<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes"?>
<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Mon, 19 Jan 2026 10:43:13 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss/tamilnadu-vellore" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[வேலூரில் 5 நாட்களுக்கு வெயில் அதிகரிக்குமாம்! யாரும் வீட்டை விட்டு வெளியே வராதீங்க! மாவட்ட ஆட்சியர் வார்னிங்! ]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-vellore/heat-will-increase-in-vellore-for-5-days-district-collector-warns-tvk-suhnuu</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-vellore/heat-will-increase-in-vellore-for-5-days-district-collector-warns-tvk-suhnuu</guid>
            <pubDate>Thu, 10 Apr 2025 11:44:13 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;வேலூர் மாவட்டத்தில் வெப்பம் அதிகரிக்கும் என்பதால், பொதுமக்கள் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jm1tgtephs31n7rqswy6ahn6,imgname-heatwave-2.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழ்நாட்டில் இன்று முதல் ஏப்ரல் 14ம் வரை வட மாவட்டங்களில் 40 &deg;C முதல் 42 &deg;C என்ற அளவில் வெப்பத்தின் தாக்கம் இயல்பைவிட அதிகம் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே வேலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் இன்று முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை வெப்பத்தின் தாக்கம் இயல்பை விட அதிகமாக இருக்கும் என்பதால் அத்தியாவசிய பணிகளை தவிர்த்து வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும் பொதுமக்கள் கீழ்க்கண்ட பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&lt;strong&gt;தமிழகத்தில் கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கப்போகுதாம்!&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;strong&gt;பாதுகாப்பு&amp;nbsp;வழிமுறைகள்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;* தாகம் இல்லாவிடினும், அவ்வப்போது போதுமான குடிநீரை அருந்த வேண்டும்.&lt;/p&gt; &lt;p&gt;* லேசான ஆடைகள், வெளிரிய ஆடைகள், உடலை இறுக்கி பிடிக்காத, தளர்வான முழுகை ஆடைகள், நூர் துணி பருத்தி ஆடைகளை அணிதல் வேண்டும்.&lt;/p&gt; &lt;p&gt;* வீட்டின் ஜன்னல் கதவுகளுக்கு திரைச்சீலை அமைத்திருப்பின் பகல் நேரங்களில் அவற்றை மூடிய நிலையிலும், இரவு நேரங்களில் அவற்றை விலக்கி வைத்து வீட்டினை குளுமையாக இருக்கும் வகையில் பராமரித்துக்கொள்ள வேண்டும்.&lt;/p&gt; &lt;p&gt;* மின்விசிறி பயன்படுத்தியும் மற்றும் குளிர்ந்த நீரில் அடிக்கடி குளித்தும் உடல் வெப்பத்தை குறைத்திட செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது.&lt;/p&gt; &lt;p&gt;* வெளியில் செல்லும்போது குடை அல்லது தொப்பி, காலணி அணிந்து செல்லவேண்டும்.&lt;/p&gt; &lt;p&gt;* இளநீர், நொங்கு, தர்ப்பூசணி, மோர் போன்றவற்றை அதிகமாக உட்கொள்ளவேண்டும்.&lt;/p&gt; &lt;p&gt;* வீட்டில் செய்யப்பட்ட லஸ்ஸி, சாத நீர், எலுமிச்சைசாறு, மோர், ஓ.ஆர்.எஸ். எனப்படும் உப்பு சர்க்சரை கரைசல், உப்புகலந்த கஞ்சி, பழரசங்கள் போன்றவைகளை பருகவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.&lt;/p&gt; &lt;p&gt;* வெளியில் பயணம் மேற்கொள்ளும்போது உடன் குடிநீர்கொண்டு செல்லவேண்டும்.&lt;/p&gt; &lt;p&gt;* கால்நடை மற்றும் வளர்ப்பு பிராணிகளை நிழலான இடத்தில் கட்டி வைத்து அதற்கு தேவையான குமநீர் மற்றும் தீவனம் அளிக்கவேண்டும்.&lt;/p&gt; &lt;p&gt;* கர்ப்பிணி பெண்கள் காலை 10.00 மணி முதல் 3.00 மணிவரை வெளியில் செல்வதை தவிர்க்கவேண்டும். வெளியில் செல்லும்போது கையில் குடை மற்றும் தண்ணீர் எடுத்துச் செல்ல வேண்டும்.&lt;/p&gt; &lt;p&gt;* மது, தேநீர், காபி போன்றவற்றை அருந்துவதை தவிர்க்கவேண்டும்.&lt;/p&gt; &lt;p&gt;* அதிக புரதம்/மாமிச கொழுப்பு சத்துள்ள மற்றும் கார வகைகளை தவிர்க்கவேண்டும்.&lt;/p&gt; &lt;p&gt;* சர்க்கரை நோய், இருதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் வெயிலில் செல்வதை தவிர்க்கவேண்டும்.&lt;/p&gt; &lt;p&gt;* வயதானவர்கள், குழந்தைகள், நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் வெயிலின் தாக்கத்தினால் அதிகமாக பாதிக்கப்படுவர். எனவே இவர்கள் வெயில் நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்க்கவேண்டும்.&lt;/p&gt; &lt;p&gt;* குழந்தைகளையும், வளர்ப்பு பிராணிகளையும் முடிய வாகனங்களில் தனியாக அமர்ந்திருக்க அனுமதிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;எனவே மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி வெப்ப பாதிப்புகளிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துகொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-vellore</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-vellore/heat-will-increase-in-vellore-for-5-days-district-collector-warns-tvk-suhnuu"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஷாக்கிங் நியூஸ்! வேலூரில் பட்டப்பகலில் மிளகாய் பொடி தூவி சிறுவன் கடத்தல்! போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-vellore/software-engineers-son-kidnapped-in-broad-daylight-at-gudiyatham-shocking-case-articleshow-868lmxf</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-vellore/software-engineers-son-kidnapped-in-broad-daylight-at-gudiyatham-shocking-case-articleshow-868lmxf</guid>
            <pubDate>Wed, 24 Sep 2025 15:14:56 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Child Kidnapping: குடியாத்தத்தில், மென்பொருள் பொறியாளர் ஒருவரின் 4 வயது மகன் பட்டப்பகலில் கடத்தப்பட்டார். தந்தை கண்முன்னே மிளகாய் பொடி தூவி, மர்ம நபர்கள் குழந்தையை காரில் கடத்திச் சென்ற சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k5xhr0dpgg96sev4bkbeaxy5,imgname-vellore-1758707057077.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;வேலூர் மாவட்டம் குடியாத்தம் காமாட்சி அம்மன் பேட்டை பகுதியில் உள்ள பவள தெருவில் சாப்ட்வேர் இன்ஜினியர் தொழில் செய்யும் வேணு. இவரது மகன் யோகேஷ்(4). மகனை உணவு இடைவேளைக்காக பள்ளியில் இருந்து அழைத்து வந்து வீட்டு வாசலில் நின்ற நேரத்தில் மர்ம நபர்கள் மிளகாய் பொடி கண்ணில் தூவியும் மிளகாய் பொடியை வாரி முகத்தில் அடித்தும் தனது குழந்தையை கண் எதிரே காரில் கடத்தியுள்ளனர்.&lt;/p&gt;&lt;p&gt;கர்நாடக மாநில பதிவின் கொண்ட வெள்ளை நிற சொகுசு காரின் கடத்தியதை கண்ட தந்தை வேணு பதறி கூச்சலிட்ட நிலையில் மின்னல் வேகத்தில் கார் சென்றுள்ளது. இதனால் மிகுந்த பதற்றத்துடன் குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் தகவல் கொடுத்துள்ளார். விரைவாக செயல்பட்ட குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர் அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் கொடுத்து உஷார்படுத்தியதன் அடிப்படையில் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை தற்போது குடியாத்தம் நகர போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;கர்நாடகா பதிவு எண் கொண்ட காரில் வந்த மர்ம நபர்கள் குழந்தையை கடத்திச் சென்றது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் மாவட்ட மற்றும் மாநில எல்லைகளில் ரோந்து பணி தீவிர படுத்தப்பட்டு நான்கு திசையிலும் காவல்துறையினர் விரைவாக செயல்பட்டு கார் சென்ற இடங்களை ஆய்வு செய்து தேடி வருகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;நகரின் மையப் பகுதியில் குறுகலான சாலையில் வீட்டின் வாசலில் குழந்தையை காரில் கடத்தியது அப்பகுதி மட்டும் அல்லாமல் குடியாத்தம் நகரம் முழுவதும் பெரும் சோகத்திலும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணையில் கர்நாடக மாநில பதிவெண் கொண்ட கார் போலி பதிவு என்பது தெரியவந்துள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-vellore</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-vellore/software-engineers-son-kidnapped-in-broad-daylight-at-gudiyatham-shocking-case-articleshow-868lmxf"/>
        </item>
        <item>
            <title><![CDATA[லேப்டாப்பில் சார்ஜ் போட்டு ரெடியா வச்சுக்கோங்க.. வேலூரில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-vellore/vellore-power-outage-areas-tomorrow-8bv53a5</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-vellore/vellore-power-outage-areas-tomorrow-8bv53a5</guid>
