<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes"?>
<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Sat, 25 Apr 2026 11:23:29 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss/television" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[ஜனனி - ஈஸ்வரி இடையே சண்டையை மூட்டிவிட்ட ராவணன் - அனல்பறக்கும் ட்விஸ்ட் உடன் எதிர்நீச்சல் தொடர்கிறது]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/raavanan-kickstart-janani-vs-eshwari-clash-in-ethirneechal-thodargiradhu-serial-today-474th-episode-08m9irc</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/raavanan-kickstart-janani-vs-eshwari-clash-in-ethirneechal-thodargiradhu-serial-today-474th-episode-08m9irc</guid>
            <pubDate>Wed, 22 Apr 2026 08:36:59 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனிக்கும் ஈஸ்வரிக்கும் இடையே சண்டையை மூட்டிவிடும் விதமாக ஒரு வேலையை பார்த்திருக்கிறார் ராவணன். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kpsja5sysqcgvj6aapsd3qkz,imgname-ethirneechal-thodargiradhu---2026-04-22t083227.679-1776827045694.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனிக்கும் ஈஸ்வரிக்கும் இடையே சண்டையை மூட்டிவிடும் விதமாக ஒரு வேலையை பார்த்திருக்கிறார் ராவணன். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி தனது போனுக்கு கதிர் நம்பரில் இருந்து கால் வந்ததாகவும் அவர்தான் தன்னை அங்கும் இங்கும் அலைய வைத்து கேம் ஆடியதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இதைக் கேட்டு கடுப்பான கதிர் தன்னுடைய போனை எடுத்துக் கொடுத்து வேண்டுமென்றால் இதை செக் செய்து கொள்ளுமாறு கொடுத்து விடுகிறார். அதன் பின்னர் சக்தி தன்னுடைய நண்பன் ஒருவனின் உதவியுடன் கதிரின் போனை ட்ராக் செய்து பார்த்தபோது அதிலிருந்து ஜனனியின் ஃபோனுக்கு எந்தவித காலும் வரவில்லை என்பது உறுதியானது. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜனனியை தனியாக அழைத்து பேசிய ஈஸ்வரி உனக்கு என்ன ஆச்சு என்ன பிரச்சனை என விசாரிக்கிறார். அப்போது அவரிடம் தான் இந்த வீட்டை விட்டு சில நாட்கள் வெளியே செல்வதாக கூறுகிறார். பின்னர் மறுநாள் காலையில் சக்தியுடன் பெட்டி படுக்கையை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார் ஜனனி. இதையடுத்து நேராக மதிவதினியின் வீட்டுக்கு செல்லும் ஜனனி அங்கு அவரிடம் நடந்த பிரச்சினைகளை எல்லாம் எடுத்துக் கூறுகிறார். மதிவதினி வீட்டில் ரகசிய கேமரா ஒன்றை வைத்துள்ள ராவணன் இந்த பிரச்சனைகளை எல்லாம் ஒட்டு கேட்கிறார். இதை வைத்து ராவணன் தன்னுடைய சகுனி வேலையை ஸ்டார்ட் பண்ணுகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அந்த வீடியோ ஆதாரம் கிடைத்ததும் ஆதி குணசேகரனை ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும் என ஜனனி பேசியதை எடிட் செய்து ஆதி குணசேகரனின் போனுக்கு அனுப்பி வைக்கிறார் ராவணன். அந்த வீடியோவை பார்த்து ஷாக்கான குணசேகரன் அதை தன் மனைவி ஈஸ்வரியிடமும் காட்டுகிறார். இதைப் பார்த்து கடுப்பாகும் ஈஸ்வரி ஏன் இந்த ஜனனி இப்படி கொலை வெறியோடு இருக்கிறார் என கேட்க, ஆதி குணசேகரன் தன் பங்கிற்கு ஜனனி பற்றி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சொல்லி அவள் இந்த வீட்டில் யாருமே நன்றாக இருக்கக் கூடாது என்பதற்காக இந்த வேலையெல்லாம் செய்கிறாள். அவளை இனி நாம் இந்த வீட்டுக்குள் சேர்க்கவே கூடாது என கொளுத்தி போடுகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜனனிக்கு அட்வைஸ் பண்ணும் மதிவதினி, நீங்க வீட்டை விட்டு வெளியே வந்தது மிகப்பெரிய தவறு எனக் கூறுகிறார். இப்போ நீங்க வெளியே வந்ததால் உங்கள் மீது தான் தவறு இருக்கிறது என நினைத்துக் கொள்வார்கள். அதனால் நீங்கள் உங்கள் வீட்டில் இருப்பது தான் சரி என கூறுகிறார். இதையடுத்து ஜனனியும் சக்தியும் மீண்டும் வீட்டுக்கு செல்ல முடிவெடுக்கிறார்கள். இந்த விஷயத்தை எல்லாம் ராவணன் தன்னுடைய ரகசிய கேமரா மூலம் பார்த்துக் கொண்டே இருந்து, நான் ஆதி குணசேகரன் பழிவாங்கும் முன்னர் ஜனனிக்கும் அவருக்கும் இடையே சண்டையை மூட்டி விட்டு வேடிக்கை பார்க்க உள்ளதாக கூறுகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜனனி தன் கணவரை பழிவாங்க பிளான் பண்ணுவதை அறிந்த ஈஸ்வரி, இனி அவளை வீட்டுக்குள்ளேயே விடக்கூடாது என்கிற முடிவில் இருக்கிறார். மதிவதினி பேச்சைக் கேட்டு ஜனனி மீண்டும் வீட்டுக்கு செல்லும்போது தான் அவருக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருக்கிறது. ஜனனியை ஈஸ்வரி வாசலிலேயே தடுத்து நிறுத்தி, இனி உனக்கு இந்த வீட்டில் இடமில்லை என கூறவும் வாய்ப்பு உள்ளது. ராவணன் எதிர்பார்த்தபடியே ஜனனிக்கும் ஈஸ்வரிக்கும் இடையே புது பகை வெடிக்கும் என தெரிகிறது. இதன் காரணமாக இனிவரும் எபிசோடுகள் அனல் பறக்கும் என்பது மட்டும் உறுதி. அதில் உள்ள டிவிஸ்ட் களை பொறுத்திருந்து பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/raavanan-kickstart-janani-vs-eshwari-clash-in-ethirneechal-thodargiradhu-serial-today-474th-episode-08m9irc"/>
        </item>
        <item>
            <title><![CDATA[குணசேகரன் வீட்டை விட்டு வெளியேறும் ஜனனி... மன்னிப்பு கேட்பாரா கதிர்? எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/janani-go-out-of-gunasekaran-house-in-ethirneechal-thodargiradhu-serial-today-473rd-episode-380l4h7</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/janani-go-out-of-gunasekaran-house-in-ethirneechal-thodargiradhu-serial-today-473rd-episode-380l4h7</guid>
            <pubDate>Tue, 21 Apr 2026 08:50:19 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனிக்கும் கதிருக்கும் இடையே பிரச்சனை வெடித்த நிலையில், வீட்டை விட்டு வெளியேற முடிவெடுத்துள்ளார் ஜனனி. அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kpq0p5dk8076vdy0f8r3wyss,imgname-ethirneechal-thodargiradhu---2026-04-21t084625.748-1776741455283.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனிக்கும் கதிருக்கும் இடையே பிரச்சனை வெடித்த நிலையில், வீட்டை விட்டு வெளியேற முடிவெடுத்துள்ளார் ஜனனி. அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனியின் போனுக்கு வீடியோ அனுப்பிய ராவணன் அதை சிறிது நேரத்தில் டெலிட் செய்துவிட்டார். அந்த வீடியோவை அனுப்பியது யார் என்பது தெரியாமல் கன்பியூஸ் ஆன ஜனனி, பின்னர் மதிவதினியின் உதவியுடன் போலீஸிடம் நம்பரை கொடுத்து அதுகுறித்த விவரங்களை வாங்கி உள்ளார். அப்போது தான் அந்த நம்பர் கதிர்வேல் பெயரில் இருந்தது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜனனி, விறுவிறுவென வீட்டுக்கு வந்து கதிர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கதிர் நான் ஏன் உனக்கு வீடியோ அனுப்பணும் என கேள்வி கேட்க, ஜனனி சற்று குழப்பமடைகிறார். இருந்தாலும் நீதான் ஏதோ கேம் ஆடுற என கதிர் மீது ஜனனி பழிபோட, இதனால் கடுப்பாடும் கதிர், ஜனனியை அடிக்க பாய்கிறார். அப்போது ஆஸ்பத்திரிக்கு போயிருந்த ஈஸ்வரி அங்கு வந்துவிடுகிறார். அவரைப் பார்த்ததும் அனைவரும் அமைதி ஆகிறார்கள். என்ன ஆச்சு? என்ன பிரச்சனை என விசாரிக்கிறார் ஈஸ்வரி. யாரும் வாய் திறக்காமல் இருக்க, ஜனனியை தனியாக அழைத்து பேசுகிறார் ஈஸ்வரி. என்கிட்ட இருந்து ஏதாவது மறைக்குறீங்களா என கேட்கிறார் ஈஸ்வரி. அதற்கு ஜனனி உங்க மனசுல என்ன தோணுது என கேட்க, அவர் தனக்கு அப்படி தான் ஃபீல் ஆகிறது என சொல்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பின்னர் மறுநாள் காலையில் டைனிங் டேபிளில் அமர்ந்து பேசும் ஆதி குணசேகரன், எதுக்கு ஜனனி வீட்டை விட்டு போகணும்னு சொல்லுது என ஈஸ்வரியிடம் கேட்கிறார். அப்போது அருகில் இருந்த கதிர், அவளுக்கு மட்டும் தான் ரோஷம், மானமெல்லாம் இருக்காம். அதான் வெளிய போறா என சொல்கிறார். டேய் கதிரு என குணசேகரன் சொல்ல, பின்ன என்ன அண்ணேன், என்னைய பத்தி எப்படி பொய் சொன்னானு நீங்களே கேட்டுகிட்டு தான் இருந்திருப்பீங்க. அதுக்காக தான் நான் கோபப்பட்டேன். அதுக்குன்னு அப்படியே பையை தூக்கிட்டு கிளம்பிருவாளா என கேட்கிறார் கதிர்வேல்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கதிருக்கு பதிலடி கொடுக்கும் நந்தினி, நீங்களும் அதே டிராமா தான பண்ணீங்க, ஒன்னு நான் இருக்கணும், இல்ல அவ இருக்கணும்னு சொல்வீங்க. அவ கிளம்பி போறா இதுல என்ன தப்பு கண்டுபிடிச்சீங்க என சாடுகிறார். எனக்கு டிராமா போடணும்னு அவசியமே இல்லை என கூறும் கதிர், என்மேல பொய்யா பழிபோட்டா அது எனக்கு புடிக்கல, நான் கிளம்புறேன்னு தான் சொன்னேன். மத்தபடி யாரையும் வீட்டை விட்டு அனுப்பணும் அப்படிங்குற என்னமெல்லாம் எனக்கில்ல என கதிர் சொல்ல, அதற்கு ஆதி குணசேகரன், அந்த புள்ளைய நீ அடிக்க போனீல்ல, அதற்காக அந்த புள்ளையிடம் நீ மன்னிப்பு கேட்டிரு என சொல்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அப்போது குறுக்கிட்டு பேசும் ஞானம், அவன் மேல என்ன அண்ணேன் தப்பு இருக்கு, அவன் எதுக்குனே மன்னிப்பு கேட்கணும். முன்னமாதிரி எதாவது தேவையில்லாம பேசிருந்தாகூட நீங்க சொல்றது நியாயமா இருந்திருக்கும். அவன்மேல எந்த தப்பும் கிடையாதுன்னே, சரி வேண்டுமென்றால் ஒன்னு செய்வோமா, அவங்க எல்லாரும் இங்கயே இருக்கட்டும். நம்ம மூணு பேரும் வெளிய போயிருவோமா. கல்யாணத்தன்னைக்கு மட்டும் நம்ம இங்க வந்து எட்டி பார்த்துட்டு போயிருவோம் என சொல்கிறார் ஞானம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அந்த சமயத்தில் மாடியில் இருந்து பெட்டி படுக்கையோடு கீழே இறங்கி வரும் ஜனனி, அக்கா தயவு செஞ்சு யாரையும் பேச வேண்டாம்னு சொல்லுங்க. என்னால தான பிரச்சனைனு நினைக்குறீங்க. நானே வீட்டை விட்டு போறேன். இன்னும் கொஞ்ச நாள்ல எல்லா உண்மையும் வெளிச்சத்துக்கு வந்திரும். நீங்க சொன்னமாதிரி கூடிய சீக்கிரம் எல்லாத்துக்கும் பதில் கிடைக்கதான் போகுது என சொன்னதும் ஆதி குணசேகரன் கேங் அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதையடுத்து என்ன நடந்தது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/janani-go-out-of-gunasekaran-house-in-ethirneechal-thodargiradhu-serial-today-473rd-episode-380l4h7"/>
        </item>
        <item>
            <title><![CDATA[பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 மெகா ஹிட் திருப்பம்; மாமா முத்துவேல் - மருமகன் கதிர் சமாதானம்; கோபத்தில் கொந்தளித்த சக்திவேல்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/pandian-stores-2-serial-twist-muthuvel-and-kathir-reunite-forget-past-enmity-in-tamil-vijay-tv-serial-5dnn2ow</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/pandian-stores-2-serial-twist-muthuvel-and-kathir-reunite-forget-past-enmity-in-tamil-vijay-tv-serial-5dnn2ow</guid>
