<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Wed, 01 Oct 2025 18:58:56 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss/tamilnadu-karur" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[Karur Constituency: என் மீதான பொய் பிரசாரங்களை மீறி கரூர் மக்கள் என்னை அங்கீகரித்துள்ளனர் - ஜோதிமணி உற்சாகம்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-karur/india-alliance-will-form-a-new-government-shortly-said-karur-mp-jothimani-vel-selcdy</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-karur/india-alliance-will-form-a-new-government-shortly-said-karur-mp-jothimani-vel-selcdy</guid>
            <pubDate>Wed, 05 Jun 2024 10:26:22 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;என் மீதான பொய் பிரசாரங்களைக் கடந்து கரூர் தொகுதி மக்கள் என்னை வெற்றி பெறச் செய்துள்ளனர். மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி என காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01hzkc24q3y8zr1wcjbfs1j2na,imgname-whatsapp-image-2024-06-05-at-10-05-50.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கரூர் அடுத்த தளவாபாளையம் வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்து, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தங்கவேலுவிடம் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தனது வெற்றி சான்றிதழை பெற்றார். அதனைத் தொடர்ந்து கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் காமராஜர் சிலைகளுக்கு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;Kanimozhi: தூத்துக்குடியில் மீண்டும் திமுக; கனிமொழியை எதிர்த்த அனைத்து வேட்பாளர்களுக்கும் டெபாசிட் காலி&lt;/p&gt; &lt;p&gt;அப்போது திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து, சால்வை அணிவித்து அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, 1 லட்சத்து 65 ஆயிரத்து 620 வாக்குகள் வித்தியாசத்தில் கரூர் தொகுதி மக்கள் எனக்கு மகத்தான வெற்றியை தந்துள்ளார்கள்.&lt;/p&gt; &lt;p&gt;Sowmiya Anbumani: இறுதி நிமிடம் வரை நீடித்த திரில்; நூலிழையில் வெற்றியை தவறவிட்ட சௌமியா அன்புமணி&lt;/p&gt; &lt;p&gt;கடந்த ஓராண்டாக பணம் செலவு செய்து என் மீது தொடர்ந்து பொய் பிரசாரம் நடத்தப்பட்டது. அதனையும் மீறி வெற்றி பெற்றுள்ளேன். ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகி உள்ளன. நிச்சயமாக இந்தியா கூட்டணி தான் மத்தியில் ஆட்சி அமைக்கும். இதுவரை மோடி அரசுக்கு எதிராக போர் நடத்தினோம். நாளை முதல் மத்தியில ஆட்சி அமைப்பதற்காக போராட இருக்கிறோம் என்றார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-karur</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-karur/india-alliance-will-form-a-new-government-shortly-said-karur-mp-jothimani-vel-selcdy"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Accident Death: கரூரில் வெப்பம் தாங்காமல் கிணற்றுக்கு குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் பிணமாக மீட்பு]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-karur/3-minor-boys-drowned-death-at-well-in-karur-district-vel-sdglum</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-karur/3-minor-boys-drowned-death-at-well-in-karur-district-vel-sdglum</guid>
            <pubDate>Tue, 14 May 2024 10:31:00 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கரூர் மாவட்டம், &amp;nbsp;ஆண்டான்கோவில் ஊராட்சி என்.புதூர் அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற மூன்று மாணவர்கள் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01hxtqjysq0b67capf3k8510ys,imgname-mixcollage-14-may-2024-10-30-am-9050.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் சற்று கடுமையாகவே காணப்படுகிறது. தற்போது அனைத்து பள்ளிகளும் ஆண்டு தேர்வுகள் நிறைவு பெற்று கோடை விடுமுறை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து நீர் நிலைகளுக்கு படையெடுகத் தொடங்கி உள்ளனர். இதில் எதிர்பாராத விதமாக ஆங்காங்கே சில அசம்பாவித சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.&lt;/p&gt; &lt;p&gt;TN 11th Exam Result : 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.. இந்த முறையாவது மாணவிகளை விட மாணவர்கள் அதிகமா?&lt;/p&gt; &lt;p&gt;அந்த வகையில், கரூர் மாவட்டம் ஆண்டான் கோவில் ஊராட்சி என்.புதூர் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (வயது 12), மாரிமுத்து (13), விஷ்ணு (13) நண்பர்களான இவர்கள் மூவரும் நேற்று மாலை குளிப்பதற்காக வீட்டிற்கு தெரியாமல் கிணற்று பகுதிக்குச் சென்றுள்ளனர். மூவரின் குடும்பத்தினரும், தங்கள் பிள்ளைகள் விளையாடச் சென்றிருப்பதாக நினைத்து இருந்துள்ளனர். பின்னர் இரவு நீண்டநேரமாகியும் சிறுவர்களை காணாததால் சந்தேகமடைந்த பெற்றோர்கள் அவர்களை தேடியுள்ளனர்.&lt;/p&gt; &lt;p&gt;ஏன் டா படுபாவி! ஜெயிலுக்கு போயும் நீ திருந்த மாட்டியா? சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை லெப்ட் ரைட் வாங்கிய ராதிகா!&lt;/p&gt; &lt;p&gt;அப்போது மாயமான மூவரும் அருகில் உள்ள கிணற்றிற்கு குளிக்கச் சென்றதால் வேறு சில சிறுவர்கள் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் அங்கு சென்று பார்த்தபோது கிணற்றின் அருகே சிறுவர்களின் காலணிகள், ஆடைகள் கிடந்துள்ளன. இதனைத் தொடர்ந்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு குழுவினர் கிணற்றில் இறங்கி தேடியபோது மூன்று மாணவர்களும், இறந்த நிலையில் மீட்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து மூவரின் உடல்களும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&lt;/p&gt; &lt;p&gt;கரூரில் ஒரே பகுதியைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-karur</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-karur/3-minor-boys-drowned-death-at-well-in-karur-district-vel-sdglum"/>
        </item>
        <item>
            <title><![CDATA[தவெக தலைவர் விஜய் மீது செருப்பு வீச்சு... கரூரில் பரபரப்பு..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-karur/slipper-thrown-on-tvk-head-thalapathy-vijay-during-karur-campaign-9yt6bdm</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-karur/slipper-thrown-on-tvk-head-thalapathy-vijay-during-karur-campaign-9yt6bdm</guid>
            <pubDate>Sat, 27 Sep 2025 23:14:19 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கரூரில் பரப்புரை மேற்கொண்டபோது அவர்மீது செருப்பு வீசப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k6647swvn04nx22eg2fqm64n,imgname-new-project---2025-09-27t230541.153-1758994884507.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கரூரில் பரப்புரை மேற்கொண்டபோது அவர்மீது செருப்பு வீசப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழகத்தின் கரூரில் சனிக்கிழமை மாலை தவெக தலைவரும், நடிகருமான விஜய் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்தனர், 58 பேர் காயமடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். விஜய் பேரணியில் திரண்டிருந்த பெருங்கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதால், பீதி ஏற்பட்டு நெரிசல் உருவானது. கூட்டத்தில் பங்கேற்ற பலர் மயங்கி விழுந்த நிலையில், அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். கூட்டம் நடந்த இடத்தில் ஏற்பட்ட அதிகப்படியான கூட்டமே இந்த சோகத்திற்கு காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.&lt;/p&gt;&lt;p&gt;முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்த திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிலைமையை ஆய்வு செய்யவும், பாதிக்கப்பட்டவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் சந்திக்கவும் கரூர் வரவுள்ளதாகக் கூறினார். காயமடைந்தவர்களிடம் கட்டணம் வசூலிக்க வேண்டாம் என்றும், தேவையான அனைத்து மருத்துவ சிகிச்சைகளையும் வழங்க வேண்டும் என்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;விஜய் மீது செருப்பு வீச்சு&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் கரூரில் பரப்புரை மேற்கொண்டபோது அவர்மீது செருப்பு வீசப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் விஜய் மக்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்தபோது ஒரு செருப்பு விஜய்யை நோக்கி பறந்து வந்த நிலையில், விஜய்யை சுற்றி இருந்த பாதுகாவலர்கள், அந்த செருப்பு விஜய் மீது விழாமல் தள்ளிவிட்டனர். இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த விஜய் ரசிகர்கள், தளபதி மீது ஏன் இவ்வளவு வன்மம் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;விஜய் மீது செருப்பு வீச்சுகரூரில் விஜய் பேசிக்கொண்டிருக்கும் போது அவர் மீது மர்மநபர் ஒருவர் செருப்பை வீசியதால் பரபரப்பு pic.twitter.com/3hIkA7uTui&lt;/p&gt;&lt;p&gt;&mdash; Pudukkottai Page (@pudukkottai_pag) September 27, 2025&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-karur</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-karur/slipper-thrown-on-tvk-head-thalapathy-vijay-during-karur-campaign-9yt6bdm"/>
