<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Wed, 22 Oct 2025 15:32:07 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss/tamilnadu-cuddalore" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[மது கடத்தி வருபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்: கடலூர் எஸ்.பி. எச்சரிக்கை]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-cuddalore/cuddalore-sp-warns-smuggling-liquor-from-puducherry-will-trigger-the-goondas-act-sgb-su2q7p</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-cuddalore/cuddalore-sp-warns-smuggling-liquor-from-puducherry-will-trigger-the-goondas-act-sgb-su2q7p</guid>
            <pubDate>Wed, 02 Apr 2025 10:22:06 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;புதுச்சேரியில் இருந்து மதுபானம் கடத்தி வந்தால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர் எஸ்.பி. ஜெயக்குமார் எச்சரித்துள்ளார். சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j7z6rt1jmdg35fytnzf4rpsz,imgname-tasmac-3.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;புதுச்சேரியில் இருந்து மதுபானம் கடத்தி வந்தால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர் எஸ்.பி. ஜெயக்குமார் எச்சரித்துள்ளார். சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;புதுச்சேரியில் இருந்து மதுபானம் கடத்தி வந்தால், குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.&amp;nbsp;இன்று நடைபெற்ற மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் கூட்டத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில் நடந்த கூட்டத்தில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கலந்துகொண்டனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;குற்றம் செய்யும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறிய எஸ்.பி. ஜெயக்குமார், மதுபானம் கடத்துவோரும், விற்பனை செய்வோரும் கைது செய்யப்படுவார்கள் என்று அறிவுறுத்தினார். தொடர்ந்து மதுபானக் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்றும் அவர் தெரிவித்தார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;மதுவிலக்கு சோதனை சாவடிகளில் வாகனங்களை முறையாக சோதனை செய்து, சட்ட நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் எஸ்.பி. ஜெயக்குமார் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;இந்த கலந்தாய்வு கூட்டத்தில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்துகொண்டனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-cuddalore</category>
            <dc:creator>SG Balan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-cuddalore/cuddalore-sp-warns-smuggling-liquor-from-puducherry-will-trigger-the-goondas-act-sgb-su2q7p"/>
        </item>
        <item>
            <title><![CDATA[தமிழ்நாட்டையே அதிர வைத்த ஆணவக்கொலை! குற்றவாளிகளின் தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/crime/supreme-court-upholds-convictions-in-kannagi-murugesan-honour-killing-case-of-tamil-nadu-vel-svf9kg</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/crime/supreme-court-upholds-convictions-in-kannagi-murugesan-honour-killing-case-of-tamil-nadu-vel-svf9kg</guid>
            <pubDate>Mon, 28 Apr 2025 15:11:04 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;சென்னை உயர் நீதிமன்றத்தின் 2022 தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் தாக்கல் செய்த மேல்முறையீடுகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது, இது அவர்களுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jsxw985wy55eca6f77vn6bkw,imgname-whatsapp-image-2025-04-28-at-15.09.33.jpeg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே தலீத் சமூகத்தைச் சேர்ந்த முருகேசன் என்ற பொறியியல் பட்டதாரி, அதே பகுதியில் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த இளங்கலை பட்டதாரி பெண்ணான கண்ணகியை காதலித்து 2003 மே 5ம் தேதி சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டனர்.&lt;/p&gt; &lt;p&gt;இந்தத் திருமணம் குறித்து கண்ணகியின் குடும்பத்தினருக்குத் தெரிந்ததும், ஜூலை 7, 2003 அன்று, அவர்கள் ஊரை விட்டு வெளியேறவிருந்தபோது, ​​தம்பதியினரை மடக்கி பிடித்து, அவர்களை விஷம் குடிக்கச் செய்தனர், இதன் விளைவாக அவர்கள் இறந்தனர். அவர்களின் உடல்கள் பின்னர் எரிக்கப்பட்டன.&lt;/p&gt; &lt;p&gt;இந்த ஜோடியின் கொலை, தமிழ்நாட்டில் நடந்த முதல் &quot;கெளரவக் கொலை&quot; வழக்குகளில் ஒன்றாகக் கருதப்பட்டது. காவல்துறையின் விசாரணையில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, இந்த வழக்கின் விசாரணை சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது.&lt;/p&gt; &lt;p&gt;2021 ஆம் ஆண்டில், விசாரணை நீதிமன்றம் கண்ணகியின் சகோதரர் மருதுபாண்டியனுக்கு மரண தண்டனை விதித்தது. அவரது தந்தை உட்பட 12 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. 2022 ஆம் ஆண்டில், சென்னை உயர் நீதிமன்றம் மருதுபாண்டியனின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து, அவரது தந்தை உட்பட ஒன்பது பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. இரண்டு பேர் விடுதலை செய்யப்பட்டனர்.&lt;/p&gt; &lt;p&gt;9 பேரின் ஆயுள் தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் 9 பேரின் ஆயுள் தண்டனையும் உறுதி செய்யப்பட்டது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-cuddalore</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/crime/supreme-court-upholds-convictions-in-kannagi-murugesan-honour-killing-case-of-tamil-nadu-vel-svf9kg"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ரயில் தண்டவாளத்தில் கவிழ்ந்த பள்ளி வேன்! காப்பாத்துங்க.. காப்பாத்துங்க.. அலறி கூச்சலிட்ட மாணவர்களின் நிலை என்ன?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-cuddalore/school-van-overturns-on-railway-tracks-in-cuddalore-articleshow-2er63cd</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-cuddalore/school-van-overturns-on-railway-tracks-in-cuddalore-articleshow-2er63cd</guid>
            <pubDate>Mon, 25 Aug 2025 10:26:14 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;விருத்தாச்சலம் அடுத்த பூவனூர் கிராமத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k3fs7rkb8vv7c8t06n673nac,imgname-school-van-accident-1756097667691.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த பூவனூர் கிராமத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றிக் கொண்டு வேன் ஒன்று சென்றுகொண்டிருந்தது. பூவனூர் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பள்ளி வேன் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்து&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்த விபத்தில் 6 பள்ளி மாணவர்கள் படுகாயமடைந்தனர். மேலும் வேனின் உள்ளே இருந்த பள்ளி மாணவர்கள் காப்பாத்துங்க காப்பாத்துங்க அலறி கூச்சலிட்டனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் ஓடி வந்து வேனை தண்டவாளத்தில் தூக்கி அகற்றினர்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பதறிய பெற்றோர்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;பின்னர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு படுகாயமடைந்த மாணவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த செய்தியை அறிந்த பிள்ளைகளின் பெற்றோர் பதறி அடித்துக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பெரும் விபத்து தவிர்ப்பு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;தண்டவாளத்தில் வேன் கவிழ்ந்த நேரத்தில் ரயில் ஏதும் வராததால் நல்வாய்ப்பாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த மாதம் கடலூரில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் அண்ணன், தங்கை உள்ளிட்ட 3 பள்ளி மாணவர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-cuddalore</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-cuddalore/school-van-overturns-on-railway-tracks-in-cuddalore-articleshow-2er63cd"/>
        </item>
        <item>
            <title><![CDATA[கடலூரில் பள்ளி வேன் விபத்தில் சிக்கியது எப்படி? வெளியான அதிர்ச்சி தகவல்! பலி எண்ணிக்கை உயர்வு!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-cuddalore/cuddalore-school-van-accident-shocking-details-death-toll-rises-in-tamil-3af0ynx</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-cuddalore/cuddalore-school-van-accident-shocking-details-death-toll-rises-in-tamil-3af0ynx</guid>
