<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes"?>
<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Sat, 20 Dec 2025 12:59:07 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss/tamilnadu-vilupuram" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[100 கி.மீ வேகம்! குறுக்கே வந்த வாகனம்! சுக்கு நூறாக நொறுங்கிய KTM பைக்! இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-vilupuram/two-youths-die-in-ktm-bike-crash-without-helmets-on-villupuram-road-articleshow-0y7pvzg</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-vilupuram/two-youths-die-in-ktm-bike-crash-without-helmets-on-villupuram-road-articleshow-0y7pvzg</guid>
            <pubDate>Fri, 26 Sep 2025 13:44:47 +0530</pubDate>
            <description><![CDATA[விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் அதிவேகமாக தலைக்கவசம் அணியாமல் KTM பைக்கில் சென்ற இரண்டு இளைஞர்கள், கட்டுப்பாட்டை இழந்து புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளாகினர். இந்த கோர விபத்தில் தலை நசுங்கி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k62h5g4mbx4w4rq3w19718f8,imgname-bike-accident-1758874222739.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;விழுப்புரம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் குபேந்திரன் (21) விழுப்புரம் மணிநகர் நான்காவது தெரு சுரேஷ் பாபு மகன் கார்த்திக் (21) ஆகிய இரண்டு இளைஞர்களும் KTM பைக்கில் விழுப்புரம் - புதுச்சேரி சாலை நல்லரசன்பேட்டை பகுதியில் தலை கவசம் அணியாமல் அதிவேகத்தில் சென்றுள்ளனர். அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க வலது புறமாக திரும்பியுள்ளனர்.&lt;/p&gt;&lt;p&gt;அப்போது இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் இருந்த புளிய மரத்தின் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு இளைஞர்களும் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். விபத்தில் சிக்கிய பைக் சுக்கு நூறாக நொறுங்கியது. இந்த விபத்து தொடர்பாக வளவனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இரு இளைஞர்களின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.&lt;/p&gt;&lt;p&gt;இந்த விபத்து தொடர்பாக போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். முதற்கட்ட விசாரணையில் சாலையில் அதிவேகமாக இருசக்கர தலைக்கவசம் அணியாமல் வாகனத்தில் பயணித்தது தான் விபத்துக்கு காரணம் என தெரியவந்தது. விபத்தில் முகம் சிதையும் அளவுக்கு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-vilupuram</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-vilupuram/two-youths-die-in-ktm-bike-crash-without-helmets-on-villupuram-road-articleshow-0y7pvzg"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஏழை, ஆதரவற்ற பெண்களுக்கு அரசு வழங்கும் அசத்தல் தொழில் வாய்ப்பு; 50 சதவீதம் மானியம்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-vilupuram/release-of-applications-for-purchase-of-chicks-provided-at-50-per-cent-subsidy-in-villupuram-vel-si49eg</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-vilupuram/release-of-applications-for-purchase-of-chicks-provided-at-50-per-cent-subsidy-in-villupuram-vel-si49eg</guid>
            <pubDate>Mon, 12 Aug 2024 23:19:05 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;விழுப்புரம் மாவட்டத்தில் 50 சதவீதம் மானியத்தில் நாட்டின கோழிக் குஞ்சுகள் வழங்கும் திட்டத்திற்கு ஆர்வமுள்ள பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j53v6515503cmd9q1drh86fe,imgname-mixcollage-12-aug-2024-11-10-pm-9510.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;விழுப்புரம் மாவட்டத்தில் 50 சதவீதம் மானியத்தில் நாட்டின கோழிக் குஞ்சுகள் வழங்கும் திட்டத்திற்கு ஆர்வமுள்ள பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், &ldquo;விழுப்புரம் மாவட்டத்தில் ஏழ்மை நிலை, கணவனை இழந்த மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு நாட்டின கோழிக் குஞ்சுகள் (ஒரு பயனாளிக்கு 40 கோழி குஞ்சுகள் வீதம்) 50 சதவீதம் மானியத்தில் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் ஒரு ஊராட்சி ஒன்றியத்தில் 100 பயனாளிகள் வீதம் 900 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. கோழிகள் வளர்ப்பில் விருப்பமுள்ள பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;பயனாளி சொந்த செலவில் 3, 200 ரூபாய் கொள்முதல் செய்திட திறன் பெற்றவராக இருக்க வேண்டும். சுயசான்று வழங்கிய ரசீது சமர்ப்பித்தவுடன் 50 சதவீதம் மானியம் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;மேலும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் உரிய ஆணவங்களுடன் ஒப்படைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பங்கள் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-vilupuram</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-vilupuram/release-of-applications-for-purchase-of-chicks-provided-at-50-per-cent-subsidy-in-villupuram-vel-si49eg"/>
        </item>
        <item>
            <title><![CDATA[செகந்திராபாத்-விழுப்புரம் இடையே சிறப்பு ரயில்! ரயில்வே சொன்ன குட்நியூஸ்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/india/special-train-between-secunderabad-villuppuram-here-are-the-details-rya-smo4jg</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/india/special-train-between-secunderabad-villuppuram-here-are-the-details-rya-smo4jg</guid>
            <pubDate>Sat, 09 Nov 2024 18:11:23 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;பயணிகளின் வசதிக்காக செகந்திராபாத்-விழுப்புரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jbyq4bwtrn04t8133pgrsw8w,imgname-southern-railway.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;பயணிகளின் வசதிக்காக செகந்திராபாத்-விழுப்புரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;ஆசியாவிலேயே மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்காக இந்திய ரயில்வே திகழ்கிறது. தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் மேற்கொள்கின்றனர். பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே பல்வேறு சலுகைகளையும் அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது.&lt;/p&gt; &lt;p&gt;வசதியான பயணம், டிக்கெட் விலை குறைவு உள்ளிட்ட பல காரணங்களால் ரயில் பயணத்தையே பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர். பண்டிகை, தொடர் விடுமுறை காலங்களில் இந்திய ரயில்வே கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. இதனால் லட்சக்கணக்கான பயணிகள் பயன்பெறுகிண்றனர்.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;இந்த நிலையில் பயணிகளின் வசதிக்காக, செகந்திராபாத்-விழுப்புரம்-செகந்திராபாத் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. - எண்.07601 செகந்திராபாத்-விழுப்புரம் சிறப்பு ரயில் இம்மாதம் 7 மற்றும் 14 ஆகிய தேதிகளில் செகந்திராபாத்தில் இருந்து இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 1.05 மணிக்கு விழுப்புரத்தை சென்றடையும்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;2025 மகா கும்பமேளா: பக்தர்களுக்கு குட்நியூஸ் சொன்ன ரயில்வே துறை!&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;மறுமார்க்கத்தில்&amp;nbsp; விழுப்புரம்-செகந்திராபாத் சிறப்பு ரயில் எண்.07602 விழுப்புரத்தில் இருந்து இம்மாதம் 8 மற்றும் 15 ஆகிய தேதிகளில் மாலை 4.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.40 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும். இந்த ரயில் ஓங்கோல், காவாலி, நெல்லூர், ரேணிகுண்டா, காட்பாடி, திருவண்ணாமலை வழியாக விழுப்புரம் சென்றடைகிறது.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;சார்மினாருக்கு கூடுதல் பொது பெட்டிகள்..&lt;/p&gt; &lt;p&gt;ஹைதராபாத்-தாம்பரம் இடையே இயங்கும் எண். 12750 சார்மினார் எக்ஸ்பிரஸ் (சார்மினார் எக்ஸ்பிரஸ்) இரண்டு ஸ்லீப்பர் கிளாஸ் பெட்டிகளுடன் இணைக்கப்படும் மற்றும் எண். இந்த பெட்டிகள் வரும் 11ம் தேதி முதல் 30ம் தேதி வரை பயணிகளுக்கு கிடைக்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;IRCTC : இனி அனைத்தும் ஒரே செயலியில்! ரயில் பயணிகளுக்கு குட்நியூஸ்!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-vilupuram</category>
