<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes"?>
<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Mon, 13 Jul 2026 11:05:30 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss/politics" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு முக்கிய அரசு பதவி! விஜய் முடிவின் பின்னணி இதுதான்! பரபரப்பு தகவல்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/why-cm-vijay-appointed-janayagan-producer-venkat-narayana-as-tamil-nadu-delhi-representative-0n14qbe</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/why-cm-vijay-appointed-janayagan-producer-venkat-narayana-as-tamil-nadu-delhi-representative-0n14qbe</guid>
            <pubDate>Fri, 26 Jun 2026 21:22:22 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Janayagan Producer Venkat Narayana: தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன் தயாரிப்பாளர் வெங்கட நாராயணாவை முதல்வர் விஜய் நியமித்துள்ளார். கர்நாடகாவை சேர்ந்த இவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kw29rnwg1t68t1jg87czj4cb,imgname-janayagan-producer-venkat-narayana-1782488782736.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Janayagan Producer Venkat Narayana: தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன் தயாரிப்பாளர் வெங்கட நாராயணாவை முதல்வர் விஜய் நியமித்துள்ளார். கர்நாடகாவை சேர்ந்த இவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழக முதல்வரும், தவெக தலைவருமான விஜய், டெல்லியில் தமிழ்நாடு அரசின் நலன் சார்ந்த பணிகளைக் கவனிக்க, 'ஜனநாயகன்' திரைப்படத்தின் தயாரிப்பாளரான வெங்கட நாராயணாவை (Venkat K. Narayana) சிறப்புப் பிரதிநிதியாக நியமித்து உத்தரவிட்டுள்ளார். அதாவது அவருக்கு தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எம். சாய் குமார் இது தொடர்பான அரசாணையை வெளியிட்டார். இந்த நியமனம், வெங்கட நாராயணா பொறுப்பேற்கும் தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;யார் இந்த வெங்கட நாராயணா?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;டெல்லியில் தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்வதே இப்பதவியின் முதன்மை நோக்கமாகும். கர்நாடகாவை சேர்ந்த வெங்கட நாராயணா பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் புகழ்பெற்ற 'கே.வி.என் புரோடக்ஷன்ஸ்' (KVN Productions) நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவாகி சென்சார் பிரச்சனை காரணமாக இன்னும் திரைக்கு வராத 'ஜனநாயகன்' திரைப்படத்தைத் தயாரித்ததன் மூலம், அரசியல் மற்றும் திரைத்துறை வட்டாரங்களில் இவர் பெரிதும் கவனிக்கப்படும் நபராக மாறினார் வெங்கட நாராயணா.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தவெக ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காக ஆளுநர் மாளிகைக்குச் சென்ற விஜய் தலைமையிலான குழுவில் வெங்கட நாராயணா முக்கியப் பங்கு வகித்தார். முதலமைச்சரின் நம்பிக்கைக்குரிய வட்டாரத்தில் ஒருவராகக் கருதப்படும் இவர், தற்போது இந்த அரசுப் பதவியின் மூலம் டெல்லியில் தமிழகத்தின் குரலாகச் செயல்பட உள்ளார். தவெக ஆட்சி அமைக்க உரிமை கோரியது முதல், டெல்லி அதிகார மட்டம் வரையிலான மிக முக்கிய அரசியல் நகர்வுகளில் விஜய்யின் நம்பிக்கைக்குரிய 'நிழல்' மனிதராக வெங்கட நாராயணா செயல்பட்டு வந்துள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதுதான் காரணமா?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;கர்நாடகாவில் மிகப்பெரிய தொழில் பின்னணி கொண்ட இவர், டெல்லி அரசியல் வட்டாரங்களிலும், மத்திய அமைச்சகங்களிலும் உள்ள முக்கியப் புள்ளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர் என்று கூறப்படுகிறது. டெல்லியில் தமிழக அரசின் உரிமைகளை நிலைநாட்டவும், மத்திய அரசுடனான இணக்கமான உறவை வளர்க்கவும் வெங்கட நாராயணாவின் இந்த 'டெல்லி கனெக்ஷன்' மற்றும் அவரது ராஜதந்திர அணுகுமுறை விஜய்க்குப் பெரிதும் உதவும் என்ற கணக்கிலேயே இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;டெல்லிக்கும், தமிழக அரசுக்கும் பாலமாக விளங்கும் தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி பொறுப்பு வெங்கட நாராயணாவுக்கு வழங்கப்பட்டதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வெங்கட நாராயணாவின் பூர்வீகம் மற்றும் அவரது கே.வி.என் புரோடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தலைமையகம் பெங்களூரு ஆகும். தமிழக அரசின் சார்பாக டெல்லியில் பிரதிநிதித்துவம் செய்ய தமிழ்நாட்டைச் சேர்ந்த, மாநிலத்தின் அரசியல் மற்றும் நிர்வாகச் சூழலை நன்கு அறிந்த ஒருவரை நியமித்திருக்கலாம் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;தமிழ்நாட்டில் ஆளே இல்லையா?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;தமிழ்நாட்டிற்குள் தகுதியான நபர்கள் இல்லையா? கர்நாடகாவை சேர்ந்தவரை ஏன் இந்த பொறுப்பில் நியமிக்க வேண்டும்? என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் முன்வைக்கின்றன. டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்பது வெறும் பெயரளவு பதவி அல்ல. மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவது, பல்வேறு அமைச்சகங்களில் உள்ள தமிழகம் சார்ந்த கோப்புகளை நகர்த்துவது போன்றவற்றுக்கு அரசியல் முதிர்ச்சியும், டெல்லி அதிகாரத்துவத்தைக் (Bureaucracy) கையாண்ட அனுபவமும் தேவை. வெங்கட நாராயணா கல்வி ரீதியாகப் பல தகுதிகள் (CA, CS, LLB) பெற்றிருந்தாலும், அரசு நிர்வாகத்திலோ அல்லது அரசியல் ராஜதந்திரத்திலோ அவருக்கு நேரடி அனுபவம் இல்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மிக முக்கியமாக தமிழ்நாட்டுக்கும், கர்நாடகாவுக்கும் இடையே இப்போது மேகதாது பிரச்சனை நிலவி வருகிறது. கர்நாடகா மேகதாது அணை கட்டக்கூடாது என தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. இதில் கர்நாடகாவை சேர்ந்த வெங்கட நாராயணாவின் நிலைப்பாடு என்ன? என்பதே எதிர்க்கட்சிகள், அரசியல் நிபுணர்களின் கேள்வியாக உள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>politics</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/why-cm-vijay-appointed-janayagan-producer-venkat-narayana-as-tamil-nadu-delhi-representative-0n14qbe"/>
        </item>
        <item>
            <title><![CDATA[C.Vijayabaskar Join TVK: டெல்டாவே காலியாகிறது.! எடப்பாடிக்கு சவால்விட்ட விஜயபாஸ்கர்.! மாமல்லபுரத்தில் மாஸ் காட்டிய  ஜெயலலிதா விசுவாசி.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/politics/c-vijayabaskar-join-tvk-delta-politics-heats-up-as-eps-faces-fresh-challenge-after-mamallapuram-event-3qumbnt</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/politics/c-vijayabaskar-join-tvk-delta-politics-heats-up-as-eps-faces-fresh-challenge-after-mamallapuram-event-3qumbnt</guid>
            <pubDate>Thu, 02 Jul 2026 10:29:13 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;அதிமுகவின் முக்கிய தூணாக விளங்கிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ளார். மாமல்லபுரத்தில் மாபெரும் கூட்டத்தைக் கூட்டி, எடப்பாடி பழனிசாமிக்கு நேரடியாக சவால் விடுத்துள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwgj09w27qv7v1n09peq3xw9,imgname-chatgpt-image-jul-2--2026--10-07-39-am--1--1782967183233.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;அதிமுகவின் முக்கிய தூணாக விளங்கிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ளார். மாமல்லபுரத்தில் மாபெரும் கூட்டத்தைக் கூட்டி, எடப்பாடி பழனிசாமிக்கு நேரடியாக சவால் விடுத்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழக அரசியல் களம் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அதிர்வை இன்று சந்தித்துள்ளது. மறைந்த முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியும், அதிமுகவின் அசைக்க முடியாத தூணாகவும் விளங்கிய முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், இன்று (ஜூலை 2) நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) அதிகாரப்பூர்வமாக இணைந்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரடியாக அரசியல் சவால் விடுத்து, மாமல்லபுரத்தில் அலைகடலெனத் திரண்ட தொண்டர்கள் மத்தியில் சி.விஜயபாஸ்கர் நடத்திய இந்த மெகா அரசியல் ஷோ, கோட்டை வரை எதிரொலித்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் சி.விஜயபாஸ்கருக்கு இருக்கும் அசைக்க முடியாத மக்கள் செல்வாக்கை நிரூபிக்கும் விதமாக இன்றைய விழா அமைந்தது. அதிகாலை முதலே சுமார் 200 சொகுசுப் பேருந்துகள் மற்றும் ஆயிரக்கணக்கான கார்கள் அணிவகுக்க, சென்னை - மாமல்லபுரம் கிழக்குக் கடற்கரைச் சாலை (ECR) முற்றிலும் முடங்கியது.&lt;/p&gt;&lt;p&gt;ஜெயலலிதா காலத்து தீவிர விசுவாசிகள் பலரும் விஜயபாஸ்கரின் பின்னால் அணிவகுத்து வர, மாமல்லபுரம் முழுக்க தவெக மற்றும் விஜயபாஸ்கரின் ஆதரவாளர்களால் மக்கள் கடலாகக் காட்சியளித்தது. இவருடன் முன்னாள் அமைச்சர்கள் எம்.எஸ்.ஆனந்தன், &amp;nbsp;முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.கந்தன் ஆகியோரும் தவெக-வில் இணைந்து எடப்பாடி தரப்புக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கட்சியில் இணைந்த கையோடு செய்தியாளர்களைச் சந்தித்த சி.விஜயபாஸ்கர், அதிமுக தலைமைக்கு எதிராகத் தனது அரசியல் சீற்றத்தை வெளிப்படுத்தினார். அவர் பேசியதாவது. &ldquo;தலைமையில் இருக்கக்கூடிய ஒருவரின் (எடப்பாடி பழனிசாமி) தவறான, சுயநலமான முடிவின் காரணமாகத்தான், இன்று மாமல்லபுரத்தில் கடல்போல் மக்கள் திரண்டிருக்கிறார்கள். இந்த எழுச்சியைப் பார்த்தால் அதிமுகவில் இருந்து ஒட்டுமொத்த டெல்டாவே காலியாகும் நிலைமைதான் இப்போது இருந்துகொண்டிருக்கிறது. தமிழகத்தின் வளமான எதிர்காலத்திற்குப் புதிய திசையை உருவாக்கி வரும் தவெக தலைவர் விஜய் அவர்களின் தலைமையில் என்னை முழுமையாக இணைத்துக் கொள்கிறேன்!&rdquo; என்று எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு நேரடியாகவே சவால் விடுத்தார் விஜயபாஸ்கர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தனது அழைப்பை ஏற்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திரண்டு வந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்களைத் தனது பாணியில் கவனித்து அசத்தினார் விஜயபாஸ்கர். மாமல்லபுரத்தின் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வந்திருந்த அனைவருக்கும் மதிய உணவாக சுடச்சுட தடபுடல் பிரியாணி மற்றும் சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பசியாரிய தொண்டர்கள் &quot;தளபதி விஜய் வாழ்க!&quot;, &quot;அண்ணன் விஜயபாஸ்கர் வாழ்க!&quot; என முழக்கமிட்ட முழக்கம் மாமல்லபுரம் கடற்கரை முழுவதையும் அதிரச் செய்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய விசுவாசியாக வலம் வந்த சி.விஜயபாஸ்கர், தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விடுத்து, தனது ஒட்டுமொத்த பலத்தோடு தவெக-வில் ஐக்கியமாகியிருப்பது திராவிட அரசியல் கட்சிகளுக்கு விழுந்த பலத்த அடியாகப் பார்க்கப்படுகிறது. 200 பேருந்துகள், ஆயிரக்கணக்கான கார்கள், சுடச்சுட உணவு என மாமல்லபுரத்தையே ஸ்தம்பிக்க வைத்த இந்த 'மாஸ்' அரசியல் நகர்வு, 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத்தை ஒரு தவிர்க்க முடியாத இமாலய சக்தியாக மாற்றியுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>politics</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/politics/c-vijayabaskar-join-tvk-delta-politics-heats-up-as-eps-faces-fresh-challenge-after-mamallapuram-event-3qumbnt"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Govt Scheme: ரூ.4,000 அரசு மானியம் வேண்டுமா? இந்த ஆவணங்கள் உங்களிடம் இருந்தால் போதும்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/govt-scheme-want-rs4000-government-subsidy-these-documents-are-all-you-need-3x3xys1</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/govt-scheme-want-rs4000-government-subsidy-these-documents-are-all-you-need-3x3xys1</guid>
