<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes"?>
<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Thu, 16 Jul 2026 16:49:17 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss/television" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[Actress Uma Shankari: 'சொக்கத் தங்கம்' பட நடிகையை ஞாபகம் இருக்கா? அவருக்கு என்ன ஆனது? மருத்துவமனையில் இருந்து வெளியான அதிர்ச்சி புகைப்படம்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/chokka-thangam-actress-uma-shankari-hospitalized-with-cancer-health-update-and-latest-details-0mcugs0</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/chokka-thangam-actress-uma-shankari-hospitalized-with-cancer-health-update-and-latest-details-0mcugs0</guid>
            <pubDate>Thu, 16 Jul 2026 16:49:01 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Chokka Thangam Actress Uma Shankari: &lsquo;சொக்கத்தங்கம்&rsquo; திரைப்படத்தில் நடித்த நடிகை மருத்துவமனையில் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxna3jfdtma5s6kc1cdngqtf,imgname-chokka-thangam-actress-uma-shankari--1--1784200415725.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Chokka Thangam Actress Uma Shankari: &lsquo;சொக்கத்தங்கம்&rsquo; திரைப்படத்தில் நடித்த நடிகை மருத்துவமனையில் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ் சினிமாவில் சில நடிகைகள் குறைந்த படங்களே நடித்திருந்தாலும் மக்கள் மனங்களில் இடம் பிடித்து விடுவார்கள். அந்த வரிசையில் குறைந்த படங்களில் நடித்து அதிகம் கவனிக்கப்படாமல் போனவர்தான் நடிகை உமா சங்கரி. தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாக திகழ்ந்த சுமித்ராவின் மகளான இவர், 2000 ஆம் ஆண்டு சீமான் இயக்கிய &lsquo;வீரநடை&rsquo; படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் -&lt;/strong&gt; &amp;nbsp;S Janaki: ரெக்கார்டிங்கில் பாட முடியாமல் கதறி அழுத S ஜானகி.! ஜானகியை அழ வைத்த வரிகள்.! எந்த பாட்டு தெரியுமா?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தொடர்ந்து கலகலப்பு, சொக்கத் தங்கம், விகடன், சூரியன், தென்றல், கோவை பிரதர்ஸ், அடைக்கலம், மணிகண்டா, ரசிகர் மன்றம், பாக்கியலட்சுமி போன்ற பல படங்களில் நடித்தார். இறுதியாக அவர் அஜித் நடித்த &lsquo;வலிமை&rsquo; படத்தில் சிறு வயது சுமித்ரா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் குறைந்த படங்களில் நடித்திருந்தாலும் &lsquo;சொக்கத்தங்கம்&rsquo; மற்றும் &lsquo;கோவை பிரதர்ஸ்' படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்ததுள்ள அவர் 2006 ஆம் ஆண்டு திருமணத்திற்குப் பின்னர் சினிமாவில் நடிப்பதை முற்றிலும் நிறுத்தினார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் -&amp;nbsp;&lt;/strong&gt; S Janaki Vs Savitri: சாவித்திரிக்காக பாடமாட்டேன் - S. ஜானகி எடுத்த சபதம்.! காரணம் என்ன தெரியுமா?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த நிலையில் அவர் எங்கு இருக்கிறார், என்ன செய்கிறார் என எதுவுமே தெரியாமல் இருந்து வந்தது. மேலும் சமூக வலைதளங்களிலும் பெரிய அளவில் அவர் ஆக்டிவாக இல்லாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். அதில் தான் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், புற்றுநோய்க்கான கீமோதெரபி மற்றும் இம்யூனோதெரபி சிகிச்சையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் - &amp;nbsp;&lt;/strong&gt;Actor Jai: இஸ்லாம் மதத்திற்கு மாறியது குறித்து உண்மைகளை உடைத்த நடிகர் ஜெய்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அவர் வெளியிட்டுள்ள பதிவில், &ldquo;கீமோ மற்றும் இம்யூனோ சிகிச்சையின் இரண்டாம் சுற்றில் இருக்கிறேன். நான் ஒவ்வொரு நாளையும் அதன் போக்கிலேயே எதிர்கொண்டு வருகிறேன். கடினமான நாட்களை எப்படி சமாளிப்பது என்று கற்றுக் கொள்கிறேன். என்னை வலிமையாக உணரும் நாட்களை கொண்டாடுகிறேன். எனக்கு துணையாக இருக்கும் குடும்பத்தினருக்கு நன்றி. அன்பும், ஆதரவு தரும் ரசிகர்களுக்கும் நன்றி. நான் எனது பணிகளை தொடர்கிறேன். மேலும் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துகிறேன்&rdquo; என குறிப்பிட்டு இருக்கிறார்.&lt;/p&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;View this post on Instagram&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&lt;p&gt;A post shared by D R UmaShankari (@uma_shankarii_)&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதனைக் கண்ட அவரது ரசிகர்கள் பலரும் விரைவில் குணமாகி மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும், உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன், நீங்கள் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறீர்கள் என்று ஆறுதலான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். திரைத்துறையில் ஏற்கனவே நடிகை கௌதமி, மமதா மோகன்தாஸ், சோனாலி பிந்த்ரா, மனிஷா கொய்ராலா போன்றவர்கள் புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/chokka-thangam-actress-uma-shankari-hospitalized-with-cancer-health-update-and-latest-details-0mcugs0"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Pandian Stores 2 : அரசியை மிரட்டிய குமார்... அடிச்சு ஓடவிட்ட பாண்டியன் - சக்திவேல் செய்யும் சூழ்ச்சி என்ன?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/arasi-father-beat-kumar-in-pandian-stores-2-serial-june-30-today-817th-episode-0s0saqv</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/arasi-father-beat-kumar-in-pandian-stores-2-serial-june-30-today-817th-episode-0s0saqv</guid>
            <pubDate>Tue, 30 Jun 2026 09:16:23 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Pandian Stores 2 Serial 30 June 2026 Today Episode : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அரசி கல்யாணத்துக்கு நோ சொன்னதால் கடுப்பான குமார், அவரை வழிமறித்து மிரட்டி இருக்கிறார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwba0jsknj4sefdvp440kw94,imgname-pandian-stores-2--68--1782791031603.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Pandian Stores 2 Serial 30 June 2026 Today Episode : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அரசி கல்யாணத்துக்கு நோ சொன்னதால் கடுப்பான குமார், அவரை வழிமறித்து மிரட்டி இருக்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;பாண்டியன் ஸ்டோர்ஸ் 2&lt;/strong&gt; சீரியலின் இன்றைய எபிசோடில், குமாருக்கு அரசியை பெண் கேட்டு சென்ற காந்திமதி, வீட்டுக்கு வந்து சைலண்டாக அமர்ந்திருக்க, அவரிடம் என்ன ஆச்சு என அனைவரும் கேட்கிறார்கள். அப்போது பழனி, அங்கு நடந்தவற்றை கூறுகிறார். பின்னர் அரசி ஏதாச்சும் சொன்னாலா என குமார் கேட்க, அவளும் எனக்கு குமாரை பிடிக்கலனு சொல்லிட்டா என பழனி சொன்னதும், அவளுக்கு எவ்வளவு திமிரு இருந்தா அப்படி சொல்லிருப்பா, அவளை சும்மா விடமாட்டேன் என எகிறுகிறார். உடனே முத்துவேல் அவரை திட்டிவிட்டு உள்ளே செல்கிறார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Siragadikka Aasai : மீண்டும் கடனா? முத்துவுக்கு ஷாக் கொடுத்த மனோஜ் - ஸ்வேதாவிடம் காதலை சொன்ன மிஷ்ரா&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பின்னர் குமார் கிளம்பி, அரசியை சந்திக்க செல்கிறார். அரசி காலேஜ் விட்டு நடந்து வரும் வழியில் நிற்கும் குமார், அரசியை தடுத்து, என்னை ஏன் பிடிக்கலனு சொன்ன என கேட்டு பிரச்சனை பண்ணுகிறார். அதற்கு அரசி, உன்னை எனக்கு புடிக்காது அதான் அப்படி சொன்னேன் என சொல்லிக் கொண்டிருக்க, அந்த நேரம் பார்த்து கார்த்திகேயன் அங்கு வர, அவருடன் சண்டைக்கு போகிறார் குமார். அப்போது அவரை தடுத்து நிறுத்தும் அரசி, பிரச்சனை பண்ணாம இங்க இருந்து போ என சொல்ல, அவரை அடிக்க கை ஓங்குகிறார் குமார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அந்த நேரம் பார்த்து குமாரின் நெஞ்சிலேயே ஒருவர் மிதிக்கிறார். அவர் யார் என்று அரசி திரும்பி பார்த்தபோது தான் பாண்டியன் அங்கு நிற்கிறார். எவ்வளவு தைரியம் இருந்தா என் பொண்ணு மேலயே கைவைக்க பார்ப்ப, என சொல்லி குமாரை அடிவெளுக்கிறார் பாண்டியன். நீ ஒரு பொறுக்கி உனக்கு என் பொண்ணு கேக்குதா, ஒழுங்கு மரியாதையா இங்க இருந்து ஓடிப்போயிடு, இல்லேனா அடிச்சே கொன்றுவேன் என சொல்லி, பளார் பளார் என கன்னத்தில் அறைவிடுகிறார் பாண்டியன். இதையடுத்து அங்கிருந்து தலைதெறிக்க ஓடுகிறார் குமார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதையடுத்து தன் தந்தை சக்திவேலை சந்திக்கும் குமார், பாண்டியன் தன்னை அடிச்ச விஷயத்தை சொல்கிறார். அதற்கு அவர், ஊர்ல இருக்க பரதேசி பையன் கிட்ட அடிவாங்கவா உன்னை பெத்து வளர்த்திருக்கேன். போயும் போயும் அவன்கிட்ட அடிவாங்கிட்டு வந்திருக்க, உனக்கு கொஞ்சம் கூட வெக்கமா இல்ல என கேட்கிறார். ஊர்ல அரசியை விட்டா வேற பொண்ணே கிடையாதா என சக்திவேல் கேட்க, அதற்கு குமார், ஊர்ல நிறைய பொண்ணுங்க இருக்கதான் செய்யுது, ஆனால் என்னை கல்யாணம் பண்ணிக்க தான் எந்த பொண்ணும் ரெடியா இல்லையே என கூறுகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதையடுத்து வட்டி பணம் வாங்குவதற்காக சக்திவேல் ஒரு இடத்துக்கு செல்கிறார். அப்போது தங்கமயிலின் அப்பா டீக்கடையில் நின்று ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கிறார். தன் மகள் விவாகரத்து விவகாரம் பற்றி அவர் பேசுவதை ஒட்டுக் கேட்கிறார் சக்திவேல். தன்னுடைய மாப்ளைக்கு வேறொரு பொண்ணுகூட தொடர்பு இருக்கு என்று சொன்னதை கேட்டுவிடுகிறார் சக்திவேல். தனக்கு இன்னொரு பொண்ணு வேற இருக்கு, அவளை யார் கல்யாணம் பண்ணுவா என தங்கமயிலின் அப்பா புலம்பிக் கொண்டிருக்க, அதையெல்லாம் ஒட்டுக்கேட்ட சக்திவேல், குமாருக்கு அந்த பெண்ணை திருமணம் செய்ய யோசிப்பது போல் தெரிகிறது. இதையடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/arasi-father-beat-kumar-in-pandian-stores-2-serial-june-30-today-817th-episode-0s0saqv"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Siragadikka Aasai : மீனாவின் இங்கிலீஷ் திறமையால் அதிர்ந்த சிந்தாமணி... ரோகிணி எடுத்த அதிரடி முடிவு!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-july-15-today-episode-meena-secures-corporate-order-chinthamani-plots-revenge-36he824</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-july-15-today-episode-meena-secures-corporate-order-chinthamani-plots-revenge-36he824</guid>