        </item>
        <item>
            <title><![CDATA[கதறி அழுத அன்பில் மகேஷ்..!கண்ணீர் விட்ட செந்தில் பாலாஜி.. உலுக்கும் வீடியோ]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-karur/karur-tvk-stampede-minister-anbil-mahesh-breaks-down-video-goes-viral-articleshow-bl01n5o</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-karur/karur-tvk-stampede-minister-anbil-mahesh-breaks-down-video-goes-viral-articleshow-bl01n5o</guid>
            <pubDate>Sun, 28 Sep 2025 07:25:20 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கரூரில் (Karur) நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களை அமைச்சர்கள் அன்பில் மகேஷ் மற்றும் செந்தில்பாலாஜி சந்தித்து ஆறுதல் கூறினர்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k6706ve999yz3ns44p6k4es6,imgname-tamil-news---2025-09-28t071747.258-1759024213449.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கரூர்: வேலுச்சாமிபுரத்தில் நேற்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கூட்டம் கழகத்தின் பிரச்சார நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த துயர சம்பவம் நம் மாநிலத்தை முழுமையாக உலுக்கியிருக்கிறது. மேலும் இந்திய அளவில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;இறந்தவர்களின் உடல்கள் அனைத்தும் அரசு மருத்துவமனையில் வரிசையாக வைக்கப்பட்டு உள்ள காட்சிகள் மனதை உலுக்கியது. உயிரிழந்தோரின் குடும்பங்கள் மற்றும் பொதுமக்கள் துயரத்தில் மூழ்கியுள்ளனர்.&lt;/p&gt;&lt;p&gt;கரூரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சம்பவம் நடந்தவுடன் அரசு மருத்துவமனை வந்தடைந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை வழங்கப்படுவதை கண்காணித்தார். அதேபோல அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தரப்பிலும் பாதிக்கப்பட்டோருக்கு முழு உதவிகள் வருகின்றன.&lt;/p&gt;&lt;p&gt;&lt;img&gt;&lt;/p&gt;&lt;p&gt;அமைச்சர் அன்பில் மகேஷ் உடனடியாக கரூருக்குச் சென்று காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளையும் அவர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அன்பில் மகேஷ் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து வரும் பொழுது, அவர் கண்ணீர் விட்டுக் கதறினார்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;செந்தில்பாலாஜி மற்றும் அங்குள்ள பிற அரசியல் தலைவர்களும் தங்களின் துயரத்தை வெளிப்படுத்தினர். கூட்ட நெரிசலில் சிகிச்சை பெற்று வரும் பலரின் உறவினர்கள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் கண்ணீர் மல்கி தங்களின் வேதனையை பகிர்ந்தனர். இந்த காட்சிகள் அனைவரின் மனதை உருக்கியது.&lt;/p&gt;&lt;p&gt;அன்பில் மகேஷ் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி, &ldquo;படிச்சு படிச்சு சொன்னேன், கண்டிஷனை சரியா பாலோ பண்ணனும்னு&rdquo; என்று கண்ணீர் விட்டு அழுதார். அவரது அருகில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியும் கண் கலங்கிய நிலையில் துயரத்துடன் நிற்கிறார்.&lt;/p&gt;&lt;p&gt;கரூர் அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை தொடர்ந்து வழங்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் அமைச்சர் அன்பில் மகேஷ் கண்ணீர் விட்டு அழும் வீடியோ வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-karur</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-karur/karur-tvk-stampede-minister-anbil-mahesh-breaks-down-video-goes-viral-articleshow-bl01n5o"/>
        </item>
        <item>
            <title><![CDATA[அதிகாலையிலேயே அதிர்ச்சி! அரசு மருத்துவமனைக்குள் பெண் படுகொலை! அலறியடித்து ஓடிய டாக்டர்கள்! என்ன நடந்தது?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-karur/woman-murdered-inside-government-hospital-in-kulithalai-karur-district-articleshow-bwnrsgl</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-karur/woman-murdered-inside-government-hospital-in-kulithalai-karur-district-articleshow-bwnrsgl</guid>
            <pubDate>Sun, 20 Jul 2025 11:15:40 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கரூர் மாவட்டம் குளித்தலை அரசு மருத்துவமனைக்குள் பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அதிகாலையிலேயே அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்ப்போம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k0bgggr6pk53rxaehag4ysar,imgname-hatya--1--1752733074182.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Woman Hacked To Death Inside Kulithalai GH: தமிழ்நாட்டில் அண்மைகாலமாக கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குற்றச்சம்பங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டாலும் தொடர்ச்சியாக குற்றச்சம்பவங்கள் நடந்து வருவது அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கரூர் அரசு மருத்துவமனையில் பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்ப்போம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;கணவன், மனைவி தகராறு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;கரூர் மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் விஷ்ரூத். இவரது மனைவி ஸ்ருதி. கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில் மனைவியை அவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அந்த பெண் குளித்தலை அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;மருத்துவமனையில் வெட்டிய கணவர்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்த நிலையில் இன்று அதிகாலை மனைவி ஸ்ருதியை பார்ப்பதற்காக விஷ்ரூத் மருத்துவமனைக்கு வந்தார். அப்போது அவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஸ்ருதியின் உடம்பில் சரமாரியாக குத்தி விட்டு அங்குகிருந்து தப்பிச்சென்றார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஸ்ருதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலையை பார்த்த நோயாளிகள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் டாக்டர்கள் அலறியடித்து ஓடினார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;காதலித்து திருமணம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்த சம்பவம் குறித்து குளித்தலை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினார்கள். மேலும் மனைவியை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய விஷ்ரூத்தினை வலைவீசி தேடி வருகின்றனர். விஷ்ரூத் - ஸ்ருதி தம்பதிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-karur</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-karur/woman-murdered-inside-government-hospital-in-kulithalai-karur-district-articleshow-bwnrsgl"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Viral Video: என்னடா லைட் அடிச்சி பாத்துட்டு திருடுறீங்க? அரைநிர்வாண கொள்ளையனால் கரூர் மக்கள் பீதி]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-karur/a-video-of-an-attempted-theft-of-jewellery-from-women-in-karur-district-is-going-viral-vel-scp9rb</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-karur/a-video-of-an-attempted-theft-of-jewellery-from-women-in-karur-district-is-going-viral-vel-scp9rb</guid>
