<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes"?>
<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Mon, 05 Jan 2026 17:19:20 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss/tamilnadu-kanchipuram" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[தேவாலயத்தில் சிறுமியிடம் இரக்கமின்றி அத்துமீறிய பாதிரியார் இரக்கம்; முதல்வரின் தனிபிரிவுக்கு பறந்த புகார்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-kanchipuram/church-father-arrested-under-pocso-act-who-sexually-abuse-minor-girl-in-kanchipuram-vel-sg3djc</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-kanchipuram/church-father-arrested-under-pocso-act-who-sexually-abuse-minor-girl-in-kanchipuram-vel-sg3djc</guid>
            <pubDate>Thu, 04 Jul 2024 14:41:35 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;காஞ்சிபுரத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மதபோதகரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j1yg6bhn862a7askwak05xvc,imgname-mixcollage-04-jul-2024-02-41-pm-1320.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;காஞ்சிபுரம் மாவட்டம், சின்ன&zwnj; காஞ்சிபுரம் இராஜாஜி மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவருடைய அம்மா இறந்த நிலையில் அக்கா மற்றும் அப்பாவுடன் வசித்து வருகிறார். சிறுமியின் தந்தை ரயில்வே சாலையில் உள்ள சிஎஸ்ஐ சர்ச்சில் தோட்ட வேலை செய்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வாரம் காலம் சிஎஸ்ஐ சர்ச்சில் சிறுமி தங்கி இருந்ததாக சொல்லப்படுகிறது.&lt;/p&gt; &lt;p&gt;எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை பார்த்த எங்களுக்கு &ldquo;விஜய் ஒரு சுண்டைக்காய்&rdquo; - அர்ஜூன் சம்பத் காட்டம்&lt;/p&gt; &lt;p&gt;அப்போது சிஎஸ்ஐ சர்ச்சில் பாதிரியாராக இருந்துவரும் தேவஇரக்கம் இரவு நேரத்தில் சிறுமி படுத்திருந்த நிலையில் அவரை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். அப்போது அங்கிருந்து கத்தியபடி சிறுமி வீட்டிற்கு சென்றதாக சொல்லப்படுகிறது. இதனால் அந்த சிறுமியின் அக்கம் பக்கத்து வீட்டினருக்கு இந்த சிறுமியை பாதிரியார் பாலியல் துன்புறுத்தியது கசிந்திருக்கிறது.&lt;/p&gt; &lt;p&gt;இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் தகவல் அறிந்து இதுகுறித்து முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுத்திட அங்கிருந்து காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சக்தி காவியாவிற்கு இம்மனு வந்த நிலையில், புகார் குறித்து விசாரித்து உண்மை நிலையை அறிந்த நிலையில் காஞ்சிபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.&lt;/p&gt; &lt;p&gt;திருச்சியில் 15 சவரன் நகைக்காக மூதாட்டி கொலை? குடியிருப்பு நிறைந்த பகுதியில் கொள்ளையர்கள் துணிகரம்&lt;/p&gt; &lt;p&gt;அதன் அடிப்படையில் பாதிரியார் தேவஇரக்கம் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். பாலியல் புகாரில் சிக்கிய பாதிரியாரின் செயல் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-kanchipuram</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-kanchipuram/church-father-arrested-under-pocso-act-who-sexually-abuse-minor-girl-in-kanchipuram-vel-sg3djc"/>
        </item>
        <item>
            <title><![CDATA[பரந்தூர் விமான நிலையத்தால் சொந்த மாநிலத்திலேயே அகதிகளாக்கப்படும் மக்கள் - தினகரன் கண்டனம்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/ammk-general-secretary-ttv-dhinakaran-condemns-tn-government-on-land-accusation-issue-for-parandur-airport-in-kanchipuram-vel-sf9j5q</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/ammk-general-secretary-ttv-dhinakaran-condemns-tn-government-on-land-accusation-issue-for-parandur-airport-in-kanchipuram-vel-sf9j5q</guid>
            <pubDate>Tue, 18 Jun 2024 11:55:01 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;புதிய விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தை விட்டு வெளியேறும் பரந்தூர் பகுதி மக்கள். சொந்த மாநில மக்களை அகதிகளாக்கும் தமிழக அரசின் பிடிவாதப்போக்குக்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01h4thb81rgtgx1tmk62x6sbkv,imgname-ttv-dhinakaran.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், &ldquo;சென்னையின் இரண்டாவது விமான நிலையத்திற்கான நிலம் கையகப்படுத்தும் தமிழக அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டிக்கும் விதமாக பரந்தூர், ஏகனாபுரம் பகுதி மக்கள் தமிழகத்தை விட்டு வெளியேறி ஆந்திராவில் இடம்பெயர முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.&lt;/p&gt; &lt;p&gt;பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு வெளியான நாளில் தொடங்கி இன்று வரை எண்ணிலடங்கா போராட்டங்களை முன்னெடுத்த பொதுமக்களின் உணர்வுகளை மதிக்காமல் பிடிவாதப் போக்குடன் செயல்படும் தமிழக அரசின் செயல்பாடுகள் கடும் கண்டனத்திற்குரியது.&lt;/p&gt; &lt;p&gt;நாட்டிலேயே இந்தியா கூட்டணிக்கு 100 சதவீத வெற்றியை கொடுத்த ஒரே மாநிலம் தமிழகம் தான் - அமைச்சர் பெருமிதம்&lt;/p&gt; &lt;p&gt;விளை நிலங்கள், நீர்நிலைகள், குடியிருப்புகளை அழித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை அடியோடு சீர்குலைக்கும் பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு நிர்வாகம் காட்டும் முனைப்பு, சுதந்திர இந்தியாவில் தங்களை ஆட்சி செய்யும் மாநில அரசை எதிர்த்து அம்மாநில மக்களே அகதிகளாக வெளியேறும் அளவிற்கு அவலநிலையை முதல் முறையாக உருவாக்கியுள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;OMNI BUS : தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் இன்று முதல் இயங்காது.!! முன்பதிவு செய்த பயணிகளுக்கு வந்த ஷாக் தகவல்&lt;/p&gt; &lt;p&gt;பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பாணையை திரும்பப் பெருவதோடு, தமிழகத்தை விட்டு வெளியேற முடிவு செய்திருக்கும் பரந்தூர் பகுதி மக்களையும் விவசாயிகளையும் உடனடியாக அழைத்துப் பேசி உரிய தீர்வு காண முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்&rdquo; என்று குறிப்பிட்டுள்ளார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-kanchipuram</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/ammk-general-secretary-ttv-dhinakaran-condemns-tn-government-on-land-accusation-issue-for-parandur-airport-in-kanchipuram-vel-sf9j5q"/>
        </item>
        <item>
            <title><![CDATA[காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி கலைச்செல்வன் மீது பதிவுத்துறை ஒருங்கிணைப்புக்குழு புகார்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-kanchipuram/registration-department-committee-files-complaint-against-kanchipuram-anti-corruption-dsp-kalaiselvan-rsk-srql6u</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-kanchipuram/registration-department-committee-files-complaint-against-kanchipuram-anti-corruption-dsp-kalaiselvan-rsk-srql6u</guid>
            <pubDate>Sat, 15 Feb 2025 23:41:17 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;strong&gt;Tirupattur District Registrar Senthur Pandian : &lt;/strong&gt;காஞ்சிரபும் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பியான கலைச்செல்வன் மீது தமிழ்நாடு பதிவுத்துறை அனைத்து ஊழியர்கள் ஒருங்கிணைப்புக் குழு பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01h4mwmrr6amctfzegnbha41h2,imgname-tn-registration-department.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;strong&gt;Tirupattur District Registrar Senthur Pandian : &lt;/strong&gt;காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையில் காவல் ஆய்வாளராக 15 வருடங்களும், DSP ஆக 6 வருடங்களும் கலைச்செல்வன் பணியாற்றி வருகிறார். மேலும் இவர் திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பணிபுரியும் சார்பதிவாளர்களை தொடர்புகொண்டு முறை கேடான ஆவணங்களை பதிவு செய்யும்படி தொடர்ந்து மிரட்டி வந்துள்ளது தெரிய வந்துள்ளது.