<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes"?>
<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Thu, 09 Apr 2026 07:15:37 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss/puducherry" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[Puducherry Elections: புதுச்சேரியில் இன்று வாக்குப்பதிவு! NDA, INDIA, தவெக இடையே மும்முனைப் போட்டி!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/india/puducherry-assembly-elections-2024-triangular-contest-heats-up-for-30-seats-articleshow-0ggd2b7</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/india/puducherry-assembly-elections-2024-triangular-contest-heats-up-for-30-seats-articleshow-0ggd2b7</guid>
            <pubDate>Thu, 09 Apr 2026 07:15:33 +0530</pubDate>
            <description><![CDATA[புதுச்சேரியில் 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. 10 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். NDA, INDIA கூட்டணி மற்றும் நடிகர் விஜய்யின் தவெக இடையே மும்முனைப் போட்டி நிலவுவதால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. 1,099 வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-external,imgname-image-542ad1eb-4fc9-4628-a1e0-d441640b3a74.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. இந்தத் தேர்தலில் மொத்தம் 10,14,070 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 5,39,125 பேர் பெண்கள், 4,74,788 பேர் ஆண்கள், 157 பேர் மூன்றாம் பாலினத்தவர். மேலும், 18-19 வயதுக்குட்பட்ட முதல்முறை வாக்காளர்கள் 24,156 பேரும், 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 6,034 பேரும் இந்தத் தேர்தலில் வாக்களிக்கின்றனர்.&lt;/p&gt;&lt;h2&gt;வாக்குப்பதிவு ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள்&lt;/h2&gt;&lt;p&gt;தேர்தல் ஏற்பாடுகள் குறித்து புதுச்சேரி தலைமைத் தேர்தல் அதிகாரி பி. ஜவஹர் ANI செய்தி நிறுவனத்திடம் பேசினார். அவர் கூறும்போது, &quot;மொத்தம் உள்ள 1,099 வாக்குச்சாவடிகளிலும் தேர்தல் ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டுள்ளன. 110 செக்டார் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவற்றில் 209 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டு, அங்கு மத்திய ஆயுதப்படை போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் விதிமீறல்களைக் கண்காணிக்க ட்ரோன்கள், பறக்கும் படைகள் மற்றும் உதவி எண்கள் பயன்படுத்தப்படுகின்றன&quot; என்றார்.&lt;/p&gt;&lt;p&gt;&quot;தேர்தல் நடத்தை விதிகள் கடந்த 48 மணி நேரமாக கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளன. பிரச்சாரம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது, மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. வாக்காளர்களுக்குப் பணம் அல்லது பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. புதுச்சேரியிலிருந்து தொலைவில் உள்ள மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் 4K தரத்தில் நேரலையாகக் கண்காணிக்கப்படுகிறது,&quot; என்றும் அவர் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;&lt;h2&gt;அரசியல் களம் மற்றும் முக்கிய கூட்டணிகள்&lt;/h2&gt;&lt;p&gt;புதுச்சேரி தேர்தல் களத்தில் ஆளும் NDA கூட்டணி, INDIA கூட்டணி மற்றும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (தவெக) இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. முதலமைச்சர் என். ரங்கசாமி தலைமையிலான அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் (AINRC) 16 தொகுதிகளிலும், பாஜக 10 தொகுதிகளிலும், அதிமுக மற்றும் LJK தலா இரண்டு தொகுதிகளிலும் NDA கூட்டணியில் போட்டியிடுகின்றன. INDIA கூட்டணியில் காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், திமுக 14 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி (VCK), புதுச்சேரியில் மூன்று தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுகிறது.&lt;/p&gt;&lt;h2&gt;அனல் பறந்த தேர்தல் பிரச்சாரம்&lt;/h2&gt;&lt;p&gt;பிரச்சாரத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ்-திமுக கூட்டணியை கடுமையாகத் தாக்கிப் பேசினார். &quot;அவர்கள் வாரிசு அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களே தவிர, மக்கள் நலனில் அக்கறை காட்டுவதில்லை&quot; என்று அவர் குற்றம் சாட்டினார்.&lt;/p&gt;&lt;p&gt;மறுபுறம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, &quot;புதுச்சேரி அரசை டெல்லியிலிருந்து திணிக்கிறார்கள். இது மக்கள் விருப்பத்தைப் பிரதிபலிக்கவில்லை&quot; என்று கூறினார். மேலும், புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க பாஜக தவறிவிட்டதாகவும், ஊழலை வளர்ப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.&lt;/p&gt;&lt;p&gt;இதற்கிடையே, தவெக தலைவர் விஜய், &quot;AINRC-பாஜக கூட்டணி சோர்வடைந்துவிட்டது, திமுக-காங்கிரஸ் கூட்டணி குழப்பத்தில் உள்ளது. இந்த இரண்டு கூட்டணிகளுக்கும் வாக்களிப்பது வீண்&quot; என்று விமர்சித்தார். புதுச்சேரிக்கு நல்லாட்சி தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.&lt;/p&gt;&lt;h2&gt;கடந்த தேர்தல் முடிவுகள்&lt;/h2&gt;&lt;p&gt;2021 சட்டமன்றத் தேர்தலில், AINRC 10 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. திமுக மற்றும் பாஜக தலா ஆறு இடங்களையும், காங்கிரஸ் ஆறு இடங்களையும் வென்றன. அப்போது 84.8% வாக்குகள் பதிவாகின. 2016 தேர்தலில், காங்கிரஸ் 15 இடங்களைப் பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. AINRC எட்டு இடங்களையும், அதிமுக நான்கு இடங்களையும், திமுக இரண்டு இடங்களையும் வென்றன. அப்போது வாக்குப்பதிவு 83.6% ஆக இருந்தது.&lt;/p&gt;&lt;h2&gt;வாக்கு எண்ணிக்கை மற்றும் சட்டமன்றத்தின் பதவிக்காலம்&lt;/h2&gt;&lt;p&gt;தற்போதைய 30 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தின் பதவிக்காலம் ஜூன் 15-ம் தேதியுடன் முடிவடைகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>puducherry</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/india/puducherry-assembly-elections-2024-triangular-contest-heats-up-for-30-seats-articleshow-0ggd2b7"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஒரு தலைவருக்கு இது கூடவா தெரியாது.. விஜய்யை கழுவி ஊற்றிய புதுச்சேரி அமைச்சர்.. என்ன விஷயம்?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/puducherry/puducherry-minister-slams-vijay-over-wrong-ration-shops-claim-0iz3xah</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/puducherry/puducherry-minister-slams-vijay-over-wrong-ration-shops-claim-0iz3xah</guid>
            <pubDate>Tue, 09 Dec 2025 14:39:30 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;புதுச்சேரியில் ரேஷன் கடைகள் மாநில அரசின் கன்ட்ரோலில் இல்லை என்று பேசிய தவெக தலைவர் விஜய்க்கு அந்த மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கண்டனம் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kc15p8xzgv8r51gbh956gk32,imgname-vijay-namachivasayam-1765271086015.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;புதுச்சேரியில் ரேஷன் கடைகள் மாநில அரசின் கன்ட்ரோலில் இல்லை என்று பேசிய தவெக தலைவர் விஜய்க்கு அந்த மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கண்டனம் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;புதுச்சேரி உப்பளம் துறைமுக வளாகத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டம் இன்று நடந்தது. கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய்யின் முதல் பொதுக்கூட்டம் என்பதால் புதுவை காவல்துறையினர் மிகவும் உஷாராக இருந்தனர். பொதுக்கூட்டத்துக்கு 5,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மேலும் கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஏதும் அசாம்விதங்கள் ஏற்பட்டால் மக்கள் வெளியேறுவதற்கு வசதியாக எமர்ஜென்சி எக்ஸிட்டுகளும் அமைக்கப்பட்டு இருந்தன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த கூட்டத்தில் பேசிய விஜய், ''அரசியல் கட்சிகள் நடத்தும் கூட்டங்களுக்கு எப்படி பாதுகாப்பு கொடுக்க வேண்டும்? என்பதை புதுவை அரசிடம் இருந்து தமிழக அரசு கற்றுக்கொள்ள வேண்டும்'' என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய விஜய், ''நான் தமிழ்நாட்டுக்கு மட்டுமில்லை; புதுச்சேரிக்கும் சேர்த்து தான் குரல் கொடுப்பேன்'' என்றார்.&lt;/p&gt;&lt;p&gt;ரேஷன் கடைகள் இல்லாத மாநிலம்&lt;/p&gt;&lt;p&gt;மேலும் பேசிய விஜய், ''புதுவை அரசுடன் கூட்டணியில் இருந்தாலும் மத்திய அரசு புதுச்சேரியை கண்டுகொள்ளவில்லை. மாநில அந்தஸ்து கோரிக்கையை கண்டுகொள்ளவில்லை. இங்கு வளர்ச்சி ஏற்படவும் துணை நிற்கவில்லை. இந்திய அளவில் ரேஷன் கடைகள் இல்லாத மாநிலம் புதுச்சேரி தான். ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரமே ரேஷன் கடைகள் தான். மற்ற மாநிலங்களை போல் இங்கும் அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட வழங்கப்பட வேண்டும்'' என்று தெரிவித்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த நிலையில், ரேஷன் கடைகள் குறித்து பேசிய விஜய்க்கு, புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய நமச்சிவாயம், ''புதுச்சேரியில் ரேஷன் கடைகள் மத்திய அரசின் கன்ட்ரோலில் உள்ளதா? இல்லை மாநில அரசின் கன்ட்ரோலில் உள்ளதா? ரேஷன் கடைகள் மாநில அரசு கன்ட்ரோலில் உள்ளது. இலவச அரிசி திட்டம் மாநில அரசின் ரேஷன் கடைகள் மூலமாகத்தான் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இது கூட தெரியாமல் விஜய் பேசிக் கொண்டுள்ளார்'' என்றார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தொடர்ந்து பேசிய நமச்சிவாயம், ''மத்திய அரசுக்கு எதிராக விஜய் பேசியதை வன்மையாக கண்டிக்கிறோம். உண்மைக்கு புறம்பான தகவலை விஜய் பேசியிருக்கிறார். பாஜக அரசு தான் மாநில அந்தஸ்து கொடுக்கவில்லை என்பது போல் விஜய் பேசுகிறார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்தே மாநில அந்தஸ்து கோரிக்கை இருந்து வருகிறது'' என்று தெரிவித்தார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>puducherry</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/puducherry/puducherry-minister-slams-vijay-over-wrong-ration-shops-claim-0iz3xah"/>
