<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes"?>
<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Tue, 20 Jan 2026 15:43:12 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss/tamilnadu-madurai" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[தூங்கா நகரில் கால் வைத்த தோனி! 'தல.. தல..' ரசிகர்கள் கோஷத்தால் குலுங்கிய மதுரை! வீடியோ!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/sports-cricket/dhoni-arrives-in-madurai-to-inaugurate-grand-cricket-stadium-fans-chant-thala-articleshow-0n2gftz</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/sports-cricket/dhoni-arrives-in-madurai-to-inaugurate-grand-cricket-stadium-fans-chant-thala-articleshow-0n2gftz</guid>
            <pubDate>Thu, 09 Oct 2025 15:26:30 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;MS Dhoni Arrives In Madurai: பிரம்மாண்ட கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைக்க மகேந்திர சிங் தோனி மதுரை வந்தார். அவருக்கு ரசிகர்கள் உற்சாகமான வரவேற்பு கொடுத்தனர்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k0py1pbpn8j7zktd2y2bv3nq,imgname-gettyimages-1348504658-1753116367222.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழ்நாட்டின் கோயில் நகரம், தூங்கா நகரம் என்று அழைக்கப்படுவது மதுரை. பல்வேறு பெருமைகளுக்கு சொந்தமான மதுரையில் சென்னைக்கு அடுத்தப்படியாக மிக பிரம்மாண்டமான கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப்பட்டுள்ளது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் உதவியுடன் வேலம்மாள் கல்வி அறக்கட்டளை ரூ.350 கோடியில் கிரிக்கெட் மைதானத்தை அமைந்துள்ளது.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;மதுரையில் பிரம்மாண்ட கிரிக்கெட் ஸ்டேடியம்&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;மதுரை சிந்தாமணி ரிங் ரோடு பகுதியில் வேலம்மாள் மருத்துவமனைக்கு அருகே 11.5 ஏக்கர் நிலத்தில் இந்த பிரம்மாண்டமான கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கபப்பட்டுள்ளது. இந்த மைதானத்தை இந்திய முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இன்று மாலை திறந்து வைக்க உள்ளார். இதற்காக கூல் கேப்டன் தோனி மும்பையில் இருந்து இன்று மதியம் மதுரை வந்தார்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;#WATCH | Tamil Nadu | Former Indian skipper and Chennai Super Kings (CSK) icon, Mahendra Singh Dhoni, arrives in Madurai. He will inaugurate a newly constructed international-standard cricket stadium, which has been developed by the Velammal Educational Trust with the support of&hellip; pic.twitter.com/HL5tqDwWJd&lt;/p&gt;&lt;p&gt;&mdash; ANI (@ANI) October 9, 2025&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;h3&gt;&lt;strong&gt;தோனியை உற்சாகமாக வரவேற்ற ரசிகர்கள்&lt;/strong&gt;&lt;/h3&gt;&lt;p&gt;தோனி முன்கூட்டியே வருவார் என தகவல் வெளியாகி இருந்ததால் அவரை காண்பதற்காக மதுரை விமான நிலையத்துக்கு வெளியே ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர். விமானத்தை விட்டு இறங்கி தோனி காரில் ஏற சென்றபோது அங்கு திரண்டிருந்த ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். தல..தல.. என்று கூறி அவர்கள் ஆரவாரமிட்டனர். தோனி அவர்களுக்கு கை காண்பித்து விட்டு காரில் ஏறி சென்றார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-madurai</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/sports-cricket/dhoni-arrives-in-madurai-to-inaugurate-grand-cricket-stadium-fans-chant-thala-articleshow-0n2gftz"/>
        </item>
        <item>
            <title><![CDATA[நிக்காம ரத்தமா போகுது.. என்னை காப்பாத்துங்கப்பா! வெங்காரம் சாப்பிட்ட கல்லூரி மாணவியின் கடைசி நிமிடக் கதறல்!  நடந்தது என்ன?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-madurai/madurai-college-student-dies-after-following-unverified-youtube-health-advice-0o1q1ow</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-madurai/madurai-college-student-dies-after-following-unverified-youtube-health-advice-0o1q1ow</guid>
            <pubDate>Tue, 20 Jan 2026 09:56:14 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;College Student: மதுரை கல்லூரி மாணவி ஒருவர், உடல் எடையைக் குறைக்க யூடியூப் வீடியோவில் பார்த்தபடி வெங்காரத்தை உட்கொண்டுள்ளார். இதனால் ஏற்பட்ட வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kfct2npm0jv4qwbxtemwmffc,imgname-madurai-1-1768882788052.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;College Student: மதுரை கல்லூரி மாணவி ஒருவர், உடல் எடையைக் குறைக்க யூடியூப் வீடியோவில் பார்த்தபடி வெங்காரத்தை உட்கொண்டுள்ளார். இதனால் ஏற்பட்ட வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மதுரை மாநகர் செல்லூர் மீனாம்பாள்புரம் காமராஜர் குறுக்குத்தெரு பகுதியை சேர்ந்த வேல்முருகன் (51). இவரது மகள் கலையரசி(19). பிரபல தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். கலையரசி உடல் பருமனாக இருந்துள்ளார். இதனை குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் குறைக்க முடியவில்லை. இந்நிலையில் கடந்த வாரம் கல்லூரி மாணவி கலையரசி இணைவோம் இயற்கையுடன் என்ற YOUTUBE பக்கத்தில் உடல் எடை குறையாதவர்களுக்கு வெங்காரம் சாப்பிட்டால் குறையும் என தெரிவித்திருந்தார். இதனை நம்பி கல்லூரி மாணவி கடந்த 16ம் தேதியன்று நாட்டு மருந்து கடையில் வெங்காரம் வாங்கி வந்து மறுநாள் சனிக்கிழமை அன்று சாப்பிட்டுள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சாப்பிட்ட சிறிது நேரத்தில் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. பின்னர் பெற்றோர் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்குச் அழைத்து சென்று சிகிச்சையளித்துள்ளனர். பின்னர் மாலையில் வீடு திரும்பிய நிலையில் கலையரசிக்கு மீண்டும் வாந்தி வயிற்றுபோக்கு ஏற்பட்டதால் வீட்டின் அருகிலுள்ள மற்றொரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வீட்டிற்கு வந்த கலையரசி தனக்கு அதிகமாக வயிறு வலிப்பதாகவும் வயிற்றுபோக்கில் ரத்தம் வெளியேறி வருவதாகவும் கூறி தனது தந்தையிடம் கதறி அழுதுள்ளார். ஆனாலும் மீண்டும் கலையரசிக்கு இரவு 11 மணியளவில் ரத்தத்துடன் வயிற்றுபோக்கு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு கலையரசியை அழைத்து சென்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கலையரசி வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கலையரசி உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வெங்காரம் (Borax/ Borate) என்பது சோடியம் டெட்ராபோரேட் (Sodium Tetraborate) வெள்ளை நிறத்தில், கற்கண்டு போன்ற வடிவத்தில் இருக்கும் ஒரு கனிம உப்பு. இது துவர்ப்பு சுவையுடையது, சோடியம் போரேட் என வேதியியல் ரீதியாக அழைக்கப்படுகிறது. இது தங்கம் உருக்கவும், சில குறிப்பிட்ட மருத்துவ முறைகளில் சுத்திகரிக்கப்பட்ட பின்பே மிகக் குறைந்த அளவில் பயன்படுத்தப்படுவதாகும். ஆனால், அதனைப் பற்றிய புரிதல் இன்றி வாங்கிச் சாப்பிட்டதே மாணவியின் உயிரிழப்புக்கு காரணம் என கூறப்படுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-madurai</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-madurai/madurai-college-student-dies-after-following-unverified-youtube-health-advice-0o1q1ow"/>
        </item>
        <item>
            <title><![CDATA[தவெக 100 அடி கொடிக்கம்பம் விழுந்து விபத்து! சுக்கு நூறாக நொறுங்கிய கார்! மதுரை மாநாட்டில் பரபரப்பு!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-madurai/madurai-tvk-conference-100-foot-flagpole-falls-on-car-articleshow-7z1zdil</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-madurai/madurai-tvk-conference-100-foot-flagpole-falls-on-car-articleshow-7z1zdil</guid>
            <pubDate>Wed, 20 Aug 2025 14:53:23 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;மதுரை தவெக மாநாட்டில் 100 அடி உயர கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்து கார் நொறுங்கியுள்ளது. இது தவெகவினர் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k33bst47wcnev69xh50zngps,imgname-tvk-flag-hole-1755680925831.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;100 Feet High Flagpole Falls At Madurai TVK Conference: தவெகவின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமாக நடந்தது. இந்நிலையில், தவெகவின் 2வது மாநில மாநாடு மதுரையில் நாளை (ஆகஸ்ட் 21) நடைபெற உள்ளது. மதுரை-தூத்​துக்​குடி சாலை​யில் உள்ள பாரப்பத்​தி​யில் மிக பிரம்மாண்டமாக தவெக மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக சுமார் 500 ஏக்​கர் பரப்​பள​வில் இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு எல்​இடி திரைகளு​டன் கூடிய டிஜிட்​டல் வடிவி​லான பெரிய மேடை அமைக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;தவெக மதுரை மாநாடு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;மேலும் பார்​வை​யாளர் கேலரி​கள், வாகன பார்க்கிங், தற்​காலிக கழிப்​பறை, குடிநீர் வசதிகள், மருத்துவ முகாம்கள், உணவுப்பொருட்களை விற்கும் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தவெக தலைவர் விஜய்யின் புகைப்படம், தவெக கொள்கை தலைவர்களாக காமராஜர், பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் புகைப்படங்கள், தவெக கொடி கட்சிகள், அலங்கார மின் விளக்குகள், தோரணங்கள் என மாநாடு களைகட்டியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;தவெக 100 அடி கொடிக்கம்பம் விழுந்து விபத்து&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;மாநாட்டு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மாநாட்டு திடலில் இன்று 100 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கும் பணி நடந்தது. 