<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes"?>
<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Tue, 30 Dec 2025 22:40:05 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss/tamilnadu-thirupur" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[அம்மா முத்தம் குடுத்தா எந்திரிப்பியே மா ரிதன்யா! கல் மனதையும் கலங்க வைக்கும் தாயின் கதறல்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-thirupur/dowry-torture-despite-300-sovereigns-mother-cries-seeing-daughters-body-in-tamil-1xcp3k0</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-thirupur/dowry-torture-despite-300-sovereigns-mother-cries-seeing-daughters-body-in-tamil-1xcp3k0</guid>
            <pubDate>Wed, 02 Jul 2025 07:21:51 +0530</pubDate>
            <description><![CDATA[திருமணமாகி 78 நாட்களில் மணப்பெண் ரிதன்யா தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு முன்பு அனுப்பிய வாட்ஸ்அப் ஆடியோவில் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதாகக் கூறியுள்ளார்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jz4cdfv7k21qze9jpt4caj58,imgname-tirppur-1-1751420157799.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[திருமணமாகி 78 நாட்களில் மணப்பெண் ரிதன்யா தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு முன்பு அனுப்பிய வாட்ஸ்அப் ஆடியோவில் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதாகக் கூறியுள்ளார்.&lt;img&gt;&lt;p&gt;திருப்பூர் மாவட்டம் அவினாசி கைகாட்டிபுதூரை சேர்ந்தவர் அண்ணாதுரை (53). இவர் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் மகள் ரிதன்யா திருமணமாகி 78 நாட்கள் ஆன நிலையில் அவிநாசியை அடுத்து மொண்டிபாளையம் கோயிலுக்குச் செல்லும் வழியில் சாலையோரம் காரை நிறுத்தி தென்னை மரத்திற்கு பயன்படுத்தப்படும் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தற்கொலை செய்வதற்கு முன்பு தனது செல்போனில் இருந்து தனது தந்தைக்கு வாட்ஸ் அப் மூலமாக, உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் தன் கணவர் மற்றும் கணவர் குடும்பத்தார் கடுமையான சித்திரவதை செய்து வந்ததாகவும், தன் சாவிற்கு தனது கணவர் கவின்குமார் மாமனார் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாமியார் சித்ராதேவி ஆகியோர் தான் காரணம் என்று உருக்கமாக பேசிய ஆடியோவை அனுப்பியிருந்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதையடுத்து சேயூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, ரிதன்யாவின் தற்கொலைக்கு காரணமான அவரது கணவர் கவின்குமார் மற்றும் மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டுதல், துன்புறுத்துதல் என இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருப்பூர் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் மூன்றாவது குற்றவாளியான மாமியார் சித்ராதேவியின் உடல்நலம் ஒத்துழைக்காததால் &quot;பைண்டிங் ஆர்டர்&quot; என்ற முறையில் எப்போது அழைத்தாலும் நேரில் வந்து விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்ற தகவலை அவிநாசி துணை காவல் கண்காணிப்பாளர் சிவகுமார் தெரிவித்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த வழக்கு குறித்து திருப்பூர் கோட்டாட்சியர் மோகனசுந்தரம் மற்றும் அவிநாசி துணை காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட பின்பு காரிலிருந்து அவரது உடலை மீட்கப்படும் காட்சிகள் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவில் தனது மகளின் உடலை கண்டு அவரது தாயார் ஜெயசுதா, கதறி துடித்து அழுகும் காட்சி கல் மனதையும் கலங்க வைப்பதாக இருந்தது. அதில், அம்மா முத்தம் குடுத்தா எந்திரிப்பியே மா என நெஞ்சில் அடித்து கதறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரிதன்​யா​வின் தந்தை அண்​ணாதுரை கூறுகையில்: பாரம்​பரியக் குடும்​பம் என நம்பி பெண்​ணைக் கொடுத்து ஏமாந்​து​விட்​டோம். திரு​மண​மான 15 நாளில் ரிதன்யா எங்​கள் வீட்​டுக்கு வந்து கண்​ணீர் விட்டு அழு​தார். உடல் ரீதி​யாக​வும், மன ரீதி​யாக​வும் அவரை மிக​வும் கொடுமைப்​படுத்தி உள்ளனர். திரு​மணத்​தின்​போது கணக்கில்லாமல் நகை போட்​டும், இன்​னும் நகை கேட்டு துன்​புறுத்தி உள்​ளனர். வீட்​டுக்​குள் பூட்டி வைத்து சித்​ர​வதை செய்​துள்​ளனர். என் மகளுக்கு நிகழ்ந்​தது​போல இனி யாருக்​கும் நடக்​கக் கூடாது என கண்ணீர் மல்க கூறியுள்ளார். இதனிடையே ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை, தாய் ஜெயசுதா மற்றும் உறவினர்கள், நேற்று சேலம் வந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து புகார் அளித்து சென்றது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thirupur</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-thirupur/dowry-torture-despite-300-sovereigns-mother-cries-seeing-daughters-body-in-tamil-1xcp3k0"/>
        </item>
        <item>
            <title><![CDATA[திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் அருகே செவிலியர் பாலியல் வன்கொடுமை செய்து கொலையா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-thirupur/nurse-brutally-murdered-near-tiruppur-collectorate-tvk-svkjvk</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-thirupur/nurse-brutally-murdered-near-tiruppur-collectorate-tvk-svkjvk</guid>
            <pubDate>Thu, 01 May 2025 11:52:03 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே செவிலியர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01gpj55r3whye1n5760y4yay9z,imgname-chennai-murder-1.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;திருப்பூர் பல்லடம் சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தென்னபாளையம் குடியிருப்பு பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ள காலி இடத்தில் இளம் பெண் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.&amp;nbsp;சம்பவ இடத்திற்கு விரைந்த திருப்பூர் தெற்கு போலீசார் தலை மற்றும் கை நசுங்கிய நிலையிர் கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றிய போது பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதனையடுத்து இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஏதாவது துப்பு கிடைக்குமா என்பது தொடர்பாக சோதனை மேற்கொண்டனர். அப்போது பெண்ணின் சடலத்தின் அருகே ரத்த கரையுடன் கல் ஒன்று கிடந்தது. இதனை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.&lt;/p&gt; &lt;p&gt;போலீசார் முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டது தனியார் மருத்துவமனை செவிலியர் என்பது தெரியவந்தது. பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் மருத்துவமனை மற்றும் அருகில் உள்ள குடியிருப்புகளில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவர் யார் என்ற விவரம் இன்னும் தெரியவில்லை. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thirupur</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-thirupur/nurse-brutally-murdered-near-tiruppur-collectorate-tvk-svkjvk"/>
        </item>
        <item>
            <title><![CDATA[சினிமா காட்சியை மிஞ்சிய சேசிங் சம்பவம்; திருப்பூரில் முகம் சிதைக்கப்பட்டு ரௌடி கொடூர கொலை]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-thirupur/rowdy-killed-by-suspicious-persons-in-palladam-vel-shwkas</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-thirupur/rowdy-killed-by-suspicious-persons-in-palladam-vel-shwkas</guid>
            <pubDate>Thu, 08 Aug 2024 19:31:40 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ரௌடி ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j4k4es7xqyyge0cg9t20qcn2,imgname-up-crime-news-1722924098813.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சிவகங்கை மாவட்டம் உடையன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் கண்ணன். இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனிடையே இன்று காலை திருப்பூர் பல்லடம் சாலையின் கரையான்புதூர் பகுதியில் வினோத் கண்ணனை 4 பேர் கொண்ட கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் விரட்டிச் சென்றுள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;சினிமா காட்சியில் வருவது போல் தனி நபரை 4 பேர் கொண்ட கும்பல் விரட்டிச் செல்வதை பார்த்த அப்பகுதி மக்கள் நடப்பது என்ன என்று சுதாரிப்பதற்குள் அக்கும்பல் வினோத் கண்ணனை சாலை ஓரமாக வெட்டி வீசினர். ஆத்திரம் அடங்காத கொலை கும்பல் வினோத் கண்ணனின் முகத்தை முழுவதுமாக சிதைத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.&lt;/p&gt; &lt;p&gt;அடக்கடவுளே; பள்ளியில் நண்பர்களுடன் ஆசையாக விளையாடிய சிறுவனுக்கு இப்படி ஒரு முடிவா? மாணவர்கள் ஷாக்&lt;/p&gt; &lt;p&gt;தகவலின் அடிப்படையில், பல்லடம் டிஎஸ்பி விஜயகுமார் தலைமையிலான காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் கொலை செய்யப்பட்டவரின் முகம் முற்றிலும் சிதைந்து காணப்பட்டதாலும் அவரிடம் எந்தவித ஆவணமும் இல்லாததாலும் அவர் யார் என கண்டறிவதிலேயே காவல் துறையினருக்கு சிக்கல் ஏற்பட்டது. பின்னர் கொலை செய்யப்பட்டது சிவகங்கை மாவட்டம் உடையான்குளம் பகுதியைச் சேர்ந்த வினோத் கண்ணன் தான் என்பதை உறுதி செய்தனர்.&lt;/p&gt; &lt;p&gt;ஆபாச போட்டோசூட்; திருமணம் என்ற பெயரில் மனைவியை கணவனே விபசாரத்தில் தள்ளிய கொடூரம்&lt;/p&gt; &lt;p&gt;இதனைத் தொடர்ந்து கொலையாளிகளை கண்டுபிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடியிருப்பு பகுதியில் காலை நேரத்தில் நிகழ்ந்த கொடூர கொலை சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thirupur</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-thirupur/rowdy-killed-by-suspicious-persons-in-palladam-vel-shwkas"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ராமர் பாதத்தை ஊர்வலமாக எடுத்துச்செல்ல அனுமதி வழங்க முடியாது - நீதிமன்றம் திட்டவட்டம்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-thirupur/the-court-ordered-that-permission-cannot-be-granted-to-take-lord-rama-s-feet-in-procession-in-tirupur-vel-si0n32</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-thirupur/the-court-ordered-that-permission-cannot-be-granted-to-take-lord-rama-s-feet-in-procession-in-tirupur-vel-si0n32</guid>
            <pubDate>Sun, 11 Aug 2024 00:22:14 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;திருப்பூரில் இருந்து அயோத்திக்கு ராமர் பாதத்தை ஊர்வலமாக எடுத்துச் செல்லும் தொடக்க நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j4yt2ce2sxhx2xftw5pfmxms,imgname-mixcollage-11-aug-2024-12-20-am-1596.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;அகில பாரத இந்து மகாசபாவின் திருப்பூர் மாவட்டத் தலைவர் பாலகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதன்படி, உத்தரபிரதேசம் மாநிலம், அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதைக் கொண்டாடும் விதமாக திருப்பூர் மாவட்டம் அனுப்பர் பாளையத்தில் உள்ள கருப்பராயன் கோவிலில் ராமர் பாதங்களை வைத்து பூஜை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;கேரளாவுக்கு ஒட்டுமொத்த தேசமும் துணை நிற்கிறது; பிரதமர் மோடி நேரில் ஆறுதல்&lt;/p&gt; &lt;p&gt;அப்படி பூஜை செய்யப்படும் பாதங்களை ஊர்வலமாக ராமேஸ்வரம் வரை எடுத்துச் சென்று சிறப்பு பூஜை செய்து அங்கிருந்து அயோத்திக்கு ரயில் மூலம் எடுத்துச்செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா மற்றும் வாகன ஊர்வலத்திற்கு அனுமதி அளித்து உரிய காவல் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.&lt;/p&gt; &lt;p&gt;ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி கேட்ட அவரது மனைவி, பா.ரஞ்சித் மீது போலீஸ் வழக்கு பதிவு&lt;/p&gt; &lt;p&gt;இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது காவல் துறை தரப்பில், மனுதாரர் ஏற்கனவே அரசியல் உள்நோக்கத்தோடு இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ளார். அவர் ஏற்கனவே இந்து முன்னணி அமைப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அனுமதியின்றி விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்தது தொடர்பான புகார் மனுதாரர் மீது உள்ளது என்பதால் இந்த விழாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது.&lt;/p&gt; &lt;p&gt;காவல்துறை தரப்பின் வாதத்தை ஏற்ற நீதிபதி, ராமர் பாதம் கொண்டு செல்லும் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க உத்தரவிட முடியாது என்று கூறி வழக்கை முடித்து வைத்தார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thirupur</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-thirupur/the-court-ordered-that-permission-cannot-be-granted-to-take-lord-rama-s-feet-in-procession-in-tirupur-vel-si0n32"/>
        </item>
        <item>
            <title><![CDATA[பள்ளி கழிவறையில் தங்க வைக்கப்பட்ட தொழிலாளர்கள்? டிடிவி தினகரன் கண்டனம்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-thirupur/dhinakaran-condemns-pillar-workers-staying-in-school-toilets-in-tirupur-vel-shltv9</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-thirupur/dhinakaran-condemns-pillar-workers-staying-in-school-toilets-in-tirupur-vel-shltv9</guid>
            <pubDate>Sat, 03 Aug 2024 00:24:45 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;திருப்பூர் மாநகராட்சி பள்ளி கழிவறைக்குள் ஒருமாத காலமாக தங்கவைக்கப்பட்ட தூய்மைப்பணியாளர்கள் &amp;nbsp;தங்க வைக்கப்பட்ட சம்பவத்திற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01h83zybgmz915vx999rwzns2v,imgname-ttv-dhinakaran-and-stalin.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், &ldquo;திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறைக்குள், தனி அறை ஒன்றில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் தங்கி அங்கேயே உணவு சமைத்து உட்கொள்வது போன்று வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.&lt;/p&gt; &lt;p&gt;நாட்டிலேயே முதல்முறை; சேலத்தில் ஏலியனுக்கு கோவில் கட்டிய சித்தர் - இனி எல்லாமே ஏலியன்கள் தானாம்&lt;/p&gt; &lt;p&gt;திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுக் கழிப்பறைகளை சுத்தம் செய்து, பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வந்த வெளிமாநிலத்தைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு, தங்குவதற்கான இடத்தைக் கூட ஒதுக்காமல் கடந்த ஒரு மாத காலமாக மாநகராட்சி பள்ளி கழிவறையிலேயே தங்க வைத்திருந்தது முழுக்க முழுக்க மனிதநேயமற்ற செயலாகும்.&lt;/p&gt; &lt;p&gt;ரூ.1,500 கோடி சொத்துக்காக 60 வயது நடிகருக்கு 4வது மனைவியான 44 வயது நடிகை&lt;/p&gt; &lt;p&gt;எனவே, பொதுக்கழிவறைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்தித் தருவதோடு, இந்த விசயத்தில் அலட்சியப் போக்குடன் செயல்பட்ட திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்&rdquo; என்று குறிப்பிட்டுள்ளார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thirupur</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-thirupur/dhinakaran-condemns-pillar-workers-staying-in-school-toilets-in-tirupur-vel-shltv9"/>
