<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes"?>
<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Mon, 05 Jan 2026 18:58:21 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss/tamilnadu-theni" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[Breaking: சவுக்கு சங்கரை விடாது துரத்தும் தமிழக அரசு? மீண்டும் குண்டர் சட்டத்தில் வழக்கு]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-theni/once-again-goondas-act-case-filed-against-youtuber-savukku-shankar-at-theni-police-station-vel-si475e</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-theni/once-again-goondas-act-case-filed-against-youtuber-savukku-shankar-at-theni-police-station-vel-si475e</guid>
            <pubDate>Mon, 12 Aug 2024 22:28:26 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தேனியில் கஞ்சா வைத்திருந்த விவகாரத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் மீது காவல் துறையினர் மீண்டும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j0v1g39251bd9dv2rfcxnhbt,imgname-whatsapp-image-2024-06-20-at-20-09-13.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த விவகாரத்தில் பிரபல யூடியூபர் சவுக்க சங்கரை காவல் துறையிர் தேனியில் கைது செய்தனர். தேனியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரிடம் கஞ்சா இருந்ததாக அப்போது புதிய வழக்கும் பதிவு செய்யப்பட்டது. மேலும் பெண் காவலர்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.&lt;/p&gt; &lt;p&gt;தீக்குழியில் விழுந்த சிறுவன் படுகாயம்; தந்தை இழுத்து சென்றபோது சோகம்&lt;/p&gt; &lt;p&gt;சவுக்கு சங்கர் மீதான வழக்குகள் தொடர்ந்ததைத் தொடர்ந்து அவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஆனால் குண்ட சட்ட நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி சவுக்கு சங்கரின் தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம் குண்டர் தடுப்பு சட்ட நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டது.&lt;/p&gt; &lt;p&gt;5 வயது சிறுமியின் உயிரை குடித்த 10 ரூபாய் குளிர்பானம்; வாயில் நுரை தள்ளிய நிலையில் துடிதுடித்து பலி&lt;/p&gt; &lt;p&gt;இந்நிலையில் தற்போது தேனியில் கஞ்சா வைத்திருந்த விவகாரத்தில் சவுக்கு சங்கர் மீது காவல் துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தேனி நகர காவல் ஆய்வாளர் உதயகுமார் தலைமையிலான காவல் துறையினர் கஞ்சா வைத்திருந்த விவகாரத்தில் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-theni</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-theni/once-again-goondas-act-case-filed-against-youtuber-savukku-shankar-at-theni-police-station-vel-si475e"/>
        </item>
        <item>
            <title><![CDATA[வெளிநாடு செல்லும் கனவில் காரில் சென்ற வாலிபர்; திடீரென கொழுந்துவிட்டு எரிந்த கார் - தேனியில் பரபரப்பு]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-theni/car-stuck-fire-accident-at-theni-district-vel-seo4q0</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-theni/car-stuck-fire-accident-at-theni-district-vel-seo4q0</guid>
            <pubDate>Thu, 06 Jun 2024 22:33:36 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தேனி போடிமெட்டு அருகே கொச்சி விமான நிலையத்திற்கு சென்ற கார் திடீரென தீப் பிடித்து எரிந்த நிலையில், காரில் பயணம் செய்த இளைஞர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01hzq81x6cr5pshy8b54zfp7bf,imgname-whatsapp-image-2024-06-06-at-12-11-30.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் இருந்து கேரளா செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது போடி மெட்டு மலைச்சாலை. தமிழக, கேரள எல்லை பகுதியை இணைக்கும் இந்த மலைச்சாலை சுமார் 21 கிலோமீட்டர் தொலைவும் 18 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டது. தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் சுற்றுலாப் பயணிகளும், இடுக்கி மாவட்டம் வழியே கொச்சின் விமான நிலையம் செல்லும் பயணிகளும் இந்த வழியாக செல்கின்றனர்.&lt;/p&gt; &lt;p&gt;Ramadoss: ஜூலை 1 முதல் தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு அமல்? அரசுக்கு இராமதாஸ் கோரிக்கை&lt;/p&gt; &lt;p&gt;இந்நிலையில் நேற்று மாலை மதுரையில் இருந்து கார்த்திக் ராஜா, ராம்பிரகாஷ், வைஷ்ணவ் ஆகிய மூன்று நபர்கள் கொச்சின் ஏர்போர்ட்டிற்கு வெளிநாடு செல்வதற்காக போடி மெட்டு மலைச்சாலை வழியே காரில் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் போடிமெட்டின் 17 வது கொண்டை ஊசி வளைவு அருகே திடீரென்று கார் நின்று விடவே காரை ஓட்டி வந்த கார்த்திக் ராஜா வண்டியை &amp;nbsp;ஸ்டாட் செய்ய முயற்சிசெய்துள்ளார்.&lt;/p&gt; &lt;p&gt;ஆடா? முடிந்தால் என் மீது கை வையுங்கள்; திமுகவினருக்கு அண்ணாமலை பகிரங்க சவால்&lt;/p&gt; &lt;p&gt;ஆனால் எதிர்பாராத விதமாக வண்டியின் எஞ்சினில் திடீரென்று குபுகுபுகுவென்று புகை கிளம்பியதுடன் தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது. அதனைக் கண்ட மூன்று நபர்களும் உடனடியாக காரை விட்டு இறங்கி தங்கள் உடைமைகளை எடுத்துக்கொண்ட நிலையில் காரில் பரவிய தீ கார் முழுவதும் பற்றி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. உடனடியாக அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்து நெருப்பை அணைக்க முயற்சி செய்த நிலையில் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து குரங்கணி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விருந்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-theni</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-theni/car-stuck-fire-accident-at-theni-district-vel-seo4q0"/>
        </item>
        <item>
            <title><![CDATA[திருமணமான 3 மாதத்தில் நிகிலா.. தடுக்க வந்த அண்ணன்.. இருவரின் கதையை முடித்ததும் வேறு வழியில்லாமல் தந்தை மகன் எடுத்த முடிவு]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/crime/theni-double-murder-case-culprits-surrendered-4119sdz</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/crime/theni-double-murder-case-culprits-surrendered-4119sdz</guid>
            <pubDate>Sat, 13 Dec 2025 14:29:53 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தேனி மாவட்டம் தேவாரம் அருகே, திருமணமான மூன்று மாதங்களில் ஏற்பட்ட தகராறில், கணவர் பிரிந்து சென்ற மனைவியை சீர் பொருள் எடுக்க வந்த இடத்தில் வெட்டிக் கொலை செய்தார். தடுக்க வந்த மனைவியின் சகோதரரையும் கணவரின் தந்தை குத்திக் கொலை செய்துள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kc8kqjw5b83dpe64cccagpr0,imgname-theni-1-1765520690053.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தேனி மாவட்டம் தேவாரம் அருகே, திருமணமான மூன்று மாதங்களில் ஏற்பட்ட தகராறில், கணவர் பிரிந்து சென்ற மனைவியை சீர் பொருள் எடுக்க வந்த இடத்தில் வெட்டிக் கொலை செய்தார். தடுக்க வந்த மனைவியின் சகோதரரையும் கணவரின் தந்தை குத்திக் கொலை செய்துள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள முத்தையன் செட்டிபட்டியை சேர்ந்த சிவக்குமார்(52). இவரது மகன் பிரதீப் (27). இவருக்கும் சின்னமனூரை சேர்ந்த வழக்கறிஞர் நிகிலாவிற்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. வேலைக்கும் செல்லாமல் குடித்துவிட்டு அடிதடி, கட்டப்பஞ்சாயத்து செய்து வந்ததால் கணவன், மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் நிகிலா தனது கணவரை பிரிந்து தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதனை தொடர்ந்து பிரதீப்புடன் சேர்ந்து வாழ முடியாது நிகிலா திட்டவட்டமாக பஞ்சாயத்தில் கூறிவிட்டார். இந்நிலையில் நிகிலாவும் இவரது சகோதரர் விவேக் மற்றும் உறவினர்கள் முத்தையன் செட்டிபட்டிக்கு சென்று திருமண சீர் பொருட்களை எடுக்க வந்துள்ளதாக பிரதீப்பிடம் கூறியுள்ளனர். அப்போது வீட்டில் இருந்த பிரதீப் இவரது தந்தை சிவக்குமார் தரப்பிற்கும் நிகிலா மற்றும் விவேக் தரப்பிற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதனால் ஆத்திரமடைந்த பிரதீப் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மனைவி நிகிலாவை சரமாரியாக