            <pubDate>Tue, 08 Jul 2025 11:22:57 +0530</pubDate>
            <description><![CDATA[கடலூரில் செம்மங்குப்பம் அருகே தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். கேட் கீப்பரின் அலட்சியம் காரணமாக விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. ரயில்வே துறை விபத்து குறித்து விளக்கமளித்துள்ளது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jzm96ygc68nrgrx12e8d4nt7,imgname-cuddalore-2-1751953668620.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[கடலூரில் செம்மங்குப்பம் அருகே தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். கேட் கீப்பரின் அலட்சியம் காரணமாக விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. ரயில்வே துறை விபத்து குறித்து விளக்கமளித்துள்ளது.&lt;img&gt;&lt;p&gt;கடலூரில் செம்மங்குப்பம் அருகே கடலூர்-ஆலப்பாக்கம் இடையே தனியார் பள்ளி வேன் ஒன்று குழந்தைகளை ஏற்றி கொண்டு இன்று காலை சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, வழியில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதியது. வேன் பல மீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டது. இதில், வேனில் இருந்த குழந்தைகள் தூக்கி வீசப்பட்டனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதுபற்றி தகவல் அறிந்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி சென்று குழந்தைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். போலீசாருக்கும், ஆம்புலன்ஸ்க்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்தில் தொண்டமாநத்தத்தை சேர்ந்த 6ம் வகுப்பு மாணவர் நிவாஸ், 11ம் வகுப்பு மாணவி சாருமதி உயிரிந்தனர். மேலும், வேன் ஓட்டுநர் உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் மாணவன் செழியன் சிகிச்சை பலனின்றி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனையடுத்து தற்போது பலி எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த விபத்துக்கு காரணம் ரயில்வே கேட்டில் பணியிருந்த ஊழியர் ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் தூங்கியதால் விபத்து நடந்ததாக முதலில் கூறப்பட்டது. இதனையடுத்து ரயில்வே கேட் கீப்பர் மீது பொதுமக்கள் சரமாரி தாக்குதல் நடத்தினர். பின்னர் போலீசார் அவர்களிடம் இருந்து அவரை மீட்டனர். இந்த விபத்தை அடுத்து ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கேட் கீப்பர் அலட்சியத்தால் விபத்து நிகழ்ந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் ரயில்வே துறை அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;செம்மங்குப்பத்தில் ரயில் வருவதை அறிந்து கேட்டை மூடுவதற்கு கேட் கீப்பர் முயற்சி செய்தார். அப்போது பள்ளி வேனை ஓட்டி வந்த ஓட்டுநர் தான் கடந்து செல்லும் வரை மூட வேண்டாம் என்றார். பள்ளி வேன் கடந்து செல்ல முயன்றபோது விழுப்புரம் - மயிலாடுதுறை ரயில் மோதியதாக ரயில்வே நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட ரயில்வே கேட் இன்டர்லாக் செய்யப்படாத கேட். கேட் கீப்பர் முறையாக மேனுவலாக கேட்டை மூட முயற்சித்துள்ளார். இதேபோன்று கேட்டை பாதி மூடி கொண்டிருக்கும்போது, வேன் ஓட்டுநர் உள்ளே சென்றார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கேட் கீப்பரின் அலட்சியத்தால் பள்ளி வேன் மீது ரயில் மோதியதாக மக்கள் கூறியுள்ளனர். விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில் குமார் ஆய்வுக்கு பிறகு பேட்டியளித்துள்ளார். இந்நிலையில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் அலட்சியமாக செயல்பட்டதாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். தீவிர விசாரணைக்கு பின்னரே விபத்துக்கான காரணம் குறித்து உண்மை நிலவரம் தெரியவரும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-cuddalore</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-cuddalore/cuddalore-school-van-accident-shocking-details-death-toll-rises-in-tamil-3af0ynx"/>
        </item>
        <item>
            <title><![CDATA[வரலாறு காணாத மழை; நாளை Dec 3 பள்ளிகளுக்கு விடுமுறை - எந்தெந்த மாவட்டத்தில்?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/tamil-nadu-heavy-rain-cuddalore-declared-leave-for-schools-ans-snvenv</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/tamil-nadu-heavy-rain-cuddalore-declared-leave-for-schools-ans-snvenv</guid>
            <pubDate>Mon, 02 Dec 2024 19:58:24 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Tamil Nadu Rains : கிருஷ்ணகிரியில் உள்ள ஊத்தங்கரையில் கடந்த 300 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த முறை கனமழை பெய்து வருகின்றது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01je3v680r3b8nx86sz4jps656,imgname-schools-leave.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கட்டுக்கடங்காத மழையால் தமிழகத்தை கலங்கடித்து வருகின்றது &quot;ஃபெஞ்சல் புயல்&quot; என்றால் அது மிகையல்ல. கடந்த சில நாட்களாகவே பெரிய அளவில் தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்து வந்தது. இப்போது சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழையின் தாக்கம் சற்று குறைந்துள்ள நிலையில், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த முறை வடகிழக்கு பருவமழையானது சற்று முன்னதாகவே தமிழகத்தில் தொடங்கிய நிலையில், தற்பொழுது அநேக இடங்களில் அதிக கனத்த மழை பெய்து வருகிறது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இந்த சூழலில் தமிழக வெதர்மேன் அண்மையில் வெளியிட்ட ஒரு தகவல்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கின்ற ஊத்தங்கரையில் மட்டும் சுமார் 500 மில்லி மீட்டர் மழை பெய்து இருக்கிறது. அதேபோல தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆரூர் என்கின்ற இடத்தில் சுமார் 330 மில்லி மீட்டர் மழை பெய்திருக்கிறது. கிட்டத்தட்ட 300 ஆண்டுகளுக்கு பிறகு இப்படிப்பட்ட ஒரு கன மழை அங்கு பெய்திருப்பதாக அவர் சுட்டிக் காட்டி இருக்கிறார். தொடர்ச்சியாக ஊத்தங்கரையில் உள்ள பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கி வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;இன்றும் புரட்டிப்போட காத்திருக்கும் ஃபெஞ்சல் புயல் சின்னம்.! இத்தனை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்டா.?&lt;/strong&gt;&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இந்நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதால் தொடர்ச்சியாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டத்தில் நாளை டிசம்பர் மூன்றாம் தேதி பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர்கள் அறிவித்திருக்கின்றனர். அது மட்டும் இல்லாமல் புதுவை மற்றும் திருவண்ணாமலையில் உள்ள பள்ளிகளுக்கும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை, பேச்சம்பள்ளி வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;தமிழகத்தை பொறுத்தவரை ஓரிரு இடங்களை தவிர பரவலாக மழை சற்று குறைந்து வரும் நிலையில், நாளை டிசம்பர் மூன்றாம் தேதி பெரம்பலூர், திருப்பத்தூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமானது முதல் இடியுடன் கூடிய கனத்த மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;வெள்ள பாதிப்பு; குடும்ப அட்டை உள்ள அனைவருக்கும் 5000 ரூபாய் - முதல்வர் அறிவிப்பு!&lt;/strong&gt;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-cuddalore</category>
            <dc:creator>Ansgar R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/tamil-nadu-heavy-rain-cuddalore-declared-leave-for-schools-ans-snvenv"/>
        </item>
        <item>
            <title><![CDATA[தேர்தல் முன்விரோத தகராறு கொ* வழக்கு: 9 பேரின் வாழ்க்கையை மாற்றிய தீர்ப்பு! கதறும் குடும்பம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-cuddalore/cuddalore-murder-case-nine-sentenced-to-life-articleshow-6wflesc</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-cuddalore/cuddalore-murder-case-nine-sentenced-to-life-articleshow-6wflesc</guid>
