<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes"?>
<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Thu, 04 Dec 2025 13:08:23 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss/tamilnadu-krishnakiri" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[Suicide: ஆண்டு தேர்வில் குறைவான மதிப்பெண்; பெற்றோர் கண்டித்ததால் 10ம் வகுப்பு மாணவன் விபரீத முடிவு]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/10th-standard-student-commit-suicide-in-tirupathur-district-vel-sewxr4</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/10th-standard-student-commit-suicide-in-tirupathur-district-vel-sewxr4</guid>
            <pubDate>Tue, 11 Jun 2024 16:41:28 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளி முழு ஆண்டு தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதால் பெற்றோர் கண்டித்த நிலையில், மனம் உடைந்த 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01hzs197bn8psfsqyvy1z90ga0,imgname-mixcollage-07-jun-2024-03-12-pm-8346.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர்கள் காந்தி, சைலா தம்பதி. இவர்களுக்கு 2 மகன்கள், 1 மகள் என மொத்தம் 3 பிள்ளைகள் இருந்துள்ளனர். கடைசி மகனான யுவராஜ் கே.பந்தரப்பள்ளி பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு 10ம் வகுப்புக்கு தேர்ச்ச பெற்றுள்ளார். தமிழகம் முழுவதும் நேற்றைய தினம் தான் கோடை விடுமுறை நிறைவு பெற்று பள்ளிகள் திறக்கப்பட்டன.&lt;/p&gt; &lt;p&gt;பாஜகவில் இருப்பவர்கள் குற்ற பின்னணி உள்ளவர்களா? தமிழிசைக்கு திருச்சி சூர்யா நேரடி சவால்&lt;/p&gt; &lt;p&gt;அதன்படி கே.பந்தரப்பள்ளி அரசுப் பள்ளியும் நேற்றைய தினம் தான் திறக்கப்பட்டது. இதனிடையே 9ம் வகுப்பு வரையிலான முழுஆண்டு தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்களை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். அதில் யுவராஜ் 9ம் வகுப்பு தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றிருந்ததாகவும், இதன் காரணமாக அவனது பெற்றோர் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு, அவர்களிடம் மாணவனின் மதிப்பெண் குறித்து முறையிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.&lt;/p&gt; &lt;p&gt;இதனைத் தொடர்ந்து வீட்டிற்கு வந்த யுவராஜின் பெற்றோர் மதிப்பெண்களை குறிப்பிட்டு மாணவனை கண்டித்துள்ளனர். இதனால் மனம் உடைந்த சிறுவன் வீட்டில் இருந்த விசத்தை எடுத்து குடித்துள்ளான். இதனை அறிந்த பெற்றோர் உடனடியாக மாணவனை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான்.&lt;/p&gt; &lt;p&gt;Breaking: புதுவையில் கழிவறை வழியாக பரவிய விஷ வாயு; ஒரே குடும்பத்தில் 3 பெண்கள் பலி - இருவர் கவலைக்கிடம்&lt;/p&gt; &lt;p&gt;அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-krishnakiri</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/10th-standard-student-commit-suicide-in-tirupathur-district-vel-sewxr4"/>
        </item>
        <item>
            <title><![CDATA[சினிமா காட்சிகளை மிஞ்சிய விபத்து சம்பவம்; அடுத்தடுத்து 12 வாகனங்கள் மோதியதில் 5 பேர் பலி]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-krishnakiri/5-persons-killed-road-accident-at-12-vehicle-met-accident-in-krishnagiri-vel-siscjn</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-krishnakiri/5-persons-killed-road-accident-at-12-vehicle-met-accident-in-krishnagiri-vel-siscjn</guid>
            <pubDate>Sun, 25 Aug 2024 23:27:23 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அடுத்தடுத்து 12 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j525w0khqdnkvn8qcd0ekdzx,imgname-car-accident-7.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேரண்டப்பள்ளி வனப்பகுதி அருகே சென்னை, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இரு மாநிலங்களை இணைக்கக் கூடிய தேசிய நெடுஞ்சாலை என்பதால் இந்த சாலையில் எப்பொழுதும் வாகனங்களின் நெரிசல் அதிகமாகவே காணப்படும். அந்த வகையில் இன்றும் வழக்கம் போல் இந்த பாதையில் வாகனங்கள் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தன.&lt;/p&gt; &lt;p&gt;பாகிஸ்தானை சொந்த மண்ணில் சம்பவம் செய்த வங்கதேசம்; 10 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றி&lt;/p&gt; &lt;p&gt;இதனிடையே பேரண்டப்பள்ளி வனப்பகுதி அருகே புதிதாக மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், அப்பகுதியில் வாகனங்களை வேகத்தை குறைக்கும் விதமாக தற்காலிக வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. அப்போது அவ்வழியாக வந்த லாரி ஒன்று வேகத்தடையை கடப்பதற்காக அதன் வேகம் குறைக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;கிருஷ்ணகிரியில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு; காதலுடன் சிறுமி விபரீத முடிவு&lt;/p&gt; &lt;p&gt;இதனை சற்றும் எதிர் பாராமல் பின்னால் வந்த வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக லாரியின் மீது மோதி விபத்தில் சிக்கின. அதன்படி 8 கார்கள், 2 லாரிகள், 1 அரசுப் பேருந்து உள்பட 12 வாகனங்கள் விபத்தில் சிக்கி சேதமடைந்தன. இந்த விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்த நிலையில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விபத்து காரணமாக சென்னை, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-krishnakiri</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-krishnakiri/5-persons-killed-road-accident-at-12-vehicle-met-accident-in-krishnagiri-vel-siscjn"/>
        </item>
        <item>
            <title><![CDATA[கிருஷ்ணகிரி: 3 மாதம் மழை இல்லை.. நீண்ட நாட்களுக்கு பிறகு பெய்த மழை.. கிடா வெட்டி கிராம மக்கள் வழிபாடு..]]></title>
            <link>https://tamil.asianetnews.com/video/video/villagers-slaughtered-more-than-twenty-goats-after-long-days-of-rain-near-shoolagiri-krishnagiri-rag-scx8ma</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/video/video/villagers-slaughtered-more-than-twenty-goats-after-long-days-of-rain-near-shoolagiri-krishnagiri-rag-scx8ma</guid>
            <pubDate>Fri, 03 May 2024 23:28:59 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கிருஷ்ணகிரி, சூளகிரி அருகே நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்ததால் இருபதுக்கு மேற்பட்ட ஆடுகளை வெட்டி கிராம மக்கள் வழிபாடு செய்தனர்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://geo.dailymotion.com/player/x1tbu.html?video=k1weKM6DqQDjrzAAG84" medium="video" height="768" width="1024"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த கொட்டாவூர் கிராமத்தில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். &amp;nbsp;இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களாக பகுதியில் மழை இல்லாததால் கிராமத்தில் கடும் வறட்சி நிலவியது. இதை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக இப்பகுதியில் கன மழை பெய்ததால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனத். மேலும் நீண்ட நாடகளுக்கு பிறகு கனமழை பெய்ததை தொடர்ந்து ஊரில் உள்ள முனீஸ்வரன் சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து கிராமத்தில் அனைத்து குடும்பத்தினரும் 20க்கும் மேற்பட்ட ஆடுகளை வெட்டி வழிபாடு செய்தனர். கனமழை பெய்ததை &amp;nbsp;கிராம மக்கள் ஆடு வெட்டி சிறப்பாக கொண்டாடிய இந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-krishnakiri</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/video/video/villagers-slaughtered-more-than-twenty-goats-after-long-days-of-rain-near-shoolagiri-krishnagiri-rag-scx8ma"/>
        </item>
        <item>
            <title><![CDATA[வரலாறு காணாத மழை; நாளை Dec 3 பள்ளிகளுக்கு விடுமுறை - எந்தெந்த மாவட்டத்தில்?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/tamil-nadu-heavy-rain-cuddalore-declared-leave-for-schools-ans-snvenv</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/tamil-nadu-heavy-rain-cuddalore-declared-leave-for-schools-ans-snvenv</guid>
