<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes"?>
<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Tue, 10 Mar 2026 11:53:31 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss/tamilnadu-neelagiri" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[மின்னல் வேகத்தில் வந்த பைக்! சாலையை கடக்க முயன்ற நீதிபதி தூக்கி வீசப்பட்டு பலி! விபத்தை ஏற்படுத்தியவர் எஸ்கேப்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/road-accident-nilgiris-district-additional-judge-killed-tvk-sgquol</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/road-accident-nilgiris-district-additional-judge-killed-tvk-sgquol</guid>
            <pubDate>Wed, 17 Jul 2024 07:06:11 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே சின்னாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி (58). இவர் நீலகிரி மாவட்டத்தில் கூடுதல் மாவட்ட நீதிபதியாக பணியாற்றி வந்தார்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j2z4nvkaykvhd5mz5nf69drv,imgname-nilgiris-district.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சாலையை கடக்க முயன்ற மாவட்ட நீதிபதி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே சின்னாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி (58). இவர் நீலகிரி மாவட்டத்தில் கூடுதல் மாவட்ட நீதிபதியாக பணியாற்றி வந்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக உடுமலை ரோட்டில் காரை நிறுத்திவிட்டு சாலையை கடக்க முயன்றுள்ளார்.&amp;nbsp;அப்போது பொள்ளாச்சி நோக்கி வந்த இருசக்கர வாகனம் சாலையை கடக்க முயன்ற நீதிபதி கருணாநிதி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நீதிபதி கருணாநிதிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&lt;strong&gt;நீலகிரிக்கு ரெட்! கோவைக்கு ஆரஞ்ச்! மற்ற மாவட்டங்களில் தரமான சம்பவம் இருக்காம்! வானிலை மையம் அலர்ட்!&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;விபத்தை ஏற்படுத்திய இருசக்கர வாகனம் வாகனத்தை நிறுத்தாமல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இந்த விபத்து தொடர்பாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த நீதிபதி கருணாநிதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&lt;strong&gt;ஃபர்ஸ்ட் அட்டெம்ட்டில் மிஸ்ஸான கணவர்! 2வது முறையாக ஸ்கெட்ச் போட்டு கதையை முடித்த மனைவி! கள்ளக்காதலால் பயங்கரம்&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விபத்தை ஏற்படுத்திய இருசக்கர வாகன ஓட்டி யார் என்பது குறித்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் மாவட்ட நீதிபதி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-neelagiri</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/road-accident-nilgiris-district-additional-judge-killed-tvk-sgquol"/>
        </item>
        <item>
            <title><![CDATA[பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.. எந்த மாவட்டத்திற்கு? என்ன காரணம்?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-neelagiri/hethai-amman-festival-local-holiday-nilgiris-district-today-2vg0byf</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-neelagiri/hethai-amman-festival-local-holiday-nilgiris-district-today-2vg0byf</guid>
            <pubDate>Wed, 07 Jan 2026 07:15:34 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;School College Holiday: படுகர் இன மக்களின் ஹெத்தையம்மன் திருவிழாவை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தின் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j8xy1x7fgkznteyfp715t323,imgname-school-holiday.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;School College Holiday: படுகர் இன மக்களின் ஹெத்தையம்மன் திருவிழாவை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தின் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்களின் குலதெய்வமான ஹெத்தையம்மன் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அன்றைய தினம் சின்ன பிக்கட்டி, பெரிய பிக்கட்டி, பேரட்டி, மல்லிக்கொரை, மஞ்சுதளா, ஜெகதளா, காரக்கொரை, ஓதனட்டி ஆகிய 8 கிராமங்களில் உள்ளவர்கள் இப்பண்டிகையின் போது விரதம் இருந்து பாத யாத்திரை செல்வது வழக்கம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில், இப்பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதாவது நீலகிரி மாவட்டத்தில் ஸ்ரீ ஹெத்தையம்மன் பண்டிகை பெறுவதையொட்டி அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலாவணி 1881 (Negotiable Instrument Act 1881)-இன் கீழ் வராது என்பதால் உள்ளூர் விடுமுறை அறிவிக்கும் போது மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக வரும் 24ம் தேதி சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-neelagiri</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-neelagiri/hethai-amman-festival-local-holiday-nilgiris-district-today-2vg0byf"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஊட்டிக்கு போற ஐடியா இருக்கா! பார்க்க வேண்டிய டாப் 10 இடங்கள் எது தெரியுமா.? வெளியான சூப்பர் அறிவிப்பு]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/do-you-know-which-are-the-major-tourist-attractions-in-ooty-kak-sjh7ep</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/do-you-know-which-are-the-major-tourist-attractions-in-ooty-kak-sjh7ep</guid>
            <pubDate>Sun, 08 Sep 2024 09:36:24 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தமிழகத்தின் மலைப்பிரதேச சுற்றுலாவின் மகுடமாக விளங்கும் ஊட்டி, இயற்கை எழில் கொஞ்சும் பசுமை நிறைந்த பூங்காக்கள், அருவிகள் மற்றும் ஏரிகளின் சொர்க்கமாக திகழ்கிறது. சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில், மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்படுகின்றன.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j3htmrnxbv5kxen2xefez5mx,imgname-asianet-news--26-.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழகத்தின் மலைப்பிரதேச சுற்றுலாவின் மகுடமாக விளங்கும் ஊட்டி, இயற்கை எழில் கொஞ்சும் பசுமை நிறைந்த பூங்காக்கள், அருவிகள் மற்றும் ஏரிகளின் சொர்க்கமாக திகழ்கிறது. சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில், மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்படுகின்றன.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;இயற்கையின் சொர்க்கம் ஊட்டி&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்கவும் இயற்கையை ரசிக்கவும் &amp;nbsp;தமிழக மக்களுக்குமின்றி ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேராளவை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஊட்டியில் குவிந்து வருவார்கள். அந்தவகையில் உதகையில் பல முக்கிய சுற்றுலா தளங்கள் உள்ளது. தாவரவியல் பூங்கா, படகு இல்லம் மற்றும் ரோஜா பூங்கா, என பல இடங்கள் உள்ளன. இதில் பெரும்பாலும் தோட்டக்கலைத்துறைக்கும், வனத்துறையும் சொந்தமாக உள்ளது. &amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதில் தமிழகத்தில் மலைப்பிரதேச சுற்றுலா என்றால் முதலில் நினைவுக்கு வருவது ஊட்டி, கொடைக்கானல், ஏலகிரி மற்றும் ஏற்காடாகும். இந்த பகுதியில் உள்ள பசுமை நிறைந்த புல்வெளிகளும், அடர்ந்த காடுகள், குளுமையாக வீசும் காற்றும், கை நீட்டும் தொலைவில் செல்லும் மேகக்கூட்டங்களும் கண்களுக்கு காட்சியளிக்கும்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;முதுமலை - யானைகள் முகாம்&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;இதனை ரசிப்பதற்காகவே லட்சக்கணக்கான மக்கள் இந்த பகுதிகளுக்கு குவிந்து வருகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மலைப்பகுதிக்கு செல்வதை விரும்பாமல் இருந்ததில்லை. பல இடங்களில் சுற்றிப்பார்க்க ஏராளமான இடங்கள் இருந்தாலும். ஊட்டியை அனைத்திலும் முன்னோடியாக உள்ளது. இங்கு ஊட்டி ஏரி, சில்ட்ரன்ஸ் பார்க், தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா, எமரால்டு ஏரி, அவலாஞ்சி, முதுமலை வன விலங்கு பாதுகாப்பகம், ரோஸ் கார்டன், பைகாரா அருவி