            <pubDate>Wed, 08 Oct 2025 14:54:28 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Cuddalore Murder Case: கடலூர் அருகே ஊராட்சி மன்ற தேர்தல் முன்விரோதம் காரணமாக 2020ல் நடந்த மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய 9 பேருக்கு கடலூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k71htaqbpd1f4yyfbdxqmwa5,imgname-court-1759915092715.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கடலூர் அருகே தூக்கணாம்பாக்கம் அடுத்த பள்ளிப்பட்டு காலனியை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (48). கடந்த உள்ளாட்சி தேர்தலில் பள்ளிப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ராமச்சந்திரன் என்பவருக்கு ஆதரவாக வேலை செய்தார். ராமச்சந்திரனுக்கு எதிராக ரவி என்பவர் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதனால் ராமச்சந்திரன் ஆதரவாளர் ஜனார்த்தனனுக்கும், ரவி ஆதரவாளர் குமாருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது.&lt;/p&gt;&lt;p&gt;கடந்த 2020ம் ஆண்டு ஜனார்த்தனன், அவரது தரப்பை சேர்ந்த கூலி தொழிலாளி கமலக்கண்ணன்(40) ஆகிய இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த குமார் தரப்பினருக்கும், ஜனார்த்தனன் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவரையொருவர் இரும்பு பைப் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில் ஜனார்த்தனன் மற்றும் அவரது தரப்பை சேர்ந்த கமலக்கண்ணன், சிவா, ஜெயசீலன் உள்பட 7 பேருக்கு காயம் ஏற்பட்டது.&lt;/p&gt;&lt;p&gt;இதனையடுத்து காயமடைந்தவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் கமலக்கண்ணன் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து குமார்(48), வெங்கடேசன்(32), மணியரசன்(29), கிருஷ்ணராஜ்(53), சிலம்பரசன்(28), வினோத்குமார்(28), பாரதிதாசன்(28), அரவிந்த்(30), சிவராமன், பரத்வாஜ்(30) உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.&lt;/p&gt;&lt;p&gt;இந்த வழக்கு கடலூர் முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இறுதிக்கட்ட விசாரணை முடிந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இதில், வழக்கில் தொடர்புடைய சிவராமன் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தற்கொலை செய்து இறந்த நிலையில் குமார் உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி சரஸ்வதி தீர்ப்பளித்தார். இதில் சிலம்பரசன் ஏற்கனவே 2021ம் ஆண்டு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று காலப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மற்ற 8 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தீர்ப்பை அறிந்த குற்றவாளிகள் மற்றும் அவரது உறவினர்கள் கதறி அழுததால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-cuddalore</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-cuddalore/cuddalore-murder-case-nine-sentenced-to-life-articleshow-6wflesc"/>
        </item>
        <item>
            <title><![CDATA[திருமணமான 25 நாளில் கணவருக்கு விஷம் வைத்த மனைவி! ]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-cuddalore/wife-poisons-husband-25-days-after-marriage--sshtzz</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-cuddalore/wife-poisons-husband-25-days-after-marriage--sshtzz</guid>
            <pubDate>Sun, 02 Mar 2025 17:08:50 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கடலூரில், திருமணமான 25 நாட்களில் கலையரசன் என்ற இளைஞருக்கு, மனைவி ஷாலினி குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்தார். ஷாலினிக்கு திருமணத்தில் விருப்பமில்லாததால், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. உடல்நலக்குறைவால் கலையரசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கலையரசனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jnb910wtz9q6ct9n52snx597,imgname-whatsapp-image-2025-03-02-at-4.07.10-pm.jpeg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கடலூரில் திருமணமான 25 நாட்களுக்கு கணவருக்கு கூல்டிரிங்க்ஸில் விஷம் கலந்து கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இளைஞரின் பெற்றோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர்.&lt;/p&gt; &lt;p&gt;கடலூர் மாவட்டம் அயன் கருவேப்பம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகன் கலையரசன் என்பவருக்கு கடந்த ஜனவரி 26ஆம் தேதி திருமணம் நடந்தது. பெரியோர் சம்மதத்துடன் நடந்த இந்தத் திருமணம் நடந்திருக்கிறது. ஆனால் மணப்பெண் ஷாலினிக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை.&lt;/p&gt; &lt;p&gt;திருமணம் முடிந்து முதல் இரவின்போது தான் இன்னொருவரைக் காதலிப்பதாக ஷாலினி கலையரசனிடம் கூறியுள்ளார். இதனால் ஷாலினியை அவரது வீட்டிற்கே அனுப்பி வைத்துவிடலாம் என்று இருவீட்டாரும் பேசி முடிவு செய்துள்ளனர்.&lt;/p&gt; &lt;p&gt;பைன்சன் பூன் ஸ்டைலில் மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மார்க் ஜூக்கர்பெர்க்!&lt;/p&gt; &lt;p&gt;இந்நிலையில் பிப்ரவரி 20ஆம் தேதி ஷாலினி கலையரசனுக்கு கூல்ட்ரிங்க்ஸில் விஷம் கலந்து கொடுத்துவிட்டார் என்றும் இதனால் கலையரசன் உடல்நலக்குறைவு ஏற்பட்டு புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.&lt;/p&gt; &lt;p&gt;தங்கள் மகனை விஷம் வைத்துக் கொல்ல முயற்சி செய்த பெண்ணுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என கலையரசனின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளடனர்.&amp;nbsp;கடலூர் புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.&lt;/p&gt; &lt;p&gt;திருமணமாகி ஒரு மாதத்திற்குள் கணவனுக்கு கூல்டிரிங்க்ஸில் விஷம் கலந்து கொலை முயற்சி நடந்திருப்பது அயன் கருவேப்பம்பாடி கிராம மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;இன்சூரன்ஸ் எடுக்கும்போது நிறைய பேர் செய்யும் தவறு இதுதான்! ரொம்ப கவனமா இருங்க!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-cuddalore</category>
            <dc:creator>SG Balan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-cuddalore/wife-poisons-husband-25-days-after-marriage--sshtzz"/>
        </item>
        <item>
            <title><![CDATA[அடுத்தடுத்து 4 ஆம்னி பேருந்துகள் மோதி விபத்து! தூக்கத்தில் இருந்த பயணிகள் அலறல்! பலர் படுகாயம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-cuddalore/four-omni-buses-collided-45-people-injured-in-cuddalore-tvk-ss9up7</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-cuddalore/four-omni-buses-collided-45-people-injured-in-cuddalore-tvk-ss9up7</guid>
            <pubDate>Wed, 26 Feb 2025 09:21:07 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;சென்னையிலிருந்து மதுரை சென்ற 4 ஆம்னி பேருந்துகள் கடலூர் அருகே விபத்துக்குள்ளாகின. லாரி மீது மோதியதில் 45 பயணிகள் படுகாயமடைந்தனர். போலீசார் விசாரணை.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jn05g3m9c1ayf1qnjya18m14,imgname-cuddalore-1.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சென்னையிலிருந்து மதுரை சென்ற 4 ஆம்னி பேருந்துகள் கடலூர் அருகே விபத்துக்குள்ளாகின. லாரி மீது மோதியதில் 45 பயணிகள் படுகாயமடைந்தனர். போலீசார் விசாரணை.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;சென்னையில் இருந்து மதுரைக்கு இன்று அதிகாலை பயணிகளை ஏற்றிக்கொண்டு அடுத்தடுத்து 4 ஆம்னி பேருந்துகள் அதிவேகத்தில் சென்றுக்கொண்டிருந்தனர்.&amp;nbsp;ஆம்னி பேருந்து &amp;nbsp;சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே வேப்பூர் மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;அப்போது முன்னாள் சென்றுக்கொண்டிருந்த லாரியை திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் பின்னால் வந்த 4 ஆம்னி பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;அடுத்தடுத்து 4 ஆம்னி பேருந்துகள் மோதிய விபத்தில் 45 பேர் படுகாயமடைந்தனர். இந்து விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;அடுத்தடுத்து 4 ஆம்னி பேருந்துகள் மோதிக் கொண்டதால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-cuddalore</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-cuddalore/four-omni-buses-collided-45-people-injured-in-cuddalore-tvk-ss9up7"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஷாக்கிங் நியூஸ்! ரவுடி அக்கவுண்டில் ஒரே மாதத்தில் ரூ.2.50 கோடி டெபாசிட்.. அதிர்ச்சியில் போலீஸ்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/gallery/rs-2-50-crores-deposited-in-rowdy-account-in-one-month-in-cuddalore-police-investigation-tvk-si6v7y</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/gallery/rs-2-50-crores-deposited-in-rowdy-account-in-one-month-in-cuddalore-police-investigation-tvk-si6v7y</guid>