வெட்டி உள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த நிகிலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தன் கண் முன்னே சகோதரி உயிரிழந்ததை கண்ட விவேக் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது பிரதீப்பின் தந்தை சிவக்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விவேக்கின் தலையில் சரமாரி குத்தி உள்ளார். விவேக்கும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். கொலை செய்த பிரதீப் மற்றும் சிவகுமார் தலைமறைவான நிலையில் இருவரையும் தனிப்படை அமைத்து தேடிவந்தனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில் கொலை வழக்கில் தொடர்புடைய பிரதீப் மற்றும் அவரது தந்தை சிவக்குமார் ஆகிய இருவரும் தேனி மாவட்டம் பெரியகுளம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். கொலை வழக்கில் சரணடைந்த மகன் மற்றும் தந்தை இருவருக்கும் நீதிபதி கமலநாதன் 24 மணி நேரமும் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு பிறப்பித்தார். மேலும் 24 மணி நேரம் கழித்து போடி நீதிமன்றத்தில் கொலை வழக்கில் சம்பந்தமுள்ள இரண்டு குற்றவாளிகளையும் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-theni</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/crime/theni-double-murder-case-culprits-surrendered-4119sdz"/>
        </item>
        <item>
            <title><![CDATA[தற்கொ**லை முடிவுக்கு யார் காரணம்? படிக்க தெரியாத பஞ்சம்மாள் பேத்தி உதவியுடன் சுவரில் எழுதிய பகீர் தகவல்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/crime/woman-commits-suicide-after-debt-pressure-in-andipatti-articleshow-46oy5pc</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/crime/woman-commits-suicide-after-debt-pressure-in-andipatti-articleshow-46oy5pc</guid>
            <pubDate>Mon, 05 Jan 2026 18:57:38 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் தனியார் நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக, பெண் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் தனது பேத்திக்கும் விஷத்தைக் கொடுத்துள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ke755ggch66mgqajygt438k8,imgname-theni-1767619346956.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வரதராஜபுரம் கிராமத்தில் ஒத்தவீடு பகுதியை வசித்து வருபவர் ரஞ்சித் (37). இவர் கூலி வேலை செய்து வருகிறார்.&zwnj; இவருக்கு திருமணமாகி சத்யா என்ற மனைவியும், தருணிக்கா, லித்திகாஶ்ரீ என்ற மகள்களும் கேசவ பாண்டி என்ற மகனும் உள்ளனர். ரஞ்சித்துடன் அவருடைய அம்மா பஞ்சம்மாளும் ஒன்றாக தங்கி வசித்து வந்துள்ளார். ரஞ்சித் கடந்த 2024ம் ஆண்டு மதுரையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அவரது பெயரில் உள்ள வீட்டை அடமானம் வைத்து ரூ.25 லட்சம் கடன் வாங்கியுள்ளார். தொடர்ந்து கடன் தொகையை செலுத்தி வந்த அவர் கடந்த சில மாதங்களாக குடும்ப சூழ்நிலை காரணமாக கடன் தவணையை செலுத்த முடியாமல் இருந்துள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;நிதி நிறுவனம் கொடுத்த நெருக்கடி&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இதனால் சம்பந்தமாக நிதி நிறுவன பணியாளர்கள் பணத்தை கட்டச் சொல்லி தொடர்ந்து நெருக்கடி கொடுத்துள்ளனர். நாளடைவில் நிதி நிறுவன பணியாளர்களின் நெருக்கடி அதிகரித்து, மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. மேலும் ரஞ்சித் வீட்டிற்கு நேரில் வந்த பணியாளர்கள் தவணைத் தொகையை செலுத்தவில்லை என்றால் வீட்டை ஜப்தி செய்து விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இது தவிர செல்போனில் தொடர்பு கொண்ட நிதி நிறுவன அதிகாரிகள் தொடர்ந்து மிரட்டல் விடும் வகையில் பேசியதாகவும் தெரிகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;தற்கொலை முடிவுக்கு யார் காரணம்?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இதற்கிடையே அதே ஊரில் ரஞ்சித் அம்மா பஞ்சமாளுக்கு சொந்தமான பூர்வீக வீட்டில் நிதி நிறுவனம் சார்பில் நோட்டீஸ் ஒட்டியும், பெயிண்டால் இந்த சொத்து நிதி நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும் எழுதியுள்ளனர். இதனால் மனமுடைந்த பஞ்சம்மாள் ரஞ்சித் மற்றும் அவரது மனைவியும் வெளியே சென்று இருந்த போது, கடந்த மாதம் 31ம் தேதி விஷ மருந்தை குடித்துள்ளார். மேலும் விஷம் மருந்தை தன்னுடன் இருந்த பேத்தி தருணிகாவிற்கும் கொடுத்தாக கூறப்படுகிறது. எழுத படிக்க தெரியாத பஞ்சம்மாள் தனது பேத்தி தருணிகாவின் உதவியுடன் குங்குமத்தை தண்ணீரில் கரைத்து தனது இந்த முடிவிற்கு யார் காரணம் என்பது குறித்து வீட்டு சுவரில் எழுதி வைத்துள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;நிதி நிறுவன ஊழியர்கள் மீது வழக்கு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;சிலமணி நேரம் நேரம் கழித்து வீட்டிற்கு வந்த ரஞ்சித், அம்மா மற்றும் தனது மகள் இருவரும் மயங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் உடனடியாக இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பஞ்சம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;சிறுமி தருணிகா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து ரஞ்சித், ராஜதானி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் நிதி நிறுவன ஊழியர்களான மாயாண்டி, கண்ணன், கார்த்திக் சேது, மற்றும் ஒரு ஊழியர் என மொத்தம் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நிதி நிறுவன பணியாளர்கள் மிரட்டியதால் பெண் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-theni</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/crime/woman-commits-suicide-after-debt-pressure-in-andipatti-articleshow-46oy5pc"/>
        </item>
        <item>
            <title><![CDATA[2 வயது குழந்தையை காவு வாங்கிய சர்க்கரை நோய்; கொஞ்சும் மழலையை தவறவிட்ட சோகத்தில் கதறி துடித்த பெற்றோர்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-theni/a-2-year-old-child-suffering-from-diabetes-died-in-theni-district-vel-sf4u9d</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-theni/a-2-year-old-child-suffering-from-diabetes-died-in-theni-district-vel-sf4u9d</guid>
            <pubDate>Sat, 15 Jun 2024 23:06:49 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட 2 வயது மழலை குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01geh3h2jshtvbv8b2f4ekefn4,imgname-india-female-imr-drops-to-same-level-as-males.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள சித்தார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி தமிழ்செல்வி. இந்த தம்பதிக்கு 2 வயதில் லித்திகா ஸ்ரீ என்ற பெண் குழந்தையும், 7 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் இருந்தது. நேற்று முன்தினம் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த இரண்டு வயது சிறுமி லித்திகா ஸ்ரீக்கு வாயில் திடீரென நுரை தள்ளியபடி அழுததாகக் கூறப்படுகிறது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;1176 மதிப்பெண்கள் எடுத்தபோதும் பஸ்பமான நீட் கனவு; 7 ஆண்டுகளுக்கு பின் அனிதாவுக்காக பொங்கும் கேரளா காங்கிரஸ்&lt;/p&gt; &lt;p&gt;இதனால் அதிர்ச்சி அடைந்த தாயார் தமிழ்ச்செல்வி, உடனடியாக குழந்தையை அருகில் உள்ள ராஜதானி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தையின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 400க்கும் அதிகமாக இருந்ததாக கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக குழந்தையை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;பாஜக.வுக்கு ஆதரவான நிறுவனங்கள் பணம் சம்பாதிக்கவே நீட் கொண்டுவரப்பட்டது - செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு&lt;/p&gt; &lt;p&gt;தொடர்ச்சியாக அந்த குழந்தைக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து ராஜதானி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுவாக 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வரும் நிலையில், இரண்டு வயது பெண் குழந்தை பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சித்தார்பட்டி கிராமத்தில் &amp;nbsp;பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-theni</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-theni/a-2-year-old-child-suffering-from-diabetes-died-in-theni-district-vel-sf4u9d"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஒரே போன்கால்..! தேனி பேருந்து நிலையத்தில் குவிந்த போலீஸ்! கையும் களவுமாக சிக்கிய பிரசாத்! நடந்தது என்ன?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/crime/methamphetamine-seized-in-theni-youth-arrested-5kc6qzv</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/crime/methamphetamine-seized-in-theni-youth-arrested-5kc6qzv</guid>