        </item>
        <item>
            <title><![CDATA[புதுச்சேரியை பார்த்து கத்துக்கோங்க.. முதல்வர் ஸ்டாலினை சீண்டிப்பார்த்த விஜய்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/puducherry/vijay-targets-cm-stalin-says-tamil-nadu-should-learn-from-puducherry-3v3xxab</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/puducherry/vijay-targets-cm-stalin-says-tamil-nadu-should-learn-from-puducherry-3v3xxab</guid>
            <pubDate>Tue, 09 Dec 2025 12:02:45 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;புதுச்சேரி உப்பளம் துறைமுகத்தில் நடந்த தவெக கூட்டத்தில் நடிகர் விஜய், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் உரையாற்றினார். புதுவை மக்களின் உரிமைக்காகவும் சமமாக குரல் கொடுப்பேன் என அவர் உறுதியளித்தார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kbhem2fpzcasj0h9w6g5em4k,imgname-untitled-design--72--1764743580150.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;புதுச்சேரி உப்பளம் துறைமுகத்தில் நடந்த தவெக கூட்டத்தில் நடிகர் விஜய், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் உரையாற்றினார். புதுவை மக்களின் உரிமைக்காகவும் சமமாக குரல் கொடுப்பேன் என அவர் உறுதியளித்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;புதுச்சேரி உப்பளம் துறைமுக வளாகத்தில் நடிகர் விஜய் இன்று கலந்து கொண்ட பொதுக்கூட்டம், கரூரில் நடந்த கூட்ட நெரிசல் உயிரிழப்புகளின் பின்னணியில் கடும் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது. தவெக சார்பில் முன்பதிவு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில், 5,000 பேருக்கு QR கோட் பாஸ் இல்லாதவர்கள் உள்ளே செல்லலாம் அனுமதிக்கப்படவில்லை. சிறுவர், கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியவர்கள் கூட வேண்டாம் என காவல்துறை முன்னெச்சரிக்கை அறிவுறுத்தியது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;புதுச்சேரியில் வசிப்பவர்களுக்காக மட்டும் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதால், தமிழ்நாட்டின் அண்டை மாவட்டங்களில் இருந்து வரும் ரசிகர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் அதிகாரிகள் தெளிவுபடுத்தினர். அரங்கு நிகழ்வில் பேசிய விஜய், புதுச்சேரி அரசு வழங்கிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பை பாராட்டி தமிழக அரசை நேரடியாக விமர்சித்தார். &ldquo;மற்ற அரசியல் கட்சிகள் நடத்தும் நிகழ்வுகளுக்கும் எப்படி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு, புதுச்சேரி அரசாங்கத்திடம் இருந்து கற்றுக் கொள்கிறது கொள்ள வேண்டும்&rdquo; என்று அவர் கூறினார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நிர்வாக ரீதியாக தனித்தனியாக இருந்தாலும், மக்கள் மனதில் ஒன்று என்று அவர் வலியுறுத்தினார். &ldquo;நாம் எல்லோரும் ஒரே சொந்தம். ஒன்றிய அரசு நம்மை வேறு வேறாகப் பார்க்கலாம். ஆனால் நாம் வேறுபட்டவர்கள் அல்ல&rdquo; என தெரிவித்தார். மேலும் பேசிய அவர், &ldquo;தமிழ்நாடு மக்களைப் போல புதுச்சேரி மக்களும் பல ஆண்டுகளாக பொறுமையுடன் தாங்கி வருகின்றனர்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;புதுவைக்கும் சமமாக குரல் கொடுப்பேன். இது என் கடமையும் உறுதியும்&rdquo; என்றார். புதுவை அரசு, வேறு கட்சி நடத்தும் நிகழ்வாக இருந்தாலும் தேவையான பாதுகாப்பை அளித்ததாகவும், இதைப் பார்த்து தமிழக அரசு பாடம் கற்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்தார். &ldquo;ஆனால் அவர்கள் கற்றுக் கொள்ள மாட்டார்கள்&rdquo; என கடும் விமர்சனத்துடன் சிறிது நேரத்தில் பேச்சை முடித்துக்கொண்டார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>puducherry</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/puducherry/vijay-targets-cm-stalin-says-tamil-nadu-should-learn-from-puducherry-3v3xxab"/>
        </item>
        <item>
            <title><![CDATA[பொங்கல் பரிசுத்தொகுப்பு.. பொதுமக்களுக்கு முதல்வர் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/puducherry/pongal-gift-announcement-for-all-ration-cards-in-puducherry-4pn3mox</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/puducherry/pongal-gift-announcement-for-all-ration-cards-in-puducherry-4pn3mox</guid>
            <pubDate>Wed, 10 Dec 2025 13:25:30 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தகுதியுள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.750 மதிப்புள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பை அறிவித்துள்ளது. இந்த தொகுப்பில் பச்சரிசி, நாட்டு சர்க்கரை, நெய் உள்ளிட்ட 6 அத்தியாவசியப் பொருட்கள் அடங்கும். இந்த பரிசு தொகுப்பு ஜனவரி 3 முதல் விநியோகம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jge4mhbmkd9e8sf0hszn8q0e,imgname-pongal-gift-8.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தகுதியுள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.750 மதிப்புள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பை அறிவித்துள்ளது. இந்த தொகுப்பில் பச்சரிசி, நாட்டு சர்க்கரை, நெய் உள்ளிட்ட 6 அத்தியாவசியப் பொருட்கள் அடங்கும். இந்த பரிசு தொகுப்பு ஜனவரி 3 முதல் விநியோகம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;புதுச்சேரி அரசு சார்பில் ஆண்டுதோறும் அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது அப்போதைய ஆளுநர் கிரண்பேடிக்கும், அப்போதைய புதுச்சேரி அரசுக்கும் மோதல் ஏற்பட்டு ரேஷன் கடைகள் மூடப்பட்டது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதனையடுத்து பயனாளிகள் வங்கிக் கணக்கில் ரேஷன் பொருட்களுக்கு பணம் செலுத்தப்பட்டு வந்தது. தற்போது புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. முதல்வராக ரங்கசாமி இருந்து வருகிறார். இந்நிலையில், புதுச்சேரி அரசு ரூ.750 மதிப்புள்ள பொங்கல் பரிசு தொகுப்பு ஜனவரி 3-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதன்படி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் கவுரவ ரேஷன் அட்டைதாரர்களை தவிர்த்து அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் நியாய விலைக்கடை மூலம் 5 மளிகை பொருட்கள் மற்றும் ஒரு பையுடன் கூடிய கிட் இலவசமாக வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, பச்சரிசி-4 கிலோ, நாட்டு சர்க்கரை-1 கிலோ, பாசி பருப்பு-1 கிலோ, நெய்-300 கிராம், சூரியகாந்தி எண்ணெய்-1 லிட்டர், பை-1 ஆகிய பொருட்கள் நியாய விலைக்கடைகள் மூலம் விநியோகம் செய்வது அரசு கூட்டுறவு நிறுவனமான கான்பெட் மூலம் செயல்படுத்தப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனாமில் உள்ள நியாய விலைக்கடைகள் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும், புதுச்சேரி கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் (பாண்லே) இருந்து நெய் கொள்முதல் செய்வதற்கு அரசாங்கத்தின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பில் நெய் தவிர்த்து மற்ற பொருட்கள் ஆன்லைன் டெண்டர் செயல்முறை மூலம் கொள்முதல் செய்ய கான்பெட் நிறுவனம் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடிமை பொருள் வழங்கல்துறை மூலம் புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>puducherry</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/puducherry/pongal-gift-announcement-for-all-ration-cards-in-puducherry-4pn3mox"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ரூ.597 கோடி சொத்து.. 26 கோடி தங்கம்.. 38 கோடிக்கு வாட்ச்.. பிரமிக்க வைக்கும் சொத்து.. யார் இந்த ஜோஸ் சார்லஸ் மார்டின்?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/puducherry/puducherry-kamaraj-nagar-candidate-jose-charles-martin-asset-details-7sa5xmv</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/puducherry/puducherry-kamaraj-nagar-candidate-jose-charles-martin-asset-details-7sa5xmv</guid>
            <pubDate>Tue, 24 Mar 2026 14:40:49 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Jose Charles Martin: ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், தனது தேர்தல் பிரமாண பத்திரத்தில் 597 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். அவருக்கு 210 கோடி ரூபாய் கடன் மற்றும் அவர் மீது 5 குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kmfg43wrvgdjrcpgbjr8jpsm,imgname-jose-1774341722008.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Jose Charles Martin: ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், தனது தேர்தல் பிரமாண பத்திரத்தில் 597 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். அவருக்கு 210 கோடி ரூபாய் கடன் மற்றும் அவர் மீது 5 குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;புதுச்சேரியில் 30 தொகுதிகள் கொண்ட சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 9ம் தேதி வியாழக்கிழமை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ்- பாஜக- அதிமுக- லஜக இடம் பெற்றுள்ளன. இதில், என்.