            <pubDate>Mon, 29 Apr 2024 16:12:46 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கரூர் மாவட்டத்தில் வெப்பம் தாங்காமல் வீட்டிற்கு வெளியில் படுத்திருந்த பெண்களின் கழுத்தில் டார்ச் லைட் அடித்து பார்த்து நகைகளை கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01hwmq5p7yq3tkk81z50tk25zd,imgname-whatsapp-image-2024-04-29-at-16-11-47.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கரூர் மாவட்டம் வாங்கலை அடுத்த மாரிகவுண்டன்பாளையம் கிராமத்தில் ஒரு குடும்பத்தினர் கோடை வெயில் காலம் என்பதால் வீட்டை பூட்டி விட்டு முன்புறம் உள்ள முற்றத்தில் கட்டில் போட்டு தூங்கிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது சுற்றுச் சுவரை ஏறிக் குதித்து உள்ளே சென்ற அந்த மர்ம நபர் தூங்கும் பெண்களின் கழுத்தில் தங்க நகைகள் இருக்கிறதா என்று டார்ச் லைட் அடித்து பார்த்துச் சென்றுள்ளான்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;&lt;/p&gt; &lt;p&gt;வேட்டியை சுருட்டி கட்டிக் கொண்டும், சட்டையை கழட்டி முகம் தெரியாமல் இருக்க துணியை கட்டிக் கொண்டு அரை நிர்வாணத்தில் டார்ச் லைட் வெளிச்சத்தில் நோட்டமிட்டுச் சென்ற சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது. இதன் காரணமாக அப்பகுதி கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;ஆன்லைன் ரம்மியால் மேலும் ஒரு தற்கொலை; தமிழக அரசு எப்போது தான் விழிக்கும்? அன்புமணி காட்டம்&lt;/p&gt; &lt;p&gt;இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படாத நிலையில் இக்காட்சிகளை கொண்டு வாங்கல் போலீசார் உரிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்ற அசம்பாவிதங்களை தடுக்க இரவு நேரத்தில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கொள்ளை முயற்சி தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-karur</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-karur/a-video-of-an-attempted-theft-of-jewellery-from-women-in-karur-district-is-going-viral-vel-scp9rb"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Karur Accident: கரூர் அருகே நெடுஞ்சாலையில் பழுதாகி நின்ற சுற்றுலாப் பேருந்து மீது டாரஸ் லாரி மோதி ஒருவர் பலி]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-karur/1-person-killed-road-accident-at-karur-salem-national-highway-vel-sfkmr6</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-karur/1-person-killed-road-accident-at-karur-salem-national-highway-vel-sfkmr6</guid>
            <pubDate>Mon, 24 Jun 2024 11:46:18 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கரூர், சேலம் பைபாஸ் சாலையில் பழுதாகி நின்ற சுற்றுலாப் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் பேருந்தை சரி செய்து கொண்டிருந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j14e6em1zh6h1wmzt0qpaw6x,imgname-whatsapp-image-2024-06-24-at-10-45-10.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கரூர் - சேலம் பைபாஸ் மண்மங்கலம் அருகே திருச்செந்தூரில் இருந்து சேலம் சென்று கொண்டிருந்த சுற்றுலா பேருந்து ஒன்று, நள்ளிரவு 1 மணி அளவில் புதிய மேம்பாலம் அருகே அமைக்கப்பட்ட &amp;nbsp;தற்காலிக சாலையில் பழுதாகி நின்றது. பேருந்தை, நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த நித்தியானந்தம் (வயது 50) மற்றும் மோகனூர் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி (46). ஆகியோர் அதிகாலை 5 மணி அளவில் பேருந்தின் பழுதை சரி செய்து கொண்டிருந்தனர். பேருந்தில் இருந்த பயணிகள் மாற்று பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.&lt;/p&gt; &lt;p&gt;அப்போது, அதே திசையில் கரூர், சேலம் பைபாஸ் சாலையில் அதிமேகமாக வந்த, டாரஸ் லாரி பேருந்தின் பின்புறமாக மோதியது. பழுதை சரி செய்து கொண்டிருந்த நித்தியானந்தம் மீது பேருந்து ஏறி சம்பவ இடத்தில் பரிதாபமாக பலியானார். மேலும் இந்த விபத்தில் பெரியசாமி, லாரி ஓட்டுநர் ஜெயபாண்டி ஆகிய இருவரும் படுகாயத்துடன் மீட்கப்பட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.&lt;/p&gt; &lt;p&gt;கிட்டார் வாசித்தபடி 1 மணி நேரம் வாளை சுழற்றிய சிறுவன்; 8 வயதில் உலக சாதனை படைத்து அசத்தல்&lt;/p&gt; &lt;p&gt;கரூர், சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை 5 மணி அளவில் ஏற்பட்ட சாலை விபத்தால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து &amp;nbsp;சுற்றுலா பேருந்து ஓட்டுனர் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியை சேர்ந்த ராஜா புகாரின் பேரில், &amp;nbsp;லாரி ஓட்டுனர் ஜெயபாண்டி மீது, வழக்குப்பதிவு செய்து வாங்கல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&lt;/p&gt; &lt;p&gt;Bomb Threat : கோவை விமான நிலைய கழிவறையில் வெடிகுண்டு.?இ மெயிலில் வந்த மிரட்டல்-களத்தில் இறங்கிய பாதுகாப்பு படை&lt;/p&gt; &lt;p&gt;கரூர் அருகே அதிகாலை தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்திற்கு நெடுஞ்சாலை மேம்பால பணிகள் மேற்கொண்டு வரும் ஒப்பந்த நிறுவனமும், அப்பகுதியில், பணியில் இருந்த நெடுஞ்சாலை போக்குவரத்து போலீசாரின் கவன குறைவு விபத்துக்கான காரணம் என கூறப்படுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-karur</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-karur/1-person-killed-road-accident-at-karur-salem-national-highway-vel-sfkmr6"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Savukku Shankar: திடீரென பரபரபத்த கரூர் நீதிமன்ற வளாகம்; பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கர்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-karur/youtuber-savukku-shankar-was-produced-by-the-police-in-the-karur-court-vel-sgchud</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-karur/youtuber-savukku-shankar-was-produced-by-the-police-in-the-karur-court-vel-sgchud</guid>
            <pubDate>Tue, 09 Jul 2024 12:53:01 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;பெண்களை தரக்குறைவாக பேசிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் இன்று கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j0v1g39251bd9dv2rfcxnhbt,imgname-whatsapp-image-2024-06-20-at-20-09-13.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழக பெண் காவலர்கள் குறித்து யூடியூப் சேனலில் மிகவும் தரக்குறைவான வகையில் கருத்து தெரிவித்ததற்காக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை கடந்த மே மாதம் 4ம் தேதி தேனியில், கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கைது நடவடிக்கையின் போது தேனியில் கஞ்சா வைத்திருந்ததாக தேனி போலீசார் வழக்கு பதிவு செய்ததை அடுத்து கோவை மத்திய சிறையில் இருந்து மற்றொரு வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார்.&lt;/p&gt; &lt;p&gt;நீலகிரி எஸ்.பி. மனைவி வந்த கார் மோதி இளைஞர் பலி, மேலும் ஒருவர் கவலைக்கிடம்&lt;/p&gt; &lt;p&gt;இதனைத் தொடர்ந்து குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை பெண் பத்திரிக்கையாளர் சந்தியா ரவிசங்கர் என்பவர் அளித்த புகார், தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி அளித்த புகார் என அடுத்தடுத்து ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார்.&lt;/p&gt; &lt;p&gt;சிலிண்டர் வாங்க பணம் கேட்டது ஒரு குத்தமா? மனைவி, பக்கத்து வீட்டுக்காரரை சம்பவம் செய்த இரட்டை கொலை மன்னன்&lt;/p&gt; &lt;p&gt;இந்நிலையில், கரூர் நகர காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கு ஒன்றில், கரூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உரிய போலீஸ் பாதுகாப்பு உடன் கரூர் நீதிமன்றத்திற்கு இன்று காலை 11.15 மணிக்கு போலீசார் அழைத்து வந்துள்ளனர். இதனால் கரூர் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-karur</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-karur/youtuber-savukku-shankar-was-produced-by-the-police-in-the-karur-court-vel-sgchud"/>
        </item>
        <item>
            <title><![CDATA[அடிக்குற வெயிலுக்கு அடுப்பு இல்லாம பிரியாணியே கிண்டலாம்போல; சாலையில் ஆம்லேட் போட்ட இளசுகள்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-karur/youngsters-cook-a-egg-while-using-sunlight-in-karur-district-vel-scgigk</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-karur/youngsters-cook-a-egg-while-using-sunlight-in-karur-district-vel-scgigk</guid>
