<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes"?>
<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Thu, 25 Jun 2026 14:25:14 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss/tamilnadu-chennai" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[சென்னை மெட்ரோ பயணிகளே உஷார்.. ரயிலில் இனி சத்தமாக பேசினால் அபராதம்.. புதிய விதி வந்தாச்சு!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-chennai/chennai-metro-new-rules-rs-500-fine-for-loud-talking-and-using-speakers-in-trains-2uz3msi</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-chennai/chennai-metro-new-rules-rs-500-fine-for-loud-talking-and-using-speakers-in-trains-2uz3msi</guid>
            <pubDate>Sat, 18 Apr 2026 11:34:35 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Chennai Metro New Rules: சென்னை மெட்ரோ ரயில்களில் சத்தமாக பேசினால் அபராதம் விதிக்கப்படும் என மெட்ரோ ரயில் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மெட்ரோ கொண்டு வந்துள்ள புதிய விதிகள் என்னென்ன? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kpfjt00vqsmretprqavz8dct,imgname-chennai-metro-1776492019739.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Chennai Metro New Rules: சென்னை மெட்ரோ ரயில்களில் சத்தமாக பேசினால் அபராதம் விதிக்கப்படும் என மெட்ரோ ரயில் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மெட்ரோ கொண்டு வந்துள்ள புதிய விதிகள் என்னென்ன? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சென்னையின் பல்வேறு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை சென்ட்ரல் முதல் கோயம்பேடு பரங்கிமலை வழியாக விமான நிலையம் வரையிலும், விம்கோ நகர் முதல் சென்னை சென்ட்ரல், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, கிண்டி வழியாக விமான நிலையம் வரையும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுமட்டுமின்றி சென்னையின் மற்ற பகுதிகளையும் இணைக்கும் வகையில் இரண்டாம் கட்டப் பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குறிப்பாக மாதவரம் - சிறுசேரி, பூந்தமல்லி - லைட் ஹவுஸ் மற்றும் மாதவரம் - சோழிங்கநல்லூர் ஆகிய மூன்று முக்கிய வழித்தடங்களில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பூந்தமல்லி &ndash; போரூர் வழித்தடத்தில் விரைவில் ரயில்களை இயக்க சென்னை மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் மெட்ரோ ரயில் திட்டங்கள் அமைந்துள்ளன. இதுமட்டுமின்றி மழை, வெள்ளம் போன்ற காலங்களில் மெட்ரோ ரயில்கள் பெரிதும் கைகொடுத்து உதவுகின்றன. இதன் காரணமாக மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதற்கிடையே மெட்ரோ ரயிலில் பயணிக்கும் சிலர் தொடர்ந்து விதிகளை மீறி சக பயணிகளுக்கு இடையூறு செய்வதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. அதாவது போனில் சத்தமாக பேசுவது, ஹெட்போன் பயன்படுத்தாமல் மொபைலில் வீடியோக்கள், ரீல்ஸ் பார்ப்பது போன்ற செயல்கள் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தின. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு தொடர் புகார்கள் சென்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த நிலையில், மெட்ரோ ரயிலில் அல்லது மெட்ரோ ரயில் வளாகங்களில் இனி சத்தமாக பேசினாலோ அல்லது ஹெட்போன் இல்லாமல் அதிக சத்தத்துடன் மொபைல் யூஸ் செய்தாலோ ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் மெட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''மெட்ரோ இரயில் பயண ஒழுங்குமுறைகளைப் பின்பற்றி, சக பயணிகளின் வசதிக்கும் அமைதிக்கும் மதிப்பளிக்குமாறு அனைத்துப் பயணிகளையும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இனி இந்த செயல்களை செய்யக் கூடாது&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;மெட்ரோ இரயில் (இயக்கம் மற்றும் பராமரிப்பு) சட்டம் 2002 பிரிவு 59-ன் கீழ், சக பயணிகளுக்குத் தொந்தரவு விளைவிப்பதோ அல்லது அவர்களின் வசதிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதோ தண்டனைக்குரிய குற்றமாகும்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;குறிப்பாக அலைபேசியில் உரத்த குரலில் உரையாடுதல், செவியில் பொருத்தி கொள்ளும் ஒலிபெருக்கி (Headphones) இன்றி இசை அல்லது வீடியோக்களைப் பார்ப்பது, அலைபேசியில் மெட்ரோ இரயில்களிலும் வளாகங்களிலும் ஒலிபெருக்கி வசதியைப் பயன்படுத்துதல் (Speaker mode) மேற்கண்ட செயல்கள் மூலம் அதிகப்படியான இரைச்சலை ஏற்படுத்தும் வகையில் அலைபேசிகளைப் பயன்படுத்துவதும் மற்றவர்களுக்கு இடையூறு விளைவிப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தச் சட்டத்தின்படி, விதியை மீறும் பயணிகளுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படலாம். மேலும், தேவைப்பட்டால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளால் மெட்ரோ வளாகத்திலிருந்து அவர்கள் வெளியேற்றப்படவும் வாய்ப்புள்ளது. எனவே, சக பயணிகளின் பயணச் சூழலைக் கருத்தில் கொண்டு, அனைவரும் ஹெட்போன்களைப் பயன்படுத்துமாறும், மெட்ரோ இரயில் மற்றும் அதன் வளாகத்திற்குள் உரத்த குரலில் உரையாடுதல் மற்றும் ஸ்பீக்கர் மோட் பயன்பாட்டைத் தவிர்க்குமாறும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது'' என்று கூறப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-chennai</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-chennai/chennai-metro-new-rules-rs-500-fine-for-loud-talking-and-using-speakers-in-trains-2uz3msi"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Chennai Power Cut : சென்னையில் நாளை மின்தடை: எந்தெந்த பகுதிகளில் பாதிப்பு? - முழு விவரம்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-chennai/chennai-power-cut-tomorrow-check-the-areas-affected-and-full-details-here-4kskir4</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-chennai/chennai-power-cut-tomorrow-check-the-areas-affected-and-full-details-here-4kskir4</guid>
            <pubDate>Mon, 08 Jun 2026 12:00:11 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Chennai Power Cut : தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை (09.06.2026) சென்னையில் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படவுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktjyen6x1qg5dr4k9k9ysxj2,imgname-chatgpt-image-jun-8--2026--11-53-38-am-1780899861725.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Chennai Power Cut : தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை (09.06.2026) சென்னையில் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படவுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;காலை 09:00 மணி முதல் மதியம் 02:00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். பராமரிப்புப் பணிகள் முன்னதாகவே நிறைவடைந்தால், மதியத்திற்கு முன்பே மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என்று மின் வாரியம் தெரிவித்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;கோவூர்: &lt;/strong&gt;மூகாம்பிகை நகர், குன்றத்தூர் பிரதான சாலை, ராம் நகர், குமரன் நகர், பெரியபனிச்சேரி, தண்டலம் பிரதான சாலை, பாபு கார்டன், இரண்டாம்கட்டளை, சிக்கராயபுரம் மற்றும் கொள்ளச்சேரி.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;பல்லாவரம்: &lt;/strong&gt;கணபதிபுரம், விஸ்வகர்மா நகர், நாயுடு ஷாப் சாலை, ஸ்கைபார்க் சர்ச் சாலை, டிவிஎஸ் ஃபிளாட்ஸ், அக்னி ஃபிளாட்ஸ், பஞ்சாயத்து காலனி, சுகுணா காலனி மற்றும் நடேசன் நகர்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;காரம்பாக்கம்: &lt;/strong&gt;வானகரம், பி.எச். சாலை, சிவபூதம், ராஜீவ் நகர், கந்தமாபுரம், வானகரம் சர்வீஸ் சாலை, செட்டியார் அகரம், ஐ.சி.எல்., நூம்பல், அக்னி ஃபேரி லேண்ட், மூர்த்தி நகர், லட்சுமி நகர், இந்திரா நகர், போரூர் கார்டன் (பேஸ் 1 மற்றும் 2), ராமசாமி நகர், ஆண்டாள் நகர், சேக்மணியம், மெட்ரோ நகர், மகரிஷி டீச்சர்ஸ் காலனி, சமயபுரம், காவேரி நகர், பாரதி சாலை, தர்மராஜா நகர், அருணாச்சலம் நகர், மோதி நகர் மற்றும் வெங்கடேஸ்வரா நகர்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;திருவேற்காடு: &lt;/strong&gt;வேலப்பன்சாவடி, மாதர்வேடு, பெருமாள் கோயில் தெரு, பத்மாவதி நகர் மற்றும் கூட்டுறவு நகர்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், இந்த மின்தடை அறிவிப்பைக் கருத்தில் கொண்டு தங்களின் அன்றாடப் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-chennai</category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-chennai/chennai-power-cut-tomorrow-check-the-areas-affected-and-full-details-here-4kskir4"/>
        </item>
        <item>
            <title><![CDATA[மகனுக்காக ராமதாஸ் கொடுத்த அசைவ விருந்து.! அப்பா மனக்காயத்திற்கு மருந்தான அன்புமணி கண்ணீர்.!  அய்யா குடும்பம் ஒன்று சேர இதுதான் காரணம்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/politics/anbumani-meets-ramados-emotional-reunion-grand-feast-tears-and-the-real-reason-behind-pmk-family-reunion-4r1qls9</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/politics/anbumani-meets-ramados-emotional-reunion-grand-feast-tears-and-the-real-reason-behind-pmk-family-reunion-4r1qls9</guid>