            <pubDate>Fri, 05 Dec 2025 12:30:36 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Theni Crime News: தேனி மாவட்ட காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், திருச்சியிலிருந்து பேருந்தில் கடத்திவரப்பட்ட மெத்தபட்டமைன் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கம்பத்தைச் சேர்ந்த பிரசாத் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kbpmmbc671mhkdja6as2mxpd,imgname-theni-1-1764917652870.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Theni Crime News: தேனி மாவட்ட காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், திருச்சியிலிருந்து பேருந்தில் கடத்திவரப்பட்ட மெத்தபட்டமைன் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கம்பத்தைச் சேர்ந்த பிரசாத் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தேனி மாவட்ட காவல்துறையினருக்கு திருச்சியில் இருந்து பேருந்தின் மூலமாக போதைப் பொருளான மெத்தபட்டமைன் கடத்தி வரப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து தேனி புதிய பேருந்து நிலையம் பகுதியில் திருச்சியிலிருந்து தேனிக்கு வந்த நபர்களை காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அப்போது ஒரு வாலிபர் ஒருவர் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடந்து கொண்டார். இதனையடுத்து அவரை சுற்றி வளைத்த போலீஸ் தனியாக அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அப்போது சர்வதேச போதைப் பொருளான மெத்தபட்டமைன் அவரிடம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை பிடித்து தேனி காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அப்போது அவர் தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்த பிரசாத் என்பதும் அவர் திருச்சியில் இருந்து ராஜேஷ் என்பவரிடம் இந்த போதைப் பொருளை வாங்கி வந்ததாக விசாரணையில் தெரியவந்தது. அவர் திருச்சியில் இருந்து தேனி மாவட்டம் கம்பம் பகுதிக்கு விற்பனைக்காக இதனை வாங்கி வருவதாக காவல்துறையினரிடம் தெரிவித்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதனையடுத்து அவரிடம் இருந்த 22 கிராம் மெத்தபெட்டமைனை பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ராஜேஷ் என்பவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-theni</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/crime/methamphetamine-seized-in-theni-youth-arrested-5kc6qzv"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Theni Lok Sabha Election Result 2024 :  தேனி தொகுதியில் குருவை கடைசி வரை முந்தவிடாமல் அடித்து ஆடும் சிஷ்யன்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-theni/theni-vip-candidate-ammk-ttv-dhinakaran-lok-sabha-seat-result-2024-updates-in-tamil-tvk-sejfdi</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-theni/theni-vip-candidate-ammk-ttv-dhinakaran-lok-sabha-seat-result-2024-updates-in-tamil-tvk-sejfdi</guid>
            <pubDate>Tue, 04 Jun 2024 16:41:24 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. இந்நிலையில் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியை பிடிக்குமா? அல்லது இண்டியா கூட்டணி வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் எழுந்துள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01de6j55s1nw3vdbhzvfcz9r5q,imgname-download-jpg.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தேனி தொகுதியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் &amp;nbsp;ஆரம்பம் முதலே தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார். திமுகவின் தங்க தமிழ்ச் செல்வன் சுமார் 3,25,682 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. இந்நிலையில் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியை பிடிக்குமா? அல்லது இண்டியா கூட்டணி வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஸ்டார் தொகுதியாக பார்க்கப்படும் தேனி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக தங்க தமிழ்ச்செல்வன், பாஜக கூட்டணி தரப்பில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன், &amp;nbsp;அதிமுக சார்பில் வி.டி. நாராயணசாமி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;திமுக வேட்பாளரான தங்க தமிழ்ச்செல்வன் 2011 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டமன்ற தேர்தலின் போது ஆண்டிப்பட்டி தொகுதியில் இருந்து சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவரான டிடிவி. தினகரன் தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதால் இந்த தொகுதி நட்சத்திர தொகுதியாக மாறியுள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;இந்நிலையில் தேனி தொகுதியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் ஆரம்பம் முதலே தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார். திமுகவின் தங்க தமிழ்ச் செல்வன் சுமார் 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;தேனி தொகுதி வேட்பாளர்கள்:&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;தங்க தமிழ்செல்வன் (திமுக) - &amp;nbsp;3,97,420 டிடிவி.தினகரன் (அமமுக)-1,90,903 நாராயணசாமி (அதிமுக) - 1.08,422 மதன் ஜெயபால்(நாம் தமிழர்)- 51,309&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-theni</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-theni/theni-vip-candidate-ammk-ttv-dhinakaran-lok-sabha-seat-result-2024-updates-in-tamil-tvk-sejfdi"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Theni Accident: தேனி மலைப்பாதையில் 100 அடி பள்ளத்தில் சீறிப் பாய்ந்த ஜீப்; ஒருவர் பலி, 5 பேர் படுகாயம்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-theni/1-person-killed-5-persons-highly-injured-while-jeep-accident-at-theni-hills-road-vel-sem05q</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-theni/1-person-killed-5-persons-highly-injured-while-jeep-accident-at-theni-hills-road-vel-sem05q</guid>
            <pubDate>Wed, 05 Jun 2024 18:59:49 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கர்நாடகா மாநிலத்தில் இருந்து சுற்றுலா வந்தவர்களின் வாகனம் தேனி மலைப்பாதையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி, 5 பேர் படுகாயம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01hzm9djekzacpnbjdb0135nbw,imgname-whatsapp-image-2024-06-05-at-17-37-07.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கர்நாடக மாநிலம், பெங்களூருவை அடுத்த குல்பர்கா என்ற குல்பர்கி &amp;nbsp;பகுதியைச் சேர்ந்த சஞ்சீவி ரெட்டி என்பவது தனது குடும்பத்தினர், உறவினர்கள் என எட்டு பேர் கொண்ட குழுவினர் கடந்த 30ம் தேதி வெள்ளிக்கிழமை கர்நாடகாவில் இருந்து புறப்பட்டு தமிழகம் மற்றும் கேரளா பகுதியில் சுற்றுலாவுக்காக வந்துள்ளனர். இந்நிலையில் இன்று சுற்றுலாவை முடித்துவிட்டு கேரளாவில் இருந்து கர்நாடகா மாநிலத்திற்கு புறப்பட்டு தமிழக, கேரளா எல்லையில் அமைந்துள்ள போடி மெட்டு மலைச்சாலை வழியாக வந்து கொண்டிருந்தனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;Rajinikanth: நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி முதல்வர் ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து&lt;/p&gt; &lt;p&gt;அப்போது நான்காவது கொண்டை ஊசி வளைவில் வாகனத்தை திருப்பிய போது ஜீப் கட்டுப்பாட்டை இழந்த தடுப்புச் சுவரை உடைத்து தலைகீழாக கவிழ்ந்து 100 அடி பள்ளத்தில் விழுந்தது. ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வைஷ்ணவி (வயது 12), கிருத்திகா (18), அம்பிகா (42), கரண் (11), விஜய் (31) ஆகிய 5 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இதில் சஞ்சீவி ரெட்டி (48) பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை &amp;nbsp;பலன் இன்றி உயிரிழந்தார்.&lt;/p&gt; &lt;p&gt;Savukku Shankar: சவுக்கு சங்கரின் நீதிமன்ற காவல் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிப்பு; நீதிபதி அதிரடி உத்தரவு&lt;/p&gt; &lt;p&gt;காயம் அடைந்தவர்களை போடி, குரங்கணி காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் மீட்டு போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கானா விளக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-theni</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-theni/1-person-killed-5-persons-highly-injured-while-jeep-accident-at-theni-hills-road-vel-sem05q"/>
