<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes"?>
<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Tue, 31 Mar 2026 22:14:31 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss/tamilnadu-sivagangai" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[சமையல் செய்யும் போது பயங்கர சத்தத்துடன் வெடித்த சிலிண்டர்.. அலறிய கிராமம்.. மூன்று பேரின் நிலைமை என்ன?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-sivagangai/karaikudi-gas-cylinder-blast-three-people-seriously-injured-6e0izem</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-sivagangai/karaikudi-gas-cylinder-blast-three-people-seriously-injured-6e0izem</guid>
            <pubDate>Fri, 30 Jan 2026 15:48:48 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள ஒரு வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், வீட்டில் இருந்த பெண், அவரது உறவினர் மற்றும் வீட்டுப் பணியாளர் என மூன்று பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதி.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kg768nngpx6jjjvk25anefh9,imgname-cylinder-4-1769767982768.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள ஒரு வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், வீட்டில் இருந்த பெண், அவரது உறவினர் மற்றும் வீட்டுப் பணியாளர் என மூன்று பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதி.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிவகங்கை மாவட்டம் காரைக்குடி டிடி.நகர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி ஆட்சி இவருக்கு மூன்று மகன்கள் உள்ள நிலையில் மூவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பழனி பாதயாத்திரை செல்வதற்காக தனது சொந்த ஊரான டிடி நகர் வீட்டிற்கு வந்த லட்சுமி ஆட்சி தனது மகன்களை பழனி பாதையாத்திரைக்கு அனுப்பி வைத்துவிட்டு காரைக்குடியில் உள்ள தனது வீட்டில் தனது சித்தி மகள் தேவி மற்றும் வீட்டில் பணிபுரியும் நபருடன் தங்கியுள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில் இன்று வீட்டில் பணிபுரியும் கருப்பு என்பவர் காலையில் சமையல் செய்துள்ளார். அப்போது சமையல் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். மேலும் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் அனைத்தும் மூடி இருந்ததால் சிலிண்டர் வெடித்ததில் அனைத்து அறைகளிலும் தீ மளமளவென பரவியது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதில் லட்சுமி ஆட்சி மற்றும் அவரது அக்கா மகள் வீட்டில் பணிபுரியும் கருப்பு என அனைவரும் படுகாயம் அடைந்து அலறி கூச்சலிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் படுகாயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து காரைக்குடி வடக்கு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-sivagangai</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-sivagangai/karaikudi-gas-cylinder-blast-three-people-seriously-injured-6e0izem"/>
        </item>
        <item>
            <title><![CDATA[கருவில் சுமந்த தாயை கருவறையில் வைத்து அழகு பார்க்கும் மகன்கள்; சிவகங்கையில் தாய்க்கு கோவில் கட்டிய மகன்கள்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-sivagangai/3-brothers-build-a-temple-for-their-mother-in-sivagangai-vel-sf87oc</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-sivagangai/3-brothers-build-a-temple-for-their-mother-in-sivagangai-vel-sf87oc</guid>
            <pubDate>Mon, 17 Jun 2024 18:49:24 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;சிவகங்கை மாவட்டத்தில் மறைந்த தனது தாய்க்கு 3 மகன்கள் ஒன்றிணைந்து சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பில் பிரமாண்ட கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j0k5jteaj2bpxsgr3fh9wkks,imgname-mixcollage-17-jun-2024-06-44-pm-4311.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த பட்டமங்கலம் அருகே உள்ள வெளியாரி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது மனைவி முத்துக்காளி அம்மாள். இவர்களுக்கு சண்முகநாதன், சரவணன், சந்தோஷ் குமார் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். மூன்று மகன்களும் இன்று மிகப்பெரும் தொழிலதிபர்களாகவும், செல்வந்தர்களாகவும் உள்ளனர்.&lt;/p&gt; &lt;p&gt;முத்துக்காளி அம்மாள் தனது 3 மகன்களையும் படிக்க கடுமையாக உழைத்ததாகவும், தனது தாலியை அடகு வைத்து மகன்களை பணம் கட்டி படிக்க வைத்ததாகவும் சொல்கின்றனர். இவர் கடந்த 2021-ம் ஆண்டு உடல்நலக் குறைவால் தனது 62 வயதில் காலமானார். இந்நிலையில் மகன்கள் மூவரும் தன் தாயின் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்த ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணினர். அதன்படி தாய்க்கு சொந்த ஊரில் கோவில் கட்ட முடிவு செய்து ரூ.1 கோடி செலவில் பிரமாண்ட கோவில் கட்டினர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்தவர்களை தமிழர்கள் மீண்டும் வெற்றி பெற செய்ததில் எனக்கு வயிற்று எரிச்சல் - மதுரை ஆதீனம்&lt;/p&gt; &lt;p&gt;இக்கோயிலில் பிரதான கோபுரமும், தங்கத்தால் செய்யப்பட்ட கலசமும் பொருத்தப்பட்டு உள்ளன. பழங்கால வேலைப்பாடுகளுடன் கோவில் கட்டப்பட்டு உள்ளது. அம்மாவின் அன்பின் மகத்துவத்தை விளக்கும் வகையில் கோவில் எழுப்பப்பட்டு கோவில் கருவறையில் தனது தாயிக்கு சுமார் 460 கிலோ எடை கொண்ட, 5 அடி ஐம்பொன் சிலையை பிரதிஷ்டை செய்து இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.&lt;/p&gt; &lt;p&gt;இதற்காக யாக சாலைகள் அமைப்பட்டு, நான்கு கால பூஜைகளுடன் யாகவேள்வி நடைபெற்றது. தொடர்ந்து யாக சாலையில் புனித குடங்களுக்கு தீபாராதனை நடைபெற்று அதன் பின்பு சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோயிலை சுற்றி கோயில் கோபுரம் வந்தடைந்தடைந்தது. அங்கு வேத மந்திரங்கள் முழங்க விமானத்திற்கு கலச நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.&lt;/p&gt; &lt;p&gt;ஆணவக்கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலமே தமிழகம் தான் - கே.பாலகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி&lt;/p&gt; &lt;p&gt;தொடர்ந்து மூலவராக வீற்றிருக்கும் தாயான முத்துகாளி அம்மாளின் சிலைக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்து வைத்து, தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து முத்துகாளி வளர்த்து வந்த வீரன் என்ற மஞ்சுவிரட்டு காளை கோவில் முன்பு நிறுத்தப்பட்டு ஆசி வழங்கப்பட்டது. பெற்றோர்கள் உள்பட முன்னோர்கள் மீது தற்போதைய உலகில் பாசம் குறைந்து வரும் நிலையில் சிவகங்கையில் மறைந்த தனது தாய்க்கு 3 மகன்கள் சேர்ந்து கோவில் கட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-sivagangai</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-sivagangai/3-brothers-build-a-temple-for-their-mother-in-sivagangai-vel-sf87oc"/>
        </item>
        <item>
            <title><![CDATA[திமிரில் அரசியல் புள்ளிகள்... சாமரம் வீசிய போலீசார்..! திருப்புவனம் பெண் ஊழியர் வழக்கில் நீதிமன்றம் அதிரடி..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-sivagangai/court-takes-action-in-thiruppuvanam-female-employee-case-articleshow-99a2b15</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-sivagangai/court-takes-action-in-thiruppuvanam-female-employee-case-articleshow-99a2b15</guid>
            <pubDate>Thu, 12 Mar 2026 17:41:00 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;காவல்துறையின் விசாரணையில் உள்ள ஓட்டைகளைச் சுட்டிக்காட்டி, நீதிபதி வைத்த குட்டு சிவகங்கை மாவட்டக் காவல்துறையைத் தலைகுனிய வைத்துள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01h6wjrczjh6kgxggb84vdvj1v,imgname-madurai-high-court.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சமத்துவம் பேசும் மண்ணில், அரசுப் பணியில் இருக்கும் ஒரு பெண்ணிற்கே சாதிய ரீதியான ஒடுக்குமுறையும், அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டிருப்பது தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு மற்றும் சமூக நீதி குறித்தப் பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பேரூராட்சியில் தேர்தல் பணியில் இருந்த ஒரு பெண் ஊழியரை, அரசியல் பலம் கொண்ட கும்பல் சாதிய ரீதியாக இழிவுபடுத்திய சம்பவம், தற்போது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தலையீட்டால் விஸ்வரூபம் எடுத்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;img&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;அரசியல் அதிகார மிரட்டலும்... சாதிய வன்கொடுமையும்!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;திருப்புவனம் பேரூராட்சியில் தற்காலிக கணினி ஊழியராகப் பணியாற்றி வருபவர் கலாரஞ்சனி. பணியில் இவர் ஈடுபட்டிருந்தபோது, தமிழ் மாநில காங்கிரஸ் (தாமாக) கட்சியின் மாநிலத் தொண்டரணி அமைப்பாளர் அயோத்தி மற்றும் நகரச் செயலாளர் பாரதிராஜா ஆகிய இருவரும் இவரைச் சாதிய ரீதியாக மிக இழிவாகப் பேசியுள்ளனர்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;அரசுப் பணியில் இருக்கும் ஒரு பெண்ணைச் சாதிப் பெயரைச் சொல்லிப் பொது இடத்தில் விமர்சித்ததோடு மட்டுமல்லாமல், அவருக்குக் கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளது. அதிகார மிரட்டல் மற்றும் சாதியத் திமிர் கொண்டு ஆடிய இந்த அரசியல் புள்ளிகளின் செயல், ஒரு நேர்மையான ஊழியரை மனரீதியாக நிலைகுலையச் செய்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;குற்றவாளிகளைக் காக்கும் காவல்துறை?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;பாதிக்கப்பட்ட கலாரஞ்சனி இது குறித்துப் புகார் அளித்தபோது, வழக்கைப் பதிவு செய்த மானாமதுரை துணை காவல் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி), அதை முறையாக விசாரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குற்றவாளிகளுக்குச் சாதகமாகச் செயல்பட்டு, அடிப்படை முகாந்திரம் இருந்தும் வழக்கை அவசர அவசரமாக முடித்து வைத்துள்ளது காவல்துறை.&lt;/p&gt;&lt;p&gt;நீதிமன்றத்தில் இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறையின் இந்த நிழல் ஆட்டம் அம்பலமானது. &quot;உண்மைகளை மறைத்து வழக்கை முடித்து வைத்தது தவறு&quot; என நீதிபதி விஜயகுமார் தனது கடும் அதிருப்தியைப் பதிவு செய்தார். ஒரு பெண் ஊழியருக்கு இழைக்கப்பட்ட அநீதியைத் தட்டிக்கேட்க வேண்டிய அதிகாரிகளே, குற்றவாளிகளுக்குக் குடைபிடிப்பது எவ்வளவு பெரிய வெட்கக்கேடு?&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;நீதிமன்றத்தின் அதிரடி&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்த வழக்கின் தீவிரத்தை உணர்ந்த நீதிபதி, மானாமதுரை டி.எஸ்.பி-யை நீதிமன்றமே தானாக முன்வந்து இந்த வழக்கில் எதிர்மனுதாரராகச் சேர்த்துள்ளது. இது அந்த அதிகாரிக்கு விடுக்கப்பட்ட ஒரு பலமான எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது. ஏற்கனவே முடித்து வைக்கப்பட்ட வழக்கை மீண்டும் முறையாக விசாரிக்க வேண்டும். ஏப்ரல் 1, 2026-க்குள் விரிவான விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மானாமதுரை டிஎஸ்பி இந்த வழக்கை மீண்டும் முறையாக விசாரித்து, அது தொடர்பான விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.காவல்துறையின் விசாரணையில் உள்ள ஓட்டைகளைச் சுட்டிக்காட்டி, நீதிபதி வைத்த குட்டு சிவகங்கை மாவட்டக் காவல்துறையைத் தலைகுனிய வைத்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;அரசியல் செல்வாக்கு இருந்தால் எதையும் செய்யலாம், யாரையும் சாதி சொல்லி இழிவுபடுத்தலாம் என்ற நினைப்பில் ஆடுபவர்களுக்கு, இந்த நீதிமன்ற உத்தரவு ஒரு சவுக்கடி. தேர்தல் பணியில் இருந்த ஒரு பெண்ணிற்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய இடத்தில் இருந்தவர்கள், இன்று நீதிமன்றக் கூண்டில் நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.&lt;/p&gt;&lt;p&gt;மானாமதுரை டி.எஸ்.பி தாக்கல் செய்யப்போகும் அறிக்கை உண்மையானதாக இருக்குமா? அல்லது மீண்டும் ஒருமுறை அதிகார வர்க்கத்திற்குச் சாதகமாக அமையுமா? என்பதை ஒட்டுமொத்த தமிழகமும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-sivagangai</category>