            <pubDate>Wed, 24 Apr 2024 22:42:20 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கரூர் மாவட்டத்தில் வெப்பம் 107 டிகிரி பாரன்ஹீட் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்க கரூர் &amp;nbsp;மாவட்ட ஆட்சித் தலைவர் &amp;nbsp;அறிவுறுத்தியுள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01hw8herw93hst785aqf4t4x0t,imgname-whatsapp-image-2024-04-24-at-22-35-21.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் &amp;nbsp;அறிக்கையில், தமிழ்நாட்டின் கரூர் உள்ளிட்ட வட உள் மாவட்டங்களில் 23.4.2024 மற்றும் 24.4.2024 ஆகிய நாட்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;எனவே, பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும். அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்குமாறும். குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்த்திடுமாறும், வெயிலின் தாக்கத்தால் உடல்நலக் குறைவு ஏற்படும் நிலையில், உடனடியாக மருத்துவரை அணுகுமாறும் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;கோவையில் தடுப்பணையில் மூழ்கிய 3 சிறார்கள்; வெப்பம் தாங்காமல் நீர் நிலைக்கு சென்றபோது சோகம்&lt;/p&gt; &lt;p&gt;கரூர் மாவட்டத்தில் பொதுவாகவே ஆண்டுதோறும் மே மாதத்தில் அக்னி நட்சத்திர காலங்களில் வெயில் கொளுத்தி எடுக்கும். ஆனால் இந்த வருடம் மார்ச் மாத தொடக்கத்திலேயே வெப்பம் அதிகரித்து இன்று 107 டிகிரி &amp;nbsp;வரை வெப்பம் உயர்ந்து கொண்டே இருப்பது பொதுமக்களிடையே ஒரு வித அச்சத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக கரூர் பரமத்தியில் உச்சமாக 107 பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதற்கு முக்கிய காரணங்கள் என்னவென்றால் அப்பகுதியில் இயங்கும் எண்ணற்ற கல்குவாரிகளால் பூமியில் தோண்டப்பட்ட மெகா பள்ளங்கள். மேலும் கரூர் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் ஆயிரக்கணக்கான மரங்கள் கேட்பாரின்றி வெட்டி சாய்க்கப்பட்டது. அதனால் தான் இன்று வெப்ப அலை வீசும் அளவிற்கு கரூர் மாவட்டம் வந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;கோலாகலமாக நடைபெற்ற கூத்தாண்டவர் கோவில் விழாவில் தாலியை அறுத்துக் கொண்டு ஒப்பாரி வைத்த திருநங்கைகள்&lt;/p&gt; &lt;p&gt;பொதுமக்கள் உங்களை காத்துக் கொள்ள அதிக அளவு தண்ணீரும், இயற்கையான பழங்களும், காய்கறிகளும் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் தேவை இல்லாமல் வெயிலில் முதியோர், கர்ப்பிணி பெண்கள் பயணிப்பதை தவிர்க்க வேண்டும், குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் வெயிலில் வெளியே செல்வதோ விளையாடுவதை பெற்றோர்கள் கவனத்துடன் கண்காணிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;இதனிடையே இளைஞர்கள் சிலர் கோழி முட்டை சாலையில் ஊற்றி ஆம்லேட் போடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-karur</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-karur/youngsters-cook-a-egg-while-using-sunlight-in-karur-district-vel-scgigk"/>
        </item>
        <item>
            <title><![CDATA[பகலில் போலீஸ் வேலை, இரவில் பைக் திருடன்; கரூரில் பைக் திருடிய ஊர்காவல் படை வீரர் கைது]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-karur/tamil-nadu-police-home-guard-personnel-arrested-on-bike-theft-case-in-karur-vel-scp6wc</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-karur/tamil-nadu-police-home-guard-personnel-arrested-on-bike-theft-case-in-karur-vel-scp6wc</guid>
            <pubDate>Mon, 29 Apr 2024 15:30:30 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கரூர் மாவட்டம் குளித்தலையில் இரு சக்கர வாகனம் திருட்டு வழக்கில் குளித்தலை ஊர் காவல் படை வீரர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01hwmkm00k6gw8vegkxbp638dh,imgname-mixcollage-29-apr-2024-03-09-pm-5092.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கரூர் மாவட்டம், குளித்தலை அருகே நச்சலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 36). இவர் தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வடக்கு சேர்வை பட்டி கிராமத்திற்கு கடந்த 10ம் தேதி சென்றிருந்தார். அங்கு சாலை ஓரத்தில் தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கடைக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது இரு சக்கர வாகனத்தை காணவில்லை.&lt;/p&gt; &lt;p&gt;இதுகுறித்து பழனிச்சாமி மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 8 மணி அளவில் நச்சலூரில் திருட்டுப் போன இருசக்கர வாகனத்தை ஒரு சிறுவன் ஓட்டி வரும்போது பழனிச்சாமி தனது இருசக்கர வாகனம் என்று கூறி வாகனத்தை நிறுத்தி வண்டியை பிடித்து விசாரணை செய்தார். அப்போது அந்த சிறுவன் ஆலத்தூரை சேர்ந்த பாஸ்கரன் என்பவரிடம் இருசக்கர வாகனத்தை வாங்கியதாக கூறியுள்ளார்.&lt;/p&gt; &lt;p&gt;வருவாய் ஈட்டுவதில் 3வது இடம் பிடித்த கோவை ரயில் நிலையம்; ரயில்வே கோட்டமாக மாற்றம்? பயணிகள் எதிர்பார்ப்பு&lt;/p&gt; &lt;p&gt;இதையடுத்து. கிராம பொதுமக்கள் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த சிறுவன் மூலம் ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரை வரவழைத்து விசாரணை செய்தனர். அப்போது இருசக்கர வாகனங்கள் உரிய ஆவணத்துடன் பணம் கொடுத்து வாகனங்களை வாங்குதல். வாகன புக்கின் பேரில் பைனான்ஸ் முன்பணம் செலுத்துதல் உள்பட தொழில் செய்து வந்தது தெரியவந்தது.&lt;/p&gt; &lt;p&gt;மேலும் விசாரணையில். புரசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஊர்க்காவல் படை வீரர் (ஹோம் கார்டு) மணிகண்டன் (30). என்பவர் தன்னிடம் இருசக்கர வாகனத்தை கொடுத்து அடமானம் வைத்ததாக கூறினார். வாகனம் திருட்டு போன பழனிச்சாமி மணப்பாறை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.&lt;/p&gt; &lt;p&gt;பொதுமக்கள் கூட்டம் அதிகமாகவும் இதே போல் நச்சலூரில் இருசக்கர வாகனம் திருட்டு போனவர்கள் சூழ்ந்து கொண்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதை அடுத்து அப்பகுதி பொதுமக்கள் &amp;nbsp;குளித்தலை காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் குளித்தலை சிறப்பு உதவி ஆய்வாளர் சிங்காரம் சம்பவ இடத்திற்கு வந்தார். அப்போது ஊர்க்காவல் படையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை கிராம பொதுமக்கள் பிடித்து வைத்திருந்தனர்.&lt;/p&gt; &lt;p&gt;தகவல் அறிந்து வந்த மணப்பாறை காவல் துறையினர் காணாமல் போனதாக புகார் கொடுத்த இரு சக்கர வாகனத்தை மீட்டு மணப்பாறைக்கு கொண்டு சென்றனர். பொதுமக்களிடம் இருந்து ஊர்க்காவல் படையைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் வாகனங்களை அடமானம் வாங்கிய பாஸ்கர் இருவரையும் குளித்தலை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.&lt;/p&gt; &lt;p&gt;அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த தூய்மை பணியாளர்; ஏழைகளின் உயிரோடு விளையாடாதீர்கள் - டிடிவி தினகரன்&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;விசாரணையில் தோகைமலை அருகே கீழவெளியூரை சேர்ந்த சரத் என்பவர் மூலம் பல்வேறு வாகனங்கள் திருட்டு சம்பவத்தில் ஊர்க்காவல் படையை சேர்ந்த மணிகண்டன் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. குளித்தலை போலீசார் இருசக்கர வாகன திருட்டு சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து ஊர் காவல் படையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை கைது செய்தனர்.&lt;/p&gt; &lt;p&gt;ஊர்க்காவல் படையைச் சேர்ந்த மணிகண்டன் சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக குளித்தலை மற்றும் தோகைமலை காவல் நிலையங்களில் காவலர்களுக்கு உதவியாகவும், அவ்வப்போது காவல் ஆய்வாளர்களுக்கு ஜீப் ஓட்டுனராகவும் இருந்து வந்தார் என்பது தெரிய வந்துள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-karur</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-karur/tamil-nadu-police-home-guard-personnel-arrested-on-bike-theft-case-in-karur-vel-scp6wc"/>
        </item>
        <item>
            <title><![CDATA[அதிகாலையிலேயே கோர விபத்து! 5 பேர் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பலி! நடந்தது என்ன?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/government-bus-car-collision-5-people-including-2-women-killed-tvk-ss9pe3</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/government-bus-car-collision-5-people-including-2-women-killed-tvk-ss9pe3</guid>
            <pubDate>Wed, 26 Feb 2025 08:15:49 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கரூர் அருகே பேருந்தும் காரும் மோதிய விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் கோவையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jmzyysatkh4nfx8n3eh1578k,imgname-accident.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கரூர் அருகே பேருந்தும் காரும் மோதிய விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் கோவையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;கரூர் மாவட்டம் குளித்தலை கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்தும் - காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் காரில் பயணித்த 2 பெண்கள், 3 ஆண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி ஒரு வழியாக பேருந்து அடியில் சிக்கி இருந்த காரை மீட்டனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;மேலும் விபத்தில் &amp;nbsp;உடல் நசுங்கி உயிரிழந்த 5 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் கோவை மாவட்டம் குனியமுத்தூரைச் சேர்ந்த செல்வராஜ், அவரது &amp;nbsp;மனைவி கலையரசி, மகள் அகல்யா, மகன் அருண் ஆகியோர் தஞ்சாவூர் ஒரத்தநாடு &amp;nbsp;கீழையூர் பகுதியில் உள்ள கோயிலுக்கு சாமி கும்மிட சென்றபோது விபத்தில் சிக்கியது தெரியவந்தது.&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;காரை ஒட்டி வந்த ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விஷ்ணு என்பவரும் விபத்தில் உயிரிழந்தார்.&amp;nbsp;இந்த விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகனங்கள் அணி வகுத்து நிற்கின்றனர்.&amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-karur</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/government-bus-car-collision-5-people-including-2-women-killed-tvk-ss9pe3"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Krishnasamy: மாஞ்சோலையில் பட்டினி சாவு ஏற்பட்டால் மாவட்ட ஆட்சியர் தான் பொறுப்பு; கிருஷ்ணசாமி எச்சரிக்கை]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-thirunelveli/tamil-nadu-government-should-support-manjolai-tea-estate-labourers-said-krishnasamy-in-tirunelveli-vel-sg360c</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-thirunelveli/tamil-nadu-government-should-support-manjolai-tea-estate-labourers-said-krishnasamy-in-tirunelveli-vel-sg360c</guid>
            <pubDate>Thu, 04 Jul 2024 11:59:00 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி விருப்ப ஓய்வு பெற வைத்த நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கருத்து தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01h544m4w2qrhpn53xncryyh16,imgname-whatsapp-image-2023-07-12-at-09-38-28.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலை மலை கிராமத்தில் இருக்கும் தேயிலை தோட்ட தொழிலாளர்களை விருப்ப ஓய்வு வழங்கி வெளியேற்ற நினைக்கும் தேயிலைத் தோட்ட நிர்வாகத்தின் செயலை கண்டித்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;அப்போது பேசிய அவர், மாஞ்சோலை பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் ஆறு தலைமுறைகளாக 1929ம் ஆண்டு முதல் தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். தாங்களாகவே முன்வந்து விருப்ப ஓய்வு பெறுவதாகவும், 15 -6 -2024 முதல் பணி நிறைவு பெற்றுவிட்டதாகவும் ஆகஸ்ட் 7ஆம் தேதிக்குள் அவர்கள் அங்கு வசிக்கும் வீடுகளை காலி செய்து வெளியேற்ற பிபிடிசி நிறுவனம் வலியுறுத்தி வருகிறது. இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இந்த குற்றத்திற்காக நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், பொது மேலாளரை கைது செய்ய வேண்டும். மாஞ்சோலை விவகாரத்தில் தொழிலாளர் நல ஆணையம் மௌனம் சாதித்து வருகிறது. மாஞ்சோலை தேயிலை &amp;nbsp;தோட்ட நிறுவனம் வலுக்கட்டாயப்படுத்தி கையெழுத்து பெற்றதாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் அளிக்கச் சென்றால் &amp;nbsp;மனு அளிக்க வந்த நபரை தனிமைப்படுத்தி மாவட்ட ஆட்சியர் மிரட்டி உள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;விஜய்யின் அடுத்த படத்திற்கு மிரட்டல் விடுத்த உதயநிதி? சந்தேகம் கிளப்பும் அர்ஜூன் சம்பத்&lt;/p&gt; &lt;p&gt;சுமுகமாக பேசி முடிக்க வேண்டிய செயலை சிக்கலில் இழுத்து விடும் செயலாக மாற்றும் நோக்கில் மாவட்ட ஆட்சியர் தேயிலைத் தோட்ட நிறுவனத்துடன் சேர்ந்து கொண்டு செயல்பட்டு வருகிறார். இந்த விவகாரத்தில் சுமுகமாக தீர்வு காணும் மனநிலையில் ஆட்சியர் இல்லை. தமிழக முதலமைச்சர் இந்த விவகாரம் தொடர்பாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் மாவட்ட ஆட்சியரை மாற்றவும் முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தேயிலை &amp;nbsp;பறிக்கும் தொழிலை தவிர்த்து வேறு எந்த தொழிலும் தெரியாத அங்குள்ள மக்கள் அங்குள்ள சீதோசன நிலைக்கு ஏற்றவாறு வாழ்ந்துள்ளனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;எக்காரணத்தைக் கொண்டும் அவர்களை கீழே இறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக்கூடாது. கட்டாயப்படுத்தி விருப்ப ஓய்வு பெற்றவர்களின் ஆணைகளை தொழிலாளர் நலத்துறை தலையிட்டு ரத்து செய்ய வேண்டும். மாஞ்சோலை காப்பு காட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே &amp;nbsp;காலி செய்ய சொல்கிறோம் என்பது வார்த்தை ஜாலம் மட்டுமே. 99 ஆண்டுகளாக மாஞ்சோலை மக்கள் காடுகளையும், வன செல்வங்களையும் பாதுகாத்து வருகின்றனர். அவர்கள் மீது காடுகளை அழித்ததாக ஒரு வழக்கு கூட கிடையாது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;திருச்சியில் 15 சவரன் நகைக்காக மூதாட்டி கொலை? குடியிருப்பு நிறைந்த பகுதியில் கொள்ளையர்கள் துணிகரம்&lt;/p&gt; &lt;p&gt;மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை கீழே இறக்க கூடாது என கோரிக்கை வைத்து வரும் 6ம் தேதி நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு புதிய தமிழகம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு கேட்டு 99 ஆம் ஆண்டு போராட்டம் நடத்திய போது திமுக ஆட்சியில் இருந்த சூழலில் நீதி கிடைக்காததை போல் தற்போது நீதி கிடைக்காதோ என்ற அச்சத்தில் மக்கள் இருக்கின்றனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;ஊதியம் இல்லாமல் தற்போது &amp;nbsp;மாஞ்சோலை பகுதியில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அங்கு பட்டினி சாவு ஏற்பட்டால். மாவட்ட ஆட்சியர் தான் முழு பொறுப்பு. மாஞ்சோலை விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்காக சென்றவர்கள் யாரும் தொழிலாளர்களின் அச்சத்தை போக்கும் வகையில் செயல்படவில்லை என அவர் தெரிவித்தார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-karur</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-thirunelveli/tamil-nadu-government-should-support-manjolai-tea-estate-labourers-said-krishnasamy-in-tirunelveli-vel-sg360c"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Murder: மகனை மரத்தில் கட்டிவைத்து அடித்தே கொன்ற தந்தை; மனைவியின் பேச்சை கேட்டு நடந்ததால் ஆத்திரம்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/crime/71-years-old-father-killed-her-own-son-for-family-problem-in-karur-vel-schktn</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/crime/71-years-old-father-killed-her-own-son-for-family-problem-in-karur-vel-schktn</guid>
            <pubDate>Thu, 25 Apr 2024 12:30:59 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கரூர் அருகே குடும்ப தகராறில் மகனை அடித்தே கொலை செய்துவிட்டு விபத்து போல் நாடகமாடிய தந்தையை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01hwa0wdb1ktxdh919yfdz3jmj,imgname-mixcollage-25-apr-2024-12-30-pm-3511.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கரூர் மாவட்டம், ஜெகதாபியை சேர்ந்தவர் மாரியப்பன் என்கிற மனோகரன் (வயது 43) ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி சுதா(40) என்ற மனைவியும், 17 வயதில் 1 மகளும், 13 வயதில் 1 மகனும் உள்ளனர். இருவரும் அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இந்த நிலையில் மனோகரன் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மது போதையில் இருந்து விடுபடுவதற்காக சேலத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. அப்போது வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகள் மட்டும் இருந்துள்ளனர். அந்த சமயத்தில் மனோகரன் வீட்டிற்கு நேர் எதிரே அவருடைய தந்தை மாணிக்கம் (71) புதியதாக வீடு கட்டும் பணியை தொடங்கியுள்ளார். இதனை மனோகரனின் மனைவி சுதா எங்கள் வீட்டிற்கு நேர் எதிராக ஏன் வீடு கட்டுகிறீர்கள், எனது கணவர் வந்த பின்பு வீடு கட்டும் பணியை தொடங்குங்கள் என்று கூறியுள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;என் கர்ப்பத்திற்கு அந்த போலீஸ் தான் காரணம்; திருமணத்தை மீறிய உறவை சுட்டிகாட்டி காவல் நிலையம் முன் பெண் தர்ணா&lt;/p&gt; &lt;p&gt;இதனால் ஆத்திரமடைந்த மாணிக்கம் மது போதையில் வந்து மருமகள் சுதாவை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதை சிகிச்சை முடித்து வீட்டிற்கு வந்த தனது கணவர் மனோகரனிடம் சுதா கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனோகரன் இது குறித்து தனது தந்தை மாணிக்கத்திடம் சண்டை போட்டுள்ளார். ஆத்திரமடைந்த மாணிக்கம் தனது மகள் வழி பேரன் மணிராஜை வரவழைத்து, மனோகரனை அங்குள்ள மரத்தில் கட்டி வைத்து குச்சியால் பலமாக தாக்கியுள்ளனர். இதில் மனோகரன் இறந்து விட்டதாக கூறப்படுகிறது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;நெல்லையில் தனிமையில் பேசிக் கொண்டிருந்த காதலர்களை மிரட்டி பணம் பறிப்பு&lt;/p&gt; &lt;p&gt;இதை மனோகரனின் மனைவி சுதாவிடம் கூறி இது குறித்து யாரிடமும் கூறக்கூடாது என கூறி மிரட்டி, நெருங்கிய உறவினர்கள் சிலரை மட்டும் வரவழைத்து சாலை விபத்தில் மனோகரன் இறந்து கிடந்ததாக கூறி, உறவினர்களுடன் சேர்ந்து மனோகரன் உடலை சுடுகாட்டுக்கு தூக்கி சென்று எரித்து விட்டனர். இதுகுறித்து மனோகரனின் மனைவி சுதா அளித்த புகாரின் பேரில், வெள்ளியணை போலீசார் வழக்கு பதிவு செய்து மாணிக்கம் மற்றும் மணிராஜை கைது செய்து, கரூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, நீதிமன்ற காவலுக்கு திருச்சி மத்திய சிறைக்கு அனுப்பி வைத்தனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-karur</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/crime/71-years-old-father-killed-her-own-son-for-family-problem-in-karur-vel-schktn"/>
        </item>
        <item>
            <title><![CDATA[விஜய் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? செந்தில் பாலாஜி சொன்ன சுளீர் பதில்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-karur/senthil-balaji-says-about-what-action-taken-against-tvk-vijay-r73zepl</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-karur/senthil-balaji-says-about-what-action-taken-against-tvk-vijay-r73zepl</guid>
            <pubDate>Sat, 27 Sep 2025 21:42:55 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 31 பேர் பலியானதாக கூறிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, விஜய் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்கிற கேள்விக்கும் பதிலளித்துள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k65z28je71dy0seyk8a30ea0,imgname-new-project---2025-09-27t214003.905-1758989460046.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 31 பேர் பலியானதாக கூறிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, விஜய் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்கிற கேள்விக்கும் பதிலளித்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று கரூரில் பரப்புரை மேற்கொண்டார். சரியாக மாலை 6 மணிக்கு கரூர் வந்த விஜய், பரப்புரை செய்ய இருந்த வேலுச்சாமி புரத்தில் 7 மணிக்கு பேசத் தொடங்கினார். விஜய் பேசத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே கூட்டத்தில் சிலர் மயக்கமடைந்தனர். இதையடுத்து தன்னுடைய பிரச்சார வாகனத்தில் இருந்த தண்ணீர் பாட்டில்களை எடுத்து அனைவருக்கும் வினியோகம் செய்தார். பின்னர் போகப் போக கூட்டம் அதிகமானதால் சில நிமிடங்கள் மட்டுமே பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பினார் விஜய்.&lt;/p&gt;&lt;p&gt;விஜய் பரப்புரை முடிந்த பின்னர் தான் அங்கு ஏராளமானோர் மயக்கமடைந்து கிடந்தது தெரியவந்தது. அதுமட்டுமின்றி இந்த கூட்டத்தில் ஏராளமான குழந்தைகளும் காணாமல் போனதாக கூறப்படுகிறது. கூட்டத்தில் மயங்கி கிடந்தவர்களை மீட்க வரிசையாக ஆம்புலன்ஸ்கள் தவெக பரப்புரை நடந்த இடத்திற்கு வந்தன. அங்கு இருந்து அவர்களை மீட்டு அவசர அவசரமாக மருத்துவமனிக்கு செல்லப்பட்டனர். சிலர் செல்லும் போதே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;விஜய் மீது என்ன நடவடிக்கை?&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;இந்த நிலையில், இச்சம்பவம் குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, இதுவரை 31 பேர் பலியாகி இருப்பதாகவும், 58 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் முதல்வர் உடனடியாக அனைவருக்கும் உயர்தர சிகிச்சை அளிக்க உத்தரவிட்டதாக கூறிய அவர், நாளை காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக கரூர் வந்து பார்வையிட உள்ளதாக கூறினார்.&lt;/p&gt;&lt;p&gt;இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விஜய் மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் என நிரூபர்கள் கேள்வி எழுப்பினர். தற்போதைக்கு சிகிச்சையில் உள்ளவர்களை காப்பாற்றுவதில் நாங்கள் தீவிரமாக இருக்கிறோம். மற்றவையெல்லாம் நாளை பேசிக் கொள்ளலாம். இங்கு காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் எல்லாரும் இருக்கிறார்கள். அதனால் நடவடிக்கை எடுக்கபதற்கான வேலைகளும் கண்டிப்பாக நடந்துகொண்டு தான் இருக்கிறது என செந்தில் பாலாஜி கூறினார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-karur</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-karur/senthil-balaji-says-about-what-action-taken-against-tvk-vijay-r73zepl"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Karur Accident: அரவக்குறிச்சி அருகே கோர விபத்து; தந்தை, மகள் உள்பட மூவர் துடிதுடித்து உயிரழப்பு]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-karur/3-people-in-a-same-family-killed-road-accident-in-karur-district-vel-sh0ky7</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-karur/3-people-in-a-same-family-killed-road-accident-in-karur-district-vel-sh0ky7</guid>
            <pubDate>Mon, 22 Jul 2024 13:02:31 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே இன்று அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் தந்தை, மகள் உள்பட மூவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j3cnk7wbjp165t8xa9et8tx1,imgname-mixcollage-22-jul-2024-01-00-pm-1611.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஈரோடு மாவட்டம் சூளை ஜிகேஆர் நகரைச் சேர்ந்தவர் நடராஜ். இவரது மகன் கிருஷ்ணகுமார் (வயது 40). இவர் ஈரோட்டில் இருந்து பௌர்ணமி தினத்தை முன்னிட்டு திருச்செந்தூருக்கு தனது குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் காரில் சென்றுள்ளார். திருச்செந்தூரில் சுவாமி தரிசனத்தை முடித்துக் கொண்டு மீண்டும் சொந்த ஊருக்கு காரில் திரும்பி வந்துகொண்டிருந்தனர்.&lt;/p&gt; &lt;p&gt;கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த ஆண்டிப்பட்டிக்கோட்டை அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது அதிகாலை 3.30 மணியளவில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த மரத்தில் மோதி கார் முற்றிலும் உருகுலைந்து. கார் மோதிய வேகத்தில் படுகாயமடைந்த கிருஷ்ணகுமார், அவரது மகள் வருணா, மாமியார் இந்திராணி ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.&lt;/p&gt; &lt;p&gt;KAILASA's Nithyananda Location Revealed: நாட்டிற்கே தண்ணீர் காட்டிய நித்தி; கைலாசா இருக்கும் இடத்தை அறிவித்தார்&lt;/p&gt; &lt;p&gt;மேலும் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய கிருஷ்ணகுமாரின் மகன் சுதர்சன், மனைவி மோகனா ஆகிய இருவரும் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். ஓட்டுநரின் தூக்க கலக்கத்தால் இந்த விபத்து நடைபெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனிடையே காரை ஓட்டி வந்த கிருஷ்ணகுமாரின் உடல் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டதால் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் உடல் மீட்கப்பட்டது.&lt;/p&gt; &lt;p&gt;எனது மொபைலில் இருந்த ஆடியோ வெளியானது இப்படி தான்.? இவர்கள் தான் காரணம்-சாட்டை துரைமுருகன் வெளியிட்ட ஷாக்&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;கோவிலுக்கு சென்று திரும்பிய நபர்கள் சாலை விபதில் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-karur</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-karur/3-people-in-a-same-family-killed-road-accident-in-karur-district-vel-sh0ky7"/>
        </item>
        <item>
            <title><![CDATA[தவெக தலைவருக்கு சரியான ஆலோசனை இல்லை – 2ஆம் கட்ட தலைவர்களை குற்றம் சாட்டிய தாடி பாலாஜி!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-karur/actor-thadi-balaji-blamed-bussy-anand-and-aadhav-arjuna-for-karur-tragedy-articleshow-rgvm5nl</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-karur/actor-thadi-balaji-blamed-bussy-anand-and-aadhav-arjuna-for-karur-tragedy-articleshow-rgvm5nl</guid>
