<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes"?>
<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Sat, 13 Jun 2026 09:00:39 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss/world" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு... பேருந்து கட்டணம் அதிகரிப்பு.. பொதுமக்கள் ஷாக்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/world/pakistan-fuel-price-hike-bus-and-freight-fares-soar-burdening-public-0nx7uio</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/world/pakistan-fuel-price-hike-bus-and-freight-fares-soar-burdening-public-0nx7uio</guid>
            <pubDate>Sat, 25 Apr 2026 20:24:17 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;பயணிகள் போக்குவரத்து மட்டுமல்ல, சரக்கு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. டீசல் விலை உயர்வால், சரக்கு லாரிகள் மற்றும் மினி மஸ்தா வேன்களின் உரிமையாளர்கள் சுமார் 5 சதவீதம் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01km61641w6gk0vvpcw07xhn8h,imgname-petrol-price--3--1774024069179.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;பயணிகள் போக்குவரத்து மட்டுமல்ல, சரக்கு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. டீசல் விலை உயர்வால், சரக்கு லாரிகள் மற்றும் மினி மஸ்தா வேன்களின் உரிமையாளர்கள் சுமார் 5 சதவீதம் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பாகிஸ்தானில் பெட்ரோல் விலை மீண்டும் உயர்ந்ததால், நாடு முழுவதும் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரித்துள்ளன. ஏற்கனவே பணவீக்கத்தால் அவதிப்பட்டு வரும் பொதுமக்களுக்கு இது பெரும் சுமையாக மாறியுள்ளது என Samaa TV செய்தி வெளியிட்டுள்ளது. Samaa TV தகவல்படி, லாகூரில், பிராந்திய போக்குவரத்து ஆணையமும் (RTA) போக்குவரத்து உரிமையாளர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், 3 முதல் 4 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்திக்கொள்ள ஒப்புக்கொள்ளப்பட்டது.&lt;/p&gt;&lt;p&gt;டிரான்ஸ்போர்ட் ஹவுஸில் நடந்த இந்த கூட்டத்தில், எரிபொருள் விலை உயர்வை காரணம் காட்டி, உரிமையாளர்கள் அதிக கட்டண உயர்வை கேட்டனர். ஆனால், RTA செயலாளர் ராணா மோஷினின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, குறைந்த அளவுக்கே அனுமதி வழங்கப்பட்டது. மேலும், அனுமதியின்றி கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ராணா மோஷின் பேசுகையில், &quot;அனுமதிக்கப்பட்டதை விட யாரும் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது. மீறினால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்&quot; என்று எச்சரித்தார். புதிய கட்டணப் பட்டியல் உடனடியாக அமலுக்கு வரும் என்றும் அவர் உறுதிப்படுத்தினார். பெட்ரோல் விலை 7 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளதால் இந்த கட்டண மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். அதிகாரிகள் கட்டுப்பாடு விதித்தாலும், சில வழித்தடங்களில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சுமார் 5 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக பயணிகள் கூறுகின்றனர். இதனால் அன்றாட மற்றும் வெளியூர் பயணச் செலவுகள் அதிகரித்துள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;அடிக்கடி ஏற்படும் இந்த கட்டண உயர்வால் பயணம் செய்வது மிகவும் கடினமாகி வருவதாக பயணிகள் வேதனை தெரிவித்தனர். வெளியூர் பேருந்து கட்டணங்களும் கணிசமாக உயர்ந்துள்ளன. லாகூரிலிருந்து ராவல்பிண்டிக்கு கட்டணம் PKR 2,340 ஆகவும், பெஷாவருக்கு PKR 3,100 ஆகவும் அதிகரித்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;அதேபோல, ஃபைசலாபாத் மற்றும் சர்கோதாவுக்கு கட்டணம் PKR 1,260 ஆக உயர்ந்துள்ளது. லாகூர்-கராச்சி வழித்தடத்தில் கட்டணம் PKR 9,720 ஆக அதிகரித்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பயணிகள் போக்குவரத்து மட்டுமல்ல, சரக்கு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. டீசல் விலை உயர்வால், சரக்கு லாரிகள் மற்றும் மினி மஸ்தா வேன்களின் உரிமையாளர்கள் சுமார் 5 சதவீதம் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். கராச்சியில், பாகிஸ்தான் சரக்கு போக்குவரத்து கூட்டமைப்பு 10 சதவீதம் கட்டண உயர்வை அறிவித்துள்ளதாக Samaa TV குறிப்பிட்டுள்ளது. இந்த கூட்டமைப்பின் தலைவர் மாலிக் ஷாஜாத் அவான், அரசின் எரிபொருள் கொள்கையை கடுமையாக விமர்சித்தார். அரசு வழங்கும் PKR 80,000 மானியம் போதாது என்று அவர் கூறினார். ஒரு ட்ரிப்புக்கு ஆகும் செலவு PKR 2,00,000 வரை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/world/pakistan-fuel-price-hike-bus-and-freight-fares-soar-burdening-public-0nx7uio"/>
        </item>
        <item>
            <title><![CDATA[60 ஆயிரம் விஷ பாம்புகளை வளர்த்து கோடீஸ்வரியான 30 வயது பெண்... இது எங்க?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/world/chinese-woman-earns-1-crore-rupees-annually-from-venomous-snake-farm-205ocoy</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/world/chinese-woman-earns-1-crore-rupees-annually-from-venomous-snake-farm-205ocoy</guid>
            <pubDate>Tue, 21 Apr 2026 12:53:07 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;30 வயது பெண் ஒருவர், நகரத்து வாழ்க்கையை விட்டுவிட்டு கிராமத்தில் பாம்புப் பண்ணை நடத்தி வருகிறார். இதன் மூலம் ஆண்டுக்கு 1.20 கோடி ரூபாய் வரை சம்பாதிக்கிறார். அவரைப் பற்றி பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kpqefdvas6ecfjwqfrr5k1kf,imgname-snake-1776755914601.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;30 வயது பெண் ஒருவர், நகரத்து வாழ்க்கையை விட்டுவிட்டு கிராமத்தில் பாம்புப் பண்ணை நடத்தி வருகிறார். இதன் மூலம் ஆண்டுக்கு 1.20 கோடி ரூபாய் வரை சம்பாதிக்கிறார். அவரைப் பற்றி பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பாம்புன்னா படையும் நடுங்கும்னு சொல்வாங்க. ஆனா, ஒரு பொண்ணு பல்லாயிரக்கணக்கான விஷப் பாம்புகளை வளர்த்து, அதுல கோடிக்கணக்குல சம்பாதிக்கிறாங்கன்னு சொன்னா நம்ப முடியுதா? சீனாவைச் சேர்ந்த 30 வயதான கின் தான் அந்த சாதனைப் பெண். நகரத்து சொகுசு வாழ்க்கையை விட்டுட்டு, தன்னோட சொந்த கிராமத்துக்கு வந்து பாம்புப் பண்ணை நடத்திட்டு வர்றாங்க. சீனாவின் குவாங்ஸி மாகாணத்தைச் சேர்ந்த கின்னின் அப்பா, ஒரு பாம்புப் பண்ணை நடத்தி வந்திருக்கார். இப்போ அந்தப் பொறுப்பை கின் எடுத்து நடத்திட்டு வர்றாங்க. இந்தப் பண்ணையில இப்போ 60,000-க்கும் அதிகமான விஷப் பாம்புகள் இருக்கு.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சவுத் சைனா மார்னிங் போஸ்ட் பத்திரிகை செய்தியின்படி, கின்னோட பண்ணையில 50,000 'ஐந்தடி பாம்புகளும்' (Five-step snakes), சுமார் 10,000 நல்ல பாம்புகளும் (Cobras) இருக்கு. 'இந்த பாம்புகளுக்கு சாப்பாடு கொடுக்கிறது ரொம்பவே ரிஸ்க்கான வேலை. ஆனா எனக்கு பயம் இல்லை. நான் பிறக்கிறதுக்கு முன்னாடியே எங்க அப்பா இந்த தொழிலை செஞ்சிட்டு இருக்கார்'னு கின் சொல்றாங்க. இந்தப் பண்ணையிலிருந்து கிடைக்கிற பாம்பு விஷம், தோல், இறைச்சிக்கு மார்க்கெட்ல பெரிய டிமாண்ட் இருக்கு.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பாரம்பரிய சீன மருந்து தயாரிப்புக்காகவும், அறிவியல் ஆராய்ச்சிக்காகவும் பாம்பு விஷம், உலர்ந்த தோல், பித்தப்பை, பாம்பு எண்ணெய் போன்றவற்றை இங்க விற்பனை செய்றாங்க. ஒரு கிராம் விஷம், அதன் தரத்தைப் பொறுத்து 40 முதல் 200 யுவான் வரை விலை போகுது. பாம்பு இறைச்சி ஒன்னுக்கு 300 யுவான் வரை விலை கிடைக்குமாம். எல்லா செலவுகளும் போக, இந்த பிசினஸ் மூலமா கின்னுக்கு வருஷத்துக்கு ஒரு மில்லியன் யுவான், அதாவது இந்திய மதிப்புல சுமார் 1.20 கோடி ரூபாய் லாபம் கிடைக்குது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;'The Girl Who Collects Snake Venom' (பாம்பு விஷத்தை சேகரிக்கும் பெண்) என்ற பெயர்ல சோஷியல் மீடியாவிலும் கின் ரொம்ப ஆக்டிவ். அதில் அவருக்கு 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலோவர்ஸ் இருக்காங்க. தன்னோட வேலை தொடர்பான வீடியோக்களை அடிக்கடி ஷேர் பண்றாங்க. ஆனாலும், இந்த வேலையில இருக்கிற ஆபத்து பற்றியும், பாம்பு கடிச்சா ஏற்படுற கடுமையான வலி பற்றியும் தன்னோட ஃபாலோயர்ஸ்களை எச்சரிக்கவும் அவங்க மறக்கல. 'ஒரு தடவை கடி வாங்கிட்டா, அந்த வலியை வாழ்நாள் முழுக்க மறக்க முடியாது'னும் சொல்றாங்க. இந்த வேலையை செய்ய உண்மையிலேயே பெரிய தைரியம் வேணும்னு பலரும் சோஷியல் மீடியால கமெண்ட் பண்ணிட்டு வர்றாங்க.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/world/chinese-woman-earns-1-crore-rupees-annually-from-venomous-snake-farm-205ocoy"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Free Trip : உணவுப் பிரியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்! இலவசமாக ஃபின்லாந்து நாட்டுக்குச் சென்று வர அரிய வாய்ப்பு!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/food-lovers-can-win-a-free-trip-to-finland-check-how-to-apply-91dduys</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/food-lovers-can-win-a-free-trip-to-finland-check-how-to-apply-91dduys</guid>
            <pubDate>Mon, 01 Jun 2026 12:22:50 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Free Trip : உலகின் மகிழ்ச்சியான நாடான ஃபின்லாந்து, &quot;ஹேவ் சம் ஃபின்னிஷ்&quot; என்ற போட்டி மூலம் 16 பேருக்கு இலவச உணவுச் சுற்றுலாவிற்கு அழைப்பு விடுத்துள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kt0yna9ay6r115m6qwdvkrqa,imgname-finland-trip---1-1780296100137.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Free Trip : உலகின் மகிழ்ச்சியான நாடான ஃபின்லாந்து, &quot;ஹேவ் சம் ஃபின்னிஷ்&quot; என்ற போட்டி மூலம் 16 பேருக்கு இலவச உணவுச் சுற்றுலாவிற்கு அழைப்பு விடுத்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உலக நாடுகளுக்குச் சுற்றுலாச் செல்வது பலருக்கும் பிடித்தமான ஒன்று. அதிலும் குறிப்பாக, ஒரு குறிப்பிட்ட பகுதியின் பாரம்பரிய உணவுகளைத் தேடிப் பிடித்துச் சுவைப்பதற்கென்றே &quot;ஸ்நாக் டூரிசம்&quot; (Snack tourism), &quot;கிராசரி டூரிசம்&quot; (Grocery tourism) எனப் புதிய பயணப் போக்குகள் (Travel trends) தற்போது பிரபலமாகி வருகின்றன.&lt;/p&gt;&lt;p&gt;அப்படிப்பட்ட உணவுப் பிரியர்களைக் கவரும் வகையில், உலகின் மிக அழகான மற்றும் மகிழ்ச்சியான நாடுகளில் ஒன்றான ஃபின்லாந்து (Finland), ஒரு பைசா கூட செலவில்லாமல் தங்கள் நாட்டுக்கு வந்து பாரம்பரிய உணவுகளைச் சுவைக்க உலக மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஃபின்லாந்து நாட்டின் சுற்றுலா வாரியம், தங்கள் நாட்டு உணவுகளை &quot;உலகின் இன்னும் கண்டறியப்படாத கடைசி உணவுமுறை&quot; என்று வர்ணிக்கிறது. இந்தச் சுவைகளை உலகிற்கு அறிமுகப்படுத்த &quot;ஹேவ் சம் ஃபின்னிஷ்&quot; என்ற பெயரில் ஒரு போட்டியை நடத்துகிறது.&lt;/p&gt;&lt;p&gt;இதில் தேர்வு செய்யப்படும் 16 அதிர்ஷ்டசாலிகளுக்கு ஃபின்லாந்து நாட்டிற்குச் சென்று வர அனைத்துச் செலவுகளும் ஏற்கப்பட்ட 4 நாட்கள் இலவசப் பயணம் பரிசாகக் கிடைக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தப் பயணத் திட்டம் ஃபின்லாந்தின் இரண்டு வெவ்வேறு பகுதிகளில் உள்ள பிராந்திய சுவைகளை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுக்குப் பிடித்தமான ஒரு பகுதியைத் தேர்வு செய்யலாம்:&lt;/p&gt;&lt;p&gt;1. கடற்கரை மற்றும் தீவுக்கூட்டப் பயணம் (Coast and Archipelago): மிச்செலின் நட்சத்திரக் குறியீடு (Michelin-starred) பெற்ற புகழ்பெற்ற சமையல் கலைஞர் எரிக் மான்சிக்கா (Erik Mansikka) இந்தப் பயணத்தை வழிநடத்துகிறார். கடலோர மக்களின் வாழ்க்கை முறை மற்றும் அங்கு கிடைக்கும் பருவகால கடல் உணவுகளின் சுவையை இதில் அனுபவிக்கலாம். இந்தப் பயணம் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 4 வரை நடைபெறும்.&lt;/p&gt;&lt;p&gt;2. லேப்லாண்ட் பயணம் (Lapland): வடக்கு ஃபின்லாந்தின் பனி படர்ந்த லேப்லாண்ட் பகுதிக்கு இந்தப் பயணம் அமையும். வளர்ந்து வரும் இளம் சமையல் கலைஞர் ஜோயல் மன்னினென் (Joel Manninen) அங்குள்ள ஆர்க்டிக் பிராந்தியத்தின் தனித்துவமான சுவைகளை அறிமுகப்படுத்துவார். இங்குக் கிடைக்கும் 'பொரன்காரிஸ்டிஸ்' (Poronkaristys - உருளைக்கிழங்கு மசியல் மற்றும் பெர்ரிகளுடன் பரிமாறப்படும் ரெயின்டீர் இறைச்சி) மிகவும் பிரபலமானது. இந்தப் பயணம் செப்டம்பர் 7 முதல் செப்டம்பர் 11 வரை நடைபெறும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஃபின்லாந்து உணவுகள் அதிக காரமோ அல்லது ஆடம்பரமான அலங்காரங்களோ கொண்டிருக்காது. எளிமை, இதம் மற்றும் பருவகாலப் பொருட்களின் பயன்பாடு தான் இதன் பலம். கடுமையான குளிர்காலத்தைக் கொண்ட நாடு என்பதால், பொருட்களைப் பதப்படுத்தி வைக்கும் முறைகள் இங்கு அதிகம்.&lt;/p&gt;&lt;p&gt;முக்கியமாக கரிய நிற 'ருய்ஸ்லெய் பா' (Rye bread - ராய் ரொட்டி), 'லோஹிகெய்ட்டோ' (Lohikeitto - சாம்பல் நிற சால்மன் மீன் சூப்) மற்றும் முட்டை வெண்ணெயுடன் பரிமாறப்படும் 'கர்ஜலான்பியராக்கா' (Karjalanpiirakka - காரிலியன் பை) போன்றவை இவர்களின் முக்கியப் பாரம்பரிய உணவுகளாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விண்ணப்பிக்கும் முறை மிகவும் எளிதானது. நீங்கள் தனியாகவோ அல்லது உங்கள் துணையுடனோ சேர்ந்து விண்ணப்பிக்கலாம்:&lt;/p&gt;&lt;p&gt;&bull; வீடியோ சவால் (Show and Tell): முதலில் உங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு, &quot;நான் ஏன் ஃபின்லாந்து உணவுகளைச் சுவைக்க வேண்டும்?&quot; (Why do you want to Have Some Finnish?) என்ற கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் ஒரு குறுகிய வீடியோவை உருவாக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&bull; சமூக ஊடகத்தில் பதிவிடவும்: அந்த வீடியோவை ஃபின்லாந்து சுற்றுலா வாரியத்தின் அதிகாரப்பூர்வ ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்தி உங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&bull; விண்ணப்பப் படிவம்: அதன் பிறகு, ஃபின்லாந்து சுற்றுலா வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தை நிரப்பி, நீங்கள் பதிவிட்ட வீடியோவின் லிங்க்கை அதில் இணைக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த வீடியோ சவால் மற்றும் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கக் கடைசி நாள் ஜூன் 9, 2026 (ஃபின்லாந்து நேரப்படி முற்பகல் 11:59 மணிக்குள்).&lt;/p&gt;&lt;p&gt;தேர்வு செய்யப்படும் வெற்றியாளர்களின் விவரங்கள் அவர்களின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களில் அறிவிக்கப்படும். உங்களிடம் பாஸ்போர்ட் மற்றும் விசா இருந்தால் உடனே ஃபின்லாந்து இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பியுங்கள். உங்களுடைய கொலைப் பசிக்கு விருந்து காத்திருக்கிறது!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world</category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/food-lovers-can-win-a-free-trip-to-finland-check-how-to-apply-91dduys"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Gold Price Hike: தங்கம், வெள்ளி வாங்குவோருக்கு ஷாக் கொடுத்த மத்திய அரசு..! இறக்குமதி வரி 15% உயர்வு]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/india-raises-gold-and-silver-tariffs-to-15-percentage-to-ease-pressure-on-forex-reserves-9c1wxtp</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/india-raises-gold-and-silver-tariffs-to-15-percentage-to-ease-pressure-on-forex-reserves-9c1wxtp</guid>
