<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes"?>
<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Wed, 24 Dec 2025 09:22:19 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss/tamilnadu-trichy" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[நான் ஒருவரை கூட கட்சியில் இருந்து நீக்கியதில்லை.. ஆனால் இனிமேல்?? கே.என்.நேரு வார்னிங்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-trichy/dmk-minister-kn-nehru-warns-party-functionaries-no-more-leniency-in-2025-articleshow-049wcr9</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-trichy/dmk-minister-kn-nehru-warns-party-functionaries-no-more-leniency-in-2025-articleshow-049wcr9</guid>
            <pubDate>Tue, 02 Sep 2025 19:06:00 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தான் ஒருவரை கூட கட்சியில் இருந்து நீக்கியதில்லை என்று திமுகவின் மூத்த அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k069qy3v7km2e2e9shj1rc8b,imgname-kn-nehru-1752558205051.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;KN Nehru Issues Strict Warning to DMK Functionaries! தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, மத்தியில் ஆளும் பாஜக, பாமக, நாம் தமிழர், விஜய்யின் தவெக என அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன. திமுகவை பொறுத்தவரை அடுத்த முறையும் ஆட்சியை தக்க வைப்பதில் உறுதியாக உள்ளது. இதனால் 200 தொகுதிகளில் வெல்ல இலக்கு நிர்ணயித்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;கே.என்.நேரு பேச்சு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;திமுக தலைமை மாநிலம் முழுவதும் கட்சிக்கு புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. திமுகவின் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், திமுகவின் மூத்த அமைச்சரான கே.என்.நேரு திருச்சியில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ''நான் 30 ஆண்டுகாலம் திமுகவில் மாவட்ட செயலாளராக இருந்து வருகிறேன். ஆனால் ஒரே ஒருவரை கூட நான் கட்சியில் இருந்து நீக்கியதில்லை.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஒருவரை கூட நீக்கியதில்லை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஒரே ஒரு ஒன்றிய செயலாளரை கூட நான் நீக்கியதில்லை. ஒன்றிய செயலாளர்களுக்காக நான் காவல்துறையில் சண்டை போட்டு மீண்டும் ஒன்றிய செயலாளர்களை கொண்டு வந்திருக்கிறேன். இங்கு தகராறு வந்தபொதெல்லாம் அவர்களை கொண்டு வந்து சேர்த்திருக்கிறோம். தயவு செய்து ஒன்றிய செயலாளர்கள் உங்கள் பணியை சரியாக செய்யுங்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சரியாக வேலை செய்யாதவர்களுக்கு வார்னிங்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;நீங்க இவ்வளவு தூரம் சொல்றீங்கல்ல.. நீங்க என்ன செஞ்சிங்க என்று கேட்கிறீர்கள். அதெல்லாம் சரிதான். நாங்கள் பதில் சொல்ல தயாராக உள்ளோம். கழக செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் ஒன்றை கவனமாக கொள்ள வேண்டும். எங்களால் செயல்பட முடியவில்லை என்று நீங்கள் சொல்லி விட்டால் நாங்கள் வேறு ஆள் போட்டுக் கொள்கிறோம். அதில் ஒன்றும் மாற்றம் இல்லை. ஏன் என்றால் சரியாக வேலை செய்தாவர்களை வைத்துக் கொண்டு இழுக்க முடியாது. வேலை வாங்க முடியாது'' என்று தெரிவித்தார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-trichy</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-trichy/dmk-minister-kn-nehru-warns-party-functionaries-no-more-leniency-in-2025-articleshow-049wcr9"/>
        </item>
        <item>
            <title><![CDATA[அதிகாலையில் கண்ணிமைக்கும் நேரத்தில் கோர விபத்து! 3 பேர் சம்பவ இடத்திலேயே ப*! 2 பேர் படுகாயம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-trichy/trichy-car-accident-3-people-killed-08t9rvp</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-trichy/trichy-car-accident-3-people-killed-08t9rvp</guid>
            <pubDate>Mon, 01 Sep 2025 08:34:32 +0530</pubDate>
            <description><![CDATA[திருச்சி அருகே பழுதான பேருந்தில் கார் மோதியதில் ஒன்றரை வயதுக் குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர். கார் ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் பேருந்தின் மீது மோதியதால் விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k41kh3s1ntpw8szayjmry75g,imgname-trichy-accident-1756695662369.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[திருச்சி அருகே பழுதான பேருந்தில் கார் மோதியதில் ஒன்றரை வயதுக் குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர். கார் ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் பேருந்தின் மீது மோதியதால் விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.&lt;img&gt;&lt;p&gt;திருச்சி மாவட்டம் சிறுகனூர் தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்று கொண்டிருந்த அரசு பேருந்தின் பின்னார் கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒன்றரை வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர். தென்காசி மாவட்டம் ஆலங்குடி பகுதியை சேர்ந்த ஜோசப் என்பவர் சென்னையில் வாடகை கார் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவர் சுப நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு மீண்டும் காரில் சென்னை நோக்கி நேற்று மாலை புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது அந்த காரில் தென்காசி ஆலங்குளத்தை சேர்ந்த செல்வக்குமார் அவரது யசோதா இவர்களது ஒன்றரை வயது குழந்தை அனோனியா மற்றும் நண்பர் விஜயபாபு உள்ளிட்ட 5 பேர் பயணித்துள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்று அதிகாலை திருச்சி மாவட்டம் சிறுநகனூர் தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்று கொண்டிருந்த அரசு பேருந்தின் மீது கார் பயங்கரமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் பயணித்த ஒன்றரை வயது குழந்தை அனோனியா, யசோதா, விஜயபாபு ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேலும் கார் ஒட்டுநர் ஜோசப், செல்வக்குமார் ஆகியோர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இந்த விபத்து தொடர்பாக சிறுகனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்த இரண்டு பேரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கார் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது. இந்த விபத்தை அடுத்து அப்பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-trichy</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-trichy/trichy-car-accident-3-people-killed-08t9rvp"/>
        </item>
        <item>
            <title><![CDATA[அடேங்கப்பா! அருண் நேருவின் சொத்து மதிப்பு இவ்வளவா! வேட்புமனுவில் வெளியான விவரங்கள்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-perambalur/arun-nehru-assets-value-perambalur-dmk-candidate-arun-nehru-file-nomination-for-lok-sabha-elections-2024-sgb-sawk79</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-perambalur/arun-nehru-assets-value-perambalur-dmk-candidate-arun-nehru-file-nomination-for-lok-sabha-elections-2024-sgb-sawk79</guid>
            <pubDate>Tue, 20 May 2025 18:06:58 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;பெரம்பலூரில் திமுக வேட்பாளர் அருண் நேரு இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அரது பிரமாணப் பத்திரத்தில் அருண் நேருவின் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் தெரியவந்துள்ளன.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01hstqgdww8ch2v9jk8ca71ztk,imgname-download--31-.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதன் முன்னிட்டு வேட்புமனு தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கியது.&amp;nbsp;வேட்புமனுக்களை தாக்கல் செய்ய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், இன்று முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.&lt;/p&gt;&lt;p&gt;தமிழ்நாட்டில் உள்ள 21 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. மீதம் உள்ள தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுடன் பங்கிட்டுக் கொண்டிருக்கிறது.&amp;nbsp;திமுகவின் தேர்தல் அறிக்கையும் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டிருக்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;பெரம்பலூர் தொகுதியில் திமுக வேட்பாளராக அமைச்சர் கே.என். நேருவின் மகன் அருண் நேருவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அவரை எதிர்த்து அதிமுகவின் சந்திரமோகன், பாஜக கூட்டணி சார்பில் ஐ.ஜே.கே. கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் ஆகியோர் களத்தில் உள்ளனர். நாம் தமிழர் கட்சி சார்பில் தேன்மொழி என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;கொரோனா போல புதுசா படையெடுக்கும் பெருந்தொற்று... எச்சரிக்கும் தொற்றுநோய் வல்லுநர்கள்!&lt;/p&gt;&lt;p&gt;&lt;img&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்நிலையில், பெரம்பலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அருண் நேரு இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.