<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes"?>
<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Thu, 04 Jun 2026 16:28:45 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss/tamilnadu" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[TN Rain Alert: சென்னை டூ கன்னியாகுமரி! 5 நாட்களுக்கு அடித்து ஊத்தப்போகும் மழை! மக்களே எச்சரிக்கை!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/tn-rain-alert-heavy-rain-from-chennai-to-kanyakumari-pbaw6pw</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/tn-rain-alert-heavy-rain-from-chennai-to-kanyakumari-pbaw6pw</guid>
            <pubDate>Thu, 04 Jun 2026 16:28:43 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;TN Rain Alert: தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை கனமழை கொட்டித்தீர்க்க போகிறது. இது குறித்த முழு விவரங்களை பார்ப்போம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01khwg265xkvvh3mnsckbsnk17,imgname-tamilnadu-rain-1-1771556640957.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;TN Rain Alert: தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை கனமழை கொட்டித்தீர்க்க போகிறது. இது குறித்த முழு விவரங்களை பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தென்மேற்கு பருவமழை கேரளப்பகுதிகளில் இன்று (04-06-2026) துவங்கியுள்ளது. தென்மேற்கு பருவமழை மேலும் தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடலின் மீதமுள்ள பகுதிகளிலும், மத்தியமேற்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகளிலும், லட்சத்தீவு பகுதிகளிலும், கேரளா - கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் சில பகுதிகளிலும், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலும், மேலும் தென்மேற்கு, மத்தியமேற்கு, மத்தியகிழக்கு மற்றும் வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலும் இன்று (4 ஜூன் 2026) முன்னேறியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜூன் 4ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திருப்பூர், திண்டுக்கல், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சென்னை டூ கன்னியாகுமரி&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஜூன் 5ம் தேதி கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர், மதுரை, சிவகங்கை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சேலம், திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவள்ளூர், வேலூர், செங்கல்பட்டு மற்றும் ஈரோடு மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன்கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;6ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பூர், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.&lt;/p&gt;&lt;p&gt;7ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;8ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். 9ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/tn-rain-alert-heavy-rain-from-chennai-to-kanyakumari-pbaw6pw"/>
        </item>
        <item>
            <title><![CDATA[அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் போர்டு மற்றும் டிஜிட்டல் வசதிகள் துவக்கம்.]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/government-schools-enter-digital-era-with-smart-boards-videoshow-qqexwlq</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/government-schools-enter-digital-era-with-smart-boards-videoshow-qqexwlq</guid>
            <pubDate>Thu, 04 Jun 2026 14:02:48 +0530</pubDate>
            <description><![CDATA[]]></description>
            <media:content url="https://geo.dailymotion.com/player/x1tbu.html?video=xad5268" medium="video" height="768" width="1024"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்வி உபகரணங்களை வழங்கியதோடு, நவீன கற்றல் வசதிக்கான ஸ்மார்ட் போர்டுகளையும் (Smart Boards) முறைப்படி தொடங்கி வைத்தார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/government-schools-enter-digital-era-with-smart-boards-videoshow-qqexwlq"/>
        </item>
        <item>
            <title><![CDATA[TVK vs DMK: புறக்கணித்த மேயர்... புறந்தள்ளிய எம்.எல்.ஏ! அரசு விழாவில் அரங்கேறிய பனிப்போர்!  சென்னையில் அரங்கேறும்  ‘ஈகோ’ யுத்தம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/politics/tvk-vs-dmk-mayor-snubs-mla-sidelined-cold-war-erupts-at-government-event-an-ego-battle-unfolds-in-chennai-oae1g85</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/politics/tvk-vs-dmk-mayor-snubs-mla-sidelined-cold-war-erupts-at-government-event-an-ego-battle-unfolds-in-chennai-oae1g85</guid>
            <pubDate>Thu, 04 Jun 2026 13:54:11 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;சென்னை மாநகராட்சி பள்ளி விழா ஒன்றில், மேயர் பிரியாவிற்கும் தவெக எம்.எல்.ஏ பல்லவிக்கும் இடையே 'ரிப்பன்' வெட்டுவதிலும், 'மெழுகுவர்த்தி' ஏற்றுவதிலும் ஈகோ மோதல் ஏற்பட்டது. இது திமுக - தவெக இடையேயான அரசியல் போட்டியின் தீவிரத்தை காட்டுகிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kt8tkzk4xy14pvcvx0zpv65e,imgname-chatgpt-image-jun-4--2026--01-33-38-pm--1--1780560297571.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சென்னை மாநகராட்சி பள்ளி விழா ஒன்றில், மேயர் பிரியாவிற்கும் தவெக எம்.எல்.ஏ பல்லவிக்கும் இடையே 'ரிப்பன்' வெட்டுவதிலும், 'மெழுகுவர்த்தி' ஏற்றுவதிலும் ஈகோ மோதல் ஏற்பட்டது. இது திமுக - தவெக இடையேயான அரசியல் போட்டியின் தீவிரத்தை காட்டுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தி.மு.க-விற்கும், புதிதாக களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கும் (த.வெ.க) இடையேயான அரசியல் மோதல் அடித்தட்டு அளவில் தீவிரமடைந்துள்ளது. அதற்குச் சான்றாக, சென்னை திரு.வி.க நகரில் உள்ள மாநகராட்சிப் பள்ளி விழா ஒன்றில் சென்னை மேயர் பிரியாவிற்கும், த.வெ.க எம்.எல்.ஏ பல்லவிக்கும் இடையே அரங்கேறியுள்ள &lsquo;மெழுகுவர்த்தி&rsquo; மற்றும் &lsquo;ரிப்பன்&rsquo; அரசியல் விவாதப் பொருளாக மாறியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சென்னை உருது பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளி புதிய கட்டடத் திறப்பு விழா என அடுத்தடுத்து நடந்த அரசு நிகழ்ச்சிகளில், மக்கள் பிரதிநிதிகளுக்கு இடையே நிலவும் பனிப்போர் பகிரங்கமாக வெளிப்பட்டுள்ளது. கட்டடத் திறப்பு விழாவின் போது, ஒரே ஒரு ரிப்பனை வெட்டுவதற்கு மேயர் பிரியாவும் த.வெ.க எம்.எல்.ஏ பல்லவியும் முண்டியடித்துக் கொண்டு காட்டிய ஆர்வம் அங்கிருந்தோரை முகம் சுளிக்க வைத்தது. &quot;ஒரு ரிப்பன்... இரு கத்திகள்&quot; என்ற நிலைக்கு இருதரப்பும் போட்டி போட்டன.&lt;/p&gt;&lt;p&gt;இதன் தொடர்ச்சியாக, குத்துவிளக்கேற்றும் நிகழ்வின் போது அரசியல் ஈகோ உச்சக்கட்டத்தை எட்டியது. மேயர் பிரியா விளக்கேற்றிய பின், அடுத்ததாக விளக்கேற்ற எம்.எல்.ஏ பல்லவி கையை நீட்டியுள்ளார். ஆனால், மேயர் பிரியா அவருக்கு மெழுகுவர்த்தியைத் தராமல், அருகில் இருந்த அதிகாரிகளுக்குக் கொடுத்து பல்லவியைப் புறக்கணித்ததாகக் கூறப்படுகிறது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அரசியலில் பழிவாங்கும் படலம் உடனடியாகவே அரங்கேறியது. அடுத்த நிகழ்வில், மேயர் பிரியா அதே மெழுகுவர்த்தியை எம்.எல்.ஏ பல்லவியிடம் நீட்டியபோது, முந்தைய புறக்கணிப்புக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பல்லவி அதை வாங்க மறுத்து அங்கிருந்து நகர்ந்தார். இந்தத் தற்காப்புப் பதிலடியை அங்கிருந்த த.வெ.க தொண்டர்கள் கைகளைத் தட்டி ஆரவாரத்தோடு வரவேற்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த மோதல் குறித்து த.வெ.க எம்.எல்.ஏ பல்லவி பேசுகையில், தங்களின் அரசியல் அணுகுமுறையைத் தெளிவுபடுத்தியுள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;&quot;விட்டுக்கொடுக்குறதால நாம ஒன்னும் கெட்டுப்போகமாட்டோம். எங்க தளபதியே (விஜய்) பொறுமையா இருக்குறதால தான் இந்த இடத்துக்கு வந்திருக்காரு. அவருக்கு பின்னாடி இருக்குற நாங்களும் பொறுமையா தான் இருப்போம். பொறுமையா இருக்குறதால நாம ஒன்னும் தாழ்ந்து போயிட மாட்டோம்ல...&quot; என்று அவர் பேசியிருப்பது, தி.மு.க-வின் ஆதிக்கப் போக்குக்கு எதிராக த.வெ.க தொண்டர்களிடையே ஒரு தார்மீக பலத்தை உருவாக்க முயல்வதைக் காட்டுகிறது. அதேநேரம், ஆளுங்கட்சியின் அதிகாரத் தோரணைக்குத் தங்களின் அமைதியே தகுந்த பதிலடி என்றும் அவர் மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த மோதல்களுக்குப் பின்னால் வெறும் தனிநபர் ஈகோ மட்டுமே இல்லை; ஆழமான அரசியல் காரணங்களும் உண்டு. தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலில், த.வெ.க தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில் &amp;nbsp;சென்னை மேயர் பிரியா இதுவரை அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆளுங்கட்சியான தி.மு.க-வின் மேயர், மாற்று அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ள த.வெ.க-வை அங்கீகரிக்கத் தயங்குவதே இந்த நிர்வாக ரீதியிலான புறக்கணிப்புகளுக்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அரசு விழாக்கள் என்பது மக்களுக்கான திட்டங்களைக் கொண்டு சேர்க்கும் தளமே தவிர, அரசியல் கட்சிகள் தங்களின் பலத்தைக் காட்டும் போர்க்களம் அல்ல. மேயர் பிரியாவின் புறக்கணிப்பு அரசியலும், அதற்கு எம்.எல்.ஏ பல்லவியின் 'பொறுமை' கலந்த பதிலடியும், வரவிருக்கும் நாள்களில் தி.மு.க மற்றும் த.வெ.க இடையேயான மோதல் இன்னும் தீவிரமடையும் என்பதையே உணர்த்துகிறது. சென்னையில் தொடங்கியுள்ள இந்த 'ஈகோ' யுத்தம், தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசியல் திசையையும் மாற்றியமைக்கும் காரணியாக மாறக்கூடும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/politics/tvk-vs-dmk-mayor-snubs-mla-sidelined-cold-war-erupts-at-government-event-an-ego-battle-unfolds-in-chennai-oae1g85"/>
        </item>
        <item>
            <title><![CDATA[TNEB: 18 ஹார்டு டிஸ்க்குகள் திருட்டு! மின்வாரிய அதிகாரிகளின் துணையின்றி நடந்திருக்க வாய்ப்பு இல்லை! ஊழல் ஆதாரங்களை அழிக்க நடந்த சதியா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/18-hard-disks-stolen-it-is-unlikely-to-have-occurred-without-the-complicity-of-electricity-board-officials-v6ap3ao</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/18-hard-disks-stolen-it-is-unlikely-to-have-occurred-without-the-complicity-of-electricity-board-officials-v6ap3ao</guid>