            <pubDate>Mon, 19 Jan 2026 10:39:25 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;வேலூர் மாவட்டத்தில் நாளை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. காட்பாடி, சத்துமதுரை, பள்ளூர், தக்கோலம், காந்திநகர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்தடை ஏற்படும்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k00n397xnythkefe061ac0g4,imgname-power-cut-1752368784637.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;வேலூர் மாவட்டத்தில் நாளை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. காட்பாடி, சத்துமதுரை, பள்ளூர், தக்கோலம், காந்திநகர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்தடை ஏற்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழகம் முழுவதும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். இதுகுறித்து பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி நாளை வேலூர் மாவட்டத்தில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை மற்றும் எத்தனை மணிநேரம் என்பதை பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;சத்துமதுரை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;அடுக்கம்பாறை, துத்திப்பேட்டை, குளவிமேடு, நெல்வாய், கணியம்பாடி, பெரியபாளையம், சின்னபாளையம், சோழவரம் மற்றும் சாத்துமதுரை சுற்றுவட்டார பகுதிகள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;கீழ்பள்ளிபட்டு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;கண்ணமங்கலம், வரகூர்புதூர், அம்மாபாளையம், வல்லம் மற்றும் கிளரசம்பேட்டை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் அடங்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;காட்பாடி&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;காந்தி நகர், சேனூர், செங்குட்டை, கல்புதூர், இபி காலனி, விருத்தம்புட், தாராபடவேடு, காங்கேயநல்லூர் மற்றும் காட்பாடி உள்ளிட்ட பகுதிகளில் பவர் கட் செய்யப்படும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பள்ளூர்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;சேந்தமங்கலம், ஆசனெல்லிக்குப்பம், திருமால்பூர், எஸ்.கொளத்தூர், கணபதிபுரம் மற்றும் பள்ளூர் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் மின்தடை ஏற்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;புன்னை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;நெமிலி, மேல்களத்தூர், கீழ்களத்தூர், செல்வமந்தை, காட்டுப்பாக்கம், வேட்டகுளம், பல்லாவரம், பேரப்பேரி, கீழ்வீதி, கீழ்வேங்கடபுயம், கீழ்துறை, மேலதுறை, புன்னை சுற்றுவட்டாரப் பகுதிகள் அனைத்தும் அடங்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;தக்கோலம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;அரிகிலபாடி, காஞ்சிபுரம், சேந்தமங்கலம் மற்றும் தக்கோலம் சுற்றுவட்டாரப் பகுதிகள் அடங்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;லட்சுமிபுரம், ராதாகிருஷ்ணா நகர், 12வது கிராஸ் காந்திநகர், ஸ்ரீ சாய்ராம் நகர், ஸ்ரீராம்நகர், காங்கேயநல்லூர் கிராமம், சிட்கோ இண்டஸ்ட்ரியல், வைபவ்நகர், வெள்ளக்கல்மோடு, 8வது கிழக்கு பிரதான சாலை, வி.ஜி.ராவ் நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 3 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-vellore</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-vellore/vellore-power-outage-areas-tomorrow-8bv53a5"/>
        </item>
        <item>
            <title><![CDATA[இளைஞர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை கொடுக்கும் தமிழக அரசு! உடனே அப்ளை பண்ணுங்க ப்ரோ!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/career/tamilnadu-government-will-give-1000-rupees-per-month-to-the-youth-apply-now-sgb-sgbfs3</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/career/tamilnadu-government-will-give-1000-rupees-per-month-to-the-youth-apply-now-sgb-sgbfs3</guid>
            <pubDate>Mon, 08 Jul 2024 23:10:52 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் தோறும்&amp;nbsp;ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துகிறது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01h50f4cff8bj83840eq6ezqpd,imgname-asianet-news--60-.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என வேலூர் மாவட்டக் கலெக்டர் அறிவித்துள்ளார். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்றவர்கள் இந்த திட்டத்தின் கீழ் ரூ.1000 வரை உதவித்தொகை பெறலாம்.&lt;/p&gt; &lt;p&gt;தமிழக அரசின் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளாக வேலை இல்லாமல் இருப்பவர்கள் உதவித்தொகை முடியும். 200 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை இந்த உதவித்தொகை கொடுக்கப்படுகிறது.&lt;/p&gt; &lt;p&gt;பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ரூ.200, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் மாதம் ரூ.300 கொடுக்கப்படும். 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400, பட்டதாரிகளுக்கு ரூ.600 உதவித்தொகையாக வழங்கப்படும். ஆனால் இந்தத் தொகை காலாண்டிற்கு ஒருமுறை மொத்தமாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.&lt;/p&gt; &lt;p&gt;மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓர் ஆண்டு முடித்திருந்தாலே&amp;nbsp;இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமானம் மற்றும் வயது வரம்பு கிடையாது. ஆனால், தமிழக அரசின் முதியோர் உதவித்தொகை (OAP) பெறுபவர்களுக்கு இத்திட்டத்தில் உதவித்தொகை பெற முடியாது.&lt;/p&gt; &lt;p&gt;பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.600 கிடைக்கும். 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750 கிடைக்கும். பட்டப்படிப்பு முடித்த மாற்றுத்திறளாளியாக இருந்தால் ரூ.1000 மாத உதவித்தொகை கிடைக்கும்.&lt;/p&gt; &lt;p&gt;இத்திட்டத்தில் விண்ணபிப்பது தொடர்பாக வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலட்சுமி அறிவிப்பு ஒன்றை&amp;nbsp;வெளியிட்டிருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது:-&lt;/p&gt; &lt;p&gt;&quot;வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டம் தமிழ்நாடு அரசினால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் ஜூன் மாதம் 30-ந் தேதி வரையிலான காலாண்டில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து தற்போது 5 ஆண்டுகள் முடிவு பெற்றுள்ள இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.&lt;/p&gt; &lt;p&gt;இதற்கான விண்ணப்பப்படிவங்களை வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம். அல்லது www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.&lt;/p&gt; &lt;p&gt;பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் மாற்றுச்சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து அசல் கல்விச்சான்றுகள், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை, குடும்ப அட்டை (ரேஷன்கார்டு) மற்றும் வேலூர் மாவட்டத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தொடங்கப்பட்ட சேமிப்பு கணக்கு புத்தகம் ஆகியவற்றை வேலை நாட்களில் நேரில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம்.&lt;/p&gt; &lt;p&gt;இதற்கு தகுதியானவர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற்று வருபவர்கள் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் வருவாய்த்துறையின் ஒட்டுமொத்த சான்றுடன் உதவித்தொகைக்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து ஒராண்டு கழித்து, 2,3-ம் ஆண்டின் தொடக்கத்தில் பணியில் இல்லை என்ற சுய உறுதிமொழி படிவத்தை அளிக்க வேண்டும்.&lt;/p&gt; &lt;p&gt;வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகள் தங்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டையை உரிய காலத்தில் புதுப்பிக்க வேண்டும். புதுப்பித்தவுடன் அதனை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும். வேலை வாய்ப்பு அலுவலகப்பதிவை புதுப்பிக்க தவறியவர்களின் உதவித்தொகை உடனடியாக நிறுத்தப்படும். வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதால் பதிவு ஏதும் ரத்தாகாது&quot;&lt;/p&gt; &lt;p&gt;இவ்வாறு வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி கூறியுள்ளார்&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-vellore</category>
            <dc:creator>SG Balan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/career/tamilnadu-government-will-give-1000-rupees-per-month-to-the-youth-apply-now-sgb-sgbfs3"/>
        </item>
        <item>
            <title><![CDATA[வேலூரில் நாளை காலை முதல் மாலை வரை மின்தடை! மோட்டர், செல்போனில் சார்ஜ் போட்டு ரெடியா வச்சுக்கோங்க.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-vellore/vellore-power-cut-tomorrow-morning-to-evening-charge-mobile-motor-alert-d1l72lz</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-vellore/vellore-power-cut-tomorrow-morning-to-evening-charge-mobile-motor-alert-d1l72lz</guid>
            <pubDate>Wed, 07 Jan 2026 09:42:16 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, வேலூர் மாவட்டத்தில் இன்று மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. ராணிப்பேட்டை, ஆற்காடு, கலவை உள்ளிட்ட பல துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்தடை ஏற்படும்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k00n3980hhe0mk0jbw7ktf1s,imgname-power-cut-1-1752368784640.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, வேலூர் மாவட்டத்தில் இன்று மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. ராணிப்பேட்டை, ஆற்காடு, கலவை உள்ளிட்ட பல துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்தடை ஏற்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி வேலூர் மாவட்டத்தில் இன்று எந்தெந்த பகுதிகளில் மின்தடை எத்தனை மணிநேரம் என்பதை பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;அனைமல்லூர்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;காவனூர், புங்கனூர், குப்பம், வண்டிக்கால், பாலமதி, சாம்பசிவபுரம், வெங்கடாபுரம், நாய்கந்தோப்பு, வரகூர்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;தாமரைப்பாக்கம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;தாமரைப்பாக்கம், வளத்தூர், வணக்கம்பாடி, பல்லவராயன்குளம், செய்யத்துவண்ணன், மழையூர், பாளையம், பரதராமி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நாவல்பூர், புலியக்கண்ணு, சாந்தமேடு, வி.சி. மோட்டார், பிஞ்சி, எம்பிடி சாலை, பைபாஸ் ராடு, ரஃபிக் நகர், மேல்புதுப்பேட்டை, காந்திநகர், பாரி காலனி, முத்துக்கடை ஒத்தவாடை தெரு, ராணிப்பேட்டை பகுதிகளில் பவர் கட் செய்யப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;புதுப்பாடி&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;புதுப்பாடி, வளவனூர், கடப்பந்தாங்கல், மாங்காடு, சக்கரமல்லூர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் மின்தடை விநியோகம் தடைப்படும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஆற்காடு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;உப்புப்பேட்டை, முப்பத்துவெட்டி, லட்சுமிபுரம், தாஜ்புரா, மேலக்குப்பம், தூப்புகானா, தேவி நகர், அம்மா நகர், விசாரம், நந்தியாலம், ரத்தினகிரி, மேலக்குப்பம் மற்றும் ஆற்காடு சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;மாம்பாக்கம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;வளப்பந்தல், வேம்பி, தோணிமேடு, செங்கணவரன், மாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;கலவை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;கலவை, கலவை புதூர், டி.புதூர், நெட்டப்பாக்கம், சென்னசமுத்திரம், மேல்நெல்லி, மாந்தாங்கல், பிண்டிதாங்கல், பின்னத்தாங்கல், வெள்ளம்பி, மழையூர், குட்டியம், அல்லாலச்சேரி, கணியத்தாங்கல், அரும்பாக்கம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேச்சேரி, அரும்பாக்கம், கலவை, ஆதிபராசக்தி இன்ஜினியரிங் கல்லூரி, கே.வேலூர், பரிகில்பட்டு, மேச்சேரி, கலவாய் எக்ஸ் ரோடு, கரிகந்தாங்கல் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-vellore</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-vellore/vellore-power-cut-tomorrow-morning-to-evening-charge-mobile-motor-alert-d1l72lz"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Crime: கணவனின் தகாத உறவால் மனம் உடைந்த மனைவி விபரீத முயற்சி; 4 வயது குழந்தை துடிதுடித்து பலி]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-vellore/a-4-year-old-child-tragically-lost-his-life-in-a-dispute-between-a-husband-and-wife-in-tirupathur-vel-sg3kok</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-vellore/a-4-year-old-child-tragically-lost-his-life-in-a-dispute-between-a-husband-and-wife-in-tirupathur-vel-sg3kok</guid>
            <pubDate>Thu, 04 Jul 2024 17:15:55 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;திருப்பத்தூர் மாவட்டத்தில் கணவனின் தகாத உறவால் தனது குழந்தையுடன் தாய் தற்கொலைக்கு முயன்ற நிலையில், 4 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j1yrsycy3g7x3gv0aa5qfdmg,imgname-whatsapp-image-2024-07-04-at-17-11-08.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த கொரட்டி பகுதியில் வசிப்பவர் குப்பன் மகன் கணபதி. இவர் ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். ஜோலார்பேட்டை அடுத்த அம்மையப்பன் நகர் பகுதியைச் சேர்ந்த வினோதினியை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 வயதில் குழந்தை ஒன்று உள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் சதீஷ்குமார் என்பவரின் மனைவி சத்யாவிற்கும் தன்னுடைய கணவணனுக்கும் ஏற்பட்ட திருமணத்தை மீறிய உறவின் காரணமாக கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் ரகசிய வீடியோ அடங்கிய செல்போன் வினோதினிக்கு கிடைத்ததாக சொல்லப்படுகிறது.&lt;/p&gt; &lt;p&gt;காஞ்சியில் அடைக்கலம் தேடி வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை; பாதிரியார் போக்சோ சட்டத்தில் கைது&lt;/p&gt; &lt;p&gt;இந்நிலையில் அந்த செல்போனை வாங்குவது சம்பந்தமாக ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி வினோதினியை, கணவன் கணபதி கடுமையாக தாக்கியதால் மனமுடைந்த வினோதினி தன்னுடைய நான்கு வயது குழந்தையுடன் அருகாமையில் இருந்த கிணற்றில் &amp;nbsp;குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;ஆனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் குழந்தையுடன் குதித்த வினோதினியை காப்பாற்றி உள்ளனர். ஆனால் துரதிஷ்டவசமாக குழந்தை கிணற்றில் நீருக்குள் மூழ்கியதால் திருப்பத்தூர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரமாக போராடி குழந்தையை சடலமாக மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.&lt;/p&gt; &lt;p&gt;எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை பார்த்த எங்களுக்கு &ldquo;விஜய் ஒரு சுண்டைக்காய்&rdquo; - அர்ஜூன் சம்பத் காட்டம்&lt;/p&gt; &lt;p&gt;இந்நிலையில் சம்பவம் அறிந்த சத்யாவும் என்ன செய்வது என்று அறியாமல் பதட்டத்தில் பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் அவரும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவன் மனைவிக்கு ஏற்பட்ட தகராறு காரணமாக நான்கு வயது குழந்தையுடன் தாய் கிணற்றில் குதித்த நிலையில் குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-vellore</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-vellore/a-4-year-old-child-tragically-lost-his-life-in-a-dispute-between-a-husband-and-wife-in-tirupathur-vel-sg3kok"/>
        </item>
        <item>
            <title><![CDATA[உடல் ஆரோக்கியத்திற்காக கிழங்கு சாப்பிட்ட இளைஞர் முகம் வீங்கி துடிதுடித்து பலி]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-vellore/person-dies-after-eating-uncooked-yam-in-vellore-vel-shmv68</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-vellore/person-dies-after-eating-uncooked-yam-in-vellore-vel-shmv68</guid>
            <pubDate>Sat, 03 Aug 2024 13:50:32 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;உடலுக்கு ஆரோக்கியம் என நினைத்து காட்டு கருணை கிழங்கை வேக வைக்காமல் சாப்பிட்ட நபர் உடல் வீங்கி துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j4bn52mc16kyy0fgc6deqkvt,imgname-whatsapp-image-2024-08-03-at-13-48-24.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்னர் ரஞ்சனி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டு திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தார்வழி பகுதியில் வசித்து வருகிறார். விவசாய பணிகளுக்கு டிராக்டர் ஓட்டி வரும் மணிகண்டனுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். இதனிடையே மாச்சம்பட்டு பகுதியில் ரவி என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் மணிகண்டன் தேங்காய் ஏற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.&lt;/p&gt; &lt;p&gt;சிறுவனின் உயிரை குடித்த ஆன்லைன் கேம்; தற்கொலைக்கு ப்ளூ பிரிண்ட் தயாரித்து விபரீத முடிவு&lt;/p&gt; &lt;p&gt;அப்போது அங்கு விளைந்திருந்த காட்டு கருணைக் கிழங்கை மணிகண்டன் சாப்பிட்டுள்ளார். அருகில் இருந்தவர்கள் அதனை சமைக்காமல் சாப்பிட வேண்டாம் என்று கூறியதற்கு, பச்சையாக சாப்பிட்டால் தான் கூடுதல் பலம் கிடைக்கும் என்று கூறிவிட்டு அந்த கிழங்கை சாப்பிட்டுள்ளார். அதனை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே ஒவ்வாமை ஏற்பட்டு அவரது முகம், உடலின் சில பகுதிகள் வீங்கத் தொடங்கி உள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;நாட்டிலேயே முதல்முறை; சேலத்தில் ஏலியனுக்கு கோவில் கட்டிய சித்தர் - இனி எல்லாமே ஏலியன்கள் தானாம்&lt;/p&gt; &lt;p&gt;இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு எந்தவித முன்னேற்றமும் தெரியாத நிலையில், உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், சிகிச்சை பலன் இன்றி மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-vellore</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-vellore/person-dies-after-eating-uncooked-yam-in-vellore-vel-shmv68"/>
        </item>
        <item>