            <pubDate>Thu, 25 Jun 2026 10:51:08 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;அன்புமணியை கட்டியணைத்து உச்சிமுகர்ந்த ராமதாஸ், &amp;nbsp;உடல்நலன் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் தன் குடும்பத்துடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தாராம். பேரன் பேத்திகளுடன் விளையாடிய அவர் நீண்ட நாளுக்கு பிறகு சந்தோஷமாக இருந்தாராம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kvyk64ce6ehkke9b6gh00qtn,imgname-chatgpt-image-jun-25--2026--10-42-48-am--1--1782364443022.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;அன்புமணியை கட்டியணைத்து உச்சிமுகர்ந்த ராமதாஸ், &amp;nbsp;உடல்நலன் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் தன் குடும்பத்துடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தாராம். பேரன் பேத்திகளுடன் விளையாடிய அவர் நீண்ட நாளுக்கு பிறகு சந்தோஷமாக இருந்தாராம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழக அரசியலில் நீண்ட நாட்களாக பேசப்பட்டு வந்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையேயான கருத்து வேறுபாடு முடிவுக்கு வந்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள், அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்லாமல் PMK தொண்டர்களிடையிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. குடும்ப பாசமும், அரசியல் முதிர்ச்சியும் ஒன்றாக வெளிப்பட்ட இந்தச் சந்திப்பு, பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நீண்ட நாட்களாக நேரில் சந்திக்காமல் இருந்த தந்தை-மகன் இருவரும் தைலாபுரத்தில் சந்தித்த தருணம் மிகவும் உணர்ச்சிகரமாக அமைந்ததாக கூறப்படுகிறது. அன்புமணியை பார்த்தவுடன் டாக்டர் ராமதாஸ் எந்த தயக்கமும் இன்றி அவரை இறுக்கமாக அணைத்துக் கொண்டாராம். அந்த சில நிமிடங்களில் இருவரும் பேச முடியாமல் கண்ணீர் வடித்ததாகக் கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;அந்த காட்சியை பார்த்த குடும்ப உறுப்பினர்கள், வீட்டில் பணிபுரிபவர்கள் என அனைவரும் நெகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். அரசியல் கருத்து வேறுபாடுகளை விட குடும்ப பாசம் பெரியது என்பதை அந்த ஒரு தருணமே உணர்த்தியதாக கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கடந்த தேர்தலுக்குப் பிறகு ஏற்பட்ட மனவருத்தம் டாக்டர் ராமதாஸை பெரிதும் பாதித்ததாக நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன. அதே நேரத்தில், தந்தையை மீண்டும் சந்தித்து பழைய உறவை மீட்டெடுக்க வேண்டும் என்ற விருப்பம் அன்புமணிக்கும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;அந்த உணர்வை வெளிப்படுத்துவதற்காகவே, ராமதாஸ் &ndash; சரஸ்வதி தம்பதியரின் திருமண நாள் விழாவை சந்திப்புக்கான நாளாக அன்புமணி தேர்வு செய்ததாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஒன்றாகக் கொண்டாட முடியாத குடும்ப விழாவை, இந்த ஆண்டு மீண்டும் மகிழ்ச்சியாக மாற்ற வேண்டும் என்ற எண்ணமே இந்த முடிவுக்குக் காரணமாக இருந்ததாக சொல்லப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தச் சந்திப்பின் மற்றொரு நெகிழ்ச்சியான தருணம், புதிதாக பிறந்த பேரக்குழந்தையை டாக்டர் ராமதாஸ் முதல் முறையாக பார்த்ததுதான். அன்புமணியின் இரண்டாவது மகள் சங்கமித்ராவுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்திருந்தது. அந்தச் சிறிய குழந்தையை கையில் ஏந்தியபோது, ராமதாஸ் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;அன்புமணியின் மனைவி சௌம்யா மற்றும் குடும்பத்தினர் அனைவரும் ராமதாஸ் &ndash; சரஸ்வதி தம்பதியரிடம் ஆசீர்வாதம் பெற்றது, குடும்ப உறவுகள் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியிருப்பதை வெளிப்படுத்தியது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பல மாதங்களுக்குப் பிறகு குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்திய தருணமும் இந்தச் சந்திப்பின் சிறப்பாக அமைந்தது. சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி உள்ளிட்ட பல்வேறு அசைவ உணவுகள் தயாரிக்கப்பட்டு விருந்தளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;ஒரே மேசையில் அமர்ந்து சிரித்துப் பேசி உணவருந்திய குடும்பத்தினரை பார்த்தவர்கள், &quot;இனி பழைய பிளவு முழுமையாக மறைந்துவிட்டது&quot; என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தச் சந்திப்பு குடும்ப பாசத்துடன் மட்டுமல்லாமல் அரசியல் ஆலோசனைகளுக்கும் முக்கியத்துவம் பெற்றதாக கூறப்படுகிறது. சமீபத்திய தேர்தல் முடிவுகள், கட்சியின் எதிர்கால வளர்ச்சி, கிராமப்புறங்களில் கட்சியை வலுப்படுத்தும் திட்டங்கள், விவசாயிகள் பிரச்சினைகள், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நீண்ட நேரம் இருவரும் விவாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.&lt;/p&gt;&lt;p&gt;முன்னதாக தாம் கூறிய &quot;கிராமங்களுக்குச் செல்&quot; என்ற அறிவுரையை அன்புமணி செயல்படுத்திய விதம் குறித்து ராமதாஸ் பாராட்டியதாகவும், எதிர்காலத்தில் கட்சியை முன்னெடுத்து செல்லும் திறன் அன்புமணிக்கு இருப்பதாகவும் அவர் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உரையாடலின் போது அன்புமணி, &quot;இந்தக் கட்சி இன்று இந்த நிலைக்கு வந்ததற்கு முழு காரணமும் நீங்கள் தான். எங்களை விமர்சிக்கவும், வழிநடத்தவும் உங்களுக்கு முழு உரிமை இருக்கிறது&quot; என்று தந்தையிடம் உணர்ச்சிபூர்வமாக கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;அந்த வார்த்தைகள் டாக்டர் ராமதாஸை மேலும் நெகிழ்ச்சியடையச் செய்ததாகவும், குடும்ப பாசம் அரசியலை விட மேலானது என்பதை மீண்டும் இருவரும் உணர்ந்ததாகவும் கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தச் சந்திப்பு ஒரு குடும்ப மீளிணைவு மட்டுமல்ல, PMK அரசியலிலும் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. நீண்ட நாட்களாக காத்திருந்த தொண்டர்களுக்கு இந்த இணைவு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. தந்தை-மகன் இருவரும் மீண்டும் ஒரே பாதையில் பயணித்தால், கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் மேலும் வலுப்பெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குடும்ப பாசம் வென்ற இந்த தருணம், தமிழக அரசியலில் நீண்ட காலம் நினைவில் நிற்கும் உணர்ச்சிகரமான நிகழ்வாக அமைந்துள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-chennai</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/politics/anbumani-meets-ramados-emotional-reunion-grand-feast-tears-and-the-real-reason-behind-pmk-family-reunion-4r1qls9"/>
        </item>
        <item>
            <title><![CDATA[கையை வச்சுக்கிட்டு சும்மா இல்லாத திமுக கவுன்சிலர்! தொடையில் தட்டியதால் அலறிய விமான பெண்! இறுதியில் நடந்தது என்ன?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-chennai/dmk-councilor-arrested-for-assaulting-air-hostess-5qcvdws</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-chennai/dmk-councilor-arrested-for-assaulting-air-hostess-5qcvdws</guid>
            <pubDate>Tue, 03 Mar 2026 13:05:01 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;DMK Councillor: ஊர் பெயரை சொல்லி கிண்டல் செய்து பின் தொடையில் கை வைத்து தட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பெண் அலறி கூச்சலிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kjs97hapnzkgcz0xz5gk1e6e,imgname-air-hostess-1772522554710.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;DMK Councillor: ஊர் பெயரை சொல்லி கிண்டல் செய்து பின் தொடையில் கை வைத்து தட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பெண் அலறி கூச்சலிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;திருவள்ளூர் நகராட்சியில் 6-வது வார்டு திமுக கவுன்சிலராக இருந்து வருபவர் பிரபாகரன். இவர் கடந்த 25-ம் தேதி தனது நண்பர் தியாகுவுடன் சென்னை விமான நிலையத்தில் இருந்து இண்டிகோ விமானத்தில் டெல்லி சென்றார். அப்போது விமானத்தில் பணியில் இருந்த 25 வயது பணிப்பெண் ஸ்நாக்ஸ்களை வழங்கி இருக்கிறார். அப்போது மதுபோதையில் இருந்த கவுன்சிலர் பிரபாகரன் மற்றும் அவரது நண்பர் தியாகு ஒருமையில் அழைத்து அவரது ஊர் பெயரை கேட்டதாகவும் கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதுமட்டுமல்லாமல் ஊர் பெயரை சொல்லி கிண்டல் செய்துள்ளனர். பின்னர் அந்த பெண்ணின் பின் தொடையில் கை வைத்து தட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பெண் அலறி கூச்சலிட்டதை அடுத்து சக பயணிகள் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட விமான பணிப்பெண் மீனம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதையடுத்து 2 பேரையும் விசாரணைக்கு ஆஜராகும் படி போலீசார் உத்தரவிட்டனர். ஆனால் ஆஜராகவில்லை. இந்நிலையில் திமுக கவுன்சிலர் பிரபாகரன் மற்றும் தியாகு நேற்று மாலை டெல்லியில் இருந்து இண்டிகோ விமானத்தில் சென்னை திரும்பிய போது விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். இந்த இருவர் மீதும் போலீசார் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிரபாகரன் திருவள்ளூர் 6வது வார்டு திமுக கவுன்சிலர் என்பதும் தியாகு என்பவர் வழக்கறிஞர் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதும் தெரிய வந்தது. இந்த இரண்டு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். விமான பெண்ணிடம் ஆளும் திமுக பிரமுகர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-chennai</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-chennai/dmk-councilor-arrested-for-assaulting-air-hostess-5qcvdws"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Chennai Power Cut : சென்னையில் நாளை முக்கிய இடங்களில் மின்தடை! லிஸ்டில் உங்க ஏரியா இருக்கா பாருங்க!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-chennai/power-shutdown-areas-in-chennai-for-tomorrow-june-11-2026-8bzaqs5</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-chennai/power-shutdown-areas-in-chennai-for-tomorrow-june-11-2026-8bzaqs5</guid>
            <pubDate>Wed, 10 Jun 2026 06:28:10 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Power Cut: தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி நாளைய தினம் எந்தெந்த பகுதிகளில் மின்தடை.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01krz8ed4jfyym4kp1db16by5m,imgname-power-cut-1-1779165508754.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Power Cut: தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி நாளைய தினம் எந்தெந்த பகுதிகளில் மின்தடை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழகத்தில் கோடை வெயில் முடிந்த பிறகும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் வீட்டில் எந்நேரமும் ஃபேன், ஏசி ஓடிக்கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக மின்தேவையும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் பொறுப்பேற்றதில் இருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இரவு நேரத்தில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதனிடையே தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி நாளை தினம் தலைநகர் சென்னையில் முக்கிய இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;சோத்துபெரும்பேடு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;கிருதாலாபுரம், பூதூர், கும்மனூர், ஆங்காடு, அருமந்தை, வீச்சூர், வெள்ளிவயல், கண்டிகை, மாறம்பேடு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;திருவேற்காடு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;காவேரி நகர், PH மெயின் ரோடு, ஜமால்ஸ் அபார்ட்மெண்ட் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பம்மல், பாலாஜி நகர் 3 முதல் 18வது தெரு, சுப்பிரமணிய பாரதியார் தெரு 1 மற்றும் 2வது தெரு, ஏ.என்.பாண்டியன் தெரு, திருவள்ளூர் தெரு, குமரன் தெரு, திருபுரசுந்தரி தெரு, பிருந்தாவனம் தெரு, திருமுருகன் தெரு, ராகவேந்திரா தெரு, அண்ணா தெரு, பெரியார் தெரு, பாபு ரெட்டி தெரு, ராதாகிருஷ்ணன் தெரு, ராதாகிருஷ்ணன் தெரு, ராதாகிருஷ்ணன் தெரு, பி. தொல்காப்பியர் தெரு, அண்ணாசாலை, மார்க்கெட் ரோடு, ராஜாங்கம் தெரு, என்எஸ்கே தெரு, கண்ணதாசன் தெரு, ஆறுமுகம் தெரு, அரவிந்தன் தெரு, சூரியம்மன் கோவில் தெரு, ஈஸ்வரன் நகர் 1 முதல் 10வது தெருக்கள், ஐயப்ப நகர் 1 முதல் 5வது தெருக்கள், பாசி தெரு, சுவாமி நாதன் நகர் 1 முதல் 5வது தெரு, மோசஸ் தெரு, சுவாமி நாதன் நகர் 1 முதல் 5வது தெரு வரை. பொழிச்சலூர் மெயின் ரோடு, அகத்தீஸ்வரர் நகர், ராமநாதன் நகர், பஜனைகோயில் தெரு, சித்திரை நகர், கக்கஞ்சி தெரு, பொழிச்சலூர், பிரேம் நகர், பாரதி நகர், பொன்னுரங்கம் நகர், ஈசிடிவி நகர், கல்லியம்மன் நகர், திருமூலர் தெரு, ராதாகிருஷ்ணன் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-chennai</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-chennai/power-shutdown-areas-in-chennai-for-tomorrow-june-11-2026-8bzaqs5"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Vandalur Zoo: எதிர்பாராத ட்விஸ்ட்! கண்டிப்பாக இதை செய்தால் தான் வண்டலூர் பூங்காவிற்கு இலவச அனுமதி!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-chennai/online-booking-is-mandatory-to-obtain-free-entry-tickets-for-vandalur-zoo-8clyud0</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-chennai/online-booking-is-mandatory-to-obtain-free-entry-tickets-for-vandalur-zoo-8clyud0</guid>