            <pubDate>Thu, 04 Jun 2026 13:38:52 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Hard Disks Stolen: சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரியத் தலைமையகத்தில், நிலக்கரி கொள்முதல் மற்றும் டெண்டர் விவரங்கள் அடங்கிய 18 ஹார்டு டிஸ்க்குகள் காணாமல் போயுள்ளன. இது ஊழல் ஆதாரங்களை அழிக்கும் சதியாக இருக்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kt8sz9zjnjcej5wf1j8v45vs,imgname-tamil-nadu-electricity-boar-1780559620082.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Hard Disks Stolen: சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரியத் தலைமையகத்தில், நிலக்கரி கொள்முதல் மற்றும் டெண்டர் விவரங்கள் அடங்கிய 18 ஹார்டு டிஸ்க்குகள் காணாமல் போயுள்ளன. இது ஊழல் ஆதாரங்களை அழிக்கும் சதியாக இருக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரியத் தலைமையகத்தில் 18 ஹார்டு டிஸ்க்குகள் காணவில்லை என்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ஹார்டு டிஸ்குகளில் நிலக்கரி கொள்முதல் முதல் டெண்டர், ரகசிய ஆவணங்கள் வரை இருப்பதாகவும், இந்த திருட்டு கடந்த மே 16, 17-ம் தேதிகளில் நடந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மின்வாரிய தலைமை அலுவலகத்திற்குள் வெளியாள்கள் நுழைய வாய்ப்பில்லை. எனவே, மின்வாரிய அதிகாரிகளின் துணையில்லாமல் இந்த திருட்டு நடந்திருக்க முடியாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதில், சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் கணினிகளில் மிக முக்கியமான தரவுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த 18 ஹார்டி டிஸ்க்குகள் திருடப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. அரசுத்துறை அலுவலகத்திலிருந்து மிக முக்கியமான தரவுகள் திருடப்பட்டிருப்பதும், அதற்கு சாதகமான சூழல் நீண்டகாலமாக உருவாக்கி வைக்கப்பட்டிருப்பதும் கண்டிக்கத்தக்கவை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;திருடப்பட்ட ஹார்டு டிஸ்குகளில் நிலக்கரி கொள்முதல், ஒப்பந்தங்கள், ஏற்கனவே நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான தரவுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன என்பதால், மின்சார வாரியத்தில் ஏற்கனவே நடைபெற்ற ஊழல்களுக்கான ஆதாரங்களை அழிப்பதற்காக நடந்த சதியாக இருக்கக்கூடும் என்று ஐயங்கள் எழுந்துள்ளன. மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 18 ஹார்டு டிஸ்குகள் திருடப்பட்டதாக கூறப்படும் போதிலும், இதுவரை 8 ஹார்டு டிஸ்குகள் காணாமல் போனதாக மட்டுமே காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உண்மையில் 18-க்கும் மேற்பட்ட ஹார்டு டிஸ்குகள் காணாமல் போயிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மின்வாரிய தலைமை அலுவலகத்திற்குள் வெளியாள்கள் நுழைய வாய்ப்பில்லை. எனவே, மின்வாரிய அதிகாரிகளின் துணையில்லாமல் இந்தத் திருட்டு நடந்திருக்க முடியாது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ்நாட்டின் மிக முக்கியமான 10 அரசு அலுவலகங்களை பட்டியலிட்டால் அதில் மின்சார வாரியத் தலைமை அலுவலகமும் கண்டிப்பாக இடம் பெறும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த அலுவலகத்தில் கடந்த ஐந்தாண்டுகளாகவே கண்காணிப்பு காமிராக்கள் வேலை செய்யவில்லை என்றும், தரகர்கள் நடமாட்டத்தை கண்காணிக்கக் கூடாது என்பதற்காக திட்டமிட்டே இவ்வாறு செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ்நாட்டில் அதிக ஊழல் நடைபெறும் துறைகளில் மின்துறை மிகவும் முக்கியமானது. அதனால் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்குகளை திருடியவர்கள் யார்? அதற்கான காரணம் என்ன? ஊழல்களுக்கான ஆதாரங்களை அழிப்பதற்காகத் தான் இவ்வாறு செய்யப்பட்டதா? ஐந்தாண்டுகளுக்கு மேலாக கண்காணிப்பு காமிராக்கள் செயல்படாதது ஏன்? என்பது குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/18-hard-disks-stolen-it-is-unlikely-to-have-occurred-without-the-complicity-of-electricity-board-officials-v6ap3ao"/>
        </item>
        <item>
            <title><![CDATA[எங்கள் சின்னத்தில் போட்டியிடவே விருப்பம்; ஏன் முடியவில்லை? துரை வைகோ பதில்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/durai-vaiko-explains-the-party-symbol-hurdle-videoshow-0ey35rg</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/durai-vaiko-explains-the-party-symbol-hurdle-videoshow-0ey35rg</guid>
            <pubDate>Thu, 04 Jun 2026 13:02:40 +0530</pubDate>
            <description><![CDATA[]]></description>
            <media:content url="https://geo.dailymotion.com/player/x1tbu.html?video=xad4t9e" medium="video" height="768" width="1024"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;திமுக சின்னத்தில் போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டதாக கூறினார். இதை துரதிர்ஷ்டம் என்று கூறிய அவர், தவறு என்று சொல்ல முடியாது என்றார். மேலும், ஒரு கட்சியின் வேட்பாளர் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது சரியான நடைமுறை அல்ல என்றும், கூட்டணியில் இருந்தபடியே அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி திருத்துவதற்கான வாய்ப்பு அதிகம் என்றும் துரை வைகோ வலியுறுத்தினார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/durai-vaiko-explains-the-party-symbol-hurdle-videoshow-0ey35rg"/>
        </item>
        <item>
            <title><![CDATA[12th Mark Sheet Corrections: ஜூன் 8 வரைக்கும் தான் டைம்..! பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் திருத்தத்திற்கு கடைசி வாய்ப்பு!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/government-examinations-department-offers-final-opportunity-for-plus-2-mark-sheet-corrections-vhm3iet</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/government-examinations-department-offers-final-opportunity-for-plus-2-mark-sheet-corrections-vhm3iet</guid>
            <pubDate>Thu, 04 Jun 2026 11:49:36 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;school education department: மேல்நிலை பொதுத் தேர்வு மதிப்பெண் பட்டியலில் உள்ள மாணவர்களின் பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள பள்ளிகளுக்கு இறுதி வாய்ப்பு வழங்கப்படுவதாக அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jfkehr27r0hbnkaqrdarx634,imgname-whatsapp-image-2024-12-21-at-07.14.04--1-.jpeg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;school education department: மேல்நிலை பொதுத் தேர்வு மதிப்பெண் பட்டியலில் உள்ள மாணவர்களின் பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள பள்ளிகளுக்கு இறுதி வாய்ப்பு வழங்கப்படுவதாக அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேல்நிலை பொதுத் தேர்வு மதிப்பெண் பட்டியலில் உள்ள மாணவர்களின் பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள பள்ளிகளுக்கு இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் சசிகலா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: மேல்நிலை பொதுத் தேர்விற்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள, அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் அரசுத் தேர்வுத் துறையால் பலமுறை வாய்ப்பளிக்கப்பட்டது. பெயர்ப்பட்டியல் தயாரிக்க போதுமான கால அவகாசமும், திருத்தங்கள் மேற்கொள்ள பல வாய்ப்புகளும் அளிக்கப்பட்ட நிலையிலும் கூட சில பள்ளிகளின் பெயர்ப்பட்டியல்களில் திருத்தம் முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை என்பது தேர்வு முடிவு வெளியிட்ட பின்னரும் சில பள்ளிகளிலிருந்து திருத்தங்கள் மேற்கொள்ளக் கோரி இவ்வலுவலகத்தில் பெறப்படும் கடிதங்கள் வாயிலாக தெரியவருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எனவே தற்போது தேர்வு முடிவு வெளியிடப்பட்ட மேல்நிலை பொதுத் தேர்விற்கான மதிப்பெண் பட்டியலில் தேர்வர்களது தலைப்பெழுத்து, பெயர் (ஆங்கிலம் / தமிழ்) பிறந்ததேதி, புகைப்படம், பயிற்றுமொழி (Medium of Instructions) மொழிப்பாடம் (First Language) ஆகியவற்றில் உள்ள திருத்தங்களை மேற்கொள்ள தற்போது இறுதியாக ஒரு வாய்ப்பு பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒவ்வொரு ஆண்டும் இம்மாதிரியாக பலமுறை மாணவர்களது பெயர் பட்டியலில் திருத்தங்கள் வழங்க வாய்ப்பளித்தும், மதிப்பெண் சான்றிதழ் தேர்வர்களுக்கு வழங்கப்பட்ட பின்னர் திருத்தம் கோரி கடிதம் பெறப்படுவது ஒரு நிகழ்வாக உள்ளது. இது மாணவர்களுக்கு சிக்கல்களை உருவாக்குகிறது. எனவே முதன்மைக் கல்வி அலுவலர்கள் இதன் முக்கியத்துவத்தை அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எனவே மேற்குறிப்பிட்டுள்ள இனங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டி இருப்பின் தலைமை ஆசிரியர் மாணவரின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் / மதிப்பெண் பட்டியல் நகலில் உரிய திருத்தங்களை மேற்கொண்டு சான்றொப்பமிட்டு அதனை அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் 08.06.2026 அன்று பிற்பகல் 5.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தேர்வர்களது நலன் கருதி பிழைகளற்ற மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சிடுவதற்காக வழங்கப்படும் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளாமல் மதிப்பெண் சான்றிதழ் அச்சிட்டு வழங்கப்பட்ட பிறகு சான்றிதழில் திருத்தம் செய்யக் கோரி இவ்வலுவலகத்திற்கு மனுக்கள் அனுப்புதல் கூடாது. எனவே புதுச்சேரி இணை இயக்குநர் (கல்வி) மற்றும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்களது ஆளுகைக்குட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் இப்பொருள் குறித்து விரைந்து சுற்றறிக்கை அனுப்புமாறும். இப்பணிக்கு அதிமுக்கியத்துவம் அளித்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/government-examinations-department-offers-final-opportunity-for-plus-2-mark-sheet-corrections-vhm3iet"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Tamilnadu Power Cut: போன், லேப்டாப்பில் சார்ஜ் போட்டு வச்சுக்கோங்க! தமிழகத்தில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை? இதோ லிஸ்ட்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/power-shutdown-areas-in-tamilnadu-for-tomorrow-june-05-2026-full-list-3uosr2t</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/power-shutdown-areas-in-tamilnadu-for-tomorrow-june-05-2026-full-list-3uosr2t</guid>
            <pubDate>Thu, 04 Jun 2026 08:39:18 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Power Cut: தமிழகம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். நாளைய தினம் எந்தெந்த பகுதிகளில் மின்தடை எத்தனை மணிநேரம் என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kd4dme4j65q1x2p20kbhd8fq,imgname-power-shutdown-3-1766453819538.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Power Cut: தமிழகம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். நாளைய தினம் எந்தெந்த பகுதிகளில் மின்தடை எத்தனை மணிநேரம் என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழகத்தில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் உச்சம் அடைந்துள்ளதால் வீட்டில் எந்நேரமும் ஃபேன், ஏசி இல்லாமல் இருக்க முடிவதில்லை. இதனால் மின்தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். அன்றைய தினம் மின்தடை செய்யப்படும் நேரத்தில் சிறிய பழுதுகள், மின்கம்பங்கள் மற்றும் மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க செல்போன், லேப்டாப் சார்ஜ் போடவும், மோட்டர் போட்டு வைக்கவும் முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும். அதன்படி நாளை தினம் (05-06-2026) அதாவது வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் உள்ளிட்ட மாவட்டங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;காமராஜ் சாலை, பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், ஹோப் கல்லூரி முதல் சிவில் ஏரோ, வி.ஆர்.புரம், என்.கே. பாளையம், கிருஷ்ணாபுரம், ஹவுசிங் யூனிட், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், ஜி.வி.ரெசிடென்சி, மசக்காளிபாளையம், உப்பிலிபாளையம், கதிர்நாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், குமாரபுரம், நாசிமநாயக்கன்பாளையம், பம்பாய் நகர், டீச்சர்ஸ் காலனி, கணேஷ்நகர், ஸ்ரீ ராம் நகர், தொப்பம்பட்டி, செல்லப்பம்பாளையத்தின் ஒரு பகுதி, பொதியாம்பாளையம், வாகராயம்பாளையம், நீலம்பூர் பகுதி, குரும்பபாளையம், ராசிபாளையம், ஊத்துப்பாளையம் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ராமராஜபுரம், குருவி துரை, மறையம்பட்டி, மட்டப்பாரி, எத்திலோடு, செங்கப்பட்டி, ஆவாரம்பட்டி, விளாம்பட்டி, நாடார்பட்டி, சடையன்பட்டி, பெருமாள்பட்டி, அமச்சியாபுரம், அய்யப்பநாயக்கன்பட்டி, தாமோதரன்பட்டி, சிப்பைபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் அடங்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை முக்கிய இடங்களில் 6 முதல் 8 மணி நேரம் மின்தடை.. லிஸ்டில் உங்க ஏரியா இருக்கா?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;பெரம்பலூர்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;செந்துறை, நடுவலூர், தேளூர், கல்லங்குறிச்சி, ஆட்சியர் அலுவலகம், விக்ரமங்கலம், குணமங்கலம், சுண்டக்குடி, தண்ணீர் பூஞ்சோலியார்க்ஸ், குணமங்கலம்,&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;புதுக்கோட்டை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;கரம்பக்குடி, நெடுவாசல், ரெகுநாதபுரம், புனல்குளம், குளத்தூர் நாயக்கர்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உடுமலை, ஜி.நகர், அன்னக்குடியிருப்பு, நேருவீதி, பேரூராட்சி அலுவலகம், பூங்கா, ரயில்வே ஸ்டேஷன், காவல்நிலையம், மார்க்கெட், எஸ்.வி.புரம், பாலப்பம்பட்டி, மைவாடி, கணமனைகனூர், குறள்குட்டை, மடத்தூர், எம்.என்.பட்டினம், பி.என்.பட்டணம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பாகாயம், ஓட்டேரி, சித்தேரி, அரியூர், ஆபீசர்ஸ் லேன், டோல்கேட், விருப்பாட்சிபுரம், சங்கரன்பாளையம், சாய்நாதபுரம் மற்றும் தொரப்பாடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/power-shutdown-areas-in-tamilnadu-for-tomorrow-june-05-2026-full-list-3uosr2t"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Heavy Rain: மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகம்! விடாமல் அடிச்சு ஊத்தப்போகும் கனமழை! கோவை, சென்னையின் நிலை என்ன?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/heavy-rains-in-tamil-nadu-what-is-the-situation-in-coimbatore-and-chennai-6elawhb</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/heavy-rains-in-tamil-nadu-what-is-the-situation-in-coimbatore-and-chennai-6elawhb</guid>
            <pubDate>Thu, 04 Jun 2026 07:14:03 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Tamilnadu Rain: தென்மேற்கு பருவமழை கேரளப்பகுதிகளில் இன்று துவங்க வாய்ப்புள்ளது. மேலும், வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. இன்று தமிழகதத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01khwg265w25vt0g2s9jwswjpa,imgname-tamilnadu-rain-1771556640956.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Tamilnadu Rain: தென்மேற்கு பருவமழை கேரளப்பகுதிகளில் இன்று துவங்க வாய்ப்புள்ளது. மேலும், வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. இன்று தமிழகதத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழகத்தில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்து வந்தாலும் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து வெயில் சதம் அடித்து வருகிறது. காலை 7 மணி முதலே வெயில் வாட்டி வதைத்து வருவதால் பொதுமக்கள் வெயில் செல்வதற்கே அஞ்சு நடுங்குகின்றனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் நேற்று 9 இடங்களில் 100 டிகிரி மேல் வெப்பம் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 104.54 டிகிரியும், திருத்தணியில் 102.56, கடலூரில் 102.38, மதுரை நகரம் மற்றும் தொண்டியில் 101.84, மதுரை விமான நிலையம், சென்னை நுங்கம்பாக்கத்தில் 101.12, வேலூரில் 100.76, பரங்கிப்பேட்டையில்100.4 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கனமழை குறித்து வானிலை மையம் முக்கிய அப்டேட் கொடுத்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதாவது தென்மேற்கு பருவமழை கேரளப்பகுதிகளில் இன்று துவங்க வாய்ப்புள்ளது. மேலும், வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதேபோல் நாளை மற்றும் நாளை மறுநாள் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, தென்காசி, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, தூத்துக்குடி, விருதுநகர், ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழையும் பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேலும் ஜூன் 7ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 39-40&deg; செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29&deg; செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/heavy-rains-in-tamil-nadu-what-is-the-situation-in-coimbatore-and-chennai-6elawhb"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை முக்கிய இடங்களில் 6 முதல் 8 மணி நேரம் மின்தடை.. லிஸ்டில் உங்க ஏரியா இருக்கா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/power-shutdown-areas-in-tamilnadu-for-tomorrow-june-04-2026-full-list-na7beqf</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/power-shutdown-areas-in-tamilnadu-for-tomorrow-june-04-2026-full-list-na7beqf</guid>
            <pubDate>Wed, 03 Jun 2026 22:10:44 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Tamilnadu Maintenance Work: தமிழகம் முழுவதும் தடையற்ற மின்சாரம் வழங்குவதற்காக, துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக, நாளை (04-06-2026) சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ksgwpqndpqx9y6f1cpbxv1yr,imgname-power-shutdown-1779757178541.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Tamilnadu Maintenance Work: தமிழகம் முழுவதும் தடையற்ற மின்சாரம் வழங்குவதற்காக, துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக, நாளை (04-06-2026) சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழகம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். அன்றைய தினம் மின்தடை செய்யப்படும் நேரத்தில் சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும். அதன்படி நாளை தினம் (04-06-2026) அதாவது வியாழக்கிழமை சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் 6 முதல் 8 மணிநேரம் மின்தடை செய்யப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மாம்பட்டி, அனுமந்தீர்த்தம், கைலாயபுரம், காட்டேரி, சட்டையம்பட்டி, சாந்திராபுரம், கீழ்மொரப்பூர், கணபதிபட்டி, கீரைப்பட்டி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் அடங்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கன்னியாகுமரி, கோவளம், சின்னமுட்டம், தென்தாமரிகுளம், சுசீந்திரம், மயிலாடி, கன்னியாகுமரி, அழகப்பபுரம், அகஸ்தீஸ்வரம், அஞ்சுகிராமம், கொட்டாரம், மருங்கூர், ஆரல்வாய்மொழி, தேரூர், வெள்ளமடம், தோவாளை, செண்பகராமன்புதூர், இடைக்கோடு, குழித்துறை, பளுகல், களியக்காவிளை, அருமனை, ஏழுதேசம் பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;சேலம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;நடுவலூர், புனல்வாசல், கிழக்கு ராஜபாளையம், பின்னனூர், எடப்பாடி, கணவாய்காடு, ஆரியபாளையம், தளவாய்பட்டி, பி.என்.பாளையம், ஏத்தாப்பூர், கல்யாணகிரி உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;உடுமலைப்பேட்டை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;உடுமலை காந்தி நகர், அன்னக்குடியிருப்பு, நேருவீதி, பேரூராட்சி அலுவலகம், பூங்கா, இரயில் நிலையம், காவல்நிலையம், மார்க்கெட், ஸ்வபுரம், பாலப்பம்பட்டி, மைவாடி, கணமநாயக்கனூர், குறள்குட்டை, மடத்தூர், மலையாண்டிப்பட்டணம், மருள்பட்டணம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;திருமுல்லைவாயல், வெள்ளனூர், போத்தூர், பொக்கிஷம் பூமி நகர், கன்னடபாளையம், சிவா கார்டன், செல்லி அம்மன் நகர், லட்சுமி நகர், ஆர்.கே.ஜே. வள்ளிவேல் நகர் மற்றும் தாய் நகர் உள்ளிட்ட பகுதிகள். பூவிருந்தவல்லி: சென்னீர்குப்பம், கரையான்சாவடி, குமணன்சாவடி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள் அடங்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/power-shutdown-areas-in-tamilnadu-for-tomorrow-june-04-2026-full-list-na7beqf"/>
        </item>