என ஏராளமான சுற்றுலா இடங்கள் உள்ளது. இதில் முக்கியமானது ஊட்டி ரயில் பயணமாகும்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஊட்டி ஏரியில் படகு சவாரி&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;முதுமலை வனவிலங்கு காப்பகமானது கர்நாடகா மற்றும் கேரள மாநில எல்லையில் அமைந்துள்ளது. &amp;nbsp;முதுமலை தென்னிந்தியாவின் முதல் வனக்காப்பகமாகும். இங்கு யானைகள், புலி, சிறுத்தை, காட்டெருமை, &amp;nbsp;மான், பறக்கும் அணில் போன்ற பல்வேறு வகையான விலங்குகள் ஏராளமாக உள்ளது. அடுத்ததாக ஊட்டி ஏரியின் அழகை ரசிக்கவே கண்கள் போதாது. அந்தளவிற்கு இயற்கையோடு கலந்திருக்கும்,&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;65 ஏக்கர் பரப்பளவில் அழகே வடிவாய் அமைந்திருக்கிறது ஊட்டி ஏரி. இங்கிருக்கும் படகு இல்லம் பிரபலமானது. இங்கே படகு சவாரி செய்வது அலாதியான இன்பத்தை கொடுக்கும். அடுத்ததாக குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்காவாக சில்ட்ரன்ஸ் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் பூத்துக்குலுங்கும் மலர்களும், விளையாட்டு சாதனங்களும் உள்ளது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;தாவரவியல் பூங்கா&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;பொட்டானிக்கல் கார்டன் என அழைக்கப்படும் தாவரவியல் பூங்காவனது பரந்து விரிந்த புள்வெளியை கொண்டதாகும், இங்கு &amp;nbsp;வண்ண வண்ண மலர்களும், மூலிகைகளும், உயர்ந்து வளர்ந்து நிற்கும் நெடிய மரங்களும்மெய் சிலிர்க்க வைக்கும். போட்டோ ஷூட் எடுக்க முக்கிய பகுதியாகவும் உள்ளது. அடுத்ததாக தொட்டபெட்டாவாகும். மிக உயரமான மலையாகும், தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரங்களில் ஒன்றாக உள்ளது. இதன் உயரம் கடல் மட்டத்தில் இருந்து 2623 மீட்டர் உயராகும். இங்கு மேகங்கள் உரசி செல்லும் அழகை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அடுத்ததாக ரோஜா பூங்காவில் 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட &amp;nbsp;ரோஜாக்கள் பல வண்ணங்களில் அமைக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;எமரால்டு ஏரியின் அழகு&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் இந்த ரோஜா பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. ஏமாரால்டு ஏரி மற்றும் அவலாஞ்சி போன்ற இடங்களும் மக்களின் மனதை கொள்ளையடிக்கும் அழகை கொண்டதாகும். இந்த இடத்தில் இருந்து பார்க்கும் போது ஓடும் ஆறுகளும் பள்ளத்தாகும் மிக அழகாக இருக்கும்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஊட்டி மலை ரயில் &lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;அடுத்ததாக பைகாரா அருவி மற்றும் படகு சவாரியாகும் கூடலூர் செல்லும் சாலையில் இந்த பைக்காரா ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் படகு சவாரி புது அனுபவத்தை கொடுக்கும், இது போன்ற முக்கிய இடங்கள் உதகையில் இருந்தாலும், உதகைக்கு மக்கள் செல்ல விரும்புவது மலை ரயிலில் தான் ஊட்டி மலை ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினந்தோறும் இயக்கப்படுகிறது.&lt;/p&gt; &lt;p&gt;மலைகளில் நடுவே வளைந்து செல்லும் இந்த இடங்களை பார்ப்பதற்காகவே ஏராளமான மக்கள் பயணம் செய்ய விரும்பார்கள். குகைகளில் செல்லும் போது மக்கள் மகிழ்ச்சியில் எழுப்பும் கூச்சல் அழகானது. ஆனால் மழை பெய்தால் ஏற்படும் நிலச்சரிவால் அடிக்கடி பாதிப்பு ஏற்பட்டு மலை ரயில் சேவை ரத்து செய்யப்படும்&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;பாதிக்கப்படும் ரயில் சேவை&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;இந்தநிலையில் ஊட்டிக்கு வரும் மக்களை கவரும் வகையில் பல இடங்களில் பல வண்ணங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக நடைபாதையில் பல வண்ணங்களில் பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது. வண்ண நடை பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க மேட்டுப்பாளையம் -ஊட்டி இடையே மலை ரயில் இயக்கப்படுகிறது. விநாயகர் சதூர்த்தி மற்றும் ஓணம் பண்டிகையையொட்டி சிறப்பு ரயில் இயக்கப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;சிறப்பு ரயில் அறிவிப்பு&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;அதன் படி இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ஓணம் பண்டிகையையொட்டி வருகிற 14, 15-ம் தேதிகளும் சிறப்பு மலை ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன் படி குன்னூரில் இருந்து ஊட்டிக்கும், ஊட்டியில் இருந்து குன்னுாருக்கு தலா ஒருமுறை சிறப்பு ரெயிலும், ஊட்டி-கேத்தி இடையே 3 முறை சிறப்பு சுற்று ரெயிலும் இயக்கப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் இந்த வாய்ப்பை மிஸ் பன்னாதீங்க.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-neelagiri</category>
            <dc:creator>Ajmal Khan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/do-you-know-which-are-the-major-tourist-attractions-in-ooty-kak-sjh7ep"/>
        </item>
        <item>
            <title><![CDATA[தாலி கட்டிய மனைவியை விட்டுட்டு கள்ளக்காதலியுடன் குடும்பம் நடத்திய கணவர்! இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/illegal-love-electrician-suicide-in-nilgiris-tvk-sgx5o2</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/illegal-love-electrician-suicide-in-nilgiris-tvk-sgx5o2</guid>
            <pubDate>Sat, 20 Jul 2024 16:41:06 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;நீலகிரி மாவட்டம் குன்னூர் மகாலிங்கம் காலனியை சேர்ந்தர் மணிகண்டன் (32). எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி சிவரஞ்சனி. இந்நிலையில் மணிகண்டனுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01gc621jtw5aqq463cj2yg3pma,imgname-illegal-love.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கள்ளக்காதலியுடன் குடும்பம் நடத்திய கணவரை மனைவி கண்டித்ததால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;நீலகிரி மாவட்டம் குன்னூர் மகாலிங்கம் காலனியை சேர்ந்தர் மணிகண்டன் (32). எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி சிவரஞ்சனி. இந்நிலையில் மணிகண்டனுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் இருக்கும் போதெல்லாம் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&lt;strong&gt;ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிக்குப் பழி? சபதம் எடுத்த கேங்! உளவுத்துறை வார்னிங்! உச்சக்கட்ட பதற்றத்தில் தலைநகர்!&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;இந்த விவகாரம் நாளடைவில் மணிகண்டனின் வீட்டுக்கு தெரியவந்ததால் பிரச்சனை ஏற்பட்டது. கள்ளக்காதலியை பிரிந்து இருக்க முடியாததால் அவருடன் வீட்டை விட்டு வெளியேறி சேலத்தில் உறவினர் வீட்டில் தங்கினர். இதனிடையே கணவரை காணவில்லை என்பதால் அதிர்ச்சியடைந்த மனைவி மற்றும் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;பின்னர் சேலம் மாவட்டத்தில் தங்கி இருப்பதை அறிந்து வளையசெட்டியூருக்கு சிவரஞ்சனி வந்தார். அங்கு கள்ளக்காதலியுடன் தங்கி இருந்த மணிகண்டனை தன்னோடு வரும்படி மனைவி அழைத்துள்ளார். மேலும் கள்ளக்காதலை கண்டித்தார். அங்கிருந்து திடீரென வெளியேறிய மணிகண்டன் பூலாம்பட்டி அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகில் விஷம் குடித்து மயங்கிய நிலை கிடந்தார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&lt;strong&gt;ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல்! யார் கூப்பிட்டாலும் போக கூடாது! திருமாவளவன் நிர்வாகிகளுக்கு கண்டிஷன்..!&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;இதனையடுத்து அவரை &amp;nbsp;எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பரிதாபமாக மணிகண்டன் உயிரிழந்தார். இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக பூலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.&amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-neelagiri</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/illegal-love-electrician-suicide-in-nilgiris-tvk-sgx5o2"/>
        </item>
        <item>
            <title><![CDATA[நீங்கள் தொடங்கிய நீட் எதிர்ப்பு இன்று எங்க கொண்டு வந்து நிறுத்திருக்கு பாத்தீங்களா? எல்.முருகன் கேள்வி?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-neelagiri/union-minister-of-state-l-murugan-has-requested-action-against-those-who-posted-wall-advertisements-to-cause-separatism-in-the-nilgiris-vel-sfzeuw</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-neelagiri/union-minister-of-state-l-murugan-has-requested-action-against-those-who-posted-wall-advertisements-to-cause-separatism-in-the-nilgiris-vel-sfzeuw</guid>
            <pubDate>Tue, 02 Jul 2024 13:13:48 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கோத்தகிரி பகுதியில் நீட் எதிர்ப்பு பிரசாரம் பிரிவினையை தூண்டும் வகையில் குறிப்பிடப்பட்டதற்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j1rzr0gsz6secb01pejc76pv,imgname-mixcollage-02-jul-2024-11-17-am-7660.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்தே தமிழகத்தில் அதற்கான எதிர்ப்புகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு சமயத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. முன்னதாக தமிழகத்தில் மட்டும் வெடித்து வந்த நீட் எதிர்ப்பு இன்று பல்வேறு மாநிலங்களுக்கும் பரவத் தொடங்கி உள்ளது. இதனிடையே நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மலைப்பகுதியில் சாலை ஓர சுவர்களில் நீட் தேர்வுக்கு எதிரான வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.&lt;/p&gt; &lt;p&gt;சிறுக சிறுக சேர்த்து வைத்த நகையை சிறுக சிறுக ஆடையை போட்ட வங்கி பணியாளர்; பிள்ளையார்பட்டியில் பரபரப்பு&lt;/p&gt; &lt;p&gt;அதில் நீட் தேர்வுக்கு எதிரான வாசகம் மட்டுமல்லாது, தேசத்தில் பிரிவினையை ஏற்படுத்தும் வாசகமும் இடம் பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தகவல் அறிந்த அதிகாரிகள், அந்த வாக்கியங்களை வண்ணம் பூசி அழித்தனர். இந்நிலையில். பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் இடம் பெற்றிருந்த வாக்கியங்களுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt; &lt;p&gt;இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், &ldquo;தமிழகத்தில் திமுக கூட்டணியினர் செய்து வரும் &amp;nbsp;நீட் வெறுப்பு பிரசாரம், தேச விரோத கும்பல்களுக்கு எந்த அளவிற்கு ஊக்கமளிக்கிறது என்பதற்கு சான்றுகள் தான் இவை. சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும் நீலகிரி மாவட்டத்தின் கோத்தகிரி பகுதியில் சாலையோர சுவர்களில் நீட் எதிர்ப்பு என்ற போர்வையில் பிரிவினைவாத, தேசவிரோத கருத்துகள் அப்பட்டமாக பரப்பப்படுகின்றன.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;எங்கள் நிகழ்ச்சிகளில் ஆபாசமோ, சாதிய உணர்வுகளோ தூண்டப்படாது; மேடை நடன நிகழ்ச்சிக்கு அனுமதியுங்கள் - கலைஞர்கள்&lt;/p&gt; &lt;p&gt;திமுக ஆட்சியில் தேச விரோத, பிரிவினைவாத கும்பல்களின் செயல்பாடு அதிகரித்து வருவது, பாரத தேசத்தை நேசிக்கும் ஒவ்வொருவரையும் வேதனைக்குள்ளாக்கும் செயல். இதுபோன்ற பிரிவினைவாத கும்பல்களை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால் தமிழகம் பெரும் ஆபத்தை சந்திக்கும் சூழல் ஏற்பட்டு விடும். திரு.மு.க.ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுத்து தேசவிரோத கும்பல்களை கைது செய்ய வேண்டும்&rdquo; என்று குறிப்பிட்டுள்ளார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-neelagiri</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-neelagiri/union-minister-of-state-l-murugan-has-requested-action-against-those-who-posted-wall-advertisements-to-cause-separatism-in-the-nilgiris-vel-sfzeuw"/>
        </item>
        <item>
            <title><![CDATA[School Holiday: விடாமல் வெளுத்து வாங்கும் கனமழை.. இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/nilgiris-district-heavy-rain-schools-holiday-tvk-sgummx</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/nilgiris-district-heavy-rain-schools-holiday-tvk-sgummx</guid>
            <pubDate>Fri, 19 Jul 2024 07:53:21 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தமிழகத்தில் காலை நேரத்தில் வெயில் வாட்டி வதைத்து வருவதும் மாலை அல்லது இரவு நேரங்களில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வந்தது. இதன் காரணமாக பூமி குளிர்ந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01hhvyb3s6xm1cegx9mkh9463k,imgname-asianet-news---2023-12-17t183815-070.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தொடர் கனமழை காரணமாக உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய வட்டங்களில் &amp;nbsp;உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;தமிழகத்தில் காலை நேரத்தில் வெயில் வாட்டி வதைத்து வருவதும் மாலை அல்லது இரவு நேரங்களில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வந்தது. இதன் காரணமாக பூமி குளிர்ந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&lt;strong&gt;School Colleges Holiday: ஆகஸ்ட் 5ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்!&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிக கன முதல் அதி கனமழையும், கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்திருந்தது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&amp;nbsp;&lt;strong&gt;கோவைக்கு ஆரஞ்சு அலர்ட்! திருப்பூர், தேனி, உள்ளிட்ட இந்த 6 மாவட்டங்களில் இன்று சம்பவம் இருக்காம்!&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;அதன்படி நீலகிரி மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால், பல்வேறு இடங்களில் மரங்கள் வேறொடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.&amp;nbsp;தொடர் மழை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட 4 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் லஷ்மி பவியா அறிவித்துள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-neelagiri</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/nilgiris-district-heavy-rain-schools-holiday-tvk-sgummx"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Shocking Video: காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்டு யானை; இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சிகள்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/video/tamilnadu-neelagiri/a-video-of-a-wild-elephant-swept-away-by-a-wild-flood-near-the-nilgiris-has-gone-viral-on-the-internet-vel-sfshe9</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/video/tamilnadu-neelagiri/a-video-of-a-wild-elephant-swept-away-by-a-wild-flood-near-the-nilgiris-has-gone-viral-on-the-internet-vel-sfshe9</guid>
            <pubDate>Fri, 28 Jun 2024 17:31:22 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;நீலகிரி மாவட்டம் கூடலூரில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காட்டு யானை வெள்ளத்தில் இருந்து தப்பித்த பதைபதைக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://geo.dailymotion.com/player/x1tbu.html?video=kTEfcGMKWajgAdAX9nO" medium="video" height="768" width="1024"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆறுகளில் தண்ணீர் குடிக்க வரும் காட்டு யானைகள் ஆற்றைக் கடந்து மறு பகுதிக்கு செல்கின்றன. இதனிடையே கூடலூர் அருகே உள்ள தர்மகிரி பகுதியில் ஆற்றை கடக்க மூன்று யானைகள் தண்ணீரில் நடந்து சென்றன அப்போது ஒரு யானை எதிர்பாராத விதமாக காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;மற்ற இரு யானைகளும் &amp;nbsp;செய்வதறியாது &amp;nbsp;திகைத்து நின்ற நிலையில், சிறிது தூரம் பாறைகளுக்கு மத்தியில் அடித்துச் செல்லப்பட்ட காட்டு யானை நீந்தி, தத்தளித்து கரையோரம் வந்து தண்ணீரில் இருந்து வெளியேறி கரை பகுதிக்கு பாதுகாப்பாக சென்றது. சினிமா காட்சிகளை மிஞ்சும் இந்த பரபரப்பான காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் &amp;nbsp;பரவி &amp;nbsp;வருகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-neelagiri</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/video/tamilnadu-neelagiri/a-video-of-a-wild-elephant-swept-away-by-a-wild-flood-near-the-nilgiris-has-gone-viral-on-the-internet-vel-sfshe9"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Heavy Rain School Holiday: விடாமல் அடிச்சு ஊத்தும் கனமழை! எந்த மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/heavy-rain-4-taluk-schools-holiday-in-nilgiris-district-tvk-sgwe47</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/heavy-rain-4-taluk-schools-holiday-in-nilgiris-district-tvk-sgwe47</guid>
            <pubDate>Sat, 20 Jul 2024 07:13:53 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01hhvyb33tar03592zztj1b95t,imgname-asianet-news---2023-12-17t183755-361.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய வட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுபெற்றுள்ளது. இது மேலும் வலுப்பெற்று &amp;nbsp;ஒரிசா மற்றும் வட ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி வரும் நாட்களில் நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&lt;strong&gt;School Colleges Holiday: ஆகஸ்ட் 5ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்!&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;இதன் காரணமாக தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு குறைவு என்றாலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிக கன முதல் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும், கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக &amp;nbsp;உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய வட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா அறிவித்துள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-neelagiri</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/heavy-rain-4-taluk-schools-holiday-in-nilgiris-district-tvk-sgwe47"/>
        </item>
        <item>
            <title><![CDATA[நீலகிரி மாவட்டத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும் - வானிலை மையம் எச்சரிக்கை]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-neelagiri/heavy-rainfall-alert-from-imd-at-nilgiris-district-upcoming-3-days-vel-shi24e</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-neelagiri/heavy-rainfall-alert-from-imd-at-nilgiris-district-upcoming-3-days-vel-shi24e</guid>
            <pubDate>Wed, 31 Jul 2024 23:32:37 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;நீலகிரி மாவட்டத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j32n85cdpystyvgs32bs93jr,imgname-palakkad--6-.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;அண்டை மாநிலமான கேரளாவில் பருவமழை மிகவும் தீவிரமடைந்து கனமழையாக பொழிந்து வருகிறது. கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் &amp;nbsp;ஏற்பட்டு 240க்கும் மேற்பட்டோர் உயிரிந்துள்ளனர். மேலும் 200க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாநில மீட்பு குழுவினர் தொடங்கி தேசிய மீட்பு குழு, இராணுவம் உட்பட பல்வேறு குழுக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.&lt;/p&gt; &lt;p&gt;Wayanad landslides: வயநாடு நிலச்சரிவு; பொதுமக்களிடம் உதவி கோரும் கேரளா அரசு&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இந்நிலையில் தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீலகிரி, கோவை மலைப் பகுதிகளில் ஆகஸ்ட் 1ம் தேதி மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;வேலை கிடைத்ததற்காக ட்ரீட் வைத்த இளம் பெண்; தோழியையே விருந்தாக்கிய நண்பர்கள்&lt;/p&gt; &lt;p&gt;மேலும் திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதே போன்று வெள்ளிக் கிழமை நீலகிரி, கோவை, திருப்பூர் தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-neelagiri</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-neelagiri/heavy-rainfall-alert-from-imd-at-nilgiris-district-upcoming-3-days-vel-shi24e"/>
        </item>
        <item>
            <title><![CDATA[நீலகிரியில் வெளுத்து வாங்கிய கனமழை! அவலாஞ்சியில் 292 மி.மீ பதிவு! 2 நாள் ஆரஞ்சு அலர்ட்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-neelagiri/heavy-rains-are-falling-in-the-nilgiris-district-tourist-spots-are-closed-ray-dumbcrt</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-neelagiri/heavy-rains-are-falling-in-the-nilgiris-district-tourist-spots-are-closed-ray-dumbcrt</guid>
            <pubDate>Mon, 16 Jun 2025 14:41:07 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் இன்றும், நாளையும் அங்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jxm5hydr40hxvqgzymqpvv56,imgname-tamilnadu-rain-1749802351031.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் இன்றும், நாளையும் அங்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. அதிலும் நீலகிரி மாவட்டத்தில் நேற்று அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்று இரவு முதல் உதகை குந்தா, அவலாஞ்சி, கூடலூர், பந்தலூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றின் தாக்கம் தீவிரமடைந்து மிக கனமழை பெய்து வருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதனால் குடியிருப்புகள் மற்றும் சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டும் மின்சார துண்டிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனை சரி செய்யும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர், தீயணைப்பு துறையினர், மின்வாரியத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். பந்தலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில், பலத்த காற்றுடன் மழை பெய்ததால் நெலாக்கோட்டை அருகே மேபீல்டு என்ற இடத்தில் மரம் ஒன்று அடியோடு பெயர்ந்து வீட்டு கூரை மீது விழுந்தது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;2 நாள் ஆரஞ்சு அலர்ட்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;நீலகிரியில் அதிகப்பட்சமாக அவலாஞ்சியில் 292 மி.மீட்டர் மழை கொட்டித் தீர்த்தது. அப்பர் பவானி 168, பார்சன்சன்ஸ் வேலி 132, பந்தலூர் 130 மி.மீட்டர் பழை பதிவாகி உள்ளன. நீலகிரி மாவட்டத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கபட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக உதகையில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றான சுற்றுலா துறையின் கீழ் இயங்கும் உதகை படகு இல்லத்தில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;அதேபோல் வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தொட்டபெட்டா காட்சிமுனை, அவலாஞ்சி, பைன் பாரஸ்ட், ஷூட்டிங் மட்டம் உள்ளிட்ட சுற்றுலா தளங்களும் மூடப்பட்டு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தென்மாநில பகுதிகளின் மேல் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் , தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு, 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி, கோவை, தென்காசி, தேனி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-neelagiri</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-neelagiri/heavy-rains-are-falling-in-the-nilgiris-district-tourist-spots-are-closed-ray-dumbcrt"/>
        </item>
        <item>
            <title><![CDATA[குட்டி காஷ்மீராய் மாறிய உதகை.. பொதுமக்களை கதறவிடும் உறைபனி.. சிலாகிக்கும் டூரிஸ்ட்.. வைரலாகும் போட்டோ]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-neelagiri/ooty-cold-wave-intense-hardship-for-public-ef8ye6b</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-neelagiri/ooty-cold-wave-intense-hardship-for-public-ef8ye6b</guid>
