<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes"?>
<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Tue, 25 Aug 2026 16:21:45 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss/television" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[Bigg Boss 10 : ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது..! அதகளமாக ஆரம்பமாகும் பிக் பாஸ் சீசன் 10 - தேதி அறிவித்த விஜய் சேதுபதி..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/vijay-sethupathi-reveals-bigg-boss-tamil-season-10-launch-date-and-time-2q0dt0g</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/vijay-sethupathi-reveals-bigg-boss-tamil-season-10-launch-date-and-time-2q0dt0g</guid>
            <pubDate>Mon, 24 Aug 2026 21:17:28 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Bigg Boss Tamil Season 10 : பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி எப்போ தொடங்குகிறது என்பது குறித்த அறிவிப்பை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0t71z23xce4tkz0jp6vqj77,imgname-bigg-boss-tamil--1--1787586214979.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Bigg Boss Tamil Season 10 : பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி எப்போ தொடங்குகிறது என்பது குறித்த அறிவிப்பை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே பரபரப்புக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இருக்காது. இதன் காரணமாகவே இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டில் செம மவுசு இருந்து வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் வெற்றிகரமாக 9 சீசன்கள் நிறைவடைந்து தற்போது 10வது சீசனுக்குள் அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி தான், இந்த 10வது சீசனையும் தொகுத்து வழங்க உள்ளார். இதற்கான அறிவிப்பு கடந்த மாதமே வெளியானது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Bigg Boss Common Man : கரிஷ்மாவுக்கு ரெட் ஸ்டார்... கில்லி போல் சொல்லி அடித்த முனியம்மா; மெர்சலான ஆரி..!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆனால் இந்த முறை புதிய முயற்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பொதுமக்களில் இருந்து ஒருவரை தேர்வு செய்து அவர்களை போட்டியாளராக களமிறக்க திட்டமிட்டு, அதற்காக பிக் பாஸ் காமன்மேன் என்கிற ஆடிஷன் நிகழ்ச்சியை நடத்தி உள்ளனர். இதில் கலந்துகொள்ள ஏராளமானோர் விண்ணப்பித்த நிலையில், அவர்களில் இருந்து 50 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பல்வேறு விதமான டாஸ்குகளை கொடுத்து, அதில் இருந்து இறுதியாக தேர்வாகவும், ஒருவரையோ அல்லது இருவரையோ பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்ப திட்டமிட்டு உள்ளனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Bigg Boss Common Man : ஆட்டோ டிரைவருக்கு அடித்த ஜாக்பாட்... பிக் பாஸ் காமன்மேன் இன்றைய எபிசோடு ஹைலைட்ஸ்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சியை மாயா தொகுத்து வழங்குகிறார். ஆரி, ஓவ்யா, ராஜு ஆகியோர் நடுவர்களாக உள்ளனர். இந்நிகழ்ச்சி கடந்த வாரத்தில் இருந்து ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் லாஞ்ச் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வருகிற செப்டம்பர் மாதம் 06ந் தேதி மாலை 6 மணிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் 10-வது சீசன் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் இனி தினந்தோறும் ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Bigg Boss Common Man : நைட்டியால் வெடித்த சர்ச்சை... பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சியில் நடுவர்களை அலறவிட்ட பெண்...!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வழக்கமாக பிக் பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் மாதம் தான் தொடங்கப்படும். அக்டோபரில் தொடங்கினால் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை வரை நடைபெறும். ஆனால் இம்முறை முதன்முறையாக தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி செப்டம்பர் மாதம் தொடங்கப்பட இருக்கிறது. இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீசனில் பொதுமக்களில் இருந்து ஒருவரும் போட்டியாளராக கலந்துகொள்ள உள்ளதால் இந்த சீசன் செம விறுவிறுப்பாக இருக்க வாய்ப்பு உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Bigg Boss Common Man : காமன்மேன் நிகழ்ச்சியில் செம ட்விஸ்ட்... பிக் பாஸே பார்க்காத பெண்ணுக்கு அடித்தது ஜாக்பாட்..!&lt;/strong&gt;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/vijay-sethupathi-reveals-bigg-boss-tamil-season-10-launch-date-and-time-2q0dt0g"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Siragadikka Aasai : பந்தா பண்ணும் சத்யா; அதிருப்தியில் மீனா... ரொமான்ஸ் பண்ணிய முத்துவுக்கு செம டோஸ் கொடுத்த பாட்டி]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/sathya-sudden-arrival-shocks-meena-what-will-muthu-do-next-in-siragadikka-aasai-serial-august-14-today-episode-3t09973</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/sathya-sudden-arrival-shocks-meena-what-will-muthu-do-next-in-siragadikka-aasai-serial-august-14-today-episode-3t09973</guid>
            <pubDate>Fri, 14 Aug 2026 10:19:35 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial 14 August 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவும் மீனாவும் மாடியில் ஜோடியாக ரொமான்ஸ் பண்ணிய போது அவர்களை பாட்டி பார்த்துவிடுகிறார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kzz9fsczmk07qs6hdzw13n60,imgname-siragadikka-aasai---2026-08-14t101248.166-1786682795423.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial 14 August 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவும் மீனாவும் மாடியில் ஜோடியாக ரொமான்ஸ் பண்ணிய போது அவர்களை பாட்டி பார்த்துவிடுகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் &lsquo;சிறகடிக்க ஆசை&rsquo; சீரியலில் அடுத்தடுத்து சுவாரஸ்யமான திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. முத்து, மீனாவின் காதல் மற்றும் குடும்பத்தில் நிலவும் பிரச்சினைகள் ஒருபுறம் இருக்க, தற்போது பாட்டியின் நடவடிக்கைகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளன. முத்துவும் மீனாவும் கீழே பேசிக் கொண்டிருந்தபோது அவர்களைப் பார்த்த பாட்டி ஏற்கனவே கோபமடைந்திருந்தார். இந்நிலையில், இருவரும் மொட்டைமாடியில் தனியாக இருக்கும் போது மீண்டும் பாட்டியின் கண்ணில் சிக்குகின்றனர். அதுவும் இருவரும் அருகருகே நெருக்கமாக இருப்பதைப் பார்த்ததால் பாட்டியின் கோபம் மேலும் அதிகமாகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Siragadikka Aasai : சத்யாவுக்கு எம்.டி பதவி... கிரிஷின் கேள்விகளால் மயங்கி விழுந்த மனோஜ்..!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதனால் முத்துவின் காதைப் பிடித்து அவரை கீழே அழைத்து வரும் பாட்டி, வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்து வைத்து புகார் கூறுகிறார். முத்துவும் மீனாவும் மொட்டைமாடியில் என்ன செய்தார்கள் என்று கேட்டு, இனிமேல் இப்படியெல்லாம் அவர்களை விட்டுவிடக்கூடாது என்றும் கடுமையாக கூறுகிறார். மேலும், மீனாவின் தோழியை அழைத்து இந்த விஷயத்தை உடனடியாக பேசி முடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கிறார். அதே நேரத்தில், முத்து-மீனா மட்டுமின்றி ரவியும் சுருதியும் காதலிப்பதை தான் ஏற்கனவே கண்டுபிடித்துவிட்டதாக பாட்டி கூறுகிறார். அவர்களுடைய விஷயத்தையும் பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று குடும்பத்தினரிடம் தெரிவிக்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதற்கிடையில் மனோஜின் திருமணம் குறித்த பேச்சும் குடும்பத்தில் எழுகிறது. ஆனால் தனக்கு இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என்றும், வாழ்க்கையில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்றும் மனோஜ் கூறுகிறார். இதைக் கேட்ட பாட்டி, ஊரில் ஒரு பெண் இருப்பதாகவும், அந்தப் பெண்ணை மனோஜுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்றும் யோசனை கூறுகிறார். உடனே மனோஜ் அந்தப் பெண் எப்படி இருப்பார் என்று தனது அம்மா விஜயாவிடம் விசாரிக்கிறார். ஆனால் விஜயா, பாட்டி கூறும் பெண்ணுக்கு தற்போது திருமணமாகி குழந்தைகள் கூட வளர்ந்திருக்கலாம் என்று கூறி மனோஜை கிண்டலாக திட்டுகிறார். இதனால் அந்த திருமணப் பேச்சு அங்கேயே வேறு விதமாக திரும்புகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதற்கிடையே பாட்டியின் தற்போதைய மனநிலையைப் பார்த்த அண்ணாமலை ஒரு முக்கிய முடிவை எடுக்கிறார். முத்து-மீனாவையும், ரவியையும் சுருதியையும் அழைத்து, அவர்களது பெற்றோரிடம் பேசி மீண்டும் திருமண ஏற்பாடுகளை செய்யலாம் என்று கூறுகிறார்.&lt;/p&gt;&lt;p&gt;முத்து-மீனாவுக்கு மீண்டும் திருமணம் செய்து வைத்தால், பாட்டிக்கு அவர்களுடைய பழைய நினைவுகள் திரும்பி வர வாய்ப்பு இருக்கிறதா என்ற எண்ணத்திலும் குடும்பத்தினர் இருக்கின்றனர். இதனால் அடுத்தடுத்த எபிசோடுகளில் திருமணம் தொடர்பான பேச்சுகள் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதையடுத்து முத்துவும் மீனாவும், இந்த விஷயங்களை அவரது அம்மாவிடம் தெரிவிப்பதற்காக மீனாவின் வீட்டிற்குச் செல்கின்றனர். அங்கு அவர்கள் எதிர்பாராத விதமாக சத்யாவை சந்திக்கின்றனர். சத்யா காரில் வந்து, கையில் நகைகளுடன் அங்கு ஆடம்பரமாக இருப்பதைப் பார்த்து முத்துவும் மீனாவும் கவனிக்கின்றனர். தனக்கு வேலை அதிகமாக இருப்பதால் அடிக்கடி வந்து செல்ல முடியாது என்றும், அவ்வப்போது வந்து பார்த்துவிட்டு செல்வேன் என்றும் சத்யா கூறிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.&lt;/p&gt;&lt;p&gt;சத்யா மகிழ்ச்சியாக இருந்தால் போதும் என்று முத்து நினைத்தாலும், சத்யா ரேகாவின் வீட்டில் இருப்பது மீனாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சற்று சங்கடத்தை ஏற்படுத்துகிறது. சத்யாவின் வருகை மீனாவின் குடும்பத்தில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது? பாட்டியின் முடிவால் முத்து-மீனாவுக்கும், ரவி-சுருதிக்கும் உண்மையிலேயே திருமணம் நடக்குமா? என்பதை அடுத்தடுத்த எபிசோடுகளில் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/sathya-sudden-arrival-shocks-meena-what-will-muthu-do-next-in-siragadikka-aasai-serial-august-14-today-episode-3t09973"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Bigg Boss Common Man : நைட்டியால் வெடித்த சர்ச்சை... பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சியில் நடுவர்களை அலறவிட்ட பெண்...!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/priyavarshini-nightdress-controversy-creates-a-stir-at-bigg-boss-common-man-today-episode-42cu7c0</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/priyavarshini-nightdress-controversy-creates-a-stir-at-bigg-boss-common-man-today-episode-42cu7c0</guid>
