<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes"?>
<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Thu, 30 Apr 2026 13:14:18 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss/world" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு... பேருந்து கட்டணம் அதிகரிப்பு.. பொதுமக்கள் ஷாக்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/world/pakistan-fuel-price-hike-bus-and-freight-fares-soar-burdening-public-0nx7uio</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/world/pakistan-fuel-price-hike-bus-and-freight-fares-soar-burdening-public-0nx7uio</guid>
            <pubDate>Sat, 25 Apr 2026 20:24:17 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;பயணிகள் போக்குவரத்து மட்டுமல்ல, சரக்கு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. டீசல் விலை உயர்வால், சரக்கு லாரிகள் மற்றும் மினி மஸ்தா வேன்களின் உரிமையாளர்கள் சுமார் 5 சதவீதம் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01km61641w6gk0vvpcw07xhn8h,imgname-petrol-price--3--1774024069179.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;பயணிகள் போக்குவரத்து மட்டுமல்ல, சரக்கு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. டீசல் விலை உயர்வால், சரக்கு லாரிகள் மற்றும் மினி மஸ்தா வேன்களின் உரிமையாளர்கள் சுமார் 5 சதவீதம் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பாகிஸ்தானில் பெட்ரோல் விலை மீண்டும் உயர்ந்ததால், நாடு முழுவதும் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரித்துள்ளன. ஏற்கனவே பணவீக்கத்தால் அவதிப்பட்டு வரும் பொதுமக்களுக்கு இது பெரும் சுமையாக மாறியுள்ளது என Samaa TV செய்தி வெளியிட்டுள்ளது. Samaa TV தகவல்படி, லாகூரில், பிராந்திய போக்குவரத்து ஆணையமும் (RTA) போக்குவரத்து உரிமையாளர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், 3 முதல் 4 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்திக்கொள்ள ஒப்புக்கொள்ளப்பட்டது.&lt;/p&gt;&lt;p&gt;டிரான்ஸ்போர்ட் ஹவுஸில் நடந்த இந்த கூட்டத்தில், எரிபொருள் விலை உயர்வை காரணம் காட்டி, உரிமையாளர்கள் அதிக கட்டண உயர்வை கேட்டனர். ஆனால், RTA செயலாளர் ராணா மோஷினின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, குறைந்த அளவுக்கே அனுமதி வழங்கப்பட்டது. மேலும், அனுமதியின்றி கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ராணா மோஷின் பேசுகையில், &quot;அனுமதிக்கப்பட்டதை விட யாரும் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது. மீறினால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்&quot; என்று எச்சரித்தார். புதிய கட்டணப் பட்டியல் உடனடியாக அமலுக்கு வரும் என்றும் அவர் உறுதிப்படுத்தினார். பெட்ரோல் விலை 7 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளதால் இந்த கட்டண மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். அதிகாரிகள் கட்டுப்பாடு விதித்தாலும், சில வழித்தடங்களில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சுமார் 5 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக பயணிகள் கூறுகின்றனர். இதனால் அன்றாட மற்றும் வெளியூர் பயணச் செலவுகள் அதிகரித்துள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;அடிக்கடி ஏற்படும் இந்த கட்டண உயர்வால் பயணம் செய்வது மிகவும் கடினமாகி வருவதாக பயணிகள் வேதனை தெரிவித்தனர். வெளியூர் பேருந்து கட்டணங்களும் கணிசமாக உயர்ந்துள்ளன. லாகூரிலிருந்து ராவல்பிண்டிக்கு கட்டணம் PKR 2,340 ஆகவும், பெஷாவருக்கு PKR 3,100 ஆகவும் அதிகரித்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;அதேபோல, ஃபைசலாபாத் மற்றும் சர்கோதாவுக்கு கட்டணம் PKR 1,260 ஆக உயர்ந்துள்ளது. லாகூர்-கராச்சி வழித்தடத்தில் கட்டணம் PKR 9,720 ஆக அதிகரித்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பயணிகள் போக்குவரத்து மட்டுமல்ல, சரக்கு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. டீசல் விலை உயர்வால், சரக்கு லாரிகள் மற்றும் மினி மஸ்தா வேன்களின் உரிமையாளர்கள் சுமார் 5 சதவீதம் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். கராச்சியில், பாகிஸ்தான் சரக்கு போக்குவரத்து கூட்டமைப்பு 10 சதவீதம் கட்டண உயர்வை அறிவித்துள்ளதாக Samaa TV குறிப்பிட்டுள்ளது. இந்த கூட்டமைப்பின் தலைவர் மாலிக் ஷாஜாத் அவான், அரசின் எரிபொருள் கொள்கையை கடுமையாக விமர்சித்தார். அரசு வழங்கும் PKR 80,000 மானியம் போதாது என்று அவர் கூறினார். ஒரு ட்ரிப்புக்கு ஆகும் செலவு PKR 2,00,000 வரை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/world/pakistan-fuel-price-hike-bus-and-freight-fares-soar-burdening-public-0nx7uio"/>
        </item>
        <item>
            <title><![CDATA[60 ஆயிரம் விஷ பாம்புகளை வளர்த்து கோடீஸ்வரியான 30 வயது பெண்... இது எங்க?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/world/chinese-woman-earns-1-crore-rupees-annually-from-venomous-snake-farm-205ocoy</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/world/chinese-woman-earns-1-crore-rupees-annually-from-venomous-snake-farm-205ocoy</guid>
            <pubDate>Tue, 21 Apr 2026 12:53:07 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;30 வயது பெண் ஒருவர், நகரத்து வாழ்க்கையை விட்டுவிட்டு கிராமத்தில் பாம்புப் பண்ணை நடத்தி வருகிறார். இதன் மூலம் ஆண்டுக்கு 1.20 கோடி ரூபாய் வரை சம்பாதிக்கிறார். அவரைப் பற்றி பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kpqefdvas6ecfjwqfrr5k1kf,imgname-snake-1776755914601.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;30 வயது பெண் ஒருவர், நகரத்து வாழ்க்கையை விட்டுவிட்டு கிராமத்தில் பாம்புப் பண்ணை நடத்தி வருகிறார். இதன் மூலம் ஆண்டுக்கு 1.20 கோடி ரூபாய் வரை சம்பாதிக்கிறார். அவரைப் பற்றி பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பாம்புன்னா படையும் நடுங்கும்னு சொல்வாங்க. ஆனா, ஒரு பொண்ணு பல்லாயிரக்கணக்கான விஷப் பாம்புகளை வளர்த்து, அதுல கோடிக்கணக்குல சம்பாதிக்கிறாங்கன்னு சொன்னா நம்ப முடியுதா? சீனாவைச் சேர்ந்த 30 வயதான கின் தான் அந்த சாதனைப் பெண். நகரத்து சொகுசு வாழ்க்கையை விட்டுட்டு, தன்னோட சொந்த கிராமத்துக்கு வந்து பாம்புப் பண்ணை நடத்திட்டு வர்றாங்க. சீனாவின் குவாங்ஸி மாகாணத்தைச் சேர்ந்த கின்னின் அப்பா, ஒரு பாம்புப் பண்ணை நடத்தி வந்திருக்கார். இப்போ அந்தப் பொறுப்பை கின் எடுத்து நடத்திட்டு வர்றாங்க. இந்தப் பண்ணையில இப்போ 60,000-க்கும் அதிகமான விஷப் பாம்புகள் இருக்கு.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சவுத் சைனா மார்னிங் போஸ்ட் பத்திரிகை செய்தியின்படி, கின்னோட பண்ணையில 50,000 'ஐந்தடி பாம்புகளும்' (Five-step snakes), சுமார் 10,000 நல்ல பாம்புகளும் (Cobras) இருக்கு. 'இந்த பாம்புகளுக்கு சாப்பாடு கொடுக்கிறது ரொம்பவே ரிஸ்க்கான வேலை. ஆனா எனக்கு பயம் இல்லை. நான் பிறக்கிறதுக்கு முன்னாடியே எங்க அப்பா இந்த தொழிலை செஞ்சிட்டு இருக்கார்'னு கின் சொல்றாங்க. இந்தப் பண்ணையிலிருந்து கிடைக்கிற பாம்பு விஷம், தோல், இறைச்சிக்கு மார்க்கெட்ல பெரிய டிமாண்ட் இருக்கு.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பாரம்பரிய சீன மருந்து தயாரிப்புக்காகவும், அறிவியல் ஆராய்ச்சிக்காகவும் பாம்பு விஷம், உலர்ந்த தோல், பித்தப்பை, பாம்பு எண்ணெய் போன்றவற்றை இங்க விற்பனை செய்றாங்க. ஒரு கிராம் விஷம், அதன் தரத்தைப் பொறுத்து 40 முதல் 200 யுவான் வரை விலை போகுது. பாம்பு இறைச்சி ஒன்னுக்கு 300 யுவான் வரை விலை கிடைக்குமாம். எல்லா செலவுகளும் போக, இந்த பிசினஸ் மூலமா கின்னுக்கு வருஷத்துக்கு ஒரு மில்லியன் யுவான், அதாவது இந்திய மதிப்புல சுமார் 1.20 கோடி ரூபாய் லாபம் கிடைக்குது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;'The Girl Who Collects Snake Venom' (பாம்பு விஷத்தை சேகரிக்கும் பெண்) என்ற பெயர்ல சோஷியல் மீடியாவிலும் கின் ரொம்ப ஆக்டிவ். அதில் அவருக்கு 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலோவர்ஸ் இருக்காங்க. தன்னோட வேலை தொடர்பான வீடியோக்களை அடிக்கடி ஷேர் பண்றாங்க. ஆனாலும், இந்த வேலையில இருக்கிற ஆபத்து பற்றியும், பாம்பு கடிச்சா ஏற்படுற கடுமையான வலி பற்றியும் தன்னோட ஃபாலோயர்ஸ்களை எச்சரிக்கவும் அவங்க மறக்கல. 'ஒரு தடவை கடி வாங்கிட்டா, அந்த வலியை வாழ்நாள் முழுக்க மறக்க முடியாது'னும் சொல்றாங்க. இந்த வேலையை செய்ய உண்மையிலேயே பெரிய தைரியம் வேணும்னு பலரும் சோஷியல் மீடியால கமெண்ட் பண்ணிட்டு வர்றாங்க.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/world/chinese-woman-earns-1-crore-rupees-annually-from-venomous-snake-farm-205ocoy"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Iran Train Warning: அடுத்த 12 மணி நேரத்திற்கு ரயிலில் பயணிக்க வேண்டாம்.. பயணிகளுக்கு பகிரங்க எச்சரிக்கை]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/world/israel-warns-iranians-to-avoid-trains-for-12-hours-sparking-attack-fears-94pq2y4</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/world/israel-warns-iranians-to-avoid-trains-for-12-hours-sparking-attack-fears-94pq2y4</guid>
            <pubDate>Tue, 07 Apr 2026 15:15:58 +0530</pubDate>
            <description><![CDATA[ஈரானில் அடுத்த 12 மணி நேரத்திற்கு ரயில் பயணத்தை தவிர்க்குமாறு இஸ்ரேல் எச்சரித்துள்ளது. ரயில்வே கட்டமைப்புகள் அடுத்த இலக்காக மாறலாமா? மத்திய கிழக்கு பதற்றங்களுக்கு மத்தியில், இந்த எச்சரிக்கை ஒரு பெரிய தாக்குதலுக்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01knkc38mbx83whvdd5dkenkgg,imgname-israel-iran-war-train-warning-12-hours-railway-alert-middle-east-conflict-civilian-safety-crisis-update-1775545459339.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[ஈரானில் அடுத்த 12 மணி நேரத்திற்கு ரயில் பயணத்தை தவிர்க்குமாறு இஸ்ரேல் எச்சரித்துள்ளது. ரயில்வே கட்டமைப்புகள் அடுத்த இலக்காக மாறலாமா? மத்திய கிழக்கு பதற்றங்களுக்கு மத்தியில், இந்த எச்சரிக்கை ஒரு பெரிய தாக்குதலுக்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.&lt;img&gt;மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஒரு எச்சரிக்கை வெளியாகியுள்ளது. இஸ்ரேல், ஈரான் மக்களிடம் அடுத்த 12 மணி நேரத்திற்கு ரயில்கள் மற்றும் ரயில் பாதைகளில் இருந்து விலகி இருக்குமாறு தெளிவாகக் கூறியுள்ளது. இது ஒரு சாதாரண ஆலோசனையாகக் கருதப்படவில்லை, இதன் பின்னால் ஒரு பெரிய ஆபத்து இருப்பதாக அஞ்சப்படுகிறது.&lt;img&gt;&lt;p&gt;இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) தனது பாரசீக மொழி சமூக ஊடகக் கணக்கு மூலம் இந்த எச்சரிக்கையை விடுத்தது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ரயில்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று அது ஈரானிய குடிமக்களை வலியுறுத்தியது. குறிப்பிடத்தக்க வகையில், இந்த எச்சரிக்கை ஒரு குறிப்பிட்ட நகரம் அல்லது பிராந்தியத்திற்கு மட்டும் அல்லாமல், நாடு தழுவிய அளவில் விடுக்கப்பட்டது. பொதுவாக, குறிப்பிட்ட உள்கட்டமைப்புக்கு ஆபத்து ஏற்படும்போது இதுபோன்ற எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன. எனவே, இந்த எச்சரிக்கை தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த எச்சரிக்கை குறிப்பாக ரயில்கள் மற்றும் ரயில் பாதைகளிலிருந்து விலகி இருக்குமாறு வலியுறுத்துகிறது. இதன் பொருள், ரயில்வே வலையமைப்பு ஒரு தாக்குதலுக்கான சாத்தியமான இலக்காக இருக்கலாம் என்பதாகும். ரயில்வேயே எந்தவொரு நாட்டிற்கும் உயிர்நாடி என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். அவற்றுக்கு ஏற்படும் சேதம் போக்குவரத்தை சீர்குலைப்பது மட்டுமல்லாமல், விநியோகச் சங்கிலிகளையும் இயல்பு வாழ்க்கையையும் பாதிக்கிறது. எனவே, இந்த எச்சரிக்கை ஒரு பாதுகாப்பு அக்கறையாக மட்டுமல்லாமல், ஒரு மூலோபாய சமிக்ஞையாகவும் இருக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே தொடரும் மோதல் இனி இராணுவத் தளங்களுக்குள் மட்டும் முடங்கிவிடவில்லை. பொதுமக்களும் பாதிக்கப்படக்கூடிய அளவிற்கு நிலைமை வளர்ந்து வருகிறது. தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்கள், ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், இவ்விருது தற்போது மக்களின் வாழ்க்கையை நேரடியாகப் பாதிக்கிறது என்பதை இதுபோன்ற எச்சரிக்கைகள் வெளிப்படுத்துகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;இந்த எச்சரிக்கையின் மிகவும் மர்மமான விஷயம் என்னவென்றால், இதில் எந்த ஒரு குறிப்பிட்ட ரயில் பாதை அல்லது பகுதியும் குறிப்பிடப்படவில்லை. இதன் பொருள், அச்சுறுத்தல் நாடு தழுவியதாக இருக்கலாம் அல்லது இஸ்ரேல் தனது திட்டத்தை ரகசியமாக வைத்திருக்க விரும்புகிறது என்பதாகும். ஈரான் அதிகாரிகளும் இதுவரை இதற்கு எந்த தெளிவான பதிலும் அளிக்கவில்லை. இது நிலைமையை மேலும் கணிக்க முடியாததாக மாற்றியுள்ளது.&lt;img&gt;&lt;p&gt;12 மணி நேரக் கெடு, நாடு தழுவிய எச்சரிக்கை, மற்றும் குடிமக்களுக்கு நேரடியாக விடுக்கப்பட்ட அறிவுரை ஆகிய அனைத்தும் ஏதோ ஒரு பெரிய சம்பவம் நடக்கக்கூடும் என்பதற்கான சாத்தியக்கூற்றையே சுட்டிக்காட்டுகின்றன. தாக்குதல் நடக்குமா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், பெரிய இராணுவ நடவடிக்கைகளுக்கு முன்பு இதுபோன்ற அறிகுறிகள் பொதுவாகக் காணப்படுகின்றன. ஈரான்-இஸ்ரேல் போருக்கு மத்தியில் இந்த எச்சரிக்கை ஒரு புதிய அபாய மணியைப் போன்றது. வரவிருக்கும் மணிநேரங்கள் மிகவும் முக்கியமானதாக இருக்கலாம். இது வெறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையா அல்லது ஒரு பெரிய நடவடிக்கையின் தொடக்கமா என்பதை உலகம் இப்போது உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/world/israel-warns-iranians-to-avoid-trains-for-12-hours-sparking-attack-fears-94pq2y4"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Iran's New Weapon: எங்களிடம் சீக்ரெட் ஆயுதம் உள்ளது.! டிரம்ப்க்கு ஈரான் பகீர் மிரட்டல்.! மூடப்படுகிறதா ஹார்முஸ் ஜலசந்தி? சிலிண்டர் தட்டுப்பாடு வருமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/world/iran-claims-new-secret-weapon-after-rejecting-trump-peace-offer-amid-hormuz-tensions-cge30lg</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/world/iran-claims-new-secret-weapon-after-rejecting-trump-peace-offer-amid-hormuz-tensions-cge30lg</guid>