            <dc:creator>Ramya s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/india/special-train-between-secunderabad-villuppuram-here-are-the-details-rya-smo4jg"/>
        </item>
        <item>
            <title><![CDATA[சாப்பாட்டில் ஊறுகாய் வைக்க மறந்த ஊழியர்; உணவகத்திற்கு ரூ.35000 அபராதம் விதித்த விழுப்புரம் நீதிமன்றம்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-vilupuram/consumer-court-orders-rs-35-000-fine-on-restaurant-in-villupuram-for-forgetting-to-put-pickle-in-parcel-food-vel-sh6g8z</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-vilupuram/consumer-court-orders-rs-35-000-fine-on-restaurant-in-villupuram-for-forgetting-to-put-pickle-in-parcel-food-vel-sh6g8z</guid>
            <pubDate>Thu, 25 Jul 2024 17:09:02 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;விழுப்புரம் மாவட்டத்தில் பார்சல் உணவில் ஊறுகாய் வைக்க மறந்த உணவகத்திற்கு ரூ.35 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j3mtv049aesr34t3s2r6k3rh,imgname-mixcollage-25-jul-2024-04-54-pm-8503.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;விழுப்புரம் மாவட்டத்தில் பார்சல் உணவில் ஊறுகாய் வைக்க மறந்த உணவகத்திற்கு ரூ.35 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;விழுப்புரம் மாவட்டம் வழுதுரெட்டிப் பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவர் கடந்த 2022ம் ஆண்டு விழுப்புரம் பேருந்து நிலையத்திற்கு எதிரில் உள்ள பாலமுருகன் என்ற உணவகத்தில் பார்சல் பாப்பாட்டின் விலையை விசாரித்துள்ளார். அதற்கு பதில் அளித்த உணவக நிர்வாகம், ஒரு சாப்பாட்டின் விலை ரூ.80, அதில் சாதம், சாம்பார், காரக்குழம்பு, ரசம், மோர், கூட்டு, பொறியல், அப்பளம், வாழை இலையுடன் சேர்த்து 1 ரூபாய் ஊறுகாய் பொட்டம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;இதனை ஏற்ற ஆரோக்கியசாமி ரூ.80 வீதம் 25 பார்சல் சாப்பாட்டிற்கு ரூ.2 ஆயிரம் பணம் செலுத்தி உணவை வாங்கிச் சென்றுள்ளார். பின்னர் சாப்பிடும்போது பார்க்கையில் பார்சலில் ஊறுகாய் விடுபட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து உணவகத்தை அணுகி ஊறுகாய் விடுபட்டது தொடர்பாக முறையிட்டுள்ளார். &amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;இது தொடர்பாக உணவக ஊழியர்களிடம் விசாரித்த உரிமையாளர், ஊறுகாய் விடுபட்டதை ஒப்புக் கொண்டார். அதன் பின்னர் ஊறுகாய்க்கான ரூ.25ஐ திருப்பி தருமாறு ஆரோக்கியசாமி கேட்டதற்கு உணவக உரிமையாளர் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆரோக்கியசாமி மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;வழக்கு தொடர்பான விசாரணை நிறைவு பெற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, உணவில் ஊறுகாய் வைக்காமல் விட்டது வாடிக்கையாளருக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மனுதாரருக்கு ரூ.30 ஆயிரம், வழக்கு செலவுக்கு ரூ.5 ஆயிரம், ஊறுகாய்க்கான ரூ.25 இவற்றை 45 நாட்களுக்குள் உணவகம் வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் மாதம் ஒன்றுக்கு 9% வட்டியுடன் இந்த தொகையை வழங்க வேண்டும் என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-vilupuram</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-vilupuram/consumer-court-orders-rs-35-000-fine-on-restaurant-in-villupuram-for-forgetting-to-put-pickle-in-parcel-food-vel-sh6g8z"/>
        </item>
        <item>
            <title><![CDATA[மோட்டர் போட்டு ரெடியா வச்சுக்கோங்க.. விழுப்புரம் மாவட்டத்தில் இன்று எந்தெந்த பகுதிகளில் மின்தடை!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-vilupuram/villupuram-power-outage-today-for-monthly-maintenance-work-aledm9l</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-vilupuram/villupuram-power-outage-today-for-monthly-maintenance-work-aledm9l</guid>
            <pubDate>Sat, 20 Dec 2025 08:44:56 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Viluppuram Power Cut: விழுப்புரம் மாவட்டத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. திண்டிவனம், செஞ்சி, விழுப்புரம் உள்ளிட்ட பல பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k00n397xnythkefe061ac0g4,imgname-power-cut-1752368784637.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Viluppuram Power Cut: விழுப்புரம் மாவட்டத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. திண்டிவனம், செஞ்சி, விழுப்புரம் உள்ளிட்ட பல பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழகத்தில் மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி காரணமாக ஒருநாள் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். மின் தடை செய்யப்படும் நேரத்தில் சிறு சிறு பழுதுகள் சரி செய்வது, மின் வயர் செல்லும் பாதையில் மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம் விழுப்புரம் மாவட்டத்தில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை மற்றும் எத்தனை மணி நேரம் என்பதை பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;திண்டிவனம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;திண்டிவனம், கிளியனூர், உப்புவெள்ளூர், சாரம், எண்டியூர், தென்பழார் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சித்தாம்பூண்டி&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;சித்தம்பூண்டி, தாண்டவசமுத்திரம், அனந்தபுரம், அப்பம்பட்டு, பள்ளிப்பட்டு, மீனம்பட்டு, கோனை, சோமசமுத்திரம், சேரனூர், துத்திப்பட்டு, பொன்னக்குப்பம், தச்சம்பட்டு, காரை, மொடையூர், திருவம்பட்டு, அணிலாடி&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;செஞ்சி டவுன், நாட்டார்மங்கலம், காளையூர், ஈச்சூர், மேல்களவாய், ஆவியூர், மேலொளக்கூர், தொண்டூர், அகலூர், சேதுவராயநல்லூர், பென்நகர், கல்லாபுலியூர், சத்தியமங்கலம், சோக்குப்பம், வேரமநல்லூர், தென்பாலை, செம்மேடு, ஆலம்பூண்டி.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கவனிப்பாக்கம், சித்தாத்தூர், கொளத்தூர், வி.அரியனூர், கண்டமாநதி, அத்தியூர் திருவதி, கேளியம்பாக்கம், மேலமேடு, பில்லூர், பிள்ளையார்குப்பம், புருச்சானூர், ராவணன், கல்லிப்பட்டு, அகரம், திருப்பச்சனூர், கொங்கரகொண்டான், சேர்ந்தனூர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;திருவெண்ணெய்நல்லூர்&lt;/p&gt;&lt;p&gt;திருவெண்ணைநல்லூர், பெரியசெவலை, துலுக்கம்பட்டு, கூவாகம், வேலூர், ஆமூர், பெரும்பாக்கம், பரிக்கல், மாறனோடை, மணக்குப்பம், பாவந்தூர், பொன்னைவலம், பணப்பாக்கம், டி.எடையார், கீரிமேடு, கேரமம், மேலமங்கலம்.&lt;/p&gt;&lt;p&gt;விழுப்புரம்&lt;/p&gt;&lt;p&gt;விழுப்புரம், சென்னை NH சாலை, திருச்சி NH சாலை, செஞ்சி சாலை, மாம்பழப்பட்டு சாலை, வண்டிமேடு, வடக்கு தெரு, விராட்டிக்குப்பம், K.V.R.நகர், நன்னாடு, பாப்பான்குளம், திருவாமாத்தூர், ஓம் சக்தி நகர், கப்பூர், மரகதப்பு.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சொர்ணாவூர் மேல்பதி, ராம்பாக்கம், ஆர்.ஆர்.பாளையம், கொங்கம்பட்டு, மேட்டுப்பாளையம், பரசுரெட்டிபாளையம், குச்சிபாளையம், சொரப்பூர், சொர்ணாவூர் கீழ்பதி, பூவரசங்குப்பம், பற்றைப்பதி, வீரணம், கிருஷ்ணாபுரம், பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-vilupuram</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-vilupuram/villupuram-power-outage-today-for-monthly-maintenance-work-aledm9l"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஐயோ! இதுக்கா உன்ன டாக்டருக்கு படிக்க வச்சேன்! எங்களை விட்டு போயிட்டியே! அமிர்த வர்ஷினி முடிவுக்கு இதுதான் காரணமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-vilupuram/female-doctor-commits-suicide-in-thirukovilur-articleshow-cthwn79</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-vilupuram/female-doctor-commits-suicide-in-thirukovilur-articleshow-cthwn79</guid>