100 அடி உயர கொடிக்கம்பத்தை ஜேசிபி எந்திரம் மூலம் தூக்கி நிறுத்தும் பணி நடந்தது. அப்போது திடீரென அந்த 100 அடி உயர கொடிக் கம்பம் திடீரென சாய்ந்து விழுந்தது. இதைப்பார்த்ததும் தவெகவினர் அங்கு இருந்து தெறித்து ஓடினார்கள். அதிவேகமாக சாய்ந்த அந்த பிரம்மாண்டமான கொடிக்கம்பம் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த காரின் மீது விழுந்தது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சுக்கு நூறாக நொறுங்கிய கார்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இதில் அந்த கார் கண்ணாடிகள் உடைந்து சுக்கு நூறாக நொறுங்கியது. நல்ல வேளையாக அந்த காரில் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. அதே வேளையில் கொடிக்கம்பம் விழுந்த காரின் பக்கத்தில் நின்ற மற்றொரு காரில் 4 பேர் உள்ளே இருந்தனர். அந்த காரில் கொடிக்கம்பம் விழுந்து இருந்தால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டு இருக்கும். மேலும் கொடிக்கம்பம் சாய்வதை பார்த்த தவெக கட்சியினர் தெறித்து ஓடி விட்டதால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;விபத்துக்கு காரணம் என்ன?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;அதிக எடையுள்ள 100 அடி உயர கொடிக்கம்பத்தை எந்த வித பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் இல்லாமல் தூக்கி நிறுத்திய நிலையில் விபத்து நடந்துள்ளது. கொடிக்கம்பத்தை துக்கி நிறுத்திய கிரேனின் பெல்ட் அறுந்ததால் விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. விபத்து நடந்தவுடன் போலீசார் உடனடியாக விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். ஏற்கெனவே தவெக பேனர் வைக்கும்போது கல்லூரி மாணவர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில், இப்போது தவெக கொடிக்கம்பமும் விழுந்துள்ளது அக்கட்சியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-madurai</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-madurai/madurai-tvk-conference-100-foot-flagpole-falls-on-car-articleshow-7z1zdil"/>
        </item>
        <item>
            <title><![CDATA[மதுரையில் ரூ.150 கோடி சொத்து வரி முறைகேடு! மாநகராட்சி உதவி ஆணையரை தட்டித் தூக்கிய போலீஸ்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-madurai/assistant-commissioner-arrested-in-madurai-rs150-crore-property-tax-scam-articleshow-84mkgng</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-madurai/assistant-commissioner-arrested-in-madurai-rs150-crore-property-tax-scam-articleshow-84mkgng</guid>
            <pubDate>Tue, 12 Aug 2025 19:01:44 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;மதுரையில் ரூ.150 கோடி சொத்து வரி முறைகேடு வழக்கில் தூத்துக்குடி மாநகராட்சி உதவி ஆணையர் கைது செய்யப்பட்டுள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k2f7mn1tzrdr433ad514146y,imgname-untitled-design-1755005473850.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Tuticorin Assistant Commissioner Arrested For in rs150 crore property tax scam: மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடி சொத்து வரி முறைகேடு நடந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த மெகா முறைகேடு, கடந்த 2022 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது மாநகராட்சியின் சில மண்டலங்களில் உள்ள பெரிய வணிக வளாகங்கள் மற்றும் கட்டடங்களுக்கு சொத்து வரியை குறைத்து நிர்ணயம் செய்ததன் மூலம் மாநகராட்சிக்கு ரூ.150 கோடிக்கும் மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;மதுரையில் ரூ.150 கோடி சொத்து வரி முறைகேடு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்த வழக்கில் இதுவரை ஓய்வுபெற்ற உதவி ஆணையர் ரங்கராஜன், உதவி வருவாய் அலுவலர் செந்தில்குமரன், மற்றும் சொத்து வரி விதிப்பு குழு தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன் உள்பட மொத்தம் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தவுடன் முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்பேரில் மதுரை மாநகராட்சியின் திமுகவை சேர்ந்த ஐந்து மண்டல தலைவர்கள் இரு நிலைக்குழு தலைவர்கள் ஆகியோர் பதவியில் இருந்து விலகினார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;தூத்துக்குடி மாநகராட்சி உதவி ஆணையர் கைது&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்த முறைகேடு வழக்கை நீதிமன்ற உத்தரவின்படி டி.ஐ.ஜி. அபினவ் குமார் தலைமையில் ஒரு சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணை குழு, பல மாநகராட்சி ஊழியர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் இடைத்தரகர்களிடம் விசாரணை நடத்தியுள்ளது. இந்நிலையில், ம்துரை சொத்து வரி முறைகேடு வழக்கில் தூத்துக்குடி மாநகராட்சியில் உதவி ஆணையராக பணியாற்றி வந்த சுரேஷ்குமார் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று கைது செய்தனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சுரேஷ்குமார் எப்படி சிக்கினார்?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;சுரேஷ்குமார் முறைகேடு நடந்த காலகட்டத்தில் மதுரையில் பணிபுரிந்ததும் சொத்து வரி விதிப்பு குழு தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன் அளித்த தகவலின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது. தூத்துக்குடியில் கைது செய்யப்பட்ட சுரேஷ்குமாரை மதுரை அழைத்து முழுமையாக விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்த முறைகேடு வழக்கில் அடுத்தடுத்து முக்கிய அதிகாரிகள் கைதாகி வருவது பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;திமுக அரசின் நிர்வாக லட்சணம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இதுதான் திமுக அரசின் நிர்வாக லட்சணம் என்று அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ஆகியோர் தெரிவித்துள்ளார். நேர்மையான முறையில் விசாரணை நடக்க இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-madurai</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-madurai/assistant-commissioner-arrested-in-madurai-rs150-crore-property-tax-scam-articleshow-84mkgng"/>
        </item>
        <item>
            <title><![CDATA[வேலை தேடுபவரா நீங்கள்? இந்த 10 நகரங்கள் தான் இந்தியாவின் அடுத்த பவர்ஹவுஸ்.. ஒரு லிஸ்ட்!"]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/career/top-10-emerging-cities-for-jobs-in-india-84rgtls</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/career/top-10-emerging-cities-for-jobs-in-india-84rgtls</guid>
            <pubDate>Mon, 21 Jul 2025 08:30:34 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;வேலை தேடுவோருக்கு லிங்க்ட்இன் வெளியிட்ட இந்தியாவின் டாப் 10 வளர்ந்து வரும் நகரங்கள் பட்டியல்! விசாகப்பட்டினம், மதுரை போன்ற புதிய மையங்களில் உள்ள வேலை வாய்ப்புகளைக் கண்டறியுங்கள்&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jy3vg3h4ksc01axega9qha08,imgname-job-1750328675876.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;வேலை தேடுவோருக்கு லிங்க்ட்இன் வெளியிட்ட இந்தியாவின் டாப் 10 வளர்ந்து வரும் நகரங்கள் பட்டியல்! விசாகப்பட்டினம், மதுரை போன்ற புதிய மையங்களில் உள்ள வேலை வாய்ப்புகளைக் கண்டறியுங்கள்&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவின் தொழில் நிலப்பரப்பு வேகமாக மாறி வருகிறது. ஒரு காலத்தில் பெரிய மெட்ரோ நகரங்களால் மட்டுமே ஆதிக்கம் செலுத்தப்பட்ட நிலையில், இப்போது புதிய நகர்ப்புற மையங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உட்கட்டமைப்பு மேம்பாடு, விரிவடைந்து வரும் தொழில்கள் மற்றும் திறமையான நிபுணர்களின் நிலையான வருகை ஆகியவற்றால் உந்தப்பட்டு, இந்தியாவின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்கள் வேலைவாய்ப்பு, புதுமை மற்றும் வளர்ச்சிக்கான துடிப்பான மையங்களாக உருவாகி வருகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&amp;nbsp;தனது &quot;இந்தியாவில் வளர்ந்து வரும் நகரங்கள்&quot; (Cities on the Rise in India) என்ற முதல் பட்டியலில், வேலை தேடுவோருக்கு சிறந்த இடங்களாக உருவாகி வரும் முதல் பத்து நகரங்களை அறிவித்துள்ளது. இப்போது எந்தெந்த நகரங்கள் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன என்பதைப் பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முதல் பத்து நகரங்களின் பட்டியலில் விசாகப்பட்டினம் முதலிடத்தில் உள்ளது. இது ஒரு முக்கிய தொழிற்துறை மற்றும் வேலைவாய்ப்பு மையமாக உள்ளது. அறிக்கை குறிப்பிடுவதன்படி, நகரத்தில் பல்வேறு தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் மற்றும் மருந்துத் தொழில் பெருகி, அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. அரசாங்கம் உட்கட்டமைப்பு மேம்பாட்டில் கவனம் செலுத்துவதும் இந்த மாற்றத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று அறிக்கை கூறுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பட்டியலில் இரண்டாவதாக ராஞ்சி உள்ளது. அதன் விருந்தோம்பல் முயற்சிகள், புதிய சில்லறை விற்பனை நிலையங்கள், ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் மற்றும் மேம்பட்ட இணைப்பு ஆகியவை ஜார்க்கண்டின் தலைநகரை தொழில் வல்லுநர்களுக்கு ஒரு விரும்பத்தக்க இடமாக மாற்றியுள்ளன என்று அறிக்கை வெளிப்படுத்துகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கலாச்சார தளங்களுக்குப் பெயர் பெற்ற விஜயவாடா, அதிக ஐ.டி. நிறுவனங்கள் அமைப்பதன் மூலமும், மெட்ரோ மற்றும் விமான நிலைய விரிவாக்கத் திட்டங்கள் மூலமும் முதலீடுகளை ஈர்த்து வருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மகாராஷ்டிராவில் அமைந்துள்ள நாசிக், அதன் பொருளாதாரப் பரப்பை விரிவுபடுத்தி வருகிறது. இந்த நகரம் பெருகி வரும் தரவு மற்றும் ஐ.