            <pubDate>Sat, 20 Jun 2026 11:52:30 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ஆதார் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் இருந்தால் தமிழக அரசு தரும் ரூ.4000 மானியத்தை பெறலாம். அதனை பெறுவது எப்படி? யார் யாருக்கு கிடைக்கும் என்பதை இந்த கட்டுரை விளக்குகிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kvht2yk07430xhfjckbbf66p,imgname-chatgpt-image-jun-20--2026--11-32-54-am--1--1781935471200.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஆதார் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் இருந்தால் தமிழக அரசு தரும் ரூ.4000 மானியத்தை பெறலாம். அதனை பெறுவது எப்படி? யார் யாருக்கு கிடைக்கும் என்பதை இந்த கட்டுரை விளக்குகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;காவிரி நீர்வரத்து குறைவு, மேட்டூர் அணை திறப்பில் ஏற்பட்ட தாமதம் போன்ற காரணங்களால் இந்தாண்டு குறுவை சாகுபடி குறித்து விவசாயிகள் கவலையில் உள்ளனர். இந்தச் சூழலில், நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு சிறப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. குறிப்பாக, தகுதியான விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.4,000 வரை மானியம் வழங்கப்படுவதால் பலருக்கும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்த உதவித் திட்டம் யாருக்கு? எந்தப் பகுதிகளில் அமல்படுத்தப்படுகிறது? என்னென்ன நிபந்தனைகள் உள்ளன? என்பதை விரிவாகப் பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குறுவை பருவத்தில் நெல் சாகுபடியை ஊக்குவித்து, விளைச்சல் குறையாமல் பாதுகாப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம். டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் நெல் சாகுபடி பரப்பை அதிகரிப்பதற்காக தமிழக அரசு பல்வேறு சலுகைகளுடன் சிறப்பு தொகுப்பை அறிவித்துள்ளது. இதில் விதைகள், இயந்திர நடவு, நுண்ணூட்டங்கள், உயிர் உரங்கள் உள்ளிட்ட பல ஆதரவுகள் இடம்பெற்றுள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குறுவை நெல் சாகுபடியில் ஈடுபடும் தகுதியான விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.4,000 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவி, சாகுபடிச் செலவைக் குறைத்து விவசாயிகள் தொடர்ந்து நெல் பயிரிட ஊக்கமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட வேளாண்மை அலுவலகத்தில் பதிவு செய்து, தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கும் விவசாயிகள் இந்த நன்மையைப் பெறலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரூ.4,000 மானியம் மட்டுமல்லாமல், குறுவை சாகுபடியை வெற்றிகரமாக மேற்கொள்ள பல்வேறு உதவிகளும் வழங்கப்படுகின்றன.&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;தரமான சான்றளிக்கப்பட்ட நெல் விதைகள்&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;இயந்திர நெல் நடவுக்கு ஊக்கத்தொகை&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;நேரடி விதைப்புக்கு ஆதரவு உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்டக் கலவைகள்&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;புதிய நெல் ரக விதை உற்பத்திக்கு ஊக்குவிப்பு&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு கூடுதல் ஆதரவு&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;இதன் மூலம் உற்பத்தி செலவு குறைந்து, விளைச்சல் அதிகரிக்கும் என அரசு எதிர்பார்க்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமானதால் காவிரி நீர்வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக வழக்கமான தேதியில் மேட்டூர் அணையை திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கால்வாய் நீரை மட்டுமே நம்பியிருந்த பல விவசாயிகள் பாதிக்கப்படக்கூடிய சூழல் உருவானது. இந்த இழப்பை ஓரளவு சமாளிக்கவும், நிலத்தடி நீரைப் பயன்படுத்தி சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கவும் இந்த சிறப்பு தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த உதவியைப் பெற விரும்பும் விவசாயிகள் தங்களது பகுதியில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையம் அல்லது வேளாண்மைத் துறை அலுவலகத்தை அணுகி,&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;நில விவரங்கள்&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;ஆதார் விவரங்கள்&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;பயிர் சாகுபடி தகவல்கள்&lt;/li&gt; &lt;li&gt;தேவையான பதிவுகள்&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;ஆகியவற்றை சமர்ப்பித்து திட்டத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மாவட்டத்திற்கு மாவட்டம் நடைமுறை மாறக்கூடும் என்பதால், உள்ளூர் வேளாண்மை அதிகாரிகளிடம் உறுதி செய்து விண்ணப்பிப்பது நல்லது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நீர்ப்பற்றாக்குறை காரணமாக குறுவை சாகுபடி சவாலாக மாறியுள்ள நிலையில், ஏக்கருக்கு ரூ.4,000 உதவியுடன் அறிவிக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு திட்டம் பல விவசாயிகளுக்கு முக்கிய ஆதரவாக அமையும். சாகுபடிச் செலவைக் குறைத்து, தரமான விதைகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த ஊக்குவிக்கும் இந்த திட்டத்தை தகுதியான விவசாயிகள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>politics</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/govt-scheme-want-rs4000-government-subsidy-these-documents-are-all-you-need-3x3xys1"/>
        </item>
        <item>
            <title><![CDATA[மகனுக்காக ராமதாஸ் கொடுத்த அசைவ விருந்து.! அப்பா மனக்காயத்திற்கு மருந்தான அன்புமணி கண்ணீர்.!  அய்யா குடும்பம் ஒன்று சேர இதுதான் காரணம்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/politics/anbumani-meets-ramados-emotional-reunion-grand-feast-tears-and-the-real-reason-behind-pmk-family-reunion-4r1qls9</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/politics/anbumani-meets-ramados-emotional-reunion-grand-feast-tears-and-the-real-reason-behind-pmk-family-reunion-4r1qls9</guid>
            <pubDate>Thu, 25 Jun 2026 10:51:08 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;அன்புமணியை கட்டியணைத்து உச்சிமுகர்ந்த ராமதாஸ், &amp;nbsp;உடல்நலன் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் தன் குடும்பத்துடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தாராம். பேரன் பேத்திகளுடன் விளையாடிய அவர் நீண்ட நாளுக்கு பிறகு சந்தோஷமாக இருந்தாராம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kvyk64ce6ehkke9b6gh00qtn,imgname-chatgpt-image-jun-25--2026--10-42-48-am--1--1782364443022.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;அன்புமணியை கட்டியணைத்து உச்சிமுகர்ந்த ராமதாஸ், &amp;nbsp;உடல்நலன் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் தன் குடும்பத்துடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தாராம். பேரன் பேத்திகளுடன் விளையாடிய அவர் நீண்ட நாளுக்கு பிறகு சந்தோஷமாக இருந்தாராம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழக அரசியலில் நீண்ட நாட்களாக பேசப்பட்டு வந்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையேயான கருத்து வேறுபாடு முடிவுக்கு வந்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள், அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்லாமல் PMK தொண்டர்களிடையிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. குடும்ப பாசமும், அரசியல் முதிர்ச்சியும் ஒன்றாக வெளிப்பட்ட இந்தச் சந்திப்பு, பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நீண்ட நாட்களாக நேரில் சந்திக்காமல் இருந்த தந்தை-மகன் இருவரும் தைலாபுரத்தில் சந்தித்த தருணம் மிகவும் உணர்ச்சிகரமாக அமைந்ததாக கூறப்படுகிறது. அன்புமணியை பார்த்தவுடன் டாக்டர் ராமதாஸ் எந்த தயக்கமும் இன்றி அவரை இறுக்கமாக அணைத்துக் கொண்டாராம். அந்த சில நிமிடங்களில் இருவரும் பேச முடியாமல் கண்ணீர் வடித்ததாகக் கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;அந்த காட்சியை பார்த்த குடும்ப உறுப்பினர்கள், வீட்டில் பணிபுரிபவர்கள் என அனைவரும் நெகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். அரசியல் கருத்து வேறுபாடுகளை விட குடும்ப பாசம் பெரியது என்பதை அந்த ஒரு தருணமே உணர்த்தியதாக கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கடந்த தேர்தலுக்குப் பிறகு ஏற்பட்ட மனவருத்தம் டாக்டர் ராமதாஸை பெரிதும் பாதித்ததாக நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன. அதே நேரத்தில், தந்தையை மீண்டும் சந்தித்து பழைய உறவை மீட்டெடுக்க வேண்டும் என்ற விருப்பம் அன்புமணிக்கும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;அந்த உணர்வை வெளிப்படுத்துவதற்காகவே, ராமதாஸ் &ndash; சரஸ்வதி தம்பதியரின் திருமண நாள் விழாவை சந்திப்புக்கான நாளாக அன்புமணி தேர்வு செய்ததாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஒன்றாகக் கொண்டாட முடியாத குடும்ப விழாவை, இந்த ஆண்டு மீண்டும் மகிழ்ச்சியாக மாற்ற வேண்டும் என்ற எண்ணமே இந்த முடிவுக்குக் காரணமாக இருந்ததாக சொல்லப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தச் சந்திப்பின் மற்றொரு நெகிழ்ச்சியான தருணம், புதிதாக பிறந்த பேரக்குழந்தையை டாக்டர் ராமதாஸ் முதல் முறையாக பார்த்ததுதான். அன்புமணியின் இரண்டாவது மகள் சங்கமித்ராவுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்திருந்தது. அந்தச் சிறிய குழந்தையை கையில் ஏந்தியபோது, ராமதாஸ் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;அன்புமணியின் மனைவி சௌம்யா மற்றும் குடும்பத்தினர் அனைவரும் ராமதாஸ் &ndash; சரஸ்வதி தம்பதியரிடம் ஆசீர்வாதம் பெற்றது, குடும்ப உறவுகள் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியிருப்பதை வெளிப்படுத்தியது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பல மாதங்களுக்குப் பிறகு குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்திய தருணமும் இந்தச் சந்திப்பின் சிறப்பாக அமைந்தது. சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி உள்ளிட்ட பல்வேறு அசைவ உணவுகள் தயாரிக்கப்பட்டு விருந்தளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;ஒரே மேசையில் அமர்ந்து சிரித்துப் பேசி உணவருந்திய குடும்பத்தினரை பார்த்தவர்கள், &quot;இனி பழைய பிளவு முழுமையாக மறைந்துவிட்டது&quot; என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தச் சந்திப்பு குடும்ப பாசத்துடன் மட்டுமல்லாமல் அரசியல் ஆலோசனைகளுக்கும் முக்கியத்துவம் பெற்றதாக கூறப்படுகிறது. சமீபத்திய தேர்தல் முடிவுகள், கட்சியின் எதிர்கால வளர்ச்சி, கிராமப்புறங்களில் கட்சியை வலுப்படுத்தும் திட்டங்கள், விவசாயிகள் பிரச்சினைகள், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நீண்ட நேரம் இருவரும் விவாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.&lt;/p&gt;&lt;p&gt;முன்னதாக தாம் கூறிய &quot;கிராமங்களுக்குச் செல்&quot; என்ற அறிவுரையை அன்புமணி செயல்படுத்திய விதம் குறித்து ராமதாஸ் பாராட்டியதாகவும், எதிர்காலத்தில் கட்சியை முன்னெடுத்து செல்லும் திறன் அன்புமணிக்கு இருப்பதாகவும் அவர் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உரையாடலின் போது அன்புமணி, &quot;இந்தக் கட்சி இன்று இந்த நிலைக்கு வந்ததற்கு முழு காரணமும் நீங்கள் தான். எங்களை விமர்சிக்கவும், வழிநடத்தவும் உங்களுக்கு முழு உரிமை இருக்கிறது&quot; என்று தந்தையிடம் உணர்ச்சிபூர்வமாக கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;அந்த வார்த்தைகள் டாக்டர் ராமதாஸை மேலும் நெகிழ்ச்சியடையச் செய்ததாகவும், குடும்ப பாசம் அரசியலை விட மேலானது என்பதை மீண்டும் இருவரும் உணர்ந்ததாகவும் கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தச் சந்திப்பு ஒரு குடும்ப மீளிணைவு மட்டுமல்ல, PMK அரசியலிலும் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. நீண்ட நாட்களாக காத்திருந்த தொண்டர்களுக்கு இந்த இணைவு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. தந்தை-மகன் இருவரும் மீண்டும் ஒரே பாதையில் பயணித்தால், கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் மேலும் வலுப்பெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குடும்ப பாசம் வென்ற இந்த தருணம், தமிழக அரசியலில் நீண்ட காலம் நினைவில் நிற்கும் உணர்ச்சிகரமான நிகழ்வாக அமைந்துள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>politics</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/politics/anbumani-meets-ramados-emotional-reunion-grand-feast-tears-and-the-real-reason-behind-pmk-family-reunion-4r1qls9"/>
        </item>
        <item>
            <title><![CDATA[TASMAC Issue: "மதுவிலக்கு இல்லையா? அப்படின்னா குறைந்தபட்சம் தரமான சரக்காவது கொடுங்க!" – விஜய் அரசுக்கு மக்கள் வைக்கும் 7 கோரிக்கைகள்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/no-prohibition-then-give-people-quality-liquor-why-cm-vijay-must-reform-tasmac-now-55gqyig</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/no-prohibition-then-give-people-quality-liquor-why-cm-vijay-must-reform-tasmac-now-55gqyig</guid>
            <pubDate>Wed, 24 Jun 2026 10:57:52 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமில்லாத பட்சத்தில், அப்படின்னா குறைந்தபட்சம் தரமான சரக்காவது கொடுங்க என குடிமகன்கள் கொந்தளிக்கின்றனர். இது தொடர்பாக விஜய் அரசுக்கு குடிமகன்கள் வைக்கும் 7 கோரிக்கைகளை விளக்குகிறது இந்த கட்டுரை.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kvw14qngwq8tjhct5shw70q5,imgname-chatgpt-image-jun-24--2026--10-35-45-am--1--1782278413998.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமில்லாத பட்சத்தில், அப்படின்னா குறைந்தபட்சம் தரமான சரக்காவது கொடுங்க என குடிமகன்கள் கொந்தளிக்கின்றனர். இது தொடர்பாக விஜய் அரசுக்கு குடிமகன்கள் வைக்கும் 7 கோரிக்கைகளை விளக்குகிறது இந்த கட்டுரை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழகத்தில் மதுவிலக்கு என்பது பல தசாப்தங்களாக அரசியல், சமூக மற்றும் பொருளாதார ரீதியாக விவாதிக்கப்படும் ஒரு விஷயம். தேர்தல் நேரங்களில் மதுவிலக்கு வாக்குறுதி பேசப்பட்டாலும், நடைமுறையில் அரசே மதுபான விற்பனையை நடத்தி வருகிறது. இந்த நிலையில், &quot;மதுவிலக்கு அமல்படுத்த முடியாவிட்டால், குறைந்தபட்சம் தரமான மதுபானமும், மனிதநேயமான சேவையும் வழங்க வேண்டாமா?&quot; என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்று பல டாஸ்மாக் கடைகளில் சுத்தமின்மை, நெரிசல், நீண்ட வரிசை, போதிய வசதிகள் இல்லாமை போன்ற குறைகள் குறித்து பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். சிலர் மதுபானங்களின் தரம் குறித்தும் சந்தேகங்களை முன்வைக்கின்றனர். அரசு சட்டப்பூர்வமாக ஒரு பொருளை விற்பனை செய்கிறது என்றால், அந்த சேவையும் தரமாக இருக்க வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பு.