            <pubDate>Wed, 13 May 2026 08:50:00 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Gold Import Duty: பொருளாதார நெருக்கடி மற்றும் அந்நிய செலாவணி கையிருப்பு காரணமாக, வாங்குவதைத் தவிர்க்குமாறு பிரதமர் நரேந்திர மோடி மக்களை வலியுறுத்திய நிலையில், தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை அரசாங்கம் 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தியது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01krfn6z4dcvx6sea953r9j9js,imgname-gold-import-duty-1778642025613.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Gold Import Duty: பொருளாதார நெருக்கடி மற்றும் அந்நிய செலாவணி கையிருப்பு காரணமாக, வாங்குவதைத் தவிர்க்குமாறு பிரதமர் நரேந்திர மோடி மக்களை வலியுறுத்திய நிலையில், தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை அரசாங்கம் 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தியது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஈரான் போரினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் அந்நியச் செலாவணிக் கையிருப்பு மீதான அழுத்தம் ஆகியவற்றின் மத்தியில், ஓராண்டுக்குத் தங்கம் வாங்குவதைத் தவிர்க்குமாறு பிரதமர் நரேந்திர மோடி இந்திய மக்களை வலியுறுத்திய சில நாட்களிலேயே, மத்திய அரசு மிகப்பெரிய அதிரடி முடிவு ஒன்றை முன்னெடுத்துள்ளது. அதன்படி தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 15 சதவீதமாக உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;இந்த விலைமதிப்புள்ள உலோகங்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்தவும், வர்த்தப் பற்றாக்குறையைக் குறைக்கவும், ஒரு டாலருக்கு 95.75 என்ற வரலாறு காணாத வீழ்ச்சியை எட்டியுள்ள ரூபாய்க்கு ஆதரவளிக்கவும், மத்திய அரசு 10 சதவீத அடிப்படை சுங்க வரியுடன் 5 சதவீத வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரியையும் (AIDC) விதித்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்குப் பிறகு, தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி மீதான வரிகளை உயர்த்துவதற்கு உடனடித் திட்டங்கள் எதுவும் இல்லை என்று இந்த வாரத் தொடக்கத்தில் ஒரு அரசாங்க வட்டாரம் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருந்தபோதிலும், இந்த வரி உயர்வு வந்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;உலகின் இரண்டாவது பெரிய தங்க நுகர்வோராகவும், மிகப்பெரிய வெள்ளி நுகர்வோராகவும் விளங்கும் இந்தியா, உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய இறக்குமதியை பெருமளவில் சார்ந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் ஏற்கனவே உயர்ந்துள்ள ஒரு காலகட்டத்தில், இந்த நடவடிக்கை நுகர்வைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உயர்ந்து வரும் விலைகள் மற்றும் பங்குகளில் இருந்து கிடைக்கும் குறைந்த வருமானம் ஆகியவற்றின் மத்தியில், கடந்த ஆண்டில் இந்தியாவில் தங்கத்திற்கான தேவை அதிகரித்துள்ளது. உலக தங்க கவுன்சிலின்படி, இந்தியாவின் தங்கப் பரிவர்த்தனை-வர்த்தக நிதிகளில் (ETFs) மார்ச் காலாண்டில் ஏற்பட்ட உள்வரவு, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 186 சதவீதம் அதிகரித்து, சாதனை அளவாக 20 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&quot;எதிர்பார்த்தபடியே, நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் வரிகளை உயர்த்தியுள்ளது. இருப்பினும், தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் ஏற்கனவே அதிகமாக இருந்ததால், இது தேவையைப் பாதிக்கக்கூடும்,&quot; என்று இந்திய தங்கம் மற்றும் நகை வியாபாரிகள் சங்கத்தின் தேசிய செயலாளர் சுரேந்திர மேத்தா கூறினார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியா, தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி மீது 3 சதவீத ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (IGST) விதித்து, சமீபத்திய வாரங்களில் தங்க இறக்குமதியைக் கடுமையாக்கத் தொடங்கியிருந்தது. இதனால், வங்கிகள் ஒரு மாதத்திற்கும் மேலாக இறக்குமதியைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, ஏப்ரல் மாத இறக்குமதி கிட்டத்தட்ட 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்தது.&lt;/p&gt;&lt;p&gt;சமீபத்திய வரி உயர்வுக்குப் பிறகு, இறக்குமதி மேலும் குறையும் என்று தங்க வியாபாரிகள் இப்போது எதிர்பார்க்கின்றனர். 2024-ஆம் ஆண்டின் மத்தியில் இந்தியா வரிகளைக் குறைத்த பிறகு தணிந்திருந்த தங்கக் கடத்தலை, அதிக வரிகள் மீண்டும் தூண்டிவிடக்கூடும் என்றும் தொழில்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.&lt;/p&gt;&lt;p&gt;&quot;சட்டவிரோதமாகத் தங்கத்தைக் கொண்டு வருவதற்கான ஊக்கங்கள் அதிகமாக இருப்பதால், கள்ளச் சந்தைகள் மீண்டும் சூடுபிடிக்க வாய்ப்புள்ளது. தற்போதைய விலை நிலவரத்தில், கடத்தல்காரர்கள் கணிசமான லாபம் ஈட்டக்கூடும்,&quot; என்று ஒரு தனியார் வங்கியின் தங்க வியாபாரி கூறினார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தொடர்ந்து நடைபெற்று வரும் ஈரான்-அமெரிக்க மோதல் மற்றும் உயர்ந்து வரும் உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகளின் பொருளாதாரத் தாக்கத்தை எதிர்கொள்ள நாடு தயாராகி வரும் நிலையில், இந்தியர்கள் நடைமுறைக்கு ஏற்ற சிக்கன நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தினார்.&lt;/p&gt;&lt;p&gt;பிரதமர் பரிந்துரைத்த நடவடிக்கைகளில், ஒரு வருடத்திற்குத் திருமணங்களுக்காகத் தங்கம் வாங்குவதைத் தவிர்ப்பது, அத்தியாவசியமற்ற வெளிநாட்டுப் பயணங்களைத் தள்ளிப்போடுவது, மற்றும் சாத்தியமான இடங்களில் வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறைகளை மீண்டும் தொடங்குவது ஆகியவை அடங்கும். மேலும், அவர் பொதுப் போக்குவரத்தை அதிக அளவில் பயன்படுத்தவும், இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீதான சார்பைக் குறைக்கவும் அழைப்பு விடுத்தார்.&lt;/p&gt;&lt;p&gt;நீண்டகால எண்ணெய் விலை வீழ்ச்சியின் விளைவுகளைச் சமாளிக்க குடும்பங்களுக்கும் பரந்த பொருளாதாரத்திற்கும் உதவுவதை நோக்கமாகக் கொண்டு, பிரதமர் மோடி திங்களன்று இந்த வேண்டுகோளை மீண்டும் வலியுறுத்தினார். இந்த வீழ்ச்சியானது பணவீக்கத்தைத் தூண்டி, அனைத்துத் துறைகளிலும் செலவுகளை அதிகரிக்கக்கூடும்.&lt;/p&gt;&lt;p&gt;ஈரான் போரின் விளைவுகளால், அமெரிக்கா மற்றும் அண்டை நாடான பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளில் எரிபொருள் விலைகள் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ள நேரத்தில் இந்தக் கருத்துகள் வெளிவந்துள்ளன. இந்தியர்கள் இதுவரை இதன் தாக்கத்திலிருந்து பெருமளவில் தப்பித்திருந்தாலும், வரும் நாட்களில் விலைகள் உயரத் தொடங்கக்கூடும் என்ற கவலைகள் நீடிக்கின்றன.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/india-raises-gold-and-silver-tariffs-to-15-percentage-to-ease-pressure-on-forex-reserves-9c1wxtp"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Iran's New Weapon: எங்களிடம் சீக்ரெட் ஆயுதம் உள்ளது.! டிரம்ப்க்கு ஈரான் பகீர் மிரட்டல்.! மூடப்படுகிறதா ஹார்முஸ் ஜலசந்தி? சிலிண்டர் தட்டுப்பாடு வருமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/world/iran-claims-new-secret-weapon-after-rejecting-trump-peace-offer-amid-hormuz-tensions-cge30lg</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/world/iran-claims-new-secret-weapon-after-rejecting-trump-peace-offer-amid-hormuz-tensions-cge30lg</guid>
            <pubDate>Thu, 30 Apr 2026 13:14:14 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;அமெரிக்கா - ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரிப்பு: ட்ரம்பின் பேச்சுவார்த்தையை நிராகரித்த ஈரான், 'புதிய மர்ம ஆயுதம்' மற்றும் கப்பல் மீதான தாக்குதல் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளதால் ஹார்முஸ் ஜலசந்தியில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kq4f8jv7m9kfzh144st2e44e,imgname-war--3--1777192946535.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;அமெரிக்கா - ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரிப்பு: ட்ரம்பின் பேச்சுவார்த்தையை நிராகரித்த ஈரான், 'புதிய மர்ம ஆயுதம்' மற்றும் கப்பல் மீதான தாக்குதல் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளதால் ஹார்முஸ் ஜலசந்தியில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அமெரிக்கா - ஈரான் இடையே பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ட்ரம்பின் அமைதிப் பேச்சுவார்த்தை திட்டத்தை நிராகரித்த தெஹ்ரான், தங்களிடம் ஒரு 'புதிய மர்ம ஆயுதம்' இருப்பதாகக் கூறியுள்ளது. அமெரிக்காவின் விமானம் தாங்கி கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், ஹார்முஸ் ஜலசந்தியில் நெருக்கடி அதிகரித்துள்ளதாகவும் ஈரான் கூறியிருப்பது போர் மூளும் அபாயத்தை அதிகரித்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக ஒரு புதிய, கண்ணுக்குத் தெரியாத ஆனால் பயங்கரமான ஆயுதத்தைப் பயன்படுத்தப் போவதாக ஈரான் மிரட்டியுள்ளது. இந்த ஆயுதம் எதிரிப் படைகளுக்குள் பெரும் பீதியை உண்டாக்கி, ஹார்ட் அட்டாக் வரும் அளவுக்கு ஒரு சூழலை உருவாக்கும் என ஈரான் கடற்படை தளபதி ரியர் அட்மிரல் ஷஹ்ராம் ஈரானி கூறியுள்ளார். இந்த ஆயுதம் மிக அருகில் தயார் நிலையில் இருப்பதாகவும், 'மிக விரைவில்' பயன்படுத்தப்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஈரான் ஒரு அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலான 'ஆபிரகாம் லிங்கன்' மீது தங்கள் படைகள் குறைந்தது ஏழு முறை ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஈரான் கூறியுள்ளது. இந்த தாக்குதல்களால் அமெரிக்க ராணுவத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டதாகவும், விமானப் போக்குவரத்து தடைபட்டதாகவும் ஈரான் தளபதி தெரிவித்துள்ளார். அமெரிக்கா இந்தத் தகவலை இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், ஈரானின் இந்த அறிக்கை உலக அளவில் ராணுவப் பதற்றத்தை அதிகரித்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க வேண்டும் என்றால், அமெரிக்கா விதித்த தடைகளை நீக்க வேண்டும் என்று ஈரான் ஒரு நிபந்தனை விதித்தது. ஆனால், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்த நிபந்தனையை திட்டவட்டமாக நிராகரித்துவிட்டார். ஈரான் மீது அழுத்தம் கொடுக்க இந்தத் தடைகள் ஒரு சிறந்த வழி என்றும், அது தொடரும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார். எந்தச் சூழ்நிலையிலும் ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்க அனுமதிக்க முடியாது என்றும் அவர் மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தி மீது தங்கள் கட்டுப்பாடு இருப்பதாகவும், தடைகள் விதிக்கப்படலாம் என்றும் ஈரான் மீண்டும் எச்சரித்துள்ளது. உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் பெரும் பகுதி இந்த வழித்தடத்தின் வழியாகத்தான் செல்கிறது. இங்கு எந்தவிதமான தடையும் ஏற்பட்டால், அது உலக எரிசக்தி சந்தையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். சில கப்பல்களின் நடமாட்டம் ஏற்கெனவே கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்றும் ஈரான் கூறியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஈரானின் ஆவேசமான பேச்சும், அமெரிக்காவின் கடுமையான நிலைப்பாடும் சூழலை மிகவும் பதற்றமாக்கியுள்ளன. இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மற்றும் கடல் தடைகள் குறித்து குற்றம் சாட்டி வருகின்றனர். ஹார்முஸ் பகுதியில் நிலைமை மேலும் மோசமானால், அதன் தாக்கம் மத்திய கிழக்கோடு நிற்காது, உலகளாவிய எண்ணெய் விநியோகம் மற்றும் சர்வதேசப் பாதுகாப்பிலும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த பதற்றம் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படுமா அல்லது ஒரு பெரிய ராணுவ மோதலாக மாறுமா என்பதை உலகம் உற்று நோக்குகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/world/iran-claims-new-secret-weapon-after-rejecting-trump-peace-offer-amid-hormuz-tensions-cge30lg"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Bear: ஒரே ஒரு கரடியால் மொத்த நகரமே லாக்டவுன்.. முடங்கிய மக்கள்.. 94 பள்ளிகள் மூடல்.. எங்க தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/world/why-a-single-black-bear-forced-a-massive-lockdown-and-school-holiday-in-japan-d8iwsgg</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/world/why-a-single-black-bear-forced-a-massive-lockdown-and-school-holiday-in-japan-d8iwsgg</guid>
