<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes"?>
<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Tue, 11 Aug 2026 17:01:32 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss/spiritual" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[Shadashtak Yog: ஒன்றாக இணையும் சூரியன் ராகு.! ஆகஸ்ட் 17 வரை இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஆபத்து; சடாஷ்டக யோகத்தால் டபுள் சிக்கல்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/shadashtak-yog-2026-effects-on-four-zodiac-signs-should-be-very-careful-until-august-17-0atu4p1</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/shadashtak-yog-2026-effects-on-four-zodiac-signs-should-be-very-careful-until-august-17-0atu4p1</guid>
            <pubDate>Sun, 02 Aug 2026 16:05:08 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Shadashtak Yog: ஜோதிடத்தின்படி, இரண்டு கிரகங்கள் ஒன்றுக்கொன்று 6 மற்றும் 8-வது வீட்டில் இருக்கும்போது 'சடாஷ்டக யோகம்' உருவாகும். இந்த யோகம் மிகவும் ஆபத்தானதாகக் கருதப்படுகிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kz10je6ar3rar4ky992q1eye,imgname-shadashtak-yog--1785666812106.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Shadashtak Yog: ஜோதிடத்தின்படி, இரண்டு கிரகங்கள் ஒன்றுக்கொன்று 6 மற்றும் 8-வது வீட்டில் இருக்கும்போது 'சடாஷ்டக யோகம்' உருவாகும். இந்த யோகம் மிகவும் ஆபத்தானதாகக் கருதப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;ஜோதிடத்தில் கிரகங்களின் நகர்வும், சேர்க்கையும் மனித வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஜூலை 16, 2026 முதல் சூரியன் மற்றும் ராகுவால் 'சடாஷ்டக யோகம்' என்ற அசுப யோகம் உருவாகியுள்ளது. இதன் தாக்கம் ஆகஸ்ட் 17 வரை, அதாவது 30 நாட்களுக்கு நீடிக்கும். ஜோதிட சாஸ்திரப்படி, இரண்டு கிரகங்கள் ஒன்றுக்கொன்று 6 மற்றும் 8-வது வீட்டில் அமரும்போது இந்த யோகம் உருவாகிறது. இது கருத்து வேறுபாடுகள், பதற்றம் மற்றும் எதிர்பாராத சவால்களைக் குறிக்கும். இந்த நேரத்தில், சூரியன் - ராகு சேர்க்கையால் நான்கு ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்.&lt;img&gt;ரிஷப ராசிக்காரர்களுக்கு மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். பேசும்போது வார்த்தைகளில் கடுமை வேண்டாம். உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். நிதி சம்பந்தமான முடிவுகளை அவசரமாக எடுக்க வேண்டாம்.&lt;img&gt;மிதுன ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் நிலைத்தன்மையை அடைய தைரியத்துடன் செயல்பட வேண்டும். இந்த காலகட்டத்தில் புதிய திட்டங்களைத் தொடங்க வாய்ப்புள்ளது. ஆனால், எந்தவொரு பெரிய முடிவையும் எடுக்கும் முன், முழுமையாக யோசித்துச் செயல்படுங்கள். இல்லையெனில், நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும்.&lt;img&gt;துலாம் ராசிக்காரர்களுக்கு இந்தக் காலகட்டம் சவாலாக இருக்கும். குடும்பத்தில் பதற்றமான சூழல் நிலவலாம். உங்கள் பேச்சில் கடுமை வெளிப்பட வாய்ப்புள்ளது. திடீரென வேலைப்பளு அதிகரிக்கக்கூடும். வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.&lt;img&gt;&lt;p&gt;கும்ப ராசிக்காரர்களுக்கு அடுத்த 30 நாட்கள் கடினமாக இருக்கும். இந்தக் காலகட்டத்தில் உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம். வாகனம் ஓட்டும்போது மிகவும் கவனமாக இருங்கள். மன அமைதிக்குத் தவறாமல் யோகா மற்றும் தியானம் செய்யுங்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)&lt;/strong&gt;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>spiritual</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/shadashtak-yog-2026-effects-on-four-zodiac-signs-should-be-very-careful-until-august-17-0atu4p1"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Ezharai Sani: ஒருவருக்கு வாழ்க்கையில் எத்தனை முறை ஏழரை சனி வரும்? அதிர்ச்சி தரும் ஜோதிட உண்மைகள்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/how-many-times-does-a-person-undergo-the-ezharai-sani-in-a-lifetime-what-are-mangu-sani-pongu-sani-and-anthima-sani-3carddp</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/how-many-times-does-a-person-undergo-the-ezharai-sani-in-a-lifetime-what-are-mangu-sani-pongu-sani-and-anthima-sani-3carddp</guid>
            <pubDate>Wed, 05 Aug 2026 13:03:39 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Different Types of Elarai Sani in Tamil: ஜோதிடத்தின் படி ஒருவரை எத்தனை முறை ஏழரை சனி பிடிக்கும்? மங்கு சனி, பொங்கு சனி, அந்திம சனி என்றால் என்ன என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kz8cv90n4t8cjdn2w70c2n0e,imgname-different-types-of-elarai-sani-in-tamil-1785914565653.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Different Types of Elarai Sani in Tamil: ஜோதிடத்தின் படி ஒருவரை எத்தனை முறை ஏழரை சனி பிடிக்கும்? மங்கு சனி, பொங்கு சனி, அந்திம சனி என்றால் என்ன என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வேத ஜோதிடத்தில் சனி பகவான் முக்கிய கிரகமாக அறியப்படுகிறார். அவர் நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப கர்ம வினைகளை அளிக்கும் நீதிமானாக விளங்குகிறார். சனி பகவான் என்றாலே பலருக்கும் பயம் ஏற்படுவது உண்டு. சனி பகவான் ஒரு ராசியைக் கடக்க 2&frac12; ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறார். ஏழரை சனி என்பது ஒருவர் பிறந்த ராசிக்கு முந்தைய ராசி (2&frac12; ஆண்டுகள்), ஜென்ம ராசி (2&frac12; ஆண்டுகள்), பிந்தைய ராசி (2&frac12; ஆண்டுகள்) ஆகிய மூன்றிலும் சனி பயணிக்கும் மொத்த 7&frac12; ஆண்டுகள் கொண்ட காலக்கட்டமாகும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் -&lt;/strong&gt; &amp;nbsp;மிதுன ராசியில் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;12 ராசிகளையும் கடந்து மீண்டும் அதே ராசிக்கு சனி பகவான் வர சுமார் 30 ஆண்டுகள் ஆகும். ஒவ்வொரு 30 ஆண்டுகளுக்கும் ஒருமுறை ஏழரை சனி சுழற்சி முறையில் மீண்டும் வரும். இதன் அடிப்படையில் ஏழரை சனி மூன்று சுற்றுகளாக பிரிக்கப்படுகிறது. முதல் சுற்று &lsquo;மந்தாரை அல்லது மங்கு சனி&rsquo; என்றும், இரண்டாம் சுற்று &lsquo;பொங்கு சனி&rsquo; என்றும், மூன்றாம் சுற்று &lsquo;மரண சனி அல்லது அந்திம சனி&rsquo; என்றும், நான்காம் சுற்று அபூர்வ சுற்றாகவும் கருதப்படுகிறது. ஒவ்வொரு சுற்றுகள் குறித்தும், அது எப்போது ஏற்படும் என்பது குறித்தும், கீழே விரிவாகப் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் -&lt;/strong&gt; &amp;nbsp;ஒன்றாக இணையும் சூரியன் ராகு.! ஆகஸ்ட் 17 வரை இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஆபத்து; சடாஷ்டக யோகத்தால் டபுள் சிக்கல்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முதல் சுற்று &lsquo;மந்தாரை அல்லது மங்கு சனி&rsquo; என்று அழைக்கப்படுகிறது. இது பெரும்பாலும் குழந்தைப் பருவம் அல்லது இளமைப் பருவத்தில் வரும். இது ராசிக்காரர்களை காட்டிலும் பெற்றோர்களை அதிகம் பாதிக்கும். குழந்தைகளுக்கு படிப்பில் சிறு தடங்கல்களை ஏற்படுத்தும். 30 வயதிற்குள் வரும் இதை முதல் சுற்றாக கருதலாம். குழந்தைகளுக்கு படிப்பில் கவனம் சிதறுதல், மந்தமான நிலை, உடல் நலக் கோளாறுகள், பெற்றோருக்கு தொல்லைகள் ஆகியவற்றை ஏற்படுத்தும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் -&lt;/strong&gt; &amp;nbsp;புதன்-சுக்கிரன் சுப பார்வையால் 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்! பணம், காதல், வேலையில் அடிக்கும் யோகம்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இரண்டாவது சனி &lsquo;பொங்கு சனி&rsquo; என்று அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் இது 30 வயது முதல் 60 வயதிற்குள் ஏற்படும். இது மனித வாழ்க்கையின் முக்கிய பகுதியாகும். தொழில், குடும்பம், பொருளாதாரம் சார்ந்த கடுமையான உழைப்புகளையும், சோதனைகளையும் தரும். இருப்பினும் பொங்கு சனி என்பதால் பல போராட்டங்களுக்குப் பிறகு நன்மைகளும், சமூகத்தில் நிலையான இடத்தையும், தொழில் வளர்ச்சியையும் வழங்கிச் செல்லும். பொங்கு சனி என்பது சவால்களை கொடுத்தாலும் அனுபவ அறிவைத் தந்து வாழ்வில் வெற்றி பெறச் செய்யும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் -&amp;nbsp;&lt;/strong&gt; 71 ஆண்டுகளுக்கு பிறகு அதிசயம்.! இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்.! எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மூன்றாம் சுற்று &lsquo;மரண சனி அல்லது அந்திம சனி&rsquo; என்று அழைக்கப்படுகிறது. இதன் காலம் 60 வயது முதல் 90 வயதிற்குள் வரும். வயோதிக காலத்தில் வரும் இந்த சுற்று உடல் ரீதியான உபாதைகள், மருத்துவச் செலவுகள், மனரீதியான பற்றற்ற தன்மை ஆகியவற்றை அதிகரிக்கும். ஆயுள் பலம் குறைவாக இருப்பவர்களுக்கு இது ஆயுள் முடிவையும் குறிக்கும். முதுமை பருவத்தில் வரும் இந்த சுற்றில் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படலாம். இறுதி கால சவால்களும் அதிகரிக்கக்கூடும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் -&lt;/strong&gt; &amp;nbsp;பிறக்கும் போதே கஜகேசரி ராஜயோகத்துடன் பிறக்கும் ராசிகள் யார்? குருவின் சக்திவாய்ந்த பார்வை இவர்களுக்கு எப்போதும் இருக்குமாம்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நான்காம் சுற்று அபூர்வ சுற்றாகும். 90 வயதை கடந்தவர்களுக்கு மட்டுமே இது சாத்தியமாகும். இதன் தாக்கம் முற்றிலும் ஆன்மீக ஈடுபாடு, உளவியல் பற்றுகளில் இருந்து விடுதலை மற்றும் பூரண ஓய்வைக் குறிக்கும். அரிதாக 90 வயது முதல் 100 வயது வரை நீண்ட ஆயுளுடன் வாழ்பவர்களுக்கு இந்த நான்காம் சுற்று வர வாய்ப்பு உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் -&lt;/strong&gt; &amp;nbsp;உங்க ஜாதகத்துல குரு பகவான் இந்த வீட்ல இருக்காரா? அப்போ நீங்க கோடீஸ்வரர் ஆவது உறுதி.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இருப்பினும் ஜோதிட ரீதியாக மனிதன் தன் வாழ்நாளில் சந்திக்கும் ஏழரை சனியின் பொதுவான எண்ணிக்கை 3 முறை ஆகும் ஏழரை சனியின் தாக்கம் ஒருவரின் ஜாதகத்தில் சனி பகவான் இருக்கும் இடம், ஆட்சி பெற்ற இடம், உச்ச பலம், தசா புத்திகள் மற்றும் பிற கிரகங்களின் பார்வையைப் பொறுத்து மாறுபடும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)&lt;/strong&gt;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>spiritual</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/how-many-times-does-a-person-undergo-the-ezharai-sani-in-a-lifetime-what-are-mangu-sani-pongu-sani-and-anthima-sani-3carddp"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Astrology: 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அரிய கிரக சேர்க்கை.! விசாகம் முதல் ரேவதி வரை 14 நட்சத்திரங்களுக்கான விரிவான பலன்கள் & பரிகாரங்கள்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/rare-planetary-conjunction-after-12-years-horoscope-predictions-for-visakam-to-revathi-581buch</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/rare-planetary-conjunction-after-12-years-horoscope-predictions-for-visakam-to-revathi-581buch</guid>
            <pubDate>Wed, 05 Aug 2026 10:00:09 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் குரு பகவானின் அரிய கிரக சேர்க்கையால், விசாகம் முதல் ரேவதி வரையிலான 14 நட்சத்திரக்காரர்களுக்கு ஏற்படும் யோகங்கள் மற்றும் மாற்றங்கள் விளக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kz827nm5zpax02j64thxfvjh,imgname-gemini-generated-image-w8by35w8by35w8by--1---1--1785903437445.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் குரு பகவானின் அரிய கிரக சேர்க்கையால், விசாகம் முதல் ரேவதி வரையிலான 14 நட்சத்திரக்காரர்களுக்கு ஏற்படும் யோகங்கள் மற்றும் மாற்றங்கள் விளக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜோதிட சாஸ்திரத்தில் நவகிரகங்களின் சஞ்சாரமும், அவற்றுக்கிடையே ஏற்படும் அரிய கிரக சேர்க்கைகளும் மனித வாழ்க்கையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில், தேவ குருவான குரு பகவான் தனது உச்ச வீடான கடக ராசியில் பிரவேசித்து, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் மிக அரிய கிரக சேர்க்கையை உருவாக்குவது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. குரு பகவான் உச்ச பலத்துடன் சஞ்சரிக்கும் போது, அவரது சுப பார்வை படும் ராசிகளுக்கும், அவருடைய ஆட்சி மற்றும் நட்பு வீடுகளில் உள்ள நட்சத்திரங்களுக்கும் அளப்பரிய நன்மைகள் கிடைக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;விசாகம் (4-ம் பாதம்) தொடங்கி ரேவதி வரையிலான 14 நட்சத்திரக்காரர்களுக்கு இந்த அரிய கிரக சேர்க்கை எத்தகைய மாற்றங்களையும், யோகங்களையும் தரப்போகிறது என்பதைப் பற்றிய விரிவான பார்வை இதோ.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விருச்சிக ராசிக்கு குருவின் பார்வையும் சஞ்சாரமும் மிகுந்த சுப பலன்களைத் தரும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;விசாகம் (4-ம் பாதம்): &lt;/strong&gt;நீண்ட நாட்களாக வராமல் இழுபறியாக இருந்த கடன் மற்றும் நிலுவை தொகைகள் கைக்கு வந்து சேரும். புதிய தொழில் முயற்சிகள் தடைகளின்றி வெற்றியடையும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;அனுஷம்:&lt;/strong&gt; தொழில் மற்றும் வியாபாரத்தில் இதுவரை இருந்த மந்த நிலை மாறி, புதிய வாடிக்கையாளர்களும் கூட்டாண்மை வாய்ப்புகளும் தேடிவரும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமை பலப்படும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;கேட்டை:&lt;/strong&gt; மன உளைச்சல், தேவையற்ற குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பாராத பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பொதுவான பரிகாரம்:&lt;/strong&gt; வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற மலர்கள் சாற்றி, கொண்டைக்கடலை மாலை அணிவித்து வழிபடவும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குருவை ராசிநாதனாகக் கொண்ட தனுசு ராசியினருக்கு இந்த சேர்க்கை பொற்காலமாக அமையும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;மூலம்: &lt;/strong&gt;எடுத்த காரியங்கள் அனைத்திலும் சுலபமாக வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் தடைபட்டு வந்த சுபகாரியப் பேச்சுவார்த்தைகள் மற்றும் திருமண யோகம் கைகூடும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பூராடம்:&lt;/strong&gt; நீண்ட நாட்களாக ஆட்டிப்படைத்த கடன் பிரச்சனைகளில் இருந்து முழுமையான விடுதலை கிடைக்கும். நிதி நிலைமை கணிசமாக உயர்ந்து சேமிப்பு அதிகரிக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;உத்திராடம் (1-ம் பாதம்): &lt;/strong&gt;சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். புதிய வீடு, நிலம் அல்லது வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பொதுவான பரிகாரம்:&lt;/strong&gt; செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானுக்கு நெய் தீபமேற்றி, கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வது நன்மையை அதிகரிக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மகர ராசியினருக்கு உத்தியோக உயர்வும், புதிய வாய்ப்புகளும் பெருகும் காலமிது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;உத்திராடம் (2, 3, 4-ம் பாதம்): &lt;/strong&gt;பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகளின் முழு ஆதரவும் பாராட்டுகளும் கிடைக்கும். தொழில் வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;திருவோணம்: &lt;/strong&gt;வெளிநாடு சென்று படிக்க அல்லது வேலை செய்ய விரும்புபவர்களுக்கு சாதகமான சூழல் நிலவும். சுப செலவுகள் மூலம் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;அவிட்டம் (1, 2-ம் பாதம்): &lt;/strong&gt;சொந்தமாக புதிய தொழில் தொடங்க திட்டமிடுபவர்களுக்கு முதலீடுகளும், நல்ல கூட்டாளிகளும் கிடைக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பொதுவான