            <pubDate>Thu, 30 Apr 2026 13:14:14 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;அமெரிக்கா - ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரிப்பு: ட்ரம்பின் பேச்சுவார்த்தையை நிராகரித்த ஈரான், 'புதிய மர்ம ஆயுதம்' மற்றும் கப்பல் மீதான தாக்குதல் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளதால் ஹார்முஸ் ஜலசந்தியில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kq4f8jv7m9kfzh144st2e44e,imgname-war--3--1777192946535.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;அமெரிக்கா - ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரிப்பு: ட்ரம்பின் பேச்சுவார்த்தையை நிராகரித்த ஈரான், 'புதிய மர்ம ஆயுதம்' மற்றும் கப்பல் மீதான தாக்குதல் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளதால் ஹார்முஸ் ஜலசந்தியில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அமெரிக்கா - ஈரான் இடையே பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ட்ரம்பின் அமைதிப் பேச்சுவார்த்தை திட்டத்தை நிராகரித்த தெஹ்ரான், தங்களிடம் ஒரு 'புதிய மர்ம ஆயுதம்' இருப்பதாகக் கூறியுள்ளது. அமெரிக்காவின் விமானம் தாங்கி கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், ஹார்முஸ் ஜலசந்தியில் நெருக்கடி அதிகரித்துள்ளதாகவும் ஈரான் கூறியிருப்பது போர் மூளும் அபாயத்தை அதிகரித்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக ஒரு புதிய, கண்ணுக்குத் தெரியாத ஆனால் பயங்கரமான ஆயுதத்தைப் பயன்படுத்தப் போவதாக ஈரான் மிரட்டியுள்ளது. இந்த ஆயுதம் எதிரிப் படைகளுக்குள் பெரும் பீதியை உண்டாக்கி, ஹார்ட் அட்டாக் வரும் அளவுக்கு ஒரு சூழலை உருவாக்கும் என ஈரான் கடற்படை தளபதி ரியர் அட்மிரல் ஷஹ்ராம் ஈரானி கூறியுள்ளார். இந்த ஆயுதம் மிக அருகில் தயார் நிலையில் இருப்பதாகவும், 'மிக விரைவில்' பயன்படுத்தப்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஈரான் ஒரு அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலான 'ஆபிரகாம் லிங்கன்' மீது தங்கள் படைகள் குறைந்தது ஏழு முறை ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஈரான் கூறியுள்ளது. இந்த தாக்குதல்களால் அமெரிக்க ராணுவத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டதாகவும், விமானப் போக்குவரத்து தடைபட்டதாகவும் ஈரான் தளபதி தெரிவித்துள்ளார். அமெரிக்கா இந்தத் தகவலை இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், ஈரானின் இந்த அறிக்கை உலக அளவில் ராணுவப் பதற்றத்தை அதிகரித்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க வேண்டும் என்றால், அமெரிக்கா விதித்த தடைகளை நீக்க வேண்டும் என்று ஈரான் ஒரு நிபந்தனை விதித்தது. ஆனால், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்த நிபந்தனையை திட்டவட்டமாக நிராகரித்துவிட்டார். ஈரான் மீது அழுத்தம் கொடுக்க இந்தத் தடைகள் ஒரு சிறந்த வழி என்றும், அது தொடரும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார். எந்தச் சூழ்நிலையிலும் ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்க அனுமதிக்க முடியாது என்றும் அவர் மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தி மீது தங்கள் கட்டுப்பாடு இருப்பதாகவும், தடைகள் விதிக்கப்படலாம் என்றும் ஈரான் மீண்டும் எச்சரித்துள்ளது. உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் பெரும் பகுதி இந்த வழித்தடத்தின் வழியாகத்தான் செல்கிறது. இங்கு எந்தவிதமான தடையும் ஏற்பட்டால், அது உலக எரிசக்தி சந்தையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். சில கப்பல்களின் நடமாட்டம் ஏற்கெனவே கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்றும் ஈரான் கூறியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஈரானின் ஆவேசமான பேச்சும், அமெரிக்காவின் கடுமையான நிலைப்பாடும் சூழலை மிகவும் பதற்றமாக்கியுள்ளன. இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மற்றும் கடல் தடைகள் குறித்து குற்றம் சாட்டி வருகின்றனர். ஹார்முஸ் பகுதியில் நிலைமை மேலும் மோசமானால், அதன் தாக்கம் மத்திய கிழக்கோடு நிற்காது, உலகளாவிய எண்ணெய் விநியோகம் மற்றும் சர்வதேசப் பாதுகாப்பிலும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த பதற்றம் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படுமா அல்லது ஒரு பெரிய ராணுவ மோதலாக மாறுமா என்பதை உலகம் உற்று நோக்குகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/world/iran-claims-new-secret-weapon-after-rejecting-trump-peace-offer-amid-hormuz-tensions-cge30lg"/>
        </item>
        <item>
            <title><![CDATA[இனி மாதத்திற்கு இருமுறை சம்பளம்..! பணப்புழக்கத்தை அதிகரிக்க அரசின் ஸ்மார்ட் மூவ்..]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/world/nepal-government-revolutionizes-payroll-bi-monthly-salaries-for-civil-servants-dqdaypc</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/world/nepal-government-revolutionizes-payroll-bi-monthly-salaries-for-civil-servants-dqdaypc</guid>
            <pubDate>Tue, 21 Apr 2026 13:43:36 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;அரசு ஊழியர்களின் நிதி நெருக்கடியைத் தீர்க்கும் நோக்கில், மாதத்திற்கு இருமுறை சம்பளம் வழங்கும் அதிரடித் திட்டத்தை நேபாள அரசு அறிமுகப்படுத்தியுள்ளது; இது ஊழியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுடன், பணப்புழக்கத்தையும் சீராக்கும் என நம்பிக்கை.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kmpn1z856na37fk0c89v3qkc,imgname-8th-pay-commission-timeline-salary-hike-arrears-fitment-factor-central-government-employees-pension-update-india-1-1774581775621.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;அரசு ஊழியர்களின் நிதி நெருக்கடியைத் தீர்க்கும் நோக்கில், மாதத்திற்கு இருமுறை சம்பளம் வழங்கும் அதிரடித் திட்டத்தை நேபாள அரசு அறிமுகப்படுத்தியுள்ளது; இது ஊழியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுடன், பணப்புழக்கத்தையும் சீராக்கும் என நம்பிக்கை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நேபாள அரசு தனது அரசு ஊழியர்களுக்கு மாதத்திற்கு இருமுறை சம்பளம் வழங்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது குறித்த செய்தி, நிர்வாக சீர்திருத்தங்களில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான மற்றும் உண்மையான தகவல்களை இங்கே காணலாம்.&lt;/p&gt;&lt;p&gt;வழக்கமாக பெரும்பாலான நாடுகளில் மாத இறுதியில் ஒருமுறை மட்டுமே சம்பளம் வழங்கப்படும் நடைமுறை உள்ளது. ஆனால், நேபாள அரசாங்கம் தனது ஊழியர்களின் நிதி மேலாண்மையை மேம்படுத்தவும், சந்தையில் பணப்புழக்கத்தை அதிகரிக்கவும் இந்த புதிய முடிவை எடுத்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;இந்த மாற்றத்தின் முதன்மை நோக்கம், மாதக் கடைசியில் ஊழியர்கள் சந்திக்கும் &quot;நிதி நெருக்கடியை&quot; (Month-end financial crunch) தடுப்பதாகும். நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட ஊழியர்கள், மாதத்தின் கடைசி வாரங்களில் அத்தியாவசியத் தேவைகளுக்குக் கூட கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுவதை இது தவிர்க்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;15 நாட்களுக்கு ஒருமுறை ஊதியம்: ஊழியர்கள் இனி 30 நாட்கள் வரை காத்திருக்கத் தேவையில்லை. ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ஒருமுறை அவர்கள் உழைப்பிற்கான ஊதியம் அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.&lt;/p&gt;&lt;p&gt;பணப்புழக்கம் அதிகரிப்பு: சந்தையில் பணம் தொடர்ந்து புழக்கத்தில் இருப்பதால், சிறு வணிகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கும் இது சாதகமாக அமையும்.&lt;/p&gt;&lt;p&gt;வட்டிச் சுமை குறைதல்: அவசரத் தேவைகளுக்காக வெளிநபர்களிடம் வட்டிக்குக் கடன் வாங்கும் சூழல் ஊழியர்களுக்குக் குறையும்.&lt;/p&gt;&lt;p&gt;உளவியல் தாக்கம்: சீரான இடைவெளியில் கையில் பணம் இருப்பது ஊழியர்களிடையே ஒருவித பாதுகாப்பு உணர்வையும், வேலையில் அதிக ஈடுபாட்டையும் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பொருளாதார வல்லுநர்களின் கருத்துப்படி, இந்த 'இருவார சம்பள முறை' (Bi-weekly payroll) வளர்ந்த நாடுகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஒன்று. நேபாளம் போன்ற வளரும் நாடுகளில் இது அமல்படுத்தப்படும்போது கீழ்க்கண்ட மாற்றங்கள் நிகழும்:&lt;/p&gt;&lt;p&gt;செலவு மேலாண்மை: ஊழியர்கள் தங்களது பட்ஜெட்டை 15 நாட்களுக்கு ஒருமுறை எனத் திட்டமிடுவதால், தேவையற்ற பெரிய செலவுகள் கட்டுப்படுத்தப்படும்.&lt;/p&gt;&lt;p&gt;வங்கிக் கடன்கள்: மாதாந்திர தவணை (EMI) செலுத்துபவர்களுக்கு இது சவாலாக இருக்கலாம் என்றாலும், வங்கிகள் இதற்கேற்ப தங்கள் வசூல் முறையை மாற்றிக்கொள்ள வாய்ப்புள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எந்தவொரு புதிய திட்டத்திலும் சவால்கள் இருப்பது இயல்பு. அந்த வகையில் இந்த முறையிலும் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன:&lt;/p&gt;&lt;p&gt;நிர்வாக வேலைப்பளு: கணக்காயர்கள் மற்றும் வங்கி ஊழியர்களுக்கு மாதத்திற்கு இரண்டு முறை சம்பளப் பட்டியலைத் தயாரிப்பதும், சரிபார்ப்பதும் கூடுதல் வேலையாக அமையும்.&lt;/p&gt;&lt;p&gt;மென்பொருள் மாற்றங்கள்: அரசுத் துறைகளில் பயன்படுத்தப்படும் ஊதிய மென்பொருட்களை (Payroll Software) இந்த புதிய முறைக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;நேபாள அரசாங்கத்தின் இந்த முடிவு ஒரு முற்போக்கான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. இது ஊழியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நாட்டின் பொருளாதாரச் சுழற்சியையும் வேகப்படுத்தும்.&lt;/p&gt;&lt;p&gt;&quot;பணம் என்பது ஒரு ஓடும் நீரைப் போன்றது; அது தேங்காமல் சீராகப் பரவும்போதுதான் அதன் பலன் அனைவரையும் சென்றடையும்.&quot;&lt;/p&gt;&lt;p&gt;இந்த நடைமுறை வெற்றிகரமாகச் செயல்படும் பட்சத்தில், பிற அண்டை நாடுகளும் தங்களது ஊழியர்களின் நலன் கருதி இத்தகைய மாற்றங்களைக் கொண்டு வரப் பரிசீலிக்க வாய்ப்புள்ளது. ஊழியர்களின் நிதிச் சுதந்திரத்தை உறுதி செய்வதில் இது ஒரு புரட்சிகரமான தொடக்கமாகும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/world/nepal-government-revolutionizes-payroll-bi-monthly-salaries-for-civil-servants-dqdaypc"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Iran Ceasefire news: ஹார்முஸ் நீரினை திறப்பு..! போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா, ஈரான் ஒப்புதல்..]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/world/iran-conflict-14-day-ceasefire-declared-dxe8se3</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/world/iran-conflict-14-day-ceasefire-declared-dxe8se3</guid>
