<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes"?>
<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Tue, 06 Jan 2026 16:27:27 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss/tamilnadu-thirunelveli" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[அள்ளுது அள்ளுது. நெல்லை மொத்தமா தூக்குது.. அஞ்சு மணிக்கு தியேட்டரில் குவிந்த மக்கள்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/the-movie-coolie-rocked-the-theaters-in-tamil-nadu-with-fans-64opof9</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/the-movie-coolie-rocked-the-theaters-in-tamil-nadu-with-fans-64opof9</guid>
            <pubDate>Thu, 14 Aug 2025 09:15:16 +0530</pubDate>
            <description><![CDATA[சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171-வது படமான கூலி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. ரசிகர்கள் படத்தை கொண்டாடி வரும் அதே வேளையில், சில நெகட்டிவ் விமர்சனங்களும் எழுந்துள்ளன.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k2kajrz47e7ycvg344d70x4d,imgname-whatsapp-image-2025-08-14-at-09.08.43-1755142775780.jpeg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171-வது படமான கூலி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. ரசிகர்கள் படத்தை கொண்டாடி வரும் அதே வேளையில், சில நெகட்டிவ் விமர்சனங்களும் எழுந்துள்ளன.&lt;img&gt;&lt;p&gt;சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து திரையரங்கை கலக்கி கொண்டிருக்கும் திரைப்படம் கூலி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஒரு பான்-இந்திய திரைப்படமாக கூலி அமைந்துள்ளது. இந்த திரைப்படம் ரஜினிகாந்தின் 171-வது படமாகும்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இப்படம் (ஆகஸ்ட் 14) இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. நாகார்ஜுனா, ஆமிர் கான், ஸ்ருதி ஹாசன், உபேந்திரா, சத்யராஜ், செளபின் ஷாஹிர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். படத்தின் இசையை அனிருத் ரவிச்சந்தர் அமைத்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கூலி திரைப்படம் உலகளவில் 4500 முதல் 5000 திரைகளில் வெளியாகியுள்ளது. முன்பதிவில் படம் 100 கோடிக்கு மேல் வசூலித்து, விஜய்யின் லியோ படத்தின் முன்பதிவு சாதனையை முறியடித்துள்ளது. இந்தியாவில் தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கும், கேரளாவில் காலை 6 மணிக்கும் முதல் காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்தின் நடிப்பு, குறிப்பாக அவரது இளமைத் தோற்றமும், கம்பீரமான ஆக்ஷன் காட்சிகளும் ரசிகர்களை கவர்ந்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேலும் நடிகர் நாகார்ஜுனாவின் ஸ்டைலிஷ் வில்லன் கதாபாத்திரம் படத்தின் முதுகெலும்பாக உள்ளதாகவும் பாராட்டப்படுகிறது. அமிர் கானின் சிறப்புத் தோற்றம் திரையரங்கை அதிர வைத்ததாக கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;கூலி திரைப்படத்தில் இடைவேளைக்கு முந்தைய திருப்பம் மற்றும் இரண்டாம் பாதியின் வேகமான சண்டை காட்சிகள் படத்தை வேற லெவலுக்கு கொண்டு செல்வதாக ரசிகர்கள் உற்சாகமாக தெரிவிக்கின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதே போல படத்தில் நெகட்டிவ் விமர்சனங்களும் வெளியாகி வருகிறது. அந்த வகையில் நாகார்ஜுனாவின் கதாபாத்திர வடிவமைப்பு சரியாக இல்லை என்று சிலர் விமர்சித்துள்ளனர். இந்த நிலையில் திரைப்படத்தை திரையரங்கில் பார்க்க ரசிகர்கள் குவிந்து வருகிறார்கள்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை போன்ற இடங்களில் தியேட்டர் விழாக்கோலமாக காட்சி அளிக்கிறது..நெல்லையில் ரசிகர்கள் குத்தாட்டம் போட்டி பால் அபிஷைகம் செய்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகிறார்கள்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thirunelveli</category>
            <dc:creator>Ajmal Khan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/the-movie-coolie-rocked-the-theaters-in-tamil-nadu-with-fans-64opof9"/>
        </item>
        <item>
            <title><![CDATA[கவின் ஆணவக்கொ**லையில் திடீர் ட்விஸ்ட்! சுர்ஜித் உறவினரை தூக்கிய போலீஸ்! விசாரணையில் 'திடுக்' தகவல்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-thirunelveli/surjith-relative-arrested-in-kavin-honor-killing-case-in-tamilnadu-articleshow-6k24673</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-thirunelveli/surjith-relative-arrested-in-kavin-honor-killing-case-in-tamilnadu-articleshow-6k24673</guid>
            <pubDate>Wed, 13 Aug 2025 20:16:08 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;நெல்லையில் கவின் ஆணவக்கொலை வழக்கில் கொலையாளி சுர்ஜித்தின் உறவினரும் கைது செய்யப்பட்டுள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k2hy9bq7jmfnxx15kh7wzbj4,imgname-kavin-surjith-1755096329959.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Surjith Rrelative Arrested In Kavin Honor Killing Case: தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின் (27) ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கவினும், திருநெல்வேலியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்தனர். அப்பெண்ணின் பெற்றோர் இருவரும் காவல் துறையில் சப் இன்ஸ்பெக்டர்களாக பணிபுரிந்து வந்த நிலையில், காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணின் சகோதரரின் சுர்ஜித் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐடி ஊழியர் கவினை வெட்டி படுகொலை செய்தார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;நெல்லை கவின் ஆணவப் படுகொலை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;சுர்ஜித் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சுர்ஜித்தின் பெற்றோர் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். பின்பு சுர்ஜித்தின் தந்தையான சப் இன்ஸ்பெக்டர் சரவணனை போலீசார் கைது செய்துள்ளனர். தனது மகனின் சாவுக்கு துணைபோன சுர்ஜித்தின் தாயையும் கைது செய்ய வேண்டும் என கவினின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர். பல அரசியல் தலைவர்கள் கவின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஆணவக் கொலைகளுக்கு எதிராக தனி சட்டம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;திமுக எம்.பி. கனிமொழி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் கவினின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். முதல்வர் மு.க.ஸ்டாலினும் கவினின் குடும்பத்துக்கு தொலைபேசி வாயிலாக ஆறுதல் தெரிவித்தார். ஆணவக் கொலைகளுக்கு எதிராக தனி சட்டம் இயற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சுர்ஜித்தின் உறவினர் கைது&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இதற்கிடையே இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிண்றனர். கொலையாளி சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணன் ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். மேலும் கொலை நடந்த இடத்துக்கும் போலீசார் சுர்ஜித்தை அழைத்து சென்றனர். இந்நிலையில், கவின் கொலை வழக்கில் 3வதாக ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது சுர்ஜித்தின் சித்தி மகன் ஜெயபாலன் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;நீதிமன்ற காவலில் அடைப்பு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;கவினை கொலை செய்ய சுர்ஜித்துக்கு கவின் உதவியதாக கூறப்படுகிறது. அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், விசாரணைக்கு பிறகு சுர்ஜித்தையும், சரவணனையும் மற்றும் ஜெயபாலனையும் போலீசார் இன்று நெல்லை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். அவர்கள் மூன்று பேரையும் ஆகஸ்ட் 26ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thirunelveli</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-thirunelveli/surjith-relative-arrested-in-kavin-honor-killing-case-in-tamilnadu-articleshow-6k24673"/>
        </item>
        <item>
            <title><![CDATA[வெள்ள அபாய எச்சரிக்கை:  தத்தளிக்கும் நெல்லை ! அணைகள் கிடுகிடு உயர்வு.. ஆற்றில் இறங்கினால் ஆபத்து! கலெக்டர் வார்னிங்.]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/thamirabarani-flood-alert-16000-cusecs-water-released-7u32cgx</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/thamirabarani-flood-alert-16000-cusecs-water-released-7u32cgx</guid>
            <pubDate>Mon, 24 Nov 2025 21:39:39 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Thamirabarani Flood Alert தாமிரபரணியில் 16,000 கன அடி நீர் திறப்பு. நெல்லை மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. ஆற்றில் இறங்கத் தடை. பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kav9vqmw93rrhgs3mq7mh3xh,imgname-thamirabarani-flood-alert-1764000390812.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Thamirabarani Flood Alert தாமிரபரணியில் 16,000 கன அடி நீர் திறப்பு. நெல்லை மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. ஆற்றில் இறங்கத் தடை. பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், முக்கிய அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் பாதுகாப்பு கருதி தாமிரபரணி ஆற்றில் அதிகளவிலான உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரங்களாக விளங்கும் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தொடர் மழையின் காரணமாக அணைகளின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காரையாறு மற்றும் சேர்வலாறு அணைகளில் இருந்து சுமார் 12,000 கன அடி நீரும், மணிமுத்தாறு அணையில் இருந்து சுமார் 4,000 கன அடி நீரும் என மொத்தம் 16,000 கன அடிக்கும் அதிகமான தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தற்போது பெய்து வரும் மழையின் அளவைப் பொறுத்து, ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்கப்படலாம். இதனால் ஆற்றில் நீரின் வேகம் மிகவும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் யாரும் எக்காரணம் கொண்டும் தாமிரபரணி ஆற்றில் இறங்க வேண்டாம் என்றும், குளிக்கவோ அல்லது துணி துவைக்கவோ செல்ல வேண்டாம் என்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேலும், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் கால்நடைகளை ஆற்றில் இறக்கி குளிப்பாட்டுவதைத் தவிர்க்க வேண்டும். தாமிரபரணி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் நீர் வரத்தை கவனித்து, பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thirunelveli</category>