            <pubDate>Wed, 15 Jul 2026 09:07:43 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial 15 July 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் சிந்தாமணிக்கு வந்த மிகப்பெரிய ஆர்டரை மீனா தன்னுடைய இங்கிலீஷ் திறமையால் தட்டி தூக்கி இருக்கிறார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxhxfvnb6stmvavbkb5d4ay9,imgname-siragadikka-aasai---2026-07-15t090442.476-1784086523563.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial 15 July 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் சிந்தாமணிக்கு வந்த மிகப்பெரிய ஆர்டரை மீனா தன்னுடைய இங்கிலீஷ் திறமையால் தட்டி தூக்கி இருக்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில் ரோகிணியைச் சந்திப்பதற்காக வித்யா அவரது வீட்டிற்கு செல்கிறார். அங்கு ரோகிணியின் அம்மாவுடன் பேசிக் கொண்டிருக்கும்போது, ரோகிணி துபாய்க்குச் செல்ல முடிவு செய்திருப்பதாக அவர் கூறுகிறார். அப்போது அங்கு வரும் ரோகிணியிடம், &quot;கிரிஷின் அம்மா துபாயில் இருக்கிறார் என்று இதுவரை பொய் சொல்லி சமாளித்தாய். ஆனால் இப்போது நிலைமையை பார்த்தியா நீ உண்மையிலேயே துபாய் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டதே?&quot; என்று வித்யா கேட்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதற்கு ரோகிணி, &quot;துபாய் செல்ல தேவையான செலவுக்காக மனோஜிடம் ரூ.5 லட்சம் கேட்டிருக்கிறேன். அந்த பணம் கிடைத்தவுடன் உடனே கிளம்பிவிடுவேன்,&quot; என்று மனவேதனையுடன் கூறுகிறார். ரோகிணியின் இந்த மாற்றம் உண்மையானதா அல்லது வேறு ஏதாவது திட்டமா என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுகிறது. மறுபுறம், மீனா பெண்கள் சங்கக் கூட்டத்தில் உறுப்பினர்களிடம் சந்தா வசூலித்து, அந்த நிதியை ஏழை மக்களுக்கு உதவ பயன்படுத்தலாம் என்று திட்டமிடுகிறார். ஆனால் சிந்தாமணி மட்டும் சந்தா செலுத்த மறுத்து, அலட்சியமாக பேசிவிட்டு அங்கிருந்து செல்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதே நேரத்தில், சிந்தாமணியின் உதவியாளர் ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தின் ஆர்டரை கொண்டு வருகிறார். அந்த நிறுவனத்தின் மேலாளர் ஆங்கிலத்தில் பேசத் தொடங்க, சிந்தாமணிக்கு எதுவும் புரியாமல் &quot;எஸ்... நோ...&quot; என்று சமாளிக்கிறார். அவரது ஆங்கிலப் பேச்சை பார்த்த மேலாளர் வேறு ஒருவரை அணுக முடிவு செய்து கிளம்ப முயல்கிறார். அப்போது அங்கிருந்த மீனா, தனக்கு சரளமாக ஆங்கிலம் பேச முடியாவிட்டாலும், நீங்கள் கூறியதை முழுமையாகப் புரிந்துகொண்டதாக கூறி, ஆங்கிலத்திலேயே அந்த கார்பரேட் மேனேஜருக்கு விளக்கம் அளிக்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அவரது பேச்சால் மேலாளர் திருப்தியடைந்து, அந்த முக்கியமான கார்ப்பரேட் ஆர்டரை மீனாவுக்கே வழங்குகிறார். இதனால் சிந்தாமணிக்கு மீனா மீது கடும் பொறாமை உருவாகிறது. மீனாவின் வளர்ச்சியை எப்படியாவது தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் புதிய திட்டம் தீட்டத் தொடங்குகிறார். பெரிய ஆர்டரை வெற்றிகரமாக பெற்ற மகிழ்ச்சியில் மீனா, ஸ்வீட் பாக்ஸ் உடன் முத்துவைச் சந்தித்து, இந்த சந்தோஷமான தகவலை அவருடன் பகிர்ந்து கொள்கிறார். மீனாவின் சந்தோஷத்தை பார்த்து முத்துவும் மகிழ்ச்சியடைகிறார்.&lt;/p&gt;&lt;p&gt;ரோகிணியின் துபாய் பயணம் உண்மையிலேயே நடைபெறுமா? மீனாவுக்கு எதிராக சிந்தாமணி என்ன திட்டம் போடப் போகிறார்? இந்த திருப்பங்களுக்கு விடை அடுத்த எபிசோட்களில் தெரியவரும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-july-15-today-episode-meena-secures-corporate-order-chinthamani-plots-revenge-36he824"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Kadhal Kadhal Kadhal : "உங்களை எனக்கு பிடிக்கல"... அர்ஜுனுக்கு ஷாக் கொடுத்த மது... ஸ்வேதாவின் லவ் புரபோசல்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/kadhal-kadhal-kadhal-serial-july-16-today-episode-arjun-madhu-and-swetha-emotional-twist-3bb631n</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/kadhal-kadhal-kadhal-serial-july-16-today-episode-arjun-madhu-and-swetha-emotional-twist-3bb631n</guid>
            <pubDate>Thu, 16 Jul 2026 09:58:23 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Kadhal Kadhal Kadhal Serial 16 July 2026 Today Episode : காதல் காதல் காதல் சீரியலில் அர்ஜுன் மதுவுக்கு ரூட் விட, ஸ்வேதா, அர்ஜுனிடம் புரபோஸ் பண்ணி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxmjs3gpsf83c6frtbfv1f2h,imgname-kadhal-kadhal-kadhal--3--1784175955478.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Kadhal Kadhal Kadhal Serial 16 July 2026 Today Episode : காதல் காதல் காதல் சீரியலில் அர்ஜுன் மதுவுக்கு ரூட் விட, ஸ்வேதா, அர்ஜுனிடம் புரபோஸ் பண்ணி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விஜய் டிவியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள சீரியல் தான் காதல் காதல் காதல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில், மெஹந்தி விழா கோலாகலமாக நடைபெறுகிறது. அனைவரும் உற்சாகமாக மெஹந்தி போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அர்ஜுனின் கவனம் முழுவதும் மது மீதே இருக்கிறது. மதுவை பார்த்துக் கொண்டே அவளைப் புகழ்ந்து பேசும் அர்ஜுனுக்கு, அவரது அம்மாவும் மறைமுகமாக ஆதரவாக செயல்படுகிறார். மெஹந்தி போடும் நேரத்தில், மதுவை ஸ்வேதா அருகில் அமர வைத்த பிறகு, அர்ஜுனின் அம்மா ஒரு சிறிய திட்டம் போடுகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மதுவுக்கு வேறு யாரும் அல்ல, அர்ஜுனே மெஹந்தி போட வேண்டும் என்று கூறி இருவரையும் ஒன்றாக அமர வைக்கிறார். ஆரம்பத்தில் மது தயக்கம் காட்டினாலும், பெரியவர்கள் சொன்னதால் மறுக்க முடியாமல் சம்மதிக்கிறார். இதனால் அர்ஜுன் மகிழ்ச்சியில் மதுவின் கையில் அழகாக மெஹந்தி வரைகிறார். இந்த காட்சியை பார்த்த கஸ்தூரிக்கும் ஆசை பிறக்கிறது. கார்த்திக்கும் தன்னுடைய கையில் மெஹந்தி போட வேண்டும் என்று கூறி அழைக்கிறார். கார்த்திக்கும் எந்த சந்தேகமும் இல்லாமல் கஸ்தூரிக்கு மெஹந்தி போட்டு விடுகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆனால் இதை தூரத்தில் இருந்து கவனிக்கும் ஆதவ், கார்த்திக்கிடம் எச்சரிக்கை விடுக்கிறார். கஸ்தூரியின் நடத்தை சரியாக இல்லை என்று கூறி கவனமாக இருக்கும்படி அறிவுறுத்துகிறார். ஆனால் கார்த்திக், கஸ்தூரியின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறியாமல், ரியாவை பற்றிய தனது எண்ணங்களிலேயே இருக்கிறார். மறுபுறம், மது கையில் மெஹந்தி போட்டு முடிந்ததும், அர்ஜுனின் அம்மா அதை பாராட்டி, இருவரையும் சேர்த்து பேச முயற்சிக்கிறார். அந்த நேரத்தில் அர்ஜுன், &quot;மெஹந்தி பிடிச்சிருக்கா?&quot; என்று மதுவிடம் கேட்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதற்கு மது, &quot;மெஹந்திதான் பிடிச்சிருக்கு... நீங்க இல்லை&quot; என்று நேரடியாக பதிலளித்து அங்கிருந்து சென்று விடுகிறார். இந்த உரையாடலை வீட்டில் இருந்த பெரியவர்கள் கவனிக்கிறார்கள். உடனே அர்ஜுனிடம் விளக்கம் கேட்க, &quot;நான் எதுவும் செய்யவில்லை. அம்மா சொன்னதால்தான் மெஹந்தி போட்டேன்&quot; என்று நிலைமையை சமாளிக்க முயற்சிக்கிறார். இதற்குப் பிறகு சங்கீத் விழா தொடங்குகிறது. அந்த நேரத்தில் ஸ்வேதா, அர்ஜுனை தனியாக அழைத்துச் சென்று, &quot;இந்த திருமணத்தில் எனக்கு விருப்பம் இல்லை... நான் விரும்புவது உன்னைத்தான்&quot; என்று தனது மனதில் இருந்த காதலை வெளிப்படுத்துகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆனால் அர்ஜுன், ஸ்வேதாவின் காதலை ஏற்க மறுத்து, &quot;எனக்கு உன் மீது அந்த மாதிரி எந்த உணர்வும் இல்லை&quot; என்று தெளிவாகக் கூறி விலகிச் செல்கிறார். இறுதியாக, நிகழ்ச்சி தொடங்குகிறது அனைவரும் ஒன்றாக நடனமாடுகிறார்கள். அப்போது மதுவையும் அர்ஜுனுடன் சேர்ந்து ஆட அழைக்கிறார்கள். ஆனால் மது அதை மறுத்து விடுகிறார். இதனால் அடுத்த எபிசோடில் இந்த முக்கோண காதல் என்ன புதிய பிரச்சினையை உருவாக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. அதை இனி வரும் எபிசோடுகளில் பொறுத்திருந்து பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/kadhal-kadhal-kadhal-serial-july-16-today-episode-arjun-madhu-and-swetha-emotional-twist-3bb631n"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Siragadikka Aasai : அருணிடம் அடிவாங்கிய சீதா.... ரோகிணிக்கு உதவிய ஸ்ருதி; வசமா சிக்கப்போகும் மனோஜ்..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/shruti-help-rohini-in-siragadikka-aasai-serial-july-07-today-1050th-episode-3kao7ua</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/shruti-help-rohini-in-siragadikka-aasai-serial-july-07-today-1050th-episode-3kao7ua</guid>
            <pubDate>Tue, 07 Jul 2026 10:20:47 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial 07 July 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் சத்யாவின் கல்யாணத்திற்கு தன்னிடம் பொய் சொல்லிவிட்டு சென்ற சீதாவை அடிவெளுத்துள்ளார் அருண்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwxedwdtq75ekwbq8ps5qav1,imgname-siragadikka-aasai---2026-07-07t101607.182-1783399641530.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial 07 July 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் சத்யாவின் கல்யாணத்திற்கு தன்னிடம் பொய் சொல்லிவிட்டு சென்ற சீதாவை அடிவெளுத்துள்ளார் அருண்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;சிறகடிக்க ஆசை&lt;/strong&gt; சீரியலின் இன்றைய எபிசோடில், ரேகாவும், சத்யாவும் கல்யாணம் முடிந்த கையோடு வீட்டுக்கு வருகிறார்கள். ரேகா ரொம்ப வசதியா வாழ்ந்த பொண்ணு, இந்த வீட்டுல படுக்குறதுக்கு ஒரு கட்டில் கூட இல்லையே என முத்துவும், மீனாவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதைக்கேட்ட ரேகா, இதுவரை நான் வசதியாக வாழ்ந்தாலும் சந்தோஷமாக இல்லை, ஆனால் இங்க எனக்காக நீங்கெல்லாம் இருக்கீங்க, அதனால எனக்கு எந்த ஒரு கவலையும் இல்லை. எனக்கு இந்த வாழ்க்கை தான் புடிச்சிருக்கு என கூறுகிறார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Siragadikka Aasai : விஜயாவுக்கு தெரியாமல் இரண்டாம் கல்யாணம்... வில்லங்கத்தில் சிக்கப்போகும் மனோஜ்..!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சீதா தன்னுடைய தம்பி சத்யாவின் கல்யாணம் முடிந்ததால் வீட்டுக்கு செல்கிறார். அங்கு அருண், சீதா மீது பயங்கர கோபத்தில் இருக்கிறார். ஏனெனில் குலதெய்வம் கோவிலுக்கு போறேன்னு பொய் சொல்லிட்டு, கல்யாணத்துக்கு போயிட்டு வந்த சீதாவுக்கு கோபத்தில் கன்னத்திலேயே பளார் என அறைவிடுகிறார். அருண் அடித்ததில் சீதாவுக்கு இரத்தம் வருகிறது. அந்த அளவுக்கு தன்னுடைய மனைவியை அடிச்சு டார்ச்சர் பண்ணுகிறார் அருண். அவரின் இந்த அட்டூழியங்களை எல்லாம் சகித்துக் கொண்டிருக்கிறார் சீதா.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மறுபுறம் ஸ்ருதியின் ஹோட்டலுக்கு கனகாவின் அம்மா மேனகா வருகிறார். அவர் தன்னுடைய மகள் கனகாவின் திருமணத்திற்காக உணவு ஆர்டர் கொடுக்க வந்திருக்கிறார். பேப்பர்ல தான் உங்க ஹோட்டலோட விளம்பரத்தை பார்த்தேன். எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அதனால் தான் என் பொண்ணோட கல்யாணத்துக்கு ஆர்டர் கொடுக்க வந்தேன். வீட்டிலேயே சிம்பிளா பண்றோம், 25 பேர் தான் வருவாங்க, அதனால நீங்க தான் அந்த பங்க்&zwnj;ஷனுக்கு நல்லபடியா, உணவு டெலிவரி செய்ய வேண்டும் என கேட்கிறார் மேனகா.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அந்த நேரம் பார்த்து மீனா, பூ கொடுப்பதற்காக அங்கு வருகிறார். அப்போது கனகாவின் அம்மாவிடம், பூ அலங்காரத்திற்கு, இவங்களிடம் ஆர்டர் கொடுங்க, கம்மி ரேட்ல, நல்லா பண்ணுவாங்க என சிபாரிசு செய்கிறார். அதற்கு கனகாவின் அம்மா மேனகாவும் ஓகே சொல்லிவிடுகிறார். பின்னர் அவர்கள் இருவரிடமும் அட்வான்ஸ் பணத்தை கொடுத்துவிட்டு செல்கிறார் மேனகா. அந்த நேரத்தில் ரோகிணியும் ஸ்ருதியின் ரெஸ்டாரண்டுக்கு வருகிறார். அவர் மீனாவிடம், தான் டைவர்ஸ் கொடுக்க சம்மதம் தெரிவித்த விஷயத்தை சொல்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சீக்கிரமா மனோஜை 5 லட்சத்தை கொடுக்க சொன்னீங்கனா, அந்த பணத்தை வாங்கிட்டு நான் ஊரைவிட்டே போயிடுவேன் என சொல்கிறார். ரோகிணி பணக்கஷ்டத்தில் இருப்பதை உணர்ந்த ஸ்ருதி, அங்கு வந்திருந்த கனவாவின் அம்மா மேனகாவிடமே, பொண்ணுக்கு மேக் அப் போடும் ஆர்டரை பெற்றுக் கொடுக்கிறார். இறுதியாக வீட்டில் இருக்கும் விஜயா, மனோஜிடம் நாளைக்கு கோவிலுக்கு போகணும் என சொல்கிறார். நாளை தான் கல்யாணம் என்பதால், மனோஜ், தனக்கு வேலை இருப்பதாக சாக்குபோக்கு சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/shruti-help-rohini-in-siragadikka-aasai-serial-july-07-today-1050th-episode-3kao7ua"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Siragadikka Aasai : சகுனி வேலை பார்த்த விஜயா... ரேகா - சத்யா கல்யாணத்துக்கு வந்த புது சிக்கல்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/vijaya-betrayal-plan-leads-rekha-sathya-marriage-in-trouble-siragadikka-aasai-serial-july-02-today-1046th-episode-5gcgl4z</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/vijaya-betrayal-plan-leads-rekha-sathya-marriage-in-trouble-siragadikka-aasai-serial-july-02-today-1046th-episode-5gcgl4z</guid>