            <title><![CDATA[இதெல்லாம் ரொம்ப தப்புடா! என் ஆளையே உஷார் பண்ண பாக்குறியா! இறுதியில் கல்லூரி மாணவனுக்கு நடந்த அதிர்ச்சி! வெளியான பகீர்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/crime/college-student-killed-by-friends-attack-in-vellore-lbv6p9e</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/crime/college-student-killed-by-friends-attack-in-vellore-lbv6p9e</guid>
            <pubDate>Mon, 05 Jan 2026 14:57:55 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Vellore College Student: வேலூரில் கல்லூரி மாணவர் டேனி வளனரசு, காதல் தகராறில் நண்பர்களால் கொலை செய்யப்பட்டார். புத்தாண்டு அன்று மதுபோதையில் இரும்பு ராடால் தாக்கி கொலை செய்து, சடலத்தை ஆந்திர எல்லையில் வீசியுள்ளனர்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ke6qd7cx15pr23jt9z9tdd1y,imgname-vellore-1767604919709.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Vellore College Student: வேலூரில் கல்லூரி மாணவர் டேனி வளனரசு, காதல் தகராறில் நண்பர்களால் கொலை செய்யப்பட்டார். புத்தாண்டு அன்று மதுபோதையில் இரும்பு ராடால் தாக்கி கொலை செய்து, சடலத்தை ஆந்திர எல்லையில் வீசியுள்ளனர்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியை சேர்ந்தவர் டேனி வளனரசு(19). இவர் வேலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவரது நண்பர்களான ஆரணியை சேர்ந்த கிஷோர்கண்ணன்(19), புதுச்சேரியை சேர்ந்த பார்த்தசாரதி(19), தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த இன்பவர்மா(18) ஆகியோர் வேலூர் சாய்நாதபுரத்தில் வீடு வாடகை எடுத்து கல்லூரியில் படித்து வந்தனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில் கல்லூரியில் செமஸ்டர் விடுமுறை என்பதால் அவரவர் சொந்த ஊருக்கு சென்றனர். ஆனால் விடுமுறைக்கு முன்பாக டேனி வளனரசு கடந்த 31ம் தேதி இரவு வேலூருக்கு வந்துள்ளார். ஆனால் வந்து சேர்ந்ததாக பெற்றோருக்கு போன் செய்யவில்லை. இதனால் மகனின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அவரது பெற்றோர், நண்பர்களிடம் தொடர்பு கொண்ட போது சரிவரி பதில் சொல்லாமல் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதனால் சந்தேகம் அடைந்த டேனி வளனரசுவின் பெற்றோர் பாகாயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனையடுத்து கிஷோர்கண்ணனிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. புதுச்சேரியை சேர்ந்த பார்த்தசாரதி, தன்னுடன் படிக்கும் மாணவி ஒருவரை காதலித்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்த மாணவி மீது டேனிவளனரசுவுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணிடம் தொடர்ந்து தனது காதலை வலியுறுத்தி வந்ததாக தெரிகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதையறிந்த பார்த்தசாரதி மற்றும் கிஷோர்கண்ணன் இருவரும் அவரை எச்சரித்துள்ளனர். ஆனால் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் காதலை தொடர்ந்துள்ளார். இதனால் அவரை கொலை செய்ய கிஷோர், பார்த்தசாரதி திட்டமிட்டனர். அதன்படி கடந்த 1ம் தேதி புத்தாண்டு தினத்தில் மது அருந்தியுள்ளனர். அப்போது போதையில் இருந்த டேனி வளனரசுவை இரும்பு ராடால் தாக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் சடலத்தை ஆந்திர எல்லைக்கு எடுத்துச் சென்று மலை அடிவாரத்தில் வீசியது தெரியவந்தது. முக்கிய குற்றவாளியான பார்த்தசாரதியை தேடி தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-vellore</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/crime/college-student-killed-by-friends-attack-in-vellore-lbv6p9e"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஒரே நேரத்தில் மனைவி, மச்சினிச்சையும் கர்ப்பமாக்கிய வாலிபர்! அதிர்ச்சியில் மாமியார்! கடைசியில் நடந்த ட்விஸ்ட்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/gallery/wife-younger-sister-got-pregnant-husband-arrest-tvk-sfw572</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/gallery/wife-younger-sister-got-pregnant-husband-arrest-tvk-sfw572</guid>
            <pubDate>Sun, 30 Jun 2024 16:58:51 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;மாமியார் வீட்டுக்கு சென்றபோது மச்சினிச்சியை மடக்கி கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அக்கா சணவர் போச்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01hjzrma307qa815d7w86xbyjy,imgname-new-project--5-.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;மாமியார் வீட்டுக்கு சென்றபோது மச்சினிச்சியை மடக்கி கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அக்கா சணவர் போச்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்துள்ள கிராமத்தை சேர்ந்தவர் 22 வயது வாலிபர். கூலித்தொழிலாளி. இவர் காட்பாடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு பெண் வீட்டார் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வீட்டை விட்டு வெளியேறிய &amp;nbsp;இளம்பெண் காதலனை திருமணம் செய்து கொண்டார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்துள்ள கிராமத்தை சேர்ந்தவர் 22 வயது வாலிபர். கூலித்தொழிலாளி. இவர் காட்பாடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு பெண் வீட்டார் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வீட்டை விட்டு வெளியேறிய &amp;nbsp;இளம்பெண் காதலனை திருமணம் செய்து கொண்டார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில் கணவர் மனைவியை பார்க்க மாமியார் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்ற நிலையில் மச்சினிச்சியுடன் காதல் ஏற்பட்டுள்ளது. &amp;nbsp;இதனையடுத்து அடிக்கடி நெருக்கமாக இருந்ததை அடுத்து மச்சினிச்சியும் கர்ப்பமானார். இதுகுறித்து சிறுமியின் குடும்பத்துக்கும், அக்காவுக்கும் தெரியவந்ததை அடுத்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;தொடர்ந்து கணவர் தனது மனைவியை ஒருவழியாக சமாதானம் செய்து இருவருடன் குடும்பம் நடத்தி உள்ளார். இந்த விஷயம் எப்படியோ காட்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தெரியவந்ததை அடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.&amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-vellore</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/gallery/wife-younger-sister-got-pregnant-husband-arrest-tvk-sfw572"/>
        </item>
        <item>
            <title><![CDATA[வேலூரில் அதிர்ச்சி!  பிறந்த 6 நாளான குழந்தையின் கட்டைவிரலை வெட்டிய செவிலியர்! நடந்தது என்ன?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-vellore/vellore-government-hospital-incident-nurse-cutting-off-a-baby-thumb-tvk/articleshow-o8zz0q8</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-vellore/vellore-government-hospital-incident-nurse-cutting-off-a-baby-thumb-tvk/articleshow-o8zz0q8</guid>
            <pubDate>Sat, 31 May 2025 09:23:17 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைக்கு குளுக்கோஸ் ஏற்றும்போது செவிலியர்கள் கத்தரிக்கோல் பயன்படுத்தியதால் குழந்தையின் கட்டை விரல் துண்டிக்கப்பட்டது.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jwj7er66xsaz583drgmbmp54,imgname-vellore-government-hospital-1748663492806.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;வேலூர் முள்ளிபாளையத்தை சேர்ந்தவர்கள் விமல்ராஜ் (30), நிவேதா (24) தம்பதியினர். திருமணமாகி இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நிவேதா கர்ப்பமாகி உள்ளார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான நிவேதாவிற்கு கடந்த 24ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;கட்டை விரலை வெட்டிய செவிலியர்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;பின்னர் பிரசவ அறையில் இருந்து சாதாரண வார்டிற்கு மாற்றப்பட்டார். குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் மருத்துவர்கள் அறிவுறுத்தலின் படி குளுக்கோஸ் ஏற்றி வந்துள்ளனர். இந்நிலையில் இன்று குழந்தையின் கையில் குளுக்கோஸ் ஏற்ற இருந்த ஊசியை செவிலியர்கள் மாற்றுவதற்காக குழந்தையின் வலது கையில் ஒட்டப்பட்டு இருந்த டேப்பை கைகளினால் பிரித்து எடுக்காமல் கத்தரிக்கோளை பயன்படுத்தி கட் செய்யும் போது எதிர்பாராத விதமாக குழந்தையின் வலது கை கட்டை விரல் துண்டாகி உள்ளது. இதனால் வலி தாங்க முடியாமல் குழந்தை அலறிய படி கத்தியது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;உறவினர்களை சமாதானம் செய்த டீன்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். இதனையடுத்து அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தலைமை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களை சமாதானம் செய்த பின் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இதனை அடுத்து வேலூர் அரசு மருத்துவமனை நிர்வாகம் குழந்தையின் கையில் பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை செய்வதற்காக உடனடியாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பச்சிளம் குழந்தையின் கட்டை விரலை செவிலியர் கவனக்குறைவால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-vellore</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-vellore/vellore-government-hospital-incident-nurse-cutting-off-a-baby-thumb-tvk/articleshow-o8zz0q8"/>
