<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes"?>
<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Sat, 04 Jul 2026 08:09:17 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss/world" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[Mummy Bread : 5000 ஆண்டுகளுக்கு முந்தைய மம்மியிலிருந்து செய்யப்பட்ட ரொட்டி!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/world/the-bizarre-story-behind-bread-made-from-a-5000-year-old-mummy-2rgmtl7</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/world/the-bizarre-story-behind-bread-made-from-a-5000-year-old-mummy-2rgmtl7</guid>
            <pubDate>Wed, 17 Jun 2026 10:01:02 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Mummy Bread : 1991-ம் ஆண்டு ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய பனி மனிதன் 'ஓட்ஸி' (&Ouml;tzi the Iceman) உடலிலிருந்து எடுக்கப்பட்ட ஈஸ்ட் மூலம், விஞ்ஞானிகள் சுவையான 'சவர்டோ' (Sourdough) வகை ரொட்டியைத் தயாரித்துள்ளனர்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kv9wwn9ceaw1ezmbgkvy73ps,imgname-chatgpt-image-jun-17--2026--09-47-51-am-1781669975340.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Mummy Bread : 1991-ம் ஆண்டு ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய பனி மனிதன் 'ஓட்ஸி' (&Ouml;tzi the Iceman) உடலிலிருந்து எடுக்கப்பட்ட ஈஸ்ட் மூலம், விஞ்ஞானிகள் சுவையான 'சவர்டோ' (Sourdough) வகை ரொட்டியைத் தயாரித்துள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;5,300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஓட்ஸி, இத்தாலி-ஆஸ்திரிய எல்லைக்கு அருகில் உள்ள ஆல்ப்ஸ் மலைப்பகுதியின் பனிப்பாறைகளில் புதையுண்டு கண்டெடுக்கப்பட்டார். வரலாற்று ஆய்வாளர்களுக்கு இவர் ஒரு பொக்கிஷம். அவரது உடல்நிலை, கடைசி உணவு, ஏன் அவரது உடலில் 61 பச்சை குத்தல்கள் இருந்தன என்பது வரை பல ரகசியங்களை இந்த மம்மி உலகுக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;மம்மியில் கிடைத்த அதிசயம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஐரோப்பிய மம்மி ஆய்வு நிறுவனத்தைச் (Institute for Mummy Studies at Eurac Research) சேர்ந்த விஞ்ஞானிகள், ஓட்ஸியின் உடலில் உள்ள நுண்ணுயிரிகளை ஆய்வு செய்தனர். -6 டிகிரி செல்சியஸ் குளிரிலும், பல ஆயிரம் ஆண்டுகளாக எப்படி நுண்ணுயிரிகள் உயிர்ப்புடன் இருக்கின்றன என்பதுதான் அவர்களின் முக்கிய கேள்வியாக இருந்தது. இந்த ஆய்வின் போதுதான், அந்த குளிரைத் தாங்கி வளரக்கூடிய நான்கு வகையான ஈஸ்ட் இனங்கள் கண்டறியப்பட்டன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த ஈஸ்ட்டைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் சவர்டோ ரொட்டி தயாரிக்கும் முயற்சியில் இறங்கினர். இது குறித்து மைக்ரோபயாலஜிஸ்ட் முகமது சர்கான் கூறுகையில், &quot;எங்கள் முதல் முயற்சி இது என்பதால், ஆரம்பத்தில் சவாலாக இருந்தது. ஆனால், இறுதியில் சாதாரண ஈஸ்ட்டைப் போலவே 24 மணி நேரத்திற்குள் மாவு நன்கு உப்பி, ரொட்டி தயாரிப்பதற்கான சரியான பதத்திற்கு வந்தது,&quot; என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;இதையும் படிங்க : சூரிய கிரகணத்தால் இந்த 4 ராசிகளுக்கு ஆபத்து! இந்த தவறை மட்டும் செய்துவிடாதீர்கள், கஷ்டங்கள் தேடி வரும்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வெறும் ரொட்டியுடன் நிறுத்திவிடாமல், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஈஸ்ட் மூலம் பீர் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஜெர்மனியின் புகழ்பெற்ற 'வெயென்ஸ்டெஃபான்' (Weihenstephan) மதுபான ஆலை நிபுணர்களுடன் அவர்கள் ஆலோசனைகளை நடத்தி வருகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இந்த ஈஸ்ட்டின் சிறப்பு என்ன?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;பொதுவாக ஈஸ்ட் வெப்பமான சூழலில் தான் நன்கு செயல்படும். ஆனால், ஓட்ஸியின் உடலில் கண்டறியப்பட்ட ஈஸ்ட்கள் கடும் குளிரிலும் செயல்படக்கூடியவை. இதனால், குளிர்சாதனப் பெட்டிகளில் வைக்கப்படும் உணவுகளைத் தயாரிப்பதற்கும், ஆற்றலைச் சேமிப்பதற்கும் இந்த வகை ஈஸ்ட் எதிர்காலத்தில் பெரும் உதவியாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;எப்படியிருந்தாலும், 5,000 ஆண்டுகள் பழமையான ஒரு மம்மியின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட ஈஸ்ட் மூலம் தயாரிக்கப்பட்ட ரொட்டியைச் சாப்பிடுவது, காலப் பயணத்தை ஒரு வாய் உணவில் அனுபவிப்பது போன்றதுதான்!&lt;/p&gt;&lt;p&gt;இதையும் படிங்க : அடுத்த ஒரு வருஷத்துக்கு இந்த 3 ராசிகளுக்கு ராஜயோகம் தான்! 2027 வரை பணமழையில் நனையத் தயாரா?&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world</category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/world/the-bizarre-story-behind-bread-made-from-a-5000-year-old-mummy-2rgmtl7"/>
        </item>
        <item>
            <title><![CDATA[UAE Indians Alert: அமீரக வாழ் இந்தியர்களுக்கு முக்கிய செய்தி! பாஸ்போர்ட், விசா சேவைகளில் அதிரடி மாற்றம்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/world/major-update-for-indians-seeking-consular-services-in-uae-68eg82n</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/world/major-update-for-indians-seeking-consular-services-in-uae-68eg82n</guid>
            <pubDate>Sat, 13 Jun 2026 21:46:08 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;UAE Indians Alert: ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) வசிக்கும் இந்தியர்களுக்கான பாஸ்போர்ட் மற்றும் விசா சேவைகளில் முக்கிய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1 முதல் மாறப்போகும் விதிகள் குறித்து பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jzcw7nqcger6p9m36044n6p2,imgname-passport-1751705179884.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;UAE Indians Alert: ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) வசிக்கும் இந்தியர்களுக்கான பாஸ்போர்ட் மற்றும் விசா சேவைகளில் முக்கிய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1 முதல் மாறப்போகும் விதிகள் குறித்து பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் லட்சக்கணக்கான இந்தியர்களை பாதிக்கும் வகையில், அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பாஸ்போர்ட், விசா மற்றும் பிற தூதரக சேவைகளை வழங்கிய BLS இன்டர்நேஷனல் மற்றும் SGIVS குலோபல் நிறுவனங்களுக்கு பதிலாக, அல்ஹிந்த் டூர்ஸ் மற்றும் டிராவல்ஸ் புதிய சேவை வழங்குநராக நியமிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தூதரகத்தின் தகவலின்படி, ஜூன் 30 வரை பழைய மையங்கள் வழியாக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். ஆனால், ஜூலை 1 முதல் சமர்ப்பிக்கப்படும் அனைத்து விண்ணப்பங்களும் அல்ஹிந்த் நிறுவனத்தின் புதிய மையங்கள் மூலமாக மட்டுமே செயல்படுத்தப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த மாற்றத்தின் ஒரு பகுதி, அபுதாபி, துபாய், ஷார்ஜா உள்ளிட்ட ஏழு எமிரேட்டுகளில் மொத்தம் 16 புதிய சேவை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்திய சமூகத்திற்கான சேவைகளை மேலும் எளிதாக்கவும், அணுகக்கூடியதாகவும் மாற்றுவதே இதன் நோக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அபுதாபியில் ஆறு மையங்கள், துபாயில் இரண்டு, ஷார்ஜாவில் இரண்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அஜ்மான், ஃபுஜைரா, உம் அல் குவைன், கோர்ஃபக்கான், கல்பா மற்றும் ராஸ் அல் கைமா ஆகிய பகுதிகளிலும் சேவை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;புதிய மையங்களின் முகவரிகள், சேவை கட்டணங்கள், அப்பாயிண்ட்மென்ட் பதிவு நடைமுறைகள் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று தூதரகம் தெரிவித்துள்ளது. எனவே, சமூக வலைதளங்களில் பரவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை தவிர்த்து, இந்திய தூதரகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/world/major-update-for-indians-seeking-consular-services-in-uae-68eg82n"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Time Traveler: 2118-ல் இருந்து வந்தேன்! 3ம் உலகப் போர், டைம் டிராவல்.. இணையத்தை அதிரவைத்த நோவா]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/world/time-traveler-noah-claims-world-war-3-and-future-earth-truth-behind-viral-video-7916il4</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/world/time-traveler-noah-claims-world-war-3-and-future-earth-truth-behind-viral-video-7916il4</guid>
            <pubDate>Sat, 04 Jul 2026 08:09:16 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Time Traveler: 2118-ம் ஆண்டிலிருந்து வந்ததாக கூறும் 'நோவா'வின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. உலகப் போர் முதல் டைம் டிராவல் வரை அவர் கூறிய தகவல்களுக்கு விஞ்ஞானிகள் அளித்த பதில் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwnfgbzf3mkmajj851yghrdr,imgname-time-traveler---1783132336111.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Time Traveler: 2118-ம் ஆண்டிலிருந்து வந்ததாக கூறும் 'நோவா'வின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. உலகப் போர் முதல் டைம் டிராவல் வரை அவர் கூறிய தகவல்களுக்கு விஞ்ஞானிகள் அளித்த பதில் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சமூக வலைதளங்களில் தற்போது அதிகம் பேசப்படும் வீடியோக்களில் ஒன்று, ApexTV யூடியூப் சேனலில் வெளியாகியுள்ள 18 நிமிட பதிவு. அதில் முகம் மறைக்கப்படும், குரல் மாற்றப்படும் பேசும் இளைஞர் ஒருவர், தன்னை 2118-ம் ஆண்டிலிருந்து வந்த 'நோவா' என அறிமுகப்படுத்தியுள்ளார். பாதுகாப்பு காரணங்களால் தனது உண்மையான பெயரை வெளியிட முடியாது என்றும், ரகசிய டைம் டிராவல் திட்டத்தில் பங்கேற்றதாகவும் அவர் கூறும் தகவல்கள் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;நோவாவின் கூற்றுப்படி, 2031-ல் தென் சீனக் கடலில் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையேயான மோதலே மூன்றாம் உலகப் போரின் தொடக்கமாக மாறும். பின்னர் ரஷ்யா, நேட்டோ உள்ளிட்ட நாடுகள் இதில் இணையும் என்றும், 2034-ல் அணுகுண்டுத் தாக்குதலால் வெறும் மூன்று நாட்களில் கோடிக்கணக்கான மக்கள் உயிரிழப்பார்கள் என்றும் அவர் கூறுகிறார். 2040-ல் போர் முடிந்தாலும், கதிர்வீச்சால் வானம் சிவப்பாக மாறி, உலகம் கடுமையான சுகாதார நெருக்கடியை சந்திக்கும் எனவும் அவர் விவரிக்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதையும் தாண்டி, 2118-ம் ஆண்டின் உலகம் குறித்து அவர் கூறிய விவரங்கள்தான் அதிக கவனத்தை ஈர்த்துள்ளன. உலக மக்கள் தொகை 350 கோடியாகக் குறைந்திருக்கும், அரசுகள் இல்லாமல் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களே உலகை நிர்வகிக்கும், குடிநீர் தனியார் கட்டுப்பாட்டில் இருக்கும், மனிதர்கள் செவ்வாய் மற்றும் நிலவில் குடியேறியிருப்பார்கள், பள்ளிகளில் டைம் டிராவல் ஒரு பாடமாக கற்பிக்கப்படும் என்றும் அவர் கூறுகிறார். இதற்கு ஆதாரமாக, சிவப்பு வானத்துடன் காணப்படும் லாஸ் வேகாஸ் புகைப்படம் மற்றும் தனது கையில் பொருத்தப்பட்டதாகக் கூறும் மைக்ரோசிப்பையும் அவர் காட்டுகிறார்.&lt;/p&gt;&lt;p&gt;ஆனால், இந்தக் கதையை விஞ்ஞானிகள் முழுமையாக மறுக்கின்றனர். இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி டாக்டர் தபன் மிஸ்ரா, எதிர்காலத்திற்கான பயணம் கோட்பாட்டளவில் பேசப்பட்டாலும், தற்போது அது சாத்தியமில்லை என்கிறார். மேலும், நோவா காட்டிய புகைப்படம் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டிருக்க வாய்ப்பு அதிகம் என்றும், கட்டிட அமைப்புகளில் காணப்படும் காட்சிப் பிழைகள் அதற்குச் சான்று என்றும் விளக்குகிறது. மனநல நிபுணர்கள், கவனத்தை ஈர்க்கும் சிலர் இத்தகைய கதைகளை உருவாக்குவது புதிதல்ல என கூறுகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;இட்லி பஞ்சு மாதிரி வேகணுமா? இந்த ஒரு ட்ரிக் மட்டும் பண்ணுங்க.! ஹோட்டல் டேஸ்ட்ல வரும்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உண்மையில், ApexTV இதற்கு முன்பும் பல 'டைம் டிராவலர்' கதைகளை வெளியிட்டுள்ளது. 2023-ல் ஏலியன் தாக்குதல், 2025-ல் ஜாம்பி பரவல் போன்ற கணிப்புகள் எதுவும் நடக்கவில்லை. அந்த வீடியோக்களும் யூடியூப்பில் என்டர்டெயின்மென்ட் வகையின் கீழ் வெளியிடப்பட்டிருந்தன. அதனால், தேவையான தகவல் ஆதாரமாக இல்லாமல், பொழுதுபோக்கு உள்ளடக்கமாகவே பார்க்க வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;ஏஐ தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் இந்தக் காலத்தில், உண்மை மற்றும் புனைகதை இடையேயான எல்லை மங்கிக்கொண்டே செல்கிறது. எனவே, உலகப் போர், டைம் டிராவல் அல்லது எதிர்கால கணிப்புகள் போன்ற அதிர்ச்சி தகவல்களை நம்புவதற்கு முன் Fact Check செய்வது அவசியம். இணையத்தில் வைரலாகும் ஒவ்வொரு கதையும் உண்மையாக இருக்க வேண்டியதில்லை. சில நேரங்களில், அது வெறும் கற்பனையை நம்ப வைக்கும் திறமையான காட்சிப்படுத்தலாக இருக்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/world/time-traveler-noah-claims-world-war-3-and-future-earth-truth-behind-viral-video-7916il4"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Bear: ஒரே ஒரு கரடியால் மொத்த நகரமே லாக்டவுன்.. முடங்கிய மக்கள்.. 94 பள்ளிகள் மூடல்.. எங்க தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/world/why-a-single-black-bear-forced-a-massive-lockdown-and-school-holiday-in-japan-d8iwsgg</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/world/why-a-single-black-bear-forced-a-massive-lockdown-and-school-holiday-in-japan-d8iwsgg</guid>
