<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes"?>
<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Wed, 04 Mar 2026 13:32:53 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss/tamilnadu-thajavur" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[திமுக முக்கிய தலைவர் வீட்டில் கொள்ளையடித்தவர்கள் இவர்கள் தான்! எவ்வளவு சவரன் நகை? வெளியான அதிர்ச்சி தகவல்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/crime/thanjavur-dmk-ex-mp-aks-vijayan-house-robbery-4-people-arrested-1bbnko8</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/crime/thanjavur-dmk-ex-mp-aks-vijayan-house-robbery-4-people-arrested-1bbnko8</guid>
            <pubDate>Sun, 07 Dec 2025 09:52:53 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தஞ்சாவூரில் திமுக முன்னாள் எம்.பி ஏ.கே.எஸ்.விஜயன் வீட்டில் 87 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் முடிவில், தர்மபுரியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கைது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kbvfckxrh2khxta1trnhv89v,imgname-robbery-1-1765079928760.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தஞ்சாவூரில் திமுக முன்னாள் எம்.பி ஏ.கே.எஸ்.விஜயன் வீட்டில் 87 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் முடிவில், தர்மபுரியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கைது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;திமுக முன்னாள் எம்.பி ஏ.கே.எஸ்.விஜயன். இவர் திமுக விவசாய பிரிவின் மாநில செயலாளராகவும், தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியாகவும் இருந்து வருகிறார். இவரது வீடு தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சேகரன் நகர் பகுதியில் ஏ.கே.எஸ்.விஜயனுக்கு சொந்தமாக வீடு ஒன்று உள்ளது. இவர்கள் கடந்த 28ம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியூருக்கு சென்று விட்டு மீண்டும் டிசம்பர் 1ம் தேதி வீடு திரும்பியுள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு நகைகள், வெள்ளி மற்றும் ரொக்கம் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. முதலில் 300 சவரன் கூறப்பட்ட நிலையில் பிறகு 87 சவரன் நகைகள் திருடு போனது தெரியவந்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதனையடுத்து ஏ.கே.எஸ்.விஜயன் தரப்பு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை அடுத்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். விசாரணையில், தர்மபுரியை சேர்ந்த தாய், மகன்கள், மகள் கொள்ளையில் ஈடுபட்டதும் தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே விடுதியில் அறை எடுத்து தங்கி நோட்டமிட்டு கொள்ளையடித்துள்ளதும் தெரியவந்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதனையடுத்து தனிப்படை போலீசார் தர்மபுரி பதுங்கி இருந்த முகமது யூசுப் மனைவி பாத்திமா ரசூல்(54), மகன்கள் மொய்தீன் (37), சாதிக் பாஷா (33), மகள் ஆயிஷா பர்வீன் (30) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் திருட்டு போன நகைகள், வெள்ளிப் பொருட்களை மீட்டனர். பின்னர் நான்கு பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இதே குடும்பத்தைச் சேர்ந்த தலைமறைவாக உள்ள ஷாஜகான் (26) என்பவரைத் தேடி வருகின்றனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thajavur</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/crime/thanjavur-dmk-ex-mp-aks-vijayan-house-robbery-4-people-arrested-1bbnko8"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஆயுத பூஜை, தொடர் விடுமுறை: சென்னை - தஞ்சை - சென்னை சிறப்பு மெமோ ரயில் அறிவிப்பு]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-thajavur/special-memu-train-operated-between-tambaram-thanjavur-tambaram-for-pooja-holiday-vel-sl69v4</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-thajavur/special-memu-train-operated-between-tambaram-thanjavur-tambaram-for-pooja-holiday-vel-sl69v4</guid>
            <pubDate>Fri, 11 Oct 2024 09:03:05 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ஆயுத பூஜை, தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னை தாம்பரம் - தஞ்சை இடையே சிறப்பு மெமோ ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01hzxeqe740etrg1a18s7emeyk,imgname-memu-train.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஆயுத பூஜை, விஜயதசமி, வார இறுதி நாட்களை முன்னிட்டு பொதுமக்கள் அதிக அளவில் வெளியூர் செல்வார்கள் என்பதால் கூட்ட நெரிசலை தவிர்க்கும் நோக்கில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றனர். தலைநகர் சென்னையில் இருந்து நேற்று ஒரே நாளில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சுமார் 7 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;மகளிர் உரிமை தொகையில் மேலும் 1000 ரூபாய் - உடனே விண்ணப்பிக்கவும்&lt;/p&gt; &lt;p&gt;சிறப்பு ரயில்கள், பேருந்துகள் இயக்கப்பட்டாலும் அனைத்து ரயி்ல்கள், பேருந்துகளும் மக்கள் வெள்ளத்தில் திக்குமுக்காடியபடியே செல்கிறது. இதனிடையே கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து தஞ்சைக்கும், தஞ்சையில் இருந்து தாம்பரத்திற்கும் முற்றிலும் முன்பதிவில்லாத சிறப்பு மெமோ ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;School Holiday: இனி இந்த கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!&lt;/p&gt; &lt;p&gt;தஞ்சை ரயில் நிலையத்தில் இருந்து 12 பெட்டிகள் கொண்ட மெமோ சிறப்பு முன்பதிவு இல்லாத விரைவு ரயில் இயக்கப்படும். வெள்ளிக் கிழமை இரவு 11.55 மணிக்கு தஞ்சையில் இருந்து புறப்படும் ரயில் மறு நாள் காலை 7.15 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தை அடைகிறது. முற்றிலும் முன்பதிவு இல்லாத இந்த ரயில் சேவையை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் பயணங்களை மேற்கொள்ள தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thajavur</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-thajavur/special-memu-train-operated-between-tambaram-thanjavur-tambaram-for-pooja-holiday-vel-sl69v4"/>
        </item>
        <item>
            <title><![CDATA[பட்டாசு குடோனில் வெடி விபத்து! இருவர் பலி!  போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-thajavur/thanjavur-crackers-explosion-2-people-killed-tvk/articleshow-1gw0832</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-thajavur/thanjavur-crackers-explosion-2-people-killed-tvk/articleshow-1gw0832</guid>
            <pubDate>Sun, 18 May 2025 13:32:46 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தஞ்சை மாவட்டம் நெய்வேலி தென்பாதியில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த வெடிகுடோனில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j1h2p383mdq0zrptseedygbk,imgname-cracker-accident.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;பட்டாசு தயாரிக்கும் ஆலைகள்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;தமிழகத்தில் விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகளவில் பட்டாசு தயாரிக்கும் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பட்டாசு ஆலைகளில் அவ்வப்போது வெடித்து விபத்து காரணமாக உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் ஓய்ந்தபாடியில்லை. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 70-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் விபத்துக்கள் நிகழ்ந்ததாகவும், இதில் 130 தொழிலாளர்கள் மரணம், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;குடோனில் வெடி விபத்து&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்நிலையில் தஞ்சை மாவட்டம் நெய்வேலி தென்பாதியில் அனுமதியின்றி வெடி குடோன் ஒன்று செயல்பட்டு வந்தது. இங்கு பல தொழிலாளிகள் வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் இன்று இந்த குடோனில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ரியாஸ்(19), சுந்தர்ராஜ்(60) ஆகிய 2 பேர் உயிரிழந்தனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;அனுமதியின்றி செயல்பட்டு வந்த பட்டாசு குடோன்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்க விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெடி விபத்து சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் திருவிழாக்களுக்கு பட்டாசு தயாரிக்கும் இந்த குடோன் அனுமதியின்றி செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thajavur</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-thajavur/thanjavur-crackers-explosion-2-people-killed-tvk/articleshow-1gw0832"/>