        </item>
        <item>
            <title><![CDATA[தேனி: பேருந்தில் பயணித்த பெண் தவறி விழுந்ததில் தலையில் படுகாயம்.. வைரலாகும் CCTV காட்சிகள்..]]></title>
            <link>https://tamil.asianetnews.com/video/video/a-woman-who-was-traveling-in-a-bus-near-theni-suffered-a-head-injury-when-she-slipped-and-fell-cctv-footage-is-going-viral-rag-setdnf</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/video/video/a-woman-who-was-traveling-in-a-bus-near-theni-suffered-a-head-injury-when-she-slipped-and-fell-cctv-footage-is-going-viral-rag-setdnf</guid>
            <pubDate>Sun, 09 Jun 2024 18:34:27 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ஆண்டிபட்டி அருகே தனியார் பேருந்தில் படிக்கட்டின் அருகிலேயே நின்று பயணம் செய்த பெண் பேருந்தில் இருந்து தவறி விழுந்ததில் தலையில் படுகாயம் அடைந்தார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://geo.dailymotion.com/player/x1tbu.html?video=k51sq7LPTmtflgAPpzo" medium="video" height="768" width="1024"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா கடமலைக்குண்டு பகுதியை சேர்ந்த தீபாலட்சுமி என்ற பெண் நேற்று மதியம் தனியார் பேருந்தில் தேனிக்கு பயணம் செய்தபோது, பேருந்து படிக்கட்டின் அருகிலேயே பாதுகாப்பு கம்பியை பிடித்து நின்றபடி பயணம் செய்தார். நடத்துனரிடம் டிக்கெட் பெற்று அதனை கை பையில் வைக்கும் போது, எதிர்பாராத விதமாக பேருந்தில் இருந்து வெளியே தவறி விழுந்ததில் தலையில் படுகாயம் அடைந்து அங்கு இருந்தவர்களால் மீட்கப்பட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டார்.&lt;/p&gt; &lt;p&gt;பின்னர் அங்கிருந்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அந்த பெண் பேருந்தில் இருந்து வெளியே தவறி விழும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகளும், பேருந்து நடத்துனர் தவறி விழும் பெண்ணை காப்பாற்ற முயற்சிக்கும் சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகி உள்ளது. &amp;nbsp;இந்த விபத்து தொடர்பாக வழக்குபதிவு செய்து கடமலைக்குண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&lt;/p&gt; &lt;p&gt;டாடாவின் மலிவான மின்சார ஸ்கூட்டர் வரப்போகுது.. இந்தியாவே அதிரப்போகுது.. விலை எவ்வளவு?&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-theni</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/video/video/a-woman-who-was-traveling-in-a-bus-near-theni-suffered-a-head-injury-when-she-slipped-and-fell-cctv-footage-is-going-viral-rag-setdnf"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Savukku Shankar: யூடியூபர் சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு தள்ளுபடி; கஞ்சா வைத்திருந்த விவகாரத்தில் நீதிபதி அதிரடி]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-madurai/youtuber-savukku-shankar-bail-petition-dismissed-by-madurai-court-today-vel-sf4kh4</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-madurai/youtuber-savukku-shankar-bail-petition-dismissed-by-madurai-court-today-vel-sf4kh4</guid>
            <pubDate>Sat, 15 Jun 2024 19:35:28 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01hzq9hg2ne9mfxmjx4v5jdnp3,imgname-savukku-shankar.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கடந்த மே மாதம் 4ம் தேதி தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த பிரபல யூடியூபர் சவுக்கு சங்களை தமிழக காவல் துறையினர் கைது செய்தனர். பெண் காவலர்கள் குறித்து தரக்குறைவான வகையில் பேசிய விவகாரத்தில் அவர் கைது செய்யப்பட்டார். மேலும் கைது நடவடிக்கையின் போது அவரிடம் சுமார் 400 கிராம் அளவுக்க கஞ்சா இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;பாஜக.வுக்கு ஆதரவான நிறுவனங்கள் பணம் சம்பாதிக்கவே நீட் கொண்டுவரப்பட்டது - செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு&lt;/p&gt; &lt;p&gt;உடனடியாக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பாக தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டி காவல் துறையினர் கூடுதல் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு மதுரை மாவட்டம் போதைப் பொருள் தடுப்பு பிரிவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் தமிழக காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.&lt;/p&gt; &lt;p&gt;தமிழக அரசின் சிறப்பான செயல்பாடுகளுக்கு மக்கள் அளித்த அங்கீகாரம் தான் நாடாளுமன்ற தேர்தல் வெற்றி - வேல்முருகன்&lt;/p&gt; &lt;p&gt;இந்நிலையில் கஞ்சா வைத்திருந்த விவகாரத்தில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி சவுக்கு சங்கர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி செங்கமலச்செல்வன் முன்பாக நடைபெற்றது. அப்போது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். ஏற்கனவே இதே வழக்கில் ஜாமீன் கோரப்பட்ட நிலையில், அந்த மனுவை சவுக்கு சங்கர் தரப்போ வாபஸ் பெற்ற நிலையில், தற்போது இரண்டாவது முறையாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-theni</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-madurai/youtuber-savukku-shankar-bail-petition-dismissed-by-madurai-court-today-vel-sf4kh4"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Savukku Shankar: சவுக்கு சங்கரின் நீதிமன்ற காவல் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிப்பு; நீதிபதி அதிரடி உத்தரவு]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-theni/youtuber-savukku-shankar-s-judicial-custody-extened-for-3rd-time-vel-selu4z</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-theni/youtuber-savukku-shankar-s-judicial-custody-extened-for-3rd-time-vel-selu4z</guid>
            <pubDate>Wed, 05 Jun 2024 16:49:47 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கஞ்சா வைத்திருந்ததாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்ற காவலை 3வது முறையாக நீட்டிப்பு செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01hyn3zdz5nqrrx03gk88t5yeb,imgname-savukku-shankar.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் தேனி மாவட்டத்தில் தங்கியிருந்த போது தனது அறையில் 2.5 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக பழனிசெட்டிபட்டி காவல்துறை தரப்பில் வழக்குப்பதிவு &amp;nbsp;செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் கடந்த மாதம் 8ம் தேதி 15நாள் நீதிமன்ற காவல் விடுத்து உத்தரவிட்டு இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 20ம் தேதி சவுக்கு சங்கரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு செய்திருந்தனர்.&lt;/p&gt; &lt;p&gt;தமிழகத்தில் அசைக்க முடியாத சக்தி பாஜக என்பதை வாக்கு வங்கி நிரூபித்துள்ளது - எல்.முருகன்&lt;/p&gt; &lt;p&gt;இதனையடுத்து 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சவுக்கு சங்கருக்கு ஜூன் 5ம் தேதி வரை மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி செங்கமலச்செல்வன் உத்தரவு பிறப்பித்தார். இந்தநிலையில் நீதிமன்றக் காவல் நிறைவடைந்து கோவை மத்திய சிறையில் இருந்து வீடியோ கால் மூலம் விசாரணைக்கு சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார்.&lt;/p&gt; &lt;p&gt;&quot;ஆட்டை கொடுமை படுத்தாமல் பிரியாணி போடுங்கள்&quot; அண்ணாமலையின் கோரிக்கையை டிரெண்டாக்கும் திமுக.வினர்&lt;/p&gt; &lt;p&gt;இதனிடையே கஞ்சா வைத்திருந்த வழக்கில் 3ம் முறையாக மேலும் 15 நாட்களுக்கு நீதிமன்றக்காவலை நீட்டித்து மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி செங்கமலச்செல்வன் உத்தரவிட்டடுள்ளார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-theni</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-theni/youtuber-savukku-shankar-s-judicial-custody-extened-for-3rd-time-vel-selu4z"/>
