<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes"?>
<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Sun, 17 May 2026 11:21:10 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss/television" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[Siragadikka Aasai : பைனான்சியருக்கு ஆப்பு... வீட்டை மீட்க முத்துவுக்கு கிடைத்த புது ரூட்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-may-15th-2026-episode-muthu-new-friend-help-to-recover-home-from-financier-4ltghkp</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-may-15th-2026-episode-muthu-new-friend-help-to-recover-home-from-financier-4ltghkp</guid>
            <pubDate>Fri, 15 May 2026 08:55:19 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து ஸ்போகன் இங்கிலீஷ் வகுப்புக்கு சென்றதன் மூலம் அவருக்கு ஒரு நண்பர் கிடைத்திருக்கிறார். அதைப்பற்றி பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01krmtgyvdjdvb7576wpn9m9cv,imgname-siragadikka-aasai--56--1778815368045.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து ஸ்போகன் இங்கிலீஷ் வகுப்புக்கு சென்றதன் மூலம் அவருக்கு ஒரு நண்பர் கிடைத்திருக்கிறார். அதைப்பற்றி பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;சிறகடிக்க ஆசை&lt;/strong&gt; சீரியலில் மனோஜ் வாங்கிய கடன் காரணமாக வீடு ஜப்தி செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்கள். விஜயா வசதிக்கு ஆசைப்பட்டு ஸ்ருதி அம்மா வீட்டிற்கு சென்றிருந்த நிலையில், அங்கு ஏற்பட்ட அவமானத்தால் வீட்டை விட்டு வெளியேறி, மனோஜின் ஷோரூமில் வந்து தங்கி இருக்கிறார். அவர் மனோஜ் ஷோரூமிற்கு வந்த தகவல் அறிந்து முத்துவும், மீனாவும் அவரை சந்தித்து தங்கள் வீட்டுக்கு வருமாறு கூப்பிடுகிறார்கள். ஆனால் விஜயா வர மறுத்துவிடுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.Siragadikka Aasai : விஜயாவுக்காக ஷோரூமை மூடிய மனோஜ்; அண்ணாமலையால் காத்திருக்கும் ட்விஸ்ட்&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விஜயாவை தான் அழைத்தால் மீனா அம்மா வீட்டிற்கு வந்துவிடுவார் என யோசித்து, அண்ணாமலையே நேராக மனோஜ் ஷோரூமிற்கு சென்று விஜயாவை கூப்பிடுகிறார். அவர் முதலில் வரமாட்டேன் என மறுத்தாலும், பின்னர் மனோஜும் இங்கு நீங்கள் இருந்தால் எங்களுக்கு கஷ்டமாக இருக்கிறது. இங்கு உங்களுக்கு போதிய வசதி இல்லை. அதுமட்டுமில்லாமல் கடையையும் திறக்க முடியவில்லை என சொன்னதை அடுத்து விஜயா மனம் மாறுகிறார். பின்னர் மீனாவின் அம்மா வீட்டிற்கு செல்ல சம்மதம் தெரிவிக்கிறார் விஜயா.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முத்துவும், மீனாவும் விஜயாவை அழைத்துக் கொண்டு மீனாவின் அம்மா வீட்டிற்கு செல்கிறார்கள். அங்கு போனதும் வழக்கம்போல் தன்னுடைய திமிர்தனத்தை காட்டுகிறார் விஜயா. எனக்கு இங்க வர விருப்பம் இல்லை. இவங்க எல்லாரும் சொன்னதுனால தான் நான் இங்க வந்தேன் என கூறுகிறார். அப்போது முத்து நீங்க இங்க நிம்மதியா இருக்கலாம் மம்மி என சொன்னதும். நீ என்னடா புதுசா மம்மினுலாம் கூப்பிடுற என விஜயா கேட்க, அப்போது முத்துவும், மீனாவும் தாங்கள் இருவரும் ஸ்போகன் இங்கிலீஷ் வகுப்புக்கு செல்வதை சொல்கிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதையடுத்து ஸ்ருதியும், ரவியும் அங்கு வர, அப்போது ஸ்ருதி, தன்னுடைய அம்மா அப்படி செய்ததற்காக தான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என விஜயாவிடம் சொல்கிறார். மன்னிப்பு கேக்குற அளவுக்கு என்னதான் நடந்துச்சு என அண்ணாமலை கேட்க, முத்து எல்லா விஷயத்தையும் போட்டு உடைக்கிறார். இதைக்கேட்டதும் மீனாவின் அம்மா, சம்மந்தி வயசுல எவ்வளவு பெரியவங்க, அவங்களை இப்படி பண்ணலாமா என கேட்கிறார். இதையடுத்து முத்துவும், மீனாவும் கிளம்பி ஸ்போகன் இங்கிலிஷ் கிளாசுக்கு செல்கிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அங்கு தான் முத்துவுக்கு ஒரு நண்பர் கிடைக்கிறார். அவர் முத்துவின் வீட்டு பிரச்சனையை பற்றி கேட்டு தெரிந்துகொண்டு, நான் உங்களுக்கு உதவுகிறேன் என சொல்கிறார். அப்படி நீங்க என்ன வேலை பாக்குறீங்க என முத்து கேட்க, நான் வருமான வரித்துறையில் வேலை பார்க்கிறேன் என சொல்கிறார். அதைக்கேட்டதும் ஷாக் ஆன முத்து, அப்போ என் வீட்டை மீட்டு கொடுத்திருவீங்களா சார் என கேட்க, அவரும், அந்த பைனான்சியரை நேரில் சென்று பார்த்து பேசுவோம் என சொல்லி இருக்கிறார். இதன்பின்னர் என்ன ஆகப்போகிறது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பொறுத்திருந்து பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-may-15th-2026-episode-muthu-new-friend-help-to-recover-home-from-financier-4ltghkp"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Ethirneechal Thodargiradhu : குணசேகரனுக்கு செக் வைத்த நீதிமன்றம்... ஈஸ்வரிக்கு காத்திருக்கும் சவால்..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/ethirneechal-thodargiradhu-serial-may-16th-2026-episode-janani-and-eshwari-clash-in-court-6zeqit1</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/ethirneechal-thodargiradhu-serial-may-16th-2026-episode-janani-and-eshwari-clash-in-court-6zeqit1</guid>
            <pubDate>Sat, 16 May 2026 11:26:41 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Ethirneechal Thodargiradhu Serial Today Episode : எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி தொடர்ந்த வழக்கில் ஆஜராக ஈஸ்வரி கோர்ட்டுக்கு வந்துள்ளார். அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01krqngh7tedv9d8sfr81qshaw,imgname-ethirneechal--9--1778910774522.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Ethirneechal Thodargiradhu Serial Today Episode : எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி தொடர்ந்த வழக்கில் ஆஜராக ஈஸ்வரி கோர்ட்டுக்கு வந்துள்ளார். அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;எதிர்நீச்சல் தொடர்கிறது&lt;/strong&gt; சீரியலில் ஜனனி, பந்தக்கால் நடுவதற்காக வீட்டிற்கு வந்திருந்த நிலையில், அவரிடம் இந்த கேஸை வாபஸ் வாங்கிவிட்டு குடும்பத்தோடு இணக்கமாக செல்லுமாறு ஈஸ்வரி கேட்ட நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்த ஜனனி, நாளைக்கு என்ன ஆனாலும் நான் நீதிமன்றத்துக்கு செல்வேன் என சவால்விட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றுள்ளார். இதனால் கடும் அப்செட்டில் இருக்கிறார் ஈஸ்வரி. அவரிடம் கதிர் மற்றும் ஞானம் இருவரும் வந்து பேசி, நீதிமன்றத்தில் அண்ணனுக்கு ஆதரவாக பேசுமாறு கூறுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;Ethirneechal : ஓட்டலில் ஒரே ரூமில் தர்ஷன் - அன்புக்கரசி... வீடியோவால் வெடிக்கப்போகும் புது பிரச்சனை&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மறுநாள் வழக்கு விசாரணைக்கு வர உள்ளதால், ஜனனி தன்னுடைய வக்கீல் சாருபாலா உடன் காரில் கிளம்பி கோர்ட்டுக்கு செல்கிறார். சக்தியும் உடன் இருக்கிறார். அப்போது கோர்ட்டில் எல்லாவற்றையும் சரியாக சொல்லுங்கள் என சாருபாலா சொன்னதும், எனக்கும் ஈஸ்வரி அக்காவுக்கும் இடையேயான உறவு முறிந்தாலும் சரி, நான் நியாயத்தின் பக்கம் தான் நிற்பேன் என்று திட்டவட்டமாக கூறுகிறார். மறுபுறம் ஈஸ்வரியை, கதிர் மற்றும் ஞானம் இருவரும் நீதிமன்றத்துக்கு அழைத்து வருகிறார்கள். ஆதி குணசேகரன் கோர்ட்டுக்கு வரவில்லை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கோர்ட் வாசலில் ஜனனி, சாருபாலா உடன் நின்று கொண்டிருக்க, அப்போது அங்கு வரும் ஈஸ்வரி, அவரிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் நீதிமன்றத்திற்குள் செல்கிறார். அப்போது ஜனனியிடம் பேசும் சாருபாலா, ஈஸ்வரி இப்படி நடந்துக்குறாங்கனு நீங்க விட்டுக் கொடுத்து போயிடாதீங்க. அவங்க தப்பானவர்கள் பக்கம் நின்றாலும் எவ்வளவு ஸ்ட்ராங்கா இருக்காங்க பாத்தீங்கள்ல. நீங்க நடந்தவற்றை முழுவதுமாக சொல்லியும் அவர்களால் அதை உள்வாங்க முடியவில்லை. ஏனெனில் அவர் தன்னையும் மீறி குணசேகரனின் ஆளாக மாறிவிட்டார் என கூறுகிறார் சாருபாலா.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதையடுத்து வழக்கு விசாரணைக்காக ஜனனி நீதிமன்றத்திற்குள் செல்கிறார். அப்போது சாருபாலாவை அழைக்கும் நீதிபதி, நீங்க மறு விசாரணை கேட்டு பெட்டிஷன் சமர்பித்திருப்பது ஏன் என கேட்கிறார். அதற்உ அவர், இந்த வழக்கு விசாரிக்கப்பட்ட தன்மை நேர்மையாக இருந்தாலும் காலம் நீட்டிக்கப்பட்டதால், சில விஷயங்கள் ரொம்ப நார்மலாகிவிட்டது. குணசேகரன் செஞ்சது மிகப்பெரிய குற்றம். ஆனால் அதற்கான தண்டனை அவருக்கு கிடைக்கவில்லை. அவருக்கு அந்த வழக்கில் ஜாமீன் கொடுத்து தீர்ப்பளித்துவிட்டார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆனால் ஜாமீன் கொடுத்ததுக்கு அப்புறம், குணசேகரன் வெளிய வந்து நிறைய தப்பு பண்ணிருக்காரு. அதெல்லாம் இந்த வழக்கில் நாங்கள் குறிப்பிட்டுள்ளோம். இது எல்லாத்துக்கும் சேர்த்து தான் நாங்க மறு விசாரணைக்கு முறையிட்டு இருக்கிறோம் என சொல்கிறார் சாருபாலா. அதன்பின்னர் குணசேகரன் தரப்பு வக்கீல் எழுந்து, அவர்கள் தொடர்ந்துள்ளது பொய் வழக்கு என கூறுகிறார். அப்போது குறுக்கிடும் நீதிபதி, இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி குணசேகரன், அவரை எங்கே என நீதிபதி கேட்க. வாயடைத்துப் போகிறார் வக்கீல். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. அதன் பின் என்ன ஆனது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/ethirneechal-thodargiradhu-serial-may-16th-2026-episode-janani-and-eshwari-clash-in-court-6zeqit1"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Siragadikka Aasai : மனோஜுக்கு வில்லியாக மாறிய விஜயா... வக்கீல் பார்த்த கோல்மால் வேலை]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-may-16th-2026-episode-vijaya-turns-villi-for-her-son-manoj-71ikpak</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-may-16th-2026-episode-vijaya-turns-villi-for-her-son-manoj-71ikpak</guid>