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மதுபான விற்பனையை தொடரும் சூழல் இருந்தால், உலகின் பல நாடுகளில் இருந்து தரமான, தரச்சான்று பெற்ற மதுபானங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்யலாம். அதற்கு அரசு அதிக வரி விதிக்கலாம். இதன் மூலம் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதோடு, தரமற்ற பொருட்கள் சந்தையில் பரவுவதையும் கட்டுப்படுத்த முடியும். தரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது, சட்டவிரோத கள்ளச்சாராய சந்தையையும் ஒரு அளவுக்கு குறைக்க உதவலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் உரிய அனுமதி மற்றும் கட்டுப்பாடுகளுடன் பாரம்பரிய கள் விற்பனை நடைமுறையில் உள்ளது. இதுபோன்ற முறையை தமிழகத்திலும் ஆய்வு செய்து, பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாடுகளுடன் அமல்படுத்துவது குறித்து விவாதிக்கலாம் என்று பலர் கூறுகின்றனர். இது பனை மற்றும் தென்னை விவசாயிகளுக்கு புதிய வருமான வாய்ப்பை உருவாக்கும். கிராமப்புற பொருளாதாரத்திற்கும் இது ஒரு ஊக்கமாக அமையலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்றைய சமூகத்தில் மது அருந்துவது என்பது பலருக்கு தனிப்பட்ட வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. அது சரியா, தவறா என்பது தனி விவாதம். ஆனால் அரசு சட்டப்பூர்வமாக விற்பனை செய்யும் நிலையில், வாடிக்கையாளர்களுக்கு அடிப்படை மரியாதை, சுத்தமான கடைகள், டிஜிட்டல் கட்டண வசதி, பாதுகாப்பான சூழல், வெளிப்படையான விலை நிர்ணயம் போன்றவை உறுதி செய்யப்பட வேண்டும். சட்டப்பூர்வ வாடிக்கையாளர்களை குற்றவாளிகளைப் போல நடத்தும் நிலை மாற வேண்டும் என்பதே பலரின் கருத்து.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;புதிதாக பொறுப்பேற்றுள்ள விஜய் அரசுக்கு, மதுக் கொள்கையில் நீண்டகால மாற்றத்தை கொண்டு வர ஒரு வாய்ப்பு இருப்பதாக பலரும் கருதுகின்றனர். மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்துவது சாத்தியமில்லையெனில், முதலில் டாஸ்மாக் கடைகளின் தரத்தை முழுமையாக மேம்படுத்த வேண்டும். தரமற்ற மதுபானங்கள் குறித்து வரும் புகார்களை விசாரித்து, சுயாதீன தரப் பரிசோதனை அமைப்பை உருவாக்க வேண்டும். உலகத் தரத்தில் தயாரிக்கப்படும் மதுபானங்களை கட்டுப்பாடுகளுடன் விற்பனை செய்வது, டாஸ்மாக் கடைகளை நவீனப்படுத்துவது, பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் கடைகளை மறுசீரமைப்பது போன்ற நடவடிக்கைகளையும் பரிசீலிக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;அதேபோல், கேரளா போன்ற மாநிலங்களில் நடைமுறையில் உள்ள பாரம்பரிய கள் விற்பனை முறை, அதன் நன்மை-தீமைகள் ஆகியவற்றை ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்கலாம். அது விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் தருமா, பொதுச் சுகாதாரத்தில் என்ன தாக்கம் ஏற்படும் என்பதை ஆராய்ந்த பிறகே எந்த முடிவும் எடுக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அரசின் நோக்கம் வெறும் வருவாய் ஈட்டுவது மட்டுமாக இருக்கக் கூடாது. மதுப் பயன்பாட்டால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளை குறைக்க விழிப்புணர்வு பிரச்சாரங்கள், போதை மறுவாழ்வு மையங்கள், மனநல ஆலோசனை சேவைகள் ஆகியவற்றிலும் முதலீடு செய்ய வேண்டும். மதுக் கொள்கை என்பது நிதிக் கொள்கை மட்டுமல்ல; அது பொதுச் சுகாதாரம், விவசாயம், சமூக நலம் மற்றும் நிர்வாகத் தரம் ஆகிய அனைத்தையும் இணைக்கும் ஒரு முக்கியமான கொள்கை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மதுவிலக்கு இல்லையென்றால், குறைந்தபட்சம் தரமான மதுபானம், சுத்தமான விற்பனை மையங்கள், வாடிக்கையாளர்களுக்கு மரியாதை, விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகள், வெளிப்படையான நிர்வாகம் மற்றும் பொதுச் சுகாதாரத்தை பாதுகாக்கும் திட்டங்கள் ஆகியவை இணைந்து இருக்க வேண்டும். புதிய ஆட்சியாக உள்ள விஜய் அரசு, இந்த துறையில் வெறும் வருவாயை மட்டுமல்லாமல், நிர்வாகத் தரத்தையும் மக்கள் நலனையும் முன்னிலைப்படுத்தும் ஒரு புதிய மதுக் கொள்கையை உருவாக்கினால், அது தமிழகத்தின் நீண்டகால விவாதத்திற்கு ஒரு புதிய திசையை வழங்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>politics</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/no-prohibition-then-give-people-quality-liquor-why-cm-vijay-must-reform-tasmac-now-55gqyig"/>
        </item>
        <item>
            <title><![CDATA[EPS Meet Sasikala: சின்னம்மா ரிட்டன்ஸ்.! கட்சியை காப்பாற்ற சசிகலாவை சந்திகும் எடப்பாடி.?!  மீண்டும் துளிர்க்கும் "இரட்டை இலை"  என பறக்கும் மீம்ஸ்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/politics/eps-meets-sasikala-chinnamma-returns-buzz-is-edappadi-reaching-out-to-save-the-party-two-leaves-reunion-memes-go-viral-7pwriy3</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/politics/eps-meets-sasikala-chinnamma-returns-buzz-is-edappadi-reaching-out-to-save-the-party-two-leaves-reunion-memes-go-viral-7pwriy3</guid>
            <pubDate>Tue, 30 Jun 2026 11:58:12 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;எடப்பாடி பழனிசாமி கட்சியை காப்பாற்ற முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக தெரிகிறது. நிர்வாகிகள் பலரும் விலகி வரும் நிலையில், மீண்டும் இரட்டை இலையை &amp;nbsp;தளிர்க்க வைக்க அவர் போயஸ்கார்டன் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwbjz0s2e41arxdy9wfwb5pj,imgname-chatgpt-image-jun-30--2026--11-48-48-am--1--1782800417570.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;எடப்பாடி பழனிசாமி கட்சியை காப்பாற்ற முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக தெரிகிறது. நிர்வாகிகள் பலரும் விலகி வரும் நிலையில், மீண்டும் இரட்டை இலையை &amp;nbsp;தளிர்க்க வைக்க அவர் போயஸ்கார்டன் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழக அரசியல் களம் தற்போது வரலாறு காணாத திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. நடிகர் விஜய் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, திராவிட அரசியலின் அஸ்திவாரமாக விளங்கும் அ.தி.மு.க-வில் மிகப்பெரிய சலசலப்புகளும், உட்கட்சிப் பூசல்களும் வெடித்துள்ளன. குறிப்பாக, அ.தி.மு.க-வினர் சாரை சாரையாக தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருவது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க-விற்குப் பெரும் தலைவலியாக மாறியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;இந்த அசாதாரணச் சூழலில், சமூக வலைத்தளங்களில் &quot;சின்னம்மா ரிட்டன்ஸ்.!&quot; மற்றும் &quot;மீண்டும் துளிர்க்கும் இரட்டை இலை&quot; என்ற வாசகங்களுடன் வெளியாகும் மீம்ஸ்கள், வெறும் நகைச்சுவையாகக் கடந்து போக முடியாத அளவிற்குத் தீவிரமான அரசியல் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க-விற்கு ஆதரவளித்ததாகக் கூறி, அ.தி.மு.க-வின் மூத்த தலைவர்களான எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், பி. தங்கமணி மற்றும் நத்தம் விசுவநாதன் ஆகியோரின் கட்சிப் பதவிகளைப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் பறித்தார். இது கட்சிக்குள் பெரும் அதிருப்தி அலையை உருவாக்கியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;மறுபுறம், கட்சியின் முக்கியத் தூண்களாகக் கருதப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர் (விராலிமலை) மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் (கரூர்) ஆகியோர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் (MLA) பதவிகளையும், அ.தி.மு.க-வையும் விட்டு விலகியுள்ளது அ.தி.மு.க தலைமைக்கு விழுந்த பலத்த அடியாகும். த.வெ.க-வுடன் கூட்டணி அமைக்க எடப்பாடி பழனிசாமி மறுத்ததே தங்களது விலகலுக்குக் காரணம் என்று அவர்கள் வெளிப்படையாகக் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால், சட்டமன்றத்தில் அ.தி.மு.க-வின் பலம் 41 ஆகக் குறைந்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பதவி பறிக்கப்பட்ட நிலையிலும், அ.தி.மு.க-வின் கொங்கு மண்டல மற்றும் வட மாவட்டப் பலமாக விளங்கும் தங்கமணி, வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகத் தீவிரமான போர்க்கொடியைத் தூக்கியுள்ளனர்.&lt;/p&gt;&lt;p&gt;&quot;கட்சியைக் காப்பாற்ற வேண்டுமானால் பிரிந்தவர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும்; தேவைப்பட்டால் பொதுச்செயலாளர் பதவியில் மாற்றம் கொண்டு வர வேண்டும்&quot; என்ற ரீதியில் சி.வி. சண்முகம் உள்ளிட்ட தலைவர்கள் போர்க்குரல் எழுப்பி வருவதாகத் தெரிகிறது. ஒற்றைத் தலைமை என்ற பிடிவாதத்தால் கட்சி தொடர்ந்து பலவீனமடைந்து வருவதை உணர்ந்தே இந்த மூத்த தலைவர்கள் இத்தகைய முடிவுக்கு வந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். சி.வி. சண்முகம் மீண்டும் சின்னம்மா கோஷம் போட தொடங்கி இருப்பது அதிமுகவை சேர்ந்த பலரையும் யோசிக்க வைத்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த ஒட்டுமொத்த அரசியல் புயலுக்கு மத்தியில், கட்சியைத் தக்கவைக்கவும், தொண்டர்கள் த.வெ.க-விற்கு மாறுவதைத் தடுக்கவும் எடப்பாடி பழனிசாமி ஒரு அதிரடி முடிவை எடுக்க உள்ளதாகக் கூறப்படும் தகவல் தான் தற்போதைய ஹாட் டாபிக். தன்னை அரசியல் ரீதியாக உயர்த்திய 'சின்னம்மா' சசிகலாவை, எடப்பாடி பழனிசாமி நேரில் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;கட்சியைப் பலப்படுத்துதல்&lt;/strong&gt;: பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க-வின் வாக்கு வங்கிகளை ஒன்றிணைக்க இந்தச் சந்திப்பு அடித்தளமாக அமையலாம்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;தலைமை மாற்றம்&lt;/strong&gt;: சசிகலாவின் ஆசி மற்றும் மூத்த நிர்வாகிகளின் சம்மதத்துடன் கட்சியில் புதிய அதிகாரப் பகிர்வு குறித்து விவாதிக்கப்படலாம்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;img&gt;&lt;p&gt;அ.தி.மு.க-வின் இந்த உட்கட்சி மோதல்களும், அடுத்தடுத்து நடக்கும் எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமாவும் தமிழ்நாட்டில் விரைவில் 7 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் உருவாகக் காரணமாகியுள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;சமூக வலைத்தளங்களில் வலம் வரும் &quot;சின்னம்மா ரிட்டன்ஸ்&quot; மீம்ஸ்கள் நிஜமாகி, சசிகலாவும் எடப்பாடியும் கரம் கோர்த்தால் மட்டுமே சரிந்து வரும் அ.தி.மு.க-வைக் காப்பாற்ற முடியும் என்பதே தற்போதைய யதார்த்தம் என அதிமுக தொண்டர்கள் கூறி வருகின்னர். &quot;இரட்டை இலை&quot; மீண்டும் துளிர்க்குமா அல்லது த.வெ.க-வின் அலையில் அடித்துச் செல்லப்படுமா என்பதை இ.பி.எஸ்-சின் அடுத்தகட்ட நகர்வுகளே தீர்மானிக்கும்!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>politics</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/politics/eps-meets-sasikala-chinnamma-returns-buzz-is-edappadi-reaching-out-to-save-the-party-two-leaves-reunion-memes-go-viral-7pwriy3"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Magalir Urimai Thogai Scheme: ஜூலை 15 ஆம் தேதி வரும் நல்ல சேதி.! ரூ.2,500 யார் யாருக்கு கிடைக்கும் தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/magalir-urimai-thogai-scheme-big-update-on-july-15-who-will-get-rs-2500-7rnfgbe</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/magalir-urimai-thogai-scheme-big-update-on-july-15-who-will-get-rs-2500-7rnfgbe</guid>
            <pubDate>Thu, 09 Jul 2026 06:59:15 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், ரூ.2,500 தொகை எப்போது கிடைக்கும் தெரியுமா? அதனை தாமதமின்றி பெறுவது எப்படி என்பது ககுறித்து இக்கட்டுரை விரிவாக அடித்தட்டு மக்களுக்கு புரியும் வகையில் &amp;nbsp;விவரிக்கிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kx271qtj2tjvtnszjvnmx4dj,imgname-gemini-generated-image-kgz4grkgz4grkgz4--1--1783559675730.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், ரூ.2,500 தொகை எப்போது கிடைக்கும் தெரியுமா? அதனை தாமதமின்றி பெறுவது எப்படி என்பது ககுறித்து இக்கட்டுரை விரிவாக அடித்தட்டு மக்களுக்கு புரியும் வகையில் &amp;nbsp;விவரிக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை திட்டம், குடும்பங்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்தும் முக்கியமான நலத்திட்டங்களில் ஒன்றாக உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியான குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் ரூ.2,500 நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. ஜூலை மாதத்திற்கான தொகை ஜூலை 15-ஆம் தேதி வரவு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால், பயனாளிகள் பலரும் தங்களின் வங்கி கணக்கு மற்றும் விண்ணப்ப நிலையை ஆர்வத்துடன் கவனித்து வருகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம், குடும்பத்தின் அன்றாட செலவுகளை சமாளிக்க பெண்களுக்கு நிதி ஆதரவு வழங்குவதாகும். குடும்பச் செலவுகள், குழந்தைகளின் கல்வி, மருத்துவத் தேவைகள், அத்தியாவசிய பொருட்கள் வாங்குதல் போன்றவற்றிற்கு இந்த உதவித்தொகை பெரிதும் பயனுள்ளதாக இருப்பதாக பல பெண்கள் தெரிவித்து வருகின்றனர். இதனால் குடும்பத்தில் பெண்களின் பொருளாதார பங்களிப்பும் அதிகரித்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரூ.2,500 உதவித்தொகையைப் பெறுவதற்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும். குடும்பத் தலைவியாக இருப்பது, தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பித்திருப்பது, ஆதார் எண், வங்கிக் கணக்கு மற்றும் பிற விவரங்கள் சரியாக இணைக்கப்பட்டிருப்பது மிகவும் அவசியம். மேலும், விண்ணப்பத்தில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அல்லது ஆவணங்களில் முரண்பாடுகள் இருந்தால், தொகை வருவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஏற்கனவே இந்தத் திட்டத்தில் பயனாளிகளாக உள்ளவர்கள், தங்களது வங்கிக் கணக்கு செயல்பாட்டில் உள்ளதா, ஆதார் இணைப்பு சரியாக உள்ளதா, மொபைல் எண் புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்பதை முன்கூட்டியே சரிபார்த்துக் கொள்வது நல்லது. இதனால் தொகை வரவு தொடர்பான தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும். புதியதாக விண்ணப்பிக்க விரும்புபவர்கள், அரசு அறிவிக்கும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜூலை 15-ஆம் தேதி தொகை வரவு செய்யப்பட்ட பிறகு, பயனாளிகள் தங்களது வங்கி கணக்கு இருப்பை ATM, இணைய வங்கி சேவை, மொபைல் வங்கி செயலி அல்லது வங்கிக் கிளை மூலமாகச் சரிபார்க்கலாம். சில நேரங்களில் வங்கி தொழில்நுட்ப காரணங்களால் குறுகிய தாமதம் ஏற்படலாம். எனவே, தொகை உடனடியாக வரவு ஆகவில்லை என்றால் சிறிது நேரம் காத்திருந்து மீண்டும் சரிபார்ப்பது நல்லது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மகளிர் உரிமைத் தொகை திட்டம், பெண்களின் பொருளாதார சுயநிலையை மேம்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தகுதியான பயனாளிகள் தங்களது ஆவணங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொண்டால், ஜூலை மாத ரூ.2,500 உதவித்தொகையை எந்த சிக்கலும் இல்லாமல் பெற முடியும். அரசு வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளையே நம்பி தகவல்களைப் பின்பற்றுவது மிகவும் முக்கியமானது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>politics</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/magalir-urimai-thogai-scheme-big-update-on-july-15-who-will-get-rs-2500-7rnfgbe"/>