        </item>
        <item>
            <title><![CDATA[கோவிலில் தீபம் ஏற்றிய நபர்; கடவுள் கண் முன்பே கரிக்கடையான சோகம் - தேனியில் பரபரப்பு]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-theni/daily-wager-died-fire-burn-in-theni-district-vel-shun7a</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-theni/daily-wager-died-fire-burn-in-theni-district-vel-shun7a</guid>
            <pubDate>Wed, 07 Aug 2024 18:39:10 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தேனி மாவட்டத்தில் கோவிலில் சூடம் ஏற்றி வழிபாடு நடத்திய நபர் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j4pf942k8yxt6dn8r677466f,imgname-mixcollage-07-aug-2024-06-37-pm-9796.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்த ராயப்பன் பட்டியைச் சேர்ந்தவர் சின்னன். கூலித் தொழிலாளியான இவர் திருமணம் செய்து கொள்ளாமல் தனது சகோதரருடன் அப்பகுதியில் வசித்து வந்தார். இதனிடையே ஆனைமலையன்பட்டி பகுதியில் அமைந்துள்ள கோவிலுக்கு சின்னன் வழிபாடு நடத்துவதற்காகச் சென்றுள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;அவன் கூட பழகாதனு சொன்னா கேக்க மாட்டியா? சகோதரியை கொன்று தொங்விட்ட அண்ணன்&lt;/p&gt; &lt;p&gt;இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் கேனுடன் சென்ற சின்னன் அதனை அருகிலேயே வைத்துக் கொண்டு கோவிலில் கற்பூரம் ஏற்றி வழிபாடு மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. அப்போது தீபம் எதிர்பாராத விதமாக சின்னன் வைத்திருந்த பெட்ரோல் கேனில் பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பெட்ரோலுடன் நெருப்பு சின்னன் மீதும் பரவவே தீயில் கருகி அருகிலேயே சுருண்டு விழுந்தார்.&lt;/p&gt; &lt;p&gt;தமிழக அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்! நிலுவையில் உள்ள மொத்த சம்பளத்தையும் வழங்க உத்தரவு&lt;/p&gt; &lt;p&gt;அருகில் யாரும் இல்லாததால் சின்னன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவ்வழியா சென்றவர்கள் இருசக்கர வாகனத்தை அடையாளம் கண்டு ஊர் மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த இராயப்பன்பட்டி காவல் துறையினர் சின்னனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவிலில் சாமி கும்பிட வந்த நபர் கோவில் முன்பாக தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-theni</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-theni/daily-wager-died-fire-burn-in-theni-district-vel-shun7a"/>
        </item>
        <item>
            <title><![CDATA[அட பாவிங்களா! ஒரு பொண்டாட்டிக்கு இரண்டு கணவர் போட்டா போட்டி! இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/crime/man-stabbed-to-death-in-bodi-after-dispute-over-wife-second-relationship-articleshow-kfobvlg</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/crime/man-stabbed-to-death-in-bodi-after-dispute-over-wife-second-relationship-articleshow-kfobvlg</guid>
            <pubDate>Wed, 27 Aug 2025 12:20:23 +0530</pubDate>
            <description><![CDATA[போடியில் இரண்டாம் திருமணம் செய்த ஆண்டிவேலு, சிறையில் இருந்து விடுதலையான பின் தனது மனைவி வேறொருவருடன் குடும்பம் நடத்துவதை அறிந்து மோதலில் ஈடுபட்டார். இதில் ஆண்டிவேலு குத்திக் கொல்லப்பட்டார்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k3n37mv799pynhvbmda7cs8n,imgname-theni-1756275921766.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தேனி மாவட்டம் போடி கரட்டுப்பட்டியை சேர்ந்தவர் ஆண்டிவேலு (42). இவர் கரட்டுப்பட்டியைச் சேர்ந்த செல்வராணி என்ற பெண்ணை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இதனையடுத்து ஆண்டிவேலு தனக்கு தங்கை முறை உள்ள ஆனந்தராணி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதால் ஊர் மக்கள் அவரை ஒதுக்கி வைத்துள்ளனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பலாத்கார குற்றத்திற்காக கைது&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இதனைத் தொடர்ந்து ஆண்டிவேலு மற்றும் செல்வராணி ஆகியோர் போடியில் குடும்பம் நடத்தி வந்தார். இந்நிலையில், பல்வேறு தவறுகள் செய்து அவ்வப்போது குற்ற வழக்குகளில் ஆண்டுவேலு சிக்கி வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பலாத்கார குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகளாக சிறையில் இருந்து வந்தார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;மனைவியை என்னுடன் அனுப்பிவிடு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்நிலையில் நேற்று முன்தினம் சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில், ஆனந்தராணியை வீட்டில் சென்று பார்த்தபோது அவர், ஆண்டிவேலுவின் நண்பரான பாலமுருகன் (37) என்பவருடன் குடும்பம் நடத்தி குழந்தை பெற்றிருந்ததும் தெரிய வந்தது. மேலும் பாலமுருகனும் ஆனந்த ராணியும் கணவன் மனைவியாகவே குடும்பம் நடத்தி வந்துள்ளனர். ஆண்டிவேலு, உன்னுடைய குழந்தையை நீயே வைத்துக்கொண்டு எனது மனைவியை என்னுடன் அனுப்பிவிடு என்று கூறி பாலமுருகனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால் மனைவி மற்றும் குழந்தையை அனுப்ப முடியாது என்று பாலமுருகன் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ரத்த வெள்ளத்தில் உயிரிழப்பு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்நிலையில் நேற்று இரவு கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் எதிரே இந்த விவகாரம் தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இந்த விவகாரத்தில் பாலமுருகனின் தந்தை நடராஜன் (63) என்பவரை ஆண்டிவேலு தாக்கியதில் நடராஜனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன் கத்தியால் ஆண்டிவேலுவை சரமாரியாக குத்தியதில் ஆண்டுவேலு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்த விவகாரம் தொடர்பாக பாலமுருகனை கைது செய்த போலீசார் ஆண்டிவேலுவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தற்போது பாலமுருகன் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆண்டிவேலு தாக்கியதில் காயமடைந்த பாலமுருகனின் தந்தை நடராஜன் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஒரு மனைவிக்காக இரண்டு கணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் போடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-theni</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/crime/man-stabbed-to-death-in-bodi-after-dispute-over-wife-second-relationship-articleshow-kfobvlg"/>
        </item>
        <item>
            <title><![CDATA[கதறிய மருமகள் நிகிலா.. விடாத 52 வயது மாமனார்.. ரசித்த மகன் பிரதீப்.. அமமுக பிரமுகர்கள் வெறியாட்டம்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/crime/wife-and-brother-in-law-double-murder-in-theni-lyqzhag</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/crime/wife-and-brother-in-law-double-murder-in-theni-lyqzhag</guid>