ஆர். காங்கிரஸ் 16, பாஜக 10, அதிமுக 2, லஜக 2 இடங்களில் போட்டியிடுகின்றன. கடந்த 16-ம் தேதி தொடங்கிய வேட்பு மனுத் தாக்கல் நேற்று முடிவடைந்தது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில் புதுச்சேரி காமராஜர் நகர் சட்டப்பேரவை தொகுதியில் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் போட்டியிடுகிறார். இவருக்கு 597 கோடி சொத்து உள்ளதாக தேர்தல் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார். ஜோஸ் சார்லஸ் மார்டின் மற்றும் அவரது மனைவி பெயரில் மெர்சிடஸ்பென்ஸ், டொயோட்டா வெல்பைர் ஆகிய இரு கார்கள் உள்ளிட்ட 339 கோடி ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துக்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சார்லஸ் மார்ட்டினுக்கு 20.59 லட்சமும் அவரது மனைவியிடம் ஒரு கோடியை 82 லட்சமும் பல்வேறு வங்கிகளில் 2.03 கோடியும், சுமார் 64க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் 74.28 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார். வேட்பாளரிடம் 25.67 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கமும், அவரது மனைவியிடம் 5.35 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கமும், 44.87 கோடி மதிப்புலான வைரங்களும் அவரது மனைவியிடம் 2.10 கோடி மதிப்பிலான வைரங்களும், 3.77 கோடி ரூபாய் மதிப்புள்ளன வெள்ளியும், மனைவியிடம் ஒரு 1.68 கோடி ரூபாய் மதிப்பிலான வெள்ளியும், சார்லஸ் மார்டினுக்கு 38 கோடிக்கு கை கடிகாரங்களும், அவரது மனைவிக்கு 1.14 கோடி ரூபாய் மதிப்பிலான கைக்கடிகாரம் உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வேட்பாளருக்கு சென்னை பொன்னேரி மற்றும் இதர இடங்களில் உள்ள விவசாய அல்லாத நிலங்களில் தற்போதைய சந்தை மதிப்பு 192 கோடியே 50 லட்சம் ரூபாய் ஆகும். குடியிருப்புக்கு கட்டிடங்களின் சொத்து மதிப்பு 76.64 கோடி ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது எனவே அசையா சொத்துக்களின் சொத்து மொத்த மதிப்பு 269 கோடி ரூபாய் ஆகும். வேட்பாளருக்கு வங்கி மற்றும் இதர நிதி நிறுவனங்களில் மிகப்பெரிய அளவில் கடன் பொறுப்புகள் உள்ளது. மொத்த கடன் அதாவது 210 கோடியே 79 லட்சம் ரூபாய். இதில் இந்தியன் ஓவர்சீஸ் மற்றும் கனரா வங்கியில் பெறப்பட்ட கடன்களும் அடங்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வேட்பாளர் மீது அமலாக்கத்துறை தொடர்பான உள்ளிட்ட 5 குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதில் பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழான புகார்களும் அடங்கும். இவர் 2006-ம் ஆண்டு சென்னையில் உள்ள புனித ஜான்ஸ் ஆங்கிலப் பள்ளியில் 12ம் வகுப்பு முடித்துள்ளார். ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் மொத்த சொத்து மதிப்பு அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மதிப்பு 597 கோடி ரூபாயாகும். அதே சமயம் அவருக்கு 210 கோடி ரூபாய் கடன் இருப்பதும் பிரமாண பத்திரத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. புதுச்சேரியில் தற்போது வரை வெளியிடப்பட்டுள்ள பிரமாண பத்திரத்தில் ஜோஸ் சார்லஸ் மாட்டின் தான் அதிக சொத்துக்கள் கொண்ட வேட்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் லாட்டரி அதிபர் மாரட்டினின் மகன்.&amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>puducherry</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/puducherry/puducherry-kamaraj-nagar-candidate-jose-charles-martin-asset-details-7sa5xmv"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஓவர் பில்டப்போடு வந்து புஸ்ஸுனு முடிந்த புதுச்சேரி மாநாடு..! விஜய் பேசியது என்ன? தளபதியின் முழு ஸ்பீச் இதோ]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/puducherry/thalapathy-vijay-full-speech-in-tvk-public-meeting-in-puducherry-84tpb48</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/puducherry/thalapathy-vijay-full-speech-in-tvk-public-meeting-in-puducherry-84tpb48</guid>
            <pubDate>Tue, 09 Dec 2025 11:56:39 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டம் இன்று புதுச்சேரியில் நடைபெற்ற நிலையில், அதில் தவெக கட்சியின் தலைவர் தளபதி விஜய் என்ன பேசினார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k99m18kjmjaf2sae8ccn489g,imgname-whatsapp-image-2025-11-05-at-14.30.58-1762333336176.jpeg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டம் இன்று புதுச்சேரியில் நடைபெற்ற நிலையில், அதில் தவெக கட்சியின் தலைவர் தளபதி விஜய் என்ன பேசினார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கரூர் சம்பவம் நடந்து 72 நாட்களுக்கு பின்னர் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசி உள்ளார். புதுச்சேரியில் உள்ள உப்பளம் பகுதியில் இந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஸ் உள்ள 5000 பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தில் முதலில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசினார். அதன்பின்னர் தவெகவின் முக்கிய புள்ளியான ஆதவ் அர்ஜுனா பேசினார். அதற்கு அடுத்தபடியாக தவெக தலைவர் விஜய் உரையாற்றினார். என் நெஞ்சில் குடியிருக்கும் என சொல்லி தன்னுடைய உரையை தொடங்கினார் விஜய். அப்போது அரங்கம் அதிர விசில் சக்கம் பறந்தது.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;விஜய் என்ன பேசினார்?&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;விஜய் பேசியதாவது : &ldquo;தமிழ்நாடும் புதுச்சேரியும் வேற வேற இல்லை, ஒன்னுதான். தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, கேரளா மட்டுமல்ல உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும், அவர்கள் எல்லாருமே நம்மோட உயிர் தான், நம்முடைய வகையறா தான். இந்த புதுச்சேரிக்கு நிறைய சிறப்புகள் உண்டு. 1977ல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்தார், ஆனால் அதற்கு முன்பே 1974-லேயே அவருடைய ஆட்சி புதுவையில் அமைந்தது. நமக்காக வந்தவர் எம்ஜிஆர் அவரை மிஸ் பண்ணிடாதீங்க என அலர்ட் பண்ணியதே புதுச்சேரி தான்.&lt;/p&gt;&lt;p&gt;என்னை 30 வருஷமா புதுச்சேரி மக்கள் தாங்கி புடிச்சிகிட்டு இருக்கீங்க. இந்த விஜய் தமிழ்நாட்டுக்கு மட்டுமில்ல, புதுச்சேரி மக்களுக்கும் குரல் கொடுப்பான். இந்த புதுச்சேரி அரசு தமிழ்நாட்டில் உள்ள திமுக மாதிரி கிடையாது. வேறு ஒரு கட்சியாக இருந்தாலும் பாதுகாப்பு கொடுத்துள்ள புதுச்சேரி சிஎம் சாருக்கு என்னுடைய மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதைப்பார்த்தாவது திமுக கத்துகிட்டா நல்லா இருக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கூட்டணியில் இருந்தாலும் புதுச்சேரி அரசை ஒன்றிய அரசு கண்டுகொள்வதில்லை. இங்கு மாநில அந்தஸ்து வேண்டும் என 16முறை தீர்மானம் போட்டும் வழங்கப்படவில்லை. இங்க ஒரு ஐடி கம்பெனி உருவாக்க வேண்டும் என்கிற எண்ணமே இல்லை. இங்க ஒரு அமைச்சரை ஊழல் குற்றச்சாட்டில் நீக்கப்பட்டு, அவருக்கு பதில் வேறு ஒருவரை நியமித்து 200 நாள் ஆச்சு. இன்னும் அவருக்கு ஒரு இலாகா கூட தரல. இந்த செயல் சிறுபான்மை மக்களை அவமானப்படுத்துவது என அப்பகுதி மக்களே சொல்கிறார்கள்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;கடன் சுமைக்கு ஆளாகிறது புதுச்சேரி&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;டூரிஸ்ட் இடமான புதுச்சேரியில் போதுமான பார்க்கிங் வசதி இல்லை. புதுச்சேரி மக்களுக்கு ஒன்னே ஒன்னு தான் சொல்லனும், இந்த திமுக-வை நம்பாதீங்க. நம்ப வச்சு ஏமாத்துறது தான் அவங்களோட வேலையே. தமிழ்நாட்டை ஒதுக்குவது போல் புதுவையையும் ஒதுக்க கூடாது. புதுச்சேரி மத்திய நிதிக்குழுவில் இடம்பெறவில்லை. அதனால் ஒவ்வொரு ஆண்டு மத்திய அரசு தோராயமாக நிதியை ஒதுக்குகிறது. இந்த நிதி பத்தாததால் கடன் சுமைக்கு ஆளாகிறது புதுச்சேரி.&lt;/p&gt;&lt;h3&gt;&lt;strong&gt;ரேஷன் கடைகளே இல்லாத மாநிலம் புதுச்சேரி&lt;/strong&gt;&lt;/h3&gt;&lt;p&gt;இந்திய அளவில் ரேஷன் கடைகளே இல்லாத மாநிலம் புதுச்சேரி தான். மற்ற மாநிலங்களில் இருப்பது போல் இங்கேயும் ரேஷன் பொருட்கள் வழங்கும் முறை சீராக்கப்பட வேண்டும். இங்குள்ள மீனவர்களை அடிக்கடி கைது செய்யும் இலங்கை கடற்படை, அவர்களது படகுகளையும் அபகரிக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். இந்த விஜய் புதுச்சேரி மக்களுக்காக எப்பவும் துணை நிற்பான். வருகின்ற தேர்தலில் தவெக கொடி பட்டொலி வீசி பறக்கும். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்&rdquo; என கூறி தன் உரையை முடித்துக் கொண்டார் விஜய்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>puducherry</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/puducherry/thalapathy-vijay-full-speech-in-tvk-public-meeting-in-puducherry-84tpb48"/>
        </item>
        <item>
            <title><![CDATA[தளபதி காத்து மாதிரி; அவரை யாராலும் தடுக்க முடியாது... 2026-ல் புதுச்சேரியிலும் தவெக ஆட்சி - கர்ஜித்த புஸ்ஸி ஆனந்த்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/puducherry/bussy-anand-speech-in-tvk-public-meeting-in-puducherry-articleshow-9v1h17i</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/puducherry/bussy-anand-speech-in-tvk-public-meeting-in-puducherry-articleshow-9v1h17i</guid>
            <pubDate>Tue, 09 Dec 2025 12:22:34 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டம் இன்று புதுச்சேரியில் நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் என்ன பேசினார் என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kc0y041x72g2hajex59p5481,imgname-new-project---2025-12-09t121847.034-1765263020092.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;Bussy Anand Speech : &lt;/strong&gt;புதுச்சேரி உப்பளத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. சட்டம் மற்றும் ஒழுங்கு மூத்த காவல் கண்காணிப்பாளர் ஆர். கலைவாணன் தலைமையிலான புதுச்சேரி காவல்துறை, யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி என்ற நிபந்தனையுடன் எக்ஸ்போ மைதானத்தில் இந்த நிகழ்வுக்கு அனுமதி வழங்கி இருந்தது.&lt;/p&gt;&lt;p&gt;இன்று மதியம் 12:30 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. வழக்கமாக மேடை அமைத்துப் பேசுவதற்குப் பதிலாக, பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்ட பிரச்சார வாகனத்தில் இருந்து விஜய் பேசினார். இந்தக் கூட்டத்தில், தவெக தலைவரும் நடிகருமான விஜய் பேசும் முன்னர் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முதலில் உரையாற்றினார்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;புஸ்ஸி ஆனந்த் பேசியது என்ன?&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;புஸ்ஸி ஆனந்த் ஏற்கனவே புதுச்சேரியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்திருக்கிறார். இதனால் புதுச்சேரி மக்களுக்கு மிகவும் பரிட்சயமான முகமாகவே ஆனந்த் பார்க்கப்படுகிறார். விஜய்க்கு அடுத்தபடியாக புஸ்ஸி ஆனந்த் ஸ்பீச் தான் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில், அவர் தவெக பொதுக்கூட்டத்தில் என்ன பேசினார் என்பதை இங்கே காணலாம்.&lt;/p&gt;&lt;p&gt;தன்னுடைய உரைய தொடங்கியது, வந்திருக்கும் மக்களுக்கும் தவெகவினருக்கும் நன்றி தெரிவித்த அவர், 2026-ம் ஆண்டு தமிழகத்தில் மட்டுமல்ல புதுச்சேரியிலும் தவெக ஆட்சி அமையும் என உறுதிபட கூறினார். தமிழ்நாட்டில் நம்மை எங்குமே விடாக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். காற்றை மறைக்க முடியுமா என்ன.. எதுவுமே செய்ய முடியாது. தலைவரை யாராலும் ஒன்னும் செய்ய முடியாது. தமிழக முதலமைச்சராக 2026-ல் தளபதி வருவார். இன்னும் நான்கு மாதங்கள் தான் இருக்கிறது. நம்பிக்கையோடு உழைத்தால் புதுச்சேரியிலும் நம்முடைய ஆட்சி இருக்கும் என புஸ்ஸி ஆனந்த் கூறினார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>puducherry</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/puducherry/bussy-anand-speech-in-tvk-public-meeting-in-puducherry-articleshow-9v1h17i"/>