            <pubDate>Fri, 19 Jun 2026 17:34:39 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Vandalur Zoo Free Entry: முதல்வரும், தவெக தலைவருமான விஜய்யின் பிறந்தநாளையொட்டி சென்னை வண்டலூர் பூங்காவில் 2 நாட்கள் பொதுமக்கள் இலவசமாக செல்லலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kvfv08sasa53bnv0rba0mt15,imgname-vandalur-zoo-2-1781869323050.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Vandalur Zoo Free Entry: முதல்வரும், தவெக தலைவருமான விஜய்யின் பிறந்தநாளையொட்டி சென்னை வண்டலூர் பூங்காவில் 2 நாட்கள் பொதுமக்கள் இலவசமாக செல்லலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு, ஜூன் 21 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 22 (திங்கட்கிழமை) ஆகிய நாட்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு பொதுமக்களுக்கு இலவச நுழைவு வழங்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இலவச நுழைவுச் சீட்டுகளைப் பெறுவதற்கு, உயிரியல் பூங்காவின் இணையதளம் மூலம் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வது கட்டாயமாகும். எனவே, பார்வையாளர்கள் தங்களது இலவச நுழைவுச் சீட்டுகளை tickets.aazp.in என்ற இணையதளத்தின் மூலம் முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முன்பதிவு செய்யப்பட்ட ஆன்லைன் டிக்கெட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மேற்கண்ட இரண்டு நாட்களிலும் உயிரியல் பூங்கா நுழைவுச் சீட்டு கவுண்டர்களில் நேரடி (On-the-spot) டிக்கெட் முன்பதிவு வசதி இருக்காது. பார்வையாளர்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காகவும், இலவச நுழைவு இரண்டு தனித்தனி நேரப் பிரிவுகளாக (காலை மற்றும் பிற்பகல்) ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் காலை நேரப் பிரிவிற்கு 10,000 ஆன்லைன் டிக்கெட்டுகளும், பிற்பகல் நேரப் பிரிவிற்கு 10,000 ஆன்லைன் டிக்கெட்டுகளும் வழங்கப்படும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;TN Power Cut: சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை.. தமிழகம் முழுவதும் மின்தடை.. லிஸ்ட்டில் உங்க ஊர் இருக்கா?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேற்கண்ட இரு நாட்களிலும் உயிரியல் பூங்கா காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை திறந்திருக்கும். மாலை 4.30 மணி வரை மட்டுமே பார்வையாளர்கள் பூங்காவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். நுழைவுக் கட்டணத்தைத் தவிர, பிற சேவைகளுக்கான கட்டணங்கள் நடைமுறையில் உள்ள கட்டண அட்டவணையின்படி வசூலிக்கப்படும். இந்த இரண்டு நாட்களிலும் உயிரியல் பூங்காவைச் சுற்றிப் பார்வையிடுவதற்கான மின்கல (Battery-operated) வாகன சேவையும், சிங்கம் மற்றும் மான் சஃபாரி (Lion and Deer Safari) சேவையும் இயக்கப்படாது. மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறப்புத் தேவையுடைய நபர்களுக்காக மின்கல வாகன வசதி இந்த இரண்டு நாட்களிலும் இலவசமாக வழங்கப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், பார்வையாளர்கள் சிரமமின்றி சுற்றிப் பார்க்க போதிய இடவசதி ஏற்படுத்தவும், அத்தியாவசிய வசதிகள் மற்றும் பிற சேவைகளை திறம்பட நிர்வகிக்கவும் நுழைவு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் பூங்கா விலங்குகளின் நலன், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் ஒவ்வொரு பார்வையாளருக்கும் பாதுகாப்பான, வசதியான மற்றும் பயனுள்ள அனுபவத்தை வழங்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் உயிரியல் பூங்காக்களைப் பார்வையிட்டு, வனவிலங்குகளை நேரடியாகக் கண்டு அனுபவித்து, உயிரினப் பன்முகத்தன்மை, வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை வளர்த்துக் கொள்ள ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்த சிறப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களிடையே வனவிலங்குகள் குறித்த விழிப்புணர்வையும், இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது என அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-chennai</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-chennai/online-booking-is-mandatory-to-obtain-free-entry-tickets-for-vandalur-zoo-8clyud0"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Chennai 2.0 : நியூயார்க் நகருக்கு இணையாக மாறப்போகும் சென்னை! - CM விஜய்யின் மாஸ்டர் பிளான்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/can-chennai-become-the-next-new-york-cm-vijays-master-plan-bvqh6ow</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/can-chennai-become-the-next-new-york-cm-vijays-master-plan-bvqh6ow</guid>
            <pubDate>Wed, 17 Jun 2026 14:31:03 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Chennai 2.0 : சென்னையை உலகத்தரம் வாய்ந்த நகரமாக மாற்றும் நோக்கில், முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். அடுத்த 20 ஆண்டுகால வளர்ச்சிக்கான 3வது மாஸ்டர் பிளானை சர்வதேச தரத்தில் தயாரிக்க அவர் அதிகாரிகளுக்குப் பணித்துள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kvacgmfsgxv9gwmgm1z9x643,imgname-chatgpt-image-jun-17--2026--02-20-35-pm-1781686358521.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Chennai 2.0 : சென்னையை உலகத்தரம் வாய்ந்த நகரமாக மாற்றும் நோக்கில், முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். அடுத்த 20 ஆண்டுகால வளர்ச்சிக்கான 3வது மாஸ்டர் பிளானை சர்வதேச தரத்தில் தயாரிக்க அவர் அதிகாரிகளுக்குப் பணித்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;1. செங்குத்து வளர்ச்சி (Vertical Growth): &lt;/strong&gt;இதுவரை கிடைமட்டமாக (Horizontal) விரிவடைந்து வந்த சென்னை, இனி வானத்தை நோக்கி உயரப் போகிறது! மெட்ரோ வழித்தடங்கள் மற்றும் வணிக மையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில், 'தரை தள விகிதத்தை' (FSI) உயர்த்தி உயரமான கட்டிடங்களை அனுமதிப்பதன் மூலம், இட நெருக்கடியைக் குறைக்கவும், நிலத்தை முழுமையாகப் பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;2. கலவை பயன்பாட்டு மேம்பாடு (Mixed-Use Development): &lt;/strong&gt;நீங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே வேலை, கல்வி, பொழுதுபோக்கு மற்றும் அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் கிடைக்கும் வகையில் இந்த நகர அமைப்பு வடிவமைக்கப்பட உள்ளது. இதனால் மக்கள் நீண்ட தூரம் பயணம் செய்வது தவிர்க்கப்பட்டு, நடைப்பயணம் செய்யக்கூடிய (Walkable Community) ஆரோக்கியமான சமூகமாக சென்னை உருவெடுக்கும். ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வெற்றி சூத்திரமே இதுதான்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;3. நீல-பச்சை உள்கட்டமைப்பு (Blue-Green Infrastructure): &lt;/strong&gt;காலநிலை மாற்றத்தைச் சமாளிக்க, நீர்நிலைகளையும் (நீலம்) பசுமைப் பூங்காக்களையும் (பச்சை) நகர்ப்புற வளர்ச்சியோடு இணைப்பது இந்தத் திட்டத்தின் முக்கியக் கொள்கை. இது வெள்ள அபாயத்தைக் குறைப்பதோடு, சென்னையின் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;4. இன்சிட்டு மறுவளர்ச்சி (In-situ Redevelopment):&lt;/strong&gt; குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்களை அங்கிருந்து அகற்றாமல், அவர்கள் இருக்கும் இடத்திலேயே அவர்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய வீட்டு வசதி செய்து தருவது இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும். இதனால் அவர்களின் சமூக உறவுகள் சிதையாமல் மேம்படுத்தப்படும்.&lt;/p&gt;&lt;p&gt;இதையும் படிங்க : CM Vijay Divorce Case : முதல்வர் விஜய் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி! விவாகரத்து வழக்கில் நடந்தது என்ன?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முதலமைச்சர் விஜய், இதற்காக முன்னணி கல்வி நிறுவனங்களுடனும், வல்லுநர்களுடனும் ஆலோசனை நடத்தி, பணியை விரைவுபடுத்த உத்தரவிட்டுள்ளார். பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்த பின்னரே இந்தத் திட்டம் இறுதி வடிவம் பெறும்.&lt;/p&gt;&lt;p&gt;2027-ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரப்போகும் இந்தத் திட்டம், சென்னையை வெறும் கான்கிரீட் காடாக மட்டுமல்லாமல், நவீனமாகவும், வசதியாகவும், அதே சமயம் இயற்கையோடு இணைந்த ஒரு நகரமாகவும் மாற்றும் என்பது நிச்சயம். ஒரு மாற்றத்தை நோக்கி சென்னை தயாராகிவிட்டது!&lt;/p&gt;&lt;p&gt;CM விஜய்யுடன் செஸ் விளையாடிய பிரக்ஞானந்தா : மாஸ் கிளப்பிய தளபதி! - வீடியோ உள்ளே&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-chennai</category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/can-chennai-become-the-next-new-york-cm-vijays-master-plan-bvqh6ow"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Deep Sleep Mode-க்கு சென்ற CM Vijay – உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/politics/cm-vijay-in-deep-sleep-mode-udhayanidhi-stalin-launches-sharp-criticism-articleshow-c7cao1y</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/politics/cm-vijay-in-deep-sleep-mode-udhayanidhi-stalin-launches-sharp-criticism-articleshow-c7cao1y</guid>