        </item>
        <item>
            <title><![CDATA[கதறிய 9ம் வகுப்பு பள்ளி மாணவன்.. ஓயாமல் 4 பேர் டார்ச்சர்.. கட்டாய ஓரின**சேர்க்கையால் அதிர்ச்சி!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/crime/school-student-torture-4-people-arrested-27yehkg</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/crime/school-student-torture-4-people-arrested-27yehkg</guid>
            <pubDate>Mon, 15 Dec 2025 11:40:06 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தஞ்சாவூர் அரசு அன்னை சத்யா விளையாட்டு அரங்க விடுதியில், 9ஆம் வகுப்பு மாணவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக நான்கு சீனியர் மாணவர்கள் மீது புகார் எழுந்தது. புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், குற்றம் சாட்டப்பட்ட 4 பேர் போக்சோ சட்டத்தில் கைது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jjvfm8rpsdznqyeb519s7qdt,imgname-boy-rape.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தஞ்சாவூர் அரசு அன்னை சத்யா விளையாட்டு அரங்க விடுதியில், 9ஆம் வகுப்பு மாணவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக நான்கு சீனியர் மாணவர்கள் மீது புகார் எழுந்தது. புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், குற்றம் சாட்டப்பட்ட 4 பேர் போக்சோ சட்டத்தில் கைது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி சாலையில் அரசு அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் உள்ளது. இங்கு விளையாட்டில் பயிற்சி பெறும் மாணவர்களுக்காக விடுதி செயலப்பட்டு வருகிறது. இங்கு, நுாற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் தங்கி, விளையாட்டு பயிற்சி மேற்கொண்டு அருகிலுள்ள அரசு பள்ளியில் படித்தும் வருகின்றனர். இந்நிலையில் இந்த விடுதியில் தங்கி படிக்கும் 9ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவனை, பிளஸ் 2 படிக்கும் இரண்டு மாணவர்கள், 10வது மற்றும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் என மொத்தம் 4 பேர் சேர்ந்து கடந்த சில மாதங்களாக ஓரினசேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேலும் சிகரெட் பிடிக்கும்படி துன்புறுத்தி உள்ளனர். நாளுக்கு நாள் மாணவர்களின் டார்ச்சர் அதிகரித்ததால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவன் வேறு வழியில்லாமல் தனது பெற்றோரிடம் கதறிய படி கூறியுள்ளார். இதையடுத்து மாணவனின் பெற்றோர், மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட்டிடம் புகார் அளித்தனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதன் பேரில், மாணவனை பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்திய நான்கு மாணவர்களும் விடுதியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட மாணவன் அளித்த தகவலின்பேரில் தஞ்சை அனைத்து மகளிர் போலீசில் குழந்தைகள் உதவி மைய அலுவலர் தியாகராஜன் நேற்று முன்தினம் புகார் அளித்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;புகாரின் பேரில், நான்கு மாணவர்களையும் போலீசார் அழைத்து விசாரணை நடத்தியதில் நடந்த சம்பவங்கள் உண்மை என்று தெரிய வந்தது. இதையடுத்து நான்கு மாணவர்கள் மீதும் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்து திருச்சி சிறார் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thajavur</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/crime/school-student-torture-4-people-arrested-27yehkg"/>
        </item>
        <item>
            <title><![CDATA[எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்கக்கூடாது! ஆசிரியை கொலை! கைதானவர் சிறையில் விபரீத முடிவு! பதறிய போலீஸ்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/man-kills-girlfriend-over-engagement-to-another-attempts-suicide-in-pudukkottai-287ghg2</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/man-kills-girlfriend-over-engagement-to-another-attempts-suicide-in-pudukkottai-287ghg2</guid>
            <pubDate>Tue, 02 Dec 2025 17:19:53 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;பாபநாசம் அருகே 13 வருடங்களாக காதலித்த ஆசிரியை காவ்யாவுக்கு வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்ததால் காதலன் அஜித்குமார் அவரை கொலை செய்தார். பின்னர் காவல் நிலையத்தில் சரணடைந்த அவர் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் தூக்கிட்டு தற்கொலை முயற்சி.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kb25e4qf128xnac2vhabsng1,imgname-thanjavur-1764230632175.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;பாபநாசம் அருகே 13 வருடங்களாக காதலித்த ஆசிரியை காவ்யாவுக்கு வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்ததால் காதலன் அஜித்குமார் அவரை கொலை செய்தார். பின்னர் காவல் நிலையத்தில் சரணடைந்த அவர் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் தூக்கிட்டு தற்கொலை முயற்சி.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா மேலகளக்குடியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர் புண்ணியமூர்த்தி மகள் காவ்யா(26). ஆலங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். அதே ஊரை சேர்ந்த கருணாநிதி மகன் அஜித்குமார்(29). பெயின்டராக வேலை செய்து வந்துள்ளார். இவர் காவ்யாவும் கடந்த 13 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் காவ்யா வீட்டில் இவரது காதலுக்கு சம்மதிக்கவில்லை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதனால் காவ்யாவுக்கும், அவரது மாமா பையனுக்கும் திருமணம் செய்வதாக முடிவு செய்து கடந்த 23ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதை அஜித்குமாரிடம் தெரிவிக்காமல் அவருடன் தொடர்ந்து செல்போனில் காவ்யா பேசி வந்துள்ளார். இந்நிலையில் காவ்யா நிச்சயதார்த்தம் நடந்தது தொடர்பாக அஜித்குமாரிடம் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் போட்டோ மற்றும் வீடியோவை அஜித்குமாருக்கு காவ்யா அனுப்பியுள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதனால் அஜித்குமார் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 17ம் தேதி காலை வழக்கம் போல் காவ்யா பள்ளிக்கு ஸ்கூட்டியில் சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த அஜித்குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டது மட்டுமல்லாமல் எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்கக்கூடாது எனக்கூறியபடி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் காவ்யாவை சரமாரியாக குத்தி கொலை செய்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதையடுத்து அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் நடந்த சம்பவத்தை கூறி அஜித்குமார் சரணடைந்தார். இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அஜித்குமார் கைதி திடீரென தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவரை சிறைத்துறை காவலர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thajavur</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/man-kills-girlfriend-over-engagement-to-another-attempts-suicide-in-pudukkottai-287ghg2"/>
        </item>
        <item>
            <title><![CDATA[DSP ரேங்கில் இருந்த "சீசர்" என்ற மோப்பநாய்.. உடல் நலக்குறைவால் இறப்பு - 12 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/video/tamilnadu/thanjavur-police-force-sniffier-dog-cesar-died-after-9-years-of-duty-funeral-in-dig-office-ans-sfsuoo</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/video/tamilnadu/thanjavur-police-force-sniffier-dog-cesar-died-after-9-years-of-duty-funeral-in-dig-office-ans-sfsuoo</guid>
            <pubDate>Fri, 28 Jun 2024 22:18:25 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Thanjavur : பல வருடமாக காவல்துறையினருக்கு பல வகையில் உதவிய சீசர் என்ற மோப்பநாய் இறந்துள்ளது, தஞ்சாவூர் காவல்துறை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://geo.dailymotion.com/player/x1tbu.html?video=k6trvcbyUU1rjUAXfV0" medium="video" height="768" width="1024"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தஞ்சை காவல் பிரிவில், கடந்த 2015ம் ஆண்டு முதல், கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் வெடிமருந்து மற்றும் வெடிப்பொருட்களை கண்டறியும் பிரிவில் பணிபுரிந்து வந்த மோப்பநாய் தான் சீசர். தஞ்சாவூருக்கு முதல்வர் மற்றும் பிரதமர் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் வரும்பொழுது சீசர் தான் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த சீசர், தனது ஒன்பதாவது வயதில் இன்று உயிரிழந்துள்ளது. இதனை அடுத்து தஞ்சை டிஐஜி அலுவலகம் பின்புறத்தில் உள்ள இடத்தில், 12 குண்டுகள் முழங்க அரசு மரியாதையோடு சீசர் என்கின்ற அந்த மோப்ப நாயின் உடலானது அடக்கம் செய்யப்பட்டது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் உள்ளிட்ட பல முக்கிய காவல்துறை அதிகாரிகள் சீசருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.&amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thajavur</category>