        <item>
            <title><![CDATA[தமிழக புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் ஐபிஎஸ் பொறுப்பேற்பு! | Mahesh Kumar Aggarwal IPS]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/mahesh-kumar-aggarwal-ips-begins-tenure-as-new-tn-dgp-videoshow-447k9zh</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/mahesh-kumar-aggarwal-ips-begins-tenure-as-new-tn-dgp-videoshow-447k9zh</guid>
            <pubDate>Wed, 03 Jun 2026 22:02:37 +0530</pubDate>
            <description><![CDATA[]]></description>
            <media:content url="https://geo.dailymotion.com/player/x1tbu.html?video=xaczb82" medium="video" height="768" width="1024"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சென்னை: தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக (DGP) மகேஷ் குமார் அகர்வால் ஐபிஎஸ் இன்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார். மயிலாப்பூரில் உள்ள மாநில காவல்துறை தலைமையகத்தில் அவர் முறைப்படி பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/mahesh-kumar-aggarwal-ips-begins-tenure-as-new-tn-dgp-videoshow-447k9zh"/>
        </item>
        <item>
            <title><![CDATA[College Student: மாணவர்களுக்கு மாதம் ரூ.18,000 அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/tn-govt-big-gift-for-students-rs-18000-allowance-per-month-who-is-eligible-3lbrzl6</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/tn-govt-big-gift-for-students-rs-18000-allowance-per-month-who-is-eligible-3lbrzl6</guid>
            <pubDate>Wed, 03 Jun 2026 19:23:40 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;சென்னை மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மற்றும் இந்திய அரசு இணைந்து ஐ.டி.ஐ, 8, 10, 12ம் வகுப்பு முடித்தவர்களுக்காக தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி முகாமை நடத்துகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் பயிற்சியாளர்களுக்கு ரூ.18000 வரை மாதாந்திர உதவித்தொகை.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jqv4v52mangm3rzxnmzda82s,imgname-2147663913.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சென்னை மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மற்றும் இந்திய அரசு இணைந்து ஐ.டி.ஐ, 8, 10, 12ம் வகுப்பு முடித்தவர்களுக்காக தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி முகாமை நடத்துகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் பயிற்சியாளர்களுக்கு ரூ.18000 வரை மாதாந்திர உதவித்தொகை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மத்திய, மாநில அரசுகள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி தரும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் உதவித்தொகை வழங்கி வருகிறது. அந்த வகையில் தொழிற் பழகுநராக சேர்க்கை செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் மாதாந்திர உதவித் தொகையாக அதிகபட்சமாக ரூ.18000 வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், சென்னை மற்றும் இந்திய அரசு, தென் மண்டல திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு இயக்ககம் இணைந்து ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு மாவட்ட அளவிலான தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது,&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பல்வேறு தொழிற்பிரிவுகளை சேர்ந்த பயிற்சியார்களுக்கு தொழிற் பழகுநர் பயிற்சி வழங்குவதற்காக, மாவட்ட அளவிலான தேசிய தொழிற் பழகுநர் முகாம் (PM National Apprenticeship Mela) வருகிற ஜூன் 10 அன்று காலை 9.30 மணியளவில் வட சென்னை-32 ஆர்.கே.நகர். அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் (வட சென்னை அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில்) நடைபெற உள்ளது. இதில் அரசு மற்றும் தனியார் தொழிற் நிறுவனங்கள் கலந்து கொண்டு தொழிற்பழகுநர் பயிற்சி வழங்க ஐ.டி.ஐ. படித்து தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் மற்றும் 8, 10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களை தொழிற்பழகுநராக தேர்வு செய்ய உள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தற்போது தொழிற் பழகுநராக சேர்க்கை செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் (National Apprenticeship Certificate) 2 குறைந்தபட்சம் ரூ.8000 முதல் அதிகபட்சமாக ரூ,18000 வழங்கப்படும். இதுவரை தொழிற்பழகுநர் பயிற்சி (NAC) முடிக்காத அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் www.apprenticeshipindia.gov.in கல்வி சான்றிதழ்களுடன் இம்முகாமில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/tn-govt-big-gift-for-students-rs-18000-allowance-per-month-who-is-eligible-3lbrzl6"/>
        </item>
        <item>
            <title><![CDATA[CM Vijay: காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை சீட்..! முதல்வர் விஜய் அறிவிப்பு..]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/cm-vijay-allocates-rajya-sabha-seat-to-congress-strengthening-alliance-ahead-of-key-political-battles-articleshow-z8ogiz8</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/cm-vijay-allocates-rajya-sabha-seat-to-congress-strengthening-alliance-ahead-of-key-political-battles-articleshow-z8ogiz8</guid>
            <pubDate>Wed, 03 Jun 2026 19:12:15 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் வகையில், காலியாக உள்ள மாநிலங்களவை இடத்தை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குவதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kt6sxzeykg9cpmv0z515kstb,imgname-vijay-congress-1780492467678.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை (ராஜ்யசபா) இடத்தை கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு ஒதுக்குவதாக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான C. Joseph Vijay அறிவித்திருப்பது மாநில அரசியலில் முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. இந்த முடிவு, தவெக&ndash;காங்கிரஸ் கூட்டணியின் உறவை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கையாக அரசியல் வட்டாரங்களில் மதிப்பிடப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சி.வி.சண்முகம், சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தனது மாநிலங்களவை பதவியை ராஜினாமா செய்ததால் அந்த இடம் காலியானது. இதற்கான இடைத்தேர்தல் ஜூன் 18, 2026 அன்று நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் ஜூன் 1 முதல் 8 வரை நடைபெறுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;சட்டமன்றத்தில் தனிப்பெரும் கட்சியாக உள்ள தவெகவுக்கு இந்த மாநிலங்களவை இடத்தை வெல்ல தேவையான எண்கள் இருப்பதால், அந்த இடத்தை தங்கள் கட்சிக்காக வைத்துக்கொள்ளலாமா அல்லது கூட்டணிக் கட்சிக்கு வழங்கலாமா என்ற விவாதம் கடந்த சில நாட்களாக நீடித்து வந்தது. இந்த நிலையில் காங்கிரஸுக்கு அந்த வாய்ப்பை வழங்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;காங்கிரஸ் தரப்பில், கட்சியின் தேசிய அளவிலான முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும், தரவு மற்றும் தேர்தல் வியூக நிபுணருமான Praveen Chakravarty மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் இறுதி வேட்பாளர் அறிவிப்பு காங்கிரஸ் தலைமையால் வெளியிடப்பட வேண்டியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அரசு அமைப்பதில் காங்கிரஸ் அளித்த ஆதரவு முக்கிய பங்காற்றியது. மேலும், காங்கிரஸ் உறுப்பினர்கள் அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ள நிலையில், மாநிலங்களவை இட ஒதுக்கீடு கூட்டணியின் நம்பிக்கையை பிரதிபலிக்கும் அரசியல் முடிவாக கருதப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;அரசியல் ஆய்வாளர்கள் கூறுவதாவது, இந்த முடிவின் மூலம் தேசிய அரசியலில் காங்கிரஸுடனான உறவை வலுப்படுத்துவதோடு, எதிர்கால கூட்டணி அரசியலுக்கான தெளிவான சிக்னலையும் முதல்வர் விஜய் வழங்கியுள்ளார். அதே நேரத்தில், தவெக தனது முதல் மாநிலங்களவை உறுப்பினரை உடனடியாக அனுப்பும் வாய்ப்பை தியாகம் செய்து கூட்டணித் தர்மத்தை முன்னிலைப்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் மதிப்பிடுகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;ஜூன் 18-ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் எதிர்பாராத மாற்றங்கள் ஏதும் இல்லையெனில், காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்று மாநிலங்களவைக்கு செல்லும் வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/cm-vijay-allocates-rajya-sabha-seat-to-congress-strengthening-alliance-ahead-of-key-political-battles-articleshow-z8ogiz8"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Tamilnadu Government: விழுப்புரத்திற்கு ஆனந்தன்! சென்னைக்கு ஆதவ்! கோவை யார் தெரியுமா? மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் லிஸ்ட்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/anandhan-for-viluppuram-aadhav-arjuna-for-chennai-district-wise-in-charge-ministers-appointed-q0kbeva</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/anandhan-for-viluppuram-aadhav-arjuna-for-chennai-district-wise-in-charge-ministers-appointed-q0kbeva</guid>