            <pubDate>Thu, 05 Feb 2026 11:52:18 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;நீலகிரி மாவட்டத்தில் கடும் உறைபனி நிலவி, வெப்பநிலை பூஜ்யம் டிகிரி செல்சியஸாக குறைந்துள்ளது. இதனால் உதகை பகுதிகள் குட்டி காஷ்மீர் போல காட்சியளிக்கிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kgp72n0nn3bp0ravxvk6ddns,imgname-ooty-1-1770272150549.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;நீலகிரி மாவட்டத்தில் கடும் உறைபனி நிலவி, வெப்பநிலை பூஜ்யம் டிகிரி செல்சியஸாக குறைந்துள்ளது. இதனால் உதகை பகுதிகள் குட்டி காஷ்மீர் போல காட்சியளிக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் நிறைவு அடைந்தது. இதனையடுத்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடும் பனிபொழிவும் ஒரு சில இடங்களில் நீர்பனி மற்றும் உறைபனியும் நிலவுகிறது. அதாவது நீர்பனி தொடங்கிய அடுத்த ஒரு சில வாரங்களில் உறைப்பனி தொடங்கும். இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் கடும் உறைபனி கடும் உறைபனி நிலவி வருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நீலகிரி மாவட்டத்தில் தலைகுந்தா, காந்தல், உதகை உள்ளிட்ட பகுதிகளில் நிலவிவரும் உறைபனி பொழிவால் அப்பகுதிகள் குட்டி காஷ்மீர் போல் மாறி கடும் குளிர் நிலவுகிறது. இப்பகுதிகளில் ஜூரோ டிகிரி செல்சியஸாக குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. ஊட்டியின் பல்வேறு பகுதிகள் காஷ்மீரை நினைவூட்டும் வகையில் பனிகள் படர்ந்து வெண்மை நிறத்தில் காட்சியளிக்கின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குறிப்பாக ஊட்டி குதிரைப் பந்தய மைதானம், காந்தல், தலைகுந்தா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள புல்வெளி மைதானங்களில் உறைபனி படிந்து, எப்போதும் பச்சைப்பசேலென காட்சியளிக்கும் புற்கள் தற்போது வெள்ளை கம்பளம் போர்த்தியதுபோல் காட்சியளிக்கின்றன. இந்த அபூர்வ காட்சியைக் காண சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர். மேலும், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள், இருசக்கர வாகனங்களின் மீது உறைபனி படிந்து அவையும் வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், தொழிலாளர்கள் குளிரைத் தாங்கும் ஆடைகளை அணிந்து உறைபனிக்கிடையிலும் கேரட் உள்ளிட்ட காய்கறிகளை அறுவடை செய்து வருகின்றனர். இதேபோல் மார்க்கெட் பகுதிகளில் சுமை தூக்கும் தொழிலாளர்கள், ஆங்காங்கே தீ மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர். உறைபனி தாக்கத்தால் செடி, கொடி மற்றும் புற்கள் காய்ந்து வறட்சியான சூழல் நிலவி வருகிறது. இதனால் கால்நடைகளுக்குப் தீவனத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-neelagiri</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-neelagiri/ooty-cold-wave-intense-hardship-for-public-ef8ye6b"/>
        </item>
        <item>
            <title><![CDATA[இந்தியாவிலேயே மிகவும் மெதுவாக செல்லும் ரயில் எது தெரியுமா? தமிழ்நாட்டில் தான் இயங்குகிறது!!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/nilgiri-mountain-rail-is-the-slowest-train-in-india-gan-skejie</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/nilgiri-mountain-rail-is-the-slowest-train-in-india-gan-skejie</guid>
            <pubDate>Thu, 26 Sep 2024 10:59:16 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;Slowest Train in India : &lt;/strong&gt;ரயில்கள் என்றாலே வேகமாக செல்லக்கூடியதாக இருக்கும், அப்படி இருக்கையில் இந்தியாவிலேயே மிகவும் மெதுவாக செல்லக்கூடிய ரயில் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j8p7y8yg6j8dg96jms66kdbe,imgname-new-project---2024-09-26t092654.188.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;Slowest Train in India : &lt;/strong&gt;ரயில்கள் என்றாலே வேகமாக செல்லக்கூடியதாக இருக்கும், அப்படி இருக்கையில் இந்தியாவிலேயே மிகவும் மெதுவாக செல்லக்கூடிய ரயில் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;நீலகிரிக்கு சுற்றுலா செல்லும் பலரது மனதிலும் நீங்கா இடம்பிடிப்பது மலை ரயில் தான். பலரையும் வசியப்படுத்தும் இந்த ரயில் நீலகிரியின் அழகை அனுபவிக்க விரும்புபவர்களின் கனவு வாகனமாக உள்ளது. ஆசியாவிலேயே பல் சக்கரங்களில் இயங்கும் ஒரே ரயில் நீலகிரி மலை ரயில் மட்டுமே. 16 குகைகள், 250 பாலங்கள் என வளைந்தும் நெளிந்தும் பயணிக்கும் இந்த மலை ரயிலின் அழகே தனி தான்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;1833-ம் ஆண்டுகளில் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு மாட்டுவண்டி மூலமே மக்கள் பயணித்தனர். பின்னர் 1872-ல் அந்த பயணம் குதிரை வண்டி மூலம் தொடர்ந்தது. அப்போது மதராசப்பட்டினத்தை ஆட்சி செய்த ஆங்கிலேயர்களுக்கு நீலகிரியின் இயற்கை அழகும், சிலிர்க்கும் குளிரும் மிகவும் பிடித்துப்போனதாம். இதனால் நீலகிரியை கோடை வாசஸ்தலமாக கொண்டாடத் தொடங்கினர்.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;அதன் பயனாக நீலகிரிக்கு ரயில் சேவையை தொடங்க திட்டமிட்ட ஆங்கிலேயர்கள், 1890-ம் ஆண்டு பல்சக்கரங்களால் ஆன தண்டவாளங்களை குன்னூர் வரை அமைத்தனர். அதில் நீராவியால் இயங்கும் ரயில் 1899-ல் தனது முதல் பயணத்தை தொடங்கியது. மேற்கு தொடர்ச்சி மலைகளின் அழகை ரசிக்க தூண்டும் இந்த மலைரயில், தற்போது மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை 46.61 கிலோ மீட்டர் தூரம் இயக்கப்பட்டு வருகிறது.&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படியுங்கள்...&amp;nbsp;&lt;strong&gt;Government Holiday: 9 நாட்கள் தொடர் விடுமுறை! பொதுமக்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை!&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;ஆங்கிலேயர் காலத்தில் நீராவி இஞ்சினை கொண்டு இயக்கப்பட்ட இந்த ரயில், பிற்காலத்தில் காலத்தின் தேவைக்கேற்ப பல்வேறு வசதிகளுடன் மாற்றங்கள் செய்யப்பட்டது. ஆனாலும் இந்த மலை ரயில் தனது மகிமையை எப்போதும் இழக்கவே இல்லை. செங்குத்தான மலைகளில் பயணம் செய்து, உலகின் எந்த பகுதிகளில் இருந்தும் வரும் அனைத்து சுற்றுலா பயணிகளையும் மகிழ்வித்து வரும் இந்த மலை ரயில், 125 ஆண்டுகளை கடந்து வெற்றிகரமாக இயக்கப்பட்டு வருகிறது.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;இந்தியாவிலேயே மிகவும் மெதுவாக செல்லக்கூடிய ரயிலும் இந்த நீலகிரி மலை ரயில் தான். இந்த மலை ரயில் வெறும் 9 கிலோ மீட்டர் வேகத்தில் தான் இயக்கப்படுகிறது. இதனால் மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை உள்ள 46 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க 5 மணிநேரம் ஆகிறது. அதேபோல் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு வெறும் 3 மணிநேரம் 30 நிமிடத்தில் வந்துவிடுகிறது.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;நீலகிரி மவுண்டெயின் எக்ஸ்பிரஸ் என அழைக்கப்படும் இந்த ரயில், மேட்டுப்பாளையத்தில் இருந்து கல்லார், குன்னூர், வெலிங்டன், வல்டேன் வழியாக ஊட்டியை வந்தடைகிறது. இந்த மலை ரயில் பாதை யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இப்படி பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த மலை ரயிலில் தான் உயிரே படத்தில் இடம்பெறும் தையா தையா பாடலை படமாக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படியுங்கள்...&amp;nbsp;&lt;strong&gt;மகாளய அமாவாசை, பிரம்மோத்ஸவம் சிறப்பு பேருந்துகள்! எங்கிருந்து இயக்கம்! இதோ முழு தகவல்&lt;/strong&gt;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-neelagiri</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/nilgiri-mountain-rail-is-the-slowest-train-in-india-gan-skejie"/>
        </item>
        <item>
            <title><![CDATA[தொடரும் கனமழை.. இன்று மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-neelagiri/nilgiri-district-collector-aruna-announced-holiday-to-gudalur-and-pandalur-today-due-to-rain-rya-sfxd84</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-neelagiri/nilgiri-district-collector-aruna-announced-holiday-to-gudalur-and-pandalur-today-due-to-rain-rya-sfxd84</guid>