            <pubDate>Sat, 16 May 2026 08:54:41 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial Today Episode : விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜும் ரோகிணியும் ஷோரூமில் பேசிக் கொண்டிருந்த விஷயம் விஜயாவுக்கு தெரியவந்துள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01krqctreqyv983bhf8r0sca68,imgname-siragadikka-aasai--66--1778901672407.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial Today Episode : விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜும் ரோகிணியும் ஷோரூமில் பேசிக் கொண்டிருந்த விஷயம் விஜயாவுக்கு தெரியவந்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;சிறகடிக்க ஆசை&lt;/strong&gt; சீரியலில் மனோஜ் ஷோரூமில் தங்கியிருந்த விஜயாவை அண்ணாமலை பேசி சமாதானப்படுத்தி மீனாவின் அம்மா வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார். இங்கு வந்ததில் இருந்தே திமிர்த்தனமாக பேசிக் கொண்டிருக்கிறார் விஜயா. ஆனால் அதையெல்லாம் சகித்துக் கொண்டு மீனாவின் குடும்பத்தார் அவரை நல்லபடியாக பார்த்துக் கொள்கிறார்கள். மறுபுறம் முத்து, வீட்டை எப்படியாவது மீட்க வேண்டும் என பிளான் போட்டுக் கொண்டிருக்க, அவருக்கு ஒரு நண்பர் மூலம் வீட்டை மீட்கும் வாய்ப்பு வந்துள்ளது. இதன்பின் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;Siragadikka Aasai : விஜயாவுக்காக ஷோரூமை மூடிய மனோஜ்; அண்ணாமலையால் காத்திருக்கும் ட்விஸ்ட்&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விஜயாவிடம் மீனாவின் அம்மா, காலை டிபனுக்கு பூரி செய்யவா என கேட்க, அதற்கு அவர் நீங்க பழைய எண்ணெய்யை யூஸ் பண்ணுவீங்களா, அது எனக்கு ஒத்துக்காது என சொல்கிறார் விஜயா. அதற்கு அவர் புது எண்ணெய் தான் சம்மந்தி என சொல்லி பூரி செய்து கொடுக்கிறார். விஜயாவுக்கு கீழே உட்கார்ந்து சாப்பிட்டு பழக்கம் இல்லாததால் அவருக்காக பக்கத்து வீட்டில் இருந்து டைனிங் டேபிள் வாங்கி வந்து போடுகிறார் சத்யா. இப்படி அவருக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்கிறார்கள். ஆனால் அவரோ நன்றியுணர்வே இல்லாமல் இருக்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முத்து, அண்ணாமலையிடம் தனக்கு ஸ்போகன் இங்கிலீஷ் கிளாசில் ஒரு நண்பர் கிடைத்திருப்பதாகவும், அவர் வருமான வரித்துறையில் வேலை செய்வதாகவும், அவரிடம் நம்முடைய வீட்டு பிரச்சனையை சொன்னபோது, அவர் பைனான்சியரை சந்தித்து இந்த பிரச்சனையை முடித்து தருவதாக சொல்லி இருக்கிறார் என சொல்ல, அண்ணாமலை சந்தோஷப்படுகிறார். அதுமட்டுமின்றி அந்த பைனான்சியரிடம் வருமான வரித்துறை அதிகாரியுடன் சென்று மனோஜ் வாங்கிய 48 லட்சம் ரூபாய் கடனுக்கான ஆதாரத்தை கேட்க இருப்பதாக சொல்கிறார் முத்து.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மறுபுறம் மனோஜின் ஷோரூமிற்கு ரோகிணி வருகிறார். அவர் வந்ததும் மனோஜிடம் ஆண்ட்டி எங்க என கேட்க, அவரோ அப்பா வந்து அம்மாவை அழைச்சிட்டு போயிட்டாங்க. இப்போ அவங்க மீனா வீட்டுல இருக்காங்க என சொல்கிறார். அதற்கு ரோகிணி, பார்த்தியா மனோஜ், கொஞ்ச நாள் கூட அங்கிளால ஆண்டியை பிரிஞ்சி இருக்க முடியல, அதேபோல தான் என்னாலையும் உன்னை பிரிந்து இருக்க முடியவில்லை என பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரம் பார்த்து மனோஜின் டைவர்ஸ் கேஸை நடத்தும் வக்கீல் அங்கு வருகிறார். அவர் மனோஜையும் ரோகிணியையும் ஒன்றாக பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பின்னர் மனோஜை தனியாக அழைத்து பேசும் வக்கீல், என்ன மனோஜ் ரெண்டு பேரும் சமாதானம் ஆகிட்டீங்களா என கேட்கிறார். அதற்கு அவர் இல்லை மேடம் என சொல்லி மழுப்புகிறார். பின்னர் அங்கிருந்து செல்லும் வக்கீல், விஜயாவுக்கு போன் போட்டு பேசுகிறார். அவரிடம் என்ன மேடம் உங்க பையனோட டைவர்ஸ் கேஸை வாபஸ் வாங்கிடலாமா என கேட்கிறார். எதுக்கு என விஜயா கேட்டதும், மனோஜ், ரோகிணி இருவரும் ஜோடியாக ஷோரூமில் இருந்ததை பற்றி சொல்கிறார் வக்கீல். இதனால் செம டென்ஷன் ஆகிறார் விஜயா. இதன்பின் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-may-16th-2026-episode-vijaya-turns-villi-for-her-son-manoj-71ikpak"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Siragadikka Aasai : 1000 எபிசோடுகளை எட்டி சிறகடிக்க ஆசை சாதனை... இதற்கு முன் இந்த மைல்கல்லை எட்டிய விஜய் டிவி சீரியல்கள் என்னென்ன?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-reached-1000-episode-fans-pouring-wishes-9dgn037</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-reached-1000-episode-fans-pouring-wishes-9dgn037</guid>
            <pubDate>Sat, 09 May 2026 10:21:08 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai 1000 Episode Record : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் வெற்றிகரமாக 1000 எபிசோடுகளை ரீச் பண்ணி சாதனை படைத்துள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kr5gx2hsbxfcmgndeb3cped3,imgname-siragadikka-aasai--35--1778301962808.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai 1000 Episode Record : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் வெற்றிகரமாக 1000 எபிசோடுகளை ரீச் பண்ணி சாதனை படைத்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முன்பெல்லாம் சீரியல்கள் அசால்டாக ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து ஒளிபரப்பப்படும். ஆனால் தற்போது போட்டிகள் அதிகரித்துவிட்டதால், சீரியல்கள் ஒரு ஆண்டு தாக்குப்பிடிப்பதே சவாலான விஷயமாக இருக்கிறது. அதுமட்டுமின்றி டிஆர்பி கிடைக்கவில்லை என்றால் தொடங்கிய சில மாதங்களிலேயே சில சீரியல்களை இழுத்து மூடும் சூழலும் உருவாகிறது. அதற்கு மத்தியில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் வெற்றிகரமாக ஆயிரமாவது எபிசோடை எட்டி சாதனை படைத்துள்ளது. அந்த சீரியலின் இந்த மைல்கல் சாதனைக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள் ரசிகர்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிறகடிக்க ஆசை சீரியல் விஜய் டிவியில் கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி 23ந் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணம் அதன் கதைக்களம் மற்றும் அதில் நடிக்கும் நட்சத்திரங்கள் தான். குறிப்பாக இந்த தொடரின் ஹீரோ, ஹீரோயினான முத்து மற்றும் மீனா இருவருக்குமே மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. மற்ற சீரியல்களை போல் குறிப்பிட்ட சில கேரக்டர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல், இந்த தொடரில் உள்ள எல்லா கேரக்டருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும். அதேபோல் கதைக்களத்தில் ட்விஸ்டுக்கும் பஞ்சமில்லாததால், ரசிகர்கள் இந்த சீரியலை விரும்பி பார்க்கிறார்கள். சிறகடிக்க ஆசை சீரியலை போல் 1000 எபிசோடு கடந்து ஒளிபரப்பான சில சீரியல்களும் விஜய் டிவியில் உள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விஜய் டிவியில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் ஒன்று. இதன் முதல் சீசன், கடந்த 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டு, 2023-ம் ஆண்டு வரை ஒளிபரப்பானது. இந்த சீரியல் 1348 எபிசோடுகளுடன் முடிவுக்கு வந்தது. இந்த சீரியல் முடிவடைந்த உடனேயே அதன் இரண்டாம் பாகத்தை ஒளிபரப்ப தொடங்கினர். தற்போது அந்த சீரியலும் டிஆர்பியில் சக்கைப் போடு போட்டு வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இரண்டாம் பாகம் தற்போது 700 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விஜய் டிவியில் 1000 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பான மற்றொரு சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2023-ம் ஆண்டு வரை ஒளிபரப்பான இந்த சீரியல் 1036 எபிசோடுகளுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த சீரியலில் அருண் பிரசாத், ரோஷினி ஆகியோர் ஹீரோ, ஹீரோயினாக நடித்திருந்தனர். இந்த சீரியல் முடிந்தவுடன் அதன் இரண்டாம் பாகத்தை தொடங்கினார். ஆனால் அதற்கு போதிய வரவேற்பு இல்லாததால், 133 எபிசோடுகளுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விஜய் டிவி ஒளிபரப்பிய மற்றுமொரு சூப்பர் ஹிட் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த சீரியல் 2025-ம் ஆண்டு வரை ஒளிபரப்பானது. விஜய் டிவி வரலாற்றில் அதிக எபிசோடுகள் ஓடிய சீரியல் என்றால் அது பாக்கியலட்சுமி தான். இந்த சீரியல் ஒட்டுமொத்தமாக 1469 எபிசோடுகள் ஒளிபரப்பாகியது. இந்த சீரியலின் சாதனையை சிறகடிக்க ஆசை சீரியல் முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-reached-1000-episode-fans-pouring-wishes-9dgn037"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Siragadikka Aasai : சிந்தாமணியின் திருவிளையாடல் ஆரம்பம்... ரோகிணியிடம் சிக்கப்போகும் மனோஜ்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-may-8th-2026-episode-chinthamani-ask-rohini-to-meet-manoj-ane78t8</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-may-8th-2026-episode-chinthamani-ask-rohini-to-meet-manoj-ane78t8</guid>
            <pubDate>Fri, 08 May 2026 09:42:33 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயாவின் குடும்பத்தை சின்னாபின்னமாக உடைத்த சிந்தாமணி, தற்போது ரோகிணியை வைத்து கேம் ஆடத் தொடங்கி இருக்கிறார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kr2wcst2cxrhq3wnm0k0f9c9,imgname-siragadikka-aasai-serial-may-8th-2026-episode-chinthamani-ask-rohini-to-meet-manoj-1778213349186.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயாவின் குடும்பத்தை சின்னாபின்னமாக உடைத்த சிந்தாமணி, தற்போது ரோகிணியை வைத்து கேம் ஆடத் தொடங்கி இருக்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயாவின் வீட்டை பைனான்சியர் ஜப்தி செய்துள்ளதால், அனைவரும் வெளியேறிவிட்டனர். அவர்களை அனைவர் முன்னிலையிலும் அவமானப்படுத்த வேண்டும் என்கிற சிந்தாமணியின் திட்டம் பழிக்காமல் போனது. ஏனெனில் அவர்கள் வீட்டை ஜப்தி செய்யும் முன்னரே காலி செய்துவிட்டு வெளியேறிவிட்டார் முத்து. தற்போது விஜயா வசதிக்கு ஆசைப்பட்டு ஸ்ருதியின் அம்மா வீட்டில் தங்கி இருக்கிறார். ஆனால் அண்ணாமலையை மீனா தன்னுடைய அம்மா வீட்டிற்கு அழைத்து சென்றிருக்கிறார். இதன்பின் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மீனா அம்மா வீட்டில் இருக்கும் அண்ணாமலை, அங்கு வசதி கம்மியாக இருந்தாலும் அங்கு இருப்பவர்கள் அண்ணாமலையை தாங்கு தாங்குனு தாங்குகிறார்கள். அதனால் அவர் எந்த கவலையும் இன்றி நிம்மதியாக இருக்கிறார். மறுபுறம் ஸ்ருதி வீட்டில் விஜயாவுக்கு எல்லா வசதியும் இருந்தாலும், ஆனால் அவருக்கு அங்கு நிம்மதி இல்லை. கேரளாவில் சாப்பிடும் மட்டை அரிசியில் சாப்பாடு போடுகிறார்கள். அது விஜயாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இதனால் இருக்குற இடத்துக்கு ஏத்த மாதிரி மாற பழகிக் கொள்ள வேண்டும் என விஜயாவுக்கு சொல்கிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மறுபுறம் மனோஜ், இரவு தன்னுடைய கடையிலேயே தங்குகிறார். அவருக்காக அவருடைய நண்பர் மொட்டை சந்தோஷ் கட்டில் வாங்கிக் கொடுத்ததோடு, ஒரு எலிப்பொரியையும் வாங்கி வந்திருந்தார். அவரையும் தன்னுடனே கடையில் தங்க வைக்கிறார் மனோஜ். இரவில் எலி அங்கும் இங்கும் ஓடுவதைப் பார்த்து பயந்துபோன மனோஜ், தூக்கமின்றி இருக்க, அவரது நண்பர் சந்தோஷ், எதையும் பொருட்படுத்தாமல் நன்கு குறட்டை விட்டு தூங்குகிறார். அவரின் குறட்டை சத்தத்தால் தூக்கம் வராமல் திண்டாடுகிறார் மனோஜ்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மறுபக்கம் முத்துவும் மீனாவும் மொட்டை மாடியில் படுத்துக் கொண்டே, இந்த பிரச்சனையில் இருந்து எப்படி நம் வீட்டை மீட்பது என்பது பற்றி ஆலோசிக்கிறார்கள். மறுதினம் ரோகிணி, சிந்தாமணியை அவரது வீட்டில் சந்திக்கிறார். சிந்தாமணிக்கு தற்போது விஜயாவின் குடும்பத்தில் யார்... யார் எங்கெங்கு இருக்கிறார்கள் என்கிற மொத்த விஷயமும் தெரியவருகிறது. ஆக மொத்தத்தில் அந்த குடும்பம் சிதறிப் போனதால் சந்தோஷமாக இருக்கிறார் சிந்தாமணி. ரோகிணியிடம் பேசுகையில், இது தான் நீ மனோஜ் உடன் சேருவதற்கு சரியான நேரம் என சொல்கிறார் சிந்தாமணி.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நீ போய் மனோஜுக்கு ஆறுதலாக இரு, அவன் உன் பக்கம் வந்திருவான் என அட்வைஸ் பண்ணுகிறார். ரோகிணியும் இதைப்பயன்படுத்தி, மனோஜை தன் பக்கம் இழுத்துவிட வாய்ப்பு உள்ளது. அநேகமாக மனோஜ், ரோகிணி வீட்டில் தங்குவதற்கும் அதிக வாய்ப்பு இருக்கிறது. இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே ஆன டைவர்ஸ் கேஸும் வாஷ் அவுட் ஆகக் கூடும். இந்த விஷயம் விஜயாவுக்கு தெரிந்தால் என்ன நடக்கும்? என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-may-8th-2026-episode-chinthamani-ask-rohini-to-meet-manoj-ane78t8"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Siragadikka Aasai : ரோகிணியின் பிளானில் மண்ணை அள்ளிப்போட்ட விஜயா... தப்பித்த மனோஜ்..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-may-13th-episode-vijaya-sudden-visit-to-manoj-shop-collapse-rohini-plan-bzctnoi</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-may-13th-episode-vijaya-sudden-visit-to-manoj-shop-collapse-rohini-plan-bzctnoi</guid>
