<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes"?>
<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Mon, 13 Jul 2026 18:54:12 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss/technology-tech-tips" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[உங்களுக்கு அதிக மன உளைச்சல் தருவது யார் என கண்டுபிடிக்கும் கருவி! வைரலாகும் பெங்களூரு இன்ஜினியரின் ஐடியா!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/technology/find-out-who-causes-you-the-most-mental-stress-bengaluru-engineers-viral-tool-02ghgch</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/technology/find-out-who-causes-you-the-most-mental-stress-bengaluru-engineers-viral-tool-02ghgch</guid>
            <pubDate>Thu, 11 Jun 2026 14:05:15 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;யாரால் நமக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது என்பதைக் கண்டறிய பெங்களூருவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஒருவர், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு விசித்திரமான 'லீடர்போர்டை' (Leaderboard) உருவாக்கியுள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kttwrmx37byv9ezn5gkjtm8t,imgname-chatgpt-image-jun-11--2026--01-58-05-pm-1781166527395.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;யாரால் நமக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது என்பதைக் கண்டறிய பெங்களூருவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஒருவர், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு விசித்திரமான 'லீடர்போர்டை' (Leaderboard) உருவாக்கியுள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பங்கஜ் (Pankaj) எனும் மென்பொருள் பொறியாளர், தனது அலுவலகத்தில் யாருடன் பேசும்போது தனக்கு அதிக மன அழுத்தம் ஏற்படுகிறது என்பதைக் கண்டறிய ஒரு வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டார். இதற்காக அவர் தனது 'Whoop' ஃபிட்னஸ் டிராக்கரை (Fitness Tracker) தனது அலுவலக காலெண்டருடன் இணைத்தார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;எப்படிச் செயல்படுகிறது?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;பங்கஜ் தனது திட்டத்தைப் பற்றி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;தரவு சேகரிப்பு:&lt;/strong&gt; 'Fable' எனும் கருவியைப் பயன்படுத்தி, தனது ஃபிட்னஸ் டிராக்கரில் பதிவாகும் இதயத் துடிப்பு (Heart Rate) தரவுகளை அவர் பிரித்தெடுத்தார்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;ஒப்பீடு: &lt;/strong&gt;ஒவ்வொரு நிமிடமும் பதிவான இதயத் துடிப்பு மாற்றங்களை, அவர் அலுவலகக் காலெண்டரில் உள்ள மீட்டிங் நேரங்கள் மற்றும் அதில் கலந்து கொண்டவர்களின் பெயர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தார்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;முடிவு: &lt;/strong&gt;எந்த மீட்டிங்கின் போது அல்லது எந்த நபருடன் பேசும்போது தனது இதயத் துடிப்பு மிக அதிகமாக உயர்கிறது என்பதை வைத்து, தனக்கு அதிக மன அழுத்தத்தைத் தரும் நபர்களைக் கொண்ட ஒரு 'லீடர்போர்டை' அவர் தயார் செய்தார்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;இதனைப் பகிர்ந்த அவர், &quot;இப்போது என்னிடம் ஒரு லீடர்போர்டு இருக்கிறது, இதை நான் தினமும் நினைத்துப் பார்க்கிறேன்&quot; என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருந்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தக் கட்டுக்கடங்காத யோசனை சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பலர் இதைப் பாராட்டி வருகின்றனர். &quot;இது மிகவும் சுவாரசியமான யோசனை, இதையே நானும் செய்ய விரும்புகிறேன்,&quot; என்று ஒருவர் பதிவிட, மற்றொருவர் &quot;உங்கள் மன அழுத்தத்தை ஒரு டேட்டா லீடர்போர்டாக மாற்றியது அபாரம்!&quot; எனப் புகழ்ந்துள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;இருப்பினும், சிலர் இதயத் துடிப்பு உயர்விற்கு மீட்டிங் மட்டுமின்றி, உணவுப் பழக்கம், நடமாட்டம் போன்ற பிற காரணங்களும் இருக்கலாம் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.&lt;/p&gt;&lt;p&gt;பெங்களூரு டெக்கிகளின் இதுபோன்ற விசித்திரமான மற்றும் புதுமையான முயற்சிகள் அவ்வப்போது இணையத்தில் வைரலாவது வாடிக்கை. இது ஒரு கேளிக்கையான விஷயமாகத் தெரிந்தாலும், வேலைப் பளு மற்றும் அலுவலகச் சூழலில் ஏற்படும் மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் ஒரு புதுமையான அணுகுமுறையாகவே பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>technology-tech-tips</category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/technology/find-out-who-causes-you-the-most-mental-stress-bengaluru-engineers-viral-tool-02ghgch"/>
        </item>
        <item>
            <title><![CDATA[UPI-ல் தவறுதலாக அதிக பணம் அனுப்பிட்டீங்களா? பதற வேண்டாம்.. இந்த ஒரு வழியில் பணத்தை திரும்ப வாங்கலாம்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/technology-tech-tips/upi-overpayment-sent-extra-money-by-mistake-here-is-how-to-get-it-back-098in3f</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/technology-tech-tips/upi-overpayment-sent-extra-money-by-mistake-here-is-how-to-get-it-back-098in3f</guid>
            <pubDate>Wed, 24 Jun 2026 10:17:03 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;UPI மூலம் பணம் அனுப்பும் போது ஒரு சிறிய கவனக்குறைவு கூட பணத்தை தவறான கணக்கிற்கு அனுப்பிவிடும். ஆனால் பதற்றப்பட வேண்டாம்! தவறுதலாக அதிக தொகை செலுத்தியிருந்தாலும், சில முக்கிய நடவடிக்கைகள் மூலம் அந்த பணத்தை மீண்டும் பெறும் வாய்ப்பு உங்களிடம் உள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kvvyrrj1kejbe5mqaa8t8r0c,imgname-upi-transaction-rules-1782275924543.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;UPI மூலம் பணம் அனுப்பும் போது ஒரு சிறிய கவனக்குறைவு கூட பணத்தை தவறான கணக்கிற்கு அனுப்பிவிடும். ஆனால் பதற்றப்பட வேண்டாம்! தவறுதலாக அதிக தொகை செலுத்தியிருந்தாலும், சில முக்கிய நடவடிக்கைகள் மூலம் அந்த பணத்தை மீண்டும் பெறும் வாய்ப்பு உங்களிடம் உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் UPI (Unified Payments Interface) மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. சில வினாடிகளில் பணத்தை அனுப்பும் வசதி இருந்தாலும், அவசரத்தில் தவறுதலாக அதிக தொகையை அனுப்புவது, தவறான நபருக்கு பணம் செலுத்துவது போன்ற பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. அப்படிப்பட்ட சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும்? அனுப்பிய பணத்தை மீண்டும் பெற முடியுமா? என்பதை விரிவாகப் பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பொதுவாக கீழ்க்கண்ட காரணங்களால் தவறான பரிவர்த்தனைகள் ஏற்படுகின்றன:&lt;/p&gt;&lt;p&gt;தவறான UPI ID-யை தேர்வு செய்தல்&lt;/p&gt;&lt;p&gt;மொபைல் எண்ணை தவறாக பதிவு செய்தல்&lt;/p&gt;&lt;p&gt;₹1,000 அனுப்ப வேண்டிய இடத்தில் ₹10,000 என உள்ளிடுதல்&lt;/p&gt;&lt;p&gt;QR கோடை ஸ்கேன் செய்யும்போது கவனக்குறைவு&lt;/p&gt;&lt;p&gt;பெறுநரின் பெயரை சரிபார்க்காமல் பணம் அனுப்புதல்&lt;/p&gt;&lt;img&gt;&lt;h3&gt;&lt;strong&gt;1. பரிவர்த்தனை விவரங்களை சேமிக்கவும்&lt;/strong&gt;&lt;/h3&gt;&lt;p&gt;முதலில் Transaction ID, UTR Number, தேதி, நேரம் மற்றும் தொகை உள்ளிட்ட விவரங்களை Screenshot எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.&lt;/p&gt;&lt;h3&gt;&lt;strong&gt;2. பெறுநரை தொடர்புகொள்ளவும்&lt;/strong&gt;&lt;/h3&gt;&lt;p&gt;தவறாக பணம் சென்ற நபரின் விவரம் தெரிந்தால், அவரை நேரடியாக தொடர்புகொண்டு பணத்தை திருப்பி அனுப்புமாறு கேட்டுக்கொள்ளலாம். பல சமயங்களில் இதுவே விரைவான தீர்வாக இருக்கும்.&lt;/p&gt;&lt;h3&gt;&lt;strong&gt;3. வங்கி அல்லது UPI செயலியில் புகார் அளிக்கவும்&lt;/strong&gt;&lt;/h3&gt;&lt;p&gt;Google Pay, PhonePe, Paytm, BHIM போன்ற செயலிகளில்:&lt;/p&gt;&lt;p&gt;Transaction History-க்கு செல்லவும்&lt;/p&gt;&lt;p&gt;சம்பந்தப்பட்ட பரிவர்த்தனையை தேர்வு செய்யவும்&lt;/p&gt;&lt;p&gt;&quot;Report Issue&quot; அல்லது &quot;Raise Complaint&quot; என்பதை தேர்வு செய்யவும்&lt;/p&gt;&lt;p&gt;தவறான பரிவர்த்தனை குறித்து விவரங்களை பதிவு செய்யவும்&lt;/p&gt;&lt;h3&gt;&lt;strong&gt;NPCI விதிகளின்படி என்ன செய்யலாம்?&lt;/strong&gt;&lt;/h3&gt;&lt;p&gt;UPI பரிவர்த்தனைகளை கண்காணிக்கும் அமைப்பு NPCI (National Payments Corporation of India) ஆகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வங்கியில் அதிகாரப்பூர்வ புகார் அளிக்கலாம்&lt;/p&gt;&lt;p&gt;NPCI grievance portal மூலம் புகார் பதிவு செய்யலாம்&lt;/p&gt;&lt;p&gt;பரிவர்த்தனை ஆதாரங்களை சமர்ப்பிக்கலாம்&lt;/p&gt;&lt;p&gt;விசாரணைக்குப் பிறகு, பணம் தவறாக சென்றது உறுதி செய்யப்பட்டால் பணத்தை மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம்.&lt;/p&gt;&lt;h3&gt;&lt;strong&gt;RBI Ombudsman-ஐ அணுக முடியுமா?&lt;/strong&gt;&lt;/h3&gt;&lt;p&gt;வங்கி அல்லது UPI சேவை வழங்குநரிடம் புகார் அளித்தும் தீர்வு கிடைக்கவில்லை என்றால், RBI Integrated Ombudsman Scheme கீழ் புகார் செய்யலாம்.&lt;/p&gt;&lt;p&gt;இதற்காக:&lt;/p&gt;&lt;p&gt;முதலில் வங்கியில் புகார் அளித்திருக்க வேண்டும்&lt;/p&gt;&lt;p&gt;30 நாட்களுக்குள் தீர்வு கிடைக்காதபட்சத்தில் RBI-யை அணுகலாம்&lt;/p&gt;&lt;h3&gt;&lt;strong&gt;பணத்தை திரும்பப் பெற எவ்வளவு காலம் ஆகும்?&lt;/strong&gt;&lt;/h3&gt;&lt;p&gt;புகாரின் தன்மை மற்றும் விசாரணையைப் பொறுத்து:&lt;/p&gt;&lt;p&gt;சில நாட்களில் தீர்வு கிடைக்கலாம்&lt;/p&gt;&lt;p&gt;சிக்கலான வழக்குகளில் சில வாரங்கள் ஆகலாம்&lt;/p&gt;&lt;p&gt;பரிவர்த்தனை விவரங்கள் சரியாக இருந்தால், செயல்முறை விரைவாக நடைபெறும்.&lt;/p&gt;&lt;h3&gt;&lt;strong&gt;பணம் திரும்ப கிடைக்காமல் போகும் சூழ்நிலைகள்&lt;/strong&gt;&lt;/h3&gt;&lt;p&gt;கீழ்க்கண்ட சூழ்நிலைகளில் சிக்கல் ஏற்படலாம்:&lt;/p&gt;&lt;p&gt;நீங்கள் சரியான நபருக்கே பணம் அனுப்பியிருந்தாலும் பின்னர் திரும்ப கேட்பது&lt;/p&gt;&lt;p&gt;பெறுநர் பணத்தை பயன்படுத்திவிட்டால்&lt;/p&gt;&lt;p&gt;தவறான தகவல்களுடன் புகார் அளித்தால்&lt;/p&gt;&lt;p&gt;பரிவர்த்தனைக்கு போதிய ஆதாரம் இல்லாவிட்டால்&lt;/p&gt;&lt;h3&gt;&lt;strong&gt;இனி தவறுகள் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?&lt;/strong&gt;&lt;/h3&gt;&lt;p&gt;பணம் அனுப்பும் முன் பெறுநரின் பெயரை இருமுறை சரிபார்க்கவும்&lt;/p&gt;&lt;p&gt;பெரிய தொகைகளுக்கு முதலில் ₹1 அனுப்பி உறுதி செய்யவும்&lt;/p&gt;&lt;p&gt;QR கோடை கவனமாக ஸ்கேன் செய்யவும்&lt;/p&gt;&lt;p&gt;அவசரத்தில் பரிவர்த்தனை செய்யாமல், தொகையை மீண்டும் சரிபார்க்கவும்&lt;/p&gt;&lt;p&gt;UPI PIN உள்ளிடுவதற்கு முன் அனைத்து விவரங்களையும் உறுதி செய்யவும்&lt;/p&gt;&lt;p&gt;UPI மூலம் தவறுதலாக அதிக தொகை அல்லது தவறான நபருக்கு பணம் அனுப்பப்பட்டாலும், பதற்றப்பட வேண்டிய அவசியமில்லை. உடனடியாக வங்கி, UPI செயலி அல்லது NPCI-யிடம் புகார் அளித்தால் பணத்தை மீட்கும் வாய்ப்பு உள்ளது. இருப்பினும், UPI பரிவர்த்தனைகளில் கவனக்குறைவு தவிர்க்க முடியாத சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதால், பணம் அனுப்பும் முன் அனைத்து விவரங்களையும் இருமுறை சரிபார்ப்பது மிகவும் முக்கியம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>technology-tech-tips</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/technology-tech-tips/upi-overpayment-sent-extra-money-by-mistake-here-is-how-to-get-it-back-098in3f"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Artificial Intelligence: டெக்னாலஜியை நாம யூஸ் பண்றோமா? இல்ல அது நம்மள யூஸ் பண்ணுதா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/technology/the-rise-of-ai-will-technology-control-humans-31c8fq5</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/technology/the-rise-of-ai-will-technology-control-humans-31c8fq5</guid>
            <pubDate>Mon, 30 Mar 2026 11:49:39 +0530</pubDate>
