<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes"?>
<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Mon, 06 Apr 2026 14:36:03 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss/television" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[கேம் சேஞ்சராக மாறிய ராவணன்; அவர் சப்போர்ட் ஜனனிக்கா? குணசேகரனுக்கா? எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/raavanan-support-janani-or-ags-in-ethirneechal-thodargiradhu-serial-today-457th-episode-09kcb9c</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/raavanan-support-janani-or-ags-in-ethirneechal-thodargiradhu-serial-today-457th-episode-09kcb9c</guid>
            <pubDate>Sat, 04 Apr 2026 08:45:14 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரனை சிக்க வைப்பதற்கான வீடியோ ராவணனிடம் இருப்பதால் அவர் ஜனனிக்கு சப்போர்ட் பண்ணுவாரா என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01knb7jvkfcfbreyjrk8cy927e,imgname-ethirneechal-thodargiradhu---2026-04-04t083623.482-1775272291951.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரனை சிக்க வைப்பதற்கான வீடியோ ராவணனிடம் இருப்பதால் அவர் ஜனனிக்கு சப்போர்ட் பண்ணுவாரா என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் கோமாவில் இருந்து மீண்டு வந்துள்ள ஈஸ்வரி பழசை எல்லாம் மறந்ததை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஆதி குணசேகரன், அவரை தனியாக அழைத்துச் சென்று சேலை வாங்கிக் கொடுத்துள்ளார். இதையடுத்து வீட்டுக்கு வந்த ஈஸ்வரி ஜனனியை அழைத்து உனக்கும் சேலை வாங்கி வந்திருப்பதாக சொல்ல, எனக்கு அந்த சேலை வேண்டாம் என காட்டமாக சொல்லும் ஜனனி, என்னால் உங்களைப் போல் பழசை எல்லாம் மறக்க முடியவில்லை என சொல்லி ட்விஸ்ட் கொடுத்துள்ளார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆதி குணசேகரனின் இந்த தந்திரத்தை முடிவுக்கு கொண்டு வர ஜனனிக்கு ஒரு ஆயுதமாக இருப்பது நீதிமன்ற விசாரணை தான். இதுகுறித்து வக்கீல் சாருபாலாவிற்கு போன் போட்டு பேசும் ஜனனி, என்ன செய்தால், ஆதி குணசேகரனை உள்ளே தள்ளலாம் என கேட்க, அதற்கு அவர், ஈஸ்வரி தாக்கப்பட்ட வீடியோ இருந்ததென்றால் அதை நாம் எப்படியாவது கண்டுபிடித்தாக வேண்டும். அதுமட்டும் நமக்கு கிடைத்ததென்றால், இந்த வழக்கை நாம் ரொம்ப ஸ்ட்ராங்க் ஆக நகர்த்திச் செல்லலாம் என கூறுகிறார். இதனால் வீடியோவை கண்டுபிடிக்கும் வேலையில் மீண்டும் இறங்க உள்ளார் ஜனனி.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஈஸ்வரி தன்னை ஆதி குணசேகரன் தாக்கியதை மறந்ததால், இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக அந்த வீடியோ மாறி உள்ளது. அந்த வீடியோ தற்போது ராவணனிடம் தான் இருக்கிறது என்பது ஜனனிக்கு தெரியாது. அதே வேளையில் அவர் ஆதி குணசேகரனுக்கு எதிரான ஆதாரத்துக்காக காத்திருக்கிறார் என்பது ராவணனுக்கு போன் மூலம் தெரியவந்துள்ளது. அவர் மதிவதினி வீட்டுக்கு சென்றபோது ஜனனி, ஆதி குணசேகரனின் அராஜகங்கள் பற்றி பேசியதை எல்லாம் ஒட்டுக் கேட்டுள்ளார் ராவணன். இதனால் அந்த வீடியோவை வைத்து கேம் ஆட பிளான் போட்டுள்ளார் ராவணன்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தன்னுடைய ஆபிஸில் அமர்ந்து ஆதி குணசேகரன், ஈஸ்வரியை தாக்கும் வீடியோவை பார்க்கும் ராவணன், அதனை ஜனனியிடம் கொடுத்துரலாமா இல்லை, குணசேகரனிடம் கொடுத்து தப்பிக்க வைக்கலாமா என தன்னுடைய பிஏ-விடம் கேட்கிறார். இதன்மூலம் இந்த வழக்கில் கேம் சேஞ்சராக மாறி இருக்கிறார் ராவணன். அவர் அநேகமாக ஜனனியிடம் அந்த வீடியோவை கொடுக்க வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் ராவணனின் கண்முன்னே அவருடைய அம்மாவை கொலை செய்த ஆதி குணசேகரனை பழிவாங்க வேண்டும் என்கிற வெறியோடு சுற்றிக் கொண்டிருக்கிறார் ராவணன். அதனால் ஜனனியிடம் கொடுத்து அவரை ஜெயிலுக்கு அனுப்ப வாய்ப்பு உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மறுபுறம் ராவணன் தன்னுடைய கிரிமினல் புத்தியை காட்டினால் அவர் அந்த வீடியோவை ஆதி குணசேகரனிடம் கொடுத்து அவரை இந்த வழக்கில் இருந்து தப்பிக்க வைத்து, அவரை தன் கையாலேயே கொலை செய்ய பிளான் போடவும் வாய்ப்புகள் இருக்கிறது. இதனால் வில்லாதி வில்லன் ராவணன் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது புரியாத புதிராகவே உள்ளது. அந்த வீடியோவை கைப்பற்ற ஜனனி எடுக்கப்போகும் அடுத்தக்கட்ட நகர்வு என்ன? அவருக்கு முன் வீடியோவை கண்டுபிடித்து இந்த கேஸில் இருந்து எஸ்கேப் ஆவாரா ஆதி குணசேகரன்? என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/raavanan-support-janani-or-ags-in-ethirneechal-thodargiradhu-serial-today-457th-episode-09kcb9c"/>
        </item>
        <item>
            <title><![CDATA[திருடன் எங்கே.. சிக்குவானா சேது? -  பணத்திருட்டு விவகாரத்தில் அன்புவின் அதிரடி முடிவு!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/singappenne-promo-april-1-says-the-missing-money-mystery-in-tamil-television-15fbr27</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/singappenne-promo-april-1-says-the-missing-money-mystery-in-tamil-television-15fbr27</guid>
            <pubDate>Wed, 01 Apr 2026 15:14:35 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Singappenne Serial Today Episode Promo: சிங்கப்பெண்ணே' தொடரின் ஏப்ரல் 1 ஆம் தேதிக்கான ப்ரோமோ வீடியோ, கதையில் ஒரு பரபரப்பான திருப்பத்தை முன்னறிவிக்கிறது. சாவித்திரி அக்காவின் பையிலிருந்து காணாமல் போன பணத்தைப் பற்றிய மர்மத்தை மையமாகக் கொண்டுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kn3cd61ytyjt27ags79kn18s,imgname-sun-tv-singappenne-serial-1775008913470.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Singappenne Serial Today Episode Promo: சிங்கப்பெண்ணே' தொடரின் ஏப்ரல் 1 ஆம் தேதிக்கான ப்ரோமோ வீடியோ, கதையில் ஒரு பரபரப்பான திருப்பத்தை முன்னறிவிக்கிறது. சாவித்திரி அக்காவின் பையிலிருந்து காணாமல் போன பணத்தைப் பற்றிய மர்மத்தை மையமாகக் கொண்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சன் டிவியில் ப்ரைம் டைம் தொடராக ஒளிபரப்பாகி வரும் 'சிங்கப்பெண்ணே' சீரியல், தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதனிடையே 'சிங்கப்பெண்ணே' தொடரின் ஏப்ரல் 1 ஆம் தேதிக்கான ப்ரோமோ வீடியோ, கதையில் ஒரு பரபரப்பான திருப்பத்தை முன்னறிவிக்கிறது. சுமார் 31 வினாடிகள் கொண்ட இந்த ப்ரோமோ, சாவித்திரி அக்காவின் பையிலிருந்து காணாமல் போன பணத்தைப் பற்றிய மர்மத்தை மையமாகக் கொண்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அலுவலகத்தில் உள்ள அனைவரும் ஒரு இடத்தில் கூடியிருக்க, சாவித்திரி அக்காவின் பையில் இருந்த பணம் திருடு போனது பற்றி பேச்சு எழுகிறது. இந்தப் பணம் எங்கே போனது என்ற கேள்வி அனைவரிடமும் எழ, சந்தேகம் ஒவ்வொருவர் மீதும் திரும்புகிறது. குறிப்பாக யார் இந்தப் பணத்தை எடுத்திருப்பாரோ என்ற ஐயத்தை அனைவருக்கும் கேள்வியாக எழுப்புகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தன்னைச் சுற்றியுள்ள சதித் திட்டங்களை அறியாத ஆனந்தி, ஒரு போன் காலில் தனது அக்காவிற்கு நடந்த விஷயங்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால், இதற்குப் பதிலளிக்கும் கோகிலா, &quot;துளசி திருந்தி இருப்பாள் என்று நினைத்தால் அது நடக்காத காரியம், அவள் மாறவே மாட்டாள்&quot; என்று மிகவும் வஞ்சகமாகப் பேசுகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ப்ரோமோவின் இறுதியில் அலுவலகத்தில் அனைவரையும் சோதனை செய்ய வேண்டும் என்ற முடிவு எடுக்கப்படுகிறது ஆனால், ஒரு குறிப்பிட்ட நபரை மட்டும் இன்னும் சோதனை செய்யவில்லை என்று அன்பு சுட்டிக்காட்டப்படுவது கதையில் ஒரு எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்துகிறது. யார் என்று பார்த்தால் சேது தான் அந்த நபர். அவனிடம் ஏற்கனவே நிறைய பணம் இருக்கிறது. அலுவலகத்தில் செய்த சதி வேலைக்காக அவனுக்கு அரவிந்த் பணம் கொடுத்து இருக்கிறார். முழுதாக இல்லாமல் ஏற்கனவே ஆனந்திக்கு, சேது மேல் தவறு இருக்குமோ என்ற சந்தேகம் இருக்கிறது. அந்த விஷயம் இப்போது தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நேற்றைய எபிசோடில், ஆனந்தியின் கணவர் அன்பு, தனது மனைவி மீது கொண்டுள்ள ஆழமான காதலையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார். ஆனந்தியின் நற்பண்புகள் தனது தாய்க்கும் குடும்பத்தினருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக, அவர்களை ஒன்றாக வெளியே அழைத்துச் செல்ல சொல்கிறார். இதற்கிடையில், ஆனந்தியை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலையும் துளசி, மிகவும் வஞ்சகமாக நடந்துகொண்டார். பாசம் காட்டுவது போல நடித்து ஆனந்திக்குத் தலை சீவி விட்ட துளசி, ரகசியமாக அவளது முடியைச் சேகரித்து வைத்துக்கொண்டார். இது ஏதோ ஒரு தவறான செயலுக்கு என்பதை உணர்த்தியது. ஆனந்தியின் அக்கா கோகிலா, &quot;பாம்பு கொத்துவது அதன் குணம்&quot; என்று எச்சரித்தது நேற்றைய எபிசோடின் மிக முக்கியமான வசனமாகும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Rsiva kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/singappenne-promo-april-1-says-the-missing-money-mystery-in-tamil-television-15fbr27"/>
        </item>
        <item>
            <title><![CDATA[சிந்தாமணிக்கு எதிராக தேர்தலில் போட்டியிடும் மீனா... வில்லியாக மாறும் விஜயா - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/chinthamani-vs-meena-clash-in-election-siragadikka-aasai-serial-today-968th-episode-2q9seof</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/chinthamani-vs-meena-clash-in-election-siragadikka-aasai-serial-today-968th-episode-2q9seof</guid>
            <pubDate>Thu, 02 Apr 2026 10:03:44 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;சிறகடிக்க ஆசை சீரியலில் பூ வியாபாரிகள் சங்கத்திற்கான எலெக்&zwnj;ஷன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிந்தாமணியை எதிர்த்து மீனா போட்டியிடுகிறார். இதன்பின் என்ன ஆனது என்பதை பார்ப்போம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kn67ata80n96kag47xvdwert,imgname-siragadikka-aasai---2026-04-02t095919.747-1775104256328.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சிறகடிக்க ஆசை சீரியலில் பூ வியாபாரிகள் சங்கத்திற்கான எலெக்&zwnj;ஷன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிந்தாமணியை எதிர்த்து மீனா போட்டியிடுகிறார். இதன்பின் என்ன ஆனது என்பதை பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி, தன்னை தாக்கிய மனோஜ் மற்றும் விஜயா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மகளிர் அமைப்பு ஒன்றில் புகார் அளித்திருந்தார். இதனால் விஜயாவை கைது செய்யும் அளவுக்கு அதிரடி ஆக்&zwnj;ஷனில் இறங்கினார் அந்த பெண், பின்னர் மனோஜை பேசி சமாளித்து அவரை அந்த அதிகாரியை சந்திக்க வைத்து அவரிடம் எல்லா உண்மையையும் எடுத்து கூறிய பின்னரே ரோகிணி பற்றிய உண்மை அவருக்கு தெரியவந்தது. இதனால் ரோகிணியின் பிளான் மொத்தமும் சொதப்பலாக முடிந்திருக்கிறது. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்றைய எபிசோடில் சிந்தாமணியின் வீட்டுக்கு பூ வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த சில கும்பலாக வந்திருந்தனர். அவர்கள் சிந்தாமணியிடம் நமது சங்கத்தில் எலெக்&zwnj;ஷன் வர இருக்கும் விஷயத்தை சொல்கிறார்கள். அதற்கு சிந்தாமணி, இதுவரை நான் கை காட்டும் நபர்களை ஜெயிக்க வைத்திருக்கிறீர்கள். அதேபோல் இந்த தேர்தலிலும் நல்ல ஒரு ஆளை நிப்பாட்டி ஜெயிக்க வைப்போம் என கூறுகிறார். ஆனால் அவர்கள் இந்த தேர்தலில் வேறு யாரும் நிற்க வேண்டாம், நீங்களே போட்டியிடுங்கள் என அவர்கள் சிந்தாமணியிடம் வலியுறுத்துகிறார்கள். முதலில் மறுக்கும் சிந்தாமணி பின்னர் ஓகே சொல்லிவிடுகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மறுபுறம் பூ வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த மேலும் சிலர், மீனாவை சந்திக்க சென்றிருக்கிறார்கள். முத்துவின் கார் ஷெட்டில் வைத்து இந்த சந்திப்பு நடக்கிறது. அப்போது பூ வியாபாரிகள் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு மீனாவை போட்டியிடுமாறு கூறுகிறார்கள். அதற்கு மீனா, தனக்கு இந்த பதவியெல்லாம் வேண்டாம் என மறுக்கிறார். ஆனால் அவர்கள் உங்களை எதிர்த்து சிந்தாமணி தான் போட்டிபோடப் போகிறார் என்று சொன்னதும், அவரை ஒரு கை பார்த்துவிட வேண்டும் என முடிவெடுத்து தேர்தலில் களமிறங்க சம்மதம் தெரிவித்துள்ளார் மீனா. இதனால் முத்துவும் செம ஹாப்பியாக இருக்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மீனா தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்த விஷயம் அறிந்த சிந்தாமணி ஆட்கள், அவரிடம் நேரிலேயே சென்று விஷயத்தை சொல்கிறார்கள். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிந்தாமணி, நீங்க நல்லா பார்த்திருக்க மாட்டீங்க, வேறு மீனாவாக இருக்கும் என கூறுகிறார். ஆனால் அவர்கள் முத்துவின் மனைவி மீனா தான் என்று அழுத்தமாக சொன்னதும், அவளை போட்டியிட விடாமல் தடுக்க முடிவெடுக்கிறார். இதற்காக விஜயாவிடம் போன் போட்டு பேசும் சிந்தாமணி, தங்களிடம் முக்கியமான விஷயம் ஒன்று பேச வேண்டும் என ஒரு ரெஸ்டாரண்டுக்கு அவரை வர வைக்கிறார்,.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதையடுத்து சிந்தாமணியை சந்திக்க விஜயா அந்த ரெஸ்டாரண்டுக்கு சென்ற நிலையில், அங்கு பொக்கே உடன் அமர்ந்திருந்த சிந்தாமணி, உங்க மருமகள் எலெக்&zwnj;ஷன்ல நிற்க போறதுக்கு வாழ்த்துக்கள் என கூறி பொக்கே கொடுக்கிறார். அதுமட்டு்மின்றி அவள் மட்டும் இந்த தேர்தலில் ஜெயித்தால், விஜயா வீடு எங்க இருக்குனு கேட்க மாட்டாங்க, தலைவி மீனா வீடு எங்க இருக்குனு தான் கேட்பார்கள். உங்களையும் தலைவி மீனாவின் மாமியார் என்று தான் அழைப்பார்கள் என சொல்லி ஒரு குண்டை தூக்கிப் போடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதையடுத்து என்ன நடந்தது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/chinthamani-vs-meena-clash-in-election-siragadikka-aasai-serial-today-968th-episode-2q9seof"/>
        </item>
        <item>
            <title><![CDATA[குழந்தை பொசிஷன் கிரிட்டிக்கல்; மருத்துவர் சொன்ன அதிர்ச்சித் தகவல்.. நிலைகுலைந்து போன அன்பு!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/singappenne-serial-today-april-6th-episode-promo-ananthi-health-update-and-legal-trouble-revealed-5yloy52</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/singappenne-serial-today-april-6th-episode-promo-ananthi-health-update-and-legal-trouble-revealed-5yloy52</guid>
            <pubDate>Mon, 06 Apr 2026 12:31:24 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;Singappenne Serial Today April 6th Episode Promo : &lt;/strong&gt;சன் டிவியின் மிகவும் பிரபலமான 'சிங்கப் பெண்ணே' சீரியலின் இன்றைய (ஏப்ரல் 5) எபிசோட்டிற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆனந்தியின் உடல்நிலை குறித்து பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kngmehcje3vk54wsq9x9we42,imgname-sun-tv-serial-today-episode-1775453554066.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;Singappenne Serial Today April 6th Episode Promo : &lt;/strong&gt;சன் டிவியின் மிகவும் பிரபலமான 'சிங்கப் பெண்ணே' சீரியலின் இன்றைய (ஏப்ரல் 5) எபிசோட்டிற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆனந்தியின் உடல்நிலை குறித்து பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சன் டிவியின் மிகவும் பிரபலமான 'சிங்கப் பெண்ணே' சீரியலின் இன்றைய (ஏப்ரல் 5) எபிசோட்டிற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. இந்த ப்ரோமோ கதையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய திருப்பத்தை விளக்குகிறது. வெறும் 32 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ, ரசிகர்களிடையே பெரும் பதற்றத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த ப்ரோமோவில் ஆனந்திக்கு ஏற்பட்ட விபத்தும், அதைத் தொடர்ந்து எழும் சட்டச் சிக்கல்களும் மையமாக உள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;கார்த்திக்கைப் பார்க்கத் துடித்த ரேவதி... அதிர்ச்சியில் மயங்கி விழுந்த கோரம்! பதறியடித்து மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்ற கார்த்திக்!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ப்ரோமோவின் தொடக்கத்தில், அன்புவின் தங்கை யாழினி பெண் காவல்துறை அதிகாரியிடம் மிகவும் ஆவேசமாக. &quot;எங்க அண்ணிக்கு இப்படி ஆனதுக்கு இவதான் மேடம் காரணம், இவளை சும்மா விடாதீங்க, ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டுப் போய் விசாரிங்க என துளசியை காண்பித்து சொல்கிறார்&quot; என்றார். இது ஆனந்தி ஒரு இக்கட்டான சூழலில் சிக்கி இருப்பதைக் காட்டுகிறது. அதே நேரத்தில், ஆனந்தி மருத்துவமனையில் படுகாயமடைந்து சுயநினைவின்றிப் படுக்கையில் இருக்கும் காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன. அவரது தலையில் பலத்த காயமடைந்து கட்டு போடப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;வசூல் வேட்டையில் லீடர்.. மந்தமான ஹேப்பி ராஜ்! முழு பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் இதோ!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆனந்தியின் இந்த நிலையைப் பார்த்து அவரது கணவர் அன்பு மிகுந்த வேதனையடைகிறார். அவர் ஆனந்தியின் அருகில் சென்று, &quot;ஆனந்தி... என்னப் பாரு ஆனந்தி&quot; என்று கதறி அழுவது பார்ப்பவர் மனதை உருக்குவதாக உள்ளது. இந்தச் சூழலில் மருத்துவர் கூறும் தகவல் கதையை மேலும் சீரியஸாக்குகிறது. ஆனந்திக்குத் தலையில் மட்டும் காயம் ஏற்படவில்லை, அவரது வயிற்றிலும் பலத்த அடிபட்டுள்ளது என்று மருத்துவர் கூறுகிறார். மேலும், ஆனந்தி கர்ப்பமாக இருப்பதால், குழந்தையின் நிலையும் மிகவும் கிரிட்டிக்கலாக இருப்பதாக மருத்துவர் எச்சரிக்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆனந்தியின் உயிருக்கு ஆபத்து இல்லை என்றாலும் கருவில் இருக்கும் குழந்தையின் நிலை என என்று முனைப் போராட்டமாக இந்தக் கதை நகர்கிறது. துளசி கைது செய்யப்படுவாரா? மருத்துவர் சொன்னது போல குழந்தைக்கு ஏதும் பாதிப்பு ஏற்படுமா? போன்ற கேள்விகளுக்கு இன்றைய எபிசோடில் விடை கிடைக்கும். இந்த விறுவிறுப்பான எபிசோட் இன்று இரவு 9:30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Rsiva kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/singappenne-serial-today-april-6th-episode-promo-ananthi-health-update-and-legal-trouble-revealed-5yloy52"/>
        </item>
        <item>
            <title><![CDATA[அதிக TRP ரேட்டிங் பெற்ற டாப் 10 தமிழ் சீரியல்கள் என்னென்ன?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/webstories/television/annam-overtake-siragadikka-aasai-here-this-week-top-10-tamil-serial-trp-rating-99p9gio</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/webstories/television/annam-overtake-siragadikka-aasai-here-this-week-top-10-tamil-serial-trp-rating-99p9gio</guid>
            <pubDate>Thu, 02 Apr 2026 15:11:35 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;சின்னத்திரை சீரியல்களில் அதிக டிஆர்பி ரேட்டிங்கை பெற்ற டாப் 10 தமிழ் சீரியல்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் என்னென்ன சீரியல்கள் இடம்பெற்றுள்ளது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kn6qz36cj15ps30sce4qb2pn,imgname-serial-trp-1775121697995.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/webstories/television/annam-overtake-siragadikka-aasai-here-this-week-top-10-tamil-serial-trp-rating-99p9gio"/>
        </item>
        <item>
            <title><![CDATA[தேர்தலில் மீனாவை டம்மி பீஸ் ஆக்க சிந்தாமணி கையிலெடுக்கும் ஆயுதம் - சிறகடிக்க ஆசை சீரியல் ட்விஸ்ட்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/chinthamani-got-more-support-than-meena-in-siragadikka-aasai-serial-today-970th-episode-highlights-aa12dcr</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/chinthamani-got-more-support-than-meena-in-siragadikka-aasai-serial-today-970th-episode-highlights-aa12dcr</guid>
            <pubDate>Sat, 04 Apr 2026 09:50:28 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;சிறகடிக்க ஆசை சீரியலில் சிந்தாமணி தேர்தலில் மீனாவை தோற்கடிக்க, இலவசங்களை வாரி வழங்கி, நிர்வாகிகளை தன் பக்கம் இழுத்துள்ளார். அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01knbbbv5r2f5kck25mswsxwg4,imgname-siragadikka-aasai---2026-04-04t094614.619-1775276256440.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சிறகடிக்க ஆசை சீரியலில் சிந்தாமணி தேர்தலில் மீனாவை தோற்கடிக்க, இலவசங்களை வாரி வழங்கி, நிர்வாகிகளை தன் பக்கம் இழுத்துள்ளார். அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில், பூ வியாபாரிகள் சங்க தேர்தலில் சிந்தாமணியை எதிர்த்து போட்டியிடும் மீனா, பிரச்சாரத்திற்காக நோட்டீஸ் அடித்து அதை பூ வியாபாரிகள் அனைவரிடமும் நேரில் சென்று கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் சிந்தாமணி தன்னுடைய காரில் வந்து இறங்குகிறார். அவர் தன்னுடைய ஆட்கள் மூலம் பெட்டி பெட்டியாக துணிகளை எடுத்து வந்து பூ வியாபாரிகளுக்கு கொடுக்கிறார். அவர்களும் இலவசத்தை பார்த்த உடனே, மீனா கொடுத்த நோட்டீசை கீழே போட்டுவிட்டு சிந்தாமணியிடம் சென்றுவிடுகிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதைப்பார்த்த மீனா மிகவும் கவலைப்படுகிறார். என்னடா நம்ம இவ்வளவு பாடுபட்டு, நோட்டீஸ் கொடுத்தால், அதைப் படிக்காமல் இவங்க இப்படி இலவசத்துக்காக அலையுறாங்களே என கவலைப்படுகிறார். இதையடுத்து ஸ்ருதியின் ரெஸ்டாரண்டுக்கு செல்லும் மீனா, அடுத்ததாக என்ன செய்யலாம் என யோசிக்கிறார். நம்மளும் மக்களுக்கு கொடுக்கணும், ஆனால் இதுபோன்ற இலவசங்கள் அல்லாமல், அவர்களுக்கு மிகவும் பயனுள்ளவற்றை கொடுக்க வேண்டும் என முடிவெடுக்கிறார்கள். அப்போது அங்கு இருக்கும் ஸ்வேதா ஒரு ஐடியா கொடுக்க, ஸ்ருதியும் தன் பங்கிற்கு ஒரு ஐடியா தருகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நான் எங்கவீட்டு பக்கத்தில் இருக்கும் பிள்ளைகளுக்கெல்லாம் டியூசன் எடுக்கிறேன். உங்க சங்கத்தில் இருப்பவர்களின் பிள்ளைகளுக்கும் டியூசன் ஃப்ரீயாவே எடுக்குறேன் என வாக்குறுதி கொடுக்கிறார் ஸ்வேதா. அதேபோல் ஸ்ருதியும், நான் 3 மாசத்துக்கு ஒருமுறை இலவசமாக மருத்துவ முகாம் நடத்துகிறேன். உங்க சங்கத்தில் இருப்பவர்களின் குழந்தைகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்க உதவுகிறேன் என கூறுகிறார். பூ வியாபாரிகள் சங்கத்தில் இருப்பவர்களிடம் இதுமாதிரி சொல்லுங்க, அப்போ தான் உங்களுக்கு அவர்கள் மத்தியில் அதிகப்படியான ஆதரவு கிடைக்கும் என ரவி கூறுகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மீனாவுக்கும் இந்த ஐடியா பிடித்துப் போக, அவரும் சங்கத்தினரிடம் சென்று தான் பதவிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்வேன் என்று சொல்லி பிரச்சாரம் செய்கிறார். அவரின் வாக்குறுதிகளை கேட்டதும் ஏராளமானோர் மீனாவுக்கு சப்போர்ட் பண்ண முன் வருகிறார்கள். இந்த விஷயம் எப்படியோ சிந்தாமணிக்கு தெரியவருகிறது. இதையடுத்து பணத்தை எடுத்து தன்னுடைய ஆட்களிடம் கொடுத்து, அந்த மீனா இந்த எலெக்&zwnj;ஷன்லயே நிற்க கூடாதுனு சொல்கிறார். அவர் மீனாவுக்கு எதிராக சதி செய்யும் விஷயத்தை எல்லாம் ரேகா பார்த்துவிடுகிறார். அவர் தன் அம்மாவிடம் சென்று சண்டை போடுகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நீ இந்த எலெக்&zwnj;ஷன்ல நிற்க கூடாது என சொல்கிறார். ஆனால் அதையெல்லாம் காது கொடுத்து கேட்காத சிந்தாமணி, இது என்னோட கெளரவ பிரச்சனை அதனால நான் கண்டிப்பா இந்த தேர்தலில் போட்டியிடுவேன் என கூறுகிறார். உன்னையெல்லாம் திருத்தவே முடியாது, நீ கண்டிப்பா இந்த எலெக்&zwnj;ஷன்ல ஜெயிக்க மாட்ட என சொல்லிவிட்டு ரேகா அங்கிருந்து கிளம்புகிறார். மீனாவுக்கு ஆதரவு பெருகுவதால் சிந்தாமணிக்கு பயம்வர ஆரம்பித்துவிட்டது. இதனால் மீனாவை இந்த தேர்தலில் நிற்கவிடக் கூடாது என பிளான் போடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/chinthamani-got-more-support-than-meena-in-siragadikka-aasai-serial-today-970th-episode-highlights-aa12dcr"/>