        </item>
        <item>
            <title><![CDATA[CM Vijay Says No Entry: அப்போ "அல்வா"தானா.! அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு "நோ என்ட்ரி"? கதவை இழுத்து மூடிய முதல்வர் விஜய்.?!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/politics/cm-vijay-says-no-entry-and-shuts-the-door-just-halwa-for-former-aiadmk-ministers-8i40oul</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/politics/cm-vijay-says-no-entry-and-shuts-the-door-just-halwa-for-former-aiadmk-ministers-8i40oul</guid>
            <pubDate>Mon, 29 Jun 2026 13:56:16 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;முதலமைச்சர் விஜய், மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களை தவெகவில் சேர்க்க வேண்டாம் என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிது. அப்போ ராஜினாமா செய்த எம்எல்ஏக்களுக்கு அல்வாதானா.!&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kw97gvj61n7zs8t60eqc37bw,imgname-chatgpt-image-jun-29--2026--01-50-42-pm--1--1782721310278.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;முதலமைச்சர் விஜய், மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களை தவெகவில் சேர்க்க வேண்டாம் என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிது. அப்போ ராஜினாமா செய்த எம்எல்ஏக்களுக்கு அல்வாதானா.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழகத்தில் மக்கள் செல்வாக்குடன் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து, தற்போது முதலமைச்சராக முத்திரை பதித்து வருகிறார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய். 2026 சட்டமன்றத் தேர்தலில் பெற்ற மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, தவெகவின் ஆட்சி தமிழகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஆளுங்கட்சியாக உருவெடுத்துள்ள தவெகவை நோக்கி, மாற்றுக்கட்சியினர்&mdash;குறிப்பாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ-க்கள்&mdash;படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.&lt;/p&gt;&lt;p&gt;தொடர்ந்து பல விக்கெட்டுகள் தவெக பக்கம் சாய்ந்து வரும் நிலையில், கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் துணைப் பொதுச்செயலாளர் அதவ் அர்ஜுனா ஆகியோருக்கு முதலமைச்சர் விஜய் அதிரடியான, கடுமையான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆட்சியில் இருக்கும் தவெகவில் இணைந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், தங்களின் அரசியல் எதிர்காலத்தை தக்க வைக்கவும் அதிமுக முன்னாள் புள்ளிகள் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், இதற்கு முதலமைச்சர் விஜய் அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார். &quot;இனி மாற்றுக்கட்சியின் முன்னாள் அமைச்சர்களையோ, எம்.எல்.ஏ-க்களையோ தவெகவில் சேர்க்க வேண்டாம்&quot; என்று ஆனந்த் மற்றும் அதவ் அர்ஜுனாவிற்கு விஜய் கறாராக உத்தரவிட்டுள்ளார். ஆளுங்கட்சியாக இருந்துகொண்டு இந்த அதிரடி முடிவை விஜய் எடுத்ததற்குக் காரணங்கள் இதுதான்.&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;வழக்குகளின் பின்னணி: தவெகவில் இணையத் துடிக்கும் பல அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் பல்வேறு நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.&lt;/li&gt; &lt;li&gt;மக்களின் அதிருப்தி: ஊழல் புகார்களுக்கு உள்ளான பழைய முகங்களை ஆளுங்கட்சியில் சேர்த்தால், தவெக அரசுக்கு மக்களிடம் இருக்கும் நல்ல பெயருக்குக் களங்கம் ஏற்படும்.&lt;/li&gt; &lt;li&gt;தூய்மையான நிர்வாகம்: &quot;மக்களிடம் நல்ல பேர் இல்லாதவர்களை கட்சியில் சேர்த்து, நம்முடைய தூய்மையான ஆட்சி நிர்வாகத்தைக் கெடுத்துக் கொள்ள முடியாது&quot; என்பதில் முதல்வர் விஜய் உறுதியாக இருக்கிறார்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;img&gt;&lt;p&gt;ஏற்கனவே, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரை தவெகவில் இணைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்தபோது, தவெகவின் அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் நடுநிலையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.&lt;/p&gt;&lt;p&gt;இதற்கிடையே, சமீபத்தில் அதிமுகவிலிருந்து ராஜினாமா செய்துள்ள மற்றொரு முன்னாள் அமைச்சரான எம்.ஆர்.விஜயபாஸ்கரையும் தவெகவில் இணைக்க அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் காய் நகர்த்தினர். ஆனால், இதற்கும் தவெகவின் உயர்மட்ட நிர்வாகிகள் தரப்பில் இருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. &quot;ஆட்சியைப் பிடித்து நல்ல முறையில் நடத்திக் கொண்டிருக்கும் வேளையில், இவர்களைச் சேர்ப்பது பின்னடைவைத்தான் தரும்&quot; என அவர்கள் முதலமைச்சரிடம் வாதிட்டுள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த விவகாரத்தில் மற்றொரு சுவாரஸ்யமான திருப்பமும் தலைமைச் செயலக வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதிமுகவில் இருந்து வந்த மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையனும், முதலமைச்சர் விஜய்யிடம் ஒரு முக்கியமான ஆலோசனையை முன்வைத்ததாகக் கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&quot;ஏற்கனவே மக்கள் உங்களுக்கு நல்ல பெரும்பான்மையைத் தந்துள்ளனர். இந்தச் சூழலில், வழக்குகளில் சிக்கிய பழைய அரசியல்வாதிகளை கட்சியில் சேர்ப்பது அரசுக்குத்தான் கெட்ட பெயரைத் தரும். மக்கள் விரும்பும் புதிய ரத்தத்தை மட்டுமே ஊக்கப்படுத்துங்கள்&quot; என்று செங்கோட்டையன் முதலமைச்சர் விஜயிடம் சுட்டிக்காட்டியதாகத் தெரிகிறது.&lt;/p&gt;&lt;p&gt;மூத்த அரசியல்வாதியின் இந்த அனுபவபூர்வமான ஆலோசனையும், கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் எதிர்ப்பும் முதலமைச்சர் விஜய்யை தீர்க்கமாக யோசிக்க வைத்துள்ளது. இதன் விளைவாகவே, தற்போது மாற்றுக்கட்சி முன்னாள் அமைச்சர்களுக்கு தவெகவின் கதவுகள் அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டுள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அரசியலில் புதிய பாதையை உருவாக்கி முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், தனது அரசின் மீதும், கட்சியின் மீதும் எந்தவொரு கறையும் படிந்துவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார். மாற்றுக்கட்சியின் பெரிய தலைவர்களை நம்பி தவெகவின் தூய்மையான பிம்பத்தை இழக்க அவர் தயாராக இல்லை.&lt;/p&gt;&lt;p&gt;முதலமைச்சர் விஜய்யின் இந்த &quot;நோ-அல்வா&quot; பாலிசி, தவெகவில் தஞ்சம் புக நினைத்த அதிமுக மூத்த புள்ளிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், ஆளுங்கட்சியின் இந்த நேர்மையான அதிரடி ஆட்டம், தமிழக மக்கள் மற்றும் தவெக தொண்டர்கள் மத்தியில் முதல்வர் விஜய்யின் மீதான மதிப்பை மேலும் உயர்த்தியுள்ளது!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>politics</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/politics/cm-vijay-says-no-entry-and-shuts-the-door-just-halwa-for-former-aiadmk-ministers-8i40oul"/>
        </item>
        <item>
            <title><![CDATA[உசுப்பேத்துறவங்கள ஓட விட்டு, கடுப்பேத்துறவங்கள கதற விட்ட விஜய்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/politics/vijays-latest-political-move-leaves-opponents-stunned-8mlx328</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/politics/vijays-latest-political-move-leaves-opponents-stunned-8mlx328</guid>
            <pubDate>Wed, 01 Jul 2026 11:49:53 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;உசுப்பேத்துறவன் கிட்ட உம்முனும், கடுப்பேத்துறவன் கிட்ட கம்முனும் இருந்தா, வாழ்க்கை ஜம்முனு இருக்கும்ன்னு சொன்ன விஜய் இன்று எதிரிகளை பந்தாடியியுள்ளார். கார்ப்பரேட் பாணி நிர்வாகத்தாலும், மக்கள் நலத் திட்டங்களாலும் வென்று காட்டியுள்ளார் CM விஜய்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwe49mywndf4rz714jtekbz9,imgname-chatgpt-image-jul-1--2026--11-31-01-am-1782885700572.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;உசுப்பேத்துறவன் கிட்ட உம்முனும், கடுப்பேத்துறவன் கிட்ட கம்முனும் இருந்தா, வாழ்க்கை ஜம்முனு இருக்கும்ன்னு சொன்ன விஜய் இன்று எதிரிகளை பந்தாடியியுள்ளார். கார்ப்பரேட் பாணி நிர்வாகத்தாலும், மக்கள் நலத் திட்டங்களாலும் வென்று காட்டியுள்ளார் CM விஜய்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆட்சிக்கு வந்த சில மணி நேரங்களிலேயே தனது அதிரடி ஆட்டத்தைத் தொடங்கினார் விஜய்.&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;200 யூனிட் இலவச மின்சாரம்: &lt;/strong&gt;பதவியேற்ற உடனே கையெழுத்திட்ட இந்த அறிவிப்பு, தமிழகத்தின் சுமார் 2.4 கோடி வீட்டு மின் இணைப்புகளுக்குப் பயனளித்துள்ளது.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;அதிரடி டாஸ்மாக் மூடல்: &lt;/strong&gt;வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களின் 500 மீட்டர் சுற்றளவிற்குள் இயங்கி வந்த 717 டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட உத்தரவிட்டார். அதில் 276 ஆன்மீகத் தலங்கள் அருகிலும், 186 பள்ளிகள் அருகிலும், 255 பேருந்து நிலையங்கள் அருகிலும் இருந்த கடைகள் வெறும் இரு வாரங்களுக்குள் மூடப்பட்டு, பொது இடங்கள் குடிகாரர்களின் தொல்லையின்றி மாற்றப்பட்டுள்ளன.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;போதைப்பொருள் ஒழிப்புப் படை: &lt;/strong&gt;மாவட்டந்தோறும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையைத் தடுக்க பிரத்யேகப் படை அமைக்கப்பட்டு, அது முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளது.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;'சிங்கப்பெண்' சிறப்புப் படை: &lt;/strong&gt;பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்து, புகார்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க இந்தத் தனிப்படை உருவாக்கப்பட்டுள்ளது.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;img&gt;&lt;p&gt;வழக்கமான அரசியல்வாதிகளின் வெள்ளை வேட்டி-சட்டை கலாச்சாரத்தை விடுத்து, கச்சிதமாகத் தைக்கப்பட்ட கருப்பு சூட் மற்றும் வெள்ளை சட்டை அணிந்து தலைமைச் செயலகத்திற்கு வருகிறார் விஜய். இது அவர் தன்னை ஒரு பாரம்பரிய அரசியல்வாதியாகக் காட்டாமல், ஒரு நவீன கார்ப்பரேட் நிர்வாகியாக (Corporate Administrator) நிலைநிறுத்த விரும்புவதைக் காட்டுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை (7 மணி நேரத்திற்கும் மேலாக) தனது அலுவலக மேஜையில் அமர்ந்து கோப்புகளைப் பார்க்கிறார். அதிகாரிகளுக்கும் கண்டிப்பான நேர மேலாண்மையை (Punctuality) உத்தரவிட்டுள்ளார். மதிய உணவைக் கூட வீட்டிலிருந்தே எடுத்து வந்து அலுவலகத்திலேயே எளிய முறையில் உண்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்த ஒழுக்கமும், வேலை கலாச்சாரமும் ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் சுறுசுறுப்பாக்கியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முந்தைய திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட ₹245.85 கோடி மதிப்பிலான 46 திட்டங்களுக்கான நிர்வாக அனுமதியை முதல்வர் விஜய் ரத்து செய்துள்ளார். &quot;கோயில் பணம் என்பது கோயில் சார்ந்த ஆன்மீக காரியங்களுக்கும் பக்தர்களின் வசதிகளுக்கும் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும், அதை வணிக நோக்கத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது&quot; என்று அவர் அதிரடி காட்டியுள்ளார். இந்த ரத்து செய்யப்பட்ட நிதியைக் கொண்டு பக்தர்களுக்கான புதிய திட்டங்கள் அறிவிக்கப்படவுள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மத்திய அரசுடன் அரசியல் ரீதியாக வேறுபட்டாலும், மாநில வளர்ச்சிக்காகப் பிரதமரை நேரில் சந்தித்து மேகதாது அணை விவகாரம், இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்கள் விடுதலை மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI), தொழில் முதலீடுகள் குறித்துப் பேசினார். ஜூன் 11 அன்று நடந்த நிதி ஆயோக் கூட்டத்திலும் பங்கேற்றார்.&lt;/p&gt;&lt;p&gt;அங்கு, 2035-க்குள் தமிழகப் பொருளாதாரத்தை 1.5 ட்ரில்லியன் டாலராக உயர்த்தும் விஜய்யின் நீண்டகால பொருளாதாரத் திட்டத்தை (Roadmap) நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் அசோக் குமார் லஹிரி பகிரங்கமாகப் பாராட்டியுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டானது.&lt;/p&gt;&lt;p&gt;திமுக, அதிமுகவுக்கு விஜய் வைத்த செக்! 16 தொகுதிகளில் நடக்கப்போகும் &lsquo;அந்த&rsquo; சம்பவம்..அலறும் அறிவாலயம்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;அம்மா உணவகம் மேம்பாடு: &lt;/strong&gt;தமிழகத்திலுள்ள 620 அம்மா உணவகங்களை நவீனப்படுத்தி, தூய்மையான சமையலறை மற்றும் தரமான உணவை உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;விவசாயம் மற்றும் சுகாதாரம்: &lt;/strong&gt;நெல் விவசாயத்தை ஊக்குவிக்க ₹134.83 கோடி தொகுப்புத் திட்டம் மற்றும் கிராமப்புற மருத்துவ சேவைக்காக 40 புதிய வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;ஊழல் ஒழிப்பு: &lt;/strong&gt;அரசு ஒப்பந்தங்களில் கமிஷன் வாங்குவதைத் தடுக்கவும், அதிகாரத்துவத்தில் உள்ள 'இணை அதிகார மையங்களை' (Parallel power centres) ஒழிக்கவும் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) சோதனைகளுக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளார்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;மின்னணு ஆளுமை (E-Governance): &lt;/strong&gt;திருக்குறளின் 10 தூண்களை அடிப்படையாகக் கொண்டு 35 துறைகளுக்கான 436 அம்சங்கள் கொண்ட 'வெற்றித் தமிழகம் தொலைநோக்கு ஆவணம்' வெளியிடப்பட்டுள்ளது. மேலும், அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் பெற 'வெற்றித் தமிழகம் சூப்பர் ஆப்' (Vetri Tamil Nadu Super App) மற்றும் குடிமக்கள் முன்னுரிமை அட்டை (Citizen Privilege Card) போன்ற தொழில்நுட்பத் திட்டங்களையும் விஜய் திட்டமிட்டுள்ளார்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;வெள்ளித்திரையில் மாபெரும் ஓப்பனிங் கொடுத்து பாக்ஸ் ஆபீஸை மிரள வைத்த விஜய், தற்போது கோட்டையிலும் அதே 'சினிமாத்தனமான மாஸ்' பாணியில், ஆனால் மிகவும் திட்டமிடப்பட்ட தெளிவான நிர்வாகத் திறமையோடு தனது அரசியல் இன்னிங்ஸைத் தொடங்கியுள்ளார். விமர்சித்தவர்களின் வாயடைத்துப் போகும் வகையில் அவரது ஒரு மாத கால ஆட்சி அமைந்துள்ளது என்பதில் ஐயமில்லை!&lt;/p&gt;&lt;p&gt;Chennai 2.0 : நியூயார்க் நகருக்கு இணையாக மாறப்போகும் சென்னை! - CM விஜய்யின் மாஸ்டர் பிளான்&lt;/p&gt;]]></content:encoded>