            <dc:creator>Suresh Manthiram</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/thamirabarani-flood-alert-16000-cusecs-water-released-7u32cgx"/>
        </item>
        <item>
            <title><![CDATA[இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த தமிழ்நாடு! நீர் மேலாண்மையில் அசத்திய நெல்லை மாவட்டம்!!! மத்திய அரசின் உயரிய விருது…]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-thirunelveli/tirunelveli-secures-first-rank-in-the-best-district-national-water-awards-8bqwnq0</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-thirunelveli/tirunelveli-secures-first-rank-in-the-best-district-national-water-awards-8bqwnq0</guid>
            <pubDate>Wed, 12 Nov 2025 20:07:44 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;National Water Awards 6வது தேசிய தண்ணீர் விருதுகள் 2024 அறிவிப்பு! சிறந்த மாவட்டமாக (தெற்கு மண்டலம்) திருநெல்வேலிக்கு முதலிடம். தமிழகத்திற்குத் தொழில், நீர் மேலாண்மை பிரிவுகளிலும் விருது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k9w7wgt6q3bkjr2q65bgy96h,imgname-national-water-awards-2-1762958132038.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;National Water Awards 6வது தேசிய தண்ணீர் விருதுகள் 2024 அறிவிப்பு! சிறந்த மாவட்டமாக (தெற்கு மண்டலம்) திருநெல்வேலிக்கு முதலிடம். தமிழகத்திற்குத் தொழில், நீர் மேலாண்மை பிரிவுகளிலும் விருது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நீர்வளத் துறை இன்று (நவம்பர் 11, 2025) 6வது தேசிய தண்ணீர் விருதுகள் 2024-ன் வெற்றியாளர் பட்டியலை வெளியிட்டது. இதில், தமிழகம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்திற்கு பல்வேறு பிரிவுகளில் முதன்மை விருதுகள் கிடைத்துள்ளன. நீரைச் சேமித்தல் மற்றும் நிர்வாகத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களைப் பாராட்ட 2018 ஆம் ஆண்டு முதல் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தேசிய அளவில் 'சிறந்த மாவட்டம்' என்ற பிரிவில், தெற்கு மண்டலத்தில் (South Zone) தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. நீர்வள மேலாண்மை, நீர் சேமிப்பு மற்றும் புனரமைப்புப் பணிகளில் திருநெல்வேலி மாவட்டம் மேற்கொண்ட சிறப்பான முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தேசிய தண்ணீர் விருதுகளில் திருநெல்வேலி மாவட்டத்தைத் தவிர, தமிழகத்தைச் சேர்ந்த வேறு சில நிறுவனங்களும், சங்கங்களும் பெருமை சேர்த்துள்ளன:&lt;/p&gt;&lt;p&gt;&bull; சிறந்த தொழில் (Best Industry): காஞ்சிபுரத்தில் உள்ள அப்போலோ டயர்கள் லிமிடெட் நிறுவனம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. நீர் மறுசுழற்சி மற்றும் தொழிற்சாலைகளில் நீர் மேலாண்மை ஆகியவற்றில் சிறந்த பங்களிப்பிற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&bull; சிறந்த நீர் பயனர் சங்கம் (Best Water User Association): கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வேட்டைக்காரன்புதூர் கால்வாய் ஓடையகுளம் கிராம நீர் பயனர் சங்கம் முதலிடத்தை வென்றுள்ளது. நீர்ப்பாசன நீர் மேலாண்மையில் இந்தச் சங்கத்தின் கூட்டு முயற்சி பாராட்டப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&bull; சிறந்த கிராம பஞ்சாயத்து (Best Village Panchayat): திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பாலாபுரம் கிராமம் இந்த பிரிவில் மூன்றாம் இடத்தை (கூட்டு வெற்றியாளர்) பெற்று, தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தேசிய தண்ணீர் விருதுகளை வென்ற 46 வெற்றியாளர்களுக்கும், 2025 நவம்பர் 18 ஆம் தேதி டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இந்நிகழ்ச்சியில் இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு அவர்கள் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு, விருதுகளை வழங்கி கௌரவிக்க உள்ளார். இந்த விருது, நீர்வளத் துறையில் நிலையான கொள்கைகள் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான மத்திய அரசின் தொடர் முயற்சியைப் பிரதிபலிக்கிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thirunelveli</category>
            <dc:creator>Suresh Manthiram</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-thirunelveli/tirunelveli-secures-first-rank-in-the-best-district-national-water-awards-8bqwnq0"/>
        </item>
        <item>
            <title><![CDATA[3வது முறை நிரம்பி வழியும் அடவிநயினார் அணை! மகிழ்ச்சியில் விவசாயிகள்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-thirunelveli/aadavinaayinar-dam-fills-for-third-time-in-one-year-farmers-rejoice-8gru8ny</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-thirunelveli/aadavinaayinar-dam-fills-for-third-time-in-one-year-farmers-rejoice-8gru8ny</guid>
            <pubDate>Sun, 17 Aug 2025 19:00:27 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தென்காசியில் உள்ள அடவிநயினார் அணை, இந்த ஆண்டு மூன்றாவது முறையாக நிரம்பியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, உபரிநீர் அனுமன் நதியில் வெளியேற்றப்படுகிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k2w346d5z1hwvpfmjn04bemn,imgname-ggvixvfxgaa9-i8-1755436947877.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தென்காசியில் உள்ள அடவிநயினார் அணை, இந்த ஆண்டு மூன்றாவது முறையாக நிரம்பியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, உபரிநீர் அனுமன் நதியில் வெளியேற்றப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் பரவலான மழையின் காரணமாக, அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, தென்காசி மாவட்டத்தில் உள்ள அடவிநயினார் அணை, இந்த ஆண்டு மூன்றாவது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;132 அடி உயரம் கொண்ட அடவிநயினார் அணைப் பகுதியில் பெய்த கனமழையால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நேற்று நிரம்பி வழிந்தது. ஏற்கனவே இரண்டு முறை நிரம்பியிருந்த இந்த அணை, தென்மேற்கு பருவமழையின் காரணமாக மீண்டும் நிரம்பியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;அணைக்கு வினாடிக்கு 70 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், அந்த உபரிநீர் முழுவதும் அனுமன் நதியில் வெளியேற்றப்படுகிறது. இதனால், பொதுமக்கள் ஆற்றின் கரையோரங்களுக்குச் செல்ல வேண்டாம் என்றும், ஆற்றில் இறங்கி குளிப்பதைத் தவிர்க்குமாறும் பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒரே ஆண்டில் அணை மூன்று முறை நிரம்பியுள்ளதால், இப்பகுதி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இது விவசாயத்திற்கு தேவையான நீரை உறுதி செய்வதால், நல்ல விளைச்சல் கிடைக்கும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thirunelveli</category>
            <dc:creator>SG Balan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-thirunelveli/aadavinaayinar-dam-fills-for-third-time-in-one-year-farmers-rejoice-8gru8ny"/>
        </item>
        <item>
            <title><![CDATA[தென்காசி பக்கத்தில் ஃபேமஸான 3 ஐயப்பன் கோயில்கள்..! நடை திறக்கும் நேரம்? எப்படி செல்வது?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/spiritual/top-3-famous-ayyappa-temples-near-tenkasi-to-visit-this-sabarimala-season-8rd991b</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/spiritual/top-3-famous-ayyappa-temples-near-tenkasi-to-visit-this-sabarimala-season-8rd991b</guid>