        </item>
        <item>
            <title><![CDATA[பீச்சில் ரொமான்ஸ் பண்ணும் சோழன் - நிலா... டைவர்ஸ் முடிவு என்ன ஆச்சு? அய்யனார் துணை சீரியல் அப்டேட்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/chozhan-nila-romance-in-beach-ayyanar-thunai-serial-today-362nd-episode-azw82bv</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/chozhan-nila-romance-in-beach-ayyanar-thunai-serial-today-362nd-episode-azw82bv</guid>
            <pubDate>Wed, 01 Apr 2026 08:57:57 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;அய்யனார் துணை சீரியலில் சோழனும், நிலாவும் ஒரு தம்பதி உடன் ட்ரிப் சென்றிருந்த நிலையில், அது முடிந்து வீடு திரும்பி உள்ளனர். அதன் பின் என்ன நடந்தது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kn3h6wheg3waf9b9gf4bydxh,imgname-ayyanar-thunai--84--1775013949998.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;அய்யனார் துணை சீரியலில் சோழனும், நிலாவும் ஒரு தம்பதி உடன் ட்ரிப் சென்றிருந்த நிலையில், அது முடிந்து வீடு திரும்பி உள்ளனர். அதன் பின் என்ன நடந்தது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அய்யனார் துணை சீரியலின் இன்றைய எபிசோடில், ட்ரிப் முடிந்து சோழனும், நிலாவும் மீண்டும் சென்னைக்கு வருகிறார்கள். வரும் போது இருவரும் ஜாலியாக பேசிக் கொண்டும், பாட்டு பாடிக் கொண்டு வருகிறார்கள். முதலில் ட்ரிப் வந்த தாத்தா, பாட்டி இருவரையும் அவர்கள் வீட்டில் டிராப் பண்ணுகிறார்கள். அவர்கள் இருவரும், நிலாவையும், சோழனையும் வீட்டுக்குள் அழைத்து சென்று, ஒரு தாம்பூலத்தில் பழம், பூ, பணம் என எல்லாம் வைத்து கொடுக்கிறார்கள். அடுத்த முறை வரும்போது இருவரும் எங்கள் வீட்டில் சாப்பிட வர வேண்டும் என கண்டிஷன் போட்டு இருவரையும் அனுப்பி வைக்கிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதன்பின்னர் நிலாவும், சோழனும் காரில் கிளம்பி வீட்டுக்கு செல்லும் வழியில், சோழனிடம் பேசும் நிலா, இப்போ நேரா வீட்டுக்கு தான் போறீங்களா என கேட்க, ஆமா என சொல்கிறார் சோழன். உடனே நிலா, நம்ம வேற எங்கயாச்சும் போவோமா என கேட்கிறார். அதற்கு சோழன், என்னங்க மறுபடியும் ட்ரிப் போலாம்னு சொல்றீங்களா என கேட்க, இல்ல, பீச்சுக்கு போலாமா என நிலா கேட்டதும், சரிவாங்க போவோம் என சொல்லி, நிலாவை அழைத்துக் கொண்டு பீச்சுக்கு செல்கிறார் சோழன். அங்கு இருவரும் ஜோடியாக சென்று கடலின் அழகை ரசித்தபடி அமர்ந்திருக்கிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மறுபுறம் அனீஸ் சேரனின் வீட்டுக்கு வருகிறார். அப்போது வீட்டின் வெளியே அமர்ந்திருக்கும் நடேசன், அனீஸை அழைத்து, என்னடா பிரச்சனையெல்லாம் முடிஞ்சிருச்சா என கேட்கிறார். ஆமா முடிஞ்சிருச்சு என சொல்கிறார் அனீஸ். அதற்கு நடேசன், அவங்க எங்கயாச்சும் இங்க இருக்க போறாங்க, பார்த்து சூதானமா இரு என சொல்ல, இல்லை அவங்கெல்லாம் ஊருக்கு போயிட்டாங்க. நான் தான் 10 நாள்ல அழைச்சிட்டு வர்றேன்னு சொல்லி சமாளிச்சுட்டேன் என சொல்கிறார். என்னது 10 நாள்ல அழைச்சிட்டு போறியா என நடேசன் கேட்க, இல்ல அதற்குள் ஏதாச்சும் பண்ணனும் என சொல்கிறார் அனீஸ்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உன் தங்கச்சிக்கும் சேரனை பிடிச்சிருக்கு, சேரனுக்கும் உன் தங்கச்சியை புடிச்சிருக்கு, உனக்கும் எந்த பிரச்சனையும் இல்ல, அப்புறம் என்ன சட்டுபுட்டுனு கல்யாணத்தை முடிச்சிர வேண்டியதுதானா. கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் எவன் வந்தாலும் நம்ம போலீஸை வைத்து சமாளிச்சிக்கலாம். கல்யாணத்துக்கு அப்புறம் போலீஸ் பொம்பள புள்ளைக்கு தான் சப்போர்ட் பண்ணும். நீ கவலைப்படாத, நீக்கிரம் கல்யாணம் பண்ற வேலையைப் பாரு என சொல்கிறார். நானும் போய் சேரன் கிட்ட இது சம்பந்தமா பேசுறேன் என சொல்லிவிட்டு வீட்டுக்குள் செல்கிறார் அனீஸ்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதன்பின்னர் சோழனையும் நிலாவையும் காட்டுகிறார்கள். பீச்சில் ஜோடியாக வலம் வருகிறார்கள். அப்போது தண்ணீரில் விளையாட ஆசைப்படுகிறார் நிலா. சோழன் நானும் வர்றேன்னு சொல்லி, ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு ஜாலியாக தண்ணீரில் விளையாடுகிறார்கள். அதன்பின்னர் இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசுகிறார்கள். அப்போது சோழனிடம் பேசும் நிலா, நீ பெரிய ஆளா வரணும், நீ ஏதாச்சும் சாதிக்கணும்னு அட்வைஸ் மழை பொழிகிறார். என்னங்க என்னைய விட்டு போகப் போறீங்களா, அதுக்காக தான் என்னிடம் அட்வைஸ் பண்ணுறீங்களா என சோழன் கேட்க, அதற்கு நிலா, நான் உன்னைய விட்டுலாம் போக மாட்டேன்.&lt;/p&gt;&lt;p&gt;நீ எனக்காக எவ்வளவோ பண்ணீருக்க, அதுக்காக நான் உனக்கு ஏதாச்சும் பண்ணனும்ல என சொல்ல, அதற்கு சோழன், நீ என்கூடவே இருந்தா அதுவே எனக்கு போதும் என சொல்கிறார். உனக்கு என்ன வேண்டுமானாலும் கேளு நான் தர்றேன் என நிலா சோழனிடம் கேட்க. இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. சோழன் என்ன கேட்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/chozhan-nila-romance-in-beach-ayyanar-thunai-serial-today-362nd-episode-azw82bv"/>
        </item>
        <item>
            <title><![CDATA[கோமதி உடல்நிலை பற்றி டாக்டர் சொன்ன அதிர்ச்சி தகவல்; கதறி அழுத பாண்டியன் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/pandian-cried-after-knows-gomathi-health-condition-in-pandian-stores-2-serial-today-755th-episode-c86qttf</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/pandian-cried-after-knows-gomathi-health-condition-in-pandian-stores-2-serial-today-755th-episode-c86qttf</guid>
            <pubDate>Wed, 01 Apr 2026 09:40:49 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கோமதி மயங்கி விழுந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் உடல்நிலை பற்றி கேள்விப்பட்டதும் பாண்டியன் கதறி அழுதுள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kn3kkssmeb02bchred13vgnb,imgname-pandian-stores-2---2026-04-01t093553.858-1775016470324.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கோமதி மயங்கி விழுந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் உடல்நிலை பற்றி கேள்விப்பட்டதும் பாண்டியன் கதறி அழுதுள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கோமதி வீட்டில் கிச்சனில் வேலை பார்க்கும் போது ஸ்டூலில் ஏறி பொடி எடுக்க முயன்றபோது அவருக்கு மயக்கம் ஏற்பட்டு தவறிவிழுகிறார். அப்போது என்னங்க என அழைத்தும் அவர் மீதுள்ள கோபத்தால், கேட்காதபடி கிளம்பி கடைக்கு சென்றுவிடுகிறார் பாண்டியன். இதையடுத்து சரவணன் வீட்டுக்கு வந்த பின்னர் தான் கோமதி மயங்கி கிடப்பதை பார்க்கிறார். பின்னர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கிறார். விஷயம் தெரிந்ததும் பாண்டியனும் கடையை அடைத்துவிட்டு ஆஸ்பத்திரிக்கு விரைகிறார். இதன் பின் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மருத்துவமனையில் கோமதியை பரிசோதித்த டாக்டர் வெளியே வந்து, அவங்களுக்கு இந்த அளவுக்கு பிரசர், பிபி எல்லாம் கீழே போயிருக்கு, நீங்க கவனிக்கவே இல்லையா? அவங்க மாத்திரை ரெகுலரா சாப்பிடுறாங்களா இல்லையா? ஏன் நீங்க யாருமே கவனிக்கல என கேட்கிறார். அதுமட்டுமில்லாமல் அவங்க எவ்வளவு நேரமா மயங்கி கிடந்தாங்க என கேட்கிறார். அதற்கும் பாண்டியனிடம் பதில் இல்லை. இன்னும் கோமதிக்கு மயக்கம் தெளியவில்லை என டாக்டர் சொல்லிவிடுகிறார். அதுமட்டுமின்றி அவரை உள்ளே சென்று பார்க்கவும் அனுமதிக்க மறுக்கிறார்கள். இதனால் பாண்டியன் என்ன செய்வதென்றே தெரியாமல், அழுதுகொண்டே அமர்ந்திருக்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதன்பின்னர் பாண்டியனை சமாதானப்படுத்தும் மீனா, அவருக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார். அதேபோல் வீட்டிலும் கோமதி மயக்கம் போட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள விஷயம் தெரிந்ததும், அரசி, காந்திமதி, ராஜி என எல்லோரும் பதறிப்போய் அழுகிறார்கள். இதையடுத்து ஆஸ்பத்தியில் இருக்கும் பாண்டியனிடம் வந்து பேசும் நர்ஸ், ரெண்டு ரெண்டுபேரா போய் பார்க்கலாம் என சொல்கிறார். முதலில் சரவணனும், பாண்டியனும் உள்ளே செல்கிறார்கள். உள்ளே போனதும் பாண்டியன், கோமதி... கோமதி என அழைக்கிறார். அவர் கண்விழிக்காததால் கதறி அழுகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதன்பின்னர் டாக்டர் வந்து செக் பண்ணுகிறார். சிறிது நேரத்தில் மீனாவும், கதிரும் சென்று பார்க்கிறார்கள். அப்போது மீனாவுக்கு போன் போடும் செந்தில், நாங்களும் வந்து பார்க்கலாமா என கேட்க, அதற்கு மீனா, இல்ல இப்போ இங்க யாரும் வர வேண்டாம். நிறைய பேர் இருக்கக் கூடாதுன்னு டாக்டர் சொல்லிருக்காங்க. அதனால் யாரும் வராதீங்க என சொல்லிவிடுகிறார். கொஞ்ச நேரத்தில், கதிரும், மீனாவும் சரவணிடம் நீங்க பாண்டியனை வீட்டுக்கு அழைச்சிட்டு போங்க என சொல்கிறார்கள். அதற்கு பாண்டியன் நான் இங்கேயே இருக்கேன் என சொல்கிறார். அதற்கு மீனா, நீங்க ரொம்ப டயர்டா இருக்கீங்க, வீட்டுக்கு போங்கனு சொல்லி அனுப்பி வைக்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பாண்டியன் வீட்டுக்கு வந்த பின்னர் யாரிடமும் எதுவும் பேசாமல் ரூமுக்குள் சென்றுவிடுகிறார். அப்போது ரூமில் தனியாக உட்கார்ந்து அழுதுகொண்டிருக்கிறார். கோமதி அழைத்தபோது சென்று பார்த்திருந்தால், இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது என நினைத்து கண்ணீர் சிந்துகிறார். நாம தான் தப்பு பண்ணிட்டோம், அவ நமக்காக எவ்வளவோ பண்ணீருக்கா, அதையெல்லாம் கொஞ்சம் கூட நினைச்சு பார்க்காம இப்படி பண்ணிட்டோமே என குற்ற உணர்ச்சியால் குமுறுகிறார் பாண்டியன். அதன்பின் உள்ளே வரும் சரவணன், அம்மா சரியாகிடுவாங்க, என சொல்லி அட்வைஸ் பண்ணுகிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/pandian-cried-after-knows-gomathi-health-condition-in-pandian-stores-2-serial-today-755th-episode-c86qttf"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஈஸ்வரி உடன் அவுட்டிங் சென்ற குணசேகரன்.... வயிற்றெரிச்சலில் ஜனனி எடுக்கும் முடிவு - எதிர்நீச்சல் தொடர்கிறது]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/aadhi-gunasekaran-outing-with-eshwari-in-ethirneechal-thodargiradhu-serial-today-455th-episode-esegns6</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/aadhi-gunasekaran-outing-with-eshwari-in-ethirneechal-thodargiradhu-serial-today-455th-episode-esegns6</guid>