            <category>politics</category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/politics/vijays-latest-political-move-leaves-opponents-stunned-8mlx328"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Government scheme: பெண் குழந்தைகளுக்கு அரசு தரும் ரூ.50,000.! யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/government-scheme-rs-50000-for-girl-children-who-is-eligible-and-how-to-apply-ac0w330</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/government-scheme-rs-50000-for-girl-children-who-is-eligible-and-how-to-apply-ac0w330</guid>
            <pubDate>Thu, 25 Jun 2026 11:54:54 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், தகுதியுள்ள குடும்பங்களுக்கு ₹50,000 வரை வைப்புத்தொகை மற்றும் 18 வயதில் ₹3 லட்சம் வரை முதிர்வுத்தொகை வழங்கப்படுகிறது.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kvypg3nepvff4pbgfm13yb7j,imgname-chatgpt-image-jun-25--2026--11-39-39-am--1--1782367915693.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், தகுதியுள்ள குடும்பங்களுக்கு ₹50,000 வரை வைப்புத்தொகை மற்றும் 18 வயதில் ₹3 லட்சம் வரை முதிர்வுத்தொகை வழங்கப்படுகிறது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பெண் குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு மற்றும் எதிர்கால பொருளாதார நலனை உறுதி செய்யும் நோக்கில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் முக்கியமான நலத்திட்டங்களில் ஒன்றாக முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் (Chief Minister's Girl Child Protection Scheme) உள்ளது. 1992ஆம் ஆண்டு அறிமுகமான இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள குடும்பங்களில் பிறக்கும் பெண் குழந்தைகளின் பெயரில் அரசு ₹50,000 அல்லது தலா ₹25,000 நிலையான வைப்புத் தொகை (Fixed Deposit) செலுத்துகிறது. பெண் குழந்தைகளை சம உரிமையுடன் வளர்க்கவும், அவர்களின் கல்வி மற்றும் எதிர்காலத்தை உறுதிப்படுத்தவும் இந்தத் திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பெண் சிசுக்கொலை மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாகுபாட்டை குறைப்பதே இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கமாகும். அதேசமயம் பெண் குழந்தைகளின் கல்வி, பொருளாதார பாதுகாப்பு மற்றும் சமூகத்தில் சம உரிமையை உறுதி செய்ய குடும்பங்களை ஊக்குவிப்பதும் இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தத் திட்டத்தில் சேர குடும்பத்தில் ஒரு அல்லது இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆண் குழந்தை இருந்தால் திட்டத்தின் பலன் கிடைக்காது. பெற்றோர் 40 வயதுக்குள் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைச் சிகிச்சை செய்திருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ₹1.20 லட்சத்தைத் தாண்டக்கூடாது. குழந்தை 3 வயதிற்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாகவோ அல்லது குறைந்தது 10 ஆண்டுகள் தமிழ்நாட்டில் வசித்தவர்களாகவோ இருக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒரே ஒரு பெண் குழந்தை இருந்தால் அவரது பெயரில் ₹50,000 FD முதலீடு செய்யப்படும். இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் ஒவ்வொருவருக்கும் தலா ₹25,000 FD செய்யப்படும். 6ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் சுமார் ₹1,800 கல்வி உதவித்தொகை வழங்கப்படும். குழந்தை 18 வயதை நிறைவு செய்யும் போது, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால், வட்டி சேர்த்து சுமார் ₹3 லட்சம் வரை முதிர்வுத் தொகையாக பெறும் வாய்ப்பு உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விண்ணப்பிக்கும் போது பெண் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், பெற்றோரின் வயதுச் சான்றிதழ், குடும்பக் கட்டுப்பாடு (Sterilization) சான்றிதழ், வருமானச் சான்று, குடும்ப அட்டை, இருப்பிடச் சான்று, வங்கி கணக்கு புத்தகத்தின் நகல் மற்றும் தேவையெனில் ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தத் திட்டத்திற்கு மாவட்ட சமூக நல அலுவலகம் (DSWO), குழந்தை மேம்பாட்டு அலுவலகம் அல்லது அருகிலுள்ள e-Sevai மற்றும் CSC மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பித்தால், அதிகாரிகள் தகுதியை ஆய்வு செய்து விண்ணப்பத்தை பரிசீலிப்பார்கள். விண்ணப்பக் கட்டணம் மிகவும் குறைவாக இருக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க விரும்பும் குடும்பங்களுக்கு இந்தத் திட்டம் மிகப்பெரிய பொருளாதார ஆதரவாக அமைகிறது. குழந்தை பிறந்த சில ஆண்டுகளுக்குள் விண்ணப்பித்து அரசின் இந்தச் சிறந்த நலத்திட்டத்தின் பலனைப் பெறுவது குடும்பங்களுக்கு நீண்டகால நிதி பாதுகாப்பை வழங்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>politics</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/government-scheme-rs-50000-for-girl-children-who-is-eligible-and-how-to-apply-ac0w330"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500.! புது ரூல்ஸ் வந்தாலும் இவங்களுக்கெல்லாம் கண்டிப்பா கிடைக்கும்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/politics/magalir-urimai-thogai-rs-2500-benefit-continues-despite-new-rules-check-who-is-still-eligible-aiax8ae</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/politics/magalir-urimai-thogai-rs-2500-benefit-continues-despite-new-rules-check-who-is-still-eligible-aiax8ae</guid>
            <pubDate>Thu, 02 Jul 2026 11:39:29 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தவெக அரசின் தேர்தல் வாக்குறுதியான ₹2,500 மகளிர் உரிமைத் தொகை, திட்ட மறுசீரமைப்பு மற்றும் புதிய தகுதி வரம்புகளால் தாமதமாகியுள்ளது. ஆகஸ்ட் மாதம் முதல் இந்த உயர்வு அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwgnvg6z2j77fr23ejeza2wz,imgname-chatgpt-image-jul-2--2026--11-15-15-am--1--1782971220191.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தவெக அரசின் தேர்தல் வாக்குறுதியான ₹2,500 மகளிர் உரிமைத் தொகை, திட்ட மறுசீரமைப்பு மற்றும் புதிய தகுதி வரம்புகளால் தாமதமாகியுள்ளது. ஆகஸ்ட் மாதம் முதல் இந்த உயர்வு அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ்நாட்டுப் பெண்களின் பொருளாதார வாழ்வில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்திய 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டம், தற்போது அரசியல் மற்றும் சமூக வெளியில் மிக முக்கியமான விவாதப் பொருளாக மாறியுள்ளது. கடந்த 2023 செப்டம்பர் 15 அன்று, முந்தைய திமுக அரசால் தொடங்கப்பட்ட இத்திட்டம், சுமார் 1.3 கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1,000 வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அரணாக விளங்கியது. இந்நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது தேர்தல் வாக்குறுதியின்படி இத்தொகையை ₹2,500 ஆக (60 வயதுக்கு மேற்பட்டோருக்கு ₹3,000 வரை) உயர்த்தும் என்று பெண்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்தனர். ஆனால், ஜூன்-ஜூலை மாதங்களில் வழக்கமான ₹1,000 மட்டுமே வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதால், தற்காலிக ஏமாற்றமும், புதிய விதிமுறைகள் (புது ரூல்ஸ்) குறித்த விவாதங்களும் எழுந்துள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான புதிய தவெக அரசு, இத்திட்டத்தை முழுமையாகக் கைவிடவில்லை. மாறாக, தேர்தல் வாக்குறுதியான ₹2,500-ஐ வழங்குவதற்கான திட்ட மறுசீரமைப்பு (Restructuring) பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. நிதிச் சுமையைக் கையாள்வது, தகுதியான பயனாளிகளைத் துல்லியமாகக் கண்டறிவது, 60 வயதுக்கு மேற்பட்டோரை முதியோர் ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றுவது மற்றும் புதிய விண்ணப்பங்களை பரிசீலிப்பது போன்ற காரணங்களால் இந்தத் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. நிதி நிலைத்தன்மையை உறுதி செய்யாமல் இவ்வளவு பெரிய தொகையை வழங்குவது சாத்தியமற்றது என்பதால், பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக அதிகாரிகளுடன் ஆலோசித்து இறுதி வடிவம் கொடுக்க அரசு திட்டமிட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அரசு திட்டத்தை முறைப்படுத்தப் புதிய தகுதி வரம்புகளையும், கட்டுப்பாடுகளையும் விதித்தாலும், பின்வரும் அடித்தட்டு மற்றும் தேவையுள்ள பிரிவினருக்கு இந்த ₹2,500 உரிமைத் தொகை எவ்வித தடையுமின்றி கண்டிப்பாகக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது:&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்கள் (BPL)&lt;/strong&gt;: மிகக் குறைந்த வருமானம் கொண்ட, அன்றாடக் கூலி வேலை செய்யும் குடும்பங்களின் தலைவிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;மாற்றுத்திறனாளிப் பெண்கள் மற்றும் பராமரிப்பாளர்கள்&lt;/strong&gt;: மாற்றுத்திறனாளிப் பெண்கள் அல்லது தங்களைச் சார்ந்துள்ள மாற்றுத்திறனாளிகளைப் பராமரிக்கும் பெண்மணிகளுக்கு இத்திட்டம் தொடர்ந்து பாதுகாப்பு அளிக்கும்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;விதவைகள் மற்றும் ஆதரவற்ற பெண்கள்&lt;/strong&gt;: கணவனை இழந்த, குடும்பத்தை தனியாகத் தாங்கிப் பிடிக்கும் பெண் தலைவிகளுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி இத்தொகை சென்றடையும்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;உண்மையான ஏழைப் பெண்கள்&lt;/strong&gt;: ஆண்டு வருமானம் ₹2.5 லட்சத்திற்கும் குறைவாக இருந்து, சொந்தமாக நிலமோ, நான்கு சக்கர வாகனங்களோ இல்லாத எளிய குடும்பத்துப் பெண்களுக்கு இந்த உயர்வு நிச்சயம் பலன் தரும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;img&gt;&lt;p&gt;தகுதியற்றவர்கள், அதாவது நல்ல வருமானம் உள்ளவர்கள் மற்றும் அரசு விதிமுறைகளைத் தவறாகப் பயன்படுத்திப் பலன் பெறுபவர்களைக் கண்டறிந்து நீக்கவே இந்த 'புது ரூல்ஸ்' கொண்டுவரப்படுகிறது. இதனால் உண்மையான ஏழைப் பெண்களுக்கான வாய்ப்பு எங்கும் போகாது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான பெண்கள் இந்த உரிமைத் தொகையை வெறும் உதவித்தொகையாகப் பார்க்காமல், தங்களின் வீட்டு வாடகை, மருத்துவச் செலவுகள், குழந்தைகளின் கல்வி மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்கான முக்கிய வாழ்வாதாரமாக நம்பியுள்ளனர். எனவே, இந்தத் தொகை உயர்வு தாமதமாவது அவர்களின் மாதாந்திரப் பொருளாதாரத் திட்டமிடலைப் பாதித்துள்ளது உண்மைதான்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இருப்பினும், அரசின் இந்தத் தற்காலிகத் தாமதம் இத்திட்டத்தை மேலும் சீரமைத்து, முறைகேடுகளைத் தவிர்த்து, நீண்ட காலத்திற்கு நிதி ரீதியாகத் தடையின்றிச் செயல்படுத்தவே உதவும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். பெண்களின் உண்மையான நிதிச் சுதந்திரத்தை உறுதி செய்ய, புதிய அரசு தனது தேர்தல் வாக்குறுதியான ₹2,500 உயர்வு குறித்த தெளிவான அரசாணையை விரைவில் வெளியிட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழக மகளிரின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் கண்டிப்பா கிடைக்கும் என்ற நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் கிடைத்துளளன.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>politics</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/politics/magalir-urimai-thogai-rs-2500-benefit-continues-despite-new-rules-check-who-is-still-eligible-aiax8ae"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Government Scheme: ரூ.4,000 அரசு உதவித்தொகை.! யாருக்கு கிடைக்கும்? எப்படி விண்ணப்பிப்பது?! முழு விவரம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/government-scheme-rs-4000-financial-assistance-who-is-eligible-and-how-to-apply-cgk1eg9</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/government-scheme-rs-4000-financial-assistance-who-is-eligible-and-how-to-apply-cgk1eg9</guid>