            <pubDate>Wed, 13 May 2026 09:05:03 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயா, ஸ்ருதி வீட்டில் இருந்து கோபித்துக் கொண்டு மனோஜின் ஷோரூமுக்கு சென்றிருக்கிறார். அதன்பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01krfp8fq4x85f6gcgdjv6rgef,imgname-siragadikka-aasai--50--1778643123940.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயா, ஸ்ருதி வீட்டில் இருந்து கோபித்துக் கொண்டு மனோஜின் ஷோரூமுக்கு சென்றிருக்கிறார். அதன்பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயா, ஸ்ருதியின் அம்மா வீட்டில் தங்கி இருந்த நிலையில், அங்கு நடந்த பார்ட்டியில் அவரை நடனம் ஆட சொல்லி அனைவரும் வற்புறுத்தி இருந்தனர். ஆனால் விஜயாவுக்கு அது சுத்தமாக பிடிக்கவில்லை. இதனால் அனைவர் முன்னிலையிலும் கத்திவிட்டு, ரூமுக்கு சென்றுவிடுகிறார். அங்கு தனியாக அமர்ந்து கண்ணீர் விட்டு அழுகிறார் விஜயா. வசதிக்கு ஆசைப்பட்டு வந்த இடத்தில் நம்மை இப்படி அவமானப்படுத்திவிட்டார்களே என்கிற கோபத்தில் இருக்கிறார் விஜயா. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கோபத்தில் ஸ்ருதி அம்மா வீட்டில் இருந்து பெட்டி படுக்கையை எடுத்துக் கொண்டு வெளியேறுகிறார் விஜயா. மறுபுறம் மனோஜ் தன்னுடைய ஷோரூமில், ரோகிணி உடன் இரவில் டூயட் பாடிக் கொண்டிருக்கிறார். அதேபோல் அவர் கொண்டு வந்த பூனை, எலியை பிடித்துவிட்டதை அறிந்து சந்தோஷப்படுகிறார். இதனால் எப்படியாவது மனோஜை நம் வழிக்கு கொண்டு வந்துவிடலாம் என்கிற மிதப்பில் ரோகிணி இருக்க, அப்போது கதவை தட்டும் சத்தம் கேட்கிறது. இந்த நேரத்தில் யார் என்று மனோஜ் யோசிக்க, விஜயா, வெளியே இருந்து கத்துகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதனால் ஷாக் ஆன மனோஜ், உடனடியாக ரோகிணியை எங்காவது சென்று மறைந்து கொள்ளும்படி சொல்கிறார். பின்னர் விஜயாவை உள்ளே அழைத்து வருகிறார் மனோஜ். அவர் என்ன ஆச்சு என விஜயாவிடம் கேட்க, அவரோ ஸ்ருதி வீட்டில் சாப்பாடு சரியில்லை என சொல்லி மழுப்புகிறார். பின்னர் பாத்ரூமுக்கு செல்கிறார் விஜயா. அந்த கேப்பில் ரோகிணியை ஷோரூமில் இருந்து வெளியே அனுப்பி வைக்கிறார் மனோஜ். அவரோ என்ன மனோஜ் இப்படி பாதியிலேயே துரத்திவிடுற என கேட்க, எங்க அம்மா பார்த்தால் அவ்வளவு தான்,. பெரிய பிரச்சனை ஆகிடும் என சொல்லி அனுப்பி வைக்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பின்னர் பாத்ரூமில் இருந்து வெளியே வரும் விஜயா, மனோஜிடம் என்ன பாத்ரூமில் பொட்டு இருக்கு, யாரோடது என கேட்கிறார். அதற்கு அவர், நம்ம ஷோரூமில் நிறைய லேடீஸ் வேலை பார்க்கிறார்கள், அவர்களில் யாராவது ஒட்டி இருப்பார்கள் என சொல்கிறார். மறுபுறம் ஸ்ருதியும், ரவியும் விஜயாவை காணவில்லை என தேடுகிறார்கள். பின்னர் இந்த விஷயத்தை அவர்கள் முத்து - மீனாவிடம் சொல்கிறார்கள். அவர்கள் கண்டிப்பாக விஜயா, மனோஜ் கடைக்கு தான் சென்றிருப்பார் என்று யூகிக்கிறார்கள். இதையடுத்து அவர்களும் மனோஜின் ஷோரூமிற்கு கிளம்பிச் செல்கிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மறுபுறம் மனோஜின் ஷோரூமில் அவர் தனக்கு வெளி உணவு செட் ஆகாததால், சமைத்து தருமாறு ஜீவா மற்றும் சந்தோஷிடம் சொல்ல, அவர்கள் இருவரும் மனோஜுக்காக ஷோரூமிலேயே சமையல் செய்கிறார்கள். அந்த சமயத்தில் விஜயா, வெளியே இருக்கும் ஷோபாவில் அமர்ந்து, தன்னை அவர்கள் அவமானப்படுத்தியதை நினைத்து கண் கலங்குகிறார். இதையடுத்து என்ன ஆனது? விஜயாவை முத்துவும் மீனாவும் சந்தித்து என்ன சொல்லப் போகிறார்கள்? என்பதை இனி வரும் எபிசோடுகளில் பொறுத்திருந்து பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-may-13th-episode-vijaya-sudden-visit-to-manoj-shop-collapse-rohini-plan-bzctnoi"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Siragadikka Aasai : முத்து மீனாவின் தில்லாலங்கடி வேலை... வாய்கூசாமல் பொய் சொன்ன விஜயா..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-may-11th-episode-annamalai-and-vijaya-speak-through-phone-call-frnpr5o</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-may-11th-episode-annamalai-and-vijaya-speak-through-phone-call-frnpr5o</guid>
            <pubDate>Mon, 11 May 2026 09:48:41 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவும், மீனாவும் சேர்ந்து பிளான் போட்டு, விஜயாவை அண்ணாமலையுடன் பேச வைத்து உள்ளனர்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kraky4kpm66kzthfwcdcv7j1,imgname-siragadikka-aasai--39--1778472915574.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவும், மீனாவும் சேர்ந்து பிளான் போட்டு, விஜயாவை அண்ணாமலையுடன் பேச வைத்து உள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயா, சுருதி வீட்டிலும், அண்ணாமலை மீனா வீட்டிலும் வசித்து வரும் நிலையில் அவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக பேசிக் கொள்ளாமல் இருக்கிறார்கள். அவர்கள் இருவரையும் எப்படியாவது பேச வைக்க வேண்டும் என முடிவெடுக்கும் முத்து - மீனா, பல்வேறு திட்டங்களை தீட்டுகிறார்கள். விஜயாவை அழைத்து வரலாம் என முத்து ஐடியா கொடுக்க, உங்க அம்மா இங்க வரமாட்டாங்க என கூறுகிறார் மீனா. அதேபோல் அண்ணாமலையை போய் பார்க்க சொன்னால் அவரும் முடியாது என சொல்லிவிடுவார். அவர் என்ன முடிவெடுத்தார்கள் என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதையடுத்து முத்து, அண்ணாமலை குளிக்கும் நேரத்தில் வீட்டில் உள்ள அவருடைய போனை எடுத்து, விஜயாவுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுக்கிறார். அதைப்பார்த்த விஜயா, உடனே அண்ணாமலைக்கு போன் போடுகிறார். அதன்பின் இருவரும் பேசிக் கொள்கிறார்கள். எப்படி இருக்க என அண்ணாமலை கேட்க, விஜயா தான் நன்றாக இருப்பதாக பொய் சொல்கிறார். அதன்பின் எதற்காக மிஸ்டு கால் கொடுத்தீர்கள் என விஜயா கேட்க, என்னது நான் போன் பண்ணிருந்தனா என அண்ணாமலை செக் பண்ணி பார்க்க, அப்போது முத்துவும் மீனாவும் அங்கு நிற்பதை பார்க்கிறார். இவங்களோட வேலை தானா என அண்ணாமலை கண்டுபிடித்துவிடுகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மறுபுறம் முத்துவும் மீனாவும் ஸ்போக்கன் இங்கிலிஷ் வகுப்புக்கு செல்கிறார்கள். அங்கு யாருமே இருக்க மாட்டார்கள் என பதற்றத்துடனே முத்துவும் மீனாவும் செல்ல, உள்ளே போய் பார்த்தால் நிறைய பேர் இருக்கிறார்கள். இதனால் சற்று ஆறுதல் அடைகிறார் முத்து. அப்போது அந்த வகுப்புக்கு எண்ட்ரி கொடுக்கிறார் ஸ்வேதா. அங்கு வந்த பின்னர் முத்து, மீனாவிடம் உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்குன்னு சொன்னேன்ல அது வேறெதுவுமில்லை, உங்களுக்கு ஸ்போக்கன் இங்கிலிஷ் வகுப்பு எடுக்கப் போறது நான் தான் என கூறுகிறார். இதைக்கேட்டு முத்து செம சந்தோஷம் அடைகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதன்பின்னர் அங்கு வந்திருந்தவர்களிடம் ஒவ்வொருவராக எழுந்து உங்களை பற்றி இண்ட்ரோ கொடுக்க வேண்டும், அதுவும் இங்கிலிஷில் தான் சொல்ல வேண்டும் என கூறுகிறார் ஸ்வேதா. அப்போது அங்கு ஒருவர் எண்ட்ரி கொடுக்கிறார். அவர் வேற யாருமில்லை, முத்துவின் நண்பர் முருகன் தான். பொண்டாட்டி தொல்லை தாங்க முடியாமல் தான் இங்கு வந்ததாக கூறுகிறார் முருகன். ஆபிஸ்ல புரமோஷன் கிடைத்துள்ளதால் அடிக்கடி வெளியூர் போக வேண்டியது வரும் அதனால் இங்கிலிஷ் கத்துக்க சொல்லி அனுப்பிட்டா என் பொண்டாட்டி என கூறுகிறார் முருகன். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதன்பின் என்ன ஆனது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-may-11th-episode-annamalai-and-vijaya-speak-through-phone-call-frnpr5o"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Siragadikka Aasai : ரேகாவுக்கு டேக்கா கொடுக்கும் சிந்தாமணி... கடும் அப்செட்டில் விஜயா]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-may-09th-episode-chinthamani-plan-to-stop-rekha-ioc1ipg</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-may-09th-episode-chinthamani-plan-to-stop-rekha-ioc1ipg</guid>
            <pubDate>Sat, 09 May 2026 08:15:50 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் ரேகாவை ஐதராபாத்துக்கு அனுப்பி வைத்துள்ள சிந்தாமணி, அவரை சென்னை வர விடாமல் தடுக்க பிளான் போடுகிறார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kr59tymgpaan2x60x1jcbhqj,imgname-siragadikka-aasai--33--1778294553232.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் ரேகாவை ஐதராபாத்துக்கு அனுப்பி வைத்துள்ள சிந்தாமணி, அவரை சென்னை வர விடாமல் தடுக்க பிளான் போடுகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயா தற்போது சுருதி வீட்டில் தங்கி இருக்கிறார். வசதிக்கு ஆசைப்பட்டு அங்கு சென்ற விஜயா, ஏண்டா இங்க வந்தோம் என ஃபீல் பண்ணும் அளவுக்கு அவரது வீட்டில் அவரை நடத்துகிறார்கள். மறுபுறம் அண்ணாமலை வசதி கம்மியான மீனா வீட்டில் தங்கி இருந்தாலும் அவரை சந்தோசமாக பார்த்துக் கொள்கிறார்கள். விஜயாவைப் போல் அவரது மகன் மனோஜ் ஷோரூமில் எலி தொல்லைகளுக்கு நடுவில் தூங்க முடியாமல் அவதிப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் ரோகினியை சந்தித்து அவருக்கு சிந்தாமணி ஒரு ஐடியா கொடுத்திருக்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரோகினிடம் இதுதான் உனக்கு சரியான நேரம் நீ மனோஜை சந்தித்து அவனை உன் வழிக்கு கொண்டு வரப்பார் என சொல்கிறார் சிந்தாமணி. அதற்கு அவரும் கண்டிப்பாக நான் இந்த சான்ஸை மிஸ் பண்ண மாட்டேன் என சொல்லிவிட்டு கிளம்புகிறார். பின்னர் மனோஜ் ஷோரூம்-க்கு செல்லும் ரோகினி, அங்கு அவர் எலியை பிடிக்க என்ன மருந்து வைக்கலாம் என பேசிக்கொண்டு இருப்பதை பார்த்து சிரிக்கிறார். பின்னர் மனோஜிடம் நீ என் வீட்டில் வந்து தங்கலாமே என ரோகினி சொல்ல, அதற்கு அவர் அம்மாவுக்கு தெரிஞ்சுச்சுனா அவ்வளவுதான் என கூறுகிறார். பின்னர் எலியை பிடிக்க தன்னிடம் ஒரு ஐடியா இருப்பதாக சொல்லும் ரோகிணி, தானும் இன்று இரவு உன்னுடனே வந்து தங்குகிறேன் என சொல்லி இருக்கிறார். இந்த மக்கு மனோஜும் அதற்கு ஓகே சொல்லி உள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மறுபுறம் சிந்தாமணியை சந்திக்க அவரது கணவர் வீட்டுக்கு வருகிறார். அவரிடம் என்ன விஷயம் என சிந்தாமணி கேட்க, அவரோ ஹைதராபாத்தில் உள்ள ரேகா திரும்பவும் சென்னைக்கு வர உள்ளதாக சிந்தாமணியிடம் கூறுகிறார். அவளுக்கு மட்டும் நாம் வேண்டும் என்று அவளை அங்கு அனுப்பி வைத்த விஷயம் தெரிந்தால் அவ்வளவுதான் என சிந்தாமணியின் கணவர் சொல்ல, அவளை இங்கு வரவிடாமல் தடுக்க என்னிடம் ஒரு நல்ல பிளான் இருக்கிறது என கூறுகிறார் சிந்தாமணி. அது என்ன பிளான் என்பது பற்றி பேச தன் கணவரை உள்ளே அழைத்துச் செல்கிறார். அந்த பிளான் பற்றி சஸ்பென்சாக வைத்துள்ளார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதையடுத்து விஜயாவை காட்டுகிறார்கள். சுருதி வீட்டு மாடிக்கு விஜயா சென்றபோது அங்கு சுருதியின் அம்மா ரூமை பூட்டிக் கொண்டிருக்கிறார். பின்னர் விஜயாவிடம் தான் வெளியே செல்ல இருப்பதாகவும் வீட்டைக் கவனமாக பார்த்துக் கொள்ளுமாறும் கூறிவிட்டு செல்கிறார். தான் இருக்கும்போது வீட்டு அறையின் கதவை சுருதி அம்மா பூட்டி சென்றதால் கடும் அப்செட் ஆன விஜயா, தன்னுடைய தோழி பார்வதிக்கு போன் போட்டு பேசுகிறார். அவரிடம் நான் இப்போ எங்கே இருக்கிறேன் தெரியுமா என கேட்க, அவரும் நீ உன்னோட வசதியான சம்மந்தி வீட்ல இருக்குற என்று தெரியும் என கூறுகிறார். எல்லா பிரச்சனையும் தெரிஞ்சும் எனக்கு நீ போன் பண்ணவே இல்ல என பார்வதி இடம் சண்டை போடுகிறார் விஜயா.