        </item>
        <item>
            <title><![CDATA[பிளடி ராஸ்கல் நாடகமா ஆடுற? நிச்சயம் செய்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் - மருத்துவமனையில் பரபரப்பு]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-vellore/relatives-who-married-the-teenager-in-ranipet-government-hospital-vel-shc8uu</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-vellore/relatives-who-married-the-teenager-in-ranipet-government-hospital-vel-shc8uu</guid>
            <pubDate>Sun, 28 Jul 2024 20:12:29 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ராணிபேட்டை மாவட்டத்தில் நிச்சயம் செய்த பின்னர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த நபரை உறவினர்கள் சுற்றி வளைத்து திருமணம் செய்து வைத்தனர்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j3wwn097nvzx9889smbjccng,imgname-whatsapp-image-2024-07-28-at-20-11-14.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுநாதன், பெயிண்டர். இவரது மனைவி&amp;nbsp;சாந்தி. இந்த &amp;nbsp;தம்பதியருக்கு 2 மகன்கள், இரு மகள்கள் உள்ளனர். இளைய மகன் தினேஷ்குமார் (வயது 27). பூ அலங்கார வேலை செய்து வருகிறார். இதேபோல் கலவை கூட்ரோடு கரிக்கந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் - பரிமளா தம்பதியரின் மகள் லாவண்யா. இவர்கள் இருவருக்கும் இருவீட்டாரும் இணைந்து திருமண ஏற்பாடுகள் செய்து வந்தனர்.&amp;nbsp;இதற்கிடையில், கரிக்கந்தாங்கல் பகுதியில் கடந்த 9-ம் தேதி தினேஷ்குமார், லாவண்யாவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.&lt;/p&gt; &lt;p&gt;அதனைத்தொடர்ந்து, தினேஷ்குமார் தனது வருங்கால மனைவியான லாவண்யாவை அடிக்கடி தனியாக சந்தித்து வந்துள்ளார். அவருக்கு ஒரு செல்போனையும் வாங்கி தந்துள்ளார். கடந்த 19ம் தேதி திடீரென தினேஷ்குமார் லாவண்யாவை பிடிக்கவில்லை திருமணம் வேண்டாம் என கூறியுள்ளார். இது பெண் வீட்டாரின் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பெண் வீட்டார் &amp;nbsp;மாப்பிள்ளை வீட்டாரிடம் முறையிட்டு வந்தனர். இதற்கிடையில், தினேஷ்குமாருக்கு வேறு பெண்ணுடன்&amp;nbsp;15 பவுன் நகைகள் போட்டு திருமணம் நடத்துவதற்காக ஏற்பாடுகளும் அவரது வீட்டின் தரப்பில் மேற்கொள்ளப்பட்டது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;தமிழகத்தில் சமஸ்கிருதத்தை நுழையவிடமாட்டோம் என வீரவசனம் பேசியவர்கள் செய்யும் செயலா இது? அன்புமணி கேள்வி&lt;/p&gt; &lt;p&gt;இதனை கேட்டு ஆத்திரமடைந்த லாவண்யாவின் குடும்பத்தினர் தினேஷ்குமார் வீட்டுக்கு வந்து முறையிட்டுள்ளனர். இரு தரப்பினரும் வழக்கறிஞர்கள் மூலமாக பேச்சு வார்த்தையும் நடத்தி வந்தனர். இந்த நிலையில் &amp;nbsp;தினேஷ்குமார்&amp;nbsp;வீட்டில் இருந்த&amp;nbsp;எறும்பு மருந்தை சிறிதளவு சாப்பிட்டு விட்டு, ஆற்காடு அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவர் எறும்பு மருந்தை சிறிதளவு சாப்பிட்டு விட்டு, நாடகம் ஆடியது லாவண்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தெரியவந்தது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதனையடுத்து அனைவரும் மருத்துவமனையின் முன்பு திரண்டனர். மேலும் &amp;nbsp;விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் பிரபு தலைமையில், தினேஷ்குமார் லாவண்யாவுக்கு மருத்துவமனையில் அதிரடியாக திருமணம் நடைபெற்றது. இதனை பார்த்த மருத்துவமனை நிர்வாகம் பிரச்சினை பெரிதாகுவதால் &amp;nbsp;தினேஷ்குமாரை மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ்சில் ஏற்றி வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;2 சவரன் நகைக்காக மூதாட்டியின் உடலை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய தம்பதி&lt;/p&gt; &lt;p&gt;தொடர்ந்து, அவர்களுக்கு பதிவு திருமணம் நடத்தவும் ஏற்பாடு நடைபெற்று வருகிறது. பெண்ணை பிடித்து திருமணம் செய்துக்கொள்வதாக கூறி, பிறகு வேண்டாம் மறுத்து தற்கொலை முயற்சி செய்ததாக நாடகம் ஆடிய மாப்பிள்ளைக்கு ஸ்கெட்ச் போட்டு நிச்சியதார்த்தம் நடத்திய பெண்ணுடனே மருத்துவமனை வளாகத்திலேயே திருமணம் செய்து வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-vellore</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-vellore/relatives-who-married-the-teenager-in-ranipet-government-hospital-vel-shc8uu"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஸ்கூல் படிக்கிற வயசுல இதெல்லாம் தேவையா? 7 பள்ளி மாணவர்கள் சஸ்பெண்ட்! தலைமை ஆசிரியர் அதிரடி! நடந்தது என்ன?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/drugs-in-school-classroom-7-students-suspended-in-vaniyambadi-tvk-sgsvdx</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/drugs-in-school-classroom-7-students-suspended-in-vaniyambadi-tvk-sgsvdx</guid>
            <pubDate>Thu, 18 Jul 2024 09:15:04 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, ஆம்பூர் நகரப்பகுதிகளிலும் மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலும் அதிக அளவில் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாகவும் அதிலும் குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j31yhxax8ppwy9e9e3ww976e,imgname-suspended.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;வாணியம்பாடி அருகே வகுப்பறையில் போதை பொருள் பயன்படுத்திய 7 பள்ளி மாணவர்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;தமிழகத்தில் போதைப்பொருள் தலைநகரில் தொடங்கி பட்டித்தொட்டி எங்கும் பரவி கிடக்கிறது. இதனை ஒழிக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும் ஒழிந்த பாடியில்லை. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, ஆம்பூர் நகரப்பகுதிகளிலும் மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலும் அதிக அளவில் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாகவும் அதிலும் குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இந்த புகாரை அடுத்து போலீசார் அதிரடி வேட்டையில் கடந்த வாரம் 3 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&lt;strong&gt;Tamilnadu Rain Alert: அடுத்த 3 மணிநேரத்தில் சென்னை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கப்போகுதாம்!&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;இந்நிலையில் வாணியம்பாடி அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் &amp;nbsp;ஒரு குறிப்பிட்ட வகுப்பில் உள்ள 7 மாணவர்களின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து ஆசிரியர் மாணவர்களின் பையை சோதனையிட்டுள்ளனர்.&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&amp;nbsp;&lt;strong&gt;Power Shutdown in Chennai: அய்யய்யோ! இன்னைக்குன்னு பார்த்து இவ்வளவு இடங்களில் மின் தடையா?&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;சிறிய வெள்ளை நிற பையில் இருந்து கஞ்சா மாதிரியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த 7 மாணவர்கள் ஒரு வாரம் பள்ளியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் தேவன் கூறுகையில்: மாணவர்கள் பயன்படுத்தியது கஞ்சா இல்லை ஹேன்ஸ் புகையிலைப் பொருள் என்று தெரிவித்தார். இதுகுறித்து 7 மாணவர்கள் கடந்த ஒரு வாரமாக பள்ளியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-vellore</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/drugs-in-school-classroom-7-students-suspended-in-vaniyambadi-tvk-sgsvdx"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஈஷா நடத்தும் “பாரத பாரம்பரிய நெல் மற்றும் உணவுத் திருவிழா” பொதுமக்களுக்கு அழைப்பு]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-vellore/indian-traditional-rice-and-food-festival-organized-by-isha-will-be-held-in-vellore-on-28th-vel-sh8ghl</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-vellore/indian-traditional-rice-and-food-festival-organized-by-isha-will-be-held-in-vellore-on-28th-vel-sh8ghl</guid>