            <pubDate>Wed, 14 Aug 2024 09:07:25 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரவுடி அசோக்குமாரின் வங்கிக் கணக்கில் ஒரே மாதத்தில் ரூ.2.50 கோடி டெபாசிட் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வங்கி நிர்வாகத்தின் புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான அசோக்குமாரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j57ecasacfgwpcjg3eeba51c,imgname-cuddalore.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரவுடி அசோக்குமாரின் வங்கிக் கணக்கில் ஒரே மாதத்தில் ரூ.2.50 கோடி டெபாசிட் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வங்கி நிர்வாகத்தின் புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான அசோக்குமாரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;கடலூர் மாவட்டம் பேர்பெரியான்குப்பத்தை சேர்ந்த &amp;nbsp;பெருமாள் மகன் அசோக்குமார்(25). இவர் மீது காவல் நிலையத்தில் கொலை, அடிதடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இவருக்கு முத்தாண்டிகுப்பம் பகுதியில் உள்ள கனரா வங்கியில் சேமிப்பு கணக்கை வைத்துள்ளார். இவரது வங்கி கணக்கில் கடந்த ஜூலை மாதம் ரூ.10 லட்சம், ரூ.20 லட்சம் என பல்வேறு தவணையாக ஒரே மாதத்தில் 2.50 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;இதுதொடர்பாக வங்கி அதிகாரிகள் கேட்ட போது முன்னுக்கு பின் முரணாக அசோக்குமார் பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த கனரா வங்கி சார்பில் முத்தாண்டிகுப்பம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;இதனையடுத்து போலீசார் அறிவுறுத்தலின் பேரில் ரவுடி அசோக் குமாரின் வங்கி கணக்கை கனரா வங்கி முடக்கி உள்ளது. &amp;nbsp;இதுகுறித்து அறிந்ததும் அசோக்குமார் தனது வங்கிக் கணக்கில் இருந்த 2 கோடி ரூபாய் பணத்தை 7 பேருக்கு அனுப்பியுள்ளார். அவர்கள் யார் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;மேலும் தலைமறைவாக உள்ள ரவுடி அசோக்குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர். கடலூரில் ரவுடி வங்கிக் கணக்கில் ஒரே மாதத்தில் ரூ. 2.50 கோடி பணம் டெபாசிட் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-cuddalore</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/gallery/rs-2-50-crores-deposited-in-rowdy-account-in-one-month-in-cuddalore-police-investigation-tvk-si6v7y"/>
        </item>
        <item>
            <title><![CDATA[மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த HM? டுவிஸ்ட் தந்த மாணவி; உறவினர்கள் ஷாக்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-cuddalore/student-demands-that-no-action-be-taken-against-the-hm-who-sexually-harassed-the-student-in-cuddalore-vel-shwipq</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-cuddalore/student-demands-that-no-action-be-taken-against-the-hm-who-sexually-harassed-the-student-in-cuddalore-vel-shwipq</guid>
            <pubDate>Thu, 08 Aug 2024 18:57:26 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;விருத்தாசலத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் அரைநிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மாணவி அளித்த விளக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j4s2jjnvd0byfxrnxnsgd9m4,imgname-whatsapp-image-2024-08-08-at-18-53-47.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த எருமனூர் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளில் விருத்தாசலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதனிடையே பள்ளியின் தலைமை ஆசிரியராக எடில்பட் பிலிப்ஸ் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பள்ளியில் தலைமை ஆசிரியர் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.&lt;/p&gt; &lt;p&gt;&lt;/p&gt; &lt;p&gt;இதனை உறுதி செய்யும் வகையில், பள்ளியில் கடந்த ஆண்டு படித்த அதே பகுதியைச் சேர்ந்த மாணவியுடன் தலைமை ஆசிரியர் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாணவியின் உறவினர்கள் தலைமை ஆசிரியரை சந்தித்து விளக்கம் கேட்க முயன்றனர். அப்போது காரில் வந்த தலைமை ஆசிரியரை வழிமறித்த கிராம மக்கள் அவரை அடித்து உதைத்து ஆடைகளை கிழித்தனர்.&lt;/p&gt; &lt;p&gt;அடக்கடவுளே; பள்ளியில் நண்பர்களுடன் ஆசையாக விளையாடிய சிறுவனுக்கு இப்படி ஒரு முடிவா? மாணவர்கள் ஷாக்&lt;/p&gt; &lt;p&gt;பின்னர் அவரை அரை நிர்வாணமாக விருத்தாசலம் காவல் நிலையத்திற்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அவர்களிடம் இருந்து தலைமை ஆசிரியரை மீட்ட காவல் துறையினர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் தலைமை ஆசிரியரை கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என மாணவியின் பெற்றோர், உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதிக்கு வந்த முன்னாள் பள்ளி மாணவி தலைமை ஆசிரியரை ஏன் கைது செய்தீர்கள்? நான் எனது முழு விருப்பத்துடன் தான் அவருடன் பழகினேன். அவரை நான் காதலிக்கிறேன். அவரை கைது செய்யாதீர்கள் என காவல் துறையினரை பார்த்து உரக்கச் சொன்னார். இதனை கேட்டு உறவினர்களும், காவல் துறையினரும் அதிர்ச்சி அடைந்தனர்.&lt;/p&gt; &lt;p&gt;சம்பந்தப்பட்ட மாணவிக்கு தற்போது 18 வயது பூர்த்தி அடைந்துவிட்ட நிலையில், இந்த விவகாரத்தில் என்ன செய்வது என தெரியாமல் காவல் துறையினர் தவிக்கின்றனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-cuddalore</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-cuddalore/student-demands-that-no-action-be-taken-against-the-hm-who-sexually-harassed-the-student-in-cuddalore-vel-shwipq"/>
        </item>
        <item>
            <title><![CDATA[இது உண்மைக்கு புறம்பானது! அங்கன்வாடி காலி பணியிடங்கள் குறித்து முக்கிய அப்டேட்  சொன்ன அமைச்சர் கீதாஜீவன்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-cuddalore/minister-geetha-jeevan-gives-update-on-anganwadi-job-vacancy-news-kr0gt5v</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-cuddalore/minister-geetha-jeevan-gives-update-on-anganwadi-job-vacancy-news-kr0gt5v</guid>
            <pubDate>Tue, 08 Jul 2025 09:49:32 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தமிழ்நாட்டில் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக வெளியான செய்திக்கு அமைச்சர் கீதாஜீவன் மறுப்பு தெரிவித்துள்ளார். தற்போது 54,483 மையங்கள் செயல்பட்டு வருவதாகவும், தேவையான இடங்களுக்கு மையங்களை இடமாற்றம் செய்ய மத்திய அரசு அனுமதி.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jzm2z5bnze8c0j1n4fvpmkxw,imgname-geetha-jeevan-2-1751947122037.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழ்நாட்டில் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக வெளியான செய்திக்கு அமைச்சர் கீதாஜீவன் மறுப்பு தெரிவித்துள்ளார். தற்போது 54,483 மையங்கள் செயல்பட்டு வருவதாகவும், தேவையான இடங்களுக்கு மையங்களை இடமாற்றம் செய்ய மத்திய அரசு அனுமதி.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்படுவதாக நாளிதழில் செய்தி வெளியான நிலையில் இதற்கு ஓபிஎஸ் மற்றும் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் அமைச்சர் கீதாஜீவன் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு முழுவதும் அங்கன்வாடி மையங்களில் போதிய ஊழியர்கள் இல்லாததால் குழந்தைகளை அனுப்ப பெற்றோர் தயக்கம் காட்டுகின்றனர் எனவும், இந்த ஆண்டு மட்டும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ளன என 05.07.2025 அன்று நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும். அரசிற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வண்ணம் தொடர்ந்து இதுபோன்ற உண்மைக்கு புறம்பான செய்தி பிரசுரிக்கப்பட்டு வருகிறது. இச்செய்தியின் அடிப்படையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களும், முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் அவர்களும், தமிழகத்தில் 500 அங்கன்வாடி மையங்களை மூடுவதற்கு கண்டனத்தை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அவ்வறிக்கைகள் உண்மை நிலைக்கு புறம்பானவைகளாக உள்ளன. இவ்வரசு 2021-ஆம் ஆணடு பொறுப்பேற்றபோது 54,439 அங்கன்வாடி மையங்கள் மட்டுமே தமிழகத்தில் செயல்பட்டு வந்தன. கழகத் தலைவர் தளபதியார் ஆட்சி பொறுப்பேற்றபின்பு கடந்த நான்கு ஆண்டுகளில், மேலும் கூடுதலாக 44 அங்கன்வாடி மையங்கள் புதிதாக அனுமதிக்கப்பட்டு தற்போது 54,483 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்த வரை, அனைத்து குழந்தைகள் மையங்களும் தற்போது வரை சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. அவ்வெண்ணிக்கை ஒருபோதும் குறைக்கப்படாது. தேவைப்படின், கூடுதலாக அங்கன்வாடி மையங்கள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மாநிலத்தின் அனைத்து பகுதிகளையும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பதற்காக, ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட 54,483 அங்கன்வாடி