<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes"?>
<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Wed, 02 Sep 2026 11:39:35 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss/spiritual" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[Raksha Bandhan 2026: மலர்ந்தும் மலராத பாதி மலர் போல.! ரக்ஷா பந்தன் நாளில்  ராக்கி கட்ட நல்ல நேரம் எது?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/raksha-bandhan-2026-date-auspicious-timings-and-rituals-0bz4ktb</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/raksha-bandhan-2026-date-auspicious-timings-and-rituals-0bz4ktb</guid>
            <pubDate>Thu, 27 Aug 2026 16:18:50 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ரக்ஷா பந்தன் 2026 ஆகஸ்ட் 28 அன்று வருகிறது. இந்த பாரம்பரிய விழாவைக் கொண்டாடும் முன், ராக்கி கட்டும் முகூர்த்தம், பௌர்ணமி திதி, பத்ரா காலம் மற்றும் முக்கிய நகரங்கள் வாரியான நேரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0ytbc3y8vpydm7sam4vw7jg,imgname-happy-raksha-bandhan-1787740663934.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ரக்ஷா பந்தன் 2026 ஆகஸ்ட் 28 அன்று வருகிறது. இந்த பாரம்பரிய விழாவைக் கொண்டாடும் முன், ராக்கி கட்டும் முகூர்த்தம், பௌர்ணமி திதி, பத்ரா காலம் மற்றும் முக்கிய நகரங்கள் வாரியான நேரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.&lt;/p&gt;&lt;img&gt;2026-ல் ரக்ஷா பந்தன் ஆகஸ்ட் 28 அன்று கொண்டாடப்படுகிறது. பௌர்ணமி திதி ஆகஸ்ட் 27 காலை 9:08 மணிக்கு தொடங்கி, ஆகஸ்ட் 28 காலை 9:48 மணிக்கு முடிவடைகிறது.&lt;img&gt;புது டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை போன்ற முக்கிய நகரங்களில் ராக்கி கட்டுவதற்கான சரியான நேரத்தை தெரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு நகரத்திற்கும் சூரிய உதய நேரத்தைப் பொறுத்து நேரம் மாறுபடும்.&lt;img&gt;&lt;p&gt;இந்த ஆண்டு பத்ரா காலம் ஆகஸ்ட் 28-ஆம் தேதி சூரிய உதயத்திற்கு முன்பே நிறைவடைந்துவிடுகிறது. எனவே, ராக்கி கட்டும் நேரத்தில் பத்ரா காலம் இருக்காது. இதனால் சகோதரிகள் எந்தவித தடையும் இன்றி தங்கள் சகோதரர்களுக்கு ராக்கி கட்டலாம். பாரம்பரிய சடங்குகளை மகிழ்ச்சியுடன் மேற்கொண்டு, சகோதரர்களின் நலன் மற்றும் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்தனை செய்யலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;காலை முகூர்த்த நேரத்தை தவறவிட்டவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ராக்கி கட்டுவதற்கு அபராஹ்ணம் எனப்படும் பிற்பகல் நேரத்தையும் பயன்படுத்தலாம். இந்த நேரம் ராக்கி கட்டுவதற்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் மணிக்கட்டில் ராக்கி கட்டி, அவர்களின் நலன், மகிழ்ச்சி மற்றும் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்தனை செய்யலாம். அதன்பின் சகோதரர்கள் தங்கள் சகோதரிகளுக்கு பரிசுகள் அல்லது இனிப்புகளை வழங்கி அன்பை வெளிப்படுத்தலாம். இருப்பினும், ராக்கி கட்டுவதற்கான சரியான முகூர்த்த நேரம் பகுதி மற்றும் பஞ்சாங்க கணக்கீட்டைப் பொறுத்து மாறுபடலாம். எனவே, உங்கள் பகுதியில் நடைமுறையில் உள்ள உள்ளூர் பஞ்சாங்கத்தை சரிபார்த்து, அதில் குறிப்பிடப்பட்டுள்ள அபராஹ்ண நேரத்திற்கேற்ப ராக்கி கட்டும் சடங்கை மேற்கொள்வது சிறந்தது. இதனால் பாரம்பரிய முறையில் பண்டிகையை சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாட முடியும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ராக்கி பண்டிகை சகோதர-சகோதரிகளின் பாசத்தை வெளிப்படுத்தும் பாரம்பரிய இந்திய விழாவாகும். இந்நாளில் சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் மணிக்கட்டில் ராக்கி கட்டி, அவர்களின் நலன் மற்றும் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்திக்கின்றனர். சகோதரர்கள் அன்பையும் பாதுகாப்பையும் உறுதியளித்து, சகோதரிகளுக்கு இனிப்புகள் மற்றும் பரிசுகளை வழங்கி மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>spiritual</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/raksha-bandhan-2026-date-auspicious-timings-and-rituals-0bz4ktb"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Krishna Jayanthi : வீட்டு வாசலில் கிருஷ்ணர் பாதம்..பின்னணியில் இருக்கும் ஆன்மிக ரகசியம் என்ன?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/spiritual/why-do-draw-footprints-of-lord-krishna-at-house-on-krishna-jayanthi-36dsved</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/spiritual/why-do-draw-footprints-of-lord-krishna-at-house-on-krishna-jayanthi-36dsved</guid>
            <pubDate>Wed, 02 Sep 2026 10:31:07 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;Krishna Jayanthi: &lt;/strong&gt;கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டு வாசலில் கிருஷ்ணர் பாதம் வரைவது ஏன்? கண்ணனுக்கு மிகவும் பிடித்த உணவுகள் என்னென்ன? என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m1g8bzg0bd0sf7049brfvxbn,imgname-happy-krishna-jayanthi-1788325789184.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;Krishna Jayanthi: &lt;/strong&gt;கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டு வாசலில் கிருஷ்ணர் பாதம் வரைவது ஏன்? கண்ணனுக்கு மிகவும் பிடித்த உணவுகள் என்னென்ன? என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கண்ணன் அவதரித்த திருநாளை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படும் புனித நாளே கிருஷ்ண ஜெயந்தி (ஜன்மாஷ்டமி). இந்த வருடம் கிருஷ்ண ஜெயந்தி வருகிற 4-ஆம் தேதி வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. ஆவணி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி திதியில், ரோகிணி நட்சத்திரத்துடன் தொடர்புடைய நாளில் கிருஷ்ண ஜெயந்தி அனுசரிக்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டு வாசலில் இருந்து பூஜை அறை வரை குழந்தை கிருஷ்ணரின் பாதச்சுவடுகளை வரைவது பல குடும்பங்களில் கடைப்பிடிக்கப்படும் அழகான பாரம்பரியமாகும். குழந்தை கிருஷ்ணர் தங்கள் வீட்டிற்குள் வந்து அருள்புரிவார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், அவரை வரவேற்கும் விதமாக இந்தப் பாதச்சுவடுகள் வரையப்படுகின்றன.&lt;/p&gt;&lt;p&gt;பொதுவாக அரிசி மாவைக் கொண்டு இந்தப் பாதச்சுவடுகள் வரையப்படுகின்றன. குழந்தை கிருஷ்ணரை அன்புடன் வீட்டிற்குள் வரவேற்பதன் மூலம், குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்து, அவரது அருள் கிடைக்கும் என்பது ஆன்மிக நம்பிக்கையாக உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வெண்ணெய் திருடி, ஓடி ஆடி விளையாடிய பாலகிருஷ்ணரின் குழந்தைப் பருவத்தை நினைவுகூரும் வகையில், அவரது சிறிய பாதங்களைப் போன்று வீட்டில் பாதச்சுவடுகள் வரையப்படுகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;ol&gt; &lt;li&gt;சிறுவயது முதல் கண்ணனுக்கு மிகவும் பிடித்தது வெண்ணெய். கோகுலத்தில் கண்ணன் வெண்ணெயைத் திருடி சாப்பிட்டதாகக் கூறப்படும் பல்வேறு புராணக் கதைகள் இன்றளவும் பக்தர்களால் விரும்பிப் பேசப்படுகின்றன.&lt;/li&gt; &lt;li&gt;கண்ணனின் குழந்தைப் பருவ நண்பரான குசேலர், அவரைச் சந்திக்கச் சென்றபோது அன்புடன் கொண்டு சென்ற அவலை கண்ணன் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டதாக புராணக் கதை கூறுகிறது. இதனால், கண்ணனுக்கு அவல் மிகவும் பிடித்தமான நைவேத்தியமாகக் கருதப்படுகிறது.&lt;/li&gt; &lt;li&gt;ஆயர்பாடி வாழ்க்கையுடன் தொடர்புடைய கிருஷ்ணருக்கு, தயிர், மோர், நெய் மற்றும் பால்கோவா போன்ற பால் சார்ந்த உணவுகள் அனைத்தும் மிகவும் உகந்தவை.&lt;/li&gt; &lt;li&gt;தமிழக வீடுகளில் கிருஷ்ண ஜெயந்தி என்றாலே உப்பு சீடை, வெல்ல சீடை, முறுக்கு, அப்பம், வெண்ணெய், கல்கண்டு உள்ளிட்ட பாரம்பரிய பலகாரங்களைத் தயாரித்து, கண்ணனுக்கு நைவேத்தியமாகப் படைப்பது வழக்கம்.&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;img&gt;&lt;p&gt;கிருஷ்ண ஜெயந்தி அன்று வீடுகளில் குழந்தைகளை பாலகிருஷ்ணர் வேடத்தில் அலங்கரிப்பது, காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் அழகான பக்தி மற்றும் பண்பாட்டு பாரம்பரியமாகும். வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு கிருஷ்ணர் அல்லது ராதை வேடம் அணிவித்து, தலையில் மயிலிறகு, கையில் புல்லாங்குழல், கழுத்தில் மாலை என அலங்கரித்து, பாலகிருஷ்ணரைப் போல் அழகுபடுத்தி மகிழ்வார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;குழந்தைகளை கிருஷ்ணர் வேடத்தில் அலங்கரிப்பது வெறும் அலங்காரம் மட்டுமல்ல. குழந்தைகளுக்கு ஆன்மிக மற்றும் பண்பாட்டு விஷயங்களை அறிமுகப்படுத்துவது, குடும்பத்துடன் பண்டிகையை மகிழ்ச்சியாகக் கொண்டாடுவது என பாரம்பரியமாக பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>spiritual</category>
            <dc:creator>Vishnupriya</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/spiritual/why-do-draw-footprints-of-lord-krishna-at-house-on-krishna-jayanthi-36dsved"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Hindu Wedding : தாலிக்கு 3 முடிச்சு போடுறது ஏன்? இதுக்கு பின்னாடி இவ்ளோ அர்த்தம் இருக்கா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/why-are-three-knots-tied-in-a-hindu-wedding-646gl7w</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/why-are-three-knots-tied-in-a-hindu-wedding-646gl7w</guid>
            <pubDate>Wed, 26 Aug 2026 12:47:00 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Hindu Wedding : இந்து திருமணத்தில் மாங்கல்ய தாரணத்தின் போது மூன்று முடிச்சுகள் போடப்படுவது ஆன்மீக, சமூக, குடும்பப் பொறுப்புகளைக் குறிக்கிறது. அவை சிவன்-பார்வதி போன்ற தெய்வங்களின் அருளையும், தம்பதியரின் நீண்ட ஆயுளையும் ஒற்றுமையையும் வேண்டுகின்றன.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0yek0ybgf3cx5xk7kymr6st,imgname-why-are-three-knots-tied-in-a-hindu-wedding-1787728331723.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Hindu Wedding : இந்து திருமணத்தில் மாங்கல்ய தாரணத்தின் போது மூன்று முடிச்சுகள் போடப்படுவது ஆன்மீக, சமூக, குடும்பப் பொறுப்புகளைக் குறிக்கிறது. அவை சிவன்-பார்வதி போன்ற தெய்வங்களின் அருளையும், தம்பதியரின் நீண்ட ஆயுளையும் ஒற்றுமையையும் வேண்டுகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்து மதத் திருமணங்களில் பல சடங்குகள் இருந்தாலும், அவற்றுள் தாலி கட்டும் நிகழ்வே மிகவும் முதன்மையானதும் புனிதமானதும் ஆகும். வேத மந்திரங்கள் ஒலிக்க, மணமகன் மணமகளின் கழுத்தில் மங்கல நாணை அணிவித்து மூன்று முடிச்சுகள் இடும் வேளையில் அந்தத் தம்பதியர் இல்லற வாழ்க்கையில் காலடி எடுத்து வைக்கின்றனர். இந்த மூன்று முடிச்சுகள் என்பது வெறும் பாரம்பரியச் சடங்கு மட்டுமல்லாமல், அதனுள் ஆன்மீக, தார்மீக மற்றும் சமூகவியல் சார்ந்த ஆழமான தத்துவங்களும் உண்மைகளும் பொதிந்துள்ளன. அவற்றின் சிறப்புகளை விரிவாகக் கீழே காண்போம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Budhan Uccha Peyarchi : புதன் உச்ச பெயர்ச்சியில் உருவாகும் ஐயப்பன் அருள்! அசுர வளர்ச்சி பெறும் 4 ராசிகள்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்து முறைப்படி திருமணத்தின்போது தாலியில் இடப்படும் மூன்று முடிச்சுகளுக்குப் பின்னால் 'திரிகரண சுத்தி' என்னும் மிக ஆழமான ஆன்மீகத் தத்துவம் மறைந்துள்ளது. அதாவது, மனம், வாக்கு, செயல் என்னும் மூன்றின் ஒருங்கிணைப்பைக் குறிப்பதே இந்த மூன்று முடிச்சுகளாகும். அவற்றின் விளக்கங்களைக் கீழே காணலாம்:&lt;/p&gt;&lt;h3&gt;&lt;strong&gt;1. முதல் முடிச்சு (மனசு - மனம்) கருத்து: இது 'மனம்' சார்ந்த பந்தத்தைக் குறிக்கிறது.&lt;/strong&gt;&lt;/h3&gt;&lt;p&gt;&lt;strong&gt;விளக்கம்: &lt;/strong&gt;மணமகன் தன் மனதார மணமகளைத் தனது சரிபாதியாக ஏற்று, வாழ்நாள் முழுவதும் அவரிடம் அன்பாகவும் உரிய மரியாதையுடனும் நடந்துகொள்வேன் என்று மனப்பூர்வமாக உறுதிமொழி எடுப்பதே முதல் முடிச்சாகும். மணமகளும் தன் முழு மனதுடன் கணவனை ஏற்றுக்கொள்வதை இது உணர்த்துகிறது.&lt;/p&gt;&lt;h3&gt;&lt;strong&gt;2. இரண்டாவது முடிச்சு (வாக்கு - பேச்சு) கருத்து: இது 'வாக்கு' அல்லது சொல்லைக் காப்பாற்றும் தர்மத்தைக் குறிக்கிறது.&lt;/strong&gt;&lt;/h3&gt;&lt;p&gt;&lt;strong&gt;விளக்கம்:&lt;/strong&gt; வாழ்க்கைப் பயணத்தில் எத்தகைய இன்ப துன்பங்கள் வந்தாலும் ஒருவருக்கொருவர் துணையாக நிற்போம் என்றும், ஒருபோதும் கொடுத்த வாக்கை மீறாமல் உண்மையும் நேர்மையும் நிறைந்த பாதையில் வாழ்வோம் என்றும் தம்பதியினர் ஒருவருக்கொருவர் அளிக்கும் உறுதிமொழியாகும்.&lt;/p&gt;&lt;h3&gt;&lt;strong&gt;3. மூன்றாவது முடிச்சு (கர்மணா - செயல்) கருத்து: இது 'செயல்' வடிவமான தர்மத்தைக் குறிக்கிறது.