            <pubDate>Fri, 26 Jul 2024 19:42:24 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;வேலூரில் நடைபெறவுள்ள பாரத பாரம்பரிய நெல் மற்றும் உணவு திருவிழா என்ற நிகழ்ச்சியில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j3qm47g521ag2ja323zes9m5,imgname-whatsapp-image-2024-07-26-at-11-36-30.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் வேலூரில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், &quot;ஈஷா மண் காப்போம் இயக்கம் கடந்த 15 வருடங்களாக நம் மண்ணை காக்கும் நோக்கத்தோடு தமிழகம் முழுவதும் இயற்கை விவசாயத்தை எடுத்து சென்ற வண்ணம் உள்ளது. இவ்வியக்கத்தின் மூலம் இதுவரையில் 25,000 விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 8,000 விவசாயிகளுக்கும் மேல் இயற்கை விவசாயத்திற்கு திரும்பி வெற்றிகரமாக &amp;nbsp;விவசாயம் செய்து வருகின்றனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இந்திய அரசு சமீபத்திய பட்ஜெட்டில் வரும் இரண்டு ஆண்டுகளில் 1 கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்திற்கு மாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளது. ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் நோக்கமும் அது தான். எனவே இயற்கை விவசாயத்தை &amp;nbsp;மென்மேலும் விரிவுப்படுத்தும் நோக்கத்தோடு ஒவ்வொரு பயிருக்கு ஏற்றவாறான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இது ஆடி பட்டம் காலம் என்பதால் நெல் விவசாயிகள் பயன்பெறும் வகையில் இந்த நெல் திருவிழா நடத்தப்படுகிறது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;அமெரிக்க அதிபர் தேர்தல்; ஓங்கும் கமலா ஹாரிசின் கை - முன்னாள் அதிபர் ஒபாமா ஆதரவு கரம்&lt;/p&gt; &lt;p&gt;மேலும் நெல் விவசாயத்தை பல வருடம் செய்த போதிலும், போதிய வருவாய் இல்லாமல் விவசாயிகள் சோர்வாக உள்ளனர். அதே வேளையில் சில முன்னோடி விவசாயிகள் நெல் விவசாயத்தை வெற்றிகரமாகவும், லாபகரமாகவும் செய்து வருகின்றனர். &amp;nbsp;நெல் விவசாயத்தை எவ்வாறு லாபகரமாக செய்ய முடியும் என்பது குறித்த தங்களின் அனுபவங்களை முன்னோடி நெல் விவசாயிகள் இந்த &quot;பாரத பாரம்பரிய நெல் மற்றும் உணவுத் திருவிழா&quot; வில் பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இந்நிகழ்ச்சியில் வேளாண் வல்லுநர்கள், விஞ்ஞானிகள் மற்றும் முன்னோடி விவசாயிகள் என ஏராளமானோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் பேச உள்ளனர். குறிப்பாக மரபு வழி கால்நடை மருத்துவரான டாக்டர் திரு. புண்ணியமூர்த்தி, பூச்சியியல் வல்லுநர் திரு. பூச்சி செல்வம், நெல் வயலில் மீன் வளர்த்து அசத்தி வரும் விவசாயி திரு. பொன்னையா மற்றும் மதிப்பு கூட்டல் மூலம் பல லட்சங்களில் வருவாய் ஈட்டும் தான்யாஸ் நிறுவனர் திரு. தினேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;மேலும் இந்த திருவிழாவின் முக்கிய அம்சமாக பொதுமக்களையும், விவசாயிகளையும் இணைக்கும் வகையிலான விவசாயிகளின் நேரடி சந்தை நடைபெற உள்ளது. இந்த சந்தையில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் இடம்பெற உள்ளன. இதில் பாரம்பரிய அரிசி வகைகள், நாட்டு காய்கறிகள் மற்றும் அதன் விதைகள், நம் மரபு திண்பண்டங்கள் உள்ளிட்ட பல்வேறு வேளாண் விளைப் பொருட்கள் சந்தைப்படுத்தப்பட உள்ளன. &amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;Savukku Shankar: யூடியூபர் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன்; கோவை நீதிமன்றம் உத்தரவு&lt;/p&gt; &lt;p&gt;அது மட்டுமின்றி பாரம்பரிய நெல்லை பரவலாக்கம் செய்ய உதவும் வகையில் விதை நெல்லும் இலவசமாக வழங்கப்பட இருக்கிறது. அத்துடன் நெல் விவசாயிகளுக்கு பயன்படும் எளிய கருவிகளின் கண்காட்சி மற்றும் விற்பனை, நூற்றுக்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களின் கண்காட்சி மற்றும் 200க்கும் மேற்பட்ட மரபு காய்கறிகளினுடைய கண்காட்சி மற்றும் விற்பனையும் நடைபெற உள்ளது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;மேலும் கூடுதல் சிறப்பாக இத்திருவிழாவில் இயற்கை முறையில் சிறப்பாக செயல்படும் 10 விவசாயிகளை தேர்ந்தெடுத்து &quot;மண்ணை காக்கும் விவசாயிகளுக்கு மண் காப்போம் விருதுகள்&quot; வழங்கப்பட இருக்கிறது. இந்த பிரம்மாண்ட திருவிழாவில் 2000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.&amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-vellore</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-vellore/indian-traditional-rice-and-food-festival-organized-by-isha-will-be-held-in-vellore-on-28th-vel-sh8ghl"/>
        </item>
        <item>
            <title><![CDATA[தமிழகத்தை உலுக்கிய பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை! சிறுவனுக்கு 20 ஆண்டு சிறை! அதுமட்டுமல்ல!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/vellore-female-doctor-gang-rape-case-five-men-including-17-year-old-to-20-years-sentences-tvk-srwt1b</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/vellore-female-doctor-gang-rape-case-five-men-including-17-year-old-to-20-years-sentences-tvk-srwt1b</guid>
            <pubDate>Wed, 19 Feb 2025 08:28:31 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;வேலூரில் பெண் மருத்துவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 5 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01je98fntcx0d8gk35zfwc9wsr,imgname-court.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;வேலூரில் பெண் மருத்துவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 5 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;வேலூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த பெண் மருத்துவர். இவர் தனது ஆண் நண்பருடன் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 16-ம் தேதி சினிமா பார்க்க இரவு நேர காட்சிக்கு சென்றுள்ளார். பிறகு, சினிமா பார்த்துவிட்டு வீடு திரும்புவதற்காக அங்கு நின்ற போது அவ்வழியாக வந்த ஆட்டோவில் இருவரும் ஏறியுள்ளனர். அந்த ஆட்டோவில் ஏற்கனவே ஆட்டோ ஓட்டுநர் உட்பட 5 பேர் பயணித்துள்ளனர். &amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;வேலூர் புதிய பேருந்து நிலையம் வரை வந்த ஆட்டோ திடீரென இடது புறம் திரும்பி மருத்துவமனைக்கு செல்லாமல் பாலாற்றை நோக்கி சென்றது. இதனை அறிந்த&amp;nbsp; அந்த பெண், தன் ஆண் நண்பரிடம் தெரிவித்துள்ளார். உடனே அவர் ஆட்டோ ஓட்டுனரிடம் கேட்கும் முன்னரே, இருவரின் கழுத்திலும் கத்தியை வைத்து மிரட்டியுள்ளனர். &amp;nbsp;அப்போது தான் தெரிந்தது இவர்கள் அனைவரும் ஒரே கும்பல் என்பது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&lt;strong&gt;தமிழகமே அதிர்ச்சி! 17 வயது சிறுமி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த 7 கல்லூரி மாணவர்கள்! கொதிக்கும் அண்ணாமலை!&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;பின்னர் ஆண் நண்பரை சரமாரியாக தாக்கிவிட்டு இளம்பெண்ணை மாறி மாறி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் அவர்களிடமிருந்து பணம் ரூ. 40,000 மற்றும் நகை, செல்போனை ஆகிவற்றையும் பறித்துக்கொண்டனர். பின்னர் அந்த கும்பல் இருவரையும் அங்கேயே விட்டுவிட்டு தப்பித்தனர். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் சொந்த மாநிலமான பீகார் சென்று அங்கிருந்து வேலூர் எஸ்.பி.யின் மின்னஞ்சல் முகவரிக்குப் புகார் அனுப்பினார்.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்துவாச்சாரி வ.உ.சி நகர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பார்த்திபன்(20), மணிகண்டன் (21), பரத், சந்தோஷ்குமார் (22) மற்றும் 17 வயது சிறுவன் உட்பட 5 பேரும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு, மகளிர் நீதிமன்றத்திலிருந்து மகளிர் விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து நீதிபதி மகேஸ்வரி பானு ரேகா ஜனவரி 30ம் தேதி பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட பார்த்திபன், பரத்,சந்தோஷ் குமார் ,மணிகண்டன் ஆகிய நான்கு பேருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது. இவ்வழக்கில் இன்னொரு குற்றவாளியான சிறுவனுக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனையும் ரூ.23,000 அபராதம் விதித்து வேலூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.&amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-vellore</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/vellore-female-doctor-gang-rape-case-five-men-including-17-year-old-to-20-years-sentences-tvk-srwt1b"/>
        </item>
        <item>
            <title><![CDATA[வேலூர் அரசு மருத்துவமனையில் கட்டை பையில் கடத்தப்பட்ட பிஞ்சு குழந்தை]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-vellore/woman-kidnap-infant-government-hospital-in-vellore-vel-shj945</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-vellore/woman-kidnap-infant-government-hospital-in-vellore-vel-shj945</guid>