            <pubDate>Mon, 01 Jul 2024 08:50:50 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், கூடலூர், பந்தலூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01hhvyb3s6xm1cegx9mkh9463k,imgname-asianet-news---2023-12-17t183815-070.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கடந்த 2 மாதங்களாகவே கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவானது. வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் திணறி வந்தனர். முன்னெப்போதும் இல்லாத வகையில் ஊட்டியில் கூட இந்த ஆண்டு 28 டிகிரி செல்சியல் வெயில் பதிவானது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவானது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இந்த சூழலில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கோடை மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து ஓரளவுக்கு மக்களுக்கு நிவாரணம் கிடைத்தது. இதனிடையே கேரளாவில் தென் மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்துவருகிறது. அந்த வகையில் நீலகிரி மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. கடந்த 29-ம் தேதி நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 278 மி.மீ அளவுக்கு மழை பெய்துள்ளது. இதனால் ஊட்டி மற்றும் பந்தலூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டு கடந்த சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இந்த இரண்டு மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்குப்போகுதாம் மழை.. சென்னையின் நிலை என்ன? வானிலை மையம் தகவல்!&lt;/p&gt; &lt;p&gt;நேற்றும் நீலகிரியில் கனமழை பெய்தது. குறிப்பாக பந்தலூரில் 70 மி.மீ அளவுக்கு கனமழை பெய்தது. இன்றும் நீலகிரியில் கனமழை தொடரும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதாவது மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் ஜூலை 6 வரை தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;Cylinder Price : குட் நியூஸ்.. சமையல் எரிவாயு விலை குறைந்தது..! எவ்வளவு தெரியுமா.?&lt;/p&gt; &lt;p&gt;அதே போல் நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் பனதலூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்று ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அவர் அறிவித்துள்ளார்.&amp;nbsp; &amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-neelagiri</category>
            <dc:creator>Ramya s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-neelagiri/nilgiri-district-collector-aruna-announced-holiday-to-gudalur-and-pandalur-today-due-to-rain-rya-sfxd84"/>
        </item>
        <item>
            <title><![CDATA[5 நாட்கள் ஊட்டி–குன்னூர் டூர்.! கம்மி விலையில் ஐஆர்சிடிசி புதிய பேக்கேஜ்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-neelagiri/irctc-introduces-affordable-ooty-coonoor-tour-package-check-price-and-details-h7pcgtb</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-neelagiri/irctc-introduces-affordable-ooty-coonoor-tour-package-check-price-and-details-h7pcgtb</guid>
            <pubDate>Tue, 10 Mar 2026 11:53:29 +0530</pubDate>
            <description><![CDATA[ஐஆர்சிடிசி குறைந்த செலவில் ஊட்டி மற்றும் குன்னூருக்கு 5 நாள் சுற்றுலா பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து தொடங்கும் இந்த பயணத்தில் தொட்டபெட்டா, முதுமலை சரணாலயம், ஊட்டி ஏரி போன்ற முக்கிய இடங்களை பட்ஜெட் விலையில் சுற்றிப் பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kkb5pfrr9ps21c0bw5dgaaxz,imgname-tamil-news---2026-03-10t112245.000-1773122830100.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[ஐஆர்சிடிசி குறைந்த செலவில் ஊட்டி மற்றும் குன்னூருக்கு 5 நாள் சுற்றுலா பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து தொடங்கும் இந்த பயணத்தில் தொட்டபெட்டா, முதுமலை சரணாலயம், ஊட்டி ஏரி போன்ற முக்கிய இடங்களை பட்ஜெட் விலையில் சுற்றிப் பார்க்கலாம்.&lt;img&gt;&lt;p&gt;குறைந்த செலவில் சுற்றுலா செல்ல விரும்புவோருக்காக இந்திய ரயில்வேயின் சுற்றுலா பிரிவு ஐஆர்சிடிசி (ஐஆர்சிடிசி) புதிய டூர் பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் புகழ்பெற்ற மலைவாசஸ்தலங்களான ஊட்டி மற்றும் குன்னூரை 5 நாட்களுக்கு சுற்றுலா செல்லும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. பட்ஜெட் விலையில் சுற்றுலா செல்ல விரும்பும் பயணிகளுக்கு இந்த பேக்கேஜ் சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த சுற்றுலா திட்டம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து தொடங்குகிறது. இரவு 9.05 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் காலை 6.20 மணிக்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தை அடையும். அங்கிருந்து சுற்றுலா பயணிகள் வாகனத்தின் மூலம் ஊட்டிக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். ஹோட்டலில் தங்கிய பின் மதியம் தொட்டபெட்டா சிகரம், தேயிலை அருங்காட்சியகம், தாவரவியல் பூங்கா மற்றும் ஊட்டி ஏரி போன்ற முக்கிய இடங்கள் பார்வையிடும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சுற்றுலாவின் அடுத்த நாளில் பைக்காரா நீர்வீழ்ச்சி, முதுமலை வனவிலங்கு சரணாலயம் மற்றும் முதுமலை யானை முகாம் போன்ற இயற்கை அழகான இடங்களுக்கு பயணம் மேற்கொள்ளப்படும். மேலும் காட்டு சவாரி அனுபவிக்கும் வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது. அதன் பின் சாலை மார்க்கமாக குன்னூருக்கு சென்று, அங்கு சிம்ஸ் பார்க், லாம்ப்ஸ் ராக் மற்றும் டால்பின்ஸ் நோஸ் போன்ற சுற்றுலா தலங்களை காண வாய்ப்பு உள்ளது. கிடைக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சுற்றுலா நிறைவடைந்த பிறகு, பயணிகள் மீண்டும் சாலை வழியாக மேட்டுப்பாளையம் கூட்டி செல்லப்படுவார்கள். அங்கிருந்து இரவு 8.20 மணிக்கு ரயிலில் பயணம் செய்து, மறுநாள் காலை 6.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் திரும்பிச் செல்வார்கள். இதன் மூலம் ஊட்டி மற்றும் குன்னூரின் முக்கிய சுற்றுலா தலங்களை சுலபமாக பார்க்கும் அனுபவம் கிடைக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த ஐஆர்சிடிசி சுற்றுலா பேக்கேஜில் ரயில் டிக்கெட், தங்கும் வசதி, உள்ளூர் போக்குவரத்து மற்றும் காலை உணவு உள்ளிட்ட சேவைகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் மதிய உணவு, இரவு உணவு மற்றும் சுற்றுலா தலங்களுக்கான நுழைவுக் கட்டணங்களை பயணிகள் தனியாக செலுத்த வேண்டும். இந்த பேக்கேஜின் கட்டணம் ஒருவருக்கு ரூ.22,630, இருவர் பகிர்ந்து சென்றால் ஒருவருக்கு ரூ.11,830 மற்றும் மூன்று பேர் சேர்ந்து சென்றால் ஒருவருக்கு ரூ.9,710 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பதிவை ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது மொபைல் செயலி மூலம் செய்யலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-neelagiri</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-neelagiri/irctc-introduces-affordable-ooty-coonoor-tour-package-check-price-and-details-h7pcgtb"/>
        </item>
        <item>
            <title><![CDATA[கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை! பள்ளிகளுக்கு விடுமுறை! மாணவர்களுக்கு குட் நியூஸ்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-neelagiri/red-alert-issued-in-the-nilgiris-district-for-tomorrow-and-schools-have-also-been-declared-holiday-ray-lwdhyge</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-neelagiri/red-alert-issued-in-the-nilgiris-district-for-tomorrow-and-schools-have-also-been-declared-holiday-ray-lwdhyge</guid>