டி. நிறுவனங்களை ஈர்த்து, ஒரு தொழில்நுட்ப நட்பு இடமாக உருவாகி வருவதை உணர்த்துகிறது. டிஜிட்டல் வருகையுடன், நாசிக்கின் ஆட்டோமொபைல் மற்றும் பாதுகாப்பு உற்பத்தித் துறைகள் ரியல் எஸ்டேட் வளர்ச்சியில் ஒரு எழுச்சியைத் தூண்டுகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒரு வளர்ந்து வரும் தொழில்நுட்ப சக்தி மையமாக நிலைநிறுத்தப்பட்டுள்ள ராய்ப்பூர், செமிகண்டக்டர்கள், AI உள்கட்டமைப்பு மற்றும் மருந்துகள் போன்ற துறைகளில் தொழிற்துறை ஆர்வத்தில் ஒரு எழுச்சியை அனுபவித்து வருகிறது என்று அறிக்கை குறிப்பிடுகிறது. மேலும், நயா ராய்ப்பூர் போன்ற திட்டங்கள் உட்கட்டமைப்பு முதலீடுகளுக்கு ஒரு ஊக்கியாக செயல்படுகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தொழில்முனைவோர் ஆற்றலையும் புதுமையான நகர்ப்புற வடிவமைப்பையும் இணைத்து, ராஜ்கோட் ஸ்பாஞ்ச் நகரங்கள், சூழல் நட்புப் பள்ளிகள் மற்றும் காலநிலை சார்ந்த உட்கட்டமைப்பு போன்ற கருத்துகள் மூலம் நிலையான வளர்ச்சியைத் தழுவுகிறது. MSME சுற்றுச்சூழல் அமைப்பு, சாலை இணைப்புடன் இணைந்து, தொழில் வல்லுநர்கள் மற்றும் வணிகங்களுக்கு ஒரு கவர்ச்சிகரமான இடமாக மாற்றி வருகிறது என்று அறிக்கை கூறுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதன் செழுமையான பாரம்பரியத்தை லட்சிய நவீனமயமாக்கலுடன் இணைத்து, தாஜ் நகரமான ஆக்ரா, விரிவான 12,000 ஹெக்டேர் புதிய ஆக்ரா திட்டம் மூலம் ஒரு மாற்றத்தைக் காண்கிறது. உற்பத்தி மையங்களுடன், இந்த முன்முயற்சி பொருளாதார விரிவாக்கத்தைத் தூண்டி, பிராந்தியம் முழுவதும் வேலைவாய்ப்புகளின் அலையை உருவாக்கி வருகிறது என்று LinkedIn அறிக்கை குறிப்பிடுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவின் கோயில் நகரம் என்று புகழ்பெற்ற மதுரை, அதிநவீன வசதிகளுடன் தனது உட்கட்டமைப்பை வேகமாக மேம்படுத்தி வருகிறது. இந்த மேம்பாடுகள் தொழிற்துறை தலைவர்களிடமிருந்து - குறிப்பாக தொழில்நுட்ப மற்றும் விவசாயத் துறைகளில் - இந்த பிராந்தியத்தில் ஒரு உறுதியான இருப்பை நிறுவி, அதிக ஆர்வத்தை ஈர்த்து வருகின்றன என்று அறிக்கை குறிப்பிடுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வதோதரா பல கட்டுமான முயற்சிகள் மூலம் ஒரு வளர்ச்சி அலையை அனுபவித்து வருகிறது. நகர்ப்புற உட்கட்டமைப்பு, சுகாதாரம், வீட்டுவசதி மற்றும் போக்குவரத்து போன்ற துறைகளில் இந்த வளர்ச்சி தெளிவாகத் தெரிகிறது, இது நகரத்தின் பொருளாதார மற்றும் கட்டமைப்பு நிலப்பரப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதன் பாரம்பரியம் மற்றும் துடிப்பான கலாச்சாரத்திற்குப் பெயர் பெற்ற ஜோத்பூர், மலிவு வாழ்க்கை மற்றும் ஒரு இறுக்கமான சமூக உணர்வைத் தேடும் இளம் தொழில் வல்லுநர்களுக்கு ஒரு காந்தமாக மாறி வருகிறது. பரவலாக்கப்பட்ட வேலை வாய்ப்புகளின் அதிகரிப்பு, விரிவடைந்து வரும் ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் Genpact போன்ற பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் வருகை அதன் மாற்றத்தைத் தூண்டுகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவின் அடுத்த பொருளாதார வளர்ச்சியின் அத்தியாயம், வெறும் பெரிய மெட்ரோ நகரங்களில் மட்டுமல்ல, அதன் வளர்ந்து வரும் நகரங்களிலும் எழுதப்படுகிறது - ஒவ்வொன்றும் அதன் சொந்த தனித்துவம், லட்சியம் மற்றும் மூலோபாய முக்கியத்துவத்துடன். வேலைகளின் எதிர்காலம் இனி பாரம்பரிய மையங்களுக்குள் மட்டும் இல்லை என்பது தெளிவாகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-madurai</category>
            <dc:creator>Suresh Manthiram</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/career/top-10-emerging-cities-for-jobs-in-india-84rgtls"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ரூ.150 கோடி சொத்து வரி முறைகேடு! மதுரை மேயரின் கணவரையும் தூக்கிய போலீஸ்! அடுத்தடுத்து சிக்கும் அதிகாரிகள்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-madurai/madurai-mayor-husband-arrested-in-150-crore-property-tax-scam-case-articleshow-8f2ex1l</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-madurai/madurai-mayor-husband-arrested-in-150-crore-property-tax-scam-case-articleshow-8f2ex1l</guid>
            <pubDate>Tue, 12 Aug 2025 21:15:02 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ரூ.150 கோடி சொத்து வரி முறைகேடு தொடர்பாக மதுரை மேயரின் கணவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k2fdwt6g2vkjy7af22d6cx2a,imgname-untitled-design-1755012032720.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Madurai Mayor's Husband Arrested In Property Tax Scam Case: மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடி சொத்து வரி முறைகேடு நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கு தொடர்பாக அடுத்தடுத்து முக்கிய அதிகாரிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;இந்த வழக்கு தொடர்பாக தூத்துக்குடி மாநகராட்சியில் உதவி ஆணையராக பணியாற்றி வந்த சுரேஷ்குமார் என்பவர் இன்று ஏற்கெனவே கைது செய்யப்பட்டு இருந்தார். இந்நிலையில், இந்த வழக்கில் மதுரை மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த்தையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;மதுரையில் நடந்த மிகப்பெரும் வரி மோசடி&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;சென்னையில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். பொன்வசந்த்தை மதுரைக்கு அழைத்துச் சென்று விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். மதுரை சொத்து வரி முறைகேடு கடந்த 2022 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் நடந்திருந்தது. மதுரை மாநகராட்சியின் பெரிய வணிக வளாகங்கள் மற்றும் கட்டடங்களுக்கு சொத்து வரியை குறைத்து நிர்ணயம் செய்ததன் மூலம் மாநகராட்சிக்கு ரூ.150 கோடிக்கும் மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இன்று ஒரே நாளில் 2 பேர் கைது&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் கைது படலம் ஆரம்பித்தது. அதாவது ஓய்வுபெற்ற உதவி ஆணையர் ரங்கராஜன், உதவி வருவாய் அலுவலர் செந்தில்குமரன், மற்றும் சொத்து வரி விதிப்பு குழு தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன் உள்பட மொத்தம் 13 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இன்று மட்டும் தூத்துக்குடி மாநகராட்சியில் உதவி ஆணையர் சுரேஷ் குமார், மதுரை மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;திமுக அரசுக்கு பின்னடைவு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;ரூ.150 கோடி சொத்து வரி முறைகேடு வழக்கில் அடுத்தடுத்து பல்வேறு முக்கிய அதிகாரிகள் கைது செய்யப்பட்டு வருவது திமுக அரசுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 3வது பெரிய நகரமான மதுரையில் அதிகாரிகள் இந்த முறைகேட்ட்டில் ஈடுபட்டுள்ளது தேர்தலின்போது தாக்கத்தை ஏற்படுத்தலாம் என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். எதிர்க்கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தின்போது இந்த விவாகரத்தை கையில் எடுத்து மக்கள் மனதில் ஆழமாக பதிக்க ஆயத்தமாகி வருகின்றன.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-madurai</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-madurai/madurai-mayor-husband-arrested-in-150-crore-property-tax-scam-case-articleshow-8f2ex1l"/>
        </item>
        <item>
            <title><![CDATA[6 முதல் 60 வரை வயசு வித்தியாசம் இல்லாமல் குத்தாட்டம் போடும் தொண்டர்கள்! நள்ளிரவிலேயே குவிந்த TVK பேன்ஸ்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/cadres-gather-since-midnight-to-participate-in-the-second-conference-of-the-tvk-9fbo6yv</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/cadres-gather-since-midnight-to-participate-in-the-second-conference-of-the-tvk-9fbo6yv</guid>
            <pubDate>Thu, 21 Aug 2025 07:07:13 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;மதுரை மாவட்டம் பாரப்பத்தி பகுதியில் இன்று நடைபெறும் தமிழக வெற்றி கழகத்தின் 2வது மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக நள்ளிரவு முதலே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்து வருவதால் மாநாட்டு திடல் விழா கோலம் பூண்டுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k353xhjvqkqw9710k8e3ttb6,imgname-mixcollage-21-aug-2025-06-59-am-2184-1755739768411.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;மதுரை மாவட்டம் பாரப்பத்தி பகுதியில் இன்று நடைபெறும் தமிழக வெற்றி கழகத்தின் 2வது மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக நள்ளிரவு முதலே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்து வருவதால் மாநாட்டு திடல் விழா கோலம் பூண்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை மாவட்டம் பாரப்பத்தி பகுதியில் இன்று மாலை 3 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. நீங்கள் வேண்டுமானால் 3 மணிக்கு மாநாட்டைத் தொடங்கிக் கொள்ளுங்கள், ஆனால் எங்களுக்கு கொண்டாட்டம் சுமார் 12 மணி நேரத்திற்கு முன்பாகவே தொடங்கி விட்டது என்று சொல்வது போல் தளபதி விஜய்யின் ரசிகர்கள் நள்ளிரவு முதலே மாநாட்டு திடலில் குவியத் தொடங்கி உள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மாநாடு தொடங்கும் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் தொண்டர்கள் சோர்வடையாமல் இருப்பதற்காக ஸ்னேக்ஸ் பேக் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கிட்டில் பிஸ்கெட் பாக்கெட், தண்ணீர் பாட்டில் உள்ளிட்டவை அடங்கிய பை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் 2 பார்க்கிங் வசதிகளுடன் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;விடிவதற்குள் மதுரை மாநாட்டு திடல் ஃபுல் ஆக்கிருவாங்ய போல தோழர்கள் &amp;nbsp;பேருந்து வசதி இல்லாட்டியும் நடந்தே படை எடுத்து வராங்ய உங்க அன்புக்கு ஈடு இணை ஏதும் இல்லை  #TVKMaduraiMaanadu pic.twitter.com/tScvvIs7Rp&lt;/p&gt;&lt;p&gt;&mdash; Voice of TVK (@risingoftvk) August 21, 2025&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மாநாடு தொடங்க இன்னும் பல மணிநேரம் உள்ள நிலையில் தொண்டர்கள் தாங்கள் வந்த வாகனங்களை பார்க்கிங் ஏரியாவில் நிறுத்திவிட்டு சுமார் 2 கிமீ தூரம் நடந்து சென்று மேடைக்கு அருகே செல்லும் காட்சிகளை நாம் பார்க்க முடிகிறது.&lt;/p&gt;&lt;p&gt;தமிழ்நாட்டு மக்கள் எங்கள் தளபதியின் மேல் வைத்துள்ள பாசத்திற்கும் அன்பிற்கும் எடுத்துக்காட்டாய் இன்று மதுரை மாநாடு இருக்கும். இது ஒன்றும் அரசியல் மாநாட்டிற்கான கூட்டம் கிடையாது நாளைய தமிழகத்தின் அரசியல் புரட்சி க்கான கூட்டம்.@TVKVijayHQ #TVKMaduraiMaanadupic.twitter.com/OpTbgnK4aI&lt;/p&gt;&lt;p&gt;&mdash; M.Raja_TVK (@IamRaja2403_Off) August 21, 2025&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மாநாட்டில் தொண்டர்கள் அமர்வதற்காக சுமார் 1.5 லட்சம் நாற்காலிகள் அமைக்கப்பட்டுள்ளன. யாருக்கேனும் உடல் நலக்குறைவு ஏற்படும் பட்சத்தில் அவர்களுக்கு முதலுதவி அளிக்கும் வகையில் 8 இடங்களில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. மாநாடு இன்று மாலை தான் தொடங்கும் என்ற நிலையில் நள்ளிரவு முதலே தொண்டர்கள் குவியத் தொடங்கியதால் தற்போதே மாநாட்டு திடல் விழாக்கோலம் பூண்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;மதுரையை நோக்கி படையெடுக்கும் தென்மாவட்ட வாகனங்கள்.மதுர குலுங்க குலுங்க சம்பவம் உறுதி.✨️#TVKMaduraiMaanadu#TVKVijay #TVK #தமிழகவெற்றிக்கழகம் pic.twitter.com/raT69eprSm&lt;/p&gt;&lt;p&gt;&mdash; balaa.TVK. (@BalaaTvk) August 21, 2025&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-madurai</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/cadres-gather-since-midnight-to-participate-in-the-second-conference-of-the-tvk-9fbo6yv"/>