            <pubDate>Mon, 08 Jun 2026 20:13:55 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Bear: ஜப்பானில் ஒரே ஒரு கரடியால் ஒட்டுமொத்த நகரமே லாக்டவுன் ஆனது. 94 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. என்ன நடந்தது? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktktv72nqwgkyf8mhj82qc7t,imgname-bear-1780929633365.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Bear: ஜப்பானில் ஒரே ஒரு கரடியால் ஒட்டுமொத்த நகரமே லாக்டவுன் ஆனது. 94 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. என்ன நடந்தது? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உலகத்தில் சவால்களை அதிகம் சந்திக்கும் ஒரு நாடு ஜப்பான். ஏனெனில் அங்கு நிலநடுக்கம், சுனாமி, பெரு வெள்ளம் என இயற்கை பேரிடர்கள் அடிக்கடி வந்து அச்சுறுத்தும். ஆனால் சவால்களை முறியடித்து ஜப்பான் வீறுநடை போட்டு வருவது வழக்கம். இப்படிபட்ட ஜப்பானில் ஒரு நகரமே ஒரு கரடியால் முடங்கியுள்ளது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? அதாவது ஜப்பானில் ஒரு நகரத்தில் பூங்கா அருகே கரடி ஒன்று தென்பட்டதால், அங்குள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஒரு கரடியால் நகரமே லாக்டவுன்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;தலைநகர் டோக்கியோவிலிருந்து 100 கிலோமீட்டர் வடக்கே உள்ள உட்சுனோமியா நகரத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனால் மக்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது. சுமார் 5 லட்சம் மக்கள் வசிக்கும் இந்த நகரத்தில், 94 தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை அன்று, நகரத்தில் உள்ள ஒரு பூங்கா அருகே இரண்டு இளைஞர்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது, திடீரென ஒரு கருங்கரடியைப் பார்த்துள்ளனர். பீதியடைந்த இளைஞர்கள் முன்னால் இருந்து அந்த கரடி ஓடிச்செல்லும் காட்சி, அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதைத் தொடர்ந்து, பகல் நேரத்திலேயே மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் கரடி நடமாட்டம் இருந்துள்ளது. திங்கட்கிழமை அதிகாலை 4 மணிக்கு, நகர மையத்திலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு தொழிற்சாலைப் பகுதியிலும் கரடி தென்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் உஷாரான நகர சபை அதிகாரிகள், பல நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளின் கதவுகளையும் ஜன்னல்களையும் பாதுகாப்பாக மூடி வைக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். ஒருவேளை கரடியைக் கண்டால், அதன் அருகில் செல்லாமல் உடனடியாக அருகிலுள்ள கட்டிடத்தில் தஞ்சம் அடையுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;94 பள்ளிகள் மூடல்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இதுகுறித்து நகரசபையின் பிரச்சார வாகனங்கள் நகரம் முழுவதும் அறிவிப்பு செய்து வருகின்றன. போலீசாரும், உள்ளூர் வேட்டைக்காரர்கள் குழுவும் கரடியைத் தேடத் தொடங்கிய பின்னரே, நகரசபை எல்லைக்குட்பட்ட பள்ளிகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜப்பானில் கரடிகள் காடுகளை விட்டு ஊருக்குள் வருவது சமீபகாலமாக அதிகரித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீபத்தில் சுமார் 50,000 முறை இதுபோன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன. பெரும்பாலும் வடகிழக்கு பகுதிகளில் கரடி தொல்லை அதிகமாக உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆனால், டோக்கியோவுக்கு அருகிலுள்ள நகரங்களில் கரடி தொல்லை பொதுவாக இருந்ததில்லை. கடந்த மாதம், டோக்கியோ அருகே உள்ள ஒகுதாமாவில் ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு மலையேறும் வீரர் மீது கரடி தாக்கி காயப்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, அருகிலுள்ள நகரமான ஹச்சியோஜியிலும் கரடி தென்பட்டது. கடந்த வாரம், ஃபுகுஷிமாவில் நான்கு பேர் மீது தாக்குதல் நடத்திய ஒரு கரடி, ஒரு நிறுவனத்தின் அலுவலகத்திற்குள் நுழைந்து ஊழியர் ஒருவரைக் காயப்படுத்தியது. பின்னர் ஒரு தொழிற்சாலைக்குள் நுழைந்த அந்த கரடி, உள்ளிருந்தே ஜன்னலைத் திறந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;புள்ளிவிவரங்களின்படி, ஜப்பானின் முக்கிய தீவான ஹோன்ஷுவில் 12,000 முதல் 42,000 ஆசிய கருங்கரடிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவற்றின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், பெரிய அளவிலான பழுப்பு நிற கரடிகள் வடக்கு தீவான ஹொக்கைடோவில் மட்டுமே காணப்படுகின்றன. இங்கு சுமார் 12,000 கரடிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/world/why-a-single-black-bear-forced-a-massive-lockdown-and-school-holiday-in-japan-d8iwsgg"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Earthquake : இந்த நாடுகளுக்கு போறீங்களா? ஜாக்கிரதை! அடிக்கடி நிலநடுக்கம் வரும் நாடுகள் இவைதான்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/world/top-earthquake-prone-countries-to-know-before-you-travel-dgbfp3z</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/world/top-earthquake-prone-countries-to-know-before-you-travel-dgbfp3z</guid>
            <pubDate>Thu, 25 Jun 2026 11:54:45 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Earthquake : சில நாடுகளில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. அங்கு வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். படிப்பு, வேலைக்காக இந்த நாடுகளுக்குச் செல்லும் இந்தியர்களும் அதிகம். எந்தெந்த நாடுகளில் நிலநடுக்கம் அதிகம் வருகிறது என்று பார்ப்போம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kvyp2phhgg84zp0vbngbyh32,imgname-4-1782367476273.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Earthquake : சில நாடுகளில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. அங்கு வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். படிப்பு, வேலைக்காக இந்த நாடுகளுக்குச் செல்லும் இந்தியர்களும் அதிகம். எந்தெந்த நாடுகளில் நிலநடுக்கம் அதிகம் வருகிறது என்று பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பூமி ஒரே தட்டாக இல்லை. அது பல பெரிய டெக்டானிக் தட்டுகளாகப் பிரிந்துள்ளது. இந்த தட்டுகள் தொடர்ந்து மெதுவாக நகர்ந்துகொண்டே இருக்கின்றன. சில சமயங்களில், இரண்டு தட்டுகள் மோதும்போது, விலகும்போது அல்லது ஒன்றன் மீது ஒன்று சரியும்போது, பூமிக்கு அடியில் அதிக அழுத்தம் உருவாகிறது. இந்த அழுத்தம் திடீரென வெளியாகும்போது பூமி அதிர்கிறது. இதைத்தான் நிலநடுக்கம் என்கிறோம். நிலநடுக்க மையத்திலிருந்து வெளிப்படும் ஆற்றல், அலைகளாகப் பரவி கட்டிடங்கள், சாலைகள், பாலங்கள் போன்றவற்றைத் தாக்குகிறது. இதனால் அவை சேதமடைகின்றன. கடலுக்கு அடியில் ஏற்படும் பெரிய நிலநடுக்கங்கள் சுனாமியையும் உருவாக்குகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;உலகில் ஜப்பான், நிலநடுக்கங்கள் அதிகம் ஏற்படும் நாடுகளில் முதலிடத்தில் உள்ளது. பசிபிக், பிலிப்பைன்ஸ், யூரேசியன், வட அமெரிக்க டெக்டானிக் தட்டுகள் சந்திக்கும் இடத்தில் ஜப்பான் அமைந்திருப்பதே இதற்குக் காரணம். இந்தோனேசியாவிலும் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. அங்கு எரிமலைகள் அதிகம் இருப்பதாலும், பல டெக்டானிக் தட்டுகள் சந்திப்பதாலும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் வருகின்றன. இதே காரணத்தால் பிலிப்பைன்ஸ், நியூசிலாந்து, பாப்புவா நியூ கினியா போன்ற நாடுகளிலும் நிலநடுக்க அபாயம் அதிகம். இந்த நாடுகள் அனைத்தும் &quot;பசிபிக் நெருப்பு வளையம்&quot; (Pacific Ring of Fire) என்று அழைக்கப்படுகின்றன.&lt;img&gt;&lt;p&gt;தென் அமெரிக்க நாடான சிலி, உலகின் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைச் சந்தித்தது. 1960-ல் அங்கு 9.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. மெக்சிகோ, பெரு போன்ற நாடுகளிலும் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. ஆசியாவில், சீனாவும் அபாயகரமான நாடுகள் பட்டியலில் உள்ளது. அதிக மக்கள்தொகை இருப்பதால், அங்கு ஏற்படும் நிலநடுக்கங்கள் பெரும் உயிரிழப்பை ஏற்படுத்துகின்றன. சமீப ஆண்டுகளில் துருக்கியும் தொடர் நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;இந்தியாவும் நிலநடுக்க அபாயத்திலிருந்து முழுமையாகப் பாதுகாக்கப்படவில்லை. இந்திய டெக்டானிக் தட்டு, வடக்கு நோக்கி நகர்ந்து யூரேசிய தட்டுடன் மோதுகிறது. இதனால்தான் இமயமலைப் பகுதியில் நிலநடுக்க அபாயம் அதிகமாக உள்ளது. ஜம்மு-காஷ்மீர், லடாக், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் அதிக அபாயகரமான பகுதிகளாகக் கருதப்படுகின்றன. டெல்லி உட்பட வட இந்தியாவின் சில பகுதிகளும் நிலநடுக்க அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றன. உலக மக்கள் தொகையில் கோடிக்கணக்கானோர் நிலநடுக்க அபாயப் பகுதிகளில் வசிப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, நிலநடுக்கத்தைத் தாங்கும் கட்டிடங்கள், முன் எச்சரிக்கை அமைப்புகள், மக்களிடையே விழிப்புணர்வு போன்றவை எதிர்கால சேதங்களைக் குறைக்க உதவும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.]]></content:encoded>
            <category>world</category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/world/top-earthquake-prone-countries-to-know-before-you-travel-dgbfp3z"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Interesting Facts: அமெரிக்காவில் மக்கள் கேஸ் சிலிண்டர் வாங்குறதே இல்ல.! அவங்களுக்கு எப்படி சமையல் எரிவாயு கிடைக்குது தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/interesting-facts-why-americans-do-not-use-gas-cylinders-at-home-how-cooking-gas-is-supplied-in-the-united-states-dzdcuge</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/interesting-facts-why-americans-do-not-use-gas-cylinders-at-home-how-cooking-gas-is-supplied-in-the-united-states-dzdcuge</guid>