            <pubDate>Mon, 08 Jun 2026 20:13:55 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Bear: ஜப்பானில் ஒரே ஒரு கரடியால் ஒட்டுமொத்த நகரமே லாக்டவுன் ஆனது. 94 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. என்ன நடந்தது? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktktv72nqwgkyf8mhj82qc7t,imgname-bear-1780929633365.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Bear: ஜப்பானில் ஒரே ஒரு கரடியால் ஒட்டுமொத்த நகரமே லாக்டவுன் ஆனது. 94 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. என்ன நடந்தது? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உலகத்தில் சவால்களை அதிகம் சந்திக்கும் ஒரு நாடு ஜப்பான். ஏனெனில் அங்கு நிலநடுக்கம், சுனாமி, பெரு வெள்ளம் என இயற்கை பேரிடர்கள் அடிக்கடி வந்து அச்சுறுத்தும். ஆனால் சவால்களை முறியடித்து ஜப்பான் வீறுநடை போட்டு வருவது வழக்கம். இப்படிபட்ட ஜப்பானில் ஒரு நகரமே ஒரு கரடியால் முடங்கியுள்ளது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? அதாவது ஜப்பானில் ஒரு நகரத்தில் பூங்கா அருகே கரடி ஒன்று தென்பட்டதால், அங்குள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஒரு கரடியால் நகரமே லாக்டவுன்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;தலைநகர் டோக்கியோவிலிருந்து 100 கிலோமீட்டர் வடக்கே உள்ள உட்சுனோமியா நகரத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனால் மக்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது. சுமார் 5 லட்சம் மக்கள் வசிக்கும் இந்த நகரத்தில், 94 தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை அன்று, நகரத்தில் உள்ள ஒரு பூங்கா அருகே இரண்டு இளைஞர்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது, திடீரென ஒரு கருங்கரடியைப் பார்த்துள்ளனர். பீதியடைந்த இளைஞர்கள் முன்னால் இருந்து அந்த கரடி ஓடிச்செல்லும் காட்சி, அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதைத் தொடர்ந்து, பகல் நேரத்திலேயே மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் கரடி நடமாட்டம் இருந்துள்ளது. திங்கட்கிழமை அதிகாலை 4 மணிக்கு, நகர மையத்திலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு தொழிற்சாலைப் பகுதியிலும் கரடி தென்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் உஷாரான நகர சபை அதிகாரிகள், பல நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளின் கதவுகளையும் ஜன்னல்களையும் பாதுகாப்பாக மூடி வைக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். ஒருவேளை கரடியைக் கண்டால், அதன் அருகில் செல்லாமல் உடனடியாக அருகிலுள்ள கட்டிடத்தில் தஞ்சம் அடையுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;94 பள்ளிகள் மூடல்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இதுகுறித்து நகரசபையின் பிரச்சார வாகனங்கள் நகரம் முழுவதும் அறிவிப்பு செய்து வருகின்றன. போலீசாரும், உள்ளூர் வேட்டைக்காரர்கள் குழுவும் கரடியைத் தேடத் தொடங்கிய பின்னரே, நகரசபை எல்லைக்குட்பட்ட பள்ளிகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜப்பானில் கரடிகள் காடுகளை விட்டு ஊருக்குள் வருவது சமீபகாலமாக அதிகரித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீபத்தில் சுமார் 50,000 முறை இதுபோன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன. பெரும்பாலும் வடகிழக்கு பகுதிகளில் கரடி தொல்லை அதிகமாக உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆனால், டோக்கியோவுக்கு அருகிலுள்ள நகரங்களில் கரடி தொல்லை பொதுவாக இருந்ததில்லை. கடந்த மாதம், டோக்கியோ அருகே உள்ள ஒகுதாமாவில் ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு மலையேறும் வீரர் மீது கரடி தாக்கி காயப்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, அருகிலுள்ள நகரமான ஹச்சியோஜியிலும் கரடி தென்பட்டது. கடந்த வாரம், ஃபுகுஷிமாவில் நான்கு பேர் மீது தாக்குதல் நடத்திய ஒரு கரடி, ஒரு நிறுவனத்தின் அலுவலகத்திற்குள் நுழைந்து ஊழியர் ஒருவரைக் காயப்படுத்தியது. பின்னர் ஒரு தொழிற்சாலைக்குள் நுழைந்த அந்த கரடி, உள்ளிருந்தே ஜன்னலைத் திறந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;புள்ளிவிவரங்களின்படி, ஜப்பானின் முக்கிய தீவான ஹோன்ஷுவில் 12,000 முதல் 42,000 ஆசிய கருங்கரடிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவற்றின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், பெரிய அளவிலான பழுப்பு நிற கரடிகள் வடக்கு தீவான ஹொக்கைடோவில் மட்டுமே காணப்படுகின்றன. இங்கு சுமார் 12,000 கரடிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/world/why-a-single-black-bear-forced-a-massive-lockdown-and-school-holiday-in-japan-d8iwsgg"/>
        </item>
        <item>
            <title><![CDATA[இனி மாதத்திற்கு இருமுறை சம்பளம்..! பணப்புழக்கத்தை அதிகரிக்க அரசின் ஸ்மார்ட் மூவ்..]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/world/nepal-government-revolutionizes-payroll-bi-monthly-salaries-for-civil-servants-dqdaypc</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/world/nepal-government-revolutionizes-payroll-bi-monthly-salaries-for-civil-servants-dqdaypc</guid>
            <pubDate>Tue, 21 Apr 2026 13:43:36 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;அரசு ஊழியர்களின் நிதி நெருக்கடியைத் தீர்க்கும் நோக்கில், மாதத்திற்கு இருமுறை சம்பளம் வழங்கும் அதிரடித் திட்டத்தை நேபாள அரசு அறிமுகப்படுத்தியுள்ளது; இது ஊழியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுடன், பணப்புழக்கத்தையும் சீராக்கும் என நம்பிக்கை.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kmpn1z856na37fk0c89v3qkc,imgname-8th-pay-commission-timeline-salary-hike-arrears-fitment-factor-central-government-employees-pension-update-india-1-1774581775621.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;அரசு ஊழியர்களின் நிதி நெருக்கடியைத் தீர்க்கும் நோக்கில், மாதத்திற்கு இருமுறை சம்பளம் வழங்கும் அதிரடித் திட்டத்தை நேபாள அரசு அறிமுகப்படுத்தியுள்ளது; இது ஊழியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுடன், பணப்புழக்கத்தையும் சீராக்கும் என நம்பிக்கை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நேபாள அரசு தனது அரசு ஊழியர்களுக்கு மாதத்திற்கு இருமுறை சம்பளம் வழங்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது குறித்த செய்தி, நிர்வாக சீர்திருத்தங்களில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான மற்றும் உண்மையான தகவல்களை இங்கே காணலாம்.&lt;/p&gt;&lt;p&gt;வழக்கமாக பெரும்பாலான நாடுகளில் மாத இறுதியில் ஒருமுறை மட்டுமே சம்பளம் வழங்கப்படும் நடைமுறை உள்ளது. ஆனால், நேபாள அரசாங்கம் தனது ஊழியர்களின் நிதி மேலாண்மையை மேம்படுத்தவும், சந்தையில் பணப்புழக்கத்தை அதிகரிக்கவும் இந்த புதிய முடிவை எடுத்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;இந்த மாற்றத்தின் முதன்மை நோக்கம், மாதக் கடைசியில் ஊழியர்கள் சந்திக்கும் &quot;நிதி நெருக்கடியை&quot; (Month-end financial crunch) தடுப்பதாகும். நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட ஊழியர்கள், மாதத்தின் கடைசி வாரங்களில் அத்தியாவசியத் தேவைகளுக்குக் கூட கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுவதை இது தவிர்க்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;15 நாட்களுக்கு ஒருமுறை ஊதியம்: ஊழியர்கள் இனி 30 நாட்கள் வரை காத்திருக்கத் தேவையில்லை. ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ஒருமுறை அவர்கள் உழைப்பிற்கான ஊதியம் அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.&lt;/p&gt;&lt;p&gt;பணப்புழக்கம் அதிகரிப்பு: சந்தையில் பணம் தொடர்ந்து புழக்கத்தில் இருப்பதால், சிறு வணிகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கும் இது சாதகமாக அமையும்.&lt;/p&gt;&lt;p&gt;வட்டிச் சுமை குறைதல்: அவசரத் தேவைகளுக்காக வெளிநபர்களிடம் வட்டிக்குக் கடன் வாங்கும் சூழல் ஊழியர்களுக்குக் குறையும்.&lt;/p&gt;&lt;p&gt;உளவியல் தாக்கம்: சீரான இடைவெளியில் கையில் பணம் இருப்பது ஊழியர்களிடையே ஒருவித பாதுகாப்பு உணர்வையும், வேலையில் அதிக ஈடுபாட்டையும் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பொருளாதார வல்லுநர்களின் கருத்துப்படி, இந்த 'இருவார சம்பள முறை' (Bi-weekly payroll) வளர்ந்த நாடுகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஒன்று. நேபாளம் போன்ற வளரும் நாடுகளில் இது அமல்படுத்தப்படும்போது கீழ்க்கண்ட மாற்றங்கள் நிகழும்:&lt;/p&gt;&lt;p&gt;செலவு மேலாண்மை: ஊழியர்கள் தங்களது பட்ஜெட்டை 15 நாட்களுக்கு ஒருமுறை எனத் திட்டமிடுவதால், தேவையற்ற பெரிய செலவுகள் கட்டுப்படுத்தப்படும்.&lt;/p&gt;&lt;p&gt;வங்கிக் கடன்கள்: மாதாந்திர தவணை (EMI) செலுத்துபவர்களுக்கு இது சவாலாக இருக்கலாம் என்றாலும், வங்கிகள் இதற்கேற்ப தங்கள் வசூல் முறையை மாற்றிக்கொள்ள வாய்ப்புள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எந்தவொரு புதிய திட்டத்திலும் சவால்கள் இருப்பது இயல்பு. அந்த வகையில் இந்த முறையிலும் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன:&lt;/p&gt;&lt;p&gt;நிர்வாக வேலைப்பளு: கணக்காயர்கள் மற்றும் வங்கி ஊழியர்களுக்கு மாதத்திற்கு இரண்டு முறை சம்பளப் பட்டியலைத் தயாரிப்பதும், சரிபார்ப்பதும் கூடுதல் வேலையாக அமையும்.&lt;/p&gt;&lt;p&gt;மென்பொருள் மாற்றங்கள்: அரசுத் துறைகளில் பயன்படுத்தப்படும் ஊதிய மென்பொருட்களை (Payroll Software) இந்த புதிய முறைக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;நேபாள அரசாங்கத்தின் இந்த முடிவு ஒரு முற்போக்கான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. இது ஊழியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நாட்டின் பொருளாதாரச் சுழற்சியையும் வேகப்படுத்தும்.&lt;/p&gt;&lt;p&gt;&quot;பணம் என்பது ஒரு ஓடும் நீரைப் போன்றது; அது தேங்காமல் சீராகப் பரவும்போதுதான் அதன் பலன் அனைவரையும் சென்றடையும்.&quot;&lt;/p&gt;&lt;p&gt;இந்த நடைமுறை வெற்றிகரமாகச் செயல்படும் பட்சத்தில், பிற அண்டை நாடுகளும் தங்களது ஊழியர்களின் நலன் கருதி இத்தகைய மாற்றங்களைக் கொண்டு வரப் பரிசீலிக்க வாய்ப்புள்ளது. ஊழியர்களின் நிதிச் சுதந்திரத்தை உறுதி செய்வதில் இது ஒரு புரட்சிகரமான தொடக்கமாகும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/world/nepal-government-revolutionizes-payroll-bi-monthly-salaries-for-civil-servants-dqdaypc"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Iran Ceasefire news: ஹார்முஸ் நீரினை திறப்பு..! போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா, ஈரான் ஒப்புதல்..]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/world/iran-conflict-14-day-ceasefire-declared-dxe8se3</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/world/iran-conflict-14-day-ceasefire-declared-dxe8se3</guid>
            <pubDate>Wed, 08 Apr 2026 07:17:34 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ஈரான் மீதான தாக்குதலை 2 வார காலத்திற்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்க அமெரிக்கா ஒப்புதல் அளிததுள்ளது. அதே போன்று அமெரிக்காவின் கோரிக்கைக்கு இணங்க ஹார்முஸ் நீரிணையை 2 வாரத்திற்கு திறக்க ஈரான் ஒப்புதல்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01knm7aw5sct07qza368hvcsyp,imgname-iran-trump-1775574020279.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஈரான் மீதான தாக்குதலை 2 வார காலத்திற்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்க அமெரிக்கா ஒப்புதல் அளிததுள்ளது. அதே போன்று அமெரிக்காவின் கோரிக்கைக்கு இணங்க ஹார்முஸ் நீரிணையை 2 வாரத்திற்கு திறக்க ஈரான் ஒப்புதல்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் கடந்த சில தினங்களாக உச்சத்தை அடைந்து உலக அளவில் பதற்றத்தை அதிகரித்தது. மேலும் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால் கோபமடைந்த அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானை ஒரே இரவில் அழிக்க முடியும் என கூறியது பதற்றத்தை உச்சமடையச் செய்தது. இந்த நிலையில் ஈரானில் இரண்டு வாரங்களுக்கு போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டதாக டொனால்ட் டிரம்ப் செவ்வாயன்று விளக்கினார். ஈரான் மீதான குண்டுவீச்சுகள் மற்றும் பிற தாக்குதல்களை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தம் செய்ய ஒப்புக்கொள்வதாக அமெரிக்க அதிபர் சமூக ஊடகங்களில் எழுதினார். இது இருதரப்பு போர் நிறுத்தமாக இருக்கும் என்று டிரம்ப் விளக்கினார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அமெரிக்க இராணுவத்தின் நோக்கங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. ஈரானுடன் நீண்டகால அமைதி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டிரம்ப் கூறினார். அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பெரும்பாலான முக்கிய சர்ச்சைக்குரிய பிரச்சினைகளுக்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக டிரம்ப் கூறினார். பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் மற்றும் ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக டிரம்ப் தெரிவித்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஈரான், ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாகவும் உடனடியாகவும் திறக்கத் தயாராக இருந்தால் மட்டுமே இந்த முடிவு எடுக்கப்படும் என்றும் டிரம்ப் கூறினார். அவர் தனக்குத்தானே நிர்ணயித்திருந்த இரவு 8 மணி காலக்கெடுவிற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு இந்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. மத்திய கிழக்கில் போர் அச்சுறுத்தல் நீடித்து வரும் நேரத்தில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை, உலக நாடுகளுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையேயான இந்த மோதலில் பாகிஸ்தான் ஒரு மத்தியஸ்தராகப் பங்காற்றி வருகிறது. இந்த நிபந்தனைக்குட்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு வழிவகுத்த பேச்சுவார்த்தைகளில், தான் பேசிய நபர்களில் ஒருவராக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் பெயரையும் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;டொனால்ட் டிரம்ப் அறிவித்த இரண்டு வார கால போர் நிறுத்தத்தில் இஸ்ரேலும் பங்கேற்பதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஒருவர் சிஎன்என்-க்கு உறுதிப்படுத்தினார். ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படாவிட்டால், ஈரானிய உள்கட்டமைப்பு மீது ஒரு பெரிய இராணுவத் தாக்குதலைத் தொடங்குவதற்கான டிரம்பின் காலக்கெடுவிற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பு இந்தத் தகவல் வெளியானது. பேச்சுவார்த்தைகள் தொடரும் நிலையில், இஸ்ரேல் தனது குண்டுவீச்சை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் ஒப்புக்கொண்டுள்ளதாக அந்த அதிகாரி கூறினார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதனிடையே டிரம்ப் அறிவித்த இரண்டு வார கால போர் நிறுத்தத்தை ஈரான் ஏற்றுக்கொண்டுள்ளது. ஈரானிய ராணுவத்தின் உதவியுடன் ஹோர்முஸ் நீர்வழி திறக்கப்படும் என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறினார். இன்று இரவு நாகரிகம் முடிவுக்கு வரும் என்று ஈரான் கடுமையான அச்சுறுத்தலை விடுத்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, செவ்வாயன்று அமெரிக்கா ஈரானுடன் இரண்டு வார கால போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது.&lt;/p&gt;&lt;p&gt;இந்த ஒப்பந்தம் இரண்டு வார காலத்திற்கு போர் நிறுத்தத்திற்கும், ஹோர்முஸ் நீர்வழியை உடனடியாகத் திறப்பதற்கும் வழிவகுக்கிறது. ஈரானுடன் ஒரு இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு இந்த இரண்டு வார காலத்தை அமெரிக்கா பயன்படுத்தும் என்று டிரம்ப் கூறினார். இதைத் தொடர்ந்து ஈரானிய வெளியுறவு அமைச்சரின் பதில் வந்தது. பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தனது ட்விட்டர் பதிவில் விடுத்த சகோதரத்துவ வேண்டுகோளுக்கு இணங்கவும், அமெரிக்காவின் 15 அம்ச முன்மொழிவுகளின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற அதன் கோரிக்கையைக் கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பேச்சுவார்த்தைகளுக்காக ஈரான் முன்வைத்த 10 அம்ச முன்மொழிவுகளின் பொதுவான கட்டமைப்பை அமெரிக்க அதிபர் ஏற்றுக்கொண்டதாக அறிவித்த பின்னரும், ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால், நமது சக்திவாய்ந்த ஆயுதப் படைகள் தற்காப்பு நடவடிக்கைகளை நிறுத்திவிடும் என்று அப்பாஸ் அராக்சி சமூக ஊடகங்களில் எழுதியுள்ளார். ஈரானிய ஆயுதப் படைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலமும், தொழில்நுட்ப வரம்புகளைக் கருத்தில் கொண்டும், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக இரண்டு வாரங்களுக்குப் பாதுகாப்பான போக்குவரத்து சாத்தியமாகும் என்றும் அராக்சி மேலும் கூறினார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/world/iran-conflict-14-day-ceasefire-declared-dxe8se3"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Iran Ship Seizure: இந்தியா வந்த கப்பல் மீது துப்பாக்கிச்சூடு, குண்டுவீச்சு! ஈரான் அதிரடி..]]></title>