            <pubDate>Thu, 20 Aug 2026 07:53:06 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Bigg Boss Common Man Today Episode : பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில் பிரியவர்ஷினி என்பவர் நைட்டி அணிந்து வந்து கலந்துகொண்டது கடும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0efg88q10ktyx63fb4g7eqb,imgname-bigg-boss-common-man--7--1787192418582.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Bigg Boss Common Man Today Episode : பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில் பிரியவர்ஷினி என்பவர் நைட்டி அணிந்து வந்து கலந்துகொண்டது கடும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில், பிரியவர்ஷினியின் செயல்பாடுகள் மற்றும் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, நைட்டி அணிந்து அவர் ஆடிஷனுக்கு வந்தது தொடங்கி, மற்ற போட்டியாளர்கள் மற்றும் நடுவர்களுடன் ஏற்பட்ட கருத்து மோதல் வரை பல சம்பவங்கள் கவனம் பெற்றுள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;ஆடிஷன் மேடைக்கு பிரியவர்ஷினி நைட்டி அணிந்து வந்தபோது, அவரது உடை குறித்து தொகுப்பாளர் ராஜு கேள்வி எழுப்புகிறார். அதற்கு பதிலளித்த பிரியவர்ஷினி, தான் போலியாக நடிக்க விரும்பவில்லை என்றும், இயல்பாகவே எப்படி இருக்கிறேனோ அப்படியே தன்னை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த உடையில் வந்ததாகவும் கூறுகிறார்.&lt;/p&gt;&lt;p&gt;இதையடுத்து, மாயா உள்ளிட்டோர் நைட்டி குறித்து கேள்வி எழுப்புகின்றனர். ஆனால், உடை என்பது தனது தனிப்பட்ட விருப்பம் என்றும், தன்னைப் பிடித்தவர்கள் பாராட்டலாம், பிடிக்காதவர்கள் விமர்சிக்கலாம் என்றும் பிரியவர்ஷினி தன்னம்பிக்கையுடன் பதிலளிக்கிறார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Bigg Boss Common Man : காமன்மேன் நிகழ்ச்சியில் செம ட்விஸ்ட்... பிக் பாஸே பார்க்காத பெண்ணுக்கு அடித்தது ஜாக்பாட்..!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நைட்டியை மாற்றிவிட்டு வருமாறு கூறப்பட்டபோதும், அதற்கு பிரியவர்ஷினி மறுப்பு தெரிவிக்கிறார். தன்னைத் தேர்வு செய்ய வேண்டுமா, வேண்டாமா என்பதை நடுவர்களே முடிவு செய்யலாம் என்றும், ஆனால் உடையை மாற்றுவதற்காக தனது நிலைப்பாட்டை மாற்றப் போவதில்லை என்றும் அவர் கூறுகிறார்.&lt;/p&gt;&lt;p&gt;இதற்கிடையே, கமலி என்ற மற்றொரு போட்டியாளர் சில முக்கியமான விஷயங்களை வெளிப்படுத்தியதால் சூழல் மேலும் பரபரப்பானது. நைட்டி அணிவது தொடர்பாக பிரியவர்ஷினி தன்னிடம் வேறு விதமாக பேசியதாகவும், தன்னம்பிக்கை குறைவாக இருப்பதாக அவர் கூறியிருந்ததாகவும் கமலி தெரிவித்ததாக நிகழ்ச்சியில் காட்டப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிரியவர்ஷினியின் செயல்பாடு குறித்து மாயா, அவர் கவனத்தை ஈர்ப்பதற்காகவே இவ்வாறு செய்கிறாரா என்ற கேள்வியை முன்வைக்கிறார். மேலும், இதுபோன்ற அணுகுமுறை வேறு மொழி நிகழ்ச்சியில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டதாகவும், அதையே பின்பற்றுவது போல இருப்பதாகவும் அவர் விமர்சிக்கிறார்.&lt;/p&gt;&lt;p&gt;இதனால் இரு தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர் போட்டியாளர்களுக்கு டாஸ்க் வழங்கப்பட்டபோதும், பிரியவர்ஷினியின் அணுகுமுறை குறித்து மீண்டும் விவாதம் எழுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தொடர்ந்து நடந்த விவாதத்தில், தன்னை மதிக்காதவர்களுக்கு ஏன் டாஸ்க் வழங்க வேண்டும் என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. இதனால் நடுவர்கள் மற்றும் போட்டியாளர்களுக்கு இடையேயான சூழல் மேலும் சூடுபிடித்தது.&lt;/p&gt;&lt;p&gt;ஒரு கட்டத்தில், தன்னைப் பற்றி தொடர்ந்து கருத்து தெரிவிப்பவர்களிடம் பிரியவர்ஷினியும் நேரடியாக கேள்வி எழுப்புகிறார். அவர்களின் கருத்துகளை ஏற்றுக்கொண்டு அமைதியாக இருக்கப் போவதில்லை என்ற வகையில் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆடிஷனின் மற்றொரு பகுதியில், தனது தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தித்த சில கடினமான சூழ்நிலைகள் குறித்தும் பிரியவர்ஷினி பகிர்ந்துகொள்கிறார். குடும்ப சூழல், சமூக வலைதளத்தில் கிடைத்த புதிய கவனம் மற்றும் பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தபோதான தனது மனநிலை உள்ளிட்ட விஷயங்களை அவர் பேசியதாக நிகழ்ச்சியில் காட்டப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;தனது வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு முக்கியமான இழப்பு குறித்தும் அவர் உருக்கமாக பேசுகிறார். அதனைத் தொடர்ந்து, பிக் பாஸ் நிகழ்ச்சி தனக்கு ஒரு புதிய வாய்ப்பாக இருக்கலாம் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்துகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆடிஷன் முடிவில் மாயா, பிரியவர்ஷினியின் மனநிலை மற்றும் அவர் சந்தித்துள்ள தனிப்பட்ட அனுபவங்களை கருத்தில் கொண்டு சில ஆலோசனைகளை வழங்குகிறார். கடினமான அனுபவங்களுக்குப் பிறகு உடனடியாக பிக் பாஸ் போன்ற அழுத்தம் நிறைந்த சூழலுக்குள் செல்வது அவருக்கு மேலும் உணர்ச்சி ரீதியான அழுத்தத்தை ஏற்படுத்தலாம் என்ற கருத்தையும் முன்வைக்கிறார்.&lt;/p&gt;&lt;p&gt;இதற்கு பிரியவர்ஷினி, தன்னால் வலிமையாக இருக்க முடியும் என்றும், இந்த வாய்ப்பை எதிர்கொள்ளும் திறன் தனக்கு இருப்பதாகவும் பதிலளிக்கிறார். இறுதியில், அவரை தேர்வு செய்யவில்லை என்ற முடிவு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவர் நடுவர்களின் அணுகுமுறை குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்.&lt;/p&gt;&lt;p&gt;நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பின்னரும், தனது மனநலம் குறித்து நடுவர்கள் பேசிய விதம் தனக்கு பிடிக்கவில்லை என்றும், தன்னைப் பற்றி முன்கூட்டியே ஒரு முடிவுடன் அவர்கள் பேசியதாகவும் பிரியவர்ஷினி குற்றம் சாட்டுகிறார். பிரியவர்ஷினியின் இந்த ஆடிஷன் பகுதி சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/priyavarshini-nightdress-controversy-creates-a-stir-at-bigg-boss-common-man-today-episode-42cu7c0"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Bigg Boss Common Man : ச்சீ... இதெல்லாம் ஒரு டாஸ்கா? முதல் எபிசோடிலேயே சர்ச்சையில் சிக்கிய பிக் பாஸ் காமன்மேன்..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/bigg-boss-common-man-task-faces-heavy-criticism-on-social-media-5g8xwtv</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/bigg-boss-common-man-task-faces-heavy-criticism-on-social-media-5g8xwtv</guid>
            <pubDate>Mon, 17 Aug 2026 11:01:48 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Bigg Boss Common Man : பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சிக்கு முன்னர் நடத்தப்பட்டு வரும் காமன்மேன் நிகழ்ச்சி நேற்று தொடங்கப்பட்ட நிலையில், அதன் முதல் டாஸ்கே சர்ச்சையில் சிக்கி உள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m07202263cw8agz21pdz11zz,imgname-bigg-boss-tamil-1786943375430.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Bigg Boss Common Man : பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சிக்கு முன்னர் நடத்தப்பட்டு வரும் காமன்மேன் நிகழ்ச்சி நேற்று தொடங்கப்பட்ட நிலையில், அதன் முதல் டாஸ்கே சர்ச்சையில் சிக்கி உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விஜய் டிவியில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்து வருகிறது பிக் பாஸ். இதுவரை 9 சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது 10-வது சீசனை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த முறை நிகழ்ச்சியில் புதுமையான முயற்சியாக, பொதுமக்களுக்கும் போட்டியாளராகும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;பிக் பாஸ் சீசன் 10-ல் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்களைப் பற்றிய இரண்டு நிமிட வீடியோவை அனுப்பி ஆடிஷனில் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் தேர்வாகும் நபர்களில் தகுதியானவர்களை இறுதியாக தேர்வு செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.&lt;/p&gt;&lt;p&gt;இந்த தேர்வு நிகழ்ச்சியில் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்களான ஓவியா, ராஜு மற்றும் ஆரி ஆகியோர் நடுவர்களாக இடம்பெற்றுள்ளனர். மாயா கிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Bigg Boss சீசன் 10-ல் காமன்மேனுக்கு விஜய் சேதுபதி கொடுத்த கோல்டன் சான்ஸ் - இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;காமன்மேன் தேர்வு நிகழ்ச்சி தற்போது ஒளிபரப்பாகி வரும் நிலையில், அதில் இடம்பெற்றுள்ள ஒரு டாஸ்க் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. ஒரு அரங்கில் ஏராளமான போட்டியாளர்கள் நிற்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு முன்பாக பல பிளாஸ்டிக் சேர்கள் தலைகீழாக வைக்கப்பட்டிருக்கின்றன. பஸர் ஒலித்ததும், போட்டியாளர்கள் வேகமாக சேர்களை சரிசெய்து அதில் அமர வேண்டும் என்பதே டாஸ்க்.&lt;/p&gt;&lt;p&gt;பஸர் ஒலித்ததும் போட்டியாளர்கள் சேர்களை நோக்கி ஓடுகின்றனர். ஒரே சேரைப் பிடிக்க பலரும் போட்டி போடுவதால் அங்கு கடுமையான தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. சிலர் ஒருவரையொருவர் தள்ளியும், முட்டியும் கீழே விழுந்தும் சேரை கைப்பற்ற முயற்சிக்கின்றனர். இந்தக் காட்சிகள்தான் தற்போது இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;Ena Elavu ithu&zwj;♂️#BiggBossTamil pic.twitter.com/4IkdXtBPtf&lt;/p&gt;&lt;p&gt;&mdash; Christopher Kanagaraj (@Chrissuccess) August 16, 2026&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த வீடியோவை பார்த்த பல நெட்டிசன்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்காக பொதுமக்களை இப்படியான உடல் ரீதியான போட்டியில் ஈடுபடுத்துவது தேவையா என்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.&lt;/p&gt;&lt;p&gt;பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லும் போட்டியாளர்களுக்கு கடினமான டாஸ்க்குகள் வழங்கப்படுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால், இன்னும் போட்டியாளர்களாகத் தேர்வு செய்யப்படாத சாதாரண மக்களையே ஒரே இடத்தில் திரட்டி இதுபோன்ற போட்டியில் ஈடுபடுத்துவது சரியா என்ற கேள்வியும் சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தப் வீடியோ வெளியானதிலிருந்து, &ldquo;பொழுதுபோக்குக்காக மனிதர்களை இப்படி நடத்தலாமா?&rdquo;, &ldquo;தேர்வு முறையே இவ்வளவு கடுமையாக இருக்க வேண்டுமா?&rdquo; என பலரும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;இந்நிலையில், இந்த சர்ச்சைக்கு பிக் பாஸ் குழுவினர் தரப்பில் இருந்து ஏதேனும் விளக்கம் வெளியாகுமா என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காமன்மேன் போட்டியாளர்களுடன் தொடங்கியுள்ள இந்த புதிய முயற்சி, பிக் பாஸ் சீசன் 10 தொடங்குவதற்கு முன்பே சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/bigg-boss-common-man-task-faces-heavy-criticism-on-social-media-5g8xwtv"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Sun TV : படம் முதல் சீரியல் வரை... இனி எல்லாமே ஷார்ட்ஸ் தான்! ஜென் ஸி-யை கவர சன் டிவி-யின் புதிய அதிரடி]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/sun-tv-network-launches-sun-nxt-shorts-for-bite-sized-entertainment-6ggk42s</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/sun-tv-network-launches-sun-nxt-shorts-for-bite-sized-entertainment-6ggk42s</guid>