&lt;/strong&gt;&lt;/h3&gt;&lt;p&gt;&lt;strong&gt;விளக்கம்: &lt;/strong&gt;அறவழியில் உழைத்து குடும்பத்தைக் காப்பற்றவும், சமூகத்திற்கு நற்பலன்களைச் சேர்க்கவும் மணமகன் செய்யும் தார்மீகப் பிரமாணத்தை இது குறிக்கிறது. அதற்கேற்ப மனைவியும் தன் பங்களிப்பைச் செய்து, தர்ம நெறிப்படி கணவனுடன் இணைந்து வாழ்வேன் என்பதை இந்த மூன்றாவது முடிச்சு உறுதிப்படுத்துகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;1 Gram Gold : 1 கிராம் தங்கத்தில் அசத்தல் கம்மல் டிசைன்ஸ்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மனித வாழ்வில் பின்பற்ற வேண்டிய முக்கிய புருஷார்த்தங்களாக தர்மம், அர்த்தம், காமம் ஆகிய மூன்றும் கூறப்படுகின்றன. இந்த மூன்றையும் தம்பதியினர் இருவரும் இணைந்து பகிர்ந்துகொண்டு, இறுதியில் மோட்சத்தை நோக்கிப் பயணிப்பதே திருமணத்தின் மூன்று முடிச்சுகளுக்குப் பின்னால் உள்ள மற்றொரு உள்ளார்ந்த அர்த்தமாகக் கருதப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;முதல் முடிச்சு &lsquo;தர்மத்தின்&rsquo; அடையாளம். கணவனும் மனைவியும் இணைந்து அறம் சார்ந்த வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.&lt;/p&gt;&lt;p&gt;இரண்டாவது முடிச்சு &lsquo;அர்த்தத்தின்&rsquo; அடையாளம். குடும்பத்தைச் சீராக நடத்துவதற்குத் தேவையான செல்வத்தையும், உழைப்பையும் இருவரும் இணைந்து பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதை இது தெரிவிக்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;மூன்றாவது முடிச்சு &lsquo;காமத்தின்&rsquo; அடையாளம். கணவனும் மனைவியும் மகிழ்ச்சியும் அன்பும் நிறைந்த இல்லற வாழ்க்கையை வாழ்ந்து, வம்சப் பெருக்கத்திற்குக் காரணமாக இருக்க வேண்டும் என்பதை இது நினைவூட்டுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;சந்திரகிரகணம் 2026 : விஷ்ணுவின் பரிபூரண அருளால் டக்டக்குன்னு டாப்புக்கு போகும் 4 ராசிகள்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மனிதனுக்கு ஸ்தூல, சூட்சும, காரண சரீரம் என மூன்று உடல்கள் இருப்பதாக தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன. திருமணம் என்பது இருவர் முழுமையாக ஒன்றிணைவது. எனவே, ஒவ்வொரு முடிச்சும் ஒவ்வொரு உடலுக்காகப் போடப்படுவதாக நம்பப்படுகிறது. கணவன்-மனைவி வாழ்நாள் முழுவதும் மூன்று உடல்களாலும் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்பதே இதன் தத்துவம். கழுத்தில் உள்ள மங்களசூத்திரம் ஒரு ஆபரணம் மட்டுமல்ல, அது கணவனின் ஆயுளாகப் பெண்கள் கருதுகின்றனர். அதனால்தான் பூஜைகள் மற்றும் விரதங்களின்போது பெண்கள் மங்களசூத்திரத்திற்கும் பொட்டு வைத்து வணங்குகிறார்கள். திருமணமான பெண் கழுத்தில் மங்களசூத்திரம் இல்லை என்றால், கணவர் இறந்துவிட்டார் என்று அர்த்தம். எனவே, ஃபேஷனுக்காக மங்களசூத்திரத்தைக் கழற்றக்கூடாது என்று கூறுவார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Rice : அரிசியில் வண்டு வராமல் இருக்க இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்து தர்மத்தில் &lsquo;மூன்று&rsquo; என்ற எண்ணுக்கு முக்கியத்துவம் உண்டு. மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரர் இந்த உலகை இயக்குவதாகவும், மூவுலகங்களான பூலோகம், பாதாளலோகம், தேவலோகம் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. இதேபோன்ற ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையில்தான், திருமணத்தில் மூன்று முடிச்சுகள் போட்டு, மணமக்கள் கடவுளைச் சாட்சியாக வைத்து ஒன்றிணைகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;சில சம்பிரதாயங்களின்படி, மணமகன் முதல் முடிச்சை மட்டும் போடுவார். மீதமுள்ள இரண்டு முடிச்சுகளையும் மணமகனின் சகோதரியான நாத்தனார் போடுவது சில பகுதிகளில் வழக்கமாக உள்ளது. புதிதாக அந்தக் குடும்பத்திற்குள் அடியெடுத்து வைக்கும் மணமகளை அன்புடன் வரவேற்பதையும், இனி அவருக்கு எப்போதும் துணையாக இருப்போம் என்ற உறுதியையும் வெளிப்படுத்தும் வகையில் இந்த முடிச்சுகள் போடப்படுகின்றன.&lt;/p&gt;&lt;p&gt;இவ்வாறு, இந்து சம்பிரதாயத்தில் மணமகளின் கழுத்தில் போடப்படும் ஒவ்வொரு முடிச்சிலும் தனித்துவமான பொறுப்பு, நம்பிக்கை மற்றும் பண்பாட்டு அர்த்தம் பொதிந்துள்ளது. இந்த மூன்று முடிச்சுகளின் பந்தம் இரண்டு உடல்களை மட்டுமல்லாமல், இரண்டு மனங்களையும், இரண்டு குடும்பங்களையும் வாழ்நாள் முழுவதும் ஒன்றிணைக்கும் புனிதமான உறவின் அடையாளமாகவும் திகழ்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Green Chillies : வீட்டுத் தொட்டியில் பச்சை மிளகாய் வளர்க்க 6 ஈஸி டிப்ஸ்!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>spiritual</category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/why-are-three-knots-tied-in-a-hindu-wedding-646gl7w"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Indian Temples : ஏன் இந்த கோயில்கள்ல மட்டும் மக்கள் செருப்பு போட்டுட்டு போறாங்க?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/why-do-people-wear-shoes-inside-these-indian-temples-7q3wgmi</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/why-do-people-wear-shoes-inside-these-indian-temples-7q3wgmi</guid>
            <pubDate>Wed, 02 Sep 2026 11:37:01 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Indian Temples : பொதுவாகக் கோயில்களில் செருப்பு தடை என்றாலும், உத்தரகண்டின் கூர் தேவதா கோயில் மற்றும் கேரளாவின் சில தலங்களில் பக்தர்கள் செருப்பு அணிந்தே வழிபடும் மரபு உள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m1gbgswyttjv7fhktnpbdeaz,imgname-why-do-people-wear-shoes-inside-these-indian-temples-1788329093022.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Indian Temples : பொதுவாகக் கோயில்களில் செருப்பு தடை என்றாலும், உத்தரகண்டின் கூர் தேவதா கோயில் மற்றும் கேரளாவின் சில தலங்களில் பக்தர்கள் செருப்பு அணிந்தே வழிபடும் மரபு உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பொதுவாக கோயிலுக்குச் சென்றால் செருப்பைக் கழட்டுவதுதான் வழக்கம். ஆனால், நம் நாட்டில் சில கோயில்களில் செருப்பு அணிந்தபடியே உள்ளே அனுமதிக்கிறார்கள் என்பது வியப்பான உண்மை. அனைத்துக் கோயில்களிலும் இல்லாத இந்த விதி அங்கு மட்டும் பின்பற்றுவதற்கான காரணத்தை இப்போது பார்ப்போம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Sadayaga Yoga : ஏழரை சனியிலிருந்து தப்பி கோடிகளைக் குவிக்கப் போகும் 2 ராசிகள்! சடயாக யோகத்தால் இனி டாப் கிளாஸ் வாழ்க்கை!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவின்போது பக்தர்கள் செருப்பு அணிந்தே கோயில் வளாகத்திற்குள் செல்வர் (வழக்கமான தினசரி பூஜைகளில் அனுமதி இல்லை). தீய சக்திகள், செய்வினை மற்றும் உடல் அல்லது மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் தேவ்ஜி மகாராஜை தரிசித்தால் அதிலிருந்து விடுதலை பெறுவர் என்று நம்பப்படுகிறது. செருப்புடன் நடப்பதன் மூலம் தங்களைப் பிடித்திருக்கும் தீய சக்திகள் விலகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Silver Jewellery : கறுத்துப்போன வெள்ளி நகைகளை 5 நிமிஷத்துல பளபளக்க வைக்க சூப்பர் டிப்ஸ்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இங்கு பக்தர்கள் செருப்பைக் கழட்டாமல் அம்மனைத் தரிசிக்கலாம். இக்கோயிலின் அம்மன் மிகவும் உக்கிரமானவராகவும், அதேசமயம் பக்தர்களைக் கண்ணின் மணிபோல் காக்கும் தாயாகவும் கருதப்படுகிறார். பக்தர்கள் முள் பாதைகள் மற்றும் கடினமான வழிகளைக் கடந்து வருவதால் அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் இருக்க, அம்மனே செருப்புடன் வர அனுமதி வழங்கியதாக ஒரு நாட்டுப்புறக் கதை சொல்லப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Thick Curd : கெட்டித் தயிர் வேணுமா? இந்த ஒரு இலையை போடுங்க! பாட்டி காலத்து டெக்னிக்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒடிசாவில் உள்ள பூரி ஜெகந்நாதர் கோயிலின் பிரதான கருவறைக்குள் செருப்பு அணிந்து செல்ல அனுமதியில்லை. இருப்பினும், கோயிலின் சமையலறை அதாவது மகாபிரசாதம் தயாராகும் இடம் மற்றும் சில குறிப்பிட்ட பூஜை வளாகங்களில் சேவகர்களும் பூசாரிகளும் மரத்தாலான பாதுகைகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றனர். பொதுவாக கோயில்களுக்குள் செருப்பு அனுமதிக்கப்படாததற்கு இரண்டு முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன. முதாவதாக சுத்தம், அதாவது வெளியில் இருந்து வரும் அழுக்கு மற்றும் கிருமிகள் கோயிலுக்குள் வராமல் தடுப்பது. இரண்டாவதாக ஆற்றல், அதாவது கோயிலில் உள்ள கல் தரை மற்றும் மந்திர உச்சரிப்புகளால் உருவாகும் நேர்மறை ஆற்றல் நமது கால்கள் வழியாக உடலுக்குள் செல்லும் என்ற நம்பிக்கை. அதனால்தான் கோயில்களில் செருப்பு அணியக் கூடாது என்று கூறுகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Numerology : இந்த தேதியில் பிறந்தவர்கள் 40 வயதுக்கு பின் கோடீஸ்வரர் ஆவது உறுதி! உங்க பிறந்த தேதி இருக்கா?&lt;/p&gt;]]></content:encoded>
            <category>spiritual</category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/why-do-people-wear-shoes-inside-these-indian-temples-7q3wgmi"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Kungumam : சுமங்கலிப் பெண்கள் உச்சி வகிடில் குங்குமம் வைப்பது ஏன் தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/spiritual/why-do-married-hindu-women-apply-kumkum-on-the-hair-parting-7yetqqp</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/spiritual/why-do-married-hindu-women-apply-kumkum-on-the-hair-parting-7yetqqp</guid>
            <pubDate>Tue, 01 Sep 2026 13:20:32 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Kungumam : திருமணமான பெண்கள் குங்குமம் வைப்பது மங்களகரமானது மட்டுமல்ல, இதன் பின்னணியில் அறிவியல் காரணமும் உண்டு. புருவங்களுக்கு நடுவே உள்ள சக்தி வாய்ந்த மர்மஸ்தானத்தில் குங்குமம் வைப்பதால் மன அமைதி, நேர்மறை ஆற்றல் மற்றும் உடல் ஆரோக்கியம் மேம்படும்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m1dyzba1gj5bkj1vpnffev2p,imgname-why-do-married-hindu-women-apply-kumkum-on-the-hair-parting-1788248829249.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Kungumam : திருமணமான பெண்கள் குங்குமம் வைப்பது மங்களகரமானது மட்டுமல்ல, இதன் பின்னணியில் அறிவியல் காரணமும் உண்டு. புருவங்களுக்கு நடுவே உள்ள சக்தி வாய்ந்த மர்மஸ்தானத்தில் குங்குமம் வைப்பதால் மன அமைதி, நேர்மறை ஆற்றல் மற்றும் உடல் ஆரோக்கியம் மேம்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்து பாரம்பரியத்தில் சிந்தூரத்திற்கு எப்போதுமே தனிச்சிறப்புண்டு. திருமணமான பெண்கள் தங்கள் நெற்றி வகிட்டில் இதனை அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவரவர் வழக்கம் மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப சிலர் சிந்தூரத்தையோ, வேறு சிலர் குங்குமத்தையோ தேர்ந்தெடுக்கின்றனர். சிவப்பு நிறமானது சக்தி, மங்களகரம் மற்றும் ஆழமான அன்பின் குறியீடாகப் போற்றப்படுகிறது. தன் கணவர் நீண்ட ஆயுளுடன் வாழவும், இல்லறத்தில் மகிழ்ச்சி தழைத்தோங்கவும் பெண்கள் இதனை அணிவதாக ஐதீகம் உள்ளது. ஆகையால், இது வெறும் ஒப்பனைப் பொருள் மட்டுமன்றி, தம்பதியரின் புனிதமான திருமண பந்தத்தை உணர்த்தும் அடையாளமாகவும் திகழ்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Numerology : இந்த தேதியில் பிறந்தவர்கள் 40 வயதுக்கு பின் கோடீஸ்வரர் ஆவது உறுதி! உங்க பிறந்த தேதி இருக்கா?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நெற்றி வகுட்டிலும் புருவங்களுக்கு இடைப்பட்ட பகுதியிலும் ஏன் குங்குமம் இடப்படுகிறது என்பதன் பின்னணியில் ஆன்மீக நம்பிக்கைகள் பல உள்ளன. இந்திய ஆன்மீக மரபில், புருவங்களுக்கு நடுவே உள்ள மையம் 'ஆக்ஞா சக்கரம்' என அழைக்கப்படுகிறது. சிந்தனைத் திறனுக்கும் மனதை ஒருமுகப்படுத்துவதற்கும் இதுவே மிக முக்கிய இடமாகக் கருதப்படுகிறது. இக்காரணத்தினால்தான் இப்பகுதியில் திலகம் அல்லது பொட்டு வைக்கும் வழக்கம் உருவானது. அதேபோன்று, சிந்தூரம் அணிவதும் இதே ஆன்மீக நம்பிக்கையுடன் தொடர்புடையதே எனப் பண்டிதர்கள் குறிப்பிடுகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Onion : ரேஷன் கடைகளில் இனி மலிவு விலையில் வெங்காயம்! தமிழக அரசு சூப்பர் திட்டம்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நெற்றியின் நடுப்பகுதியில் ஏராளமான நரம்பு முடிச்சுகள் அமைந்துள்ளதால், அப்பகுதியை லேசாக அழுத்துவது மன அமைதியைத் தரும் என்று பாரம்பரிய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், சிந்தூரம் இடுவதால் உடல்நலக் கோளாறுகள் நீங்கும் என்பதற்கு உறுதியான அறிவியல் சான்றுகள் ஏதுமில்லை. மேலும், சந்தையில் விற்கப்படும் அனைத்து சிந்தூரங்களும் ஒரே தரத்தில் இருப்பதில்லை என்பதால், நச்சு வேதிப்பொருட்கள் அற்ற தரமான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பதே பாதுகாப்பானது. சுருக்கமாகக் கூறின், சிந்தூரம் அணிதல் என்பது மதம், பாரம்பரியம் மற்றும் ஆன்மீக நம்பிக்கைகளின் கலவையாகும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Mosquito : இந்தச் செடிகளை வீட்டுக்குள்ள வச்சுப் பாருங்க! கொசு தலைதெறிக்க ஓடும்!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>spiritual</category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/spiritual/why-do-married-hindu-women-apply-kumkum-on-the-hair-parting-7yetqqp"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Astrology: ராகு-கேதுவால் கிடைக்கும் ஜாக்பாட்.! 5 நட்சத்திரங்களுக்கு கோடீஸ்வர யோகம்.! பணபலம், அதிகார பலம் அதிகரிக்கும் நேரம்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/rahu-ketu-jackpot-5-nakshatras-set-for-crorepati-yoga-money-power-to-rise-b94l4py</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/rahu-ketu-jackpot-5-nakshatras-set-for-crorepati-yoga-money-power-to-rise-b94l4py</guid>