            <pubDate>Fri, 21 Nov 2025 10:00:25 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Top 3 Famous Ayyappa Temples Near Tenkasi: சபரிமலை சீசன் தொடங்கி விட்ட நிலையில், தென்காசிக்கு அருகில் கேரளாவில் உள்ள 3 புகழ்பெற்ற ஐயப்பன் கோயில்கள் குறித்தும், அங்கு எப்படி செல்வது? என்பது குறித்தும் இந்த செய்தியில் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kah626dn838hg78877sj4jdc,imgname-aryankavu-temple-1763660863925.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Top 3 Famous Ayyappa Temples Near Tenkasi: சபரிமலை சீசன் தொடங்கி விட்ட நிலையில், தென்காசிக்கு அருகில் கேரளாவில் உள்ள 3 புகழ்பெற்ற ஐயப்பன் கோயில்கள் குறித்தும், அங்கு எப்படி செல்வது? என்பது குறித்தும் இந்த செய்தியில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மண்டல மகர விளக்கு பூஜைக்காக திறக்கப்பட்டுள்ளது. தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். சபரிமலைக்கு செல்லும் வழியில் இருக்கும் மற்ற ஐயப்பன் கோயில்களுக்கும் செல்ல பக்தர்கள் தவறுவதில்லை.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;தென்காசி, செங்கோட்டை, ஆரியங்காவு, புனலூர், பத்தனம்திட்டா வழியாக சபரிமலைக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் செல்கின்றனர். தென்காசிக்கு அருகில் கேரள மாநிலத்தில் உள்ள 3 புகழ்பெற்ற ஐயப்பன் கோயில்கள் குறித்து பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தென்காசியில் இருந்து சுமார் 32 கிமீ தொலைவில் கேரளாவின் அச்சன்கோவில் என்னும் இடத்தில் இந்த ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் கருவறையில் வனராஜனாக அமர்ந்த நிலையில் இருக்கும் சுவாமி ஐயப்பன், கையில் அமுதமும், காந்தமலை வாளும் ஏந்தி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.&lt;/p&gt;&lt;p&gt;திருமணமாகாதவர்கள் அச்சன்கோவில் தர்மசாஸ்தாவை வழிபட்டால் உடனே திருமணம் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எனவே பக்தர்கள் இந்த ஐய்யப்பனை கல்யாண சாஸ்தா என்று அழைக்கின்றனர். அடர்ந்த வனப்பகுதியின் உள்ளே இருக்கும் அச்சன்கோவில் ஐயப்பனை காண வனங்கள் வழியாக செல்வது புத்துணர்ச்சியை கொடுக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;நடை திறந்திருக்கும் நேரம்:&lt;/strong&gt; தினமும் அதிகாலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;எப்படி செல்வது? &lt;/strong&gt;தென்காசியில் இருந்து செங்கோட்டை, பண்பொழி, மேக்கரை வழியாக மலைப்பாதையில் பயணித்து இந்த கோயிலை அடையலாம். செங்கோட்டையில் தினமும் காலை, மாலை வேளையில் கேரள அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தென்காசியில் இருந்து சுமார் 47 கிமீ தொலைவில் குளத்துப்புழா என்ற இடத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. கோயில் கருவறையில் சுவாமி ஐயப்பன் குழந்தையாக காட்சி தருவதால் 'பால சாஸ்தா' என்று அழைக்கின்றனர்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;குழந்தை வரம் வேண்டி ஐயப்பனை மனமுருகி பிரார்த்தனை செய்தால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் ஐதிகம். கோயிலின் முன்பகுதியில் கல்லடா ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் உற்சாகமாக குளித்து விட்டு புத்துணர்ச்சியுடன் ஐயப்பனை வழிபடலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;நடை திறந்திருக்கும் நேரம்: &lt;/strong&gt;தினமும் அதிகாலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை. மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;எப்படி செல்வது? &lt;/strong&gt;தென்காசியில் இருந்து செங்கோட்டை, ஆரியங்காவு, தென்மலை வழியாக குளத்துப்புழா செல்லலாம். தென்காசியில் இருந்து திருவனந்தபுரத்துக்கு 1 மணி நேரத்துக்கு ஒரு முறை இயக்கப்படும் கேரள அரசு பேருந்துகள் குளத்துப்புழா வழியாகச் செல்லும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தென்காசியில் இருந்து 22 கிமீ தொலைவில் சபரிமலை செல்லும் பிரதான சாலையில் ஆரியங்காவு பகுதியில் இந்த கோயில் அமைந்துள்ளது. மற்ற கோயில்களில் பிரம்மச்சாரியாக உள்ள ஐயப்பன் இந்த கோயிலில் மட்டும் புஷ்கலை என்னும் பெண்ணைத் திருமணம் செய்தவராக பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.&lt;/p&gt;&lt;p&gt;தமிழக&zwj; எல்லையில் அமைந்துள்ளதால் இந்த கோயிலின் பூஜைகள் தமிழக முறைப்படி நடைபெறுகிறது. சபரிமலை செல்லும் பிரதான சாலையில் உள்ளதால் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் ஆரியங்காவு ஐயப்பனை தரிசிக்க தவறுவதில்லை.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;நடை திறந்திருக்கும் நேரம்: &lt;/strong&gt;தினமும் அதிகாலை 4 மணி முதல் நண்பகல் 12 மணி வரை. மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;எப்படி செல்வது? &lt;/strong&gt;தென்காசியில் இருந்து செங்கோட்டை, புளியறை வழியாக ஆரியங்காவு சென்றடையலாம். தென்காசியில் இருந்து 10 நிமிடத்துக்கு ஒரு பேருந்துகள் ஆரியங்காவு வழியாக கேரளாவின் மற்ற இடங்களுக்கு செல்கின்றன. கோயிலுக்கு முன்பாகவே பேருந்து நிறுத்தம் உள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;சென்னையில் இருந்து தென்காசி வழியாக செல்லும் கொல்லம் எக்ஸ்பிரஸ் (வ.எண்: 16101), மதுரை, குருவாரூர் எக்ஸ்பிரஸ் (வ.எண்: 16327) ஆகிய ரயில்கள் ஆரியங்காவு ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thirunelveli</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/spiritual/top-3-famous-ayyappa-temples-near-tenkasi-to-visit-this-sabarimala-season-8rd991b"/>
        </item>
        <item>
            <title><![CDATA[திருநெல்வேலி இன்று முக்கிய இடங்களில் மின்தடை அறிவிப்பு.! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-thirunelveli/tirunelveli-power-cut-today-major-areas-disrupted-be9kx9r</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-thirunelveli/tirunelveli-power-cut-today-major-areas-disrupted-be9kx9r</guid>
            <pubDate>Sat, 03 Jan 2026 07:56:06 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Tirunelveli Power Cut: திருநெல்வேலி நகர்ப்புற கோட்ட துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், சுரண்டை, பணகுடி, சிந்தாமணி, ஆலங்குளம், மற்றும் வீரவனநல்லூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இன்று மின் தடை செய்யப்படுகிறது.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k00n397xnythkefe061ac0g4,imgname-power-cut-1752368784637.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Tirunelveli Power Cut: திருநெல்வேலி நகர்ப்புற கோட்ட துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், சுரண்டை, பணகுடி, சிந்தாமணி, ஆலங்குளம், மற்றும் வீரவனநல்லூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இன்று மின் தடை செய்யப்படுகிறது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;திருநெல்வேலி நகர்ப்புற கோட்டத்திற்கு உட்பட்ட முக்கிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக இன்று நகரின் முக்கிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;சம்பவர் வடகரை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;சாம்பவர் வடகரை, சின்ன தம்பி, நாடனூர், பொய்கை, கோவிலாந்தனூர், கள்ளம்புள்ளி, எம்.சி.பொய்கை, துரைசாமிபுரம் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சுரண்டை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;சுரண்டை, இடையர் தாவனை, குளையனேரி, ரெட்டைக்குளம், சுந்தரபாண்டியபுரம், பாடக்குறிச்சி, வாடியூர், ஆனைக்குளம், கரையாலனூர், அச்சங்குன்றம்&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிவகாமிபுரம், பணகுடி, கொங்கந்தன், ரொஸ்மியால்புரம், புஷ்பவனம், சாய்தம்மாள்புரம், லெப்பைக்குடி இருப்பு, தண்டையார்குளம், முத்துசாமிபுரம், காவல்கிணறு, பாப்பாங்குளம், பாப்பாங்குளம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் அடங்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;வீரசிகாமணி&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;வீரசிகாமணி, பட்டடைகட்டி, அருணாச்சலபுரம், அரியநாயகிபுரம், பாம்பு கோயில், வென்றிலிங்கபுரம், திருமலாபுரம், வடநத்தம்பட்டி, சேர்ந்தமரம், நடுவக்குறிச்சி&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சிந்தாமணி&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;சிந்தாமணி, அய்யபுரம், ராஜகோபாலபேரி, ரத்தினபேரி, இந்திராநகர், புனையபுரம், கடுவெட்டி, சிங்கிலிபட்டி, சங்கனபேரி, சிதம்பரப்பேரி, கந்தரேசபுரம், திருவேட்டூர், திருவெள்ளூர், சொக்கம்பட்டி.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;உதுமலை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஊதுமலை, கீழக்கலங்கல், குறிஞ்சன்குளம், மேல மருதபுரம், சோலை சேரி, கருவந்தா, அமுதபுரம், மாவிலியூத்து, கள்ளத்திக்குளம், கங்கணக்கிணறு, ருக்குமணியாள்புரம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஊத்துமலை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஊதுமலை, கீழக்கலங்கல், குறிஞ்சன்குளம், மேல மருதபுரம், சோலை சேரி, கருவந்தா, அமுதபுரம், மாவிலியூத்து, கள்ளத்திக்குளம், கங்கணக்கிணறு, ருக்குமணியாள்புரம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஆலங்குளம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஆலங்குளம், ஆண்டிபட்டி, நல்லூர், சிவலர்குளம், இந்தாங்கத்தளை, தூத்துக்குடி, கல்லூத்து, கருவன்கோட்டை, குறிப்பங்குளம், அத்தியூத்து, குத்தபாஞ்சான்,&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;அடைக்கலப்பட்டினம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;மாயமாங்குறிச்சி, கழுநீர்குளம், அடைக்கலப்பட்டினம், பூலாங்குளம், முத்துகிருஷ்ணபேரி&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஓத்துலுக்கபட்டி&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஆழ்வந்துழுகப்பட்டி, ஒதுலுகாபட்டி, செங்குளம், கபாலிபாறை, இடைகால், அணைந்த நாடார்பட்டி, தலையூத்து, பனையங்குறிச்சி, நாலாங்கத்தாளை, கீழக்கூத்தபாஞ்சன், காசிங்கர்காமம், காளிடைக்கூர்&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;வீரவனநல்லூர்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;வீரவநல்லூர், சத்துபத்து, அரிஹேசநல்லூர், வெள்ளங்குளி, ரெங்கசமுத்திரம், கூனியூர், காருக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thirunelveli</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-thirunelveli/tirunelveli-power-cut-today-major-areas-disrupted-be9kx9r"/>
        </item>
        <item>
            <title><![CDATA[நெல்லை மக்கள் தலையில் இடியை இறக்கிய மாநகராட்சி: குடிநீர் வரி கட்ட இனி சொத்தையே விற்க வேண்டிவரும் ! கட்டணம் 300% உயர்கிறது!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-thirunelveli/shock-for-nellai-residents-water-tax-to-increase-up-to-300-in-corporation-bnxq431</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-thirunelveli/shock-for-nellai-residents-water-tax-to-increase-up-to-300-in-corporation-bnxq431</guid>