            <pubDate>Sat, 22 Aug 2026 09:00:10 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Sun TV Launches Sun NXT Shorts : சன் நெக்ஸ்ட் செயலியிலேயே இது ஒரு புதிய அம்சமாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம், திரைப்படங்கள் மற்றும் சீரியல்களை சின்ன சின்ன எபிசோட்களாகப் பார்க்க முடியும்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k76ddhzsmannz99r0327dhq8,imgname-new-project---2025-10-10t115050.927-1760078252025.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Sun TV Launches Sun NXT Shorts : சன் நெக்ஸ்ட் செயலியிலேயே இது ஒரு புதிய அம்சமாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம், திரைப்படங்கள் மற்றும் சீரியல்களை சின்ன சின்ன எபிசோட்களாகப் பார்க்க முடியும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தென்னிந்தியாவின் மிகப்பெரிய மீடியா நிறுவனமான சன் டிவி நெட்வொர்க், 'சன் நெக்ஸ்ட் ஷார்ட்ஸ்' என்ற புதிய மைக்ரோ-டிராமா சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவை, ஏற்கனவே உள்ள சன் நெக்ஸ்ட் செயலிக்குள்ளேயே ஒரு புதிய அம்சமாகச் செயல்படும். இதன் மூலம், தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் பார்வையாளர்களின் மாறிவரும் ரசனைக்கு ஏற்ப, சின்ன சின்ன சுவாரஸ்யமான கதைகளை வழங்க முடியும் என சன் டிவி நெட்வொர்க் தெரிவித்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;Serial : சன் டிவி எடுத்த அதிரடி முடிவு... தொடங்கிய வேகத்தில் இழுத்து மூடப்படும் புத்தம் புது சீரியல்..!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உலகளவில் டிஜிட்டல் பார்வையாளர்கள் மத்தியில் பிரபலமாகி வரும் மைக்ரோ-என்டர்டெயின்மென்ட் துறையில், சன் நெக்ஸ்ட் இதன் மூலம் நுழைகிறது. குறுகிய நேரத்தில் பார்க்கக்கூடிய, விறுவிறுப்பான கதைகளை மையமாக வைத்து 'சன் நெக்ஸ்ட் ஷார்ட்ஸ்' உருவாக்கப்பட்டுள்ளது. சன் டிவி நெட்வொர்க்கின் பிராந்திய கதை சொல்லும் அனுபவத்தையும், இந்த புதிய ஷார்ட்ஸ் வடிவத்தையும் இது இணைக்கிறது. தென்னிந்திய மக்களின் கலாச்சார அடையாளத்தைப் பிரதிபலிக்கும் கதைகளை வழங்குவதில் இந்த தளம் உறுதியாக உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த தளத்தில் பிரத்யேக ஒரிஜினல் தொடர்கள், சர்வதேச மொழிகளிலிருந்து டப் செய்யப்பட்ட ஷார்ட்ஸ், பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் மற்றும் சன் டிவி-யின் பிரபலமான சீரியல்கள் எனப் பலவும் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில், வேகமான எபிசோட்களாக ரீ-எடிட் செய்யப்பட்டு, புதிய வடிவில் வழங்கப்படுகின்றன. இதன் மூலம், தங்களுக்குப் பிடித்த திரைப்படங்களையும், டிவி நிகழ்ச்சிகளையும் முற்றிலும் புதிய, வேகமான டிஜிட்டல் வடிவத்தில் பார்வையாளர்கள் கண்டு ரசிக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;குறிப்பாக, ரஜினிகாந்த் நடித்த 'எந்திரன்', சூர்யாவின் 'அயன்', தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' போன்ற பிளாக்பஸ்டர் தமிழ் படங்களும், 'எதிர்நீச்சல்', 'கயல்', 'சிங்கப்பெண்ணே' போன்ற டிவி சீரியல்களும் இதில் அடங்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த புதிய முயற்சி குறித்து சன் டிவி நெட்வொர்க்கின் நிர்வாக இயக்குநர் காவ்யா மாறன் கூறுகையில், &quot;தென்னிந்திய மீடியா சந்தை ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கிறது. மக்கள் இப்போது அதிக கன்டென்ட் பார்ப்பது மட்டுமல்ல, அதை வித்தியாசமான முறைகளில், பல ஸ்கிரீன்களில், குறுகிய நேரத்தில் பார்க்கிறார்கள். நீண்ட நேரம் காத்திருக்க அவர்களுக்குப் பொறுமை இல்லை. இந்த மாற்றத்தை மனதில் வைத்து எடுக்கப்பட்ட ஒரு முக்கிய முடிவுதான் 'சன் நெக்ஸ்ட் ஷார்ட்ஸ்'. எங்களிடம் 65,000 மணி நேர கன்டென்ட், பல தசாப்த கால கதை சொல்லும் அனுபவம், மற்றும் வேறு யாராலும் ஒரே இரவில் உருவாக்க முடியாத ஒரு விநியோக நெட்வொர்க் உள்ளது. இந்த சொத்துக்களை அடுத்த தலைமுறைக்கு ஏற்றவாறு மாற்றி அமைப்பதே எங்கள் நோக்கம். வேறு யாராவது இந்தத் துறையை வரையறுப்பதற்கு முன், நாங்களே அதைச் செய்ய விரும்புகிறோம். அதுதான் நாங்கள் உருவாக்கும் பிசினஸ்,&quot; என்றார்.&lt;/p&gt;&lt;p&gt;சன் நெக்ஸ்ட் செயலியை ஏற்கனவே பயன்படுத்தும் குடும்பப் பார்வையாளர்களை, இந்த வேகமான கதை சொல்லும் முறை மூலம் மீண்டும் ஈர்க்க 'சன் நெக்ஸ்ட் ஷார்ட்ஸ்' உதவுகிறது. அதே சமயம், இந்த ஷார்ட்ஸ் வடிவம் இளம் டிஜிட்டல் தலைமுறையினரிடையே மிகவும் பிரபலமாக இருப்பதால், அவர்களைக் கவரும் வகையில் புதிய கன்டென்ட்டும் உருவாக்கப்படும். இதன் மூலம், இந்தச் சேவை பல தலைமுறை பார்வையாளர்களையும் எளிதாக இணைக்கிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/sun-tv-network-launches-sun-nxt-shorts-for-bite-sized-entertainment-6ggk42s"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Siragadikka Aasai : மனோஜுக்கு அடித்த ஜாக்பாட்... விஜயாவுக்கு வந்த சந்தேகம்! அடுத்து என்ன நடக்கப்போகுது?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/vijaya-orders-meena-and-shruthi-to-spy-on-manoj-in-siragadikka-aasai-serial-today-1087th-episode-ayndr0g</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/vijaya-orders-meena-and-shruthi-to-spy-on-manoj-in-siragadikka-aasai-serial-today-1087th-episode-ayndr0g</guid>
            <pubDate>Sat, 15 Aug 2026 06:51:35 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜின் செயல்பாடுகள் மர்மமாக இருப்பதால் அதை கண்டுபிடிக்க விஜயா ஸ்மார்ட் ஆக பிளான் போட்டு இருக்கிறார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m01fz75xh83v7cpj6jf8m644,imgname-siragadikka-aasai--3--1786756701373.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜின் செயல்பாடுகள் மர்மமாக இருப்பதால் அதை கண்டுபிடிக்க விஜயா ஸ்மார்ட் ஆக பிளான் போட்டு இருக்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் &lt;strong&gt;சிறகடிக்க ஆசை&lt;/strong&gt; சீரியலின் இன்றைய எபிசோடு எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. மனோஜை சுற்றி அடுத்தடுத்து நடக்கவிருக்கும் சம்பவங்கள் கதையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கனகாவின் அம்மா மனோஜை நேரில் அழைத்து ஒரு முக்கியமான விஷயத்தை தெரிவிக்கிறார். தனது பெயரில் இருக்கும் சில சொத்துகளை மனோஜின் பெயருக்கு மாற்றி எழுத முடிவு செய்திருப்பதாக அவர் கூறுகிறார். குறிப்பாக ஊட்டியில் இருக்கும் வீடு மற்றும் நிலம் உள்ளிட்ட சொத்துகளை மனோஜுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்யப் போவதாகவும், அதற்காக ஆடிட்டரிடம் பேசிவிட்டதாகவும் தெரிவிக்கிறார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Siragadikka Aasai : சத்யாவுக்கு எம்.டி பதவி... கிரிஷின் கேள்விகளால் மயங்கி விழுந்த மனோஜ்..!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சொத்துகள் தனது பெயருக்கு வரப்போகிறது என்ற தகவலை கேட்டதும் மனோஜ் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார். சொத்து கிடைக்கும் என்ற ஆசையில் அவர் உற்சாகமடையும் நிலையில், மறுபுறம் வீட்டில் மனோஜ் மீது சந்தேகம் அதிகரிக்கிறது. மனோஜின் நடவடிக்கைகளில் ஏதோ மர்மம் இருப்பதாக விஜயாவுக்கு சந்தேகம் ஏற்படுகிறது. இதனால் உண்மையை கண்டுபிடிக்க மீனா மற்றும் சுருதியிடம் மனோஜை கண்காணிக்குமாறு விஜயா கூறுகிறார். இதையடுத்து இருவரும் மனோஜின் நடவடிக்கைகளை கவனிக்கத் தொடங்குகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Siragadikka Aasai : முத்து, மீனாவிடம் இருந்து ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்த மனோஜ்... கிரிஷ் உடன் வந்து பிளாக்மெயில் பண்ணும் ரோகிணி&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த விசாரணையின் போது மனோஜுக்கும் கனகாவுக்கும் இடையே இருக்கும் தொடர்பு குறித்த பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிச்சத்திற்கு வர வாய்ப்புள்ளது. குறிப்பாக, மனோஜுக்கு ஏற்கனவே இரண்டாவது திருமணம் நடந்திருக்கிறது என்ற விஷயம் தெரியவரும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் மனோஜின் சொத்து ஆசை ஒருபுறம், விஜயாவின் சந்தேகம் மறுபுறம் என கதை விறுவிறுப்பான கட்டத்தை எட்டுகிறது. ரோகிணி தொடர்பான உண்மை வெளியில் வந்தால் குடும்பத்தில் அடுத்ததாக என்ன மாதிரியான பிரச்சனை வெடிக்கும் என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Siragadikka Aasai : மனோஜின் இரண்டாவது திருமணம் அம்பலமாகுமா? முத்து-மீனா பார்த்த காட்சியால் எதிர்பார்ப்பு&lt;/strong&gt;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/vijaya-orders-meena-and-shruthi-to-spy-on-manoj-in-siragadikka-aasai-serial-today-1087th-episode-ayndr0g"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Karthigai Deepam : ரேவதியின் அதிரடி முடிவால் ஆடிப்போன குடும்பம்... கார்த்திக்காக காத்திருக்கும் புதிய சிக்கல்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/revathi-takes-a-bold-stand-against-her-mother-karthigai-deepam-today-episode-gets-a-major-twist-gf3071t</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/revathi-takes-a-bold-stand-against-her-mother-karthigai-deepam-today-episode-gets-a-major-twist-gf3071t</guid>
            <pubDate>Mon, 17 Aug 2026 08:11:27 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Karthigai Deepam Serial Today Episode : கார்த்திகை தீபம் சீரியலில் ரேவதியின் முடிவால் ஒட்டுமொத்த குடும்பமே ஆடிப்போய் உள்ளது. அதன்பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kzzjprqs12vwzjrr0t2xc4rr,imgname-karthigai-deepam--27--1786692461305.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Karthigai Deepam Serial Today Episode : கார்த்திகை தீபம் சீரியலில் ரேவதியின் முடிவால் ஒட்டுமொத்த குடும்பமே ஆடிப்போய் உள்ளது. அதன்பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். குடும்ப உறவுகள், மோதல்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இந்தத் தொடரில், ரேவதி எடுத்திருக்கும் அதிரடி முடிவு தற்போது கதையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவுள்ளது. நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரியின் நடவடிக்கைகளுக்கு எதிராக ரேவதி துணிச்சலுடன் கேள்வி எழுப்பியிருந்தார். இதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடில் ரேவதி எடுக்கப்போகும் முடிவு குடும்பத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.&lt;/p&gt;&lt;p&gt;சாமுண்டீஸ்வரியிடம் நேரடியாக தனது மனதில் இருப்பதைப் பேசும் ரேவதி, தொடர்ந்து இதே சூழ்நிலையில் வீட்டில் தங்க முடியாது என்று திட்டவட்டமாக கூறுகிறார். தனது வாழ்க்கையைப் பற்றி தானே முடிவு செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் அவர் நினைக்கிறார். இதனால் வீட்டில் இருந்த அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்படுகிறது. ரேவதி உண்மையிலேயே வீட்டை விட்டு செல்லப் போகிறாரா என்ற கேள்வி குடும்பத்தினரிடையே எழுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Karthigai Deepam : வீட்டை அடித்து நொறுக்கிய சாமுண்டீஸ்வரி... பரமேஸ்வரி பாட்டி வீட்டில் கார்த்திக் - ரேவதிக்கு நடந்தது என்ன?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒருபுறம் ரேவதி தனது உடைமைகளை எடுத்துக்கொண்டு கிளம்புவதற்குத் தயாராகிறார். அப்போது அவரை சந்திக்கும் ரோகிணி, ரேவதியின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் ஆதரவாக பேசுகிறார். உன் வாழ்க்கையில் என்ன நடக்க வேண்டும் என்பதை நீயே தீர்மானிக்க வேண்டும் என்றும், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எடுத்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் ரோகிணி ரேவதிக்கு தைரியம் கொடுக்கிறார். ரோகிணியின் இந்த வார்த்தைகள் ரேவதிக்கு கூடுதல் நம்பிக்கையை அளிக்கின்றன.