            <pubDate>Wed, 08 Jul 2026 13:29:29 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தமிழக அரசு தரும் ரூ.4,000 வரை அரசு உதவித்தொகை யாரெல்லாம் பெறலாம் தெரியுமா?. அதறக்கு யார் விண்ணப்பிக்கலாம்?, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேவையான ஆவணங்கள் குறித்து இக்கட்டுரை விளக்குகிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kx0bntxja6xr677rxztd2974,imgname-chatgpt-image-jul-8--2026--01-10-56-pm--1--1783497419698.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழக அரசு தரும் ரூ.4,000 வரை அரசு உதவித்தொகை யாரெல்லாம் பெறலாம் தெரியுமா?. அதறக்கு யார் விண்ணப்பிக்கலாம்?, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேவையான ஆவணங்கள் குறித்து இக்கட்டுரை விளக்குகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அரசு மற்றும் மாநில அரசுகள் வேலைவாய்ப்பில்லாத இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்காக பல்வேறு நிதியுதவி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இந்தத் திட்டங்களில் சிலவற்றிற்கு குறிப்பிட்ட சான்றிதழ்கள் மற்றும் தகுதிகள் அவசியம். ரூ.4,000 வரை வழங்கப்படும் அரசு உதவித்தொகை யாருக்கு கிடைக்கும், எப்படி விண்ணப்பிப்பது, என்னென்ன ஆவணங்கள் தேவை என்பதை இந்தக் கட்டுரையில் விரிவாக தெரிந்துகொள்ளலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;படிப்பை முடித்த பிறகும் வேலை கிடைக்காமல் பல இளைஞர்கள் அரசு வேலைக்காகவும், தனியார் நிறுவன வேலைக்காகவும் காத்திருக்கின்றனர். இதுபோன்ற சூழலில் அரசு அறிவிக்கும் பல்வேறு நலத்திட்டங்கள், உதவித்தொகைகள் மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்களைப் பெற சில முக்கிய ஆவணங்கள் கட்டாயமாக தேவைப்படுகின்றன. அவற்றில் மிக முக்கியமானது வேலையில்லா சான்றிதழ் (Unemployment Certificate) ஆகும். இந்தச் சான்றிதழ் இருந்தால் மட்டுமே சில குறிப்பிட்ட உதவித்திட்டங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வேலையில்லா சான்றிதழ் என்பது, விண்ணப்பதாரர் தற்போது எந்த அரசு அல்லது தனியார் நிறுவனத்திலும் பணியாற்றவில்லை என்பதை வருவாய்த் துறை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யும் ஆவணமாகும். வேலைவாய்ப்பு தொடர்பான திட்டங்கள், சில கல்வி உதவித்தொகைகள், இளைஞர்களுக்கான நிதி உதவிகள் மற்றும் அரசு அறிவிக்கும் சிறப்பு திட்டங்களில் இந்தச் சான்றிதழ் முக்கிய பங்கு வகிக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வேலையில்லா இளைஞர்களுக்காக அறிவிக்கப்படும் சில உதவித்திட்டங்களில் மாதம் ரூ.4,000 வரை நிதியுதவி வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தகைய திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் போது வேலையில்லா சான்றிதழ் முக்கிய ஆவணமாக கேட்கப்படலாம். எனவே அரசு உதவிகளை பெற விரும்பும் இளைஞர்கள் இந்தச் சான்றிதழை முன்கூட்டியே பெற்றிருப்பது நல்லது. உதவித்தொகை வழங்கப்படுவது சம்பந்தப்பட்ட திட்டத்தின் தகுதி, விதிமுறைகள் மற்றும் அரசின் அறிவிப்புகளுக்கு உட்பட்டதாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;ul&gt; &lt;li&gt;வேலை இல்லாமல் இருப்பவர்கள்.&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள இளைஞர்கள்.&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;படிப்பை முடித்து வேலை தேடி வருபவர்கள்.&lt;/li&gt; &lt;li&gt;&amp;nbsp;அரசு நலத்திட்டங்களுக்கு தகுதி பெற விரும்புவோர்.&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;திறன் மேம்பாட்டு அல்லது வேலைவாய்ப்பு சார்ந்த அரசுத் திட்டங்களுக்கு விண்ணப்பிப்போர்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;img&gt;&lt;p&gt;முன்பு இந்தச் சான்றிதழைப் பெற தாலுகா அலுவலகம் அல்லது இ-சேவை மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டியிருந்தது. தற்போது தமிழ்நாடு அரசின் இ-சேவை வசதியின் மூலம் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பிக்க முடிகிறது. இதனால் நேரமும் செலவும் குறைவதோடு, விண்ணப்பத்தின் நிலையை இணையத்தில் கண்காணிக்கும் வசதியும் கிடைக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முதலில் தமிழ்நாடு அரசின் இ-சேவை தளத்தில் கணக்கை உருவாக்க வேண்டும். ஏற்கனவே கணக்கு இருந்தால் நேரடியாக உள்நுழையலாம். பின்னர் வருவாய்த் துறை சேவைகளில் &quot;Unemployment Certificate&quot; சேவையைத் தேர்வு செய்து விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;விண்ணப்பத்தில் பெயர், முகவரி, ஆதார் எண், குடும்ப விவரங்கள், கல்வித் தகுதி உள்ளிட்ட தகவல்கள் சரியாக பதிவு செய்யப்பட வேண்டும். அதன் பிறகு தேவையான ஆவணங்களை பதிவேற்றி விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;ul&gt; &lt;li&gt;ஆதார் அட்டை&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;குடும்ப அட்டை&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;முகவரிச் சான்று&lt;/li&gt; &lt;li&gt;கல்விச் சான்றிதழ்கள்&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;பாஸ்போர்ட் அளவு&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;புகைப்படம்&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;வேலைவாய்ப்பு அலுவலக பதிவு (தேவைப்பட்டால்)&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;வங்கி கணக்கு விவரங்கள் மொபைல் எண்&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;திட்டத்தைப் பொறுத்து கூடுதல் ஆவணங்கள் கேட்கப்படலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விண்ணப்பத்தை சமர்ப்பித்ததும் ஒரு விண்ணப்ப எண் வழங்கப்படும். அந்த எண்ணைப் பயன்படுத்தி விண்ணப்பத்தின் நிலையை ஆன்லைனில் அறிந்து கொள்ளலாம். அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்த்து ஒப்புதல் அளித்த பிறகு வேலையில்லா சான்றிதழ் வழங்கப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வேலையில்லா சான்றிதழ் ஒரு உதவித்தொகைக்காக மட்டுமல்ல. பல்வேறு அரசு வேலைவாய்ப்பு திட்டங்கள், திறன் மேம்பாட்டு பயிற்சிகள், வேலைவாய்ப்பு முகாம்கள், சில கல்வி உதவித்தொகைகள் மற்றும் இளைஞர் நலத் திட்டங்களில் தகுதியை நிரூபிக்கவும் இது உதவுகிறது. எதிர்காலத்தில் அரசு அறிவிக்கும் புதிய நலத்திட்டங்களுக்கும் இந்த ஆவணம் பயன்பட வாய்ப்பு உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விண்ணப்பத்தில் தவறான தகவல்களை வழங்கக் கூடாது. ஏற்கனவே அரசு அல்லது தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தால் அதனை மறைத்து விண்ணப்பிப்பது சட்டரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். மேலும், ஒவ்வொரு உதவித்திட்டத்திற்கும் தனித்தனி தகுதி விதிமுறைகள் இருப்பதால், விண்ணப்பிக்கும் முன் அவற்றை முழுமையாக சரிபார்ப்பது அவசியம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வேலை தேடி வரும் இளைஞர்களுக்கு வேலையில்லா சான்றிதழ் மிகவும் பயனுள்ள ஆவணமாகும். அரசின் பல்வேறு நலத்திட்டங்கள், திறன் மேம்பாட்டு வாய்ப்புகள் மற்றும் நிதியுதவிகளைப் பெற இது முக்கிய பங்காற்றுகிறது. எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் புதிய திட்டங்களிலும் இந்தச் சான்றிதழ் பயன்படக்கூடும் என்பதால், தகுதியுள்ளவர்கள் முன்கூட்டியே இதைப் பெற்றுக் கொள்வது நல்ல முடிவாக இருக்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>politics</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/government-scheme-rs-4000-financial-assistance-who-is-eligible-and-how-to-apply-cgk1eg9"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Trisha: டீலே இதுதான்.! விராலிமலையில் த்ரிஷா போட்டி.?! வெற்றி கனியை தட்டி தருவதாக விஜயபாஸ்கர் உறுதி.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/politics/this-is-the-real-deal-trisha-to-contest-from-viralimalai-vijaya-baskar-assures-victory-for-vijay-pdb2ga9</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/politics/this-is-the-real-deal-trisha-to-contest-from-viralimalai-vijaya-baskar-assures-victory-for-vijay-pdb2ga9</guid>
            <pubDate>Tue, 30 Jun 2026 13:06:41 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;விராலிமலை தொகுதியில் நடிகை த்ரிஷாவை நிறுத்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருடன் முதல்வர் விஜய் டீல் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலடியாக, உதயநிதி ஸ்டாலின் த்ரிஷாவை எதிர்க்க மற்றொரு பிரபல நடிகையை களமிறக்க திட்டமிட்டுள்ளார் எனவும் தெரிகிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwbp5n1p6fw4ma37ras2en3k,imgname-chatgpt-image-jun-30--2026--12-43-43-pm--1--1782803780661.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;விராலிமலை தொகுதியில் நடிகை த்ரிஷாவை நிறுத்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருடன் முதல்வர் விஜய் டீல் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலடியாக, உதயநிதி ஸ்டாலின் த்ரிஷாவை எதிர்க்க மற்றொரு பிரபல நடிகையை களமிறக்க திட்டமிட்டுள்ளார் எனவும் தெரிகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழக அரசியல் களம் எப்போதும் எதிர்பாராத திருப்பங்களுக்குப் பெயர் பெற்றது. சினிமா பிரபலங்கள் அரசியலுக்கு வருவதும், அவர்களுக்குப் பின்னால் பெரும் அரசியல் நகர்வுகள் நடப்பதும் காலம் காலமாகத் தொடர்ந்து வருகிறது. அந்த வகையில், தற்போது தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது ஒரு புதிய தகவல். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதல்வருமான விஜய், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் பிரபல நடிகை த்ரிஷாவை நிறுத்தப் போவதாகவும், அதற்காக முன்னாள் அமைச்சர் சி.வி.விஜயபாஸ்கருடன் ஒரு மெகா 'டீல்' பேசியிருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு தொற்றியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கடந்த சில நாட்களாகவே, தளபதி விஜய்யின் தவெக கட்சியில் முக்கிய சினிமா முகங்கள் இணையப் போவதாகப் பேச்சுகள் அடிபட்டன. அதில் முதன்மையானவராக நடிகை த்ரிஷாவின் பெயர் அடிபட்டது. தற்போதைய தகவல்களின்படி, விராலிமலை தொகுதி இடைத்தேர்தலில் த்ரிஷாவை தவெக வேட்பாளராகக் களம் இறக்க விஜய் தரப்பு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;இதற்காக, அந்தத் தொகுதியில் வலுவான செல்வாக்குக் கொண்ட முன்னாள் அதிமுக அமைச்சரான சி.வி.விஜயபாஸ்கருடன் விஜய் தரப்பு ஒரு ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாகச் சொல்லப்படுகிறது. விராலிமலையில் த்ரிஷாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க விஜயபாஸ்கர் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்பதே தவெக போட்ட 'டீல்' எனக் கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதிமுகவில் இருந்தாலும், தொகுதிக்குள் தனிப்பட்ட முறையில் பெரும் செல்வாக்குக் கொண்டவர் விஜயபாஸ்கர். தவெக-வின் இந்த கோரிக்கைக்கு அவரும் சம்மதம் தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன. த்ரிஷாவின் வெற்றிக் கனியைத் தட்டித் தருவதாக அவர் உறுதி அளித்துள்ளாராம்.&lt;/p&gt;&lt;p&gt;இதற்குப் பிரதிபலனாக விஜயபாஸ்கருக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த, அதிகாரமிக்க பதவி ஒன்று வழங்கப்படும் என விஜய் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இந்தத் தகவல் வெளியானதில் இருந்தே, விராலிமலையில் த்ரிஷாவை வரவேற்கவும், தேர்தல் வேலைகளைப் பார்க்கவும் தளபதி ரசிகர்கள் இப்போதே தங்களைக் கொண்டாடத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த விவகாரம் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் தரப்புக்கு எட்டவே, அவர்களும் சும்மா இருக்கப் போவதில்லை என அதிரடி வியூகங்களை வகுக்கத் தொடங்கிவிட்டனர். த்ரிஷாவின் வருகை தவெக-விற்குப் பெரும் பலமாக மாறும் என்பதை உணர்ந்த எதிர்க்கட்சிகள், அவரைத் தோற்கடிக்க அதைவிடப் பெரிய &lsquo;மாஸ்டர் பிளான்&rsquo; ஒன்றை கையில் எடுத்துள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;த்ரிஷாவை எதிர்கொள்ள, அவரை விடப் பிரபலமான, தமிழக மக்களிடம் பெரும் செல்வாக்குக் கொண்ட ஒரு முன்னணி நடிகையை விராலிமலையில் களம் இறக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;இதற்கான பேச்சுவார்த்தையில் திமுக இளைஞரணி செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் நேரடியாக இறங்கியுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. அந்தப் பிரபல நடிகையுடன் உதயநிதி நடத்திய பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்துவிட்டதாகவும், அவர் விராலிமலையில் போட்டியிடச் சம்மதித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இருப்பினும், த்ரிஷாவுக்கு எதிராகப் போட்டியிடப் போகும் அந்தப் மாஸ் நடிகை யார் என்ற விவரத்தை தற்போதைக்குத் துளிரும் கசியவிடக் கூடாது என்பதில் எதிர்க்கட்சித் தலைமை மிகவும் தீவிரமாக உள்ளது. இதனை ஒரு &lsquo;சீக்ரெட்&rsquo; ஆயுதமாக அவர்கள் வைத்துள்ளனர்.&lt;/p&gt;&lt;p&gt;சரியான நேரத்தில், தேர்தல் களம் சூடுபிடிக்கும் போது அந்த நடிகையின் பெயரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு, ஒட்டுமொத்த தமிழக மக்களையே ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்துவோம் என திமுக உடன்பிறப்புகள் ரகசியம் பேசி வருகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இடை தேர்தலில் விராலிமலை தொகுதியில் த்ரிஷா போட்டியிடும் நிலையில் அத்தொகுதி &amp;nbsp;தமிழகத்தின் விஐபி தொகுதியாக மாறும். ஒருபுறம் விஜய் - விஜயபாஸ்கர் கூட்டணியின் ஆதரவோடு த்ரிஷா, மறுபுறம் உதயநிதி ஸ்டாலினின் &lsquo;சர்ப்ரைஸ்&rsquo; மூவ் மூலம் களமிறக்கப்படும் மற்றொரு முன்னணி நடிகை என விராலிமலை களம் இரண்டு சினிமா நட்சத்திரங்களின் அக்னிப் பரீட்சையாக மாறப் போகிறது. இந்த நட்சத்திரப் போரில் வெற்றிக் கனியைப் பறிக்கப் போவது யார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இடைத்தேர்தல் தேதி அறிவித்தால் அவ்ளோதான் தமிழக மக்களுக்கு தினமும் விருந்துதான்.! அதாங்க செய்தி விருந்து.!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>politics</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/politics/this-is-the-real-deal-trisha-to-contest-from-viralimalai-vijaya-baskar-assures-victory-for-vijay-pdb2ga9"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Trisha Krishnan: த்ரிஷா புகழ்பாடும் கோலிவுட்..! "சரோஜா தேவி மாதிரி நல்ல கேரக்டர்"..! சர்ட்டிஃபிகேட் கொடுக்கும் நடிகர்கள்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/trisha-krishnan-why-kollywood-stars-praise-her-character-compared-to-legendary-saroja-devi-sdg7rru</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/trisha-krishnan-why-kollywood-stars-praise-her-character-compared-to-legendary-saroja-devi-sdg7rru</guid>