&amp;nbsp;பெரம்பலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி கற்பகத்தைச் சந்தித்து தனது வேட்புமனுவை வழங்கினார். வேட்புமனுவுடன் சமர்ப்பிக்கப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் அருண் நேருவின் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் தெரியவந்துள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;அருண் நேரு சொத்து மதிப்பு எவ்வளவு?:&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;அருண் நேரு தாக்கல் செய்துள்ள பிராமணப் பத்திரத்தின்படி, அவர் பெயரில் உள்ள அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.46.20 கோடி. இதில் கையிருப்பில் உள்ள ரொக்கப் பணம் ரூ.2.14 லட்சம். அருண் நேரு பெயரில் 7 வங்கிக் கணக்குகள் உள்ளன. ரூ.27.11 கோடி பணத்தை பல வகைகளில் முதலீடு செய்துள்ளார். சுமார் ரூ.24 லட்சம் மதிப்புள்ள 480 கிராம் தங்கமும் வைத்திருக்கிறார்.&lt;/p&gt;&lt;p&gt;அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.29.06 கோடி ஆகும். திருச்சியில் தில்லை நகரிலும் ஶ்ரீரங்கத்திலும் ஒரு வீடு உள்ளது. சென்னையில்&amp;nbsp;மயிலாப்பூர் மற்றும் அடையார் பகுதிகளிலும் இரண்டு வீடுகள் உள்ளன. திருச்சியில் மூன்று இடங்களில் சுமார் 10 ஏக்கரில் விவசாய நிலம் உள்ளது. லால்குடி விவசாயப் பயன்பாடு இல்லாத 18,872 சதுர அடி பரப்புள்ள நிலமும் உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;அவரது மனைவி தீபிகா பெயரிலும் இதே அளவுக்குத் தங்கம் உள்ளது. மனைவி வசம் உள்ள அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.83.47 லட்சம். ரூ.1.50 லட்சம் ரொக்கப் பணம் கையிருப்பில் உள்ளது. சென்னை தாம்பரத்தில் தீபிகா பெயரில் ஒரு வீடும் உள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;ஏ டூ இசட் நான் தான்... பிரளயத்தை ஏற்படுத்துவேன்... இது நடிகர் மன்சூர் அலிகான் கேரண்டி&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-trichy</category>
            <dc:creator>SG Balan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-perambalur/arun-nehru-assets-value-perambalur-dmk-candidate-arun-nehru-file-nomination-for-lok-sabha-elections-2024-sgb-sawk79"/>
        </item>
        <item>
            <title><![CDATA[அடி தூள்.. இனி திருச்சியில் இருந்து நியூயார்க் பறக்கலாம்.. புதிய அறிவிப்பு]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-trichy/trichy-new-york-flights-via-delhi-smart-route-but-needs-planning-6go1u8f</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-trichy/trichy-new-york-flights-via-delhi-smart-route-but-needs-planning-6go1u8f</guid>
            <pubDate>Fri, 07 Nov 2025 09:41:19 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;திருச்சியிலிருந்து நியூயார்க்கிற்கு டெல்லி வழியாக பயணம் செய்வது இப்போது எளிதாகியுள்ளது. தென் இந்திய நகரமான திருச்சியிலிருந்து அமெரிக்காவுக்கான ஒரு எளிய, ஒரே நிறுத்தத்துடன் கூடிய இணைப்பு கிடைக்கிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k9e7xdhsxrpjswa84qsy1rx9,imgname-tamil-news--16--1762488399417.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;திருச்சியிலிருந்து நியூயார்க்கிற்கு டெல்லி வழியாக பயணம் செய்வது இப்போது எளிதாகியுள்ளது. தென் இந்திய நகரமான திருச்சியிலிருந்து அமெரிக்காவுக்கான ஒரு எளிய, ஒரே நிறுத்தத்துடன் கூடிய இணைப்பு கிடைக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;திருச்சிராப்பள்ளி (திருச்சி) மற்றும் நியூயார்க் (நியூயார்க் - JFK/EWR) இடையிலான விமானப் பயணத்திற்கு தற்போது தினசரி ஒரே ஒரு வழி மிகவும் பிரபலமாக உள்ளது. ஆனால் இந்தப் பயணம் முழுமையாக திட்டமிடப்பட வேண்டிய ஒன்று ஆகும்.&lt;/p&gt;&lt;p&gt;இந்த வழியில், ஏர் இந்தியா நிறுவனம் நியூயார்க்&ndash;டெல்லி இடையே நேரடி (நிறுத்தப்படாத) விமானத்தை இயக்குகிறது. அதே சமயம், IndiGo நிறுவனம் டெல்லி-திருச்சி இடையே தினசரி உள்நாட்டு நேரடி விமான சேவை வழங்குகிறது. இதனால் தென் இந்திய நகரமான திருச்சியிலிருந்து அமெரிக்காவுக்கான ஒரு எளிய, ஒரே நிறுத்தத்துடன் கூடிய இணைப்பு கிடைக்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;ஆனால் பயணிகள் கவனிக்க வேண்டிய மிக முக்கிய அம்சம் இது ஒரே டிக்கெட்டில் இணைந்த பயணம் அல்ல. அதாவது, ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ விமானங்கள் தனித்தனி முன்பதிவுகளாகும். எனவே பயணிகள் டெல்லியில் இறங்கியதும் தாமாகவே மீண்டும் &ldquo;செக்-இன்&rdquo; செய்ய வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;டெல்லி விமான நிலையத்தில் இறங்கியது முதலில் குடியேற்றம் மற்றும் சுங்க சோதனைகளை முடிக்க வேண்டும், பின்னர் சேமிப்பு பைகள் (சோதனை செய்யப்பட்ட பொருட்கள்) எடுத்துக்கொண்டு, அடுத்த விமானம் நிறுவனத்தின் செக்-இன் கவுண்டருக்குச் சென்று மீண்டும் பதிவு செய்ய வேண்டும். இதற்கு குறைந்தது 5 மணி 20 நிமிடங்கள் இடைவெளி பரிந்துரைக்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிறந்த செய்தி என்னவென்றால், இப்போது திருச்சியிலிருந்து டெல்லி, மும்பை அல்லது பெங்களூரு வழியாக அமெரிக்கா போன்ற தூர இடங்களுக்கு இணைப்பு எளிதாக கிடைக்கிறது. முன்பு போல சென்னைக்கு டாக்ஸி அல்லது காரில் சென்று நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரே டிக்கெட்டில் கனெக்ட் பிளைட் வசதிகள் பலருக்கும் நேரம் மற்றும் செலவினத்தில் சிக்கனமாக மாறியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;ஆனால் இதன் பாதுகாப்பு பொறுப்பு பயணியிடமே உள்ளது. முதல் விமானம் தாமதமானால், இரண்டாவது விமான நிறுவனம் இலவசமாக முன்பதிவு செய்யாது. எனவே, பயணிகள் தங்களது நேரத்தையும், டிக்கெட்டையும் முன்னதாகவே சரிபார்த்து, சரியான இடைவெளியுடன் திட்டமிடுவது அவசியம்.&lt;/p&gt;&lt;p&gt;டெல்லி விமான நிலையத்தில் சமீபத்தில் சில டெர்மினல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன, பயணத்திற்கு முன் எந்த டெர்மினலில் எந்த விமானம் இயக்கப்படுகிறது என்பதை உறுதி செய்து கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. இதனால் நீண்ட பயணத்தின் ஆரம்பமே சீராகவும் மனஅழுத்தமில்லாமலும் இருக்கும். மொத்தத்தில், திருச்சி&ndash;டெல்லி&ndash;நியூயார்க் வழியாக பயணம் செய்வது தற்போது எளிமையானதும் விரைவானதுமாக மாறியுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-trichy</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-trichy/trichy-new-york-flights-via-delhi-smart-route-but-needs-planning-6go1u8f"/>
        </item>
        <item>
            <title><![CDATA[மணப்பாறை தனியார் பள்ளி மாணவி பாலியல் தொல்லை விவகாரம்! திருச்சி மாவட்ட காவல்துறை பரபரப்பு தகவல்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-trichy/manaparai-private-school-student-case-police-release-official-statement-tvk-srb8sw</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-trichy/manaparai-private-school-student-case-police-release-official-statement-tvk-srb8sw</guid>
            <pubDate>Fri, 07 Feb 2025 16:49:44 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள சிபிஎஸ்இ பள்ளியில் 4-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல். பள்ளி அறங்காவலர் உட்பட 5 பேர் கைது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jjvqzm2n4g1ht2cdr4q07hq2,imgname-rape.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள மணப்பாறைபட்டி சாலையில் தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் 4-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். &amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதுதொடர்பாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: திருச்சி மாவட்டம், மணப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணப்பாறைப்பட்டி பகுதியில் இயங்கி வரும் குரு வித்யாலயா CBSE பள்ளியின் அறங்காவலர் வசந்தகுமார் அப்பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் பாதிக்கப்பட்ட மாணவி 9/25 என்பவரிடம். அவரது வகுப்பறையில் உள்ள ஆசிரியரை வெளியில் அனுப்பிவிட்டு 06.02.2025-ம் தேதி காலை 10.20 மணியளவில் மேற்படி மாணவியிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டுள்ளார் என்று பாதிக்கப்பட்ட மாணவியின் பாட்டி பாக்கியலக்ஷ்மி என்பவர் 06.02.2025-ம் தேதி இரவு 10.00 மணிக்கு மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த எழுத்து மூலமான புகாரின் அடிப்படையில் மேற்படி 1) வசந்தகுமார் (தாளாளர் சுதாவின் கணவர்). 2) பள்ளியின் தலைவர் மாராச்சி, 3) தாளாளர் சுதா, 4) துணை தாளாளர் செழியன் மற்றும் 5) பள்ளியின் முதல்வர் ஜெயலட்சுமி ஆகியோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;மேலும் வழக்கு தொடர்பாக, வழக்கில் சம்மந்தப்பட்ட அனைத்து எதிரிகளான ஐந்து நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 1-வது எதிரி வசந்தகுமார் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றார். மேலும் காவல்துறையினர் இவ்வழக்கில் விசாரணையை உடனடியாக மேற்கொண்டும் துரிதமாக செயல்பட்டும் வழக்கு பதிவு செய்து உடனடியாக ஐந்து எதிரிகளையும் கைது செய்தும், மேலும் இவ்வழக்கில் அனைத்து தரப்பு சாட்சியங்களையும் மற்றும் ஆவணங்களையும் பரிசீலனை செய்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுபடி புலன் விசாரணை துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.&lt;/p&gt; &lt;p&gt;மேலும், இச்சம்பவம் தொடர்பாக, மாவட்டத்திலுள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யும் பொருட்டு, அனைத்து அரசு துறையினருடன் இணைந்து விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வரும் நிலையில், இனிவரும் காலங்களில் மேற்படி விழிப்புணர்வு முகாம் தீவிரப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-trichy</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-trichy/manaparai-private-school-student-case-police-release-official-statement-tvk-srb8sw"/>
        </item>
        <item>
            <title><![CDATA[திருச்சி பெல் நிறுவனத்தில் இன்ஜினியர், சூப்பர்வைசர் வேலைகள்! மாதம் ரூ.84,000 வரை சம்பளம்.]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/career/bhel-trichy-jobs-2025-supervisor-engineer-vacancies-9p7q3aa</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/career/bhel-trichy-jobs-2025-supervisor-engineer-vacancies-9p7q3aa</guid>
            <pubDate>Sun, 01 Jun 2025 22:15:17 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;திருச்சி பெல் நிறுவனத்தில் இன்ஜினியர், சூப்பர்வைசர் வேலைகள்! மாதம் ரூ.84,000 வரை சம்பளம். ஜூன் 11, 2025 கடைசி நாள். உடனே விண்ணப்பியுங்கள்!&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jjgxd9gk0j3nt0mk3v8nj1p0,imgname-tamil-news---2025-01-26t142751.674.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;திருச்சி பெல் நிறுவனத்தில் இன்ஜினியர், சூப்பர்வைசர் வேலைகள்! மாதம் ரூ.84,000 வரை சம்பளம். ஜூன் 11, 2025 கடைசி நாள். உடனே விண்ணப்பியுங்கள்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;திருச்சி பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL) நிறுவனத்தில் காலியாக உள்ள இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மத்திய அரசு வேலையை எதிர்பார்த்திருப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த அறிவிப்பின்படி, மொத்தம் 20 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இன்ஜினியர் (தரக்கட்டுப்பாடு) பணிக்கு மாதம் ரூ.84,000 வரையும், சூப்பர்வைசர் (தரக்கட்டுப்பாடு) பணிக்கு மாதம் ரூ.45,000 வரையும் சம்பளம் வழங்கப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்ஜினியர் பணிக்கு மெக்கானிக்கல், புரொடக்&zwnj;ஷன், மெட்டலர்ஜி, கெமிக்கல் துறைகளில் முழுநேர இளங்கலை பொறியியல் பட்டம் அல்லது வேதியியலில் முதுகலை அறிவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சூப்பர்வைசர் பணிக்கு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 22 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, SC/ST, OBC மற்றும் PwBD பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த வேலைக்கு விண்ணப்பிக்க எந்தவித கட்டணமும் கிடையாது. விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விண்ணப்பங்கள் 21.05.2025 அன்று தொடங்கி 11.06.2025 அன்றுடன் நிறைவடைகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர் BHEL இணையதளமான [https://careers.bhel.in/] இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களுடன் &quot;Sr. Manager / HR &ndash; IR &amp;amp; Rectt., HR department, 24 Building, BHEL, Thiruverumbur, Tiruchirappalli &ndash; 620014&quot; என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து, அனைத்து தகுதிகளையும் உறுதிப்படுத்திக் கொள்ளவும்.&lt;/p&gt;&lt;p&gt;இந்த அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-trichy</category>
            <dc:creator>Suresh Manthiram</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/career/bhel-trichy-jobs-2025-supervisor-engineer-vacancies-9p7q3aa"/>
        </item>
        <item>
            <title><![CDATA[கல்லூரி மாணவர்கள் அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.! டிசம்பர் 30-ம் தேதி விடுமுறை.! என்ன காரணம் தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-trichy/happy-news-for-government-employees-december-30-holiday-announced-b3whyen</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-trichy/happy-news-for-government-employees-december-30-holiday-announced-b3whyen</guid>
            <pubDate>Wed, 24 Dec 2025 09:19:56 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Trichy Local Holiday: ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு டிசம்பர் 30ம் தேதி நடைபெறுகிறது. இதன் காரணமாக அன்றைய தினம் திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k0gsqk2vxn7z8cyjd2yx9hhk,imgname-whatsapp-image-2025-07-19-at-13.02.51-1752910515291.jpeg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Trichy Local Holiday: ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு டிசம்பர் 30ம் தேதி நடைபெறுகிறது. இதன் காரணமாக அன்றைய தினம் திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கங்கத்தில் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 20ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மொத்தம் 21 நாட்கள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் முக்கிய விழாவான சொர்க்கவாசல் திறப்பு வரும் டிசம்பர் 30-ம் தேதி செவ்வாய் கிழமை நடைபெற உள்ளது. இந்த நிகழ்வின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கத்தில் வருகை தருவார்கள் என்பதால் அன்றைய தினம் திருச்சி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதுதொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருச்சி மாவட்டத்துக்கு டிசம்பர் 30ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த விடுமுறையானது பள்ளிகள், கல்லூரிகள் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கு இந்த விடுமுறை பொருந்தும். எனினும், பள்ளி, கல்லூரிகளில் தேர்வு நடைபெறுவதில் இந்த விடுமுறை பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக 2026-ம் ஆண்டு ஜனவரி 24ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் கல்வி நிறுவனங்கள் செயல்படும். இந்த விடுமுறை நாளில் அரசு அனைத்து துணை கருவூலங்களும், மாவட்ட கருவூலமும் குறைந்த பணியாளர்களைக் கொண்டு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-trichy</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-trichy/happy-news-for-government-employees-december-30-holiday-announced-b3whyen"/>
        </item>
        <item>
            <title><![CDATA[டி.என்.பி.எஸ்.சி மீது திமுக அரசுக்கு நம்பிக்கை இல்லையா? அப்புறம் எதற்கு மீண்டும் மீண்டும் நேர்காணல்? அன்புமணி!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-trichy/does-the-dmk-government-not-have-faith-in-the-tnpsc-anbumani-ramadoss-tvk-srd0vw</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-trichy/does-the-dmk-government-not-have-faith-in-the-tnpsc-anbumani-ramadoss-tvk-srd0vw</guid>
            <pubDate>Sat, 08 Feb 2025 15:53:55 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் காலியாக உள்ள 2,566 பணியிடங்களை நிரப்புவதில் முறைகேடுகள் நடைபெறுகின்றன என்ற ஐயம் எழுந்துள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j43wm26ycnpctrwcwb484zs7,imgname-anbumani-ramadoss.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் &amp;nbsp;வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் காலியாக உள்ள 2,566 பணியிடங்களை நிரப்புவதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்படும் விதத்தை வைத்துப் பார்க்கும் போது, பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதில் முறைகேடுகள் நடைபெறுகின்றனவோ? என்ற ஐயம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மிகவும் வெளிப்படையாக நடைபெற வேண்டிய ஆள்தேர்வு முறை சந்தேக வளையத்தில் மீண்டும், மீண்டும் சிக்கிக் கொள்வது சரியல்ல. இந்த விஷயத்தில் அரசின் அணுகுமுறை கண்டிக்கத்தக்கது.&lt;/p&gt; &lt;p&gt;நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் காலியாக உள்ள பொறியியல் உள்ளிட்ட பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஆள்தேர்வு அறிவிக்கை கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி விண்ணப்பித்தவர்களுக்கான போட்டித் தேர்வுகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் வாயிலாக கடந்த ஆண்டு ஜூன் 29, 30 ஜூலை 6 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் கடந்த செப்டம்பர் 20-ஆம் தேதி வெளியிடப்பட்டன.&lt;/p&gt; &lt;p&gt;அந்தத் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அக்டோபர், நவம்பர் மாதங்களிலும், நீதிமன்ற வழக்குகள் காரணமாக துப்புரவு ஆய்வாளர் பணிக்கு மட்டும் கடந்த ஜனவரி மாதத்திலும் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல்கள் நடத்தப்பட்டன. வழக்கமாக சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் முடிவடைந்தவுடன் அனைத்து வகை தேர்வுகளிலும் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும். ஆனால், அண்ணா பல்கலைக்கழகமோ முடிவுகளை அறிவிக்காமல் நேர்காணலில் பங்கேற்கத் தவறியவர்களுக்கு மீண்டும், மீண்டும் வாய்ப்பு அளிப்பதாகக் கூறி, அவர்களை நேர்காணலுக்கு அழைத்துக் கொண்டிருக்கிறது. இது தான் தேர்வர்கள் மத்தியில் பெரும் ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;நகராட்சி நிர்வாகத்துறைக்கு பணியாளர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியான நாள் முதலாகவே, ஆள்தேர்வு முறையின் நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மை குறித்த ஐயம் நிலவிக் கொண்டு தான் இருக்கிறது. முதலில், இந்தப் பணிகளுக்கான தேர்வுகளை இதுவரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தான் நடத்தி வந்தது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததுமே, துறை சார்ந்த ஆள்தேர்வுகளை அந்தந்த துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் நடத்தக்கூடாது என்று அறிவித்ததுடன், அனைத்து ஆள்தேர்வுகளையும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாகவே நடத்தும் வகையில் சட்டத் திருத்தமும் செய்யப்பட்டது.&lt;/p&gt; &lt;p&gt;ஆனால், அதற்கு முற்றிலும் எதிரான வகையில், நகராட்சி நிர்வாகத்துறைக்கு மட்டும், அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக இல்லாமல் அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலமாக ஆள்தேர்வு நடத்துவது ஏன்? டி.என்.பி.எஸ்.சி மீது அரசுக்கு நம்பிக்கை இல்லையா? அல்லது அண்ணா பல்கலைக்கழகம் தான் மிக மிக நேர்மையான அமைப்பா? இரண்டாவதாக, நகராட்சி நிர்வாகத்துறைக்கு அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் போட்டித் தேர்வின் மூலம் என்னென்ன பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்களோ, பிற துறைகளில் அதே பணிகளுக்கு தகுதியானவர்களை இன்னும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தான் தேர்ந்தெடுத்து வருகிறது. ஒரே கல்வித்தகுதியும், ஊதியமும் கொண்ட ஊதிய நிலை 20, 13, 11, 5 ஆகியவற்றில் அடங்கிய பணிகளுக்கு தகுதியானவர்களை டி.என்.பி.எஸ்.சி தேர்வு செய்யும் போது நேர்காணல் இல்லை; அதே பணிக்கு தகுதியான ஆட்களை அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு செய்யும்போது நேர்காணல் உண்டு என்பது எவ்வளவு முரண்?&lt;/p&gt; &lt;p&gt;மூன்றாவதாக, அரசுப் பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதில் நடைபெறும் ஊழல்களுக்கு நேர்காணல்கள் தான் முதன்மைக் காரணமாக இருக்கின்றன என்பதால் அவற்றை ரத்து செய்ய வேண்டும் என்று பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. ஆந்திரத்தில் முதல் தொகுதி பணிகளுக்குக் கூட நேர்காணல்கள் நடத்தப்படுவதில்லை. தமிழ்நாட்டிலும் இரண்டாம் தொகுதி பணிகளுக்கு நேர்காணல் ரத்து செய்யப்பட்டு விட்டன. ஆனால், அதை விட கீழான பணிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலம் நேர்காணல் நடத்தி தகுதியானவர்களை நகராட்சி நிர்வாகத்துறை தேர்ந்தெடுக்கிறது எனும் போது, முறைகேடுகள் செய்வதற்காகத் தான் நேர்காணல் நடத்தப்படுகிறதோ? என்ற ஐயம் எழுவது இயற்கை.&lt;/p&gt; &lt;p&gt;அதிலும் குறிப்பாக சான்றிதழ் சரிபார்ப்பும், நேர்காணலும் முடிவடைந்த பிறகும் இறுதி முடிவுகளை வெளியிடாமல், கடந்த காலங்களில் நேர்காணலுக்கு வராதவர்களை மீண்டும், மீண்டும் நேர்காணலுக்கு வாருங்கள் என அழைக்கும் போது முறைகேடு குறித்த ஐயம் அதிகரிக்கிறது. இதை போக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது. எனவே, இது குறித்து விளக்கம் அளிப்பதுடன், ஆள்தேர்வு முடிவுகளையும் நகராட்சி நிர்வாகத்துறையும், அண்ணா பல்கலைக்கழகமும் உடனடியாக வெளியிட வேண்டும். அதுமட்டுமின்றி, ஆள்தேர்வு நடைமுறைகள் அனைத்தும் நேர்மையாக நடந்தன என்பதை உறுதி செய்யும் வகையில் ஒவ்வொரு தேர்வரும் எழுத்துத் தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு? நேர்காணலில் எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு? நேர்காணலில் அவர்களிடம் கேட்கப்பட்ட வினாக்கள், அதற்கு அவர்கள் அளித்த விடைகள், ஒவ்வொரு தேர்வரும் நேர்காணல் செய்யப்படும் காணொலி பதிவு ஆகியவற்றையும் நகராட்சி நிர்வாகத்துறையும், அண்ணா பல்கலைக்கழகமும் வெளியிட வேண்டும் என அன்புமணி தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-trichy</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-trichy/does-the-dmk-government-not-have-faith-in-the-tnpsc-anbumani-ramadoss-tvk-srd0vw"/>
        </item>
        <item>
            <title><![CDATA[என்ன பெரிய ஏர்போர்ட்... வந்து பாருங்க பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்ட்... அமெரிக்காவை விஞ்சும் அதிசயம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/beyond-just-buses-trichy-panjappur-bus-terminus-sets-new-standards-for-travel-erx75cu</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/beyond-just-buses-trichy-panjappur-bus-terminus-sets-new-standards-for-travel-erx75cu</guid>
            <pubDate>Sun, 20 Jul 2025 18:24:51 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;திருச்சியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள பஞ்சப்பூர் பேருந்து முனையம், அதிநவீன வசதிகள் மற்றும் குளிரூட்டப்பட்ட சூழலுடன் பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குகிறது. நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் இந்த முனையம் அமைக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k0kx51hmy1y6z765x0hd54xc,imgname-araathu--1753014765108.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;திருச்சியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள பஞ்சப்பூர் பேருந்து முனையம், அதிநவீன வசதிகள் மற்றும் குளிரூட்டப்பட்ட சூழலுடன் பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குகிறது. நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் இந்த முனையம் அமைக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;திருச்சி மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டும் பஞ்சப்பூரில் அமைக்கப்பட்டுள்ள &quot;முத்தமிழறிஞர் கலைஞர் டாக்டர் மு. கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையம்&quot; கடந்த ஜூலை 16ஆம் தேதி முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் 408 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த அதிநவீன பேருந்து நிலையம், தமிழகத்திலேயே முழுமையாக குளிரூட்டப்பட்ட முதல் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் என்ற சிறப்பைப் பெறுகிறது. இந்தப் பேருந்து முனையத்தில் உள்ள முக்கிய சிறப்பம்சங்கள் மற்றும் வசதிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;குளிரூட்டப்பட்ட தரைத்தளம்:&lt;/strong&gt; பேருந்து நிலையத்தின் தரைத்தளம் முழுவதும் 1.20 லட்சம் சதுர அடி பரப்பளவில் பால் சீலிங் செய்யப்பட்டு, 704 டன் ஏசி வசதியுடன் குளிரூட்டப்பட்டுள்ளது. இது தமிழகத்திலேயே பயணிகள் பயன்படுத்தும் தரைத்தளம் முழுவதும் ஏசி வசதி செய்யப்பட்ட முதல் பேருந்து நிலையமாகும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பேருந்துகள் நிறுத்தும் வசதி:&lt;/strong&gt; ஒரே நேரத்தில் 401 பேருந்துகளை நிறுத்தும் வசதி இங்கு உள்ளது. தரைத்தளத்தில் வெளியூர் மற்றும் நீண்ட தூர பேருந்துகளுக்கான 345 இடங்களும், முதல் தளத்தில் நகரப் பேருந்துகளுக்கான 56 இடங்களும் உள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;உணவகங்கள் மற்றும் கடைகள்: &lt;/strong&gt;பயணிகளுக்கான உணவகங்கள், டீ, காபி, சிற்றுண்டிக் கடைகள் மற்றும் பல்பொருள் விற்பனைப் பெட்டிக் கடைகள் என மொத்தம் 20 கடைகளும், 12 உணவகங்களும், 10 சிற்றுண்டிக் கடைகளும் திறக்கப்படவுள்ளன. (தற்போது சில கடைகள் செயல்பாட்டில் உள்ளன).&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;கழிப்பறைகள்: &lt;/strong&gt;ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்தனி நவீன கழிப்பறைகள் உட்பட மொத்தம் 107 கழிப்பறைகள் உள்ளன. இதில் ஆண்களுக்கு 42, பெண்களுக்கு 59, திருநங்கைகளுக்கு 2, மாற்றுத்திறனாளிகளுக்கு 4 கழிப்பறைகள் அடங்கும். மேலும், 4 குளியலறைகளும் உள்ளன. கழிப்பறைகளில் தானியங்கி முறையில் இயங்கும் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;நகரும் படிக்கட்டுகள் மற்றும் லிஃப்ட்கள்:&lt;/strong&gt; பயணிகளின் வசதிக்காக நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேட்டர்கள்) மற்றும் லிஃப்ட் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;குடிநீர் வசதி: &lt;/strong&gt;காவிரி ஆற்றிலிருந்து குடிநீர் கொண்டுவரப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பொருள்கள் வைக்கும் அறை:&lt;/strong&gt; பயணிகள் தங்களது உடைமைகளை பாதுகாப்பாக வைக்க லாக்கர் வசதி கொண்ட பொருள்கள் வைப்பறை உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;மருத்துவ உதவி மையம்:&lt;/strong&gt; தனியார் மருத்துவமனை சார்பில் மருத்துவர், செவிலியர், உதவியாளர் கொண்ட குழு 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளது. பயணிகளின் அவசரத் தேவைக்காக அழைப்பின்பேரில் மருத்துவர் குழுவினர் வருகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஏடிஎம் வசதிகள்: &lt;/strong&gt;தற்போது ஏடிஎம் மையங்கள் அமைக்கப்படாததால், 3 வங்கிகளின் நடமாடும் ஏடிஎம் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பேட்டரி கார்கள்: முதியவர்கள் மற்றும் நோயாளிகள் பயன்பாட்டிற்காக 3 பேட்டரி கார்கள் தயார் நிலையில் உள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;தகவல் பலகைகள்: டிஜிட்டல் வழிகாட்டி பலகைகள் மற்றும் 50 எல்.இ.டி திரைகள் பேருந்து நிலையத்தில் நிறுவப்பட்டுள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;காவல்துறை: தற்காலிக காவல் நிலையம் அமைக்கப்பட்டு, 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;சுகாதார ஏற்பாடுகள்: &lt;/strong&gt;பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு சுகாதார வசதிகளை உறுசெய்ய 228 தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து பணிகளை மேற்கொண்டுள்ளனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;தனியார் பராமரிப்பு:&lt;/strong&gt; பேருந்து நிலையத்தின் பராமரிப்புப் பணிகள் 15 ஆண்டுகளுக்கு தனியார் வசம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்தப் புதிய முனையம், சென்னை, மதுரை, சேலம், கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கான பேருந்து இணைப்பை மேம்படுத்துகிறது. நகரின் மத்தியப் பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையம் ஆகியவை தொடர்ந்து செயல்படும் என்றும், நகரப் பேருந்துகள் மத்திய பேருந்து நிலையம் வழியாக பஞ்சப்பூர் பேருந்து நிலையத்துக்கு வந்து செல்லும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;இந்த நவீன வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த பேருந்து முனையம், திருச்சியை தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவிலும் ஒரு முன்னணி போக்குவரத்து மையமாக நிலைநிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-trichy</category>
            <dc:creator>SG Balan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/beyond-just-buses-trichy-panjappur-bus-terminus-sets-new-standards-for-travel-erx75cu"/>
        </item>
        <item>
            <title><![CDATA[திருச்சியில் இருந்து சார்ஜாவிற்கு புறப்பட்ட சில நொடிகளில்! அலறிய 180 பயணிகள்! நடந்தது என்ன?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-trichy/air-india-express-flight-grounded-due-to-technical-glitch-in-trichy-airport-h9hungu</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-trichy/air-india-express-flight-grounded-due-to-technical-glitch-in-trichy-airport-h9hungu</guid>
            <pubDate>Wed, 03 Sep 2025 09:21:18 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;திருச்சியில் இருந்து சார்ஜாவிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக நிறுத்தப்பட்டது.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j9y3awwqtj6btj7ffszj5eny,imgname-trichy-air-india-express.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;திருச்சியில் இருந்து சார்ஜாவிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக நிறுத்தப்பட்டது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குஜராத் மாநிலம் அகதாபாத்தில் இருந்து ஜூன் 12-ம் தேதி பிரிட்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஓடு பாதையில் இருந்து மேலெழும்பிய சில நொடிகளிலேயே விமானம் கீழே விழுந்ததில், விமானம் வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 240 பேர் உயிரிழந்தனர். ஒரு பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதனால் அடுத்தடுத்து விமான விபத்து, திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கம் செய்யும் சம்பவங்களும் நிகழ்ந்து வருவதால் ஒரு வித பீதியுடனே பயணிகள் விமானத்தில் பயணிக்கின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில் திருச்சியில் இருந்து சார்ஜாவிற்கு 180 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சில நொடிகளிலேயே தொழில்நுட்பக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து விமானி அவசரமாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து விமானத்தை ஓடுபாதையிலேயே விமானி நிறுத்தினார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதனையடுத்து கோளாறை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக விமானத்திற்குள்ளேயே பயணிகள் காத்திருந்தனர். இருப்பினும் தொடர்ந்து கோளாறு சரி செய்யும் பணி நடைபெற்று வருவதால் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டுள்ளனர். பகல் 12 மணிக்கு மாற்று விமானம் மூலம் அவர்கள் அனைவரும் சார்ஜாவிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக விமான நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-trichy</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-trichy/air-india-express-flight-grounded-due-to-technical-glitch-in-trichy-airport-h9hungu"/>
        </item>
        <item>
            <title><![CDATA[முதல் முறையாக பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்ட தமிழக அரசு!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-trichy/tamil-nadu-economy-2024-25-important-report-released-by-m-k-stalin-tvk-st24lx</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-trichy/tamil-nadu-economy-2024-25-important-report-released-by-m-k-stalin-tvk-st24lx</guid>
            <pubDate>Thu, 13 Mar 2025 15:47:57 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆய்வறிக்கை 2024-25 வெளியிடப்பட்டது. இதில் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, தனி நபர் வருமானம் மற்றும் வருவாய், செலவு குறித்த முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jp7g4qafpdtz1b82qw4cx71e,imgname-mk-stalin-5.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முந்தைய நாளில் நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிடும். அந்த வகையில் தமிழ்நாடு அரசு தரப்பில் &amp;nbsp;2025-2026ம் ஆண்டுக்கான &amp;nbsp;நிதிநிலை அறிக்கை நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அரசின் மாநில திட்டக் குழு சார்பில் தயாரிக்கப்பட்ட தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25-யை (Economic Survey of Tamil Nadu 2024-25) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று வெளியிட்டார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;அப்போது, தலைமைச் செயலாளர் சண்முகம், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.பொருளாதார ஆய்வு அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிடுவது இதுவே முதல்முறையாகும்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கையில்: தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8% ஆக இருக்கும் என்றும் தனி நபர் வருமானம் ரூ. 2.78 லட்சமாக அதிகரிக்கும். மேலும் தமிழ்நாட்டில் தனி நபர் வருமானம், தேசிய சராசரியைவிட 1.64 மடங்கு அதிகம்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;மாநிலத்தின் மக்கள் தொகையில் 31.8 சதவிகிதம் உள்ள வடக்கு மண்டலம், சிஎஸ்டிபியில் 36.6 சதவிகிதம் என்ற அதிகபட்ச பங்களிப்பை வழங்குகிறது. அதேபோல் ஒரு ரூபாயில் தமிழக அரசின் வருவாய் எவ்வளவு, செலவு எவ்வளவு என்ற விவரமும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஒரு ரூபாயில் கடன்களை திருப்பி செலுத்துவதற்கு 9.1 சதவிகிதமும், வட்டி செலுத்துவதற்கு 14.1 சதவிகிதமும் பயன்படுத்தப்படுகிறது. கொரோனா தொற்றுக்குப் பிறகு தமிழ்நாட்டில் சேவைத்துறை வலுவான மீட்சியைக் கண்டுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-trichy</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-trichy/tamil-nadu-economy-2024-25-important-report-released-by-m-k-stalin-tvk-st24lx"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஸ்ரீரங்கம் பேருந்து நிலையம் எப்போது திறக்கப்படும்? வெளியான புதிய தகவல்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-trichy/srirangam-new-bus-stand-80-work-completed-tvk-lr8ulbg</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-trichy/srirangam-new-bus-stand-80-work-completed-tvk-lr8ulbg</guid>
            <pubDate>Mon, 26 May 2025 17:23:33 +0530</pubDate>
            <description><![CDATA[திருச்சி ஸ்ரீரங்கத்தில் 11.10 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி 80% நிறைவடைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் எட்டு பேருந்துகள் நிறுத்தும் வசதி, கடைகள், பல்நோக்கு அரங்கம் மற்றும் உணவகம் போன்ற வசதிகள் இடம்பெறும்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jw66enebxn7xvwgpmn5vjbp8,imgname-srirangam-1-1748259788235.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[திருச்சி ஸ்ரீரங்கத்தில் 11.10 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி 80% நிறைவடைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் எட்டு பேருந்துகள் நிறுத்தும் வசதி, கடைகள், பல்நோக்கு அரங்கம் மற்றும் உணவகம் போன்ற வசதிகள் இடம்பெறும்.&lt;img&gt;&lt;p&gt;108 வைணவ தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள், நாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் உலக பிரசித்தி பெற்ற ஶ்ரீரங்கம் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் இறங்கிச் செல்ல ஏதுவாக பேருந்து நிலையம் இல்லாததால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த பகுதியில் மட்டும் சுமார் 1 லட்சத்து 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் ஸ்ரீரங்கத்தில் இதுவரை உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் பேருந்துகளுக்கு என தனியாக பேருந்து நிலையம் இல்லை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆகையால் ஸ்ரீரங்கத்தில் உள்ளூர் பேருந்து நிலையம் கட்டப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு உத்தரவின் பெயரில் ஸ்ரீரங்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை எதிரில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதனை தொடர்ந்து ஶ்ரீரங்கத்தில் ரூபாய் 11.10 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது. கடந்த 2023 டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. 2024 ஜனவரி மாதம் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டது. சில காரணங்களால் பணிகள் தாமதமானது. ஆனால், மாநகராட்சி நிர்வாகம் விரைந்து செயல்பட்டு பணிகளை துரிதப்படுத்தியுள்ளது. தற்போது 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதுவரை 80% பணிகள் முடிவடைந்துள்ளன. முதல் தளத்திற்கான கான்கிரீட் கூரை அமைக்கும் பணி நடந்து வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அடுத்து, சுகாதார வளாகங்கள், கடைகள், பூச்சு வேலை, மின் மற்றும் பிளம்பிங் வேலைகள் மேற்கொள்ளப்படும். திட்டமிட்டபடி பார்த்தால், பணி ஆணை வழங்கப்பட்ட தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த திட்டம் முடிக்கப்பட வேண்டும். ஆனால், அதற்கு முன்பே பணிகள் முடிவடையும் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;&lt;p&gt;இந்த பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் எட்டு பேருந்துகளை நிறுத்தும் வசதி இருக்கும். இது நகர மற்றும் புறநகர் பேருந்துகளை கையாளுவதற்கு ஏற்றதாக இருக்கும். பேருந்து நிலையத்தில் ஊழியர்களுக்கான அறைகள், சுகாதார வளாகம் மற்றும் சுமார் 22 கடைகள் இருக்கும். முதல் தளத்தில் 260 பேர் அமரக்கூடிய பல்நோக்கு அரங்கம் மற்றும் 140 பேர் அமர்ந்து சாப்பிடக்கூடிய உணவுக்கூடம் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-trichy</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-trichy/srirangam-new-bus-stand-80-work-completed-tvk-lr8ulbg"/>
