<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes"?>
<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Fri, 26 Jun 2026 21:22:26 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss/tamilnadu" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு முக்கிய அரசு பதவி! விஜய் முடிவின் பின்னணி இதுதான்! பரபரப்பு தகவல்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/why-cm-vijay-appointed-janayagan-producer-venkat-narayana-as-tamil-nadu-delhi-representative-0n14qbe</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/why-cm-vijay-appointed-janayagan-producer-venkat-narayana-as-tamil-nadu-delhi-representative-0n14qbe</guid>
            <pubDate>Fri, 26 Jun 2026 21:22:22 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Janayagan Producer Venkat Narayana: தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன் தயாரிப்பாளர் வெங்கட நாராயணாவை முதல்வர் விஜய் நியமித்துள்ளார். கர்நாடகாவை சேர்ந்த இவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kw29rnwg1t68t1jg87czj4cb,imgname-janayagan-producer-venkat-narayana-1782488782736.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Janayagan Producer Venkat Narayana: தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன் தயாரிப்பாளர் வெங்கட நாராயணாவை முதல்வர் விஜய் நியமித்துள்ளார். கர்நாடகாவை சேர்ந்த இவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழக முதல்வரும், தவெக தலைவருமான விஜய், டெல்லியில் தமிழ்நாடு அரசின் நலன் சார்ந்த பணிகளைக் கவனிக்க, 'ஜனநாயகன்' திரைப்படத்தின் தயாரிப்பாளரான வெங்கட நாராயணாவை (Venkat K. Narayana) சிறப்புப் பிரதிநிதியாக நியமித்து உத்தரவிட்டுள்ளார். அதாவது அவருக்கு தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எம். சாய் குமார் இது தொடர்பான அரசாணையை வெளியிட்டார். இந்த நியமனம், வெங்கட நாராயணா பொறுப்பேற்கும் தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;யார் இந்த வெங்கட நாராயணா?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;டெல்லியில் தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்வதே இப்பதவியின் முதன்மை நோக்கமாகும். கர்நாடகாவை சேர்ந்த வெங்கட நாராயணா பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் புகழ்பெற்ற 'கே.வி.என் புரோடக்ஷன்ஸ்' (KVN Productions) நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவாகி சென்சார் பிரச்சனை காரணமாக இன்னும் திரைக்கு வராத 'ஜனநாயகன்' திரைப்படத்தைத் தயாரித்ததன் மூலம், அரசியல் மற்றும் திரைத்துறை வட்டாரங்களில் இவர் பெரிதும் கவனிக்கப்படும் நபராக மாறினார் வெங்கட நாராயணா.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தவெக ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காக ஆளுநர் மாளிகைக்குச் சென்ற விஜய் தலைமையிலான குழுவில் வெங்கட நாராயணா முக்கியப் பங்கு வகித்தார். முதலமைச்சரின் நம்பிக்கைக்குரிய வட்டாரத்தில் ஒருவராகக் கருதப்படும் இவர், தற்போது இந்த அரசுப் பதவியின் மூலம் டெல்லியில் தமிழகத்தின் குரலாகச் செயல்பட உள்ளார். தவெக ஆட்சி அமைக்க உரிமை கோரியது முதல், டெல்லி அதிகார மட்டம் வரையிலான மிக முக்கிய அரசியல் நகர்வுகளில் விஜய்யின் நம்பிக்கைக்குரிய 'நிழல்' மனிதராக வெங்கட நாராயணா செயல்பட்டு வந்துள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதுதான் காரணமா?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;கர்நாடகாவில் மிகப்பெரிய தொழில் பின்னணி கொண்ட இவர், டெல்லி அரசியல் வட்டாரங்களிலும், மத்திய அமைச்சகங்களிலும் உள்ள முக்கியப் புள்ளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர் என்று கூறப்படுகிறது. டெல்லியில் தமிழக அரசின் உரிமைகளை நிலைநாட்டவும், மத்திய அரசுடனான இணக்கமான உறவை வளர்க்கவும் வெங்கட நாராயணாவின் இந்த 'டெல்லி கனெக்ஷன்' மற்றும் அவரது ராஜதந்திர அணுகுமுறை விஜய்க்குப் பெரிதும் உதவும் என்ற கணக்கிலேயே இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;டெல்லிக்கும், தமிழக அரசுக்கும் பாலமாக விளங்கும் தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி பொறுப்பு வெங்கட நாராயணாவுக்கு வழங்கப்பட்டதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வெங்கட நாராயணாவின் பூர்வீகம் மற்றும் அவரது கே.வி.என் புரோடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தலைமையகம் பெங்களூரு ஆகும். தமிழக அரசின் சார்பாக டெல்லியில் பிரதிநிதித்துவம் செய்ய தமிழ்நாட்டைச் சேர்ந்த, மாநிலத்தின் அரசியல் மற்றும் நிர்வாகச் சூழலை நன்கு அறிந்த ஒருவரை நியமித்திருக்கலாம் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;தமிழ்நாட்டில் ஆளே இல்லையா?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;தமிழ்நாட்டிற்குள் தகுதியான நபர்கள் இல்லையா? கர்நாடகாவை சேர்ந்தவரை ஏன் இந்த பொறுப்பில் நியமிக்க வேண்டும்? என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் முன்வைக்கின்றன. டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்பது வெறும் பெயரளவு பதவி அல்ல. மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவது, பல்வேறு அமைச்சகங்களில் உள்ள தமிழகம் சார்ந்த கோப்புகளை நகர்த்துவது போன்றவற்றுக்கு அரசியல் முதிர்ச்சியும், டெல்லி அதிகாரத்துவத்தைக் (Bureaucracy) கையாண்ட அனுபவமும் தேவை. வெங்கட நாராயணா கல்வி ரீதியாகப் பல தகுதிகள் (CA, CS, LLB) பெற்றிருந்தாலும், அரசு நிர்வாகத்திலோ அல்லது அரசியல் ராஜதந்திரத்திலோ அவருக்கு நேரடி அனுபவம் இல்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மிக முக்கியமாக தமிழ்நாட்டுக்கும், கர்நாடகாவுக்கும் இடையே இப்போது மேகதாது பிரச்சனை நிலவி வருகிறது. கர்நாடகா மேகதாது அணை கட்டக்கூடாது என தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. இதில் கர்நாடகாவை சேர்ந்த வெங்கட நாராயணாவின் நிலைப்பாடு என்ன? என்பதே எதிர்க்கட்சிகள், அரசியல் நிபுணர்களின் கேள்வியாக உள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/why-cm-vijay-appointed-janayagan-producer-venkat-narayana-as-tamil-nadu-delhi-representative-0n14qbe"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Tasmac News : டாஸ்மாக்கில் இனி வெளிநாட்டு சரக்கு? வருவாயை அதிகரிக்க தமிழக அரசு போடும் மாஸ்டர் பிளான்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/tamil-nadu-government-plans-to-sell-imported-liquor-through-tasmac-to-boost-revenue-2y0agxw</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/tamil-nadu-government-plans-to-sell-imported-liquor-through-tasmac-to-boost-revenue-2y0agxw</guid>
            <pubDate>Thu, 25 Jun 2026 11:39:22 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Tasmac News : தமிழ்நாட்டின் மதுபான சந்தையில் ஒரு பெரிய மாற்றம் நிகழப்போகிறது. உள்ளூர் மதுபான ஆலைகளின் ஆதிக்கத்திற்குப் பிறகு, இப்போது வெளிநாட்டு மதுபான பிராண்டுகளையும் அனுமதிக்க மாநில அரசு பரிசீலித்து வருகிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kkjyd9gdkdmkj46y8kagafp2,imgname-drinking-1773383624205.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Tasmac News : தமிழ்நாட்டின் மதுபான சந்தையில் ஒரு பெரிய மாற்றம் நிகழப்போகிறது. உள்ளூர் மதுபான ஆலைகளின் ஆதிக்கத்திற்குப் பிறகு, இப்போது வெளிநாட்டு மதுபான பிராண்டுகளையும் அனுமதிக்க மாநில அரசு பரிசீலித்து வருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;உள்ளூர் மதுபான ஆலைகளின் ஆதிக்கத்தில் இருந்த சந்தையை, வெளிநாட்டு பிராண்டுகளுக்குத் திறந்துவிடுவதன் மூலம் கலால் வரியை அதிகரிக்க அரசு திட்டமிடுகிறது. இதன்மூலம், வாடிக்கையாளர்கள் பக்கத்து மாநிலங்களுக்குச் செல்வதையும் தடுக்க முடியும்.&lt;img&gt;வெளிநாட்டு பிராண்டுகள் உட்பட பலவகை மதுபானங்களை அறிமுகப்படுத்தினால், வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ள முடியும். இது அரசின் வருவாயை அதிகரிப்பதோடு, வாடிக்கையாளர் சேவையையும் மேம்படுத்தும்.&lt;img&gt;தற்போது, தமிழ்நாட்டில் உள்ள அரசு கடைகளில் வெளிநாட்டு பிராண்டுகள் கிடைப்பதில்லை. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விஸ்கி போன்றவை கிடைத்தாலும், விலை உயர்ந்த இறக்குமதி சரக்குகள் பப்களில் மட்டுமே கிடைக்கின்றன. இந்த நிலையை மாற்ற அரசு தயாராகி வருகிறது.&lt;img&gt;நல்ல பிராண்டுகளுக்காகவும், வெளிநாட்டு மதுபானங்களுக்காகவும் தமிழ்நாட்டு மக்கள் பெங்களூரு மற்றும் புதுச்சேரிக்கு செல்வதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதைத் தடுக்கவே இந்த புதிய முடிவு.&lt;img&gt;மதுபான விநியோக அமைப்பில் முழுமையான மாற்றத்தைக் கொண்டுவர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், மதுபான வணிகத்தின் மீது தனது கட்டுப்பாட்டை அதிகரிக்கவும் அரசு தயாராகி வருகிறது.&lt;img&gt;இந்த புதிய திட்டத்தின் கீழ், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (TASMAC) நடத்தும் கடைகள் மேம்படுத்தப்படும். விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.]]></content:encoded>