            <pubDate>Thu, 01 Aug 2024 15:01:17 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;வேலூர் அரசு மருத்துவமனையில் பிறந்து 2 நாட்களேயான ஆண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01hpccc2zxa9mazgkbc1mrq95w,imgname-new-born-baby.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த அரவட்லா பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 25). கூலித் தொழிலாளியான இவர் தனது மனைவி சின்னியை பிரசவத்திற்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கடந்த 27ம் தேதி அனுமதித்துள்ளார். அனுமதிக்கப்பட்ட தினமே இரவில் சின்னிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்த நாள் பிரசவ வார்டுக்கு தாயும், சேயும் மாற்றப்பட்டுள்ளனர்.&lt;/p&gt; &lt;p&gt;Kumari Ananthan : தமிழிசையின் தந்தை குமரிஆனந்தனுக்கு தமிழக அரசு விருது.! முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் அறிவிப்பு&lt;/p&gt; &lt;p&gt;இந்த நிலையில், இன்று காலை 9 மணி அளவில் சின்னியின் கணவர் உணவு வாங்கி கொடுத்துவிட்டு வார்டுக்கு வெளியே சென்ற நிலையில் சின்னி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது குழந்தை அழுததாகச் சொல்லப்படுகிறது. அப்போது அங்கு இருந்த அடையாளம் தெரியாத பெண் ஒருவர் சாப்பிட்டு முடிக்கும் வரை குழந்தையை தன்னிடம் கொடுக்குமாறும், தான் பார்த்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt; &lt;p&gt;Mettur Dam Water : மேட்டூர் அணையின் நீர் மட்டம் என்ன தெரியுமா.? இத்தனை லட்சம் கன அடி நீர் வெளியேற்றமா.?&lt;/p&gt; &lt;p&gt;இதனை நம்பி சின்னியும் தனது குழந்தையை அப்பெண்ணிடம் ஒப்படைத்துள்ளார். பின்னர் அப்பெண் பிஞ்சு குழந்தையுடன் திடீரென மாயமானார். இது தொடர்பாக கோவிந்தன், சின்னி தம்பதியர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், சின்னி அடையாளம் காட்டிய பெண், கையில் கட்டை பையில் குழந்தையை வைத்து கடத்திச் சென்றது தெரிய வந்துள்ளது. இது மேலும் கடத்திச் சென்ற பெண்ணை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-vellore</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-vellore/woman-kidnap-infant-government-hospital-in-vellore-vel-shj945"/>
        </item>
        <item>
            <title><![CDATA[பாலாற்றில் வெள்ள எச்சரிக்கை..! கரையோர கிராம மக்களே உஷார்... நிரம்பியது பேத்தமங்களா ஏரி!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-vellore/flood-alert-in-palar-river-villagers-warned-as-paithamangalam-lake-fills-articleshow-wne4hzg</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-vellore/flood-alert-in-palar-river-villagers-warned-as-paithamangalam-lake-fills-articleshow-wne4hzg</guid>
            <pubDate>Sat, 11 Oct 2025 12:48:56 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;பேத்தமங்களம் அணை உபரிநீர் வெளியேற்றத்தாலும் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பாலாற்று கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k7924q0nh2v5vjdx92vt4xjj,imgname-palar-river-1760167091221.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழக ஆந்திரா எல்லை பகுதியான பெறும்பள்ளம் என்ற இடத்தில் ஆந்திரா அரசு பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பனையில் இருந்து வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் பேத்தமங்களம் அணையில் இருந்து உபரிநீர் வெளியேறி வருவதால் பாலாற்றில் அதிக அளவு வெள்ளம் வர வாய்ப்புள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;எனவே, திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பாலாற்று கரையோர கிராமங்களான புல்லூர், திம்மாம்பேட்டை, ஆவரங்கும்பம், வடக்குபட்டு, இராமநாயக்கண்பேட்டை, அம்பலூர், கொடையாஞ்சி ஏக்லாஸ்புரம், தேவஸ்தானம், பழைய வாணியம்பாடி, வாணியம்பாடி நகரம் உதயேந்திரம், கிரிசமுத்திரம், மற்றும் வளையாம்பாட்டு ஆகிய கிராம மக்கள் ஆற்றை கடக்கவோ, குளிக்கவோ கூடாது என்று கிராம பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;மேலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வாணியம்பாடி நீர்வளத்துறை பாசனப்பிரிவு உதவிப்பொறியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதேபோல் வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் பகலில் வெயில் வாட்டி வதைப்பதும் இரவு நேரத்தில் கனமழை வெளுத்து வாங்குவது தொடர்கதையாக இருந்து. இன்றும் வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-vellore</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-vellore/flood-alert-in-palar-river-villagers-warned-as-paithamangalam-lake-fills-articleshow-wne4hzg"/>
        </item>
        <item>
            <title><![CDATA[மயக்க மருந்து கொடுத்து இளம்பெண் கூட்டு பலாத்காரம்; 6 பேர் மீது வழக்கு; வேலூரில் ஷாக்! ]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/young-woman-was-drugged-and-gang-paliyal-palathkaram-in-vellore-ray-srgfc2</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/young-woman-was-drugged-and-gang-paliyal-palathkaram-in-vellore-ray-srgfc2</guid>
            <pubDate>Mon, 10 Feb 2025 11:58:50 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;வேலூரில் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக 3 பெண்கள் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jjvqzm2n4g1ht2cdr4q07hq2,imgname-rape.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;சீட்டு கட்டிய இளம்பெண்&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சீட்டு நிறுவனம் நடத்தி வருபவர் அல்தாப் தாசின். இவரிடம் சின்னகாஞ்சீபுரத்தை சேர்ந்த 30 வயது இளம்பெண் ஒருவர், தனது நிலத்தை விற்று ரூ.15 லட்சத்துக்கு சீட்டு கட்டி வந்தார். மேலும் தனக்கு தெரிந்தவர்களையும் இந்த சீட்டு திட்டத்தில் சேர்த்து விட்டு மொத்தமாக ரூ.1 கோடியே 75 லட்சத்துக்கு சீட்டு கட்டியுள்ளனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;சீட்டு நிறுவனம் சார்பில் ரூ.40 லட்சத்தை மட்டுமே கொடுத்துள்ளனர். மீதி பணத்தை கொடுக்கவில்லை என &amp;nbsp;கூறப்படுகிறது. இதனால் அந்த இளம்பெண் மீதி பணத்தை தரும்படி அல்தாப் தாசினிடம் தொடர்ந்து கேட்டு வந்தார். அதற்கு அவர் வேலூர் வந்து பணத்தை பெற்றுக்கொள்ளும்படி கூறியுள்ளார். இதனால் இளம்பெண்ணும், அவரது தாயும் வேலூருக்கு சென்றுள்ளனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;கூட்டு பாலியல் வன்கொடுமை&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;அப்போது அல்தாப் தாசின், பொது இடத்தில் அதிக தொகை கொடுத்தால் பிரச்சினை வரும். ஆகையால் விடுதிக்கு வாருங்கள் என்று இளம்பெண்ணிடம் தெரிவித்துள்ளார். இதன்பிறகு அந்த பெண்ணும், அவரது தாயாரும் விடுதிக்கு சென்றனர். அங்கு இருந்த அல்தாப் தாசின் உள்பட 5 பேர் கொண்ட கும்பல் பணத்தை தர முடியாது என்று கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.&lt;/p&gt; &lt;p&gt;பிறகு அந்த கும்பல் இளம் பெண்ணின் தாயை விடுதியில் வேறு ஒரு அறைக்கு அழைத்து சென்றுள்ளனர். பின்பு அந்த இளம்பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து அல்தாப் தாசின், மகேஷ், ராஜ்குமார் ஆகியோர் அடங்கிய கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மயக்கம் தெளிந்த இளம்பெண் அதிர்ச்சி அடைந்தார்.&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;வீடியோ எடுத்து மிரட்டல்&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;தொடர்ந்து அந்த கும்பல், ''உன்னை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்துள்ளோம். இதை வெளியே சொன்னால் அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டு விடுவோம்'' என்று மிரட்டியுள்ளனர். இதன்பிறகு விடுதியில் இருந்து வெளியேறிய அந்த இளம்பெண், வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்தார்.&lt;/p&gt; &lt;p&gt;இந்த சம்பவம் தொடர்பாக வேலுார் அனைத்து மகளிர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த விலையில், அல்தாப் தாசின், மகேஷ், ராஜ்குமார், கிரிஜா, தேவி, புவனா ஆகிய 6 பேர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;தமிழ்நாட்டில் அண்மைகாலமாக பாலியல் குற்றங்கள் தொடர்பான சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஓடும் ரயிலில் கர்ப்பிணியை பலாத்காரம் செய்து தள்ளிவிட்ட சம்பவம், பள்ளியில் ஆசியர்களே மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம என தமிழ்நாடு முழுவதும் பாலியல் குற்றங்கள் நடந்து வருகின்றன.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;பாலியல் குற்றங்களை கட்டுப்படுத்த முதல்வர் ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, அண்னாமலை, சீமான், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர்.&amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-vellore</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/young-woman-was-drugged-and-gang-paliyal-palathkaram-in-vellore-ray-srgfc2"/>
        </item>
        <item>
            <title><![CDATA[அழகிரியின் மகன் துரை தயாநிதி.. உடல் நலம் குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் - மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/alagiri-son-durai-dayanidhi-is-gaining-health-please-dont-spread-rumors-says-cmc-vellore-ans-sg9j7l</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/alagiri-son-durai-dayanidhi-is-gaining-health-please-dont-spread-rumors-says-cmc-vellore-ans-sg9j7l</guid>