            <pubDate>Wed, 01 Oct 2025 18:58:00 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய தாடி பாலாஜி தவெகவின் 2ஆம் கட்ட தலைவர்களை குற்றம் சாட்டியுள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jb7jpwg62251p56r43bhs3f5,imgname-bussy-anand.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;h2&gt;&lt;strong&gt;தமிழக வெற்றிக் கழகம் - தவெக தலைவர் விஜய்:&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கி 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி தனது அரசியல் பயணத்தை மேற்கொண்டு வரும் தளபதி விஜய் தற்போது நாடு முழுவதும் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். முதல் கட்டமாக திருச்சி, பெரம்பலூரில் பரப்புரை மேற்கொண்டார். அடுத்ததாக நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் பரப்புரையில் ஈடுபட்டார். இந்த நிலையில் தான் கடந்த 27ஆம் தேதி சனிக்கிழமை நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் மக்களை சந்தித்து பேசினார். இந்த நிலையில் தான் கரூர் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.&lt;/p&gt;&lt;p&gt;கத்திக்குத்து பட்டவர் எங்கு சிகிச்சை பெற்றார்?.. முக்கியமான பாயிண்டை பிடித்த செந்தில் பாலாஜி!&lt;/p&gt;&lt;p&gt;இச்சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில் மிகப்பெரிய பூகம்பமாக வெடித்தது. அதுமட்டுமின்றி அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு முழுக்க முழுக்க திமுக அரசு தான் காரணம் என்றும், கரூர் மாவட்ட செயலாளருமான செந்தில் பாலாஜி தான் காரணம் என்றும் குற்றம் சாட்டப்பட்டது. மேலும், கூட்ட நெரிசல் மிகுந்த அந்த சாலையில் ஆம்புலன்ஸ் வந்தது எப்படி? தொண்டர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது ஏன்?&lt;/p&gt;&lt;p&gt;விஜய் பேசிக் கொண்டிருந்த போது வாகனத்தின் மீது செருப்பு வீசி மர்ம நபர் யார்? சம்பவம் நடந்தவுடன் அவசரம் அவசரமாக பலியானவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்தது ஏன்? என பல்வேறு கேள்விகளை தவெகவினர் எழுப்பினார்கள். மிக முக்கியமாக கூட்டத்தில் மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்தியதாகவும் தவெகவினர் குற்றம்சாட்டுகின்றனர். இது தொடர்பாக தவெவினர் சேனல்களுக்கு பேட்டியும் அளித்தனர்.&lt;/p&gt;&lt;p&gt;பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு..! ஆதாரத்துடன் திமுக அரசை வெளுத்து வாங்கிய அண்ணாமலை!&lt;/p&gt;&lt;p&gt;இந்த சூழலில் தான் 3 நாட்களுக்கு பிறகு தவெக தலைவர் தளபதி விஜய் வீடியோ வெளியிட்டு கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தார். தான் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ தான் இருப்பேன். தன்னை என்ன வேண்டுமென்றாலும் செய்து கொள்ளலாம் என்று கூறி வீடியோ வெளியிட்டிருந்தார். விரைவில் கரூர் வந்து பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க இருப்பதாக கூறியிருந்தார். இந்த நிலையில் தான் நடிகரும், விஜய்யின் நண்பருமான தாடி பாலாஜி கரூர் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.&lt;/p&gt;&lt;p&gt;அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு தாடி பாலாஜி பதிலளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: தளபதி விஜய்யுடன் இருக்கும் 2ஆம் கட்ட தலைவர்கள் தான் காரணம். தலைவருக்கு எல்லாமே தெரியும் அப்படி என்பதில்லை. இப்போது தான் கட்சி ஆரம்பித்திருக்கிறார். இனிமேல் தான் படிப்படியாக ஒன்னொன்னா தெரிஞ்ச்சுக்கணும். இந்த சம்பவம் தான் அவருக்கு ஒரு புரிதலை ஏற்படுத்தியிருக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;தலைவர் 7 மணிக்கு ஷூட்டிங் என்றால் கூட 5 மணி, 6 மணிக்கு போயிருவார். இந்த 2 ஆம் கட்ட தலைவர்கள், இந்த இடத்தை பார்த்திருக்கிறார்கள், வந்திருக்கிறார்கள், ஆய்வு செய்திருக்கிறார்கள். அப்படியிருக்கும் போது, இந்த டைமில் நீங்கள் வந்தால் நன்றாக இருக்கும் என்று இந்த 2ஆம் கட்ட தலைவர்கள் தான் தலைவரிடம் சொல்லியிருக்க வேண்டும். அதனுடைய முக்கியத்துவத்தை புரிய வைக்க வேண்டும். டைமிங்கும் ஒரு ரீசன் தான்.&lt;/p&gt;&lt;p&gt;சார், 8.45 மணிக்கு அனுமதி வாங்கியிருக்கு சார், அந்த இடத்தை முடித்துக் கொண்டு திரும்ப இங்கு வர வேண்டும். டிராவலிங் டைம் இவ்வளவு இருக்கு என்று சொல்ல வேண்டும். இந்த 2ஆம் கட்ட தலைவர்கள் முழுக்க முழுக்க அரசியல் தெரிந்தவர்கள். அனுபவம் வாய்ந்தவர்கள். முதலில் பில்டிங் ஸ்டிராங்க இருக்க வேண்டும். அதாவது, கட்டமைப்பு சரியாக இருக்க வேண்டும். இந்த சம்பவம் தவெக தலைவர் விஜய்க்கு நிறைய விஷயங்களை புரிய வைத்திருக்கும். என்னுடைய குற்றச்சாட்டு முழுவதும் 2ஆம் கட்ட தலைவர்கள் தான் என்று புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜூனாவை குற்றம் சாட்டியுள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-karur</category>
            <dc:creator>Rsiva kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-karur/actor-thadi-balaji-blamed-bussy-anand-and-aadhav-arjuna-for-karur-tragedy-articleshow-rgvm5nl"/>
        </item>
        <item>
            <title><![CDATA[அரசு பள்ளி கழிவறையை சுத்தம் செய்த மாணவிகள்! வைரலான வீடியோ! தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-karur/two-girl-students-cleaning-toilet-karur-government-school-hm-suspended-tvk-stcx9x</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-karur/two-girl-students-cleaning-toilet-karur-government-school-hm-suspended-tvk-stcx9x</guid>
            <pubDate>Wed, 19 Mar 2025 13:22:01 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கரூர் அரசு பள்ளியில் மாணவிகளை கழிவறை சுத்தம் செய்ய வைத்த சம்பவம் வைரலாகியுள்ளது. தலைமை ஆசிரியை பூங்கொடி இடைநீக்கம் செய்யப்பட்டார். மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jppg7rb2vttmxncensyd71hq,imgname-school-students.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவிகளை கழிவறையை செய்யும் சம்பவம் அவ்வப்போது வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்தாலும் இன்னும் ஒய்ந்தபாடியில்லை. இந்நிலையில் அரசு பள்ளியில் மாணவிகளை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.&lt;/p&gt; &lt;p&gt;கரூர் மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட &amp;nbsp;புலியூர் காளிபாளையம் பகுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 25க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் ஆகிய இருவர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&lt;strong&gt;அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தலையில் இடியை இறக்கிய தமிழக அரசு!&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;பள்ளியில் ஆசிரியர்கள் பயன்படுத்தும் கழிவறைகளை பள்ளியில் படிக்கும் மாணவர்களை கொண்டு தலைமை ஆசிரியர்கள் சுத்தம் செய்ய வைப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில் பள்ளி மாணவிகள் கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ காட்சிகள் வைரலானது. இதுதொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் எம்.எஸ். சுகானந்தம் விளக்கம் கேட்ட போது தான்தோன்றிமலை வட்டார கல்வி அலுவலரை நேரில் அனுப்பி வைத்து விசாரணை மேற்கொள்வதாக தெரிவித்தார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&lt;strong&gt;நாகையில் அதிசய வாழை மரம்! ஐந்து தலை நாக வடிவில் மேல்நோக்கி வளரும் வாழைக்காய்!&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;அதனை தொடர்ந்து இடத்திற்கு வந்த கல்வி அலுவலர் அப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மாணவிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது அறிக்கை சமர்ப்பித்தார். இதனையடுத்து பள்ளித் தலைமை ஆசிரியை பூங்கொடி இடைநீக்கம் செய்யப்பட்டார்.&amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-karur</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-karur/two-girl-students-cleaning-toilet-karur-government-school-hm-suspended-tvk-stcx9x"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Jothimani: கோவை தொகுதியை அதிமுகவும், வேலுமணியும் அண்ணாமலைக்கு விட்டு கொடுத்துள்ளனர் - ஜோதிமணி பரபரப்பு தகவல்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-coimbatore/karur-mp-jothimani-slams-bjp-government-in-chennai-airport-vel-seprq5</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-coimbatore/karur-mp-jothimani-slams-bjp-government-in-chennai-airport-vel-seprq5</guid>