மையங்கள் எண்ணிக்கைக்குள், தேவையான இடத்திற்கு குழந்தைகள் மையங்களை இடமாற்றம் செய்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில்தான், அதிக நகரமயமாக்கல் காரணமாக இடம்பெயரும் மக்கள் தொகை (migration population), பயனாளிகளின் வருகை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, முதன்மை அங்கன்வாடி மையத்தினை குறு மையமாகவும், குறு மையத்தினை முதன்மை அங்கன்வாடி மையமாக மாற்றிடவும், திட்டம் சென்றடையாத புதிய பகுதிகளில், புதிய மையங்களை துவக்கிடவும், குறைவான பயனாளிகள் கொண்டு அருகருகே உள்ள இரு மையங்களை இணைத்திடவும், தூரத்தில் செயல்படும் மையங்களை பயனாளிகளின் வசிப்பிடத்திற்கு அருகிலேயே புதிதாக ஆரம்பிக்கவும், மலைப்பகுதி மற்றும் யாரும் எளிதில் சென்றடைய முடியாத பகுதிகளை கண்டறிந்து புதிதாக குறு மையங்களை ஆரம்பித்திடவும், கடந்த ஆறு மாதங்களாக அங்கன்வாடி மையங்கள் மறுசீரமைப்பு நடவடிக்கைக்காக (rationalisation exercise) புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேற்கூறிய யாவையும் தமிழ்நாடு அரசின் பரிசீலனையில் மட்டுமே உள்ளது. இந்த மறுசீரமைப்பு இன்னமும் நடைமுறைப்பத்தப்படவில்லை. அவ்வாறு முறைப்படுத்தும் போதும் 54,483 குழந்தைகள் மையங்களை தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடத்தும், நிலைமை இவ்வாறு இருக்க, தற்போது 54,483 குழந்தைகள் மையங்கள் செயல்பட்டு வரும் தருணத்தில் புதிதாக 501 மையங்கள் மூடப்பட்டுள்ளன என்ற செய்தி உண்மைக்கு புறம்பானதாகும். மேலும், தற்போது 7,783 அங்கன்வாடி காலிப் பணி இடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டு, அனைத்து மாவட்டங்களிலும் நேர்முகத் தேர்வு நடைபெற்று வருகின்றது. விரைவில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-cuddalore</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-cuddalore/minister-geetha-jeevan-gives-update-on-anganwadi-job-vacancy-news-kr0gt5v"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஓயாத அடை மழை! வீட்டின் சுவர் இடிந்தது! பறிபோன தாய் மகள் உயிர்! கண் கலங்கிய அமைச்சர்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-cuddalore/tragic-rain-death-mother-and-daughter-killed-in-cuddalore-wall-collapse-articleshow-l9oiuph</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-cuddalore/tragic-rain-death-mother-and-daughter-killed-in-cuddalore-wall-collapse-articleshow-l9oiuph</guid>
            <pubDate>Wed, 22 Oct 2025 15:30:24 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தாய், மகள் பரிதாபமாக பலியாயினர். இந்த சோக சம்பவம் தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k85nrb55gzkf207tmsf2ahqj,imgname-mother-daughter-1761127181477.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை கொட்டித் தீர்த்து வருகிறது. சென்னையில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் இடைவிடாமல் மழை கொட்டித் தீர்க்கிறது. இந்த நிலையில், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த ஆண்டார் முள்ளி பள்ளம் கிராமத்தில் கடந்த 2 நாட்களுக்கு மேலாக மழை விடாமல் கொட்டுகிறது.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;அந்த கிராமத்தை சேர்ந்தவர் யசோதை (69). அவரது மகள் ஜெயா (40). இவர்கள் இருவரும் நேற்று இரவு தங்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஓயாத மழை காரணமாக வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் சிக்கி யசோதை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஜெயா படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.&lt;/p&gt;&lt;h3&gt;&lt;strong&gt;தாய், மகள் பலியான பரிதாபம்&lt;/strong&gt;&lt;/h3&gt;&lt;p&gt;சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் ஜெயாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தாய், மகள் உயிரிழந்தது முள்ளி பள்ளம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. கணவர் இறந்ததால் ஜெயா தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். அவருக்கு 2 ஆண், ஒரு பெண் என 3 குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்க்கது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;கண் கலங்கிய அமைச்சர்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் உடனடியாக அங்கு விரைந்து சென்று கண் கலங்கியபடி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்து நிவாரண உதவியும் செய்தார். வீட்டின் சுவர் இடிந்து பலியான தாய், மகளின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அன்புமணி, ''கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த ஆண்டார் முள்ளி பள்ளம் கிராமத்தில் மழையால் சேதமடைந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் அந்த வீட்டில் வசித்து வந்த யசோதை, ஜெயா ஆகிய இருவர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து வருத்தம் அடைந்தேன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடும், அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்'' என்று கூறியுள்ளார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-cuddalore</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-cuddalore/tragic-rain-death-mother-and-daughter-killed-in-cuddalore-wall-collapse-articleshow-l9oiuph"/>
        </item>
        <item>
            <title><![CDATA[கடலூரிலிருந்து கிளாம்பாக்கம் நோக்கி சென்ற அரசு பேருந்து விபத்து – 10 பேர் காயம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-cuddalore/cuddalore-kilambakkam-government-bus-accident-shocking-information-in-tamil-rsk-ssylwo</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-cuddalore/cuddalore-kilambakkam-government-bus-accident-shocking-information-in-tamil-rsk-ssylwo</guid>
            <pubDate>Tue, 11 Mar 2025 18:11:12 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;கடலூரில் இருந்து கிளாம்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மதுராந்தகம் அருகில் விபத்துக்குள்ளானது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jp2kdk569p08z7kf2kfxh0qs,imgname-untitled-design--9-.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;Cuddalore-Kilambakkam bus accident: Complete information நாளுக்கு நாள் பேருந்துகளின் விபத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக உயிர் சேதமும் அதிகரிக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு திருத்தனி அருகில் டிப்பர் லாரியானது அரசு பேருந்து மீது விபத்துக்குள்ளானது. இதில், 5 பேர் உயிரிழந்த நிலையில், கிட்டத்தட்ட 30 பேர் படுகாயமடைந்தனர். இந்த நிலையில் தான் இன்று கடலூரிலிருந்து சென்னை கிளாம்பாக்கம் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியிருக்கிறது. கடலூரிலிருந்து கிளம்பிய அரசு பேருந்து திருச்சி &ndash; சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அருகில் வந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது. &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;முன்னே சென்ற அரசு பேருந்தை முந்த சென்ற போது டிரைவரது கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கிட்டத்தட்ட 10 பேர் படுகாயமடைந்த நிலையில் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர் தப்பி ஓடியுள்ளார். போலீசார் அவரை தேடி வருகின்றனர்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;img&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-cuddalore</category>
            <dc:creator>Rsiva kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-cuddalore/cuddalore-kilambakkam-government-bus-accident-shocking-information-in-tamil-rsk-ssylwo"/>
        </item>
        <item>
            <title><![CDATA[லிப்ட்டில் சிக்கிய காங்கிரஸ் எம்.பி.!  2 நிர்வாகிகள் மயக்கம்! விஷ்ணு பிரசாத் நிலைமை என்ன?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/cuddalore-congress-mp-vishnu-prasad-trapped-in-lift-tvk-srs1f2</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/cuddalore-congress-mp-vishnu-prasad-trapped-in-lift-tvk-srs1f2</guid>