            <pubDate>Mon, 06 Jul 2026 12:57:26 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நீடித்து நிற்கும் நடிகை த்ரிஷாவின் வெற்றிப் பயணம், அவரது நடிப்புத் திறமையை மட்டுமல்ல, அவரது மனிதநேயம், எளிமை மற்றும் நட்பையும் அடிப்படையாகக் கொண்டது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwv4ke56h71gazepyksw3181,imgname-chatgpt-image-jul-6--2026--12-46-06-pm--1--1783322228902.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நீடித்து நிற்கும் நடிகை த்ரிஷாவின் வெற்றிப் பயணம், அவரது நடிப்புத் திறமையை மட்டுமல்ல, அவரது மனிதநேயம், எளிமை மற்றும் நட்பையும் அடிப்படையாகக் கொண்டது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ் சினிமாவில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக தொடர்ந்து வெற்றிகரமாக பயணித்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவர் த்ரிஷா. புதிய தலைமுறை நடிகைகள் தொடர்ந்து அறிமுகமாகி வந்தாலும், தனது நடிப்பு, திரை வசீகரம் மற்றும் ரசிகர்களின் அன்பால் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருப்பது அவரது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. ஒரு நடிகையாக மட்டுமல்லாமல், மனிதநேயம், எளிமை மற்றும் நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கலைஞராகவும் த்ரிஷா திரையுலகில் மதிப்பைப் பெற்றுள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மாடலிங் துறையில் தனது பயணத்தைத் தொடங்கிய த்ரிஷா, அழகிப்போட்டிகளில் வெற்றி பெற்று சினிமாவில் அறிமுகமானார். ஆரம்பத்தில் கிடைத்த சிறிய வாய்ப்புகளை திறமையாக பயன்படுத்திய அவர், 'மௌனம் பேசியதே' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதன்பிறகு 'சாமி', 'கில்லி', 'திருப்பாச்சி', 'ஆறு', 'விண்ணைத்தாண்டி வருவாயா', '96', 'பொன்னியின் செல்வன்', 'லியோ' உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்து, காலம் மாறினாலும் தனது மார்க்கெட்டை நிலைநிறுத்தியுள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;த்ரிஷாவின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் 'கில்லி'. இதில் அவர் நடித்த 'தனலட்சுமி' கதாபாத்திரம் இன்றும் ரசிகர்களின் மனதில் அழியாத இடத்தைப் பிடித்துள்ளது. விஜயுடன் இணைந்து அவர் வெளிப்படுத்திய திரை வேதியியல், குறும்பான நடிப்பு, உணர்ச்சிகரமான காட்சிகள் என அனைத்தும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தன. பல ஆண்டுகள் கடந்த பிறகும் அந்தக் கதாபாத்திரம் ரசிகர்களால் கொண்டாடப்படுவது, த்ரிஷாவின் இயல்பான நடிப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;திரையில் முன்னணி நடிகையாக இருந்தாலும், படப்பிடிப்பு தளங்களில் எப்போதும் எளிமையாக பழகும் நடிகையாகவே த்ரிஷா அறியப்படுகிறார். மூத்த நடிகர்கள் முதல் புதிய உதவி இயக்குநர்கள் வரை அனைவரிடமும் ஒரே மாதிரியான மரியாதையுடன் பேசுவார் என்றும், படக்குழுவினருடன் நட்பாக பழகுவார் என்றும் அவருடன் பணியாற்றிய பலர் கூறியுள்ளனர். இந்த எளிமையான அணுகுமுறையே அவரை சக கலைஞர்களின் செல்ல நடிகையாக மாற்றியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;திரையுலகில் த்ரிஷாவைப் பற்றி அதிகம் பேசப்படும் விஷயங்களில் ஒன்று அவரது நட்புதான். நண்பர்கள் வாழ்க்கையில் புதிய உயரத்தை அடைந்தால் முதல் ஆளாக வாழ்த்து சொல்ல வேண்டும், அவர்களின் மகிழ்ச்சியை மனதார கொண்டாட வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருப்பதாக நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். அதேபோல், யாருக்காவது சிரமம் ஏற்பட்டால் முடிந்த உதவியைச் செய்யவும், ஆறுதல் கூறவும் தயங்காத குணம் அவரிடம் இருப்பதாகவும் திரையுலகில் பலரும் பாராட்டியுள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பொதுவாக சினிமா உலகில் போட்டி அதிகம் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், மற்றவர்களின் வெற்றியை மனதார பாராட்டும் குணம் கொண்ட நடிகையாக த்ரிஷா குறிப்பிடப்படுகிறார். சக நடிகர்கள், இயக்குநர்கள் அல்லது தொழில்நுட்பக் கலைஞர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு கிடைக்கும் வெற்றியை தனது வெற்றியாகவே கருதி வாழ்த்து தெரிவிப்பார் என்று அவருடன் பழகியவர்கள் கூறுகின்றனர். இதுவே அவருக்கு திரையுலகில் தனி மரியாதையை பெற்றுத் தந்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முதல்வர் விஜயுடனும் த்ரிஷாவுக்கும் நீண்டகாலமாக நல்ல நட்பு இருந்து வருவதாக பலரும் கூறி வருகின்றனர். சமீபத்தில் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற விஜயை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததுடன், அவரது பதவியேற்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஒரு நண்பரின் வாழ்க்கையில் முக்கியமான தருணத்தில் அருகில் நிற்பதே உண்மையான நட்பு என்பதை தனது செயலின் மூலம் த்ரிஷா வெளிப்படுத்தியதாக ரசிகர்கள் பாராட்டினர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;த்ரிஷாவுடன் பணியாற்றிய பல இயக்குநர்கள், அவரது தொழில்முறை அணுகுமுறையை எப்போதும் பாராட்டியுள்ளனர். ஒரு காட்சிக்காக எத்தனை முறை நடித்துக் காட்ட வேண்டியிருந்தாலும் அதே உற்சாகத்துடன் நடித்துக் கொடுப்பார் என்றும், கதாபாத்திரத்திற்காக முழுமையாக தன்னை மாற்றிக் கொள்வார் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த அர்ப்பணிப்புதான் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக அவரை முன்னணி நடிகையாக வைத்திருக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சினிமாவைத் தாண்டியும், விலங்குகள் மீது அதிக அன்பு கொண்ட நடிகையாக த்ரிஷா அறியப்படுகிறார். சாலையோர விலங்குகளை பாதுகாக்க வேண்டும், அவற்றை அன்புடன் பராமரிக்க வேண்டும் என்ற கருத்துகளை சமூக வலைத்தளங்கள் மூலமாக பலமுறை பகிர்ந்துள்ளார். உயிரினங்கள் மீதான அவரது இந்த அக்கறை, ரசிகர்களிடையே மேலும் மதிப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நீண்டகாலமாக திரையுலகில் இருக்கும் எந்த நட்சத்திரத்தையும் போல, த்ரிஷாவைப் பற்றியும் பல்வேறு வதந்திகள் அவ்வப்போது பரவியுள்ளன. ஆனால் அவற்றுக்கு தேவையற்ற முக்கியத்துவம் கொடுக்காமல், தனது நடிப்பிலும் தொழிலிலும் மட்டுமே கவனம் செலுத்தியுள்ளார். புதிய படங்கள், புதிய கதாபாத்திரங்கள் மற்றும் ரசிகர்களின் அன்பு ஆகியவற்றின் மூலம், தனது பயணத்தை அவர் தொடர்ந்து வெற்றிகரமாக முன்னெடுத்து வருகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தன்னை இந்த உயரத்திற்கு கொண்டு வந்தது ரசிகர்கள்தான் என்பதை த்ரிஷா எப்போதும் மறந்ததில்லை. படப்பிடிப்பு தளங்களில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வது, சமூக வலைத்தளங்களில் அவர்களின் வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவிப்பது போன்ற செயல்கள், ரசிகர்களுடன் அவருக்கு இருக்கும் நெருக்கத்தை வெளிப்படுத்துகின்றன. அதனால்தான் இளம் தலைமுறை ரசிகர்களும், பல ஆண்டுகளாக அவரை ஆதரித்து வரும் ரசிகர்களும் ஒரே அளவில் அவரை கொண்டாடி வருகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அழகு, திறமை, வெற்றி ஆகியவை ஒரு நடிகையை உச்சத்திற்கு கொண்டு செல்லலாம். ஆனால் மனிதநேயம், எளிமை, நட்பு மற்றும் நேர்மை போன்ற குணங்கள்தான் அந்த இடத்தை நீண்ட காலம் தக்க வைத்திருக்க உதவுகின்றன. அந்த வகையில், த்ரிஷா வெறும் வெற்றிகரமான நடிகை மட்டுமல்ல; நண்பர்களின் மகிழ்ச்சியில் மனதார மகிழும் நல்ல தோழி, சக கலைஞர்களை மதிக்கும் பண்பாளர், ரசிகர்களின் அன்பை மதிக்கும் எளிமையான நட்சத்திரம் என்ற அடையாளத்தையும் உருவாக்கியுள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;திரையில் பல மறக்க முடியாத கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்களின் மனதை வென்ற த்ரிஷா, நிஜ வாழ்க்கையிலும் தனது பணிவு, நட்பு மற்றும் மனிதநேயத்தால் பலரின் இதயத்தில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ளார். காலம் மாறினாலும், தலைமுறைகள் மாறினாலும், த்ரிஷா மீது ரசிகர்கள் வைத்திருக்கும் அன்பு குறையாமல் இருப்பதற்கு காரணம் அவரது வெற்றிப் படங்கள் மட்டுமல்ல; நல்ல மனிதராக அவர் சம்பாதித்திருக்கும் மரியாதையும்தான். அதனால்தான், இன்று வரை தமிழ் சினிமாவின் எவர்கிரீன் நாயகிகளில் ஒருவராக த்ரிஷா கொண்டாடப்பட்டு வருகிறார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>politics</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/trisha-krishnan-why-kollywood-stars-praise-her-character-compared-to-legendary-saroja-devi-sdg7rru"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Rajini Speech: ரஜினிகாந்த் பேசியதால் பரபரப்பான 10 சம்பவங்கள்... இன்னும் மறக்காத தமிழகம்! ஒரு சுவாரஸ்யமான லிஸ்ட்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/politics/rajinikanth-controversies-10-statements-that-sparked-massive-debate-in-tamil-nadu-tk04yvp</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/politics/rajinikanth-controversies-10-statements-that-sparked-massive-debate-in-tamil-nadu-tk04yvp</guid>
            <pubDate>Wed, 24 Jun 2026 13:56:19 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;நடிகர் ரஜினிகாந்தின் பேச்சுகள் ஏன் எப்போதும் அரசியல் சர்ச்சையாகின்றன என்பதை இந்த கட்டுரை ஆராய்கிறது. கடந்த 30 ஆண்டுகளில் ரஜினி பேசியதால் எழுந்த முக்கிய சர்ச்சைகள் மற்றும் அவற்றின் பின்னணியை இது விவரிக்கிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kvwbg00q5xz92nj8nrpyncnd,imgname-chatgpt-image-jun-24--2026--01-28-28-pm--1--1782289268758.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;நடிகர் ரஜினிகாந்தின் பேச்சுகள் ஏன் எப்போதும் அரசியல் சர்ச்சையாகின்றன என்பதை இந்த கட்டுரை ஆராய்கிறது. கடந்த 30 ஆண்டுகளில் ரஜினி பேசியதால் எழுந்த முக்கிய சர்ச்சைகள் மற்றும் அவற்றின் பின்னணியை இது விவரிக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருக்கும் ரஜினிகாந்த், திரையில் பேசும் வசனங்களைப் போலவே, நிஜ வாழ்க்கையில் பேசும் வார்த்தைகளாலும் பலமுறை தலைப்புச் செய்தியாகியுள்ளார். ஒரு சாதாரண நடிகரின் கருத்தாக இல்லாமல், தமிழக அரசியல், சமூக சூழல், ரசிகர்களின் உணர்வு, ஊடகங்களின் கவனம் என பல காரணங்களால் அவரது ஒவ்வொரு பேச்சும் பெரிதாக விவாதிக்கப்படுகிறது. சில பேச்சுகள் தேர்தல் அரசியலையே பாதித்ததாகக் கூறப்படுகின்றன; சில பேச்சுகள் சமூக வலைதளங்களில் பல நாட்கள் டிரெண்டானது. சமீபத்தில் &quot;நான் பேசினாலே பிரச்சனைதான்&quot; என்று அவரே கூறிய நிலையில், கடந்த 30 ஆண்டுகளில் அதிகம் பேசப்பட்ட அவரது முக்கிய சர்ச்சைகளை விரிவாகப் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரஜினிகாந்தின் அரசியல் தாக்கத்தை உலகுக்கே உணர வைத்த சம்பவம் 1996-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்தான். அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அரசுக்கு எதிராக மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவிய சூழலில், ரஜினி வெளிப்படையாக தனது கருத்தை தெரிவித்தார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&quot;மீண்டும் ஜெயலலிதா ஆட்சி வந்தால் ஆண்டவனாலும் தமிழகத்தை காப்பாற்ற முடியாது.&quot;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்த ஒரு வரி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியது. அந்தக் காலத்தில் சமூக வலைதளங்கள் இல்லாத நிலையிலும், தொலைக்காட்சி, நாளிதழ்கள், பொதுக்கூட்டங்கள் என எங்கு பார்த்தாலும் இந்தப் பேச்சே பேசப்பட்டது. பின்னர் நடைபெற்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், ரஜினியின் இந்தக் கருத்து தேர்தல் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக அரசியல் ஆய்வாளர்கள் நீண்ட காலமாக விவாதித்து வருகின்றனர். இன்று வரை இது அவரது மிகப் பெரிய அரசியல் அறிக்கையாகவே பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;1995-ல் 'பாட்ஷா' வெற்றி விழாவில் ரஜினிகாந்த் பேசிய சில கருத்துகள் அப்போதைய தமிழக அரசை மறைமுகமாக விமர்சித்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. &quot;தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் அதிகரித்து வருகிறது&quot; என்ற அவரது கருத்து பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.&lt;/p&gt;&lt;p&gt;இந்தப் பேச்சுக்குப் பிறகு சினிமாவுக்கும் அரசியலுக்கும் இடையிலான எல்லை மங்கத் தொடங்கியது. ரசிகர்கள் இதை துணிச்சலான கருத்து என்று பாராட்டிய நிலையில், அரசியல் வட்டாரங்களில் பல்வேறு எதிர்வினைகள் எழுந்தன. பல அரசியல் விமர்சகர்கள், &quot;ரஜினியின் அரசியல் பயணம் அன்றே தொடங்கியது&quot; என்று இந்த நிகழ்வைக் குறிப்பிடுகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;1998-ல் கோவை தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. அந்த நேரத்தில் ரஜினிகாந்த், &lt;strong&gt;&quot;முதலில் நம் வீட்டை சுத்தம் செய்வோம்; பிறகு அடுத்த வீட்டைப் பார்ப்போம்.&quot; &lt;/strong&gt;என்று கூறினார்.&lt;/p&gt;&lt;p&gt;இந்த ஒரு வரி பலவிதமாகப் புரிந்துகொள்ளப்பட்டது. சிலர் அதை அமைதிக்கான அழைப்பு என்று வரவேற்றனர். மற்றவர்கள் அது ஒரு குறிப்பிட்ட தரப்பை குறிவைத்த கருத்து என்று விமர்சித்தனர். அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுக்குச் சாதகமாக அந்தப் பேச்சை விளக்கியதால், பல நாட்கள் இது ஊடகங்களில் முக்கிய செய்தியாக இருந்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;2017-ல் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி உச்சத்தில் இருந்தபோது, ரஜினிகாந்த், &ldquo;சிஸ்டம் கெட்டுப்போய்விட்டது... அதை மாற்ற வேண்டும்.