        </item>
        <item>
            <title><![CDATA[தலை துண்டிக்கப்பட்டு காவல் ஆய்வாளர் படுகொ*ல: அதிமுக MLA தோட்டத்தில் நடந்த பகீர் சம்பவம்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/si-shanmugavel-killed-by-suspicious-persons-in-tiruppur-district-cpws6az</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/si-shanmugavel-killed-by-suspicious-persons-in-tiruppur-district-cpws6az</guid>
            <pubDate>Wed, 06 Aug 2025 07:21:48 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;திருப்பூர் மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு காவல் ஆய்வாளர் சண்முகவேல் அதிமுக எம்எல்ஏ.வின் தோட்டத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k1ygyvh6sb3r64gc1jf03hy8,imgname---------.20-500-------------------27--1754444820006.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;திருப்பூர் மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு காவல் ஆய்வாளர் சண்முகவேல் அதிமுக எம்எல்ஏ.வின் தோட்டத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த குடிமங்கலம் பகுதியில் சிறப்பு காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவர் சண்முகவேல். இவர் நேற்று இரவு வழக்கம் போல் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது இரவு 11.30 மணியளவில் குடிமங்கலம் காவல் நிலையத்திற்கு வந்த தொலைபேசி அழைப்பில் சிக்கனூர்த்தி பகுதியில் அமைந்துள்ள அதிமுக மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் தோட்டத்தில் தந்தை, மகன் இடையே சண்டை நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு ஆய்வாளர் சண்முகவேலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்த்துள்ளார். அவருடன் காவலர் ஒருவரும் சென்றதாக சொல்லப்படுகிறது. சம்பவ இடத்தில் மது அருந்திவிட்டு சண்டையில் ஈடுபட்ட நபர்களை சண்முகவேல் கண்டித்து சண்டையை நிறுத்தியதாக சொல்லப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சண்டை நிறைவு பெற்றதைத் தொடர்ந்து சண்முகவேல் அப்பகுதியில் இருந்து புறப்படத் தயாரான நிலையில், திடீரென ஒரு கும்பல் காவல் ஆய்வாளர் மீது சரமாரியாக வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் SI சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த SI, MLA தோட்டத்தில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thirupur</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/si-shanmugavel-killed-by-suspicious-persons-in-tiruppur-district-cpws6az"/>
        </item>
        <item>
            <title><![CDATA[உயிர் பிரியும் தருவாயிலும் 20 குழந்தைகளின் உயிரை பத்திரமாக காப்பாற்றிய தனியார் பள்ளி ஓட்டுநர்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-thirupur/a-private-school-van-driver-dies-after-saving-20-students-in-tirupur-vel-sh704k</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-thirupur/a-private-school-van-driver-dies-after-saving-20-students-in-tirupur-vel-sh704k</guid>
            <pubDate>Fri, 26 Jul 2024 00:17:30 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;திருப்பூரில் தனியார் பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்ற வேன் ஓட்டுநர் மாரடைப்பால் அவதிப்பட்ட நிலையிலும் குழந்தைகளை பத்திரமாக காப்பாற்றிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j3nkg5r9n8smg2r18g3f94mq,imgname-whatsapp-image-2024-07-26-at-00-12-21.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த வெள்ளக்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் மலையப்பன் (வயது 49). இவர் வெள்ளக்கோவில் அடுத்த அய்யனூர் பகுதியில் செயல்பட்டு வரும் னியார் மெட்ரிக் பள்ளியில் கடந்த 8 மாதங்களாக பள்ளி வாகனத்தை இயக்கும் பணி செய்து வருகிறார். அதன்படி நேற்று மாலை வழக்கம் போல் பள்ளி முடிந்து சுமார் 20 மாணவர்களை வேனில் அழைத்து வந்துள்ளார்.&lt;/p&gt; &lt;p&gt;மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்; பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு&lt;/p&gt; &lt;p&gt;மேலும் அதே வாகனத்தில் தான் இவரது மனைவி லலிதாவும், குழந்தைகளுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார். இந்நிலையில், வாகனம் வெள்ளக்கோவில் காவல் நிலையம் அருகே திருச்சி, கோவை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநர் மலையப்பனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;தனக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையிலும் வாகனத்தில் உள்ள குழந்தைகளின் பாதுகாப்பு கருதி வாகனத்தை மிகவும் லாவகமாக சாலையின் ஓரம் பத்திரமாக நிறுத்திய மலையப்பன் தனது இருக்கையில் இருந்து எழுந்து நிற்கக் கூட முடியாத நிலையில் ஸ்டேரிங் மீதே மயங்கி விழுந்துள்ளார். இதனால் வாகனத்தில் பயணம் செய்த மனைவி உட்பட மாணவர்கள் அனைவரும் அலறி துடித்துள்ளனர்.&lt;/p&gt; &lt;p&gt;15 நிமிடத்தில் ரூ.2 லட்சம் கடன் தரும் வங்கி; அந்த பேங்க்ல உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கா?&lt;/p&gt; &lt;p&gt;இதனைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் வாகனத்தில் ஏறி ஓட்டுநரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சம்பந்தப்பட்ட நபர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். தனது உயிர் பிரியும் தருவாயிலும் குழந்தைகளின் பாதுகாப்பை எண்ணிப்பார்த்த ஓட்டுநரின் செயலை எண்ணி குழந்தைகளின் பெற்றோர், பள்ளி நிர்வாகத்தினர் மிகவும் வேதனை அடைந்தனர். மேலும் ஓட்டுநரின் செயலுக்கு இணையத்தில் பாராட்டுகளும் குவிந்து வருகின்றனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thirupur</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-thirupur/a-private-school-van-driver-dies-after-saving-20-students-in-tirupur-vel-sh704k"/>
        </item>
        <item>
            <title><![CDATA[அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/crime/transgender-woman-shriya-murdered-in-tiruppur-articleshow-eurc5gn</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/crime/transgender-woman-shriya-murdered-in-tiruppur-articleshow-eurc5gn</guid>
            <pubDate>Wed, 10 Dec 2025 12:42:57 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;திருப்பூர் காலேஜ் ரோடு பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்த ஸ்ரேயா என்ற திருநங்கை, ஆடை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் எதிர்வீட்டைச் சேர்ந்த தந்தை, மகனால் தாக்கப்பட்டார். தலையில் பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01h8gm4sn3qhb7dr6b4y2437tf,imgname-chennai-police-3.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;திருப்பூர் காலேஜ் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரேயா (40). திருநங்கையான இவர் காலேஜ் ரோடு பகுதியில் உள்ள வீட்டின் முன்புறம் பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் ஸ்ரேயா தனது பெட்டிக்கடையில் அரைகுறை ஆடைகளுடன் அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் எதிர்வீட்டில் வசித்துக்கொண்டு சலூன் கடை வைத்து நடத்தி வரும் சுப்பிரமணியம் என்பவர் தன் வீட்டில் குழந்தைகள், பெண்கள் உள்ளதால் இது போன்று அமர வேண்டாம் என திருநங்கை ஸ்ரேயாவிடம் கூறியுள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;இதனால் ஸ்ரேயாவிற்கும் சுப்பிரமணியின் குடும்பத்திற்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான பிரச்சனையில் ஸ்ரேயா கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீசார் காப்பாற்றிய நிலையில் அவர் மீண்டும் பெட்டிக்கடை வியாபாரத்தை பார்த்து வந்தார்.&lt;/p&gt;&lt;p&gt;இந்நிலையில் கடந்த 6ம் தேதி மீண்டும் ஸ்ரேயாவிற்கும் எதிர்வீட்டைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சுப்பிரமணி மற்றும் அவருடைய மகன் சரவணன் ஆகியோர் சேர்ந்து ஸ்ரேயாவை சரமாரியாக தாக்கி கீழே தள்ளிவிட்டுள்ளனர். ஸ்ரேயாவும் பதிலுக்கு தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் ஸ்ரேயாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.&lt;/p&gt;&lt;p&gt;அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த திருநங்கை ஸ்ரேயா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து சுப்பிரமணியம் (63), சரவணன் (39) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அரைகுறை ஆடைகளுடன் அமர்ந்திருந்த திருநங்கையை தந்தை, மகன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thirupur</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/crime/transgender-woman-shriya-murdered-in-tiruppur-articleshow-eurc5gn"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஓடும் ரயிலில் இருந்து கர்ப்பிணியை கீழே தள்ளிய கொடூரனுக்கு சாகும் வரை சிறை! நீதிமன்றம் தீர்ப்பு!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-thirupur/court-gives-life-sentence-to-man-for-pushing-pregnant-woman-from-train-articleshow-gcditq1</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-thirupur/court-gives-life-sentence-to-man-for-pushing-pregnant-woman-from-train-articleshow-gcditq1</guid>
            <pubDate>Mon, 14 Jul 2025 19:20:58 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ஓடும் ரயிலில் இருந்து கர்ப்பிணியை கீழே தள்ளிய இளைஞருக்கு நீதிமன்றம் சாகும் வரை சிறை தண்டனை வழங்கியுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jygbteh0c4dk5fpgzh4qhtn7,imgname-stockphoto-1750748445216.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Young man pushes pregnant woman off moving train: ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர் கடந்த பிப்ரவரி மாதம் மருத்துவ பரிசோதனைக்காக சொந்த ஊருக்கு செல்வதற்காக கோவையில் இருந்து திருப்பதி வரை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலின் பொதுப்பெட்டியில் பயணம் செய்தார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;கர்ப்பிணியை கீழே தள்ளிய கொடூரன்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;அந்த ரயில் குடியாத்தம்- கே.வி.குப்பம் ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தபோது அந்த இளம்பெண் கழிவறைக்கு சென்றார். அப்போது கழிவறை அருகே அமர்ந்திருந்த இளைஞர் ஒருவர் அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் கூச்சலிட்டப்போது மற்ற பயணிகள் ஓடி வந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர் இளம்பெண்ணை ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டு மற்ற பெட்டிகளுக்கு தப்பிச் சென்றார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;கர்ப்பிணிக்கு தீவிர சிகிச்சை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;கர்ப்பிணி கீழே விழுந்ததை பார்த்த மற்ற பயணிகள் உடனடியாக ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கர்ப்பிணியை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். கை, காலில் எலும்பு முறிவு மற்றும் தலையில் படுகாயம் அடைந்த கர்ப்பிணிக்கு மருத்துவமனையில் தீவிர சிசிச்சை அளிக்கப்பட்டது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;கொடூரன் ஹேமராஜ் கைது&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இதற்கிடையே கர்ப்பிணியை ரயில் இருந்து தள்ளிய வேலூர் மாவட்டம் பூஞ்சோலை கிராமத்தைச் சேர்ந்த ஹேமராஜ் (30) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பான வழக்கை திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கில் ஏற்கெனவே தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் கொடூரன் ஹேமராஜ் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சாகும் வரை சிறை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்நிலையில், இந்த வழக்கில் தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்பட்டன. அதன்படி தண்டனை விவரத்தை அறிவித்த நீதிபதி மீனாகுமாரி கர்ப்பிணியை கீழே தள்ளிய குற்றவாளிக்கு ஹேமராஜுக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையுடன். சாகும் வரை சிறை தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டார். மேலும் தமிழ்நாடு அரசு ரூ.50 லட்சம், ரயில்வே துறை ரூ.50 லட்சம் என மொத்தமாக ரூ.1 கோடி அந்த கர்ப்பிணிக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thirupur</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-thirupur/court-gives-life-sentence-to-man-for-pushing-pregnant-woman-from-train-articleshow-gcditq1"/>
        </item>
        <item>
            <title><![CDATA[இன்ஸ்டா காதல்.. தாயின் 7 சவரன் நகையுடன் எஸ்கேப்.. 17 வயது காதலனுக்கு ஐபோன் வாங்கி கொடுத்த 15 வயது சிறுமி!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-thirupur/instagram-love-15-year-old-girl-buys-iphone-for-17-year-old-boyfriend-tvk-sf0hb2</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-thirupur/instagram-love-15-year-old-girl-buys-iphone-for-17-year-old-boyfriend-tvk-sf0hb2</guid>
            <pubDate>Thu, 13 Jun 2024 14:41:02 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;திருப்பூரை சேர்ந்த 15 வயது சிறுமி மற்றும் 17 சிறுவனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01grrvc4cv1xvryh7ks6mn2jes,imgname-instagram-love.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;17 வயது சிறுவனை இன்ஸ்டாவில் காதலித்த 15 வயது சிறுமி தாயின் நகைகளுடன் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;திருப்பூரை சேர்ந்த 15 வயது சிறுமி மற்றும் 17 சிறுவனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் 17 வயது சிறுவன் தன்னிடம் சிறிய அளவிலான செல்போன் தான் உள்ளதால் &amp;nbsp;ஐபோன் வாங்கி தரும்படி சிறுமியிடம் கேட்டுள்ளார். இதனையடுத்து அந்த சிறுமி வீட்டிலிருந்த &amp;nbsp;தனது தாயின் 7 சவரன் நகையை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&lt;strong&gt;கொலை வெறியில் அண்ணனை தேடி வந்த கும்பல்! சிக்கிய தம்பியை சின்னா பின்னமாக்கிய கொடூரம்.. சென்னையில் பயங்கரம்!&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;பின்னர் அந்த நகையை விற்று அதில் கிடைத்த பணத்தின் மூலம் இருவரும் ஐபோன் வாங்கியுள்ளனர். &amp;nbsp;இருவரும் திருப்பூரில் பல்வேறு இடங்களில் சுற்றியுள்ளனர்.&amp;nbsp;இதனிடையே வீட்டில் இருந்த நகை மற்றும் மகளை காணவில்லை என்பதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&amp;nbsp;&lt;strong&gt;கேப் கிடைக்கும் போதெல்லாம் மருமகனுடன் உல்லாசம்! எவ்வளவு சொல்லியும் கேட்காத மனைவி! இறுதியில் நடந்தது என்ன?&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;பின்னர் சிறுமியையும் சிறுவனையும் போலீசார் கண்டுபிடித்தனர். இருவரிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thirupur</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-thirupur/instagram-love-15-year-old-girl-buys-iphone-for-17-year-old-boyfriend-tvk-sf0hb2"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Tiruppur Accident: டீ குடிப்பதற்காக தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 தொழிலாளர்கள் ரயிலில் அடிபட்டு பலி]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-thirupur/2-building-workers-killed-train-accident-in-tirupur-district-vel-sfxnmx</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-thirupur/2-building-workers-killed-train-accident-in-tirupur-district-vel-sfxnmx</guid>