            <pubDate>Mon, 22 Jun 2026 14:48:42 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Interesting Facts: இந்தியாவைப் போல அமெரிக்காவில் மக்கள் சிலிண்டர் வாங்குவதில்லை. அவர்களுக்கு எப்படி சமையல் எரிவாயு கிடைக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம் வாருங்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kvq86s7kqk1yprmyxjx2st98,imgname-gas-cylinder-in-america---1-1782118049011.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Interesting Facts: இந்தியாவைப் போல அமெரிக்காவில் மக்கள் சிலிண்டர் வாங்குவதில்லை. அவர்களுக்கு எப்படி சமையல் எரிவாயு கிடைக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம் வாருங்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உலகின் பிற பகுதிகளில் நடைபெற்று வரும் போர்ச்சூழல் காரணமாக இந்தியாவில் கடுமையான எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மக்கள் காலி சிலிண்டர்களைத் தூக்கிக்கொண்டு எரிவாயு நிறுவனங்களுக்கு ஓடுகின்றனர். மாதம் மாதம் சிலிண்டர் புக் செய்து டெலிவரிக்காக காத்திருக்கின்றனர். ஆனால் அமெரிக்காவில் இதுபோன்ற நிலைமை கிடையாது. அமெரிக்க மக்களின் வீடுகளுக்கு சமையல் எரிவாயு முற்றிலும் வேறுபட்ட, அதே சமயம் எளிமையான முறையில் கிடைக்கிறது. அமெரிக்காவில் சமையல் எரிவாயு விநியோகிக்கப்படும் முறை பற்றி இங்கு விரிவாகக் காணலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்: &amp;nbsp;&lt;/strong&gt;Fun Facts: டைப்-சி சார்ஜரில் உள்ள 'C'-க்கு என்ன அர்த்தம்? 90% பேருக்கு இது தெரியாது.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அமெரிக்க நகரங்களில் உள்ள 90 சதவீதத்திற்கும் அதிகமான வீடுகளில் இயற்கை எரிவாயு நேரடியாக குழாய்கள் மூலம் விநியோகிக்கப்படுகிறது. குடிநீர் குழாய்கள் போலவே தெருக்களில் மண்ணுக்கு அடியில் எரிவாயு கொண்டு செல்லும் முதன்மை குழாய்கள் பதிக்கப்பட்டு இருக்கும். அங்கிருந்து ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனியாக இணைப்புக் குழாய்கள் கொடுக்கப்பட்டு நேரடியாக சமையலறை அடுப்புக்கு இணைக்கப்பட்டு இருக்கும். வீட்டின் வெளிப்பகுதியில் ஒரு மீட்டர் பொருத்தப்பட்டு எவ்வளவு எரிவாயு பயன்படுத்துகிறீர்களோ, அதை இந்த மீட்டர் துல்லியமாக கணக்கிடும். மாத இறுதியில் மின் கட்டணம் போல ஆன்லைனில் கட்டணம் செலுத்தினால் போதுமானது. கேஸ் தீர்ந்துவிடும் என்கிற கவலையே அமெரிக்க மக்களுக்கு இருக்காது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்: &amp;nbsp;&lt;/strong&gt;Facts: நம்ம போன் நம்பர்ல 10 இலக்கம் ஏன் இருக்கு? 8, 9-னு ஏன் இல்ல? இதற்குப் பின்னால் உள்ள காரணம் என்ன தெரியுமா?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நகரங்களைத் தாண்டி குழாய் இணைப்பு வசதி இல்லாத கிராமங்கள் அல்லது பண்ணை வீடுகளில் இருப்பவர்களுக்கு நம் ஊர்களில் கிடைப்பது போலவே எல்பிஜிகள் சிலிண்டர்கள் கிடைக்கிறது. அங்கேயும் அவர்கள் சிறிய சிலிண்டர்களை பயன்படுத்துவதில்லை. இவர்களது வீட்டின் பின்புறம் அல்லது தோட்டத்தில் மிகப்பெரிய கேஸ் டேங்க் வைக்கப்பட்டிருக்கும். இது 100 முதல் 500 கேலன்கள் (சுமார் 400 முதல் 2000 லிட்டர்கள் கொள்ளளவு) கொண்டதாக இருக்கும். தனியார் எரிவாயு நிறுவனங்கள் பெரிய லாரிகள் மூலம் சில மாதங்களுக்கு ஒரு முறை நேரடியாக வீட்டிற்கு வந்து இந்த டேங்குகளில் கேஸை நிரப்பி விட்டுச் செல்வார்கள். பல வீடுகளில் இருக்கும் ஸ்மார்ட் மீட்டர், கேஸ் அளவு குறையும் பொழுது நிறுவனத்திற்கு தானாகவே தகவல் தெரிவித்து விடும். அவர்கள் வந்து நிரப்பி விட்டுச் செல்வார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்: &amp;nbsp;&lt;/strong&gt;Facts: ரயில் தண்டவாளத்தின் நடுவில் ஜல்லிக்கற்கள் ஏன் கொட்டப்படுது? இதன் பின்னால் உள்ள அறிவியல் தெரியுமா?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அமெரிக்காவில் பல வீடுகளில் கேஸ் பயன்படுத்துவதற்கு பதிலாக மின்சார அடுப்புகளை பயன்படுத்தியே சமைக்கின்றனர். குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்புகளில் பாதுகாப்பு காரணங்கள் மற்றும் சுற்றுச்சூழல் விதிகளுக்காக கேஸ் இணைப்புகளுக்கு பதிலாக முழுமையாக இன்டக்சன் அடுப்புகளே பயன்படுத்தப்படுகின்றன. அமெரிக்கர்கள் பல நேரங்களில் சிலிண்டர் வாங்குவதே கிடையாது. ஆனால் வீட்டின் பின்புறத்தில் வைத்து பார்பிக்யூ கிரில் சிக்கன் செய்வதற்கும், குளிர்காலத்தில் வீட்டை வெதுவெதுப்பாக வைத்திருக்க உதவும் அவுட்டோர் ஹீட்டர்களுக்கும் சிறிய ரக ப்ரொபேன் சிலிண்டர்களை பயன்படுத்துகிறார்கள். இவை காலியாகிவிட்டால் அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட் அல்லது பெட்ரோல் பங்குகளில் கொடுத்து புதிய சிலிண்டர்களை வாங்கிக் கொள்கிறார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்:&amp;nbsp;&lt;/strong&gt; Indian Railways: ரயில் பெட்டி மேல இந்த வட்டமான மூடிகள் ஏன் இருக்கு? இதன் உண்மையான வேலை என்ன தெரியுமா?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தடையற்ற உள் கட்டமைப்பு வசதிகள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம் காரணமாக அமெரிக்க மக்கள் சிலிண்டர் புக் செய்யும் தேவையே இல்லாமல் 24 மணி நேரமும் சமையல் எரிவாயுவைப் பெற்று வருகின்றனர். தற்போது இந்தியாவிலும் கூட சென்னை, மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களில் PNG (Piped Natural Gas) முறை வேகமாக அறிமுகமாகி வருகிறது. இந்த முறையில் மண்ணுக்கடியில் குழாய்கள் பதிக்கப்பட்டு இயற்கை எரிவாயு வீட்டிற்கு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டால் இந்திய மக்களும் 24 மணி நேரமும் தடையின்றி சமையல் எரிவாயுவைப் பெற முடியும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/interesting-facts-why-americans-do-not-use-gas-cylinders-at-home-how-cooking-gas-is-supplied-in-the-united-states-dzdcuge"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Petrol Price Cut: பெட்ரோல் விலை 4 ரூபாய் குறைப்பு.. அதிரடியாக அறிவித்த அரசு.. மக்களுக்கு நிம்மதி!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/world/pakistan-petrol-price-reduced-by-4-rupees-today-updates-fz20fw3</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/world/pakistan-petrol-price-reduced-by-4-rupees-today-updates-fz20fw3</guid>
            <pubDate>Sun, 07 Jun 2026 14:16:19 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;இந்தியா உட்பட பல நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. ஆனால் நமது அண்டை நாடான பாகிஸ்தான் பெட்ரோல் விலை 4 ரூபாய் குறைந்துள்ளது. இது எப்படி சாத்தியம் என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ksygqngymdrwdab5m4h9bst1,imgname-petrol--2--1780214388254.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;இந்தியா உட்பட பல நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. ஆனால் நமது அண்டை நாடான பாகிஸ்தான் பெட்ரோல் விலை 4 ரூபாய் குறைந்துள்ளது. இது எப்படி சாத்தியம் என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உலகளாவிய பதற்றங்களால் கச்சா எண்ணெய் விலை அதிகமாக உள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் குறைத்துள்ளது. ஒவ்வொரு வாரமும் அங்கு விலை மதிப்பாய்வு செய்யப்படுகிறது. பெட்ரோல் விலை 4 ரூபாய் குறைக்கப்பட்டாலும், டீசல் விலையில் மாற்றம் இல்லை. பாகிஸ்தான் அரசின் தகவல்படி, அதிவேக டீசலின் (HSD) எக்ஸ்-டிப்போ விலை ஒரு லிட்டருக்கு 380.78 ரூபாயாகவே தொடரும். முன்பு ஏப்ரல் 10 அன்று டீசல் விலை 520.35 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பாகிஸ்தானில் பணவீக்கத்திற்கு அதிவேக டீசல் ஒரு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. ஏனெனில், சரக்கு போக்குவரத்திற்கு இது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. சுங்க வரி, பெட்ரோலிய வரி மற்றும் கிளைமேட் சப்போர்ட் வரி என ஒரு லிட்டர் டீசலுக்கு சுமார் 100 ரூபாயை பாகிஸ்தான் அரசு வரியாக விதிக்கிறது. டீசலைப் போலவே, பெட்ரோலின் எக்ஸ்-டிப்போ விலையும் 4 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 381.78 ரூபாயிலிருந்து 377.79 ரூபாயாகக் குறைந்துள்ளது. இதன் மூலம் மொத்தமாக சுமார் 37 ரூபாய் விலை குறைந்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கடந்த வாரம், பாகிஸ்தான் அரசு பெட்ரோல் மற்றும் அதிவேக டீசல் விலையை லிட்டருக்கு 22 ரூபாய் குறைப்பதாக அறிவித்தது. மேலும், மண்ணெண்ணெய் மீது லிட்டருக்கு சுமார் 21 ரூபாயும், லைட் டீசல் ஆயில் மீது 16 ரூபாயும் பெட்ரோலிய வரியாக விதிக்கப்படுகிறது. ஒரு வாரத்திற்கு முன்பு கூட பெட்ரோல், டீசல் விலை 22 ரூபாய் குறைக்கப்பட்டது. பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் HSD-யிலிருந்துதான் அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கிறது. இவற்றின் மாத விற்பனை சுமார் 7 முதல் 8 லட்சம் டன்கள். ஆனால், மண்ணெண்ணெயின் மாதத் தேவை வெறும் 10,000 டன்கள் மட்டுமே.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பாகிஸ்தான் ரூபாயின் ஸ்திரத்தன்மை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது, அமெரிக்க டாலருக்கு எதிரான பாகிஸ்தான் ரூபாயின் (PKR) மதிப்பு சமீபகாலமாக ஓரளவிற்கு ஸ்திரத்தன்மை அடைந்துள்ளது. டாலர் மதிப்பு உயராமல் கட்டுக்குள் இருந்ததால், எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான செலவு குறைந்தது. இது நுகர்வோருக்கு விலைக்குறைப்பாக மாற்றப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/world/pakistan-petrol-price-reduced-by-4-rupees-today-updates-fz20fw3"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Elon Musk: சம்பளம் மட்டும் இல்லை... ஷேரும் தர்றாரு! உலகையே ஆச்சரியப்பட வைத்த எலான் மஸ்க்! வேலை இருந்தா சொல்லுங்கப்பா..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/world/elon-musk-not-just-salary-he-gives-company-shares-too-how-thousands-of-employees-became-millionaires-geu0mdg</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/world/elon-musk-not-just-salary-he-gives-company-shares-too-how-thousands-of-employees-became-millionaires-geu0mdg</guid>
            <pubDate>Wed, 24 Jun 2026 12:41:40 +0530</pubDate>
            <description><![CDATA[எலான் மஸ்க் தனது நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்துடன் நிறுவனப் பங்குகளையும் வழங்கியுள்ளார். இந்த மாஸ்டர் பிளான் மூலம், SpaceX-ல் பணியாற்றிய சுத்திகரிப்பு தொழிலாளர்கள் முதல் வெல்டர்கள் வரை ஆயிரக்கணக்கானோர் இன்று மில்லியனர்களாக மாறியுள்ளனர்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kvw550n78gtx82vgbcemp55s,imgname-chatgpt-image-jun-24--2026--11-56-16-am--1--1782282617509.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[எலான் மஸ்க் தனது நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்துடன் நிறுவனப் பங்குகளையும் வழங்கியுள்ளார். இந்த மாஸ்டர் பிளான் மூலம், SpaceX-ல் பணியாற்றிய சுத்திகரிப்பு தொழிலாளர்கள் முதல் வெல்டர்கள் வரை ஆயிரக்கணக்கானோர் இன்று மில்லியனர்களாக மாறியுள்ளனர்.&lt;img&gt;&lt;p&gt;பொதுவாக ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தால் மாதந்தோறும் சம்பளம் கிடைக்கும். சில நிறுவனங்களில் போனஸ் கிடைக்கும். ஆனால் உலகின் மிகப்பெரிய தொழிலதிபரான எலான் மஸ்க் வேற லெவல். &quot;நிறுவனம் வளர்ந்தால், அதில் உழைக்கும் ஊழியர்களும் வளர வேண்டும்&quot; என்ற கொள்கையில், தனது நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்துடன் நிறுவன பங்குகளையும் வழங்கினார். இன்று அந்த முடிவு ஆயிரக்கணக்கான சாதாரண தொழிலாளர்களையே மில்லியனர்களாக மாற்றியுள்ளது. அதனால்தான் சமூக வலைதளங்களில் பலரும் ஜாலியாக, &quot;வேலை இருந்தா சொல்லுங்கப்பா!&quot; என்று பதிவிட்டு வருகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;1971-ல் தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் பிறந்த எலான் மஸ்க், சாதாரண குடும்பத்தில் இருந்து உலகின் மிகப்பெரிய தொழில்முனைவோராக உயர்ந்துள்ளார். Zip2, PayPal, Tesla, SpaceX, xAI, Neuralink என தொடர்ந்து உலகையே மாற்றும் நிறுவனங்களை உருவாக்கினார். சமீபத்தில் SpaceX பங்குச் சந்தையில் பட்டியலானதைத் தொடர்ந்து, அவரது சொத்து மதிப்பு 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலரைத் தாண்டி (இந்திய மதிப்பில் சுமார் ₹86 லட்சம் கோடி) உலகின் முதல் ட்ரில்லியனர் என்ற சாதனையை படைத்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பல நிறுவனங்களில் உயரதிகாரிகளுக்கு மட்டுமே பங்குகள் வழங்கப்படுகின்றன. ஆனால் எலான் மஸ்க் தனது நிறுவன வளர்ச்சியில் பங்காற்றிய ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு Stock Options வழங்கினார். நிறுவனம் வளர வளர, அந்த பங்குகளின் மதிப்பும் பல மடங்கு உயர்ந்தது. இதனால் சம்பளம் வாங்கிய அதே ஊழியர்கள், இன்று கோடிக்கணக்கான சொத்துகளுக்கு உரிமையாளர்களாக மாறியுள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;SpaceX நிறுவனத்தில் பணியாற்றிய தற்போதைய மற்றும் முன்னாள் ஊழியர்கள் சேர்த்து 4,400-க்கும் மேற்பட்டோர் இன்று மில்லியனர்களாகியுள்ளனர். இவர்களில் சுமார் 400 பேரின் பங்கு மதிப்பு 100 மில்லியன் டாலருக்கும் அதிகமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுத்திகரிப்பு பணியாளர்கள், வெல்டர்கள், இயந்திர பராமரிப்பு ஊழியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் என பலரும் நிறுவனத்தின் வளர்ச்சியால் நேரடியாக செல்வந்தர்களாகியுள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சில ஊழியர்கள் ஆரம்ப காலத்திலேயே பெற்ற பங்குகளின் மதிப்பு, இன்று பல கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மணிக்கு சாதாரண ஊதியத்தில் வேலை பார்த்தவர்களே, இன்று பங்கு மதிப்பால் நிதி சுதந்திரம் பெற்றுள்ளனர். ஒரு நிறுவனத்தின் வெற்றி, அதில் உழைத்தவர்களின் வெற்றியாகவும் மாற வேண்டும் என்பதற்கு SpaceX சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவில் பல பெரிய நிறுவனங்கள் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் லாபம் ஈட்டுகின்றன. ஆனால் அந்த வளர்ச்சியின் பலன் அனைத்து ஊழியர்களையும் சமமாக சென்றடைகிறதா என்ற கேள்வி எழுகிறது. எலான் மஸ்கின் அணுகுமுறை, &quot;ஊழியர்கள் செலவு அல்ல; நிறுவனத்தின் உண்மையான சொத்து&quot; என்பதை உலகுக்கு மீண்டும் நினைவூட்டியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சம்பளம் வாங்கி வாழ்க்கையை நடத்துவது ஒரு விஷயம். அதே வேலையால் கோடிக்கணக்கான சொத்து சேர்ப்பது வேறு விஷயம். SpaceX ஊழியர்களின் வெற்றிக் கதைகளைப் பார்த்த பிறகு, சமூக வலைதளங்களில் பலரும் நகைச்சுவையாக, &quot;எலான் மஸ்க் கம்பெனியில் வேலை இருந்தா சொல்லுங்கப்பா!