            <pubDate>Thu, 30 Oct 2025 13:28:51 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;பெற்றோர் திருமணத்திற்கு வற்புறுத்தியதால் மனமுடைந்த 24 வயது பெண் பல் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்போது திருமணம் வேண்டாம் என கூறியும், குடும்பத்தினர் தொடர்ந்து ஏற்பாடுகளை செய்ததால் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k4f09qwehsm0vhe34s3z1vxq,imgname-doctor-1757145259918.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சந்தைப்பேட்டை சுப்பிரமணிய நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகள் அமிர்த வர்ஷினி (24 ). தனியார் மருத்துவமனையில் பல் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மகளுக்கு திருமணம் செய்ய பெற்றோர் ஆசைப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளனர்.&lt;/p&gt;&lt;p&gt;ஆனால் தற்போது திருமணம் வேண்டாம் என பெற்றோரிடம் அமிர்த வர்ஷினி திட்டவட்டமாக கூறியுள்ளார். இருப்பினும் அவருடைய குடும்பத்தினர் திருமண ஏற்பாடுகளை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் பெற்றோர் ஏற்பாடு செய்து வந்ததால் மனமுடைந்த அமிர்த வர்ஷினி, வீட்டின் மாடியில் உள்ள ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.&lt;/p&gt;&lt;p&gt;இதனை சற்றும் எதிர்பாராத பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் அலறி கூச்சலிட்ட படியே நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுது கதறினார். இந்த சம்பவம் தொடர்பாக திருக்கோவிலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அமிர்த வர்ஷினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.&lt;/p&gt;&lt;p&gt;இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணத்துக்கு பெற்றோர் ஏற்பாடு செய்ததால் மனமுடைந்து பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-vilupuram</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-vilupuram/female-doctor-commits-suicide-in-thirukovilur-articleshow-cthwn79"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஒரு மாத சம்பளத்தை அப்படியே நூலகத்துக்கு கொடுத்த திமுக எம்.எல்.ஏ! குவியும் பாராட்டு!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-vilupuram/dmk-mla-anniyur-siva-donated-his-one-month-salary-to-the-library-ray/articleshow-fx4e7zi</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-vilupuram/dmk-mla-anniyur-siva-donated-his-one-month-salary-to-the-library-ray/articleshow-fx4e7zi</guid>
            <pubDate>Fri, 30 May 2025 11:08:00 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;திமுக எம்எல்ஏ அன்னியூர் சிவா நூலகத்துக்கு தனது ஒரு மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jwfv36c15bftd45r0555jfbd,imgname-anniyur-siva-1748583422337.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;DMK MLA Anniyur Siva Donated One Month Salary to Library: திமுகவின் விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூர் சிவா பொது நூலகத்துக்கு தனது ஒரு மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் ஜானகிபுரம் அருகே அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்க வளாகத்தில் செயல்பட்டு வரும் நூலகத்திற்கு, விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. அன்னியூர் அ.சிவா ரூ.1.05 லட்சம் மதிப்புள்ள 375 புத்தகங்களை நன்கொடையாக வழங்கினார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;திமுக எம்.எல்.ஏ அன்னியூர் சிவா&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்த நன்கொடை, எம்.எல்.ஏ அன்னியூர் சிவா ஒரு மாத சம்பளத்தில் இருந்து வழங்கப்பட்டது. அரசு போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தகங்கள், இன்று மாலை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் முன்னிலையில் நூலகத்திற்கு வழங்கப்பட்டது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;புத்தகங்களின் தொகுப்பை வழங்கிய திமுக எம்.எல்.ஏ&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்த புத்தகங்களின் தொகுப்பில் சிவில் சர்வீஸ் மற்றும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்குத் தேவையான மனோத்தூண்டும் கல்வி வழிகாட்டும் புத்தகங்கள், வரலாறு, அரசியல், பொருளாதாரம், சட்டம், பொதுத்தமிழ் மற்றும் பொதுஅறிவு தொடர்பான பல முக்கிய நூல்கள் அடங்கியுள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;என்னென்ன புத்தகங்கள்?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இவற்றில் &lsquo;சிறகுக்குள் வானம்&rsquo;, &lsquo;தமிழ் நெடுஞ்சாலை&rsquo; &ndash; பாலகிருஷ்ணன் ஆர், &lsquo;ஐஏஎஸ் படிக்கட்டுகள்&rsquo; &ndash; வெ. இறையன்பு, மாபெரும் சபைதனில்-உதயச்சந்திரன் ஐஏஎஸ், &lsquo;நானும் இந்திய ஆட்சிப் பணியும்&rsquo; &ndash; ஞான ராஜசேகரன், &lsquo;இந்திய அரசமைப்பு சட்டம்&rsquo; &ndash; சங்கர சரவணன், சந்திர சேகரன், &lsquo;பொதுஅறிவு களஞ்சியம்&rsquo;, &lsquo;பொதுத்தமிழ் களஞ்சியம்&rsquo; &ndash; சங்கர சரவணன், TNPSC/IAS தேர்வு வழிகாட்டிகள் &ndash; ஸ்பெக்ட்ரம், அரிஹந்த், சுரா, சக்தி வெளியீடுகள் ஆகிய புத்தகங்கல் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பொதுமக்கள் பாராட்டு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்த நன்கொடையின் மூலம், கிராமப்புற மாணவர்கள் மற்றும் போட்டித்தேர்வுகளை எதிர்நோக்கும் இளைஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயனளிக்கும் வகையில் நூலக வளங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. தனது ஒரு மாத சம்பளத்தை நூலகத்துக்கு நன்கொடையாக வழங்கிய விக்கிரவாண்டி எம்.எல்.ஏ அன்னியூர் சிவாவுக்கு போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகள் நன்றி தெரிவித்தனர். மேலும் திமுகவினர் பொதுமக்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-vilupuram</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-vilupuram/dmk-mla-anniyur-siva-donated-his-one-month-salary-to-the-library-ray/articleshow-fx4e7zi"/>
        </item>
        <item>
            <title><![CDATA[இடஒதுக்கீட்டுக்காக தமிழகமே ஸ்தம்பிக்கும் வகையில் போராட்டம்; ராமதாஸ் எச்சரிக்கை]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-vilupuram/ramdas-said-that-a-huge-protest-will-be-held-for-vanniyar-reservation-vel-sgxmqe</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-vilupuram/ramdas-said-that-a-huge-protest-will-be-held-for-vanniyar-reservation-vel-sgxmqe</guid>
            <pubDate>Sat, 20 Jul 2024 22:48:14 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;இடஒதுக்கீடு கோரி தமிழகமே ஸ்தம்பிக்கும் வகையில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினால் மட்டுமே இந்த அரசு பணியும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01hx4e6hmg262z82ymv9hfqkbk,imgname-asianet-news--68-.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;வன்னியர் சங்கத்தின் 45ம் ஆண்டு விழாவை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் அச்சங்கத்தின் நிறுவனர் இராமதாஸ் சங்கத்தின் கொடியை ஏற்றி நிர்வாகிகளுக்கு இனிப்பு வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இராமதாஸ், &ldquo;1980ம் ஆண்டு ஜூலை மாதம் 20ம் தேதி வன்னியர் சங்கம் துவங்கப்பட்டது. அந்த நேரத்தில் 3 கோரிக்கைகள் அரசுக்கு முன்வைக்கப்பட்டன.&lt;/p&gt; &lt;p&gt;சாதிவாரி கணக்கெடுப்பு நடதி அனைத்து சமூக மக்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். வன்னியர் மக்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப 20 விழுக்காடும், பட்டியல் இன மக்களுக்கு வழங்கப்படு 18 விழுக்காடுக்கு பதில் 22 விழுக்காடும் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.&lt;/p&gt; &lt;p&gt;எடப்பாடி பழனிசாமி சசிகலாவிடம் நேரில் சென்று வாழ்த்து பெறுவார் - ராஜன் செல்லப்பா&lt;/p&gt; &lt;p&gt;இச்சங்கம் தொடங்கி 44 ஆண்டுகள் கடந்த 45ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். இடஒதுக்கீடு வேண்டி தமிழ்நாடே ஸ்தம்பிக்கும் வகையில் 7 நாள் சாலை மறியல் போராட்த்தை காட்டிலும் தீவரமாக ஒரு போராட்டத்தை நடத்தினால் தான் திமுக அரசு பணியும் அல்லது கொடுக்கும் என நம்புகிறோம்.&lt;/p&gt; &lt;p&gt;கோவையில் 15 ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாத வீட்டில் தாய், மகள்; திகில் வீட்டில் 4 டன் குப்பைகள் அகற்றம்&lt;/p&gt; &lt;p&gt;தற்போது உள்ள இளைஞர்கள் ஆர்வமாக துடிப்புடன் உள்ளனர். இவ்வளவு நாள் வஞ்சிக்கப்பட்டது யாரால்? எதனால்? என்று தெரியாமல் இருந்ததை இப்போது புரிய வைத்துள்ளோம். இளைஞாகள் கடும் கோபத்தில் உள்ளனர். எனவே இப்போராட்டம் முந்தைய போராட்டத்தை விட கடுமையாக இருக்கும் என உங்கள் மூலமாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் என்று கூறினார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-vilupuram</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-vilupuram/ramdas-said-that-a-huge-protest-will-be-held-for-vanniyar-reservation-vel-sgxmqe"/>