            <pubDate>Mon, 02 Dec 2024 19:58:24 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Tamil Nadu Rains : கிருஷ்ணகிரியில் உள்ள ஊத்தங்கரையில் கடந்த 300 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த முறை கனமழை பெய்து வருகின்றது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01je3v680r3b8nx86sz4jps656,imgname-schools-leave.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கட்டுக்கடங்காத மழையால் தமிழகத்தை கலங்கடித்து வருகின்றது &quot;ஃபெஞ்சல் புயல்&quot; என்றால் அது மிகையல்ல. கடந்த சில நாட்களாகவே பெரிய அளவில் தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்து வந்தது. இப்போது சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழையின் தாக்கம் சற்று குறைந்துள்ள நிலையில், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த முறை வடகிழக்கு பருவமழையானது சற்று முன்னதாகவே தமிழகத்தில் தொடங்கிய நிலையில், தற்பொழுது அநேக இடங்களில் அதிக கனத்த மழை பெய்து வருகிறது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இந்த சூழலில் தமிழக வெதர்மேன் அண்மையில் வெளியிட்ட ஒரு தகவல்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கின்ற ஊத்தங்கரையில் மட்டும் சுமார் 500 மில்லி மீட்டர் மழை பெய்து இருக்கிறது. அதேபோல தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆரூர் என்கின்ற இடத்தில் சுமார் 330 மில்லி மீட்டர் மழை பெய்திருக்கிறது. கிட்டத்தட்ட 300 ஆண்டுகளுக்கு பிறகு இப்படிப்பட்ட ஒரு கன மழை அங்கு பெய்திருப்பதாக அவர் சுட்டிக் காட்டி இருக்கிறார். தொடர்ச்சியாக ஊத்தங்கரையில் உள்ள பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கி வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;இன்றும் புரட்டிப்போட காத்திருக்கும் ஃபெஞ்சல் புயல் சின்னம்.! இத்தனை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்டா.?&lt;/strong&gt;&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இந்நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதால் தொடர்ச்சியாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டத்தில் நாளை டிசம்பர் மூன்றாம் தேதி பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர்கள் அறிவித்திருக்கின்றனர். அது மட்டும் இல்லாமல் புதுவை மற்றும் திருவண்ணாமலையில் உள்ள பள்ளிகளுக்கும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை, பேச்சம்பள்ளி வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;தமிழகத்தை பொறுத்தவரை ஓரிரு இடங்களை தவிர பரவலாக மழை சற்று குறைந்து வரும் நிலையில், நாளை டிசம்பர் மூன்றாம் தேதி பெரம்பலூர், திருப்பத்தூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமானது முதல் இடியுடன் கூடிய கனத்த மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;வெள்ள பாதிப்பு; குடும்ப அட்டை உள்ள அனைவருக்கும் 5000 ரூபாய் - முதல்வர் அறிவிப்பு!&lt;/strong&gt;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-krishnakiri</category>
            <dc:creator>Ansgar R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/tamil-nadu-heavy-rain-cuddalore-declared-leave-for-schools-ans-snvenv"/>
        </item>
        <item>
            <title><![CDATA[தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியை உடனே தடை செய்யுங்க..! களத்தில் இறங்கிய வேல்முருகன்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-krishnakiri/velmurugan-demands-ban-on-bigg-boss-show-in-tamil-nadu-6vae28f</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-krishnakiri/velmurugan-demands-ban-on-bigg-boss-show-in-tamil-nadu-6vae28f</guid>
            <pubDate>Sat, 11 Oct 2025 15:36:19 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை உடனடியாக தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k79ba47n51gv50tmw9taw6n1,imgname-whatsapp-image-2025-10-11-at-15.27.42-1760176705780.jpeg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை உடனடியாக தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சியில் கடந்த வாரம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி, இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தினந்தோறும் புது புது போட்டிகள், சண்டைகள் போன்ற நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய கோரி தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அதிரடியாக களத்தில் இறங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;தமிழர் பண்பாடு என்பது, நெஞ்சில் நாணம், வாழ்வில் ஒழுக்கம், நாவிலே நெறி என்று, பன்னெடுங்காலமாக வடிவெடுத்த ஒரு நாகரிகச் செல்வம். அந்த மகத்தான செல்வத்தை, இன்று &lsquo;பொழுதுபோக்கு&rsquo; என்றப் பெயரில் அழிக்க முயலும் ஒரு வணிகப் பாம்பு தான், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் (Bigg Boss) நிகழ்ச்சி. தமிழர் மரபையும் மதிப்பையும் கேலி செய்து, சீரழிக்கும் அளவுக்குச் சென்றுவிட்டது. இது உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டிய சமூகச் சீரழிவு.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழர் பண்பாட்டையும், குடும்ப அமைப்பையும் குலைக்கும் நச்சு நிகழ்ச்சி இது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் தினசரி அத்தியாயங்கள் சண்டை, குரோதம், பொய், துரோகம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளின் களமாகவே இருக்கின்றன. இவை எதுவுமே தமிழ்ச் சமூகத்தின் பாரம்பரிய அடையாளங்கள் அல்ல. தமிழர் குடும்பம் என்பது 'அன்பு, அரவணைப்பு, விட்டுக்கொடுத்தல்' ஆகிய விழுமியங்களுடன் வாழும் ஓர் உன்னதமான அமைப்பு.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;ஆனால், இந்த நிகழ்ச்சி இளைஞர்களுக்கு வெறுப்பையும், வன்முறையையும், தனிமனித மோதல்களையும் மட்டுமே வாழும் முறையாகக் கற்றுக்கொடுக்கிறது. இது குடும்ப நல்லிணக்கத்திற்கும், சமூக ஒழுக்கத்திற்கும் எதிரானத் தீவிரமான பண்பாட்டு அச்சுறுத்தல் ஆகும். தமிழ் இனத்தின் தொன்மையை மறக்கடிக்கும் இந்தப் போக்கு கண்டிக்கத்தக்கது&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்தியாவின் பல மாநிலங்களிலும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள், விதிமீறல்கள், மற்றும் சமூக எதிர்ப்புகளை எழுப்பியுள்ளது. இந்த நிகழ்ச்சியால், சட்ட மீறல், கலாச்சார வீழ்ச்சி, சமூக எதிர்ப்பு ஆகியவையே பின்தொடர்கின்றன. இது ஒரு நிகழ்ச்சி அல்ல. இது ஒரு வணிக நோயாக மாறி, ஒவ்வொரு மாநிலத்திலும், ஒழுக்கத்தை ஒட்டுமொத்தமாகக் குலைக்கிறது. இது, இளைஞர்களின் எதிர்காலத்தைக் கெடுக்கும் ஊடக நஞ்சு. எதிர்காலத் தலைமுறைக்கு அறிவை வளர்க்க வேண்டிய நேரத்தில், பிக் பாஸ் நிகழ்ச்சி அனைவரின் மனநிலையையும் மாசுபடுத்துகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வன்முறை, வஞ்சகம் ஆகியவற்றை இயல்பாக்கி, சமூகத்திற்கு கேடான வார்த்தைகளை பயன்படுத்தி, அதை ஒரு பொழுதுபோக்காகக் காட்டுகிறது. இது கல்விக்கும், சமூக சேவைக்கும், ஆரோக்கியமான உளவியலுக்கும் எதிரான ஒரு ஊடக உளவியல் தாக்குதலே ஆகும். வர்த்தக நலனுக்காக மக்களை ஏமாற்றும் இந்த நிகழ்ச்சி,&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;பொது மக்களின் நலனுக்கானதல்ல, முழுவதுமாகக் கார்ப்பரேட் நிறுவனங்களின் பண வணிக நலனுக்காகவே வடிவமைக்கப்பட்ட ஒன்று. இதில் பங்கேற்கும் சிலரை சண்டை, அவதூறுகள் மூலம் பிரபலமாக்கி, அதன் மூலம் வரும் சர்ச்சைகளை டிவி சேனல்கள் பணமாக்குகின்றன. &ldquo;பொழுதுபோக்கு&rdquo; என்ற பெயரில் நடக்கும் இந்த வணிக ஏமாற்றத்தை, மக்கள் விழித்துணர்ந்து நிராகரிக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழக அரசு, தமிழ் மரபையும் , எதிர்காலச் சந்ததியையும், காக்கும் கடமையின் அடிப்படையில், உடனடியாக 'பிக் பாஸ்' நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்றும்,&lt;/p&gt;&lt;p&gt;தமிழ் ஊடகங்களில் பண்பாட்டு மதிப்புகள் நிலைத்திருக்க, 'Cable Television Regulation Act, 1995' மற்றும் 'Program Code' விதிமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்படுகிறதா? என்பதை, உறுதி செய்ய வேண்டும் என்றும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துவதாக அந்த அறிக்கையில் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-krishnakiri</category>
            <dc:creator>Ajmal Khan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-krishnakiri/velmurugan-demands-ban-on-bigg-boss-show-in-tamil-nadu-6vae28f"/>
        </item>
        <item>