            <pubDate>Fri, 12 Dec 2025 12:02:00 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தேனியில் குடும்பத் தகராறு காரணமாக மனைவி மற்றும் அவரது அண்ணனை, கணவனும் மாமனாரும் சேர்ந்து சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துள்ளனர். இந்த இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தந்தை, மகனை தேடி வருகின்றனர்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kc8kqjw5b83dpe64cccagpr0,imgname-theni-1-1765520690053.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தேனியில் குடும்பத் தகராறு காரணமாக மனைவி மற்றும் அவரது அண்ணனை, கணவனும் மாமனாரும் சேர்ந்து சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துள்ளனர். இந்த இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தந்தை, மகனை தேடி வருகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள முத்தையன்செட்டிபட்டியை சேர்ந்தவர் சிவக்குமார்(52). இவரது மகன் பிரதீப் (27). இருவரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் ஒன்றிய பொறுப்பில் இருந்து வருகின்றனர். இவருக்கு சின்னமனூரை சேர்ந்த நிகிலா(32) என்பவருடன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இருவரும் முத்தையன்செட்டிபட்டியில் வசித்து வந்த நிலையில், பிரதீப் அமமுக கட்சியில் கிளைச் செயலாளராக இருந்த நிலையில் எந்த வேலைக்கும் செல்லாமல் குடித்துவிட்டு அடிதடி, கட்டப்பஞ்சாயத்து என்று செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. பிரதீப் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதனால் கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் நிகிலா தனது கணவரை பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதைத் தொடர்ந்து உறவினர்கள் சமாதானம் பேசி கடந்த வாரம் நிகிலாவை பிரதீப்புடன் சேர்த்து வைத்துள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் இடையே மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பிரதீப் நிகிலாவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த நிகிலா சின்னமனூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் பிரதீப் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்துவதாக போடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதனை தொடர்ந்து பிரதீப்புடன் சேர்ந்து வாழ முடியாது என பஞ்சாயத்து பேசி முடித்துவிட்டு தன்னுடைய பொருட்களை எடுத்துச் செல்வதற்காக நிகிலா அவரது அண்ணன் விவேக் (33) மற்றும் 10க்கும் மேற்பட்ட உறவினர்களை அழைத்துக் கொண்டு முத்தையன் செட்டிபட்டியில் உள்ள கணவர் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு சிவக்குமார், பிரதீப் மற்றும் நிகிலாவின் குடும்பத்தினருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் பிரதீப் விவேக்கை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அண்ணனை கொலை செய்ததை நேரில் கண்டு மயங்கிய நிகிலாவை மாமனார் சிவக்குமார் அரிவாளால் சரமாரியாக வெட்டியும், கத்தியால் குத்தியும் படுகொலை செய்துள்ளனர். இதனை கண்டு அப்பகுதியினர் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதனைத் தொடர்ந்து சிவக்குமார் மற்றும், அவரது மகன் பிரதீப் ஆகியோர் தலைமறைவாகி விட்டார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இது தொடர்பாக போடி தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து இரண்டு பேர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவாக உள்ள இருவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக மனைவி மற்றும் மைத்துனரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-theni</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/crime/wife-and-brother-in-law-double-murder-in-theni-lyqzhag"/>
        </item>
        <item>
            <title><![CDATA[சுமதியை கொ*லை செய்துவிட்டு தாலியை பார்சலில் கணவனுக்கு அனுப்பியது எதற்காக? வெங்கடேஷ் அதிர்ச்சி வாக்குமூலம்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/crime/salem-women-murder-case-accused-venkatesh-shocking-statement-nwwcaag</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/crime/salem-women-murder-case-accused-venkatesh-shocking-statement-nwwcaag</guid>
            <pubDate>Wed, 31 Dec 2025 13:59:13 +0530</pubDate>
            <description><![CDATA[ஏற்காட்டில் காணாமல் போன சுமதியின் தாலி பார்சலில் வந்ததால் கணவர் அதிர்ச்சியடைந்தார். விசாரணையில், இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய வெங்கடேஷ் என்பவருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் தகராறில் சுமதி கொலை செய்யப்பட்டு, உடலை சாக்குமூட்டையில் கட்டி வீசியது அம்பலமானது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kdq611h40h8q969hcpa6a3df,imgname-salem-1767083378212.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[ஏற்காட்டில் காணாமல் போன சுமதியின் தாலி பார்சலில் வந்ததால் கணவர் அதிர்ச்சியடைந்தார். விசாரணையில், இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய வெங்கடேஷ் என்பவருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் தகராறில் சுமதி கொலை செய்யப்பட்டு, உடலை சாக்குமூட்டையில் கட்டி வீசியது அம்பலமானது.&lt;img&gt;&lt;p&gt;சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியை அடுத்துள்ள மாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் (32). லாரி ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு நாமக்கல் மாவட்டம் சூளங்காட்டு புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சுமதி (30) என்பவரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. கடந்த 23ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற சுமதி மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் கணவர் மற்றும் உறவினர்கள் தேடியும் கிடைக்கவில்லை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதனையடுத்து மனைவியை காணவில்லை என்று கணவர் ஏற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே மாரமங்கலம் மலைக்கிராமத்திற்கு வந்த பேருந்து ஓட்டுநர் ஒரு பார்சலை அங்குள்ள மளிகைக்கடையில் கொடுத்து சண்முகத்திடம் கொடுக்கும்படி கூறியுள்ளார். இதனை பிரித்து பார்த்த சண்முகத்திற்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த பார்சலில் சுமதி அணிந்திருந்த தாலி இருந்துள்ளது. இதனை யார் கொடுத்தது என்று ஓட்டுநரிடம் சண்முகம் விசாரித்த போது அதே கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் (22) என்பவர் கொடுத்து அனுப்பியது தெரியவந்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அவரிடம் விசாரித்த போது உன் மனைவி சுமதி இந்த தாலியை கழற்றி கொடுத்துவிட்டு உன்னோடு வாழ முடியாது எனக்கூறி எங்கையோ சென்றுவிட்டார். யாருடன் சென்றார்? எனக்கு தெரியாது எனக்கூறியுள்ளார். இதையடுத்து வெங்கடேசை பிடித்து போலீசார் பாணியில் விசாரணை நடத்தினர். அப்போது அதிர்ச்சி தகவல் வெளியானது. சுமதிக்கும் எனக்கும் கள்ளத்தொடர்பு இருந்தததாகவும் கடந்த 23ம் தேதி கொலை செய்து, சாக்குமூட்டையில் கட்டி பள்ளத்தில் வீசியதாக கூறினார். இதனையடுத்து சுமதியின் உடலை ஒருவழியாக மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கைது செய்யப்பட்ட வெங்கடேஷ் குறித்து போலீசார் கூறுகையில்: மாரமங்கலத்தை சேர்ந்த சுமதி, இன்ஸ்டாகிராம் மூலம் வெங்கடேசுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. லாரி ஓட்டுநரான சண்முகம் வேலைக்கு சென்ற நேரத்தில் அந்த பகுதியில் உள்ள தனது காபி தோட்டத்திற்கு சுமதியை அடிக்கடி வரவழைத்து வெங்கடேஷ் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். திடீரென வெங்கடேசின் போன் அழைப்பை சுமதி தவிர்த்துள்ளார். இதனால் உனக்கு வேறு யாருடனாவது தொடர்பு இருக்கிறதா என வெங்கடேஷ் தகராறு செய்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆனால் அவர் வேறு நபர்களுடன் போனில் பேசி வந்தது, அவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் சம்பவத்தன்று சுமதியை காபி தோட்டத்திற்கு வரவழைத்து இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். பின்னர் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த வெங்கடேஷ் துப்பட்டாவால் சுமதியின் கழுத்தை இறுக்கி கொலை செய்து தாலியை மட்டும் கழற்றி எடுத்துவிட்டு, காபி கொட்டை கட்டும் சாக்குப்பையில் போட்டு கட்டி, பைக்கில் ஏற்றி குப்பனூர் மலைப்பாதையில் 6 கி.மீ. தூரம் சென்று முனியப்பன் கோயில் அருகே வளைவில் உள்ள பள்ளத்தில் இறங்கி, தூரமாக தூக்கி வீசியுள்ளார். பின்னர் தாலியை பார்சலில் அனுப்பி வைத்து, வேறு நபருடன் அவர் ஓடிவிட்டார் எனக்கூறினால் நம்பி விடுவார்கள் என நாடகம் ஆடியது தெரியவந்துள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-theni</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/crime/salem-women-murder-case-accused-venkatesh-shocking-statement-nwwcaag"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Theni: பள்ளிகளில் சாதி மோதல்களை தவிர்க்க பரிந்துரைக்கப்பட்ட நீதிபதியின் அறிக்கையை கிழித்த ஊராட்சி துணைத்தலைவர்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-theni/theni-panchayat-committee-vice-chairman-tore-up-the-report-given-by-retired-judge-chanduru-vel-sfbyeg</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-theni/theni-panchayat-committee-vice-chairman-tore-up-the-report-given-by-retired-judge-chanduru-vel-sfbyeg</guid>