            <pubDate>Thu, 02 Apr 2026 09:00:01 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஈஸ்வரி மெமரி லாஸ் ஆனதை பயன்படுத்தி அவருடன் நெருங்கிப் பழக ஆரம்பித்துள்ளார் ஆதி குணசேகரன். அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kn63p96hvanpqdk3nq674sfj,imgname-ethirneechal-thodargiradhu---2026-04-02t085357.616-1775100437713.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஈஸ்வரி மெமரி லாஸ் ஆனதை பயன்படுத்தி அவருடன் நெருங்கிப் பழக ஆரம்பித்துள்ளார் ஆதி குணசேகரன். அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் கோமாவில் இருந்த ஈஸ்வரி கண்விழித்து வந்தால் ஆதி குணசேகரன் கதை காலி என அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத விதமாக ஈஸ்வரிக்கு மெமரி லாஸ் ஆகி உள்ளது. அவர் குணமாகிவிட்டாலும் அவருக்கு கடந்த 3 ஆண்டுகள் என்ன நடந்தது என்பது சுத்தமாக நினைவில் இல்லை. தன் மனைவிக்கு நினைவுகள் மறந்து போனதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் ஆதி குணசேகரன், அவருடன் நெருங்கிப் பழகி வருகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஈஸ்வரி தன் அருகில் வந்து படுப்பார் என எதிர்பார்த்திருந்த தர்ஷினிக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் விதமாக அவர் ஆதி குணசேகரன் அருகிலேயே படுத்து தூங்கி இருக்கிறார். இதைப்பார்த்து ஷாக் ஆன தர்ஷினி, இரவில் பார்கவி மற்றும் ஜனனியிடம் புலம்பி இருக்கிறார். பின்னர் மறுநாள் காலையில் எழுந்ததும் ஈஸ்வரி கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டிருக்க, அவரை அழைக்கும் ஆதி குணசேகரன், அவரை வெளியே போகணும் கிளம்பி வா என அழைக்கிறார். இதைக்கேட்டதும் அங்கிருந்த விசாலாட்சியே ஷாக் ஆகிறார். பின்னர் ரெடியாகி வந்து ஆதி குணசேகரன் உடன் காரில் செல்கிறார் ஈஸ்வரி.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதையடுத்து மாடியில் இருந்து இறங்கி வந்த ஜனனி, அக்காவை எங்கே என விசாலாட்சியிடம் கேட்க, அவர் நடந்ததை கூறுகிறார். இதைக்கேட்டதும் ஷாக் ஆன ஜனனி, எல்லாத்தையும் பண்ணிட்டு, நல்லவர் வேஷம் போடுறாரா என குமுறுகிறார். பின்னர் மாடிக்கு சென்று மதிவதினிக்கு போன் போட்டு பேசுகிறார் ஜனனி. இந்த வீட்டில் குணசேகரன் செய்யும் அராஜகம் எல்லைமீறி செல்கிறது என வீட்டில் நடந்தவற்றையெல்லாம் கூறி கண்ணீர் சிந்துகிறார். அதற்கு மதிவதினி, ஃபீல் பண்ணாதீங்க ஜனனி, அந்த டிராமா எல்லாம் ரொம்ப நாளைக்கு நிலைக்காது எனக்கூறி அவரை கூல்டவுன் ஆக்குறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிறிது நேரத்தில் வீட்டில் யாரோ வந்திருக்கும் சத்தம் கேட்டதும், போனை கட் பண்ணிவிட்டு கீழே சென்று பார்க்கிறார் மதிவதினி. அப்போது அவரின் கணவர் ராவணன் ஹாலில் நின்று கொண்டிருக்கிறார். அப்போது அவரிடம் சென்று நீ எதுக்கு இங்க வந்த என கேட்கிறார் மதி. அதற்கு அவர், நான் என் மகளை பார்க்க வந்தேன் என கூறுகிறார். அதுக்காக வீட்டுக்கே வருவீங்களா என திட்டுகிறார் மதிவதினி. இதன்பின்னர் அவர் மகள் வந்ததும் இருவரும் சண்டை போடுவதை நிறுத்திவிடுகிறார்கள். இந்த ராவணன் தான் தன்னை ஆலிவரை வைத்து கடத்தினான் என்கிற உண்மை தெரிந்தால் மதிவதினி என்ன ஆக்&zwnj;ஷன் எடுக்கப்போகிறாரோ என்பதே மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மறுபுறம் வீட்டில் ஆதி குணசேகரனும் ஈஸ்வரியும் இல்லாத நேரத்தில் வக்கீல் வருகிறார். அவரை ஹாலில் அமர வைத்து கதிர், ஞானம், விசாலாட்சி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது அவர், உங்க அண்ணன் தொடர்ந்து இந்த வீட்டுல இருக்கப் போறாரா இல்லேனா ஜெயிலுக்கு போகப் போறாரா அப்படிங்குறது எல்லாம் உங்க வீட்டு பெண்கள் கையில் தான் இருக்கிறது என கூறுகிறார் வக்கீல். இதனால் பெண்கள் என்ன முடிவு எடுக்கப்போகிறார்கள் என்பது உச்சக்கட்ட சஸ்பென்ஸாக இருக்கிறது. இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதன்பின் என்ன நடந்தது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/aadhi-gunasekaran-outing-with-eshwari-in-ethirneechal-thodargiradhu-serial-today-455th-episode-esegns6"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஈஸ்வரி உடன் சண்டைபோடும் ஜனனி... வெடவெடத்துப் போன குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/janani-fight-with-eshwari-in-ethirneechal-thodargiradhu-serial-today-456th-episode-ga9526n</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/janani-fight-with-eshwari-in-ethirneechal-thodargiradhu-serial-today-456th-episode-ga9526n</guid>
            <pubDate>Fri, 03 Apr 2026 10:13:23 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன் உடன் வெளியே சென்று வந்த ஈஸ்வரியிடம் ஜனனி சண்டைபோட்டு இருக்கிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kn8t8at592va0cc9wrcsz759,imgname-ethirneechal-thodargiradhu---2026-04-03t100653.122-1775191206725.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன் உடன் வெளியே சென்று வந்த ஈஸ்வரியிடம் ஜனனி சண்டைபோட்டு இருக்கிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன், ஈஸ்வரிக்கு மெமரி லாஸ் ஆனதை பயன்படுத்தி, அவரை தன் வழிக்கு கொண்டுவர, அளவுகடந்த பாசத்தைக் கொட்டி வருகிறார். அவரால் தான் கோமா நிலைக்கு சென்றோம் என்கிற உண்மை அறியாத ஈஸ்வரி, ஆதி குணசேகரனிடம் படிப்படியாக நெருக்கம் காட்டத் தொடங்கி இருக்கிறார். இதையெல்லாம் பார்த்து ஜனனி, தர்ஷினி, ரேணுகா, நந்தினி ஆகியோர் கடும் கோபம் கொள்கிறார்கள். இதனிடையே ஆதி குணசேகரனுக்கு எதிரான வழக்கும் விசாரணைக்கு வர இருக்கிறது. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆதி குணசேகரன் வீட்டில் இருந்து வெளியே சென்றதும், எண்ட்ரி கொடுக்கும் வக்கீல், அனைவரையும் அழைத்து பேசுகிறார். ஆதி குணசேகரன் மீதான வழக்கு விசாரணைக்கு வர உள்ளதாகவும், அவருக்கு எதிராக ஈஸ்வரி சாட்சி சொல்ல முடியாது, அவங்களுக்கு பழசு எல்லாம் மறந்துவிட்டதால், அவர் குணசேகரனுக்கு ஆதரவாக தான் சாட்சி சொல்வார் என கூறுகிறார். அப்போ நாங்களும் அவருடன் சேர்ந்து பொய் சாட்சி சொல்ல வேண்டுமா என ஜனனி கேட்க, வாயடைத்துப் போகிறார் வக்கீல். உங்க குடும்பம் நல்லா இருக்கணும்னு தான் நான் இதையெல்லாம் சொன்னேன் என கூறிவிட்டு செல்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆதி குணசேகரனுக்கு ஆதரவாக சாட்சி சொல்லுமாறு வீட்டில் உள்ள பெண்களிடம் பேசுகிறார் ஞானம். எங்க அண்ணன் செஞ்சது தப்பாவே இருக்கட்டும், அதை பணத்தாலயோ இல்ல சொத்தாலயோ அடைக்கணும்னா சொல்லுங்க, அதையும் நாங்க பண்றோம் என கூறுகிறார். இதைக்கேட்டு டென்ஷன் ஆன ஜனனி, இவ்வளவு தப்பையும் பண்ணிட்டு, இப்போ எல்லாத்தையும் சமநிலைக்கு கொண்டுவர முயற்சி பண்றீங்களா என கேட்கிறார். பின்னர் பேசும் கதிர், சக்தியிடம் அண்ணனை உன்னால மன்னிக்க முடியாதா என கேட்கிறார். அதற்கு அவர், நான் மன்னிச்சிருவேன், ஆனால் இந்த பிள்ளையோட அப்பனை இதே வீட்டுல வச்சு தான அடிச்சீங்க. பார்கவி தான் அதை மறந்திருமா, மன்னிச்சிருமா என கேட்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அந்த நேரம் பார்த்து வெளியே சென்றிருந்த குணசேகரனும், ஈஸ்வரியும் வீட்டுக்கு திரும்புகிறார்கள். வீட்டில் உள்ள அனைவருக்கும் புது டிரெஸ் வாங்கி வந்திருக்கிறார். அதை ஒவ்வொருவராக அழைத்து கொடுக்கிறார் ஈஸ்வரி. அப்போது ஜனனியிடம் இந்த உனக்கான டிரெஸ் என ஈஸ்வரி கொடுக்க, அதை வாங்க மறுக்கிறார் ஜனனி. ஏன் வாங்க மாட்டேங்குற என ஈஸ்வரி கேட்க, அக்கா ப்ளீஸ் என்னால உங்கள மாதிரி எல்லாத்தையும் மறந்துட்டு இயல்பாக நடிக்க முடியாது என சொல்கிறார். அதற்கு ஈஸ்வரி உனக்கு என்மீது ஏதாவது கோபம் இருக்கிறதா என கேட்க, ஜனனியும் ஆமாம் என சொல்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உங்க மேல நிறைய கோபம், நிறைய ஆதங்கம் இருக்கு. இந்த வீட்டுல இவ்வளவு நடந்ததுக்கு அப்புறம் என்னால இயல்பாக இருக்க முடியவில்லை. நீங்க வேண்டுமானால் எல்லாத்தையும் மறந்திருக்கலாம். என்னால அப்படி இருக்க முடியாது என ஜனனி சொன்னதும், எனக்கு ஒன்னுமே புரியல என கூறும் ஈஸ்வரி, நீ இப்படி பேசுவதால் என் மனசெல்லாம் படபடனு அடிக்குது என சொல்கிறார். தயவு செஞ்சு என்ன நடந்துச்சுனு சொல்லு என கேட்கிறார் ஈஸ்வரி. அவரிடம் ஆதி குணசேகரன் செய்த சூழ்ச்சிகளை எல்லாம் ஜனனி சொல்வாரா? இல்லையா? என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/janani-fight-with-eshwari-in-ethirneechal-thodargiradhu-serial-today-456th-episode-ga9526n"/>
        </item>
        <item>
            <title><![CDATA[காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பாண்டியன்; அன்பால் ஒன்றிணைந்த கோமதி அண்ட் பாண்டியன்: Pandian Stores 2 சீரியலில் மலரும் க்யூட் ரொமான்ஸ்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/pandian-stores-2-serial-this-week-6th-to-11th-april-2026-promo-pandian-and-gomathi-emotional-reunion-scene-in-tamil-lvzmgz1</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/pandian-stores-2-serial-this-week-6th-to-11th-april-2026-promo-pandian-and-gomathi-emotional-reunion-scene-in-tamil-lvzmgz1</guid>
            <pubDate>Sun, 05 Apr 2026 13:09:31 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Pandian Stores 2 Serial This Week Promo Video : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இந்த வாரம் 6ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரையிலான எபிசோடிற்கான புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kne55cty36ka41t0eddwhmgh,imgname-gomathi-acting-1775370416990.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Pandian Stores 2 Serial This Week Promo Video : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இந்த வாரம் 6ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரையிலான எபிசோடிற்கான புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கதிர் மற்றும் ராஜீக்கு தனது தனக்கு தெரியாமல் திருமணம் செய்து வைத்தது தெரிய வரவே பாண்டியனுக்கும் கோமதிக்கும் இடையில் சண்டை உண்டானது. இதையடுத்து கோமதி உடன் பாண்டியன் பேசுவதை தவிர்த்தார். திருமணமாகி கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாகியும் இப்படி கோமதி மற்றும் பாண்டியன் இருவரும் பேசாமல் இருந்ததில்லை. இதன் காரணமாக கோமதியால் தனது கணவரிடம் பேசாமல் இருக்க முடியவில்லை. பல முறை பேசுவதற்கு முயற்சி செய்தார். சில சந்தர்ப்பங்களில் கடிதம் கூட எழுதி கொடுத்தார். ஆனால், எதுவும் ஒர்க் அவுட்டாகவில்லை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிறகு கோமதியும் பேசுவதை நிறுத்திவிட்டார். அவருக்கு எந்த வேலையும் செய்வதில்லை என்று முடிவு செய்தார். அதாவது அவரது டிரஸை துவைப்பதில்லை. அவருக்கு சமையல் பரிமாறுவதில்லை என்று எந்த வேலையும் செய்யவில்லை. இதனால் பாண்டியன் கடையில் வாங்கி வந்து சாப்பிடும் நிலை ஏற்பட்டது. இந்த சூழலில் தான் கடந்த வார எபிசோடில் கோமதி வீட்டில் மயக்கமடைந்த நிலையில் கீழே விழுந்தார். சரவணன் மற்றும் பழனிவேல் இருவரும் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தனது மனைவி கோமதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தெரிந்து பதறிய பாண்டியன் உடனே மருத்துவமனைக்கு சென்றார். தீவிர சிகிச்சைக்கு பிறகு கண் விழித்த கோமதியை பாண்டியன் அருகில் இருந்து பார்த்தார். கண்ணீர் விட்டு அழுதார். இதைத் தொடர்ந்து மருத்துவமனையிலிருந்து டிஸ்ஜார்ஜ் செய்ய பிறகு என்ன நடந்தது, வீட்டில் யாரும் இல்லையா என்றெல்லாம் ஆளாளுக்கு கேள்வி எழுப்பினர். அப்போதுதான் என்ன நடந்தது, வீட்டில் யார் இருந்தாங்க என்று சொல்ல அவர் சொல்வதைக் கேட்டு குடும்பத்தில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால் பாண்டியன் தான் வீட்டில் இருந்தார். அவரை கூப்பிட்டேன், அவர் காதில் வாங்காமல் சென்றுவிட்டார் என்றார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதற்கு பதிலளித்த பாண்டியன், இதற்கு முன் இப்படியெல்லாம் நாடகம் ஆடி என்னிடம் பேச முயற்சி செய்தாள், அது போன்று தான் இப்பவும் செய்கிறாள் என்று நினைத்தேன் என்றார். இப்படியே சென்று கொண்டிருக்க, பாண்டியன் வழிய வழிய பேசவே, கோமதி பேசவே இல்லை. இந்த நிலையில் தான் ஒருவேளை நான் இறந்துவிட்டாள் என்ன செய்வீங்க என்று ஒவ்வொருவரிடம் கேட்க அதற்கு சாப்பாட்டுக்கு கஷ்டப்படுவோம், எது எங்க இருக்கிறது என்று தெரியாது என்று ஒவ்வொருவரும் பேசினர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதனால் கோமதி ஒரு முடிவுக்கு வந்தார். அதாவது, வீட்டு சாவி, வீட்டில் எது எங்கிருக்கிறது என்று எல்லோரிடம் சொல்லிவிட்டார். நான் எங்கேயோ போகிறேன் என்று புறப்பட்டார். மற்றவர்களுக்கு ஒரு நியாயம், எனக்கு ஒரு நியாயமா? கோபம் வந்தால் மற்றவர்கள் புறப்பட்டு செல்லும் போது நான் போக கூடாதா? நான் போறதுக்கும் ஒரு காரணம் இருக்கிறது என்று சொல்லி வீட்டை விட்டு கிளம்பினார். அவருக்கு பின்னாடியே அவரை சமாதானப்படுத்த பாண்டியன் கிளம்பினார். கோமதி முன்னாடி செல்ல பாண்டியன் பின்னாடியே கோமதி மோமதி என்று கூப்பிட்டுக் கொண்டே சென்றார். அதோடு கடந்த வார எபிசோடு முடிந்த நிலையில் இந்த வாரத்திற்கான புரோமோவை விஜய் டிவி வெளியிட்டது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதில், இருவரும் ஒரு கோயில் படிக்கட்டில் அமர்ந்து கொண்டு திருமணத்திற்கு பிறகு உன்னோட அண்ணன்களுக்கு பயந்து கொண்டு ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருந்தோம் என்றார் பாண்டியன். அதன் பிறகு இன்று தான் காலையிலிருந்து என்னுடன் இருந்திருக்கீங்க என்றார். நீ போட்ட டிராமா எல்லாம் என்னிடம் பேசுவதற்கு தான் என்று தெரியாமல் உன்னை கஷ்டப்படுத்திவிட்டேன். என்னை மன்னித்துவிடு என்று அவரது காலை தொட்டு மன்னிப்பு கேட்டார்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;வசூல் வேட்டையில் லீடர்.. மந்தமான ஹேப்பி ராஜ்! முழு பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் இதோ!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதற்கு பதிலாக கதிருக்கு உங்களுக்கு தெரியாமல் கல்யாணம் செய்து வைத்தது என்னுடைய தப்பு தான் என்று கோமதியும் மன்னிப்பு கேட்டார். உனக்காக இனி நான் என்னை மாற்றி கொள்கிறேன் என்று பாண்டியன் பேசுவதை கேட்டு கோமதி புன்னகைத்தார். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இந்த வாரத்திற்கான புரோமோ வீடியோ முடிந்தது. இனி இந்த வாரம் என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம். இந்த புரோமோவில் தங்கமயில் தொடர்பான காட்சிகள் இடம் பெறவில்லை.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;கார்த்திக்கைப் பார்க்கத் துடித்த ரேவதி... அதிர்ச்சியில் மயங்கி விழுந்த கோரம்! பதறியடித்து மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்ற கார்த்திக்!&lt;/strong&gt;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Rsiva kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/pandian-stores-2-serial-this-week-6th-to-11th-april-2026-promo-pandian-and-gomathi-emotional-reunion-scene-in-tamil-lvzmgz1"/>
        </item>
        <item>
            <title><![CDATA[பாண்டியனை தெருத் தெருவாக அலையவிடும் கோமதி; மீனாவிடம் திட்டுவாங்கிய செந்தில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/gomathi-atrocity-against-husband-pandian-stores-2-serial-today-758th-episode-review-mac3ub0</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/gomathi-atrocity-against-husband-pandian-stores-2-serial-today-758th-episode-review-mac3ub0</guid>
            <pubDate>Sat, 04 Apr 2026 11:53:04 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், வீட்டை விட்டு வெளியேறும் கோமதி, பாண்டியனை தன் பின்னாலேயே லோ லோவென அலையவிட்டுள்ளார். அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01knbjbshnpqtep7kk6ts7n094,imgname-pandian-stores-2---2026-04-04t114723.030-1775283594805.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், வீட்டை விட்டு வெளியேறும் கோமதி, பாண்டியனை தன் பின்னாலேயே லோ லோவென அலையவிட்டுள்ளார். அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கோமதியிடம் பேசாமல் இருந்த பாண்டியன், அவர் மயங்கி விழுந்து ஆஸ்பத்திரியில் இருந்து மீண்டும் வீட்டுக்கு வந்த பின்னர், அவரிடம் பறிந்து பேசி வருகிறார். ஆனால் அவரை லேசாக மன்னித்துவிடக் கூடாது என முடிவு செய்யும் கோமதி, தன் பங்கிற்கு அவரிடம் சற்று கறாராக நடந்து கொள்கிறார். மறுபுறம் காந்திமதி, மீனா ஆகியோரும் கோமதிக்கு சப்போர்டாக செயல்படுகிறார்கள். ஒருகட்டத்தில் கோமதி தான் வீட்டை விட்டு வெளியே செல்கிறேன் என கூறி மீண்டும் பாண்டியனை பயமுறுத்துகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கோமதி வீட்டை விட்டு வெளிய போறேன் என்று சொன்னதை வீட்டில் உள்ள யாருமே நம்பவில்லை. என்னம்மா காமெடி பண்ணிட்டு இருக்க, மறுபடியும் டிராமா போட போறியா என எல்லோரும் கிண்டலடிக்கிறார். இதனால் கடும் கோபம் கொள்ளும் கோமதி, வீட்டை விட்டு வெளியேறுகிறார். கோமதி வெளியேறியதைப் பார்த்ததும், ராஜியும், அரசியும் அவரை தடுத்து நிறுத்த செல்கிறார்கள். அவர்கள் பேச்சை கேட்காத கோமதி விறுவிறுவென நடையை கட்டுகிறார். உடனே சரவணன், நான் போய் அம்மாவை அழைச்சிட்டு வர்றேன் என சொல்லி கிளம்புகிறார். ஆனால் மீனா அவரை தடுத்து நிறுத்திவிடுகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அப்போது பேசும் கதிர், நீ எதுக்குனே போற, நமக்கு முன்னாடி அம்மாவுக்கு சொந்தம் அப்பா தான். அதனால, அப்பா போய் கூப்பிட்டா தான் அம்மா வருவாங்க. நம்ம அழைச்சு ஒரு பிரயோஜனமும் இல்ல. அதனால அப்பா போய் அம்மாவை சமாதானப்படுத்தி கூட்டிட்டு வரச் சொல்லு என சொல்கிறார். இதையடுத்து கோமதியின் அம்மா காந்திமதி, பாண்டியனிடம், மாப்ள போய் அவளை கூட்டிட்டு வாங்க என சொன்ன உடன் வேறு வழியின்றி கோமதி பின்னாலேயே செல்கிறார் பாண்டியன். அவர் செல்லும் வழியில் தயவு செஞ்சு வீட்டுக்கு வந்துரு என கெஞ்சுகிறார். ஆனால் கோமதி கேட்கவில்லை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பாண்டியனின் பேச்சைக் கேட்காமல் கோமதி விறுவிறுவென நடந்து செல்கிறார். ரோட்டில் செல்பவர்கள் எல்லாம் பாண்டியனை வேடிக்கை பார்க்கிறார்கள். இதனால் அவருக்கு அவமானமாக இருக்கிறது. இருந்தாலும் கோமதி பின்னாடியே கெஞ்சுகிட்டே போகிறார். மறுபுறம் வீட்டில் இருக்கும் செந்தில், மீனாவிடம் நீ தான் இப்படி ஒரு ஐடியாவை அம்மாவுக்கு கொடுத்தியா என கேட்கிறார். இதனால் டென்ஷன் ஆகும் மீனா, உங்க அம்மா என சின்ன குழந்தையா நாங்க சொல்லி கொடுத்து செய்யுறதுக்கு, அவங்களுக்கு கோபம் வந்து கிளம்பிட்டாங்க, அதுக்கு நான் என்ன பண்றது என செம டோஸ் கொடுக்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இறுதியாக கோமதி ஒரு இளநீர் கடைக்கு சென்று இளநீயை வாங்கி குடித்துவிட்டு, காசு அவர்கிட்ட வாங்கிக் கோங்க என சொல்லிவிட்டு செல்கிறார். பின்னர் காசை கொடுத்துவிட்டு, சரி வா வீட்டுக்கு போகலாம் என அழைக்கிறார் பாண்டியன். இளநீர் வாங்கி கொடுத்ததுக்காக நான் வீட்டுக்கெல்லாம் வர மாட்டேன் என சொல்லி மீண்டும் முரண்டு பிடிக்கிறார் கோமதி. இதனால் அவரை எப்படி சமாதானப்படுத்துவது என்று தெரியாமால் மாட்டிக் கொண்டு முழிக்கிறார் பாண்டியன். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதன்பின்னர் என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/gomathi-atrocity-against-husband-pandian-stores-2-serial-today-758th-episode-review-mac3ub0"/>
        </item>
        <item>
            <title><![CDATA[குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் களமிறங்கிய ஓஜி ஆங்கர்... இனி ரக்‌ஷனுக்கு பதில் இவர் தானாம்?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/ma-ka-pa-anand-is-the-og-anchor-in-cook-with-comali-season-7-replacing-rakshan-o0o7qw9</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/ma-ka-pa-anand-is-the-og-anchor-in-cook-with-comali-season-7-replacing-rakshan-o0o7qw9</guid>
            <pubDate>Thu, 02 Apr 2026 14:35:52 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்நிகழ்ச்சியில் ரக்&zwnj;ஷனுக்கு பதில் புது ஆங்கரை களமிறக்கி உள்ளனர்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kn6prnfd6bkaggv0fh7at048,imgname-cook-with-comali-season-7--3--1775120438764.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்நிகழ்ச்சியில் ரக்&zwnj;ஷனுக்கு பதில் புது ஆங்கரை களமிறக்கி உள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விஜய் டிவி என்றாலே பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் விஜய் டிவியில் முழுக்க முழுக்க ஒரு ஃபன் நிகழ்ச்சியாக கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சி ஒரு பரபரப்பான குக்கிங் ஷோவாக இருந்தாலும் இதில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது. சமைக்கவே தெரியாத கோமாளிகளை வைத்துக் கொண்டு குக்குகள் படும் பாடு பார்க்கவே அவ்வளவு அருமையாக இருக்கும். முதல் சீசனிலேயே ரசிகர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டர் ஷோ என பெயர் எடுத்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்கள் முடிவடைந்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனில் வனிதா விஜயகுமார் டைட்டில் வின்னர் ஆனார். இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது சீசனில் கனி திருவும், மூன்றாவது சீசனில் ஸ்ருதிகா டைட்டில் ஜெயித்தார். பின்னர் நடந்த நான்காவது சீசனில் மைம் கோபி டைட்டில் வென்றார். குக் வித் கோமாளி வரலாற்றில் டைட்டில் ஜெயித்த முதல் ஆண் போட்டியாளர் இவர் தான். இதையடுத்து நடைபெற்ற ஐந்தாவது சீசனில் பிரியங்கா தேஷ்பாண்டேவும், ஆறாவது சீசனில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் ராஜு ஜெயமோகனும் டைட்டிலை தட்டிச் சென்றனர். தற்போது ஏழாவது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் 4 சீசன் சக்கைப்போடு போட்டன, அதற்கு முக்கிய காரணம் அந்த நான்கு சீசன்களையும் மீடியா மேசன்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. அவர்கள் ஐந்தாவது சீசனில் இருந்து விலகிவிட்டார்கள். அதன்பின்னர் நடந்த ஐந்தாவது சீசன் உப்பு சப்பு இல்லாமல் சென்று கொண்டிருந்த நிலையில், இறுதியாக மணிமேகலை, பிரியங்கா உடன் சண்டைபோட்டு அந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய சம்பவம் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாற்றி, அந்த சீசன் ஒரு சர்ச்சையான சீசனாகவே முடிவுக்கு வந்தது. அந்த சீசனோடு மணிமேகலையும் விலகினார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதேபோல் 4வது சீசன் வரை பயணித்த வெங்கடேஷ் பட் ஐந்தாவது சீசனில் விலகி சன் டிவிக்கு சென்றதால், அவருக்கு பதில் கடந்த இரண்டு சீசன்களாக மாதம்பட்டி ரங்கராஜும், செஃப் தாமுவும் நடுவர்களாக இருந்து வந்தார்கள். கடந்த சீசனில் செஃப் கெளஷிக்கும் இணைந்தார். இந்த நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் மேலும் ஒரு நடுவரை களமிறக்கி உள்ளனர். அவர் வேறுயாருமில்லை, நடிகை ரோஜா தான். இவரும் இந்த சீசனில் இருந்து நடுவராக பணியாற்றுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தன. அதோடு இந்த சீசன் முதல் ஆங்கரையும் மாற்றி உள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5-வது சீசனில் போட்டியாளராக களமிறங்கிய ஷாலின் சோயா, தற்போது 7-வது சீசனில் தொகுப்பாளராக களமிறங்கி உள்ளார். அவர் ரக்&zwnj;ஷன் உடன் சேர்ந்து இந்த சீசனை தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ரக்&zwnj;ஷன் இந்த சீசனில் இருந்து விலகி இருக்கிறார். இதனால் அவருக்கு பதிலாக ஓஜி ஆங்கர் வருகிறார் என பில்டப் கொடுத்து வந்தது விஜய் டிவி. தற்போது அந்த ஓஜி ஆங்கர் யார் என்பதை ரிவீல் செய்துள்ளனர். அதன்படி மா கா பா ஆனந்த் தான் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் தொகுப்பாளர் என அறிவித்துள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதுவரை சிங்கிள் குக்குகளுடன் நடைபெற்று வந்த இந்நிகழ்ச்சி, இந்த சீசனில் டபுள் குக்குகளுடன் நடைபெற இருக்கிறது. அதன்படி பிக் பாஸ் பிரபலம் கானா வினோத் அவரது மனைவி உடன் பங்கேற்கிறார். அதேபோல் பாடகர் மனோவும் அவரது மனைவியும் ஒரு டீம் ஆக களம் இறங்குகின்றனர். இதுதவிர கிரிக்கட்டர் அனிருதா ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி சம்யுக்தா ஆகியோரும் பங்கேற்கிறார்கள். மேலும் அய்யனார் துணை சீரியல் நடிகர் அரவிந்த் சேஜு தன் மனைவி சங்கீதா உடன் களமிறங்குகிறார். இதனால் இந்த சீசன் தூள் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/ma-ka-pa-anand-is-the-og-anchor-in-cook-with-comali-season-7-replacing-rakshan-o0o7qw9"/>
        </item>
        <item>
            <title><![CDATA[கயல் சீரியல் நடிகையின் உயிரைப் பறித்த வீடியோ கால்... அதிர்ச்சியில் ரசிகர்கள்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/kayal-serial-actress-subashini-fight-with-husband-and-committed-suicide-in-chennai-riznpbq</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/kayal-serial-actress-subashini-fight-with-husband-and-committed-suicide-in-chennai-riznpbq</guid>
            <pubDate>Mon, 06 Apr 2026 14:36:01 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் நடித்து வந்த சுபாஷினி சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01knh0d24qdqtdvge60y171y7d,imgname-kayal-1775466088599.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் நடித்து வந்த சுபாஷினி சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சுபாஷினி பாலசுப்பிரமணியம், 36 வயதான இவர் சென்னை போரூர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களுக்கு பரிச்சயமான முகம். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும், கயல் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் இவர், இலங்கையில் பிறந்து பின்னர் இந்தியாவில் செட்டிலாகிவிட்டார். சில ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் பிப்பின் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமண வாழ்க்கையில் கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் தற்கொலை செய்துள்ளார் சுபாஷினி.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வந்த சுபாஷினி, சம்பவம் நடந்ததற்கு முன்புவரை வழக்கம்போல தனது தினசரி வாழ்க்கையை பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் எதிர்பாராத வகையில், நேற்று இரவு கணவருடன் வீடியோ கால் பேசியபோது ஏற்பட்ட குடும்ப பிரச்சனை அவரை கடுமையாக பாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மனஅழுத்தம் காரணமாக திடீரென எடுத்த முடிவு, அவருடைய வாழ்க்கையை துயரமான முடிவுக்கு கொண்டு சென்றுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலை கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். ஒரு சிறிய கருத்து வேறுபாடு கூட எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறது. சினிமா மற்றும் தொலைக்காட்சி வட்டாரங்களில் இந்த செய்தி அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இவர் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். கடந்த 2012-ம் ஆண்டு இலங்கையை பின்னணியாக கொண்டு எடுக்கப்பட்ட இனி அவன் என்கிற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இதையடுத்து ஆரி நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டு ரிலீஸ் ஆன &lsquo;எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான்&rsquo; என்கிற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் திருமணத்துக்கு பின்னர் பெங்களூருவில் கணவருடன் வசித்து வந்தார். சன் டிவியின் கயல் சீரியலில் நடித்து வந்ததால் சென்னையில் உள்ள ஐயப்பன் தாங்கலில் வீடு வாடைகைக்கு எடுத்து வசித்து வந்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஞாயிற்றுக்கிழமை இரவு தன்னுடைய கணவருடன் வீடியோ காலில் பேசியபோது, சுபாஷினிக்கும் அவருடைய கணவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் மனமுடைந்து போன சுபாஷினி, தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக சொல்லிவிட்டு போனை கட் பண்ணி இருக்கிறார். பின்னர் சென்னையில் உள்ள வீட்டிலேயே தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார். இச்சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/kayal-serial-actress-subashini-fight-with-husband-and-committed-suicide-in-chennai-riznpbq"/>
        </item>
        <item>
            <title><![CDATA[விஜயாவின் எதிர்ப்பை மீறி தேர்தலில் போட்டியிடுவாரா மீனா? சிறகடிக்க ஆசை சீரியல் ஹைலைட்ஸ்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/vijaya-try-to-stop-meena-compete-in-election-siragadikka-aasai-serial-today-969th-episode-highlights-rrrrfie</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/vijaya-try-to-stop-meena-compete-in-election-siragadikka-aasai-serial-today-969th-episode-highlights-rrrrfie</guid>
            <pubDate>Fri, 03 Apr 2026 09:35:47 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா, சிந்தாமணியை எதிர்த்து பூ வியாபாரிகள் சங்க தேர்தலில் போட்டியிடுவதற்கு விஜயா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதைப்பற்றி பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kn8r2ygtp6s1m52bg1fkw8k5,imgname-siragadikka-aasai---2026-04-03t092947.028-1775188933146.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா, சிந்தாமணியை எதிர்த்து பூ வியாபாரிகள் சங்க தேர்தலில் போட்டியிடுவதற்கு விஜயா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதைப்பற்றி பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிறகடிக்க ஆசை சீரியலில் பூ வியாபாரம் செய்யும் தொழிலாளர்கள் சங்கத்தில் எலெக்&zwnj;ஷன் நடக்க இருக்கிறது. அந்த தேர்தலில் சிந்தாமணி போட்டியிடும் நிலையில், அவரை எதிர்த்து மீனா களம் காண்கிறார். இதற்காக மீனா வேட்புமனு தாக்கல் செய்த விஷயம் அறிந்த சிந்தாமணி, உடனடியாக விஜயாவை போன் போட்டு வர வைத்து அவரிடம் மீனா மட்டும் தலைவி ஆனால், உங்க வீட்டில் உங்களுக்கான மவுசு குறைந்துவிடும், இனி அது தலைவி மீனா வீடாக மாறிவிடும் என ஏத்திவிட்டுள்ளார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மீனா மட்டும் ஜெயித்து தலைவி ஆகிவிட்டால் உனக்கு வீட்டில் மரியாதையே போயிடும், என சிந்தாமணி சொன்னதும், விஜயா கற்பனை பண்ணி பார்க்கிறார். மீனாவை பார்க்க ஆட்கள் எல்லாம் வீட்டுக்கு வருகிறார்கள், அவர்களுக்கு விஜயா தன் கையால் காஃபி போட்டு வந்து கொடுக்கிறார். இதை யோசித்து பார்த்த விஜயா, மீனாவை தலைவி ஆகவிடக் கூடாது என்கிற முடிவோடு, கோபமாக வீட்டுக்கு கிளம்பிச் செல்கிறார். அங்கு விஜயா வரும் முன் மீனாவும், முத்துவும் வந்து வீட்டில் உள்ளவர்களிடம் மீனா தேர்தலில் நிற்கப் போகும் விஷயத்தை கூறி அனைவருக்கும் தாங்கள் வாங்கி வந்த ஸ்வீட்டை கொடுக்கிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அந்த நேரத்தில் விஜயா வீட்டுக்குள் எண்ட்ரி கொடுக்கிறார். அத்தையை பார்த்ததும், அவரிடம் ஸ்வீட்டை கொண்டுபோய் நீட்டுகிறார் மீனா. அதை எடுக்காமல், தட்டிவிடுகிறார் விஜயா. இதைப்பார்த்த முத்து செம கோபம் அடைகிறார். நீ இந்த எலெக்&zwnj;ஷன்ல நிற்க கூடாது. ஒழுங்கா இந்த வீட்டுல மருமகளா மட்டும் இரு. நான் சொல்றத கேட்டு நடந்தால் தான் நீ இந்த வீட்டுல இருக்கணும் இல்லேனா இங்க நீ இருக்க முடியாது என காட்டமாக சொல்கிறார் விஜயா. அவர் என்ன சொன்னாலும் மீனாவுக்கு தான் வீட்டில் நிறைய சப்போர்ட் இருக்கிறதே. அதனால் விஜயா எவ்வளவு கத்தினாலும் கடைசியில் அது எடுபடாமல் போய் விடுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பின்னர் விஜயா ரூமுக்குள் சென்ற பின்னர், மீனாவிடம் பேசும் அண்ணாமலை, மீனா நீ இந்த தேர்தல்ல நிக்குற, உனக்கு என்னோட முழு ஆதரவை தருகிறேன். என்னோட ஆசிர்வாதமும் உனக்கு எப்பவும் உண்டு என சொல்கிறார். மறுபுறம் முத்துவும், மீனாவிடம் நீ அம்மா சொல்றதையெல்லாம் கேட்காத, நீ நில்லு நான் உன்னைய ஜெயிக்க வைக்குறேன் என சொல்கிறார். அதன்பின்னர் நோட்டீஸ் அடிப்பது தொடர்பாக முத்துவும் மீனாவும் டிஸ்கஸ் பண்ணுகிறார்கள். அதில் என்னவெல்லாம் எழுத வேண்டும், என்பதை கலந்து ஆலோசித்து இருவரும் அதற்கான வேலைகளில் இறங்குகிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதேநேரத்தில் மனோஜ், ஷோரூமில் சோகமாக அமர்ந்திருக்கிறார். அடுத்த கல்யாணம் பண்ணுவதற்கு பெண் கிடைக்காத சோகத்தில் இருக்கிறார் மனோஜ். அப்போது ஜீவாவுக்கு மேட்ரிமோனியில் இருந்து போன் வருகிறது. அதையெடுத்து பேசிய ஜீவா, அதன்பின் மனோஜிடம் வந்து, உங்களுக்கு முதல்ல டைவர்ஸ் ஆகட்டும், அதுக்கப்புறம் தான் பொண்ணு பார்க்க முடியும்னு மேட்ரிமோனியில் சொல்லிவிட்டார்கள் என கூறுகிறார் ஜீவா. அப்போது அருகில் இருந்த மொட்டை சந்தோஷ், நம்ம ஸ்டேட்ல பொண்ணு பார்த்தா தான இந்த பிரச்சனை, பேசாம வட இந்தியாவில் இருந்து பொண் பார்க்கலாம் என சொல்லி கிண்டல் பண்ணுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதன்பின் என்ன ஆனது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/vijaya-try-to-stop-meena-compete-in-election-siragadikka-aasai-serial-today-969th-episode-highlights-rrrrfie"/>
        </item>
        <item>
            <title><![CDATA[கார்த்திக்கைப் பார்க்கத் துடித்த ரேவதி... அதிர்ச்சியில் மயங்கி விழுந்த கோரம்! பதறியடித்து மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்ற கார்த்திக்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/karthigai-deepam-serial-today-1169th-episode-highlights-karthik-carries-revathi-to-hospital-scene-in-tamil-television-s6szdug</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/karthigai-deepam-serial-today-1169th-episode-highlights-karthik-carries-revathi-to-hospital-scene-in-tamil-television-s6szdug</guid>