            <description><![CDATA[நாமதான் டெக்னாலஜியை பயன்படுத்துறோம்னு நினைச்சுட்டு இருக்கோம். ஆனா, செல்போன் மாதிரி, செயற்கை நுண்ணறிவு (AI) நம்மள பயன்படுத்த ஆரம்பிச்சா என்ன ஆகும்? இது ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kcs57gf8461sd4cch354tst1,imgname-artificial-intelligence--2--1766075908584.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[நாமதான் டெக்னாலஜியை பயன்படுத்துறோம்னு நினைச்சுட்டு இருக்கோம். ஆனா, செல்போன் மாதிரி, செயற்கை நுண்ணறிவு (AI) நம்மள பயன்படுத்த ஆரம்பிச்சா என்ன ஆகும்? இது ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்.&lt;img&gt;சதித்திட்டம் தீட்டுவது, பழிவாங்குவது, யாருக்கும் புரியாத மொழியில் தங்களுக்குள் ஒரு நெட்வொர்க் அமைத்து பேசிக்கொள்வது... இதெல்லாம் யார் செய்வார்கள்? தீவிரவாதிகள் என்றுதானே நினைப்போம்? ஆனால், இப்போது செயற்கை நுண்ணறிவு (AI) இயந்திரங்கள் இந்த வேலைகளைச் செய்யத் தொடங்கியுள்ளன. இப்போதைக்கு இது மிகச் சிறிய அளவில்தான் நடக்கிறது. ஆனால், இன்னும் சில ஆண்டுகளில் நிலைமை மனிதக் கட்டுப்பாட்டை மீறிப் போய்விடும் என்கிறார்கள் நிபுணர்கள். மனிதனை விட புத்திசாலியான, மனிதனால் கட்டுப்படுத்த முடியாத இயந்திரங்களை AI-களே உருவாக்கும் முயற்சிகள் தொடங்கிவிட்டனவாம். ஏதோ சயின்ஸ் ஃபிக்&zwnj;ஷன் படம் பார்ப்பது போல இருந்தாலும், இதுதான் நிஜம்.&lt;img&gt;&lt;p&gt;முன்பெல்லாம் ஒரு படம் பார்க்க தியேட்டருக்குப் போக வேண்டும், சென்சார் இருந்தது. இப்போது ரீல்ஸ், ஷார்ட்ஸ் என எல்லாம் கைக்கு வந்துவிட்டது. யார் வேண்டுமானாலும் பார்க்கலாம், எந்தக் கட்டுப்பாடும் இல்லை. யார் வேண்டுமானாலும் ஒரு யூடியூப் சேனல் ஆரம்பித்து, மைக்கை எடுத்துக்கொண்டு கேள்வி கேட்கலாம். ஒரு பூங்காவில், ஒரு தம்பதி தங்கள் இரண்டு குழந்தைகளுடன் அமர்ந்திருக்கிறார்கள். 3 வயது குழந்தை வீட்டுக்குப் போக வேண்டும் என்று அழுகிறது. அப்போது இரண்டு யூடியூபர்கள் வந்து, 'நீங்க குழந்த கடத்தல் கும்பலா?' என்று மிரட்டுகிறார்கள். ஆதார் கார்டு, பிறப்புச் சான்றிதழ் காட்டச் சொல்லி அதட்டுகிறார்கள். இது இன்னும் நடக்கவில்லை, ஆனால் அரசுகள் இதைக் கண்டுகொள்ளாமல் விட்டால், இது போன்ற பல சம்பவங்கள் நிச்சயம் நடக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;ஒரு யூடியூப் சேனல் தொடங்க எந்த அனுமதியும் தேவையில்லை. ஆனால், அதன் பெயரில் மக்களை பிளாக்மெயில் செய்தால் கேட்பதற்கு ஆள் இல்லை. இந்த நிலையில், அரசுகள் AI-ஐ கட்டுப்படுத்தும் என எப்படி நம்புவது? சமீபத்தில், சீனாவில் இருந்து வாங்கிய ஒரு ரோபோ நாயை, தங்களது சொந்தக் கண்டுபிடிப்பு என்று ஒரு தனியார் பல்கலைக்கழகம் கூறி விளம்பரம் செய்தது. ஒரு தனிநபர் அல்ல, ஒரு பல்கலைக்கழகமே இப்படிச் செய்கிறது! 2050-க்குள் பல வேலைகள் இருக்காது என்கிறார்கள். அப்படி வேலை இல்லையென்றால் மக்கள் எப்படி வாழ்வார்கள்? AI எல்லா வேலையையும் செய்தால், மக்களுக்கு வருமானம் இருக்காது. அப்போது பொருட்களை யார் வாங்குவார்கள்? ரோபோக்களைத் தயாரித்த கோடீஸ்வரர்கள் இலவசமாகப் பொருட்களைக் கொடுப்பார்களா? இதெல்லாம் சாதாரண மக்களுக்குப் புரியாது.&lt;img&gt;மீடியாவில் வரும் பல செய்திகள் மிகைப்படுத்தப்பட்டவை. தங்கம் விலை சிறிது குறைந்தால், 'குப்பையென சரிந்தது' என தலைப்பு வைப்பார்கள். பல உண்மைகள் நமக்குத் தெரிவதே இல்லை. மீடியாவில் வருவதை நம்பி வாழ்கிறோம். சிறிய விஷயங்களிலேயே இப்படி என்றால், உலகப் பணக்காரர்களின் AI தொழில்நுட்பத்தை அரசுகள் மக்கள் நலனுக்காகக் கட்டுப்படுத்தும் என எதிர்பார்ப்பது பேராசை. மனிதன்தான் டெக்னாலஜியைப் பயன்படுத்த வேண்டும். ஆனால், டெக்னாலஜி நம்மைப் பயன்படுத்த ஆரம்பித்தால்? அது அதோகதிதான். இப்போது எத்தனை பேர் மொபைல் போனைப் பயன்படுத்துகிறார்கள்? எத்தனை பேரை மொபைல் போன் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது? இதுதான் வித்தியாசம்.]]></content:encoded>
            <category>technology-tech-tips</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/technology/the-rise-of-ai-will-technology-control-humans-31c8fq5"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Car Care: காரை நேரடி வெயிலில் நிறுத்தினால் இந்த ஆபத்துகள் உறுதி! இதை தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/parking-your-car-in-direct-sunlight-these-hidden-dangers-could-shock-you-3234ksu</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/parking-your-car-in-direct-sunlight-these-hidden-dangers-could-shock-you-3234ksu</guid>
            <pubDate>Fri, 29 May 2026 10:54:53 +0530</pubDate>
            <description><![CDATA[கோடை காலத்தில் காரை நேரடியாக வெயிலில் நிறுத்துவது பல பாதிப்புகளை ஏற்படுத்தும். இது காரின் பெயிண்ட் மங்குதல், பேட்டரி ஆயுள் குறைதல், மற்றும் இன்ஜின் ஓவர்ஹீட் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுத்து, இறுதியில் ஆயிரக்கணக்கில் செலவை உண்டாக்கும்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kss25mfcgtkwcj8yq664cvhd,imgname-chatgpt-image-may-29--2026--10-36-37-am--1--1780031345130.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[கோடை காலத்தில் காரை நேரடியாக வெயிலில் நிறுத்துவது பல பாதிப்புகளை ஏற்படுத்தும். இது காரின் பெயிண்ட் மங்குதல், பேட்டரி ஆயுள் குறைதல், மற்றும் இன்ஜின் ஓவர்ஹீட் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுத்து, இறுதியில் ஆயிரக்கணக்கில் செலவை உண்டாக்கும்.&lt;img&gt;&lt;p&gt;கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் மக்கள் தங்களின் உடல்நலத்தை பாதுகாக்க கவனம் செலுத்தினாலும், காரை பாதுகாப்பதில் பலர் அலட்சியம் செய்கிறார்கள். குறிப்பாக நேரடி வெயிலில் நீண்ட நேரம் காரை நிறுத்துவது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது பலருக்கும் தெரியாது. இந்த சிறிய தவறு பின்னர் ஆயிரக்கணக்கில் செலவாக மாறக்கூடும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;காரை வெயிலில் நிறுத்தினால், சில நிமிடங்களிலேயே காரின் உள்ளே வெப்பநிலை மிகவும் அதிகரிக்கும். இதனால் சீட்கள், டாஷ்போர்டு, ஸ்டியரிங் போன்றவை கடுமையாக சூடாகிவிடும். சில நேரங்களில் பிளாஸ்டிக் பகுதிகள் வெடிக்கும் அளவுக்கும் வெப்பம் உயரும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தொடர்ந்து நேரடி சூரிய ஒளியில் கார் நிறுத்தப்பட்டால், அதன் பெயிண்ட் மெதுவாக மங்கத் தொடங்கும். கார் பழையதாக தோன்றும். குறிப்பாக கருப்பு மற்றும் டார்க் கலர் கார்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதிக வெப்பம் காரின் பேட்டரியை வேகமாக பாதிக்கும். பேட்டரியின் உள்ளே இருக்கும் ரசாயன செயல்பாடு வெப்பத்தால் பாதிக்கப்பட்டு, அதன் ஆயுள் குறையக்கூடும். இதனால் திடீரென கார் ஸ்டார்ட் ஆகாமல் போகும் அபாயம் உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வெயிலில் நீண்ட நேரம் நிற்கும் காரின் டயர்களில் காற்றழுத்தம் அதிகரிக்கும். ஏற்கனவே டயரில் பிரச்சனை இருந்தால், அதிக வெப்பம் காரணமாக டயர் வெடிக்கும் அபாயமும் உள்ளது. அதனால் டயர் பிரஷரை அடிக்கடி பரிசோதிக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கார் முழுவதும் சூடாக இருக்கும் போது, ஏசி அதிகமாக வேலை செய்ய வேண்டியிருக்கும். இதனால் ஏசி கம்ப்ரசருக்கு கூடுதல் அழுத்தம் ஏற்படும். காலப்போக்கில் ஏசி குளிர்ச்சி குறைந்து, சர்வீஸ் செலவும் அதிகரிக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கோடையில் இன்ஜின் சீக்கிரம் சூடாகும். Coolant சரியான அளவில் இல்லையெனில், இன்ஜின் ஓவர்ஹீட் ஆகி பெரிய பழுது ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது அதிக செலவுக்கு காரணமாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;ul&gt; &lt;li&gt;முடிந்தவரை நிழலில் கார் நிறுத்துங்கள்&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;Sunshade பயன்படுத்துங்கள்&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;கார் கவர் போடலாம்&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;ஜன்னலை லேசாக திறந்து வைக்கலாம்&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;பேட்டரி மற்றும் டயரை அடிக்கடி சோதிக்க வேண்டும்&lt;/li&gt; &lt;li&gt;Coolant மற்றும் Engine Oil சரிபார்க்க வேண்டும்&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;&ldquo;சில மணி நேரம்தானே&rdquo; என்று நினைத்து காரை வெயிலில் நிறுத்துவது பெரிய தவறாக மாறக்கூடும். சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால், தேவையற்ற செலவுகளையும் பெரிய பழுதுகளையும் தவிர்க்கலாம். உங்கள் காரை பாதுகாப்பது உங்கள் பணத்தையும் பாதுகாப்பதற்கு சமம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>technology-tech-tips</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/parking-your-car-in-direct-sunlight-these-hidden-dangers-could-shock-you-3234ksu"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Smartphone Overheating: ஸ்மார்ட்ஃபோன் யூசர்களே உஷார்! 47°C வெயிலில் போன் வெடிக்காமல் இருக்க ஈசி வழி]]></title>
            <link>https://tamil.asianetnews.com/technology-tech-tips/smartphone-exploding-in-summer-heat-here-is-how-to-prevent-it-articleshow-3e2qzx7</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/technology-tech-tips/smartphone-exploding-in-summer-heat-here-is-how-to-prevent-it-articleshow-3e2qzx7</guid>
            <pubDate>Sat, 30 May 2026 21:11:07 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;இந்தியா முழுவதும் 45&deg;C முதல் 47&deg;C வரை வெப்பம் கொளுத்தி எடுக்கும் நிலையில், உங்கள் பாக்கெட்டில் இருக்கும் ஸ்மார்ட்போன் ஒரு பெரிய விபத்துக்கு காரணமாகலாம். பைக் ஓட்டும்போது போனை பாக்கெட்டில் வைப்பதும், காரின் டேஷ்போர்டில் விட்டுச் செல்வதும் ஏன் ஆபத்தானது?&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kcdwb5qxhqt9m73n3yawgsjk,imgname-smart-phone--2--1765697492733.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;Smartphone Overheating Prevention Tips:&lt;/strong&gt; நாடு முழுவதும் சூரியன் நெருப்பைக் கக்கிக்கொண்டிருக்கிறது. டெல்லி, உ.பி.யில் இருந்து தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா வரை கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. பல்வேறு நகரங்களில் வெப்பநிலை 47&deg;C-ஐ தாண்டியுள்ளது. இந்த கொடூரமான வெயிலில் மனிதர்களே அவதிப்படும்போது, 24 மணி நேரமும் உங்கள் பாக்கெட்டில் இருக்கும் ஸ்மார்ட்போனும் அதிக சூடாகி வருகிறது.&lt;/p&gt;&lt;p&gt;வெளியே வெப்பநிலை 45-47 டிகிரியைத் தொடும்போது, போனின் பேட்டரி உள்ளுக்குள் கொதிக்கத் தொடங்குகிறது. ஒரு சிறிய கவனக்குறைவு கூட, போன் அதிக சூடாகி வெடிக்கவோ அல்லது நிரந்தரமாக செயலிழக்கவோ காரணமாகிவிடும். இந்த கோடையில் உங்கள் விலைமதிப்பற்ற போனைப் பாதுகாக்க விரும்பினால், உடனடியாக இந்த 3 பழக்கங்களை மாற்றிக்கொள்ளுங்கள்.&lt;/p&gt;&lt;h2&gt;1. பைக் ஓட்டும்போது ஜீன்ஸ் அல்லது இறுக்கமான பாக்கெட்டில் போன் வைப்பது&lt;/h2&gt;&lt;p&gt;இந்த வெயில் காலத்தில் நீங்கள் பைக்கிலோ அல்லது ஸ்கூட்டியிலோ செல்லும்போது, அனல் காற்று நேரடியாக உங்கள் உடல் மீது படும். ஜீன்ஸ் போன்ற இறுக்கமான உடைகள் காற்றோட்டத்தைத் தடுக்கும். நீங்கள் 45-47 டிகிரி வெயிலில் பைக் ஓட்டும்போது, உங்கள் உடல் சூடும், வெளியில் உள்ள வெப்பமும் சேர்ந்து உங்கள் பாக்கெட்டை ஒரு அடுப்பு போல மாற்றிவிடும். அதிலும் போனின் டேட்டா ஆன் செய்யப்பட்டிருந்தால், பேட்டரியின் வெப்பநிலை அபாயகரமான அளவை எட்டும். எனவே, பைக் ஓட்டும்போது போனை பேன்ட் பாக்கெட்டில் வைப்பதற்குப் பதிலாக, உங்கள் பேக்கில் அல்லது நேரடி வெயில் மற்றும் உடல் சூடு படாத இடத்தில் வைக்கவும்.&lt;/p&gt;&lt;h2&gt;2. காரின் டேஷ்போர்டு அல்லது நேரடி வெயில் படும் இடத்தில் போனை வைப்பது&lt;/h2&gt;&lt;p&gt;பல நேரங்களில் நாம் காரை பார்க் செய்யும்போது அல்லது ஓட்டும்போது, போனை காரின் டேஷ்போர்டில் அல்லது மொபைல் ஹோல்டரில் வைத்து விடுகிறோம். அங்கு நேரடி சூரிய ஒளி திரையின் மீது படும். வெயிலில் நிறுத்தப்பட்ட காருக்குள் இருக்கும் வெப்பநிலை, வெளியே இருப்பதை விட இருமடங்கு அதிகமாக இருக்கும். மூடிய காருக்குள் டேஷ்போர்டில் வைக்கப்பட்ட போனின் பேட்டரி, சில நிமிடங்களிலேயே வீங்கிவிடும் அல்லது ஷார்ட் சர்க்யூட் ஆகிவிடும். எனவே, காருக்குள் நேரடி சூரிய ஒளி படும் இடத்தில் ஒருபோதும் போனை வைக்காதீர்கள். போனை எப்போதும் சீட்டுக்கு அடியிலோ, க்ளோவ் பாக்ஸிலோ (Glove Box) அல்லது நிழலான இடத்திலோ வைக்கவும்.&lt;/p&gt;&lt;h2&gt;3. போன் சூடாக இருந்தாலும் கேமிங், ரீல்ஸ் பார்ப்பது அல்லது சார்ஜ் செய்வது&lt;/h2&gt;&lt;p&gt;கோடை காலத்தில் போன் லேசாக சூடாவது இயல்புதான். ஆனால், கையில் பிடிக்க முடியாத அளவுக்கு போன் கொதிக்கும்போதும் அதைத் தொடர்ந்து பயன்படுத்துவதுதான் மிகப்பெரிய முட்டாள்தனம். கடுமையான வெயிலுக்கு மத்தியில், போனை சார்ஜ் செய்துகொண்டே கேம் விளையாடுவது, வீடியோ எடுப்பது அல்லது தொடர்ந்து ரீல்ஸ் ஸ்க்ரோல் செய்வது போன்ற செயல்களால், போனின் பிராசஸரும் பேட்டரியும் ஒரே நேரத்தில் வெப்பத்தை உருவாக்குகின்றன. இதனால் போன் திடீரென ஹேங் ஆகலாம், டிஸ்ப்ளே போகலாம் அல்லது பேட்டரி வெடிக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;எனவே, போன் வழக்கத்தை விட அதிகமாக சூடாகிவிட்டது என்று உணர்ந்தவுடன், உடனடியாக அதன் கவரை (Case) கழற்றி விடுங்கள். இணையம், புளூடூத் மற்றும் ஜிபிஎஸ் ஆகியவற்றை அணைத்துவிட்டு, தொலைபேசியை சிறிது நேரம் குளிர்ச்சியான இடத்தில் (விசிறிக்கு அடியில் இருப்பது போல) வையுங்கள். சூடான போனை குளிர்விக்கிறேன் என்று நினைத்து ஃபிரிட்ஜில் மட்டும் வைத்துவிடாதீர்கள். அது போனின் உள்ளே இருக்கும் பாகங்களை நிரந்தரமாக சேதப்படுத்திவிடும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>technology-tech-tips</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/technology-tech-tips/smartphone-exploding-in-summer-heat-here-is-how-to-prevent-it-articleshow-3e2qzx7"/>
        </item>
        <item>
            <title><![CDATA[AC பயன்படுத்தும் 90% பேருக்கும் தெரியாத 3 நிமிட ரூல்... இதை ஃபாலோ பண்ணா கரெண்ட் பில் கம்மியாகும்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/technology-tech-tips/avoid-this-common-ac-mistake-to-save-money-and-extend-its-lifespan-47hbdzk</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/technology-tech-tips/avoid-this-common-ac-mistake-to-save-money-and-extend-its-lifespan-47hbdzk</guid>