        </item>
        <item>
            <title><![CDATA[நாவல் பழத்திற்கு ஆசைப்பட்டு உயிரை விட்ட 3 பிஞ்சு குழந்தைகள்; விழுப்புரத்தில் சோகம்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-vilupuram/3-minor-students-drowned-wated-and-killed-in-dindivanam-vel-shv0as</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-vilupuram/3-minor-students-drowned-wated-and-killed-in-dindivanam-vel-shv0as</guid>
            <pubDate>Wed, 07 Aug 2024 23:22:03 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;திண்டிவனம் அருகே நாவல் பழம் பறிக்க முயன்று 3 சிறுவர்கள் ஆற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01geh3h2jshtvbv8b2f4ekefn4,imgname-india-female-imr-drops-to-same-level-as-males.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கோனேரிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகள்கள் பிரியதர்ஷினி (வயது 10), சுபாஷினி (8). இவர்கள் இருவரும் அதே பகுதியில் அருகில் செயல்பட்டு வந்த அரசுப் பள்ளியில் 6 மற்றும் 4ம் வகுப்பு படித்து வந்தனர். இவர்களுடன் அதே பகுதியைச் சேர்ந்த விஜி என்பவரது மகன் சஞ்சய்யும் (10) படித்து வந்தார். இதனிடையே இவர்கள் மூவரும் புதன் கிழமை மாலை பள்ளி முடிந்து வீட்டிற்குச் செல்லும் வழியில் நாவல் பழம் பறிக்கச் சென்றதாக சொல்லப்படுகிறது.&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp;மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; பள்ளி HMஐ உள்ளாடையோடு இழுத்து வந்த மக்கள்&lt;/p&gt; &lt;p&gt;மூவரும் மரத்தில் ஏறி பழத்தை பறிக்க முயன்றபோது காற்றின் வேகத்தால் மூவருமே ஆற்றில் தவறி விழுந்துள்ளனர். மேலும் காப்பற்றும்படி சிறுவர்கள் கூச்சலிட்ட நிலையில் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து சிறுவர்களை மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.&lt;/p&gt; &lt;p&gt;கோவிலில் தீபம் ஏற்றிய நபர்; கடவுள் கண் முன்பே கரிக்கடையான சோகம் - தேனியில் பரபரப்பு&lt;/p&gt; &lt;p&gt;விபத்து தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஓலக்கூர் காவல் துறையினர் உயிரிழந்த மூவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாவல் பழம் பறிக்க முயன்று ஒரே கிராமத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த கிராமத்தையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-vilupuram</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-vilupuram/3-minor-students-drowned-wated-and-killed-in-dindivanam-vel-shv0as"/>
        </item>
        <item>
            <title><![CDATA[School Holiday: பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! மார்ச் 4ம் தேதி விடுமுறை அறிவிப்பு!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/melmalayanur-angalamman-temple-chariot-festival-school-holiday-for-march-4th-tvk-ss8j6r</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/melmalayanur-angalamman-temple-chariot-festival-school-holiday-for-march-4th-tvk-ss8j6r</guid>
            <pubDate>Tue, 25 Feb 2025 16:15:54 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் மாசிப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தை முன்னிட்டு மார்ச் 4ம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01hb6h9qcs7nr9me48mpv39k09,imgname-school-leave-extended.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் மாசிப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தை முன்னிட்டு மார்ச் 4ம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் மிகவும் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இக்கோவிலில் அமாவாசை தினத்தன்று ஊஞ்சல் உற்சபம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிப்பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான மாசிப்பெருவிழா பிப்ரவரி 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. பிப்ரவரி 27-ம் தேதி மயானக்கொள்ளை விழாவும், மார்ச் 02-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை தீமிதி விழாவும் நடைபெற உள்ளது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான மார்ச் 04ம் தேதி செவ்வாய்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் தேரோட்டம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். இதையொட்டி விழுப்புரம் மாவட்ட பக்தர்களின் வசதிக்காக மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&lt;strong&gt;மாணவர்கள் ஜாக்பாட்! பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை! முழு விவரம் இதோ !&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;இதுகுறித்து &amp;nbsp;விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் &amp;nbsp;ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டம், அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் மார்ச் 04ம் தேதியன்று நடைபெறவுள்ள திருத்தேர் உற்சவத்தை முன்னிட்டு அன்றைய தினம் ஒரு நாள் மட்டும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;மேற்படி, தினத்தில் அவசர அலுவல்களை கவனிக்கும்பொருட்டு விழுப்புரம் மாவட்ட கருவூலமும் மற்றும் சார்நிலைக் கருவூலங்களும் குறைந்த பணியாளர்களைக் கொண்டு இயங்கும்.&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;மேலும், மாணவ, மாணவியர்களுக்கு மார்ச் அன்று தேர்வுகள் நடைபெறத் தேதி நிர்ணயிக்கப்பட்டிருப்பின் அந்த தேர்வுகள் அன்றைய தேதியில் வழக்கம்போல் நடைபெறும். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக மார்ச் 15ம் தேதி சனிக்கிழமை வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-vilupuram</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/melmalayanur-angalamman-temple-chariot-festival-school-holiday-for-march-4th-tvk-ss8j6r"/>
        </item>
        <item>
            <title><![CDATA[தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் வேலை! உடனே விண்ணபிக்கவும்...]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/career/tnstc-villupuram-salem-are-recruiting-drivers-and-conductors-sw1yjp</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/career/tnstc-villupuram-salem-are-recruiting-drivers-and-conductors-sw1yjp</guid>
