Asianet News TamilAsianet News Tamil

ஆர்சிபி அணியால் ஐபிஎல்லில் ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியாதது ஏன்..? முதல் முறையாக மௌனம் கலைத்த கேப்டன் கோலி

ஆர்சிபி அணியால் ஐபிஎல்லில் ஒருமுறை கூட டைட்டிலை வெல்ல முடியாதது குறித்து அந்த அணியின் கேப்டன் விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.
 

virat kohli explains why rcb did not win even single ipl title
Author
India, First Published Apr 2, 2020, 9:42 PM IST

ஐபிஎல் 13வது சீசன் கொரோனா அச்சுறுத்தலால் நடப்பது சந்தேகமாகியுள்ளது. கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ரத்தாகிவிட்டதால் வீரர்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

இந்நிலையில், கெவின் பீட்டர்சனுடன் இன்ஸ்டாகிராமில் பேசிய விராட் கோலியிடம், ஆர்சிபி அணி ஐபிஎல் டைட்டிலை வெல்லாதது குறித்து பீட்டர்சன் கேள்வியெழுப்பியதை அடுத்து, அதுகுறித்து விராட் கோலி பேசியுள்ளார்.

ஐபிஎல்லில் இதுவரை 12 சீசன்கள் நடந்து முடிந்துள்ளன. மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 4 முறையும் சிஎஸ்கே அணி 3 முறையும் கேகேஆர் அணி 2 முறையும் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளன. ஆனால் ஆர்சிபி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் ஆகிய மூன்று அணிகளும் ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை. 

விராட் கோலி, டிவில்லியர்ஸ் என்ற இருபெரும் தலைசிறந்த வீரர்களை அணியில் பெற்றிருந்தும் அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. கிறிஸ் கெய்ல், மிட்செல் ஸ்டார்க், ஷேன் வாட்சன் போன்ற பெரிய வீரர்களை ஏற்கனவே அணியில் பெற்றிருந்தும் கூட, அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. 

விராட் கோலி 2013ம் ஆண்டு ஆர்சிபி அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். 2016ல் ஃபைனல் வரை சென்ற ஆர்சிபி அணி, சன்ரைசர்ஸிடம் தோற்று கோப்பையை இழந்தது. அதன்பின்னர் 2017, 2018, 2019ல் அந்த அணியால் இறுதி போட்டிக்கு முன்னேறவே முடியவில்லை. 

அந்த அணி இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத நிலையில், அந்த அணியில் மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கேவை போல கோர் டீம் இல்லாததும், ஏலத்தில் சரியான வீரர்களை தேர்வு செய்யாததும், அடிக்கடி வீரர்களை மாற்றிக்கொண்டே இருப்பதும் என பல காரணங்கள் உள்ளன.

இந்நிலையில், இன்ஸ்டாகிராம் உரையாடலில், விராட் கோலியிடம் இதுகுறித்து கெவின் பீட்டர்சன் கேட்டார். அதற்கு பதிலளித்த கோலி, ஆர்சிபி அணியில் பெரிய வீரர்கள் இருப்பதால், அனைவரின் கவனமும் ஆர்சிபி அணி மீதே உள்ளது. பெரிய வீரர்கள் இருப்பதால்தான் எங்கள் மீது அனைவரின் கவனக்குவிப்பும் அதிகமாகவுள்ளது.

நாங்கள்(ஆர்சிபி) 3 முறை ஐபிஎல் ஃபைனலுக்கு முன்னேறியிருக்கிறோம். ஆனால் கோப்பையை வென்றதில்லை. ஆர்சிபி சிறந்த அணியாக இருந்தும் கூட, இன்னும் ஐபிஎல் டைட்டிலை வெல்லவில்லை. எங்கள் அணியின் லட்சியம் கோப்பையை வெல்வதுதான். நாங்கள் அதற்கு தகுதியான அணியும் கூட... என்று கோலி தெரிவித்துள்ளார்.

கடைசிவரை கோப்பையை வெல்ல முடியாததற்கான காரணம் என்னவென்று தெளிவாக கூறவில்லை விராட் கோலி.
 

Follow Us:
Download App:
  • android
  • ios