            <pubDate>Sun, 05 Apr 2026 09:00:46 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;Karthigai Deepam Serial Today 1169th Episode Highlights: &lt;/strong&gt;கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய 1169ஆவது எபிசோடில் கார்த்திக்கை பார்க்க நினைத்த ரேவதி திடீரென்று மயக்கமடைந்த நிலையில் அடுத்து என்ன நடந்தது என்று பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kndp3dtnmbckdvq96c5g6q9d,imgname-revathi-and-karthik-treatment-1775354623829.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;Karthigai Deepam Serial Today 1169th Episode Highlights: &lt;/strong&gt;கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய 1169ஆவது எபிசோடில் கார்த்திக்கை பார்க்க நினைத்த ரேவதி திடீரென்று மயக்கமடைந்த நிலையில் அடுத்து என்ன நடந்தது என்று பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;Karthigai Deepam Serial Today 1169th Episode Highlights: &lt;/strong&gt;கார்த்திகை தீபம் சீரியலில் யாருமே எதிர்பார்க்காத திருப்பமாக தலையில் அடிபட்ட நிலையில் ரேவதிக்கு பழைய நினைவுகள் எல்லாம் மறந்துவிட்டது. அதுவும் 2, 3 ஆண்டுகளில் நடந்த சம்பவங்கள் எல்லாம் மறந்துவிட்டது. உண்மையில் அப்படி நடக்குமா என்றால் சீரியலில் அப்படியெல்லாம் நடக்கிறது. என்ன செய்வது, வேறு வழியில்லாமல் சீரியலில் என்ன ஒளிபரப்பு செய்கிறார்களோ இல்லை இல்லை இயக்குநரின் ஸ்கிரிப்டில் என்ன இருக்கிறதோ அதைத்தான் நாம் தொலைக்காட்சியில் ஒரு தொடராக பார்க்க முடியும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கொஞ்ச நாள், ரேவதி மற்றும் கார்த்திக்கை பிரித்து வைத்தார்கள். அதன் பிறகு இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தார்கள். இப்போது கார்த்திக் யார் என்று தெரியாமலும், தனக்கு திருமணம் நடந்தது பற்றியும் ரேவதிக்கு நினைவில் இல்லை. இதை வைத்து ரேவதி மற்றும் கார்த்திக்கை பிரிக்க சாமுண்டீஸ்வரி திட்டமிட்டுள்ளார். சந்திரகலாவும் எப்படியாவது கார்த்திக்கை வீட்டை விட்டு விரட்டிவிடலாம் என்று திட்டமிட்டநிலையில், ரேவதிக்கு இந்த நிலைமைக்கு கார்த்திக் தான் காரணம் என்று சொல்லி அவரை வீட்டை விட்டு துரத்திவிட்டார் சாமுண்டீஸ்வரி.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேலும், ரேவதியிடம் தான் யார் என்ற உண்மையை சொல்லக் கூடாது என்றும் சொல்லிவிட்டார். ஆனால், அவருக்கு ஆழ்மனதில் கார்த்திக் பற்றிய சுயநினைவு இருந்து கொண்டே தான் இருக்கிறது. அதனால் தான் கோயிலில் கார்த்திக் அவரை பார்க்கும் போது தன்னை யாரோ பார்ப்பது போன்ற உணர்வு இருப்பதாக கூறியுள்ளார். இந்த நிலையில் தான் கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய 1169ஆவது எபிசோடில் என்ன நடந்தது என்று பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;50 வயதிலும் ராணி போல் ஜம்முனு வாழும் சிம்ரன்... அவரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பக்கத்து ஊரிலுள்ள ஒரு கோயிலுக்கு வந்த ரேவதி அங்கு ஊர் மக்கள் அனைவரும் கார்த்திக் பற்றி பேசவே, அவர் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். கார்த்திக் வெறும் பெயர் மட்டுமல்ல, அந்த ஊருக்கே காவல் தெய்வம், ஊர் மக்களுக்கு குலசாமியாக இருக்கிறார். அப்படிப்பட்ட ஒருவரை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்ட ரேவதி அவர் யார் என்று ஊர் மக்களிடம் கேட்க, அவர்களும் அடையாளம் காட்டினர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதைத் தொடர்ந்து கார்த்திக்கை நோக்கி நடந்து சென்று பின்பக்கமாக அவரை தொடவே ரேவதியின் மூளையில் கார்த்திக் பற்றிய சுயநினைவு வந்துள்ளது. இதன் காரணமாக அவர் குழப்பம் அடைந்து மயங்கி விழுந்துள்ளார். ரேவதியை பார்த்த கார்த்திக் உடனே அவரை தூக்கி அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். அதன் பின்னர் மயில்வாகனத்திற்கு ரேவதியை பற்றி தெரியப்படுத்த அவர் தனது மாமியார் சாமுண்டீஸ்வரிக்கு தெரியப்படுத்தினார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பாண்டியனை தெருத் தெருவாக அலையவிடும் கோமதி; மீனாவிடம் திட்டுவாங்கிய செந்தில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உடனே மருத்துவமனைக்கு மயில்வாகனம் மற்றும் ராஜராஜன் புறப்பட்டு வரவே, சாமூண்டீஸ்வரியும் புறப்பட்டு வந்துள்ளார். மயில்வாகனம், என்ன நடந்தது என்பது பற்றி தனது மாமியாரிடம் கூறினார். இதைத் தொடர்ந்து சாமுண்டீஸ்வரி அமைதியானார். அவனால் தான் ரேவதிக்கு இந்த நிலைமை என்று கூறி ரேவதியை டிஸ்ஜார்ஜ் செய்ய எண்ணினார். மருத்துவரும் அவருக்கு ஒன்றும் ஆகவில்லை என்றனர். அங்கிருந்த நர்ஸிடம் தான் மயக்கம் அடைந்தது நினைவில் இருக்கிறது. தன்னை இங்கு கொண்டு வந்தது யார் என்று கேட்க, அவரும் கார்த்திக் தான் உங்களை இங்கு கொண்டு வந்து சேர்த்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிறகு மருத்துவரிடம் உங்களுக்கு ஒன்றுமில்லை என்று தெரிந்து கொண்ட பிறகு தான் அவர் இங்கிருந்து புறப்பட்டு சென்றார் என்று கூறினார். நான் யாரை பார்க்க நினைத்தேனோ அவர் தான் தன்னை இங்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார். எப்படியும் அவரை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். ஆனால், கார்த்திக்கின் அம்மா சிலையை தனது அம்மா தான் சிறந்து வைத்திருப்பதை அறிந்து கொண்ட ரேவதி, அம்மாவிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்ற முடிவில் இருக்கிறார். இனி அடுத்து என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Rsiva kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/karthigai-deepam-serial-today-1169th-episode-highlights-karthik-carries-revathi-to-hospital-scene-in-tamil-television-s6szdug"/>
        </item>
        <item>
            <title><![CDATA[சிங்கப்பெண்ணே ப்ரோமோ: துளசியின் சதி.. சேதுவின் தில்லுமுல்லு:ரத்த வெள்ளத்தில் ஆனந்தி!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/singappenne-shocking-twist-revealed-in-today-promo-on-april-2-2026-tamil-telvision-tnuk5o8</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/singappenne-shocking-twist-revealed-in-today-promo-on-april-2-2026-tamil-telvision-tnuk5o8</guid>
            <pubDate>Thu, 02 Apr 2026 20:04:21 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;Singappenne Serial Today April 2 Promo: &lt;/strong&gt;சன் டிவியின் முன்னணி தொடரான 'சிங்கப்பெண்ணே (Singappenne)' சீரியலின் தற்போதைய ப்ரோமோ (Promo) ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பரபரப்பான எபிசோடின் சுருக்கம் இதோ&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kn3cd62583y35jx2e6pxrktb,imgname-anandhi-singappenne-1775008913477.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;Singappenne Serial Today April 2 Promo: &lt;/strong&gt;சன் டிவியின் முன்னணி தொடரான 'சிங்கப்பெண்ணே (Singappenne)' சீரியலின் தற்போதைய ப்ரோமோ (Promo) ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பரபரப்பான எபிசோடின் சுருக்கம் இதோ&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிங்கப்பெண்ணே' தொடரின் இந்த ப்ரோமோ வீடியோவில், ஆனந்திக்கு, சேதுவின் மீது ஏற்பட்டுள்ள சந்தேகத்தைப் பற்றி முத்து மற்றும் அவரது நண்பர் அன்பு விவாதிக்கின்றனர். சரக்கு விநியோகத்தின் போது பெட்டிகளை அடுக்கும் விஷயத்தில் சேதுவுக்கும், ஆனந்திக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை முத்துவின் நண்பர் நினைவுபடுத்துகிறார். பெட்டிகளை இறக்கிச் சோதனையிட ஆனந்தி முயன்றபோது, முத்து அழைத்ததால் அவர் அங்கிருந்து சென்ற விவரம் விவாதிக்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேலும் சுவந்தர்யா, சேதுவைப் பற்றி பேசியது குறித்து, &quot;சேதுவிடம் எல்லாம் பணமே இருக்காது, அன்னைக்கே ஆனந்தி அவனிடம் 2000 ரூபாய் கேட்கச் சொன்னாள்&quot; என்றார். சேது ஏதோ தில்லுமுல்லு செய்வதை ஆனந்தி கவனித்திருக்கலாம் என்றும், ஆனால் தகுந்த ஆதாரம் இல்லாமல் யாரையும் குற்றம் சொல்லக்கூடாது என்கிற தனது கொள்கையினால் அவர் யாரிடமும் பேசாமல் இருக்கிறார் என்று முத்து கருதுகிறார். இறுதியில், ஆனந்திக்கு உடனடியாக அழைத்து அவரிடம் இருக்கும் சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ள அன்பு முடிவெடுக்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதே நேரத்தில், ஒரு சிறிய பிளாஸ்டிக் பையில் ஆனந்தியின் தலைமுடி இழைகள் இருப்பதை பார்த்து அன்பு அம்மா, துளசியிடம் விசாரிக்கிறார். &rdquo;அது ஆனந்தியின் தலைமுடி என்று அடையாளம் காணப்பட, &quot;இது எதுக்கு நீ வைத்திருக்கிறாய்?&quot; என்ற கேள்வி எழுகிறது. அவளை உலகத்தை விட்டு அனுப்ப போகிறேன் என்று துளசி சொல்ல அன்பு அம்மாவிற்கு கோபம் வருகிறது. இந்த ப்ரோமோ, சேதுவின் மர்மமான செயல்கள் வெளிச்சத்திற்கு வருமா என்கிற எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. மறுபக்கம் ரத்த வெள்ளத்தில் இருக்கும் ஆனந்திக்கு என்னவாகும் என்ற பதற்றமும் நீடிக்கிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Rsiva kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/singappenne-shocking-twist-revealed-in-today-promo-on-april-2-2026-tamil-telvision-tnuk5o8"/>
        </item>
        <item>
            <title><![CDATA[குணசேகரனை மாட்டிவிட ஜனனியோடு கூட்டு சேரும் அறிவுக்கரசி... எதிர்பாரா திருப்பங்களுடன் எதிர்நீச்சல் தொடர்கிறது]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/arivu-and-janani-turns-against-ags-in-ethirneechal-thodargiradhu-serial-today-459th-episode-twe71sf</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/arivu-and-janani-turns-against-ags-in-ethirneechal-thodargiradhu-serial-today-459th-episode-twe71sf</guid>
            <pubDate>Mon, 06 Apr 2026 08:03:50 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரனுக்கு எதிரான வீடியோ ஆதாரத்தை தேடி ஜனனி மட்டுமின்றி அறிவுக்கரசியும் களத்தில் குதித்துள்ளார். அதைப்பற்றி இங்கே பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01knga29kqhwd9npsjvq3dg4g3,imgname-ethirneechal-thodargiradhu---2026-04-06t075825.010-1775442667127.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரனுக்கு எதிரான வீடியோ ஆதாரத்தை தேடி ஜனனி மட்டுமின்றி அறிவுக்கரசியும் களத்தில் குதித்துள்ளார். அதைப்பற்றி இங்கே பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஈஸ்வரிக்கு மெமரி லாஸ் ஆனதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் ஆதி குணசேகரன், அவர் மீது அளவு கடந்த பாசத்தைக் கொட்டுகிறார். இதையெல்லாம் பார்த்து ஜனனி கடும் கோபம் கொள்கிறார். ஒரு கட்டத்தில் தன்னை அறியாமலேயே ஈஸ்வரி மீது கோபப்படும் ஜனனி, உங்களைப் போல் பழசை எல்லாம் மறந்துட்டு என்னால சகஜமா இருக்க முடியாது என சொன்னதும், ஈஸ்வரி என்ன பிரச்சனை என ஜனனியிடம் கேட்க, அவர் ஆதி குணசேகரன் தன்னை வேலைக்கு செல்ல விடாமல் தடுத்ததாக கூறி மழுப்பிவிட்டு செல்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜனனி கேஸ் விஷயமாக சாருபாலாவின் உறவினரை பார்க்க சென்றிருக்க, மறுபுறம் ஆதி குணசேகரன் தன்னுடைய மனைவி ஈஸ்வரி உடன் குலதெய்வம் கோவிலுக்கு சென்றுவிட, இந்த நேரத்தை பயன்படுத்தி, ரேணுகா, நந்தினி மற்றும் விசாலாட்சியை தனியாக தங்களின் அறைக்கு அழைத்து செல்லும் கதிர் மற்றும் ஞானம், அவர்களிடம் காலில் விழாத குறையாக எமோஷனல் டிராமா பண்ணுகிறார்கள். தங்கள் அண்ணன் செஞ்சதை எல்லாம் மறந்துவிட்டு, அவருக்கு சாதகமாக கோர்ட்டில் பேசுமாறு கெஞ்சிக் கேட்கிறார்கள். ஞானம் கையெடுத்து கும்பிட்டு கேட்டுள்ளார். அந்த நேரத்தில் பார்கவி, தர்ஷன், தர்ஷினியும் அங்கு வருகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதுமட்டுமின்றி ஜனனி பேச்சை யாரும் கேட்காதீர்கள் என்றும் சொல்கிறார்கள். தர்ஷனிடம், நீயும், பார்கவியும் வெளிநாடு போய் சந்தோஷமாக இருக்க நாங்க உதவி பண்றோம் என கூறிக் கொண்டிருக்க, அந்த நேரம் பார்த்து அங்கு வரும் அறிவுக்கரசி, இந்த பரதேசி கூட இவனை வாழ வைக்க