            <pubDate>Sun, 16 Feb 2025 18:34:18 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;வடலூரில் நடைபெற்ற காங்கிரஸ் கிராம கமிட்டி கூட்டத்தில் பங்கேற்க வந்த எம்.பி. விஷ்ணு பிரசாத் உள்பட 6 பேர் லிப்டில் சிக்கினர்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01d4ajgcxc15akr5cerzq576fw,imgname-vishnu-prasad.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கடலூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் எம்.பி. விஷ்ணு பிரசாத். இவர் காங்கிரஸ் மூத்த தலைவர் கிருஷ்ணசாமியின் மகன். இந்நிலையில் கடலூர் மாவட்டம் வடலூரில் இன்று காங்கிரஸ் கட்சியின் கிராம கமிட்டி கூட்டம் தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் எம்.பி. விஷ்ணு பிரசாத் தனியார் விடுதிக்கு வந்திருந்தார்.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&lt;strong&gt;பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல்! ரூ.48,000 உதவித்தொகை! அள்ளிக்கும் கொடுக்கும் மத்திய அரசு!&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;கிராம கமிட்டி கூட்டம் நடைபெறும் 2வது தளத்துக்கு செல்வதற்காக எம்.பி. விஷ்ணு பிரசாத் உள்பட 6 நிர்வாகிகள் லிப்ட்டில் சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக லிப்ட் பாதி வழியில் பழுதாகி நின்றது. இதனால் விடுதி ஊழியர்களும், காங்கிரஸ் கட்சியினரும் அதிர்ச்சி அடைந்தனர். விடுதி ஊழியர்கள் அவசர கால சாவியை பயன்படுத்தி லிப்டை திறக்க முயற்சித்தனர். ஆனால் தோல்வியில் முடிந்தது.&amp;nbsp;&lt;/p&gt; &lt;p&gt;இதையடுத்து உடனடியாக குறிஞ்சிபாடி, நெய்வேலி, கடலூரில் உள்ளிட்ட தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் லிப்ட்டில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரம் போராடி லிப்ட்டை இயக்க முயற்சித்தும் முடியவில்லை. பின்னர் வேறு வழியில்லாமல் லிப்ட்டின் கதவை உடைத்து உள்ளே சிக்கிய விஷ்ணு பிரசாத் எம்.பி. உள்பட 6 பேரை ஒரு வழியாக மீட்டனர்.&lt;/p&gt; &lt;p&gt;இதையும் படிங்க:&amp;nbsp;&amp;nbsp;&lt;strong&gt;மத்திய பாஜக அரசை கண்டிக்கக் கூட துப்பில்லாமல் ஒளிந்திருக்கும் பதுங்குக்குழி பழனிசாமி எங்கே? செந்தில் பாலாஜி!&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;லிப்டில் மயங்கி விழுந்த நிலையில் இருந்த காங்கிரஸ் நிர்வாகிகள் இரண்டு பேருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். விசாரணையில் மூன்று பேர் மட்டுமே செல்லக்கூடிய லிப்டில் 6 பேர் சென்றதே லிப்ட் பழுதாகி நின்றதற்கு காரணம் என தெரியவந்துள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-cuddalore</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/cuddalore-congress-mp-vishnu-prasad-trapped-in-lift-tvk-srs1f2"/>
        </item>
        <item>
            <title><![CDATA[கடலூர் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து! குழந்தைகளின் நிலை என்ன? பரபரப்பு தகவல்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-cuddalore/school-van-hit-by-train-near-chidambaram-three-students-killed-many-injured-s9lm0dl</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-cuddalore/school-van-hit-by-train-near-chidambaram-three-students-killed-many-injured-s9lm0dl</guid>
            <pubDate>Tue, 08 Jul 2025 08:55:40 +0530</pubDate>
            <description><![CDATA[சிதம்பரம் அருகே செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் 3 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jzm0t4t1e8pv0mbyy0h3xbc2,imgname-cuddalore-1751944860481.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[சிதம்பரம் அருகே செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் 3 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.&lt;img&gt;&lt;p&gt;கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்துள்ள செம்மங்குப்பம் பகுதியில் ரயில் தண்டவாளம் அமைந்துள்ளது. சாலையின் நடுவே அமைந்துள்ள அந்த தண்டவாளம் அருகே வாகனங்கள் கடந்து செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பள்ளி வேன் ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. செம்மங்குப்பம் அருகே உள்ள ரயில்வே கேட்டை பள்ளி வேன் ஒட்டுநர் கடக்க முயன்றுள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அப்போது அவ்வழியாக வந்த திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் பள்ளி வேன் மோதியது. இதில் பள்ளி வேன் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் பள்ளி வேன் சுமார் 50 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் பள்ளி மாணவர் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தததாக தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்த வலி தங்க முடியாமல் அலறி கூச்சலிட்டனர். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினர் மற்றும் போலீசார் விரைந்தனர். இதனையடுத்து படுகாயமடைந்த குழந்தைகள் அரசு மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதில், பள்ளி மாணவர்களின் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. பள்ளிக்கு சென்ற குழந்தைகள் விபத்தில் சிக்கிய செய்தியை அறிந்த பெற்றோர் பதறி அடித்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ரயில் வருவதை ஓட்டுநர் கவனிக்காமல் கடக்க முயன்ற போது விபத்து நிகழ்ந்ததாக முதலில் கூறப்பட்டது. ஆனால், ரயில்வே கேட்டில் பணியிருந்த ஊழியர் ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் தூங்கியதால் விபத்து நடந்ததாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-cuddalore</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-cuddalore/school-van-hit-by-train-near-chidambaram-three-students-killed-many-injured-s9lm0dl"/>
        </item>
        <item>
            <title><![CDATA[விமானங்கள் ரத்து, ECR சாலை, கல்வி நிலையங்கள் மூடல் - தலைநகரை சுழன்றடிக்கும் ஃபெஞ்சல் புயல்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/red-alert-has-been-issued-for-many-districts-due-to-cyclone-fengal-vel-snqseh</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/red-alert-has-been-issued-for-many-districts-due-to-cyclone-fengal-vel-snqseh</guid>
            <pubDate>Sat, 30 Nov 2024 08:05:44 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ஃபெஞ்சல் புயல் இன்று புதுவை - காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் நிலையில் சென்னை, கடலூர், விழுப்புரம் உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jdxek4zjwa8cqe6yara5rh5x,imgname-mixcollage-30-nov-2024-08-01-am-7541.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஃபெஞ்சல் புயல் இன்று புதுவை - காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் நிலையில் சென்னை, கடலூர், விழுப்புரம் உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;6 கிமீ வேகத்தில் ஃபெஞ்சல் புயல்&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;கடந்த 7 மணி நேரமாக மணிக்கு 6 கிமீ வேகத்தில் பயணிக்கும் ஃபெஞ்சல் (&lt;strong&gt;Fengal&lt;/strong&gt;) புயல் புதுவையில் இருந்து கிழக்கே 180 கிமீ தொலைவிலும், சென்னையில் இருந்து தென்கிழக்கே 190 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;புயல் இன்று பகல் நேரத்தில் புதுவைக்கு அருகே மாமல்லபுரம் - புதுவை இடையே கரையை கடக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 90 கிமீ வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;ரெட் அலர்ட்&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;ஃபெஞ்சல் காரணமாக தமிழகம், புதுவையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ள நிலையில் தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளகுறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிககனமழை பெய்யக்கூடும் என்பதற்கான ரெட் அலர்ட் (Red Alert) விடுக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;இதே போன்று ராணிபேட்டை, திருவண்ணாமலை, வேலூர், திருவண்ணாமலை, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் மிதமழை முதல் கனமழை (&lt;strong&gt;Heavy Rain&lt;/strong&gt;) பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;மூடப்படும் ECR சாலை&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;புயல் புதுவைக்கு அருகே மாமல்லபுரம், காரைக்கால் இடையே கரையை கடக்கக்கூடும் என்பதால் புயல் கரையை கடக்கும் நேரத்தில் கிழக்கு கடற்கரைச் சாலை தற்காலிகமாக மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;விடுமுறை&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;ஃபெஞ்சல் புயல் காரணமாக கனமழை பெய்து வரும் நிலையில் புயல் கரையை கடக்கும் போது மழையின் தீவிரம் அதிகமாக இருக்கும் என்பதால் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளகுறிச்சி, மயிலாடுதுறை, ராணிபேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை (&lt;strong&gt;Holiday&lt;/strong&gt;) அளிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;வட்டமடிக்கும் விமானங்கள்&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;புயல் காரணமாக காற்றின் வேகம் அதிகரித்திருப்பதால் புனே, குவைத், மஸ்கட், மும்பை ஆகிய நகரங்களில் இருந்து சென்னைக்கு வந்த விமானங்கள் தரையிரங்க முடியாமல் வானில் வட்டமடித்தபடி இருக்கின்றன.&lt;/p&gt; &lt;p&gt;கனமழை மற்றும் காற்றின் சீற்றம் காரணமாக சிங்கப்பூர், திருச்சி, மங்களூரு உட்பட பல பகுதிகளில் இருந்து சென்னை வரும் 6 விமானங்கள் (Flights Cancelled) ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனிடையே திருச்சி, தூத்துக்குடி, மைசூரு, பெங்களூரு, அந்தமான் செல்லும் விமானங்கள் வழக்கம்போல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-cuddalore</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/red-alert-has-been-issued-for-many-districts-due-to-cyclone-fengal-vel-snqseh"/>