பரிகாரம்:&lt;/strong&gt; சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு சாற்றி, துளசி மாலையிட்டு வழிபடுவது நற்பலன்களைத் தரும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கும்ப ராசியினருக்கு ஆரோக்கிய மேம்பாடும், திடீர் பண வரவும் உண்டாகும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;அவிட்டம் (3, 4-ம் பாதம்): &lt;/strong&gt;நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் தடையின்றி கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சதயம்:&lt;/strong&gt; நீண்ட நாட்களாக இருந்த உடல்நலக் கோளாறுகள் நீங்கி ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய வருமான வழிகள் திறக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பூரட்டாதி (1, 2, 3-ம் பாதம்): &lt;/strong&gt;ஆன்மீகப் பயணங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் மிகச்சிறந்த வளர்ச்சியும், உயர்கல்வி வாய்ப்புகளும் அமையும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பொதுவான பரிகாரம்:&lt;/strong&gt; திங்கட்கிழமைகளில் சிவபெருமானுக்கு வில்வ அர்ச்சனை செய்து, பால் அபிஷேகம் செய்து வழிபடுவது யோகத்தை பலப்படுத்தும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குருவின் சொந்த ராசியான மீன ராசியினருக்கு சகல காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பூரட்டாதி (4-ம் பாதம்): &lt;/strong&gt;குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுப நிகழ்வுகளும் தொடர்ந்து நடைபெறும். பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர வாய்ப்புள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;உத்திரட்டாதி:&lt;/strong&gt; வியாபாரத்தில் எதிர்பாராத பெரும் லாபம் கிடைக்கும். நீங்கள் செய்யும் புதிய முதலீடுகள் எதிர்காலத்தில் நல்ல பலனைத் தரும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ரேவதி: &lt;/strong&gt;தொட்ட காரியங்கள் அனைத்தும் தடைகளின்றி வெற்றியடையும். வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற நல்ல வேலைவாய்ப்புகள் தேடி வரும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பொதுவான பரிகாரம்: &lt;/strong&gt;பெருமாள் கோயிலுக்கு துளசி மாலை சாற்றி, விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது அதிர்ஷ்ட வாய்ப்புகளை அதிகரிக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும் இந்த அரிய கிரக சேர்க்கையானது, தடைகளைத் தகர்த்து புதிய பாதையை அமைத்துக் கொடுக்கும் வல்லமை கொண்டது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள நட்சத்திரக்காரர்கள் இந்த காலகட்டத்தில் கிடைக்கும் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தி, உரிய பரிகார முறைகளையும் பின்பற்றி நடந்தால், வாழ்வில் மிகச்சிறந்த யோகங்களையும், வெற்றியையும் அடையலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>spiritual</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/rare-planetary-conjunction-after-12-years-horoscope-predictions-for-visakam-to-revathi-581buch"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Spiritual: சுமங்கலிகள் மொட்டை அடிப்பது சரியா, தவறா? சாஸ்திரம் சொல்வது என்ன? சுமங்கலிப் பெண்கள் அறிய வேண்டிய முக்கிய தகவல்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/sumangali-pengal-mottai-podalama-in-tamil-hindu-shastra-rules-and-spiritual-beliefs-about-tonsure-for-married-women-7xnv73l</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/sumangali-pengal-mottai-podalama-in-tamil-hindu-shastra-rules-and-spiritual-beliefs-about-tonsure-for-married-women-7xnv73l</guid>
            <pubDate>Fri, 07 Aug 2026 12:10:18 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Sumangali Pengal Mottai Podalama in Tamil: இந்து சாஸ்திரத்தில் சுமங்கலி பெண்கள் மொட்டை அடிப்பதற்கான சில விதிமுறைகள் கூறப்பட்டுள்ளது. அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kzdeyxjcpka2dzw69qpf4fhp,imgname-sumangali-pengal-mottai-podalama-in-tamil---1-1786084554316.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Sumangali Pengal Mottai Podalama in Tamil: இந்து சாஸ்திரத்தில் சுமங்கலி பெண்கள் மொட்டை அடிப்பதற்கான சில விதிமுறைகள் கூறப்பட்டுள்ளது. அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நாம் கோயில்களுக்கு செல்லும் பொழுது அங்கு பெண் பக்தர்கள் பலரும் தலை முடியை முழுமையாக சிரவர்த்தனம் செய்வதை (தலை முடியை முழுமையாக வழித்து மொட்டை அடிக்கும் பழக்கம்) பார்த்திருப்போம். ஆனால் இந்து சாஸ்திரங்கள் மற்றும் சம்பிரதாயங்களின்படி சுமங்கலி பெண்கள் தலை முடியை முழுமையாக நீக்குவது தவிர்க்கப்பட வேண்டும் என்று சாஸ்திர விதிகளும், நம்பிக்கைகளும் கூறுகின்றன. அதற்கு சாஸ்திரங்கள் கூறும் காரணங்களை இங்கு பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பெண்ணின் கூந்தல் என்பது அழகுக்கானது மட்டுமல்லாமல், மங்களகரமானதாகவும், லட்சுமி கடாசிற்கும் அடையாளமாகவும் கருதப்படுகிறது. ஆண்களுக்கு மொட்டை அடிப்பதும், பெண்களுக்கு நுனி முடியை மட்டும் வெட்டுவதே வழக்கம். மிகக் கடுமையான பாவ பிராயச்சித்தங்கள் அல்லது முக்கிய நேர்த்திக்கடன்களின் போது சுமங்கலி பெண்கள் முழுமையாக மொட்டை அடிப்பதற்கு பதிலாக நுனி முடியை மட்டும் ஒரு அங்குலம் வெட்டி சமர்ப்பிப்பதே போதுமானது என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சுமங்கலியாக இருக்கும் பெண்கள் எப்போதும் கூந்தலை அலங்கரித்துக் கொண்டும், திலகம், மலர் மற்றும் மங்களப் பொருட்களுடன் திகழ்வது &lsquo;சுமங்கலி இலட்சணம்&rsquo; என்று அழைக்கப்படும். திருப்பதி போன்ற புண்ணியத்தலங்களுக்கு செல்லும் பெண்கள் அங்கு நேர்த்திக் கடனுக்காக மொட்டை அடிக்கிறார்கள். கணவன் உயிருடன் இருக்கும் பொழுது சுமங்கலி பெண்கள் விருப்பப்பட்டு முழுமையாக மொட்டை அடிப்பது சாஸ்திரப்படி தவிர்க்கப்பட வேண்டும் என்று பெரியோர்கள் கூறுகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கடுமையான நோய் தீர வேண்டும் என்றோ அல்லது பெரிய பிரார்த்தனைகளுக்காகவோ நேர்ந்து கொண்டால் மட்டுமே கணவரின் முழு சம்மதத்துடன் மொட்டை அடித்துக் கொள்ள வலியுறுத்தப்படுகிறது. சுமங்கலி பெண்கள் இறைவனுக்கு முடி காணிக்கை செலுத்த விரும்பினால் முடியின் நுனி பகுதியை மட்டும் ஒரு சிறிய பகுதியை வெட்டி இறைவனுக்கு சமர்ப்பிக்கலாம். இதற்கு &lsquo;வேணி தானம்&rsquo; என்று பெயர். சுமங்கலி பெண்கள் மொட்டை அடிப்பது கணவனின் ஆயுளுக்கும் குடும்பத்தின் மங்களத்திற்கும் உகந்ததல்ல என்பதே பாரம்பரிய நம்பிக்கை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;காஞ்சி மகா பெரியவர் போன்ற ஆன்மீக வழிகாட்டிகள் மற்றும் சாஸ்திர அறிஞர்களின் கூற்றுப்படி, &ldquo;சுமங்கலி பெண்கள் தலைமுடியை முழுமையாக மொட்டை அடிக்க வேண்டியது இல்லை. இறைவனுக்கு கூந்தலை அர்ப்பணிக்க விரும்பினால், கணவனின் அனுமதியோடு வேணி தானம் செய்வதே (கூந்தலின் நுனிப்பகுதியில் சிறிதளவு நறுக்குவதே) சரியான முறையாகும். குலதெய்வங்கள் மற்றும் பிற தெய்வங்களுக்கு மொட்டை அடிக்கும் பாரம்பரிய பழக்கம் இருந்தால் மட்டுமே அதை தொடரலாம். எந்த ஒரு பாரம்பரியமும் இல்லாத பட்சத்தில் பொதுவான சாஸ்திர விதிகளின்படி சுமங்கலி பெண்கள் மொட்டை அடிப்பதை தவிர்க்க வேண்டும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>spiritual</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/sumangali-pengal-mottai-podalama-in-tamil-hindu-shastra-rules-and-spiritual-beliefs-about-tonsure-for-married-women-7xnv73l"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Astrology: ஆகஸ்ட் 11-ல் உருவாகும் 4 ராஜயோகங்கள்.! இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் நிச்சயம்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/august-11-2026-powerful-yogas-4-zodiac-signs-set-to-receive-jackpot-luck-and-major-benefits-according-to-astrology-8ak837v</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/august-11-2026-powerful-yogas-4-zodiac-signs-set-to-receive-jackpot-luck-and-major-benefits-according-to-astrology-8ak837v</guid>
            <pubDate>Mon, 10 Aug 2026 12:06:33 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;August 11 Zodiac Prediction: ஆகஸ்ட் 11-ம் தேதி மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாகும். அன்றைய தினம் உருவாகும் 4 சக்தி வாய்ந்த யோகங்களால் 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் கிடைக்கவுள்ளது. அதுகுறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kzn5abyvhykt6hxsw41ckyhb,imgname-august-11-zodiac-prediction-1786342879195.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;August 11 Zodiac Prediction: ஆகஸ்ட் 11-ம் தேதி மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாகும். அன்றைய தினம் உருவாகும் 4 சக்தி வாய்ந்த யோகங்களால் 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் கிடைக்கவுள்ளது. அதுகுறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வேத ஜோதிடத்தின்படி, 2026 ஆகஸ்ட் 11-ம் தேதி மிகவும் சிறப்பு வாய்ந்த நாள். அன்று கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் அமைப்பால், ஹம்ச ராஜயோகம், சசி ஆதித்ய ராஜயோகம், கஜகேசரி ராஜயோகம், புதாதித்ய ராஜயோகம் என 4 சக்திவாய்ந்த ராஜயோகங்கள் உருவாகின்றன. இந்த காலகட்டம் 4 ராசிக்காரர்களுக்கு தொழில் வெற்றி, வியாபார லாபம், பண பலம், சமூக மரியாதை என அனைத்தையும் அள்ளிக் கொடுக்கும். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் -&lt;/strong&gt; கடகத்தில் வலுவடையும் குரு பகவான்: ஆகஸ்ட் 10-க்குப் பின் 4 ராசிகளுக்கு கூரையை பிச்சிகிட்டு கொட்டப்போகுது.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த நல்ல யோகங்கள் உருவாவதால், ரிஷப ராசிக்காரர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும். நின்றுபோன வேலைகள் வேகம் பிடிக்கும். பணியில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும், பதவி உயர்வும் கிடைக்கலாம். தொழில் செய்பவர்கள் புதிய வாடிக்கையாளர்களைப் பெற்று, நல்ல பண லாபம் காண்பார்கள். முதலீடுகளும் நல்ல பலனைக் கொடுக்கும். உங்கள் இலக்குகளை அடைவதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். வேலை சம்பந்தமாக உள்நாடு மற்றும் வெளிநாடு பயணங்களுக்கும் வாய்ப்புகள் வரலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் -&lt;/strong&gt; பூஜையின் போது விளக்கு அணைந்துவிடுகிறதா? நல்ல சகுனமா? கெட்ட சகுனமா? சகுன சாஸ்திரம் சொல்வது என்ன?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கடக ராசியில் பிறந்தவர்கள் நான்கு ராஜயோகங்களின் முழுப் பலன்களையும் அனுபவிக்க வாய்ப்புள்ளது. உங்கள் தன்னம்பிக்கை அதிகரித்து, முன்னேற்றத்திற்கு புதிய வாய்ப்புகள் உருவாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கடினமான வேலைகளையும் எளிதாக முடிப்பீர்கள். தொழில் செய்பவர்களுக்கும் இந்த நேரம் சாதகமாக இருக்கும். உங்கள் தொழிலை விரிவுபடுத்துவதன் மூலம் வருமானத்திற்கு புதிய வழிகள் திறக்கும். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும், உங்கள் புகழ் வலுப்பெறும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் -&lt;/strong&gt; சுமங்கலிகள் மொட்டை அடிப்பது சரியா, தவறா? சாஸ்திரம் சொல்வது என்ன? சுமங்கலிப் பெண்கள் அறிய வேண்டிய முக்கிய தகவல்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த ராஜயோகம் துலாம் ராசிக்காரர்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும். இந்த காலகட்டத்தில், தொழில் செய்பவர்கள் குறிப்பிடத்தக்க லாப வாய்ப்புகளையும், தொழில் முன்னேற்றத்திற்கான புதிய வழிகளையும் காண்பார்கள். நீண்ட நாட்களாக முடங்கிக் கிடந்த திட்டங்கள் வேகம் பெற்று வெற்றிகரமாக முடியும். கூட்டாண்மை தொழிலும் நல்ல பலன்களைக் கொடுக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். உங்கள் நிதி நிலைமை வலுப்பெறும், புதிய வருமான வழிகளும் உருவாகும். இந்த நேரத்தில் வாகனம் அல்லது சொத்து வாங்கும் கனவுகளும் நனவாகலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் - &lt;/strong&gt;வீட்டு நிம்மதியைக் கெடுக்கும் 5 பழக்கங்கள்! இதை மாற்றினால் வாழ்க்கை சூப்பராக மாறும்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த சுப ராஜயோகம் கும்ப ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசிக்க வைக்கும். வேலை மாற்றம் அல்லது தொழிலில் ஒரு புதிய தொடக்கத்தைத் திட்டமிடுபவர்களுக்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும். பணியிடத்தில் புதிய வாய்ப்புகள் உருவாகி, முன்னேற்றத்திற்கு வழிகள் திறக்கும். தொழில் செய்பவர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்துவதன் மூலம் நல்ல லாபம் ஈட்ட வாய்ப்புள்ளது. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தங்கள் கடின உழைப்புக்கு நல்ல பலன்களைப் பெறுவார்கள். அவர்களின் நிதி நிலைமை வலுப்பெறும். வராமல் இருந்த பணம் திரும்பக் கிடைக்க வாய்ப்புள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)&lt;/strong&gt;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>spiritual</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/august-11-2026-powerful-yogas-4-zodiac-signs-set-to-receive-jackpot-luck-and-major-benefits-according-to-astrology-8ak837v"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Kamika Ekadashi: காமிகா ஏகாதசி விரதம்.! விரதம் முடித்த பிறகு இந்தக் கதையை கேட்டால் பிரச்சனைகள் தீரும்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/spiritual/kamika-ekadashi-vrat-katha-the-path-to-redemption-and-vishnus-blessings-acnvm9m</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/spiritual/kamika-ekadashi-vrat-katha-the-path-to-redemption-and-vishnus-blessings-acnvm9m</guid>
            <pubDate>Mon, 10 Aug 2026 06:37:58 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;காமிகா ஏகாதசி விரத கதை: காமிகா ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பதால், விஷ்ணுவின் அருளால் பாவங்கள் நீங்கும். கதையின்படி, ஒரு சத்திரியன் பிராமணரைக் கொன்ற பாவத்தில் இருந்து விடுபட இந்த விரதத்தை அனுசரித்து, தன் பாவங்கள் அனைத்திலிருந்தும் விடுபட்டான்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kzmk0exw24cgtfakfjdr2wk4,imgname-chatgpt-image-aug-10--2026--06-29-34-am--1--1786323680186.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;காமிகா ஏகாதசி விரத கதை: காமிகா ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பதால், விஷ்ணுவின் அருளால் பாவங்கள் நீங்கும். கதையின்படி, ஒரு சத்திரியன் பிராமணரைக் கொன்ற பாவத்தில் இருந்து விடுபட இந்த விரதத்தை அனுசரித்து, தன் பாவங்கள் அனைத்திலிருந்தும் விடுபட்டான்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்து மதத்தில் ஏகாதசி விரதத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. குறிப்பாக காமிகா ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது மிகவும் புண்ணியமானதாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து விஷ்ணுவை வழிபடுவதன் மூலம் எதிர்மறை எண்ணங்கள் நீங்கி, மன அமைதி கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும், செய்த பாவங்கள் நீங்கி, புண்ணிய பலன்கள் பெருகி, குடும்பத்தில் மகிழ்ச்சியும் செல்வ வளமும் அதிகரிக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தன் கோபத்தின் விளைவாக நிகழ்ந்த விபரீதத்தை உணர்ந்த சத்திரியன் கடும் அதிர்ச்சியடைந்தான். தன்னால் ஒரு பிராமணர் கொல்லப்பட்டதை நினைத்து மனம் உடைந்து, செய்த பாவத்திற்காக பெரிதும் வருந்தினான். அந்த பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து எப்படியாவது விடுபட வேண்டும் என எண்ணிய அவன், அதற்கான வழியைத் தேடி அலைந்தான். இறுதியில், தனது பாவம் நீங்கி மன அமைதி பெறுவதற்கான பரிகாரத்தை அறிந்து கொள்ள முயன்றான்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஏழை, எளிய மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து, அன்னதானம் உள்ளிட்ட தான தர்மங்களை மேற்கொள்ளுமாறு அவர்கள் அறிவுறுத்தினர். மேலும், மனதைத் தூய்மையாக வைத்துக்கொண்டு, முழு நம்பிக்கையுடனும் உண்மையான பக்தியுடனும் மகாவிஷ்ணுவை சரணடைந்தால், செய்த பாவங்களிலிருந்து விமோசனம் கிடைக்கும் என்றும் வழிகாட்டினர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அவனது மனமார்ந்த பக்தியையும், தான் செய்த தவறுக்காக உண்மையாக வருந்திய உள்ளத்தையும் கண்டு மகாவிஷ்ணு மகிழ்ந்தார். அவனது பாவங்களை மன்னித்து, பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து அவனுக்கு விமோசனம் அளித்தார். மேலும், மனதில் இருந்த கவலைகள் நீங்கி, இனி தர்மத்தின் வழியில் நடக்க வேண்டும் என்று அருளாசி வழங்கி, அவனது வாழ்க்கையில் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிலைத்திருக்க அருள்புரிந்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;காமிகா ஏகாதசி விரதத்தை முழு நம்பிக்கையுடனும் பக்தியுடனும் அனுசரித்து, மகாவிஷ்ணுவை வழிபடுபவர்கள் தங்கள் பாவங்களில் இருந்து விமோசனம் பெற்று, மன அமைதியையும் நல்வாழ்வையும் அடைவார்கள் என்பது இந்தக் கதையின் முக்கிய நீதியாகும். உண்மையான பக்தி, மனப்பூர்வமான வருத்தம் மற்றும் தர்மத்தின் வழியில் நடப்பது இறைவனின் அருளைப் பெற்றுத் தரும் என்பதையும் இக்கதை உணர்த்துகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>spiritual</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/spiritual/kamika-ekadashi-vrat-katha-the-path-to-redemption-and-vishnus-blessings-acnvm9m"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Lamp Lighting Rituals: வீட்டில் எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும்? இதன் பின்னால் இருக்கும் அறிவியல்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/spiritual/simple-vastu-tips-for-lighting-lamps-at-home-egv8kyq</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/spiritual/simple-vastu-tips-for-lighting-lamps-at-home-egv8kyq</guid>