            <link>https://tamil.asianetnews.com/world/iran-commandos-attack-and-seize-india-bound-cargo-ship-articleshow-e7w40ks</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/world/iran-commandos-attack-and-seize-india-bound-cargo-ship-articleshow-e7w40ks</guid>
            <pubDate>Thu, 23 Apr 2026 16:17:54 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ஹார்முஸ் ஜலசந்தியில், இந்தியா வந்துகொண்டிருந்த சரக்குக் கப்பலை ஈரான் படைகள் துப்பாக்கி முனையில் சிறைபிடித்துள்ளன. இந்த அதிரடித் தாக்குதலின் திகில் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் உலக வர்த்தகம் மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kpwy40zq4r1et7am0myrjqrx,imgname-iran-seizes-india-bound-ship-in-strait-of-hormuz-dramatic-video-shows-armed-boarding-operation-1776940090359.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;உலகின் மிக பதற்றமான கடல் வழிகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தியிலிருந்து ஒரு திகிலூட்டும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்தியாவுக்கு வந்துகொண்டிருந்த ஒரு சரக்குக் கப்பலை, ஈரான் கமாண்டோக்கள் சினிமா பாணியில் தாக்கி சிறைபிடித்துள்ளனர். துப்பாக்கிச்சூடு, கையெறி குண்டுகள் மற்றும் அதிவேக படகுகளுக்கு மத்தியில் நடந்த இந்த ஆப்ரேஷனின் வீடியோ இப்போது வெளியாகி, பாதுகாப்பு குறித்த பெரிய கேள்விகளை எழுப்பியுள்ளது.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;இந்தியா வந்த கப்பல் மீது திடீர் தாக்குதல்&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;கிடைத்த தகவல்களின்படி, லைபீரியக் கொடியுடன் கூடிய 'Epaminondas' என்ற சரக்குக் கப்பல், துபாயிலிருந்து குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்திற்குச் சென்றுகொண்டிருந்தது. அப்போதுதான், ஈரான் கடற்படை அதை குறிவைத்துள்ளது. ஈரான் வீரர்கள் அதிவேகப் படகுகளில் கப்பலை நெருங்கி துப்பாக்கியால் சுட்டதாகவும், கையெறி குண்டுகளை வீசியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதலில், கப்பலின் 'பிரிட்ஜ்' எனப்படும் கட்டுப்பாட்டு அறை சேதமடைந்தது.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;வீடியோவில் பதிவான திகில் நிமிடங்கள்&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;ஈரான் வெளியிட்ட வீடியோவில், முகமூடி அணிந்த கமாண்டோக்கள் அதிவேகப் படகுகளில் கப்பலைத் துரத்துவது தெளிவாகத் தெரிகிறது. பின்னர், அவர்கள் ஏணி மூலம் கப்பலில் ஏறி, ஆயுத முனையில் அதைக் கட்டுக்குள் கொண்டு வருகிறார்கள். வீடியோவில், வீரர்கள் கப்பலின் இன்ஜின் அறை வரை சென்று சோதனை செய்வதையும், கப்பல் தளம் முழுவதையும் கட்டுப்பாட்டில் எடுப்பதையும் பார்க்க முடிகிறது. இந்த முழு நடவடிக்கையும் மிகவும் திட்டமிட்ட மற்றும் ஆக்ரோஷமான ஒன்றாகத் தெரிகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;#BREAKING:An unprecedented Iranian challenge.Iran publishes scenes of the moment that the Revolutionary Guards took over ships using very fast boats, contrary to the instructions of the Iranian Navy and the rise of elite forces on board. pic.twitter.com/ckePfEZK8e&lt;/p&gt;&lt;p&gt;&mdash; MOSCOW NEWS  (@MOSCOW_EN) April 22, 2026&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;மற்றொரு கப்பலும் இலக்கு&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;ஈரான், 'MSC Francesca' என்ற மற்றொரு கப்பலையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது. இந்தக் கப்பல் ஈரான் கடற்கரையிலிருந்து சுமார் 6 மைல் தொலைவில் இருந்தபோது, அதன் மீதும் கடுமையான துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. பின்னர் இரண்டு கப்பல்களும் ஈரான் நோக்கி கொண்டு செல்லப்பட்டன.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;ஊழியர்கள் பாதுகாப்பாக உள்ளனர், ஆனால் பதற்றம் அதிகரிப்பு&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;இந்தத் தாக்குதலில் கப்பல் ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், நடுக்கடலில் இப்படி துப்பாக்கிச்சூடும், குண்டுவீச்சும் நடந்திருப்பது உலக கடல்சார் பாதுகாப்பு குறித்த கவலையை அதிகரித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி போன்ற முக்கிய வழித்தடத்தில் நிலைமை எவ்வளவு பதற்றமாக இருக்கிறது என்பதை இந்தச் சம்பவம் காட்டுகிறது.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;இந்த விவகாரம் ஏன் முக்கியமானது?&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;இந்தியாவுக்கு வந்துகொண்டிருந்த கப்பல் நேரடியாகத் தாக்கப்பட்டதால், இந்தச் சம்பவம் இந்தியாவிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே, வரும் நாட்களில் தூதரக மட்டத்தில் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தவும் வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/world/iran-commandos-attack-and-seize-india-bound-cargo-ship-articleshow-e7w40ks"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Alien Life Research : டைனோசர் முட்டை.. நாசா மிஷனில் பெரிய திருப்பம்... ஆடிப்போன விஞ்ஞானிகள்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/world/scientists-develop-new-method-to-detect-alien-life-beyond-earth-f7ufd6q</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/world/scientists-develop-new-method-to-detect-alien-life-beyond-earth-f7ufd6q</guid>
            <pubDate>Sun, 17 May 2026 14:34:39 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;பூமிக்கு வெளியே உயிரினங்கள் இருக்கிறதா என்ற கேள்விக்கான பதிலை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் புதிய பயோசிக்னேச்சர் முறையை உருவாக்கியுள்ளனர். இது செவ்வாய் மற்றும் யூரோப்பா போன்ற இடங்களில் பழங்கால நுண்ணுயிர்களின் தடயங்களை கண்டறிய உதவலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01krtjnmsfzrk2xjxcd8q19pa4,imgname-tamil-news--79--1779008459566.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;பூமிக்கு வெளியே உயிரினங்கள் இருக்கிறதா என்ற கேள்விக்கான பதிலை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் புதிய பயோசிக்னேச்சர் முறையை உருவாக்கியுள்ளனர். இது செவ்வாய் மற்றும் யூரோப்பா போன்ற இடங்களில் பழங்கால நுண்ணுயிர்களின் தடயங்களை கண்டறிய உதவலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பூமிக்கு வெளியே உயிர்கள் இருக்கிறதா என்ற கேள்வி பல ஆண்டுகளாக விஞ்ஞான உலகில் பெரிய ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. இதுவரை அமினோ அமிலங்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் போன்ற இரசாயன மூலக்கூறுகள் மூலம் உயிர்களின் தடயங்களை கண்டறியும் முயற்சிகள் நடந்தன. ஆனால் இவை இயற்கை ரசாயன வினைகளாலும் உருவாகலாம் என்பதால், அந்த முறை முழுமையாக நம்பகமானதாக இருக்கவில்லை.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;புதிய ஆய்வின் முக்கிய அம்சங்கள்:&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;அமினோ அமிலங்களின் அமைப்பை ஆய்வு செய்தல்&lt;/li&gt; &lt;li&gt;பன்முகத்தன்மை மற்றும் விநியோக முறையை கண்காணித்தல்&lt;/li&gt; &lt;li&gt;சுமார் 100 மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன&lt;/li&gt; &lt;li&gt;டைனோசர் முட்டை முதல் விண்கற்கள் வரை ஆய்வு.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;img&gt;&lt;p&gt;இஸ்ரேலில் உள்ள வீஸ்மேன் இன்ஸ்டிடியூட் விஞ்ஞானி கிடியான் யோஃபே தலைமையிலான குழு, விண்கற்கள், மண், புதைபடிவங்கள் மற்றும் டைனோசர் முட்டைகள் உள்ளிட்ட பல மாதிரிகளை ஆய்வு செய்தது. உயிரினங்களால் உருவாகும் அமினோ அமிலங்கள் ஒழுங்கான அமைப்புடன் காணப்பட்டதாகவும், இது உயிர்களின் இருப்பை சுட்டிக்காட்டும் வலிமையான அடையாளமாக இருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;செவ்வாய் மற்றும் யூரோப்பாவில் புதிய நம்பிக்கை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்த புதிய தொழில்நுட்பம் செவ்வாய் கிரகத்தில் பழங்கால நுண்ணுயிர்களின் தடயங்களை கண்டறிய உதவலாம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். குறிப்பாக, வியாழன் கிரகத்தின் துணைக்கோளான யூரோப்பாவின் பனிக்கட்டிகளுக்கு அடியில் பெரிய கடல் இருப்பதாக கருதப்படுவதால், அங்கு உயிர்கள் இருக்க வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;விஞ்ஞானிகள் கவனம் செலுத்தும் இடங்கள்:&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;செவ்வாய் கிரகம்&lt;/li&gt; &lt;li&gt;யூரோப்பா துணைக்கோள்&lt;/li&gt; &lt;li&gt;பனிக்கடல் பகுதிகள்&lt;/li&gt; &lt;li&gt;பழங்கால இரசாயன அமைப்புகள்&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;&lt;strong&gt;நாசாவின் Europa Clipper மிஷனுக்கு உதவுமா?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;2030-31 வயதில் யூரோப்பாவை அடையவுள்ள நாசாவின் Europa Clipper விண்கலம், அங்குள்ள பனித் துகள்களை ஆய்வு செய்ய உள்ளது. இந்த புதிய BioSignature முறையின் மூலம், அங்குள்ள உயிர்களின் தடயங்கள் உள்ளதா என்பதை மேலும் துல்லியமாக கண்டறிய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. விண்வெளி ஆராய்ச்சியில் இது மிகப்பெரிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/world/scientists-develop-new-method-to-detect-alien-life-beyond-earth-f7ufd6q"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Petrol Price Cut: பெட்ரோல் விலை 4 ரூபாய் குறைப்பு.. அதிரடியாக அறிவித்த அரசு.. மக்களுக்கு நிம்மதி!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/world/pakistan-petrol-price-reduced-by-4-rupees-today-updates-fz20fw3</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/world/pakistan-petrol-price-reduced-by-4-rupees-today-updates-fz20fw3</guid>
            <pubDate>Sun, 07 Jun 2026 14:16:19 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;இந்தியா உட்பட பல நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. ஆனால் நமது அண்டை நாடான பாகிஸ்தான் பெட்ரோல் விலை 4 ரூபாய் குறைந்துள்ளது. இது எப்படி சாத்தியம் என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ksygqngymdrwdab5m4h9bst1,imgname-petrol--2--1780214388254.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;இந்தியா உட்பட பல நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. ஆனால் நமது அண்டை நாடான பாகிஸ்தான் பெட்ரோல் விலை 4 ரூபாய் குறைந்துள்ளது. இது எப்படி சாத்தியம் என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உலகளாவிய பதற்றங்களால் கச்சா எண்ணெய் விலை அதிகமாக உள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் குறைத்துள்ளது. ஒவ்வொரு வாரமும் அங்கு விலை மதிப்பாய்வு செய்யப்படுகிறது. பெட்ரோல் விலை 4 ரூபாய் குறைக்கப்பட்டாலும், டீசல் விலையில் மாற்றம் இல்லை. பாகிஸ்தான் அரசின் தகவல்படி, அதிவேக டீசலின் (HSD) எக்ஸ்-டிப்போ விலை ஒரு லிட்டருக்கு 380.78 ரூபாயாகவே தொடரும். முன்பு ஏப்ரல் 10 அன்று டீசல் விலை 520.35 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பாகிஸ்தானில் பணவீக்கத்திற்கு அதிவேக டீசல் ஒரு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. ஏனெனில், சரக்கு போக்குவரத்திற்கு இது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. சுங்க வரி, பெட்ரோலிய வரி மற்றும் கிளைமேட் சப்போர்ட் வரி என ஒரு லிட்டர் டீசலுக்கு சுமார் 100 ரூபாயை பாகிஸ்தான் அரசு வரியாக விதிக்கிறது. டீசலைப் போலவே, பெட்ரோலின் எக்ஸ்-டிப்போ விலையும் 4 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 381.78 ரூபாயிலிருந்து 377.79 ரூபாயாகக் குறைந்துள்ளது. இதன் மூலம் மொத்தமாக சுமார் 37 ரூபாய் விலை குறைந்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கடந்த வாரம், பாகிஸ்தான் அரசு பெட்ரோல் மற்றும் அதிவேக டீசல் விலையை லிட்டருக்கு 22 ரூபாய் குறைப்பதாக அறிவித்தது. மேலும், மண்ணெண்ணெய் மீது லிட்டருக்கு சுமார் 21 ரூபாயும், லைட் டீசல் ஆயில் மீது 16 ரூபாயும் பெட்ரோலிய வரியாக விதிக்கப்படுகிறது. ஒரு வாரத்திற்கு முன்பு கூட பெட்ரோல், டீசல் விலை 22 ரூபாய் குறைக்கப்பட்டது. பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் HSD-யிலிருந்துதான் அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கிறது. இவற்றின் மாத விற்பனை சுமார் 7 முதல் 8 லட்சம் டன்கள். ஆனால், மண்ணெண்ணெயின் மாதத் தேவை வெறும் 10,000 டன்கள் மட்டுமே.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பாகிஸ்தான் ரூபாயின் ஸ்திரத்தன்மை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது, அமெரிக்க டாலருக்கு எதிரான பாகிஸ்தான் ரூபாயின் (PKR) மதிப்பு சமீபகாலமாக ஓரளவிற்கு ஸ்திரத்தன்மை அடைந்துள்ளது. டாலர் மதிப்பு உயராமல் கட்டுக்குள் இருந்ததால், எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான செலவு குறைந்தது. இது நுகர்வோருக்கு விலைக்குறைப்பாக மாற்றப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/world/pakistan-petrol-price-reduced-by-4-rupees-today-updates-fz20fw3"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Summer Travel: பழங்கால இன்ஜினியரிங்கின் உச்சம்! உலகின் டாப் சுற்றுலாத் தலங்கள் இதோ.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/top-historic-destinations-every-history-lover-must-visit-gdlhkgl</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/top-historic-destinations-every-history-lover-must-visit-gdlhkgl</guid>