            <pubDate>Wed, 03 Jun 2026 15:07:44 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;District Wise In Charge Ministers: தமிழ்நாடு அரசு, மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், நலத்திட்டங்களைக் கண்காணிக்கவும் அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. இவர்கள் அவசரகால பணிகளை மேற்கொள்வார்கள்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ksxt9ag2zjh67an2dmrjbkw3,imgname-tamil-nadu-government-1780190849538.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;District Wise In Charge Ministers: தமிழ்நாடு அரசு, மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், நலத்திட்டங்களைக் கண்காணிக்கவும் அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. இவர்கள் அவசரகால பணிகளை மேற்கொள்வார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும், இயற்கைச் சீற்றம், நோய்த்தொற்று இன்னபிற நேரங்களில் அவசரகால பணிகளை கூடுதலாக மேற்கொள்ளவும், அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்:- தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை சார்ந்த திட்டப் பலன்களும் பொதுமக்களுக்கு விரைவாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு சீரிய நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. இயற்கைச் சீற்றம், நோய்த்தொற்று மற்றும் பல்வேறு இடர்பாடான சூழ்நிலைகளில், இந்தத் திட்டப் பணிகளை மாவட்ட அளவில் கூர்ந்தாய்வு செய்து, விரைவுபடுத்தும் வகையில் ஏற்கனவே இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கண்காணிப்பு அலுவலர்களாக (Monitoring Officers) நியமித்து அரசு கண்காணித்து வருகிறது. இதனை மேலும் வலுப்படுத்தும் வகையில், அமைச்சர்களையும் இப்பணியில் முழுமையாக ஈடுபடுத்த அரசு முடிவெடுத்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதன்படி அமைச்சர் பெருமக்களை அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்து, அந்தந்த மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும் இயற்கைச் சீற்றம், நோய்த்தொற்று இன்னபிற நேரங்களில் அவசரகால பணிகளை கூடுதலாக மேற்கொள்ளவும், வருவாய் மாவட்ட வாரியாக, அமைச்சர்களை பொறுப்பு அமைச்சர்களாக பின்வருமாறு நியமனம் செய்யப்படுகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஊட்டியை விடுங்க.. கோவையில் கட்டாயம் பார்க்க வேண்டிய குளு குளுவென இருக்கும் 10 இடங்கள்!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விழுப்புரம், கடலூர் &ndash; ஆனந்த், சென்னை, திருவண்ணாமலை &ndash; ஆதவ் அர்ஜுனா, மயிலாடுதுறை வெங்கட்ரமணன், திருவள்ளூர் &ndash; ரா.குமார், நெல்லை &ndash; மரிய வில்சன், பெரம்பலூர் -ராஜ்மோகன், காஞ்சிபுரம் &ndash; க.தென்னரசு, திருப்பத்தூர் &ndash; ரஞ்சித்குமார், செங்கல்பட்டு -சரத்குமார், கள்ளக்குறிச்சி &ndash; வன்னி அரசு, ராணிப்பேட்டை &ndash; காந்திராஜ், தருமபுரி, அரியலூர் &ndash; ராஜ்குமார், நாகப்பட்டினம் - ஷாஜகான், தஞ்சாவூர் &ndash; வினோத், திருச்சி &ndash; ரமேஷ், கரூர் &ndash; விஜயலஷ்மி, நாமக்கல் &ndash; லோகேஷ் தமிழ்செல்வன், திருப்பூர் &ndash; அருண்ராஜ், நீலகிரி -கமலி, வேலூர் &ndash; விஜய் பாலாஜி, ஈரோடு - செங்கோட்டையன், கோவை - சம்பத்குமார், மதுரை, தேனி &ndash; நிர்மல்குமார், புதுக்கோட்டை &ndash; முகமது பர்வேஸ், சிவகங்கை - டி.கே.பிரவு, கிருஷ்ணகிரி &ndash; கீர்த்தனா, விருதுநகர் &ndash; ஜெகதீஸ்வரி, திருவாரூர் &ndash; விஸ்வநாதன், தூத்துக்குடி &ndash; ஸ்ரீநாத், ராமநாதபுரம் -மதன்ராஜா, சேலம் &ndash;பார்த்திபன், கன்னியாகுமரி -ராஜேஷ்குமார், தென்காசி &ndash; ராஜீவ், திண்டுக்கல் &ndash; விக்னேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வருவாய் மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்ட அமைச்சர் பெருமக்கள் சம்பந்தப்பட்ட ஆட்சித் தலைவர்கள், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் (Monitoring Officers)மற்றும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து திட்டப் பணிகளை துரிதப்படுத்துதல் நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/anandhan-for-viluppuram-aadhav-arjuna-for-chennai-district-wise-in-charge-ministers-appointed-q0kbeva"/>
        </item>
        <item>
            <title><![CDATA[LPG Cylinder Rules: வீட்டில் எத்தனை கேஸ் சிலிண்டர்கள் வைத்திருக்கலாம்? விதிகளை தெரிந்து கொள்ளுங்கள்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/lpg-cylinder-rules-how-many-gas-cylinders-can-you-keep-at-home-know-the-safety-regulations-w08npr2</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/lpg-cylinder-rules-how-many-gas-cylinders-can-you-keep-at-home-know-the-safety-regulations-w08npr2</guid>
            <pubDate>Wed, 03 Jun 2026 14:48:46 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;இந்தியாவில் ஒரு வீட்டு உபயோகத்திற்கு பொதுவாக இரண்டு எல்பிஜி சிலிண்டர்கள் அனுமதிக்கப்படுகின்றன. பாதுகாப்பு காரணங்களுக்காக, குறிப்பிட்ட வரம்புக்கு மேல் சிலிண்டர்களை சேமிப்பது ஆபத்தானது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kt6bwae8ayd1cppk5nkfw298,imgname-chatgpt-image-jun-3--2026--02-36-43-pm--1--1780477733320.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;இந்தியாவில் ஒரு வீட்டு உபயோகத்திற்கு பொதுவாக இரண்டு எல்பிஜி சிலிண்டர்கள் அனுமதிக்கப்படுகின்றன. பாதுகாப்பு காரணங்களுக்காக, குறிப்பிட்ட வரம்புக்கு மேல் சிலிண்டர்களை சேமிப்பது ஆபத்தானது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் சமையலுக்காக எல்பிஜி (LPG) சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், ஒரே வீட்டில் அதிகபட்சமாக எத்தனை சிலிண்டர்களை வைத்திருக்கலாம் என்பது குறித்து பலருக்கும் தெளிவான தகவல் இல்லை. பாதுகாப்பு காரணங்களுக்காக இதற்கென சில முக்கிய விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;பொதுவாக ஒரு வீட்டு எல்பிஜி இணைப்பில் இரண்டு சிலிண்டர்கள் அனுமதிக்கப்படுகின்றன. ஒன்று பயன்பாட்டில் இருக்கும் சிலிண்டர், மற்றொன்று மாற்று (spare) சிலிண்டராக வைத்துக்கொள்ளப்படும். இதுவே வீட்டு பயன்பாட்டிற்கான சாதாரண நடைமுறையாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆனால் சிலர் எதிர்கால தேவைக்காக கூடுதலாக நிரப்பப்பட்ட சிலிண்டர்களை வாங்கி சேமித்து வைப்பது வழக்கம். பாதுகாப்பு விதிகளின்படி, அதிக எண்ணிக்கையிலான நிரப்பப்பட்ட சிலிண்டர்களை வீட்டில் வைத்திருப்பது ஆபத்தானதாக கருதப்படுகிறது. குறிப்பிட்ட வரம்புக்கு மேல் சிலிண்டர்களை சேமிக்க விரும்பினால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதி தேவைப்படலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எல்பிஜி மிகவும் எளிதில் தீப்பற்றக்கூடிய எரிவாயு ஆகும். சிலிண்டரில் கசிவு ஏற்பட்டால் அல்லது தீ விபத்து ஏற்பட்டால், அருகில் இருக்கும் பல சிலிண்டர்கள் விபத்தின் தீவிரத்தை பல மடங்கு அதிகரிக்கக்கூடும். இதனால் மனித உயிர்களுக்கும் சொத்துகளுக்கும் பெரிய சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;ul&gt; &lt;li&gt;சிலிண்டரை எப்போதும் நிமிர்ந்த நிலையில் வைத்திருக்க வேண்டும்.&lt;/li&gt; &lt;li&gt;காற்றோட்டம் நன்றாக உள்ள இடத்தில் வைக்க வேண்டும்.&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;நேரடி சூரிய ஒளி படும் இடங்களைத் தவிர்க்க வேண்டும்.&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;மின் சாதனங்கள், ஹீட்டர்கள் மற்றும் தீ மூலங்களிலிருந்து விலகி வைக்க வேண்டும்.&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;ரெகுலேட்டர் மற்றும் குழாய்களை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும்.&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;வாயு கசிவு சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக ரெகுலேட்டரை மூட வேண்டும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;img&gt;&lt;p&gt;அனுமதியின்றி அதிகப்படியான சிலிண்டர்களை சேமித்து வைத்திருப்பது பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவதாக கருதப்படலாம். விபத்து ஏற்பட்டால் காப்பீட்டு கோரிக்கைகளிலும் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவும் முடியும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒரு சாதாரண குடும்பத்திற்கு ஒரு பயன்பாட்டு சிலிண்டர் மற்றும் ஒரு மாற்று சிலிண்டர் என இரண்டு LPG சிலிண்டர்கள் போதுமானதாக கருதப்படுகின்றன. தேவையில்லாமல் கூடுதல் சிலிண்டர்களை சேமித்து வைப்பதைத் தவிர்ப்பது பாதுகாப்பானது. குடும்பத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு LPG பயன்பாட்டில் எப்போதும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/lpg-cylinder-rules-how-many-gas-cylinders-can-you-keep-at-home-know-the-safety-regulations-w08npr2"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Kalaignar Birthday: இங்க் பேனா முதல் மீன் குழம்பு வரை..! கருணாநிதி பற்றி பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்கள்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/politics/unknown-and-interesting-facts-of-kalaignar-karunanidhi-on-his-103rd-birth-anniversary-explained-ydgexqb</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/politics/unknown-and-interesting-facts-of-kalaignar-karunanidhi-on-his-103rd-birth-anniversary-explained-ydgexqb</guid>
            <pubDate>Wed, 03 Jun 2026 13:58:21 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Unknown and Interesting Facts of Kalaignar Karunanidhi: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் இன்று (ஜூன் 3) கொண்டாடப்படுகிறது. பன்முகத் திறமையாளராக வலம் வந்த அவர் குறித்து தெரியாத சில தகவல்களை பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kt68qt8pcp9hqj0p2htjpq24,imgname-karunanidhi---10--1780474439958.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Unknown and Interesting Facts of Kalaignar Karunanidhi: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் இன்று (ஜூன் 3) கொண்டாடப்படுகிறது. பன்முகத் திறமையாளராக வலம் வந்த அவர் குறித்து தெரியாத சில தகவல்களை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழக அரசியலில் அழியாத முத்திரையை பதித்த தலைவர்களில் முக்கியமானவர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி. எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர், பேச்சாளர் மற்றும் அரசியல்வாதி என பல துறைகளில் தனித்துவம் காட்டிய அவர் குறித்து பலருக்கும் தெரியாத சில சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கலைஞரின் வாழ்க்கையில் எழுத்துக்கு தனி இடம் இருந்தது. தொழில்நுட்பம் வளர்ந்த பிறகும், அவர் பெரும்பாலும் மை நிரப்பும் பேனாக்களையே பயன்படுத்த விரும்பினார். குறிப்பாக இந்தியாவில் தயாரிக்கப்படும் &lsquo;Wality 69T&rsquo; மாடல் பேனா அவருக்குப் பிடித்தமானதாக இருந்ததாக கூறப்படுகிறது. நிறைய இங்க் ஊற்றும் வண்ணம் அளவில் பெரியதாகவும், இங்க் அளவு வெளியில் தெரியும் வண்ணம் கண்ணாடி அமைப்பில், வண்ண மூடிகளுடன் இந்த பேனா மிக அழகாக இருக்கும். இதன் விலை ஆரம்பத்தில் ரூ.150 என இருந்த நிலையில், கருணாநிதி மறைவுக்குப் பின்னர் பலரும் வாங்க தொடங்கியதால் தற்போது ரூ.1,000-க்கும் அதிகமாக விற்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கருணாநிதியை நினைத்தாலே மஞ்சள் நிறத் துண்டு நினைவுக்கு வரும். ஆரம்ப காலங்களில் அவர் பெரும்பாலும் வெள்ளை