            <category>tamilnadu</category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/tamil-nadu-government-plans-to-sell-imported-liquor-through-tasmac-to-boost-revenue-2y0agxw"/>
        </item>
        <item>
            <title><![CDATA["மின் வாரியத்தின் ரகசியங்கள் அம்பலம் ! அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட்ட அதிரடி வெள்ளை அறிக்கை!"]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/electricity-board-secrets-revealed-in-new-white-paper-videoshow-3i0tl2w</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/electricity-board-secrets-revealed-in-new-white-paper-videoshow-3i0tl2w</guid>
            <pubDate>Thu, 25 Jun 2026 13:00:29 +0530</pubDate>
            <description><![CDATA[]]></description>
            <media:content url="https://www.youtube.com/embed/ZIohRTDqCI0" medium="video" height="350" width="560"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சென்னை: தமிழக மின்சாரத் துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் (TNEB) நிதி நிலைமை மற்றும் திட்டப்பணிகள் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளார். மின் வாரியத்தின் தற்போதைய கடன்கள், இழப்புகள் மற்றும் செயல்பாட்டில் உள்ள திட்டங்களின் உண்மை நிலையை விளக்கும் வகையில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/electricity-board-secrets-revealed-in-new-white-paper-videoshow-3i0tl2w"/>
        </item>
        <item>
            <title><![CDATA[சென்னை மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுனசிலர்கள் கடும் முழக்கம்; வெளிநடப்பு செய்த காங்கிரஸ்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/uproar-by-dmk-congress-walkout-at-chennai-meeting-videoshow-4izp0vu</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/uproar-by-dmk-congress-walkout-at-chennai-meeting-videoshow-4izp0vu</guid>
            <pubDate>Wed, 24 Jun 2026 22:00:41 +0530</pubDate>
            <description><![CDATA[]]></description>
            <media:content url="https://www.youtube.com/embed/T2mDq6QNK48" medium="video" height="350" width="560"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சென்னை ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கவுன்சிலர்களிடையே எதிர்பாராத விதமாகக் கடும் மோதல் ஏற்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கூட்டத்தின் நேரமில்லா நேரத்தின்போது பேசிய காங்கிரஸ் கவுன்சிலர் திரவியம், தமிழக முதலமைச்சர் விஜயைப் புகழ்ந்து பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த திமுக கவுன்சிலர்கள், அவருக்கு எதிராக அவையிலேயே கடுமையாகக் கூச்சலிட்டு முழக்கங்களை எழுப்பினர். &quot;நம்பிக்கை துரோகி காங்கிரஸ்&quot; என்று திமுகவினர் உரக்க முழக்கமிட்டதால் அவையில் கடுமையான அமளி நிலவியது. சூழலைக் கட்டுக்குள் கொண்டுவர மேயர் பிரியா தொடர்ந்து எச்சரிக்கை மணியை (Bell) ஒலித்தும் இருதரப்பு கவுன்சிலர்களும் அடங்காமல் வார்த்தைப் போரில் ஈடுபட்டனர். திமுகவினரின் இந்த கடும் எதிர்ப்பைக் கண்டித்து காங்கிரஸ் கவுன்சிலர்கள் கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளிநடப்பு செய்தனர். இந்த மோதல் சென்னை அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/uproar-by-dmk-congress-walkout-at-chennai-meeting-videoshow-4izp0vu"/>
        </item>
        <item>
            <title><![CDATA[மகனுக்காக ராமதாஸ் கொடுத்த அசைவ விருந்து.! அப்பா மனக்காயத்திற்கு மருந்தான அன்புமணி கண்ணீர்.!  அய்யா குடும்பம் ஒன்று சேர இதுதான் காரணம்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/politics/anbumani-meets-ramados-emotional-reunion-grand-feast-tears-and-the-real-reason-behind-pmk-family-reunion-4r1qls9</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/politics/anbumani-meets-ramados-emotional-reunion-grand-feast-tears-and-the-real-reason-behind-pmk-family-reunion-4r1qls9</guid>
            <pubDate>Thu, 25 Jun 2026 10:51:08 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;அன்புமணியை கட்டியணைத்து உச்சிமுகர்ந்த ராமதாஸ், &amp;nbsp;உடல்நலன் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் தன் குடும்பத்துடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தாராம். பேரன் பேத்திகளுடன் விளையாடிய அவர் நீண்ட நாளுக்கு பிறகு சந்தோஷமாக இருந்தாராம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kvyk64ce6ehkke9b6gh00qtn,imgname-chatgpt-image-jun-25--2026--10-42-48-am--1--1782364443022.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;அன்புமணியை கட்டியணைத்து உச்சிமுகர்ந்த ராமதாஸ், &amp;nbsp;உடல்நலன் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் தன் குடும்பத்துடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தாராம். பேரன் பேத்திகளுடன் விளையாடிய அவர் நீண்ட நாளுக்கு பிறகு சந்தோஷமாக இருந்தாராம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழக அரசியலில் நீண்ட நாட்களாக பேசப்பட்டு வந்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையேயான கருத்து வேறுபாடு முடிவுக்கு வந்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள், அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்லாமல் PMK தொண்டர்களிடையிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. குடும்ப பாசமும், அரசியல் முதிர்ச்சியும் ஒன்றாக வெளிப்பட்ட இந்தச் சந்திப்பு, பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நீண்ட நாட்களாக நேரில் சந்திக்காமல் இருந்த தந்தை-மகன் இருவரும் தைலாபுரத்தில் சந்தித்த தருணம் மிகவும் உணர்ச்சிகரமாக அமைந்ததாக கூறப்படுகிறது. அன்புமணியை பார்த்தவுடன் டாக்டர் ராமதாஸ் எந்த தயக்கமும் இன்றி அவரை இறுக்கமாக அணைத்துக் கொண்டாராம். அந்த சில நிமிடங்களில் இருவரும் பேச முடியாமல் கண்ணீர் வடித்ததாகக் கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;அந்த காட்சியை பார்த்த குடும்ப உறுப்பினர்கள், வீட்டில் பணிபுரிபவர்கள் என அனைவரும் நெகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். அரசியல் கருத்து வேறுபாடுகளை விட குடும்ப பாசம் பெரியது என்பதை அந்த ஒரு தருணமே உணர்த்தியதாக கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கடந்த தேர்தலுக்குப் பிறகு ஏற்பட்ட மனவருத்தம் டாக்டர் ராமதாஸை பெரிதும் பாதித்ததாக நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன. அதே நேரத்தில், தந்தையை மீண்டும் சந்தித்து பழைய உறவை மீட்டெடுக்க வேண்டும் என்ற விருப்பம் அன்புமணிக்கும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;அந்த உணர்வை வெளிப்படுத்துவதற்காகவே, ராமதாஸ் &ndash; சரஸ்வதி தம்பதியரின் திருமண நாள் விழாவை சந்திப்புக்கான நாளாக அன்புமணி தேர்வு செய்ததாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஒன்றாகக் கொண்டாட முடியாத குடும்ப விழாவை, இந்த ஆண்டு மீண்டும் மகிழ்ச்சியாக மாற்ற வேண்டும் என்ற எண்ணமே இந்த முடிவுக்குக் காரணமாக இருந்ததாக சொல்லப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தச் சந்திப்பின் மற்றொரு நெகிழ்ச்சியான தருணம், புதிதாக பிறந்த பேரக்குழந்தையை டாக்டர் ராமதாஸ் முதல் முறையாக பார்த்ததுதான். அன்புமணியின் இரண்டாவது மகள் சங்கமித்ராவுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்திருந்தது. அந்தச் சிறிய குழந்தையை கையில் ஏந்தியபோது, ராமதாஸ் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;அன்புமணியின் மனைவி சௌம்யா மற்றும் குடும்பத்தினர் அனைவரும் ராமதாஸ் &ndash; சரஸ்வதி தம்பதியரிடம் ஆசீர்வாதம் பெற்றது, குடும்ப உறவுகள் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியிருப்பதை வெளிப்படுத்தியது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பல மாதங்களுக்குப் பிறகு குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்திய தருணமும் இந்தச் சந்திப்பின் சிறப்பாக அமைந்தது. சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி உள்ளிட்ட பல்வேறு அசைவ உணவுகள் தயாரிக்கப்பட்டு விருந்தளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;ஒரே மேசையில் அமர்ந்து சிரித்துப் பேசி உணவருந்திய குடும்பத்தினரை பார்த்தவர்கள், &quot;இனி பழைய பிளவு முழுமையாக மறைந்துவிட்டது&quot; என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தச் சந்திப்பு குடும்ப பாசத்துடன் மட்டுமல்லாமல் அரசியல் ஆலோசனைகளுக்கும் முக்கியத்துவம் பெற்றதாக கூறப்படுகிறது. சமீபத்திய தேர்தல் முடிவுகள், கட்சியின் எதிர்கால வளர்ச்சி, கிராமப்புறங்களில் கட்சியை வலுப்படுத்தும் திட்டங்கள், விவசாயிகள் பிரச்சினைகள், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நீண்ட நேரம் இருவரும் விவாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.