            <pubDate>Fri, 07 Aug 2026 17:10:26 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Lamp Lighting Rituals: வீட்டில் விளக்கு ஏற்றுவது வெறும் சம்பிரதாயம் மட்டுமல்ல, அது பாசிட்டிவ் எனர்ஜியை தரும் ஒரு விஷயம். மாலையில் விளக்கு ஏற்றும்போது செய்யும் சின்ன தவறுகள் கூட தோஷத்தை ஏற்படுத்தலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kzdwcb61ay8y15qww4czn1hm,imgname-thumbnail---2026-08-07t155611.633-1786098625729.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Lamp Lighting Rituals: வீட்டில் விளக்கு ஏற்றுவது வெறும் சம்பிரதாயம் மட்டுமல்ல, அது பாசிட்டிவ் எனர்ஜியை தரும் ஒரு விஷயம். மாலையில் விளக்கு ஏற்றும்போது செய்யும் சின்ன தவறுகள் கூட தோஷத்தை ஏற்படுத்தலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தினமும் வீட்டில் பக்தியுடன் தீபம் ஏற்றுவதால், மகாலட்சுமி அருள் புரிவார். இதனால் வீட்டில் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி, வருமான வழிகள் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகள் குறைந்து, வீட்டில் செல்வமும் தானியமும் பெருகும் என்பது நம்பிக்கை.&lt;/p&gt;&lt;img&gt;வாஸ்து சாஸ்திரத்தின்படி, தினமும் காலையிலும் மாலையிலும் பூஜை அறையில் விளக்கு ஏற்றுவது வாஸ்து தோஷத்தின் தாக்கத்தை அழிக்கும். குறிப்பாக, மாலையில் கடவுளுக்கு முன்பு இரண்டு விளக்குகளை ஏற்றுவது ரொம்பவே மங்களகரமானது. இதில் ஒன்று நெய் விளக்காகவும், மற்றொன்று எண்ணெய் விளக்காகவும் இருக்க வேண்டும்.&lt;img&gt;&lt;p&gt;விளக்குகளை வைக்கும் முறையில் அறிவியலும் சாஸ்திரமும் அடங்கியுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;நெய் விளக்கு (Ghee Lamp): &lt;/strong&gt;கடவுளின் படம் அல்லது சிலைக்கு வலது பக்கம் நெய் விளக்கை வைக்க வேண்டும். இதை கிழக்கு அல்லது வடக்கு திசையை நோக்கி ஏற்றுவதால், வீட்டில் அமைதியும் அதிர்ஷ்டமும் பெருகும்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;எண்ணெய் விளக்கு (Oil Lamp): &lt;/strong&gt;கடவுளின் படத்திற்கு இடது பக்கம் எண்ணெய் விளக்கை (நல்லெண்ணெய் அல்லது கடுகு எண்ணெய்) வைக்க வேண்டும். இது வீட்டிற்கு ஒரு ரக்ஷா கவசம் போல செயல்படும். நெகட்டிவ் எனர்ஜி, கண் திருஷ்டி, வாஸ்து தோஷங்களை நீக்க இது உதவும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விளக்கு ஏற்றுவதில் திசைக்கு அதிக முக்கியத்துவம் உண்டு:&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;கிழக்கு:&lt;/strong&gt; குடும்ப உறுப்பினர்களின் ஆயுள், ஆரோக்கியம் மற்றும் நன்மைக்காக விளக்கு கிழக்கு நோக்கி இருக்க வேண்டும்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;வடக்கு: &lt;/strong&gt;செல்வம் மற்றும் தொழில் வளர்ச்சிக்காக விளக்கு வடக்கு திசையை நோக்கி இருக்க வேண்டும். கவனத்திற்கு: விளக்கை ஒருபோதும் மேற்கு அல்லது தெற்கு திசையை நோக்கி ஏற்றக்கூடாது, இது அசுபமாக கருதப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;சாதாரண நாட்களில் மாலையில் இரண்டு விளக்குகள் ஏற்றுவது நல்லது. ஆனால் அமாவாசை, பௌர்ணமி, தீபாவளி அல்லது மற்ற விசேஷ பண்டிகை நாட்களில், கடவுளுக்கு முன்பு ஐந்து அல்லது ஏழு விளக்குகளை ஏற்றுவது மிகவும் மங்களகரமானது. இப்படி செய்வதால் வீட்டிற்கு அஷ்ட ஐஸ்வர்யங்களும் வந்து சேரும் என பண்டிதர்கள் கூறுகின்றனர்.]]></content:encoded>
            <category>spiritual</category>
            <dc:creator>Rayar A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/spiritual/simple-vastu-tips-for-lighting-lamps-at-home-egv8kyq"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Nag Panchami: நாக பஞ்சமி அன்று கிச்சனில் இந்த தவறை செய்யாதீங்க! ராகு-கேது தோஷத்தில் இருந்து தப்பிக்க எளிய வழிகள்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/astrology/nag-panchami-2026-vastu-rules-to-avoid-rahu-ketu-dosha-articleshow-eutrgc2</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/astrology/nag-panchami-2026-vastu-rules-to-avoid-rahu-ketu-dosha-articleshow-eutrgc2</guid>
            <pubDate>Mon, 10 Aug 2026 06:07:13 +0530</pubDate>
            <description><![CDATA[நாக பஞ்சமி அன்று சமையலறையில் இரும்பு வாணலியைப் பயன்படுத்துவது ஜோதிட மற்றும் வாஸ்து ரீதியாக நல்லதல்ல. இது ராகு மற்றும் செவ்வாய் சேர்க்கையால் 'அங்காரக தோஷத்தை' உருவாக்கி, குடும்பத்தில் மன அழுத்தம் மற்றும் விபத்து அபாயத்தை அதிகரிக்கும்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxz2kn7y2t3tp8a348zgzxa8,imgname-nag-panchami-date-2026-1784528098557.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;Nag Panchami Vastu Rules: &lt;/strong&gt;நாக பஞ்சமி பண்டிகை வெறும் மத ரீதியான ஒரு விழா மட்டும் இல்லை. ஜோதிட சாஸ்திரப்படியும், வாஸ்து சாஸ்திரப்படியும் இது ரொம்பவே முக்கியமான ஒரு நாள். இந்த நாளில் நாக தேவதையை வழிபட்டால், கால சர்ப்ப தோஷம் மற்றும் ராகு-கேது தோஷத்தால் ஏற்படும் கஷ்டங்களில் இருந்து விடுதலை கிடைக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;வேத ஜோதிடம் மற்றும் வீட்டு வாஸ்துப்படி, நாக பஞ்சமி அன்று சமையலறையில் இரும்பு வாணலியைப் பயன்படுத்துவது, ஒரு குடும்பத்தின் ஆரோக்கியம், செல்வம் மற்றும் மன அமைதியில் பெரிய நெகட்டிவ் தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் பின்னணியில் உள்ள வாஸ்து மற்றும் ஜோதிட காரணங்களை விரிவாகப் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;h3&gt;ராகு, செவ்வாய் மற்றும் நெருப்பின் ஆபத்தான கூட்டணி&lt;/h3&gt;&lt;p&gt;ஜோதிட சாஸ்திரம், சமையலறை பாத்திரங்களுக்கும் கிரகங்களுக்கும் நேரடி தொடர்பு இருப்பதாகக் கூறுகிறது:&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இரும்புப் பாத்திரம் ராகுவின் சின்னம்:&lt;/strong&gt; ஜோதிடத்தில், கறுப்பு இரும்பு வாணலி என்பது நிழல் கிரகமான ராகுவைக் குறிக்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சமையல் செய்யும் இடம் செவ்வாயின் சின்னம்:&lt;/strong&gt; சமையலறையில் இருக்கும் நெருப்பு, ஆற்றல் மற்றும் கோபத்தின் கிரகமான செவ்வாயுடன் தொடர்புடையது.&lt;/p&gt;&lt;p&gt;ஜோதிடத்தின்படி, நாக பஞ்சமி அன்று அடுப்பு நெருப்பின் மீது நேரடியாக வாணலியை வைப்பது, ராகுவும் செவ்வாயும் இணைவது போன்ற ஒரு நிலையை (அங்காரக தோஷம்) உருவாக்குகிறது. ராகுவே பாம்பின் தலை என்று கருதப்படுகிறது. இந்த நாளில் ராகுவின் சின்னமான வாணலியைச் சூடாக்கினால், வீட்டில் ராகு தோஷம் அதிகரிக்கும். இதனால், குடும்ப உறுப்பினர்களிடையே தேவையில்லாத மன அழுத்தம், எரிச்சல் மற்றும் விபத்துகள் ஏற்படும் அபாயம் கூடும்.&lt;/p&gt;&lt;h2&gt;தென்கிழக்கு மூலை மற்றும் நாக பஞ்சமி வாஸ்து விதிகள்&lt;/h2&gt;&lt;p&gt;&lt;strong&gt;சமையலறையும் தென்கிழக்கு மூலையும்:&lt;/strong&gt; வாஸ்து சாஸ்திரத்தின்படி, சமையலறை வீட்டின் தென்கிழக்கு திசையில் (அக்னி மூலை) இருக்க வேண்டும். இது நெருப்புக்கு உரிய இடமாகக் கருதப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;நாக தேவதையும் வாணலியும்:&lt;/strong&gt; வாணலியின் வட்டமான வடிவம், 'பாம்பின் படம்' (ஒரு வட்டமான ஆற்றல் வளையம்) போன்ற ஒரு சின்னமாகப் பார்க்கப்படுகிறது. நாக தேவதைக்கும் வாஸ்து புருஷனுக்கும் ஆழமான தொடர்பு உண்டு.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இரும்பும் நெகட்டிவ் எனர்ஜியும்:&lt;/strong&gt; இரும்பு, சனி மற்றும் ராகு கிரகங்களின் சின்னம். ஒரு இரும்பு வாணலி அல்லது பாத்திரம் அதிக வெப்பத்தில் இருக்கும்போது, அது நெகட்டிவ் அதிர்வுகளை வெளியிடும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;நாக பஞ்சமியில் இரும்புப் பாத்திரங்களின் தாக்கம்:&lt;/strong&gt; நாக பஞ்சமி அன்று இரும்புப் பாத்திரங்களை அதிகமாகப் பயன்படுத்தினால், அது தென்கிழக்கு மூலையின் வாஸ்து ஆற்றலைக் கெடுத்து, சமையலறையின் சமநிலையைச் சீர்குலைக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;அமைதியான ஆற்றலை உருவாக்குதல்:&lt;/strong&gt; நேரடியாக இரும்புப் பாத்திரத்தில் வறுக்காமல், உணவை ஆவியில் வேகவைத்தால் அல்லது அவித்தால், வீட்டில் பாசிட்டிவ் மற்றும் அமைதியான ஆற்றல் நிலைத்திருக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஆரோக்கியம் மற்றும் நிதிப் பாதிப்பு:&lt;/strong&gt; தென்கிழக்கு மூலையில் ஏற்படும் இதுபோன்ற வாஸ்து தோஷம், வீட்டில் உள்ள பெண்களின் ஆரோக்கியத்தையும், குடும்பத்தின் நிதி செழிப்பையும் மோசமாகப் பாதிக்கும்.&lt;/p&gt;&lt;h3&gt;ராகு-கேது மற்றும் காலசர்ப்ப தோஷத்துக்கான பரிகாரங்கள்&lt;/h3&gt;&lt;p&gt;உங்கள் ஜாதகத்தில் காலசர்ப்ப தோஷம், ராகு திசை, அல்லது பித்ரு தோஷம் இருந்தால், நாக பஞ்சமி அன்று பின்வரும் விஷயங்களில் குறிப்பாக கவனம் செலுத்துங்கள்:&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பித்தளை, செம்பு அல்லது மண் பாத்திரங்கள்:&lt;/strong&gt; இந்த நாளில் சமைப்பதற்கோ அல்லது உணவை சூடுபடுத்துவதற்கோ மண், பித்தளை அல்லது செம்பு பாத்திரங்களைப் பயன்படுத்துங்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;வேகவைத்த அல்லது பழைய உணவு:&lt;/strong&gt; பாரம்பரியமாக, சமையலறையில் அதிக வெப்பத்தைத் தவிர்க்க, இந்த நாளில் முதல் நாள் சமைத்த குளிர்ச்சியான உணவுகளை சாப்பிடும் வழக்கம் உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;வெள்ளி அல்லது செப்பு நாகம் தானம்:&lt;/strong&gt; வாஸ்து தோஷத்தை நீக்க, இந்த நாளில் ஒரு ஜோடி வெள்ளி நாகங்களை ஓடும் நீரில் விடுவது மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;நாக பஞ்சமி அன்று வாணலி மற்றும் வறுக்கும் பாத்திரங்களைப் பயன்படுத்தாமல் இருப்பது வெறும் மூடநம்பிக்கை அல்ல; இது ராகுவின் அசுப சக்திகளை அமைதிப்படுத்தவும், வீட்டின் வாஸ்து சமநிலையை ಕಾಪಾற்றவும் உதவும் ஒரு பழங்கால ஜோதிட பரிகாரமாகும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>spiritual</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/astrology/nag-panchami-2026-vastu-rules-to-avoid-rahu-ketu-dosha-articleshow-eutrgc2"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Aadi Amavasai: முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்க இந்த விஷயங்களை செய்யுங்க..! பலரும் அறியாத ரகசியம்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/spiritual/aadi-amavasai-2026-do-these-5-things-to-seek-your-ancestors-blessings-ancient-rituals-you-should-know-fg0kbxh</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/spiritual/aadi-amavasai-2026-do-these-5-things-to-seek-your-ancestors-blessings-ancient-rituals-you-should-know-fg0kbxh</guid>
            <pubDate>Sat, 08 Aug 2026 07:38:18 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ஆடி அமாவாசையில் முன்னோர்களை நினைத்து செய்யும் எளிய வழிபாடுகள் குடும்பத்தில் நன்மையும் மனநிம்மதியும் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பெரிய சடங்குகள் செய்யாவிட்டாலும், இந்த 5 விஷயங்களை செய்தால் முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kzfhh59kzn25b341gpbp2qwz,imgname-aadi-amavasai-1786154358067.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஆடி அமாவாசையில் முன்னோர்களை நினைத்து செய்யும் எளிய வழிபாடுகள் குடும்பத்தில் நன்மையும் மனநிம்மதியும் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பெரிய சடங்குகள் செய்யாவிட்டாலும், இந்த 5 விஷயங்களை செய்தால் முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆடி அமாவாசை என்பது முன்னோர்களை நினைத்து வழிபடுவதற்கும், தர்ப்பணம் மற்றும் பிற பித்ரு வழிபாடுகளைச் செய்வதற்கும் முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. அமாவாசை நாளில் முன்னோர்களுக்கான சிராத்தம் போன்ற சடங்குகளைச் செய்வது பாரம்பரியமாக முக்கியத்துவம் பெற்றுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி ஆடி அமாவாசை அனுசரிக்கப்பட உள்ள நிலையில், அன்றைய தினம் என்ன செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கும். குறிப்பாக, பெரிய அளவில் சடங்குகள் செய்ய முடியாதவர்கள்கூட சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றலாம் என்ற நம்பிக்கை உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆடி அமாவாசை அன்று அதிகாலையில் எழுந்து குளித்து, வீட்டையும் பூஜை அறையையும் சுத்தம் செய்து வழிபாட்டைத் தொடங்குவது சிறப்பாகக் கருதப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;முடிந்தால் புனித நீர்நிலை அல்லது ஆற்றில் நீராடுவது வழக்கமாக இருந்தாலும், அனைவராலும் அது சாத்தியமில்லை. வீட்டிலேயே தூய்மையாக நீராடி மனதை அமைதியாக வைத்துக்கொண்டு வழிபடலாம்.&lt;/p&gt;&lt;p&gt;உடல் சுத்தத்தைவிட மன சுத்தமே முக்கியம் என்ற எண்ணத்துடன் முன்னோர்களை நினைத்து வழிபடுவது இந்த நாளின் அடிப்படை நோக்கமாக பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;2. முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யுங்கள்&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;ஆடி அமாவாசையின் முக்கியமான வழிபாடுகளில் ஒன்று தர்ப்பணம்.&lt;/p&gt;&lt;p&gt;மறைந்த பெற்றோர், தாத்தா-பாட்டி உள்ளிட்ட முன்னோர்களை நினைத்து, அவர்களின் ஆன்ம அமைதிக்காக தர்ப்பணம் செய்வது இந்த நாளில் பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;தர்ப்பணம் செய்வதற்கான முறைகள் குடும்ப வழக்கம், சமய மரபு மற்றும் உள்ளூர் நடைமுறைக்கு ஏற்ப மாறுபடலாம். எனவே முறையாகச் செய்ய விரும்புபவர்கள் குடும்ப புரோகிதர் அல்லது தகுதியான வேத அறிஞரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பெரிய அளவில் சடங்குகள் செய்ய முடியாதவர்களுக்கு மிகவும் எளிமையான ஒரு வழி &mdash; முன்னோர்களை மனதார நினைத்து பிரார்த்தனை செய்வது.&lt;/p&gt;&lt;p&gt;அவர்களின் பெயரை நினைத்து,&lt;/p&gt;&lt;p&gt;&ldquo;எங்கள் குடும்பத்தை ஆசீர்வதித்து, அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், அமைதி, வளம் கிடைக்க அருள் செய்யுங்கள்&rdquo;&lt;/p&gt;&lt;p&gt;என்று மனதார வேண்டிக்கொள்ளலாம்.