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;தற்போது திருப்பூர் மாவட்டத்தில் பதிவாளராக பணியாற்றி வரும் செந்தூரபாண்டியனின் மாமானார் வீட்டில் நேற்று நடத்தப்பட்ட சோதனையில் எந்த ஒரு ஆவணமோ, நகையோ, பணமோ கைப்பற்றப்படவில்லை. இந்த் நிலையில் கலைச்செல்வன் DVAC-யில் பணிபுரியாத வெளிநபர்களை அழைத்து சென்று அவர்கள் மூலமாக தவறான தகவலை Media-க்கு கசியவிட்டு மாநிலத்தலைவரை பொதுவெளியில் அசிங்கப்படுத்த முயற்சி செய்துள்ளார். மேலும் செந்தூர் பாண்டியனை கைது செய்துவிட்டதாகவும் பொய்யான தகவலை பரப்பியுள்ளார். இது சம்மந்தமாக அவர்மீது நீதிமன்றத்தில் மான நஷ்ட ஈடு வழக்கு தொடரப்பட இருக்கிறது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;உரிமையைக் கேட்கிறோம்; பிச்சையல்ல; மத்திய அரசுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;முத்திரை கட்டணத்தை குறைவாக பதிவு செய்து ரூ 1.34 கோடி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக திருப்பத்தூர் மாவட்ட பதிவாளரான செந்தூர் பாண்டியன் வீட்டில் நேற்று சோதனை நடத்தப்பட்டது.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;செங்கல்பட்டு மாவட்டத்தில் பணியாற்றிய போது முத்திரை கட்டணம் குறைவாக பதிவு செய்து அரசுக்கு ரூ.1.34 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக செந்தூர் பாண்டியன் மீது புகார் எழுந்தது. இதுகுறித்து காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.&zwnj; இந்த நிலையில் மதுரவாயல் அடுத்த நூம்பல் பகுதியில் உள்ள செந்தூர் பாண்டியன் வீட்டில் நேற்று டிஎஸ்பி கலைச்செல்வன், இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் 7 பேர் சோதனை நடத்தினர்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்காவிட்டால் நிதி கிடையாது; மத்திய அமைச்சர் திட்டவட்டம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;நடைமுறை தவறு ஏதும் இல்லாத ஆவணப்பதிவில் பொய்ப் புகாரை விசாரிக்க பதிவுத்துறை தலைவர் அனுமதி அளித்தது எப்படி? DVAC-யின் புகாரினை எதிர்த்து செந்தூர் பாண்டியனால் உயர்நீதிமன்றத்தில் (வழக்கு எண் W.P.No.18072/2024) வழக்கு தொடரப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்ட பதிவாளர் செந்தூர் பாண்டியனுக்கு பணி பாதுகாப்பும், உயிர் பாதுகாப்பும் வழங்க வேண்டும். தமிழ்நாடு பதிவுத்துறை அனைத்து ஊழியர்கள் ஒருங்கிணைப்புக்குழு அறிக்கை வாயிலாக கண்டனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;ஸ்மார்ட்போனை விட ஸ்மார்டாக இருங்கள்! மாணவரின் கேள்விக்கு சத்குரு அளித்த பதில்!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-kanchipuram</category>
            <dc:creator>Rsiva kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-kanchipuram/registration-department-committee-files-complaint-against-kanchipuram-anti-corruption-dsp-kalaiselvan-rsk-srql6u"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Kanchipuram: காஞ்சிபுரத்தில் ஒரே கிராமத்தில் 10க்கும் மேற்பட்டோருக்கு திடீர் உடல்நலக்குறைவு; மூதாட்டி பலி]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-kanchipuram/more-than-10-people-fell-ill-at-the-same-time-in-kanchipuram-one-old-lady-died-vel-sf21ll</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-kanchipuram/more-than-10-people-fell-ill-at-the-same-time-in-kanchipuram-one-old-lady-died-vel-sf21ll</guid>
            <pubDate>Fri, 14 Jun 2024 10:52:33 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே ஒரே கிராமத்தில் திடீரென பலருக்கும் வயிற்றுபோக்கு ஏற்பட்டுள்ள நிலையில், மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j0ak3023bas67hnk3149qhsd,imgname-whatsapp-image-2024-06-14-at-10-46-24.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம் வையாவூர் ஊராட்சிக்கு உட்பட்ட காலனி பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் திடீரென நேற்று முதல் கிராம மக்கள் பலக்கும் திடீரென வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.&lt;/p&gt; &lt;p&gt;இந்நிலையில் மூதாட்டி ஒருவர் வயிற்றுப்போக்கின் காரணமாக உயிரிழந்த நிலையில் அந்தப் பகுதி முழுவதுமே தொற்று நோய் ஏதேனும் ஏற்பட்டிருக்குமோ என பெரும் அச்சம் ஏற்பட்டு உள்ளது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த சுகாதாரத் துறை அதிகாரிகள் அப்பகுதியில் முகாமிட்டு கிராம மக்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு மருந்து, மாத்திரைகளை விநியோகம் செய்து வருகின்றனர்.&lt;/p&gt; &lt;p&gt;Theft: ரூ.10 ஆயிரம் கடனுக்காக ஆட்டோவை திருடிச் சென்ற பாஜக பிரமுகர் - கன்னியாகுமரியில் பரபரப்பு&lt;/p&gt; &lt;p&gt;மேலும் ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குனர் ஜெயக்குமார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்து கிராமம் முழுவதும் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள முடுக்கி விட்டுள்ளார். மேலும் குடிநீர் தொட்டியை முறையாக பராமரிக்காத ஊராட்சி செயலாளர் பாஸ்கர் மற்றும் பம்ப் ஆப்ரேட்டர் உள்ளிட்ட பணியாளர்களை பணியிடை நீக்கம் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.&lt;/p&gt; &lt;p&gt;பெண்களை பார்த்ததும் நிற்காமல் சிட்டாக பறக்கும் அரசு பேருந்துகள்; பேருந்தை சிறை பிடித்த மக்களால் பரபரப்பு&lt;/p&gt; &lt;p&gt;இந்நிலையில் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அனைத்தும் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு குளோரின் கலக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குடிநீர் பிரச்சினை காரணமாக இந்நிலை ஏற்பட்டு இருக்குமோ என பொதுமக்கள் அச்சப்படும் நிலையில் குடிநீரையும் பரிசோதனை செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-kanchipuram</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-kanchipuram/more-than-10-people-fell-ill-at-the-same-time-in-kanchipuram-one-old-lady-died-vel-sf21ll"/>
        </item>
        <item>
            <title><![CDATA[4 சட்டக்கல்லூரி மாணவர்களை காவு வாங்கிய நாய்; விபத்தில் அப்பளம் போல் நொறுங்கிய கார்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-kanchipuram/4-law-college-students-killed-road-accident-in-chengalpattu-vel-shjxuq</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-kanchipuram/4-law-college-students-killed-road-accident-in-chengalpattu-vel-shjxuq</guid>
            <pubDate>Thu, 01 Aug 2024 23:55:38 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;செங்கல்பட்டு அருகே திடீரென நாய் குறுக்கே வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்தில் சிக்கியதில் அதில் பயணம் செய்த 4 சட்டக்கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j47k099c9jbv8g7abh6z5asc,imgname-whatsapp-image-2024-08-01-at-23-53-37.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் பகுதியில் தனியார் சட்டக்கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 3 மற்றும் 5 ஆண்டு சட்டப்படிப்புகளை படித்து வருகின்றனர். இந்நிலையில், வியாழன் கிழமை மாலை 3.30 மணி அளவில் கல்லூரி முடிந்ததும் 4ம் ஆண்டு மாணவர்கள் மகா ஸ்வேதா(வயது 21), பவித்ரா (21), கர்லின் பால் (21), 3ம் ஆண்டு மாணவர்கள் லிங்கேஸ்வரன் (23), சிவா (23) ஆகிய ஐவரும் ஒரே காரில் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள &amp;nbsp;கோவளத்திற்கு சென்றுள்ளனர்.&lt;/p&gt; &lt;p&gt;அங்கு உணவகம் ஒன்றில் டீ குடித்துவிட்டு படூர் புறவழிச் சாலை வழியாக காரில் வந்து கொண்டிருந்தனர். காரை மாணவர் சிவா ஓட்டியுள்ளார். படூர் புறவழிச்சாலையில் உள்ள பாலத்தின் அருகே கார் வந்து கொண்டிருந்த நிலையில், திடீரென நாய் ஒன்று குறுக்கே வந்துள்ளது. நாயின் மீது மோதாமல் இருக்க சிவா காரை இடது புறமாக திருப்பி உள்ளார்.&lt;/p&gt; &lt;p&gt;ஆசை ஆசையாக வாங்கிய நடிகர் விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் கார் விற்பனைக்கு; விலை தெரியுமா?&lt;/p&gt; &lt;p&gt;கார் அசுர வேகத்தில் வந்துகொண்டிருந்த நிலையில் நிலைத்தடுமாறி சாலையை விட்டு கீழே இறங்கி தனியார் கல்லூரி வளாகத்திற்கு கார் பறந்து சென்று விழுந்தது. இதில் காரில் இருந்த மகா ஸ்வேதா, பவித்ரா, லிங்கேஸ்வரன் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். காரை ஓட்டி வந்த சிவா, மாணவி கர்லின் பால் ஆகிய இருவரும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;படிகட்டுக்கு 11 லட்சமா? அனிதா சம்பத்தின் வீடியோவுக்கு அடடே விளக்கம்&lt;/p&gt; &lt;p&gt;விபத்தை அறிந்து ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அனைவரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது கர்லின் பால் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிந்தார். இந்நிலையில், விபத்து தொடர்பாக வழக்குப்பதிலு செய்த காவல் துறையினர் விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-kanchipuram</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-kanchipuram/4-law-college-students-killed-road-accident-in-chengalpattu-vel-shjxuq"/>
        </item>