            <pubDate>Thu, 02 Jul 2026 08:54:51 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial 02 July 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் சிந்தாமணியை பழிவாங்குவதற்காக ஒரு சகுனி வேலையைப் பார்த்திருக்கிறார் விஜயா.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwgdgv6n23pwgh8hzr3rtrby,imgname-siragadikka-aasai---2026-07-02t084846.367-1782962482389.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial 02 July 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் சிந்தாமணியை பழிவாங்குவதற்காக ஒரு சகுனி வேலையைப் பார்த்திருக்கிறார் விஜயா.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;சிறகடிக்க ஆசை&lt;/strong&gt; சீரியலில் சத்யாவுக்கும் ரேகாவுக்கும் பாட்டி வீட்டில் வைத்து திருமணம் செய்து வைக்க முடிவெடுத்துள்ள முத்து, அதற்கான வேலைகளை முழுவீச்சில் செய்து வருகிறார். முத்து ஃபேமிலியில் உள்ள அனைவரும் பாட்டி வீட்டில் ஆஜராகி உள்ளனர். மறுபுறம் சிந்தாமணி, தன் மகளின் திருமணம் எங்கு நடக்கிறது என்பது தெரியாமல் திக்குமுக்காடிப்போய் இருக்கிறார். கல்யாண பதற்றத்தில் இருக்கும் ரேகாவை கூல்டவுன் பண்ணும் விதமாக அவருக்கு மேக்கப் போட்டு விடுகிறார் ஸ்ருதி. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Siragadikka Aasai : மனோஜின் திருமணத்திற்கு கிளம்பிய எதிர்ப்பு... ரோகிணியை விஜயா திடீரென சந்தித்தது ஏன்?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மறுபுறம் மீனா, தன் கையில் செயின் உடன் வந்து ரேகாவுக்கு போட்டு விடுகிறார். அவசர அவசரமாக கல்யாணம் நடப்பதால், தங்களால் பெரிதாக எதுவும் செய்ய முடியவில்லை. அதனால் இந்த செயின் மட்டும் போட்டுவிடுகிறேன் என கூறுகிறார். கல்யாண வேலைகள் பரபரவென நடந்துகொண்டிருக்க, தன்னுடைய தோழி பார்வதி உடன் வெளியே சென்று பேசுகிறார் விஜயா. அப்போது சிந்தாமணிக்கு அப்படி என்ன கோபம், தன்னோட பொண்ணு கல்யாணத்தை பார்க்க அவளுக்கு கொடுத்து வைக்கல என சொல்கிறார் பார்வதி.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உடனே விஜயா, சிந்தாமணி இந்த கல்யாணத்தை பார்க்க போவதில்லைனு யார் சொன்னா என கேட்கிறார். நீ என்ன சொல்ற என பார்வதி கேட்க, அதற்கு விஜயா, அந்த சிந்தாமணி இந்த கல்யாணத்தை பார்க்க தான் போறா என கூறுகிறார். அவன் என் கூடவே இருந்து எனக்கு துரோகம் பண்ணுனால்ல, அதனால் அவளுக்கு நான் ஒரு பதிலடி கொடுக்கப் போறேன் என சொல்கிறார். என்ன பண்ண போற என பார்வதி கேட்கிறார். பொண்ணுக்கு அவ கூடவே இருந்து அவ கல்யாணத்தை பார்க்க ஆசை இருக்கும்ல, இங்க தாலி கட்டும்போது அந்த சிந்தாமணி இங்க வருவா, அதற்கான ஏற்பாடுகளை செய்யப்போறேன் என கூறுகிறார் விஜயா.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அய்யோ விஜயா கல்யாணம் நடக்குற இடத்துல எதுவும் வில்லங்கத்தை பண்ணிவிட்றாத என பார்வதி சொன்னதும், இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கும் அதுல எந்த பிரச்சனையும் வராது என கூறும் விஜயா, உள்ளே சென்று ரூமில் சத்யா - ரேகா ஆகியோர் மணக்கோலத்தில் ஜாலியாக பேசிக் கொண்டிருக்கும் வீடியோவை சிந்தாமணிக்கு அனுப்பிவிடுகிறார். அதைப்பார்த்து ஷாக் ஆன சிந்தாமணி, விஜயாவிடம் போனில் பேசுகிறார். அவரிடம் இந்த கல்யாணம் எங்க நடக்கிறது என்கிற விவரத்தை சொல்லி, முடிஞ்சா தடுத்து பார் என சவால் விடுகிறார் விஜயா.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதையடுத்து தன்னுடைய கணவருடன், காரில் கிளம்பி வருகிறார் சிந்தாமணி. அவர் வரும் வழியில் தன்னுடைய மகள் ரேகாவுக்கு போன் போடுகிறார். ஆனால் போனை எடுக்கலாமா வேண்டாமா என ரேகா யோசிக்க, அப்போது அங்கு வரும் விஜயா, அந்த போனை பிடுங்கி, இப்போ எடுத்து பேசுனா பிரச்சனை தான் வரும். அதனால் போனை எடுக்காத என கூறுகிறார். பின்னர் அந்த போனை வாங்கும் ஸ்ருதி, அதனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிவிடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதன்பின் என்ன நடந்தது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/vijaya-betrayal-plan-leads-rekha-sathya-marriage-in-trouble-siragadikka-aasai-serial-july-02-today-1046th-episode-5gcgl4z"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Pandian Stores 2 : குமாருக்கு வில்லங்கமான குடும்பத்தில் சம்பந்தம் பேசி முடித்த சக்திவேல்... அதிர்ச்சியில் கோமதி..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/kumar-marriage-with-thangamayil-sister-in-pandian-stores-2-serial-july-02-today-819th-episode-8dranc5</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/kumar-marriage-with-thangamayil-sister-in-pandian-stores-2-serial-july-02-today-819th-episode-8dranc5</guid>
            <pubDate>Thu, 02 Jul 2026 09:49:35 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Pandian Stores 2 Serial 02 July 2026 Today Episode : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் குமாருக்கு தங்கமயிலின் தங்கையை திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து உள்ளார் சக்திவேல்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwggmkqsgsry9gj4jemyzzbq,imgname-pandian-stores-2--73--1782965751545.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Pandian Stores 2 Serial 02 July 2026 Today Episode : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் குமாருக்கு தங்கமயிலின் தங்கையை திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து உள்ளார் சக்திவேல்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;பாண்டியன் ஸ்டோர்ஸ் 2&lt;/strong&gt; சீரியலின் இன்றைய எபிசோடில், மீனா உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவருக்கு சிகிச்சை முடிந்து, அவரை வீட்டுக்கு அழைத்து செல்ல சொல்கிறார் டாக்டர். அப்போது மீனாவை தங்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்வதாக மீனாவின் தந்தை சொல்ல, கோமதி அவரை தங்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறோம் என கூறுகிறார். பின்னர் மீனாவிடமே எங்கு செல்ல விருப்பம் என கேட்கிறார்கள். அவர் கோமதி வீட்டுக்கு செல்ல சம்மதிக்கிறார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Siragadikka Aasai : சகுனி வேலை பார்த்த விஜயா... ரேகா - சத்யா கல்யாணத்துக்கு வந்த புது சிக்கல்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மறுபுறம் சக்திவேல், குமாருக்கு வரன் பார்த்துள்ள விஷயத்தை வீட்டில் உள்ளவர்களிடம் சொல்ல ஆர்வமுடன் வருகிறார். அங்கு வந்ததும், குமாருக்கு வேறு ஒரு பெண் பார்த்திருக்கிறேன். அவர் வேறுயாருமில்லை, சரவணனின் மனைவி தங்கமயிலின் தங்கச்சி முத்து தான் என கூறுகிறார். அதைக்கேட்டதும் ஷாக் ஆன காந்திமதி, அந்த பொண்ணு குமாருக்கு தங்கச்சி முறை வரும் என சொல்ல, அந்த சரவணன் தான் தங்கமயிலை டைவர்ஸ் பண்ணப் போறான்ல, அப்புறம் என்ன உறவு முறை, அதனால் இந்த திருமணத்தை பேசி முடித்துவிட்டேன் என கூறுகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதையடுத்து மீனாவை வீட்டுக்கு அழைத்து வந்த கோமதி அவருடன் சோஃபாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது உனக்கும், செந்திலுக்கும் ஏதாச்சும் பிரச்சனையா என விசாரிக்கிறார். அந்த நேரம் பார்த்து அங்கு வரும் பாண்டியன், மீனாவிடம் நலம் விசாரிக்கிறார். அப்போது எதிரே அமர்ந்திருந்த செந்திலிடம் பொண்டாட்டியை ஒழுங்கா பாத்துக்க மாட்டியாடா என சத்தம் போடுகிறார். அதுமட்டுமின்றி, அவர் உடல்நிலை சரியாகும் வரை இங்கு தான் இருப்பார் என கூறுகிறார். ஆனால் செந்தில் நான் நாளைக்கு காலையில அவளை குவாட்ரஸுக்கு கூட்டிட்டு போறேன் என சொல்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;செந்திலை திட்டும் கோமதி, அவ இங்க தான் இருப்பா என ஸ்ட்ரிக்ட் ஆக சொல்லிவிடுகிறார். அப்போது அங்கு வரும் பழனி, உங்க எல்லார்கிட்டையும் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வேண்டும் என கூறி, குமாருக்கு பெண் பார்த்திருக்கும் விஷயத்தை சொல்கிறார். அதுவும் அந்த பெண் யாரென்றால் நம்ம தங்கமயிலோட தங்கச்சி என சொன்னதும் அதிர்ச்சி அடையும் கோமதி, அவதான் அவனுக்கு முறை வராதே என சொல்ல, உடனே பழனி அதான் சரவணனுக்கு டைவர்ஸ் ஆகப்போகுதுல்ல அப்புறம் என்ன முறை வேண்டியதிருக்குனு அண்ணேன் சொல்லிருச்சு என கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/kumar-marriage-with-thangamayil-sister-in-pandian-stores-2-serial-july-02-today-819th-episode-8dranc5"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Siragadikka Aasai : கல்யாண வீட்டில் முத்து - மீனா என்ட்ரி... மனோஜ் சிக்கினாரா? எஸ்கேப் ஆனாரா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/manoj-tries-to-escape-after-seeing-muthu-in-siragadikka-aasai-serial-july-09-today-1052nd-episode-dcr37s3</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/manoj-tries-to-escape-after-seeing-muthu-in-siragadikka-aasai-serial-july-09-today-1052nd-episode-dcr37s3</guid>
            <pubDate>Thu, 09 Jul 2026 09:21:16 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial 09 July 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் திருமணம் நடைபெறும் வீட்டுக்கு முத்துவும் மீனாவும் வந்திருக்கிறார்கள். இதன் பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kx2frvvpwb8mx2m17ce4n335,imgname-siragadikka-aasai---2026-07-09t091546.378-1783568822134.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial 09 July 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் திருமணம் நடைபெறும் வீட்டுக்கு முத்துவும் மீனாவும் வந்திருக்கிறார்கள். இதன் பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;சிறகடிக்க ஆசை&lt;/strong&gt; சீரியலில் மனோஜ் பணத்திற்கு ஆசைப்பட்டு, வீட்டுக்கே தெரியாமல் கனகா என்கிற மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கிறார். மேலும் இந்த திருமணம் உங்களுக்கு டைவர்ஸ் ஆகும் முன்பே நடக்க வேண்டும் என கனகாவின் அம்மா கேட்டுக்கொண்டதை அடுத்து, மனோஜும் இந்த திருமணத்தை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வீட்டிலேயே நடத்தலாம் என ஐடியா கொடுக்கிறார். ஆனால் கனகாவின் அம்மா, திருமணத்திற்கான பூ ஆர்டரை மீனாவுக்கும், சமையல் ஆர்டரை ஸ்ருதிக்கும் கொடுத்துவிடுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Siragadikka Aasai : அருணிடம் அடிவாங்கிய சீதா.... ரோகிணிக்கு உதவிய ஸ்ருதி; வசமா சிக்கப்போகும் மனோஜ்..!