        </item>
        <item>
            <title><![CDATA[100 டிகிரி போட்டுத்தாக்கும் வெயில்! அடுத்தடுத்து மயங்கி விழுந்த தவெக தொண்டர்கள்! மருந்துகளுடன் பறந்த ட்ரோன்கள்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-madurai/madurai-tvk-meeting-heatstroke-tvk-supporters-fainted-treatment-given-9oguve5</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-madurai/madurai-tvk-meeting-heatstroke-tvk-supporters-fainted-treatment-given-9oguve5</guid>
            <pubDate>Thu, 21 Aug 2025 14:34:39 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;மதுரை தவெக மாநாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தவெக தொண்டர்கள் மயங்கி விழுந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k35xqmny88y52t9n314zajs1,imgname-tvk-heat-1755766837950.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;மதுரை தவெக மாநாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தவெக தொண்டர்கள் மயங்கி விழுந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தவெகவின் 2வது மாநில மாநாடு மதுரை-தூத்​துக்​குடி சாலை​யில் உள்ள பாரப்பத்​தி​யில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. சுமார் 500 ஏக்​கர் பரப்​பள​வில் பிரம்மாண்டமாக ஏற்பாடுகள் செய்யட்ட நிலையில், இன்று அதிகாலை 4 மணி முதலே மாநாட்டுத் திடலில் தவெக தொண்டர்கள் குவிந்தனர். முதல் ஆளாக இருக்கைகளை பிடித்து விட வேண்டும் என அவர்கள் போட்டி போட்டனர். மதியம் 2 மணி வரை சுமார் 2 லட்சம் தவெக தொண்டர்கள் கூடியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மாநாடு நடைபெறும் பாரப்பத்​தி​யில் சுமார் 100 டிகிரி செல்சியஸ் அளவில் வெயில் கடுமையாக கொளுத்தி வருகிறது. அதிகாலை முதலே இருப்பதால் வெயிலின் கோரத்தை சமாளிக்க முடியாமல் தவெக தொண்டர்கள் தடுமாறினார்கள். வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்ததால், காலையிலேயே மாநாட்டுத் திடலுக்கு வந்திருந்த பல தொண்டர்கள் சோர்வடைந்து மயங்கி விழுந்தனர். குறிப்பாக அதிக நேரம் நின்றுகொண்டிருந்தவர்களும், போதிய அளவு தண்ணீர் அருந்தாதவர்களும் வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்தனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மயக்கமடைந்தவர்களுக்கு உடனடியாக மாநாட்டுத் திடலில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் முதலுதவி அளிக்கப்பட்டது. அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், அவர்களுக்கு குளுக்கோஸ் மற்றும் ஓ.ஆர்.எஸ். கரைசல் கொடுத்து சிகிச்சை அளித்தனர். மேலும் மயங்கி விழுந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ட்ரோன்கள் மூலம் முதலுதவி சிகிச்சை பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டன.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ட்ரோன்கள் மூலம் தண்ணீர் தெளிப்பு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;வெயிலின் கோரப்பிடியை சமாளிக்க முடியாமல் தவெக தொண்டர்கள் மாநாட்டு திடலில் கீழே விரிக்கப்பட்டு இருந்த தரை விரிப்புகளை கிழித்து மூடிக் கொண்டனர். மேலும் அங்கு போடப்பட்டு இருந்த டேபிள்களுக்கு அடியிலும் நிழலுக்காக ஒதுங்கினார்கள். வெயிலின் கொடுமையை தொண்டர்கள் சமாளிக்கும் வகையில் ட்ரோன்கள் மூலம் தண்ணீர் பாட்டில்கள் அதிக அளவில் விநியோகம் செய்யப்பட்டன. மேலும் ட்ரோன்கள் மூலம் தண்ணீரும் தெளிக்கப்பட்டது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மாநாட்டுக்கு முன்னதாக பெண்கள் கைக்குழந்தைகளை அழைத்து வர வேண்டாம் என விஜய் வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் அவர் பேச்சை கேட்காமல் ஏராளமான பெண்கள் கைக்குழந்தைகளுடன் வந்தனர். கூட்ட நெரிசல் மற்றும் வெப்பத்தைக் கருத்தில் கொண்டு, குழந்தைகளுடன் வந்தவர்கள் மாநாட்டுத் திடலுக்குள் அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-madurai</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-madurai/madurai-tvk-meeting-heatstroke-tvk-supporters-fainted-treatment-given-9oguve5"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Hill Station மதுரைக்கு அருகில் சூப்பரான 'குளுகுளு' மலைவாசஸ்தலம்! கொடைக்கானல் தோத்துடும்! மிஸ் பண்ணாதீங்க!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-madurai/sirumalai-the-unexplored-little-princess-hill-station-near-madurai-articleshow-drrsb5q</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-madurai/sirumalai-the-unexplored-little-princess-hill-station-near-madurai-articleshow-drrsb5q</guid>
            <pubDate>Wed, 03 Sep 2025 13:55:47 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;மதுரைக்கு அருகில் இருக்கும் அழகான மலைவாசஸ்தலமான சிறுமலையின் சிறப்புகள் குறித்தும், அங்கு எப்படி செல்வது? என்பது குறித்தும் பார்ப்போம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jhdd5b4bdan0f02skwh0qndq,imgname-sirumalai-hill-station.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;மதுரைக்கு அருகே உள்ள மலைவாசஸ்தலம் என்றால் உடனே நினைவுக்கு வருவது கொடைக்கானல். ஆனால் அதற்கு இணையாக, இன்னும் அதிகம் அறியப்படாத, அமைதியான ஒரு அழகான இடத்தை பற்றி பார்க்கலாம். நான் இங்கே குறிப்பிடுவது சிறுமலை. கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த மலை, 'மலைகளின் குட்டி இளவரசி' என்று அன்புடன் அழைக்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;'மலைகளின் குட்டி இளவரசி' சிறுமலை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;கொடைக்கானல் மற்றும் ஊட்டியைப் போலவே, சிறுமலையிலும் ஆண்டு முழுவதும் குளிர்ச்சியான, இதமான காலநிலை நிலவும். பசுமையான காடுகள், செடிகள் மற்றும் கொடிகள் சூழ்ந்த இந்த இடம், நகர வாழ்க்கையின் பரபரப்பில் இருந்து விடுபட்டு மன அமைதியைத் தேடுவோருக்கு ஒரு வரப்பிரசாதம். இங்குள்ள குளிர்ந்த காற்று உங்கள் மன அழுத்தத்தைக் குறைத்து புத்துணர்ச்சி தரும். மேலும், உள்ளூர் மலைவாழ் மக்களால் பயிரிடப்படும் வாழை, மிளகு, பலாப்பழம் போன்றவற்றை இங்கு காணலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;அழகான 18 கொண்டை ஊசி வளைவுகள்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;சிறுமலைக்குச் செல்லும் பாதையில் மொத்தம் 18 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. நான்காவது அல்லது ஐந்தாவது வளைவைத் தாண்டும்போதே குளிர்ந்த காற்று உங்களை வரவேற்கும். வானுயர மரங்களுக்கு இடையே வளைந்து நெளிந்து செல்லும் சாலையில் பயணிப்பது ஓர் அழகான அனுபவமாக இருக்கும். இங்கு குரங்குகள் மட்டுமின்றி, காட்டு மாடுகள், கடமான், கேளையாடு, முயல், கழுதை, காட்டு அணில் போன்ற வனவிலங்குகளையும் காணலாம். உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் காட்டு மாடுகளைக் கூட பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சிறுமலையில் பார்க்க வேண்டிய இடங்கள் என்னென்ன?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சிறுமலை ஏரி: &lt;/strong&gt;இது மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை ஏரி. இங்கு படகு சவாரி செய்து இயற்கையின் அழகை ரசிக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சந்தான கிருஷ்ணர் கோயில்:&lt;/strong&gt; சந்தன மரத்தால் செய்யப்பட்ட கிருஷ்ணர் சிலை இங்கு பிரசித்தி பெற்றது. இயற்கை அழகை ரசித்துவிட்டு, இந்த ஆன்மீக தலத்திற்கும் சென்று வரலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;அன்னை வேளாங்கண்ணி ஆலயம்: &lt;/strong&gt;பசுமையான காடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ள இந்த ஆலயம், அமைதி தேடுவோருக்கு ஏற்ற இடம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;அகஸ்தியர்புரம் காட்சிமுனை (டவர்):&lt;/strong&gt; பள்ளத்தாக்கின் மொத்த அழகையும், பசுமையான வனங்களின் பிரம்மாண்டத்தையும் இங்கிருந்து பார்க்கலாம். புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதற்கு இது ஒரு சிறந்த இடமாகும்.&lt;/p&gt;&lt;p&gt;ஊட்டி, கொடைக்கானல் போல அதிக கூட்டம் இல்லாததால், சிறுமலையின் இயற்கையை முழுமையாக அனுபவிக்க முடியும். இங்குள்ள மூலிகைக் காற்றை சுவாசிப்பது உடலுக்கு மிகவும் நல்லது. டிரெக்கிங் செல்ல விரும்புபவர்களுக்கு இது ஒரு சரியான இடம். மேலும், சிறுமலை அதன் சுவையான பலாப்பழம் மற்றும் வாழைப்பழங்களுக்கு மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு வரும்போது அவற்றை ருசிக்க மறக்காதீர்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சிறுமலைக்கு எப்படி செல்வது?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சாலை மார்க்கமாக: &lt;/strong&gt;சிறுமலை திண்டுக்கல்லில் இருந்து 25 கி.மீ. தொலைவிலும், மதுரையில் இருந்து சுமார் 90 கி.மீ. தொலைவிலும் உள்ளது. சென்னை அல்லது பிற ஊர்களில் இருந்து வருபவர்கள் திண்டுக்கல் வந்து, அங்கிருந்து நத்தம் சாலையில் உள்ள மேம்பாலத்தைக் கடந்து, வலதுபுறம் திரும்பி சிறுமலைக்கு செல்லலாம். இருசக்கர வாகனம் அல்லது காரில் செல்வது சிறப்பான அனுபவத்தைத் தரும். திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து சிறுமலைக்கு அரசுப் பேருந்துகளும் குறிப்பிட்ட நேரங்களில் இயக்கப்படுகின்றன.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ரயில் அல்லது விமானம் மூலம்: &lt;/strong&gt;சென்னையிலிருந்து திண்டுக்கல் ரயில் நிலையம் வந்து, அங்கிருந்து வாடகை வண்டிகள் மூலம் சிறுமலைக்குச் செல்லலாம். மதுரையில் இருந்து விமானம் மூலம் வந்தும் வாடகை வண்டிகளைப் பயன்படுத்தலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;தங்குமிட வசதிகள்: &lt;/strong&gt;சிறுமலையில் விடுதிகள் (லாட்ஜ்கள்) மற்றும் ரிசார்ட்டுகள் உள்ளன. மதுரை, திண்டுக்கல்லில் வசிப்பவர்கள் அதிகாலையில் புறப்பட்டால், சிறுமலையை சுற்றிப் பார்த்துவிட்டு அன்றைய இரவே திரும்பிவிடலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-madurai</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-madurai/sirumalai-the-unexplored-little-princess-hill-station-near-madurai-articleshow-drrsb5q"/>
        </item>
        <item>