&lt;/p&gt;&lt;p&gt;ரேவதி தனது பொருட்களை எடுத்துக்கொண்டு வெளியேறுவதை பார்த்ததும் சாமுண்டீஸ்வரி அதிர்ச்சியடைகிறார். தான் நினைத்தது போல் ரேவதி தன்னுடைய பேச்சை கேட்கவில்லை என்பதை உணரும் அவர், கடைசி முயற்சியாக ரேவதியிடம் இந்த முடிவை நன்றாக யோசித்துதான் எடுத்தாயா என்று கேட்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆனால் ரேவதி தனது முடிவில் இருந்து பின்வாங்குவதாக இல்லை. தன்னுடைய வாழ்க்கையை இனி தானே பார்த்துக்கொள்வேன் என்று உறுதியுடன் பதில் அளிக்கிறார். சாமுண்டீஸ்வரியின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் ரேவதி வீட்டை விட்டு வெளியேறுகிறார். இந்தக் காட்சி குடும்பத்தினர் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்துகிறது. இதுவரை சாமுண்டீஸ்வரியின் முடிவுகளை ஏற்றுக்கொண்டு வந்த ரேவதி, முதல் முறையாக தனக்கான வாழ்க்கையைத் தேர்வு செய்து வீட்டை விட்டு வெளியேறியிருப்பது கதையில் முக்கியமான திருப்பமாக அமைந்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரேவதி வீட்டை விட்டு சென்றதால் சாமுண்டீஸ்வரி இனி என்ன செய்யப்போகிறார் என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. தனது முடிவுகளால் மகள் இப்படி ஒரு நிலைக்கு சென்றுவிட்டதை அவர் உணர்வாரா அல்லது கோபத்தில் மேலும் கடுமையான முடிவை எடுப்பாரா என்ற கேள்வியும் எழுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;அதேபோல், ரேவதிக்கு ரோகிணி தொடர்ந்து ஆதரவாக இருப்பாரா? ரேவதி தனியாக எடுத்திருக்கும் இந்த முடிவு அவரது வாழ்க்கையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்துமா? என்பதும் இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.&lt;/p&gt;&lt;p&gt;ரேவதியின் அதிரடி முடிவு, சாமுண்டீஸ்வரியின் அதிர்ச்சி மற்றும் ரோகிணியின் எதிர்பாராத ஆதரவு என பல திருப்பங்களுடன் நகரும் கார்த்திகை தீபம் தொடரின் இன்றைய எபிசோட் ரசிகர்களுக்கு விறுவிறுப்பான அனுபவமாக இருக்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/revathi-takes-a-bold-stand-against-her-mother-karthigai-deepam-today-episode-gets-a-major-twist-gf3071t"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Bigg Boss Common Man : பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சியில் முனியம்மாவுக்கு செக் வைத்த டீம்! ஷாப்பிங் டாஸ்க்கில் வெடித்த சர்ச்சை]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/bigg-boss-common-man-contestants-turns-against-muniyamma-what-really-happened-gnxilpo</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/bigg-boss-common-man-contestants-turns-against-muniyamma-what-really-happened-gnxilpo</guid>
            <pubDate>Tue, 25 Aug 2026 16:21:40 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Bigg Boss Common Man Task : பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ள முனியம்மா, ஷாப்பிங் டாஸ்கில் சக போட்டியாளர்களிடம் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளார். அதைப்பற்றி பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0w8me47h31x08q6krhcxsx3,imgname-bigg-boss-common-man--15--1787654977671.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Bigg Boss Common Man Task : பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ள முனியம்மா, ஷாப்பிங் டாஸ்கில் சக போட்டியாளர்களிடம் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளார். அதைப்பற்றி பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சியின் 10வது எபிசோடில் நடைபெற்ற ஷாப்பிங் டாஸ்க், முனியம்மாவுக்கு எதிர்பாராத சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக தன்னுடைய வெளிப்படையான பேச்சால் கவனம் ஈர்த்து வந்த முனியம்மா, இந்த முறை தனது சொந்த அணியினரிடமிருந்தே பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார். குறிப்பாக, தாங்கள் சொல்வதை கேட்காமல், மீண்டும் மீண்டும் வேறு விதமாக கூறுவதாக சில போட்டியாளர்கள் குற்றம்சாட்டியதால், அவர் ஒருகட்டத்தில் செய்வதறியாமல் தடுமாறிய காட்சிகளும் இடம்பெற்றன.&lt;/p&gt;&lt;p&gt;இந்த ஷாப்பிங் டாஸ்க்கில் ஒவ்வொரு அணியினரும் தாங்கள் வாங்கிய பொருட்களை அடிப்படையாக வைத்து ஒரு சுவாரஸ்யமான கதையை உருவாக்கி, அதை பிக் பாஸ் வீட்டில் நகைச்சுவையாகவும் பொழுதுபோக்காகவும் சொல்ல வேண்டும். அந்த வகையில் முனியம்மா இடம்பெற்ற அணியும் தங்களுக்கான கதையைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது. முனியம்மா மற்றும் திவ்யா இடம்பெற்ற அணியில் அடுத்ததாக யார் மேடைக்குச் செல்வது என்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது முனியம்மா மற்றும் டர்வின் ஆகியோர் தாங்களாகவே முன்வந்து கதையைச் சொல்ல ஒப்புக்கொண்டனர். ஆனால், அவர்கள் எந்த மாதிரியான கதையைத் தயாரித்திருக்கிறார்கள் என்பதை அணியினர் தெரிந்துகொள்ள விரும்பினர்.&lt;/p&gt;&lt;p&gt;இதனால் முனியம்மாவிடம் பலமுறை கதையின் விவரங்களை கேட்டுள்ளனர். ஆனால், தான் கதை சொல்லும் முறையை மற்றவர்கள் கவனிக்க வேண்டும் என்பதற்காக அதை முன்கூட்டியே கூறவில்லை என்று முனியம்மா விளக்கம் அளித்தார். மேலும், தன்னை தொடர்ந்து கேள்வி கேட்டதால் தன்னுடைய கவனம் திசைதிருப்பப்பட்டதாகவும் அவர் கூறினார்.&lt;/p&gt;&lt;p&gt;Bigg Boss 10 : ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது..! அதகளமாக ஆரம்பமாகும் பிக் பாஸ் சீசன் 10 - தேதி அறிவித்த விஜய் சேதுபதி..!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அப்போது ராஜு, அணிக்குள் ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும் என்றால், குறைந்தபட்சம் கதையின் அடிப்படையையாவது சக போட்டியாளர்களிடம் பகிர்ந்திருக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த முனியம்மா, தன்னிடம் பேசுவதற்கான வாய்ப்பே வழங்கப்படவில்லை என்றும், தன்னை கதை சொல்ல வேண்டாம் என்று கூறியதாகவும் தெரிவித்தார். அந்த வார்த்தையை யார் சொன்னது என கேட்கப்பட்டபோது, திவ்யாவின் பெயரை அவர் குறிப்பிட்டார்.&lt;/p&gt;&lt;p&gt;இதையடுத்து சரண்யா உள்ளிட்ட போட்டியாளர்கள் தங்களுடைய தரப்பை விளக்கினர். முனியம்மா என்ன கதை சொல்லப் போகிறார் என்பதை தெரிந்துகொள்ளவே தாங்கள் கேட்டதாகவும், அவருக்கு உதவி செய்யும் நோக்கத்திலேயே அந்த விவரங்களை கேட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். ஆனால், முனியம்மா அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறினர்.&lt;/p&gt;&lt;p&gt;சம்யுக்தாவும் முனியம்மாவின் அணுகுமுறை குறித்து தனது கருத்தை தெரிவித்தார். மேடைக்குச் சென்று கதையைச் சொல்ல வேண்டும் என்பதில் மட்டுமே அவர் கவனம் செலுத்தியதாகவும், அணியினரின் ஆலோசனைகளை கேட்கும் மனநிலையில் அவர் இல்லை என்றும் கூறினார். மற்றவர்களின் உதவியை ஏற்றுக்கொள்ளாமல் தனியாக செயல்பட முயன்றதாகவும் சிலர் குற்றம்சாட்டினர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒருபுறம் முனியம்மா தனது தரப்பை விளக்கிக் கொண்டிருக்க, மறுபுறம் சோபா உள்ளிட்ட போட்டியாளர்கள், தாங்கள் பலமுறை உதவ முன்வந்தும் முனியம்மாதான் அதை மறுத்ததாக தெரிவித்தனர். இதனால் ஒரே சம்பவம் குறித்து இரு தரப்பிலும் முற்றிலும் மாறுபட்ட கருத்துகள் முன்வந்தன.&lt;/p&gt;&lt;p&gt;இவ்வளவு விவாதங்களுக்குப் பிறகு இறுதியாக டாஸ்க் தொடங்கியது. முனியம்மாதான் கதையை முதலில் சொல்லத் தொடங்கினார். ஆனால், கதை நகர்ந்துகொண்டிருந்தபோது சில ஆங்கில வார்த்தைகளின் அர்த்தம் அவருக்குப் புரியாமல் போக, ஒரு கட்டத்தில் அவர் தொடர்ந்து பேச முடியாமல் தடுமாறினார்.&lt;/p&gt;&lt;p&gt;மேலும், கதையின் ஒரு பகுதியில் எதிர்பாராத விதமாக சில சிக்கலான வார்த்தைகள் மற்றும் சம்பவங்கள் இடம்பெற்றதால், அதை அடுத்தடுத்து எப்படி எடுத்துச் செல்வது என்பது குறித்து முனியம்மாவுக்கு குழப்பம் ஏற்பட்டது. இதனால் அவர் கதையை முழுமையாக முடிக்க முடியாமல் தடுமாற, பின்னர் டர்வின் கதையைத் தொடர்ந்து சொல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த சம்பவத்தின்போது முனியம்மா என்ன செய்வது என்று தெரியாமல் ஒருவித குழப்பத்துடன் நின்ற காட்சியும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. ஆரம்பத்தில் பிக் பாஸ் வீடு தனக்கு எளிதாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இருந்ததாக தோன்றிய முனியம்மாவுக்கு, இந்த டாஸ்க் உண்மையில் சவாலான அனுபவமாக அமைந்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;குறிப்பாக, சொந்த அணியினரிடமிருந்தே தொடர்ச்சியாக விமர்சனங்கள் வந்ததும், டாஸ்க்கின்போது ஏற்பட்ட தடுமாற்றமும் அவருக்கு மனதளவில் அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என தெரிகிறது. இதுவரை வெளிப்படையாகவும் வெள்ளந்தியாகவும் பேசிவந்த முனியம்மா, இந்த சம்பவத்துக்குப் பிறகு சற்று திணறிய நிலையில் காணப்பட்டார்.&lt;/p&gt;&lt;p&gt;பிக் பாஸ் வீட்டில் ஒரு சிறிய டாஸ்க் கூட போட்டியாளர்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை வெளிக்கொண்டு வரும் என்பதற்கு இந்த சம்பவம் மற்றொரு உதாரணமாக அமைந்துள்ளது. இனிவரும் நாட்களில் முனியம்மா இந்த விமர்சனங்களை எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/bigg-boss-common-man-contestants-turns-against-muniyamma-what-really-happened-gnxilpo"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Bigg Boss Common Man : ஆட்டோ டிரைவருக்கு அடித்த ஜாக்பாட்... பிக் பாஸ் காமன்மேன் இன்றைய எபிசோடு ஹைலைட்ஸ்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/auto-driver-kalil-basha-gets-the-green-signal-bigg-boss-the-common-man-today-episode-gxrf43s</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/auto-driver-kalil-basha-gets-the-green-signal-bigg-boss-the-common-man-today-episode-gxrf43s</guid>
            <pubDate>Fri, 21 Aug 2026 11:48:39 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Bigg Boss The Common Man Today Episode : பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில் ஆட்டோ டிரைவர் ஒருவர் அடுத்த லெவலுக்கு சென்றிருக்கிறார். அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0hfcckwdhkk3f1anxpys3ep,imgname-bigg-boss-common-man--8--1787292955260.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Bigg Boss The Common Man Today Episode : பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில் ஆட்டோ டிரைவர் ஒருவர் அடுத்த லெவலுக்கு சென்றிருக்கிறார். அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடு விறுவிறுப்பாக அமைந்தது. 41 முதல் 50-வது போட்டியாளர்கள் வரை மேடையேறி தங்களது திறமைகளை நிரூபிக்க முயன்ற நிலையில், சிலர் நடுவர்களின் கவனத்தை ஈர்த்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். சிலரின் செயல்பாடு எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால் அவர்களின் பிக்பாஸ் பயணம் முடிவுக்கு வந்தது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சுந்தர பாண்டிக்கு ஏமாற்றம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;41-வது போட்டியாளராக களமிறங்கிய ஜோதிடர் சுந்தர பாண்டி, ராஜலட்சுமியுடன் விவாதத்தில் ஈடுபட்டார். இருவருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டாலும், சுந்தர பாண்டியின் ஒட்டுமொத்த செயல்பாடு நடுவர்களை கவரவில்லை. இதனால் அவர் ரிஜெக்ட் செய்யப்பட்டார்.&lt;/p&gt;&lt;p&gt;42-வது போட்டியாளரான ராஜலட்சுமி, மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருந்து வந்த குங்ஃபூ மாஸ்டர். சுந்தர பாண்டியுடன் நடந்த விவாதத்தில் பங்கேற்ற அவர், தனது கருத்துகளை முன்வைத்தார். இருந்தாலும் அவரது பிரசன்டேஷன் போதுமான அளவு சுவாரஸ்யமாக இல்லை என நடுவர்கள் கருதியதால் ரிஜெக்ட் என அறிவிக்கப்பட்டது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Bigg Boss Common Man : நைட்டியால் வெடித்த சர்ச்சை... பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சியில் நடுவர்களை அலறவிட்ட பெண்...!