            <pubDate>Fri, 29 May 2026 17:19:21 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது X வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தேர்தலுக்கு முன்னர் சட்டம் ஒழுங்கு பற்றி பக்கம் பக்கமாக பஞ்ச் டயலாக் பேசிய விஜய், முதல்வர் ஆனதும் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுவிட்டார் என கடுமையாக விமர்சித்துள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kr91gkwfv9y3m7y51xgsdasv,imgname-udhayanidhi-1778420043663.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது X வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தேர்தலுக்கு முன்னர் சட்டம் ஒழுங்கு பற்றி பக்கம் பக்கமாக பஞ்ச் டயலாக் பேசிய விஜய், முதல்வர் ஆனதும் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுவிட்டார் என கடுமையாக விமர்சித்துள்ளார்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;உதயநிதியின் X தள பதிவு :&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;அவருடைய அந்த X தள பதிவில், &ldquo;கடலூரில் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியை எற்படுத்துகிறது. இப்படி தொடர்ச்சியா நடக்குற குற்றச்சம்பவங்களை பார்க்கும் போது, தமிழ்நாட்டுல சட்டம் ஒழுங்குன்ற ஒன்னு இருக்கா இல்லையான்னு மக்களுக்கு சந்தேகம் வருது. இந்த Sofa Model அரசு அமைஞ்சது முதல், கொலை - கொள்ளை - பாலியல் வன்கொடுமைன்னு இப்படி குற்றங்கள் நடக்காத நாளே இல்ல. தேர்தல் பிரச்சாரத்துல பக்கம் பக்கமா பேப்பர் வச்சு, சட்டம் ஒழுங்கு பத்தி வாய்கிழிய Punch டயலாக் பேசினவர், முதலமைச்சர் ஆனதும் Deep Sleep Mode-க்கு போய்ட்டாரு.&rdquo; என்று குறிப்பிட்டுள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;மேலும், &ldquo;பெண்கள் பாதுகாப்புக்காக நீங்க அறிவிச்ச சிங்கப்பெண்கள் படையோட தொடக்க விழாவை, கடைசி நேரத்துல ரத்து செஞ்சு இருக்கீங்க. நிகழ்ச்சியை தள்ளி வைச்சு இருக்கீங்களா, இல்ல அந்த முயற்சியையே தள்ளிவச்சுட்டீங்களானு மக்கள் கேட்கிறாங்க. சிங்கப்பெண் படைனு பேரையும், Uniform-ஐயும் மாத்துறது தான் மாற்றமா? இல்ல, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் அவகாசம் வேணுமா? நீங்க டைம் எடுத்து கத்துக்கிட்டு வந்து சட்டம் ஒழுங்கை காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir.&rdquo; என முதல்வர் விஜய்யை விமர்சித்து, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-chennai</category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/politics/cm-vijay-in-deep-sleep-mode-udhayanidhi-stalin-launches-sharp-criticism-articleshow-c7cao1y"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Chennai Power Cut: மே 24ம் தேதி.. ஞாயிற்றுக்கிழமை அதுவுமா சென்னையில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-chennai/power-shutdown-areas-in-chennai-for-tomorrow-may-24th-2026-full-list-g2zxwz3</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-chennai/power-shutdown-areas-in-chennai-for-tomorrow-may-24th-2026-full-list-g2zxwz3</guid>
            <pubDate>Sat, 23 May 2026 07:00:29 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Chennai Power Cut: தமிழக முழுவதும் மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் நாளை ஞாயிற்று கிழமை அதுவுமா எந்தெந்த பகுதிகளில் மின்தடை என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jyqej3sz9cwca3avgw61kjtw,imgname-power-cut-1-1750986198847.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Chennai Power Cut: தமிழக முழுவதும் மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் நாளை ஞாயிற்று கிழமை அதுவுமா எந்தெந்த பகுதிகளில் மின்தடை என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழகத்தில் தற்போது அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் 107 டிகிரி அளவுக்கு வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெயிலுக்கு பயந்து வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். அதுமட்டுமல்ல புழுக்கம் அதிகமாக இருப்பதால் வீட்டில் எந்நேரமும் ஃபேன், ஏசி உள்ளிட்டவைகள் ஓடிக்கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக மின்தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில் தலைநகர் சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். மின் தடை செய்யப்படும் நேரத்தில் சிறு சிறு பழுதுகள் சரி செய்வது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின் வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் தொடர்பான லிஸ்ட் வெளியிடப்படும். அதன்படி நாளை தினம் (24-05-2026) அதாவது ஞாயிற்றுக்கிழமை அதுவுமாக சென்னையில் முக்கிய இடங்களில் மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிட்கோ தொழிற்பேட்டை, செக்டர் 3-இல் உள்ள 1வது குறுக்கு பிரதான சாலை, 1 மற்றும் 2வது லேன், 2 மற்றும் 3வது தெரு, பஜனை கோவில் தெரு, நல்ல கிணறு தெரு, கன்னியம்மன் கோவில் தெரு, குள்ளன் தெரு, பாடசாலை தெரு, கோரமண்டல் டவுன், சி.டி.எச். சாலை, மேனாம்பேடு சாலை, சிட்கோ தொழிற்பேட்டை 10 மற்றும் 11வது தெரு, சிட்கோ தொழிற்பேட்டை வடக்கு கட்டம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;2வது பிரதான சாலை, ரெட்டிப்பாளையம் பிரதான சாலை, முகப்பேர் பிரதான சாலை, எம்.ஜி.ஆர் சாலையில் பின்புறம் உள்ள C19, C18, C15 மற்றும் C16 பகுதிகள், அம்பத்தூர் தொழிற்பேட்டை (தெற்கு பகுதி) உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-chennai</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-chennai/power-shutdown-areas-in-chennai-for-tomorrow-may-24th-2026-full-list-g2zxwz3"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Business Training: நீங்களும் தொழிலதிபராகலாம்! லட்சம் லட்சமாய் சம்பாதிக்க சூப்பர் சான்ஸ்! அரசின் சூப்பர் அறிவிப்பு!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/tn-govt-super-announcement-your-ultimate-golden-ticket-to-become-an-entrepreneur-gedht85</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/tn-govt-super-announcement-your-ultimate-golden-ticket-to-become-an-entrepreneur-gedht85</guid>
            <pubDate>Tue, 02 Jun 2026 08:55:53 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Business: தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சொந்த தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்காக 'நீங்களும் ஒரு தொழிலதிபராகலாம்' என்ற 5 நாள் சிறப்பு பயிற்சியை சென்னையில் வழங்குகிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kt34zj2amqc3y8pmyggv4cas,imgname-business-training-1-1780369836106.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Business: தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சொந்த தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்காக 'நீங்களும் ஒரு தொழிலதிபராகலாம்' என்ற 5 நாள் சிறப்பு பயிற்சியை சென்னையில் வழங்குகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருந்தாலும், அனுபவம் இல்லாமல் எப்படி தொடங்குவது மற்றும் நிதி பிரச்சனைகளை எவ்வாறு சமாளிப்பது குழப்பம் காரணமாக பலர் அந்த முயற்சியை கைவிட்டு விடுகின்றனர். இந்நிலையில் இளைஞர்கள் மற்றும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வகையில் சொந்த தொழில் தொடங்க ஏதுவாக மீடியா ட்ரோன் பயிற்சி, பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி, வீட்டு உபயோக பொருட்கள் பயிற்சி, யூடியூப் சேனல் தொடங்க பயிற்சி பல்வேறு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் நீங்களும் ஒரு தொழிலதிபராக சூப்பர் வாய்ப்பை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதாவது தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், &ldquo;நீங்களும் ஒரு தொழிலதிபராகலாம்&rdquo; - தொழில் முனைவோர் மேம்பாட்டு குறித்த பயிற்சி வரும் 15.06.2026 முதல் 19.06.2026 தேதி வரை (5 நாட்கள்) காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இப்பயிற்சியில் தொழில்முனைவோரின் அறிமுகம் மற்றும் அடிப்படைகள், வணிக நெறிமுறைகள் &amp;amp; அடிப்படைகள், சந்தைப்படுத்துதல் &amp;amp; பிராண்டிங், மின்னணு முறையில் சந்தைப்படுத்துதல், சந்தை ஆய்வு, திட்ட அறிக்கை தயாரித்தல், நிதி மேலாண்மை, அடிப்படை கணக்குகள் -ERP Tally, ஜிஎஸ்டி, இ-வே பில், சிறு வணிகம் தொடர்பான சட்டங்கள், மாநில தொழில் கொள்கை, MSME வகைப்பாடு பதிவுகளைப் பற்றி விளக்கங்கள், ஆகியவை பற்றி விளக்கப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10வது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் பங்குபெறும் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள். முன்பதிவு அவசியம்: அரசு சான்றிதழ் வழங்கப்படும் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை &ndash; 600 032. Ph. No: 8668102600 / 7806918609 என தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-chennai</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/tn-govt-super-announcement-your-ultimate-golden-ticket-to-become-an-entrepreneur-gedht85"/>
        </item>
        <item>
            <title><![CDATA[காலையிலேயே தங்கம் கொடுத்த இன்ப அதிர்ச்சி! ரூ.2640 குறைந்தும்.. வாங்க தயங்கும் பொதுமக்கள்! என்ன காரணம் தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/gold-rate-today-march-21-in-chennai-and-tamilnadu-ia0m4gr</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/gold-rate-today-march-21-in-chennai-and-tamilnadu-ia0m4gr</guid>
            <pubDate>Sat, 21 Mar 2026 10:37:51 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;சர்வதேச பதற்றங்களால் உயர்ந்த தங்கம் விலை, தற்போது சவரனுக்கு ரூ.2,640 வரை குறைந்துள்ள போதிலும், தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக மக்கள் நகை வாங்கத் தயங்குகின்றனர்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kd4pyc8xd84sh0d0t6n5119v,imgname-mixcollage-23-dec-2025-09-49-am-4408-1766463582492.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சர்வதேச பதற்றங்களால் உயர்ந்த தங்கம் விலை, தற்போது சவரனுக்கு ரூ.2,640 வரை குறைந்துள்ள போதிலும், தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக மக்கள் நகை வாங்கத் தயங்குகின்றனர்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தங்கம் வெள்ளி இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சத்தை எட்டி நகைப்பிரியர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஈரான்- இஸ்ரேல், அமெரிக்கா இடையிலான போர் காரணமாக கிடு கிடுவென விலை உயர்ந்து வந்தது. போர் பதற்றம் காரணமாக விலை இன்னும் உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த 13ம் தேதி முதல் தங்கம் விலை அதிரடியாக குறைந்து வருகிறது. இந்நிலையில் இன்றும் தங்கம் சவரனுக்கு ரூ.2640 குறைந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நேற்று நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,950க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,11,600க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில் இன்றைய (மார்ச் 21) நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,640 குறைந்து ரூ.1,08,960ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.330 குறைந்து ரூ.13,620ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 14,858ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ. 118,864ஆக விற்பனையாகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.250க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.250,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆனால் தங்கம், வெள்ளி விலை குறைவை நகை பிரியர்கள் கொண்டாட முடியவில்லை. அதற்கான காரணம் என்னவென்றால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50,000க்கு மேல் ரொக்கப் பணத்தை எடுத்துச் செல்ல முடியாது. இதனால் திருமணங்கள் மற்றும் விசேஷங்களுக்கு நகை வாங்க வரும் வாடிக்கையாளர்கள் பெரும் தொகையை எடுத்துச் செல்ல அஞ்சி வருகின்றனர். இத்தகைய கெடுபிடிகளால் நகை கடைகளில் விற்பனை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-chennai</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/gold-rate-today-march-21-in-chennai-and-tamilnadu-ia0m4gr"/>