            <title><![CDATA[மது மற்றும் சூதாட்டத்திற்கு அடிமையான மகனை தந்தையே கொன்று தொங்கவிட்ட கொடூரம் - ஓசூரில் பரபரப்பு]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-krishnakiri/young-man-killed-by-own-family-members-for-continuously-loose-money-at-gambling-in-hosur-vel-sdhce6</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-krishnakiri/young-man-killed-by-own-family-members-for-continuously-loose-money-at-gambling-in-hosur-vel-sdhce6</guid>
            <pubDate>Tue, 14 May 2024 20:02:30 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ஓசூரில் மது மற்றும் சூதாட்டத்திற்கு அடிமையான மகனை தந்தையே தனது உறவினர்கள் உதவியுடன் கொன்று தூக்கில் தொங்க விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01hxvr8ca38rkpw2n343arytzx,imgname-mixcollage-14-may-2024-08-00-pm-6113.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே அச்செட்டிப் பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பிரேம்நாத். இவருடைய மகன் ஜெய்தீப் (வயது 24) திருமணமாகாதவர். நேற்று &amp;nbsp;வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக 12ம் தேதி தந்தை மத்திகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் தற்கொலை வழக்காக பதிவு செய்து உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.&lt;/p&gt; &lt;p&gt;ஆள் பற்றாக்குறை, செலவு அதிகம்; ராட்சத ட்ரோன்களை களத்தில் இறக்கிய மயிலாடுதுறை விவசாயிகள்&lt;/p&gt; &lt;p&gt;உடற்கூறு ஆய்வில் காவல் துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து பிரேம் நாத்திடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் இறந்த ஜெய்தீப் சீட்டாட்டம்(கேம்லிங்) மற்றும் மதுவுக்கு அடிமையாகி தொடர்ந்து பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்ததார். மேலும் அடிக்கடி பெங்களூரு சென்று சூதாட்டத்தில் ஈடுபட்டார். இதனால் சுமார் ஐந்து லட்சம் வரை நாங்கள் செலவு செய்துள்ளோம்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;புகார் அளித்த நபர்களை குடும்பத்தோடு காலி செய்ய துடிக்கும் கஞ்சா கும்பல் - கோவையில் பரபரப்பு&lt;/p&gt; &lt;p&gt;அப்படி இருந்தும் தொடர்ந்து போதையில் எங்களை அடிக்கடி துன்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்ததால் எங்களுக்கு என்ன செய்வது என தெரியாமல் கொலை நாங்களே செய்ததாக காவல் நிலையத்தில் வாக்குமூலம் அளித்தார். இதனை அடுத்து கொலையில் தந்தைக்கு உதவியாக இருந்த தம்பி யஸ்வந்த் (19) மற்றும் அவருடைய தாய் மாமன் மஞ்சுநாத் ஆகிய மூவரும் திட்டம் தீட்டி கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டதாக குற்றத்தை ஒப்புக் கொண்டதாக தெரிவித்ததன் அடிப்படையில் காவல் துறையினர் கொலை வழக்காக மாற்றியுள்ளனர்.&lt;/p&gt; &lt;p&gt;இதை அடுத்து மூவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறைச்சாலைக்கு அனுப்பி வைத்தனர். மதுவுக்கும், சூதாட்டத்திற்கும் அடிமையாகிய மகனை கொலை செய்த சம்பவம் ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-krishnakiri</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-krishnakiri/young-man-killed-by-own-family-members-for-continuously-loose-money-at-gambling-in-hosur-vel-sdhce6"/>
        </item>
        <item>
            <title><![CDATA[துணிச்சலான பணிக்காக தமிழக அரசின் விருது பெற்ற பிரபல வன கால்நடை மருத்துவர் தற்கொலை! நடந்தது என்ன?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/forest-department-veterinarian-doctor-suicide-police-investigation-tvk-silllp</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/forest-department-veterinarian-doctor-suicide-police-investigation-tvk-silllp</guid>
            <pubDate>Thu, 22 Aug 2024 08:04:49 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தமிழக அரசு சார்பில் துணிச்சலான பணிக்காக விருதை பெற்ற &amp;nbsp;வன கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்த பிரகாஷ், தனது அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j5vymej5v2gy6wdvdzb29y6s,imgname-suicide.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சேலம் மாவட்டம் கன்னங்குறிஞ்சியை சேர்ந்தவர் பிரகாஷ் (40). இவர் ஓசூரில் வன கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்தார். மனைவி கவிதாவை (37) 15 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் திருநெல்வேலி மாவட்ட பத்திரப்பதிவுத்துறை பதிவாளராக உள்ளார். இந்த தம்பதிக்கு 6 வயதில் மகள் உள்ளார். மனைவி மற்றும் மகள் திருநெல்வேலியில் வசித்து வருகின்றனர். பிரகாஷ் மட்டும் ஓசூர் மாருதி நகரிலுள்ள அப்பார்ட்மென்ட்டில் தனியாக வசித்து வந்தார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இந்நிலையில், நேற்று &amp;nbsp;காலை வீட்டில் தனியாக இருந்த பிரகாஷ், மனைவி கவிதாவிற்கு போன் செய்து பேசிவிட்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மனைவி உடனே அப்பார்ட்மென்ட் உரிமையாளருக்கு தெரிவித்தார்.&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&lt;strong&gt;School Colleges Holiday: ஹேப்பி நியூஸ்! நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளியான அறிவிப்பு!&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;உடனே சென்று பார்த்த போது படுக்கை அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பிரகாஷ் &amp;nbsp;உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&amp;nbsp;&lt;strong&gt;Power Shutdown in Chennai: சென்னை மக்களே முக்கிய செய்தி.. இன்று எந்தெந்த பகுதிகளில் மின்தடை தெரியுமா?&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;தற்கொலை செய்து கொண்ட மருத்துவர் பிரகாஷ், வனப்பகுதியில் இறக்கும் யானை மற்றும் பிற விலங்குகளுக்கு பிரேத பரிசோதனை செய்வது, காயமடையும் வன விலங்குகளுக்கு சிகிச்சை அளிப்பது போன்ற பணிகளை திறன்பட செய்து வந்தார். தமிழக அரசு சார்பில் துணிச்சலான பணிக்காக விருதை பெற்றவர். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.&amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-krishnakiri</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/forest-department-veterinarian-doctor-suicide-police-investigation-tvk-silllp"/>
        </item>
        <item>
            <title><![CDATA[கிருஷ்ணகிரியில் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்! பெண்களைப் பாதுகாப்பதில் அரசு படுதோல்வி! அன்புமணி! ]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/young-woman-gang-raped-in-krishnagiri-anbumani-slams-dmk-government-tvk-ss2ocw</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/young-woman-gang-raped-in-krishnagiri-anbumani-slams-dmk-government-tvk-ss2ocw</guid>
            <pubDate>Sat, 22 Feb 2025 12:24:04 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கஞ்சா போதையில் நடமாடும் மனிதர்கள் அனைவரும் மிருகங்கள்; அவர்கள் எந்த நேரமும் வெடித்து பேரழிவை ஏற்படுத்தக் காத்திருக்கும் வெடிகுண்டுக்கு ஒப்பானவர்கள்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j43wm26ycnpctrwcwb484zs7,imgname-anbumani-ramadoss.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழகத்தில் கடந்த சில நாட்களில் மட்டும் பாலியல் பலாத்காரம் சம்பவங்கள் கட்டுக்கடங்காமல் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுதொடர்பாக பாமக தலைவர் &lt;strong&gt;அன்புமணி ராமதாஸ்&lt;/strong&gt; வெளியிட்டுள்ள அறிக்கையில்: கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகில் உள்ள மலைக்கு தமது உறவினருடன் சென்ற &amp;nbsp;திருப்பத்தூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், &amp;nbsp;கஞ்சா போதையில் இருந்த &amp;nbsp;4 மனித மிருகங்களால் கத்தி முறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறார். அவரிடமிருந்து நகை, பணம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும், அதைத் தடுக்க தமிழக அரசும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்காததும் கண்டிக்கத்தக்கவை.&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&lt;strong&gt;தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எங்கே செல்கிறது.! கைகட்டி வேடிக்கை பார்ப்பதா.? அன்புமணி ஆவேசம்&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுகளை நடந்துள்ளன. பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் அதிகரித்து வருவது குறித்து தமிழகத்தின் அனைத்துத் தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. ஆனால், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எந்த நடவடிக்கையும் இன்று வரை எடுக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் &amp;nbsp;வெளியில் நடமாடுவதற்கே அஞ்சும் நிலை தான் நிலவுகிறது. இதற்காக தமிழக ஆட்சியாளர்கள் தலைகுனிய வேண்டும்.&lt;/p&gt; &lt;p&gt;பெண்களை பாதுகாக்க &amp;nbsp;எந்த நடவடிக்கையும் &amp;nbsp;எடுக்காத தமிழக அரசு, &amp;nbsp;பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்கிறோம் என்பதையே மீண்டும் , மீண்டும் கூறி வருகிறது. &amp;nbsp;கிருஷ்ணகிரி &amp;nbsp;கொடூரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் கூட துப்பாக்கியால் சுட்டு &amp;nbsp;பிடிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அதுமட்டும் அரசின் கடமை அல்ல... பெண்களை சீண்டினால் கடுமையான நடவடிக்கை பாயும் என்ற சட்டப்படியான அச்சத்தை உருவாக்கி பெண்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டியது தான் அரசின் முதல் கடமை என்பதை தமிழக ஆட்சியாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.&lt;/p&gt; &lt;p&gt;தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதற்கு இரு அம்சங்கள் தான் முதன்மைக் காரணம் ஆகும். அவற்றில் முதலாவது குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு ஆட்சியாளர்களின் மறைமுக ஆதரவு இருப்பது. இரண்டாவது, தமிழ்நாடு முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் கட்டுப்பாடின்றி தொடர்வது ஆகும். கஞ்சா போதையில் நடமாடும் மனிதர்கள் அனைவரும் மிருகங்கள்; அவர்கள் எந்த நேரமும் வெடித்து பேரழிவை ஏற்படுத்தக் காத்திருக்கும் வெடிகுண்டுக்கு ஒப்பானவர்கள் என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்து கொண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்து பெண்களை பாதுகாப்பதில் தமிழக அரசு தோல்வியடைந்து விட்டது.&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&lt;strong&gt;நாதகவில் இருந்து விலகினார் காளியம்மாள்? வைரலாகும் அழைப்பிதழ்! எந்த கட்சியில் இணைகிறார்?&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;தமிழக அரசு இனியாவது விழித்துக் கொண்டு தமிழ்நாட்டில் பெண்களுக்கு ஆபத்தான சூழல் நிலவுவதைப் போக்க வேண்டும். &amp;nbsp;அதற்காக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை &amp;nbsp;ஒழிக்கவும், &amp;nbsp;கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என அன்புமணி கூறியுள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-krishnakiri</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/young-woman-gang-raped-in-krishnagiri-anbumani-slams-dmk-government-tvk-ss2ocw"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Suicide: தீராத கடன் தொல்லை; கிருஷ்ணகிரியில் தாய், 2 மகள்கள் தூக்கிட்டு தற்கொலை]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-krishnakiri/3-people-in-a-single-family-hanged-death-in-krishnagiri-district-vel-sgvtse</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-krishnakiri/3-people-in-a-single-family-hanged-death-in-krishnagiri-district-vel-sgvtse</guid>
            <pubDate>Fri, 19 Jul 2024 23:25:26 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடன் தொல்லையால் தாய், 2 மகள்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j0fvrb6cd34j4y22ndwtf21p,imgname-JEE-student-commits-suicide-1718519344332.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியைச் சேர்நதவர்கள் ரமேஷ், உஷா தம்பதி. ரமேஷ் கல் உடைக்கும் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு நிவேதா, ஷர்மிளா என இரு மகள்கள் இருந்தனர். மகள்கள் இருவரும் அருகில் உள்ள அரசுப் பள்ளியில் 12, 8ம் வகுப்பு படித்து வந்தனர். ரமேஷ்க்கு போதிய வருமானம் இல்லாத நிலையில், கடன் பெற்று குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து வந்துள்ளனர்.&lt;/p&gt; &lt;p&gt;கடலூரை அதிர வைத்த 3 பேர் கொலை சம்பவம்; தாயின் தற்கொலைக்கு காத்திருந்து பழி தீர்த்த இளைஞர்&lt;/p&gt; &lt;p&gt;இதனிடையே இன்றைய தினம் நகைக்கடனுக்கான தவணைத் தொகையை செலுத்த கடைசி தேதி என்று சொல்லப்படுகிறது. இதற்காக ரமேஷ்க்கு ரூ.5 ஆயிரம் தேவைப்பட்ட நிலையில் வெளியூரில் வசித்து வரும் தனது சசோதனை தொடர்பு கொண்டு ரமேஷ் பண உதவி கேட்டுள்ளார். தொலைபேசியில் சகோதரர்கள் இருவரும் செல்போனில் பேசிக் கொண்டிருந்த சூழலில் ரமேஷ்ன் வீட்டில் வழக்கத்திற்கு மாறாக சண்டையிடும் சத்தம் கேட்டுள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;Egmore Railway Station: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு? உச்சக்கட்ட பதற்றத்தை ஏற்படுத்திய கடிதம்&lt;/p&gt; &lt;p&gt;செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பா ரமேஷ்ன் சசோதரர், தனது தந்தைக்கு தகவல் சொல்லி ராமேஷின் வீட்டிற்கு சென்று பார்க்க சொல்லி உள்ளார். அதன் அடிப்படையில் &amp;nbsp;ரமேஷின் வீட்டிற்கு வந்த அவரது தந்தை வீட்டிற்குள் சென்று பார்த்தபோது உஷா மற்றும் இரு மகள்கள் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளனர். இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் 3 உடல்களையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மரு்ததுவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.&lt;/p&gt; &lt;p&gt;மேலும் வீட்டை விட்டு வெளியேறிய ரமேஷை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-krishnakiri</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-krishnakiri/3-people-in-a-single-family-hanged-death-in-krishnagiri-district-vel-sgvtse"/>
        </item>
        <item>
            <title><![CDATA[கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி..! விபத்தில் மத்தூர் ஏட்டம்மா சம்பவ இடத்திலயே ப** லி]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-krishnakiri/female-police-officer-dies-in-road-accident-articleshow-ib09f09</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-krishnakiri/female-police-officer-dies-in-road-accident-articleshow-ib09f09</guid>
            <pubDate>Sat, 11 Oct 2025 15:06:57 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Krishnagiri Accident: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் காவல் நிலைய முதன்மை காவலர் ரமாமணி, ஸ்கூட்டியில் சென்றபோது அதிவேகமாக வந்த பைக் மோதி படுகாயமடைந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k79a2mwehcvz2y44vmb5fntz,imgname-whatsapp-image-2025-10-11-at-15.05.39-1760175412110.jpeg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த மத்தூர் காவல் நிலையத்தில் முதன்மை காவலர் ரமாமணி என்பவர் பணியாற்றி வந்தார். வாரந்தோறும் சனிக்கிழமை தொடரும் நடைபெறும் கவாத்து பயிற்சி வகுப்புக்கு சென்றுவிட்டு மீண்டும் மத்தூர் நோக்கி ஸ்கூட்டியில் சாலையின் இடதுபுறத்தில் இருந்து வலதுபுறமாக திரும்பிக் கொண்டிருந்தார்.&lt;/p&gt;&lt;p&gt;அப்போது பெங்களூருவில் இருந்து விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த இளைஞர் பெண் காவலர் ஓட்டி வந்த ஸ்கூட்டியில் பயங்கரமாக மோதியது. இதில் பெண் காவலர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். பின்னர் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.&lt;/p&gt;&lt;p&gt;ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ரமாமணி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ரமாமணி உடலை கைப்பற்றிய போலீஸ் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடந்தது தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்தை ஏற்படுத்திய இளைஞரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-krishnakiri</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-krishnakiri/female-police-officer-dies-in-road-accident-articleshow-ib09f09"/>
        </item>
        <item>
            <title><![CDATA[காட்டுப்பகுதியில் மருமகள் கல்லூரி மாணவனுடன் உல்லாசம்! நேரில் பார்த்த மாமியார்! அப்புறம் என்ன நடந்தது தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/crime/illegal-love-daughter-in-law-killed-her-mother-in-law-tvk-sfm5bb</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/crime/illegal-love-daughter-in-law-killed-her-mother-in-law-tvk-sfm5bb</guid>
            <pubDate>Tue, 25 Jun 2024 07:34:11 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;பக்கத்து வீட்டில் குடியிருக்கும் மணிகண்டன் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.காம் படித்து வருகிறார். இவருக்கும் பவித்ராவிற்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j16hez9yjq3kdajnkwmz8cyt,imgname-illegal-love.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மருமகளை கண்டித்த மாமியார் கழுத்தை நெரித்து கொன்று பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை &amp;nbsp;ஏற்படுத்தியுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அடுத்த கரியபெருமாள் வலசை கிராமத்தை சேர்ந்தவர் அலமேலு (48). இவருக்கு ஏழுமலை (20), சேட்டு (18) என்ற 2 மகன்கள் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அலமேலுவின் அண்ணன் மகளான பவித்ரா (20) என்பவரை ஏழுமலைக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் மணிகண்டன் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.காம் படித்து வருகிறார். இவருக்கும் பவித்ராவிற்கும் பழக்கம் ஏற்பட்டது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&lt;strong&gt;அடக்கடவுளே.. இதுக்கலாமா அம்மாவையும் தம்பியும் கொலை பண்ணுவாங்க.. சென்னையில் நடந்த பயங்கரம்..!&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் நாளடைவில் மாமியாருக்கு தெரியவந்ததை அடுத்து 2 பேரையும் கண்டித்துள்ளார். ஆனாலும் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார். நேற்று முன்தினம் காலையும் இதுதொடர்பாக மாமியார்-மருமகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் ஆடு மேய்க்க சென்ற பவித்ரா நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் மாமியார் மருகளை தேடிச் சென்றுள்ளார். அப்போது, பவித்ராவும், மணிகண்டனும் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால், மாமியார் தகாத வார்த்தையால் திட்டியுள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் மற்றும் பவித்ரா 2 பேரும் சேர்ந்து அலமேலுவை அடித்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர் இருவரும் சேர்ந்து அலுமேலு உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு எதுவும் தெரியாதது போல வீட்டுக்கு சென்றுள்ளனர். இதனிடையே நீண்ட நேரமாகியும் தாய் வீடு திரும்பததால் அதிர்ச்சியடைந்த 2வது மகன் நண்பர்களுடன் சேர்ந்து பல்வேறு இடங்களில் தேடியுள்ளார். அப்போது தனியார் நிலத்தில் பாதி உடல் எரிந்த நிலையில் அலமேலு கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&amp;nbsp;&lt;strong&gt;நண்பனை வீட்டில் விட்டது தப்பா போச்சு.. மனைவியை கரெக்ட் செய்து உல்லாசம்! தட்டிக்கேட்ட கணவருக்கு நடந்த கொடூரம்&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;இதுதொடர்பாக ஊத்தங்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அலமேலு உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சந்தேகத்தின் பேரில் பவித்ராவை பிடித்து விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனையடுத்து கிடுக்குப்பிடி விசாரணையில் கள்ளக்காதலன் மணிகண்டன், அலமேலுவை கழுத்தை நெரித்து கொலை செய்து தீ வைத்து எரித்தது தெரிய வந்தது. இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.&amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-krishnakiri</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/crime/illegal-love-daughter-in-law-killed-her-mother-in-law-tvk-sfm5bb"/>
        </item>
        <item>
            <title><![CDATA[கே.பி முனுசாமி கிட்ட தோற்றா உங்க பதவி காலி..! மாவட்ட செயலாளர்களை நேரடியாக எச்சரித்த முதலமைச்சர் ஸ்டாலின்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-krishnakiri/stalin-warns-dmk-district-secretaries-over-poor-performance-in-krishnagiri-mvsirds</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-krishnakiri/stalin-warns-dmk-district-secretaries-over-poor-performance-in-krishnagiri-mvsirds</guid>
            <pubDate>Sun, 09 Nov 2025 07:13:01 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;2026ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை ஜோராக ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கிருஷ்ணகிரி மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k9k3r35z0yf56h42ns54602w,imgname-tamil-news--29--1762651802815.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;2026ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை ஜோராக ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கிருஷ்ணகிரி மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அரசியல் சூழல் நாள்தோறும் சூடுபிடித்து வருகிறது. இதனை முன்னிட்டு, திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாவட்ட வாரியாக திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சி செயல்பாடுகள், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள், மற்றும் தேர்தல் களத் தயாரிப்புகள் குறித்து அவர் நேரடியாக ஆய்வு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதன் ஒரு பகுதியாக, கிருஷ்ணகிரி மாவட்ட திமுக நிர்வாகிகளுடனும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பில், மாவட்டத்தின் முக்கிய தொகுதிகளில் கட்சி நிலவரம், வாக்காளர் பதிவு பணிகள் மற்றும் எதிர்கட்சிகளின் தலைவர்கள் குறித்தும் விரிவாக பேசப்பட்டது என்று கூறப்படுகிறது. குறிப்பாக, SIR (Special Intensive Revision) பணிகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்களால், சில வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதனால், ஒவ்வொரு திமுக நிர்வாகியும் வாக்காளர் விவரங்களை துல்லியமாகச் சேகரித்து, எவரும் வாக்குரிமையை இழக்காதபடி கவனிக்க வேண்டும் கடுமையாக அறிவுறுத்தினார். மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி போட்டியிடும் தொகுதி திமுகவுக்கு பெரும் சவாலாக இருக்கும் என குறிப்பிடப்பட்டதாக தகவல் வந்துள்ளது. அந்த தொகுதியை எந்த எதிர்க்கட்சிக்கும் இழக்க கூடாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். &ldquo;அந்த தொகுதியில் திமுக வெற்றி பெறாத பட்சத்தில் கட்சியின் மரியாதையும், மாவட்டத்தின் நம்பிக்கையும் பாதிக்கப்படும்&rdquo; என்று அவர் தெளிவாக எச்சரித்ததாக கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேலும், ஓசூர், தளி, வேப்பனஹள்ளி போன்ற முக்கிய தொகுதிகளில் திமுக வெற்றி பெறாவிட்டால், அந்த மாவட்ட செயலாளர் பதவி பறி போகும் எனவும் ஸ்டாலின் எச்சரித்துள்ளார். தேர்தல் நேரத்தில் ஒருமைப்பாட்டோடு செயல்பட வேண்டும் என்பதையும், எதிர்க்கட்சிகளுக்கு எதிராக திமுக வலுவாக பதிலளிக்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார். தேர்தல் வெற்றி என்பது பதவிகளுக்காக அல்ல, மக்களின் நம்பிக்கைக்காக நினைவூட்டிய முதலமைச்சர், கட்சி நிர்வாகிகள் மக்கள் மத்தியில் நேரடியாகச் செயல்படுவார்கள் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார் ஸ்டாலின் என்று திமுக வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-krishnakiri</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-krishnakiri/stalin-warns-dmk-district-secretaries-over-poor-performance-in-krishnagiri-mvsirds"/>
        </item>
        <item>
            <title><![CDATA[கிருஷ்ணகிரியில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு; காதலுடன் சிறுமி விபரீத முடிவு]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-krishnakiri/young-love-couple-commit-suicide-in-krishnagiri-district-vel-sirz23</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-krishnakiri/young-love-couple-commit-suicide-in-krishnagiri-district-vel-sirz23</guid>
            <pubDate>Sun, 25 Aug 2024 18:36:03 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விரக்தியடைந்த சிறுமி தனது காதலனுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j5dsa0ft4rmhr0sr92pk5njt,imgname-1111--2-.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கௌதாளம் பகுதியைச் சேர்ந்தவர் நரசிம்ம மூர்த்தி (வயது 21). தச்சு வேலை செய்து வந்தார். இதனிடையே நரசிம்ம மூர்த்தி பச்சப்பன்பட்டி கிராமத்தில் 17 வயது சிறுமி ஒருவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. சிறமியும் அவரை காதலித்த நிலையில், இது குறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நரசிம்ம மூர்த்தி மீது தனது மகளை கொடுமை படுத்துவதாக புகார் அளிக்கப்பட்டது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;அதன் அடிப்படையில் போக்சோ வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த நரசிம்ம மூர்த்தி மீண்டும் தனது காதலியை சந்தித்து பேசி உள்ளார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் இருவரையும் கடுமையாக எச்சரித்துள்ளனர்.&lt;/p&gt; &lt;p&gt;மூட்டை மூட்டையாக கஞ்சா, பயங்கர ஆயுதம்; கல்லூரி மாணவர்கள் அறையில் பயங்கரம் - போலீஸ் அதிர்ச்சி&lt;/p&gt; &lt;p&gt;இதனால் இருவரும் மனவேதனை அடைந்ததாக சொல்லப்படுகிறது. அதன் பின்னர் கல்லூரிக்கு செல்வதாக சொல்லிவிட்டு வீட்டை விட்டு புறப்பட்ட மாணவி கல்லூரிக்கு செல்லாமல் நரசிம்ம மூர்த்தியின் வீட்டிற்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாக சிறுமியை தொடர்பு கொள்ள முடியாததால் சந்தேகமடைந்த சிறுமியின் பெற்றோர் நரசிம்ம மூர்த்தியின் வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளனர்.&lt;/p&gt; &lt;p&gt;பரபரப்பான சாலையில் ரூபாய் நோட்டுகளை பறக்கவிட்ட யூடியூபர்; லைக்குக்கு ஆசைப்பட்டு கம்பி எண்ணும் நிலை&lt;/p&gt; &lt;p&gt;அப்போது வீட்டினுள் கால் ஜோடி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாகக் கிடந்துள்ளனர். இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இளம் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-krishnakiri</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-krishnakiri/young-love-couple-commit-suicide-in-krishnagiri-district-vel-sirz23"/>
        </item>
        <item>
            <title><![CDATA[தம்பி மனைவி மஞ்சுளாவை மடக்க நினைத்து ரூட் போட்ட அண்ணன்! உல்லாசத்துக்கு அழைப்பு! இறுதியில் நடந்தது என்ன? ]]></title>
            <link>https://tamil.asianetnews.com/crime/krishnagiri-murder-case-brother-arrest-tvk-shu92q</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/crime/krishnagiri-murder-case-brother-arrest-tvk-shu92q</guid>
            <pubDate>Wed, 07 Aug 2024 13:34:03 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள கொக்கரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி(30). திருமணமான &amp;nbsp;இவருக்கு மஞ்சுளா என்ற மனைவியும் 4 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j4nxg7en03sa646r6h643kcr,imgname-krishnagiri-crime-news.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கிருஷ்ணகிரி அருகே அண்ணனை கட்டையால் அடித்து கொலை செய்து உடலை சாக்கு பையில் மூட்டையாக கட்டி பாழடைந்த கிணற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்டுத்தியுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள கொக்கரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி(30). திருமணமான &amp;nbsp;இவருக்கு மஞ்சுளா என்ற மனைவியும் 4 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. மூர்த்தியின் அண்ணன் பாபு(32) திருணமாகாத இவர் கோவையில் கட்டிட மேஸ்திரியாக &amp;nbsp;வேலை பார்த்து வந்தார். கோவையில் இருந்த சொந்த கிராமத்திற்கு அடிக்கடி வந்த சென்ற பாபு தனது தம்பி மனைவி மஞ்சுளா மீது காம பார்வை வீசியதுடன் சில்மிஷம் செய்து, உல்லாசத்திற்கு அழைத்துள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதுகுறித்து மஞ்சுளா தனது கணவர் மூர்த்தியிடம் கூறியுள்ளார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த மஞ்சுளா தனது மகளை கடந்த 3 மாதங்களுக்கு முன் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். மனைவியை பிரிந்த சோகத்தில் இருந்த மூர்த்தி இதற்கெல்லாம் காரணம் அண்ணன் பாபு &amp;nbsp;தான் நினைத்து அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதனால், ஆத்திரமடைந்த மூர்த்தி, தடியால் சரமாரியாக அண்ணன் பாபுவை தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர் பாபுவை கொன்று சாக்கு பையில் கட்டி வீட்டிற்கு அருகே உள்ள பாழடைந்த கிணற்றில் வீசியுள்ளார். நாளடைவில் உடல் அழுகி தூர்நாற்றம் வீசியதால் அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு விசாரணையில் நடத்தியதில் சாக்கு மூட்டையில் அழுகிய நிலையில் கிடந்த பாபுவின் உடல் என்பது தெரியவந்தது. பின்னர் அண்ணனை கொலை செய்த தம்பி மூர்த்தியை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-krishnakiri</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/crime/krishnagiri-murder-case-brother-arrest-tvk-shu92q"/>
        </item>
        <item>
            <title><![CDATA[கர்நாடகத்தில் இருந்து வந்த ரசாயனம் கலந்த நீர்; KRP அணையில் 7 டன் மீன்கள் செத்து மிதப்பதால் கடும் துர்நாற்றம்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-krishnakiri/nearly-7-tons-of-fishes-death-and-floating-at-krp-dam-in-krishnagiri-for-mixing-chemical-water-vel-sdvf8f</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-krishnakiri/nearly-7-tons-of-fishes-death-and-floating-at-krp-dam-in-krishnagiri-for-mixing-chemical-water-vel-sdvf8f</guid>
            <pubDate>Wed, 22 May 2024 10:30:15 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் கடும் வெப்பம் மற்றும் ஆற்றில் ரசாயனம் கலந்த நீர் வந்ததால் டன் கணக்கில் இறந்து கிடக்கும் மீன்கள் - ஒரு வாரத்திற்கும் மேலாக அப்புறப்படுத்தாமல் உள்ளதால் துர்நாற்றம் வீசுவதால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01hyfaqd87wmp3t0qvbtw3yvh6,imgname-whatsapp-image-2024-05-22-at-10-20-34.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கடந்த வாரம் முதல் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. கர்நாடகாவில் இருந்து வரும் மழைநீருடன், அங்குள்ள சுத்திகரிக்கப்படாத ரசாயனம் கலந்த தொழிற்சாலை கழிவு நீருடன் சேர்ந்து, ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு கடும் துர்நாற்றத்துடன், நுரை பொங்கியவாறு தண்ணீர் வந்தது.&lt;/p&gt; &lt;p&gt;வைகாசி விசாகப் பெருவிழா; பழனி திருக்கல்யாண வைபவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு&lt;/p&gt; &lt;p&gt;கெலவரப்பள்ளி அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட்டதால், இந்த நீர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு வந்து சேர்ந்தது. இந்த ரசாயனம் கலந்த தண்ணீரால், அணையின் மேல் பகுதியில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. இதனால் மீன் பிடிப்பவர்கள் மிகவும் கவலையடைந்தனர். இந்நிலையில் இந்த தண்ணீர் அணையின் ஷட்டர் பகுதி வரை நகர்ந்து வந்ததால், 2 கிலோ எடை வரை உள்ள 7 டன் மீன்கள் செத்து மிதந்தன.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;IRFAN : மன்னிப்பு கேட்ட இர்பான்.!! நடவடிக்கை எடுப்பது உறுதி என அறிவித்த மருத்துவ குழு&lt;/p&gt; &lt;p&gt;இதனால் அணைப் பகுதியில் நிற்க முடியாத அளவிற்கு மிகவும் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது. மீன்கள் செத்து மிதக்கும் பகுதியில் பச்சை நிறத்தில் சேறு கலந்தவாறு தண்ணீர் மாறியுள்ளது. டன் கணக்கில் மீன்கள் இறந்து மிதப்பதால் பெரும் துர்நாற்றம் வீசுவதால் தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-krishnakiri</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-krishnakiri/nearly-7-tons-of-fishes-death-and-floating-at-krp-dam-in-krishnagiri-for-mixing-chemical-water-vel-sdvf8f"/>
        </item>
        <item>
            <title><![CDATA[234 தொகுதிகளிலும் தனித்தே போட்டி..! இயேசு மீது சத்தியம் அடித்தார் சீமான்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-krishnakiri/seeman-confirms-he-will-contest-all-234-seats-alone-u022uli</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-krishnakiri/seeman-confirms-he-will-contest-all-234-seats-alone-u022uli</guid>
            <pubDate>Sat, 11 Oct 2025 16:19:56 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;எந்த காலத்திலும் திராவிட, இந்திய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என இயேசு மேல் ஆணையாகக் கூறிய சீமான், 2026 தேர்தலிலும் தனித்து நிற்போம் என உறுதியளித்தார்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jd9we4tqmj53b6ax8jwb4r0z,imgname-seeman.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;எந்த காலத்திலும் திராவிட, இந்திய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என இயேசு மேல் ஆணையாகக் கூறிய சீமான், 2026 தேர்தலிலும் தனித்து நிற்போம் என உறுதியளித்தார்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பன்னாட்டு தமிழ் கிருத்துவ பேராயம் மற்றும் சமூக நீதி பேரவை சார்பாக, உறவுகளின் அரசியல் கேள்விகளுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில் அளிக்கும் வகையிலான &quot;உரையாடல் அமர்வு&quot; நிகழ்ச்சி சென்னை அசோக் நகரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சீமானிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;அதற்கு சீமான் பதில் அளித்தார். சிற்றூர் தோறும் நாம் தமிழர் கட்சி தன் கிளையை பரப்புகிறதா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், நாம் புகழ்பெற்ற நடிகராக இருந்தால் எல்லா ஊர்களிலும் ரசிகர்கள் இருப்பார்கள். ரசிகர்களை தொண்டர்களாக்கி கொண்டு உடனடியாக கட்டமைப்பை உருவாக்குவது எளிது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எல்லா கட்சிகளுக்கும் வாக்குகள் விழாத வாக்குசாவடிகள் உண்டு. ஆனால் நாம் தமிழருக்கு வாக்கு விழாத வாக்குசாவடிகளே இல்லை. Tvk vs dmk போட்டி என்று தம்பி விஜய் சொல்கிறார். ஆனால் விக்கிரவாண்டி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இவர்கள் யாரும் நிற்கவில்லை. ய=அங்கே உண்மையான போட்டி NTK vs DMK என தெரிவித்தார்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;பாஜக உடன் தேர்தல் கூட்டணி வைப்பீர்களா? என்ற கேள்விக்கு பதில அளித்த சீமான், அப்படி வைப்பது என்றால் 15 ஆண்டுகளில் எவ்வளவு அழுத்தம், எவ்வளவு நெருக்கடி வந்திருக்கும். வைத்திருக்க மாட்டேனா? 1/2 விழுக்காடு, 1/4 விழுக்காடு வாக்குகள் எடுத்துள்ள கட்சிகளுடன் பாஜக பேசும் போது,&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;8.5 விழுக்காடு பெற்ற என்னை பேசியிருப்பார்களா? பேசியிருக்க மாட்டார்களா? நாம் தமிழர். எந்த காலத்திலும் இந்திய கட்சிகள் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டோம். இப்போதும் தனித்து நிற்போம். 2026 தேர்தலிலும் தனித்து நிற்போம். தனித்துவத்தோடு நிற்போம். இறைவன் இயேசு மேல் ஆணையாக எவரோடும் கூட்டணி கிடையாது. 234 தொகுதியிலும் தொடர்ச்சியாக வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிடும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி தான்.&lt;/p&gt;&lt;p&gt;திமுக, அதிமுக, பாஜக, தவெக கட்சிகளை எதிர்த்து பேசுகிறீர்கள். உங்களுக்கு ஏதேனும் மறைமுக கூட்டணி இருக்கிறதா? திமுகவை எதிர்த்தீர்கள் என்றால் பாஜக காசு கொடுக்கிறது. ஆர்எஸ்எஸ் கைக்கூலி. ஆர்எஸ்எஸ் பாஜகவை எதிர்த்தால், இஸ்லாமிய கிறிஸ்தவ கைக்கூலி.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதிமுகவை எதிர்த்தால் திமுக B டீம் தம்பி விஜயை நாம் எதிர்க்கவில்லை. திமுக, பாஜக, காங்கிரஸ் ஆகியவற்றை எதிர்த்தோம். விஜயை எதிர்க்கவில்லை. கேள்வியை எழுப்புகிறோம். அதற்கே விமர்சனம் என்று சொல்கிறார்கள். அவரை எதிர்த்தால் திமுக B டீம், திமுக காசு கொடுக்கிறது என்று சொல்கிறார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;நாம் நினைத்திருந்தால் எப்போதோ யாருடனோ கூட்டணி வைத்து பதவிகளை பெற்றிருக்க முடியும். பாஜக தனியாக நிற்கட்டும். நானும் தனியாக நிற்கிறேன். என்னை விட ஒரு வாக்கு அதிகமாக வாங்கட்டும் பார்க்கலாம்.. திமுகவும் என்னோடு நிற்கட்டும். போட்டியிடட்டும். ஆனால் ஓட்டுக்கு காசு கொடுக்காமல் வெற்றி பெற முடியுமா?&lt;/p&gt;&lt;p&gt;காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் 1 புள்ளி மாறுதல். கட்சி கொடியில் வண்ணம் மாறும். ஆனால் எண்ணம் மாறாது. பாஜக தீவிர இந்துத்துவா. இவர்கள் இந்துத்துவா. பாஜக பாபர் மசூதி இடிக்கிறார்கள். அவர்கள் ராமர் கோயில் கட்டுகிறார்கள். இவர்கள் வாழ்த்து சொல்கிறார்கள்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-krishnakiri</category>
            <dc:creator>Ajmal Khan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-krishnakiri/seeman-confirms-he-will-contest-all-234-seats-alone-u022uli"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஓசூரில் சிறுமிக்கு கட்டாய திருமணம்? திருமணமான 3 மாதத்தில் சிறுமி விபரீத முடிவு]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-krishnakiri/newly-married-minor-girl-commits-suicide-in-hosur-vel-sge7nc</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-krishnakiri/newly-married-minor-girl-commits-suicide-in-hosur-vel-sge7nc</guid>
            <pubDate>Wed, 10 Jul 2024 11:07:59 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ஓசூர் அருகே திருமணமான 3 மாதத்தில் சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01hheg9nszffq87kwm7eazxxdn,imgname-35.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தட்டசந்திரம் கிராமத்தில் வசிப்பவர் வரும் அஜித்(வயது 21) டாடா எலக்ட்ரானிக் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும், அதே ஊரை சேர்ந்த BCA முதலாமாண்டு படித்து வந்த திவ்யபிரியா(17) என்னும் சிறுமிக்கும் கடந்த மார்ச் 21ம் தேதி இருவீட்டார் சம்மதத்துடன் &amp;nbsp;திருமணம் நடைபெற்றுள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;ஆம்ஸ்ட்ராங் கொலையில் பாஜகவை பாதுகாத்தவர் யார்? அடுக்கடுக்கான சந்தேகம் எழுப்பும் திருமுருகன் காந்தி!&lt;/p&gt; &lt;p&gt;இந்த திருமணத்தில் திவ்யபிரியாவிற்கு விருப்பம் இல்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த 7ம் தேதி ஏற்பட்ட தகராறில் திவ்யபிரியா வீட்டில் இருந்த தென்னை மரத்திற்கு அடிக்கும் பூச்சி மருந்து குடித்துள்ளார். இதை அறிந்த உறவினர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலன் இன்றி நேற்று இரவு திவ்யபரியா உயிரிழந்தார்.&lt;/p&gt; &lt;p&gt;தனியார் ஆம்னி பேருந்துகளை அலறவிடும் அரசு பேருந்து.. அசர வைக்கும் வசதிகள்.. என்னென்ன தெரியுமா?&lt;/p&gt; &lt;p&gt;சிறுமி தற்கொலை குறித்து ரத்தினகிரி கிராம நிர்வாக அலுவலர் லோகநாதன்(30) கெலமங்கலம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அந்த புகாரில், திவ்யா பிரியா 18 வயது நிரம்பாமல் &amp;nbsp;இருவீட்டார் இளம் வயது திருமணம் செய்துள்ளதாகவும், திவ்யா பிரியா சாவில் சந்தேகம் இருப்பதாக சிறுமியின் பெற்றோர் குற்றம் சாட்டுவதாக கூறி புகார் அளித்துள்ளார்.&lt;/p&gt; &lt;p&gt;இது குறித்து கெலமங்கலம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சிறுமியை திருமணம் செய்து, தற்கொலைக்கு தூண்டியதாகவும், சிறுமியை திருமணம் செய்ததாக அஜித்தை போலிசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும் சிறுமிக்கு திருமணம் செய்த வழக்கில் அஜித்தின் தாய், தந்தை என மூன்று பேரை கைது செய்துள்ளனர். திருமணமான மூன்று மாதத்தில் சிறுமி தற்கொலை செய்து கொண்டுள்ளதால் ஒசூர் சப் கலெக்டர் பிரியங்கா பெற்றோர்களிடம் விசாணை மேற்கொண்டு வருகிறார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-krishnakiri</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-krishnakiri/newly-married-minor-girl-commits-suicide-in-hosur-vel-sge7nc"/>
        </item>
        <item>
            <title><![CDATA[பள்ளியிலேயே வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி; பப்பாளி, அண்ணாசியை ஊட்டிவிட்ட ஆசிரியர்கள் - கிருஷ்ணகிரியில் கொடூரம்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-krishnakiri/8th-standard-student-raped-by-teacher-at-private-school-campus-in-krishnagiri-vel-siggoi</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-krishnakiri/8th-standard-student-raped-by-teacher-at-private-school-campus-in-krishnagiri-vel-siggoi</guid>