            <pubDate>Wed, 02 Sep 2026 06:38:38 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ஜோதிடத்தில் ராகு-கேதுவின் சாதகமான தாக்கம் சில குறிப்பிட்ட நட்சத்திரங்களுக்கு எதிர்பாராத முன்னேற்றங்கள், பணவரவு, மற்றும் தொழில் வளர்ச்சியைத் தரக்கூடும். இந்த காலகட்டம் சமூக அந்தஸ்தையும், அதிகாரத்தையும் அதிகரிக்கும் வாய்ப்புகளை வழங்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m1ftvjxdpp7x57fxg55bkanx,imgname-chatgpt-image-sep-2--2026--06-42-46-am--1--1788311620525.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஜோதிடத்தில் ராகு-கேதுவின் சாதகமான தாக்கம் சில குறிப்பிட்ட நட்சத்திரங்களுக்கு எதிர்பாராத முன்னேற்றங்கள், பணவரவு, மற்றும் தொழில் வளர்ச்சியைத் தரக்கூடும். இந்த காலகட்டம் சமூக அந்தஸ்தையும், அதிகாரத்தையும் அதிகரிக்கும் வாய்ப்புகளை வழங்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜோதிடத்தில் ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்கள் என்று அழைக்கப்பட்டாலும், அவற்றின் தாக்கம் ஒரு நபரின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியதாக கருதப்படுகிறது. குறிப்பாக ராகு எதிர்பாராத வாய்ப்புகள், திடீர் பணவரவு, வெளிநாட்டு தொடர்புகள், தொழில்நுட்பம், அரசியல், அதிகாரம் போன்றவற்றுடன் தொடர்புடைய கிரகமாக பார்க்கப்படுகிறார். அதேபோல் கேது ஆன்மிகம், ஞானம், உள்ளுணர்வு, பழைய கர்ம பலன்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களை குறிக்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;ஒருவரது ஜாதகத்தில் ராகு அல்லது கேது சாதகமான நிலையில் இருந்து, அதன் மீது சுப கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை கிடைக்கும்போது வாழ்க்கையில் இதுவரை எதிர்பார்க்காத முன்னேற்றங்கள் ஏற்படலாம் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். குறிப்பாக சில நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு இந்த காலகட்டம் பணவரவு, தொழில் வளர்ச்சி, பதவி உயர்வு மற்றும் சமூக அந்தஸ்து அதிகரிக்கும் காலமாக அமைய வாய்ப்புள்ளதாக ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ராகு ஆசை, லட்சியம், புகழ், அதிகாரம், புதுமையான சிந்தனை மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை குறிக்கும் கிரகமாக ஜோதிடத்தில் கருதப்படுகிறது. ராகுவின் சாதகமான தாக்கம் ஒருவருக்கு பெரிய இலக்குகளை நோக்கி செல்லும் தைரியத்தையும், மற்றவர்களிடமிருந்து மாறுபட்டு சிந்திக்கும் திறனையும் கொடுக்கக்கூடும்.&lt;/p&gt;&lt;p&gt;குறிப்பாக தொழிலில் புதிய முயற்சிகளை மேற்கொள்பவர்கள், ஆன்லைன் தொழில், தகவல் தொழில்நுட்பம், ஊடகம், வெளிநாட்டு நிறுவனங்கள், இறக்குமதி-ஏற்றுமதி, டிஜிட்டல் துறைகள் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு ராகுவின் அனுகூலம் சிறப்பான வாய்ப்புகளைத் தரும் என்று ஜோதிட நம்பிக்கைகள் கூறுகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கேது பொதுவாக துறவு மற்றும் ஆன்மிகத்தைக் குறிக்கும் கிரகமாக பார்க்கப்பட்டாலும், பொருளாதார ரீதியாகவும் சில முக்கியமான பலன்களை வழங்கக்கூடியவர். கேதுவின் தாக்கம் பழைய பிரச்சினைகளுக்கு எதிர்பாராத தீர்வு கிடைப்பது, தேவையற்ற செலவுகள் குறைவது, முக்கிய முடிவுகளை தெளிவாக எடுப்பது போன்ற மாற்றங்களை ஏற்படுத்தலாம்.&lt;/p&gt;&lt;p&gt;ராகு வெளிப்புற உலகில் வளர்ச்சியைத் தூண்டும் சக்தியாக இருந்தால், கேது ஒருவரின் உள்ளார்ந்த திறமையை வெளிக்கொண்டு வருவதாக ஜோதிடத்தில் கருதப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் முக்கியமான திருப்பத்தை சந்திக்கக்கூடிய காலமாக இந்த கிரகங்களின் தாக்கம் பார்க்கப்படுகிறது. திருமணம் போன்ற சுபகாரியங்கள் நிகழும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த காலகட்டம் பொருளாதார ரீதியாக முக்கியமான மாற்றங்களை கொண்டு வரக்கூடியதாக இருக்கலாம். சூரியனின் ஆதிக்கம் பெற்ற இந்த நட்சத்திரத்திற்கு ராகு-கேதுவின் தாக்கம் கிடைக்கும்போது, தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன் புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளும் உருவாகலாம்.&lt;/p&gt;&lt;p&gt;தொழில் செய்பவர்களுக்கு எதிர்பாராத வகையில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கலாம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தொழில் ஒப்பந்தம் கைகூடலாம். வேலை செய்பவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைத்து, பதவி உயர்வு அல்லது முக்கியமான பொறுப்பு கிடைக்கக்கூடும்.&lt;/p&gt;&lt;p&gt;பண விஷயங்களில் இருந்த நெருக்கடிகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கலாம். வீடு, நிலம் அல்லது வாகனம் வாங்கும் முயற்சிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ராகுவின் ஆதிக்கம் பெற்ற திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ராகுவின் அனுகூலம் கிடைக்கும் காலமாக இது அமையலாம். புதிய சிந்தனைகள், துணிச்சலான முடிவுகள் மற்றும் எதிர்பாராத வாய்ப்புகள் வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.&lt;/p&gt;&lt;p&gt;குறிப்பாக தொழில்நுட்பம், வெளிநாட்டு வேலை, ஆன்லைன் தொழில், தகவல் தொடர்பு, ஊடகம் மற்றும் டிஜிட்டல் துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;தொழில் வளர்ச்சி மட்டுமின்றி வருமானத்திற்கான கூடுதல் வழிகளும் உருவாகலாம். எதிர்பாராத பணவரவு கிடைப்பதற்கான சூழல் ஏற்படலாம். நீண்ட காலமாக முயற்சி செய்து வந்த ஒரு விஷயம் வெற்றியடைவதால் மனநிம்மதியும் அதிகரிக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த காலகட்டம் வளர்ச்சி மற்றும் நிலையான முன்னேற்றத்தை வழங்கக்கூடியதாக இருக்கலாம். சனியின் ஆதிக்கம் கொண்ட இந்த நட்சத்திரத்திற்கு சாதகமான கிரகப் பலன்கள் கிடைக்கும்போது, கடந்த கால உழைப்புக்கான பலன் கிடைக்கத் தொடங்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு அல்லது புதிய பொறுப்பு கிடைக்கலாம். அரசு மற்றும் தனியார் துறைகளில் இருப்பவர்களுக்கு முக்கியமான வாய்ப்புகள் கிடைக்கக்கூடும்.&lt;/p&gt;&lt;p&gt;தொழில் செய்பவர்கள் புதிய முதலீடுகள் மற்றும் தொழில் விரிவாக்கம் குறித்து சிந்திக்கலாம். குடும்பத்தில் பொருளாதார நிலை மேம்படலாம். சேமிப்பில் கவனம் செலுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் நல்ல நிதி பாதுகாப்பை உருவாக்க முடியும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த காலகட்டத்தில் லட்சியங்களை நிறைவேற்றும் வாய்ப்புகள் அதிகரிக்கலாம். குருவின் ஆதிக்கம் கொண்ட இந்த நட்சத்திரத்திற்கு ராகு-கேதுவின் தாக்கம் புதிய பாதைகளைத் திறக்கக்கூடும் என்று ஜோதிட நம்பிக்கைகள் கூறுகின்றன.&lt;/p&gt;&lt;p&gt;தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படலாம். முக்கியமான நபர்களின் அறிமுகம் கிடைத்து, அதன் மூலம் புதிய வாய்ப்புகள் உருவாகலாம். வெளிநாடு தொடர்பான வேலை அல்லது தொழில் முயற்சிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான செய்திகள் கிடைக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;பணவரவு அதிகரிப்பதுடன் பழைய கடன்களை அடைப்பதற்கான வாய்ப்புகளும் உருவாகலாம். சிலருக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த சொத்து தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த காலகட்டம் வாழ்க்கையில் நிலையான முன்னேற்றத்தை உருவாக்கக்கூடியதாக இருக்கலாம். சனியின் ஆதிக்கம் பெற்ற இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பொறுமையுடன் செயல்பட்டால் அதன் பலனை அனுபவிக்கக்கூடும்.&lt;/p&gt;&lt;p&gt;வேலை, தொழில் மற்றும் நிதி தொடர்பான விஷயங்களில் சாதகமான மாற்றங்கள் ஏற்படலாம். நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த திட்டங்கள் மீண்டும் செயல்பாட்டுக்கு வரலாம். தொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளுடன், தேவையற்ற செலவுகளை குறைத்து பணத்தை சேமிக்கும் சூழலும் உருவாகலாம். சிலருக்கு வீடு, நிலம் போன்ற நீண்டகால சொத்துகளில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;சமூகத்தில் மரியாதை மற்றும் செல்வாக்கு அதிகரிக்கலாம். குடும்பத்தினரின் ஆதரவு கிடைப்பதால் முக்கியமான முடிவுகளை தைரியமாக எடுக்க முடியும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த காலகட்டம் அதிர்ஷ்டத்தின் கதவுகளைத் திறக்கும் காலமாக இருக்கலாம். குருவின் ஆதிக்கம் பெற்ற இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ராகு-கேதுவின் தாக்கத்தால் வாழ்க்கையில் சில எதிர்பாராத மாற்றங்களை சந்திக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;தொழில் செய்பவர்களுக்கு புதிய முதலீட்டாளர்கள், வாடிக்கையாளர்கள் அல்லது தொழில் கூட்டாளிகள் கிடைக்கலாம். வெளிநாட்டு தொடர்புகள் மூலம் வருமான வாய்ப்புகள் உருவாகலாம்.&lt;/p&gt;&lt;p&gt;வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கலாம். ஏற்கெனவே பணியில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு அல்லது முக்கியமான பொறுப்பு கிடைக்கும் சூழல் ஏற்படலாம்.&lt;/p&gt;&lt;p&gt;பணவரவு அதிகரிப்பதுடன், பழைய நிதி பிரச்சினைகளை சரிசெய்யும் வாய்ப்பும் கிடைக்கலாம். சிலருக்கு எதிர்பாராத பணவரவு கிடைத்து, நீண்ட நாட்களாக நிறைவேற்ற முடியாமல் இருந்த குடும்பத் தேவைகளை நிறைவேற்ற முடியும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த காலகட்டம் பல்வேறு விதங்களில் முக்கியமானதாக அமையலாம். புதன் ஆதிக்கம் கொண்ட இந்த நட்சத்திரத்திற்கு ராகுவின் தாக்கம் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்கவும், புதிய வாய்ப்புகளை அடையாளம் காணவும் உதவக்கூடும் என்று ஜோதிட நம்பிக்கைகள் கூறுகின்றன.&lt;/p&gt;&lt;p&gt;தொழில் மற்றும் பண விஷயங்களில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படலாம். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவுக்கு வரலாம். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;அரசு, நிர்வாகம், வங்கி, கணக்கியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிகத் துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உருவாகலாம். சமூகத்தில் மரியாதையும் செல்வாக்கும் அதிகரிக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த காலகட்டத்தில் பணம் மற்றும் புகழ் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் கிடைக்கக்கூடும். சுக்கிரனின் ஆதிக்கம் கொண்ட இந்த நட்சத்திரத்திற்கு ராகு-கேதுவின் கோச்சார தாக்கம் சாதகமாக அமைந்தால் எதிர்பாராத வாய்ப்புகள் உருவாகலாம்.&lt;/p&gt;&lt;p&gt;கலை, சினிமா, அழகு, ஆடை, விற்பனை, வியாபாரம், ஆன்லைன் துறை போன்றவற்றில் இருப்பவர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளைப் பெறலாம்.&lt;/p&gt;&lt;p&gt;வேலை செய்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும் சூழல் உருவாகலாம். சிலருக்கு பதவி உயர்வு அல்லது முக்கியமான பொறுப்பு கிடைக்கலாம். குடும்பத்தில் பொருளாதார நிலை மேம்பட்டு, வீடு அல்லது நிலம் தொடர்பான முயற்சிகளும் சாதகமாக நகரலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அறிவாற்றல், தேடல் மனப்பான்மை மற்றும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளும் ஆர்வம் அதிகமாக இருக்கும் என்று ஜோதிடம் கூறுகிறது. ராகுவின் தாக்கம் இவர்களுக்கு புதிய சிந்தனைகளையும் எதிர்பாராத வாய்ப்புகளையும் கொண்டு வரக்கூடும்.&lt;/p&gt;&lt;p&gt;குறிப்பாக தொழில்நுட்பம், தகவல் தொடர்பு, ஆன்லைன் தொழில், ஊடகம் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படலாம்.&lt;/p&gt;&lt;p&gt;நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பணவரவு கிடைக்கலாம். சிலருக்கு கூடுதல் வருமானத்திற்கான புதிய வழிகள் திறக்கலாம். தொழிலில் புதிய கூட்டாளிகள் அல்லது முக்கியமான நபர்களின் அறிமுகம் கிடைப்பதும் எதிர்கால வளர்ச்சிக்கு உதவியாக அமையலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த காலகட்டம் வாழ்க்கையில் புதிய மாற்றங்களை உருவாக்கக்கூடியதாக இருக்கலாம். ராகு-கேதுவின் தாக்கத்தால் நீண்ட நாட்களாக தாமதமாகி வந்த சில முயற்சிகள் வேகம் பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகலாம்.