&quot; என்று பதிவிட்டு வருகின்றனர். அந்த ஒரு வரி நகைச்சுவையாக இருந்தாலும், அதன் பின்னால் ஒரு பெரிய உண்மை இருக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எலான் மஸ்க் இன்று உலகின் முதல் ட்ரில்லியனராக உயர்ந்திருக்கலாம். ஆனால் அவரை மற்ற தொழிலதிபர்களிடமிருந்து வேறுபடுத்தியது அவரது சொத்து மதிப்பு மட்டுமல்ல; தனது வெற்றியை ஆயிரக்கணக்கான ஊழியர்களுடனும் பகிர்ந்து கொண்ட மனப்பான்மையே. ஒரு நல்ல முதலாளி, லாபத்தை மட்டும் சம்பாதிப்பதில்லை; தன்னுடன் உழைப்பவர்களின் வாழ்க்கையையும் உயர்த்துவார் என்பதை எலான் மஸ்க் உலகிற்கு நிரூபித்துள்ளார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/world/elon-musk-not-just-salary-he-gives-company-shares-too-how-thousands-of-employees-became-millionaires-geu0mdg"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Interesting Facts: அமெரிக்காவில் கரண்ட் ஒயர்கள் ஏன் வெளியில் தெரிவதில்லை? இந்தியாவில் இது சாத்தியமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/interesting-facts-underground-power-lines-in-usa-vs-india-explained-gh996l5</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/interesting-facts-underground-power-lines-in-usa-vs-india-explained-gh996l5</guid>
            <pubDate>Sun, 21 Jun 2026 13:22:30 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Interesting Facts: அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் பெரும்பாலான கரண்ட் கம்பங்கள், ஒயர்கள் வெளியே தெரிவதில்லை. அவை பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலும் இதுபோல செய்வது சாத்தியம்தானா? அதிலுள்ள சவால்கள் என்னென்ன? பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kvmhz0ansaxsc3ssfh974d1t,imgname-underground-power-lines-in-usa-vs-india--1782027616597.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Interesting Facts: அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் பெரும்பாலான கரண்ட் கம்பங்கள், ஒயர்கள் வெளியே தெரிவதில்லை. அவை பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலும் இதுபோல செய்வது சாத்தியம்தானா? அதிலுள்ள சவால்கள் என்னென்ன? பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அமெரிக்கா, UK போன்ற வளர்ந்த நாடுகளில் பெரும்பாலான மின்சார ஒயர்கள் பூமிக்கு அடியில்தான் இருக்கும். இதனால் தெருக்களில் கம்பங்களோ, ஆபத்தான முறையில் தொங்கும் ஒயர்களோ இருக்காது. முக்கிய நகரங்கள், வணிகப் பகுதிகள் மற்றும் நவீன புறநகர்ப் பகுதிகளில் இந்த முறையை கொண்டுவந்துவிட்டார்கள். இன்னும் சில இடங்களில் கம்பங்கள் இருந்தாலும், அந்த மின்சார லைன்களையும் ஒரு சிஸ்டமேட்டிக்கான முறையில் பராமரிக்கிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அமெரிக்காவில் சுமார் 50% மின்சார லைன்கள் பூமிக்கு அடியில்தான் செல்கின்றன. இதனால், புயல், பலத்த காற்றுக்கு மின்கம்பங்கள் சாயும் அபாயம் இல்லை. நகரமும் பார்க்க அழகாகவும், சுத்தமாகவும் இருக்கும். பராமரிப்பு செலவும் குறைவு. ஆரம்பகட்ட செலவு அதிகம் என்றாலும், நீண்ட காலத்திற்கு இதுவே லாபகரமானது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவிலும் அண்டர்கிரவுண்ட் கேபிளிங் சாத்தியம்தான். பல நகரங்களில் இந்த மாற்றம் நடந்து வருகிறது. ஆனால், அமெரிக்காவைப் போல கிராமங்கள் வரை இதைச் செய்வது சவாலானது. ஏற்கெனவே இருக்கும் குறுகிய தெருக்கள், அதிக மக்கள் தொகை, தண்ணீர் மற்றும் கழிவுநீர்க் குழாய்களால், புதியதாகத் தோண்டி கேபிள் பதிப்பது கடினம். ஆனால், அகலமான பகுதிகளில் இது சாத்தியமே, நடந்துகொண்டும் இருக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அமெரிக்காவில் நிலப்பரப்பு அதிகம், மக்கள் தொகை குறைவு. ஆனால், இந்தியாவில் மக்கள் தொகை மிக அதிகம். இங்கு முழுமையாக அண்டர்கிரவுண்ட் சிஸ்டம் கொண்டுவர, திட்டமிடல் அவசியம். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் நகரங்களை உருவாக்கும்போதே இந்தத் திட்டத்துடன் உருவாக்கின. ஆனால், ஏற்கெனவே உருவான இந்திய நகரங்களில் இதைச் செய்வது பெரும் சவால். அதனால்தான் புதிதாக உருவாகும் நகரப் பகுதிகளில் இதைச் செய்கிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சாதாரண ஒயர்களை விட, அண்டர்கிரவுண்ட் கேபிளிங் செய்ய 4 முதல் 10 மடங்கு வரை அதிக செலவாகும். ஆனாலும், பாதுகாப்பு மற்றும் நகர அழகிற்காக இந்திய அரசும் இதை ஊக்குவிக்கிறது. குஜராத்தில் 'Wire-Free City Mission' திட்டத்தின் கீழ் இது செயல்படுத்தப்படுகிறது. பெங்களூரு, விசாகப்பட்டினம் போன்ற நகரங்களிலும் இந்தத் திட்டம் ஓரளவிற்கு வெற்றி பெற்றுள்ளது. ஹைதராபாத்திலும் திட்டங்கள் தயாராகி வருகின்றன.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/interesting-facts-underground-power-lines-in-usa-vs-india-explained-gh996l5"/>
        </item>
        <item>
            <title><![CDATA[தரை மட்டமான கட்டிடங்கள்.! காணாமல் போன வீடுகள்.! இயற்கையின் கோரதாண்டவத்தால் காணாமல் போன வெனிசுலா.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/world/venezuela-a-landscape-erased-by-natural-disaster-videoshow-gygw3uw</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/world/venezuela-a-landscape-erased-by-natural-disaster-videoshow-gygw3uw</guid>
            <pubDate>Thu, 25 Jun 2026 14:01:58 +0530</pubDate>
            <description><![CDATA[]]></description>
            <media:content url="https://www.youtube.com/embed/HevJM3yQlf8" medium="video" height="350" width="560"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஒரே சில நொடிகள்... ஆனால் அந்த சில நொடிகளே ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றிவிட்டன.* தென் அமெரிக்க நாடான வெனிசுலாவை தாக்கிய சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கம், நகரங்களையே சிதைத்து, மக்கள் மனதில் நீங்காத பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலைகள் பிளந்தன, கட்டிடங்கள் தரைமட்டமானன, ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றன.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/world/venezuela-a-landscape-erased-by-natural-disaster-videoshow-gygw3uw"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Social Media Ban: இரவு நேர சமூக ஊடக ஊரடங்கு.! இரவு 10 மணிக்கு மேல் இதையெல்லாம் செய்ய முடியாது.! UK அரசு எடுத்த முக்கிய முடிவு.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/world/uk-social-media-ban-uk-government-plans-social-media-restrictions-for-children-under-16-explained-ldc7mqu</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/world/uk-social-media-ban-uk-government-plans-social-media-restrictions-for-children-under-16-explained-ldc7mqu</guid>
            <pubDate>Mon, 15 Jun 2026 15:55:19 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;UK Social Media Ban: 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை விதிக்க உள்ளதாக பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. இந்த விதியில் எந்தெந்த செயலிகள் அடங்கும்? YouTube, Instagram, X போன்ற தளங்களும் முடக்கப்படுமா? என்ற முழு விவரம் உள்ளே.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kv5cwvhezws7pqwqc3t3j3em,imgname-social-media-ban-1781518986798.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;UK Social Media Ban: 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை விதிக்க உள்ளதாக பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. இந்த விதியில் எந்தெந்த செயலிகள் அடங்கும்? YouTube, Instagram, X போன்ற தளங்களும் முடக்கப்படுமா? என்ற முழு விவரம் உள்ளே.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இப்போதெல்லாம் குழந்தைகளை ஸ்மார்ட்போன் மற்றும் ரீல்ஸ் பழக்கத்தில் இருந்து பெற்றோர்களால் மீட்கவே முடியவில்லை. ஆனால், குழந்தைகளின் இந்த பழக்கத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க, UK அரசாங்கம் மிகவும் கடுமையான மற்றும் வரலாற்று சிறப்புமிக்க ஒரு முடிவை எடுத்துள்ளது. இந்த புதிய விதிமுறை அமலுக்கு வந்தால், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ரீல்ஸ் பார்க்கவோ, ஸ்க்ரோலிங் செய்யவோ முடியாது. அதுமட்டுமல்லாமல், 'சமூக ஊடக ஊரடங்கு' (Social Media Curfew) கொண்டுவரவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதாவது, இரவு நேரங்களில் குழந்தைகளின் போன்களில் இந்த செயலிகள் வேலை செய்யாது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குழந்தைகளின் நலன் மற்றும் அவர்களின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக பிரிட்டன் (UK) அரசு இந்த பெரிய நடவடிக்கையை எடுத்துள்ளது. பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் (Keir Starmer) கூறுகையில், &quot;பழைய முறை முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது. குழந்தைகளைப் பாதுகாக்க இந்த கடுமையான முடிவு மிகவும் அவசியம்&quot; என்று கூறியுள்ளார். 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகங்களை முழுமையாகத் தடை செய்த உலகின் நான்காவது நாடாக பிரிட்டன் மாறியுள்ளது. இதற்கு முன்பு ஆஸ்திரேலியா, இந்தோனேசியா மற்றும் மலேசியா போன்ற நாடுகளும் இதுபோன்ற கடுமையான விதிகளை அமல்படுத்தியுள்ளன. அறிக்கைகளின்படி, இந்த வரம்பில் 10 பெரிய தளங்கள் வரலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;ol&gt; &lt;li&gt;இன்ஸ்டாகிராம் (Instagram)&lt;/li&gt; &lt;li&gt;யூடியூப் (YouTube)&lt;/li&gt; &lt;li&gt;டிக்டாக் (TikTok)&lt;/li&gt; &lt;li&gt;ஸ்னாப்சாட் (Snapchat)&lt;/li&gt; &lt;li&gt;Reddit&lt;/li&gt; &lt;li&gt;Twitch&lt;/li&gt; &lt;li&gt;X (Twitter)&lt;/li&gt; &lt;li&gt;Threads&lt;/li&gt; &lt;li&gt;பேஸ்புக் (Facebook)&lt;/li&gt; &lt;li&gt;Kick&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;img&gt;&lt;p&gt;பிரிட்டன் அரசு செயலிகளைத் தடை செய்வதோடு நிறுத்தவில்லை. இந்தத் திட்டம் ஆஸ்திரேலியாவின் திட்டத்தை விட இரண்டு படிகள் முன்னேறியுள்ளது. இதன் கீழ், டீன் ஏஜ் வயதினருக்கு (Older Teenagers) இரவு நேரங்களில் சமூக ஊடகங்களுக்கு 'ஊரடங்கு' விதிக்கப்பட உள்ளது. இதனால், குழந்தைகள் இரவில் விழித்திருந்து அரட்டை அடிப்பது அல்லது ரீல்ஸ் பார்ப்பது தடுக்கப்படும். இது தவிர, AI சாட்பாட்களின் பயன்பாட்டிற்கும் கடுமையான வரம்புகள் விதிக்கப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தக் கடுமையான சட்டத்தை உருவாக்குவதற்கு முன்பு, அரசு 3 மாதங்கள் ஒரு பெரிய கணக்கெடுப்பை நடத்தியது. இதில் சுமார் 1 லட்சத்து 16 ஆயிரம் பேர் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். இந்தக் கணக்கெடுப்பின் முடிவுகள் அதிர்ச்சியூட்டுவதாகவும், நம் கண்களைத் திறப்பதாகவும் இருந்தன. 90% பெற்றோர்கள் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடையை வெளிப்படையாக ஆதரித்தனர். 83% க்கும் அதிகமான மக்கள், சமூக ஊடகங்களின் நன்மைகளை விட அதன் தீமைகளும் ஆபத்துகளும் அதிகம் என்று நம்பினர். ரீல்ஸ்களை தொடர்ந்து கீழே தள்ளிக்கொண்டே போகும் 'இன்ஃபினிட் ஸ்க்ரோல்' (infinite scroll) மற்றும் ஒரு வீடியோ முடிந்ததும் அடுத்த வீடியோ தானாகவே இயங்கும் 'ஆட்டோபிளே' (autoplay) போன்ற அம்சங்கள் குழந்தைகளை போனுக்கு அடிமையாக்குகின்றன என்று பெற்றோர்கள் கூறுகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;புதிய விதிகளின்படி, சமூக ஊடகங்கள் மட்டுமல்ல, ஆன்லைன் கேமிங் செயலிகளுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்படும். இனி குழந்தைகள் கேம் விளையாடும்போது எந்தவொரு அந்நியரிடமும் (Stranger) பேசவோ அல்லது அரட்டை அடிக்கவோ முடியாது. இதனுடன், பாதுகாப்பானதாகக் கருதப்படும் தளங்களில் கூட லைவ்-ஸ்ட்ரீமிங் செய்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கும். இதன் மூலம் குழந்தைகளை ஆன்லைன் சுரண்டல் மற்றும் ஆபாசத்தில் இருந்து முழுமையாகப் பாதுகாக்க முடியும். இருப்பினும், சில சமூக ஆர்வலர்கள் இத்தகைய கடுமையான கட்டுப்பாடுகளால் குழந்தைகளுக்கு புதிய சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்று கூறுகின்றனர். ஆனால், குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதும், குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதும்தான் தங்களின் முதல் முன்னுரிமை என்று அரசாங்கம் தெளிவாகக் கூறியுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/world/uk-social-media-ban-uk-government-plans-social-media-restrictions-for-children-under-16-explained-ldc7mqu"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Venezuela Earthquake: அடுத்தடுத்து 2 சக்திவாய்ந்த நிலநடுக்கம்! வெனிசுலா உருக்குலைந்தது, 164 பேர் பலி]]></title>