            <pubDate>Wed, 19 Jun 2024 19:19:28 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;பள்ளி மாணவர்களிடையே ஏற்படும் சாதி மோதல்களை தவிர்க்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு சமர்ப்பித்த அறிக்கை நகலை தேனி ஊராட்சி குழு துணைத்தலைவர் கிழித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j0rc3hf52jy58439yd9zx341,imgname-mixcollage-19-jun-2024-07-18-pm-4409.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;பள்ளி, கல்லூரி மாணவர்கள் இடையே சாதிய மோதல்கள் மற்றும் வன்முறைகளை தடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் குழுவை கடந்த 2023ம் ஆண்டு தமிழக அரசு அமைத்தது. அதன்படி ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு பல்வேறு தரப்புகளிடம் கருத்துக்களை கேட்ட பின்பு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினடம் அறிக்கையை சமர்ப்பித்தார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;அதில், மாணவர்கள் கையில் கயிறு கட்டுவதால் சாதி அடையாளம் வெளிப்படுத்தும் வகையில் இருப்பதால் பள்ளிகளில் கையில் கயிறு கட்டுவதை தடை விதிக்க வேண்டும் என அரசுக்கு பரிந்துரை அளிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற ஊராட்சி கூட்டத்தில் ஊராட்சிக் குழு தலைவர், துணைத் தலைவர் உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;Illicit liquor in kallakurichi: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் பலி, 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி&lt;/p&gt; &lt;p&gt;இந்நிலையில் இந்தக் கூட்டத்தில் ஊராட்சி குழு துணை தலைவர் ராஜபாண்டி, ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அறிக்கையின் நகல் குறித்து கூட்டத்தில் பேசிய போது மாணவர்கள் கையில் கயிறு கட்டக் கூடாது எனக் கூறுவது இந்து மத நம்பிக்கைக்கு எதிராக, அரசு ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக கூறி சந்துரு சமர்ப்பித்த அறிக்கையின் நகலை கூட்டத்தில் கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;பாமக.வுக்கு தைரியமா? வாக்கு வங்கியை சோதிக்கவே விக்கிரவாண்டியில் போட்டி - செல்லூர் ராஜூ விமர்சனம்&lt;/p&gt; &lt;p&gt;ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் பல்வேறு தரப்பினரிடம் எடுக்கப்பட்ட கருத்துக்களை வைத்து நேற்றைய தினம் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரிடம் ஒரு நபர் குழு சமர்பித்த அறிக்கைக்கு எதிராக நடைபெற்ற இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-theni</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-theni/theni-panchayat-committee-vice-chairman-tore-up-the-report-given-by-retired-judge-chanduru-vel-sfbyeg"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ADMK Protest: தேனியில் எம்.ஜி.ஆர். பாடலுக்கு சாமி ஆடிய பெண்; சாலையில் அங்க பிரதசட்ணம் - பதறிப்போன போலீஸ்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-theni/the-woman-who-danced-aggressively-at-the-aiadmk-protest-in-theni-vel-sfky6e</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-theni/the-woman-who-danced-aggressively-at-the-aiadmk-protest-in-theni-vel-sfky6e</guid>
            <pubDate>Mon, 24 Jun 2024 15:53:01 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தேனியில் திமுக அரசை கண்டித்து அதிமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஒலிபெருக்கி மூலம் இசைக்கப்பட்ட பாடலுக்கு பெண் சாலையில் உருண்டு புரண்டு நடனம் ஆடிய காட்சி வைரல் ஆகி வருகிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j14w8b5tgpyhkc8xtczt2pfs,imgname-mixcollage-24-jun-2024-03-51-pm-2102.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளச்சாராயம் அருந்தி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், கள்ளச்சாராயம் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து தேனி மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி பங்களாமேடு பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பெண்கள் என சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இங்கேயே தீக்குளித்து சாவேன்; திமுக.விற்கு எதிரான போராட்டத்தில் கார் மீது நின்று ஓ.எஸ்.மணியன் ஆவேசம்&lt;/p&gt; &lt;p&gt;ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்தும், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஆர்ப்பாட்டம் முடிந்து நிர்வாகிகள், தொண்டர்கள் கலைந்து சென்ற போது அதிமுக கட்சியின் பாடல்கள் ஒலிபெருக்கி மூலம் &amp;nbsp;ஒலிபரப்பப்பட்டது. அப்போது பெண் ஒருவர் அதிமுக கண்டன கோஷங்கள் அடங்கிய பதாகையை கையில் ஏந்தியவாறு பாடலுக்கு திடீரென நடனமாடத் தொடங்கினார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;வி.சி.க.வுக்கு மாநில அந்தஸ்து பெற்று தந்த மாமன்னன்; திருமாவுக்கு விழா எடுத்து கொண்டாடிய இளம் பெண்கள்&lt;/p&gt; &lt;p&gt;ஆக்ரோஷமாக சாலையில் உருண்டு புரண்டுக்கொண்டு பாட்டிற்கு நடனமாடிய பெண்ணை சாலையில் நடந்து செல்வோர் பார்த்துக்கொண்டே சென்ற நிலையில் பின்னர் பெண் போலீசார் அவரை &amp;nbsp;அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-theni</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-theni/the-woman-who-danced-aggressively-at-the-aiadmk-protest-in-theni-vel-sfky6e"/>
        </item>
        <item>
            <title><![CDATA[500 ஆண்டு பழமையான கோயில் அபகரிப்பு: அமைச்சரின் மாஜி உதவியாளருக்கு எதிராக சீறிய மக்கள்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-theni/public-protests-allege-minister-former-assistant-is-trying-to-seize-ancient-temple-in-theni-kak/articleshow-vsmgg3z</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-theni/public-protests-allege-minister-former-assistant-is-trying-to-seize-ancient-temple-in-theni-kak/articleshow-vsmgg3z</guid>
            <pubDate>Wed, 28 May 2025 09:56:09 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தேனி மாவட்டம் ஊஞ்சாம்பட்டியில் 500 ஆண்டுகள் பழமையான காளியம்மன் கோவிலை அமைச்சரின் முன்னாள் உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி அபகரித்து, பொதுமக்கள் வழிபாடு செய்ய விடாமல் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jwahw0qckaj692s40982y42q,imgname-whatsapp-image-2025-05-28-at-09.45.47-1748405977836.jpeg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;Theni temple property misappropriation : &lt;/strong&gt;தேனி மாவட்டம் ஊஞ்சாம்பட்டியில் ஊர் பொதுமக்கள் வழிபடும் 500 ஆண்டுகள் பழமையான காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. ஊஞ்சாம்பட்டி கிராமம் மற்றும் அன்னஞ்சி விலக்கு ஆகிய பகுதிகளில் இந்தக் கோவிலுக்கு சொந்தமாக பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. ஆண்டுதோறும் வரி வசூல் செய்து கோவில் திருவிழாவை வெகு விமர்சையாக நடத்தி வந்துள்ளனர்.&lt;/p&gt;&lt;p&gt;இந்த நிலையில் அமைச்சர் பெரியகருப்பனின் நேர்முக உதவியாளராக இருந்த கிருஷ்ணன் என்கிற கிருஷ்ணமூர்த்தி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தேனிக்கு வந்து இந்த கோவிலில் வந்து வழிபடத் தொடங்கினார். பின்னர் இக்கோவிலுக்கு அடிக்கடி வந்த அவர், இந்தக் கோவிலில் உள்ள காளியம்மன் தனது வேண்டுதல்களை உடனடியாக நிறைவேற்றுவதாக கூறி கோவிலுக்கு சில பணிகள் நன்கொடையாக செய்து கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த கோவில் தனக்கு சொந்தமானது எனக் கூறி பொதுமக்கள் வழிபாடு செய்யாமல் தடுத்து விட்டதாக கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;img&gt;&lt;/p&gt;&lt;h2&gt;அமைச்சரின் மாஜி உதவியாளுக்கு எதிராக மக்கள் போராட்டம்&lt;/h2&gt;&lt;p&gt;இக்கோவிலில் பொதுமக்கள் ஆடு,கோழி பலியிடாமல் வழிபட்டு வந்த நிலையில்,கோவிலின் ஆகம விதிகளை மீறி,கோவிலின் புனிதத்தை கெடுக்கும் விதத்தில் இந்த கோவிலில் ஆடு கோழி பலியிட்டு வருவதுடன், பொதுமக்களின் ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக சுற்றுச்சுவர் எழுப்பி தற்போது கோவிலின் கருவறை உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் பூட்டி வைத்து பொதுமக்களை வழிபாடு செய்யாமல் தடுத்துவிட்டதாகவும் புகார் கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவில் எதிர்புறத்தில் மிகப்பெரிய மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் வழிபாடு செய்வதை தடுக்க மாட்டேன் என போலீசாரிடம் தெரிவித்த கிருஷ்ணமூர்த்தி,நேற்று மீண்டும் கோவிலை பூட்டி வைத்துவிட்டு சென்றுவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இந்து மக்கள் கட்சி மாநில தொண்டர் அணி தலைவர் குரு.