            <pubDate>Fri, 07 Jun 2024 19:48:05 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;அதிமுக, பாஜக இடையேயான வார்த்தைப் போர் என்பது நாடகம். கோவை தொகுதியை பாஜகவின் அழுத்தம் காரணமாக அதிமுகவும், வேலுமணியும் அண்ணாமலைக்கு விட்டு கொடுத்துள்ளனர் என கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01hepnc4q36jyaxs948663401b,imgname-jothimani-mp.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சென்னை விமான நிலையத்தில், கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜோதி மணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்த தேர்தலில் பா.ஜ.க.வும், மோடியும் ஆட்சி அமைக்க கூடாது என்று மக்கள் ஓட்டு போட்டு உள்ளனர். இதனால் பா.ஜ.க. ஆட்சி அமைக்க உரிமை கோர கூடாது.&lt;/p&gt; &lt;p&gt;யூடியூப் மட்டும் பார்த்து படித்து நீட் தேர்வில் 687 மதிப்பெண்கள் எடுத்த திருப்பூர் மாணவன்; பெற்றோர் மகிழ்ச்சி&lt;/p&gt; &lt;p&gt;மக்கள் எதிர்த்து ஒட்டு போட்டு உள்ளதால் தார்மீக அடிப்படையில் பதவி ஏற்க கூடாது. இது பா.ஜ.க ஆட்சி இல்லை தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்று கூறுகின்றனர். அமைச்சரவையில் இடம் கேட்டு நிர்பந்தங்கள் இருப்பதாக தகவல்கள் வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் காங்கிரஸ் எதிர்கட்சியாக சிறப்பாக செயல்பட்டதால் மக்கள் நம்பிக்கையை பெற்று உள்ளோம்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;மனைவியின் கல்வி கடனை அடைக்க வெளிநாடு சென்ற வாலிபர்; இன்ஸ்டா காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவி - தென்காசியில் பரபரப்பு&lt;/p&gt; &lt;p&gt;சிறந்த எதிர்கட்சியாக செயல்படுவோம். மக்கள் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம். அதிமுக - பா.ஜ.க. வார்த்தை போர் என்பது நாடகம். பா.ஜ.க அழுத்தம் காரணமாக அதிமுகவும், வேலுமணியும், அண்ணாமலைக்கு விட்டு கொடுத்து உள்ளனர். இதை மறைத்து அப்பாவி அதிமுக தொண்டர்களை ஏமாற்ற வேலுமணியும், அண்ணாமலையும் நாடகம் நடத்துகின்றனர். பா.ஜ.க.விற்கு கிடைத்த வாக்கு வங்கி அதிமுகவின் வாக்கு தான் என்று அவர் கூறினார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-karur</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-coimbatore/karur-mp-jothimani-slams-bjp-government-in-chennai-airport-vel-seprq5"/>
        </item>
        <item>
            <title><![CDATA[என்னால முடியல.. கரூருக்கு ஓடோடி வந்த ஸ்டாலின்.. கதறி அழுத பெற்றோர்கள்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-karur/karur-tvk-stampede-cm-stalin-consoles-victims-articleshow-xg1y8g1</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-karur/karur-tvk-stampede-cm-stalin-consoles-victims-articleshow-xg1y8g1</guid>
            <pubDate>Sun, 28 Sep 2025 06:55:46 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் நடத்திய பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர். முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து, இது விவரிக்க முடியாத துயரம் என்று குறிப்பிட்டார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k66ydt2xa3hg2zt2sah0gxmw,imgname-tamil-news---2025-09-28t064742.071-1759022344285.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கரூர் வேலுச்சாமிபுரத்தில் நேற்று மாலை நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பேரணியில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. இந்த துயரச் சம்பவத்தில் 17 பெண்கள், 13 ஆண்கள் மற்றும் 9 குழந்தைகள் உயிரிழந்தனர்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;தற்போது மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவலின்படி ஒருவர் கவலைக்கிடமாக உள்ளார். பல குழந்தைகள் காணாமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாலை கரூருக்குச் சென்று மருத்துவமனையில் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். சம்பவம் தொடர்பாக தமிழக அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;img&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு, உயிரிழந்தவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் உடனடி நிவாரணமாக தமிளகா அரசு அறிவித்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் அதிகாலை 3.25 மணியளவில் மருத்துவமனையில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தினார்.&lt;/p&gt;&lt;p&gt;மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், கரூர் சம்பவம் அரசியல் கூட்டங்களில் இதுவரை நடந்த நிகழ்வுகளில் இல்லாத துயரம் என்றும், விவரிக்க முடியாத சம்பவம் என்றும் தெரிவித்தார். விஜய் கைது செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு, யாரை கைது செய்யலாம், யாரை முடியாது என்பதை தற்போது கூற முடியாது என்றும் அவர் பதிலளித்தார்.&lt;/p&gt;&lt;p&gt;15 வயதுக்குட்பட்ட சுமார் ஆயிரம் குழந்தைகள் கரூர் பேரணியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. விபத்து நேரம், காவல்துறை கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதால், விபத்து நடக்க சில நிமிடங்களுக்கு முன் விஜய் மைக்கில் தண்ணீர் பாட்டில்கள் வழங்கும் உதவியை கோரினார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;img&gt;&lt;/p&gt;&lt;p&gt;இருப்பினும், கூட்ட நெரிசல் காரணமாக உதவி வழங்க முடியவில்லை. கரூர் சம்பவத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;பிரதமர் மோடி கரூர் விபத்தை வேதனையளிக்கும் சம்பவமாகவும், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அன்புடன் துணை நிற்கும் என்றும் கூறினார். அமித் ஷா முதல்வர் ஸ்டாலினை தொலைபேசியில் அழைத்து தனது இரங்கலைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-karur</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-karur/karur-tvk-stampede-cm-stalin-consoles-victims-articleshow-xg1y8g1"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ ஃபேன் சுவிட்சை போடும் போது தாக்கிய மின்சாரம்.. பேரனை காப்பாற்ற சென்ற தாத்தா.. இருவரும் துடிதுடித்து பலி!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-karur/grandfather-grandson-killed-in-electrocution-in-karur-sfj1c7</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-karur/grandfather-grandson-killed-in-electrocution-in-karur-sfj1c7</guid>
            <pubDate>Sun, 23 Jun 2024 15:06:07 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கரூர் மாவட்டம் குளித்தலையை அருகே உள்ள வயலூர் நடுப்பட்டியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (65). இவரது பேரன் திருக்குமரன் (15). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j1274wvqdmfr0a2gpysr0xnz,imgname-karur.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கரூர் அருகே ஃபேன் சுவிட்சை அழுத்தும் போது மின்சாரம் பாய்ந்து தாத்தா சீனிவாசன் மற்றும் பேரன் திருக்குமரன் ஆகியோர் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;கரூர் மாவட்டம் குளித்தலையை அருகே உள்ள வயலூர் நடுப்பட்டியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (65). இவரது பேரன் திருக்குமரன் (15). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், வீட்டில் ஃபேன் சுவிட்ச் பிளக் மாட்டும் போது திருக்குமரன் மீது மின்சாரம் பாய்ந்தது. அப்போது தாத்தா சீனிவாசன் காப்பாற்ற முயற்சி ஈடுபட்டார். இதனால், மின்சாரம் பாய்ந்தது. அப்போது தாத்தா சீனிவாசன் காப்பாற்ற முயற்சி ஈடுபட்டார். அப்போது தாத்தாவும், பேரனும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இவர்களை காப்பாற்ற முயன்ற திருக்குமரனின் தாயார் ரேவதி மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இறுதியாக மின்சார இணைப்பை துண்டித்த பிறகு ரேவதியை மட்டும் காப்பாற்றினர். மின்சாரம் தாக்கி காயமடைந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இந்த சம்பவம் தொடர்பாக லாலாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தில் தாத்தா பேரன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-karur</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-karur/grandfather-grandson-killed-in-electrocution-in-karur-sfj1c7"/>
        </item>
    </channel>
</rss>