            <pubDate>Mon, 01 Jul 2024 12:34:09 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;திருப்பூர் மாவட்டத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற கட்டிடத் தொழிலாளர்கள் இருவர் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j02nfd3ve80f5p40gr8gtadb,imgname-train-kerala.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;திருப்பூர் காவிளிபாளையம் புதூர் பகுதியில் கட்டிட பணி செய்வதற்காக திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 28), சரவணபவன் (28) என்ற இரண்டு இளைஞர்கள் புதூரில் தங்கியிருந்து வேலை செய்து வந்தனர். கடந்த சில நாட்களாக அதே பகுதியில் தங்கியிருந்து பணி செய்து வரும் நிலையில், அருகில் இருந்த தண்டவாளத்தை கடந்து சென்று டீ குடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.&lt;/p&gt; &lt;p&gt;மாற்று திறனாளிகள், முதியோர் உட்பட அனைத்து ஓய்வூதியத்தையும் வாரி வழங்கிய ஆந்திரா முதல்வர்&lt;/p&gt; &lt;p&gt;அந்த வகையில், இன்று அதிகாலை 5 மணியளவில் இவர்கள் இருவரும் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றுள்ளனர். அப்போது கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த விரைவு ரயில் மோதிய வேகத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டு உடல் சிதறி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&lt;/p&gt; &lt;p&gt;இதனிடையே இப்பகுதியில் தண்டவாளத்தை கடக்க முறையான பாதை இல்லாத சூழலில் பலரும் தங்கள் உயிரை பணயம் வைத்தே தண்டவாளத்தை கடந்து செல்வதாகக் கூறப்படுகிறது. மேலும் உள்ளூர் மக்கள் ரயில் வரும் நேரத்தை கவனத்தில் கொண்டு தண்டவாளத்தை கடந்து செல்லும் நிலையில், வெளியூர் நபர்கள் கவனக்குறைவாக நடந்து கொள்வதால் அவ்வபோது இதுபோன்ற விபத்துகள் நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் விபத்துகளை தடுக்க முறையான பாதை அமைத்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.&lt;/p&gt; &lt;p&gt;பழனி மலை அடிவாரத்தில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், கடைகள் இடித்து அகற்றம்; போலீஸ் குவிப்பு&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp;வந்திருந்தனர். பணி செய்து வந்த நிலையில் &amp;nbsp;ரயில்வே தண்டவாளத்தை கடந்து டீ குடிக்க செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர். இந்நிலையில் இன்று காலை 5 மணி அளவில் டீ குடிக்க சென்று திரும்பி வரும் போது கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த ரயில் மோதி இருவரும் உடல் சிதறி உயிரிழந்தனர். ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thirupur</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-thirupur/2-building-workers-killed-train-accident-in-tirupur-district-vel-sfxnmx"/>
        </item>
        <item>
            <title><![CDATA[கோவைக்கு வரும் ஃபெஞ்சல் புயல்; நீலகிரியில் நிலச்சரிவுக்கு வாய்ப்பா? கோவை வெதர்மேன் தகவல்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-coimbatore/landslides-likely-in-nilgiris-due-to-heavy-rains-meteorologist-warns-vel-snr6z8</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-coimbatore/landslides-likely-in-nilgiris-due-to-heavy-rains-meteorologist-warns-vel-snr6z8</guid>
            <pubDate>Sat, 30 Nov 2024 15:07:19 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ஃபெஞ்சல் புயல்: தொடர் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக நீலகிரி, கோவை மக்களுக்கு தனியார் வானிலை ஆய்வாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jc92d3nx6vekdfa0hf6p4253,imgname-heavy-rain-in-tamilnadu.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஃபெஞ்சல் புயல்: தொடர் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக நீலகிரி, கோவை மக்களுக்கு தனியார் வானிலை ஆய்வாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;சென்னை, கடலூர் உட்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இது தொடர்பாக கோவை தனியார் வானிலை ஆய்வாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், &ldquo;ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் கோவை நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிக கனமழை (&lt;strong&gt;Heavy Rain&lt;/strong&gt;) பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை காலைக்குள் புயலானது புதுச்சேரி அருகே கரையை கடந்து சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக ஞாயிற்றுக்கிழமை மாலை மற்றும் திங்கள்கிழமை அன்று செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;புயல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய் வரை மிகக் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் கோவை நகரின் சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது, அச்சப்படத் தேவையில்லை ஆனால் இப்போதிருந்தே நிகழ்வை எதிர்கொள்ளத் தயாராக இருப்பது சரியான முன்னெச்சரிக்கையாகும்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;கோயம்புத்தூரில் 47 ஆண்டுகளுக்குப் பிறகு புயல் மழை. அதாவது 1977 க்குப் பிறகு முதல் முறையாக நாம் நேரடியாகப் பார்க்கப் போகிறோம். கோயம்புத்தூரை கடக்கும்போது அது வலுவிழந்து இருக்கும் ஆனால் மழை மேகங்கள் உற்பத்தி அப்படியே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீங்கள் மழையை விரும்பும் நபர் என்றால் உங்களுக்கு இந்த நிகழ்வு மிகசிறந்த பரவசம் மற்றும் அனுபவத்தை தரும் என்று நம்பலாம்,அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;நீலகிரி மக்கள் பாதுகாப்பாக இருங்கள்&lt;/strong&gt;: ஞாயிறு முதல் செவ்வாய் வரை நீலகிரி மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்வதை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில் மிக கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் (&lt;strong&gt;Landslide&lt;/strong&gt;) ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நிகழ்விலிருந்து கொங்கு மண்டல மாவட்டங்களின் மற்ற பகுதிகள் பரவலாக கனமழையைக் காணும் என்று வானிலை ஆய்வாளரின் செய்தி குறிப்பி்ல தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thirupur</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-coimbatore/landslides-likely-in-nilgiris-due-to-heavy-rains-meteorologist-warns-vel-snr6z8"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Tiruppur: திருப்பூரில் மூதாட்டின் உடலை தகனம் செய்த பெரியார் திராவிடர் கழக பெண்கள்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-thirupur/women-paid-their-last-respects-to-the-body-of-the-deceased-in-tirupur-vel-sgb2mr</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-thirupur/women-paid-their-last-respects-to-the-body-of-the-deceased-in-tirupur-vel-sgb2mr</guid>