            <pubDate>Sat, 10 May 2025 21:17:49 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;டிஎன்எஸ்டிசி&amp;nbsp; ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களைத் தேர்வு செய்கிறது. தகுதிகளை சரிபார்த்து உடனே விண்ணப்பிக்கவும்!&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01h116jns3fg5fbr7f06g2tqzs,imgname-asianet-news-tamil--30-.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;டிஎன்எஸ்டிசி&amp;nbsp; ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களைத் தேர்வு செய்கிறது. தகுதிகளை சரிபார்த்து உடனே விண்ணப்பிக்கவும்!&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் மற்றும் சேலம் கோட்டங்களில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களை நியமிக்கத் திட்டமிட்டுள்ளன.&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் ஓட்டுநர்கள் 24 முதல் 48 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவும் வேண்டும். மேலும், அவர்கள் கனரக வாகன ஓட்டுநர் உரிமம், பேட்ஜ் மற்றும் குறைந்தது 18 மாத ஓட்டுநர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். நடத்துநர்கள் 24 முதல் 48 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்றிருக்கவும் வேண்டும். அத்துடன், அவர்கள் நடத்துநர் உரிமம், முதலுதவி சான்றிதழ் மற்றும் பொது சேவை பேட்ஜ் பெற்றிருக்க வேண்டியது அவசியம்.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவர் இதுகுறித்து கூறுகையில், &quot;ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பற்றாக்குறையால் பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிப்பதன் மூலம் அனைத்து பேருந்துகளையும் இயக்க முடியும். இது பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்&quot; என்றார்.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;சிஐடியு தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் கே.அருணுக நயினார் இதுகுறித்து கூறுகையில், &quot;ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களை நியமிக்க அரசு போக்குவரத்து கழகங்கள் டெண்டர் வெளியிட்டுள்ளன.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;நிரந்தர நியமனங்கள் செய்யப்படும் வரை இது தற்காலிக ஏற்பாடு என்று அமைச்சர் உறுதியளித்திருந்தாலும், மனிதவள நிறுவனங்கள் மூலம் பணியாளர்களை நியமிப்பது சமூக நீதிக்கு எதிரானது. அனைத்து பேருந்துகளும் இயக்கப்படுவதை உறுதி செய்ய காலியாக உள்ள பணியிடங்களை அரசு நிரப்ப வேண்டும்&quot; என்று வலியுறுத்தினார்.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் மற்றும் சேலம் கோட்டங்கள், ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களை நியமிக்கத் திட்டமிட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் மூலம், விழுப்புரம் கோட்டம் தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 667 ஓட்டுநர்களையும், 724 நடத்துநர்களையும் நியமிக்க உள்ளது. அதேபோல், சேலம் கோட்டம் 142 ஓட்டுநர்களையும், 134 நடத்துநர்களையும் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-vilupuram</category>
            <dc:creator>Suresh Manthiram</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/career/tnstc-villupuram-salem-are-recruiting-drivers-and-conductors-sw1yjp"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஆரோவிலில் முகாமிட்ட என்டிபிசி குழுவினர்: வளர்ச்சி பணிகள் சிறப்பாக நடப்பதாக பாராட்டு]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/ntpc-team-visited-auroville-vel-sqoh5u</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/ntpc-team-visited-auroville-vel-sqoh5u</guid>
            <pubDate>Sun, 26 Jan 2025 09:49:47 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ஆரோவில் சர்வதேச நகரைப் பார்வையிட்ட என்.டி.பி.சி குழுவினர், ஆரோவிலில் வளர்ச்சிப் பணிகள் சிறப்பாக நடைபெறுவதாக பாராட்டு தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jj11yv8086k5hf66csr9vtxg,imgname-auroville-55.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தேசிய அனல்மின் கழகத்தின் நிதி இயக்குநர் ஜெயக்குமார் ஸ்ரீவாசன், தெற்கு பிராந்தியம் மற்றும் வர்த்தகப் பிரிவின் நிர்வாக இயக்குநர் அஜய்துவா மற்றும் நாடாளுமன்றக் குழுவினருடன் ஆரோவில் சர்வதேச நகரத்திற்கு கடந்த வெள்ளிக் கிழமை வந்தனர். பின்னர் அவர்கள் ஆரோவில் பகுதியில் அமைந்துள்ள மாத்திர் மந்திர் உள்ளிட்ட பல்வேறுப் பகுதிகளைச் சென்று பார்வையிட்டனர்.&lt;/p&gt; &lt;p&gt;குடியரசு தின கொடியை ஏற்றிய ஆளுநர் ரவி.! தமிழக அரசின் சாதனை விளக்க ஊர்தியை பார்வையிட்டார்&lt;/p&gt; &lt;p&gt;இதன் தொடர்ச்சியாக ஆரோவில் பகுதியின் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளைப் பார்வையிட்ட என்.டி.பி.சி. குழுவினர், பணிகள் சிறப்பாக நடைபெறுவதாகக் கூறி பாராட்டு தெரிவித்தனர்.&lt;/p&gt; &lt;p&gt;மேலும் இங்கு வந்ததன் மூலம் ஆரோவில்லின் ஒருங்கிணைந்த தாங்கு தன்மை மற்றும் ஆன்மீக அணுகுமுறைகளை ஆழமாகப் புரிந்து கொள்ள உதவியது. பல வருடங்களாக ஆரோவில் உருவாக்கியுள்ள புதிய மாதிரிகள் இந்தியாவிலும், அதன் எல்லைக்கு வெளியிலும் உள்ள தனி நபர்கள், நிறுவனங்களுக்கு எடுத்துக்காட்டாக இருப்பதாக என்.டி.பி.சி குழுவினர் பாராட்டு தெரிவித்தனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-vilupuram</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/ntpc-team-visited-auroville-vel-sqoh5u"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஆம்னி பேருந்து ஆற்று பாலத்தில் தடுப்பை உடைத்து தொங்கிய பேருந்து.. தூக்கித்தில் இருந்த 40 பயணிகளின் நிலை என்ன?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-vilupuram/vikravandi-omni-bus-accident-40-passengers-injured-m98191q</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-vilupuram/vikravandi-omni-bus-accident-40-passengers-injured-m98191q</guid>
            <pubDate>Sat, 20 Dec 2025 09:48:42 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;விழுப்புரம் விக்கிரவாண்டி அருகே, அதிவேகமாக சென்ற ஆம்னி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சங்கராபரணி ஆற்றுப் பாலத்தின் தடுப்பை உடைத்து தொங்கியது. இந்த கோர விபத்தில் 40 பயணிகள் பயணித்த நிலையில், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kcwzde7kgytd4am1agwg87eb,imgname-omni-bus-3-1766204029171.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;விழுப்புரம் விக்கிரவாண்டி அருகே, அதிவேகமாக சென்ற ஆம்னி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சங்கராபரணி ஆற்றுப் பாலத்தின் தடுப்பை உடைத்து தொங்கியது. இந்த கோர விபத்தில் 40 பயணிகள் பயணித்த நிலையில், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த பேரணி அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை அதிவேகமாக சென்ற ஆம்னி பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சங்கராபரணி ஆற்று பாலத்தில் தடுப்பை உடைத்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்து தொங்கியது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த கோர விபத்தில் பேருந்தின் முன் பகுதி நொறுங்கியது. அதிகாலை நேரம் என்பதால் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த 40 பயணிகள் அலறி கூச்சலிட்டனர். பேருந்து விபத்து தொடர்பாக போலீசாருக்கும் மற்றும் மீட்புக் குழுவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ஓட்டுநர் அதிவேகமாக பேருந்தை இயக்கியதே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. காவல்துறை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாலத்தின் மையத் தடுப்பில் சிக்கியுள்ள பேருந்தை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதிகாலை நேரத்தில் விபத்து ஏற்பட்டதை அடுத்து அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-vilupuram</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-vilupuram/vikravandi-omni-bus-accident-40-passengers-injured-m98191q"/>
        </item>
        <item>
            <title><![CDATA[பல்லவர் கால கொற்றவை, மூத்ததேவி சிற்பங்கள் கண்டுபிடிப்பு! 1200 ஆண்டு பழமையானது!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/pallava-era-sculpture-of-kottravai-moothadevi-discovered-near-villupuram-articleshow-n0wprhx</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/pallava-era-sculpture-of-kottravai-moothadevi-discovered-near-villupuram-articleshow-n0wprhx</guid>
