Asianet News TamilAsianet News Tamil

அதெல்லாம் முடியாதுங்க.. தோனி விஷயத்தில் கங்குலி கறார்

உலக கோப்பை அரையிறுதிக்கு பின்னர், கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக ஒரு போட்டியில் கூட ஆடாத தோனியின் பெயர், பிசிசிஐ-யின் வருடாந்திர வீரர்கள் ஊதிய ஒப்பந்த பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. 

ganguly refuses to comment on exclusion of dhoni from bcci annual player contract list
Author
India, First Published Jan 18, 2020, 12:41 PM IST

இந்திய அணியின் சீனியர் வீரரான தோனி, உலக கோப்பையுடன் ஓய்வு பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உலக கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக கடைசியாக ஆடிய தோனி, அதன்பின்னர் ஓய்வும் அறிவிக்காமல், தனது எதிர்கால திட்டம் குறித்து பிசிசிஐ-க்கும் தெரிவிக்காமல் இருந்துவந்தார். 

உலக கோப்பை அரையிறுதி போட்டிக்கு பின்னர், கடந்த ஆறு மாதங்களாக தோனி ஒரு போட்டியில் கூட ஆடவில்லை. உலக கோப்பைக்கு அடுத்து இந்திய அணி மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் தன்னை விடுவித்துக்கொண்ட தோனி, அதன்பின்னர் ஒரு போட்டியில் கூட ஆடவில்லை.

Also Read - அடுத்தடுத்த யார்க்கரில் ஸ்டம்பை தெறிக்கவிட்ட ஷமி.. மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய வீடியோ

ganguly refuses to comment on exclusion of dhoni from bcci annual player contract list

இந்நிலையில்,  2020ம் ஆண்டுக்கான வீரர்கள் ஊதிய ஒப்பந்த பட்டியலை நேற்று வெளியிட்டது பிசிசிஐ. அதில் தோனியின் பெயர் இல்லவே இல்லை. எனவே தோனி இனிமேல் இந்திய அணிக்காக ஆடும் வாய்ப்பில்லை. குறிப்பிட்ட காலக்கட்டத்தில் குறைந்தது 3 டி20 போட்டிகளிலாவது ஆடினால்தான், அந்த வீரரின் பெயர், ஊதிய ஒப்பந்த பட்டியலில் இடம்பெறும். தோனி கடந்தன் 6 மாதங்களில் ஒரு போட்டியில் கூட ஆடவில்லை. எனவே அவரது பெயரை 2020ம் ஆண்டுக்கான ஊதிய ஒப்பந்த பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளது பிசிசிஐ. 

Also Read - சர்ச்சையை கிளப்பிய ஃபின்ச்சின் ஸ்டம்பிங்.. வீடியோ

தோனியின் பெயர், ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது, தோனியின் ரசிகர்களுக்கு வேண்டுமானால் அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் இதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. ஏனெனில் அவர் கடந்த 6 மாதங்களில் ஒரு போட்டியில் கூட ஆடவில்லை. 

ganguly refuses to comment on exclusion of dhoni from bcci annual player contract list

இந்நிலையில், தோனியின் பெயர் வீரர்கள் ஊதிய ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலியிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு, அதுகுறித்து நான் கருத்து கூறமுடியாது என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டார் கங்குலி. 

ஏ+பிரிவு (ரூ.7 கோடி) - ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா

ஏ பிரிவு(ரூ.5 கோடி) - அஷ்வின், ஜடேஜா, புவனேஷ்வர் குமார், ரஹானே, புஜாரா, தவான், ஷமி, இஷாந்த் சர்மா, குல்தீப் யாதவ், ரிஷப் பண்ட், கேஎல் ராகுல்.

Also Read - ஹர்பஜன் சிங் சாதனையை முறியடித்த குல்தீப் யாதவ்

பி பிரிவு (ரூ.3 கோடி) - ஹர்திக் பாண்டியா, உமேஷ் யாதவ், சாஹல், மயன்க் அகர்வால், ரிதிமான் சஹா.

சி பிரிவு (ரூ.1 கோடி) - கேதார் ஜாதவ், மனீஷ் பாண்டே, ஹனுமா விஹாரி, சைனி, தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், ஷ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios