<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes"?>
<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Thu, 20 Nov 2025 16:24:43 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss/tamilnadu-thiruvannamalai" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[அடி தூள்! டோட்டலாக மாறும் திருவண்ணாமலை! பக்தர்களுக்கு குட் நியூஸ் சொன்ன தெற்கு ரயில்வே!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-thiruvannamalai/tiruvannamalai-railway-station-to-be-upgraded-as-terminal-by-southern-railway-0gw0kdt</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-thiruvannamalai/tiruvannamalai-railway-station-to-be-upgraded-as-terminal-by-southern-railway-0gw0kdt</guid>
            <pubDate>Tue, 22 Jul 2025 17:38:25 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;திருவண்ணாமலை ரயில் நிலையம் ரயில் முனையாக தரம் உயர்த்தப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k0s08netstechg77r7jj1m70,imgname-tiruvanamalai-railway-1753185801690.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;திருவண்ணாமலை ரயில் நிலையம் ரயில் முனையாக தரம் உயர்த்தப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ்நாட்டின் ஆன்மிக நகரங்களில் ஒன்றாக விளங்கி வருவது திருவண்ணாமலை. இங்கு அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல லட்ச்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். அதுவும் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அருணாச்சலேஸ்வரரை தரிசனம் செய்து வருகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தினம்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பேருந்துகள், ரயில் மூலம் திருவண்ணாமலை வருகின்றனர். திருவண்ணாமலைக்கு பேருந்துகள் 24 மணி நேரமும் இருக்கும் நிலையில், ரயில் சேவை அந்த அளவுக்கு இல்லை. பவுர்ணமி கிரிவலத்தின்போது மட்டும் தெற்கு ரயில்வே சார்பில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படுகின்றன. திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் மேம்படுத்தி அங்கிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என பக்தர்க்ள் கோரிக்கை விடுத்து வந்தனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில், பக்தர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக திருவண்ணாமலை ரயில் நிலையத்தை &quot;PFTR&quot; முனையமாக (Passenger Facility Terminal) மாற்ற தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் &quot;அம்ரித் பாரத்&quot; திட்டத்தின் கீழ் சுமார் ரூ. 8.17 கோடி செலவில் திருவண்ணாமலை ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. திருவண்ணாமலை ரயில் நிலையத்தை ஒரு முனையமாக மாற்றுவதன் மூலம், இங்கிருந்து பிற நகரங்களுக்கும், மாநிலங்களுக்கும் புதிய ரயில்களை இயக்க முடியும். மேலும், ரயில்கள் திருவண்ணாமலையில் இருந்து புறப்படவும், அங்கு வந்து நிற்கவும் முடியும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;திருவண்ணாமலை கோயிலின் வடிவமைப்பில் ரயில் நிலையத்தின் முகப்பு அமைக்கப்பட உள்ளது. திருவண்ணாமலை ரயில் நிலையத்தின் நடைமேடைகள் இரண்டில் இருந்து ஐந்தாக உயர்த்தப்படும். புதிய டிக்கெட் கவுண்டர்கள் அமைக்கப்பட்டு, டிஜிட்டல் டிஸ்பிளே போர்டுகள் பொருத்தப்படும். மேலும் பயணிகள் இருக்கைகள், குடிநீர் வசதி, கழிப்பறைகள் போன்ற அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். ரயில் நிலையம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்படும். ஒளி விளக்குகள் மேம்படுத்தப்பட்டு, பார்க்கிங் வசதியும் விரிவாக்கப்படும். மொத்தத்தில் சென்னை சென்டிரல் ரயில் நிலையம் போன்று திருவண்ணாமலை ரயில் நிலையமும் டோட்டலாக மாற உள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thiruvannamalai</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-thiruvannamalai/tiruvannamalai-railway-station-to-be-upgraded-as-terminal-by-southern-railway-0gw0kdt"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஓயாத கனமழை; டிசம்பர் 2 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை - எந்தெந்த மாவட்டத்தில் தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/heavy-rain-tamilnadu-schools-and-colleges-declared-leave-on-december-2-ans-sntujd</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/heavy-rain-tamilnadu-schools-and-colleges-declared-leave-on-december-2-ans-sntujd</guid>
            <pubDate>Mon, 02 Dec 2024 07:01:58 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Schools and Colleges Leave : நாளையும் கனமழை தொடரவுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01je1pnbzvhm26qqj7b4vcjzv4,imgname-school-leave.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த சில நாட்களாகவே சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமானது முதல் அதிக கனத்த மழை வரை பரவலாக பெய்து வருகிறது. சென்னையின் அனேக இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்து இருந்த நிலையில், தற்போது மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது என்றே கூறலாம். சென்னைக்கு அதிக கனத்த மழை எச்சரிக்கை இல்லை என்றாலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இன்று காலை வரை திருவண்ணாமலை பகுதியில் வெளுத்து வாங்கிய கனமழை தற்பொழுது கொஞ்சம் குறைய தொடங்கியுள்ள நிலையில், இந்த ஃபெஞ்சல் புயலானது தர்மபுரி நோக்கி நகர்ந்து கிருஷ்ணகிரி மற்றும் கர்நாடகா பகுதிக்கு செல்ல உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வருகிறது. இருப்பினும் நாளையும் தொடர்ச்சியாக அநேக இடங்களில் மிதமான முதல் இடியுடன் கூடிய அதிக கனத்த மழை வரை பெய்ய அதிக வாய்ப்புகள் இருக்கிறது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;Red Alert in Villupuram: இன்னும் மழையின் ஆட்டம் முடியவில்லையாம்! மீண்டும் ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்!&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;கோவைக்கும் எதிர்வரும் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. ஃபெஞ்சல் புயல் வலுவிழந்தாலும் அதனுடைய விளைவாக பல இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நாளை டிசம்பர் 2ம் தேதியும் தமிழகத்தின் அநேக இடங்களில் கன மழை தொடரும் காரணமாக கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை ஒருநாள் விடுமுறை அளிக்கப்படுகிறது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இந்த உத்தரவு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்பட்டு வரும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என்றும் அங்குள்ள கல்லூரிகளில் வழக்கம் போல நாளை திங்கட்கிழமை செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;தர்மபுரி நோக்கி நகரும் ஃபெஞ்சல்; கோவையிலும் மிதமான மழை - வானிலை ஆய்வு மையம்!&lt;/strong&gt;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thiruvannamalai</category>
            <dc:creator>Ansgar R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/heavy-rain-tamilnadu-schools-and-colleges-declared-leave-on-december-2-ans-sntujd"/>
        </item>
        <item>
            <title><![CDATA[திருவண்ணாமலை கிரிவலப்பாதைக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! என்னவெல்லாம் செய்யக்கூடாது? இதோ முழு விவரம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-thiruvannamalai/maha-deepam-festivel-guidelines-for-the-tiruvannamalai-girivalam-path-tvk-soc4z1</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-thiruvannamalai/maha-deepam-festivel-guidelines-for-the-tiruvannamalai-girivalam-path-tvk-soc4z1</guid>
            <pubDate>Wed, 11 Dec 2024 20:43:48 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;Tiruvannamalai Maha deepam Festivel Guidelines:&amp;nbsp;&lt;/strong&gt;திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபத்திற்காக 25 தற்காலிக பேருந்து நிலையங்கள், 116 கார் பார்க்கிங் வசதிகள் மற்றும் பக்தர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. பக்தர்கள் பாதுகாப்பாக கிரிவலம் செல்லவும், அவசர உதவி எண்களைத் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jev4dd9z5exj6061jtd62hja,imgname-tiruvannamalai-maha-deepam.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபத்தை முன்னிட்டு &amp;nbsp;நாளை முதல் 15ம் தேதி வரை போக்குவரத்து நெரிசல் ஏதுமின்றி பக்தர்கள் வந்து கிரிவலம் செல்ல ஏதுவாக 25 தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் 116 கார் பார்க்கிங் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை மக்கள் அறிந்து அவற்றை முறையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. பக்தர்கள் தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் கார் பார்க்கிங் இடங்கள் தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட காவல் துறை WhatsApp உதவி எண். 9363622330-ற்கு Message மூலம் தொடர்பு கொண்டு Google Map Link - ஐ பெற்று Google Map உதவியுடன் அந்தந்த கார் பார்க்கிங் வசதிகளுக்கு செல்லலாம்.&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;வழிகாட்டு நெறிமுறைகள்&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;* பக்தர்களுக்கு நீர்மோர் வழங்குதல், திலகமிடுதல், ஆசிர்வதித்தல் என்ற போர்வையில் ஏமாற்றியும் மற்றும் மிரட்டியும் பக்தர்களிடமிருந்து பணம் வசூலிப்பது குற்றமாகும். அக்குற்றச் செயல்களை கண்காணிக்க கிரிவலப்பாதையில் பிரத்யேகமாக காவல் அதிவிரைவுப் படைகள் (QRT) ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அக்குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் உடனடியாக கைது செய்யப்பட்டு கடும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர் என எச்சரிக்கப்படுகிறது.&lt;/p&gt; &lt;p&gt;* பக்தர்கள் நான்கு கோபுரங்களுக்கு முன்போ, கிரிவலப்பாதையிலோ எங்கும் கற்பூரம் ஏற்றுதல் கூடாது.&lt;/p&gt; &lt;p&gt;* கால்நடைகளின் உரிமையாளர்கள் தங்கள் கால்நடைகளை கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு இடையூறாக உலாவ விடக்கூடாது. பக்தர்களும் கால்நடைகளுக்கு அகத்திக்கீரை உள்ளிட்டவற்றை வழங்குவதை தவிர்க்கவும்.&lt;/p&gt; &lt;p&gt;* உரிய அனுமதியின்றி அன்னதானம் வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் அன்னதானம் வழங்க அறிவுறுத்தப்படுகிறது.&lt;/p&gt; &lt;p&gt;*&amp;nbsp; கிரிவலம் செல்லும் பக்தர்கள் தங்களது குழந்தைகளையும் வயதானவர்களையும், பத்திரமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.&lt;/p&gt; &lt;p&gt;*&amp;nbsp; பக்தர்கள் தங்களது செல்போன், ஆபரணங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் ஆகியவற்றை தாங்களே பாதுகாத்து கொள்ள வேண்டும். யாரையும் நம்பி ஒப்படைக்க வேண்டாம். சந்தேகத்திற்கிடமான நபர்களையோ அல்லது பொருட்களையோ கண்டால் உடனடியாக அருகில் உள்ள காவல்துறை அலுவலரிடம் தெரிவிக்கவும்.&lt;/p&gt; &lt;p&gt;* பக்தர்கள் உதவிக்கு அருகிலுள்ள May I Help You Booth / காவல் உதவி மையத்தை அணுகலாம். கீழ்காணும் அலைபேசி எண்களுக்கும் தொடர்பு கொள்ளலாம். இந்த உதவி எண்கள் 12.12.2024 (07:00 AM) முதல் 15.12.2024 (06:00 PM) வரை 24 மணிநேரமும் செயல்படும்.&lt;/p&gt; &lt;p&gt;* திருவண்ணாமலை நகர குற்றப்பிரிவு காவல்நிலையம் - 04175-222303&lt;/p&gt; &lt;p&gt;* &amp;nbsp;உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் - 9498100431&lt;/p&gt; &lt;p&gt;*&amp;nbsp; அவசர உதவி எண்- 100&lt;/p&gt; &lt;p&gt;*&amp;nbsp; மாவட்ட காவல் கட்டுபாட்டு அறை எண் - 9159616263&lt;/p&gt; &lt;p&gt;*&amp;nbsp; பக்தர்கள், கிரிவலப்பாதையை ஒட்டியுள்ள நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்கவும்.&lt;/p&gt; &lt;p&gt;*&amp;nbsp; கிரிவலப்பாதையில் நிறுவப்பட்டுள்ள தற்காலிக கழிப்பிடங்களை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.&lt;/p&gt; &lt;p&gt;*&amp;nbsp; குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தவும்.&lt;/p&gt; &lt;p&gt;*&amp;nbsp; பக்தர்கள், தங்களது காலணிகளை 4 கோபுரங்களுக்கு முன்பும், மாடவீதிகளிலும் விடுவதை தவிர்க்கவும். கடைகள் அல்லது காலணி பாதுகாப்பகங்களில் விட அறிவுறுத்தப்படுகிறது.&lt;/p&gt; &lt;p&gt;*&amp;nbsp; கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு இடையூறாக தற்காலிக கடைகள் அமைக்க தடை செய்யப்பட்டுள்ளது. மீறும்பட்சத்தில் சட்டபடி நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.&lt;/p&gt; &lt;p&gt;*&amp;nbsp; கிரிவலப்பாதை மற்றும் மாடவீதிகளில் பக்தர்களுக்கு தொல்லை கொடுக்கும் விதமாக அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களான பீபீ உள்ளிட்டவற்றை விற்பனை செய்வதும், பயன்படுத்துவதும் குற்றமாகும்.&lt;/p&gt; &lt;p&gt;* பக்தர்களுக்கு இடையூறாக கிரிவலப்பாதை மற்றும் மாட வீதிகளில் உள்ள நிரந்தர கடைகளில் அதிக ஒலியுடன் கூடிய விளம்பர ஆடியோக்கள் ஒலிபரப்ப தடை செய்யப்பட்டுள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;*&amp;nbsp; கிரிவலப்பாதையில் தற்காலிகமாக கடைகள் அமைத்தோ, தங்கியோ கேஸ் சிலிண்டர் பயன்படுத்தி சமையல் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. மீறினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சமையல் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்படும்.&lt;/p&gt; &lt;p&gt;* அனுமதியின்றி வனப்பகுதியில் பிரவேசிப்பதும் மலையின் மீது ஏற முயற்சிப்பதும் குற்றமாகும். அந்நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;* ஏதேனும் உடல் நலக்குறைவு ஏற்படின் அருகில் உள்ள மருத்துவ முகாம்களின் மூலம் மருத்துவ உதவி பெறலாம் உதவிக்கு அருகில் உள்ள காவல் உதவி மையத்தையும் (May I Help You Booth) அணுகலாம் என கூறப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thiruvannamalai</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-thiruvannamalai/maha-deepam-festivel-guidelines-for-the-tiruvannamalai-girivalam-path-tvk-soc4z1"/>
        </item>
        <item>
            <title><![CDATA[திருப்பதிக்கே டஃப் கொடுக்கும் திருவண்ணாமலை..! உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-thiruvannamalai/tiruvannamalai-temple-undiyal-collection-crosses-6-crore-rupees-a1soas4</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-thiruvannamalai/tiruvannamalai-temple-undiyal-collection-crosses-6-crore-rupees-a1soas4</guid>
            <pubDate>Wed, 03 Sep 2025 11:59:26 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆடி மாத பவுர்ணமி உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நிறைவடைந்துள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k47405rzbvqxxd0a0csmrq1j,imgname-tiruvannamalai-1756880705311.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆடி மாத பவுர்ணமி உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நிறைவடைந்துள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உலக புகழ்பெற்ற கோவில்களில் ஒன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். இக்கோவில் நினைத்தாலே முக்தி தரக்கூடிய புண்ணிய தலமாக விளங்கக்கூடியது. அது மட்டுமல்லாமல் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும் விளங்குகிறது. இங்கு சிவனே மலை வடிவாக காட்சி தருவதாக ஐதீகம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இங்குள்ள 14 கிலோ மீட்டர் அளவிலான சுற்றுவட்டப்பாதையில் மாதந்தோறும் வரும் பவுர்ணமி தினத்தன்று வெளியூர் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர். ஆனால் தற்போது தினமும் வெளியூர் பக்தர்கள் கிரிவலம் வந்து செல்கின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கையை மாதந்தோறும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி ஆடி மாத பவுர்ணமி நிறைவடைந்துள்ள நிலையில் அதற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி திருக்கல்யாண மண்டபத்தில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி இரவு 7 மணிவரை நடைபெற்றது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதில், அண்ணாமலையார் கோயில் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். மேலும், அண்ணாமலையார் கோயில் வளாகத்தில் உள்ள உண்டியல் மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் உள்ளிட்ட அஷ்ட லிங்கத்தில் வைக்கப்பட்ட உண்டியல்கள் என அனைத்து எண்ணும் பணி சிசிடிவி கேமிரா மூலம் பதிவு செய்யப்பட்டது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில், கோயில் உண்டியலில் ரூ.6 கோடியே 18 லட்சம் ரொக்கம், 275 கிராம் தங்கம், 2 கிலோ 700 கிராம் வெள்ளி ஆகியவற்றையும் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும், வெளிநாட்டு கரன்சிகளும் உண்டியலில் செலுத்தப்பட்டிருந்தது. பின்னர் உண்டியல் காணிக்கை எண்ணிக்கை முடிந்ததும் அந்த தொகையானது அண்ணாமலையார் கோயில் கணக்கில் வங்கியில் செலுத்தப்பட்டது. இந்நிலையில் வரலாற்றில் முதல்முறையாக உண்டியல் காணிக்கை ரூ.6 கோடியை கடந்து இருப்பது இதுதான் முதன்முறையாகும். திருப்பதிக்கே டஃப் கொடுக்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மாதம் மாதம் உண்டியல் காணிக்கை அதிகரித்து வருகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thiruvannamalai</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-thiruvannamalai/tiruvannamalai-temple-undiyal-collection-crosses-6-crore-rupees-a1soas4"/>
        </item>
        <item>
            <title><![CDATA[புகழ்பெற்ற அண்ணாமலையார் கோவிலில் தம்பதி செய்த வேலை! அதிர்ச்சியில் பக்தர்கள்! எச்சரித்த போலீஸ்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-thiruvannamalai/couple-eating-non-vegetarian-food-inside-annamalaiyar-temple-tvk-b08o6tg</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-thiruvannamalai/couple-eating-non-vegetarian-food-inside-annamalaiyar-temple-tvk-b08o6tg</guid>
            <pubDate>Tue, 10 Jun 2025 09:38:09 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தம்பதியினர் செய்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியடைந்தனர். கோயில் வளாகத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, காவல்துறையினர் இருவரையும் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jc8hx9ygp72bf6nq01btrhvk,imgname-tiruvannamalai-7.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தம்பதியினர் செய்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியடைந்தனர். கோயில் வளாகத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, காவல்துறையினர் இருவரையும் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உலக புகழ்பெற்ற கோவில் மட்டுமல்லாமல் நினைத்தாலே முக்தி தரக் கூடிய புண்ணிய தலமாகவும் பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாக விளங்கக்கூடியது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். இங்குள்ள 14 கிலோ மீட்டர் அளவிலான சுற்றுவட்டப்பாதையில் மாதம்தோறும் வரும் பவுர்ணமி அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையார் அருளை பெறுகின்றனர். இக்கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதுவும் தொடர் விடுமுறை மற்றும் வார விடுமுறை நாட்கள் வந்துவிட்டால் அண்ணாமலையாரை தரிசனம் செய்வதற்கே கிட்டத்தட்ட 3 மணிநேரம் ஆகிவிடும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவி லின் ஐந்தாம் பிரகாரத்தில் அமர்ந்து கொண்டு தம்பதியினர் அசைவ உணவு சாப்பிட்டிக் கொண்டிருந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பக்தர்கள் கோயில் வளாகத்தில் உள்ள இந்துசமய அறநிலையத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து இருவரையும் காவல் துறையினர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;புகாரின் பேரில் அசைவ உண்டதாக கூறப்படும் இருவரையும் போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தம்பதியினர் ராமலிங்கனார் தெருவை சேர்ந்த ரமேஷ் மற்றும் அவரது மனைவி என்பது தெரியவந்தது. மேலும் முட்டை குஷ்கா பார்ச்சல் வாங்கிக்கொண்டு கோபுரத்தின் உள்ளே வந்து ஐந்தாம் பிரகாரத்தில் அமர்ந்து சாப்பிட்டது தெரியவந்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அண்ணாமலையார் கோவிலில் கிழக்கு திசையில் அமைந்துள்ள ராஜகோபுரம் மற்றும் வடக்கு திசையில் அமைந்துள்ள அம்மணி அம்மன் கோபுரம் ஆகிய இரண்டு நுழைவு வாயில்களில் வரக்கூடிய பக்தர்கள் பலத்த சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். கொண்டு செல்லும் பொருட்களும் பைகளும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படும். அப்படி இருக்கும் போது இந்த தம்பதியினர் பிரியாணியை எப்படி கொண்டு வந்தார்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இனி இதுபோன்று செய்யக்கூடாது என்று கூறி இருவரையும் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thiruvannamalai</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-thiruvannamalai/couple-eating-non-vegetarian-food-inside-annamalaiyar-temple-tvk-b08o6tg"/>
        </item>
        <item>
            <title><![CDATA[என்ன நடிப்புடா சாமி! காதல் கணவனை போட்டு தள்ளிவிட்டு நாடகமாடிய 25 வயது ஷர்மிளா! சிக்கியது எப்படி?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/crime/wife-kills-husband-and-stages-drama-to-cover-up-the-crime-cpqi8xn</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/crime/wife-kills-husband-and-stages-drama-to-cover-up-the-crime-cpqi8xn</guid>
            <pubDate>Thu, 20 Nov 2025 16:24:38 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;திருவண்ணாமலை அருகே கள்ளக்காதலனுடன் ரீல்ஸ் எடுத்ததை கண்டித்த லாரி ஓட்டுநரான கணவரை, அவரது மனைவியும் மாமியாரும் சேர்ந்து கொலை செய்துள்ளனர். பின்னர், கணவர் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய நிலையில், காவல்துறையின் விசாரணையில் அதிர்ச்சி.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jw83nw2w8gmnt46p0s1hv02z,imgname-women-arrest-1748323987548.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;திருவண்ணாமலை அருகே கள்ளக்காதலனுடன் ரீல்ஸ் எடுத்ததை கண்டித்த லாரி ஓட்டுநரான கணவரை, அவரது மனைவியும் மாமியாரும் சேர்ந்து கொலை செய்துள்ளனர். பின்னர், கணவர் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய நிலையில், காவல்துறையின் விசாரணையில் அதிர்ச்சி.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டை அடுத்துள்ள இடையன்குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜய் (27). லாரி ஓட்டுநர். இவரது மனைவி ஷர்மிளா (25). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஹன்சிகா(4) என்ற மகளும், ஆஜீஸ்(3) என்ற மகனும் உள்ளனர். விஜய் லாரி ஓட்டுநர் என்பதால் வெளியூர்களுக்கு சென்று விட்டு 10 முதல் 15 நாட்கள் சென்றுவிட்டு வீட்டிற்கு வருவாராம். இந்நிலையில் விஜய்க்கு காதல் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அக்கம்பத்தினர் யாரோ ஒருவர் அடிக்கடி வீட்டிற்கு வந்து செல்வதாக கூறியுள்ளனர். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஷர்மிளா அடிக்கடி கோபித்துக்கொண்டு அதே பகுதியில் வசிக்கும் தாய் வீட்டிற்கு செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் தம்பதி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது விஜய், ஷர்மிளாவை சரமாரி தாக்கியுள்ளார். இதனை கண்ட ஷர்மிளாவின் தாய் மருமகனை கண்டித்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில் விஜய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களிடம் காதல் மனைவி ஷர்மிளா கூறியுள்ளார். ஆனால் விஜயின் உறவினர்கள் சாவில் சந்தேகம் இருப்பதாக சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து ஷர்மிளா மற்றும் அவரது தாய் ராணிபாத்திமா இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்திய போது பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதில், ஷர்மிளா கள்ளக்காதலனுடன் ரீல்ஸ் எடுத்து பதிவிட்டதை பார்த்த விஜய் அவரது மனைவியை கண்டித்துள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் ஷர்மிளா, ராணிபாத்திமா இருவரும் சேர்ந்து விஜய்யை உருட்டு கட்டையாலும், கம்பியாலும் சரமாரி தாக்கி அவரது கழுத்தை கயிற்றால் கட்டி ஜன்னல் கம்பியில் இறுக்கி கொலை செய்தது தெரியவந்தது. ஆனால் விஜய் ஜன்னலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியுள்ளார். இதனையடுத்து இருவரையும் கைது செய்தனர். மேலும் இந்த கொலை வழக்கில் கள்ளக்காதலனுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thiruvannamalai</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/crime/wife-kills-husband-and-stages-drama-to-cover-up-the-crime-cpqi8xn"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ Tiruvannamalai Girivalam  Ashtalingam: தி-மலை கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்கம்! அள்ளி கொடுக்கும் பலன்கள்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/gallery/tiruvannamalai-girivalam-ashtalingam-what-are-the-benefits-tvk-sj836u</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/gallery/tiruvannamalai-girivalam-ashtalingam-what-are-the-benefits-tvk-sj836u</guid>
            <pubDate>Tue, 03 Sep 2024 11:56:41 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசானிய லிங்கம் என 8 லிங்கங்கள் உள்ளன.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j6v6e9m2cbxh0wmvhp52s5wy,imgname-tiruvannamalai.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசானிய லிங்கம் என 8 லிங்கங்கள் உள்ளன.&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக திகழ்வது திருவண்ணாமலை. இங்கு சிவனே மலை வடிவாக காட்சி தருவதாக ஐதீகம். இங்குள்ள 14 கிலோ மீட்டர் கொண்ட கிரிவலப் சுற்றுவட்டப்பாதையை பவுர்ணமி தினத்தில் லட்சக்கணக்காக பக்தர்கள் பக்தியுடன் சுற்றி வருகின்றனர். இந்த கிரிவலப்பாதையில் &amp;nbsp;இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசானிய லிங்க சன்னதிகள் அமைந்துள்ளன. இந்த அஷ்ட லிங்கத்தை வழிப்பட்டால் என்னென்ன பயன்கள் என்பதை பார்ப்போம்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கிரிவலம் தொடங்கியதுமே முதலில் அமைந்திருப்பது இந்திர லிங்கம். கிழக்கு திசையில் அமைந்திருக்கும் இங்கு ஐராவதம் எனும் யானையின் மூலம் கேட்பதையெல்லாம் பக்தர்களுக்கு வாரி வழங்குகிறார் இந்திர தேவன். கையில் வஜ்ராயுதம் தாங்கியவராக அருள்தருகிறார். இந்த லிங்கத்தை வழிபட்டால் செல்வம் பெருகும். பதவி உயர்வு, பணியிட மாற்றம் போன்றவைகள் கிடைக்கும்.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;கிரிவல பாதையில் 2வது லிங்கமாக இருப்பது அக்னி லிங்கம். தென்கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. கிரிவலப்பாதையில் மற்ற அனைத்து லிங்கங்களும் வலது புறம் அமைந்திருக்க, அக்னி லிங்கம் மட்டுமே இடப்புறம் அமைந்திருக்கும். இந்த அக்னி லிங்கத்தை வழிப்பட்டால் நோய், பிணி, பயம் முதலியன விலகும். எதிரிகள் தொல்லை இருக்காது.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;கிரிவல பாதையில் 3வது லிங்கம் எமலிங்கம். எமராஜன் அங்கபிரதட்சணமாக கிரிவலம் சென்று சிவனை வழிபட்டார். அவர் கிரிவலம் நிறைவு செய்த இடத்தில் தாமரை மலர்ந்தது. அதிலிருந்து ஜோதிமயமான ஒரு லிங்கம் தோன்றியது. அதுவே எமலிங்கம் என்று வரலாறு கூறுகிறது. எம லிங்கம். தென் திசை நோக்கி அமைந்துள்ளது. இந்த லிங்கத்தை வழிப்பட்டால் பொருளாதார கஷ்டங்கள் நீங்கும். செல்வ வளம் பெருகும். சகோதரர்களின் உறவு நீடிக்கும்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;கிரிவல பாதையில் 4வது லிங்கமானது நிருதி லிங்கம். தென் கிழக்கு திசையில் அமைந்துள்ளது. ஹரியை நிருதீஸ்வரர் வலம் வந்து வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்போது கிரிவல மலையின் தென்மேற்கு திசையில் ஒரு குழந்தையின் அழுகுரலும், பெண்ணின் சலங்கை ஒலியும் கேட்டது. அந்த இடத்தைநோக்கி நிருதீஸ்வரர் சென்றார். அவர் எதிரில் பிரதிரூப லிங்கம் தோன்றியது. அதுதான் நிருதிலிங்கம். இங்கு வழிபாடு செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஜென்ம சாபங்கள் நீங்கும். புகழ் கிடைக்கும்.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;கிரிவல பாதையில் 5வது லிங்கமானது வருண லிங்கம். இது மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. நீருக்கு அதிபதியான வருணபகவான், அக்னி வடிவமான அண்ணாமலையை முழங்கால் பிரதட்சணமாகவும், ஒற்றைக்கால் பிரதட்சணமாகவும் கிரிவலம் வந்து வழிபட்டார். அப்போது வருண பகவானுக்கு சிவ பெருமான் நீரின் வடிவில் காட்சி கொடுத்த இடத்தில் வருண லிங்கம் உருவானது. இந்த லிங்கத்தை வழிபட்டால் கொடிய நோயிலிருந்து விடுதலையும், புகழும் கிடைக்கும்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;கிரிவல பாதையில் 6வது லிங்கமானது வாயு லிங்கம். வடமேற்கு திசையில் இந்த லிங்கம் அமைந்துள்ளது. மூச்சுக்காற்றை நிலை நிறுத்தியபடியே வாயுபகவான் கிரிவலம் சென்றார். அப்போது அடிஅண்ணாமலை அருகே சுகந்தமான நறுமணம் வீசியது. அதுவரை மூச்சை நிறுத்தி வலம் வந்த வாயுபகவான் நிலைதடுமாறினார். அங்கு பஞ்சக்ருத்திகா மலர்களின் நடுவே சுயம்பாக லிங்க வடிவில் சிவன் காட்சி அளித்தார். அதுவே வாயுலிங்கம். &amp;nbsp;இந்த லிங்கத்தை வழிபட்டால் கண் திருஷ்டி, இதய நோய்கள் நீங்கும். மன நிம்மதி உண்டாகும்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;கிரிவல பாதையில் 7வது லிங்கமானது குபேர லிங்கம். இந்த லிங்கம் வடக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. எல்லா செல்வங்களுக்கும் அதிபதியானவர் குபேரன். ஆனால் ஆண்டியான சிவனின் அருள் வேண்டி குதிகால் நடையுடன் குபேரன் கிரிவலம் சென்று வழிபட்டார். அப்போது விஷ்ணுவும், லட்சுமியும் சேர்ந்து அண்ணாமலையாரை சக்ரபாணி செய்யும் காட்சியை குபேரன் தரிசித்தார். அந்த இடத்தில் சுயம்புவாக தோன்றியதே குபேர லிங்கம். இந்த லிங்கத்தை வழிப்பட்டால் செல்வம் செழிக்கும்&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;கிரிவல பாதையில் கடைசியாக அதாவது 8வது லிங்கமானது ஈசான்யா லிங்கம். வடகிழக்கு திசையில் இந்த லிங்கம் அமைந்துள்ளது. கண்களை மூடியபடி ருத்திர முனிவர் கிரிவலம் சென்றார். அப்போது ஈசான்ய மூலையில் ஒருவரின் அழுகுரல் கேட்டது. அங்கு சென்றபோது சுயம்பு லிங்கமாக காட்சியளித்தது. இந்த லிங்கத்தை வழிபாடு செய்தால் மனம்ஒருநிலை அடையும். வெற்றி கிடைக்கும். நினைத்த காரியம் கை கூடும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thiruvannamalai</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/gallery/tiruvannamalai-girivalam-ashtalingam-what-are-the-benefits-tvk-sj836u"/>
        </item>
        <item>
            <title><![CDATA[கோவில் நகரத்தில் அதிர்ச்சி! பெண்களை கூட்டு பலாத்காரம் செய்து விபச்சாரத்தில் தள்ளிய கும்பல்! வௌியான பகீர் தகவல்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/gang-raped-women-and-forced-them-into-prostitution-in-tiruvannamalai-tvk-srxag4</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/gang-raped-women-and-forced-them-into-prostitution-in-tiruvannamalai-tvk-srxag4</guid>
            <pubDate>Wed, 19 Feb 2025 14:32:28 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;இன்ஸ்டாகிராமில் தொடங்கிய காதல், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டலில் முடிந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01gh6fnah9z3mwk9qm5nxfd09f,imgname-photos--26-.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;இன்ஸ்டாகிராமில் தொடங்கிய காதல், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டலில் முடிந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;திருவண்ணாமலை நாவக்கரை பகுதியைச் சேர்ந்த ருத்வேந்திரன் (26) வேன் டிரைவர். இவர் இன்ஸ்டாகிராமில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தண்டராம்பட்டு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது.&amp;nbsp;அந்த பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில் கடந்த 7-ம் தேதி நேரில் சந்திக்க வேண்டும் என இளம்பெண்ணை அழைத்த ருத்வேந்திரன் திருவண்ணாமலை நாவக்கரை பகுதியில் உள்ள சுடுகாட்டில் அவரது நண்பரான தனுஷ் (20) என்பவருடன் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்தது மட்டுமல்லாமல் இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;அப்படி இருந்த போதிலும் பாதிக்கப்பட்ட பெண் தண்டராம்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கடந்த 9-ம் தேதி ருத்வேந்திரன், தனுஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;மேலும் அவர்களிடம் கைப்பற்றப்பட்ட செல்போன்களில் ஆபாச படங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து அடிக்கடி அவர்கள் தொடர்பு கொண்டு பேசிய செல்போன் எண் குறித்து காவல்துறை தொடர் விசாரணை நடத்தினர். அதில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள போத்துவா கிராமத்தைச் சேர்ந்த சவுந்தர்யா என்ற இளம்பெண் வாலிபர்களுக்கு இளம்பெண்களின் செல்போன் நம்பர்களை வழங்கி வந்தது தெரியவந்தது. விபச்சாரத்தில் பெண்களை ஈடுபடுத்தியதாகவும் தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தியதில் பல இளம் பெண்களை மிரட்டி பாலியல் தொழிலில் தள்ளியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.&amp;nbsp;திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து இந்த சம்பவத்தில் தொடர்பாக வேறு யாராவது உள்ளனரா என தீவிர விசாரணை மேற்கொண்ட போது ஏற்கனவே இரண்டு பேரை கைது செய்த காவல்துறையினர் தொடர்ந்து இரண்டு நாட்கள் கழித்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய சவுந்தர்யாவை காவல்துறையினர் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். தீவிர விசாரணை மேற்கொண்டதில் மேலும் 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மொத்தமாக 7 பேரை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்துள்ளனர். இதில், மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.&amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thiruvannamalai</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/gang-raped-women-and-forced-them-into-prostitution-in-tiruvannamalai-tvk-srxag4"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Road Accident: சினிமா பாணியில் நடந்த பயங்கர விபத்து! 3 இளைஞர்கள் பலி! நடந்தது என்ன? பரபரப்பு தகவல்! ]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-thiruvannamalai/arani-bike-accident-3-youths-were-killed-tvk-sk7bia</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-thiruvannamalai/arani-bike-accident-3-youths-were-killed-tvk-sk7bia</guid>
            <pubDate>Sun, 22 Sep 2024 12:12:04 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Road Accident:&amp;nbsp;ஆரணி அருகே இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j8c5we327v43fntw2rcwa66h,imgname-accident-2.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Road Accident:&amp;nbsp;ஆரணி அருகே இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அரியப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சரண்ராஜ் மற்றும் ராஜேஷ். &amp;nbsp;முள்ளிப்பட்டு ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த மணி. இவர்கள் 3 பேரும் நண்பர்கள். சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். நேற்று புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை என்பதால் இவர்கள் மூவரும் விடுமுறைக்கு வீட்டுக்கு வந்தனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&lt;strong&gt;School Holiday: மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை? பள்ளிகள் மீண்டும் எப்போது திறப்பு?&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;பின்னர் ஆரணியில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று விட்டு சினிமா பார்த்து இரவு 11 மணிக்கு மேல் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்ததனர். அப்போது ஆரணி தேசிய நெடுஞ்சாலை ஆற்றுப்பாலம் அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் நேருக்கு நேர் மோதியுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;இதில், சினிமா பாணியில் தூக்கி வீசப்பட்ட மூன்று பேரும் ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். இந்த விபத்தை ஏற்படுத்திய வாகனம் அங்கிருந்து நிற்காமல் சென்றுள்ளது. இதனை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த 3 இளைஞர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு&amp;nbsp;மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&amp;nbsp;&lt;strong&gt;School Education Department: மாணவர்களின் எண்ணிக்கையில் மெகா மோசடி! அதிரடி முடிவு எடுத்த பள்ளிக் கல்வித்துறை!&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். விபத்தில் 3 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thiruvannamalai</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-thiruvannamalai/arani-bike-accident-3-youths-were-killed-tvk-sk7bia"/>
        </item>
        <item>
            <title><![CDATA[திருவண்ணாமலை மலையின் உறுதித்தன்மை குறைந்துவிட்டதா? மலையேற பக்தர்களுக்கு அனுமதியா? இல்லையா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-thiruvannamalai/tiruvannamalai-deepam-are-devotees-allowed-to-climb-the-mountain-gn24gki</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-thiruvannamalai/tiruvannamalai-deepam-are-devotees-allowed-to-climb-the-mountain-gn24gki</guid>
            <pubDate>Wed, 19 Nov 2025 11:39:24 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் 24ல் தொடங்குகிறது. டிசம்பர் 3ம் தேதி மகாதீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், கடந்த ஆண்டு ஏற்பட்ட மலை சரிவு காரணமாக இந்த ஆண்டு மலை மீது பக்தர்களை அனுமதிப்பது குறித்து ஆய்வு செய்த பின்னரே முடிவெடுக்கப்படும்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kadbe38vzgy3g4mhqzv5q87e,imgname-tiruvannamalai-4-1763532279067.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் 24ல் தொடங்குகிறது. டிசம்பர் 3ம் தேதி மகாதீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், கடந்த ஆண்டு ஏற்பட்ட மலை சரிவு காரணமாக இந்த ஆண்டு மலை மீது பக்தர்களை அனுமதிப்பது குறித்து ஆய்வு செய்த பின்னரே முடிவெடுக்கப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து, 10 நாட்கள் தீபத்திருவிழா சாமி வீதி உலா மற்றும் தேர் திருவிழா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் டிசம்பர் 3ம் தேதி மாலை ஏற்றப்படும். அன்று அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபமும் மாலை 6 மணிக்கு 2,688அடி உயரமுள்ள மலையின் உச்சியில் மகாதீபமும் ஏற்றப்பட உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில் மகா தீபத்தை தரிசிக்கவும், மலை மீது சென்று மகா தீபத்தை தரிசிக்கவும் ஆன்லைன் மூலமாக முன் பதிவு செய்ய வேண்டும். இதற்கு குறிப்பிட்ட அளவிலான பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். நேற்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கோவிலில் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதனையடுத்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில், திருக்கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, பொதுப்பணி, நெடுஞ்சாலை, சிறு துறைமுகம் துறை அமைச்சர் எ.வ.வேலு, திமுக எம்எல்ஏ பிச்சாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில் திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ. வேலு மற்றும் சேகர்பாபு கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கடந்த 2024ம் ஆண்டு பெரிய மழை வந்ததால் ஈரப்பதம் அதிகமாகியது. அப்போது ஐஐடி நிபுணர்கள் வந்து மலையின் உறுதித்தன்மை குறைந்துவிட்டது. கொழ கொழ என்று மண்ணாகிவிட்டதால் பாறை இறங்கிவிட்டது என்றார்கள். இதனால் பாதுகாப்பு கருதி கடந்த ஆண்டு யாரையும் மலை மீது அனுமதிக்கவில்லை. எனக்கு தெரிந்து இந்த மலை சரிந்ததே இல்லை. கடந்த ஆண்டுதான் முதல்முறையாக சரிந்தது. ஆகையால் இந்த ஆண்டு கார்த்திகை தீபத்தின்போது உரிய ஆய்வு செய்த பிறகே மலை மீது பக்தர்களை அனுமதிப்பது குறித்து முடிவவெடுக்க முடியும் என தெரிவித்தார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thiruvannamalai</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-thiruvannamalai/tiruvannamalai-deepam-are-devotees-allowed-to-climb-the-mountain-gn24gki"/>
        </item>
        <item>
            <title><![CDATA[  தி.மலை அண்ணாமலையார் கோவில்!  50 லட்சம் மதிப்பிலான 750 கிராம் தங்க சங்கிலியை வழங்கிய பக்தர்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-thiruvannamalai/devotee-donates-750-grams-of-makarakandi-to-tiruvannamalai-annamalaiyar-temple-tvk-sujn34</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-thiruvannamalai/devotee-donates-750-grams-of-makarakandi-to-tiruvannamalai-annamalaiyar-temple-tvk-sujn34</guid>
            <pubDate>Fri, 11 Apr 2025 13:33:21 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான தங்க மகர கண்டி ஆபரணம் பக்தர் குமார் வழங்கினார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jrhx41cpd83zy2q6xxy3cmbt,imgname-annamalaiyar-temple.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;&amp;nbsp;&lt;span&gt;&lt;strong&gt;திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;உலக புகழ்பெற்ற கோவில் மட்டுமல்லாமல் நினைத்தாலே முக்தி தரக் கூடிய புண்ணிய தலமாக விளங்கக்கூடியது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில்.&amp;nbsp;இக்கோவில் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும் விளங்குகிறது. இங்கு சிவனே மலை வடிவாக காட்சி தருவதாக ஐதீகம். &amp;nbsp;இக்கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் &amp;nbsp;காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&lt;strong&gt;அடுத்த 3 மணிநேரத்தில் இந்த 6 மாவட்டங்களில் அலறவிடப்போகுதாம் மழை! லிஸ்ட்ல சென்னை இருக்கா?&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;&lt;span&gt;மகர கண்டி &amp;nbsp;தங்க ஆபரணம்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;இந்நிலையில் திருவண்ணாமலை மாநகரில் குமரகோவில் தெருவை சேர்ந்த குமார். இவர் திருவண்ணாமலை சண்முகா விண்ணுலப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களது குடும்பத்தினர்கள் &amp;nbsp;750 கிராமில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் தங்கத்தினால் ஆன மகரகண்டி என்று அழைக்கக்கூடிய பல்வேறு கெம்புக்கல், பச்சைக்கல், வைரக்கல், மரகத பச்சை உள்ளிட்ட பல்வேறு வகையான கற்களைக்கொண்டு வடிவமைக்கப்பட்ட தங்க மாலையை இன்று அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள சம்பந்த விநாயகர், அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலை அம்மனுக்கு சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜை செய்து பின்னர் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் பழனியிடம் ஒப்படைத்தனர்.&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&amp;nbsp;&lt;strong&gt;தொண்டையில் சிக்கிய உயிர் மீன்! துடிதுடித்து உயிரிழந்த இளைஞர்! நடந்தது என்ன?&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;strong&gt;50 லட்சம் மதிப்பிலான நகை&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;இந்த நகைகள் அனைத்தும் திருவண்ணாமலை அண்ணாமலையார் வீதி உலா வரும்போது அண்ணாமலையாரின் திருமேனியை மேலும் அழகு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. 50 லட்சம் மதிப்பிலான நகையினை கோவிலுக்கு வழங்கிய பக்தரின் செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thiruvannamalai</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-thiruvannamalai/devotee-donates-750-grams-of-makarakandi-to-tiruvannamalai-annamalaiyar-temple-tvk-sujn34"/>
        </item>
        <item>
            <title><![CDATA[அணையில் கால் வைத்த இளைஞர்! சட்டென கவ்விச்சென்ற முதலை! சோகத்தில் மூழ்கிய திருவண்ணாமலை!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-thiruvannamalai/youth-attacked-and-killed-by-crocodile-at-sathanur-dam-in-tiruvannamalai-articleshow-i94gcgp</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-thiruvannamalai/youth-attacked-and-killed-by-crocodile-at-sathanur-dam-in-tiruvannamalai-articleshow-i94gcgp</guid>
            <pubDate>Sun, 14 Sep 2025 17:02:59 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;திருவண்ணாமலை சாத்தனூர் அணையில் முதலை தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான முழு விவரங்களை விரிவாக பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k53zxh8t6467cqkp991xfhzd,imgname-tiruvanamalai-railway-1757849503002.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;திருவண்ணாமலை மாவட்டத்தில், சாத்தனூர் அணைக்கு அருகிலுள்ள பெரியமலை கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் தனது கால்நடைகளைப் பராமரித்து, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு குடும்பத்தை நடத்தி வருகிறார். கண்ணனிடம் சில மாடுகள் உள்ளன, அவற்றை அவர் அணையை ஒட்டிய வனப்பகுதியிலும், சமவெளி பகுதிகளிலும் மேய்ப்பது வழக்கம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இளைஞரை இழுத்து சென்ற முதலை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்நிலையில், இன்று கல்லூரி மாணவரான கண்ணனின் மகன் முனீஸ் (18) விடுமுறை தினம் என்பதால் மாடுகளை மேய்க்க அணைக்கு அருகிலுள்ள புல்வெளிக்கு அழைத்துச் சென்றார். மாடுகளை மேய்ச்சலுக்கு விட்ட பிறகு, களைப்பால் சோர்ந்த முனீஸ், முகம் மற்றும் கைகால்களைக் கழுவுவதற்காக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிக்குச் சென்றார். அப்போது, நீரில் மறைந்திருந்த முதலை ஒன்று முனீஸைத் தாக்கி, நீருக்குள் இழுத்துச் சென்றது. இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மூச்சுத் திணறி முனீஸ் உயிரிழந்தார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பிணமாக மீட்பு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;மகன் வழக்கமாக உணவு நேரத்திற்கு வீடு திரும்பாததால் கவலைப்பட்ட கண்ணன், அவரைத் தேடி அணைப் பகுதிக்குச் சென்றார். அங்கு, மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தாலும், முனீஸைக் காணவில்லை. அப்போது, நீர்ப்பிடிப்பு பகுதியில் ஒரு சடலம் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அருகில் சென்று பார்த்தபோது, அது தனது மகன் முனீஸின் உடல் என்பதை அறிந்து கதறினார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;முதலை மனிதர்களை தாக்குமா?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இதையடுத்து, கிராம மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, வனத்துறை மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விசாரணையில், முனீஸ் நீரில் முகம் கழுவ இறங்கியபோது முதலை தாக்கியதால் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்தது தெரியவந்தது. பின்னர், காவல்துறையினர் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் பெரியமலை கிராமத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;பொதுவாக, முதலைகள் மனிதர்களைத் தாக்குவது அரிதான விஷயமாகும். அணையில் கை, கால் கழுவ சென்ற முனீஸை விலங்குகள் என நினைத்து முதலை தாக்கியிருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thiruvannamalai</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-thiruvannamalai/youth-attacked-and-killed-by-crocodile-at-sathanur-dam-in-tiruvannamalai-articleshow-i94gcgp"/>
        </item>
        <item>
            <title><![CDATA[திருவண்ணாமலை கோவில் தலைமை குருக்களை ஒருமையில் பேசி அவமரியாதை! கொந்தளிக்கும் பாஜக!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-thiruvannamalai/disrespect-to-the-chief-priests-of-the-tiruvannamalai-temple-narayanan-thirupathy-condemns-tvk-srm4ry</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-thiruvannamalai/disrespect-to-the-chief-priests-of-the-tiruvannamalai-temple-narayanan-thirupathy-condemns-tvk-srm4ry</guid>
            <pubDate>Thu, 13 Feb 2025 13:56:22 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் குருக்கள் தர்ணாவில் ஈடுபட்ட விவகாரம் நாராயணன் திருப்பதியால் வரவேற்றுள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jkz6cehdayz7phfv2r92rkyh,imgname-narayanan-thirupathy.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தாங்கள் தான் கோவில்களின் சொந்தக்காரர்கள் என்பது போன்று ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நடந்து கொள்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது என&amp;nbsp;நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் சிவாச்சாரியார்களின் தலைமை குருக்கள் ரமேஷ் அவர்களை ஹிந்து அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதி அவர்கள் &amp;nbsp;தரக்குறைவாக, ஒருமையில் பேசியதற்காக அனைத்து குருக்களும் &amp;nbsp;தர்ணாவில் ஈடுபட்ட விவகாரம் அதிர்ச்சியளித்தாலும், வரவேற்கத்தக்கதே. ஏதோ, குருக்கள், பட்டாசார்யார்கள் ஆகியோரை ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் தங்களின் எடுபிடிகளாக நினைத்து கொண்டு அதிகாரம் செலுத்துவது வழக்கமாகி விட்டது. அவர்கள் மீது தவறே இருந்தாலும், கோவிலின் அறங்காவலர் குழு தான் பிரச்சினையை அணுக வேண்டுமேயன்றி, ஹிந்து அறநிலையத்துறை கண்டிப்பதற்கு எந்த உரிமையும் கிடையாது. மேலும், குருக்கள் ஹிந்து அறநிலையத்துறையின் வேலையாட்களும் அல்ல, சம்பளமும் பெறுவதில்லை என்பதை உணரவேண்டும்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;ஹிந்து அறநிலையத்துறை என்பது, பிரச்சினைகள் இருப்பின் கோவில் நிர்வாகத்தை நடத்தும் &amp;nbsp;அறங்காவலர் குழுவை மேற்பார்வையிடும் &amp;nbsp;அமைப்பு மட்டுமே என்பதும், கோவில்களின் அன்றாட நிகழ்வுகளில் தலையிடுவதற்கு எந்த உரிமையும் இல்லை என்பதும் சட்டம். ஆனால், அந்த நிர்வாகத்தையே தன் வசப்படுத்திக்கொண்டு தாங்கள் தான் கோவில்களின் சொந்தக்காரர்கள் என்பது போன்று ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நடந்து கொள்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இந்த விவகாரத்தில் கோவில் குருக்கள் அனைவரும் தர்ணாவில் ஈடுபட்டது வரவேற்கத்தக்கது. குட்டக் குட்ட குனிந்து கொண்டேயிருந்தால் குட்டிக் கொண்டே தான் இருப்பார்கள். யாருடனும் வம்பு வேண்டாம், சண்டை வேண்டாம் என்று சகிப்புத் தன்மையோடு, பெருந்தன்மையோடு ஒதுங்கி செல்லும் சமுதாயத்தை சீண்டி பார்ப்பதை இனியாவது நிறுத்திக்கொள்வது நல்லது. இரு நாட்களுக்கு முன்னர், தட்டில் பணம் போடுவது குறித்த விவகாரத்தில், &amp;nbsp;இனி ஹிந்து அறநிலைய துறை ஆக்கிரமித்திருக்கும் கோவில்களில் குருக்களை, பட்டர்களை கேவலப்படுத்தும் விதத்தில் யாரேனும் நடந்து கொண்டால் தன்மானத்தோடு ஹிந்து அறநிலையத்துறை ஆக்கிரமித்திருக்கும் கோவில்களில் கடமையாற்றிக்கொண்டிருக்கிறவர்கள் வேறு பணிக்கு செல்வது தான் ஒரே வழி என்று நான் குறிப்பிட்டிருந்த நிலையில், நேற்று திருவண்ணாமலையில் கோவில் தலைமை குருக்கள் ரமேஷ் அவர்களுக்கு ஏற்பட்டிருக்க கூடிய மரியாதைக்குறைவு அந்த எண்ணத்தை வலுப்படுத்துகிறது.&lt;/p&gt; &lt;p&gt;கோவில் குருக்கள், பட்டர்கள் சம்பளத்திற்கு பணியாற்றுபவர்கள் அல்ல, மக்களை மகேசனிடம் (இறைவனிடம்) அழைத்து செல்லும் கடமையாற்றுபவர்கள். ஆனால், தொடர்ந்து 'திராவிட மாடல்' என்று மார்தட்டிக் கொள்பவர்கள், அவர்களை இழிவுபடுத்தி பேசுவதற்கு காரணம், அவர்களின் பொறுமை மற்றும் சகிப்புத்தன்மையே. ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் தங்களின் பணியினை மேற்கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல் கோவிலின் அன்றாட பணிகளில் தலையிடுவதை நிறுத்தி கொள்ள வேண்டும்.&lt;/p&gt; &lt;p&gt;2026ல் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும் போது கொள்ளையர்களின் கூடாரமாக கோவில்கள் ஆகிவிடக்கூடாது என்ற சிந்தனையோடு ஹிந்து அறநிலையத்துறையை அகற்றி விட்டு உரிய மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ளும். தலைமை குருக்கள் ரமேஷ் அவர்களை ஒருமையில் பேசி அவமரியாதை செய்த இணை ஆணையாளர் ஜோதி மீது நடவடிக்கை எடுப்பதோடு இனி இது போன்ற தவறுகள் நடைபெறாது தடுக்கப்பட வேண்டும். இல்லையேல், அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு என்ற கோஷம் மேலும் வலுவாக ஒலிக்கும் என நாராயணன் திருப்பதி எச்சரித்துள்ளார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thiruvannamalai</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-thiruvannamalai/disrespect-to-the-chief-priests-of-the-tiruvannamalai-temple-narayanan-thirupathy-condemns-tvk-srm4ry"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Deepam Festivel: திருவண்ணாமலை மலை உச்சியில் நிலச்சரிவு? மகா தீபம் ஏற்றப்படுமா? அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-thiruvannamalai/we-will-successfully-celebrate-the-deepam-festival-in-tiruvannamalai-minister-sekarbabu-tvk-snyos8</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-thiruvannamalai/we-will-successfully-celebrate-the-deepam-festival-in-tiruvannamalai-minister-sekarbabu-tvk-snyos8</guid>
            <pubDate>Wed, 04 Dec 2024 18:02:12 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;திருவண்ணாமலையில் நிலச்சரிவில் 7 பேர் உயிரிழந்த நிலையில், கார்த்திகை தீபத் திருவிழா திட்டமிட்டபடி நடைபெறும் என அமைச்சர் சேகர்பாபு உறுதியளித்துள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01je8dt9wr77dj78vvnz6dwwc1,imgname-tiruvannamalai-landslide-2.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;திருவண்ணாமலையில் நிலச்சரிவில் 7 பேர் உயிரிழந்த நிலையில், கார்த்திகை தீபத் திருவிழா திட்டமிட்டபடி நடைபெறும் என அமைச்சர் சேகர்பாபு உறுதியளித்துள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும், பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாக விளங்குவது புகழ் பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். இங்குள்ள 14 கிலோ மீட்டர் அளவிலான சுற்றுவட்டப்பாதையில் தினமும் பொதுமக்கள் கிரிவலம் செல்கின்றனர். குறிப்பாக &amp;nbsp;மாதம்தோறும் வரும் பவுர்ணமி தினத்தில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் நடைபெற்றது. ழாவின் முக்கிய நிகழ்வான டிசம்பர் 13ம் தேதி அதிகாலையில் அருணாசலேஸ்வரர் கோவிலுக்குள் பரணி தீபமும், &amp;nbsp;மாலையில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&lt;strong&gt;பக்தர்களுக்கு முக்கிய செய்தி! திருவண்ணாமலை மகா தீபம் தரிசன டிக்கெட்! ஆன்லைனில் பெறுவது எப்படி?&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில் ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலையில் வரலாறு காணாத மழை பெய்தது. இதனால், அடுத்தடுத்து இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 5 குழந்தைகள் உள்பட 7 பேரும் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். இதனையடுத்து பெரும் சவால்களுக்கு இடையே 7 பேரின் உடல்கள் ஒரு வழியாக மீட்கப்பட்டது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;நேற்று முன்தினம் அண்ணாமலை மலையின் தென்கிழக்கு பகுதியில் சுமார் ஆயிரம் அடி அளவிற்கு மழையின் உச்சியில் இருந்து பெரிய மண்சரிவு ஏற்பட்டது. இந்த இடம் வரும் 13ம் தேதி கார்த்திகை தீபம் ஏற்றவுள்ள முகப்பு என கூறப்படுகிறது. இதனால் தீபத்திருவிழா நடக்குமா? மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுமா? என்பது குறித்து பல கேள்விகள் எழுந்தன. இதற்கு அமைச்சர் சேகர்பாபு பதிலளித்துள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;இதுகுறித்து இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: &amp;nbsp;திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சேதம் இருந்தால் 2 நாட்களில் சரி செய்யப்படும். &amp;nbsp;மகா தீபம் ஏற்பாடுகள் டிசம்பர் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மீண்டும் ஆய்வு கூட்டம் நடத்தவுள்ளோம். &amp;nbsp;திருவண்ணாமலைக்கு வரும் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் எந்தவித குறைபாடு இன்றி செய்து தரப்படும். நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து அங்குள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இந்த ஆண்டு 40 லட்சத்துக்கு மேல் பக்தர்கள் கூடினாலும் வெற்றிக்கரமாக தீபத் திருவிழாவை நடத்துவோம் என அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thiruvannamalai</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-thiruvannamalai/we-will-successfully-celebrate-the-deepam-festival-in-tiruvannamalai-minister-sekarbabu-tvk-snyos8"/>
        </item>
        <item>
            <title><![CDATA[திருவண்ணாமலையில் 156 பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-thiruvannamalai/9-day-holiday-for-schools-in-tiruvannamalai-for-deepam-festival-2024-so4re0</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-thiruvannamalai/9-day-holiday-for-schools-in-tiruvannamalai-for-deepam-festival-2024-so4re0</guid>
            <pubDate>Sat, 07 Dec 2024 21:10:31 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்காக, டிசம்பர் 8 முதல் 16 வரை 156 பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j8w7ybtane6jqhz6kchcnwm7,imgname-gettyimages-88922481.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு அந்த மாவட்டத்தில் உள்ள 156 பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை&amp;nbsp;மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட்டுள்ளார்.&lt;/p&gt; &lt;p&gt;திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நடைபெறும் காா்த்திகை தீபத் திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 13ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்று அதிகாலை 4 மணி அளவில் அருணாசலேஸ்வரர் கோயில் மூலவர் சந்நிதியில் பரணி தீபம் ஏற்றப்படும். மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் உள்ள மலைமீது மகா தீபம் ஏற்றப்படும்.&lt;/p&gt; &lt;p&gt;கார்த்திகை மகா தீபத்தைக் காண சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்குத் தேவையான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. போக்குவரத்துத் துறை சார்பில் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.&lt;/p&gt; &lt;p&gt;இந்நிலையில் திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அந்த மாவட்டத்தில் உள்ள 156 பள்ளிகளுக்கு டிசம்பர் 8ஆம் தேதி முதல் 16ஆம் தேதிவரை 9 நாட்கள் விடுமுறை அளிப்பதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். தீபத் திருவிழா பாதுகாப்புப் பணிக்காக பிற மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் காவலர்கள் இந்தப் பள்ளிகளில் தங்க உள்ளனர் என்பதால் இந்த விடுமுறை அறிவிக்கப்படுகிறது என்றும்&amp;nbsp;முதன்மைக் கல்வி அலுவலர் கூறியுள்ளார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thiruvannamalai</category>
            <dc:creator>SG Balan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-thiruvannamalai/9-day-holiday-for-schools-in-tiruvannamalai-for-deepam-festival-2024-so4re0"/>
        </item>
        <item>
            <title><![CDATA[கர்ப்பிணி மனைவி, குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை! விசாரணையில் பகீர்! கணவரின் குடும்பமே ஜெயிலில்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-thiruvannamalai/pregnant-wife-commits-suicide-by-jumping-into-well-with-child-husband-family-arrest-tvk/articleshow-sh82sgq</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-thiruvannamalai/pregnant-wife-commits-suicide-by-jumping-into-well-with-child-husband-family-arrest-tvk/articleshow-sh82sgq</guid>
            <pubDate>Sat, 28 Jun 2025 14:38:01 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கீழ்பென்னாத்தூரில் கர்ப்பிணி மனைவி மற்றும் இரண்டு வயது குழந்தையுடன் விவசாய கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j5yfkka9qmg11cgxnb9zfzzd,imgname-police-arrest.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த கரிக்கலாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ். விவசாயி பார்த்து வருகிறார். இவரது மனைவி உமாதேவி(25). இந்த தம்பதிக்கு இரண்டு வயதில் மோகனா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் 4 மாத கர்ப்பிணியாக இருந்த உமாதேவியும், குழந்தை மோகனாவும் கடந்த 24ம் தேதி விவசாய கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். தவறி விழுந்ததில் இருவரும் உயிரிழந்திருக்கலாம் என முதலில் கூறப்பட்டது. ஆனால் மகள் உமாதேவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தந்தை ஏழுமலை கீழ்பென்னாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;வெளியான அதிர்ச்சி தகவல்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உமாதேவியின் கணவர் விக்னேஷ், மாமியார் சிவகாமி மற்றும் மாமனார் ஜெயவேல் ஆகியோரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. விக்னேஷ் மற்றும் உமாதேவி தம்பதிக்கு ஏற்கனவே பெண் குழந்தை உள்ளதால் அடுத்ததும் பெண் குழந்தை பிறந்துவிடுமோ என்ற பயத்தில் கருவில் உள்ளது ஆணா? பெண்ணா? என்று கண்டறிய கணவர் குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதற்காக ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு சென்று அங்குள்ள தனியார் ஸ்கேன் சென்டரில் உமாதேவிக்கு ஸ்கேன் செய்யப்பட்டது. இதில் கருவில் இருப்பது பெண் சிசு என்பது தெரியவந்தது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;கருவை கலைக்க சொல்லி டார்ச்சர்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இதனால் விக்னேஷ், மாமனார் ஜெயவேல் மற்றும் மாமியார் சிவகாமி ஆகியோர் உமாதேவியின் கருவை கலைக்கும் படி வற்புறுத்தி டார்ச்சர் செய்துள்ளனர். அதே கிராமத்தை சேர்ந்த ஒருவரை அணுகி உமா தேவியின் கருவை கலைக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த உமாதேவி பெண் குழந்தையுடன் விவசாயி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;4 பேர் கைது&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இதையடுத்து உமாதேவி, கணவர் விக்னேஷ் (27), மாமனார் ஜெயவேல்(58) மற்றும் மாமியார் சிவகாமி(43) மற்றும் கருவை கலைக்க முயற்சிக்க உதவிய அதே ஊரை சேர்ந்த சாரதி(39) ஆகிய 4 பேரை கீழ்பென்னாத்தூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thiruvannamalai</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-thiruvannamalai/pregnant-wife-commits-suicide-by-jumping-into-well-with-child-husband-family-arrest-tvk/articleshow-sh82sgq"/>
        </item>
        <item>
            <title><![CDATA[திருவண்ணாமலையில் வேனும், பஸ்சும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து; ஒருவர் பலி, 20 பேர் படுகாயம்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-thiruvannamalai/1-person-killed-20-people-highly-injured-while-private-bus-hit-van-in-tiruvannamalai-vel-siqkp8</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-thiruvannamalai/1-person-killed-20-people-highly-injured-while-private-bus-hit-van-in-tiruvannamalai-vel-siqkp8</guid>
            <pubDate>Sun, 25 Aug 2024 00:28:20 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே தனியார் பேருந்தும், வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட கோர விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 20 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j4v3sv2076f62brqbtj4chn0,imgname-ROAD-ACCIDENT-UP-1723191848000.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே திருப்பனமூர் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு வேகமாக சென்று கொண்டிரந்தது. அப்போது எதிர் திசையில் தனியார் வேன் ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக பேருந்தும், வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;மும்பைக்கு குட்பை சொல்லும் SKY? கேப்டன்சி வழங்குவதாக வலைவிரிக்கும் கொல்கத்தா&lt;/p&gt; &lt;p&gt;இந்த விபத்தில் ஒருவர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 20 பேர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.&lt;/p&gt; &lt;p&gt;இவங்களை எல்லாம் எப்படி கலைஞர் சமாளிச்சிரோ? ரஜினியின் பேச்சை ரசித்து கேட்ட முதல்வர்&lt;/p&gt; &lt;p&gt;விபத்து தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் காயமடைந்தவர்களையும் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தை அடுத்து அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thiruvannamalai</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-thiruvannamalai/1-person-killed-20-people-highly-injured-while-private-bus-hit-van-in-tiruvannamalai-vel-siqkp8"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா! பக்தர்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-thiruvannamalai/tiruvannamalai-maha-deepam-festivel-special-buses-announcement-tvk-soc336</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-thiruvannamalai/tiruvannamalai-maha-deepam-festivel-special-buses-announcement-tvk-soc336</guid>
            <pubDate>Wed, 11 Dec 2024 20:05:51 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;Tiruvannamalai Maha Deepam Special Bus: &lt;/strong&gt;திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கும்பகோணம் கோட்டத்திலிருந்து 850 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். 9 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு, கிரிவலப்பாதைக்கு சிற்றுந்துகள் இயக்கப்படும்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jev1nn39fsxt31pvej6na603,imgname-tiruvannamalai-4.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;Tiruvannamalai Maha Deepam Special Bus: &lt;/strong&gt;திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கும்பகோணம் கோட்டத்திலிருந்து 850 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். 9 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு, கிரிவலப்பாதைக்கு சிற்றுந்துகள் இயக்கப்படும்.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கும்பகோணம் கோட்டம் சார்பில் 850 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;இதுதொடர்பாக கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குநர் பொன்முடி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் கார்த்திகை தீபத் திருநாள் டிசம்பர் 13ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 06.00 மணிக்கு நடைபெறவுள்ளதை முன்னிட்டும் டிசம்பர் 15ம் தேதி பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டும் 12ம் தேதி வியாழக்கிழமை முதல் 15ம் தேதி வரை அனைத்து பக்தர்கள் மற்றும் பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டத்தின் மூலம் சிறப்பு பேருந்துகள் கும்பகோணம், மயிலாடுதுறை நாகப்பட்டினம், திருச்சி கரூர். காரைக்குடி இராமேஸ்வரம் புதுக்கோட்டை மற்றும் கும்பகோணம் கோட்டத்தின் பிற முக்கிய நகரங்களிலிருந்தும் மேற்கண்ட நாட்களில் 850 சிறப்பு பேருந்துகள் பக்தர்கள் வசதிக்காக இயக்கப்பட உள்ளது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக 9 தற்காலிக பேருந்து நிலையங்கள் கீழ்க்கண்டவாறு அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து பக்தர்கள் கிரிவலப்பாதை சென்று திரும்பி வருவதற்கு வசதியாக சிற்றுந்துகள் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு பயணம் செய்ய ஏதுவாக https://www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் மொபைல் ஆப் (Mobile App) Android / I phone கைபேசி மூலமாகவும் முன் பதிவு செய்து கொள்ளலாம்.&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&lt;strong&gt;திருவண்ணாமலை செல்லும் பக்தர்களுக்கு குட்நியூஸ்! சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட தெற்கு ரயில்வே!&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;தற்காலிக பேருந்து நிலையம் மற்றும் பேருந்துகள் புறப்படும் இடங்கள் விவரம்:&lt;/p&gt; &lt;p&gt; * திண்டிவனம் ரோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் - செஞ்சி, திண்டிவனம், புதுச்சேரி, கிளாம்பாக்கம் அடையாறு மாதவரம். * செங்கம் ரோடு அத்தியந்தல் மைதா - பெங்களூரு, ஓசூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர். * செங்கம் ரோடு-விட்டோடிகள் நிலம்- ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர். * வேலூர் ரோடு அண்ணா ஆர்ச்- போளூர், வேலூர், ஆரணி, ஆற்காடு, செய்யாறு. * &amp;nbsp;அவலூர்பேட்டை ரோடு-செல்வபுரம் சிவகுமார் மைதானம்- சேத்துப்பட்டு, வந்தவாசி, காஞ்சிபுரம்.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;* காஞ்சி, கடலாடி ரோடு-டான் பாஸ்கோ பள்ளி மைதானம்- காஞ்சி, புதுப்பாளையம், மேல்சோழங்குப்பம். &amp;nbsp;* வேட்டவலம் ரோடு சர்வேயர் நகர்- வேட்டவலம், விழுப்புரம். * திருகோயிலூர் ரோடு - மாநகராட்சி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி எதிரில் உள்ள மைதானம்- திருகோயிலூர், பண்ரூட்டி, கடலூர், சிதம்பரம், கும்பகோணம், திட்டக்குடி, விருத்தாச்சலம், நாகப்பட்டினம், திருச்சி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி. * &amp;nbsp;மணலூர்பேட்டை ரோடு SR Steel company எதிரில் உள்ள மைதானம்- மணலூர்பேட்டை கள்ளக்குறிச்சி, தானிப்பாடி, சாத்தனூர் அணை.&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&amp;nbsp;&lt;strong&gt;School Holiday:டிசம்பர் 13ம் தேதி பள்ளி, கல்லூரி மட்டுமல்ல அரசு அலுவலத்திற்கும் விடுமுறை! வெளியானது அறிவிப்பு!&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;மேலும் பயணிகள் அடர்வு குறையும் வரை தேவைக்கு ஏற்ப பேருந்துகளை இயக்கிட பக்தர்களுக்கு எவ்விதமான அசௌகரியமும் ஏற்படாமல் இருக்க அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thiruvannamalai</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-thiruvannamalai/tiruvannamalai-maha-deepam-festivel-special-buses-announcement-tvk-soc336"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Girivalam: அரசு விடுமுறை நாளில் பவுர்ணமி! கிரிவலம் செல்ல உகந்த நேரம் என்ன? கோவில் நிர்வாகம் அறிவிப்பு!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-thiruvannamalai/purattasi-month-pournami-2024-what-is-the-best-time-for-tiruvannamalai-girivalam-tvk-sjsa7g</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-thiruvannamalai/purattasi-month-pournami-2024-what-is-the-best-time-for-tiruvannamalai-girivalam-tvk-sjsa7g</guid>
            <pubDate>Sat, 14 Sep 2024 09:18:52 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Tiruvannamalai Girivalam: புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை எதிர்பார்க்கப்படுவதால், தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j7q9qgzgwwdr5xwqdwp1q62w,imgname-tiruvannamalai-girivalam-3.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Tiruvannamalai Girivalam: புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை எதிர்பார்க்கப்படுவதால், தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;நினைத்தாலே முக்தி தரக் கூடிய சிறப்பான புண்ணிய தலமாக விளங்கக்கூடியது திருவண்ணாமலை. பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும் விளங்குகிறது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். இங்கு சிவனே மலை வடிவாக காட்சி தருவதாக ஐதீகம். இங்குள்ள 14 கிலோ மீட்டர் கொண்ட கிரிவலப் சுற்றுவட்டப்பாதையை மாதம்தோறும் வரும் பவுர்ணமி தினத்தில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஓம் நமச்சிவாய என்று உச்சரித்தப்படியே கிரிவலம் வருகின்றனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;குறிப்பாக ஆந்திரா, தெலங்கானாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை பவுர்ணமி தினத்தில் குவிந்து அருணாச்சலேஸ்வரரை வழிபட்டு அவரின் அருளை பெற்று செல்கின்றனர். மன குறையுடன் வந்து கிரிவலம் செல்பவர்களின் குறையை நிவர்த்தி செய்வதால் திரும்ப திரும்ப அண்ணாமலையாரை தரிசித்து பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். அதுமட்டுமல்லாமல் கிரிவலம் செல்பவர்களின் பசியை போக்கும் வகையில் பல்வேறு இடங்களில் அன்னதானம் மற்றும் குடிநீர் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த கிரிவலப்பாதையில் &amp;nbsp;இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசானிய லிங்க என்னிட்ட அஷ்ட லிங்க சன்னதிகள் அமைந்துள்ளன.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&lt;strong&gt;Tiruvannamalai Girivalam Ashtalingam: தி-மலை கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்கம்! அள்ளி கொடுக்கும் பலன்கள்!&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில் புரட்டாசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பவுர்ணமி வருகிற செப்டம்பர் 17-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11.27 மணிக்கு தொடங்கி மறுநாள் 18-ம் தேதி காலை 9.10 மணிக்கு முடிவடைகிறது. இந்த குறிப்பிட்ட நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம். செப்டம்பர் 17-ம் தேதி மிலாடி நபி அரசு விடுமுறை என்பதால் அன்றைய தினம் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று &amp;nbsp;எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில், கிரிவலத்தில் பங்கேற்க தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருவதையொட்டி தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி செப்டம்பர் 17-ம் தேதி 682 சிறப்பு பேருந்துகளும், 18-ம் தேதி (நாளை மறுநாள்) 502 சிறப்புப் பேருந்துகளும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக சார்பில் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.&amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thiruvannamalai</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-thiruvannamalai/purattasi-month-pournami-2024-what-is-the-best-time-for-tiruvannamalai-girivalam-tvk-sjsa7g"/>
        </item>
        <item>
            <title><![CDATA[இன்னும் இரண்டே நாள் தான்! திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வேலை! லட்சக்கணக்கில் சம்பளம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/career/tiruvannamalai-annamalaiyar-temple-109-job-vacancies-applications-closing-february-28-tvk-ssajz1</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/career/tiruvannamalai-annamalaiyar-temple-109-job-vacancies-applications-closing-february-28-tvk-ssajz1</guid>
            <pubDate>Wed, 26 Feb 2025 18:27:44 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் 109 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க பிப்ரவரி 28ம் தேதி கடைசி நாளாகும்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jc8hx9ygp72bf6nq01btrhvk,imgname-tiruvannamalai-7.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;உலக புகழ்பெற்ற கோவில்களில் ஒன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். இக்கோவில் நினைத்தாலே முக்தி தரக் கூடிய புண்ணிய தலமாக விளங்கக்கூடியது. அது மட்டுமல்லாமல் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும் விளங்குகிறது. இக்கோவிலில் 18 பிரிவுகளில் 109 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டிருந்தது. குறிப்பாக இந்து சமயத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியும். இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;தட்டச்சர்&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;தட்டச்சர் பணி காலியிடங்களின் எண்ணிக்கை 1 கல்வித் தகுதியாக 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். சம்பளம் ரூ. 18,500 முதல் 58,600 வரை.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;காவலர் பணி&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;காவலர் பணி காலியிடங்களின் எண்ணிக்கை 70. கல்வித் தகுதியாக தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். சம்பளம் ரூ. 15,900 முதல் 50,400 வரை.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;கூர்க்கா&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;கூர்க்கா பணி காலியிடங்களின் எண்ணிக்கை 2. கல்வித் தகுதியாக தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். சம்பளம் ரூ. 15,900 முதல் 50,400 வரை.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;ஏவலாள்&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;ஏவலாள் பணி காலியிடங்களின் எண்ணிக்கை 2. கல்வித் தகுதியாக தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். சம்பளம் ரூ. 10,000 முதல் 31,500 வைர.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;உபகோயில் பெருக்குபவர்&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;உபகோயில் பெருக்குபவர் காலியிடங்களின் எண்ணிக்கை 2. கல்வித் தகுதி தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். சம்பளம் ரூ. 10,000 முதல் 31,500 வரை.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;கால்நடை பராமரிப்பாளர்&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;கால்நடை பராமரிப்பாளர் பணி காலியிடங்களின் எண்ணிக்கை 1. கல்வித் தகுதி தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். சம்பளம் ரூ. 10,000 முதல் 31,500 வரை.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;உபகோயில் காவலர்&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp;உபகோயில் காவலர் பணி காலியிடங்களின் எண்ணிக்கை 2. கல்வித் தகுதி தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். சம்பளம் ரூ. 11,600 முதல் 36,800 வரை.&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;திருமஞ்சனம்&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;திருமஞ்சனம் பணி காலியிடங்களின் எண்ணிக்கை 3. கல்வித் தகுதி தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். தொடர்புடைய துறையில் ஓராண்டு சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ. 11,600 முதல் 36,800 வைர.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;முறை ஸ்தானீகம்&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;முறை ஸ்தானீகம் பணி காலியிடங்களின் எண்ணிக்கை 10. கல்வித் தகுதி தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். தொடர்புடைய துறையில் ஓராண்டு சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ. 11,600 முதல் 36,800 வரை.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;ஓடல்&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;ஓடல் பணி காலியிடங்களின் எண்ணிக்கை 2. கல்வித் தகுதியாக தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். தொடர்புடைய துறையில் ஓராண்டு சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ. 15,900 முதல் 50,400 வரை.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;தாளம்&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;தாளம் பணி காலியிடங்களின் எண்ணிக்கை 3. கல்வித் தகுதியாக தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். தொடர்புடைய துறையில் ஓராண்டு சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 18,500 முதல் 58,600 வரை.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;தொழில்நுட்ப உதவியாளர் (மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு)&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;தொழில்நுட்ப உதவியாளர் (மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு) பணி காலியிடங்களின் எண்ணிக்கை 1. கல்வித் தகுதி மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு பொறியியலில் பட்டயப் படிப்பு படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ. 20,600 முதல் 65,500 வரை.&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;பிளம்பர்&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;பிளம்பர் பணி காலியிடங்களின் எண்ணிக்கை 4. கல்வித் தகுதி பிளம்பர் பிரிவில் ஐ.டி.ஐ படிப்பு படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ. 18,000 முதல் 56,900 வரை.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;உதவி மின்பணியாளர்&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;உதவி மின்பணியாளர் பணி காலியிடங்களின் எண்ணிக்கை 2. கல்வித் தகுதி வயர்மேன் பிரிவில் ஐ.டி.ஐ படிப்பு படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ. 16,600 &amp;nbsp;முதல் &amp;nbsp;52,400 வரை.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;தலைமை ஆசிரியர்&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;தலைமை ஆசிரியர் பணி காலியிடங்களின் எண்ணிக்கை 1. கல்வித் தகுதியாக தமிழில் முதுகலைப் பட்டமும் ஆசிரியர் பயிற்சி இளநிலை பட்டமும் படித்திருக்க வேண்டும். 5 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். சம்பளம் ரூ. 36,700 முதல் 1,16,200 வரை.&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;தேவார ஆசிரியர்&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;தேவார ஆசிரியர் பணி காலியிடங்களின் எண்ணிக்கை 1. கல்வித் தகுதி தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். தொடர்புடைய துறையில் மூன்றாண்டு சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 35,400 முதல் 1,12,400 வரை.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;சங்கீத இசை ஆசிரியர்&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;சங்கீத இசை ஆசிரியர் பணி காலியிடங்களின் எண்ணிக்கை 1. கல்வித் தகுதியாக குரலிசையில் மூன்று வருட பட்டய படிப்பு அல்லது பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ. 35,400 முதல் 1,12,400 வரை.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;ஆகம ஆசிரியர்&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;ஆகம ஆசிரியர் பணி காலியிடங்களின் எண்ணிக்கை 1. கல்வித் தகுதி வேத, ஆகம சாலையில் நான்கு ஆண்டு சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும். 5 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். சம்பளம் ரூ. 35,900 முதல் 1,13,500 வரை.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;விண்ணப்பிக்கும் முறை:&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;தேர்வு செய்யப்படும் முறையாக இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://annamalaiyar.hrce.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து அதனுடன் ரூ.25 மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டிய சுய விலாசமிட்ட ஒப்புகை அட்டை, அஞ்சல் உறை ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்ப உறையின் மீது பணியின் வரிசை எண் மற்றும் பணியின் பெயரை குறிப்பிட வேண்டும்.&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்:&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;பிப்ரவரி 28&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;இணை ஆணையர், செயல் அலுவலர், அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவில், திருவண்ணாமலை - 606601&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thiruvannamalai</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/career/tiruvannamalai-annamalaiyar-temple-109-job-vacancies-applications-closing-february-28-tvk-ssajz1"/>
        </item>
    </channel>
</rss>