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;43-வது போட்டியாளரான ரியானா ராஜு, திருநங்கை சமூகத்தின் உரிமைகள் மற்றும் முன்னேற்றம் குறித்து தனது கருத்துகளை அழுத்தமாக பதிவு செய்தார். குறிப்பாக வேலைவாய்ப்பைப் பெறுவதில் திருநங்கைகள் எதிர்கொள்ளும் தடைகள் குறித்து பேசிய அவர், தங்கள் சமூகத்தில் உள்ள திறமையாளர்களுக்கு பிரதான தளங்களில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என வலியுறுத்தினார். அவரது கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளித்த நடுவர்கள், ரியானாவை ஹோல்டு பட்டியலில் வைத்தனர்.&lt;/p&gt;&lt;p&gt;44-வது போட்டியாளராக வந்த கலீல் பாஷா, ஷேர் ஆட்டோ ஓட்டுநராக இருப்பதுடன் கானா பாடகராகவும் திகழ்கிறார். தனது பாடல் திறமையை மேடையில் வெளிப்படுத்திய அவர், தனது எனர்ஜியால் நடுவர்களை கவர்ந்தார். மேலும், ரியானாவுடன் ஷோவுக்கான தகுதி குறித்து சூடான விவாதத்திலும் ஈடுபட்டார். அவரது தன்னம்பிக்கையும் தனித்துவமான அணுகுமுறையும் நடுவர்களுக்கு பிடித்ததால் செலக்ட் என அறிவிக்கப்பட்டார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;45-வது போட்டியாளரான சுப்ரமணி, டேட்டா சயின்டிஸ்ட்டாக பணியாற்றி வருவதுடன், கடந்த சில ஆண்டுகளாக மீடியா துறையில் தனது ஆர்வத்தை வளர்த்து வருவதாக தெரிவித்தார். ஆனால் ஆடிஷனுக்கு ஒரு மணி நேரம் தாமதமாக வந்தது அவருக்கு மிகப்பெரிய மைனஸாக அமைந்தது. இதனால் திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு இருந்தாலும், இறுதியில் ரிஜெக்ட் செய்யப்பட்டார்.&lt;/p&gt;&lt;p&gt;46-வது போட்டியாளரான ஷாமா, வாழ்க்கையில் புதிதாக பல விஷயங்களை முயற்சி செய்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற தனது எண்ணத்தை பகிர்ந்துகொண்டார். அவரது உற்சாகமான செயல்பாடும் கலகலப்பான அணுகுமுறையும் நடுவர்களை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து ஷாமா செலக்ட் செய்யப்பட்டார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;47-வது போட்டியாளரான ஆங்கர் சுகுமார், ராப் பாடலுடன் தனது ஆடிஷனை தொடங்கினார். அதுமட்டுமின்றி நான்கு நடுவர்களைப் பற்றிய தனது நேரடியான கருத்துகளையும் வெளிப்படையாக கூறினார். பெண்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைப்பதாகவும், ஆண்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் அவர் கூறிய கருத்து மாயாவுடன் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பான விவாதத்துக்குப் பிறகு சுகுமார் ஹோல்டு செய்யப்பட்டார்.&lt;/p&gt;&lt;p&gt;48-வது போட்டியாளரான மாயா நடாஷன், தனது குடும்பத்தில் தன்னை வேறு பெயரில் அழைப்பதாகவும், மாடலிங் துறைக்காக &ldquo;மாயா&rdquo; என்ற பெயரை பயன்படுத்தியதாகவும் கூறினார். ஆனால் அவர் அளித்த பிரசன்டேஷன் நடுவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இதனால் மாயா ரிஜெக்ட் செய்யப்பட்டார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;49-வது போட்டியாளரான பிரியங்கா பால், சுமார் பத்து ஆண்டுகளாக மீடியா துறையில் வாய்ப்பு தேடி வருவதாக கூறினார். ஆங்கரிங் உள்ளிட்ட துறைகளிலும் முயற்சி செய்துள்ள அவர், மேடையில் நம்பிக்கையுடன் தனது கருத்துகளை வெளிப்படுத்தினார்.&lt;/p&gt;&lt;p&gt;நல்ல எனர்ஜியுடன் பேசியதோடு, நடுவர்களின் கேள்விகளையும் திறம்பட எதிர்கொண்டார். அவரது அணுகுமுறை நடுவர்களுக்கு பிடித்திருந்தாலும், இறுதியில் ஹோல்டு பட்டியலில் வைக்கப்பட்டார். மேடையை விட்டு வெளியேறும் முன் நடுவர்களுடன் அவர் நடத்திய ஜாலியான வாக்குவாதமும் கவனம் பெற்றது.&lt;/p&gt;&lt;p&gt;50-வது மற்றும் இந்த எபிசோட்டின் கடைசி போட்டியாளராக நர்மதா களமிறங்கினார். CA-வான இவர், நீண்ட காலமாக மீடியா துறையில் நுழைய வேண்டும் என்ற ஆசையுடன் இருப்பதாக தெரிவித்தார். அவருக்கு நடிப்பு தொடர்பான டாஸ்க் வழங்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு அதை வெளிப்படுத்த முடியாததால், நர்மதா ரிஜெக்ட் செய்யப்பட்டார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/auto-driver-kalil-basha-gets-the-green-signal-bigg-boss-the-common-man-today-episode-gxrf43s"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Karthigai Deepam : வீட்டை அடித்து நொறுக்கிய சாமுண்டீஸ்வரி... பரமேஸ்வரி பாட்டி வீட்டில் கார்த்திக் - ரேவதிக்கு நடந்தது என்ன?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/chamundeeswari-breaks-things-in-anger-in-karthigai-deepam-serial-august-14-today-episode-ikv48vq</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/chamundeeswari-breaks-things-in-anger-in-karthigai-deepam-serial-august-14-today-episode-ikv48vq</guid>
            <pubDate>Fri, 14 Aug 2026 13:00:06 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Karthigai Deepam Serial 14 August 2026 Episode : கார்த்திகை தீபம் சீரியலில் கார்த்திக்கும் ரேவதிக்கும் பரமேஸ்வரி பாட்டி வீட்டில் தடபுடல் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைப்பற்றி பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kzzjprqpt9kyhcjg358de37t,imgname-karthigai-deepam--30--1786692461302.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Karthigai Deepam Serial 14 August 2026 Episode : கார்த்திகை தீபம் சீரியலில் கார்த்திக்கும் ரேவதிக்கும் பரமேஸ்வரி பாட்டி வீட்டில் தடபுடல் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைப்பற்றி பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். தொடர்ந்து பல எதிர்பாராத திருப்பங்களுடன் நகர்ந்து வரும் இந்தத் தொடரில், இன்றைய எபிசோடும் பரபரப்புக்கும் உணர்ச்சிகளுக்கும் பஞ்சமில்லாமல் இருக்கப் போகிறது. நேற்றைய எபிசோடில் கார்த்திக்கும் ரேவதியும் பரமேஸ்வரி பாட்டியை சந்திக்க புறப்பட்ட நிலையில், இன்று அவர்கள் அங்கு செல்வதால் புதிய சம்பவங்கள் அரங்கேறுகின்றன.&lt;/p&gt;&lt;p&gt;Karthigai Deepam : சந்திரகலாவை பளார் என அறைந்த ரேவதி... துப்பாக்கியால் மிரட்டிய சாமுண்டீஸ்வரி!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒருபக்கம் சாமுண்டீஸ்வரி கடும் ஆத்திரத்தில் வீட்டில் ருத்ரதாண்டவம் ஆடுகிறார். தனது கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீட்டில் இருந்த பொருட்களை தூக்கி வீசி உடைக்கும் அளவுக்கு அவரது ஆவேசம் செல்கிறது. அவரை அமைதிப்படுத்த குடும்பத்தினர் முயற்சி செய்தாலும், சாமுண்டீஸ்வரியின் கோபம் தணிந்தபாடில்லை. அவரது இந்த ஆவேசத்திற்குப் பின்னால் இருக்கும் காரணம் என்ன, இனி அவர் எடுக்கப்போகும் முடிவு என்ன என்பது சீரியலில் முக்கிய திருப்பமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;Karthigai Deepam : ரேவதியின் கேள்விகளால் ஆடிப்போன சாமுண்டீஸ்வரி... மறைக்கப்பட்ட காதல் ரகசியம் அம்பலம்&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதற்கிடையே கார்த்திக் மற்றும் ரேவதி இருவரும் ஒன்றாக பரமேஸ்வரி பாட்டியின் வீட்டிற்கு வந்து சேருகின்றனர். அவர்களை பார்த்ததும் பரமேஸ்வரி பாட்டி மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார். இருவரையும் அன்புடன் வரவேற்பதுடன், ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்துச் செல்கிறார். தொடர்ந்து ரேவதியை பூஜை அறைக்கு அழைத்துச் செல்லும் பரமேஸ்வரி, அங்கு விளக்கேற்றச் சொல்கிறார். ரேவதியும் பக்தியுடன் விளக்கேற்ற, அந்தக் காட்சி குடும்பத்தினர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.&lt;/p&gt;&lt;p&gt;Karthigai Deepam : கார்த்திக்கின் பிளான் தெரியாமல் சவால்விட்ட சாமுண்டீஸ்வரி... ரேவதி ரிட்டர்ன் ஆனது ஏன்?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில் பரமேஸ்வரி பாட்டி வீட்டிற்கு மயில்வாகனமும் ரோகினியும் வருகின்றனர். கார்த்திக் மற்றும் ரேவதியை அவர்கள் சந்திக்கும் சூழல் உருவாகிறது. ஏற்கனவே பல்வேறு குழப்பங்கள் நிலவி வரும் நிலையில், இவர்களின் வருகை அடுத்த கட்டத்தில் என்ன மாதிரியான பிரச்சனையை உருவாக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஒருபுறம் சாமுண்டீஸ்வரி கோபத்தின் உச்சியில் இருக்க, மறுபுறம் கார்த்திக் - ரேவதி பரமேஸ்வரி பாட்டியின் வீட்டில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளனர்.&lt;/p&gt;&lt;p&gt;இதனால் இரு பக்கத்திலும் நடக்கப்போகும் சம்பவங்கள் சீரியலின் கதையில் முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தலாம். சாமுண்டீஸ்வரியின் ஆவேசம் எங்கே சென்று முடியும்? கார்த்திக் - ரேவதியை பரமேஸ்வரி பாட்டி தொடர்ந்து எப்படி நடத்தப் போகிறார்? மயில்வாகனம் மற்றும் ரோகினியின் வருகையால் என்ன அதிர்ச்சி காத்திருக்கிறது? என்பதை தெரிந்துகொள்ள இன்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் எபிசோடை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;Karthigai Deepam : ரேவதியின் பாஸ்போர்ட் மாயம்... கார்த்திக்கை வீழ்த்த எதிரிகள் போட்ட மாஸ்டர் பிளான் ஒர்க் அவுட் ஆகுமா?&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/chamundeeswari-breaks-things-in-anger-in-karthigai-deepam-serial-august-14-today-episode-ikv48vq"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Bigg Boss Common Man : காமன்மேன் நிகழ்ச்சியில் செம ட்விஸ்ட்... பிக் பாஸே பார்க்காத பெண்ணுக்கு அடித்தது ஜாக்பாட்..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/bigg-boss-common-man-today-episode-unexpected-selection-female-contestant-steals-the-show-qd0m9oa</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/bigg-boss-common-man-today-episode-unexpected-selection-female-contestant-steals-the-show-qd0m9oa</guid>
            <pubDate>Wed, 19 Aug 2026 07:42:03 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Bigg Boss Common Man Today Episode : பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில் ஏராளமான போட்டியாளர்களுக்கு நடந்த ஆடிஷனில் ஒரே ஒரு பெண் மட்டுமே நேரடியாக செலக்ட் ஆகி உள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0bwev0zs3w3dzw5fc8brwb9,imgname-bigg-boss-common-man--4--1787105340447.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Bigg Boss Common Man Today Episode : பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில் ஏராளமான போட்டியாளர்களுக்கு நடந்த ஆடிஷனில் ஒரே ஒரு பெண் மட்டுமே நேரடியாக செலக்ட் ஆகி உள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை போட்டியாளர்களாக இருந்தவர்களுக்கு மாறாக, இந்த முறை காமன் மேன் ஆடிஷன் மூலம் பலரும் வாய்ப்புக்காக களமிறங்கியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக இன்று வெளியான நான்காவது எபிசோடில் பல்வேறு பின்னணியைச் சேர்ந்த போட்டியாளர்கள் ஜட்ஜ்கள் முன்பு தங்களது திறமையை நிரூபிக்க முயன்றனர். இதில் சிலர் நிராகரிக்கப்பட்ட நிலையில், சிலர் ஹோல்டில் வைக்கப்பட்டதுடன், ஒருவருக்கு மட்டும் செலக்ஷன் கிடைத்தது.&lt;/p&gt;&lt;p&gt;முதலில் மலேசியாவில் இருந்து பர்வீன் பானு என்ற போட்டியாளர் ஆடிஷனுக்கு வந்தார். அவரது பெற்றோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றாலும், பர்வீன் மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். தன்னை டெப்யூட் தயாரிப்பாளராக அறிமுகப்படுத்திக் கொண்ட அவர், ஊடகத் துறையில் சாதிக்க வேண்டும் என்றும், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு இருக்கும் சில கட்டுப்பாடுகளைத் தாண்டி மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த வாய்ப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். இருப்பினும், அவரது பேச்சு ஜட்ஜ்களை பெரிதாக கவராததால் அவர் நிராகரிக்கப்பட்டார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Bigg Boss Common Man : ச்சீ... இதெல்லாம் ஒரு டாஸ்கா? முதல் எபிசோடிலேயே சர்ச்சையில் சிக்கிய பிக் பாஸ் காமன்மேன்..!