            <title><![CDATA[தவெக மாநாட்டில் ரஜினிகாந்தை சீண்டிய விஜய்! கொந்தளிக்கும் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-madurai/thalapathy-vijay-takes-a-dig-at-superstar-rajinikanth-at-madurai-tvk-conference-articleshow-foxotmy</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-madurai/thalapathy-vijay-takes-a-dig-at-superstar-rajinikanth-at-madurai-tvk-conference-articleshow-foxotmy</guid>
            <pubDate>Thu, 21 Aug 2025 17:46:51 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;மதுரை தவெக மாநாட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தளபதி விஜய் மறைமுகமாக சீண்டினார். இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jb9aw6nxwcvmednk6dg2xrx9,imgname-mixcollage-28-oct-2024-04-00-pm-2701.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Vijay Insulted Rajinikanth At The TVK Conference: தவெகவின் 2வது மாநில மாநாடு மதுரையில் நடந்தது. சுமார் 2 லட்சம் தொண்டர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர். தவெக தொண்டர்கள் ஆர்ப்பரிப்புக்கு மத்தியில் விஜய் மேடையேறினார். இதன்பிறகு மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டு இருந்த ரேம்ப் வாக்கில் நடந்து சென்று தொண்டர்களை நோக்கி விஜய் கையசைததார். மேலும் தங்களது கட்சியின் கொள்கை தலைவர்களான காமராஜர், பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் உருவப்படங்களுக்கு மரியாதை செலுத்தி, 40 அடி உயர கொடிக்கம்பத்தில் தவெக கொடியை ஏற்றினார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சிங்கம் சிங்கிளாதான் இருக்கும்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இதனைத் தொடர்ந்து தொண்டர்களின் ஆர்ப்பரிப்புக்கு மத்தியில் தவெக தலைவர் விஜய் ஆவேசமாக பேசினார். அப்போது பேசிய அவர், ''சிங்கம் எப்பவும், வேட்டைக்கு மட்டும்தான் வெளிய வரும். வேடிக்கை பார்க்க வராது. அப்படியே வரும்போதும், உயிரோடு இருக்க தன்னைவிட பெரிய மிருகத்தைதான் வேட்டையாடும். அப்பவும் எவ்வளவு பசி இருந்தாலும், உயிரில்லாத, கெட்டுப்போனதை தொட்டுக்கூட பாக்காது. சிங்கத்துக்கு கூட்டத்தோட இருக்கவும் தெரியும், A LION IS ALWAYS A LION. EVEN IF IT IS SINGLE'' என்று தெரிவித்தார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ரஜினியை சீண்டிய விஜய்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;தொடர்ந்து பேசிய அவர், ''தவெக கையில் எடுத்துள்ள அரசியல், உண்மையான அரசியல், உணர்வுப்பூர்வமான அரசியல், நல்ல அரசியல், நல்லது மட்டுமே செய்யும் அரசியல்'' என்றார். மாநாட்டில் பேசிய விஜய் நடிகர் ரஜினிகாந்தை மறைமுகமாக சீண்டினார். அதாவது விஜய் தனது பேச்சின்போது, ''நாம் அரசியலுக்கு வருவதற்கு முன்பு, இவரெல்லாம் அரசியலுக்கு வர மாட்டார். அவரே வரவில்லை, இவர் எங்கே வரப்போகிறார் என்று நிறைய பேர் ஜோசியம் சொன்னார்கள். கட்சியின் பெயர் அறிவித்தவுடன் மக்களிடம் பெயர் வாங்க வேண்டுமே என்றனர். கூட்டமெல்லாம் எப்படி ஓட்டுகளாக மாறும்'' என்று விமர்சனம் வைத்தனர்'' என்றார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சினிமாவில் விஜய் ரோல் மாடல் யார்?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;நீண்டகால எதிர்பார்ப்புக்கு பிறகு அரசியலுக்கு வருவதாக சொன்ன ரஜினி, பின்பு உடல்நிலையை காரணம்காட்டி அரசியலில் இருந்து பின்வாங்கினார். இதனால் ரஜினி அரசியலுக்கு வருவதாக கூறிவிட்டு ஏமாற்றியதாக பலரும் தெரிவித்தனர். இதையே விஜய் தனது பேச்சின்போது அவர்(ரஜினி) வரல; இவரும் வரமாட்டார்னு சொன்னாங்க என்று தெரிவித்தார். மேலும் விஜய் தனது பேச்சின்போது சினிமாவிலும், அரசியலிலும் என் தலைவர் எம்.ஜி.ஆர் தான் என்று குறிப்பிட்டார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ரஜினி ரசிகர்கள் கண்டனம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;விஜய்யை பொறுத்தவரை சினிமாவில் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்தை தான் காப்பி அடித்து வந்தார். சினிமாவில் ரஜினி பின்பற்றும் பாணியை தான் அவர் பின்பற்ற்றினார். ரஜினிக்கு ரசிகர்கள் கொடுத்த பட்டத்தை அவரும் வைத்துக் கொண்டார். ''அண்ணாமலை தம்பி நான் ஆட வர்றேன்டா..'' என தனது படத்தில் பாடலே வைத்து ரஜினியின் தம்பி நான் தான் என குறிப்பிட்டு வந்தார். இப்படி சினிமாவில் ரஜினியை காப்பி அடித்த விஜய், இப்போது சினிமாவில் எனது தலைவர் எம்.ஜி.ஆர் என குறிப்பிட்டு இருப்பது ரஜினி ரசிகர்களின் கண்டனத்துக்கு ஆளாக்கியுள்ளது. அரசியலுக்காக விஜய் இப்போது எம்.ஜி.ஆரை தூக்கிபிடித்துள்ளதாக ரஜினி ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-madurai</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-madurai/thalapathy-vijay-takes-a-dig-at-superstar-rajinikanth-at-madurai-tvk-conference-articleshow-foxotmy"/>
        </item>
        <item>
            <title><![CDATA[மளமளவென பற்றி எரிந்த எல்ஐசி அலுவலகம்! பெண் மேலாளர் பலியானது எப்படி? பரபரப்பு தகவல்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-madurai/madurai-lic-office-fire-accident-woman-employee-dies-fu8ol9n</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-madurai/madurai-lic-office-fire-accident-woman-employee-dies-fu8ol9n</guid>
            <pubDate>Thu, 18 Dec 2025 09:56:49 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;மதுரை ரயில் நிலையம் எதிரில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், ஊழியர்கள் அலறியடித்து வெளியேறினர். இந்த கோர விபத்தில் நெல்லையைச் சேர்ந்த முதுநிலை மேலாளர் கல்யாணி என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். மற்றொருவர் காயங்களுடன் மீட்பு.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kcqv23swwhxpdtdmebkmhg47,imgname-madurai-4-1766031691580.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;மதுரை ரயில் நிலையம் எதிரில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், ஊழியர்கள் அலறியடித்து வெளியேறினர். இந்த கோர விபத்தில் நெல்லையைச் சேர்ந்த முதுநிலை மேலாளர் கல்யாணி என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். மற்றொருவர் காயங்களுடன் மீட்பு.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மதுரை ரயில் நிலையம் எதிரில் உள்ள கட்டிடத்தின் 2ம் தளத்தில் எல்.ஐ.சி. அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 50 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் புதிய பாலிசி அறிமுகம் தொடர்பாக நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் ஒவ்வொரு ஊழியர்கள் வீட்டுக்கு ஒவ்வொருவராக சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிறிது நேரத்தில் தீ மளமளவென கட்டிடம் முழுவதும் பரவியதால் ஊழியர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியேறினர். ஆனால் சிலர் மட்டும் கட்டிடத்தின் உள்ளே சிக்கிக்கொண்டனர். இந்த தீ விபத்து தொடர்பாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து ஊழியர்களை மீட்டனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இருப்பினும் நெல்லையை சேர்ந்த எல்ஐசி முதுநிலை மேலாளர் கல்யாணி (55) இந்த விபத்தில் துரதிஷ்டவசமாக உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், நிர்வாகி அதிகாரி ராம் (44) தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு, உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இதனையடுத்து உயிரிழந்த கல்யாணி உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனிக்கு அனுப்பி வைத்தனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த விபத்து தொடர்பாக முதற்கட்ட விசாரணையில் தீ விபத்துக்கான காரணம் மின் கசிவாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் கூறுகையில்: எல்.ஐ.சி. அலுவலகத்தில் புதிய திட்டம் ஒன்றின் அறிமுக விழா, வியாழக்கிழமை நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுக் கொண்டிருந்த நிலையில்தான் தீ விபத்து ஏற்பட்டது. எல்ஐசி அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-madurai</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-madurai/madurai-lic-office-fire-accident-woman-employee-dies-fu8ol9n"/>
        </item>
        <item>
            <title><![CDATA[விஜய்யின் மதுரை மாநாட்டுக்கு சிக்கல்! கல்யாணம், பிறந்த நாள்னு கணக்கு சொல்லாதீங்க - போலீஸ் கெடுபிடி]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/police-department-recommends-vijay-to-change-tvk-madurai-conference-date-gs783qf</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/police-department-recommends-vijay-to-change-tvk-madurai-conference-date-gs783qf</guid>
            <pubDate>Mon, 04 Aug 2025 11:04:54 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தமிழக வெற்றி கழகத்தின் மதுரை மாநாட்டு தேதியை மாற்றி அமைக்குமாறு காவல் துறை தரப்பில் மீண்டும் கட்சியிடம் கோரப்பட்டுள்ளதால் மாநாட்டுக்கு சிக்கல் எழுந்துள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k0p2z82965rzkz8sc2ks5wmm,imgname-whatsapp-image-2025-07-21-at-14.12.05-1753087975497.jpeg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழக வெற்றி கழகத்தின் மதுரை மாநாட்டு தேதியை மாற்றி அமைக்குமாறு காவல் துறை தரப்பில் மீண்டும் கட்சியிடம் கோரப்பட்டுள்ளதால் மாநாட்டுக்கு சிக்கல் எழுந்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், புதிதாகத் தொடங்கப்பட்ட தமிழக வெற்றி கழகத்தின் செயல்திறன் தொடர்பான எதிர்பார்ப்பு தமிழக மக்களிடம் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. உறுப்பினர் சேர்க்கைக்காக ஆப் வெளியிடுவது, மாநாடு நடத்துவது என தனித்துவ அரசியலுடன் தமிழகத்தில் அடுத்தடுத்த அதிரடிகளை மேற்கொண்டு வருகிறது.