<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes"?>
<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Thu, 30 Apr 2026 13:06:27 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss/spiritual" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[Madurai chithirai thiruvizha 2026 கள்ளழகர் மீது தண்ணீர் பீச்சும் பழக்கம் எப்படி ஏற்பட்டது தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/spiritual/madurai-chithirai-thiruvizha-2026-kallalagar-water-sprinkling-history-articleshow-32w4ibg</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/spiritual/madurai-chithirai-thiruvizha-2026-kallalagar-water-sprinkling-history-articleshow-32w4ibg</guid>
            <pubDate>Mon, 27 Apr 2026 17:30:52 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;மதுரை சித்திரை திருவிழாவில், மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வந்த திருவிழாக்கள் நிறைவு பகுதியை எட்டி உள்ளது. அடுத்ததாக சித்திரை திருவிழாவில் உச்ச நிகழ்வான வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் வைபவம் இந்த ஆண்டு மே 01ம் தேதி சித்ரா பெளர்ணமி அன்று நடைபெற உள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jv1nwxshv533n3wnmf84n28d,imgname-whatsapp-image-2025-05-12-at-12.49.49-1747034470193.jpeg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;மதுரை சித்திரை திருவிழா என்றாலே நம் நினைவுக்கு வருவது பச்சை பட்டுடுத்தி, தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகர் கோலம் தான். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் &quot;கோவிந்தா... கோவிந்தா...&quot; என முழக்கமிட, தங்கக் குதிரை வாகனத்தில் வரும் அழகர் மீது தோல் பைகளில் இருந்து தண்ணீரைப் பீய்ச்சி அடிப்பார்கள். இதை வெறும் வேடிக்கையாகவோ அல்லது கோடை வெயிலுக்கான தீர்வாகவோ நாம் பார்த்திருக்கலாம். ஆனால், இந்த மரபு உருவானதற்கு பின்னால் ஒரு நெகிழ்ச்சியான வரலாறும், பலரும் அறியாத ஆன்மீக ரகசியமும் ஒளிந்துள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;துர்வாசரின் சாபமும் தவளை அவதாரமும் :&lt;/p&gt;&lt;p&gt;இந்த நீர் பீய்ச்சும் படலத்தின் பின்னணியில் மண்டூக மகரிஷி என்பவரின் கதை இருக்கிறது. துர்வாச முனிவரின் சாபத்தால் தவளையாக மாறிய மண்டூக மகரிஷி, வைகை ஆற்றின் கரையில் விஷ்ணுவை நோக்கி கடும் தவம் புரிந்தார். அவருக்கு சாப விமோசனம் அளிக்கவே அழகர் மலையிலிருந்து கள்ளழகர் மதுரைக்கு எழுந்தருள்கிறார். தவளை என்பது நீரிலேயே வாழும் உயிரினம். தன் பக்தனான மண்டூக மகரிஷியின் சாப வெப்பத்தைத் தணிக்கவும், அவர் குளிர்ந்து போய் மோட்சம் பெறவும் அந்தக் காலத்தில் மக்கள் நீரினை இறைவர் மீது தெளித்ததாகக் கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;கள்ளழகர் எந்த நிறத்தில் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்குகிறாரோ அதைப் பொருத்து அந்த ஆண்டின் விவசாயம், வளமை இருக்கும் என்ற நம்பிக்கை உண்டு. அது போலவே கோடை வெயில் சுட்டெரிக்கும் சித்திரை மாதத்தில் பக்தர்கள் பாசமுடன் பீய்ச்சி அடிக்கும் தண்ணீரால் மனம் குளிர்ந்து, வைகை ஆற்றில் மகிழ்ச்சியுடன் கள்ளழகர் இறங்கினால் அந்த ஆண்டு மக்கள் மனம் குளிரும் வகையில் நல்ல மழை பெய்து, விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கையும் பக்தர்களிடம் காணப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;புராணக் கதை :&lt;/p&gt;&lt;p&gt;&lt;img&gt;&lt;/p&gt;&lt;p&gt;கள்ளழகர் (மாலிருஞ்சோலை அழகர்) தனது தங்கை மீனாட்சியின் திருமணத்தைக் காண அழகர் மலையில் இருந்து புறப்பட்டு வருகிறார். ஆனால், அவர் மதுரைக்கு வருவதற்கு முன்பே திருமணம் முடிந்துவிட்டதை அறிந்து, அவர் கோபமடைந்து வைகை ஆற்றுக்குள் இறங்காமல், அக்கரையில் உள்ள ராமராயர் மண்டகப்படிக்குச் செல்கிறார். அந்த கோபத்தைத் தணிக்கவும், அவரைச் சாந்தப்படுத்தவும் பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சி அடிக்கிறார்கள் என ஒரு கதை கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;சுவாரஸ்யமான 'தோல் பை' ரகசியம் :&lt;/p&gt;&lt;p&gt;அழகர் மீது தண்ணீர் பீய்ச்சுபவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் (வீரபத்திர கோத்திரத்தினர்). இவர்கள் இதற்காக ஆட்டுத்தோலால் ஆன பைகளைப் பயன்படுத்துகிறார்கள். முன்பு கள்ளழகர் வரும் பாதையில் கள்ளர்கள் மற்றும் வழிப்பறி திருடர்களின் நடமாட்டம் அதிகம் இருக்குமாம். அழகரை அவர்கள் நெருங்க விடாமல் தடுக்கவும், கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும் காவல் தெய்வத்தின் அம்சமாகத் தண்ணீர் பீய்ச்சும் இந்த முறை உருவானது என்றும் சொல்லப்படுகிறது. இது பலரும் அறியாத கள்ளழகர் பற்றிய ரகசியங்களில் ஒன்று.&lt;/p&gt;&lt;p&gt;ஏன் தண்ணீர் பீய்ச்சுகிறார்கள்? ஆன்மீகக் காரணம் :&lt;/p&gt;&lt;p&gt;அந்த காலத்தில் வெறும் தண்ணீரை மட்டும் அடிக்க மாட்டார்கள். தண்ணீரில் வெல்லம், ஏலக்காய், பச்சை கற்பூரம் மற்றும் வாசனை திரவியங்களைக் கலந்து &quot;சர்க்கரைத் தண்ணீராக&quot; அடிக்கும் வழக்கம் இருந்தது. இது அழகருக்குச் செய்யப்படும் ஒருவகை நைவேத்தியமாகக் கருதப்பட்டது. அழகர் மலையிலிருந்து வெயிலில் நடந்து வரும் இறைவனின் உடல் சூட்டைத் தணிக்க, தன் பிள்ளைகள் செய்யும் அன்பான உபசாரமே இந்த நீர் பீய்ச்சும் நிகழ்வு கருதப்படுகிறது. கள்ளழகரை 'மலை கள்ளன்' என்று அழைப்பார்கள். திருப்பதி வேங்கடாஜலபதியே இங்கு அழகராக வருவதாக ஐதீகம். வேங்கடவனுக்கு எப்படி அபிஷேகம் பிரியமோ, அதே போல் கள்ளழகருக்கு இந்த நீர் விளையாட்டு பிரியம்.&lt;/p&gt;&lt;p&gt;இன்றைய சூழலில் ஒரு மாற்றம் :&lt;/p&gt;&lt;p&gt;முன்பு தோல் பையில் தண்ணீர் எடுத்துக் கொண்டு குழாய் மூலம் பீய்ச்சி அடித்தார்கள். ஆனால் தற்போது பலர் &lsquo;பிரஷர் பம்ப்&rsquo; மூலம் அதிக வேகத்தில் தண்ணீர் அடிக்கிறார்கள். இது இறைவனின் திருமேனியைப் பாதிக்கும் என்பதால், பழைய முறைப்படி நிதானமாக, அன்புடன் நீர் தெளிப்பதே உண்மையான பக்தியாகும். சமீப காலமாக பழங்கால முறையை பின்பற்றி கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சும் முறை மீண்டும் பக்தர்களால் கடைபிடிக்கப்படுகிறது. தற்போது ஏராளமான பக்தர்கள் தங்களின் வேண்டுதல் நிறைவேறுவதற்காக வேண்டிக் கொண்டு கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வழக்கத்தை செய்து வருகின்றனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>spiritual</category>
            <dc:creator>Priya Velan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/spiritual/madurai-chithirai-thiruvizha-2026-kallalagar-water-sprinkling-history-articleshow-32w4ibg"/>
        </item>
        <item>
            <title><![CDATA[velankanni church ஈஸ்டருக்குப் பின் கிறிஸ்தவர்கள் வேளாங்கண்ணி செல்வதன் ஆன்மீக ரகசியம்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/spiritual/velankanni-church-know-the-reason-for-chiristian-visit-velankanni-after-celebrating-easter-articleshow-72gni7g</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/spiritual/velankanni-church-know-the-reason-for-chiristian-visit-velankanni-after-celebrating-easter-articleshow-72gni7g</guid>
            <pubDate>Tue, 28 Apr 2026 16:05:15 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ஈஸ்டர் பண்டிகைக்கு பிறகு ஏராளமான கிறிஸ்தவர்கள் வேளாங்கண்ணி தேவாலயத்திற்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். எதற்காக கிறிஸ்தவர்கள் இந்த ஆன்மீக பயணத்தை மேற்கொள்கிறார்கள்? இதற்கு பின்னால் இருக்கும் ஆன்மீக காரணம் என்ன என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k3qp6wgbwmjtcrsemvmej00s,imgname-velankanni--1-1756362928651.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சிலுவையில் அறையப்படும் இயேசு கிறிஸ்து, புனித வெள்ளி அன்று உயிர் துறந்து, பிறகு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் என சொல்லப்படுகிறது. இந்த நாளையே கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் திருநாளாக கொண்டாடுகிறார்கள். இந்த நாளை ஆன்மீக பயணத்தின் துவக்கமாக கிறிஸ்தவர்கள் கருதுகின்றனர். சிலுவை மரணத்தின் துயரத்தை வென்று, இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த அந்தத் தருணம், மனித குலத்திற்கு நம்பிக்கையை மீட்டெடுத்துக் கொடுத்தது. இந்த உயிர்ப்பின் மகிழ்ச்சியைத் தங்களுக்குள்ளும், தங்கள் குடும்பங்களிலும் நிலை நிறுத்திக் கொள்ளவே, ஈஸ்டருக்கு பிறகு ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் நாகப்பட்டினம் புனித ஆரோக்கிய மாதா திருத்தலத்தை நோக்கி (வேளாங்கண்ணி) செல்கின்றனர். இதன் பின்னணியில் இருக்கும் ஆன்மீக ரகசியங்களையும், சுவாரஸ்யமான காரணங்களையும் தெரிந்து கொள்ளலாம்.&lt;/p&gt;&lt;p&gt;ஈஸ்டருக்கு பின் கிறிஸ்தவர்கள் வேளாங்கண்ணி செல்வது ஏன்?&lt;/p&gt;&lt;p&gt;1. தாயின் மடியில் இளைப்பாறுதல் :&lt;/p&gt;&lt;p&gt;ஈஸ்டருக்கு முந்தைய 40 நாட்கள் 'தவக்காலம்' எனப்படும். இந்த நாட்களில் விசுவாசிகள் நோன்பு, ஜபம் மற்றும் பிரார்த்தனைகளில் ஈடுபட்டுத் தங்களைத் தூய்மைப்படுத்துகின்றனர். ஒரு நீண்ட ஆன்மீகப் போராட்டத்திற்குப் பிறகு, வெற்றி வீரனாக உயிர்த்தெழுந்த மகனை (இயேசுவை), அவரது தாயின் மடியில் அமர்ந்து தரிசிப்பது ஒரு முழுமையான நிறைவைத் தரும். இதன் காரணமாகவே கிறிஸ்தவர்கள் வேளாங்கண்ணி செல்கின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;2. 'பாஸ்கா' காலத்தின் நீட்சி :&lt;/p&gt;&lt;p&gt;கத்தோலிக்க திருச்சபையின் நாட்காட்டியின்படி, ஈஸ்டர் என்பது ஒரே ஒரு நாள் திருவிழா அல்ல. அது 50 நாட்கள் நீடிக்கும் 'பாஸ்கா காலம்'. இந்த 50 நாட்களும் மகிழ்ச்சியின் நாட்கள். பழைய காலத்தில், ஈஸ்டர் அன்று திருமுழுக்கு பெற்ற புதிய கிறிஸ்தவர்கள், தங்களின் வெண்ணிற ஆடையை அணிந்து கொண்டு புனித இடங்களுக்குத் திருப்பயணம் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அதன் நவீன வடிவமாகவே, ஈஸ்டர் கொண்டாட்டங்களுக்குப் பிறகு மக்கள் வேளாங்கண்ணிக்குச் சென்று நன்றிப் பலி செலுத்துகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;3. கடல் மட்டத்திலான ஆன்மீக அதிர்வுகள் :&lt;/p&gt;&lt;p&gt;&lt;img&gt;&lt;/p&gt;&lt;p&gt;வேளாங்கன்னி கடற்கரை ஓரம் அமைந்திருப்பதால், அங்குள்ள காற்றில் 'அயோடின்' மற்றும் உப்பின் வீரியம் அதிகம். உயிர்த்தெழுதல் என்பது புத்துயிரைக் குறிக்கிறது. தவக்காலத்தில் உடலையும் மனதையும் வருத்திய விசுவாசிகள், கடலோரப் பகுதியில் உள்ள இந்தத் திருத்தலத்திற்கு வரும் போது, இயற்கை ரீதியாகவும் அவர்களுக்கு ஒரு புத்துணர்வு கிடைக்கிறது. குறிப்பாக, ஈஸ்டருக்குப் பிறகு வரும் வசந்த காலக் காற்று, மாதாவின் அருளோடு சேர்ந்து மன அழுத்தத்தை நீக்குவதாகப் பக்தர்கள் நம்புகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;4. 'நன்றி நவில்தல்' காணிக்கை :&lt;/p&gt;&lt;p&gt;பலரும் அறியாத ஒரு விஷயம் என்னவென்றால், ஈஸ்டர் காலத்தில் கேட்கப்படும் பல வேண்டுதல்கள் நிறைவேறும் போது, மக்கள் தங்களின் முதல் நன்றியை ஆரோக்கிய அன்னைக்குச் செலுத்தவே அங்கு செல்கின்றனர். &quot;இயேசு உயிர்த்தெழுந்து விட்டார், இனி அன்னை மரியாளின் பரிந்துரை இன்னும் வலிமையானது&quot; என்ற ஆழமான விசுவாசம் கிராமப்புற மக்களிடையே இன்றும் வேரூன்றி இருக்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;வேளாங்கண்ணி மூன்று அற்புதங்களின் சங்கமம்:&lt;/p&gt;&lt;p&gt;இந்தத் தலம் உருவாவதற்கு மூன்று முக்கிய நிகழ்வுகள் காரணமாக அமைந்தன:&lt;/p&gt;&lt;p&gt;1. பால் கொடுத்த சிறுவன்: 16-ஆம் நூற்றாண்டில் மோர் விற்றுக்கொண்டிருந்த ஒரு சிறுவனிடம் அன்னை மரியா பால் கேட்ட நிகழ்வு. 2. முடவன் குணம் அடைந்தது: மோர் விற்கும் ஊனமுற்ற சிறுவன் அன்னையின் அருளால் நடக்கத் தொடங்கியது. 3. உயிர் பிழைத்த மாலுமிகள்: கடலில் புயலில் சிக்கிய போர்த்துகீசிய மாலுமிகள் கரை ஒதுங்கியது. அவர்கள் கொடுத்த வாக்குறுதியின்படிதான் இன்று நாம் காணும் கல் தேவாலயம் கட்டப்பட்டது.&lt;/p&gt;&lt;p&gt;கிழக்கின் லூர்து :&lt;/p&gt;&lt;p&gt;பிரான்ஸ் நாட்டில் உள்ள லூர்து நகருக்கு அடுத்தபடியாக, உலகிலேயே அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மிக முக்கியமான தலம் இதுதான். அதனால் தான் இது 'கிழக்கின் லூர்து' என்று உலகளவில் அழைக்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;இந்து மத வழிபாடுகள் :&lt;/p&gt;&lt;p&gt;வேளாங்கண்ணிக்கு வரும் பக்தர்கள் செய்யும் சில சடங்குகள் இந்து சமய வழிபாட்டு முறைகளை ஒத்திருக்கும். உதாரணமாக பக்தர்கள் மொட்டை போடுதல் மற்றும் முடி காணிக்கை செலுத்துவது. மாதாவுக்கு பட்டுச் சேலை அணிவித்தல் (உலகிலேயே அன்னை மரியா சேலை அணிந்திருப்பது இங்குதான் அதிகம் காணப்படுகிறது). மஞ்சள் கயிறு கட்டுதல் மற்றும் அங்கப்பிரதட்சணம் செய்வது போன்ற வழிபாட்டு முறைகள் இங்கு ஒரு தனித்துவமான கலாச்சாரமாக உள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>spiritual</category>
            <dc:creator>Priya Velan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/spiritual/velankanni-church-know-the-reason-for-chiristian-visit-velankanni-after-celebrating-easter-articleshow-72gni7g"/>
        </item>
        <item>
            <title><![CDATA[chitra pournami 2026 remedies நாளை சித்ரா பெளர்ணமி 2026 : வாழ்வை மாற்றும் அற்புதமான ரகசிய வழிபாடுகள்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/spiritual/chitra-pournami-2026-spiritual-remedies-for-get-relief-from-all-problems-and-sins-articleshow-bdx7ubw</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/spiritual/chitra-pournami-2026-spiritual-remedies-for-get-relief-from-all-problems-and-sins-articleshow-bdx7ubw</guid>