        <item>
            <title><![CDATA[பட்டப்பகலில் சினிமாவை மிஞ்சும் பயங்கரம்! பிரபல ரவுடி நாட்டு வெடிகுண்டு வீசி படுகொலை! யார் இந்த வசூல்ராஜா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-kanchipuram/kanchipuram-famous-rowdy-vasool-raja-murdered-tvk-ssyeef</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-kanchipuram/kanchipuram-famous-rowdy-vasool-raja-murdered-tvk-ssyeef</guid>
            <pubDate>Tue, 11 Mar 2025 15:37:39 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;காஞ்சிபுரம் திருக்காலிமேட்டில் ரவுடி வசூல்ராஜா வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 5 பேர் கொண்ட கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசி, சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடியது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jp29rav22n2h23g7tbx8kmpz,imgname-kanchipuram-murder.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழகத்தில் தலைநகர் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொலை சம்பவங்கள் குறைந்திருந்த நிலையில் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் அரங்கேறி வருவது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி வசூல்ராஜா. இவர் மீது கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று &amp;nbsp;காஞ்சிபுரம் மாவட்டம் திருக்காலிமேட்டில் ரவுடி வசூல்ராஜா 5 பேர் கொண்ட கும்பல் நாட்டு வெடிகுண்டை வீசியுள்ளனர். பின்னர் அவைர சுற்றி வளைத்த அந்த கும்பல் தலை, கை, கால்கள் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் &amp;nbsp;வசூல்ராஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றிருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு தான் இவர் சிறையில் இருந்து வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.&amp;nbsp;பட்டப்பகலில் மக்கள் நடமாடும் பகுதியில் பிரபல ரவுடி ஒருவர் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;யார் இந்த வசூல்ராஜா?&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;வசூல்ராஜா சிறுசிறு குற்றங்களில் ஈடுபட்டு வந்தள்ளார். இவர் 2009-ஆம் ஆண்டு ஜோசப் மற்றும் அவரது நண்பர் இருவரை கொலை செய்தார். இதனைத் தொடர்ந்து 2011-ம் ஆண்டு காஞ்சிபுரம் பொய்யாக்குளம் பகுதி சேர்ந்த, ஆட்டோ ராஜா என்பவரையும் கொலை செய்ததை அடுத்து&amp;nbsp;ரவுடிகள் மத்தியில் பிரபலமானார். பின்னர் வட்டிக்கு விடும் தொழிலில் ராஜா ஈடுபட்டு வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து தனது பெயரை வசூல்ராஜா என மாற்றிக் கொண்டுள்ளார். வசூல்ராஜா என்ற பெயருக்கு ஏற்றார் போல், கடனை வசூல் செய்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாக எந்த குற்றச்செயல்களில் ஈடுபடாமல் திருந்தி வாழ நினைத்த நிலையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-kanchipuram</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-kanchipuram/kanchipuram-famous-rowdy-vasool-raja-murdered-tvk-ssyeef"/>
        </item>
        <item>
            <title><![CDATA[மாணவர்கள் குஷியோ குஷி! நாளை பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை அறிவிப்பு! என்ன காரணம்?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-kanchipuram/kanchipuram-ekambaranathar-temple-kumbabishekam-schools-holiday-tomorrow-6nf8c5o</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-kanchipuram/kanchipuram-ekambaranathar-temple-kumbabishekam-schools-holiday-tomorrow-6nf8c5o</guid>
            <pubDate>Sun, 07 Dec 2025 08:22:05 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 28 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், டிசம்பர் 8ம் தேதி நடைபெறும் இவ்விழாவிற்காக மாவட்ட பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01h62xt64cgesrfqbg7kvhp6y6,imgname-asianet-news--1-.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 28 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், டிசம்பர் 8ம் தேதி நடைபெறும் இவ்விழாவிற்காக மாவட்ட பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பஞ்சபூத ஸ்தலங்கள் என்பது சிவனுக்கு உரிய மிக முக்கிய கோவில்களாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் தொன்மையான திருக்கோவில்களில் ஒன்றாக ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயில் உள்ளது. இக்கோவில் 17 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக இந்து அறநிலைத்துறை சார்பில் 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மீதமுள்ள 16 கோடி ரூபாய் நிதி உபயதாரர்கள் மூலம், வசூலிக்கப்பட்டு கோவில் திருப்பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதாவது மொத்தம் ஏகாம்புநாதர் கோயில் திருப்பணிகள் 28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. குறிப்பாக ஏகாம்பரநாதர் கோயிலில் பிரதான ராஜகோபுரத்தின் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம் டிசம்பர் 8ம் தேதி காலை 5.45 மணிக்கு நடைபெறும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. 17 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் கும்பாபிஷேகம் என்பதால் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. இந்நிலையில் டிசம்பர் 8ம் தேதியான நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள 149 பள்ளிகளுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை என முதன்மை கல்வி அலுவலர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-kanchipuram</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-kanchipuram/kanchipuram-ekambaranathar-temple-kumbabishekam-schools-holiday-tomorrow-6nf8c5o"/>
        </item>
        <item>
            <title><![CDATA[கரூர பத்தி அப்புறமா பேசறேன்..! எல்லாத்துக்கும் மொத்தமா பதில் சொல்றேன்.. விஜய்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-kanchipuram/political-heat-rises-vijay-hints-at-big-statement-after-karur-event-9drkszq</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-kanchipuram/political-heat-rises-vijay-hints-at-big-statement-after-karur-event-9drkszq</guid>
            <pubDate>Sun, 23 Nov 2025 12:00:09 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கரூர் சம்பவத்திற்குப் பிறகு, காஞ்சிபுரத்தில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்றார். தனது உரையில், நம்ப வைத்து ஏமாற்றியவர்களை கேள்வி கேட்காமல் விடப்போவதில்லை என ஆவேசமாக பேசினார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kaqp8m6re29qspn8cqdfeex0,imgname-tamil-news---2025-11-23t115543.649-1763879178455.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கரூர் சம்பவத்திற்குப் பிறகு, காஞ்சிபுரத்தில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்றார். தனது உரையில், நம்ப வைத்து ஏமாற்றியவர்களை கேள்வி கேட்காமல் விடப்போவதில்லை என ஆவேசமாக பேசினார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலுக்கான தயாரிப்புகளை வேகப்படுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, தனது மக்கள் தொடர்பு பிரச்சாரத்தை மீண்டும் தொடங்கியுள்ளார். கரூரில் நடந்த துயர சம்பவத்திற்குப் பிறகு சில வார இடைவெளிக்குப் பிறகு, விஜய் மீண்டும் பொதுமக்களை நேரில் சந்திக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் தொடங்கியுள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;இன்று காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள உள் அரங்கில் விஜய் கலந்து கொண்டார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் அவர் இன்று காலை சென்னையின் நீலாங்கரை பகுதியில் தனது இல்லத்திலிருந்து புறப்பட்டார். அவரது வருகைக்காக அந்த பகுதி முழுவதும் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.&lt;/p&gt;&lt;p&gt;சுமார் காலை 11 மணிக்கு விஜய் கூட்ட அரங்கத்தை சென்றடைந்தார். விஜய் பங்கேற்ற பிறகு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 2,000 பேர் பங்கேற்றுள்ளனர். கூட்டநிர்வாகத்திற்காக பங்கேற்பாளர்களுக்கு &lsquo;QR code&rsquo; கொண்ட டிஜிட்டல் நுழைவு சீட்டு வழங்கப்பட்டிருப்பது முக்கிய அம்சமாகும். இது தவெக நிகழ்ச்சி அமைப்பில் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதற்கான ஒரு எடுத்துக்காட்டு.