            <pubDate>Mon, 13 Jul 2026 15:05:21 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;AC Maintenance: வெயிலில் இருந்து வந்ததும் AC-யை ஆன் செய்வதும், குளிர் ஆரம்பித்ததும் ஆஃப் செய்வதும் நம்மில் பலரின் பழக்கம். ஆனால், இதில் ஒரு '3 நிமிட ரூல்' இருக்கிறது. இதை பின்பற்றவில்லை என்றால், கம்ப்ரஸர் பழுதாகி, கரண்ட் பில் எகிறிவிடும்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxdd4mm3s1kn4ck6nb8n47xe,imgname-ac-1783935160963.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;AC Maintenance: வெயிலில் இருந்து வந்ததும் AC-யை ஆன் செய்வதும், குளிர் ஆரம்பித்ததும் ஆஃப் செய்வதும் நம்மில் பலரின் பழக்கம். ஆனால், இதில் ஒரு '3 நிமிட ரூல்' இருக்கிறது. இதை பின்பற்றவில்லை என்றால், கம்ப்ரஸர் பழுதாகி, கரண்ட் பில் எகிறிவிடும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வெயிலில் இருந்து வீட்டுக்குள் நுழைந்ததும் நாம் முதலில் என்ன செய்வோம்? ரிமோட்டை எடுத்து AC-யை 16 டிகிரியில் வைத்து, ஃபேனை ஃபுல் ஸ்பீடில் ஓட விடுவோம். பத்து நிமிடத்தில் குளிர் அதிகமாகிவிட்டால் ஆஃப் செய்துவிடுவோம். சிறிது நேரத்தில் மீண்டும் வியர்க்க ஆரம்பித்தால், உடனே ஆன் செய்வோம். இந்த ஆன்-ஆஃப் விளையாட்டால் கரண்ட் மிச்சமாகும் என்று நாம் நினைக்கிறோம். ஆனால், AC மெக்கானிக்குகளும், கம்பெனி இன்ஜினீயர்களும் சொல்வது என்னவென்றால், இந்த ஒரே ஒரு பழக்கம்தான் உங்கள் AC-யின் மிக முக்கியமான பாகமான கம்ப்ரஸரை காலி செய்கிறது. கூடவே உங்கள் பாக்கெட்டையும் தான்.&lt;/p&gt;&lt;p&gt;உண்மையில், AC-யில் ஒரு ரகசிய '3 நிமிட விதி' இருக்கிறது. 99% மக்களுக்கு இது தெரிவதே இல்லை. தெரியாததன் விளைவை, சர்வீஸ் செலவிலும், கரண்ட் பில்லிலும் அனுபவிக்கிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த '3 நிமிட விதி' மிகவும் எளிமையானது. AC-யை ஆஃப் செய்த பிறகு, அதை மீண்டும் ஆன் செய்வதற்கு முன்பு குறைந்தபட்சம் 3 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். அதாவது, நீங்கள் ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டால், அடுத்த 3 நிமிடங்களுக்குள் மீண்டும் ஆன் செய்யவே கூடாது. கோபத்திலோ, அவசரத்திலோ ரிமோட்டை படபடவென அழுத்தவும் கூடாது.&lt;/p&gt;&lt;p&gt;ஏன் 3 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும்? இதற்கான முழு காரணமும் AC-யின் இதயம் எனப்படும் கம்ப்ரஸருக்குள் தான் இருக்கிறது. கம்ப்ரஸரின் வேலை, AC-க்குள் இருக்கும் ஃபிரையான் வாயுவை அழுத்தி, குளிர்ச்சியான காற்றை வெளியேற்றுவது. நீங்கள் AC-யை ஆஃப் செய்யும்போது, கம்ப்ரஸருக்குள் ஒரு பக்கம் உயர் அழுத்தமும், மறுபக்கம் குறைந்த அழுத்தமும் உருவாகும். ஆஃப் செய்தவுடன், இந்த இரண்டு அழுத்தங்களும் சமநிலைக்கு வர சுமார் 2 முதல் 3 நிமிடங்கள் ஆகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த நேரத்திற்குள் நீங்கள் மீண்டும் AC-யை ஆன் செய்துவிட்டால், சமநிலை அடையாத அழுத்தத்திற்கு எதிராக கம்ப்ரஸர் கட்டாயப்படுத்தி வேலை செய்ய வேண்டியிருக்கும். இன்ஜினீயரிங் மொழியில் இதை 'ஷார்ட் சைக்கிளிங்' என்று சொல்வார்கள். இதனால், முதலில் கம்ப்ரஸர் மீது பயங்கர அழுத்தம் ஏற்படும். நாளடைவில் கம்ப்ரஸர் பலவீனமாகி, ஒரு கட்டத்தில் முற்றிலும் பழுதாகிவிடும். கம்ப்ரஸரை மாற்ற வேண்டும் என்றால் 15,000 முதல் 20,000 ரூபாய் வரை செலவாகும். இரண்டாவதாக, அழுத்தம் சமநிலையில் இல்லாததால், AC குளிர்விக்க அதிக கரண்ட் இழுக்கும். மாத இறுதியில் பில்லைப் பார்த்தால் தலை சுற்றும். மூன்றாவதாக, AC-யிலிருந்து 'கட் கட்' என சத்தம் வரும், குளிரும் முன்பு போல் இருக்காது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதோடு சேர்த்து இன்னொரு 3 நிமிட விதியும் இருக்கிறது, அதையும் நாம் யாரும் மதிப்பதில்லை. அது, AC-யை ஆன் செய்த பிறகு வரும் 3 நிமிடங்கள். வீட்டுக்குள் நுழைந்ததும் பலர் 16 டிகிரி மற்றும் ஃபேன் ஃபுல் ஸ்பீடில் வைத்துவிடுகிறார்கள். அப்படிச் செய்யாதீர்கள். AC ஆன் செய்ததும், முதல் 3 நிமிடங்களுக்கு 24 முதல் 25 டிகிரியில், மீடியம் ஃபேனில் ஓட விடுங்கள். அறை கொஞ்சம் குளிர்ச்சியாகட்டும். அதன்பிறகு மெதுவாக வெப்பநிலையை 22-23 டிகிரிக்கு குறையுங்கள். இதனால் கம்ப்ரஸர் மீது திடீர் அதிர்ச்சி ஏற்படாது. மெஷினும் நன்றாக இருக்கும், அறையும் சீராகக் குளிர்ச்சியடையும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வீட்டுக்குள் வந்ததும் முதலில் ஜன்னல், கதவுகளை மூடுங்கள். AC-யை ஆன் செய்து 24 டிகிரியில், மீடியம் ஃபேனில் 3 நிமிடங்கள் ஓட விடுங்கள். பிறகு தேவைப்பட்டால் வெப்பநிலையைக் குறைக்கவும். வெளியே செல்லும்போது AC-யை ஆஃப் செய்தால், 3 நிமிடங்களுக்குள் மீண்டும் உள்ளே வந்து ஆன் செய்யாதீர்கள். வீட்டுக் குழந்தைகளை ரிமோட்டிலிருந்து தள்ளி வையுங்கள். கூடவே, மாதத்திற்கு ஒருமுறை AC ஃபில்டரை நீங்களே கழற்றி சுத்தம் செய்யுங்கள். இதனால் கம்ப்ரஸர் மீதான அழுத்தம் இன்னும் குறையும்.&lt;/p&gt;&lt;p&gt;கடைசியாக ஒரே ஒரு விஷயம்தான். AC என்பது வெறும் குளிர்விக்கும் மெஷின் மட்டுமல்ல. அதுவும் ஒரு இன்ஜின் போன்றது. இன்ஜினை ஆன் செய்வதற்கும் ஆஃப் செய்வதற்கும் இடையில் நேரம் கொடுக்க வேண்டும். இந்தச் சிறிய '3 நிமிட விதியை' நீங்கள் பின்பற்றினால், உங்கள் AC-யின் ஆயுள் 3 முதல் 4 ஆண்டுகள் அதிகரிப்பதை நீங்களே பார்ப்பீர்கள். கூடவே, ஒவ்வொரு மாத கரண்ட் பில்லும் சுமார் 20% வரை குறையும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>technology-tech-tips</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/technology-tech-tips/avoid-this-common-ac-mistake-to-save-money-and-extend-its-lifespan-47hbdzk"/>
        </item>
        <item>
            <title><![CDATA[AC Maintenance Tips:  வெயில் காலத்தில் ஏசி தீ பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/technology-tech-tips/how-to-prevent-ac-fires-during-summer-essential-safety-tips-you-should-know-4zkmy0v</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/technology-tech-tips/how-to-prevent-ac-fires-during-summer-essential-safety-tips-you-should-know-4zkmy0v</guid>
            <pubDate>Sun, 31 May 2026 15:11:15 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;AC Maintenance Tips: கோடையில் ஏசி பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், ஏசி வெடிப்பு விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. மின் கசிவு, ஓவர்லோடிங் போன்ற காரணங்களால் ஏற்படும் இந்த ஆபத்துகளைத் தவிர்ப்பது எப்படி என்பது குறித்து விரிவாகக் காண்போம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ksynzd8v1p02kppyzdaqkes9,imgname-ac-use---may-31-1780219884827.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;AC Maintenance Tips: கோடையில் ஏசி பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், ஏசி வெடிப்பு விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. மின் கசிவு, ஓவர்லோடிங் போன்ற காரணங்களால் ஏற்படும் இந்த ஆபத்துகளைத் தவிர்ப்பது எப்படி என்பது குறித்து விரிவாகக் காண்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கோடைக் காலத்தில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ஏசி (Air Conditioner) பயன்பாடு பெருமளவு உயர்ந்துள்ளது. சர்வதேச எரிசக்தி நிறுவனத்தின் (IEA) கணிப்புப்படி, இந்தியாவில் தற்போது வெறும் 8% வீடுகளில் மட்டுமே ஏசி இருந்தாலும், வரும் 2050ஆம் ஆண்டிற்குள் இதன் பயன்பாடு 9 மடங்கு அதிகரிக்கும் எனத் தெரிகிறது.&lt;/p&gt;&lt;p&gt;ஆனால், மற்றொரு புறம் டெல்லி, காசியாபாத் போன்ற நாட்டின் பல்வேறு நகரங்களில் ஏசிகள் திடீரென வெடித்து (AC Blast) பயங்கர தீ விபத்துகள் ஏற்படுவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் அண்மையில் நடந்த ஏசி வெடிப்பு விபத்தில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்த சம்பவமும் இதில் அடங்கும்.&lt;/p&gt;&lt;p&gt;ஏசிகள் ஏன் வெடிக்கின்றன? அதன் பின்னணியில் உள்ள அறிவியல் என்ன? விபத்துகளைத் தவிர்ப்பது எப்படி? என்பவை குறித்து விரிவாக காண்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வீடுகளில் உள்ள ஏசி வெடிப்பதற்கும், வெளியே நிலவும் கடும் வெப்பத்திற்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். டெல்லி தீயணைப்புத் துறையின் தரவுகளின்படி, நகரில் நடக்கும் 60% தீ விபத்துகள் மின் கசிவு, ஓவர்லோடிங் மற்றும் தரமற்ற சாதனங்களால் ஏற்படுபவை ஆகும்.&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;கண்டென்சர் மீது கூடும் அழுத்தம்:&lt;/strong&gt; ஐஐடி வாரணாசியின் மெக்கானிக்கல் துறை பேராசிரியர் சகார் சர்கார் விளக்கத்தின்படி, ஏசியின் குளிர்விக்கும் செயல்முறை சீராக நடக்க, கம்ப்ரசர் அல்லது கண்டென்சர் இருக்கும் வெளிப்பகுதி வெப்பநிலையானது, கண்டென்சரின் வெப்பநிலையை விட 10 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்க வேண்டும். இந்தியாவில் பொதுவாக கண்டென்சர் வெப்பநிலை 50&deg;C வரை இருக்கும். கத்தரி வெயில் காலங்களில் வெளியேயும் 45&deg;C முதல் 50&deg;C வரை வெப்பம் உயரும்போது, கண்டென்சர் மீது அழுத்தம் அதிகரித்து அது வெடிக்கும் அபாயம் ஏற்படுகிறது.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;மின் கசிவு மற்றும் ஓவர்லோடிங் (Short Circuit):&lt;/strong&gt; கோடையில் ஏசியை இடைவிடாமல் தொடர்ந்து இயக்கும்போது, ஒயர்களின் இன்சுலேஷன் உருகி ஷார்ட் சர்க்யூட் ஏற்படுகிறது. பொதுவாக மின்சுற்றில் கூடுதல் சுமை (Overload) ஏற்பட்டால், பாதுகாப்பிற்காகப் பொருத்தப்பட்டிருக்கும் MCB (Miniature Circuit Breaker) சுவிட்ச் தானாகவே மின்சாரத்தைத் துண்டித்துவிடும். ஆனால், தரம் குறைந்த அல்லது பழுதடைந்த MCB-களைப் பயன்படுத்தும்போது இந்த பாதுகாப்பு வளையம் வேலை செய்யாமல் போய் தீ விபத்து ஏற்படுகிறது.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;கம்ப்ரசர் மற்றும் கேஸ் கசிவு:&lt;/strong&gt; ஏசியின் வெளிப்புற யூனிட்டில் (Outdoor Unit) இருக்கும் கம்ப்ரசர்தான் குளிரூட்டும் வாயுவை (Refrigerant Gas) சுழற்சி செய்கிறது. இந்த ஒயரிங்கில் ஏற்படும் சிறு பொறியும் (Spark), அதே நேரத்தில் ஏசியில் இருக்கும் கேஸ் கசிவும் (Gas Leak) ஒன்றாக இணையும்போது, மூடிய அறைக்குள் அது பெரிய வெடிப்பாக மாறுகிறது.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;அழுக்கடைந்த காயில்கள்: &lt;/strong&gt;கண்டென்சர் காயில்களில் தூசியும் அழுக்கும் படிந்து அடைத்துக் கொண்டால், வெப்பத்தை வெளியேற்ற ஏசி கூடுதல் பலத்தைப் பிரயோகிக்க வேண்டியிருக்கும். இதனால் கம்ப்ரசர் மிக வேகமாக சூடாகி தீப்பற்றிக் கொள்கிறது.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;img&gt;&lt;p&gt;வழக்கமான ஏசிகள் (Non-Inverter AC) அறையின் வெப்பநிலையைக் குறைக்க கம்ப்ரசரை முழு வேகத்தில் இயக்கி, பின்னர் முற்றிலும் அணைத்து, மீண்டும் ஆன் செய்யும். இந்த தொடர் ஆன்-ஆஃப் செயல்முறை கடும் வெயில் காலத்தில் இயந்திரத்தின் மீது கூடுதல் அழுத்தத்தை (Mechanical Stress) ஏற்படுத்தும்.&lt;/p&gt;&lt;p&gt;இதற்கு நேர்மாறாக, இன்வெர்ட்டர் ஏசிகள் கம்ப்ரசரின் வேகத்தை படிப்படியாகக் கட்டுப்படுத்துவதால், இயந்திரத்தின் மீதான அழுத்தம் குறைகிறது. இருப்பினும், இன்வெர்ட்டர் ஏசிகளும் முழுமையாக விபத்தில் இருந்து தப்ப முடியாது; அவற்றிலும் ஒயரிங் கோளாறு, மின் அழுத்த ஏற்ற இறக்கங்கள் (Voltage Fluctuations) அல்லது முறையான பராமரிப்பு இல்லை எனில் தீ விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விபத்து ஏற்படுவதற்கு முன்பு ஏசி சில முன்னெச்சரிக்கை சமிக்ஞைகளை வெளிப்படுத்தும். இவற்றை அலட்சியப்படுத்தக் கூடாது:&lt;/p&gt;&lt;p&gt;1. ஏசி இயங்கும்போது வழக்கத்திற்கு மாறான விசித்திரமான சத்தங்கள் வருவது.&lt;/p&gt;&lt;p&gt;2. ஏசி அடிக்கடி தானாகவே ஆன் மற்றும் ஆஃப் (Frequent Cycling) ஆவது.&lt;/p&gt;&lt;p&gt;3. அறையில் குளிர்ச்சி சீராக இல்லாமல் திடீரெனக் குறைவது.&lt;/p&gt;&lt;p&gt;4. ஏசியில் இருந்து லேசான புகை அல்லது ஏதேனும் பொருள் கருகும் வாசனை வருவது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஏசி விபத்துகளில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளப் பின்பற்ற வேண்டிய எளிய வழிமுறைகள்:&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;1.இடைவிடாத பயன்பாட்டைத் தவிர்க்கவும்: &lt;/strong&gt;ஏசியைத் தொடர்ந்து பல மணி நேரம் இயக்கக் கூடாது. இயந்திரம் அதிக வெப்பமடைவதைத் தடுக்க, குறிப்பிட்ட இடைவெளிகளில் அதற்கு ஓய்வு தர வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;2.வெப்பநிலையை 22&deg;C - 25&deg;C இல் வைக்கவும்: &lt;/strong&gt;ஏசியின் வெப்பநிலையை மிகக் குறைவாக (உதாரணமாக 16&deg;C அல்லது 18&deg;C) வைக்கும்போது கம்ப்ரசர் மீது கடுமையான அழுத்தம் ஏற்படும். எனவே, நிபுணர்களின் பரிந்துரைப்படி 22&deg;C முதல் 25&deg;C வரை வைப்பது பாதுகாப்பானது; மின்சாரமும் சேமிக்கப்படும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;3.அவுட்டோர் யூனிட்டை நிழலில் அமைக்கவும்: &lt;/strong&gt;ஏசியின் கம்ப்ரசர் இருக்கும் அவுட்டோர் யூனிட்டை நேரடி வெயில் படாதவாறு நிழலான மற்றும் போதுமான காற்றோட்டம் உள்ள பகுதியில் பொருத்த வேண்டும். அதன் அருகில் காய்ந்த இலைகள், குப்பைகள் அல்லது எந்தப் பொருட்களையும் குவிக்கக் கூடாது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;4.முறையான சர்வீஸ்: &lt;/strong&gt;அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டு ஏசியைத் தவறாமல் சர்வீஸ் செய்ய வேண்டும். ஏர் ஃபில்டர்களில் உள்ள தூசிகளை அடிக்கடி சுத்தம் செய்வதன் மூலம் கம்ப்ரசரின் சுமையைக் குறைக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;5.துரு மற்றும் கேஸ் கசிவைச் சோதித்தல்: &lt;/strong&gt;வெளிப்புற யூனிட்டில் உள்ள தாமிரக் குழாய்களில் (Copper Pipes) பச்சை நிறத்தில் துரு ஏறியிருந்தால், அது கேஸ் கசிவின் அறிகுறியாக இருக்கலாம். உடனடியாக அதைச் சரி செய்ய வேண்டும். மேலும், அலுமினியம் கண்டென்சர்களை விட, துருப்பிடிக்காத மற்றும் விரைவில் குளிர்ச்சியடையும் 'காப்பர் கண்டென்சர்' (Copper Condenser) கொண்ட ஏசிகளே சிறந்தவை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உங்கள் பகுதியில் அடிக்கடி மின் அழுத்த ஏற்ற இறக்கங்கள் (Voltage Fluctuations) இருந்தால், ஏசிக்குத் தனியாக ஒரு ஸ்டெபிலைசரைப் (Stabilizer) பயன்படுத்துங்கள். நீண்ட நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே செல்லும்போது ஏசியின் முதன்மை பவர் சுவிட்சை (Main Switch) அணைத்து வைப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>technology-tech-tips</category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/technology-tech-tips/how-to-prevent-ac-fires-during-summer-essential-safety-tips-you-should-know-4zkmy0v"/>