            <pubDate>Fri, 07 Nov 2025 09:00:57 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Water Tax நெல்லை மாநகராட்சிக் கூட்டத்தில் குடிநீர்க் கட்டணம் 50% முதல் 300% வரை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை வைப்புத்தொகையும் உயர்கிறது. தீர்மானம் நவம்பர் 10 அன்று தாக்கல்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k9d3wnj7ydx04bcn4vsj9814,imgname-tirunelveli-1762450626119.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Water Tax நெல்லை மாநகராட்சிக் கூட்டத்தில் குடிநீர்க் கட்டணம் 50% முதல் 300% வரை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை வைப்புத்தொகையும் உயர்கிறது. தீர்மானம் நவம்பர் 10 அன்று தாக்கல்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகம், நிதி ஆதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. வருகிற நவம்பர் 10-ம் தேதி நடைபெற உள்ள மாமன்றக் கூட்டத்தில், குடிநீர் கட்டணத்தை 50 சதவீதம் முதல் 300 சதவீதம் வரை உயர்த்தும் தீர்மானம் முன்மொழியப்படவுள்ளது. அத்துடன், புதிய பாதாள சாக்கடை திட்டத்திற்கான வைப்புத் தொகையையும் (Deposit Fee) அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்தால், நெல்லை மாநகர மக்களின் மாதச் செலவில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குடிநீர்க் கட்டண உயர்வு வீடுகளின் பரப்பளவு மற்றும் கட்டட வகையின் அடிப்படையில் மாறுபடுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;600 சதுர அடிக்கு கீழ் உள்ள வீடுகள்- புதிய கட்டணம் (மாதம்) ₹120&lt;/p&gt;&lt;p&gt;வணிக மற்றும் தொழில் நிறுவனங்கள்- புதிய கட்டணம் (மாதம்) ₹360&lt;/p&gt;&lt;p&gt;அதேபோல, 600-1,200 சதுர அடி, 1,200-1,800 சதுர அடி, 1,800-3,500 சதுர அடி, மற்றும் 10 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள கட்டடங்களுக்கும் தனித்தனியாகக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, உயர்வுக்கான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பயன்பாட்டிற்கு ஏற்ற கட்டணத்தை நிர்ணயிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குடிநீர்க் கட்டண உயர்வு மட்டுமின்றி, பாதாள சாக்கடை திட்டத்தில் சேருவதற்கான வைப்புத் தொகையையும் மாநகராட்சி உயர்த்த முடிவெடுத்துள்ளது. முன்னர் பொதுவாக ₹5,000 ஆக இருந்த வைப்புத் தொகை, இப்போது கட்டடத்தின் பரப்பளவைப் பொறுத்து வேறுபடுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&bull; 600 சதுர அடி வரை உள்ள வீடுகள்: ₹7,500&lt;/p&gt;&lt;p&gt;&bull; வணிகம் சார்ந்த கட்டடங்கள்: ₹10,000&lt;/p&gt;&lt;p&gt;&bull; தொழில் நிறுவனங்களின் கட்டடங்கள்: ₹15,000&lt;/p&gt;&lt;p&gt;மேலும், 1,200 சதுர அடி கட்டடங்களுக்கு ₹10,000 எனவும், 10 ஆயிரம் சதுர அடிக்கு மேற்பட்ட கட்டடங்களுக்கு ₹40,000 எனவும் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நவம்பர் 10 அன்று நடைபெறும் மாமன்றக் கூட்டத்தில் இந்தக் கட்டண உயர்வு குறித்த தீர்மானங்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும். கவுன்சிலர்களின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, இந்த புதிய கட்டண உயர்வுகள் உடனடியாக அமலுக்கு வரும் என்று மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிநீர் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான கட்டண உயர்வை மாநகர மக்கள் எப்படி எதிர்கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thirunelveli</category>
            <dc:creator>Suresh Manthiram</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-thirunelveli/shock-for-nellai-residents-water-tax-to-increase-up-to-300-in-corporation-bnxq431"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பட்டம் பெற மறுத்த மாணவி ஷீன் ஜோசப்! மேடையில் அனைவரும் ஷாக்! நெல்லையில் நடந்தது என்ன?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-thirunelveli/student-refuses-degree-from-tamilnadu-governor-rn-ravi-in-tirunelveli-articleshow-dpqapvn</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-thirunelveli/student-refuses-degree-from-tamilnadu-governor-rn-ravi-in-tirunelveli-articleshow-dpqapvn</guid>
            <pubDate>Wed, 13 Aug 2025 14:47:51 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பட்டம் பெற மறுத்து விட்டார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k2hag2srmhm7fv67vhwq0kf2,imgname-ran-ravi-stunded-1755075578680.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Student Refused To Eeceive Her degree from TN Governor R.N. Ravi: திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பல்கலைக்கழக வேந்தராக மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார். ஒவ்வொரு மாணவ, மாணவிகளும் ஆளுநர் ரவியிடம் பட்டம் பெற்று மகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த நாகர்கோவில் மாணவி&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;அப்போது மேடைக்கு வந்த நாகர்கோவிலைச் சேர்ந்த ஷீன் ஜோசப் என்ற மாணவி, ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பட்டம் பெற மறுத்து, அருகில் நின்ற பல்கலைக்கழக துணை வேந்தரிடம் பட்டத்தை பெற்றுச் சென்றார். ஆளுநர் ரவி சைகை காட்டியும் அந்த மாணவி அதை சட்டை செய்யாமல் துணைவேந்தரிடம் பட்டத்தை வாங்கிச் சென்றார். இதைப்பார்த்த ஆளுநர் ரவி மேடையிலேயே அதிர்ச்சி அடைந்தார். அவர் மட்டுமின்றி மேடையில் இருந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் பட்டம் பெற வந்த மாணவ, மாணவிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஆளுநரை புறக்கணித்தது ஏன்?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இதனைத் தொடர்ந்து ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி ஷீன் ஜோசப் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''ஆளுநர் ஆர்.என். ரவி தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் செய்தது என்ன? அவர் தமிழகத்தும், தமிழக மக்களுக்கும் எதிராக செயல்பட்டு வருவதால் அவரிடம் இருந்து பட்டம் பெற எனக்கு விருப்பம் இல்லை. இது என்னுடைய தனிப்பட்ட முடிவு'' என்றார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;தமிழக அரசு-ஆர்.என்.ரவி மோதல்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;தமிழ்நாடு அரசும், ஆளுநர் ஆர்.என்.ரவியும் தொடர்ந்து கீரியும், பாம்புமாக இருந்து வருகின்றனர். தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதிப்பது, அரசின் கொள்கைகளுக்கு மாறான கருத்துக்களைத் தெரிவிப்பது போன்ற விஷயங்களில் ஆளுநர் செயல்படுவதாக தமிழக அரசு தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. தமிழக அரசு அனுப்பிய முக்கிய மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் கொடுக்காமல் இருந்ததால் தமிழக அரசு இதற்கு எதிராக உச்சநீதிமன்றம் சென்றது. அப்போது உச்சநீதிமன்றம் அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thirunelveli</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-thirunelveli/student-refuses-degree-from-tamilnadu-governor-rn-ravi-in-tirunelveli-articleshow-dpqapvn"/>
        </item>
        <item>
            <title><![CDATA[உதயநிதியை முதல்வர் ஆக்குவதே லட்சியம்... ஸ்டாலினை ரவுண்டு கட்டிய அமித் ஷா!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/making-udhayanidhi-cm-is-the-only-goal-amit-shah-attacks-mk-stalin-keicgkq</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/making-udhayanidhi-cm-is-the-only-goal-amit-shah-attacks-mk-stalin-keicgkq</guid>
            <pubDate>Fri, 22 Aug 2025 17:53:30 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;திருநெல்வேலியில் பாஜக கூட்டத்தில் பேசிய அமித் ஷா, உதயநிதியை முதல்வராக்குவதே ஸ்டாலினின் லட்சியம் என்றும், 2026-ல் பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என்றும் கூறினார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k1wjeb620hdne5drcx5nzchx,imgname-gettyimages-1138682131-1754379267266.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;திருநெல்வேலியில் பாஜக கூட்டத்தில் பேசிய அமித் ஷா, உதயநிதியை முதல்வராக்குவதே ஸ்டாலினின் லட்சியம் என்றும், 2026-ல் பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என்றும் கூறினார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா இன்று திருநெல்வேலியில் நடைபெற்ற பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார்.&lt;/p&gt;&lt;p&gt;அப்போது பேசிய அமித் ஷா, &ldquo;புனிதமான தமிழ் மண்ணை வணங்கி எனது உரையை தொடங்குகிறேன். புண்ணிய பூமியான தமிழகத்தில் தமிழில் பேச முடியவில்லையே என வருந்துகிறேன். மறைந்த நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் பாஜகவுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன். தமிழ் மண்ணைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணனை நாங்கள் துணை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியுள்ளோம். அடுத்த மாநிலங்களவை கூட்டத்தில் அவர் சபாநாயகராக இருப்பார்.&quot; என்றார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&ldquo;பிரதமர் மோடி தமிழ் மண், மக்கள், மொழி மீது மிகுந்த பற்று கொண்டவர். சோழர்களின் பெருமையை உணர்ந்து, கங்கை கொண்ட சோழபுரத்தில் மன்னன் ராஜேந்திரனுக்கு விழா எடுத்தவர் பிரதமர் மோடி. தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி அப்துல் கலாமை ஜனாதிபதி என்ற உயரிய பதவியில் அமர்த்தி அழகு பார்த்தது பாஜக.&rdquo; எனவும் அமித் ஷா குறிப்பிட்டார்.