நிறத் துண்டுகளை பயன்படுத்தியிருந்தாலும், பின்னர் மஞ்சள் நிறத் துண்டு அவரது நிரந்தர அடையாளமாக மாறியது. அரசியல் நிகழ்வொன்றில் கிடைத்த அந்த நிறத் துண்டை தொடர்ந்து அணிந்ததே இதற்குக் காரணமாக கூறப்படுகிறது. கருணாநிதியின் இயற்பெயர் தட்சிணாமூர்த்தி என்பதாலும், மஞ்சள் குரு பகவானுக்கு உகந்தது என்பதாலும் அவர் மஞ்சள் துண்டு அணிந்தார் என கூறுவதுண்டு. ஆனால் கூட்டணி பேச வந்த பாமக நிறுவனர் ராமதாஸ், பாமகவின் பிரதான நிறமான மஞ்சள் நிறத்துடன் கூடிய துண்டை கருணாநிதிக்கு அணிவித்தது முதல், அதை தன்னுடைய அடையாளமாக மாற்றிக்கொண்டார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;டெல்டா பகுதியைச் சேர்ந்த கருணாநிதிக்கு கடல் உணவுகள் மிகவும் பிடித்தமானவை. குறிப்பாக வீட்டில் தயாரிக்கப்படும் மீன் குழம்பை ரசித்து சாப்பிடுவார். தனது மனைவி தயாளு வைக்கும் மீன் குழம்பு என்றால் அவருக்கு கொள்ளை விருப்பமாம். மற்ற இறைச்சிகளை விட மீன் மற்றும் கடல் உணவுகளை விரும்பி சாப்பிடும் வழக்கம் கொண்டிருந்தார். வயது அதிகரித்த பின்னர் உடல்நலக் காரணங்களால் அசைவ உணவுகளை குறைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கருணாநிதியின் கையில் அடிக்கடி காணப்பட்ட பவள மோதிரத்துக்கும் ஒரு சிறப்பு வரலாறு உள்ளது. திமுக முதல் முறையாக தேர்தலில் களம் இறங்கிய போது, பொருளாளராக இருந்த கருணாநிதி, தேர்தல் நிதியாக ரூ.11 லட்சம் திரட்டி கொடுத்ததற்காக அறிஞர் அண்ணா அளித்த பரிசு தான் அந்த பவளம் மோதிரம். கருணாநிதி இறக்கும் வரை அவரது கைகளில் அந்த மோதிரத்தை அணிந்திருந்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உணவு கட்டுப்பாட்டில் மிகவும் கவனமாக இருந்தாலும், சில உணவுகள் மீது அவருக்கு தனி விருப்பம் இருந்தது. குறிப்பாக காபியுடன் போண்டா சாப்பிடுவதை அவர் விரும்பியதாக அவரது நெருங்கியவர்கள் பலமுறை குறிப்பிட்டுள்ளனர். தேர்தல் பிரச்சாரங்களின் போது கூட, ஹோட்டல்களில் சாப்பிடாமல் அந்தந்த மாவட்டங்களில் இருக்கும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வீட்டிற்குச் சென்று, அவர்கள் வீட்டில் சமைத்த உணவுகளையே சாப்பிடுவார். இருப்பினும் அண்ணா அறிவாலயம் அருகில் இருக்கும் ஆனந்த பவன் ஹோட்டல் போண்டா என்றால் அவருக்கு அதிக பிரியம். உதவியாளர்களை அடிக்கடி அனுப்பி போண்டா வாங்கி வரச் சொல்லி விரும்பி சாப்பிடுவாராம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;செல்லப்பிராணிகள் மற்றும் அலங்கார மீன்கள் வளர்ப்பதில் கருணாநிதிக்கு அதிக ஈடுபாடு இருந்தது. அவர் இருந்த இடங்களில் மீன் தொட்டிகள் அமைத்து அவற்றை பராமரிப்பதில் ஆர்வம் காட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓமாந்தூரார் அரசினர் வளாகத்தில் கட்டிய புதிய சட்டசபையில் சிறு நீச்சல் குளம் அமைத்து, அதில் மீன்கள் வளர்த்து வந்தார். தினமும் சட்டசபைக்கு வரும்போது மீன்களுக்கு உணவு அளித்துவிட்டு, அதை சில மணி அமர்ந்து நேரம் பார்த்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கருணாநிதி கைக்கடிகாரம் அணிவதில் தனித்துவமான பழக்கத்தை கொண்டிருந்தார். புதிய மற்றும் விலையுயர்ந்த மாடல்களை விட பழக்கமான வடிவமைப்புகளையே தொடர்ந்து பயன்படுத்தினார். கருணாநிதி வழக்கமாக அணிவது போல் அல்லாமல், பின்பக்கமாக கைக்கடிகாரம் அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர். ஆரம்பத்தில் கருப்பு நிறப் பட்டையில் கை கடிகாரம் அணிந்து வந்த அவர், பின்னர் சிகப்பு நிற பட்டையை அணிவதை வழக்கமாக்கி கொண்டார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கருணாநிதிக்கு செல்லப்பிராணிகள் வளர்ப்பது என்றால் மிக பிடிக்கும். ஆலிவர் ரோடு இல்லத்தில் குடியிருந்தபோது பிளாக்கி என்னும் நாயை வளர்த்திருக்கிறார். அது இறந்த பின்னர் வீட்டு வாசலிலேயே புதைத்து அந்த இடத்தில் ஒரு செடியையும் வளர்த்திருக்கிறார். அதன் பின்னர் சில நாய்களை வளர்த்து வந்த அவர், பின்னர் நாய்கள் வளர்ப்பதை முற்றிலும் நிறுத்திவிட்டார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கலைஞரின் அடையாளங்களில் ஒன்றாக கருப்பு நிறக் கண்ணாடி இருந்தது. வெளியூருக்கு காரில் சென்று கொண்டிருந்த போது, விபத்தில் சிக்கிய கருணாநிதியின் இடது கண் பலத்த சேதமடைந்தது. இதற்காக அந்த கண்ணில் மட்டும் 12 முறை அறுவை சிகிச்சை செய்யப்படிருக்கிறது. அதன் பின்னர் தொடர்ந்து அவர் கருப்பு கண்ணாடி அணியத் தொடங்கினார். பின்னர் அது அவரது தோற்றத்தின் பிரிக்க முடியாத அம்சமாக மாறியது. கண்ணாடி இல்லாமல் கருணாநிதியை பார்ப்பது என்பது அரிதான காரியங்களில் ஒன்று.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;2005-ம் ஆண்டு முதுகு வலி காரணமாக, முதுகுத் தண்டுவட அறுவை சிகிச்சைக்குப் பிறகு நடப்பதில் சிரமம் ஏற்பட்டதால் கருணாநிதி சக்கர நாற்காலியை பயன்படுத்த வேண்டிய நிலை உருவானது. இருப்பினும், அரசியல் மற்றும் இலக்கியப் பணிகளை அவர் தொடர்ந்து மேற்கொண்டார். 50 ஆண்டுகளாக இந்தியாவின் அரசியலை நிர்ணயித்த அந்த தலைவரின் சக்கர நாற்காலி அவருக்குப் பின்னர் நிரந்தர ஓய்வுக்குச் சென்றது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/politics/unknown-and-interesting-facts-of-kalaignar-karunanidhi-on-his-103rd-birth-anniversary-explained-ydgexqb"/>
        </item>
        <item>
            <title><![CDATA[School Reopening : ஜூன் 4-ல் பள்ளிகள் திறப்பு உறுதி! வெயிலின் தாக்கம் "சென்டிமீட்டரில்" குறைந்ததாகவும் அமைச்சர் பேச்சு!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/school-reopening-confirmed-on-june-4-minister-says-heatwave-impact-has-reduced-oqkvv4e</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/school-reopening-confirmed-on-june-4-minister-says-heatwave-impact-has-reduced-oqkvv4e</guid>
            <pubDate>Wed, 03 Jun 2026 11:21:14 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;School Reopening : தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறைந்ததால், திட்டமிட்டபடி ஜூன் 4-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01hzvc453ky5kmvy1jvt4nsmbk,imgname-school-reopen-1.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;School Reopening : தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறைந்ததால், திட்டமிட்டபடி ஜூன் 4-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழகத்தில் கோடை வெயிலின் கொடுமை தீவிரமாக இருந்ததால், ஜூன் 1-ஆம் தேதி தொடங்கவிருந்த நடப்பு கல்வி ஆண்டு, 4-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இது மேலும் தள்ளிவைக்கப்படுமா என்பது குறித்து சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் ஆய்வு நடத்தினார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் குறைந்து வருவதால், திட்டமிட்டபடி வரும் ஜூன் 4-ஆம் தேதி பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படும் என்று தெளிவுபடுத்தினார். அதே வேளை, செய்தியாளர்கள் சந்திப்பில் வெப்பநிலையைக் குறிப்பிடுவதற்குப் பதிலாக மழையளவைக் குறிக்கும் 'சென்டிமீட்டர்' என்ற வார்த்தையை அமைச்சர் பயன்படுத்தியது இணையவெளியில் பேசுபொருளாக மாறியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், &quot;வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததன் காரணமாகத்தான் ஜூன் 1-ஆம் தேதி துவங்க வேண்டிய பள்ளி திறப்பை, ஜூன் 4-ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தோம். தற்போது வெயிலின் தாக்கம் 41 சென்டிமீட்டரிலிருந்து 35 சென்டிமீட்டராகக் குறைந்துள்ளது. இந்த வெயில் தாக்கத்தால் ஒருவர் கூட தமிழகத்தில் இறக்கவில்லை. எனவே, திட்டமிட்டபடி வரும் ஜூன் 4-ஆம் தேதி பள்ளிகள் திறப்பதில் எந்தத் தடையும் இல்லை,&quot; என்று கூறினார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பள்ளிகள் திறப்பு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட போது, வெப்பநிலையை 'டிகிரி செல்சியஸ்' என்று கூறுவதற்குப் பதிலாக, மழையின் அளவை அளவிடும் 'சென்டிமீட்டர்' என்ற வார்த்தையை அமைச்சர் அடுத்தடுத்துப் பயன்படுத்தினார். வெயிலின் அளவை சென்டிமீட்டரில் அவர் குறிப்பிட்டது அங்கிருந்த செய்தியாளர்களிடையே சற்றே வியப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;நெட்டிசன்கள் விமர்சனம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;பள்ளிகள் திறப்பு தேதி உறுதியானதில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நிம்மதியடைந்தாலும், மூத்த அமைச்சரான செங்கோட்டையன் வெப்பநிலை அளவீட்டில் காட்டிய இந்தக் குழப்பம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. &quot;வெயிலை சென்டிமீட்டரில் அளக்க ஆரம்பிச்சிட்டாங்களா?&quot; என அமைச்சரின் வீடியோவைப் பகிர்ந்து நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu</category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/school-reopening-confirmed-on-june-4-minister-says-heatwave-impact-has-reduced-oqkvv4e"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ரூட்டை மாற்றிய அண்ணாமலை.! தமிழக அரசியலில் என்ன மாற்றம் ஏற்படும்? மலைக்க வைக்கும் திருப்பங்கள்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/annamalai-s-strategic-shift-a-new-turn-for-tn-politics-videoshow-fgs1xu7</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/annamalai-s-strategic-shift-a-new-turn-for-tn-politics-videoshow-fgs1xu7</guid>
            <pubDate>Wed, 03 Jun 2026 13:02:54 +0530</pubDate>
            <description><![CDATA[]]></description>
            <media:content url="https://geo.dailymotion.com/player/x1tbu.html?video=xacw4se" medium="video" height="768" width="1024"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;அண்ணாமலையின் இந்த அதிரடி முடிவு திடீரென எடுக்கப்பட்ட ஒன்று அல்ல என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். கடந்த சில காலங்களாகவே கட்சியின் தேசியத் தலைமைக்கும், அவருக்கும் இடையே நிலவி வந்த சில உள்கட்சி முரண்பாடுகளும், தமிழ்நாட்டில் பாஜாகவின் தற்போதைய அரசியல் நகர்வுகளும் அவரை இந்த புதிய பாதையை நோக்கித் தள்ளியுள்ளன.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/annamalai-s-strategic-shift-a-new-turn-for-tn-politics-videoshow-fgs1xu7"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஜூன் மாதம் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 யாருக்கெல்லாம் கிடைக்கும்? உடனே செக் பண்ணுங்க.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/magalir-urimai-thogai-who-gets-1-000-in-june-videoshow-nu2vzhh</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/magalir-urimai-thogai-who-gets-1-000-in-june-videoshow-nu2vzhh</guid>