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கல்யாண வீட்டில் அலங்கார வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு இருக்கும் முத்து மற்றும் மீனா ஆகியோரை மணமகளின் தாய் சந்திக்கிறார். அப்போது முத்துவைப் பார்த்ததும் அவருக்கு முதலில் அடையாளம் தெரியவில்லை. உடனே முத்து, &quot;என்னை நினைவில் இல்லையா? உங்கள் மகள் காணாமல் போனபோது நீங்கள் என் காரில் வந்தீர்கள். அப்போது இருவரும் சேர்ந்து அவரை தேடிக் கண்டுபிடித்தோமே&quot; என்று நினைவூட்டுகிறார். அதன் பிறகே அந்த பெண்ணின் தாய்க்கு முத்து யார் என்பது ஞாபகம் வருகிறது. மறுபுறம், ரவி மற்றும் ஸ்ருதி திருமண விருந்துக்கான உணவுகளை கொண்டு வந்து, அவற்றை மேல்தளத்தில் வைத்து அனைவருக்கும் பரிமாற ஏற்பாடு செய்கின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதே நேரத்தில், மணமகளுக்கு மேக்கப் போடுவதற்காக ரோகிணி வருகிறார். ஆரம்பத்தில் மேக்கப் போட மறுக்கும் மணமகளை, &quot;மாப்பிள்ளையை சந்திக்கும் போது அழகாக இருக்க வேண்டும்&quot; என்று சமாதானப்படுத்தி, இறுதியில் மேக்கப் செய்ய வைக்கிறார். இதற்கிடையில் மனோஜ், தனது நண்பருடனும் ஜோதிடருடனும் கனகாவின் வீட்டுக்கு வருகிறார். அவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்ற பிறகு, நேராக அறைக்குள் அழைத்துச் செல்கின்றனர். மாப்பிள்ளைக்கும் அவரது நண்பருக்கும் காபி கொடுக்குமாறு மணமகளின் தாய் கூறியதால், முதலில் முத்து செல்ல முயற்சிக்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆனால் அங்கிருந்த மற்றொரு பெண், &quot;நானே கொடுத்து விடுகிறேன்&quot; என்று காபியை வாங்கிச் செல்வதால், முத்துவால் மாப்பிள்ளையை நேரில் பார்க்க முடியாமல் போகிறது. அனைவரும் தங்களது வேலைகளில் பிஸியாக இருக்கும் நிலையில், சந்தோஷ் மற்றும் ஜீவா திருமண ஏற்பாடுகளைப் பார்ப்பதற்காக கீழே வருகிறார்கள். அப்போது அங்கே முத்து மற்றும் மீனாவை பார்த்ததும் இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உடனே அவர்கள் மனோஜ் இருக்கும் அறைக்குச் சென்று, முத்துவும் மீனாவும் அங்கு வந்திருப்பதாக கூறுகின்றனர். இதைக் கேட்ட மனோஜ் பதற்றமடைந்து, அங்கிருந்து ஜன்னல் வழியாக தப்பிக்க முயற்சிக்கிறார். ஆனால் அவரது நண்பர்கள் அவரைத் தடுத்து நிறுத்தி, &quot;முதலில் அவர்கள் எதற்காக வந்திருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வோம். அதன்பிறகு என்ன செய்யலாம் என்று முடிவு செய்வோம்&quot; என்று அறிவுறுத்துகின்றனர். இதனால், அடுத்த எபிசோடில் மனோஜின் ரகசியம் அம்பலமாகுமா? முத்து அவரை நேருக்கு நேர் சந்திப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/manoj-tries-to-escape-after-seeing-muthu-in-siragadikka-aasai-serial-july-09-today-1052nd-episode-dcr37s3"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Siragadikka Aasai : விஜயாவுக்கு தெரியாமல் இரண்டாம் கல்யாணம்... வில்லங்கத்தில் சிக்கப்போகும் மனோஜ்..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/manoj-plan-to-marry-kanaga-secretly-in-siragadikka-aasai-serial-july-04-today-1048th-episode-eikuyoy</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/manoj-plan-to-marry-kanaga-secretly-in-siragadikka-aasai-serial-july-04-today-1048th-episode-eikuyoy</guid>
            <pubDate>Sat, 04 Jul 2026 00:14:49 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial 04 July 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ், தன்னுடைய அம்மாவுக்கு தெரியாமல், கனகாவை இரண்டாம் திருமணம் செய்ய இருக்கிறார். அதைப்பற்றி பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwkmm9dp26zsspv9enht9xfb,imgname-siragadikka-aasai---2026-07-03t142306.988-1783070598582.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial 04 July 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ், தன்னுடைய அம்மாவுக்கு தெரியாமல், கனகாவை இரண்டாம் திருமணம் செய்ய இருக்கிறார். அதைப்பற்றி பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;சிறகடிக்க ஆசை&lt;/strong&gt; சீரியலில் மீனாவின் தம்பி சத்யாவுக்கு, சிந்தாமணியின் மகள் ரேகாவுக்கு திருமணம் நடத்தி வைக்க இருக்கிறார் முத்து. இந்த திருமணம் சிந்தாமணிக்கு தெரியாமல், முத்துவின் பாட்டி வீட்டில் வைத்து நடக்கிறது. இந்த திருமணத்தில் குழப்பத்தை ஏற்படுத்த, திருமணம் நடக்கும் இடத்தை சிந்தாமணிக்கு சொல்லிவிடுகிறார் விஜயா. இதையடுத்து, சிந்தாமணி தன்னுடைய கணவருடன் கிளம்பி, ரேகாவின் திருமணத்தை தடுத்து நிறுத்த வருகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Pandian Stores 2 : லஞ்சம் வாங்கிய செந்திலை பிளாக்மெயில் பண்ணும் மீனா... தேர்வில் பாஸ் ஆனாரா ராஜி?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆனால் சிந்தாமணி வரும் முன்பே சத்யா, ரேகா கழுத்தில் தாலியை கட்டிவிடுகிறார். பின்னர் சிந்தாமணி உள்ளே வந்து பார்க்கையில் தன் மகள் ரேகா கழுத்தில் தாலியோடு மணமேடையில் அமர்ந்திருக்கிறார். இதைப்பார்த்து கடுப்பான சிந்தாமணி, கோபத்தில், தன்னுடைய காரில் இருந்த அரிவாளை எடுத்து வந்து, ரேகாவையும், சத்யாவை வெட்ட பாய்கிறார். அப்போது முத்து, அவரை தடுத்து நிறுத்தி, அவர் கையில் இருந்த அரிவாளை பிடுங்கி கீழே போடுகிறார். இதைப்பார்த்து அங்கிருந்த அனைவரும் ஷாக் ஆகிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மறுபுறம் மனோஜ், முதன்முறையாக கனகாவின் வீட்டிற்கு செல்கிறார். அவருடன் ஜோதிடரும் உடன் சென்றிருக்கிறார். இதையடுத்து, மனோஜிடம் தனியாக பேசும் கனகாவின் அம்மா, உங்களுக்கு கல்யாணத்துக்கு சம்மதமா என கேட்க, அதற்கு அவர், சம்மதம் தான் ஆனால் அதற்கு முன் நீங்கள் எங்களுக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் என கேட்கிறார். கனகாவின் அம்மாவும், நீங்க எந்த உதவியா இருந்தாலும் தயங்காம கேளுங்க, நான் செய்யுறேன் என கூறுகிறார். அப்போது தான் தனக்கு பணம் தேவைப்படும் விஷயத்தை சொல்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நீங்கள் கல்யாணத்துக்கு முன் 10 லட்சம் கொடுத்தால், நான் ரோகிணிக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்து டைவர்ஸ் வாங்கிவிடுவேன் என கூறுகிறார். அதற்கு ஓகே சொல்லும் கனகாவின் அம்மா, அந்த பணத்தை நீங்கள் என் மகள் கழுத்தில் தாலி கட்டினால் தான் தருவேன் என கூறுகிறார். பின்னர் மனோஜ், நான் டைவர்ஸ் வாங்குவதற்கு முன் உங்கள் மகள் கழுத்தில் தாலி கட்டினால், பிரச்சனை ஆகிவிடும். அதனால் முன்கூட்டியே பணத்தை கொடுங்க, கண்டிப்பா உங்க பொண்ணை நான் திருமணம் செய்துகொள்கிறேன் என கூறுகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அப்போது தன்னுடைய ஜோதிடரிடம் ஆலோசிக்கும் மனோஜ், வேறுவழியின்றி கல்யாணத்தை ரகசியமாக வீட்டிலேயே முடிக்க முடிவெடுக்கிறார். அநேகமாக விஜயாவுக்கே தெரியாமல் தான் இந்த திருமணத்தை மனோஜ் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. விவாகரத்து பெறும் முன்னரே மனோஜ் இரண்டாம் திருமணம் செய்வதால், அதன்மூலம் கண்டிப்பாக சிக்கலில் சிக்குவார் என யூகிக்கப்படுகிறது. இதுவே அவருக்கு விவாகரத்து கிடைக்காமல் போகவும் வாய்ப்பு உள்ளது. அதனால் இனி வரும் எபிசோடுகளில் செம ட்விஸ்ட் காத்திருக்கு.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/manoj-plan-to-marry-kanaga-secretly-in-siragadikka-aasai-serial-july-04-today-1048th-episode-eikuyoy"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Siragadikka Aasai : விஜயாவிடம் பொய் சொல்லி எஸ்கேப் ஆன மனோஜ்... கல்யாண வீட்டில் காத்திருக்கும் ட்விஸ்ட்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/manoj-marriage-twist-loading-in-siragadikka-aasai-serial-july-08-today-1051st-episode-gkp0zg6</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/manoj-marriage-twist-loading-in-siragadikka-aasai-serial-july-08-today-1051st-episode-gkp0zg6</guid>
            <pubDate>Wed, 08 Jul 2026 09:43:34 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial 08 July 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜின் திருமணம் என தெரியாமல் முத்து, மீனா, ஸ்ருதி, ரவி கிளம்பி சென்றுள்ளனர். அதைப்பற்றி பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwzyqdkdjmy98pccs2pzhkzp,imgname-siragadikka-aasai---2026-07-08t093842.918-1783483840109.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial 08 July 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜின் திருமணம் என தெரியாமல் முத்து, மீனா, ஸ்ருதி, ரவி கிளம்பி சென்றுள்ளனர். அதைப்பற்றி பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;சிறகடிக்க ஆசை&lt;/strong&gt; சீரியலின் இன்றைய எபிசோடில் என்ன நடந்திருக்கு அப்படிங்கறத பார்க்கலாம். விஜயா மனோஜ கோயிலுக்கு போயிட்டு பரிகாரம் பண்ணனும்னு கூப்பிடுறாங்க. ஆனா மனோஜுக்கு கல்யாணம் இருக்கு இல்லையா, அவரே வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்றாப்ல அதனால என்னால வர முடியாது என்னோட பிரண்டோட கல்யாணம், அவன் எனக்கு டிரஸ் எல்லாம் வாங்கி கொடுத்திருக்கான். அப்படி இப்படின்னு மனோஜ் சாக்கு போக்கு சொல்லிக்கிட்டு இருக்கறாப்பல. விஜயா எவ்வளோ கூப்பிட்டும் மனோஜ் முடியாதுனு சொல்லிவிடுகிறார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடித்த நடிகைகள்.... இன்ஸ்டா சப்ஸ்கிரிப்ஷனில் அன்லிமிடெட் கவர்ச்சிகாட்டி கோடிக்கணக்கில் வசூல் வேட்டை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதுக்கப்புறம் என்ன, நம்ம மனோஜ் நான் போய் பிரண்டோட கல்யாணத்துக்கே கிளம்புறேன் அப்படின்னு சொல்லிட்டு தன்னோட கல்யாணத்துக்கே ரெடி ஆயிட்டு இருக்கறாப்ல, இந்த பக்கம் மீனா, முத்துவை அழைச்சுக்கிட்டு போயிட்டு நீங்க இதுக்கப்புறம் இந்த மாதிரிதான் டிரஸ் பண்ணனும் அப்படின்னு ஒரு ஆபீசர் மாதிரி டக் இன் பண்ற மாதிரி டிரஸ் எல்லாம் கொடுத்து போட்டுக்கிட்டு வாங்க அப்படின்னு சொல்லி, முத்துவோட கெட்டப்பையே மாத்திடுறாங்க. அதுக்கப்புறம் முத்துவோட கெட்டப்ப பாத்துட்டு விஜயா அண்ணாமலையே அசந்து போறாங்கன்னா பாத்துக்கோங்களே, அந்த அளவுக்கு இன் பண்ணிக்கிட்டே சும்மா டிப் டாப்பா இருக்கறாப்பல முத்து.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதுக்கப்புறம் மீனா போயிட்டு ஸ்ருதிக்காக கல்யாணத்துக்கு கேசரி எல்லாம் பண்ணி கொடுக்குறாங்க. மனோஜ் ஒரு பக்கம் ரெடி ஆகிட்டு இருக்கறாரு. மனோஜ் பட்டு வேஸ்டி சட்டையில ரெடியாகி வந்ததை பாத்துட்டு எல்லாருமே ஷாக் ஆகுறாங்க. என்னடா உன் பிரண்டோட கல்யாணம்னு சொன்ன, நீ மாப்பிள்ளை மாதிரி ரெடி ஆயிருக்க அப்படின்னு கேக்குறாரு முத்து. என் பிரண்ட் தான்டா வாங்கி கொடுத்தான் அப்படின்னு வாய் கூசாம நம்ம மனோஜ் பொய் சொல்றாப்ல. அதுக்கப்புறம் என்ன ஸ்ருதி, ரவி, மீனா, முத்து&lt;/p&gt;&lt;p&gt;எல்லாருமே அந்த கல்யாணத்துக்கு கிளம்பி போறாங்க.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஏன்னா இவங்கதானே ஆர்டர் எடுத்திருக்காங்க. அவங்களுக்கு தெரியாது அது மனோஜோட கல்யாணம்னு. இறுதியாக கல்யாண பொண்ணு வீட்டை காமிக்கிறாங்க கல்யாண பொண்ணு கனகா ஒரு மனநால பாதிக்கப்பட்ட பொண்ணு அப்படிங்கறதுனால சேலை கட்டிக்க மாட்டேன் அப்படின்னு அட்டகாசம் பண்ணிக்கிட்டு இருக்கு. அதுக்கப்புறம் அவங்க அம்மாதான் வந்து உனக்கும் மனோஜ்-க்கும் தான் கல்யாணம் நடக்க போகுது, அதுக்கப்புறம் நீ மனோஜ் கூடயே போயிட்டு அவன் கடையிலேயே உட்கார்ந்து பிரிட்ஜ பாத்துக்கிட்டே இருக்கலாம் அப்படின்னு சொன்ன உடனே அந்த பொண்ணு அடங்கிடுது.&lt;/p&gt;&lt;p&gt;முத்து அந்த வீட்ல வந்து டெக்கரேஷன் எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கறாப்ல. மாப்பிள்ளை வந்துட்டாரு அப்படின்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க. இதோட இன்றைய எபிசோடு முடிஞ்சிருச்சு. வெயிட் பண்ணி பார்க்கலாம் நாளைக்கு என்ன நடக்க போகுதுன்னு.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/manoj-marriage-twist-loading-in-siragadikka-aasai-serial-july-08-today-1051st-episode-gkp0zg6"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Siragadikka Aasai : கர்ப்பமாக இருக்கிறாரா மீனா? சந்தேகப்படும் விஜயாவுக்கு ஆஸ்பத்திரியில் காத்திருந்த ட்விஸ்ட்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-july-16-today-episode-hospital-drama-vijay-suspicion-and-a-big-emotional-twist-for-meena-gwouf49</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-july-16-today-episode-hospital-drama-vijay-suspicion-and-a-big-emotional-twist-for-meena-gwouf49</guid>