&lt;/p&gt;&lt;p&gt;மேலும், &ldquo;பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள் குற்ற வழக்கில் கைதானால் பதவியில் நீடிக்கக் கூடாது என ஒரு மசோதாவை நாங்கள் தாக்கல் செய்தோம். ஆனால், நாடாளுமன்றத்தில் இந்த சட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். பொன்முடி மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் சிறைக்குச் சென்ற பிறகும் பதவியில் நீடித்தனர். இருட்டு நடவடிக்கையில் ஈடுபடும் ஸ்டாலினுக்கு இந்த மசோதாவை 'கறுப்புச் சட்டம்' என்று சொல்ல எந்தத் தகுதியும் இல்லை. அவரே இருண்ட ஆட்சியைத்தான் நடத்திக் கொண்டிருக்கிறார்.&rdquo; என்றார்&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;#WATCH | Tirunelveli, Tamil Nadu: Union Home Minister Amit Shah says, &quot;...Modi ji has presented the 130th Constitutional Amendment Bill in the Lok Sabha. The entire opposition started protesting. What is the Constitution Bill? If any CM or Prime Minister goes to jail, they will&hellip; pic.twitter.com/3HDy5tiLnq&lt;/p&gt;&lt;p&gt;&mdash; ANI (@ANI) August 22, 2025&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&ldquo;முதலமைச்சர் ஸ்டாலினின் ஒரே லட்சியம் உதயநிதியை முதலமைச்சர் ஆக்குவதுதான். அதுபோலவே, சோனியா காந்தியின் ஒரே லட்சியம் ராகுல் காந்தியை பிரதமர் ஆக்குவதுதான்,&rdquo; என்று அமித்ஷா கடுமையாக விமர்சித்தார்.&lt;/p&gt;&lt;p&gt;&ldquo;'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் பயங்கரவாதத்தின் முதுகெலும்பை முறித்தவர் பிரதமர் மோடி. தமிழகத்தில் வரும் 2026-ல் பாஜக மற்றும் அதிமுகவை உள்ளடக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்.டி.ஏ.) ஆட்சிதான் அமையப் போகிறது,&rdquo; என்று அமித்ஷா நம்பிக்கை தெரிவித்தார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thirunelveli</category>
            <dc:creator>SG Balan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/making-udhayanidhi-cm-is-the-only-goal-amit-shah-attacks-mk-stalin-keicgkq"/>
        </item>
        <item>
            <title><![CDATA[1000 லிட்டருக்கு வெறும் ரூ.1.50 தானா?  ஆறு காயுது.. கம்பெனி லாபம் சம்பாதிக்குதா? உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/madurai-high-court-demands-report-on-thamirabarani-water-m6wznwk</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/madurai-high-court-demands-report-on-thamirabarani-water-m6wznwk</guid>
            <pubDate>Sun, 23 Nov 2025 09:00:20 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Thamirabarani Water தாமிரபரணி நீர் வரி விவகாரம் மற்றும் தொழிற்சாலைகளின் வரி பாக்கி தொடர்பாகத் தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு பற்றிய முழு விவரங்கள்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kapamcqr7mwtjeydn4xpf9tb,imgname-thamirabarani-water-1763833426680.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Thamirabarani Water தாமிரபரணி நீர் வரி விவகாரம் மற்றும் தொழிற்சாலைகளின் வரி பாக்கி தொடர்பாகத் தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு பற்றிய முழு விவரங்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தாமிரபரணி ஆற்றிலிருந்து தொழிற்சாலைகளுக்கு விநியோகிக்கப்படும் தண்ணீருக்கான வரி விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. தொழிற்சாலைகள் செலுத்தும் வரி, நிலுவைத் தொகை மற்றும் எந்தெந்த நிறுவனங்கள் தண்ணீர் எடுக்கின்றன என்ற விவரங்களை உடனடியாகத் தாக்கல் செய்ய வேண்டும் எனத் தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பொதுநல வழக்கு பின்னணி&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த காமராஜ் என்பவர் இது தொடர்பாகப் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் தாமிரபரணி ஆற்றிலிருந்து, வணிக நோக்கத்திற்காகப் பல்வேறு தொழிற்சாலைகளுக்குத் தண்ணீர் விநியோகிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டியிருந்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த வழக்கில் முன்வைக்கப்பட்ட மிக முக்கியமான குற்றச்சாட்டு, 1998-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட தண்ணீர் கட்டணமே இப்போதும் தொடர்வதுதான். கடந்த 1998-ல் தமிழகப் பொதுப்பணித்துறை வெளியிட்ட அரசாணைப்படி, 1000 லிட்டர் தண்ணீருக்கு வெறும் 1 ரூபாய் 50 காசுகள் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 25 ஆண்டுகளுக்கு மேலாகியும், தொழில்மயமாக்கம் அதிகரித்தும், இக்கட்டணத்தை மாற்றியமைக்க அரசு எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை என மனுதாரர் கவலை தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தனியார் நிறுவனங்கள் லாபமடைய வழிவகுக்கும் இந்த பழைய கட்டண முறையால், அரசுக்குப் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பல தொழிற்சாலைகள் கோடிக்கணக்கில் தண்ணீர் வரியைச் செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளன. இதனால் நிதி பற்றாக்குறை ஏற்பட்டு, தாமிரபரணி ஆற்றைத் தூர்வாரக் கூட முடியாத சூழல் உருவாகியுள்ளது. எனவே, ஆக்கிரமிப்பாளர்களை அகற்றுவதுடன், தண்ணீர் கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் பி. புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முக்கிய உத்தரவைப் பிறப்பித்தது. அதில், &quot;எந்தெந்த நிறுவனங்கள் தண்ணீர் எடுக்கின்றன? அவற்றின் வரி நிலுவை எவ்வளவு?&quot; என்ற முழு விவரங்களைத் தமிழக நீர்வளத்துறைச் செயலரும், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரும் வரும் டிசம்பர் 4-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thirunelveli</category>
            <dc:creator>Suresh Manthiram</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/madurai-high-court-demands-report-on-thamirabarani-water-m6wznwk"/>
        </item>
        <item>
            <title><![CDATA[திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று 5 முதல் 8 மணிநேரம் வரை மின்தடை! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-thirunelveli/power-supply-disrupted-today-in-various-sub-stations-of-tirunelveli-mcn2y8b</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-thirunelveli/power-supply-disrupted-today-in-various-sub-stations-of-tirunelveli-mcn2y8b</guid>
            <pubDate>Sat, 06 Dec 2025 09:02:07 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பல்வேறு துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. திருநெல்வேலி, வள்ளியூர், கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் காலை 9 மணி முதல் மின்தடை ஏற்படும்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jyqej3t03jcd9nnj2y7ddf72,imgname-power-cut-2-1750986198847.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பல்வேறு துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. திருநெல்வேலி, வள்ளியூர், கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் காலை 9 மணி முதல் மின்தடை ஏற்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழகத்தில் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று மாதாந்திர பாராமரிப்பு காரணமாக இன்று எந்தெந்த பகுதிகளில் மின்தடை என்பதை பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கொக்கிரகுளம், மீனாட்சிபுரம், வடக்கு மற்றும் தெற்கு புறவழிச் சாலை, வண்ணாரப்பேட்டை முழுவதும், இளங்கோ நகர், பரணி நகர், திருநெல்வேலி சந்திப்பு முதல் மேரி சார்ஜன்ட் பள்ளி வரையிலான திருவனந்தபுரம் சாலை, பாளை புதுப்பேட்டை தெரு, சுப்பிரமணியபுரம், மாருதி நகர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பணகுடி, லெப்பைகுடியிருப்பு, புஷ்பவனம், குமந்தான், காவல்கிணறு, சிவகாமிபுரம், தளவாய்புரம், பாம்பன்குளம், கலந்தபனை, கடம்பன்குளம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வீரவநல்லூர், அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, கடையம் ஆகிய துணைமின் நிலையங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும் மின்தடை ஏற்படும். அதேபோல் ஆழ்வான்துலுக்கப்பட்டி, ஒ.துலுக்கப்பட்டி, செங்குளம், பாப்பாகுடி, கபாலிபாறை, இடைகால், அணைந்தநாடார்பட்டி, தாழையூத்து, பனையங்குறிச்சி, நாலாங்கட்டளை, கீழக்குத்தப்பாஞ்சான், காசிதர்மம், முக்கூடல், சிங்கம்பாறை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சாட்டுபத்து, அரிகேசவநல்லூர், வெள்ளாங்குளி, ரெங்கசமுத்திரம், கூனியூர், காருகுறிச்சி, அம்பாசமுத்திரம், ஊர்க்காடு, வாகைகுளம், இடைகால், மன்னார்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியர்பட்டி, மணிமுத்தாறு, ஜமின் சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி, வைராவிகுளம், பொன்மாநகர், தெற்குபாப்பன்குளம், மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூர், ஏர்மாள்புரம், கடையம், கட்டேரிபட்டி, முதலியார்பட்டி, பண்டாரகுளம், பொட்டல்புதூர், திருமலையப்புரம், ரவணசமுத்திரம், வள்ளியம்மாள்புரம், சிவநாடனுர், மாதாபுரம், மைலப்பபுரம், வெய்காலிப்பட்டி, மேட்டூர் ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thirunelveli</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-thirunelveli/power-supply-disrupted-today-in-various-sub-stations-of-tirunelveli-mcn2y8b"/>
        </item>
        <item>
            <title><![CDATA[நயினாருக்கு எதிராக எடப்பாடியின் பினாமியை களமிறக்கும் ஸ்டாலின்: நெல்லை திமுக வேட்பாளர் இவர் தானா?...]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/nellai-dmk-high-stakes-move-against-nainar-nagendran-og3eee0</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/nellai-dmk-high-stakes-move-against-nainar-nagendran-og3eee0</guid>