&lt;/p&gt;&lt;p&gt;இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் அடுத்த மாநாட்டை மதுரையில் நடத்த அக்கட்சியின் தலைவர் விஜய் முடிவு செய்துள்ளார். மேலும் மாநாட்டு தேதி வரலாற்றில் முக்கியமான நாளாக இருக்க வேண்டும் என அவர் போட்ட கண்டிஷனால் நிர்வாகிகள் தீவிரமாக ஆலோசித்து ஆகஸ்ட் 25ம் தேதியைத் தேர்வு செய்துள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஏனெனில் ஆகஸ்ட் 25ம் தேதி தான் தேமுதிக நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் எதிர்கட்சி தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் பிறந்த தினமாகும். விஜயகாந்த் மதுரை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்பதால் அவர் மீது தற்போதும் தென்மாவட்டங்களில் தனி ஆதரவு உள்ளது. அண்றைய தினம் மதுரையில் மாநாட்டை நடத்துவதன் மூலம் விஜயகாந்தின் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெறலாம் என்ற திட்டத்தில் இந்த தேதி தேர்வு செய்யப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;அதே போன்று ஆகஸ்ட் 25ம் தேதி தான் கட்சியின் தலைவர் விஜய்யின் திருமண நாளும் கூட. இதனால் மாநாட்டை அதே தேதியில் நடத்தி விடலாம் என ஒப்புதல் அளித்த விஜய் அதற்கான பணிகளைத் தீவிரப்படுத்துமாறு கட்டளை இட்டார். அதன்படி மதுரை மாவட்டத்தில் மாநாட்டுக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில், வருகின்ற 27ம் தேதி அதாவது மாநாடு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டதற்கு இரண்டாவது நாளே விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இந்து மதத்தினரின் பிற பண்டிகைகளைப் போல் அல்லாமல் அண்மை காலமாக விநாயகர் சதுர்த்தி பதற்றமான பண்டிகையாக மாறியுள்ளது. இதனால் சட்டம் ஒழுங்கை காக்க வேண்டிய கட்டாயத்தில் காவல் துறை இருப்பதால் இதனைக் குறிப்பிட்டு தவெக.வுக்கு காவல் துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;அதன்படி விநாயகர் சதுர்த்தி வருவதால் விநாயகர் சதுர்த்திக்கு முன்பாக, அதாவது ஆகஸ்ட் 21ம் தேதி மாநாட்டை நடத்துங்கள் அல்லது விநாயகர் சதுர்த்திக்கு பின்னர் நடத்துங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாநாட்டு தேதியை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தவெக தள்ளப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-madurai</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/police-department-recommends-vijay-to-change-tvk-madurai-conference-date-gs783qf"/>
        </item>
        <item>
            <title><![CDATA[பாத்ரூமுக்கு சென்ற பெண்! வளைச்சு வளைச்சு வீடியோ எடுத்த இளைஞர்! அதுவும் அரசு அலுவலகத்திலேயே இப்படியா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-madurai/female-staff-secretly-filmed-in-restroom-by-coworker-at-electricity-office-articleshow-ibg81w1</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-madurai/female-staff-secretly-filmed-in-restroom-by-coworker-at-electricity-office-articleshow-ibg81w1</guid>
            <pubDate>Fri, 26 Sep 2025 12:58:19 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Madurai Youth Arrested: மதுரை சமயநல்லூர் மின் வாரிய அலுவலகத்தில், பெண் ஊழியர் ஒருவரை கழிப்பறையில் சக ஊழியர் படம் பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புகாரின் பேரில் வணிகப் பிரிவு ஆய்வாளர் ராஜராஜேஸ்வரன் கைது செய்யப்பட்டார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k62ecxgktsva2v8xgdgwcdrg,imgname-madurai-1758871320083.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;மதுரை மாவட்டம் சமயநல்லூர் மின் வாரியக் கோட்ட அலுவலகத்தில் ஜூனியர் கணக்கராக பணிபுரிந்து வந்தவர் ஹேமலதா (24). இவர் வழக்கம்போல் நேற்று அலுவலக வளாகத்தில் உள்ள கழிப்பறையைப் பயன்படுத்தச் சென்றுள்ளார். அப்போது, அதே அலுவலகத்தில் வணிகப் பிரிவு ஆய்வாளராகப் பணிபுரியும் சக ஊழியரான ராஜராஜேஸ்வரன்(33) என்பவர், கழிப்பறையின் ஜன்னல் வழியாக தன்னைப் படம் எடுப்பதைப் பார்த்த ஹேமலதா அதிர்ச்சியடைந்து அலறி கூச்சலிட்டுள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பாத்ரூம் சென்ற பெண் ஊழியர்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இவரது சத்தம் கேட்டதும் அங்கிருந்து தப்பியோடிய ராஜராஜேஸ்வரன், எதுவும் நடக்காதது போல அலுவலகத்தில் தன் இருக்கையில் அமர்ந்திருந்துள்ளார். ஹேமலதாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த சக பெண் ஊழியர்களிடம் ஹேமலதா நடந்ததைக் கூறி அழுதுள்ளார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் ஹேமலதா, மின் கோட்டச் செயற்பொறியாளர் ஜெயலெட்சுமியிடம் முறையிட்டுள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;செல்போனில் வீடியோ&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;பின்னர், மின் வாரிய ஊழியர் ராஜராஜேஸ்வரனின் செல்போனை வாங்கிப் பார்த்தபோது, கோட்ட அலுவலகத்தில் பணிபுரியும் சக பெண் ஊழியர்களின் பல ஆபாசப் படங்கள் அதில் இருப்பதைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனைத் தொடர்ந்து, ஹேமலதா கொடுத்த புகாரின் பேரில், சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் மதுரை செல்லூர் அருண்தாஸ்புரத்தைச் சேர்ந்த, மின் வாரிய வணிகப் பிரிவு ஆய்வாளராகப் பணிபுரிந்த ராஜராஜேஸ்வரனை (33) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;போலீஸ் விசாரணை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;கைது செய்யப்பட்ட ராஜராஜேஸ்வரன், மற்ற பெண் ஊழியர்களையும் இதுபோல் படம் எடுத்துள்ளாரா என்பது குறித்தும், இந்தசம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-madurai</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-madurai/female-staff-secretly-filmed-in-restroom-by-coworker-at-electricity-office-articleshow-ibg81w1"/>
        </item>
        <item>
            <title><![CDATA[யூடியூபர் முக்தாரை விரட்டி அடித்த விஜய் தொண்டர்கள்..! நேரடியாக மிரட்டியதால் அதிர்ச்சி!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-madurai/madurai-tvk-party-conference-youtuber-mukthar-chased-away-articleshow-lhvb2fn</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-madurai/madurai-tvk-party-conference-youtuber-mukthar-chased-away-articleshow-lhvb2fn</guid>
            <pubDate>Thu, 21 Aug 2025 18:49:05 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;மதுரை மாநாட்டில் பிரபல யூடியூபர் முக்தாரை தவெக தொண்டர்கள் விரட்டியடித்தனர். இதனால் அவர் அவரசம், அவசரமாக வெளியே சென்றார்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k36cgmfef9b31nvbfe1g5j3j,imgname-mukthar-1755782337006.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தவெகவின் 2வது மாநில மாநாடு மதுரையில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது. சுமார் 2 லட்சம் தொண்டர்களுக்கு மத்தியில் பேசிய தவெக தலைவர் விஜய், மத்தியில் ஆளும் பாஜக, தமிழகத்தில் ஆளும் திமுக, பாஜகவுடன் கூட்டணி சேர்ந்த அதிமுக என அனைத்து பெரிய கட்சிகளையும் பாரபட்சமின்றி விமர்சித்தார். மேலும் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருபவர்களை எதிர்க்கும் சீமானையும் அவர் மறைமுகமாக விமர்சித்தார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பாஜக, திமுகவை கடுமையாக சாடிய விஜய்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;மேலும் தனது பேச்சில் அவர் பல்வேறு அரசியல் விஷயங்கள் குறித்தும், தனது கட்சியின் கொள்கைகள் குறித்தும், எதிர்கால திட்டங்கள் குறித்தும் பேசினார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டதாக கூறி விஜய் திமுகவை கடுமையாக சாடினார். இது தவிர கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தினார். நீட் தேர்வு மத்திய அரசின் பிடிவாதத்தால் நடக்கிறது என்று விமர்சித்தார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;முக்தாரை விரட்டியடித்த தவெக தொண்டர்கள்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடும் என்றும், மக்கள் ஒவ்வொரு வீட்டிலும் தனக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். முன்னதாக, தவெக மாநாடு தொடங்குவதற்கு முன்பு தவெகவினர் பிரபல யூடியூபர் முக்தாரை விரட்டியடித்த சம்பவம் நடந்துள்ளது. அதாவது தவெக மாநாட்டு திடலில் மாஸ்க் அணிந்த முக்தார் வந்திருந்தார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;முக்தாருக்கு எதிராக கோஷம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;''தவெகவுக்கு எதிராக பேசும் முக்தார் வெளியேறு. யூடியூபர் முக்தார் வெளியேறு'' என்று தவெக தொண்டர் ஒருவர் கத்தி கூச்சலிட அங்கிருந்த அனைத்து தவெக தொண்டர்களும் முக்தார் வெளியேறும்படி கூச்சலிட்டனர். இதனைத் தொடர்ந்து முக்தார் மாநாட்டுத் திடலில் அவசரம் அவசரமாக வெளியே சென்றார். அப்போதும் அவரை விடாமல் பின்தொடர்ந்து சென்ற தவெக தொண்டர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவலர்களிடம், ''சார் முக்தாரை வெளியேற்றுங்கள்'' எண்று ஆவேசமாக கூறினார்கள். இதனால் மாநாட்டு திடலில் பெரும் பரபரப்பு நிலவியது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;முக்தார் மீது விஜய் தொண்டர்களுக்கு இவ்வளவு கோபம் ஏன்?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;பிரபல யூடியூபரான முக்தார், நடிகர் விஜய் தவெக கட்சியை தொடங்கியதில் இருந்து அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார். விஜய் வீட்டில் இருந்து அரசியல் செய்வதாகவும், மக்களை சந்திக்கவில்லை என்று தொடர்ந்து விமர்சித்தார். இதனால் கடும் கோபம் கொண்ட தவெகவினர் அவரை விரட்டியடித்துள்ளனர். முக்தார் திமுக கட்சியின் ஆதரவாளர் என தவெகவினர் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-madurai</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-madurai/madurai-tvk-party-conference-youtuber-mukthar-chased-away-articleshow-lhvb2fn"/>
        </item>
        <item>
            <title><![CDATA[தேசிய நெடுஞ்சாலையில் அதிர்ச்சி.. பயங்கர சத்தத்துடன் வெடித்த பேருந்து.. அலறிய 55 பயணிகள் நிலை என்ன?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-madurai/government-bus-tire-burst-accident-20-passengers-injured-onu9hwp</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-madurai/government-bus-tire-burst-accident-20-passengers-injured-onu9hwp</guid>