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அடுத்ததாக வெங்கடேஷ் என்ற சுமார் 40 வயது மதிக்கத்தக்க திருமணமான நபர் காமன் மேன் போட்டியாளராக வந்தார். தனது வாழ்க்கையில் இன்னும் பல சாதனைகளை செய்ய வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருப்பதாக கூறிய அவர், திருமணமே தனது மிகப்பெரிய சாதனை என்று கூறி ஜட்ஜ்களை ஆச்சரியப்படுத்தினார். மனைவியைப் பற்றிய கேள்விகளுக்கும் நகைச்சுவையாக பதிலளித்த அவர், கோபம் வந்தால் அழத் தொடங்கிவிடுவேன் என்றும் வெளிப்படையாகப் பகிர்ந்தார்.&lt;/p&gt;&lt;p&gt;அவருக்கு வழங்கப்பட்ட சிறிய டாஸ்க்கில், குறிப்பிட்ட நேரத்திற்குள் பல பேப்பர்களில் இருந்து பிக் பாஸ் தொடர்பான டயலாக்கள் இடம்பெற்றிருந்த பேப்பர்களை தேர்வு செய்ய வேண்டும். அதில் சிலவற்றை சரியாக எடுத்த அவர், தன்னுடைய உயரம் குறித்த கிண்டல்களை உடைத்து தன்னம்பிக்கையுடன் முன்னேற வேண்டும் என்ற ஆசையையும் தெரிவித்தார். இதையடுத்து அவர் ஹோல்டில் வைக்கப்பட்டார்.&lt;/p&gt;&lt;p&gt;அதன் பின்னர் ஹைட் கார்த்தி மற்றும் யோயோ ராஜேஷ் ஆகிய இருவர் ஆடிஷனில் பங்கேற்றனர். சென்னையைச் சேர்ந்த ஹைட் கார்த்தி இசை கற்றுக்கொண்டு வருவதாகவும், யோயோ ராஜேஷ் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான கேம்ஸ் மற்றும் என்டர்டெயின்மென்ட் நிகழ்ச்சிகளில் பணியாற்றுவதாகவும் தெரிவித்தனர். இருவருக்கும் இடையிலான உரையாடலில் ஹைட் கார்த்தி சிறப்பாக செயல்பட்டார். குறைவாக பேசிய யோயோ ராஜேஷ் நிராகரிக்கப்பட்ட நிலையில், ஹைட் கார்த்தி ஹோல்டில் வைக்கப்பட்டார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதைத்தொடர்ந்து கரிஷ்மா என்ற போட்டியாளர் களமிறங்கினார். கல்லூரியில் சேராமல், தொழில்முனைவோராக வேண்டும் என்பதே தனது லட்சியம் என்று கூறிய அவர், தனது முக்கிய திறமை நன்றாகப் பேசுவதுதான் என தெரிவித்தார். ஆனால், தன்னிடம் ஏற்கனவே பல விஷயங்கள் இருப்பதால் இந்த வாய்ப்பு ஏன் தேவை என ஜட்ஜ்கள் கேள்வி எழுப்பினர். குடும்ப சூழல் மற்றும் தாய்க்காக ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை கரிஷ்மா விளக்கினார்.&lt;/p&gt;&lt;p&gt;அவரது திறனை சோதிக்க பிச்சை எடுக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. தயக்கமின்றி அந்த டாஸ்க்கை செய்த கரிஷ்மா, பின்னர் ஜட்ஜ்களுடன் தனது வாய்ப்பு குறித்து விவாதித்தார். அனுபவம் குறைவாக இருப்பதாக ஜட்ஜ்கள் கூறியபோது, வாய்ப்பு கொடுத்தால்தான் தன்னை நிரூபிக்க முடியும் என்று அவர் பதிலளித்தார். இதற்கிடையில் ராஜுவுக்கும் கரிஷ்மாவுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இறுதியில் கரிஷ்மாவும் ஹோல்டில் வைக்கப்பட்டார்.&lt;/p&gt;&lt;p&gt;அடுத்ததாக பெங்களூருவைச் சேர்ந்த புகழேந்தி ஆடிஷனுக்கு வந்தார். தன்னை கராத்தே மற்றும் கிக் பாக்ஸிங் சாம்பியன் என்றும், மேஜிக் கற்றுக் கொடுப்பவர் என்றும் அறிமுகப்படுத்திய அவர், அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் ஒரு டாஸ்க்கை செய்தார். பின்னர் அவர் முழுமையாக தனது திறமையை வெளிப்படுத்தவில்லை என்றாலும், ஜட்ஜ்களின் மாறுபட்ட கருத்துகளால் அவரும் ஹோல்டில் வைக்கப்பட்டார்.&lt;/p&gt;&lt;p&gt;இதன்பின் சென்னையைச் சேர்ந்த சீனியர் மேனேஜரும் சாப்ட்வேர் இன்ஜினியரிங் துறையில் பணியாற்றுபவருமான ஸ்ரீ நாகநித்யா பங்கேற்றார். 45 வயதிலும் தொடர்ந்து சாதிக்க வேண்டும் என்ற தன்னம்பிக்கையுடன் இருப்பதாக அவர் கூறினார். அவருடன் அரவிந்த் உமாபதியும் ஆடிஷனில் பங்கேற்றார். இருவருக்கும் இடையே தகுதி குறித்து விவாதம் நடந்த நிலையில், சிறப்பாக டிபேட் செய்த அரவிந்த் உமாபதி ஹோல்டில் வைக்கப்பட்டார். ஸ்ரீ நாகநித்யா நிராகரிக்கப்பட்டார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கடைசியாக கவின் நிலவன் மற்றும் திவ்யா ஆகியோர் ஆடிஷனுக்கு வந்தனர். திவ்யா இதற்கு முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்ததே இல்லை என்றும், மக்களுடன் ஒரே வீட்டில் வசித்தால் தன்னுடைய அனுபவம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்ளும் ஒரு பரிசோதனையாகவே இந்த வாய்ப்பை பார்க்கிறேன் என்றும் தெரிவித்தார்.&lt;/p&gt;&lt;p&gt;மறுபுறம் கவின் தன்னை எம்சி மற்றும் என்டர்டெய்னராக அறிமுகப்படுத்திக் கொண்டார். நிகழ்ச்சிகளை நடத்தி மக்களை மகிழ்விப்பதில் நீண்ட கால அனுபவம் இருப்பதாகவும் கூறினார். அவருக்கு வழங்கப்பட்ட ஒரு டாஸ்க்கில் தயக்கமின்றி செயல்பட்டார். ஆனால், அந்த டாஸ்க்கை தன்னுடைய தனிப்பட்ட மதிப்புகளுக்கு எதிரானதாக கருதிய திவ்யா முதலில் எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் அது ஒரு டாஸ்க் மட்டுமே என்பதை புரிந்துகொண்டு அதில் பங்கேற்றார்.&lt;/p&gt;&lt;p&gt;ஆச்சரியமாக, இறுதியில் திவ்யா தேர்வு செய்யப்பட்டார். இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்த அனுபவமே இல்லாத ஒருவர் நேரடியாக தேர்வு செய்யப்பட்டிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கவின் தனது செயல்பாடுகளால் கவனம் ஈர்த்திருந்தாலும், இறுதி தேர்வில் திவ்யாவுக்கு வாய்ப்பு கிடைத்தது.&lt;/p&gt;&lt;p&gt;ஒட்டுமொத்தமாக இந்த எபிசோடில் மூன்று பேர் நிராகரிக்கப்பட்டனர். ஆறு பேர் ஹோல்டில் வைக்கப்பட்ட நிலையில், ஒருவருக்கு மட்டும் நேரடியாக செலக்ஷன் கிடைத்துள்ளது. அடுத்தடுத்த ரவுண்டுகளில் ஹோல்டில் உள்ள போட்டியாளர்களில் யாருக்கு பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லும் வாய்ப்பு கிடைக்கப் போகிறது என்பதே தற்போது எதிர்பார்ப்பாக உள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/bigg-boss-common-man-today-episode-unexpected-selection-female-contestant-steals-the-show-qd0m9oa"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Karthigai Deepam : போராட்டத்தை ஒடுக்க முயன்று பல்பு வாங்கிய சாமுண்டீஸ்வரி.. மீடியாவிடம் உண்மையை சொன்ன ரேவதி!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/revathi-exposes-the-truth-to-the-media-karthigai-deepam-serial-takes-a-dramatic-turn-in-today-episode-qo0l7v4</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/revathi-exposes-the-truth-to-the-media-karthigai-deepam-serial-takes-a-dramatic-turn-in-today-episode-qo0l7v4</guid>
            <pubDate>Thu, 20 Aug 2026 08:48:37 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Karthigai Deepam Serial Today Episode : கார்த்திகை தீபம் சீரியலில் கார்த்திக்கை சிறையில் இருந்து வெளியே கொண்டுவருவதற்காக போராட்டத்தில் குதித்துள்ளார் ரேவதி.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0ejpvh34pky9zaq1hadjnp7,imgname-karthigai-deepam--1--1787195780643.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Karthigai Deepam Serial Today Episode : கார்த்திகை தீபம் சீரியலில் கார்த்திக்கை சிறையில் இருந்து வெளியே கொண்டுவருவதற்காக போராட்டத்தில் குதித்துள்ளார் ரேவதி.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் &lsquo;கார்த்திகை தீபம்&rsquo;. நாளுக்கு நாள் விறுவிறுப்பான திருப்பங்களுடன் நகர்ந்து வரும் இந்தத் தொடரில், கார்த்திக்கைச் சுற்றி உருவாகியுள்ள பிரச்சனை தற்போது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த எபிசோடில், கார்த்திக் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி ரேவதி தனியாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். கார்த்திக்கான நீதியைப் பெற்றே தீர வேண்டும் என்ற அவரது உறுதியால், இந்தப் போராட்டம் தற்போது பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Karthigai Deepam : ரேவதியின் அதிரடி முடிவால் ஆடிப்போன குடும்பம்... கார்த்திக்காக காத்திருக்கும் புதிய சிக்கல்!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரேவதியின் போராட்டம் குறித்து சாமுண்டீஸ்வரி மற்றும் சந்திரகலாவுக்கு தகவல் கிடைக்கிறது. இதற்கிடையில், கார்த்திக்கிற்கு ஆதரவாக ஊர் மக்களும் ரேவதியின் பக்கம் திரளத் தொடங்குகின்றனர். இதனால் போராட்டம் மேலும் தீவிரமடைகிறது. நிலைமை கட்டுக்குள் வராமல் போக, சந்திரகலா சாமுண்டீஸ்வரியிடம் ஆலோசனை கேட்கிறாள். இதனால் ஆத்திரமடையும் சாமுண்டீஸ்வரி, போராட்டத்தில் ஈடுபடுபவர்களை விரட்டியடிக்க உத்தரவிடுகிறார். இதையடுத்து போலீசார் போராட்டக்காரர்களை கலைக்க முயற்சிப்பதுடன், ரேவதியிடமும் கடுமையாக நடந்து கொள்கின்றனர். இதனால் சம்பவ இடத்தில் பதற்றமான சூழல் உருவாகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Karthigai Deepam : வீட்டை அடித்து நொறுக்கிய சாமுண்டீஸ்வரி... பரமேஸ்வரி பாட்டி வீட்டில் கார்த்திக் - ரேவதிக்கு நடந்தது என்ன?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த சம்பவம் அத்துடன் முடிவுக்கு வரவில்லை. அங்கு வந்த செய்தியாளர்களிடம் ரேவதி நடந்த சம்பவங்களை வெளிப்படையாக எடுத்துரைக்கிறார். இதனால் பிரச்சனை மேலும் பூதாகரமாகிறது. விவகாரம் மேலதிகாரிகளின் கவனத்திற்குச் செல்ல, எஸ்.பி. நேரடியாக சம்பவ இடத்திற்கு வருகிறார். கார்த்திக்கை எந்த அடிப்படையில் கைது செய்தீர்கள் என இன்ஸ்பெக்டரிடம் அவர் கேள்வி எழுப்புகிறார். இதற்கு உரிய பதிலை அளிக்க முடியாமல் போலீஸ் தரப்பு தடுமாறுகிறது. இதன் தொடர்ச்சியாக, கார்த்திக்கை விடுவிக்கும் நிலைக்கு போலீசார் தள்ளப்படுகின்றனர். இதனால் ரேவதியின் போராட்டம் ஒரு கட்டத்தில் வெற்றியை நோக்கி நகர்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Karthigai Deepam : சந்திரகலாவை பளார் என அறைந்த ரேவதி... துப்பாக்கியால் மிரட்டிய சாமுண்டீஸ்வரி!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கார்த்திக் வெளியே வந்ததும், ரேவதி அடுத்ததாக சாமுண்டீஸ்வரியை எதிர்கொள்ள தயாராகிறாள். நடந்த சம்பவங்களால் கோபத்தில் இருக்கும் ரேவதி, நேராக சாமுண்டீஸ்வரியின் வீட்டை நோக்கி செல்கிறாள். அங்கு இருவருக்கும் இடையே நேருக்கு நேர் மோதல் ஏற்படுமா? கார்த்திக்கிற்கு எதிராக அடுத்ததாக என்ன திட்டம் தயாராகிறது? ரேவதியின் நடவடிக்கைக்கு சாமுண்டீஸ்வரி எப்படி பதிலடி கொடுக்கப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகியுள்ளது. இப்படி அடுத்தடுத்து பரபரப்பான சம்பவங்களுடன் நகரும் &lsquo;கார்த்திகை தீபம்&rsquo; சீரியலின் இன்றைய எபிசோட், கார்த்திக்கின் விடுதலைக்குப் பிறகு கதையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Karthigai Deepam : ரேவதியின் கேள்விகளால் ஆடிப்போன சாமுண்டீஸ்வரி... மறைக்கப்பட்ட காதல் ரகசியம் அம்பலம்&lt;/strong&gt;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/revathi-exposes-the-truth-to-the-media-karthigai-deepam-serial-takes-a-dramatic-turn-in-today-episode-qo0l7v4"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Bigg Boss Common Man : கரிஷ்மாவுக்கு ரெட் ஸ்டார்... கில்லி போல் சொல்லி அடித்த முனியம்மா; மெர்சலான ஆரி..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/muniyamma-big-comeback-in-bigg-boss-common-man-task-her-dance-marathon-performance-wins-everyone-attention-v7l7ook</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/muniyamma-big-comeback-in-bigg-boss-common-man-task-her-dance-marathon-performance-wins-everyone-attention-v7l7ook</guid>