            <pubDate>Fri, 13 Jun 2025 21:02:47 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;நீலகிரி மாவட்டத்தில் நாளை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்ட நிலையில், பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jdrw7r9wt8dxbbkry2k2h54b,imgname-gettyimages-1148218795-612x612.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;நீலகிரி மாவட்டத்தில் நாளை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்ட நிலையில், பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக வெயில் கடுமையாக வாட்டியது. சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், நெல்லை என அனைத்து இடங்களிலும் வெயில் வாட்டி வதைத்தது. வெயில் எப்போது ஓயும் என மக்கள் எதிர்பார்த்த நிலையில் தென்மேற்கு பருவமழை காரணமாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை கொட்டியது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கோவை, தென்காசி மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. நீலகிரி மாவட்டத்தில் விடாமல் கொட்டிய கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. அங்குள்ள சுற்றுலாத்தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. தொடர் கனமழை காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் மழை ஓய்ந்து மீண்டும் பல இடங்களில் வெயில் கொளுத்தி எடுத்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தென் மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமாகியுள்ளது. குறிப்பாக தென்காசி, நெல்லை, தேனி, கோவை, நீலகிரி என மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களி நல்ல மழை பெய்து வருகிறது. நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான ‛ஆரஞ்ச் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை (ஜூன் 14) மற்றும் நாளை மறுநாள் (ஜூன் 15) என்று 2 நாட்கள் நீலகிரி மாவட்டத்துக்கு அதி கனமழைக்கான ‛ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;தேசிய பேரிடர் மீட்பு படையினர்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்த இரண்டு நாட்களும் நீலகிரியில் பலத்த மழை கொட்டித் தீர்க்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்றுள்ளனர். ஆற்றோரம் உள்ள மக்கள், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தங்க வைக்கப்பட்டுள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேலும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் நீலகிரி மாவட்டத்தில் நாளை (ஜூன் 14) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை சனிக்கிழமை என்பதால் அரசு பள்ளிகளுக்கு ஏற்கெனவே விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;ஆகையால் தனியார் பள்ளிகளும் நாளை விடுமுறை விட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அரசின் உத்தரவை மீறி பள்ளிகளை திறப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-neelagiri</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-neelagiri/red-alert-issued-in-the-nilgiris-district-for-tomorrow-and-schools-have-also-been-declared-holiday-ray-lwdhyge"/>
        </item>
        <item>
            <title><![CDATA[சூரியன் ஒருபோதும் உதிக்காத கிராமம்.. நம்ம தமிழ்நாட்டில் இப்படியொரு இடமா..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-neelagiri/kinnakorai-village-where-the-sun-never-rises-truth-revealed-rag-n3p85yp</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-neelagiri/kinnakorai-village-where-the-sun-never-rises-truth-revealed-rag-n3p85yp</guid>
            <pubDate>Wed, 21 May 2025 16:07:11 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;நீலகிரியில் அமைந்துள்ள கிண்ணக்கொரை கிராமம், &quot;சூரியன் உதிக்காத கிராமம்&quot; என்று அழைக்கப்படுகிறது. அடர்ந்த மேகங்கள் மற்றும் மூடுபனி காரணமாக இந்தப் பெயர் பெற்றுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jvs69zjvprat95rmbygacn2z,imgname-tamil-news---2025-05-21t145603.018-1747823427161.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;நீலகிரியில் அமைந்துள்ள கிண்ணக்கொரை கிராமம், &quot;சூரியன் உதிக்காத கிராமம்&quot; என்று அழைக்கப்படுகிறது. அடர்ந்த மேகங்கள் மற்றும் மூடுபனி காரணமாக இந்தப் பெயர் பெற்றுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள கிண்ணக்கொரை என்ற தொலைதூர கிராமம் சமீபத்தில் சமூக ஊடகங்களில் &quot;சூரியன் ஒருபோதும் உதிக்காத கிராமம்&quot; என்று வைரலாகி வருகிறது. அடர்ந்த மேகங்கள் மற்றும் மூடுபனி காரணமாக இந்தப் பகுதி தொடர்ந்து இருளில் இருப்பதாக கூறுகிறார்கள். அது உண்மையா, அப்படியென்றால் அதற்கான காரணம் என்ன? என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேற்குத் தொடர்ச்சி மலைகளின் உயரத்தில் அமைந்துள்ள கிண்ணக்கொரை, ஆண்டின் பெரும்பகுதிக்கு குளிர் மற்றும் மேகமூட்டமான காலநிலையை அனுபவிக்கிறது. அடிக்கடி மூடுபனி, அடர்த்தியான மூடுபனி மற்றும் தொடர்ச்சியான மேகமூட்டம் கிராமத்திற்கு ஒரு மாய தோற்றத்தை அளிக்கிறது மற்றும் நேரடி சூரிய ஒளியின் அளவைக் குறைக்கிறது. ஆனால் பலரும் சூரியன் அங்கு ஒருபோதும் தோன்றாது என்று கூறி வருகிறார்கள். இது தவறான விஷயம் ஆகும். இருப்பினும், தெளிவான நாட்கள் மற்றும் சில மாதங்களில், கிராமம் சூரிய ஒளியைக் காண்கிறது. அதுவும் சமவெளிகளுடன் ஒப்பிடும்போது குறைவாகவே.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கிண்ணக்கொரை குந்தா தாலுகாவில் அமைந்துள்ளது. வரலாற்று ரீதியாக அதன் காபி தோட்டங்களுக்கு பெயர் பெற்றது. காலப்போக்கில், நீலகிரியில் பரந்த விவசாய மாற்றங்களுக்கு ஏற்ப தேயிலை சாகுபடி அதிக ஆதிக்கம் செலுத்தியது. வளமான மண், அதிக ஈரப்பதம் மற்றும் ஏராளமான மழைப்பொழிவு தேயிலை தோட்டங்கள் மற்றும் மசாலா விவசாயத்திற்கு ஏற்ற சூழ்நிலைகளை உருவாக்குகின்றன. அளவில் சிறியதாக இருந்தாலும், இந்த கிராமம் இப்பகுதியின் சுற்றுச்சூழல் நட்பு மற்றும் நிலையான விவசாய நிலப்பரப்பில் ஒரு பங்கை வகிக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நீலகிரி மாவட்டம் 900 முதல் 2600 மீட்டர் வரை உயரத்தைக் கொண்டுள்ளது, கிண்ணக்கொரை மலை உச்சி கிராமங்களில் ஒன்றாகும். இந்தப் பகுதி தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைகளிலிருந்து மழையைப் பெறுகிறது, ஆண்டுக்கு 950 முதல் 1550 மிமீ வரை மழை பெய்யும். இந்த நிலையான ஈரப்பதம் மற்றும் குளிரான வெப்பநிலை ஆண்டு முழுவதும் மேகமூட்டமான மற்றும் மூடுபனி நிறைந்த சூழலை பராமரிக்கிறது - இது &quot;சூரிய ஒளி இல்லாத&quot; கிராமம் என்ற கட்டுக்கதைக்கு தூண்டுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கிண்ணக்கொரையில் சூரியன் ஒருபோதும் உதிப்பதில்லை என்று சொல்வது தவறானது என்றாலும், கிராமத்தின் தனித்துவமான காலநிலை நிலைமைகள் அதை எப்போதும் மூடுபனியுடன் காட்சிப்படுத்துகின்றன. இருளை விட, அமைதியான, மூடுபனி நிறைந்த வளிமண்டலமும் குளிர்ந்த காற்றும்தான் இங்கு வாழ்க்கையை வரையறுக்கின்றன என்றே கூறலாம். கிண்ணக்கொரை நீலகிரியின் மறைக்கப்பட்ட ரத்தினங்களில் ஒன்றாக உள்ளது - அமைதியான, இயற்கை எழில் கொஞ்சும், இயற்கையின் மர்மமான வசீகரத்தால் மூடப்பட்டிருக்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-neelagiri</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-neelagiri/kinnakorai-village-where-the-sun-never-rises-truth-revealed-rag-n3p85yp"/>
        </item>
        <item>
            <title><![CDATA[School Holiday: விடாமல் போட்டு தாக்கும் கனமழை.. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. எந்த மாவட்டம் தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/nilgiris-district-continued-heavy-rains-schools-holiday-tvk-sh7lwp</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/nilgiris-district-continued-heavy-rains-schools-holiday-tvk-sh7lwp</guid>
            <pubDate>Fri, 26 Jul 2024 08:07:52 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குந்தா வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01hhvyb33tar03592zztj1b95t,imgname-asianet-news---2023-12-17t183755-361.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குந்தா வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 - 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். &amp;nbsp;நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்திருந்தது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;அதன்படி நீலகிரி மாவட்டங்களில் காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&lt;strong&gt;Power Shutdown in Chennai: சென்னையில் இன்று முக்கிய இடங்களில் மின்தடை.. இதோ பெரிய லிஸ்ட்!&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில் தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை மற்றும் குந்தா ஆகிய தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா அறிவித்துள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-neelagiri</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/nilgiris-district-continued-heavy-rains-schools-holiday-tvk-sh7lwp"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Master Mathan: நீலகிரி முன்னாள் எம்.பி. மாஸ்டர் மதன் காரமானார்; பிரதமர் மோடி இரங்கல்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-coimbatore/bjp-former-mp-master-mathan-passed-away-in-coimbatore-vel-sha0fi</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-coimbatore/bjp-former-mp-master-mathan-passed-away-in-coimbatore-vel-sha0fi</guid>