            <link>https://tamil.asianetnews.com/world/venezuela-rocked-by-double-earthquake-death-toll-reaches-164-articleshow-lptbggu</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/world/venezuela-rocked-by-double-earthquake-death-toll-reaches-164-articleshow-lptbggu</guid>
            <pubDate>Thu, 25 Jun 2026 17:13:40 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் நாடு உருக்குலைந்துள்ளது. இந்த கோர சம்பவத்தில் இதுவரை 164 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 974 பேர் காயமடைந்துள்ளனர். புதன்கிழமை இரவு இந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. முதலில் 32 பேர் மட்டுமே இறந்ததாக தகவல் வெளியானது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kvz82k78ndv12xvd01gk4t99,imgname--earthquake-in-caracas-1782386347240.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் நாடு உருக்குலைந்துள்ளது. இந்த கோர சம்பவத்தில் இதுவரை 164 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 974 பேர் காயமடைந்துள்ளனர். புதன்கிழமை இரவு இந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. முதலில் 32 பேர் மட்டுமே இறந்ததாக தகவல் வெளியானது.&lt;/p&gt;&lt;p&gt;ஆனால், இடிந்து விழுந்த கட்டிடங்களுக்குள் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடப்பதாலும், பாதிக்கப்பட்ட பல இடங்களுக்கு மீட்புக் குழுக்கள் இன்னும் செல்ல முடியாததாலும் பலி எண்ணிக்கை இன்னும் உயரக்கூடும் என தற்காலிக அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் கூறியுள்ளார். கடந்த 100 ஆண்டுகளில் வெனிசுலாவைத் தாக்கிய மிக மோசமான நிலநடுக்கம் இதுவாகும். இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள், வெனிசுலா தலைநகர் காரகாஸிலிருந்து சுமார் 1050 மைல் தொலைவில் உள்ள பிரேசிலின் அமேசான் பகுதி வரை உணரப்பட்டது.&lt;/p&gt;&lt;p&gt;நிலநடுக்கத்தால் நாட்டின் முக்கிய விமான நிலையமான சிமோன் பொலிவார் சர்வதேச விமான நிலையம் கடுமையாக சேதமடைந்துள்ளது. இதனால், விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பள்ளிகளுக்கு பல நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சில பள்ளிகள் தற்காலிக முகாம்களாகவும், நிவாரணப் பொருட்கள் பெறும் மையங்களாகவும் செயல்படும் என கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;கடற்கரை மாகாணமான ஃபால்கானில் 32 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்டு நான்கு மணி நேரத்திற்குப் பிறகும், 15 பேர் இடிபாடுகளில் சிக்கியிருந்ததாக ஆளுநர் விக்டர் கிளார்க் தெரிவித்தார்.&lt;/p&gt;&lt;p&gt;அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) அறிக்கையின்படி, முதல் நிலநடுக்கம் மொன்டால்பான் நகருக்கு வடமேற்கே 17.6 மைல் தொலைவில், 8.2 மைல் ஆழத்தில் ஏற்பட்டது. முதலில் இது ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவானாலும், பின்னர் 7.2 ஆக திருத்தப்பட்டது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு வெறும் 39 வினாடிகளுக்குப் பிறகு, அதே மொன்டால்பான் நகருக்கு வடமேற்கே 21 மைல் தொலைவில் 7.5 ரிக்டர் அளவில் இரண்டாவது சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ஒரு இரட்டை நிலநடுக்கம் என்றும், 7.5 ரிக்டர் அளவிலான முக்கிய நிலநடுக்கத்திற்கு முந்தைய ஒரு அதிர்வுதான் முதல் நிலநடுக்கம் என்றும் விஞ்ஞானிகள் விளக்கியுள்ளனர்.&lt;/p&gt;&lt;p&gt;இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, பியூர்டோ ரிகோ மற்றும் விர்ஜின் தீவுகளுக்கு அமெரிக்காவின் சுனாமி எச்சரிக்கை அமைப்பு எச்சரிக்கை விடுத்தது. ஆனால், பின்னர் அந்த எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.&lt;/p&gt;&lt;p&gt;தலைநகர் காரகாஸில், மக்கள் பல மணி நேரம் வீதிகளிலேயே தஞ்சம் புகுந்தனர். கட்டிட இடிபாடுகள் மற்றும் சாய்ந்த மின்கம்பங்களால் சாலைகள் முடங்கின. நகரின் பல பகுதிகளில் மின்சாரம் மற்றும் மொபைல் நெட்வொர்க் ಸಂಪೂರ್ಣமாக துண்டிக்கப்பட்டது. கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கியதால், மக்கள் பீதியில் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தனர். காரகாஸின் அல்தமிரா பகுதியில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தது நிலைமையை மோசமாக்கியுள்ளதாக உள்துறை அமைச்சர் டியோஸ்டாடோ காபெல்லோ கூறினார். மேலும், தொடர் அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், மக்கள் வீடுகளுக்கு வெளியே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும், அனைவரும் ஒருவருக்கொருவர் தொடர்புகொண்டு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் அரசு தொலைக்காட்சி மூலம் வேண்டுகோள் விடுத்தார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/world/venezuela-rocked-by-double-earthquake-death-toll-reaches-164-articleshow-lptbggu"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Venezuela Earthquake: தரை மட்டமான கட்டிடங்கள்.! காணாமல் போன வீடுகள்.! இயற்கையின் கோரதாண்டவத்தால் காணாமல் போன வெனிசுலா.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/world/venezuela-earthquake-buildings-reduced-to-rubble-homes-vanish-as-powerful-twin-quakes-devastate-the-nation-oha5pax</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/world/venezuela-earthquake-buildings-reduced-to-rubble-homes-vanish-as-powerful-twin-quakes-devastate-the-nation-oha5pax</guid>
            <pubDate>Thu, 25 Jun 2026 12:31:13 +0530</pubDate>
            <description><![CDATA[தென் அமெரிக்க நாடான வெனிசுலாவை தாக்கிய சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கம், நகரங்களை சிதைத்து பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்க, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kvyp2phhgg84zp0vbngbyh32,imgname-4-1782367476273.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[தென் அமெரிக்க நாடான வெனிசுலாவை தாக்கிய சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கம், நகரங்களை சிதைத்து பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்க, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.&lt;img&gt;&lt;p&gt;ஒரே சில நொடிகள்... ஆனால் அந்த சில நொடிகளே ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றிவிட்டன. தென் அமெரிக்க நாடான வெனிசுலாவை தாக்கிய சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கம், நகரங்களையே சிதைத்து, மக்கள் மனதில் நீங்காத பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலைகள் பிளந்தன, கட்டிடங்கள் தரைமட்டமானன, ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வெனிசுலாவில் முதலில் 7.2 ரிக்டர் அளவிலும், அதனைத் தொடர்ந்து 7.5 ரிக்டர் அளவிலும் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இந்த இரட்டை அதிர்வால் மக்கள் என்ன நடக்கிறது என்று புரிந்துகொள்வதற்குள் பல கட்டிடங்கள் சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தன. சில பகுதிகளில் முழு குடியிருப்பு தெருக்களே இடிபாடுகளாக மாறியுள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நிலநடுக்கத்தின் கொடூரத்தை வெளிப்படுத்தும் வகையில், பல குடும்பங்கள் வாழ்ந்த வீடுகள் இருந்த இடத்தில் தற்போது கான்கிரீட் குவியல்கள் மட்டுமே காணப்படுகின்றன. தங்களது உறவினர்களை தேடி மக்கள் இடிபாடுகளை அகற்றும் காட்சிகள் நெஞ்சை உருக்கும் வகையில் உள்ளன. பலர் இன்னும் காணாமல் போயிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதால், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;திடீரென பூமி அதிர்ந்ததும் மக்கள் அலறியடித்தபடி வீடுகளை விட்டு தெருக்களுக்கு ஓடினர். பலர் குழந்தைகளை கையில் தூக்கிக்கொண்டும், முதியோர்களை அழைத்துக்கொண்டும் உயிரைக் காப்பாற்ற ஓடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. சிலர் கட்டிடங்கள் இடியும் முன் சில விநாடிகளில் மட்டுமே வெளியேறி உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பல பகுதிகளில் மின்கம்பங்கள் சரிந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட்டதால், உறவினர்களின் நிலையை அறிய முடியாமல் ஆயிரக்கணக்கான மக்கள் தவித்து வருகின்றனர். முக்கிய சாலைகளில் ஏற்பட்ட சேதம் காரணமாக மீட்புக் குழுக்கள் சில பகுதிகளை அடைவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பேரழிவைத் தொடர்ந்து வெனிசுலா அரசு அவசரநிலையை அறிவித்துள்ளது. ராணுவம், தீயணைப்பு துறை மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் இணைந்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதுவரை வெளியான அதிகாரப்பூர்வ தகவலின்படி பலர் உயிரிழந்துள்ளதுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். இருப்பினும், இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து ஏற்பட்டு வரும் பின்அதிர்வுகள் (Aftershocks) காரணமாக மீட்புப் பணிகளும் மிகவும் சவாலானதாக மாறியுள்ளது. கிட்டத்தட்ட 1 லட்சம் பேரை காணவில்லை என கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மனிதன் எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும், இயற்கையின் முன் அவன் எவ்வளவு சிறியவன் என்பதை இந்த பேரழிவு மீண்டும் உலகிற்கு உணர்த்தியுள்ளது. ஒரே சில நொடிகளில் நகரங்களின் தோற்றமே மாறி, ஆயிரக்கணக்கான மக்களின் கனவுகளும் வாழ்க்கையும் சிதைந்துள்ளன. வெனிசுலா மக்கள் இந்த பேரிடரில் இருந்து விரைவில் மீண்டு வர உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/world/venezuela-earthquake-buildings-reduced-to-rubble-homes-vanish-as-powerful-twin-quakes-devastate-the-nation-oha5pax"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Number 13: விமானங்களில் 13-ம் நம்பர் சீட் ஏன் இல்லை? அந்த எண் அவ்வளவு துரதிர்ஷ்டமானதா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/why-many-airplanes-skip-seat-number-13-the-superstition-and-design-reasons-behind-missing-row-13-explained-q4p546q</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/why-many-airplanes-skip-seat-number-13-the-superstition-and-design-reasons-behind-missing-row-13-explained-q4p546q</guid>