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விழாவில் பேச தொடங்கிய விஜய், &ldquo;தனிப்பட்ட முறையில் எனக்கும் அவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் கிடையாது. எந்த வாழ்க்கையிலும் பிரச்சனை கிடையாது. அப்படியே ஏதாவது பிரச்சனை என்றால் நாம் கண்டுகொள்ளப் போவதில்லை. ஆனால் அவர்கள் என் மீது தனிப்பட்ட வன்மம் வைத்திருக்கலாம். ஆனால் என்னை நம்ப வைத்து பொய் சொல்ல வைத்து வாக்கு செலுத்த வைத்தார்களே&rdquo; என்று கரூர் சம்பவத்துக்கு பிறகு ஆவேசமாக கேள்விக்கணைகளை தொடுத்தார் விஜய்.&lt;/p&gt;&lt;p&gt;தொடர்ந்து பேசிய அவர், &ldquo;நம்ப வைத்து நாடகம் ஆடியவர்களை எப்படி கேள்வி கேட்காமல் இருக்க முடியும். எனவே அவர்களை நாம் கேள்வி கேட்காமல் விடப்போவதில்லை என்றார். தெரிந்தோ தெரியாமலோ இந்த மாவட்டத்திற்கும் நமக்கும் ஒரு இணைப்பு ஏற்படுகிறது. எல்லாம் நன்மைகளும் சட்டபூர்வமாக செய்ய வேண்டும். எனவே தான் மக்களிடம் செல் என்ற அண்ணா சொன்ன வார்த்தையை கையில் எடுத்தோம்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;அது என்ன கிலோ விலை என பேசும் தமிழ்நாடு முதலமைச்சர் நமது கொள்கை என்ன என்று கேட்கிறார். கரூர் விவகாரம் பத்தி பேசுவோம்னு நினைச்சிருப்பாங்க. அத நான் அப்புறம் பேசுறேன்&rdquo; என்று காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பேசினார். தனது உரையில் வேறு எங்கும் கரூர் பற்றி விஜய் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-kanchipuram</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-kanchipuram/political-heat-rises-vijay-hints-at-big-statement-after-karur-event-9drkszq"/>
        </item>
        <item>
            <title><![CDATA[தம்பி சமாதியில் பட்டா கத்தியுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்.! அண்ணனை அலேக்கா தூக்கிய போலீஸ்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/crime/birthday-celebration-with-cake-at-brother-grave-a8wwhwg</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/crime/birthday-celebration-with-cake-at-brother-grave-a8wwhwg</guid>
            <pubDate>Mon, 05 Jan 2026 17:17:37 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ஸ்ரீபெரும்புதூர் அருகே, சரித்திர பதிவேடு குற்றவாளியான தனது தம்பியின் பிறந்தநாளை, அவனது சமாதியில் வீச்சரிவாளால் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் அண்ணன் ஐயப்பன். இந்தக் கொண்டாட்டத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ke6zfec2djfh8fn1g9vavhtr,imgname-vellore-1-1767613380993.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஸ்ரீபெரும்புதூர் அருகே, சரித்திர பதிவேடு குற்றவாளியான தனது தம்பியின் பிறந்தநாளை, அவனது சமாதியில் வீச்சரிவாளால் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் அண்ணன் ஐயப்பன். இந்தக் கொண்டாட்டத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சந்த வேலூர் EB காலனியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் சரித்திர பதிவேடு குற்றவாளி. இவர் மீது சுங்குவார்சத்திரம் உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை மற்றும் கொள்ளை என பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கஞ்சா போதையில் ஆட்டோ ஓட்டி சென்றபோது மப்பேடு அருகே விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில் பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய ராஜ்குமாரின் அண்ணன் ஐயப்பன். இவர் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய குற்ற சரித்திர பதிவேடு குற்றவாளியான ஜி.கே. எண்டர்பிரைசஸ் உரிமையாளர் நெமிலி பகுதியை சேர்ந்த கார்த்தியிடம் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார்.&lt;/p&gt;&lt;p&gt;இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜ்குமாரின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக தம்பியின் சமாதிக்கு சென்று சமாதியின் நடுவே BIRTHDAY CAKE வைத்து தனது கையில் வைத்திருந்த பெரிய வீச்சரிவாளால் கேக்கை வெட்டி, ஐயப்பன் தனது தம்பியின் பிறந்த நாளை கொண்டாடினார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வீடியோ வைரலானதை அடுத்து சுங்குவார்சத்திரம் காவல்துறையினர் தாமாக முன்வந்து ஐயப்பனை கைது செய்தனர். பின்னர் ஐயப்பன் பதுக்கி வைத்திருந்த வீச்சரிவாள் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-kanchipuram</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/crime/birthday-celebration-with-cake-at-brother-grave-a8wwhwg"/>
        </item>
        <item>
            <title><![CDATA[42 வழக்குகள்! இரண்டு முறை குண்டர் சட்டம்! யார் இந்த படப்பை குணா? மிரள வைக்கும் க்ரைம் ரிப்போர்ட்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/rowdy-padappai-guna-arrest-tvk-ssqi3p</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/rowdy-padappai-guna-arrest-tvk-ssqi3p</guid>
            <pubDate>Fri, 07 Mar 2025 09:13:10 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;சரித்திர பதிவேடு குற்றவாளியும் &amp;nbsp;இரண்டு முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட படப்பை குணா மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ft808969htsy4z021ntscapb,imgname-padappai-guna.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சரித்திர பதிவேடு குற்றவாளியும் &amp;nbsp;இரண்டு முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட படப்பை குணா மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா என்கிற குணசேகரன். இவர் மீது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் ரியல் எஸ்டேட், கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மிரட்டுவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், கொலை, கொள்ளை முயற்சி, ஆள் கடத்தல் என 42 வழக்குகள் அவருக்கு எதிராக நிலுவையில் இருந்து வந்தது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சரித்திர பதிவேடு குற்றவாளி.&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;போலீசார் படப்பை குணாவை என்கவுண்டர் செய்ய திட்டமிட்ட நிலையில், கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட அவரை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து ஜாமின் பெற்று வெளியே வந்த படப்பை குணா மீண்டும் கட்டப்பஞ்சாயத்து, ரவுடிசம் செய்ததை அடுத்து இரண்டு முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு &amp;nbsp;6 மாதங்களுக்கு முன்புதான் சிறையில் இருந்து வெளியே வந்தார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&lt;strong&gt;அதிகாலையிலேயே அலறிய தூத்துக்குடி! குற்றவாளியை சுட்டுப் பிடித்த போலீசார்! நடந்தது என்ன? பரபரப்பு தகவல்!&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில், மதுரமங்கலம் கிராமத்தில் நெற்பயிர் சாகுபடி செய்துள்ள விளைநிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அதே பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவரை படப்பை குணா மிரட்டியதோடு, அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மோகன் சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட சுங்குவார்சத்திரம் போலீசார் ரவுடி குணாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&lt;strong&gt;தாய், குழந்தைகள் மரண வழக்கில் திடீர் திருப்பம்! குடும்பத்தையே கொலை செய்துவிட்டு கணவர் செய்த பகீர் சம்பவம்!&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;படப்பை குணா பாஜக காஞ்சிபுரம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாவட்டத் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.&amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-kanchipuram</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/rowdy-padappai-guna-arrest-tvk-ssqi3p"/>
        </item>
        <item>
            <title><![CDATA[காஞ்சிபுரம் மேயர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் ரத்து; பதவியை காப்பாற்றிக் கொண்ட மகாலட்சுமி]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-kanchipuram/no-confidence-vote-on-kanchipuram-mayor-mahalakshmi-cancelled-vel-shdiuu</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-kanchipuram/no-confidence-vote-on-kanchipuram-mayor-mahalakshmi-cancelled-vel-shdiuu</guid>