            <pubDate>Wed, 08 Apr 2026 07:17:34 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ஈரான் மீதான தாக்குதலை 2 வார காலத்திற்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்க அமெரிக்கா ஒப்புதல் அளிததுள்ளது. அதே போன்று அமெரிக்காவின் கோரிக்கைக்கு இணங்க ஹார்முஸ் நீரிணையை 2 வாரத்திற்கு திறக்க ஈரான் ஒப்புதல்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01knm7aw5sct07qza368hvcsyp,imgname-iran-trump-1775574020279.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஈரான் மீதான தாக்குதலை 2 வார காலத்திற்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்க அமெரிக்கா ஒப்புதல் அளிததுள்ளது. அதே போன்று அமெரிக்காவின் கோரிக்கைக்கு இணங்க ஹார்முஸ் நீரிணையை 2 வாரத்திற்கு திறக்க ஈரான் ஒப்புதல்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் கடந்த சில தினங்களாக உச்சத்தை அடைந்து உலக அளவில் பதற்றத்தை அதிகரித்தது. மேலும் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால் கோபமடைந்த அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானை ஒரே இரவில் அழிக்க முடியும் என கூறியது பதற்றத்தை உச்சமடையச் செய்தது. இந்த நிலையில் ஈரானில் இரண்டு வாரங்களுக்கு போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டதாக டொனால்ட் டிரம்ப் செவ்வாயன்று விளக்கினார். ஈரான் மீதான குண்டுவீச்சுகள் மற்றும் பிற தாக்குதல்களை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தம் செய்ய ஒப்புக்கொள்வதாக அமெரிக்க அதிபர் சமூக ஊடகங்களில் எழுதினார். இது இருதரப்பு போர் நிறுத்தமாக இருக்கும் என்று டிரம்ப் விளக்கினார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அமெரிக்க இராணுவத்தின் நோக்கங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. ஈரானுடன் நீண்டகால அமைதி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டிரம்ப் கூறினார். அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பெரும்பாலான முக்கிய சர்ச்சைக்குரிய பிரச்சினைகளுக்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக டிரம்ப் கூறினார். பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் மற்றும் ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக டிரம்ப் தெரிவித்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஈரான், ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாகவும் உடனடியாகவும் திறக்கத் தயாராக இருந்தால் மட்டுமே இந்த முடிவு எடுக்கப்படும் என்றும் டிரம்ப் கூறினார். அவர் தனக்குத்தானே நிர்ணயித்திருந்த இரவு 8 மணி காலக்கெடுவிற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு இந்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. மத்திய கிழக்கில் போர் அச்சுறுத்தல் நீடித்து வரும் நேரத்தில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை, உலக நாடுகளுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையேயான இந்த மோதலில் பாகிஸ்தான் ஒரு மத்தியஸ்தராகப் பங்காற்றி வருகிறது. இந்த நிபந்தனைக்குட்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு வழிவகுத்த பேச்சுவார்த்தைகளில், தான் பேசிய நபர்களில் ஒருவராக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் பெயரையும் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;டொனால்ட் டிரம்ப் அறிவித்த இரண்டு வார கால போர் நிறுத்தத்தில் இஸ்ரேலும் பங்கேற்பதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஒருவர் சிஎன்என்-க்கு உறுதிப்படுத்தினார். ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படாவிட்டால், ஈரானிய உள்கட்டமைப்பு மீது ஒரு பெரிய இராணுவத் தாக்குதலைத் தொடங்குவதற்கான டிரம்பின் காலக்கெடுவிற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பு இந்தத் தகவல் வெளியானது. பேச்சுவார்த்தைகள் தொடரும் நிலையில், இஸ்ரேல் தனது குண்டுவீச்சை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் ஒப்புக்கொண்டுள்ளதாக அந்த அதிகாரி கூறினார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதனிடையே டிரம்ப் அறிவித்த இரண்டு வார கால போர் நிறுத்தத்தை ஈரான் ஏற்றுக்கொண்டுள்ளது. ஈரானிய ராணுவத்தின் உதவியுடன் ஹோர்முஸ் நீர்வழி திறக்கப்படும் என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறினார். இன்று இரவு நாகரிகம் முடிவுக்கு வரும் என்று ஈரான் கடுமையான அச்சுறுத்தலை விடுத்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, செவ்வாயன்று அமெரிக்கா ஈரானுடன் இரண்டு வார கால போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது.&lt;/p&gt;&lt;p&gt;இந்த ஒப்பந்தம் இரண்டு வார காலத்திற்கு போர் நிறுத்தத்திற்கும், ஹோர்முஸ் நீர்வழியை உடனடியாகத் திறப்பதற்கும் வழிவகுக்கிறது. ஈரானுடன் ஒரு இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு இந்த இரண்டு வார காலத்தை அமெரிக்கா பயன்படுத்தும் என்று டிரம்ப் கூறினார். இதைத் தொடர்ந்து ஈரானிய வெளியுறவு அமைச்சரின் பதில் வந்தது. பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தனது ட்விட்டர் பதிவில் விடுத்த சகோதரத்துவ வேண்டுகோளுக்கு இணங்கவும், அமெரிக்காவின் 15 அம்ச முன்மொழிவுகளின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற அதன் கோரிக்கையைக் கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பேச்சுவார்த்தைகளுக்காக ஈரான் முன்வைத்த 10 அம்ச முன்மொழிவுகளின் பொதுவான கட்டமைப்பை அமெரிக்க அதிபர் ஏற்றுக்கொண்டதாக அறிவித்த பின்னரும், ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால், நமது சக்திவாய்ந்த ஆயுதப் படைகள் தற்காப்பு நடவடிக்கைகளை நிறுத்திவிடும் என்று அப்பாஸ் அராக்சி சமூக ஊடகங்களில் எழுதியுள்ளார். ஈரானிய ஆயுதப் படைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலமும், தொழில்நுட்ப வரம்புகளைக் கருத்தில் கொண்டும், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக இரண்டு வாரங்களுக்குப் பாதுகாப்பான போக்குவரத்து சாத்தியமாகும் என்றும் அராக்சி மேலும் கூறினார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/world/iran-conflict-14-day-ceasefire-declared-dxe8se3"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Iran Ship Seizure: இந்தியா வந்த கப்பல் மீது துப்பாக்கிச்சூடு, குண்டுவீச்சு! ஈரான் அதிரடி..]]></title>
            <link>https://tamil.asianetnews.com/world/iran-commandos-attack-and-seize-india-bound-cargo-ship-articleshow-e7w40ks</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/world/iran-commandos-attack-and-seize-india-bound-cargo-ship-articleshow-e7w40ks</guid>
            <pubDate>Thu, 23 Apr 2026 16:17:54 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ஹார்முஸ் ஜலசந்தியில், இந்தியா வந்துகொண்டிருந்த சரக்குக் கப்பலை ஈரான் படைகள் துப்பாக்கி முனையில் சிறைபிடித்துள்ளன. இந்த அதிரடித் தாக்குதலின் திகில் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் உலக வர்த்தகம் மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kpwy40zq4r1et7am0myrjqrx,imgname-iran-seizes-india-bound-ship-in-strait-of-hormuz-dramatic-video-shows-armed-boarding-operation-1776940090359.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;உலகின் மிக பதற்றமான கடல் வழிகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தியிலிருந்து ஒரு திகிலூட்டும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்தியாவுக்கு வந்துகொண்டிருந்த ஒரு சரக்குக் கப்பலை, ஈரான் கமாண்டோக்கள் சினிமா பாணியில் தாக்கி சிறைபிடித்துள்ளனர். துப்பாக்கிச்சூடு, கையெறி குண்டுகள் மற்றும் அதிவேக படகுகளுக்கு மத்தியில் நடந்த இந்த ஆப்ரேஷனின் வீடியோ இப்போது வெளியாகி, பாதுகாப்பு குறித்த பெரிய கேள்விகளை எழுப்பியுள்ளது.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;இந்தியா வந்த கப்பல் மீது திடீர் தாக்குதல்&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;கிடைத்த தகவல்களின்படி, லைபீரியக் கொடியுடன் கூடிய 'Epaminondas' என்ற சரக்குக் கப்பல், துபாயிலிருந்து குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்திற்குச் சென்றுகொண்டிருந்தது. அப்போதுதான், ஈரான் கடற்படை அதை குறிவைத்துள்ளது. ஈரான் வீரர்கள் அதிவேகப் படகுகளில் கப்பலை நெருங்கி துப்பாக்கியால் சுட்டதாகவும், கையெறி குண்டுகளை வீசியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதலில், கப்பலின் 'பிரிட்ஜ்' எனப்படும் கட்டுப்பாட்டு அறை சேதமடைந்தது.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;வீடியோவில் பதிவான திகில் நிமிடங்கள்&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;ஈரான் வெளியிட்ட வீடியோவில், முகமூடி அணிந்த கமாண்டோக்கள் அதிவேகப் படகுகளில் கப்பலைத் துரத்துவது தெளிவாகத் தெரிகிறது. பின்னர், அவர்கள் ஏணி மூலம் கப்பலில் ஏறி, ஆயுத முனையில் அதைக் கட்டுக்குள் கொண்டு வருகிறார்கள். வீடியோவில், வீரர்கள் கப்பலின் இன்ஜின் அறை வரை சென்று சோதனை செய்வதையும், கப்பல் தளம் முழுவதையும் கட்டுப்பாட்டில் எடுப்பதையும் பார்க்க முடிகிறது. இந்த முழு நடவடிக்கையும் மிகவும் திட்டமிட்ட மற்றும் ஆக்ரோஷமான ஒன்றாகத் தெரிகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;#BREAKING:An unprecedented Iranian challenge.Iran publishes scenes of the moment that the Revolutionary Guards took over ships using very fast boats, contrary to the instructions of the Iranian Navy and the rise of elite forces on board. pic.twitter.com/ckePfEZK8e&lt;/p&gt;&lt;p&gt;&mdash; MOSCOW NEWS  (@MOSCOW_EN) April 22, 2026&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;மற்றொரு கப்பலும் இலக்கு&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;ஈரான், 'MSC Francesca' என்ற மற்றொரு கப்பலையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது. இந்தக் கப்பல் ஈரான் கடற்கரையிலிருந்து சுமார் 6 மைல் தொலைவில் இருந்தபோது, அதன் மீதும் கடுமையான துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. பின்னர் இரண்டு கப்பல்களும் ஈரான் நோக்கி கொண்டு செல்லப்பட்டன.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;ஊழியர்கள் பாதுகாப்பாக உள்ளனர், ஆனால் பதற்றம் அதிகரிப்பு&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;இந்தத் தாக்குதலில் கப்பல் ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், நடுக்கடலில் இப்படி துப்பாக்கிச்சூடும், குண்டுவீச்சும் நடந்திருப்பது உலக கடல்சார் பாதுகாப்பு குறித்த கவலையை அதிகரித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி போன்ற முக்கிய வழித்தடத்தில் நிலைமை எவ்வளவு பதற்றமாக இருக்கிறது என்பதை இந்தச் சம்பவம் காட்டுகிறது.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;இந்த விவகாரம் ஏன் முக்கியமானது?&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;இந்தியாவுக்கு வந்துகொண்டிருந்த கப்பல் நேரடியாகத் தாக்கப்பட்டதால், இந்தச் சம்பவம் இந்தியாவிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே, வரும் நாட்களில் தூதரக மட்டத்தில் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தவும் வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/world/iran-commandos-attack-and-seize-india-bound-cargo-ship-articleshow-e7w40ks"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Summer Travel: பழங்கால இன்ஜினியரிங்கின் உச்சம்! உலகின் டாப் சுற்றுலாத் தலங்கள் இதோ.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/top-historic-destinations-every-history-lover-must-visit-gdlhkgl</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/top-historic-destinations-every-history-lover-must-visit-gdlhkgl</guid>