            <pubDate>Sun, 07 Jul 2024 22:29:45 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Durai Dayanidhi : அழகிரியின் மகன் துரை தயாநிதியின் உடல்நலம் குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று அவருக்கு சிகிச்சை அளித்து வரும் CMC மருத்துவமனை அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j271rze06tej6g7ef43gea7c,imgname-durai-dayanidhi.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;துரை தயாநிதிக்கு மயக்கம்&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் வசித்து வரும் அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு, கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதைக் கண்டு அதிர்ந்த அவருடைய குடும்பத்தினர், அவரை உடனடியாக மீட்டு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;பிறகு துரை தயாநிதிக்கு மூளையில் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அப்போது முதல்வர் ஸ்டாலின் அவர்களும் நேரடியாக மருத்துவமனைக்கு சென்று துரை தயாநிதி உடல் நலத்தை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இந்நிலையில் சுமார் 3 மாத காலம் அப்போலோ மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்து வந்த துரை தயாநிதி, கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;யார் இந்த பொற்கொடி? 20 வயது மூத்தவரை விரும்பி திருமணம் செய்துகொண்ட ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி!&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;அங்கும் கடந்த 3 மாத காலத்திற்கும் மேலாக அவருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. வேலூரில் துரை தயாநிதி அனுமதிக்கப்பட்ட சில மாதங்கள் கழித்து, அவரை நேரில் சென்று சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின். இந்நிலையில் அவருடைய உடல் நலம் குறித்து சமூக வலைதளங்களில் சில வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;வேலூர் CMC மருத்துவமனை&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;அந்த வந்ததிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலையில், துரை தயாநிதிக்கு சிகிச்சை நல்லபடியாக நடந்து வருவதாகவும், அவர் உடல் நல்ல நிலையில் இருப்பதாகவும் வேலூர் சிஎம்சி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. யாரும் அவருடைய உடல் நலம் குறித்து எந்தவித வதந்திகளையும் பரப்பவேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;Trichy : முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா.. விபத்தில் சிக்கியது அவரை அழைக்க சென்ற கார் - வைரல் வீடியோ!&lt;/strong&gt;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-vellore</category>
            <dc:creator>Ansgar R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/alagiri-son-durai-dayanidhi-is-gaining-health-please-dont-spread-rumors-says-cmc-vellore-ans-sg9j7l"/>
        </item>
        <item>
            <title><![CDATA[விக்கிரவாண்டியில் இடைத்தேர்தலே தேவையில்லை; திமுக வெற்றி என அறிவித்துவிடலாம்; அன்புமணி விரக்தி]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-vellore/anbumani-ramadoss-said-that-dmk-can-declare-victory-in-vikravandi-without-holding-elections-vel-sg3m36</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-vellore/anbumani-ramadoss-said-that-dmk-can-declare-victory-in-vikravandi-without-holding-elections-vel-sg3m36</guid>
            <pubDate>Thu, 04 Jul 2024 17:46:18 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;விக்கிரவாண்டி தொகுதியில் திமுக நிர்வாகிகள் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியுள்ள பாமக தலைவர் அன்புமணி, தேர்தல் நடத்தும் முன்பே திமுக வெற்றி பெற்றதாக அறிவித்துவிடலாம் என தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j1ytrqqcdyg074rfkbr0sn8z,imgname-whatsapp-image-2024-07-04-at-16-44-36.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;வேலூர் மாவட்டம், காட்பாடியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், செய்தியாளர்கள் சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், கள்ளச்சாராயம் விற்க கூடாது என்று சட்டமன்றத்தில் கடுமையான சட்டம் கொண்டு வந்தார்கள். திமுக ஆட்சியால் கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியாது. கள்ளச்சாராயம் தொடர்பாக சட்டத்தை கொண்டு வந்தால் சட்டத்தை மதிக்க வேண்டும். கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த வேண்டும். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் கிராமத்தில் அண்மையில் ஒருவர் கள்ள சாராயத்தால் இறந்துள்ளார். இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சியில் 66 பேர் உயிரிழந்துள்ளனர்.&lt;/p&gt; &lt;p&gt;கள்ளக்குறிச்சி கள்ளச்சார சம்பவத்தில் சிபிசிஐடி விசாரணை மேற்கொள்வதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் சிபிசிஐடி மீது மரியாதை உள்ளது. கள்ளக்குறிச்சி சம்பவத்தில் சிபிஐ விசாரணை &amp;nbsp;வேண்டும். இதற்குக் காரணம் அரசியல்வாதிகள், போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளனர். அதனால் தான் சிபிஐ விசாரணை வேண்டும் என்கிறோம். இந்த சம்பவத்தில் அரசியல்வாதிகள் யார் யார் என்பது முதலமைச்சருக்கு தெரியாதா?&lt;/p&gt; &lt;p&gt;காஞ்சியில் அடைக்கலம் தேடி வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை; பாதிரியார் போக்சோ சட்டத்தில் கைது&lt;/p&gt; &lt;p&gt;கள்ளச்சாராய சம்பவத்தினால் மீண்டும் உயிர் பலிகள் ஏற்படக்கூடாது என்பதற்காக &amp;nbsp;சிபிஐ விசாரணை கோரி உள்ளோம். தமிழ்நாட்டில் நிர்வாகம் சரி இல்லை விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நூற்றுக்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர், 30 எம்பிக்கள் அந்தப் பகுதியில் முகாமிட்டு பணத்தை வழங்கி வருகின்றனர்.&lt;/p&gt; &lt;p&gt;கணவனின் தகாத உறவால் மனம் உடைந்த மனைவி விபரீத முயற்சி; 4 வயது குழந்தை துடிதுடித்து பலி&lt;/p&gt; &lt;p&gt;பஞ்சாயத்து தேர்தலை விட &amp;nbsp;மிக மோசமாக நடந்து கொண்டிருக்கிறது. தேர்தல் அதிகாரி ஆர்டிஓ. அவர் என்ன செய்ய முடியும்? அங்குள்ள அமைச்சர்களை எதிர்த்து தேர்தல் அதிகாரி பேச முடியுமா? திமுக எல்லா இடங்களையும் ஆக்கிரமித்து பணம் கொடுத்து வருகின்றனர். பொது மக்களை அடைத்து, பணத்தை கொடுத்து தங்க வைத்துள்ளனர். இது ஒரு தேர்தலா? &amp;nbsp;இப்படி ஒரு தேர்தல் நடத்துவதற்கு முன்பாகவே திமுக வெற்றி பெற்றதாக அறிவித்துவிடலாம் என காட்டமாக தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-vellore</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-vellore/anbumani-ramadoss-said-that-dmk-can-declare-victory-in-vikravandi-without-holding-elections-vel-sg3m36"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Vellore Rowdy Murder: சினிமா பாணியில் நடந்த ரவுடி படுகொலை! அலறிய வேலூர்! பதறிய போலீஸ்.. நடந்தது என்ன?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/crime/rowdy-murder-in-vellore-4-people-arrest-tvk-sg12rh</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/crime/rowdy-murder-in-vellore-4-people-arrest-tvk-sg12rh</guid>
            <pubDate>Wed, 03 Jul 2024 08:56:44 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;வேலூர் மாவட்டம் அரியூர் பாரதி தெருவை சேர்ந்தவர் ராஜா என்ற எம்எல்ஏ ராஜா. இவர் மீது கொலை, மிரட்டல், ஆள் கடத்தல் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. சிறையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் ஜாமீனில் வெளியே வந்தார்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j1v9q2ynwg9p2dg1ved1gpdw,imgname-vellore.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;வேலூரில் பிரபல ரவுடி கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;வேலூர் மாவட்டம் அரியூர் பாரதி தெருவை சேர்ந்தவர் ராஜா என்ற எம்எல்ஏ ராஜா. இவர் மீது கொலை, மிரட்டல், ஆள் கடத்தல் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. சிறையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் நேற்று இரவு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த ராஜாவை காரில் வந்த மர்ம கும்பல் வழிமறித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்தனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&lt;strong&gt;நான் கூப்பிடும்போதெல்லாம் வரலைன்னா! ஃபாரின்ல இருக்குற புருஷன் கிட்ட சொல்லிடுவேன்! கள்ளக்காதலன் டார்ச்சர்!&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&lt;strong&gt;என்ன கழற்றிவிட்டு அவன் கூட போறியா? போட்டுக்கொடுத்த முதல் கள்ளக்காதலன்.. போட்டுத்தள்ளிய மகன்கள்!&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp;உடனே கொலையாளிகளை பிடிக்க மாவட்டம் முழுவதும் உஷார் படுத்தப்பட்டு வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது வல்லம் சுங்கச்சாவடி பகுதியில் கொலையாளிகள் தப்பிச் சென்ற காரை போலீசார் சுற்றி வளைத்தனர். காரில் 4 பேரிடம் விசாரணை நடத்தியதில் அரியூர் பகுதியைச் சேர்ந்த சந்துரு, அஜித்குமார், ராஜேஷ், தேஜேஷ் என்றும் எம்எல்ஏ ராஜாவை கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-vellore</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/crime/rowdy-murder-in-vellore-4-people-arrest-tvk-sg12rh"/>
        </item>
    </channel>
</rss>