            <pubDate>Sun, 19 Apr 2026 08:01:03 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;Pandian Stores 2 Serial Twist Muthuvel and Kathir Reunite: &lt;/strong&gt;பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தனது மாமனாருக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிந்து கதிர் அவருக்கு ஆறுதலாக இருந்து வருகிறார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kphk71p62f8wdywz0f0drrge,imgname-muthuvel-and-kathir-1776559556294.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;Pandian Stores 2 Serial Twist Muthuvel and Kathir Reunite: &lt;/strong&gt;பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தனது மாமனாருக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிந்து கதிர் அவருக்கு ஆறுதலாக இருந்து வருகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மாமனார் மற்றும் மருமகன் இருவரும் இப்போது பகையை மறந்து ஒன்று சேர்ந்துள்ளனர். ஆனால், இது தற்காலிகம் தான் என்று மருமகன் சொன்னது தான் சற்று வேதனை அளிக்கிறது. இது குறித்து முழுவதுமாக தெரிந்து கொள்ளலாம். பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கோமதியின் அண்ணன்களான முத்துவேல் மற்றும் சக்திவேல் இருவரும் எதிர்வீட்டில் தான் வசித்து வருகின்றனர். இந்த சீரியல் ஆரம்பித்தது முதல் இப்போது வரையில் இரு குடும்பமும் பகையாக இருந்து வருகிறது. இந்த சூழலில் தான் கோமதி தனது கணவருக்கு கூட தெரியாமல் தனது அண்ணன்களின் கௌரவத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக கதிர் மற்றும் ராஜீ இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதற்கு முன்பு வரை ராஜீ வேறொரு பையனை காதலித்து வந்தார். இது குறித்து கதிர் பல முரை வார்னிங் கொடுத்தும் ராஜீ கேட்பதாக இல்லை. இருவருக்குமே ஆரம்பம் முதலே பிடிக்காது. இந்த சூழலில் தான் கோமதி இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார். திருமணத்திற்கு பிறகு கொஞ்ச நாட்கள் இருவரும் சண்டை போட்டுக் கொண்டே இருந்துள்ளனர். காலப்போக்கில் இருவரும் ஒருவருக்கொருவர் காதலிக்க தொடங்கினர். இப்போது கதிர் சொந்தமாக டிராவல்ஸ் திறந்துள்ளார். ராஜியோ தனது இலட்சியமான எஸ் ஐ வேலைக்காக படித்துக் கொண்டிருக்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த நிலையில் தான் தனது ஒரே மகள் ராஜீயை யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டதால் கோமதி மற்றும் முத்துவேல் குடும்பத்தில் பகை கொஞ்சம் கூடுதலானது. இதற்கிடையில் குமரவேல் மற்றும் அரசியின் காதல் காட்சிகள் ஒளிபரப்பானது. ஆனால், அதுவும் பாதியில் நின்றது. இப்போது மீண்டும் அவர்களது காதலுக்கு இயக்குநர் பச்சை கொடி காட்டலாமா வேண்டாமா என்ற யோசனையில் இருக்கிறார். எப்போதும் அடித்துக் கொண்டிருக்கும் பாண்டியன் மற்றும் முத்துவேல் குடும்பத்தினர் ஒரு கட்டத்தில் தனது தங்கை கோமதியின் குடும்பத்திற்கு கஷ்டம் என்று வரும் போது ஓடி வந்து உதவி செய்தனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆம், தங்கமயில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக புகார் கொடுத்த நிலையில் பாண்டியன் குடும்பத்தினரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அப்போது காலை முதல் இரவு வரை முத்துவேலும் சரி சக்திவேலும் சரி இருவரும் போலீஸ் ஸ்டேஷனிலேயே காத்திருந்தனர். இவ்வளவு ஏன் கூண்டில் நின்று இருவரும் கோமதியின் குடும்பத்திற்கு ஆதரவாக சாட்சி சொன்னர். இப்படியான நிலையில் தனது அண்ணன்களுக்கு தனது கையால் சாப்பாடு பரிமாற வேண்டும் என்பதற்காக கோமதி விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அப்போது சக்திவேல் பிரச்சனையை ஏற்படுத்த இரு வீட்டாருக்கும் மீண்டும் சண்டையானது. அப்போதுதான் கதிர் மற்றும் ராஜீக்கு திருமணம் வைத்தது குறித்து கோமதி எல்லா உண்மைகளையும் வெளிப்படுத்தினார். இந்த நிலையில் இப்படி இரு குடும்பமும் பகையாக இருக்கும் போது கதிர் மட்டும் தனது மாமனாருடன் உறவாடுவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தனது மாமனாரின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரிந்து அவருக்கு பக்கபலமாக இருந்து வருகிறார். ஆம், முத்துவேலுவிற்கு குடல் புற்றுநோய் (Intestinal Cancer) பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முத்துவேல் மற்றும் கதிர் இருவரும் யாருக்கும் தெரியாமல் திருச்சிக்கு சென்றனர். அங்கு முத்துவேலுவிற்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அப்போது அவருக்கு தீவிர அறுவை சிகிச்சை செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று மருத்துவர் அட்வைஸ் செய்த நிலை அது முத்துவேலுவை வெகுவாக பாதிப்படையச் செய்தது. பின்னர் திருச்சி சிகிச்சையை முடித்துக் கொண்டு முத்துவேல் மற்றும் கதிர் இருவரும் வீடு திரும்பிய போது சக்திவேல் கவனித்துவிட்டார். இது குறித்து கதிரிடம் கேட்ட போது எந்த பதிலும் இல்லை. சக்திவேல் தனது அண்ணனிடம் கேட்டதற்கும் அதற்கு பதில் இல்லை. இதைத்தொடர்ந்து வங்கி கணக்கு விவரங்களை சரிபார்த்த போது அக்கவுண்டிலிருந்து பல லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டது குறித்து குமரவேல் தனது அப்பாவிடம் கேட்க, அதற்கு அண்ணன் தான் எடுத்திருக்கிறார். அதற்கு அவர் சரியான விளக்கம் கொடுக்கவில்லை. ஒருவேளை அந்த பணத்தை வைத்து மருமகனுக்கு ஏதாவது இடம் வாங்கி கொடுக்கிறாரா? என்று சந்தேகம் அடைந்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கதிர் வீட்டிலோ அல்லது முத்துவேல் வீட்டிலோ இந்த குடல் புற்றுநோய் பற்றி யாருக்கும் தெரியவில்லை. முத்துவேல் யாருக்கும் தெரியக் கூடாது என்று சொல்லிவிட்டார். அதனால், கதிர் தனது வீட்டில் தனது மனைவி ராஜீயிடம் கூட சொல்லவில்லை. இப்படி பகையை மறந்து முத்துவேல் மற்றும் கதிர் இருவரும் ஒன்று சேர்ந்தாலும் பணத்திற்காகத்தான் கதிர் தனது அண்ணன் உடன் இருக்கிறார் என்று சக்திவேல் வீண் பழி சுமத்துகிறார். இப்படியான நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்து பொறுத்திருந்து பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Rsiva kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/pandian-stores-2-serial-twist-muthuvel-and-kathir-reunite-forget-past-enmity-in-tamil-vijay-tv-serial-5dnn2ow"/>
        </item>
        <item>
            <title><![CDATA[சன் டிவி vs விஜய் டிவி : TRP கிங் யார்? இந்த வார டாப் 10 சீரியல்கள் பட்டியல் இதோ]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/top-10-tamil-serials-trp-ayyanar-thunai-enters-top-5-moondru-mudichu-leads-singapenne-closes-in-63mzvap</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/top-10-tamil-serials-trp-ayyanar-thunai-enters-top-5-moondru-mudichu-leads-singapenne-closes-in-63mzvap</guid>
            <pubDate>Fri, 17 Apr 2026 15:05:06 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;டாப் 10 தமிழ் சீரியல்களின் டிஆர்பி விவரங்கள் வெளியாகி உள்ள நிலையில், இதில் முதலிடத்தில் உள்ள மூன்று முடிச்சு சீரியலை சிங்கப்பெண்ணே சீரியல் நெருங்கி உள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kh8kmwtngfx9c905c0nc0byh,imgname-serial-trp--1--1770889311061.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;டாப் 10 தமிழ் சீரியல்களின் டிஆர்பி விவரங்கள் வெளியாகி உள்ள நிலையில், இதில் முதலிடத்தில் உள்ள மூன்று முடிச்சு சீரியலை சிங்கப்பெண்ணே சீரியல் நெருங்கி உள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ் தொலைக்காட்சி உலகில் வாரந்தோறும் வெளியாகும் TRP பட்டியல் ரசிகர்களின் விருப்பங்களையும், தொடர்களின் நிலைப்பாட்டையும் தெளிவாக வெளிப்படுத்துகிறது. கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இந்த வாரத்தின் டாப் 10 பட்டியலில் சில முக்கியமான மாற்றங்கள் மற்றும் சுவாரஸ்யமான முன்னேற்றங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வாரத்தில் எந்தெந்த தமிழ் சீரியல்கள் அதிக டிஆர்பி ரேட்டிங்கை பெற்று டாப் 10 பட்டியலில் இடம்பிடித்துள்ளன என்பதை விரிவாக பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முதலிடத்தில் தொடர்ந்தும் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வருகிறது மூன்று முடிச்சு. கடந்த வாரம் 9.40 புள்ளிகள் பெற்றிருந்த இந்த தொடர், இந்த வாரம் 9.36 ஆக சற்றே குறைந்திருந்தாலும், இன்னும் முதலிடத்தை தக்க வைத்திருக்கிறது. இது அதன் நிலையான ரசிகர் ஆதரவை காட்டுகிறது. இரண்டாவது இடத்தில் இருக்கும் சிங்கப்பெண்ணே இந்த வாரம் குறிப்பிடத்தக்க உயர்வை பதிவு செய்துள்ளது. கடந்த வாரம் 8.48 இருந்தது, இந்த வாரம் 9.01 ஆக உயர்ந்து, முதலிடத்துக்கு நெருக்கமாக வந்துள்ளது. இதன் கதைக்கள முன்னேற்றம் ரசிகர்களை ஈர்த்திருப்பது தெளிவாக தெரிகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கயல் மற்றும் மருமகள் தொடர்கள் தங்கள் நிலைகளை காக்கும் வகையில் சிறிய சரிவை சந்தித்துள்ளன. கயல் 7.71 இலிருந்து 7.44 ஆகவும், மருமகள் 7.34 இலிருந்து 7.20 ஆகவும் குறைந்துள்ளது. இருந்தாலும், Top 5-இல் தங்கள் இடத்தை இழக்கவில்லை. முக்கிய மாற்றமாக, கடந்த வாரம் 6வது இடத்தில் இருந்த அய்யனார் துணை, இந்த வாரம் 7.01 புள்ளிகளுடன் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதே சமயம், அன்னம் 5வது இடத்திலிருந்து 7வது இடத்திற்கு சரிந்துள்ளது. கடந்த வாரம் 7.06 டிஆர்பி ரேட்டிங்கை பெற்ற இந்த சீரியல் இந்த வாரம் வெறும் 6.61 புள்ளிகளை மட்டுமே பெற்றிருக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மத்திய தரவரிசையில் உள்ள சிறகடிக்க ஆசை கடந்த வாரத்தில் 6.70 ரேட்டிங்கையும் இந்த வாரம் 6.66 புள்ளிகளையும் பெற்று 6வது இடத்தில் உள்ளது. எதிர்நீச்சல் தொடர்கிறது கடந்த வாரம் 6.38 புள்ளிகளும் இந்த வாரம் 6.40 புள்ளிகளும் பெற்று 8ம் இடத்தில் உள்ளது. இது அந்த தொடர்கள் நிலையான பார்வையாளர்களை வைத்திருப்பதை காட்டுகின்றன. இதில் எதிர்நீச்சல் மட்டும் சற்று முன்னேற்றம் கண்டுள்ளது. கடைசி இரண்டு இடங்களில் பெரிய மாற்றம் இல்லை. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 5.89 புள்ளிகளுடன் அதே 9வது இடத்தில் தொடர்கிறது. சின்ன மருமகள் மட்டும் 4.98ல் இருந்து 5.07 ஆக உயர்ந்தாலும், 10வது இடத்தில் தான் உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மொத்தத்தில், இந்த வார TRP பட்டியல் சில தொடர்களின் வளர்ச்சியையும், சில தொடர்களின் சற்று பின்னடைவைவும் வெளிப்படுத்துகிறது. குறிப்பாக சிங்கப்பெண்ணே மற்றும் அய்யனார் துணை போன்ற தொடர்கள் வேகமாக முன்னேறி வருவது கவனிக்கத்தக்கது. வரும் வாரங்களில் முதலிடப் போட்டி இன்னும் கடுமையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் மற்ற சீரியல்களை காட்டிலும் நம்பர் 1 இடத்தில் உள்ள மூன்று முடிச்சு சீரியல் ஒரு மணிநேரம் ஒளிபரப்பாகி வருகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/top-10-tamil-serials-trp-ayyanar-thunai-enters-top-5-moondru-mudichu-leads-singapenne-closes-in-63mzvap"/>
        </item>
        <item>
            <title><![CDATA[குணசேகரனுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆகும் ஜனனி... மதிவதினியின் பலே திட்டம் - எதிர்நீச்சல் தொடர்கிறது]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/janani-and-mathivathini-smart-move-against-ags-in-ethirneechal-thodargiradhu-serial-today-470th-episode-9d1mic8</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/janani-and-mathivathini-smart-move-against-ags-in-ethirneechal-thodargiradhu-serial-today-470th-episode-9d1mic8</guid>
            <pubDate>Sat, 18 Apr 2026 08:59:24 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனியும் மதிவதினியும் சேர்ந்து ஆதி குணசேகரனுக்கு எதிரான ஆதாரத்தை கைப்பற்ற புது திட்டம் தீட்டி உள்ளனர். அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kpfa1jhhg19y0qj0j80dah04,imgname-ethirneechal-thodargiradhu---2026-04-18t085313.435--1--1776482830897.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனியும் மதிவதினியும் சேர்ந்து ஆதி குணசேகரனுக்கு எதிரான ஆதாரத்தை கைப்பற்ற புது திட்டம் தீட்டி உள்ளனர். அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில், ஆதி குணசேகரன் அவருடைய மனைவி ஈஸ்வரியை தாக்கிய வீடியோ தற்போது ராவணன் கையில் இருக்கிறது. அவர் அந்த வீடியோவை ஜனனிக்கு அனுப்பிவிட்டிருந்த நிலையில், அவர் பார்த்த உடன் அந்த வீடியோ டெலிட் ஆகிவிடுகிறது. இதனால் அந்த வீடியோ இருக்கும் நபரை எப்படியாவது தேடி கண்டுபிடிக்க வேண்டும் என முடிவெடுத்து இருக்கிறார். இதற்காக மதிவதினியின் உதவியை நாடி இருக்கிறார் ஜனனி. அந்த வீடியோவை கைப்பற்றினால் ஆதி குணசேகரனை ஜெயிலுக்கு அனுப்பிவிடலாம் என்கிற பிளானில் உள்ளார் ஜனனி. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஈஸ்வரியை ஜனனிக்கு எதிராக திருப்பிவிட்டது போல் நந்தினி மற்றும் ரேணுகாவையும் திருப்பும் வேலையில் இறங்கி இருக்கிறார்கள் கதிர் மற்றும் ஞானம். அதில் முதல்படியாக பெட்ரூமுக்குள் சென்றதும் கதிர், ஞானம் இருவரும் தங்கள் மனைவியிடம் வழிந்து பேசுகிறார்கள். குறிப்பாக இருவரும் ஒரு முளம் மல்லிகை பூவை எடுத்து நீட்டி உனக்காக தான் வாங்கிட்டு வந்தேன் என கூறுகிறார்கள். இதற்கெல்லாம் மசியாத ரேணுகா, எப்படி இதை தலையில வச்சிக்கவா இல்ல காதுல வைக்கவா, உங்க அண்ணன் ஈஸ்வரி அக்காவுக்கு வாங்கி கொடுத்தாருல்ல, அதுல மிச்சம் இருக்குறது கொண்டுவந்து நீங்க ஏங்கிட்ட தர்றீங்களாக்கும். இந்த வேலையெல்லாம் எங்கிட்ட செல்லுபடி ஆகாது. போய் தூங்குங்க என சொல்லிவிடுகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மறுபுறம் மதிவதினி இனி தன்னுடைய குழந்தையை ராவணன் பார்க்க வரக்கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில், அதுதொடர்பாக வழக்கறிஞர் ஒருவரிடம் பேசுகிறார் ராவணன். அப்போது அவரிடம், லைஃப்ல ஒருமுறையாவது தோத்துப் போகணும்னு ரொம்ப ஆசையா இருக்கு, ஆனால் இந்த மதிவதினியிடம் மட்டும் தோத்துப் போக மாட்டேன் என சொல்கிறார். அப்போது அங்கிருந்த வக்கீல், எதுக்கு சார் அந்த லேடியை போட்டு இப்படி டார்ச்சர் பண்றீங்க என கேட்கிறார். அதற்கு அவர் கோபத்தில் ஷட் அப் என சொல்லிவிட்டு அவரை வெளியே போக சொல்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதன்பின்னர் மதிவதினிக்கு போன் போட்டு பேசுகிறார் ஜனனி. அப்போது அவர் ஒரு ஐடியா கொடுக்கிறார். அது என்னவென்றால், அவர்கள் வழியிலேயே சென்று அவர்களை லாக் பண்ணலாம் என சொல்கிறார். அதுமாதிரி எந்த இடத்திலும் நீங்கள் உங்களை வித்தியாசமாக காட்டாதீர்கள். ஏனெனில் அவங்க ரியாக்&zwnj;ஷன் எல்லாம் எப்படி போகுது என்பதை கண்டுபிடித்தால் தான், அதுக்கு ஏத்தமாதிரி நம்ம ஏதாவது மூவ் பண்ண முடியும் என சொல்கிறார். அதற்கு ஓகே சொன்ன ஜனனி, ஆதி குணசேகரன் சொல்வதற்கெல்லாம் தலையாட்டத் தொடங்குகிறார். அதன் முதல் படியாக பெண்கள் அனைவரையும் தர்ஷன் கல்யாணத்துக்காக புடவை எடுக்க அனுப்புகிறார் குணசேகரன்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அந்த கேப்பில் அவருக்கு எதிரான ஆதாரத்தை திரட்டும் வேலைகளில் இறங்குகிறார் ஜனனி. மறுபுறம் தன்னுடைய தம்பிகளிடம் பேசும் ஆதி குணசேகரன், ஜனனி மீதுள்ள சந்தேகத்தை சொல்கிறார். அவ கையில எதுவும் இல்லாம வெறும் வாயில வடை சுடுறவ இல்ல. ஏதோ ஒன்னை தெரிஞ்சிகிட்டு தான் அவ எல்லா வேலையும் பாக்குறா என சொல்கிறார். அந்த நேரத்தில் தான் ராவணனிடம் இருந்து ஒரு வீடியோ ஆதி குணசேகரன் போனுக்கு வருகிறது. இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதையடுத்து என்னென்ன ட்விஸ்ட் அரங்கேறப்போகிறாது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/janani-and-mathivathini-smart-move-against-ags-in-ethirneechal-thodargiradhu-serial-today-470th-episode-9d1mic8"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஜனனிக்கு வில்லியாக மாறும் ஈஸ்வரி; குணசேகரனை பிளாக்மெயில் செய்யும் ராவணன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/eshwari-turns-villi-for-janani-in-ethirneechal-thodargiradhu-serial-today-469th-episode-agftyfr</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/eshwari-turns-villi-for-janani-in-ethirneechal-thodargiradhu-serial-today-469th-episode-agftyfr</guid>
            <pubDate>Fri, 17 Apr 2026 08:53:10 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனிக்கு எதிராக ஈஸ்வரியை திருப்பிவிட கதிர் மற்றும் ஞானம் ஒரு டிராமாவை போட்டுள்ளனர். அதன் பின் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kpcpzg26zzk4ds6mwzpvh2yy,imgname-ethirneechal-thodargiradhu---2026-04-17t084044.725-1776395731014.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனிக்கு எதிராக ஈஸ்வரியை திருப்பிவிட கதிர் மற்றும் ஞானம் ஒரு டிராமாவை போட்டுள்ளனர். அதன் பின் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனிக்கு ராவணன் வீடியோ அனுப்பி டெலிட் பண்ணிய நிலையில், அதுதொடர்பாக மதிவதினியை சந்தித்து பேசி உள்ளார் ஜனனி. அப்போது அந்த வீடியோ அனுப்பியவன் கண்டிப்பாக நமக்கு நல்லது செய்வதற்காக அனுப்பவில்லை. அவன் ஏதோ சதி செய்கிறான் என்று சந்தேகிக்கிறார் ஜனனி. மதிவதினியும் அது கண்டிப்பாக வெளி ஆளாக இருக்க வாய்ப்பு இல்லை. நமக்கு தெரிந்த ஒருவன் தான் இந்த வேலையை செய்திருக்கிறான் என ஹிண்ட் கொடுக்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜனனி வீட்டில் இல்லாத நேரத்தில் ஈஸ்வரியிடம் பேசும் கதிர் மற்றும் ஞானம் ஒரு பெரிய குண்டை தூக்கிப் போடுகிறார்கள். ஜனனிக்கு புத்தி பேதளித்துவிட்டதாகவும், அவர் ஒருநிலையில் இல்லை என்றும் கூறுகிறார்கள். அதுமட்டுமின்றி அவள் இந்த வீட்டில் இருந்தால் எந்த நல்லதுமே நடக்காது என கூறும் கதிர், அவளுடைய வயிற்றில் வளரும் குழந்தையின் நல்லதுக்காக சொல்கிறேன். கொஞ்ச நாளைக்கு ஜனனியும், சக்தியும் வெளியே சென்று தங்கட்டும் என கூறி இருக்கிறார். கதிரின் இந்த பேச்சைக் கேட்டு ஷாக் ஆன நந்தினி மற்றும் ரேணுகா, அவர்களை தடுக்க பார்க்கிறார்கள். ஆனால் அதெல்லாம் வேலைக்கு ஆகவில்லை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஈஸ்வரியும் அவர்கள் சொல்லும் ஐடியா நன்றாக இருக்கிறது என சொல்வதோடு, எனக்கும் ஜனனியின் நடவடிக்கைகளில் எனக்கே நிறைய குழப்பம் இருக்கிறது என ஈஸ்வரி சொல்கிறார். இதனால் ஆதி குணசேகரனின் பிளான்படி ஈஸ்வரியை வைத்து ஜனனியை அந்த வீட்டை விட்டே துரத்த ஆயத்தமாகிறார்கள் கதிர் மற்றும் ஞானம். ஈஸ்வரி தன்னுடைய மகன் தர்ஷனுக்கு திருமணம் செய்ய உள்ளதற்கு ஜனனி எதிர்ப்பு தெரிவித்தால், அவரை ஈஸ்வரி வீட்டை விட்டு வெளியே போகச் சொல்வார் போல தெரிகிறது. அவரை துரத்திவிட்டு நந்தினி மற்றும் ரேணுகாவை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்வார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜனனியை வீட்டை விட்டு துரத்தும் பிளான் நல்லபடியாக சென்றுகொண்டிருக்கிறது என்கிற மிதப்பில் ஆதி குணசேகரன் இருக்க, அவரது போனுக்கு ஒரு வீடியோ வருகிறது. அது வேறேதுவுமில்லை அவர் ஈஸ்வரியை தாக்கிய வீடியோ தான். அந்த வீடியோவை அனுப்பிவிட்டு ஆதி குணசேகரனுக்கு போன் போட்டு பேசிய ராவணனிடம் நீ யாருயா என குணசேகரன் கேட்க, உங்களுக்கு கூட பொறந்தவன்னு நினைச்சுக்கோங்க என சொல்கிறார். இதனால் இந்த வீடியோவை வைத்து ஆதி குணசேகரனை பழிவாங்கும் வேலைகளில் இறங்கி இருக்கிறார் ஆதி முத்து ராணா. அவருடன் அறிவுக்கரசியும் கூட்டு சேர வாய்ப்புள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மறுபுறம் வீட்டில் தர்ஷன் பார்கவிக்கான திருமண ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கும் போது பார்கவி குடும்பத்தில் யார் இருக்கிறார்கள் என்று ஈஸ்வரி கேட்கிறார். அப்போது அதற்கு பதில் சொல்லும் ஜனனி, அவளுக்கு அப்பா இருந்தாரு, கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் அவர் இறந்தார். அவரை அடிச்சு சித்ரவதை பண்ணி சாகடிச்சாங்க என ஜனனி வாய்தவறி சொல்லிவிட, யார் செஞ்சாங்க என ஈஸ்வரி கேட்கிறார். அவர் ஷாக் ஆகிறார். இதனால் பார்கவியின் அப்பாவை கதிர் அடித்து கொன்ற விஷயம் ஈஸ்வரிக்கு தெரியவர வாய்ப்புள்ளது. இதையடுத்து என்ன நடந்தது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/eshwari-turns-villi-for-janani-in-ethirneechal-thodargiradhu-serial-today-469th-episode-agftyfr"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ரோகிணியிடம் தனியாக சிக்கிய மனோஜின் வருங்கால மனைவி; சிந்தாமணியால் காத்திருக்கும் ட்விஸ்ட் - சிறகடிக்க ஆசை]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/rohini-meet-manoj-fiance-harini-in-siragadikka-aasai-serial-today-981st-episode-b0bfldd</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/rohini-meet-manoj-fiance-harini-in-siragadikka-aasai-serial-today-981st-episode-b0bfldd</guid>
            <pubDate>Fri, 17 Apr 2026 09:58:40 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் தன்னுடைய வருங்கால மனைவி ஹரிணி உடன் அவுட்டிங் சென்றபோது அவரிடம் ரோகிணி பேசி உள்ளார். இதன் பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kpcv27bjx3nfvert2r7ybv6w,imgname-siragadikka-aasai---2026-04-17t095623.525-1776400014706.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் தன்னுடைய வருங்கால மனைவி ஹரிணி உடன் அவுட்டிங் சென்றபோது அவரிடம் ரோகிணி பேசி உள்ளார். இதன் பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில், மீனாவின் தம்பி சத்யாவும் அவருடைய காதலி ரேகாவும், மீனா தேர்தலில் வெற்றிபெற்றதை கொண்டாடுவதற்காக கேக் வாங்கிக் கொண்டு செல்கிறார்கள். சத்யாவையும், ரேகாவையும் ஃபாலோ பண்ணிக்கிட்டே சிந்தாமணியும் சென்றிருக்கிறார். அவர் மறைந்திருந்து என்ன நடக்கிறது என்பதை நோட்டமிடுகிறார். மீனா கேக் வெட்டி எல்லாருக்கும் கொடுக்கிறார். இதையெல்லாம் காரில் அமர்ந்துகொண்டே பார்க்கும் சிந்தாமணி, அவர்களுக்கு தெரியாமல் காரில் இருந்தபடியே போட்டோவும் எடுக்கிறார். அதை வைத்து ஒரு ட்விஸ்ட் கொடுக்கவும் வாய்ப்பு உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதன்பின்னர் தான் மிகப்பெரிய சம்பவமே இருக்கிறது. ரேகா, முத்து மற்றும் மீனாவிடம், நானும் உங்க தம்பியும் காதலிக்கிறோம் என சொல்கிறார். இதைக்கேட்டு அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள். ஏன் எதுவும் பேசாம அமைதியா இருக்கீங்க என ரேகா கேட்க, இந்த விஷயம் தான் எங்களுக்கு ஏற்கனவே தெரியுமே என மீனா சொல்கிறார். அது ஓகே, ஆனால் இனி தான் ஒரு பிரச்சனை இருக்கிறது என ரேகா சொல்கிறார். என் கல்யாணத்துக்கு என்னுடைய அப்பா ஓகே சொல்லிடுவாரு, ஆனா எங்க அம்மா சம்மதிக்க மாட்டாங்க என கூறுகிறார். உங்க அம்மாகிட்ட நான் பேசுறேன் என மீனா சொல்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நீங்க பேசுனாலும் கண்டிப்பா ஏத்துக்க மாட்டாங்க, ஏன்னா எங்க அம்மாவை உங்களுக்கு ஏற்கனவே தெரியும்னு ரேகா சொல்ல, யார் அவங்க என மீனா கேட்டதும், நீங்க எலெக்&zwnj;ஷனில் யாரை எதிர்த்து போட்டிபோட்டு ஜெயிச்சங்களோ, அந்த சிந்தாமணி தான் என்னுடைய அம்மா என கூறுகிறார் ரேகா. இதைக்கேட்டதும் ஷாக் ஆகும் மீனா, இதுக்கப்புறம் நீங்க ரெண்டு பேரும் பேசிக்காதீங்க. இனிமேல் லவ் பண்ணுவதை விட்டுவிடுங்கள் என சொல்கிறார் மீனா. பின்னர் முத்து மீனாவை சமாதானப்படுத்தி, அது எப்படி காதலிச்சுட்டு பாதியிலேயே விட முடியும். நீங்க ரெண்டு பேரும் உறுதியா இருந்தீங்கன்னா உங்களை நான் சேர்த்து வைக்கிறேன் என முத்து சொல்ல மீனாவும் அதற்கு சம்மதிக்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மறுபுறம் மனோஜ் தன்னுடைய வருங்கால மனைவி ஹரிணியை ஆட்டோவில் அழைத்து செல்கிறார். ஆட்டோ குலுக்குன குலுக்குல ஹரினிக்கு வாமிட் வருகிறது. உடனே ஆட்டோவை ஓரமாக நிப்பாட்ட சொல்லும் மனோஜ், ஹரிணிக்கு கூல்டிரிங்க்ஸ் வாங்கிட்டு வர்றேன்னு சொல்லிட்டு கிளம்புகிறார். மனோஜ் கிளம்பி சென்றதும், அங்கு ரோகிணி வருகிறார். அவர் ஹரிணியிடம் நல்லவர் போல் பேசி, அவருக்கு வாமிட் வராமல் இருக்க ஒரு மிட்டாயை கொடுத்துச் செல்வதோடு, அருகில் தான் தன்னுடைய பியூட்டி பார்லர் இருக்கிறது. அங்கு வாங்க என சொல்லிவிட்டு செல்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரேகாவின் காதல் விஷயம் தெரிந்ததும், சிந்தாமணி நேராக தன்னுடைய கணவரின் ஆபிஸுக்கு செல்கிறார். அங்கு வந்ததும் உங்க ஆபிஸில் வேலை பார்க்கும் சத்யாவை தான் நம்ம பொண்ணு ரேகா காதலிக்கிறா என்கிற உண்மையை சொல்லிவிடுகிறார் சிந்தாமணி. அதை அவர் நம்ப வேண்டும் என்பதற்காக சத்யாவும், ரேகாவும் ஜோடியாக எடுத்த புகைப்படங்களை காட்டுகிறார் சிந்தாமணி. இதனால் ரேகாவின் காதலுக்கு சிந்தாமணியின் கணவர் ஓகே சொல்வாரா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதன்பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/rohini-meet-manoj-fiance-harini-in-siragadikka-aasai-serial-today-981st-episode-b0bfldd"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஒரேயொரு சீனால் தலைகீழாக மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் கதை – இனி ஆட்டம் வேற மாதிரி!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/pandian-stores-2-serial-story-fully-changed-after-thangamayil-pregnant-scene-major-twist-in-upcoming-episodes-tamil-cpv88op</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/pandian-stores-2-serial-story-fully-changed-after-thangamayil-pregnant-scene-major-twist-in-upcoming-episodes-tamil-cpv88op</guid>