            <pubDate>Sun, 14 Jun 2026 11:03:55 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Why is There No Row 13 on Planes: விமானத்தில் பயணம் செய்யும்போது சீட் நம்பரை கவனித்திருக்கிறீர்களா? 12-க்கு அப்புறம் நேராக 14-வது எண் தான் இருக்கும். இதற்கு என்ன காரணம் தெரியுமா? 13-ம் எண்ணை ஏன் தவிர்க்கிறார்கள்? என இங்கு விரிவாகப் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kv2947hpabzhsbbq15jw8aqh,imgname-why-is-there-no-row-13-on-planes-1781414370870.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Why is There No Row 13 on Planes: விமானத்தில் பயணம் செய்யும்போது சீட் நம்பரை கவனித்திருக்கிறீர்களா? 12-க்கு அப்புறம் நேராக 14-வது எண் தான் இருக்கும். இதற்கு என்ன காரணம் தெரியுமா? 13-ம் எண்ணை ஏன் தவிர்க்கிறார்கள்? என இங்கு விரிவாகப் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அடிக்கடி விமானத்தில் பயணம் செய்பவர்கள், 12-வது சீட் நம்பருக்குப் பிறகு நேரடியாக 14-வது சீட் நம்பர் வருவதைக் கவனித்திருப்பார்கள். இதற்குப் பின்னால் ஒரு வலுவான காரணம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. சிலர் இதை மூடநம்பிக்கை என்று சொன்னாலும், பலர் 13-ம் எண்ணை ஒரு கெட்ட சகுனமாகவே பார்க்கிறார்கள். விமானங்களில் ஏன் 13-ம் எண் வரிசை இல்லை என்பதைப் பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்: &amp;nbsp;&lt;/strong&gt;Facts: அமெரிக்க வீடுகள்ல ஏன் மொட்டை மாடில தண்ணி டேங்க் இல்ல? என்ன காரணம் தெரியுமா?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உலகில் பல பகுதிகளில் 13-ம் எண்ணைப் பற்றி ஒரு நம்பிக்கை இருக்கிறது. மேற்கத்திய கலாச்சாரத்தில் 13-ம் எண்ணை துரதிர்ஷ்டவசமானதாகக் கருதுகிறார்கள். மனநல மருத்துவத்தில் 13-ஆம் எண்ணைக் கண்டு பயப்படுவதற்கு 'ட்ரைஸ்கைடோஃபோபியா' (Triskaidekaphobia) என்று பெயர். இந்த எண் மேற்கத்திய நாடுகளில் துரதிஷ்ட எண்ணாக கருதப்படுகிறது விமான பயணங்கள் ஏற்கனவே பலருக்கும் ஒருவித பதற்றத்தை ஏற்படுத்துபவை என்பதால், 13ஆவது இருக்கையில் அமர்ந்து பயணிப்பது பயணிகளின் பயத்தை இன்னும் அதிகமாக்கி விடக்கூடாது என்பதற்காக விமான நிறுவனங்கள் இந்த எண்ணை தவிர்க்கின்றன.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்: &amp;nbsp;&lt;/strong&gt;Facts: ரயில் தண்டவாளத்தின் நடுவில் ஜல்லிக்கற்கள் ஏன் கொட்டப்படுது? இதன் பின்னால் உள்ள அறிவியல் தெரியுமா?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;13 ஆம் எண்ணை தவிர்ப்பதற்குப் பின்னால் சில மத காரணங்களும் உள்ளன. இதன் வேர்கள் கிறிஸ்தவ பாரம்பரியத்தில் உள்ளன. இயேசு கிறிஸ்து தனது சீடர்களுடன் அமர்ந்து சாப்பிட்ட கடைசி விருந்தான 'தி லாஸ்ட் சப்பர்' நிகழ்வில் 13-வதாகக் கலந்துகொண்ட ஜூதாஸ் என்ற நபர்தான் இயேசுவைக் காட்டிக் கொடுத்தார். அதற்கு அடுத்த நாள் வெள்ளிக்கிழமை இயேசு சிலுவையில் அறையப்பட்டார். இதனால் 'Friday the 13th' மற்றும் 13 என்ற எண் துரதிர்ஷ்டத்தின் அடையாளமாக மாறியது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்: &amp;nbsp;&amp;nbsp;&lt;/strong&gt;Train Speed : இரவில் ரயில் ஏன் ஸ்பீடாக போகுது தெரியுமா? பின்னணியில் உள்ள சுவாரஸ்யமான ரகசியங்கள்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விமானப் பயணம் பலருக்கும் ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தும். தரையிறங்கும் வரை ஒருவித பயத்துடனே இருப்பார்கள். இந்த நிலையில், 13-ம் எண் மீது எத்தனை பயணிகளுக்கு பயம் இருக்கும் என்று தெரியாது. அதனால், அந்த எண்ணை நீக்கிவிட்டால் யாருக்கும் பயம் இருக்காது என விமான நிறுவனங்கள் முடிவு செய்தன. ஒருவேளை 13-ம் எண் சீட் கொடுத்தாலும், சிலர் அதில் உட்கார மறுக்கலாம். அப்போது அந்த வரிசையை காலியாக விட வேண்டியிருக்கும். இதற்குப் பதிலாக அந்த வரிசையையே நீக்கிவிடுவது நல்லது என விமான நிறுவனங்கள் முடிவெடுத்தன.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்: &amp;nbsp;&lt;/strong&gt;Train: ரயில் என்ஜின் கண்ணாடியில் ஏன் இரும்பு வலை பொருத்துகிறார்கள் தெரியுமா? பொருளு சிறுசு ஆனா பண்ற வேலை பெருசு.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;13-ம் எண் மட்டுமல்ல, இத்தாலி மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில் மக்கள் 17-ம் எண்ணையும் துரதிர்ஷ்டவசமானதாகக் கருதுகின்றனர். ஏனென்றால், ரோமன் எழுத்துக்களில் 17 என்ற எண்ணுக்கு லத்தீன் மொழியில் &lsquo;நான் என் வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்துவிட்டேன்&rsquo; என்று அர்த்தம். இது மரணத்தைக் குறிப்பதாக நினைப்பதால், அந்த எண்ணையும் அவர்கள் துரதிர்ஷ்டவசமானதாகப் பார்க்கிறார்கள்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/why-many-airplanes-skip-seat-number-13-the-superstition-and-design-reasons-behind-missing-row-13-explained-q4p546q"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Aral Sea: 60 ஆண்டுகளுக்கு முன் கடல், இன்று பாலைவனம்..! மனிதன் செய்த 'அந்த' ஒரு தவறால் வற்றிப்போன கடலின் அதிர்ச்சி வரலாறு.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/world/aral-sea-disaster-how-human-mistakes-turned-a-vast-sea-into-a-desert-in-central-asia-r7zq2yt</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/world/aral-sea-disaster-how-human-mistakes-turned-a-vast-sea-into-a-desert-in-central-asia-r7zq2yt</guid>
            <pubDate>Sat, 20 Jun 2026 12:51:54 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Aral Sea Disaster: உலக வரலாற்றில் மிக மோசமான நிகழ்வு என்பது கடல் நீர் வற்றுவதுதான். அப்படி ஒரு நிகழ்வு மத்திய ஆசியாவில் நடந்துள்ளது. அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kvhxr5rraya1a4s8fswfqawc,imgname-aral-sea-disaster---1-1781939312408.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Aral Sea Disaster: உலக வரலாற்றில் மிக மோசமான நிகழ்வு என்பது கடல் நீர் வற்றுவதுதான். அப்படி ஒரு நிகழ்வு மத்திய ஆசியாவில் நடந்துள்ளது. அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மனித வரலாற்றின் மிக மோசமான சுற்றுச்சூழல் பேரழிவுகளில் ஒன்றான ஆரல் கடல் வறண்ட கதையை இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம். மத்திய ஆசியாவில் கஜகஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே அமைந்திருந்த ஆரல் கடல், ஒரு காலத்தில் உலகில் நான்காவது பெரிய உள்நாட்டு கடலாக இருந்தது. ஆனால் தற்போது அது வெறும் உப்பு காற்றும், உடைந்த கப்பல்களையும் கொண்ட ஒரு பெரிய பாலைவனமாக மாறிவிட்டது. இந்த பேராபத்தின் பின்னணி மற்றும் முக்கிய காரணங்கள் குறித்து இங்கு காணலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;1960-களுக்கு முன்பு வரை ஆரல் கடல் சுமார் 68,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டு பெருங்கடலாக காட்சியளித்தது. இங்கு ஆண்டுக்கு பல்லாயிரக்கணக்கான டன் மீன்கள் பிடிக்கப்பட்டன. இது உள்ளூர் மக்களின் வாழ்வாதாரமாகவும், கஜகஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவும் விளங்கியது. மேலும் கடலை சுற்றியுள்ள பிற பகுதிகளின் வெப்பநிலையை சமமாக வைத்திருக்க இந்த கடல் உதவியது. கோடையில் குளிர்ச்சியையும், குளிர்காலத்தில் இதமான சூழ்நிலையையும் தந்தது. அமு தர்யா மற்றும் சிர் தர்யா ஆகிய இரு பெரும் நதிகள், பனி மலைகளில் இருந்து உருகி ஓடி வந்து இக்கடலை நிரப்பிக் கொண்டே இருந்தன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;60 ஆண்டுகளுக்கு முன்பு கடலாக இருந்த இந்த இடம் தற்போது பற்றி பாலைவனமாக காட்சியளிக்கிறது. இது முழுக்க முழுக்க மனிதர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு சுற்றுச்சூழல் அத்து மீறலாகும். 1960 ஆம் ஆண்டுகளில் சோவியத் ஒன்றியம் மத்திய ஆசிய பகுதியை உலகில் மிகப்பெரிய பருத்தி உற்பத்தி மையமாக மாற்ற முடிவு செய்தது. பருத்தி பயிரிடுவதற்கு அதிகப்படியான தண்ணீர் தேவைப்பட்டது. எனவே ஆரல் கடலுக்குச் செல்லும் நீர் ஆதாரங்களான அமு தர்யா மற்றும் சிர் தர்யா ஆகிய ஜீவநதிகளின் பாதைகளை சோவியத் பொறியாளர்கள் அணை மற்றும் கால்வாய்கள் மூலம் திசை திருப்பினர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த இரண்டு நதிகளின் நீரானது உஸ்பெகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் பகுதிகளின் வறண்ட நிலங்களில் பருத்தி மற்றும் நெல் விவசாயத்திற்காக பாய்ச்சப்பட்டது. அவசர அவசரமாக வெட்டப்பட்ட பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் நீளம் கொண்ட கால்வாய்கள் சரியாக பூசப்படவில்லை. இதனால் நதிகளில் இருந்து திருப்பப்பட்ட நீரானது 30% முதல் 75% வரை கடலை சென்று சேர்வதற்கு முன்னரே வறண்ட மணலால் உறிஞ்சப்பட்டு வீணானது. கடலுக்கு வர வேண்டிய நீர் முழுமையாக நின்றதால் ஆரல் கடல் தன்னுடைய நீர் இருப்பை வேகமாக இழந்து ஆவியாகத் தொடங்கியது. 1980ஆம் ஆண்டுகளுக்குள் கடல் இரண்டாகப் பிரிந்து சிறு சிறு குளங்களாக சுருங்கியது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அமு தர்யா மற்றும் சிர் தர்யா ஆகிய நதிகளின் நீர்வரத்து முழுமையாக நின்று விட்டதால் ஆரல் கடலின் 90% நீர் பரப்பளவு முற்றிலும் மறைந்து விட்டது. தற்போது அங்கு உப்புக் கழிவுகளும், வறண்ட நிலமும் எஞ்சி இருக்கிறது. கடல் வற்றிய இடத்தில் 60,000 சதுர கிலோ மீட்டருக்கும் மேலாக பாலைவனம் உருவாகியுள்ளது. ஒரு காலத்தில் அலைகளின் மீது மிதந்த பிரம்மாண்ட தோணிகள் மற்றும் கப்பல்கள் இன்று வறண்ட மணலில் துருப்பிடித்து காட்சியளிக்கின்றன. இது பார்ப்போரின் நெஞ்சங்களை எல்லாம் உலுக்குகிறது. கடல் வற்றியதால் அந்த பகுதி மக்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கடல் நீர் வற்றியதால் அதன் தரைப்பகுதியில் டன் கணக்கில் உப்பு மற்றும் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகள் தேங்கி கிடக்கின்றன. பலத்த காற்று வீசும் பொழுது இந்த நச்சு படிமங்கள் காற்றில் கலந்து உப்பு புயலாக மாறி, 100 கிலோ மீட்டர் தொலைவிற்கு பரவுகின்றன. இதனால் இந்த பகுதியில் வாழும் மக்களுக்கு தொண்டை புற்றுநோய், சுவாசக் கோளாறுகள், சிறுநீரகக் கோளாறுகள் ரத்த சோகை போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. கடலின் ஈரப்பதம் இல்லாததால் இப்பகுதியின் காலநிலை கடுமையாக மாறி உள்ளது. கோடை காலம் கடுமையான வெப்பத்துடனும், குளிர் காலம் உறை பனியுடனுன் காணப்படுகிறது. விவசாயம் மேற்கொள்ள முடியாதபடி நிலங்கள் உவர்ப்புத் தன்மையாக மாறிவிட்டன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆரல் கடலை முழுமையாக மீட்டெடுப்பது சாத்தியமில்லாத ஒன்று. இருந்தாலும் கஜகஸ்தான் அரசு உலக வங்கியின் உதவியோடு கோக் ஆரல் அணைத் திட்டத்தை செயல்படுத்தியது. இதன் மூலம் வடக்கு ஆரல் கடல் பகுதிக்கு வரும் சிர் தர்யா நதியின் நீர் சேமிக்கப்பட்டு அந்த பகுதியில் நீர்மட்டம் ஓரளவு உயர்ந்துள்ளது. இதனால் அங்கு மீன்பிடித் தொழில் மெதுவாக தொடங்கியுள்ளது. இருப்பினும் தெற்கு ஆடல் கடல் (உஸ்பெகிஸ்தான் பகுதி) மீட்டெடுக்க முடியாதபடி முற்றிலும் அழிந்துவிட்டது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆரல் கடலின் கதை இயற்கையின் சமநிலையை, மனிதன் தன் சுயநலத்திற்காக மாற்ற நினைத்தால் என்ன நடக்கும் என்பதை உலகிற்கு உணர்த்தும் ஒரு எச்சரிக்கை மணியாகும். தண்ணீரை திசை திருப்பினால் ஒரு கடலையே பாலைவனம் ஆக்க முடியும் என்கிற கசப்பான உண்மையை ஆரல் கடல் மனித குலத்திற்கு உணர்த்துகிறது. மனிதர்கள் கற்க வேண்டிய வரலாற்று சுவடாக ஆரல் கடல் மாறி நிற்கிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/world/aral-sea-disaster-how-human-mistakes-turned-a-vast-sea-into-a-desert-in-central-asia-r7zq2yt"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Free Train Travel for Senior Citizens: மூத்த குடிமக்களுக்கு 100%  இலவச ரயில் பயணம் எங்கு தெரியுமா..?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/world/free-train-travel-for-senior-citizens-25-percentage-metro-fare-discount-announced-in-major-welfare-initiative-uapoo2m</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/world/free-train-travel-for-senior-citizens-25-percentage-metro-fare-discount-announced-in-major-welfare-initiative-uapoo2m</guid>