            <pubDate>Mon, 29 Jul 2024 13:25:43 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட வாக்கெடுப்பு ரத்து செய்யப்பட்டது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j3wf39xqbgr684se2q3ypnjw,imgname-mixcollage-28-jul-2024-03-56-pm-3854.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;காஞ்சிபுரம் மாநகராட்சியில் திமுக மேயர் மகாலட்சுமிக்கு எதிராக திமுக, அதிமுக உட்பட பல்வேறு கட்சி மாமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கினர். 51 வார்டுகளைக் கொண்ட காஞ்சிபுரம் மாநகராட்சியில் திமுகவுக்கு 33 உறுப்பினர்களும், விசிக, காங்கிரஸ் தலா 1 உறுப்பினர் என ஆளும் கட்சிக்கு 35 உறுப்பினர்களின் பலம் உள்ளது. மேயர் மீதான அதிருப்தியின் விளைவாக மேயருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது.&lt;/p&gt; &lt;p&gt;குறையே சொல்ல முடியாத ஆட்சியா? குறைய தவிர எதையுமே சொல்ல முடியலயேப்பா - சீமான் ரைமிங் அட்டாக்&lt;/p&gt; &lt;p&gt;இந்த தீர்மானத்தின் மீது இன்று (திங்கள் கிழமை) வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனிடையே அதிருப்தி மாமன்ற உறுப்பினர்கள் 22 பேர் மற்றும் ஆதரவு உறுப்பினர்கள் 10 பேர் என மொத்தமாக 33 உறுப்பினர்கள் சுற்றுலா சென்றது போன்ற புகைப்படங்கள் வெளியாகின.&lt;/p&gt; &lt;p&gt;இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் பணிக்காக மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் காலை 10 மணி முதல் காத்திருந்தார். ஆனால் அதிருப்தி தெரிவித்த உறுப்பினர்கள் உட்பட யாருமே வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இதனால் வாக்கெடுப்பு ரத்து செய்யப்பட்டது. வாக்கெடுப்பு ரத்தானதால் நம்பிக்கை இல்லா தீர்மானமும் ரத்தாவதாக ஆணையர் செந்தில் முருகன் அறிவித்தார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;மீண்டும் மீண்டும் கதற விடும் சென்னை போலீஸ் கமிஷனர்; ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகளுக்கு அடுத்த ஷாக் தகவல்!!&lt;/p&gt; &lt;p&gt;இதனிடையே தொகுதியில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளதாகக் கூறி மேயருக்கு எதிராக களம் இறங்கிய மாமன்ற உறுப்பினர்கள் திடீரென ஏன் மாயமானார்கள்? நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காதது ஏன்? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-kanchipuram</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-kanchipuram/no-confidence-vote-on-kanchipuram-mayor-mahalakshmi-cancelled-vel-shdiuu"/>
        </item>
        <item>
            <title><![CDATA[என்னது! வசூல்ராஜாவை நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்தது கல்லூரி மாணவர்களா? வெளியான பகீர் தகவல்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/kanchipuram-rowdy-vasool-raja-case-5-people-including-college-students-arrested-tvk-st1l9z</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/kanchipuram-rowdy-vasool-raja-case-5-people-including-college-students-arrested-tvk-st1l9z</guid>
            <pubDate>Thu, 13 Mar 2025 08:50:23 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Vasool Raja Murder:&amp;nbsp;காஞ்சிபுரத்தில் ரவுடி வசூல் ராஜா வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 கல்லூரிகள் மாணவர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jp6qhafscbjswdkgwanmeb2q,imgname-vasool-raja-1.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Vasool Raja Murder:&amp;nbsp;காஞ்சிபுரத்தில் ரவுடி வசூல் ராஜா வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 கல்லூரிகள் மாணவர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;காஞ்சிபுரம் மாமல்லன் நகர், கே.டி.எஸ். மணி தெருவை சேர்ந்தவர் அலெக்சாண்டர். இவரது மகன் ராஜா(எ) வசூல் ராஜா(38). காஞ்சிபுரம் மாவட்டத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 28 வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் இருந்து வந்தது. பிரபல தாதா ஸ்ரீதர் நண்பரான தியாகு என்பவருக்கு ராஜா வலது கரமாக செயல்பட்டு வந்துள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;பின்னர் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில் கழிவு பொருட்களை ஏலம் எடுப்பதில் தியாகுவுக்கும் ராஜாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து தியாகுவிடம் இருந்து பிரிந்து எதிர் குழுவான நிவாஸ்கான் என்ற ரவுடியுடன் இணைந்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார். பின்னர் தனியாக காஞ்சிபுரத்தில் பிரபல ரவுடியாக வலம் வந்த ராஜா ஒரு கட்டத்தில், காஞ்சிபுரம் பகுதியில் தொழிலதிபர்கள் முதல் வியாபாரிகள் வரை அனைவரையும் மிரட்டி பல லட்சம் ரூபாய் வசூலில் ஈடுபட்டு வந்தார். இதனால் இவரது பெயர் வசூல் ராஜா என அழைக்கப்பட்டது. இவர் காஞ்சிபுரம் மாவட்ட பாஜக விளையாட்டு அணியில் முக்கிய பொறுப்பில் இருந்து வந்தார்.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;இதனிடையே காதலி அட்வைஸ் செய்ததை அடுத்து &amp;nbsp;சிறிது காலமாக எந்த குற்ற சம்பவங்களில் ஈடுபடாமல் ஆன்மிகத்தில் முழு ஈடுபாடு காட்டி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் திருக்காளிமேடு ஈஸ்வரன் கோயில் அருகில் உள்ள ரேஷன் கடை அருகே தனது நண்பருடன் நேற்று முன்தினம் மதியம் 1.30 மணியளவில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் முதலில் ரவுடி வசூல் ராஜா மீது &amp;nbsp;நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளனர். இதில் நிலை குலைந்து போன அவரை அரிவாளால் சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&lt;strong&gt;பட்டப்பகலில் சினிமாவை மிஞ்சும் பயங்கரம்! பிரபல ரவுடி நாட்டு வெடிகுண்டு வீசி படுகொலை! யார் இந்த வசூல்ராஜா?&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் கொலை செய்தவர்கள் அங்குள்ள தெருக்கள் வழியாக தப்பி ஓடும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இதனையடுத்து வசூல்ராஜா கொலை சம்பவம் தொடர்பாக திலீப், சிவா, சுரேஷ் சூர்யா, பரத் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 3 பேர் கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட வசூல் ராஜா நாட்டு வெடிகுண்டுகளை கையாள்வதில் திறமையான நபர் என கூறப்படும் நிலையில் அவரது பாணியிலேயே இந்த கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆனால், இதுவரை கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.&amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-kanchipuram</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/kanchipuram-rowdy-vasool-raja-case-5-people-including-college-students-arrested-tvk-st1l9z"/>
        </item>
        <item>
            <title><![CDATA[அம்மன் கோயிலுக்கு பால் குடம் எடுக்கும் மியா கலிஃபா! பேனரில் சம்பவம் செய்த காஞ்சிபுரம் ரசிகர்கள்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/ex-porn-star-mia-khalifa-spotted-on-religious-hoarding-in-tamil-nadu-sgb-shwmt4</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/ex-porn-star-mia-khalifa-spotted-on-religious-hoarding-in-tamil-nadu-sgb-shwmt4</guid>
            <pubDate>Thu, 08 Aug 2024 20:37:55 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;திருவிழாவிற்கான ஏற்பாடுகளில் ஒரு பகுதியாக அந்த ஊர் இளைஞர்கள் சார்பில் வைக்கப்பட்ட ஒரு பேனர் வைக்கப்பட்டது. அதில் புகழ்பெற்ற ஆபாசப்பட நடிகை மியா கலீஃபா பால் குடம் சுமந்து செல்வது போன்ற படம் இடம்பெற்றுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j4s7qhmz1ttfzq2yn40f8akf,imgname-mia-khalifa-in-tamil-nadu.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோவில் திருவிழாவிற்கான பேனரில் முன்னாள் ஆபாசப் பட நடிகையான மியா கலீஃபாவின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.&lt;/p&gt; &lt;p&gt;ஆடி வெள்ளி அம்மனுக்கு விசேஷமான நாட்கள் ஒன்றாகும். ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள், சடங்குகள் நடப்பது வழக்கம். அந்த வகையில் குருவிமலையில் உள்ள நாகாத்தம்மன், செல்லியம்மன் கோவில் விழாவை முன்னிட்டு மின்விளக்குகள் மற்றும் பதாகைகளால் அலங்பகாரம் செய்யப்பட்டது.&lt;/p&gt; &lt;p&gt;திருவிழாவிற்கான ஏற்பாடுகளில் ஒரு பகுதியாக அந்த ஊர் இளைஞர்கள் சார்பில் வைக்கப்பட்ட ஒரு பேனர் வைக்கப்பட்டது. அதில் புகழ்பெற்ற ஆபாசப்பட நடிகை மியா கலீஃபா பால் குடம் சுமந்து செல்வது போன்ற படம் இடம்பெற்றுள்ளது. கோயிலில் நடக்கும் திருவிழாவில் மியா கலீஃபாவின் படம் எப்படி வந்தது என்பது புரியாத புதிராக உள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;தமிழுக்கு மரியாதை! பென்ஷன் தொகையை உயர்த்தும் தமிழக அரசு! யாருக்கு தெரியுமா?&lt;/p&gt; &lt;p&gt;பேனரில் மியா கலீஃபா படத்துன் இன்னொரு அம்சமும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆதார் அட்டை வடிவில் உள்ளூர் இளைஞர்களின் படங்களும் பேனரில் இடம்பெற்றுள்ளன. இந்த பேனரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிகமாகப் பகிரப்பட்டு வருகின்றன.&lt;/p&gt; &lt;p&gt;இதனையடுத்து இந்த பேனர் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் உடனடியாக அங்கு வந்து சர்ச்சைக்குரிய பேனரை அகற்றியுள்ளனர்.&lt;/p&gt; &lt;p&gt;மியா கலீஃபாவின் படம் பேனரில் பயன்படுத்தப்பட்டது எப்படி என்பது குறித்து உள்ளூர் மக்கள் யாரும் இன்னும் விளக்கம் அளிக்கவில்லை. இது வேண்டுமென்றே செய்யப்பட்டதா அல்லது தவறுதலாக அந்தப் படம் பயன்படுத்தப்பட்டதா என்று இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.&lt;/p&gt; &lt;p&gt;மெர்சிடிஸ்-பென்ஸ் ரகசியம் இதுதான்! பெயருக்குப் பின்னால் உள்ள கதையைப் பகிர்ந்த சிஇஓ!!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-kanchipuram</category>