&lt;/p&gt;&lt;p&gt;இது ஒரு ஆன்மிக நம்பிக்கை சார்ந்த நடைமுறை. இதன் நோக்கம், நம்முடைய வாழ்க்கைக்கு அடித்தளமாக இருந்த முன்னோர்களை நன்றியுடன் நினைவுகூர்வதாகும்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;4. அன்னதானம் அல்லது உணவு தானம் செய்யுங்கள்&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;ஆடி அமாவாசை நாளில் முடிந்த அளவுக்கு உணவு தானம் செய்வதும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;ஏழை, ஆதரவற்றவர் அல்லது உணவு தேவைப்படுபவர்களுக்கு உணவு வழங்கலாம். வயதானவர்களுக்கு உதவலாம். ஒருவருக்கு ஒரு வேளை உணவு வழங்குவதுகூட மனநிறைவைத் தரக்கூடிய நல்ல செயலாகும்.&lt;/p&gt;&lt;p&gt;அதேபோல், தங்களால் முடிந்த அளவில் தண்ணீர், உணவு அல்லது தேவையான பொருட்களை தானமாக வழங்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;தானத்தின் அளவு முக்கியமல்ல; மனதார கொடுப்பதே முக்கியம் என்ற கருத்து இந்த வழக்கத்தின் பின்னணியில் உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மாலை நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி, முன்னோர்களை நினைத்து அமைதியாக சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யலாம்.&lt;/p&gt;&lt;p&gt;குடும்பத்தில் குழந்தைகளிடம் கூட, &ldquo;நம்முடைய முன்னோர்கள் யார்? அவர்கள் குடும்பத்திற்காக என்ன செய்தார்கள்?&rdquo; என்பதைப் பகிர்ந்து கொள்ளலாம்.&lt;/p&gt;&lt;p&gt;இப்படி முன்னோர்களை நினைவுகூர்வது ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு குடும்ப நினைவுகளையும் நன்றியுணர்வையும் எடுத்துச் செல்லும் வழியாகவும் அமைகிறது&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆன்மிக மரபுகளின்படி இந்த நாளில் தேவையற்ற கோபம், சண்டை, அவதூறு பேசுதல் போன்றவற்றைத் தவிர்த்து அமைதியாகவும் நிதானமாகவும் இருப்பது நல்லதாகக் கருதப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;மேலும், சடங்குகளை வெறும் கடமையாகச் செய்யாமல், முன்னோர்களை நன்றியுடன் நினைத்துச் செய்வதே இந்த நாளின் உண்மையான நோக்கம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆடி அமாவாசையில் முன்னோர்களின் ஆசீர்வாதத்தைப் பெற விலையுயர்ந்த பொருட்களோ, பெரிய செலவுகளோ அவசியமில்லை.&lt;/p&gt;&lt;p&gt;நினைவு + நன்றி + தர்ப்பணம் + தானம் + பிரார்த்தனை &mdash; இந்த ஐந்து விஷயங்களையும் உங்களால் முடிந்த முறையில் செய்வதே முக்கியம்.&lt;/p&gt;&lt;p&gt;ஆடி அமாவாசை என்பது வெறும் ஒரு சடங்கு நாள் மட்டுமல்ல. நம்முடைய வாழ்க்கைக்கு முன் சென்ற தலைமுறைகளை நினைத்து, அவர்களுக்கு நன்றி செலுத்தி, குடும்பத்தின் நலனுக்காக பிரார்த்தனை செய்யும் ஒரு முக்கியமான வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;குறிப்பு: &lt;/strong&gt;தர்ப்பணம், சிராத்தம் உள்ளிட்ட சடங்குகளின் முறை மற்றும் நேரம் குடும்ப மரபு மற்றும் உள்ளூர் பஞ்சாங்கத்தைப் பொறுத்து மாறுபடலாம். குறிப்பிட்ட சடங்கைச் செய்யும் முன் உள்ளூர் புரோகிதர்/வேத அறிஞரிடம் ஆலோசிப்பது சிறந்தது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>spiritual</category>
            <dc:creator>Asianet News</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/spiritual/aadi-amavasai-2026-do-these-5-things-to-seek-your-ancestors-blessings-ancient-rituals-you-should-know-fg0kbxh"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Astrology: புதன்-சுக்கிரன் சுப பார்வையால் 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்! பணம், காதல், வேலையில் அடிக்கும் யோகம்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/budh-shukra-yogam-mercury-venus-auspicious-conjunction-may-bring-wealth-career-success-and-love-luck-for-4-zodiac-signs-ia1hgec</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/budh-shukra-yogam-mercury-venus-auspicious-conjunction-may-bring-wealth-career-success-and-love-luck-for-4-zodiac-signs-ia1hgec</guid>
            <pubDate>Sun, 02 Aug 2026 14:01:59 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Budh Shukra Yogam: ஆகஸ்ட் 13-ம் தேதி புதன் மற்றும் சுக்கிரனின் சுப பார்வை உருவாகிறது. இதனால் 4 ராசிக்காரர்களுக்கு பணம், வேலை, தொழில், காதல் என அனைத்திலும் நல்ல வாய்ப்புகள் உருவாகும். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kz0sha4afy6watztf34rr25d,imgname-budh-shukra-yogam-1785659435146.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Budh Shukra Yogam: ஆகஸ்ட் 13-ம் தேதி புதன் மற்றும் சுக்கிரனின் சுப பார்வை உருவாகிறது. இதனால் 4 ராசிக்காரர்களுக்கு பணம், வேலை, தொழில், காதல் என அனைத்திலும் நல்ல வாய்ப்புகள் உருவாகும். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வேத ஜோதிடத்தில், புதன் மற்றும் சுக்கிரன் இருவரும் நல்ல நண்பர்களாகக் கருதப்படுகிறார்கள். சில சமயங்களில், இவர்களின் பெயர்ச்சி ஒருவருக்கொருவர் உறவை வலுப்படுத்தி, ஜாதகருக்கு நல்ல பலன்களைத் தரும். ஜோதிட விதிகளின்படி, புதனும் சுக்கிரனும் 60 டிகிரி கோணத்தில் இருக்கும்போது, அது 'புத-சுக்கிர லாப த்ருஷ்டி' எனப்படும். ஆகஸ்ட் 13, 2026 அன்று, கிரகங்களின் இளவரசனான புதன் கடக ராசியிலும், சுக்கிரன் கன்னி ராசியிலும் சஞ்சரிப்பார்கள். இந்த சுப கிரகங்களின் சேர்க்கையால், நான்கு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆகஸ்ட் 13 முதல், கடக ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கும். புதன் உங்கள் சிந்தனையை வலுப்படுத்துவார். வேலையில் உங்கள் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். உங்களுக்குப் புதிய பொறுப்புகள் வரலாம். இது உங்கள் கெரியரில் முன்னேற நல்ல வாய்ப்பாக அமையும். தொழிலில் புதிய வாடிக்கையாளர்களுடனான பேச்சுவார்த்தை வெற்றியில் முடியும். வருமானத்தை அதிகரிக்க ஒரு புதிய வழியும் பிறக்கலாம். குடும்பத்தில் ஒரு நல்ல செய்தியால் மகிழ்ச்சி உண்டாகும். காதல் உறவில் இருந்த தவறான புரிதல்கள் நீங்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள். நேர்காணல்களில் சிறப்பாகச் செயல்பட முடியும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆகஸ்ட் 13 முதல், கன்னி ராசிக்காரர்களுக்கு பல புதிய வாய்ப்புகளைக் கொண்டு வரும். உங்கள் ராசியில் இருக்கும் சுக்கிரன், உங்கள் ஆற்றலையும், தன்னம்பிக்கையையும் அதிகரிப்பார். வேலையில் உங்கள் உழைப்புக்கு நல்ல பாராட்டு கிடைக்கும். பதவி உயர்வு அல்லது புதிய வேலை வாய்ப்பு கிடைக்கலாம். ஒரு முக்கியமான தொழில் ஒப்பந்தம் முடிவாகும் வாய்ப்புள்ளது. உங்கள் நிதி நிலைமை முன்பை விட வலுப்பெறும். காதல் உறவுகள் நெருக்கமாகும். தம்பதியர் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பார்கள். சொத்து அல்லது வாகனம் தொடர்பான திட்டமும் முன்னோக்கிச் செல்லும். அவசரத்தைத் தவிர்த்தால் இன்னும் நல்ல பலன்கள் கிடைக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;ஆகஸ்ட் 13, விருச்சிக ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வழிகளைத் திறக்கும். நீண்ட நாட்களாகத் தடைப்பட்டிருந்த வேலைகள் முடிவடையும். வேலையில் உங்கள் தலைமைப் பண்பு பாராட்டப்படும். மேலதிகாரிகள் உங்கள் ஆலோசனைகளை மதிப்பார்கள். தொழில் விரிவாக்கத் திட்டங்கள் வெற்றி பெறலாம். வருமானம் அதிகரிப்பதற்கான வலுவான அறிகுறிகள் உள்ளன. முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும். காதல் உறவில் நம்பிக்கை வலுப்படும். பழைய குடும்பப் பிரச்சினை ஒன்று தீர்க்கப்படலாம். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் நல்ல முடிவுகளைப் பெறுவார்கள்.&lt;img&gt;&lt;p&gt;ஆகஸ்ட் 13, மீன ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். புதன் மற்றும் சுக்கிரனின் சுப பார்வை உங்களுக்குச் சாதகமான சூழலை உருவாக்கும். நின்றுபோன ஒரு வேலை வாய்ப்பு மீண்டும் வரலாம். வேலையில் உங்கள் கடின உழைப்புக்குப் பலன் கிடைக்கும். புதிய திறன்களைக் கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். புதிய தொழில் கூட்டாளிகளுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கலாம். நிதி லாபத்திற்கு நல்ல அறிகுறிகள் உள்ளன. பழைய பாக்கிப் பணம் கைக்கு வரலாம். உங்கள் காதல் உறவு இனிமையாக மாறும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிடுவீர்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)&lt;/strong&gt;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>spiritual</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/budh-shukra-yogam-mercury-venus-auspicious-conjunction-may-bring-wealth-career-success-and-love-luck-for-4-zodiac-signs-ia1hgec"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Shakuna Shastra: பூஜையின் போது விளக்கு அணைந்துவிடுகிறதா? நல்ல சகுனமா? கெட்ட சகுனமா? சகுன சாஸ்திரம் சொல்வது என்ன?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/shakuna-shastra-signs-and-meanings-when-your-puja-lamp-extinguishes-unexpectedly-ig6bgs7</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/shakuna-shastra-signs-and-meanings-when-your-puja-lamp-extinguishes-unexpectedly-ig6bgs7</guid>
            <pubDate>Sat, 08 Aug 2026 14:50:48 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Shakuna Shastra for Puja Lamps: பூஜை செய்யும்போது ஏற்றிய விளக்கு திடீரென அணைந்துவிட்டால் மனதில் ஒருவித பதற்றம் ஏற்படும். இது அபசகுனத்தின் அறிகுறியா அல்லது சாதாரணமானதா? சகுன சாஸ்திரம் இதுபற்றி என்ன சொல்கிறது என்பது போன்ற தகவல்கள் இங்கே உள்ளன.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kzgapqapavkvdv929ygkxxb8,imgname-shakuna-shastra-signs-and-meanings-when-your-puja-lamp-extinguishes-unexpectedly-1786180754774.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Shakuna Shastra for Puja Lamps: பூஜை செய்யும்போது ஏற்றிய விளக்கு திடீரென அணைந்துவிட்டால் மனதில் ஒருவித பதற்றம் ஏற்படும். இது அபசகுனத்தின் அறிகுறியா அல்லது சாதாரணமானதா? சகுன சாஸ்திரம் இதுபற்றி என்ன சொல்கிறது என்பது போன்ற தகவல்கள் இங்கே உள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;இந்து மத வழக்கப்படி, தினமும் வீட்டில் விளக்கு ஏற்றுவது மிகவும் முக்கியம். பூஜை அறையில் விளக்கு ஏற்றிய பிறகுதான் எந்த வேலையையும் தொடங்குவார்கள். கடவுளுக்கு முன் ஏற்றப்படும் விளக்கை, ஞானம் மற்றும் நேர்மறை ஆற்றலின் சின்னமாக மக்கள் கருதுகின்றனர். ஆனால், சில சமயங்களில் ஏற்றிய விளக்கு திடீரென அணைந்துவிடும். இந்த நேரத்தில், வீட்டில் இருப்பவர்களுக்கு ஏதேனும் அபசகுனம் நடக்குமோ என்ற பயம் ஏற்படுவது இயல்பு. இதுகுறித்து சாஸ்திரங்கள் என்ன சொல்கின்றன என்ற தகவல் இங்கே உள்ளது.&lt;img&gt;விளக்கு அணைந்தவுடன் பதற்றப்படத் தேவையில்லை. பல நேரங்களில், பலத்த காற்று வீசுவது, திரியில் கோளாறு இருப்பது அல்லது எண்ணெய் தீர்ந்துபோவது போன்றவை விளக்கு அணைவதற்கு முக்கிய காரணங்களாக இருக்கும். இதுபோன்ற இயல்பான காரணங்களால் விளக்கு அணைந்தால், அதை அபசகுனத்தின் அறிகுறியாகக் கருதக்கூடாது. இது ஒரு சாதாரண தொழில்நுட்ப அல்லது இயல்பான நிலையாகவே இருக்கும்.&lt;img&gt;&lt;p&gt;காற்றும் இல்லாமல், எண்ணெயும் திரியும் சரியாக இருந்தும், விளக்கு அடிக்கடி அணைந்துகொண்டிருந்தால், அதை அலட்சியப்படுத்தக் கூடாது என்று சகுன சாஸ்திரம் கூறுகிறது. இதுபோன்ற நிகழ்வுகள், எதிர்காலத்தில் வரவிருக்கும் கஷ்டங்களின் முன்னறிவிப்பாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த நேரத்தில் பயப்படாமல், தெய்வீக பரிகாரங்களைக் கண்டறிவது நல்லது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;குலதெய்வ வழிபாடு: &lt;/strong&gt;விளக்கு அடிக்கடி அணைந்தால், உங்கள் குலதெய்வத்தை பூஜித்து, பிரார்த்தனை செய்யுங்கள்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;மந்திர ஜபம்:&lt;/strong&gt; ஏதேனும் கெடுதலோ அல்லது அபசகுனமோ நடக்குமோ என்ற பயம் இருந்தால், &lt;strong&gt;'ஓம் நம சிவாய' &lt;/strong&gt;மந்திரத்தை பக்தி சிரத்தையுடன் ஜபிக்கவும். இது மனதிற்கு அமைதியைத் தருவதோடு, நேர்மறை ஆற்றலையும் கொண்டு வரும்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;ஹனுமான் சாலிசா பாராயணம்:&lt;/strong&gt; தினமும் ஹனுமான் சாலிசாவை பாராயணம் செய்வதால், உங்கள் தைரியமும் சக்தியும் அதிகரிக்கும். இதனால், வரக்கூடிய கஷ்டங்களை எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;தான தர்மம்:&lt;/strong&gt; உங்கள் ஜென்ம நட்சத்திரம் அல்லது ராசியின் அதிபதிக்கு ஏற்ப ஏழைகளுக்கு தானம் செய்வது, தோஷம் நீங்க உதவும்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;ஜோதிட ஆலோசனை:&lt;/strong&gt; பிரச்சனைகள் அடிக்கடி ஏற்பட்டால், உங்கள் ஜாதகத்தை ஆராய்ந்து, தகுந்த பரிகாரத்திற்காக ஜோதிடரின் ஆலோசனையைப் பெறுங்கள்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>spiritual</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/shakuna-shastra-signs-and-meanings-when-your-puja-lamp-extinguishes-unexpectedly-ig6bgs7"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Chanakya Niti: வீட்டு நிம்மதியைக் கெடுக்கும் 5 பழக்கங்கள்! இதை மாற்றினால் வாழ்க்கை சூப்பராக மாறும்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/chanakya-niti-5-habits-that-can-ruin-family-peace-and-happiness-lol5qu2</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/chanakya-niti-5-habits-that-can-ruin-family-peace-and-happiness-lol5qu2</guid>
            <pubDate>Thu, 06 Aug 2026 12:06:26 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;5 Habits That Can Ruin Family Peace: சாணக்கியரின் கூற்றுபடி, 5 பழக்கவழக்கங்கள் நம் வீட்டின் நிம்மதியை கெடுத்துவிடுமாம். இந்த 5 விஷயங்களை மாற்றினால் வீட்டில் நிம்மதி நிலவும் என்று சாணக்கியர் கூறுகிறார். அதுகுறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kzawj8mwa83vweg33kdt9k5h,imgname-5-habits-that-can-ruin-family-peace-1785998156443.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;5 Habits That Can Ruin Family Peace: சாணக்கியரின் கூற்றுபடி, 5 பழக்கவழக்கங்கள் நம் வீட்டின் நிம்மதியை கெடுத்துவிடுமாம். இந்த 5 விஷயங்களை மாற்றினால் வீட்டில் நிம்மதி நிலவும் என்று சாணக்கியர் கூறுகிறார். அதுகுறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;ஒவ்வொரு குடும்பமும் தங்கள் வீட்டில் எப்போதும் மகிழ்ச்சியும், அமைதியும், செழிப்பும் இருக்க வேண்டும் என்றுதான் விரும்பும். அதற்காக மக்கள் கடினமாக உழைக்கிறார்கள், பூஜைகள் செய்கிறார்கள். ஆனால் சில சமயங்களில், வீட்டுப் பிரச்சனைகளுக்கு பெரிய காரணங்கள் எதுவும் தேவையில்லை. நம்முடைய அன்றாட சின்ன சின்ன பழக்கங்களே மெதுவாக வீட்டின் சந்தோஷத்தைப் பறித்துவிடும். ஆச்சார்ய சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் அப்படிப்பட்ட சில பழக்கங்களைப் பற்றி விளக்கியுள்ளார். அவற்றை சரியான நேரத்தில் மாற்றிக்கொண்டால், குடும்பத்தில் மீண்டும் அன்பும், நம்பிக்கையும், மகிழ்ச்சியும் தழைக்கும்.&lt;img&gt;ஆச்சார்ய சாணக்கியர் அரசியல் மற்றும் ராஜதந்திரத்தில் மட்டுமல்ல, குடும்ப வாழ்க்கை குறித்தும் பல மதிப்புமிக்க ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அவர் சொல்வதன்படி, வீட்டில் உள்ள மகிழ்ச்சியும் அமைதியும் பணம் அல்லது சொத்தால் வருவதில்லை. அங்குள்ள உறுப்பினர்களின் நடத்தையைப் பொறுத்தே அமைகிறது. ஒருவருக்கொருவர் மரியாதை, ஒழுக்கம், நம்பிக்கை இருக்கும் வீட்டில் சந்தோஷம் தானாகவே குடியேறும். ஆனால் சில தவறான பழக்கங்கள் உறவுகளில் மெதுவாக விரிசலை உண்டாக்கிவிடும்.&lt;img&gt;சாணக்கியர் சொல்வது போல, ஒருவருக்கொருவர் மரியாதையாகப் பேசாத வீட்டில் அமைதி நிலைக்காது. எல்லாவற்றிற்கும் கிண்டல் செய்வது, சத்தமாகப் பேசுவது அல்லது கசப்பான வார்த்தைகளைப் பயன்படுத்துவது உறவுகளில் விரிசலை ஏற்படுத்தும். சின்ன கருத்து வேறுபாடுகூட, பேசும் விதத்தால் பெரிய சண்டையாக மாறக்கூடும். எனவே, எப்போதும் இனிமையாகவும், நிதானமாகவும் பேசுவது குடும்ப ஒற்றுமைக்கு நல்லது.