            <pubDate>Thu, 16 Jul 2026 09:16:36 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial 16 July 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா திடீரென மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxmgd8wq6134c6wxx2kxwhh6,imgname-siragadikka-aasai---2026-07-16t091254.139-1784173470615.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial 16 July 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா திடீரென மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிறகடிக்க ஆசை சீரியலில், மனோஜ் வீட்டில் யாருக்கும் தெரியாமல் கனகா என்கிற மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்திருக்கிறார். பணத்துக்கு ஆசைப்பட்டு தான் மனோஜ் இந்த திருமணத்தை செய்துகொண்டார். ஆனால் பணம் சொன்னபடி வராததால் கடும் அப்செட்டில் இருக்கிறார். மறுபுறம் ரோகிணி, தான் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல முடிவெடுத்து இருக்கிறார். மனோஜ் 5 லட்சம் பணத்தை கொடுத்ததும் துபாய் செல்ல இருக்கிறார் ரோகிணி. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்றைய எபிசோடில், ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸுக்கு மீனா மட்டும் செல்கிறார். முத்து சவாரி இருப்பதாக கூறி கிளாஸுக்கு வராமல் கிளம்பி விடுகிறார். இதே நேரத்தில் மிஸ்ராவும் கிளாஸில் கலந்து கொள்கிறார். வழக்கம்போல் கிளாஸ் நடைபெற்று கொண்டிருக்க, மாணவர்களின் செயல்பாட்டுக்கு ஸ்வேதா மதிப்பெண்களையும் வழங்குகிறார். ஆனால், கிளாஸ் முடிந்து வெளியேறும்போது மீனாவுக்கு திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்படுகிறது. இதனால் அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மருத்துவர் பரிசோதனை செய்த பிறகு, ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று கூறுகிறார். இந்த தகவல் முத்துவுக்கு தெரியவர, பதறியபடி மருத்துவமனைக்கு ஓடி வருகிறார். ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்த மருத்துவர், மீனாவுக்கு குழந்தை பெறுவதில் ஒரு பெரிய இருப்பதாகவும், அதற்கு சிக்கலான சிகிச்சை தேவைப்படலாம் என்றும் கூறுகிறார். மேலும், இந்த சிகிச்சையை மூத்த மருத்துவரே மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார். இதைக்கேட்டதும் முத்து, மீனா இருவருக்கும் பேரதிர்ச்சி ஆகிறது. இந்த செய்தியால் மனமுடைந்து அழும் மீனாவை முத்து ஆறுதல் கூறி மருத்துவமனையிலிருந்து அழைத்துச் செல்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதே நேரத்தில், அந்த வழியாக ஆட்டோவில் சென்ற விஜயா, முத்துவும் மீனாவும் மகப்பேறு மருத்துவமனையில் இருந்து வெளியே வருவதை பார்த்து சந்தேகப்படுகிறார். &quot;மீனா கர்ப்பமாக இருக்கிறாளோ?&quot; என்ற எண்ணத்தில் மருத்துவமனைக்குள் சென்று விசாரிக்கிறார். ஆனால், மீனாவின் தங்கை சீதா, வயிற்று வலி காரணமாகவே அக்கா மருத்துவமனைக்கு வந்ததாக கூறியதும் விஜயா சற்று நிம்மதி அடைகிறார். இதையடுத்து விஜயாவும் அங்கிருந்து கிளம்பி செல்கிறார். மறுபக்கம், மனோஜ் இன்னும் பணம் வராததால் நியூமராலஜிஸ்டிடம் வருத்தப்படுகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதற்கு, &quot;இப்போது நேரம் சாதகமாக இல்லை. ஆனால் விரைவில் உனக்கு நல்ல பண வரவு வரும்&quot; என்று அவர் நம்பிக்கை கொடுக்கிறார். அந்த நேரத்தில் கனகாவின் அம்மா வந்து, &quot;நாளை வந்து பணத்தை வாங்கிக்கொள்ளுங்கள். பணம் கொடுத்த பிறகுதான் வேலை நடக்கும்,&quot; என்று கூறிச் செல்கிறார். இதைக் கேட்ட மனோஜ் மகிழ்ச்சியில் திளைக்கிறார். இப்போது மீனாவின் மருத்துவப் பிரச்சினை எப்படி தீரும்? முத்து இந்த சோதனையை எப்படி சமாளிப்பார்? மனோஜ் எதிர்பார்த்த பணம் கிடைக்குமா? என பல கேள்விகளுக்கு பதில் இனிவரும் எபிசோடில் கிடைக்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-july-16-today-episode-hospital-drama-vijay-suspicion-and-a-big-emotional-twist-for-meena-gwouf49"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Siragadikka Aasai : சத்யா - ரேகா கல்யாணத்தை தடுத்து நிறுத்த வந்த சிந்தாமணி - அம்பலமான விஜயாவின் சூழ்ச்சி..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/chinthamani-unable-to-stop-sathya-rekha-marriage-in-siragadikka-aasai-serial-july-03-today-1047th-episode-h9khy3g</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/chinthamani-unable-to-stop-sathya-rekha-marriage-in-siragadikka-aasai-serial-july-03-today-1047th-episode-h9khy3g</guid>
            <pubDate>Fri, 03 Jul 2026 08:21:54 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial 03 July 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் சத்யா - ரேகாவின் திருமணத்தை தடுத்து நிறுத்த வந்துள்ளார் சிந்தாமணி. இதையடுத்து என்ன ஆச்சு என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwjxzjh45rstbfthdvtgscqd,imgname-siragadikka-aasai---2026-07-03t081543.386-1783046851108.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial 03 July 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் சத்யா - ரேகாவின் திருமணத்தை தடுத்து நிறுத்த வந்துள்ளார் சிந்தாமணி. இதையடுத்து என்ன ஆச்சு என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;சிறகடிக்க ஆசை&lt;/strong&gt; சீரியலில் ரேகாவும் சத்யாவும் காதலித்த நிலையில், அவர்களை சேர விடக்கூடாது என சிந்தாமணி முடிவெடுத்து ரேகாவை ஹவுஸ் அரெஸ்ட் செய்து வைத்திருந்தார். பின்னர் முத்துவும் மீனாவும் ரேகாவை சிந்தாமணி மற்றும் அவரது கணவரின் பிடியிலிருந்து மீட்டு, அவரை கடத்தி வந்து முத்து தன்னுடைய பாட்டி வீட்டில் தங்க வைத்துள்ளார். சிந்தாமணி இந்த திருமணத்தை நடக்க விட மாட்டார் என்பதால், ரேகாவுக்கும் சத்யாவுக்கும் பாட்டியின் ஊரில் வைத்தே திருமணம் செய்து வைத்து விடலாம் என முடிவெடுத்து அதற்கான வேலைகளை செய்து வருகிறார் முத்து.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Pandian Stores 2 : குமாருக்கு வில்லங்கமான குடும்பத்தில் சம்பந்தம் பேசி முடித்த சக்திவேல்... அதிர்ச்சியில் கோமதி..!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரேகா சத்யாவின் திருமணத்திற்காக குடும்பத்தினர் அனைவரும் பாட்டியின் ஊருக்கு வந்துள்ள நிலையில், அங்கு கல்யாணம் ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கிறது. விஜயாவும் இந்த கல்யாணத்திற்கு வந்திருக்கிறார். ரேகாவுக்கு சத்யாவுடன் எப்படியாவது கல்யாணம் நடக்க வேண்டும் என்பதில் விஜயாவும் ஆவலோடு இருக்கிறார். ஏனெனில் சிந்தாமணியிடம் உன்னுடைய மகள் ஒன்னும் இல்லாதவன் கூட ஓடிப் போக போறா பாரு என சவால் விட்டிருந்தார் விஜயா. அந்த சவாலில் தான் ஜெயிக்க இருப்பதால் இந்த திருமணம் நடைபெறும் விஷயத்தை சிந்தாமணி இடம் சொல்லி விடுகிறார் விஜயா.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரேகாவும் சத்யாவும் திருமண கோலத்தில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடையும் சிந்தாமணி உடனடியாக தன்னுடைய கணவருடன் காரில் கிளம்பி முத்துவின் பாட்டி ஊருக்கு செல்கிறார். இந்த திருமணத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்கிற முடிவில் சிந்தாமணி இருக்கிறார். சரியாக ரேகாவுக்கு சத்யா தாலிக்கட்டும் நேரத்தில் அங்கு வந்து விடுகிறார் சிந்தாமணி. அப்போது அவர் நிறுத்துங்க என கத்த, அனைவரும் ஷாக் ஆகிறார்கள். பின்னர் மண மேடையில் இருக்கும் தன்னுடைய மகளை அங்கிருந்து இழுத்துச் செல்ல வருகிறார் சிந்தாமணி.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உடனே முத்து குறுக்கிட்டு சிந்தாமணியை தடுக்கிறார். அப்போது முத்துவை அடிக்க பாய்கிறார் சிந்தாமணி. பின்னர் அங்கிருந்தவர்களும் சிந்தாமணிக்கு எதிர்ப்பு தெரிவிக்க, ரேகாவின் திருமணம் சிந்தாமணி கண் முன்னே நடக்கிறது. இதைப் பார்த்து உற்சாகமடையும் விஜயா, பாத்தியா நான் சொன்ன மாதிரியே உன் பொண்ணு ஒன்னும் இல்லாதவன கல்யாணம் பண்ணிக்கிட்டா என கூறுகிறார் விஜயா. இதைக் கேட்டு கடுப்பான சிந்தாமணி, அரிவாளை எடுத்து வந்து ரேகாவை வெட்ட வருகிறார். அப்போது முத்து அவரை தடுத்து நிறுத்துகிறார். பின்னர், நீங்க ரெண்டு பேரும் நல்லாவே இருக்க மாட்டீங்க என சாபம் விடுகிறார் சிந்தாமணி. இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதை அடுத்து என்ன நடந்தது என்பதை இனிவரும் எபிசோடுகளில் விரிவாக பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/chinthamani-unable-to-stop-sathya-rekha-marriage-in-siragadikka-aasai-serial-july-03-today-1047th-episode-h9khy3g"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Pandian Stores 2 : லஞ்சம் வாங்கிய செந்திலை பிளாக்மெயில் பண்ணும் மீனா... தேர்வில் பாஸ் ஆனாரா ராஜி?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/meena-blackmail-senthil-in-pandian-stores-2-serial-july-03-today-820th-episode-k34yerd</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/meena-blackmail-senthil-in-pandian-stores-2-serial-july-03-today-820th-episode-k34yerd</guid>
            <pubDate>Fri, 03 Jul 2026 08:45:44 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Pandian Stores 2 Serial 03 July 2026 Today Episode : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் செந்தில் லஞ்சம் வாங்கிய விஷயத்தை பாண்டியனிடம் சொல்லிவிடுவேன் என மிரட்டுகிறார் மீனா.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwjzc59tfxscy77szdncdxf7,imgname-pandian-stores-2--78--1783048312122.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Pandian Stores 2 Serial 03 July 2026 Today Episode : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் செந்தில் லஞ்சம் வாங்கிய விஷயத்தை பாண்டியனிடம் சொல்லிவிடுவேன் என மிரட்டுகிறார் மீனா.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;பாண்டியன் ஸ்டோர்ஸ் 2&lt;/strong&gt; சீரியலில் குமாருக்கு தங்கமயிலின் தங்கச்சியை திருமணம் செய்து வைக்க சக்திவேல் முடிவெடுத்துள்ளார். இந்த விஷயத்தை பழனி, பாண்டியன் குடும்பத்திடம் சொல்ல அதைக் கேட்டு அனைவரும் பேரதிர்ச்சி அடைகிறார்கள். இந்த சம்பந்தம் குமாருக்கு வேண்டாம் என சொல்லுமாறு பழனியிடம் சரவணன் சொல்ல, அதற்கு அவர் நான் சொன்னால் கேட்கிற மனநிலையில் அவர்கள் இல்லை என கூறுகிறார். பின்னர் பாண்டியன் இந்த விஷயத்தில் யாரும் தலையிட வேண்டாம் என சொல்லி விடுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Siragadikka Aasai : சத்யா - ரேகா கல்யாணத்தை தடுத்து நிறுத்த வந்த சிந்தாமணி - அம்பலமான விஜயாவின் சூழ்ச்சி..!