&lt;/p&gt;&lt;p&gt;தொழில் செய்பவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள், புதிய ஒப்பந்தங்கள் மற்றும் விரிவாக்கத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கலாம். வேலை பார்ப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைத்து, பதவி உயர்வு அல்லது கூடுதல் பொறுப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;நிதி நிலையில் படிப்படியான முன்னேற்றம் ஏற்படலாம். பழைய கடன்களை குறைப்பதற்கும் சேமிப்பை அதிகரிப்பதற்கும் நல்ல வாய்ப்புகள் உருவாகலாம். சொத்து வாங்கும் எண்ணம் கொண்டவர்களுக்கு சாதகமான சூழ்நிலை அமையலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சதயம் நட்சத்திரம் ராகுவின் ஆதிக்கம் பெற்ற நட்சத்திரமாகும். எனவே ராகுவின் பலன் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகள், டிஜிட்டல் துறை சார்ந்த முன்னேற்றங்கள், வெளிநாட்டு தொடர்புகள் மற்றும் எதிர்பாராத வருமான வாய்ப்புகள் உருவாகலாம்.&lt;/p&gt;&lt;p&gt;குறிப்பாக தொழில்நுட்பம், ஆன்லைன் தொழில், தகவல் தொடர்பு, ஆராய்ச்சி, ஊடகம் மற்றும் நவீன தொழில்துறைகளில் இருப்பவர்கள் தங்கள் திறமையை பயன்படுத்தி முன்னேற்றம் காணலாம்.&lt;/p&gt;&lt;p&gt;சிலருக்கு இதுவரை கிடைக்காமல் இருந்த அங்கீகாரம் கிடைக்கலாம். சமூகத்தில் செல்வாக்கும் அதிகரிக்கலாம். எதிர்பாராத வகையில் கிடைக்கும் ஒரு வாய்ப்பு எதிர்காலத்தில் பெரிய பொருளாதார மாற்றத்திற்கான அடித்தளமாக அமையக்கூடும்.&lt;/p&gt;&lt;p&gt;இதையும் கிளிக் செய்யுங்களேன்- குரு பார்வையால் செப்டம்பரில் சாதனை படைக்கும் ராசிகள்.! சுக்கிரனால் பேங்க் பேலன்ஸ் பலமடங்கு உயரும்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த ஐந்து நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு பணம் தொடர்பான விஷயங்களில் சாதகமான மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஜோதிடம் கூறுகிறது. வருமானம் அதிகரிப்பது மட்டுமல்லாமல், தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்தும் திறனும் அதிகரிக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;சிலருக்கு பழைய கடன்களை அடைக்கும் வாய்ப்பு கிடைக்கலாம். மற்ற சிலருக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணம் கிடைக்கலாம். இன்னும் சிலருக்கு புதிய தொழில் வாய்ப்புகள் மூலம் வருமானம் அதிகரிக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;அதிகாரம் மற்றும் செல்வாக்கு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;ராகுவின் முக்கியமான அம்சங்களில் ஒன்று அதிகாரம் மற்றும் சமூக செல்வாக்கு. ராகு சாதகமாக அமைந்தால் ஒருவருக்கு பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைப்பது, முக்கியமானவர்களுடன் தொடர்பு ஏற்படுவது, வேலை செய்யும் இடத்தில் செல்வாக்கு அதிகரிப்பது போன்ற மாற்றங்கள் ஏற்படலாம் என்று ஜோதிடர்கள் கருதுகின்றனர்.கேதுவின் தாக்கம் தேவையற்ற மனிதர்களிடமிருந்து விலகி, உண்மையில் முன்னேற்றத்திற்கு உதவும் நபர்களை அடையாளம் காணும் மனநிலையை வழங்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;எதிர்பாராத அதிர்ஷ்டம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;ராகு கிரகம் திடீர் திருப்பங்களை ஏற்படுத்தக்கூடியவர் என்று ஜோதிடத்தில் கருதப்படுகிறார். அதனால் சிலருக்கு எதிர்பாராத நேரத்தில் வேலை வாய்ப்பு, தொழில் வாய்ப்பு, பணவரவு அல்லது புதிய தொடர்பு கிடைக்கலாம். ஆனால் ராகுவின் காலத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தும்போது அவசர முடிவுகளைத் தவிர்ப்பது அவசியம். குறிப்பாக அதிக லாபம் கிடைக்கும் என்று கூறப்படும் முதலீடுகளில் பணம் செலுத்துவதற்கு முன்பு முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;கோடீஸ்வர யோகம் என்றால்?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இங்கு கூறப்படும் &quot;கோடீஸ்வர யோகம்&quot; என்பது ஜோதிட ரீதியான ஒரு பொதுவான பலன் குறிப்பு மட்டுமே. ஒருவரின் உண்மையான பொருளாதார நிலையை அவரது பிறந்த தேதி, நேரம், இடம், லக்னம், சந்திர ராசி, தசா-புக்தி, கோச்சார கிரக நிலைகள், 2-ம் பாவம், 5-ம் பாவம், 9-ம் பாவம் மற்றும் 11-ம் பாவம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்த பிறகே விரிவாகக் கணிக்க முடியும்.&lt;/p&gt;&lt;p&gt;எனவே நட்சத்திரப் பலன்களை பொதுவான ஜோதிட நம்பிக்கையாக மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். உழைப்பு, திட்டமிடல், சரியான நிதி மேலாண்மை மற்றும் புத்திசாலித்தனமான முடிவுகள் இணைந்தால்தான் எந்த வாய்ப்பையும் உண்மையான வெற்றியாக மாற்ற முடியும்.&lt;/p&gt;&lt;p&gt;மொத்தத்தில், ராகு-கேதுவின் சாதகமான தாக்கம் கிடைக்கும் காலத்தில் சிலருக்கு பணவரவு, தொழில் வளர்ச்சி, பதவி, அதிகாரம், சமூக மரியாதை மற்றும் எதிர்பாராத வாய்ப்புகள் அதிகரிக்கலாம் என்று ஜோதிட நம்பிக்கைகள் கூறுகின்றன. தங்களது முயற்சிகளை அதிகரித்தால் இந்த காலகட்டத்தின் வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள முடியும்.&lt;/p&gt;&lt;p&gt;இதையும் கிளிக் செய்யுங்களேன்- கண்ணனை வழிபட இதுதான் சரியான முறை.! கிருஷ்ணரின் அருளைப் பெற செய்ய வேண்டிய பரிகாரங்கள்!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>spiritual</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/rahu-ketu-jackpot-5-nakshatras-set-for-crorepati-yoga-money-power-to-rise-b94l4py"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Ram And Krishna Birth Secret: ராமர் பகல் 12 மணிக்கும், கிருஷ்ணர் இரவு 12 மணிக்கும் பிறந்தது ஏன்?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/spiritual/why-ram-was-born-at-noon-and-krishna-at-midnight-the-divine-story-f655pxu</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/spiritual/why-ram-was-born-at-noon-and-krishna-at-midnight-the-divine-story-f655pxu</guid>
            <pubDate>Sat, 22 Aug 2026 05:55:43 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Ram And Krishna Birth Secret: ராமர் மற்றும் கிருஷ்ணர் ஆகிய இருவரின் பிறப்புக் கதைகளும் மிகவும் சுவாரஸ்யமானவை. ராமர் பகல் 12 மணிக்கும், கிருஷ்ணர் நள்ளிரவிலும் பிறந்ததாக கூறப்படுகிறது. இந்த நேர வேறுபாட்டிற்கான காரணம் என்ன தெரியுமா?!&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0ka0sz8j6byb2jjj0h7rptz,imgname-chatgpt-image-aug-22--2026--04-48-26-am--1--1787354441704.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Ram And Krishna Birth Secret: ராமர் மற்றும் கிருஷ்ணர் ஆகிய இருவரின் பிறப்புக் கதைகளும் மிகவும் சுவாரஸ்யமானவை. ராமர் பகல் 12 மணிக்கும், கிருஷ்ணர் நள்ளிரவிலும் பிறந்ததாக கூறப்படுகிறது. இந்த நேர வேறுபாட்டிற்கான காரணம் என்ன தெரியுமா?!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பகவான் ராமர் சித்திரை மாத சுக்லபட்ச நவமி திதியில், சூரியன் உச்சத்தில் இருக்கும் நண்பகல் வேளையில் அவதரித்தார். அவரது பிறப்பு ஒளி, ஆற்றல், தர்மம் மற்றும் உண்மையின் அடையாளமாகக் கருதப்படுகிறது. உலகிற்கு நல்வழியையும், நீதியையும், அறத்தையும் எடுத்துக்காட்டும் அவதாரமாக ராமர் போற்றப்படுகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பகவான் கிருஷ்ணர் ஆவணி மாத கிருஷ்ணபட்ச அஷ்டமி திதியில், நள்ளிரவில் அடர்ந்த இருள் சூழ்ந்த சிறைச்சாலையில் அவதரித்தார். அவரது பிறப்பு, அதர்மம் நிறைந்த இருளை அகற்றி, தர்மம் மற்றும் உண்மையின் ஒளியை நிலைநாட்டிய தெய்வீக நிகழ்வாகக் கருதப்படுகிறது. கிருஷ்ணரின் அவதாரம், தீமையை அழித்து நன்மையை நிலைநாட்டும் இறைவனின் அருளையும் சக்தியையும் உணர்த்துகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பகவான் விஷ்ணு, தீய சக்திகளை அழித்து தர்மத்தை நிலைநாட்ட ராமர் மற்றும் கிருஷ்ணர் என இரு வேறு யுகங்களில் அவதரித்தார். ராமர் அவதாரம் ஒளி, தர்மம் மற்றும் உண்மையை பிரதிபலிக்கிறது. கிருஷ்ணர் அவதாரம் இருளை அகற்றி தர்மத்தை நிலைநாட்டும் தெய்வீக சக்தியை உணர்த்துகிறது. இருவரின் பிறப்பு நேரமும் அவர்களின் அவதார நோக்கத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சூரிய வம்சத்தில் அவதரித்த பகவான் ராமரின் பிறப்பு, சூரியன் உச்சத்தில் இருக்கும் நண்பகல் வேளையில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நேரம் ஒளி, ஆற்றல் மற்றும் தெளிவின் அடையாளமாகக் கருதப்படுகிறது. ராமரின் அவதாரம், புருஷோத்தம குணம், தர்மம், சத்தியம் மற்றும் நீதியை நிலைநாட்டும் உயர்ந்த பண்புகளை பிரதிபலிப்பதாக நம்பப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பூமியில் அதர்மமும், அறியாமையும் அதிகரித்து, இருள் சூழ்ந்த காலத்தில் பகவான் கிருஷ்ணர் தெய்வீக ஒளியாக அவதரித்தார். ஆவணி மாத கிருஷ்ணபட்ச அஷ்டமி திதியில், நள்ளிரவு வேளையில் அவர் பிறந்தது சிறப்புமிக்கதாகக் கருதப்படுகிறது. இந்த நள்ளிரவு பிறப்பு, உலகில் நிலவிய இருளை அகற்றி தர்மத்தின் ஒளியை நிலைநாட்டியதைக் குறிக்கிறது. தீமைகள் பெருகிய காலத்தில் நன்மையின் சக்தி தோன்றும் என்பதை கிருஷ்ணரின் அவதாரம் உணர்த்துகிறது. அவரது பிறப்பு, அதர்மத்தின் மீது தர்மம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையையும், அநீதிக்கு எதிராக நீதியும் உண்மையும் இறுதியில் நிலைபெறும் என்ற தத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது. இதனால் கிருஷ்ண ஜெயந்தி பக்தர்களால் மிகுந்த மகிழ்ச்சியுடனும் ஆன்மிக நம்பிக்கையுடனும் கொண்டாடப்படுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>spiritual</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/spiritual/why-ram-was-born-at-noon-and-krishna-at-midnight-the-divine-story-f655pxu"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Janmashtami 2026: கோடிகளை தரும் கிருஷ்ண ஜெயந்தி விரதம்.! விரதம் இருந்தால் என்ன கொடுப்பார் கிருஷ்ண பகவான்?!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/spiritual/janmashtami-2026-significance-fasting-rules-and-krishnas-birth-story-fd61m8e</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/spiritual/janmashtami-2026-significance-fasting-rules-and-krishnas-birth-story-fd61m8e</guid>
            <pubDate>Mon, 31 Aug 2026 09:51:04 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ஜென்மாஷ்டமி 2026: 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 4 ஆம் தேதி கிருஷ்ண ஜென்மாஷ்டமி. இந்த கட்டுரையில் ஜென்மாஷ்டமியின் முக்கியத்துவம், விரதம், பூஜை விதிகள் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது, இதைப் பின்பற்றுவதன் மூலம் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் செழிப்பும் உண்டாகும்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m1b16vaapd41y9r388dh9cqt,imgname-chatgpt-image-aug-31--2026--09-56-54-am--1--1788150508872.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஜென்மாஷ்டமி 2026: 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 4 ஆம் தேதி கிருஷ்ண ஜென்மாஷ்டமி. இந்த கட்டுரையில் ஜென்மாஷ்டமியின் முக்கியத்துவம், விரதம், பூஜை விதிகள் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது, இதைப் பின்பற்றுவதன் மூலம் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் செழிப்பும் உண்டாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;2026-ல் செப்டம்பர் 4 அன்று ஜென்மாஷ்டமி கொண்டாடப்படுகிறது. பகவான் கிருஷ்ணரின் பிறந்தநாளை முன்னிட்டு வீடுகள் மற்றும் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த நாளில் கிருஷ்ணரை பக்தியுடன் வழிபட்டு, விரதம் இருந்து, வெண்ணெய், அவல் உள்ளிட்ட நைவேத்தியங்களை படைப்பது சிறப்பு. கிருஷ்ணரின் அருளால் வீட்டில் மகிழ்ச்சி, அமைதி, செழிப்பு பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;துவாபர யுகத்தில் பூமியில் அதர்மம் அதிகரித்து, தீமைகள் தலைதூக்கியபோது, மக்களை காக்கவும் தர்மத்தை நிலைநாட்டவும் பகவான் கிருஷ்ணர் அவதரித்தார். குறிப்பாக, மதுரையை ஆட்சி செய்த கம்சனின் கொடுங்கோன்மைக்கு முற்றுப்புள்ளி வைத்து, அநீதியை அழித்து, தர்மத்தை நிலைநாட்டுவதே அவரது அவதாரத்தின் முக்கிய நோக்கமாகக் கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜென்மாஷ்டமி அன்று பக்தர்கள் விரதம் இருந்து, பகவான் கிருஷ்ணரை மனமுருக வழிபடுகின்றனர். இவ்வாறு விரதம் இருந்து கிருஷ்ணரை வழிபட்டால், செய்த பாவங்கள் நீங்கி, மன அமைதி கிடைத்து, வாழ்க்கையில் மகிழ்ச்சியும் செழிப்பும் பெருகும் என்பது இந்து சமய நம்பிக்கையாகும். மேலும், கிருஷ்ணரின் அருள் கிடைத்து குடும்பத்தில் நலமும், அமைதியும் நிலவும் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜென்மாஷ்டமி அன்று கிருஷ்ணரின் குழந்தை வடிவமான லட்டு கோபாலை வீட்டில் வைத்து பக்தியுடன் வழிபடுவது சிறப்பாகக் கருதப்படுகிறது. லட்டு கோபாலுக்கு புத்தாடை அணிவித்து, சந்தனம், பூக்கள் சூட்டி, வெண்ணெய், அவல், பழங்கள் உள்ளிட்ட நைவேத்தியங்களை படைக்கலாம். பின்னர் கிருஷ்ணரின் நாமத்தைச் சொல்லி, ஆரத்தி எடுத்து வழிபடுவது வழக்கம். இவ்வாறு வழிபட்டால் வீட்டில் வளமும், மகிழ்ச்சியும், அமைதியும் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கிருஷ்ண ஜெயந்தி அன்று பக்தர்கள் நாள் முழுவதும் விரதம் இருந்து, பகவான் கிருஷ்ணரின் பிறப்பை எதிர்நோக்கி வழிபடுகின்றனர். நள்ளிரவில் கிருஷ்ணர் அவதரித்ததாகக் கருதப்படும் நேரத்தில், கிருஷ்ணருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து, சிறப்பு பூஜைகள் மற்றும் ஆரத்தி நடத்துகின்றனர். பின்னர் நைவேத்தியம் படைத்து, பிரசாதம் உட்கொண்டு விரதத்தை நிறைவு செய்கின்றனர். கிருஷ்ணரின் அருளால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், செழிப்பும் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>spiritual</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/spiritual/janmashtami-2026-significance-fasting-rules-and-krishnas-birth-story-fd61m8e"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Horoscope Predictions: ராகு கேது பார்வையால் 5 ராசிகளுக்கு அள்ள அள்ள பணம்.! குவியல் குவியலாக கிடைக்கும் தங்க புதையல்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/horoscope-september-predictions-for-all-zodiac-signs-ragu-kethu-give-blessings-geo5eyl</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/horoscope-september-predictions-for-all-zodiac-signs-ragu-kethu-give-blessings-geo5eyl</guid>
            <pubDate>Fri, 28 Aug 2026 08:53:53 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;செப்டம்பர் மாதத்தில் ராகு கேது கிரகங்கள் பார்வையில் 5 ராசிகளுக்கு சொத்துக்கள் குவியப்போகுது. தொழிலில் கொடிகட்டி பறக்கபோகிறார்கள். 12 ராசிக்காரர்களுக்கும் செப்படம்பர் எப்படி இருக்கும், எங்கே அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m1369gsam46e037mwn849y1b,imgname-chatgpt-image-aug-28--2026--08-52-10-am--1--1787887403817.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;செப்டம்பர் மாதத்தில் ராகு கேது கிரகங்கள் பார்வையில் 5 ராசிகளுக்கு சொத்துக்கள் குவியப்போகுது. தொழிலில் கொடிகட்டி பறக்கபோகிறார்கள். 12 ராசிக்காரர்களுக்கும் செப்படம்பர் எப்படி இருக்கும், எங்கே அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேஷ ராசியினருக்கு செப்டம்பர் மாதம் நிதி ரீதியாக சாதகமான மாற்றங்கள் ஏற்படலாம். நீண்ட நாட்களாக இருந்து வந்த பழைய கடன்களின் சுமை படிப்படியாக குறைந்து நிம்மதி கிடைக்கும். பங்குச் சந்தையில் ஏற்கனவே செய்த முதலீடுகள் மூலம் எதிர்பாராத லாபம் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. ராகு-கேது பார்வையின் தாக்கத்தால் திடீர் பணவரவு அல்லது எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கலாம். நீண்ட நாட்களாக காத்திருந்த பணம் கைக்கு வந்து பொருளாதார நிலையை வலுப்படுத்தலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரலாம். அதேநேரம், கிடைக்கும் பணத்தை தேவையற்ற செலவுகளுக்கு பயன்படுத்தாமல் சேமிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. புதிய முதலீடுகளில் அவசரம் வேண்டாம். மொத்தத்தில், மேஷ ராசியினருக்கு செப்டம்பர் மாதம் கடன் சுமையை குறைந்து, பணவரவு அதிகரிக்கும் வாய்ப்புள்ள மாதமாக அமையலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;புதிய தொடக்கங்களுக்கான ஆர்வம் உங்களை செப்டம்பர் மதாம் உற்சாகப்படுத்தும். நீண்ட நாட்களாக மனதில் வைத்திருந்த புதிய முயற்சிகளைத் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகலாம். ராகு-கேது பார்வையின் தாக்கத்தால் எதிர்பாராத பணவரவு கிடைக்கும் சூழல் அமையலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரலாம். பழைய முயற்சிகளில் இருந்து லாபம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. அதேநேரம், உறவுகளில் கூடுதல் கவனம் தேவை. குறிப்பாக உங்கள் துணையின் உணர்வுகளைப் புறக்கணிக்காமல், அவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து மென்மையாக நடந்துகொள்வது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கும். புதிய வாய்ப்புகளை நிதானமாக அணுகினால் முன்னேற்றத்தைப் பெறலாம். மொத்தத்தில், பணவரவு, புதிய முயற்சிகள் மற்றும் உறவுகளில் நல்ல மாற்றங்கள் ஏற்படக்கூடிய மாதமாக செப்டம்பர் அமையலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிம்ம ராசியினருக்கு செப்டம்பர் மாதம் கடின உழைப்புக்கான முழுமையான பலன் கிடைக்கும் மாதமாக அமையலாம். நீண்ட நாட்களாக மேற்கொண்ட முயற்சிகளுக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்க வாய்ப்புள்ளது. ராகு-கேது பார்வையின் தாக்கத்தால் எதிர்பாராத பணவரவு அல்லது நிதி ஆதாயம் கிடைக்கலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் உருவாகலாம். உங்கள் நேர்மறையான கண்ணோட்டம் வெற்றியை நோக்கி உங்களை உற்சாகமாக அழைத்துச் செல்லும். முக்கியமான விஷயங்களில் முடிவெடுக்கும் திறன் இன்று வலுப்பெறும். இதனால் சரியான முடிவுகளை எடுத்து முன்னேற்றத்தைப் பெற முடியும். பணம் தொடர்பான விஷயங்களில் நிதானமாக செயல்படுவது நல்லது. எதிர்பாராத நிதி வாய்ப்புகள் கதவைத் தட்டலாம். மொத்தத்தில், சிம்ம ராசியினருக்கு செப்டம்பர் மாதம் உழைப்பு, பணவரவு மற்றும் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் மாதமாக இருக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வேலை தேடுபவர்களுக்கு இன்று புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். உங்கள் தொடர்புகள் மற்றும் அறிமுகங்களின் வட்டம் விரிவடையும். மேலதிகாரி உங்கள் வேலையைப் பாராட்டக்கூடும். ராகு கேது பார்வையால் அள்ள அள்ள பணம்.! தங்க புதையல் கிடைக்கும் விருச்சிக ராசியினருக்கு புதிய வேலை வாய்ப்புகள் வரலாம், உங்கள் நெட்வொர்க் விரிவடையும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கும்ப ராசியினருக்கு செப்டம்பர் மாதம் நிதி ரீதியாக வலுப்பெறும் நாளாக அமையலாம். கடந்த காலத்தில் செய்த சில முதலீடுகள் எதிர்பார்த்த லாபத்தை கொடுக்கத் தொடங்கும். இதனால் பொருளாதார நிலை மேம்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய மாற்றங்களை மேற்கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கலாம். இந்த மாற்றங்கள் எதிர்கால வளர்ச்சிக்கு வழிவகுக்கும். எதிர்பாராத வகையில் பணவரவு கிடைக்கும் சூழலும் உருவாகலாம். நீண்ட நாட்களாக தாமதமாகி வந்த பணம் கைக்கு வரலாம். குடும்பத்தின் முக்கிய தேவைகளை நிறைவேற்ற முடியும். புதிய முதலீடுகளை மேற்கொள்ளும்போது அவசர முடிவுகளை தவிர்த்து ஆலோசனையுடன் செயல்படுவது நல்லது. உங்களின் திறமைக்கும் கடின உழைப்புக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்கலாம். மொத்தத்தில், செப்டம்பர் மாதம் கும்ப ராசியினருக்கு பணவரவு மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் மாதமாக இருக்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>spiritual</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/horoscope-september-predictions-for-all-zodiac-signs-ragu-kethu-give-blessings-geo5eyl"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Peacock: இந்த 4 இடங்களில் மயிலிறகை வைத்தால் போதும், அதிர்ஷ்டம் வரும்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/webstories/spiritual/peacock-feather-vastu-tips-where-to-place-peacock-feathers-in-your-home-izzk4z3</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/webstories/spiritual/peacock-feather-vastu-tips-where-to-place-peacock-feathers-in-your-home-izzk4z3</guid>
            <pubDate>Wed, 26 Aug 2026 15:28:15 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Peacock Feather Vastu: வாஸ்து சாஸ்திரப்படி, வீட்டில் இந்த 4 இடங்களில் மயிலிறகை வைத்தால், உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பு பெருகுவதில் சந்தேகமே இல்லை.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwpss2crdgbybc0pvfhmgbg9,imgname-peacock-feather-1783176661399.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <category>spiritual</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/webstories/spiritual/peacock-feather-vastu-tips-where-to-place-peacock-feathers-in-your-home-izzk4z3"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Sri Narayana Guru: பெரியாருக்கு முன்பே சாதிக்கு எதிராக நின்ற சாமானியன்.! யார் இந்த ஸ்ரீநாராயண குரு! மணிமண்டபம் கோரிக்கை விடுத்த சீடர்கள்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/spiritual/sri-narayana-guru-demand-to-build-a-memorial-in-tamil-nadu-knvbi16</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/spiritual/sri-narayana-guru-demand-to-build-a-memorial-in-tamil-nadu-knvbi16</guid>
            <pubDate>Fri, 28 Aug 2026 18:11:19 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;சமூக சீர்திருத்தவாதியான ஸ்ரீநாராயண குரு, &quot;ஒரு ஜாதி, ஒரு மதம், ஒரு கடவுள்&quot; என்ற கொள்கையை வலியுறுத்தினார். தற்போது, கன்னியாகுமரி மருந்துவாழ் மலையில் அவருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m145xqn4hxcxwvwaez6geb65,imgname-chatgpt-image-aug-28--2026--06-05-02-pm--1--1787920572068.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சமூக சீர்திருத்தவாதியான ஸ்ரீநாராயண குரு, &quot;ஒரு ஜாதி, ஒரு மதம், ஒரு கடவுள்&quot; என்ற கொள்கையை வலியுறுத்தினார். தற்போது, கன்னியாகுமரி மருந்துவாழ் மலையில் அவருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சாதி, மத வேறுபாடுகளால் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் நிலவிய காலகட்டத்தில், மனிதர்களிடையே சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்திய ஆன்மிகத் தலைவர்களில் முக்கியமானவர் ஸ்ரீநாராயண குரு. &ldquo;ஒரு ஜாதி, ஒரு மதம், ஒரு கடவுள் மனிதனுக்கு&rdquo; என்ற சிந்தனையை முன்வைத்து, ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட அவரது வாழ்க்கை இன்றும் சமூக சீர்திருத்தத்தின் முக்கிய அத்தியாயமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கன்னியாகுமரி மருந்துவாழ் மலையில் ஸ்ரீநாராயண குருவுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது கவனம் பெற்றுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கேரளத்தைச் சேர்ந்த ஸ்ரீநாராயண குரு, ஆன்மிகத் துறையில் மட்டுமின்றி சமூக சீர்திருத்தத்திலும் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றவர். சாதியின் பெயரால் மனிதர்களை பிரித்து வைத்திருந்த காலத்தில், மனிதர்களின் பிறப்பை அடிப்படையாகக் கொண்டு உயர்வு, தாழ்வு பார்ப்பதை அவர் கடுமையாக எதிர்த்தார்.&lt;/p&gt;&lt;p&gt;கல்வி, தூய்மை, ஒழுக்கம், தொழில் மற்றும் அமைப்பு ஆகியவற்றின் மூலம் சமூக முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார். ஆன்மிகத்தை சமூக மாற்றத்துடன் இணைத்த அவரது செயல்பாடுகள், பின்னாளில் பல்வேறு சமூக சீர்திருத்த இயக்கங்களுக்கு ஊக்கமாக அமைந்தன.&lt;/p&gt;&lt;p&gt;ஸ்ரீநாராயண குரு கேரளத்தில் பிறந்தவராக இருந்தாலும், அவரது சிந்தனைகளுக்கு தமிழ்நாட்டிலும் தனி மரியாதை உள்ளது. தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தின் மீதும் அவர் ஆர்வம் கொண்டிருந்ததாக அவரது ஆதரவாளர்கள் குறிப்பிடுகின்றனர். தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட தமிழ் பக்தி இலக்கியங்களிலும் அவருக்கு ஆழ்ந்த ஈடுபாடு இருந்ததாக கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஸ்ரீநாராயண குருவின் சிந்தனைகள் அவருடைய காலத்தில் பல முக்கிய தலைவர்களின் கவனத்தையும் ஈர்த்தன. மகாத்மா காந்தி அவரை சந்தித்து உரையாடியதும் குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அதேபோல், கவிஞரும் தேசிய கீதத்தை இயற்றியவருமான ரவீந்திரநாத் தாகூரும் ஸ்ரீநாராயண குருவை சந்தித்து அவரது ஆளுமையைப் பாராட்டியதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;சாதி வேறுபாடுகளுக்கு எதிராக குரல் கொடுத்து, மனிதர்களின் சமத்துவத்தை முன்னிறுத்திய அவரது வாழ்க்கை, ஆன்மிகத்தையும் சமூகப் பொறுப்பையும் இணைத்த ஒரு முன்னுதாரணமாக கருதப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த நிலையில், ஸ்ரீநாராயண குருவின் 172-வது ஜெயந்தி விழா, கன்னியாகுமரி மருந்துவாழ் ஸ்ரீநாராயண குரு தர்ம மடத்தில் நடைபெற்றது. அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம் (எய்ம்பா) சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைவர் ஓம்சக்தி ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் ரவி முதலியார் முன்னிலை வகித்தார்.&lt;/p&gt;&lt;p&gt;விழாவில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடைபெற்றதுடன், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் ஸ்ரீநாராயண குருவுக்கு மலர் அஞ்சலி செலுத்தினர். மேலும், நிகழ்ச்சியில் புத்தகமும் வெளியிடப்பட்டது.&lt;/p&gt;&lt;p&gt;இதில் பேசிய மாநில தலைவர் ஓம்சக்தி ராமச்சந்திரன், ஸ்ரீநாராயண குருவின் ஜெயந்தி நாளில் தமிழக அரசு மரியாதை செலுத்துவதுடன், தமிழ்நாடு முழுவதும் விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும், அவர் சித்தியடைந்ததாகக் கூறப்படும் மருந்துவாழ் மலையில் அவரது பெருமையை போற்றும் வகையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அதற்குத் தேவையான உதவிகளை வழங்க தங்கள் அமைப்பு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.&lt;/p&gt;&lt;p&gt;சாதி வேறுபாடுகளுக்கு எதிராக மனிதநேயத்தையும் சமத்துவத்தையும் வலியுறுத்திய ஸ்ரீநாராயண குருவின் நினைவைப் போற்றும் வகையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை, தற்போது மீண்டும் சமூக கவனத்தை ஈர்த்துள்ளது. அவரது வாழ்க்கை மற்றும் சிந்தனைகள் அடுத்த தலைமுறையினருக்கும் அறிமுகமாக வேண்டும் என்பதே இந்தக் கோரிக்கையின் முக்கிய நோக்கமாக அமைந்துள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>spiritual</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/spiritual/sri-narayana-guru-demand-to-build-a-memorial-in-tamil-nadu-knvbi16"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Tulsi Plant: ஒரு சின்ன தொட்டி போதும்.! துளசி செடி செழிக்க இந்த 5 விஷயங்களை செய்யுங்க.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/how-to-grow-holy-basil-at-home-during-monsoon-lcdn5hk</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/how-to-grow-holy-basil-at-home-during-monsoon-lcdn5hk</guid>
            <pubDate>Fri, 21 Aug 2026 12:36:50 +0530</pubDate>
            <description><![CDATA[வீட்ல துளசி செடி வளர்க்கணும்னு ஆசையா இருக்கா? ஆனா எப்படி வளர்க்குறதுனு தெரியலையா? கவலைய விடுங்க. அதுக்குதான் இந்த 5 சிம்பிள் ஸ்டெப்ஸ் இருக்கு. வாங்க பார்க்கலாம்!]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0hj55exrrn2jxn9d0s0ty0b,imgname-chatgpt-image-aug-21--2026--12-33-27-pm--1--1787295864285.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[வீட்ல துளசி செடி வளர்க்கணும்னு ஆசையா இருக்கா? ஆனா எப்படி வளர்க்குறதுனு தெரியலையா? கவலைய விடுங்க. அதுக்குதான் இந்த 5 சிம்பிள் ஸ்டெப்ஸ் இருக்கு. வாங்க பார்க்கலாம்!&lt;img&gt;உங்கள் வீட்டுத் தோட்டத்தில் ஒரு புது செடியை சேர்க்க விரும்பினால், துளசி ஒரு சரியான தேர்வு. அதை எப்படி வளர்ப்பது என்று தெரியவில்லையா? நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுகிறோம்!&lt;img&gt;&lt;p&gt;துளசி செடியை ஆரோக்கியமாக வளர்க்க, சரியான தொட்டியைத் தேர்வு செய்வது முக்கியம். ஒரு நடுத்தர அளவிலான தொட்டியைத் தேர்ந்தெடுத்து, அதில் செடி வேர் நன்றாகப் பரவுவதற்கு போதுமான இடம் இருப்பதை உறுதி செய்யுங்கள். குறிப்பாக, தொட்டியின் அடிப்பகுதியில் தண்ணீர் வெளியேறுவதற்கான வடிகால் துளைகள் அவசியம். தண்ணீர் தேங்கி நிற்பது வேர் அழுகலுக்கு வழிவகுக்கும். எனவே, நல்ல வடிகால் வசதியுள்ள தொட்டியைப் பயன்படுத்துவது சிறந்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;துளசி செடி நன்றாக வளர மண் கலவையை சரியாகத் தயார் செய்வது மிகவும் முக்கியம். இதற்காக சம அளவில் கரிசல் மண், நன்கு மக்கிய இயற்கை உரம் மற்றும் மணல் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளுங்கள். மூன்றையும் நன்றாகக் கலந்து, காற்றோட்டமும் நீர் வடிகாலும் கிடைக்கும் வகையில் மண்ணைத் தயாரிக்கலாம். இந்த மண் கலவை துளசி செடியின் வேர் வளர்ச்சிக்கு ஏற்றதாக இருக்கும். மண் மிகவும் இறுக்கமாக இல்லாமல், மென்மையாகவும் வடிகால் வசதியுடனும் இருப்பதை உறுதி செய்யுங்கள். இதோ, துளசி செடிக்கான மண் கலவை தயார்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சீக்கிரமாக துளசி செடி வளர வேண்டும் என்றால், ஆரோக்கியமான இளம் துளசி நாற்றுகளைத் தேர்ந்தெடுத்து நடுவது சிறந்தது. விதைகள் மூலம் வளர்க்க விரும்பினால், அவற்றை மண்ணின் மேல் அடுக்கில் மெதுவாகத் தூவுங்கள். விதைகளை ஆழமாக புதைக்காமல், லேசாக மண் தூவி மூடலாம். தொடர்ந்து மிதமான ஈரப்பதத்தை பராமரித்து, நல்ல வெளிச்சம் கிடைக்கும் இடத்தில் தொட்டியை வைக்கவும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;துளசி செடி நன்றாக வளர சரியான இடத்தைத் தேர்வு செய்வது மிகவும் முக்கியம். தொட்டியை நாள் முழுவதும் நேரடியாக கடுமையான வெயில் படும் இடத்தில் வைப்பதைத் தவிர்க்கலாம். அதே நேரத்தில், செடிக்கு போதுமான இயற்கை வெளிச்சம் கிடைக்கும் இடமாக இருக்க வேண்டும். ஜன்னல் அருகில் அல்லது பால்கனி போன்ற நல்ல வெளிச்சம் கிடைக்கும் பகுதிகள் ஏற்றதாக இருக்கும். குறிப்பாக காலை நேரத்தில் கிடைக்கும் மிதமான சூரிய ஒளி துளசி செடியின் வளர்ச்சிக்கு உதவும். மதிய நேரத்தில் அதிக வெப்பம் மற்றும் கடுமையான வெயில் படும்போது இலைகள் வாடும் வாய்ப்பு உள்ளது. எனவே, நேரடி வெயிலுக்கு பதிலாக மறைமுகமான சூரிய ஒளி கிடைக்கும் இடத்தில் துளசி செடியை வைப்பது நல்லது. இவ்வாறு பராமரித்தால் செடி பசுமையாகவும் ஆரோக்கியமாகவும் வளரும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;துளசி செடி ஆரோக்கியமாக வளர அதிகப்படியான தண்ணீர் தேவையில்லை. மண்ணில் எப்போதும் ஈரப்பதம் அதிகமாக இருந்தால், வேர் அழுகல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, ஒவ்வொரு முறையும் தண்ணீர் ஊற்றுவதற்கு முன்பு மண்ணின் ஈரப்பதத்தை சோதித்துப் பாருங்கள். மேல் மண் சற்று உலர்ந்திருந்தால் மட்டுமே தேவையான அளவு தண்ணீர் ஊற்றுவது நல்லது. குறிப்பாக மழைக்காலங்களில் தண்ணீர் ஊற்றும் அளவை குறைக்க வேண்டும். தொட்டியில் வளர்க்கப்படும் துளசி செடிக்கு, அதிகப்படியான தண்ணீர் வெளியேறும் வகையில் வடிகால் துளைகள் இருப்பதும் அவசியம். காலை நேரத்தில் தண்ணீர் ஊற்றுவது செடியின் வளர்ச்சிக்கு சிறந்ததாக இருக்கும். சரியான அளவு தண்ணீர், போதுமான சூரிய ஒளி மற்றும் நல்ல காற்றோட்டம் கிடைத்தால் துளசி செடி பசுமையாகவும் செழிப்பாகவும் வளரும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>spiritual</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/how-to-grow-holy-basil-at-home-during-monsoon-lcdn5hk"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Sadhguru Diet : சத்குருவின் உணவு ரகசியங்களும், 9 விதிகளும்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/webstories/health-food/sadhguru-diet-9-food-rules-you-should-know-nxtu56n</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/webstories/health-food/sadhguru-diet-9-food-rules-you-should-know-nxtu56n</guid>
            <pubDate>Fri, 21 Aug 2026 12:51:28 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Sadhguru Diet : சத்குருவின் உணவு முறை தரும் 9 விதிகள்! குடலைச் சுத்தப்படுத்தி, உடலுக்கு ஆற்றல் அளித்து உங்களை முழுமையாக மாற்றும் எளிய பழக்கங்கள்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jfm96x140cc2njcn421crv6d,imgname-Sadhgurus-1734773797924.jpeg" type="image/jpeg" height="390" width="690"/>
            <category>spiritual</category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/webstories/health-food/sadhguru-diet-9-food-rules-you-should-know-nxtu56n"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Unakoti Mystery ஒரு கோடிக்கு ஒன்று குறைவான சிலைகள்...இந்தியாவில் இப்படியொரு மர்மமான இடமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/spiritual/unakoti-mystery-site-tripura-one-crore-minus-one-statues-oyns3ev</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/spiritual/unakoti-mystery-site-tripura-one-crore-minus-one-statues-oyns3ev</guid>
            <pubDate>Tue, 01 Sep 2026 19:45:50 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;இந்தியாவில் உள்ள மிகவும் மர்மமான இடங்களில் ஒன்று தான் உனகோடி. பெயரே வித்தியாசமாக இருக்கிறது என நினைக்கிறீர்களா? பெயரில் மட்டுமல்ல, அதிகம் பிரபலமாகாத, பெரும்பாலானவர்களுக்கு தெரியாத, ஆச்சரியங்கள், மர்மங்களை உள்ளிடக்கிய சுற்றுலா தலங்களில் இதுவும் ஒன்று&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m1ej4rz50qkfygp3d0seaw8g,imgname-unakoti--7---1--1788268930021.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;இந்தியாவில் உள்ள மிகவும் மர்மமான இடங்களில் ஒன்று தான் உனகோடி. பெயரே வித்தியாசமாக இருக்கிறது என நினைக்கிறீர்களா? பெயரில் மட்டுமல்ல, அதிகம் பிரபலமாகாத, பெரும்பாலானவர்களுக்கு தெரியாத, ஆச்சரியங்கள், மர்மங்களை உள்ளிடக்கிய சுற்றுலா தலங்களில் இதுவும் ஒன்று&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;'உனகோடி' என்ற பெங்காலி வார்த்தைக்கு &quot;ஒரு கோடிக்கு ஒன்று குறைவு&quot; (99,99,999) என்று பொருள். அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் பாறைகளிலும், நீர்வீழ்ச்சியின் ஓரங்களிலும் செதுக்கப்பட்டுள்ள இந்த எண்ணற்ற தெய்வங்களின் சிற்பங்களும், பிற உருவங்களும் யாரால், எப்போது, எதற்காக உருவாக்கப்பட்டன என்பதற்கு இன்று வரை தெளிவான வரலாற்றுச் சான்றுகள் இல்லை. கி.பி 7-ஆம் நூற்றாண்டு முதல் 9-ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இவை உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று தொல்லியல் துறையினர் கணித்தாலும், பழங்குடியின மக்களிடையே நிலவும் சுவாரஸ்யமான கதைகளே இதற்கான மர்மத்தை கூட்டுகின்றன. இதில் மிக முக்கியமான அதிசயம் என்னவென்றால் 99,99,999 தெய்வ சிலைகளில் சிவபெருமானின் சிலை மட்டும் இருக்காது.&lt;/p&gt;&lt;p&gt;இயற்கையோடு இணைந்து வாழும் ரம்மியமான சூழல், பாறைகளில் வடிக்கப்பட்ட பிரம்மாண்டமான 'உனகோடீஸ்வர கால பைரவர்' சிலை மற்றும் மலை உச்சியிலிருந்து கொட்டும் நீர்வீழ்ச்சி எனப் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைக்கும் அம்சங்கள் இங்கு ஏராளம். உலகளவில் வரலாற்று ஆய்வாளர்களையும், சுற்றுலாப் பிரியர்களையும் ஈர்க்கும் இந்த மாயாஜால தலத்தைப் பற்றிய ஆழமான தகவல்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இத்தலத்தின் தோற்றம் குறித்து இருவேறு கதைகள் பிரபலமாகப் பேசப்படுகின்றன. முதலாவது கதையின்படி, சிவபெருமான் ஒரு கோடி தெய்வங்களுடன் காசிக்குச் செல்லும் வழியில், இரவு நேரத்தில் இந்த அடர்ந்த வனப்பகுதியில் தங்கியதாகவும், மறுநாள் சூரிய உதயத்திற்கு முன்பாக அனைவரும் புறப்பட வேண்டும் என்று கட்டளையிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், சிவபெருமானைத் தவிர மற்ற 99,99,999 தெய்வங்களும் தூக்கத்திலிருந்து எழுந்திருக்கத் தவறியதால், கோபமுற்ற சிவன் அவர்களைக் கல்லாக மாறுமாறு சாபமிட்டுவிட்டுத் தனியாகக் காசிக்குப் புறப்பட்டுச் சென்றார் என்பது நம்பிக்கை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மற்றொரு நாட்டுப்புறக் கதையின்படி, கல்லுக்கரன் என்ற புகழ்பெற்ற சிற்பி, சிவபெருமானையும் பார்வதி தேவியையும் கயிலாயத்திற்குப் பின்தொடர்ந்து வர விரும்பினான். அதற்குச் சிவன், &quot;ஒரே இரவுக்குள் ஒரு கோடி தெய்வங்களின் உருவங்களைச் செதுக்கி முடித்தால் உன்னை அழைத்துச் செல்கிறேன்&quot; என்று நிபந்தனை விதித்தார். விடிய விடிய தீவிரமாகப் பணியாற்றிய அந்தச் சிற்பியால் சூரிய உதயத்திற்குள் 99,99,999 சிலைகளை மட்டுமே செதுக்க முடிந்தது. ஒரு சிலை குறைந்ததால் அவன் கயிலாயம் செல்லும் பாக்கியத்தை இழந்தான் என்றும், அந்தச் சிலைகளே இங்கு பாறைகளாக நிற்கின்றன என்றும் கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இங்குள்ள பாறைச் சிற்பங்களிலேயே மிகவும் புகழ்பெற்றது 'உனகோடீஸ்வர கால பைரவர்' என்று அழைக்கப்படும் சிவபெருமானின் பிரம்மாண்டமான தலையுருவம் ஆகும். சுமார் 30 அடி உயரத்திற்குப் பாறையிலேயே செதுக்கப்பட்டுள்ள இந்தச் சிலையின் தலை அலங்காரம் மட்டும் 10 அடி உயரத்தைக் கொண்டது. இதன் இருபுறமும் இரண்டு பெண் தெய்வங்களின் உருவங்களும், அருகில் பிரம்மாண்டமான துர்க்கா தேவியின் உருவமும் செதுக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள இந்த சிற்பக் கூடத்தில், இயற்கையாக உருவாகும் ஒரு நீர்வீழ்ச்சி சிலைகளின் மீதே விழுந்து செல்வது காண்போரைக் பரவசப்படுத்துகிறது. இந்த நீர்வீழ்ச்சியில் குளித்து, உனகோடீஸ்வரரை வழிபடுவது புனிதமாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் இங்கு நடைபெறும் 'அசோகாஷ்டமி மேளா' திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வடகிழக்கு இந்தியாவின் 'கஜுராஹோ' என்று அழைக்கப்படும் உனகோடி, உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட வேண்டிய இடங்களில் ஒன்றாக யுனெஸ்கோவால் (UNESCO) தற்காலிகப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. தரைமட்டத்திலிருந்து பல நூறு படிகள் இறங்கிச் சென்று காண வேண்டிய இந்த அற்புத கலைக்கூடம், தொல்லியல் துறையினரால் தற்போது தீவிரமாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது.&lt;/p&gt;&lt;p&gt;மனிதக் கரங்களால் செதுக்கப்பட்ட கலைப்படைப்பா அல்லது இறைவனின் திருவிளையாடலா என்ற விடை தெரியாத கேள்வியுடன், இன்றும் அடர்ந்த காடுகளுக்குள் மௌனமாக வீற்றிருக்கிறது உனகோடி.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>spiritual</category>
            <dc:creator>Priya Velan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/spiritual/unakoti-mystery-site-tripura-one-crore-minus-one-statues-oyns3ev"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Durga Puja: துர்கா பூஜை பந்தல்களில் அசைவ உணவா? VHP என்ன சொல்கிறது!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/india/vhp-urges-ban-on-non-veg-food-near-durga-puja-pandals-rc0fuv8</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/india/vhp-urges-ban-on-non-veg-food-near-durga-puja-pandals-rc0fuv8</guid>
            <pubDate>Sat, 29 Aug 2026 06:49:15 +0530</pubDate>
            <description><![CDATA[துர்கா பூஜை பந்தல்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் அசைவ உணவுகளை விற்கக் கூடாது என விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) ஒரு பெரிய கோரிக்கையை வைத்துள்ளது. அம்மன் சிலையின் புனிதத்தைக் காக்க அந்த அமைப்பு என்ன சொல்கிறது என்பதை விரிவாகப் பார்ப்போம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m13nnhkdjd9rq4e9h43nhe0a,imgname-gemini-generated-image-wfs182wfs182wfs1-1787903526509.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[துர்கா பூஜை பந்தல்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் அசைவ உணவுகளை விற்கக் கூடாது என விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) ஒரு பெரிய கோரிக்கையை வைத்துள்ளது. அம்மன் சிலையின் புனிதத்தைக் காக்க அந்த அமைப்பு என்ன சொல்கிறது என்பதை விரிவாகப் பார்ப்போம்.&lt;img&gt;&lt;p&gt;சமீபத்தில் மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை பந்தல்கள் தொடர்பாக விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) புதிய கோரிக்கையை முன்வைத்துள்ளது. பந்தல்களின் உள்ளேயும், அம்மன் சிலையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அசைவ உணவுகளை விற்பனை செய்வதையும் உட்கொள்வதையும் தவிர்க்க வேண்டும் என அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;அதேநேரத்தில், துர்கா பூஜை காலத்தில் அசைவ உணவை முழுமையாகத் தடை செய்ய வேண்டும் என்று தாங்கள் கூறவில்லை என VHP தலைவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். அசைவ உணவு விற்பனை செய்ய வேண்டுமெனில், பந்தலுக்கு வெளியே தனியாக ஒதுக்கப்பட்ட இடங்களில் விற்பனை செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளனர். அம்மன் சிலையின் புனிதம், தூய்மை மற்றும் பந்தல் சுற்றுப்புறத்தின் சுகாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே இந்த கோரிக்கையின் முக்கிய நோக்கம் என அவர்கள் கூறியுள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) தெரிவித்துள்ளதன்படி, துர்கா பூஜை பந்தல் மற்றும் அம்மன் சிலையைச் சுற்றியுள்ள பகுதி தூய்மையாகவும் புனிதமாகவும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே முக்கிய நோக்கமாகும். குறிப்பாக, பந்தலுக்கு அருகில் மீன், இறைச்சி, முட்டை உள்ளிட்ட அசைவ உணவுகளை விற்பனை செய்வதையும், அவற்றின் கழிவுகள் அல்லது துகள்கள் பூஜை நடைபெறும் பகுதிக்குள் செல்வதையும் தவிர்க்க வேண்டும் என அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;அதேவேளை, துர்கா பூஜை காலம் முழுவதும் அசைவ உணவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று VHP கூறவில்லை. அசைவ உணவுகளை விற்பனை செய்ய வேண்டுமெனில், பந்தலில் இருந்து தனியாக ஒதுக்கப்பட்ட இடங்களில் விற்பனை செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அம்மன் சிலையின் புனிதம் மற்றும் பந்தல் சுற்றுப்புறத்தின் தூய்மையை காப்பதே தங்களின் முதன்மை நோக்கம் என VHP விளக்கியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வங்காளத்தின் துர்கா பூஜை பாரம்பரியம் முழுமையாக சைவ உணவு முறையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது அல்ல என்பதை விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) மத்திய ஆலோசனைக் குழு உறுப்பினர் நிர்குணானந்தாவும் ஒப்புக்கொண்டுள்ளார். வங்காளத்தில் துர்கா பூஜை ஒருபோதும் முழுமையான சைவ விழாவாக இருந்ததில்லை என்றும், அங்குள்ள உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் கலாச்சாரத்தை தாங்கள் அறிந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், பூஜை பந்தல் மற்றும் அம்மன் சிலையைச் சுற்றியுள்ள பகுதியின் புனிதத்தையும் தூய்மையையும் பாதுகாப்பது முக்கியம் என்பதே VHP-யின் வலியுறுத்தல். அசைவ உணவுகளை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்பது நோக்கமல்ல; அவை விற்பனை செய்யப்படும் இடங்கள் பந்தலுக்கு வெளியே தனியாக அமைக்கப்பட வேண்டும் என்பதே கோரிக்கை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அசைவ உணவுகளை முழுமையாகத் தடை செய்ய வேண்டும் என்று VHP கோரவில்லை. ஆனால், துர்கா பூஜை பந்தலுக்கு அருகில் அசைவ உணவுகளை விற்பனை செய்வதைத் தவிர்த்து, அதற்கென பந்தலுக்கு வெளியே தனியாக ஒரு குறிப்பிட்ட இடத்தை ஒதுக்க வேண்டும் என்று அமைப்பு வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக மீன், இறைச்சி, முட்டை உள்ளிட்ட உணவுகளின் கழிவுகள் பந்தல் அல்லது அம்மன் சிலையைச் சுற்றியுள்ள பகுதிக்கு வராத வகையில் உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என VHP மத்திய ஆலோசனைக் குழு உறுப்பினர் நிர்குணானந்தா தெரிவித்துள்ளார். இதன் மூலம் பூஜை நடைபெறும் இடத்தின் தூய்மை மற்றும் அம்மன் சிலையின் புனிதம் பாதுகாக்கப்படும் என்பது VHP-யின் கருத்தாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;துர்கா பூஜை பந்தல்களின் புனிதத்தையும், அம்மன் சிலையின் தூய்மையையும் பாதுகாப்பதில் பூஜை கமிட்டிகள் முக்கியப் பொறுப்பு வகிக்க வேண்டும் என விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) கேட்டுக்கொண்டுள்ளது. குறிப்பாக, பந்தல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அசைவ உணவுகள் விற்பனை செய்யப்படுவதையும், அதன் கழிவுகள் அங்கு சேருவதையும் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;மேலும், பூஜை கமிட்டிகள் தங்களது பரிந்துரைகளை செயல்படுத்தத் தவறினால், அம்மன் சிலையின் புனிதத்தைப் பாதுகாப்பதற்காக VHP நேரடியாகத் தலையிட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அமைப்பு எச்சரித்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lsquo;மதம் அவரவருடையது, பண்டிகை அனைவருக்குமானது&rsquo; என்ற பொதுவான கருத்தையும் அந்த VHP தலைவர் கேள்விக்குள்ளாக்கியுள்ளார். அவரது பார்வையில், துர்கா பூஜை என்பது வெறும் கலாச்சார நிகழ்வு மட்டுமல்ல; இந்து சமய நம்பிக்கைகள் மற்றும் பாரம்பரியத்துடன் நெருக்கமாக தொடர்புடைய பண்டிகையாகும். எனவே, அதன் மத உணர்வுகள் மற்றும் சடங்குகளை மதித்து நடப்பது முக்கியம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக, இந்து கலாச்சாரத்தின் நம்பிக்கைகள் மற்றும் உணர்வுகளைப் பின்பற்றுவதற்கான பொறுப்பு சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்களுக்கே அதிகம் உள்ளது என்பதே அவரது கருத்தாக முன்வைக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) கருத்துப்படி, பிற மதங்களைச் சேர்ந்தவர்கள் துர்கா பூஜை பந்தல்களுக்கு வருவதற்கு எந்தத் தடையும் இல்லை. அவர்கள் பந்தல்களுக்கு வந்து விழாவைக் காணலாம் என்றும் VHP மத்திய ஆலோசனைக் குழு உறுப்பினர் நிர்குணானந்தா தெரிவித்துள்ளார். ஆனால், இந்துக் கலாச்சாரம், சடங்குகள் மற்றும் மத உணர்வுகளைப் பாதுகாக்கும் பொறுப்பு இந்துக்களுக்கே உள்ளது என்பதே அவரது வாதம். குறிப்பாக, பூஜையின் பாரம்பரிய நடைமுறைகள் மற்றும் அம்மன் சிலையின் புனிதத்தைப் பேணுவதில் இந்துக்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>spiritual</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/india/vhp-urges-ban-on-non-veg-food-near-durga-puja-pandals-rc0fuv8"/>
        </item>
        <item>
            <title><![CDATA[சாயங்காலம் கற்பூரம், கிராம்பு ஏத்துங்க.. அப்புறம் பாருங்க மேஜிக்கை!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/webstories/life-style/why-you-should-burn-camphor-and-cloves-every-evening-sbhkg47</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/webstories/life-style/why-you-should-burn-camphor-and-cloves-every-evening-sbhkg47</guid>
            <pubDate>Sat, 22 Aug 2026 06:56:57 +0530</pubDate>
            <description><![CDATA[கற்பூரம், கிராம்பு நன்மைகள்: நம்ம கிச்சன்ல இருக்குற கற்பூரமும் கிராம்புவும் பூஜைக்கும் சமையலுக்கும் மட்டும் இல்ல. வீட்டு சுகாதாரத்துக்கும் ரொம்ப முக்கியம். சாயங்காலம் இதை ஏத்துறதால என்னெல்லாம் நன்மை இருக்கு தெரியுமா?]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0kh02kf6j2y4x1t6642t042,imgname-chatgpt-image-aug-22--2026--06-51-39-am--1--1787361757807.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <category>spiritual</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/webstories/life-style/why-you-should-burn-camphor-and-cloves-every-evening-sbhkg47"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Vastu Tips: இந்த இடத்தில் உப்பை வைக்காதீங்க.. வாஸ்து சொல்வது என்ன?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/webstories/astrology/vastu-shastra-tips-why-you-should-not-keep-salt-in-the-bathroom-skd77o1</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/webstories/astrology/vastu-shastra-tips-why-you-should-not-keep-salt-in-the-bathroom-skd77o1</guid>
            <pubDate>Thu, 27 Aug 2026 10:29:37 +0530</pubDate>
            <description><![CDATA[வீட்டில் அல்லது பாத்ரூமில் உள்ள நெகட்டிவ் எனர்ஜியை விரட்ட பலரும் உப்பைப் பயன்படுத்துகிறார்கள். கண் திருஷ்டி மற்றும் எதிர்மறை ஆற்றல்களை ஈர்க்கும் சக்தி உப்புக்கு இருப்பதாக ஒரு நம்பிக்கை உள்ளது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ksffhzne9bfj22h5grc7zx13,imgname-2-1779709836974.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <category>spiritual</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/webstories/astrology/vastu-shastra-tips-why-you-should-not-keep-salt-in-the-bathroom-skd77o1"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Aavani Avittam 2026: நாளை ஆவணி அவிட்டம்.. பூணூல் மாற்ற உகந்த நேரம் என்ன?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/spiritual/aavani-avittam-2026-auspicious-time-to-change-sacred-thread-on-august-27-articleshow-urin0aw</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/spiritual/aavani-avittam-2026-auspicious-time-to-change-sacred-thread-on-august-27-articleshow-urin0aw</guid>
            <pubDate>Wed, 26 Aug 2026 14:26:37 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ஆவணி அவிட்டம் என்பது வேதம் பயிலும் ஆண்கள் பழைய பூணூலை மாற்றி புதிய பூணூல் அணியும் ஒரு முக்கிய ஆன்மிக நிகழ்வாகும், இது உபாகர்மம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வு, வேதங்களை போதித்த முனிவர்களுக்கு நன்றி செலுத்துவதையும், ஆன்மிக ஒழுக்கத்தை புதுப்பித்துக் கொள்வதையும் நோக்கமாகக் கொண்டது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0ym32v62r9mv331y4z8ydt7,imgname-chatgpt-image-aug-26--2026--02-16-57-pm--1--1787734100838.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஆவணி மாதத்தில் வரும் முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளில் ஒன்றாக ஆவணி அவிட்டம் கருதப்படுகிறது. வேதம், ஆன்மிகம் மற்றும் பாரம்பரியத்துடன் தொடர்புடைய இந்த நாளில், குறிப்பாக வேதம் பயிலும் ஆண்கள் மற்றும் பிராமண சமூகத்தினர் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டு, பழைய பூணூலை அகற்றி புதிய பூணூல் அணியும் சடங்கை கடைப்பிடிக்கின்றனர். இந்த நிகழ்வு உபாகர்மம் என்றும் அழைக்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஆவணி அவிட்டம் என்றால் என்ன?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;தமிழ் மாதங்களில் ஐந்தாவது மாதமான ஆவணி, பல்வேறு சுப நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. சூரியன் சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் காலத்துடன் தொடர்புடைய இந்த மாதத்தில் பல்வேறு ஆன்மிக நிகழ்வுகள் நடைபெறுகின்றன. அதில் ஆவணி அவிட்டம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த நாளில் வேதங்களை போதித்த முனிவர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் ரிஷி தர்ப்பணம் உள்ளிட்ட சடங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், வேதக் கல்வியை புதிதாகத் தொடங்குவதற்கான நாளாகவும் உபாகர்மம் பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;h2&gt;ஏன் பூணூல் மாற்றப்படுகிறது?&lt;/h2&gt;&lt;p&gt;ஆவணி அவிட்டத்தின் முக்கிய சடங்குகளில் ஒன்றுதான் பூணூல் மாற்றுதல். பழைய பூணூலை அகற்றி, மந்திரங்களை உச்சரித்து புதிய பூணூல் அணிவது வழக்கமாக உள்ளது. பூணூல் மாற்றுவது என்பது வெறும் பாரம்பரிய சடங்கு மட்டுமல்ல; ஆன்மிக ஒழுக்கம், வேதப் பயிற்சி மற்றும் கடமைகளை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ளும் அடையாளமாகவும் கருதப்படுகிறது. இந்த நாளில் தங்களுடைய தவறுகளுக்கு மனதளவில் வருந்தி, நல்ல எண்ணங்களுடனும் ஒழுக்கத்துடனும் வாழ்க்கையை தொடர வேண்டும் என்ற உறுதியை எடுத்துக்கொள்வதும் வழக்கமாக உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஆவணி அவிட்டம் 2026 எப்போது?