            <dc:creator>Ansgar R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/video/tamilnadu/thanjavur-police-force-sniffier-dog-cesar-died-after-9-years-of-duty-funeral-in-dig-office-ans-sfsuoo"/>
        </item>
        <item>
            <title><![CDATA[கிரிக்கெட்டில் CSK-வையும்; தேர்தலில் TVK-வையும் யாராலும் தொட முடியாது - தவெக தலைவர் விஜய் பேச்சு]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-thajavur/vijay-compare-tvk-with-csk-in-his-tanjore-speech-61185w6</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-thajavur/vijay-compare-tvk-with-csk-in-his-tanjore-speech-61185w6</guid>
            <pubDate>Wed, 04 Mar 2026 13:32:51 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தஞ்சாவூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக வெற்றி கழக (தவெக) தலைவர் விஜய், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் திமுக அரசை, கடுமையாக விமர்சித்து உள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kjvxm6406tcbccxf1xynnc62,imgname-tvk-vijay-1772611049600.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தஞ்சாவூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக வெற்றி கழக (தவெக) தலைவர் விஜய், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் திமுக அரசை, கடுமையாக விமர்சித்து உள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தஞ்சாவூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய், தனது 'ஜனநாயகன்' திரைப்பட வெளியீட்டைச் சுற்றியுள்ள சர்ச்சையைக் குறிப்பிட்டு, படத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்ததற்காக ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், படத்திற்கு பொதுமக்களிடமிருந்து பரவலான ஆதரவு கிடைத்ததையும் குறிப்பிட்டார். &quot;நான் சொல்வதைக் கேளுங்கள், அடுத்தது தவெக ஆட்சிதான். மீனவர்களே, நம்பிக்கையுடன் இருங்கள்; உங்கள் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்படும். 'ஜனநாயகன்' பட வெளியீட்டின் போது, பலர் ஆதரவாகக் குரல் கொடுத்தனர். நமது முதல்வர்கூட ஆதரவுக் குரல் கொடுத்தார். அதற்காக அவர்களுக்கு நன்றி. முதல்வரே, நீங்கள் என்னை அமைதிப்படுத்த முயற்சிக்கலாம், ஆனால் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள ஒவ்வொரு விஜயையும் உங்களால் அமைதிப்படுத்த முடியாது. அவர்கள் ஏற்கனவே தங்கள் பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டார்கள்,&quot; என்று விஜய் கூறினார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை கிரிக்கெட்டுடன் ஒப்பிட்டுப் பேசிய விஜய், &quot;டெல்லி அணி vs தமிழ்நாடு அணி&quot; என்று திமுக சித்தரிப்பதை விமர்சித்தார். கிரிக்கெட்டில்கூட டெல்லி அணியால் தமிழ்நாடு அணியை வெல்ல முடியாது என்று அவர் கூறினார். &quot;தமிழ்நாடுதான் தவெக, தவெகதான் தமிழ்நாடு&quot; என்று வலியுறுத்திய அவர், அனைத்து பிரிவினைகளும் புறக்கணிக்கப்பட்டு தவெக அணி வெற்றி பெறும் என்றும் கூறினார்.&lt;/p&gt;&lt;p&gt;&quot;வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை, தமிழ்நாடு அணிக்கும் டெல்லி அணிக்கும் இடையேயான போட்டியாக திமுகவினர் சித்தரிக்கின்றனர். கிரிக்கெட்டில்கூட, டெல்லி அணியால் தமிழ்நாடு அணியை வெல்ல முடியாது. தமிழ்நாடுதான் தவெக, தவெகதான் தமிழ்நாடு. தமிழ்நாடு அணி vs டெல்லி அணி போன்ற அனைத்து பிரிவினைகளும் ஒதுக்கி வைக்கப்படும்--தவெக அணிதான் வெல்லும்,&quot; என்று விஜய் கூறினார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தனது கட்சியின் முன்னுரிமைகளை கோடிட்டுக் காட்டிய விஜய், தவெக அரசு திட்டங்களை அறிவிப்பதோடு மட்டுமல்லாமல், அனைத்து திட்டங்களும் ஐந்து ஆண்டுகளுக்குள் முடிக்கப்படுவதை உறுதி செய்யும் என்றார். அடுத்த பிறவியில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்ற தனது தனிப்பட்ட விருப்பத்தையும் அவர் வெளிப்படுத்தினார். மீனவர் பிரச்சினையில் மாநில அரசு மவுனம் காக்கிறது என்று விமர்சித்த அவர், இலங்கை கடற்படையிடமிருந்து மீனவர்களைப் பாதுகாக்க மத்திய அரசுக்கு உண்மையான அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். தவெக ஆட்சியில் மீனவர்களின் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&quot;அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால், நான் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறக்க விரும்புகிறேன். தவெக ஆட்சியில், நாங்கள் திட்டங்களை அறிவிப்பது மட்டுமல்ல; அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் ஐந்து ஆண்டுகளுக்குள் முடிக்க முயற்சிப்போம். மீனவர் பிரச்சினையில், முதல்வர் அவ்வப்போது கடிதங்கள் எழுதிவிட்டு உறங்கிவிடுகிறார். மத்திய அரசுக்கு உண்மையான மற்றும் உணர்வுப்பூர்வமான அழுத்தம் கொடுப்பதுதான் தேவை. இலங்கை கடற்படை நம் மீனவர்கள் மீது கை வைக்கவே கூடாது. நம் மீனவர்களை அவர்கள் தொட நாம் அனுமதிக்கக் கூடாது. அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்--அதுதான் எங்கள் ஒரே நோக்கம். நான் சொல்வதைக் கேளுங்கள், அடுத்தது தவெக ஆட்சிதான். மீனவர்களே, நம்பிக்கையுடன் இருங்கள்; உங்கள் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்படும்,&quot; என்றார் விஜய்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நீட் மற்றும் அடிப்படை வசதிகள் போன்ற பிரச்சினைகளில் திமுக மக்களைத் தவறாக வழிநடத்துவதாகவும் விஜய் மேலும் குற்றம் சாட்டினார். மேலும், நிதிப் பற்றாக்குறை மற்றும் பொய் வாக்குறுதிகளுக்காக தற்போதைய நிர்வாகத்தை அவர் விமர்சித்தார்.&lt;/p&gt;&lt;p&gt;&quot;மக்கள் அடிப்படை வசதிகளைக் கேட்டால், நிதிச்சுமையைக் காரணம் காட்டி நீங்கள் அதைத் தட்டிக்கழிக்கிறீர்கள். நீட் தேர்வை மாநில அரசால் தடை செய்ய முடியாது என்று உங்களுக்குத் தெரிந்திருந்தும், அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதாகக் கூறி மக்களைத் தவறாக வழிநடத்தினீர்கள். இந்த விஜயை நம்புகிறீர்களா, அல்லது ஸ்டாலினை நம்புகிறீர்களா?,&quot; என்றார் விஜய்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thajavur</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-thajavur/vijay-compare-tvk-with-csk-in-his-tanjore-speech-61185w6"/>
        </item>
        <item>
            <title><![CDATA[என்ன கழற்றிவிட்டு அவன் கூட போறியா? போட்டுக்கொடுத்த முதல் கள்ளக்காதலன்.. போட்டுத்தள்ளிய மகன்கள்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/crime/mother-boyfriend-murder-case-sons-arrested-in-thanjavur-tvk-sfzk5u</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/crime/mother-boyfriend-murder-case-sons-arrested-in-thanjavur-tvk-sfzk5u</guid>
            <pubDate>Tue, 02 Jul 2024 13:14:18 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;உயிரிழந்த வாலிபர் மல்லிப்பட்டினம் செம்பருத்தி நகரை சேர்ந்த மீனவர் ராஜா (36) என தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் விக்னேஷ் (எ) விக்கி(22), அவரது தம்பி 17 வயது சிறுவன், மற்றும் அதே பகுதியை சேர்ந்த குமார் (51) ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j1s6d0vxndz2p97nvqv72fwh,imgname-thanjavur.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தாயுடன் உல்லாசமாக இருந்த வாலிபரை இரும்பு கம்பியால் கொடூரமாக அடித்துக் கொலை செய்த சம்பவம் தொடர்பாக 2 மகன்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.