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆஸ்பத்திரியில் இருந்து வந்து டையர்டாக இருக்கும் மீனாவை ரூமுக்குள் சென்று ரெஸ்ட் எடுக்க சொல்கிறார் பாண்டியன். அப்போது செந்திலும் மீனாவுடன் ரூமுக்குள் சென்று பேசுகிறார். ஆனால் அவரிடம் பேசாமல் அமைதியாக இருக்கிறார் மீனா. அப்போது செந்தில், வா நம்ம ரெண்டு பேரும் நம்ம வீட்டுக்கே போயிடலாம் என கூறுகிறார். அதுமட்டுமின்றி லஞ்சம் வாங்குவதெல்லாம் சகஜம் தான் என்பது போல் பேசுகிறார். இதைக் கேட்டு கடுப்பான மீனா, நீ லஞ்சம் வாங்கிய விஷயத்தை உங்க அப்பாவிடம் சொல்லட்டுமா என கேட்க, செந்தில் பதறிப் போகிறார். என்னிடம் நீ பேசினால் கண்டிப்பாக இந்த விஷயத்தை உங்க அப்பாவிடம் சொல்லி விடுவேன் என பிளாக் மெயில் பண்ணுகிறார் மீனா. இதன்பின் கப்சிப் என ஆகிவிடுகிறார் செந்தில்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மறுபுறம் குமாருக்கு தங்கமயில் தங்கச்சியை திருமணம் செய்து கொடுக்க இருக்கும் விஷயத்தை அறிந்து சரவணன் கடும் அப்செட்டில் இருக்கிறார். ரூமில் தூக்கம் வராமல் புலம்பிக் கொண்டிருக்கும் அவருக்கு ஒரு பெண்ணிடம் இருந்து வாய்ஸ் மெயில் வருகிறது. அந்தப் பெண் தனக்கு அஞ்சலி நம்பர் வேண்டும் என கேட்டு மெசேஜ் அனுப்பி இருக்கிறார். அப்போது சரவணனுக்கு அஞ்சலியின் ஞாபகம் வருகிறது. அவரிடம் தான் உன்னை கண்டிப்பாக கல்யாணம் செய்து கொள்வேன். ஏமாற்ற மாட்டேன் என்று சத்தியம் செய்ததெல்லாம் சரவணனுக்கு ஞாபகம் வருகிறது. அதை நினைத்து தூங்காமல் ஃபீல் பண்ணிக் கொண்டிருக்கிறார் சரவணன்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மறுபுறம் கதிர் இரவில் எழுந்து பார்த்தபோது ராஜி தூங்காமல் போர்வையை மூடிக்கொண்டு தனியே அமர்ந்திருக்கிறார். பின்னர் அவரை அழைத்து என்ன ஆச்சு என கேட்க, நாளைக்கு ரிசல்ட் வருதுல்ல அதனால தான் தூக்கம் வரமாட்டேங்குது என கூறுகிறார் ராஜி. பின்னர் அவரை அழைத்து பேசும் கதிர், ரிசல்ட் நல்லபடியா வரும் வா நம்ம ரெண்டு பேரும் பாட்டு கேட்கலாம் என சொல்லி இருவரும் ஜோடியாக பாட்டு கேட்கிறார்கள். பின்னர் காலை எழுந்ததும் கதிரும், ராஜியும் கோவிலுக்கு சென்று வருகிறார்கள். வீட்டுக்கு வந்ததும் பாண்டியனிடம் கோவில் பிரசாதத்தை கொடுக்கிறார் ராஜி. அப்போது என்னப்பா ஏதாச்சு விசேஷமா என கேட்கிறார் பாண்டியன்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உடனே அருகில் இருந்த கோமதி இன்னைக்கு ரிசல்ட் வருதுல்ல அதனாலதான் கோவிலுக்கு போயிட்டு வந்திருப்பா என கூறுகிறார். ரிசல்ட் வரும் விஷயத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம் என முன்கூட்டியே கோமதியிடம் கூறியிருந்தார் ராஜி. ஆனால் அவர் மறதியில் அனைவரிடமும் கூறிவிட்டதால், தற்போது ரிசல்டுக்காக அனைவரும் காத்திருக்கிறார்கள். ரிசல்ட் வந்ததும் கதிர் போனில் செக் பண்ணுகிறார். எதிர்பார்த்தபடியே ராஜி பாஸ் ஆகி விடுகிறார். பின்னர் அனைவருக்கும் ஸ்வீட் கொடுத்து வாழ்த்து பெறுகிறார் ராஜி. இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதையடுத்து என்ன நடந்தது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/meena-blackmail-senthil-in-pandian-stores-2-serial-july-03-today-820th-episode-k34yerd"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Siragadikka Aasai : மனோஜுக்கு கோயிலில் காத்திருந்த அதிர்ச்சி... மகனின் களவாணித்தனத்தை கண்டுபிடித்தாரா விஜயா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/astrologer-saves-manoj-from-vijaya-in-siragadikka-aasai-serial-july-11-today-1054th-episode-mna3nfr</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/astrologer-saves-manoj-from-vijaya-in-siragadikka-aasai-serial-july-11-today-1054th-episode-mna3nfr</guid>
            <pubDate>Sat, 11 Jul 2026 09:16:33 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial 11 July 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் கனகாவை திருமணம் செய்த கையோடு கோவிலுக்கு அழைத்து சென்றுள்ளார் மனோஜ். அங்கு என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kx7mbfh3ymz32s3ynjwattw7,imgname-siragadikka-aasai---2026-07-11t090954.004-1783741398563.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial 11 July 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் கனகாவை திருமணம் செய்த கையோடு கோவிலுக்கு அழைத்து சென்றுள்ளார் மனோஜ். அங்கு என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;சிறகடிக்க ஆசை&lt;/strong&gt; சீரியலின் இன்றைய எபிசோடில் மனோஜ் மற்றும் கனகாவின் திருமணம் எளிமையாக நடைபெற்று முடிகிறது. திருமணத்திற்குப் பிறகு இருவரும் கோயிலுக்கு செல்கிறார்கள். ஆனால் அதே நேரத்தில் விஜயாவும், பார்வதி ஆண்ட்டியும் அதே கோயிலுக்கு வருவதால் எதிர்பாராத திருப்பம் ஏற்படுகிறது. கோயிலில் மனோஜை பார்த்ததும் விஜயா அவரை அடையாளம் கண்டு அருகில் வருகிறார். இதனால் மனோஜ் பதற்றத்தில் உறைந்து போகிறார். அந்த நேரத்தில் கனகாவின் அம்மா &quot;மாப்பிள்ளை&quot; என்று மனோஜை அழைக்கிறார். இதைக் கண்ட விஜயா அதிர்ச்சியில் ஆழ்கிறார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Siragadikka Aasai : கல்யாண வீட்டில் முத்து - மீனா என்ட்ரி... மனோஜ் சிக்கினாரா? எஸ்கேப் ஆனாரா?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதே சமயம் அங்கு வந்த ஜோதிடர் நிலைமையை சமாளிக்கும் வகையில், உண்மையான மாப்பிள்ளை இவர்தான் என்று வேறு ஒருவரைக் காட்டி சூழ்நிலையை மாற்றிவிடுகிறார். இதனால் விஜயாவும் அதை நம்பி சந்தேகமின்றி அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார். பெரிய பிரச்சினை தவிர்க்கப்பட்டதால் மனோஜ் நிம்மதி அடைகிறார். பின்னர் கனகாவின் அம்மா, &quot;இப்போது திருமணம் முடிந்துவிட்டது. இனி உங்கள் அம்மாவிடம் உண்மையை எப்போ சொல்லப் போகிறீர்கள்?&quot; என்று கேட்கிறார். அதற்கு மனோஜ், &quot;இன்னும் விவாகரத்து சட்டப்படி முடிவடையவில்லை. அதற்குள் இந்த திருமணத்தை வீட்டில் சொல்ல முடியாது. அம்மாவும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார். அதனால் இப்போதைக்கு இந்த விஷயத்தை ரகசியமாகவே வைத்திருக்கலாம்&quot; என்று கூறுகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதன்பிறகு, திருமணம் நடந்த நாளே சாந்தி முகூர்த்தத்தை நடத்த வேண்டும் என்று கனகாவின் அம்மா வலியுறுத்துகிறார். ஆனால் விஜயா கோயிலில் பார்த்த சம்பவத்தால் ஏற்கனவே பயந்துபோன மனோஜ், இன்று முடியாது, பிறகு ஒரு நல்ல நாளில் பார்த்துக்கொள்ளலாம் என்று கூறி அங்கிருந்து தப்பிக்க முயல்கிறார். அப்போது திருமணத்திற்கு முன்பு வாக்குறுதி அளிக்கப்பட்ட 10 லட்சம் ரூபாய் குறித்து மனோஜ் கேட்கிறார். ஆனால் கனகாவின் அம்மா, இப்போது பணத்தை கொடுத்தால் மனோஜ் மீண்டும் வராமல் போய்விடுவார் என்று எண்ணி, &quot;என் கணவர் வந்ததும் பணத்தை வாங்கித் தருகிறேன்&quot; என்று கூறி சமாளிக்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதற்கிடையில் மனோஜ் வீட்டிற்கு வருகிறார். அங்கு முத்துவும் அண்ணாமலையும் திருமணம் தொடர்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். மனோஜ் உள்ளுக்குள் பதற்றத்துடன் இருந்தாலும் வெளியில் எதையும் காட்டாமல் இருக்கிறார். சிறிது நேரத்தில் விஜயாவும் வீட்டிற்கு வந்து, கோயிலில் ஒரு மாப்பிள்ளையை பார்த்ததாகவும், அவர் மனோஜின் நண்பர் போல இருந்ததாகவும் கூறுகிறார். மேலும், &quot;உன்னுடைய விவாகரத்து முடிந்தவுடன் ஒரு பெரிய கோடீஸ்வர குடும்ப பெண்ணை பார்த்து நான் உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன்&quot; என்று பெருமையாக பேசுகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விஜயாவுக்கு உண்மை தெரியாமல் இருப்பதால் மனோஜ் தற்காலிகமாக நிம்மதி அடைந்தாலும், இந்த ரகசிய திருமணம் எப்போது வீட்டாருக்கு தெரியவரும் என்ற எதிர்பார்ப்புடன் இன்றைய எபிசோடு நிறைவடைகிறது. விவாகரத்து கிடைக்கும் முன் இரண்டாவது திருமணம் செய்துள்ளது சட்டவிரோதம் என்பதால், கண்டிப்பாக மனோஜின் இந்த கல்யாண மேட்டர் ரோகிணிக்கு தெரியவர வாய்ப்பு உள்ளது. அது நடக்கும்போது மிகப்பெரிய சம்பவம் காத்திருக்கிறது. அதனால் இனி மனோஜுக்கு என்னென்ன சிக்கல் வரப்போகுது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/astrologer-saves-manoj-from-vijaya-in-siragadikka-aasai-serial-july-11-today-1054th-episode-mna3nfr"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Siragadikka Aasai : மனோஜின் ரகசியம் உடையப்போகுதா? பேரன் வேண்டும் என உருகிய அண்ணாமலை]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-today-episode-annamalai-emotional-wish-leaves-everyone-shocked-ptg2npu</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-today-episode-annamalai-emotional-wish-leaves-everyone-shocked-ptg2npu</guid>
            <pubDate>Mon, 13 Jul 2026 09:20:54 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் தன்னுடைய மகன்களுக்கு குழந்தை பிறக்கவில்லையே என்கிற சோகத்தில் இருக்கிறார் விஜயாவின் கணவர் அண்ணாமலை.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxcsej823qdv39w4ad8hn2p9,imgname-siragadikka-aasai---2026-07-13t091557.472-1783914514690.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் தன்னுடைய மகன்களுக்கு குழந்தை பிறக்கவில்லையே என்கிற சோகத்தில் இருக்கிறார் விஜயாவின் கணவர் அண்ணாமலை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில் மனோஜுக்கு வசதியான குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணையே திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற தனது முடிவில் விஜயா உறுதியாக இருக்கிறார். இதைக் கேட்டு அண்ணாமலை, &quot;இப்போதாவது நல்ல குணமுள்ள பெண்ணை பார்த்து திருமணம் செய்து வை. பணத்தை மட்டும் பார்த்து முடிவு எடுக்காதே&quot; என்று அறிவுரை கூறுகிறார். அதற்கு பதிலளிக்கும் விஜயா, &quot;எனக்கு பணம்தான் முக்கியம் என்றிருந்தால், மனோஜ் முன்பு விரும்பிய அந்த பெண்ணையே திருமணம் செய்து வைத்திருப்பேன்&quot; என்று கூறுகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆனால் பார்வையாளர்களுக்குத் தெரிந்தபடி, மனோஜ் ஏற்கனவே ரகசியமாக அந்த பெண்ணை திருமணம் செய்திருக்கிறார். இந்த உண்மை குடும்பத்தினருக்கு எப்போது தெரியவரும் என்ற எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது. இதற்கிடையில், அண்ணாமலையின் நண்பர் பரசு வீட்டிற்கு வந்து, தனது பேரனின் காது குத்து விழாவிற்கு குடும்பத்தினரை அழைக்கிறார். இந்த அழைப்பு அண்ணாமலையை உணர்ச்சிவசப்படச் செய்கிறது. நண்பர்களுக்கு பேரன், பேத்தி பிறந்துவிட்ட நிலையில், தனது வீட்டில் இன்னும் அந்த சந்தோஷம் கிடைக்கவில்லை என்பதே அவரது வருத்தமாக இருக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதன்பின் முத்து மற்றும் ரவியை தனியாக அழைத்து, விரைவில் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அண்ணாமலை தனது ஆசையை வெளிப்படுத்துகிறார். ஆனால் விஜயாவின் எண்ணம் வேறுபட்டதாக இருக்கிறது. குடும்பத்தில் முதலில் மனோஜுக்குத்தான் குழந்தை பிறக்க வேண்டும் என்பதே அவரது விருப்பமாக உள்ளது. அண்ணாமலை, முத்து, ரவி மூவரும் தனியாக பேசிக்கொண்டிருப்பதை விஜயா மறைமுகமாக கவனிக்க முயற்சிக்கிறார். அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்தாலும், அவரால் அவர்கள் பேசியதை கேட்க முடியவில்லை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பின்னர், அண்ணாமலையின் விருப்பத்தை முத்து, மீனாவிடம் பகிர்ந்து கொள்கிறார். அதற்கு மீனா, &quot;நமக்கென வீட்டில் மேல்மாடியில் ஒரு அறை கட்ட வேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்தோம். அது முடிந்த பிறகு குழந்தை பற்றிய விஷயத்தை யோசிக்கலாம்&quot; என்று தனது கருத்தை தெரிவிக்கிறார். மற்றொரு புறம், ரவி தனது தந்தையின் ஆசையைப் பற்றி ஸ்ருதியிடம் கூறும்போது, அதற்கு ஸ்ருதி நகைச்சுவையாக, &quot;ஒரு பேபி டாலை வாங்கி அப்பா கையில் கொடுத்து விடுங்கள். அவர் அதை கொஞ்சிக்கொண்டு சந்தோஷமாக இருப்பார்&quot; என்று கிண்டலாக பதிலளிக்கிறார்.&lt;/p&gt;&lt;p&gt;இவ்வாறு குடும்பத்தில் குழந்தை பற்றிய பேச்சுகள் ஒரு புறம் நகர, மறுபுறம் மனோஜின் ரகசிய திருமணம் எப்போது வெளிச்சத்திற்கு வரும் என்ற பரபரப்பும் அதிகரிக்கிறது. அடுத்தடுத்த எபிசோட்களில் என்னென்ன திருப்பங்கள் காத்திருக்கின்றன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-today-episode-annamalai-emotional-wish-leaves-everyone-shocked-ptg2npu"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Siragadikka Aasai : மீனா குடும்பத்துக்கு சாபம் விடும் சிந்தாமணி.... ஜீவா சொன்ன மேட்டரால் பீதியடைந்த மனோஜ்...!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/chinthamani-clash-with-meena-family-in-siragadikka-aasai-serial-july-06-today-1049th-episode-r743w0b</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/chinthamani-clash-with-meena-family-in-siragadikka-aasai-serial-july-06-today-1049th-episode-r743w0b</guid>