        </item>
        <item>
            <title><![CDATA[TVK Supporter Arrested: சென்னையில் அதிர்ச்சி! வீட்டில் கஞ்சா செடி வளர்த்த தவெக ஆதரவாளரை தட்டி தூக்கிய போலீஸ்! சிக்கியது எப்படி?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-chennai/chennai-tvk-supporter-arrested-for-growing-ganja-at-home-isk123p</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-chennai/chennai-tvk-supporter-arrested-for-growing-ganja-at-home-isk123p</guid>
            <pubDate>Sat, 16 May 2026 11:36:01 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;TVK Supporter Arrested: சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் தவெக ஆதரவாளரான எட்வின் ராஜ் பிரண்டோ (35) என்பவர் வீட்டின் மாடியில் வைத்து கஞ்சா செடியை வளர்த்து வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01krqnpe9h3tmr12hv8y9mnkn3,imgname-chennai-crime-1778910968113.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;TVK Supporter Arrested: சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் தவெக ஆதரவாளரான எட்வின் ராஜ் பிரண்டோ (35) என்பவர் வீட்டின் மாடியில் வைத்து கஞ்சா செடியை வளர்த்து வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றதை அடுத்து முதல்வராக விஜய் கடந்த 10ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல் மாநிலம் முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக கல்வி நிறுவனங்கள், விடுதிகள் அருகே போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க தீவிர சோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வந்த தவெக ஆதரவாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் தவெக ஆதரவாளரான எட்வின் ராஜ் பிரண்டோ (35) என்பவர் வீட்டின் மாடியில் வைத்து கஞ்சா செடியை வளர்த்து வந்திருக்கிறார். அக்கம் பக்கத்தினர் கண்டுபிடிக்காமல் இருப்பதற்காக துணியை கட்டி மறைத்திருக்கிறார். ஆனால், வாசனை விஷயத்தில் அவர் கோட்டை விட்டிருக்கிறார். கஞ்சா செடியில் ஒரு விதமான வாசனை அவரை காட்டி கொடுத்துள்ளது. இதுதொடர்பாக அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அப்போது வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து செடியை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். தவெக ஆதரவாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதேபோல் சென்னையை அடுத்த ஆவடியின் அயப்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்படிருப்பதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வீட்டில் நுழைந்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் இருந்த 100 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் விசாரணையில்: ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த 3 பேரை கைது செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-chennai</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-chennai/chennai-tvk-supporter-arrested-for-growing-ganja-at-home-isk123p"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Chennai : சென்னைையே மாறப்போகுது.! பேருந்து – ரயில் கனெக்டிவிட்டி ரெடி.. இதை கவனிச்சீங்களா!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-chennai/kilambakkam-skywalk-bus-rail-connection-may-opening-ncfszxk</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-chennai/kilambakkam-skywalk-bus-rail-connection-may-opening-ncfszxk</guid>
            <pubDate>Wed, 29 Apr 2026 10:46:57 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முதல் ரயில் நிலையம் வரை பாதுகாப்பாக செல்ல ஒரு ஸ்கைவாக் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் இறுதிப் பகுதி நிறுவலுக்காக போக்குவரத்து காவல்துறை அனுமதிக்கு காத்திருக்கிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kqbt9zq68h3h7zb0qfnvpra4,imgname-tamil-news---2026-04-29t103847.653-1777439407846.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முதல் ரயில் நிலையம் வரை பாதுகாப்பாக செல்ல ஒரு ஸ்கைவாக் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் இறுதிப் பகுதி நிறுவலுக்காக போக்குவரத்து காவல்துறை அனுமதிக்கு காத்திருக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சென்னையின் முக்கிய நெரிசல் சாலைகளில் ஒன்றான ஜிஎஸ்டி சாலையில், கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் மற்றும் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் இடையே அமைக்கப்படும் ஸ்கைவாக் மே மாதத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். பல முறை காலக்கெடு தள்ளிப்போன இந்த திட்டம், தினமும் வேகமாகச் செல்லும் வாகனங்களைக் கடந்து பயணிகள் சாலையைக் கடந்து செல்ல வேண்டிய அவல நிலையை உருவாக்கியது.&lt;/p&gt;&lt;p&gt;275 மீட்டர் நீளமுள்ள இந்த ஸ்கைவாக் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இருப்பினும், சாலையை கடக்கும் இரண்டாவது பகுதியை நிறுத்த போக்குவரத்து போலீசாரின் அனுமதி இன்னும் கிடைக்காமல் உள்ளது. அதிகாரிகள் கூறியது, இந்த பகுதியை ஒரே ஒரு நாள் போதுமானதாக இருந்தாலும், அன்றைய தினம் வாகனங்கள் மாற்றுப்பாதைக்கு திருப்பப்பட வேண்டும் என்பதால், மே 4-ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;முன்னதாக இந்த திட்டத்தை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும் முன் திறக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ஏற்கனவே அமைக்கப்பட்ட பகுதியின் நிலைத்தன்மையில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து ஐஐடி மெட்ராஸ் முன்வைத்த கருத்துகளால் கூடுதல் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது இரண்டாவது பகுதி முழுமையாக தயார் நிலையில் உள்ளது. அனுமதி கிடைத்தது, இரவு நேரத்தில் அதை நிறுவி 12 மணி நேர கண்காணிப்பிற்கு பிறகு பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;2023 டிசம்பரில் திறக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வந்தபின்னரும், பல்வேறு போக்குவரத்து வசதிகளுடன் இணைப்பு குறைவாக இருந்தது. இதனால் தெற்கு மாவட்டங்களுக்கு பயணம் செய்பவர்கள் சிரமங்களை எதிர்கொண்டனர். இதை சரிசெய்ய மாநில அரசு மற்றும் தெற்கு ரயில்வே இணைந்து கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் ரயில் நிலையத்தையும், அதை இணைக்கும் ஸ்கைவாக் திட்டத்தையும் முன்னெடுத்தன.&lt;/p&gt;&lt;p&gt;இந்த ஸ்கைவாக் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்த பிறகு, பயணிகள் பேருந்து நிலையத்திலிருந்து ரயில் நிலையம் வரை பாதுகாப்பாக நடந்து செல்ல முடியும். எனினும், ரயில் தடத்தை கடக்கும் மேம்பாலம் மற்றும் மேடைகளுக்கான படிக்கட்டுப் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. அதனால், நேரடி ரயில் சேவைகள் துவங்குவதற்கு சிறிது காலம் ஆகும் என ரயில்வே அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-chennai</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-chennai/kilambakkam-skywalk-bus-rail-connection-may-opening-ncfszxk"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Chennai New Metro : சென்னை மக்களுக்கு குட் நியூஸ்! இனி 90 நிமிஷ பயணம் வெறும் 30 நிமிஷம்தான்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/chennai-new-metro-to-cut-travel-time-from-90-minutes-to-30-minutes-phqau25</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/chennai-new-metro-to-cut-travel-time-from-90-minutes-to-30-minutes-phqau25</guid>
            <pubDate>Mon, 22 Jun 2026 13:33:14 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Chennai New Metro :சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளில் ஒரு முக்கிய மைல்கல்லாக,வடபழனி முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரையிலான 14.6 கிமீ நீளமுள்ள புதிய மெட்ரோ வழித்தடத்தை பிரதமர் மோடி ஜூலை 2 அல்லது 3ஆம் வாரத்தில் தொடங்கி வைக்கிறார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kvq52daxwx5kxw7f7kgbccnc,imgname-chatgpt-image-jun-22--2026--01-22-06-pm-1782114760029.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Chennai New Metro :சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளில் ஒரு முக்கிய மைல்கல்லாக,வடபழனி முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரையிலான 14.6 கிமீ நீளமுள்ள புதிய மெட்ரோ வழித்தடத்தை பிரதமர் மோடி ஜூலை 2 அல்லது 3ஆம் வாரத்தில் தொடங்கி வைக்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிரதமரின் இந்தத் தமிழக வருகையின் போது, மெட்ரோ வழித்தடத்தைத் திறந்து வைப்பதுடன், நிறைவடைந்த பல்வேறு இரயில்வே திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார். மேலும், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) புதிய இரண்டு திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டுவார் என்று மத்திய மற்றும் மாநில அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;லைட் ஹவுஸ் (மெரினா கடற்கரை) முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை இணைக்கும் 26.1 கி.மீ நீளமுள்ள 'இரண்டாம் கட்ட காரிடார் 4' (மஞ்சள் வழித்தடம்) திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த 14.6 கி.மீ வடபழனி - பூந்தமல்லி வழித்தடம் அமைந்துள்ளது. இந்த வழித்தடத்தில் வணிக ரீதியான சேவைகளைத் தொடங்குவதற்குத் தேவையான அனைத்து கட்டாய அனுமதிகளையும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் (CMRL) ஏற்கனவே பெற்றுள்ளது. இதுகுறித்த பணிகள் நிறைவடைந்த விவரத்தை தமிழக அரசு சமீபத்தில் பிரதமரின் அலுவலகத்திற்கு (PMO) முறைப்படி தெரிவித்துள்ளது. ஜூலை முதல் வாரத்தில் மத்திய அமைச்சரவையில் சிறிய மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதால், ஜூலை 2வது அல்லது 3வது வாரத்தில் பிரதமர் சென்னைக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த புதிய மெட்ரோ சேவை பயன்பாட்டிற்கு வருவதன் மூலம், பூந்தமல்லி புறநகர் பகுதியில் இருந்து வடபழனி செல்வதற்கான பயண நேரம் 90 நிமிடங்களில் இருந்து வெறும் 30 நிமிடங்களாகக் குறையும். மேலும், சென்னை சென்ட்ரல் மற்றும் பரங்கிமலை இடையே இயங்கும் தற்போதைய 'பச்சை வழித்தடத்துடன்' (Green Line) வடபழனியில் இந்த புதிய வழித்தடம் தடையற்ற இணைப்பை வழங்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தொடக்கக் கட்டத்தில், பூந்தமல்லி புறவழிச்சாலையில் இருந்து புறப்படும் மெட்ரோ இரயில்கள் போரூர் வரையிலான அனைத்து 10 நிலையங்களிலும் நின்று செல்லும். போரூருக்குப் பிறகு, இடையில் உள்ள ஆலப்பாக்கம், காரம்பாக்கம், வளசரவாக்கம், ஆழ்வார்திருநகர், சாலிகிராமம் வேர்ஹவுஸ் மற்றும் சாலிகிராமம் ஆகிய 6 நிலையங்களில் நிற்காமல், நேரடியாக வடபழனிக்கு விரைவு சேவையாக இயக்கப்படும்.