ஐயப்பன் தலைமையில், தேனி மாவட்ட ஆட்சியரிடமும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் மனு அளித்தனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;img&gt;&lt;/p&gt;&lt;h3&gt;மாவட்ட ஆட்சியரிடம் புகார்&lt;/h3&gt;&lt;p&gt;அதில் கிருஷ்ணன் என்கிற கிருஷ்ணமூர்த்தி மீது நில அபகரிப்பு, மற்றும் பொதுமக்களிடையே கலவரத்தை தூண்டும் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என மனு அளித்தனர். அமைச்சரின் முன்னாள் உதவியாளர் எனக் கூறி பொதுமக்களுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான கோவிலை அபகரித்ததுடன்,பொது மக்களை அங்கு வழிபாடு செய்யாமல் தடுத்து வரும் சம்பவம் தேனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-theni</category>
            <dc:creator>Ajmal Khan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-theni/public-protests-allege-minister-former-assistant-is-trying-to-seize-ancient-temple-in-theni-kak/articleshow-vsmgg3z"/>
        </item>
        <item>
            <title><![CDATA[புதிய அணைக்கு தடை கோரும் தமிழகம்; முல்லைப்பெரியாறு அணையில் மத்திய குழு இன்று ஆய்வு]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/central-water-resources-commission-officials-are-inspect-the-stability-of-the-mullaperiyar-dam-vel-sf0b1t</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/central-water-resources-commission-officials-are-inspect-the-stability-of-the-mullaperiyar-dam-vel-sf0b1t</guid>
            <pubDate>Thu, 13 Jun 2024 12:21:29 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;முல்லைப் பெரியாறு அணையில் மத்திய நீர்வள ஆணைய தலைமைப் பொறியாளர் ராகேஷ் கசியப் தலைமையிலான மத்திய கண்காணிப்பு குழுவினர் இன்றும், நாளையும் ஆய்வு மேற்கொள்கின்றனர்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j085sm1ncrx3dmqezndarym9,imgname-whatsapp-image-2024-06-13-at-12-20-01.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழகத்தின் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாகத் திகழ்வது முல்லைப் பெரியாறு அணை. இந்த முல்லை பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க, கடந்த 2014 ல் மூன்று பேர் கொண்ட 'கண்காணிப்பு குழுவை&quot; உச்சநீதிமன்றம் நியமித்தது. பின் 2022ல் இக்குழுவில் இரு மாநில தொழில் நுட்ப வல்லுனர்கள் இருவரை சேர்க்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;Dharmapuri Crime: தருமபுரியில் பரபரப்பு; முகம் சிதைக்கப்பட்டு சிறார் கொடூர கொலை - போலீஸ் விசாரணை&lt;/p&gt; &lt;p&gt;தற்போது இந்த குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் ராகேஷ் உள்ளார். தமிழக பிரதிநிதிகளாக நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழும தலைவர் சுப்பிரமணியம், கேரள பிரதிநிதிகளாக கேரள நீர்ப்பாசனத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அசோக்குமார் சிங் , கேரள நீர்ப்பாசனத்துறை நிர்வாக தலைமை பொறியாளர் பிரியேஷ் உள்ளனர். இக்குழு கடந்த ஆண்டு மார்ச் 27ல் பெரியாறு அணையை ஆய்வுசெய்தனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இன்று முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 118.85 அடியாக உள்ள நிலையில், நடைபெறக்கூடிய ஆய்விற்கு கேரள மாநிலம் தேக்கடி படகுத்துறை பகுதியில் இருந்து அதிகாரிகள் படத்தின் மூலம் அணை பகுதிக்கு சென்றுள்ளனர். இதையடுத்து முல்லைபெரியாறு அணையில் பருவநிலை மாற்றத்தை ஒட்டி செய்துள்ள, செய்ய வேண்டிய வழக்கப்பணிகள் குறித்தும், &amp;nbsp;மெயின் அணை, பேபி அணை, ஷட்டர் பகுதி, கேலரி பகுதி, வல்லகடவு பாதை உள்ளிட்டவற்றை கண்காணிப்பு குழுவினர் இன்று ஆய்வு செய்கின்றனர்.&lt;/p&gt; &lt;p&gt;திருச்சி எஸ்.பி.யின் தலைக்கு குறிவைத்து இன்ஸ்டாவில் மிரட்டல் பதிவு; சிறார்களை கண்டித்து அனுப்பிய போலீஸ்&lt;/p&gt; &lt;p&gt;அங்கு மதகுகளின் இயக்கம் சரிபார்த்தல், அணையின் பலத்தை நிரூபிக்கும் சுரங்கக் கசிவு நீரின் மாதிரிகள் சேகரிக்கப்படும். இன்றும், நாளையும் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்படும் முடிவுகள் அரசுக்கு அறிக்கையாக அனுப்பப்படும். கடந்த சில மாதங்களாக கேரளாவில் முல்லைப் பெரியாற்றின் புதிய அணை என்ற கருத்து நிலவி வரும் சூழலில் இந்த ஆய்வு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-theni</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/central-water-resources-commission-officials-are-inspect-the-stability-of-the-mullaperiyar-dam-vel-sf0b1t"/>
        </item>
        <item>
            <title><![CDATA[கம்பம் அரசு மருத்துவமனையில் கட்டுமானத்தின் போதே இடிந்து விழுந்த கட்டிடம்; ஒருவர் பலி, இருவர் படுகாயம்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-theni/construction-worker-killed-while-building-collapsed-at-cumbam-government-hospital-in-theni-vel-sgb59d</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-theni/construction-worker-killed-while-building-collapsed-at-cumbam-government-hospital-in-theni-vel-sgb59d</guid>
            <pubDate>Mon, 08 Jul 2024 19:23:37 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், இருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j299wmjh41268m9nd4wgjm3f,imgname-whatsapp-image-2024-07-08-at-16-31-44.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தேனி மாவட்டம், கம்பம் அரசு மருத்துவமனையில் ரூபாய் 10 கோடி மதிப்பில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனை கட்டிடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. கடந்த இரண்டு வருடங்களாக புதிய கட்டிடம் அமைக்கும் பணியில் வெளி மாவட்ட பணியாளர்கள் ஏராளமானோர் நாள் தோறும் பணிபுரிந்து வருகின்றனர்.&lt;/p&gt; &lt;p&gt;இந்நிலையில் இன்று வழக்கம் போல் மதுரை ஊமச்சிகுளம் பகுதியைச் சேர்ந்த நம்பிராஜன், முனீஸ்வரன் மற்றும் ரத்தினவேல் ஆகியோர் புதிய கட்டிடத்தில் உள்ள போர்டிகோ மற்றும் எலிவேஷன் பகுதியில் கட்டிடப் பணிகளை செய்து கொண்டிருந்தனர். திடீரென அந்த கட்டிடம் இடிந்து அவர்கள் மீது விழுந்ததில் இடிபாடுகளுக்குள் அவர்கள் சிக்கிக் கொண்டனர்.&lt;/p&gt; &lt;p&gt;மதுரை அரசு மருத்துவமனையில் நோயாளிகளை கவனிப்பதில் அலட்சியம்? ஒரே ஸ்ட்ரெச்சரில் 2 கர்ப்பிணிகள்&lt;/p&gt; &lt;p&gt;இது குறித்து அருகில் பணிபுரிந்த பணியாளர்கள் கம்பம் தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரமாக போராடி நம்பிராஜனை உயிரிழந்த நிலையில் மீட்டனர். மேலும் உடன் பணிபுரிந்த முனீஸ்வரன் மற்றும் ரத்தினவேல் படுகாயம் அடைந்ததை தொடர்ந்து அவர்களை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.&lt;/p&gt; &lt;p&gt;திருப்பூரில் சடங்கு சம்பிரதாயங்களை தகர்த்து மூதாட்டியின் உடலை தகனம் செய்த பெண்கள்&lt;/p&gt; &lt;p&gt;விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதிதாக கட்டி வரும் இந்த மருத்துவமனை கட்டிடத்தில் &amp;nbsp;உரிய தளவாடங்களை சரிவர பயன்படுத்தி கட்டிடம் கட்டாததால் புதிய கட்டிடம் இடிந்து விழுந்து உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக உடன் பணிபுரிபவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-theni</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-theni/construction-worker-killed-while-building-collapsed-at-cumbam-government-hospital-in-theni-vel-sgb59d"/>
        </item>
    </channel>
</rss>