            <pubDate>Fri, 24 Apr 2026 10:47:49 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கோடை விடுமுறை வந்தாச்சு, எங்க டூர் போலாம்னு தேட ஆரம்பிச்சுட்டீங்களா? இப்போதைய டிரெண்ட்படி மக்கள் எங்கே அதிகம் போறாங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? ட்ரிப் அட்வைசர் புள்ளிவிவரப்படி &amp;nbsp;அந்த சூப்பரான இடங்களைப் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01er9k3b912ya255v0mvz2n5km,imgname-rohit-ritika-jpg.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கோடை விடுமுறை வந்தாச்சு, எங்க டூர் போலாம்னு தேட ஆரம்பிச்சுட்டீங்களா? இப்போதைய டிரெண்ட்படி மக்கள் எங்கே அதிகம் போறாங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? ட்ரிப் அட்வைசர் புள்ளிவிவரப்படி &amp;nbsp;அந்த சூப்பரான இடங்களைப் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பழங்கால ரோமின் மிகச் சிறப்பாகப் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களில் இதுவும் ஒன்று. ஒரே நேரத்தில் 50,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் அமரும் திறன் கொண்டது. கிளாடியேட்டர்கள் சண்டையிட்ட இந்த அரங்கத்தைப் பார்க்க ரோம் செல்பவர்கள் யாரும் தவறுவதில்லை. அரை நாள் ஆகும் இந்த பயணத்திற்கு, வரிசையில் நிற்காமல் செல்ல ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இத்தாலி: ரோம் நகரில் உள்ள போப் ஆண்டவரின் இல்லம் மற்றும் அருங்காட்சியகங்களின் பிரம்மாண்டமான வளாகம் இது. கடந்த 2000 ஆண்டுகால மனிதகுலத்தின் சாதனைகளையும் வளர்ச்சியையும் இங்கே காணலாம். 'வேக்கிங் அப் தி வத்திக்கான்' என்ற சிறிய குழு சுற்றுப்பயணம் மூலம், சிஸ்டைன் சேப்பலை கூட்ட நெரிசல் இல்லாமல் அமைதியாகப் பார்க்கலாம். போப்பைப் பார்க்க விரும்பினால், வாரத்தின் குறிப்பிட்ட நாட்களுக்கு முன்பதிவு செய்ய வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிரான்ஸ், அமெரிக்காவுக்கு நட்பின் பரிசாக வழங்கியதுதான் சுதந்திர தேவி சிலை. இது சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் உலகளாவிய சின்னமாக விளங்குகிறது. அமெரிக்காவுக்குச் சென்றால், இந்த புகழ்பெற்ற நினைவுச்சின்னத்தையும், எல்லிஸ் தீவின் அழகிய காட்சிகளையும் தவறவிடாதீர்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உலகெங்கிலும் உள்ள பயணிகள், புகழ்பெற்ற ஈபிள் டவரை நேரில் காணவே பாரிஸ் வருகிறார்கள். டவரை ரசிப்பதோடு, அதன் அருகே கிடைக்கும் சுவையான உணவுகளும் ஒரு புதுவித அனுபவத்தைத் தரும். உலகின் மிக அழகான நகரங்களில் ஒன்றான பாரிஸின் அழகை இங்கு முழுமையாக உணரலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வரலாற்றுக்கு முந்தைய இங்கிலாந்தின் மிக முக்கியமான எச்சங்களில் ஒன்று ஸ்டோன்ஹெஞ்ச். கரடுமுரடாக செதுக்கப்பட்ட இந்த ராட்சதக் கற்கள், இரண்டு செறிவான வட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இதன் அழகை அங்கு சென்றால் மட்டுமே முழுமையாக உணர முடியும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;லியனார்டோ டா வின்சியின் 'மோனா லிசா' ஓவியம் இங்குதான் உள்ளது. லூவர், உலகின் மிகப்பெரிய கலை அருங்காட்சியகமாகக் கருதப்படுகிறது. பல காலகட்டங்களைச் சேர்ந்த கலைப் படைப்புகளின் ஈடு இணையற்ற தொகுப்பு இங்குள்ளது. அருங்காட்சியகத்தின் சில முக்கிய பகுதிகளைப் பார்க்க, 'ஸ்கிப்-தி-லைன்' நடைபயண டிக்கெட்டைப் பயன்படுத்தலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்னும் கட்டி முடிக்கப்படாத இந்த ரோமன் கத்தோலிக்க தேவாலயம், புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர் கௌடியின் மிகச்சிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது. இதன் கட்டுமானம் 1882-ல் தொடங்கி இன்னும் முடியவில்லை. பார்சிலோனா செல்லும் எந்தவொரு சுற்றுலாப் பயணியும் இதைத் தவறவிட விரும்ப மாட்டார்கள். இங்கு எப்போதுமே நீண்ட வரிசை இருக்கும் என்பதால், முன்னுரிமை டிக்கெட்டை முன்பதிவு செய்வது நல்லது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/top-historic-destinations-every-history-lover-must-visit-gdlhkgl"/>
        </item>
        <item>
            <title><![CDATA[அமெரிக்கா செல்ல வேண்டுமா? உங்கள் சோசியல் மீடியா ரொம்ப பத்திரம் மக்களே!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/world/usa-visa-social-media-screening-h1b-applicants-details-gmvaut9</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/world/usa-visa-social-media-screening-h1b-applicants-details-gmvaut9</guid>
            <pubDate>Fri, 03 Apr 2026 08:51:53 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;அமெரிக்கா தனது விசா விதிகளில் புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது, இதன்படி விசா விண்ணப்பதாரர்கள் தங்கள் சமூக வலைதள தகவல்களை பகிர வேண்டும். இந்த நடவடிக்கை விண்ணப்பதாரர்களின் பின்னணியை ஆய்வு செய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kn8kahtga2ry973vnppmxw19,imgname-tamil-news--39--1775183939407.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;அமெரிக்கா தனது விசா விதிகளில் புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது, இதன்படி விசா விண்ணப்பதாரர்கள் தங்கள் சமூக வலைதள தகவல்களை பகிர வேண்டும். இந்த நடவடிக்கை விண்ணப்பதாரர்களின் பின்னணியை ஆய்வு செய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அமெரிக்கா செல்லும் பல இந்தியர்களுக்கு &ldquo;அமெரிக்கன் ட்ரீம்&rdquo; போல இருக்கிறது. ஆனால், இப்போது அந்த பயணம் சற்று கடினமாகும் நிலை உருவாகியுள்ளது. மார்ச் 30 முதல் அமெரிக்கா தனது விசா விதிகளில் புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இனிமேல், விசா பெற விண்ணப்பிப்பவர்கள் தங்கள் சமூக வலைதள தகவல்களையும் பகிர வேண்டிய அவசியம் உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அமெரிக்க வெளியுறவு துறை அறிவிப்பின்படி, வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களுக்கு விண்ணப்பிக்கும் நான்இமிக்ரண்ட் (குடியேறாத) விசா விண்ணப்பதாரர்களின் சமூக வலைதள கணக்குகள் பரிசோதிக்கப்படும். இதில் A-3, C-3, G-5, H-3, H-4 போன்ற பல பிரிவுகள் அடங்கும். இந்த நடவடிக்கை மூலம் விண்ணப்பதாரர்களின் பின்னணி மற்றும் செயல்பாடுகளை விரிவாக ஆய்வு செய்ய முடியும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த புதிய நடைமுறையின் முக்கிய நோக்கம், அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதி செய்வதே ஆகும். விண்ணப்பதாரர்களின் சமூக வலைதள பதிவுகள், கருத்துகள் மற்றும் ஆன்லைன் செயல்பாடுகள் மூலம் பொதுமக்கள் பாதுகாப்புக்கு ஆபத்தானவர்களா என்பதை மதிப்பீடு செய்ய முடியும். ஏதேனும் சந்தேகத்துக்கிடமான தகவல்கள் இருந்தால், விசா மறுக்கப்படும் வாய்ப்பு அதிகம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதே போன்ற விதிமுறைகள் ஏற்கனவே மாணவர் மற்றும் எக்ஸ்சேஞ்ச் விசாக்களுக்கு நடைமுறையில் இருந்தது. கடந்த டிசம்பர் மாதம் H-1B வேலை விசா மற்றும் அதனுடன் தொடர்புடையவர்களுக்கு இந்த சோதனை அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இந்த நடைமுறை மேலும் பல பிரிவுகளுக்கும் விரிவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;புதிய விதிமுறைகளின்படி, விசா விண்ணப்பதாரர்கள் தங்களது சமூக வலைதள கணக்குகளை பொதுமக்கள் பார்வைக்கு திறந்தவையாக வைத்திருக்க வேண்டும். தூதரக அதிகாரிகள் அந்த செயல்பாடு கணக்குகளில் உள்ள பதிவுகள், மற்றும் டிஜிட்டல் தகவல்களை ஆய்வு செய்வார்கள். ஆகவே, அமெரிக்கா செல்ல திட்டமிடுபவர்கள் தங்களது ஆன்லைன் செயல்பாடுகளில் கவனம் செலுத்துவது இப்போது மிகவும் அவசியமாகியுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/world/usa-visa-social-media-screening-h1b-applicants-details-gmvaut9"/>
        </item>
        <item>
            <title><![CDATA[பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு..! மீண்டும் லாக்டவுன்..! 8 மணிக்கு மேல் கடைகளை மூட உத்தரவு]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/world/pakistan-implements-smart-lockdown-to-combat-dwindling-foreign-reserves-h0ac71o</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/world/pakistan-implements-smart-lockdown-to-combat-dwindling-foreign-reserves-h0ac71o</guid>
            <pubDate>Tue, 07 Apr 2026 22:37:37 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் காரணமாக பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு உச்சத்தை அடைந்துள்ள நிலையில் நிலைமையை சமாளிக்கும் பொருட்டு ஸ்மார்ட் லாக்டவுனை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kkgb3q7edtesa3wtea76d1tv,imgname-lpg-gas-shortage-leads-lockdown-situation-1773296278766.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் காரணமாக பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு உச்சத்தை அடைந்துள்ள நிலையில் நிலைமையை சமாளிக்கும் பொருட்டு ஸ்மார்ட் லாக்டவுனை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பாகிஸ்தானில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பொருளாதாரச் சரிவு காரணமாக, நாடு முழுவதும் 'ஸ்மார்ட் லாக்டவுன்' (Smart Lockdown) போன்ற கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு ஏப்ரல் 7, 2026 முதல் அமல்படுத்தியுள்ளது. கோவிட் காலத்தைப் போன்ற முழுமையான முடக்கம் இதுவல்ல என்றாலும், மின்சாரம் மற்றும் எரிபொருளைச் சேமிப்பதற்காக வர்த்தக நேரங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;பின்னணி மற்றும் காரணம்&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவை பாகிஸ்தானின் பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்துள்ளன. அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்துள்ள நிலையில், இறக்குமதி செய்யப்படும் எரிபொருளுக்கான செலவைக் குறைக்க பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மத்திய மற்றும் மாகாண அரசுகள் இணைந்து எடுத்துள்ள முடிவின்படி பின்வரும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன:&lt;/p&gt;&lt;p&gt;வணிக வளாகங்கள் மற்றும் சந்தைகள்: அனைத்து வணிக வளாகங்கள், சில்லறை விற்பனை அங்காடிகள் மற்றும் பொதுச் சந்தைகள் இரவு 8:00 மணிக்குள் மூடப்பட வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;உணவகங்கள்: உணவகங்கள், பேக்கரிகள் மற்றும் கஃபேக்கள் இரவு 10:00 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;திருமண விழாக்கள்: திருமண மண்டபங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் மற்றும் தனியார் வீட்டு விசேஷங்கள் அனைத்தும் இரவு 10:00 மணிக்குள் முடிக்கப்பட வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;அரசு அலுவலகங்கள்: எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 4 நாட்கள் வேலை மற்றும் வீட்டிலிருந்தே பணியாற்றும் (Work from Home) முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;மின்னொளி பயன்பாடு: விளம்பரப் பலகைகளுக்கான மின்சாரம் மற்றும் தேவையற்ற தெருவிளக்குகள் பயன்பாடு இரவு நேரங்களில் துண்டிக்கப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மருந்தகங்கள் (Pharmacies), மருத்துவமனைகள் மற்றும் பால், காய்கறி போன்ற அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு இந்தக் கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;மாகாணங்களின் நிலைப்பாடு&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;பஞ்சாப், கைபர் பக்துன்க்வா, பலுசிஸ்தான் மற்றும் இஸ்லாமாபாத் ஆகிய பகுதிகளில் இக்கட்டுப்பாடுகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. கைபர் பக்துன்க்வாவின் சில முக்கிய நகரங்களில் மட்டும் சந்தைகள் இரவு 9:00 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிந்து மாகாணத்திலும் இதற்கான முறையான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வரும் சூழலில், இந்த 'ஸ்மார்ட் லாக்டவுன்' மூலம் சுமார் 250 பில்லியன் ரூபாய் வரை சேமிக்க முடியும் என அரசு எதிர்பார்க்கிறது. எனினும், வர்த்தக நேரக் குறைப்பு காரணமாக சிறு வியாபாரிகள் மற்றும் தினசரி கூலித் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்ற அச்சம் எழுந்துள்ளது. வர்த்தக அமைப்புகள் இந்த முடிவிற்கு எதிர்ப்புத் தெரிவித்தாலும், நாட்டின் தற்போதைய அவசர நிலையைக் கருத்தில் கொண்டு ஒத்துழைக்குமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;இந்த நடவடிக்கை தற்காலிகமானது என்றும், சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை சீரானவுடன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்றும் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், மின்சாரத் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/world/pakistan-implements-smart-lockdown-to-combat-dwindling-foreign-reserves-h0ac71o"/>
        </item>
        <item>
            <title><![CDATA[US-Iran Talks: அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தை.! நிபந்தனைகளால் நீடிக்கும் சிக்கல்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/world/us-iran-islamabad-talks-face-hurdles-over-nuclear-deal-and-hormuz-strait-control-m5d3fm6</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/world/us-iran-islamabad-talks-face-hurdles-over-nuclear-deal-and-hormuz-strait-control-m5d3fm6</guid>
