<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes"?>
<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Sat, 04 Apr 2026 14:46:31 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss/tamilnadu" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[ஊழல்வாதிகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்... தொகுதி மாறி ஓடிய செந்தில் பாலாஜி.! - ஆதவ் அர்ஜுனா]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/aadhav-arjuna-voters-to-teach-senthil-balaji-a-lesson-videoshow-08i9qgx</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/aadhav-arjuna-voters-to-teach-senthil-balaji-a-lesson-videoshow-08i9qgx</guid>
            <pubDate>Fri, 03 Apr 2026 12:00:42 +0530</pubDate>
            <description><![CDATA[]]></description>
            <media:content url="https://www.youtube.com/embed/c1YmLLMc8fQ" medium="video" height="350" width="560"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;உதயநிதி ஸ்டாலின் குறித்துப் பேசுகையில், &quot;அவர் என்ன அம்பானியின் மகனா? கேள்வி கேட்டார். தமிழகத்தில் நிலவும் ஊழல்கள் குறித்துப் பட்டியலிடத் தான் தயார் என்றும், திமுக அரசின் நிர்வாகச் சீர்கேடுகளைத் தோலுரித்துக் காட்டப் போவதாகவும் அவர் சவால் விடுத்தார். மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜி தொகுதி மாறுவது குறித்துப் பேசிய அவர், அது மக்கள் சேவையில் ஏற்பட்ட ஆர்வத்தால் அல்ல, மாறாக ஒரு தொகுதியில் செய்த தவறுகளால் மக்கள் மத்தியில் எழுந்துள்ள எதிர்ப்பு மற்றும் தோல்வி பயத்தினால் எடுக்கப்படும் தந்திரம் என்று &quot;புட்டு புட்டு வைத்தார்&quot;. செந்தில் பாலாஜி கரூரில் இருந்து கோவைக்குத் தப்பி ஓடுவதன் பின்னணியில் உள்ள அரசியல் சூழ்ச்சிகளை விளக்கிய ஆதவ் அர்ஜுனா&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/aadhav-arjuna-voters-to-teach-senthil-balaji-a-lesson-videoshow-08i9qgx"/>
        </item>
        <item>
            <title><![CDATA[கெத்து காட்டும் உதயநிதி.. சவால் விடும் விஜய்.. சீறும் எடப்பாடி.. தேர்தல் திருவிழா அப்டேட்ஸ்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/udhayanidhi-stalin-files-nomination-vijay-challenges-in-trichy-eps-slams-dmk-tn-assembly-elections-2026-articleshow-1pbvgl2</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/udhayanidhi-stalin-files-nomination-vijay-challenges-in-trichy-eps-slams-dmk-tn-assembly-elections-2026-articleshow-1pbvgl2</guid>
            <pubDate>Thu, 02 Apr 2026 19:00:52 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;TN Assembly Elections 2026: சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் 2வது முறையாக போட்டியிடும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், இன்று வேட்புமனுத்தாக்கல் செய்தார்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kn766tnz6j17q7pftn2jrg0e,imgname-eps-admk-1775136631487.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. வேட்பாளர்கள் விறுவிறுப்பாக வேட்புமனு தாக்கல் தாக்கல் செய்து வருகின்றனர். மறுபக்கம் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய் என பம்பரமாக சுழன்று வாக்குகள் வேட்டையாடி வருகின்றனர். தமிழக தேர்தல் திருவிழாவில் இன்றைய (ஏப்ரல் 2) நிகழ்வுகளின் தொகுப்பை சுருக்கமாக பார்ப்போம்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;மீண்டும் மெகா வெற்றியை ருசிப்பாரா உதயநிதி?&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் 2வது முறையாக போட்டியிடும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், இன்று வேட்புமனுத்தாக்கல் செய்தார். 2021 சட்டப்பேரவை தேர்தலில் முதன் முறையாக இந்த தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி, 93,285 வாக்குகள் பெற்று மெகா வெற்றியை ருசித்தார். வேட்புமனு தாக்கல் செய்வதற்காக திறந்த ஜீப்பில் சென்ற உதயநிதிக்கு பொதுமக்கள், திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு உதயநிதி வீதி வீதியாக சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தார்.&lt;/p&gt;&lt;h3&gt;&lt;strong&gt;விஜய்யால் திக்குமுக்காடிய திருச்சி&lt;/strong&gt;&lt;/h3&gt;&lt;p&gt;தவெக தலைவர் சட்டப்பேரவை தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதற்காக பெரம்பூரில் ஏற்கெனவே வேட்புமனு தாக்கல் செய்த விஜய், இன்று திருச்சி கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகம் அமைந்துள்ள திருச்சி மண்டலக்குழு அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து திறந்த வேனில் நின்றபடியே மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே விஜய் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது திமுக ஆட்சியை சரமாரியாக விமர்சித்த விஜய், தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல தவெகவுக்கு ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள் என்று தெரிவித்தார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரசாரம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தருமபுரியில் இன்று மாலை அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ''தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருகிறது. ஆனால் தமிழகத்தில் பெண்கள் இப்போது தான் வேலைக்கு சென்றது போல் ஸ்டாலின் பேசுகிறார். தமிழகத்தில் அதிகமான பெண்கள் எப்போதும் வேலைக்கு சென்று கொண்டு தான் இருக்கின்றனர். நாங்கள் பாஜகவுக்கு அடிமை இல்லை. எந்த கட்சியும் யாருக்கும் அடிமை இல்லை. ஸ்டாலினின் திமுகவை போல கூஜா தூக்கும் கட்சி அல்ல நாங்கள்'' என்று தெரிவித்தார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/udhayanidhi-stalin-files-nomination-vijay-challenges-in-trichy-eps-slams-dmk-tn-assembly-elections-2026-articleshow-1pbvgl2"/>
        </item>
        <item>
            <title><![CDATA[தேர்தல் பிரச்சாரத்தில் பேராபத்து? ஸ்டாலின், இபிஎஸ், விஜய்க்கு.. டெல்டா வெதர்மேன் வைத்த முக்கிய அலர்ட் மெசேஜ்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/stalin-eps-vijay-get-important-request-from-delta-weatherman-8mn7knw</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/stalin-eps-vijay-get-important-request-from-delta-weatherman-8mn7knw</guid>
            <pubDate>Fri, 03 Apr 2026 14:44:41 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Delta Weatherman: தமிழ்நாட்டில் எலினோ காரணமாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளதால், டெல்டா வெதர்மேன் அரசியல் தலைவர்களுக்கு முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k9ertdxbb9hzd4gebyheyzcw,imgname-tamil-news--24--1762506127274.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Delta Weatherman: தமிழ்நாட்டில் எலினோ காரணமாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளதால், டெல்டா வெதர்மேன் அரசியல் தலைவர்களுக்கு முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ்நாட்டில் முன் எப்போதும் இல்லாத வகையில் பிப்ரவரி மாதமே வெயில் வாட்டி வதைத்து வந்தது. பின்னர் மார்ச் மாதத்தில் உக்கிரமானதை அடுத்து கோடை வெயில் தொடங்கிய விட்டதோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்தது. பல்வேறு இடங்களில் 100 டிகிரி தாண்டி வெயில் சுட்டெரித்தது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதை முற்றிலுமாக தவிர்த்து வந்தனர். உச்சி வெயில் மண்டையை பொளந்தாலும் அவ்வப்போது ஒரு சில மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்து வந்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில் ஏப்ரல் மாதம் தொடங்கியதை அடுத்து வெயில் அதிகரித்து காணப்படுப்படுகிறது. இதனிடையே தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுவதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அரசியல் கட்சி தலைவர்களுக்கு டெல்டா வெதர்மேன் முக்கிய வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதுதொடர்பாக அவரது முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாட்டில் ஜனநாயகத் திருவிழா சூடு பிடித்து நடந்து கொண்டிருக்கிறது. இந்த தருணத்தில் ஒரு வானிலை ஆய்வாளராக திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக கட்சி தலைவர் விஜய் அவர்களுக்கும் முக்கியமான வேண்டுகோள் ஒன்றை வைக்கிறேன்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நாம் முன்பே குறிப்பிட்டவாறு இந்த ஆண்டு எலினோ உருவாகக்கூடிய ஆண்டாக இருப்பதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளை ஒப்பிடும்போது வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருக்கும். இந்த ஆண்டு நமக்கு ஏப்ரல், மே மாதங்களில் வெப்பத்தின் தாக்கம் இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. வெப்ப அலைகளின் தாக்கம் இருக்கும் இந்த சூழலில் அடுத்து ஒரு சில வாரங்களில் தேர்தல் இருக்கக்கூடிய சூழலில் கட்சி பொதுக் கூட்டங்களையும், பிரச்சாரங்களையும் கட்சித் தலைவர்கள் தயவு செய்து காலை அல்லது மாலை நேரத்தில் மட்டும் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குறிப்பாக நண்பகல் 11 முதல் 3.30 மணி இடைப்பட்ட நேரத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருக்கும். வெப்பம் உச்சபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் மேல் பதிவாக வாய்ப்புகள் இருக்கிறது. அதேபோல ஒரு சமவெளி பகுதிகளில் அதாவது திறந்தவெளி பகுதியில் மரங்கள் இல்லாத பகுதியில் அதிக கூட்டம் கூடும்போது. அங்கு இருக்கக்கூடிய உணர்வும் வெப்பநிலை என்பது அதிகரித்து காணப்படும். அந்த தருணத்தில் குறிப்பிட்ட இடத்தில் அதிகப்படியான மக்கள் கூட்டம் கூடினால் அவர்களுக்கு எளிதாக உடம்பில் நீர்சத்து குறைவதற்கான வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக வெயில் நேரத்தில் பக்கவாதங்கள் ஹார்ட் அட்டாக் போன்றவை ஏற்படுவதற்கும் மயக்கம் அடைந்தால் எளிதாக கடந்து போய் விடுகிறோம். தண்ணீர் தாகம் தானே என்று நாம் எளிதாக கடந்து போகிறோம். டிஹைட்ரேட் அவர்களிடம் நீர்ச்சத்து முழுமையாக குறைந்து மயக்கம் அடைந்தால் அந்த தருணத்தில் தண்ணீர் கொடுத்தால் கூட காப்பாற்று என்பது கடினம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தவிர்க்க வேண்டிய சூழல் இருக்கும்போது அதை தவிர்க்காமல் விபத்து ஏற்படுகிறது என்று குறிப்பிட முடியாது. அதன் காரணமாக காலை 11 மணிக்கு முன்பாக அல்லது 3.30 மணிக்கு பின்பாக தங்களின் பிரச்சாரங்கள் பொதுக்கூட்டங்கள் பிரச்சாரங்களை வைத்துக் கொள்ளுங்கள். கண்டிப்பாக அதையும் மீறி கட்சித் தலைவர் பொதுக்கூட்டத்தை மேற்கொள்ளும் போது வந்திருக்கக்கூடிய தொண்டர்களுக்கு தேவையான நிழலுக்கோ, அங்கு இருக்கக்கூடியவர்களுக்கு நீர்ச்சத்து குறையாமல் இருப்பதற்கு தகுந்த முன்னேற்பாடுகள் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இது எந்த விதத்திலும் எந்த கட்சியையும் குறிப்பிட்டு பதிவிடவில்லை. தற்போது இருக்கக்கூடிய சூழல் ஏப்ரல் மாதங்களில் தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கூட்டங்கள் கூடும் போது அந்த இடங்களில் வறட்சியான நிலைக்கு சென்று விடாமல் பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/stalin-eps-vijay-get-important-request-from-delta-weatherman-8mn7knw"/>
        </item>
        <item>
            <title><![CDATA[எம்.ஜி.ஆரின் பிரசாரம் - கலைஞரின் வியூகம்: காமராஜரையே அதிர வைத்த 1971 களம்..! 55 ஆண்டு ரெகார்ட்..]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/1971-election-how-mgr-and-kalaignar-stunned-kamarajar-videoshow-9r3msgn</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/1971-election-how-mgr-and-kalaignar-stunned-kamarajar-videoshow-9r3msgn</guid>
            <pubDate>Thu, 02 Apr 2026 19:02:39 +0530</pubDate>
            <description><![CDATA[]]></description>
            <media:content url="https://geo.dailymotion.com/player/x1tbu.html?video=xa448am" medium="video" height="768" width="1024"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;எம்.ஜி.ஆர், கலைஞரின் வியூகமும் இணைந்து, காமராஜர் போன்ற மாபெரும் தலைவரையே அதிர வைத்து, திமுகவிற்கு 184 இடங்களை வாரிக்கொடுத்தன. 1971 சட்டமன்றத் தேர்தலில் திமுக பெற்ற இந்த இமாலய வெற்றி, 55 ஆண்டுகளைக் கடந்தும் முறியடிக்க முடியாத சாதனையாக நீடிக்கிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/1971-election-how-mgr-and-kalaignar-stunned-kamarajar-videoshow-9r3msgn"/>
        </item>
        <item>
            <title><![CDATA[திமுகதான் கோயிலை பாதுகாக்கும்.! இதெல்லாம் செய்வோம் என பட்டியல் போட்ட கனிமொழி.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/kanimozhi-details-dmk-s-plan-to-protect-temples-videoshow-9u238tk</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/kanimozhi-details-dmk-s-plan-to-protect-temples-videoshow-9u238tk</guid>
            <pubDate>Fri, 03 Apr 2026 16:02:51 +0530</pubDate>
            <description><![CDATA[]]></description>
            <media:content url="https://geo.dailymotion.com/player/x1tbu.html?video=xa46sre" medium="video" height="768" width="1024"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழக அரசு மேற்கொண்டு வரும் மக்கள் நலத்திட்டங்களைப் பட்டியலிட்ட கனிமொழி, குறிப்பாக மகளிருக்கான இலவசப் பேருந்து பயணம் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் ஆகியவை பெண்களின் வாழ்வாதாரத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறினார். நிலக்கோட்டை தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர் வசதி, சாலை மேம்பாடு மற்றும் விவசாயிகளுக்கான கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்தார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/kanimozhi-details-dmk-s-plan-to-protect-temples-videoshow-9u238tk"/>
        </item>
        <item>
            <title><![CDATA[புதுச்சேரியில் ரோடு ஷோ நிகழ்ச்சி... கையசைத்தபடி வந்த பிரதமர் மோடி..]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/pm-modi-greets-puducherry-with-a-grand-roadshow-videoshow-feu8484</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/pm-modi-greets-puducherry-with-a-grand-roadshow-videoshow-feu8484</guid>
            <pubDate>Fri, 03 Apr 2026 19:03:02 +0530</pubDate>
            <description><![CDATA[]]></description>
            <media:content url="https://geo.dailymotion.com/player/x1tbu.html?video=xa478dy" medium="video" height="768" width="1024"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சட்டமன்ற தேர்தல் பரப்புரைக்காக புதுச்சேரி வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரி அஜந்தா சிக்னல் சந்திப்பில் இருந்து அண்ணா சிலை வரை ரோடு ஷோ மேற்கொள்கிறார். பிரதமர் மோடியுடன் புதுச்சேரி ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயமும் ரோடு ஷோவில் பங்கேற்றுள்ளனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/pm-modi-greets-puducherry-with-a-grand-roadshow-videoshow-feu8484"/>
        </item>
        <item>
            <title><![CDATA[திமுகவுல சேந்துட்டோம்.! டி.டி.வி.தினகரன பத்தி கேட்காதிங்க.!பொருமி தள்ளிய அமமுக நிர்வாகிகள்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/ammk-officials-join-dmk-citing-frustration-with-ttv-videoshow-g7wwpgp</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/ammk-officials-join-dmk-citing-frustration-with-ttv-videoshow-g7wwpgp</guid>
            <pubDate>Fri, 03 Apr 2026 15:03:14 +0530</pubDate>
            <description><![CDATA[]]></description>
            <media:content url="https://geo.dailymotion.com/player/x1tbu.html?video=xa46nbu" medium="video" height="768" width="1024"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;அமமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த நிர்வாகிகள், சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக, முன்னாள் எம்.பி. கோபால் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த பிறகு பேசுகையில், &quot;நாங்கள் இப்போது முழுமனதுடன் திமுகவில் இணைந்துவிட்டோம்; இனிமேல் டி.டி.வி. தினகரன் பற்றியோ அல்லது அமமுக பற்றியோ எங்களிடம் எந்தக் கேள்வியும் கேட்காதீர்கள்&quot; என ஆவேசமாகக் குறிப்பிட்டனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/ammk-officials-join-dmk-citing-frustration-with-ttv-videoshow-g7wwpgp"/>
        </item>
        <item>
            <title><![CDATA[பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. முழு ஆண்டு தேர்வு தேதியில் மாற்றம்..]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/school-student-annual-exam-date-change-klrcfw3</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/school-student-annual-exam-date-change-klrcfw3</guid>
            <pubDate>Fri, 03 Apr 2026 18:17:38 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் தேர்த் திருவிழா முன்னிட்டு 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற உள்ள தேர்வுகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j8bndzc3md5sm1e50p9rffvp,imgname-school-student--3.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் தேர்த் திருவிழா முன்னிட்டு 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற உள்ள தேர்வுகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்கி 26ம் தேதியும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வு ஏப்ரல் 10 முதல் 24-ம் தேதி வரை நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது. இதனிடையே தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டிருந்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் காரணமாக பள்ளி கட்டிடங்கள் வாக்குச்சாவடி மையங்களாக பயன்படுத்தப்படவுள்ளதை அடுத்து கல்வி நடவடிக்கைகளில் இடையூறு ஏற்படாத வகையில் முழு ஆண்டு தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வுகளை ஏப்ரல் 16ம் தேதி வரை நடத்தப்படுகிறது. ஏப்ரல் 17ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதனிடையே புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அடுத்துள்ள நார்த்தாமலையில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டுக்கான பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்ரல் 6-ம் தேதி திங்கட்கிழமை மாலை நடைபெற உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த தேரோட்டதை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மட்டும் தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் தேர்த் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் ஏப்ரல் 6ம் தேதி திங்கள் கிழமை அன்று உள்ளுர் விடுமுறை அளித்து ஆணையிடப்பட்டுள்ளது. அன்றைய தினம் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற உள்ள தேர்வுகள் அனைத்தும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அனுமதியின்படி ஏப்ரல் 10ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/school-student-annual-exam-date-change-klrcfw3"/>
        </item>
        <item>
            <title><![CDATA[No அண்ணாமலை..! பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு..! 27 தொகுதிகளுக்குமான பட்டியல் வெளியானது..]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/tn-assembly-election-2026-bjp-candidate-list-released-articleshow-lg56h17</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/tn-assembly-election-2026-bjp-candidate-list-released-articleshow-lg56h17</guid>
            <pubDate>Fri, 03 Apr 2026 14:29:05 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தமிழக சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் 27 தொகுதிகளில் போட்டியிடக் கூடிய பாஜக வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது. மிகுந்து எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பெயர் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kdphfagxfjrtnxev443197n4,imgname-untitled-design--11--1767061826076.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழகத்தில் வரக்கூடிய 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக தலைமையில் பாரதிய ஜனதா கட்சி 27 தொகுதிகளில் போட்டியிடுகிறது. போட்டியாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மட்டும் தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிடாமல் தாமதப்படுத்தி வந்தன.&lt;/p&gt;&lt;p&gt;இந்த நிலையில் 27 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை பாஜக தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலின் படி பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சாத்தூர் தொகுதியிலும், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனும் போட்டியிடுகின்றனர். தமிழக மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்க இருந்த முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பெயர் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை.&lt;/p&gt;&lt;p&gt;மேலும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த விஜயதாரணிக்கு விளவங்கோடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;Press ReleaseThe Central Election Committee of the @BJP4India has decided the following names for the ensuing General Elections to the Legislative Assembly of TAMIL NADU:TAMIL NADU Legislative Assembly Election 2026..!#TNElection2026#TNElection2026 pic.twitter.com/nSe4tgaupm&lt;/p&gt;&lt;p&gt;&mdash; BJP Tamilnadu (@BJP4TamilNadu) April 3, 2026&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/tn-assembly-election-2026-bjp-candidate-list-released-articleshow-lg56h17"/>
        </item>
        <item>
            <title><![CDATA[இந்த தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என நான் தான் கூறினேன் ! அண்ணாமலை விளக்கம்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/annamalai-explains-his-initial-reluctance-to-contest-videoshow-n9isz8f</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/annamalai-explains-his-initial-reluctance-to-contest-videoshow-n9isz8f</guid>
            <pubDate>Sat, 04 Apr 2026 14:03:01 +0530</pubDate>
            <description><![CDATA[]]></description>
            <media:content url="https://geo.dailymotion.com/player/x1tbu.html?video=xa4983k" medium="video" height="768" width="1024"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;இந்த தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என நான் தான் கூறினேன் . மாநிலத்தினுடைய கோர் கமிட்டியில் என்னுடைய கருத்தை சொல்லிருந்தேன் போட்டியிடவில்லை என்று . மேலும் பிரச்சாரம் செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன் என அண்ணாமலை விளக்கம் .&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/annamalai-explains-his-initial-reluctance-to-contest-videoshow-n9isz8f"/>
        </item>
        <item>
            <title><![CDATA[தலைவனா இருக்க தகுதியில்லை! ஜெயில் இருந்தபோது யாருப்பா வந்தீங்க.! கொதித்தெழுந்த ஆ.ராசா.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/a-raja-on-jail-time-who-is-unworthy-to-be-a-leader-videoshow-nypmtco</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/a-raja-on-jail-time-who-is-unworthy-to-be-a-leader-videoshow-nypmtco</guid>
            <pubDate>Thu, 02 Apr 2026 18:00:01 +0530</pubDate>
            <description><![CDATA[]]></description>
            <media:content url="https://geo.dailymotion.com/player/x1tbu.html?video=xa43rjs" medium="video" height="768" width="1024"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் பெயரைச் சொல்லி அவர் சில ஒப்பீடுகளைச் செய்ததாகக் கூறப்படும் நிலையில், இந்த ஆடியோ உட்கட்சி அரசியலில் நிலவும் பழைய கசப்பான சம்பவங்களை மீண்டும் நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளது. குறிப்பாக, சிறை வாசத்தின் போது தனக்குக் கட்சித் தலைமையிடம் இருந்து போதுமான ஆதரவு கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்துவது போலவும், அழகிரியின் வருகையை ஒரு முக்கிய ஆதரவாக அவர் கருதுவது போலவும் அந்தப் பேச்சு அமைந்துள்ளது. இது பழைய வீடியோவாக இருந்தாலும், தற்போதுள்ள அரசியல் சூழலில் திமுகவின் உள்விவகாரங்கள் குறித்து விவாதிக்க சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/a-raja-on-jail-time-who-is-unworthy-to-be-a-leader-videoshow-nypmtco"/>
        </item>
        <item>
            <title><![CDATA[கோவை மட்டுமல்ல.. இந்த மூன்று மாவட்டங்களில் விடாமல் கொட்டப்போகும் கனமழை.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-coimbatore/heavy-rain-warning-for-three-districts-including-coimbatore-and-the-nilgiris-ooczlui</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-coimbatore/heavy-rain-warning-for-three-districts-including-coimbatore-and-the-nilgiris-ooczlui</guid>
            <pubDate>Sat, 04 Apr 2026 14:46:29 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01khwg265xkvvh3mnsckbsnk17,imgname-tamilnadu-rain-1-1771556640957.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பொதுவாக மே மாதத்தில்தான் அக்னி நட்சத்திரம் தொடங்கும். ஆனால், புவி வெப்பமடைதல் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மாற்றம் காரணமாக ஏப்ரல் மாதத்திலேயே வேலூர், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெயில் சதம் அடித்து வருகிறது. குறிப்பாக உள் மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதை முற்றிலுமாக தவிர்த்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் சுகாதாரத்துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தாகம் இல்லாவிட்டாலும் அவ்வப்போது தண்ணீர் குடிக்கவும். இளநீர், நன்னாரி சர்பத், மோர் மற்றும் பழச்சாறுகள் உடலுக்குக் குளிர்ச்சி தரும். காரமான மற்றும் எண்ணெய் பலகாரங்களைத் தவிர்த்து, நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளான வெள்ளரிக்காய், தர்பூசணி மற்றும் புடலங்காயைச் சேர்த்துக் கொள்ளவும். இறுக்கமான ஆடைகளைத் தவிர்த்து, தளர்வான பருத்தி (Cotton) ஆடைகளை அணியவும். வெளியே செல்லும்போது குடை அல்லது தொப்பி அணிவது அவசியம். மதியம் 12 மணி முதல் 4 மணி வரை நேரடியாக வெயிலில் வேலை செய்வதைத் தவிர்க்கவும். இது 'ஹீட் ஸ்ட்ரோக்' (Heatstroke) எனப்படும் வெப்ப மயக்கத்தைத் தடுக்க உதவும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில் இன்று கோவை, நீலகிரி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களுக்கு வானிலை மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது சுமார் 0.9 கிமீ உயரத்தில் மரத்வாடா முதல் தென்தமிழகம் வரை உள் கர்நாடகா வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதேபோல் நாளை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏப்ரல் 6ம் தேதி தென்தமிழகதில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். விருதுநகர், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்று முதல் ஏப்ரல் 07 வரை வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2-3&deg; செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். தென்தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37&deg; செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27&deg; செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-coimbatore/heavy-rain-warning-for-three-districts-including-coimbatore-and-the-nilgiris-ooczlui"/>
        </item>
        <item>
            <title><![CDATA[தவெக தலைவர் விஜய்யை விமர்சிக்க விரும்பவில்லை... திமுக எம்.பி. கனிமொழி இப்படி சொல்லிட்டாங்களே..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/dmk-mp-kanimozhi-comments-on-tvk-vijay-contesting-two-constituency-articleshow-pqlspgh</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/dmk-mp-kanimozhi-comments-on-tvk-vijay-contesting-two-constituency-articleshow-pqlspgh</guid>
            <pubDate>Fri, 03 Apr 2026 12:58:31 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;நடிகர் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது அவரது நம்பிக்கையை காட்டுகிறது என்றும், அதை விமர்சிக்க விரும்பவில்லை என்றும் திமுக எம்.பி கனிமொழி கூறியுள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k6csw94y3kjk1n7h02ydkcnd,imgname-mixcollage-30-sep-2025-01-03-pm-5901-1759218902174.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Kanimozhi Comments on TVK Vijay : தமிழ்நாட்டு மக்கள் மீண்டும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான 'திராவிட மாடல் 2.0' ஆட்சி அமைய வேண்டும் என விரும்புகிறார்கள். அதனால், திமுகவின் வெற்றி உறுதி என நான் உறுதியாக நம்புகிறேன்,&quot; என்று திமுக எம்.பி. கனிமொழி வியாழக்கிழமை சிவகங்கையில் பேசினார். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து கேட்டபோது, &quot;விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது அவருடைய நம்பிக்கையையும், அவருடைய கட்சியின் நம்பிக்கையையும் காட்டுகிறது. அதை நான் விமர்சிக்க விரும்பவில்லை,&quot; என்றார் கனிமொழி.&lt;/p&gt;&lt;p&gt;காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் தாமதமாவது பற்றி பேசிய அவர், &quot;சோனியா காந்திக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், கூடிய சீக்கிரமே காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியாகும்,&quot; என்று குறிப்பிட்டார். நேற்றும் கூட, முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என கனிமொழி நம்பிக்கை தெரிவித்திருந்தார்.&lt;/p&gt;&lt;p&gt;&quot;திமுக நிச்சயம் மீண்டும் ஆட்சிக்கு வரும். ஏனென்றால், எங்கள் அரசாங்கம் மீதும், முதல்வர் மீதும், கடந்த ஐந்து ஆண்டுகளில் நாங்கள் செய்த சாதனைகள் மீதும் மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறது,&quot; என்று அவர் கூறினார். திமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்ட கனிமொழி, வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம், மற்றும் குறிப்பாக பெண்கள் மற்றும் மாணவர்களுக்கான சமூக நலத் திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார்.&lt;/p&gt;&lt;p&gt;&quot;முதல்வர் ஆட்சிக்கு வந்த கடந்த ஐந்து ஆண்டுகளில் வளர்ச்சி, பொருளாதாரம், ஜிடிபி எல்லாமே நல்ல முன்னேற்றம் கண்டிருக்கிறது. அதனால் இந்த ஆட்சி தொடர வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். தூத்துக்குடியில்கூட நிறைய தொழிற்சாலைகளை கொண்டு வந்திருக்கிறார்கள். முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சியால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்திருக்கிறது. அதனால் மக்கள் ரொம்ப ஆர்வமாக இருக்கிறார்கள். பெண்களின் முன்னேற்றத்துக்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. உயர்கல்வி படிக்க விரும்பும் மாணவர்களுக்கு இந்த அரசு பக்கபலமாக இருந்து, அவர்களுக்கு ஆதரவு கொடுத்திருக்கிறது,&quot; என்றும் கனிமொழி கூறினார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;img&gt;&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;கனிமொழி பிரச்சாரம்&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;இதையடுத்து மதுரை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் பூமினாதனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தபோது, &quot;தமிழ் மக்களின் மற்றும் அவர்களின் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பவர்களுக்குத்தான் மக்கள் வாக்களிப்பார்கள்&quot; என்று அவர் கூறினார்.&lt;/p&gt;&lt;p&gt;&quot;மக்கள் உங்களுக்கு (NDA) வாக்களிக்கத் தயாராக இல்லை. முதலமைச்சர் தலைமையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் திறன் கொண்ட திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் எங்கள் கூட்டணிக்கும் ஆதரவளிக்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள். தமிழ் மக்களின் மற்றும் தமிழ் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பவர்களுக்கு வாக்களிக்க மக்கள் தயாராக உள்ளனர்,&quot; என்றார் கனிமொழி.&lt;/p&gt;&lt;p&gt;மேலும், தங்கள் கூட்டணி ஒரு &quot;கொள்கை அடிப்படையிலான கூட்டணி&quot; என்றும், சந்தர்ப்பவாதக் கூட்டணி அல்ல என்றும் அவர் விவரித்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்பு பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று கூறிவிட்டு இப்போது கூட்டணி வைத்திருப்பதை அவர் விமர்சித்தார்.&lt;/p&gt;&lt;p&gt;&quot;எங்கள் கூட்டணி கொள்கை அடிப்படையிலானது. இது அடிக்கடி மாறும் சந்தர்ப்பவாதக் கூட்டணி அல்ல. இது மக்கள் நலன் சார்ந்த கூட்டணி, இது அர்ப்பணிப்புடனும் ஸ்திரத்தன்மையுடனும் தனது பயணத்தைத் தொடரும். சில ஆண்டுகளுக்கு முன்பு, எடப்பாடி பழனிசாமி எந்தச் சூழ்நிலையிலும் பாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டேன் என்று அறிவித்தார். ஆனால் இன்று, அவர்கள் ஒரே மேடையில் கைகோர்த்து நிற்கிறார்கள். இதுபோன்ற முரண்பாடுகளுடன் அவர்கள் வாக்கு கேட்க வருகிறார்கள்,&quot; என்று அவர் கூறினார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/dmk-mp-kanimozhi-comments-on-tvk-vijay-contesting-two-constituency-articleshow-pqlspgh"/>
        </item>
        <item>
            <title><![CDATA[விஜய் போட்டியிடும் தொகுதியில் முதல்வர் மார்னிங் வாக்; திமுக பயப்படவில்லை என நாடகமாடுகிறது - ஆதவ் அர்ஜுனா தாக்கு!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/tvk-aadhav-arjuna-says-dmk-is-scared-of-vijay-and-slams-cm-stalin-campaign-in-trichy-east-articleshow-qpmgz6y</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/tvk-aadhav-arjuna-says-dmk-is-scared-of-vijay-and-slams-cm-stalin-campaign-in-trichy-east-articleshow-qpmgz6y</guid>
            <pubDate>Sat, 04 Apr 2026 13:06:13 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;நடிகர் விஜய்யின் அரசியல் வருகையைக் கண்டு ஆளும் திமுக பயந்துவிட்டது என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா விமர்சித்துள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01knbpm162pdmvk5yk89qd90ab,imgname-aadhav-arjuna--1--1775288059074.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;TVK Aadhav Arjuna Slams DMK : &lt;/strong&gt;வரவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் விஜய்யின் அரசியல் வருகையைப் பார்த்து ஆளும் திமுக பயந்துவிட்டது என்று தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா கிண்டலாகத் தெரிவித்துள்ளார். திருச்சியில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, திமுகவினர் நம்பிக்கையுடன் இருப்பதாகக் கூறினாலும், திருச்சி கிழக்கு தொகுதியில் அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் முகாமிட்டிருப்பதைச் சுட்டிக்காட்டினார்.&lt;/p&gt;&lt;p&gt;&quot;&lsquo;நாங்கள் தவெக-வுக்கோ விஜய்க்கோ பயப்படவில்லை&rsquo; என்று திமுகவினர் சொல்கிறார்கள். ஆனால், விஜய் போட்டியிடும் திருச்சி கிழக்கு தொகுதியில், முதல்வரும் மற்ற அமைச்சர்களும் ஓட்டு சேகரிப்பதற்காக மார்னிங் வாக் போய்க்கொண்டிருக்கிறார்கள்,&quot; என்று அவர் கூறினார்.&lt;/p&gt;&lt;p&gt;மேலும், அந்த தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பற்றிக் குறிப்பிட்ட அர்ஜுனா, கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர் தொகுதியை கண்டுகொள்ளவே இல்லை என்று குற்றம்சாட்டினார்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;திமுகவை சாடிய ஆதவ் அர்ஜுனா&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;&quot;ஐந்து ஆண்டுகளாக தொகுதி பக்கமே வராத எம்.எல்.ஏ, இப்போது தேவையில்லாமல் வருகிறார். தொகுதியில் உள்ள மக்களுக்கு அவரது பெயர் கூடத் தெரியவில்லை,&quot; என்று குறிப்பிட்ட அவர், இதுபோல மக்கள் பிரதிநிதிகள் மக்களைச் சந்திக்காமல் இருப்பது மாநிலத்தின் பல தொகுதிகளில் நடப்பதாகக் கூறினார்.&lt;/p&gt;&lt;p&gt;நடிகர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். பெரம்பூரில் திமுக-வின் சிட்டிங் எம்.எல்.ஏ ஆர்.டி. சேகரையும், திருச்சி கிழக்கில் இன்பதுரை இருதயராஜையும் எதிர்த்து அவர் களம் காண்கிறார். பெரம்பூர் தொகுதி 2016 வரை சிபிஐ(எம்) கட்சியின் கோட்டையாக இருந்தது. 2019 இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதிலிருந்து ஆர்.டி. சேகர் அங்கு எம்.எல்.ஏ-வாக இருக்கிறார்.&lt;/p&gt;&lt;p&gt;தவெக தனது தேர்தல் அறிக்கையில், &quot;போதைப்பொருள் எதிர்ப்பு பாதுகாப்பு மண்டலங்கள்&quot; மற்றும் மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை போன்ற வாக்குறுதிகளை அளித்துள்ளது. பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.2,000 வழங்கப்படும் என விஜய் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23ந் தேதி அன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெறும். அடுத்த ஐந்து ஆண்டுகள் தமிழ்நாட்டை யார் ஆட்சி செய்யப் போகிறார் என்பதை தீர்மானிக்க இன்னும் ஒரு மாதம் மட்டுமே எஞ்சி உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;இந்தத் தேர்தலில் முக்கியப் போட்டி, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் (NDA) இடையே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், நடிகர் விஜய் இந்தத் தேர்தலை மும்முனைப் போட்டியாக மாற்ற முயற்சிப்பார். விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. அதில் குறிப்பாக அக்கட்சித் தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் களமிறங்குகிறார். அக்கட்சியினரை ஆதரித்து விஜய் தற்போது சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதேபோல் தவெகவின் முக்கிய வேட்பாளர்களில் ஒருவரான ஆதவ் அர்ஜுனா இந்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் சென்னையில் உள்ள வில்லிவாக்கம் தொகுதியில் களமிறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/tvk-aadhav-arjuna-says-dmk-is-scared-of-vijay-and-slams-cm-stalin-campaign-in-trichy-east-articleshow-qpmgz6y"/>
        </item>
        <item>
            <title><![CDATA[விஜய் இன்னும் வெளிப்படையான அரசியல் நிலைப்பாடுகளை எடுக்க வேண்டும் - அறிவுரை சொன்ன துரை வைகோ]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/durai-vaiko-advises-vijay-on-a-clearer-political-stand-videoshow-szbqqe1</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/durai-vaiko-advises-vijay-on-a-clearer-political-stand-videoshow-szbqqe1</guid>
            <pubDate>Fri, 03 Apr 2026 17:02:40 +0530</pubDate>
            <description><![CDATA[]]></description>
            <media:content url="https://geo.dailymotion.com/player/x1tbu.html?video=xa46xd0" medium="video" height="768" width="1024"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த துரை வைகோ, ராகுல் காந்தியின் தமிழக வருகை மற்றும் பிரச்சாரம் இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய பலத்தை அளிக்கும் என்றும் குறிப்பிட்டார். விஜய்யின் அரசியல் நகர்வுகள் குறித்துப் பேசிய அவர், விஜய் இன்னும் வெளிப்படையான அரசியல் நிலைப்பாடுகளை எடுக்க வேண்டும் என்றும், அப்போதுதான் அவர் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்றும் தெரிவித்தார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/durai-vaiko-advises-vijay-on-a-clearer-political-stand-videoshow-szbqqe1"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Udhayanidhi Net Worth: அட! ரூ.21 கோடியை தாண்டாத உதயநிதி சொத்து மதிப்பு.. முழு விவரம் உள்ளே!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/udhayanidhi-stalin-net-worth-rs-20-crore-declared-for-2026-tamil-nadu-polls-tmoqgxf</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/udhayanidhi-stalin-net-worth-rs-20-crore-declared-for-2026-tamil-nadu-polls-tmoqgxf</guid>
            <pubDate>Thu, 02 Apr 2026 21:19:24 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் உதயநிதி இன்று வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அவரது சொத்து மதிப்பு விவரங்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kd1z7n7am5312m2t71s6ekpd,imgname-whatsapp-image-2025-12-22-at-08.16.04-1766371611882.jpeg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் உதயநிதி இன்று வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அவரது சொத்து மதிப்பு விவரங்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்த வேட்புமனுவில் தனது சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதன்படி, அவருக்கு ₹20.64 கோடிக்கு மேல் சொத்து இருப்பது தெரியவந்துள்ளது. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் மீண்டும் போட்டியிடும் உதயநிதி, தனது பெயரில் ₹12.92 கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்களும், ₹7.72 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;கிருத்திகாவுக்கு எவ்வளவு சொத்து?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;அவரது மனைவி கிருத்திகா பெயரில் ₹13.25 கோடிக்கு அசையும் சொத்துக்கள் உள்ளன. வேட்புமனு தாக்கல் செய்த பிறகு, தேர்தல் பிரச்சாரத்தையும் உதயநிதி தொடங்கியுள்ளார். சென்னை அயோத்தியா நகர் பகுதியில், மக்களுடன் நேரடியாக உரையாடுவதற்காக ஆட்டோவில் பயணம் செய்து தனது பிரச்சாரத்தை ஆரம்பித்தார். முன்னதாக, வேட்புமனு தாக்கல் செய்ய ஊர்வலமாகவும் சென்றார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பின்பு செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, &quot;இந்த முறை நாங்கள் சரித்திரம் படைப்போம், நிச்சயம் வெற்றி பெறுவோம். எங்கள் தலைவர் (மு.க. ஸ்டாலின்) இரண்டாவது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்பார்&quot; என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலின், இதே சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ. என்பது குறிப்பிடத்தக்கது. 2021 சட்டமன்றத் தேர்தலில், பாமக வேட்பாளர் ஏ.வி.ஏ. கசாலியை 69,355 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோற்கடித்தார். இந்த முறை, அதிமுக சார்பில் ஆதிராஜாராம் அவரை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;திமுக தேர்தல் வாக்குறுதி&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;சமீபத்தில், மக்கள் டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க உதவும் வகையில் ₹8,000 மதிப்புள்ள கூப்பன்கள் வழங்கப்படும் என உதயநிதி அறிவித்திருந்தார். மேலும், மாநில அரசின் திட்டத்தின் கீழ் 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை மாதம் ₹2,000 ஆக உயர்த்துவது, பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை தொடர்வது, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை 8-ம் வகுப்பு வரை விரிவுபடுத்துவது, தகுதியான குடும்பங்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் தொகையை ₹10 லட்சமாக உயர்த்துவது போன்ற பல திட்டங்களை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முன்னதாக முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்கள் வெளியாகி இருந்தன. கடந்த நிதியாண்டிற்கான வருமான வரித் தாக்கலின் அடிப்படையில், முதல்வர் ஸ்டாலினின் அசையும் சொத்துக்கள் ரூ.3.30 கோடி ஆகும். அசையா சொத்துக்கள் ரூ.2.96 கோடி ஆகும். ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினின் அசையும் சொத்துக்கள் ரூ.1.32 கோடி ஆகும். அசையா சொத்துகள் ரூ.2.10 கோடி ஆகும். முதல்வர் ஸ்டாலினின் மொத்த வருமானம் 31 லட்சம் ரூபாய்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சொந்தமாக வாகனம் இல்லை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;அதே காலகட்டத்தில், அவரது மனைவி துர்கா ஸ்டாலினின் வருமானம் 5.33 லட்சம் ரூபாய் ஆகும். கையிருப்பு ரொக்கத்தைப் பொறுத்தவரை, முதல்வரிடம் 10,000 ரூபாயும், துர்கா ஸ்டாலினிடம் 40,000 ரூபாயும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் பெயரில் எந்தவிதமான பைக், கார் உள்பட சொந்த வாகனங்களோ அல்லது தங்கம் மற்றும் வெள்ளி நகைகளோ இல்லை என்பது பிரமாணப் பத்திரத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அவரது மனைவி துர்கா ஸ்டாலினிடம் 84 லட்சம் ரூபாய் மதிப்பிலான 720 கிராம் பழைய தங்க நகைகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/udhayanidhi-stalin-net-worth-rs-20-crore-declared-for-2026-tamil-nadu-polls-tmoqgxf"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஆட்சியைக் காத்தவருக்கே அல்வா? - தனபாலைத் தவிக்கவிட்ட எடப்பாடி! தனபாலுக்கு இழைக்கப்பட்டதா துரோகம்.?!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/dhanapal-betrayed-the-price-of-saving-edappadi-videoshow-ynya5cb</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/dhanapal-betrayed-the-price-of-saving-edappadi-videoshow-ynya5cb</guid>
            <pubDate>Thu, 02 Apr 2026 18:02:42 +0530</pubDate>
            <description><![CDATA[]]></description>
            <media:content url="https://geo.dailymotion.com/player/x1tbu.html?video=xa4404c" medium="video" height="768" width="1024"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;அதிமுகவில் விசுவாசிகளுக்கு எப்போதும் மதிப்பு இருக்கும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் அதனை பொய்காகும் வகையில் தற்போது புதிய புகைச்சல் எழுந்துள்ளது. தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், அ.தி.மு.க கூட்டணியில் ஏற்பட்டுள்ள சலசலப்புகள் அக்கட்சியின் அடிமட்டத் தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. குறிப்பாக, அவிநாசி (தனி) தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ-வும், முன்னாள் சபாநாயகருமான தனபாலுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது, &quot;விசுவாசத்திற்கு அ.தி.மு.க-வில் இடமில்லையா?&quot; என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/dhanapal-betrayed-the-price-of-saving-edappadi-videoshow-ynya5cb"/>
        </item>
        <item>
            <title><![CDATA[மீனவ கிராமங்களில் வாக்குகள் வேட்டையாடிய முதல்வர்.! மீனவர் நலன் காக்கப்படும் என உத்தரவாதம்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/cm-guarantees-fishermen-s-welfare-in-coastal-campaign-videoshow-yo77air</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/cm-guarantees-fishermen-s-welfare-in-coastal-campaign-videoshow-yo77air</guid>
            <pubDate>Sat, 04 Apr 2026 13:02:42 +0530</pubDate>
            <description><![CDATA[]]></description>
            <media:content url="https://geo.dailymotion.com/player/x1tbu.html?video=xa4937u" medium="video" height="768" width="1024"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக முதலமைச்சரும் கொளத்தூர் தொகுதி வேட்பாளருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். தனது பயணத்தின் ஒரு பகுதியாக, கன்னியாகுமரி கடற்கரை ஓரத்தில் வசிக்கும் மீனவச் சமூகத்தினரை நேரில் சந்தித்து அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்துக் கேட்டறிந்தார். மீனவர்களுடன் சகஜமாக உரையாடிய அவர், திமுக அரசு எப்போதும் மீனவர் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் என உறுதியளித்தார். நாகர்கோவிலில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர், மத்திய அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்ததோடு, தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க மீண்டும் திமுகவிற்கு ஆதரவளிக்க வேண்டும் என மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். இச்சந்திப்பின் போது எடுக்கப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/cm-guarantees-fishermen-s-welfare-in-coastal-campaign-videoshow-yo77air"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஏப்ரல் 21 முதல் 23ம் தேதி வரை தடை.. தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/ban-on-the-publication-of-election-opinion-polls-from-april-21-to-23-z8k9k9y</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/ban-on-the-publication-of-election-opinion-polls-from-april-21-to-23-z8k9k9y</guid>
            <pubDate>Fri, 03 Apr 2026 17:30:45 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தமிழ்நாட்டில் தேர்தல் வாக்குப்பதிவையொட்டி, ஏப்ரல் 21 முதல் 23 வரை 48 மணி நேரத்திற்கு கருத்துக்கணிப்பு முடிவுகள் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான விவரங்களை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jwr0cgjnbg7cqs6vx5c1qqrt,imgname-election-1748857406037.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழ்நாட்டில் தேர்தல் வாக்குப்பதிவையொட்டி, ஏப்ரல் 21 முதல் 23 வரை 48 மணி நேரத்திற்கு கருத்துக்கணிப்பு முடிவுகள் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான விவரங்களை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ்நாட்டில் தேர்தல் தொடர்பாக கருத்துக்கணிப்பு முடிவுகள் உள்பட எந்தவொரு விவரத்தையும் வரும் 21 முதல் 23ம் தேதி வரை அதாவது 48 மணி நேரத்திற்கு காட்சிப்படுத்த தடை விதித்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதாவது அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்குவங்க சட்டப் பேரவைகளுக்கான பொதுத்தேர்தல் அட்டவணையையும், கோவா, குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அட்டவணையையும் இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15ம் தேதி வௌியிட்டது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951ன் பிரிவு 126-ன் படி, எந்தவொரு தேர்தல் ஒரு வாக்குச்சாவடி பகுதியில் நிறைவடைவதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாக உள்ள நாற்பத்தெட்டு மணிநேர காலத்தில் (அமைதிக்காலம்), தொலைக்காட்சி அல்லது அதுபோன்ற பிற சாதனங்கள் வாயிலாக தேர்தல் தொடர்பான எந்தவொரு விவரத்தையும் காட்சிப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அசாம் மாநிலத்தில் ஏப்ரல் 9ம் தேதி வாக்குப்பதிவும், ஏப்ரல் 7ம் தேதி மாலை 5 மணி முதல் 09ம் தேதி மாலை 5 மணி வரையும், கேரளா மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 9ம் தேதி வாக்குப்பதிவும், ஏப்ரல் 7ம் தேதி மாலை 6 மணி முதல் 09ம் தேதி மாலை 5 மணி வரையும் பிரச்சாரம் ஓய்வுகிறது. மேலும் தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவும், ஏப்ரல் 21 மாலை 6 மணி முதல் 23ம் தேதி மாலை 6 மணி வரையும் ஓய்கிறது. மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏப்ரல் 23 வாக்குப்பதிவும், ஏப்ரல் 21 மாலை 6 மணி முதல் 23 மாலை 6 மணி வரையும், ஏப்ரல் 27ம் தேதி மாலை 6 மணி முதல் 29 மாலை 6 மணி வரை பிரச்சாரம் ஓய்வுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தொலைக்காட்சி/வானொலி அலைவரிசைகள்மற்றும் கேபிள் நெட்வொர்க்குகள், மேலே குறிப்பிடப்பட்ட காலத்தில் தாங்கள் ஒளிபரப்பும் நிகழ்ச்சிகளில், ஏதேனும் ஒரு குறிப்பிட்ட கட்சி அல்லது வேட்பாளருக்கு ஆதரவான அல்லது பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அல்லது தேர்தலின் முடிவை பாதிக்கக்கூடிய வகையில் அமைப்பாளர்கள்/பங்கேற்பாளர்களின் கருத்துக்கள்/வேண்டுகோள்கள் உள்ளிட்ட எந்தவொரு விஷயமும் இடம்பெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று ஆணையம் மீண்டும் வலியுறுத்துகிறது. இதில் கருத்துக் கணிப்புகளை (Opinion Poll) வெளியிடுவதும் அடங்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன் பிரிவு 126A-ன் கீழ், ஏப்ரல் 9, 2026 (வியாழக்கிழமை) காலை 7:00 மணி முதல் ஏப்ரல் 29, 2026 (புதன்கிழமை) மாலை 6:30 மணி வரை, வாக்குக் கருத்துக்கணிப்புகளை (Exit poll) நடத்துவதும், அதன் முடிவுகளை அச்சு அல்லது மின்னணு ஊடகங்கள் மூலம் வெளியிடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது என ஆணையம் அறிவித்துள்ளது. இப்பிரிவை மீறுவது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனைக்குரிய குற்றமாகும். அனைத்து ஊடக நிறுவனங்களும் இந்த அறிவுறுத்தல்களை அதன் சாராம்சம் குறையாமல் பின்பற்றுமாறு ஆணையம் அறிவுறுத்துகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/ban-on-the-publication-of-election-opinion-polls-from-april-21-to-23-z8k9k9y"/>
        </item>
        <item>
            <title><![CDATA[அமமுக முக்கிய பிரமுகர்களை மொத்தமாக தட்டித்தூக்கிய மு.க.ஸ்டாலின்.. அதிர்ச்சியில் டிடிவி.தினகரன்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/former-mla-parthiban-join-dmk-articleshow-zvgz4ln</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/former-mla-parthiban-join-dmk-articleshow-zvgz4ln</guid>
            <pubDate>Fri, 03 Apr 2026 15:59:36 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;TTV Dhinakaran: சோளிங்கர் தொகுதி ஒதுக்கப்படாததால் அதிருப்தியடைந்த அமமுக மாவட்டச் செயலாளர் என்.ஜி.பார்த்திபன், அக்கட்சியில் இருந்து விலகினார்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kn9dvmvesdzpn4zyrwy4ejsp,imgname-mk-stalin-1775211762542.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;அதிமுக ஆட்சியில் டிடிவி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களில் ஒருவர் என்.ஜி.பார்த்திபன். அமமுக சார்பாக மாவட்டச் செயலாளரும் அந்த தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வுமான என்.ஜி.பார்த்திபன் சோளிங்கர் தொகுதியில் களமிறங்க டிடிவி.தினகரன் முடிவு செய்திருந்தார். அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக இணைவதற்கு முன்பாகவே, சோளிங்கர் தொகுதி வேட்பாளராக என்.ஜி.பார்த்திபனை டிடிவி.தினகரன் அறிவித்திருந்தார்.&lt;/p&gt;&lt;p&gt;இந்நிலையில், என்டிஏ கூட்டணியில் அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதில், சோளிங்கர் இடம்பெறவில்லை. மாறாக, பாமகவுக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டது. இதனால், என்.ஜி.பார்த்திபன் கடும் அதிருப்தி அடைந்தார். இதையடுத்து, கடந்த வாரம் தனது ஆதரவாளர்களிடம் கலந்தாலோசித்த பார்த்திபன் அமமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். அவருடன் சேர்ந்து 80-க்கும் மேற்பட்ட அமமுக நிர்வாகிகளும் திமுக-வில் ஐக்கியமானார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;அமமுக நிர்வாகிகள் விவரம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், இன்று காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், அ.ம.மு.க. மாநில தலைவர் சி.கோபால், Ex.MLA, Ex.MP., தலைமையில் அ.ம.மு.க.வைச் சேர்ந்த மாநில தேர்தல் பிரிவு செயலாளர், மாவட்டச் செயலாளர் என்.ஜி.பார்த்திபன், Ex.MLA, - மாநில இளம்பெண்கள் பாசறை செயலாளர் என்.ஷோபனா நடராஜன், செங்கல்பட்டு தெற்கு மாவட்டச் செயலாளர் எம்.கோதண்டபாணி, Ex.MLA, மாவட்ட அவைத்தலைவர் நெமிலி தே.பாண்டுரங்கன், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஏ.ஆதம்சாயபு, எல்.சங்கீதா, மாவட்ட பொருளாளர் ஜிஎம்.மூர்த்தி - ஒன்றியச் செயலாளர்கள் நெமிலி மேற்கு டி.ஜி.மணி, நெமிலி கிழக்கு கோ.சி.மணிவண்ணன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கோமதி மணிவண்ணன், சோளிங்கர் மேற்கு எம்.பழனி, அரக்கோணம் கிழக்கு ஜி.துளசிராமன், அரக்கோணம் மேற்கு ஜி.பாபு, சோளிங்கர் கிழக்கு எஸ்.அரி, பள்ளிப்பட்டு இ.எம்.நடராஜன் &ndash; நகரச் செயலாளர்கள் சோளிங்கர் என்.சீனிவாசன், மேல்விஷாரம் கே.அப்ரார், காட்பாடி கவுதம், - பேரூராட்சி செயலாளர்கள் நெமிலி பி.குமார், பனப்பாக்கம், பி.ஹேமச்சந்திரன், கலவை ஆர்.பரத்குமார், தக்கோலம் டி.பலராமன் - மாவட்ட இதயதெய்வம் அம்மா பேரவை செயலாளர் எஸ்.வேடராஜன், மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞர் அணிச் செயலாளர் எஸ்.ரகு உள்ளிட்டோர் இணைந்தனர்.&lt;/p&gt;&lt;p&gt;மேலும் மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் ஆர்.வசந்தகுமார்ஜெயின், மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் ஆர்.சுமதி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் என்.ஜி.தமிழ்ச்செல்வன், மாவட்ட மருத்துவர் அணிச் செயலாளர் டாக்டர் எம்.தினேஷ், மாவட்ட மீனவர் அணிச் செயலாளர் என்.சிவகுமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் எம்.பிரபாகரன், மாவட்ட வர்த்தக அணிச் செயலாளர் வி.பி.என்.ரமேஷ், வேலூர் மாநகர் மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் ஆர்.எஸ்.துரைமுருகன், மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் கே.எம்.இளஞ்செழியன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் ஜே.ரஞ்சித்குமார், சோளிங்கர் நகர கவுன்சிலர்கள் என்.டி.சுரேஷ், திருமதி எஸ்.ராதிகாசீனிவாசன், திருமதி ஜி.காஞ்சனாகோபிநாதன், திருமதி கே.ராதாகுமார் &ndash; நெமிலி பேரூராட்சி கவுன்சிலர் பி.தனசேகரன் மற்றும் வழக்கறிஞர் எஸ்.முராரி, இராணிப்பேட்டை நகர துணைச் செயலாளர் எம்.பரத், வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் கே.ராஜா, ஐடி விங் துணைச் செயலாளர் ஆர்.சந்தோஷ், சோளிங்கர் நகர மாணவர் அணிச் செயலாளர் ஜே.மதன்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணைச் செயலாளர் எம்.சிவக்குமார், மாவட்ட ஐடி விங் துணைச் செயலாளர் வி.எம்.அத்திக்ரஹ்மான் ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.&lt;/p&gt;&lt;p&gt;மாவட்ட மாணவர் அணி துணைச் செயலாளர் பி.மணிஷ்ஜெயின், முன்னாள் மாநில பேரவை துணைச் செயலாளர் வி.உமாசங்கர், முன்னாள் கீழ்களத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் எம்.தணிகைவேல், அரக்கோணம் கிழக்கு ஒன்றிய இளைஞர் அணிச் செயலாளர் பி.ரங்கநாதன், அரக்கோணம் கிழக்கு ஒன்றிய பொருளாளர் எஸ்.ராஜேஷ், பொதட்டூர்பேட்டை நகரச் செயலாளர் எம்.ஓ.ஜானகிராமன், பொதட்டூர்பேட்டை ஒன்றியச் செயலாளர் எப்.எம்.எஸ்.நடராஜன், மாவட்ட பிரதிநிதி பி.எஸ்.சுரேஷ், கிளைச் செயலாளர் இ.எ.ராமகிருஷ்ணன், நகர தகவல் தெழில்நுட்ப பிரிவு செயலாளர் கே.எஸ்.முருகன், நகர மாணவர் அணிச் செயலாளர் பி.தினகரன், மாவட்ட இ.செ.த.தொ. என்.டி.வேலு, வி.குருமூர்த்தி, கீழ்களத்தூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ராதிகா தணிகைவேல், சோளிங்கர் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் ஏ.முபாரக், பி.ரங்கநாதன், மாவட்ட பிரதிநிதி நெமிலி ஜி.பாபு, ஒன்றிய அவைத்தலைவர் கோபால், ராணிப்பேட்டை எம்.சரவணன், சத்துவாச்சாரி பகுதி செயலாளர் கோபி, அரக்கோணம் மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் ஆனந்தன், ஒன்றிய பொருளாளர் பிரேம்நாத், ஊராட்சி செயலாளர் கனகராஜ், காட்பாடி வி.நரேஷ்குமார் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>tamilnadu</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/former-mla-parthiban-join-dmk-articleshow-zvgz4ln"/>
        </item>
    </channel>
</rss>