            <dc:creator>SG Balan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/ex-porn-star-mia-khalifa-spotted-on-religious-hoarding-in-tamil-nadu-sgb-shwmt4"/>
        </item>
        <item>
            <title><![CDATA[காஞ்சிபுரம் மேயர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் நாளை வாக்கெடுப்பு; கூட்டாக சுற்றுலா சென்ற கவுன்சிலர்கள்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-kanchipuram/voting-on-the-no-confidence-motion-against-kanchipuram-mayor-mahalakshmi-tomorrow-vel-shbxzo</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-kanchipuram/voting-on-the-no-confidence-motion-against-kanchipuram-mayor-mahalakshmi-tomorrow-vel-shbxzo</guid>
            <pubDate>Sun, 28 Jul 2024 16:17:48 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது நாளை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில் கவுன்சிலர்கள் சுற்றுலா சென்றுள்ளதால் பரபரப்பு.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j3wf39xqbgr684se2q3ypnjw,imgname-mixcollage-28-jul-2024-03-56-pm-3854.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;2022ம் ஆண்டு நடைபெற்ற காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தலுக்கு பின்னர் திமுகவைச் சேர்ந்த மகாலட்சுமி மேயராக பதவி ஏற்றார். அவரைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குமரகுருபரர் துணை மேயராக இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக மேயருக்கும், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த கவுன்சிலர்களுக்கும் மோதல் இருந்து வந்துள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;முதலமைச்சர் பொறுப்பில் நீடிக்க தார்மீக உரிமை இருக்கிறதா.? ஸ்டாலின் சுயபரிசோதனை செய்யனும்- விளாசும் அண்ணாமலை&lt;/p&gt; &lt;p&gt;இந்நிலையில் மேயர் மகாலட்சுமி மீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளளது. இதனிடையே மேயருக்கு எதிரான திமுக கவுன்சிலர்கள் 22 பேர் தங்கள் குடும்பத்தினருடன் தனி பேருந்தில் சுற்றுலா சென்றுள்ளனர். இதனால் நாளை நடைபெறும் நம்பிக்கையில்லா தீர்மானம் வாக்கெடுப்பு கூட்டத்தில் இவர்கள் கலந்து கொள்வார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும் மேயர் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள 10 பேரும் சுற்றுலா சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;பயங்கரம்! காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை! தலைமறைவான பிரபல ரவுடி!&lt;/p&gt; &lt;p&gt;51 வார்டுகளைக் கொண்ட காஞ்சிபுரம் மாநகராட்சியில் திமுகவில் 33 உறுப்பினர்களும், விசிக, காங்கிரஸ் தலா 1 உறுப்பினர் என ஆளும் கட்சிக்கு 35 உறுப்பினர்கள் உள்ளனர். இந்நிலையில் மேயருக்கு எதிராக திமுக 17, அதிமுக 8, பாமக 2, சுயேட்சை 4, பாஜக 1, தமிழ் மாநில காங்கிரஸ் 1 என மொத்தம் 33 பேர் உள்ளனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-kanchipuram</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-kanchipuram/voting-on-the-no-confidence-motion-against-kanchipuram-mayor-mahalakshmi-tomorrow-vel-shbxzo"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Madurai Adheenam: நானும் தமிழன் தான்; அரசியல் பேச எனக்கு உரிமை உள்ளது - மதுரை ஆதீனம் பேச்சு]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-kanchipuram/nithyananda-will-not-allowed-to-enter-a-adheenam-said-madurai-adheenam-in-kanchipuram-vel-sf7z7a</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-kanchipuram/nithyananda-will-not-allowed-to-enter-a-adheenam-said-madurai-adheenam-in-kanchipuram-vel-sf7z7a</guid>
            <pubDate>Mon, 17 Jun 2024 15:46:22 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;நி்த்தியானந்தாவை ஏற்கனவே ஆதீனத்தை விட்டு நீக்கியாச்சி, மீண்டும் அவர் ஆதீனத்திற்குள் நுழைய முடியாது என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j0jv3fgq14s0f5k2c7xb5bkm,imgname-whatsapp-image-2024-06-17-at-15-11-45.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;மதுரை ஆதீனம் ஹரிஹர ஶ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியர் 293-வது ஆதீனம் இன்று காஞ்சிபுரம் வருகை புரிந்தார். அப்பொழுது பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஹரிஹர ஶ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியர் 293-வது ஆதீனம் தெரிவித்ததாவது, கோவில் மாநகர் காஞ்சிபுரத்தில் பல்வேறு கோயில்கள் உள்ளன.&zwnj; மிகவும் சிறப்பான ஊர் காஞ்சிபுரம் மாநகர். நித்யானந்தாவை அப்பொழுதே மடத்தை விட்டு நீக்கியாச்சி. இனி அவர் நுழைந்தாலும் மடத்திற்குள் விடமாட்டோம். நாட்டுக்குள்ள அவரு வந்தாலே கைது செய்யப்படுவார்.&lt;/p&gt; &lt;p&gt;அதிமுக இடைத்தேர்தலில் புறக்கணித்தது நல்லது தான். இடைத்தேர்தலில் ஆளும் கட்சி தான் வெற்றி பெறும். பாமக வெற்றி பெற்றால் உண்டு. இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சிக்கு அதிக செல்வாக்கு உண்டு.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;ராணிபேட்டையில் ஒரே நேரத்தில் 4 சிறுமிகளுக்கு குழந்தை திருமணம்; அதிரடியா எண்ட்ரி கொடுத்த அதிகாரிகள்&lt;/p&gt; &lt;p&gt;அரசியல் கருத்துக்களை நான் ஏன் சொல்லக்கூடாது? ஜனநாயக நாட்டில் நான் ஓட்டு போடுகிறேன். ஒரு கிறிஸ்தவ அமைப்பினர் கூறுகிறார்கள் அல்லவா. இஸ்லாமிய அமைப்பினர் கூறுகிறார்கள் அல்லவா. அதேபோன்று நாங்கள் ஏன் சொல்லக்கூடாது. நாங்கள் சொல்லாமல் இருந்தால் என் தமிழர்களை கொலை செய்வார்கள் அதை பார்த்துக் கொண்டிருக்க முடியுமா?&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;மேகதாது விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கு ஒத்துக்கொள்வதே நமது உரிமைகளை தாரை வார்ப்பதற்கு சமம் - ராமதாஸ் எச்சரிக்கை&lt;/p&gt; &lt;p&gt;தமிழ்நாட்டில் இருக்கிறேன் நான் தமிழன் நானும் ஓட்டு போடுகிறேன். எனக்கு ஓட்டு உரிமை உள்ளது. எனக்கும் உரிமை உள்ளது.&zwnj; வயிற்று எரிச்சலில் தான். இலங்கையில் தமிழர்களை கொத்து கொத்தாக கொன்று குவித்தார்கள். அதையெல்லாம் மறந்துவிட்டு அவர்களை வெற்றி பெற செய்துள்ளார்களே என்ற வயிற்றெரிச்சல் என்றார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-kanchipuram</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-kanchipuram/nithyananda-will-not-allowed-to-enter-a-adheenam-said-madurai-adheenam-in-kanchipuram-vel-sf7z7a"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Rental House: அதிகரித்துக்கொண்டே சென்ற வாடகை பாக்கி; வீட்டு உரிமையாளரின் செயலால் குடியிருப்புவாசி தவிப்பு]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-kanchipuram/there-was-a-commotion-when-the-owner-cut-off-the-house-s-stairs-to-force-the-tenants-who-refuse-to-vacate-the-house-vel-sfbbyj</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-kanchipuram/there-was-a-commotion-when-the-owner-cut-off-the-house-s-stairs-to-force-the-tenants-who-refuse-to-vacate-the-house-vel-sfbbyj</guid>