&lt;/p&gt;&lt;p&gt;இதையும் படிங்க : Bike Parcel: ரயில்ல பைக்கை பார்சல் அனுப்ப எவ்வளவு செலவாகும்? புக்கிங் செய்வது எப்படி?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;திருமழிசை அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள குத்தம்பாக்கம் புதிய புறநகர் பேருந்து முனையத்தை இந்த ஆண்டு பிப்ரவரி மாதமே திறக்க மாநில அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், வடபழனி - போரூர் இடையேயான மெட்ரோ இரயில் பணிகள் நிறைவடைவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இந்தத் திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டது. குத்தம்பாக்கம் பேருந்து முனையம், பூந்தமல்லி புறவழிச்சாலை மெட்ரோ நிலையத்திலிருந்து சுமார் 6.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;கோயம்பேடு (CMBT) பேருந்து முனையத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு, வேலூர், கிருஷ்ணகிரி, வாலாஜா, ஓசூர், திருப்பத்தூர் மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களுக்குச் செல்லும் அரசுப் பேருந்துகளை (TNSTC &amp;amp; SETC) இந்த புதிய குத்தம்பாக்கம் முனையத்திற்கு மாற்ற போக்குவரத்துத் துறையும் சிஎம்டிஏ-வும் (CMDA) திட்டமிட்டுள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;&quot;வடபழனி - பூந்தமல்லி இடையேயான மெட்ரோ இரயில் சேவை தொடங்கப்பட்ட பின்னரே, குத்தம்பாக்கம் முனையத்தைத் திறப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்&quot; என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், நாசரத்பேட்டை (பூந்தமல்லி) மெட்ரோ நிலையத்திற்கும் குத்தம்பாக்கம் பேருந்து முனையத்திற்கும் இடையே பயணிகளின் வசதிக்காக மாநகரப் பேருந்துகள் (MTC) இணைப்புச் சேவைகளாக இயக்கப்பட உள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;IRCTC Tour Package: பெங்களூர் டூ ராமேஸ்வரம், மதுரை! 5 நாள் டூர் வெறும் ₹10,710&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-chennai</category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/chennai-new-metro-to-cut-travel-time-from-90-minutes-to-30-minutes-phqau25"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ராயபுரம் ரணகளம்: மாஜி அமைச்சரின் 'ரீ-என்ட்ரி'..! மிரள வைக்கும் ரிப்போர்ட் கார்டு..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/royapuram-former-ministers-re-entry-the-mlas-stunning-report-card-articleshow-q3w2z82</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/royapuram-former-ministers-re-entry-the-mlas-stunning-report-card-articleshow-q3w2z82</guid>
            <pubDate>Mon, 23 Mar 2026 18:21:25 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், ராயபுரம் தொகுதியில் யாரும் எதிர்பாராத ஒரு திருப்பம் நிகழ்ந்தது. 1991 முதல் ராயபுரத்தின் முகமாக இருந்த ஜெயகுமாரை, 27,779 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி 'ஐட்ரீம்' மூர்த்தி வெற்றி பெற்றார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kmdbmbc29y8g41hek08retwc,imgname-image-870x-69c0eb26918d0-1774269902209.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;வடசென்னையின் இதயப் பகுதியான ராயபுரம் தொகுதி, தமிழக அரசியல் வரலாற்றில் எப்போதும் ஒரு 'ஸ்டார்' அந்தஸ்து கொண்ட தொகுதி. ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும், முன்னாள் அமைச்சராகவும் இருந்த அதிமுகவின் மூத்த தலைவர் டி.ஜெயகுமார், தற்போதைய திமுக எம்.எல்.ஏ ஐட்ரீம் மூர்த்தி ஆகியோருக்கு இடையிலான மோதல், வரும் 2026 ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலில் மீண்டும் ஒரு வரலாற்றுச் சமரை உறுதி செய்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஜெயகுமாரை சமாளிப்பாரா ஐட்ரீம் மூர்த்தி?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், ராயபுரம் தொகுதியில் யாரும் எதிர்பாராத ஒரு திருப்பம் நிகழ்ந்தது. 1991 முதல் ராயபுரத்தின் முகமாக இருந்த ஜெயகுமாரை, 27,779 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி 'ஐட்ரீம்' மூர்த்தி வெற்றி பெற்றார். இந்தத் தோல்வி அதிமுகவிற்குப் பெரும் அதிர்ச்சியை அளித்தாலும், இந்த முறை ஜெயகுமார் மீண்டும் அதே தொகுதியில் களம் காண்பதில் உறுதியாக இருக்கிறார். அதேநேரம், கடந்த 5 ஆண்டுகளில் தான் செய்த நலத்திட்டங்களை முன்வைத்து ஐட்ரீம் மூர்த்தி இரண்டாவது வெற்றியை நோக்கி நகர்கிறார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;img&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஐட்ரீம் மூர்த்தியின் 'வளர்ச்சிப் பட்டியல்'&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;திமுக தரப்பில் ஐட்ரீம் மூர்த்தியின் வெற்றிக்கான முக்கியக் காரணியாகக் கடந்த ஐந்தாண்டு காலச் சாதனைகள் முன்வைக்கப்படுகின்றன. தொகுதி மக்களின் நீண்ட காலப் பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டிருப்பது இவருக்குப் பெரும் பலமாகப் பார்க்கப்படுகிறது. ராயபுரம் மக்களின் 50 ஆண்டுகாலக் கனவான போஜராஜன் நகர் சுரங்கப்பாதை திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சுமார் ₹45 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன தொழிலாளர் பயிற்சி மையம் தொகுதி இளைஞர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;₹120 கோடி மதிப்பீட்டில் RSRM மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதில் 300 புதிய படுக்கைகள் மற்றும் 38 புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் ₹152 கோடியில் பிரம்மாண்ட ஆர்த்தோ (Ortho) பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. ₹25 கோடி மதிப்பில் புதிய பள்ளிக் கட்டிடங்கள், ஐஏஎஸ்/ஐபிஎஸ் பயிலும் மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி மையம், நவீன நூலகங்கள் போன்றவை கல்வித் தரத்தை உயர்த்தியுள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;சுமார் ₹500 கோடி மதிப்பீட்டில் 3000-க்கும் மேற்பட்ட புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 3000 குடும்பங்களுக்குப் பட்டா வழங்கியது தொகுதி மக்களின் ஆதரவை இவருக்குத் தக்கவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-chennai</category>
            <dc:creator>Thiraviya raj</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/royapuram-former-ministers-re-entry-the-mlas-stunning-report-card-articleshow-q3w2z82"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Chennai Parandur Airport : பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து! ரூ.50,000 கோடி இழப்பா? விஜய் அரசின் அடுத்த பிளான் என்ன?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/chennai-parandur-airport-cancelled-rs-50000-crore-loss-and-vijay-govt-next-move-qlvtwfh</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/chennai-parandur-airport-cancelled-rs-50000-crore-loss-and-vijay-govt-next-move-qlvtwfh</guid>
            <pubDate>Thu, 28 May 2026 14:27:06 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Chennai Parandur Airport : விஜய் தலைமையிலான தவெக அரசு, பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்துள்ளது. இந்த முடிவால் ₹50,000 கோடி முதலீட்டு இழப்பு மற்றும் வேலைவாய்ப்பு சவால்கள் குறித்த கவலைகள் எழுந்துள்ளன.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01g9cry4b9wzsqthj8gd6pfpr8,imgname-cftu.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Chennai Parandur Airport : விஜய் தலைமையிலான தவெக அரசு, பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்துள்ளது. இந்த முடிவால் ₹50,000 கோடி முதலீட்டு இழப்பு மற்றும் வேலைவாய்ப்பு சவால்கள் குறித்த கவலைகள் எழுந்துள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ்நாட்டில் கடந்த ஆட்சிக் காலத்தில் பெரும் விவாதப் பொருளாகவும், அரசியல் ரீதியாகப் பெரும் கரும்புள்ளியாகவும் பார்க்கப்பட்டது பரந்தூர் பசுமை வழி விமான நிலையத் திட்டம். சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையத் தேவைக்காக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 3,700 ஏக்கர் பரப்பளவில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முந்தைய திமுக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வந்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு ஆரம்பம் முதலே அப்பகுதி மக்களும் விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இவர்களுக்கு ஆதரவாக, தவெக தலைவர் விஜய் எதிர்க்கட்சியாக இருந்தபோது தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வந்தார். தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, விஜய் தலைமையில் தமிழகத்தில் புதிய அரசு அமைந்துள்ள சூழலில், பரந்தூர் விமான நிலையப் பணிகளைத் தொடர்வதற்கு தவெக அரசு அதிரடியாகத் தடை விதித்து, திட்டத்தைக் கைவிட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தத் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மாநிலத்தின் எதிர்காலப் பொருளாதார வளர்ச்சி குறித்த கவலைகளும் எழுந்துள்ளன. ஒரு சர்வதேச விமான நிலையம் அமையவிருந்த திட்டம் கைவிடப்பட்டதன் மூலம், தமிழகத்திற்கு வரவிருந்த சுமார் 50,000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் மற்றும் அதன் மூலம் உருவாகியிருக்க வேண்டிய லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், இந்த உள்கட்டமைப்புத் திட்டம் முடங்கியதால் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களின் தொழில் வளர்ச்சி தேக்கமடைந்து, மாநிலத்தின் முன்னேற்றம் பின்னோக்கிச் செல்லக்கூடும் என்ற அச்சமும் தொழில் துறையினரிடையே நிலவுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்ட நிலையில், ஏற்கனவே மக்களிடமிருந்து பெறப்பட்ட நிலங்களின் எதிர்காலம் என்ன என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. கடந்த ஆட்சியில் சுமார் 1,700 ஏக்கர் நிலங்கள் நேரடியாக நில உரிமையாளர்களின் சம்மதத்துடன் அரசுக்கு முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளன. சட்டப்பூர்வ நில எடுப்பு முறையின் கீழ் இவை கையகப்படுத்தப்படவில்லை என்பதால், இந்த நிலங்களை உரிமையாளர்களிடம் மீண்டும் ஒப்படைப்பதில் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;நிலங்களை அரசுக்கு வழங்கியவர்களுக்கு அதற்கான இழப்பீட்டுத் தொகையும் முழுமையாக வழங்கப்பட்டு விட்டது. ஒருவேளை நிலத்தை மீண்டும் பெற விரும்பினால், அவர்கள் வாங்கிய தொகையை அரசிடம் திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும். இதனால், இந்த 1,700 ஏக்கர் நிலங்களை அப்படியே அரசின் வசம் வைத்துக்கொண்டு, அங்கு புதிய 'சிப்காட்' (SIPCOT) போன்ற அதிநவீன தொழிற்பூங்காவை அமைக்கலாமா என்று புதிய அரசு தற்போது தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பரந்தூர் திட்டம் அதிகாரப்பூர்வமாகக் கைவிடப்பட்டுள்ளதால், சென்னையின் வான்வழிப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அரசு மாற்று ஏற்பாடுகளைச் செய்யுமா அல்லது தற்போதுள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்தையே மேலும் விரிவாக்கம் செய்ய வழிகளைத் தேடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;மக்களின் விவசாய நிலங்களைக் காக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருந்தாலும், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்காத வண்ணம் மாற்றுத் தொழில் திட்டங்களை முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு எவ்வாறு கொண்டு வரப்போகிறது என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-chennai</category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/chennai-parandur-airport-cancelled-rs-50000-crore-loss-and-vijay-govt-next-move-qlvtwfh"/>