            <pubDate>Mon, 24 Aug 2026 17:07:39 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Bigg Boss Common Man Task : பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில் டான்ஸ் மாரத்தான் டாஸ்க் நடைபெற்றது. அதில் முனியம்மாவின் பர்பார்மன்ஸ் எப்படி இருந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0sqrjwb1vdankrg98xv8c5f,imgname-bigg-boss-common-man--10--1787570178955.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Bigg Boss Common Man Task : பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில் டான்ஸ் மாரத்தான் டாஸ்க் நடைபெற்றது. அதில் முனியம்மாவின் பர்பார்மன்ஸ் எப்படி இருந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிக் பாஸ் வீட்டில் நடைபெறும் ஒவ்வொரு டாஸ்க்கும் போட்டியாளர்களின் தனித்திறமைகளை வெளிக்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்த முறை நடைபெற்ற டான்ஸ் மாரத்தான் டாஸ்க்கில் முனியம்மா கொடுத்த பெர்பார்மன்ஸ் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. முன்னதாக நடைபெற்ற முதல் டாஸ்க்கிலேயே முனியம்மா ரெட் ஸ்டார் பெற்றிருந்த நிலையில், அடுத்தடுத்த நிகழ்வுகளில் அவரது செயல்பாடுகள் குறித்து சில விமர்சனங்களும் எழுந்தன. இந்த சூழலில், டான்ஸ் மாரத்தான் டாஸ்க் அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது.&lt;/p&gt;&lt;p&gt;Bigg Boss Common Man : ஆட்டோ டிரைவருக்கு அடித்த ஜாக்பாட்... பிக் பாஸ் காமன்மேன் இன்றைய எபிசோடு ஹைலைட்ஸ்&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் தங்களது கம்பர்ட் ஜோனை விட்டு வெளியே வந்து நடனம் ஆட வேண்டும் என்ற சூழல் உருவானது. குறிப்பாக கிராமப்புற பின்னணியில் இருந்து வந்த முனியம்மாவுக்கு தொடர்ந்து நடனம் ஆடுவது எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், பாடல் ஒலித்ததும் எதிர்பாராத வகையில் முனியம்மா உற்சாகமாக களத்தில் இறங்கினார். &lsquo;கில்லி&rsquo; படத்தின் பாடல் ஒலித்தபோது, உடனடியாக நடனமாடத் தொடங்கிய அவர், முகத்தில் புன்னகையுடன் மிகவும் இயல்பான முறையில் பெர்பார்ம் செய்தார். கையில் பூவை வைத்துக்கொண்டு அவர் ஆடிய விதமும், அவரது இயல்பான உடல்மொழியும் அங்கிருந்த மற்ற போட்டியாளர்களை வெகுவாக கவர்ந்தது. முனியம்மாவின் நடனத்தை பார்த்த பலரும் உற்சாகமாக அதை ரசித்தனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முனியம்மாவின் பெர்பார்மன்ஸை கவனித்த ஆரி, அவரது முயற்சியை பாராட்டினார். வழக்கமாக தன்னுடைய கம்பர்ட் ஜோனில் இருந்து வெளியே வராத ஒருவர், முதல் முறையாக இவ்வளவு தன்னம்பிக்கையுடன் நடனமாடியிருப்பது தெரிகிறது என்ற வகையில் அவரது கருத்து அமைந்திருந்தது. இதையடுத்து ஓவியாவும், முனியம்மாவிடம் இது உண்மையிலேயே முதல் முறையாக நடனமாடுகிறீர்களா என்று கேட்டார்.&lt;/p&gt;&lt;p&gt;அதற்கு பதிலளித்த முனியம்மா, பிறந்தநாள் போன்ற குடும்ப நிகழ்ச்சிகளில் அவ்வப்போது நடனமாடியிருப்பதாக கூறினார். அதே சமயம், தனது கணவர் அடிக்கடி நடனமாட வேண்டாம் என்று கூறுவார் என்றும், தனது தங்கையைப் பாராட்டுவார் என்றும் சுவாரஸ்யமாக பகிர்ந்துகொண்டார். அந்த விஷயத்தை கேட்ட ஓவியா, இனிமேல் யாராவது முனியம்மாவை நடனமாட வேண்டாம் என்று சொன்னால், அவர்களை அமைதியாக இருக்கச் சொல்லிவிடுங்கள் என்ற வகையில் அவருக்கு ஆதரவு தெரிவித்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தனக்கு மேடை கிடைத்துவிட்டது, இந்த வாய்ப்பை பயன்படுத்தி தன்னுடைய திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அந்த டாஸ்க்கில் ஆடியதாக முனியம்மா தெரிவித்தார். இதன் மூலம், இதுவரை அமைதியாக இருந்ததாக பார்க்கப்பட்ட முனியம்மாவின் இன்னொரு பக்கத்தை ரசிகர்கள் பார்க்க முடிந்தது.&lt;/p&gt;&lt;p&gt;இதைத்தொடர்ந்து போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் ரெட் கொடுப்பதற்கான காரணங்களை பகிர்ந்துகொண்டனர். அப்போது முனியம்மா, கரிஷ்மாவுக்கு ரெட் கொடுத்தார். அதற்கான காரணமாக, மற்றவர்கள் தங்களை பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காகவே சிலர் செயல்படுகிறார்கள்; ஆனால் கரிஷ்மா தன்னுடைய மகிழ்ச்சிக்காகவே நடனமாடியது போல் தெரிந்தது என்ற கருத்தை முனியம்மா முன்வைத்தார். முனியம்மா கூறிய இந்த பாயிண்ட்டை ஆரி பாராட்டினார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;டாஸ்க்கின் போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முனியம்மா உள்ளிட்ட சில போட்டியாளர்கள் சரியான பதிலை அளித்தனர். குறிப்பாக, கிராமப்புற பின்னணியில் இருந்து வந்திருந்தாலும், கேள்விகளை புரிந்துகொண்டு தெளிவாக பதிலளித்த முனியம்மாவை ஆரி மற்றும் ராஜு பாராட்டினர். இதுவரை போட்டியில் முனியம்மா எப்படி செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், டான்ஸ் டாஸ்க், தன்னம்பிக்கையான பேச்சு மற்றும் சரியான பதில்கள் மூலம் முனியம்மா தன்னுடைய திறமையை நிரூபிக்கத் தொடங்கியிருக்கிறார். இந்த டாஸ்க் முனியம்மாவுக்கு உண்மையிலேயே ஒரு கம்பேக் தருணமாக அமைந்துள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/muniyamma-big-comeback-in-bigg-boss-common-man-task-her-dance-marathon-performance-wins-everyone-attention-v7l7ook"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Siragadikka Aasai : ரோகிணியை நம்பி சிக்கலில் மாட்டிய மனோஜ்... முத்துவின் கையில் சிக்கிய முக்கிய ஆதாரம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/manoj-caught-with-rohini-and-krish-at-a-hotel-muthu-records-video-in-siragadikka-aasai-serial-today-1089th-episode-vc75r88</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/manoj-caught-with-rohini-and-krish-at-a-hotel-muthu-records-video-in-siragadikka-aasai-serial-today-1089th-episode-vc75r88</guid>
            <pubDate>Mon, 17 Aug 2026 07:54:57 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து, மனோஜும் ரோகிணியும் ஒன்றாக ஹோட்டலில் சந்தித்து பேசியதை வீடியோவாக ரெக்கார்டு செய்திருக்கிறார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m06rcvps93p0t0878vx4tgxb,imgname-siragadikka-aasai--6---2--1786933309145.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து, மனோஜும் ரோகிணியும் ஒன்றாக ஹோட்டலில் சந்தித்து பேசியதை வீடியோவாக ரெக்கார்டு செய்திருக்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியலான சிறகடிக்க ஆசை தொடரில், தற்போது ரோகிணியின் தில்லுமுல்லுகள் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. கிரிஷ் விஷயத்தில் மனோஜை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ரோகிணி, அவரை நம்ப வைத்து தொடர்ந்து தனது திட்டத்தை நகர்த்தி வருகிறார். அந்த வகையில் இன்றைய எபிசோடில் எதிர்பாராத திருப்பம் அரங்கேறி உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;ரோகிணியின் பேச்சை முழுமையாக நம்பி வரும் மனோஜ், அவர் சொல்லும் விஷயங்களை ஏற்றுக்கொண்டு செயல்பட்டு வருகிறார். கிரிஷுடன் பழக வேண்டும் என்ற ரோகிணியின் விருப்பத்திற்கும் மனோஜ் சம்மதிக்கிறார். இதையடுத்து கிரிஷையும் அழைத்துக்கொண்டு மனோஜ் ஒரு ஹோட்டலுக்குச் செல்கிறார். அங்கு மூவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடத் தொடங்குகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Siragadikka Aasai : மனோஜுக்கு அடித்த ஜாக்பாட்... விஜயாவுக்கு வந்த சந்தேகம்! அடுத்து என்ன நடக்கப்போகுது?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதே நேரத்தில், ஒரு பயணியை காரில் அழைத்துச் செல்லும் வேலையாக முத்து அந்த ஹோட்டல் பகுதிக்கு வருகிறார். அப்போது தற்செயலாக மனோஜ், ரோகிணி மற்றும் கிரிஷ் ஆகிய மூவரும் ஒன்றாக ஹோட்டலுக்குள் செல்வதை முத்து பார்த்துவிடுகிறார். மனோஜ் இவர்கள் இருவருடனும் இங்கே என்ன செய்கிறான் என்ற சந்தேகம் முத்துவுக்கு ஏற்படுகிறது. இதனால் அவர்களைப் பின்தொடர்ந்து உள்ளே சென்று பார்க்கிறார்.&lt;/p&gt;&lt;p&gt;உள்ளே சென்ற முத்துவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. ரோகிணி மற்றும் கிரிஷுடன் அமர்ந்து மனோஜ் சாப்பிட்டுக் கொண்டிருப்பதை அவர் பார்க்கிறார். அதுமட்டுமின்றி, கிரிஷுக்கு மனோஜ் சாப்பாடு ஊட்டிக் கொண்டிருப்பதையும் முத்து கவனிக்கிறார்.&lt;/p&gt;&lt;p&gt;ஏற்கனவே மனோஜின் நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்டிருந்த முத்துவுக்கு இந்தக் காட்சி மேலும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது என்று நினைக்கும் அவர், நடந்ததை வீடியோவாக பதிவு செய்ய முடிவு செய்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மனோஜ், ரோகிணி, கிரிஷ் மூவரும் ஒன்றாக இருந்த காட்சியை முத்து தனது செல்போனில் வீடியோ எடுத்து வைத்துக்கொள்கிறார். இதை வீட்டில் அனைவரிடமும் காட்டி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்பதே அவரது திட்டமாக இருக்கிறது. இதனால் ரோகிணி இதுவரை மறைத்து வைத்திருக்கும் விஷயங்கள் வெளிச்சத்திற்கு வருமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. மறுபுறம், மனோஜின் நடவடிக்கைகள் குறித்து விஜயாவுக்கும் சந்தேகம் இருந்து வருகிறது. இதனால் மீனா மற்றும் ஸ்ருதியிடம் மனோஜை கண்காணிக்குமாறு விஜயா ஏற்கனவே கூறியிருக்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில், முத்துவின் கையில் சிக்கியுள்ள வீடியோ மேலும் பிரச்சினையை பெரிதாக்கும் சூழல் உருவாகியுள்ளது. ஒருபுறம் முத்து, மீனா, ஸ்ருதி ஆகியோரிடம் மனோஜ் சிக்கக்கூடிய நிலை இருக்க, மறுபுறம் கனகா மற்றும் அவரது அம்மா தொடர்பான விஷயங்களிலும் அவர் சிக்கிக் கொள்ளும் சூழல் உருவாகிறது.&lt;/p&gt;&lt;p&gt;ரோகிணியை நம்பி அவர் செய்து வரும் செயல்கள் அனைத்தும் தற்போது அவருக்கே எதிராக திரும்பும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக முத்து எடுத்திருக்கும் வீடியோ வீட்டில் காட்டப்பட்டால், மனோஜ் என்ன பதில் சொல்லப் போகிறார் என்பது மிகப்பெரிய கேள்வியாக மாறியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;ரோகிணியின் உண்மை வெளிவருமா? முத்துவின் வீடியோவால் மனோஜின் சீக்ரெட் உடையுமா? இந்த சிக்கலில் இருந்து மனோஜ் எப்படி தப்பிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/manoj-caught-with-rohini-and-krish-at-a-hotel-muthu-records-video-in-siragadikka-aasai-serial-today-1089th-episode-vc75r88"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Bigg Boss Common Man : ஒருத்தர் கூட ரிஜெக்ட் ஆகல... பிக் பாஸ் காமன்மேன் இன்றைய எபிசோடில் செம ட்விஸ்ட்..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/bigg-boss-common-man-episode-03-two-contestants-selected-for-top-50-abinaya-vs-aishwarya-clash-turns-heated-yawyd95</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/bigg-boss-common-man-episode-03-two-contestants-selected-for-top-50-abinaya-vs-aishwarya-clash-turns-heated-yawyd95</guid>