            <pubDate>Fri, 24 Apr 2026 10:47:49 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கோடை விடுமுறை வந்தாச்சு, எங்க டூர் போலாம்னு தேட ஆரம்பிச்சுட்டீங்களா? இப்போதைய டிரெண்ட்படி மக்கள் எங்கே அதிகம் போறாங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? ட்ரிப் அட்வைசர் புள்ளிவிவரப்படி &amp;nbsp;அந்த சூப்பரான இடங்களைப் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01er9k3b912ya255v0mvz2n5km,imgname-rohit-ritika-jpg.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கோடை விடுமுறை வந்தாச்சு, எங்க டூர் போலாம்னு தேட ஆரம்பிச்சுட்டீங்களா? இப்போதைய டிரெண்ட்படி மக்கள் எங்கே அதிகம் போறாங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? ட்ரிப் அட்வைசர் புள்ளிவிவரப்படி &amp;nbsp;அந்த சூப்பரான இடங்களைப் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பழங்கால ரோமின் மிகச் சிறப்பாகப் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களில் இதுவும் ஒன்று. ஒரே நேரத்தில் 50,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் அமரும் திறன் கொண்டது. கிளாடியேட்டர்கள் சண்டையிட்ட இந்த அரங்கத்தைப் பார்க்க ரோம் செல்பவர்கள் யாரும் தவறுவதில்லை. அரை நாள் ஆகும் இந்த பயணத்திற்கு, வரிசையில் நிற்காமல் செல்ல ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இத்தாலி: ரோம் நகரில் உள்ள போப் ஆண்டவரின் இல்லம் மற்றும் அருங்காட்சியகங்களின் பிரம்மாண்டமான வளாகம் இது. கடந்த 2000 ஆண்டுகால மனிதகுலத்தின் சாதனைகளையும் வளர்ச்சியையும் இங்கே காணலாம். 'வேக்கிங் அப் தி வத்திக்கான்' என்ற சிறிய குழு சுற்றுப்பயணம் மூலம், சிஸ்டைன் சேப்பலை கூட்ட நெரிசல் இல்லாமல் அமைதியாகப் பார்க்கலாம். போப்பைப் பார்க்க விரும்பினால், வாரத்தின் குறிப்பிட்ட நாட்களுக்கு முன்பதிவு செய்ய வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிரான்ஸ், அமெரிக்காவுக்கு நட்பின் பரிசாக வழங்கியதுதான் சுதந்திர தேவி சிலை. இது சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் உலகளாவிய சின்னமாக விளங்குகிறது. அமெரிக்காவுக்குச் சென்றால், இந்த புகழ்பெற்ற நினைவுச்சின்னத்தையும், எல்லிஸ் தீவின் அழகிய காட்சிகளையும் தவறவிடாதீர்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உலகெங்கிலும் உள்ள பயணிகள், புகழ்பெற்ற ஈபிள் டவரை நேரில் காணவே பாரிஸ் வருகிறார்கள். டவரை ரசிப்பதோடு, அதன் அருகே கிடைக்கும் சுவையான உணவுகளும் ஒரு புதுவித அனுபவத்தைத் தரும். உலகின் மிக அழகான நகரங்களில் ஒன்றான பாரிஸின் அழகை இங்கு முழுமையாக உணரலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வரலாற்றுக்கு முந்தைய இங்கிலாந்தின் மிக முக்கியமான எச்சங்களில் ஒன்று ஸ்டோன்ஹெஞ்ச். கரடுமுரடாக செதுக்கப்பட்ட இந்த ராட்சதக் கற்கள், இரண்டு செறிவான வட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இதன் அழகை அங்கு சென்றால் மட்டுமே முழுமையாக உணர முடியும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;லியனார்டோ டா வின்சியின் 'மோனா லிசா' ஓவியம் இங்குதான் உள்ளது. லூவர், உலகின் மிகப்பெரிய கலை அருங்காட்சியகமாகக் கருதப்படுகிறது. பல காலகட்டங்களைச் சேர்ந்த கலைப் படைப்புகளின் ஈடு இணையற்ற தொகுப்பு இங்குள்ளது. அருங்காட்சியகத்தின் சில முக்கிய பகுதிகளைப் பார்க்க, 'ஸ்கிப்-தி-லைன்' நடைபயண டிக்கெட்டைப் பயன்படுத்தலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்னும் கட்டி முடிக்கப்படாத இந்த ரோமன் கத்தோலிக்க தேவாலயம், புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர் கௌடியின் மிகச்சிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது. இதன் கட்டுமானம் 1882-ல் தொடங்கி இன்னும் முடியவில்லை. பார்சிலோனா செல்லும் எந்தவொரு சுற்றுலாப் பயணியும் இதைத் தவறவிட விரும்ப மாட்டார்கள். இங்கு எப்போதுமே நீண்ட வரிசை இருக்கும் என்பதால், முன்னுரிமை டிக்கெட்டை முன்பதிவு செய்வது நல்லது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/top-historic-destinations-every-history-lover-must-visit-gdlhkgl"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Ebola: காங்கோவில் எபோலா அவசரநிலை! இந்த வைரஸ் ஏன் இவ்வளவு ஆபத்தானது?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/health/ebola-outbreak-in-congo-explained-who-global-health-emergency-gvb5czp</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/health/ebola-outbreak-in-congo-explained-who-global-health-emergency-gvb5czp</guid>
            <pubDate>Wed, 27 May 2026 12:48:41 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;டெமாக்ரடிக் ரிபப்ளிக் ஆஃப் காங்கோவில் எபோலா நோய் பரவி வருவதால், WHO உலகளாவிய சுகாதார அவசரநிலையை அறிவித்துள்ளது.தற்போது பரவி வரும் புன்டிபுகியோ வகை வைரஸுக்கு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியோ அல்லது சிகிச்சையோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01krqs1vmvnv7crjvdnyq5madv,imgname-180524154744-ebola-2014-1778914487963.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;டெமாக்ரடிக் ரிபப்ளிக் ஆஃப் காங்கோவில் எபோலா நோய் பரவி வருவதால், WHO உலகளாவிய சுகாதார அவசரநிலையை அறிவித்துள்ளது.தற்போது பரவி வரும் புன்டிபுகியோ வகை வைரஸுக்கு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியோ அல்லது சிகிச்சையோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;டெமாக்ரடிக் ரிபப்ளிக் ஆஃப் காங்கோவின் கிழக்குப் பகுதியில் உள்ள இட்டூரி மாகாணத்தில் சமீபத்தில் பரவத் தொடங்கிய எபோலா பாதிப்பை, உலக சுகாதார அமைப்பு (WHO) 'சர்வதேச அக்கறைக்குரிய பொது சுகாதார அவசரநிலை' என அறிவித்துள்ளது. தொற்று மற்றும் இறப்புகள் அதிகரிப்பதாலும், இந்த வைரஸ் எல்லைகளைத் தாண்டி மேலும் பரவக்கூடும் என்ற அச்சத்தாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;WHO தகவல்படி, இதுவரை சுமார் 246 சந்தேகத்திற்கிடமான பாதிப்புகளும், 80 இறப்புகளும் பதிவாகியுள்ளன. இந்த நோய் காங்கோவைத் தாண்டி, அண்டை நாடான உகாண்டாவிலும் பரவியுள்ளது. அங்கு இரண்டு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;இருப்பினும், தற்போதைய சூழல் ஒரு 'பெருந்தொற்று அவசரநிலை' இல்லை என்று WHO தெளிவுபடுத்தியுள்ளது. ஆனாலும், உண்மையான பாதிப்பு எண்ணிக்கை மற்றும் வைரஸ் எவ்வளவு தூரம் பரவியுள்ளது என்பது குறித்த பல கேள்விகளுக்கு விடை இல்லாததால், உலக சுகாதார அதிகாரிகள் கவலையடைந்துள்ளனர்.&lt;/p&gt;&lt;p&gt;WHO-வின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், 'பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கை மற்றும் நோய் பரவியுள்ள புவியியல் பகுதி ஆகிய இரண்டிலும் குறிப்பிடத்தக்க நிச்சயமற்ற தன்மைகள் உள்ளன' என்று கூறியுள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;தற்போதைய பரவல், எபோலாவின் புன்டிபுகியோ (Bundibugyo) வைரஸ் வகையுடன் தொடர்புடையது. இதற்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது குறிப்பிட்ட சிகிச்சைகளோ இல்லை.&lt;/p&gt;&lt;p&gt;இந்த அறிவிப்பு, உலகின் மிகக் கொடிய வைரஸ் நோய்களில் ஒன்றான எபோலாவின் மீது மீண்டும் உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உலக சுகாதார அமைப்பு (WHO), எபோலா என்பது மனிதர்களைத் தாக்கும் ஒரு அரிதான ஆனால் கடுமையான வைரஸ் நோயாகும். இது பெரும்பாலும் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடியது.&lt;/p&gt;&lt;p&gt;இந்த நோய், ஃபிலோவிரிடே (filoviridae) குடும்பத்தின் ஆர்த்தோஎபோலா வைரஸ் (Orthoebolavirus) குழுவைச் சேர்ந்த வைரஸ்களால் ஏற்படுகிறது. விஞ்ஞானிகள் இந்த வைரஸ்களில் ஆறு வெவ்வேறு வகைகளைக் கண்டறிந்துள்ளனர். ஆனால், அவற்றில் மூன்று முக்கியமாக மனிதர்களிடையே பெரிய அளவிலான பரவலுக்கு காரணமாகின்றன. அவை:&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;எபோலா வைரஸ் (EBOV)&lt;/li&gt; &lt;li&gt;சூடான் வைரஸ் (SUDV)&lt;/li&gt; &lt;li&gt;புன்டிபுகியோ வைரஸ் (BDBV)&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;காங்கோவில் தற்போதைய பரவலுக்கு புன்டிபுகியோ வைரஸ் தான் காரணம்.&lt;/p&gt;&lt;p&gt;எபோலா முதன்முதலில் 1976-ல் ஆப்பிரிக்காவில் ஒரே நேரத்தில் ஏற்பட்ட இரண்டு பரவல்களின் போது தோன்றியது. ஒரு பரவல் இன்றைய தெற்கு சூடானிலும், மற்றொன்று இன்றைய டெமாக்ரடிக் ரிபப்ளிக் ஆஃப் காங்கோவில் உள்ள யம்புக்கு என்ற இடத்திலும் ஏற்பட்டது.&lt;/p&gt;&lt;p&gt;அருகில் இருந்த எபோலா நதியின் பெயர் இந்த நோய்க்கு சூட்டப்பட்டது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சர்வதேச அளவில் நோய் பரவும் அபாயம் அதிகரித்து வருவதாலும், பரவல் குறித்த நிச்சயமற்ற தன்மையாலும் WHO இந்த உலகளாவிய சுகாதார அவசரநிலையை அறிவித்துள்ளது. சுகாதார அதிகாரிகள் குறிப்பாக கவலைப்படக் காரணம்:&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;ஏற்கனவே நூற்றுக்கணக்கான சந்தேகத்திற்கிடமான பாதிப்புகள் உள்ளன.&lt;/li&gt; &lt;li&gt;இறப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்துள்ளது.&lt;/li&gt; &lt;li&gt;உகாண்டா வரை நோய் பரவியுள்ளது.&lt;/li&gt; &lt;li&gt;தற்போது பரவும் வைரஸ் வகைக்கு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ மருந்துகளோ இல்லை.&lt;/li&gt; &lt;li&gt;எல்லைப் பகுதிகளில் அதிகப்படியான பயண மற்றும் வர்த்தகப் போக்குவரத்து உள்ளது.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;வேலை, வர்த்தகம் மற்றும் குடும்ப காரணங்களுக்காக தினமும் பலர் எல்லைகளைக் கடந்து செல்வதால், காங்கோவின் அண்டை நாடுகள் அதிக ஆபத்துள்ள பகுதிகளாகக் கருதப்படுகின்றன.&lt;/p&gt;&lt;p&gt;தற்போதைய பரவலில் ஆய்வகத்தில் உறுதிப்படுத்தப்பட்ட 8 பாதிப்புகள் உள்ளதாகவும், இன்னும் பல பாதிப்புகள் சந்தேகத்திற்குரியதாகவே இருப்பதாகவும் WHO கூறியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகள், இட்டூரி மாகாணத்தின் தலைநகரான புனியா மற்றும் மொங்வாலு, ராம்பரா ஆகிய தங்கச் சுரங்க நகரங்கள் உட்பட மூன்று சுகாதார மண்டலங்களில் பரவியுள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;சுரங்கத் தொழிலாளர்கள் அடிக்கடி பயணம் செய்வதால், நோய் கட்டுப்பாட்டை கடினமாக்குகிறது. எனவே சுரங்கப் பகுதிகள் குறிப்பாக கவலைக்குரியதாக உள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தற்போது பரவி வரும் புன்டிபுகியோ (Bundibugyo) வகை வைரஸுக்கு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ மருந்துகளோ இல்லாததால், இது கூடுதல் கவலையை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;முந்தைய பரவல்களுக்கு காரணமான எபோலா வைரஸ் வகைக்கு, அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளும் சிகிச்சைகளும் உள்ளன. ஆனால், புன்டிபுகியோ மற்றும் சூடான் வைரஸ் நோய்களுக்கு, விஞ்ஞானிகள் இன்னும் தடுப்பூசிகளையும் மருந்துகளையும் உருவாக்கி வருகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;மாற்றுத் தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும், ஆனால் இன்னும் எதுவும் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை என்றும் WHO கூறியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;இதனால், நோயாளிகள் உயிர் பிழைக்க மருத்துவர்கள் பெரும்பாலும் ஆதரவு மருத்துவ சிகிச்சைகளையே நம்பியுள்ளனர்.&lt;/p&gt;&lt;h3&gt;&lt;strong&gt;எபோலா எப்படி பரவுகிறது?&lt;/strong&gt;&lt;/h3&gt;&lt;p&gt;பழந்தின்னி வௌவால்கள்தான் எபோலா வைரஸ்களின் இயற்கையான இருப்பிடம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;வௌவால்கள், சிம்பன்சிகள், கொரில்லாக்கள், குரங்குகள், காட்டு மான்கள் மற்றும் முள்ளம்பன்றிகள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட காட்டு விலங்குகளுடன் தொடர்பு கொள்வதன் மூலம் இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவக்கூடும்.&lt;/p&gt;&lt;p&gt;மனிதர்களுக்கு தொற்று ஏற்பட்டவுடன், இந்த நோய் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பின்வரும் உடல் திரவங்களின் நேரடித் தொடர்பு மூலம் பரவுகிறது:&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;ரத்தம்&lt;/li&gt; &lt;li&gt;வாந்தி&lt;/li&gt; &lt;li&gt;வியர்வை&lt;/li&gt; &lt;li&gt;உமிழ்நீர்&lt;/li&gt; &lt;li&gt;சிறுநீர்&lt;/li&gt; &lt;li&gt;மலம்&lt;/li&gt; &lt;li&gt;விந்து&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;பாதிக்கப்பட்ட நோயாளிகள் பயன்படுத்திய அசுத்தமான பரப்புகள், உடைகள் அல்லது படுக்கைகளைத் தொடுவதன் மூலமும் மக்களுக்கு தொற்று ஏற்படலாம்.&lt;/p&gt;&lt;p&gt;முக்கியமாக, அறிகுறிகள் தொடங்குவதற்கு முன்பு எபோலா பரவாது. இருப்பினும், பாதிக்கப்பட்டவர்களின் ரத்தம் மற்றும் உடல் திரவங்களில் வைரஸ் இருக்கும் வரை அவர்கள் தொற்றுநோயைப் பரப்பக்கூடியவர்களாகவே இருப்பார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;கடந்த காலங்களில், பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை நேரடியாகத் தொட்டு செய்யப்படும் இறுதிச் சடங்குகள் பல பரவல்களுக்கு காரணமாக அமைந்துள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கடுமையாக பின்பற்றப்படாதபோது, சுகாதாரப் பணியாளர்கள் குறிப்பாக அதிக ஆபத்துகளை எதிர்கொள்கின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தொற்று ஏற்பட்ட 2 முதல் 21 நாட்களுக்குள் அறிகுறிகள் தோன்றலாம். இந்த நோய் பெரும்பாலும் திடீரெனத் தொடங்குகிறது. ஆரம்ப அறிகுறிகள் பின்வருமாறு:&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;காய்ச்சல்&lt;/li&gt; &lt;li&gt;சோர்வு&lt;/li&gt; &lt;li&gt;பலவீனம்&lt;/li&gt; &lt;li&gt;தசை வலி&lt;/li&gt; &lt;li&gt;தலைவலி&lt;/li&gt; &lt;li&gt;தொண்டை வலி&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;நோய் மோசமடையும்போது, நோயாளிகளுக்கு பின்வரும் பாதிப்புகள் ஏற்படலாம்:&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;வாந்தி&lt;/li&gt; &lt;li&gt;வயிற்றுப்போக்கு&lt;/li&gt; &lt;li&gt;வயிற்று வலி&lt;/li&gt; &lt;li&gt;சருமத்தில் தடிப்புகள்&lt;/li&gt; &lt;li&gt;கல்லீரல் பிரச்சினைகள்&lt;/li&gt; &lt;li&gt;சிறுநீரக பிரச்சினைகள்&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;எபோலா என்றாலே எப்போதும் ரத்தக்கசிவு ஏற்படும் என்று பலர் நினைக்கிறார்கள், ஆனால் பரவலாக நம்பப்படுவதை விட இது குறைவான பொதுவானது என்று WHO கூறுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;கடுமையான சந்தர்ப்பங்களில், நோயாளிகளுக்கு உள் அல்லது வெளிப்புற ரத்தக்கசிவு ஏற்படலாம். இதில் வாந்தி அல்லது மலத்தில் ரத்தம், ஈறுகளில் ரத்தக்கசிவு அல்லது மூக்கில் இருந்து ரத்தம் வருதல் ஆகியவை அடங்கும்.&lt;/p&gt;&lt;p&gt;சில நோயாளிகள் குழப்பம், ஆக்ரோஷம் மற்றும் நரம்பு மண்டலப் பிரச்சினைகளாலும் பாதிக்கப்படுகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மலேரியா, டைபாய்டு காய்ச்சல், மூளைக்காய்ச்சல், ஷிகெல்லோசிஸ் மற்றும் பிற வைரஸ் காய்ச்சல்கள் உட்பட, ஆப்பிரிக்காவில் பொதுவான பல நோய்களின் அறிகுறிகளைப் போலவே எபோலாவின் அறிகுறிகளும் இருப்பதால், இதைக் கண்டறிவது கடினம்.&lt;/p&gt;&lt;p&gt;இதனால், தொற்றுநோயை உறுதிப்படுத்த ஆய்வகப் பரிசோதனை அவசியம். மருத்துவர்கள் பின்வரும் சோதனைகளைப் பயன்படுத்துகின்றனர்:&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;RT-PCR சோதனைகள்&lt;/li&gt; &lt;li&gt;ELISA சோதனைகள்&lt;/li&gt; &lt;li&gt;ஆன்டிஜென் கண்டறிதல் சோதனைகள்&lt;/li&gt; &lt;li&gt;வைரஸ் தனிமைப்படுத்தல் முறைகள்&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;எபோலா நோயாளிகளிடமிருந்து மாதிரிகளைக் கையாள்வது மிகவும் ஆபத்தானது. இந்த வைரஸ் அதிக தொற்று தன்மை கொண்டதால், ஆய்வகங்கள் மிக உயர்ந்த பாதுகாப்புத் தரங்களைப் பயன்படுத்த வேண்டும்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;என்ன சிகிச்சை உள்ளது?&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;தற்போது புன்டிபுகியோ வைரஸ் நோய்க்கு என அங்கீகரிக்கப்பட்ட குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை. இருப்பினும், ஆரம்ப கட்டத்திலேயே ஆதரவு சிகிச்சை அளிப்பது உயிர் பிழைக்கும் வாய்ப்பை பெரிதும் மேம்படுத்தும் என்று WHO கூறுகிறது. ஆதரவு சிகிச்சையில் பின்வருவன அடங்கும்:&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;நீரேற்றம் (Rehydration)&lt;/li&gt; &lt;li&gt;வலி மேலாண்மை&lt;/li&gt; &lt;li&gt;ஊட்டச்சத்து ஆதரவு&lt;/li&gt; &lt;li&gt;மலேரியா போன்ற பிற தொற்றுகளுக்கு சிகிச்சை&lt;/li&gt; &lt;li&gt;ஆக்சிஜன் ஆதரவு&lt;/li&gt; &lt;li&gt;உறுப்புகளின் செயல்பாட்டைக் கண்காணித்தல்&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;EBOV வகையால் ஏற்படும் எபோலா வைரஸ் நோய்க்கு, WHO சில மோனோக்ளோனல் ஆன்டிபாடி சிகிச்சைகளை அங்கீகரித்துள்ளது, அவற்றுள்:&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;அன்சுவிமாப் (Ansuvimab)&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இன்மாசெப் (Inmazeb)&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஆனால் இவை புன்டிபுகியோ வைரஸ் நோய்க்கு அங்கீகரிக்கப்படவில்லை.