            <pubDate>Mon, 06 Jul 2026 10:05:43 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial 06 July 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் தன்னைமீறி தன் மகளை திருமணம் செய்து வைத்த மீனாவுக்கு சிந்தாமணி சாபம் விட்டுள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwtv6kyf18j8c1z1dhk1zkbf,imgname-siragadikka-aasai---2026-07-06t100141.508-1783312371663.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial 06 July 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் தன்னைமீறி தன் மகளை திருமணம் செய்து வைத்த மீனாவுக்கு சிந்தாமணி சாபம் விட்டுள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;சிறகடிக்க ஆசை&lt;/strong&gt; சீரியலில் ரேகா சத்யாவின் திருமணம் ஒருவழியாக நடந்து முடிந்துள்ளது. அதனை தடுக்க வந்து பல்பு வாங்கிய சிந்தாமணி, ஊருக்கு போக மனமில்லாமல், மறுபடியும் ரேகாவிடம் வந்து பேசி அவரை சமாதானப்படுத்தப் பார்க்கிறார். ஆனால் ரேகா மனமிறங்க மறுக்கிறார். சிந்தாமணி தன் மகளிடம் கதறுவதைப் பார்த்து விஜயா மிகுந்த உற்சாகமடைகிறார். இதை தான் நான் எதிர்பார்த்தேன் என அருகில் இருந்த தன்னுடைய தோழி பார்வதியிடம் சொல்லி சிரிக்கிறார். ரேகா நம்ம என்ன சொன்னாலும் வர மாட்டா என்பதை புரிந்துகொண்ட சிந்தாமணி, அவருக்கு சாபம் விட்டுட்டு அங்கிருந்து கிளம்பி செல்கிறார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Siragadikka Aasai : சகுனி வேலை பார்த்த விஜயா... ரேகா - சத்யா கல்யாணத்துக்கு வந்த புது சிக்கல்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மறுபுறம் மனோஜ், ரேகா, சத்யாவின் கல்யாணத்துக்கு செல்லாமல் இருக்க, அவரிடம் அந்த கல்யாணத்துக்கு போகலேனா என்ன வர்ற 17ந் தேதி நடக்க இருக்குற உங்களோட கல்யாணத்தை பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க என நீயூமராலஜிஸ்ட் கேட்கிறார். அதை நினைத்து இன்னும் பயத்திலேயே இருப்பதாக சொல்கிறார் மனோஜ். அந்த நேரம் பார்த்து ஜீவா அங்கு வருகிறார். ஜீவா லேட்டா வருவதை பார்த்த மனோஜ், ஏன் இவ்வளவு லேட் என மனோஜ் கேட்க, அதற்கு அவர் உங்க பிசினஸ் பெரிய லெவல்ல போகப் போகுது, எதிர்காலத்தில் ஃபாரின் ட்ரிப்பெல்லாம் போக வேண்டியதிருக்கும். அதுக்காக தான் பாஸ்போர்ட்டுக்கு அப்ளை பண்ணிட்டு வர்றேன் என கூறி ஐஸ் வைக்கிறார் ஜீவா.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதுமட்டுமின்றி மனோஜ், கல்யாணம் பண்ணுவது தொடர்பாக அறிந்த ஜீவா, அவரை பயமுறுத்தும் வகையில் ஒரு கதையை சொல்கிறார். நான் நேத்து தான் டிவில பார்த்தேன், முதல் மனைவியோடு டைவர்ஸ் ஆகாமலேயே இரண்டாவது கல்யாணம் பண்ணவன, மணமேடையிலேயே வந்து போலீஸ் அரெஸ்ட் பண்ணியதாக ஜீவா சொன்னதும் மனோஜ் பீதியடைகிறார். அந்த நேரம் பார்த்து கனகாவின் அம்மா அங்கு வருகிறார். அவர் மனோஜிடம் 50 ஆயிரம் பணத்தை கொடுத்து, நீங்க டிரெஸ் எடுத்துக்கோங்க, உங்களோட நண்பர்களுக்கும் வாங்கிக் கொடுங்க என கூறிவிட்டு செல்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உடனே அங்கிருந்த நியூமராலஜிஸ்ட், பார்த்தியா உன்னைத் தேடி பணம் இனிமேல் வரப்போகுது. நீ அதை நினைச்சு கவலைப்படாத, உன் தலைக்கு மேல குரு உட்கார்ந்திருக்கான்னு சொல்லி மனோஜை தேற்றுகிறார். இப்போ தான் எனக்கு நிம்மதியா இருக்கு, என்ன நடந்தாலும் நீங்க பார்த்துப்பீங்க என கூறுகிறார் மனோஜ். மறுபுறம் கல்யாணம் முடிந்த கையோடு, ரேகாவையும் சத்யாவையும் வீட்டுக்கு அழைத்து வருகிறார்கள். அப்போது ரேகா விளக்கு ஏற்றுகிறார். அங்கு இருப்பவர்கள், ரேகாவை பார்த்து, வசதியா வாழ்ந்த பொண்ணு, இங்க எப்படி இருக்கப் போகுதோ என பேசிக் கொண்டிருக்கிறார்கள். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/chinthamani-clash-with-meena-family-in-siragadikka-aasai-serial-july-06-today-1049th-episode-r743w0b"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Siragadikka Aasai : மீண்டும் கடனா? முத்துவுக்கு ஷாக் கொடுத்த மனோஜ் - ஸ்வேதாவிடம் காதலை சொன்ன மிஷ்ரா]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/vijaya-seeks-help-from-muthu-for-manoj-in-siragadikka-aasai-serial-july-01-today-1045th-episode-tg6g603</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/vijaya-seeks-help-from-muthu-for-manoj-in-siragadikka-aasai-serial-july-01-today-1045th-episode-tg6g603</guid>
            <pubDate>Wed, 01 Jul 2026 08:39:54 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial 01 July 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜுக்காக முத்துவிடம் பணத்தை ரெடி பண்ண சொல்லி உள்ளார் விஜயா. இதன்பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwdt9paq4qnnt0n7vjsmavnr,imgname-siragadikka-aasai---2026-07-01t083533.504-1782875216215.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial 01 July 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜுக்காக முத்துவிடம் பணத்தை ரெடி பண்ண சொல்லி உள்ளார் விஜயா. இதன்பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;சிறகடிக்க ஆசை&lt;/strong&gt; சீரியலில் மனோஜுக்கு டைவர்ஸ் கொடுக்க சம்மதித்துள்ள ரோகிணி, அதற்கு ஒரு கண்டிஷனையும் போட்டிருக்கிறார். அது என்னவென்றால், மனோஜ் சிறையில் இருந்தபோது அவரை வெளியே எடுக்க தான் செலவு செய்த 5 லட்சம் ரூபாயை தன்னிடம் திருப்பி கொடுத்தால், உடனே டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்து போட்டு கொடுக்கிறேன் என கூறிவிடுகிறார். இதனால் அந்த பணத்தை எப்படியாவது ரெடி பண்ணி கொடுக்க வேண்டும் என முடிவெடுத்துள்ளார் மனோஜ். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Pandian Stores 2 : அரசியை மிரட்டிய குமார்... அடிச்சு ஓடவிட்ட பாண்டியன் - சக்திவேல் செய்யும் சூழ்ச்சி என்ன?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மனோஜ் ரோகிணிக்கு கொடுக்க வேண்டிய 5 லட்சத்தையும், விஜயா மனசாட்சியே இல்லாம முத்து - மீனாவிடம் கேட்கிறார். ஆனால் முத்து, தன்னால் தற்போது வாங்கிய கடனையே கட்ட முடியாமல் திணறுகிறேன். என்னால இந்த 5 லட்சத்தை ரெடி பண்ண முடியாது என சொல்லிக் கொண்டிருக்க, அந்த நேரம் பார்த்து மனோஜ் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுக்கிறார். அவர் உள்ளே வந்ததும் எனக்காக யாரும் பணம் கொடுக்க வேண்டாம், நானே பணத்தை ரெடி பண்ணிருவேன் என மனோஜ் சொன்னதும், இதை முத்து - மீனா சொல்லிருந்தா நம்பிருப்பேன், நீ சொன்னதை நம்ப முடியல என கூறுகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதையடுத்து மனோஜ், தான் தனக்கு தெரிந்தவர்களிடம் காசு கேட்டிருக்கேன். அவங்க கொடுக்குறேன்னு சொல்லிருக்காங்க என சொல்கிறார். இதைக்கேட்டதும் முத்துவுக்கு மனோஜ் மீது சந்தேகம் வருகிறது. இவன் எங்க மறுபடியும் எங்கயாச்சும் கடன் வாங்கி, நம்மள சிக்கலில் மாட்டிவிட்டிருவானோ என பயப்படுகிறார் முத்து. நான் எந்த சிக்கல்லையும் மாட்டிவிட மாட்டேன்னு உன் தலையில அடிச்சு சத்தியம் பண்ணுடா என மனோஜிடம் கேட்கிறார் முத்து. இதையடுத்து மனோஜும் தலையில் அடித்து சத்தியம் பண்ணுகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மறுபுறம் சத்யா - ரேகா கல்யாணத்துக்கு பணம் தேவைப்படுவதால், என்ன செய்வதென்று தெரியாமல், முத்துவும் மீனாவும் முழிக்கிறார்கள். அப்போது ரவியும், ஸ்ருதியும் வந்து ஒரு லட்ச ரூபாய் பணத்தை கொடுக்கிறார்கள். இதை கல்யாண செலவுக்கு வைத்துக் கொள்ளுமாறு கூறுகிறார்கள். அதுமட்டுமின்றி இதுக்கு அப்புறம் மாச மாசம் லோன் கட்ட நாங்களும் பணம் கொடுக்கிறோம் என கூறுகிறார்கள். இதனால் முத்துவுக்கும், மீனாவுக்கும் கொஞ்சம் பாரம் குறைகிறது. பின்னர் இருவரும் கிளம்பி ஸ்போகன் இங்கிலீஷ் கிளாஸுக்கு செல்கிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அங்கு சென்றதும் சத்யாவுக்கும் ரேகாவுக்கும் கல்யாணம் நடக்கும் விஷயத்தை சொல்கிறார்கள். அப்போது அங்கிருந்த ஸ்வேதா, காதலை பற்றி என்ன நினைக்குறீர்கள் என்பதை ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும் என சொல்ல, உடனே மிஷ்ரா எழுந்து சென்று ஸ்வேதாவிடம் காதலை சொல்லிவிடுகிறார். இதனால் கோபமடையும் ஸ்வேதா அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார். மறுபுறம் சத்யா - ரேகாவின் கல்யாண வேலைகள் நாச்சியார் வீட்டில் தடபுடலாக நடக்கிறது. இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/vijaya-seeks-help-from-muthu-for-manoj-in-siragadikka-aasai-serial-july-01-today-1045th-episode-tg6g603"/>
        </item>
        <item>
            <title><![CDATA[சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடித்த நடிகைகள்.... இன்ஸ்டா சப்ஸ்கிரிப்ஷனில் அன்லிமிடெட் கவர்ச்சிகாட்டி கோடிக்கணக்கில் வசூல் வேட்டை]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/serial-actress-janani-ashokkumar-dharsha-gupta-reshma-abirami-earn-huge-money-through-instagram-subscription-vcr92gi</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/serial-actress-janani-ashokkumar-dharsha-gupta-reshma-abirami-earn-huge-money-through-instagram-subscription-vcr92gi</guid>
            <pubDate>Tue, 07 Jul 2026 13:48:22 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Serial Actress Instagram Subscription : தமிழில் சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகைகள் சிலர் இன்ஸ்டாகிராம் சப்ஸ்கிரிப்ஷன் மூலம் மிகப்பெரிய தொகையை சம்பாதித்து வருகின்றனர்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwxt71jsr83gdqqh5e25t9gm,imgname-dharsha-gupta--1--1783412000345.