            <pubDate>Wed, 19 Jun 2024 11:14:43 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாடகை பாக்கி தொடர்ந்து அதிகமானதாலும், வீட்டை காலி செய்ய மறுத்ததாலும் வீட்டின் உரிமையாளர் வீட்டுக்கு செல்லும் பாதையை துண்டித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j0qgckmmv9qc5vnevkf75rab,imgname-mixcollage-19-jun-2024-11-04-am-1080.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;காஞ்சிபுரம் மாவட்டம் விளக்கடி கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் ஆப்செட் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் அவருக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள வானவில் நகர் பகுதியில் சொந்தமாக வீடு உள்ளது. இங்கு மேல் மாடியில் வேணுகோபால் என்பவர் தனது மனைவி லீலா, தம்பி பாபு மற்றும் மகள் மகாலட்சுமி, அவரது இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். வேணுகோபால் திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டு பக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்று வருகிறார்.&lt;/p&gt; &lt;p&gt;பாபு முறையாக வாடகை செலுத்தாததால் இவரை குடியிருப்பில் இருந்து காலி செய்ய வீட்டு உரிமையாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதனிடையில் பாபு வழக்கறிஞர் உதவியுடன் வீட்டின் உரிமையாளரிடம் பேசி கால அவகாசம் வாங்கிய நிலையில் கடந்த ஆறு மாத காலமாக வாடகை செலுத்தவில்லை என கூறப்படுகிறது. பலமுறை கேட்டும் வீடு காலி செய்ய மறுத்த நிலையில், இன்று காலை 6 மணியளவில் கட்டுமான உதவியாளர் உள்பட 10 நபர்களுடன் வீட்டின் மாடிக்கு செல்லும் படிக்கட்டுகளை இடித்து இணைப்பை துண்டித்துள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;TTR: விரைவு ரயிலில் ஒரிஜினல் டிக்கெட் பரிசோதகரிடம் டிக்கெட் கேட்டு வசமாக மாட்டிய போலி TTR&lt;/p&gt; &lt;p&gt;இதைக் கண்டு அதிர்ச்சடைந்த குடியிருப்பு வாசிகள் காவல்துறையின் அவசர உதவியான நூறுக்கு அழைத்து புகார் தெரிவித்ததின் பேரில், காஞ்சிபுரம் தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வீட்டில் உள்ள நபர்களை பாதுகாப்பாக அழைத்து வர காஞ்சிபுரம் தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். வீட்டை விட்டு வெளியேற குடும்பத்தினர் மறுத்து வருவதால் காவல்துறையினரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.&lt;/p&gt; &lt;p&gt;Dindigul Accident: அதிமுக பிரமுகரின் கார் மோதி இருவர் பலி; உறவினர்கள் சாலை மறியலால் திண்டுக்கல்லில் பரபரப்பு&lt;/p&gt; &lt;p&gt;இது &amp;nbsp;குறித்து குடியிருப்பு வாசிகள் கூறுகையில், பக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளியை கவனிக்க அதிக செலவழித்த நிலையில் விரைவாக பாக்கி தொகையை தந்து விடுவதாக கூறிய நிலையில் இது போன்ற அராஜக செயலில் ஈடுபட்டு தற்போது குடிநீர் கூட குடிக்க இயலாத நிலையில் வீட்டில் முடங்கி கிடப்பதாகவும், பள்ளி செல்லும் மாணவர்கள் கூட பள்ளிக்கு செல்லாமல் காத்துக் கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-kanchipuram</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-kanchipuram/there-was-a-commotion-when-the-owner-cut-off-the-house-s-stairs-to-force-the-tenants-who-refuse-to-vacate-the-house-vel-sfbbyj"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Anitha Sampath: படிகட்டுக்கு 11 லட்சமா? அனிதா சம்பத்தின் வீடியோவுக்கு அடடே விளக்கம்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-kanchipuram/a-video-posted-by-anitha-sampath-regarding-the-construction-of-stairs-to-a-pond-in-kanchipuram-has-gone-viral-vel-shjuun</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-kanchipuram/a-video-posted-by-anitha-sampath-regarding-the-construction-of-stairs-to-a-pond-in-kanchipuram-has-gone-viral-vel-shjuun</guid>
            <pubDate>Fri, 02 Aug 2024 11:24:44 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருக்குளத்திற்கு படிக்கட்டு அமைக்க ரூ.11 லட்சம் செலவிடப்பட்டதாகக் கூறி அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரல்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j47fa98zq072p64enxwx9ym5,imgname-mixcollage-01-aug-2024-10-33-pm-2470.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;செய்தி வாசிப்பாளராக ஊடகப் பணியை தொடங்கிய அனிதா சம்பத் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளால் தற்போது நாடகம் மற்றும் சினிமாக்களில் நடித்து வருகிறார். பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக பங்கேற்ற பின்னர் அனிதா சம்பத் மிகவும் பிரபலமடைந்ததைத் தொடர்ந்து தற்போது தனது இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் நகைக்கடைகள், துணி கடைகள் உள்ளிட்டவற்றுக்கு தொடர்ந்து விளம்பரம் செய்து வருகிறார்.&lt;/p&gt;  &lt;p&gt;Bold statement by News Anchor #AnithaSampath against the corruption in TN #DMKFails pic.twitter.com/9uXWmuNZ7g&lt;/p&gt; &mdash; Kushi (@kushi_5) August 1, 2024  &lt;p&gt;இதனிடையே காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தில் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள குளத்தின் அருகே சென்ற அனிதா சம்பத் அந்த குளத்தின் அருகில் குளத்திற்கு படிக்கட்டு அமைப்பதற்காக ரூ.11.36 லட்சம் செலவிடப்பட்டதாக குறிப்பிட்டிருந்ததை சுட்டிக்காட்டிய அனதா சம்பத், இந்த குளத்திற்கு 11 லட்சத்தில் படிக்கட்டா? தற்போது 12 லட்சத்தில் ஒரு வீடே கட்டிவிடுகிறார்கள் என்று கூறி விமர்சித்தார். இந்நிலையில் அனிதா சம்பத்தின் கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்கள் குவிந்த வண்ணம் உள்ளன.&lt;/p&gt; &lt;p&gt;பொதுத்துறை வங்கிகளில் கொட்டி கிடக்கும் 4,400 காலி பணியிடங்கள்; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்&lt;/p&gt; &lt;p&gt;இந்நிலையில், அனிதாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள சிலர், எங்கள் ஊரிலும் இப்படி தான். ஒரு கருப்பு டேங்கை மட்டும் வைத்துவிட்டு அதற்கு லட்சகணக்கில் கணக்கு எழுதுகின்றனர். நீங்கள் குரல் கொடுத்ததற்கு வாழ்த்துகள் என்று ஒருசிலர் ஆதரவாக பதிவிடுகின்றனர். அதே போன்று ஒருசிலர் நீங்கள் ஒரு செய்தி வாசிப்பாளராக இருந்து கொண்டு இப்படி பேசுவது சரி கிடையாது. நடைபாதை படிகட்டு அந்த குளத்தை சுற்றி அமைக்கப்பட்டு இருக்கும் மின் விளக்குகள் மற்றும் அதற்கான பராமரிப்பு செலவு அதே போன்று நீங்கள் நின்று கொண்டிருக்கும் நடைபாதையும் சேர்த்து தான் அந்த தொகை குறிப்பிட்டுள்ளனர் என்று கூறியுள்ளனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-kanchipuram</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-kanchipuram/a-video-posted-by-anitha-sampath-regarding-the-construction-of-stairs-to-a-pond-in-kanchipuram-has-gone-viral-vel-shjuun"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Chennai Rain Update: சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!! ]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-chennai/precaution-of-heavy-rains-holidays-announced-for-schools-and-colleges-in-4-districts-including-chennai-vel-slc6w8</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-chennai/precaution-of-heavy-rains-holidays-announced-for-schools-and-colleges-in-4-districts-including-chennai-vel-slc6w8</guid>
            <pubDate>Mon, 14 Oct 2024 17:57:21 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லுரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ja519a9j029x1ff4zdrp7hyd,imgname-mixcollage-14-oct-2024-01-40-pm-5718.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லுரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;தமிழகத்தில் நாளை வடகிழக்குப்பருவமழை தொடங்கும் என்றும், தொடக்கத்திலேயே அதிகப்படியான மழைபொழிவு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. அதன்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில தினங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில் 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.&lt;/p&gt; &lt;p&gt;தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் 4 நாட்கள் வீடுகளில் இருந்தே வேலை.! முதலமைச்சர் அதிரடி உத்தரவு&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;மேலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள் 4 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்ட ஆசட்யர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்த பின்னர் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கனமழையின் தாக்கத்தினை எதிர்கொள்ள பொதுமக்களின் பாதுகாப்பு கருத்தி 15ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.&lt;/p&gt; &lt;p&gt;கொட்டப் போகுது மழை; நீங்கள் வீட்டில் செய்ய வேண்டியது இதுதான்; மறக்க வேண்டாம்&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;கனமழை முன்னெச்சரிக்கையாக முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு சில அறிவுரைகளை வழங்கி உள்ளார். அதன்படி விவசாயிகள், மீனவர்கள், 4 சக்கர மற்றும் இரு சக்கர வாகன உரிமையாளர்கள், விடுதிகளில் தங்கி இருப்பவர்கள், பயணங்களை திட்டமிட்டுள்ளவர்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் தொழிற்பேட்டைகள், வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், நடைபாதை &amp;nbsp;வியாபாரிகள், கட்டுமானப் பணியை மேற்கொள்பவர்கள் கமழைக்கான திட்டமிடுதலையும், முன்னேற்பாடுகளையும் செய்து கொள்ள வேண்டும்.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையினபடி முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு செல்ல வேண்டும். முக்கியப் பொருட்கள் மற்றும் ஆவணங்களை நீர் புகா வண்ணம் பாதுகாப்பாக வைக்க வேண்டும். கனமழை எச்சரிக்கையை முன்னிட்டு பொதுமக்கள் கடற்கரை, சுற்றுலா தலங்கள், வழிபாட்டு தலங்கள், நீர்நிலைகள் ஆகிய பகுதிகளில் கூட வேண்டாம். அறுந்து கிடக்கும் மின் கம்பிகளில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-kanchipuram</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-chennai/precaution-of-heavy-rains-holidays-announced-for-schools-and-colleges-in-4-districts-including-chennai-vel-slc6w8"/>