        </item>
        <item>
            <title><![CDATA[சென்னையில் பார்க்க வேண்டிய டாப் 10 இடங்கள்.. என்னென்ன தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-chennai/top-10-places-to-visit-in-chennai-s0c24nk</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-chennai/top-10-places-to-visit-in-chennai-s0c24nk</guid>
            <pubDate>Sat, 25 Apr 2026 11:04:38 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் கட்டாயம் பார்க்க வேண்டிய 10 சுற்றுலா தலங்கள் இந்த கட்டுரையில் பட்டியலிடப்பட்டுள்ளன. மெரினா பீச், கபாலீஸ்வரர் கோயில் முதல் மகாபலிபுரம் மற்றும் வேடந்தாங்கல் வரை, ஒவ்வொரு இடத்தின் சிறப்புகளும் விளக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kmd5p8yxqvsehg0qxe8ndwaf,imgname-chennai-railway-station-1774263673821.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் கட்டாயம் பார்க்க வேண்டிய 10 சுற்றுலா தலங்கள் இந்த கட்டுரையில் பட்டியலிடப்பட்டுள்ளன. மெரினா பீச், கபாலீஸ்வரர் கோயில் முதல் மகாபலிபுரம் மற்றும் வேடந்தாங்கல் வரை, ஒவ்வொரு இடத்தின் சிறப்புகளும் விளக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை பல்வேறு வரலாற்று சிறப்புக்களை கொண்டுள்ளது. அதுமட்டுமல்ல வந்தாரை வாழ வைக்கும் சென்னை என்றும் அழைக்கப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் சுற்றி பல சுற்றுலா தலங்கள் உள்ளன. அந்த வகையில் சென்னையில் கட்டாயம் பார்க்க வேண்டிய 10 சுற்றுலா தலங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சென்னைக்கு சுற்றுலா வருபவர்களின் பட்டியலில் முதலிடத்தில் எப்போதும் இருப்பது மெரினா பீச். உலகின் மிக நீளமான பீச்களில் ஒன்றாக இருக்கும். குறிப்பாக அழகான மாலைப் பொழுதை கழிப்பதில் உள்ளூர் மக்களின் முதல் தேர்வு மெரினா கடற்கரை. தினமும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். அதுமட்டுமல்ல இங்கு கிடைக்கும் பல கடல் உணவுகளை நீங்கள் ருசித்து சாப்பிடலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மயிலாப்பூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற கபாலீஸ்வரர் கோயில். இக்கோவில் நீங்கள் பார்க்க வேண்டிய முக்கிய இடங்களில் ஒன்றாகும். சென்னையின் உயரிய ஆன்மீக பாரம்பரியத்திற்கு உதாரணமாக திகழும் இந்தக் கோயிலில் மூலக் கடவுளாக சிவபெருமான் மக்களுக்கு அருள்பாலிக்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவின் 8வது சிறிய தேசிய பூங்காவான கிண்டி தேசிய பூங்கா நகரின் எல்லைக்குள் அமைந்துள்ளது. இங்கு மான், குரங்குகள், பல வகையான பறவைகள், தாவரங்கள் ஆகியவற்றை கண்டு ரசிக்கலாம். இதன் உள்ளேயே குழந்தைகளுக்கான பூங்காவும் பாம்பு பண்ணையும் உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பழங்கால பாறைக் கோயில்கள் மற்றும் பிரமிக்க வைக்கும் கடலோர காட்சிகளுக்கு பெயர் பெற்ற மகாபலிபுரம் யுனெஸ்கோ. இது உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாகும். ஒரே கல்லில் செதுக்கப்பட்டபாறைச் சிற்பங்களும் உள்ளது. கடற்கரைக் கோயில், அர்ஜுனனின் தவம் மற்றும் பஞ்ச ரதங்களை நீங்கள் குடும்பத்தோடு கண்டு மகிழலாம். சென்னையிலிருந்து 52 கி.மீ தொலைவில் உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா என்றழைக்கப்படும் இது சென்னை வண்டலூரில் அமைந்துள்ளது. இது நகரத்தின் மையப்பகுதியில் இருந்து ஒரு குறுகிய பயண தூரத்தில் அமைந்துள்ளது. 1,490 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த உயிரியல் பூங்கா ஏராளமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் வாழ்விடமாகும். இந்த பூங்காவில் பல்வேறு வகையான பாலூட்டிகள், ஊர்வன, சிங்கம், புலி மற்றும் பறவையினங்களைபார்க்க முடியும். சென்னையில் காண வேண்டிய ஒரு சிறந்த இடமாக இருக்கும் இது குழந்தைகளோடு வரும் குடும்பத்தினருக்கு மிக உகந்த சுற்றுலா இடமாக இருக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சென்னையில் இருந்து சுமார் 85 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம். இந்தியாவின் பழமையான பறவைகள் சரணாலயங்களில் ஒன்று ஆகும். பல்வேறு பறவை இனங்களை பார்ப்பது, இயற்கை சூழலை அமைதியாக ரசிப்பது என உங்கள் பயணத்தை மேற்கொள்ளலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மெரினா பீச்சின் எதிர்புறமாக அமைந்துள்ளது விவேகானந்தர் இல்லம். 1897-ம் ஆண்டு விவேகானந்தர் சென்னைக்கு வந்திருந்தபோது இங்குதான் தங்கியுள்ளார். இங்குள்ள அருங்காட்சியகத்தில் அவருடைய வாழ்க்கை குறிப்புகளும் அவருடைய போதனைகளும் புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் கலைப்பொருட்களாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பெசன்ட் நகரில் உள்ள பாரம்பரிய கலைநயத்தோடு கூடிய எலியட்ஸ் கடற்கரை, நகரத்தின் மையத்திலிருந்து சற்று தொலைவில் உள்ள ஒரு விசித்திரமான கடற்கரையாகும். இந்த கடற்கரை மெரினா கடற்கரையில் இருந்து முற்றிலும் வேறுபட்டது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நாகலாபுரம் சென்னையில் இருந்து 74 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இயற்கை காட்சிகளை கண்டுகளிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நல்ல சாய்ஸ் ஆக இருக்கும். மலையேற்றம் மற்றும் அருவிகளை பார்ப்பதற்கு நல்ல இடமாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;புலிகாட் ஏரி பறவை ஆர்வலர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களுக்கு ஏற்றதாகும். புலிகாட் பறவைகள் சரணாலயம், டச்சு கல்லறை ஆகியவற்றை நீங்கள் பார்வையிடலாம் மற்றும் புலிகாட் தீவுக்கு படகு சவாரி செய்து மகிழலாம். தூரத்தை பொறுத்தவரை சென்னையில் இருந்து 104 கி.மீ ஆகும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-chennai</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-chennai/top-10-places-to-visit-in-chennai-s0c24nk"/>
        </item>
        <item>
            <title><![CDATA[நோ கூட்டணி; சிங்கம் போல் சிங்கிளாக களமிறங்கும் தவெக - விஜய் போட்டியிடும் தொகுதி எது தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/politics/tvk-contest-tn-elections-alone-and-vijay-will-contest-in-perambur-constituency-teyrhc7</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/politics/tvk-contest-tn-elections-alone-and-vijay-will-contest-in-perambur-constituency-teyrhc7</guid>
            <pubDate>Tue, 17 Mar 2026 15:50:46 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தளபதி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சி வருகிற சட்டமன்ற தேர்தலில் எந்த கூட்டணியும் இல்லாமல் சோலோவாக தேர்தலை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kft7a6kd8k83bkw34k8jgdf9,imgname-vijay-1-1769332873837.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தளபதி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சி வருகிற சட்டமன்ற தேர்தலில் எந்த கூட்டணியும் இல்லாமல் சோலோவாக தேர்தலை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகி தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை கடந்த 2024-ம் ஆண்டு தொடங்கினார். அவர் கட்சி தொடங்கி கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகிறது. அக்கட்சியால் தமிழ்நாட்டின் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது என்றே சொல்லலாம். விஜய்யின் அரசியல் வருகையால் திமுக மற்றும் அதிமுகவின் வாக்கு சதவீதம் குறையும் சூழல் உருவாகி உள்ளது. கருத்துக் கணிப்பு முடிவுகளும் அதையே பிரதிபலிக்கின்றன. இந்த தேர்தலில் தவெக கட்சி பாஜக உடன் கூட்டணி அமைக்க உள்ளதாக பரவலாக பேச்சு அடிபட்டு வந்தது. விரைவில் அறிவிப்பு வரும் என்றும் கூறப்பட்டது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆனால் தற்போது வெளியாகி உள்ள லேட்டஸ்ட் தகவலின் படி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் இந்த தேர்தலில் யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்து தான் போட்டியிட உள்ளதாம். அதனால் யார்... யார் எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவார்கள் என்கிற உத்தேச பட்டியலும் வெளியாகி உள்ளது. அதன்படி அக்கட்சியின் தலைவர் விஜய், மொத்தம் இரண்டு தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதில் ஒரு தொகுதியாக பெரம்பூர் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய் போட்டியிட உள்ள மற்றொரு தொகுதி என்ன என்பதை சஸ்பென்ஸாக வைத்துள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதேபோல் தவெகவில் உள்ள மற்றும் சில பிரபலங்கள் போட்டியிடும் தொகுதி குறித்த விவரங்கள் தெரியவந்துள்ளன. அதன்படி தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், சென்னை தி நகர் தொகுதியில் போட்டியிட உள்ளாராம். அதேபோல் தவெக தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. தவெகவின் பொருளாளர் வெங்கட்ராமன் மயிலாப்பூரிலும், தவெகவில் உள்ள மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான ஜேசிடி பிரபாகர், ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாம். அதேபோல் ஆர்.கே.நகரில் மரிய வில்சன் போட்டியிடுவார் என கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சென்னை, திமுகவின் கோட்டையாக இருந்து வரும் நிலையில், அதை தகர்த்தெறிவதற்காக பலம் வாய்ந்தவர்களை விஜய் களமிறக்கி உள்ளாராம். தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 23ந் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அப்போது பதிவாகும் வாக்குகள் மே மாதம் 4ம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அன்றைய தினம் தெரிந்துவிடும் TVK-வின் அரசியல் எதிர்காலம். இந்த தேர்தலில் TVK-வுக்கும், திமுகவுக்கும் தான் போட்டியே என விஜய் ஒவ்வொரு மேடைகளிலும் சொல்கிறார். அவர் லிஸ்ட்டிலேயே சேர்க்காத அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் என்ன செய்யப்போகின்றன என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-chennai</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/politics/tvk-contest-tn-elections-alone-and-vijay-will-contest-in-perambur-constituency-teyrhc7"/>
        </item>
        <item>