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதுமட்டுமின்றி தனக்கு இங்கு இருக்க பிடிக்கவே இல்லை நான் கிளம்பி உன் வீட்டுக்கு வர போகிறேன் என சொல்கிறார் விஜயா. அதற்கு யோசிக்கும் பார்வதி, நீ மட்டும் இங்கு வந்தால் சரியா இருக்காது. நீ உன்னுடைய கணவர் அண்ணாமலையுடன் இங்கு வந்து தாராளமாக தங்கிக் கொள்ளலாம். ஆனால் தனியா வந்து தங்க வேண்டாம் என கூறிவிடுகிறார் பார்வதி. இதனால் மேலும் கோபமடைந்த விஜயா, என்னையே வர வேண்டாம்னு சொல்லிட்ட இல்ல என கோபப்பட்டு போனை கட் பண்ணி விடுகிறார். இதை அடுத்து என்னானது? ஸ்ருதி வீட்டில் விஜயாவுக்கு காத்திருந்த அடுத்த அதிர்ச்சி என்ன? என்பதை இனிவரும் எபிசோடுகளில் பொறுத்திருந்து பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-may-09th-episode-chinthamani-plan-to-stop-rekha-ioc1ipg"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Vijay Movie : சன் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாகும் விஜய் படம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. எந்த படம்.?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/vijay-movie-pokkiri-to-air-on-sun-tv-after-a-long-gap-ivz3li5</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/vijay-movie-pokkiri-to-air-on-sun-tv-after-a-long-gap-ivz3li5</guid>
            <pubDate>Sat, 16 May 2026 19:19:00 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, சன் டிவி மூன்று சூப்பர் ஹிட் திரைப்படங்களை ஒளிபரப்ப உள்ளது. விக்ரமின் 'தில்', ராகவா லாரன்ஸின் 'மொட்ட சிவ கேட்ட சிவா' ஆகியவற்றுடன், விஜய் ரசிகர்களின் ஆல்-டைம் ஃபேவரிட் திரைப்படமும் ஒளிபரப்பாகிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01krrg6rmsgt18ckjgg9k2avmh,imgname-tamil-news--66--1778938765976.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, சன் டிவி மூன்று சூப்பர் ஹிட் திரைப்படங்களை ஒளிபரப்ப உள்ளது. விக்ரமின் 'தில்', ராகவா லாரன்ஸின் 'மொட்ட சிவ கேட்ட சிவா' ஆகியவற்றுடன், விஜய் ரசிகர்களின் ஆல்-டைம் ஃபேவரிட் திரைப்படமும் ஒளிபரப்பாகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வார இறுதியில் குடும்பத்துடன் சேர்ந்து பழைய ஹிட் திரைப்படங்களை டிவியில் பார்ப்பது பலருக்கும் பிடித்த பொழுதுபோக்காக இருக்கிறது. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை என்றாலே சினிமா ரசிகர்களுக்கு அது ஒரு சிறிய திருவிழாவைப் போல மாறிவிடும். இந்த வாரமும், சன் டிவி ரசிகர்களை குஷிப்படுத்திய மூன்று சூப்பர் ஹிட் திரைப்படங்களை ஒளிபரப்ப தயாராகியுள்ளது. அதிலும், விஜய் நடித்த மாஸ் ஹிட் படம் இடம்பெற்றிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதுவும் தேர்தலுக்கு பிறகு விஜய் படம் மீண்டும் சன் டிவியில் ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு தில் திரைப்படம் ஒளிபரப்பாகிறது. விக்ரம், ஜோதிகா, விவேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த ஆக்ஷன்-என்டர்டெய்னர் படம், இன்றும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறுகிறது. விக்ரமின் மாஸ் காட்சிகளும், விவேக்கின் காமெடியும் இந்த படத்தின் முக்கிய பலமாக பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதையடுத்து பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாக இருப்பது தான் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் போக்கிரி திரைப்படம். விஜய் தனது ஸ்டைல், மாஸ் வசனங்கள் மற்றும் ஆக்ஷன் காட்சிகளால் ரசிகர்களை கவர்ந்த இந்த படம், டிவியில் ஒளிபரப்பானாலும் TRP-யை தெறிக்கவிடும் படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அசின் உடன் விஜயின் கெமிஸ்ட்ரியும், வடிவேலு காமெடியும் ரசிகர்களை சிரிக்க வைக்கிறது. &ldquo;ஒரு தடவை முடிவு பண்ணிட்டா...&rdquo; போன்ற வசனங்கள் இன்றும் வைரலாக பேசப்படுகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மாலை 6.30 மணிக்கு மொட்ட சிவ கேட்ட சிவா திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. ராகவா லாரன்ஸ் நடித்த இந்த படம் ஆக்ஷன், காமெடி கலவையுடன் ரசிகர்களுக்கு விறுவிறுப்பான அனுபவத்தை கொடுக்கும். குடும்பத்துடன் சேர்ந்து வார இறுதியை சினிமா கொண்டாட்டமாக மாற்ற இந்த மூன்று படங்களும் சரியான தேர்வாக இருக்கும் என ரசிகர்கள் கூறுகின்றனர். சமீப காலமாக தொலைக்காட்சிகளில் பழைய சூப்பர் ஹிட் படங்கள் மீண்டும் ஒளிபரப்பாகி வருவது பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக போக்கிரி போன்ற விஜய் படங்கள் டிவியில் ஒளிபரப்பாகும் போது சமூக வலைதளங்களிலும் ரசிகர்கள் கொண்டாட்டம் தொடங்கி விடுவது வழக்கம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/vijay-movie-pokkiri-to-air-on-sun-tv-after-a-long-gap-ivz3li5"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Top 10 Serial TRP : வாஷ் அவுட் ஆன எதிர்நீச்சல்... இந்த வார டிஆர்பி ரேஸில் அதிரடி மாற்றம்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/ethirneechal-moves-to-last-place-this-week-top-10-tamil-serial-trp-rating-l8qgtkq</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/ethirneechal-moves-to-last-place-this-week-top-10-tamil-serial-trp-rating-l8qgtkq</guid>
            <pubDate>Thu, 07 May 2026 15:45:11 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Top 10 Tamil Serial : தமிழ்நாட்டில் போட்டிபோட்டி சின்னத்திரை சீரியல்களை ஒளிபரப்பி வரும் சன் டிவியும், விஜய் டிவியும் தான் இந்த வார டிஆர்பி ரேஸில் ஆதிக்கம் செலுத்தி உள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k1001vwkkcyzeq0rzfzg89we,imgname-new-project---2025-07-25t104258.441-1753420459922.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Top 10 Tamil Serial : தமிழ்நாட்டில் போட்டிபோட்டி சின்னத்திரை சீரியல்களை ஒளிபரப்பி வரும் சன் டிவியும், விஜய் டிவியும் தான் இந்த வார டிஆர்பி ரேஸில் ஆதிக்கம் செலுத்தி உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சின்னத்திரையை பொறுத்தவரை சீரியல்களுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. தற்போது ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் சினிமாவுக்கு நிகராக செம விறுவிறுப்பான கதைக்களத்துடன் இருப்பதால், அதற்கான ரசிகர் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாகவே சீரியல்களை வாரத்தின் 7 நாட்களும் சில தொலைக்காட்சிகள் ஒளிபரப்பி வருகின்றன. அந்த சீரியல்களின் வெற்றியை தீர்மானிப்பது அதற்கு கிடைக்கும் டிஆர்பி ரேட்டிங் தான். அந்த வகையில் 2026-ம் ஆண்டின் 17-வது வாரத்திற்கான டாப் 10 சீரியல்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சன் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலான எதிர்நீச்சல் தொடர்கிறது இந்த வாரம் அதளபாதாளத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. கடந்த வாரம் 5.35 புள்ளிகள் உடன் 9ம் இடத்தில் இருந்த எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இந்த வாரம் வெறும் 4.79 புள்ளிகளை மட்டுமே பெற்று 10ம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. இந்த சீரியல் 10 மணிக்கு மாற்றப்பட்டது தான் அதன் பின்னடைவுக்கு முக்கிய காரணாமாக கருதப்படுகிறது. இந்த பட்டியலில் 9-ம் இடத்தில் விஜய் டிவியின் சின்ன மருமகள் சீரியல் உள்ளது. கடந்த வாரம் 5.20 புள்ளிகள் உடன் 10ம் இடத்தில் இருந்த இந்த சீரியல் இந்த வாரம் 4.88 புள்ளிகளோடு 9-ம் இடத்துக்கு முன்னேறி இருக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த வாரம் 8-ம் இடத்தில் சன் டிவியின் மாலை நேர தொடர்களான செல்லமே செல்லம் மற்றும் அன்னம் ஆகியவற்றின் மகா சங்கமம் தான் உள்ளது. இந்த மகா சங்கமத்திற்கு 5.47 புள்ளிகள் கிடைத்துள்ளன். இதில் அன்னம் சீரியல் கடந்த வாரத்தில் 6-ம் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்தபடியாக 6 மற்றும் 7-ம் இடத்தில் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ஆகிய இரு தொடர்கள் உள்ளன. இதில் 8-ம் இடத்தில் இருந்து 7-ம் இடத்துக்கு முன்னேறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் 5.84 புள்ளிகளையும், 7-ம் இடத்தில் இருந்து 6-ம் இடத்துக்கு தாவி உள்ள சிறகடிக்க ஆசை சீரியல் 6.13 டிஆர்பி ரேட்டிங்கையும் பெற்றுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலான அய்யனார் துணை இந்த வாரம் 5-ம் இடத்தை பிடித்துள்ளது. கடந்த வாரம் 6.79 புள்ளிகள் உடன் 4-ம் இடத்தில் இருந்த இந்த சீரியல், இந்த வாரம் 6.41 புள்ளிகளை மட்டுமே பெற்று ஒரு இடம் பின்னுக்கு தள்ளப்பட்டு உள்ளது. அதற்கு உல்டாவாக கடந்த வாரத்தில் ஐந்தாம் இடம் பிடித்திருந்த சன் டிவியின் பிரைம் டைம் சீரியலான மருமகள், இந்த வாரம் 4-ம் இடத்துக்கு முன்னேறி உள்ளது. கடந்த வாரத்தில் 6.62 புள்ளிகளை பெற்றிருந்த மருமகள் சீரியல், இந்த வாரம் 6.44 புள்ளிகளை பெற்றிருந்தாலும் ஒரு இடம் முன்னேறி உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வழக்கம் போல் இந்த வாரமும் சன் டிவி சீரியல்கள் தான் டாப் 3 இடங்களை வாரிசுருட்டி உள்ளன. அதன்படி சன் டிவியின் கயல் சீரியல் 6.80 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தை தக்க வைத்து உள்ளது. இருந்தாலும் கடந்த வாரம் 7.31 புள்ளிகளை பெற்றிருந்த அந்த சீரியல் இந்த வாரம் அதைவிட குறைவாகவே ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த வாரம் இரண்டாம் இடத்தில் சிங்கப்பெண்ணே சீரியல் உள்ளது. அதற்கு 6.94 டிஆர்பி புள்ளிகள் கிடைத்துள்ளன. மூன்று முடிச்சு சீரியல் இந்த வாரமும் முதலிடத்திலேயே நீடிக்கிறது. அந்த சீரியலுக்கு 8.57 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/ethirneechal-moves-to-last-place-this-week-top-10-tamil-serial-trp-rating-l8qgtkq"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Siragadikka Aasai : ஸ்ருதி வீட்டில் வெடித்த பிரச்சனை; உடனே வெளியேறிய விஜயா... வசமாக சிக்கப்போகும் மனோஜ்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-may-12th-episode-vijaya-comes-out-from-shruti-home-p6wve6c</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-may-12th-episode-vijaya-comes-out-from-shruti-home-p6wve6c</guid>