&lt;img&gt;சாணக்கிய நீதியின்படி, கோபம் ஒரு மனிதனின் பகுத்தறிவைக் குறைத்துவிடும். ஒவ்வொரு சின்ன விஷயத்திற்கும் கோபப்படும் நபர், சரியான முடிவெடுக்கும் திறனை இழக்க நேரிடலாம். வீட்டில் நடக்கும் தொடர் சண்டைகள் குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் மனதிலும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். கருத்து வேறுபாடு வரும்போது உடனடியாக கோபப்படுவதை விட, அமைதியாகப் பேசித் தீர்ப்பதே சிறந்த வழி என்று சாணக்கியர் அறிவுறுத்துகிறார்.&lt;img&gt;ஒரு வலுவான குடும்பத்தின் அடித்தளமே பரஸ்பர நம்பிக்கைதான். குடும்ப உறுப்பினர்கள் ஒருவர் மீது ஒருவர் சந்தேகப்படத் தொடங்கினாலோ அல்லது விஷயங்களை மறைக்க ஆரம்பித்தாலோ, உறவுகளில் உள்ள நெருக்கம் மெதுவாகக் குறையும். குடும்பத்தினர் தங்கள் பிரச்சனைகளை வெளிப்படையாகப் பகிர்ந்து, நேர்மையைக் கடைப்பிடித்தால், தவறான புரிதல்களும் மனக்கசப்புகளும் விலகிவிடும்.&lt;img&gt;&lt;p&gt;சாணக்கியரின் கூற்றுப்படி, உணவை வீணடிக்கும் அல்லது தேவையில்லாமல் பணத்தைச் செலவழிக்கும் வீட்டில், நிதி நெருக்கடிகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. திட்டமிடப்படாத செலவுகள், பின்னர் குடும்பத்தில் மன அழுத்தம் மற்றும் கருத்து வேறுபாடுகளுக்கு வழிவகுக்கும். எனவே, தேவைக்கேற்ப பணத்தைப் பயன்படுத்துவதும், உணவை மதிப்பும் குடும்பத்தின் ஸ்திரத்தன்மைக்கு மிகவும் அவசியம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சாணக்கியர் சொல்வது போல, சோம்பேறித்தனம் ஒருவரின் முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய தடையாகும். வேலையைத் தள்ளிப்போடும் பழக்கமும், வீட்டின் சுத்தத்தைப் புறக்கணிப்பதும் எதிர்மறையான சூழலை உருவாக்கும். இதற்கு மாறாக, சுத்தமான மற்றும் ஒழுங்கான வீடு, முறையான தினசரி பழக்கவழக்கங்கள் ஆகியவை குடும்ப உறுப்பினர்களிடையே நேர்மறையான மனப்பான்மை, நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சியை வளர்க்க உதவும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)&lt;/strong&gt;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>spiritual</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/chanakya-niti-5-habits-that-can-ruin-family-peace-and-happiness-lol5qu2"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Aadi Amavasai 2026: 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஆடி அமாவாசை.! மறக்காமல் செய்ய வேண்டிய வழிபாடுகள்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/aadi-amavasai-2026-rare-amavasya-after-12-years-must-do-rituals-pitru-worship-remedies-m5yqokd</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/aadi-amavasai-2026-rare-amavasya-after-12-years-must-do-rituals-pitru-worship-remedies-m5yqokd</guid>
            <pubDate>Tue, 11 Aug 2026 09:59:11 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் சிறப்பு ஆடி அமாவாசை 2026 ஆகஸ்ட் 12ல் வருகிறது. முன்னோர் வழிபாடு, தர்ப்பணம், தானம், குலதெய்வ வழிபாடு உள்ளிட்ட செய்ய வேண்டிய முக்கிய வழிபாடுகள் மற்றும் ஆன்மிக பலன்களை தெரிந்துகொள்ளுங்கள்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kzqh8e0hy06fwp9tgrd7h371,imgname-chatgpt-image-aug-11--2026--09-57-00-am--1--1786422507533.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் சிறப்பு ஆடி அமாவாசை 2026 ஆகஸ்ட் 12ல் வருகிறது. முன்னோர் வழிபாடு, தர்ப்பணம், தானம், குலதெய்வ வழிபாடு உள்ளிட்ட செய்ய வேண்டிய முக்கிய வழிபாடுகள் மற்றும் ஆன்மிக பலன்களை தெரிந்துகொள்ளுங்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அமாவாசை என்றாலே முன்னோர் வழிபாடு நினைவுக்கு வரும். அதிலும் தமிழ் மாதமான ஆடியில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மறைந்த முன்னோர்களை நினைத்து தர்ப்பணம், தானம், அன்னதானம் உள்ளிட்ட நற்செயல்களை செய்வதற்கு இந்த நாள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. 2026-ம் ஆண்டு ஆடி அமாவாசை ஆகஸ்ட் 12-ம் தேதி புதன்கிழமை வருகிறது.&lt;/p&gt;&lt;p&gt;இந்த நாளில் செய்யப்படும் முன்னோர் வழிபாடு குடும்பத்தில் நன்மை, மன அமைதி, ஒற்றுமை மற்றும் வளம் ஏற்படுவதற்கான ஆன்மிக வழியாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பல ஆண்டுகளாக குலதெய்வ வழிபாடு செய்யாமல் இருப்பவர்கள், முன்னோர் வழிபாட்டைத் தவறவிட்டவர்கள் ஆகியோர் இந்த நாளை பயன்படுத்தி தங்களது குடும்ப வழிபாட்டு மரபுகளை மீண்டும் தொடங்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ் மாதங்களில் ஆடி மாதம் அம்மன் வழிபாட்டுக்கு மட்டுமல்லாமல் முன்னோர் வழிபாட்டுக்கும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அமாவாசை என்பது சந்திரன் தனது ஒளியை வெளிப்படுத்தாத நாள் என்பதால், இந்த நாள் ஆன்மிக ரீதியாக உள்ளுணர்வு, நினைவு மற்றும் முன்னோர்களை நினைவுகூர்வதற்கான காலமாக பல மரபுகளில் பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;ஆடி அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது, அவர்களின் பெயர்களை நினைத்து வழிபடுவது, ஏழை எளியவர்களுக்கு உணவு வழங்குவது, தானம் செய்வது போன்றவை பாரம்பரியமாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன.&lt;/p&gt;&lt;p&gt;ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை ஆகியவை முன்னோர் வழிபாட்டுக்கு முக்கியமான அமாவாசை நாட்களாகக் கருதப்படுகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த ஆண்டு ஆடி அமாவாசை குறித்து &quot;12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் சிறப்பு&quot; என்ற கருத்து பரவலாக பேசப்படுகிறது. இது குறிப்பிட்ட ஜோதிட கிரக நிலைகள் மற்றும் அவற்றின் சேர்க்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஆன்மிக-ஜோதிட விளக்கமாகும்.&lt;/p&gt;&lt;p&gt;அதே கிரக அமைப்பு மீண்டும் ஏற்படுவதற்கு பல ஆண்டுகள் ஆகக்கூடிய சூழலில், இந்த நாளை மிகவும் விசேஷமானதாக சில ஜோதிடர்கள் கருதுகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;எனவே, இந்த நாளில் முன்னோர் வழிபாடு, தானம், இறை வழிபாடு போன்றவற்றைச் செய்வது கூடுதல் ஆன்மிக பலனைத் தரும் என்பது நம்பிக்கை.&lt;/p&gt;&lt;p&gt;இருப்பினும், &quot;12 ஆண்டுகளுக்கு ஒருமுறை&quot; என்ற கூற்று எந்த குறிப்பிட்ட கிரக அமைப்பைக் குறிக்கிறது என்பதை பஞ்சாங்கம் அல்லது ஜோதிடக் கணக்கீட்டின் அடிப்படையில் தனியாக உறுதிப்படுத்துவது நல்லது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;2026-ம் ஆண்டு ஆடி அமாவாசை ஆகஸ்ட் 12, புதன்கிழமை வருகிறது. பஞ்சாங்கக் கணக்கின்படி அமாவாசை திதி ஆகஸ்ட் 12-ம் தேதி அதிகாலை தொடங்கி இரவு வரை நீடிக்கிறது; இருப்பினும் தர்ப்பணம் உள்ளிட்ட சடங்குகளுக்கான நேரம் இடம் மற்றும் குடும்ப வழக்கத்துக்கு ஏற்ப மாறுபடலாம்.&lt;/p&gt;&lt;p&gt;எனவே, குறிப்பிட்ட நேரத்தில் தர்ப்பணம் செய்ய விரும்புபவர்கள் தங்களது உள்ளூர் பஞ்சாங்கம் அல்லது புரோகிதரின் ஆலோசனையைப் பின்பற்றுவது சிறந்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஆடி அமாவாசையின் முக்கியமான வழிபாடு தர்ப்பணம்.&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;பொதுவாக எள் மற்றும் நீரைப் பயன்படுத்தி முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்யப்படுகிறது. தந்தை, தாத்தா, முப்பாட்டன் உள்ளிட்ட முன்னோர்களின் பெயர்களை நினைத்து அவர்களுக்கு மரியாதை செலுத்தலாம்.&lt;/p&gt;&lt;p&gt;மந்திரங்கள் தெரிந்தவர்கள் தங்களது குடும்ப சம்பிரதாயப்படி சங்கல்பம் மற்றும் மந்திரங்களைச் சொல்லி தர்ப்பணம் செய்யலாம். மந்திரங்கள் தெரியாதவர்கள், மனதார முன்னோர்களின் பெயர்களை நினைத்து, &quot;எங்கள் முன்னோர்கள் அனைவரும் மனநிறைவுடன் இருந்து எங்கள் குடும்பத்தை ஆசீர்வதிக்க வேண்டும்&quot; என்று பிரார்த்தனை செய்து வழிபடலாம்.&lt;/p&gt;&lt;p&gt;தர்ப்பணம் செய்யும் முறைகள் குடும்பம், கோத்திரம் மற்றும் சமய மரபுகளுக்கு ஏற்ப மாறுபடக்கூடும். எனவே முறையான சடங்கைச் செய்ய விரும்புபவர்கள் அறிந்த புரோகிதரின் வழிகாட்டுதலைப் பெறுவது நல்லது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முன்னோர் வழிபாடு என்றால் தந்தை வழி முன்னோர்களை மட்டும் நினைக்க வேண்டும் என்றில்லை.&lt;/p&gt;&lt;p&gt;தாய், தந்தை, தாத்தா, பாட்டி என தங்களது குடும்ப மரபுப்படி இரு வழி முன்னோர்களையும் நினைத்து பிரார்த்தனை செய்யலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&quot;எங்கள் முன்னோர்கள் அனைவருக்கும் இந்த வழிபாடு சென்றடைய வேண்டும். அவர்கள் மனநிறைவு பெற்று எங்கள் குடும்பத்திற்கு நல்வாழ்வையும், ஆரோக்கியத்தையும், வளத்தையும் அருள வேண்டும்&quot; என்று மனதார வேண்டிக்கொள்ளலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;புனிதமான ஆறு, நதிக்கரை, கடற்கரை மற்றும் தீர்த்தத் தலங்களில் தர்ப்பணம் செய்வது பல தலைமுறைகளாகப் பின்பற்றப்படும் வழக்கமாகும்.&lt;/p&gt;&lt;p&gt;தமிழகத்தில் பல்வேறு தீர்த்தத் தலங்களுக்கு ஆடி அமாவாசை நாளில் மக்கள் சென்று முன்னோர்களுக்கான வழிபாடுகளைச் செய்கின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;ஆனால் அனைவராலும் புனிதத் தலங்களுக்கு செல்ல முடியாது. அப்படிப்பட்டவர்கள் தங்களது வீட்டிலேயே குடும்ப மரபுப்படி வழிபாடு செய்யலாம்.&lt;/p&gt;&lt;p&gt;வழிபாட்டின் முக்கிய நோக்கம் முன்னோர்களை நினைத்து நன்றியுடன் இருப்பதும், அவர்களின் நினைவைப் போற்றுவதும்தான்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆடி அமாவாசை நாளில் அன்னதானம் செய்வது சிறப்பான நற்செயலாகக் கருதப்படுகிறது.வசதி இருப்பவர்கள் ஏழை, எளியவர்கள், முதியவர்கள் அல்லது ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;ஒருவருக்கு உணவு வழங்குவது மட்டுமல்லாமல், தேவைப்படுபவர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறி, எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;பெரிய அளவில் தானம் செய்ய முடியாதவர்கள் ஒருவருக்கு உணவு வழங்கினால்கூட போதுமானது. தானத்தின் அளவைவிட மனதின் தூய்மையே முக்கியம் என்பது ஆன்மிகத்தின் அடிப்படை கருத்தாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முன்னோர் வழிபாட்டுடன் தொடர்புடைய பாரம்பரிய வழக்கங்களில் காகங்களுக்கு உணவு வைப்பதும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;சமைத்த சாதத்தில் சிறிதளவு உணவை வைத்து காகங்களுக்கு வழங்குவதை பல குடும்பங்கள் வழக்கமாகக் கொண்டுள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;இதனை முன்னோர்களை நினைவுகூரும் அடையாளமாகக் கருதி செய்கின்றனர். இதனுடன் பிற பறவைகள் மற்றும் உயிரினங்களுக்கு தண்ணீர் அல்லது உணவு வழங்குவதும் நல்ல நற்செயலாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பல குடும்பங்களில் காலப்போக்கில் குலதெய்வ வழிபாடு தவறிவிடுகிறது. ஆடி அமாவாசையை முன்னிட்டு குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்வது அல்லது வீட்டிலேயே குலதெய்வத்தை நினைத்து விளக்கேற்றி பிரார்த்தனை செய்வது சிறப்பாகக் கருதப்படுகிறது. குலதெய்வ வழிபாட்டை மீண்டும் தொடங்குவதற்கு முன்பு குடும்பத்தில் வழக்கமாகப் பின்பற்றப்பட்ட முறையை பெரியவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வெளியூர் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே எளிமையாக வழிபாடு செய்யலாம். காலையில் எழுந்து வீட்டைச் சுத்தம் செய்து, குளித்துவிட்டு, பூஜை அறையில் விளக்கேற்றலாம். முன்னோர்களை மனதில் நினைத்து சில நிமிடங்கள் அமைதியாக பிரார்த்தனை செய்யலாம். அன்றைய தினம் இயன்றவர்களுக்கு உணவு வழங்கலாம். ஒரு மரக்கன்றை நடுவது, பறவைகளுக்கு தண்ணீர் வைப்பது, தேவையுள்ள ஒருவருக்கு உதவுவது போன்ற நற்செயல்களையும் செய்யலாம். இவை அனைத்தும் முன்னோர்களை நினைவுகூர்வதுடன், சமூக நலனுக்கும் உதவும் செயல்களாக அமையும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பித்ரு தோஷம் உள்ளவர்கள் என்ன செய்யலாம்?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஜோதிடத்தில் சூரியன், சந்திரன், ராகு, கேது உள்ளிட்ட கிரகங்களின் நிலைகளை அடிப்படையாக வைத்து பித்ரு தொடர்பான தோஷங்கள் குறித்து சில ஜோதிட முறைகள் விளக்குகின்றன. திருமணத் தடை, தொழில் வளர்ச்சியின்மை, குடும்பத்தில் தொடர்ந்து ஏற்படும் பிரச்னைகள் போன்றவற்றை சிலர் பித்ரு தோஷத்துடன் தொடர்புபடுத்திப் பார்க்கின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;இத்தகைய சூழலில் ஆடி அமாவாசை நாளில் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம், தானம், அன்னதானம் மற்றும் இறை வழிபாடு செய்வதை ஆன்மிக பரிகாரமாக பலர் கடைப்பிடிக்கின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;ஆனால் வாழ்க்கையில் ஏற்படும் எந்த பிரச்னைக்கும் பித்ரு தோஷமே ஒரே காரணம் என்று கருதாமல், நடைமுறை காரணங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;திருமணத் தடை நீங்குமா?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஆன்மிக நம்பிக்கைப்படி, முன்னோர் வழிபாடு குடும்பத்தில் இருக்கும் தடைகளை நீக்கி சுபகாரியங்கள் நடைபெற வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;திருமண முயற்சிகள் தொடர்ந்து தாமதமாகும் குடும்பங்களில் ஆடி அமாவாசை நாளில் முன்னோர்களை நினைத்து வழிபடுவது ஒரு முக்கியமான பரிகாரமாகக் கருதப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&quot;எங்கள் குடும்பத்தில் நல்ல திருமணங்கள் நடைபெற வேண்டும். நல்ல வாழ்க்கைத்துணை அமைய வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும்&quot; என்று மனதார பிரார்த்தனை செய்யலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;தொழில், பணம், குடும்ப வளம் பெருக என்ன செய்யலாம்?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஆடி அமாவாசை நாளில் தானம் செய்வது செல்வ வளத்தை ஈர்க்கும் ஆன்மிகச் செயலாகக் கருதப்படுகிறது. அரிசி, தானியம், உணவு அல்லது தேவையான பொருட்களை தானமாக வழங்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;தொழில் செய்பவர்கள் தங்களது தொழில் தடைகள் நீங்கி வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்றும், வேலை தேடுபவர்கள் நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்றும், குடும்பத்தினர் பொருளாதார முன்னேற்றம் பெற வேண்டும் என்றும் இறைவனை வேண்டிக்கொள்ளலாம். இவை நம்பிக்கையின் அடிப்படையிலான ஆன்மிக வழிபாடுகள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஆடி அமாவாசை அன்று செய்ய வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;முன்னோர்களை நினைத்து வழிபடுங்கள். குடும்ப வழக்கப்படி தர்ப்பணம் செய்யுங்கள். தாய், தந்தை வழி முன்னோர்களை நினைவுகூருங்கள். ஏழை, எளியவர்களுக்கு அன்னதானம் செய்யுங்கள். காகங்கள் மற்றும் பிற உயிரினங்களுக்கு உணவு வழங்குங்கள். தண்ணீர் தேவைப்படும் இடங்களில் குடிநீர் வழங்குங்கள். குலதெய்வத்தை வழிபடுங்கள். கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபடுங்கள். தேவையுள்ளவர்களுக்கு ஆடை அல்லது உணவுப் பொருட்களை தானமாக வழங்குங்கள். குடும்பத்தின் நலம், ஆரோக்கியம் மற்றும் ஒற்றுமைக்காக மனதார பிரார்த்தனை செய்யுங்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;என்னென்ன விஷயங்களை தவிர்க்க வேண்டும்?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;அமாவாசை நாளில் தேவையற்ற சண்டை, கோபம், அவதூறு, பிறரைத் துன்புறுத்துதல் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. முன்னோர் வழிபாடு செய்யும் நாளை அமைதியாகக் கழிப்பது பாரம்பரியமாகக் கருதப்படுகிறது. வழிபாட்டில் பங்கேற்பவர்கள் தங்களது உடல்நிலை மற்றும் குடும்ப மரபுக்கு ஏற்ற உணவு முறையைப் பின்பற்றலாம். விரதம் இருக்க வேண்டும் என்ற கட்டாயத்தை அனைவருக்கும் பொதுவாகக் கூற முடியாது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஆடி அமாவாசையின் உண்மையான நோக்கம் என்ன?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஆடி அமாவாசை என்பது வெறும் பரிகாரம் செய்வதற்கான நாள் மட்டுமல்ல.&lt;/p&gt;&lt;p&gt;நமக்கு வாழ்க்கையையும், குடும்பத்தையும், பாரம்பரியத்தையும் வழங்கிய முன்னோர்களை நினைத்து நன்றி செலுத்தும் நாளாகவும் இதைப் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;முன்னோர்களின் நினைவுகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வது, குடும்ப வரலாற்றை அறிந்து கொள்வது, பெரியவர்களை மதிப்பது, தேவைப்படுபவர்களுக்கு உதவுவது போன்ற நல்ல பண்புகளை வளர்ப்பதற்கும் இந்த நாள் ஒரு வாய்ப்பாக அமைகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;மறக்காமல் செய்ய வேண்டிய முக்கிய வழிபாடு!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;2026-ம் ஆண்டு ஆடி அமாவாசை ஆகஸ்ட் 12-ம் தேதி வருகிறது. இந்த நாள் முன்னோர் வழிபாட்டுக்கு முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;எனவே, பெரிய அளவில் சடங்குகளைச் செய்ய முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் முன்னோர்களை மனதில் நினைத்து விளக்கேற்றி பிரார்த்தனை செய்யுங்கள். குடும்ப வழக்கப்படி தர்ப்பணம் செய்ய முடிந்தவர்கள் முறையாகச் செய்யலாம். ஏழை ஒருவருக்கு உணவு வழங்குங்கள். குலதெய்வத்தை நினைத்து வழிபடுங்கள்.&lt;/p&gt;&lt;p&gt;முன்னோர்களை நினைத்து செய்யப்படும் வழிபாடு குடும்பத்தில் நன்றியுணர்வையும், ஒற்றுமையையும் வளர்க்கட்டும். அவர்களின் நல்லாசி நம் குடும்பத்தில் நிலைக்கட்டும் என்பதே இந்த ஆடி அமாவாசையின் முக்கிய பிரார்த்தனையாக இருக்கட்டும்.&lt;/p&gt;&lt;p&gt;தர்ப்பணம், சங்கல்பம், பவித்ரம் உள்ளிட்ட சடங்குகளின் நடைமுறைகள் குடும்பம், கோத்திரம், சமய மரபு மற்றும் பிராந்திய வழக்கப்படி மாறுபடலாம். முறையான சடங்கு செய்ய விரும்புபவர்கள் குடும்ப புரோகிதர் அல்லது தகுதியான வேத விற்பன்னரின் ஆலோசனையைப் பின்பற்றுவது சிறந்தது. ஜோதிடப் பலன்கள் மற்றும் பரிகாரங்கள் ஆன்மிக நம்பிக்கைகளின் அடிப்படையிலானவை.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>spiritual</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/aadi-amavasai-2026-rare-amavasya-after-12-years-must-do-rituals-pitru-worship-remedies-m5yqokd"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஆடி மாத கிருஷ்ண பட்ச சஷ்டி.. முருகனுக்கு இன்று இதை மட்டும் செய்தால் நினைத்தது நிறைவேறுமாம்..]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/spiritual/krishna-paksha-shashti-today-will-this-simple-prayer-to-lord-murugan-help-fulfill-your-wishes-mmv3na3</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/spiritual/krishna-paksha-shashti-today-will-this-simple-prayer-to-lord-murugan-help-fulfill-your-wishes-mmv3na3</guid>
            <pubDate>Tue, 04 Aug 2026 08:04:21 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;இன்று கிருஷ்ண பட்ச சஷ்டி! முருகப் பெருமானின் அருளைப் பெற பக்தர்கள் மிகவும் புனிதமாகக் கருதும் இந்த நாளில் செய்யும் வழிபாட்டுக்கு தனி சிறப்பு இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த நாளில் என்னென்ன வழிபாட்டு முறைகளைப் பின்பற்றலாம்? என்பதை விரிவாகப் பார்ப்போம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kz5991xsj23rse2cx5cvqq7f,imgname-krishna-paksha-sashti-today-1785810159544.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;இன்று கிருஷ்ண பட்ச சஷ்டி! முருகப் பெருமானின் அருளைப் பெற பக்தர்கள் மிகவும் புனிதமாகக் கருதும் இந்த நாளில் செய்யும் வழிபாட்டுக்கு தனி சிறப்பு இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த நாளில் என்னென்ன வழிபாட்டு முறைகளைப் பின்பற்றலாம்? என்பதை விரிவாகப் பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த தினங்களில் முக்கியமானது கிருஷ்ண பட்ச சஷ்டி. இந்த நாளில் மனமுருகி வழிபட்டால் தடைகள் விலகும், எதிர்பார்த்த காரியங்கள் வெற்றியடையும், மன அமைதி கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். குறிப்பாக இன்று வரும் கிருஷ்ண பட்ச சஷ்டியில் சில எளிய பரிகாரங்களை செய்தால் முருகனின் அருள் முழுமையாக கிடைக்கும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.&lt;/p&gt;&lt;p&gt;ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் அமாவாசைக்கு முன்பாக வரும் ஆறாவது திதியே கிருஷ்ண பட்ச சஷ்டி. சஷ்டி திதி முழுவதும் முருகப்பெருமானின் சக்தி அதிகமாக இருக்கும் நாளாக கருதப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;சூரபத்மனை வதம் செய்து உலகிற்கு தர்மத்தை நிலைநாட்டிய சக்தியின் நினைவாக சஷ்டி தினங்கள் முருக வழிபாட்டிற்கு மிகவும் உகந்ததாக பார்க்கப்படுகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்றைய கிருஷ்ண பட்ச சஷ்டியில் முருகனை மனதார வேண்டினால்,&lt;/p&gt;&lt;p&gt;&bull; நீண்ட நாட்களாக தடைபட்ட திருமணம் நடைபெறலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&bull; வேலை வாய்ப்பில் இருந்த தடைகள் நீங்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&bull; தொழிலில் லாபம் அதிகரிக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&bull; குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களுக்கு நம்பிக்கை தரும் நாளாக கருதப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&bull; கடன் சுமை குறைய இறைவனின் அருள் கிடைக்கும் என்று பக்தி மரபில் நம்பப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;இவை மத நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட பாரம்பரிய நம்பிக்கைகளாகும்; இதற்கு அறிவியல் ஆதாரம் இல்லை.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;முருகனுக்கு இன்று செய்ய வேண்டிய எளிய வழிபாடு&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;இன்று காலை அல்லது மாலை அருகிலுள்ள முருகன் கோவிலுக்கு செல்லுங்கள்.&lt;/p&gt;&lt;p&gt;பின்னர்,&lt;/p&gt;&lt;p&gt;&bull; சிவப்பு அல்லது மஞ்சள் மலர்களால் அர்ச்சனை செய்யுங்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&bull; இரண்டு நெய் தீபம் ஏற்றுங்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&bull; பால் அல்லது பஞ்சாமிர்த அபிஷேகம் செய்ய இயன்றால் செய்யுங்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&bull; சிவப்பு நிற பழங்கள் அல்லது வாழைப்பழம் நைவேத்தியமாக படையுங்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&bull; &quot;ஓம் சரவணபவ&quot; மந்திரத்தை 108 முறை ஜபியுங்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&bull; முடிந்தால் கந்த சஷ்டி கவசம் அல்லது சுப்பிரமணிய புஜங்கம் பாராயணம் செய்யுங்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆன்மிக அறிஞர்கள் பலர் கூறும் எளிய வழிபாடு என்னவென்றால்,&lt;/p&gt;&lt;p&gt;ஒரு அகல் விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்றி, &quot;ஓம் சரவணபவ&quot; என்ற மந்திரத்தை 108 முறை மனமுருகி ஜபிப்பது.&lt;/p&gt;&lt;p&gt;இதனால்,&lt;/p&gt;&lt;p&gt;&bull; மனக்குழப்பம் குறையும்,&lt;/p&gt;&lt;p&gt;&bull; எதிர்மறை எண்ணங்கள் விலகும்,&lt;/p&gt;&lt;p&gt;&bull; தன்னம்பிக்கை அதிகரிக்கும்,&lt;/p&gt;&lt;p&gt;&bull; மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேற முருகனின் அருள் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;இன்று சஷ்டி விரதம் இருப்பவர்கள்,&lt;/p&gt;&lt;p&gt;&bull; காலை பழம் அல்லது பால் மட்டும் அருந்தலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&bull; நாள் முழுவதும் முருகனை தியானிக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&bull; மாலை பூஜைக்குப் பிறகு விரதத்தை முடிக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;இவ்வாறு விரதம் இருப்பதால் உடல்-மனம் தூய்மையடைவதுடன் ஆன்மிக ஈடுபாடும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சஷ்டி நாளில்,&lt;/p&gt;&lt;p&gt;&bull; அன்னதானம்&lt;/p&gt;&lt;p&gt;&bull; கல்வி உதவி&lt;/p&gt;&lt;p&gt;&bull; பால் தானம்&lt;/p&gt;&lt;p&gt;&bull; குழந்தைகளுக்கு நோட்டு, பேனா வழங்குதல்&lt;/p&gt;&lt;p&gt;&bull; ஏழைகளுக்கு உணவு வழங்குதல்&lt;/p&gt;&lt;p&gt;போன்ற தானங்கள் செய்வது மிகவும் புண்ணியமானதாக கருதப்படுகிறது.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;தவிர்க்க வேண்டியவை&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;&bull; கோபப்படுவதைத் தவிர்க்க வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&bull; பிறரை புண்படுத்தும் வார்த்தைகளை பேசக்கூடாது.&lt;/p&gt;&lt;p&gt;&bull; பொய் சொல்லாமல் இருப்பது நல்லது.&lt;/p&gt;&lt;p&gt;&bull; அசைவ உணவைத் தவிர்ப்பது பல பக்தர்களின் வழக்கம்.&lt;/p&gt;&lt;p&gt;&bull; மனதை அமைதியாக வைத்துக் கொண்டு இறைநாமம் சொல்லுவது சிறந்ததாக கருதப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆம். சஷ்டி வழிபாட்டிற்கு ராசி, நட்சத்திரம் போன்ற எந்தக் கட்டுப்பாடும் இல்லை. எந்த வயதினரும், எந்த ராசியினரும் முருகனை பக்தியுடன் வழிபடலாம். பக்தியுடன் செய்யப்படும் வழிபாடே முக்கியம் என்று ஆகமங்கள் வலியுறுத்துகின்றன.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;நிறைவாக...&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;கிருஷ்ண பட்ச சஷ்டி என்பது வெறும் ஒரு திதி மட்டுமல்ல; மனதில் இருக்கும் கவலைகளை இறைவனிடம் ஒப்படைத்து நம்பிக்கையுடன் முன்னேற நினைவூட்டும் ஆன்மிக நாள். இன்று முருகப்பெருமானுக்கு ஒரு நெய் தீபம் ஏற்றி, &quot;ஓம் சரவணபவ&quot; என்று மனமுருகி ஜபித்துப் பிரார்த்தனை செய்தால், வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்ற நம்பிக்கையுடன் பக்தர்கள் வழிபடுகின்றனர். அதே நேரத்தில், இறைநம்பிக்கையுடன் சேர்த்து தொடர்ந்து முயற்சி செய்வதே எந்த இலக்கையும் அடைய முக்கியமானது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>spiritual</category>
            <dc:creator>Asianet News</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/spiritual/krishna-paksha-shashti-today-will-this-simple-prayer-to-lord-murugan-help-fulfill-your-wishes-mmv3na3"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Astrology by Date of Birth: ஆடி பெருக்கு நாளில் குரு - சூரியன் சேர்க்கையால் குபேர யோகம்.! உச்சத்திற்கு செல்லப்போகும் 4 ராசிகள்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/astrology-by-date-of-birth-kubera-yogam-on-aadi-perukku-due-to-guru-sun-conjunction-4-zodiac-signs-reach-new-heights-mq9250w</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/astrology-by-date-of-birth-kubera-yogam-on-aadi-perukku-due-to-guru-sun-conjunction-4-zodiac-signs-reach-new-heights-mq9250w</guid>
            <pubDate>Mon, 03 Aug 2026 15:01:00 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Astrology by Date of Birth: சூரியன் மற்றும் குரு பகவானின் சேர்க்கையால் குபேர யோகம் உருவாகியுள்ளது. இதனுடன் மேலும் இரண்டு ராஜ யோகங்கள் உருவாகியுள்ளதால் நான்கு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்க உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kz3eshqnjds597ykt0e1t4dn,imgname-astrology-by-date-of-birth---2-1785748834036.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Astrology by Date of Birth: சூரியன் மற்றும் குரு பகவானின் சேர்க்கையால் குபேர யோகம் உருவாகியுள்ளது. இதனுடன் மேலும் இரண்டு ராஜ யோகங்கள் உருவாகியுள்ளதால் நான்கு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்க உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜோதிடத்தின்படி ஜூலை 28ஆம் தேதி வானில் ஒரு சக்தி வாய்ந்த கிரக சேர்க்கை நடைபெற்றது. சிம்ம ராசியில் குரு மற்றும் சூரியன் இருவரும் இணைந்தனர். இந்த சேர்க்கையால் குபேர யோகம் உருவாகியுள்ளது. இது 23ஆம் தேதி முதல் செயல்படுத்த தொடங்கினாலும், ஆடிப்பெருக்கு தினத்தில் வலுப்பெறத் தொடங்கி இருக்கிறது. இந்த இரண்டு கிரகங்களின் இணைவு சில ராசிகளின் வாழ்க்கையில் மாற்றங்களை கொண்டுவர இருக்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் - &amp;nbsp;&lt;/strong&gt;புதன்-சுக்கிரன் சுப பார்வையால் 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்! பணம், காதல், வேலையில் அடிக்கும் யோகம்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குபேர யோகத்துடன் வரிஷ்ட யோகம், விஷகம்ப யோகம், ப்ரீத்தி யோகங்களும் உருவாகியுள்ளன. மேலும் திரியேகாதச யோகமும் இணைந்துள்ளதால் மற்றொரு முக்கிய ஜோதிட நிகழ்வு நடந்துள்ளது. இத்தகைய சுப யோகங்களால் நான்கு ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் -&amp;nbsp;&lt;/strong&gt; ஒன்றாக இணையும் சூரியன் ராகு.! ஆகஸ்ட் 17 வரை இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஆபத்து.!&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சூரியன் மற்றும் குருவின் இணைவு மேஷ ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்த இருக்கிறது. நீண்ட நாட்களாக நிலவையில் இருந்த பணிகள் வெற்றிகரமாக முடிவடையும். ஆடிப்பெருக்கு தினமான இன்று குருவின் பார்வை மேஷ ராசியின் மீது நேரடியாக பதிகிறது. இதன் மூலம் புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். சமூகத்தில் அந்தஸ்து, மரியாதை உயரும். முதலீடுகள் மூலம் எதிர்பாராத லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் -&amp;nbsp;&lt;/strong&gt; 18 மந்திரவாதிகளை படிக்கட்டுகளாக மாற்றிய கருப்பசாமி.! அழகர்மலை 18 படிகளின் ரகசியம் தெரியுமா?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மிதுன ராசிக்காரர்களுக்கு குபேர யோகம் உத்தியோகத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வை அள்ளி வழங்கும். வெளிநாடு தொடர்பான முயற்சிகள் வெற்றியைப் பெறும். வெளிநாட்டு வர்த்தகத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். தடைபட்டு நின்ற காரியங்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், பொருளாதார ஸ்திரத்தன்மையும், வளமும், வருமானத்திற்கான புதிய வழிகளும், ஆதாரங்களும் உருவாகும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் -&amp;nbsp;&lt;/strong&gt; 71 ஆண்டுகளுக்கு பிறகு அதிசயம்.! இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்.! எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிம்ம ராசியின் அதிபதியே சூரிய பகவான் என்பதால் இந்த சேர்க்கை சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிக தைரியத்தையும், ஆளுமைத் திறனையும் தரும். அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு வெற்றிகள் கிடைக்கும். நிர்வாக பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வந்து சேரலாம். மேலும் அடுத்த சில வாரங்கள் உங்களுக்கு பொற்காலமாக அமையும். சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். புதிய முதலீடுகள் மூலம் நீண்ட கால லாபம் கிடைக்க வழி பிறக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் - &amp;nbsp;&lt;/strong&gt;அரசு வேலை யோகம் தரும் கிரகங்கள்.! எந்த கிரகம் எந்த வீட்டில் இருந்தால் அரசு வேலை கிடைக்கும்?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விருச்சிக ராசிக்காரர்களுக்கு குபேர யோகம் காரணமாக பண வரவு பெருகும். ஆன்மீகம் மற்றும் தொண்டு சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். திடீர் தன லாபம் அல்லது பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. தொழில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, நல்ல முன்னேற்றம் காணப்படும். கடின உழைப்பு மற்றும் நேர்மை காரணமாக பொருளாதாரத்தில் உன்னதமான நிலையை அடைவீர்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் -&amp;nbsp;&lt;/strong&gt; பிறக்கும் போதே கஜகேசரி ராஜயோகத்துடன் பிறக்கும் ராசிகள் யார்? குருவின் சக்திவாய்ந்த பார்வை இவர்களுக்கு எப்போதும் இருக்குமாம்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>spiritual</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/astrology-by-date-of-birth-kubera-yogam-on-aadi-perukku-due-to-guru-sun-conjunction-4-zodiac-signs-reach-new-heights-mq9250w"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஆடிப்பெருக்கில் பெண்கள் கட்டும் மஞ்சள் கயிறு.. கணவர் ஆயுள் முதல் குடும்ப வளம் வரை.. இவ்வளவு நன்மையா!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/why-do-women-wear-a-turmeric-thread-on-aadi-perukku-the-traditional-belief-explained-qih7nzd</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/why-do-women-wear-a-turmeric-thread-on-aadi-perukku-the-traditional-belief-explained-qih7nzd</guid>