தான் நான் இங்க இருக்கேனா, என் தங்கச்சி வாழ்க்கையை மட்டும் கெடுக்கணும்னு பார்த்தீங்க அவ்வளவுதான் என சொல்லிவிட்டு கீழே செல்கிறார். கீழே போனதும், முல்லையிடம் பேசும் அறிவு, ஆதி குணசேகரன் ஈஸ்வரியை தாக்குன வீடியோ இந்த வீட்டுல தான் எங்கயோ இருக்கு, அதை தேடி கண்டுபிடிக்கனும் என முடிவெடுக்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மறுபுறம் சாரு பாலாவும், ஜனனியிடம் போனில் பேசும் போது அந்த வீடியோ ஆதாரத்தை எப்படியாவது மீட்குமாறு சொல்லி இருக்கிறார். இதனால் அந்த வீடியோவைத் தேடும் பணியும் ஜனனியும் இறங்க இருக்கிறார். ஆதி குணசேகரனை சிக்க வைப்பதற்காக தான் இருவருமே பிளான் போடுகிறார்கள். அதனால் இருவரும் கூட்டு சேர்ந்து அந்த வீடியோவை எடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அந்த வீடியோவின் மற்றொரு பிரிண்ட் ஆதிமுத்து ராவணனிடம் உள்ளது. அவர் அதனை அநேகமாக ஆதி குணசேகரனிடம் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனனி, மதிவதினியின் தோழியாக இருப்பதால் அவரிடம் வீடியோவை கொடுக்க ராவணன் விருப்பம் காட்டவில்லை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆதி குணசேகரனை இந்த கேஸில் இருந்து வெளியே கொண்டு வர அனைவரும் தங்களுக்கு ஆதரவாக சாட்சி சொல்ல வேண்டும் என கதிர், ஞானம் போட்ட டிராமாவை எல்லாம் தவிடுபொடி ஆக்கும் ஜனனி, முதலில் நீங்க செஞ்ச தப்புக்கெல்லாம் ஜெயிலுக்கு போய் தண்டனை அனுபவிச்சிட்டு வாங்க, அதுக்கப்புறம் நாம எல்லாரும் குடும்பமே சேர்ந்து சந்தோஷமா வாழலாம் என சொல்லிவிட்டு மாடிக்கு செல்கிறார். அப்போது ஓவர் டென்ஷனாக இருந்ததால், அவர் படியிலேயே மயக்கம் போட்டு விழுந்துவிடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதன்பின் என்ன ஆனது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/arivu-and-janani-turns-against-ags-in-ethirneechal-thodargiradhu-serial-today-459th-episode-twe71sf"/>
        </item>
        <item>
            <title><![CDATA[என் காதலுக்கு தகுதியற்றவர்.... விவாகரத்து பற்றி ஒரே போடாக போட்ட ‘சின்ன மருமகள்’ ஸ்வேதா]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/chinna-marumagal-serial-actress-swetha-opens-up-about-divorce-with-aadhi-vn95km1</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/chinna-marumagal-serial-actress-swetha-opens-up-about-divorce-with-aadhi-vn95km1</guid>
            <pubDate>Tue, 31 Mar 2026 15:29:48 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;சின்ன மருமகள் சீரியல் நாயகி ஸ்வேதா, தன்னுடைய கணவர் ஆதி தன்னை ஏமாற்றியதாகவும் அவரிடம் விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்துள்ளதாகவும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k3g9zx5jerbgxz2k8qk1zps8,imgname-new-project---2025-08-25t151445.463-1756115236018.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சின்ன மருமகள் சீரியல் நாயகி ஸ்வேதா, தன்னுடைய கணவர் ஆதி தன்னை ஏமாற்றியதாகவும் அவரிடம் விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்துள்ளதாகவும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சின்ன மருமகள் சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் ஸ்வேதா. அவர் ஆதி என்பவரை காதலித்து அவரை பதிவுத் திருமணமும் செய்திருக்கிறார். பின்னர் அவர் ஒரு பிராடு என்பது தெரிந்ததும் அவரைவிட்டு பிரிந்திருக்கிறார். இதையடுத்து அவரது காதலன் நான் தான் எனக்கூறி அவரின் கணவர் ஆதி யூடியூப்பில் பேட்டி கொடுத்து வந்தார். அண்மையில் பிக் பாஸ் தாமரைச் செல்வி, ஆதி தன்னிடம் நகை வாங்கி ஏமாற்றிவிட்டதாக கூறி வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் ஸ்வேதா, ஆதி பற்றி ஒரு நீண்ட பதிவை வெளியிட்டு இருக்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அவர் வெளியிட்ட பதிவில், காதலித்து திருமணம் செய்துகொண்ட தனது வாழ்க்கை ஆரம்பத்தில் நம்பிக்கையுடன் இருந்ததாக கூறியுள்ளார். மிகவும் இளமையிலேயே திருமணம் செய்து கொண்டதால், கணவரின் உண்மையான நிலைமைகள் குறித்து அறியாமல் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் ஒரே ஒரு வழக்கு மட்டுமே இருப்பதாக கூறிய அவரது கணவர், அதை சரி செய்யலாம் என்ற நம்பிக்கையில் தனது பணத்தையும் ஆதரவையும் பயன்படுத்த வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆனால் காலப்போக்கில் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்ததாகவும், அவர் கூறிய தகவல்கள் அனைத்தும் பொய்யானவை என்பதை பின்னர் உணர்ந்ததாகவும் ஸ்வேதா தெரிவித்துள்ளார். மேலும், அவர்மீது பல வழக்குகள் இருப்பது தெரிய வந்ததன் பின்னர், இந்த உறவை தொடர முடியாது என்ற முடிவுக்கு வந்ததாக கூறியுள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;காதல் காலத்தில் &lsquo;வியாபாரம்&rsquo; என்ற பெயரில் தன்னிடமிருந்து பணமும் நகைகளும் பெற்றுக் கொண்டதாகவும், முழு நம்பிக்கையுடன் அதை வழங்கியதையே இன்று வருத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது, விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாகவும், சட்டரீதியாக பிரச்சினையை சமாளித்து வருவதாகவும் கூறியுள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதற்கிடையில், தன்னிடம் இருந்து விலகிய பிறகும் தொடர்ந்து தொந்தரவு செய்து வருகிறார் என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளார். இதனால் சமூக மற்றும் மன ரீதியாக பெரும் பாதிப்பை சந்தித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இவரது கணவர் பலரையும் இதேபோல் ஏமாற்றியிருக்கிறார் என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்து, யாரும் அவரை நம்பி எந்த வகையான தொழில் வாய்ப்புகளிலும், குறிப்பாக promotion மற்றும் photoshoot போன்றவற்றில் ஈடுபட வேண்டாம் என்று பொதுமக்களிடம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதற்கு முன்னர், பிக்பாஸ் பிரபலமான தாமரை செல்வியும் அதே நபர் மீது மோசடி குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. நகைகள் வாங்கி ஏமாற்றியதாக அவர் தெரிவித்திருந்தது இந்த விவகாரத்தை மேலும் பரபரப்பாக்கியுள்ளது. இந்த பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ள ஸ்வேதா, இறுதியில் நீதியும் கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/chinna-marumagal-serial-actress-swetha-opens-up-about-divorce-with-aadhi-vn95km1"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ரவியை புருஷனாக்கிய நீத்து; பதறிப்போன ஸ்ருதி... மனோஜுக்கு குட்நியூஸ் சொன்ன ஸ்வேதா - சிறகடிக்க ஆசை]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/neethu-ravi-invitation-stuns-shruti-in-siragadikka-aasai-serial-today-971st-episode-w3vtxgf</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/neethu-ravi-invitation-stuns-shruti-in-siragadikka-aasai-serial-today-971st-episode-w3vtxgf</guid>
            <pubDate>Mon, 06 Apr 2026 07:26:08 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;சிறகடிக்க ஆசை சீரியலில் ரவி பெயரில் பொக்கே ஷாப் ஒன்றை தொடங்க உள்ள நீத்து, ஸ்ருதிக்கு அழைப்பிதழ் ஒன்றை அனுப்பி இருக்கிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kng7x6961vxr3d87220arba9,imgname-siragadikka-aasai---2026-04-06t071949.573-1775440402726.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சிறகடிக்க ஆசை சீரியலில் ரவி பெயரில் பொக்கே ஷாப் ஒன்றை தொடங்க உள்ள நீத்து, ஸ்ருதிக்கு அழைப்பிதழ் ஒன்றை அனுப்பி இருக்கிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா, சிந்தாமணியை எதிர்த்து தேர்தலில் போட்டியிட உள்ளார். மீனாவை எப்படியாவது ஜெயிக்க வைக்க வேண்டும் என ஸ்வேதா, ஸ்ருதி ஆகியோர் தங்கள் உதவிக்கரம் நீட்டி உள்ளனர். மறுபுறம் மீனாவை இந்த தேர்தலில் நிற்க விடாமல் தடுக்க சிந்தாமணி தன்னுடைய ஆட்களுக்கு பணத்தை கொடுத்து மீனாவை போட்டுத்தள்ள சொல்லி உள்ளார். இது தெரியாமல் மீனா தன்னுடைய கணவர் முத்து உடன் சேர்ந்து தேர்தலுக்காக நோட்டீஸ் கொடுத்து வருகிறார். மீனாவுக்கு ஆதரவு அதிகரித்த வண்ணம் உள்ளது. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்றைய எபிசோடில் ஸ்வேதா, விஜயாவின் வீட்டிற்கு வருகிறார். அவர் அனைவரிடமும் தான் ஒரு குட் நியூஸ் கொண்டு வந்திருப்பதாக சொல்லி, மனோஜுக்கு தனக்கு தெரிந்த ஃபிரெண்டு ஒருவர் மூலம் ஒரு வரன் வந்திருப்பதாக சொல்கிறார். பொண்ணு ஏற்கனவே திருமணமாகி ஓராண்டில் டைவர்ஸ் ஆனவர் என்றும், ஆனால் அவருடைய குடும்பம் பெரும் பணக்காரர்கள் எனக் கூறும் ஸ்வேதா, அவருடைய ஃபேமிலி தற்போது அமெரிக்காவில் இருப்பதாக கூறுகிறார். உடனே விஜயா, பெண் பார்க்க அமெரிக்காவா செல்ல முடியும் என கேட்க, ஆன்லைனிலேயே பேசி முடிக்கலாம் என கூறுகிறார் ஸ்வேதா.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மறுபுறம் மனோஜ், பொண்ணு ஏற்கனவே கல்யாணம் ஆனவங்களா இருக்காங்க அது தான் பிரச்சனை என சொல்ல, நீயும் ஏற்கனவே கல்யாணம் ஆனவன் தாண்டா என சொல்லி கிண்டல் பண்ணுகிறார் முத்து. அதன்பின்னர் பொண்ணுடைய அப்பாவுக்கு சொந்தமாக ஃபிளைட் இருப்பதாக ஸ்வேதா சொன்னதும் வாயடைத்துப் போன விஜயா, உடனே இந்த சம்மதத்துக்கு ஓகே சொல்கிறார். மனோஜும் ஃபிளைட் இருப்பதை கேள்விப்பட்டதும் டக்குனு மனம்மாறி சம்மதம் தெரிவிக்கிறார். அதுமட்டுமின்றி ஸ்வேதாவை தங்கச்சி என்றும் அழைக்கிறார். இதைப்பார்த்த முத்து, ஃபிளைட் இருக்குனு தெரிஞ்சதும் ஸ்வேதாவை தங்கச்சி ஆக்கிட்டான் பாத்தியா என சொல்லி கிண்டல் பண்ணுகிறர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த விஷயத்தை ஸ்ருதியிடம் சொல்வதற்காக அவருடைய ரெஸ்டாரண்டுக்கு செல்கிறார் மீனா. அங்கு ஸ்ருதியிடம் மனோஜுக்கு மிகப்பெரிய வரன் கிடைத்திருப்பதை சொல்வதோடு, நீங்க நிச்சயம் பேச கண்டிப்பாக வர வேண்டும் என அழைக்கிறார். அந்த நேரத்தில் ஸ்ருதிக்கு ஒரு கொரியர் வருகிறது. அதை திறந்து பார்த்த ஸ்ருதிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நீத்து தான் அந்த கொரியரை அனுப்பி இருக்கிறார். அவர் புதிதாக தொடங்க உள்ள ரவி பொக்கே ஷாப்பிற்கான அழைப்பிதழை அனுப்பி இருக்கும் நீத்து. அதில் தன்னுடைய பெயரை நீத்து ரவி என குறிப்பிட்டு இருக்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நீத்துவின் இந்த செயலால் அதிருப்தி அடையும் ஸ்ருதி, என்ன செய்வதென்று யோசிக்கையில், மீனா அவருக்கு ஒரு ஐடியா கொடுக்கிறார். நீத்து அந்த பொக்கே ஷாப் ஓபன் பண்ணும் நாள் அன்று நீங்களும் ரவியும் வெளியூர் போயிருங்க. அது தான் அவளுக்கு நீங்க கொடுக்குற பதிலடியா இருக்கும் என சொல்கிறார். நாங்க போயிட்டா கடையை யார் பார்த்துப்பாங்க என ஸ்ருதி கேட்க, அதற்கு மீனா, நானும் அவரும் பாத்துக்குறோம் என சொல்கிறார். மறுபுறம் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக வந்திருந்த சிந்தாமணியிடம் அவரது ஆதரவாளர்கள், நீங்க தான் ஜெயிப்பீங்க என பேசிக் கொண்டிருக்கிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அந்த நேரம் பார்த்து மீனா வேட்புமனு தாக்கல் செய்ய வருகிறார். அவரை மேளதாளம் முழங்க, ஆட்டம் பாட்டத்துடன் அழைத்து வருகிறார் முத்து. இதைப்பார்த்து வயித்தெறிச்சல் படும் விஜயா, வேட்புமனு தாக்கல் பண்ணுவதற்கே இந்த அலப்பறையா என கேட்க, என் பொண்டாட்டி தலைவி ஆகப்போறா அதனால் தான் இப்படி செய்கிறோம் என சொல்லி ஆட்டம் போடுகிறார் முத்து. இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதையடுத்து என்ன நடந்தது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/neethu-ravi-invitation-stuns-shruti-in-siragadikka-aasai-serial-today-971st-episode-w3vtxgf"/>
        </item>
    </channel>
</rss>