            <pubDate>Mon, 08 Jul 2024 18:26:50 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உயிரிழந்த மூதாட்டியின் உடலை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த பெண்கள் சுமந்து சென்று தகனம் செய்தனர்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j296n22xyr7r6rbvrpqeakqt,imgname-whatsapp-image-2024-07-08-at-17-24-22.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;திருப்பூர் மாவட்டம், தாராபுரம் மெட்ரோ சிட்டி பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் குமார் என்பவரின் பெரியம்மா இந்திராணி (வயது 83). இந்திராணி கடந்த 5ம் தேதி வயது மூப்பு காரணமாக உடல்நலம் குன்றி உயிரிழந்தார். இவரது உடலை பெண்கள் மட்டும் சுமந்து சென்று இறுதிச் சடங்கு செய்த சம்பவம் பரவலாக பேசப்பட்டு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;தேயிலை தொழிலாளர்களுக்கு நிரந்தர இடம்; கிருஷ்ணசாமியின் எண்ட்ரியால் வழக்கில் திடீர் திருப்பம்&lt;/p&gt; &lt;p&gt;தமிழகத்தில் பொதுவாக இறுதி ஊர்வலத்தில் பெண்கள் &amp;nbsp;வீதியிலேயே நிறுத்தப்படுவார்கள். இதனை தகர்க்கும் விதமாகவும் பெரியார் செய்த புரட்சியால் பெண்கள் தங்கள் எல்லைகளை கடந்து சாதனை புரிந்து வருகின்றனர் என்பதை உணர்த்தும் வகையில் தாராபுரம் மின் மயானத்தில் தகனம் நடைபெற்றது.&lt;/p&gt; &lt;p&gt;2 மகள்கள், மனைவியை கொன்று தண்ணீர் தொட்டியில் வீசிய கொடூரம்? கோவையில் பரபரப்பு சம்பவம்&lt;/p&gt; &lt;p&gt;இதில் எவ்வித ஜாதி, மத சடங்குகளும் இன்றி பெண்களே இந்திராணி உடலை சுமந்து சென்று இறுதி நிகழ்வுகள் நடத்தப்பட்டது. திராவிடர் கழக பெரியாரிய உணர்வாளர்கள் இணைந்து இந்த புரட்சிகர இறுதி நிகழ்வை நிகழ்த்தியுள்ளனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thirupur</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-thirupur/women-paid-their-last-respects-to-the-body-of-the-deceased-in-tirupur-vel-sgb2mr"/>
        </item>
        <item>
            <title><![CDATA[கள்ளக்குறிச்சி சம்பவம்: நாம்தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.. நடிகர் விதார்த் பேட்டி!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/video/video/the-kallakurichi-incident-is-sad-film-actor-vidharth-was-interviewed-in-tirupur-rag-sfiyac</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/video/video/the-kallakurichi-incident-is-sad-film-actor-vidharth-was-interviewed-in-tirupur-rag-sfiyac</guid>
            <pubDate>Sun, 23 Jun 2024 14:00:13 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற சம்பவம் வருத்தமளிக்கிறது. நம்மை நாம்தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று திருப்பூரில் திரைப்பட நடிகர் விதார்த் பேட்டி அளித்துள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://geo.dailymotion.com/player/x1tbu.html?video=k6ToFPHeUzFhORAUYTE" medium="video" height="768" width="1024"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;திரைப்பட நடிகர் விதார்த் நடிப்பில் லாந்தர் திரைப்படம் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இதனை முன்னிட்டு திருப்பூர் ஊத்துக்குளி ரோடு வாவிபாளையம் பகுதியில் உள்ள திரையரங்கில் நடிகர் விதார்த் ரசிகர்களுடன் லாந்தர் படம் பார்த்தார். இதன் பின்னர் &amp;nbsp;நிருபர்களுக்கு விதார்த் பேட்டி அளித்தார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;அப்போது பேசிய அவர், &ldquo;லாந்தர் திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியாகி பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தில் திரில்லர் கதாபாத்திரத்தில் நான் நடித்துள்ளேன். முதற்கட்டமாக 100 திரையரங்குகளில் படம் வெளியாகி உள்ளது. ரசிகர்களின் வரவேற்பை பொறுத்து கூடுதலாக திரையரங்குகளில் வெளியிடப்படும்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;தமிழகத்தில் நல்ல படங்களுக்கு இடையே &amp;nbsp;எப்போதும் போட்டியிருக்கும். பொதுமக்கள் ஆதரவும் தெரிவிப்பார்கள். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் இறந்துள்ளது வருத்தமளிக்கிறது. இதற்கு யாரையும் குறை சொல்ல முடியாது. நாம்தான் நம்மளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். லாந்தர் படத்திலும் முதல் சீன் கள்ளச்சாராயம் தொடர்பாக இடம்பெற்று இருக்கிறது&rdquo; என்று கூறினார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thirupur</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/video/video/the-kallakurichi-incident-is-sad-film-actor-vidharth-was-interviewed-in-tirupur-rag-sfiyac"/>
        </item>
        <item>
            <title><![CDATA[சினிமா மிஞ்சிய சம்பவம்.. கத்தியுடன் காவலரை விரட்டிய வாலிபர்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/crime/tiruppur-man-arrested-for-attacking-policeman-with-knife-articleshow-q22kewb</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/crime/tiruppur-man-arrested-for-attacking-policeman-with-knife-articleshow-q22kewb</guid>
            <pubDate>Tue, 30 Dec 2025 22:38:24 +0530</pubDate>
            <description><![CDATA[திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவில் சொர்க்க வாசல் திறப்பு பாதுகாப்பு பணியின் போது, காவலர் ஒருவரை வாலிபர் கத்தியால் தாக்க முயன்றார். அந்த காவலர் தனது பெல்ட்டை பயன்படுத்தி தற்காத்துக்கொண்ட நிலையில், தாக்குதல் நடத்திய வாலிபரை சக காவலர்கள் கைது செய்தனர்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kdr3jhjt79m039kx62kgkvgh,imgname-tiruppur-3-1767114360410.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;திருப்பூர் அரிசி கடை வீதியில் வீரராகவ பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு நடைபெற்றது. இதனால் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் கூட்டத்தை கட்டுப்படுத்த திருப்பூர் தெற்கு காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;திடீரென அவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காவலரை கத்தியால் தாக்க முயன்றுள்ளார். இதனை கண்டு அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தாக்குதலில் இருந்து தப்பிக்க கொஞ்சம் தூரம் ஓடிய காவலர் தனது இடுப்பில் இருந்த பெல்ட்டை கழற்றி அதன் மூலம் வாலிபர் கத்தியால் குத்தாமல் தற்காத்துக்கொண்டார்.&lt;/p&gt;&lt;p&gt;இதனையடுத்து அங்கிருந்த சக காவலர்கள் அந்த வாலிபரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வாலிபர் யார்? எதற்காக தாக்க முற்பட்டார் என தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. காவலரை வாலிபர் கத்தியோடு துரத்திய வீடியோ வைரலாகி வருகிறது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே திமுக ஆட்சியில் பொதுமக்களுக்கு மட்டுமல்ல காவல்துறைக்கும் பாதுகாப்பு இல்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thirupur</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/crime/tiruppur-man-arrested-for-attacking-policeman-with-knife-articleshow-q22kewb"/>
        </item>
        <item>