            <title><![CDATA[RO Water: ஷாக் ரிப்போர்ட்..! RO தண்ணீரிலும் பாக்டீரியா.! புதிய ஆய்வு வெளியிட்ட எச்சரிக்கை!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/ro-water-shock-report-bacteria-found-even-in-purified-water-new-study-warns-xmegrgc</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/ro-water-shock-report-bacteria-found-even-in-purified-water-new-study-warns-xmegrgc</guid>
            <pubDate>Thu, 25 Jun 2026 14:25:09 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;சென்னையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், RO மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரில் மூன்றில் ஒரு பங்கு மாதிரிகளில் E. coli பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. &amp;nbsp;RO கருவிகளின் செயல்திறன் அதன் சரியான பராமரிப்பைப் பொறுத்தே அமையும் என்பதை வலியுறுத்துகிறது.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kvyxy5c30cg3cz65vytdyw2v,imgname-jun-25--2026--01-50-06-pm--1--1782375716226.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சென்னையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், RO மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரில் மூன்றில் ஒரு பங்கு மாதிரிகளில் E. coli பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. &amp;nbsp;RO கருவிகளின் செயல்திறன் அதன் சரியான பராமரிப்பைப் பொறுத்தே அமையும் என்பதை வலியுறுத்துகிறது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வீட்டில் RO (Reverse Osmosis) வாட்டர் பியூரிஃபையர் இருந்தால் குடிநீர் 100 சதவீதம் பாதுகாப்பானது என்று பலரும் நம்புகின்றனர். குறிப்பாக நகரங்களில் குழாய் நீரின் தரம் குறித்து அச்சம் நிலவுவதால், பெரும்பாலான குடும்பங்கள் RO கருவிகளை பயன்படுத்தி வருகின்றன. ஆனால், சென்னையில் நடத்தப்பட்ட புதிய அறிவியல் ஆய்வு அந்த நம்பிக்கையையே கேள்விக்குறியாக்கியுள்ளது. RO மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரிலும் ஆபத்தான E. coli பாக்டீரியா கண்டறியப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த ஆய்வை ஐஐடி மதராஸ், அவின் பல்கலைக்கழகம், ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மற்றும் மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இணைந்து மேற்கொண்டுள்ளனர். சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள 262 வீடுகளில் இருந்து குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. சுத்திகரிக்கப்படாத நீர் மட்டுமின்றி, RO கருவி மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரும் பரிசோதிக்கப்பட்டது. அதன் முடிவுகள் பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆய்வில் பரிசோதிக்கப்பட்ட RO குடிநீர் மாதிரிகளில் சுமார் 31 சதவீதத்தில் E. coli பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 74 சதவீத மாதிரிகளில் Coliform வகை பாக்டீரியாக்களும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே நேரத்தில் சுத்திகரிக்கப்படாத நீரில் E. coli மற்றும் Coliform பாக்டீரியாக்கள் அதிக அளவில் இருந்தாலும், RO அமைப்பு அவற்றை முழுமையாக அகற்றவில்லை என்பது இந்த ஆய்வின் முக்கிய கண்டுபிடிப்பாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;E. coli என்பது மனிதர்கள் மற்றும் விலங்குகளின் குடலில் இயல்பாக வாழும் ஒரு வகை பாக்டீரியா. ஆனால், அது குடிநீரில் இருப்பது மலக்கழிவு மூலம் நீர் மாசுபட்டிருக்கலாம் என்பதற்கான முக்கிய அறிகுறியாக மருத்துவர்கள் கருதுகின்றனர். இந்த பாக்டீரியா கலந்த தண்ணீரை குடித்தால் வயிற்றுப்போக்கு, வாந்தி, கடுமையான வயிற்றுவலி, காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். சிலருக்கு குடல் தொற்று தீவிரமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய நிலையும் உருவாகலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;RO தொழில்நுட்பம் தண்ணீரில் உள்ள உப்புகள், கன உலோகங்கள், வேதிப்பொருட்கள் மற்றும் சில நுண்ணுயிர்களை நீக்குவதில் திறமையானது. இருப்பினும், கருவியின் ஃபில்டர்கள் மற்றும் மெம்பிரேன்கள் நீண்ட நாட்களாக மாற்றப்படாமல் இருந்தால் அதன் செயல்திறன் குறையலாம். அதேபோல், RO சேமிப்பு தொட்டிகளை சுத்தம் செய்யாமல் இருப்பது, குடிநீரை அழுக்கான பாத்திரங்களில் சேமிப்பது, குழாய்களில் ஏற்படும் மாசுபாடு போன்ற காரணங்களால் சுத்திகரிக்கப்பட்ட நீரும் மீண்டும் பாக்டீரியாவால் பாதிக்கப்படலாம் என்று ஆய்வாளர்கள் விளக்குகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;E. coli பாதிப்பு அனைவரையும் தாக்கக்கூடியதாக இருந்தாலும், குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் அதிக ஆபத்தில் இருப்பதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இவர்களுக்கு சாதாரண வயிற்றுப்போக்கே தீவிரமான உடல்நல பாதிப்புகளாக மாறும் அபாயம் இருப்பதால், குடிநீரின் தரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;RO கருவி வாங்கிவிட்டால் கடமை முடிந்துவிடாது. குறிப்பிட்ட கால இடைவெளியில் ஃபில்டர்களை மாற்றுவது, மெம்பிரேன்களை பரிசோதிப்பது, சேமிப்பு தொட்டிகளை சுத்தம் செய்வது, தரமான சேவை மையங்கள் மூலம் பராமரிப்பு செய்வது ஆகியவை கட்டாயம் மேற்கொள்ளப்பட வேண்டும். இல்லையெனில், RO கருவி இருந்தும் அதன் முழு பலன் கிடைக்காமல் போகலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த ஆய்வு RO தொழில்நுட்பம் பயனற்றது என்று கூறவில்லை. மாறாக, RO கருவியின் செயல்திறன் அதன் பராமரிப்பைப் பொறுத்தே அமையும் என்பதை வலியுறுத்துகிறது. தண்ணீரின் வேதியியல் தரத்தை மேம்படுத்தும் RO, நுண்ணுயிர் பாதுகாப்பை உறுதி செய்ய தொடர்ந்து சரியான பராமரிப்பு அவசியம் என்பதை இந்த ஆய்வு நினைவூட்டுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&quot;RO தண்ணீர் என்பதால் எந்த ஆபத்தும் இல்லை&quot; என்ற எண்ணத்தை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. வீட்டில் RO கருவி இருந்தாலும், அதை முறையாக பராமரிக்கவில்லை என்றால் குடிநீரில் மீண்டும் பாக்டீரியா உருவாகும் வாய்ப்பு இருப்பதாக இந்த ஆய்வு எச்சரிக்கிறது. எனவே, குடிநீரின் பாதுகாப்பை உறுதி செய்ய RO கருவியை நம்புவது மட்டுமல்ல, அதன் பராமரிப்பு மற்றும் சுத்தமான பயன்பாட்டையும் மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்பதே இந்த ஆய்வின் மிக முக்கியமான செய்தியாகும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-chennai</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/ro-water-shock-report-bacteria-found-even-in-purified-water-new-study-warns-xmegrgc"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Pachaiyappa College: 184 ஆண்டுகால வரலாற்றில் பச்சையப்பன் கல்லூரி புதிய சாதனை! இனி மாணவிகளுக்கும் அனுமதி! தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-chennai/pachaiyappa-college-opens-admission-for-girls-tamilnadu-government-historic-xs5u9tg</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-chennai/pachaiyappa-college-opens-admission-for-girls-tamilnadu-government-historic-xs5u9tg</guid>
            <pubDate>Wed, 17 Jun 2026 21:32:54 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Tamilnadu Government: 184 ஆண்டு கால பாரம்பரியம் மிக்க பச்சையப்பன் கல்லூரிக்கு தமிழ்நாடு அரசு இருபாலர் கல்வி அந்தஸ்தை வழங்கியுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு மாணவிகளுக்கு உயர்கல்வி வாய்ப்புகளை உருவாக்கிறது.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kvb4s5xs4a0rg0ws9s3by8gs,imgname-pachaiyappa-college-4-1781711804345.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Tamilnadu Government: 184 ஆண்டு கால பாரம்பரியம் மிக்க பச்சையப்பன் கல்லூரிக்கு தமிழ்நாடு அரசு இருபாலர் கல்வி அந்தஸ்தை வழங்கியுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு மாணவிகளுக்கு உயர்கல்வி வாய்ப்புகளை உருவாக்கிறது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவின் மிகப் பழமையான மற்றும் புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான பச்சையப்பன் கல்லூரி, அதன் 184 ஆண்டுகால சிறப்புமிக்க பயணத்தில் புதிய வரலாற்றுச் சாதனையை எட்டியுள்ளது. தமிழ்நாடு அரசு, அரசாணை (G.O. No.100 dated 15.06.26) மூலம் கல்லூரிக்கு இருபாலர் (Co-Educational) அந்தஸ்தை வழங்கியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;1842 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பச்சையப்பன் கல்லூரி பல தலைமுறைகளாக கல்விச் சிறப்பு, சமூகப் பொறுப்பு மற்றும் கல்விச் சேவையின் அடையாளமாக விளங்கி வருகிறது. இருபாலர் அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பது, கல்லூரியின் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளதுடன், அனைவரையும் உள்ளடக்கிய கல்வி, சமத்துவம் மற்றும் சமுதாயத்தின் வளர்ந்து வரும் கல்வி எதிர்பார்ப்புகளுக்கான அதன் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு, மாணவிகளுக்கும் இந்நிறுவனத்தின் வாயில்களைத் திறந்து வைத்து தரமான உயர்கல்விக்கான அதிக வாய்ப்புகளை உருவாக்குவதோடு, பன்முகத் தன்மையும் உயிர்ப்பும் நிறைந்த கல்விச் சூழலை உருவாக்கும். கல்லூரியின் பாரம்பரியத்தையும் பெருமைமிகு மரபையும் பாதுகாத்தபடியே, நவீன கல்வி மதிப்புகளுக்கு இம்முயற்சி உறுதுணையாக அமைகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ்நாடு அரசின் இந்த முடிவை, பச்சையப்பன் கல்லூரியின் நிர்வாகம், முதல்வர், பேராசிரியர்கள், ஓய்வு பெற்ற பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் வரவேற்றுள்ளனர். இந்தச் சாதனை, பல்வேறு தரப்பினரின் நீண்டகால முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றியாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கல்லூரியின் கனவுகளையும் எதிர்பார்ப்புகளையும் அங்கீகரித்து, நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த அனுமதியை வழங்கிய தமிழ்நாடு அரசு மற்றும் உயர்கல்வித் துறைக்கு கல்லூரி தனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறது. புதிய அத்தியாயத்தை நோக்கி முன்னேறும் பச்சையப்பன் கல்லூரி, அறிவு, நற்பண்பு மற்றும் தலைமைத்துவத்தை வளர்ப்பதற்கான தனது பணியில் தொடர்ந்து உறுதியாக இருக்கும். இருபாலர் அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பது ஒரு நிர்வாகச் சாதனை மட்டுமல்ல; மாறாக, இரண்டு நூற்றாண்டுகளாக சமூகத்திற்கு சிறப்பாகச் சேவை செய்துவரும் இந்தப் பெருமைமிகு கல்வி நிறுவனத்தின் பாரம்பரியத்தை நிலைநிறுத்தியபடி, முன்னேற்றமிக்க எதிர்காலத்தை உருவாக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும். &quot;புகழ்மிகு பச்சையப்பர் பாரம்பரியத்தைப் போற்றுவோம்; அனைவரையும் உள்ளடக்கிய எதிர்காலத்தை உருவாக்குவோம் என முனைவர் பேபி குல்னாஸ் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu-chennai</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-chennai/pachaiyappa-college-opens-admission-for-girls-tamilnadu-government-historic-xs5u9tg"/>
        </item>
    </channel>
</rss>