&lt;/p&gt;&lt;p&gt;முன்னதாக தாம் கூறிய &quot;கிராமங்களுக்குச் செல்&quot; என்ற அறிவுரையை அன்புமணி செயல்படுத்திய விதம் குறித்து ராமதாஸ் பாராட்டியதாகவும், எதிர்காலத்தில் கட்சியை முன்னெடுத்து செல்லும் திறன் அன்புமணிக்கு இருப்பதாகவும் அவர் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உரையாடலின் போது அன்புமணி, &quot;இந்தக் கட்சி இன்று இந்த நிலைக்கு வந்ததற்கு முழு காரணமும் நீங்கள் தான். எங்களை விமர்சிக்கவும், வழிநடத்தவும் உங்களுக்கு முழு உரிமை இருக்கிறது&quot; என்று தந்தையிடம் உணர்ச்சிபூர்வமாக கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;அந்த வார்த்தைகள் டாக்டர் ராமதாஸை மேலும் நெகிழ்ச்சியடையச் செய்ததாகவும், குடும்ப பாசம் அரசியலை விட மேலானது என்பதை மீண்டும் இருவரும் உணர்ந்ததாகவும் கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தச் சந்திப்பு ஒரு குடும்ப மீளிணைவு மட்டுமல்ல, PMK அரசியலிலும் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. நீண்ட நாட்களாக காத்திருந்த தொண்டர்களுக்கு இந்த இணைவு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. தந்தை-மகன் இருவரும் மீண்டும் ஒரே பாதையில் பயணித்தால், கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் மேலும் வலுப்பெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குடும்ப பாசம் வென்ற இந்த தருணம், தமிழக அரசியலில் நீண்ட காலம் நினைவில் நிற்கும் உணர்ச்சிகரமான நிகழ்வாக அமைந்துள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/politics/anbumani-meets-ramados-emotional-reunion-grand-feast-tears-and-the-real-reason-behind-pmk-family-reunion-4r1qls9"/>
        </item>
        <item>
            <title><![CDATA[புதிய மைல்கல்: தமிழ்நாட்டில் 300 புதிய பேருந்து சேவைகளைத் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/cm-vijay-launches-300-new-bus-services-in-tamil-nadu-videoshow-777qke8</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/cm-vijay-launches-300-new-bus-services-in-tamil-nadu-videoshow-777qke8</guid>
            <pubDate>Thu, 25 Jun 2026 12:00:35 +0530</pubDate>
            <description><![CDATA[]]></description>
            <media:content url="https://www.youtube.com/embed/LIa_5XwcUYU" medium="video" height="350" width="560"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் கழகம் சார்பில், கிராமப்புறம் முதல் நகர்ப்புறம் வரை பொதுமக்கள் பாதுகாப்பாகவும், வசதியாகவும் பயணிக்க 300 புதிய பேருந்து சேவைகளை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். இதில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கும் நோக்கில் 164 டீசல் பேருந்துகளும், 136 சிஎன்ஜி (CNG) பேருந்துகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சென்னை செய்தி மக்கள் தொடர்புத் துறை (TN DIPR) வெளியிட்டுள்ள இந்த நிகழ்வில், அரசின் உயர் அதிகாரிகள், ஊடகப் பிரதிநிதிகள் மற்றும் போக்குவரத்துத் துறைத் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/cm-vijay-launches-300-new-bus-services-in-tamil-nadu-videoshow-777qke8"/>
        </item>
        <item>
            <title><![CDATA[3 கிலோமீட்டர் நிற்காமல் ஓடிய முதலமைச்சர் விஜய்..! இளைஞர்களுடன் சேர்ந்து தளபதி செய்த சம்பவம்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/the-story-behind-thalapathy-vijay-s-3km-run-videoshow-7ps2afq</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/the-story-behind-thalapathy-vijay-s-3km-run-videoshow-7ps2afq</guid>
            <pubDate>Fri, 26 Jun 2026 12:07:25 +0530</pubDate>
            <description><![CDATA[]]></description>
            <media:content url="https://www.youtube.com/embed/K-l9lBh-JuY" medium="video" height="350" width="560"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு சார்பில் &quot;Start Run, Stop Drugs&quot; என்ற மாபெரும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டம் சென்னை மெரினா கடற்கரையில் வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெற்றது. அண்ணா நினைவிடத்தில் இருந்து தொடங்கிய இந்த ஓட்டத்தை முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்ததோடு, ஆயிரக்கணக்கான இளைஞர்கள், மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து சுமார் 6 கிலோமீட்டர் தூரம் ஓடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் இதேபோன்ற ஓட்டங்கள் நடத்தப்பட்டன.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/the-story-behind-thalapathy-vijay-s-3km-run-videoshow-7ps2afq"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Government scheme: பெண் குழந்தைகளுக்கு அரசு தரும் ரூ.50,000.! யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/government-scheme-eligibility-for-50-000-for-girls-videoshow-9s0owt4</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/government-scheme-eligibility-for-50-000-for-girls-videoshow-9s0owt4</guid>
            <pubDate>Thu, 25 Jun 2026 17:02:53 +0530</pubDate>
            <description><![CDATA[]]></description>
            <media:content url="https://geo.dailymotion.com/player/x1tbu.html?video=xaimkbi" medium="video" height="768" width="1024"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், தகுதியுள்ள குடும்பங்களுக்கு ₹50,000 வரை வைப்புத்தொகை மற்றும் 18 வயதில் ₹3 லட்சம் வரை முதிர்வுத்தொகை வழங்கப்படுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/government-scheme-eligibility-for-50-000-for-girls-videoshow-9s0owt4"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Government scheme: பெண் குழந்தைகளுக்கு அரசு தரும் ரூ.50,000.! யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/government-scheme-rs-50000-for-girl-children-who-is-eligible-and-how-to-apply-ac0w330</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/government-scheme-rs-50000-for-girl-children-who-is-eligible-and-how-to-apply-ac0w330</guid>
            <pubDate>Thu, 25 Jun 2026 11:54:54 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், தகுதியுள்ள குடும்பங்களுக்கு ₹50,000 வரை வைப்புத்தொகை மற்றும் 18 வயதில் ₹3 லட்சம் வரை முதிர்வுத்தொகை வழங்கப்படுகிறது.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kvypg3nepvff4pbgfm13yb7j,imgname-chatgpt-image-jun-25--2026--11-39-39-am--1--1782367915693.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், தகுதியுள்ள குடும்பங்களுக்கு ₹50,000 வரை வைப்புத்தொகை மற்றும் 18 வயதில் ₹3 லட்சம் வரை முதிர்வுத்தொகை வழங்கப்படுகிறது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பெண் குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு மற்றும் எதிர்கால பொருளாதார நலனை உறுதி செய்யும் நோக்கில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் முக்கியமான நலத்திட்டங்களில் ஒன்றாக முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் (Chief Minister's Girl Child Protection Scheme) உள்ளது. 1992ஆம் ஆண்டு அறிமுகமான இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள குடும்பங்களில் பிறக்கும் பெண் குழந்தைகளின் பெயரில் அரசு ₹50,000 அல்லது தலா ₹25,000 நிலையான வைப்புத் தொகை (Fixed Deposit) செலுத்துகிறது. பெண் குழந்தைகளை சம உரிமையுடன் வளர்க்கவும், அவர்களின் கல்வி மற்றும் எதிர்காலத்தை உறுதிப்படுத்தவும் இந்தத் திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பெண் சிசுக்கொலை மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாகுபாட்டை குறைப்பதே இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கமாகும். அதேசமயம் பெண் குழந்தைகளின் கல்வி, பொருளாதார பாதுகாப்பு மற்றும் சமூகத்தில் சம உரிமையை உறுதி செய்ய குடும்பங்களை ஊக்குவிப்பதும் இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தத் திட்டத்தில் சேர குடும்பத்தில் ஒரு அல்லது இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆண் குழந்தை இருந்தால் திட்டத்தின் பலன் கிடைக்காது. பெற்றோர் 40 வயதுக்குள் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைச் சிகிச்சை செய்திருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ₹1.20 லட்சத்தைத் தாண்டக்கூடாது. குழந்தை 3 வயதிற்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாகவோ அல்லது குறைந்தது 10 ஆண்டுகள் தமிழ்நாட்டில் வசித்தவர்களாகவோ இருக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒரே ஒரு பெண் குழந்தை இருந்தால் அவரது பெயரில் ₹50,000 FD முதலீடு செய்யப்படும். இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் ஒவ்வொருவருக்கும் தலா ₹25,000 FD செய்யப்படும். 6ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் சுமார் ₹1,800 கல்வி உதவித்தொகை வழங்கப்படும். குழந்தை 18 வயதை நிறைவு செய்யும் போது, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால், வட்டி சேர்த்து சுமார் ₹3 லட்சம் வரை முதிர்வுத் தொகையாக பெறும் வாய்ப்பு உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விண்ணப்பிக்கும் போது பெண் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், பெற்றோரின் வயதுச் சான்றிதழ், குடும்பக் கட்டுப்பாடு (Sterilization) சான்றிதழ், வருமானச் சான்று, குடும்ப அட்டை, இருப்பிடச் சான்று, வங்கி கணக்கு புத்தகத்தின் நகல் மற்றும் தேவையெனில் ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தத் திட்டத்திற்கு மாவட்ட சமூக நல அலுவலகம் (DSWO), குழந்தை மேம்பாட்டு அலுவலகம் அல்லது அருகிலுள்ள e-Sevai மற்றும் CSC மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பித்தால், அதிகாரிகள் தகுதியை ஆய்வு செய்து விண்ணப்பத்தை பரிசீலிப்பார்கள். விண்ணப்பக் கட்டணம் மிகவும் குறைவாக இருக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க விரும்பும் குடும்பங்களுக்கு இந்தத் திட்டம் மிகப்பெரிய பொருளாதார ஆதரவாக அமைகிறது. குழந்தை பிறந்த சில ஆண்டுகளுக்குள் விண்ணப்பித்து அரசின் இந்தச் சிறந்த நலத்திட்டத்தின் பலனைப் பெறுவது குடும்பங்களுக்கு நீண்டகால நிதி பாதுகாப்பை வழங்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/government-scheme-rs-50000-for-girl-children-who-is-eligible-and-how-to-apply-ac0w330"/>
        </item>
        <item>
            <title><![CDATA[அப்பாவ அங்க தேடாதிங்க....மக்கள் மனதில் போய் தேடுங்க இருப்பேன்! முதல்வருக்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/stalin-to-cm-find-my-father-in-the-hearts-of-people-videoshow-bvob656</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/stalin-to-cm-find-my-father-in-the-hearts-of-people-videoshow-bvob656</guid>
            <pubDate>Thu, 25 Jun 2026 18:01:01 +0530</pubDate>
            <description><![CDATA[]]></description>
            <media:content url="https://www.youtube.com/embed/IKXVxkGzW3w" medium="video" height="350" width="560"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;திருவாரூர்: முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் உ. மதிவாணனின் இல்லத் திருமண விழாவில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்த விழாவில் முதலமைச்சரின் வருகை, திருமண நிகழ்வின் காட்சிகள் மற்றும் அவரது சிறப்பு உரை ஆகியவை இடம் பெற்றுள்ளன&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/stalin-to-cm-find-my-father-in-the-hearts-of-people-videoshow-bvob656"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Tamilnadu Rain: ஒரு வாரத்திற்கு ஓயாமல் இடி மின்னலுடன் கூடிய கனமழை..உங்கள் மாவட்டம் லிஸ்டில் உள்ளதா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/heavy-rain-accompanied-by-thunder-and-lightning-continuing-ceaselessly-for-a-week-c2igcuc</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/heavy-rain-accompanied-by-thunder-and-lightning-continuing-ceaselessly-for-a-week-c2igcuc</guid>
            <pubDate>Thu, 25 Jun 2026 15:45:46 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;TN Weather Update: தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக, அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jez3btxq2zbwd5v7131xberb,imgname-heavy-rain.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;TN Weather Update: தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக, அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காலை 7 மணி முதலே வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிலேயே முடங்கி விடுகின்றனர். இந்நிலையில் இடி மின்னலுடன் கனமழை குறித்து சென்னை வானிலை மையம் முக்கிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளது. அதாவது சுமார் 0.9 கி.மீ உயரத்தில் தமிழக கடலோர பகுதிகளின் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதேபோல் நாளை தமிழகத்தில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில், இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழகத்தில் விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் மற்றும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் , இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஜூன் 29&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;தமிழகத்தில் விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் மற்றும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஜூன் 30&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;30-06-2026: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஜூலை 01&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39&deg; செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29&deg; செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.&lt;/p&gt;&lt;p&gt;அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39&deg; செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29&deg; செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/heavy-rain-accompanied-by-thunder-and-lightning-continuing-ceaselessly-for-a-week-c2igcuc"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Crop Insurance: விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு.. இந்த 26 வகையான பயிர்களுக்கு ஜூலை 31 வரை காப்பீடு செய்யலாம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/july-31-is-the-last-day-for-farmers-to-take-out-crop-insurance-cukofb4</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/july-31-is-the-last-day-for-farmers-to-take-out-crop-insurance-cukofb4</guid>