&lt;/p&gt; &lt;p&gt;தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் மனோரா அருகில் கருவேலங்காட்டில் வாலிபர் ஒருவர் ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதை கண்டு அப்பகுதியினர் மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், அந்த வாலிபர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உயிரிழந்தவர் யார் என்று விசாரணை மேற்கொண்டு வந்தனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;விசாரணையில் உயிரிழந்த வாலிபர் மல்லிப்பட்டினம் செம்பருத்தி நகரை சேர்ந்த மீனவர் ராஜா (36) என தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் விக்னேஷ் (எ) விக்கி(22), அவரது தம்பி 17 வயது சிறுவன், மற்றும் அதே பகுதியை சேர்ந்த குமார் (51) ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதுகுறித்து போலீசார் கூறுகையில்: &amp;nbsp;மல்லிப்பட்டினம் செம்பருத்தி நகரை சேர்ந்த செல்வம் மனைவி அபூர்வம் (45). கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து தனது மகன்களுடன் வசித்து வந்தார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த குமார் (51), ராஜா (36) ஆகிய 2 பேரிடமும் அபூர்வம் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். பின்னர் குமாருடமான கள்ளத்தொடர்பை தவிர்த்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த &amp;nbsp;குமார் அபூர்வத்தின் மகன்களிடம் உனது அம்மாவுக்கும், ராஜாவுக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக போட்டுக்கொடுத்தது மட்டுமல்லாமல் தாய், ராஜாவுடன் உல்லாசமாக இருப்பதை நேரில் சென்று காண்பித்துள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதனால் ஆத்திரமடைந்த மகன்கள் ராஜாவை சரமாரியாக இரும்பு கம்பியால் தாக்கி கருவேலங்காட்டில் வீசியது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குமார், விக்கி, அவரது 17வயதான தம்பி ஆகியோரை கைது செய்தனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thajavur</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/crime/mother-boyfriend-murder-case-sons-arrested-in-thanjavur-tvk-sfzk5u"/>
        </item>
        <item>
            <title><![CDATA[மதுவை கீழே ஊற்றி BJP நூதன ஆர்ப்பாட்டம்.. கட்டிங் கேட்டு அலப்பறை செய்த "குடிமகன்" - இறுதியில் வென்றது யார்?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/video/tamilnadu/kumbakonam-bjp-protest-against-dmk-on-kallakurichi-issue-man-asked-for-liquor-video-viral-ans-sfjnqj</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/video/tamilnadu/kumbakonam-bjp-protest-against-dmk-on-kallakurichi-issue-man-asked-for-liquor-video-viral-ans-sfjnqj</guid>
            <pubDate>Sun, 23 Jun 2024 23:09:56 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Kumbakonam : கள்ளக்குறிச்சி சம்பவத்தை தொடர்ந்து, திமுக அரசை கண்டித்து, குடந்தை பகுதி பாஜகவினர் மதுவை கீழே கொட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://geo.dailymotion.com/player/x1tbu.html?video=k46xNwbFUD5GVCAVchw" medium="video" height="768" width="1024"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய 50க்கும் அதிகமான நபர்கள் இறந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கி உள்ளது என்றால் அது மிகையல்ல. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருனாபுரம் பகுதியில் நான் இந்த சோக நிகழ்வு நடைபெற்றது. இந்நிலையில் இந்த கோர சம்பவத்திற்கு திராவிட முன்னேற்றக் கழக அரசு தான் காரணம் என்று கூறி, எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;நேற்று சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் பாஜகவினர் போராட்டம் நடத்திய நிலையில், நாளை திங்கட்கிழமை ஜூன் மாதம் 24ம் தேதி, அதிமுக சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் உள்ள, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. &amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இந்நிலையில் கும்பகோணத்தை சேர்ந்த பாஜகவினர், கும்பகோணம் ரயில் நிலையத்தில் இருந்து தங்களுடைய ஆர்ப்பாட்டத்தை தொடங்கினர். திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய அவர்கள், மதுபான கடையில் இருந்து வாங்கிய பீர்பாட்டில்களை சாலையில் கொட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;அப்பொழுது அவர்களுக்கு அருகாமையில், மதுவை கீழே ஊற்றிக் கொண்டிருப்பதை கண்டு கொண்டிருந்த மதுப்பிரியர் ஒருவர் அதை தனக்கு தருமாறும், கீழே கொட்ட வேண்டாம் என்றும் ஏக்கத்தோடு அவர்களை பார்த்துக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அவர், அவர்கள் கையில் இருந்து பாட்டிலை பிடுங்கவும் முயற்சி செய்தார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இறுதியில் அவர் தொல்லை தாங்காத பாஜகவினர், அவரிடம் ஒரு பாட்டிலை கொடுத்து அனுப்பியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்பொழுது அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thajavur</category>
            <dc:creator>Ansgar R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/video/tamilnadu/kumbakonam-bjp-protest-against-dmk-on-kallakurichi-issue-man-asked-for-liquor-video-viral-ans-sfjnqj"/>
        </item>
        <item>
            <title><![CDATA[பள்ளி மாணவர்கள் குஷியோ குஷி! மார்ச் 12ம் தேதி விடுமுறை! என்ன காரணம் தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/masi-maham-festival-march-12th-school-college-holiday-in-thanjavur-district-tvk-sswlwx</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/masi-maham-festival-march-12th-school-college-holiday-in-thanjavur-district-tvk-sswlwx</guid>
            <pubDate>Mon, 10 Mar 2025 16:16:09 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கும்பகோணத்தில் மாசி மகம் திருவிழா முன்னிட்டு மார்ச் 12ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j9kda3dh7k45bama3zs9wqra,imgname-school-reopen.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கும்பகோணத்தில் மாசி மகம் திருவிழா முன்னிட்டு மார்ச் 12ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா நடைபெறுவது வழக்கம். இவ்விழாவின் போது நாடு முழுவதும் இருந்து மகாமகம் குளத்தில் புனித நீராட லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். அதேபோன்று கும்பகோணத்தில் நடைபெறும் மாசிமகம் திருவிழாவும் மிகவும் பிரசித்தி பெற்றது. மாசி மாத பவுர்ணமியும் மகம் திதியும் சேர்ந்து வரக்கூடிய தினம் மாசி மகம் என அழைக்கப்படுகிறது. &amp;nbsp;இந்த நாள் சிவபெருமானுக்கு மற்றும் பெருமாளுக்கு உகந்த நாளாக பார்க்கப்படுகிறது.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;இந்த நாளில் காசிக்கு இணையான கும்பகோணம் மகாமக குளத்தில் புனித நீராடினால் செய்த பாவங்கள் தீரும் என்பது ஐதீகம். இந்நிலையில், இந்த ஆண்டு மாசி மகம் மார்ச் 12ம் நடைபெறுகிறது. இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார் என்பதால் அன்றைய தினம் தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;இதுதொடர்பாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் மாசியகத்தன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வெளியிடப்படுவது வழக்கம்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;அதன்படி, இந்த ஆண்டும் கொண்டாடப்படவுள்ள மாசிமகத் திருவிழாவினை முன்னிட்டு வருகிற மார்ச் 12ம் தேதி புதன்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. &amp;nbsp;அன்றைய தினம் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;மேலும், விடுமுறை என்றாலும், அரசு பொதுத்தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;ஆனாலும் அவசர அலுவல்களை கவனிக்கும் வகையில் தஞ்சாவூர் மாவட்ட கருவூலமும் மற்றும் சார்நிலைக் கருவூலங்களும் குறைந்த பணியாளர்களை கொண்டு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் 29ம் தேதி சனிக்கிழமை அன்று அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thajavur</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/masi-maham-festival-march-12th-school-college-holiday-in-thanjavur-district-tvk-sswlwx"/>
        </item>
        <item>
            <title><![CDATA[சமயபுரம் கோயிலுக்கு பாதயாத்திரை சென்றவர்கள் மீது மோதிய மினி லாரி! ரத்த வெள்ளத்தில் 5 பேர் துடிதுடித்து பலி!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/5-devotees-killed-in-mini-truck-collision-near-thanjavur-tvk-sgr207</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/5-devotees-killed-in-mini-truck-collision-near-thanjavur-tvk-sgr207</guid>