        </item>
        <item>
            <title><![CDATA[எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் நீண்ட நாள் உழைக்க வேண்டுமா? இதை மட்டும் செஞ்சா போதும்! செலவும் குறையும்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/want-electronics-to-last-long-do-this-save-money-too-5oygapg</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/want-electronics-to-last-long-do-this-save-money-too-5oygapg</guid>
            <pubDate>Tue, 08 Jul 2025 12:27:56 +0530</pubDate>
            <description><![CDATA[வீட்டு உபயோகப் பொருட்களை நீண்ட நாட்கள் பராமரிக்க சில எளிய வழிமுறைகள். சாதனங்களின் முக்கிய விவரங்களை எழுதி வைப்பதன் மூலம் பழுது ஏற்படும்போது நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01hxgeh9qsv1p4gn8dgdj9t1w9,imgname-Tv-Fridge-1715317810937.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[வீட்டு உபயோகப் பொருட்களை நீண்ட நாட்கள் பராமரிக்க சில எளிய வழிமுறைகள். சாதனங்களின் முக்கிய விவரங்களை எழுதி வைப்பதன் மூலம் பழுது ஏற்படும்போது நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தலாம்.&lt;img&gt;&lt;p&gt;இன்றைய காலத்தில் வீட்டில் பல்வேறு எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் பயன்பாட்டில் உள்ளன. வாட்டர் ஃபில்டர், வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், ஏர் கண்டிஷனர் (ஏ.சி) போன்றவை இல்லாமல் நம் குடும்ப வாழ்க்கை சீராக செல்லவே முடியாது. இவை நமக்கு நேரத்தைச் சேமிக்கவும், சுகமாக வாழவும் பெரிதும் உதவுகின்றன. ஆனால் இவைகள் அனைத்தும் பராமரிப்பு தேவையுள்ளவையே. அடிக்கடி சர்வீஸ் செய்து வைத்தால், அதிக காலம் நல்ல நிலையில் செயல்படும். ஆனால் சில விஷயங்களை செய்தால் செலவில்லாமல் நீண்ட நாட்கள் பாதுகாக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பலருக்கு சாதனம் பழுதாகும் நேரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் சிரமப்படும் நிலை ஏற்படுகிறது. எப்போது வாங்கினோம், வாரண்டி இன்னும் இருக்கிறதா, யாரை அழைக்கலாம் என்று தேடித் தேடி நேரமும் சகிப்புத்தன்மையும் போய்விடும். இந்த சிக்கலைத் தவிர்க்க, சாதனங்களை வாங்கியபோதே அவற்றின் முக்கியமான விவரங்களை எழுதிவைத்து அதன் அருகே ஒட்டுவது மிகச்சிறந்த வழி.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒவ்வொரு சாதனத்துக்கும் கீழ்க்கண்ட விவரங்களை ஒரு பேப்பரில் தெளிவாக எழுதலாம்:&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;வாங்கிய தேதி&lt;/strong&gt;: எப்போது வாங்கினோம் என்று குறிப்பிட்டால், வாரண்டி காலம் எப்போது முடியும் என்பது தெரியும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;வாரண்டி காலாவதி தேதி&lt;/strong&gt;: எந்த மாதம், ஆண்டு முடியுமென்று சரியாக எழுத வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;கடைசியாக சர்வீஸ் செய்த தேதி&lt;/strong&gt;: பழுதுபார்க்கப்பட்ட நாள் தெரிய வேண்டிய அவசியம் உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;அடுத்து சர்வீஸ் செய்ய வேண்டிய தேதி&lt;/strong&gt;: சில சாதனங்களுக்கு ஆண்டு இருமுறை சர்வீஸ் தேவைப்படும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சர்வீஸ் ஆபீஸ் அல்லது நபர் போன் நம்பர்&lt;/strong&gt;: உடனடியாக தொடர்பு கொள்ள வசதியாக இருக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;இந்த விவரங்களை ஒன்று விடாமல் எழுதினால், எதிர்காலத்தில் சிக்கல் ஏற்பட்டால் உடனே செயல்பட முடியும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இவை அனைத்தையும் எளிய தமிழில் எழுதிக்கொண்டு, பிளாஸ்டிக் ஷீட்டில் பாதுகாப்பாக வைத்து சாதனத்தின் பக்கத்தில் ஒட்டுங்கள். எப்போது வேண்டுமானாலும் அந்த தகவல்களைப் பார்த்து சரியான நடவடிக்கை எடுக்கலாம். கூடவே, உங்கள் மொபைலிலும் இந்த விவரங்களை புகைப்படமாக எடுத்தோ அல்லது நோட்ஸில் சேமித்தோ வைத்துக்கொள்ளலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;ul&gt; &lt;li&gt;இவ்வாறு செய்தால் பல நன்மைகள் கிடைக்கும்:&lt;/li&gt; &lt;li&gt;எந்தப் பிரச்சினை வந்தாலும் நேரம் வீணாக்காமல் உடனே சர்வீஸ் அழைக்க முடியும்.&lt;/li&gt; &lt;li&gt;வாரண்டி காலத்துக்குள் பழுதுபார்க்க ஏற்பாடு செய்யலாம்.&lt;/li&gt; &lt;li&gt;குடும்பத்தில் யாருக்கும் தயக்கமின்றி உதவியாளரை அழைத்து சிக்கலை சரி செய்ய முடியும்.&lt;/li&gt; &lt;li&gt;சாதனங்களை நீண்ட நாள் பயன்படுத்தும் வாய்ப்பு பெருகும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த ஒழுங்கான பழக்கம் உங்கள் வீட்டு நிம்மதிக்கும், பணச் சுருக்கத்துக்கும், சாதனங்களின் நீண்ட ஆயுளுக்கும் உறுதியான ஆதாரம் ஆகும். இன்று முதல் நீங்கள் வீட்டில் உள்ள அனைத்து சாதனங்களுக்கும் விவரப்பட்ட தகவல்களை எழுதிவைத்து ஒட்டுங்கள். இதனால் நாளைய சிக்கல்களை தவிர்த்து மன நிம்மதியுடன் வாழ முடியும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>technology-tech-tips</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/want-electronics-to-last-long-do-this-save-money-too-5oygapg"/>
        </item>
        <item>
            <title><![CDATA[New Aadhaar App: புதிய ஆதார் மொபைல் ஆப் அறிமுகம் – முக்கிய அம்சங்கள் என்னென்ன?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/technology/what-are-the-key-features-of-the-newly-introduced-aadhaar-mobile-app-7h9gbcv</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/technology/what-are-the-key-features-of-the-newly-introduced-aadhaar-mobile-app-7h9gbcv</guid>
            <pubDate>Thu, 28 May 2026 17:51:12 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;New Aadhaar App: UIDAI, மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய ஆதார் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. பல்வேறு வசதிகளுடன் கூடிய இந்த புதிய செயலியைப் பதிவிறக்கம் செய்யுமாறு பயனர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kagzg5fj5heqpej4g2gs84kz,imgname-new-aadhaar-app-1763653981682.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;New Aadhaar App: UIDAI, மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய ஆதார் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. பல்வேறு வசதிகளுடன் கூடிய இந்த புதிய செயலியைப் பதிவிறக்கம் செய்யுமாறு பயனர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் முற்றிலும் புதிய அம்சங்களுடன் கூடிய &lsquo;ஆதார்&rsquo; (Aadhaar) மொபைல் செயலியை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. அதே வேளையில், தற்போதைய பயன்பாட்டில் இருக்கும் பழைய &lsquo;mAadhaar&rsquo; செயலி விரைவில் நிறுத்தப்படும் என்றும், பொதுமக்கள் அனைவரும் இந்த புதிய செயலியைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துமாறும் UIDAI தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) பக்கத்தில் அறிவுறுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்பு (DPDP) சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு, பயனர்களின் தனியுரிமைக்கு (Privacy) முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த புதிய செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;1. கட்டுப்படுத்தப்பட்ட தரவுப் பகிர்வு (Selective Sharing):&lt;/strong&gt; பழைய செயலியைப் போல முழு ஆதார் விவரங்களையும் காட்ட வேண்டிய அவசியமில்லை. ஹோட்டல் முன்பதிவு, மருத்துவமனை அனுமதி அல்லது வயதுச் சான்று போன்ற தேவைகளுக்கு, பெயர், புகைப்படம் அல்லது பிறந்த தேதி போன்ற குறிப்பிட்ட விவரங்களை மட்டும் தேர்ந்தெடுத்துப் பகிரும் வசதி இதில் உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;2. க்யூஆர் கோட் சரிபார்ப்பு (QR-based Verification):&lt;/strong&gt; இதன் மூலம் உங்கள் ஆதார் அட்டையின் நகலை எங்கும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை. செயலியில் உள்ள க்யூஆர் கோடை காண்பித்து அடையாளத்தைச் சரிசெய்து கொள்ளலாம். இந்த அம்சம் இணைய வசதி இல்லாத இடங்களிலும் (Offline) வேலை செய்யும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;3. முக அங்கீகார வசதி (Face Authentication): &lt;/strong&gt;முன்பு ஒடிபி (OTP) மட்டுமே முக்கியச் சரிபார்ப்பு முறையாக இருந்த நிலையில், தற்போது கூடுதல் பாதுகாப்பிற்காக இந்த செயலியில் முக அங்கீகார (Face ID) வசதி சேர்க்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;4. பயோமெட்ரிக் லாக் மற்றும் அன்லாக்: &lt;/strong&gt;பயனர்கள் தங்களின் கைரேகை மற்றும் முக அங்கீகாரப் பதிவுகளைத் தேவைக்கேற்ப ஒரே கிளிக்கில் செயலியில் இருந்தபடியே லாக் (Lock) அல்லது அன்லாக் (Unlock) செய்து கொள்ள முடியும். இது தவறான பயன்பாடுகளைத் தடுக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;5. பயன்பாட்டு வரலாறு (Authentication History):&lt;/strong&gt; உங்கள் ஆதார் விவரங்கள் எங்கு, எப்போது பயன்படுத்தப்பட்டன என்பதைச் செயலியின் மூலம் துல்லியமாகக் கண்காணிக்க முடியும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;6. ஒரே செயலியில் குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள்: &lt;/strong&gt;ஒரே மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களின் (குழந்தைகள் அல்லது முதியவர்கள்) அதிகபட்சமாக 5 ஆதார் ப்ரொஃபைல்களை இந்த ஒரே செயலியில் நிர்வகிக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;7. முகவரி மற்றும் மொபைல் எண் மாற்றம்:&lt;/strong&gt; ஆதார் மையங்களுக்குச் செல்லாமல், இந்தச் செயலியின் மூலமாகவே முகவரி மற்றும் மொபைல் எண் போன்ற விவரங்களைப் புதுப்பித்துக் கொள்ள முடியும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பாதுகாப்பு அடுக்குகள் அதிகரித்துள்ளதால், இந்த புதிய செயலியின் அமைப்புச் செயல்முறை சற்று விரிவானதாக மாற்றப்பட்டுள்ளது:&lt;/p&gt;&lt;p&gt;1. கூகுள் பிளே ஸ்டோர் (Play Store) அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் (App Store) இருந்து அதிகாரப்பூர்வ புதிய &lsquo;Aadhaar&rsquo; செயலியைப் பதிவிறக்கம் செய்யவும்.&lt;/p&gt;&lt;p&gt;2. உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுத்து, உங்கள் அதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடவும்.&lt;/p&gt;&lt;p&gt;3. மொபைல் எண்ணிற்கு வரும் OTP-ஐப் பதிவிட்டு சரிபார்க்கவும்.&lt;/p&gt;&lt;p&gt;4. பாதுகாப்பு அமைப்பின் ஒரு பகுதியாக, செயலி உங்கள் முக அங்கீகாரத்தைக் (Face Authentication) கேட்கும்.&lt;/p&gt;&lt;p&gt;5. அதன் பின்னர், 6 இலக்க PIN எண்ணை உருவாக்கி, கூடுதல் பாதுகாப்பிற்காக பயோமெட்ரிக் அன்லாக்கையும் (Biometric Unlock) ஆன் செய்து கொள்ளலாம்.&lt;/p&gt;&lt;p&gt;6. மீண்டும் ஒருமுறை OTP சரிபார்ப்பு முடிந்தவுடன் உங்கள் கணக்கு முழுமையாகச் செயல்பாட்டிற்கு வரும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;புதிய செயலி அறிமுகத்துடன், மைஆதார் (myAadhaar) இணையத்தளம் மூலம் ஆதார் ஆவணங்களை (அடையாளம் மற்றும் முகவரிச் சான்று) இலவசமாகப் புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை 2027 ஜூன் 14 ஆம் தேதி வரை UIDAI நீட்டித்துள்ளது. இதற்கு முன் இச்சேவை 2026 ஜூன் 15 வரை மட்டுமே இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>technology-tech-tips</category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/technology/what-are-the-key-features-of-the-newly-introduced-aadhaar-mobile-app-7h9gbcv"/>
        </item>
        <item>
            <title><![CDATA[சாம்சங் போன் இருக்கா? உங்கள் போனின் ஆயுளை அதிகரிக்கும் ரகசியங்கள்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/technology-tech-tips/using-a-galaxy-phone-these-samsung-tips-could-save-you-an-upgrade/articleshow-k3hlffp</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/technology-tech-tips/using-a-galaxy-phone-these-samsung-tips-could-save-you-an-upgrade/articleshow-k3hlffp</guid>