            <pubDate>Sat, 18 Apr 2026 06:00:39 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;Pandian Stores 2 Serial Story Fully Changed : &lt;/strong&gt;பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஒரே ஒரு சீனால் இப்போது சீரியலின் முழு கதையும் மாறி வருகிறது. அது என்ன, எதனால் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kpdp0xgn0ee9vv22vgg5b8xd,imgname-saravanan-and-meena-thangamayil-1776428283412.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;Pandian Stores 2 Serial Story Fully Changed : &lt;/strong&gt;பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஒரே ஒரு சீனால் இப்போது சீரியலின் முழு கதையும் மாறி வருகிறது. அது என்ன, எதனால் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை. இந்த சீரியலானது அப்பா, மகன் கதையை மையப்படுத்தி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் மெயின் கதாபாத்திரம் பாண்டியனின் குடும்பத்தில் உள்ளவர்கள் தான். அதில், பாண்டியன், கோமதி, சரவணன், தங்கமயில், செந்தில், மீனா, கதிர், ராஜீ மற்றும் அரசி ஆகியோர் தான் பாண்டியன் குடும்பம். இதே போன்று கோமதியின் அண்ணன்களான முத்துவேல், சக்திவேல் அவர்களது குடும்பமாக வடிவு, மாரி, குமரவேல் மற்றும் கோமதியின் அம்மா காந்திமதி ஆகியோர் எதிர்வீட்டில் இருக்கின்றனர். இதில் முத்துவேல் மற்றும் சக்திவேல் தான் ஆரம்பத்திலிருந்து வில்லன்களாக இருந்து வருகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆரம்பம் முதலே சக்திவேல் மற்றும் சக்திவேல் ஆகியோரால் தான் அடிக்கடி சண்டை சச்சரவு ஏற்பட்டது. ஆனால், எப்போது சரவணன் மற்றும் தங்கமயில் இருவருக்கும் திருமணமானதோ அப்போது முதல் புதிய திருப்பு முனையாக இருவரது வாழ்வில் பூகம்பம் வெடிக்க ஆரம்பித்தது. இதற்கு காரணம் தங்கமயில் அவரது அம்மா பாக்கியம் மற்றும் மாணிக்கத்தின் பேச்சைக் கேட்டு அடிக்கடி பொய் சொன்னதோடு மட்டுமின்றி திருமண நிச்சயத்தின் போதிலிருந்து படிப்பு, தங்க நகைகள், வயது என்று எல்லாவற்றிலும் பொய் சொல்லி வைத்திருக்கிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதை மறைக்க தேவைப்படும் போது இன்னும் கொஞ்சம் கூடுதலாக பொய்யை சொல்லி அடிக்கியுள்ளார். ஒரு கட்டத்தில் சரவணனுக்கு எல்லா உண்மைகளும் தெரிய வரவே தங்கமயில் வீட்டை விட்டு விரட்டப்பட்டார். அப்போதுதான் கர்ப்பமாக இருப்பதாக சொல்லி மீண்டும் வீட்டிற்குள் வந்தார். அதுவும் பொய் என்று சரவணனுக்கு தெரியவர இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டது. ஆனால், அப்போதும் கூட தங்கமயில் சரவணனுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒரு கட்டத்தில் பொங்கி எழுந்த சரவணன் எல்லா உணமைகளையும் வீட்டில் சொல்லவே பெரிய பூகம்பம் வெடித்தது. பாண்டியன் மற்றும் பாக்கியம் குடும்பத்திற்கு இடையில் விரிசல் ஏற்பட்டது. சரவணன் விவாகரத்து நோட்டீஸ் அனுப்ப தங்கமயில் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக புகார் கொடுத்தனர். இதையடுத்து பாண்டியன் குடும்பத்தில் மீனாவை தவிர மற்றவர்கள் லாக்கப்பில் அடைக்கப்பட்டனர். இதில் ராஜீ மற்றும் அரசியை போலீசார் விடுவிக்கவே மற்றவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் முத்துவேல் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பாண்டியன் குடும்பத்தினர் விடுவிக்கப்பட்டனர். அதன் பின்னர் தான் பாண்டியன் ஒரு முடிவு எடுத்தார். அதாவது இனிமேலும் தங்கமயில் குடும்பத்திற்கும் நமக்கும் எந்த உறவும், பந்தமும் இல்லை என்றார். இந்த காட்சிகளை எல்லாம் வைத்து ரசிகர்கள் சரவணனுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆனால், இப்போது அதெல்லாம் நேர் எதிராக மாறிவிட்டது. எப்படி என்றால், தங்கமயிலுக்கு பிறந்த வீட்டு பாசமும் கிடைக்கவில்லை. புகுந்த வீட்டிலும் துரத்திவிட்டார்கள். வேறு எங்கு செல்வது என்று தெரியாமல் தற்கொலைக்கு முயற்சி செய்த நிலையில் மீனா அவரை காப்பாற்றி கூட்டிக் கொண்டு வந்து வேலையும் வாங்கிக் கொடுத்தார். இந்த சூழலில் தான் தங்கமயில் கர்ப்பமானார். இது குறித்து மருத்துவரிடம் சென்று உறுதி செய்து கொண்டனர். இதைப் பற்றி சரவணனிடம் தெரியப்படுத்த அவரோ இந்த குழந்தைக்கு யார் அப்பா என்று கேட்டார். இந்த நிலையில் தான் மீனா மற்றும் தங்கமயில் இருவரும் அடிக்கடி வெளியில் சந்தித்து கொள்வது எப்படியோ செந்திலுக்கு தெரிய வந்துள்ளது. அதை உறுதிப்படுத்த ரகசியமாக சென்று கையும் களவுமாக பிடித்துவிட்டார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதைப் பற்றி மீனாவிடம் கேட்க பெரிய வாக்குவாதம் ஆனது. மீனாவை வீட்டை விட்டு வெளியேற்ற நினைத்த செந்திலுக்கு கடைசியில் அதிர்ச்சி காத்திருந்தது. இது மீனாவிற்கு கொடுக்கப்பட்ட அரசு விடுதி என்பதால் மீனா செந்திலை வீட்டை விட்டு துரத்திவிட்டார். செந்தில் நேராக தனது வீட்டிற்கு வந்து மீனா மற்றும் தங்கமயில் இருவரும் பேசுவது பற்றி தெரியப்படுத்தினார். இதனால் கோபத்தில் கொந்தளித்த கோமதி உடனடியாக மீனாவை வீட்டிற்கு வரவழைக்க, அவரும் தங்கமயில் கர்ப்பமாக இருப்பது பற்றியும், சரவணன் அது யாருடைய குழந்தை என்று கேட்டது பற்றியும் எல்லா உண்மைகளையும் வெளிப்படுத்தினார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மீனா சொன்ன ஒவ்வொரு விஷயத்தையும் கேட்டு ஆடிப்போன பாண்டியன் மற்றும் கோமதி இருவரும் சரவணனை வரவழைத்து லெஃப்ட் ரைட்டு வாங்கினர். அப்போதுதான் சரவணனுக்கு தங்கமயில் கர்ப்பமாக இருப்பது உண்மை என்று தெரிய வந்தது. ஆரம்பத்தில் சரவணனுக்கு ஆதரவாக செயல்பட்ட பாண்டியன் குடும்பத்தினர் தங்கமயிலுக்கு எதிராக இருந்தனர். ஆனால், இப்போது கொஞ்சம் கொஞ்சமாக தங்கமயில் மீது இரக்கம் காட்ட தொடங்கிவிட்டனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தங்கமயில் கர்ப்பமாக இருப்பது தெரிந்து பாண்டியன், தங்கமயிலை பார்த்து பேசிவிட்டு வரும்படி கோமதியிடம் கூறினார். ஆனால், அடுத்து என்ன செய்வது, மீண்டும் தங்கமயிலை வீட்டிற்கு அழைத்து வருவதா? இல்லை நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருக்கும் சூழலில் அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருக்கின்றனர். ஆனால், சரவணன் அது தன்னுடைய குழந்தை. குழந்தையை மட்டும் ஏற்றுக் கொள்வேன். தங்கமயிலை ஒரு போதும் தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டார். இப்படியான சூழலில் தங்கமயிலின் குடும்பத்தினரின் ரியாக்&zwnj;ஷன் என்னவாக இருக்கும்? தங்கமயிலை ஏற்றுக் கொள்ள சொல்வார்களா? இல்லையா என்பது பற்றி இனிவரும் எபிசோடுகளில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆரம்பத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஒளிபரப்பான கதை வேறு, இப்போது ஒளிபரப்பாகி வரும் கதை வேறும். தங்கமயில் கர்ப்பமாக இருக்கும் ஒரே ஒரு சீனால் இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் ஒட்டு மொத்த கதையும் காட்சியும் மாறிவிட்டது. இதற்கிடையில் சரவணன் வாழ்க்கையில் அஞ்சலி என்ற கதாபாத்திரம் குறுக்கிட்டது. இருவரும் ஏற்கனவே கல்லூரி காலத்தில் ஒன்றாக பேசி பழகியுள்ளனர். இப்போது நீண்ட நாட்களுக்கு பிறகு இருவரும் பேச தொடங்கினர். பாண்டியன் கூட சரவணன் எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு தனக்கு சம்மதம் என்று கூறியிருந்தார். இப்போது பாண்டியன் தங்கமயில் மீது இரக்கம் காட்டும் நிலையில் அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Rsiva kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/pandian-stores-2-serial-story-fully-changed-after-thangamayil-pregnant-scene-major-twist-in-upcoming-episodes-tamil-cpv88op"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஜனனிக்கு ஆப்பு... ஆதி குணசேகரனின் முடிவுக்கு ஓகே சொல்வாரா ஈஸ்வரி? எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/gunasekaran-tactical-move-against-janani-in-ethirneechal-serial-today-477th-episode-iwb3mbw</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/gunasekaran-tactical-move-against-janani-in-ethirneechal-serial-today-477th-episode-iwb3mbw</guid>
            <pubDate>Sat, 25 Apr 2026 10:41:31 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி, வீட்டை விட்டு வெளியேறியதை பயன்படுத்தி, தன் மேல் போடப்பட்ட வழக்குகளை எல்லாம் வாபஸ் வாங்க வைக்க திட்டமிட்டுள்ளார் ஆதி குணசேகரன். அதைப்பற்றி பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kq1gmyn4cqe0rx2b6vysvvxz,imgname-ethirneechal-thodargiradhu--4--1777093737124.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி, வீட்டை விட்டு வெளியேறியதை பயன்படுத்தி, தன் மேல் போடப்பட்ட வழக்குகளை எல்லாம் வாபஸ் வாங்க வைக்க திட்டமிட்டுள்ளார் ஆதி குணசேகரன். அதைப்பற்றி பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் கதிருடன் சண்டைபோட்ட கையோடு வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார் ஜனனி. அவர் மதிவதினி உடன் சேர்ந்து ஆதி குணசேகரனை ஜெயிலுக்கு அனுப்புவது பற்றி ஜனனி பேசியதை ரகசிய கேமரா மூலம் படம்பிடித்து குணசேகரனுக்கு அனுப்பி வைத்துள்ளார் ராவணன். அதைப்பார்த்த குணசேகரன், ஈஸ்வரியிடம் அந்த வீடியோவை காட்ட, அவர் ஜனனி மீது கோபமடைந்து, சக்திக்கு போன் போட்டு உடனடியாக ஜனனியை வீட்டுக்கு வர சொல்கிறார். ஆனால் தற்போது நான் அங்கு சென்றால் பிரச்சனை பெரிதாகிவிடும் என்பதை கருத்தில் கொண்டு ஜனனி, வீட்டுக்கு வர மறுத்துவிடுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சக்தி, மதிவதினி வீட்டில் ரகசிய கேமரா இருக்கும் விஷயத்தை சொல்லிடலாம் என ஜனனியிடம் சொல்ல, அவரோ, அவங்க ஃபேமிலி விஷயமா வெளியூர் போயிருக்காங்க, அதனால இப்போ அவங்ககிட்ட இதப்பத்தி எதுவும் சொல்ல வேண்டாம் என கூறிவிடுகிறார். மறுபுறம் ஆதி குணசேகரனும் தன்னுடைய தம்பிகளுடன் கூடி பேசி, ஜனனி வெளியில் இருந்தால் நமக்கு எதிராக ஏதாவது ஒரு வேலையை பார்ப்பாள், அதனால் அவளை வீட்டுக்கு வர வைக்க வேண்டும் என திட்டம்போடுகிறார். இங்கு வர வைத்து அவளின் சோலியை முடிக்க வேண்டும் என கூறுகிறார். அதுமட்டுமின்றி வழக்கு சம்பந்தமாக பேச வக்கீலையும் வீட்டுக்கு வரச் சொல்கிறார் குணசேகரன்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதையடுத்து மறுநாள் காலையில் வீட்டுக்கு வரும் வக்கீல், குணசேகரனுக்கு எதிரான வழக்கு பற்றி ஈஸ்வரியிடம் கூறுகிறார். படிச்சு முடிச்சதுமே நாச்சியப்பன் அவரது மகள் ஜனனியை, இந்த வீட்டுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்துட்டாரு. அதனால் ஏமாற்றம் அடைந்த ஜனனி, அப்பத்தாவின் தூண்டுதலின் பேரில், வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். திரும்பி வந்ததும் அவர் உங்களை அவர் பக்கம் இழுக்க பார்க்கிறார். இதெல்லாம் சேர்ந்து பல வழக்காக மாறி நிற்கிறது என வக்கீல் ஒரு கதையை அவிழ்துவிட, அதற்கு ஈஸ்வரி, அப்படி என்ன வழக்கு குணசேகரன் மீது போட்டிருக்கிறார்கள் என கேட்கிறார். அதையெல்லாம் விளக்கமா சொன்னா உங்களுக்கு கன்பியூஸ் ஆகிவிடும் என சொல்லி எஸ்கேப் ஆகிறார் வக்கீல்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இப்போ நான் ஒரே ஒரு விஷயம் தான் கேக்குறேன். குணசேகரன் சாருக்கு எதிரா உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லேன்னு, வாக்குமூலமா நீங்க எழுதி கையெழுத்து போட்டு கொடுத்து அதை நான் வாங்கிவிட்டால் எல்லாமே சமாதானமாக போயிரும். இப்போ நீங்க வழக்கை நடத்தினால் செலவுக்கு என்ன செய்வீர்கள். குணசேகரன் சாருக்கு எதிரா வழக்கு நடத்த அவரிடமே காசு வாங்க முடியுமா என கேட்கிறார். அதுமட்டுமின்றி இந்த சமாதானப் பேச்சுவார்த்தைக்கு ஜனனியும் வந்தாக வேண்டும். அவங்களும் வந்துவிட்டால் இன்னையோட எல்லா பிரச்சனையையும் முடிச்சிடலாம் என வக்கீல் சொல்ல, அப்போது அனைவரும் மெளனம் காக்கிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அந்த சமயத்தில் குறுக்கிட்டு பேசும் ஆதி குணசேகரன். பழசையே திரும்ப திரும்ப பேசி இந்த குடும்பம் நிம்மதி கெட்டு போகணுமா, இல்லை எல்லாவற்றையும் மறந்துவிட்டு அடுத்தகட்டத்துக்கு போகணுமா, அதுக்கு அவளும் வரணும் என சொல்கிறார். அப்போது அருகில் இருந்த ஈஸ்வரி, ஜனனி வருவா, அவளை நான் வர வைக்கிறேன் என சொல்கிறார். இதையடுத்து, ஈஸ்வரியை தனியாக அழைத்து சென்று பேசும் ரேணுகா மற்றும் நந்தினியிடம், இந்த கோர்ட், கேஸ் எல்லாம் யார் ஆரம்பிச்சது என கேட்கிறார் ஈஸ்வரி. அவரிடம் நடந்தவற்றை எல்லாம் உடைத்து கூறுவார்களா? என்பதை இனி வரும் எபிசோடுகளில் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/gunasekaran-tactical-move-against-janani-in-ethirneechal-serial-today-477th-episode-iwb3mbw"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஜனனியை தீர்த்துக்கட்ட ஈஸ்வரியை பகடைக்காயாக பயன்படுத்தும் குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/ags-plan-to-betray-janani-via-eshwari-in-ethirneechal-thodargiradhu-serial-today-476th-episode-nfafdwa</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/ags-plan-to-betray-janani-via-eshwari-in-ethirneechal-thodargiradhu-serial-today-476th-episode-nfafdwa</guid>