            <pubDate>Wed, 03 Jun 2026 13:02:41 +0530</pubDate>
            <description><![CDATA[]]></description>
            <media:content url="https://geo.dailymotion.com/player/x1tbu.html?video=xacw4s0" medium="video" height="768" width="1024"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், ஜூன் மாதத்திற்கான ரூ.1,000 பணம் யாருக்கெல்லாம் கிடைக்கும், யாருடைய கணக்கிற்கு வரவு வைக்கப்படும் என்ற முழு விவரங்கள் இந்த வீடியோவில்&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/magalir-urimai-thogai-who-gets-1-000-in-june-videoshow-nu2vzhh"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Kalaignar Magalir Urimai Thogai: ஜூன் மாதம் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 யாருக்கெல்லாம் கிடைக்கும்? உடனே செக் பண்ணுங்க.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/kalaignar-magalir-urimai-thogai-june-2026-who-will-receive-the-1000-rupees-check-eligibility-details-explained-5krfnt0</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/kalaignar-magalir-urimai-thogai-june-2026-who-will-receive-the-1000-rupees-check-eligibility-details-explained-5krfnt0</guid>
            <pubDate>Wed, 03 Jun 2026 08:47:20 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Kalaignar Magalir Urimai Thogai June 2026: ஜூன் மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை எப்போது கிடைக்கும் என்பது குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதுகுறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kt5qgpz6gyc5pv76gbb3swd7,imgname-kalaignar-magalir-urimai-thogai-1780456381414.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Kalaignar Magalir Urimai Thogai June 2026: ஜூன் மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை எப்போது கிடைக்கும் என்பது குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதுகுறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கடந்த திமுக ஆட்சியில் மகளிருக்காக அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டங்களில் ஒன்று &lsquo;கலைஞர் மகளிர் உரிமைத்தொகை&rsquo;. ஒவ்வொரு குடும்பத் தலைவிகளும் பயன்பெறும் வகையில் அரசு மாதம் ரூ.1000-ஐ உரிமைத்தொகை என்ற பெயரில் பெண்களின் கணக்கில் வரவு வைத்து வந்தது. 2026 ஆம் ஆண்டு தேர்தலில் இந்த உரிமைத் தொகை உயர்த்தி வழங்கப்படும் என அனைத்து கட்சிகளும் அறிவிப்பு வெளியிட்டன. குறிப்பாக புதுவரவான தமிழக வெற்றிக் கழகமும் உரிமைத் தொகை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறி இருந்தது.&lt;/p&gt;&lt;p&gt;EB Bill: கரண்ட் பில் ஏறிட்டே போகுதா? மத்திய அரசின் சூப்பர் சோலார் திட்டம் இதோ.! எப்படி விண்ணப்பிப்பது? விரிவான தகவல்கள்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆனால் ஆட்சிக்கு வந்த தமிழக வெற்றிக் கழகம், கடந்த ஆட்சியில் பத்தரை லட்சம் ரூபாய் கடன் இருப்பதாகவும் இது குறித்து முழுமையாக ஆராய்ந்த பின்னரே ரூ.2,500 வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டது. இது குடும்பத் தலைவிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. தவெக அரசின் நிலைப்பாடு குறித்து எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தையும் தெரிவித்தனர். தொடர்ந்து கடந்த மே மாதம் 15 ஆம் தேதி மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 அனைவரது கணக்கிலும் வரவு வைக்கப்பட்டது. ஆட்சிக்கு வந்தவுடன் ரூ.2500 வழங்குவேன் எனக் கூறிவிட்டு ரூ.1,000 மட்டுமே வரவு வைத்தது சர்ச்சையை கிளப்பியிருந்தது.&lt;/p&gt;&lt;p&gt;Ration: வீடு தேடி வரும் ரேஷன் பொருள்! தேதி குறித்த தமிழக அரசு! முழு விவரம் இதோ!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த நிலையில் ஜூன் மாதத்திற்கான &lsquo;கலைஞர் உரிமைத்தொகை&rsquo; எப்போது வரவு வைக்கப்படும் என்கிற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களுடன் பேசிய நிதி அமைச்சர் மரிய வில்சன், &ldquo;மகளிர் உரிமைத்தொகை திட்டம் மறு சீரமைப்பு செய்வதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாகவும், மகளிர் உரிமைத்தொகை வழங்கலில் பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாகவும், அது குறித்து முழுமையாக விசாரணை நடக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் வேறு மாநிலத்தைச் சார்ந்த பெண்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டதாக வரும் தகவல்கள் குறித்து தீவிர ஆய்வு நடைபெறுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உரிமைத் தொகை திட்டம் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்ட பிறகு, ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் மகளிர் உரிமை தொகை குறித்து முறையான அறிவிப்பு வெளியாகும் என்று அவர் கூறினார். தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் சட்டசபை கூட்டம் ஜூலை மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2026-2027 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. மேலும் தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் விவசாயக் கடன் தள்ளுபடி தொடர்பாக ரிசர்வ் வங்கி விதிமுறைகளை பின்பற்றி முழுமையாக தள்ளுபடி செய்யும் வாய்ப்புகளை அரசு ஆராய்ந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அடுத்த மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இந்த மாதம் ரூ.1000 வரவு வைக்கப்படுமா? அல்லது ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கப்படுமா? என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ரூ.10 லட்சம் கோடி கடனில் இருந்தாலும் அது மாநிலத்தின் கடன் வாங்கும் வரம்பிற்கு உட்பட்ட இருப்பதாகவும், கடன் சுமை இருப்பது தெரிந்து தானே தேர்தல் அறிக்கையில் ரூ.2500 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டீர்கள்? எனவே தேவையில்லாமல் பழி சொல்வதை விட்டுவிட்டு மகளிருக்கு உரிமை தொகை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தவெக அரசை வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/kalaignar-magalir-urimai-thogai-june-2026-who-will-receive-the-1000-rupees-check-eligibility-details-explained-5krfnt0"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Tamilnadu Heavy Rain: தமிழகத்தில் இன்று முதல் ருத்தரதாண்டவம் ஆடப்போகும் பெய் மழை! எந்தெந்த மாவட்டங்களில்? முக்கிய அப்டேட்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/heavy-rain-in-tamil-nadu-from-today-which-districts-will-be-affected-gzttpd0</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/heavy-rain-in-tamil-nadu-from-today-which-districts-will-be-affected-gzttpd0</guid>
            <pubDate>Wed, 03 Jun 2026 08:18:37 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Rain: தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், சில இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இதனிடையே தென்மேற்கு பருவமழை ஜூன் 4-ல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதால், ஜூன் 6 வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைஎச்சரிக்கை.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kkdhfp2mn0qv7agvd5vkx59g,imgname-tamilnadu-rain-1773202298964.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Rain: தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், சில இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இதனிடையே தென்மேற்கு பருவமழை ஜூன் 4-ல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதால், ஜூன் 6 வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைஎச்சரிக்கை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் காலை 7 மணி முதலே வெயில் சுட்டெரித்து வருவதால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் தலைகாட்டவே அஞ்சு நடுங்குகின்றனர். அந்த அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. நேற்று வேலூர் - 104, சென்னை மீனம்பாக்கம் - 104, கரூர் பரமத்தி - 103, தஞ்சாவூர் - 102, சென்னை நுங்கம்பாக்கம் - 101, பாளையங்கோட்டை - 101, திருச்சி - 101, திருத்தணி - 101, நாமக்கல் - 100, மதுரை விமான நிலையம் - 100 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கோடை வெயில் அதிகபட்சமாக இருந்தாலும் மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது கோடை மழை பெய்து வருகிறது. நேற்று திருப்பத்தூர், திருப்பூர், கரூர், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில் தென்மேற்கு பருவமழை குறித்து வானிலை மையம் முக்கிய அப்டேட் கொடுத்துள்ளது. அதாவது தென்மேற்கு பருவமழை கேரளப்பகுதிகளில் ஜூன் 04ம் தேதி வாக்கில் துவங்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திருப்பூர், தென்காசி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதேபோல் ஜூன் 5ம் தேதி தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல், தூத்துக்குடி, விருதுநகர், ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, சிவகங்கை, மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜூன் 6ம் தேதி தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை தஞ்சாவூர், திருவாரூர். நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசா முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39&deg; செல்சியஸை ஒட்டியும் குறைபட்ச வெப்பநிலை 28&deg; செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/heavy-rain-in-tamil-nadu-from-today-which-districts-will-be-affected-gzttpd0"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Vaiko Vs DMK: அப்பவே சொன்ன வைகோவை சேர்க்காதீங்கன்னு! கேட்டீங்களா! தலையில் அடித்துக்கொள்ளும் திமுக முன்னாள் நிர்வாகி!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/former-dmk-functionary-criticizes-vaiko-3o24q9u</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/former-dmk-functionary-criticizes-vaiko-3o24q9u</guid>