            <pubDate>Sat, 07 Jun 2025 06:20:39 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;உங்கள் Samsung Galaxy போனின் பேட்டரி ஆயுளை அதிகரிக்க எளிய வழிகள்! செட்டிங்ஸ் மாற்றுவது, தேவையற்ற அம்சங்களை முடக்குவது, பேட்டரி சேவர் மோட் பயன்படுத்துவது என பல டிப்ஸ்களை அறிந்து கொள்ளுங்கள்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jttkjqtp2t64ynzejj5awjk5,imgname-whatsapp-image-2025-05-09-at-6.50.48-pm-1746797158230.jpeg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;காலையில் சார்ஜ் போட்டு, மதியமே பேட்டரி காலியாகிவிடும் தொந்தரவு இன்றைய நவீன வாழ்க்கையின் பெரிய எரிச்சல்களில் ஒன்று. முக்கிய குரூப் சேட்டில் சூடான விவாதம் நடக்கும்போது அல்லது ஒரு புதிய உணவகத்திற்கு வழி தேடும்போது உங்கள் போன் திடீரென அணைந்து போவது மிகவும் சங்கடமானது. ஆனால் கவலை வேண்டாம்! உங்கள் சாம்சங் கேலக்ஸி போனின் பேட்டரி ஆயுளை அதிகரிக்க சாம்சங் சில அருமையான டிப்ஸ்களை வெளியிட்டுள்ளது. இந்த வழிமுறைகளுக்கு நீங்கள் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;திரை வெளிச்சத்தைக் குறைக்கவும்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;உங்கள் சாம்சங் கேலக்ஸி போனின் திரை எவ்வளவு அழகாக இருந்தாலும், அது அதிக மின்சாரத்தை உறிஞ்சுகிறது. உங்கள் திரை அணைக்கும் நேரத்தைக் குறைப்பதன் மூலமும், வெளிச்சத்தைக் குறைப்பதன் மூலமும் பேட்டரி ஆயுளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம். உங்கள் திரையின் மேலிருந்து கீழ் இழுப்பதன் மூலம் பிரகாசக் கட்டுப்படுத்தியை இடதுபுறம் நகர்த்தவும். மேலும், பயன்படுத்தாதபோது உங்கள் டிஸ்ப்ளே விரைவில் அணைக்கப்படும்படி அமைக்கலாம்; ஆட்டோ பிரைட்னஸ் மற்றும் 30-வினாடி நேர அவகாசம் ஆகியவை சிறப்பாக செயல்படும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;தேவையற்ற செயலிகளை அணைக்கவும்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;நீங்கள் பயன்படுத்தாதபோது புளூடூத், ஜிபிஎஸ் மற்றும் வைஃபை ஆகியவற்றை அணைத்து வைக்கவும். இந்த அம்சங்கள் தொடர்ந்து இணைப்புகளைத் தேடுவதால் பேட்டரி ஆயுள் குறைகிறது. விரைவு செட்டிங்ஸ் மெனுவை கீழே இழுத்து இவற்றைப் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Always On Display-ஐ அணைக்கவும்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;சாம்சங்கின் Always On Display மெசேஜ்கள் அல்லது கடிகாரத்தை விரைவாகப் பார்க்க வசதியாக இருந்தாலும், அது பேட்டரி ஆயுளை மெதுவாகக் குறைக்கிறது. இதை முழுமையாக அணைக்க அல்லது குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் காண்பிக்க, Settings &amp;gt; Lock screen &amp;gt; Always On Display என்பதற்குச் செல்லவும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பேட்டரி சேமிப்பு பயன்முறையைப் பயன்படுத்தவும்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;உங்கள் பேட்டரியின் நன்மைக்காக, பவர் சேவிங் மோடை ஆன் செய்வதன் மூலம் பின்னணி செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தலாம், திரை வெளிச்சத்தைக் குறைக்கலாம் மற்றும் செயல்திறனைக் குறைக்கலாம். இதை நீங்கள் கைமுறையாக இயக்கலாம் அல்லது Settings &amp;gt; Device Maintenance &amp;gt; Battery என்பதற்குச் சென்று தானாக இயங்கும்படி அமைக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;மென்பொருளைப் புதுப்பிக்க மறக்காதீர்கள்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;பழைய மென்பொருள் ஒரு மறைக்கப்பட்ட பேட்டரி கொலையாளியாக இருக்கலாம். Settings &amp;gt; About phone என்பதில் ஏதேனும் புதுப்பிப்புகள் உள்ளதா என சரிபார்க்கவும். மேலும், சமூக ஊடகங்கள் மற்றும் மின்னஞ்சல் போன்ற எப்போதும் ஒத்திசைக்கும் நிரல்களைப் பயன்படுத்துவதை நிறுத்துங்கள். ஒத்திசைக்கும் அதிர்வெண்ணைக் குறைக்கவும் அல்லது கைமுறையாக புதுப்பிப்பதற்கு வரம்பிடவும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>technology-tech-tips</category>
            <dc:creator>Suresh Manthiram</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/technology-tech-tips/using-a-galaxy-phone-these-samsung-tips-could-save-you-an-upgrade/articleshow-k3hlffp"/>
        </item>
        <item>
            <title><![CDATA[BSNL: வெறும் 6 ரூபாய்க்கு 13 மாத வேலிடிட்டி + டேட்டா! பிஎஸ்என்எல்லின் மாஸ் பிளான்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/technology-tech-tips/bsnl-plan-offers-13-months-validity-unlimited-calls-and-data-for-just-6-rupees-ray-k7788f8</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/technology-tech-tips/bsnl-plan-offers-13-months-validity-unlimited-calls-and-data-for-just-6-rupees-ray-k7788f8</guid>
            <pubDate>Mon, 26 May 2025 07:31:22 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;பிஎஸ்என்எல் நிறுவனம் வெறும் 6 ரூபாய்க்கு 13 மாத வேலிட்டி, அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் டேட்டா வழங்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த பிளான் குறித்து விரிவாக பார்ப்போம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jgwt3pnpg8sxk42k054nrkcq,imgname-whatsapp-image-2025-01-06-at-08.50.11.jpeg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;பிஎஸ்என்எல் நிறுவனம் வெறும் 6 ரூபாய்க்கு 13 மாத வேலிட்டி, அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் டேட்டா வழங்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த பிளான் குறித்து விரிவாக பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL அதன் மலிவான ரீசார்ஜ் திட்டங்களுக்காக தலைப்புச் செய்திகளில் தொடர்ந்து இடம்பிடித்துள்ளது. ஏனெனில், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது, ​​பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் கோடிக்கணக்கான பயனர்களுக்கு மலிவான விலையில் நீண்ட செல்லுபடியாகும் திட்டங்களை வழங்குகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதுபோன்ற சூழ்நிலையில், நீங்களும் ஒரு பிஎஸ்என்எல் பயனராக இருந்து நீண்ட செல்லுபடியாகும் திட்டத்தைத் தேடுகிறீர்கள் என்றால், BSNL உங்களுக்காக 6 மாதங்கள் அல்லது 12 மாதங்களுக்கு அல்ல, முழு 13 மாதங்களுக்கு ஒரு திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. அதுவும் மலிவான விலையில். எனவே இந்தத் திட்டத்தைப் பற்றி அறிந்து கொள்வோம்.&lt;/p&gt;&lt;p&gt;BSNL அதன் 9 கோடி பயனர்களுக்கு 13 மாத செல்லுபடியாகும் திட்டத்தை வழங்குகிறது. இந்த திட்டத்தின் விலை ரூ.2399 மட்டுமே. அதாவது, மாதத்திற்கு ரூ.184 ஆகும். அதுவும் ஒரு நாள் என்று எடுத்துக் கொண்டால் ரூ.6 மட்டுமே ஆகும்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;இந்த திட்டத்தின் நன்மைகளைப் பற்றி பேசுகையில் வாடிக்கையாளர்கள் வரம்பற்ற அழைப்பு வசதி மற்றும் ஒவ்வொரு நெட்வொர்க்கிலும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் வசதியைப் பெறுவார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இது தவிர, டேட்டாவைப் பற்றி பேசினால், பயனர்கள் ஒவ்வொரு நாளும் 2 ஜிபி டேட்டாவின் பலனையும் பெறுவார்கள். இது மட்டுமல்லாமல், இந்த திட்டத்தில் பயனர்கள் BiTV-க்கான இலவச அணுகலையும் பெறுவார்கள். இதன் மூலம் பயனர்கள் 350க்கும் மேற்பட்ட நேரடி டிவி சேனல்கள் மற்றும் OTT பயன்பாடுகளை அனுபவிக்க முடியும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த திட்டம் அனைத்து BSNL பயனர்களுக்கும் சிறந்தது. ஒரு முறை ரீசார்ஜ் செய்து, பின்னர் 13 மாதங்கள் முழுவதும் ரீசார்ஜ் செய்யும் பதற்றத்திலிருந்து விடுபடுங்கள். BSNL-ன் இந்த திட்டம் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது விலை உயர்ந்ததல்ல.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;இதனுடன், இந்த திட்டத்தில் பயனர்கள் மட்டுமே நன்மைகளைப் பெறுகிறார்கள். தினசரி டேட்டா மற்றும் ஒவ்வொரு நாளும் வரம்பற்ற அழைப்பு வசதி. அத்தகைய சூழ்நிலையில், இந்த திட்டம் ஒவ்வொரு பயனருக்கும் சிறந்தது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>technology-tech-tips</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/technology-tech-tips/bsnl-plan-offers-13-months-validity-unlimited-calls-and-data-for-just-6-rupees-ray-k7788f8"/>
        </item>
        <item>
            <title><![CDATA[அமேசானில் ரூ.1000-க்குள் கிடைக்கும் டாப் 5 boAt இயர்பட்ஸ்! மிஸ் பண்ணிடாதீங்க]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/technology-tech-tips/top-5-boat-earbuds-under-1000-rupees-on-amazon-lwwxef5</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/technology-tech-tips/top-5-boat-earbuds-under-1000-rupees-on-amazon-lwwxef5</guid>
            <pubDate>Tue, 26 Aug 2025 12:24:43 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ஆன்லைன் வர்த்தக தளமான அமேசானில் boAt இயர்பட்ஸ் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன. ₹1000-க்குள் கிடைக்கும் டாப் 5 இயர்பட்ஸ் பற்றி இங்கே காணலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k3e0m713ehk0nt1xymr2e5zn,imgname-boat-earbuds-price-1756038306850.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஆன்லைன் வர்த்தக தளமான அமேசானில் boAt இயர்பட்ஸ் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன. ₹1000-க்குள் கிடைக்கும் டாப் 5 இயர்பட்ஸ் பற்றி இங்கே காணலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இப்போதெல்லாம் ஆன்லைன் ஷாப்பிங் தான் டிரெண்ட். ஊசி முதல் அரிவாள் வரை அனைத்தும் ஆன்லைனில் கிடைக்கின்றன, அதுவும் கடைகளில் விற்பனை செய்யப்படும் விலையை விடக் குறைவாக. அதனால்தான் பலரும் வெளியே சென்று கஷ்டப்படாமல் தங்களுக்குத் தேவையான பொருட்களை ஆன்லைனில் வாங்குகிறார்கள். அமேசான், பிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் செயலிகள் அனைத்து வகையான பொருட்களையும் மிகக் குறைந்த விலையில் வழங்குகின்றன. அமேசானில் தற்போது boAt இயர்பட்ஸ் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன.&lt;/p&gt;&lt;p&gt;இப்போதெல்லாம் கையில் செல்போன் இருந்தால் காதில் இயர்பட்ஸ் இருக்க வேண்டும். இவை இல்லாமல் இருக்க முடியாத நிலை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இவற்றைப் பயன்படுத்துகிறார்கள். நல்ல தரமான இயர்பட்ஸ் வாங்க வேண்டுமானால் ₹2000-5000 ஆகும். ஆனால் தற்போது அமேசானில் boAt நிறுவனத்தின் இயர்பட்ஸ்களுக்கு நல்ல சலுகைகள் உள்ளன. அவற்றைப் பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த மாடலின் அசல் விலை ₹4490. ஆனால் அமேசானில் 78% தள்ளுபடியுடன் வெறும் ₹999-க்குக் கிடைக்கிறது. 60 மணிநேர பிளேடைம், ஃபாஸ்ட் சார்ஜிங், வாய்ஸ் கண்ட்ரோல், டச் கண்ட்ரோல், வால்யூம் கண்ட்ரோல் போன்ற அம்சங்கள் உள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிறியதாகவும் அழகாகவும் இருக்கும் இந்த மாடலைப் பயன்படுத்துவது மிகவும் வசதியாக இருக்கும். இதன் அசல் விலை ₹3490, ஆனால் அமேசானில் 71% தள்ளுபடியுடன் ₹999-க்குக் கிடைக்கிறது. 35 மணிநேர பேட்டரி ஆயுள் இதன் சிறப்பம்சம். 2 Mic ENx, டைப்-C போர்ட், V5.3 புளூடூத் ஆகியவையும் உள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேம்பட்ட அம்சங்களைக் கொண்ட இந்த மாடலின் அசல் விலை ₹4990. ஆனால் இப்போது அமேசானில் 82% தள்ளுபடியுடன் வெறும் ₹899-க்குக் கிடைக்கிறது. மெக்கானிக் போல்ட் கருப்பு நிறத்தில் மிகவும் அழகாக இருக்கிறது. 50 மணிநேர பேட்டரி ஆயுள், ஃபாஸ்ட் சார்ஜிங், டூயல் மைக் ENx டெக், LED டிரான்ஸ்பரன்சி, குறைந்த லேட்டன்சி, IPX4, IWP டெக் ஆகியவை உள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த மாடல் அமேசானில் வெறும் ₹699-க்கே கிடைக்கிறது. 45 மணிநேர பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கிடைக்கிறது. குறைந்த பட்ஜெட்டில் நல்ல இயர்பட்ஸ் தேடுபவர்கள் இதைப் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;h3&gt;boat airpodes 141/8 :&lt;/h3&gt;&lt;p&gt;இந்த மாடல் 78% தள்ளுபடியுடன் அமேசானில் வெறும் ₹999-க்கே கிடைக்கிறது. ஃபாஸ்ட் சார்ஜிங், 42 மணிநேர பிளேடைம் கொண்டது.&lt;/p&gt;&lt;p&gt;நீண்ட நேரம் பாட்டு கேட்பவர்களுக்கு, கேமர்களுக்கு இந்த boAt இயர்பட்ஸ் சிறந்தது. குறைந்த விலையிலும் கிடைக்கின்றன. ஆனால் அமேசான் சலுகைகள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே. எனவே வாங்குவதற்கு முன் விலை, பிற அம்சங்களைச் சரிபார்க்கவும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>technology-tech-tips</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/technology-tech-tips/top-5-boat-earbuds-under-1000-rupees-on-amazon-lwwxef5"/>
        </item>
        <item>
            <title><![CDATA[OTP Facts: OTP எதுக்கு வருது? இந்த 6 டிஜிட் நம்பரோட உண்மையான வேலை என்ன தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/technology-tech-tips/the-ultimate-guide-to-otp-security-and-how-it-works-nsz33pg</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/technology-tech-tips/the-ultimate-guide-to-otp-security-and-how-it-works-nsz33pg</guid>