            <pubDate>Mon, 19 Jan 2026 16:37:05 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Government Bus Accident: மதுரையில் இருந்து பழனிக்கு சென்ற அரசு பேருந்தின் டயர் சமயநல்லூர் அருகே வெடித்ததால், பேருந்தின் ஆக்சல் துண்டாகி வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kfaym4rs6xbn6g5zzhkjpgqy,imgname-bus-accident-1768820445977.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Government Bus Accident: மதுரையில் இருந்து பழனிக்கு சென்ற அரசு பேருந்தின் டயர் சமயநல்லூர் அருகே வெடித்ததால், பேருந்தின் ஆக்சல் துண்டாகி வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மதுரை மாவட்டம் ஆரம்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து பழனிக்கு அரசு பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் மேற்கொண்டனர். அப்போது மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே கட்டபுளி நகர் பகுதியில் பேருந்து சென்ற போது பின் பக்க டயர் மோசமாக இருந்தது. இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த போதே திடீரென பின் பக்க டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதனால் பேருந்து நிலைதடுமாறும் ஓட்டுநர் பிரேக் அடிக்கவே பின்பக்க ஆக்சல் துண்டாகி தனியாக போது சென்றது மட்டுமல்லாமல் இடதுபுறமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் பயணிகள் அலறி கூச்சலிட்டனர். இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மேலும் 5க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பின்னர் ஆம்பிலன்ஸ் வரவழைக்கப்பட்டு காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்விபத்தின் காரணமாக அப்பகுதியில் ஒரு மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து கிரேன் மூலம் பேருந்தை அகற்றி வழி ஏற்படுத்தினர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-madurai</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-madurai/government-bus-tire-burst-accident-20-passengers-injured-onu9hwp"/>
        </item>
        <item>
            <title><![CDATA[அதிகாலை 3 மணிக்கு அலறி ஓடிய காவலர்கள்.. மதுரை ஐகோர்ட் வளாகத்தில் அதிர்ச்சி! சிக்கிய பரபரப்பு கடிதம்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-madurai/police-constable-commits-suicide-by-shooting-himself-in-madurai-high-court-orx7aci</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-madurai/police-constable-commits-suicide-by-shooting-himself-in-madurai-high-court-orx7aci</guid>
            <pubDate>Thu, 27 Nov 2025 09:16:04 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் பாதுகாப்புப் பணியில் இருந்த சிறப்புப் படை காவலர் மகாலிங்கம், இன்று அதிகாலை தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தற்கொலை கடிதத்தை கைப்பற்றி விசாரணை.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01h6wjrczjh6kgxggb84vdvj1v,imgname-madurai-high-court.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் பாதுகாப்புப் பணியில் இருந்த சிறப்புப் படை காவலர் மகாலிங்கம், இன்று அதிகாலை தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தற்கொலை கடிதத்தை கைப்பற்றி விசாரணை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மதுரை மாவட்டம் எழுமலை கோட்டைப்பட்டியை சேர்ந்த மகாலிங்கம். இவர் சிறப்பு படை காவலராக 2023ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அமர்வு முன்பாக நேற்று இரவு முதல் பாதுகாப்பு பணியில் மகாலிங்கம் இருந்துள்ளார். அப்போது இன்று அதிகாலை 3 மணியளவில் தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அப்போது துப்பாக்கி சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த சக காவலர்கள் வந்து பார்த்த போது மகாலிங்கம் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மகாலிங்கத்தை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த சம்பவத்தை அடுத்து உயர் அதிகாரிகள் மருத்துவமனைக்கு விரைந்தனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் தனது தற்கொலைக்கு யாரும் காரணம் அல்ல கூறி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-madurai</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-madurai/police-constable-commits-suicide-by-shooting-himself-in-madurai-high-court-orx7aci"/>
        </item>
        <item>
            <title><![CDATA[தவெக கொடிக்கம்பம் சாய்ந்த விபத்துக்கு என்ன காரணம்? பாதுகாப்பு ஏற்பாட்டில் கோட்டை விட்டாரா விஜய்?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-madurai/reason-for-the-collapse-of-100-foot-flagpole-at-madurai-tvk-conference-articleshow-pc3pnd4</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-madurai/reason-for-the-collapse-of-100-foot-flagpole-at-madurai-tvk-conference-articleshow-pc3pnd4</guid>
            <pubDate>Wed, 20 Aug 2025 15:57:17 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;மதுரை தவெக மாநாட்டில் 100 அடி உயர கொடிக்கம்பம் சாய்ந்த விபத்துக்கு என்ன காரணம்? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k33g8pr8tyezc4htema5smmd,imgname-tvk-hole-1-1755685608200.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;What Caused The Accident TVK 100 Foot Flagpole Fell?: தவெகவின் 2வது மாநில மாநாடு மதுரையில் நாளை (ஆகஸ்ட் 21) நடைபெற உள்ளது. மதுரை-தூத்​துக்​குடி சாலை​யில் உள்ள பாரப்பத்​தி​யில் சுமார் 500 ஏக்​கர் பரப்​பள​வில் மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டுக்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மாநாட்டுத் திடலில் தவெகவின் 100 அடி உயர கொடிக்கம்பம் சாய்ந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;தவெக கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்தது&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;அதாவது மாநாட்டு திடலில் இன்று 100 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கும் பணி நடந்தது. 100 அடி உயர கொடிக்கம்பத்தை கிரேன் எந்திரம் மூலம் தூக்கி நிறுத்தும் பணி நடந்தது. அப்போது திடீரென 100 அடி உயர கொடிக் கம்பம் திடீரென சாய்ந்து அங்கு நின்றிருந்த காரின் மீது விழுந்தது. இதில் கார் கண்ணாடிகள் உடைந்து அப்பளம் போல் நொறுங்கியது. இதைப்பார்த்ததும் தவெகவினர் அலறியடித்து ஓடினார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;விபத்துக்கு காரணம் என்ன?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;அந்த காரில் ஆட்கள் யாரும் இல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. கொடிக்கம்பம் சாய்ந்து விழுவதை பார்த்ததும் தவெகவினரும் அங்கிருந்து தெறித்து ஓடி விட்டதால் நல்லவேளையாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதிக எடையுள்ள 100 அடி உயர கொடிக்கம்பத்தை துக்கி நிறுத்திய கிரேனின் பெல்ட் அறுந்ததால் விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பாதுகாப்பு முன்னேற்பாடு இல்லை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;மேலும் கொடிக்கம்பத்தை நிறுவதற்கான சரியான அடித்தளமும் அமைக்கவில்லை என கூறப்படுகிறது. எந்த வித பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் இல்லாமல் தூக்கி நிறுத்திய நிலையில் விபத்து நடந்துள்ளது. இவ்வளவு பெரிய கொடிக்கம்பத்தை தூக்கி நிறுத்தும்போது முன்னேற்பாடாக அதனை சுற்றி ஆட்கள் நிற்க, வாகனங்கள் நிற்க தடை விதித்து இருக்க வேண்டும். ஆனால் அந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏதும் செய்யப்படவில்லை.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பாதுகாப்பு ஏற்பாட்டில் கோட்டை விட்டாரா விஜய்?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;நல்லவேளையாக ஆட்கள் மேல் கொடிக்கம்பம் விழாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தவெக மாநாட்டுக்கு பேனர் வைத்த கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இப்போது கொடிக்கம்பமும் சாய்ந்து விழுந்ததது. தவெக மாநாட்டில் ஏறட்டுள்ள பாதுகாப்பு குறைபாடுகளை சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளது. தவெக மாநாட்டுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் விஜய் கோட்டை விட்டாரா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-madurai</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-madurai/reason-for-the-collapse-of-100-foot-flagpole-at-madurai-tvk-conference-articleshow-pc3pnd4"/>
        </item>
        <item>
            <title><![CDATA[மதுரை LIC அலுவலக தீ விபத்தில் திடீர் திருப்பம்.. பெண் மேலாளரை உயிரோடு எரித்து கொன்றது அம்பலம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-madurai/madurai-woman-manager-petrol-attack-murder-lic-office-incident-qelomi6</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-madurai/madurai-woman-manager-petrol-attack-murder-lic-office-incident-qelomi6</guid>
            <pubDate>Tue, 20 Jan 2026 15:43:08 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;மதுரை எல்ஐசி அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் மேலாளர் உயிரிழந்தார். ஆரம்பத்தில் விபத்து என கருதப்பட்ட நிலையில், அவரது மகனின் புகாரால் நடத்தப்பட்ட விசாரணையில், காப்பீட்டு முறைகேட்டை மறைக்க சக ஊழியரே பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றது அம்பலமானது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kfdd50h01aa4bc6d6d08wmeh,imgname-madurai-3-1768902787616.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;மதுரை எல்ஐசி அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் மேலாளர் உயிரிழந்தார். ஆரம்பத்தில் விபத்து என கருதப்பட்ட நிலையில், அவரது மகனின் புகாரால் நடத்தப்பட்ட விசாரணையில், காப்பீட்டு முறைகேட்டை மறைக்க சக ஊழியரே பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றது அம்பலமானது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மதுரை மேலபெருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள எல்ஐசி கிளை அலுவலகத்தின் 2வது தளத்தில் கடந்த டிசம்பர் 17ம் தேதி இரவு 8.15 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது பணியில் இருந்த பெண் முதுநிலை கிளை மேலாளர் கல்யாணி நம்பி (55) தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், உதவி நிர்வாக அதிகாரி ராம கிருஷ்ணன் என்பவருக்கு காலில் தீக்காயம் ஏற்பட்டது. இதனையடுத்து கல்யாணி நம்பி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே தனது தாயின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மகன் திலகர்திடல் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் திலகர்திடல் காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் அலுவலகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேலும் தீக்காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் உதவி மேலாளர் ராமகிருஷ்ணனிடமும் விசாரணை நடத்தினர். அப்போது அவர் விசாரணைக்கு சரியாக ஒத்துழைக்காமல் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்திய போது பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. பெண் மேலாளரை பெட்ரோல் ஊற்றி ராமகிருஷ்ணன் எரித்தது தெரியவந்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விபத்து தொடர்பான காப்பீடு