            <pubDate>Sat, 11 Apr 2026 12:53:23 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;இஸ்லாமாபாத்தில் நடக்கவுள்ள அமெரிக்கா-ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன்பே நம்பிக்கை சிக்கல் எழுந்துள்ளது. அணுசக்தி ஒப்பந்தம், ஹார்முஸ் ஜலசந்தி கட்டுப்பாடு போன்றவற்றால் பேச்சுவார்த்தை தடம் மாறுமா? அல்லது போர்நிறுத்தத்திற்கு வழி பிறக்குமா?&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01knxg55605h90whk4ec0yahnh,imgname-us-iran-islamabad-talks-ceasefire-nuclear-hormuz-strait-conflict-demands-differences-middle-east-crisis-6-1775885259968.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;இஸ்லாமாபாத்தில் நடக்கவுள்ள அமெரிக்கா-ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன்பே நம்பிக்கை சிக்கல் எழுந்துள்ளது. அணுசக்தி ஒப்பந்தம், ஹார்முஸ் ஜலசந்தி கட்டுப்பாடு போன்றவற்றால் பேச்சுவார்த்தை தடம் மாறுமா? அல்லது போர்நிறுத்தத்திற்கு வழி பிறக்குமா?&lt;/p&gt;&lt;img&gt;மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஒட்டுமொத்த உலகின் பார்வையும் இப்போது இஸ்லாமாபாத் மீதுதான். இங்கு அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே மிக முக்கியமான அமைதிப் பேச்சுவார்த்தை நடக்கவிருக்கிறது. ஆனால், இரு நாடுகளுக்கும் இடையே நம்பிக்கை முற்றிலும் சிதைந்துள்ளதால், இந்தப் பேச்சுவார்த்தை எளிதாக இருக்காது. போரை நிறுத்த வேண்டும் என்ற அழுத்தம் ஒருபுறம், அவநம்பிக்கை மறுபுறம். இரு நாடுகளும் பேச விரும்பினாலும், அவர்களின் நிபந்தனைகள் நேர்மாறாக இருப்பதால், இது 'செய் அல்லது செத்து மடி' என்ற நிலையை எட்டியுள்ளது.&lt;img&gt;இந்தப் பேச்சுவார்த்தை வெறும் இரு நாடுகளுக்கு இடையேயானது மட்டுமல்ல, உலகப் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புடனும் தொடர்புடையது. உலகின் 20% கச்சா எண்ணெய் வர்த்தகம் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே நடக்கிறது. இதில் ஏதேனும் தடை ஏற்பட்டால், கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, பல நாடுகள் பாதிக்கப்படும். அதே சமயம், ஈரானின் அணுசக்தி திட்டமும் ஒரு பெரிய பிரச்னையாக உள்ளது. ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கக் கூடாது என அமெரிக்கா விரும்புகிறது. ஆனால், ஈரான் இதைத் தனது பாதுகாப்பு மற்றும் இறையாண்மையின் ஒரு பகுதியாகப் பார்க்கிறது.&lt;img&gt;ஈரான் தரப்புக்கு முகமது பாகர் காலிபாஃப் தலைமை தாங்குகிறார். 'அமெரிக்கா பலமுறை வாக்குறுதிகளை மீறியதால், அவர்களை நம்புவது கடினம்' என்று அவர் தெளிவாகக் கூறுகிறார். ஈரானின் முக்கிய கோரிக்கைகள்: ஹார்முஸ் ஜலசந்தி தங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்; அமெரிக்கப் படைகள் இப்பகுதியில் இருந்து வெளியேற வேண்டும்; பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும்; முடக்கப்பட்ட ஈரான் சொத்துக்களைத் திரும்பத் தர வேண்டும். மேலும், லெபனானில் போர் நிறுத்தம் அமலாகி, சொத்துக்கள் திரும்ப ஒப்படைக்கப்படும் வரை முறையான பேச்சுவார்த்தை தொடங்காது என்றும் ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.&lt;img&gt;அமெரிக்கத் தரப்பில் ஜே.டி. வான்ஸ் இந்தப் பேச்சுவார்த்தைக்குத் தலைமை ஏற்கிறார். ஆனால், டொனால்ட் ட்ரம்ப் தனது நிலைப்பாட்டை ஏற்கெனவே தெளிவுபடுத்திவிட்டார். 'ஈரான் எந்தச் சூழலிலும் அணு ஆயுதம் தயாரிக்கக் கூடாது என்பதுதான் 99% பிரச்னை' என்கிறார் ட்ரம்ப். மேலும், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வர்த்தகம் தடையின்றி நடக்க வேண்டும் என்றும் அமெரிக்கா விரும்புகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில், சிறைபிடிக்கப்பட்ட சில அமெரிக்கக் குடிமக்களின் விடுதலை குறித்தும் அமெரிக்கா பேசலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.&lt;img&gt;இந்தப் பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் ஒரு முக்கிய சமரசராகத் தன்னைக் காட்டிக்கொள்கிறது. பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் இதை 'மேக் ஆர் பிரேக்' (make or break), அதாவது ஒரு निर्णायक தருணம் என்று வர்ணித்துள்ளார். இருப்பினும், பாகிஸ்தானின் பங்கு குறித்து சில கேள்விகளும் எழுகின்றன. சமீபத்திய சில கருத்துகளால் தூதரக ரீதியான சர்ச்சை ஏற்பட்டதால், அதன் நடுநிலைத்தன்மை பாதிக்கப்படலாம். ஆனாலும், இஸ்லாமாபாத்தில் நடக்கும் இந்தக் கூட்டம், இந்தச் சிக்கலைத் தீர்க்க ஒரு பெரிய வாய்ப்பாகக் கருதப்படுகிறது.&lt;img&gt;தற்போதைய சூழலில், இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தினாலும், தங்கள் நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கத் தயாராக இல்லை. ஒருபுறம் அவநம்பிக்கை, மறுபுறம் உலக நாடுகளின் அழுத்தம். இந்தப் பேச்சுவார்த்தை வெற்றி பெற்றால், மத்திய கிழக்கில் அமைதியை நோக்கிய ஒரு பெரிய படியாக இது அமையும். ஒருவேளை தோல்வியடைந்தால், பதற்றம் மேலும் அதிகரித்து, அதன் தாக்கம் உலகம் முழுவதும் எதிரொலிக்கும்.&lt;img&gt;இஸ்லாமாபாத்தில் என்ன முடிவு எடுக்கப்படும் என ஒட்டுமொத்த உலகமும் இப்போது காத்திருக்கிறது. இது வெறும் ஒரு தூதரக சந்திப்பு மட்டுமல்ல, எதிர்காலத்தின் திசையைத் தீர்மானிக்கக்கூடிய ஒரு திருப்புமுனை. அமெரிக்கா-ஈரான் இடையேயான இந்த மோதல், தற்போது அமைதிக்கு வழிவகுக்குமா அல்லது ஒரு பெரிய நெருக்கடியை உருவாக்குமா என்ற கட்டத்தை எட்டியுள்ளது.]]></content:encoded>
            <category>world</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/world/us-iran-islamabad-talks-face-hurdles-over-nuclear-deal-and-hormuz-strait-control-m5d3fm6"/>
        </item>
        <item>
            <title><![CDATA[US-Iran Conflict: ஒரே ராத்திரியில் ஒரு நாகரிகமே அழியும்... ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த பகிரங்க மிரட்டல்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/world/iran-faces-civilization-ending-threat-from-trump-as-deal-deadline-looms-articleshow-mmhtqs0</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/world/iran-faces-civilization-ending-threat-from-trump-as-deal-deadline-looms-articleshow-mmhtqs0</guid>
            <pubDate>Tue, 07 Apr 2026 21:08:23 +0530</pubDate>
            <description><![CDATA[ஒப்பந்தம் செய்யவில்லை என்றால் ஒரு நாகரிகமே அழியும் என ஈரானுக்கு டொனால்ட் டிரம்ப் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானின் ராணுவ தளங்கள் மீது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன. கார்க் தீவு மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி பகுதிகளில் பதற்றம் அதிகரித்துள்ளது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01knk4czvtdpen8qk6yc0fwsmd,imgname----------------------80--1775537389434.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் அதிகமாகிட்டே இருக்கு. இதுக்கு நடுவுல, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் இன்னும் முத்திப் போயிருக்கு. அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானுக்கு மறுபடியும் ஒரு ஸ்ட்ராங்கான வார்னிங் கொடுத்திருக்கார். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள்ள எந்த ஒப்பந்தமும் செய்யலைன்னா, &ldquo;ஒரு நாகரிகமே அழியக்கூடிய&rdquo; அளவுக்கு நிலைமை மோசமாகலாம்னு சொல்லியிருக்கார்.&lt;/p&gt;&lt;p&gt;டிரம்ப் இந்த கருத்தை தனது Truth Social சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். &ldquo;நான் இதை விரும்பவில்லை, ஆனால் நிலைமை வேகமாக அந்த திசையில் செல்லக்கூடும். ஒருவேளை நிலைமை மாறினால், அது உலக வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமையும்&rdquo; என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;Trump told: &ldquo;A whole civilization will die tonight&rdquo;.You and your allies will suffer an unforgettable hit from the ancient civilization of Iran.&lt;/p&gt;&lt;p&gt;&mdash; Iran Embassy SA (@IraninSA) April 7, 2026&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;h2&gt;ஒப்பந்தத்துக்கான கெடு&lt;/h2&gt;&lt;p&gt;வாஷிங்டன் நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி வரைக்கும் (இந்திய நேரப்படி புதன்கிழமை காலை 5:30 மணி) ஈரானுக்கு டிரம்ப் கெடு விதிச்சிருக்கார். இந்த கெடுவுக்குள் ஈரான் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்றால், அந்நாட்டின் ராணுவ மற்றும் முக்கிய கட்டமைப்புகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.&lt;/p&gt;&lt;h2&gt;அமெரிக்க துணை அதிபர் கருத்து&lt;/h2&gt;&lt;p&gt;அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸும் (JD Vance) இதுபத்தி பேசியிருக்கார். &ldquo;போரின் ராணுவ நோக்கங்கள் பெருமளவுக்கு நிறைவேறிடுச்சு. இனிமே என்ன முடிவு எடுக்கப்படுதுன்னு பார்க்கணும்&rdquo;னு அவர் சொல்லியிருக்கார். ஈரானின் ராணுவ பலம் கணிசமாக பலவீனப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பாரசீக வளைகுடாவில் அதன் செல்வாக்கு குறைந்துள்ளதாகவும் வேன்ஸ் கூறியுள்ளார். இனி ஈரான் மக்கள் மற்றும் அதன் தலைமைதான் அடுத்தகட்ட முடிவை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;&lt;h2&gt;கார்க் தீவு மீது பெரிய தாக்குதல்&lt;/h2&gt;&lt;p&gt;கிடைக்கிற தகவல்படி, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானோட பல முக்கிய இடங்களை குறிவெச்சு தாக்கியிருக்கு. இதுல, ஈரானோட மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவும் (Kharg Island) அடங்கும். இங்கிருந்த 50-க்கும் மேற்பட்ட ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் மீது அழுத்தத்தை அதிகரிக்கும் ஒரு தந்திரமாகவே இந்த தாக்குதல்கள் பார்க்கப்படுகின்றன.&lt;/p&gt;&lt;h2&gt;ஹார்முஸ் ஜலசந்தியிலும் பதற்றம்&lt;/h2&gt;&lt;p&gt;ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியிலயும் பதற்றம் அதிகரிச்சிருக்கு. இது உலகத்தோட மிக முக்கியமான கடல் வழித்தடங்களில் ஒண்ணு. உலகத்துக்கான எண்ணெய் விநியோகத்துல பெரும்பகுதி இது வழியாதான் போகுது. இந்த வழித்தடத்தை திறந்து வைத்திருக்க வேண்டும், கடல் போக்குவரத்துக்கு எந்த தடையும் வரக்கூடாது என அமெரிக்கா நினைக்கிறது. இதற்காகவும் ஈரான் மீது அழுத்தம் கொடுக்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;h2&gt;பேச்சுவார்த்தையை நிராகரித்த ஈரான்&lt;/h2&gt;&lt;p&gt;ஆனா, அமெரிக்காவோட இந்த டீலை ஈரான் நிராகரிச்சிருச்சு. தென்னாப்பிரிக்காவில் உள்ள ஈரான் தூதரகம், டிரம்பின் மிரட்டலுக்கு பதிலடி கொடுத்திருக்கு. &ldquo;அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும், ஈரானின் பழமையான நாகரிகத்திடமிருந்து மறக்க முடியாத ஒரு அடியை வாங்குவார்கள்&rdquo;னு சொல்லியிருக்காங்க. சமீபத்திய மிரட்டல்களுக்குப் பிறகு, மறைமுக பேச்சுவார்த்தைகள் உட்பட பல ராஜதந்திர வழிகளும் நிறுத்தப்பட்டுவிட்டதாக ஈரான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.&lt;/p&gt;&lt;h2&gt;வளைகுடா பகுதியில் அதிகரித்திருக்கும் ஆபத்து&lt;/h2&gt;&lt;p&gt;தாக்குதல்கள் தொடர்ந்தா, வளைகுடா பகுதியில் உள்ள எதிரி நாடுகளோட உள்கட்டமைப்புகளை தாக்குவோம்னு ஈரான் சூசகமா சொல்லியிருக்கு. சமீபத்தில் ஒரு கப்பல் மீதும், சவுதி அரேபியாவில் உள்ள சில தொழிற்சாலைகள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், அவற்றிற்கு அமெரிக்க நிறுவனங்களுடன் தொடர்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.&lt;/p&gt;&lt;h2&gt;அடுத்து என்ன நடக்கலாம்?&lt;/h2&gt;&lt;p&gt;நிபுணர்கள் என்ன சொல்றாங்கன்னா, ஈரான் சீக்கிரமா ஒரு ஒப்பந்தத்துக்கு வரணும்னு அழுத்தம் கொடுக்கத்தான் அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்துது. ஆனா, தாக்குதல் நிக்கிற வரைக்கும் பேச்சுவார்த்தைக்கே இடமில்லைனு ஈரான் கறாரா சொல்லிருச்சு. இனிவரும் நாட்களில் பதற்றம் அதிகரிக்குமா அல்லது பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/world/iran-faces-civilization-ending-threat-from-trump-as-deal-deadline-looms-articleshow-mmhtqs0"/>
        </item>
        <item>
            <title><![CDATA[கூகுள், ஆப்பிள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களை அழிப்போம்..! அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை மணி]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/world/iran-threatens-attacks-on-18-us-companies-in-west-asia-including-apple-and-google-mpo3ki0</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/world/iran-threatens-attacks-on-18-us-companies-in-west-asia-including-apple-and-google-mpo3ki0</guid>