        </item>
        <item>
            <title><![CDATA[தமிழ்நாட்டில் பிளாப்… தவெக–என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி.. விஜய்க்கு கைகொடுக்குமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/puducherry/tvk-nr-congress-alliance-will-the-puducherry-experiment-work-c0og1kv</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/puducherry/tvk-nr-congress-alliance-will-the-puducherry-experiment-work-c0og1kv</guid>
            <pubDate>Tue, 09 Dec 2025 12:38:49 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், தவெக தலைவர் விஜய், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்காத ஒன்றிய அரசையும், தமிழக முதல்வரையும் கடுமையாக விமர்சித்தார். என்.ஆர். காங்கிரஸுடன் புதிய கூட்டணி அமையுமா என்ற அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kc0yjy033fr7yn6s34dm8zyk,imgname-tamil-news---2025-12-09t122613.500-1765263636482.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், தவெக தலைவர் விஜய், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்காத ஒன்றிய அரசையும், தமிழக முதல்வரையும் கடுமையாக விமர்சித்தார். என்.ஆர். காங்கிரஸுடன் புதிய கூட்டணி அமையுமா என்ற அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கரூர் மாவட்டத்தில் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற கூட்டநெரிசல் தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த துயரச் சம்பவத்திற்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் பெரிய அளவிலான பொதுக்கூட்டங்களை நடத்துவதில் ஒருவித இடைவெளியை விட்டார் என்றே கூறலாம். பின்னர் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதால் எந்த வித குழப்பமும் ஏற்படாமல் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. அதே அனுபவம் புதுச்சேரியில் நடைபெற்ற சந்திப்பிற்கும் வழிகாட்டியாக அமைந்தது.&lt;/p&gt;&lt;p&gt;புதுச்சேரி உப்பளம் துறைமுக வளாகத்தில் நடந்த இந்த பொதுக்கூட்டத்தில், வழக்கமான மேடை அமைப்புகள் எதுவும் செய்யப்படவில்லை. விஜய் தனது பிரச்சார வாகனத்தில் நின்றபடி உரையாற்றும் நடைமுறையே பின்பற்றப்பட்டது. கரூரில் இடம்பெற்ற துயரத்தை கருத்தில் கொண்டு, காவல்துறை மிகவும் கடுமையான பாதுகாப்பு சுற்றுவலயத்தை அமைத்தது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த QR பாஸ் முறையும் அமல்படுத்தப்பட்டது.&lt;/p&gt;&lt;p&gt;இதில் உரையாற்றிய விஜய், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நிர்வாக ரீதியாக தனித்த பிரதேசங்களாக இருந்தாலும், மக்கள் மனதில் வேறுபாடு இல்லை வலியுறுத்தினார். தமிழ்நாட்டுக்காக மட்டுமே தனது குரல் ஒலிக்கும் என நினைப்பது தவறு, புதுச்சேரி பிரச்சினைகளுக்கும் சமமான முறையில் குரல் கொடுப்பேன் என அவர் கூறினார் தெளிவுபடுத்தினார். &ldquo;எம்ஜிஆரைத் தவறவிடாதீர்கள் என முதலில் எச்சரித்தது புதுவை மக்கள் தான்,&rdquo; எனவும் அவர் கூறினார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதே சந்திப்பில், புதுச்சேரி அரசு வழங்கிய பாதுகாப்பு ஏற்பாடுகளை பாராட்டிய விஜய், &ldquo;இதைப் பார்த்து தமிழ்நாட்டின் முதல்வர் பாடம் கற்க வேண்டும். கற்றுக் கொள்ள மாட்டார்கள். அடுத்த தேர்தலில் மக்கள் முடிவு சொல்வார்கள்,&rdquo; என கடுமையாக விமர்சித்தார். புதுச்சேரி ஒன்றிய அரசு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்காதது, வேலைவாய்ப்பு வாய்ப்புகள் உருவாக்கப்படாதது, காரைக்கால் பகுதிக்கு புறக்கணிப்பு செய்யப்பட்டது என அடுக்கடுக்காக குற்றம் சாட்டினார்.&lt;/p&gt;&lt;p&gt;மேலும், புதுச்சேரியில் போதிய பார்க்கும் வசதிகள், கழிப்பறை அமைப்புகள் இல்லாததைச் சுட்டிக்காட்டி, &ldquo;இந்த நிலைக்கு காரணம் ஒன்றிய அரசு, போதிய நிதி வழங்காததுமே&rdquo; என தெரிவித்தார். ரேஷன் கடை இல்லாத ஒரே மாநிலமாக புதுச்சேரி மாறியுள்ளதை அவர் கண்டனம் செய்தார். புதுச்சேரி மக்களுக்கு எப்போதும் துணை நிற்பேன் என்றும் அவர் உறுதியளித்தார்.&lt;/p&gt;&lt;p&gt;இதற்கிடையில், என்.ஆர். காங்கிரஸ் மற்றும் தவெக கூட்டணி உருவாகும் சூழலில், குறிப்பாக முதலமைச்சர் ரங்கசாமியை விமர்சிக்காமல் விஜய் பேசியது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. கூட்டணியில் இருந்தாலும், &ldquo;பா.ஜ.க. புதுச்சேரியை வஞ்சித்து வருகிறது&rdquo; என்று கூறி அவர் புதிய கூட்டணிக்கு ஆச்சரியமான அரசியல் வரவேற்பு கொடுத்துள்ளார். இது புதுச்சேரியில் புது கூட்டணிக்கான அச்சாரமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>puducherry</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/puducherry/tvk-nr-congress-alliance-will-the-puducherry-experiment-work-c0og1kv"/>
        </item>
        <item>
            <title><![CDATA[என்ன கோபி இதெல்லாம்.. புதுச்சேரியில் ரேஷன் கடை இல்லையா.? விஜய்யின் பேச்சால் எழுந்த சர்ச்சை]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/puducherry/tvk-leader-vijay-faces-backlash-for-comment-on-puducherry-ration-shops-esachqh</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/puducherry/tvk-leader-vijay-faces-backlash-for-comment-on-puducherry-ration-shops-esachqh</guid>
            <pubDate>Tue, 09 Dec 2025 15:07:45 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், புதுச்சேரியில் தனது அரசியல் பயணத்தை தொடங்கி, திமுக மற்றும் ஒன்றிய அரசுகளை விமர்சித்தார். தவெக தலைவர் விஜயின் இந்த பேச்சு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kc16yf15c7nqz85ar7e02ssx,imgname-tamil-news---2025-12-09t145601.692-1765272402974.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், புதுச்சேரியில் தனது அரசியல் பயணத்தை தொடங்கி, திமுக மற்றும் ஒன்றிய அரசுகளை விமர்சித்தார். தவெக தலைவர் விஜயின் இந்த பேச்சு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான சூழல் ஏற்கனவே அரசியல் ரீதியாக சூடுபிடித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக புதுச்சேரியில் தனது மக்கள் சந்திப்பு பயணத்தை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கினார். மிகப்பெரிய திரளான மக்கள் பங்கேற்ற இந்த பொதுக்கூட்டம், புதுச்சேரி அரசியல் மேடையில் புதிய உயிர் ஊட்டியது என்று கூறலாம்.&lt;/p&gt;&lt;p&gt;பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய விஜய், தனது பேச்சை ஒன்றிய அரசின் செயல்பாடுகளை விமர்சித்ததன் மூலம் தொடங்கினார். அதன்பின், திமுக அரசை நோக்கி கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்தார். திமுகவை நம்பி விட வேண்டாம் என்று புதுச்சேரி மக்களிடம் நேரடியாக கூறிய அவர், ஒன்றிய அரசு புதுச்சேரியை பல ஆண்டுகளாக புறக்கணித்து வருவதாக குற்றம் சாட்டினார். ஆளுங்கட்சியான என்.ஆர். காங்கிரஸ் குறித்தும், முதல்வர் ரங்கசாமி குறித்தும் எந்தவிதமான விமர்சனமும் அவர் முன்வைக்காதது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&quot;தமிழ்நாடு ஒரு மாநிலம், புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்ற வகையில் ஒன்றிய அரசு பிரித்து பார்க்கலாம். ஆனால் நம்ம பார்வையில் அப்படி எந்த வித்தியாசமும் இல்லை,&quot; என்று விஜய் கூறினார். புதுச்சேரி அரசை பாராட்டியும் விஜய் பேசினார். &ldquo;தமிழ்நாட்டில் இருக்கும் திமுக அரசு செய்யாத பாதுகாப்பை, வேறு கட்சி கூட்டம் என்றாலும் கூட, புதுச்சேரி அரசு வழங்கியது. அதிகாரிகளுக்கும் எனது நன்றிகள்,&rdquo; என அவர் தெரிவித்தார்.&lt;/p&gt;&lt;p&gt;புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து மட்டுமல்ல, தொழில் வளர்ச்சியும் அவசியம் என்பதை அவர் வலியுறுத்தினார். நாடு முழுவதும் ரேஷன் கடைகள் இல்லாத ஒரே பகுதி புதுச்சேரி என்றும் கூறினார். &quot;மற்ற மாநிலங்களைப் போல இங்கும் ரேஷன் கடைகள் இயங்கி மக்களுக்கு மானிய விலையில் உணவுப் பொருட்கள் கிடைக்க வேண்டும்&quot; என்று மக்களின் எதிர்பார்ப்பு பிரதிபலிக்கும் உரையாற்றினார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உரையின் இறுதியில், புதுச்சேரி அரசியல் மேடையில் தமிழக வெற்றிக் கழக கொடியும் பறக்கும் என்று அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார். &ldquo;புதுச்சேரி மக்களே, நம்பிக்கை வையுங்கள்; வெற்றி நம்மிடம் தான் வரும்,&rdquo; என தேர்தல் உறுதியை வெளிப்படுத்தினார். புதுச்சேரியில் ரேஷன் கடைகள் மறுதிறப்பு தொடர்பான விவகாரம் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பொதுமக்களுக்கு இலவச அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்கள் ரேஷன் கடைகளின் மூலம் வழங்கப்பட்டது. பின்னர் ஆளுநராகப் பொறுப்பேற்ற கிரண்பேடி, சில நிர்வாக காரணங்களைச் சுட்டிக்காட்டி ரேஷன் கடைகள் இயங்குவதற்கு தடைவிதித்ததால், புதுச்சேரி முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் மூடப்பட்டன. இதனால் நீண்ட காலமாக அரசு ஆதரவு பெறும் உணவுப் பொருட்களை பொதுமக்கள் பெற முடியாமல் போனது.&lt;/p&gt;&lt;p&gt;அரசியல் மாற்றத்தின்போது என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதல்வராக பதவியேற்றதைத் தொடர்ந்து, ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்படும் என்று கூறினார். சுமார் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 21 அக்டோபர் 2024 அன்று குடிமைப்பொருள் வழங்கல் துறையின் ஏற்பாட்டில் புதுச்சேரி ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. இதன் மூலம், பல ஆண்டுகளாக நீடித்து வந்த ரேஷன் சேவை இடைவெளிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தீபாவளிக்காக 10 கிலோ இலவச அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற இந்த மறுதிறப்பு நிகழ்வில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் மற்றும் முதல்வர் ரங்கசாமி ஆகியோர் நேரில் பங்கேற்றனர். ரேஷன் கடைகளுக்கான கதவுகளை திறந்து வைத்தனர். பின்னர் பொதுமக்களுக்கு இலவச அரிசி, சர்க்கரை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதன் மூலம் நீண்ட நாட்களாக காத்திருந்த மக்களுக்கு முக்கிய நிவாரணம் கிடைத்தது.&lt;/p&gt;&lt;p&gt;அதே நேரத்தில், 2024-இல் ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்பட்ட விவரத்தை அறியாமல் விஜய் இப்படி தவறாக பேசியுள்ளாரே? இது கூட ஒரு கட்சியின் தலைவருக்கு தெரியாதா? என்ற கேள்வியையும் அரசியல் நிபுணர்கள் எழுப்பியுள்ளனர். தவெக தலைவர் விஜயின் இந்த பேச்சு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>puducherry</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/puducherry/tvk-leader-vijay-faces-backlash-for-comment-on-puducherry-ration-shops-esachqh"/>
        </item>
        <item>
            <title><![CDATA[இனி ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது.. மதுபான மொத்த விற்பனைக்கு தடை.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/puducherry/liquor-wholesale-banned-in-puducherry-evwhn8a</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/puducherry/liquor-wholesale-banned-in-puducherry-evwhn8a</guid>
            <pubDate>Sun, 05 Apr 2026 11:56:58 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Liquor Sales: புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களை கவர மதுபானம் மொத்தமாக விற்கப்படுவதாக வந்த புகார்களை அடுத்து, மொத்த விற்பனைக்கு கலால்துறை தடை விதித்துள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j7z6rt1jmdg35fytnzf4rpsz,imgname-tasmac-3.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Liquor Sales: புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களை கவர மதுபானம் மொத்தமாக விற்கப்படுவதாக வந்த புகார்களை அடுத்து, மொத்த விற்பனைக்கு கலால்துறை தடை விதித்துள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் வரும் 9ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மதுபானத்தை மொத்தமாக வாங்கி பலர் சட்டவிரோமாக விற்கப்படுவதாக புகார்கள் வந்தன. இதன் காரணமாக மதுபான மொத்த விற்பனைக்கு தடை விதித்துள்ளதோடு, விதிமீறலில் ஈடுபடும் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இது தொடர்பாக கலால்துறை துணை ஆணையர் மாத்யூ பிரான்சிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்: புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள பல மதுபானக் கடைகள் மற்றும் மதுபான விடுதிகள் விற்பனையின் போது முறையான ரசீதுகளை வழங்குவதில்லை தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இது கலால்துறையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதனையடுத்து மதுபானம் வழங்கும் உரிமம் பெற்ற அனைத்து மதுபானக் கடைகள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களின் அனைத்து உரிமதாரர்களுக்கும், வாங்கப்பட்ட அளவைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு விற்பனைக்கும் முறையான ரசீதை கொடுக்க வேண்டும். அதேபோல் புதுச்சேரி கலால் வரிச் சட்டங்கள் மற்றும் விதிகள் 1970-ஐ மீறி, சில உரிமதாரர்கள்/குத்தகைதாரர்களால் மதுபானம் மொத்தமாக விற்பனை செய்யப்படுவதாக, கலால்துறைக்கு புகார்கள் வந்துள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒவ்வொரு கொள்முதலுக்கும் ரசீது வழங்காதது, மொத்த விற்பனையை மறைப்பதைக் காட்டுவதோடு, அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி மதுபானம் விற்பனை செய்வதற்கு உரிமதாரர் சாக்குப்போக்கு சொல்லவும் வழிவகுக்கிறது. மேலும், ரசீதுகள் இல்லாமல் விற்கப்படும் எந்தவொரு மதுபான விற்பனையும் (அளவைப் பொருட்படுத்தாமல்), புதுச்சேரி சட்டமன்றப் பொதுத் தேர்தல்-2026-ல் ஈடுபட்டுள்ள நபர்கள், வாக்காளர்களைத் தூண்டுவதற்காக மதுபானத்தைக் குவித்து வைக்க உரிமதாரருக்கு மறைமுகமாக வழிவகுக்கும் என்று இப்போது கருதப்படுகிறது. அதன்படி, செல்லுபடியாகும் ரசீதுகள் இல்லாத அனைத்து விற்பனைகளும் மொத்த விற்பனையாகக் கருதப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எனவே, புதுச்சேரி மண்டலத்தின் அனைத்து மதுபான உரிமதாரர்கள் / குத்தகைதாரர்களும், புதுச்சேரி கலால் விதிகள் 1970-இன் விதி 22-இல் பரிந்துரைக்கப்பட்டுள்ளபடி, முறையான ரசீதுகளுடன் மற்றும் அனுமதிக்கப்பட்ட விற்பனை அளவிற்குள் மதுபானங்களை விற்பனை செய்யுமாறு இதன்மூலம் அறிவுறுத்தப்படுகிறார்கள். பரிந்துரைக்கப்பட்ட வரம்பிற்கு மேல் மதுபானம் விற்பனை செய்வது கண்டிப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான எந்தவொரு குறைபாடும் மிகவும் கடுமையாகக் கருதப்படும் மற்றும் புதுச்சேரி கலால் சட்டம் 1970 இன் பிரிவு 28(1)(e) இன் படி உரிமங்கள் இடைநீக்கம் செய்யப்படும் அல்லது ரத்து செய்யப்படும் என எச்சரித்துள்ளார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>puducherry</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/puducherry/liquor-wholesale-banned-in-puducherry-evwhn8a"/>
        </item>
        <item>
            <title><![CDATA[என்ன ஒரு தைரியம்! கடலுக்குள்ள 20 அடி ஆழத்துல பரதநாட்டியம் ஆடிய புதுச்சேரி சுட்டி!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/puducherry/stop-dumping-plastic-puducherry-student-performs-bharatanatyam-20-ft-underwater-articleshow-flkyqpq</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/puducherry/stop-dumping-plastic-puducherry-student-performs-bharatanatyam-20-ft-underwater-articleshow-flkyqpq</guid>
            <pubDate>Tue, 23 Dec 2025 15:38:55 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;புதுச்சேரியைச் சேர்ந்த தாரகை ஆராதனா என்ற சிறுமி, கடல் தூய்மை மற்றும் பிளாஸ்டிக் கழிவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஆழ்கடலில் பரதநாட்டியம் ஆடி உலகை வியக்க வைத்துள்ளார். 20 அடி ஆழத்தில் நிகழ்த்தப்பட்ட இந்த சாதனை பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kd5ansmymnze571apt4bq5kx,imgname-tharagai-arathana-1766484272798.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும், குறிப்பாக கடல் தூய்மையிலும் புதுச்சேரியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் ஆழ்கடலுக்குள் நடனமாடி உலகத்தையே வியக்க வைத்துள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;சுற்றுச்சூழல் மாசு என்பது இந்தியா சந்திக்கும் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக, கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் கடல்வாழ் உயிரினங்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றன.இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த புதுச்சேரியைச் சேர்ந்த நடனக் கலைஞரும், நீச்சல் வீராங்கனையுமான தாரகை ஆராதனா (Tharagai Arathana) ஒரு புதுமையான முயற்சியை மேற்கொண்டுள்ளார்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;20 அடி ஆழத்தில் நடனம்&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், தாரகை ஆராதனா சுமார் 20 அடி ஆழமுள்ள ஆழ்கடலில் முழுமையான பரதநாட்டிய உடையில் காட்சியளிக்கிறார். ஆபரணங்கள் மற்றும் ஒப்பனையுடன் நிலப்பரப்பில் உள்ள மேடையில் ஆடுவது போலவே, கடலின் ஆழத்தில் மிக நேர்த்தியாக அவர் நடனமாடியுள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;ராமேஸ்வரம் அருகே வங்காள விரிகுடா கடல் பகுதியில் இந்த நடன நிகழ்ச்சி நடைபெற்றது. சர்வதேச நடன தினத்தை முன்னிட்டு இந்த விழிப்புணர்வு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சாய் பல்லவி நடித்த 'சியாம் சிங்கா ராய்' திரைப்படத்தின் 'பிரணவாலயா' (Pranavalaya) பாடலுக்கு அவர் நடனமாடினார்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;&quot; This little angel from Chennai, Thaaragai Aarathana, is just 11-14 years old yet India's youngest PADI-certified female junior open-water scuba diver!She started diving at the tender age of 5 and has already removed over 3,000 kg of plastic waste from the ocean with her father&hellip; pic.twitter.com/m2gLUYlZ55&lt;/p&gt;&lt;p&gt;&mdash; @Prabha -Mahapatra (@Shashi49020834) December 23, 2025&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;பிளாஸ்டிக் கழிவு விழிப்புணர்வு&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;தண்ணீருக்கு அடியில் இசையைக் கேட்க முடியாது என்றாலும், தாளம் தப்பாமல் அவர் ஆடியது பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இது குறித்து அவர் கூறுகையில், &quot;பிளாஸ்டிக் கழிவுகளால் கடல் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை உலகுக்கு உணர்த்தவே இந்த முயற்சியை மேற்கொண்டேன்,&quot; எனத் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;இந்த முயற்சியில் தாரகையுடன் அவரது சகோதரர் அஸ்வினும் இணைந்துள்ளார். மீனவ சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும், இளைஞர்களிடையே நடனத்தை ஊக்குவிப்பதோடு, கடல் மாசுபடுவதைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளனர்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;இணையவாசிகளின் பாராட்டு&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;இச்சிறுமிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. &quot;மறக்க முடியாத, கற்பனைக்கும் எட்டாத ஒரு செயல்,&quot; என ஒரு பயனர் பதிவிட்டுள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;&quot;வருங்கால சந்ததியினர் தங்கள் எதிர்காலத்தைக் காக்க இவ்வளவு துணிச்சலாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது,&quot; என மற்றொருவர் பாராட்டியுள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;இருப்பினும், இந்தியர்களிடையே பொது இடங்களில் குப்பை போடும் பழக்கம் மாறாத வரை இத்தகைய மாற்றங்கள் கடினம் என்ற சில விமர்சனக் கருத்துகளும் இணையத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;தாரகை ஆராதனா&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;11 வயதே ஆகும் தாரகை, இந்தியாவின் இளம் PADI சான்றளிக்கப்பட்ட ஸ்கூபா டைவர் (Scuba Diver) ஆவார். இவர் தனது தந்தையுடன் இணைந்து இதுவரை கடலில் இருந்து ஆயிரக்கணக்கான கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>puducherry</category>
            <dc:creator>SG Balan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/puducherry/stop-dumping-plastic-puducherry-student-performs-bharatanatyam-20-ft-underwater-articleshow-flkyqpq"/>
        </item>
        <item>
            <title><![CDATA[பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று திடீர் விடுமுறை அறிவிப்பு.. குஷியில் துள்ளிக்குதிக்கும் மாணவர்கள்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/puducherry/karaikal-school-college-sudden-holiday-announcement-today-g0gbztg</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/puducherry/karaikal-school-college-sudden-holiday-announcement-today-g0gbztg</guid>
            <pubDate>Mon, 19 Jan 2026 08:57:36 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;காரைக்காலில் நடைபெற்ற மலர் கண்காட்சி மற்றும் கார்னிவல் விழாவைத் தொடர்ந்து, மாணவர்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு இன்று ஒரு நாள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளுக்கு இது பொருந்தாது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j8xy1x7fgkznteyfp715t323,imgname-school-holiday.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;காரைக்காலில் நடைபெற்ற மலர் கண்காட்சி மற்றும் கார்னிவல் விழாவைத் தொடர்ந்து, மாணவர்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு இன்று ஒரு நாள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளுக்கு இது பொருந்தாது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகைக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த 14ம் தேதி அதாவது போகி பண்டிகை முதல் 18ம் தேதி வரை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதாவது மொத்தம் 5 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்தால் பள்ளி மாணவர்கள் முதல் ஆசிரியர் வரை குஷியில் இருந்து வந்தனர். இந்நிலையில் இன்று பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதாவது புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் காரைக்கால் பகுதியில் கடந்த 3 நாட்களாக மலர் கண்காட்சி மற்றும் கார்னிவல் விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவை உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்ககளை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கண்டு ரசித்தனர். நேற்று இறுதி நாள் கூட்டம் அலைமோதியது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதனால் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு செல்ல மாணவர்களுக்கு சிரமம் ஏற்படும் என்பதால் இன்று ஒரு நாள் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என நாஜிம் எம்எல்ஏ கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் விடுமுறை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதே நேரத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு தேர்வுகள் நடைபெறும் பட்சத்தில் இந்த விடுமுறை பொருந்தாது. மேலும் இந்த விடுமுறை ஈடுசெய்யும் விதமாக வேலை நாள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>puducherry</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/puducherry/karaikal-school-college-sudden-holiday-announcement-today-g0gbztg"/>
        </item>
        <item>
            <title><![CDATA[சனிக்கிழமை ஸ்கூல் இருக்கா? இல்லையா? பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/puducherry/puducherry-schools-tomorrow-working-day-hf24kga</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/puducherry/puducherry-schools-tomorrow-working-day-hf24kga</guid>
            <pubDate>Fri, 12 Dec 2025 09:27:37 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;டிட்வா புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக புதுச்சேரியில் நாளை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற அறிவிப்பு தமிழகத்திலும் வெளியாகலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01hb6h9qcs7nr9me48mpv39k09,imgname-school-leave-extended.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;டிட்வா புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக புதுச்சேரியில் நாளை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற அறிவிப்பு தமிழகத்திலும் வெளியாகலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் இலங்கையில் ருத்தரதாண்டவம் ஆடியது. பெரு மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி பொருள் சேதம், உயிர் சேதம் என இலங்கை நாட்டு மக்கள் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கி போட்டது. புயலால் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனையடுத்து இலங்கையில் இருந்து டிட்வா புயல் தமிழகம் மற்றும் புதுச்சேரியை நோக்கி நகர்ந்து வந்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி கனமழை வெளுத்து வாங்கியது. அதிலும் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை ஊத்தியது. இதன் காரணமாக குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது. மேலும் வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். தொடர் கனமழையை அடுத்து சென்னை, புதுச்சேரிகளுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக சனிக்கிழமைகளில் பள்ளிகளை இயக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி டிட்வா புயலால் புதுச்சேரியில் கடந்த வாரம் அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக நாளை பள்ளிகள் இயங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் வியாழக்கிழமை பாடவேளையை பின்பற்றி முழு நேரம் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் மழை விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக நாளை பள்ளிகள் செயல்படுவது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>puducherry</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/puducherry/puducherry-schools-tomorrow-working-day-hf24kga"/>
        </item>
        <item>
            <title><![CDATA[SIR பணிகள் ஓவர்.. புதுவையில் 85500 வாக்காளர்களின் பெயர்களை தூக்கி எறிந்த தேர்தல் ஆணையம்..]]></title>
            <link>https://tamil.asianetnews.com/puducherry/sir-work-in-puducherry-is-complete-names-of-85531-voters-have-been-deleted-articleshow-ps4cd76</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/puducherry/sir-work-in-puducherry-is-complete-names-of-85531-voters-have-been-deleted-articleshow-ps4cd76</guid>
            <pubDate>Tue, 16 Dec 2025 11:10:45 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;புதுச்சேரியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் காரணமாக உயிரிழந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் உட்பட மொத்தமாக 85531 நபர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதகாரி அறிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kcjt4k9cmzf3r8c8tn1pq8sr,imgname-untitled-design--100--1765862952236.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;புதுச்சேரி, தமிழகம், மேற்கு வங்கம் உட்பட நாட்டின் பல மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக வாக்காளர் சிறப்பு தீவி திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வாக்காளர்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் அண்மையில் பதிவேற்றம் செய்து முடிக்கப்பட்டது. இந்நிலையில் புதுச்சேரியில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் இன்று வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். முன்னதாக புதுவையில் 8,51,775 பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தன. இந்நிலையில் தற்போது இதில் 85531 பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;உயிரிழந்தவர்கள், நிரந்தரமாக வேறு பகுதிக்கு குடி பெயர்ந்தவர்கள், இரண்டு பகுதிகளில் வாக்குரிமை வைத்திருந்தவர்களின் பெயர்கள் இந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இது அம்மாநில மொத்த வாக்காளர் பட்டியலில் 10.04 சதவீதம் ஆகும். தற்போது அந்த மாநிலத்தில் 7.64 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாக தேர்தல் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத வாக்காளர்கள் தங்கள் ஆவணங்களை வருகின்ற ஜனவரி 15ம் தேதிக்குள் பதிவு செய்து தங்கள் வாக்குரிமையைத் தக்கவைத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>puducherry</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/puducherry/sir-work-in-puducherry-is-complete-names-of-85531-voters-have-been-deleted-articleshow-ps4cd76"/>
        </item>
        <item>
            <title><![CDATA[புதுச்சேரிக்கு எனது பாக்கெட்டில் இருந்து ரூ 100 கோடி செலவிட தயார்..! லாட்டரி மார்டின் மகன் போடும் பக்கா ஸ்கெட்ச்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/puducherry/rs-100-crore-from-my-pocket-for-development-charles-martin-puducherry-poll-pitch-articleshow-qsr0i85</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/puducherry/rs-100-crore-from-my-pocket-for-development-charles-martin-puducherry-poll-pitch-articleshow-qsr0i85</guid>
            <pubDate>Thu, 25 Dec 2025 15:12:18 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;2026 ஆம் ஆண்டு தேர்தலில் தாம் வெற்றி பெற்றால், புதுச்சேரியின் வளர்ச்சிக்காக ரூ.100 கோடி தமது சொந்த நிதியைச் செலவிடுவதாக லட்சிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் சார்லஸ் மார்ட்டின் உறுதியளித்தார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kdae1nch1d50f1sp3qebv3xb,imgname-whatsapp-image-2025-12-25-at-15.08.36-1766655579537.jpeg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;லட்சிய ஜனநாயகக் கட்சி (LJK) தலைவரும், TVKவின் ஆதவ் அர்ஜுனாவின் மைத்துனருமான சார்லஸ் மார்ட்டின், 2026 சட்டமன்றத் தேர்தலில் புதுச்சேரியில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், மாநிலத்தின் வளர்ச்சிக்காக தனது சொந்தப் பணத்தில் ரூ.100 கோடியைச் செலவிடுவதாக உறுதி அளித்தார்.&lt;/p&gt;&lt;p&gt;புதுச்சேரியில் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், சார்லஸ் மார்ட்டின் ஆறு முக்கிய நலத்திட்டங்கள் உட்பட பெண்கள் அதிகாரமளிப்பதில் வலுவான கவனம் செலுத்தி, ஏராளமான தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார்.&lt;/p&gt;&lt;p&gt;&quot;பெண்களுக்கு நேரடி ஆதரவு, அரசாங்கம் ரூ.2,000 வழங்கப்படும் என்று கூறியிருந்தாலும், கடந்த மூன்று மாதங்களாக ஒரு ரூபாய் கூட விநியோகிக்கப்படவில்லை என்று கேள்விப்படுகிறேன். எனவே இந்தத் தொகையை மாதந்தோறும் ரூ.4,000 ஆகவும், ஆண்டுக்கு ரூ.50,000 ஆகவும் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளேன்,&quot; என்று சார்லஸ் மார்ட்டின் கூறினார்.&lt;/p&gt;&lt;p&gt;வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு திருமணத்திற்கு ரூ.1 லட்சம் மற்றும் 10 கிராம் தங்கம் வழங்கப்படும் என்றும், ஆறு எல்பிஜி கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். &quot;கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.35,000 மற்றும் குழந்தைகளின் சரியான வளர்ச்சிக்காக ஒரு சுகாதாரப் பெட்டி வழங்கப்படும்&quot; என்று அவர் கூறினார், ஆதரவற்ற மற்றும் திருமணமாகாத பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.60,000 வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.&lt;/p&gt;&lt;p&gt;பெண்கள் அதிகாரமளிப்பதில் கல்வியின் பங்கை வலியுறுத்திய சார்லஸ் மார்ட்டின், &ldquo;தாய்மார்களுக்கான கல்வி நிதி. ஒரு குழந்தைக்கு, கல்வி மிகவும் முக்கியமானது, பெற்றோர்கள் கடன் வாங்கி தனியார் பள்ளிகளுக்கு அனுப்புவதன் மூலமும் கூட நிறைய பணம் செலவிடுகிறார்கள். அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவேன் என்றும், உங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளுக்கு அனுப்பினால், தாய்மார்களுக்கு ரூ.20,000 வழங்கப்படும் என்றும் நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்&rdquo; என்றார்.&lt;/p&gt;&lt;p&gt;மேலும், பெண்களுக்கான அரசியல் மற்றும் நிர்வாக பிரதிநிதித்துவத்தையும் அவர் அறிவித்தார். &ldquo;எங்களிடம் 30 தொகுதிகள் மற்றும் மூன்று நியமன தொகுதிகள் உள்ளன, புதுச்சேரியில் ஒரே ஒரு பெண் மக்கள் பிரதிநிதி மட்டுமே உள்ளார். எங்கள் கட்சியில், பெண்களுக்கு ஆறு இடங்கள் ஒதுக்கப்படும், அதே நேரத்தில் உள்ளாட்சித் தேர்தல்களில் பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கப்படும், அரசு வேலைகளில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்படும்,&rdquo; என்று அவர் கூறினார்.&lt;/p&gt;&lt;p&gt;இந்த திட்டங்களை அடையக்கூடியவை என்று கூறிய சார்லஸ் மார்ட்டின், &ldquo;நிச்சயமாக நிறைவேற்றக்கூடிய ஆறு முக்கியமான திட்டங்களை நான் அறிவிக்கிறேன். என் சகோதரி, மகள் அல்லது மருமகளுக்கு ஒரு சகோதரர், தந்தை மற்றும் மாமாவாக நான் என்ன செய்வேன் என்பதை மனதில் கொண்டு அவற்றை வரைந்துள்ளேன். நிச்சயமாக நீங்கள் எங்களை ஆட்சிக்குக் கொண்டு வருவீர்கள், நாங்கள் திட்டங்களை நிறைவேற்றுவோம்.&rdquo;&lt;/p&gt;&lt;p&gt;சார்லஸ் மார்ட்டின் கூற்றுப்படி, புதுச்சேரியில் 12.5 லட்சம் மக்கள் தொகை உள்ளது, இதில் 50.9 சதவீதம் பெண்கள் உள்ளனர். இந்த வாக்குறுதிகளை செயல்படுத்துவதற்கு ஆண்டுதோறும் குறைந்தபட்சம் ரூ.1,500 கோடி செலவாகும் என்று அவர் கூறினார், இது &ldquo;நிச்சயமாக அடையக்கூடியது&rdquo; என்று அவர் கூறினார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>puducherry</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/puducherry/rs-100-crore-from-my-pocket-for-development-charles-martin-puducherry-poll-pitch-articleshow-qsr0i85"/>
        </item>
        <item>
            <title><![CDATA[மகளிர் உதவித்தொகை 150% உயர்வு.. இனி ரூ.1000 இல்ல ரூ.2500.. பிப்ரவரி முதல் வழங்க முதல்வர் உத்தரவு]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/puducherry-chief-minister-orders-increase-in-womens-assistance-amount-to-rs-2500-roo7c49</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/puducherry-chief-minister-orders-increase-in-womens-assistance-amount-to-rs-2500-roo7c49</guid>
            <pubDate>Tue, 20 Jan 2026 07:30:16 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்படும் மகளிர் உதவித் தொகையானது வருகின்ற பிப்ரவரி மாதம் முதல் ரூ.1000க்கு பதிலாக ரூ.2500ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k05zfwdj797bj29j3edm4xqy,imgname-whatsapp-image-2025-07-15-at-08.12.45-1752547455410.jpeg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்படும் மகளிர் உதவித் தொகையானது வருகின்ற பிப்ரவரி மாதம் முதல் ரூ.1000க்கு பதிலாக ரூ.2500ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;புதுச்சேரி மாநிலம் மாஹேவில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில் ரூ.12 கோடியே 75 லட்சம் செலவில் 50 படுக்கைகள் கொண்ட 4 அடுக்கு மாடி கொண்ட உள் நோயாளிகள் பிரிவு கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா திங்கள் கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டோர் காணொலி வாயிலாகக் கலந்து கொண்டனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விழாவில் பேசிய முதல்வர் ரங்கசாமி, &ldquo;தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பொறுப்பேற்றது முதல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல நலத்திட்டங்கள் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்படும் மகளிர் உதவித் தொகை, முதியோர் உதவித் தொகை உள்ளிட்டவற்றை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதன்படி குடும்ப தலைவிகளுக்கான மகளிர் உதவித் தொகையானது 150 சதவீதம் உயர்த்தப்பட்டு ரூ.1000க்கு பதிலாக ரூ.2500 வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே போன்று முதியோர் உதவித் தொகையும் ரூ.500 உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் வருகின்ற பிப்ரவரி 7ம் தேதி முதல் கிடைக்கும் வகையில் அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளதால் இல்லத்தரசிகள், முதியோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>puducherry</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/puducherry-chief-minister-orders-increase-in-womens-assistance-amount-to-rs-2500-roo7c49"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ரேஷன் கடையில் கால்கடுக்க நிற்க வேண்டாம்.. வீடு தேடி வரும் ரூ.3,000.. சூப்பர் அறிவிப்பு!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/puducherry/puducherry-pongal-gift-2026-rs-3000-cash-to-bank-no-ration-queue-usz2ymo</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/puducherry/puducherry-pongal-gift-2026-rs-3000-cash-to-bank-no-ration-queue-usz2ymo</guid>
            <pubDate>Mon, 12 Jan 2026 21:09:21 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;மாநிலத்தில் உள்ள 3.40 லட்சம் ரேசன் அட்டைதாரர்களுக்கும் ரூ.3.000 பொங்கல் பரிசுடன் ரூ.750 மதிப்பு கொண்ட பொங்கல் பொருட்கள் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jfaa8xr2adhsaapgpat9rpzy,imgname-pongal-gift-3.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;மாநிலத்தில் உள்ள 3.40 லட்சம் ரேசன் அட்டைதாரர்களுக்கும் ரூ.3.000 பொங்கல் பரிசுடன் ரூ.750 மதிப்பு கொண்ட பொங்கல் பொருட்கள் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பொருட்களுடன் ரூ.3,000 பொங்கல் பரிசுத்தொகையையும் அறிவித்தது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தை போல் புதுச்சேரியிலும் ரூ.3,000 பொங்கல் பரிசு வழங்கப்படும் என அந்த மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதாவது புதுச்சேரியில் உள்ள 3.40 லட்சம் ரேசன் அட்டைதாரர்களுக்கும் ரூ.3.000 பொங்கல் பரிசுடன் ரூ.750 மதிப்பு கொண்ட பொங்கல் பொருட்கள் வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனாம் பகுதிகளில் வசிக்கும் 3.40 லட்சம் ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு கிடைக்கும். இதில் குறிப்பிடத்தக்க விஷயமாக தமிழகத்தை போல் ரூ.3,000 பணத்தை கையில் வழங்காமல் மக்களின் வங்கிக் கணக்கிலேயே பணம் செலுத்தப்படும் என புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதனால் ரேஷன் கடைகளில் கால்நடுக்க நின்று பணம் பெற தேவையில்லை. மக்களின் அக்கவுண்ட்வுக்கே பணம் வந்து விடும். அதே வேளையில் வங்கி விடுமுறை காரணமாக பொங்கல் பண்டிகை முடிந்த பிறகே ரூ.3,000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என புதுச்சேரி அரசு கூறியுள்ளது. புதுச்சேரி அரசு பொங்கல் பரிசு அறிவித்துள்ளதால் அந்த மாநில மக்கள் குஷியாகியுள்ளனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ரூ.4,000ல் இருந்து ரூ.3,000க்கு இறங்கிய ரங்கசாமி&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பொங்கல் பரிசு ரூ.4,000 வழங்கப்படும் என முதலில் தெரிவித்து இருந்தார். இதற்காக ஆளுநரிடம் ரூ.140 கோடி நிதி ஒதுக்க ஆளுநரிடம் அவர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், மாநிலத்தில் ஏற்கெனவே நிதிச்சுமை காரணமாக ஆளுநர் அதற்கு மறுத்து விட்டார். இதனால் வேறு வழியின்றி புதுச்சேரி அரசு ரூ.3,000 கொடுப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>puducherry</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/puducherry/puducherry-pongal-gift-2026-rs-3000-cash-to-bank-no-ration-queue-usz2ymo"/>
        </item>
        <item>