            <pubDate>Sat, 13 Jun 2026 09:00:36 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Senior Citizen Railway Benefits | மூத்த குடிமக்களை கவுரவிக்கும் வகையில் வங்கதேச அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரயிலில் இலவச பயணமும், மெட்ரோவில் 25% கட்டண தள்ளுபடியும் வழங்கப்பட உள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktzg614p77synrsj86yh0x6t,imgname-senior-citizen-railway-benefits-1781321106581.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Senior Citizen Railway Benefits | மூத்த குடிமக்களை கவுரவிக்கும் வகையில் வங்கதேச அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரயிலில் இலவச பயணமும், மெட்ரோவில் 25% கட்டண தள்ளுபடியும் வழங்கப்பட உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மூத்த குடிமக்களின் நலனை மேம்படுத்தும் நோக்கில் வங்கதேச அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2026&ndash;27 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது, 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு அரசு இயக்கும் ரயில்களில் இலவச பயண வசதியும், மெட்ரோ ரயிலில் 25 சதவீத கட்டண சலுகையும் வழங்கப்படும் என நிதி அமைச்சர் அமீர் கோஸ்ரு மஹ்முத் சௌத்ரி அறிவித்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பட்ஜெட் உரையில் பேசிய நிதி அமைச்சர், &ldquo;நாட்டை கட்டியெழுப்புவதில் மூத்த குடிமக்களின் பங்கு அளப்பரியது. அவர்களின் நலனில் அரசு தொடர்ந்து அக்கறை காட்டும்&rdquo; என்று கூறினார். அதன்படி, 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் அரசு சொந்தமான ரயில்களில் முழுமையாக இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். மேலும், டாக்கா மெட்ரோ ரயில் சேவைகளில் 25% கட்டண தள்ளுபடியும் வழங்கப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த அறிவிப்புக்கு முன்னதாகவே, வங்கதேச ரயில்வே அமைச்சகம் 2026 மே 25 முதல் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரயில் பயண கட்டணத்தில் 25% தள்ளுபடி வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இந்த சலுகை பெற தேசிய அடையாள அட்டை (NID) மூலம் வயது சரிபார்க்கப்படும். ஆன்லைன் மற்றும் நிலைய டிக்கெட் கவுண்டர்கள் மூலமாகவும் இந்த சலுகையை பெற முடியும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;டாக்கா மெட்ரோ ரயில் சேவையிலும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 25% கட்டண சலுகை ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒற்றை பயண டிக்கெட்டுகளுக்கு இந்த தள்ளுபடி பொருந்தும். பயணிகள் தேசிய அடையாள அட்டையை காட்டி சலுகையை பெறலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வங்கதேச புள்ளிவிவரத் துறையின் தரவுகளின்படி, நாட்டில் 65 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2023ஆம் ஆண்டில் மூத்த குடிமக்கள் மக்கள் தொகையில் 6.14% ஆக உயர்ந்துள்ளனர். இதனால் அவர்களின் சமூக பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து அணுகலை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;h3&gt;&lt;strong&gt;சமூக நலத்திட்டங்களில் முக்கிய முன்னேற்றம்&lt;/strong&gt;&lt;/h3&gt;&lt;p&gt;பொதுப் போக்குவரத்து செலவை குறைப்பதன் மூலம் மூத்த குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், அவர்கள் சுயமாக பயணிக்க உதவவும் இந்த திட்டம் முக்கிய பங்காற்றும் என வங்கதேச அரசு நம்புகிறது. குறிப்பாக மருத்துவம், குடும்ப சந்திப்பு மற்றும் அன்றாட தேவைகளுக்கான பயணங்களில் இந்த சலுகை பெரும் உதவியாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/world/free-train-travel-for-senior-citizens-25-percentage-metro-fare-discount-announced-in-major-welfare-initiative-uapoo2m"/>
        </item>
        <item>
            <title><![CDATA[AI Lawyer : ஒரிஜினல் வக்கீலை தோற்கடித்த AI Lawyer! அப்போ இனிமேல் வக்கீல்களின் நிலை?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/technology/ai-lawyer-beats-a-real-lawyer-what-happens-next-usqnvfg</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/technology/ai-lawyer-beats-a-real-lawyer-what-happens-next-usqnvfg</guid>
            <pubDate>Sun, 28 Jun 2026 11:15:01 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;AI Lawyer : கல்வி, மருத்துவம், சாஃப்ட்வேர்னு எல்லா துறையிலும் கலக்கிட்டு இருந்த AI, இப்போ சட்டத்துறையிலும் ஒரு புது சரித்திரம் படைச்சிருக்கு. உலகத்துல முதல் முறையா, ஒரு AI லீகல் சாட்பாட் கோர்ட்ல ஒரு வழக்கை ஜெயிச்சுக் காட்டியிருக்கு.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kw6bmzjz7rv2g1tzvbyf6nv4,imgname-chatgpt-image-jun-28--2026--11-05-25-am-1782624976479.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;AI Lawyer : கல்வி, மருத்துவம், சாஃப்ட்வேர்னு எல்லா துறையிலும் கலக்கிட்டு இருந்த AI, இப்போ சட்டத்துறையிலும் ஒரு புது சரித்திரம் படைச்சிருக்கு. உலகத்துல முதல் முறையா, ஒரு AI லீகல் சாட்பாட் கோர்ட்ல ஒரு வழக்கை ஜெயிச்சுக் காட்டியிருக்கு.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த வழக்கில், கார்ஃபீல்டு AI தான் முழு சட்டரீதியான வேலைகளையும் செய்தது. வழக்கு சம்பந்தமான தகவல்களை அலசுவது, சட்ட நுணுக்கங்களை ஆராய்வது, தேவையான டாக்குமென்ட்களை தயார் செய்வது என எல்லா வேலைகளையும் இந்த AI தான் பார்த்தது. கோர்ட்டில் வாதங்களை முன்வைக்க மட்டும் ஒரு ஜூனியர் வழக்கறிஞரை நியமித்தார்கள். அதாவது, கேஸின் மொத்த தயாரிப்பு வேலையையும் AI செய்ய, மனித வழக்கறிஞர் கோர்ட்டில் வாதாடினார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த கேஸின் இன்னொரு ஸ்பெஷல், அதன் செலவு. பொதுவாக, பிரிட்டனில் இது போன்ற சட்ட வழக்குகளுக்கு வழக்கறிஞர்கள் பெரிய தொகையை ஃபீஸாக வாங்குவார்கள். ஆனால், கார்ஃபீல்டு AI சுமார் 50,000 ரூபாய் செலவில் இந்த சேவையை வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கும் சட்ட உதவி எளிதாகக் கிடைக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த வழக்கின் விசாரணை கடந்த மாதம் பிரிட்டனில் உள்ள வாண்ட்ஸ்வொர்த் கவுன்டி நீதிமன்றத்தில் நடந்தது. சுமார் மூன்று மணி நேரம் விசாரணை நீடித்தது. இறுதியில், நீதிமன்றம் கார்ஃபீல்டு AI-யின் கட்சிக்காரருக்கு சாதகமாக தீர்ப்பளித்தது. வழக்கு முடிந்த பிறகு, எதிர் தரப்பு வழக்கறிஞர்கூட, AI தயாரித்த ஆவணங்கள் தரமாக இருந்ததாக ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இது சட்டத்துறையில் AI-யின் திறமை குறித்த விவாதத்தை அதிகப்படுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த வெற்றியைப் பெற்றாலும், AI முழுமையாக வழக்கறிஞர்களின் இடத்தை எடுத்துக்கொள்ள முடியாது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். கார்ஃபீல்டு AI தற்போது 10,000 பவுண்டுகள் மதிப்புள்ள சிறிய வழக்குகளை மட்டுமே கையாள்கிறது. மேலும், AI-க்கு கோர்ட்டில் நேரடியாக வாதாடும் அனுமதி இல்லை. அதனால்தான், இந்த வழக்கில் மனித வழக்கறிஞரைப் பயன்படுத்தினார்கள். அதாவது, சட்ட ஆராய்ச்சி, ஆவணங்கள் தயாரிப்பு, வழக்கை தயார் செய்தல் போன்ற வேலைகளில் மட்டுமே AI தற்போது முக்கியப் பங்கு வகிக்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;Keyboard : கீபோர்டு ஏன் ABCD வரிசையில் இல்லை? இதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணமா?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உலகம் முழுவதும் நீதிமன்ற அமைப்பில் AI-யைப் பயன்படுத்துவது ஒன்றும் புதிதல்ல. அமெரிக்கா உட்பட பல நாடுகளில் சட்ட ஆராய்ச்சி, ஆவணப் பகுப்பாய்வு மற்றும் வழக்கு நிர்வாகத்தில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், ஒரு வழக்கில் வெற்றி பெறுவதற்காக, சட்ட ஆவணங்களைத் தயாரிப்பதில் AI முக்கியப் பங்கு வகித்து, அந்த வழக்கு வெற்றி பெற்றது இதுவே முதல் முறை என்கிறார்கள். இந்தச் சம்பவத்தால், எதிர்காலத்தில் சட்ட சேவைகள் வேகமாகவும், குறைந்த செலவிலும் மக்களுக்குக் கிடைக்கும் என நிபுணர்கள் நம்புகின்றனர். ஆனாலும், AI ஒரு உதவும் சாதனம் மட்டுமே; இறுதி சட்ட முடிவுகள், நீதிமன்ற வாதங்கள் மற்றும் சட்டப் பொறுப்புகள் இப்போதும் மனித வழக்கறிஞர்களின் கையில்தான் உள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;Bluetooth-க்கு அந்த பெயர் எப்படி வந்தது? அடடே இதுதான் காரணமா?&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world</category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/technology/ai-lawyer-beats-a-real-lawyer-what-happens-next-usqnvfg"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Venezuela Earthquake: நிலநடுக்கம் வருவதற்கு முன் காப்பாற்றிய ஆண்ட்ராய்டு போன்! வைரலாகும் CCTV வீடியோ]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/technology/technology-mobile/android-earthquake-alert-saves-three-women-in-venezuela-viral-cctv-footage-vhb1cci</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/technology/technology-mobile/android-earthquake-alert-saves-three-women-in-venezuela-viral-cctv-footage-vhb1cci</guid>
            <pubDate>Sat, 27 Jun 2026 16:10:23 +0530</pubDate>
            <description><![CDATA[வெனிசுலாவில் ஒரு கடையில் இருந்த 3 பெண்களுக்கு, ஆண்ட்ராய்டு போனில் நிலநடுக்க எச்சரிக்கை வந்துள்ளது. உடனே அவர்கள் வெளியே ஓடிவிட, சில நொடிகளில் கட்டிடம் குலுங்கி பொருட்கள் சரிந்தன. இந்த சிசிடிவி காட்சி வைரலாகியுள்ளது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kw41p4cb9pe6thazrv3tf9pp,imgname-android-earthquake-alert-feature-praised-after-viral-venezuela-cctv-video-image---2026-06-27t133009.547-1782547419531.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[வெனிசுலாவில் ஒரு கடையில் இருந்த 3 பெண்களுக்கு, ஆண்ட்ராய்டு போனில் நிலநடுக்க எச்சரிக்கை வந்துள்ளது. உடனே அவர்கள் வெளியே ஓடிவிட, சில நொடிகளில் கட்டிடம் குலுங்கி பொருட்கள் சரிந்தன. இந்த சிசிடிவி காட்சி வைரலாகியுள்ளது.&lt;img&gt;&lt;p&gt;வெனிசுலாவில் நிலநடுக்கம் ஏற்படுவதற்குச் சில வினாடிகளுக்கு முன்பு, மூன்று பெண்கள் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லப் போதுமான நேரத்தை வழங்கியது போல் தோன்றியதால், வைரலான ஒரு சிசிடிவி காணொளி ஆண்ட்ராய்டின் உள்ளமைக்கப்பட்ட நிலநடுக்க எச்சரிக்கை அமைப்பின் மீது கவனத்தை ஈர்த்து வருகிறது.&lt;/p&gt;&lt;p&gt; WILD footage from YouTuber Caribano, who'd just started recording when the earthquakes hit VenezuelaWriter: Ianpic.twitter.com/OQK50T25OC https://t.co/hN4aw3bcHl&lt;/p&gt;&lt;p&gt;&mdash; Mario Nawfal (@MarioNawfal) June 27, 2026&lt;/p&gt;&lt;p&gt;சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டுள்ள அந்தக் காணொளியில், பெண்கள் ஒரு சிறிய கடைக்குள் இருக்கும்போது, ​​அவர்களில் ஒருவரின் ஆண்ட்ராய்டு கைபேசிக்கு திடீரென நிலநடுக்க எச்சரிக்கை வருவது தெரிகிறது. அந்த எச்சரிக்கை உடனடியாக கடைக்குள் இருந்த சூழலை மாற்றுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிசிடிவி காட்சியில், பெண்களில் ஒருவர் அறிவிப்பைப் படித்தவுடன் விரைவாகச் செயல்படுகிறார். அவர் மற்ற இரண்டு பெண்களிடமும் அவசரமாகத் தெரிவிக்க, மூவரும் நேரத்தை வீணாக்காமல் கடையை விட்டு வெளியே விரைந்து செல்கின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;Nunca sabremos las cifras, pero la alerta de Android salvo miles de vidas, algo que muy pocos sabian que exist&iacute;a. pic.twitter.com/s6CL9GKvwv&lt;/p&gt;&lt;p&gt;&mdash; Wismer mendoza (@wismerM) June 27, 2026&lt;/p&gt;&lt;p&gt;சில கணங்களுக்குப் பிறகு, நிலநடுக்கம் தொடங்குகிறது. கடைக்குள் இருந்த அலமாரிகளும் மற்ற பொருட்களும் தரையில் விழத் தொடங்குவதால், கட்டிடம் அதிர்வதை அந்தக் காணொளி காட்டுகிறது. இந்தக் காணொளிப் பதிவு பல பார்வையாளர்களைத் திகைக்க வைத்துள்ளது, மேலும் இந்த எச்சரிக்கை கடுமையான காயங்களைத் தடுத்திருக்கக்கூடும் என்று பலர் கூறுகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த வீடியோ இணையத்தில் பலவிதமான எதிர்வினைகளைத் தூண்டியுள்ளது, மேலும் பல பயனர்கள் ஆண்ட்ராய்டின் நிலநடுக்க எச்சரிக்கையை, அந்தத் தளத்தின் மிகவும் பயனுள்ளதும் ஆனால் அதிகம் அறியப்படாததுமான அம்சங்களில் ஒன்றாகக் குறிப்பிடுகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;நிலநடுக்கத்தின் போது ஐந்து முதல் பத்து வினாடிகள் முன்னறிவிப்பு கூட மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பலர் கூறினர். மற்றவர்கள் இந்தத் தொழில்நுட்பத்தை ஒரு அமைதியான உயிர்காப்பான் என்று வர்ணித்து, அன்றாட ஸ்மார்ட்போன்கள் அவசர காலங்களில் மக்களை எவ்வாறு பாதுகாக்க முடியும் என்பதை இது நிரூபிக்கிறது என்றும் கூறினர்.