            <pubDate>Fri, 26 Jun 2026 09:56:56 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Farmers: எல் நினோ தாக்கத்தால் ஏற்படக்கூடிய மகசூல் இழப்பைத் தவிர்க்க, ஜூலை 31-ம் தேதிக்குள் விவசாயிகள் காப்பீடு செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பொது சேவை மையங்கள், வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் இதைப் பதிவு செய்யலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kw12cnevsg8emcdnpe4c6njd,imgname-farmer-1782447494619.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Farmers: எல் நினோ தாக்கத்தால் ஏற்படக்கூடிய மகசூல் இழப்பைத் தவிர்க்க, ஜூலை 31-ம் தேதிக்குள் விவசாயிகள் காப்பீடு செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பொது சேவை மையங்கள், வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் இதைப் பதிவு செய்யலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நடப்பு 2026 குறுவை பருவ நெற்பயிர் மற்றும் இதர பயிர்களை பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண் கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஜுலை 31ம் தேதிக்குள் விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ள தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக அமைச்சர் வினோத் வெளியிட்டுள்ள அறிக்கையில்: இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பயிர் இழப்பிலிருந்து விவசாயிகளின் நலன் மற்றும் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, 2026-2027ஆம் ஆண்டில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் குறுவை பருவத்தில் மாநிலத்தின் 37 மாவட்டங்களை உள்ளடக்கிய 14 தொகுப்புகளில் செயல்படுத்தப்படும். தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கார்/ குறுவை/ சொர்ணவாரி நெல் மற்றும் இதர பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை 9 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் அனைத்து குறுவை பருவ பயிர்கள் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், சுமார் 6 இலட்சம் ஏக்கரில் குறுவை &quot;நெற்பயிர்&quot; பயிரிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தற்போது நிலவும் எல் நினோ நிகழ்வின் தாக்கத்தால் தென்மேற்கு பருவமழை இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், குறுவை மற்றும் மானாவாரி பயிர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்டு, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், 2026 குறுவை பருவத்தில் நெல், மக்காச்சோளம், துவரை, உளுந்து, பச்சைப்பயறு, நிலக்கடலை, ராகி, சோளம், கம்பு, தட்டைப்பயறு, எள், பருத்தி, சாமை மற்றும் கொள்ளு ஆகிய 14 வேளாண் பயிர்களும், வாழை, மரவள்ளி, வெங்காயம், உருளைக்கிழங்கு, கேரட், கத்தரி, வெண்டை, மஞ்சள், தக்காளி, பூண்டு, இஞ்சி மற்றும் முட்டைக்கோஸ் ஆகிய 12 தோட்டக்கலைப் பயிர்களும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை நேற்று முதல் விவசாயிகள் தேசிய பயிர்க் காப்பீட்டு இணையதளத்தில் காப்பீடு செய்து கொள்ளலாம். குறுவை நெற்பயிருக்கு ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் ஜூலை 15 ஆகும். இதர அறிவிக்கை செய்யப்பட்ட மாவட்டங்களில் விவசாயிகள் 2026 ஜூலை 31ம் தேதி வரை காப்பீடு செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ், மாவட்டங்களின் பரிந்துரைப்படி மகசூல் இழப்பு, விதைப்பு மற்றும் நடவு செய்ய இயலாத நிலை, விதைப்பு/ நடவு பொய்த்தல், பகுதி சார்ந்த மற்றும் பயிர் வளர்ச்சி கால இடர் நிகழ்வுகளால் ஏற்படும் இழப்பு மற்றும் அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்பு போன்ற இனங்கள் காப்பீடு செய்யப்படுகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எனவே, கடன் பெறும் விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் காப்பீடு செய்து கொள்ளலாம். கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்கள் (இ-சேவை மையங்கள்) அல்லது தேசிய பயிர்க் காப்பீட்டு இணையதளத்தில் உள்ள &quot;விவசாயிகள் கார்னர்&quot; வாயிலாக நேரடியாகவும் பதிவு செய்து கொள்ளலாம். காப்பீடு செய்வதற்கான இறுதி தேதி ஜூலை 31 எனவும் இக்காலக்கெடு எக்காரணத்திற்காகவும் நீட்டிக்க மாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விவசாயிகள் இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் / விதைப்பு அறிக்கை, வங்கிக் கணக்கு புத்தகத்தின் (Bank pass book) முதல் பக்க நகல், ஆதார் அட்டை (Aadhaar Card) நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டணத் தொகையை செலுத்தியபின் அதற்கான ரசீதையும் பெற்றுக்கொண்டு, அதில் தாங்கள் காப்பீடு செய்த பயிர் மற்றும் கிராமம்/ குறுவட்டம் உள்ளிட்ட விவரங்கள் சரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநரையோ, வேளாண்மை அலுவலரையோ, உதவி வேளாண்மை அலுவலரையோ வங்கி கிளைகளையோ அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலனுக்காக தமிழ்நாடு அரசு செயல்படுத்திவரும் இப்பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் தங்கள் மாவட்டங்களில் அறிவிக்கை செய்த பகுதிகளில் அறிவிக்கை செய்த பயிர்களைக் காப்பீடு செய்து பயனடையுமாறு அமைச்சர் வினோத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/july-31-is-the-last-day-for-farmers-to-take-out-crop-insurance-cukofb4"/>
        </item>
        <item>
            <title><![CDATA["70 ஆண்டுகால வைகை அணை பிரச்சினைக்கு 2 மாதங்களில் தீர்வு!" — அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆய்வு!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/minister-vows-2-month-fix-for-70-year-vaigai-dam-issue-videoshow-g6geky2</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/minister-vows-2-month-fix-for-70-year-vaigai-dam-issue-videoshow-g6geky2</guid>
            <pubDate>Wed, 24 Jun 2026 21:00:25 +0530</pubDate>
            <description><![CDATA[]]></description>
            <media:content url="https://www.youtube.com/embed/IGDaTZVOkSs" medium="video" height="350" width="560"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை கட்டப்பட்டு 70 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில், அங்கு பெருமளவில் மணல் மற்றும் வண்டல் மண் தேங்கியுள்ளது. இதனால் அணையின் நீர் சேமிப்பு திறன் தற்போது வெறும் 18-20% ஆகக் குறைந்துள்ளது. பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் உள்ள இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் வைகை அணையில் மேற்கொள்ளப்படவுள்ள தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதற்கான சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் மத்திய அரசின் ஒப்புதலை தமிழக அரசு ஏற்கனவே பெற்றுள்ளது. அடுத்த இரண்டு மாதங்களுக்குள் தூர்வாரும் பணிகளைத் தொடங்கி, வரவிருக்கும் மழைக்காலத்திற்குள் அணையின் நீர் சேமிப்பு திறனை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுமார் 4,000 விவசாயிகள் இந்த வண்டல் மண்ணை இலவசமாகப் பெறப் பதிவு செய்துள்ள நிலையில், தனியார் நபர்களுக்கு சட்டவிரோதமாக மண் விற்கப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் குறித்தும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/minister-vows-2-month-fix-for-70-year-vaigai-dam-issue-videoshow-g6geky2"/>
        </item>
        <item>
            <title><![CDATA[VijayaBaskar Join TVK: இபிஎஸ்-க்கு அடுத்த ஷாக்! தவெகவில் இணைய நாள் குறித்த விஜயபாஸ்கர்! முக்கிய பொறுப்பு ரெடி!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/ex-minister-vijayabaskar-set-to-join-tvk-lwgz2uu</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/ex-minister-vijayabaskar-set-to-join-tvk-lwgz2uu</guid>
            <pubDate>Thu, 25 Jun 2026 09:47:21 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;VijayBaskar Vs EPS: தவெக மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதிமுகவை சேர்ந்த சி.வி. சண்முகம். விஜயபாஸ்கர் 25 எம்எல்ஏக்கள் தவெக ஆட்சிக்கு ஆதரவாகவும், இபிஎஸ் தரப்பினர் எதிராகவும் வாக்களித்தனர். இதனையடுத்து இவர்களின் மாவட்ட செயலாளர்களின் பதவி பறிப்பு.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kvyej511v2xd4z71wmt5sjhq,imgname-vijayabaskar-3-1782359594017.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;VijayBaskar Vs EPS: தவெக மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதிமுகவை சேர்ந்த சி.வி. சண்முகம். விஜயபாஸ்கர் 25 எம்எல்ஏக்கள் தவெக ஆட்சிக்கு ஆதரவாகவும், இபிஎஸ் தரப்பினர் எதிராகவும் வாக்களித்தனர். இதனையடுத்து இவர்களின் மாவட்ட செயலாளர்களின் பதவி பறிப்பு.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜெயலலிதா மறைவை அடுத்து அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றதில் இருந்து உள்ளாட்சி, சட்டமன்றம், நாடாளுமன்றம் உள்ளிட்ட அனைத்து தேர்தல்களில் அதிமுக தோல்வியை கண்டு வருகிறது. இந்நிலையில் தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்து 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதனால் அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அதிமுகவில் உள்கட்சி பூசல் ஏற்பட்டது. அதாவது எஸ்.பி.வேலுமணி, சி.வி. சண்முகம். சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்கொடித் தூக்கினார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Actor Santhini: 3 முறை கர்ப்பமாகி கருக்கலைப்பு.. நம்பவைத்து ஏமாற்றிவிட்டார்.. அதிமுக முன்னாள் அமைச்சரால் கதறும் நடிகை..&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தவெக மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதிமுகவை சேர்ந்த சி.வி. சண்முகம். சி.விஜயபாஸ்கர் 25 எம்.எல்.ஏ.க்கள் தவெக ஆட்சிக்கு ஆதரவாகவும், இபிஎஸ் தரப்பினர் எதிராகவும் வாக்களித்தனர். இதனையடுத்து இவர்களின் மாவட்ட செயலாளர்களின் பதவி பறிக்கப்பட்டது. இதனிடையே யாரும் எதிர்பாராத விதமாக அதிமுக எம்எல்ஏக்களான மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா மற்றும் இசக்கி சுப்பையா ஆகிய 4 தங்களது பதவிகளை ராஜினாமா செய்த கையோடு தவெகவில் இணைந்தனர். அதன் பின்னர் பொதுச்செயலாளர் இபிஎஸ்யுடன் மீண்டும் சமரசம் உருவாகி அதிருப்தி அணியினர் மீண்டும் கட்சியில் ஐக்கியமாகினர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆனால் சி.விஜயபாஸ்கர், சி.வி. சண்முகம் அதிமுகவிற்கு செல்லாமல் தொடர்ந்து மௌனம் காத்து வந்தது மட்டுமல்லாமல் அவ்வப்போது அவரது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ பதவியை விஜயபாஸ்கர் கடந்த 16ம் தேதி ராஜினாமா செய்தார். இதனால் இவர் திமுகவில் இணையப்போகிறாரா அல்லது ஆளுகட்சியான தவெகவில் இணையப்போகிறாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் வைத்து அமைச்சரும், தவெக பொதுச்செயலாளருமான புஸ்ஸி ஆனந்தை விஜயபாஸ்கர் சந்தித்துள்ளார். வரும் 29ம் தேதி காலை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் தவெகவில் தனது ஆதரவாளர்களுடன் விஜயபாஸ்கர் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜயபாஸ்கருக்கு டெல்டா மாவட்டங்களை உள்ளடக்கி முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் விராலிமலை தொகுதி இடைத்தேர்தலிலும் அவரே வேட்பாளராக களமிறங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/ex-minister-vijayabaskar-set-to-join-tvk-lwgz2uu"/>
        </item>
        <item>
            <title><![CDATA[முதல்வர் சட்டமன்றத்தை ஒரு திரைப்பட அரங்கமாக மாற்றாமல் இருக்க வேண்டும் ! தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/assembly-is-not-a-theater-tamilisai-to-chief-minister-videoshow-m6qyrw9</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/assembly-is-not-a-theater-tamilisai-to-chief-minister-videoshow-m6qyrw9</guid>
            <pubDate>Thu, 25 Jun 2026 19:02:38 +0530</pubDate>
            <description><![CDATA[]]></description>
            <media:content url="https://www.youtube.com/embed/yLX9X9wm9qU" medium="video" height="350" width="560"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் (BJP) மூக்கிய தலைவர்களில் ஒருவரான தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தற்போதைய அரசியல் நிலவரங்கள், தமிழக அரசின் செயல்பாடுகள் மற்றும் கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து அவர் தனது கருத்துகளையும் விமர்சனங்களையும் முன்வைத்தார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/assembly-is-not-a-theater-tamilisai-to-chief-minister-videoshow-m6qyrw9"/>
        </item>
        <item>
            <title><![CDATA["நயினார் நாகேந்திரன் காமெடி பேசுகிறவர்.. அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது” - செங்கோட்டையன்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/sengottaiyan-calls-nainar-nagendran-s-comedy-unworthy-of-reply-videoshow-sm7e2ie</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/sengottaiyan-calls-nainar-nagendran-s-comedy-unworthy-of-reply-videoshow-sm7e2ie</guid>
            <pubDate>Wed, 24 Jun 2026 20:00:32 +0530</pubDate>
            <description><![CDATA[]]></description>
            <media:content url="https://www.youtube.com/embed/XW_VXy4yBPs" medium="video" height="350" width="560"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;நயினார் நாகேந்திரனின் கருத்துக்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், &quot;அவர் ஒரு காமெடி பேர்வழி, அவருக்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது&quot; என்று அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் அதிரடியாகப் பேசியுள்ளார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/sengottaiyan-calls-nainar-nagendran-s-comedy-unworthy-of-reply-videoshow-sm7e2ie"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Viral Video: பணத்தை பிரசாதமாக தரும் கருப்பசாமி! தமிழ்நாட்டில் இப்படி ஒரு கோவிலா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/spiritual/viral-video-karuppasamy-temple-gives-money-as-prasadam-in-tamil-nadu-sn1z2io</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/spiritual/viral-video-karuppasamy-temple-gives-money-as-prasadam-in-tamil-nadu-sn1z2io</guid>
            <pubDate>Fri, 26 Jun 2026 10:21:39 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Viral Video: தமிழ்நாட்டில் உள்ள ஒரு கோவிலில், பக்தர்களிடம் இருந்து எவ்வித காணிக்கையும் பெறாமல், அவர்களுக்குத் திரும்பப் பணத்தை பிரசாதமாக வழங்கப்படும் வினோத மற்றும் நெகிழ்ச்சியான பாரம்பரியம் சமூக ஊடகங்களில் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kw13hh7hs35xbae3vkj6yndx,imgname-chatgpt-image-jun-26--2026--10-03-48-am-1782448702705.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Viral Video: தமிழ்நாட்டில் உள்ள ஒரு கோவிலில், பக்தர்களிடம் இருந்து எவ்வித காணிக்கையும் பெறாமல், அவர்களுக்குத் திரும்பப் பணத்தை பிரசாதமாக வழங்கப்படும் வினோத மற்றும் நெகிழ்ச்சியான பாரம்பரியம் சமூக ஊடகங்களில் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வினாயகபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ வரம்தரும் மாளிகைப்பாறை கருப்பசாமி கோவில். இக்கோவிலில் அண்மையில் நடைபெற்ற இரவு நேர திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.&lt;/p&gt;&lt;p&gt;இந்த விழாவின் போது, கருப்பசாமி வேடமணிந்து அருள்வந்து ஆடிய பூசாரி, கூர்மையான வாளின் மீது ஏறி நின்று பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். அப்போது, அங்கு திரண்டிருந்த மக்களுக்குத் தன் கைகளாலேயே நாணயங்களை அள்ளிப் பிரசாதமாக வழங்கினார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இங்கு வழங்கப்படும் இந்த புனித நாணயங்கள் &quot;பிடிகாசு&quot; என்று அழைக்கப்படுகின்றன. கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் இருந்து எந்தவொரு கட்டணமோ அல்லது காணிக்கையோ பெறப்படுவதில்லை. மாறாக, அவர்களின் வாழ்வில் வளம் பெருகவும், தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கவும் இந்த பிடிகாசு பிரசாதமாக வழங்கப்படுகிறது.&lt;/p&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;View this post on Instagram&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&lt;p&gt;A post shared by The Brief India (@thebrief.in)&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&ldquo;கோவிலுக்கு வரும் மக்கள் எவ்வளவு கூட்டமாக இருந்தாலும், இந்த பிடிகாசை வாங்காமல் செல்வதில்லை. கருப்பசாமி தன் கைகளால் வழங்கும் இந்த ஒரு பிடிகாசு, தங்கள் வாழ்வில் பல நன்மைகளையும், செல்வச் செழிப்பையும் தரும் என்று பக்தர்கள் ஆழமாக நம்புகின்றனர்.&rdquo;&lt;/p&gt;&lt;p&gt;இதையும் படிங்க : Numerology : உங்களை கோடீஸ்வரராக்கும் மொபைல் எண்! மொபைல் எண்ணில் ஒளிந்திருக்கும் ரகசியம்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தட்டுகளிலும், துணிகளிலும் இந்த நாணயங்களைப் பிரசாதமாகப் பெற்றுச் செல்லும் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன. பணத்தாசை பிடித்துள்ள இன்றைய உலகில், பக்தர்களிடம் பணம் வாங்காமல் அவர்களுக்கே பணத்தைப் பிரசாதமாகக் கொடுக்கும் இந்த உன்னத வழக்கம், சமூக வலைத்தளங்களில் பலரது நெஞ்சங்களையும் நெகிழச் செய்துள்ளதுடன், பெரும் பாராட்டுகளையும் குவித்து வருகிறது.&lt;/p&gt;&lt;p&gt;இதையும் படிங்க : Astrology : ஜூன் 29 முதல் எந்தெந்த ராசிகளுக்கு ராஜயோகம்? உஷாரா இருக்க வேண்டியது எந்த ராசி? முழு விவரம்!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu</category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/spiritual/viral-video-karuppasamy-temple-gives-money-as-prasadam-in-tamil-nadu-sn1z2io"/>