            <pubDate>Tue, 02 Jun 2026 22:59:32 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Vaiko: முதல்வர் விஜய்க்கு ஆதரவளித்திருக்கலாம் என மதிமுக எம்.பி. துரை வைகோ தெரிவித்த நிலையில், அவரது சந்தர்ப்பவாதத்தை முன்னாள் திமுக நிர்வாகி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கடுமையாக சாடியுள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kt4nnee5vb2rg53yhv7avt9c,imgname-vaiko-1780420884933.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Vaiko: முதல்வர் விஜய்க்கு ஆதரவளித்திருக்கலாம் என மதிமுக எம்.பி. துரை வைகோ தெரிவித்த நிலையில், அவரது சந்தர்ப்பவாதத்தை முன்னாள் திமுக நிர்வாகி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கடுமையாக சாடியுள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றதில் இருந்து தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக வலுவான கூட்டணியை கட்டமைத்து வந்த திமுக கூட்டணியில் இருந்து ஒவ்வொரு கட்சியாக வெளியேறி தவெகவுடன் இணைந்துள்ளன. இந்நிலையில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக கடந்த சில நாட்களாகவே தவெகவுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்காக சென்ற முதல்வர் விஜய்யை, திருச்சி தொகுதி எம்.பி.யும் வைகோவின் மகனுமான துரை வைகோ விமான நிலையத்தில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த துரை வைகோ: உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது துரதிர்ஷ்டவசமானது. தனி சின்னத்தில் போட்டியிட்டிருந்தால் தவெகவுக்கு ஆதரவு அளித்திருக்கலாம் என்ற கருத்தை தெரிவித்திருந்தார். இந்நிலையில் தோல்வியானாலும் கூட உங்களுக்கு தனிச் சின்னம் கொடுத்த போதே அதில் போட்டியிட்டு இருக்கலாமே? இப்பொழுது வந்து துரதிஷ்டம் என்று சொன்னால் என்ன அர்த்தம்? என முன்னாள் திமுக நிர்வாகி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கடுமையாக விமர்சித்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: மதிமுகவினர் &ldquo;நாங்கள் உதய சூரியன் சின்னத்தில் நின்றது துரதிஷ்டமாகி விட்டது. அப்படி இல்லாமல் எங்கள் சொந்தச் சின்னத்தில் நின்று ஜெயித்திருந்தால் இப்பொழுது விஜய்க்கு ஆதரவு கொடுத்து இருப்போம் &ldquo;என்று கூறுகிறார். அவரிடம் ஒரு கேள்வி. சீர்காழியில் உங்கள் விரும்பும் சின்னத்தில் நிற்பதற்கான ஒரு தொகுதியைத் தானே ஸ்டாலின் கூட்டணியில் ஒதுக்கினார். நீங்கள் தான் அந்த சின்னத்தில் நாங்கள் நிற்கவில்லை உதயசூரியன் சின்னத்திலேயே நிற்கிறோம் என்று கூறினீர்கள்? உங்களுக்காக வந்து சீர்காழி தொகுதியிலும் கூட ஸ்டாலின் மனைவி பிரச்சாரம் கூட பண்ணினார். தோல்வியானாலும் கூட உங்களுக்கு தனிச் சின்னம் கொடுத்த போதே அதில் போட்டியிட்டு இருக்கலாமே? இப்பொழுது வந்து துரதிஷ்டம் என்று சொன்னால் என்ன அர்த்தம்!?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உங்கள் நாவில் இருந்து வரும் சொற்களில் ஏதாவது அறம் இருக்கிறதா? நியாயம் இருக்கிறதா? தவம் இருக்கிறதா? உங்களின் சுய நேர்மையை விட எங்கே காரிய சாதகம் இருக்கிறதோ அங்கே சென்று விடுகிறீர்கள். ஏறக்குறைய 1998 இல் இருந்து 2001 இல் இருந்து பார்த்துக் கொண்டுதான் வருகிறேன். அப்பனும் பிள்ளையுமாகத்தான் முடிவு எடுக்கிறீர்கள். அப்படி முடிவெடுக்கும் பொழுது எல் கணேசனோ கண்ணப்பனோ பொன் முத்துராமலிங்கமோ அந்த காலத்திலேயே உங்களால் அழைக்கப்படவில்லையே.. நீங்கள் இரண்டு பேருமாகத்தான் முடிவெடுத்தீர்கள். விளைவாக இன்றைக்கு மதிமுகவில் வாரிசு அரசியல் உச்சத்தில் இருக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கடந்த காலத்தில் நீங்கள் பேசிய பேச்சுக்களையும் உங்களுக்காகத் தீக்குளித்து உயிர் விட்டவர்களையும் திரும்பக் கொண்டு வந்து விடுவீர்களா வைகோ? இப்படித்தான் மிகக் கேவலமாக இருக்கிறது உங்கள் வாடிக்கை. ஒவ்வொருவரும் உயிரைக் கொடுத்து உங்களுக்காக உழைத்தார்கள். எத்தனை நாட்கள்! எத்தனை ஆண்டுகள்! ஒவ்வொருவரின் வாழ்க்கையும் அதன் அடிப்படையில் எவ்வாறு சீரழிந்து ஒன்றுமில்லாமல் போனது!? எவ்வளவு பேர் எதிர்பார்ப்பில் இருந்து மனமொடிந்து போயிருப்பார்கள்!?&lt;/p&gt;&lt;p&gt;எந்தப் பலாபலனும் இல்லாமல் இளமை காலம் பொருள் அனைத்தையும் இழந்து அவர்களது அரசியல் வாழ்க்கை காற்றில் கரைந்தே போய்விட்டது.. எத்தனை பேரை உங்களுடைய சுயலாபத்திற்காக புறம் தள்ளினீர்கள். ஒதுக்கி வைத்தீர்கள் அந்த பாவம் எல்லாம் உங்களைச் சும்மா விடுமா? 10 வருடம் 20 வருடங்களுக்கு மேலாக உங்களுக்காக உழைத்து உங்கள் அருகிலேயே இருந்தவர்களுக்கு நீங்கள் என்ன நன்றி கடன் பட்டடீர்கள்! அவர்களை அண்ட விடாமல் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டு இன்றைக்கு வந்து துரதிர்ஷடம் பற்றி எல்லாம் பேசுகிறீர்கள்! வேடிக்கையாகத்தான் இருக்கிறது!! நீங்கள் ஏதோ பதவி சுகத்தோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றெல்லாம் நினைத்துக் கொள்ள வேண்டாம்! எல்லாவற்றிற்கும் காலம் பதில் சொல்லும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எப்பொழுதும் உண்மையே பேசுவேன் என்று சொன்ன அரிச்சந்திரனும் கஷ்டப்பட்டான். நள வெண்பாவில் நளனின் கதை என்ன ஆயிற்று? புராணக் கதைகளும் இதிகாசங்களும் எல்லாவற்றிற்குமான காரண காரிய அறிவோடு அவற்றின் விளைவுகளோடும் சம்பந்தப்படுத்தி ஒரு முழுமையான பார்வையை காலம் காலமான இந்தியத் தத்துவங்கள் வழியாக இந்த மானுட சமூகத்திற்கு வழங்கி இருக்கின்றன. கடவுளை நம்பினால் என்ன? நம்பாமல் இருந்தால் என்ன? அதன் படி எல்லாவற்றுக்கும் ஒரு தீர்வு உண்டு. யாரும் அதில் இருந்து தப்ப முடியாது என தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/former-dmk-functionary-criticizes-vaiko-3o24q9u"/>
        </item>
        <item>
            <title><![CDATA[EPS: மனம் தளர வேண்டாம்! துரோகிகளின் எண்ணம் ஈடேறாது! எல்லாத்தையும் நான் பார்த்துகொள்கிறேன்.. சீனாக சீனுக்கு வரும் இபிஎஸ்..]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/aiadmk-general-secretary-edappadi-palanisamy-issues-a-firebrand-statement-hifypuk</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/aiadmk-general-secretary-edappadi-palanisamy-issues-a-firebrand-statement-hifypuk</guid>
            <pubDate>Tue, 02 Jun 2026 19:06:05 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;AIADMK: கழகம் தற்போதைய சூழ்நிலையில் இருந்து மீண்டெழுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நான் மேற்கொண்டு வருகிறேன். இதற்கு கழக நிர்வாகிகளும், கோடானு கோடி கழகத் தொண்டர்களும் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01krrepdr4hgd1njn5mn4b441n,imgname-edappadi-1778937181956.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;AIADMK: கழகம் தற்போதைய சூழ்நிலையில் இருந்து மீண்டெழுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நான் மேற்கொண்டு வருகிறேன். இதற்கு கழக நிர்வாகிகளும், கோடானு கோடி கழகத் தொண்டர்களும் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கட்சியில் பல்வேறு பதவி சுகங்களை அனுபவித்துவிட்டு இன்று கட்சியை அழிக்கும் செயல்களில் ஒருசிலர் ஈடுபடுகின்றனர். அவர்களின் எண்ணம் நிறைவேறாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கழக நிறுவனத் தலைவர், பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கிய நாள் முதல் பல்வேறு சோதனைகளையும், துரோகங்களையும் சந்தித்து வெற்றி கண்டுள்ளார். தொடர்ந்து, அம்மா அவர்களும் இதுபோன்ற பல்வேறு சோதனைகளையும், துரோகங்களையும் சந்தித்துதான் கழகத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்கள். இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் 1988, 1989 ஆண்டுகளில் பல்வேறு இன்னல்களையும், சோதனைகளையும் சந்தித்தார்கள். குறிப்பாக 1996 சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது, கழகம் 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று சோதனையைச் சந்தித்தபோது, கழகத்தில் உடன் இருந்தே அம்மா அவர்களுக்கு பல நேரங்களில் இழைக்கப்பட்ட துரோகங்களை துணிச்சலோடு எதிர்கொண்டு கழகத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்று, பல்வேறு சிறப்புகளைப் பெற்றுத் தந்தார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அந்த வகையில், நம் இரும்பெரும் தலைவர்களின் நல்லாசியோடும், உங்களின் ஒத்துழைப்போடும் 'கழகப் பொதுச் செயலாளர்' பொறுப்பினை ஏற்று, இரவு பகல் பாராமல் பணியாற்றி வரும் நான், பல்வேறு இன்னல்களையும், சோதனைகளையும், துரோகங்களையும், கழக நிர்வாகிகள் மற்றும் கோடானு கோடி கழகத் தொண்டர்களின் துணையோடு எதிர்கொண்டு தொடர்ந்து பயணித்து வருகிறேன் என்பதை நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில் கழகம் 47 இடங்களைப் பெற்ற நிலையில், கழகத்தில் பல்வேறு பதவி சுகங்களை அனுபவித்துவிட்டு இன்று கழகத்தை அழிப்பதற்கான செயல்களில் ஒருசிலர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. நமக்கு எப்பொழுதும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது ஆன்மா உறுதுணையாக இருக்கும். கழகத்தின் தற்போதையை நிலையை எண்ணி, தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளரும், கழகத்தின் தீவிர விசுவாசியுமான K.S. மகேந்திரன் அவர்கள் தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்ட செய்தி அறிந்து என்னுடைய மனம் மிகுந்த வேதனைக்குள்ளாகி இருக்கிறது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தற்போது ஏற்பட்டுள்ள சோதனையைக் கண்டு கழக நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் அனைவரும் மனம் தளர வேண்டாம்; எவ்வித விபரீதமான செயல்களிலும் ஈடுபட வேண்டாம் என்று மீண்டும் மீண்டும் உங்கள் அனைவரையும் மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகிய நம் இருபெரும் தலைவர்கள்தான், சட்டமன்றத் தேர்தலில் தொடர் வெற்றியை கண்டவர்கள். வெற்றி, தோல்வி என்பது மாறி, மாறி வரும். கழகம் தோல்வியை கண்டு துவண்டுவிடுவதுமில்லை. அந்தவகையில், கழகம் தற்போது வெற்றி வாய்ப்பை இழந்தாலும், இந்நிலையில் இருந்து விரைவிலேயே மீண்டு, எதிர்வரும் தேர்தலில் மகத்தான வெற்றியை பெறும். கழகம் தற்போதைய சூழ்நிலையில் இருந்து மீண்டெழுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நான் மேற்கொண்டு வருகிறேன். இதற்கு கழக நிர்வாகிகளும், கோடானு கோடி கழகத் தொண்டர்களும் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&quot;எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ண திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்&quot; என்ற இதய தெய்வம் அம்மா அவர்களின் எண்ணவோட்டத்தை, நாம் அனைவரும் ஒன்றிணைந்து மெய்ப்பித்துக் காட்டுவோம். கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் தற்போதைய சூழ்நிலையை எண்ணி எவ்வித அச்சத்திற்கும், பதற்றத்திற்கும் ஆளாக வேண்டாம் என்று மீண்டும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/aiadmk-general-secretary-edappadi-palanisamy-issues-a-firebrand-statement-hifypuk"/>
        </item>
    </channel>
</rss>