            <pubDate>Thu, 30 Apr 2026 11:00:24 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;சித்திரை மாதத்தில் மிக முக்கியமான வழிபாட்டு நாட்களில் ஒன்று சித்ரா பெளர்ணமி. இந்த நாளில் யம தர்ம ராஜாவின் கணக்காளரான சித்ரகுப்தன் அவதரித்ததாக புராணங்கள் சொல்கின்றன. நம்முடைய முந்தைய பிறவிகள், இந்த பிறவியில் நாம் தெரிந்தும் தெரியாமலும் செய்யும் பாவங்களில் இருந்து விடுபட்டு துன்பங்கள் நீங்கி நல்வாழ்வு பெறுவதற்கான நாளாக சித்ரா பெளர்ணமி கருதப்படுகிறது&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kqecyrnnbsxaaa2emqwecgx6,imgname-chitra-pournami-1777526071986.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சித்திரை மாதம் என்றாலே அது வசந்த காலத்தின் தொடக்கம். ஆனால் ஆன்மீக ரீதியாக, இது நம் வாழ்வின் கர்மவினையின் &quot;கணக்கு வழக்குகளை&quot; சரிபார்க்கும் மாதம். சித்திரை மாத பெளர்ணமியும், சித்திரை நட்சத்திரமும் இணையும் நாளையே சித்ரா பெளர்ணமியாக ஆண்டுதோறும் கொண்டாடுகிறோம். 2026-ம் ஆண்டு மே மாதம் 1-ம் தேதி (வெள்ளிக்கிழமை) சித்ரா பௌர்ணமி கொண்டாடப்படுகிறது. சூரியனும், சந்திரனும் சம பலத்துடன் திகழும் நாள் இது தான். சந்திரன் முழுப் பொலிவுடன் பூமிக்கு மிக அருகில் வரும் இந்தத் திருநாளில், நம்முடைய கர்ம வினைகளைக் குறைத்து, புண்ணியங்களை அதிகரிக்கும் ரகசிய வழிபாட்டு முறைகளை இங்கே காண்போம்.&lt;/p&gt;&lt;p&gt;சித்திரகுப்தர் வழிபாடு :&lt;/p&gt;&lt;p&gt;சித்ரா பௌர்ணமி என்றாலே நம் நினைவுக்கு வருவது எமதர்மனின் கணக்காளரான சித்திரகுப்தர் தான். பலரும் இவரைப் பயத்துடன் பார்ப்பார்கள். ஆனால், உண்மையில் இவர் நாம் செய்யும் சிறு புண்ணியத்தையும் விடாமல் குறித்து வைத்து, அதற்குரிய பலனைத் தருபவர். பிரம்ம தேவரின் சக்தியில் இருந்து சித்ரகுப்தர் அவதரித்த நாளையே சித்ரா பெளர்ணமி நாளாக கொண்டாடுகிறோம்.சித்திரகுப்தர் பிறந்ததே ஒரு பசுவிடமிருந்து (காமதேனு) என்று புராணங்கள் சொல்கின்றன. அதனால் தான், அன்று பசுக்களுக்கு உணவளிப்பது சித்திரகுப்தரின் ஆசியை நேரடியாகப் பெற்றுத் தரும்.&lt;/p&gt;&lt;p&gt;துன்பங்கள் விலக எளிய ஆன்மீகப் பரிகாரங்கள் :&lt;/p&gt;&lt;p&gt;வாழ்க்கையில் தொடர் தோல்விகள், பணத்தடை அல்லது மன உளைச்சலில் இருப்பவர்கள் சித்ரா பௌர்ணமி அன்று கீழ்க்கண்ட எளிய பரிகாரங்களைச் செய்யலாம்:&lt;/p&gt;&lt;p&gt;1. சித்திரகுப்தருக்கு வேண்டுதல்: ஒரு வெள்ளைத் தாளில் &quot;தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களுக்கு மன்னிப்பு வேண்டுகிறேன், இனி நற்செயல்களைச் செய்வேன்&quot; என எழுதி, சித்திரகுப்தர் படத்தின் முன் வைத்து பிரார்த்திக்கவும். இது உங்கள் ஆழ்மனக் குற்ற உணர்வை நீக்கி, புதிய தொடக்கத்தைத் தரும்.&lt;/p&gt;&lt;p&gt;2. பௌர்ணமி கிரிவலம்: 2026 சித்ரா பௌர்ணமி வெள்ளிக்கிழமை வருவதால், திருவண்ணாமலை போன்ற புண்ணிய தலங்களில் கிரிவலம் வருவது மகாலட்சுமியின் அருளையும், ஆரோக்கியத்தையும் ஒருசேரப் பெற்றுத் தரும்.&lt;/p&gt;&lt;p&gt;3. உப்பு இல்லாத உணவு: அன்று ஒருவேளை மட்டும் உப்பு சேர்க்காத உணவை (உதாரணத்திற்கு பால் சாதம் அல்லது பழங்கள்) உட்கொள்வது சந்திர தோஷங்களை நீக்கி, மனத்தெளிவைத் தரும்.&lt;/p&gt;&lt;p&gt;கண்டிப்பாகச் செய்ய வேண்டியவை :&lt;/p&gt;&lt;p&gt;&lt;img&gt;&lt;/p&gt;&lt;p&gt;1. தர்ப்பணம்: முன்னோர்களுக்கு (பித்ருக்களுக்கு) திதி கொடுக்கத் தவறியவர்கள், சித்ரா பௌர்ணமி அன்று நீர் நிலைகளில் எள்ளும் தண்ணீரும் இறைத்து வழிபட்டால் பித்ரு சாபம் நீங்கும்.&lt;/p&gt;&lt;p&gt;2. கல்வி தானம்: சித்திரகுப்தர் எழுத்தாணி ஏந்தியவர் என்பதால், ஏழை மாணவர்களுக்குப் பேனா, பென்சில் அல்லது புத்தகங்களை வாங்கித் தருவது உங்கள் குழந்தைகளின் கல்வி அறிவை மேம்படுத்தும்.&lt;/p&gt;&lt;p&gt;3. சித்ரான்னம் படைத்தல்: எலுமிச்சை சாதம், புளியோதரை, தயிர் சாதம் போன்ற 'சித்ரான்னங்களை' இறைவனுக்குப் படைத்து ஏழைகளுக்கு விநியோகிப்பது குலதெய்வ ஆசியைப் பெற்றுத் தரும்.&lt;/p&gt;&lt;p&gt;கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டியவை :&lt;/p&gt;&lt;p&gt;சித்ரா பௌர்ணமி அன்று சில செயல்களைச் செய்வது நம் புண்ணியத்தைக் குறைக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;- கடன் கொடுத்தல்/வாங்குதல்: அன்று பணப் பரிமாற்றங்களைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாகக் கடன் கொடுத்தால் அது திரும்புவதில் சிக்கல் ஏற்படும். - வெள்ளை நிறப் பொருட்களைத் தவிர்த்தல்: மற்ற பௌர்ணமி நாட்களில் வெள்ளை ஆடை உடுத்தலாம். ஆனால் சித்ரா பௌர்ணமி அன்று கணக்கு வழக்குகளைச் சரிபார்க்கும் சித்ரகுப்தருக்குரிய நாள் என்பதால், கருப்பு மற்றும் அடர் நீல நிறங்களைத் தவிர்த்து மஞ்சள் ஆடை அணிவது சிறப்பு. - வாக்குவாதம் தவிர்த்தல்: அன்று உங்கள் தந்தை அல்லது ஆசிரியர்களிடம் விவாதம் செய்யாதீர்கள். இது சித்திரகுப்தரின் பதிவேட்டில் 'எதிர்மறை' புள்ளிகளாகச் சேரும்.&lt;/p&gt;&lt;p&gt;பலரும் அறியாத தகவல்கள் :&lt;/p&gt;&lt;p&gt;சித்ரா பௌர்ணமி அன்று இரவு நிலவின் ஒளியில் தியானம் செய்வது, உடலில் உள்ள 'பீனியல்' சுரப்பியைத் தூண்டி ஞானத்தைத் தரும். மேலும், அன்று நிலவு வெளிச்சத்தில் சமைத்த உணவை உண்பது நரம்பு மண்டலத்தைச் சீராக்கும். ஆன்மீக ரீதியாக மட்டுமின்றி, அறிவியல் ரீதியாகவும் மிகவும் சிறப்பு வாய்ந்த, முக்கியத்துவம் மிக்க நாளாக சித்ரா பெளர்ணமி கருதப்படுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>spiritual</category>
            <dc:creator>Priya Velan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/spiritual/chitra-pournami-2026-spiritual-remedies-for-get-relief-from-all-problems-and-sins-articleshow-bdx7ubw"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Mohini Ekadashi 2026 மோகினி ஏகாதசி 2026: துன்பங்களை போக்கி மங்களம் தரும் மகா விரதம்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/spiritual/mohini-ekadashi-2026-vrat-katha-significance-fasting-method-and-benefits-articleshow-bgad15a</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/spiritual/mohini-ekadashi-2026-vrat-katha-significance-fasting-method-and-benefits-articleshow-bgad15a</guid>
            <pubDate>Mon, 27 Apr 2026 13:30:27 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;வளர்பிறை, தேய்பிறை என மாதத்தில் இரண்டு முறை ஏகாதசி விரதம் வருவது உண்டு. இவற்றில் சித்திரை மாதம் வளர்பிறையில் வரக் கூடிய ஏகாதசிக்கு மோகினி ஏகாதசி என்று பெயர். அனைத்து ஏகாதசி விரதங்களும் பாவங்களை போக்கக் கூடியது என்றாலும் மோகினி ஏகாதசி, பாவங்களை போக்குவதுடன், நாம் இழந்த விஷயங்களையும் நமக்கு மீட்டுத் தரும் அற்புதமான விரதமாகும்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kq6vryvrhsfq8ctz2d684q4p,imgname-mohini-ekadashi--1-1777273174904.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;விரதங்களில் உயர்வான புண்ணிய பலனை தரும் விரதமாக கருதப்படுவது ஏகாதசி விரதம் ஆகும். பெருமாளின் அருளை பெறவும், பாவங்களில் இருந்து விடுபடவும் ஏகாதசி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. அதிலும் சித்திரை மாத வளர்பிறையில் வரும் மோகினி ஏகாதசி மிகவும் தனித்துவமானது. &quot;மோகினி&quot; என்பது மகாவிஷ்ணுவின் அற்புதமான அவதாரங்களில் ஒன்று. இந்த ஆண்டு ஏப்ரல் 27ம் தேதி திங்கட்கிழமையில் மோகினி ஏகாதசி விரதம் கடைபிடிக்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;ஏகாதசி விரதம் :&lt;/p&gt;&lt;p&gt;ஏகாதசி விரதம், அமாவாசை மற்றும் பவுர்ணமியை அடுத்து வரும் 11-வது திதியில் மகாவிஷ்ணுவை நோக்கி கடைபிடிக்கப்படும் மிகவும் புனிதமான விரதமாகும். இது பாவங்களைப் போக்கி, மன அமைதியை அளித்து, உடலை நச்சுத்தன்மையாக்கி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வைகுண்ட ஏகாதசி, நிரஜலா ஏகாதசி போன்றவை மிகவும் சிறப்பு வாய்ந்தவை. ஒரு வருடத்தில் வரும் 24 ஏகாதசிகளிலும் விரதம் இருந்து வழிபட முடியாதவர்கள், குறிப்பிட்ட இந்த 2 ஏகாதசிகளில் மட்டுமாவது விரதம் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;மோகினி ஏகாதசி தோன்றிய வரலாறு:&lt;/p&gt;&lt;p&gt;பாற்கடலைக் கடைந்த போது வெளிவந்த பொருட்களை அசுரர்களும், தேவர்களும் மாறி மாறி பங்கிட்டு கொண்டார்கள். அசுரர்களின் முறை வரும் போது அமிர்தம் வெளிப்பட்டது. தேவர்களிடம் இருந்து அமிர்தத்தை அசுரர்கள் அபகரித்துச் சென்றனர். மரணம் இல்லாத வாழ்வை தரும் அமிர்தம் அசுரர்களுக்கு கிடைத்தால் பெரும் தீமை ஏற்படும் என்பதால் உலகைக் காக்கும் பரந்தாமன், அசுரர்களை மயக்கி அமிர்தத்தைத் தேவர்களுக்குப் பகிர்ந்தளிக்க எடுத்த அவதாரமே மோகினி அவதாரம். இந்த அவதாரம் தோன்றிய தினமே மோகினி ஏகாதசியாகக் கொண்டாடப்படுகிறது. மேலும், வசிஷ்ட முனிவர் தர்மபுத்திரருக்கு உபதேசித்த கதையின்படி, திருஷ்டபுத்தி என்ற கொடிய பாவங்களை செய்தவன் தனது பாவங்களிலிருந்து விடுபட்டு மோட்சம் அடைய இந்த விரதமே கைகொடுத்தது என்பது வரலாறு.&lt;/p&gt;&lt;p&gt;இந்த விரதத்தை ஏன் கடைபிடிக்க வேண்டும்?&lt;/p&gt;&lt;p&gt;&lt;img&gt;&lt;/p&gt;&lt;p&gt;இன்றைய பரபரப்பான உலகில் நாம் தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் சிறு பிழைகள் நம் மன நிம்மதியைக் குலைக்கின்றன. இவற்றில் இருந்து விடுபட சிறந்த, அதே சமயம் எளிமையான வழியாக இருப்பது மோகினி ஏகாதசி விரதம் ஆகும். வாழ்வில் கர்மவினைகளால் நமக்கு கிடைக்காமல் போன நல்ல விஷயங்களை, நமக்கு உரியவற்றை நமக்கு கிடைக்க செய்யும் அற்புதமான விரதமாக மோகினி விரதம் கருதப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;மோகினி ஏகாதசி விரதத்தின் சிறப்பம்சங்கள் :&lt;/p&gt;&lt;p&gt;பாவ விமோசனம்- பல பிறவிகளாகத் தொடரும் பாவ வினைகளை நீக்கும் சக்தி கொண்டது.&lt;/p&gt;&lt;p&gt;மன அமைதி- மோகினி என்ற சொல்லுக்கு 'மயக்குதல்' என்று பொருள். உலகியல் மாயைகளில் சிக்கியிருக்கும் நம் மனதை பரம்பொருளின் பக்கம் திருப்பி, அமைதியை வழங்குகிறது.&lt;/p&gt;&lt;p&gt;கோ தானம் - புராணங்களின்படி, இந்த ஒரு நாள் விரதம் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த புண்ணியத்தை ஒருவருக்குத் தரும்.&lt;/p&gt;&lt;p&gt;விரதம் கடைபிடிக்கும் முறை :&lt;/p&gt;&lt;p&gt;மோகினி ஏகாதசி விரதத்தை முழுமையாகவும், பக்தியுடனும் கடைபிடிக்க சில எளிய வழிமுறைகள்: - ஏகாதசிக்கு முந்தைய நாள் (தசமி) இரவே எளிமையான உணவை உட்கொண்டு விரதத்தைத் தொடங்க வேண்டும். - ஏகாதசி அன்று அதிகாலையில் நீராடி, மகாவிஷ்ணுவின் திருவுருவப் படத்திற்கு துளசி மற்றும் மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். 'ஓம் நமோ நாராயணாய' எனும் மந்திரத்தை உச்சரிப்பது நலம். - அன்று முழுவதும் நீர் மட்டும் அருந்தியோ அல்லது பழங்கள் மட்டும் உட்கொண்டோ விரதம் இருக்கலாம். தானியங்கள் மற்றும் வெங்காயம், பூண்டு தவிர்க்கப்பட வேண்டும். - அன்று இரவு முழுவதும் கண் விழித்து விஷ்ணு சகஸ்ரநாமம் அல்லது பகவத் கீதை வாசிப்பது கூடுதல் பலன் தரும். - மறுநாள் (துவாதசி) காலையில் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் அளித்துவிட்டு, முறைப்படி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;மோகினி ஏகாதசி விரத பலன்கள் :&lt;/p&gt;&lt;p&gt;மோகினி ஏகாதசி அன்று விரதம் இருப்பவர்களுக்கு எம பயம் இருக்காது என்றும், அவர்களின் முன்னோர்கள் நற்கதி அடைவார்கள் என்றும் நம்பப்படுகிறது. சீதா தேவியைப் பிரிந்து வாடிய ஸ்ரீராமபிரான் கூட, தன் துயரம் நீங்க வசிஷ்டரின் அறிவுரைப்படி இந்த விரதத்தை அனுஷ்டித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்க்கையில் இழந்த செல்வம், நிம்மதி மற்றும் கௌரவத்தை மீண்டும் பெற மோகினி ஏகாதசி ஒரு சிறந்த வாய்ப்பு. நம்பிக்கையுடன் இந்த விரதத்தை மேற்கொண்டு, விஷ்ணுவின் அருளால் வாழ்வில் எல்லா வளங்களையும் பெற முடியும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>spiritual</category>
            <dc:creator>Priya Velan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/spiritual/mohini-ekadashi-2026-vrat-katha-significance-fasting-method-and-benefits-articleshow-bgad15a"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Meenakshi thirukalyanam 2026 அழகர் வரல...அப்போ மீனாட்சி திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தது யார்?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/spiritual/meenakshi-thirukalyanam-2026-unknown-things-about-pavalakanivai-perumal-in-this-divine-marriage-articleshow-d9xn0o2</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/spiritual/meenakshi-thirukalyanam-2026-unknown-things-about-pavalakanivai-perumal-in-this-divine-marriage-articleshow-d9xn0o2</guid>
            <pubDate>Tue, 28 Apr 2026 12:50:23 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று மீனாட்சி அம்மன் திருக்கல்யாண வைபவம். மீனாட்சி திருக்கல்யாணத்தை மதுரை மக்கள் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். கல்யாண விருந்து, மீனாட்சிக்கு மாங்கல்ய தாரணம் நடைபெறும் போது பெண்கள் தாலிக்கயிறு மாற்றிக் கொள்வது போன்றவை அனைவரும் அறிந்த விஷயங்கள் தான்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kq9e0xcx3yn1h46b4ncs3wrq,imgname-thirukkalyanam-1777359418781.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;வழக்கமாக இந்துக்களின் திருமண சடங்குகளில் கன்னிகா தானம் என்று ஒரு சடங்கு நடத்தப்படுவது வழக்கம். அதாவது, மணப்பெண்ணை பெற்ற தந்தை, தன்னுடைய குலத்தின் சொத்தான தனது மகளை, மாப்பிள்ளையிடம் ஒப்படைப்பது. மாப்பிள்ளையின் கைக்கு மேல் மணப்பெண்ணின் கைகளை வைத்து, அவர்களின் கைகளில் தண்ணீர் ஊற்றி, தானமாக கொடுப்பார்கள். தானங்களில் மிக உயர்ந்த தானமாக சொல்லப்படும் விஷயங்களில் கன்னிகா தானமும் ஒன்று என இந்து மத சாஸ்திரங்கள் சொல்கின்றன.&lt;/p&gt;&lt;p&gt;மீனாட்சி திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தது யார்?&lt;/p&gt;&lt;p&gt;இந்து மத சாஸ்திரங்களின் படி, பெண் பெற்ற தந்தை இல்லை என்றால் அவருடைய இடத்தில் இருந்து, அந்த பெண்ணுடன் பிறந்த அண்ணன், திருமணத்தின் போது கன்னிகா தானம் அல்லது தாரை வார்த்து கொடுப்பார். உலகிற்கே தாய்-தந்தையாக விளங்கும் பார்வதி தேவிக்கும் சிவபெருமானுக்கு நடைபெறும் திருமணத்தில் யார் கன்னிகா தானம் செய்து வைப்பது என்ற கேள்வி வரும். தெய்வங்களாகவே இருந்தாலும் அவர்களும் சாஸ்திர விதிகளுக்கு கட்டுப்பட்டவர்கள் என்ற உன்னதமான தத்துவத்தை மனிதகுலத்திற்கு எடுத்துக் காட்டும் பல விஷயங்கள் மதுரை மீனாட்சி அம்மன் திருமண வைபவத்தில் காண முடியும்.&lt;/p&gt;&lt;p&gt;தன்னையே வழிபடும் சிவன் :&lt;/p&gt;&lt;p&gt;அன்னை மீனாட்சிக்கு அண்ணனாக இருந்து பெருமாள், சுந்தரேஸ்வரரான சிவபெருமானுக்கு தாரை வார்த்துக் கொடுப்பார். மனிதர்களின் திருமணத்தில் என்னென்ன சடங்குகள் நடத்தப்படுமோ, அவை அனைத்தும் மீனாட்சி அம்மனின் திருக்கல்யாணத்திலும் நடைபெறும். அதே போல், ஒரு நாட்டின் அரசனாக முடி சூடிக் கொள்வதற்கு முன், அந்த அரசன் தனது மனைவியுடன் இணைந்து, தம்பதி சமேதராக சிவ பூஜை செய்ய வேண்டும் என்பது நியதி. அந்த நியதிக்கு கட்டுப்பட்டு மீனாட்சி திருக்கல்யாணம் முடிந்த கையோடு, அன்னை மீனாட்சியும்- சுந்தரேஸ்வரரும் மதுரையில் உள்ள இம்மையில் நன்மை தருவார் தலத்திற்கு எழுந்தருள்வார்கள். இங்கு தான் சிவபெருமான், தனது கைகளால் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, தன்னை தானே பூஜை வழிபடுவார். அதற்கு பிறகே மதுரையின் அரசனாக சுந்தரேஸ்வரர் முடிசூட்டிக் கொள்வார். மதுரையில் முதல் 4 மாதங்கள் மீனாட்சி ஆட்சியும், அடுத்த 8 மாதங்கள் சொக்கநாதர் ஆட்சியும் நடைபெறும் என்பது ஐதீகம்.&lt;/p&gt;&lt;p&gt;தங்கை திருமணத்திற்கு வராத பெருமாள்:&lt;/p&gt;&lt;p&gt;&lt;img&gt;&lt;/p&gt;&lt;p&gt;புராண கதைகளின் படி, தங்கை மீனாட்சியின் திருமணத்தை நடத்தி வைப்பதற்காக பெருமாள் பூமிக்கு வருவார். அப்போது கள்ளர்கள் அழித்த உபசாரத்தை ஏற்ற மயக்கத்தில் அழகர்மலையிலேயே அவர் தங்கி விடுவார். திருமண முகூர்த்தத்திற்கு நேரமாகி விட்டதே என்ற நினைவு வந்து, மதுரையை நோக்கி பெருமாள் வருவதற்குள் மீனாட்சி திருமணம் முடிந்து விடும். இதனால் கோபம் கொண்ட கள்ளழகர், வைகை ஆற்றில் இறங்கி, மதுரை நகருக்குள் வராமலேயே திரும்பி சென்று விடுவார். மீனாட்சி கல்யாணத்திற்கு அழகர் வரவில்லை என்றால், அப்படியானால் திருமண பந்தலில் சிவபெருமானுக்கு, மீனாட்சியை தாரை வார்த்து கொடுப்பது யார்? என்ற கேள்வி தோன்றும்.&lt;/p&gt;&lt;p&gt;பலரும் அறியாத சிவனின் திருவிளையாடல் :&lt;/p&gt;&lt;p&gt;முகூர்த்தத்திற்கு நேரம் நெருங்குகிறது. ஆனாலும் அண்ணன் அழகர் வரவில்லை. அன்னை மீனாட்சி பதற்றத்துடன் இருப்பதை உணர்ந்த சிவ பெருமானின், தனது சக்தியின் மூலம் அழகிய பெருமாளை உருவாக்கினார். இவர் தான் மீனாட்சி - சொக்கநாதர் திருமணத்தின் போது தங்கை மீனாட்சியை தாரை வார்த்து கொடுத்து, திருமணத்தை நடத்தி வைப்பார். தான் வருவதற்கு தங்கையின் திருமணம் முடிந்து விட்டதால் பாதி வழியிலேயே கோபத்துடன் திரும்பிய பெருமாள், சுந்தரராஜ பெருமாளாக அழகர்மலையில் வீற்றிருக்கிறார். சிவனின் அம்சமாக தோன்றிய பெருமாளுக்கு, பவளக்கனிவாய் பெருமாள் என்று பெயர். இந்த பெருமாளை திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சாமி கோவிலில் சிவனின் சன்னதிக்கு அருகில் தரிசனம் செய்ய முடியும்.&lt;/p&gt;&lt;p&gt;நேருக்கு நேர் காட்சி தரும் சிவனும் பெருமாளும் :&lt;/p&gt;&lt;p&gt;திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் முருகப் பெருமானுடன் சேர்த்து 5 மூல மூர்த்திகளை தரிசிக்க முடியும். இவர்களில் பவளக்கனிவாய் பெருமாளும் ஒருவர். வழக்கமாக சிவன் சன்னதிக்கு முன் நந்தி தான் காட்சி தருவார். ஆனால் இங்கு சிவன் சன்னதிக்கு எதிராக பெருமாளின் சன்னதி இருக்கும். சிவனின் சக்தியில் இருந்து தோன்றிய பெருமாள் என்பதாலும், சிவனும்-பெருமாளும் ஒன்றே என்பதை காட்டுவதற்காகவும் இருவரும் நேர் எதிராக காட்சி தருவார்கள். ஒவ்வொரு வருடமும் மதுரை சித்திரை திருவிழாவின் போது மீனாட்சி திருக்கல்யாணத்தன்று திருப்பரங்குன்றத்தில் இருந்து தெய்வானையுடன் முருகப் பெருமானும், பவளக்கனிவாய் பெருமாளும் மதுரைக்கு எழுந்தருளி, திருக்கல்யாண வைபவத்தை முன்னின்று நடத்தி வைக்கும் வழக்கும் இன்றும் கடைபிடிக்கப்படுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>spiritual</category>
            <dc:creator>Priya Velan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/spiritual/meenakshi-thirukalyanam-2026-unknown-things-about-pavalakanivai-perumal-in-this-divine-marriage-articleshow-d9xn0o2"/>
        </item>
        <item>
            <title><![CDATA[chitra pournami girivalam சித்ரா பெளர்ணமி அன்று திருவண்ணாமலை கிரிவலம் செல்வதன் ஆன்மீக, அறிவியல் ரகசியங்கள்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/spiritual/chitra-pournami-2026-tiruvannamalai-girivalam-spiritual-and-scientific-significances-articleshow-e4gtcnw</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/spiritual/chitra-pournami-2026-tiruvannamalai-girivalam-spiritual-and-scientific-significances-articleshow-e4gtcnw</guid>
            <pubDate>Tue, 28 Apr 2026 16:43:10 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;திருவண்ணாமலை, நினைத்தாலே முக்தியை தரும் புண்ணிய தலம், பஞ்சபூத தலங்களில் அக்னி தலம், எத்தனையோ பழமையான சிவன் கோவில்கள் இருந்தாலும், திருவண்ணாமலையில் மலையை வலம் வரும் கிரிவல வழிபாடு முக்தியை தரும் என்பது நம்பிக்கை. சித்தர்களின் பூமியாகவும், ஆன்மீக பூமியாகவும் கருதப்படும் இங்கு சித்ரா பெளர்ணமி அன்று கிரிவலம் வருவதன் பலன்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kb3yjww59yavktt4kzyc1eh4,imgname-tv-imresizer-1764290556805.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;திருவண்ணாமலை என்றதுமே நம் நினைவுக்கு வருவது கோவிலின் பின்புறம் உள்ள உயரமான மலை, அதை சுற்றி வந்து வழிபடும் பக்தர்கள் தான். திருவண்ணாமலையில் மாதந்தோறும் பௌர்ணமி கிரிவலம் சென்றாலும், சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பௌர்ணமி அன்று மேற்கொள்ளப்படும் கிரிவலத்திற்கு ஒரு தனித்துவமான ஈர்ப்பு உண்டு. திருவண்ணாமலையில் வருடத்தின் 365 நாட்களும் எந்த நாளிலும், எந்த நேரத்திலும் கிரிவலம் சென்றாலும் அண்ணாமலையாரின் அருளும், அதற்கான பலனும் கிடைக்கும் என்றாலும் பெளர்ணமி அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். பெளர்ணமி கிரிவலம் பாவங்களை தீர்த்து, புண்ணியங்களை தரும் என சொல்லப்படுகிறது பலரும் அறிந்த ஆன்மீகப் பலன்களுக்கு அப்பால், மறைக்கப்பட்ட ரகசியங்கள் மற்றும் அறிவியல் உண்மைகளை உள்ளடக்கிய பல விஷயங்கள் இதில் மறைந்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;சித்ரா பெளர்ணமி கிரிவலம் ஆன்மீக ரகசியம் :&lt;/p&gt;&lt;p&gt;சித்ரா பௌர்ணமி அன்று சந்திரன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் வேளையில், அண்ணாமலையின் அதிர்வுகள் உச்சகட்டத்தை எட்டுகின்றன. பலரும் அறியாத ஒரு செய்தி என்னவென்றால், இந்த நாளில் கிரிவலம் வரும் போது நாம் வெறும் மலையைச் சுற்றி வரவில்லை; மாறாக 'சித்தர் மண்டலம்' எனப்படும் சூட்சுமப் பாதைக்குள் நுழைகிறோம்.&lt;/p&gt;&lt;p&gt;1. சித்ரகுப்தனின் கணக்கு மாறுதல்: சித்ரா பௌர்ணமி என்பது நம்முடைய பாவ-புண்ணிய கணக்குகளை எழுதும் சித்ரகுப்தனுக்குரிய நாள். அன்று கிரிவலம் வந்து அண்ணாமலையாரைத் தரிசித்தால், ஒருவருடைய கடுமையான கர்ம வினைகளில் கூட மாற்றங்கள் நிகழும் என்பது சித்தர்கள் வாக்கு.&lt;/p&gt;&lt;p&gt;2. நிழல் இல்லாத தரிசனம்: அன்று மலையைச் சுற்றும் போது மனதால் இறைவனை மட்டுமே நினைப்பவர்களுக்கு, அகங்காரம் எனும் 'நிழல்' மறையத் தொடங்கும். இது வெறும் குறியீடு மட்டுமல்ல, ஆன்மாவின் தூய்மையை உணர்த்தும் ஒரு நுட்பமான ஆன்மீக நிலை.&lt;/p&gt;&lt;p&gt;3. மறைக்கப்பட்ட அறிவியல் ரகசியங்கள் : அண்ணாமலை என்பது வெறும் கல் மற்றும் மண் சார்ந்த மலை அல்ல; இது ஒரு அணைந்த எரிமலை. இங்கு சிவபெருமானே ஜோதி வடிவமாக, மலையின் ரூபமாக வீற்றிருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள். சித்ரா பௌர்ணமி கோடைக் காலத்தின் தொடக்கத்தில் வருவதால், சூரியனின் வெப்பம் மலையில் உள்ள பாறைகளில் ஊடுருவி இருக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;4. அரிய வாயுக்களின் வெளிப்பாடு: பௌர்ணமி நிலவின் ஈர்ப்பு விசை காரணமாக, மலையின் இடுக்குகளில் உள்ள அரிய வகை மூலிகைகளிலிருந்து பிராண வாயுவும், லேசான அளவில் 'ரேடான்' (Radon) போன்ற வாயுக்களும் கசிகின்றன. இவை மனித உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டி, நுரையீரல் தொடர்பான குறைபாடுகளைச் சீர்செய்யும் 'இயற்கை ஏரோசல்' போலச் செயல்படுகின்றன.&lt;/p&gt;&lt;p&gt;5. மூளை அலைகளின் மாற்றம் : திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பல இடங்களில் காந்தப் புலங்கள் மாறுபடுகின்றன. சித்ரா பௌர்ணமி நிலவின் ஒளியில் இந்த காந்தப்புலங்கள் நம் மூளையில் உள்ள 'பீனியல் சுரப்பியை' ஊக்கப்படுத்துகின்றன. இதனால் மன அழுத்தம் குறைந்து, ஆழ்ந்த அமைதி கிடைக்கிறது. இது பலருக்குத் தெரியாத ஒரு நரம்பியல் உண்மை.&lt;/p&gt;&lt;p&gt;ஏன் இந்த நாளில் கிரிவலம் வர வேண்டும்?&lt;/p&gt;&lt;p&gt;&lt;img&gt;&lt;/p&gt;&lt;p&gt;மூலிகை குளியல்: கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்கங்களுக்கு அருகே வீசும் காற்று, அந்தந்த திசையில் வளரும் குறிப்பிட்ட மூலிகைகளின் வாசனையைச் சுமந்து வரும். சித்ரா பௌர்ணமி இரவில் வீசும் இந்தக் காற்று நம் தோலில் உள்ள துவாரங்கள் வழியாக உட்சென்று இரத்தத்தைச் சுத்திகரிக்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;கால சுழற்சி சீரமைப்பு: பெண்களின் ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் மனச்சோர்வு நீங்க சித்ரா பௌர்ணமி கிரிவலம் ஒரு சிறந்த மருந்தாகக் கருதப்படுகிறது. நிலவின் முழுமையான ஒளி உடலின் 'சர்க்காடியன் ரிதம்' எனும் உயிரியல் கடிகாரத்தைச் சீரமைக்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;அண்ணாமலையில் கிரிவலம் வருவது என்பது ஒரு உடற்பயிற்சியோ அல்லது சடங்கோ அல்ல; அது ஒரு 'உயிர்ப்பியல் மாற்றம்'. சித்ரா பௌர்ணமி அன்று அண்ணாமலையார் மலையாகவே அமர்ந்து நமக்கு அருள்பாலிக்கிறார். அன்று நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் நம்முடைய பழைய எதிர்மறை எண்ணங்களை அழித்து, புதிய ஆற்றலை நமக்குள் விதைக்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>spiritual</category>
            <dc:creator>Priya Velan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/spiritual/chitra-pournami-2026-tiruvannamalai-girivalam-spiritual-and-scientific-significances-articleshow-e4gtcnw"/>
        </item>
        <item>
            <title><![CDATA[chitra pournami 2026 சித்ரா பௌர்ணமி 2026: கர்ம வினைகளைத் தீர வீட்டில் செய்ய வேண்டிய வழிபாடுகள்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/spiritual/chitra-pournami-2026-performing-puja-at-home-and-things-to-follow-on-this-sacred-day-articleshow-ecr1tpw</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/spiritual/chitra-pournami-2026-performing-puja-at-home-and-things-to-follow-on-this-sacred-day-articleshow-ecr1tpw</guid>
            <pubDate>Wed, 29 Apr 2026 17:30:53 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;இந்துக்களின் மிக முக்கியமான வழிபாட்டு நாட்களில் ஒன்றாக சித்ரா பெளர்ணமி கருதப்படுகிறது. சித்திரை மாதத்தில் வரும் பெளர்ணமியும் சித்திரை நட்சத்திரமும் இணையும் நாளையே சித்ரா பெளர்ணமியாக கொண்டாடுகிறோம். இந்த நாளில் நாம் செய்யும் வழிபாடுகளால் நம்முடைய கர்மவினைகள் குறைந்து, தலையெழுத்தே மாறும் என சொல்லப்படுகிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kqcenzzm51d7bvx05mctg8yh,imgname-chitra-pournami-2026--1--1777460772852.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சித்திரை மாதம் என்றாலே அது புதுப்பொலிவுக்கான மாதம். வானில் நிலவு முழு நிலவாய் ஜொலிக்கும் சித்ரா பௌர்ணமி அன்று, பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனின் 'வாழ்க்கைப் புத்தகமும்' புதுப்பிக்கப்படுவதாக ஆன்மீகம் கூறுகிறது. 2026-ஆம் ஆண்டு மே 1-ஆம் தேதி வரவிருக்கும் இந்த அற்புத நாளில், நம்முடைய கர்ம வினைகளைக் குறைத்து, புண்ணிய கணக்கை எப்படி அதிகரிப்பது? பலரும் அறியாத புதிய தகவல்கள் இதோ...&lt;/p&gt;&lt;p&gt;சித்திரகுப்தன்: ஏன் இவருக்கு இவ்வளவு முக்கியத்துவம்?&lt;/p&gt;&lt;p&gt;யமதர்ம ராஜாவின் உதவியாளர் இவர். நாம் செய்யும் ஒவ்வொரு சிறு செயலையும் துல்லியமாகக் கணக்கெடுப்பவர் சித்திரகுப்தன். &quot;சித்திரம்&quot; என்றால் படம், &quot;குப்தன்&quot; என்றால் மறைந்திருப்பவர். அதாவது, கண்ணுக்குத் தெரியாமல் நம் நிழலைப் போலவே நம் செயல்களைப் பதிவு செய்பவர். சித்ரா பௌர்ணமி, சித்ர குப்தர் அவதரித்த தினமாக கருதப்படுகிறது. மனிதர்களின் பாவ புண்ணியங்களை கணக்கு எடுப்பதற்காக பிரம்மா தனது சக்தியை கொண்டு உருவாக்கியவர் தான் சித்ரகுப்தன். சித்ரா பெளர்ணமி அன்று இவரை வழிபடுவது, நம்முடைய பழைய பாவ மூட்டைகளைக் கரைத்து, நல்வாழ்வைத் தொடங்கச் செய்யும் ஒரு அற்புதமான நாளாகும்.&lt;/p&gt;&lt;p&gt;வீட்டிலேயே செய்ய வேண்டிய அபூர்வ வழிபாட்டு முறைகள் :&lt;/p&gt;&lt;p&gt;&lt;img&gt;&lt;/p&gt;&lt;p&gt;- பொதுவாகக் கோயில்களுக்குச் சென்று வழிபடுவதைக் காட்டிலும், சித்ரா பௌர்ணமி அன்று வீட்டில் வழிபடுவது மிகவும் சிறப்பான முறையாகும். - சித்ரா பெளர்ணமி என்பது சூரியன், சந்திரன் என இரு பெரும் சக்திகளும் தங்களின் முழு ஆற்றலுடன் திகழும் நாளாகும். அன்று மாலை சந்திரன் உதயமானதும், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் தெரியும் நிலவின் பிம்பத்தைப் பார்த்து வணங்குங்கள். பின் அந்தத் தண்ணீரைச் செடிகளுக்கு ஊற்றி விடலாம். இது மனக்குழப்பத்தை நீக்கி தெளிவைத் தரும். - மஞ்சள் மற்றும் பேனா பூஜை: சித்திரகுப்தருக்கு உருவம் கிடையாது என்பதால், ஒரு வெற்றிலையின் மீது மஞ்சளால் ஒரு பிள்ளையார் பிடித்து வைத்து, அதன் அருகில் ஒரு புதிய பேனா மற்றும் ஒரு சிறிய டைரியை வைக்கவும். அன்று முழுவதும் நீங்கள் செய்யும் நல்ல காரியங்களை அதில் எழுதி, இறைவனிடம் சமர்ப்பியுங்கள். - பஞ்சவர்ண கோலம்: வாசலில் ஐவகை நிறங்கள் (இயற்கையான பூக்கள் அல்லது தானியங்கள்) கொண்டு கோலமிடுவது, பஞ்சபூதங்களின் ஆசியைப் பெற்றுத் தரும்.&lt;/p&gt;&lt;p&gt;உப்பில்லா உணவும் எருமைப் பால் தடையின் பின்னணியும் :&lt;/p&gt;&lt;p&gt;சித்ரா பௌர்ணமி விரதத்தின் மிக முக்கியமான அம்சம் 'உப்பில்லா உணவு'. உப்பு சுவையானது, ஆனால் அது உணர்ச்சிகளைத் தூண்டக்கூடியது. அன்று உப்பைத் தவிர்ப்பதன் மூலம் நம் புலன்களைக் கட்டுப்படுத்த முடியும். அதேபோல், சித்ரா பௌர்ணமி அன்று எருமைப் பால், தயிர், நெய் ஆகியவற்றைத் தொடவே கூடாது. புராண ரீதியாக, யமனின் வாகனம் எருமை என்பதால், அவரிடம் கணக்காளராக இருக்கும் சித்திரகுப்தருக்கு மரியாதை செய்யும் விதமாக இது கடைபிடிக்கப்படுகிறது. பசுவின் பால் பொருட்களுக்கு மட்டுமே அன்று முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அது மட்டுமின்றி, சித்ரகுப்தர் காமதேனுவின் மகன் என்றும் சொல்லப்படுவதால் இந்த நாளில் பசுவின் பால் பொருட்களை படைப்பது சிறப்பானதாக சொல்லப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;செய்ய வேண்டிய 'புண்ணிய' தானங்கள் :&lt;/p&gt;&lt;p&gt;2026 கோடைக் காலத்தில் இந்தத் திருநாள் வருவதால், சில குறிப்பிட்ட தானங்கள் உங்கள் தலையெழுத்தையே மாற்றும் வலிமை கொண்டவை: 1. விசிறி தானம்: கை விசிறிகளை ஏழைகளுக்கு வழங்குவது உங்கள் வாழ்வில் வரவிருக்கும் 'சூடான' பிரச்சனைகளைக் குறைக்கும். 2. பானகம் மற்றும் நீர்மோர்: தாகம் தீர்ப்பது மிகப்பெரிய புண்ணியம். முடிந்தால் தெருவோரம் ஒரு பானையில் நீர் வைத்துச் செல்லுங்கள். 3. சுமங்கலி தானம்: திருமணமான பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் மற்றும் ரவிக்கைத் துணி வழங்குவது குடும்ப ஒற்றுமையை பலப்படுத்தும். 4. இந்த நாளில் சித்ரகுப்தருக்கு சித்ரன்னம் எனப்படும் புளியோதரை, எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம் உள்ளிட்ட பலவிதமான கலவை சாதங்களை நைவேத்தியமாக படைத்து, பிறகு அவற்றை மற்றவர்களுக்கு தானமாக வழங்குவது மிகப் பெரிய புண்ணிய பலனை தரும்.&lt;/p&gt;&lt;p&gt;தவிர்க்க வேண்டியவை :&lt;/p&gt;&lt;p&gt;- சித்ரா பௌர்ணமி அன்று யாரிடமும் வாக்குவாதம் செய்யாதீர்கள். உங்கள் கோபம் சித்திரகுப்தனின் 'சிவப்புப் பக்கங்களில்' பதியப்படும். - பெரியவர்களிடம் ஆசி பெறுவதை மறக்காதீர்கள்; அன்று செய்யும் அவமரியாதை உங்கள் புண்ணிய கணக்கை குறைக்க உதவும். - முடிந்த வரை இரவு முழுவதும் தூங்காமல் (விழிப்புடன்) இருந்து சந்திர தரிசனம் செய்வது அல்லது திருவாசகம் வாசிப்பது உன்னதமானது.&lt;/p&gt;&lt;p&gt;இந்த 2026 சித்ரா பௌர்ணமி அன்று, நம்பிக்கையுடன் இந்த எளிய வழிபாடுகளைச் செய்து உங்கள் வாழ்வின் புதிய அத்தியாயத்தைத் தொடங்குங்கள்!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>spiritual</category>
            <dc:creator>Priya Velan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/spiritual/chitra-pournami-2026-performing-puja-at-home-and-things-to-follow-on-this-sacred-day-articleshow-ecr1tpw"/>
        </item>
        <item>
            <title><![CDATA[agni nakchathiram 2026 அக்னி நட்சத்திரம் 2026 எந்த தெய்வத்தை வழிபட்டால் நல்லது நடக்கும்?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/spiritual/agni-nakchathiram-2026-worship-method-things-to-follow-on-this-period-articleshow-ggq0o3x</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/spiritual/agni-nakchathiram-2026-worship-method-things-to-follow-on-this-period-articleshow-ggq0o3x</guid>
            <pubDate>Thu, 30 Apr 2026 13:06:24 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;அக்னி நட்சத்திரம் என்பது வெறும் கோடை வெயில் அதிகரிக்கும் காலம் மட்டும் கிடையாது. ஆன்மீக ரீதியாக இதற்கு பல சிறப்புகள் உண்டு. அக்னி நட்சத்திரத்தின் போது சுப காரியங்களை தவிர்க்க வேண்டும் என பெரியவர்கள் சொல்வது உண்டு. அதே சமயம் அக்னி நட்சத்திர காலத்தில் நாம் செய்யும் வழிபாடுகள் தானங்கள் ஆகியவை நம்முடைய வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kqemkepc2etbvxgmr6kgafwg,imgname-agni-1777534089615.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கோடைக்காலம் என்றாலே நம் நினைவுக்கு வருவது 'அக்னி நட்சத்திரம்' எனப்படும் கத்திரி வெயில் காலம். சூரியனின் வெப்பம் உச்சத்தில் இருக்கும் இந்தக் காலத்தில், உடல் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் நம்மை எப்படித் தயார்படுத்திக் கொள்வது? 2026-ம் ஆண்டு மே 4-ம் தேதி தொடங்கி மே 28-ம் தேதி வரை நீடிக்கும் இந்த அக்னி நட்சத்திர காலத்தைப் பற்றிய ஆன்மீக தகவல்களையும், நல்லது நடக்க செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகள் குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.&lt;/p&gt;&lt;p&gt;அக்னி நட்சத்திரம் புராண கதை :&lt;/p&gt;&lt;p&gt;அக்னி நட்சத்திரம் உருவான வரலாறு சுவாரஸ்யமானது. ஒருமுறை அக்னி பகவான் அளவுக்கு அதிகமான நெய் ஆகுதிகளை உட்கொண்டதால் மந்த நோய்க்கு ஆளானார். அந்த நோயிலிருந்து விடுபட காண்டவ வனத்தை எரிக்க வேண்டிய சூழல் உருவானது. அப்போது அக்னி வெளிப்படுத்திய அதீத வெப்பமே 'அக்னி நட்சத்திரம்' எனப்படுகிறது. மற்றொரு தகவலின்படி, சூரியன் தனது தேரை மிக மெதுவாகச் செலுத்தும் காலம் இது. இதனால் பூமியின் மீது கதிரவனின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆன்மீக ரீதியாக இது ஈசனின் நெற்றிக்கண் வெப்பத்தை நினைவுபடுத்தும் காலமாகவும் பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;வீட்டில் செய்ய வேண்டிய எளிய வழிபாடு :&lt;/p&gt;&lt;p&gt;வெப்பம் அதிகமாக இருக்கும் இந்தக் காலத்தில், இறைவனை குளிர்விக்கும் வழிபாடுகளே மிக முக்கியம்.&lt;/p&gt;&lt;p&gt;ஜலதாரா வழிபாடு: வீட்டில் சிவலிங்கம் அல்லது விக்கிரகங்கள் இருந்தால், அவற்றின் மேல் ஒரு பாத்திரத்தில் இருந்து சொட்டுச் சொட்டாக நீர் விழுமாறு ஏற்பாடு செய்வது (ஜலதாரா) மிகச்சிறப்பு. இது குடும்பத்தில் உள்ள உஷ்ணமான சண்டைகளைத் தணிக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;ஈஸ்வரனுக்கு சந்தனக் காப்பு: சிவபெருமானுக்கோ அல்லது முருகப்பெருமானுக்கோ தூய சந்தனத்தை அரைத்துப் பூசி வழிபடுவது மன அமைதியைத் தரும்.&lt;/p&gt;&lt;p&gt;நிவேதனம்: இந்த நாட்களில் எலுமிச்சை சாதம், தயிர் சாதம், நீர் மோர் மற்றும் பானகம் ஆகியவற்றை இறைவனுக்குப் படைத்து வழிபடலாம். இது வெறும் சடங்கல்ல, நம் உடல் வெப்பத்தைச் சீராக்கும் மருத்துவ முறையாகும்.&lt;/p&gt;&lt;p&gt;கண்டிப்பாகச் செய்ய வேண்டியவை :&lt;/p&gt;&lt;p&gt;&lt;img&gt;&lt;/p&gt;&lt;p&gt;தண்ணீர் பந்தல்: அக்னி நட்சத்திர காலத்தில் தாகத்தோடு வருபவர்களுக்குத் தண்ணீர், மோர் அல்லது இளநீர் வழங்குவது கோடிக்கணக்கான புண்ணியங்களைத் தரும். இது அக்னி பகவானையே குளிர்விப்பதற்குச் சமம்.&lt;/p&gt;&lt;p&gt;பறவைகளுக்கு நீர்: வீட்டின் மொட்டை மாடியிலோ அல்லது பால்கனியிலோ சிறு பாத்திரத்தில் தண்ணீர் வைப்பது மிகப்பெரிய ஜீவகாருண்ய செயலாகும்.&lt;/p&gt;&lt;p&gt;ஆலய தரிசனம்: முடிந்தால் நீர் நிலைகளுக்கு அருகில் இருக்கும் கோவில்களுக்குச் சென்று வழிபடுவது சிறந்தது.&lt;/p&gt;&lt;p&gt;கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டியவை :&lt;/p&gt;&lt;p&gt;அக்னி நட்சத்திர காலத்தில் சில சுப காரியங்களைத் தவிர்ப்பது நமது முன்னோர்களின் வழக்கம். அதற்கு அறிவியல் மற்றும் ஆன்மீகக் காரணங்கள் உண்டு.&lt;/p&gt;&lt;p&gt;சுப காரியங்கள்: பொதுவாகத் திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற பெரிய சுப காரியங்களை இந்தக் காலத்தில் தவிர்க்கச் சொல்வார்கள். அதற்குக் காரணம், கோடை வெப்பத்தால் விருந்தினர்கள் சிரமப்படக்கூடாது என்பதும், அம்மை போன்ற வெப்ப நோய்கள் தாக்க வாய்ப்புள்ளது என்பதுமே ஆகும்.&lt;/p&gt;&lt;p&gt;புதிய செடிகள் நடுதல்: இந்த வெப்பத்தில் செடிகள் வேர் பிடிப்பது கடினம் என்பதால், தோட்டம் அமைப்பதைத் தவிர்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;நீண்ட தூரப் பயணம்: வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் மதிய வேளைகளில் நீண்ட தூரப் பயணத்தைத் தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.&lt;/p&gt;&lt;p&gt;பலரும் அறியாத புதிய தகவல்கள்:&lt;/p&gt;&lt;p&gt;அக்னி நட்சத்திரம் முடியும் நாளை 'அக்னி நட்சத்திர நிவர்த்தி' என்பார்கள். அன்றைய தினம் பழனி போன்ற முருகர் தலங்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடக்கும். அக்னி நட்சத்திர காலத்தில் செய்யப்படும் தானங்கள், மற்ற நாட்களை விடப் பத்து மடங்கு பலன் தரும் என்பது ஐதீகம். குறிப்பாக, செருப்பு மற்றும் குடை தானம் செய்வது உங்கள் ஜாதகத்தில் உள்ள 'சூரிய தோஷத்தை' நீக்கும். இந்த அக்னி நட்சத்திர காலத்தை வெறும் வெயில் காலமாகப் பார்க்காமல், நம் உடலையும் ஆன்மாவையும் தூய்மைப்படுத்தும் தவக்காலமாகக் கருதி இறைவனை வழிபடுவது சிறப்பு.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>spiritual</category>
            <dc:creator>Priya Velan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/spiritual/agni-nakchathiram-2026-worship-method-things-to-follow-on-this-period-articleshow-ggq0o3x"/>
        </item>
        <item>
            <title><![CDATA[South Facing Home : தெற்கு பார்த்த வீடு துரதிர்ஷ்டமா? இந்த 4 பரிகாரங்களை செய்தால் நிம்மதியும், அதிர்ஷ்டமும் பெருகும்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/spiritual/south-facing-house-vastu-tips-how-to-remove-negative-effects-and-attract-good-luck-explained-gxdtevs</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/spiritual/south-facing-house-vastu-tips-how-to-remove-negative-effects-and-attract-good-luck-explained-gxdtevs</guid>
            <pubDate>Mon, 27 Apr 2026 16:48:57 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Therku Partha Veedu Vastu in Tamil : வாஸ்து சாஸ்திரங்களின்படி தெற்கு திசை நோக்கிய வீடு துஷ்டத்தை தரும் என்று கூறப்படுகிறது. ஆனால் சில பரிகாரங்களையும், வாஸ்து குறிப்புகளையும் பின்பற்றினால் தெற்கு நோக்கிய வீடும் அதிர்ஷ்டத்தைத் தரும்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k1wgtexzgvvfc1cnt2xn262z,imgname-nilai-vasal-pooja-1754377567167.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Therku Partha Veedu Vastu in Tamil : வாஸ்து சாஸ்திரங்களின்படி தெற்கு திசை நோக்கிய வீடு துஷ்டத்தை தரும் என்று கூறப்படுகிறது. ஆனால் சில பரிகாரங்களையும், வாஸ்து குறிப்புகளையும் பின்பற்றினால் தெற்கு நோக்கிய வீடும் அதிர்ஷ்டத்தைத் தரும்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தெற்கு திசை யமன், சனி பகவான், செவ்வாய் கிரகத்தோடு தொடர்புபடுத்தப்படுகிறது. இந்த திசை கட்டுப்பாடு, சக்தி, நிலைத்தன்மைக்கான அடையாளமாக இருக்கிறது. எனவே, இந்த திசையை வாஸ்துப்படி சரியாக பயன்படுத்த வேண்டியது அவசியம். இதைப்பற்றி அனுபவமிக்க ஜோதிடர்கள் கூறும் விளக்கத்தைப் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தெற்கு பார்த்த வீட்டின் பிரதான வாசல், தெற்கு திசையின் தென்கிழக்கு பகுதியில் (South-East Quadrant) இருப்பது நல்லது. இந்த இடத்தை 'தன பிரவேசம்' அதாவது செல்வம் நுழையும் இடம் என அழைப்பர். பிரதான வாசலை அழகாகவும், சுத்தமாகவும் வெத்துக் கொள்ள வேண்டியது அவசியம். வாசலில் ஸ்வஸ்திக், சுப-லாபம், விநாயகர் படம் வைப்பது நன்மை தரும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சமையலறை, நெருப்புக்கான திசையான தென்கிழக்கில் இருக்க வேண்டும். சமைக்கும்போது கிழக்கு திசையை பார்த்து சமைப்பது நல்லது. படுக்கையறை தென்மேற்கு திசையில் இருக்க வேண்டும். தூங்கும்போது தலை தெற்கு அல்லது மேற்கு திசையை நோக்கி இருக்க வேண்டும். பூஜை அறை வடகிழக்கு திசையில் (ஈசான மூலை) இருப்பது மிகச் சிறந்தது. சுவாமி சிலைகள் மேற்கு அல்லது வடக்கு திசையை பார்த்திருக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தண்ணீர் தொட்டி, நீரூற்று அல்லது எந்தவொரு நீர் ஆதாரமும் வடக்கு அல்லது வடகிழக்கு திசையில்தான் இருக்க வேண்டும். தெற்கு திசையில் தண்ணீர் தொடர்பான பொருட்களை வைத்தால், அது பண இழப்பை ஏற்படுத்தலாம். படிக்கட்டுகள் தெற்கு, தென்மேற்கு அல்லது மேற்கு திசையில் கடிகாரச் சுற்று முறையில் ஏறுவது போல அமைக்க வேண்டும். தெற்கு திசையை சமநிலைப்படுத்த, அங்கே கனமான பொருட்கள், ஸ்டோர் ரூம் அல்லது உறுதியான சுவர்களை அமைக்கலாம். தெற்கு திசையில் துளசி செடி அல்லது திறந்தவெளி தோட்டம் அமைக்க வேண்டாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒருவேளை தெற்கு திசையில் வாஸ்து தோஷம் இருந்தால், பரிகாரமாக பிரதான வாசலில் வெளிப்பக்கம் பார்த்த மாதிரி பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலையை வைக்க வேண்டும். ஒவ்வொரு சனிக்கிழமையும் நல்லெண்ணெயில் தீபம் ஏற்றி, சனி மந்திரங்களை சொல்வது நல்ல பலனைத் தரும். இப்படி சரியான வாஸ்து விதிகளைப் பின்பற்றினால், தெற்கு பார்த்த வீடும் அதிர்ஷ்டத்தையும், வாழ்க்கையில் நிலைத்தன்மையையும் கொடுக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)&lt;/p&gt;]]></content:encoded>
            <category>spiritual</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/spiritual/south-facing-house-vastu-tips-how-to-remove-negative-effects-and-attract-good-luck-explained-gxdtevs"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Meenakshi thirukalyanam 2026 மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் 2026 தாலி சரடு மாற்ற நல்ல நேரமும், வீட்டில் வழிபடும் முறையும்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/spiritual/meenakshi-thirukalyanam-2026-auspicious-time-for-changing-thalaisaradu-and-worship-method-at-home-articleshow-k6bh391</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/spiritual/meenakshi-thirukalyanam-2026-auspicious-time-for-changing-thalaisaradu-and-worship-method-at-home-articleshow-k6bh391</guid>
            <pubDate>Mon, 27 Apr 2026 12:40:09 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;மதுரையில் 2026 சித்திரை திருவிழா சிறப்பாக நடக்கிறது. இதன் முக்கிய நிகழ்வான மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ஏப்ரல் 28-ல் நடைபெறுகிறது. அந்நாளில் சுமங்கலி பெண்கள் புதிய தாலிச்சரடு மாற்றிக்கொள்ள உகந்த நேரத்தையும், வீட்டில் இருந்தபடியே அம்மன் அருளைப் பெற வழிபடும் முறையையும் இங்கு எளிமையாக அறிந்து கொள்ளலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kq6vwmsx4djatzzj4rbgrexa,imgname-meenakshi-sundareshwar-1777273295677.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;மதுரை என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது மீனாட்சி அம்மன் கோவில் தான். வேறு எந்த கோவிலிலும் இல்லாத அளவிற்கு ஏராளமான தனித்துவமான சிறப்புக்களைக் கொண்டது இக்கோவில். இக்கோவிலில் நடைபெறும் மிக முக்கியமான விழாக்களில் ஒன்று, சித்திரை மாதத்தில் நடைபெறும் மதுரை சித்திரை திருவிழா. 12 நாட்கள் நடைபெறும் மதுரை சித்திரை திருவிழாவின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று தான் அன்னை மீனாட்சி - சுந்தரேஸ்வர பெருமான் திருக்கல்யாணம் வைபவம்.&lt;/p&gt;&lt;p&gt;மீனாட்சி திருக்கல்யாணம் :&lt;/p&gt;&lt;p&gt;மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக ஏப்ரல் 26ம் தேதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. மதுரையின் அரசியாக முடி சூட்டப்பட்ட பிறகு அடுத்த 4 மாதங்களுக்கு மதுரையில் மீனாட்சி அம்மையின் ஆட்சி நடைபெறும். அதன் பிறகு சிவபெருமான், மதுரையின் அரசனாக ஆட்சி புரிவதாக ஐதீகம். சிவனும்- சக்தியும் மாறி மாறி மதுரையை ஆட்சி செய்யும் இது போன்ற அற்புதத்தை வேறு எங்கும் காண முடியாது. மீனாட்சி பட்டாபிஷேகத்திற்கு அடுத்த நாள் ஏப்ரல் 27 அன்று மீனாட்சி திக் விஜயமும், ஏப்ரல் 28ம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவமும் நடைபெறும். மீனாட்சி அம்மனின் திருமணத்தை நடத்தி வைக்க அழகர்மலையில் இருந்து கள்ளழகர் வர தாமதமானதால், திருப்பரங்குன்றத்தில் இருந்து சுப்ரமணிய சுவாமியும், பவளகனிவாய் பெருமாளும் மதுரைக்கு வந்து திருமணத்தை நடத்தி வைப்பதாக ஐதீகம்.&lt;/p&gt;&lt;p&gt;ஏன் சித்திரை மாதம் திருக்கல்யாணம்?&lt;/p&gt;&lt;p&gt;&lt;img&gt;&lt;/p&gt;&lt;p&gt;பொதுவாக தெய்வ திருமணங்கள் அனைத்தும் பங்குனி உத்திரத்தில் செய்வது வழக்கம். பங்குனி உத்திரம் அன்று தான் மீனாட்சி - சொக்கநாதர் திருக்கல்யாணம் நடைபெற்றதாக புராணங்கள் சொல்கின்றன. ஆனால், மீனாட்சிக்கு மட்டும் சித்திரை மாதத்தில் தான் திருக்கல்யாணம் நடைபெறும். பாண்டிய மன்னர்களின் ஆட்சி முறைப்படி, சித்திரை மாதம் என்பது 'வசந்த காலத்தின்' தொடக்கம். அதனால் பக்தர்களின் வாழ்க்கையும் சிறக்க அன்னை மீனாட்சிக்கு சித்திரை மாதத்தில் திருக்கல்யாணம் நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. இதற்கு மற்றொரு காரணமும் உண்டு. திருமலை நாயக்கர் மன்னர் காலத்திற்கு முன்பு வரை மீனாட்சி திருக்கல்யாணம் உள்ளிட்ட மீனாட்சி அம்மன் கோவில் விழாக்கள், பங்குனி மாதத்திலும், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது உள்ளிட்ட அழகர்மலை உற்சவங்கள் சித்திரை மாதத்திலும்ய நடைபெற்றதாகவும், திருமலை நாயக்க மன்னர் தான், சைவ-வைணவ ஒற்றுமையை ஏற்படுத்த இந்த விழாக்களை ஒன்றாக இணைத்து நடத்தியதாக சொல்லப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;பச்சை பட்டு உடுத்தும் ரகசியம் :&lt;/p&gt;&lt;p&gt;திருக்கல்யாணத்தின் போது அன்னை மீனாட்சிக்கு அணிவிக்கப்படும் உடைகளில் 'பச்சை' நிறத்திற்கு அதிக முக்கியத்துவம் உண்டு. இது வெறும் அழகிற்காக அல்ல. மதுரை ஒரு காலத்தில் கடம்ப வனமாக இருந்தது. இயற்கையோடு இணைந்த அந்த வனத்தின் அரசியாக அவள் இருப்பதைக் குறிக்கவே பச்சை நிறம். மேலும், அழகர் (விஷ்ணு) பச்சை நிறம் கொண்டவர் என்பதால், அண்ணனுக்கும் தங்கைக்கும் இடையிலான அந்த ரத்த உறவின் பிணைப்பை உறுதிப்படுத்தும் குறியீடாக இது பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;பக்தர்களின் நம்பிக்கை:&lt;/p&gt;&lt;p&gt;மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடைபெறும் போது, மதுரையில் உள்ள சுமங்கலிப் பெண்கள் அனைவரும் தங்கள் மாங்கல்யக் கயிற்றைப் புதிதாக மாற்றிக் கொள்வார்கள். அன்னைக்கு தாலி கட்டப்படும் அதே நேரத்தில், ஊரே தாலி மாற்றிக் கொள்ளும் இந்த நிகழ்வு 'மாங்கல்ய பலம்' தரும் என்பது ஐதீகம். திருக்கல்யாணத்திற்கு வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதப் பைகளில் இப்போதும் கூட மஞ்சள், குங்குமம் மற்றும் ஒரு சிறிய கயிறு இருக்கும். இது அன்னை மீனாட்சி தன் திருமணத்திற்கு வந்த விருந்தினர்களுக்குத் தரும் 'சீதனமாக' கருதப்படுகிறது. மீனாட்சி அன்னையை மதுரை மக்கள் தங்கள் வீட்டு பெண்ணாக நினைப்பதால், மதுரையில் இந்த நாளில் திரும்பிய பக்கம் எல்லாம் திருமணம் விருந்து பக்தர்களுக்கு வழங்கப்படும் வழக்கம் உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;மீனாட்சி திருக்கல்யாணம் 2026 தாலிச்சரடு மாற்ற நல்ல நேரம் :&lt;/p&gt;&lt;p&gt;&lt;img&gt;&lt;/p&gt;&lt;p&gt;மீனாட்சி திருக்கல்யாணம் இந்த ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி செவ்வாய்கிழமை நடக்கிறது. காலை 08.35 மணி முதல் 08.59 மணிக்குள் மீனாட்சி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெறும் இந்த நேரத்தில் சுமங்கலி பெண்கள், தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்க தாலிச்சரடு மாற்றிக் கொள்ளலாம். அப்படி முடியாதவர்கள் காலை 10.35 முதல் 11.30 வரையிலான நேரத்தில் தாலிச்சரடு மாற்றிக் கொள்ளலாம். மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறும் நாள் என்பதால் செவ்வாய்கிழமையில் தாலிச்சரடு மாற்றிக் கொள்ளலாமா என்ற தயக்கம் இல்லாமல் பெண்கள் தாராளமாக தாலிச்சரடு மாற்றிக் கொள்ளலாம்.&lt;/p&gt;&lt;p&gt;வீட்டில் வழிபடும் முறை :&lt;/p&gt;&lt;p&gt;மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தில் நேரில் சென்று கலந்து கொள்ள முடியாதவர்கள் வீட்டில் உள்ள மீனாட்சி அம்மன் படத்திற்கு பூக்கள் சூட்டி, விளக்கேற்றி வைத்து, சர்க்கரை பொங்கல் நிவேதமான படைத்து வழிபடலாம். அன்னை மீனாட்சியின் 108 போற்றி மந்திரங்களை சொல்லி, அர்ச்சனை செய்து வழிபடலாம். மஞ்சள் தயிறு, குங்குமம், மஞ்சள், வெற்றிலை பாக்கு போன்ற மங்கள பொருட்களை சுமங்கலி பெண்களுக்கு தானமாக கொடுக்கலாம். யாராவது இரண்டு பேருக்கு இந்த நாளில் அன்னதானம் படைக்கலாம். இதனால் மீனாட்சி அம்மனின் அருள் நமக்கு கிடைக்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>spiritual</category>
            <dc:creator>Priya Velan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/spiritual/meenakshi-thirukalyanam-2026-auspicious-time-for-changing-thalaisaradu-and-worship-method-at-home-articleshow-k6bh391"/>
        </item>