            <pubDate>Sun, 10 Aug 2025 22:03:59 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;திண்டிவனம் மற்றும் செஞ்சி அருகே பல்லவர் காலத்தைச் சேர்ந்த கொற்றவை மற்றும் மூத்ததேவி சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மொளசூரில் ஓடைப்பகுதியில் 5 அடி உயர கொற்றவை சிற்பமும், ஆலம்பூண்டியில் 3 அடி உயர மூத்ததேவி சிற்பமும் கண்டறியப்பட்டுள்ளன.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k2acd50xhznk4n5ngnyrw97x,imgname-pallava-statue-1754842698780.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;திண்டிவனம் மற்றும் செஞ்சி அருகே உள்ள கிராமங்களில் வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் மேற்கொண்ட களஆய்வில், பல்லவர் காலத்தைச் சேர்ந்த கொற்றவை மற்றும் மூத்ததேவி சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;மொளசூரில் கொற்றவை சிற்பம்:&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;திண்டிவனம் அருகே உள்ள மொளசூர் கிராமத்தின் ஓடைப்பகுதியில் சுமார் 5 அடி உயரமுள்ள கொற்றவை சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது. நீண்ட தலையலங்காரம் மற்றும் அணிகலன்களுடன், எருமை தலையின் மீது நின்ற நிலையில் கொற்றவை காட்சி அளிக்கிறார். அவரது 7 கரங்களில் ஆயுதங்கள் உள்ளன. சிற்பத்தின் மேல் பகுதியில் மானும், சிம்மமும் செதுக்கப்பட்டுள்ளன, இவை கொற்றவையின் வாகனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;&lt;p&gt;சிற்பத்தின் கீழ்ப்பகுதியில், தனது தலையை தானே அரிந்து பலி கொடுக்கும் வீரன் ஒருவனும், அவருக்கு எதிரே வழிபாடு செய்யும் அடியவர் ஒருவரும் அமர்ந்துள்ளனர். பல்லவர் கலைப்பாணியின் சிறந்த உதாரணமாகத் திகழும் இந்தச் சிற்பம், கி.பி. 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என ஆய்வாளர் செங்குட்டுவன் தெரிவித்தார். மேலும், மொளசூர் ஏரியில் மற்றொரு கொற்றவை சிற்பமும், 2 மூத்ததேவி மற்றும் ஒரு அய்யனார் சிற்பமும் இருப்பதாகவும் அவர் கூறினார். பல்லவர் காலத்தில் மொளசூர் கிராமம் சிறந்த வழிபாட்டு மையமாக இருந்திருக்கலாம் எனவும் தெரிவித்தார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஆலம்பூண்டியில் மூத்ததேவி சிற்பம்:&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தில், ஆலகால ஈஸ்வரர் கோயில் வளாகத்தில் சுமார் 3 அடி உயரமுள்ள மூத்ததேவி சிற்பம் வழிபாட்டில் இருந்து வருகிறது. கனத்த மார்புகள், சரிந்த வயிற்றுடன், காதணிகள் மற்றும் கழுத்தணிகளுடன் அமர்ந்திருக்கும் மூத்ததேவியின் வலது கை அபய முத்திரையுடனும், இடது கை செல்வக்குடத்தின் மீதும் உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;அவரது இரு பக்கங்களிலும் மகன் மாந்தன், மகள் மாந்தி ஆகியோர் அமர்ந்திருக்கின்றனர். சிற்பத்தின் மேல் பகுதியில் காக்கைக்கொடியும், துடைப்பமும் காட்டப்பட்டுள்ளன. இந்தச் சிற்பம் பல்லவர் காலத்தின் இறுதியில் (கி.பி. 9-ம் நூற்றாண்டு) வடிக்கப்பட்டதாக இருக்கலாம் என செங்குட்டுவன் கூறினார். இந்தத் தெய்வத்தை உள்ளூர் மக்கள் காளி எனவும், மானசாதேவி எனவும் வழிபட்டு வருகிறார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;மொளசூர் மற்றும் ஆலம்பூண்டி சிற்பங்கள், கொற்றவை மற்றும் மூத்ததேவி வழிபாடுகள் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் இன்றும் தொடர்கின்றன என்பதற்கான சான்றுகளாகத் திகழ்கின்றன என்றும் செங்குட்டுவன் தெரிவித்தார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-vilupuram</category>
            <dc:creator>SG Balan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/pallava-era-sculpture-of-kottravai-moothadevi-discovered-near-villupuram-articleshow-n0wprhx"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Job Opportunities: வேலை தேடும் இளைஞர்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு! எங்கு? எப்போது? இதோ முழு விவரம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/career/private-job-opportunities-camp-in-villupuram-tvk-skrhu1</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/career/private-job-opportunities-camp-in-villupuram-tvk-skrhu1</guid>
            <pubDate>Thu, 03 Oct 2024 09:31:13 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Private Job Opportunities:&amp;nbsp;தமிழக அரசு இளைஞர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்க மாவட்டம் தோறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் அக்டோபர் 5ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற&amp;nbsp; உள்ளதாக அறிவிப்பு&amp;nbsp;&amp;nbsp;ெ வளியாகியுள்ளது. எங்கு எப்போது உள்ளிட்ட விரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j988hcnpahc0fpste2de2pj7,imgname-job-opportunities.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Private Job Opportunities:&amp;nbsp;தமிழக அரசு இளைஞர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்க மாவட்டம் தோறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் அக்டோபர் 5ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற&amp;nbsp; உள்ளதாக அறிவிப்பு&amp;nbsp;&amp;nbsp;ெ வளியாகியுள்ளது. எங்கு எப்போது உள்ளிட்ட விரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;இன்றைய இளைஞர்கள் எப்படியாவது அரசு வேலையை வாங்கி விட வேண்டும் என போட்டா போட்டிக்கொண்டு படித்து வருகின்றனர். &amp;nbsp;ஆனால் ஆயிரம் பேர் வேலைக்கு சுமார் 10 லட்சம் முதல் 20 லட்சம் பேர் போட்டியிடுகின்றனர். எனவே அனைவருக்கும் அரசு வேலை கிடைப்பது சாத்தியமே இல்லை. இதனால் இன்றைய இளைஞர்களின் அரசு வேலை என்பது கனவாகவே இருந்து வருகிறது.&amp;nbsp;&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;இன்னும் சில இளைஞர்கள் வேலை கிடைக்காத விரக்தியில் விபரீத முடிவை எடுக்கின்றனர். இந்நிலையில் இளைஞர்களின் வேலை வாய்ப்பை உருவாக்கும் விதமாக &amp;nbsp;தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தனியார் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு மாவட்டம் தோறும் வேலைவாய்பு முகாம்களை அரசே ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் வேலை வாய்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலம் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் மாதந்தோறும் இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமை (அரசு விடுமுறை நாள் தவிர்த்து) &amp;nbsp;சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களும். ஆண்டிற்கு இரண்டு பெரிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களையும் நடத்த ஆணையிடப்பட்டுள்ளது.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;அந்த வகையில் தற்போது விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அக்டோபர் 05ம் தேதி (சனிக்கிழமை) அன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;இதில், உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனத்திற்கு தேவையான 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்த வேலை வாய்ப்பு முகாமில் பட்டதாரிகள், டிப்ளமோ, ஐ.டி.ஐ. 12வது மற்றும் 10ம் வகுப்பு படித்தவர்கள் இம்முகாமில் பங்கேற்கலாம். 18 வயது முதல் 40 வயது வரையிலான வேலை தேடுபவர்கள் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;இம்மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைநாடுநர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது. வேலை நாடுநர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்கள் எடுத்து வரவேண்டும். முகாம் தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது தொலைபேசி (04146-226417), 9499055906 வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-vilupuram</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/career/private-job-opportunities-camp-in-villupuram-tvk-skrhu1"/>
        </item>
        <item>
            <title><![CDATA[2 சிறுமிகளை கூட்டாக வேட்டையாடிய உறவினர்கள்; 15 நபர்களுக்கு 20 ஆண்டு சிறை - விழுப்புரத்தில் பரபரப்பு]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-vilupuram/15-people-gets-20-years-prison-who-arrested-under-pocso-act-in-villupuram-vel-sgpssi</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-vilupuram/15-people-gets-20-years-prison-who-arrested-under-pocso-act-in-villupuram-vel-sgpssi</guid>