        </item>
        <item>
            <title><![CDATA[திருச்சி விமான நிலையம் மட்டுமல்ல; எல்லாமே தனியார்மயம் - அரசு கொடுத்த அதிர்ச்சி]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-trichy/airports-to-be-privatized-11-airports-including-trichy-leased-rag-stcysg</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-trichy/airports-to-be-privatized-11-airports-including-trichy-leased-rag-stcysg</guid>
            <pubDate>Wed, 19 Mar 2025 12:15:52 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;திருச்சி விமான நிலையம் உட்பட 11 விமான நிலையங்களை தனியாருக்கு குத்தகைக்கு விட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் குறித்த முழு விவரங்களை இங்கே காணலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jppjcpx94gefr539fmjfnrda,imgname-tamil-news---2025-03-19t120437.063.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Trichy Airport &ndash; To Be Leased Under New Plan : 2025-26 நிதியாண்டின் இறுதிக்குள் 11 விமான நிலையங்களின் செயல்பாடுகளை தனியார் நிறுவனங்களுக்கு மாற்றுவதை இலக்காகக் கொண்டு, இந்திய அரசு அதன் விமான நிலைய தனியார்மயமாக்கல் முயற்சியின் மூன்றாம் கட்டத்தைத் தொடங்க உள்ளது. முதலீட்டாளர்களை ஈர்க்க, நிதி நிலைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், நஷ்டத்தில் இயங்கும் விமான நிலையங்களை லாபகரமான விமான நிலையங்களுடன் இணைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;11 விமான நிலையங்கள்&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;இந்த முயற்சி அரசுக்கு சொந்தமான சொத்துக்களை பணமாக்குவதற்கான ஒரு பெரிய உத்தியின் ஒரு பகுதியாகும். இது நிதி பற்றாக்குறையை குறைக்க உதவுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட 11 விமான நிலையங்கள் இந்தியாவின் உள்நாட்டு பயணிகள் போக்குவரத்தில் சுமார் 10% மற்றும் சர்வதேச போக்குவரத்தில் 4% ஆகும், இது விமானத் துறை சீர்திருத்தங்களில் அவற்றின் தனியார்மயமாக்கலை ஒரு முக்கியமான படியாக மாற்றுகிறது. முன்மொழியப்பட்ட திட்டத்தின்படி, வாரணாசி விமான நிலையம் குஷிநகர் மற்றும் கயா விமான நிலையங்களுடன் தொகுக்கப்படும்.&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;திருச்சி விமான நிலையம்&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;வாரணாசியில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தரும் அதே வேளையில், ஜூன் மாதத்திலிருந்து குஷிநகரில் பயணிகள் யாரும் இல்லை. மேலும் கயா ஒரு புத்த மத யாத்திரைத் தலமாக இருந்தபோதிலும், குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் வருகையைக் காண்கிறது. இதேபோல், புவனேஸ்வர் மற்றும் அமிர்தசரஸ் விமான நிலையங்கள் ஹூப்ளி மற்றும் காங்க்ராவுடன் இணைக்கப்படும், அதே நேரத்தில் ராய்ப்பூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகியவை அவுரங்காபாத் மற்றும் திருப்பதியுடன் இணைக்கப்படும்.&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;வருவாய் சமநிலை&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;இந்த உத்தி, லாபகரமான விமான நிலையங்களை நிர்வகிக்கும் முதலீட்டாளர்கள் நஷ்டத்தில் இயங்கும் விமான நிலையங்களுக்குப் பொறுப்பேற்று, போர்ட்ஃபோலியோ முழுவதும் வருவாயை சமநிலைப்படுத்துவதை உறுதி செய்கிறது. 2025-26 நிதியாண்டில் சொத்து பணமாக்குதல் மூலம் ₹47,000 கோடி திரட்ட அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது. இந்த நிதியைப் பயன்படுத்தி அதன் நிதிப் பற்றாக்குறையை நிர்வகிக்கிறது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4% ஆகக் குறைக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;தனியார்மயமாக்கல்&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) தனியார்மயமாக்கல் கட்டமைப்பை இறுதி செய்து வருகிறது. மேலும் அடுத்த மாதத்திற்குள் அரசாங்க ஒப்புதலைப் பெறும். ஏலச் செயல்முறை ஒரு பயணிக்கு வருவாய் பகிர்வின் அடிப்படையில் இருக்கும். இது வெளிப்படைத்தன்மையை உறுதி செய்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய தனியார் விமான நிலைய நிறுவனமான அதானி விமான நிலைய ஹோல்டிங்ஸ் லிமிடெட், இரண்டாவது தனியார்மயமாக்கல் கட்டத்தில் ஆறு விமான நிலையங்களையும் மும்பை சர்வதேச விமான நிலையத்தையும் முன்பு கையகப்படுத்தியுள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;இந்திய விமானப் போக்குவரத்து&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை இயக்கும் GMR விமான நிலையங்கள் லிமிடெட் நிறுவனமும் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியாளர்களைக் கருத்தில் கொண்டு, போட்டி கடுமையாக இருக்கும் என்றும், இந்திய விமானப் போக்குவரத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விமான நிலையங்களை தனியார்மயமாக்குவது செயல்பாட்டுத் திறன், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பயணிகள் அனுபவத்தை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;விமான நிலைய மேலாண்மை&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;இருப்பினும், விமான நிலையக் கட்டணங்கள், வேலைவாய்ப்பு மற்றும் பிராந்திய இணைப்பை இது எவ்வாறு பாதிக்கலாம் என்பதை பங்குதாரர்கள் கூர்மையாகக் கவனித்து வருகின்றனர். தனியார்மயமாக்கல் செயல்முறை வெளிவரும்போது, ​​இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறையில் அதன் விளைவுகள் தெளிவாகும், இது விமான நிலைய மேலாண்மை மற்றும் உள்கட்டமைப்பு முதலீட்டில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-trichy</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-trichy/airports-to-be-privatized-11-airports-including-trichy-leased-rag-stcysg"/>
        </item>
        <item>
            <title><![CDATA[நீண்ட நேரமாகியும் திறக்காத கதவு! உள்ளே சென்று பார்த்த போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி! நடந்தது என்ன?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-trichy/debt-problem-family-commits-suicide-in-trichy-tvk-rrxh93u</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-trichy/debt-problem-family-commits-suicide-in-trichy-tvk-rrxh93u</guid>
            <pubDate>Wed, 14 May 2025 12:42:43 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;திருச்சியில் கடன் தொல்லையால் துணிக்கடைக்காரர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jv6sda7adxe39m22726eh6p5,imgname-trichy-3-1747205925098.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;திருச்சியில் கடன் தொல்லையால் துணிக்கடைக்காரர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;திருச்சி மாவட்டம் மேலகல்கண்டார் கோட்டை மூகாம்பிகை நகர் பகுதியில் வசித்து வந்தவர் அலெக்ஸ். துணிக்கடையை நடத்தி வந்துள்ளார். இவரது மனைவி விக்டோரியா. இவர் ரயில்வே ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த தம்பதிக்கு ஆராதனா(9), ஆலியா(3) ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில், இன்று காலை நீண்ட நேரமாகியும் வீடு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னம் வழியாக எட்டி பார்த்த போது மூச்சு பேச்சு இல்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அப்போது அலெக்ஸ் மற்றும் விக்டோரியா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டனர். மற்றொரு அறையில் இரு மகள்களுக்கும் விஷம் கொடுத்து வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்துகிடந்தனர். இதனையடுத்து 4 பேரின் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு தகவல்கள் வெளியாகின. அலெக்ஸ்க்கு ஜவுளி வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் போதிய வருமானம் இல்லாததால் கடன் அதிகரித்துள்ளது. கடன் கொடுத்தவர்களும் பணத்தை கேட்டு தொல்லை கொடுத்துள்ளனர். இதனால் வேறு வழியில்லாமல் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முதலில் தங்களது இரு மகள்களையும் விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு பின்னர் தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை எற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-trichy</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-trichy/debt-problem-family-commits-suicide-in-trichy-tvk-rrxh93u"/>
        </item>
        <item>
            <title><![CDATA[திருச்சியில் அக்சென்ச்சர் புதிய கிளை! காத்திருக்கும் வேலைவாய்ப்புகள்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-trichy/accenture-to-open-branch-in-trichy-job-opportunities-on-the-rise-for-youth--suqvqy</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-trichy/accenture-to-open-branch-in-trichy-job-opportunities-on-the-rise-for-youth--suqvqy</guid>