            <pubDate>Fri, 24 Apr 2026 09:04:31 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் ஈஸ்வரியை தூண்டிவிட்டு அவர் மூலம் ஜனனியை பழிவாங்க திட்டமிட்டுள்ளார் ஆதி குணசேகரன்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kpyrnmgxpg38qgd3411w35f7,imgname-ethirneechal-thodargiradhu---2026-04-24t085859.911-1777001484829.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் ஈஸ்வரியை தூண்டிவிட்டு அவர் மூலம் ஜனனியை பழிவாங்க திட்டமிட்டுள்ளார் ஆதி குணசேகரன்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் கதிர் உடன் சண்டைபோட்ட ஜனனி, வீட்டை விட்டு வெளியேறி இருக்கும் நிலையில், அவர் மதிவதினியிடம் சென்று ஆதி குணசேகரனை எப்படியாவது ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும் என்று பேசியதை தன்னுடைய ரகசிய கேமராவில் படம்பிடித்த ராவணன், அதனை ஆதி குணசேகரனுக்கு அனுப்பி விட்டிருக்கிறார். அதைப்பார்த்த குணசேகரன், அந்த வீடியோவை ஈஸ்வரியிடம் காட்டி, இவ நம்ம குடும்பத்தை நல்லாவே இருக்க விடமாட்டாம்மா என பேசி டிராமா போடுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அந்த வீடியோவை பார்த்ததும் அதிரடி முடிவெடுக்கும் ஈஸ்வரி ஜனனியை வீட்டுக்கு வர சொல்கிறார். ஆனால் ஜனனி, அவருக்கு பதிலாக சக்தியை அந்த வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார். அங்கு சக்தி வந்ததும், அவரிடம் அந்த வீடியோவை காட்டுகிறார்கள். அதைப்பார்த்த சக்தி இது எப்படி லீக் ஆச்சு என ஷாக் ஆனது ஒருபுறம் இருக்க, மறுபுறம் அதில் ஜனனி எதுவும் தப்பா பேசலையே என சப்போர்ட் பண்ணுகிறார். அப்போது அவரை தடுத்து நிறுத்தும் ஈஸ்வரி, சக்தி ஜனனி இப்போ இந்த வீட்டுக்கு வரணும் என ஆர்டர் போடுகிறார். இதனால் வேறு வழியின்றி ஜனனியை அழைத்துவர செல்கிறார் சக்தி.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பின்னர் ஜனனியிடம் சென்று விஷயத்தை சொல்லும் சக்தி, இதெல்லாம் எப்படி லீக் ஆச்சு என்பதை கண்டுபிடிக்க வேண்டும். நீ இப்போ பேசுனது மட்டுமில்ல, ஏற்கனவே நீ மதிவதினி மேடம் கிட்ட பேசுன ஆடியோவும் வெளிய வந்திருக்கு என சக்தி சொல்ல, இதெல்லாம் யார் செய்யும் வேலை என்பது தெரியாமல் குழம்பிப் போகிறார் ஜனனி. அதுமட்டுமின்றி நீ இப்போ அங்க போனா பிரச்சனை தான் பெரிதாகும், அதனால் இப்போதைக்கு அந்த வீட்டுக்கு நீ செல்ல வேண்டாம் என்று கூறும் சக்தி, ஈஸ்வரிக்கும் போன் போட்டு, ஜனனி இப்போ வரலேன்னு சொல்லிட்டா அண்ணி என சொல்லிவிடுகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மறுபுறம் தன்னுடைய தம்பிகளான கதிர் மற்றும் ஞானத்தை தனியாக அழைத்து பேசும் ஆதி குணசேகரன். ஜனனியை வீட்டை விட்டு துரத்திவிடனும்னு நினைக்காதீங். இங்க வச்சே அவளை பந்தாடணும் என சொல்கிறார். அதுமட்டுமின்றி ஈஸ்வரியை தற்போது தன் பக்கம் இழுத்துள்ள அவர், ஈஸ்வரி தனக்கு சப்போர்டாக இருப்பார் என்கிற மிதப்பில் அவரை வைத்தே ஜனனியை பழிவாங்கவும் முடிவெடுத்துள்ளார். இதுதான் சரியான நேரம், அவளை இதோடு முடிச்சுவிட்றுங்க என தன் தம்பிகளிடம் சொல்கிறார். இதனால் ஜனனிக்கு ஆபத்து காத்திருக்கிறது என்பது மட்டும் உறுதி.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் ஆதி குணசேகரன் ஏதோ கேம் ஆடுகிறார் என்பது மட்டும் ஜனனிக்கு தெரிகிறது. அதுமட்டுமின்றி வீட்டில் கேமரா இருக்கும் விஷயத்தை மதிவதினியிடம் ஜனனி சொல்வாரா? ஈஸ்வரியிடம் உண்மையை கூறி ஆதி குணசேகரனின் மாஸ்டர் பிளானை உடைப்பாரா ஜனனி? அல்லது ஈஸ்வரி ஆதி குணசேகரனின் பேச்சைக் கேட்டு ஜனனியை பழிவாங்க உள்ளாரா? என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. இதனால் இனி வரும் எபிசோடுகள் அனல்பறக்கும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/ags-plan-to-betray-janani-via-eshwari-in-ethirneechal-thodargiradhu-serial-today-476th-episode-nfafdwa"/>
        </item>
        <item>
            <title><![CDATA[முத்துவின் அதிரடியால் ஜெயிலில் தூக்கி போடப்பட்ட சிந்தாமணி - எதிர்பாரா திருப்பங்களுடன் சிறகடிக்க ஆசை]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/muthu-caught-culprit-chinthamani-arrested-in-siragadikka-aasai-serial-today-985th-episode-ob4dsi0</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/muthu-caught-culprit-chinthamani-arrested-in-siragadikka-aasai-serial-today-985th-episode-ob4dsi0</guid>
            <pubDate>Wed, 22 Apr 2026 09:21:00 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;சிறகடிக்க ஆசை சீரியலில் சிந்தாமணியின் ஆள் சிக்கியதை அடுத்து, அவர் மீது போலீசில் புகார் கொடுத்து ஜெயிலில் தள்ளி இருக்கிறார் முத்து. இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kpsmt2rfq9gt0hscykzrc97z,imgname-siragadikka-aasai---2026-04-22t091510.073-1776829664015.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சிறகடிக்க ஆசை சீரியலில் சிந்தாமணியின் ஆள் சிக்கியதை அடுத்து, அவர் மீது போலீசில் புகார் கொடுத்து ஜெயிலில் தள்ளி இருக்கிறார் முத்து. இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயா அண்ணாமலையிடம் பொய் சொன்னது பற்றி மீனாவிடம் பேசிக் கொண்டிருக்கும் முத்து, ஹரிணி ரோகினியின் காதல் உண்மையானது என்று சொன்னதை சுட்டிக்காட்டுகிறார். ஹரிணி கூட ஒரு காதலை புரிந்து கொண்டிருக்கிறார் ஆனால் நீ தான் புரிந்து கொள்ளவில்லை என முத்து சொல்ல, நான் என்ன புரிஞ்சுக்கல என கேட்கிறார் மீனா. சத்யா ரேகாவின் காதலை நீ புரிந்து கொள்ளவில்லை என சொல்கிறார் முத்து. அதற்கு மீனா நான் அவனின் நல்லதுக்காக தான் பேசுகிறேன் என சொல்கிறார். அவர்களை சேர்த்து வைத்தால் சிந்தாமணி நிச்சயம் பிரச்சனை பண்ணுவார் என பயப்படுகிறார் மீனா.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதையடுத்து முத்து கிளம்பி கார் செட்டிற்கு செல்ல அங்கு சத்யாவும் ரேகாவும் வருகிறார்கள். அப்போது ரேகா தான் ஹைதராபாத் செல்ல உள்ள விஷயத்தை சொல்கிறார். அது மட்டும் இன்றி சத்யாவின் அம்மாவிற்கு தங்களுடைய காதல் விவகாரம் தெரிய வந்த விஷயத்தையும் கூறுகிறார். எல்லாம் உங்க அக்காவால்தான் என சொல்லும் முத்து, உங்கம்மா சிந்தாமணிக்கு நீங்க காதலிக்கும் விஷயம் தெரியாது தான என கேட்கிறார் முத்து. அது மட்டும் இன்றி நீயும் சத்யாவும் உங்கள் காதலில் உறுதியாக இருக்கிறீர்களா என்று கேட்கிறார் முத்து. அதற்கு இருவரும் நாங்கள் ஒருபோதும் பிரிய மாட்டோம் என வாக்குறுதி அளிக்கின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதையடுத்து வீட்டுக்கு வரும் முத்து மீனாவிடம் ரேகா ஹைதராபாத் செல்லும் விஷயம் உனக்கு தெரியுமா என கேட்க, அவரும் எனக்குத் தெரியும் என சொல்கிறார். அதுமட்டுமின்றி அவர் ஹைதராபாத் செய்வது ஏதோ உள்குத்து இருப்பதாகவும் சந்தேகப்படுகிறார் மீனா. எத்தனை நாட்கள் சென்னையில் இருந்தவரை ஏன் திடீரென ஹைதராபாத் அனுப்ப வேண்டும். அனேகமாக அவரின் பெற்றோருக்கு அவர்களின் காதல் விவகாரம் தெரிந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறுகிறார் மீனா. ஆனால் முத்து அதெல்லாம் இருக்காது அப்படி தெரிந்திருந்தால் இந்நேரம் அந்த சிந்தாமணி பிரச்சனை பண்ணாமல் இருந்திருப்பார் என கேட்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதன் பின்னர் சவாரி ஒன்றுக்குச் செல்லும் முத்து அந்த ஏரியாவில் ரவுடி ஒருவரை பார்க்கிறார். இவரை எங்கேயோ பார்த்தது போல் இருக்கிறது என யோசிக்கையில், இவன்தான் மீனாவை கத்தியால் குத்தியவன் என்று முத்துவுக்கு ஞாபகம் வருகிறது. பின்னர் அவனை துரத்தி சென்று பிடிக்கும் முத்து, யார் சொல்லி நீ மீனாவை கத்தியால் குத்துன என கேட்கிறார். முதலில் அந்த நபர் உண்மையை கூற மறுக்க பின்னர் அவருக்கு தர்ம அடி கொடுக்கும் முத்து சொல்லலைன்னா உன்ன அடிச்சேன் கொன்றுவேன் என்று மிரட்டிய பின்னர் வேறு வழியின்றி உண்மையை சொல்லி விடுகிறார். சிந்தாமணி தான் தன்னை கத்தியால் குத்த சொன்னதாக கூறுகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதையடுத்து அந்த நபரை போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்று ஒப்படைக்கும் முத்து சிந்தாமணி மீது புகார் கொடுக்கிறார். உடனடியாக சிந்தாமணி வீட்டுக்குச் செல்லும் போலீஸ், மீனாவை கத்தியால் குத்திய நபர் நீங்கள் சொல்லி தான் அவ்வாறு செய்ததாக வாக்குமூலம் கொடுத்ததால் உங்களை கைது செய்ய வந்திருக்கிறோம் எனக் கூறுகிறார். இதைக் கேட்ட சிந்தாமணி நான் அதெல்லாம் பண்ணவில்லை அந்த முத்து வேண்டுமென்றே என் மீது பழி போடுகிறான் என்று சொல்ல, அதெல்லாம் நீங்க ஸ்டேஷன்ல வந்து பேசிக்கோங்க எனக்கூறி சிந்தாமணியை கைது செய்து அழைத்துச் செல்கிறார்கள். இதையடுத்து என்ன நடந்தது என்பதை இனிவரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/muthu-caught-culprit-chinthamani-arrested-in-siragadikka-aasai-serial-today-985th-episode-ob4dsi0"/>
        </item>
        <item>
            <title><![CDATA[சீட்டிங் பண்ணிய சிந்தாமணி... விஜயாவுக்கு விதிக்கப்பட்ட கெடு - சிறகடிக்க ஆசை சீரியலில் எதிர்பாரா திருப்பம்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/chinthamani-cheating-vijaya-in-siragadikka-aasai-serial-today-987th-episode-og7iu35</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/chinthamani-cheating-vijaya-in-siragadikka-aasai-serial-today-987th-episode-og7iu35</guid>
            <pubDate>Fri, 24 Apr 2026 10:21:28 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;சிறகடிக்க ஆசை சீரியலில் சிந்தாமணி தன்னை ஏமாற்றிய உண்மையை அறிந்து விஜயா கடும் கோபம் கொள்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kpyx11ecz93j2qa2s0vv457m,imgname-siragadikka-aasai---2026-04-24t101313.423-1777006052812.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சிறகடிக்க ஆசை சீரியலில் சிந்தாமணி தன்னை ஏமாற்றிய உண்மையை அறிந்து விஜயா கடும் கோபம் கொள்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில், சிந்தாமணி சரியான நேரம் பார்த்து விஜயாவை பழிவாங்கி இருக்கிறார். மனோஜும், விஜயாவும் சேர்ந்து ஃபிராடுத்தனம் பண்ணி அண்ணாமலையோட கையெழுத்தை பத்திரத்தில் போட்டு, வீட்டை அடமானம், வைத்து கடன் வாங்கி இருப்பதாக பிரச்சனை வெடித்துள்ள நிலையில், இது எல்லாத்துக்கும் காரணம் மனோஜும், விஜயாவும் தான் என சொல்லிவிடுகிறார்கள். எங்களுக்கு எதுவுமே தெரியாது என சிந்தாமணியும், பைனான்சியரும் ஒரு நாடகத்தை போட்டுவிடுகிறார்கள். தற்போது விஜயாவும், மனோஜும் என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆல்ரெடி அண்ணாமலை மனோஜை போட்டு பொளந்துகட்டிய நிலையில், தற்போது விஜயாவுக்கும் தர்ம அடி கொடுக்கிறார். அந்த பைனான்சியர் தனக்கு வாங்கிய பணத்தை கொடுக்கவில்லை என்றால் வீட்டை ஏலம் விடப்போவதாக சொல்கிறார். எப்படி ஏலத்துக்கு விடுவீங்க, என்னோட கையெழுத்தே இல்லை. இவன் தான் போட்டிருக்கான்னு சொல்கிறார் அண்ணாமலை. உடனே அவர், போலீசை வர வைத்து அரெஸ்ட் பண்ண சொல்லவா என கேட்கிறார். அதற்கு அண்ணாமலை கொஞ்ச டைம் கொடுங்க, நாங்க பணத்தை கொடுத்துவிடுகிறோம் என கேட்கிறார். அதற்கு அவர் அதெல்லாம் முடியாது என உடனடியாக பணம் வேண்டும் என சொல்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பின்னர் அவரிடம் கெஞ்சி கேட்கும் அண்ணாமலை எனக்கு ஒரு வருஷம் டைம் கொடுங்க, நான் பணத்தை எப்படியாவது ரெடி பண்ணி கொடுக்கிறேன் என கேட்கிறார். அதற்காக நான் கையெழுத்து வேண்டுமானாலும் போட்டு கொடுக்கிறேன் என சொல்லிப்பார்க்கிறார். அதற்கு அந்த பைனான்சியர், முடியவே முடியாது, ஒரு மாசம் வேணா தர்றேன் என சொல்கிறார். பின்னர் ஒருவழியாக பேசி மூன்று மாதம் டைம் வாங்குகிறார் அண்ணாமலை. 3 மாதத்திற்குள் 45 லட்சம் கொடுக்க வேண்டும் என சொல்லும் அவர் சாட்சி கையெழுத்து கேட்க, முத்துவும் மீனாவும் சாட்சி கையெழுத்து போடுகிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;3 மாசத்துக்கு மேல ஒரு நாள் தாண்டினாலும் நாங்க இந்த வீட்டை ஏலத்துல விட்ருவோம் என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார் பைனான்சியர். இதையடுத்து சிந்தாமணி விஜயாவிடம் தனியாக சென்று பேசுகிறார். இப்படி என்னை காலைவாரிவிட்டு என்னை ஏமாத்திட்டியே என சிந்தாமணியை பார்த்து விஜயா கேட்க, நான் ஒன்னும் ஏமாத்தல, நீ தான் பொய் சொல்லி உன்னுடைய வீட்டாரை ஏமாத்திருக்க என நக்கலாக சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார் சிந்தாமணி. இதற்கு அப்புறமாவது விஜயா திருந்துவாரா என்று தெரியவில்லை. சிந்தாமணியின் சுயரூபம் தெரிந்தும் அவருடன் பழக வாய்ப்பு உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பின்னர் ரூமுக்குள் சென்று அண்ணாமலையை சமாதானப்படுத்த முயற்சி செய்கிறார் விஜயா. ஆனால் அண்ணாமலை அவரிடம் பேச மறுக்கிறார். மறுபுறம் முத்துவும், மீனாவும், எப்படி 45 லட்சத்தை 3 மாசத்துல புரட்ட முடியும், நாம ஒரு வருஷமா மேல ரூம் கட்ட பணத்தை புரட்ட முயற்சிக்கிறோம். அதுவே முடியல, மூணு மாசத்துல எப்படி 45 லட்ச ரூபாயை சேர்க்க முடியும் என பேசிக் கொண்டிருக்கிறார்கள். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பொறுத்திருந்து பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/chinthamani-cheating-vijaya-in-siragadikka-aasai-serial-today-987th-episode-og7iu35"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ரோகிணியால் தடுத்து நிறுத்தப்பட்ட மனோஜின் திருமணம்... வசமாக சிக்கிய விஜயா - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/april-20-2026-today-episode-of-siragadikka-aasai-serial-rohini-stopped-manoj-marriage-p07m494</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/april-20-2026-today-episode-of-siragadikka-aasai-serial-rohini-stopped-manoj-marriage-p07m494</guid>