            <pubDate>Thu, 09 Jul 2026 14:13:39 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;OTP Facts : நாம் இன்டர்நெட் பேங்கிங், ஆன்லைன் ஷாப்பிங் செய்யும்போது அல்லது ஒரு செயலியில் லாகின் செய்யும்போது, நம் மொபைலுக்கு ஒரு OTP வரும். ஆனால், அது ஏன் வருகிறது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kx30h2ztzm9jhppsqtb95a3c,imgname-otp-1783586393082.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;OTP Facts : நாம் இன்டர்நெட் பேங்கிங், ஆன்லைன் ஷாப்பிங் செய்யும்போது அல்லது ஒரு செயலியில் லாகின் செய்யும்போது, நம் மொபைலுக்கு ஒரு OTP வரும். ஆனால், அது ஏன் வருகிறது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;OTP-யின் முழுப்பெயர் One-Time Password. இது ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய, குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் ஒரு ரகசிய குறியீடு. பொதுவாக இது 4, 6 அல்லது 8 இலக்கங்களில் SMS, இ-மெயில் அல்லது ஆத்தென்டிகேட்டர் ஆப் மூலம் அனுப்பப்படும்.&lt;img&gt;உங்கள் அடையாளத்தை உறுதி செய்யவும், உங்கள் கணக்கைப் பாதுகாப்பாக வைத்திருக்கவுமே OTP அனுப்பப்படுகிறது. ஒருவேளை உங்கள் பாஸ்வேர்டு யாருக்காவது தெரிந்தாலும், OTP இல்லாமல் அவர்களால் உங்கள் கணக்கில் நுழைய முடியாது. இதனால்தான் வங்கிகள், UPI ஆப்கள், இ-காமர்ஸ் தளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் OTP-ஐப் பயன்படுத்துகின்றன.&lt;img&gt;வங்கி கணக்கில் லாகின் செய்வது, ஆன்லைன் பேமெண்ட், புதிய பாஸ்வேர்டு உருவாக்குவது போன்ற முக்கிய வேலைகளைச் செய்யும்போது, சிஸ்டம் ஒரு பிரத்யேக OTP-ஐ உருவாக்கி, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அல்லது இ-மெயிலுக்கு அனுப்பும். நீங்கள் சரியான OTP-ஐ உள்ளிட்டால் மட்டுமே, அந்தச் செயல்முறை நிறைவடையும்.&lt;img&gt;பாதுகாப்பு காரணங்களுக்காகவே OTP சில நிமிடங்களில் காலாவதியாகிவிடும். ஒருவேளை OTP நீண்ட நேரம் செல்லுபடியானால், அதை வேறு யாராவது தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. இதனால்தான் பெரும்பாலான OTP-கள் 30 விநாடிகள் முதல் 10 நிமிடங்களுக்குள் காலாவதியாகிவிடும்.&lt;img&gt;வங்கி மற்றும் சைபர் பாதுகாப்பு ஏஜென்சிகள் எப்போதும் OTP-ஐ யாருடனும் பகிர வேண்டாம் என்று எச்சரிக்கின்றன. உங்கள் OTP-ஐத் தெரிந்துகொண்டால், உங்கள் வங்கிக் கணக்கு, UPI, இ-மெயில் அல்லது சமூக ஊடகக் கணக்கை ஹேக் செய்ய முடியும். சைபர் திருடர்கள் தங்களை வங்கி அதிகாரி, CBI அதிகாரி, அரசு ஊழியர் என்று கூறி OTP-ஐக் கேட்பார்கள். எனவே யாரிடமும் கொடுக்காதீர்கள்.&lt;img&gt;OTP ஒரு வலுவான பாதுகாப்பு அம்சம்தான், ஆனால் அது மட்டுமே எல்லாவிதமான சைபர் தாக்குதல்களையும் தடுத்துவிடாது. எனவே, வலுவான பாஸ்வேர்டு, இரண்டு அடுக்கு பாதுகாப்பு (Two-Factor Authentication), அதிகாரப்பூர்வ செயலிகளைப் பயன்படுத்துதல் மற்றும் விழிப்புணர்வும் அவசியம்.&lt;img&gt;&lt;ul&gt; &lt;li&gt;இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் 5.5 பில்லியன் (550 கோடி) OTP SMS அனுப்பப்படுகின்றன. இது இந்தியாவை உலகின் மிகப்பெரிய OTP சந்தையாக மாற்றியுள்ளது.&lt;/li&gt; &lt;li&gt;இந்தியாவில் உள்ள சுமார் 90% வங்கிகள் மற்றும் ஃபின்டெக் நிறுவனங்கள், SMS OTP-ஐ தங்களின் இயல்புநிலை பாதுகாப்பு அம்சமாக (Two-Factor Authentication) பயன்படுத்துகின்றன.&lt;/li&gt; &lt;li&gt;இந்தியாவின் நியோபேங்குகள், டிஜிட்டல் கடன் வழங்கும் நிறுவனங்கள் மாதத்திற்கு 200 கோடிக்கும் அதிகமான OTP-களை அனுப்புகின்றன.&lt;/li&gt; &lt;li&gt;இந்தியாவில் நடக்கும் சைபர் மோசடி வழக்குகளில், OTP தொடர்பான மோசடிகளே அதிகம். மொத்த வழக்குகளில் 25%-க்கும் அதிகமானவை OTP ஸ்கேம்கள் தான்.&lt;/li&gt;&lt;/ul&gt;]]></content:encoded>
            <category>technology-tech-tips</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/technology-tech-tips/the-ultimate-guide-to-otp-security-and-how-it-works-nsz33pg"/>
        </item>
        <item>
            <title><![CDATA[செகண்ட் ஹேண்ட் போன் வாங்குவதற்கு முன்பு இதை கவனியுங்க.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/webstories/technology/must-know-tips-for-purchasing-a-reliable-used-smartphone-rag-nzevpo3</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/webstories/technology/must-know-tips-for-purchasing-a-reliable-used-smartphone-rag-nzevpo3</guid>
            <pubDate>Tue, 03 Jun 2025 13:07:17 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;இன்றைய வேகமாக மாறிவரும் ஸ்மார்ட்போன் துறையில், புத்தம் புதிய ஸ்மார்ட்போன்களுக்கு மாற்றாக செகண்ட் ஹேண்ட் போன்களை பலரும் வாங்குகிறார்கள்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j4rs2s69axhgz5manekbt1b2,imgname-15--19-.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <category>technology-tech-tips</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/webstories/technology/must-know-tips-for-purchasing-a-reliable-used-smartphone-rag-nzevpo3"/>
        </item>
        <item>
            <title><![CDATA[தூக்கமின்றி தவிக்கிறீர்களா..? இரவில் வைஃபையை அணைக்காததுதான் காரணமா..? ஆராய்ச்சிகள் தரும் அதிர்ச்சி..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/technology-tech-tips/turn-off-wifi-before-sleeping-at-night-electromagnetic-radiation-bedroom-tips-articleshow-qdv6gfy</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/technology-tech-tips/turn-off-wifi-before-sleeping-at-night-electromagnetic-radiation-bedroom-tips-articleshow-qdv6gfy</guid>
            <pubDate>Sun, 24 Aug 2025 10:54:46 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Wifi கதிர்வீச்சு தூக்கத்தை பாதிக்கிறதா என்பது குறித்து இப்போது கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனாலும், அது ஒரு உளவியல் விளைவைக் கொண்டிருப்பது உறுதி. உண்மையில் இது நோசெபோ தாக்கம் என்று கூறப்படுகிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k0bd5k5mtsajjfmcy72vxcys,imgname-jio-fiber-wifi-plan-price-1752729570484.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;உங்கள் இரவுகளை தூக்கமின்றி கழிக்கிறீர்களா? காலையில் எழுந்தவுடன் இரவு முழுவதும் தூங்கவில்லை என்பது போல் உணர்கிறீர்களா? உங்கள் வைஃபை ரூட்டர் உங்கள் தூக்கத்தைத் திருடுகிறது என்பதை அறிந்து நீங்கள் அதிர்ச்சி அடைவீர்கள். உங்கள் அறையில் இருக்கும் ரூட்டர் நிறுவப்பட்டதில் இருந்து தொடர்ந்து இயக்கத்தில் உள்ளது. வீடு முழுவதும் வைஃபை சிக்னல்களை வீசுகிறது. வைஃபையின் மின்காந்த கதிர்வீச்சு நமது தூக்க முறையை கடுமையாக பாதிக்கும் என்று சில ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில், இரவில் தூங்கும்போது வைஃபையை அணைக்க வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது?&lt;/p&gt;&lt;p&gt;&lt;img&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஆர்எம்ஐடி பல்கலைக்கழகம் 2024 ஆம் ஆண்டில் இந்த விஷயத்தில் ஒரு ஆய்வை நடத்தியது. மக்கள் ஒரு வாரம் வைஃபை அருகே தூங்க வைக்கப்பட்டனர். இதன் விளைவாக 27% மக்களில் தூக்கமின்மை போன்ற அறிகுறிகள் காணப்பட்டன. இது தவிர, மூளை செயல்பாடு அதிகரித்ததாகவும் காணப்பட்டது. இது தூக்கத்திற்கு நல்லதல்ல. இதேபோல், 2021 ஆம் ஆண்டு எலிகள் மீது நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், 2.4 GHz WiFi சிக்னல் எலிகளை அதிகமாக விழித்திருக்க வைத்தது. அவற்றின் ஆழ்ந்த தூக்கம் குறைந்தது என்று கண்டறியப்பட்டது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;இருப்பினும், உலக சுகாதார நிறுவனம் இதை மறுத்து, WiFi கதிர்வீச்சு மிகவும் குறைவாக உள்ளது என்றும் அது மனித தூக்கத்தை பாதிக்காது என்றும் கூறுகின்றன. இந்நிலையில், மனித தூக்கத்தில் WiFi இன் விளைவு குறித்து நிபுணர்களிடையே வேறுபாடுகள் உள்ளன. ஆனால் இரண்டு விஷயங்கள் மிகவும் தெளிவாக உள்ளன. முதலாவது, WiFi கதிர்வீச்சு அது குறைந்த அளவில் இருந்தாலும் கூட நிச்சயமாக நிகழ்கிறது. இரண்டாவதாக, அது நிச்சயமாக ஒரு உளவியல் விளைவைக் கொண்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;img&gt;&lt;/p&gt;&lt;p&gt;Wifi கதிர்வீச்சு தூக்கத்தை பாதிக்கிறதா என்பது குறித்து இப்போது கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனாலும், அது ஒரு உளவியல் விளைவைக் கொண்டிருப்பது உறுதி. உண்மையில் இது நோசெபோ தாக்கம் என்று கூறப்படுகிறது. இதில் WiFi இன் கதிர்வீச்சு யாருடைய உடலையும் பாதிக்காவிட்டாலும், WiFi உடலைப் பாதிக்கிறது என்ற கவலையால் தூக்கம் மீண்டும் மீண்டும் தடைபடுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், இரவில் வைஃபை அணைக்கப்பட்டால், அதனால் என்ன நன்மைகள் ஏற்படும், எந்த சந்தர்ப்பங்களில் வைஃபை அணைப்பது பயனளிக்காது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;வைஃபையின் மின்காந்த கதிர்வீச்சின் விளைவு அனைவருக்கும் காணப்படாமல் போகலாம். ஆனால் அது நிச்சயமாக சிலரின் தூக்கத்தைக் கெடுக்கும். இந்நிலையில், நீங்கள் மோசமான தூக்கப் பிரச்சினையைச் சந்தித்தால், அனைத்து நடவடிக்கைகளுடன் வைஃபை அணைப்பதையும் ஒரு தீர்வாக முயற்சிக்கலாம். உங்கள் மனம் நிம்மதியடையும், உங்களுக்கு சிறந்த தூக்கம் கிடைக்கும்.&lt;img&gt;&lt;/p&gt;&lt;p&gt;தூக்கத்தைத் தவிர, இரவில் வைஃபை ரூட்டரை அணைப்பது தரவு மற்றும் மின்சாரத்தையும் சேமிக்கிறது. இது தவிர, இரவில் ரூட்டரை அணைத்தால் உங்கள் ரூட்டரின் ஆயுள் மிகவும் சிறப்பாக மாறும். வைஃபை கதிர்வீச்சு தூக்கத்தைப் பாதிக்கிறதா இல்லையா? என்ற பிரச்சினையில் நிபுணர்கள் பிரிக்கப்பட்டிருந்தாலும், இரவில் வைஃபை அணைத்தால், அது நிச்சயமாக உங்களுக்கு மன அமைதியைத் தரும். வைஃபை அணைக்கப்பட்டால், உங்கள் மனதின் எங்கோ ஒரு மூலையில் கதிர்வீச்சு அமர்ந்திருக்கும் என்ற பயம் நீங்கும்.&lt;/p&gt;&lt;p&gt;நீங்கள் வீட்டில் ஸ்மார்ட் சாதனங்களைப் பயன்படுத்தினால், அத்தகைய சூழ்நிலையில் வைஃபையை அணைப்பது நன்மை பயப்பதற்குப் பதிலாக தீங்கு விளைவிக்கும். உண்மையில், ஸ்மார்ட் சாதனங்களுக்கு தொடர்ந்து இணையம் தேவை. இது தவிர, உங்கள் ஸ்மார்ட் சாதனங்களில் ஏதேனும் ஆட்டோமேஷனைப் பயன்படுத்தினால், வைஃபை இணையம் இல்லாமல் அதன் திட்டமிடப்பட்ட வேலையை சரியான நேரத்தில் முடிக்க முடியாது. உங்கள் அறையில் வைஃபை இருக்கக்கூடாது என்று நீங்கள் இன்னும் விரும்பினால், வீட்டின் வேறு ஏதேனும் இடத்தில் ரூட்டரை அமைக்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>technology-tech-tips</category>
            <dc:creator>Thiraviya raj</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/technology-tech-tips/turn-off-wifi-before-sleeping-at-night-electromagnetic-radiation-bedroom-tips-articleshow-qdv6gfy"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Food Delivery Hack: Zomato-Swiggy-ல இப்படி ஆர்டர் பண்ணா பில் பாதியா குறையும்! இப்படி ட்ரை பண்ணுங்க]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/technology-tech-tips/zomato-swiggy-hack-to-save-money-on-weekend-food-orders-rd3ych7</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/technology-tech-tips/zomato-swiggy-hack-to-save-money-on-weekend-food-orders-rd3ych7</guid>
            <pubDate>Sat, 30 May 2026 22:48:13 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;எல்லா Zomato-Swiggy காம்போக்களும் உண்மையிலேயே மலிவானவையா? சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் உணவு ஆர்டர் செய்வது அதிக விலை கொண்டதாக இருக்குமா? ஒரு எளிய தந்திரத்தின் மூலம் ஒவ்வொரு ஆர்டரிலும் ₹50-₹100 வரை சேமிக்க முடியுமா?&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kswxtak6hkr7dkatshp984ac,imgname-zomato-swiggy-offers-1780160997990.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;எல்லா Zomato-Swiggy காம்போக்களும் உண்மையிலேயே மலிவானவையா? சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் உணவு ஆர்டர் செய்வது அதிக விலை கொண்டதாக இருக்குமா? ஒரு எளிய தந்திரத்தின் மூலம் ஒவ்வொரு ஆர்டரிலும் ₹50-₹100 வரை சேமிக்க முடியுமா?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சனிக்கிழமை மாலையாக இருந்தாலும் சரி, ஞாயிற்றுக்கிழமை முழுதாக இருந்தாலும் சரி, பலருக்கு சமைக்கும் மனநிலை இருப்பதில்லை. குறிப்பாக, வீட்டை விட்டு வெளியே வசிக்கும் திருமணமாகாத ஆண்களும் பெண்களும். பெரும்பாலானோர் உடனடியாகத் தங்கள் தொலைபேசியை எடுத்து, ஸொமேட்டோ அல்லது ஸ்விக்கி செயலியைத் திறந்து, தங்களுக்குப் பிடித்த உணவை ஆர்டர் செய்கிறார்கள். ஆனால், வார இறுதி நாட்களிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், இந்த உணவுச் செயலிகள் உங்கள் பசியையும் சோம்பலையும் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, உங்கள் பணத்தை அமைதியாகக் காலி செய்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? இன்று நாங்கள் ஆன்லைன் உணவு ஆர்டர் செய்வது தொடர்பான ஒரு 'மெனு தந்திரத்தை' உங்களுக்குச் சொல்லப் போகிறோம். இதைத் தெரிந்துகொண்ட பிறகு, நீங்கள் உணவு ஆர்டர் செய்யும்போது குறைந்தபட்சம் ₹50 முதல் ₹100 வரை எளிதாகச் சேமிக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சனிக்கிழமைகளிலோ அல்லது ஞாயிற்றுக்கிழமைகளிலோ, நாம் தனியாகவோ அல்லது நண்பர்களுடனோ இருக்கும்போது, ​​செயலிகள் பெரிய எழுத்துக்களில் &quot;ஞாயிறு சிறப்பு காம்போ&quot; அல்லது &quot;சூப்பர் சேவர் மீல்&quot; என்று விளம்பரப்படுத்தப்படுவதைப் பார்க்கிறோம். உதாரணமாக, ஒரு பர்கர், ஃபிரெஞ்ச் ஃப்ரைஸ் மற்றும் ஒரு குளிர்பானம் அடங்கிய காம்போவின் விலை ₹299 ஆக இருக்கும். இது ஒரு காம்போ என்பதால் விலை மலிவாகத்தான் இருக்கும் என்று கருதி, நாம் யோசிக்காமல் அதை வாங்கிவிடுகிறோம், இது நமது செலவை அதிகரிக்கிறது.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;என்ன செய்ய வேண்டும்?&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;அடுத்த முறை, ஒரு காம்போவை கிளிக் செய்வதற்குப் பதிலாக, ஒவ்வொரு பொருளையும் தனித்தனியாகத் தேடி உங்கள் கார்ட்டில் சேர்க்கவும். அதே பர்கர், ஃபிரைஸ் மற்றும் கோக் ஆகியவற்றைத் தனித்தனியாகச் சேர்த்தால் வெறும் ₹250 அல்லது ₹260 மட்டுமே செலவாகும் என்பதைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். யாரும் இதுபோன்ற கணக்கீடுகளைச் செய்ய மாட்டார்கள் என்பதை அறிந்து, செயலிகள் பெரும்பாலும் நமது &quot;ஞாயிற்றுக்கிழமை சோம்பலை&quot; சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;h3&gt;&lt;strong&gt;மறைமுக விநியோகக் கட்டணங்கள் (அதிகரிப்பு விலை)&lt;/strong&gt;&lt;/h3&gt;&lt;p&gt;ஞாயிற்றுக்கிழமை மதிய நேரங்களிலும் இரவுகளிலும் ஆர்டர்கள் குறிப்பாக அதிகமாக இருக்கும். இந்த செயலிகள், அதிக தேவை அல்லது &quot;சர்ஜ் கட்டணங்கள்&quot; என்ற பெயரில் ₹20 முதல் ₹40 வரை கூடுதல் டெலிவரி கட்டணத்தை அடிக்கடி சேர்க்கின்றன; மற்ற நாட்களில் இந்தக் கட்டணம் இருப்பதில்லை அல்லது மிகக் குறைவாகவே இருக்கும்.