        </item>
        <item>
            <title><![CDATA[மூன்று பேரூராட்சிகள் நகராட்சியாக தரம் உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/three-town-panchayats-upgraded-to-municipalities-tamil-nadu-govt-sgb-srmkzd</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/three-town-panchayats-upgraded-to-municipalities-tamil-nadu-govt-sgb-srmkzd</guid>
            <pubDate>Thu, 13 Feb 2025 19:47:41 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Tamil Nadu Municipalities:&amp;nbsp;ரீபெரும்புதூர், மாமல்லபுரம் மற்றும் திருவையாறு ஆகிய பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த முடிவு தமிழக அரசிதழில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01h0cvvqe2vsxnwdtfsdnz3j3d,imgname-asianet-news-tamil--52-.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு ஆகிய மூன்று பேராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று அரசிதழில் வெளியாகியுள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;ஸ்ரீபெரும்புதூரை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்று ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருமான செல்வப்பெருந்தகை&amp;nbsp;கோரி இருந்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-2024ஆம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையின்போது இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.&lt;/p&gt; &lt;p&gt;அவருடைய கோரிக்கைக்கு பதிலளித்த நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, &quot;ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு உள்பட சில பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளன&quot; என்று கூறினார். இதற்கான தீர்மானமும் தமிழகச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.&lt;/p&gt; &lt;p&gt;தமிழ்நாடு அமைச்சரவையில் தீடீர் இலாகா மாற்றம்! பொன்முடிக்கு கூடுதல் பொறுப்பு!&lt;/p&gt; &lt;p&gt;தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் திருத்த சட்டத்தின் கீழ், இந்த மூன்று பேரூராட்சிகளின் வரலாறு, சுற்றுலா உள்ளிட்ட சிறப்புகள், தொழில் வளர்ச்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான உத்தேச முடிவு எடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஆகிய மூன்று பேரூராட்சிகளை நகராட்சிகளாக மாற்றுவது குறித்து சென்ற ஆகஸ்ட் மாதம் முதல் கட்ட அறிவிப்பு வெளியானது.&lt;/p&gt; &lt;p&gt;இந்நிலையில், அந்த அறிவிப்பை அதிகாரபூர்வமாக உறுதிசெய்யும் வகையில், ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு ஆகிய மூன்று பேரூராட்சிகளும் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசிதழில் இன்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;திமுகவில் அதிரடி மாற்றங்கள்! 4 புதிய மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமனம்!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-kanchipuram</category>
            <dc:creator>SG Balan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/three-town-panchayats-upgraded-to-municipalities-tamil-nadu-govt-sgb-srmkzd"/>
        </item>
        <item>
            <title><![CDATA[School Student: பள்ளி மாணவர்களுக்கு ரூ.15,000! அக்டோபர் 30ம் தேதி வரை கடைசி நாள்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-kanchipuram/thirukural-competition-2024-rs-15000-win-cash-prize-to-school-students-tvk-skkbdq</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-kanchipuram/thirukural-competition-2024-rs-15000-win-cash-prize-to-school-students-tvk-skkbdq</guid>
            <pubDate>Sun, 29 Sep 2024 12:28:38 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;School Student:&amp;nbsp;தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக 1330 திருக்குறளை ஒப்பிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு ரூ.15,000 பரிசு வழங்கும் திட்டம். பள்ளி மாணவர்கள் அக்டோபர் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j8y7cd1p6yjhy4zjamq2bhsc,imgname-thirukural--4.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;School Student:&amp;nbsp;தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக 1330 திருக்குறளை ஒப்பிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு ரூ.15,000 பரிசு வழங்கும் திட்டம். பள்ளி மாணவர்கள் அக்டோபர் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் 2000ம் ஆண்டு முதல் 1330 திருக்குறளை ஒப்பிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு பரிசு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. திருக்குறள் கூறும் கருத்துக்களை மாணவர்களிடம் கொண்டு போய் சேர்க்கும் பொருட்டு, தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. 1330 குறள்களை ஒப்பிக்கும் மாணவர்களுக்கு 15,000 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டு தோறும் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக நடத்தப்படும் இந்த போட்டிகள் இந்த ஆண்டும் நடத்தப்பட உள்ளது. இதற்காக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;பரிசுத் தொகை:&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதுதொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: உலகப் பொதுமறையாம் திருக்குறளில் உள்ள கருத்துக்களைப் பள்ளி மாணவர்கள் இளம் வயதிலேயே அறிந்து கொண்டு. கல்வியறிவோடு நல்லொழுக்கம் மிக்கவர்களாக விளங்கும் வகையில் தமிழக அரசால் &ldquo;திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு&rdquo; திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதில் 1330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் திறன் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்குத் தலா ரூ.15,000 ரொக்கப் பரிசாகத் தமிழ் வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றது.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;தகுதி:&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;அதன்படி 2024 &ndash; 2025 ஆண்டில் இத்திட்டத்தின்கீழ் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் 1330 குறட்பாக்களையும் ஒப்பிக்கும் திறன் கொண்ட மாணவர்களாக இருக்க வேண்டும். இயல் எண், அதிகாரம் எண், குறள் எண் போன்றவற்றை தெரிவித்தால் அதற்கான திருக்குறளை சொல்லும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். போட்டியாளர்கள் திருக்குறளின் அடைமொழிகள், சிறப்புகள், சிறப்புப் பெயர்கள் போன்றவற்றையும் அறிந்திருக்க வேண்டும். திருக்குறளின் பொருளை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாக கருதப்படும்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;போட்டிக்கான நிபந்தனைகள்:&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1330 குறட்பாக்களையும் மனனம் செய்து ஒப்பிக்கும் திறன் பெற்ற பள்ளி மாணவ, மாணவியர் இருப்பின் இப்போட்டியில் பங்கேற்கலாம். ஏற்கனவே இந்த போட்டியில் பரிசு பெற்றவர்கள் மீண்டும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ள முடியாது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;போட்டியில் விண்ணப்பிக்க கடைசி நாள்:&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பம் பெறலாம் அல்லது தமிழ் வளர்ச்சித்துறையின் வலைதளத்தில் (https://tamilvalarchithurai.tn.gov.in) இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பின்னர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அக்டோபர் 30ம் தேதிக்குள் காஞ்சிபுரம் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-kanchipuram</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-kanchipuram/thirukural-competition-2024-rs-15000-win-cash-prize-to-school-students-tvk-skkbdq"/>
        </item>
    </channel>
</rss>