            <pubDate>Wed, 17 Jul 2024 09:42:07 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே கண்ணுக்குடிப்பட்டியையைச் சேர்ந்த பக்தர்கள் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரையாக நடந்து சென்றுக்கொண்டிருந்தனர்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j2zdpdevhqhwbe4vh0m6qnx0,imgname-accident.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள் மீது மினி லாரி மோதியது. இந்த விபத்தில் 5 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே கண்ணுக்குடிப்பட்டியையைச் சேர்ந்த பக்தர்கள் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரையாக நடந்து சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது தஞ்சாவூர் மாவட்டம் வளம்பக்குடி திருச்சி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது அவ்வழியாக சரக்கு ஏற்றிக்கொண்டு வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து பக்தர்கள் மீது மோதியது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&lt;strong&gt;மின்னல் வேகத்தில் வந்த பைக்! சாலையை கடக்க முயன்ற நீதிபதி தூக்கி வீசப்பட்டு பலி! விபத்தை ஏற்படுத்தியவர் எஸ்கேப்&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;img&gt;&lt;/p&gt; &lt;p&gt;இந்த விபத்தில் முத்துசாமி, மீனா, ராணி, மோகனாம்பாள் ஆகிய 4 பேரும் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த சங்கீதா, லட்சுமி ஆகிய இருவரும் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. &amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&lt;strong&gt;School College Holiday: பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ்.. ஜூலை 29ம் விடுமுறை! வெளியான சூப்பர் அறிவிப்பு!&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;img&gt;&lt;/p&gt; &lt;p&gt;இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thajavur</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/5-devotees-killed-in-mini-truck-collision-near-thanjavur-tvk-sgr207"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Viral Video in Tanjore: சில்லறை இல்லை; கர்ப்பிணியை வலுக்கட்டாயமாக பாதி வழியில் இறக்கிவிட்ட பேருந்து நடத்துநர்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/video/tamilnadu-thajavur/a-pregnant-woman-was-dropped-half-way-through-a-private-bus-in-thanjavur-due-to-lack-of-money-vel-sfqh7g</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/video/tamilnadu-thajavur/a-pregnant-woman-was-dropped-half-way-through-a-private-bus-in-thanjavur-due-to-lack-of-money-vel-sfqh7g</guid>
            <pubDate>Thu, 27 Jun 2024 15:32:04 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சரஸ்வதி தனியார் பேருந்தில் சில்லறை இல்லாத காரணத்தினால் பாதியில் இறக்கி தள்ளி விடப்பட்ட &amp;nbsp;கர்ப்பிணி பெண்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://geo.dailymotion.com/player/x1tbu.html?video=k3oNP50jL2qJCQAWDZ0" medium="video" height="768" width="1024"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் நோக்கி புறப்பட்ட சரஸ்வதி என்ற தனியார் பேருந்தில் கர்ப்பிணி ஒருவர் ராஜகிரி செல்வதற்காக ஏறியுள்ளார். பேருந்து பாதி தூரம் சென்றவுடன் நடத்துநர் டிக்கெட் வழங்கிக் கொண்டிருந்த நிலையில் கர்ப்பிணி பெண் 500 ரூபாய் கொடுத்து டிக்கெட் கேட்டுள்ளார். அப்போது தன்னிடம் சில்லறை இல்லை என்று நடத்துநர் தெரிவிக்கவே நடத்துநருக்கும், பெண் பயணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;இதனைத் தொடர்ந்து பேருந்து பசுபதி கோவில் பகுதியில் வந்து கொண்டிருந்த நிலையில், பேருந்தை நிறுத்திய நடத்துநர், அப்பெண்ணை பாதி வழியில் வலுக்கட்டாயமாக இறக்கி விட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thajavur</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/video/tamilnadu-thajavur/a-pregnant-woman-was-dropped-half-way-through-a-private-bus-in-thanjavur-due-to-lack-of-money-vel-sfqh7g"/>
        </item>
        <item>
            <title><![CDATA[திருவையாறில் இருந்து சென்னை விமான நிலையத்தை அலறவிட்ட வாலிபர்; அதிகாரிகள் அதிரடி]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-thajavur/young-man-arrested-who-did-bomb-threatening-mumbai-flight-from-chennain-in-thiruvaiyaru-vel-sfhk18</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-thajavur/young-man-arrested-who-did-bomb-threatening-mumbai-flight-from-chennain-in-thiruvaiyaru-vel-sfhk18</guid>
            <pubDate>Sat, 22 Jun 2024 19:54:43 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து மும்பை செல்லும் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுத்த இளைஞரை கைது செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j105afcnq5nn6x0ewb3ygjgk,imgname-mixcollage-22-jun-2024-07-52-pm-4548.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சென்னை பன்னாட்டு விமான நிலையம் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில், கடந்த 18ம் தேதி பெரும்பாக்கத்தில் உள்ள இண்டிகோ ஏர்லைன்ஸின் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு அழைத்த மர்ம நபர் சென்னையில் இருந்து மும்பை செல்லும் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது வெடிக்கும் என கூறப்பட்டது. உடனடியாக இண்டிகோ ஏர்லைன்ஸ் வாடிக்கையாளர் சேவை மையம் சார்பில் விமான நிலைய அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.&lt;/p&gt; &lt;p&gt;இண்டிகோ ஏர்லைன்ஸின் வாடிக்கையாளர் சேவை மைய புகாரின் அடிப்படையில் சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், மிரட்டல் அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களை பகுப்பாய்வு செய்ததில் &amp;nbsp;மிரட்டலானது தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு பகுதியில் உள்ள ஒரு லேண்ட் லைன் எண்ணின் இணையதள இணைப்பு மூலம் அனுப்பப்பட்டது என தெரியவந்தது.&lt;/p&gt; &lt;p&gt;கள்ளச்சாராயம் குடித்துவிட்டு வீட்டிலேயே இருந்த 55 பேர் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது - ஆட்சியர் தகவல்&lt;/p&gt; &lt;p&gt;இது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் தலைமையிலான போலீசார் விசாரணை செய்தனர். அப்போது மிரட்டல் விடுத்தது திருவையாறைச் சேர்ந்த வி.பிரசன்னா(27) என தெரியவந்தது. இதையடுத்து &amp;nbsp;தனிப்படை திருவையாறு சென்று பிரச்சன்னாவை கைது செய்தனர். மேலும் வெடிகுண்டு மிரட்டல் அனுப்ப பயன்படுத்திய சாம்சங் கேலக்ஸி போன், இன்டர்நெட் மோடம் மற்றும் ரௌட்டர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.&lt;/p&gt; &lt;p&gt;மாடு திருடி மாட்டிக்கொண்ட வடமாநில நபர்; சமயோஜித புத்தியால் 1 அடி கூட வாங்காமல் தப்பித்த சுவாரசியம்&lt;/p&gt; &lt;p&gt;விசாரணையில் சென்னை பெரம்பூரில் வசித்த குடும்பத்தினருடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அவர்களை பழிவாங்கும் நோக்கத்துடன் வெடிகுண்டு மிரட்டல்கள் அனுப்பியுள்ளார் என தெரியவந்தது. கைது செய்யப்பட்ட பிரசன்னா விசாரணைக்குப் பின் &amp;nbsp;சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இது போன்ற போலி வெடிகுண்டு மிரட்டல் வந்தால், பொதுமக்களின் பாதுகாப்பே முதல் முன்னுரிமை என்றும், இது போன்ற போலியான அழைப்புகள் அல்லது மின்னஞ்சல்கள் வந்தால், அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள், பொதுமக்கள், உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்குமாறு போலீஸ் கமிஷனர் அறிவுறுத்தி உள்ளார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thajavur</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-thajavur/young-man-arrested-who-did-bomb-threatening-mumbai-flight-from-chennain-in-thiruvaiyaru-vel-sfhk18"/>
        </item>
        <item>
            <title><![CDATA[தமிழ்நாடு மக்களுக்கு குட் நியூஸ்! 3,103 வழித்தடங்களில் மினி பஸ் சேவை தொடக்கம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-thajavur/mini-bus-service-has-been-launched-on-3103-routes-in-tamil-nadu-ray/articleshow-pt3atal</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-thajavur/mini-bus-service-has-been-launched-on-3103-routes-in-tamil-nadu-ray/articleshow-pt3atal</guid>