            <pubDate>Thu, 20 Nov 2025 19:43:14 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Nellai DMK நெல்லையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை தோற்கடிக்க, பிரபலமான அரசு ஒப்பந்தக்காரரும், எடப்பாடியின் பினாமி என அறியப்பட்டவருமான ஒருவரை திமுக களமிறக்க திட்டமிட்டுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k7nwdnpzrcz37rbszeq0f3fx,imgname-mixcollage-16-oct-2025-12-17-pm-2997-1760597300957.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Nellai DMK நெல்லையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை தோற்கடிக்க, பிரபலமான அரசு ஒப்பந்தக்காரரும், எடப்பாடியின் பினாமி என அறியப்பட்டவருமான ஒருவரை திமுக களமிறக்க திட்டமிட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில், தி.மு.க.வின் தேர்தல் பணிகள் மிக வேகமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன. வழக்கம்போல பொது மக்களை முதலில் சந்திக்காமல், கட்சி நிர்வாகிகளை நேரடியாகச் சந்தித்து வருகிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். 'உடன்பிறப்பே வா' என்ற தலைப்பில் அவர் தொகுதி வாரியாக தி.மு.க. நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையின் முக்கிய நோக்கம், தி.மு.க.வுக்கு சவாலான தொகுதிகளைக் கண்டறிந்து, அங்கு வெற்றி வியூகங்களை அமைப்பதுதான்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அந்த வகையில், கடந்த வாரம் அண்ணா அறிவாலயத்தில் நெல்லை மற்றும் சங்கரன்கோவில் தொகுதி நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது நெல்லை சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளுக்கு அவர் கடுமையான எச்சரிக்கை விடுத்ததாகத் தெரிகிறது. &quot;நெல்லையில் இந்த முறை தோற்றால், அத்தனை பேரின் பதவியும் பறிக்கப்படும்&quot; என்று ஸ்டாலின் நேரடியாகவே நிர்வாகிகளிடம் கூறியிருக்கிறார். நெல்லை தொகுதியைப் பொறுத்தவரை, தற்போதைய எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முதலமைச்சரின் இந்த அதிரடி எச்சரிக்கைக்குப் பின்னணியில், நெல்லை தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு எதிராக ஒரு பிரபல தொழிலதிபரையும், அரசு ஒப்பந்தக்காரரையும் தி.மு.க. களமிறக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பினாமி என்றும் அறியப்பட்டவர். நயினார் நாகேந்திரனை வீழ்த்த வேண்டுமானால், அதிகாரப்பூர்வ பணபலம் கொண்ட ஒருவரால்தான் முடியும் என்ற முடிவுக்கு தி.மு.க. தலைமை வந்திருப்பதாகத் தெரிகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த திருசெந்தூர் ஆண்டவரின் பெயர் கொண்ட இவர், தமிழக நெடுஞ்சாலைத் துறையின் பிரபல ஒப்பந்தக்காரர். இவரது நிறுவனம் பல கோடி ரூபாய் மதிப்பிலான சாலைப் பணிகளைத் தமிழகத்தின் பல மாவட்டங்களில் செய்து வருகிறது. அரசியல் ரீதியாக அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. என எந்த ஆட்சி அமைந்தாலும், இரண்டு ஆட்சிகளிலும் செல்வாக்குடன் அரசு ஒப்பந்தங்களைப் பெறுவதில் இவர் வல்லவராக இருந்து வருகிறார். இவர் தற்போது தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டிருப்பதாக நெல்லை தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நெல்லை தி.மு.க. வட்டாரத்தில் இதுகுறித்து விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் மேலும் அதிர்ச்சியளிக்கின்றன. &quot;மாற்றுக்கட்சியில் இருந்து சமீபத்தில் தி.மு.க.வில் இணைந்த ஆலங்குளத்தின் முக்கிய புள்ளி ஒருவரின் மூலமாக, கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தப் பிரபல அரசு ஒப்பந்தக்காரர் தி.மு.க.வில் சேர்க்கப்பட்டுள்ளார். கட்சிக்குள் நுழையும்போதே, நெல்லை தொகுதியின் வேட்பாளர் இவர்தான் என்ற உறுதிமொழியுடன் தான் இவர் அழைக்கப்பட்டு இருக்கிறார். மேலும், இவருக்கு ஓர் முக்கிய அமைச்சரின் ஆதரவும் முழுமையாகக் கிடைத்திருக்கிறது. நயினார் நாகேந்திரனைத் தோற்கடிக்க வேண்டுமென்றால், நல்ல துட்டு உள்ள நபரால் தான் முடியும். அதனால்தான், இந்தப் பெரிய பணபலம் கொண்டவர் களமிறக்கப்பட்டுள்ளார்&quot; என்று தி.மு.க. வட்டாரங்கள் கூறுகின்றன. நெல்லை களம் நிச்சயம் இந்த முறை மிக கடுமையான பணப் போட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thirunelveli</category>
            <dc:creator>Suresh Manthiram</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/nellai-dmk-high-stakes-move-against-nainar-nagendran-og3eee0"/>
        </item>
        <item>
            <title><![CDATA[திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று எந்தெந்த பகுதிகளில் மின்தடை.. இதோ லிஸ்ட்..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-thirunelveli/tirunelveli-district-power-outage-areas-today-list-pqde7uc</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-thirunelveli/tirunelveli-district-power-outage-areas-today-list-pqde7uc</guid>
            <pubDate>Mon, 29 Dec 2025 07:18:44 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பல்வேறு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், இன்று (திங்கள்) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k00n3980hhe0mk0jbw7ktf1s,imgname-power-cut-1-1752368784640.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பல்வேறு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், இன்று (திங்கள்) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;திருநெல்வேலி மாவட்டத்தில் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக திங்கள் கிழமை இன்று எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படப்போகிறது என்பதை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;பாளையங்கோட்டை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;வி.எம். சத்திரம், கிருஷ்ணாபுரம், KTC நகர், செய்துங்கநல்லூர், அரியகுளம், மேலக்குளம், நடுவக்குறிச்சி, ரஹ்மத் நகர், நீதிமன்றப் பகுதிகள், சாந்தி நகர், கான்சபுரம், பொட்டல்புரம், திருமலைக்கோல்&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;மேலகல்லூர்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;மேலகள்ளூர், சுத்தமல்லி, சங்கந்திராடு, கொண்டநகரம், நடுகல்லூர், பழவூர், கருங்காடு, திருப்பணிகரிசல்குளம், துலுக்கர்குளம், வெள்ளாளங்குளம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;நாவலடி&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;நாவலடி, குண்டல், வளன்விளை, ராமன்குடி, உருவங்குளம், இராமதபுரம், பேட்டைக்குளம், அனகரை, உவரி&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சங்கனங்குளம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;சங்கன்குளம், இடமொழி, அழகப்பபுரம், வடக்கு விஜயநாராயணம், தெற்கு விஜயநாராயணம், வெங்கட்ராயபுரம்&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;கரந்தநேரி&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;அம்பலம், சூரங்குடி, நாங்குநேரி, பனங்குளம், சிங்கனேரி, திதியூர்&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;மானூர்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;மானூர், மாவடி, தெற்கு பட்டி, களக்குடி, எட்டங்குளம், கானார்பட்டி, பிள்ளையார்குளம், குறிச்சிக்குளம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;ரஸ்தா&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;ரஸ்தா, நரியூத்து, மாதவக்குறிச்சி, வெங்கலபொட்டல், பட்டவர்த்தி&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;மூன்றடைப்பு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;மூன்றடைப்பு, பெத்தானியா, அம்பூரணி, தோட்டக்குடி, மருதகுளம், கருப்புகட்டி&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பரப்பாடி&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;பரப்பாடி, இளங்குளம், சடையனேரி, சவலைக்காரன்குளம், வள்ளியனேரி, ஏமாங்குளம், பெருமாள் நகர், கொற்கனேரி, காருங்காடு, தட்டான்குளம், கன்னநல்லூர், துலுக்கப்புரம், மாட்டூர்பட்டி, சியோன்மா&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கங்கைகொண்டான், ராஜபதி, வெங்கடாசலபுரம், ஆனைத்தலையூர், சீவிலாபேரி, பாலமடை, குப்பக்குறிச்சி, ஆலங்காரப்பேரி, வடகரை, துறையூர், ஆலடிப்பட்டி, ஆலவந்தானங்கை, செழியநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thirunelveli</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-thirunelveli/tirunelveli-district-power-outage-areas-today-list-pqde7uc"/>
        </item>
        <item>
            <title><![CDATA[நெல்லை மக்களே ரெடியா? பொருநை மியூசியம்: டிக்கெட் விலை முதல் டைமிங் வரை.. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை இதோ!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/porunai-museum-tirunelveli-opening-date-ticket-price-timings-tfn52sv</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/porunai-museum-tirunelveli-opening-date-ticket-price-timings-tfn52sv</guid>