        </item>
        <item>
            <title><![CDATA[வாயை மூடிட்டு போறியா! நீ எங்கு வேண்டுமானாலும் போய் கம்ப்ளைண்ட் பண்ணு! பெண் மருத்துவரின் பேச்சால் பரபரப்பு!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu-cuddalore/threatening-government-female-doctor-in-panruti-tvk/articleshow-uote058</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu-cuddalore/threatening-government-female-doctor-in-panruti-tvk/articleshow-uote058</guid>
            <pubDate>Thu, 26 Jun 2025 19:06:27 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;பண்ருட்டி அரசு மருத்துவமனையில் ஊசி போட்ட பின் சிறுவனுக்கு தொற்று ஏற்பட்டது. பெற்றோர் கேள்வி எழுப்பியதற்கு மருத்துவர் அலட்சியமாக பதிலளித்து மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jynmh1y1wb0rkettta2an3ts,imgname-cuddalore-1750925346753.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சி பின்புறம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்த பிரகாஷ் -தமிழ் தம்பதியின் மகன் தனுஷன். இவர் தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்த நிலையில் கீழே விழுந்து காயம் அடைந்ததால் காய்ச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சமூக வலைதளங்களில் வைரல்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இதன் காரணமாக சிறுவன் தனுஷன் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று ஊசி போட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. ஊசி போட்டுக் கொண்ட ஓரிரு தினங்களுக்குள் சிறுவனுக்கு தொற்று ஏற்பட்டு வீங்கிய நிலையில் அது குறித்து மருத்துவரிடம் பெற்றோர் கேட்டுள்ளனர். அப்போது மருத்துவர் அலட்சியமாக பதில் அளிக்கக்கூடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;காவல் நிலையத்தில் புகாராளிக்கவா&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;அதில் ஊசி போட்டுக் கொண்டதெல்லாம் எனக்கு தெரியாது, என்னைய கேள்வி கேட்டால் உங்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து வழக்கு பதிவு செய்யப்படும். அரசியல் செல்வாக்கில் உள்ள மருத்துவர்கள் இரண்டு மணி நேரம் மட்டும் வேலை செய்துவிட்டு வீட்டிற்கு செல்லும் ஆட்கள் எல்லாம் இருக்கிறார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;மருத்துவர் மிரட்டல்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;நீ எங்கு வேண்டுமானாலும் சென்று புகார் அளிக்கலாம். என்னை எதுவும் செய்ய முடியாது என்று மருத்துவர் மிரட்டல் பாணியில் பேசுகிறார்.நோயாளிகளிடம் அலட்சிய போக்குடன் நடந்து கொள்ளும் மருத்துவர் இளம்தமிழ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-cuddalore</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu-cuddalore/threatening-government-female-doctor-in-panruti-tvk/articleshow-uote058"/>
        </item>
        <item>
            <title><![CDATA[பிஎச்டி படிக்க ஆசையா? அண்ணாமலை பல்கலை. Ph.D. சேர்க்கை 2025-26 ஆரம்பம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/career/annamalai-university-invites-applications-for-fulltime-parttime-phd-2025-2026-vc78dbr</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/career/annamalai-university-invites-applications-for-fulltime-parttime-phd-2025-2026-vc78dbr</guid>
            <pubDate>Sat, 05 Jul 2025 21:44:35 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான முழுநேர/பகுதிநேர Ph.D. திட்டங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. பல்வேறு துறைகள் மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் சேர ஆகஸ்ட் 8, 2025க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01hfbn48qd5szd7x4m77j90rts,imgname-annamalai-university.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான முழுநேர/பகுதிநேர Ph.D. திட்டங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. பல்வேறு துறைகள் மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் சேர ஆகஸ்ட் 8, 2025க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ்நாட்டின் புகழ்பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான முனைவர் பட்ட (Ph.D.) திட்டங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. முழுநேர (Full-Time) மற்றும் பகுதிநேர (Part-Time/Part-Time-Internal/External) என இரு பிரிவுகளிலும் பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் இந்த ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொள்ள ஆர்வமுள்ளவர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கலை, அறிவியல், கடல்சார் அறிவியல், இந்திய மொழிகள், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், கல்வி, நுண்கலைகள் மற்றும் வேளாண்மை எனப் பல்வேறு துறைகளில் முனைவர் பட்டப்படிப்புகளை வழங்குகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;கலைத் துறை:&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஆங்கிலம், வரலாறு, அரசியல் அறிவியல், பொது நிர்வாகம், பொருளாதாரம், சமூகவியல், சமூகப் பணி, வர்த்தகம், மக்கள் தொகை ஆய்வுகள், வணிக நிர்வாகம், கிராமப்புற மேம்பாடு, நூலகம் மற்றும் தகவல் அறிவியல், தத்துவம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;அறிவியல் துறை:&lt;/strong&gt; கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், பயோஇன்ஃபர்மேடிக்ஸ், நுண்ணுயிரியல், புவியியல், பயன்பாட்டு புவியியல், புவித்தகவல், உயிர் வேதியியல், உயிரி தொழில்நுட்பம், கணினி பயன்பாடுகள், விளையாட்டு உயிர் வேதியியல், உடற்பயிற்சி உடலியல், வலிமை மற்றும் கண்டிஷனிங்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;கடல்சார் அறிவியல் துறை: &lt;/strong&gt;கடல் உயிரி தொழில்நுட்பம், கடல் நுண்ணுயிரியல், கடல் உணவுத் தொழில்நுட்பம், கடல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கடலியல்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;இந்திய மொழிகள்: &lt;/strong&gt;தமிழ், மொழியியல், இந்தி.&lt;/p&gt;&lt;p&gt;பொறியியல் மற்றும் தொழில்நுட்பம்: இரசாயன பொறியியல், இரசாயன பொறியியல்-உயிரி தொழில்நுட்பம், இரசாயன பொறியியல்-உணவு தொழில்நுட்பம், இரசாயன பொறியியல்-தொழில்துறை பாதுகாப்பு, குடிமைப் பொறியியல், கட்டமைப்புப் பொறியியல், கணினி அறிவியல் மற்றும் பொறியியல், மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல், மின்னணுவியல் மற்றும் தகவல்தொடர்பு பொறியியல், மின்னணுவியல் மற்றும் கருவிமயமாக்கல் பொறியியல், தகவல் தொழில்நுட்பம், இயந்திரவியல் பொறியியல், உற்பத்திப் பொறியியல், மருந்தகம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;கல்வி: &lt;/strong&gt;கல்வி உளவியல், உடற்கல்வி.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;நுண்கலைகள்:&lt;/strong&gt; இசை, நடனம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;வேளாண்மை:&lt;/strong&gt; வேளாண்மை, பூச்சியியல், தாவர நோயியல், வேளாண் நுண்ணுயிரியல், வேளாண் உயிரி தொழில்நுட்பம், வேளாண் விரிவாக்கக் கல்வி, மரபியல் மற்றும் தாவர வளர்ப்பு (தோட்டக்கலை) காய்கறி அறிவியல், மண் அறிவியல்.&lt;/p&gt;&lt;p&gt;இணைப்புக் கல்லூரிகளில் வழங்கப்படும் படிப்புகள் குறித்து அந்தந்த கல்லூரிகளின் இணையதளங்களைப் பார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முனைவர் பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.annamalaiuniversity.ac.in/adm/index.php மூலம் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கட்டணம் ரூ. 1500/- ஆகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்த பிறகு, அதன் ஹார்ட் காப்பியை தேவையான இணைப்புகளுடன் &quot;பதிவாளர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர் &ndash; 608002&quot; என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் சேர்க்கை குறித்த விரிவான தகவல் கையேடு (Prospectus) கிடைக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆன்லைன் பதிவு தொடங்கும் தேதி: 07.07.2025&lt;/p&gt;&lt;p&gt;ஆன்லைன் பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 08.08.2025, மாலை 5.30 மணி&lt;/p&gt;&lt;p&gt;ஆன்லைன் விண்ணப்பத்தின் கடின நகலை இணைப்புகளுடன் பெறுவதற்கான கடைசி தேதி: 14.08.2025, மாலை 5.30 மணி&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நுழைவுத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி பல்கலைக்கழக இணையதளத்தில் அறிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு, www.annamalaiuniversity.ac.in/adm/index.php என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம் அல்லது careau2018@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்: 04144-238349.&lt;/p&gt;&lt;p&gt;அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டு, உங்கள் கல்வி மற்றும் தொழில் வாழ்க்கையில் புதிய உயரங்களை அடைய இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-cuddalore</category>