            <dc:creator>Thiraviya raj</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-sivagangai/court-takes-action-in-thiruppuvanam-female-employee-case-articleshow-99a2b15"/>
        </item>
        <item>
            <title><![CDATA[சிறுக சிறுக சேர்த்து வைத்த நகையை சிறுக சிறுக ஆடையை போட்ட வங்கி பணியாளர்; பிள்ளையார்பட்டியில் பரபரப்பு]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-sivagangai/employee-arrested-for-cheating-customers-jewellery-at-pillaiyarpatti-vel-sfy1om</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-sivagangai/employee-arrested-for-cheating-customers-jewellery-at-pillaiyarpatti-vel-sfy1om</guid>
            <pubDate>Mon, 01 Jul 2024 17:37:34 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;காரைக்குடியில் பிரபல வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைக்கும் தங்க நகைகளை மோசடி செய்த நகை மதிப்பீட்டாளரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j1q309f64zb7n1sehwrnqdnx,imgname-mixcollage-01-jul-2024-05-31-pm-714.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் இந்தியன் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் &amp;nbsp;பிள்ளையார்பட்டி, சிறாவயல், சிறுகூடல்பட்டி, துளாவூர், குன்றக்குடி, நேமம், வைரவன்பட்டி, மருதங்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த &amp;nbsp;மக்கள் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இவர்களில் &amp;nbsp;பலர் தங்களது அவசர தேவைக்கு நகைகளை அடகு வைத்து கடன் பெற்றனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இந்நிலையில் நகைக் கடன் வாங்கியவர்களில் சிலர் அசல், வட்டியை முழுமையாக செலுத்தி நகைகளை திருப்பினர். அப்போது அடகு வைத்தபோது இருந்ததை விட நகையின் எடை குறைவாக இருப்பதாகவும், நகைகள் வெட்டப்பட்டு, ஒட்டப்பட்டு காணப்படுவதாகவும் அடகு வைத்த போது பெரிய செயினாக இருந்தது. அதனை மீட்கும் போது சிறிய செயினாக மாறி உள்ளதாகவும் குற்றம் சாட்டினர்.&lt;/p&gt; &lt;p&gt;வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை சட்டப்பூர்வமா பெற்றுத்தரவேண்டும் என்பதே அரசின் நோக்கம் - அமைச்சர் விளக்கம்&lt;/p&gt; &lt;p&gt;மேலும் அடகு வைத்த கை செயின் விரல் செயினாக மாறி விட்டதாக கூறி கடந்த மாதம் 21ம் தேதி வங்கியில் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். அதை வீடியோவாக எடுத்தனர். இது குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதனை தொடர்ந்து வங்கி அதிகாரிகளின் தொடர் விசாரணையில் அடகு நகை மோசடி புகார்களின் எண்ணிக்கை அதிகமானது. இதனை அடுத்து சிவகங்கை குற்றப்பிரிவில் தற்போது கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு பணி மாறுதலில் வங்கி மேலாளர் கொடுத்த புகாரில் விசாரணை நடந்து வந்தது.&lt;/p&gt; &lt;p&gt;தொடர்ந்து வங்கி உயர் அதிகாரிகளின் உத்தரவுப்படி வங்கியில் நகை அடகு வைத்த 2500க்கும் மேற்பட்ட வாடிக்கையார்களில் தினமும் குறிப்பிட்ட நபர்களை வரவழைத்து நகைகள் அவர்கள் முன்பு பிரித்துப் பார்த்து சோதனை செய்தனர். இதில் பல நபர்களின் நகைகள் வெட்டப்பட்டும், ஒடப்பட்டும் இருப்பதும், குறிப்பாக படிப்பறிவு இல்லாத ஏழை, எளிய பாமர மக்களின் அடகு நகைகளில் மட்டும் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;சிவகங்கையில் தைலமர காட்டுக்குள் வெட்டி சிதைக்கப்பட்ட 2 உயிர்கள்; அண்ணன் தம்பி படுகொலை&lt;/p&gt; &lt;p&gt;வங்கியில் இதுவரை 1500க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் நகைகள் ஆய்வு செய்ததில் 80க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் அடகு நகைகளில் மோசடி நடந்துள்ளது. தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களிடம் புகார்கள் பெறப்பட்டுள்ளது. தினமும் நடைபெறும் அடகு நகை ஆய்வில், வாடிக்கையாளர்கள் புகார்கள் கொடுத்த வண்ணம் உள்ளனர்.&lt;/p&gt; &lt;p&gt;மேலும் வங்கியில் நகைகள் &amp;nbsp;மோசடி நடைபெற்ற செய்தி பரவியதைத் தொடர்ந்து ஏராளமான மக்கள் வங்கிக்கு வருகை தந்து பல மணி நேரம் காத்திருந்து தங்களது அடகு நகைகளை முழு பணத்தையும் செலுத்தி திருப்பியும் வருகின்றனர். திருப்ப முடியாத வாடிக்கையாளர்கள் தங்களது நகைகளை ஆய்வுக்கு உட்படுத்தி தங்கள் நகைகள் பத்திரமாக உள்ளனவா? என்று ஆய்வு செய்து வருகின்றனர். இதற்காக வங்கியில் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டு தற்போது தொடர்ந்து வாடிக்கையாளர் முன்பு வங்கி அதிகாரிகள் அடகு நகைகளை ஆய்வு செய்து வருகின்றனர்.&lt;/p&gt; &lt;p&gt;இந்நிலையில் &amp;nbsp;வங்கியில் 7 வருடங்களுக்கும் மேலாக நகை மதிப்பீட்டாளராக பணி புரிந்து வரும் நாராயணகுமார் மீது மேலாளர் சரத்குமார் அளித்த புகாரில் சுமார் 167 கிராம் தங்க நகைகள் &amp;nbsp;மோசடி செய்துள்ளதாகவும், அதன் மதிப்பு 11 லட்சத்து 13 ஆயிரம் என &amp;nbsp;நகை மதிப்பீட்டாளர் மீது மட்டும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.&lt;/p&gt; &lt;p&gt;வங்கியில் 80க்கும் &amp;nbsp;மேற்பட்ட நபர்களிடம் கிலோ கணக்கில் அடகு நகை மோசடி நடந்துள்ளதாக கூறப்படும் நிலையில், வங்கி நகை மதிப்பீட்டாளர் மீது மட்டும் வழக்கு பதிந்து, கைது செய்து சிறையில் அடைத்துள்ளது &amp;nbsp;நகை மோசடி குறித்து புகார் தெரிவித்த மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய முறையில் மாவட்ட &amp;nbsp;குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி &amp;nbsp;அடகு நகை மோசடி வழக்கில் உண்மையான குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என வாடிக்கையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-sivagangai</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-sivagangai/employee-arrested-for-cheating-customers-jewellery-at-pillaiyarpatti-vel-sfy1om"/>
        </item>
        <item>
            <title><![CDATA[காலேஜ் போக முடியலையா? வீட்டில் இருந்தே படிக்கலாம்: அழகப்பா பல்கலைக்கழகம் அட்மிஷன் ஓபன்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/career/alagappa-university-admission-notification-srz3d3</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/career/alagappa-university-admission-notification-srz3d3</guid>
            <pubDate>Thu, 16 Oct 2025 20:30:06 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;உயர்கல்வி படிக்கணும்னு ஆசையா? ஆனா காலேஜ் போக முடியலையா? கவலை வேணாம்! அழகப்பா பல்கலைக்கழகம் உங்களுக்காகவே தொலைநிலைக் கல்வி மற்றும் ஆன்லைன் கல்வி திட்டங்களை வச்சிருக்கு! இனி உங்க கனவுகள் நனவாகும்!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jmh7a7yhk3ah9j678y291p3r,imgname-university.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;&lt;span&gt;உயர்கல்வி படிக்கணும்னு ஆசையா? ஆனா காலேஜ் போக முடியலையா? கவலை வேணாம்! அழகப்பா பல்கலைக்கழகம் உங்களுக்காகவே தொலைநிலைக் கல்வி மற்றும் ஆன்லைன் கல்வி திட்டங்களை வச்சிருக்கு! இனி உங்க கனவுகள் நனவாகும்!&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span&gt;&lt;strong&gt;என்னென்ன கோர்ஸ்கள் இருக்கு?&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span&gt;அழகப்பா பல்கலைக்கழகம் இளங்கலை, முதுகலை, டிப்ளமோன்னு ஏகப்பட்ட படிப்புகளை வழங்குது. உங்களுக்குப் பிடிச்ச கோர்ஸை தேர்ந்தெடுத்து, வீட்ல இருந்தே படிச்சுக்கலாம்!&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span&gt;&lt;strong&gt;இளங்கலை பட்டப்படிப்புகள் (UG):&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;span&gt;தமிழ், ஆங்கிலம், கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ், வணிகவியல் (B.Com), பிபிஏன்னு நிறைய கோர்ஸஸ் இருக்கு.&lt;/span&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;&lt;span&gt;&lt;strong&gt;முதுகலை பட்டப்படிப்புகள் (PG):&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;span&gt;எம்.ஏ. தமிழ், எம்.ஏ. ஆங்கிலம், எம்.சி.ஏ., எம்.ஏ. பொருளாதாரம், எம்.எஸ்.சி. சைக்காலஜி, எம்பிஏன்னு இன்னும் நிறைய ஆப்ஷன்ஸ் இருக்கு!&lt;/span&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;&lt;span&gt;&lt;strong&gt;டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள்:&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;span&gt;ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், சைபர் செக்யூரிட்டின்னு புதுசா, ட்ரெண்டியான கோர்ஸஸ் கூட இருக்கு!&lt;/span&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;&lt;span&gt;&lt;strong&gt;ஆன்லைன்லேயே படிக்கலாம்!&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span&gt;நீங்க எங்க இருந்தாலும், ஆன்லைன்லேயே கிளாஸ் அட்டெண்ட் பண்ணலாம். வேலைக்கு போய்கிட்டே படிக்கனும்னு நினைக்கிறவங்களுக்கும், ஃபேமிலி ரெஸ்பான்சிபிலிட்டிஸ் இருக்கிறவங்களுக்கும் இது ரொம்பவே யூஸ்ஃபுல்லா இருக்கும்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span&gt;&lt;strong&gt;முக்கியமான விஷயம்:&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;span&gt;மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் கிடையாது!&lt;/span&gt;&lt;/li&gt; &lt;li&gt;&lt;span&gt;அழகப்பா பல்கலைக்கழகத்தில் படிச்சவங்களுக்கு கல்விக் கட்டணத்தில் 25% சலுகை உண்டு!&lt;/span&gt;&lt;/li&gt; &lt;li&gt;&lt;span&gt;கடைசி வருஷம் எக்ஸாம் ரிசல்ட்டுக்காக வெயிட் பண்றவங்க கூட அப்ளை பண்ணலாம்!&lt;/span&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;&lt;span&gt;&lt;strong&gt;எப்படி விண்ணப்பிக்கிறது?&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span&gt;ஆன்லைன்ல தான் அப்ளை பண்ணனும். &amp;nbsp;இந்த வெப்சைட்ல போயி அப்ளை பண்ணுங்க.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span&gt;&lt;strong&gt;கடைசி தேதி:&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span&gt;மார்ச் 31, 2025 தான் லாஸ்ட் டேட்! சீக்கிரம் அப்ளை பண்ணுங்க!&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span&gt;&lt;strong&gt;மேலும் தகவல்களுக்கு:&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span&gt;இந்த வெப்சைட்ல போங்க:&amp;nbsp;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span&gt;உங்க எதிர்காலத்த வடிவமைக்க இது ஒரு சூப்பர் சான்ஸ்! மிஸ் பண்ணிடாதீங்க!&lt;/span&gt;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-sivagangai</category>