&lt;/p&gt;&lt;p&gt;ஆராய்ச்சியாளர்கள் புதிய மருந்துகள் மற்றும் மருத்துவப் பரிசோதனைகளில் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.&lt;/p&gt;&lt;h3&gt;&lt;strong&gt;தடுப்பூசிகள் உள்ளனவா?&lt;/strong&gt;&lt;/h3&gt;&lt;p&gt;முந்தைய சில பரவல்களுக்கு காரணமான எபோலா வைரஸ் வகைக்கு தடுப்பூசிகள் உள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளில் சில:&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;எர்வெபோ (Ervebo)&lt;/li&gt; &lt;li&gt;சப்டெனோ (Zabdeno)&lt;/li&gt; &lt;li&gt;வாவ்பியா (Mvabea)&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;எர்வெபோ தடுப்பூசி எபோலா பரவலின் போது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் அவசரகால தடுப்பூசி திட்டங்கள் மூலம் சர்வதேச அளவில் இதை வழங்க முடியும்.&lt;/p&gt;&lt;p&gt;இருப்பினும், தற்போதைய பரவலில் ஈடுபட்டுள்ள புன்டிபுகியோ வகைக்கு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி எதுவும் தற்போது இல்லை.&lt;/p&gt;&lt;p&gt;விஞ்ஞானிகள் இன்னும் மாற்றுத் தடுப்பூசிகளை உருவாக்கி வருகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நோய் பரவலைத் தடுக்க சமூகத்தின் ஒத்துழைப்பு முக்கியம் என்று WHO கூறுகிறது. சுகாதார அதிகாரிகள் பல நடவடிக்கைகளை ஒன்றாகப் பயன்படுத்துகின்றனர், அவற்றுள்:&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;நோயாளிகளை ஆரம்பத்திலேயே தனிமைப்படுத்துதல்&lt;/li&gt; &lt;li&gt;தொடர்புத் தடமறிதல் (Contact tracing)&lt;/li&gt; &lt;li&gt;ஆய்வகப் பரிசோதனை&lt;/li&gt; &lt;li&gt;தொற்று கட்டுப்பாடு&lt;/li&gt; &lt;li&gt;பாதுகாப்பான முறையில் சடலங்களை அடக்கம் செய்தல்&lt;/li&gt; &lt;li&gt;பொது விழிப்புணர்வு பிரச்சாரங்கள்&lt;/li&gt; &lt;li&gt;கிடைக்கும் இடங்களில் தடுப்பூசி போடுதல்&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;பாதிக்கப்பட்ட நபர்களுடனும், வைரஸைச் சுமக்கக்கூடிய காட்டு விலங்குகளுடனும் நேரடித் தொடர்பைத் தவிர்க்குமாறு மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;சுகாதார நடவடிக்கைகளைப் பின்பற்றவும், சந்தேகத்திற்கிடமான அறிகுறிகளை உடனடியாகத் தெரிவிக்கவும் சமூகங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;சுகாதாரப் பணியாளர்களுக்கு ஏன் அதிக ஆபத்து?&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் பாதிக்கப்பட்ட நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பு கொள்வதால், எபோலா பரவலின் போது பெரும் அபாயங்களை எதிர்கொள்கின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;சரியான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல், சுகாதாரப் பணியாளர்கள் ரத்தம் அல்லது உடல் திரவங்கள் மூலம் எளிதில் பாதிக்கப்படலாம்.&lt;/p&gt;&lt;p&gt;கடுமையான தொற்று கட்டுப்பாட்டு விதிகள் அவசியம் என்று WHO கூறுகிறது, அவற்றுள்:&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;கை சுகாதாரம்&lt;/li&gt; &lt;li&gt;முகக்கவசம் மற்றும் கையுறைகளின் பயன்பாடு&lt;/li&gt; &lt;li&gt;பாதுகாப்பு ஆடை&lt;/li&gt; &lt;li&gt;ஊசிகளைப் பாதுகாப்பாகக் கையாளுதல்&lt;/li&gt; &lt;li&gt;அசுத்தமான பொருட்களைப் பாதுகாப்பாக அகற்றுதல்&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;எபோலா மாதிரிகளைக் கையாளும்போது ஆய்வகப் பணியாளர்களுக்கும் சிறப்புப் பயிற்சி மற்றும் உயர் பாதுகாப்பு வசதிகள் தேவை.&lt;/p&gt;&lt;h3&gt;&lt;strong&gt;எபோலாவிலிருந்து தப்பியவர்களுக்கு என்ன ஆகும்?&lt;/strong&gt;&lt;/h3&gt;&lt;p&gt;எபோலாவிலிருந்து மீண்ட பலரும் குணமடைந்த பிறகும் உடல்நலப் பிரச்சினைகளைத் தொடர்ந்து எதிர்கொள்கின்றனர். சில நோயாளிகளுக்கு நீண்டகால சிக்கல்கள் ஏற்படுகின்றன, அவை:&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;கண்கள்&lt;/li&gt; &lt;li&gt;மூளை&lt;/li&gt; &lt;li&gt;மனநலம்&lt;/li&gt; &lt;li&gt;நரம்பு மண்டலம்&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;மீண்டவர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப உதவ, அவர்களுக்கு ஆலோசனை, மருத்துவப் பராமரிப்பு மற்றும் ஆதரவு வழங்கப்பட வேண்டும் என்று WHO கூறுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;குணமடைந்த பிறகும் சில மாதங்களுக்கு உடலின் சில பகுதிகளில் வைரஸ் தங்கியிருக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;சில சமயங்களில், குணமடைந்து 15 மாதங்கள் வரை விந்து மூலம் எபோலா பரவியது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;இதனால், மீண்ட ஆண்களுக்கு பாதுகாப்பான பாலியல் நடைமுறைகள் மற்றும் வழக்கமான பரிசோதனைகளை WHO அறிவுறுத்துகிறது.&lt;/p&gt;&lt;p&gt;எபோலாவிலிருந்து மீண்ட கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கும் சிறப்பு மருத்துவக் கண்காணிப்பு தேவை.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இந்த பரவல் உலகளவில் ஏன் முக்கியமானது?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;தற்போதைய பரவல் முக்கியமாக காங்கோ மற்றும் உகாண்டாவில் மையமாக இருந்தாலும், இன்றைய இணைக்கப்பட்ட உலகில் தொற்று நோய்கள் வேகமாகப் பரவக்கூடும் என்பதால் சுகாதார நிபுணர்கள் நிலைமையை உன்னிப்பாகக் கவனிக்கின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;2014-2016-ல் மேற்கு ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட எபோலா பரவல் 11,000-க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றது. கட்டுப்பாடற்ற பரவல்கள் எவ்வளவு ஆபத்தானவை என்பதை அது காட்டியது.&lt;/p&gt;&lt;p&gt;நவீன பயணம், நெரிசலான நகரங்கள், பலவீனமான சுகாதார அமைப்புகள் மற்றும் எல்லை தாண்டிய நடமாட்டம் ஆகியவை பரவலான பரவல் அபாயத்தை அதிகரிக்கின்றன.&lt;/p&gt;&lt;p&gt;WHO-வின் அவசரநிலை அறிவிப்பு, தாமதமாகச் செயல்படுவதை விட, நாடுகள் முன்கூட்டியே தயாராவதற்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டது.&lt;/p&gt;&lt;p&gt;இந்த அறிவிப்பு, அரசாங்கங்களும் சர்வதேச நிறுவனங்களும் நிதி, மருத்துவக் குழுக்கள் மற்றும் பொது சுகாதார ஆதரவை வேகமாகத் திரட்ட அனுமதிக்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;மக்கள் நினைவில் கொள்ள வேண்டியவை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;நாடுகள் விரைவாகச் செயல்பட்டால் எபோலா தீவிரமானது ஆனால் கட்டுப்படுத்தக்கூடியது என்று WHO வலியுறுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;கோவிட்-19 போல எபோலா காற்றில் பரவாது என்பதையும் அந்த அமைப்பு மக்களுக்கு நினைவூட்டியுள்ளது. இது முக்கியமாக பாதிக்கப்பட்ட உடல் திரவங்களுடனான நேரடித் தொடர்பு மூலம் பரவுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;ஆரம்பக்கட்ட மருத்துவப் பராமரிப்பு, விரைவான தனிமைப்படுத்தல், தொடர்புத் தடமறிதல் மற்றும் பொது விழிப்புணர்வு ஆகியவை பரவலைத் தடுப்பதில் மிக முக்கியமான கருவிகளாக உள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;தற்போது, சுகாதார நிறுவனங்கள் காங்கோ மற்றும் அண்டை நாடுகளில் உள்ள நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன. அதே நேரத்தில் ஆராய்ச்சியாளர்கள் புன்டிபுகியோ வகைக்கான தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகள் குறித்து தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;நோய் மேலும் பரவுவதற்கு முன்பு சுகாதார அதிகாரிகளால் பரவலைக் கட்டுப்படுத்த முடியுமா என்பதைத் தீர்மானிப்பதில் வரும் வாரங்கள் முக்கியமானதாக இருக்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/health/ebola-outbreak-in-congo-explained-who-global-health-emergency-gvb5czp"/>
        </item>
        <item>
            <title><![CDATA[பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு..! மீண்டும் லாக்டவுன்..! 8 மணிக்கு மேல் கடைகளை மூட உத்தரவு]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/world/pakistan-implements-smart-lockdown-to-combat-dwindling-foreign-reserves-h0ac71o</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/world/pakistan-implements-smart-lockdown-to-combat-dwindling-foreign-reserves-h0ac71o</guid>
            <pubDate>Tue, 07 Apr 2026 22:37:37 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் காரணமாக பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு உச்சத்தை அடைந்துள்ள நிலையில் நிலைமையை சமாளிக்கும் பொருட்டு ஸ்மார்ட் லாக்டவுனை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kkgb3q7edtesa3wtea76d1tv,imgname-lpg-gas-shortage-leads-lockdown-situation-1773296278766.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் காரணமாக பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு உச்சத்தை அடைந்துள்ள நிலையில் நிலைமையை சமாளிக்கும் பொருட்டு ஸ்மார்ட் லாக்டவுனை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பாகிஸ்தானில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பொருளாதாரச் சரிவு காரணமாக, நாடு முழுவதும் 'ஸ்மார்ட் லாக்டவுன்' (Smart Lockdown) போன்ற கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு ஏப்ரல் 7, 2026 முதல் அமல்படுத்தியுள்ளது. கோவிட் காலத்தைப் போன்ற முழுமையான முடக்கம் இதுவல்ல என்றாலும், மின்சாரம் மற்றும் எரிபொருளைச் சேமிப்பதற்காக வர்த்தக நேரங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;பின்னணி மற்றும் காரணம்&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவை பாகிஸ்தானின் பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்துள்ளன. அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்துள்ள நிலையில், இறக்குமதி செய்யப்படும் எரிபொருளுக்கான செலவைக் குறைக்க பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மத்திய மற்றும் மாகாண அரசுகள் இணைந்து எடுத்துள்ள முடிவின்படி பின்வரும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன:&lt;/p&gt;&lt;p&gt;வணிக வளாகங்கள் மற்றும் சந்தைகள்: அனைத்து வணிக வளாகங்கள், சில்லறை விற்பனை அங்காடிகள் மற்றும் பொதுச் சந்தைகள் இரவு 8:00 மணிக்குள் மூடப்பட வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;உணவகங்கள்: உணவகங்கள், பேக்கரிகள் மற்றும் கஃபேக்கள் இரவு 10:00 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;திருமண விழாக்கள்: திருமண மண்டபங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் மற்றும் தனியார் வீட்டு விசேஷங்கள் அனைத்தும் இரவு 10:00 மணிக்குள் முடிக்கப்பட வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;அரசு அலுவலகங்கள்: எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 4 நாட்கள் வேலை மற்றும் வீட்டிலிருந்தே பணியாற்றும் (Work from Home) முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;மின்னொளி பயன்பாடு: விளம்பரப் பலகைகளுக்கான மின்சாரம் மற்றும் தேவையற்ற தெருவிளக்குகள் பயன்பாடு இரவு நேரங்களில் துண்டிக்கப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மருந்தகங்கள் (Pharmacies), மருத்துவமனைகள் மற்றும் பால், காய்கறி போன்ற அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு இந்தக் கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;மாகாணங்களின் நிலைப்பாடு&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;பஞ்சாப், கைபர் பக்துன்க்வா, பலுசிஸ்தான் மற்றும் இஸ்லாமாபாத் ஆகிய பகுதிகளில் இக்கட்டுப்பாடுகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. கைபர் பக்துன்க்வாவின் சில முக்கிய நகரங்களில் மட்டும் சந்தைகள் இரவு 9:00 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிந்து மாகாணத்திலும் இதற்கான முறையான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வரும் சூழலில், இந்த 'ஸ்மார்ட் லாக்டவுன்' மூலம் சுமார் 250 பில்லியன் ரூபாய் வரை சேமிக்க முடியும் என அரசு எதிர்பார்க்கிறது. எனினும், வர்த்தக நேரக் குறைப்பு காரணமாக சிறு வியாபாரிகள் மற்றும் தினசரி கூலித் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்ற அச்சம் எழுந்துள்ளது. வர்த்தக அமைப்புகள் இந்த முடிவிற்கு எதிர்ப்புத் தெரிவித்தாலும், நாட்டின் தற்போதைய அவசர நிலையைக் கருத்தில் கொண்டு ஒத்துழைக்குமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;இந்த நடவடிக்கை தற்காலிகமானது என்றும், சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை சீரானவுடன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்றும் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், மின்சாரத் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/world/pakistan-implements-smart-lockdown-to-combat-dwindling-foreign-reserves-h0ac71o"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Burj Khalifa: உலகின் மிக உயரமான கட்டிடம் புர்ஜ் கலிஃபாவில் ஒரு வீடு வாங்க எவ்வளவு கோடி வேணும் தெரியுமா? விலை கேட்டா தலை சுத்திடும்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/world/burj-khalifa-house-price-in-rupees-how-much-does-it-cost-to-buy-a-home-in-burj-khalifa-luxury-apartment-prices-explained-hcrtlg3</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/world/burj-khalifa-house-price-in-rupees-how-much-does-it-cost-to-buy-a-home-in-burj-khalifa-luxury-apartment-prices-explained-hcrtlg3</guid>