            <pubDate>Mon, 20 Apr 2026 09:34:50 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் திருமணம் செய்துகொள்ள உள்ள ஹரிணி, ரோகிணியின் பார்லருக்கு சென்றபோது அவருக்கு எல்லா உண்மையும் தெரியவந்துள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kpmgt73mz3tt8hm626grs5v7,imgname-siragadikka-aasai---2026-04-20t092928.175-1776657702004.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் திருமணம் செய்துகொள்ள உள்ள ஹரிணி, ரோகிணியின் பார்லருக்கு சென்றபோது அவருக்கு எல்லா உண்மையும் தெரியவந்துள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் தனக்கு டைவர்ஸ் கிடைத்துவிடும் என கூறியதை நம்பி, அவருக்கு பெண் பார்க்க சம்மதித்து இருந்தார் அண்ணாமலை. இதையடுத்து ஸ்வேதாவின் மூலம் ஒரு வரன் வந்தது. அமெரிக்காவில் மிகப்பெரிய பணக்காரராக இருப்பவரின் மகளை மனோஜுக்கு திருமணம் செய்து வைக்க பேச்சுவார்த்தை நடந்து, இருவருக்கும் நிச்சயதார்த்தத்தையும் நடத்தி முடித்தனர். இதையடுத்து வருங்கால மனைவி ஹரிணியோடு அவுட்டிங் சென்றிருந்தார் மனோஜ், அப்போது ரோகிணி, ஹரிணியை சந்தித்து தனியாக பேச அழைத்திருந்தார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரோகிணியின் பார்லருக்கு ஹரிணி சென்றிருந்த நிலையில், அவருக்கு மனோஜ் தான் தன்னுடைய கணவர் என்கிற உண்மையை போட்டுடைக்கிறார் ரோகிணி. அதுமட்டுமின்றி ஹரிணியிடம் அழுது புலம்பிய அவர், தங்களுக்கு இன்னும் டைவர்ஸ் கூட கிடைக்கவில்லை என்கிற உண்மையை சொல்லிவிடுகிறார். கோர்ட்டில் மனோஜ் தனக்கு மாதம் 25 ஆயிரம் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருப்பதையும் சுட்டிக் காட்டி பேசி இருக்கிறார். இதையெல்லாம் கேட்டு ஷாக் ஆன ஹரிணி, தன்னுடைய பெற்றோரிடம் இந்த மேட்டரை கூறி இருக்கிறார். இதனால் ரோகிணி நிம்மதி அடைந்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மறுபுறம் மீனாவின் அம்மா, முத்துவை சந்தித்து பேசுகிறார். சத்யாவின் காதல் விஷயம் தொடர்பாக பேச வந்திருப்பதாக சொல்ல, அதற்கு முத்து, உங்களுக்கு இந்த விஷயம் எப்படி தெரியும் என கேட்க, மீனா தான் சொன்னா என கூறுகிறார். சொல்ல வேண்டாம் என சொல்லியும் உங்ககிட்ட சொல்லிருக்கால்ல என கோபப்படுகிறார் முத்து. பின்னர் தான் முத்துவிடம் கெஞ்சி கேட்கும் மீனாவின் அம்மா, நீங்க இந்த விஷயத்தில் தலையிடாதீர்கள் என சொல்கிறார். அந்த சிந்தாமணி ரொம்ப மோசமானவள் அவளுடைய பொண்ணுக்கு என் பையனை கொடுக்கமாட்டேன் என திட்டவட்டமாக கூறுகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பின்னர் வீட்டுக்கு சென்று மீனாவிடம் ஏன் உங்க அம்மாகிட்ட இந்த விஷயத்தை சொன்ன என கேட்டு சண்டைபோடுகிறார் முத்து. அதற்கு மீனா, அந்த சிந்தாமணி பற்றி உங்களுக்கு தெரியாது என சொல்ல, ரேகா நல்ல பொண்ணு தான என முத்து கேட்கிறார். அவ நல்ல பொண்ணு தான், ஆனால் அவளுடைய அம்மா, சத்யாவை பழிவாங்காம விடமாட்டாங்க என சொல்கிறார். பின்னர் மீனாவுக்கு சர்ப்ரைஸாக தான் வாங்கி வந்த கிஃப்டை கொடுக்கிறார் முத்து. மீனா, பல நாட்களாக கழுத்தில் தங்க செயின் இல்லாமல் இருந்த நிலையில், அவருக்கு தங்க செயின் ஒன்றை வாங்கி கொடுத்திருக்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதை வீட்டில் உள்ளவர்களிடம் காட்டி சந்தோஷப்படுகிறார் முத்து. அப்போது ஹரிணியின் அம்மா, அப்பா அங்கு வருகிறார்கள். அவர்கள் அண்ணாமலையிடம் நீங்க இப்படி ஏமாத்துவீங்கனு எதிர்பார்க்கல என கூறுகிறார். உங்க பையன் மனோஜுக்கு டைவர்ஸ் கிடைக்கும்னு ஏன் பொய் சொன்னீங்க, கோர்ட்ல என்ன நடந்திருக்கு தெரியுமா என விஜயாவும் மனோஜும் மூடி மறைத்த உண்மையெல்லாம் சொல்கிறார். இதனால் மனோஜின் திருமணத்துக்கு எண்டு கார்டு போட்டுள்ளார்கள் போல தெரிகிறது. இதையடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/april-20-2026-today-episode-of-siragadikka-aasai-serial-rohini-stopped-manoj-marriage-p07m494"/>
        </item>
        <item>
            <title><![CDATA[கதிர் தான் கல்பிரிட்; அடிச்சு சொன்ன ஜனனி... ராவணனின் பிளான் சக்சஸ் - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ட்விஸ்ட்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/april-20-2026-today-episode-of-ethirneechal-thodargiradhu-serial-janani-says-kathir-is-the-culprit-p9bpp59</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/april-20-2026-today-episode-of-ethirneechal-thodargiradhu-serial-janani-says-kathir-is-the-culprit-p9bpp59</guid>
            <pubDate>Mon, 20 Apr 2026 08:35:42 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனிக்கு வீடியோவை அனுப்பிய நபர் கதிர் தான் என தெரியவந்துள்ளது. இதனால் அவருடன் சண்டை போட்டுள்ளார் ஜனனி. இதைப்பற்றி பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kpmdegmfynbe5qdznsnah7zb,imgname-ethirneechal-thodargiradhu---2026-04-20t083205.838-1776654172815.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனிக்கு வீடியோவை அனுப்பிய நபர் கதிர் தான் என தெரியவந்துள்ளது. இதனால் அவருடன் சண்டை போட்டுள்ளார் ஜனனி. இதைப்பற்றி பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனியின் போனுக்கு ஆதி குணசேகரன், ஈஸ்வரியை தாக்கிய வீடியோவை அனுப்பி வைத்த ராவணன் ஆதி முத்து, அதை சிறிது நேரத்திலேயே டெலிட் செய்துவிட்டார். இதனால் கன்பியூஸ் ஆன ஜனனி, அந்த வீடியோ அனுப்பிய நபர் யார் என்பதை கண்டுபிடிக்க மதிவதினியின் உதவியை நாடினார். அவரும் தனக்கு தெரிந்த போலீஸ் அதிகாரிகளின் மூலம் அதுபற்றி விசாரிக்க சொல்லி இருந்தார். இந்த கேப்பில் ஜனனி, ஈஸ்வரியுடன் காரில் சேலை எடுக்க சென்றபோது அவருக்கு மற்றுமொரு வீடியோ வந்தது. அதைப்பற்றி இந்த எபிசோடில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜனனி அந்த வீடியோவை ஓபன் பண்ணி அனைவரிடமும் காட்டியபோது அதில் ஒரு பொம்மை படம் இருந்தது. இதனால் அனைவரும் அப்செட் ஆகினர். பின்னர் புடவை எடுக்க கடைக்குள் சென்றபோது ஜனனிக்கு போன் பண்ணிய ராவணன், அவரை ஒரு இடத்துக்கு வரச் சொல்கிறார். ஜனனியும் அவரின் பேச்சைக் கேட்டு ரோடு ரோடாக அலைகிறார். பின்னர் அவர் தன்னை வைத்து கேம் ஆடுகிறார் என தெரிந்ததும், மதிவதினிக்கு போன் போட்டுவிட்டு, அவரது வீட்டுக்கு செல்கிறார் ஜனனி. அங்கு சென்றதும், அந்த மர்ம நபர் பற்றி கூறும் ஜனனி, அவரை கண்டுபிடிக்க வேண்டும் என கூறுகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பின்னர் மதிவதினி தனக்கு தெரிந்த போலீஸ் அதிகாரிகளிடம் நம்பர் கொடுத்து அதை டிராக் பண்ணுமாறு சொல்ல, அப்போது தான் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அவர்கள் அந்த நம்பரை டிராக் பண்ணி அது யார் பெயரில் இருக்கிறது என்பதை கூறி இருக்கிறார்கள். அந்த போன் நம்பர் கதிர்வேல் ஆதி முத்து பெயரில் இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள். இதைக்கேட்டதும் கடும் கோபமடைந்த ஜனனி, அப்போ அந்த வீடியோ அனுப்பியது கதிர் தானா என சந்தேகப்படுகிறார். அவனை ஒரு வழி பண்ணுகிறேன் என சொல்லிவிட்டு ஜனனி வீட்டுக்கு கிளம்புகிறார். அதற்குள் ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி ஆகியோர் சேலை எடுத்துவிட்டு வீட்டுக்கு வந்துவிடுகிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அவர்கள் வீட்டுக்கு வந்ததும் கதிர் ஜனனி எங்கே என கேட்க, அவள் ஏதோ வீடியோ விஷயமா யாரையோ பார்க்க சென்றிருப்பதாக சொல்ல, அதற்கு கதிர், அவளுக்கு இதே வேலையாபோச்சு, வேண்டுமென்றால் நீங்களே பாருங்க, இன்னும் கொஞ்ச நேரத்தில் அவ இங்க வருவா, வந்து என்மேலயோ, இல்ல அண்ணன் மேலயோ ஏதாச்சும் ஒரு பழியை போடுவா பாருங்க என ஈஸ்வரியிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரம் பார்த்து கரெக்டாக வீட்டுக்குள் எண்ட்ரி கொடுக்கிறார் ஜனனி. வந்த வேகத்தில் டேய் கதிர்வேல் கீழ வாடா என சொல்லி கத்துகிறார். இதைப்பார்த்து அனைவரும் கன்பியூஸ் ஆகிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கதிர் மாடியில் இருந்து கீழே வந்ததும், நீயே எனக்கு வீடியோ அனுப்புற, அதுக்கப்புறம் நீயே டெலிட் பண்ணுற என கேட்கிறார். உடனே கதிர், அங்கிருந்தவர்களிடம், நான் சொல்லல இவ இப்படி தான் பண்ணுவான்னு என சொல்ல, அனைவரும் ஜனனியிடம் என்ன ஆச்சு என கேட்கிறார்கள். கதிர் மீது சந்தேகம் இருந்தாலும், ஆதி குணசேகரன் பற்றிய வீடியோவை அவர் ஏன் தனக்கு அனுப்ப வேண்டும் என்கிற குழப்பமும் ஜனனியிடம் இருக்கிறது. ஆக மொத்தம் அந்த வீடியோவால் குடும்பத்தில் ஒரு பிரச்சனை வெடித்துள்ளது. இதன்பின் என்ன ஆனது எனபதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/april-20-2026-today-episode-of-ethirneechal-thodargiradhu-serial-janani-says-kathir-is-the-culprit-p9bpp59"/>
        </item>
        <item>
            <title><![CDATA[டாப் 10 TRP ரேஸில் அதிரடி மாற்றம்... சன் டிவி தொடர்களை தூக்கியடித்த விஜய் டிவி சீரியல்கள்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/sun-tv-serals-huge-drop-compared-to-vijay-tv-in-top-10-tamil-serial-trp-rating-q3hvlmw</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/sun-tv-serals-huge-drop-compared-to-vijay-tv-in-top-10-tamil-serial-trp-rating-q3hvlmw</guid>
            <pubDate>Sat, 25 Apr 2026 11:23:25 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தமிழ் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் விவரம் வார வாரம் வெளியிடப்படும். அந்த வகையில் இந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங்கில் விஜய் டிவி சீரியல்களைக் காட்டிலும் சன் டிவி தொடர்கள் அதிக ரேட்டிங் பெற்றுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k1001vwkkcyzeq0rzfzg89we,imgname-new-project---2025-07-25t104258.441-1753420459922.