            <pubDate>Tue, 16 Jul 2024 17:18:18 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;விழுப்புரம் மாவட்டத்தில் 2 சிறுமிகளுக்கு 2 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்து வந்த உறவினர்கள் 15 நபர்களுக்கு 20 ஆண்டகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01hngbn1xb10bxsemw86rz69xw,imgname-pocso-case-arrest--1-.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தென்நெற்குணம் கிராமத்தைச் சேர்ந்த 7 மற்றும் 9 வயதுடைய சிறுமிகள் இருவர் தங்களது தாத்தா, பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளனர். முதியவர்களின் அரவணைப்பில் இருப்பதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட உறவினர்கள் சிலர் சிறுமியை பார்த்துக் கொள்வது போல் அவர்களிடம் அத்துமீறுவதையே வேலையாக் கொண்டிருந்தனர்.&lt;/p&gt; &lt;p&gt;தொடர் பாலியல் அத்துமீறல்களால் மிகவும் பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளும் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளனர். இதனை அறிந்த பள்ளி ஆசிரியை இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் உறவினர்கள் சிறுமிகளிடம் அத்துமீறலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறுமிகளின் தாய் 2019ம் ஆண்டு பிரம்மதேசம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனிடையே பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமி உடல்நிலை மிகவும் மோசமடைந்து கடந்த 2019ம் ஆண்டே உயிரிழந்தார்.&lt;/p&gt; &lt;p&gt;காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு முழு ஒத்துழைப்பு; அணை கட்ட அனுமதியுங்கள் - டி.கே.சிவக்குமார்&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;புகாரின் அடிப்படையில், உறவினர்களான தீனதயாளன், அஜித்குமார், பிரபா, பிரசாந்த், ரவிக்குமார், அருண், மகேஷ், ரமேஷ், துரைராஜ், மோகன், செல்வம், கமலக்கண்ணன், முருகன், துரைசாமி, செல்வம், சேகர் ஆகிய 15 நபர்களை காவல் துறையினர் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விழுப்புரம் போக்சோ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.&lt;/p&gt; &lt;p&gt;30 வயது பெண்ணுடன் ஓட்டம் பிடித்த 15 வயது சிறுவன்; பேருந்து நிலையத்தில் சுத்துபோட்ட உறவினர்கள்&lt;/p&gt; &lt;p&gt;இந்நிலையில், போக்சோ நீதிமன்ற நீதிபதி வினோதா இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார். அதன்படி சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து ந்த 15 நபர்களுக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.32 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.&amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-vilupuram</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-vilupuram/15-people-gets-20-years-prison-who-arrested-under-pocso-act-in-villupuram-vel-sgpssi"/>
        </item>
        <item>
            <title><![CDATA[கனமழை எதிரொலி; விழுப்புரத்தில் சிறுமியின் பார்வையை பறித்த மின்னல்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-vilupuram/a-9th-standard-girl-loss-her-vision-by-lightning-in-villupuram-vel-si247x</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-vilupuram/a-9th-standard-girl-loss-her-vision-by-lightning-in-villupuram-vel-si247x</guid>
            <pubDate>Sun, 11 Aug 2024 19:29:57 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;விழுப்புரத்தில் மின்னல் தாக்கி 9ம் வகுப்பு படிக்கும் சிறுமியின் கண் பார்வை பறிபோன சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j1anx2gcyaax5kdzd2y1zgwz,imgname-thunderstorm-1719419177484.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று இரவு 11 மணிக்கு தொடங்கிய மழை காலை 6 மணி வரை அவ்வபோது விட்டு விட்டு வெளுத்து வாங்கியது. தொடர் கனமழை எதிரொலியாக பேருந்து நிலையம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது.&lt;/p&gt; &lt;p&gt;ஒரு பழத்துக்கா இவ்வளவு அக்கப்போறு? திண்டுக்கல்லை அதிர வைத்த துப்பாக்கி சத்தம்&lt;/p&gt; &lt;p&gt;இதனிடையே விழுப்புரம் மாவட்டம் கக்கனூர் கிராமத்தில் வசிக்கும் அசோக்குமார் என்பவரது மகள் சன்மதி. இவர் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு பெய்த கனமழையின் போது சிறுமியின் வீட்டருகே இருந்த தென்னை மரத்தில் மின்னல் தாக்கியது. அதன் தொடர்ச்சியாக வீட்டில் இருந்த மின்சாதன பொருட்கள் வெடித்து சேமடைந்தன. இதன் விளைவாக ஏற்பட்ட அதிக வெளிச்சத்தால் சிறுமியின் கண் பார்வை பறிபோனதாகக் கூறப்படுகிறது.&lt;/p&gt; &lt;p&gt;பள்ளியில் விழுந்து கிடந்த பழங்களை சாப்பிட்ட மாணவனுக்கு நேர்ந்த சோகம்; சக மாணவர்கள் கதறல்&lt;/p&gt; &lt;p&gt;மின்னல் தாக்கிய சிறிது நேரத்திலேயே சிறுமியின் கண் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக மங்கலாகவே அவர் கதறி அழுதுள்ளார். பின்னர் சிறிது நேரத்திலேயே சிறுமியின் முழு பார்வையும் பறிபோனது. இதனைத் தொடர்ந்து சிறுமியின் உறவினர்கள் அவரை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு பார்வையை மீண்டும் கொண்டு வருவதற்கான தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-vilupuram</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-vilupuram/a-9th-standard-girl-loss-her-vision-by-lightning-in-villupuram-vel-si247x"/>
        </item>
        <item>
            <title><![CDATA[விழுப்புத்தில் புத்தக கண்காட்சி! எத்தனை நாள் நடக்கிறது? என்னென்ன புத்தகங்கள்? ]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/get-ready-for-villupuram-district-book-festival-event-2025-events-schedule-ray-sspbyf</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/get-ready-for-villupuram-district-book-festival-event-2025-events-schedule-ray-sspbyf</guid>
            <pubDate>Thu, 06 Mar 2025 17:57:50 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;விழுப்புரம் மாவட்டத்தில் புத்தக கண்காட்சி நடந்து வருகிறது? இந்த கண்காட்சி எத்தனை நாள் நடக்கும்? என்னென்ன புத்தகங்கள்? உள்ளன என்பது குறித்து பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jnnpkmyy32j3wvc08dqr0d3y,imgname-image--1-.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Villupuram District Book Festival: விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் (பபாசி) ஆகியவை இணைந்து நடத்தும் மூன்றாவது ஆண்டு புத்தகத் திருவிழா மார்ச் 2-ஆம் தேதி தொடங்கி 12-ஆம் தேதி வரை நகராட்சித் திடல் பகுதியில் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் புத்தகத் திருவிழா நடந்து வருகிறது. இந்நிலையில், விழுப்பும் மாவட்டத்திலும் புத்தகத் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடலில் மூன்றாவது புத்தகத் திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;விழுப்புத்தில் புத்தக கண்காட்சி&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;தொடக்க விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். அமைச்சர் பொன்முடி புத்தகத் திருவிழவை தொடங்கி வைத்தார். எம்.பி ரவிக்குமார், எம்.எல்.ஏ.க்கள் விழுப்புரம் இரா. லட்சுமணன், விக்கிரவாண்டி அன்னியூர் அ.சிவா, உளுந்தூர்பேட்டை ஏ.ஜெ. மணிக்கண்ணன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் (பபாசி) ஆகியவை இணைந்து இந்த புத்தகத் திருவிழாவை நடத்துகின்றன. மார்ச் 2ஆம் தேதி தொடங்கிய இந்த புத்தகத் திருவிழா மார்ச் 12ஆம் தேதி வரை நகராட்சித் திடல் பகுதியில் நடைபெறவுள்ளது. இதற்காக 50க்கும் மேற்பட்ட பல்வேறு பதிப்பகங்கள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt; &lt;p&gt;டிஎன்பிஎஸ்சி தட்டச்சர் பணிக்கான சிறப்பு போட்டித் தேர்வு முடிவுகள் வெளியீடு&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;ஆயிரக்கணக்கான புத்தகங்கள்&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;விழுப்புரம் புத்தகத் திருவிழாவில் கலை, இலக்கியம், புதினம், நாவல் என பல்வேறு தலைப்புகளில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. மேலும் ஒவ்வொரு நாளும் அங்கு நடைபெறும் விழாவில் பல்வேறு தலைப்புகளில் ஆளுமைகள் பேசுகின்றனர். முன்னதாக புத்தக திருவிழா தொடக்க விழாவில் பேசிய அமைச்சர் பொன்முடி, ''புத்தக கண்காட்சி மாணவர்களிடையே வாசிக்கும் பழக்த்தை உருவாக்கும். புத்தக வாசிப்பின் மூலம் மனதில் சீர்திருத்த கருத்துக்கள் தோன்றி சிறந்ததொரு சமூகம் அமையும்.&lt;/p&gt; &lt;p&gt;புத்தகங்கள் படிக்கும்போது, மனம் ஒருநிலைபடுவதால், உடல் நலனும் பாதுகாக்கப்படும். பெற்றோர்கள் தங்களின் குழந்தைகள் தினசரி நாளிதழ்கள் படிக்கும் பழக்கத்தை வளர்க்க வேண்டும். அப்போது தான், உலகளாவிய அன்றாட நிகழ்வுகளை அறிந்து கொள்ள முடியும். போட்டி தேர்வுக்கு தயாராவோர் இந்த புத்தக கண்காட்சியை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்' என்றார்.&lt;/p&gt; &lt;p&gt;இது வெறும் ட்ரெய்லர் தான்! இனிமே தான் வெயின் ஆட்டமே இருக்காம்! ஆனாலும் ட்விஸ்ட் வைத்த வானிலை! &amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-vilupuram</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/get-ready-for-villupuram-district-book-festival-event-2025-events-schedule-ray-sspbyf"/>