            <pubDate>Mon, 16 Jun 2025 15:41:04 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தமிழ்நாட்டில் 3103 வழித்தடங்களில் மினி பஸ் சேவை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்த திட்டம் குறித்து விரிவாக பார்ப்போம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jxw3btcc9ngcr7vjhdkzc8sy,imgname-mini-bus-1750068488588.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Mini Bus Service 0n 3103 Routes In Tamil Nadu: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(16.6.2025) தஞ்சாவூர், மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், புதிய விரிவான மினி பஸ் திட்டம்-2024ன் படி பேருந்து வசதி கிடைக்கப் பெறாத இடங்களில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் புதிய மினி பஸ் சேவையினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;தமிழ்நாட்டில் மினி பஸ் சேவை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;தமிழ்நாட்டில் கடந்த 1997-ஆம் ஆண்டு பேருந்து வசதி பெறாத குக்கிராமங்களில் வாழும் மக்கள் பேருந்து வசதி பெறும் நோக்கில் மினிபஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, மாவட்டத்திற்கு 250 மினிபஸ் அனுமதிச்சீட்டுகள் என்ற அடிப்படையில், பேருந்துகள் இயக்கப்படாத (Un-Served) வழித்தடத்தில் 16 கி.மீ. மற்றும் பேருந்துகள் இயக்கப்படும் வழித்தடத்தில் (Served) 4 கி.மீ., என மொத்தம் 20 கி.மீ. என்ற அளவில் வழித்தடம் நீட்டிப்பு செய்து மினிபஸ் இயக்கப்பட்டு வந்தன.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;புதிய விரிவான மினிபஸ் திட்டம்&zwj; 2024&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்த அரசு பொறுப்பேற்றப்பின்னர், இத்திட்டத்தை விரிவாகவும், முறையாகவும் நடைமுறைப்படுத்த பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துத் துறை சார்ந்த பல்வேறு தரப்பினர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் அரசால் ஆய்வு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் புதிய விரிவான மினிபஸ் திட்டம்&zwj; 2024 கடந்த 23.01.2025 அன்று வெளியிடப்பட்டது. பின்னர், மீண்டும் அத்திட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு கடந்த 28.4.2025 அன்று வெளியிடப்பட்டது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;புதிய வழித்தடங்களில் மினி பஸ் சேவை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;புதிய விரிவான மினிபஸ் திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட குக்கிராமங்களை நகரப் பகுதிகளுடன் இணைக்கும் விதமாக, அதிகபட்ச வழித்தட தூரத்தினை 25 கி.மீ. ஆக உயர்த்தி வழித்தட நீட்டிப்பு செய்து, அதில் பேருந்து இயங்காத வழித்தடங்களில் குறைந்தபட்சம் 65 சதவிகிதம் என இயக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தின்படி மினிபஸ்கள் பேருந்து நிறுத்தங்கள் / பேருந்து நிலையங்களில் இருந்து புறப்படவும், நிறுத்தவும் வசதி செய்யப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;மொத்தம் 3,103 வழித்தடங்கள்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;அத்துடன் தற்போது மினி பஸ் இயக்கி வருபவர்கள் புதியத் திட்டத்திற்கு மாற்றம் (Migration) பெற்று இயக்கிடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 2094 புதிய வழித்தடங்கள் மற்றும் புதிய திட்டத்திற்கு மாறுதல் செய்யப்பட்ட 1009 வழித்தடங்கள் என மொத்தம் 3,103 வழித்தடங்கள் அடையாளம் கண்டறியப்பட்டு செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு பேருந்து இயக்கப்படாத 25,708 கி.மீ. நீளத்திற்கு புதிதாக பேருந்து வசதி கிடைக்கப்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் யார்? யார்?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்மை &ndash; உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எம்.பி.க்கள் திருச்சி சிவா, கல்யாண சுந்தரம், முரசொலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thajavur</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-thajavur/mini-bus-service-has-been-launched-on-3103-routes-in-tamil-nadu-ray/articleshow-pt3atal"/>
        </item>
        <item>
            <title><![CDATA[தஞ்சாவூரில் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் தீ விபத்து! அலறியபடி வெளியேறிய கர்ப்பிணிகள்! ]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-thajavur/thanjavur-government-raja-mirasudar-hospital-fire-accident-tvk-sv7vhd</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-thajavur/thanjavur-government-raja-mirasudar-hospital-fire-accident-tvk-sv7vhd</guid>
            <pubDate>Thu, 24 Apr 2025 15:29:44 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவமனையின் பிரசவ வார்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. கர்ப்பிணிகள், குழந்தைகள் உட்பட அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஏசி-யில் ஏற்பட்ட கோளாறே தீ விபத்துக்குக் காரணம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jskjxmwq4hbxk6vw19dj0cmb,imgname-thanjavur-5.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவமனையின் பிரசவ வார்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. கர்ப்பிணிகள், குழந்தைகள் உட்பட அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஏசி-யில் ஏற்பட்ட கோளாறே தீ விபத்துக்குக் காரணம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;Thanjavur Government Raja Mirasudar Hospital fire: தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகில் அரசு ராசாமிராசுதார் மருத்துவமனை அமைந்துள்ளது. தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகள் வந்து செல்வது வழக்கம். திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சைக்காக தினமும் ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;&lt;span&gt;&lt;strong&gt;அரசு ராசாமிராசுதார் மருத்துவமனை&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;குறிப்பாக இந்த மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் அதிக அளவில் நடந்து வருகிறது. இதற்காக மருத்துவமனையில் பிரசவ வார்டுக்கு என்று தனி கட்டிடம் இயங்கி வருகிறது. இங்கு தினமும் ஏராளமான பிரசவம் நடந்து வருகின்றன. மேலும் பிரசவத்திற்காக கர்ப்பிணி பெண்களும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மருத்துவமனை எப்போதும் பரபரப்பாக இருக்கும்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&lt;strong&gt;சென்னையில் ஐடி ஊழியர் வீட்டில்! ஐந்து பெண்கள் செய்த கேவலமான வேலை! சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்!&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;&lt;span&gt;&lt;strong&gt;பிரசவ வார்டின் முதல் தளத்தில் தீ விபத்து&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;இந்நிலையில் இன்று மதியம் பிரசவ வார்டின் முதல் தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை கர்ப்பிணி பெண்கள் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அலறி கூச்சலிட்ட படியே வெளியேறினர். மேலும் மருத்துவமனையில் உடனே மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த தீ விபத்து தொடர்பாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் கர்ப்பிணிகள், குழந்தைகளை ஒவ்வொருவராக மீட்டு வேறு கட்டிடங்களுக்கு அழைத்து சென்றனர். மேலும் தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&lt;strong&gt;மக்களே உஷார்! இது சும்மா டிரெய்லர் தான்! இனிமே தான் வெயின் ஆட்டமே இருக்காம்! வானிலை மையம் எச்சரிக்கை!&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;&lt;span&gt;&lt;strong&gt;மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம்&amp;nbsp;ஆய்வு&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;தீ விபத்து குறித்து தகவலறிந்து மருத்துவமனைக்கு சென்ற அம்மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அப்பகுதியில் பார்வையிட்டு ஆய்வு செய்து மருத்துவர்களிடம் நிலவரம் குறித்து கேட்டறிந்தார். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்: கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் அனைவரும்&amp;nbsp;நலமாக உள்ளனர். ஏ.சி.யில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thajavur</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-thajavur/thanjavur-government-raja-mirasudar-hospital-fire-accident-tvk-sv7vhd"/>
        </item>
        <item>
            <title><![CDATA[மூன்று பேரூராட்சிகள் நகராட்சியாக தரம் உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/three-town-panchayats-upgraded-to-municipalities-tamil-nadu-govt-sgb-srmkzd</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/three-town-panchayats-upgraded-to-municipalities-tamil-nadu-govt-sgb-srmkzd</guid>