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழ் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் விவரம் வார வாரம் வெளியிடப்படும். அந்த வகையில் இந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங்கில் விஜய் டிவி சீரியல்களைக் காட்டிலும் சன் டிவி தொடர்கள் அதிக ரேட்டிங் பெற்றுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ் டெலிவிஷன் தொடர்களின் TRP தரவரிசையை ஒப்பிட்டு பார்க்கும்போது, சில தொடர்கள் தங்களது நிலையை உறுதியாக தக்க வைத்துக் கொண்டுள்ளன, சில தொடர்கள் முன்னேற்றம் கண்டுள்ளன, மற்றவை சிறிய சரிவையும் சந்தித்துள்ளன. இங்கே ஒவ்வொரு தொடரையும் தனித்தனியாகப் பார்க்கலாம். முதலிடத்தில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் மூன்று முடிச்சு இந்த வாரம் 8.73 TRP பெற்று முதலிடத்தை தக்க வைத்துள்ளது. கடந்த வாரம் 9.36 இருந்த நிலையில், சிறிய குறைவு இருந்தாலும், இதன் இடத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இரண்டாம் இடத்தில் இருக்கும் சிங்கப்பெண்ணே இந்த வாரம் 7.57 TRP-யுடன் உள்ளது. கடந்த வாரம் 9.01 இருந்ததால், இந்த தொடருக்கு கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளது. மூன்றாம் இடத்தில் நிலைத்திருக்கும் கயல் இந்த வாரம் 7.31 TRP பெற்றுள்ளது. கடந்த வாரம் 7.44 இருந்ததால், மிகச்சிறிய வீழ்ச்சி மட்டுமே உள்ளது. நான்காம் இடத்தில் இந்த வாரம் முன்னேறியுள்ள அய்யனார் துணை 6.85 TRP பெற்றுள்ளது. கடந்த வாரம் 7.01 இருந்தாலும், தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளது. ஐந்தாம் இடத்தில் இருக்கும் மருமகள் இந்த வாரம் 6.69 TRP பெற்றுள்ளது. கடந்த வாரம் 7.20 இருந்த நிலையில், இந்த தொடருக்கு சிறிய சரிவு ஏற்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆறாம் இடத்தில் இருக்கும் சிறகடிக்க ஆசை இந்த வாரம் 6.46 TRP பெற்றுள்ளது. கடந்த வாரம் 6.66 இருந்ததால், நிலைத்தன்மை இருந்தாலும் சிறிய வீழ்ச்சி உள்ளது. ஏழாம் இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இந்த வாரம் 6.19 TRP-யுடன் முன்னேறியுள்ளது. கடந்த வாரம் 5.89 இருந்ததால், நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. எட்டாம் இடத்தில் இருக்கும் அன்னம் இந்த வாரம் 6.15 TRP பெற்றுள்ளது. கடந்த வாரம் 6.61 இருந்ததால், சிறிய சரிவு உள்ளது. ஒன்பதாம் இடத்தில் இருக்கும் எதிர்நீச்சல் தொடர்கிறது இந்த வாரம் 5.56 TRP பெற்றுள்ளது. கடந்த வாரம் 6.40 இருந்ததால், இந்த தொடருக்கு குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பத்தாம் இடத்தில் இருக்கும் சின்ன மருமகள் இந்த வாரம் 5.50 TRP பெற்றுள்ளது. கடந்த வாரம் 5.07 இருந்த நிலையில், இது மட்டும் சிறிய முன்னேற்றம் கண்டுள்ளது. மொத்தத்தில் பார்க்கும்போது, முன்னணி தொடர்கள் தங்கள் இடத்தை தக்க வைத்துள்ளன. ஆனால் TRP மதிப்புகளில் பல தொடர்களுக்கு ஏற்றத் தாழ்வுகள் காணப்படுகின்றன. குறிப்பாக &ldquo;பாண்டியன் ஸ்டோர்ஸ் 2&rdquo; மற்றும் &ldquo;சின்ன மருமகள்&rdquo; போன்ற தொடர்கள் முன்னேற்றம் கண்டுள்ளன, அதேசமயம் &ldquo;சிங்கப்பெண்ணே&rdquo; மற்றும் &ldquo;எதிர்நீச்சல் தொடர்கிறது&rdquo; போன்றவை வீழ்ச்சியை சந்தித்துள்ளன. இதனால் அடுத்த வாரங்களில் தரவரிசையில் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதுவரை சன் டிவி சீரியல்கள் டிஆர்பி ரேஸில் தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வந்த நிலையில், இந்த வாரம் அனைத்து சீரியல்களும் சரிவை சந்தித்து உள்ளன. அடுத்தடுத்து சில புதிய தொடர்களும் சன் டிவியில் களமிறங்க உள்ளதால் டிஆர்பியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/sun-tv-serals-huge-drop-compared-to-vijay-tv-in-top-10-tamil-serial-trp-rating-q3hvlmw"/>
        </item>
        <item>
            <title><![CDATA[அடுத்தடுத்து முடிவுக்கு வரும் இரண்டு சன் டிவி சூப்பர் ஹிட் தொடர்கள் - அதிர்ச்சியில் ரசிகர்கள்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/back-to-back-two-sun-tv-super-hit-serials-set-to-end-soon-qoz4q9y</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/back-to-back-two-sun-tv-super-hit-serials-set-to-end-soon-qoz4q9y</guid>
            <pubDate>Fri, 17 Apr 2026 14:54:17 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Sun TV Hit Serials Coming to an End: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இரண்டு சூப்பர் ஹிட் தொடர்கள், முடிவுக்கு வர உள்ளதை தொடர்ந்து, ரசிகர்கள் தங்களின் கவலைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ka8fqdzbmvbcm51h0n1gfp0m,imgname-new-project---2025-11-17t141000.079-1763369007083.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Sun TV Hit Serials Coming to an End: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இரண்டு சூப்பர் ஹிட் தொடர்கள், முடிவுக்கு வர உள்ளதை தொடர்ந்து, ரசிகர்கள் தங்களின் கவலைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் , சின்னத்திரை ரசிகர்களிடையே தொடர்ந்து தனி வரவேற்பைப் பெற்று வருகின்றன. குடும்ப உணர்வுகள், உறவுகள், காதல், தியாகம் என ரசிகர்களின் உணர்வுகளை உள்ளடக்கிய அம்சங்களை மையமாகக் கொண்டு எடுக்கப்படுவதே இதன் முக்கிய காரணம் எனலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சன் டிவியில் இதற்கு முன் ஒளிபரப்பான கோலங்கள், நாதஸ்வரம், மெட்டி ஒளி, ரோஜா, போன்ற பல தொடர்கள் 1000 எபிசோடுகளைத் தாண்டியும் வெற்றிகரமாக ஓடிய தொடர்கள் ஆகும். தற்போது ஒளிபரப்பாகி வரும் &ldquo;மூன்று முடிச்சு&rdquo;, &ldquo;சிங்கப்பெண்ணே&rdquo;, &ldquo;கயல்&rdquo;, &ldquo;மருமகள்&rdquo;, &ldquo;அன்னம்&rdquo;, &ldquo;எதிர்நீச்சல்&rdquo; போன்ற தொடர்கள் நல்ல கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்த தொடர்கள் ஒவ்வொரு வாரமும் TRP தரவரிசை பட்டியலிலும் நல்ல மதிப்பீடுகளை பெற்று வருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில், சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த இரண்டு முக்கிய தொடர்கள் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக Non Prime Time பகுதியில் ஒளிபரப்பாகி வந்த, அதாவது மதிய நேர தொடரான, &ldquo;புனிதா&rdquo; தொடர் அதன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடர் அமைதியான கதையமைப்புடன் ஒரு குறிப்பிட்ட ரசிகர் வட்டத்தை ஈர்த்திருந்தது. கதையின் முக்கிய திருப்பங்கள் நிறைவுக்கு வந்துள்ளதால், விரைவில் இந்த தொடர் நிறைவு பெறும் என கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதைத் தொடர்ந்து மற்றொரு மதிய நேர தொடரான &ldquo;மணமகளே வா&rdquo; என்ற தொடரும் முடிவுக்கு வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குடும்ப உறவுகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த தொடர், குறிப்பாக பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. கதையின் இயல்பான முன்னேற்றமும், பாத்திரங்களின் உணர்ச்சி வெளிப்பாடுகளும் இந்த தொடரை மக்கள் மனதில் நிலைநிறுத்தியது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒரு தொடர் முடிவுக்கு வருவதையே ரசிகர்கள் அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் தற்போது இரண்டு தொடர்கள் அடுத்தடுத்து முடிவுக்கு வர உள்ளது. அதே நேரத்தில் புதிய கதைகள், புதிய பாத்திரங்கள் வருவதற்கான வாய்ப்பையும் இது உருவாக்குகிறது. சன் டிவி தொடர்ந்து புதிய மற்றும் சுவாரஸ்யமான தொடர்களை அறிமுகப்படுத்தி வருவதால், இந்த மாற்றமும் ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில், சன் டிவி தொடர்கள் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து கொண்டே இருக்கின்றன. சில தொடர்கள் முடிவுக்கு வந்தாலும், அதற்குப் பதிலாக மேலும் பல நல்ல கதைகள் உருவாகி ரசிகர்களை கவரும் என்பது உறுதி.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Rsiva kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/back-to-back-two-sun-tv-super-hit-serials-set-to-end-soon-qoz4q9y"/>
        </item>
        <item>
            <title><![CDATA[வீட்டை காப்பாற்ற மாடாக உழைக்கும் முத்து - மீனா... விஜயாவிடம் அடிவாங்கும் மனோஜ் - சிறகடிக்க ஆசை அப்டேட்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/muthu-and-meena-start-saving-money-in-siragadikka-aasai-serial-today-988th-episode-rpsfmw4</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/muthu-and-meena-start-saving-money-in-siragadikka-aasai-serial-today-988th-episode-rpsfmw4</guid>
            <pubDate>Sat, 25 Apr 2026 09:33:56 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் வாங்கிய கடனை அடைப்பதற்காக முத்துவும், மீனாவும் ஓடி ஓடி உழைக்க ஆரம்பிக்கிறார்கள். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kq1csdj221h441q5bzgr0e3b,imgname-siragadikka-aasai--2--1777089689154.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் வாங்கிய கடனை அடைப்பதற்காக முத்துவும், மீனாவும் ஓடி ஓடி உழைக்க ஆரம்பிக்கிறார்கள். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் வாங்கிய கடனுக்காக வீட்டை விஜயா யாருக்கும் தெரியாமல் அடமானம் வைத்திருந்த நிலையில், தற்போது பைனான்சியர் அந்த காசை கேட்டு வீட்டுக்கு வந்ததோடு மனோஜூம் விஜயாவும் சேர்ந்து அண்ணாமலையின் கையெழுத்தை போட்டு வீட்டு பத்திரத்தை தன்னிடம் கொடுத்து அடமானம் வைத்து 45 லட்சம் ரூபாய் கடன் வாங்கிய விஷயத்தை போட்டு உடைக்கிறார். அதுமட்டுமின்றி அந்த கடன் தொகையை மூன்று மாதத்தில் திருப்பி செலுத்தாவிட்டால் வீட்டை ஏலத்துக்கு விட்டு விடுவேன் என்றும் வார்னிங் கொடுத்துவிட்டு சென்று இருக்கிறார். இதை அடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மனோஜ் வாங்கிய கடனுக்காக முத்துவும் மீனாவும் சாட்சி கையெழுத்து போட்டுள்ள நிலையில் அவர்கள் இருவரும் அந்தப் பணத்தை எப்படியாவது ரெடி பண்ண வேண்டும் என்பதற்காக தீவிரமாக உழைக்க ஆரம்பிக்கிறார்கள். அதுமட்டுமின்றி மீனா தன்னிடம் இருந்த தங்க நகைகளை அடமானம் வைத்து அதன்மூலம் ஒன்பது லட்சம் ரூபாயை திரட்டி இருக்கிறார். பணத்தை வேகமாக சேர்க்க வேண்டும் என்பதற்காக கூடுதல் நேரம் உழைக்கிறார் பீனா ஏராளமான இடங்களில் பூ ஆர்டர் எடுத்து அதனை டெலிவரி செய்து வருகிறார். மறுபுறம் முத்துவும் இரவு பகல் பாராமல் கார் ஓட்டி சம்பாதித்து வருகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த சமயத்தில் மீனாவுக்கு ஒரு குட் நியூஸ் வருகிறது. அவர் தலைமையில் உள்ள பூ வியாபாரிகள் சங்கத்திற்கு தமிழ்நாடு அரசு நடத்தும் மலர்கண்காட்சிக்கான பொறுப்பை கவனித்துக் கொள்ள ஆர்டர் வருகிறது. அதனை நல்லபடியாக முடித்துக் கொடுத்தால் அவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இந்த தகவலை அறிந்த மீனா மிகுந்த சந்தோஷம் அடைகிறார். மறுபுறம் முத்து ஒரு சவாரியை இறக்கி விட சென்றபோது அங்கு வடை இருப்பதை பார்த்து சாப்பிட ஆசைப்படுகிறார். பின்னர் நமக்கு வீட்டுக் கடனை அடைப்பது தான் முக்கியம் என முடிவெடுத்து தண்ணீரை மட்டும் குடித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி செல்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இப்படி தாங்கள் வாங்காத கடனுக்காக முத்துவும் மீனாவும் ஓடி ஓடி உழைக்கும் நிலையில் மறுபுறம் கடனை வாங்கிவிட்டு எந்தவித கவலையும் இன்றி சுற்றிக் கொண்டிருக்கும் மனோஜ் வீட்டிற்கு சுட சுட பிரியாணி வாங்கி வந்து சாப்பிடாமல் இருக்கிறார். இப்படி அவர் கடனைப் பற்றி கவலைப்படாமல் சுற்றுவதை பார்த்து கடுப்பான விஜயா இந்த நேரத்தில் உனக்கு பிரியாணி தான் ஒரு கேடா என கேட்டு அவருக்கு தர்ம அடி கொடுக்கிறார். இங்கே நானே வீடு பறிபோயிடும்னு கவலையில் இருக்கேன் நீ என்னடான்னா துளியும் கவலையில்லாமல் இப்படி சுத்திக்கிட்டு இருக்க உன்னை போய் நம்பி நானும் ஏமாந்துட்டேனே என புலம்புகிறார் விஜயா.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அனேகமாக இந்த மூன்று மாதத்திற்குள் முத்துவும் மீனாவும் கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் போக வாய்ப்புள்ளது. இதனால் அந்த பைனான்சியர் வீட்டை ஏலம் விட தொடங்கும் போது முத்து தன்னுடைய டிராவல்ஸ் வேலை விற்று அந்த பணத்தை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் சிந்தாமணியும் மீனாவின் தலைவி பதவியை பறிக்க பல்வேறு சதித்திட்டம் தீட்டி வருகிறார். அவருக்கு உடந்தையாக ரோகிணியும் இருக்கிறார். இதனால் முத்துமீனாவுக்கு அடுத்தடுத்து சிக்கல்கள் காத்திருக்கின்றன. அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதை இனிவரும் எபிசோடுகளில் பொறுத்திருந்து பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/muthu-and-meena-start-saving-money-in-siragadikka-aasai-serial-today-988th-episode-rpsfmw4"/>
        </item>
        <item>
            <title><![CDATA[மீனாவுக்கு சிந்தாமணி வைத்த செக் மேட்... விஜயாவின் ஆசையில் மண்ணை அள்ளிப்போட்ட ரோகிணி - சிறகடிக்க ஆசை ட்விஸ்ட்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/chinthamani-checkmate-for-meena-unexpected-twist-loading-in-siragadikka-aasai-serial-xbbas81</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/chinthamani-checkmate-for-meena-unexpected-twist-loading-in-siragadikka-aasai-serial-xbbas81</guid>