            <pubDate>Tue, 23 Dec 2025 06:00:35 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Porunai Museum நெல்லை பொருநை அருங்காட்சியகம் டிசம்பர் 23 முதல் திறக்கப்படுகிறது. நுழைவுக்கட்டணம், நேரம் மற்றும் பேருந்து வசதி குறித்த முழு விபரங்களை இங்கே காணலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kd3h1f026ge0gdnyzm292a6c,imgname-porunai-museum-1766423837697.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Porunai Museum நெல்லை பொருநை அருங்காட்சியகம் டிசம்பர் 23 முதல் திறக்கப்படுகிறது. நுழைவுக்கட்டணம், நேரம் மற்றும் பேருந்து வசதி குறித்த முழு விபரங்களை இங்கே காணலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;திருநெல்வேலி சீமைக்கும், பழைமை வாய்ந்த பொருநை நாகரிகத்திற்கும் மேலும் புகழ் சேர்க்கும் வகையில், நெல்லையில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள 'பொருநை அருங்காட்சியகம்' பொதுமக்களின் பார்வைக்காகத் திறக்கப்படவுள்ளது. சுமார் ரூ.67.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த நவீன அருங்காட்சியகத்தை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சனிக்கிழமை இரவு மின்னொளியில் மிளிர்ந்த விழாவில் திறந்து வைத்தார். மேலும், அருங்காட்சியக வளாகத்தில் வன்னி மரக்கன்றையும் நட்டு வைத்தார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;எங்கு அமைந்துள்ளது?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையை அடுத்த ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. சுமார் 13 ஏக்கர் பரப்பளவில், 54,296 சதுர அடி விஸ்தீரணத்தில் இது பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. முதல்வர் திறந்து வைத்ததைத் தொடர்ந்து, அறிமுக கூடத்தை பார்வையிட்ட அவருக்கு, அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள தொல்பொருள்கள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அருங்காட்சியகம் திறக்கப்பட்டாலும், பொதுமக்களின் வருகைக்காக செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 23) முதல் அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் இரா. சுகுமார் கூறுகையில், பொதுமக்கள் அருங்காட்சியகத்தை எளிதாக வந்து பார்வையிடும் வகையில், அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்காக நேரக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இந்த அருங்காட்சியகம் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும். வார இறுதி நாட்களிலும் இதே நேரத்தில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அருங்காட்சியகத்தை பார்வையிட வருபவர்களுக்கான கட்டண விபரங்கள் பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளன:&lt;/p&gt;&lt;p&gt;&bull; பெரியவர்கள்: ரூ.30&lt;/p&gt;&lt;p&gt;&bull; சிறியவர்கள்: ரூ.10&lt;/p&gt;&lt;p&gt;&bull; பள்ளி மாணவர்கள்: ரூ.5&lt;/p&gt;&lt;p&gt;&bull; வெளிநாட்டினர்: ரூ.50&lt;/p&gt;&lt;p&gt;&bull; 5டி (5D) திரையரங்கம்: ரூ.25 (தனிக் கட்டணம்)&lt;/p&gt;&lt;p&gt;பள்ளி மாணவர்களுக்கு மிகக்குறைந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், மாணவர்களின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thirunelveli</category>
            <dc:creator>Suresh Manthiram</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/porunai-museum-tirunelveli-opening-date-ticket-price-timings-tfn52sv"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ப்ளீஸ் என்ன விட்டுடு! இனி இப்படி செய்யமாட்ட கதறிய ஸ்ரீபிரியா! விடாத பாலமுருகன்! நடந்தது என்ன? பகீர் வாக்குமூலம்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/crime/husband-murders-wife-with-sword-in-kovai-over-illicit-affair-dispute-txvom5o</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/crime/husband-murders-wife-with-sword-in-kovai-over-illicit-affair-dispute-txvom5o</guid>
            <pubDate>Tue, 02 Dec 2025 13:16:17 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் கோவையில் உள்ள மகளிர் விடுதியில் தங்கியிருந்த தனது மனைவியை கணவர் பாலமுருகன் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார். கொலையின் பின்னர் மனைவியின் சடலத்துடன் செல்பி எடுத்து அதனை தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸாக வைத்தார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jyr5yw306m6j5q9fddgv2za4,imgname-illegal-love-2-1751010734176.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் கோவையில் உள்ள மகளிர் விடுதியில் தங்கியிருந்த தனது மனைவியை கணவர் பாலமுருகன் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார். கொலையின் பின்னர் மனைவியின் சடலத்துடன் செல்பி எடுத்து அதனை தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸாக வைத்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;திருநெல்வேலி மாவட்டம் தருவையை சேர்ந்தவர் பாலமுருகன்(34). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீபிரியா (30) காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 10 வயதில் மகனும், 3 வயதில் மகளும் உள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில், ஸ்ரீபிரியாவுக்கும் அவரது உறவினரான நெல்லையை சேர்ந்த இசக்கிராஜாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரம் கணவருக்கு தெரியவந்ததை அடுத்து மனைவியை கண்டித்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஸ்ரீபிரியா தனது குழந்தைகளுடன் கோவைக்கு வந்தார். பின்னர் குழந்தைகளை பெற்றோர் வீட்டில் விட்டு விட்டு காந்திபுரத்தில் மகளிர் விடுதியில் தங்கியிருக்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நேற்று காலை 9 மணி அளவில் பாலமுருகன், நெல்லையில் இருந்து கோவைக்கு வந்தார். ஸ்ரீ பிரியா தங்கியிருந்த விடுதிக்கு சென்று மனைவியை சந்தித்தார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதை அடுத்து பாலமுருகன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஸ்ரீபிரியாவை வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஸ்ரீபிரியா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பின்னர் பாலமுருகன் அவரது சடலத்தின் முன் நாற்காலியில் அமர்ந்து செல்போனில் செல்பி எடுத்தார். அந்த போட்டோவை தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் ஆக வைத்திருந்தார். இந்த சம்பவத்தை அடுத்து போலீசார் விரைந்து ஸ்ரீபிரியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை சம்பவம் தொடர்பாக அவரது கணவர் பாலமுருகன் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அப்போது அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் மனைவியிடம் பலமுறை எச்சரித்தும் கள்ளக்காதலை கைவிடவில்லை. அதுமட்டுமல்லாமல் இருவரும் சேர்ந்து இருக்கும் போட்டோவை எனக்கு அனுப்பி இருந்தார். இதை பார்த்ததும் எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. பின்னர் கோவைக்கு சென்று சேர்ந்து வாழலாம் என்று அழைத்த போது அவர் வர மறுத்துள்ளார். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. நான் இவ்வளவு கூறியும் ,மனைவி கேட்காததால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டு ஸ்ரீபிரியாவின் கழுத்தில் வெட்டி கொன்றேன் என்றார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thirunelveli</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/crime/husband-murders-wife-with-sword-in-kovai-over-illicit-affair-dispute-txvom5o"/>
        </item>
        <item>
            <title><![CDATA[தத்தளிக்கும் நெல்லை.. அவசரமா? 1077-க்கு ஒரு போன் போடுங்க! மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில்...]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/tirunelveli-district-administration-issues-orange-alert-u5m0lvk</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/tirunelveli-district-administration-issues-orange-alert-u5m0lvk</guid>
            <pubDate>Mon, 24 Nov 2025 07:00:05 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Tirunelveli நெல்லையில் கனமழை காரணமாக ஆரஞ்சு அலர்ட். அவசர உதவிக்கு 1077 மற்றும் வாட்ஸ்அப் எண்களைத் தொடர்பு கொள்ளவும். டிஎன் அலர்ட் செயலி விவரம் உள்ளே.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01karrscyvpdw389yj6cyx2f83,imgname-tirunelveli--2--1763915379675.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Tirunelveli நெல்லையில் கனமழை காரணமாக ஆரஞ்சு அலர்ட். அவசர உதவிக்கு 1077 மற்றும் வாட்ஸ்அப் எண்களைத் தொடர்பு கொள்ளவும். டிஎன் அலர்ட் செயலி விவரம் உள்ளே.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கனமழை காரணமாக, மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்' (Orange Alert) விடுத்துள்ளது. மிகக் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடனும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மழையினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அவசரத் தேவைகளுக்காக, பொதுமக்கள் உடனடியாகத் தகவல் தெரிவிக்கும் வகையில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய பேரிடர் அவசரக் கட்டுப்பாட்டு மையம் (Disaster Emergency Control Center) அமைக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பொதுமக்கள் மழை தொடர்பான புகார்கள் மற்றும் உதவிகளுக்குக் கீழ்க்கண்ட எண்களைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது:&lt;/p&gt;&lt;p&gt;&bull; கட்டணமில்லா தொலைபேசி எண்: 1077&lt;/p&gt;&lt;p&gt;&bull; அலுவலக எண்: 0462-2501070&lt;/p&gt;&lt;p&gt;&bull; வாட்ஸ்அப் எண் (வணக்கம் நெல்லை): 97865 66111&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள, பொதுமக்கள் அனைவரும் தங்கள் கைபேசியில் 'TN Alert App'-ஐ பதிவிறக்கம் செய்யுமாறு செய்தி மக்கள் தொடர்புத் துறை (DIPR) மற்றும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. இதன் மூலம் மழை நிலவரம் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்களை எளிதாகப் பெற முடியும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thirunelveli</category>
            <dc:creator>Suresh Manthiram</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/tirunelveli-district-administration-issues-orange-alert-u5m0lvk"/>
        </item>
        <item>
            <title><![CDATA[அட பாவிங்களா.! இதுக்குலாமா கொலை செய்வாங்க! வியாபாரியை காரில் கடத்தி குற்றாலத்தில் கதறவிட்டு கதையை முடித்த பயங்கரம்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/crime/businessman-kidnapped-and-murdered-in-nellai-articleshow-x5wxazn</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/crime/businessman-kidnapped-and-murdered-in-nellai-articleshow-x5wxazn</guid>
