Asianet News TamilAsianet News Tamil

#TokyoOlympics இந்தியாவிற்கு 4வது பதக்கத்தை உறுதி செய்த மல்யுத்த வீரர் ரவி குமார்..! ஃபைனலுக்கு முன்னேறினார்

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு 4வது பதக்கத்தை உறுதி செய்தார் மல்யுத்த வீரர் ரவி குமார்.
 

indian wrestler ravi kumar enters final and he assures 4th medal for india in tokyo olympics
Author
Tokyo, First Published Aug 4, 2021, 3:12 PM IST

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்தம் ஃப்ரீஸ்டைல் 57 கிலோ எடைப்பிரிவில் கஜகஸ்தானை சேர்ந்த நூரிஸ்லாம் சனயேவை எதிர்கொண்டார் இந்தியாவில் ரவி குமார்.

இந்த போட்டியில் மிகச்சிறப்பாக விளையாடிய இந்தியாவின் ரவி குமார், கஜகஸ்தானின் நூரிஸ்லாமை 9-5 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்று ஃபைனலுக்கு முன்னேறினார்.

இந்த வெற்றியின் மூலம் இந்தியாவிற்கு டோக்கியோ ஒலிம்பிக்கில் 4வது பதக்கத்தை உறுதி செய்துள்ளார் ரவி குமார். இதன்மூலம், ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் ஐந்தாவது மல்யுத்த வீரர் என்ற பெருமையை பெறுகிறார் ரவி குமார். இதற்கு முன் கேடி ஜாதவ், சுஷில் குமார், யோகேஷ்வர் மற்றும் சாக்‌ஷி மாலிக் ஆகிய நால்வரும் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் பதக்கம் வென்றுள்ளனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios