<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes"?>
<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Sat, 01 Aug 2026 12:02:22 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss/sports-cricket" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[IND vs SL Test: சிங்கம் ரீ-என்ட்ரி! உடற்தகுதி தேர்வில் பும்ரா கெத்து! இந்திய ரசிகர்களுக்கு ஸ்வீட் நியூஸ்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/ind-vs-sl-test-bumrah-passes-fitness-test-ahead-of-srilanka-series-13m8fnu</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/ind-vs-sl-test-bumrah-passes-fitness-test-ahead-of-srilanka-series-13m8fnu</guid>
            <pubDate>Sat, 01 Aug 2026 12:02:21 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;IND vs SL Test: இங்கிலாந்து தொடரில் காயம் அடைந்த ஜஸ்பிரித் பும்ரா காயத்தில் இருந்து குணமடைந்து விட்டதாகவும், உடற்தகுதி தேர்வில் அவர் வெற்றி பெற்று விட்டதாகவும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kbsd5ns998d5qj3kcwz4d6dv,imgname-gettyimages-2246635659-1765010495272.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;IND vs SL Test: இங்கிலாந்து தொடரில் காயம் அடைந்த ஜஸ்பிரித் பும்ரா காயத்தில் இருந்து குணமடைந்து விட்டதாகவும், உடற்தகுதி தேர்வில் அவர் வெற்றி பெற்று விட்டதாகவும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடக்கவிருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட முக்கியமான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, இந்திய அணிக்கு ஒரு ஆறுதலான செய்தி கிடைத்துள்ளது. காயத்தால் அவதிப்பட்டு வந்த இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, தற்போது முழுமையாக குணமடைந்து, இந்தத் தொடரில் விளையாடத் தயாராகிவிட்டார் என்று பிசிசிஐ வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இலங்கை சுற்றுப்பயணத்திற்காக பிசிசிஐ சமீபத்தில் அறிவித்த 15 பேர் கொண்ட அணியில், வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்ஷன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால், அவர்கள் இருவரும் ஃபிட்னஸை நிரூபித்தால் மட்டுமே அணியில் சேர்க்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;இந்நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்தின்படி, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (Centre of Excellence) நடந்த அனைத்து கடினமான ஃபிட்னஸ் சோதனைகளிலும் பும்ரா வெற்றிகரமாகத் தேர்ச்சி பெற்றுள்ளார். இதனால், வரவிருக்கும் தொடரில் ஆடும் லெவனில் தேர்வு செய்யப்படுவதற்கு அவர் தயாராக இருக்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பும்ராவின் உடல்நிலை குறித்துப் பேசிய பிசிசிஐயின் மூத்த அதிகாரி ஒருவர், &quot;ஜஸ்பிரித் பும்ரா காயத்திலிருந்து முழுமையாக மீண்டுவிட்டார். அனைத்து ஃபிட்னஸ் சோதனைகளிலும் அவர் பாஸ் செய்துவிட்டார். அவர் அணியின் மிக முக்கிய பந்துவீச்சு அஸ்திரம் என்பதால், இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் அவர் விளையாடுவார்&quot; என்று தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 15 அன்று காலே மைதானத்திலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 23 அன்று கொழும்புவிலும் தொடங்கவுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும் நோக்கில், இந்தத் தொடர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;தற்போதைய சூழலில், இறுதிப் போட்டிக்கு முன்னேற இந்தியா மீதமுள்ள 9 டெஸ்ட் போட்டிகளில் குறைந்தது 7-ல் வெற்றி பெற வேண்டும். எனவே, நியூசிலாந்துக்கு எதிரான உள்நாட்டுத் தொடருக்கு முன்பாக, இலங்கையை 2-0 என்ற கணக்கில் வீழ்த்துவது இந்திய அணியின் முக்கிய இலக்காக உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;சுப்மன் கில் (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்ஷன் (ஃபிட்னஸைப் பொறுத்து), துருவ் ஜுரெல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மனவ் சுதர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் ப்ரார், சரன்ஷ் ஜெயின்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>sports-cricket</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/ind-vs-sl-test-bumrah-passes-fitness-test-ahead-of-srilanka-series-13m8fnu"/>
        </item>
        <item>
            <title><![CDATA[IND vs SL Test: 33 வயதில் இந்திய அணியில் அறிமுகமாகும் வீரர்! யார் இந்த சரன்ஷ் ஜெயின்? பிசிசிஐ தேர்வு செய்தது ஏன்?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/ind-vs-sl-test-series-2026-who-is-saransh-jain-why-bcci-picked-33-year-old-spinner-6qq18pf</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/ind-vs-sl-test-series-2026-who-is-saransh-jain-why-bcci-picked-33-year-old-spinner-6qq18pf</guid>
            <pubDate>Tue, 28 Jul 2026 11:19:30 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;IND vs SL Test: Saransh Jain: இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் 33 வயதான சரன்ஷ் ஜெயின் இடம்பிடித்து ஆச்சரியப்படுத்தியுள்ளார். யார் இவர்? இவரை பிசிசிஐ தேர்வு செய்தது ஏன்? என்பது குறித்து பார்ப்போம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kykhzkqgwcqjv92vn5py7k67,imgname-saransh-jain-1785215307504.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;IND vs SL Test: Saransh Jain: இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் 33 வயதான சரன்ஷ் ஜெயின் இடம்பிடித்து ஆச்சரியப்படுத்தியுள்ளார். யார் இவர்? இவரை பிசிசிஐ தேர்வு செய்தது ஏன்? என்பது குறித்து பார்ப்போம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை BCCI-யின் தேர்வுக் குழு அறிவித்துள்ளது. இந்த அணிக்கு சுப்மன் கில் கேப்டனாகவும், கே.எல். ராகுல் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 15 முதல் 19 வரை காலே சர்வதேச மைதானத்திலும் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 23 முதல் 27 வரை கொழும்புவிலும் நடைபெற உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;இந்திய அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அணியில் சேர்க்கப்பட்டிருந்தாலும், BCCI-யின் Centre of Excellence (COE) வழங்கும் உடற்தகுதி சான்றிதழைப் பொறுத்தே அவர் விளையாடுவது உறுதி செய்யப்படும். இதேபோல், தமிழக வீரர் பி. சாய் சுதர்சனின் உடற்தகுதியும் COE-யின் ஒப்புதலைப் பொறுத்தே அமையும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர், தொடை தசைப்பிடிப்பு காயம் காரணமாக முதல் டெஸ்டில் விளையாடமாட்டார். அவருக்குப் பதிலாக, 33 வதான ஸ்பின்னர் சரன்ஷ் ஜெயின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவருக்கு இதுவே முதல் டெஸ்ட் அழைப்பாகும். மூத்த ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, 2026 ஐபிஎல் போட்டியின்போது ஏற்பட்ட முழங்கை காயத்தில் இருந்து மீண்டு அணிக்குத் திரும்பியுள்ளார். துணைக்கண்ட ஆடுகளங்களில் அவரது வருகை, இந்தியாவின் சுழற்பந்து வீச்சுக்கு பெரும் பலம் சேர்க்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், துருவ் ஜுரல், குல்தீப் யாதவ், மனவ் சுதர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் ப்ரார், மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இந்திய அணியில் இடம்பிடிக்க ஏராளமான இளைஞர்கள் தவம் கிடக்கும் நிலையில், 33 வயதில் சரன்ஷ் ஜெயின் இந்திய அணியில் அறிமுகமானது பல்வேறு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.&lt;/p&gt;&lt;p&gt;யார் இவர்? என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த 33 வயதான சரன்ஷ் ஜெயின் இடதுகை பேட்ஸ்மேன் மற்றும் வலதுகை ஆஃப்-பிரேக் சுழற்பந்து வீச்சாளர் ஆவார். 2014-15 சீசனில் மத்தியப் பிரதேச அணிக்காக முதல்தர போட்டிகளில் அறிமுகமான இவர், தனது சுழற்பந்து வீச்சினாலும், தேவைப்படும் நேரங்களில் கீழ்வரிசையில் இறங்கி ரன்கள் சேர்க்கும் திறனாலும் அணியின் முக்கியத் தூணாக மாறினார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மத்தியப் பிரதேச அணி ரஞ்சி கோப்பையை வெல்வதற்கும் மற்றும் தொடர்ச்சியான நாக் அவுட் சுற்றுகளுக்கு முன்னேறுவதற்கும் முக்கியக் காரணமாக இருந்தார். இதன் காரணமாக India A, Central Zone மற்றும் Rest of India அணிகளில் தேர்வாகி துலீப் டிராபி மற்றும் இரானி கோப்பைகளில் சிறப்பாகச் செயல்பட்டார். முதல்தர போட்டிகளில் இவர் பேட்டிங்கில் 2223 ரன்களும், பவுலிங்கில் 188 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;33 வயதில் இந்திய டெஸ்ட் அணிக்கு முதன்முறையாக அழைப்பு பெற்றுள்ள சரன்ஷ் ஜெயின், துணைக் கண்ட ஆடுகளங்களில் (Spin-friendly conditions) ஆஃப்-ஸ்பின்னராகச் சிறப்பாகச் செயல்படக்கூடியவர். வாஷிங்டன் சுந்தரைப் போல பந்துவீச்சுடன் பேட்டிங்கிலும் பங்களிக்கக்கூடிய திறமை கொண்டவர் என்பதால் இலங்கை தொடருக்கு இவரை பிசிசிஐ தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சுப்மன் கில் [கேப்டன்], கே.எல். ராகுல் [துணை கேப்டன்], யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் [விக்கெட் கீப்பர்], சாய் சுதர்சன் (உடல் தகுதியை நிரூபித்தால் விளையாடுவார்), துருவ் ஜுரல் [விக்கெட் கீப்பர்], ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மனவ் சுதர், ஜஸ்பிரித் பும்ரா (உடல்தகுதியை நிரூபிடித்தால் விளையாடுவார்) முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் ப்ரார், தேவ்தத் படிக்கல் மற்றும் சரன்ஷ் ஜெயின்&lt;/p&gt;]]></content:encoded>
            <category>sports-cricket</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/ind-vs-sl-test-series-2026-who-is-saransh-jain-why-bcci-picked-33-year-old-spinner-6qq18pf"/>
        </item>
        <item>
            <title><![CDATA[IND vs ZIM: 149 கி.மீ வேகம்.. கம்பேக் மேட்ச்சில் மரண மாஸ் காட்டிய மயங்க் யாதவ்.. வரலாற்று சாதனை!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/ind-vs-zim-mayank-yadav-creates-history-with-149-kmph-wicket-on-first-ball-7hmxzq6</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/ind-vs-zim-mayank-yadav-creates-history-with-149-kmph-wicket-on-first-ball-7hmxzq6</guid>
            <pubDate>Thu, 23 Jul 2026 18:58:11 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;IND vs ZIM: இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியில் இடம் பிடித்த மயங்க் யாதவ் ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டி20 போட்டியில் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ky7e9rges5assvrz3g8jr9t4,imgname-mayank-yadav-creates-history-with-first-ball-wicket-on-india-comeback-against-zimbabwe-1784808792590.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;IND vs ZIM: இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியில் இடம் பிடித்த மயங்க் யாதவ் ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டி20 போட்டியில் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியா, ஜிம்பாப்வே இடையிலான முதல் டி20 போட்டி ஹராரேவில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 20 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் வெஸ்லி மதேவெரே அதிகபட்சமாக 39 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் மயங்க் யாதவ் 4 ஓவரில் 18 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். பிரின்ஸ் யாதவ் 2 விக்கெட் சாய்த்தார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;மயங்க் யாதவ் சூப்பர் பவுலிங்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;கிட்டத்தட்ட இரண்டு வருட காத்திருப்புக்குப் பிறகு இந்திய அணிக்குத் திரும்பிய வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ், கிரிக்கெட் ரசிகர்கள் நீண்ட காலம் நினைவில் கொள்ளும் ஒரு அறிமுகத்தை நிகழ்த்தினார். ஹராரேயில் ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டி20 போட்டியில், மயங்க் தனது முதல் பந்திலேயே விக்கெட் எடுத்து எதிரணியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது மட்டுமல்லாமல், இந்திய கிரிக்கெட்டின் சாதனைப் புத்தகங்களிலும் தனது பெயரைப் பொறித்தார். அவரது வேகமும் துல்லியமான பந்துவீச்சும், காயத்திலிருந்து மீண்டு வந்த பிறகும் அவர் ஒரு அஞ்சத்தக்க சக்தியாகவே இருக்கிறார் என்பதைத் தெளிவுபடுத்தியது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மயங்க் யாதவ் கம்பேக் போட்டியில் பந்துவீச வந்தபோது, ​​தனது முதல் பந்தை மணிக்கு 149 கி.மீ. வேகத்தில் வீசினார். ஜிம்பாப்வே பேட்ஸ்மேன் பிரையன் பென்னட், பந்தின் வேகத்தையும் பவுன்ஸையும் கணிக்கத் தவறி, அதைத் தடுக்க முயன்றபோது, ​​விக்கெட் கீப்பர் இஷான் கிஷனிடம் எளிதான கேட்சைக் கொடுத்தார்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;இந்த விக்கெட்டின் மூலம், டி20 சர்வதேசப் போட்டிகளில் இந்தியாவுக்காக ஒரு இன்னிங்ஸின் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த பந்துவீச்சாளர்கள் என்ற சிறப்புமிக்க குழுவில் மயங்க் யாதவ் இணைந்துள்ளார். குறிப்பிடத்தக்க வகையில், அவர் இந்தச் சாதனையை நிகழ்த்துவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு, 2024-ல் வங்கதேசத்திற்கு எதிரான தனது சர்வதேச அறிமுகப் போட்டியின் முதல் பந்திலேயே அவர் ஒரு விக்கெட்டை எடுத்திருந்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்திய அணியில் ஏற்கெனவே புவனேஷ்வர், அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்திக் ஆகியோர் சிறப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.டி20 சர்வதேசப் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸின் முதல் பந்திலேயே விக்கெட் எடுப்பது இந்தியாவிற்கு மிகவும் மதிக்கப்படும் ஒரு சாதனையாகும். புவனேஷ்வர் குமார் மூன்று முறை இந்தச் சாதனையை நிகழ்த்தி, இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். ஹர்திக் பாண்டியா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;தற்போது, ​​மயங்க் யாதவ் இரண்டு முறை முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த முதல் இந்தியப் பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அடிக்கடி காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் மயங்க் யாதவ் முக்கிய போட்டிகளை தவற விட நேரிடுகிறது. வெளிநாட்டு பிட்ச்களில் மயங்க் யாதவ் வேகம் கைகொடுக்கும் என்பதால் அவரை வெளிநாட்டு தொடர்களில் தொடர்ந்து பிசிசிஐ பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>sports-cricket</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/ind-vs-zim-mayank-yadav-creates-history-with-149-kmph-wicket-on-first-ball-7hmxzq6"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Rahane Net Worth: ₹80 கோடி சொத்து! ரஹானேவின் கார்கள், பிசினஸ் ரகசியங்கள் இதோ!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/ajinkya-rahane-retirement-net-worth-cars-and-business-investments-835ogye</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/ajinkya-rahane-retirement-net-worth-cars-and-business-investments-835ogye</guid>
            <pubDate>Thu, 30 Jul 2026 22:33:42 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;சர்வதேச கிரிக்கெட்டுக்கு அஜிங்க்யா ரஹானே குட்பை சொல்லிட்டார். இந்திய அணிக்கு பல வெற்றிகளை தேடித் தந்த ரஹானேவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? அவரின் சொகுசு கார்கள், கோடிக்கணக்கான ரூபாய் வீடு, முதலீடுகள் குறித்த முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k8j1t3gcqmwxqjz11effbdh9,imgname-ajinkya-rahane-on-ajit-agarkar-1761542475275.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சர்வதேச கிரிக்கெட்டுக்கு அஜிங்க்யா ரஹானே குட்பை சொல்லிட்டார். இந்திய அணிக்கு பல வெற்றிகளை தேடித் தந்த ரஹானேவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? அவரின் சொகுசு கார்கள், கோடிக்கணக்கான ரூபாய் வீடு, முதலீடுகள் குறித்த முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்திய கிரிக்கெட்டின் மிகவும் அமைதியான வீரரும், கடினமான காலங்களில் அணிக்கு ஆதரவளிக்கும் 'மௌன நாயகனுமான' அஜிங்க்யா ரஹானே, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார். அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அவர் சமூக வலைதளங்களில் அறிவித்து, தனது சிறப்பான 12 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;38 வயதான ரஹானே, டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் உட்பட இந்தியாவுக்காக மொத்தம் 195 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் கடைசியாக 2023-ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காகக் களமிறங்கினார். இதுவே சரியான நேரம் என்று கூறி தனது கிரிக்கெட் பயணத்தை அவர் முடித்துக்கொண்டார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;2013 மார்ச் மாதம் டெல்லியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ரஹானே, தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 85 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 12 சதங்கள் மற்றும் 26 அரை சதங்கள் உட்பட 38.46 சராசரியில் 5,077 ரன்கள் எடுத்துள்ளார். வெளிநாடுகளில் உள்ள கடினமான ஆடுகளங்களில் ரஹானே ஆடிய ஆட்டங்கள், இந்திய அணிக்கு பல மாபெரும் வெற்றிகளைப் பெற்றுத் தந்துள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;2020-21 பார்டர்-கவாஸ்கர் கோப்பையில் அடிலெய்டில் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்த பிறகு விராட் கோலி இல்லாத நிலையில் அணியின் பொறுப்பை ஏற்ற ரஹானே, மெல்போர்ன் டெஸ்டில் ஒரு அற்புதமான சதம் அடித்து அணியை ஒரு வரலாற்றுத் தொடர் வெற்றிக்கு வழிநடத்தினார். அவர் 90 ஒருநாள் போட்டிகளில் 2,962 ரன்களும், 20 டி20 போட்டிகளில் 375 ரன்களும் எடுத்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;களத்தில் மிகவும் எளிமையாகத் தோற்றமளிக்கும் ரஹானே, நிதி ரீதியாக மிகவும் வலுவான நிலையில் இருக்கிறார். ஊடக அறிக்கைகளின்படி, ரஹானேவின் மொத்த நிகர மதிப்பு சுமார் ₹80 கோடி ஆகும். பிசிசி ஒப்பந்தங்கள், ஐபிஎல் சம்பளங்கள், விளம்பர ஒப்பந்தங்கள் மற்றும் வணிக முதலீடுகள் மூலம் அவர் இந்த அளவிலான செல்வத்தைக் குவித்துள்ளார். அவர் பிசிசி மத்திய ஒப்பந்தத்தில் இருந்தபோது, ​​'பி' கிரேடின் கீழ் ஆண்டுக்கு ₹3 கோடி தக்கவைப்புக் கட்டணத்தைப் பெற்று வந்தார்.&lt;/p&gt;&lt;p&gt;ஐபிஎல்-லில் 6 வெவ்வேறு அணிகளுக்காக விளையாடியுள்ள ரஹானே, ஐபிஎல் சம்பளமாக மட்டுமே ₹54 கோடிக்கு மேல் சம்பாதித்துள்ளார். கடந்த ஐபிஎல் சீசன்களில் கேகேஆர் அவரை ₹1.5 கோடிக்கு வாங்கியது, மேலும் 2016-2018-க்கு இடையில், அவர் ₹8 கோடி முதல் ₹9.5 கோடி வரை விலைக்கு வாங்கப்பட்டார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரஹானே களத்தில் மட்டுமல்லாமல், களத்திற்கு வெளியேயும் வணிகம் சார்ந்த விஷயங்களில் புத்திசாலித்தனமான நகர்வுகளை மேற்கொண்டுள்ளார். விவசாயிகளுக்குத் தேவையான இயந்திரங்களையும் பொருட்களையும் வழங்கும் 'மெராகிசான்' என்ற வேளாண் தொழில்நுட்பத் தளத்தில் ரஹானே முதலீடு செய்துள்ளார். இதனுடன், விளையாட்டு சேனல்களை வழங்கும் 'ஹடில்' என்ற விளையாட்டு தொழில்நுட்பத் தளத்திலும் அவர் முதலீடு செய்துள்ளார். குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட 'கிரிக்கெட் பாங்' என்ற அனிமேஷன் தொடரின் முதலீட்டாளராகவும், அதன் தொகுப்பாளராகவும் அவர் இருந்து வருகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மும்பையின் மிகவும் விலையுயர்ந்த பகுதிகளில் ஒன்றில், பாந்த்ரா-வோர்லி கடல் இணைப்பு மற்றும் அரபிக்கடலைப் பார்த்தவாறு ரஹானேவுக்கு ஒரு ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது. அதன் தற்போதைய சந்தை மதிப்பு ரூ. 20 கோடிக்கும் அதிகமாகும். அந்த வீட்டில் இத்தாலிய மார்பிள் தரை, ஐரோப்பிய பாணி உள்ளலங்காரங்கள் மற்றும் அவரது கிரிக்கெட் சாதனைகளைக் காட்சிப்படுத்தும் ஒரு சிறப்பு 'கோப்பைச் சுவர்' ஆகியவை உள்ளன. ரஹானேவின் கார் சேகரிப்பு பார்ப்பதற்குப் பிரமிப்பானது. அவரிடம் ரூ. 3 கோடி மதிப்புள்ள 'மெர்சிடிஸ்-மேபேக் ஜிஎல்எஸ் 600' எஸ்யூவி உள்ளது. இது தவிர, ஆடி க்யூ5, பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி, ரேஞ்ச் ரோவர், வோல்வோ எஸ்யூவி போன்ற சொகுசு கார்களும் அவரது கேரேஜில் உள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரஹானேவின் தூய்மையான பிம்பமும், நம்பகமான குணமும், முன்னணி பெருநிறுவனங்களின் கவனத்தை ஈர்த்து, அவருடன் ஒப்பந்தம் செய்ய அவர்களைத் தூண்டியுள்ளது. அவர் நைக், அடிடாஸ், சீட், பூஸ்ட், ஹீரோ மோட்டோகார்ப், மை11சர்க்கிள், கேம்ஸ்24x7, நியோ குரோத், எல்சா கார்ப் மற்றும் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் போன்ற பல பெரிய பிராண்டுகளின் செய்தித் தொடர்பாளராக இருந்துள்ளார். அறிக்கைகளின்படி, ஒவ்வொரு பிராண்ட் விளம்பரத்திற்கும் அவர் சுமார் ரூ. 1 கோடி கட்டணம் வசூலிக்கிறார். அவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றிருந்தாலும், மும்பை உள்ளூர் அணியுடன் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து பங்கேற்பார் என்று தெரிகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>sports-cricket</category>
            <dc:creator>Asianet News</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/ajinkya-rahane-retirement-net-worth-cars-and-business-investments-835ogye"/>
        </item>
        <item>
            <title><![CDATA[வைபவ் சூர்யவன்ஷிக்கு 'இந்த' பலவீனம் இருக்கு! உண்மையை போட்டுடைத்த இந்திய அணி கோச்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/vaibhav-suryavanshi-fitness-issue-india-coach-vvs-laxman-reveals-key-weakness-8nmd9dv</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/vaibhav-suryavanshi-fitness-issue-india-coach-vvs-laxman-reveals-key-weakness-8nmd9dv</guid>
            <pubDate>Mon, 27 Jul 2026 11:52:58 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Vaibhav Suryavanshi: ஜிம்பாப்வே தொடரில் கலக்கிய 15 வயதான அதிரடி புயல் வைபவ் சூர்யவன்ஷி ஒரு விஷயத்தில் மட்டும் கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டும் என்று இந்திய அணி தற்காலிக பயிற்சியாளர் விவிஎஸ் லட்சுமணன் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kx7v1xbdw9t730w91s8j82nv,imgname-vaibhav-suryavanshi-faces-fan-backlash-1783748425069.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Vaibhav Suryavanshi: ஜிம்பாப்வே தொடரில் கலக்கிய 15 வயதான அதிரடி புயல் வைபவ் சூர்யவன்ஷி ஒரு விஷயத்தில் மட்டும் கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டும் என்று இந்திய அணி தற்காலிக பயிற்சியாளர் விவிஎஸ் லட்சுமணன் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்திய கிரிக்கெட்டின் இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி, தனது ஃபிட்னஸை இன்னும் மேம்படுத்திக்கொண்டால், அவரால் மிகப்பெரிய உயரங்களைத் தொட முடியும் என்று இந்திய அணியின் தற்காலிக தலைமைப் பயிற்சியாளர் விவிஎஸ் லட்சுமணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஜிம்பாப்வேக்கு எதிராக நடந்த தொடரில் சூர்யவன்ஷியின் ஆட்டம் எல்லோரையும் மிரள வைத்தது.&lt;/p&gt;&lt;p&gt;நேற்று ஹராரேவில் நடந்த கடைசி டி20 போட்டியில், வெறும் 49 பந்துகளில் 81 ரன்கள் விளாசி, இந்தியாவின் 35 ரன் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.இந்தத் தொடரில் 3 போட்டிகளில் 151 ரன்கள் குவித்து, தொடரின் அதிகபட்ச ரன் எடுத்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார். இதற்காக, தனது முதல் 'தொடர் நாயகன்' விருதையும் வென்றார். இந்த வருடம் நடந்த ஐசிசி U-19 உலகக் கோப்பையிலும் இவரது ஆட்டம் சிறப்பாக இருந்தது. 15 வயதே ஆன இந்த இடது கை பேட்ஸ்மேனின் அதிரடி ஆட்டம், அவரது எதிர்காலத்தைக் காட்டுவதாக அமைந்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சூர்யவன்ஷியின் பேட்டிங் திறமையால் கிரிக்கெட் உலகம் வியந்து நிற்கும் நிலையில், அவர் தனது பயணத்தில் தொடர்ந்து முன்னேற வேண்டுமென்றால் ஒரு முக்கியமான விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என இந்திய அணியின் தற்காலிக பயிற்சியாளர் விவிஎஸ் லட்சுமணன் சுட்டிக்காட்டியுள்ளார்.&quot;அவர் மேம்படுத்திக்கொள்ள வேண்டிய ஒரே ஒரு விஷயம், அவருடைய ஒட்டுமொத்த ஃபிட்னஸ்தான்&quot; என்று லட்சுமணன் ஐசிசி இணையதளத்தில் கூறியுள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;&quot;அவர் ரொம்ப சின்னப் பையன். ஆட்டத்தின் எல்லா அம்சங்களிலும் தன்னை மெருகேற்றிக்கொள்ள அவர் விரும்புகிறார். இன்றைக்குக்கூட, ஃபீல்டிங் செய்யும்போது டைவ் அடித்து கேட்ச் பிடிக்க முயன்றதில் காயம் அடைந்த பிறகும், களத்தை விட்டு வெளியேற அவர் விரும்பவில்லை. எங்க பிசியோதான் அவரை வெளியே வரச் சொன்னார். அணிக்கு தன்னால் முடிந்த எல்லா வழிகளிலும் பங்களிக்க வேண்டும் என்ற ஆர்வம் அவரிடம் இருக்கிறது&quot; என்றும் லட்சுமணன் தெரிவித்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தொடர்ந்து பேசிய அவர், &quot;கடந்த ஆண்டு அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக முதல்முறை விளையாடியபோதே, அவர் அழுத்தத்தை கையாண்ட விதம் சிறப்பாக இருந்தது. எந்த ஒரு ஐபிஎல் போட்டியும் ஒரு சர்வதேச போட்டிக்கு சமமானது என்பது என் கருத்து. 14 அல்லது 15 வயதில் ஐபிஎல் போன்ற பெரிய தொடரில் விளையாடும்போது, அந்த சூழலைக் கண்டு மிரண்டு போகலாம் அல்லது அந்த அழுத்தத்தை ஏற்றுக்கொண்டு விளையாடலாம். அவர் இரண்டாவது வழியைத் தேர்ந்தெடுத்தார்&quot; என்று கூறினார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேலும் &quot;இந்த தொடரில் அவர் இப்படி விளையாடியதில் எனக்கு ஆச்சரியம் இல்லை. சதம் அடிக்க முடியவில்லையே என்று அவர் ஏமாற்றமடைந்தார், ஆனால் இது முதல் வாய்ப்பும் இல்லை, கடைசி வாய்ப்பும் இல்லை என்று நாங்கள் அவரிடம் சொன்னோம். அவருக்கு ஒரு நீண்ட கிரிக்கெட் வாழ்க்கை இருக்கிறது. ஒவ்வொரு நாளும் தன்னை மேம்படுத்திக்கொள்ளும் மனப்பான்மையும், திறமையும் அவரிடம் உள்ளது. அவர் நிச்சயம் முன்னேறி, சர்வதேச அளவில் எல்லா சாதனைகளையும் முறியடிப்பார் என்று நான் நம்புகிறேன். அதற்கான எல்லா தகுதியும், திறமையும் அவரிடம் இருக்கிறது&quot; என்றும் லட்சுமணன் நம்பிக்கை தெரிவித்தார்.&lt;/p&gt;&lt;p&gt;வைபவ் சூர்யவன்ஷியின் இந்த அபார வளர்ச்சிக்குப் பின்னால் லட்சுமணனுக்கு முக்கிய பங்கு உண்டு. இந்த ஆண்டு இந்தியா கோப்பையை வென்ற U-19 உலகக் கோப்பை அணிக்கு அவர் தான் தலைமைப் பொறுப்பில் இருந்தார். அப்போது, அந்தத் தொடரில் 439 ரன்கள் குவித்து, தொடர் நாயகன் விருதையும் சூர்யவன்ஷி வென்றது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>sports-cricket</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/vaibhav-suryavanshi-fitness-issue-india-coach-vvs-laxman-reveals-key-weakness-8nmd9dv"/>
        </item>
        <item>
            <title><![CDATA[IND vs ENG: ரோஹித் சதம் அடித்தும் இந்தியா தோல்வி... லார்ட்ஸில் கோட்டைவிட்ட 5 இடங்கள்..]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/india-vs-england-lords-odi-5-reasons-why-rohit-sharmas-century-could-not-save-india-from-defeat-9g91wxm</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/india-vs-england-lords-odi-5-reasons-why-rohit-sharmas-century-could-not-save-india-from-defeat-9g91wxm</guid>
            <pubDate>Mon, 20 Jul 2026 07:46:57 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;லார்ட்ஸ் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்திடம் 27 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது. இதனால் தொடரையும் இழந்தது. ரோஹித் சர்மா 138 ரன்கள் அடித்தும் வெற்றி கிடைக்கவில்லை. இந்தியாவின் தோல்விக்குக் காரணமான 5 முக்கிய தவறுகளைப் பார்ப்போம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxyjwn4496a3j8maak9wa9r1,imgname-india-vs-england-3rd-odi-1784511616132.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;லார்ட்ஸ் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்திடம் 27 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது. இதனால் தொடரையும் இழந்தது. ரோஹித் சர்மா 138 ரன்கள் அடித்தும் வெற்றி கிடைக்கவில்லை. இந்தியாவின் தோல்விக்குக் காரணமான 5 முக்கிய தவறுகளைப் பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா, இங்கிலாந்திடம் 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தத் தோல்வியின் மூலம், இந்திய அணி இங்கிலாந்திடம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. லார்ட்ஸ் மைதான வரலாற்றிலேயே அதிகபட்ச போட்டி ஸ்கோர் பதிவான இந்தப் போட்டியில், இங்கிலாந்து நிர்ணயித்த 388 ரன்கள் என்ற பெரிய இலக்கைத் துரத்திய இந்திய அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 360 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;ரோஹித் சர்மா (110 பந்துகளில் 138 ரன்கள்) மற்றும் விராட் கோலி (74) ஆகியோர் அரைசதம் அடித்துத் தனியாகப் போராடினர், ஆனால் அவர்களால் அணியை வெற்றிக்கு வழிநடத்த முடியவில்லை. இந்திய அணி தோல்வியடைந்ததற்கான ஐந்து முக்கிய காரணங்களைப் பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;டாஸ் வென்று முதலில் பந்துவீசிய இந்திய அணிக்கு, பவர் பிளேயிலேயே இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் பெரும் அடியைக் கொடுத்தனர். ஜஸ்பிரித் பும்ரா இல்லாததும், ஐந்து முக்கிய பந்துவீச்சாளர்களை மட்டுமே களமிறக்க வேண்டியிருந்ததும் அந்த அணிக்கு ஒரு பெரிய பின்னடைவாக அமைந்தது. பவர் பிளேயில், இந்திய பந்துவீச்சாளர்கள் லைன் மற்றும் லென்த் இல்லாமல் ஒழுங்கற்ற முறையில் பந்துவீசினர்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்களான பென் டக்கெட் (141) மற்றும் ஜேக்கப் பெத்தேல் (91) ஆகியோர் எந்தவிதமான ரிஸ்க்கும் எடுக்காமல் அதிக ரன்களைக் குவித்தனர். முதல் 20-30 ஓவர்களில் இந்தியாவால் ஒரு விக்கெட்டைக் கூட எடுக்க முடியவில்லை என்பது, இந்திய பந்துவீச்சின் தோல்விக்கு ஒரு சான்றாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;45 ஓவர்கள் வரை இந்தியா ஆட்டத்தின் கட்டுப்பாட்டில் இருப்பது போல் தோன்றியது, ஆனால் இறுதி ஓவர்களில் பந்துவீச்சாளர்கள் சொதப்பிவிட்டனர். கடைசி 5 ஓவர்களில் இங்கிலாந்து 82 ரன்கள் எடுத்தது. பரித் கிருஷ்ணா மற்றும் குர்னூர் பிரார் வீசிய ஓவர்களில் ஜோஸ் பட்லர் (13 பந்துகளில் 41 ரன்கள் ஆட்டமிழக்காமல்) மற்றும் ஜோ ரூட் (48 பந்துகளில் 74 ரன்கள் ஆட்டமிழக்காமல்) ஆகியோர் பெரும் சேதத்தை ஏற்படுத்தினர். பரித் கிருஷ்ணா 49வது ஓவரிலும், குர்னூர் கிருஷ்ணா 48வது ஓவரிலும் தலா 23 ரன்களை விட்டுக்கொடுத்தனர்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;இறுதி ஓவர்களில் ஏற்பட்ட இந்த மோசமான ஆட்டத்தினால்தான் இங்கிலாந்தால் 387 ரன்கள் என்ற பெரிய ஸ்கோரை எட்ட முடிந்தது. லார்ட்ஸ் மைதானத்தின் வரலாற்றிலேயே குர்னூர் பிரார் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளர் (0/97) என்ற சாதனையைப் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒரு பெரிய இலக்கைத் துரத்தியபோது, ​​ரோஹித் ஷர்மாவும் ஷுப்மன் கில்லும் (77) முதல் விக்கெட்டுக்கு 147 ரன்கள் என்ற சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். கில் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய கோலியுடன் சேர்ந்து ரோஹித், ரன் விகிதத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். இருப்பினும், 39வது ஓவரில், 138 ரன்கள் எடுத்திருந்த ரோஹித் ஷர்மா, பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர் ஜேக்கப் பெத்தேலால் க்ளீன் போல்ட் ஆனார். அப்போது லார்ட்ஸ் மைதான ரசிகர்கள் எழுந்து நின்று ஆரவாரம் செய்தனர். ரோஹித் ஆட்டமிழந்த பிறகுதான் உண்மையான கதை தொடங்கியது. ரன் விகிதம் திடீரென 13-ஐத் தாண்டியதால், மற்ற பேட்ஸ்மேன்கள் மீதான அழுத்தம் தீவிரமடைந்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இலக்கை விரட்டியடித்த இந்திய அணியைக் கட்டுப்படுத்துவதில் இங்கிலாந்து பந்துவீச்சாளர் சாம் கரண் முக்கியப் பங்காற்றினார். குறிப்பாக, ஆடுகளத்தின் வேகத்தை மாற்றி அவர் வீசிய மெதுவான பந்துகளை இந்திய பேட்ஸ்மேன்களால் கணிக்க முடியவில்லை. மணிக்கு 87 கி.மீ வேகத்தில் கரண் வீசிய மெதுவான பந்தில் இஷான் கிஷன் (14) ஆட்டமிழந்தார். அதே நேரத்தில், அணியின் கடைசி நம்பிக்கையாக இருந்த விராட் கோலியும், சாம் கரண் வீசிய ஒரு மெதுவான குட்டைப் பந்தில் கேட்ச் ஆகி வெளியேறினார். கரண் வெறும் 6 பந்துகளில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆட்டத்தை முழுவதுமாக இங்கிலாந்துக்குச் சாதகமாக மாற்றினார்.&lt;/p&gt;&lt;p&gt;England won by 27 runs to claim the series 2-1.Scorecard ▶️ https://t.co/pLZ2PvDH5G#TeamIndia | #ENGvIND pic.twitter.com/NhVsIozDGq&lt;/p&gt;&lt;p&gt;&mdash; BCCI (@BCCI) July 19, 2026&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரோஹித் மற்றும் கோலி அமைத்த வலுவான அடித்தளத்தை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களால் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. ரன் ரேட் அழுத்தத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் டக் அவுட் ஆனார், அதே நேரத்தில் கே.எல். ராகுல் வெறும் 12 ரன்களுக்கு ஜோஃப்ரா ஆர்ச்சரால் க்ளீன் போல்ட் ஆனார்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;அக்சர் பட்டேலும் வெறும் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கீழ் வரிசையில் அர்ஷ்தீப் சிங் சில பவுண்டரிகளை அடித்தார், ஆனால் போட்டி ஏற்கனவே இந்தியாவின் கையை விட்டு நழுவிக்கொண்டிருந்தது. போட்டிக்குப் பிறகு, இந்திய கேப்டன் ஷுப்மன் கில், கடைசி ஓவர்களில் 60 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்ததே தங்களது தோல்விக்கு முக்கிய காரணம் என்று கூறினார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>sports-cricket</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/india-vs-england-lords-odi-5-reasons-why-rohit-sharmas-century-could-not-save-india-from-defeat-9g91wxm"/>
        </item>
        <item>
            <title><![CDATA[IND vs ZIM: இந்திய அணியில் அதிரடி மாற்றம்! ஸ்டார் ஓப்பனருக்கு ஷாக், இளம் புயலுக்கு சான்ஸ்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/india-vs-zimbabwe-2nd-t20-playing-11-changes-9rirl0n</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/india-vs-zimbabwe-2nd-t20-playing-11-changes-9rirl0n</guid>
            <pubDate>Sat, 25 Jul 2026 07:59:36 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காயத்தால் அவதிப்படும் முக்கிய வீரருக்கு ஓய்வளித்து, அவருக்கு பதிலாக இளம் வீரருக்கு வாய்ப்பு வழங்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwr6c6ytcxdhw3p0gznythpa,imgname-team-india-ind-vs-eng-t20--1--1783223426010.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காயத்தால் அவதிப்படும் முக்கிய வீரருக்கு ஓய்வளித்து, அவருக்கு பதிலாக இளம் வீரருக்கு வாய்ப்பு வழங்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவுக்கும் ஜிம்பாப்வேக்கும் இடையிலான பரபரப்பான போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இரு அணிகளும் இன்று நடைபெறும் இரண்டாவது டி20 போட்டியில் மோத உள்ளன. ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் மாலை 4:30 மணிக்கு போட்டி தொடங்கும், டாஸ் மாலை 4:00 மணிக்கு நடைபெறும்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;தொடரின் நல்ல தொடக்கத்தை எதிர்பார்த்து, இந்திய அணியின் ஆடும் லெவனில் ஒரு பெரிய மாற்றத்திற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. முதல் போட்டிக்குப் பிறகு, இளம் இந்திய அணி தனது தொடக்க வரிசையில் சில சோதனைகளைச் செய்ய முடிவு செய்துள்ளது, மேலும் அணியின் முக்கிய நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவருக்கு வாய்ப்பளிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதோ முழு விவரங்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா தற்போது கடுமையான ஃபார்ம் இழப்பால் அவதிப்பட்டு வருகிறார். முன்பு களத்தில் வெடித்துச் சிதறி, எதிரணி பந்துவீச்சாளர்களைத் திணறடித்த அவரது மட்டை, கடந்த சில போட்டிகளாக முற்றிலும் அமைதியாகிவிட்டது. கடந்த ஐந்து போட்டிகளில் அவரால் வெறும் 73 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்துள்ளது. சமீபத்தில் முடிவடைந்த டி20 உலகக் கோப்பையிலும் அவரது ஆட்டம் திருப்திகரமாக அமையவில்லை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் போட்டியிலும் ஏமாற்றம் அளித்த அபிஷேக் ஷர்மா, வெறும் 8 பந்துகளில் 1 ரன்னுக்கு ஒரு விக்கெட்டை விட்டுக்கொடுத்தார். அதுமட்டுமின்றி, போட்டியின் போது அவருக்குக் காயம் ஏற்பட்டதால், சரியாக 15 ஓவர்கள் அவர் களத்தில் இருந்து விலகியிருக்க வேண்டியிருந்தது. வரவிருக்கும் முக்கியமான தொடரைக் கருத்தில் கொண்டு, காயத்தின் பிரச்சினை மேலும் மோசமடைவதைத் தடுப்பதற்காக, இரண்டாவது டி20 போட்டியில் அவருக்கு முழு ஓய்வு அளிக்க வாரியம் முடிவு செய்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அபிஷேக் ஷர்மா இல்லாததால், இளம் வீரர் பிரப்சிம்ரன் சிங்கிற்கு ப்ளேயிங் 11-ல் வாய்ப்பு கிடைப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. தனது அதிரடி பேட்டிங்கிற்கு பெயர் பெற்ற பிரப்சிம்ரன், வைபவ் சூர்யவன்ஷியுடன் இணைந்து இந்திய இன்னிங்ஸை தொடங்குவார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஹராரே மைதானத்தில் ஜிம்பாப்வே பந்துவீச்சாளர்களுக்கு இந்த புதிய மற்றும் இளம் தொடக்க ஜோடி எப்படி ஒரு கனவாக இருக்கும் என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.&lt;/p&gt;&lt;p&gt;போட்டி நேரம் மற்றும் தேதி விவரங்கள்!&lt;/p&gt;&lt;p&gt;போட்டி: இந்தியா vs ஜிம்பாப்வே (2வது டி20)&lt;/p&gt;&lt;p&gt;தேதி: ஜூலை 25, 2026&lt;/p&gt;&lt;p&gt;இடம்: ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்&lt;/p&gt;&lt;p&gt;டாஸ் நேரம்: மாலை 04:00 மணி&lt;/p&gt;&lt;p&gt;போட்டி தொடக்கம்: மாலை 04:30 மணி&lt;/p&gt;&lt;img&gt;அணியில் இந்த முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், பிரப்சிம்ரன் மற்றும் வைபவ் ஜோடி இந்திய அணிக்கு ஒரு சிறப்பான தொடக்கத்தை தருமா என கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.]]></content:encoded>
            <category>sports-cricket</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/india-vs-zimbabwe-2nd-t20-playing-11-changes-9rirl0n"/>
        </item>
        <item>
            <title><![CDATA[வைபவ் சூர்யவன்ஷிக்கு சீனியர் வீரர்கள் வார்னிங்.. இந்திய அணி டிரெஸ்ஸிங் ரூமில் நடந்தது என்ன?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/ishan-kishan-senior-players-warning-vaibhav-suryavanshi-epaa3db</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/ishan-kishan-senior-players-warning-vaibhav-suryavanshi-epaa3db</guid>
            <pubDate>Sun, 26 Jul 2026 17:28:01 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Vaibhav Suryavanshi: இந்திய அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு, டிரெஸ்ஸிங் ரூமில் சீனியர் வீரர்கள் சீரியஸாக வார்னிங் கொடுத்துள்ளனர். அந்த மூத்த வீரர்கள் வைபவுக்கு கொடுத்த வார்னிங் என்ன? என்பது குறித்து பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ky9n5rajaq3kfg0rgpt18n02,imgname-vaibhav-suryavanshi-celebration-meaning-a-sign-double-thumbs-up-zimbabwe-t20-1784883110226.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Vaibhav Suryavanshi: இந்திய அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு, டிரெஸ்ஸிங் ரூமில் சீனியர் வீரர்கள் சீரியஸாக வார்னிங் கொடுத்துள்ளனர். அந்த மூத்த வீரர்கள் வைபவுக்கு கொடுத்த வார்னிங் என்ன? என்பது குறித்து பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 20 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். நல்ல தொடக்கத்தை பெரிய இன்னிங்ஸாக மாற்றத் தவறியதால், டிரெஸ்ஸிங் ரூமில் இருந்த சீனியர்களின் பார்வை அவர் மீது இருந்தது. இளம் வயதில் கிடைத்த இந்த பெரிய வாய்ப்பும், புகழும் வைபவின் பாதையை மாற்றிவிடுமோ என்ற கவலை சீனியர்களுக்கு எழுந்துள்ளது. போட்டிக்குப் பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில், இஷான் கிஷன் இந்த சீரியஸ் வார்னிங் குறித்துப் பேசினார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டிக்குப் பிறகு பேசிய இஷான் கிஷன், வைபவ் குறித்து வெளிப்படையாகப் பேசினார். 'நாங்கள் இருவரும் பீகாரைச் சேர்ந்தவர்கள் என்பதால், எங்களுக்குள் ஒரு சிறப்புப் பிணைப்பு உள்ளது. வைபவை என் சொந்த தம்பியாகவே பார்க்கிறேன். பல வீரர்கள் தங்கள் கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்பத்தில் செய்யும் தவறுகளை அவன் செய்யக்கூடாது என்பதே என் கவலை' என்று இஷான் கிஷன் கறாராகக் கூறினார்.&lt;/p&gt;&lt;p&gt;வைபவ் சூர்யவன்ஷி எப்படி பேட்டிங் செய்ய வேண்டும், களத்திற்கு வெளியே எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர். ஆனாலும், இவ்வளவு இளம் வயதில் கிடைத்திருக்கும் இந்த புகழ், ஒரு வீரரின் கவனத்தை எளிதில் திசை திருப்பக்கூடும் என இஷான் கிஷன் எச்சரித்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வைபவைச் சுற்றி உருவாகும் சூழல் பல குழப்பங்களைக் கொண்டது. நண்பர்கள் வட்டம், திடீரென வந்த புகழ், சமூக ஊடகங்களின் ஹைப்பெல்லாம் ஒரு வீரரின் சிந்தனையைக் கெடுக்கலாம். எனவே, எந்தக் குழப்பங்களுக்கும் இடம் கொடுக்காமல், கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்பதே சீனியர்கள் டிரெஸ்ஸிங் ரூமில் கொடுத்த முக்கிய அறிவுரை.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இஷான் கிஷன் மட்டுமல்ல இவங்களும் தான்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இஷான் கிஷன் மட்டுமல்ல, அணியின் மற்ற சீனியர்களான அபிஷேக் ஷர்மா, அக்சர் படேல் ஆகியோரும் வைபவிடம் தொடர்ந்து பேசி வருகின்றனர். 'சமூக ஊடகங்களில் கிடைக்கும் அதீத புகழோ அல்லது ஓரிரு போட்டிகளில் ரன் அடிக்காதபோது வரும் கடுமையான விமர்சனமோ, வைபவின் மனதை பாதிக்காமல் பார்த்துக்கொள்வது எங்கள் கடமை' என்று இஷான் கூறினார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;போட்டியில் ரன் அடிக்க முடியவில்லை என்பதற்காகவோ, ஆன்லைனில் மக்கள் என்ன பேசுகிறார்கள் என்பதற்காகவோ வைபவ் துவண்டுவிடக் கூடாது. 'சமூக ஊடகங்களில் என்ன நடந்தாலும், அது ஒரு வீரரின் பாடி லாங்குவேஜையோ, தன்னம்பிக்கையையோ பாதிக்கக் கூடாது. களத்தில் இறங்கிவிட்டால், தனது இயல்பான பேட்டிங்கில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்' என்பதே இளம் வீரருக்கு சீனியர்கள் கொடுத்த சீரியஸ் வார்னிங் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>sports-cricket</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/ishan-kishan-senior-players-warning-vaibhav-suryavanshi-epaa3db"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ICC Rankings: 230 இடங்கள் எகிறிய வைபவ்... இளம் புயல் சூர்யவன்ஷியின் லேட்டஸ்ட் ரேங்க் என்ன?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/vaibhav-suryavanshi-makes-huge-leap-in-icc-t20i-rankings-g1sa0wo</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/vaibhav-suryavanshi-makes-huge-leap-in-icc-t20i-rankings-g1sa0wo</guid>
            <pubDate>Wed, 29 Jul 2026 19:26:16 +0530</pubDate>
            <description><![CDATA[ஜிம்பாப்வே தொடரில் சிறப்பாகச் செயல்பட்ட இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, ஐசிசி T20 தரவரிசையில் மிகப்பெரிய முன்னேற்றம் கண்டுள்ளார். ஒரே தொடரில் 230 இடங்கள் முன்னேறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ky7qdrqtacczgwkqca2ry4sq,imgname-vaibhav-sooryavanshi-1784818361082.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[ஜிம்பாப்வே தொடரில் சிறப்பாகச் செயல்பட்ட இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, ஐசிசி T20 தரவரிசையில் மிகப்பெரிய முன்னேற்றம் கண்டுள்ளார். ஒரே தொடரில் 230 இடங்கள் முன்னேறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.&lt;img&gt;&lt;p&gt;இந்திய மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் முடிந்த உடனேயே, ஐசிசி புதிய ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தரவரிசைகளை வெளியிட்டது. இருப்பினும், ஐசிசி டி20 தரவரிசையில் ஒரு ஆச்சரியமான முன்னேற்றம் ஏற்பட்டது. இளம் இந்திய கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 230 இடங்கள் முன்னேறி 48-வது இடத்தைப் பிடித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான பிறகு, இந்த இளம் வீரர் ஐசிசி தரவரிசையில் தீவிரமான முன்னேற்றத்தைக் கண்டு வருகிறார். அவர் இதேபோல் தொடர்ந்து முன்னேறினால், நிச்சயமாக டி20 வடிவத்தில் சிறந்த பேட்ஸ்மேனாக உருவெடுப்பார்.&lt;/p&gt;&lt;p&gt;சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் வைபவ் சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமானார். இருப்பினும், ஏமாற்றமளித்த தொடரைக் கொண்டிருந்த 15 வயதான அவர், ஜிம்பாப்வே தொடரில் விரைவாகத் தனது பழைய ஃபார்முக்குத் திரும்பினார். ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் போட்டியில் 50 ரன்களும், மூன்றாவது டி20 போட்டியில் 81 ரன்களும் எடுத்தார். மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் மொத்தம் 151 ரன்கள் எடுத்த அவர், 'தொடர் நாயகன்' விருதையும் வென்றார்.&lt;/p&gt;&lt;p&gt;இந்தியன் பிரீமியர் லீக்கிற்கு (ஐபிஎல்) தகுதி பெற்று இந்திய அணியில் இடம்பிடித்த வைபவ், தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கியதிலிருந்து மிகக் குறுகிய காலத்தில் மிக உயர்ந்த தரவரிசையை எட்டியுள்ளார். ஒரே நேரத்தில் 230 இடங்கள் முன்னேறுவது ஒரு சாதாரண விஷயமல்ல. தனது அபாரமான பேட்டிங்கால் பல சாதனைகளை முறியடித்து, ரன்களைக் குவித்து வரும் வைபவ், தற்போது டி20 தரவரிசையிலும் ஒரு சாதனையை படைத்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மற்ற இந்திய வீரர்களைப் பொறுத்தவரை... இந்திய அணியின் டி20 துணை கேப்டனும், ஹைதராபாத் கிரிக்கெட் வீரருமான திலக் வர்மா இரண்டு இடங்கள் முன்னேறியுள்ளார்... டி20 வடிவத்தில் அவரது தரவரிசை ஆறாவது இடத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் இந்திய அணியின் டி20 கேப்டனாகப் பொறுப்பேற்ற ஸ்ரேயாஸ் ஐயர், ஏழு இடங்கள் முன்னேறி 24வது இடத்தைப் பிடித்துள்ளார். மறுபுறம், இந்தியாவிற்கு எதிராக சிறப்பாகப் பந்துவீசிய ஜிம்பாப்வே பந்துவீச்சாளர் பிளெஸ்ஸிங் முஜரபானி, டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் 10 இடங்கள் முன்னேறி 26வது இடத்தைப் பிடித்துள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;கடந்த மூன்று டி20 தொடர்களைத் தவறவிட்ட முன்னாள் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், முதல் 20 இடங்களுக்குள் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார். சூர்யகுமார் தற்போது டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 19வது இடத்தில் உள்ளார். டி20 பந்துவீச்சுப் பிரிவில் முதல் 10 இடங்களுக்குள் இருக்கும் ஒரே இந்திய பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி ஆவார். ஜிம்பாப்வே தொடரைத் தவறவிட்டதால், அவர் மூன்று இடங்கள் சரிந்து 9வது இடத்திற்கு வந்துள்ளார். ஹர்திக் பாண்டியா டி20 ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் நீடிக்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்திய ஒருநாள் கேப்டன் ஷுப்மன் கில், ஐசிசி தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்... ஒருநாள் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் அவர் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் 80, 31 மற்றும் 77 ரன்கள் என அபாரமாக எடுத்ததன் மூலம் கில் இந்த இடத்தைப் பிடித்தார். இந்திய அணி தொடரை இழந்தபோதிலும், கில் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் நியூசிலாந்து பேட்ஸ்மேன் டேரில் மிட்செலைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்தார். ஒருநாள் தரவரிசையில் கில் முதலிடத்தைப் பிடிப்பது இது மூன்றாவது முறையாகும் என்று ஐசிசி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;ஐசிசி ஒருநாள் தரவரிசையின் முதல் 5 இடங்களில் மூன்று இந்திய நட்சத்திர வீரர்கள் மட்டுமே உள்ளனர். கில் 801 மதிப்பீட்டுப் புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். விராட் கோலி 767 மதிப்பீட்டுப் புள்ளிகளுடனும், ரோஹித் சர்மா 758 மதிப்பீட்டுப் புள்ளிகளுடனும் முறையே 3வது மற்றும் 4வது இடங்களில் உள்ளனர். நியூசிலாந்து வீரர் டேரன் மிட்செல் 794 மதிப்பீட்டுப் புள்ளிகளுடன் அவர்களை விட முன்னிலையில் உள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;இளம் நட்சத்திர வீரர் இஷான் கிஷன் 910 மதிப்பீட்டுப் புள்ளிகளுடன் டி20 தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். பாகிஸ்தான் வீரர் ஷாஹிப்சாதா ஃபர்ஹான் 848 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், அபிஷேக் சர்மா 819 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜஸ்பிரித் பும்ரா 870 புள்ளிகளுடன் டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் தொடர்ந்து முன்னணியில் உள்ளார். இருப்பினும், முதல் 10 டெஸ்ட் பந்துவீச்சாளர்களில் பும்ரா மட்டுமே இடம்பெற்றுள்ளார். முதல் 20 இடங்களில், குல்தீப் யாதவ் 14வது இடத்திலும், முகமது சிராஜ் 15வது இடத்திலும், ரவீந்திர ஜடேஜா 16வது இடத்திலும் உள்ளனர்.&lt;/p&gt;&lt;p&gt;ஒருநாள் போட்டித் தரவரிசையில் அணியின் நிலை மிகவும் மோசமாக உள்ளது... முதல் 10 இடங்களுக்குள் ஒரு பந்துவீச்சாளர் கூட இல்லை. முதல் 20 இடங்களுக்குள் குல்தீப் யாதவ் மட்டுமே உள்ளார்... அவர் 11வது இடத்தில் உள்ளார். டி20 பந்துவீச்சுத் தரவரிசையிலும் இதே நிலைதான்... முதல் 10 இடங்களுக்குள் வருண் சக்ரவர்த்தி மட்டுமே உள்ளார். அவர் 663 மதிப்பீட்டுப் புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளார். ஆப்கானிஸ்தான் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரஷித் கான் டி20-யில் சிறந்த பந்துவீச்சாளராக உள்ளார்... அவர் 753 மதிப்பீட்டுப் புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>sports-cricket</category>
            <dc:creator>Asianet News</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/vaibhav-suryavanshi-makes-huge-leap-in-icc-t20i-rankings-g1sa0wo"/>
        </item>
        <item>
            <title><![CDATA[இந்த 4 வீரர்களுக்கும் இந்த கெட்ட பழக்கம் இருக்கா! கேமராவில் வசமாக சிக்கிய தருணங்கள்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/4-cricketers-caught-biting-their-nails-during-matches-hf9lt2y</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/4-cricketers-caught-biting-their-nails-during-matches-hf9lt2y</guid>
            <pubDate>Sun, 26 Jul 2026 16:32:42 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கிரிக்கெட் போட்டிகளில் ரசிகர்கள் பெரும்பாலும் வீரர்களின் சிக்ஸர்கள், விக்கெட்டுகள் மற்றும் சாதனைகளையே கவனிப்பார்கள். ஆனால், கடுமையான போட்டி சூழலில் வீரர்கள் தங்களின் பதற்றத்தை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை பார்ப்பதில்லை.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ky931w7k9ayjzkpddgra2rfw,imgname-youngest-international-fifty-1-1784864108786.gif" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கிரிக்கெட் போட்டிகளில் ரசிகர்கள் பெரும்பாலும் வீரர்களின் சிக்ஸர்கள், விக்கெட்டுகள் மற்றும் சாதனைகளையே கவனிப்பார்கள். ஆனால், கடுமையான போட்டி சூழலில் வீரர்கள் தங்களின் பதற்றத்தை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை பார்ப்பதில்லை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்திய அணியின் ஸ்டார் பேட்ஸ்மேன் விராட் கோலி, ஒரு பேட்டியில் தனக்கு ஆரம்ப நாட்களில் நகம் கடிக்கும் பழக்கம் இருந்ததாக ஒப்புக்கொண்டார். மேட்ச் பிரஷர் அல்லது டென்ஷன் சமயங்களில் அடிக்கடி இப்படிச் செய்துவிடுவதாக அவர் கூறியிருந்தார். ஆனாலும், காலப்போக்கில் இந்தப் பழக்கத்தை அவர் பெருமளவு கட்டுப்படுத்திவிட்டார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவும் பல போட்டிகளின்போது கேமராவில் நகம் கடிக்கும்போது சிக்கியுள்ளார். ஆனால், ரோஹித் இந்தப் பழக்கம் குறித்து பொதுவெளியில் எதுவும் பேசியதில்லை. ரசிகர்களும் வர்ணனையாளர்களும் இதை மேட்ச் பிரஷர் அல்லது பதற்றத்துடன் தொடர்புபடுத்திப் பார்க்கிறார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;இறங்கிய வேகத்தில் எகிறிய இந்தியா..! T20 தரவரிசையில் மீண்டும் முதல் இடம்..&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும், அவர் விளையாடிய நாட்களில் பலமுறை கேமராவில் நகம் கடிக்கும்போது காணப்பட்டார். குறிப்பாக, அவர் மைதானத்திற்கு வெளியே அமர்ந்து மேட்ச் பார்க்கும்போதோ அல்லது அணியின் ஆட்டம் குறித்து டென்ஷனாக இருக்கும்போதோ, அவர் அப்படிச் செய்யும் புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகியுள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்திய ஆஃப்-ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வினும் சில போட்டிகளிலும், டிரெஸ்ஸிங் ரூமிலும் கேமராவில் நகம் கடிக்கும்போது தென்பட்டுள்ளார். ஆனாலும், இது தனது பழக்கம் என்று அவர் அதிகாரப்பூர்வமாக சொன்னதில்லை. இருந்தபோதிலும், பல சமயங்களில் அவரது இந்த செயல் கேமராவில் பதிவாகியுள்ளது. நகம் கடிக்கும் பழக்கம் என்பது மன அழுத்தம், பதற்றம், கவலை அல்லது ஆழ்ந்த கவனத்தின் வெளிப்பாடாக இருக்கலாம். இது கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமல்ல, கால்பந்து, டென்னிஸ், பேட்மிண்டன் மற்றும் பிற விளையாட்டு வீரர்களும் பலமுறை இதுபோன்ற பழக்கங்களுடன் கேமராவில் சிக்கியுள்ளனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>sports-cricket</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/4-cricketers-caught-biting-their-nails-during-matches-hf9lt2y"/>
        </item>
        <item>
            <title><![CDATA[T20 Rankings: இறங்கிய வேகத்தில் எகிறிய இந்தியா..! T20 தரவரிசையில் மீண்டும் முதல் இடம்..]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/india-dethrones-england-to-reclaim-number-one-t20-ranking-hpotz1g</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/india-dethrones-england-to-reclaim-number-one-t20-ranking-hpotz1g</guid>
            <pubDate>Sun, 26 Jul 2026 13:34:57 +0530</pubDate>
            <description><![CDATA[ஜிம்பாப்வே அணியை 90 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டி20 தொடரை வென்றது இந்திய அணி. இதன்மூலம், ஐசிசி டி20 தரவரிசையில் இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளி மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ky7pvnf4wz44n8tbc2vrj2eh,imgname-team-india-1784817767905.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[ஜிம்பாப்வே அணியை 90 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டி20 தொடரை வென்றது இந்திய அணி. இதன்மூலம், ஐசிசி டி20 தரவரிசையில் இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளி மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.&lt;img&gt;&lt;p&gt;ஹராரேயில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில், இந்திய கிரிக்கெட் அணி போட்டியை நடத்தும் ஜிம்பாப்வே அணியை 90 ரன்கள் என்ற மிகப்பெரிய வித்தியாசத்தில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது. இந்த அபார வெற்றியின் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஒரு போட்டி மீதமிருக்கும் நிலையில் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. தொடரின் மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30 மணிக்கு ஹராரேயில் நடைபெறும்.&lt;/p&gt;&lt;img&gt;இந்த பிரம்மாண்ட வெற்றியின் மூலம், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) டி20 தரவரிசையில் இந்திய அணி மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் 0-4 என தோற்றதால், இந்தியா தனது நம்பர் 1 இடத்தை இழந்திருந்தது. தற்போது, ஜிம்பாப்வேக்கு எதிரான வெற்றியின் மூலம் இங்கிலாந்தை இரண்டாம் இடத்திற்கு தள்ளி, மீண்டும் முதலிடத்தை இந்தியா கைப்பற்றியுள்ளது.&lt;img&gt;டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் குவித்தது. ஆனால், தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 9 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 20 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதனால், 29 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறியது.&lt;img&gt;&lt;p&gt;அப்போது களமிறங்கிய இஷான் கிஷன், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருடன் இணைந்து இன்னிங்ஸை மேம்படுத்தினார். அவர்கள் இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்கு வெறும் 42 பந்துகளில் 66 ரன்கள் என்ற முக்கியமான பார்ட்னர்ஷிப்பை பதிவு செய்தனர். ஸ்ரேயாஸ் ஐயர் 20 பந்துகளில் 25 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார், அதே நேரத்தில் இஷான் கிஷன் அதிரடியாக விளையாடத் தொடங்கினார். இஷான் 44 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 81 ரன்கள் எடுத்தார். பின்னர் திலக் வர்மா அதிரடியாக விளையாடி, வெறும் 29 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ரிங்கு சிங் 12 ரன்கள் சேர்த்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;220 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கைத் துரத்திய இந்திய பந்துவீச்சாளர்கள், ஜிம்பாப்வே அணிக்குக் கடுமையான அடியைக் கொடுத்தனர். இதன் விளைவாக, ஜிம்பாப்வே அணி 129 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஜிம்பாப்வே பேட்ஸ்மேன்களில் பிரையன் பென்னட் 32 ரன்களுடன் அதிக ரன்கள் எடுத்த வீரராக இருந்தார், அதே நேரத்தில் தடிவானாஷே மருமானி 24 ரன்கள் எடுத்தார்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;இந்திய பந்துவீச்சாளர்களில், பேட்டிங்கில் சிறந்து விளங்கிய அபிஷேக் சர்மா, பந்துவீச்சிலும் சிறந்து விளங்கி 17 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். யாஷ் தாக்கூர் 30 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும், பிரின்ஸ் யாதவ் 10 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி, இந்திய அணிக்கு ஒரு மாபெரும் வெற்றிக்கு வழிவகுத்தனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>sports-cricket</category>
            <dc:creator>Asianet News</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/india-dethrones-england-to-reclaim-number-one-t20-ranking-hpotz1g"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Hidden Talents: பாட்டு, டான்ஸ், மெக்கானிக்... நம்ம கிரிக்கெட் வீரர்களின் மறுபக்கம்..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/indian-cricketers-and-their-surprising-hidden-talents-ifhmu1o</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/indian-cricketers-and-their-surprising-hidden-talents-ifhmu1o</guid>
            <pubDate>Mon, 27 Jul 2026 19:55:10 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்கள் முழு நேரத்தையும் கிரிக்கெட் விளையாடுவதிலேயே செலவிடுகிறார்கள் என்று மக்கள் அடிக்கடி கருதுகிறார்கள். கிரிக்கெட்டைத் தாண்டி குறிப்பிடத்தக்க மறைந்திருக்கும் திறமைகளைக் கொண்ட பல இந்திய கிரிக்கெட் வீரர்கள் உள்ளனர்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kyc890jhpgvqpfv4tmv7egpf,imgname-indian-cricketers-hidden-talents-1-1784970248784.gif" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்கள் முழு நேரத்தையும் கிரிக்கெட் விளையாடுவதிலேயே செலவிடுகிறார்கள் என்று மக்கள் அடிக்கடி கருதுகிறார்கள். கிரிக்கெட்டைத் தாண்டி குறிப்பிடத்தக்க மறைந்திருக்கும் திறமைகளைக் கொண்ட பல இந்திய கிரிக்கெட் வீரர்கள் உள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான விராட் கோலி, தனது பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களுக்காக மட்டுமல்லாமல், பாடுவதில் உள்ள அவரது பேரார்வத்திற்காகவும் அறியப்படுகிறார். பல அணி நிகழ்வுகள், உடை மாற்றும் அறைகள் மற்றும் கொண்டாட்டங்களின் போது அவர் முணுமுணுப்பதை காணமுடிகிறது. விராட், பஞ்சாபி மற்றும் பாலிவுட் பாடல்களைக் கேட்பதையும் பாடுவதையும் விரும்புகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்திய டி20 அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர், தனது பேட்டிங் மற்றும் நடனத் திறமைக்காகப் புகழ்பெற்றவர். அவர் இசை கேட்பதையும் நடனமாடுவதையும் விரும்புகிறார். அவருடைய பல நடன வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன. நடன அமைப்பாளர் தனஸ்ரீ வர்மாவுடன் அவர் ஆடிய நடன வீடியோவும் மிகவும் பிரபலமானது.&lt;/p&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;View this post on Instagram&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&lt;p&gt;A post shared by Zoom TV (@zoomtv)&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ். தோனி, பைக்குகள் மற்றும் கார்கள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவர் தனது பல பைக்குகளுக்குத் தேவையான சிறு பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளைத் தானே செய்கிறார். ராஞ்சியில் உள்ள அவரது வீட்டில் ஒரு பிரம்மாண்டமான பைக் சேகரம் உள்ளது, மேலும் அவர் இயந்திரங்களுடன் பணியாற்றுவதை விரும்புகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல், கிரிக்கெட் வீரராக மாறுவதற்கு முன்பு தேசிய அளவிலான சதுரங்க வீரராக இருந்தார். அவர் அகில இந்திய அளவிலும் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். சதுரங்கம் விளையாடுவது, நெருக்கடியான சூழ்நிலைகளில் வியூகம் வகுக்கவும், தகவலறிந்த முடிவுகளை எடுக்கவும் தனது திறனை மேம்படுத்துவதாகவும், அது கிரிக்கெட்டிலும் தனக்குப் பயனளிப்பதாகவும் சாஹல் நம்புகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், தனது கலகலப்பான 'கப்பார்' குணத்திற்காகப் பிரபலமானவர். அவர் கவிதைகள் மற்றும் ஈரடிச் செய்யுள்கள் எழுதுவதையும் விரும்புகிறார் என்பது சிலருக்கே தெரியும். அவர் தனது படைப்புகளை சமூக ஊடகங்களில் பலமுறை பகிர்ந்துள்ளார். மேலும், ஷிகர் தவான் புல்லாங்குழல் வாசிப்பதையும் விரும்புகிறார். இந்த வீரரின் மறைந்திருக்கும் திறமைகள், கிரிக்கெட்டைத் தாண்டி அவருக்குப் பல பொழுதுபோக்குகள் இருப்பதையும், அவை அவரை ஆடுகளத்திற்கு வெளியேயும் தனித்துவமானவராக ஆக்குகின்றன என்பதையும் வெளிப்படுத்துகின்றன.&lt;/p&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;View this post on Instagram&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&lt;p&gt;A post shared by Shikhar Dhawan (@shikhardofficial)&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;கிரிக்கெட் வீரர்களின் திறமை குறித்த அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;1. எந்த இந்திய கிரிக்கெட் வீரருக்குப் பாடுவது மிகவும் பிடிக்கும்?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;விராட் கோலிக்கு பாடுவது, குறிப்பாக பஞ்சாபி மற்றும் பாலிவுட் பாடல்கள் பாடுவது மிகவும் பிடிக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;2. தேசிய அளவிலான சதுரங்க வீரராக இருந்த இந்திய கிரிக்கெட் வீரர் யார்?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;கிரிக்கெட் வீரராக ஆவதற்கு முன்பு, யுஸ்வேந்திர சாஹல் ஒரு தேசிய அளவிலான சதுரங்க வீரராக இருந்தார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;3. கிரிக்கெட்டைத் தவிர எம்.எஸ். தோனியின் மறைந்திருக்கும் திறமை என்ன?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;எம்.எஸ். தோனிக்கு பைக்குகள் மற்றும் கார்களைப் பழுதுபார்ப்பதும், இயந்திரங்களுடன் வேலை செய்வதும் மிகவும் பிடிக்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>sports-cricket</category>
            <dc:creator>Asianet News</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/indian-cricketers-and-their-surprising-hidden-talents-ifhmu1o"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Rohit Sharma: ரிட்டையர்மென்ட் வதந்திக்கு பேட்டால் பதிலடி! லார்ட்ஸில் வரலாற்று சதம் அடித்த ஹிட்மேன்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/rohit-sharma-slams-historic-lords-century-amid-retirement-rumors-mrbrfcb</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/rohit-sharma-slams-historic-lords-century-amid-retirement-rumors-mrbrfcb</guid>
            <pubDate>Mon, 20 Jul 2026 08:24:07 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Hit Man Rohit Sharma: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக வதந்திகள் பரவிய நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் லார்ட்ஸ் மைதானத்தில் 138 ரன்கள் குவித்துய ரோஹித் சர்மா ஆக்ரோஷமான பதிலடி கொடுத்துள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxymqzfj2zr49qzpwpxhvxtf,imgname-rohit-sharma-lords-century-records-1784513560050.gif" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Hit Man Rohit Sharma: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக வதந்திகள் பரவிய நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் லார்ட்ஸ் மைதானத்தில் 138 ரன்கள் குவித்துய ரோஹித் சர்மா ஆக்ரோஷமான பதிலடி கொடுத்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், மூத்த தொடக்க ஆட்டக்காரருமான ரோஹித் சர்மா, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போகிறார் என்ற யூகங்கள் பரவி வந்தன. இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் தனது பேட்டிங் மூலம் அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;2027 ஒருநாள் உலகக் கோப்பையை மனதில் வைத்து, இளம் வீரர்களுக்கு வழிவிடும் வகையில் ரோஹித் சர்மாவை அணியில் இருந்து நீக்குவது குறித்து தேர்வுக்குழு அவரிடம் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. இதனால், இந்தத் தொடர்தான் அவரது கடைசி சர்வதேச போட்டியாக இருக்குமோ என்ற பரபரப்பு ஏற்பட்டது.&lt;/p&gt;&lt;p&gt;ரோஹித் சர்மாவின் ஓய்வு குறித்த யூகங்களை பிசிசிஐ செயலாளர் தேவாஜித் சைகியா நிராகரித்த போதிலும், 39 வயதான ரோஹித் மீது அனைவரின் பார்வையும் இருந்தது. இதுதான் ஒருநாள் போட்டிகளில் அவரது கடைசி இன்னிங்ஸாக இருக்குமா என ரசிகர்களும், கிரிக்கெட் நிபுணர்களும் உற்றுநோக்கிக் கொண்டிருந்தனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில், பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் 21 பந்துகளில் 11 ரன்களும், கார்டிஃபின் சோபியா கார்டன்ஸில் 47 பந்துகளில் 26 ரன்களும் எடுத்து ரோஹித் சொதப்பினார். இதனால், தொடரின் கடைசிப் போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டிய அழுத்தம் அவருக்கு அதிகமாக இருந்தது.&lt;/p&gt;&lt;p&gt;ஆனால், 'ஹிட்மேன்' ரோஹித் சர்மா, வழக்கம் போல நிதானமாகவும், அதே சமயம் நேர்த்தியான கிளாசிக் ஷாட்கள் மற்றும் கணக்கிடப்பட்ட அதிரடியுடன் இங்கிலாந்து பந்துவீச்சை சிதறடித்தார்.&lt;/p&gt;&lt;p&gt;39 வயதான ரோஹித், தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான ஷுப்மன் கில்லுடன் இணைந்து 147 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். கில் 84 பந்துகளில் 77 ரன்கள் எடுத்தார். அதன்பிறகு, தனது நீண்டகால பார்ட்னரான விராட் கோலியுடன் இணைந்தார். கோலி நிதானமாக ஆட, ரோஹித் சர்மா அதிரடியை தொடர்ந்தார்.&lt;/p&gt;&lt;p&gt;85 ரன்களில் இருந்தபோது, 30-வது ஓவரில் இரண்டு சிக்ஸர்களையும், 31-வது ஓவரில் ஒரு பவுண்டரியையும் அடித்து, 84 பந்துகளில் தனது சதத்தை நிறைவு செய்தார். இதன் மூலம், புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் ஒருநாள் போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்தார். இந்திய அணியின் வீரர்கள் உட்பட மைதானத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கைதட்டி அவரது மாஸ்டர் கிளாஸ் ஆட்டத்தை பாராட்டினர்.&lt;/p&gt;&lt;p&gt;A statement 1️⃣0️⃣0️⃣ from the HITMAN! Rohit Sharma brings up a sensational century and becomes the first Indian to score an ODI hundred at Lord's! #ENGvIND 3rd ODI  Streaming LIVE on JioHotstar! pic.twitter.com/sFnq0hRAHq&lt;/p&gt;&lt;p&gt;&mdash; Star Sports (@StarSportsIndia) July 19, 2026&lt;/p&gt;&lt;p&gt;தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையின் 34-வது சதத்திற்குப் பிறகும் ரோஹித் தனது அதிரடியை தொடர்ந்தார். விராட் கோலியுடன் இரண்டாவது விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்த நிலையில், பகுதிநேர பந்துவீச்சாளர் ஜேக்கப் பெத்தெல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.&lt;/p&gt;&lt;p&gt;ரோஹித் 110 பந்துகளில் 17 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உட்பட 138 ரன்கள் எடுத்து, 125.45 ஸ்டிரைக் ரேட்டில் தனது சிறப்பான ஒருநாள் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஓய்வு வதந்திகளுக்கு மத்தியில் லார்ட்ஸில் ரோஹித் சர்மா அடித்த இந்த சதம், சோஷியல் மீடியாவை, குறிப்பாக X தளத்தை (முன்னர் ட்விட்டர்) தெறிக்கவிட்டது. ரசிகர்களும் கிரிக்கெட் ஆர்வலர்களும் ஹிட்மேனுக்கு வாழ்த்து மழை பொழிந்தனர்.&lt;/p&gt;&lt;p&gt;பலரும், 'விமர்சகர்களுக்கு பேட்டால் பதிலடி கொடுத்துவிட்டார்' என்றும், இந்த சதம் 'அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் மிக முக்கியமான இன்னிங்ஸ்' என்றும் புகழ்ந்தனர். 'வயசானாலும் உங்க ஸ்டைல் மாறல' என சிலரும், 'ஓய்வு வதந்திகளுக்கு மத்தியில் பேட் தான் பேசும் என நிரூபித்துவிட்டார்' என பலரும் பதிவிட்டனர்.&lt;/p&gt;&lt;p&gt;பல ரசிகர்கள், 'இனிமேல் அவரை அணியில் இருந்து நீக்க முடியாது' என்றும், 2027 உலகக் கோப்பையிலும் அவரே இந்திய அணியை வழிநடத்த வேண்டும் என்றும் ஆதரவு தெரிவித்தனர்.&lt;/p&gt;&lt;p&gt;டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற ரோஹித் சர்மா, தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெறும் 2027 உலகக் கோப்பை வரை தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை நீட்டிப்பதே அவரது நோக்கம்.&lt;/p&gt;&lt;p&gt;தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில், ரோஹித் 288 போட்டிகளில் 48.95 சராசரியுடன் 11895 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 34 சதங்களும் 62 அரைசதங்களும் அடங்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>sports-cricket</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/rohit-sharma-slams-historic-lords-century-amid-retirement-rumors-mrbrfcb"/>
        </item>
        <item>
            <title><![CDATA[15 வயதிலேயே மாஸ் சம்பவம்! சர்வதேச கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/vaibhav-suryavanshi-record-fifty-india-sweeps-zimbabwe-t20-series-myfvd4q</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/vaibhav-suryavanshi-record-fifty-india-sweeps-zimbabwe-t20-series-myfvd4q</guid>
            <pubDate>Sun, 26 Jul 2026 20:44:54 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Vaibhav Suryavanshi: ஜிம்பாப்வேவுக்கு எதிரான 3வது டி20 போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றது. அதிரடி அரைசதம் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி 15 வயதில் ஆட்டநாயகன், தொடர் நாயகன் விருது வென்று சாதனை படைத்தார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kyfch1defvc2pyf1ekfd66eb,imgname-vaibhav-suryavanshi-world-record-1785075369390.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Vaibhav Suryavanshi: ஜிம்பாப்வேவுக்கு எதிரான 3வது டி20 போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றது. அதிரடி அரைசதம் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி 15 வயதில் ஆட்டநாயகன், தொடர் நாயகன் விருது வென்று சாதனை படைத்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜிம்பாப்வேக்கு எதிரான மூன்றாவது T20 போட்டியில் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் தொடரையும் 3 0 என்ற கணக்கில் முழுதாக கைப்பற்றியுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 192/5 என்ற வலுவான ஸ்கோரை எட்டியது. வெறும் 49 பந்துகளில் 81 ரன்கள் விளாசி, சூர்யவன்ஷி மிரட்டினார். வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டத்தில் எட்டு பவுண்டரிகளும், நான்கு சிக்ஸர்களும் அடங்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;வைபவ் சூர்யவன்ஷி ஆட்டநாயகன்; தொடர் நாயகன்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;பின்பு ஆடிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்திய அணி தரப்பில் மயங்க் யாதவ் 3 விக்கெட்டுகளையும், யாஷ் தாக்கூர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். வைபவ் சூர்யவன்ஷி ஆட்டநாயகன் விருது வென்றார். மேலும் 151 ரன்கள் குவித்த அவர் தொடர் நாயகன் விருதையும் வென்றார். அயர்லாந்து, இங்கிலாந்து டி20 தொடரை இழந்த இந்திய அணி ஜிம்பாப்வே தொடரை வென்று ஆறுதல் அடைந்துள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்சியில் முதல் வெற்றித் தொடர் இதுவாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஏற்கெனவே முதல் டி20 போட்டியில் தனது முதலாவது சர்வதேச டி20 அரைசதத்தை பதிவு செய்த வைபவ் சூர்யவன்ஷி, 15 வயதில் அரைசதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்து இருந்தார். இப்போது தனது இரண்டாவது அரை சதமும் விளாசி 15 வயதில் 2 அரைசதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையையும் தன்வசப்படுத்தியுள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் 15 வயதில் ஆட்டநாயகன் விருது வெண்ற வீரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார். மேலும் தொடர் நாயகன் விருதையும் வென்ற அவர் 15 வயதில் தொடர் நாயகன் விருது வென்ற முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முதல் ஆட்டநாயகன், தொடர் நாயகன் விருது வென்றது குறித்து பேசிய வைபவ் சூர்யவன்ஷி, ''மிகவும் நன்றாக உணர்கிறேன். இங்குப் பயிற்சிகள் மிகச் சிறப்பாக அமைந்தன. இதற்கு முன்பாக 19 வயதுக்குட்பட்டோருக்கான (U19) உலகக் கோப்பையிலும் நான் இங்கு விளையாடியுள்ளேன், அதனால் இங்கு விளையாடுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;பயிற்சியாளர் மற்றும் கேப்டன் உட்பட அணியின் ஒவ்வொருவரும் எனக்கு முழு ஆதரவு அளித்தனர். எனது வழக்கமான T20 ஆட்டத்தை வெளிப்படுத்தவே நான் முயன்றேன். அணிக்கு ஒரு நல்ல தொடக்கத்தைக் கொடுத்து, நல்ல தொடக்கம் அமைந்துவிட்டால் அதை ஒரு நீண்ட இன்னிங்ஸாக மாற்ற வேண்டும் என்பதே எனது எண்ணமாக இருந்தது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;பயிற்சிகளின் போது நான் என்ன செய்கிறேனோ, அதையே போட்டிகளிலிலும் அப்படியே வெளிப்படுத்த முயற்சி செய்கிறேன். இது எனக்கு ஒரு கனவு நனவான தருணம். சர்வதேச கிரிக்கெட்டில் எனது முதல் ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருது இதுவாகும்'' என்று தெரிவித்தார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>sports-cricket</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/vaibhav-suryavanshi-record-fifty-india-sweeps-zimbabwe-t20-series-myfvd4q"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Rohit Sharma Retirement: ரோஹித் சர்மா ஓய்வா? BCCI சொன்ன அதிகாரப்பூர்வ தகவல்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/bcci-clarifies-rumours-on-rohit-sharma-odi-retirement-pgnc9f5</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/bcci-clarifies-rumours-on-rohit-sharma-odi-retirement-pgnc9f5</guid>
            <pubDate>Sat, 18 Jul 2026 21:56:23 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ரோஹித் சர்மாவின் ஒருநாள் கிரிக்கெட் ஓய்வு பற்றி கடந்த சில நாட்களாக நிறைய செய்திகள் பரவி வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் மூன்றாவது ஒருநாள் போட்டிக்குப் பிறகு அவர் ஓய்வு பெறுவார் என்று கூறப்பட்ட நிலையில், பிசிசிஐ தெளிவான விளக்கம் அளித்துள்ளது&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxszx8m9jbq8hnh45fzjpwr6,imgname-rohit-sharma--2--1784357495431.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ரோஹித் சர்மாவின் ஒருநாள் கிரிக்கெட் ஓய்வு பற்றி கடந்த சில நாட்களாக நிறைய செய்திகள் பரவி வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் மூன்றாவது ஒருநாள் போட்டிக்குப் பிறகு அவர் ஓய்வு பெறுவார் என்று கூறப்பட்ட நிலையில், பிசிசிஐ தெளிவான விளக்கம் அளித்துள்ளது&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிடிஐ-யிடம் பேசிய பிசிசி செயலாளர் தேவ்ஜித் சாய்கியா, ரோஹித் சர்மாவின் ஓய்வு குறித்த செய்திகளில் உண்மை இல்லை என்று கூறினார். லார்ட்ஸில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டிக்குப் பிறகு ரோஹித்தின் ஓய்வு குறித்து பிசிசி-யில் எந்த விவாதமும் நடைபெறவில்லை என்றும் அவர் தெரிவித்தார். ரோஹித் தற்போது இந்திய ஒருநாள் அணியின் முக்கிய உறுப்பினராக உள்ளார் என்றும், அணியின் திட்டங்கள் இருக்கும் வரை அவர் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவார் என்றும் அவர் கூறினார். இருப்பினும், 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் அவர் விளையாடுவாரா இல்லையா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;2027 ஒருநாள் உலகக் கோப்பையைக் கருத்தில் கொண்டு, இந்திய அணி நிர்வாகம் இளம் வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்துள்ளதாக சமீபத்தில் சில ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளன. குறிப்பாக, யஷஸ்வி ஜெய்ஸ்வாலை ஒரு நீண்டகால தொடக்க ஆட்டக்காரராக உருவாக்க தேர்வாளர்கள் முயன்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்குப் பிறகு ரோஹித் அணியில் இருக்க மாட்டார் என்று தேர்வுக் குழு அவரிடம் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தச் செய்தியால், ரோஹித் விரைவில் தனது ஓய்வை அறிவிப்பார் என்ற பிரச்சாரம் அதிகரித்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரோஹித் குறித்த செய்தி வெளியான பிறகு, முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அணி நிர்வாகத்தை விமர்சித்தார். எதிர்காலத் திட்டங்களில் ரோஹித்தை சேர்க்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டிருந்தால், அது 2025 சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகு தெளிவுபடுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று அவர் கருதினார்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;2027 உலகக் கோப்பைக்கான உடற்தகுதியுடன் ரோஹித் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், இதுபோன்ற ஒரு நிலைமை ஏற்படுவது சரியல்ல என்றும் அவர் கூறினார். வீரர்களுடன் முறையான தகவல் தொடர்பு இல்லாததாலேயே இதுபோன்ற சர்ச்சைகள் எழுகின்றன என்றும், தனது ஓய்வின்போதும் இதேபோன்ற ஒரு சூழ்நிலையை எதிர்கொண்டதாகவும் அஸ்வின் மறைமுகமாகக் குறிப்பிட்டார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சமீபகாலமாக ரோஹித் ஷர்மாவால் எதிர்பார்க்கப்பட்ட அளவில் ரன்களைக் குவிக்க முடியவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான தற்போதைய தொடரின் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் அவர் பெரிய ஸ்கோர்களைப் பதிவு செய்யவில்லை. முன்னாள் கிரிக்கெட் வீரர் தீப் தாஸ்குப்தாவும், ரோஹித்தின் பேட்டிங்கில் முன்பு இருந்த தெளிவு இல்லை என்று கருதுகிறார். லார்ட்ஸ் ஒருநாள் போட்டியிலும் ரோஹித் சொதப்பினால், தேர்வாளர்கள் ஒரு கடினமான முடிவை எடுக்க வாய்ப்புள்ளது என்று விளையாட்டு வட்டாரங்கள் பேசி வருகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரோஹித் சர்மா இதுவரை இந்தியாவுக்காக 287 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 11,757 ரன்கள் எடுத்துள்ளார். அவர் 48.58 என்ற சராசரியைக் கொண்டு, 33 சதங்களை அடித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் கருதப்படும் ரோஹித், தற்போது ஃபார்ம் இல்லாமல் தவித்து வருகிறார். ஆனால், பிசிசி-யின் சமீபத்திய அறிவிப்பு, அவரது ஓய்வு குறித்த யூகங்களுக்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதன் மூலம், அனைவரின் பார்வையும் இப்போது லார்ட்ஸில் நடைபெறும் மூன்றாவது ஒருநாள் போட்டியின் மீது திரும்பியுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>sports-cricket</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/bcci-clarifies-rumours-on-rohit-sharma-odi-retirement-pgnc9f5"/>
        </item>
        <item>
            <title><![CDATA[IND vs ENG: இந்திய பவுலர்கள் சொதப்பல்! இங்கிலாந்து மெகா ஸ்கோர்... என்ன காரணம்a?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/india-vs-england-3rd-odi-indian-bowlers-concede-387-runs-at-lords-phswa1p</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/india-vs-england-3rd-odi-indian-bowlers-concede-387-runs-at-lords-phswa1p</guid>
            <pubDate>Sun, 19 Jul 2026 21:40:17 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் மிரட்டிவிட்டார்கள். இந்திய பந்துவீச்சை முழுவதுமாக ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து அணி, 50 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 387 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை பதிவு செய்துள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxxgpykz5tf0y07jm7m1sysg,imgname-ind-vs-eng-3rd-odi-1784475777662.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் மிரட்டிவிட்டார்கள். இந்திய பந்துவீச்சை முழுவதுமாக ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து அணி, 50 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 387 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை பதிவு செய்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்து, ஆரம்பத்திலிருந்தே ஆக்ரோஷமாக விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களான பென் டக்கெட் மற்றும் ஜேக்கப் பெத்தேல், இந்திய பந்துவீச்சாளர்களுக்கு எந்த வாய்ப்பும் அளிக்காமல் ரன்களைக் குவித்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 192 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்தனர். பெத்தேல் 93 பந்துகளில் 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கும் வரை, இங்கிலாந்தின் ஸ்கோரை விரைவாக முன்னோக்கி எடுத்துச் சென்றார். அவரது இன்னிங்ஸில் 11 பவுண்டரிகளும் இரண்டு சிக்ஸர்களும் அடங்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பெத்தேல் ஆட்டமிழந்த பிறகும், இங்கிலாந்தின் ஆக்ரோஷம் சற்றும் குறையவில்லை. பென் டக்கெட்டுக்கு ஜோ ரூட் நல்ல ஆதரவை வழங்கினார். இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு மேலும் 101 ரன்கள் சேர்த்தனர். டக்கெட் 135 பந்துகளில் 141 ரன்கள் குவித்து ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது பேட்டிங்கில் 18 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும். இறுதியில், ஜோ ரூட் 74 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார், அதே நேரத்தில் கேப்டன் ஜோஸ் பட்லர் வெறும் 13 பந்துகளில் 41 ரன்கள் குவித்து ஆட்டத்திற்கு உத்வேகம் அளித்தார். இதன் மூலம், இங்கிலாந்து 387 ரன்கள் என்ற மிகப்பெரிய ஸ்கோரை எட்டியது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்திய பந்துவீச்சாளர்களால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பரிதின் கிருஷ்ணா மட்டுமே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பாகச் செயல்பட்டார். பிரின்ஸ் யாதவ் மற்றொரு விக்கெட்டை வீழ்த்தினார். இருப்பினும், மற்ற பந்துவீச்சாளர்கள் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தனர். அக்சர் படேல் தனது 10 ஓவர்களில் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் ரன்களை விட்டுக்கொடுத்தார். அர்ஷ்தீப் சிங்கும் அதிக ரன்களைக் கொடுத்த பந்துவீச்சை வெளிப்படுத்தினார். இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள், இளம் பந்துவீச்சாளர்களான பிரின்ஸ் யாதவ் மற்றும் குர்னூர் பிராரை முழுமையாக ஆதிக்கம் செலுத்தினர்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;ரசிகர்களின் அதிருப்தி&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;இந்தப் போட்டியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இல்லாதது இந்திய பந்துவீச்சில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் முழங்காலில் காயம் ஏற்பட்டதால், பும்ரா மூன்றாவது போட்டியில் விளையாடவில்லை. இது இந்திய பந்துவீச்சின் கூர்மையை இழக்க வழிவகுத்தது. ஆறாவது பந்துவீச்சுத் தேர்வு இல்லாததும் அணிக்கு ஒரு பிரச்சனையாக மாறியுள்ளது. இந்த ஆட்டத்திற்குப் பிறகு, ரசிகர்கள் சமூக ஊடகங்களில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். அணித் தேர்வு மற்றும் பந்துவீச்சு உத்திகளுக்காக அவர்கள் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் காம்பீர் மற்றும் தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் ஆகியோரைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். வரவிருக்கும் ஒருநாள் உலகக் கோப்பையைக் கருத்தில் கொண்டு, பந்துவீச்சுத் துறையை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று அவர்கள் கருதுகின்றனர்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;வரலாறு படைக்க இங்கிலாந்தின் வாய்ப்பு&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;இங்கிலாந்து நிர்ணயித்த 388 ரன்கள் என்ற இலக்கைத் துரத்துவது இந்தியாவிற்கு எளிதாக இருக்காது. இருப்பினும், இந்த மாபெரும் இலக்கை அவர்கள் வெற்றிகரமாக எட்டினால், லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு அரிய சாதனையை நிகழ்த்துவதோடு மட்டுமல்லாமல், தொடரைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்பையும் பெறுவார்கள். தற்போது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு ஒரு பெரும் பொறுப்பு இருப்பதால், சுப்மன் கில்லின் அணி இந்த சவாலை எப்படி எதிர்கொள்கிறது என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>sports-cricket</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/india-vs-england-3rd-odi-indian-bowlers-concede-387-runs-at-lords-phswa1p"/>
        </item>
        <item>
            <title><![CDATA[IND vs ZIM: தோனி சாதனையை தூள் தூளாக்கிய திலக் வர்மா.. ஜிம்பாப்வேயை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/ind-vs-zim-2nd-t20i-india-wins-series-tilak-varma-overtakes-ms-dhonis-t20i-runs-record-qfazokr</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/ind-vs-zim-2nd-t20i-india-wins-series-tilak-varma-overtakes-ms-dhonis-t20i-runs-record-qfazokr</guid>
            <pubDate>Sat, 25 Jul 2026 22:06:50 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;IND vs ZIM: இஷான் கிஷான் அதிரடியால் 2வது டி20 போட்டியில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி இந்தியா தொடரை வென்றது. அரை சதம் விளாசிய திலக் வர்மா தோனி சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kgvg8w9sb1z6pf9r83akn2qn,imgname-5-1770449563961.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;IND vs ZIM: இஷான் கிஷான் அதிரடியால் 2வது டி20 போட்டியில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி இந்தியா தொடரை வென்றது. அரை சதம் விளாசிய திலக் வர்மா தோனி சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி, புதிய T20 கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் தனது முதல் தொடர் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இன்று ஹராரேவில் நடந்த இரண்டாவது T20 போட்டியில், ஜிம்பாப்வே அணியை 90 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா துவம்சம் செய்தது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;இந்த வெற்றியின் மூலம், 2-0 என்ற கணக்கில் இந்தியா தொடரைக் கைப்பற்றியது. முன்னதாக இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து சுற்றுப்பயணங்களில் முறையே 0-4, 0-2 என்ற கணக்கில் தொடர்களை இழந்த நிலையில், இந்த வெற்றி ஸ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்சிக்கு கிடைத்த முதல் தொடர் வெற்றியாக அமைந்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, இஷான் கிஷனின் அதிரடி (44 பந்துகளில் 81 ரன்கள்) மற்றும் திலக் வர்மாவின் அபாரமான ஆட்டத்தால் (29 பந்துகளில் 60 ரன்கள்) 5 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 17.5 ஓவர்களில் 129 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அபிஷேக் ஷர்மா 3 விக்கெட் வீழ்த்தினார். அறிமுக வீரர் யாஷ் தாக்கூர் மற்றும் பிரின்ஸ் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். 44 பந்துகளில் 9 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 81 ரன்கள் குவித்த இஷான் கிஷன் ஆட்டநாயன் விருது வென்றார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த போட்டியில் 29 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 60 ரன்கள் விளாசிய திலக் வர்மா ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். அதாவது டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில், ஜாம்பவான்களான எம்.எஸ். தோனி, சுரேஷ் ரெய்னா மற்றும் சக வீரர் இஷான் கிஷனை பின்னுக்குத் தள்ளி 7-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;தோனி சாதனையை முறியடித்த திலக் வர்மா&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்த ஆட்டத்தின் மூலம், திலக் வர்மா T20 போட்டிகளில் மொத்தமாக 1,634 ரன்களைக் குவித்துள்ளார். இதுவரை 58 போட்டிகளில், 55 இன்னிங்ஸ்களில் விளையாடி, 44.16 என்ற சராசரியுடன், 145.37 ஸ்ட்ரைக் ரேட்டில் இந்த ரன்களை எடுத்துள்ளார். இதில் இரண்டு சதங்களும், ஒன்பது அரைசதங்களும் அடங்கும். அவரது அதிகபட்ச ஸ்கோர் 120* ஆகும்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;இதன் மூலம், தோனி (98 போட்டிகளில் 1,617 ரன்கள்) மற்றும் ரெய்னா (78 போட்டிகளில் 1,605 ரன்கள்) ஆகியோரின் மொத்த T20 ரன்களை அவர் தாண்டியுள்ளார். இந்த ஆண்டில் திலக் வர்மாவின் ஆட்டம் ஏற்ற இறக்கமாகவே இருந்துள்ளது. 18 T20 போட்டிகளில் விளையாடி, 34.69 சராசரியுடன் 451 ரன்கள் எடுத்துள்ளார். இதில் மூன்று அரைசதங்கள் அடங்கும். அவரது சிறந்த ஸ்கோர் 60 ஆகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;1. ரோஹித் சர்மா (159 போட்டிகளில் 4,231 ரன்கள்)&lt;/p&gt;&lt;p&gt;2. விராட் கோலி (125 போட்டிகளில் 4,188 ரன்கள்)&lt;/p&gt;&lt;p&gt;3. சூர்யகுமார் யாதவ் (113 போட்டிகளில் 3,272 ரன்கள்)&lt;/p&gt;]]></content:encoded>
            <category>sports-cricket</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/ind-vs-zim-2nd-t20i-india-wins-series-tilak-varma-overtakes-ms-dhonis-t20i-runs-record-qfazokr"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Rohit Sharma Retirement: கம்பீர் சொன்ன 'அந்த' வார்த்தை! இங்கிலாந்து ஓடிஐ தொடருடன் ரோகித் சர்மா ஓய்வு?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/rohit-sharma-retirement-rumors-will-lords-odi-vs-england-be-the-hitmans-final-one-day-match-rermeh1</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/rohit-sharma-retirement-rumors-will-lords-odi-vs-england-be-the-hitmans-final-one-day-match-rermeh1</guid>
            <pubDate>Fri, 17 Jul 2026 07:53:45 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Rohit Sharma Retirement: இந்திய அணியின் மூத்த வீரர் ரோகித் சர்மா இங்கிலாந்து ஓடிஐ தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கம்பீர் சொன்ன ஒரு விஷயத்தில் அவர் அதிருப்தி அடைந்ததாக தகவல்கல் கூறுகின்றன.&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxp65ykn8qfwghsg8tbvxrvy,imgname-gettyimages-2241973937-1784229853813.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Rohit Sharma Retirement: இந்திய அணியின் மூத்த வீரர் ரோகித் சர்மா இங்கிலாந்து ஓடிஐ தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கம்பீர் சொன்ன ஒரு விஷயத்தில் அவர் அதிருப்தி அடைந்ததாக தகவல்கல் கூறுகின்றன.&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையிலான ஓடிஐ தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், நேற்று நடந்த 2வது போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா நிர்ணயித்த 234 ரன்கள் இலக்கை அந்த அணி 44 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. இந்திய அணியில் விராட் கோலி (65), ஷ்ரேயாஸ் ஐயர் (66) அரைசதம் அடித்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா 47 பந்துகளில் 26 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த நிலையில், லார்ட்ஸில் ஜூலை 19 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஓடிஐ போட்டியுடன் ஓடிஐ பார்மட்டிலும் ரோகித் சர்மா ஓய்வு பெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தேசிய ஊடக அறிக்கைகளின்படி, இந்திய அணியின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு பிசிசிஐ தேர்வுக்குழு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கு அணியை தயார்படுத்தும் நோக்கில், இங்கிலாந்து தொடருக்குப் பிறகு ரோகித் சர்மாவை ஒருநாள் அணிக்குத் தேர்வு செய்ய வேண்டாம் என அவர்கள் முடிவெடுத்துள்ளனர். இதுகுறித்து கடந்த வாரம் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் தேர்வாளர்கள் ரோகித்திடம் நீண்ட நேரம் பேசியுள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இளம் திறமைகளுக்கு வாய்ப்பு கொடுப்பதே தேர்வுக்குழுவின் இந்த முடிவுக்கு முக்கியக் காரணம். குறிப்பாக, யஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற அதிரடி இளம் வீரர்களுக்கு தொடக்க வீரராக நிரந்தர வாய்ப்பு அளித்து, அடுத்த உலகக் கோப்பைக்கு ஒரு வலுவான அணியை உருவாக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளில் தொடர விரும்பினாலும், இந்த முடிவு அவருக்குக் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரோகித் சர்மா 2024 டி20 உலகக் கோப்பையை வென்றதுடன் அந்த ஃபார்மட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பிறகு, 2025 மே மாதம் இன்ஸ்டாகிராம் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்து ஆச்சரியப்படுத்தினார். ஏற்கெனவே ஒருநாள் கேப்டன் பதவியை சுப்மன் கில்லிடம் அவர் ஒப்படைத்துவிட்டார். இப்போது, கடைசியாக இருந்த ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்தும் அவர் வெளியேறும் நேரம் வந்துவிட்டது.&lt;/p&gt;&lt;p&gt;இங்கிலாந்து தொடரில் ரோகித் சர்மாவின் பேட்டிங் ஃபார்மும் தேர்வாளர்களின் இந்த முடிவுக்கு வலு சேர்த்துள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் அவர் முறையே 11 மற்றும் 26 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார். களத்தில் பந்துகளை எதிர்கொள்ள அவர் திணறுவதும், வேகமாக ரன் குவிக்க முடியாததும், அவரது வயது மற்றும் வேகத்தை பாதித்துள்ளதா? என்ற விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;கடைசி போட்டிக்காக காத்திருக்கும் ரசிகர்கள்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;மொத்தத்தில், லார்ட்ஸில் நடக்கவிருக்கும் இந்தப் போட்டி, இந்திய கிரிக்கெட்டின் ஒரு அழகான சகாப்தத்தின் முடிவாக அமையலாம். கேப்டனாக இந்தியாவிற்குப் பெருமை சேர்த்த ரோகித், தனது பேட் மூலம் பிரியாவிடை தருவதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>sports-cricket</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/rohit-sharma-retirement-rumors-will-lords-odi-vs-england-be-the-hitmans-final-one-day-match-rermeh1"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Vaibhav Sooryavanshi: 'கன்னி' அரைசதத்தில் உலக சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி! இந்தியா மாஸ் வெற்றி!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/vaibhav-sooryavanshi-t20i-world-record-ind-vs-zim-rgbrqes</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/vaibhav-sooryavanshi-t20i-world-record-ind-vs-zim-rgbrqes</guid>
            <pubDate>Thu, 23 Jul 2026 20:20:33 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Vaibhav Sooryavanshi: ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி சர்வதேச கிரிக்கெட்டில் முதல் அரைசதம் விளாசி வரலாற்று சாதனை படைத்தார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ky7ppv10jsph5jwvrtjsw81b,imgname-vaibhav-sooryavanshi-1784817609760.jpeg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Vaibhav Sooryavanshi: ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி சர்வதேச கிரிக்கெட்டில் முதல் அரைசதம் விளாசி வரலாற்று சாதனை படைத்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஹராரேவில் நடந்த ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 20 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் வெஸ்லி மதேவெரே அதிகபட்சமாக 39 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் மயங்க் யாதவ் 4 ஓவரில் 18 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். பிரின்ஸ் யாதவ் 2 விக்கெட் சாய்த்தார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;வைபவ் சூர்யவன்ஷி வரலாற்று சாதனை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;பின்பு ஆடிய இந்திய அணி 13.2 ஓவரில் 3 விக்கெட் மட்டுமே இழந்து இலக்கை எட்டியது. இந்திய அணி தரப்பில் சிக்சர் மழை பொழிந்த 15 வயதே ஆன பாலகன் வைபவ் சூர்யவன்ஷி சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதலாவது அரை சதத்தை விளாசினார். வெறும் 18 பந்துகளில் 50 ரன்களைக் கடந்து வைபவ் சூர்யவன்ஷி சாதனை படைத்தார். அவருடைய இந்த அதிரடி ஆட்டத்தில் 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அரை சதம் அடித்த இளம் வீரர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தற்போது வைபவ் வயது 15 வருடம் 118 நாட்கள் தான் ஆகிறது. ஐசிசி-யின் முழு அந்தஸ்து பெற்ற அணிகளைப் பொறுத்தவரை, இதற்கு முன்பு இந்த சாதனை ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் பெயரில் இருந்தது. 2019-ல் ஜிம்பாப்வேக்கு எதிராக அவர் அரைசதம் அடித்தபோது, அவருக்கு 17 வருடம் 296 நாட்கள் வயது. இப்போது வைபவ் சூர்யவன்ஷி அந்த சாதனையை தகர்த்துள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சர்வதேச டி20-யில் முதல் அரைசதம் அடித்த இளம் வயது வீரர்கள் லிஸ்ட்:&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;15 வயது 118 நாட்கள் - வைபவ் சூர்யவன்ஷி (இந்தியா) vs ஜிம்பாப்வே, ஹராரே, 2026&lt;/p&gt;&lt;p&gt;16 வயது 56 நாட்கள் - லூயிஸ் ப்ரூஸ் (ஜிப்ரால்டர்) vs மால்டா, அல்பர்கேரியா, 2021&lt;/p&gt;&lt;p&gt;16 வயது 76 நாட்கள் - கவின் சத்தா (இந்தோனேசியா) vs ஸ்வீடன், பாலி, 2026&lt;/p&gt;&lt;p&gt;16 வயது 89 நாட்கள் - அலுசின் துரே (சியரா லியோன்) vs கானா, பெனோனி, 2023&lt;/p&gt;&lt;p&gt;16 வயது 118 நாட்கள் - டென்சின் ரப்கே (பூட்டான்) vs சீனா, கோலாலம்பூர், 2023&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் டி20 போட்டிகளில் தொடர்ச்சியான 6 போட்டிகளில் அடைந்த தோல்விக்கு இந்தியா முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதுவும் ஷ்ரேயாஸ் கேப்டன் ஆன பிறகு தான் இந்த 6 தொடர் தோல்விகளும் வந்தது. இன்றைய வெற்றியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் தனது முதல் வெற்றியை பெற்றுள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முன்னதாக இந்த போட்டியின் முதல் பந்திலேயே தான் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்திய இந்திய பாஸ்ட் பவுலர் மயங்க் யாதவ், சர்வதேசப் போட்டிகளில் இந்தியாவுக்காக ஒரு இன்னிங்ஸின் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த பந்துவீச்சாளர்கள் என்ற சிறப்புமிக்க சாதனை பட்டியலில் இணைந்தார். இரண்டு ஆன்டுகளுக்கு பிறகு தனது கம்பேக் போட்டியில் மாஸ் காட்டியுள்ள மயங்க் யாதவ் ஆட்டநாயன் விருது வென்றதும் குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>sports-cricket</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/vaibhav-sooryavanshi-t20i-world-record-ind-vs-zim-rgbrqes"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Ajinkya Rahane: கிரிக்கெட்டுக்கு' குட்பை' சொன்ன ரஹானே.. இதுதான் காரணம்.. இன்ஸ்டாகிராமில் உருக்கம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/ajinkya-rahane-announces-retirement-from-international-cricket-w44nu8g</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/ajinkya-rahane-announces-retirement-from-international-cricket-w44nu8g</guid>
            <pubDate>Thu, 30 Jul 2026 11:58:54 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Ajinkya Rahane: இந்திய அணியின் ஸ்டார் வீரர் அஜிங்க்யா ரஹானே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் ஓய்வுக்கான காரணம் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jt8ss3pswygvjyy1e4yc4cyw,imgname-rahane-4-1746199678681.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Ajinkya Rahane: இந்திய அணியின் ஸ்டார் வீரர் அஜிங்க்யா ரஹானே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் ஓய்வுக்கான காரணம் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் அஜிங்க்யா ரஹானே, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். இதன் மூலம், சுமார் இரண்டு தசாப்தங்களாக நீடித்த அவரது கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு உருக்கமான வீடியோவை பகிர்ந்து, இந்த முடிவை ரஹானே உறுதிப்படுத்தியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகுவதற்கு இதுதான் சரியான நேரம் என்று அவர் கூறியுள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;&quot;வாழ்க்கையின் நிதர்சனம் என்னவென்றால், எல்லாவற்றுக்கும் ஒரு தொடக்கம் உண்டு, ஒரு முடிவும் உண்டு. நேரம் வரும்போது, அதை மதித்து நாம் செல்ல வேண்டும். என் பேட்டிங்கில் நான் எப்போதும் டைமிங்கை நம்பியிருக்கிறேன், அதன் முக்கியத்துவத்தையும் நான் புரிந்துகொண்டேன்&quot; என்று ரஹானே கூறினார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தொடர்ந்து தனது பதிவில் கூறிய அவர், &quot;சர்வதேச கிரிக்கெட் மற்றும் அனைத்து வடிவங்களிலிருந்தும் எனது ஓய்வை அறிவிக்க சரியான நேரம் இது என்று உணர்கிறேன். சிறுவயதில் பயிற்சிக்கு மட்டும் பயணம் செய்த அந்த ஆரம்ப நாட்களில் இருந்து, இந்த விளையாட்டுக்கு நான் எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு இன்னிங்ஸிலும், பேட்டிங் செய்ய கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பிலும், இந்திய தொப்பியை அணிய வேண்டும் என்பதுதான் எப்போதும் கனவாக இருந்தது&quot; என்று மேலும் கூறினார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;நேர்மையுடன் விளையாடினேன்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;ரஹானே தனது கிரிக்கெட் வாழ்க்கையில் எப்போதும் நாட்டிற்கும் அணிக்கும் முன்னுரிமை அளித்ததாகவும், நேர்மையுடன் விளையாடியதாகவும் கூறினார். &quot;நான் ஒரு எளிய விதியைக் கடைப்பிடித்தேன். எப்போதும் என் நாட்டையும் என் அணியையும் எனக்கு முன்னால் வைத்தேன். இந்த விளையாட்டை நான் முழு நேர்மையுடன் விளையாடினேன். உங்கள் நோக்கம் சரியாக இருந்தால், விளையாட்டு எப்போதும் உங்களைக் கவனித்துக் கொள்ளும் என்று நான் எப்போதும் நம்பினேன்&quot; என்றும் தெரிவித்தார்.&lt;/p&gt;&lt;p&gt;ரஹானே தனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் ஆதரவளித்த பிசிசிஐ, மும்பை கிரிக்கெட் சங்கம் (MCA), தனது சக வீரர்கள், பயிற்சியாளர்கள், ஐபிஎல் அணிகள், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். &quot;உயர்வு தாழ்வு என அனைத்திலும் எனக்கு ஆதரவளித்த அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் ஒரு சிறப்பு நன்றி.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;'அஜிங்க்யா' என்றால் வெல்ல முடியாதவன் என்று அர்த்தம், ஆனால் கிரிக்கெட் எனக்கு பலமுறை தோல்வியைக் காட்டியுள்ளது. கிரிக்கெட் வீரர்களாக, நாங்கள் வெற்றி பெறுவதை விட அடிக்கடி தோல்வியடைகிறோம். ஆனால், நான் ஒருபோதும் தோற்கடிக்கப்படாத ஒரு இடம் உண்டு. அது உங்கள் இதயங்களில்தான். உங்கள் அன்புக்கும், நம்பிக்கைக்கும், ஆதரவுக்கும் நன்றி. கேப் எண் 278, விடைபெறுகிறேன்&quot; என்று ரஹானே முடித்தார்.&lt;/p&gt;&lt;p&gt;சர்வதேச போட்டிகளில் ரஹானே பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். 85 போட்டிகளில் 144 இன்னிங்ஸ்களில் விளையாடி, 38.46 சராசரியில் 5,077 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 12 சதங்களும் 26 அரைசதங்களும் அடங்கும்.&lt;/p&gt;&lt;p&gt;ஒருநாள் போட்டிகளில், 90 போட்டிகளில் 87 இன்னிங்ஸ்களில் விளையாடி, 35.26 சராசரியில் 2,962 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 3 சதங்களும் 24 அரைசதங்களும் அடங்கும். டி20 போட்டிகளில், 20 போட்டிகளில் 375 ரன்கள் எடுத்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;டெஸ்ட் கேப்டனாக ரஹானேவின் சாதனை சிறப்பாக உள்ளது. அவர் தலைமையில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோற்கவில்லை. நான்கு வெற்றிகள், இரண்டு டிராக்களுடன், குறைந்தபட்சம் ஐந்து போட்டிகளில் கேப்டனாக இருந்த இந்திய வீரர்களில் அதிக வெற்றி சதவீதத்தை ரஹானே கொண்டுள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;2020-21 பார்டர்-கவாஸ்கர் டிராபியில், மெல்போர்னில் பெற்ற வரலாற்று சிறப்புமிக்க வெற்றி மற்றும் கப்பா மைதானத்தில் ஆஸ்திரேலியாவின் நீண்ட கால வெற்றிப் பயணத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது ஆகியவை அவரது கேப்டன்சியில் மறக்க முடியாத தருணங்கள். அந்த தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றது.&lt;/p&gt;&lt;p&gt;ரஹானே 2017-ல் தரம்சாலாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும், 2018-ல் ஆப்கானிஸ்தானுக்கு எதிராகவும் இந்திய அணியை வெற்றிக்கு வழிநடத்தினார். ரஹானே ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>sports-cricket</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/ajinkya-rahane-announces-retirement-from-international-cricket-w44nu8g"/>
        </item>
    </channel>
</rss>