திட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய தொகையில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது ல்யாணி நம்பிக்கு தெரியவந்தது. இந்த முறைகேட்டில் அங்கு உதவி மேலாளராக பணிபுரிந்து வரும் ராமகிருஷ்ணனுக்கு தொடர்பு இருந்துள்ளது. இது தொடர்பாக ராமகிருஷ்ணனிடம், கல்யாணி நம்பி விசாரணை நடத்தி உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ராமகிருஷ்ணன் அலுவலகத்தில் இருந்து சில ஆவணங்களை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த முதுநிலை மேலாளர் கல்யாணி நம்பி அதனை பார்த்து அவரது மகனுக்கு செல்போன் மூலமாக பேசி காவல்துறையினரை வர சொல் என கூறியுள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதனால் ஆத்திரமடைந்த ராம் உடனடியாக பெட்ரோலை கல்யாணி நம்பியின் மீது ஊற்றிவிட்டு கதவை பூட்டிவிட்டு வந்துள்ளார். கல்யாணி நம்பியின் உடலில் பெட்ரோலை ஊற்றி தீப்பற்றியபோது ராமின் காலிலும் பெட்ரோல் பட்டுள்ளது. இதையடுத்து பெண் முதுநிலை மேலாளர் உயிரிழந்த வழக்கு, கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு உதவி நிர்வாக அதிகாரி ராமகிருஷ்ணணை போலீசார் கைது செய்தனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-madurai</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-madurai/madurai-woman-manager-petrol-attack-murder-lic-office-incident-qelomi6"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஒட்டுமொத்த இளைஞர் பட்டாளத்தை வாரி சுருட்டிய தளபதி விஜய்! TVK கூட்டத்தால் அலறும் பிரதான கட்சிகள்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/young-volunteers-gather-at-tvks-madurai-meeting-ui0mb8e</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/young-volunteers-gather-at-tvks-madurai-meeting-ui0mb8e</guid>
            <pubDate>Thu, 21 Aug 2025 08:11:20 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு இன்று மாலை நடைபெறும் நிலையில் அதிகாலையிலேயே குவிந்த தொண்டர்களின் எண்ணிக்கை லட்சத்தைக் கடந்துள்ளதால் தமிழக பிரதான கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k2ednckg7f53n9bx8w691jn3,imgname-mixcollage-12-aug-2025-11-17-am-7867-1754978234990.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு இன்று மாலை நடைபெறும் நிலையில் அதிகாலையிலேயே குவிந்த தொண்டர்களின் எண்ணிக்கை லட்சத்தைக் கடந்துள்ளதால் தமிழக பிரதான கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை மாவட்டம் பாரப்பத்தியில் இன்று மாலை 3 மணிக்கு தொடங்க உள்ளது. மாநாடு மாலை நேரத்தில் தான் தொடங்கும் என்றாலும் நள்ளிரவு முதலே மாநாட்டு திடலை நோக்கி சாரை சாரையாக தொண்டர்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். மாநாட்டில் மொத்தமாக 1.5 லட்சம் தொண்டர்கள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்த இருக்கை எண்ணிக்கையே 1.5 லட்சம் தான் என்றாலும் தற்போதே அங்கு குவிந்துள்ள தொண்டர்களின் எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டும் என்று சொல்லப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;இன்று இறங்குகிறார் எங்க அழகர் வெள்ளை பட்டுத்தி..கம்பீரமாக மதுரை மாநகரை களங்கடிக்க.... #TVKMaduraiManaadu #TVKVijay #ThalapathyVijay #TVK #தமிழகவெற்றிக்கழகம் pic.twitter.com/OAvIPl9DHc&lt;/p&gt;&lt;p&gt;&mdash; Jegan ebi (@jeganebenezar1) August 21, 2025&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள மாநாட்டு திடலுக்கு வரும் வாகனங்கள் சுமார் 3 கிமீ முன்பாகவே நிறுத்தப்பட்டு அங்கிருந்து தொண்டர்கள் நடந்து செல்கின்றனர். மாநாட்டு திடலில் கூடியவர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் இளைஞர்களாக உள்ளனர். தமிழகத்தில் பிரதான கட்சிகளாக திமுக.வும், அதிமுக.வும் உள்ள நிலையில் இக்கட்சிகளில் இருக்கக்கூடிய தொண்டர்களில் பெரும்பாலானோர் சுமார் 40 வயதுக்கு அதிகமானோர் தான். அடுத்த தலைமுறை என்று அழைக்கக்கூடிய 18 வயது முதல் 35 வயது வரையிலான வாக்காளர்களை தங்கள் கட்சிகளில் இணைக்க இரு பிரதான கட்சிகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.&lt;/p&gt;&lt;p&gt;என்றும் எங்கள் தளபதி @TVKVijayHQ ❤! #TVKForTN | #TVKMaduraiManaadupic.twitter.com/I1HgjWbOpV&lt;/p&gt;&lt;p&gt;&mdash; OTFC SALEM (@OTFC_SALEM) August 20, 2025&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆனால் அண்மையில் கட்சி தொடங்கிய விஜய் புதிய தலைமுறை வாக்களர்கள் அனைவரையும் தனது கட்சி பக்கம் வாரி சுருட்டியுள்ளார் என்று சொன்னால் மிகை ஆகாது. அந்த அளவிற்கு கட்சியில் இளைஞர் பட்டாளம் கொத்து கொத்தாக சேர்ந்து வருகிறது. இதனால் அதிமுக, திமுக.வுக்கு தமிழகத்தில் முடிவுரை எழுதப்படுகிறதோ என அக்கட்சி நிர்வாகிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.&lt;/p&gt;&lt;p&gt;I Think Madhurains Easily Beat This Last TVK MAANADU Records #TVKMaduraiManaadu #TVK #TVKVijay pic.twitter.com/T7lsXIfxgn&lt;/p&gt;&lt;p&gt;&mdash; BOSS TVK ❤️❤️ (@BossTVK) August 20, 2025&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதற்கு சான்றாக விஜய் மாநாட்டில் நாற்காலிகள் அமைக்க 5 ஒப்பந்ததாரர்களிடம் ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. ஆனால் சில அரசியல் கட்சிகளின் அழுத்தம் காரணமாக இறுதி நேரத்தில் 4 ஒப்பந்ததாரர்கள் நாற்காலி வழங்காமல் பின்வாங்கினர். இதனைத் தொடர்ந்து கேரளாவில் இருந்து நாற்காலிகள் கொண்டு வரப்பட்டு மாநாடு நடைபெற உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;வாகை சூடும் வரலாறு &ndash; மக்கள் பேரெழுச்சியோடு!  #TVKMaduraiManaadu #TVKVetriMaanadu #TVKMadurai #TVKMaanadu2PointO pic.twitter.com/lqeoymXzk9&lt;/p&gt;&lt;p&gt;&mdash; Thamizhagathin Vetri Kural (@TVettriKural) August 21, 2025&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-madurai</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/young-volunteers-gather-at-tvks-madurai-meeting-ui0mb8e"/>
        </item>
        <item>
            <title><![CDATA[எந்த தலைவருக்காவது இப்படி கூட்டம் வந்ததுண்டா? வெற்றி நிச்சயம்! அரங்கத்தை தெறிக்கவிட்ட ஆனந்த்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-madurai/n-anand-says-no-leader-has-drawn-such-a-massive-crowd-at-tvk-conference-articleshow-y3pugrq</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-madurai/n-anand-says-no-leader-has-drawn-such-a-massive-crowd-at-tvk-conference-articleshow-y3pugrq</guid>
            <pubDate>Thu, 21 Aug 2025 16:58:18 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;எந்த தலைவருக்கும் இவ்வளவு அதிகமான கூட்டம் வந்ததில்லை என்று தவெக மாநாட்டில் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k3665rjg6r6x88mh6pjm2q0j,imgname-pussy-anand-1755775689296.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;N. Anand's Speech At The TVK Conference: தவெகவின் 2வது மாநில மாநாடு மதுரையில் நடந்து வருகிறது. சுமார் 2 லட்சம் தொண்டர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர். ''உங்கள் விஜய் உங்கள் விஜய், உயிரென வரேன் நான்..'' என்று விஜய் பாடிய பாடல் பின்னணியில் ஓலிக்க தவெக தலைவர் விஜய் தவெக தொண்டர்கள் ஆர்ப்பரிப்புக்கு மத்தியில் மேடையேறினார். மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டு இருந்த ரேம்ப் வாக்கில் நடந்து சென்று தொண்டர்களை நோக்கி விஜய் கையசைததார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சப்தமில்லாமல் சாதனை செய்த விஜய்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இதனைத் தொடர்ந்து பேசிய தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மதுரை மாநாடு வெற்றி பெற்றதாக அறிவித்தார். மாநாட்டில் பேசிய அவர் கூறுகையில், ''உலக தமிழர்களின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் வீற்றிருக்கும் வருங்கால முதல்வர் தளபதி விஜய் அவர்களே. ஓராண்டுக்கு முன்பே விக்கிரவாண்டி வி.சாலையில் முதல் மாநாடு நடத்தினோம். அன்று நம் மனதில் இருந்த எண்ணங்களை ஆசைகளை நம் தலைவரோடு பகிர்ந்து கொண்டோம். நம் தமிழர் அன்று ஒரு கட்சி அல்ல; ஒரு புரட்சியை தொடங்கினார். இன்று கோடிக்கணக்கான மக்கள் படையே இவரோடு நிற்கிறது. இதற்கு பெயர் தான் சப்தமில்லாமல் சாதனை செய்வது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;விஜய் தாய்மார்களின் செல்லப்பிள்ளை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இன்று மதுரை மண்ணில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாட்டில் நிற்கிறோம். இத்தனை லட்சம் மக்களை பார்க்கும்போது ஒரே வார்த்தை தான் தோன்றுகிறது. வெற்றி.. வெற்றி.. வெற்றி.. இந்த மதுரை மாநாடும் மாபெரும் வெற்றி அடைந்துள்ளது. சில நல்லவர்கள் ஒரு கேள்வி கேட்டார்கள். வட தமிழ்நாட்டில் கூட்டம் வந்தது. தென் தமிழ்நாட்டில் கூட்டம் வருமா? என்றார்கள். நான் திருப்பி கேட்டேன். தம்பி வருவது யார் தெரியுமா? தாய்மார்களின் செல்லப்பிள்ளை.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;எந்த தலைவருக்கும் இந்த கூட்டம் வராது&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;தமிழகமே அதிரும் தெரியுமா? வேறு எந்த தலைவருக்கும் மூன்று நாட்களுக்கு முன்பே குடும்பம் குடும்பமாய் கூட்டம் வராது. தலைவா உங்களுக்கு மட்டும் தான் வரும். நீங்கள் (விஜய்) இன்று அரசியல் ஆளுமை. நாளைய முதல்வர். உங்கள் பின்னால் நிற்பது பாசத்துக்குரிய கட்டுப்படும் ராணுவ படை. இன்றைய மாநாடு நாம் அடுத்து செய்யப்போகும் வேலைகளுக்கு வழிகாட்டியாக அமையும். தலைவரின் ஆணைகளை நாம் நிறைவேற்றுவோம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;வேகமாக வேலை பார்க்க வேண்டும்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;நாம் இன்னும் வேகமாக வேலை பார்க்க வேண்டும். வேர்வை நதியில் குளிக்க வேண்டும். மக்கள் மனங்களை வெல்ல வேண்டும். நம் லட்சியம் ஒன்று தான். இந்த மண்ணும், மக்களும் நல்ல முறையில் வாழ வேண்டும். அதற்கு நம் தலைவர் தான் நாட்டை ஆள வேன்டும். இந்த மாநாடு நம் வௌவான எதிர்காலத்துக்கு ஒரு அடித்தளத்தை அமைக்கும். இந்த மாநாட்டுக்காக அயராது உழைத்த கட்சியினர் அனைவருக்கும் நன்றி'' என்றார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-madurai</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-madurai/n-anand-says-no-leader-has-drawn-such-a-massive-crowd-at-tvk-conference-articleshow-y3pugrq"/>
        </item>
    </channel>
</rss>