            <pubDate>Mon, 03 Aug 2026 06:30:21 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Aadi Perukku special: ஆடிப்பெருக்கு நாளில் பெண்கள் மஞ்சள் கயிறு கட்டுவது வெறும் பாரம்பரியம் மட்டுமல்ல; அதன் பின்னால் குடும்ப நலம், மங்கள வாழ்வு மற்றும் வளமான வாழ்க்கையை குறிக்கும் ஆழமான நம்பிக்கைகள் உள்ளன.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kz1pqk2s9gvhkzzgr5e0cnfr,imgname-aadi-perukku--2--1785690049625.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Aadi Perukku special: ஆடிப்பெருக்கு நாளில் பெண்கள் மஞ்சள் கயிறு கட்டுவது வெறும் பாரம்பரியம் மட்டுமல்ல; அதன் பின்னால் குடும்ப நலம், மங்கள வாழ்வு மற்றும் வளமான வாழ்க்கையை குறிக்கும் ஆழமான நம்பிக்கைகள் உள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆடி மாதம் தமிழர்களின் ஆன்மிக வாழ்க்கையில் மிகவும் முக்கியமான மாதமாகக் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் சிறப்பு வாய்ந்ததாக இருந்தாலும், ஆடி 18-ஆம் நாள் கொண்டாடப்படும் ஆடிப்பெருக்கு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. இந்த நாளில் பெண்கள் அம்மனை வழிபட்டு, ஆறுகள் மற்றும் நீர்நிலைகளுக்கு நன்றி செலுத்தி, குடும்ப நலனுக்காக வேண்டிக்கொள்வது தலைமுறை தலைமுறையாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழக்கமாகும்.&lt;/p&gt;&lt;p&gt;அதேபோல், ஆடிப்பெருக்கு நாளில் பெண்கள் மஞ்சள் கயிறு கட்டுவது அல்லது திருமாங்கல்ய கயிற்றை மாற்றுவது என்ற பாரம்பரியமும் பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து வருகிறது. ஆனால், இதன் உண்மையான காரணம் என்ன? வெறும் சடங்கா? அல்லது அதன் பின்னால் ஆழமான ஆன்மிக அர்த்தம் உள்ளதா? என்பதை விரிவாகப் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆடி மாதம் 18-ஆம் நாள், காவிரி உள்ளிட்ட ஆறுகளில் நீர்வரத்து அதிகரிக்கும் காலத்தை வரவேற்கும் வகையில் ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. 'பெருக்கு' என்ற சொல்லுக்கு 'பெருகுதல்' என்று பொருள். அதாவது நீர் பெருகுவது மட்டுமல்ல, வாழ்க்கையில் செல்வம், ஆரோக்கியம், மகிழ்ச்சி, சந்தோஷம், விளைச்சல் மற்றும் உறவுகள் அனைத்தும் பெருக வேண்டும் என்ற வேண்டுதலின் அடையாளமாக இந்த விழா பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;பண்டைய தமிழர்கள் இயற்கையை தெய்வமாகக் கருதி வழிபட்டனர். குறிப்பாக தண்ணீர் இல்லாமல் உயிர்கள் வாழ முடியாது என்பதை உணர்ந்து, நதிகளுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாகவே ஆடிப்பெருக்கு உருவானதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆடிப்பெருக்கு நாளில் மஞ்சள் பூசப்பட்ட புதிய கயிற்றை பெண்கள் அணிவது பல்வேறு ஆன்மிக மற்றும் பண்பாட்டு நம்பிக்கைகளுடன் தொடர்புடையது.&lt;/p&gt;&lt;p&gt;1. மங்களத்தின் அடையாளம்&lt;/p&gt;&lt;p&gt;இந்திய பாரம்பரியத்தில் மஞ்சள் மிகவும் புனிதமான பொருளாக கருதப்படுகிறது. திருமணம் முதல் அனைத்து சுப நிகழ்ச்சிகளிலும் மஞ்சளுக்கு முக்கிய இடம் உண்டு.&lt;/p&gt;&lt;p&gt;மஞ்சள் கயிறு அணிவது என்பது பெண்ணின் மங்கள வாழ்வையும், குடும்பத்தின் செழிப்பையும் குறிக்கும் அடையாளமாக பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;h3&gt;&lt;strong&gt;2. திருமாங்கல்யத்தை புதுப்பிக்கும் வழக்கம்&lt;/strong&gt;&lt;/h3&gt;&lt;p&gt;பல குடும்பங்களில் ஆடிப்பெருக்கு நாளில் திருமாங்கல்ய கயிறு பழையதாக இருந்தால் அதை மாற்றி புதிய மஞ்சள் கயிறு அணிவார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;இதன் மூலம்,&lt;/p&gt;&lt;p&gt;&bull; திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக தொடர வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&bull; கணவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&bull; தம்பதியரிடையே அன்பும் ஒற்றுமையும் அதிகரிக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;என்ற நம்பிக்கையுடன் இந்த வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;h3&gt;&lt;strong&gt;3. அம்மனின் அருள் கிடைக்கும் என்ற நம்பிக்கை&lt;/strong&gt;&lt;/h3&gt;&lt;p&gt;ஆடி மாதம் முழுவதும் அம்மன் வழிபாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;ஆடிப்பெருக்கு நாளில் அம்மனுக்கு மஞ்சள், குங்குமம், பூ, பழங்கள் படைத்து வழிபட்டு, பின்னர் மஞ்சள் கயிறு அணிவதால் அம்மனின் அருள் கிடைக்கும் என்றும் குடும்பத்தில் துன்பங்கள் விலகும் என்றும் பலர் நம்புகின்றனர்.&lt;/p&gt;&lt;h3&gt;&lt;strong&gt;4. குடும்ப ஒற்றுமையின் அடையாளம்&lt;/strong&gt;&lt;/h3&gt;&lt;p&gt;பழங்காலத்தில் குடும்ப பெண்கள் அனைவரும் ஒன்றாக ஆற்றங்கரைக்கு சென்று வழிபாடு செய்து, ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிறு கட்டி வாழ்த்துவார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;இதன் மூலம்,&lt;/p&gt;&lt;p&gt;&bull; உறவுகள் வலுப்படும்.&lt;/p&gt;&lt;p&gt;&bull; குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&bull; பெண்களிடையே அன்பும் மரியாதையும் அதிகரிக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;என்ற சமூக நோக்கமும் இருந்ததாக கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மஞ்சள் வெறும் ஆன்மிக பொருள் மட்டுமல்ல.&lt;/p&gt;&lt;p&gt;அதில் கிருமி எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு தன்மைகள் இருப்பது பல அறிவியல் ஆய்வுகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;இதனால் பழங்காலத்தில் உடலோடு தொடர்பில் இருக்கும் பொருட்களில் மஞ்சளைப் பயன்படுத்துவது சுத்தம் மற்றும் ஆரோக்கியத்தின் அடையாளமாகவும் கருதப்பட்டது.&lt;/p&gt;&lt;p&gt;அதே நேரத்தில், மஞ்சள் கயிறு அணிவதால் மருத்துவ ரீதியாக குறிப்பிட்ட நோய்கள் குணமாகும் என்ற அறிவியல் ஆதாரம் இல்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அதன் முக்கியத்துவம் பெரும்பாலும் கலாச்சார, ஆன்மிக மற்றும் சின்னார்த்த அடிப்படையிலேயே உள்ளது.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;கன்னிப் பெண்களும் மஞ்சள் கயிறு கட்டலாமா?&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;தமிழகத்தின் பல பகுதிகளில் திருமணமாகாத பெண்களும் ஆடிப்பெருக்கு நாளில் மஞ்சள் கயிறு அணிந்து அம்மனை வழிபடுகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;இதன் மூலம்,&lt;/p&gt;&lt;p&gt;&bull; நல்ல வாழ்க்கைத் துணை அமைய வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&bull; குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&bull; எதிர்காலம் வளமாக இருக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;என்று வேண்டிக்கொள்வது வழக்கமாக உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&bull; அதிகாலையில் குளித்து புத்தாடை அணிவது.&lt;/p&gt;&lt;p&gt;&bull; வீட்டின் வாசலில் கோலம் போடுவது.&lt;/p&gt;&lt;p&gt;&bull; அம்மனுக்கு மஞ்சள், குங்குமம், பூ வைத்து வழிபடுவது.&lt;/p&gt;&lt;p&gt;&bull; திருமாங்கல்ய கயிற்றை மாற்றுவது அல்லது மஞ்சள் கயிறு அணிவது.&lt;/p&gt;&lt;p&gt;&bull; சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தாம்பூலம் வழங்குவது.&lt;/p&gt;&lt;p&gt;&bull; காவிரி, ஆறு, ஏரி அல்லது குளங்களுக்கு நன்றி தெரிவித்து வழிபடுவது.&lt;/p&gt;&lt;p&gt;&bull; குடும்ப நலன், குழந்தைகளின் முன்னேற்றம் மற்றும் விவசாய வளத்திற்காக பிரார்த்தனை செய்வது.&lt;/p&gt;&lt;h3&gt;&lt;strong&gt;இந்த வழக்கத்தின் பின்னால் இருக்கும் உண்மையான செய்தி&lt;/strong&gt;&lt;/h3&gt;&lt;p&gt;ஆடிப்பெருக்கில் மஞ்சள் கயிறு கட்டும் வழக்கம் என்பது வெறும் மதச் சடங்கு அல்ல. அது இயற்கைக்கு நன்றி செலுத்துதல், குடும்ப ஒற்றுமையை வலுப்படுத்துதல், பெண்களின் மங்கள வாழ்வை கொண்டாடுதல் மற்றும் சமூக உறவுகளை பேணுதல் போன்ற பல்வேறு பண்பாட்டு மதிப்புகளை தாங்கி நிற்கும் பாரம்பரியமாகும்.&lt;/p&gt;&lt;p&gt;இன்றைய காலத்திலும் இந்த வழக்கத்தை பல குடும்பங்கள் பக்தியுடனும் மரியாதையுடனும் பின்பற்றுகின்றன. நம்பிக்கைகள் ஒவ்வொரு குடும்பம், பகுதி மற்றும் மரபுக்கு ஏற்ப மாறுபடலாம். எனினும், தமிழர் பண்பாட்டில் ஆடிப்பெருக்கும், அதனுடன் இணைந்த மஞ்சள் கயிறு அணியும் பாரம்பரியமும் பெண்களின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான கலாச்சார அடையாளமாகத் தொடர்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;குறிப்பு: &lt;/strong&gt;இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள கணவர் ஆயுள், குடும்ப வளம், அம்மன் அருள் போன்ற பலன்கள் பாரம்பரிய இந்து நம்பிக்கைகள் மற்றும் உள்ளூர் வழக்கங்களை அடிப்படையாகக் கொண்டவை. அவை அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டவை அல்ல; குடும்ப மரபு மற்றும் தனிநபர் நம்பிக்கையைப் பொறுத்து நடைமுறைகள் மாறுபடலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>spiritual</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/why-do-women-wear-a-turmeric-thread-on-aadi-perukku-the-traditional-belief-explained-qih7nzd"/>
        </item>
        <item>
            <title><![CDATA[வீட்டில் கஷ்டம்... கையில் பணம் தங்கலையா? காலபைரவருக்கு 8 எலுமிச்சை வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/spiritual/why-do-devotees-offer-8-lemons-to-kala-bhairava-the-spiritual-belief-behind-this-powerful-ritual-qu3g56v</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/spiritual/why-do-devotees-offer-8-lemons-to-kala-bhairava-the-spiritual-belief-behind-this-powerful-ritual-qu3g56v</guid>
            <pubDate>Mon, 03 Aug 2026 11:51:36 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;வாழ்க்கையில் தொடர்ந்து தடைகள், பணக்கஷ்டம், மனஅமைதியின்மை போன்ற பிரச்சினைகள் நீங்க வேண்டும் என்று விரும்புபவர்கள் பலர் காலபைரவரை பக்தியுடன் வழிபடுகின்றனர். இந்த வழிபாட்டில் இடம் பெறும் 8 எலுமிச்சை பரிகாரத்தின் நம்பிக்கை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kz3466190yr3q47b2fh72dmt,imgname-kala-bhairava--1--1785737713705.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;வாழ்க்கையில் தொடர்ந்து தடைகள், பணக்கஷ்டம், மனஅமைதியின்மை போன்ற பிரச்சினைகள் நீங்க வேண்டும் என்று விரும்புபவர்கள் பலர் காலபைரவரை பக்தியுடன் வழிபடுகின்றனர். இந்த வழிபாட்டில் இடம் பெறும் 8 எலுமிச்சை பரிகாரத்தின் நம்பிக்கை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&quot;எத்தனை முயன்றும் வேலை நடக்கவில்லையா? வீட்டில் அடிக்கடி பிரச்சினைகள் வருகிறதா? தொழிலில் முன்னேற்றம் தடைபடுகிறதா?&quot; என்று பலர் மனவேதனையுடன் கேட்பார்கள். இத்தகைய சூழ்நிலைகளில், காலபைரவரை வழிபட்டு 8 எலுமிச்சை கொண்டு செய்யப்படும் ஒரு சிறப்பு பரிகாரம் குறித்து பல ஆண்டுகளாக ஆன்மிக மரபுகளில் பேசப்பட்டு வருகிறது.&lt;/p&gt;&lt;p&gt;இது அனைவருக்கும் உறுதியாக பலன் தரும் என்று அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஒன்றல்ல. ஆனால், இந்து ஆன்மிக நம்பிக்கைகளில் காலபைரவர் வழிபாட்டின் ஒரு பகுதியாக இதை பல பக்தர்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;காலபைரவர், சிவபெருமானின் உக்கிர வடிவங்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். காலம், நீதி, பாதுகாப்பு மற்றும் தடைகளை அகற்றும் தெய்வமாக அவரை பலர் வணங்குகின்றனர். குறிப்பாக:&lt;/p&gt;&lt;p&gt;&bull; தொழில் தடைகள்&lt;/p&gt;&lt;p&gt;&bull; கடன் சுமை&lt;/p&gt;&lt;p&gt;&bull; எதிரிகளின் தொல்லை&lt;/p&gt;&lt;p&gt;&bull; நீதிமன்ற வழக்குகள்&lt;/p&gt;&lt;p&gt;&bull; மன அமைதியின்மை&lt;/p&gt;&lt;p&gt;&bull; தொடர்ந்து ஏற்படும் தோல்விகள்&lt;/p&gt;&lt;p&gt;போன்ற பிரச்சினைகளிலிருந்து விடுபட காலபைரவர் அருளை நாடுவது வழக்கமாக உள்ளது.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;ஏன் 8 எலுமிச்சை?&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;எலுமிச்சை எதிர்மறை ஆற்றல்களை உறிஞ்சி அகற்றும் சக்தி கொண்டது என்ற நம்பிக்கை பல ஆன்மிக மரபுகளில் காணப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;எண் 8-க்கும் சிறப்பு முக்கியத்துவம் உண்டு. சில ஜோதிட மற்றும் ஆன்மிக நம்பிக்கைகளின்படி, எண் 8 என்பது கர்ம பலன்கள், சனி பகவானின் தாக்கம் மற்றும் வாழ்க்கை மாற்றங்களை குறிக்கும் எண்ணாகக் கருதப்படுகிறது. காலபைரவர் வழிபாட்டில் 8 எலுமிச்சையை பயன்படுத்துவது, வாழ்க்கையில் இருக்கும் தடைகளை நீக்கி நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பல கோவில்களில் பின்பற்றப்படும் வழக்கத்தின் அடிப்படையில்:&lt;/p&gt;&lt;p&gt;&bull; தேய்பிறை அஷ்டமி அல்லது ஞாயிறு, செவ்வாய், சனிக்கிழமைகளில் அதிகாலை அல்லது மாலை காலபைரவர் கோவிலுக்குச் செல்லலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&bull; சுத்தமான 8 எலுமிச்சை பழங்களை வாங்கிச் செல்ல வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&bull; அவற்றை காலபைரவர் சன்னதியில் வைத்து அர்ச்சனை செய்யலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&bull; அர்ச்சகரிடம் பெயர், நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்து கொள்ளலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&bull; பின்னர் தீபம் ஏற்றி, மனதில் உள்ள வேண்டுதல்களை இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&bull; சிலர் அந்த எலுமிச்சைகளை வீட்டிற்கு கொண்டு வந்து பூஜை அறையில் வைத்து, பின்னர் மரத்தின் அடியில் வைப்பதும் வழக்கமாக உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;இது கோவிலுக்கு கோவில் மாறுபடக்கூடும். எனவே அந்தந்த கோவில் நடைமுறைகளைப் பின்பற்றுவது நல்லது.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;எந்த நாளில் செய்வது சிறப்பு?&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;ஆன்மிக நம்பிக்கையின்படி, பின்வரும் நாட்கள் காலபைரவர் வழிபாட்டிற்கு மிகவும் சிறப்பாகக் கருதப்படுகின்றன:&lt;/p&gt;&lt;p&gt;&bull; தேய்பிறை அஷ்டமி&lt;/p&gt;&lt;p&gt;&bull; காலபைரவர் அஷ்டமி&lt;/p&gt;&lt;p&gt;&bull; சனிக்கிழமை ராகுகாலம்&lt;/p&gt;&lt;p&gt;&bull; செவ்வாய்க்கிழமை மாலை&lt;/p&gt;&lt;p&gt;&bull; கிருஷ்ணபட்ச அஷ்டமி&lt;/p&gt;&lt;p&gt;இந்த நாட்களில் பக்தியுடன் வழிபடுவது கூடுதல் ஆன்மிக பலனை அளிக்கும் என்று கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்து வந்தால்:&lt;/p&gt;&lt;p&gt;&bull; நீண்டநாள் தடைப்பட்ட காரியங்கள் நடைபெறலாம் என்ற நம்பிக்கை&lt;/p&gt;&lt;p&gt;&bull; மனதில் தைரியமும் நம்பிக்கையும் அதிகரிக்கலாம்&lt;/p&gt;&lt;p&gt;&bull; எதிர்மறை எண்ணங்கள் குறையலாம்&lt;/p&gt;&lt;p&gt;&bull; தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் அமையலாம்&lt;/p&gt;&lt;p&gt;&bull; குடும்பத்தில் அமைதி நிலவலாம்&lt;/p&gt;&lt;p&gt;&bull; நீதிமன்றம் அல்லது கடன் தொடர்பான சிக்கல்கள் சீராகும் என்ற நம்பிக்கை&lt;/p&gt;&lt;p&gt;இவை அனைத்தும் ஆன்மிக நம்பிக்கைகளின் அடிப்படையிலானவை; ஒவ்வொருவரின் அனுபவமும் மாறுபடலாம்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;கவனிக்க வேண்டிய விஷயம்&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;எந்த பரிகாரமாக இருந்தாலும், அது முயற்சிக்கு மாற்றாக அல்ல; மன உறுதியையும் இறைநம்பிக்கையையும் வளர்க்கும் ஆன்மிக வழிமுறையாகவே பார்க்கப்பட வேண்டும். வாழ்க்கையில் வெற்றி பெற உழைப்பு, திட்டமிடல், சரியான முடிவுகள் ஆகியவை அவசியம். அதனுடன் பக்தி மற்றும் நேர்மறை எண்ணங்களை இணைத்துக் கொண்டால் மனநிம்மதியும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;குறிப்பு: &lt;/strong&gt;இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கைகள் மற்றும் பாரம்பரிய வழிபாட்டு முறைகள் பற்றிய தகவல்களை மட்டுமே பகிர்கிறது. இதனை மத நம்பிக்கையின் ஒரு பகுதியாகவே அணுக வேண்டும்; உறுதியான பலனை உத்தரவாதம் அளிப்பதாகக் கருதக்கூடாது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>spiritual</category>
            <dc:creator>Asianet News</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/spiritual/why-do-devotees-offer-8-lemons-to-kala-bhairava-the-spiritual-belief-behind-this-powerful-ritual-qu3g56v"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Garuda Puranam: இறந்தவர் பொருட்களை பயன்படுத்தலாமா? கருட புராணம் சொல்வது என்ன?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/spiritual/garuda-puranam-explains-what-to-do-with-deceased-clothes-bed-and-personal-belongings-after-their-passing-explained-u0fmddi</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/spiritual/garuda-puranam-explains-what-to-do-with-deceased-clothes-bed-and-personal-belongings-after-their-passing-explained-u0fmddi</guid>