            <pubDate>Tue, 12 May 2026 08:57:34 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் ஸ்ருதி வீட்டில் தங்கி இருந்த விஜயா, தன்னுடைய சம்மந்தி உடன் சண்டைபோட்டு அங்கிருந்து வெளியேறி இருக்கிறார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01krd3drzqnbepz85t1xypb67z,imgname-siragadikka-aasai--44--1778556265462.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் ஸ்ருதி வீட்டில் தங்கி இருந்த விஜயா, தன்னுடைய சம்மந்தி உடன் சண்டைபோட்டு அங்கிருந்து வெளியேறி இருக்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிறகடிக்க ஆசை சீரியலில் வீடு ஜப்தி செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டதால், அண்ணாமலை தற்போது மீனா வீட்டிலும், விஜயா வசதிக்கு ஆசைப்பட்டு ஸ்ருதி வீட்டிலும் வசித்து வருகிறார்கள். மீனா வீட்டில் வசதி கம்மியாக இருந்தாலும் அங்கு நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் அண்ணாமலை. மறுபுறம் பணக்கார வீடு என ஆசைப்பட்டு போன விஜயாவுக்கு அங்கு நிம்மதியே இல்லை. ஒழுங்கான சாப்பாடு இல்லை, சம்மந்தியால் அவமானம் என பல்வேறு பிரச்சனைகளுக்கு நடுவே சகித்துக் கொண்டு அந்த வீட்டில் வசித்து வருகிறார் விஜயா. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மனோஜ் தன்னுடைய ஷோரூமில் எலித் தொல்லை இருப்பதாக சொன்னதை அடுத்து, அதனை விரட்ட நான் ஏற்பாடு செய்கிறேன் என சொல்லி இருந்த ரோகிணி, இரவில் ஷோரூமுக்கு வருகிறார். அவர் பூனை ஒன்றை எடுத்து வந்துள்ளார். எலியை விரட்டும் வேலையை அது பார்த்துக் கொள்ளும் என கூறும் ரோகிணி, மனோஜை தனியாக அழைத்துச் சென்று பேசுகிறார். அப்போது மனோஜ், அம்மா - அப்பா இருவரும் பிரிந்து எப்படி தான் இருக்கிறார்களோ என பேசிக் கொண்டிருக்க, ரோகிணியும் நானும் உன்னை பிரிந்து ரொம்ப கஷ்டப்படுகிறேன் என ரோகிணி சொன்னதும், மனம் உருகும் மனோஜ், அவரிடம் பணிந்து பேசுகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மறுபுறம் முத்து தன்னுடைய மாமியார் வீட்டில் சந்தோஷமாக வாழ்கிறார். அவர் தன்னுடைய மனைவி மீனா மற்றும் மாமியார் ஆகியோரை அமர வைத்து அவர்களுக்கு சப்பாடு பரிமாறுகிறார். அதைப்பார்த்த மீனாவின் அம்மா, ஆம்பளைங்க சாப்பிட்ட பிறகு தான் நாங்க சாப்பிடுவோம் என சொல்ல, அதெல்லாம் அந்த காலம், இப்போ அப்படி இல்ல என சொல்கிறார். பின்னர் சத்யா மாடியில் தனியாக நின்று கொண்டிருக்க, அவரிடம் என்ன பிரச்சனை என முத்துவும் மீனாவும் கேட்கிறார்கள். அப்போது அவர் ரேகாவுக்கு அவருடைய அப்பா மீது சந்தேகம் வந்ததாக கூறுகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதையடுத்து ஸ்ருதி வீட்டில் இருக்கும் விஜயாவை தான் காட்டுகிறார்கள். ரூமில் தனியாக இருக்கும் விஜயாவை ஹாலுக்கு அழைத்து செல்கிறார் ஸ்ருதியின் அம்மா, அங்கு பார்ட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் ஸ்ருதி அப்பாவின் நண்பர்கள் வந்து மது அருந்திக் கொண்டிருக்கிறார்கள். அதையெல்லாம் பார்த்து முகம் சுழிக்கிறார் விஜயா. அங்கு வந்திருந்த நபர் ஒருவர் விஜயாவை பார்த்து லுக் விட்டுக் கொண்டே இருக்கிறார். பின்னர் அவர் பார்ப்பதற்கு மலையாள ஹீரோயின் போல இருப்பதாக சொல்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பின்னர் அருகில் வந்து டான்ஸ் ஆடுகிறார். அப்போது ஸ்ருதியின் அம்மா, என் சம்மந்தியும் நல்லா டான்ஸ் ஆடுவாங்க என சொல்ல, விஜயாவையும் ஆட சொல்கிறார்கள். அப்போது கோபத்தின் உச்சத்துக்கு சென்ற விஜயா, இங்க டான்ஸ் ஆடவா நான் வந்திருக்கேன் என சொல்லி கத்துகிறார். பின்னர் மாடிக்கு சென்று கதறி அழும் விஜயா, தன்னுடைய மகன் மனோஜுக்கு போன் போட்டு, தான் உடனே உன்னுடைய ஷோரூமுக்கு வர உள்ளதாக கூறுகிறார். இதையடுத்து ஸ்ருதி வீட்டில் இருந்து வெளியேறி இருக்கிறார் விஜயா. இதையடுத்து என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-may-12th-episode-vijaya-comes-out-from-shruti-home-p6wve6c"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Ethirneechal : ஓட்டலில் ஒரே ரூமில் தர்ஷன் - அன்புக்கரசி... வீடியோவால் வெடிக்கப்போகும் புது பிரச்சனை]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/ethirneechal-thodargiradhu-serial-may-14th-2026-episode-dharshan-anbukkarasi-in-same-hotel-room-qf14x8o</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/ethirneechal-thodargiradhu-serial-may-14th-2026-episode-dharshan-anbukkarasi-in-same-hotel-room-qf14x8o</guid>
            <pubDate>Thu, 14 May 2026 09:31:23 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Ethirneechal Thodargiradhu Serial Today Episode : எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷனும், அன்புக்கரசியும் ஒரே ரூமில் இருக்கும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01krja63qabxg2b7qy20be0pfb,imgname-ethirneechal-thodargiradhu--22--1778731126506.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Ethirneechal Thodargiradhu Serial Today Episode : எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷனும், அன்புக்கரசியும் ஒரே ரூமில் இருக்கும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி சொன்னதெல்லாம் பொய் என சொல்லி அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்ட ஈஸ்வரி, தன்னுடைய மகனுக்கு தன் கையால் கல்யாணம் பண்ணி வைக்க ஏற்பாடுகளை செய்கிறார். மறுபுறம் ஜனனி, ஆதி குணசேகரனுக்கு எதிரான வீடியோ ஆதாரங்களை கண்டுபிடித்து அவரை ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு சுற்றுகிறார். அதேபோல் ஆதி குணசேகரனின் மகன் தர்ஷன், ராவணனின் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துள்ளார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தர்ஷன் - பார்கவியின் திருமணத்திற்காக பந்தக்கால் நடுவதற்கான பணிகள் வீட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்க, அப்போது தர்ஷனுக்கு ஆபிஸில் இருந்து போன் வருகிறது. அன்புக்கரசி தான் தர்ஷனுக்கு போன் போட்டிருக்கிறார். அவர் கம்பெனியில் இருந்து அவசரமாக திருச்சி கிளம்ப வேண்டும், உடனே கம்பெனிக்கு வருமாறு சொல்கிறார். இதனால் தர்ஷனும் வேறு வழியின்றி அங்கு கிளம்பிப் போகிறார். மறுபுறம் தர்ஷனின் தந்தை ஆதி குணசேகரனும் வீட்டுக்கு வராமல் கோவிலிலேயே தஞ்சமடைந்திருக்கிறார். அவருக்காக அனைவரும் காத்திருக்கின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தர்ஷன் - அன்புக்கரசி உடன் கிளம்பி திருச்சிக்கு சென்றிருக்கிறார். அங்கு இரவில் ரூம் எடுத்து தங்குவதற்காக ஹோட்டலுக்கு செல்கிறார்கள். முதலில் இரண்டு ரூம் புக் பண்ணி இருந்த நிலையில், இருவர் வராததால், தற்போது தங்கள் இருவருக்கும் ஒரு ரூம் மட்டுமே போதும் என சொல்கிறார் அன்புக்கரசி. அதைக்கேட்டதும் தர்ஷன் அதிர்ச்சி அடைகிறார். பின்னர் வேறு வழியின்றி அவருடன் ஒரே ரூமில் தங்க சம்மதிக்கிறார். அங்குதான் மிகப்பெரிய ட்விஸ்டே காத்திருக்கிறது. அந்த ரூமில் கேமரா வைத்து இருவரும் ஒன்றாக இருக்கும் வீடியோவை ராவணன், ஜனனிக்கு அனுப்ப வாய்ப்பு உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அந்த வீடியோவை மட்டும் ஜனனி ஈஸ்வரியிடம் காட்டினால் கட்டாயம் கல்யாணம் நின்றுபோகும். அதேபோல் தர்ஷன் - பார்கவி இடையேயும் சண்டை ஏற்பட வாய்ப்பு உள்ளது. ராவணனின் முழு நோக்கமே ஆதி குணசேகரனின் குடும்பத்தை ஒட்டுமொத்தமாக அழிக்க வேண்டும் என்பது தான். அதில் முதல் படியாக ஜனனியை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார். அடுத்து தர்ஷன் - பார்கவியும் வெளியேற வாய்ப்பு உள்ளது. இதனால் குடும்பத்தில் மேலும் பிரச்சனை வெடிக்கும். ஆதி குணசேகரனும் வழக்கில் சிக்க வாய்ப்பு உள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/ethirneechal-thodargiradhu-serial-may-14th-2026-episode-dharshan-anbukkarasi-in-same-hotel-room-qf14x8o"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Ayyanar Thunai சீரியலில் எதிர்பாரா ட்விஸ்ட்... சோழனை விவாகரத்து செய்தார் நிலா - காரணம் என்ன?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/ayyanar-thunai-serial-may-11th-episode-court-gives-divorce-for-chozhan-and-nila-rimshsn</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/ayyanar-thunai-serial-may-11th-episode-court-gives-divorce-for-chozhan-and-nila-rimshsn</guid>
            <pubDate>Mon, 11 May 2026 08:48:23 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Ayyanar Thunai Serial Today Episode : அய்யனார் துணை சீரியலில் சோழனிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என நீதிமன்றத்தில் கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார் நிலா.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kragf0h307hb96exz6fc7dk5,imgname-ayyanar-thunai--6--1778469274147.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Ayyanar Thunai Serial Today Episode : அய்யனார் துணை சீரியலில் சோழனிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என நீதிமன்றத்தில் கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார் நிலா.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அய்யனார் துணை சீரியலில் நிலாவும், சோழனும் விவாகரத்து கோரி தொடர்ந்த வழக்கு விசாரணை வர உள்ளதால், நிலா விவாகரத்து வேண்டாம் என்று தான் சொல்வார் என்கிற மிதப்பில் இருந்தா சோழன். ஆனால் நிலா, நான் வேணும்னு தான் சொல்வேன் என கூறி சோழனை வெறுப்பேற்றுகிறார். இதனால் பீதி அடைந்த சோழன் தன்னுடைய அண்ணன் சேரனிடம் அதை சொல்லி ஃபீல் பண்ணுகிறார். பின்னர் சேரன், நிலாவை தனியாக அழைத்து, நிஜமாவே டைவர்ஸ் கொடுக்கப் போறியா என கேட்க, அதற்கு அவர் அதெல்லாம் கொடுக்கமாட்டேன் என வாக்குறுதி கொடுத்திருந்தார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதையடுத்து இருவரும் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் சென்றபோது, நீதிபதி முன் செல்லும் நிலா, தனக்கு டைவர்ஸ் வேண்டும் என கூறுகிறார். இதைக்கேட்டதும் சோழன் செம ஷாக் ஆகிறார். அப்போது குறுக்கிடும் நிலாவின் வக்கீல், நேத்து வரைக்கும் டைவர்ஸ் வேண்டாம்னு சொன்ன, இப்போ வேணும்னு சொல்ற என கேட்க, காரணமே சொல்லாத அவர், தனக்கு டைவர்ஸ் தான் வேணும் என சொன்னதும், நீதிபதி வேறுவழியின்றி டைவர்ஸ் கொடுத்துவிடுகிறார். அப்போது அருகில் இருந்த சோழனுக்கு எதுவுமே புரியவில்லை. அவர் நிலா பின்னால் கெஞ்சுகிட்டே ஓடுகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒரு கட்டத்தில் நிலா எல்லா உண்மையையும் உடைக்கிறார். நீ சோழவந்தான் கிட்ட பேசுன எல்லாத்தையும் நான் கேட்டுட்டேன் என கூறுகிறார். நான் உன்னைய காதலிச்சனா கல்யாணத்துக்கு முன்னாடி, எதுக்கு இப்படி பொய் சொல்லி, என்னை ஏமாத்தி கல்யாணம் பண்ணுன என சோழனை செம திட்டு திட்டுகிறார். அதன்பின்னர் விறுவிறுவென ஒரு ஆட்டோவில் ஏறி கிளம்புகிறார் நிலா. அதன்பின்னர் சோழன் என்ன