            <pubDate>Tue, 18 Aug 2026 09:22:36 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Bigg Boss Common Man Today Episode : பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சியின் மூன்றாவது எபிசோடில், ஒரு போட்டியாளர் கூட வெளியேற்றப்படவில்லை. அதேபோல் இந்த எபிசோடில் இருவர் செலக்ட் ஆகி உள்ளனர்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m09fv8q3vhfxjh3eg73mx4qd,imgname-bigg-boss--1--1787025007331.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Bigg Boss Common Man Today Episode : பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சியின் மூன்றாவது எபிசோடில், ஒரு போட்டியாளர் கூட வெளியேற்றப்படவில்லை. அதேபோல் இந்த எபிசோடில் இருவர் செலக்ட் ஆகி உள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சியின் 3-வது எபிசோடும் பல்வேறு சவால்கள், சுவாரஸ்யமான அறிமுகங்கள், எதிர்பாராத தருணங்கள் மற்றும் பரபரப்பான வாக்குவாதங்களுடன் தொடர்ந்தது. இந்த எபிசோடில் மேலும் சில போட்டியாளர்கள் தங்களது திறமைகளை நிரூபிக்க முயன்ற நிலையில், இரண்டு பேர் நேரடியாக தேர்வு செய்யப்பட்டனர்.&lt;/p&gt;&lt;p&gt;இன்றைய எபிசோடில் முதலாவதாக வந்த ஃபெரோஸ் கான், தன்னை ஒரு முழுமையான என்டர்டெயின்மென்ட் பேக்கேஜ் என அறிமுகப்படுத்திக் கொண்டார். பணம் சம்பாதிப்பதும் தனது திறமைகளில் ஒன்று என்று கூறினார். தொழில்முனைவோர் மற்றும் பிசினஸ் அட்வைசர் என தன்னை குறிப்பிட்ட அவர், எலான் மஸ்க்கை தனது முன்மாதிரியாகக் கூறினார். ஆனால், அவர் குறிப்பிட்ட நபர் குறித்த போதிய புரிதல் அவருக்கு இருக்கிறதா என நடுவர்கள் கேள்வி எழுப்பினர். மேலும், ஃபெரோஸின் அணுகுமுறை செயற்கையாக இருப்பதாக ஆரி தனது கருத்தை தெரிவித்தார். தொடர்ந்து நடைபெற்ற பலூன் டேப் டாஸ்கை ஃபெரோஸ் வெற்றிகரமாக முடித்தார். இவரது முடிவை நிறுத்தி வைத்துள்ளனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Bigg Boss Common Man : ச்சீ... இதெல்லாம் ஒரு டாஸ்கா? முதல் எபிசோடிலேயே சர்ச்சையில் சிக்கிய பிக் பாஸ் காமன்மேன்..!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அடுத்ததாக இரண்டு குழந்தைகளின் ஒற்றைத் தாயான காமாட்சி வந்தார். இவர் கேப் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். தனது வாழ்க்கையில் சந்தித்த பல்வேறு சிரமங்களைப் பற்றி மனம் திறந்து பேசிய அவர், தனது பேச்சுத் திறமையை வெளிப்படுத்த பிக் பாஸ் போன்ற ஒரு தளம் கிடைக்க வேண்டும் என்ற விருப்பத்தையும் பகிர்ந்து கொண்டார். அவரது தைரியமான அணுகுமுறையும், சுயமாக வாழ்க்கையை எதிர்கொள்ளும் மனப்பான்மையும் நடுவர்களின் கவனத்தை ஈர்த்தது. இவரது முடிவும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது&lt;/p&gt;&lt;p&gt;பின்னர் சந்திரமதி மற்றும் வெங்கடேசன் என இருவர் உள்ளே வந்தனர். தந்தை இல்லாமல் வளர்ந்த தனது குழந்தைப் பருவத்தையும், சிறு வயதிலிருந்தே குடும்பத்திற்காக உழைத்ததையும் சந்திரமதி பகிர்ந்து கொண்டார். அவரது வாழ்க்கைப் பின்னணி உணர்வுபூர்வமானதாக அமைந்ததுடன், வெங்கடேசனுடனான உரையாடலும் கவனம் பெற்றது.&lt;/p&gt;&lt;p&gt;பெரிய கனவுகளுடனும் தெளிவான இலக்குகளுடனும் களமிறங்கிய வெங்கடேசன், தனது தொழில் மற்றும் எதிர்கால திட்டங்களைப் பற்றி பேசினார். பலரது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே தனது நோக்கம் என்றும் அவர் கூறினார். சந்திரமதியுடனான உரையாடலிலும் அவரது தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் வெளிப்பட்டன. அவரது அணுகுமுறை நடுவர்களை கவர்ந்த நிலையில், அவர் அடுத்த கட்டத்திற்கு முன்னேறினார். ஆனால் சந்திரமதியின் முடிவு நிறுத்திவைக்கப்பட்டது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதையடுத்து வந்த ஜார்ஜ் ராஜசெல்வன், 2004-ம் ஆண்டு முதல் கோயம்புத்தூரில் மெடிக்கல் ரெப்ரசென்டேட்டிவாக பணியாற்றி வருவதாக தெரிவித்தார். காமெடி நடிகராக வேண்டும் என்ற தனது கனவுடன் பிக் பாஸ் வாய்ப்பை எதிர்பார்த்து வந்தார். தனது வாழ்க்கை அனுபவங்களையும் நகைச்சுவையையும் கலந்து நடுவர்களையே கலாய்க்கும் அளவுக்கு தனது காமெடி திறமையை வெளிப்படுத்தினார். ரன்னர் பேண்ட் டாஸ்க்கிலும் தனது திறமையை நிரூபித்த அவர், பொழுதுபோக்கு துறையில் தனக்கான இடத்தை உருவாக்க முடியும் என்பதை காட்டினார். இவரது முடிவும் நிறுத்திவைக்கப்பட்டது.&lt;/p&gt;&lt;p&gt;அடுத்ததாக அசோசியேட் டைரக்டராக பணியாற்றி வரும் ஜேசன், பாடல் வரிகள் மற்றும் இசை மீதான தனது ஆர்வத்தைப் பற்றி பேசினார். குடும்பத்திற்கான முக்கியத்துவம், தன்னம்பிக்கை மற்றும் தனது எதிர்கால கனவுகள் குறித்தும் அவர் பகிர்ந்து கொண்டார். மக்களுக்கு நம்பிக்கையை வழங்க வேண்டும் என்றும், நேர்மையுடன் செயல்பட்டு வெற்றியை அடைவது முக்கியம் என்றும் அவர் கூறினார். அவரது தன்னம்பிக்கையும் கருத்துகளும் நடுவர்களை கவர்ந்ததால், ஜேசன் அடுத்த சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டார். இவரை நெக்ஸ்ட் லெவலுக்கு தேர்வு செய்தனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பின்னர் வந்த அபிநயா, பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் என்பதே பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் வருவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று என தெரிவித்தார். கல்வி நிலையங்கள், பணியிடங்கள், பொது இடங்கள் மற்றும் அன்றாட வாழ்க்கை என பல்வேறு சூழல்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்து அவர் தனது கருத்துகளை முன்வைத்தார்.&lt;/p&gt;&lt;p&gt;அப்போது அவருடன் வந்திருந்த மற்றொரு போட்டியாளரான ஐஸ்வர்யா, அபிநயாவின் சில கருத்துகளை கேள்விக்குள்ளாக்கினார். பாதுகாப்பு என்பது பெண்களுக்கு மட்டும் தொடர்புடைய விஷயமாக பார்க்கப்படாமல், ஒட்டுமொத்த மனிதர்களின் பாதுகாப்பாக அணுகப்பட வேண்டும் என்ற கோணத்தையும் அவர் முன்வைத்தார். இதையடுத்து அறையை பகிர்ந்து கொள்வது உள்ளிட்ட விஷயங்களிலும் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகரித்தது.&lt;/p&gt;&lt;p&gt;மக்களின் பாதுகாப்பு குறித்த தனது கருத்துகளை ஐஸ்வர்யா மிகவும் வெளிப்படையாக முன்வைத்தார். அபிநயாவின் அணுகுமுறையுடன் தனக்கு இருக்கும் முரண்பாடுகளையும் அவர் தயக்கமின்றி கூறினார். இருவரும் ஒருவருக்கொருவர் பிடிக்காத விஷயங்களை நேரடியாக சுட்டிக்காட்டியதால், விவாதம் படிப்படியாக தனிப்பட்ட விமர்சனங்களாக மாறியது. தேர்வு நடைபெறும் இடத்தை விட்டு வெளியேறிய பிறகும் இருவருக்கிடையேயான வாக்குவாதம் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்கள் இருவரையும் ஹோல்டில் வைத்துள்ளனர்.&lt;/p&gt;&lt;p&gt;மொத்தத்தில், பிக் பாஸ் காமன்மேன் டாப் 50 தேர்வின் 3-வது எபிசோடில் வெங்கடேசன் மற்றும் ஜேசன் கௌஷி ஆகிய இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பல போட்டியாளர்கள் ஆன் ஹோல்டு பட்டியலில் வைக்கப்பட்ட நிலையில், அபிநயா மற்றும் ஐஸ்வர்யா இடையேயான கருத்து மோதல் எபிசோடின் முக்கிய ஹைலைட்டாக அமைந்தது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/bigg-boss-common-man-episode-03-two-contestants-selected-for-top-50-abinaya-vs-aishwarya-clash-turns-heated-yawyd95"/>
        </item>
        <item>
            <title><![CDATA[karthigai Deepam : கார்த்திக் மீது பொய் வழக்கு... சாமுண்டீஸ்வரியிடம் நேருக்கு நேர் மோதிய ரேவதி!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/karthik-consoles-heartbroken-revathi-in-karthigai-deepam-serial-today-episode-zkmgm08</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/karthik-consoles-heartbroken-revathi-in-karthigai-deepam-serial-today-episode-zkmgm08</guid>
            <pubDate>Fri, 21 Aug 2026 09:16:58 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;karthigai Deepam Serial Today Episode : கார்த்திகை தீபம் சீரியலில் ரேவதியை சந்திக்கும் கார்த்திக், அவரை சமாதானப்படுத்தி சாப்பிட வைக்கிறார். அதன்பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0h6pqp7ne7ek1jkjkdwc4sy,imgname-karthigai-deepam--2--1787283857095.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;karthigai Deepam Serial Today Episode : கார்த்திகை தீபம் சீரியலில் ரேவதியை சந்திக்கும் கார்த்திக், அவரை சமாதானப்படுத்தி சாப்பிட வைக்கிறார். அதன்பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜீ தமிழில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர் கார்த்திகை தீபம். நேற்றைய எபிசோடில் கார்த்திக் சிறையில் இருந்து வெளியேறிய நிலையில், இனி கதையில் என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அந்த வகையில் இன்றைய எபிசோடும் உணர்ச்சிகரமான சம்பவங்களுடன் விறுவிறுப்பாக நகர்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;இன்றைய கதையில் ரேவதி நேரடியாக சாமுண்டீஸ்வரியை சந்திக்கிறாள். கார்த்திக்கைப் பற்றி தவறான புரிதலால் அவர் மீது பொய் வழக்கு பதிவு செய்ததாகக் கூறி, சாமுண்டீஸ்வரியிடம் ரேவதி தனது கோபத்தை வெளிப்படுத்துகிறாள். இதனால் ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்பும் அவள், தனது ஆதங்கத்தை வெளிப்படையாக கூறுகிறாள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Karthigai Deepam : போராட்டத்தை ஒடுக்க முயன்று பல்பு வாங்கிய சாமுண்டீஸ்வரி.. மீடியாவிடம் உண்மையை சொன்ன ரேவதி!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதற்கிடையில், ரேவதிக்கு தலையில் காயம் ஏற்பட்டிருப்பதை அறிந்த கார்த்திக், உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறான். மனைவியின் சிகிச்சை மற்றும் உடல்நிலை குறித்து அக்கறையுடன் கவனித்துக்கொள்ளும் கார்த்திக்கின் செயல்பாடுகள் இந்த எபிசோடில் முக்கியத்துவம் பெறுகின்றன. சிகிச்சை முடிந்த பின்னர் இருவரும் பரமேஸ்வரி பாட்டியின் வீட்டுக்கு செல்கின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;மறுபுறம், கார்த்திக் சிறையில் இருந்து வெளியே வந்த செய்தி சிவனாண்டி மற்றும் சந்திரகலாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கார்த்திக்கை எப்படி மீண்டும் பிரச்சனையில் சிக்க வைப்பது என்பது குறித்து இருவரும் ஆலோசனை நடத்துகின்றனர். அவர்களுக்கு இடையிலான இந்தப் பேச்சு, அடுத்தடுத்த எபிசோடுகளில் புதிய சிக்கல்கள் உருவாகப்போவதற்கான அறிகுறியாக அமைகிறது.&lt;/p&gt;&lt;p&gt;Karthigai Deepam : ரேவதியின் அதிரடி முடிவால் ஆடிப்போன குடும்பம்... கார்த்திக்காக காத்திருக்கும் புதிய சிக்கல்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதற்கிடையே நடந்த சம்பவங்களால் ரேவதி மிகவும் மனமுடைந்து காணப்படுகிறாள். வீட்டில் உணவு சாப்பிடாமல் தனியாக படுத்திருக்கும் அவளை கவனிக்கும் கார்த்திக், உணவை எடுத்துக்கொண்டு சென்று அன்புடன் பேசி சமாதானப்படுத்த முயற்சி செய்கிறான். கணவரின் அக்கறையை உணரும் ரேவதி, இறுதியில் மனம் மாறி உணவை சாப்பிட சம்மதிக்கிறாள்.&lt;/p&gt;&lt;p&gt;கார்த்திக் &ndash; ரேவதி இடையிலான இந்த பாசமான தருணம் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைகிறது. அதே நேரத்தில், சாமுண்டீஸ்வரியை எதிர்த்து ரேவதி தெரிவித்த கோபம் அவரது மனதில் எந்த மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதும் சுவாரஸ்யமாக உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;Karthigai Deepam : வீட்டை அடித்து நொறுக்கிய சாமுண்டீஸ்வரி... பரமேஸ்வரி பாட்டி வீட்டில் கார்த்திக் - ரேவதிக்கு நடந்தது என்ன?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேலும், கார்த்திக் மீண்டும் தங்கள் வழியில் குறுக்கிடுவதைத் தடுக்க சிவனாண்டி மற்றும் சந்திரகலா என்ன திட்டம் தீட்டப் போகிறார்கள்? ரேவதியின் வாழ்க்கையில் அடுத்ததாக என்ன பிரச்சனை உருவாகப் போகிறது? கார்த்திக் &ndash; ரேவதி உறவு எந்த திசையில் செல்லும்? என்ற கேள்விகளுடன் கதை நகர்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;இந்த பரபரப்பான திருப்பங்களுடன் கார்த்திகை தீபம் தொடரின் இன்றைய எபிசோட் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்த சம்பவங்களை தெரிந்துகொள்ள இன்று இரவு 9 மணிக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் தொடரை காணலாம்.&lt;/p&gt;&lt;p&gt;Karthigai Deepam : சந்திரகலாவை பளார் என அறைந்த ரேவதி... துப்பாக்கியால் மிரட்டிய சாமுண்டீஸ்வரி!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/karthik-consoles-heartbroken-revathi-in-karthigai-deepam-serial-today-episode-zkmgm08"/>
        </item>
    </channel>
</rss>