            <pubDate>Tue, 11 Aug 2026 17:01:30 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;What To Do With Deceased Clothes: ஒருவர் இறந்த பிறகு அவருடைய உடைகள், கட்டில், மெத்தை போன்றவற்றை பயன்படுத்தலாமா என்பதற்கான விளக்கத்தை கருட புராணம் கூறுகிறது. அதுகுறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktrvzh5zkzaem9aj3xyhzew3,imgname-what-to-do-with-deceased-clothes---garuda-puranam-rules-1781098595519.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;What To Do With Deceased Clothes: ஒருவர் இறந்த பிறகு அவருடைய உடைகள், கட்டில், மெத்தை போன்றவற்றை பயன்படுத்தலாமா என்பதற்கான விளக்கத்தை கருட புராணம் கூறுகிறது. அதுகுறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒருவர் இறந்த பிறகு, அவரது நினைவுகள் மட்டுமல்ல, அவர் பயன்படுத்திய பொருட்களும் குடும்பத்தினருக்கு உணர்வுப்பூர்வமானவை. பலர் இறந்தவரின் நினைவாக உடைகள், கட்டில், மெத்தையை பத்திரமாக வைத்திருப்பார்கள். ஆனால், சனாதன தர்மத்தின்படி இந்த பொருட்களை என்ன செய்ய வேண்டும் என கருட புராணம் சில வழிகாட்டுதல்களை வழங்குகிறது. இது ஆன்மாவின் பயணம் மற்றும் அது தொடர்பான பல விஷயங்களை விளக்குகிறது.&lt;/p&gt;&lt;p&gt;Spiritual: இந்த இறைச்சியை சாப்பிட்டால் 7 தலைமுறைக்கு சாபம் உண்டாகும்.! மொத்த பரம்பரையே அழிந்து போகுமாம்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்து மதத்தின்படி, இறப்பு என்பது உடலுக்கு மட்டுமே, ஆன்மாவுக்கு அல்ல என கருட புராணம் சொல்கிறது. இறந்த பிறகும் ஆன்மா சிறிது காலம் உலகப் பொருட்களுடன் இணைந்திருக்கலாம். நாம் தினமும் பயன்படுத்தும் பொருட்களில் நமது ஆற்றல் தங்கியிருக்கும். அதனால்தான், இறந்தவரின் உடைகள், கட்டில், மெத்தை போன்றவற்றை நீண்ட காலம் வீட்டில் வைத்திருப்பது நல்லதல்ல. இது வீட்டில் எதிர்மறை சூழலை உருவாக்கும் என நம்பப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;கணவரை இழந்த பெண்கள் பொட்டு வைக்கலாமா? சுப நிகழ்ச்சிகளில் விளக்கேற்கலாமா? தேச மங்கையர்கரசியின் மனதை உருக்கும் அறிவுரை.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உடைகள், படுக்கை, போர்வை போன்றவை ஒரு நபருடன் அதிக தொடர்பில் இருக்கும் பொருட்கள். கருட புராணத்தின்படி, இந்த பொருட்களில் இறந்த பிறகும் ஒருவரின் நினைவுகளும் ஆற்றலும் தங்கியிருக்கும். இந்த காரணத்தால், அவற்றை உடனடியாகப் பயன்படுத்தக்கூடாது. அப்படி பயன்படுத்தினால் மனக்கவலை, கெட்ட கனவுகள் அல்லது மன அழுத்தம் ஏற்படலாம் என்று கருட புராணம் கூறுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;குழந்தைகளுக்கு எந்த வயதில் ஜாதகம் எழுத வேண்டும்? எந்த வயதில் பலன்கள் பார்க்க வேண்டும்? தேசமங்கையர்கரசி விளக்கம்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கருட புராணத்தின்படி, இறந்தவரின் உடைகளையும் படுக்கையையும் சுத்தம் செய்து, தேவைப்படும் ஒருவருக்கோ, ஏழைக் குடும்பத்திற்கோ, ஆசிரமத்திற்கோ தானம் செய்வது சிறந்தது. இதனால் இல்லாதவர்களுக்கு உதவியது போலவும் இருக்கும், மேலும் பிரிந்த ஆன்மாவுக்கு உலகத்துடனான பந்தமும் குறையும். இதனால் ஆன்மாவின் பயணம் இனிமையானதாகவும் இருக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;கணவரை இழந்த பெண்கள் பூச்சூடுவது சரியா? தவறா? போட்டுடைத்த தேசமங்கையர்கரசி.! பெண்களுக்கான முக்கிய தகவல்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒரு மனிதன் தன் வாழ்நாளின் பெரும்பகுதியை ஓய்வில் கழிக்கிறான். எனவே, படுக்கை அவர்களின் தனிப்பட்ட ஆற்றலுடன் தொடர்புடையது. முடிந்தால், இறந்தவரின் படுக்கையை தானம் செய்ய வேண்டும் என்று கருட புராணம் கூறுகிறது. ஒவ்வொரு குடும்பத்தின் சூழ்நிலையும் வேறுபட்டது. சில நேரங்களில், பொருளாதார காரணங்கள் அல்லது பிற தேவைகளால், படுக்கை, உடைகளை தானம் செய்ய முடியாமல் போகலாம். அத்தகைய சூழ்நிலையில், அதை வீட்டிலேயே வைத்திருக்கலாம், ஆனால் பயன்படுத்துவதற்கு முன்பு அதை நன்கு துவைத்து, புனித நீரால் சுத்திகரிப்பு செய்ய வேண்டியது முக்கியம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்து மரபுகளில், துக்க அனுசரிப்பு காலம் அல்லது சூதக காலம் என்பது மரணத்திற்குப் பிறகு சுமார் 10 முதல் 13 நாட்கள் வரை நீடிக்கும். இந்த நேரத்தில், குடும்பத்தினர் மங்களகரமான செயல்களில் இருந்து விலகி இருப்பார்கள். சூதக காலம் முடிந்ததும், வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். அதன் பிறகு இறந்தவரின் பொருட்களை தானம் செய்வது மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>spiritual</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/spiritual/garuda-puranam-explains-what-to-do-with-deceased-clothes-bed-and-personal-belongings-after-their-passing-explained-u0fmddi"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Guru Udhayam 2026: கடகத்தில் வலுவடையும் குரு பகவான்: ஆகஸ்ட் 10-க்குப் பின் 4 ராசிகளுக்கு கூரையை பிச்சிகிட்டு கொட்டப்போகுது.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/guru-udhayam-in-cancer-on-august-10-2026-4-zodiac-signs-set-to-receive-powerful-benefits-according-to-astrology-v5fxsnl</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/guru-udhayam-in-cancer-on-august-10-2026-4-zodiac-signs-set-to-receive-powerful-benefits-according-to-astrology-v5fxsnl</guid>
            <pubDate>Sat, 08 Aug 2026 15:32:40 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Guru Udhayam 2026 in Cancer: குரு பகவான் ஆகஸ்ட் 10 ஆம் தேதி கடக ராசியில் உதயமாகவுள்ளார். பலவீனமான நிலையில் இருக்கும் குரு பலமாக மாறுவதால், 4 ராசிகளுக்கு உச்சபட்ச பலன்கள் கிடைக்கவுள்ளது. அதுபற்றி இங்கு விரிவாகப் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kzgd0s1apxgzsaz2g7a72jqb,imgname-guru-udhayam-2026-1786183181353.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Guru Udhayam 2026 in Cancer: குரு பகவான் ஆகஸ்ட் 10 ஆம் தேதி கடக ராசியில் உதயமாகவுள்ளார். பலவீனமான நிலையில் இருக்கும் குரு பலமாக மாறுவதால், 4 ராசிகளுக்கு உச்சபட்ச பலன்கள் கிடைக்கவுள்ளது. அதுபற்றி இங்கு விரிவாகப் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜோதிட சாஸ்திரத்தில் சுபக் கிரகமாகவும், தேவர்களின் குருவாகவும் போற்றப்படுபவர் குரு பகவான். இவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாவதோடு, அஸ்தமனம் அடைவதும் பின்னர் உதயமாவதும் வழக்கம். இத்தகைய மாற்றங்கள் அனைத்து ராசிகளின் வாழ்விலும் நேர்மறையான மற்றும் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.&lt;/p&gt;&lt;p&gt;தற்போது குரு பகவான் தனது உச்ச ராசியான கடகத்தில் அஸ்தமன நிலையில் பலவீனமாக பயணித்து வருகிறார். இந்நிலையில், 2026 ஆகஸ்ட் 10 ஆம் தேதி கடக ராசியில் குரு உதயமாகவுள்ளார். ஏற்கனவே கடகத்தில் குரு இருப்பதனால் ஹன்ஸ் மகாபுருஷ ராஜயோகம் உருவாகியுள்ள நிலையில், குருவின் உதயம் மூலமாக அவரது பலம் இருமடங்காக அதிகரித்து சில ராசிகளுக்கு சிறப்பான நன்மைகளையும் யோகத்தையும் அள்ளித்தரவுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;குரு உதயத்தால் பெரும் யோகமும் அதிர்ஷ்டமும் பெறவுள்ள 4 ராசிகள் குறித்து கீழே காண்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;இடம்:&lt;/strong&gt; முதல் வீடு (ஜென்ம ராசி)&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பலன்கள்:&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;தன்னம்பிக்கை மற்றும் மன தைரியம் அதிகரிக்கும்.&lt;/li&gt; &lt;li&gt;நீண்ட நாட்களாக முடங்கிக்கிடந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.&lt;/li&gt; &lt;li&gt;உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.&lt;/li&gt; &lt;li&gt;புதிய வருமான வழிகள் திறக்கும்.&lt;/li&gt; &lt;li&gt;குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;இடம்:&lt;/strong&gt; 11-ஆம் வீடு (லாப ஸ்தானம்)&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பலன்கள்:&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;ஆகஸ்ட் 10-க்குப் பிறகு எதிர்பாராத நன்மைகள் தேடி வரும்.&lt;/li&gt; &lt;li&gt;வருமானம் கணிசமாக உயரும்; தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.&lt;/li&gt; &lt;li&gt;முந்தைய முதலீடுகளில் இருந்து சிறப்பான பலன்கள் கிடைக்கும்.&lt;/li&gt; &lt;li&gt;சமூகத்தில் மதிப்புமிக்க மனிதர்களின் நட்பும் ஆதரவும் கிடைக்கும்.&lt;/li&gt; &lt;li&gt;நிதி நிலைமை வலுவடைந்து குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;இடம்:&lt;/strong&gt; 10-ஆம் வீடு (கர்ம / தொழில் ஸ்தானம்)&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பலன்கள்:&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;தொழில் மற்றும் வணிகத் துறையில் இருப்பவர்களுக்கு அபாரமான வளர்ச்சி கிடைக்கும்.&lt;/li&gt; &lt;li&gt;பணியிடத்தில் உங்களின் உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரமும் பலனும் கிடைக்கும்.&lt;/li&gt; &lt;li&gt;புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை அமைய வாய்ப்புள்ளது.&lt;/li&gt; &lt;li&gt;வியாபாரிகளுக்கு லாபகரமான புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.&lt;/li&gt; &lt;li&gt;குருவின் அருளால் நிதிப் பிரச்சனைகள் நீங்கி பொருளாதார நிலை மேம்படும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;இடம்: &lt;/strong&gt;8-ஆம் வீடு (ஆயுள் ஸ்தானம்)&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பலன்கள்:&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;திடீர் பணவரவு மற்றும் நிதி ஆதாயங்கள் உண்டாகும்.&lt;/li&gt; &lt;li&gt;பூர்வீகச் சொத்துக்கள் தொடர்பான விவகாரங்களில் சாதகமான முடிவுகள் வரும்.&lt;/li&gt; &lt;li&gt;தொழில் மற்றும் வேலைவாய்ப்பில் நேர்மறையான மாற்றங்களைக் காண்பீர்கள்.&lt;/li&gt; &lt;li&gt;பொருளாதார நிலை முன்பை விட சிறப்பாக வலுவடையும்.&lt;/li&gt; &lt;li&gt;குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை அதிகரிக்கும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது&lt;/p&gt;]]></content:encoded>
            <category>spiritual</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/guru-udhayam-in-cancer-on-august-10-2026-4-zodiac-signs-set-to-receive-powerful-benefits-according-to-astrology-v5fxsnl"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Astrology:  ஆடிப்பெருக்கை தொடர்ந்து வரும் அதிர்ஷ்டம்.! தொடர்ந்து 10 நாட்களுக்கு கோடீஸ்வர யோகம்.! கல்லாகட்ட போகும் ராசிகள் லிஸ்ட்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/astrology-after-aadiperukku-5-zodiac-signs-get-wealthy-and-healthy-life-wyyxxig</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/astrology-after-aadiperukku-5-zodiac-signs-get-wealthy-and-healthy-life-wyyxxig</guid>
            <pubDate>Mon, 03 Aug 2026 09:35:02 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ஆடிப் பெருக்குக்கு பிறகு, கிரகங்களின் சுப சேர்க்கையால் 5 ராசிகளுக்கு அடுத்த 10 நாட்களுக்கு கோடீஸ்வர யோகம் உண்டாகும். இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் லாபம், எதிர்பாராத பணவரவு, மற்றும் கடன் நிவர்த்தி போன்ற பிரம்மாண்டமான நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kz2vsjfykkqqpy8eqnbfwzc1,imgname-gemini-generated-image-myg5trmyg5trmyg5--1--1785728911869.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஆடிப் பெருக்குக்கு பிறகு, கிரகங்களின் சுப சேர்க்கையால் 5 ராசிகளுக்கு அடுத்த 10 நாட்களுக்கு கோடீஸ்வர யோகம் உண்டாகும். இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் லாபம், எதிர்பாராத பணவரவு, மற்றும் கடன் நிவர்த்தி போன்ற பிரம்மாண்டமான நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆடிப் பெருக்கு பண்டிகை காவேரி அன்னையின் அருளாலும், சூரியன் மற்றும் செவ்வாயின் சுப சேர்க்கையாலும் அஷ்டலட்சுமி யோகத்தை அள்ளித்தரும் அற்புத நாளாக அமைந்திருக்கிறது. ஆடி 18-ஆம் பெருக்கு முடிவடைந்ததைத் தொடர்ந்து, நவகிரகங்களின் சுப அதிர்வுகள் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அடுத்த 10 நாட்களுக்குப் பிரம்மாண்டமான தன பிராப்தியையும், அஷ்டலட்சுமி கடாட்சத்தையும் வாரி வழங்கவுள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;கேந்திர மற்றும் கோண வீடுகளில் கிரகங்களின் சுப பார்வை கிடைப்பதால், இந்த ராசிக்காரர்களுக்குத் தொட்டதெல்லாம் பொன்னாகும் &quot;கோடீஸ்வர யோகம்&quot; கூடி வருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தன காரகனான சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு, ஆடிப் பெருக்குக்குப் பிந்தைய 10 நாட்கள் பொற்காலமாக அமையப் போகிறது. தன ஸ்தானத்தில் லக்னாதிபதி பலம்பெறுவதால், நிலுவையில் இருந்த கடன் தொகைகள் வசூலாகும். பூர்வீகச் சொத்து மூலம் எதிர்பாராத பணவரவு கிடைக்கும். தொழிலில் இரட்டிப்பு லாபம் கண்டு கல்லாப்பெட்டி நிரம்பும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சூரிய பகவானின் சொந்த வீடான சிம்மத்திற்கு, இந்த 10 நாட்களில் 'ஆதித்ய யோகம்' மற்றும் 'தன யோகம்' பிரகாசிக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குத் திடீர் ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிப் பெரும் நிதி ஆதாயத்தைத் தரும். லாப அதிபதி சுப ஸ்தானத்தில் அமர்வதால், முதலீடுகள் மூலம் அதிக லாபம் ஈட்டுவீர்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆடிப் பெருக்கின் நாயகனான செவ்வாயின் யோகப் பார்வை உங்கள் ராசிக்குக் கிடைப்பதால், லக்னம் வலுவடைகிறது. தொழில் ஸ்தானத்தில் சுப கிரகங்களின் சேர்க்கை இருப்பதால், தடைபட்டுக் கிடந்த புதிய தொழில்கள் அசுர வேகத்தில் தொடங்கும். ரியல் எஸ்டேட், பூமி, மற்றும் கட்டுமானத் தொழிலில் இருப்பவர்களுக்குக் கோடிகளில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குரு பகவானின் ஆசி பெற்ற தனுசு ராசியினருக்குப் பாக்கிய ஸ்தானம் மிகவும் வலுவாக உள்ளது. 'கஜகேசரி யோகத்தின்' தாக்கம் இருப்பதால், வெளிநாட்டுத் தொடர்புகள் மூலம் எதிர்பாராத தன லாபம் உண்டாகும். தொழில் ரீதியான கடன்கள் அடைபட்டு, சேமிப்பு பன்மடங்கு உயரும். புதிய தொழிலில் முதலீடு செய்ய இதுவே பொன்னான காலம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கும்ப ராசியினருக்கு இதுநாள் வரை இருந்துவந்த பொருளாதார நெருக்கடிகள் விலகும் காலம் இது. தன மற்றும் லாப அதிபதிகளின் அனுக்கிரகத்தால், பங்குச்சந்தை மற்றும் மறைமுக வழிகளில் எதிர்பாராத அதிர்ஷ்டப் பணம் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூலாகி உங்களை நிதி ரீதியாக வலுப்படுத்தும்.&lt;/p&gt;&lt;p&gt;இந்த கட்டுரையும் உங்களுக்கு பிடிக்கும்&lt;/p&gt;&lt;p&gt;https://tamil.asianetnews.com/gallery/astrology/monthly-money-horoscope-financial-predictions-for-all-zodiac-signs-nnpmgxc&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த 10 நாட்களும் கோடீஸ்வர யோகத்தின் பலன்களை முழுமையாகப் பெறவும், லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்கவும் தினமும் காலையில் மகாலட்சுமி அஷ்டோத்திரம் பாராயணம் செய்து, தீப ஏற்றி வழிபடுவது சிறந்தது. ஆடிப் பெருக்கில் தொடங்கிய சுப அதிர்வுகள் உங்கள் வாழ்வைச் செல்வச் செழிப்பால் நிரப்பட்டும்!&lt;/p&gt;&lt;p&gt;இதையும் படிக்கலாமே&lt;/p&gt;&lt;p&gt;https://tamil.asianetnews.com/gallery/astrology/job-horoscope-predictions-for-all-zodiac-signs-career-and-business-insights-qgzbnxa&lt;/p&gt;]]></content:encoded>
            <category>spiritual</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/astrology-after-aadiperukku-5-zodiac-signs-get-wealthy-and-healthy-life-wyyxxig"/>
        </item>
    </channel>
</rss>