            <pubDate>Sat, 18 Apr 2026 15:32:36 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;சிறகடிக்க ஆசை சீரியலில் தேர்தலில் வெற்றி பெற்று தலைவியான மீனாவுக்கு சிந்தாமணி மிகப்பெரிய ஆப்பு ஒன்றை வைத்திருக்கிறார். அது என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kpg0fwmb237c22txvbtfk02j,imgname-siragadikka-aasai---2026-04-18t152726.942-1776506368651.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சிறகடிக்க ஆசை சீரியலில் தேர்தலில் வெற்றி பெற்று தலைவியான மீனாவுக்கு சிந்தாமணி மிகப்பெரிய ஆப்பு ஒன்றை வைத்திருக்கிறார். அது என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிறகடிக்க ஆசை சீரியலில் தன்னை தேர்தலில் தோற்கடித்த மீனாவை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்கிற முனைப்போடு சுற்றிக் கொண்டிருக்கும் சிந்தாமணிக்கு அவரது மகள் ரேகா ஒரு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளார். அவர் மீனாவின் தம்பி சத்யாவை காதலிக்கும் விஷயம் சிந்தாமணிக்கு தெரியவந்ததோடு, அவர் சத்யாவும் ரேகாவும் ஜோடியாக ஊர் சுற்றியபோது அதை போட்டோ எடுத்து வைத்துள்ளார். இதன்பின்னர் நேராக ரேகாவின் அப்பாவை அவரது ஆபிஸுக்கு சென்று சந்தித்து பேசிய சிந்தாமணி, போட்டோ ஆதாரத்துடன் ரேகாவின் காதல் விவகாரத்தை போட்டுடைத்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மீனாவுக்கு சத்யா காதலிக்கும் ரேகா சிந்தாமணியின் மகள் என்கிற உண்மை தெரிந்ததும் அவர் என்னால் இந்த காதலுக்கு சம்மதம் தெரிவிக்க முடியாது என சொல்லிவிட, பின்னர் முத்து தான் அவரிடம் பேசி சமாளித்து அவர்களின் காதலை சேர்த்துவைக்க சொல்கிறார். சிந்தாமணி மீனாவை பழிவாங்க, ரேகாவின் காதலை ஒரு பகடைக் காயாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. நீ பூ வியாபாரிகள் சங்கத்தின் தலைவி பதவியில் இருந்து விலகினால், உனது தம்பி சத்யாவுக்கு என்னுடைய மகள் ரேகாவை திருமணம் செய்துவைக்க ஒப்புக் கொள்கிறேன் என்று மீனாவுக்கு செக் மேட் வைக்கவும் வாய்ப்பு உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தம்பியின் காதலுக்காக மீனா தன்னுடைய பதவியை தூக்கி எறிவாரா என்பது தான் கேள்விக் குறியாக உள்ளது. தன்னுடைய சுயநலத்துக்காக தன்னை நம்பி வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயலாக இது அமைந்துவிடும் என்பதை கருத்தில் கொண்டு மீனா சிந்தாமணியின் டீலிங்கை ஏற்க மறுக்க வாய்ப்பு இருக்கிறது. அதே வேளையில் ரேகாவும் தன்னுடைய காதலில் ஸ்ட்ராங் ஆக இருப்பதால், முத்துவின் உதவியோடு சிந்தாமணியையும் அவருடைய கணவரையும் மீறி ரேகாவை தூக்கி வந்து சத்யாவுக்கு கல்யாணம் பண்ணி வைப்பார்கள் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதேபோல் விஜயாவுக்கும் ஒரு பேரதிர்ச்சி காத்திருக்கிறது. விஜயா தன்னுடைய மகன் மனோஜுக்கு அமெரிக்காவில் வேலை பார்க்கும் பெண் கிடைத்திருக்கிறது என்கிற குஷியில் இருக்கிறார். அதுமட்டுமின்றி ரோகிணியிடம் டைவர்ஸ் வாங்காமலேயே மனோஜுக்கும் ஹரிணிக்கும் திருமணம் நிச்சயம் செய்திருக்கிறார். இந்த விஷயம் தற்போது ரோகிணிக்கும் தெரியவந்துள்ளது. ரோகிணி பார்லருக்கு ஹரிணி சென்றிருந்தபோது அவர், ரோகிணி போனில் மனோஜ் வால்பேப்பர் இருந்ததை பார்த்து கேட்க, அதற்கு ரோகிணி தான் மனோஜின் முதல் மனைவி என்கிற உண்மையை சொல்லிவிடுகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஏற்கனவே சாப்பிட சென்றபோது மனோஜின் நடவடிக்கைகள் எல்லாம் பார்த்து அப்செட் ஆன ஹரிணிக்கு தற்போது ரோகிணி மேட்டரும் தெரிந்துவிட்டதால், அவர் மனோஜ் உடனான திருமணத்தை பாதியில் நிறுத்தும் முடிவுக்கு வர வாய்ப்பு உள்ளது. இதனால் தன்னுடைய மகனுக்கு பெரிய இடத்தில் பெண் பார்க்க வேண்டும் என்கிற விஜயாவின் ஆசை மண்ணாய் போய் உள்ளது. இதற்கெல்லாம் காரணம் ரோகிணி தான் என்கிற உண்மையும் தெரியவந்தால், விஜயா பத்ரகாளியாக மாறிவிடவும் வாய்ப்பு உள்ளது. அதனால் அடுத்த வார எபிசோடுகள் அனல்பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/chinthamani-checkmate-for-meena-unexpected-twist-loading-in-siragadikka-aasai-serial-xbbas81"/>
        </item>
        <item>
            <title><![CDATA[மிகப்பெரிய உண்மையை மறைத்த விஜயா; அடிக்க பாய்ந்த அண்ணாமலை - சிறகடிக்க ஆசை சீரியலில் செம ட்விஸ்ட்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/annamalai-angry-with-vijaya-in-siragadikka-aasai-serial-today-984th-episode-xtnk1gb</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/annamalai-angry-with-vijaya-in-siragadikka-aasai-serial-today-984th-episode-xtnk1gb</guid>
            <pubDate>Tue, 21 Apr 2026 09:32:38 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜுக்கு இரண்டாம் திருமணம் செய்து வைப்பதற்காக விஜயா சொன்ன பொய் அமபலமாகி உள்ளது. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kpq34adw53mhvse33vkhncz0,imgname-siragadikka-aasai---2026-04-21t092919.245-1776744016316.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜுக்கு இரண்டாம் திருமணம் செய்து வைப்பதற்காக விஜயா சொன்ன பொய் அமபலமாகி உள்ளது. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிறகடிக்க ஆசை சீரியலில், மனோஜுக்கு விரைவில் டைவர்ஸ் கிடைத்துவிடும் என பொய் சொல்லி, ஹரிணி என்கிற பணக்கார வீட்டு பெண்ணுடன் மனோஜுக்கு நிச்சயம் செய்துள்ளார் விஜயா. இதை அறிந்த ரோகிணி, ஹரிணியை தன்னுடைய பியூட்டி பார்லருக்கு வர வைத்து எல்லா உண்மையையும் சொல்லிவிடுகிறார். இதனால் கடுப்பான ஹரிணி, தன்னுடைய பெற்றோரிடம் உண்மையை போட்டுடைத்துள்ளார். பின்னர் ஹரிணியின் ஃபேமிலி விஜயா வீட்டிற்கு சென்று பிரச்சனை செய்திருக்கிறார்கள். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஹரிணியும், அவரின் குடும்பத்தாரும், விஜயாவை பார்த்து, இவங்க சீட்டிங் பண்ணிட்டாங்க. இவ்வளவு பொய் சொல்லிருக்காங்க என சொல்கிறார்கள். அப்போது தான் ரோகிணியை சந்தித்த விஷயத்தை சொல்கிறார் ஹரிணி. ரோகிணி தன்னிடம் என்னவெல்லாம் சொன்னார் என்பதை ஒரு குட்டி பிளாஷ்பேக்காக சொல்கிறார் ஹரிணி. அப்போது ஹரிணியிடம் கண்ணீர்விட்டு பேசும் ரோகிணி, தான் மனோஜை உயிருக்கு உயிராக காதலித்தேன். ஆனால் அவங்க என்னைய ஏமாத்திட்டாங்க என எக்ஸ்ட்ரா ரெண்டு பிட்ட, சேர்த்துப் போட்டு சொல்கிறார். அவர் அழுதுகிட்டே சொன்னதால் ஹரிணியும் அதை உண்மை என நம்பிவிடுகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கண்டிப்பா உங்களுக்கு டைவர்ஸ் கிடைக்காது. ரோகிணி டைவர்ஸ் கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க. ரோகிணி தான் உங்களுக்கு கரெக்டா இருக்கும். அவ உங்களை அந்த அளவுக்கு காதலிக்குறா என மனோஜிடம் சொல்கிறார். அப்போது விஜயா, அதெல்லாம் இல்ல, ரோகிணி சொன்னதெல்லாம் பொய் என சொல்லி சப்பைகட்டு கட்டப்பார்க்கிறார். ஆனால் அதற்கெல்லாம் மசியாத ஹரிணியின் பெற்றோர். இப்படி ஏமாத்திட்டீங்களே. 6 மாசம் டைவர்ஸ் கிடைக்க வாய்ப்பில்லை. அதுவரை ரோகிணிக்கு 25 ஆயிரம் மாச மாசம் கொடுக்கணும்னு கோர்ட் ஆர்டர் போட்டிருக்கும் விஷயத்தை சொல்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நாங்க கோர்ட் ஆர்டர் காப்பியெல்லாம் பாத்துட்டு தான் இங்க வர்றோம் என சொல்கிறார். நீங்களும் இப்படி இவங்களோடு சேர்ந்து பொய் சொல்றீங்களே என அண்ணாமலையை அவர்கள் திட்டிவிட்டு செல்கிறார்கள். இதனால் அண்ணாமலைக்கு செம கோபம் வருகிறது. நான் இதுவரைக்கும் யாரிடமும் பொய் சொன்னதே இல்ல, என்னைய பொய் சொன்னேன்னு யாரும் சொன்னதே இல்ல. ஆனா பாரு, உன்னையால இப்போ என்னைய ஹரிணியோட அப்பா பொய் சொல்றேன்னு சொல்லிட்டு போயிட்டாரு. எனக்கு இந்த அவமானமெல்லாம் தேவையா என கேட்டு விஜயாவை அடிக்க பாய்கிறார் அண்ணாமலை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அப்போது அங்கிருந்த முத்து, மீனா ஆகியோர் அவரை தடுத்து நிறுத்துகிறார்கள். இந்த பிரச்சனையெல்லாம் முடிந்த பிறகு முத்துவும், மீனாவும் தனியா போய் இதைப்பற்றி டிஸ்கஸ் பண்ணுகிறார்கள். ஹரிணியும், இவனும் சேர மாட்டாங்கனு எனக்கு ஏற்கனவே தெரியும். ஹரிணி ரொம்ப நல்ல பொண்ணா இருக்கு. ஆனா இவன் பாரு எப்படி இருக்கான்னு மனோஜை திட்டிக் கொண்டிருக்கிறார் முத்து. இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதையடுத்து என்ன ஆனது? மனோஜின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன? என்பதையெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/annamalai-angry-with-vijaya-in-siragadikka-aasai-serial-today-984th-episode-xtnk1gb"/>
        </item>
        <item>
            <title><![CDATA[மனோஜின் காதலுக்கு வேட்டு வைத்த ரோகிணி... ரேகாவுக்கு சிந்தாமணியால் வந்த புது சிக்கல் - சிறகடிக்க ஆசை அப்டேட்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/rohini-master-plan-against-manoj-harini-love-in-siragadikka-aasai-serial-today-982nd-episode-yet7g42</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/rohini-master-plan-against-manoj-harini-love-in-siragadikka-aasai-serial-today-982nd-episode-yet7g42</guid>
            <pubDate>Sat, 18 Apr 2026 09:58:51 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி, மனோஜ் திருமணம் செய்துகொள்ள உள்ள ஹரிணியை தன்னுடைய பியூட்டி பார்லருக்கு அழைத்து பேசி உள்ளார். அதன்பின் என்ன ஆனது என பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kpfdebreg7swysqqe2srp1kw,imgname-siragadikka-aasai---2026-04-18t095459.792-1776486395662.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி, மனோஜ் திருமணம் செய்துகொள்ள உள்ள ஹரிணியை தன்னுடைய பியூட்டி பார்லருக்கு அழைத்து பேசி உள்ளார். அதன்பின் என்ன ஆனது என பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் தான் திருமணம் செய்துகொள்ள உள்ள ஹரிணி உடன் வெளியே சென்று சாப்பிட சென்றிருக்கிறார். மனோஜ் காரில் போகலாம் என சொல்ல, அதற்கு ஹரிணி தனக்கு ஆட்டோவில் போக ஆசை என சொல்லி அவரை ஆட்டோவில் அழைத்து செல்கிறார். அப்போது செல்லும் வழியில் ஹரிணி வாந்தி எடுக்கிறார். அப்போது அவருக்காக சோடா வாங்கிவர மனோஜ் செல்ல, அந்த கேப்பில் ஹரிணியை சந்திக்கும் ரோகிணி, அவரிடம் நல்லவர் போல பேசி, அவருக்கு தன்னுடைய பார்லர் விசிட்டிங் கார்டையும் கொடுத்துவிட்டு செல்கிறார். இதன்பின் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதன்பின்னர் ஹரிணியை அழைத்துக் கொண்டு மனோஜ், ஸ்ருதியின் ரெஸ்டாரண்டுக்கு செல்கிறார். அவர் கூடவே முத்து, மீனா, ஸ்வேதா ஆகியோரும் வந்திருக்கிறார்கள். அப்போது மனோஜ் அவர்கள் முன்னிலையில், ஓவராக பந்தா பண்ணிக் கொண்டிருக்கிறார். இதெல்லாம் ஒரு ஹோட்டலா, அமெரிக்காவுல இதைவிட எவ்வளவு பெரிய ஹோட்டல்லாம் இருக்கும் என்று பேசுகிறார் மனோஜ். அவரின் இந்த நடவடிக்கை ஹரிணிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. தன்னுடைய சொந்த தம்பியின் ஹோட்டலையே இப்படி தரக்குறைவா பேசுறாரே என ஹரிணி செம அப்செட் ஆகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மறுபுறம் சிந்தாமணி, ரேகாவின் அப்பாவை சந்தித்து சத்யாவின் காதலைப் பற்றி பேசுகிறார். அவரும் சிந்தாமணியின் பேச்சைக் கேட்டு மனசு மாறிவிடுகிறார். நீ சொன்னது கரெக்ட் தான், நம்ம பொண்ணை ஒரு நல்ல இடத்தில் தான் கட்டிக் கொடுக்க வேண்டும். அதையே நானும் விரும்புவேன். இந்த விஷயத்துல நான் உனக்கு சப்போர்ட் பண்ணுறேன். முதலில் அவனை வேலையை விட்டு தூக்குறேன்னு சொல்கிறார். ஆனால் அதையெல்லாம் செய்ய வேண்டாம் என சொல்லும் சிந்தாமணி, நீ இப்போ அவனை வேலையை விட்டு தூக்குனா, நம்ம பொண்ணு அவன்கூட ஓடிப் போயிடும். அதனால நம்ம பொண்ணை எங்காச்சும் வெளி ஊருக்கு அனுப்புவோம் என ஐடியா கொடுக்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஸ்ருதியின் ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது ஹரிணியிடம் அட்வாண்டேஜ் எடுக்கும் மனோஜ், இதெல்லாம் சாப்பிடாத, இது உனக்கு ஒத்துக்காது, ஸ்பூன்ல சாப்பிடுனு சொல்லி பந்தா பண்ணுகிறார். இதனால் கடுப்பாகும் ஹரிணி, மனோஜை திட்டிவிடுகிறார். இதனால் ஷாக் ஆகிறார் மனோஜ். பின்னர் வீட்டுக்கு செல்லும் முத்து, மீனாவிடம் பேசுகையில், மனோஜ் பண்ணுறது சரியில்ல, ஹரிணியோட முகமே மாறிப்போச்சு என சொல்கிறார். அதன்பின்னர் ரேகா - சத்யா இருவருக்கும் எப்படி கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு பேசுகிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இறுதியாக ஹரிணி, ரோகிணியின் பியூட்டி பார்லருக்கு செல்கிறார். அவரிடம் மனோஜ் தான் தன்னுடைய கணவர் என்பதை தெரியப்படுத்துவதற்காக தன்னுடைய மொபைலில் தானும் மனோஜும் ஜோடியாக எடுத்த போட்டோவை வால்பேப்பராக வைத்திருக்கிறார். அதை எப்படியோ ஹரிணியிடம் காட்டிவிடுகிறார். அதன்பின்னர் இவர்கூட தான் தனக்கு திருமணம் நிச்சயமாகி இருக்கிறது என ஹரிணி சொன்னவுடன். ரோகிணி அழுது டிராமா போட ஆரம்பிக்கிறார். அநேகமாக இந்த கல்யாணம் நின்றுபோக அதிகம் வாய்ப்புள்ளது. அதைப்பற்றி இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/rohini-master-plan-against-manoj-harini-love-in-siragadikka-aasai-serial-today-982nd-episode-yet7g42"/>
        </item>
    </channel>
</rss>