            <title><![CDATA[வாட்ஸ்அப்பில் வந்த வில்லங்கம்.. டிஜிட்டல் கைது செய்வதாக மிரட்டி ரூ.52 லட்சம் அபேஸ்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/puducherry/puducherry-woman-loses-rs-52-lakh-in-digital-arrest-scam-articleshow-wddf6fr</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/puducherry/puducherry-woman-loses-rs-52-lakh-in-digital-arrest-scam-articleshow-wddf6fr</guid>
            <pubDate>Sun, 14 Dec 2025 15:03:51 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;புதுச்சேரியில், டெல்லி போலீஸ் அதிகாரி எனக்கூறி 'டிஜிட்டல் கைது' செய்வதாக மிரட்டிய மர்மநபர், ஒரு பெண்ணிடம் இருந்து ₹52 லட்சத்தை ஆன்லைனில் மோசடி செய்துள்ளார். இந்த புதிய வகை மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01hf8w6y96x7bv21vrzy2bk0aw,imgname-fotojet---2023-11-15t122457.034.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;புதுச்சேரியில், தன்னை டெல்லி காவல்துறை அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்ட மர்மநபர் ஒருவர், 'டிஜிட்டல் கைது' செய்வதாக மிரட்டி, ஒரு பெண்ணிடம் இருந்து ஆன்லைன் வாயிலாக ₹52 லட்சம் மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;வாட்ஸ்-அப்பில் வந்த மிரட்டல்&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;புதுச்சேரி மாநிலம், வைத்திக்குப்பம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரின் வாட்ஸ்-அப் எண்ணுக்குச் சமீபத்தில் ஒரு வீடியோ அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஏற்றபோது, மறுமுனையில் பேசிய மர்மநபர் ஒருவர், தன்னை டெல்லியில் உள்ள ஒரு போலீஸ் அதிகாரி என்று கூறி அறிமுகப்படுத்திக் கொண்டார்.&lt;/p&gt;&lt;p&gt;அவர், அப்பெண்ணிடம், &quot;உங்களது செல்போன் எண் சட்டவிரோத செயல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, உங்களை டிஜிட்டல் கைது (Digital Arrest) செய்துள்ளோம்&quot; என்று மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். மேலும், &quot;உங்களது வங்கி கணக்கில் உள்ள பணம் சட்டவிரோதமாக சம்பாதிக்கப்பட்ட பணமா? எனச் சோதனை செய்ய வேண்டும். எனவே, உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணம் அனைத்தையும் உடனடியாக ஒரு குறிப்பிட்ட கணக்குக்கு அனுப்புங்கள்&quot; என்று கூறி வற்புறுத்தியுள்ளார்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;பயத்தில் ரூ.52 லட்சம் அனுப்பிய பெண்&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;போலீஸ் அதிகாரி என்ற மிரட்டல் மற்றும் 'கைது' என்ற வார்த்தையைக் கேட்டுப் பயந்துபோன அந்தப் பெண், வேறு வழியின்றி தனது வங்கிக் கணக்கில் இருந்த மொத்தம் ₹52 லட்சத்தை அந்த மர்மநபர் குறிப்பிட்டிருந்த கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;பணத்தை அனுப்பிய பிறகு, அந்த எண்ணுக்குத் திரும்பவும் தொடர்பு கொள்ள முயன்றபோது, அவரால் அந்த மர்மநபரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன்பிறகே, தான் ஆன்லைன் மோசடியில் ஏமாற்றப்பட்டதை அறிந்து அப்பெண் அதிர்ச்சியடைந்தார்.&lt;/p&gt;&lt;p&gt;உடனடியாக, மோசடிக்கு உள்ளான அப்பெண் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட சைபர் கிரைம் போலீசார், இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;&lt;strong&gt;&bull; அதிகாரிகள் என்ற பெயரில் மிரட்டினால்:&lt;/strong&gt; எந்த ஒரு உண்மையான போலீஸ் அதிகாரியும், உங்களைப் பணத்தை அனுப்பும்படி மிரட்டவோ அல்லது உங்கள் கணக்கு விவரங்களைக் கேட்கவோ மாட்டார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&bull; 'டிஜிட்டல் கைது' (Digital Arrest): &lt;/strong&gt;இது சைபர் குற்றவாளிகள் பயன்படுத்தும் ஒரு புதிய மோசடி தந்திரம். இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&bull; சந்தேகம் வந்தால்:&lt;/strong&gt; இது போன்ற அழைப்புகள் வந்தால் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்திலோ அல்லது சைபர் கிரைம் பிரிவிலோ தகவல் தெரிவிக்கவும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>puducherry</category>
            <dc:creator>SG Balan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/puducherry/puducherry-woman-loses-rs-52-lakh-in-digital-arrest-scam-articleshow-wddf6fr"/>
        </item>
        <item>
            <title><![CDATA[போட்ரா வெடிய.. இனி 6ம் வகுப்பு முதல் இலவச லேப்டாப்..! முதல்வர் அதிரடி அறிவிப்பு]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/chief-minister-announces-steps-to-provide-free-laptops-to-6th-grade-students-y1rql5k</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/chief-minister-announces-steps-to-provide-free-laptops-to-6th-grade-students-y1rql5k</guid>
            <pubDate>Mon, 16 Feb 2026 09:47:38 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;6ம் வகுப்பு முதலே பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பால் அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01khja2wex6cmkj281ss883nsf,imgname-untitled-design--36--1771214827997.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;6ம் வகுப்பு முதலே பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பால் அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் 11, 12ம் வகுப்பு, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது. வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப பணிகள் காரணமாக 6ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கே இலவச லேப்டாப் வழங்கவேண்டுமென கோரிக்கை எழுந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த கோரிக்கைக்கு முதல்வர் பச்சைக் கொடியும் காட்டி உள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அண்மையில் புதுவையில் கல்வித்துறை சார்பில் 11, 12ம் வகுப்பு படிக்கும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டது. இந்த விழாவில் முதல்வர் ரங்கசாமி, துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய முதல்வர் ரங்கசாமி, &ldquo;நாட்டில் பள்ளிக்கல்வித் துறை மிகவும் முக்கியமானது. இது சிறப்பாக இருக்க ஆசிரியர்களின் பங்கு இன்றியமையாதது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பள்ளிக்கல்வித்துறையை சிறப்பானதாக மாற்ற காலி பணியிடங்கள் அனைத்தையும் அரசு விரைந்து நிரப்பி வருகிறது. ஏழை மாணவர்களும் மருத்துவக் கல்லூரியில் படிக்க முடியுமென்ற நிலையை அரசு உருவாக்கி உள்ளது. அதற்காக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.&lt;/p&gt;&lt;p&gt;இந்த கல்வியாண்டு புதுவையில் 37 பேர் மருத்துவ கல்லூரியில் கல்வி பயின்று வருகின்றனர். மேலும் பொறியியல், செவிலியர் கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளிலும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு கல்லூரியில் பட்டப்படிப்பை சிரமமின்றி முடிக்கும் வாய்ப்பை உருவாக்கி உள்ளோம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மாணவர்கள் புதிய தொழில்நுட்பம் மூலம் அனைத்தையும் வேகமாக தெரிந்து கொள்ளும் வகையில் 6ம் வகுப்பில் இருந்தே இலவசமாக லேப்டாப் கொடுத்தால் மாணவர்களுக்கு வசதியாக இருக்குமென கருத்து தெரிவித்தனர். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக அரசுப்பள்ளிகளில் 6ம் வகுப்பில் இருந்தே மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்&rdquo; என்று தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>puducherry</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/chief-minister-announces-steps-to-provide-free-laptops-to-6th-grade-students-y1rql5k"/>
        </item>
        <item>
            <title><![CDATA[விடுமுறை தொடர்பான முக்கிய அறிவிப்பு ... குஷியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள்..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/puducherry/karaikal-kandhuri-vizhla-festival-today-local-holiday-yn00kno</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/puducherry/karaikal-kandhuri-vizhla-festival-today-local-holiday-yn00kno</guid>
            <pubDate>Thu, 29 Jan 2026 07:59:06 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Holiday: காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு, இன்று அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தேர்வுகள் திட்டமிட்டப்படி நடைபெறும்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j4bd8st0eb6xf9tqxq5nr9v6,imgname-school-holiday.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Holiday: காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு, இன்று அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தேர்வுகள் திட்டமிட்டப்படி நடைபெறும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கோவில் திருவிழாக்கள், கும்பாபிஷேகம், மசூதி, தேவாலயங்களில் மற்றும் தியாகிகளின் நினைவு தினம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா ஷரீஃப் கந்தூரி விழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கி நடைபெற உள்ளது. இதில், காரைக்கால் மட்டுமன்றி, தமிழகத்தில் நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். பக்தர்களின் வசதி மற்றும் போக்குவரத்து நெரிசலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதுதொடர்பாக காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: காரைக்கால் பிரசித்தி பெற்ற மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா ஷரீஃப் கந்தூரி விழாவை முன்னிட்டு இன்று அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள்/கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பள்ளிகளில் செய்முறைத் தேர்வுகள் முன்பருவத் தேர்வுகள் இருப்பின் திட்டமிட்டப்படி அவை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தேர்வு உள்ள மாணவர்கள் மட்டும் உரிய நேரத்தில் கல்வி நிறுவனங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக பிப்ரவரி 7ம் தேதி சனிக்கிழமை அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>puducherry</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/puducherry/karaikal-kandhuri-vizhla-festival-today-local-holiday-yn00kno"/>
        </item>
    </channel>
</rss>