        <item>
            <title><![CDATA[narasimha Jayanti 2026 இன்று நரசிம்ம ஜெயந்தி 2026: மறந்தும் கூட இந்த 5 விஷயங்களை செய்துடாதீங்க]]></title>
            <link>https://tamil.asianetnews.com/spiritual/narasimha-jayanti-2026-worship-secrets-dos-and-donts-on-this-sacred-day-articleshow-kctsh49</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/spiritual/narasimha-jayanti-2026-worship-secrets-dos-and-donts-on-this-sacred-day-articleshow-kctsh49</guid>
            <pubDate>Thu, 30 Apr 2026 10:15:45 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;நரசிம்ம அவதாரத்தை போற்றும் உன்னத நாள் நரசிம்ம ஜெயந்தி. பயத்தை போக்கி தைரியம், மனவலிமை, ஆரோக்கியத்தை அளிக்கக் கூடியவர் நரசிம்மர். பக்தியுடன் அவரை சரணடைந்தால் அவர்களை காக்க உடனே ஓடி வரக் கூடிய கருணை உள்ளம் கொண்டவர் நரசிம்ம பெருமாள். அவரை வழிபடுவர்களுக்கு தொழில் சிறக்கும், கடன் தீரும், பாதுகாப்பு கிடைக்கும், நன்மைகள் அதிகரிக்கும்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kafz7ktbabve58aagt516hwz,imgname-636c7370-c65c-4b8c-8667-dd6b8c876e16--1--1763620147019.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் மிகவும் சக்தி வாய்ந்ததும், நொடிப்பொழுதில் நிகழ்ந்ததும் நரசிம்ம அவதாரம் மட்டுமே. நரசிம்ம பெருமாள், சித்திரை மாத வளர்பிறை சதுர்த்தசி திதியில் அவதரித்ததாக புராணங்கள் சொல்கின்றன. 2026-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி வியாழக்கிழமையான இன்று நரசிம்ம ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. பக்தன் பிரகலாதனின் நம்பிக்கையைக் காக்க, தூணில் இருந்து நரசிம்மர் வெளிப்பட்ட அந்த அற்புத தினத்தில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய வழிபாட்டு விதிமுறைகளை இங்கு தெரிந்து கொள்ளலாம்.&lt;/p&gt;&lt;p&gt;யாரும் அறியாத நரசிம்ம ரகசியங்கள் :&lt;/p&gt;&lt;p&gt;- நரசிம்ம அவதாரம் என்பது வெறும் சிங்க முகம் கொண்ட கடவுள் மட்டுமல்ல; அது ஒரு தத்துவப் பாடம். மனிதனுக்குள் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்களின் வெளிப்பாடு தான் நரசிம்ம அவதாரம். இவற்றில் தீய குணங்களை அடக்கினால் நமக்குள் இருந்து தெய்வீக தன்மை வெளிப்படும் என்பது தான் நரசிம்மரின் தோற்றமும், அவதாரமும் உணர்த்தும் உண்மைகளாகும். - மின்னல் வேக அவதாரம்: மற்ற அவதாரங்கள் எல்லாம் கருவில் தோன்றி வளர்ந்தவை. ஆனால், நரசிம்மர் மட்டுமே ஒரு நொடியில் தூணிலிருந்து தோன்றியவர். வாழ்வில் தீர்க்க முடியாத சிக்கல்கள் &quot;மின்னல் வேகத்தில்&quot; தீர நரசிம்ம வழிபாடு ஒன்றே வழி. - பானகத்தின் பின்னணி: நரசிம்மருக்கு பானகம் படைத்து வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும். நரசிம்மர் தூணிலிருந்து வெளிப்பட்ட போது மிக உக்கிரமாக இருந்தார். அந்த வெப்பத்தைத் தணித்து, அவரைச் சாந்தப்படுத்தவே வெல்லம், சுக்கு, ஏலக்காய் கலந்த குளிர்ச்சியான பானகம் படைக்கப்படுகிறது. இது நம் உடலில் உள்ள பித்தத்தையும், மனதில் உள்ள கோபத்தையும் கட்டுப்படுத்தும் குறியீடாகும். - வீட்டில் செய்ய வேண்டிய எளிய வழிபாடு : கோவிலுக்குச் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே மிக எளிமையாக நரசிம்மரை வசியம் செய்யலாம். வீட்டில் உள்ள ஏதாவது ஒரு தூண் அல்லது நிலைவாசலுக்கு சந்தனம், குங்குமம் தொட்டு வைத்து, அதற்கு முன் விளக்கேற்றி வைத்து, நம்பிக்கையுடனும், பக்தியுடனும் வழிபட்டால் நரசிம்மரின் அருள் நிச்சயம் கிடைக்கும். - சந்தனக் காப்பு: நரசிம்மரின் கோபத்தைத் தணிக்க அவருக்குப் பிடித்தது குளிர்ச்சி. வீட்டில் சிறிய விக்கிரகம் இருந்தால் சந்தனம் பூசி வழிபடலாம். படம் என்றால், படத்திற்குச் சந்தனப் பொட்டு வைத்து அதன் மேல் ஒரு துளசி இலையை வைக்கலாம். - கடன் தீர்க்கும் நெய் தீபம்: தீராத கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், இன்று மாலை பிரதோஷ காலத்தில் (மாலை 4:30 - 6:00) ஒன்பது நெய் தீபங்களை ஏற்றி &quot;லட்சுமி நரசிம்ம மங்கள ஸ்தோத்திரம்&quot; வாசித்தால் பண வரவு சீராகும். - பிரத்யேக நிவேதனம்: மோர், பானகம் தவிர, இன்று &quot;மிளகு கலந்த தயிர் சாதம்&quot; நரசிம்மருக்கு படைப்பது ராகு-கேது தோஷங்களை நீக்கும் என்பது பலரும் அறியாத ரகசியம்.&lt;/p&gt;&lt;p&gt;கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டிய 5 விஷயங்கள் :&lt;/p&gt;&lt;p&gt;&lt;img&gt;&lt;/p&gt;&lt;p&gt;நரசிம்மர் வழிபாட்டில் மிகவும் முக்கியமான உறுதியான பக்தியும், பூரண சரணாகதியும் மட்டும். அதனால் இந்த நாளில் 5 விஷயங்களை கண்டிப்பாக தவிர்த்து, நரசிம்மரின் அருளை பெற முயற்சி செய்ய வேண்டும். 1. ஈகோ மற்றும் அதிகார தோரணை: இரண்யகசிபு அழிந்ததே தனது &quot;அகங்காரத்தால்&quot; தான். எனவே, இன்று பணியாளர்களிடமோ அல்லது உங்களை விட எளியவர்களிடமோ அதிகாரத்தைக் காட்டாதீர்கள். 2. பெரிய சத்தங்கள்: வீண் விவாதங்கள், கத்துவது அல்லது சண்டையிடுவதைத் தவிர்க்கவும். அமைதியான சூழலில் மந்திரங்களை ஜபிப்பதே நரசிம்மருக்குப் பிடிக்கும். 3. தாமச உணவுகள்: பூண்டு, வெங்காயம், அசைவம் ஆகியவற்றைத் தவிர்த்து சாத்வீக உணவை மட்டுமே உட்கொள்ள வேண்டும். 4. மாலை உறக்கம்: நரசிம்மர் அவதரித்ததே அந்திப் பொழுதில் தான். எனவே, மாலை 5 மணி முதல் 7 மணி வரை உறங்குவதைத் தவிர்க்க வேண்டும். 5. குழந்தைகளைத் துன்புறுத்துதல்: நரசிம்மர் ஒரு குழந்தையின் பக்தியால் தான் (பிரகலாதன்) ஈர்க்கப்பட்டார். இன்று குழந்தைகளை அடிப்பதோ, திட்டுவதோ நரசிம்மரின் கோபத்திற்கு ஆளாக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;இன்று என்ன செய்யலாம் ?&lt;/p&gt;&lt;p&gt;- இன்று நரசிம்மருக்குரிய நரசிம்ம கவசம் படித்து, அவரை வழிபடுவது சிறப்பு. - நரசிம்ம பெருமாளுக்குரிய 108 போற்றி மந்திரங்களை சொல்லி வழிபடலாம். - அருகில் உள்ள நரசிம்மர் கோவில் அல்லது பெருமாள் கோவிலுக்கு சென்று, அங்கு நடக்கும் பூஜைகள், வழிபாடுகளில் கலந்து கொள்ளலாம். - நரசிம்மருக்கு துளசியால் அர்ச்சனை செய்து வழிபடலாம். - வயதானவர்கள், ஏழை குழந்தைகளுக்கு முடிந்த அளவு தானங்களையும், உதவிகளையும் செய்யலாம். - வீட்டில் லட்சுமி நரசிம்மர் பூஜை செய்து வழிபடலாம். இதனால் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் மற்றும் வறுமை நீங்கி, சுபிட்சம் ஏற்படும். - நரசிம்ம புராணம் வாசிப்பது மிகவும் நல்லது.&lt;/p&gt;&lt;p&gt;நரசிம்ம ஜெயந்தி பலன்கள் :&lt;/p&gt;&lt;p&gt;2026ம் ஆண்டில் நரசிம்ம ஜெயந்தி வியாழக்கிழமை வருவது கூடுதல் சிறப்பு. குருவின் ஆதிக்கமும், நரசிம்மரின் சக்தியும் இணைவதால், அன்று செய்யப்படும் வழிபாடு தீராத நோய்களைத் தீர்க்கும், எதிரிகள் தொல்லை நீங்கும், முக்கியமாக செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்குத் திருமணத் தடைகள் விலகும். கடன் தொல்லை, தீராத பொருளாதார நெருக்கடிகள், தீயசக்திகளின் பிடியில் இருந்து விடுபட முடியும். ஆபத்துக்கள், நோய்கள், பயம் விலகும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>spiritual</category>
            <dc:creator>Priya Velan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/spiritual/narasimha-jayanti-2026-worship-secrets-dos-and-donts-on-this-sacred-day-articleshow-kctsh49"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Nagamani : பாம்பின் தலையில் இருந்து விழுந்த கல்.! நாகமணியாக வழிபடும் மக்கள்.! உண்மையில் நாகமணி இருக்கிறதா? உண்மை என்ன?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/spiritual/nagamani-stone-real-or-myth-rumours-about-a-stone-falling-from-a-snake-head-nagamani-truth-and-scientific-explanation-mqdd3as</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/spiritual/nagamani-stone-real-or-myth-rumours-about-a-stone-falling-from-a-snake-head-nagamani-truth-and-scientific-explanation-mqdd3as</guid>
            <pubDate>Tue, 28 Apr 2026 17:30:05 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Nagamani Stone Real or Myth : சமீபத்தில் பீகார் மாநிலத்தில் பாம்பின் தலையில் இருந்து ஒரு கல் விழுந்ததாகவும், அது நாகமணியாக இருக்கக்கூடும் என்று தகவல் பரவி வருகிறது. அதன் உண்மைத்தன்மை குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kq9z4qr56p45d01yhz7wwh9m,imgname-nagamani-stone-real-or-myth--1--1777377369860.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Nagamani Stone Real or Myth : சமீபத்தில் பீகார் மாநிலத்தில் பாம்பின் தலையில் இருந்து ஒரு கல் விழுந்ததாகவும், அது நாகமணியாக இருக்கக்கூடும் என்று தகவல் பரவி வருகிறது. அதன் உண்மைத்தன்மை குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள சாஹேப்கஞ்ச் என்கிற பகுதியில் பள்ளி ஒன்றில் சில தினங்களுக்கு முன்பு பாம்பு ஒன்று புகுந்துள்ளது. அந்த பாம்பை பிடிக்கச் சென்ற பொழுது, அதன் தலையில் இருந்து படிகம் போன்ற ஒரு பொருள் விழுந்ததாக கூறப்படுகிறது. அந்த பொருள் பிளாஸ்டிக் போல தோன்றினாலும், அப்பகுதி மக்கள் அதை நாகமணி என்று நம்புகின்றனர். இதன் காரணமாக அந்த நாகமணியை பார்க்கவும், அதை வழிபடவும் அந்த பகுதியில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதைத்தொடர்ந்து நாகமணி என்று ஒன்று உள்ளதா? இந்து புராணங்கள் இதிகாசங்களில் கூறப்பட்டுள்ளது என்ன? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்து மத மரபுகளில் நாகங்கள் முக்கிய தெய்வமாக வழிபடப்படுகிறது. நாகமணி குறித்த ஏராளமான குறிப்புகள் இந்து புராணங்கள், இதிகாசங்கள் மற்றும் பிற கதைகளில் காரணப்படுகின்றன. மகாபாரதம், கருட புராணம் போன்ற நூல்களில் நாகலோகம் பற்றியும், அங்கு நாகராஜாக்களின் தலைகளில் விலைமதிப்பற்ற ரத்தினங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நாகமணிகள் இரவில் பிரகாசமாக ஒளிரும் என்றும், அவற்றை வைத்திருப்பவர்களுக்கு அளவற்ற செல்வ செழிப்பும், ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும், எதிரிகளை வெல்லும் சக்தியும் கிடைக்கும் என நம்பப்படுகிறது. எனவே இந்த நாகமணிகளை எடுப்பதற்காக சிலர் நாகங்களை கொல்லும் செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்து மதத்தின் கூற்றுகளின் படி நாகங்கள் தாமாக வந்து சிலருக்கு நாகமணிகளை வழங்குமென்றும், சில சமயங்களில் கோபமடைந்த நாகங்கள் நாகமணிகளை தாமாக உமிழ்ந்து விடும் என்று கூறப்படுகிறது. ஆனால் அறிவியல் ரீதியாக பார்த்தால் பாம்புகளின் தலையில் ஜொலிக்கும் கல் போன்ற பொருள் இருப்பதற்காகவோ அல்லது நாகமணி இருப்பதற்காகவோ எந்தவித ஆதாரமும் இல்லை. உயிரியலாளர்கள், விஞ்ஞானிகள் ஊர்வன ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் நாகமணி குறித்த தகவல்களை முழுமையாக மறுக்கின்றனர். பாம்புக்கு தலையில் கல்போன்ற பொருளை சுமக்கும் அம்சமோ அல்லது கல்லை வெளியிடும் அம்சங்களோ இல்லை என விஞ்ஞானிகள் ஆணித்தரமாக கூறுகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மற்ற உயிரினங்களைப் போலவே பாம்புகளின் உடலும் செதில்கள், எலும்புகள், தசைகள் மற்றும் பிற உறுப்புகளைக் கொண்டவை. அவற்றின் தலைப்பகுதியில் ரத்தினங்கள் உருவாகும் வாய்ப்புகள் இல்லை என்று உயிரியலாளர்கள் கூறுகின்றனர். சில சமயங்களில் பாம்புகள் தங்கள் வாழ்விடங்களில் இருந்து பளபளப்பான கற்கள் அல்லது கண்ணாடி துண்டுகளை சுமந்து வந்திருக்கலாம், தவறுதலாக அவை கீழே விழும் பொழுது அதை நாகமணியாக கருதி இருக்கலாம் என்று கூறுகின்றனர். ஒளிரும் பண்புகளைக் கொண்ட சில தாதுக்கள் அல்லது பாறைகள் இரவில் வெளிச்சத்தை பிரதிபலிக்க கூடும். இது போன்ற இடங்களில் பதுங்கி இருக்கும் பாம்புகளில் தாதுக்கள் ஒட்டிக்கொண்டிருக்கும் பொழுது அது நாகமணி என்று தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நாகமணி குறித்து பல கட்டுக்கதைகள் நம் நாட்டில் நிலவுகின்றன. நாகமணி இருப்பதாக கூறி பல மோசடிகளும் நடைபெற்றிருக்கின்றன. ஒளிரும் தன்மையுள்ள, இரசாயனம் பூசப்பட்ட கற்கள் அல்லது செயற்கையான கற்களை நாகமணி என்று கூறி பலர் மக்களை ஏமாற்றி பணம் பறித்துள்ளனர். அறிவியலாளர்களின் கருத்துப்படி நாகமணி என்கிற ஒரு பொருள் உண்மையில் கிடையாது. பீகாரில் நடந்த சம்பவத்தைப் பொறுத்தவரை, அது பல வழிகளில் விளக்கப்படுகிறது. மக்கள் மத்தியில் பாம்புகள் குறித்து ஆழமாக வேரூன்றிய பயம் மற்றும் நாகமணி குறித்த நம்பிக்கை இதுபோன்ற சம்பவங்களை உண்மை என நம்ப வைக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பாம்பு அசைந்த பொழுது அதன் அருகில் இருந்த பளபளப்பான பொருள் தற்செயலாக கீழே விழுந்து இருக்கலாம். அது பாம்பு தலையிலிருந்து விழுவது போல தோன்றி இருக்கலாம் அல்லது மண்ணில் புதைந்த ஒரு சாதாரண கல் அல்லது கனிமம் பாம்பின் அசைவால் வெளிப்பட்டிருக்கலாம். சில சமயங்களில் பரபரப்பு அல்லது வைரலுக்காக இதுபோன்ற கட்டுக்கதைகள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது. இதை வைத்து மோசடி செய்யும் எண்ணமும் சிலருக்கு இருந்திருக்கலாம். ஆனால் அறிவியல் ரீதியாக நாகமணி ஒரு கற்பனையான விஷயம் என்று ஆராய்ச்சியாளர்கள் இதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பீகாரில் நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவம் மக்கள் மத்தியில் நிலவும் ஆழ்ந்த நம்பிக்கையின் வெளிப்பாடாகும். இது தற்செயலான நிகழ்வின் புரிதலாக இருக்கலாம். இது போன்ற அமானுஷ்ய நிகழ்வுகளை பகுத்தறிவு மற்றும் அறிவியல் மனப்பான்மையுடன் அணுக வேண்டியது அவசியம். எந்த ஒரு நம்பத்தகாத விஷயத்தையும் ஆராய்ந்து அதன் உண்மை நிலையை அறிந்து கொள்வது என்பது, தவறான தகவல்களை பரப்புவதை தடுப்பதற்கும், மோசடிகள் நிகழாமல் இருப்பதற்கும் உதவும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>spiritual</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/spiritual/nagamani-stone-real-or-myth-rumours-about-a-stone-falling-from-a-snake-head-nagamani-truth-and-scientific-explanation-mqdd3as"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Narasimha Jayanti 2026 நாளை நரசிம்ம ஜெயந்தி 2026: தீமைகளை அழித்து வெற்றியைத் தரும் அற்புத வழிபாடு]]></title>
            <link>https://tamil.asianetnews.com/spiritual/narasimha-jayanti-2026-fasting-rules-worship-method-dhaan-and-mantras-to-chant-articleshow-n1awmg2</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/spiritual/narasimha-jayanti-2026-fasting-rules-worship-method-dhaan-and-mantras-to-chant-articleshow-n1awmg2</guid>
            <pubDate>Wed, 29 Apr 2026 15:20:34 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் மிகவும் உக்கிரமான அவதாரமாக கருதப்படுவது நரசிம்ம அவதாரம். ஆனால் கூப்பிட்ட உடன் உடனடியாக ஓடி வந்து அருள் செய்யக் கூடியவரும் நரசிம்மர் தான். நரசிம்மர் அவதரித்த தினத்தை நரசிம்ம ஜெயந்தியாக ஆண்டுதோறும் கொண்டாடுகிறோம். இந்த ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி வியாழக்கிழமை நரசிம்ம ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kqc7m7cdamdsn9kry5hvv8fw,imgname-narasimha-jayanti-2026-1777453374861.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களிலேயே மிகவும் தனித்துவமானது நரசிம்ம அவதாரம். மற்ற அவதாரங்கள் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக நீண்ட காலம் திட்டமிடப்பட்டவை. ஆனால், நரசிம்ம அவதாரம் என்பது தன் பக்தன் பிரகலாதனின் வாக்கை மெய்ப்பிக்க, ஒரு நொடிப்பொழுதில் தூணிலிருந்து தோன்றிய அதிரடி அவதாரம். சித்திரை மாதம் வளர்பிறை சதுர்த்தசி திதியில் வரும் இந்த நரசிம்ம ஜெயந்தி, நம் வாழ்வில் தீர்க்க முடியாத சிக்கல்களைத் தீர்க்கும் ஒரு உன்னத நாளாகும்.&lt;/p&gt;&lt;p&gt;நரசிம்ம ஜெயந்தி வழிபாட்டு முறை:&lt;/p&gt;&lt;p&gt;- நரசிம்மர் தூணிலிருந்து வெளிப்பட்டது அந்தி சாயும் பொழுது (மாலை 4.30 மணி முதல் 7 மணி வரை) என்பதால், நரசிம்ம ஜெயந்தி வழிபாட்டை மாலையில் தான் செய்ய வேண்டும். அன்று அதிகாலையிலேயே நீராடி, வீட்டைத் தூய்மை செய்து நரசிம்மர் திருவுருவப் படத்திற்கு மணமுள்ள மலர்களைச் சாற்ற வேண்டும். - பானக நிவேதனம்: நரசிம்மருக்கு மிகவும் பிடித்தது பானகம். சுக்கு, வெல்லம், ஏலக்காய் சேர்த்த பானகம் அவரது கோபத்தைத் தணிப்பதாக ஐதீகம். இதனுடன் காய்ச்சாத குளிர்ந்த பால் மற்றும் தயிர் சாதம் நிவேதனம் செய்வது விசேஷம். - மலர் வழிபாடு: லக்ஷ்மி நரசிம்மரை வழிபடும் போது துளசி, சிவப்புத் தாமரை மலர்களையும், செவ்வரளிப் பூக்களையும் சமர்ப்பிப்பது அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அள்ளித் தரும்.&lt;/p&gt;&lt;p&gt;சொல்ல வேண்டிய சக்திவாய்ந்த மந்திரங்கள் :&lt;/p&gt;&lt;p&gt;&lt;img&gt;&lt;/p&gt;&lt;p&gt;பலரும் நரசிம்மரின் உக்கிரமான மந்திரங்களைச் சொல்ல அஞ்சுவார்கள். ஆனால், எளிய பக்தர்களுக்கு அவர் ஒரு தாயைப் போன்றவர். &quot;மரண பயம்&quot; நீங்கவும், கடன் தொல்லைகள் அகலவும், எதிரிகள் தொல்லை, பயம், நோய் தீர கீழே உள்ள மந்திரம் மிகவும் விசேஷமானது:&lt;/p&gt;&lt;p&gt;&quot;உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம் ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யு ம்ருத்யும் நமாம்யஹம்&quot;&lt;/p&gt;&lt;p&gt;&quot;நரசிம்ம கவசம்&quot; அல்லது நரசிம்ம மந்திரத்தை 108 முறை உச்சரிப்பது சத்ரு (எதிரி) பயத்தை அறவே நீக்கும். உக்கிர நரசிம்மரை விட, லக்ஷ்மி தேவி இடது மடியில் அமர்ந்திருக்கும் 'மாலோல நரசிம்மரை' தியானிப்பது இல்லறத்தில் அமைதியைத் தரும்.&lt;/p&gt;&lt;p&gt;தானங்களின் பலன்கள்:&lt;/p&gt;&lt;p&gt;நரசிம்ம ஜெயந்தி அன்று அன்னதானம் செய்வது சிறப்பு என்றாலும், அன்று &quot;தண்ணீர் பந்தல்&quot; அமைப்பது அல்லது கோடை காலத்திற்குத் தேவையான விசிறி, குடை, செருப்பு போன்றவற்றைத் தானம் செய்வது நரசிம்மருக்குப் ப்ரீதியானது. மேலும், பலரும் அறியாத ஒரு தகவல் என்னவென்றால், நரசிம்ம ஜெயந்தி அன்று ஆதரவற்ற முதியவர்களுக்கு ஒரு வேளை உணவும், வஸ்திரமும் (துணி) தானம் செய்து, அவர்களது ஆசியைப் பெற்றால், உங்கள் ஜாதகத்தில் உள்ள செவ்வாய் தோஷம் மற்றும் பித்ரு தோஷங்களின் தாக்கம் பெருமளவு குறையும்.&lt;/p&gt;&lt;p&gt;தவிர்க்க வேண்டியவை :&lt;/p&gt;&lt;p&gt;- பகல் உறக்கம்: அன்று பகல் முழுதும் விரதம் இருப்பது நல்லது. இயலாதவர்கள் பால், பழம் உட்கொள்ளலாம். ஆனால், பகலில் தூங்குவதைத் தவிர்க்க வேண்டும். - கோபம் மற்றும் வீண் வாக்குவாதம்: நரசிம்மர் கோபத்தின் வெளிப்பாடாகத் தோன்றினாலும், அவரை வழிபடும் நாளில் நாம் யாரிடமும் கோபப்படக் கூடாது. முக்கியமாக யாரையும் இகழ்ந்து பேசக்கூடாது. - புளியோதரை தவிர்த்தல்: பெருமாளுக்குப் பிடித்தமான புளியோதரை அன்று வேண்டாம். மாறாக இனிப்புப் பொங்கல் அல்லது தயிர் சாதம் மட்டுமே நிவேதனமாகப் படைக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;யாரும் அறியாத ரகசிய வழிபாடு :&lt;/p&gt;&lt;p&gt;&lt;img&gt;&lt;/p&gt;&lt;p&gt;நரசிம்ம ஜெயந்தி அன்று மாலை வேளையில், உங்கள் வீட்டின் நிலை வாசலில் நெய் விளக்கேற்றி, ஒரு தூணிற்கு (அல்லது சுவருக்கு) சந்தனம், குங்குமம் இட்டு, நரசிம்மர் அங்கு எழுந்தருளியிருப்பதாகக் கருதி வணங்குங்கள். நரசிம்மர் எங்கும் நிறைந்திருப்பவர் என்பதால், அந்தத் தூணிலேயே அவர் ஆசி வழங்கி உங்கள் வீட்டிற்குள் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களை விரட்டி அடிப்பார். &quot;நாளை என்பது நரசிம்மனிடம் இல்லை&quot; என்பார்கள். அதாவது நீங்கள் இன்று ஒரு வேண்டுதலை வைத்தால், அதைத் தள்ளிப்போடாமல் உடனடியாக நிறைவேற்றிக் கொடுக்கும் கருணை அவதாரமே நரசிம்மர். இந்த நரசிம்ம ஜெயந்தியில் அவரைச் சரணடைந்து சகல துன்பங்களில் இருந்தும் விடுதலை பெறுவோம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>spiritual</category>
            <dc:creator>Priya Velan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/spiritual/narasimha-jayanti-2026-fasting-rules-worship-method-dhaan-and-mantras-to-chant-articleshow-n1awmg2"/>
        </item>
        <item>
            <title><![CDATA[pradosh vrat புதன்கிழமை வரும் 'புத-பிரதோஷத்தின்' அபூர்வ ரகசியங்களும் வழிபாட்டு பலன்களும்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/spiritual/budha-pradosh-vrat-2026-april-significance-worship-method-and-puja-benefits-articleshow-ok3b9qc</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/spiritual/budha-pradosh-vrat-2026-april-significance-worship-method-and-puja-benefits-articleshow-ok3b9qc</guid>
            <pubDate>Wed, 29 Apr 2026 14:28:22 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;சிவபெருமான் ஆலகால விஷத்தை குடித்து, உலகத்தை காத்த நேரமே பிரதோஷ காலமாக கருதப்படுகிறது. தன்னை வழிபட்ட தேவர்கள் உள்ளிட்டோருக்கு வேண்டிய வரங்களை சிவபெருமான் அழித்து, நந்தியின் கொம்புகளுக்கு இடையே ஆனந்த தாண்டவம் ஆடிக் காட்டிய காலம் என்பதால் நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேற பிரதோஷ காலத்தில் சிவ வழிபாடு செய்வதும் சிவ பூஜையில் கலந்து கொள்வதும் சிறப்பானது&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kqc79kkbh4gsm2pqgx6k5cqp,imgname-budha-pradosh-vrat-2026--1--1777453026923.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சிவபெருமானுக்கு உகந்த எட்டு வகையான விரதங்களில் 'பிரதோஷம்' மிக முக்கியமானது. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை என இருமுறை திரயோதசி திதியில் மாலை நேரத்தில் வரும் இந்த வழிபாட்டை, &quot;நித்ய பிரதோஷம், பட்ச பிரதோஷம், மகா பிரதோஷம்&quot; எனப் பல வகைகளில் பிரிப்பார்கள். தினமும் மாலை 04.30 மணி முதல் 6 மணி வரையிலான நேரத்தை பிரதோஷ வேளை என்றும், நித்ய பிரதோஷம் என்றும் சொல்லுவார்கள். சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்தி உலகைக் காத்த நேரமே பிரதோஷ காலம்.திங்கட்கிழமையில் வரும் சோமவார பிரதோஷம் மற்றும் சனிக்கிழமையில் வரும் சனி மகா பிரதோஷத்தை போல் ஒவ்வொரு கிழளையிலும் வரும் பிரதோஷத்திற்கு ஒரு தனிச்சிறப்பும், பலன்களும் உண்டு. அப்படி புதன்கிழமையில் வரும் பிரதோஷத்திற்கு என்ன சிறப்பு என தெரிந்து கொள்ளலாம்.&lt;/p&gt;&lt;p&gt;புத-பிரதோஷத்தின் தனித்துவமான சிறப்பு :&lt;/p&gt;&lt;p&gt;நவகிரகங்களில் 'புதன் பகவான்' கல்வி, அறிவு, வியாபாரம் மற்றும் பேச்சாற்றலுக்கு அதிபதி. ஜோதிட ரீதியாக புதன்கிழமை அன்று சிவனை வழிபடுவது ஒருவரின் ஜாதகத்தில் இருக்கும் 'புதன் தோஷத்தை' நீக்கும் வல்லமை கொண்டது. பலரும் அறியாத தகவல் என்னவென்றால், பிரதோஷ வேளையில் நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையில் சிவன் திருநடனம் ஆடும்போது, அங்கேயே திருமாலும் (புதனின் அதிதேவதை) உடன் இருந்து தாளம் இசைப்பதாக புராணங்கள் கூறுகின்றன. எனவே, புதன்கிழமை பிரதோஷத்தை வழிபடுபவர்களுக்கு சிவனின் அருளோடு விஷ்ணுவின் ஆசியும் ஒருசேர கிடைக்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;வழிபாட்டு முறைகள்:&lt;/p&gt;&lt;p&gt;&lt;img&gt;&lt;/p&gt;&lt;p&gt;- பிரதோஷ நேரத்தில் குளித்துவிட்டு, திருநீறு அணிந்து கோவிலுக்குச் செல்வது சிறப்பு. - சிவனை தரிசிப்பதற்கு முன்னால் நந்தியம் பெருமானின் அனுமதி பெற வேண்டும். &quot;ஓம் நந்திகேஸ்வராய நமஹ&quot; என்று கூறி, நந்தியின் கொம்புகளுக்கு இடையில் சிவதரிசனம் காண்பது கோடி புண்ணியம் தரும். - புதன்கிழமை பிரதோஷத்திற்கு 'பச்சை கற்பூரம்' அல்லது 'பன்னீர்' வாங்கித் தருவது சிறந்தது. இது புத பகவானின் ஆதிக்கத்தை வலுப்படுத்தி, மனக்குழப்பத்தை நீக்கி தெளிவான சிந்தனையைத் தரும். - இந்த நாளில் &quot;ஓம் நம சிவாய&quot; என்ற பஞ்சாட்சர மந்திரத்தை எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை சொல்வது சிறப்பு. - சிவன் மற்றும் நந்திக்கு உரிய அபிஷேகம் மற்றும் பூஜை பொருட்களை வாங்கிக் கொடுப்பதால் நம்முடைய பாவங்கள் தீரும் என நம்பப்படுகிறது. - சிவனுக்கு பிரதோஷ வேளையில் வில்வத்தால் அர்ச்சனை செய்து வழிபடுவதும், நந்திக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுவதும் சிறப்பு. - சிவபெருமானுக்கு பிரதோஷத்தன்று கரும்புச்சாறு கொண்டு அபிஷேகம் செய்வது கர்மவினைகளை குறைத்து, முக்தியை தரும் என்பது நம்பிக்கை. - பிரதோஷம் அன்று சிவபெருமானை வழிபடுவதுடன், நரசிம்ம பெருமாளையும் வழிபடுவதால் வாழ்க்கையில் எப்படிப்பட்ட துன்பத்தில் இருந்தும் விடுபட முடியும்.&lt;/p&gt;&lt;p&gt;செய்ய வேண்டிய 'ரகசிய' தானங்கள் :&lt;/p&gt;&lt;p&gt;இந்த நாளில் சிவனுக்கு வில்வ இலைகளையும், நந்திக்கு அருகம்புல்லையும் சமர்ப்பிப்பது வழக்கம். ஆனால், கூடுதல் பலன்களைப் பெற பச்சைப்பயறு தானம் சிறந்தது. புதனுக்கு உகந்த தானியம் பச்சைப்பயறு. இதனை வேக வைத்து பசுமாட்டிற்கு வழங்கினால், தடைப்பட்டுக் கொண்டிருக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றியில் முடியும்.&lt;/p&gt;&lt;p&gt;கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் பிரதோஷ வேளையில் கோவிலில் உள்ள தீபத்தில் 'இலவம் பஞ்சு' திரி போட்டு, சுத்தமான பசு நெய் ஊற்றி விளக்கேற்றினால் கடன் சுமை குறையும் என்பது நம்பிக்கை. புத-பிரதோஷத்தில் விரதம் இருந்து வழிபட்டால் மாணவர்களுக்குக் கல்வியில் மந்த நிலை நீங்கி, ஞாபக சக்தி பெருகும். வியாபாரத்தில் நஷ்டத்தைச் சந்திப்பவர்கள் மீண்டும் எழுச்சி பெறுவார்கள். ஜாதகத்தில் புதன் பலவீனமாக இருப்பவர்களுக்கு பேச்சில் தடுமாற்றம் நீங்கி, சமயோசித புத்தி கூடும்.&lt;/p&gt;&lt;p&gt;வாழ்க்கையில் எவ்வளவு பெரிய கஷ்டங்கள் இருந்தாலும், பிரதோஷ காலத்தில் ஒரு நிமிடம் சிவனை நினைத்து தியானம் செய்வது மனதிற்கு அமைதியைத் தரும். &quot;சிவ சிவ&quot; என்று உச்சரித்து, இந்த புத-பிரதோஷத்தை மனதார வழிபடுங்கள்; அறிவுத்திறனும், செல்வ வளமும் தேடி வரும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>spiritual</category>
            <dc:creator>Priya Velan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/spiritual/budha-pradosh-vrat-2026-april-significance-worship-method-and-puja-benefits-articleshow-ok3b9qc"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Vastu Tips: மக்களே, பெட்ரூம்ல இந்த 3 பொருட்களை மறந்தும் வெக்காதீங்க!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/spiritual/bedroom-vastu-mistakes-to-avoid-for-a-peaceful-life-oqmz2f1</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/spiritual/bedroom-vastu-mistakes-to-avoid-for-a-peaceful-life-oqmz2f1</guid>
            <pubDate>Tue, 28 Apr 2026 11:47:58 +0530</pubDate>
            <description><![CDATA[வாஸ்து சாஸ்திரத்தின்படி, சில பொருட்களை சரியான இடத்தில் வைப்பது அவசியம். குறிப்பாக, படுக்கையறையில் சில பொருட்களை மறந்தும் வைக்கக்கூடாது என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள். அப்படிப்பட்ட பொருட்கள் எவை என்று இங்கே பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kq9bq9tshtd7yzr0y9ydasnz,imgname-gemini-generated-image-t5tzvrt5tzvrt5tz--1--1777357006681.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[வாஸ்து சாஸ்திரத்தின்படி, சில பொருட்களை சரியான இடத்தில் வைப்பது அவசியம். குறிப்பாக, படுக்கையறையில் சில பொருட்களை மறந்தும் வைக்கக்கூடாது என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள். அப்படிப்பட்ட பொருட்கள் எவை என்று இங்கே பார்க்கலாம்.&lt;img&gt;&lt;p&gt;நம் வீட்டில் உள்ள பொருட்களை சரியான இடத்தில் வைக்கவில்லை என்றால், அது நமக்கே தெரியாமல் நம் மனநிலையில் சில மாற்றங்களை ஏற்படுத்தும் என வாஸ்து கூறுகிறது. இதைதான் பெரியோர்கள் வைக்க வேண்டியதை வைக்க வேண்டிய இடத்தில் வைக்கனும் அப்படின் சொல்லியுள்ளார்கள். எந்தவொரு பொருளையும் வைக்க வேண்டிய இடத்தில் வைத்தால் அது மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;வாஸ்து சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு பொருளையும் அதனதன் சரியான இடத்தில் வைக்க வேண்டும். குறிப்பாக, படுக்கையறையில் சில பொருட்களை மறந்தும் வைக்கக்கூடாது. அவை என்னென்ன என்று பார்ப்போம்.&lt;img&gt;கடவுள் சிலைகளை எப்போதும் பூஜை அறையில்தான் வைக்க வேண்டும். படுக்கையறையில் வைத்தால், அது மனத்தில் ஒருவித பயத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தும். இந்த டென்ஷன் கணவன்-மனைவி இடையே மனக்கசப்பை உண்டாக்கலாம்.&lt;img&gt;படுக்கையறையில் தானியங்கள் போன்ற உணவுப் பொருட்களைச் சேமித்து வைப்பது, திருமண உறவில் பெரிய விரிசலையும் சிக்கலையும் உருவாக்கும். மேலும், இது பூச்சிகள் மற்றும் கிருமிகளை ஈர்த்து, நம் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.&lt;img&gt;படுக்கையறையில் நம் கட்டிலைப் பிரதிபலிக்கும் வகையில் கண்ணாடியை வைக்கக்கூடாது. அப்படி வைத்தால், அது மன அழுத்தத்தையும், மன அமைதியின்மையையும் ஏற்படுத்தும் என்று வாஸ்து சாஸ்திரம் எச்சரிக்கிறது.&lt;img&gt;வாஸ்து என்பது சரியான பொருட்களை சரியான இடங்களில் வைப்பதுதான். இதை நாம் சரியாகப் பின்பற்றினால், நம் வீடுகளில் உள்ள நெகட்டிவ் எனர்ஜி மற்றும் குழப்பங்கள் நீங்குவதை நிச்சயமாகப் பார்க்கலாம்.]]></content:encoded>
            <category>spiritual</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/spiritual/bedroom-vastu-mistakes-to-avoid-for-a-peaceful-life-oqmz2f1"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Pillow Vastu: காதல் பிரச்சனையா? பணக்கஷ்டமா? தலையணைக்கு அடியில் இதை வையுங்க போதும்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/spiritual/vastu-remedies-under-pillow-for-wealth-and-love-life-success-qywqkw9</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/spiritual/vastu-remedies-under-pillow-for-wealth-and-love-life-success-qywqkw9</guid>
            <pubDate>Thu, 30 Apr 2026 10:32:59 +0530</pubDate>
            <description><![CDATA[வாஸ்து படி, நாம தூங்குற தலையணைக்கு அடியில சில பொருட்களை வெச்சா, வாழ்க்கையில பாசிட்டிவ் மாற்றங்கள் வருமாம். காதல், பணம், சொகுசுக்கு காரணமான சுக்கிரனை வலுப்படுத்த இந்த டிப்ஸ் உதவும்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kqec8vrjbct9q7cr11kdvwrh,imgname-chatgpt-image-apr-30--2026--10-31-14-am--1--1777525354258.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[வாஸ்து படி, நாம தூங்குற தலையணைக்கு அடியில சில பொருட்களை வெச்சா, வாழ்க்கையில பாசிட்டிவ் மாற்றங்கள் வருமாம். காதல், பணம், சொகுசுக்கு காரணமான சுக்கிரனை வலுப்படுத்த இந்த டிப்ஸ் உதவும்.&lt;img&gt;&lt;p&gt;நாம தூங்குற தலையணைக்கு அடியில சில ஸ்பெஷல் பொருட்களை வெச்சா, அது நம்ம வாழ்க்கையில பாசிட்டிவ் எனர்ஜி, குட்லக், பிரச்சனைகளுக்கு தீர்வுனு எல்லாத்தையும் கொண்டு வரும்னு உங்களுக்குத் தெரியுமா? வாஸ்து மற்றும் ஆன்மீக நம்பிக்கைகள்ல இதுக்கு நிறைய முக்கியத்துவம் இருக்கு. நம்ம வாழ்க்கையோட சொகுசு, காதல், கல்யாண வாழ்க்கை, பணம் எல்லாத்துக்கும் சுக்கிரன் கிரகம்தான் காரணம். அதனால, சுக்கிரனை வலுப்படுத்த தலையணைக்கு அடியில சில பொருட்களை வைக்கச் சொல்லி வாஸ்து நிபுணர்கள் சொல்றாங்க. வாஸ்து நிபுணர் ஜெய் மதான் சொல்லும் இந்த எளிய பரிகாரங்களை செஞ்சு வாழ்க்கையில வெற்றி பெறலாம். எந்தப் பொருளை, எப்போ, எதுக்காக வைக்கணும்னு விரிவா பார்க்கலாம் வாங்க.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;என்ன பலன் கிடைக்கும்:&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;அன்னாசிப்பூ ஒரு சக்திவாய்ந்த, வாசனைமிக்க மசாலா. இது நெகட்டிவ் எனர்ஜியை நீக்கி, பாசிட்டிவ் வைப்ஸை அதிகரிக்கும்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;எப்போது வைக்க வேண்டும்:&lt;/strong&gt; தொடர்ந்து துரதிர்ஷ்டம் துரத்துவது போல உணர்ந்தால், இன்டர்வியூ அல்லது தேர்வில் தோல்வி ஏற்பட்டால் இதைச் செய்யலாம்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;&lt;strong&gt;கவனிக்க வேண்டியவை:&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;வெள்ளிக்கிழமை இரவு இதை தலையணைக்கு அடியில் வைத்து, தொடர்ந்து 7 இரவுகள் அப்படியே விடவும்.&lt;/li&gt; &lt;li&gt;காலையில் எழுந்து, அதை ஓடும் தண்ணீரில் விட்டுவிட வேண்டும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;என்ன பலன் கிடைக்கும்:&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;வாஸ்துவில் மஞ்சளை மிகவும் மங்களகரமான மற்றும் தூய்மையான பொருளாகக் கருதுகிறார்கள். இது பண வரவையும், காரிய சித்தியையும் குறிக்கிறது.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;எப்போது வைக்க வேண்டும்:&lt;/strong&gt; வருமான வழிகள் குறையும்போது, செலவுகள் அதிகரிக்கும்போது அல்லது வேலை/வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படும்போது இதைச் செய்யலாம்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;&lt;strong&gt;கவனிக்க வேண்டியவை:&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;ஒரு மஞ்சள் கிழங்கை வெள்ளிக்கிழமை இரவு மஞ்சள் துணியில் சுற்றி தலையணைக்கு அடியில் வைக்கவும்.&lt;/li&gt; &lt;li&gt;இதை 11 நாட்கள் வைத்து, பிறகு ஏதாவது ஒரு அரச மரத்தின் அடியில் வைத்துவிட வேண்டும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;என்ன பலன் கிடைக்கும்:&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;வாழ்க்கையில் ஏற்படும் தேக்க நிலையை போக்க இலவங்கப்பட்டை உதவுகிறது. இது செயல்களில் வேகத்தையும் வெற்றியையும் கொண்டு வரும்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;எப்போது வைக்க வேண்டும்:&lt;/strong&gt; எல்லாம் தடைபடுவது போலத் தோன்றினால், எந்த வேலையும் முடியும் தருவாயில் நின்றுபோனால் இதைச் செய்யலாம்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;&lt;strong&gt;கவனிக்க வேண்டியவை:&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;இரண்டு அல்லது மூன்று இலவங்கப்பட்டை துண்டுகளை தலையணைக்கு அடியில் வைக்கவும்.&lt;/li&gt; &lt;li&gt;7 நாட்களுக்குப் பிறகு, அதை ஓடும் நீரில் விட்டுவிட வேண்டும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;என்ன பலன் கிடைக்கும்:&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;ஏலக்காய், நறுமணத்துக்கும் ஆசைகள் நிறைவேறுவதற்கும் ஒரு சின்னமாக கருதப்படுகிறது. முடியாத ஒரு வேலையை விரைவில் முடிக்க வேண்டும் என்றால், இந்த பரிகாரம் நல்ல பலனைத் தரும்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;எப்போது செய்யலாம்:&lt;/strong&gt; ஒரு முக்கியமான இன்டர்வியூ, பதவி உயர்வு, திருமணம், விசா அல்லது கோர்ட் கேஸ் போன்றவற்றுக்கு முன் இதைச் செய்யலாம்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;&lt;strong&gt;செய்முறை:&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;உங்கள் விருப்பத்தை மனதில் நினைத்துக்கொள்ளுங்கள்.&lt;/li&gt; &lt;li&gt;6 ஏலக்காய்களை ஒரு வெள்ளைக் கைக்குட்டையில் சுற்றி, தலையணைக்கு அடியில் வையுங்கள்.&lt;/li&gt; &lt;li&gt;3 நாட்களுக்குப் பிறகு, அதை கோவிலில் உண்டியலில் சேர்த்து விடுங்கள்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;என்ன பலன் கிடைக்கும்:&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;ரோஜா, காதல் மற்றும் அழகின் சின்னம். உங்கள் பார்ட்னருடன் மனக்கசப்பு, காதலில் டென்ஷன் அல்லது வாழ்க்கையில் அன்பு குறைந்ததாக உணர்ந்தால், இந்த பரிகாரம் கை கொடுக்கும்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;எப்போது செய்யலாம்:&lt;/strong&gt; உறவுகளில் ஒருவித ஈர்ப்பு இல்லாதபோது, சண்டைகள் அல்லது மனரீதியான இடைவெளி ஏற்படும்போது இதைச் செய்யலாம்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;&lt;strong&gt;செய்முறை:&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;புதிய ரோஜா இதழ்களை எடுத்து, அதை வெள்ளி அல்லது வெள்ளைத் துணியில் சுற்றவும்.&lt;/li&gt; &lt;li&gt;வெள்ளிக்கிழமை இரவு முதல் திங்கள் காலை வரை தலையணைக்கு அடியில் வைக்கவும்.&lt;/li&gt; &lt;li&gt;அதன் பிறகு, அதை துளசி செடியின் அடியில் வைத்துவிடவும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;h2&gt;&lt;strong&gt;சுக்கிரன் கிரகம் ஏன் இந்த பரிகாரங்களால் வலுப்பெறுகிறது?&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;வாஸ்து சாஸ்திரத்தின்படி, சுக்கிரன் கிரகம் நமது ஆடம்பரம், காதல், செழிப்பு மற்றும் உறவுகளுடன் தொடர்புடையது. இந்த பரிகாரங்களைச் செய்யும்போது, சுக்கிரன் நேர்மறையாகச் செயல்பட்டு, வாழ்க்கையில் தடைபட்ட காரியங்கள் நடக்கத் தொடங்கும்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;கவனத்தில் கொள்ள வேண்டியவை:&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;ul&gt; &lt;li&gt;இந்த பரிகாரங்களைச் செய்யும்போது உங்கள் மனம் சுத்தமாகவும், எண்ணம் நன்றாகவும் இருக்க வேண்டும்.&lt;/li&gt; &lt;li&gt;இந்த பரிகாரத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.&lt;/li&gt; &lt;li&gt;வீட்டில் வழக்கமான பூஜை மற்றும் சுத்தமும் அவசியம்.&lt;/li&gt;&lt;/ul&gt;]]></content:encoded>
            <category>spiritual</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/spiritual/vastu-remedies-under-pillow-for-wealth-and-love-life-success-qywqkw9"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Chitra Pournami: சித்ரா பவுர்ணமி ஸ்பெஷல்.! கன்னியாகுமரியில் ஒரே நேரத்தில் நிகழும் சூரிய-சந்திர சந்திப்பு!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/chitra-pournami-special-why-tomorrow-evening-is-a-must-watch-in-kanyakumari-v5t5kk3</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/chitra-pournami-special-why-tomorrow-evening-is-a-must-watch-in-kanyakumari-v5t5kk3</guid>
            <pubDate>Thu, 30 Apr 2026 12:04:05 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் சூரியன் மறைவதும் சந்திரன் உதயமாவதும் ஒரே நேரத்தில் நிகழும் அபூர்வ காட்சி நடைபெறும். இந்த அதிசய நிகழ்வை காண சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kqegtbt25zte7bzwnwqamk7j,imgname-gemini-generated-image-ubdczwubdczwubdc--1--1777530122050.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் சூரியன் மறைவதும் சந்திரன் உதயமாவதும் ஒரே நேரத்தில் நிகழும் அபூர்வ காட்சி நடைபெறும். இந்த அதிசய நிகழ்வை காண சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவின் தென்முனையான கன்னியாகுமரி, அதன் இயற்கை எழிலுக்கும் ஆன்மீகச் சிறப்பிற்கும் உலகப் புகழ்பெற்றது. முக்கடல் சங்கமிக்கும் இந்த புனிதமான இடத்தில், இயற்கையின் அதிசயங்களை காண்பது வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவமாகும். அந்த வகையில், இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, கன்னியாகுமரி கடலில் சூரியன் மறைவதும், சந்திரன் உதயமாவதும் ஒரே நேரத்தில் நிகழும் அபூர்வ காட்சி நடைபெற உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பவுர்ணமி தினத்தன்று 'சித்ரா பவுர்ணமி' விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி நாளை (வெள்ளிக்கிழமை) வருகிறது. ஆன்மீக ரீதியாகவும், இயற்கை ரீதியாகவும் இந்த தினத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. இந்த நன்னாளில் வானில் நிகழும் இந்த கோள்களின் அணிவகுப்பு காண்போரைக் வியக்க வைக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நாளை மாலை சரியாக 6 மணி அளவில் இந்த அதிசய நிகழ்வு நிகழ உள்ளது. அப்போது:&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;மேற்குப் பகுதியில்: அரபிக்கடல் பகுதியில் சூரியன் ஒரு செந்நிறப் பந்து போன்ற வடிவில் மெல்ல மெல்ல கடலுக்குள் மறைவதைக் காணலாம்.&lt;/li&gt; &lt;li&gt;கிழக்குப் பகுதியில்: அதே நேரத்தில், வங்கக்கடல் பகுதியில் முழு நிலவானது (சந்திரன்) வட்ட வடிவில் பிரகாசமான ஒளியுடன் மெல்ல உதயமாகும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;ஒரே நேரத்தில் ஒருபுறம் பகலவன் விடைபெறுவதும், மறுபுறம் நிலவு தோன்றுவதும் புவியியல் ரீதியாக மிகவும் அரிதான மற்றும் கண்கொள்ளாக் காட்சியாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த அபூர்வ நிகழ்வைச் சிறப்பாகக் காண கன்னியாகுமரியில் பின்வரும் இடங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன:&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;முக்கடல் சங்கமம் கடற்கரை பகுதி: கடல் அலைகளின் பின்னணியில் இதைக் காண சிறந்த இடம்.&lt;/li&gt; &lt;li&gt;சன் செட் பாயிண்ட் (Sunset Point): சூரிய மறைவை மிகத்தெளிவாகப் பார்க்க உதவும் பகுதி.&lt;/li&gt; &lt;li&gt;முருகன் குன்றம்: உயரமான இடத்திலிருந்து வானியல் மாற்றங்களை ரசிக்க உகந்த இடம்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த அபூர்வக் காட்சியைக் காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவில் கன்னியாகுமரியில் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் மக்கள் கூட்டம் அலைமோதும்.&lt;/p&gt;&lt;p&gt;பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடற்கரை பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இயற்கையின் படைப்பில் இதுபோன்ற நிகழ்வுகள் மிக அரிதாகவே நிகழ்கின்றன. சித்ரா பவுர்ணமி நாளில் கடலின் நடுவே நிகழும் இந்த ஒளியின் விளையாட்டை ரசிப்பது மனதிற்கு அமைதியையும், இயற்கையின் மீதான வியப்பையும் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. நாளை மாலை இந்த அற்புதத் தருணத்தைக் காண கன்னியாகுமரி தயாராகி வருகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>spiritual</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/chitra-pournami-special-why-tomorrow-evening-is-a-must-watch-in-kanyakumari-v5t5kk3"/>
        </item>
        <item>
            <title><![CDATA[meenakshi thirukalyanam 2026 மீனாட்சி திருக்கல்யாணத்தில் இந்த அம்மனை கவனிச்சீங்களா? யார் இந்த பிரியாவிடை?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/spiritual/meenakshi-thirukalyanam-2026-know-the-secret-about-piriyavidai-amman-in-madurai-meenakshi-temple-articleshow-w887w3h</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/spiritual/meenakshi-thirukalyanam-2026-know-the-secret-about-piriyavidai-amman-in-madurai-meenakshi-temple-articleshow-w887w3h</guid>
            <pubDate>Tue, 28 Apr 2026 14:35:22 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;மதுரை என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது மீனாட்சி அம்மன் தான். மீனாட்சி அம்மனையும், சொக்கநாதரையும் தான் பலருக்கும் தெரியும். ஆனால் பிரியாவிடை அம்மன் பற்றி பலருக்கும் தெரியாது. மீனாட்சி திருக்கல்யாணத்தின் போது மணமேடையில் சுந்தரேஸ்வரருக்கு இடது பாகத்தில் இருக்கும் அம்மன் யார் என பலருக்கும் சந்தேகம் இருக்கும்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kq6vwmsx4djatzzj4rbgrexa,imgname-meenakshi-sundareshwar-1777273295677.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;மதுரை சித்திரை திருவிழாவில் அனைவரும் எதிர்பார்க்கும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சி அம்மனின் தஇருக்கல்யாண வைபவம் ஏப்ரல் 28ம் தேதியான இன்று காலை நடந்து முடிந்துள்ளது. மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் என்று சொன்னாலும் சுந்தரேஸ்வரருக்கு அருகில் இரண்டு அம்மன்கள் இருப்பார்கள். அதாவது சுந்தரேஸ்வருக்கு பக்கத்தில் ஒரு அம்மனும், தனியாக ஒரு அம்மனும் இருப்பார்கள். மீனாட்சி திருக்கல்யாணமாக இருந்தாலும் சுந்தரேஸ்வரர் தனக்கு பக்கத்திலேயே இருக்கும் பிரியாவிடை அம்மனுக்கு தான் முதலில் திருமாங்கல்யம் அணிவிப்பார். அதற்கு பிறகு தனியாக இருக்கும் மீனாட்சி அம்மனுக்கு மாங்கல்யம் அணிவிப்பார்.&lt;/p&gt;&lt;p&gt;சுந்தரேஸ்வரருடன் இருக்கும் இந்த பிரியாவிடை அம்மன் பற்றி பலருக்கும் தெரியாது. வெறுமனே ஒரு சிலையாக அல்லாமல், மதுரையின் ஆன்மீக வாழ்வியலில் ஒரு அங்கமாக விளங்கும் இந்தப் பிரியாவிடை அம்மன் பற்றி இதுவரை பலரும் அறியாத சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கே தெரிந்து கொள்வோம்.&lt;/p&gt;&lt;p&gt;யார் இந்தப் பிரியாவிடை?&lt;/p&gt;&lt;p&gt;மதுரை மீனாட்சி சொக்கநாதர் கோவிலில், சுவாமி சன்னதிக்குச் சென்றால் அங்கே சொக்கநாதப் பெருமானுடன் எப்போதும் பிரியாமல் வீற்றிருக்கும் ஒரு தேவியைக் காணலாம். இவரே பிரியாவிடை அம்மன். பெயரிலேயே அதன் அர்த்தம் பொதிந்துள்ளது. &quot;பிரிவு + விடை&quot; - அதாவது இறைவனை விட்டு ஒருபோதும் பிரியாதவள் என்று பொருள். பொதுவாக அனைத்து சிவத்தலங்களிலும் உற்சவ மூர்த்தியாக சோமாஸ்கந்தர் (சிவன், உமை, முருகன்) இருப்பார். ஆனால் மதுரையில் மட்டும் இறைவனுடன் எப்போதும் இணைந்தே இருக்கும் இந்தப் பிரியாவிடை அம்மன் தனிச்சிறப்பு வாய்ந்தவர்.&lt;/p&gt;&lt;p&gt;இதுவரை அறியாத அரிய தகவல்கள் :&lt;/p&gt;&lt;p&gt;1. திருமணக் கோலத்தின் சாட்சி :&lt;/p&gt;&lt;p&gt;&lt;img&gt;&lt;/p&gt;&lt;p&gt;மதுரையில் மீனாட்சி - சொக்கநாதர் திருமணம் நடந்த பிறகு, அன்னை மீனாட்சி அரசியாக மதுரையை ஆளுகிறார். ஆனால், சொக்கநாதர் சிவகாமியாகவோ அல்லது பார்வதியாகவோ அல்லாமல், தன் இடப்பாகத்தில் பிரியாவிடை அம்மனைத் தாங்கி நிற்கிறார். இது இறைவனின் நித்திய கல்யாணக் கோலத்தைக் குறிக்கிறது. மீனாட்சி அரசியாக ஆட்சி செய்யும் போது, இல்லத்தரசியாக இறைவனுக்கு அருகிலேயே இருப்பவர் இந்தப் பிரியாவிடை அம்மன்.&lt;/p&gt;&lt;p&gt;2. கருவறையில் இருக்கும் ரகசியம் அம்மன்:&lt;/p&gt;&lt;p&gt;மதுரை கோவிலில் மூலவர் மீனாட்சி அம்மனுக்குத் தனிச் சன்னதி உண்டு. ஆனால், சொக்கநாதர் கருவறைக்குள்ளேயே சுவாமிக்கு இடப்பக்கத்தில் பிரியாவிடை அம்மன் சிறிய உருவமாக எழுந்தருளியிருப்பார்.&quot;அரசியாக அன்னை மீனாட்சி வெளிப்படையாக அருள்பாலிக்க, அந்தரங்கத் துணையாகவும், சக்தியாகவும் பிரியாவிடை அம்மன் இறைவனுடன் இரண்டறக் கலந்திருக்கிறார்&quot; என்பது ஐதீகம்.&lt;/p&gt;&lt;p&gt;3. திருவிழாக்களின் நாயகி :&lt;/p&gt;&lt;p&gt;மதுரை சித்திரைத் திருவிழா போன்ற பெரிய உற்சவங்களின் போது, சுவாமி புறப்படும் போது மீனாட்சி அம்மன் தனியாக ஒரு வாகனத்திலும், சொக்கநாதர் மற்றொரு வாகனத்தில் பிரியாவிடை அம்மனுடனும் வருவார்கள். சுவாமி எங்கு சென்றாலும் அவரை விட்டுப் பிரியாமல் நிழல் போலத் தொடர்வதால் தான் இவருக்கு இந்தப் பெயர் வந்தது.&lt;/p&gt;&lt;p&gt;4. வேறு எங்கும் காண முடியாத திருக்கோலம் :&lt;/p&gt;&lt;p&gt;பொதுவாக அனைத்து சிவன் கோவில்களிலும் சாமி தனி சன்னதியிலும், அம்பாள் தனி சன்னதியிலும் காட்சி தருவார்கள். அரிதாக சில ஆலயங்களில் அம்பாளும், சாமியும் ஒரே கருவறையில் காட்சி தருவார்கள். ஆனால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மட்டுமே மீனாட்சி தனி சன்னதியில் வீற்றிருக்க, அவளின் அம்சமாக பிரியாவிடை அம்மன் சொக்கநாதருடன் தனி சன்னதியிலும் காட்சி தருவதை காண முடியும். சாமி சன்னதியில் பிரியாவிடை அம்மன் உடன் இருப்பது பலருக்கு தெரியாத ரகசியம். ஆனால் மூலஸ்தானம், உற்சவம், வீதிஉலா என எந்த சமயத்தில் சொக்கநாதரை பிரியாமல் பிரியாவிடை அம்மன் கூடவே இருப்பாள். சக்தி இல்லாமல் சிவன் இல்லை என்ற ஆழ்ந்த ஆன்மீக தத்துவத்தை உணர்த்துவதே இந்த திருக்கோலத்தின் சிறப்பு அம்சமாகும்.&lt;/p&gt;&lt;p&gt;ஆன்மீகத் தத்துவம்:&lt;/p&gt;&lt;p&gt;&lt;img&gt;&lt;/p&gt;&lt;p&gt;பிரியாவிடை அம்மன் நமக்கு உணர்த்தும் தத்துவம் மிக அழகானது. கணவன் - மனைவி உறவில் ஒருவருக்கொருவர் துணையாக, பிரியாமல் இருக்க வேண்டும் என்பதையே இந்தப் பிம்பம் காட்டுகிறது. இறைவனை விட்டுப் பிரியாத உயிருக்கு என்றும் அழிவில்லை என்ற பூரண சரணாகதி தத்துவத்தையும் உணர்த்தக் கூடியவள் இந்த பிரியாவிடை அம்மன்.இறைவன் இயங்குவதற்கு ஆதாரமான சக்தியாகப் பிரியாவிடை அம்மன் விளங்குகிறார்.&lt;/p&gt;&lt;p&gt;இதை கவனிச்சிருக்கீங்களா?&lt;/p&gt;&lt;p&gt;மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் செல்லும் போது, சொக்கநாதர் சன்னதியில் தீபாராதனை காட்டப்படும் போது கவனமாகப் பாருங்கள். சுவாமியின் இடப்பக்கம் மிகச்சிறிய வடிவில் பிரியாவிடை அம்மன் காட்சி தருவாள். ஜொலிக்கும் அந்தப் பிரியாவிடை அம்மனை வணங்கினால்,குடும்பத்தில் ஒற்றுமை பெருகும் என்பது நம்பிக்கை. மதுரையில் மீனாட்சிக்கு இருக்கும் அதே முக்கியத்துவம், சுவாமியுடன் பிரியாமல் இருக்கும் இந்த அன்னைக்கும் உண்டு. மீனாட்சி திருக்கல்யாணத்தின் போது கூட முதலில் பிரியாவிடை அம்மனுக்கு தான் திருமாங்கல்யம் அணிவிக்கப்படும். அதற்கு பிறகு தான் கையில் கிளியுடன் தனியாக இருக்கும் மீனாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்படும். பிரிந்திருக்கும் தம்பதிகள் மீண்டும் இணையவும், குடும்பத்தில் சச்சரவுகள் நீங்கவும் பிரியாவிடை அம்மனை மனதார வேண்டிக் கொள்வது ஒரு சிறந்த ஆன்மீகப் பரிகாரமாகக் கருதப்படுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>spiritual</category>
            <dc:creator>Priya Velan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/spiritual/meenakshi-thirukalyanam-2026-know-the-secret-about-piriyavidai-amman-in-madurai-meenakshi-temple-articleshow-w887w3h"/>
        </item>
        <item>
            <title><![CDATA[madurai chithirai thiruvizha 2026 வாராரு வாராரு அழகர் வாராரு...கள்ளழகர் எதிர்சேவை பற்றி இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/spiritual/madurai-chithirai-thiruvizha-2026-kallalagar-edhirsevai-unknown-things-to-know-articleshow-wiymi20</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/spiritual/madurai-chithirai-thiruvizha-2026-kallalagar-edhirsevai-unknown-things-to-know-articleshow-wiymi20</guid>
            <pubDate>Wed, 29 Apr 2026 16:45:07 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;மதுரை சித்திரை திருவிழாவின் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றான கள்ளழகர் திருவிழா துவங்கி உள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு தான் கள்ளழகர் எதிர்சேவை. ஊரே கூடி, கள்ளழகரை வரவேற்கும் இந்த நிகழ்வு பல பாரம்பரிய வழக்கங்கள், சடங்குகளை உள்ளடக்கியதாகும். அழகர், அழகர்மலையில் இருந்து புறப்பட்டு மதுரை வரும் வழி நெடுகிலும் பக்தர்கள் அவரை உபசரிப்பது கண்கொள்ளா காட்சியாகும்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-cfa7ed09-32b7-5597-ab5b-e7bdc894f5e2,imgname-image.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;மதுரை சித்திரை திருவிழா கோலாகலமாக நடந்து கொண்டிருக்கிறது. மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம் என மீனாட்சி அம்மன் கோவில் உற்சவங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அழகர் மலையிலிருந்து கோட்டை வாசல் கடந்து &quot;கோவிந்தா&quot; கோஷம் அதிரக் கள்ளழகர் புறப்பட்டு மதுரை நோக்கி வரும் உற்சவம் துவங்கி உள்ளது. திருமாலிருஞ்சோலை எனப்படும் அழகர்மலையில் இருந்து மதுரை நோக்கி 20 கி.மீ., பயணம் செய்து வரும் கள்ளழகரை எதிர்கொண்டு வரவேற்கும் ஒரு அற்புதமான நிகழ்ச்சி தான் எதிர்சேவை. கள்ளழகர் திருவிழாவின் முதல் நிகழ்வான எதிர்சேவை பற்றி பலரும் அறியாத தகவல்கள் இதோ உங்களுக்காக...&lt;/p&gt;&lt;p&gt;கள்ளழகர் எதிர்சேவை ஆச்சரியமூட்டும் 7 தகவல்கள் :&lt;/p&gt;&lt;p&gt;1. மூன்றுமாவடியில் நிகழும் 'எல்லை மரியாதை' :&lt;/p&gt;&lt;p&gt;மதுரையின் எல்லையான மூன்றுமாவடி பகுதியில் சுந்தரராஜ பெருமாள், கள்ளழகர் வேடத்தில் வரும் போது, அங்குள்ள மக்கள் அவரைத் திரண்டு வந்து வரவேற்பார்கள். இதற்கொரு பின்னணி உண்டு. கள்ளழகர் &lsquo;கள்ளர்&rsquo; வேடம் பூண்டு வருவதால், அவர் கையில் தடியும், இடுப்பில் கத்தியும் வைத்திருப்பார். வீரமான தோற்றத்தில் வரும் அவரை, அமைதிப்படுத்தும் விதமாக மக்கள் இனிப்பான வெல்லத்தையும் (சர்க்கரை), நீரையும் கொடுத்து உபசரிக்கின்றனர். தல்லாகுளத்தில் இருந்து வீரராகவ பெருமாள், மூன்றுமாவடி எல்லை வரை சென்று, கள்ளழகரை வரவேற்று, மதுரை நகருக்குள் அழைத்து வரும் நிகழ்வு தான் எதிர்சேவை. அதாவது, வீட்டிற்கும் வரும் விருந்தினரை வாசலுக்கு சென்று வரவேற்று, உள்ளே அழைத்து வருவது போன்ற மரியாதை நிகழ்வாகும்.&lt;/p&gt;&lt;p&gt;2. பதினெட்டாம் படி கருப்பனின் 'அனுமதி' :&lt;/p&gt;&lt;p&gt;எதிர்சேவைக்காக மதுரைக்கு கிளம்பும் முன், அழகர் மலையில் உள்ள பதினெட்டாம் படி கருப்பண்ணசாமியிடம், சுந்தரராஜ பெருமாள் அனுமதி பெறுவது வழக்கம். ஆனால், மதுரை எல்லைக்குள் நுழையும் போது, அந்தந்தப் பகுதிகளில் உள்ள காவல் தெய்வங்கள் அழகரைத் தங்கள் பகுதிக்குள் வரவேற்று அழைத்துச் செல்வதாக ஒரு ஐதீகம் உண்டு. இதற்காகவே ஒவ்வொரு மண்டகப்படியிலும் பிரத்யேகமான தீப ஆராதனைகள் காட்டப்படுகின்றன. அழகர்மலையில் இருந்து சுந்தரராஜ பெருமாள் புறப்படும் முன் அவர் அணிந்திருக்கும் நகைகள் குறித்த பட்டியல் கருப்பனின் சன்னதி முன் வாசிக்கப்படும். அதே போல் சித்திரை திருவிழா முடிந்து மீண்டும் அழகர் மலைக்கு திரும்பியதும், அவர் அணிந்திருக்கும் ஆபரணங்கள் கருப்பனின் முன் சரி பார்க்கப்பட்டு, பிறகு தான் அழகர் கோவிலுக்குள் செல்வார். இந்த நடைமுறை இன்றும் வழக்கத்தில் உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;3. 'நூபுர கங்கை' :&lt;/p&gt;&lt;p&gt;&lt;img&gt;&lt;/p&gt;&lt;p&gt;அழகர் வரும் போது அவருடன் ஒரு சிறிய செம்பில் நூபுர கங்கை தீர்த்தம் கொண்டு வரப்படும். அழகர் மலையில் உள்ள இந்தத் தீர்த்தம் மிகவும் புனிதமானது. எதிர்சேவையின் போது இந்தத் தீர்த்தத்தை வைத்தே சுவாமிக்கு ஆராதனைகள் செய்யப்படுகின்றன. மதுரையின் வெப்பத்தைத் தணிக்கவும், பயணக் களைப்பைப் போக்கவும் இந்தத் தீர்த்தமே அவருக்குப் பிரதானம்.&lt;/p&gt;&lt;p&gt;4. அழகரின் 'தன்னார்வப் படை' :&lt;/p&gt;&lt;p&gt;எதிர்சேவையின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கருப்பு ஆடை அணிந்து, கையில் சாட்டையுடன் &lsquo;கோடாங்கி&rsquo; அடித்து வருவார்கள். இது ஏதோ நேர்த்திக்கடன் மட்டுமல்ல; முற்காலத்தில் அழகர் மலைப்பாதையில் வரும் போது கள்ளர்களிடமிருந்தும், விலங்குகளிடமிருந்தும் சுவாமியின் ஆபரணங்களைப் பாதுகாக்க உருவான ஒரு 'பாதுகாப்புப் படை'யின் எச்சமே இந்த வேடம். இன்று இது பக்தியின் வெளிப்பாடாகத் தொடர்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;5. தண்ணீர் பீய்ச்சும் வைபவத்தின் அறிவியல் :&lt;/p&gt;&lt;p&gt;எதிர்சேவையில் பக்தர்கள் தோல் பையில் தண்ணீர் நிரப்பி பீய்ச்சுவார்கள். இதில் பலருக்குத் தெரியாத விஷயம் என்னவென்றால், அந்தத் தண்ணீரில் வெட்டிவேர், சந்தனம், ஏலக்காய், பச்சைக் கற்பூரம் போன்ற இயற்கை மூலிகைகள் கலக்கப்படுகின்றன. சித்திரை மாதக் கடும் வெயிலில் லட்சக்கணக்கான மக்கள் கூடும்போது, தொற்றுநோய்கள் பரவாமல் இருக்கவும், கூட்டத்தின் வெப்பத்தைத் தணிக்கவும் நம் முன்னோர்கள் உருவாக்கிய ஒரு 'இயற்கை ஏர்-கண்டிஷனர்' முறைதான் இது.&lt;/p&gt;&lt;p&gt;6. தல்லாகுளம் பெருமாள் கோயில் :&lt;/p&gt;&lt;p&gt;எதிர்சேவையின் உச்சகட்டம் தல்லாகுளம் பெருமாள் கோயிலில் நடக்கும் வரவேற்பு. தன் தங்கை மீனாட்சியின் திருமணத்திற்குத் தான் தாமதமாக வந்துவிட்டோம் என்ற ஆதங்கத்தில் வரும் அழகரை, தல்லாகுளம் பெருமாள் எதிர்கொண்டு அழைத்துச் செல்வார். இங்குதான் அழகருக்கு ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அணிவிக்கப்படுகிறது. இந்த மாலை ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து பிரத்யேகமாகக் கொண்டு வரப்படுகிறது. இது அண்ணனுக்கும் தங்கைக்கும் இடையிலான பாசப் பிணைப்பின் அடையாளமாகக் கருதப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;7. ஆடை அலங்காரத்தில் ஒளிந்துள்ள ரகசியம் :&lt;/p&gt;&lt;p&gt;எதிர்சேவைக்கு பிறகு, தல்லாகுளத்தில் அழகருக்கு பலவிதமான அபிஷேகங்கள் செய்து அவரை குளிர்விக்கும் நிகழ்வு நடத்தப்படும். தல்லாகுளம் கோவிலில் வைத்து தான், மறுநாள் கள்ளழகர் என்ன நிற பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்க வேண்டும் என்பது முடிவு செய்யப்படும். கள்ளழகர் என்ன நிற பட்டு உடுத்தி இறங்குகிறாரோ அதை பொறுத்து தான் அந்த ஆண்டு விவசாயம், மழை இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் உண்மை என்னவென்றால், கள்ளழகர் ஒவ்வொரு வருடமும் மஞ்சள் நிற கட்டாங்கி சேலை உடுத்தி, கள்ளர் வேடமிட்டு தான் வைகையில் இறங்குவார். அந்த உடைக்கு மேல் தான், ஒவ்வொரு ஆண்டு பஞ்சாங்கத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் வஸ்திரம் கள்ளழகருக்கு சாத்தப்படும்.&lt;/p&gt;&lt;p&gt;எதிர்சேவை என்பது வெறும் சடங்கு அல்ல; மதுரை மக்கள் தங்களின் பக்தியையும், பாசத்தையும் காட்டுவதற்காக ஊர் எல்லைக்கே சென்று கள்ளழகரை மதுரைக்குள் அழைத்து வரும் நிகழ்வாகும். சாதி, மத பேதமின்றி மதுரையின் அத்தனை தரப்பு மக்களும் ஒன்றாகக் கூடி &lsquo;வாராரு வாராரு அழகர் வாராரு&rsquo; எனப் பாடும் அந்தத் தருணம், மதுரையின் மாறாத கலாச்சாரப் பெருமையைப் பறைசாற்றுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>spiritual</category>
            <dc:creator>Priya Velan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/spiritual/madurai-chithirai-thiruvizha-2026-kallalagar-edhirsevai-unknown-things-to-know-articleshow-wiymi20"/>
        </item>
        <item>
            <title><![CDATA[தீராத கடனும் தீரும் பிரதோஷ வழிபாடு..! இன்று இந்த ஒரு வழிபாடு உங்கள் மொத்த கஷ்டத்தையும் போக்கும்..]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/spiritual/financial-freedom-and-mental-peace-unlock-blessings-this-pradosham-evening-wo7giwu</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/spiritual/financial-freedom-and-mental-peace-unlock-blessings-this-pradosham-evening-wo7giwu</guid>
            <pubDate>Wed, 29 Apr 2026 07:31:19 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;வாழ்க்கையின் கடன் சுமைகளையும் மன அழுத்தங்களையும் நீக்கி, நிம்மதி பெற வைக்கும் சக்திவாய்ந்த பிரதோஷ வழிபாடு இன்று நடைபெறுகிறது; நந்தியம்பெருமானின் அருளோடு சிவபெருமானைத் தரிசித்து இழந்த வளங்களை மீட்கும் வழிகளை இங்கே காண்போம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kqbexa29wf5ckh681naethxv,imgname-gemini-generated-image-qx2uliqx2uliqx2u-1777427458121.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;வாழ்க்கையின் கடன் சுமைகளையும் மன அழுத்தங்களையும் நீக்கி, நிம்மதி பெற வைக்கும் சக்திவாய்ந்த பிரதோஷ வழிபாடு இன்று நடைபெறுகிறது; நந்தியம்பெருமானின் அருளோடு சிவபெருமானைத் தரிசித்து இழந்த வளங்களை மீட்கும் வழிகளை இங்கே காண்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிரதோஷ காலம் என்பது சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நேரமாகும். &quot;பிரதோஷம்&quot; என்றால் &quot;தோஷங்களை நீக்குவது&quot; என்று பொருள். குறிப்பாக கடன் தொல்லைகள், மனக்கவலைகள் மற்றும் தீராத நோய்களால் அவதிப்படுபவர்களுக்குப் பிரதோஷ வழிபாடு ஒரு மிகச்சிறந்த மருந்தாக அமைகிறது.&lt;/p&gt;&lt;p&gt;இன்று பிரதோஷ தினத்தை முன்னிட்டு, மாலை வேளையில் நந்தியம் பெருமானையும் சிவனையும் எப்படி வழிபட வேண்டும் மற்றும் அதன் பலன்கள் என்ன என்பதை விரிவாகக் காண்போம்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;பிரதோஷ காலத்தின் மகிமை&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;நித்ய பிரதோஷம், பட்சப் பிரதோஷம், மாதப் பிரதோஷம் எனப் பல வகைகள் இருந்தாலும், மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான நேரமே பிரதோஷ காலம் என்று அழைக்கப்படுகிறது. பாற்கடலைக் கடைந்தபோது வெளிவந்த ஆலகால விஷத்தை உண்டு, உலகைக் காத்த சிவபெருமான், நந்தியின் கொம்புகளுக்கு இடையே நடனமாடிய நேரமே இதுவாகும். எனவே, இந்த நேரத்தில் இறைவனை வழிபடுவது கோடி புண்ணியங்களைத் தரும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிவபெருமானின் வாகனமாகவும், அவருடைய முதன்மைப் பக்தராகவும் விளங்குபவர் நந்தியம் பெருமான். பிரதோஷ வேளையில் நந்திக்குச் செய்யப்படும் அபிஷேகங்களும் வழிபாடுகளும் மிக முக்கியமானவை.&lt;/p&gt;&lt;p&gt;அபிஷேகம்: நந்திக்கு அரிசி மாவு, திருமஞ்சனம், பால், தயிர், இளநீர் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்வது விசேஷம்.&lt;/p&gt;&lt;p&gt;அருகம்புல் மாலை: நந்திக்கு அருகம்புல் மாலை அணிவிப்பதன் மூலம் நம்முடைய கர்ம வினைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.&lt;/p&gt;&lt;p&gt;செவிகளில் வேண்டுதல்: நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையில் சிவபெருமானைத் தரிசனம் செய்துவிட்டு, நமது கோரிக்கைகளை நந்தியின் செவிகளில் மெதுவாகக் கூறினால், அவர் அதை நேரடியாக ஈசனிடம் கொண்டு சேர்ப்பார் என்பது ஐதீகம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பொருளாதார ரீதியாகப் பின் தங்கியிருப்பவர்கள் மற்றும் கடன் சுமையால் தூக்கம் இழந்தவர்கள் பிரதோஷத்தன்று பின்வரும் முறையைப் பின்பற்றலாம்:&lt;/p&gt;&lt;p&gt;பஞ்சாமிர்தம் வழங்குதல்: அபிஷேகத்திற்குத் தேவையான பொருட்களைக் கோயிலுக்குத் தானமாக வழங்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;தீப வழிபாடு: மாலையில் சிவ சன்னதியில் நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;ருண விமோசன லிங்க வழிபாடு: முடிந்தால் &quot;ருண விமோசன&quot; மந்திரங்களை உச்சரிப்பது கடன் தொல்லைகளை விரைவாகக் குறைக்கும்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;மனக்கவலைகள் மறைய...&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;இன்றைய வேகமான உலகில் மன அழுத்தம் மற்றும் கவலைகள் அனைவருக்கும் பொதுவானதாகிவிட்டது. பிரதோஷ வழிபாடு மனதிற்கு அமைதியைத் தரும் ஒரு அற்புதமான தியானமாகும்.&lt;/p&gt;&lt;p&gt;சிவன் கோவில் உலா: பிரதோஷத்தன்று கோயிலைச் சுற்றி வரும்போது &quot;சோமசூக்தப் பிரதட்சணம்&quot; செய்வது வழக்கம். இது மனக்குழப்பங்களைத் தீர்த்து, தெளிவான சிந்தனையை வழங்கும்.&lt;/p&gt;&lt;p&gt;ஓம் நமசிவாய: இந்த மூல மந்திரத்தை 108 முறை உச்சரிப்பது மனதை ஒருநிலைப்படுத்தும்.&lt;/p&gt;&lt;p&gt;வில்வ அர்ச்சனை: சிவபெருமானுக்குப் பிரியமான வில்வ இலைகளால் அர்ச்சனை செய்வதன் மூலம் மன பாரம் குறைந்து, வாழ்வில் மகிழ்ச்சி பெருகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&quot;பிரதோஷ காலத்தில் செய்யப்படும் வழிபாடு, ஒரு வருடம் முழுவதும் சிவனை வழிபட்டதற்கு இணையான பலனைத் தரும்.&quot;&lt;/p&gt;&lt;p&gt;உணவு: பிரதோஷத்தன்று மதியம் உணவைத் தவிர்த்து, மாலை வழிபாடு முடிந்த பின் பிரசாதம் உட்கொள்வது சிறந்தது.&lt;/p&gt;&lt;p&gt;தானம்: வசதி உள்ளவர்கள் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் அல்லது வஸ்திர தானம் செய்வது வழிபாட்டின் பலனை இரட்டிப்பாக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;பிரதோஷ வேளையில் சிவாலயம் சென்று, நந்தியின் கொம்புகளுக்கு இடையில் ஈசனைக் காண்பது நம் வாழ்வின் இருளை நீக்கி ஒளியேற்றும். நம்பிக்கையுடனும் பக்தியுடனும் இன்று மாலை நந்தியையும் சிவனையும் வணங்குவோம். கடன் தொல்லைகள் நீங்கி, மன நிம்மதியுடன் கூடிய வளமான வாழ்வைப் பெறுவோம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>spiritual</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/spiritual/financial-freedom-and-mental-peace-unlock-blessings-this-pradosham-evening-wo7giwu"/>
        </item>
    </channel>
</rss>