        </item>
        <item>
            <title><![CDATA["Start Run, Stop Drugs" புதிய பாதை வகுத்த முதலமைச்சர் விஜய்.! ]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/cm-vijay-s-new-path-the-start-run-stop-drugs-plan-videoshow-toxw1go</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/cm-vijay-s-new-path-the-start-run-stop-drugs-plan-videoshow-toxw1go</guid>
            <pubDate>Fri, 26 Jun 2026 14:00:54 +0530</pubDate>
            <description><![CDATA[]]></description>
            <media:content url="https://www.youtube.com/embed/caMnzzo6N38" medium="video" height="350" width="560"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;அண்ணா நினைவிடத்தில் இருந்து தொடங்கிய இந்த ஓட்டத்தை முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்ததோடு, ஆயிரக்கணக்கான இளைஞர்கள், மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து சுமார் 6 கிலோமீட்டர் தூரம் ஓடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் இதேபோன்ற ஓட்டங்கள் நடத்தப்பட்டன.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/cm-vijay-s-new-path-the-start-run-stop-drugs-plan-videoshow-toxw1go"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Senthil Balaji: எதுக்கு இந்த பொழப்பு! இல்லைனா வழக்கு தான்! தவெக அரசுக்கு செந்தில் பாலாஜியின் தரமான பதிலடியும் எச்சரிக்கையும்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/former-minister-senthil-balaji-hits-back-at-tvk-government-v71pl38</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/former-minister-senthil-balaji-hits-back-at-tvk-government-v71pl38</guid>
            <pubDate>Fri, 26 Jun 2026 07:49:14 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். தற்போதைய அரசு தங்கள் நிர்வாகத் திறமையின்மையை மறைக்க, திமுக மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k5rb211ygejn79fgp6vyjysv,imgname-vijay-senthil-balaji-1758532273214.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். தற்போதைய அரசு தங்கள் நிர்வாகத் திறமையின்மையை மறைக்க, திமுக மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மின்துறை வெள்ளை அறிக்கை வெளியிட்டு திமுக மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்து மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமாருக்கு திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். அதில், தமிழ்நாடு மின்சாரவாரியத்தின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளனர். கடந்த ஐந்தாண்டுகள் திராவிட மாடல் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் நலிவடைந்து கிடந்த மின்சார வாரியம் காப்பாற்றப்பட்டது. கடந்த ஐந்தாண்டுகளில் எங்களின் தலைவர் முதலமைச்சராக இருந்த போது மின்துறைக்கு தேவையான நிதிகளை ஒதுக்கி சீரான மின் விநியோகத்திற்கு வித்திட்டார். கடந்த ஐந்தாண்டு திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டின் மின் தேவையானது ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்தே வந்துள்ளன. அப்படி மின் தேவை அதிகரித்த போதும் மக்கள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இப்போது வெளியிடப்பட்டுள்ள வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள வருவாய் பற்றாக்குறையானது 2011-16 இல் 56,361 கோடி , 2016-21 இல் 58,534 கோடி ரூபாய். முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் மூன்று கட்டங்களாக மின்சார கட்டணம் ஏற்றப்பட்டது. 37% , 3.5% , 16% என அந்த கட்டண உயர்வு இருந்தது. அப்படி மின் கட்டணம் ஏற்றப்பட்ட போது கூட வருவாய் பற்றாக்குறை என்பது ரூ. 56,000 கோடி. அதற்கடுத்து ரூ58,000 கோடி என்ற அளவிற்கு உயர்ந்திருந்தது. ஆனால் கடந்த எங்களின் ஐந்தாண்டு ஆட்சியில் வருவாயானது ரூ 1,48,77, 856 உயர்ந்து ரூ.4,97,996 ஆக இருந்தது. வருவாய் பற்றாக்குறை ரூ 34,447 கோடியாக குறைக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் 58,000 வருவாய் அதிகரித்த போது செலவும் அதிகரித்துள்ளது பற்றி கூறும் மின்சாரத்துறை அமைச்சர் அந்த செலவுகள் எதற்காக செய்யப்பட்டுள்ளன என்ற தகவலை மட்டும் மறைத்து விட்டார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதையும் வெளிப்படையாக மக்கள் முன் கூறி இருக்க வேண்டும் ஆனால் அதை தவெக அரசு மறைத்துவிட்டது. அதிமுக ஆட்சிக்காலத்தில் 13.5% வட்டி க்கு பல்வேறு வங்கிகளில் கடன் வாங்கப்பட்டிருந்தது. அதை எல்லாம் சீர் படுத்தி 9.5% வட்டி என்ற அளவிற்கு குறைக்கப்பட்டது. இதன் மூலம் ஆண்டுக்கு 1200-1500 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டது. அதேபோல பிளை ஆஸ் (fly ash) விற்பனை ஆண்டுக்கு 90 கோடி ரூபாய் என்றிருந்ததை ஆண்டுக்கு 160 கோடி ரூபாய் என்ற அளவிற்கு வருவாய் உயர்த்தப்பட்டது.&lt;/p&gt;&lt;p&gt;2019 - 20 ஆம் ஆண்டு தமிழ் நாட்டின் மின் தேவை என்பது 94,947 மில்லியன் யுனிட் அதுவே 2020-21 இல் 93,344 , 2021-22 இல் 98,674 மில்லியன் யுனிட், 2022-23 இல் 1,03,546 மில்லியன் யுனிட், 2023-24 இல் 1,11,504 மில்லியன் யுனிட், 2024-25 இல் 1,16,813 மில்லியன் யுனிட் ஆக 94,947 மில்லியன் யுனிட் லிருந்து 1,16,813 மில்லியன் யுனிட் ஆக மின் தேவை அதிகரித்துள்ளது. ஏறத்தாழ 25,000 மில்லியன் யுனிட் அதிகரித்துள்ளது. அப்படி அதிகரிக்கும் போது அதற்கான கொள்முதலை அதிகரிக்க வேண்டும் , உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இதற்கான செலவினம் என்பதும் அதிகரித்துள்ளது இதனை வெள்ளை அறிக்கையில் வெளியிட்டிருக்க வேண்டும். அதேபோல இந்த வெள்ளை அறிக்கையில் திமுகவின் திட்டங்களையே பட்டியலிட்டுள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;2021 இல் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்ற போது மின்சார வாரியத்தின் கடன் 1,59,731கோடி இருந்தது. ஆண்டுக்கு 15,000 கோடி வட்டி மட்டுமே கட்டி வந்தோம். ஐந்தாண்டுகளில் முந்தைய ஆட்சியில் வாங்கிய கடனுக்கான வட்டி மட்டுமே 75,000 கோடி கட்டி உள்ளோம். இதை கூறாமல் மறைத்துள்ளனர். அதேபோல அறப்போர் இயக்கம் தொடர்ந்துள்ள வழக்கில் ராஜஸ்தான் மின் மாற்றி கொள்முதலோடு தமிழ்நாட்டை ஒப்பிடுவதே தவறானது. நமது டெண்டர் முறை வேறு அவர்களுடையது வேறு. நாம் 25 ஆண்டுகள் நிலைத்திருக்க கூடிய தரமான மின் மாற்றிகளை வாங்குகிறோம். ஆனால் அவர்களுடைய மின்மாற்றி வாழ் நாள் 16 ஆண்டுகள் தான். அதே போல ஐந்தாண்டுகள் மெயிண்டனன்ஸ் அந்நிறுவனங்களின் பொறுப்பு அதற்காக நாம் 5% நிதியை பிடித்தம் செய்து வைத்துள்ளோம். ஆனால் ராஜஸ்தான் அரசு மூன்று வருடங்கள் மெயிண்டனன்ஸ், 0.5% நிதி மட்டுமே பிடித்தம் செய்கிறார்கள். தரமான பொருளுக்கும் டூப்ளிகேட் பொருளுக்குமான விலை வேறு வேறு ஆக தான் இருக்கும். நாம் தரமான மின் மாற்றியை வாங்குகி உள்ளோம். அனைத்து டெண்டர்களும் ஆன்லைன் முறையில் வெளிப்படையாக நடந்துள்ளது. நாம் நிர்ணயித்துள்ள தர அளவுகளை குறைக்காமல் , நிபந்தனைகளை மாற்றாமல் புதிய அரசு எவ்வளவு ரூபாய்க்கு கொள்முதல் செய்வார்கள் என்பதை பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதேபோல கடந்த ஆட்சியில் எந்த கட்டமைப்பும் செய்யவில்லை என சொல்கிறார் அமைச்சர் ஆனால் அவர் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையிலேயே எங்களது ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட கட்டமைப்பு நடவடிக்கைகளும், புதிய மின் உற்பத்தி நிலையங்களும் இடம் பெற்றுள்ளன. 99,573 மின்மாற்றிகள் புதியதாக நிறுவப்பட்டுள்ளதை வெள்ளை அறிக்கையிலேயே கூறியுள்ளார்கள். 