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Serial Actress Instagram Subscription : தமிழில் சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகைகள் சிலர் இன்ஸ்டாகிராம் சப்ஸ்கிரிப்ஷன் மூலம் மிகப்பெரிய தொகையை சம்பாதித்து வருகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்ஸ்டார்கிராம் தான் இன்றைய இளசுகள் மத்தியில் பாப்புலராக உள்ளது. இன்ஸ்டாவை திறந்தாலே அடுத்தடுத்து விதவிதமான ரீல்ஸ் வீடியோக்கள் வருவதால், பொழுதுபோக்குக்கு சிறந்த செயலியாக அது இருக்கிறது. அந்த இன்ஸ்டாகிராமில் சப்ஸ்கிரைபர் ஆப்ஷன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டது. அதைப் பயன்படுத்திக் கொண்ட நடிகைகள் சிலர் அதில் தங்களுடைய கவர்ச்சிகரமான போட்டோக்களை வெளியிட்டு அதைப்பார்க்க காசும் வசூலிக்கிறார்கள். அதிலும் தற்போது சின்னத்திரை சீரியல் நடிகைகளும் அந்த கவர்ச்சி ரூட்டுக்கு தாவி ஆண்டுக்கு கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். அவர்கள் யார்... யார் என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்ஸ்டாவில் தற்போது டிரெண்டிங்கே இவர் தான். இவர் விஜய் டிவி, ஜீ தமிழ் உள்ளிட்ட சேனல்களில் சில சீரியல்களில் நடித்தாலும் அது பெரியளவில் அவருக்கு கைகொடுக்கவில்லை. பின்னர் சினிமாவிலும் நடித்தார். அதிலும் சோபிக்க முடியவில்லை. இதனால் இன்ஸ்டா சப்ஸ்கிரிப்ஷனில் தன்னுடைய கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட தொடங்கினார். பிகினி உடையில் அன்லிமிட்டெட் கவர்ச்சியில் ரசிகர்களை திக்குமுக்காட வைக்கிறாராம் தர்ஷா. அவருக்கு தற்போது 1428 சப்ஸ்கிரைபர்கள் இருக்கிறார்கள். ஒரு ஆளுக்கு மாதம் 390 ரூபாய் வசூலிப்பதன் மூலமாக அவருக்கு மாதந்தோறும் ரூ.5 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறதாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்ஸ்டாவில் வசூல் வேட்டையாடும் மற்றுமொரு சீரியல் நடிகை தான் அபிராமி. இவர் சினிமாவில் பெரியளவில் வாய்ப்பு கிடைக்காததால் சீரியலில் நடிக்க வந்தார். அதிலும் அடுத்தடுத்து வாய்ப்பு வராததால், கிளாமர் ரூட்டுக்கு திரும்பிய அவர், வித விதமாக போட்டோஷூட் நடத்தி, அதன் புகைப்படங்களை தன்னுடைய சப்ஸ்கிரைபர்களுக்காக அடிக்கடி பதிவிட்டு வருகிறார். இவருக்கு இன்ஸ்டாவில் 1846 சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். அவர்களிடம் இருந்து மாதத்துக்கு ரூ.390 வசூலிக்கிறார் அபிராமி. அதன்மூலம் அவருக்கு மாதந்தோறும் 7 லட்சத்து 19 ஆயிரத்து 940 ரூபாய் கிடைக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்ஸ்டா சப்ஸ்கிரிப்ஷன் மூலம் டிரெண்டான சீரியல் நடிகை என்றால் அது ஜனனி அசோக் குமார் தான். இவர் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் தொடர்களில் நடித்திருந்தாலும், அதில் ஹோம்லி லுக்கில் வந்திருப்பார். ஆனால் இன்ஸ்டாவில் ஆளே டோட்டலாக மாறி, விதவிதமான கிளாமர் உடைகளில் கிளுகிளுப்பாக போஸ் கொடுத்து, ரசிகர்களுக்கு கவர்ச்சிவிருந்து படைத்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாவில் 2450 சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். மாதம் 390 ரூபாய் வீதம் கணக்கிட்டு பார்த்தால், ஜனனிக்கு மாதந்தோறும் இதன்மூலம் 9 லட்சத்து 55 ஆயிரத்து 500 ரூபாய் கிடைக்கிறது. ஆண்டுக்கு கணக்கு போட்டால் கோடிகளை தாண்டிவிடுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்ஸ்டா சப்ஸ்கிரிப்ஷன் மூலம் அதிகம் சம்பாதிக்கும் நடிகை என்றால் அது ரேஷ்மா பசுபுலேட்டி தான். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி சீரியல் மூலம் பேமஸ் ஆனார். அந்த சீரியல் முடிந்த பின்னர் கிளாமர் ரூட்டுக்கு திரும்பிய ரேஷ்மா, இன்ஸ்டா சப்ஸ்கிரைபர்களை கவர்ச்சியால் கிறங்கடித்து வருகிறார். அவருக்கு இன்ஸ்டாகிராமில் 2481 சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். ஒரு மாதத்துக்கு 390 ரூபாய் நிர்ணயம் செய்திருக்கிறார். அதை கணக்கிட்டால், மாதந்தோறும் 9 லட்சத்து 67 ஆயிரத்து 590 ரூபாய் சம்பாதிக்கிறார் ரேஷ்மா.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/serial-actress-janani-ashokkumar-dharsha-gupta-reshma-abirami-earn-huge-money-through-instagram-subscription-vcr92gi"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Siragadikka Aasai : மனோஜை விடாமல் துரத்தும் கனகா... ரகசியமாக நடக்கும் பர்ஸ்ட் நைட் ஏற்பாடு; ரோகிணிக்கு வந்த டவுட்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-july-14-today-episode-manoj-shocked-by-kanaga-first-night-arrangement-wd9vl15</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-july-14-today-episode-manoj-shocked-by-kanaga-first-night-arrangement-wd9vl15</guid>
            <pubDate>Tue, 14 Jul 2026 10:02:27 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai 14 July 2026 Today episode : சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜின் ஷோரூமிற்கு ரோகிணி வந்தபோது கனகாவும் அங்கிருந்தார். இதனால் ரோகிணிக்கு மனோஜ் மீது சந்தேகம் எழுகிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxfe7x5eeazm0t2pd7hqrkp8,imgname-siragadikka-aasai---2026-07-14t095835.860-1784003425454.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai 14 July 2026 Today episode : சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜின் ஷோரூமிற்கு ரோகிணி வந்தபோது கனகாவும் அங்கிருந்தார். இதனால் ரோகிணிக்கு மனோஜ் மீது சந்தேகம் எழுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில் மனோஜின் கடைக்கு வந்த கனகா, மனோஜின் கையை பிடித்தபடி, &quot;வாங்க... ஃபிரிட்ஜ் பார்க்கலாம் ஹஸ்பண்ட்!&quot; என்று அழைத்துச் செல்ல முயற்சிக்கிறார். ஆனால் மனோஜ் பதற்றத்துடன், &quot;அங்கதான் ஃபிரிட்ஜ் இருக்கு, போய் பாருங்க&quot; என்று சமாளித்து அனுப்பிவிடுகிறார். இதற்கிடையில், கனகாவை யார் அழைத்து வந்தார்கள் என்று டிரைவரிடம் கேட்டபோது, &quot;மேடம் தான் அனுப்பி வைத்தாங்க&quot; என்று கூறுகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அந்த நேரத்தில் ரோகிணியும் கடைக்கு வருகிறார். அவரை பார்த்த கனகா, முன்பு போலவே தனக்கு மேக்கப் செய்து தருமாறு கேட்கிறார். ஆனால் ரோகிணி அவரிடம் மழுப்பலாக பதில் சொல்லிவிட்டு கடைக்குள் செல்கிறார். பின்னர் மனோஜிடம் பேச ரோகிணி செல்லும் நேரத்தில், அங்கு வரும் கனகா, மனோஜின் கையைப் பிடித்து ஐஸ்கிரீம் சாப்பிட வருமாறு வற்புறுத்துகிறார். இதைப் பார்த்த ரோகிணிக்கு மனோஜ் மீது சிறிய சந்தேகம் உருவாகிறது. ஆனால் சந்தோஷ், கனகாவை அங்கிருந்து அழைத்துச் செல்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதன் பிறகும் ரோகிணி, &quot;அவள் ஏன் உன் கையை பிடித்து இழுக்கிறாள்?&quot; என்று கேட்க, மனோஜ், &quot;நான் இந்தக் கடையின் உரிமையாளர் என்பதால் அப்படிச் செய்திருப்பாள்&quot; என்று சமாளிக்கிறார். அதற்கும் ரோகிணி திருப்தியடையாமல், &quot;கனகா பொருள் வாங்க வருபவள் மாதிரி தெரியலையே?&quot; என்று கேட்க, மனோஜ் அவளுடன் அவளது கணவரும் வந்திருக்கிறார் என்று கூறுகிறார். அதே சமயம் ஜோதிடரும் அங்கு இருப்பதால், அவரையே கனகாவின் கணவர் என்று ரோகிணியிடம் அறிமுகப்படுத்தி மனோஜ் எஸ்கேப் ஆகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பின்னர் ரோகிணி, மனோஜிடம் பணம் எப்போது தரப் போகிறீர்கள் என்று கேட்டு, தான் விரைவில் வெளியூருக்கு செல்ல வேண்டியிருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டதாகவும் கூறுகிறார். மற்றொரு பக்கம், முத்துவும் மீனாவும் டியூஷன் சென்று ஸ்வேதாவிடம் மிஸ்ரா சார் குறித்து விசாரிக்கின்றனர். ஆனால் ஸ்வேதா, அவரைப் பற்றி தெரிந்துகொள்ள இன்னும் கொஞ்சம் அவகாசம் வேண்டும் என்று கூறுகிறார். அதன்பிறகு முத்துவும் மீனாவும் மிஸ்ரா சாரிடமும் முக்கிய விஷயங்களை பகிர்ந்து பேசுகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதற்கிடையில், கனகாவின் வீட்டில் வேறு பரபரப்பு நடக்கிறது. கனகாவுக்கும் மனோஜுக்கும் முதலிரவு ஏற்பாடு செய்ய கனகாவின் அம்மா தீவிரமாக தயாராகிறார். அந்த இடத்திற்கு மனோஜுடன் ஜோதிடரும் சந்தோஷும் வருகிறார்கள். இந்த ஏற்பாட்டைப் பார்த்த மனோஜ் அதிர்ச்சியடைந்து, &quot;எனக்கு இன்னும் விவாகரத்து கூட ஆகவில்லை. இப்போது இப்படியெல்லாம் நடந்தால் நான் நேராக ஜெயிலுக்குப் போக வேண்டியதுதான்&quot; என்று கூறி அங்கிருந்து தப்பிச் செல்ல முயல்கிறார். மனோஜின் ரகசியம் இன்னும் எவ்வளவு நாள் மறைந்திருக்கும்? ரோகிணி உண்மையை கண்டுபிடிப்பாரா? என்ற பரபரப்பான கேள்விகளுக்கான பதில் அடுத்த எபிசோடில் தெரியவரும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-july-14-today-episode-manoj-shocked-by-kanaga-first-night-arrangement-wd9vl15"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Siragadikka Aasai : மனோஜ் - கனகாவின் திருமணத்தில் அடுத்தடுத்து அரங்கேறிய ட்விஸ்ட்... அடிபொலி எபிசோடு இதோ]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/manoj-kanaga-marriage-completed-with-sudden-twist-in-siragadikka-aasai-serial-july-10-today-1053rd-episode-zwi2uzg</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/manoj-kanaga-marriage-completed-with-sudden-twist-in-siragadikka-aasai-serial-july-10-today-1053rd-episode-zwi2uzg</guid>
            <pubDate>Fri, 10 Jul 2026 09:14:45 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial 10 July 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில் மனோஜ் - கனகாவின் திருமணத்தின் போது பல எதிர்பாராத திருப்பங்கள் அரங்கேறி உள்ளன. அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kx51t3005gfs6p3nez6qvt44,imgname-siragadikka-aasai---2026-07-10t090830.094-1783654845440.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial 10 July 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில் மனோஜ் - கனகாவின் திருமணத்தின் போது பல எதிர்பாராத திருப்பங்கள் அரங்கேறி உள்ளன. அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடின் தொடக்கத்தில், ரோகிணி கனகாவுக்கு மேக்கப் செய்து முடித்துவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். அப்போது அவரை மொட்டை சந்தோஷ் பார்த்துவிடுகிறார். ஆனால், &quot;என்னுடைய நண்பரின் திருமணத்திற்குத்தான் வந்திருக்கிறேன்&quot; என்று கூறி ரோகிணியிடம் சமாளிக்கிறார். அதன்பிறகு, சந்தோஷிடம் தனது 5 லட்சம் ரூபாய் குறித்து ரோகிணி கேட்க, &quot;விரைவில் கொடுத்துவிடுகிறோம்&quot; என்று உறுதியளித்து அவரை அனுப்பி வைக்கிறார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Siragadikka Aasai : விஜயாவிடம் பொய் சொல்லி எஸ்கேப் ஆன மனோஜ்... கல்யாண வீட்டில் காத்திருக்கும் ட்விஸ்ட்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதற்கிடையில், சந்தோஷை முத்துவும் மீனாவும் பார்த்து, அவர் அங்கு என்ன செய்கிறார் என்று விசாரிக்கிறார்கள். அதற்கு, நண்பரின் திருமணம் என்று கூறி சமாளிக்கும் சந்தோஷிடம், &quot;மனோஜுக்காக இந்தப் பெண்ணைப் பார்த்தது நீங்கள்தானே? மனோஜ் மறுத்ததால் வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்கிறீர்களா?&quot; என்று கேட்கிறார்கள். அதற்கும் எப்படியோ சமாளித்துவிட்டு, சந்தோஷ் அவசரமாக அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதன்பின், மனோஜிடம் சென்று, முத்து, மீனா, ரவி மற்றும் ஸ்ருதி ஆகியோர் திருமண நடக்கும் இடத்திலேயே இருப்பதாகவும், அவர்கள் திருமண ஏற்பாடுகளையே கவனித்து வருவதாகவும் கூறுகிறார். இதைக் கேட்டு மனோஜ் என்ன செய்வது என்று தெரியாமல் பதற்றமடைகிறார். அந்த நேரத்தில், ஜோதிடர் மணப்பெண்ணின் தாயாரை தனியாக அழைத்து, முத்துவும் ரவியும் மனோஜின் சகோதரர்கள் என்றும், அவர்கள் அங்கு இருந்தால் இந்தத் திருமணத்தை தடுக்கக்கூடும் என்றும் எச்சரிக்கிறார். இதனால், மணப்பெண் வீட்டார் முத்து, மீனா, ரவி, ஸ்ருதி ஆகியோரிடம் திருமணம் நடக்க தாமதமாகும் என சொன்னதும், அவர்களும் தங்களுக்கு வேலை இருப்பதாக கூறி அங்கிருந்து கிளம்பிவிடுகிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அவர்கள் சென்றுவிட்டதாக நினைத்து மனோஜை கீழே அழைத்து வருகிறார்கள். ஆனால், அப்போது எதிர்பாராத விதமாக முத்து மீண்டும் அங்கு வருகிறார். இதைப் பார்த்த மனோஜ் பதற்றத்தில் ஒளிந்துகொள்கிறார். பின்னர், மீனா தனது பர்ஸை மறந்துவிட்டதால் அதை எடுக்கத்தான் முத்து திரும்பி வந்தது தெரியவருகிறது. பர்ஸை எடுத்துக்கொண்டு அவர்கள் மீண்டும் கிளம்பிச் செல்கிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதையடுத்து, எந்தத் தடையும் இல்லாமல் மனோஜ், கனகாவின் கழுத்தில் தாலி கட்டி திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்திற்குப் பிறகு வழக்கம்போல் கோயிலுக்கு செல்ல முடிவு செய்கிறார்கள். ஆச்சரியமாக, அவர்கள் செல்லும் கோயில், விஜயா செல்ல விரும்பிய அதே கோயிலாக இருக்கிறது. அங்கு பார்வதியுடன் விஜயா சாமி தரிசனம் செய்து கொண்டிருக்கும் நேரத்தில், புதுமணக் கோலத்தில் மனோஜும் கனகாவும் கோயிலுக்கு வருகிறார்கள். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. மனோஜை விஜயா பார்ப்பாரா? இல்லையா? என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>television</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/manoj-kanaga-marriage-completed-with-sudden-twist-in-siragadikka-aasai-serial-july-10-today-1053rd-episode-zwi2uzg"/>
        </item>
    </channel>
</rss>