            <pubDate>Mon, 19 Aug 2024 13:41:41 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 12 வயது சிறுமி பள்ளியிலேயே வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக 9 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j5mszkp4am8a6cy78d3s71ae,imgname-mixcollage-19-aug-2024-01-18-pm-1136.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 12 வயது சிறுமி பள்ளியிலேயே வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக 9 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த கந்தி குப்பம் பகுதியில் கிங்ஸ்லி என்ற தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சிவராமன் தேசிய மாணவர் படையின் (NSS) பயிற்சியாளராக சிவராமன் இருந்துள்ளார். மேலும் இவர் நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராகவும் பொறுப்பு வகித்து பின்னர் அதில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில் கடந்த 5ம் தேதி என்எஸ்எஸ் மாணவர்கள் அனைவரையும் பள்ளியில் கேம்ப் நடைபெறப் போவதாகவும், என்எஸ்எஸ் மாணவர்கள் அனைவரும் பள்ளியிலேயே தங்க வேண்டும் என்று சிவராமன் தெரிவித்துள்ளார். இதனை ஏற்று 17 மாணவிகள் பள்ளியின் ஆடிட்டோரியத்தில் தங்கி உள்ளனர். இதனிடையே கடந்த 9ம் தேதி &amp;nbsp;அதிகாலை 3 மணி அளவில் மாணவிகள் தங்கியிருந்த ஆடிட்டோரியத்திற்குள் சென்ற சிவராமன் 12 வயதுடைய மாணவி ஒருவரை தனிமையில் அழைத்துச் சென்றுள்ளார்.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;மேலும் அவரை கடுமையாக தாக்கி, கட்டாயப்படுத்தி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக மாணவி பள்ளியின் தலைமை ஆசிரியரை சந்தித்து முறையிட்டுள்ளார். மாணவியின் புகாரை பெற்றுக் கொண்ட தலைமை ஆசிரியர் நடவடிக்கை எடுக்காமல் மாணவியை மூளைச்சலவை செய்துள்ளார். மேலும் இந்த விவகாரம் வெளியில் தெரிந்தால் உன் பெற்றோர் மிகவும் சிரமப்படுவார்கள். உன் எதிர்காலம் பாதித்துவிடும் என்று கூறி மிரட்டி உள்ளார். இதனால் சிறுமி என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துள்ளார்.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;இச்சம்பவம் பள்ளியின் மற்ற ஆசிரியர்களுக்கும் தெரிய வரவே, சிறுமிக்கு பப்பாளி பழம், அன்னாசி பழம் உள்ளிட்டவற்றை சாப்பிடச்சொல்லி ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தி உள்ளனர். இந்நிலையில், கடந்த 16ம் தேதி சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்படவே பெற்றோர் சிறுமியை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது சிறுமி தனக்கு பள்ளியில் நேர்ந்த கொடுமைகளை எடுத்துச் சொல்லியதை கேட்டு மருத்துவர்களும், உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சிறுமிக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;இதைத் தொடர்ந்து பள்ளியின் முதல்வரான சதீஷ்குமார், பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியர் ஜெனிபர், பள்ளியின் தாளாளர் சாம்சன் வெஸ்லி, பயிற்சியாளர்கள் சக்திவேல், சிந்து, சத்யா, &amp;nbsp;சுப்பிரமணி ஆகிய 8 பேரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். கைதான சுப்பிரமணி முன்னாள் சி.ஆர்.பி.எப். வீரர். ஆவார். மேலும் தலைமறைவாக இருந்து வந்த முக்கிய குற்றவாளியான சிவராமனை கோவையில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.&lt;/p&gt; &lt;p&gt;இதனிடையே முகாமிற்கு சென்ற 17 மாணவிகளில், ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். மேலும் 13 மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-krishnakiri</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-krishnakiri/8th-standard-student-raped-by-teacher-at-private-school-campus-in-krishnagiri-vel-siggoi"/>
        </item>
        <item>
            <title><![CDATA[35 வயது ஆன்ட்டி மீது க.காதல்..! ஆசை ஆசையாய் இரவு வீட்டிற்கு சென்ற போது நடுரோட்டில் ஹரீஷ் அலறல்..! நடந்தது என்ன?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/crime/aiadmk-leader-car-driver-murder-police-investigation-yrlnlat</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/crime/aiadmk-leader-car-driver-murder-police-investigation-yrlnlat</guid>
            <pubDate>Thu, 04 Dec 2025 13:07:12 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ஓசூரில் அதிமுக பிரமுகரின் கார் ஓட்டுநரான ஹரீஷ் என்பவரை மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்தது. இந்த கொலை கள்ளக்காதல் விவகாரத்தால் நடந்ததா அல்லது தொழில் போட்டி காரணமாக நடந்ததா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01h8gm4sn3qhb7dr6b4y2437tf,imgname-chennai-police-3.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஓசூரில் அதிமுக பிரமுகரின் கார் ஓட்டுநரான ஹரீஷ் என்பவரை மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்தது. இந்த கொலை கள்ளக்காதல் விவகாரத்தால் நடந்ததா அல்லது தொழில் போட்டி காரணமாக நடந்ததா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேரண்டப்பள்ளி அருகே உள்ள மாரசந்திரத்தை சேர்ந்தவர் நாராயணப்பா மகன் ஹரீஷ் (32). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் அதிமுக பிரமுகருக்கு கார் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். ஹரீஷ் ஓட்டுநர் வேலையுடன் ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் வட்டிக்கு பணம் கொடுத்தும் வந்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில் இவருக்கும் ஓசூர் வானவில் நகரில் கருத்து வேறுபாடு கணவரை பிரிந்து மகன், மகளுடன் வசித்து வரும் 35 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி அவரது வீட்டிற்கு சென்று வருவதை ஹரீஷ் வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற ஹரீஷ் அங்கிருந்து ஸ்கூட்டரில் வானவில் நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அப்போது, அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பல் அவரை பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஹரீஷ் ஸ்கூட்டரை அங்கேயே போட்டுவிட்டு ஓடினார். ஆனால் அந்த கும்பல் விடாமல் ஓட ஓட விரட்டி சென்று சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதனை அவ்வழியாக நடைபயிற்சி வந்த பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து ஓசூர் அட்கோ காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஹரீஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டாரா? தொழில் போட்டியால் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-krishnakiri</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/crime/aiadmk-leader-car-driver-murder-police-investigation-yrlnlat"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Accident: பயணத்தின் போது அசதியில் உறங்கிய ஓட்டுநர்? ஓசூரில் தடுப்பு சுவற்றில் லாரி மோதி ஒருவர் பலி]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-krishnakiri/lorry-driver-killed-road-accident-in-krishnagiri-vel-senbnu</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-krishnakiri/lorry-driver-killed-road-accident-in-krishnagiri-vel-senbnu</guid>
            <pubDate>Thu, 06 Jun 2024 12:05:54 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இன்று அதிகாலை சாலையின் தடுப்புச் சுவற்றில் மோதி லாரி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01hzp446z9rzee3wmjx96kaqef,imgname-whatsapp-image-2024-06-06-at-10-53-47.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த சூளகிரி பகுதியைச் சேர்ந்த சாதிக் எனபவர் சூளகிரியில் இருந்து கருவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை ஏற்றுமதி செய்து, வேலூர் மற்றும் ஆற்காடு பகுதிகளில் உள்ள தினசரி சந்தைகளில் விற்பனை செய்துவிட்டு இன்று அதிகாலை மீண்டும் சூளகிரி நோக்கிச்சென்று கொண்டிருந்தார்.&lt;/p&gt; &lt;p&gt;பழனி அருகே கோவில் திருவிழாவில் ஆபாச நடனம்; இளசுகளுக்கு முத்தங்களை பறக்கவிட்ட அழகிகள்&lt;/p&gt; &lt;p&gt;அப்போது திருப்பத்தூர் மாவட்டம். ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பகுதியில் உள்ள சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் லாரி வந்து கொண்டிருந்த நிலையில், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தேசிய நெடுஞ்சாலையின் நடுவே இருந்த இரும்பு தடுப்பு வேலியின் மீது மோதி விபத்துக்குள்ளானது.&lt;/p&gt; &lt;p&gt;ADMK : கட்சியையும், ஆட்சியை ஒற்றுமையால் மீட்டெடுக்க எத்தகைய தியாகத்திற்கும் தயார்.! ஓபிஎஸ் திடீர் அறிவிப்பு&lt;/p&gt; &lt;p&gt;இந்த விபத்தில் லாரியின் முன்பக்கம் நொறுங்கியதில், லாரியின் இடிபாடுகளில் சிக்கி லாரி ஓட்டுநர் சாதிக் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கிய லாரி ஓட்டுநரின் உடலை &amp;nbsp;மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-krishnakiri</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-krishnakiri/lorry-driver-killed-road-accident-in-krishnagiri-vel-senbnu"/>
        </item>
    </channel>
</rss>