செய்வதென்றே தெரியாமல் வீட்டில் உள்ள எல்லாருக்கும் போன் பண்ணி விஷயத்தை சொல்லிவிடுகிறார். அதன்பின் எல்லாருமே வீட்டுக்கு கிளம்பி வருகிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மறுபுறம் வானதி, பாண்டியனை பார்ப்பதற்காக மறுபடியும் பாண்டியின் கடைக்கு வருகிறார். பாண்டி அந்த நேரத்தில் கடையில் இல்லை. அவர் சோழன் சொன்ன பிரச்சனையால் வீட்டுக்கு கிளம்பிச் செல்கிறார். அங்கிருந்த பாண்டியின் அசிஸ்டண்ட்டிடம் பாண்டி எங்க என வானதி கேட்க, அதற்கு அவரோ, நீ பிரேக் அப் பண்ணுன சந்தோஷத்துல அவங்க எல்லாரும் டூர் கிளம்பி போயிட்டாங்கனு சொல்லி வானதியை வேண்டுமென்றே வெறுப்பேற்றுகிறார். இதனை உண்மை என நம்பிய வானதி என்ன செய்வதென்றே தெரியாமல் முழிக்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நிலா ஆட்டோவில் வீட்டுக்கு வந்து இறங்குகிறார். உள்ளே வந்ததும் யாரிடமும் எதுவும் பேசாமல், நேராக ரூமுக்குள் சென்று அமர்ந்து அழுகிறார். கொஞ்ச நேரத்தில் சோழனும் பின்னாடியே காரில் வருகிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது? நிலா, சோழன் தனக்கு செய்த துரோகத்தால் வீட்டை விட்டு கிளம்ப முடிவெடுத்துள்ளதால், அவரை சேரன் தடுத்து நிறுத்துவாரா? நிலா - சோழன் மீண்டும் சேருவார்களா? என்கிற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இனி வரும் எபிசோடுகளில் தான் விடை கிடைக்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/ayyanar-thunai-serial-may-11th-episode-court-gives-divorce-for-chozhan-and-nila-rimshsn"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Siragadikka Aasai : அடிபொலி ட்விஸ்ட்... விஜயா வீட்டை சீல் வைக்க வந்த சிந்தாமணிக்கு செம நோஸ் கட்..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-may-7th-2026-episode-chinthamani-shocked-while-sealed-vijaya-house-s1vnmbs</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-may-7th-2026-episode-chinthamani-shocked-while-sealed-vijaya-house-s1vnmbs</guid>
            <pubDate>Thu, 07 May 2026 09:13:40 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயாவின் வீட்டை சீல் வைக்க பைனான்சியர் உடன் சென்றிருந்த சிந்தாமணிக்கு ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அதைப்பற்றி பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kr08akvk0d2v4f5verc5hzzw,imgname-siragadikka-aasai-serial-may-7th-2026-episode-chinthamani-shocked-while-sealed-vijaya-house-1778125197171.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயாவின் வீட்டை சீல் வைக்க பைனான்சியர் உடன் சென்றிருந்த சிந்தாமணிக்கு ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அதைப்பற்றி பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் வாங்கிய கடனுக்காக விஜயாவின் வீட்டை ஜப்தி செய்ய முடிவெடுத்த பைனான்சியர், கடன் தொகையை உடனடியாக கொடுக்காவிட்டால் வீட்டை சீல் வைப்பேன் என எச்சரித்திருந்தார். கடனை திருப்பி செலுத்த முடியாததால், அவர்கள் வீட்டை சீல் வைக்க வரும் முன் நாம் வெளியே சென்றுவிடலாம் என முடிவெடுத்து, அனைவரும் வீட்டை காலி செய்துவிட்டு கிளம்புகிறார்கள். முத்து அண்ணாமலையை மீனாவின் அம்மா வீட்டிற்கு அழைத்து செல்கிறார். ஸ்ருதி தன்னுடைய அம்மா வீட்டிற்கு விஜயாவை அழைத்து செல்கிறார். இதன்பின் இன்றைய எபிசோடில் என்ன ஆச்சு என்பதை பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஸ்ருதி வீட்டிற்கு செல்லும் விஜயாவை அவரது குடும்பத்தார் ஆரம்பத்தில் நன்றாக கவனிக்கிறார்கள். அதன்பின்னர் விஜயாவுக்கு ஸ்ருதியின் அம்மா காஃபி போட்டு கொடுக்கிறார். கேரளா ஸ்பெஷலான கட்டன் சாயாவை தான் விஜயாவுக்கு கொடுக்கிறார்கள். விஜயாவுக்கு அது சுத்தமாக பிடிக்கவில்லை. அவரால் ஒரு வாய் கூட குடிக்க முடியவில்லை. அப்போ தான் விஜயாவுக்கு மீனா போட்டுக் கொடுக்கும் காஃபி நியாபகத்துக்கு வருது. மீனா, அவ்வளவு டேஸ்டா காஃபி போட்டு வந்து கொடுத்தாலும் அதை குடிச்சிட்டு நல்லா இருக்குனு சொல்லாம இருந்த விஜயா, இவ்ளோ கேவலமான கட்டன் சாயாவை குடிக்கிறோமே என நினைத்துப் பார்க்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மறுபுறம் மனோஜ் கடையில், ஜீவா மற்றும் சந்தோஷை அழைத்து, இனி நான் கடையில் தான் தங்கப் போகிறேன் என சொல்கிறார். அதற்காக மொட்டை சந்தோஷ், மனோஜ் படுப்பதற்காக கட்டில் எல்லாம் வாங்கி வந்து கொடுக்கிறார். அதனுடனே ஒரு எலிப்பொரியையும் வாங்கி கொடுத்திருக்கிறார் சந்தோஷ். இது எதுக்கு என மனோஜ் கேட்க, நம்ம கடையில் நிறைய பெரிய பெரிய எலியா இருக்கு, நைட்டு நீங்க தூங்கும் போது அது உங்களை கடித்துவிடக் கூடாது என்பதற்காக தான் இந்த எலிப் பொரியை வாங்கி வந்ததாக கூறுகிறார் சந்தோஷ். இதனால் பயந்துபோன மனோஜ், நீயும் இன்னைக்கு நைட் என்கூட தங்கு என சொல்லி சந்தோஷையும் தன்னுடன் தங்க வைக்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதுக்கப்புறம் சிந்தாமணியை தான் காட்டுகிறார்கள். விஜயாவின் வீட்டுக்கு சீல் வைக்கலாம் என்று ஆசையோடு வந்து பார்த்த சிந்தாமணி, வீடு பூட்டு போட்டு பூட்டி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். விஜயா, அண்ணாமலை, மீனா, முத்து ஆகியோரை அவமானப்படுத்தலாம்னு பார்த்தால், அவங்க கரெக்டா பிளான் பண்ணி முன்கூட்டியே காலி பண்ணிட்டாங்களே என பைனான்சியரிடம் சொல்லி புலம்புகிறார் சிந்தாமணி. இதையடுத்து வேறு வழியின்றி ஆளே இல்லாத வீட்டுக்கு சீல் வைத்துவிட்டு செல்கிறார்கள். தன்னுடைய பிளான் சொதப்பியதால் கடும் அப்செட்டில் இருக்கிறார் சிந்தாமணி.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மறுபுறம் அண்ணாமலை மீனாவின் அம்மா வீட்டில் தங்கும்போது அவர் கீழே படுத்துக்குறேன் என சொல்ல, அதற்கு அவர்கள் கட்டில்ல படுங்க என சொல்கிறார்கள். நான் கிராமத்துல கீழ தான் படுப்பேன் என சொல்லிக் கொண்டிருக்கிறார் அண்ணாமலை. இருந்தாலும் அவருக்காக தனியாக ஒரு கட்டில் வாங்கிக் கொடுக்கிறார்கள். பின்னர் அனைவருடனும் ஜாலியாக பேசிக் கொண்டு சாப்பிடுகிறார் அண்ணாமலை. குருவிக் கூடு போல ஒன்றாக ஒரே வீட்டில் இருந்தவர்கள். தற்போது தனித்தனியாக பிரிந்து கிடக்கிறார்கள். இதுக்கப்புறம் என்ன நடக்கப்போகிறது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-may-7th-2026-episode-chinthamani-shocked-while-sealed-vijaya-house-s1vnmbs"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Siragadikka Aasai : விஜயாவுக்காக ஷோரூமை மூடிய மனோஜ்; அண்ணாமலையால் காத்திருக்கும் ட்விஸ்ட்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-may-14th-2026-annamalai-meet-vijaya-in-manoj-showroom-sgm0qkq</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-may-14th-2026-annamalai-meet-vijaya-in-manoj-showroom-sgm0qkq</guid>
            <pubDate>Thu, 14 May 2026 10:38:19 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial Today Episode : விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயா தன்னுடைய ஷோரூமில் தங்கி இருப்பதால் கடையை திறக்காமல் லீவு விட்டுள்ளார் மனோஜ்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01krje0428v54s40tf8p66q4s7,imgname-siragadikka-aasai--51--1778735124552.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial Today Episode : விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயா தன்னுடைய ஷோரூமில் தங்கி இருப்பதால் கடையை திறக்காமல் லீவு விட்டுள்ளார் மனோஜ்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் &lsquo;சிறகடிக்க ஆசை&rsquo; சீரியலின் இன்றைய எபிசோடில் குடும்ப உறவுகளுக்குள் நிலவும் மனக்கசப்புகள் மேலும் தீவிரமடையும் வகையில் காட்சிகள் அமைந்திருந்தன. விஜயாவை சமாதானப்படுத்த முயற்சிக்கும் குடும்பத்தினரின் போராட்டமும், அண்ணாமலையின் எதிர்பாராத செயலும் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தது.Siragadikka Aasai : பைனான்சியருக்கு ஆப்பு... வீட்டை மீட்க முத்துவுக்கு கிடைத்த புது ரூட்&lt;/p&gt;&lt;p&gt;எபிசோடு தொடக்கத்தில், மனோஜ் தனது ஷோரூமிற்கு விடுமுறை எடுத்துவிட்டு, சந்தோஷ் மற்றும் ஜீவாவுடன் சேர்ந்து விஜயாவை கவனித்து வருகிறார். அந்த நேரத்தில் குளிக்க வெந்நீர் வேண்டும் என்று விஜயா கூற, மனோஜ் குக்கரில் தண்ணீர் சூடாக்கித் தரவா என கேட்பது விஜயாவுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. இருந்தாலும், வீட்டை மீட்க முத்து மற்றும் மீனா முயற்சி எடுக்க வேண்டுமென நினைத்து, ஷோரூமிலேயே தங்க முடிவு செய்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதற்கிடையில் அண்ணாமலைக்கு ஒரு ரியல் எஸ்டேட் முகவரிடமிருந்து அழைப்பு வருகிறது. புதிய இடம் வாங்க விருப்பமா என்று கேட்டபோது, &ldquo;இருக்கிற வீடே கையில் இருந்து போகும் நிலைமை. இப்போது புதிய இடம் எதற்கு?&rdquo; என்று கோபமாக பதிலளித்து போனை கட் பண்ணுகிறார். பின்னர் தனியாக வீட்டை நினைத்து கவலையுடன் இருக்கும் அண்ணாமலைக்கு, மீனாவின் அம்மா ஆறுதல் கூறுகிறார்.&lt;/p&gt;&lt;p&gt;மறுபக்கம், மீனா மற்றும் முத்து இருவரும் விஜயாவை வீட்டிற்கு வர அழைக்க செல்கின்றனர். ஆனால் விஜயா தொடர்ந்து பிடிவாதமாக பேசுகிறார். &ldquo;உங்கள் வீட்டில் என்னால் தங்க முடியாது&rdquo; என்று மறுத்தாலும், இருவரும் அவரை சமாதானப்படுத்த முயற்சிக்கின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பின்னர் முத்துவும் மீனாவும் அண்ணாமலையிடம் விஜயா குறித்து பேசும்போது, &ldquo;அவளுக்காக நான் ஏற்கனவே பல தியாகங்கள் செய்துவிட்டேன். இந்த முறை நான் முதலில் போய் அழைக்க மாட்டேன்&rdquo; என்று உறுதியாக கூறுகிறார். இதனால் அடுத்து என்ன செய்யலாம் என்று முத்துவும் மீனாவும் குழப்பத்தில் இருக்கின்றனர். இந்நிலையில், காய்ச்சலுடன் ஷோரூமில் அமர்ந்திருக்கும் விஜயாவை பார்க்க அண்ணாமலை நேரில் வருவது பெரிய திருப்பமாக அமைகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முன்னதாக தான் அழைக்க மாட்டேன் என்று கூறியிருந்த அண்ணாமலை அங்கே வந்திருப்பதை பார்த்த விஜயா உணர்ச்சிவசப்படுகிறார். அதன்பின், &ldquo;சில நாட்களுக்கு மீனா வீட்டிற்கு வா&rdquo; என்று அண்ணாமலை கூறுகிறார். ஆனால் அந்த வீட்டில் தங்க முடியாது என்று விஜயா மறுபடியும் தெரிவிக்கிறார்.&lt;/p&gt;&lt;p&gt;அந்த சமயத்தில் முத்து அங்கே வர, பின்னர் மீனாவும் வருகிறார். அண்ணாமலை ஏற்கனவே வந்திருப்பதை பார்த்து மீனா அதிர்ச்சி அடைகிறார். இருப்பினும், விஜயாவுக்கு வெளியே டீ குடிப்பது பிடிக்காது என்பதால் டீ வாங்கி வந்ததாக சமாளிக்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இறுதியில், மனோஜ் தொடர்ந்து ஷோரூமை மூடி வைத்து விஜயாவுடன் இருப்பது அறிந்து அண்ணாமலை கடும் கோபம் கொள்கிறார். &ldquo;இந்த கடைக்காகத்தான் கடன் வாங்கியிருக்கிறாய். இப்படி இருந்தால் பிசினஸும் பாதிக்கப்படும்&rdquo; என்று திட்டுகிறார். அப்போது முத்து, &ldquo;அம்மாவை வீட்டுக்கு அனுப்பியிருக்க வேண்டியது தானே?&rdquo; என்று மனோஜிடம் கேட்க, &ldquo;அம்மா மனசு உடைந்து போய்விடுமோ என்று சொல்லவில்லை&rdquo; என அவர் பதிலளிக்கிறார். அந்த பதிலை கேட்ட விஜயா மனோஜை கடுமையாக முறைத்துப் பார்க்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. அதன்பின் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-may-14th-2026-annamalai-meet-vijaya-in-manoj-showroom-sgm0qkq"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரி vs ஜனனி மோதல் ஆரம்பம்...  சவாலில் ஜெயிக்கப்போவது யார்?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/ethirneechal-thodargiradhu-serial-may-15th-episode-eshwari-vs-janani-clash-starts-slbg70l</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/ethirneechal-thodargiradhu-serial-may-15th-episode-eshwari-vs-janani-clash-starts-slbg70l</guid>