            <dc:creator>Suresh Manthiram</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/career/alagappa-university-admission-notification-srz3d3"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஊராட்சிகளில் கலப்பட பிளீச்சிங் பவுடர்... சிவகங்கை மாவட்டத்தில் அவலம்..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-sivagangai/adulterated-bleaching-powder-a-shocking-incident-in-sivaganga-district-articleshow-da6urtr</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-sivagangai/adulterated-bleaching-powder-a-shocking-incident-in-sivaganga-district-articleshow-da6urtr</guid>
            <pubDate>Fri, 26 Dec 2025 19:56:43 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;உயர் அதிகாரிகள், சிவகங்கை மாவட்டத்தை நோக்கி பார்வையை திருப்புவது நல்லது. தேர்தல் ஆதாயத்திற்கு கலப்பட பிளீச்சிங் பவுடர் விவகாரத்தை பாஜக கையில் எடுக்கும் வாய்ப்பு உள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kddgqbhfaatgam5r1hgahmfy,imgname-bleeching-1766759050799.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சென்னை மாநகராட்சியில் பிளிச்சிங் பவுடருக்கு பதிலாக சுண்ணாம்பு பவுடரை குப்பை தொட்டிகளுக்கு அருகில் கொட்டிய அவலம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பின்னணியில் பல கோடி ஊழல் அம்பலமானது. அதேபோல, சிவகங்கை மாவட்ட ஊராட்சிகளில் அமைச்சர் பெரியகருப்பண் பெயரை பயன்படுத்தி புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஆதவன் என்ற கம்பெணி சமீபத்தில் சுண்ணாம்பு கலந்த பிளிச்சிங் பவுடர் மூட்டைகளை சிவகங்கை மாவட்டம் முழுவதும் சப்ளை செய்தது. கலப்படம் பற்றி லீலைககள் கசிந்த பிறகு சில இடங்களில் ப்ளீச்சிங் பவுடர் மூட்டைகளை திரும்ப பெற்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;மீண்டும், அதே ஆதவன் என்ற கம்பெணிக்கு ஆர்டர் கொடுக்கச் சொல்லி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இரண்டு உதவி இயக்குநர்களும், பிடிஓக்களுக்கு உத்தரவிட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. சிவகங்கை மாவட்டதை சேர்ந்த பத்து ரூபாய் இயக்கத்தை சார்ந்தவர்கள் இதுகுறித்து நம்மிடம் பேசுகையில், &ldquo;ஆதவன் கம்பெணியினர் அரசு தரப்பில் குறிப்பிட்ட அளவு கெமிக்கல் இல்லாத, வெறும் சுண்ணாம்பு பவுடரை சப்ளை செய்துள்ளனர். அதே கம்பெணிக்கு மீண்டும் ஆர்டர் கொடுத்துள்ள இரண்டு உதவி இயக்குநர்கள் விரைவில் ஓய்வு பெற உள்ளனர். அதனால், கிடைக்கும் வரை சுருட்டி வருகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;img&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஆதவன் கம்பெணிக்காரர்கள் அதிகாரிகளை சந்திக்கும் போதே பணத்தால் மட்டுமே பேசுவார்களாம். யாருக்கு வேண்டுமென்றாலும் ஆர்டர் கொடுக்கட்டும். ஆனால், கலப்படம் இல்லாத பிளீச்சிங் பவுடரை சப்ளை செய்யவேண்டும். அதனை, சம்மந்தப்பட்டவர்கள் கண்காணிக்க வேண்டும். எங்கள் பத்து ரூபாய் இயகத்தின் சார்பாகவும், அந்தந்த ஊராட்சிகளில் உள்ள இளைஞர்களின் மூலமாகவும் கண்காணிப்போம். பிளீச்சிங் பவுடர் தரத்தை மக்களுக்கு தெரிவிப்போம்&rsquo;&rsquo; என்றார்.&lt;/p&gt;&lt;p&gt;உயர் அதிகாரிகள், சிவகங்கை மாவட்டத்தை நோக்கி பார்வையை திருப்புவது நல்லது. தேர்தல் ஆதாயத்திற்கு கலப்பட பிளீச்சிங் பவுடர் விவகாரத்தை பாஜக கையில் எடுக்கும் வாய்ப்பு உள்ளது. அமைச்சரின் பெயரை தவறாக பயன்படுத்தி பெரியகருப்பணை அமாலக்கத்துறையில் மாட்டி வைக்கும் வேலையை இளங்கோவன் என்ற உதவியாளர் கச்சிதமாக செய்து வருவதாகவும் குமுறுகிறார்கள் சிவகங்கை மாவட்ட சமூக ஆர்வலர்கள்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-sivagangai</category>
            <dc:creator>Thiraviya raj</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-sivagangai/adulterated-bleaching-powder-a-shocking-incident-in-sivaganga-district-articleshow-da6urtr"/>
        </item>
        <item>
            <title><![CDATA[காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் அட்மிஷன் ஆரம்பம்: உடனே விண்ணப்பிக்கவும்…]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/career/alagappa-university-admission-2025-26-details-su8hve</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/career/alagappa-university-admission-2025-26-details-su8hve</guid>
            <pubDate>Tue, 08 Apr 2025 19:31:15 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;தமிழ்நாட்டின் புகழ்பெற்ற அழகப்பா பல்கலைக்கழகம், 2025-2026 கல்வியாண்டிற்கான சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jmkmhdsnhx68n9z5qsmc59gm,imgname-screenshot-2025-02-21-122246.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;தமிழ்நாட்டின் புகழ்பெற்ற அழகப்பா பல்கலைக்கழகம், 2025-2026 கல்வியாண்டிற்கான சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;தமிழ்நாட்டின் புகழ்பெற்ற அழகப்பா பல்கலைக்கழகம், 2025-2026 கல்வியாண்டிற்கான சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற விரும்பும் மாணவர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;நுழைவுத் தேர்வு இல்லாத படிப்புகள்:&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;பல்கலைக்கழகத்தில், நுழைவுத் தேர்வு இல்லாமல் மாணவர்கள் சேரக்கூடிய பல்வேறு படிப்புகள் உள்ளன.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;கல்வியியல்:&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt; எம்.எட்., பி.எட். சிறப்பு கல்வி (பார்வையற்றோர்), பி.எட். சிறப்பு கல்வி (Intellectual Disability) போன்ற படிப்புகள் ஆசிரியராக விரும்பும் மாணவர்களுக்கு ஏற்றவை.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;கலை மற்றும் அறிவியல்:&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt; எம்.ஏ. தமிழ், எம்.ஏ. ஆங்கிலம், எம்.ஏ. Gender Studies, எம்.எஸ்.டபிள்யூ. (Master of Social Work), எம்.ஏ. பொருளாதாரம், எம்.ஏ. வரலாறு, எம்.ஏ. பொது நிர்வாகம், எம்.ஏ. நாடகம் மற்றும் திரைப்பட ஆய்வுகள், எம்.ஏ. இதழியல் மற்றும் வெகுஜன ஊடகவியல், எம்.ஏ. மனிதவள மேம்பாடு, எம்.லிப்.ஐ.எஸ்.சி., எம். வொகேஷனல் பேஷன் டெக்னாலஜி, எம். வொகேஷனல் மென்பொருள் மேம்பாடு, எம்.எஸ்சி. கணிதம், எம்.எஸ்சி. கணினி அறிவியல், எம்.எஸ்சி. சைபர் தடயவியல், எம்.எஸ்சி. தகவல் தொழில்நுட்பம், எம்.எஸ்சி. (Artificial Intelligence and Data Science), &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;எம்.எஸ்சி. ஆற்றல் அறிவியல், எம்.எஸ்சி. நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், எம்.எஸ்சி. பொருள் அறிவியல், எம்.எஸ்சி. உயிர் தகவல்கள், எம்.எஸ்சி. கடல்சார் அறிவியல், எம்.எஸ்சி. மீன்வள அறிவியல், எம்.எஸ்சி. பயன்பாட்டு புவியியல், எம்.எஸ்சி. விலங்கியல், எம்.எஸ்சி. உயிர் மருத்துவ அறிவியல், எம்.எஸ்சி. தாவரவியல், எம்.எஸ்சி. உளவியல், எம்.எஸ்சி. யோகா, எம்.எஸ்சி. ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை போன்ற படிப்புகள் உள்ளன.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;இசை மற்றும் நுண்கலை: எம்.எப்.ஏ. ஓவியம் போன்ற படிப்புகளும் உள்ளன.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;இதையும் படிங்க: M.A, M.Sc படிக்க ஆசையா? மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் PG அட்மிஷன் 2025-2026 துவக்கம்! முழு விவரம்...&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;நுழைவுத் தேர்வு உள்ள படிப்புகள்:&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;சில படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;வணிகவியல் மற்றும் நிர்வாகம்: எம்.காம்., எம்.பி.ஏ. (Corporate Secretaryship), எம்.பி.ஏ. (Banking &amp;amp; Finance), எம்.பி.ஏ. (General), எம்.பி.ஏ. (International Business), எம்.பி.ஏ. (Logistics and Supply Chain Management), எம்.பி.ஏ. (Tourism Management), எம்.பி.ஏ. (Disaster Management), எம்.சி.ஏ. போன்ற படிப்புகள் உள்ளன.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;அறிவியல்: எம்.எஸ்சி. இயற்பியல், எம்.எஸ்சி. வேதியியல், எம்.எஸ்சி. உயிரி தொழில்நுட்பம், எம்.எஸ்சி. நுண்ணுயிரியல், பி.எட். (2 years) போன்ற படிப்புகளும் உள்ளன.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க: பெண்களே UG, PG படிக்க ஆசையா? அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் அட்மிஷன் துவக்கம்&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;ஒருங்கிணைந்த மற்றும் இளங்கலை திட்டங்கள்:&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;ஒருங்கிணைந்த திட்டம்: எம்.எஸ்சி. கடல் உயிரியல் (5 ஆண்டுகள்), ஒருங்கிணைந்த பி.எட். எம்.எட். சிறப்பு கல்வி (Intellectual Disability) (3 ஆண்டுகள்) போன்ற திட்டங்கள் உள்ளன.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;இளங்கலை திட்டங்கள்: பி.எஸ்சி. கேட்டரிங் சயின்ஸ் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட், பி.வோக். பேஷன் டெக்னாலஜி, பி.வோக். மென்பொருள் மேம்பாடு, பி.எஸ்சி. உடற்கல்வி, பி.எஸ்சி. யோகா, பி.ஏ. Gender Studies, பி.எப்.ஏ. ஓவியம் (4 ஆண்டுகள்) போன்ற இளங்கலை திட்டங்களும் அழகப்பா பல்கலைக்கழகத்தில் வழங்கப்படுகின்றன.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;தொண்டியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம், பி.எஸ்சி. கணிதம், பி.எஸ்சி. கணினி அறிவியல், பி.காம்., பி.காம். (Computer Application), பி.பி.ஏ. போன்ற இளங்கலை திட்டங்கள் உள்ளன.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;பட்டயப் படிப்புகள்:&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;ஓவியம் வரைதல் (1 ஆண்டு), பாரா விளையாட்டு பயிற்சி (2 ஆண்டுகள்) போன்ற பட்டயப் படிப்புகளும் உள்ளன.