&lt;/p&gt;&lt;h3&gt;&lt;strong&gt;மெனு பணவீக்கம்&lt;/strong&gt;&lt;/h3&gt;&lt;p&gt;உணவகங்களில் ₹150 விலையுள்ள பனீர் டிக்கா அல்லது மசாலா தோசை, இந்த செயலிகளில் ₹200 முதல் ₹220 வரை பட்டியலிடப்பட்டுள்ளது. நிறுவனங்கள் இதை &quot;பேக்கிங் மற்றும் கையாளுதல் கட்டணம்&quot; என்ற பெயரில் மறைக்கின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;h3&gt;&lt;strong&gt;உணவகத்தை நேரடியாக அழைக்கவும்&lt;/strong&gt;&lt;/h3&gt;&lt;p&gt;உணவகம் உங்கள் வீட்டிற்கு அருகில் இருந்தால், செயலி மூலம் ஆர்டர் செய்வதற்குப் பதிலாக அவர்களை நேரடியாகத் தொடர்புகொள்ளுங்கள். பெரிய ஆர்டர்களுக்கு, அவர்கள் பெரும்பாலும் செயலி கட்டணத்தை விட 15-20% குறைவாகக் கட்டணம் வசூலிப்பதுடன், தங்களுடைய சொந்த இலவச விநியோக ஊழியரையும் அனுப்புவார்கள்.&lt;/p&gt;&lt;h3&gt;&lt;strong&gt;கூப்பன் குறியீட்டைச் சரிபார்க்க மறக்காதீர்கள்&lt;/strong&gt;&lt;/h3&gt;&lt;p&gt;பணம் செலுத்தும் பக்கத்திற்குச் செல்வதற்கு முன், 'கூப்பன்களைப் பயன்படுத்துங்கள்' பகுதி வரை ஸ்க்ரோல் செய்யவும். பெரும்பாலும், உங்கள் கட்டணத்தை உடனடியாக ₹40 முதல் ₹50 வரை குறைக்கக்கூடிய மறைக்கப்பட்ட வங்கிச் சலுகைகள் அல்லது 'ஞாயிறு சிறப்பு' கூப்பன்கள் இருக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இலவச டெலிவரி கிடைக்கும் என்பதற்காக மட்டும், ₹50 மதிப்புள்ள கூடுதல் பொருட்களை வலுக்கட்டாயமாகச் சேர்க்காதீர்கள். சில சமயங்களில், இலவச டெலிவரிக்காக மட்டும் உங்கள் கார்ட்டில் கூடுதலாக ₹100 மதிப்புள்ள பொருளைச் சேர்ப்பதை விட, ₹30 டெலிவரி கட்டணம் செலுத்துவது அதிகப் பயனளிக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பொறுப்புத் துறப்பு: &lt;/strong&gt;இந்தக் கட்டுரை பொதுவான தகவல் மற்றும் விழிப்புணர்வு நோக்கங்களுக்காக மட்டுமே. Zomato, Swiggy அல்லது வேறு எந்த உணவு விநியோகத் தளத்திலும் உள்ள விலைகள், சலுகைகள், விநியோகக் கட்டணங்கள், கூப்பன்கள் மற்றும் காம்போ டீல்கள் நேரம், இடம், உணவகம் மற்றும் பயனர் கணக்கைப் பொறுத்து மாறுபடலாம். ஆர்டர் செய்வதற்கு முன், செயலியில் காட்டப்படும் விலைகள் மற்றும் விதிமுறைகளை எப்போதும் சரிபார்க்கவும். இந்தக் கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ள சேமிப்புக் குறிப்புகள் பொதுவான அனுபவம் மற்றும் கிடைக்கக்கூடிய தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை; அவை ஒரு குறிப்பிட்ட நிதி ஆதாயத்திற்கான உத்தரவாதமாகக் கருதப்படக்கூடாது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>technology-tech-tips</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/technology-tech-tips/zomato-swiggy-hack-to-save-money-on-weekend-food-orders-rd3ych7"/>
        </item>
        <item>
            <title><![CDATA[AI Photos : AI படங்களை ஈசியா எப்படி கண்டுபிடிக்கலாம்? சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/technology/how-to-identify-ai-generated-images-uh65nv9</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/technology/how-to-identify-ai-generated-images-uh65nv9</guid>
            <pubDate>Mon, 13 Jul 2026 18:54:08 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;AI Photos : செயற்கை நுண்ணறிவுப் படங்கள் சமூக வலைத்தளங்களில் பெருகி வருகின்றன. இந்த டிஜிட்டல் உலகில் உண்மைக்கும் பொய்க்கும் உள்ள வேறுபாட்டை எவ்வாறு கண்டறியலாம்? AI படங்களை இனம் காண சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக!&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxdsvf66fjtncdvkpm976gx8,imgname-chatgpt-image-jul-13--2026--06-37-07-pm-1783948491974.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;AI Photos : செயற்கை நுண்ணறிவுப் படங்கள் சமூக வலைத்தளங்களில் பெருகி வருகின்றன. இந்த டிஜிட்டல் உலகில் உண்மைக்கும் பொய்க்கும் உள்ள வேறுபாட்டை எவ்வாறு கண்டறியலாம்? AI படங்களை இனம் காண சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்றைய டிஜிட்டல் யுகத்தில், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்படும் படங்கள் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாகப் பரவி வருகின்றன. இவை நிஜமான புகைப்படங்கள் போலவே தோற்றமளித்தாலும், அவை பெரும்பாலும் பொய்யான தகவல்களைப் பரப்புவதற்கே பயன்படுத்தப்படுகின்றன. 2023 ஆம் ஆண்டில், பல நாடுகளில் அரசியல் தலைவர்களின் போலியான AI படங்கள் பரவி பெரும் குழப்பத்தை ஏற்படுத்தின. இத்தகைய தவறான தகவல்கள் பொதுமக்களின் முடிவெடுக்கும் திறனைப் பாதித்து, சமூகத்தில் தேவையற்ற பதற்றத்தையும் வதந்திகளையும் உருவாக்குகின்றன. உண்மை நிலையைத் தெரிந்துகொள்ளவும், தவறான தகவல்களில் சிக்காமல் இருக்கவும், AI படங்களை அடையாளம் காணும் திறன் ஒவ்வொருவருக்கும் அவசியமாகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;செயற்கை நுண்ணறிவு உருவாக்கிய படங்களை அடையாளம் காண மிகவும் பொதுவான ஒரு வழி, படத்திலுள்ள மனிதர்களின் கை விரல்களை உற்று நோக்குவதுதான். AI மாதிரிகள், மனித கைகளைத் துல்லியமாக உருவாக்குவதில் இன்னும் போராடுகின்றன. பெரும்பாலும், ஒரு கையில் ஐந்து விரல்களுக்குப் பதிலாக ஆறு விரல்கள் அல்லது நான்கு விரல்கள் என எண்ணிக்கையில் பிழைகள் இருக்கும். விரல்களின் வடிவம் மாறுபட்டதாகவோ, இயற்கைக்கு மாறாக வளைந்ததாகவோ அல்லது ஒன்றுடன் ஒன்று கலந்ததாகவோ தோன்றும். நகங்கள் விசித்திரமான வடிவத்தில் இருக்கும் அல்லது அறவே இருக்காது. இந்த சிறிய குறைபாடு ஒரு படத்தை AI உருவாக்கியதா இல்லையா என்பதை உடனடியாகக் காட்டிக்கொடுக்கும். இதனை நீங்கள் எளிதாகக் கவனிக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;AI படங்களை அடையாளம் காண மற்றொரு முக்கிய அம்சம், அவற்றின் பின்னணிகளையும் அருகிலுள்ள பொருட்களையும் ஆராய்வதுதான். செயற்கை நுண்ணறிவு, மனித உருவங்களை உருவாக்குவதில் சிறந்ததாக இருந்தாலும், பின்னணிகளை உருவாக்குவதில் பெரும்பாலும் தடுமாறும். கட்டிடங்களின் கோடுகள் வளைந்ததாகவோ, சாளரங்கள் சீரற்றதாகவோ இருக்கலாம். மரங்கள் அல்லது தாவரங்கள் இயற்கைக்கு மாறான வடிவத்தில் தோன்றும். கூட்டமாக இருக்கும் படங்களில்கூட, பின்னணியில் உள்ள பல முகங்கள் மங்கலாகவோ, சிதைந்ததாகவோ காணப்படும். ஒரு படத்திலுள்ள எழுத்துகள் தெளிவற்றதாகவோ, பொருளற்றவையாகவோ இருந்தால், அது AI உருவாக்கிய படமாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. இந்த நுட்பமான விவரங்கள், ஒரு படத்தை நிஜத்திலிருந்து வேறுபடுத்தி அறிய உதவும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நிஜமான புகைப்படங்களில் ஒளி, நிழல் மற்றும் பிரதிபலிப்புகள் ஒரு குறிப்பிட்ட லாஜிக்கைப் பின்பற்றும். ஆனால், செயற்கை நுண்ணறிவுப் படங்கள் இந்த அம்சங்களை உருவாக்குவதில் பெரும்பாலும் குழப்பமடைகின்றன. படத்திலுள்ள வெவ்வேறு பொருட்களின் மீது விழும் ஒளியின் திசை முரண்பாடாகத் தோன்றும். ஒரு பொருளிலிருந்து விழும் நிழல் தர்க்கரீதியாக இருக்காது அல்லது அறவே இல்லாமல் போகலாம். தண்ணீர் அல்லது கண்ணாடி போன்ற பளபளப்பான பரப்புகளில் தெரியும் பிரதிபலிப்புகள் சரியாக இருக்காது. உதாரணமாக, மனிதர்களின் கண்களில் பிரதிபலிப்புகள் இல்லாதது அல்லது விசித்திரமாகத் தெரிவது பொதுவானது. ஒரு படத்திலுள்ள எழுத்துகள் பெரும்பாலும் சிதைந்தவையாகவோ, வாசிக்க முடியாதவையாகவோ காணப்படும். இந்த நுணுக்கமான பிழைகளும் AI படங்களை அடையாளம் காண உதவும்.&lt;/p&gt;&lt;p&gt;LPG Cylinder : உங்க கேஸ் சிலிண்டர் 2 மாதம் வரணுமா? பலருக்கும் தெரியாத சூப்பர் டிப்ஸ் இதோ!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பொதுமக்கள் செயற்கை நுண்ணறிவுப் படங்களை அடையாளம் காண, இணையத்தில் கிடைக்கும் சில இலவச கருவிகளையும் பயன்படுத்தலாம். 'ஹைவ் AI டிடெக்டர்' (Hive AI Detector) போன்ற சில தளங்கள் ஒரு படம் AI ஆல் உருவாக்கப்பட்டதா என்பதை பகுப்பாய்வு செய்து சொல்லும். கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடல் (Google Reverse Image Search) மூலம், ஒரு படம் முதலில் எங்கு வெளியிடப்பட்டது என்பதைக் கண்டறிந்து, அதன் மூலத்தை சரிபார்க்கலாம். ஒரு படத்தை பார்க்கும் போது, அது எங்கிருந்து வந்தது, அதை யார் வெளியிட்டார்கள் என்று எப்போதும் கேள்வி கேட்க வேண்டும். நம்பகமான செய்தி நிறுவனங்கள் அல்லது சரிபார்க்கப்பட்ட சமூக ஊடகக் கணக்கிலிருந்து மட்டுமே தகவல்களைப் பெறுங்கள். எந்தவொரு படத்தைப் பற்றியும் சந்தேகம் இருந்தால், அதை பகிராமல் தவிர்ப்பது தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்கும். விழிப்புடன் இருங்கள்.&lt;/p&gt;&lt;p&gt;AI Lawyer : ஒரிஜினல் வக்கீலை தோற்கடித்த AI Lawyer! அப்போ இனிமேல் வக்கீல்களின் நிலை?&lt;/p&gt;]]></content:encoded>
            <category>technology-tech-tips</category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/technology/how-to-identify-ai-generated-images-uh65nv9"/>
        </item>
        <item>
            <title><![CDATA[கூகுள் பே, போன் பே பரிவர்த்தனை ஹிஸ்ட்ரியை நீக்குவது எப்படி?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/technology-tech-tips/how-to-delete-google-pay-and-phonepe-transaction-history-articleshow-uyat62r</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/technology-tech-tips/how-to-delete-google-pay-and-phonepe-transaction-history-articleshow-uyat62r</guid>
            <pubDate>Wed, 16 Jul 2025 15:21:27 +0530</pubDate>
            <description><![CDATA[UPI பரிவர்த்தனை வரலாற்றை நீக்குவது எப்படி? நீங்கள் UPI-ஐப் பயன்படுத்தினால், பரிவர்த்தனை வரலாற்றை நீக்க முயற்சித்திருக்கலாம். அதைச் செய்வதற்கான சரியான வழி மற்றும் RBI விதிகள் என்னவென்று இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k098hffbsw3wgjxgt4nyhxez,imgname-google-pay-phonepe--transaction-history-kaise-delete-kare-1752657608171.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;இப்போதெல்லாம் பணம் செலுத்துவதற்கு ரொக்கப் பணத்தைப் பயன்படுத்துவது மிகவும் குறைவு. UPI நம் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாகிவிட்டது. 5 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரை அனைத்தும் மொபைல் மூலம் செய்யப்படுகிறது. மக்களின் ஸ்மார்ட்போன்களில் வேறு எதுவும் இல்லாவிட்டாலும் போன் பே, கூகுள் பே போன்ற செயலிகள் இருக்கும். இவற்றை இயக்குவதுடன் பணத்தை மாற்றுவதும் மிகவும் எளிது.&lt;/p&gt;&lt;p&gt;நீங்களும் பல ஆண்டுகளாக UPI செயலிகளைப் பயன்படுத்தி வருகிறீர்கள், ஆனால் இன்றுவரை உலாவல் வரலாற்றை நீக்கவில்லை என்றால், இந்தச் செய்தி உங்களுக்கானது. காலப்போக்கில், UPI-யில் பல பரிவர்த்தனைகள் சேரும். உங்கள் UPI ID-யிலிருந்து ஏதேனும் தனிப்பட்ட பரிவர்த்தனைகளை நீக்க விரும்புகிறீர்கள், ஆனால் முயற்சித்த பிறகும் அதைச் செய்ய முடியவில்லை என்றால், இப்போது உங்களுக்காக ஒரு எளிய தந்திரத்தைக் கொண்டு வந்துள்ளோம். இதன் மூலம் மிக எளிதான வழிமுறைகளில் கட்டண வரலாற்றை நிர்வகிக்கலாம்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;கூகுள் பே, போன் பே பரிவர்த்தனை வரலாற்றை நீக்குவது எப்படி?&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;இந்திய ரிசர்வ் வங்கியின் விதிகள் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளின் கீழ், UPI செயலிகளிலிருந்து பரிவர்த்தனை வரலாற்றை முழுமையாக நீக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளவும். இருப்பினும், அவற்றை நிர்வகிக்க முடியும்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;கூகுள் பே விதி என்ன சொல்கிறது?&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;ul&gt; &lt;li&gt;கூகுள் பேயில் வரலாற்றை நீக்க முடியாது. இங்கே, கூகுள் கணக்கிற்குச் சென்று செயல்பாடுகளை நிர்வகிக்கலாம். நீங்கள் அவ்வாறு செய்ய விரும்பினால் -&lt;/li&gt; &lt;li&gt;உங்கள் தொலைபேசியில் கூகுள் பேயைத் திறக்கவும்&lt;/li&gt; &lt;li&gt;உங்கள் எண்ணுடன் உள்நுழையவும்&lt;/li&gt; &lt;li&gt;கீழே பரிவர்த்தனை விருப்பத்தைக் காண்பீர்கள்&lt;/li&gt; &lt;li&gt;அதைக் கிளிக் செய்து, பக்கத்தில் x (குறுக்கு) குறியைக் காண்பீர்கள்.&lt;/li&gt; &lt;li&gt;இங்கே கடைசி மணிநேரம், எல்லா நேரம் போன்ற விருப்பங்கள் இருக்கும், உங்கள் வசதிக்கேற்ப தேர்வு செய்யவும்&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;h2&gt;&lt;strong&gt;போன் பேயில் வரலாற்றை எப்படி நீக்குவது?&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;ul&gt; &lt;li&gt;இங்கேயும் நேரடியாக நீக்கும் விருப்பம் இல்லை.&lt;/li&gt; &lt;li&gt;அதற்குப் பதிலாக, செயலி தரவை அழிக்கும் விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.&lt;/li&gt; &lt;li&gt;இதற்கு, அமைப்புகளுக்குச் சென்று, செயலிகள் என்பதைத் தேர்ந்தெடுத்து, பின்னர் போன் பேயைத் தேர்ந்தெடுக்கவும்&lt;/li&gt; &lt;li&gt;இங்கே சேமிப்பகத்தைக் கிளிக் செய்து, தரவை அழி என்பதைக் காண்பீர்கள்&lt;/li&gt; &lt;li&gt;இதைக் கிளிக் செய்தால், தொலைபேசியின் உள்ளூர் வரலாறு நீக்கப்படும். இருப்பினும், சேவையகத்தில் தரவு சேமிக்கப்படும்.&lt;/li&gt;&lt;/ul&gt;]]></content:encoded>
            <category>technology-tech-tips</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/technology-tech-tips/how-to-delete-google-pay-and-phonepe-transaction-history-articleshow-uyat62r"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Fridge Blast : குளிர்சாதனப் பெட்டி வெடிப்பதற்கான 7 காரணங்கள்! தடுப்பது எப்படி?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/technology/7-reasons-why-a-refrigerator-can-explode-and-how-to-prevent-it-v82eczi</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/technology/7-reasons-why-a-refrigerator-can-explode-and-how-to-prevent-it-v82eczi</guid>