            <dc:creator>Suresh Manthiram</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/career/annamalai-university-invites-applications-for-fulltime-parttime-phd-2025-2026-vc78dbr"/>
        </item>
        <item>
            <title><![CDATA[கடலூர் ரயில் விபத்து! ஓட்டுநர் ரயில் கேட்டை திறக்க சொன்னாரா? உண்மை அம்பலமானது!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-cuddalore/cuddalore-school-van-accident-gatekeeper-false-claim-exposed-in-investigation-xm9m1cb</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-cuddalore/cuddalore-school-van-accident-gatekeeper-false-claim-exposed-in-investigation-xm9m1cb</guid>
            <pubDate>Sat, 12 Jul 2025 09:53:34 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் பலி. கேட் கீப்பர் அலட்சியம் எனக் கூறப்பட்ட நிலையில், வேன் ஓட்டுநர் தன்னை கேட் மூட வேண்டாம் எனக் கூறியதாகக் கேட் கீப்பர் தெரிவித்தார். ஆனால், வேன் ஓட்டுநர் இதனை மறுத்திருந்தார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jzyd51dc3rrwbh6n0r2g18pe,imgname-school-van-1752293344684.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் பலி. கேட் கீப்பர் அலட்சியம் எனக் கூறப்பட்ட நிலையில், வேன் ஓட்டுநர் தன்னை கேட் மூட வேண்டாம் எனக் கூறியதாகக் கேட் கீப்பர் தெரிவித்தார். ஆனால், வேன் ஓட்டுநர் இதனை மறுத்திருந்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கடலூரில் செம்மங்குப்பம் அருகே ஜூலை 8ம் தேதி காலை 8 மணியளவில் கடலூர்-ஆலப்பாக்கம் இடையே தனியார் பள்ளி வேன் ஒன்று குழந்தைகளை ஏற்றி கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது ரயில்வே கேட்டை கடக்க முயன்ற போது விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வேகமாக வந்த பயணிகள் ரயில் பள்ளி வேன் மீது மோதியது. இந்த விபத்தில் பள்ளி வேன் பல மீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டது. இதில், வேனில் இருந்த குழந்தைகள் அலறியபடி தூக்கி வீசப்பட்டனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த கோர விபத்தில் சாருமதி, செழியன், நிவாஸ் ஆகியோர் உயிரிழந்தனர். இதில் சாருமதி மற்றும் செழியன் அக்கா, தம்பியாகும். மேலும் வேன் ஓட்டுநர் சங்கர் மற்றும் மாணவர் விஸ்வேஷ் உள்ளிட்டோர் படுகாயமடைந்ததை அடுத்து கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். முதலில் கேட் கீப்பர் அலட்சியத்தால் விபத்து நிகழ்ந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் ரயில்வே துறை அதிர்ச்சி தகவலை தெரிவித்தது. அதாவது செம்மங்குப்பத்தில் ரயில் வருவதை அறிந்து கேட்டை மூடுவதற்கு கேட் கீப்பர் முயற்சி செய்தார். அப்போது பள்ளி வேனை ஓட்டி வந்த ஓட்டுநர் தான் கடந்து செல்லும் வரை மூட வேண்டாம் என்றார். பள்ளி வேன் கடந்து செல்ல முயன்றபோது ரயில் மோதியதாக விளக்கமளித்திருந்தது. இந்த விபத்து தொடர்பாக கேட் கீப்பர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்டார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில் வேன் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் வேன் ஓட்டுநர் நான் செல்லும்போது கேட் திறந்துதான் இருந்தது. நான் கேட் கீப்பரிடம் பேசவே இல்லை. கேட்டை மூட வேண்டாம் என நான் சொல்லவே இல்லை. ரயில் ஹாரன் சத்தம் கூட அடிக்கவில்லை. கேட் கீப்பரும் அந்த இடத்தில் இல்லை என கூறியிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதாவது பள்ளி வேன் விபத்தின்போது லெவல் கிராசிங் கேட் திறந்திருந்ததற்கான ஆதாரங்களை புலனாய்வு குழு கண்டறிந்துள்ளது. கேட் கீப்பர் பங்கஜ் கேட்டை (LC-170)திறந்தே வைத்திருந்தது உறுதியாகியுள்ளது. மேலும் ரயில்வே கேட்டை மூடாமலேயே மூடிவிட்டதாக பிரைவேட் எண்ணைக் ஸ்டேஷன் மாஸ்டருக்கு கொடுத்துள்ளார். விபத்துக்குப் பின் ஸ்டேஷன் மாஸ்டரை அழைத்து கேட்டை மூடவில்லை என்று ஒப்புக்கொண்டது ரயில்வேயின் தானியங்கி வாய்ஸ் ரெக்கார்டரில் பதிவாகியுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-cuddalore</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-cuddalore/cuddalore-school-van-accident-gatekeeper-false-claim-exposed-in-investigation-xm9m1cb"/>
        </item>
        <item>
            <title><![CDATA[தமிழகத்தில் வெளுத்து வாங்கும் கனமழை; பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை - எந்த மாவட்டத்தில்?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/heavy-rain-cuddalore-schools-college-declared-leave-tomorrow-ans-sno0ob</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/heavy-rain-cuddalore-schools-college-declared-leave-tomorrow-ans-sno0ob</guid>
            <pubDate>Thu, 28 Nov 2024 20:08:34 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Schools and Colleges Leave : தமிழகத்தில் இன்னும் சில நாட்களுக்கு கனமழை தொடரவுள்ள நிலையில் ஒரு சில பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jdsk2ye5q3dwkwxavxwzek8r,imgname-cuddalore.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Schools and Colleges Leave : தமிழகத்தில் இன்னும் சில நாட்களுக்கு கனமழை தொடரவுள்ள நிலையில் ஒரு சில பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;இந்த ஆண்டு எதிர்பார்த்ததை விட முன்னதாகவே வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கியது. இருப்பினும் அக்டோபர் மாதம் 2ம் பாதியில் இருந்து, அம்மாத இறுதிவரை பெரிய அளவில் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டாலும், சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அக்டோபர் மாத இறுதி வரை பெரிய அளவில் மழை பெய்யவில்லை என்றே கூறலாம்.&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;&quot;நீங்க 200 கோடினா; நான் 2000 கோடி&quot; மீண்டும் விஜயை வம்பிழுக்கும் சீமான்!&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;இந்த சூழலில் தற்பொழுது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக, வரவிருக்கும் புயல் டெல்டா மாவட்டங்களில் கனமழையை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் எதிர்வரும் நான்கு நாட்களுக்கு மிதமான மழையை எதிர்பார்க்கலாம் என்றும், தமிழகத்தை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான முதல் அதி கனத்த மழை பெய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;அதே போல நாளை நவம்பர் 29ம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதிக கனத்த மழையும், பல இடங்களில் பரவலாக நல்ல மழையும் பெய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இன்று திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் சாரல் மழை பெய்தாலும் அநேக நேரங்கள் மேகமூட்டத்துடன் தான் வானம் காணப்பட்டது.&lt;/p&gt; &lt;img&gt;&lt;p&gt;இருப்பினும் நாளை மிதமானது முதல் கனமழை ஒரு இடங்களில் வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மேலும் நாளை கடலூரில் நல்ல மழை எதிர்பார்க்கப்படும் நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். டிசம்பர் 1ம் தேதி வரை அநேக இடங்களில் நல்ல மழை பெய்ய அதிக வாய்ப்புகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;புரட்டிப்போட போகுது பேய் மழை.! இனி தான் மெயின் பிக்சர்.! தேதி குறித்த தமிழ்நாடு வெதர் மேன்&lt;/strong&gt;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-cuddalore</category>
            <dc:creator>Ansgar R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/heavy-rain-cuddalore-schools-college-declared-leave-tomorrow-ans-sno0ob"/>
        </item>
    </channel>
</rss>