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;முக்கிய நாட்கள்:&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;விண்ணப்பங்கள் ஆன்லைனில் வழங்கத் தொடங்கும் நாள்: 02.04.2025&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;நுழைவுத் தேர்வு உள்ள படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: 02.05.2025&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;நுழைவுத் தேர்வு இல்லாத படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.05.2025&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;டிப்ளமோ / ஒருங்கிணைந்த படிப்புகள் / இளங்கலை திட்டங்கள் விண்ணப்பிக்க கடைசி நாள்: மேல்நிலைப் பள்ளித் தேர்வு முடிவுகள் வெளியான ஒரு வாரத்திற்குப் பிறகு.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;2025-ல் எந்த அரசுப் பல்கலையில் சேரலாம்? தமிழ்நாட்டில் உள்ள அரசு பல்கலைக்கழங்களின் லிஸ்ட் இதோ!!&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;நுழைவுத் தேர்வு விவரங்கள்:&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;நுழைவுத் தேர்வு காரைக்குடியில் மட்டுமே நடைபெறும்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;ul&gt;  &lt;li&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;பி.எட்., எம்.காம். - 11.05.2025, காலை 10 மணி - 12 மணி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/li&gt;  &lt;li&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;எம்.எஸ்சி. இயற்பியல், வேதியியல், உயிரி தொழில்நுட்பம், நுண்ணுயிரியல் - 11.05.2023, மதியம் 2 மணி - 4 மணி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/li&gt;  &lt;li&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;எம்.பி.ஏ. (அனைத்து படிப்புகள்) - 18.05.2025, காலை 10 மணி - 12 மணி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/li&gt;  &lt;li&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;எம்.சி.ஏ. - 18.05.2025, மதியம் 2 மணி - 4 மணி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/li&gt; &lt;/ul&gt; &lt;img&gt;&lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;தொடர்பு கொள்ள:&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழக இணையத்தளம் &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;www.alagappauniversity.ac.in&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt; ஐப் பார்வையிடவும் அல்லது (+91) 4565-223111 / 223126 என்ற தொலைபேசி எண்களில் அல்லது &amp;lt;admission@alagappauniversity.ac.in&amp;gt; என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;இந்தியாவின் டாப் 10 பல்கலைக்கழகங்கள்: பெஸ்ட் அரசு யூனிவர்சிட்டி!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-sivagangai</category>
            <dc:creator>Suresh Manthiram</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/career/alagappa-university-admission-2025-26-details-su8hve"/>
        </item>
        <item>
            <title><![CDATA[அதிகாலையில் நொடி பொழுதில் நடந்த பயங்கர விபத்து! 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு! 16 பேர் படுகாயம்! ]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/3-people-killed-16-injured-in-road-accident-in-karaikudi-svtmnv</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/3-people-killed-16-injured-in-road-accident-in-karaikudi-svtmnv</guid>
            <pubDate>Tue, 06 May 2025 09:34:08 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;காரைக்குடியில் அரசு பேருந்தும் பால் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 16 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jthtz23w6c5aydz78ex6fweq,imgname-road-accident.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;காரைக்குடியில் அரசு பேருந்தும் பால் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 16 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தேனாற்று பாலம் அருகே திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி அரசு பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்துக்கொண்டிருந்தது. தேவகோட்டையில் இருந்து காரைக்குடியை நோக்கி வந்த தனியார் பால் வாகனம் சென்றுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பால் ஏற்றிவந்த லாரி சாலையில் கவிழ்ந்து எதிர் திசையில் வந்த அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பால் வேனை ஓட்டிய ரூபன், அரசு பேருந்து ஓட்டுநர் நாகராஜ், நடத்துனர் செல்வேந்திர பிரசாத் ஆகியோர் ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;மேலும் பேருந்தில் பயணித்த &amp;nbsp;16 பேர் படுகாயங்களுடன் காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் உயிரிழந்து பால் வேனில் இருந்த &amp;nbsp;ஆறுமுகம், கருணா, தமிழ்பாண்டியன் ஆகிய 3 பேர் என்பது தெரியவந்தது. இந்த விபத்து சுமார்அதிகாலை 3 மணியளவில் நடந்ததாக கூறப்படுகிறது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தை அடுத்து அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிகாலை நடந்த கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-sivagangai</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/3-people-killed-16-injured-in-road-accident-in-karaikudi-svtmnv"/>
        </item>
        <item>
            <title><![CDATA[சர்வாதிகாரத்திற்கு எதிராக உத்தரபிரதேச மக்கள் கொட்டு வைத்துள்ளனர் - கார்த்தி சிதம்பரம்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-sivagangai/congress-mp-karti-chidambaram-criticize-tamil-nadu-bjp-vel-sema2u</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-sivagangai/congress-mp-karti-chidambaram-criticize-tamil-nadu-bjp-vel-sema2u</guid>
            <pubDate>Wed, 05 Jun 2024 22:34:06 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;உத்திரபிரதேசத்தில் ஜனநாயகம் தன்னுடைய பாணியில் சர்வாதிகாரிக்கு எப்படி தலையில்கொட்டுமோ, அதுபோல மக்கள் நறுக்கென்று கொட்டு வைத்திருப்பதாக சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01hzmnnj8r7qdvccz75kypvyw5,imgname-whatsapp-image-2024-06-05-at-22-19-55.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், தமிழ்நாட்டில் கிடைத்த வெற்றிக்கு முதல் காரணம் முதல்வர்தான். அவரின் நலத்திட்டம், அணுகுமுறை, தமிழ்நாட்டு மக்கள் மதங்களை மதிக்கின்ற அரசு வேண்டும் என்பதற்காக, மதச்சார்பற்ற அரசு மத்தியில் வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் நாங்கள் எதிர்பார்த்ததைப் போல வாக்களித்து வெற்றி பெற செய்திருக்கிறார்கள். எனது பகுதியை சேர்ந்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/p&gt; &lt;p&gt;வெற்றி சான்றிதழை தொடாதே; தனித்தொகுதி எம்எல்ஏ.வின் கையை தட்டிவிட்ட மாவட்ட செயலாளர்&lt;/p&gt; &lt;p&gt;உத்திரபிரதேசத்தில் ஜனநாயகம் தன்னுடைய பாணியில் சர்வாதிகாரிக்கு எப்படி தலையில் கொட்டுமோ, அதுபோல மக்கள் நறுக்கென்று கொட்டு வைத்திருக்கிறார்கள். குறிப்பாக அயோத்தியாவில் வைத்த கொட்டு நிச்சயம் வலிக்கும் என்று நம்புகிறேன்.&lt;/p&gt; &lt;p&gt;அதிமுக பெரிய அரசியல் கட்சி, அவர்களின் சின்னம் கிராமம் வரை உள்ளது. அவர்களுக்கு தொண்டர் இருக்கிறார்கள், அதை எந்த காலத்திலும் குறைத்து மதிப்பிட மாட்டேன். பாஜகவுக்கு கிடைத்த வாக்குகள் அவர்களுடைய ஓட்டுகள் என்று சொல்ல முடியாது. சமுதாய ரீதியான அமைப்புகளோடு கூட்டணி வைத்திருந்தார்கள். அந்த சமுதாயத்தைச் சார்ந்தவர்களே வேட்பாளர்களாக இருந்ததால் வாக்குகள் பெற்றது. இது முழுமையான வாக்குகள் என்று நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;தேனி மலைப்பாதையில் 100 அடி பள்ளத்தில் சீறிப் பாய்ந்த ஜீப்; ஒருவர் பலி, 5 பேர் படுகாயம்&lt;/p&gt; &lt;p&gt;ஆனால் வாக்குகள் வாங்கி இருக்கிறார்கள் என்பது ஏற்றுக்கொள்கிறேன். அந்த வாக்குகள் அவர்களின் முழுமையான வாக்கு அல்ல. ஒரு சமுதாயத்தை சாராத வேட்பாளரை போட்டியிட வைத்திருந்தால் அந்த வாக்குகள் கிடைத்திருக்குமா இல்லையா என்பது கேள்விக்குறி. அதுபோல தான் அவர்கள் வைத்திருக்கும் அந்த அமைப்புகளின் கூட்டணி இல்லை என்றால் இந்த வாக்குகள் வந்திருக்காது என்றார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-sivagangai</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-sivagangai/congress-mp-karti-chidambaram-criticize-tamil-nadu-bjp-vel-sema2u"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ப்ளூடூத் ஹெட்போன் வெடித்து முதியவர் படுகாயம்.. அதை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்துவது?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-sivagangai/old-man-injured-after-his-bluetooth-headphone-explodes-in-sivagangai-how-to-use-them-safely-rya-sehn3f</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-sivagangai/old-man-injured-after-his-bluetooth-headphone-explodes-in-sivagangai-how-to-use-them-safely-rya-sehn3f</guid>
            <pubDate>Mon, 03 Jun 2024 10:27:15 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;சிவகங்கையில் ப்ளூடூத் ஹெட்போனில் பாட்டுக்கேட்டுக் கொண்டிருந்த போது ஹெட்போன் வெடித்ததால் முதியவர் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01fm9tra8713et3ch721a83m8g,imgname-earphone-cleaning-tips.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தொழில்நுட்பம் எந்தளவு நம் வாழ்க்கையை எளிதாக்கி உள்ளதோ சில நேரங்களில் அதே அளவு ஆபத்தையும் ஏற்படுத்துகிறது. ஆம்.. சிவகங்கையில் ப்ளூடூத் ஹெட்போனில் பாட்டுக்கேட்டுக் கொண்டிருந்த போது ஹெட்போன் வெடித்ததால் முதியவர் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் அருகே மாத்துகண்மாய் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவர் ஒரு விவசாயி. 55 வயதாகும் இவர் நேற்று முன் தினம் இரவு ப்ளூடூத் மூலம் பாட்டு கேட்டுள்ளார். அப்போது அவரின் ப்ளூடூத் ஹெட்போன் திடீரென வெடித்து சிதறியதால் அவரின் காதில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;இதை தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி செய்யப்பட்ட நிலையில், அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;அடிக்கடி குளிர்பானங்கள், காபி, டீ குடிப்பீங்களா? ICMR விடுத்த எச்சரிக்கையை கவனிச்சீங்களா?&lt;/p&gt; &lt;p&gt;புளூடூத் ஹெட்போன்கள் வெடிப்பது மிகவும் அரிதானது என்றாலும், லித்தியம்-அயன் பேட்டரி மூலம் இயங்கும் எந்த மின்னணு சாதனமும் சில சந்தர்ப்பங்களில் வெடிக்கும் சாத்திக்கூறுகள் உள்ளது. ஆனால் சாத்தியமான அபாயங்களைக் குறைக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பது முக்கியமானது. ப்ளூடூத் ஹெட்போனை பாதுகாப்பாகப் பயன்படுத்தவும் ஏதேனும் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கவும் உதவும் சில டிப்ஸ் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.