            <pubDate>Thu, 13 Feb 2025 19:47:41 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Tamil Nadu Municipalities:&amp;nbsp;ரீபெரும்புதூர், மாமல்லபுரம் மற்றும் திருவையாறு ஆகிய பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த முடிவு தமிழக அரசிதழில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01h0cvvqe2vsxnwdtfsdnz3j3d,imgname-asianet-news-tamil--52-.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு ஆகிய மூன்று பேராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று அரசிதழில் வெளியாகியுள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;ஸ்ரீபெரும்புதூரை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்று ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருமான செல்வப்பெருந்தகை&amp;nbsp;கோரி இருந்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-2024ஆம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையின்போது இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.&lt;/p&gt; &lt;p&gt;அவருடைய கோரிக்கைக்கு பதிலளித்த நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, &quot;ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு உள்பட சில பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளன&quot; என்று கூறினார். இதற்கான தீர்மானமும் தமிழகச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.&lt;/p&gt; &lt;p&gt;தமிழ்நாடு அமைச்சரவையில் தீடீர் இலாகா மாற்றம்! பொன்முடிக்கு கூடுதல் பொறுப்பு!&lt;/p&gt; &lt;p&gt;தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் திருத்த சட்டத்தின் கீழ், இந்த மூன்று பேரூராட்சிகளின் வரலாறு, சுற்றுலா உள்ளிட்ட சிறப்புகள், தொழில் வளர்ச்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான உத்தேச முடிவு எடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஆகிய மூன்று பேரூராட்சிகளை நகராட்சிகளாக மாற்றுவது குறித்து சென்ற ஆகஸ்ட் மாதம் முதல் கட்ட அறிவிப்பு வெளியானது.&lt;/p&gt; &lt;p&gt;இந்நிலையில், அந்த அறிவிப்பை அதிகாரபூர்வமாக உறுதிசெய்யும் வகையில், ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு ஆகிய மூன்று பேரூராட்சிகளும் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசிதழில் இன்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;திமுகவில் அதிரடி மாற்றங்கள்! 4 புதிய மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமனம்!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thajavur</category>
            <dc:creator>SG Balan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/three-town-panchayats-upgraded-to-municipalities-tamil-nadu-govt-sgb-srmkzd"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Shocking Video: தஞ்சையில் மரண பீதியை ஏற்படுத்திய தனயார் பேருந்து ஓட்டுநர்; உயிர் பயத்தில் அலறிய பயணிகள்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/video/tamilnadu-thajavur/a-private-bus-that-caused-an-try-to-accident-in-thanjavur-was-confiscated-vel-sg551w</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/video/tamilnadu-thajavur/a-private-bus-that-caused-an-try-to-accident-in-thanjavur-was-confiscated-vel-sg551w</guid>
            <pubDate>Fri, 05 Jul 2024 13:33:33 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தஞ்சையில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் அரசு, தனியார் பேருந்தை முந்திச் சென்ற தனியார் பேருந்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://geo.dailymotion.com/player/x1tbu.html?video=kTzhBKUK3G5lT0B0qgu" medium="video" height="768" width="1024"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த தனியார் பேருந்து திருவலஞ்சுழி என்ற பகுதியில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளை&zwnj; அதிவேகமாக முந்த முயன்று விபத்து ஏற்படுத்தும் சூழல் ஏற்பட்டது. இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அலறி அடித்து அச்சமடைந்தனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;கொலையில் முடிந்த குழாய் அடி சண்டை; போலீசின் அலட்சியமே காரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டு&lt;/p&gt; &lt;p&gt;தகவல் அறிந்த காவல்துறை கண்காணிப்பாளர் (பொறுப்பு)ஜாபர் சித்திக் போக்குவரத்து காவலர்கள் மூலம் விபத்தை ஏற்படுத்த முயன்ற தனியார் பேருந்தை பறிமுதல் செய்ததோடு பேருந்தை இயக்கிய ஓட்டுனர் மற்றும் நடத்துனரை கைது செய்தனர். தனியார் பேருந்துகள் அதிக சத்தம் தரக்கூடிய ஹாரன் வைத்துக்கொண்டு எந்த விதமான கட்டுப்பாடும் இல்லாமல் செல்வது வாடிக்கையாக உள்ளது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;போக்குவரத்து துறை அதிகாரிகள் இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த இரண்டு பேருந்துகளும் மோதும் அளவிற்கு ஓவர் டெக் செய்யும் &amp;nbsp;காட்சிகள்தற்போது இணையத்தில் வைரல் ஆகி உள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thajavur</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/video/tamilnadu-thajavur/a-private-bus-that-caused-an-try-to-accident-in-thanjavur-was-confiscated-vel-sg551w"/>
        </item>
        <item>
            <title><![CDATA[இந்த வாரம் முழுவதும் பள்ளிக்கு விடுமுறை! வெளியான அறிவிப்பு!  என்ன காரணம் தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-thajavur/one-week-holiday-for-mallipattinam-schools-tvk-sn9a5j</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-thajavur/one-week-holiday-for-mallipattinam-schools-tvk-sn9a5j</guid>
            <pubDate>Wed, 20 Nov 2024 21:09:19 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தஞ்சாவூரில் பள்ளி வளாகத்தில் ஆசிரியை ரமணி கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். ஒருதலைக் காதலால் மதன் என்ற நபர் இக்கொடூரச் செயலைச் செய்துள்ளார். முதல்வர் நிதியுதவி அறிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jaj74r0rzchv2k457vy2hk8d,imgname-whatsapp-image-2024-10-19-at-4.32.53-pm.jpeg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தஞ்சாவூரில் பள்ளி வளாகத்தில் ஆசிரியை ரமணி கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். ஒருதலைக் காதலால் மதன் என்ற நபர் இக்கொடூரச் செயலைச் செய்துள்ளார். முதல்வர் நிதியுதவி அறிவித்துள்ளார்.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே சின்னமனை பகுதியை சேர்ந்தவர் &amp;nbsp;ரமணி (26). இவர் மல்லிப்பட்டினம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக பணியில் சேர்ந்துள்ளார். இதே பகுதியை சேர்ந்த மதன் என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.&amp;nbsp;ஆனால் ரமணி திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மதன் இன்று காலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கண்முன்னே&amp;nbsp; ரமணி &amp;nbsp;கழுத்து உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை அடுத்து குற்றவாளி மதன் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில் ஆசிரியை கொலை செய்யப்பட்டது மிகவும் மிருகத்தனமானது என்று கூறிய முதல்வர் ஸ்டாலின் நிதியுதவியை அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக பட்டதாரி தமிழ் ஆசிரியையாகப் பணிபுரிந்துவந்த செல்வி ரமணி (26) இன்று காலை பள்ளி வளாகத்தில் இருந்தபோது மதன்குமார் என்ற நபரால் கத்தியால் குத்தப்பட்டு பலத்த காயமடைந்து, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற செய்தியைக்கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக உயர்கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்களை உயிரிழந்த ஆசிரியை அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க அனுப்பி வைத்தேன்.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;பள்ளி ஆசிரியை கொலை செய்யப்பட்டுள்ள இச்சம்பவமானது மிகவும் மிருகத்தனமானது, இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி காவல்துறையினரால் கைது&amp;nbsp;செய்யப்பட்டு அவர்மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இவ்வழக்கின் விசாரணை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு குற்றவாளிக்கு விரைவில் சட்டப்படி தண்டனை பெற்றுத்தரப்படும். கிராமப்புறப் பகுதியில் கல்விப்பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட செல்வி&amp;nbsp;&amp;nbsp;ரமணி அவர்களின் உயிரிழப்பு பள்ளிக் கல்வித் துறைக்கும், சக&amp;nbsp;ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;பள்ளி ஆசிரியை கொலை செய்யப்பட்டுள்ள இச்சம்பவமானது மிகவும் மிருகத்தனமானது, இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி காவல்துறையினரால் கைது&amp;nbsp;செய்யப்பட்டு அவர்மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இவ்வழக்கின் விசாரணை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு குற்றவாளிக்கு விரைவில் சட்டப்படி தண்டனை பெற்றுத்தரப்படும். கிராமப்புறப் பகுதியில் கல்விப்பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட செல்வி&amp;nbsp;&amp;nbsp;ரமணி அவர்களின் உயிரிழப்பு பள்ளிக் கல்வித் துறைக்கும், சக&amp;nbsp;ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;இதனிடையே மல்லிப்பட்டினம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட ஆசிரியை ரமணி உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆறுதல் கூறினார். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் ஆசிரியை ரமணி கொலை செய்யப்பட்ட அரசுப் பள்ளிக்கு இந்த வாரம் முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்ட பிறகே வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thajavur</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-thajavur/one-week-holiday-for-mallipattinam-schools-tvk-sn9a5j"/>