            <pubDate>Tue, 15 Apr 2025 11:10:44 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;அக்சென்ச்சர் நிறுவனம் திருச்சியில் புதிய கிளையைத் திறக்கவுள்ளது. இது திருச்சியின் வளர்ச்சிக்கு ஒரு திருப்புமுனையாகவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01hrrnxn18dp4hcjerqrgy8mhx,imgname-asianet-news---2024-03-12t120406-909.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;அக்சென்ச்சர் நிறுவனம் திருச்சியில் புதிய கிளையைத் திறக்கவுள்ளது. இது திருச்சியின் வளர்ச்சிக்கு ஒரு திருப்புமுனையாகவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;&lt;span&gt;&lt;strong&gt;அக்சென்ச்சர் நிறுவனம்:&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;சமீப காலமாக, பலரது விருப்பமாக இருப்பது ஐடி துறையில் பணிபுரிவதுதான். அந்த வகையில், அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு உலகளவில் செயல்படும் நிறுவனம் அக்சென்ச்சர். குறிப்பாக இந்திய ஐடி நிறுவனங்களுக்கு இது ஒரு முன்னோடியாகவும், அடையாளச் சின்னமாகவும் கருதப்படுகிறது. எனவே, அக்சென்ச்சரின் வருவாய் அறிக்கை, சேவைகளை ஏற்றுமதி செய்வதை பெரிதும் நம்பியுள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் உட்பட உலகளாவிய ஐடி துறையின் போக்கை உணர்த்தும் ஒரு முக்கிய காட்டியாக விளங்குகிறது.&lt;/p&gt; &lt;p&gt;டிஜிட்டல் சந்தைப்படுத்தல், பகுப்பாய்வு, மொபைல் தொழில்நுட்பம், மென்பொருள் தொழில்நுட்பம் மற்றும் கிளவுட் சேவைகள் போன்ற பல்வேறு சேவைகளை அக்சென்ச்சர் வழங்கி வருகிறது. டிஜிட்டல், கிளவுட் மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் மேம்பட்ட திறன்களைக் கொண்ட ஒரு உலகளாவிய தொழில்முறை சேவை நிறுவனமாக இது திகழ்கிறது.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;&lt;span&gt;&lt;strong&gt;டெலிவரி நெட்வொர்க்:&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;செயற்கை நுண்ணறிவு, கிளவுட் கம்ப்யூட்டிங், தரவு பகுப்பாய்வு மற்றும் மெட்டாவேர்ஸ் போன்ற நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் டிஜிட்டல் மாற்றத்திற்கும், புதுமைக்கும் உதவுகின்ற ஒரு பெரிய டெலிவரி நெட்வொர்க்கை இந்நிறுவனம் கொண்டுள்ளது. இந்தியாவில் பல்வேறு நகரங்களில் இதன் கிளைகள் செயல்பட்டு வருகின்றன.&lt;/p&gt; &lt;p&gt;குறிப்பாக கர்நாடகாவின் பெங்களூரு, தெலுங்கானாவின் ஹைதராபாத், மகாராஷ்டிராவின் மும்பை மற்றும் புனே, மேற்கு வங்கத்தின் கொல்கத்தா, ஒடிசாவின் புவனேஸ்வர், ராஜஸ்தானின் ஜெய்ப்பூர், மத்திய பிரதேசத்தின் இந்தூர் மற்றும் ஹரியானாவின் குருகிராம் ஆகிய இடங்களில் அக்சென்ச்சர் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இரண்டு நகரங்களில் இதன் கிளைகள் ஏற்கனவே உள்ளன. இந்நிலையில், அக்சென்ச்சர் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;&lt;span&gt;&lt;strong&gt;திருச்சியில்&amp;nbsp;புதிய கிளை:&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;தற்போது, அக்சென்ச்சரின் புதிய கிளை திருச்சியில் அமையவுள்ளது. இந்த நிறுவனத்தின் வருகை, திருச்சியின் வளர்ச்சிப் பாதையில் ஒரு திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், திருச்சி உலக வரைபடத்தில் ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்து, எதிர்காலத்தில் வேகமான வளர்ச்சிக்க வழிவகுக்கும்.&lt;/p&gt; &lt;p&gt;பெரிய நகரங்கள் முதல் வளர்ந்து வரும் நகரங்கள் வரை அனைத்து நிலைகளிலும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது என்பதை இது உலகிற்கு நிரூபிக்கிறது. இந்த புதிய நிறுவனம் திருச்சியில் அமைவதால், அப்பகுதி இளைஞர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று நம்பப்படுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-trichy</category>
            <dc:creator>SG Balan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-trichy/accenture-to-open-branch-in-trichy-job-opportunities-on-the-rise-for-youth--suqvqy"/>
        </item>
        <item>
            <title><![CDATA[பள்ளி மாணவர்கள் எதிர்பார்த்த செய்தி! இன்று வெளியாகிறது முடிவுகள்! யாருக்கெல்லாம் ரூ.10,000  கிடைக்கும்?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-trichy/chief-minister-aptitude-test-results-to-be-released-today-tvk-sx0gr66</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-trichy/chief-minister-aptitude-test-results-to-be-released-today-tvk-sx0gr66</guid>
            <pubDate>Thu, 12 Jun 2025 11:36:46 +0530</pubDate>
            <description><![CDATA[தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வெழுதிய மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j9wmwvkc1bg2arx5raz6nw64,imgname-school-student.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வெழுதிய மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம்.&lt;img&gt;&lt;p&gt;திமுக அரசு வெற்றி பெற்று முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆரம்ப கல்வியே அடிப்படை கல்வி என்ற நோக்கில் தரமான கல்வியை வழங்க வேண்டும் என மாநில பாடத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி மாணவர்களின் உயர்கல்விக்கு வழிவகுத்து வருகிறது. இந்நிலையில் பள்ளி மாணவர்கள் உயர்கல்வி படிப்பதை ஊக்கப்படுத்தும் வகையில், தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இத்தேர்வில்&zwnj; 1000 மாணாக்கர்கள்&zwnj; (500 மாணவர்கள்&zwnj; + 500 மாணவியர்கள்&zwnj;) தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இளநிலை பட்டப்படிப்பு வரை மாதம்&zwnj; ரூ.1000 வீதம்&zwnj; 10 மாதங்களுக்கு உதவித் தொகையாக ரூ.10,000 வழங்கப்படும்&zwnj;. இந்நிலையில் முதல்வர் திறனாய்வு தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்கள் ஜனவரி 20-ம் தேதி வெளியிடப்பப்பட்டு ஜனவரி 25-ம் தேதி தமிழக முதல்வர் திறனாய்வு தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுகள் முடிவுகள் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருந்த மாணவ, மாணவிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதுதொடர்பாக அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களின் திறனைக் கண்டறிவதற்கும் , அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத்தேர்வு கடந்த ஜனவரி மாதம் 25ம் தேதி சனிக்கிழமை அன்று நடைபெற்றது. இந்த தேர்வை 1,43,351 மாணவ மாணவியர்கள் எழுதினர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இத்தேர்வில் 1000 மாணாக்கர்கள் ( 500 மாணவர்கள் + 500 மாணவியர்கள் ) தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு இளநிலை பட்டப்படிப்பு வரை மாதம் ரூ .1000 வீதம் ஒரு கல்வியாண்டிற்கு 10 மாதங்களுக்கு மட்டும் உதவித்தொகையாக ரூ .10,000 வழங்கப்படும். பிற்பகல் இத்தேர்வின் முடிவுகள் இன்று பிற்பகலில் வெளியாக உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எனவே இத்தேர்வெழுதிய மாணாக்கர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் RESULTS என்ற தலைப்பில் சென்று TAMILNADU CHIEF MINISTER TALENT SEARCH EXAMINATION Results என்ற பக்கத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை உள்ளீடு செய்து மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம் . மேலும் ஊக்கத்தொகைக்கான தெரிவுப்பட்டியல் இவ்விணையதளத்திலே other Examination &rarr; TAMILNADU CHIEF MINISTER TALENT SEARCH EXAMINATION பக்கத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-trichy</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-trichy/chief-minister-aptitude-test-results-to-be-released-today-tvk-sx0gr66"/>
        </item>
        <item>
            <title><![CDATA[திருச்சி பெல் நிறுவன அலுவலகத்தில் அதிர்ச்சி! பொதுமேலாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை! காரணம் என்ன?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-trichy/trichy-bhel-general-manager-commit-suicide-police-investigation-tvk-sszy0q</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-trichy/trichy-bhel-general-manager-commit-suicide-police-investigation-tvk-sszy0q</guid>
            <pubDate>Wed, 12 Mar 2025 11:30:26 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Trichy BHEL General Manager Commit Suicide:&amp;nbsp;திருச்சி பெல் நிறுவனத்தில் பொது மேலாளர் சண்முகம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jp4en5hfgs78a1gzy25edqv1,imgname-suicide.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Trichy BHEL General Manager Commit Suicide:&amp;nbsp;திருச்சி பெல் நிறுவனத்தில் பொது மேலாளர் சண்முகம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் தமிழகம் மட்டுமின்றி&amp;nbsp;இந்தியாவில் போபால், அரித்வார், ஐதராபாத், சான்சி போன்ற இடங்களில் உள்ளது. சுமார் 7,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில் பெல் நிறுவனத்தில் எஸ்எஸ்டிபி எனப்படும் ஸ்டீல் டியூப் பிரிவின் பொது மேலாளர் சண்முகம்(50). வழக்கம் போல வீட்டில் இருந்து பணிக்கு வந்துள்ளார். பின்னர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போதும் அவர் எடுக்கவில்லை.&amp;nbsp;இதனையடுத்து உறவினர் மற்றும் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் சண்முகத்தை தேடியும் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக பணி முடிந்தும் சண்முகம் வீட்டுக்கு வரவில்லை என்பது பற்றி குடும்பத்தினர் பெல் நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்தனர்.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;பின்னர் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் அவரது அலுவலக அறைக்கு சென்று பார்த்தனர். அப்போது அறையின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. இதனையடுத்து அறைக் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சண்முகம் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துக் கொண்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சண்முகம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சண்முகம் பயன்படுத்திய துப்பாக்கிக்கு உரிமம் இல்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் அவரது தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து இதுவரை தெரியவில்லை.&amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-trichy</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-trichy/trichy-bhel-general-manager-commit-suicide-police-investigation-tvk-sszy0q"/>