            <pubDate>Thu, 18 Jun 2026 17:24:37 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Fridge Blast : அத்தியாவசியப் பொருளாகிவிட்ட குளிர்சாதனப் பெட்டி வெடிக்குமா என்ற அச்சம் பலரது மனதிலும் எழுகிறது. ஆம், சில சமயங்களில் குளிர்சாதனப் பெட்டிகள் தீப்பிடித்து விபத்துகளை ஏற்படுத்தக்கூடும். இதை எப்படித் தடுப்பது என்பது குறித்து பார்ப்போம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kvd8f3y8zajdag4xg7cj2853,imgname-chatgpt-image-jun-18--2026--05-08-38-pm-1781782777800.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Fridge Blast : அத்தியாவசியப் பொருளாகிவிட்ட குளிர்சாதனப் பெட்டி வெடிக்குமா என்ற அச்சம் பலரது மனதிலும் எழுகிறது. ஆம், சில சமயங்களில் குளிர்சாதனப் பெட்டிகள் தீப்பிடித்து விபத்துகளை ஏற்படுத்தக்கூடும். இதை எப்படித் தடுப்பது என்பது குறித்து பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குளிர்சாதனப் பெட்டிகள் தீப்பிடிக்க அல்லது வெடிக்க பல காரணங்கள் இருந்தாலும், கீழ்காணும் 7 காரணங்களே பிரதானமாக பார்க்கப்படுகின்றன.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;1) மின் கசிவு மற்றும் ஷார்ட் சர்க்யூட்: &lt;/strong&gt;இது ஒரு பொதுவான காரணமாகும். பழைய அல்லது சேதமடைந்த வயரிங், பிளக் பாயிண்டுகளில் ஏற்படும் மின்கசிவு ஆகியவை தீ விபத்துகளுக்கு வழிவகுக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;2) கம்ப்ரஸர் அதிக வெப்பமடைதல்: &lt;/strong&gt;குளிர்சாதனப் பெட்டியின் பின்பகுதியில் உள்ள கம்ப்ரஸர், சரியான காற்றோட்டம் இல்லாதபோது அதிக வெப்பமடையலாம். இது கம்ப்ரஸர் வெடிப்பதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;3) வாயு கசிவு:&lt;/strong&gt; குளிர்சாதனப் பெட்டிகளில் பயன்படுத்தப்படும் R-600A போன்ற குளிர்பதன வாயுக்கள் எளிதில் தீப்பற்றக்கூடியவை. கசிவுகள் ஏற்பட்டால், மின்சார தீப்பொறியுடன் தொடர்பு கொள்ளும்போது தீப்பிடிக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;4) காற்றோட்டம் இல்லாத இடம்:&lt;/strong&gt; குளிர்சாதனப் பெட்டியை சுவரை ஒட்டி வைப்பதால், கம்ப்ரஸரில் இருந்து வெளியாகும் வெப்பம் சரியாக வெளியேறாமல், அதிக வெப்பமடையும். இதுவும் வெடிப்புக்கு ஒரு காரணமாகும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;5) இன்சுலேஷன் பொருள்: &lt;/strong&gt;சில குளிர்சாதனப் பெட்டிகளில் பயன்படுத்தப்படும் சைக்ளோபென்டேன் (cyclopentane) போன்ற இன்சுலேஷன் பொருட்கள், மின் கசிவு ஏற்படும்போது எளிதில் தீப்பிடிக்கும் தன்மை கொண்டவை.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;6) அதிகப்படியான பனிக்கட்டி உருவாக்கம்: &lt;/strong&gt;ஃப்ரீசரில் அதிகப்படியான பனிக்கட்டி குவிவது கம்ப்ரஸர் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும், இது செயலிழப்புக்கு வழிவகுத்து, வெடிக்கும் அபாயத்தை அதிகரிக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;7) தரமற்ற பாகங்கள்:&lt;/strong&gt; பழுதான பாகங்களை சரிசெய்யும்போது உள்ளூர் அல்லது தரமற்ற உதிரிபாகங்களைப் பயன்படுத்துவது மேலும் அபாயத்தை ஏற்படுத்தலாம்.&lt;/p&gt;&lt;p&gt;இதையும் படிங்க : AC Maintenance Tips: வெயில் காலத்தில் ஏசி தீ பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?&lt;/p&gt;&lt;img&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;முறையான அமைப்பு மற்றும் காற்றோட்டம் :&lt;/strong&gt; குளிர்சாதனப் பெட்டிக்கும் சுவருக்கும் இடையே குறைந்தது அரை அடி இடைவெளியை உறுதி செய்யுங்கள். இது கம்ப்ரஸர் வெளியிடும் வெப்பம் சீராக வெளியேற உதவும். நேரடி சூரிய ஒளி படும் இடங்களில் அல்லது சமையலறை புகை படும் இடங்களில் பெட்டியை வைப்பதைத் தவிர்க்கவும்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;முறையான பராமரிப்பு: &lt;/strong&gt;ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ஒரு தகுதியான எலக்ட்ரீசியனைக் கொண்டு குளிர்சாதனப் பெட்டியின் வயரிங், ஆட்டோமேட்டிக் கட்-ஆஃப் சிஸ்டம் மற்றும் வாயு கசிவு இல்லை என்பதை சரிபார்க்க வேண்டும். மின்சார ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும் பகுதிகளில் ELCB (Earth Leakage Circuit Breaker) கருவியைப் பொருத்துவது பாதுகாப்பை அதிகரிக்கும்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;பனிக்கட்டியை நீக்குதல்:&lt;/strong&gt; ஒற்றை கதவு குளிர்சாதனப் பெட்டிகளில் பனிக்கட்டி அதிகமாகக் கட்டினால், கத்தி அல்லது கூர்மையான பொருட்களைப் பயன்படுத்தி அதனை அகற்ற முயற்சிக்காதீர்கள். இது கேஸ் குழாய்களில் கீறலை ஏற்படுத்தி கசிவுக்கு வழிவகுக்கும். பனிக்கட்டியை கைமுறையாக நீக்கும் முறையைப் பின்பற்றுங்கள் அல்லது நிபுணரின் உதவியைப் நாடுங்கள்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;பொருட்களை கவனமாக கையாளுதல்:&lt;/strong&gt; குளிர்சாதனப் பெட்டியை நகர்த்தும்போது அல்லது சுத்தம் செய்யும்போது அதன் பின்புறம் உள்ள மெல்லிய பைப்லைன்கள் சேதமடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;ஓவர்லோட் செய்வதைத் தவிர்த்தல்: &lt;/strong&gt;குளிர்சாதனப் பெட்டியில் அதிகப்படியான பொருட்களை திணிப்பதைத் தவிர்க்கவும். இது காற்று சுழற்சியைத் தடுத்து, கம்ப்ரஸர் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;சூடான பொருட்களை வைக்க வேண்டாம்: &lt;/strong&gt;சூடான உணவுகளை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைப்பதற்கு முன், அவற்றை அறையின் வெப்பநிலைக்குக் கொண்டு வாருங்கள்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;குழந்தைகளின் பாதுகாப்பு:&lt;/strong&gt; குழந்தைகள் குளிர்சாதனப் பெட்டியின் பின்புறம் உள்ள வயரிங் மற்றும் கேஸ் குழாய்களை தொடாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;AC அறையில் குளிர்சாதனப் பெட்டி: &lt;/strong&gt;AC உள்ள அறையில் குளிர்சாதனப் பெட்டியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். குளிர்சாதனப் பெட்டி குளிர்ந்த காற்றை உற்பத்தி செய்து, பின்னர் சூடான காற்றை வெளியேற்றுவதால், AC இன் செயல்திறனைக் குறைக்கும் மற்றும் மின்சாரச் செலவை அதிகரிக்கும்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;சுத்தமாக வைத்திருத்தல்: &lt;/strong&gt;குளிர்சாதனப் பெட்டியை மாதத்திற்கு ஒருமுறையாவது வினிகர் அல்லது எலுமிச்சை சாறு கொண்டு சுத்தம் செய்யுங்கள். சோப்புத் தூள் அல்லது ஷாம்பு போன்றவற்றைத் தவிர்க்கவும். பின்புறம் சேகரமாகும் தண்ணீரையும் அவ்வப்போது வெளியேற்ற வேண்டும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;குளிர்சாதனப் பெட்டிகள் நமது அன்றாட வாழ்க்கையில் முக்கியப் பங்கு வகித்தாலும், அதன் சரியான பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்களில் கவனம் செலுத்துவது அவசியம். மேற்கூறிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் விபத்துகளைத் தவிர்த்து, உங்கள் குளிர்சாதனப் பெட்டியை பாதுகாப்பாகவும், திறம்படவும் பயன்படுத்தலாம். ஏதேனும் பழுது ஏற்பட்டால், உடனடியாக ஒரு தகுதியான தொழில்நுட்ப வல்லுநரை அணுகுவது நல்லது.&lt;/p&gt;&lt;p&gt;இதையும் படிங்க : Police Robot : ஓராண்டு பணி, ஒரு கைது கூட இல்லை! பணிநீக்கம் செய்யப்பட்ட ரோபோ போலீஸ் அதிகாரி&lt;/p&gt;]]></content:encoded>
            <category>technology-tech-tips</category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/technology/7-reasons-why-a-refrigerator-can-explode-and-how-to-prevent-it-v82eczi"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Airtel Plan: 25+ ஓடிடி இலவசம்! ரூ.279 போதும்! மாஸ் பிளான்களை அறிமுகம் செய்த ஏர்டெல்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/technology-tech-tips/airtel-offering-25-plus-ott-subscriptions-for-free-at-jus-rs-279-ray/articleshow-w379isy</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/technology-tech-tips/airtel-offering-25-plus-ott-subscriptions-for-free-at-jus-rs-279-ray/articleshow-w379isy</guid>
            <pubDate>Tue, 27 May 2025 13:37:02 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ஏர்டெல் நிறுவனம் ரூ.279 விலையில் 25க்கும் மேற்பட்ட ஓடிடி சந்தாக்களை இலவசமாக வழங்கும் பிளான்களை அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-ani20250326090259,imgname-image-f8eb3979-7ae1-448b-9827-1cd7ecbf37ca.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Airtel Free OTT Plans: இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களில் ஒன்றான பாரதி ஏர்டெல் இன்று ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்குப் புதிய இணையற்ற பொழுதுபோக்குப் பேக்குகளை அறிவித்துள்ளது. நெட்ஃபிளிக்ஸ், ஜியோஹாட்ஸ்டார், ஜீ5 மற்றும் சோனிலிவ் உள்ளிட்ட 25+ சிறந்த OTT தளங்களின் தொழில்துறை முன்னணி போர்ட்ஃபோலியோவை அணுகுவதன் மூலம் இவ்வளவு விரிவான பொழுதுபோக்கு அனுபவத்தை இந்தியாவில் ஏர்டெல் மட்டுமே வழங்குகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஏர்டெல் அறிமுகம் செய்த மாஸ் பிளான்கள்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;1 மாதத்துக்குச் செல்லுபடியாகும் ரூ.279 என்ற கவர்ச்சிகரமான அறிமுக விலையில் தொடங்கி ரூ.750 மதிப்புள்ள பல்வேறு பிரபலமான ஸ்ட்ரீமிங் தளங்களை வாடிக்கையாளர்கள் அணுகலாம். இதன் மூலம் இவ்வளவு பரந்த OTT ஸ்ட்ரீமிங் விருப்பத்தேர்வுகளை அணுக அனுமதிக்கும் ஒரே தொலைத்தொடர்பு நிறுவனமாக ஏர்டெல் உள்ளது. வரம்பற்ற பொழுதுபோக்கு வசதிக்காக வரம்பற்ற 5G டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் கொண்ட பொழுதுபோக்குப் பேக்குகளை நிறுவனம் ரூ.598 இல் தொகுத்து வழங்குகிறது. &amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஏர்டெல் அறிமுகப்படுத்திய ஓடிடி பிளான்களின் லிஸ்ட்:&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;1. ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே ஆப் வழியாக நேரடிச் சந்தா&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இதன் நன்மைகள்: நெட்ஃபிக்ஸ் பேசிக் + ஜீ5 +ஜியோஹாட்ஸ்டார் + ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம்&lt;/p&gt;&lt;p&gt;செல்லுபடியாகும் காலம்: 1 மாதம்&lt;/p&gt;&lt;p&gt;விலை: ரூ.279&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;2. ப்ரீபெய்டு மட்டும் உள்ளடங்கிய பேக்குகள்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இதன் நன்மைகள்: நெட்ஃபிக்ஸ் பேசிக் + ஜீ5 +ஜியோஹாட்ஸ்டார் + ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம்&lt;/p&gt;&lt;p&gt;செல்லுபடியாகும் காலம்: 1 மாதம்&lt;/p&gt;&lt;p&gt;விலை: ரூ.279&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;3. ஒரு மாதத்திற்கு 1 ஜிபி டேட்டா உள்ளிட்ட பேக்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இதன் நன்மைகள்: நெட்ஃபிக்ஸ் பேசிக் + ஜீ5 +ஜியோஹாட்ஸ்டார் + ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம்&lt;/p&gt;&lt;p&gt;செல்லுபடியாகும் காலம்: 28 நாட்கள்&lt;/p&gt;&lt;p&gt;விலை: ரூ.598&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;4. ஒரு மாதத்திற்கு 1 ஜிபி டேட்டா உள்ளிட்ட பேக்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இதன் நன்மைகள்: நெட்ஃபிக்ஸ் பேசிக் + ஜீ5 +ஜியோஹாட்ஸ்டார் + ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம்&lt;/p&gt;&lt;p&gt;செல்லுபடியாகும் காலம்: 84 நாட்கள்&lt;/p&gt;&lt;p&gt;விலை: ரூ.1729&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஜியோஹாட்ஸ்டார், ஜீ5 ஓடிடி சந்தா இலவசம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;வாடிக்கையாளர்கள் இப்போது நெட்ஃபிளிக்ஸ், ஜியோஹாட்ஸ்டார், ஜீ5 மற்றும் சோனிலிவ், லயன்ஸ்கேட்ப்ளே, ஏஎச்ஏ, சன்நெக்ஸ்ட், ஹோய்சோய், ஈஇராஸ்நவ், மற்றும் ஷெமாரூமீ போன்ற முன்னணி OTT தளங்களில் இருந்து பல்வேறு வகையான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் மற்றும் ஆவணப்படங்களை ஒரே தொகுப்பின் மூலம் அணுகலாம். இந்தப் பல்வேறு OTT சேவைகளை ஒரு மலிவு விலை தொகுப்பாக ஒருங்கிணைப்பதன் மூலம் நிறுவனம் அதன் ப்ரீபெய்ட் பயனர்களின் மாறிவரும் பொழுதுபோக்கு விருப்பங்களைப் பூர்த்தி செய்ய முயல்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;படங்கள், வெப் சீரிஸ்களை கண்டு ரசிக்கலாம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இது தனிப்பட்ட சந்தாக்களை நிர்வகிப்பதில் சிக்கல்கள் இல்லாமல் அவர்களின் விருப்பமான நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் அசல் உள்ளடக்கம் உட்பட 16 க்கும் மேற்பட்ட மொழிகளில் சர்வதேச, பாலிவுட் மற்றும் பிராந்திய உள்ளடக்கத்தை சிரமமின்றி கண்டுகளிக்க உதவுகிறது. இந்த உத்திசார்ந்த முயற்சி ஏர்டெல்லின் மதிப்பு முன்மொழிவை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒப்பிடமுடியாத வசதி, நெகிழ்வுத்தன்மை மற்றும் பல்வேறு வகையான பொழுதுபோக்கு விருப்பத்தேர்வுகளை வழங்குவதில் நிறுவனத்தின் அர்ப்பணிப்பையும் எடுத்துக்காட்டுகிறது.&amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>technology-tech-tips</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/technology-tech-tips/airtel-offering-25-plus-ott-subscriptions-for-free-at-jus-rs-279-ray/articleshow-w379isy"/>
        </item>
    </channel>
</rss>