        </item>
        <item>
            <title><![CDATA[டெல்டா விவசாயிகளுக்கு குட் நியூஸ்! கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-thajavur/water-released-from-the-tamilnadu-kallanai-dam-to-benefit-delta-farmers-ray/articleshow-xev6za2</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-thajavur/water-released-from-the-tamilnadu-kallanai-dam-to-benefit-delta-farmers-ray/articleshow-xev6za2</guid>
            <pubDate>Sun, 15 Jun 2025 21:18:47 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;டெல்டா மாவட்டங்கள் பாசன வசதி பெறும் வகையில் முதல்வர் ஸ்டாலின் கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார். இதன்மூலம் 13 இலட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jxt4css5y3tmf1jfky72gejw,imgname-kallanai-1750002460453.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Water Release From Tamilnadu Kallanai Dam: தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (15.6.2025) தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், கல்லணையிலிருந்து காவிரி டெல்டா விவசாயிகளின் நலன் கருதி, குறுவை சாகுபடிக்காக தண்ணீரை திறந்து வைத்தார். காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக முதல்வர் ஸ்டாலினால் 12.06.2025 அன்று மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் கல்லணை வந்தடைந்ததை தொடர்ந்து, கல்லணையிலிருந்து காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் திறந்துவிடப்பட்டது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;தற்போது அனைத்து உப ஆறுகளிலும் விவசாய பணிகள் தொடங்கப்பட்டு வருகிறது. கல்லணையில், காவிரி ஆற்றிலிருந்து வினாடிக்கு 1500 கனஅடி நீர், வெண்ணாறு ஆற்றிலிருந்து வினாடிக்கு 1500 கனஅடி நீர், கல்லணைக் கால்வாயிலிருந்து வினாடிக்கு 500 கனஅடி நீர், கொள்ளிடம் ஆற்றிலிருந்து வினாடிக்கு 400 கனஅடி நீர்பங்கீடு செய்யப்படுகிறது. மேலும் கூடுதலாக கிடைக்க உள்ள தண்ணீரை தேவைக்கேற்ப அனைத்து ஆறுகளிலும் வழங்கப்படும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;98 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;நடப்பாண்டில் (2025-2026) மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா மாவட்டங்களான சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை ஆகியவற்றிலுள்ள ஆறுகள், வாய்க்கால்கள் மற்றும் வடிகால்களில் 98.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 5021.74 கி.மீ நீளத்திற்கு, திட்ட நிதியின் கீழ் சிறப்பு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, நிறைவு பெற்றுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;13 இலட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;மேலும், கல்லணை தலைப்பில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் காவிரி, வெண்ணாறு மற்றும் கல்லணைக் கால்வாய்களின் கடைமடைப் பகுதிகளுக்கு விரைந்து செல்ல நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கினார். கல்லணையிலிருந்து தற்போது தண்ணீர் திறந்து விடப்படுவதால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்யவும், சம்பா சாகுபடிக்கான தொடக்கப்பணிகளை செய்யவும், சுமார் 13.00 இலட்சம் ஏக்கர் பரப்பு பாசன வசதி பெறவுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;காவிரி டெல்டா பாசன பகுதிகளுக்கு தேவைக்கேற்ப தண்ணீர்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;மேட்டூர் அணையின் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்து, எதிர்நோக்கும் மழை, மேலும் கர்நாடகாவிலிருந்து நமக்கு கிடைக்க வேண்டிய நீரின் அளவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, காவிரி டெல்டா பாசன பகுதிகளுக்கு தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்கப்படும். மேட்டூர் அணையில் நீர் இருப்பின் அடிப்படையில் முறை பாசனம் நடைமுறைப்படுத்தப்படும். பாசனத்திற்கு வழங்கப்படும் நீரினை சிக்கனமாகவும், தேவைக்கேற்பவும் பயன்படுத்தி அதிக மகசூல் பெற விவசாயிகளிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;டெல்டா மாவட்டங்களின் கலெக்டர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;முன்னதாக முதல்வர் ஸ்டாலின் கல்லணை சுற்றுலா மாளிகையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், திருவாரூர் மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன், திருச்சி கலெக்டர் பிரதீப் குமார், மயிலாடுதுறை கலெக்டர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், நாகப்பட்டினம் கலெக்டர் ஆகாஷ், புதுக்கோட்டை கலெக்டர் அருணா ஆகியோருடன் டெல்டா பகுதிகளில் தூர்வாரப்பட்டதன் விவரங்கள் குறித்தும், சாகுபடி விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;முதல்வருக்கு நன்றி தெரிவித்த விவசாயிகள்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;மேலும், தேவைக்கேற்ப நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்திடவும், விவசாய இடுபொருட்களான உரங்கள், விதைகள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்றவை தேவையான அளவு இருப்பதை உறுதி செய்திடவும் அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினை டெல்டா பகுதி விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் சந்தித்து, மேட்டூர் மற்றும் கல்லணையிலிருந்து சாகுபடிக்கு குறித்த காலத்தில் தண்ணீரை திறந்து வைத்ததற்கு நன்றி தெரிவித்துக்கொண்டு, தங்களது கோரிக்கைகள் குறித்த மனுவையும் அளித்தனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thajavur</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-thajavur/water-released-from-the-tamilnadu-kallanai-dam-to-benefit-delta-farmers-ray/articleshow-xev6za2"/>
        </item>
        <item>
            <title><![CDATA[சினிமாவை மிஞ்சிய கோர விபத்து! 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி! 2 பேர் படுகாயங்களுடன் அலறல்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-thajavur/thanjavur-road-accident-3-people-killed-articleshow-xh6ub7v</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-thajavur/thanjavur-road-accident-3-people-killed-articleshow-xh6ub7v</guid>
            <pubDate>Thu, 14 Aug 2025 11:33:56 +0530</pubDate>
            <description><![CDATA[தஞ்சையில் ஒரே பைக்கில் கோயிலுக்குச் சென்ற குடும்பத்தினர் மீது கார் மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jsxfnh0tc3c20y4hnrex5am3,imgname-dhar-road-accident-1745819976730.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தஞ்சை அடுத்த வல்லம் கொள்ளுப்பேட்டை தெருவை சேர்ந்த அறிவழகன் (37). தனது மனைவி உஷா (35). மகள்கள் ரூபா (10), பாவ்யாஸ்ரீ (9)., உறவுக்கார சிறுமி தேஜா ஸ்ரீ ஆகியோருடன் ஒரே பைக்கில் அறிவழகன் பனங்காடு பகுதியில் உள்ள கோயிலுக்கு சாமி கும்பிட சென்று கொண்டிருந்தார். மாதாக்கோட்டை பைபாஸ் மேம்பாலம் அருகில் சென்ற போது கேரளாவில் இருந்து நாகூர் தர்காவிற்கு சென்று கொண்டிருந்த பக்தர்களின் கார் முன்னாள் சென்று கொண்டு இருந்த அறிவழகன் பைக் மீது வேகமாக மோதியது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சினிமா பாணியில் தூக்கி வீசப்பட்டனர்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இதில் பைக்கில் இருந்த 5 பேரும் சினிமா பாணியில் தூக்கி வீசப்பட்டனர். இதில் அறிவழகன் மற்றும் அவரது மகள் பாவ்யா ஸ்ரீ, தங்கை மகள் தேஜா ஸ்ரீ ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அறிவழகன் மனைவி உஷா, மகள் ரூபா ஆகியோர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;3 பேர் பலி&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;விபத்து பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக காவல் துறையினர் காயமடைந்த உஷா மற்றும் சிறுமி ரூபா ஆகியோரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த 3 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;கார் ஓட்டுநர் கைது&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;இந்த விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-thajavur</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-thajavur/thanjavur-road-accident-3-people-killed-articleshow-xh6ub7v"/>
        </item>
    </channel>
</rss>