            <pubDate>Wed, 01 Apr 2026 10:30:45 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;மேற்கு ஆசியாவில் செயல்படும் 18 அமெரிக்க நிறுவனங்கள் மீது ஏப்ரல் 1 முதல் தாக்குதல் நடத்தப்போவதாகவும், இந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் உடனடியாக வெளியேறுமாறும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) மிரட்டல் விடுத்துள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kn3nr63a85rwtw1mxwg2jxzc,imgname-whatsapp-image-2026-04-01-at-10.12.58-1775018711146.jpeg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;மேற்கு ஆசியாவில் செயல்படும் 18 அமெரிக்க நிறுவனங்கள் மீது ஏப்ரல் 1 முதல் தாக்குதல் நடத்தப்போவதாகவும், இந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் உடனடியாக வெளியேறுமாறும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) மிரட்டல் விடுத்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC), ஏப்ரல் 1 முதல் மேற்கு ஆசியாவில் செயல்படும் அமெரிக்க நிறுவனங்களைக் குறிவைக்கத் தொடங்கும் என்று கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. இது அப்பகுதியில் பதற்றத்தை மேலும் கடுமையாக அதிகரித்துள்ளது. இந்த அச்சுறுத்தலில், ஆப்பிள் , கூகுள் , மைக்ரோசாப்ட் , இன்டெல், ஐபிஎம் மற்றும் டெஸ்லா போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்கள் உட்பட 18 முக்கிய அமெரிக்க நிறுவனங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாக அந்த அச்சுறுத்தலில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;கடுமையான வார்த்தைகள் அடங்கிய அறிக்கை ஒன்றில் ஐ.ஆர்.ஜி.சி, &ldquo;இந்த நிறுவனங்கள், ஏப்ரல் 1 ஆம் தேதி புதன்கிழமை, தெஹ்ரான் நேரப்படி இரவு 8 மணி முதல் தத்தமது பிரிவுகள் அழிக்கப்படுவதை எதிர்பார்க்க வேண்டும்&rdquo; என்று கூறியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேலும் அந்தக் குழு, ஊழியர்களுக்கு நேரடி எச்சரிக்கை விடுத்து, &ldquo;இந்த நிறுவனங்களின் ஊழியர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள, உடனடியாகத் தங்கள் பணியிடங்களை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்துகிறோம்&rdquo; என்று கூறியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையேயான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனது உயர்மட்ட அதிகாரிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தொடர் படுகொலைகளுக்கு அமெரிக்க மற்றும் நேச நாட்டுப் படைகளே காரணம் என தெஹ்ரான் குற்றம் சாட்டுகிறது. இந்த நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அமைப்புகள் உள்ளிட்ட மேம்பட்ட தொழில்நுட்பங்கள், இராணுவத் திட்டமிடல் மற்றும் அவற்றைச் செயல்படுத்துவதில் பங்கு வகித்துள்ளதாக ஈரானிய அதிகாரிகள் கூறுகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஐ.ஆர்.ஜி.சி இந்த நிறுவனங்களை &ldquo;சட்டபூர்வமான இலக்குகள்&rdquo; என முத்திரை குத்தியுள்ளது. இது, வழக்கமான இராணுவ இலக்குகளிலிருந்து பெருநிறுவன மற்றும் தொழில்நுட்ப உள்கட்டமைப்புகளை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது. இது, நேரடி அலுவலகங்கள் மற்றும் தரவு மையங்கள் மீது மட்டுமல்லாமல், உலகளாவிய நிதி மற்றும் தகவல் தொடர்புக்கு இன்றியமையாத டிஜிட்டல் வலையமைப்புகள் மீதும் ஏற்படக்கூடிய தாக்குதல்கள் குறித்த கவலைகளை எழுப்புகிறது.&lt;/p&gt;&lt;p&gt;இலக்கு வைக்கப்பட்ட நிறுவனங்களின் பட்டியலில், தொழில்நுட்பம், நிதி மற்றும் விண்வெளி உள்ளிட்ட பல துறைகள் இடம்பெற்றுள்ளன; போயிங், ஆரக்கிள், டெல், சிஸ்கோ, மெட்டா மற்றும் ஜேபி மார்கன் போன்ற நிறுவனங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்களில் பல, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற வளைகுடா நாடுகளில் குறிப்பிடத்தக்க செயல்பாடுகளைக் கொண்டுள்ளதால், இப்பகுதி குறிப்பாகப் பாதிக்கப்படக்கூடியதாக உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த எச்சரிக்கை ஏற்கனவே உலகளாவிய கவலையைத் தூண்டியுள்ளது; சந்தைகள் பதற்றத்துடன் எதிர்வினையாற்றுவதோடு, வணிக நிறுவனங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்து வருகின்றன. பெருநிறுவன உள்கட்டமைப்புகள் மீதான எந்தவொரு தாக்குதலும், வங்கி அமைப்புகள் முதல் கிளவுட் கம்ப்யூட்டிங் வரையிலான அத்தியாவசிய சேவைகளைச் சீர்குலைத்து, பரந்த பொருளாதாரப் பாதிப்புகளை மேலும் தீவிரப்படுத்தக்கூடும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;இந்த வளர்ச்சி, நவீனப் போர்முறையானது பெருநிறுவன மற்றும் தொழில்நுட்பத் தளத்திற்குள் அபாயகரமாக விரிவடைவதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது; இதில் தனியார் நிறுவனங்கள் புவிசார் அரசியல் மோதல்களில் அதிகளவில் ஈர்க்கப்பட்டு, பொதுமக்கள் மற்றும் இராணுவ இலக்குகளுக்கு இடையிலான எல்லைகளை மங்கச் செய்கின்றன.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/world/iran-threatens-attacks-on-18-us-companies-in-west-asia-including-apple-and-google-mpo3ki0"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Artemis 2: 54 ஆண்டுகளுக்கு பின் நிலவை நோக்கி பயணித்த 4 மனிதர்கள்.. சாதனை படைக்கப்போகும் NASA]]></title>
            <link>https://tamil.asianetnews.com/world/artemis-2-lifts-off-marking-humanitys-return-to-lunar-orbit-after-50-years-articleshow-nd8gbzm</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/world/artemis-2-lifts-off-marking-humanitys-return-to-lunar-orbit-after-50-years-articleshow-nd8gbzm</guid>
            <pubDate>Thu, 02 Apr 2026 09:22:10 +0530</pubDate>
            <description><![CDATA[54 வருட இடைவெளிக்குப் பிறகு, நாசாவின் ஆர்டெமிஸ் 2 மிஷன் நான்கு விண்வெளி வீரர்களுடன் நிலாவுக்குப் புறப்பட்டது. ஒரு பெண், ஒரு கறுப்பினத்தவர் உட்பட இந்த டீம், பத்து நாட்கள் நிலாவைச் சுற்றிவிட்டு பூமிக்குத் திரும்பும்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kn5kada6jrdzacspp5ntzegy,imgname-artemis-1775083271494.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;54 ஆண்டுகளுக்குப் பிறகு, மனிதர்கள் மீண்டும் நிலாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர். நாசாவின் ஆர்டெமிஸ் 2 திட்டத்தின் ராக்கெட், இந்திய நேரப்படி அதிகாலை 4.06 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. ஃப்ளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து, நான்கு விண்வெளி வீரர்களுடன் SLS ராக்கெட் சீறிப் பாய்ந்தது. இந்த பிரம்மாண்டமான SLS ராக்கெட்டில் உள்ள ஓரியன் விண்கலத்தில்தான் இவர்கள் பயணம் செய்கிறார்கள். ஒரு பெண் மற்றும் ஒரு கறுப்பினத்தவர் இடம்பெற்றுள்ள முதல் நிலவுப் பயணம் இது என்பது வரலாற்றுச் சிறப்புமிக்கது. நாசாவின் ரெய்டு வைஸ்மேன் (மிஷன் கமாண்டர்), விக்டர் குளோவர் (பைலட்), கிறிஸ்டினா கோச் (மிஷன் ஸ்பெஷலிஸ்ட்) மற்றும் கனடா விண்வெளி ஏஜென்சியின் ஜெரெமி ஹேன்சன் ஆகியோர்தான் அந்த நான்கு பேர்.&lt;/p&gt;&lt;p&gt;இந்த மிஷனின் இலக்கு, பத்து நாட்களில் நிலவைச் சுற்றிவிட்டு பூமிக்குத் திரும்புவதுதான். பயணத்தின் ஒரு கட்டத்தில், இதுவரை மனிதர்கள் சென்ற எந்த விண்கலமும் அடையாத தூரத்திற்கு ஓரியன் செல்லும். இந்த நான்கு பேரும் கென்னடி விண்வெளி மையத்தில் கடுமையான தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளில் இருந்தனர். அவர்களின் தூக்கம், உணவு, தண்ணீர் அருந்துவது கூட கண்காணிக்கப்பட்டது. கிறிஸ்டினா கோச், நிலவுப் பயணத்தில் பங்கேற்கும் முதல் பெண். விக்டர் குளோவர் முதல் கறுப்பினத்தவர். ஜெரெமி ஹேன்சன், அமெரிக்கர் அல்லாத முதல் பயணி. இவர்களின் பயணத்தில் 'ரைஸ்' என்ற ஒரு சிறிய பொம்மையும் கூடவே செல்கிறது. அதற்குள், முன்பே பதிவு செய்த 56 லட்சம் மக்களின் பெயர்கள் அடங்கிய மெமரி கார்டும் உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;1972-ல் நடந்த அப்போலோ 17 மிஷனுக்குப் பிறகு, மனிதர்களை நிலாவின் சுற்றுவட்டப்பாதைக்குக் கொண்டு செல்லும் முதல் மிஷன் இந்த ஆர்டெமிஸ் 2 தான். அப்போலோ 17 குழுவினர் நிலவில் கால் பதித்தனர். ஆனால், ஆர்டெமிஸ் 2 குழுவினரைச் சுமந்து செல்லும் ஓரியன் விண்கலம், 10 நாட்கள் நிலவை வலம் வந்து பூமிக்குத் திரும்புவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளது. 2022 இறுதியில் நடந்த ஆளில்லா ஆர்டெமிஸ் 1 மிஷன் ஒரு பெரிய வெற்றியாக அமைந்தது. அப்போது, ஓரியன் விண்கலம் பயணிகளைச் சுமக்காமல் நிலவை வெற்றிகரமாகச் சுற்றிவிட்டு பூமிக்குத் திரும்பியது. சீனாவுக்கு முன்பாக மீண்டும் நிலவில் மனிதனை இறக்குவதுதான் அமெரிக்காவின் வெளிப்படையான இலக்கு.&lt;/p&gt;&lt;p&gt;புதிய திட்டத்தின்படி, ஆர்டெமிஸ் 4 மிஷனில்தான் நிலவில் கால் பதிப்பது நடக்கும். ஆனால், அது எல்லாமே ஆர்டெமிஸ் 2 மிஷனின் வெற்றியைப் பொறுத்துதான் இருக்கிறது. நீண்ட தூர மனித விண்வெளிப் பயணங்களுக்காக உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்தின் செயல்திறனை உறுதிப்படுத்த வேண்டும். அதற்கு, ஆர்டெமிஸ் 2 முழுமையாக வெற்றி பெற வேண்டும். அதனால், இந்த நிலவைச் சுற்றிவரும் பயணத்தை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/world/artemis-2-lifts-off-marking-humanitys-return-to-lunar-orbit-after-50-years-articleshow-nd8gbzm"/>
        </item>
        <item>
            <title><![CDATA[7 வாரம் ஆச்சு.. காமெனி உடல் இன்னும் அடக்கம் செய்யப்படாதது ஏன்?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/world/khameneis-funeral-still-pending-inside-irans-unusual-crisis-nngg9yt</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/world/khameneis-funeral-still-pending-inside-irans-unusual-crisis-nngg9yt</guid>
            <pubDate>Mon, 20 Apr 2026 17:27:18 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமெனியின் உடல், அவர் இறந்து பல வாரங்கள் ஆகியும் இன்னும் அடக்கம் செய்யப்படவில்லை. இந்த அசாதாரண தாமதம், நாட்டின் தற்போதைய அரசியல் ஸ்திரமற்ற தன்மையைப் பிரதிபலிக்கிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kjvqz8wx29aqzad317gjj4kg,imgname-mojtaba-khamenei-new-iran-supreme-leader-ayatollah-ali-khamenei-death-us-israel-strike-assembly-of-experts-update-2-1772605121437.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமெனியின் உடல், அவர் இறந்து பல வாரங்கள் ஆகியும் இன்னும் அடக்கம் செய்யப்படவில்லை. இந்த அசாதாரண தாமதம், நாட்டின் தற்போதைய அரசியல் ஸ்திரமற்ற தன்மையைப் பிரதிபலிக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஈரானின் அரசியல் மற்றும் மத வரலாற்றில் அரிதாகக் காணப்படும் ஒரு சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. நாட்டின் முன்னாள் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமெனியின் உடல், அவர் உயிரிழந்து பல வாரங்கள் கடந்தும் இன்னும் அடக்கம் செய்யப்படாமல் உள்ளது. டெஹ்ரானில் நடந்த தாக்குதலில் உயிரிழந்த 86 வயதான இந்த தலைவரின் கல்லறை எங்கு அமைக்கப்பட வேண்டும் என்ற முடிவை அரசு இதுவரை எடுக்கவில்லை. இது வழக்கமான நடைமுறைகளை விட முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;புதிய நிர்வாகம், குறிப்பாக மொஜ்தபா காமெனி தலைமையிலான குழு, வெளிநாட்டு அழுத்தங்களையும் பாதுகாப்பு சிக்கல்களையும் சமாளிப்பில் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறது. இதனால் இறுதிச் சடங்கு போன்ற பெரிய நிகழ்வுகளை உடனடியாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், சில பாதுகாப்பு ஆய்வாளர்கள் இந்த தாமதத்திற்கு முக்கிய காரணம் பயம் என்றும் கருத்து தெரிவிக்கின்றனர். போர்நிலை ஓரளவு அமைதியாக இருந்தாலும், சூழ்நிலை முழுமையாக கட்டுப்பாட்டில் இல்லை என்பதே அவர்களின் மதிப்பீடு.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;1989ஆம் ஆண்டு அயத்துல்லா ருஹொல்லா கொமெய்னியின் இறுதிச் சடங்கில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டது நினைவில் உள்ளது. ஆனால் அதே அளவிலான பொதுமக்கள் திரளைக் கொண்ட நிகழ்வை தற்போது நடத்த முடியாமல் இருப்பது அரசின் தயக்கத்தைக் காட்டுகிறது. இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்கள், வான்வழி அச்சுறுத்தல்கள் மற்றும் நாட்டுக்குள் ஏற்படக்கூடிய போராட்டங்கள் ஆகியவை இந்த முடிவை மேலும் தாமதப்படுத்துகின்றன. இதனால் அரசு எந்த அபாயத்தையும் ஏற்காமல் எச்சரிக்கையுடன் செயல்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேலும், புதிய உச்ச தலைவராக கருதப்படும் மொஜ்தபா காமெனி பொதுவெளியில் அதிகமாக தோன்றாதது கூட பல கேள்விகளை எழுப்புகிறது. இந்த சூழலில், கல்லறை அமைக்கும் இடமாக வடகிழக்கு நகரமான மஷாத் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது காமெனியின் சொந்த ஊராகவும், நாட்டின் எல்லைப் பகுதியில் பாதுகாப்பான இடமாகவும் கருதப்படுகிறது. மொத்தத்தில், இந்த தாமதம் ஈரான் அரசின் தற்போதைய நிலையைப் பற்றி பல கேள்விகளை எழுப்பும் ஒரு முக்கிய சுட்டிக்காட்டி உள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/world/khameneis-funeral-still-pending-inside-irans-unusual-crisis-nngg9yt"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Iran Oil: 'ஈரானின் எண்ணெய்யை பிடுங்குவோம்' - டிரம்பின் மிரட்டலால் உலகம் ஷாக்! என்னதான் திட்டம்?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/donald-trump-threatens-to-seize-irans-kharg-island-oil-hub-skhr77p</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/donald-trump-threatens-to-seize-irans-kharg-island-oil-hub-skhr77p</guid>