            <pubDate>Fri, 15 May 2026 09:41:50 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Ethirneechal Thodargiradhu Serial Today Episode : எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஈஸ்வரி கெஞ்சி கேட்டும் மனம் இறங்க மறுத்த ஜனனி, அதிரடி முடிவு எடுத்துள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01krmx46vmb6hg3c92t9h4a94v,imgname-ethirneechal-1778818095988.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Ethirneechal Thodargiradhu Serial Today Episode : எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஈஸ்வரி கெஞ்சி கேட்டும் மனம் இறங்க மறுத்த ஜனனி, அதிரடி முடிவு எடுத்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;எதிர்நீச்சல் தொடர்கிறது&lt;/strong&gt; சீரியலில் ஜனனி, ஆதி குணசேகரனை எப்படியாவது சிறையில் தள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அவருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வர உள்ளதால், ஆதாரத்தை திரட்டும் வேலைகளை முழு வீச்சில் செய்து வருகிறார் ஜனனி. மறுபுறம் தர்ஷன், வேலை விஷயமாக திருச்சி வரை சென்றிருக்கிறார். அவர் தன்னுடைய டீம் லீடர் அன்புக்கரசி உடன் தான் சென்றுள்ளார். அங்கு ஒரே ரூமில் இருவரும் தங்க முடிவு செய்திருக்கிறார்கள். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;Ethirneechal : ஓட்டலில் ஒரே ரூமில் தர்ஷன் - அன்புக்கரசி... வீடியோவால் வெடிக்கப்போகும் புது பிரச்சனை&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒரே ரூமில் தர்ஷனும், அன்புக்கரசியும் ஒன்றாக அமர்ந்து பேசுகிறார்கள். அப்போது நம்ம இந்த இடத்துல வேலைக்காக தான் வந்து தங்கி இருக்கிறோம். இதுக்கு முன்னாடியே உன்னை தெரியும் என்பதை தாண்டி, நமக்குள்ள வேற எதுவுமே இல்லை என அன்புக்கரசி தர்ஷனிடம் சொல்லி இருக்கிறார். இப்படி அவர்கள் இருவரும் ஒன்றாக ஒரே ரூமில் தங்கி இருப்பதை ராவணன் வீடியோவாக பதிவு செய்து அதனை வைத்து கேம் ஆட முடிவு செய்துள்ளார். அப்படி அவர்கள் இருவரையும் ஒரே ரூமில் பார்த்தால் வீட்டில் உள்ளவர்கள் என்ன செய்வார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மறுபுறம் ஆதி குணசேகரன் தன்னுடைய குலதெய்வம் கோவிலில் டேரா போட்டுள்ளார். அவரை அவருடைய தம்பிகள் ஞானம் மற்றும் கதிர் சந்திக்கிறார்கள். அப்போது வக்கீலும் உடன் இருக்கிறார். அவர் ஆதி குணசேகரனிடம் நாளைக்கு பெட்டிஷன் விசாரணைக்கு வருது சார் என சொல்கிறார். அதேபோல் உங்க அண்ணி மட்டும் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கனும் என கதிர் மற்றும் ஞானத்திடம் சொல்கிறார் வக்கீல். அப்போது குறுக்கிட்டு பேசும் ஆதி குணசேகரன், ஈஸ்வரி நிச்சயம் என்பக்கம் தான் நிப்பா என கான்பிடண்ட் ஆக சொல்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆதி குணசேகரன் எதிர்பார்த்தபடியே, ஈஸ்வரி, தன்னுடைய கணவருக்காக ஜனனியை எப்படியாவது சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்குகிறார். வீட்டில் பந்தக்கால் நட வந்த ஜனனியிடம் பேசுகிறார் ஈஸ்வரி, அப்போது, இந்த குடும்பத்துக்கு ஆகாதவங்களோட நீ சேர்ந்து நிக்குற, நம்ம வீடு, நம்ம குடும்பம்னு நினைச்சா நீ இப்போ செய்யுறதெல்லாம் செய்ய மாட்ட ஜனனி. எந்த பிரச்சனை வந்தாலும் விட்டுக்கொடுத்து போறது தான் வாழ்க்கை. அதனால் நீயும் விட்டுக்கொடுத்து போ என செண்டிமெண்டாக பேசுகிறார் ஈஸ்வரி.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆனால் இதற்கெல்லாம் மனம் இறங்காத ஜனனி, அவரையே எதிர்த்து நிற்கிறார். நீங்க என்ன சொல்லி என் மனசை மாத்த முயற்சித்தாலும் அதை கேக்குற நிலைமையில் நான் இல்லை. நாளைக்கு நான் கோர்ட்டுக்கு போக தான் போறேன். அந்த கடவுளே இறங்கி வந்து வேண்டாம்னு சொன்னாகூட நான் விடமாட்டேன். தப்பு பண்ணவங்க யாராக இருந்தாலும் அவங்களுக்கு தண்டனை வாங்கி கொடுப்பேன் என ஈஸ்வரியின் மூஞ்சில் அடித்தவாறு பேசிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார் ஜனனி. இதையடுத்து என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/ethirneechal-thodargiradhu-serial-may-15th-episode-eshwari-vs-janani-clash-starts-slbg70l"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Ayyanar Thunai : டைவர்ஸ் வழக்கில் ட்விஸ்ட்... நிலாவின் முடிவால் பீதியில் சோழன்...!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/ayyanar-thunai-serial-may-8th-2026-episode-nila-shocking-decision-about-divorce-chozhan-vxrg0g7</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/ayyanar-thunai-serial-may-8th-2026-episode-nila-shocking-decision-about-divorce-chozhan-vxrg0g7</guid>
            <pubDate>Fri, 08 May 2026 10:28:58 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Ayyanar Thunai Serial Today Episode : அய்யனார் துணை சீரியலில், நிலாவும் சோழனும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், அதில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kr2z106zr8ck3hsg4nkf0txn,imgname-ayyanar-thunai-serial-may-8th-episode-nila-shocking-decision-about-divorce-chozhan-1778216108254.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Ayyanar Thunai Serial Today Episode : அய்யனார் துணை சீரியலில், நிலாவும் சோழனும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், அதில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அய்யனார் துணை சீரியலின் இன்றைய எபிசோடில், டைவர்ஸ் கேஸ் தொடர்பாக சோழனும், நிலாவும் வக்கீலை பார்த்துவிட்டு ஜோடியாக பைக்கில் வருகிறார்கள். அப்போது நிலாவிடம் பேசும் சோழன், எப்படியும் நீங்க நாளைக்கு டைவர்ஸ் வேண்டாம்னு சொல்லிடுவீங்க. அதுக்கப்பறம் நாம் இருவரும் ஜோடியா வாழ்க்கையை தொடங்கலாம் என சோழன் பயங்கர சந்தோஷத்தில் சொல்ல, அது எப்படி நான் சேர்ந்து வாழப்போறதா முடிவெடுப்பேன்னு உங்களுக்கு தெரியும். நான் அப்படிலாம் சொல்ல மாட்டேன். சேர்ந்து வாழ வேண்டாம்னு தான் சொல்வேன் என சொல்லிக் கொண்டு வருகிறார் நிலா.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதற்கு சோழன், நீங்க சும்மா சொல்லாதீங்க, கண்டிப்பா என்கூட சேர்ந்து வாழணும்னு தான் சொல்லப்போறீங்க, எனக்கு நல்லாவே தெரியும் என ரொம்ப கான்பிடண்டா சொல்லிக்கிட்டே வர்றார். இதன்பின் இருவரும் வீட்டுக்கு வருகிறார்கள். வீட்டுக்கு வந்ததும் சோழனுக்கு டவுட் வர ஆரம்பிக்கிறது. ஒருவேளை நிலா நம்ம கூட சேர்ந்து வாழ மாட்டேன்னு சொல்லிட்டாங்கனா என்ன செய்யுறது என தன்னுடைய அண்ணன் சேரனிடம் சொல்லி ஃபீல் பண்ணுகிறார் சோழன். அதெல்லாம் நல்லதாவே நடக்கும் என சேரனும், பாண்டியனும் சோழனுக்கு அட்வைஸ் பண்ணுகிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உனக்கு ஒன்னுன்னா நிலா தான் வர்றா, அதனால் அவ உன்னைவிட்டு பிரியமாட்டா என உறுதியாக சொல்கிறார் சேரன். அதன்பின்னர் பாண்டியன் வானதியை தேடிச் செல்கிறார். வானதி வீட்டின் முன் நின்று, உள்ளபோய் பேசலாமா... வேண்டாமானு யோசிக்கிறார். அதன்பின்னர் நடேசன் வண்டியை எடுத்துட்டு வந்து, அதுலயே உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு, அதுலயே தூங்குகிறார். அதைப்பார்த்த பாண்டியன், உங்களுக்கு தான் உடம்பு சரியில்லேல்ல, எதுக்காக இந்த கொசுக்கடியில தூங்குறீங்க, ஒழுங்கா வீட்டுக்கு வாங்க என கூப்பிடுகிறார். என் உடம்ப எனக்கு பாத்துக்க தெரியும் நீ போடானு சொல்லி அனுப்பிவைக்கிறார் நடேசன்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மறுநாள் காலையில் விடிந்ததும், சேரன், நிலாவை அழைத்து டைவர்ஸ் கேஸ் விஷயமாக பேசுகிறார். இன்னைக்கு கோர்ட்டுக்கு போறேல்ல, அங்க என்ன சொல்லப்போற, சோழனோட சேர்ந்து வாழுறேன்னு தான சொல்லப்போற, அவன் உன்னைய ரொம்ப நேசிக்கிறான். உன்கூட சேர்ந்து வாழனும்னு தான் ஆசைப்படுகிறான் என சேரன் சொல்ல, அதற்கு நிலாவும், நான் டைவர்ஸ் வேணும்னு சொல்லமாட்டேன் கவலைப்படாதீங்க என சொல்கிறார். இதனால் நிம்மதி பெருமூச்சு விடுகிறார் சேரன். இதன்பின் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/ayyanar-thunai-serial-may-8th-2026-episode-nila-shocking-decision-about-divorce-chozhan-vxrg0g7"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Ethirneechal Thodargiradhu : மெமரி லாஸ் ஆன மாதிரி நடித்தாரா ஈஸ்வரி? எல்லா உண்மையையும் போட்டுடைத்த ஜனனி]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/ethirneechal-thodargiradhu-may-6th-2026-episode-janani-reveals-all-issues-to-eshwari-w29920x</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/ethirneechal-thodargiradhu-may-6th-2026-episode-janani-reveals-all-issues-to-eshwari-w29920x</guid>
            <pubDate>Wed, 06 May 2026 09:23:19 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Ethirneechal Thodargiradhu Serial Today Episode : எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன் தாக்கியதால் தான் நீங்க கோமாவுக்கு போனீங்க என ஈஸ்வரியிடம் கூறி உள்ளார் ஜனனி. இதன் பின் என்ன ஆச்சு என்பதை பார்ப்போம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kqxpej4ee0ffwqqrpc8ncz81,imgname-ethirneechal-thodargiradhu-may-6th-2026-episode-janani-reveals-all-issues-to-eshwari-1778039343246.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Ethirneechal Thodargiradhu Serial Today Episode : எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன் தாக்கியதால் தான் நீங்க கோமாவுக்கு போனீங்க என ஈஸ்வரியிடம் கூறி உள்ளார் ஜனனி. இதன் பின் என்ன ஆச்சு என்பதை பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன் செய்த சூழ்ச்சியால் ஜனனி தவிர மற்ற பெண்கள் அனைவரும் அவருக்கு எதிராக சாட்சி சொல்ல மாட்டோம் என எழுதி கொடுத்து விட்டார்கள். இந்த விஷயத்தை மதிவதினிடம் சொல்லி ஃபீல் பண்ணிய ஜனனி அடுத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை எனக் கூற, அப்போது மதிவதினி அவருக்கு ஒரு ஐடியா கொடுக்கிறார். நீங்க நடந்த விஷயங்களை கொஞ்சம் கொஞ்சமாக ஈஸ்வரிக்கு சொல்லுங்க என சொன்னதும் விறுவிறுவென வீட்டுக்குள் கிளம்பிச் செல்கிறார் ஜனனி. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஈஸ்வரியிடம் சென்று பேசும் ஜனனி, இப்போ இங்க எல்லா உண்மையும் நான் உடைக்க போகிறேன் என சொல்கிறார். அப்போது அவரை தடுக்கும் நந்தினி, ஜனனி நீ என்ன சொல்லப் போறேன்னு எனக்கு தெரியும். தயவு செஞ்சு இப்போதெல்லாம் சொல்ல வேண்டாம் எனக் கூறுகிறார். அதேபோல் ஞானமும் அவரை தடுத்து, இப்போ எதுக்கு உனக்கு இந்த தேவையில்லாத வேலை. வாயை மூடிட்டு உன்னால சும்மா இருக்க முடியாதா என ஜனனியை பார்த்து கேட்கிறார். மறுபுறம் கதிரும் ஜனனியிடம், குடும்பத்துல களங்கம் ஏற்படுத்திகிட்டே இருப்பியா. எங்களை நிம்மதியாக இருக்க விட மாட்டியா என சண்டை போடுகிறார். ஆனால் ஜனனி அதற்கெல்லாம் அசரவில்லை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜனனி சொல்ல வருவதை அனைவரும் சொல்ல விடாமல் தடுக்க, அப்போது குறுக்கிட்டு பேசும் ஈஸ்வரி, நீ சொல்ல வந்ததை சொல்லு என கூறுகிறார். உடனே ஜனனி, நீங்க ஹாஸ்பிடலுக்கு போனதுக்கு காரணம் உங்க வீட்டுக்காரர் தான். உங்களை அடித்து கோமா நிலைக்கு கொண்டு சென்றதும் அவர்தான் என்கிற உண்மையை ஈஸ்வரிடம் போட்டுடைக்கிறார் ஜனனி. இதையெல்லாம் கேட்டதும் அமைதியாக இருக்கிறார் ஈஸ்வரி. அவரிடம் நான் சொன்னதெல்லாம் வைத்து ஒரே ஒரு வாக்குமூலம் மட்டும் கொடுத்தீர்கள் என்றால் குணசேகரன் ஓட ஆட்டம் முடிந்துவிடும் எனக் கூறுகிறார் ஜனனி.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தன்னை தன்னுடைய கணவர் இப்படி கொடுமைப்படுத்தி இருக்கிறார் என அறிந்ததும் ஈஸ்வரி ஜனனி பக்கம் திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் ஒரு மிகப்பெரிய ட்விஸ்ட் கொடுத்துள்ளார். என் கணவர் எப்படிப்பட்டவர் அவர் என்னை எப்படி எல்லாம் நடத்தினார் என எல்லாம் எனக்குத் தெரியும் என சொல்லி அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் ஈஸ்வரி. அது மட்டும் இன்றி ஜனனியிடம், நீ எனக்கு புதுசா ஒரு நம்பர் வாங்கி கொடுத்த அந்த நம்பர் வேற யாருக்கு தெரியும் என கேட்கிறார். வேற யாருக்கும் தெரியாது என சொல்லும் ஜனனியிடம், இதைக் கேளு என ஒரு ஆடியோவை போட்டு காட்டுகிறார் ஈஸ்வரி. அதைக் கேட்டு ஷாக் ஆகிறார் ஜனனி.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அப்படி அந்த ஆடியோவில் என்னதான் இருந்தது. ஈஸ்வரிக்கு அந்த ஆடியோவை அனுப்பியது யார்? இத்தனை நாட்கள் தனக்கு பழசெல்லாம் மறந்து விட்டது என சொல்லி ஈஸ்வரி டிராமா பண்ணினாரா? ஈஸ்வரியை ஆதி குணசேகரனுக்கு எதிராக சாட்சி சொல்ல வைக்க ஜனனி போட்ட திட்டமெல்லாம் பொய்த்து போனதால் இனி என்ன முடிவு எடுக்கப் போகிறார் ஜனனி? இப்படி அனல் பறக்கும் டிவிஸ்ட்களோடு சென்று கொண்டிருக்கும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை இனிவரும் எபிசோடுகளில் பொறுத்திருந்து பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/ethirneechal-thodargiradhu-may-6th-2026-episode-janani-reveals-all-issues-to-eshwari-w29920x"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Roja Selvamani: எந்த ஹீரோவும் என்கிட்டே நெருங்க கூட இல்ல.! அதுக்கு காரணம் என்ன தெரியுமா? பல ஆண்டுகளுக்குப் உண்மைகளை போட்டு உடைத்த நடிகை ரோஜா.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/roja-selvamani-reveals-why-no-co-star-ever-proposed-to-her-actress-roja-about-her-love-affair-and-personal-life-ydig0lq</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/roja-selvamani-reveals-why-no-co-star-ever-proposed-to-her-actress-roja-about-her-love-affair-and-personal-life-ydig0lq</guid>
            <pubDate>Fri, 15 May 2026 14:09:27 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Actress Roja Selvamani About her Love Affair and Personal Life: நடிகை ரோஜா, சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது சினிமா வாழ்க்கை மற்றும் பர்சனல் லைஃப் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01krnck268xbfj2edc2yjvx16e,imgname-actress-roja-selvamani-about-her-love-affair-and-personal-life-1778834311368.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Actress Roja Selvamani About her Love Affair and Personal Life: நடிகை ரோஜா, சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது சினிமா வாழ்க்கை மற்றும் பர்சனல் லைஃப் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நடிகை ரோஜா ஒரு காலத்தில் முன்னணி ஹீரோயினாக இருந்தார். பின்னர் அரசியலில் நுழைந்து, நீண்ட பயணத்திற்குப் பிறகு நகரி எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற்றார். ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அரசில் அமைச்சராகவும் பணியாற்றினார். சின்னத்திரையில் 'குக் வித் கோமாளி' போன்ற டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சமீபத்திய பேட்டியில், 'சினிமாவில் கதாநாயகிகளுக்கு தொல்லைகள் அதிகம், காம்ப்ரமைஸ் கேட்கிறார்கள் என்கிறார்களே, உண்மையா?' என தொகுப்பாளர் கேட்டார். அதற்கு பதிலளித்த ரோஜா, 'எனக்கு அதுபற்றித் தெரியாது. நான் அப்படி எதையும் பார்த்ததில்லை. எல்லோரையும் போல நானும் கேள்விப்பட்டது மட்டுமே' என்றார்.&lt;/p&gt;&lt;img&gt;'எனக்கு எந்த தொந்தரவும் வந்ததில்லை' என ரோஜா உறுதியாகக் கூறினார். இவர் தமிழில் 'செம்பருத்தி' படம் மூலம் அறிமுகமானார். இதன் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி. முதல் படத்திலேயே செல்வமணியும் ரோஜாவும் காதலிக்கத் தொடங்கினர். அந்த நேரத்தில் செல்வமணி ஒரு பிரபலமான இயக்குநராக இருந்தார்.&lt;img&gt;&lt;p&gt;'ஒரு பாப்புலர் டைரக்டரோட காதலியா இருந்ததால, எல்லாரும் எனக்கு மரியாதை கொடுத்தாங்க. எந்த ஹீரோவும் எனக்கு ப்ரொபோஸ் பண்ணதில்லை. அப்படி இருக்கும்போது, தொல்லைக்கு இடமே இல்லை. செல்வமணியைக் காதலித்தது என் கரியர் ஆரம்பத்தில் எனக்கு ஒரு பாதுகாப்பாக இருந்தது' என ரோஜா குறிப்பிட்டார்.&lt;/p&gt;&lt;img&gt;'நான் நடிப்பு மேல ஆசைப்பட்டு சினிமாவுக்கு வரல. தற்செயலாதான் வந்தேன். அதனால, கண்டிப்பா நடிச்சே ஆகணும், வாய்ப்புக்காக எதையும் பண்ணணும்னு நான் நினைக்கல. அதனாலயும் யாரும் என்னை தொந்தரவு செய்யல' என்று ரோஜா விளக்கினார்.]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/roja-selvamani-reveals-why-no-co-star-ever-proposed-to-her-actress-roja-about-her-love-affair-and-personal-life-ydig0lq"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரியை கேள்விகளால் மடக்கிய நீதிபதி, ஓங்கும் ஜனனியின் கை.! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/ethirneechal-thodargiradhu-serial-may-17th-episode-judge-corners-eeswari-with-tough-questions-eeswari-vs-janani-yfra8u0</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/ethirneechal-thodargiradhu-serial-may-17th-episode-judge-corners-eeswari-with-tough-questions-eeswari-vs-janani-yfra8u0</guid>
            <pubDate>Sun, 17 May 2026 11:21:08 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Ethirneechal Thodargiradhu Serial 17 May 2026 Today Episode : சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் &lsquo;எதிர்நீச்சல் தொடர்கிறது' சீரியலில் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01krt7jwcjjeswbf79ejvx4cay,imgname-ethirneechal--8--1778996834706.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Ethirneechal Thodargiradhu Serial 17 May 2026 Today Episode : சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் &lsquo;எதிர்நீச்சல் தொடர்கிறது' சீரியலில் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lsquo;எதிர்நீச்சல் தொடர்கிறது&rsquo; சீரியல் சன் தொலைக்காட்சியில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ஆதி குணசேகரனுக்கு எதிராக ஜனனி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்கிறார். பந்தக்கால் நடுவதற்காக வீட்டிற்கு வந்த ஜனனியிடம் வழக்கை வாபஸ் வாங்குமாறு ஈஸ்வரி கேட்கிறார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவிக்கும் ஜனனி, என்ன ஆனாலும் பரவாயில்லை நான் நீதிமன்றம் செல்வேன் என கூறிவிட்டு அங்கிருந்து செல்கிறார். கதிர் மற்றும் ஞானம் இருவரும் நீதிமன்றத்தில் அண்ணனுக்கு ஆதரவாக பேசுமாறு ஈஸ்வரியிடம் கூறுகிறார்.Ethirneechal Thodargiradhu : குணசேகரனுக்கு செக் வைத்த நீதிமன்றம்... ஈஸ்வரிக்கு காத்திருக்கும் சவால்..!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த நிலையில் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் வருகிறது. அங்கு ஈஸ்வரியை கதிர் மற்றும் ஞானம் இருவரும் நீதிமன்றத்திற்கு அழைத்து வருகிறார்கள். ஆதி குணசேகரன் கோர்ட்டுக்கு வரவில்லை. வழக்கு விசாரணைக்காக ஜனனி நீதிமன்றத்திற்குள் செல்கிறார். அப்போது சாருபாலாவை அழைக்கும் நீதிபதி, நீங்கள் மறு விசாரணை கேட்டு பெட்டிசன் சமர்ப்பிப்பது ஏன்? எனக்கு கேட்கிறார். இந்த வழக்கு விசாரிக்கப்பட்ட தன்மை நேர்மையாக இருந்தாலும், காலம் நீட்டித்துக் கொண்டே செல்வதால் சில விஷயங்கள் நார்மல் ஆகிவிட்டது. குணசேகரன் செய்தது மிகப்பெரிய குற்றம். ஆனால் அவருக்கு தண்டனை கிடைக்கவில்லை என்று சாருபாலா கூறுகிறார்.Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரி vs ஜனனி மோதல் ஆரம்பம்... சவாலில் ஜெயிக்கப்போவது யார்?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜாமீனுக்கு பிறகு குணசேகரன் நிறைய தப்பு செய்திருக்கிறார். அதை இந்த வழக்கில் குறிப்பிட்டுள்ளோம். அனைத்தையும் சேர்த்து மறு விசாரணைக்கு முறையிட்டு இருக்கிறோம் என சாருபாலா கூற, இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ஆதி குணசேகரன் எங்கே என நீதிபதி கேட்கிறார். ஆதி குணசேகரன் வக்கீல் பேச முடியாமல் வாயடைத்துப் போகிறார். இத்துடன் கடந்த வாரத்திற்கான எபிசோடுகள் நிறைவடைந்த நிலையில், இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க வந்துள்ள ஈஸ்வரியை நீதிபதி கேள்விகளால் மடக்குகிறார். நீதிபதியின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் ஈஸ்வரி திணறுகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதில் சாட்சியம் கூறும் ஈஸ்வரி, நீதிபதியிடம் நான் மாடி படியில் இருந்து தவறி விழுந்து விட்டேன் என்று கூறுகிறார். அதற்கு நீதிபதி கடந்த கால விஷயங்கள் எல்லாம் மறந்து விட்டது. ஆனால் படியில் இருந்து விழுந்தது மட்டும் எப்படி ஞாபகம் இருக்கிறது? என்று கேள்விகளால் மடக்குகிறார். இதனால் ஈஸ்வரி பதில் சொல்ல முடியாமல் தருமாறுகிறார். பின்னர் அந்த வழக்கின் தேதியை மாற்றி வைக்கின்றனர். கோபத்தில் வெளியே வந்த ஜனனி ஈஸ்வரியிடம், நீங்கள் இப்போது தேதியை மாற்றி வைத்து ஜெயித்திருக்கலாம். ஆனால் கண்டிப்பாக நியாயம் தான் ஜெயிக்கும் என்று கோபமாக கூறிவிட்டு அங்கிருந்து செல்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தப் ப்ரோமோவை பார்த்த பலரும் இந்த பிரச்சனை எப்போதுதான் முடிவுக்கு வரும்? சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்க என்று புலம்பி தள்ளி வருகின்றனர். எப்போதும் வில்லன் குணசேகரன் மற்றும் அவரது தம்பிகள் தவறு செய்து கொண்டே இருக்கிறார்கள். அதில் இருந்து தப்பிப்பது போல் சில விஷயங்களை செய்கிறார்கள். ஆனால் நியாயத்திற்காக போராடும் ஜனனி ஒவ்வொரு விஷயத்தையும் எதிர்கொண்டு அதில் தோல்வியே தழுவுகிறார். இப்படியே வில்லன் கை ஓங்கி இருப்பதும், கதாநாயகி கை அதல பாதாளத்திற்கும் சென்ற வண்ணமே உள்ளது. இது ரசிகர்களை பெரும் கவலைக்கு உள்ளாக்கி இருக்கிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/ethirneechal-thodargiradhu-serial-may-17th-episode-judge-corners-eeswari-with-tough-questions-eeswari-vs-janani-yfra8u0"/>
        </item>
    </channel>
</rss>