423 துணை மின் நிலையங்கள் அறிவிக்கப்பட்டு பல துணை மின் நிலையங்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இப்படி வெள்ளை அறிக்கையிலேயே நாங்கள் செய்த திட்டங்கள் இடம் பெற்றிருந்தும் அதை திரித்து அமைச்சர் பேசி உள்ளார். வட சென்னை அனல் மின் திட்டம் நிலை 3 , உடன் குடி மின் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டன. எண்ணூர் அனல் மின் நிலைய பணிகள் 75% நிறைவு பெற்றது.; குண்டாறு மின் திட்ட பணிகள் 85% முடிந்துவிட்டது; கொல்லிமலை மின் திட்டம் 90% முடிந்துவிட்டது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சமீபத்தில் தவெக அரசு வெளியிட்ட 300 ஊழியர்களுக்கான பதவி உயர்வு என்பது திமுக ஆட்சியில் இறுதி செய்யப்பட்டது. அதேபோல சமீபத்தில் வழங்கிய பணி ஆணைகள் கடந்த ஆண்டு திமுக ஆட்சியில் tnpsc தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இப்படி திமுக அரசு செய்த செயல்களுக்கு தங்களின் ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை செய்து வருகின்றனர். ஏன் இதனை வெளிப்படையாக இந்த அரசு தெரிவிக்கவில்லை. மேலும் கடந்த ஆட்சியில் மின்வாரியத்துறை தொடர்பாக எங்கள் தலைவரது குடும்பத்தையோ, எதிர்க்கட்சி தலைவர் அவர்களின நண்பர்களையோ இணைத்து அவதூறு பரப்பினால் அவர்கள் மீது வழக்கு தொடுக்கப்படும்.&lt;/p&gt;&lt;p&gt;இப்போது முதல்வரின் தனி செயலர் ஆக நியமிக்கப்பட்டுள்ள அவரது சினிமா proவான ஜெகதீஷ் தான் தமிழ்நாட்டின் மொத்த நிர்வாகத்தையும் பார்க்கிறார் என சொன்னால் அதை ஏற்றுக்கொள்கிறார்களா.? மின் வெட்டு பிரச்சினையால் மக்கள் அவதியுற்று வருகின்றனர். அதை தீர்க்க ஆய்வுக் கூட்டமே நடத்தவில்லை. அதை நான் எடுத்து சொல்லி கேள்வி கேட்டும் இன்று வரை பதில் இல்லை. தங்களின் நிர்வாகத் திறமை யின்மையை மூடி மறைக்க திமுக மீது ஆதாரமற்ற அவதூறுகளை கூறிக்கொண்டு இருக்காமல் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க இந்த அரசு நவடிக்கை எடுக்க வேண்டும் என செந்தில் பாலாஜி வலியுறுத்தியுள்ளார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/former-minister-senthil-balaji-hits-back-at-tvk-government-v71pl38"/>
        </item>
        <item>
            <title><![CDATA[RO Water: ஷாக் ரிப்போர்ட்..! RO தண்ணீரிலும் பாக்டீரியா.! புதிய ஆய்வு வெளியிட்ட எச்சரிக்கை!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/ro-water-shock-report-bacteria-found-even-in-purified-water-new-study-warns-xmegrgc</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/ro-water-shock-report-bacteria-found-even-in-purified-water-new-study-warns-xmegrgc</guid>
            <pubDate>Thu, 25 Jun 2026 14:25:09 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;சென்னையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், RO மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரில் மூன்றில் ஒரு பங்கு மாதிரிகளில் E. coli பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. &amp;nbsp;RO கருவிகளின் செயல்திறன் அதன் சரியான பராமரிப்பைப் பொறுத்தே அமையும் என்பதை வலியுறுத்துகிறது.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kvyxy5c30cg3cz65vytdyw2v,imgname-jun-25--2026--01-50-06-pm--1--1782375716226.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சென்னையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், RO மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரில் மூன்றில் ஒரு பங்கு மாதிரிகளில் E. coli பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. &amp;nbsp;RO கருவிகளின் செயல்திறன் அதன் சரியான பராமரிப்பைப் பொறுத்தே அமையும் என்பதை வலியுறுத்துகிறது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வீட்டில் RO (Reverse Osmosis) வாட்டர் பியூரிஃபையர் இருந்தால் குடிநீர் 100 சதவீதம் பாதுகாப்பானது என்று பலரும் நம்புகின்றனர். குறிப்பாக நகரங்களில் குழாய் நீரின் தரம் குறித்து அச்சம் நிலவுவதால், பெரும்பாலான குடும்பங்கள் RO கருவிகளை பயன்படுத்தி வருகின்றன. ஆனால், சென்னையில் நடத்தப்பட்ட புதிய அறிவியல் ஆய்வு அந்த நம்பிக்கையையே கேள்விக்குறியாக்கியுள்ளது. RO மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரிலும் ஆபத்தான E. coli பாக்டீரியா கண்டறியப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த ஆய்வை ஐஐடி மதராஸ், அவின் பல்கலைக்கழகம், ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மற்றும் மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இணைந்து மேற்கொண்டுள்ளனர். சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள 262 வீடுகளில் இருந்து குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. சுத்திகரிக்கப்படாத நீர் மட்டுமின்றி, RO கருவி மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரும் பரிசோதிக்கப்பட்டது. அதன் முடிவுகள் பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆய்வில் பரிசோதிக்கப்பட்ட RO குடிநீர் மாதிரிகளில் சுமார் 31 சதவீதத்தில் E. coli பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 74 சதவீத மாதிரிகளில் Coliform வகை பாக்டீரியாக்களும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே நேரத்தில் சுத்திகரிக்கப்படாத நீரில் E. coli மற்றும் Coliform பாக்டீரியாக்கள் அதிக அளவில் இருந்தாலும், RO அமைப்பு அவற்றை முழுமையாக அகற்றவில்லை என்பது இந்த ஆய்வின் முக்கிய கண்டுபிடிப்பாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;E. coli என்பது மனிதர்கள் மற்றும் விலங்குகளின் குடலில் இயல்பாக வாழும் ஒரு வகை பாக்டீரியா. ஆனால், அது குடிநீரில் இருப்பது மலக்கழிவு மூலம் நீர் மாசுபட்டிருக்கலாம் என்பதற்கான முக்கிய அறிகுறியாக மருத்துவர்கள் கருதுகின்றனர். இந்த பாக்டீரியா கலந்த தண்ணீரை குடித்தால் வயிற்றுப்போக்கு, வாந்தி, கடுமையான வயிற்றுவலி, காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். சிலருக்கு குடல் தொற்று தீவிரமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய நிலையும் உருவாகலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;RO தொழில்நுட்பம் தண்ணீரில் உள்ள உப்புகள், கன உலோகங்கள், வேதிப்பொருட்கள் மற்றும் சில நுண்ணுயிர்களை நீக்குவதில் திறமையானது. இருப்பினும், கருவியின் ஃபில்டர்கள் மற்றும் மெம்பிரேன்கள் நீண்ட நாட்களாக மாற்றப்படாமல் இருந்தால் அதன் செயல்திறன் குறையலாம். அதேபோல், RO சேமிப்பு தொட்டிகளை சுத்தம் செய்யாமல் இருப்பது, குடிநீரை அழுக்கான பாத்திரங்களில் சேமிப்பது, குழாய்களில் ஏற்படும் மாசுபாடு போன்ற காரணங்களால் சுத்திகரிக்கப்பட்ட நீரும் மீண்டும் பாக்டீரியாவால் பாதிக்கப்படலாம் என்று ஆய்வாளர்கள் விளக்குகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;E. coli பாதிப்பு அனைவரையும் தாக்கக்கூடியதாக இருந்தாலும், குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் அதிக ஆபத்தில் இருப்பதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இவர்களுக்கு சாதாரண வயிற்றுப்போக்கே தீவிரமான உடல்நல பாதிப்புகளாக மாறும் அபாயம் இருப்பதால், குடிநீரின் தரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;RO கருவி வாங்கிவிட்டால் கடமை முடிந்துவிடாது. குறிப்பிட்ட கால இடைவெளியில் ஃபில்டர்களை மாற்றுவது, மெம்பிரேன்களை பரிசோதிப்பது, சேமிப்பு தொட்டிகளை சுத்தம் செய்வது, தரமான சேவை மையங்கள் மூலம் பராமரிப்பு செய்வது ஆகியவை கட்டாயம் மேற்கொள்ளப்பட வேண்டும். இல்லையெனில், RO கருவி இருந்தும் அதன் முழு பலன் கிடைக்காமல் போகலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த ஆய்வு RO தொழில்நுட்பம் பயனற்றது என்று கூறவில்லை. மாறாக, RO கருவியின் செயல்திறன் அதன் பராமரிப்பைப் பொறுத்தே அமையும் என்பதை வலியுறுத்துகிறது. தண்ணீரின் வேதியியல் தரத்தை மேம்படுத்தும் RO, நுண்ணுயிர் பாதுகாப்பை உறுதி செய்ய தொடர்ந்து சரியான பராமரிப்பு அவசியம் என்பதை இந்த ஆய்வு நினைவூட்டுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&quot;RO தண்ணீர் என்பதால் எந்த ஆபத்தும் இல்லை&quot; என்ற எண்ணத்தை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. வீட்டில் RO கருவி இருந்தாலும், அதை முறையாக பராமரிக்கவில்லை என்றால் குடிநீரில் மீண்டும் பாக்டீரியா உருவாகும் வாய்ப்பு இருப்பதாக இந்த ஆய்வு எச்சரிக்கிறது. எனவே, குடிநீரின் பாதுகாப்பை உறுதி செய்ய RO கருவியை நம்புவது மட்டுமல்ல, அதன் பராமரிப்பு மற்றும் சுத்தமான பயன்பாட்டையும் மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்பதே இந்த ஆய்வின் மிக முக்கியமான செய்தியாகும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/ro-water-shock-report-bacteria-found-even-in-purified-water-new-study-warns-xmegrgc"/>
        </item>
    </channel>
</rss>