&lt;/p&gt;&lt;p&gt;இந்த அம்சம் எல்லா நாடுகளிலும் அல்லது பிராந்தியங்களிலும் கிடைக்கவில்லை என்றும், இதுபோன்ற எச்சரிக்கை அமைப்புகள் மேலும் பரவலாகக் கிடைக்கும் என்றும் சில பயனர்கள் சுட்டிக்காட்டினர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆண்ட்ராய்டின் நிலநடுக்க எச்சரிக்கை அமைப்பு, ஆண்ட்ராய்டு தொலைபேசிகளில் உள்ள சென்சார்களைப் பயன்படுத்தி, ஒரு நிலநடுக்கத்தின் முதல், பலவீனமான நில அதிர்வுகளைக் கண்டறிய உதவுகிறது. ஒரு நிலநடுக்கம் கண்டறியப்பட்டால், வலுவான அதிர்வு வருவதற்கு முன்பே பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு ஓர் எச்சரிக்கை கிடைக்கக்கூடும். இது, அவர்கள் எதிர்வினையாற்றுவதற்கு சில மதிப்புமிக்க வினாடிகளை வழங்குகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&quot;Un terremoto cerca&quot;A la gran mayor&iacute;a les son&oacute; la alerta de terremoto, exclusiva en los terminales con ANDROID, pero muy pocos lo sab&iacute;an y cre&iacute;an que era una simple notificaci&oacute;n. pic.twitter.com/m0ylSgn2vb&lt;/p&gt;&lt;p&gt;&mdash; Borja Alonso Azpilicueta (@borjazpi) June 26, 2026&lt;/p&gt;&lt;p&gt;வைரலான சிசிடிவி காட்சிகள், முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் தொழில்நுட்பம் மற்றும் இயற்கை பேரிடர்களின் போது அது ஆற்றக்கூடிய பங்கு ஆகியவற்றின் மீதான மதிப்பீட்டைப் புதுப்பித்துள்ளன. உண்மையில், வெனிசுலா நிலநடுக்கத்தின் போது, ​​எச்சரிக்கைகளைப் பெற்று மக்கள் தங்கள் பாதுகாப்பிற்காக விரைவதைக் காட்டும் பல வீடியோக்கள் இணையத்தில் வெளிவந்துள்ளன.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/technology/technology-mobile/android-earthquake-alert-saves-three-women-in-venezuela-viral-cctv-footage-vhb1cci"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Sun Therapy: ICU நோயாளிக்கு வெயிலில் நடந்த மேஜிக்! சூரிய ஒளியில் சிகிச்சை! இது எப்படி சாத்தியம்?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/world/sun-therapy-for-icu-patients-how-sunlight-is-used-as-medicine-in-hospitals-ygowwqm</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/world/sun-therapy-for-icu-patients-how-sunlight-is-used-as-medicine-in-hospitals-ygowwqm</guid>
            <pubDate>Sat, 27 Jun 2026 17:30:44 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Sun Therapy: பிரிட்டனில் ஒரு மருத்துவமனையில் ICU-வில் இருந்த ஒரு பெண்மணிக்கு 'சன் தெரபி' அளிக்கப்படுள்ளது. சூரிய ஒளி சிகிச்சை என்றால் என்ன? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kw4f0nn2je0cgqysvn9w32n0,imgname-sun-therapy-1782561396386.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Sun Therapy: பிரிட்டனில் ஒரு மருத்துவமனையில் ICU-வில் இருந்த ஒரு பெண்மணிக்கு 'சன் தெரபி' அளிக்கப்படுள்ளது. சூரிய ஒளி சிகிச்சை என்றால் என்ன? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒரு பெண்மணி வீல்சேரில் அமர்ந்து வெயிலில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவர் பிரிட்டனில் உள்ள ஒரு மருத்துவமனையில் 'சன் தெரபி' எடுத்துக்கொள்கிறார். சில நாட்களுக்கு முன்பு வரை இவர் ICU-வில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஐரோப்பா முழுவதும் பல மருத்துவமனைகளில் இந்த 'சன் தெரபி' மிகவும் பிரபலமாகி வருகிறது. மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளைக் கூட, சிறிது நேரம் வெயிலில் அமர வைத்து மருத்துவர்கள் குணப்படுத்த முயற்சிக்கின்றனர். அதனால், இந்த சிகிச்சை முறை குறித்து பெரிய விவாதமே நடந்து வருகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சூரிய ஒளி சிகிச்சை பழங்கால முறை தான்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;சூரிய ஒளியில் சிகிச்சை அளிப்பது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. இது மிகவும் பழமையான, ஆனால் சிறப்பாகச் செயல்படும் ஒரு முறையாகும். 18 மற்றும் 19-ஆம் நூற்றாண்டுகளில், ஆன்டிபயாடிக்ஸ் போன்ற மருந்துகளோ, தொழில்நுட்பங்களோ வருவதற்கு முன்பு இப்படித்தான் சிகிச்சை அளித்து வந்தனர். மருத்துவமனையின் நான்கு சுவர்களுக்குள் அடைந்து கிடப்பதை விட, நோயாளிகளை நல்ல காற்றோட்டமான இடத்திலும், வெயிலிலும் வைத்தால் வேகமாக குணமடைவதை அன்றைய மருத்துவர்கள் புரிந்துகொண்டனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த முறைக்கு அப்போது &lsquo;ஹீலியோதெரபி&rsquo; (Heliotherapy) என்று பெயர் இருந்தது. இப்போது இந்த பழைய சிகிச்சை முறையைத்தான் ஐரோப்பாவில் உள்ள பல மருத்துவமனைகள் மீண்டும் கொண்டு வந்துள்ளன. இதற்காக மருத்துவமனைகளின் வடிவமைப்பையே மாற்றுகின்றனர். பெரிய ஜன்னல்கள், திறந்த பால்கனிகள் மற்றும் மொட்டை மாடிகளை உருவாக்கி, அங்கு 'சன்லைட் ஸோன்' (Sunlight Zone) அமைக்கின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;மிகவும் பலவீனமாக உள்ள நோயாளிகளை படுக்கை அல்லது வீல்சேருடன் அந்த பால்கனியிலோ, மொட்டை மாடியிலோ குறிப்பிட்ட நேரத்திற்கு வைக்கின்றனர். இப்படி திறந்த வெளியில், வெயிலில் இருக்கும்போது நோயாளிகள் மிக வேகமாக குணமடைவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆம், சூரிய ஒளி நம் தோல் மீது படும்போது, உடலே வைட்டமின் டி-யை உற்பத்தி செய்துகொள்ளும். இந்த வைட்டமின் டி, எலும்புகளை வலுவாக்குவது மட்டுமல்லாமல், தசைகளையும் சுறுசுறுப்பாக்குகிறது. அதுமட்டுமின்றி, ஹார்மோன்களின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;மேலும், சூரிய ஒளி உடலில் 'செரோடோனின்' (Serotonin) எனப்படும் 'மகிழ்ச்சி ஹார்மோன்' அளவை அதிகரிக்கிறது. இதனால், நோயாளிக்கு மன அழுத்தம், பதட்டம் போன்றவை குறைகிறது. ஒருவர் வேகமாக குணமடைய வேண்டும் என்றால், மனநிலை நன்றாக இருப்பது மிகவும் முக்கியம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவிலும் சில அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இந்த முறையைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். உதாரணமாக, நம் ஊரில் குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்து, இளவெயிலில் சிறிது நேரம் படுக்க வைக்கும் பழக்கம் பல வீடுகளில் இருக்கிறது அல்லவா? அதுவும் ஒரு வகையான சன் தெரபிதான். இப்போது, தீவிர நோயாளிகளுக்கும் இந்த சிகிச்சையை அளிக்கத் தொடங்கியுள்ளனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;முக்கிய எச்சரிக்கை:&lt;/strong&gt; இந்த சன் தெரபி என்பது மருத்துவர்களின் கடுமையான கண்காணிப்பில், நோயாளியின் உடல்நிலையைப் பொறுத்து, காலை அல்லது மாலை நேரத்து இளவெயிலில் (Mild Sunlight) மட்டுமே சில நிமிடங்கள் அளிக்கப்படுகிறது. சுட்டெரிக்கும் மதிய வெயிலிலோ அல்லது மருத்துவர் அனுமதியின்றியோ தீவிர நோயாளிகளுக்கு இதைச் செய்யக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/world/sun-therapy-for-icu-patients-how-sunlight-is-used-as-medicine-in-hospitals-ygowwqm"/>
        </item>
        <item>
            <title><![CDATA[இனி AC தேவையில்லை! வெயிலை விரட்டியடிக்க சீனா கண்டுபிடித்த மந்திர தொழில்நுட்பம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/world/chinas-new-cooling-technology-could-reduce-the-need-for-ac-z40kypy</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/world/chinas-new-cooling-technology-could-reduce-the-need-for-ac-z40kypy</guid>
            <pubDate>Fri, 03 Jul 2026 09:56:38 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Chinas new cooling technology could reduce the need for ac : சீனாவில் நிலவும் கடும் வெப்பத்தைத் தணிக்க, கட்டிடங்களின் மேலிருந்து மழை பொழிவது போன்ற ஒரு புதிய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இந்த நவீன ரூஃப்டாப் மிஸ்ட் கூலிங் சிஸ்டம் குறித்து பார்ப்போம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwk32r5gxdzrvgxadgftj4hb,imgname-chatgpt-image-jul-3--2026--09-44-53-am-1783052198064.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Chinas new cooling technology could reduce the need for ac : சீனாவில் நிலவும் கடும் வெப்பத்தைத் தணிக்க, கட்டிடங்களின் மேலிருந்து மழை பொழிவது போன்ற ஒரு புதிய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இந்த நவீன ரூஃப்டாப் மிஸ்ட் கூலிங் சிஸ்டம் குறித்து பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சீனாவின் ஷான்சி (Shanxi) மாகாணத்தில் உள்ள யுன்செங் (Yuncheng) நகரில், குடியிருப்புக் கட்டிடங்களின் கூரைகளில் இந்த மிஸ்ட் தெளிக்கும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை கட்டிடத்தின் மேலிருந்து மிக நுண்ணிய நீர் துகள்களை மேகம் போல காற்றில் தெளிக்கின்றன. இது பார்ப்பதற்கு செயற்கை மழை பொழிவது போன்ற ஒரு காட்சியை உருவாக்குகிறது.&lt;/p&gt;&lt;p&gt;இது எப்படி வேலை செய்கிறது? (செயல்முறை)&lt;/p&gt;&lt;p&gt;இந்த தொழில்நுட்பம் 'ஆவியாதல் குளிர்ச்சி' (Evaporative Cooling) என்ற அறிவியல் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;நுண்ணிய தெளிப்பு: &lt;/strong&gt;கட்டிடத்தின் கூரையில் பொருத்தப்பட்டுள்ள உயர் அழுத்த முனைகள் (high-pressure nozzles) நீரை மிக மெல்லிய துகள்களாக மாற்றிக் காற்றில் தெளிக்கின்றன.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;வெப்பத்தை உறிஞ்சுதல்:&lt;/strong&gt; காற்றில் தெளிக்கப்பட்ட நீர்த்துளிகள் ஆவியாகும்போது, சுற்றியுள்ள காற்றின் வெப்பத்தை அவை உறிஞ்சிக்கொள்கின்றன. மனித உடலில் வேர்வை வெளியேறி உடல் சூட்டைத் தணிப்பது போன்றதே இதுவும்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;தாக்கம்: &lt;/strong&gt;இந்த முறையில் வெளிப்புற வெப்பநிலையை வெறும் சில நிமிடங்களில் 5&deg;C முதல் 8&deg;C வரை குறைக்க முடியும் என்று கூறப்படுகிறது.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;1.தீவிரமாகும் வெப்ப அலைகள்: &lt;/strong&gt;சமீபகாலமாக சீனாவில் கோடைக்கால வெப்பத்தின் தீவிரம் அதிகரித்து வருகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;2.நகர்ப்புற வெப்பத் தீவு விளைவு (Urban Heat Island Effect): &lt;/strong&gt;கான்கிரீட் கட்டிடங்கள் மற்றும் சாலைகள் வெப்பத்தை உறிஞ்சி வைத்துக்கொள்வதால், நகரங்கள் கிராமப்புறங்களை விட அதிக வெப்பமாக மாறுகின்றன. இதனால் மக்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள் மிகவும் வெப்பமடைகின்றன.&lt;/p&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;View this post on Instagram&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&lt;p&gt;A post shared by Interesting Engineering (@interestingengineering)&lt;/p&gt;&lt;p&gt;Fridge Blast : குளிர்சாதனப் பெட்டி வெடிப்பதற்கான 7 காரணங்கள்! தடுப்பது எப்படி?&lt;/p&gt;&lt;img&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;குறைந்த மின்சாரச் செலவு: &lt;/strong&gt;வழக்கமான ஏர் கண்டிஷனர்களை (AC) விட இந்த முறைக்கு மின்சாரத் தேவை மிகக் குறைவு. இது முக்கியமாக நீரையும், பம்புகளையும் மட்டுமே பயன்படுத்துகிறது.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;திறன்மிக்கது: &lt;/strong&gt;நீர்த்துளிகள் மிக நுண்ணியதாக இருப்பதால், அவை தரையை நனைக்காமல் விரைவாக ஆவியாகி காற்றில் உள்ள வெப்பத்தை மட்டுமே குறைக்கின்றன.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;சூழல் நட்பு: &lt;/strong&gt;பொது பூங்காக்கள், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் இந்த முறை ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;இருப்பினும், தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் இந்த முறையை அமல்படுத்தும்போது நீரின் பயன்பாடு குறித்து சில விவாதங்கள் எழுந்தாலும், இது ஒரு சிக்கனமான மற்றும் நடைமுறைக்கு உகந்த தீர்வாகவே பார்க்கப்படுகிறது. உலகெங்கும் வெப்பம் அதிகரித்து வரும் சூழலில், இத்தகைய எளிமையான கண்டுபிடிப்புகள் எதிர்கால நகர வடிவமைப்பிற்கு பெரும் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.&lt;/p&gt;&lt;p&gt;தினமும் RO Water குடிக்கிறீர்களா? உங்கள் உடலில் நடக்கும் ஆபத்தான மாற்றங்கள்!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world</category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/world/chinas-new-cooling-technology-could-reduce-the-need-for-ac-z40kypy"/>
        </item>
    </channel>
</rss>