            <title><![CDATA[திருப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் ரொமான்ஸ்; ரூ.13000 அபராதம் விதித்த போலீஸ்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/video/tamilnadu-thirupur/a-romantic-couple-has-been-fined-rs-13-000-for-traveling-dangerously-on-a-two-wheeler-in-tirupur-vel-sh8il8</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/video/tamilnadu-thirupur/a-romantic-couple-has-been-fined-rs-13-000-for-traveling-dangerously-on-a-two-wheeler-in-tirupur-vel-sh8il8</guid>
            <pubDate>Fri, 26 Jul 2024 19:52:21 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;திருப்பூரில் போக்குவரத்து விதிகளை மீறி சாலையில் இருசக்கர வானத்தில் சாகசப் பயணம் மேற்கொண்ட காதல் ஜோடிக்கு ரூ.13 ஆயிரம் அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://geo.dailymotion.com/player/x1tbu.html?video=k2uT8aVgsa9gCvBa4oY" medium="video" height="768" width="1024"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;அண்மை காலமாக ரீல்ஸ் மோகத்தில் பைக்கில் ஸ்டண்ட் செய்து வீடியோ வெளியிடும் கலாசாரம் அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் திருப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இளம் காதல் ஜோடி ஒன்று இருசக்கர வாகனத்தில் ஆபத்தான முறையில் பயணம் செய்து அதனை வீடியோவாக வெளியிட்டு அதனை வைரலாக்கி உள்ளனர்.&lt;/p&gt; &lt;p&gt;அந்த வீடியோவில் இளம் பெண் இருசக்கர வாகனத்தை ஓட்ட, காதலன் பெட்ரோல் டேங்க் மீது அமர்ந்து சாகசப் பயணம் செய்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இதன் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி, ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனத்தை ஓட்டுதல் மற்றும் தலைக்கவசம் அணியாமல் ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனத்தை இயக்கி போக்குவரத்து விதியை மீறியதால் ரூபாய் 13,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thirupur</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/video/tamilnadu-thirupur/a-romantic-couple-has-been-fined-rs-13-000-for-traveling-dangerously-on-a-two-wheeler-in-tirupur-vel-sh8il8"/>
        </item>
        <item>
            <title><![CDATA[கள் உடலுக்கு கேடு என நிரூபித்தால் 10 கோடி ரூபாய் பரிசு! அரசியல் கட்சியினருக்கு விவசாயிகள் சவால்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/rs-10-crore-prize-if-you-prove-that-s-are-harmful-to-the-toddy-farmers-challenge-political-parties-tvk-ss8h0h</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/rs-10-crore-prize-if-you-prove-that-s-are-harmful-to-the-toddy-farmers-challenge-political-parties-tvk-ss8h0h</guid>
            <pubDate>Tue, 25 Feb 2025 15:27:53 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;திருப்பூரில் நடைபெற்ற கள் விடுதலை மாநாட்டில், கள்ளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க விவசாயிகள் வலியுறுத்தினர். கள் மீதான தடையை நீக்க தமிழக அரசுக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01g8082q97449z2fxbtp346sk8,imgname-student-brings-toddy.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கள் விடுதலை மாநாடு நடைபெற்றது.&amp;nbsp;இந்த மாநாட்டில் தமிழ்நாடு கள் இயக்க தலைவர் நல்லசாமி, ஏராளமான விவசாய சங்க தலைவர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். கள்ளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வலியுறுத்தும் வகையில் மங்கை வள்ளி கும்மி குழுவினரின் வள்ளி கும்மி ஆட்டம் நடைபெற்றது.&lt;/p&gt; &lt;p&gt;மாநாட்டில் புறநானூற்று பாடலில் தமிழ் புலவர் ஔவையாருக்கு தகடூர் மன்னர் அதியமான் அவர்கள் கள் விருந்து வைத்த பாடலை மேற்கோள் காட்டி வரையப்பட்ட ஓவியத்திற்கு கள் படையலிட்டு மாநாட்டை தொடங்கினர். மேலும் விவசாய சங்க தலைவர்கள் மாநாட்டு மேடையில் கள் எங்கள் உணவு கள் எங்கள் உரிமை என்ற கோஷங்கள் முழங்க கள்ளை பருகினார்.&lt;/p&gt; &lt;p&gt;தமிழர்களின் முதன்மையான தற்சார்பு தொழிலான பனை தொழிலில் ஈடுபடும் பனையேறிகள் மற்றும் பனை தென்னை விவசாயிகள் மீது தமிழ்நாடு காவல்துறை நடத்தும் அடக்குமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கள்ளை தமிழ்நாட்டின் மதுவிலக்கு சட்டத்திலிருந்து நீக்கி, மரபு வழி உணவு பானமாக அறிவித்து கள் மீதான தடையை தமிழக அரசு நீக்க வேண்டும் என மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் விழுப்புரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் தமிழ்நாடு காவல்துறை கள் இறக்கும் தொழிலாளர்களை அச்சுறுத்துவதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு கள் இயக்கத்தின் தலைவர் நல்லசாமி: 1987இல் கள்ளுக்கான தடை என்பது கொள்கை முடிவு அல்ல கொள்ளை முடிவு. கலப்படத்தை கட்டுப்படுத்த முடியாததால் கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டதாகவும் அரசியலமைப்பு சட்டத்தில் கள்ளுக்கு தடை எனக் கூறவில்லை. அரசியலமைப்பு சட்டத்தின் மீது சத்திய பிரமாணம் செய்து பதவி ஏற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சவால் விடுப்பதாகவும் கள் உடலுக்கு தீங்கானது என்பதை நிரூபித்தால் 10 கோடி ரூபாய் பரிசு வழங்குவதாகவும், சவாலை ஏற்று விவாதத்திற்கு வர அரசியல் கட்சி தலைவர்கள் தயாரா என கேள்வி எழுப்பினார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;மேலும் விவசாயிகளின் அறியாமையை அரசியல்வாதிகள் அறுவடை செய்து வருகிறார்கள். மேலும் வெள்ளைப் பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்தாவிட்டால் இன்னும் ஒரு வருடத்திற்குள் தேங்காயின் விலை 100 ரூபாய்க்கு உயரும் அபாயம் ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார். உடுமலைப்பேட்டையில் வருகின்ற மார்ச் 4ம் தேதி நடைபெற உள்ள கள் குறித்தான கருத்தரங்கத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொள்ள உள்ளார்கள் எனவும் அந்த நிகழ்ச்சியிலும் பாஜக தலைவர் கள் அருந்துவதாக கூறியுள்ளார் எனவும் தெரிவித்தார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thirupur</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/rs-10-crore-prize-if-you-prove-that-s-are-harmful-to-the-toddy-farmers-challenge-political-parties-tvk-ss8h0h"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Accident Video: தவறான திசையில் எண்ட்ரி கொடுத்த கார்; சாலையில் தலைகீழாக கவிழ்ந்த அதிர்ச்சி வீடியோ]]></title>
            <link>https://tamil.asianetnews.com/video/tamilnadu-thirupur/a-car-crashed-into-a-roadblock-in-tirupur-vel-sfsnd7</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/video/tamilnadu-thirupur/a-car-crashed-into-a-roadblock-in-tirupur-vel-sfsnd7</guid>
            <pubDate>Fri, 28 Jun 2024 19:40:19 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;திருப்பூர் மாவட்டம், காரணம்பேட்டை அருகே தனியார் பேருந்தை முந்த முயன்ற போது கார் விபத்துக்குள்ளான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://geo.dailymotion.com/player/x1tbu.html?video=k5wzFvFkT9QDqHAXbB6" medium="video" height="768" width="1024"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;திருப்பூர் மாவட்டம் காரணம்பேட்டையில் இருந்து சூலூர் செல்லும் வழியில் உள்ள என்.ஆர்.டி. பெட்ரோல் பங்க் அருகே தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது பேருந்தை முந்தி செல்லும் நோக்கில் கார் ஒன்று தவறான திசையில் முன்னேறி வந்தது. திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்பாராத விதமாக சாலையின் தடுப்பில் மோதி விபத்து தலைகீழாகக் கவிழ்ந்தது.&lt;/p&gt; &lt;p&gt;இந்த விபத்தில் காரில் இருந்த பயணிகளில் இருவர் லேசான &amp;nbsp;காயங்களுடன் தப்பினர். கார் விபத்துக்கு உள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காயம் அடைந்த இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், விபத்து தொடர்பாக பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thirupur</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/video/tamilnadu-thirupur/a-car-crashed-into-a-roadblock-in-tirupur-vel-sfsnd7"/>