&lt;/p&gt; &lt;p&gt;Expiry date Vs Best before date : இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? எது பாதுகாப்பானது? FSSAI விளக்கம்..&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;ப்ளூடூத் ஹெட்போனை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்துவது?&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;ul&gt;  &lt;li&gt;பிரபலமான நல்ல பிராண்டுகள், அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து ப்ளூடூத் ஹெட்போனை வாங்கவும்.&amp;nbsp;&lt;/li&gt;  &lt;li&gt;உங்கள் ப்ளூடூத் இயர்போன்களை மிகவும் சூடாகவோ அல்லது மிகவும் குளிராகவோ இருக்கும் தீவிர வெப்பநிலையில் வைக்க வேண்டாம். அதிக வெப்பநிலை பேட்டரி மீது அழுத்தத்தை ஏற்படுத்துவதுடன், செயலிழப்பு அபாயத்தை அதிகரிக்கும்.&lt;/li&gt;  &lt;li&gt;உங்கள் ப்ளூடூத் ஹெட்போன் வாங்கும் அதற்காக கொடுக்கப்பட்ட சார்ஜரைப் பயன்படுத்தவும். பொருந்தாத சார்ஜரைப் பயன்படுத்துவது பேட்டரியை சேதப்படுத்தும். இதனால் பேட்டரி அதிக வெப்பமடையும் அபாயத்தை அதிகரிக்கும்.&lt;/li&gt;  &lt;li&gt;உங்கள் ப்ளூடூத் ஹெட்போன் முழுவதுமாக சார்ஜ் செய்யப்பட்ட பிறகு உடனடியாக அதை சார்ஜில் இருந்து எடுக்க வேண்டும். அதிக சார்ஜ் செய்வது பேட்டரியை பாதிக்கலாம்.&lt;/li&gt;  &lt;li&gt;உங்கள் ப்ளூடூத் ஹெட்போனில் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா எனத் தவறாமல் சரிபார்க்கவும். ஏதேனும் சேதம் ஏற்பட்டால், உடனடியாக இயர்போன்களைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.&lt;/li&gt;  &lt;li&gt;பயன்பாட்டில் இல்லாதபோது, ​​உங்கள் ப்ளூடூத் இயர்போன்களை நேரடி சூரிய ஒளி வைப்பதை தவிர்க்க வேண்டும். குளிர்ந்த, உலர்ந்த இடத்தில் ஹெட்போனை வைக்கவும்.&lt;/li&gt;  &lt;li&gt;உங்கள் ப்ளூடூத் இயர்போன்களை சார்ஜ் செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும், பராமரிப்பதற்கும் அந்த நிறுவனத்தின் வழிமுறைகளை எப்போதும் பின்பற்றவும்.&lt;/li&gt;  &lt;li&gt;பெரும்பாலான புளூடூத் இயர்போன்கள் வாட்டர் ப்ரூஃபாக வருவதில்லை. எனவே அவற்றை நீர் அல்லது ஈரப்பதமான இடத்தில் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.&amp;nbsp;&lt;/li&gt;  &lt;li&gt;உங்கள் ப்ளூடூத் இயர்போன்களில் இருந்து அதிகப்படியான வெப்பம், புகை அல்லது விசித்திரமான வாசனை போன்ற ஏதேனும் அசாதாரணமான நடத்தையை நீங்கள் கண்டால், உடனடியாக அவற்றைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, உதவிக்கு உற்பத்தியாளரைத் தொடர்புகொள்ளவும்.&lt;/li&gt;  &lt;li&gt;இந்தப் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் ப்ளூடூத் ஹெட்போனை பாதுகாப்பாக பயன்படுத்தலாம்.&lt;/li&gt; &lt;/ul&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-sivagangai</category>
            <dc:creator>Ramya s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-sivagangai/old-man-injured-after-his-bluetooth-headphone-explodes-in-sivagangai-how-to-use-them-safely-rya-sehn3f"/>
        </item>
        <item>
            <title><![CDATA[சிவகங்கையில் தைலமர காட்டுக்குள் வெட்டி சிதைக்கப்பட்ட 2 உயிர்கள்; அண்ணன் தம்பி படுகொலை]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-sivagangai/2-persons-killed-suspicious-persons-in-sivagangai-vel-sfxyaa</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-sivagangai/2-persons-killed-suspicious-persons-in-sivagangai-vel-sfxyaa</guid>
            <pubDate>Mon, 01 Jul 2024 16:24:10 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே நேற்று நள்ளிரவு முன்விரோதம் காரணமாக அண்ணன், தம்பி இருவரும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j1pyv61tzq1v7e0c8fm4pg37,imgname-whatsapp-image-2024-07-01-at-16-23-09.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சிவகங்கை அருகே கொல்லங்குடி கல்லணை என்ற பகுதியில் நேற்று நள்ளிரவு எட்டு பேர் கொண்ட கும்பல் மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா, நாச்சிகுளம் ஆண்டிச்சாமி மகன்கள் சுபாஷ், ஜெயசூர்யா ஆகிய இருவரை கொலை செய்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காளையார்கோவில் போலீசார் உடலை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&lt;/p&gt; &lt;p&gt;அரசியலில் படித்தவர்களை விட அர்ப்பணிப்பு உள்ளவர்கள் தான் தேவை; நடிகர் விஜயின் கருத்துக்கு வானதி பதில்&lt;/p&gt; &lt;p&gt;உயிரிழந்த இருவரும் அண்ணன், தம்பிகள். இவர்கள் மீது சோழவந்தான் காவல் நிலையத்தில் கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதனைத் தொடர்ந்து கடந்த சில வருடங்களாக இவர்கள் இருவரும் சிவகங்கையில் உள்ள தனியார் உணவகத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு மூன்று இரு சக்கர வாகனத்தில் காளையார்கோவில் அருகே கொல்லங்குடி பகுதியில் உள்ள தைலமரக் காட்டுக்குள் இருந்த சுபாஷ், ஜெயசூர்யா மற்றும் 3 நண்பர்களையம் முன் விரோதத்தால் பயங்கர ஆயுதங்களால் அண்ணன் தம்பி சுபாஷ், ஜெயசூர்யா ஆகிய இருவரை வெட்டி கொலை செய்து விட்டு &amp;nbsp;மற்ற மூன்றுபேரை &amp;nbsp;வெட்ட முற்படும் பொழுது தப்பி ஓடி உள்ளனர். &amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;விஷசாராயத்தை விட அரசு விற்கும் மதுபானம் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது - திருமாவளவன் வருத்தம்&lt;/p&gt; &lt;p&gt;கொலை சம்பவம் தொடர்பாக தப்பி ஓடிய ராஜேஷ், நவீன், ஆகியோர் காளையார்கோவில் காவல் துறையினருக்கு &amp;nbsp;தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் காளையார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். அண்ணன், தம்பி இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-sivagangai</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-sivagangai/2-persons-killed-suspicious-persons-in-sivagangai-vel-sfxyaa"/>
        </item>
        <item>
            <title><![CDATA[அமைச்சர் பற்றி அவதூறு... ரத்த காயத்துடன் திமுக பிரமுகர் அனுமதி: மருத்துவ அறிக்கையில் வெளியான உண்மை..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-sivagangai/dmk-cadre-admitted-in-hospital-who-alleges-minister-periya-karuppan-supporters-attacked-police-probe-smp-sefwyl</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-sivagangai/dmk-cadre-admitted-in-hospital-who-alleges-minister-periya-karuppan-supporters-attacked-police-probe-smp-sefwyl</guid>
            <pubDate>Sun, 02 Jun 2024 12:05:09 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கூட்டுறவுத்துறை அமைச்சர் குறித்து அவதூறாக சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட தன்னை சிலர் தாக்கியதாக திமுக பிரமுகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01hzbtexqgp6nwg18rs8ekemn4,imgname-attack-on-dmk-cadre-sivagangai.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கூட்டுறவுத்துறை அமைச்சர் குறித்து அவதூறாக சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட தன்னை சிலர் தாக்கியதாக ரத்த காயத்துடன் திமுக பிரமுகர் ஒருவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&lt;/p&gt; &lt;p&gt;சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பொய்யலூரை சேர்ந்தவர் சரவணன். இவர் திமுக பிரமுகர். இந்நிலையில், நேற்று ஆட்டோவில் வந்த தன்னை சிலர் வழிமறித்து கட்டையால் தாக்கியதாக புகார் கூறி, காரைக்குடி காவல் நிலையம் சென்றவரை போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.&lt;/p&gt; &lt;p&gt;விசாரணையில், திமுக பிரமுகரான &amp;nbsp;சரவணன், கடந்த 26ஆம் தேதி கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பனிடம் தனது மகனுக்கு கல்லூரியில் சீட் வாங்கி தர கேட்டு, அதற்கு அமைச்சர் மறுத்ததால், இது குறித்து &amp;nbsp;சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பி பதிவிட்டதாகவும், அதனைத் தொடர்ந்து சரவணன் நேற்று இரவு தேவகோட்டை ரஸ்தாவில் உள்ள தனது வீட்டிற்கு ஆட்டோவில் செல்லும் பொழுது சிலர் தன்னை தாக்கி காயப்படுத்தியதாகவும் தெரிவித்தவர், அதற்கு அமைச்சரும் அமைச்சரின் ஆதரவாளர்கள் தான் காரணம் என்றும் புகார் கூறினார்.&lt;/p&gt; &lt;p&gt;ஆனால், மருத்துவ அறிக்கையில் அடித்ததால் ஏற்பட்ட காயம் அல்ல எனவும், ஆட்டோ கவிழ்ந்து விபத்திற்குள்ளானதால் கை, மற்றும் உடலில் இரத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;4 மாத கைக்குழந்தையை தரையில் அடித்து கொன்ற பெற்றோர்; சிவகங்கையில் தாய், தந்தை கூட்டாக வெறிச்செயல்&lt;/p&gt; &lt;p&gt;இதுகுறித்து காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரகாஷிடம் கேட்டபோது, திமுகவினர் அடித்ததாக புகார் கூறிய சரவணன், மருத்துவமனையில் இருந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் வெளியேறி விட்டதாகவும் இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.&lt;/p&gt; &lt;p&gt;இதுகுறித்து அமைச்சர் பெரியகருப்பன் தரப்பில் விளக்கம் கேட்டபோது, சமூக வலைத்தளத்தில் வேண்டுமென்றே அவதூறு செய்தியை பதிவிட்டுஅமைச்சரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த சரவணன் முயற்சி செய்துள்ளார். அவரை யாரும் அடிக்கவில்லை. 10 பேர் சேர்ந்து கம்பால் தாக்கினால் கை,கால் வீங்கி எலும்பு முறிவு &amp;nbsp;ஏற்பட்டிருக்கும். இரவு இருசக்கர வாகனத்தில் சென்ற போது தடுமாறி விழுந்ததில் ஏற்பட்ட ரத்த காயம்தான் என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என கூறினர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-sivagangai</category>
            <dc:creator>Manikanda Prabu</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-sivagangai/dmk-cadre-admitted-in-hospital-who-alleges-minister-periya-karuppan-supporters-attacked-police-probe-smp-sefwyl"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Sivagangai Murder News: பாஜக பிரமுகர் வெட்டி படுகொலை.. பதற்றம்.. போலீஸ் குவிப்பு!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-sivagangai/bjp-leader-murder-in-sivagangai-tvk-shbl0h</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-sivagangai/bjp-leader-murder-in-sivagangai-tvk-shbl0h</guid>
            <pubDate>Sun, 28 Jul 2024 11:38:56 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;சிவகங்கை மாவட்டம் வேலாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வக்குமார். இவர் அதே பகுதியில் செங்கல் சூளை நடத்தி வருகிறார். பாஜக கூட்டுறவு மாவட்ட செயலாளராகவும் இருந்து வருகிறார்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j1sbctp7yg8kxjb59gpanr9z,imgname-MURDER-CRIME-1719911475910.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சிவகங்கை அருகே பாஜக பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து பதற்றம் ஏற்பட்டுள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;சிவகங்கை மாவட்டம் வேலாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வக்குமார். இவர் அதே பகுதியில் செங்கல் சூளை நடத்தி வருகிறார். பாஜக கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலாளராகவும் இருந்து வந்தார். இவர் நேற்றிரவு தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்த மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&lt;strong&gt;இதுதான் நல்ல சான்ஸ்! இப்ப வந்தா ஆம்ஸ்ட்ராங் போட்றலாம்! கொலையாளிகளுக்கு இன்பார்ம் கொடுத்த பீரதிப்! யார் இவர்?&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;அவ்வழியாக வந்தவர்கள் இதனை கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் செல்வக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக &amp;nbsp;சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். &amp;nbsp;&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&amp;nbsp;&lt;strong&gt;ஈரோடு அருகே பயங்கர விபத்து.! 3 கல்லூரி மாணவர்கள் ரத்த வெள்ளத்தில் பலி.! 2 பேர் படுகாயம்! நடந்தது என்ன?&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;இந்த சம்பவத்தை அறிந்த கிராம மக்கள் மற்றம் பாஜகவினர் கொலை குற்றவாளிகளை உடனே கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த &amp;nbsp;மாவட்ட எஸ்.பி. குற்றவாளிகளைப் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். மூன்று நாட்களில் அடுத்தடுத்து 3 கொலைகள் நடைபெற்ற சம்பவம் சிவகங்கை மக்களிடையே &amp;nbsp;அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-sivagangai</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-sivagangai/bjp-leader-murder-in-sivagangai-tvk-shbl0h"/>
        </item>
        <item>
            <title><![CDATA[அவங்கள சும்மா விட்டுடாதீங்க! எச்.ராஜா காலில் விழுந்து கதறி அழுத கொலை செய்யப்பட்ட செல்வகுமாரின் குடும்பத்தினர்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/sivaganga-bjp-worker-murder-selvakumar-family-who-fell-at-h-raja-feet-and-cried-tvk-shfv3w</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/sivaganga-bjp-worker-murder-selvakumar-family-who-fell-at-h-raja-feet-and-cried-tvk-shfv3w</guid>
            <pubDate>Tue, 30 Jul 2024 19:09:35 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கடந்த ஜூலை 27-ம் தேதி பாஜக கூட்டுறவு பிரிவு மாவட்டச் செயலாளர் செல்வக்குமார் &amp;nbsp;வழிமறித்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j41xfa0bajtpgz6907vvqhz2,imgname-sivaganga.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சிவகங்கையில் கொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகியின் வீட்டிற்கு ஆறுதல் தெரிவிக்க வந்த எச்.ராஜா காலில் விழுந்து செல்வக்குமார் குடும்பத்தினர் கதறி அழுதனர்.&lt;/p&gt; &lt;p&gt;சிவகங்கை அருகே வேளாங்குளத்தைச் சேர்ந்தவர் செல்வக்குமார் (52). அப்பகுதியில் செங்கல்சூளை நடத்தி வந்தார். இவர் பாஜக கூட்டுறவு பிரிவு மாவட்டச் செயலாளராகவும் இருந்தார். கடந்த ஜூலை 27-ம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் வந்துக்கொண்டிருந்த செல்வக்குமாரை வழிமறித்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடிவந்தனர். இதனையடுத்து மேலப்பிடாவூரைச் சேர்ந்த மருதுபாண்டி (20), அருண்குமார் (20), வசந்த்குமார் (25), &amp;nbsp;சட்டீஸ்வரன் (21), &amp;nbsp;விஷால் (20) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&lt;strong&gt;இப்படியே போச்சுனா! இளைஞர்களை சீரழித்தது திமுக தான்! வரலாற்றின் கருப்பு பக்கங்களில் பதிவாகும்!அன்புமணி வார்னிங்&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;இந்நிலையில், புதுப்பட்டி கிராமத்தில் கொலைக்காக பயன்படுத்திய ஆயுதங்களை மறைத்து வைத்த இடத்தை காண்பிப்பதற்காக, குற்றவாளிகளை காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். அப்போது சார்பு ஆய்வாளர் பிரதாப்பை தாக்கிவிட்டு வசந்த குமார் தப்ப முயன்றார். &amp;nbsp;இதைக்கண்ட ஆய்வாளர் மணிகண்டன், வசந்தகுமாரை துப்பாக்கியால் காலில் சுட்டனர். இதையடுத்து காயமடைந்த வசந்தகுமாரும், சார்பு ஆய்வாளர் பிரதாப்பும் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&amp;nbsp;&lt;strong&gt;School Colleges Holiday: ஆகஸ்ட் 3ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளியான சூப்பர் அறிவிப்பு!&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;இந்நிலையில் பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா கொலை செய்யப்பட்ட வேலாங்குளத்தை சேர்ந்த பாஜக நிர்வாகி செல்வக்குமார் வீட்டிற்கு ஆறுதல் தெரிவிக்க சென்றார். அப்போது செல்வக்குமாரின் குடும்பத்தினர் எச்.ராஜாவின் காலில் விழுந்து என் மகனை கொலை செய்தவர்களை சும்மாவிடக்கூடாது என அழுது கதறினர். இதனையடுத்து செய்தியார்களை சந்தித்த அவர் தமிழ்நாட்டில் சட்டம் ஓழுங்கு சீர்கேட்டு உள்ளது என விமர்சித்திருச்தார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-sivagangai</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/sivaganga-bjp-worker-murder-selvakumar-family-who-fell-at-h-raja-feet-and-cried-tvk-shfv3w"/>
        </item>
        <item>
            <title><![CDATA[4 மாத கைக்குழந்தையை தரையில் அடித்து கொன்ற பெற்றோர்; சிவகங்கையில் தாய், தந்தை கூட்டாக வெறிச்செயல்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-sivagangai/4-month-old-baby-killed-by-parents-in-sivaganga-vel-se5ohd</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-sivagangai/4-month-old-baby-killed-by-parents-in-sivaganga-vel-se5ohd</guid>
            <pubDate>Mon, 27 May 2024 23:26:01 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;சிவகங்கை அருகே &amp;nbsp;4 மாத குழந்தை இறந்து புதைக்கப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக தாய், தந்தை சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் உட்பட மூவரையும் போலீஸார் கைது செய்தனர். &amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01hyxk125mhfsbhdt2720t3fgz,imgname-whatsapp-image-2024-05-27-at-23-15-18.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சிவகங்கை மாவட்டம் நாட்டாகுடியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 42). இவர் கோவையில் தேனீர் கடையில் வேலை பார்த்தபோது தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்த நாகர்கோவிலைச் சேர்ந்த மஞ்சுவை (25) காதலித்து திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இவர்களுக்கு முனீஸ்வரன் என்ற 4 மாத குழந்தை இருந்தது.&lt;/p&gt; &lt;p&gt;கணவர், மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இருவரும் கடந்த 20-ம் தேதி சொந்த ஊரான நாட்டகுடிக்குச் சென்றுள்ளனர். அங்கு மர்மான முறையில் இறந்த அவர்களது குழந்தையை, &amp;nbsp;யாருக்கும் தெரியாமல் புதைத்துவிட்டதாக திருப்பாச்சேத்தி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.&lt;/p&gt; &lt;p&gt;நெல்லையில் உச்சக்கட்ட பதற்றம்; தீபக் ராஜாவின் உடலை சூழ்ந்த ஆதரவாளர்கள் - குவிக்கப்பட்ட போலீஸ் படை&lt;/p&gt; &lt;p&gt;இதையடுத்து சந்திரசேகரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில், சம்பவதன்று தனது மனைவி மஞ்சு சிவகங்கைக்கு குழந்தையுடன் சென்றார். &amp;nbsp;ஆனால் அவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. அவரை செல்போனில் தொடர்பு கொண்டபோது குழந்தையை நாட்டாக்குடி கட்டப்புலி கோயில் அருகே கட்டப்பையில் வைத்துவிட்டு, நாகர்கோவில் சென்றுவிட்டதாக அவர் தெரிவித்தார்.&lt;/p&gt; &lt;p&gt;மேலும் அங்கு சென்றுபார்த்தபோது குழந்தை இறந்து கிடந்தது. தனது தாயார் காளிமுத்துவுடன் சேர்ந்து குழந்தையின் உடலை மயானத்தில் புதைத்ததாக சந்திரசேகர் தெரிவித்தார். தொடர்ந்து புதைக்கப்பட்ட குழந்தையை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில் &amp;nbsp;தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் குழந்தை இறந்தது தெரியவந்தது.&lt;/p&gt; &lt;p&gt;கழிவு நீர் செல்வதில் தகராறு; பெண் உள்பட மூவரை கம்பு, கட்டையால் புரட்டி எடுத்த இளைஞர்கள்&lt;/p&gt; &lt;p&gt;இதையடுத்து போலீஸார் தொடர் விசாரணையில், &amp;nbsp;குழந்தை பிறப்பில் சந்திரசேருக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவரும், மனைவியும் சேர்ந்து குழந்தையை தரையில் தூக்கி எறிந்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சந்திரசேகர், மஞ்சு, &amp;nbsp;அவர்களுக்கு துணையாக இருந்த காளிமுத்து ஆகிய மூவரையும் போலீஸார் கைது செய்தனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-sivagangai</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-sivagangai/4-month-old-baby-killed-by-parents-in-sivaganga-vel-se5ohd"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Crime: சிவகங்கையில் சகோதரர்கள் கொலை வழக்கில் திடீர் திருப்பம்; இளம்பெண் உள்பட 7 பேர் அதிரடி கைது]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-sivagangai/7-person-arrested-who-related-double-murder-case-in-sivagangai-vel-sg1add</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-sivagangai/7-person-arrested-who-related-double-murder-case-in-sivagangai-vel-sg1add</guid>
            <pubDate>Wed, 03 Jul 2024 11:38:00 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே மஞ்சு விரட்டு பிரச்சனையில் மதுரை சகோதரர்கள் கொலை இளம் பெண் உட்பட 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j1vk6p0e6fcghmmbdesfxw1c,imgname-whatsapp-image-2024-07-03-at-10-50-18.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள நாச்சி குளத்தைச் சேர்ந்த சகோதரர்கள் ஜெயசூர்யா(வயது 25), சுபாஷ்(23). இவர்கள் இருவர் மீதும் சோழவந்தான் காவல் நிலையத்தில் கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து சுமார் கடந்த 8 ஆண்டுகளாக இருவரும் சிவகங்கையில் உள்ள ஒரு உணவகத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;திருச்சியில் ஓட்டுநரின் கவனக்குறைவால் தவறி விழுந்து உயிரிழப்பு? போலீஸ் விசாரணை&lt;/p&gt; &lt;p&gt;இந்நிலையில் கடந்த ஜூன் 30-ம் தேதி இரவு கொல்லங்குடி அருகே கல்லணைப் பகுதியில் ஜெயசூர்யா, சுபாஷ் ஆகிய இரு வரையும் 8 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்தது. இதுகுறித்து காளையார் கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். அப்போது கடந்த சில தினங்களுக்கு முன் காளையார்கோவில் அருகே நடைபெற்ற மஞ்சு விரட்டில் மாடு பிடித்தது தொடர்பாக ஏற்பட்ட முன்பகை காரணமாக இந்த கொலை நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;Edappadi Palaniswami: சிறையில் இருந்தபடி இலங்கைக்கு போதைப் பொருள் கடத்திய குற்றவாளி; பழனிசாமி சீற்றம்&lt;/p&gt; &lt;p&gt;இதனிடையே இக்கொலை வழக்கில் தொடர்புடைய சிவகங்கை காளவாசலைச் சேர்ந்த திவாகர்(23), சாஸ்திரி தெருவைச் சேர்ந்த வாணிகருப்பு மனைவி மதுமதி(26), சுந்தரநடப்பைச் சேர்ந்த சந்தோஷ்(23), நகரம்பட்டியைச் சேர்ந்த ராம்ஜி(21), யுவராஜ்(22), அருண்குமார்(30), ஒக்கூர் அபினேஷ்(22) ஆகிய 7 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-sivagangai</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-sivagangai/7-person-arrested-who-related-double-murder-case-in-sivagangai-vel-sg1add"/>