        </item>
        <item>
            <title><![CDATA[விமானங்கள் ரத்து, ECR சாலை, கல்வி நிலையங்கள் மூடல் - தலைநகரை சுழன்றடிக்கும் ஃபெஞ்சல் புயல்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/red-alert-has-been-issued-for-many-districts-due-to-cyclone-fengal-vel-snqseh</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/red-alert-has-been-issued-for-many-districts-due-to-cyclone-fengal-vel-snqseh</guid>
            <pubDate>Sat, 30 Nov 2024 08:05:44 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ஃபெஞ்சல் புயல் இன்று புதுவை - காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் நிலையில் சென்னை, கடலூர், விழுப்புரம் உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jdxek4zjwa8cqe6yara5rh5x,imgname-mixcollage-30-nov-2024-08-01-am-7541.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஃபெஞ்சல் புயல் இன்று புதுவை - காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் நிலையில் சென்னை, கடலூர், விழுப்புரம் உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;6 கிமீ வேகத்தில் ஃபெஞ்சல் புயல்&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;கடந்த 7 மணி நேரமாக மணிக்கு 6 கிமீ வேகத்தில் பயணிக்கும் ஃபெஞ்சல் (&lt;strong&gt;Fengal&lt;/strong&gt;) புயல் புதுவையில் இருந்து கிழக்கே 180 கிமீ தொலைவிலும், சென்னையில் இருந்து தென்கிழக்கே 190 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;புயல் இன்று பகல் நேரத்தில் புதுவைக்கு அருகே மாமல்லபுரம் - புதுவை இடையே கரையை கடக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 90 கிமீ வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;ரெட் அலர்ட்&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;ஃபெஞ்சல் காரணமாக தமிழகம், புதுவையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ள நிலையில் தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளகுறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிககனமழை பெய்யக்கூடும் என்பதற்கான ரெட் அலர்ட் (Red Alert) விடுக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;இதே போன்று ராணிபேட்டை, திருவண்ணாமலை, வேலூர், திருவண்ணாமலை, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் மிதமழை முதல் கனமழை (&lt;strong&gt;Heavy Rain&lt;/strong&gt;) பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;மூடப்படும் ECR சாலை&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;புயல் புதுவைக்கு அருகே மாமல்லபுரம், காரைக்கால் இடையே கரையை கடக்கக்கூடும் என்பதால் புயல் கரையை கடக்கும் நேரத்தில் கிழக்கு கடற்கரைச் சாலை தற்காலிகமாக மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;விடுமுறை&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;ஃபெஞ்சல் புயல் காரணமாக கனமழை பெய்து வரும் நிலையில் புயல் கரையை கடக்கும் போது மழையின் தீவிரம் அதிகமாக இருக்கும் என்பதால் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளகுறிச்சி, மயிலாடுதுறை, ராணிபேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை (&lt;strong&gt;Holiday&lt;/strong&gt;) அளிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;வட்டமடிக்கும் விமானங்கள்&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;புயல் காரணமாக காற்றின் வேகம் அதிகரித்திருப்பதால் புனே, குவைத், மஸ்கட், மும்பை ஆகிய நகரங்களில் இருந்து சென்னைக்கு வந்த விமானங்கள் தரையிரங்க முடியாமல் வானில் வட்டமடித்தபடி இருக்கின்றன.&lt;/p&gt; &lt;p&gt;கனமழை மற்றும் காற்றின் சீற்றம் காரணமாக சிங்கப்பூர், திருச்சி, மங்களூரு உட்பட பல பகுதிகளில் இருந்து சென்னை வரும் 6 விமானங்கள் (Flights Cancelled) ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனிடையே திருச்சி, தூத்துக்குடி, மைசூரு, பெங்களூரு, அந்தமான் செல்லும் விமானங்கள் வழக்கம்போல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-vilupuram</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/red-alert-has-been-issued-for-many-districts-due-to-cyclone-fengal-vel-snqseh"/>
        </item>
        <item>
            <title><![CDATA[என்னையே வேணாம்னு சொல்றியா! டீயில் எலி பேஸ்ட்! உயிருக்குப் போராடும் காதலன்! கைதான காதலி பகீர்! ]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/tea-mixed-with-rat-poison-for-boyfriend-college-girl-arrest-tvk-sskyrs</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/tea-mixed-with-rat-poison-for-boyfriend-college-girl-arrest-tvk-sskyrs</guid>
            <pubDate>Tue, 04 Mar 2025 09:22:40 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;விழுப்புரத்தில் காதலியை கைவிட்டதால் தேநீரில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்த காதலி. காதலன் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார், சிறுநீரகம் செயலிழந்தது. ரம்யா கைது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jnfmammdp8vvgsfwwp2fs5vd,imgname-villupuram-2.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அடுத்துள்ளது கிரிமேடு கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் ஜெயசூர்யா (24). சட்டக்கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர், தனியார் பொறியியல் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த ரம்யா (19) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.&amp;nbsp;இவர்களின் காதல் விவகாரம் இருவரின் வீட்டார் பெற்றோருக்கு தெரியவந்ததை அடுத்து இருவரையும் கண்டித்துள்ளனர். அந்த பெண் தங்கை முறை என்பதால் அவளுடன் பேசுவதை நிறுத்தித் கொள்ள வேண்டும் என &amp;nbsp;ஜெயசூர்யாவை கண்டித்துள்ளனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதனால் ஜெயசூர்யா காதலி ரம்யாவுடன் பேசுவதை நிறுத்தியது மட்டுமல்லாமல் காதலை கைவிட முடிவு செய்தார். பேசுவதை நிறுத்தியதால் ஆத்திரத்தில் இருந்து வந்த ரம்யா எப்படியோ நைசமாக பேசி பிப்ரவரி 2ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் காதலனை வீட்டுக்கு வரவழைத்துள்ளார். அப்போது ஜெயசூர்யாவிற்கு ரம்யா தேநீர் கொடுத்து விட்டு சிறிது நேரம் பேசிவிட்டு சென்றுவிட்டார்.அதன் பின்னர் மறுநாள் உடல் நிலையில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா?' என்று ரம்யா வாட்ஸ் ஆப் மூலமாக காதலன் ஜெயசூர்யாவிடம் கேட்டுள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;&lt;img&gt;&lt;/p&gt; &lt;p&gt;அதற்கு ஜெயசூர்யா ஆமாம் என்று கூறியதற்கு என்னை நீ வேண்டாம் என்று கூறி விட்டதால் தேநீரில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்துள்ளேன் என மெசேஜ் அனுப்பியுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத ஜெயசூர்யா அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுதொடர்பாக நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து உடனடியாக நண்பர்கள் அவரை மீட்டு முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஜெயசூர்யாவை அனுமதிக்கப்பட்டார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக சென்னையிலுள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஒரு சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகள் செயலிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து 30 நாட்களுக்கு மேலாக ஆபத்தான நிலையில் ஜெயசூர்யாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. /&lt;/p&gt; &lt;p&gt;&lt;img&gt;&lt;/p&gt; &lt;p&gt;இந்த சம்பவம் தொடர்பாக திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே ரம்யா மற்றும் அவரது குடும்பத்தினர் தலைமறைவானதை அடுத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் ரம்யாவை நேற்று மாலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருவெண்ணைநல்லூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.&amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-vilupuram</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/tea-mixed-with-rat-poison-for-boyfriend-college-girl-arrest-tvk-sskyrs"/>
        </item>
    </channel>
</rss>