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;2026ஆம் ஆண்டு ஆவணி அவிட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி, வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலையில் எழுந்து புனித நீராடி, வழிபாடுகளை மேற்கொண்டு, குடும்ப வழக்கப்படி பூணூல் மாற்றும் சடங்கு நடைபெறும். ஒவ்வொரு குடும்பம் மற்றும் வேத சம்பிரதாயத்தைப் பொறுத்து சடங்கு முறைகளில் சிறிய வேறுபாடுகள் இருக்கலாம். எனவே, குடும்ப வழக்கம் அல்லது தங்கள் ஆசாரியரின் வழிகாட்டுதலைப் பின்பற்றுவது சிறந்ததாகும்.&lt;/p&gt;&lt;h2&gt;பூணூல் மாற்ற உகந்த நேரம்&lt;/h2&gt;&lt;p&gt;2026 ஆகஸ்ட் 27ஆம் தேதி காலை 9:05 மணி முதல் 10:38 மணி வரை பூணூல் மாற்றுவதற்கு உகந்த நேரமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் பூணூல் மாற்றும் சடங்கை மேற்கொள்ளலாம் என ஆன்மிக காலக்கணிதத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நாளில் காலை 6:01 மணி முதல் 7:33 மணி வரை யமகண்ட காலம் என்றும், பிற்பகல் 1:42 மணி முதல் 3:15 மணி வரை ராகு காலம் என்றும் குறிப்பிடப்படுகிறது. எனவே, முக்கியமான சுப சடங்குகளை மேற்கொள்ளும்போது இந்த காலங்களைத் தவிர்ப்பது வழக்கமாக உள்ளது.&lt;/p&gt;&lt;h3&gt;ஆவணி அவிட்டத்தின் ஆன்மிக முக்கியத்துவம்&lt;/h3&gt;&lt;p&gt;ஆவணி அவிட்டம் வேத அறிவுக்கும் அதை தலைமுறைகளுக்கு வழங்கிய முனிவர்களுக்கும் மரியாதை செலுத்தும் நாளாக பார்க்கப்படுகிறது. இந்த நாளில் வேத மந்திரங்கள், காயத்ரி மந்திரம் உள்ளிட்ட புனித மந்திரங்களை உச்சரித்து வழிபடுவது வழக்கம்.&lt;/p&gt;&lt;p&gt;மேலும், ஹயக்ரீவ ஜெயந்தியுடனும் இந்த நாள் தொடர்புபடுத்தப்படுகிறது. விஷ்ணுவின் ஹயக்ரீவ அவதாரம் வேதங்களை மீட்டெடுத்து உலகிற்கு வழங்கியதாக புராணங்களில் கூறப்படுகிறது. இதனால் கல்வி, வேத அறிவு மற்றும் ஞானத்துடன் தொடர்புடைய ஆன்மிக முக்கியத்துவமும் இந்த நாளுக்கு இருப்பதாக நம்பப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;எப்படி கடைப்பிடிக்க வேண்டும்?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஆவணி அவிட்டம் அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, சுத்தமான உடை அணிந்து, குடும்ப வழக்கப்படி பூஜை மற்றும் சடங்குகளை மேற்கொள்வது வழக்கம். பின்னர் ரிஷி தர்ப்பணம், வேத மந்திர பாராயணம் மற்றும் பூணூல் மாற்றுதல் போன்ற நிகழ்வுகள் நடைபெறும்.&lt;/p&gt;&lt;p&gt;பூணூல் மாற்றும் நேரம் உள்ளிட்ட சடங்குகளுக்கு உள்ளூர் பஞ்சாங்கம் மற்றும் குடும்ப சம்பிரதாயத்தை கருத்தில் கொள்வது முக்கியம். ஏனெனில் இடம், பின்பற்றப்படும் வேத சம்பிரதாயம் மற்றும் பஞ்சாங்க கணக்கீடு ஆகியவற்றைப் பொறுத்து நேரங்களில் மாற்றம் இருக்கக்கூடும்.&lt;/p&gt;&lt;p&gt;குறிப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள நேரங்கள் பொதுவாக வெளியிடப்பட்ட பஞ்சாங்கத் தகவல்களின் அடிப்படையிலானவை. உங்கள் குடும்ப வழக்கம் அல்லது உள்ளூர் பஞ்சாங்கத்தில் வேறுபாடு இருந்தால் அதையே முன்னுரிமையாக எடுத்துக்கொள்வது நல்லது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>spiritual</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/spiritual/aavani-avittam-2026-auspicious-time-to-change-sacred-thread-on-august-27-articleshow-urin0aw"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Puja Mistakes: பூஜை விளக்கில் ஊதுபத்தி ஏற்றுகிறீர்களா? இந்த ஒரு தவறால் வீட்டில் தரித்திரம் வரும்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/spiritual/why-lighting-agarbatti-from-puja-lamp-is-considered-inauspicious-zpchwcf</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/spiritual/why-lighting-agarbatti-from-puja-lamp-is-considered-inauspicious-zpchwcf</guid>
            <pubDate>Wed, 26 Aug 2026 16:12:54 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;சாஸ்திரங்களின்படி, பூஜை செய்யும் போது எரியும் விளக்கில் ஊதுபத்தி ஏற்றுவது பெரும் பாவமாகும். அது வீட்டில் வறுமையை உண்டாக்கி, நேர்மறை ஆற்றலைக் குறைக்கிறது. இந்தக் கட்டுரை இதற்கான காரணங்களையும், பூஜைக்கான சரியான விதிகளையும் விளக்குகிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0yfth3a96ftpftvsq61cfva,imgname-lighting-agarbatti--5--1787729626218.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சாஸ்திரங்களின்படி, பூஜை செய்யும் போது எரியும் விளக்கில் ஊதுபத்தி ஏற்றுவது பெரும் பாவமாகும். அது வீட்டில் வறுமையை உண்டாக்கி, நேர்மறை ஆற்றலைக் குறைக்கிறது. இந்தக் கட்டுரை இதற்கான காரணங்களையும், பூஜைக்கான சரியான விதிகளையும் விளக்குகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சனாதன இந்து மதத்தில், தினசரி வழிபாடுகளுக்கும் காணிக்கைகளுக்கும் மிகவும் புனிதமான இடம் உண்டு. ஒவ்வொரு வீட்டிலும் காலையிலும் மாலையிலும் கடவுளுக்கு முன்பாக விளக்கேற்றி, தூபம் மற்றும் விளக்குகளுடன் வழிபடுவது ஒரு பாரம்பரியமாகும். வேதங்களின்படி, கடவுளுக்கு முன்பாக ஏற்றப்படும் விளக்கின் ஒளி உண்மையில் 'அக்னி தேவனின்' வடிவமாகும், மேலும் அது மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையே ஒரு இணைப்பாகச் செயல்படுகிறது. இருப்பினும், வழிபாடு செய்யும்போது பெரும்பாலான மக்கள் செய்யும் ஒரு பொதுவான மற்றும் பெரிய தவறு, எரியும் விளக்கிலிருந்து தூபம் அல்லது ஊதுபத்திகளை ஏற்றுவதாகும்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சாஸ்திரங்கள் மற்றும் ஜோதிடத்தின்படி, எரியும் விளக்கில் இருந்து சாம்பிராணி அல்லது ஊதுபத்திகளை ஏற்றுவது மிகவும் அசுபமானதாகவும் பெரும் பாவமாகவும் கருதப்படுகிறது. அப்படியென்றால், இதனால் ஏற்படக்கூடிய இழப்புகள் என்ன? அதற்கான விதிகள் என்ன? இதோ முழுமையான விளக்கம்.&lt;/p&gt;&lt;p&gt;ஒரு விளக்கைக் கொண்டு ஊதுபத்தியை ஏற்றினால் ஏற்படும் இழப்புகள் என்ன?&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;1. குடும்பத்தைச் சூழ்ந்துள்ள கொடிய வறுமை:&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;சாஸ்திரங்களின்படி, வழிபாட்டிற்காக ஏற்றப்படும் விளக்கு தெய்வீக ஒளியின் சின்னமாகும். அந்தப் புனிதமான சுடரைக் கொண்டு மற்ற பொருட்களை எரிப்பது அல்லது பற்ற வைப்பது வீட்டில் 'பர்கத்' (செழிப்பு) ஏற்படுவதைத் தடுக்கும். தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும், கடன் வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது, மேலும் இது லட்சுமி தேவியின் அதிருப்திக்கும் வழிவகுக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒரு விளக்கு வீட்டிலிருந்து எதிர்மறை ஆற்றலை அகற்றி, நேர்மறை ஆற்றலை நிரப்புகிறது. இருப்பினும், அதே விளக்கில் இருந்து சாம்பிராணி ஏற்றப்படும்போது, ​​அந்த ஒளியின் புனிதம் குலைந்து, வீட்டில் எதிர்மறை அலைகள் அதிகரிக்கும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பல புராணக்கதைகள் மற்றும் ஆன்மீகப் போதகர்களின் கூற்றுப்படி, வழிபாட்டில் ஊதுபத்திகளை எரிப்பதை விட இயற்கை தூபத்தை (தூபம்) எரிப்பதே சிறந்தது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;மூங்கில் தோஷம்: &lt;/strong&gt;பெரும்பாலான ஊதுபத்திகளில் ஒரு மூங்கில் குச்சி இருக்கும். இந்து பாரம்பரியத்தில், சிரார்த்தம் அல்லது இறுதிச் சடங்குகளின் போது மட்டுமே மூங்கில் எரிக்கப்படுகிறது. தினசரி வழிபாட்டின் போது மூங்கிலை எரிப்பது குடும்பத்தின் வளர்ச்சியைத் தடுப்பதாகவும், பித்ரு தோஷத்தை ஏற்படுத்துவதாகவும் நம்பப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;அறிவியல் காரணம்: &lt;/strong&gt;இரசாயனங்கள் சேர்த்து மூங்கிலை எரிப்பதால் வெளிவரும் புகை உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிப்பதுடன், சுற்றுச்சூழலுக்கும் நல்லதல்ல. எனவே, தூய பொருட்களால் செய்யப்பட்ட ஊதுபத்திகளைப் பயன்படுத்துவதே சிறந்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தெய்வத்தின் விளக்கை ஏற்றுவதற்கு எப்போதும் சுத்தமான பசு நெய் அல்லது நல்லெண்ணெயைப் பயன்படுத்துங்கள் (சனி-பைரவ பூஜைக்கு வெற்றிலை/கடுகு எண்ணெய்).&lt;/p&gt;&lt;p&gt;ஊதுபத்தியை ஏற்றுவதற்குத் தனியான தீக்குச்சி அல்லது கற்பூரத்தைப் பயன்படுத்துங்கள். அதை ஒருபோதும் பிரதான விளக்குச் சுடரில் ஏற்றாதீர்கள்.&lt;/p&gt;&lt;p&gt;வாஸ்து சாஸ்திரத்தின்படி, எப்போதும் வடகிழக்கு, கிழக்கு அல்லது வடக்கு திசையை நோக்கி விளக்கை ஏற்றுவது சிறந்தது.&lt;/p&gt;&lt;p&gt;( &lt;strong&gt;குறிப்பு: &lt;/strong&gt;இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் மத நம்பிக்கைகள், ஜோதிடம் மற்றும் நாட்டுப்புறக் கதைகளை அடிப்படையாகக் கொண்டவை. நம்பிக்கை என்பது தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது.)&lt;/p&gt;]]></content:encoded>
            <category>spiritual</category>
            <dc:creator>Asianet News</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/spiritual/why-lighting-agarbatti-from-puja-lamp-is-considered-inauspicious-zpchwcf"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Janmashtami 2026: கண்ணனை வழிபட இதுதான் சரியான முறை.! கிருஷ்ணரின் அருளைப் பெற செய்ய வேண்டிய பரிகாரங்கள்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/spiritual/simple-rituals-for-janmashtami-2026-to-receive-lord-krishnas-blessings-zw2y7pn</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/spiritual/simple-rituals-for-janmashtami-2026-to-receive-lord-krishnas-blessings-zw2y7pn</guid>
            <pubDate>Wed, 02 Sep 2026 05:43:36 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;வரவிருக்கும் கிருஷ்ண ஜெயந்தி அன்று, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அருளைப் பெற சில எளிய வழிமுறைகள் உள்ளன. அவரின் பரிபூரண ஆசீர்வாதத்தைப் பெற வீட்டில் செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகள் மற்றும் எளிய பரிகாரங்களை இப்போது பார்ப்போம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m1e2yb24dk65vcx3kcaprf88,imgname-janmashtami-2026-1788252990532.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;வரவிருக்கும் கிருஷ்ண ஜெயந்தி அன்று, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அருளைப் பெற சில எளிய வழிமுறைகள் உள்ளன. அவரின் பரிபூரண ஆசீர்வாதத்தைப் பெற வீட்டில் செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகள் மற்றும் எளிய பரிகாரங்களை இப்போது பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பாத்ர மாதத்தின் கிருஷ்ணபட்ச அஷ்டமி திதியில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்தார். இதனால், இந்த நாள் இந்துக்களுக்கு மிகவும் புனிதமானதாகும். கிருஷ்ண ஜெயந்தி விழா வழிாட்டு முறைகள் மற்றும் விரதங்கள் கண்ணனின் அருளை உடனே கிடைக்கவைக்கும் ஒரு சிறப்பான வழியாகும். ஒரு சில முறைகளில் கிருஷ்ணரை வழிபட்டால் நினைத்தகாரியம் நடக்கும். பொன் பொருள் குவியும்.&lt;/p&gt;&lt;img&gt;ஜோதிடர்களின் கூற்றுப்படி, ஜெயந்தி அன்று கோபாலனுக்கு குங்குமப்பூ கலந்த பாயாசம் செய்து படையுங்கள். அன்று முழுவதும் விரதம் இருந்து, மாலையில் பூஜை செய்த பின் உணவு உண்ணுங்கள். வீட்டில் அசைவ உணவு சமைக்க வேண்டாம்.&lt;img&gt;&lt;p&gt;வீட்டில் சிறிய கிருஷ்ணர் தொட்டில் இருந்தால், அவரை அதில் வைத்து ஆட்டுங்கள். துளசி மாலை அணிவியுங்கள். காய்ச்சாத பாலில் ரோஜா அல்லது தாமரை இதழ்கள், பன்னீர், வெள்ளை சந்தனம், சிறிது கற்பூரம் கலந்து கிருஷ்ணருக்கு அபிஷேகம் செய்யுங்கள். இதையும் கிளிக் செய்யுங்கள்- நெட்டிவ் எனர்ஜியை விரட்டும் கல் உப்பு.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜெயந்தி அன்று, கோபாலனின் உடல் முழுவதும் நெய் அல்லது வெண்ணெய் தடவுங்கள். பிறகு, ஒரு வெள்ளிப் பாத்திரத்தில் அல்லது வலம்புரிச் சங்கில் காய்ச்சாத பால் மற்றும் கங்காஜலத்தைக் கலந்து அபிஷேகம் செய்து நீராட்டுங்கள். இதையும் கிளிக்க செய்யுங்கள்- ராகு கேது பார்வையால் 5 ராசிகளுக்கு அள்ள அள்ள பணம்.! குவியல் குவியலாக கிடைக்கும் தங்க புதையல்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜெயந்தி பூஜையின்போது கிருஷ்ணருக்கு ஒரு வெள்ளி புல்லாங்குழலை வைத்து வழிபட்டு, பிறகு அதை உங்கள் பணம் வைக்கும் இடத்தில் வையுங்கள். பூஜையில் மயில் இறகையும் வையுங்கள். இது கிருஷ்ணரை மகிழ்விக்கும். முடிந்தால் சில குழந்தைகளுக்கு உணவளிப்பது ஆசீர்வாதத்தைத் தரும். இதையும் கிளிக்க செய்யுங்கள்-Janmashtami 2026: கோடிகளை தரும் கிருஷ்ண ஜெயந்தி விரதம்.! விரதம் இருந்தால் என்ன கொடுப்பார் கிருஷ்ண பகவான்?!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>spiritual</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/spiritual/simple-rituals-for-janmashtami-2026-to-receive-lord-krishnas-blessings-zw2y7pn"/>
        </item>
    </channel>
</rss>