            <pubDate>Fri, 29 May 2026 08:11:50 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Burj Khalifa House Price in Rupees: துபாயின் புர்ஜ் கலிஃபாவில் ஒரு வீடு வாங்க வேண்டும் என்பது பலரின் கனவு. ஆனால், அங்கு ஒரு வீட்டை வாங்க கோடீஸ்வரராக இருக்க வேண்டும். புர்ஜ் கலிஃபாவில் ஒரு ஃபிளாட்டின் விலை என்னவாக இருக்கும் என்று விரிவாகப் பார்ப்போம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ksrsefbs0nfmdsctfm9g0j42,imgname-burj-khalifa-house-price-in-rupees-1780022197625.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Burj Khalifa House Price in Rupees: துபாயின் புர்ஜ் கலிஃபாவில் ஒரு வீடு வாங்க வேண்டும் என்பது பலரின் கனவு. ஆனால், அங்கு ஒரு வீட்டை வாங்க கோடீஸ்வரராக இருக்க வேண்டும். புர்ஜ் கலிஃபாவில் ஒரு ஃபிளாட்டின் விலை என்னவாக இருக்கும் என்று விரிவாகப் பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சமீபத்தில் வெளியான நெட்ஃப்ளிக்ஸ் ஷோ &quot;தேசி பிளிங்&quot; (Desi Bling), இந்த கட்டிடத்தின் மீதான ஆர்வத்தை மீண்டும் தூண்டியுள்ளது. இந்த ஷோவைப் பார்த்த பலருக்கும், புர்ஜ் கலிஃபாவில் ஒரு ஃபிளாட்டின் விலை என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. வாருங்கள், அதன் விவரங்களைப் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;Durian: இந்த பழத்தை பொது இடங்களில் எடுத்துட்டு போனா ரூ.13,000 அபராதம்.! என்ன காரணம் தெரியுமா?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;துபாய் சொத்து பட்டியல் மற்றும் சந்தை அறிக்கைகளின்படி, புர்ஜ் கலிஃபாவில் உள்ள ஃபிளாட்களின் விலை சாதாரண மக்களுக்கு எட்டாத ஒன்று. இங்கு ஒரு ஸ்டுடியோ அபார்ட்மென்ட்டின் ஆரம்ப விலையே 15 லட்சம் முதல் 25 லட்சம் AED வரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.3.4 கோடி முதல் ரூ.5.7 கோடி வரை) ஆகும். இதுதான் புர்ஜ் கலிஃபாவில் உள்ள மிகச் சிறிய வீடு ஆகும் (சுமார் 550 சதுர அடி).&lt;/p&gt;&lt;p&gt;80 வயது வரை இளமை.! 150 வயது வரை ஆயுட்காலம்.! ரகசிய இனக்குழு மக்களின் நீண்ட ஆயுளுக்கான காரணம் தெரியுமா? இந்த ஒரு விதை தான் காரணமாம்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கொஞ்சம் வசதியான, ஒரு படுக்கையறை கொண்ட சிறிய வீடு (சுமார் 900 - 1,100 சதுர அடி). ஒரு படுக்கையறை கொண்ட அபார்ட்மென்ட்டின் விலை 22 லட்சம் முதல் 40 லட்சம் AED வரை (சுமார் ரூ.5 கோடி முதல் ரூ.9 கோடி வரை) உள்ளது. அதுவே, இரண்டு படுக்கையறைகள் கொண்ட அபார்ட்மென்ட் என்றால், நீங்கள் 44 லட்சம் முதல் 70 லட்சம் AED வரை (சுமார் ரூ.10 கோடி முதல் ரூ.16 கோடி வரை) செலுத்த வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;தங்கம் விலை விண்ணை தொடும்.! பணம் செல்லாமல் போகும்.! தேனீக்கள் படையெடுக்கும்.! போர் வரும்.! 2026 குறித்து கணித்த தீர்க்கதரிசி.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்னும் அதிக ஆடம்பரம் வேண்டுவோருக்கு, மூன்று படுக்கையறை கொண்ட யூனிட்களின் விலை 80 லட்சம் AED முதல் 2 கோடி AED-க்கும் அதிகமாக உள்ளது. இங்குள்ள மிக விலையுயர்ந்த பென்ட்ஹவுஸ்கள் மற்றும் அர்மானி ரெசிடென்ஸ்களின் விலை 35 லட்சம் AED முதல் 100 லட்சம் AED வரை (அதாவது, இந்திய மதிப்பில் சுமார் ரூ.80 கோடியிலிருந்து ரூ.230 கோடிக்கும் மேல்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வீட்டின் விலையைத் தவிர, நீங்கள் பின்வரும் தொகைகளையும் செலுத்த வேண்டியிருக்கும்:&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;துபாய் நிலத்துறை கட்டணம் (DLD Fee): &lt;/strong&gt;வீட்டின் மதிப்பில் 4% அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டும்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;ரியல் எஸ்டேட் முகவர் கமிஷன்: &lt;/strong&gt;பொதுவாக வீட்டின் விலையில் 2%.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;ஆண்டு பராமரிப்புக் கட்டணம் (Service Charges):&lt;/strong&gt; புர்ஜ் கலிஃபாவில் சதுர அடிக்கு ஏற்ப ஆண்டுதோறும் ஒரு பெரிய தொகையை பராமரிப்புக்காகச் செலுத்த வேண்டும். இது ஒரு சிறிய வீட்டிற்கு வருடத்திற்குச் சுமார் ₹10 லட்சம் முதல் ₹15 லட்சம் வரை வரலாம்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;img&gt;&lt;p&gt;புர்ஜ் கலிஃபாவில் ஒரு வீடு வாங்குவது என்பது, உலக அளவில் ஒரு பெரிய அந்தஸ்தைப் பெறுவதற்குச் சமம். பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் போன்ற பிரபலங்கள் இங்கு சொந்தமாக ஃபிளாட் வைத்துள்ளனர். இத்தாலிய ஆடை வடிவமைப்பாளர் ஜார்ஜியோ அர்மானிக்கும் இங்கு ஒரு பிரத்யேக வீடு உள்ளது. சுருக்கமாகச் சொன்னால், புர்ஜ் கலிஃபாவில் வீடு வாங்குவது, வானத்தில் ஒரு வீட்டைக் கட்டுவது போலத்தான்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;குறிப்பு: வீட்டின் விலை அது அமைந்திருக்கும் தளம் (Floor) மற்றும் அங்கிருந்து தெரியும் காட்சி (Fountain view, Sea view) ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும்.&lt;/strong&gt;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/world/burj-khalifa-house-price-in-rupees-how-much-does-it-cost-to-buy-a-home-in-burj-khalifa-luxury-apartment-prices-explained-hcrtlg3"/>
        </item>
        <item>
            <title><![CDATA[PM Modi : இத்தாலி பிரதமருக்கு 'மெலடி' சாக்லேட் கொடுத்த மோடி... இணையத்தில் வைரலாகும் க்யூட் மொமண்ட்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/world/pm-modi-gifts-melody-toffees-to-italian-pm-meloni-in-viral-friendship-gesture-articleshow-iuq6zoy</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/world/pm-modi-gifts-melody-toffees-to-italian-pm-meloni-in-viral-friendship-gesture-articleshow-iuq6zoy</guid>
            <pubDate>Wed, 20 May 2026 13:29:07 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;PM Modi Gifts Melody Choclates to Meloni : இத்தாலிக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு 'மெலடி' சாக்லேட்களை பரிசளித்துள்ளார். இவர்களின் நட்பை இணையத்தில் 'மெலடி' என குறிப்பிடுவதை அடுத்து, இந்த சம்பவம் வைரலாகியுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ks23j526e3wqx52jq6bybxbc,imgname-pm-modi-meloni-melodi-chocolate-gift-rome-italy-colosseum-diplomacy-news-video2026-1779261051974.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;PM Modi Meet Meloni : &lt;/strong&gt;பிரதமர் நரேந்திர மோடி, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு 'மெலடி' சாக்லேட்களை பரிசாகக் கொடுத்து, இணையத்தில் டிரெண்டாகும் 'மெலடி மொமன்ட்'டை நிஜமாக்கியுள்ளார். இந்த பரிசுக்கு நன்றி தெரிவித்து, இத்தாலி பிரதமர் மெலோனி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். இணையத்தில் தங்களைப் பற்றி வரும் ஜாலியான டிரெண்டைப் பார்த்து இருவரும் சிரித்து மகிழ்ந்தனர்.&lt;/p&gt;&lt;p&gt;Thank you for the gift pic.twitter.com/7ePxbJwPbA&lt;/p&gt;&lt;p&gt;&mdash; Giorgia Meloni (@GiorgiaMeloni) May 20, 2026&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;பிரதமர் மோடி மற்றும் மெலோனியின் நல்ல நட்பை, இணையவாசிகள் 'மெலடி' என்ற வார்த்தையை வைத்து ஜாலியாக குறிப்பிட்டு வருகின்றனர். ஐந்து நாடுகள் பயணத்தின் கடைசி கட்டமாக, செவ்வாய்க்கிழமை ரோம் வந்தடைந்த பிரதமர் மோடி, மெலோனியை இரவு விருந்தில் சந்தித்தார்.அதன்பிறகு, இருவரும் ரோம் நகரின் புகழ்பெற்ற கொலோசியத்திற்குச் சென்றனர். அங்கு பலதரப்பட்ட விஷயங்கள் குறித்து ஆழமாகப் பேசிக்கொண்டிருந்தனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;img&gt;&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;மெலோனியை சந்தித்த பிரதமர் மோடி&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், மெலோனியுடனான சந்திப்பின் சில புகைப்படங்களைப் பகிர்ந்து, &quot;ரோமில் தரையிறங்கியதும், பிரதமர் மெலோனியை இரவு விருந்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து புகழ்பெற்ற கொலோசியத்திற்கும் சென்றோம். நாங்கள் பல விஷயங்கள் குறித்து எங்கள் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டோம். இன்று நடக்கும் பேச்சுவார்த்தைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். அதில், இந்தியா-இத்தாலி நட்புறவை எப்படி மேம்படுத்துவது என்பது குறித்து தொடர்ந்து பேசுவோம்,&quot; என்று குறிப்பிட்டிருந்தார். ஐந்து நாடுகள் சுற்றுப்பயணத்தின் இறுதி கட்டமாக ரோம் வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடியை ஜார்ஜியா மெலோனி வரவேற்றார்.&lt;/p&gt;&lt;p&gt;பிரதமர் மோடியுடன் இருக்கும் படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த மெலோனி, &quot;ரோமிற்கு வரவேற்கிறேன், என் நண்பரே!&quot; என்று எழுதியிருந்தார். இத்தாலியில் உள்ள கொலோசியத்தில் இருவரும் எடுத்துக்கொண்ட பழைய படத்தையும் மெலோனி பகிர்ந்திருந்தார். மேலும், தனது ரோம் பயணத்தின்போது, இத்தாலிய ஓவியர் கியாம்போலோ டோமசெட்டியை பிரதமர் மோடி வெகுவாகப் பாராட்டினார். இந்தியா மற்றும் இத்தாலியின் கலாச்சாரங்களை இணைக்கும் ஒரு கலைப் படைப்பை அவர் முன்னிலைப்படுத்தினார்.&lt;/p&gt;&lt;p&gt;டோமசெட்டி, காசி என்று அழைக்கப்படும் பழமையான மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த நகரமான வாரணாசியின் ஒரு அற்புதமான ஓவியத்தை பிரதமர் மோடிக்கு வழங்கினார். இந்திய பாரம்பரியத்திற்காக அந்த ஓவியர் தனது வாழ்நாளை அர்ப்பணித்திருப்பதை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, வேத கலாச்சாரம் மற்றும் வரலாற்று இதிகாசங்களின் சாரத்தை பல தசாப்தங்களாக அவர் படம் பிடித்து வருவதைப் பாராட்டினார்.&lt;/p&gt;&lt;p&gt;&quot;ரோமில் காசியின் ஒரு துளி! இத்தாலிய ஓவியரான கியாம்போலோ டோமசெட்டி, வாரணாசி குறித்த தனது படைப்பை வழங்கினார்,&quot; என்று மோடி எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார். &ldquo;இந்திய கலாச்சாரத்தின் மீதான அவரது ஆர்வம் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. 1980களில், வேத கலாச்சாரம் குறித்த புத்தகங்களுக்கு ஒரு இல்லஸ்ட்ரேட்டராகத் தொடங்கினார். 2008 முதல் 2013 வரை, மகாபாரதம் தொடர்பான 23 பெரிய ஓவியங்களை வரைந்துள்ளார்.&rdquo;&lt;/p&gt;&lt;p&gt;இந்தியா-இத்தாலி உறவுகள் வலுவான நிலையில் இருக்கும் சூழலில், பிரதமர் மோடியின் இந்த இத்தாலி பயணம் அமைந்துள்ளது. இரு தரப்பும் 2025-2029க்கான கூட்டு மூலோபாய செயல் திட்டத்தை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. இது பல துறைகளில் ஒத்துழைப்புக்கான ஒரு பரந்த கட்டமைப்பாகும். இதில், 2025-ல் 16.77 பில்லியன் டாலரை எட்டிய வர்த்தகம், 3.66 பில்லியன் டாலர் ஒட்டுமொத்த அந்நிய நேரடி முதலீடு (ஏப்ரல் 2000-செப்டம்பர் 2025), அத்துடன் பாதுகாப்பு, தூய்மையான எரிசக்தி, புத்தாக்கம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், மற்றும் மக்களிடையேயான பரிமாற்றங்கள் ஆகியவை அடங்கும்.&amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/world/pm-modi-gifts-melody-toffees-to-italian-pm-meloni-in-viral-friendship-gesture-articleshow-iuq6zoy"/>
        </item>
        <item>
            <title><![CDATA[US-Iran Talks: அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தை.! நிபந்தனைகளால் நீடிக்கும் சிக்கல்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/world/us-iran-islamabad-talks-face-hurdles-over-nuclear-deal-and-hormuz-strait-control-m5d3fm6</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/world/us-iran-islamabad-talks-face-hurdles-over-nuclear-deal-and-hormuz-strait-control-m5d3fm6</guid>
            <pubDate>Sat, 11 Apr 2026 12:53:23 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;இஸ்லாமாபாத்தில் நடக்கவுள்ள அமெரிக்கா-ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன்பே நம்பிக்கை சிக்கல் எழுந்துள்ளது. அணுசக்தி ஒப்பந்தம், ஹார்முஸ் ஜலசந்தி கட்டுப்பாடு போன்றவற்றால் பேச்சுவார்த்தை தடம் மாறுமா? அல்லது போர்நிறுத்தத்திற்கு வழி பிறக்குமா?&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01knxg55605h90whk4ec0yahnh,imgname-us-iran-islamabad-talks-ceasefire-nuclear-hormuz-strait-conflict-demands-differences-middle-east-crisis-6-1775885259968.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;இஸ்லாமாபாத்தில் நடக்கவுள்ள அமெரிக்கா-ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன்பே நம்பிக்கை சிக்கல் எழுந்துள்ளது. அணுசக்தி ஒப்பந்தம், ஹார்முஸ் ஜலசந்தி கட்டுப்பாடு போன்றவற்றால் பேச்சுவார்த்தை தடம் மாறுமா? அல்லது போர்நிறுத்தத்திற்கு வழி பிறக்குமா?&lt;/p&gt;&lt;img&gt;மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஒட்டுமொத்த உலகின் பார்வையும் இப்போது இஸ்லாமாபாத் மீதுதான். இங்கு அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே மிக முக்கியமான அமைதிப் பேச்சுவார்த்தை நடக்கவிருக்கிறது. ஆனால், இரு நாடுகளுக்கும் இடையே நம்பிக்கை முற்றிலும் சிதைந்துள்ளதால், இந்தப் பேச்சுவார்த்தை எளிதாக இருக்காது. போரை நிறுத்த வேண்டும் என்ற அழுத்தம் ஒருபுறம், அவநம்பிக்கை மறுபுறம். இரு நாடுகளும் பேச விரும்பினாலும், அவர்களின் நிபந்தனைகள் நேர்மாறாக இருப்பதால், இது 'செய் அல்லது செத்து மடி' என்ற நிலையை எட்டியுள்ளது.&lt;img&gt;இந்தப் பேச்சுவார்த்தை வெறும் இரு நாடுகளுக்கு இடையேயானது மட்டுமல்ல, உலகப் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புடனும் தொடர்புடையது. உலகின் 20% கச்சா எண்ணெய் வர்த்தகம் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே நடக்கிறது. இதில் ஏதேனும் தடை ஏற்பட்டால், கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, பல நாடுகள் பாதிக்கப்படும். அதே சமயம், ஈரானின் அணுசக்தி திட்டமும் ஒரு பெரிய பிரச்னையாக உள்ளது. ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கக் கூடாது என அமெரிக்கா விரும்புகிறது. ஆனால், ஈரான் இதைத் தனது பாதுகாப்பு மற்றும் இறையாண்மையின் ஒரு பகுதியாகப் பார்க்கிறது.&lt;img&gt;ஈரான் தரப்புக்கு முகமது பாகர் காலிபாஃப் தலைமை தாங்குகிறார். 'அமெரிக்கா பலமுறை வாக்குறுதிகளை மீறியதால், அவர்களை நம்புவது கடினம்' என்று அவர் தெளிவாகக் கூறுகிறார். ஈரானின் முக்கிய கோரிக்கைகள்: ஹார்முஸ் ஜலசந்தி தங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்; அமெரிக்கப் படைகள் இப்பகுதியில் இருந்து வெளியேற வேண்டும்; பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும்; முடக்கப்பட்ட ஈரான் சொத்துக்களைத் திரும்பத் தர வேண்டும். மேலும், லெபனானில் போர் நிறுத்தம் அமலாகி, சொத்துக்கள் திரும்ப ஒப்படைக்கப்படும் வரை முறையான பேச்சுவார்த்தை தொடங்காது என்றும் ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.&lt;img&gt;அமெரிக்கத் தரப்பில் ஜே.டி. வான்ஸ் இந்தப் பேச்சுவார்த்தைக்குத் தலைமை ஏற்கிறார். ஆனால், டொனால்ட் ட்ரம்ப் தனது நிலைப்பாட்டை ஏற்கெனவே தெளிவுபடுத்திவிட்டார். 'ஈரான் எந்தச் சூழலிலும் அணு ஆயுதம் தயாரிக்கக் கூடாது என்பதுதான் 99% பிரச்னை' என்கிறார் ட்ரம்ப். மேலும், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வர்த்தகம் தடையின்றி நடக்க வேண்டும் என்றும் அமெரிக்கா விரும்புகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில், சிறைபிடிக்கப்பட்ட சில அமெரிக்கக் குடிமக்களின் விடுதலை குறித்தும் அமெரிக்கா பேசலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.&lt;img&gt;இந்தப் பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் ஒரு முக்கிய சமரசராகத் தன்னைக் காட்டிக்கொள்கிறது. பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் இதை 'மேக் ஆர் பிரேக்' (make or break), அதாவது ஒரு निर्णायक தருணம் என்று வர்ணித்துள்ளார். இருப்பினும், பாகிஸ்தானின் பங்கு குறித்து சில கேள்விகளும் எழுகின்றன. சமீபத்திய சில கருத்துகளால் தூதரக ரீதியான சர்ச்சை ஏற்பட்டதால், அதன் நடுநிலைத்தன்மை பாதிக்கப்படலாம். ஆனாலும், இஸ்லாமாபாத்தில் நடக்கும் இந்தக் கூட்டம், இந்தச் சிக்கலைத் தீர்க்க ஒரு பெரிய வாய்ப்பாகக் கருதப்படுகிறது.&lt;img&gt;தற்போதைய சூழலில், இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தினாலும், தங்கள் நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கத் தயாராக இல்லை. ஒருபுறம் அவநம்பிக்கை, மறுபுறம் உலக நாடுகளின் அழுத்தம். இந்தப் பேச்சுவார்த்தை வெற்றி பெற்றால், மத்திய கிழக்கில் அமைதியை நோக்கிய ஒரு பெரிய படியாக இது அமையும். ஒருவேளை தோல்வியடைந்தால், பதற்றம் மேலும் அதிகரித்து, அதன் தாக்கம் உலகம் முழுவதும் எதிரொலிக்கும்.&lt;img&gt;இஸ்லாமாபாத்தில் என்ன முடிவு எடுக்கப்படும் என ஒட்டுமொத்த உலகமும் இப்போது காத்திருக்கிறது. இது வெறும் ஒரு தூதரக சந்திப்பு மட்டுமல்ல, எதிர்காலத்தின் திசையைத் தீர்மானிக்கக்கூடிய ஒரு திருப்புமுனை. அமெரிக்கா-ஈரான் இடையேயான இந்த மோதல், தற்போது அமைதிக்கு வழிவகுக்குமா அல்லது ஒரு பெரிய நெருக்கடியை உருவாக்குமா என்ற கட்டத்தை எட்டியுள்ளது.]]></content:encoded>