            <pubDate>Mon, 30 Mar 2026 12:05:18 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ஈரானின் எண்ணெய் வளத்தின் மீது தனது பார்வை இருப்பதாக டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகள் குவிக்கப்பட்டு வருகின்றன. இதனால், மிகப்பெரிய எரிசக்தி தட்டுப்பாடு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jxy4867ay2ycfqpd56037s44,imgname-donald-trump-1750136527082.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஈரானின் எண்ணெய் வளத்தின் மீது தனது பார்வை இருப்பதாக டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகள் குவிக்கப்பட்டு வருகின்றன. இதனால், மிகப்பெரிய எரிசக்தி தட்டுப்பாடு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;அமெரிக்கா, ஈரானின் மிக முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான 'கார்க் தீவை' (Kharg Island) கைப்பற்றலாம் என டிரம்ப் சூசகமாகத் தெரிவித்துள்ளார். ஈரானின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் ஏற்றுமதியும் இந்த தீவு வழியாகத்தான் உலக நாடுகளுக்குச் செல்கிறது. ஒரு பேட்டியில், &quot;அந்தத் தீவில் ஈரானிடம் எந்த பாதுகாப்பும் (Defence) இல்லை, அதை நாங்கள் மிக எளிதாகக் கைப்பற்றிவிடுவோம்&quot; என்று டிரம்ப் கூறியுள்ளார்.&lt;img&gt;டிரம்ப் வெறும் மிரட்டலோடு நிறுத்தவில்லை, ஒரு கெடுவையும் விதித்துள்ளார். ஈரான் ஏப்ரல் 6-ஆம் தேதிக்குள் ஒப்பந்த நிபந்தனைகளை ஏற்கவில்லை என்றால், அந்நாட்டின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் (எண்ணெய் தளங்கள்) மீது அமெரிக்கா நேரடியாகத் தாக்கும் என்று அவர் கூறியுள்ளார். இதுவரை ஈரானின் 13,000 தளங்களை அமெரிக்கா குண்டுவீசித் தகர்த்துள்ளதாகவும், இன்னும் 3,000 இலக்குகள் மீதமிருப்பதாகவும் டிரம்ப் உரிமை கோரியுள்ளார்.&lt;img&gt;தரைவழித் தாக்குதலுக்கான தயாரிப்புகள் தொடங்கிவிட்டன. பென்டகன் (Pentagon), சுமார் 10,000 வீரர்களை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இவர்களில் 3,500 ராணுவ வீரர்கள் மற்றும் 2,200 மரைன் கமாண்டோக்கள் வெள்ளிக்கிழமை அன்று அந்தப் பகுதிக்கு வந்து சேர்ந்துள்ளனர். இந்தப் படைப்பிரிவு, குறிப்பாக 'நிலப்பரப்பைக் கைப்பற்றி, அதைத் தக்கவைப்பதற்காக' பயிற்சி பெற்றவர்கள்.&lt;img&gt;ஈரானில் பழைய ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டதாக டிரம்ப் மற்றொரு பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார். அந்நாட்டின் உச்ச தலைவர் அயத்துல்லா காமெனியின் மரணத்திற்குப் பிறகு, தற்போது புதிய மற்றும் திறமையான நபர்கள் ஆட்சியில் இருப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும், காமெனியின் மகன் முஜ்தபா காமெனி ஒன்று இறந்திருக்கலாம் அல்லது மிகவும் மோசமான நிலையில் இருக்கலாம் என்றும், அவரைப் பற்றி நீண்ட காலமாக எந்த தகவலும் இல்லை என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.&lt;img&gt;டிரம்பின் இந்த ஆக்ரோஷமான போக்கால் உலக சந்தையில் அதன் தாக்கம் தெரியத் தொடங்கியுள்ளது. பிரென்ட் கச்சா எண்ணெய் (Brent Crude) விலை ஒரு பேரலுக்கு 116 டாலரைத் தாண்டியுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இது 50% உயர்வாகும். ஒருவேளை கார்க் தீவு மீது தாக்குதல் நடந்தால், உலகின் எண்ணெய் விநியோகச் சங்கிலி முடங்கக்கூடும் என நிபுணர்கள் கருதுகின்றனர். இதனால், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பணவீக்கம் விண்ணை முட்டும் அளவுக்கு உயரலாம். கார்க் தீவைத் தாக்குவது ஆபத்தானது என்றும், இது போரை நீண்ட காலத்திற்கு இழுத்துச் சென்று அமெரிக்க வீரர்களின் உயிருக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்றும் ராணுவ வல்லுநர்கள் கருதுகின்றனர்.]]></content:encoded>
            <category>world</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/donald-trump-threatens-to-seize-irans-kharg-island-oil-hub-skhr77p"/>
        </item>
        <item>
            <title><![CDATA[இந்தியாவுக்கு செக்..! செங்கடலில் துண்டிக்கப்படும் கேபிள்..! மொத்த இணையமும் முடங்கும் அபாயம்..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/world/middle-east-war-if-red-sea-cables-cuts-and-internet-crisis-happens-india-will-also-affected-te9zzrw</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/world/middle-east-war-if-red-sea-cables-cuts-and-internet-crisis-happens-india-will-also-affected-te9zzrw</guid>
            <pubDate>Mon, 30 Mar 2026 18:34:25 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;போர் என்பது வெறும் ஆயுதங்களால் மட்டுமே நடத்தப்படுவதில்லை; ஒரு நாட்டின் தகவல் தொடர்பு நரம்பு மண்டலத்தைத் துண்டிப்பதும் ஒரு போர் உத்திதான்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01km2h368pqe4b8y4hp5azab7w,imgname-gettyimages-2217409697-1773906532630.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;போர் என்பது வெறும் ஆயுதங்களால் மட்டுமே நடத்தப்படுவதில்லை; ஒரு நாட்டின் தகவல் தொடர்பு நரம்பு மண்டலத்தைத் துண்டிப்பதும் ஒரு போர் உத்திதான்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சர்வதேச அரசியலில் போர் என்பது நிலம், வான்வெளியோடு நின்றுவிடுவதில்லை. அது தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் கடலுக்கு அடியிலும் ஊடுருவியுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல், குறிப்பாக செங்கடல் பகுதியில் உள்ள கடலடி தகவல் தொடர்பு கேபிள்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல், இந்தியாவின் இணையப் பாதுகாப்பு, பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;உலகின் 95 சதவீதத்திற்கும் அதிகமான சர்வதேச தரவுப் பரிமாற்றங்கள் கடலுக்கு அடியில் பதிக்கப்பட்டுள்ள ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் வழியாகவே நடைபெறுகின்றன. ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவை இணைக்கும் மிக முக்கியமான ஒரு பாதையாக செங்கடல் விளங்குகிறது. இப்பகுதியின் வழியாகச் செல்லும் கேபிள்கள் சேதமடைந்தால், அது ஒரு நாட்டின் தகவல் தொடர்பை மட்டுமல்லாது, உலகளாவிய இணையப் பிணைப்பையே சீர்குலைக்கும் வல்லமை கொண்டது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஏமனின் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள், ஈரான்-இஸ்ரேல் மோதலில் ஈரானுக்கு ஆதரவாகத் தங்களைக் களமிறக்கியுள்ளனர். செங்கடல் வழியாகச் செல்லும் வணிகக் கப்பல்களைத் தாக்குவதுடன், கடலுக்கு அடியில் உள்ள தகவல் தொடர்பு கேபிள்களைத் தகர்ப்போம் என அவர்கள் விடுத்து வரும் அச்சுறுத்தல்கள் உலக நாடுகளைக் கலக்கமடையச் செய்துள்ளன. 2025 செப்டம்பரில் ஏற்கனவே ஒரு வணிகக் கப்பலின் நங்கூரம் சிக்கியதில் நான்கு முக்கிய கேபிள்கள் சேதமடைந்து, தெற்காசியாவில் பெரிய அளவில் இணையச் சிக்கல்கள் ஏற்பட்டதை நாம் மறந்துவிட முடியாது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியா தற்போது ஒரு டிஜிட்டல் பொருளாதாரமாக உருவெடுத்து வருகிறது. இந்நிலையில், செங்கடல் பகுதியில் ஏற்படும் கேபிள் சேதங்கள் இந்தியாவை பாதிக்கும். இந்தியாவின் யுபிஐ, வங்கிச் சேவைகள் அனைத்தும் இணையத்தையே நம்பியுள்ளன. சர்வதேச பணப் பரிமாற்றங்கள், பங்குச்சந்தை வர்த்தகங்கள் இதனால் முடங்கக்கூடும்.&lt;/p&gt;&lt;p&gt;செயற்கை நுண்ணறிவு, கிளவுட் சேவைகளின் பயன்பாடு இந்தியாவில் அதிகரித்து வருகிறது. வெளிநாட்டு சர்வர்களுடன் இணைக்கப்பட்டுள்ள இந்தச் சேவைகள், கேபிள் துண்டிக்கப்பட்டால் செயலற்றுப் போகும். இந்தியாவின் அந்நியச் செலாவணியில் முக்கியப் பங்கு வகிக்கும் ஐடி நிறுவனங்கள், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ள முடியாமல் போகும் சூழல் உருவாகலாம். மின்னஞ்சல், வீடியோ அழைப்புகள் முதல் ஆன்லைன் கல்வி மற்றும் மருத்துவம் வரை அனைத்துமே பாதிப்புக்குள்ளாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவில் சுமார் 17 கடலடி கேபிள்கள் உள்ளன. இவை மும்பை, சென்னை, கொச்சி, தூத்துக்குடி, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் உள்ள 14 தரையிறங்கும் நிலையங்கள் வழியாக இணைக்கப்பட்டுள்ளன. ஒரு பாதையில் பாதிப்பு ஏற்பட்டால், தரவுகளை மாற்றுப் பாதையில் திருப்புவதற்கான வசதிகள் இருந்தாலும், செங்கடல் போன்ற ஒரு முக்கியப் பாதையில் ஒட்டுமொத்தமாகப் பாதிப்பு ஏற்படும்போது, இணைய வேகம் பெருமளவு குறைவதையும், நெட்வொர்க் செயலிழப்புகளையும் தவிர்க்க முடியாது.&lt;/p&gt;&lt;p&gt;போர் என்பது வெறும் ஆயுதங்களால் மட்டுமே நடத்தப்படுவதில்லை; ஒரு நாட்டின் தகவல் தொடர்பு நரம்பு மண்டலத்தைத் துண்டிப்பதும் ஒரு போர் உத்திதான். 2025-ல் நாம் சந்தித்த சிறிய அளவிலான பாதிப்புகளே நமக்கு ஒரு எச்சரிக்கை மணி. செங்கடல் பகுதியில் அமைதி திரும்பாவிட்டால், இந்தியா போன்ற வளர்ந்து வரும் டிஜிட்டல் நாடுகள் அதன் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். தொழில்நுட்ப ரீதியாக மாற்று வழிகளையும், செயற்கைக்கோள் வழி இணையச் சேவைகளையும் வலுப்படுத்துவதே இதற்கு நீண்டகால தீர்வாக அமையும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world</category>
            <dc:creator>Thiraviya raj</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/world/middle-east-war-if-red-sea-cables-cuts-and-internet-crisis-happens-india-will-also-affected-te9zzrw"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Iran Air Defense: அமெரிக்க போர் விமானங்களை சாய்க்கும் ஈரான்! என்ன அந்த ‘சீக்ரெட்’ மிசைல் டெக்னாலஜி?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/world/iran-majid-missile-system-challenges-us-air-supremacy-with-f35-and-f15e-takedowns-u2rf4cp</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/world/iran-majid-missile-system-challenges-us-air-supremacy-with-f35-and-f15e-takedowns-u2rf4cp</guid>
            <pubDate>Sat, 04 Apr 2026 14:53:43 +0530</pubDate>
            <description><![CDATA[ஈரானின் 'மஜித்' இன்ஃப்ராரெட் ஏவுகணை அமைப்பு, அமெரிக்காவின் F-15E, F-35 போன்ற ஜெட்களை வீழ்த்தியதாக தகவல். இந்த அசிமெட்ரிக் போர் யுக்தி, அமெரிக்காவின் வான்வழி ஆதிக்கத்திற்கே சவால் விடுத்துள்ளது. ஈரான் உண்மையிலேயே F-35, F-15 விமானங்களை வீழ்த்தியதா?]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01knbmqnfjt57ksbknbvrynw6t,imgname-iran-air-defense-system-majid-missile-how-iran-shot-down-us-fighter-jets-f15e-f35-asymmetric-warfare-analysis-1-1775286081010.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[ஈரானின் 'மஜித்' இன்ஃப்ராரெட் ஏவுகணை அமைப்பு, அமெரிக்காவின் F-15E, F-35 போன்ற ஜெட்களை வீழ்த்தியதாக தகவல். இந்த அசிமெட்ரிக் போர் யுக்தி, அமெரிக்காவின் வான்வழி ஆதிக்கத்திற்கே சவால் விடுத்துள்ளது. ஈரான் உண்மையிலேயே F-35, F-15 விமானங்களை வீழ்த்தியதா?&lt;img&gt;&lt;p&gt;மத்திய கிழக்கில் நிலவி வரும் பதட்டங்களுக்கு மத்தியில், ஒரு முக்கியக் கேள்வி வேகமாகப் பரவி வருகிறது: ஈரான் இப்போது அமெரிக்காவின் மிகவும் மேம்பட்ட போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்துகிறதா? கடந்த 24 மணி நேரத்தில் வெளிவரும் அறிக்கைகள் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன. அமெரிக்கப் போர் விமானங்கள் மற்றும் பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்கள் ஈரானியத் தாக்குதல்களால் குறிவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது உண்மையாக இருந்தால், இது ஒரு தனிப்பட்ட சம்பவம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த வான்வழிப் போர் உத்தியிலும் ஒரு மாற்றத்தைக் குறிக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;ஈரானிய ஊடகங்கள் மற்றும் சமூக வலைதள கணக்குகள், IRGC வான் பாதுகாப்பு அமைப்பு ஒரு அமெரிக்க போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கின்றன. ஆரம்பத்தில் இது F-35 என்று கூறப்பட்டாலும், சிதைவுகளின் புகைப்படங்கள் RAF லேக்கன்ஹீத்தில் உள்ள 494வது ஃபைட்டர் ஸ்குவாட்ரனைச் சேர்ந்த F-15E ஸ்ட்ரைக் ஈகிள் விமானத்துடன் பொருந்துகின்றன.&lt;img&gt;&lt;p&gt;அறிக்கைகளின்படி, ஒரு மேம்பட்ட அமெரிக்க F-15E போர் விமானம் குறிவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்களும் தாக்கப்பட்டன. மேலும், ஒரு A-10 வார்ஹாக் விமானம் விபத்துக்குள்ளானதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்தச் சம்பவங்கள், ஈரானிய வான்வெளியின் மீது &quot;முழுமையான கட்டுப்பாடு&quot; இருப்பதாக அமெரிக்கா கூறும் கூற்று குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பெரும் படைபலத்தில் ஈரானால் அமெரிக்காவுடன் நேரடியாகப் போட்டியிட முடியாது, ஆனால் அது &quot;சமச்சீரற்ற போர்முறையில்&quot; கைதேர்ந்தது. இதன் பொருள், நேரடி மோதலுக்குப் பதிலாக திடீர்த் தாக்குதல் உத்திகளைக் கையாள்வதாகும். தன்னை விடப் பெரிய எதிரிகளைத் தொந்தரவு செய்வதற்காக, ஈரான் சிறிய ஆனால் கொடிய ஆயுதங்கள், மறைமுக அமைப்புகள் மற்றும் திடீர்த் தாக்குதல்களைப் பயன்படுத்துகிறது. இதனால்தான் அமெரிக்கா போன்ற ஒரு வல்லரசு கூட அதன் நகர்வுகளை முன்கூட்டியே கணிப்பதில் பெரும்பாலும் தோல்வியடைகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;'மஜித்' முறை: இது ஒரு திருப்புமுனையாக அமையுமா?