            <pubDate>Sat, 27 Jul 2024 15:15:18 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;நீலகிரி தொகுதியின் பாஜக முன்னாள் எம்.பி. மாஸ்டர் மதன் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு பாஜக நிர்வாகிகள் மதியாதை செலுத்தி வருகின்றனர்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j3ss6hwgaq761n6zsxm5srae,imgname-mixcollage-27-jul-2024-03-13-pm-6807.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பிரஸ் காலனி பாலாஜி கார்டனில் வசித்து வந்தவர் மாஸ்டர் மதன்(வயது93). இவர் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் 1998 மற்றும் 1999 என இரண்டு முறை வெற்றி பெற்று உறுப்பினராக பொறுப்பு வகித்துள்ளார்.&lt;/p&gt; &lt;p&gt;வீட்ல ஒத்த ரூபா கூட இல்ல, வந்ததுக்கு நானே 20 ரூபா வச்சிட்டு போறேன்; திருடனின் செயல் இணையத்தில் வைரல்&lt;/p&gt; &lt;p&gt;வயது முதிவுர் காரணமாக கடந்த சில காலங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்று வந்த மாஸ்டர் மதன் நேற்று இரவு 11.10 மணியளவில் கலமானார். அவரது இறப்பு செய்தி கேட்டு கோவை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பாஜக உறுப்பினர்கள் அவரது வீட்டிற்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.&lt;/p&gt; &lt;p&gt;100 அடியை எட்டிய மேட்டூர் அணை! சீறி பாய்ந்து வரும் ஒரு லட்சம் கனஅடி நீர்! எப்போது முழு கொள்ளளவை எட்டும்?&lt;/p&gt; &lt;p&gt;இதனிடையே மாஸ்டர் மதன் மறைவு குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், &ldquo;முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு மாஸ்டர் மதன் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. அவர் தமது சமூக சேவை முயற்சிகளுக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைத்ததற்காகவும் என்றென்றும் நினைவுகூறப்படுவார். தமிழகத்தில் எங்கள் கட்சியை வலுப்படுத்தவும் அவர் அரும்பாடு பட்டார். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் &amp;nbsp;எனது ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி&rdquo; என்று குறிப்பிட்டுள்ளார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-neelagiri</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-coimbatore/bjp-former-mp-master-mathan-passed-away-in-coimbatore-vel-sha0fi"/>
        </item>
        <item>
            <title><![CDATA[School Holiday: மாணவர்களின் கவனத்திற்கு..! பள்ளிகளுக்கு நாளை விடுமுறை! அரசு அறிவிப்பு!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-neelagiri/schools-holiday-in-nilgiris-tomorrow-due-to-red-alert-for-heavy-rain-ua7n5si</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-neelagiri/schools-holiday-in-nilgiris-tomorrow-due-to-red-alert-for-heavy-rain-ua7n5si</guid>
            <pubDate>Mon, 04 Aug 2025 21:34:24 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;நீலகிரி மாவட்டத்தில் நாளை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. அங்குள்ள சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01hjsrfbymmgn16epcpfd03xwx,imgname-school-holidays-1703819063251.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;நீலகிரி மாவட்டத்தில் நாளை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. அங்குள்ள சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்காசி, தேனி, கோவை மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. அதே வேளையில் நீலகிரி மாவட்டத்தில் கனமழை கொட்டி வருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில், நீலகிரி மாவடத்தில் நாளை (ஆகஸ்ட் 5) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மிக அதிகமான கனமழை பெய்யும் என்பதால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளன. மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேலும் நீலகிரி மாவட்டத்துக்கு தேசிய மீட்பு படையினரும் விரைந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் மழை, பேரிடர் பாதிப்புகள் குறித்து 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி, 0423-2450034, 24500335 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். 9488700588 என்ற வாட்ஸ் அப் எண்ணில் பாதிப்பு குறித்து தெரிவிக்கலாம். கோட்ட வாரியாக ஊட்டி 0423-244 5577, குன்னூர் 220 6002. ஊட்டி 244 2433 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெவித்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நாளை நீலகிரி மட்டுமின்றி கோவையிலும் அதி கனம்ழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது. நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திண்டுக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-neelagiri</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-neelagiri/schools-holiday-in-nilgiris-tomorrow-due-to-red-alert-for-heavy-rain-ua7n5si"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Road Accident: நீலகிரி எஸ்.பி. மனைவி வந்த கார் மோதி இளைஞர் பலி, மேலும் ஒருவர் கவலைக்கிடம்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-neelagiri/young-man-killed-road-accident-and-one-person-highly-injured-in-nilgiris-vel-sgcapz</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-neelagiri/young-man-killed-road-accident-and-one-person-highly-injured-in-nilgiris-vel-sgcapz</guid>
            <pubDate>Tue, 09 Jul 2024 10:19:10 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;நீலகிரியில் காவல் எஸ்.பி.யின் மனைவி வந்த கார் மோதிய விபத்தில் படுகாயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j2ax43wjc1rywq4qhd2ammw2,imgname-accident.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அல்தாஃப் மற்றும் ஜுனைத் ஆகிய இரண்டு வாலிபர்கள் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரிக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் மேட்டுப்பாளையம், குன்னூர் சாலையில் சென்று கொண்டு இருந்தனர். கல்லார் அருகே சென்ற போது எதிரே நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேலின் மனைவி வந்த கார் எதிர் திசையில் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.&lt;/p&gt; &lt;p&gt;வெறும் வாக்குக்கு மட்டும் தான் சமூக நீதியா? ஆம்ஸ்ட்ராங் கொலையை சுட்டிக்காட்டி திமுக அரசை விளாசும் பா.ரஞ்சித்!&lt;/p&gt; &lt;p&gt;இந்த விபத்தில் இருசக்கர வாகனம் சேதமடைந்ததுடன் அதில் பயணித்த அல்தாப் மற்றும் ஜுனைத் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். மேலும் விபத்துக்குள்ளான இருசக்கர வாகனமும் தீ பற்றி எரிந்தது. நீலகிரி காவல் கண்காணிப்பாளர் மனைவி வந்த காரும் சேதம் அடைந்தது.&lt;/p&gt; &lt;p&gt;OPS: நீச்சல் குளத்தை உடனே சுத்தம் செய்யுங்க; அமீபா தொற்றால் 97% உயிரிழப்பு ஏற்படுமாம்; அலர்ட் செய்யும் ஓபிஎஸ்!&lt;/p&gt; &lt;p&gt;இதனை அடுத்து காயம் அடைந்த இரண்டு வாலிபர்களையும் மீட்டு சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சுக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அல்தாஃப் என்ற இளைஞர் உயிரிழந்தார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;மேலும் ஜூனைத்ம் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து மேட்டுப்பாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-neelagiri</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-neelagiri/young-man-killed-road-accident-and-one-person-highly-injured-in-nilgiris-vel-sgcapz"/>
        </item>
    </channel>
</rss>