        </item>
        <item>
            <title><![CDATA[மனைவி, குழந்தையை கொலை செய்து நாடகமாடிய கணவர்! சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-thirupur/husband-killed-wife-and-child-in-erode-tvk/articleshow-xk8f0tg</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-thirupur/husband-killed-wife-and-child-in-erode-tvk/articleshow-xk8f0tg</guid>
            <pubDate>Sat, 28 Jun 2025 12:42:23 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ஈரோட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கருதப்பட்ட பெண் மற்றும் தொட்டிலில் இறந்து கிடந்த குழந்தையின் மரணத்தில் திடீர் திருப்பமாக கணவர் இருவரையும் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jytnv0sj0pha4g7e7pkga31n,imgname-murder-5-1751094494002.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த வெள்ளோடு, காந்திநகரை சேர்ந்தவர் கவின் பிரசாத் (32). இவர் பெருந்துறையில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி அமராவதி (28). இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆதிரா என்ற ஆண் குழந்தை இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு வழக்கம் போல் வேலை முடிந்து கவின் பிரசாத் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் குழந்தையை தொட்டிலில் படுக்க வைத்துவிட்டு கணவன், மனைவி இருவரும் தூங்க சென்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;மனைவி தற்கொலை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் கணவர் எழுந்து பார்த்த போது மனைவி இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் படுக்கை அறையில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து கணவர் அலறி துடித்தார். சத்தம் கேட்டு பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அவர்களின் உதவியுடன் அமராவதியை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பாிசோதனை செய்த மருத்துவர்கள் அமராவதி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இருவரின் உடலை மீட்ட போலீஸ்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கவின் பிரசாத் கதறி அழுதார். இதனிடையே குழந்தையின் ஞாபகம் வந்து பார்த்த போது தொட்டிலில் குழந்தையும் அசைவற்று இருப்பதை கண்டனர். உடனே குழந்தையையும் அதே மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தையும் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வெள்ளோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;விசாரணையில் திடீர் திருப்பம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இது குறித்து வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து குடும்ப தகராறில் அமராவதி மகனை கொன்று தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு என்ன காரணம் குறித்து விசாரணை நடத்தினர். இதனிடையே, திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்றது. இந்நிலையில், திடீர் திருப்பமாக அமராவதி கணவர் கவின் பிரசாத் மனைவியையும், குழந்தையையும் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;நடத்தையில் சந்தேகம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;இதனையடுத்து அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் மனைவி அமராவதியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் இருவரையும் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். மனைவி மற்றும் குழந்தையை கொலை செய்து விட்டு நாடகமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thirupur</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-thirupur/husband-killed-wife-and-child-in-erode-tvk/articleshow-xk8f0tg"/>
        </item>
        <item>
            <title><![CDATA[உரிமையாளரை கடத்தி நிலத்தை அபகரிக்க முயற்சி; பாஜக பிரமுகர்கள் உள்பட 3 பேர் கைது]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-thirupur/3-persons-arrested-for-land-accusation-case-in-tiruppur-vel-sg5maj</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-thirupur/3-persons-arrested-for-land-accusation-case-in-tiruppur-vel-sg5maj</guid>
            <pubDate>Fri, 05 Jul 2024 19:45:55 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;திருப்பூரில் நிலத்தின் உரிமையாளரை கடத்தி அவரிடம் இருந்து நிலத்தை அபகரிக்க முயன்ற பாஜக பிரமுகர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள இருவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j21kzrjfn7nm720azbz4erjh,imgname-mixcollage-05-jul-2024-07-45-pm-4202.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தரணிதரன். இவருக்கு சொந்தமாக தாராபுரம் - பழனி சாலையில் 35 சென்ட் இடம் உள்ளது. இந்த இடத்தை தாராபுரத்தைச் சேர்ந்த பா.ஜ.க வைச் முன்னாள் நிர்வாகியான ஹரி பிரசாத் என்பவருக்கு 2.5 கோடி ரூபாய்க்கு விற்பதற்கு பேசி முடிக்கப்பட்டது.&lt;/p&gt; &lt;p&gt;ஹரி பிரசாத் நிலத்தை வாங்க 8.25 லட்சம் ரூபாய் பணத்தை தரணிதரனிடம் கொடுத்த நிலையில் மீதி பணத்தை கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. மீதிப் பணத்தை கொடுக்காமல் நிலத்தை தனது பெயருக்கு மாற்றி கொடுக்க தரணிதரனை &amp;nbsp;மிரட்டியதுடன், தரணிதரனை தாராபுரத்தில் இருந்து கோவை அழைத்து வந்து ரயில் நிலையம் அருகில் உள்ள ஹோட்டலில் வைத்து அவரிடம் இருந்து வீட்டு பத்திரம், கார், ஏ.டி.எம் கார்டு உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டதாகக் கூறப்படுகின்றது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;எங்கள் தலைவர்களின் செயல்பாடுகளால் பாஜக மிகப்பெரிய அளவி்ல வளர்ந்து வருகிறது - எல்.முருகன்&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இது தொடர்பாக தரணிதரன் கோவை பந்தயசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் கூட்டு சதி உட்பட நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் தாராபுரத்தைச் சேர்ந்த ஹரி பிரசாத், கோவையை சேர்ந்த பிரவீன் குமார் மற்றும் பாபு ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.&lt;/p&gt; &lt;p&gt;நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை; கேமரா இருப்பது தெரியாமல் பணிப்பெண்கள் விபரீத செயல்&lt;/p&gt; &lt;p&gt;இந்த வழக்கில் தொடர்புடைய செந்தில் மற்றும் &amp;nbsp;ஜான்சன் என்ற இருவரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட தாராபுரத்தைச் சேர்ந்த ஹரி பிரசாத் மற்றும் கோவையைச் சேர்ந்த பாபு ஆகியோர் பாஜக முன்னாள் நிர்வாகிகள் என்பதும், பிரவீன் குமார் அனுமன் சேனா அமைப்பின் கோவை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்து வருவதும் குறிப்பிடதக்கது. கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thirupur</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-thirupur/3-persons-arrested-for-land-accusation-case-in-tiruppur-vel-sg5maj"/>
        </item>
    </channel>
</rss>