&lt;/p&gt;&lt;p&gt;ஈரான் மஜித் வான் பாதுகாப்பு அமைப்பைப் பயன்படுத்தியிருக்கலாம் என நிபுணர்கள் நம்புகின்றனர். இந்த அமைப்பு குறிப்பாக ஆபத்தானதாகக் கருதப்படுவதற்குக் காரணம்:&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;இது ரேடாரைச் சார்ந்து செயல்படுவதில்லை, மாறாக அகச்சிவப்பு கதிர் (வெப்பத்தைக் கண்டறிதல்) மூலம் இலக்குகளைக் கண்டறிகிறது.&lt;/li&gt; &lt;li&gt;ஏவுகணை தன்னைக் குறிவைத்துவிட்டது என்பது அந்த விமானத்திற்குத் தெரியாது.&lt;/li&gt; &lt;li&gt;இது 8 கி.மீ. தூரம் வரையிலும், 6 கி.மீ. உயரம் வரையிலும் தாக்கும் திறன் கொண்டது.&lt;/li&gt; &lt;li&gt;ஒரே நேரத்தில் பல இலக்குகளைக் கண்காணிக்கும் திறன்&lt;/li&gt; &lt;li&gt;இதனால்தான் F-35 போன்ற மறைமுகத் தாக்குதல் போர் விமானங்கள் கூட இதிலிருந்து முற்றிலும் பாதுகாப்பானவையாகக் கருதப்படுவதில்லை.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;img&gt;&lt;p&gt;ஈரான் தனது வியூகத்தை கணிசமாக மாற்றியுள்ளது. அது இப்போது நிலையான அமைப்புகளுக்குப் பதிலாக நகரும் ஏவுகணை ஏவுதளங்களைப் பயன்படுத்துகிறது. ஒரு தாக்குதலுக்குப் பிறகு அதனால் விரைவாக இடங்களை மாற்றிக்கொள்ள முடியும் (சுட்டுவிட்டுத் தப்பிச் செல்லுதல்). அது தனது ஆயுதங்களை நிலத்தடி சுரங்கங்களிலும் ஏவுகணை நகரங்களிலும் மறைத்து வைப்பதால், எதிரிகள் அவற்றைக் கண்டுபிடித்து அழிப்பது மிகவும் கடினமாகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரேடார் மற்றும் அகச்சிவப்பு தொழில்நுட்பம் ஆகிய இரண்டையும் கொண்டுள்ளதும், மின்னணு நெரிசலைத் தாங்கக்கூடியதுமான சீனாவின் HQ-9B போன்ற மேம்பட்ட அமைப்புகளை ஈரான் பயன்படுத்தக்கூடும் என்றும் சில அறிக்கைகள் கூறுகின்றன.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;அப்படியானால், அமெரிக்காவின் வான் மேலாதிக்கம் இப்போது ஆபத்தில் உள்ளதா?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்த நிகழ்வுகள் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தியுள்ளன: ஈரானின் வான்வெளி முன்பிருந்ததைப் போல இப்போது எளிதாக இல்லை. இராணுவ பலத்தில் அமெரிக்கா இன்னும் மேலோங்கி இருந்தாலும், ஈரானின் புதிய தந்திரங்கள் அதன் வான் மேலாதிக்கத்திற்கு நிச்சயமாக சவால் விடுத்துள்ளன.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/world/iran-majid-missile-system-challenges-us-air-supremacy-with-f35-and-f15e-takedowns-u2rf4cp"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஈரான் மீதான தடைகள் நீக்கம்..! பவர்புல் ரீ என்ட்ரி கொடுத்த இந்தியா.. பெட்ரோல் விலை குறைய போகுது..?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/world/india-iran-crude-oil-imports-ioc-tanker-us-sanctions-lift-middle-east-strategic-energy-xb0a6r2</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/world/india-iran-crude-oil-imports-ioc-tanker-us-sanctions-lift-middle-east-strategic-energy-xb0a6r2</guid>
            <pubDate>Wed, 08 Apr 2026 15:16:07 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ஐஓசி நிறுவனத்தின் ஈரான் கச்சா எண்ணெய் இந்தியாவிற்கு வந்து சேர்கிறது. 7 ஆண்டுகளுக்கு பிறகு ஈரான் கச்சா எண்ணெய் இந்தியாவை வந்தடைகிறது. இது உலகளாவிய எண்ணெய் சந்தையில் ஒரு புதிய கொந்தளிப்பு உருவாகி வருகிறதா?&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01knp48zf57qbfzh8e79pdq70p,imgname-india-iran-crude-oil-imports-ioc-tanker-us-sanctions-lift-middle-east-strategic-energy-202-1775637921253.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஐஓசி நிறுவனத்தின் ஈரான் கச்சா எண்ணெய் இந்தியாவிற்கு வந்து சேர்கிறது. 7 ஆண்டுகளுக்கு பிறகு ஈரான் கச்சா எண்ணெய் இந்தியாவை வந்தடைகிறது. இது உலகளாவிய எண்ணெய் சந்தையில் ஒரு புதிய கொந்தளிப்பு உருவாகி வருகிறதா?&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் ஏற்றுமதியை இந்தியா பெறவுள்ளது. அமெரிக்கத் தடைகள் தற்காலிகமாகத் தளர்த்தப்பட்டிருப்பதாலும், எண்ணெய் சந்தையில் நிச்சயமற்ற நிலை அதிகரித்து வருவதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக சீனாவுக்குச் சென்றுகொண்டிருந்த ஒரு பிரம்மாண்டமான கப்பல், தற்போது இந்தியாவின் கிழக்குக் கடற்கரையை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. இந்த முன்னேற்றம், இந்திய எண்ணெய் கழகத்திற்கும் (IOC) மற்றும் நாட்டின் சுத்திகரிப்பு ஆலைகளுக்கும் புதிய வாய்ப்புகளைத் திறந்துவிட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;லண்டன் பங்குச் சந்தைக் குழுமம் (LSEG) மற்றும் Kpler கப்பல் போக்குவரத்துத் தரவுகளின்படி, குராஓ கொடியை ஏந்திய பிரம்மாண்டமான 'ஜயா' என்ற எண்ணெய்க் கப்பல் தற்போது இந்தியாவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. முன்னதாக, அது தென்கிழக்கு ஆசியக் கடல் பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்ததாகவும், அதன் இலக்கு சீனாவாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த மாற்றம், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஒரு புதிய நிலைத்தன்மையையும், ஈரானிலிருந்து இறக்குமதிகள் திறக்கப்படுவதையும் குறிக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;லண்டன் பங்குச் சந்தைக் குழுமம் (LSEG) மற்றும் Kpler ஆகியவற்றின் கப்பல் போக்குவரத்துத் தரவுகளின்படி, குராஓ கொடியிடப்பட்ட 'ஜயா' என்ற எண்ணெய்க் கப்பல் இந்தியாவின் கிழக்குக் கடற்கரைக்கு அப்பால் ஈரானிய எண்ணெயை இறக்கவுள்ளது. மேலும், 'ஜோர்டான்' என்ற மற்றொரு எண்ணெய்க் கப்பலும் தனது எண்ணெயை இந்தியாவிற்குக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவை, எண்ணெய் விநியோக ஓட்டம் மேம்பட்டு வருவதையும், உலகச் சந்தையில் இந்தியா ஒரு மூலோபாய சாதகத்தைப் பெற வாய்ப்புள்ளது என்பதையும் காட்டும் அறிகுறிகளாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியா கடைசியாக 2019 மே மாதம் ஈரானிய எண்ணெயை இறக்குமதி செய்தது. அப்போது, ​​அமெரிக்கத் தடைகள் காரணமாக சுத்திகரிப்பு ஆலைகள் கொள்முதல் செய்யத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தியாவின் முக்கிய எண்ணெய் விநியோக நாடான ஈரான், அக்காலத்தில் கவர்ச்சிகரமான விலைகளையும் சாதகமான விதிமுறைகளையும் வழங்கி வந்தது. அதன் பிறகு, இந்திய சுத்திகரிப்பு ஆலைகள் முதன்மையாக மேற்கு ஆசிய மற்றும் அமெரிக்க எண்ணெய் ஆதாரங்களையே சார்ந்திருந்தன. இருப்பினும், அமெரிக்காவின் தளர்வுகள் சந்தையில் புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு இந்த சரக்கு வந்தடைந்தாலும், இந்த மாத தொடக்கத்திலேயே கொள்முதல் செய்யப்பட்டுவிட்டது. உள்நாட்டு சுத்திகரிப்பு ஆலைகள் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயைக் கொள்முதல் செய்யத் தொடங்கியுள்ளதாக எண்ணெய் அமைச்சகமும் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், தற்போது பணம் செலுத்தும் முறையில் எந்த இடையூறும் இல்லை. இதன் பொருள், தடைகள் தற்காலிகமாகத் தளர்த்தப்பட்டதால், தடையற்ற வர்த்தகப் பரிமாற்றங்கள் சாத்தியமாகியுள்ளன என்பதாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சமீபத்திய ஆண்டுகளில், ஹோர்முஸ் ஜலசந்தியிலும் மேற்கு ஆசியாவிலும் ஏற்பட்ட மோதல்கள், எண்ணெய் விநியோகம் தொடர்பான பதட்டங்களை அதிகரித்துள்ளன. அமெரிக்கா, ஈரானிய எண்ணெய் மீதான தடைகளைத் தளர்த்தியுள்ளது. இது, இந்தியா தனது உத்தியை மாற்றி இறக்குமதியை அதிகரிக்க ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. ஐஓசி மற்றும் பிற சுத்திகரிப்பு நிறுவனங்கள் இப்போது, ​​ஈரானிய எண்ணெயை மாற்று மூலங்களுடன் சமநிலைப்படுத்துவதன் மூலம் விலைகளையும் விநியோகத்தையும் நிலைப்படுத்த முடியும்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;நிபுணர் கருத்து மற்றும் எதிர்கால வாய்ப்புகள்&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;ஈரானிய எண்ணெய் இந்தியாவிற்குத் திரும்புவது, எண்ணெய் விலைகளை நிலைப்படுத்தி, சுத்திகரிப்பு ஆலைகளுக்கு நிவாரணம் அளிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பணம் செலுத்துவதிலும் வர்த்தகப் பரிவர்த்தனைகளிலும் தற்போது எந்த இடையூறும் இல்லை என்றும் எண்ணெய் அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. இதன் பொருள், இந்தத் தற்காலிகத் தளர்வு வர்த்தகத்தைச் சீரமைக்க உதவியுள்ளது என்பதாகும். இந்த புதிய சரக்கு வரவின் மூலம், இந்தியா தனது விநியோகச் சங்கிலியை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உலகளாவிய எண்ணெய் சந்தையில் தனது முக்கிய இடத்தையும் தக்க வைத்துக் கொள்கிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/world/india-iran-crude-oil-imports-ioc-tanker-us-sanctions-lift-middle-east-strategic-energy-xb0a6r2"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கிய 18 இந்தியக் கப்பல்கள்.. வீட்டு கேஸ் சிலிண்டர்களுக்கு மேலும் சிக்கல்?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/world/18-indian-ships-stuck-in-strait-of-hormuz-lpg-shortage-fear-articleshow-xw2nqqe</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/world/18-indian-ships-stuck-in-strait-of-hormuz-lpg-shortage-fear-articleshow-xw2nqqe</guid>
            <pubDate>Tue, 31 Mar 2026 15:02:23 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;சிக்கியுள்ள 18 இந்தியக் கப்பல்களில், 3 எல்பிஜி டாங்கர்கள், 1 எல்என்ஜி கப்பல் மற்றும் 4 கச்சா எண்ணெய் டாங்கர்கள் உள்ளன. ஒரு காலியான டாங்கரில் எல்பிஜி நிரப்பப்பட்டு வருகிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kn1kr1b5dt6h4g2f5c1v6fs7,imgname-ship-india-1774949500261.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;மேற்கு ஆசியாவில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக, உலகிலேயே மிக முக்கியமான கடல் வழிப்பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் 18 இந்தியக் கொடி ஏந்திய கப்பல்கள் தற்போது சிக்கியுள்ளன. இதில் கச்சா எண்ணெய், எல்பிஜி (LPG) மற்றும் எல்என்ஜி (LNG) ஏற்றிச் செல்லும் கப்பல்கள் அடங்கும்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;18 இந்திய கப்பல்கள் நிறுத்தி வைப்பு&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;ஹார்முஸ் ஜலசந்தியின் மேற்குப் பகுதியில் 18 இந்தியக் கப்பல்கள் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதில் 4 எல்பிஜி டேங்கர்கள், 4 கச்சா எண்ணெய் டேங்கர்கள், 1 எல்என்ஜி கப்பல் மற்றும் கொள்கலன் கப்பல்கள் (Container ships) அடங்கும். இந்த 18 கப்பல்களிலும் சேர்த்து மொத்தம் 485 இந்திய மாலுமிகள் மற்றும் பணியாளர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.&lt;/p&gt;&lt;h3&gt;&lt;strong&gt;மத்திய அரசு உறுதி&lt;/strong&gt;&lt;/h3&gt;&lt;p&gt;இந்தியக் கப்பல்கள் தவிர, இந்தியாவிற்கு எரிபொருட்களை ஏற்றி வரும் 10 வெளிநாட்டுக் கொடி ஏந்திய கப்பல்களும் அங்கு சிக்கியுன. இது தொடர்பாக பேசிய மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சின்ஹா, ''இந்தியாவிற்கு வர வேண்டிய 10 வெளிநாட்டுக் கொடி ஏந்திய கப்பல்களில், 3 எல்பிஜி கப்பல்கள், 4 கச்சா எண்ணெய் டாங்கர்கள் மற்றும் 3 எல்என்ஜி கப்பல்கள் உள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;காப்பீட்டு பிரீமியம் உயர்வு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;சிக்கியுள்ள 18 இந்தியக் கப்பல்களில், 3 எல்பிஜி டாங்கர்கள், 1 எல்என்ஜி கப்பல் மற்றும் 4 கச்சா எண்ணெய் டாங்கர்கள் உள்ளன. ஒரு காலியான டாங்கரில் எல்பிஜி நிரப்பப்பட்டு வருகிறது. இந்தக் கப்பல்களில் மொத்தம் 485 மாலுமிகள் உள்ளனர். போரினால் பாதிக்கப்பட்ட இந்தப் பகுதியில் கப்பல்களுக்கான காப்பீட்டு பிரீமியம் (Insurance Premium) கடுமையாக உயர்ந்துள்ளது. போருக்கு முன்பு காப்பீட்டு மதிப்பில் 0.04 சதவீதமாக இருந்த பிரீமியம், தற்போது 0.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. சில சந்தர்ப்பங்களில் இது இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று சின்ஹா தெரிவித்தார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 40%, எல்என்ஜி இறக்குமதியில் 50%, மற்றும் எல்பிஜி (சமையல் எரிவாயு) இறக்குமதியில் 90% இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே நடைபெறுகிறது. நீண்ட நாட்களுக்கு இந்தக் கப்பல்கள் தடுத்து நிறுத்தப்பட்டால், உள்நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. ஆகவே மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/world/18-indian-ships-stuck-in-strait-of-hormuz-lpg-shortage-fear-articleshow-xw2nqqe"/>
        </item>
    </channel>
</rss>