        </item>
        <item>
            <title><![CDATA[திருச்சியில் முதல்வர் இருக்கும் போதே பயங்கரம்! காவலர் குடியிருப்பில் இளைஞர் ஓட ஓட விரட்டி படுகொ*லை! அலறி ஓடிய பொதுமக்கள்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-trichy/trichy-youth-murder-in-police-quarters-vz2zkmg</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-trichy/trichy-youth-murder-in-police-quarters-vz2zkmg</guid>
            <pubDate>Mon, 10 Nov 2025 11:47:43 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;திருச்சி பீமா நகரில் தாமரைச்செல்வன் என்ற இளைஞரை, நான்கு பேர் கொண்ட கும்பல் விரட்டிச் சென்றுள்ளது. உயிர் பயத்தில் காவலர் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டிற்குள் தஞ்சம் புகுந்த அவரை, அந்தக் கும்பல் காவலர் குடும்பத்தினர் கண்முன்னே சரமாரியாக வெட்டிக் கொலை.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k9p69gfkp0wnygphdszhnhfh,imgname-trichy-1762755133939.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;திருச்சி பீமா நகரில் தாமரைச்செல்வன் என்ற இளைஞரை, நான்கு பேர் கொண்ட கும்பல் விரட்டிச் சென்றுள்ளது. உயிர் பயத்தில் காவலர் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டிற்குள் தஞ்சம் புகுந்த அவரை, அந்தக் கும்பல் காவலர் குடும்பத்தினர் கண்முன்னே சரமாரியாக வெட்டிக் கொலை.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;திருச்சி மாவட்டம் பீமா நகர் கீழத் தெருவை சேர்ந்த தாமரைச்செல்வன். இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. இவர் தனியார் கம்பெனி ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல இன்று காலை வேலைக்கு செல்வதற்காக திருச்சி பீமா நகர் பழைய தபால் நிலைய சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அப்போது எதிர்திசையில் இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் தாமரை செல்வன் இருசக்கர வாகனத்தின் மீது மோதி உள்ளனர். பின்னர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது நான்கு பேரும் பயங்கர ஆயுதங்களை கையில் வைத்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உயிர் பயத்தில் அப்பகுதியில் அலறியடி ஓடியுள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;காவலர் குடியிருப்புக்குள் நுழைந்த தாமரை செல்வன் தில்லை நகரில் பணிபுரியும் காவலர் செல்வராஜ் வீடு திறந்து இருந்ததால் அந்த வீட்டிற்குள் நுழைந்து கிரைண்டர் பக்கத்தில் போய் ஒளிந்து கொண்டுள்ளார். ஆனாலும் அந்த கும்பல் விடாமல் வீட்டுக்குள் நுழைந்து எஸ்எஸ்ஐ செல்வராஜ் மற்றும் காவலர் குடும்பத்தின் கண்முன்னே தாமரை செல்வனை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனை கண்ட காவலர் குடும்பத்தினர் அலறி கூச்சலிட்டுள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதனை சக காவலர்கள் கல்லால் கொலையாளிகளை தாக்கியுள்ளனர். ஆனால் அவர்கள் கையில் ஆயுதங்கள் இருந்ததால் அனைவரும் துரத்தில் இருந்தே தாக்கியுள்ளனர். இதில், ஒருவர் பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தாமரை செல்வன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் கொலை நடைபெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி வந்துள்ள முதல்வர் ஸ்டாலின், சம்பவ இடத்திற்கு சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் அருகே தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-trichy</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-trichy/trichy-youth-murder-in-police-quarters-vz2zkmg"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஸ்ரீரங்கம் யாத்திரி நிவாஸில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொ*லை.! வெளியான அதிர்ச்சி காரணம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-trichy/four-members-of-the-same-family-committed-suicide-in-trichy-articleshow-vzn1uot</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-trichy/four-members-of-the-same-family-committed-suicide-in-trichy-articleshow-vzn1uot</guid>
            <pubDate>Fri, 19 Dec 2025 15:08:39 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Family Suicide: தஞ்சையை சேர்ந்த தம்பதியினர், மனநலம் பாதிக்கப்பட்ட தங்கள் இரு மகள்களுடன் திருச்சி ஸ்ரீரங்கம் யாத்திரி நிவாஸில் தற்கொலை செய்து கொண்டனர். மகள்களை கவனித்துக் கொள்ள ஆள் இல்லாததால் இந்த விபரீத முடிவை எடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01h8gm4sn3qhb7dr6b4y2437tf,imgname-chennai-police-3.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியை சேர்ந்த சுவாமிநாதன் (67) மற்றும் அவரது மனைவி செண்பகவல்லி (65) ஆகியோர் தங்களது இரண்டு மகள்களுடன் கடந்த 10ம் தேதி திருச்சி ஸ்ரீரங்கத்திற்கு வருகை தந்தனர். பின்னர் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலுக்கு சொந்தமான யாத்திரி நிவாஸில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.&lt;/p&gt;&lt;p&gt;இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அவர்கள் தங்கியிருந்த அறையின் கதவு திறக்கப்படாமல் இருந்தது. இதனையடுத்து ஊழியர்கள் அந்த அறையின் கதவை பலமுறை தட்டியும் திறக்கப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.&lt;/p&gt;&lt;p&gt;அப்போது அங்கு கணவன், மனைவி மற்றும் அவர்களது இரண்டு மகள்கள் என மொத்தம் 4 பேரும் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இதனையடுத்து 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.&lt;/p&gt;&lt;p&gt;இதனிடையே அவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது. அதில், மனநலம் பாதிக்கப்பட்ட இரு மகள்களை கவனித்துக் கொள்ள ஆள் இல்லாததால் இந்த விபரீத முடிவை எடுத்தாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-trichy</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-trichy/four-members-of-the-same-family-committed-suicide-in-trichy-articleshow-vzn1uot"/>
        </item>
        <item>
            <title><![CDATA[சமயபுரம் கோவிலில் அதிர்ச்சி! புதிய காருக்கு பூஜை போட வந்த இடத்தில் பக்தர் உயிரிழப்பு! நடந்தது என்ன?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-trichy/car-accident-at-samayapuram-temple-devotee-dies-tvk/articleshow-zgo5alu</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-trichy/car-accident-at-samayapuram-temple-devotee-dies-tvk/articleshow-zgo5alu</guid>
            <pubDate>Thu, 12 Jun 2025 10:37:20 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;சமயபுரம் மாரியம்மன் கோவிலில் புதிய காரை பூஜை செய்ய கொண்டு வந்த பக்தர் ஒருவர், காரை ரிவர்ஸ் எடுத்தபோது தூங்கிக் கொண்டிருந்த மற்றொரு பக்தர் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jxh88ee59dvqrg7cph2417b4,imgname-samayapuram-temple-1749704522181.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;சமயபுரம் மாரியம்மன் கோவில்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;திருச்சி மாவட்டம் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோவில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கரூர் மாவட்டம் சாமிநாதபுரம் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் திருச்சியில் புதிய சொகுசு ஒன்றை வாங்கியுள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;புதிய காருக்கு பூஜை போட்ட இடத்தில் விபரீதம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இதனையடுத்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பூஜை செய்வதற்காக எடுத்துச் சென்றுள்ளார். காரை தெற்கு வாசல் அருகே பக்தர்கள் செல்லும் நடைபாதையில் நிறுத்திவிட்டு கோவிலுக்கு சென்ற அவர் சாமி தரிசனம் முடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக காரை ரிவர்ஸ் எடுத்துள்ளார். அப்போது தெற்கு வாசல் அருகே நடைபாதை ஒரத்தில் படுத்து தூங்கிக்கொண்டிருந்த பக்தரின் தலையின் மீது சொகுசு கார் ஏறி இறங்கியது. இந்த விபத்தில் பக்தர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;போலீஸ் விசாரணை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;சம்பவ இடத்திற்கு விரைந்த சமயபுரம் போலீசார் உயிரிழந்த பக்தரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். உயிரிழந்த விவரம் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் கார் உரிமையாளரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சொகுசு கார்கள் நிறுத்திவதற்கு தனியாக கார் பார்கிங் வசதி உள்ள நிலையில் இதுபோன்ற வாகனங்களை கோவில் பிரகாரம் வழியாக அனுமதிக்கப்பட்டதால் விபத்து ஏற்பட்டதாக பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-trichy</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-trichy/car-accident-at-samayapuram-temple-devotee-dies-tvk/articleshow-zgo5alu"/>
        </item>
    </channel>
</rss>