            <pubDate>Tue, 06 Jan 2026 16:26:51 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;வீரவநல்லூர் அருகே மாவுக்கடை வியாபாரி ராம்குமார், முன்விரோதம் காரணமாக கடத்தப்பட்டார். அவரை தென்காசி மாவட்டம் குற்றாலத்திற்கு அழைத்துச் சென்ற கும்பல், அங்குள்ள விடுதியில் வைத்து கத்தியால் குத்திக் கொலை செய்தது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j32cty1mgaxfv81h1exjc2h2,imgname-whatsapp-image-2024-07-18-at-12.58.33.jpeg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள புதுக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ரங்காச்சாரி. இவரது மகன் ரங்கநாதன் என்ற ராம்குமார் (48). இவர் வீரவநல்லூர் பஜாரில் மாவு கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். மேலும் சமையல் பாத்திரங்கள் வாடகை நிலையமும் வைத்துள்ளார். நேற்று கடையில் இருந்த ராம்குமாரை காரில் வந்த கும்பல் அழைத்து சென்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;இந்நிலையில் இரவு நீண்ட நேரமாகியும் ராம்குமார் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த மனைவி செல்போனில் தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர், கடைக்கு வந்து பார்த்தபோது சில மணி நேரங்களுக்கு முன்பே காரில் யாருடனோ ஏறி சென்றதாக அக்கம்பக்கத்து கடைக்காரர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;&lt;p&gt;இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி வீரவநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ராம்குமாரை கடத்தி சென்ற காரின் பதிவெண்ணை வைத்து அதன் டிரைவரை பிடித்து விசாரித்தனர். அப்போது ராம்குமாரை புதுக்குடியில் வசிக்கும் சிக்கன் கடைக்காரர் உள்பட 3 பேர் கும்பல் தென்காசி மாவட்டம் குற்றாலத்திற்கு அழைத்துச்சென்றதாகவும், குற்றாலத்தில் உள்ள ஒரு விடுதியில் இறக்கிவிட்டதாக தெரிவித்தார்.&lt;/p&gt;&lt;p&gt;இதனிடையே குற்றாலத்தில் ஒரு தனியார் விடுதி அருகே ராம்குமார் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக தகவல் வந்தது. தகவல் அறிந்து குற்றாலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.&lt;/p&gt;&lt;p&gt;ராம்குமார் கடை வைத்திருக்கும் அதே பகுதியில் சிக்கன் கடை வைத்திருக்கும் கௌதம் என்ற வாலிபரை ராம்குமார் அடிக்கடி கிண்டல் செய்து பேசியதால் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் அந்த வாலிபர் தனது நண்பர்களுடன் சேர்ந்து காரில் குற்றாலத்திற்கு கடத்தி சென்ற கும்பல், அங்குள்ள பராசக்தி மகளிர் கல்லூரி அருகே ஒரு லாட்ஜில் அடைத்து வைத்திருந்தது. பின்னர் மதுபோதையில் இருந்த அந்த கும்பல் ராம்குமாரை கத்தியால் சரமாரி குத்திக்கொலை செய்தது.&lt;/p&gt;&lt;p&gt;பின்னர் அவரது உடலை அங்கேயே வீசிவிட்டு கும்பல் தப்பிச்சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை இரவோடு இரவாக கைது செய்தனர். அந்த கும்பல் மது மற்றும் கஞ்சா போதையில் இருந்த நிலையில் அவர்களிடம் விசாரணை நடத்த முடியவில்லை. இன்று காலையில் போதை தெளிந்த நிலையில் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thirunelveli</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/crime/businessman-kidnapped-and-murdered-in-nellai-articleshow-x5wxazn"/>
        </item>
        <item>
            <title><![CDATA[நெல்லையில் 254% அதிக மழை! தீபாவளியிலும் கனமழை கொட்டி தீர்க்கப் போகுது!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/weather-update-heavy-rain-expected-for-six-days-in-tamil-nadu-fishermen-warned-xvdodge</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/weather-update-heavy-rain-expected-for-six-days-in-tamil-nadu-fishermen-warned-xvdodge</guid>
            <pubDate>Sun, 19 Oct 2025 17:19:31 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அடுத்த 6 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j0xay89k7d272ydvaj9befya,imgname-asianet-news---2024-06-21t173248.085.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அடுத்த 6 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழகத்தில் கடந்த 16-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வரும் நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்றும் தென் மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தெற்கு அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. வரும் 21-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தென்கிழக்கு வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.&lt;/p&gt;&lt;p&gt;இது அடுத்த 24 மணிநேரத்தில் மேலும் காற்றழுத்த மண்டலமாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கடலோரப் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மீனவர்கள் வரும் 21-ஆம் தேதி காலைக்குள் ஆழ்கடலில் இருந்து கரை திரும்ப வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;மேலும், தமிழக கடலோரம், லட்சத்தீவு, கேரள, கர்நாடக கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;24-ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும். வரும் 6 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, நாளை, தீபாவளியன்று வட கிழக்கு தமிழகம் முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 23 முதல் 25-ஆம் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்று (ஞாயிற்றுக்கிழமை) கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி உட்பட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை (திங்கட்கிழமை) 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 19 மற்றும் 24 ஆகிய நாட்களில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;அக்டோபர் 1-ஆம் தேதி முதல் தற்போது வரை 14 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 58 சதவீதம் அதிகம் ஆகும். நெல்லை மாவட்டத்தில் இயல்பை விட 254 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மழையின்போது மக்கள் பாதுகாப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் எனவும் வானிலை மையத் தலைவர் அமுதா கேட்டுக்கொண்டார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thirunelveli</category>
            <dc:creator>SG Balan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/weather-update-heavy-rain-expected-for-six-days-in-tamil-nadu-fishermen-warned-xvdodge"/>
        </item>
        <item>
            <title><![CDATA[பஸ் நிறுத்தத்திலேயே இப்படியா? மாமியார்னு கூட பார்க்காம கையை பிடித்து இழுத்து மருமகன் செய்த வேலை!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-thirunelveli/son-in-law-bites-mother-in-laws-finger-in-nellai-articleshow-zgab18k</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-thirunelveli/son-in-law-bites-mother-in-laws-finger-in-nellai-articleshow-zgab18k</guid>
            <pubDate>Tue, 19 Aug 2025 10:54:57 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;நெல்லையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வந்த கணவன், மனைவியை சமாதானப்படுத்தும் முயற்சியில் மாமியாரின் விரலைக் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jyr5yw306m6j5q9fddgv2za4,imgname-illegal-love-2-1751010734176.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;நெல்லை மாவட்டம் ராஜவல்லிபுரம் பகுதியை சேர்ந்தவர் சுடலை மகன் துரைராஜ் (33). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தங்கலட்சுமிக்கும் திருமணம் நடத்தது. இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கோபித்துக்கொண்டு தங்கலட்சுமி தனது 3 குழந்தைகளுடன் கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்தார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;கருத்து வேறுபாடு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;நேற்று காலை தங்கலட்சுமி தனது குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவதற்காக அங்குள்ள பேருந்து நிறுத்தத்திற்கு வந்தார். அப்போது அங்கு வந்த துரைராஜ், தனது மனைவியிடம் பேசினார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உடனே தங்கலட்சுமி தனது செல்போன் மூலம் தாய் பேச்சியம்மாளை தொடர்புகொண்டு நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். உடனே பேச்சியம்மாளும் பதறியபடி சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். அங்கு துரைராஜ் மற்றும் தங்கலட்சுமி இடையேயான வார்த்தை மோதலை தடுக்க முயன்றார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;மாமியார் விரலை கடித்து துப்பிய மருமகன்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஆனால் மாமியாரை கண்டதும் துரைராஜ் கடும் ஆத்திரமடைந்தார். மனைவி பிரிவதற்கு மாமியார் தான் காரணம் என்ற நினைத்த மருமகன் பேச்சியம்மாளின் கையை பிடித்து இழுத்து எதிர்பாராத விதமாக அவரது விரலை கடித்து துப்பியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த பேச்சியம்மாள் அலறி துடித்துள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;அப்போது பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் உடனே பேச்சியம்மாளை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவியுடனான பிரச்சினையை தீர்க்க வந்த மாமியாரின் கை விரலை மருமகன் கடித்து துப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thirunelveli</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-thirunelveli/son-in-law-bites-mother-in-laws-finger-in-nellai-articleshow-zgab18k"/>
        </item>
    </channel>
</rss>