        </item>
        <item>
            <title><![CDATA[விசாரணைக்கு சென்ற இளைஞர் திடீர் மரணம்! 6 போலீசார் பணியிடை நீக்கம்! என்ன நடந்தது?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-sivagangai/youth-who-went-to-the-police-station-for-questioning-died-in-sivagangai-six-police-officers-suspended-ray/articleshow-uf5d5sg</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-sivagangai/youth-who-went-to-the-police-station-for-questioning-died-in-sivagangai-six-police-officers-suspended-ray/articleshow-uf5d5sg</guid>
            <pubDate>Sun, 29 Jun 2025 12:11:26 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;சிவகங்கையில் போலீஸ் விசாரணைக்கு சென்ற இளைஞர் உயிரிழந்தார். இது தொடர்பாக 6 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jyqjyjexqxz8bdnbbp9q6hq3,imgname-----------------------2025-06-27t074911.273-1750990801373.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Youth Dies In Police Custody In Sivagangai: மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவர் சிவகாமி (76). இவரது மனைவி நிக்தா (41). இவர்கள் இருவரும் நேற்று சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவிலுக்கு காரில் புறப்பட்டனர். காரை நிக்தா ஓட்டினார். கோயிலுக்கு சென்றதும் நிக்தா அங்கு காவலாளியாக பணியில் இருந்த மடப்புரத்தை சேர்ந்த அஜித்குமாரிடம் (28) தனது காரை ஓரமாக நிறுத்துமாறு கூறி சாவியை அவரிடம் கொடுத்துள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;காரில் இருந்த நகையை காணவில்லை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;அதற்கு தனக்கு கார் ஓட்டத்தெரியாது என்று கூறிய அஜித்குமார் வேறொருவரிடம் காரை ஓரமாக நிறுத்த சொல்லியுள்ளார். பின்பு தரிசனம் முடிந்து வெளியே வந்த நிக்தா, அஜித்குமாரிடம் சாவியை வாங்கி காரில் ஏறியபோது அதில் வைத்திருந்த 9% பவுன் நகையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த நிக்தா, இது தொடர்பாக காவலாளி அஜித்குமாரிடம் கேட்டபோது அவர் தனக்கு ஏதும் தெரியாது என்று கூறியுள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;விசாரணைக்கு சென்றவர் உயிரிழப்பு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இதனைத் தொடர்ந்து நிக்தா நகை மாயமானது குறித்து போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் மானாமதுரை குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் மடப்புரம் கோயிலுக்கு வந்து காவலாளி அஜித்குமாரை விசாரணைக்காக ஒரு வேனில் அழைத்து சென்றார்கள். இதன்பிறகு மாலை 6 மணி அளவில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி சிகிச்சைக்காக சிவகங்கையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;உறவினர்கள் குற்றச்சாட்டு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அஜித்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் அஜித்குமாரின் உறவினர்கள் திருப்புவனம் போலீஸ் நிலையம் முன்பு திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். காவலர்கள் தாக்கியதால் தான் அஜித்குமார் உயிரிழந்து விட்டதாக அவர்கள் குற்றம்சாட்டினார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;6 போலீசார் பணியிடை நீக்கம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;உயர் அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்நிலையில், அஜித்குமார் விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்ட காவல் நிலையத்தில் பணியாற்றிய குற்றப்பிரிவு போலீசார் 6 பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டார். இந்த சம்பவம் காவல்துறையில் அதிகரித்துவரும் குரூரப் போக்கை காட்டுவதாக தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;நயினார் நாகேந்திரன் கண்டனம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்ததாக தெரிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. மடப்புரம் அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோவிலின் தற்காலிக ஊழியர் திரு. அஜித்குமாரை விசாரணை எனும் போர்வையில் அழைத்துச் சென்று, 7 காவலர்கள் இணைந்து 2 நாட்களாக அடித்துத் துன்புறுத்தியதால் அவர் உயிரிழந்ததாக உறவினர் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், இது லாக்-அப் மரணமோ என்ற சந்தேகத்தை வலுவாக எழுப்புகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;காவல்துறையின் குரூரப் போக்கு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;கடந்த வாரம் பாலியல் தொல்லை குறித்து புகாரளிக்க வந்த கர்ப்பிணி உட்பட மூன்று பெண்களை காவலர் தாக்கிய நிலையில், தற்போது தன்னையும் தன் சகோதரரையும் வண்டியில் அழைத்து செல்லும் வேளையிலும் பின்னால் கயிறு கட்டி தாக்கியதாக உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரர் வாக்குமூலம் அளித்திருப்பது காவல்துறையின் அதிகரித்துவரும் குரூரப் போக்கை வெளிப்படுத்துகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;திமுக ஆட்சியில் காவல்நிலையத்திற்கு வந்தாலே ஏழை எளியோரின் உயிர்களுக்கு பாதுகாப்பில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. காவல்துறையின் அராஜகப் போக்கிற்கு மேலும் பல உயிர்கள் பலியாகும் முன், சட்டம் ஒழுங்கை தன் நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் உடனடியாக இவ்விஷயத்தில் தீவிர விசாரணை நடத்தி, உயிரிழந்தவரின் இறப்புக்கு தக்க நியாயம் பெற்றுத்தர வேண்டும்'' என்று கூறியுள்ளார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-sivagangai</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-sivagangai/youth-who-went-to-the-police-station-for-questioning-died-in-sivagangai-six-police-officers-suspended-ray/articleshow-uf5d5sg"/>
        </item>
        <item>
            <title><![CDATA[அரசு சம்பளத்தில் சொந்த கிளினிக்..!  அதிகாரிகளுக்கு அல்வா..!  ஆதாரத்துடன் சிக்கிய முத்தனேந்தல் பி.எம்.ஓ மார்கண்டன்..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/muthanendal-bmo-markandan-caught-red-handed-with-evidence-xe54dtp</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/muthanendal-bmo-markandan-caught-red-handed-with-evidence-xe54dtp</guid>
            <pubDate>Tue, 31 Mar 2026 22:14:25 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;சிவகங்கை மாவட்டம் முத்தனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பி.எம்.ஓ-வாக (Block Medical Officer) பணியாற்றும் டாக்டர் மார்கண்டன் என்பவரின் கடந்த 12 ஆண்டுகால அட்டூழியங்கள், அந்தப் பகுதி மக்களை ரத்தக் கண்ணீர் வடிக்க வைத்துள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kn2cfwa6x0z275ffb5mg5gqa,imgname--1112-whatsapp-image-2026-03-31-at-9.56.10-pm--2801-idaikattura2-1774975447365.jpeg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சிவகங்கை மாவட்டம் முத்தனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பி.எம்.ஓ-வாக (Block Medical Officer) பணியாற்றும் டாக்டர் மார்கண்டன் என்பவரின் கடந்த 12 ஆண்டுகால அட்டூழியங்கள், அந்தப் பகுதி மக்களை ரத்தக் கண்ணீர் வடிக்க வைத்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மக்களின் உயிர் காக்க வேண்டிய மருத்துவர், மக்களின் வரிப்பணத்தில் கொழுத்த சம்பளம் வாங்கிக்கொண்டு, பகல் கொள்ளையடிப்பதைப் போன்ற ஒரு கீழ்த்தரமான செயல் வேறெதுவும் இருக்க முடியாது. சிவகங்கை மாவட்டம், முத்தனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பி.எம்.ஓ-வாக (Block Medical Officer) பணியாற்றும் டாக்டர் மார்கண்டனின் கடந்த 17 ஆண்டுகால அட்டூழியங்கள், அந்தப் பகுதி மக்களை ரத்தக் கண்ணீர் வடிக்க வைத்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;அரசு மருத்துவமனையில் முழுநேரம் பணியாற்றி, ஏழை எளிய மக்களின் நோயைத் தீர்க்க வேண்டிய மார்கண்டன், இன்று ஒரு 'கிளினிக் அதிபராக' உருவெடுத்துள்ளார். இடைக்காட்டூர் மற்றும் மானாமதுரை என இரண்டு இடங்களில் சொந்தமாக கிளினிக் நடத்தி வரும் இவர், அரசுப் பணி மருத்துவ பணிக்கு செல்லாமல், அதிகாரிகளை ஏமாற்றி அதே நேரத்திலேயே அந்த இரு கிளினிக்குகளையும் நடத்தி வருவதுதான் அதிர்ச்சியின் உச்சம்.&lt;/p&gt;&lt;p&gt;இதுகுறித்து அப்பகுதி மக்கள் வேதனையோடு குமுறுகின்றனர். &quot;முத்தனேந்தல் , நடமாடும் மருத்துவ குழு மருத்துவர் மார்கண்டனை கடந்த ஆண்டு வட்டார மருத்துவ அலுவலராக, மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் மீனாட்சி நியமித்துள்ளார். இந்த மார்கண்டன் காலை முதல் மதியம் வரை இடைக்காட்டூர் கிளினிக், மாலை வேளையில் மானாமதுரை கிளினிக். வாரத்தில் வெள்ளிக்கிழமை மட்டும் அரசு பணிக்கு ஒரு 'விசிட்' அடிப்பதோடு சரி. மீதி ஆறு நாட்களும் அரசு மருத்துவமனை பக்கம் இவர் தலை வைத்தே படுப்பதில்லை. அரசு வழங்கும் லட்சக்கணக்கான ரூபாய் சம்பளத்தை வாங்கிக்கொண்டு, அந்த நேரத்தை தனது கல்லாவை நிரப்பப் பயன்படுத்தும் இவரைப் போன்றவர்கள் மருத்துவர் என்று சொல்லிக்கொள்ளவே தகுதியற்றவர்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;புகைப்படம்: மானாமதுரை கிளினிக்&lt;/p&gt;&lt;p&gt;மார்கண்டன் வெறும் கடமை தவறியவர் மட்டுமல்ல. ஒரு மகா ஏமாற்றுக்காரர் என்பது அவர் தயார் செய்யும் 'ரிப்போர்ட்களில்' தெரிகிறது. தான் நடமாடும் மருத்துவ குழுவுடன் ஃபீல்டுக்குச் சென்று மக்களுக்கு சிகிச்சை செய்ததாக கடந்த 7 வருடங்களாக மேலிடத்திற்கு தகவல்களை அனுப்பி நம்ப வைக்கிறார். இதற்கு அவருக்குத் துணையாக இருப்பது ஸ்டாஃப் நர்ஸ் அக்கினி வீரன். ஸ்டாப் நர்ஸ் அக்கினி வீரன் தான் நடமாடும் மருத்துவ குழுவிற்கு மருத்துவர் போல் அதிகாரம் செய்து வருகிறார்.&lt;/p&gt;&lt;p&gt;மார்கண்டன் செய்ய வேண்டிய களப்பணிகளை அக்கினி மேற்கொள்வதும், அதற்குப் பிரதிபலனாக அக்கினி அந்தப் பகுதியில் ஒரு 'பெரிய டாக்டர்' போலவே பந்தா செய்வதும் வாடிக்கையாகிவிட்டது. ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்களிடம் அக்கினி காட்டும் அடாவடி கொஞ்சநஞ்சமல்ல. ஒப்பந்த ஊழியர்களான டிரைவர், கிளீனர் உள்ளிட்டோரின் வேலையைப் பறித்துவிடுவேன் என்று மிரட்டி, தங்களது சட்டவிரோதச் செயல்களை மூடி மறைக்க இந்த 'கூட்டுக்களவாணி' கூட்டணி கச்சிதமாகச் செயல்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;புகைப்படம்- இடைக்காட்டூர் கிளினிக்&lt;/p&gt;&lt;p&gt;கடமை தவறுதல், நம்ப வைத்து மோசடி ஒருபுறம் என்றால், மார்கண்டனின் கீழ்த்தரமான நடத்தை மறுபுறம் அருவருக்கத்தக்கதாக உள்ளது. சக பெண் ஊழியர்களிடம் இரட்டை அர்த்தத்தில் பேசுவதும், அவர்களைச் சீண்டுவதும் இவரது வாடிக்கை. 2018ம் ஆண்டு விசாலாட்சி என்கிற துணிச்சலான பெண் நர்ஸ் இவர் மீது அதிகாரப்பூர்வமாகப் புகாரளித்து நடவடிக்கைக்கு உள்ளானவர் இந்த மார்க்கண்டன். நடமாடும் மருத்துவரான அவரை மருத்துவமனைக்கு உள்ளேயே வரக்கூடாது என கண்டிப்பு காட்டினார் அப்போது மாவட்ட அதிகாரியாக இருந்த பெண் அலுவலர்.&lt;/p&gt;&lt;p&gt;கிராமப்புறங்களில் இருந்து அரசு மருத்துவமனைக்கு பணிக்கு வரும் ஏழைப் பெண்கள், மானத்திற்கு அஞ்சி மார்கண்டனின் இரட்டை அர்த்த பேச்சுகளையும், சீண்டல்களையும் வெளியே சொல்ல முடியாமல் புழுங்கிக் கொண்டிருக்கிறார்கள். வாராந்திர ஆய்வுக் கூட்டத்தில் ( Review Meeting) கலந்து கொள்ளும், இவரை விட மூத்த பெண் ஊழியர்களையும் இவர் ஒருமையில் பேசுவது அதிகாரத்தின் உச்சபட்ச துஷ்பிரயோகம்.&lt;/p&gt;&lt;p&gt;ஒரு அரசு அதிகாரியாக இருந்து கொண்டு, சக பெண் ஊழியர்களுக்கே பாதுகாப்பு வழங்காத இந்த மார்கண்டன் மீது இதுவரை கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாதது தமிழக சுகாதாரத் துறைக்கே இழுக்கு!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;புகைப்படம்: முதலில் இருப்பவர் மார்கண்டன்&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;ஆண்டுக் கணக்கில் ஒரு நடமாடும் மருத்துவ குழு மருத்துவர், கடந்த ஒரு வருடமாக பி.எம்.ஓ பொறுப்பில் இருக்கும் அதிகாரி பணிக்கு வராமல் சொந்த கிளினிக் நடத்த முடிகிறது என்றால், மாவட்ட மருத்துவ அதிகாரியின் 'கவனிப்பு' இன்றி இது நடக்குமா? மேலதிகாரிகள் 'விசாரணை நடத்துகிறோம்' என்று சொல்வதெல்லாம் வெறும் கண்துடைப்பு நாடகமா?'' எனக் கொந்தளிக்கிறார்கள் அப்பகுதி மக்கள்.&lt;/p&gt;&lt;p&gt;பொதுமக்கள் சொன்ன புகாரை உறுதிப்படுத்த, ஊடகத்துறையினர், சில அச்சு ஊடகத்தினர் வாரக்கணக்கில் ரகசியக் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதில், பணி நேரத்தில் அரசு மருத்துவமனையில் பணியில் இருக்க வேண்டிய மார்க்கண்டன் அதே நேரத்தில் சொந்த கிளினிக்கை கவனித்துக் கொண்டிருந்தபோது ஜிபிஎஸ் கேமராவில் பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் மார்கண்டனின் அத்தனை முகத்திரையையும் கிழித்து எறிந்துவிட்டன. அவர் அரசு மருத்துவமனைக்கு வராமல் கிளினிக்கில் கல்லா கட்டும் ஒவ்வொரு நிமிடமும் ஆதாரமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;புகைப்படம்: மார்கண்டன் ஆய்வுக்கு செல்லாததால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனம்&lt;/p&gt;&lt;p&gt;ஏழை மக்கள் நம்பிக்கையோடு வரும் அரசு மருத்துவமனையைத் தனது சுயநலத்திற்காகச் சீரழிக்கும் மார்கண்டன் போன்றவர்கள் இன்னும் பணியில் நீடிப்பது சமூக அநீதி. அரசுச் சம்பளத்தைத் திருடும் இந்த 'டாக்டர்' மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படுமா? அவருக்குத் துணையாக இருக்கும் நர்ஸ் அக்கினி வீரன் மீது விசாரணை நடத்தப்படுமா? புகார்களைக் கண்டும் காணாமல் இருக்கும் மேலதிகாரிகள் மீது அரசு சாட்டையைச் சுழற்றுமா? மக்களின் வரிப்பணம் மார்கண்டனின் தனிப்பட்ட சொத்து அல்ல. உடனடியாக இவரைப் பணியிடை நீக்கம் செய்து, கடந்த 17 ஆண்டுகளில் அவர் செய்த முறைகேடுகளை முழுமையாக விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். இல்லையெனில், முத்தனேந்தல் வட்டார மக்கள் வீதியில் இறங்கிப் போராடும் நாள் வெகுதூரத்தில் இல்லை.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-sivagangai</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/muthanendal-bmo-markandan-caught-red-handed-with-evidence-xe54dtp"/>
        </item>
        <item>
            <title><![CDATA[புதிய அணைக்கு தடை கோரும் தமிழகம்; முல்லைப்பெரியாறு அணையில் மத்திய குழு இன்று ஆய்வு]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/central-water-resources-commission-officials-are-inspect-the-stability-of-the-mullaperiyar-dam-vel-sf0b1t</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/central-water-resources-commission-officials-are-inspect-the-stability-of-the-mullaperiyar-dam-vel-sf0b1t</guid>
            <pubDate>Thu, 13 Jun 2024 12:21:29 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;முல்லைப் பெரியாறு அணையில் மத்திய நீர்வள ஆணைய தலைமைப் பொறியாளர் ராகேஷ் கசியப் தலைமையிலான மத்திய கண்காணிப்பு குழுவினர் இன்றும், நாளையும் ஆய்வு மேற்கொள்கின்றனர்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j085sm1ncrx3dmqezndarym9,imgname-whatsapp-image-2024-06-13-at-12-20-01.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழகத்தின் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாகத் திகழ்வது முல்லைப் பெரியாறு அணை. இந்த முல்லை பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க, கடந்த 2014 ல் மூன்று பேர் கொண்ட 'கண்காணிப்பு குழுவை&quot; உச்சநீதிமன்றம் நியமித்தது. பின் 2022ல் இக்குழுவில் இரு மாநில தொழில் நுட்ப வல்லுனர்கள் இருவரை சேர்க்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;Dharmapuri Crime: தருமபுரியில் பரபரப்பு; முகம் சிதைக்கப்பட்டு சிறார் கொடூர கொலை - போலீஸ் விசாரணை&lt;/p&gt; &lt;p&gt;தற்போது இந்த குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் ராகேஷ் உள்ளார். தமிழக பிரதிநிதிகளாக நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழும தலைவர் சுப்பிரமணியம், கேரள பிரதிநிதிகளாக கேரள நீர்ப்பாசனத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அசோக்குமார் சிங் , கேரள நீர்ப்பாசனத்துறை நிர்வாக தலைமை பொறியாளர் பிரியேஷ் உள்ளனர். இக்குழு கடந்த ஆண்டு மார்ச் 27ல் பெரியாறு அணையை ஆய்வுசெய்தனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இன்று முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 118.85 அடியாக உள்ள நிலையில், நடைபெறக்கூடிய ஆய்விற்கு கேரள மாநிலம் தேக்கடி படகுத்துறை பகுதியில் இருந்து அதிகாரிகள் படத்தின் மூலம் அணை பகுதிக்கு சென்றுள்ளனர். இதையடுத்து முல்லைபெரியாறு அணையில் பருவநிலை மாற்றத்தை ஒட்டி செய்துள்ள, செய்ய வேண்டிய வழக்கப்பணிகள் குறித்தும், &amp;nbsp;மெயின் அணை, பேபி அணை, ஷட்டர் பகுதி, கேலரி பகுதி, வல்லகடவு பாதை உள்ளிட்டவற்றை கண்காணிப்பு குழுவினர் இன்று ஆய்வு செய்கின்றனர்.&lt;/p&gt; &lt;p&gt;திருச்சி எஸ்.பி.யின் தலைக்கு குறிவைத்து இன்ஸ்டாவில் மிரட்டல் பதிவு; சிறார்களை கண்டித்து அனுப்பிய போலீஸ்&lt;/p&gt; &lt;p&gt;அங்கு மதகுகளின் இயக்கம் சரிபார்த்தல், அணையின் பலத்தை நிரூபிக்கும் சுரங்கக் கசிவு நீரின் மாதிரிகள் சேகரிக்கப்படும். இன்றும், நாளையும் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்படும் முடிவுகள் அரசுக்கு அறிக்கையாக அனுப்பப்படும். கடந்த சில மாதங்களாக கேரளாவில் முல்லைப் பெரியாற்றின் புதிய அணை என்ற கருத்து நிலவி வரும் சூழலில் இந்த ஆய்வு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-sivagangai</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/central-water-resources-commission-officials-are-inspect-the-stability-of-the-mullaperiyar-dam-vel-sf0b1t"/>
        </item>
        <item>
            <title><![CDATA[120 ஆடுகள்.. 21 மாடுகள்... பிரமாண்ட படையலுடன் நரிக்குறவர்கள் கொண்டாடிய திருவிழா!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-sivagangai/21-buffaloes-120-goats-were-sacrificed-in-sivagangai-narikuravar-festival-sgb-siq7yq</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-sivagangai/21-buffaloes-120-goats-were-sacrificed-in-sivagangai-narikuravar-festival-sgb-siq7yq</guid>
            <pubDate>Sat, 24 Aug 2024 19:54:28 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;விழாவில் கலந்துகொண்ட மக்கள் பலியிட்ட எருமைகளின் ரத்தத்தை குடித்து, உடலிலும் பூசிக்கொண்டனர். இறைச்சியை காளிக்கு படையலிட்டனர்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j62aatmwqyvwbtkjvfdnn090,imgname-1300150.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சிவகங்கையில் நடைபெற்ற நரிக்குறவர் இன மக்களின் திருவிழாவில் 21 எருமை மாடுகள், 120 ஆடுகள் பலி கொடுத்து படையலிட்டு வழிபாடு செய்துள்ளனர்.&lt;/p&gt; &lt;p&gt;சிவகங்கை மாவட்டம் பழமலைநகரில் முந்நூறுக்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் வசிக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் காளியம்மன், மீனாட்சியம்மன், மாரியம்மன், மதுரைவீரன் உள்ளிட்ட தங்கள் குல தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடு நடத்துகிறார்கள்.&lt;/p&gt; &lt;p&gt;இந்த ஆண்டின் திருவிழா கடந்த 8ஆம் தேதி காப்புக் கட்டுடன் தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு நரிக்குறவர் குடியிருப்புப் பகுதியில் ஓலைக் குடில்கள் அமைக்கப்பட்டன. தினமும் அந்தக் குடிலில் வைத்து வழிபாடு செய்துவந்ததனர். விழாவின் அச்ச நிகழ்வாக சனிக்கிழமை அதிகாலை சாமியாடும் நிகழ்ச்சி நடந்தது.&lt;/p&gt; &lt;p&gt;உலகிலேயே மிகப் பெரிய பசுமை ரயில்வே! மின்மயமாக்கப்பட்ட 68,000 கி.மீ. ரயில்பாதை!!&lt;/p&gt; &lt;p&gt;அதைத் தொடர்ந்து காளியம்மனுக்கு 21 எருமை மாடுகள், 120 ஆடுகள் பலியிடப்பட்டன. அனைவரும் நோய் நொடி இல்லாமல் வாழ, வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் ஆண்டுதோறும் இவ்வாறு பலி கொடுப்பதாக நரிக்குறவர் இன மக்கள் கூறுகின்றனர்.&lt;/p&gt; &lt;p&gt;விழாவில் கலந்துகொண்ட மக்கள் பலியிட்ட எருமைகளின் ரத்தத்தை குடித்து, உடலிலும் பூசிக்கொண்டனர். இறைச்சியை காளிக்கு படையலிட்டனர். இந்த விழாவில் சிவகங்ககை மட்டுமின்றி, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருப்பத்தூர், பட்டுக்கோட்டை மாவட்டங்களில் இருந்தும் 3,000 க்கும் அதிகமான நரிக்குறவர் இன மக்கள் கலந்துகொண்டனர்.&lt;/p&gt; &lt;p&gt;விழாவில் அனைவருக்கும் காளிக்குப் படைக்கப்பட்ட ஆடு, மாடுகளைச் சமைத்து விருந்து அளிக்கப்பட்டது. விருந்தைத் தொடர்ந்து பல போட்டிகளும் நடத்தப்பட்டன. மாலையில் பெண்கள் மது எடுப்பு ஊர்வலம் நடைபெற்றது. நள்ளிரவில் எரிசோறு விடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;செருப்பை ஒளித்து வைத்ததால் விபரீதம்! பள்ளியிலேயே உயிரிழந்த மாணவர்!!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-sivagangai</category>
            <dc:creator>SG Balan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-sivagangai/21-buffaloes-120-goats-were-sacrificed-in-sivagangai-narikuravar-festival-sgb-siq7yq"/>
        </item>
    </channel>
</rss>