            <category>world</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/world/us-iran-islamabad-talks-face-hurdles-over-nuclear-deal-and-hormuz-strait-control-m5d3fm6"/>
        </item>
        <item>
            <title><![CDATA[7 வாரம் ஆச்சு.. காமெனி உடல் இன்னும் அடக்கம் செய்யப்படாதது ஏன்?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/world/khameneis-funeral-still-pending-inside-irans-unusual-crisis-nngg9yt</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/world/khameneis-funeral-still-pending-inside-irans-unusual-crisis-nngg9yt</guid>
            <pubDate>Mon, 20 Apr 2026 17:27:18 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமெனியின் உடல், அவர் இறந்து பல வாரங்கள் ஆகியும் இன்னும் அடக்கம் செய்யப்படவில்லை. இந்த அசாதாரண தாமதம், நாட்டின் தற்போதைய அரசியல் ஸ்திரமற்ற தன்மையைப் பிரதிபலிக்கிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kjvqz8wx29aqzad317gjj4kg,imgname-mojtaba-khamenei-new-iran-supreme-leader-ayatollah-ali-khamenei-death-us-israel-strike-assembly-of-experts-update-2-1772605121437.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமெனியின் உடல், அவர் இறந்து பல வாரங்கள் ஆகியும் இன்னும் அடக்கம் செய்யப்படவில்லை. இந்த அசாதாரண தாமதம், நாட்டின் தற்போதைய அரசியல் ஸ்திரமற்ற தன்மையைப் பிரதிபலிக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஈரானின் அரசியல் மற்றும் மத வரலாற்றில் அரிதாகக் காணப்படும் ஒரு சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. நாட்டின் முன்னாள் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமெனியின் உடல், அவர் உயிரிழந்து பல வாரங்கள் கடந்தும் இன்னும் அடக்கம் செய்யப்படாமல் உள்ளது. டெஹ்ரானில் நடந்த தாக்குதலில் உயிரிழந்த 86 வயதான இந்த தலைவரின் கல்லறை எங்கு அமைக்கப்பட வேண்டும் என்ற முடிவை அரசு இதுவரை எடுக்கவில்லை. இது வழக்கமான நடைமுறைகளை விட முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;புதிய நிர்வாகம், குறிப்பாக மொஜ்தபா காமெனி தலைமையிலான குழு, வெளிநாட்டு அழுத்தங்களையும் பாதுகாப்பு சிக்கல்களையும் சமாளிப்பில் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறது. இதனால் இறுதிச் சடங்கு போன்ற பெரிய நிகழ்வுகளை உடனடியாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், சில பாதுகாப்பு ஆய்வாளர்கள் இந்த தாமதத்திற்கு முக்கிய காரணம் பயம் என்றும் கருத்து தெரிவிக்கின்றனர். போர்நிலை ஓரளவு அமைதியாக இருந்தாலும், சூழ்நிலை முழுமையாக கட்டுப்பாட்டில் இல்லை என்பதே அவர்களின் மதிப்பீடு.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;1989ஆம் ஆண்டு அயத்துல்லா ருஹொல்லா கொமெய்னியின் இறுதிச் சடங்கில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டது நினைவில் உள்ளது. ஆனால் அதே அளவிலான பொதுமக்கள் திரளைக் கொண்ட நிகழ்வை தற்போது நடத்த முடியாமல் இருப்பது அரசின் தயக்கத்தைக் காட்டுகிறது. இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்கள், வான்வழி அச்சுறுத்தல்கள் மற்றும் நாட்டுக்குள் ஏற்படக்கூடிய போராட்டங்கள் ஆகியவை இந்த முடிவை மேலும் தாமதப்படுத்துகின்றன. இதனால் அரசு எந்த அபாயத்தையும் ஏற்காமல் எச்சரிக்கையுடன் செயல்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேலும், புதிய உச்ச தலைவராக கருதப்படும் மொஜ்தபா காமெனி பொதுவெளியில் அதிகமாக தோன்றாதது கூட பல கேள்விகளை எழுப்புகிறது. இந்த சூழலில், கல்லறை அமைக்கும் இடமாக வடகிழக்கு நகரமான மஷாத் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது காமெனியின் சொந்த ஊராகவும், நாட்டின் எல்லைப் பகுதியில் பாதுகாப்பான இடமாகவும் கருதப்படுகிறது. மொத்தத்தில், இந்த தாமதம் ஈரான் அரசின் தற்போதைய நிலையைப் பற்றி பல கேள்விகளை எழுப்பும் ஒரு முக்கிய சுட்டிக்காட்டி உள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/world/khameneis-funeral-still-pending-inside-irans-unusual-crisis-nngg9yt"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Free Train Travel for Senior Citizens: மூத்த குடிமக்களுக்கு 100%  இலவச ரயில் பயணம் எங்கு தெரியுமா..?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/world/free-train-travel-for-senior-citizens-25-percentage-metro-fare-discount-announced-in-major-welfare-initiative-uapoo2m</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/world/free-train-travel-for-senior-citizens-25-percentage-metro-fare-discount-announced-in-major-welfare-initiative-uapoo2m</guid>
            <pubDate>Sat, 13 Jun 2026 09:00:36 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Senior Citizen Railway Benefits | மூத்த குடிமக்களை கவுரவிக்கும் வகையில் வங்கதேச அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரயிலில் இலவச பயணமும், மெட்ரோவில் 25% கட்டண தள்ளுபடியும் வழங்கப்பட உள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktzg614p77synrsj86yh0x6t,imgname-senior-citizen-railway-benefits-1781321106581.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Senior Citizen Railway Benefits | மூத்த குடிமக்களை கவுரவிக்கும் வகையில் வங்கதேச அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரயிலில் இலவச பயணமும், மெட்ரோவில் 25% கட்டண தள்ளுபடியும் வழங்கப்பட உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மூத்த குடிமக்களின் நலனை மேம்படுத்தும் நோக்கில் வங்கதேச அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2026&ndash;27 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது, 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு அரசு இயக்கும் ரயில்களில் இலவச பயண வசதியும், மெட்ரோ ரயிலில் 25 சதவீத கட்டண சலுகையும் வழங்கப்படும் என நிதி அமைச்சர் அமீர் கோஸ்ரு மஹ்முத் சௌத்ரி அறிவித்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பட்ஜெட் உரையில் பேசிய நிதி அமைச்சர், &ldquo;நாட்டை கட்டியெழுப்புவதில் மூத்த குடிமக்களின் பங்கு அளப்பரியது. அவர்களின் நலனில் அரசு தொடர்ந்து அக்கறை காட்டும்&rdquo; என்று கூறினார். அதன்படி, 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் அரசு சொந்தமான ரயில்களில் முழுமையாக இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். மேலும், டாக்கா மெட்ரோ ரயில் சேவைகளில் 25% கட்டண தள்ளுபடியும் வழங்கப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த அறிவிப்புக்கு முன்னதாகவே, வங்கதேச ரயில்வே அமைச்சகம் 2026 மே 25 முதல் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரயில் பயண கட்டணத்தில் 25% தள்ளுபடி வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இந்த சலுகை பெற தேசிய அடையாள அட்டை (NID) மூலம் வயது சரிபார்க்கப்படும். ஆன்லைன் மற்றும் நிலைய டிக்கெட் கவுண்டர்கள் மூலமாகவும் இந்த சலுகையை பெற முடியும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;டாக்கா மெட்ரோ ரயில் சேவையிலும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 25% கட்டண சலுகை ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒற்றை பயண டிக்கெட்டுகளுக்கு இந்த தள்ளுபடி பொருந்தும். பயணிகள் தேசிய அடையாள அட்டையை காட்டி சலுகையை பெறலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வங்கதேச புள்ளிவிவரத் துறையின் தரவுகளின்படி, நாட்டில் 65 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2023ஆம் ஆண்டில் மூத்த குடிமக்கள் மக்கள் தொகையில் 6.14% ஆக உயர்ந்துள்ளனர். இதனால் அவர்களின் சமூக பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து அணுகலை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;h3&gt;&lt;strong&gt;சமூக நலத்திட்டங்களில் முக்கிய முன்னேற்றம்&lt;/strong&gt;&lt;/h3&gt;&lt;p&gt;பொதுப் போக்குவரத்து செலவை குறைப்பதன் மூலம் மூத்த குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், அவர்கள் சுயமாக பயணிக்க உதவவும் இந்த திட்டம் முக்கிய பங்காற்றும் என வங்கதேச அரசு நம்புகிறது. குறிப்பாக மருத்துவம், குடும்ப சந்திப்பு மற்றும் அன்றாட தேவைகளுக்கான பயணங்களில் இந்த சலுகை பெரும் உதவியாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/world/free-train-travel-for-senior-citizens-25-percentage-metro-fare-discount-announced-in-major-welfare-initiative-uapoo2m"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஈரான் மீதான தடைகள் நீக்கம்..! பவர்புல் ரீ என்ட்ரி கொடுத்த இந்தியா.. பெட்ரோல் விலை குறைய போகுது..?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/world/india-iran-crude-oil-imports-ioc-tanker-us-sanctions-lift-middle-east-strategic-energy-xb0a6r2</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/world/india-iran-crude-oil-imports-ioc-tanker-us-sanctions-lift-middle-east-strategic-energy-xb0a6r2</guid>
            <pubDate>Wed, 08 Apr 2026 15:16:07 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ஐஓசி நிறுவனத்தின் ஈரான் கச்சா எண்ணெய் இந்தியாவிற்கு வந்து சேர்கிறது. 7 ஆண்டுகளுக்கு பிறகு ஈரான் கச்சா எண்ணெய் இந்தியாவை வந்தடைகிறது. இது உலகளாவிய எண்ணெய் சந்தையில் ஒரு புதிய கொந்தளிப்பு உருவாகி வருகிறதா?&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01knp48zf57qbfzh8e79pdq70p,imgname-india-iran-crude-oil-imports-ioc-tanker-us-sanctions-lift-middle-east-strategic-energy-202-1775637921253.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஐஓசி நிறுவனத்தின் ஈரான் கச்சா எண்ணெய் இந்தியாவிற்கு வந்து சேர்கிறது. 7 ஆண்டுகளுக்கு பிறகு ஈரான் கச்சா எண்ணெய் இந்தியாவை வந்தடைகிறது. இது உலகளாவிய எண்ணெய் சந்தையில் ஒரு புதிய கொந்தளிப்பு உருவாகி வருகிறதா?&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் ஏற்றுமதியை இந்தியா பெறவுள்ளது. அமெரிக்கத் தடைகள் தற்காலிகமாகத் தளர்த்தப்பட்டிருப்பதாலும், எண்ணெய் சந்தையில் நிச்சயமற்ற நிலை அதிகரித்து வருவதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக சீனாவுக்குச் சென்றுகொண்டிருந்த ஒரு பிரம்மாண்டமான கப்பல், தற்போது இந்தியாவின் கிழக்குக் கடற்கரையை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. இந்த முன்னேற்றம், இந்திய எண்ணெய் கழகத்திற்கும் (IOC) மற்றும் நாட்டின் சுத்திகரிப்பு ஆலைகளுக்கும் புதிய வாய்ப்புகளைத் திறந்துவிட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;லண்டன் பங்குச் சந்தைக் குழுமம் (LSEG) மற்றும் Kpler கப்பல் போக்குவரத்துத் தரவுகளின்படி, குராஓ கொடியை ஏந்திய பிரம்மாண்டமான 'ஜயா' என்ற எண்ணெய்க் கப்பல் தற்போது இந்தியாவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. முன்னதாக, அது தென்கிழக்கு ஆசியக் கடல் பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்ததாகவும், அதன் இலக்கு சீனாவாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த மாற்றம், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஒரு புதிய நிலைத்தன்மையையும், ஈரானிலிருந்து இறக்குமதிகள் திறக்கப்படுவதையும் குறிக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;லண்டன் பங்குச் சந்தைக் குழுமம் (LSEG) மற்றும் Kpler ஆகியவற்றின் கப்பல் போக்குவரத்துத் தரவுகளின்படி, குராஓ கொடியிடப்பட்ட 'ஜயா' என்ற எண்ணெய்க் கப்பல் இந்தியாவின் கிழக்குக் கடற்கரைக்கு அப்பால் ஈரானிய எண்ணெயை இறக்கவுள்ளது. மேலும், 'ஜோர்டான்' என்ற மற்றொரு எண்ணெய்க் கப்பலும் தனது எண்ணெயை இந்தியாவிற்குக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவை, எண்ணெய் விநியோக ஓட்டம் மேம்பட்டு வருவதையும், உலகச் சந்தையில் இந்தியா ஒரு மூலோபாய சாதகத்தைப் பெற வாய்ப்புள்ளது என்பதையும் காட்டும் அறிகுறிகளாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியா கடைசியாக 2019 மே மாதம் ஈரானிய எண்ணெயை இறக்குமதி செய்தது. அப்போது, ​​அமெரிக்கத் தடைகள் காரணமாக சுத்திகரிப்பு ஆலைகள் கொள்முதல் செய்யத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தியாவின் முக்கிய எண்ணெய் விநியோக நாடான ஈரான், அக்காலத்தில் கவர்ச்சிகரமான விலைகளையும் சாதகமான விதிமுறைகளையும் வழங்கி வந்தது. அதன் பிறகு, இந்திய சுத்திகரிப்பு ஆலைகள் முதன்மையாக மேற்கு ஆசிய மற்றும் அமெரிக்க எண்ணெய் ஆதாரங்களையே சார்ந்திருந்தன. இருப்பினும், அமெரிக்காவின் தளர்வுகள் சந்தையில் புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு இந்த சரக்கு வந்தடைந்தாலும், இந்த மாத தொடக்கத்திலேயே கொள்முதல் செய்யப்பட்டுவிட்டது. உள்நாட்டு சுத்திகரிப்பு ஆலைகள் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயைக் கொள்முதல் செய்யத் தொடங்கியுள்ளதாக எண்ணெய் அமைச்சகமும் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், தற்போது பணம் செலுத்தும் முறையில் எந்த இடையூறும் இல்லை. இதன் பொருள், தடைகள் தற்காலிகமாகத் தளர்த்தப்பட்டதால், தடையற்ற வர்த்தகப் பரிமாற்றங்கள் சாத்தியமாகியுள்ளன என்பதாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சமீபத்திய ஆண்டுகளில், ஹோர்முஸ் ஜலசந்தியிலும் மேற்கு ஆசியாவிலும் ஏற்பட்ட மோதல்கள், எண்ணெய் விநியோகம் தொடர்பான பதட்டங்களை அதிகரித்துள்ளன. அமெரிக்கா, ஈரானிய எண்ணெய் மீதான தடைகளைத் தளர்த்தியுள்ளது. இது, இந்தியா தனது உத்தியை மாற்றி இறக்குமதியை அதிகரிக்க ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. ஐஓசி மற்றும் பிற சுத்திகரிப்பு நிறுவனங்கள் இப்போது, ​​ஈரானிய எண்ணெயை மாற்று மூலங்களுடன் சமநிலைப்படுத்துவதன் மூலம் விலைகளையும் விநியோகத்தையும் நிலைப்படுத்த முடியும்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;நிபுணர் கருத்து மற்றும் எதிர்கால வாய்ப்புகள்&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;ஈரானிய எண்ணெய் இந்தியாவிற்குத் திரும்புவது, எண்ணெய் விலைகளை நிலைப்படுத்தி, சுத்திகரிப்பு ஆலைகளுக்கு நிவாரணம் அளிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பணம் செலுத்துவதிலும் வர்த்தகப் பரிவர்த்தனைகளிலும் தற்போது எந்த இடையூறும் இல்லை என்றும் எண்ணெய் அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. இதன் பொருள், இந்தத் தற்காலிகத் தளர்வு வர்த்தகத்தைச் சீரமைக்க உதவியுள்ளது என்பதாகும். இந்த புதிய சரக்கு வரவின் மூலம், இந்தியா தனது விநியோகச் சங்கிலியை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உலகளாவிய எண்ணெய் சந்தையில் தனது முக்கிய இடத்தையும் தக்க வைத்துக் கொள்கிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>world</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/world/india-iran-crude-oil-imports-ioc-tanker-us-sanctions-lift-middle-east-strategic-energy-xb0a6r2"/>
        </item>
    </channel>
</rss>