&rdquo;என்று கூறினார். இந்த ஒரு வரி தமிழக அரசியலை பரபரப்பாக்கியது. &quot;ரஜினி கட்சி ஆரம்பிக்கப் போகிறார்&quot;, &quot;புதிய அரசியல் வரப்போகிறது&quot; என்ற செய்திகள் தினமும் வெளியாகின. ரசிகர்கள் மாவட்டம் தோறும் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தத் தொடங்கினர். ஆனால் இறுதியில் அவர் அரசியலுக்கு வரவில்லை. இருந்தாலும் &quot;சிஸ்டம் சரியில்லை&quot; என்ற வசனம் இன்று வரை அரசியல் விவாதங்களில் மேற்கோளாக பயன்படுத்தப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;2018-ல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் சம்பவ இடத்திற்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, &lt;strong&gt;&quot;இந்தப் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியிருந்தார்கள்.&quot; &lt;/strong&gt;என்று கூறினார்.&lt;/p&gt;&lt;p&gt;இந்த கருத்து மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. போராட்டத்தில் பங்கேற்றவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல அரசியல் கட்சிகள் கடுமையாக எதிர்த்தனர். மறுபுறம், சிலர் ரஜினி கூறியது சட்டம்-ஒழுங்கு குறித்து மட்டுமே என்றனர். இதுவே அவரது அதிகம் விமர்சிக்கப்பட்ட பேச்சுகளில் ஒன்றாக உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;'துக்ளக்' இதழ் ஆண்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த்,&quot;துக்ளக் படிப்பவர்கள் அறிவாளிகள்.&quot; என்று கூறினார். இந்தப் பேச்சு உடனடியாக சமூக வலைதளங்களில் டிரெண்டானது. ஒரு குறிப்பிட்ட இதழைப் படிப்பவர்களை மட்டும் அறிவாளிகள் என்று கூறுவது சரியா என்ற கேள்வி எழுந்தது. பலரும் ஆதரித்தனர்; பலரும் எதிர்த்தனர். சில நாட்கள் முழுவதும் மீம்கள், விவாதங்கள், தொலைக்காட்சி விவாதங்கள் என இந்த ஒரு வரியே பேசப்பட்டது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த், &quot;அறிவு என்பது புத்தி மட்டுமல்ல; நாம் யார், எங்கிருந்து வந்தோம், சாதி உள்ளிட்ட அனைத்தையும் உள்ளடக்கியது.&quot; என்று விளக்கமளித்தார்.&lt;/p&gt;&lt;p&gt;ஆனால் சமூக வலைதளங்களில் இந்தப் பேச்சின் ஒரு பகுதி மட்டும் வைரலானதால் கடுமையான விவாதம் வெடித்தது. பல அரசியல் தலைவர்கள் அவரை விமர்சித்தனர். குறிப்பாக சில கட்சித் தலைவர்கள் இது தவறான கருத்து என்று கூறினர். மறுபுறம், அவரது ஆதரவாளர்கள் முழுப் பேச்சையும் கேட்காமல் விமர்சிக்கக் கூடாது என்று வாதிட்டனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;2017-ல் அரசியலுக்கு வருவதாக அறிவித்த ரஜினிகாந்த், பல ஆண்டுகள் ரசிகர்களை எதிர்பார்ப்பில் வைத்திருந்தார். மாவட்ட வாரியாக ரசிகர் மன்றங்கள் அரசியல் பணிகளுக்குத் தயாரான சூழலில், 2020 இறுதியில் உடல்நலக் காரணங்களைக் குறிப்பிட்டு அரசியலுக்கு வர முடியாது என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. பலர் கண்ணீர் மல்க கருத்து தெரிவித்தனர். அரசியல் கட்சிகளும் இதற்கு தனித்தனியாக பதிலளித்தன. ஒரு அரசியல் கட்சி தொடங்காமலேயே இவ்வளவு விவாதம் ஏற்பட்டது என்பது ரஜினியின் செல்வாக்கை காட்டுவதாக கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராததற்கு 'திமுக குடும்பத்தின் அச்சுறுத்தலே காரணம்' என தவெக (TVK) பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கூறிய குற்றச்சாட்டை ரஜினிகாந்த் திட்டவட்டமாக மறுத்தார். அந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், &quot;காலம் பேசாது... ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்&quot; என்று அவர் காட்டமாகப் பதிலடி கொடுத்தார். இந்த ஒரு வரி சில மணி நேரங்களிலேயே சமூக வலைதளங்களில் டிரெண்டானது. ரசிகர்கள் அதை ஆதரவாக பகிர்ந்தனர்; அரசியல் வட்டாரங்களில் பல்வேறு விளக்கங்கள் கூறப்பட்டன. ரஜினியின் ஒரு வரி கூட இன்னும் செய்தியாக மாறுகிறது என்பதற்கு இது மற்றொரு உதாரணம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;'தர்மன்' திரைப்பட அறிவிப்பு விழாவில் ரஜினிகாந்த் சிரித்தபடியே,&quot;நான் பேசினாலே பிரச்சனைதான் வருகிறது.&quot; என்று கூறினார். மேலும், &ldquo;பிடிக்காதவர்களுக்கு நாம் என்ன செய்தாலும் பிடிக்காது. பிடித்தவர்களுக்கு நாம் செய்வதெல்லாம் சரி என்று நினைப்பதும் தவறு.&rdquo;என்றும் அவர் தெரிவித்தார். இந்த பேச்சு பலரால் முதிர்ச்சியான சுய விமர்சனமாகப் பார்க்கப்பட்டது. கடந்த காலங்களில் அவரது பல கருத்துகள் பெரிய விவாதங்களை ஏற்படுத்தியதை நினைவுகூர்ந்த ரசிகர்கள், &quot;ரஜினியே இதை நகைச்சுவையாக ஒப்புக்கொண்டார்&quot; என்று சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரஜினிகாந்தின் பேச்சுகள் சர்ச்சையாக மாறுவதற்கு காரணம் அவர் ஒரு நடிகர் என்பதல்ல; தமிழ் சமூகத்தில் அவர் பெற்றிருக்கும் அபாரமான செல்வாக்குதான். கடந்த மூன்று தசாப்தங்களில் அவர் பேசிய சில கருத்துகள் தேர்தல் அரசியலையும், சில கருத்துகள் சமூக விவாதங்களையும், சில கருத்துகள் இணைய உலகையும் ஆக்கிரமித்துள்ளன. அதனால்தான் இன்று கூட ரஜினி மேடையில் மைக் பிடித்தாலே, ரசிகர்களைவிட முதலில் ஊடகங்களும் அரசியல் வட்டாரங்களுமே அவர் என்ன பேசப் போகிறார் என்று காத்திருக்கின்றன.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>politics</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/politics/rajinikanth-controversies-10-statements-that-sparked-massive-debate-in-tamil-nadu-tk04yvp"/>
        </item>
        <item>
            <title><![CDATA[TVK Government : இவருக்கு கோபம் வந்தால் தவெக ஆட்சி கவிழுமாம்! யார் தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/politics/who-can-topple-tvk-government-with-his-anger-ublbvpg</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/politics/who-can-topple-tvk-government-with-his-anger-ublbvpg</guid>
            <pubDate>Mon, 13 Jul 2026 11:05:28 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;TVK Government : திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கோபம் வந்தால் தவெக ஆட்சி கவிழும் என்று அதிமுக முக்கியப் பிரமுகர் ஒருவர் கூறியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யார் அந்த அதிமுக பிரமுகர்ன்னு தெரியுமா?&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kx5hjzb2wjr5f52g924t7v12,imgname-mixcollage-10-jul-2026-01-46-pm-3242-1783671389538.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;TVK Government : திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கோபம் வந்தால் தவெக ஆட்சி கவிழும் என்று அதிமுக முக்கியப் பிரமுகர் ஒருவர் கூறியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யார் அந்த அதிமுக பிரமுகர்ன்னு தெரியுமா?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழகத்தில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் ஆதரவால் மட்டுமே நீடிப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வரும் நிலையில், இது குறித்து ராஜேந்திர பாலாஜி முக்கியக் கருத்துகளை முன்வைத்துள்ளார். அவர் கூறுகையில், &quot;திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எப்போது கோபம் வருகிறதோ, அப்போது தவெக ஆட்சி முடிவுக்கு வரும். அவருக்கு அந்த கோபம் வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்,&quot; என்று தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தவெகவின் தற்போதைய வெற்றி ஒரு நிலையான வெற்றி அல்ல என்றும், அது வெறும் 'கானல் நீர்' போன்றது என்றும் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார். தவெகவுக்கு வாக்களித்தவர்களில் பலருக்கு வேட்பாளர் யார் என்பது கூட தெரியாது என்றும், தெரியாமல் அளித்த அந்த வாக்குகள் செல்லாத வாக்குகளுக்கு சமம் என்றும் அவர் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;மேலும், இந்த ஆட்சி ஒரு மைனாரிட்டி ஆட்சி என்றும், பல்வேறு கூட்டணிக் கட்சிகளின் உதவியுடன் தற்காலிகமாகவே இயங்கி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் தவெகவுக்கு உரிய பாடம் புகட்டுவார்கள் என்றும் ராஜேந்திர பாலாஜி தனது கருத்தை ஆணித்தரமாகப் பதிவிட்டுள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Money Tree : பணம் காய்க்கும் மரம் உண்மையிலேயே இருக்கு! எங்க இருக்கு தெரியுமா?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மறுபுறம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் தவெக ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்து வருகிறார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், மின்வெட்டு மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகளை இந்த அரசு கவனிக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த அரசை வீழ்த்துவதற்கு திமுக தொண்டர்கள் உறுதியேற்க வேண்டும் என்று ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;&lt;p&gt;அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு பெரும் எதிர்க்கட்சிகளும் தவெக ஆட்சியை விமர்சித்து வரும் சூழலில், தமிழக அரசியலில் அடுத்தகட்ட மாற்றங்கள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க :&lt;/strong&gt; EV Conversion : பழைய காரை EV காராக மாற்ற செம்ம ஐடியா! எவ்வளவு செலவாகும்?&lt;/p&gt;]]></content:encoded>
            <category>politics</category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/politics/who-can-topple-tvk-government-with-his-anger-ublbvpg"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Jana Nayagan: ஜனநாயகன் படத்தை சரசரவென வெட்டித்தள்ளிய சென்சார்.?! நீக்கப்பட்ட 12 முக்கிய காட்சிகள் என்னென்ன?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/jana-nayagan-censor-board-makes-12-major-cuts-what-are-the-12-key-scenes-removed-from-vijay-film-uq9u6zy</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/jana-nayagan-censor-board-makes-12-major-cuts-what-are-the-12-key-scenes-removed-from-vijay-film-uq9u6zy</guid>
            <pubDate>Sat, 11 Jul 2026 11:48:43 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;'ஜனநாயகன்' திரைப்படம், தணிக்கைக் குழுவின் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு 'A' சான்றிதழைப் பெற்றுள்ளது. க்ளைமாக்ஸ் உட்பட 12 முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்ட போதிலும், படத்தின் நீளம் 3 மணி நேரமாக நீடிக்கிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kx7wh0ey5q084j7bdj2yrwxb,imgname-chatgpt-image-jul-11--2026--11-34-23-am--1--1783749968349.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;'ஜனநாயகன்' திரைப்படம், தணிக்கைக் குழுவின் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு 'A' சான்றிதழைப் பெற்றுள்ளது. க்ளைமாக்ஸ் உட்பட 12 முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்ட போதிலும், படத்தின் நீளம் 3 மணி நேரமாக நீடிக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ் திரையுலகமே ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தளபதி விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் ஒருவழியாக சென்சார் சோதனைகளைக் கடந்து 'A' சான்றிதழைப் பெற்றுள்ளது. ஆனால், இந்தச் சான்றிதழைப் பெறுவதற்குள் படக்குழுவினர் தணிக்கைக் குழுவிடம் (CBFC) பெரும் போராட்டத்தையே நடத்த வேண்டியிருந்தது. படத்தின் அரசியல் வீரியத்தைக் கண்டு மிரண்ட சென்சார் போர்டு, கதையின் போக்கையே மாற்றும் அளவுக்கு பல காட்சிகளைச் சரசரவென வெட்டித்தள்ளியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ்நாட்டின் முன்னணி அரசியல் கட்சிகளை நேரடியாகவோ அல்லது குறியீடாகவோ நினைவூட்டும் வகையில் அமைந்திருந்த வார்த்தைகள் மற்றும் சின்னங்கள் முற்றிலும் மியூட் (Mute) செய்யப்பட்டுள்ளன. அதேபோல், நடப்பு அரசியல் சூழலை மிகக் கடுமையாக விமர்சித்து விஜய் பேசும் சில அனல் பறக்கும் வசனங்களின் ஆடியோவும், தேர்தல் சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தும் வகையிலான சில உணர்வுப்பூர்வமான வசனங்களும் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன. நிஜ அரசியல் தலைவர்களின் பெயர்களோடு ஒத்துப் போகும் வகையிலான பெயர்கள் படத்தில் வரும்போது அவை கேட்காதவாறு ஆடியோ கட் செய்யப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;படத்தில் தேசியக் கொடி தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக சென்சார் போர்டு ஆட்சேபனை தெரிவித்ததால், அந்த காட்சியின் பின்னணி மற்றும் விபரம் முற்றிலும் மாற்றப்பட்டுள்ளது. மேலும் சட்டம், காவல்துறை, அரசு பாதுகாப்புப் படைகளின் செயல்பாடுகளைக் கேள்வி கேட்கும் மற்றும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலான சில முக்கிய காட்சிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. பொது அமைப்புகள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களை தவறாக சித்தரிக்கும் வசனங்களும் தணிக்கைக் குழுவால் நீக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;படத்தில் வரும் பிரம்மாண்டமான அரசியல் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டக் காட்சிகளின் நீளம் சட்டம் ஒழுங்கு காரணங்களுக்காகக் குறைக்கப்பட்டுள்ளது. சண்டைக் காட்சிகளில் வன்முறையின் வீரியம் அதிகமாக இருந்ததால், தியேட்டர்களில் பார்க்கும்போது பதற்றத்தை ஏற்படுத்தும் பல 'ஷாட்கள்' (Shots) வெட்டி சுருக்கப்பட்டுள்ளன. திரையில் அதிகமாகத் தெரிந்த இரத்தக் கறைகள், கொடூரமான தாக்குதல் காட்சிகளின் நீளம் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளதுடன், கதாபாத்திரங்கள் பேசும் கடுமையான சொற்கள் அனைத்தும் 'பீப்' (Beep) செய்யப்பட்டு மியூட் செய்யப்பட்டுள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;படத்தின் மிக முக்கிய பகுதியான க்ளைமாக்ஸ் காட்சியில் அரசியல் ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சில வசனங்கள் மற்றும் குறியீட்டு சின்னங்களில் சென்சார் போர்டின் உத்தரவுப்படி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இப்படி சென்சார் போர்டு சரசரவென 12 முக்கிய மாற்றங்களைச் செய்து பல காட்சிகளை வெட்டித்தள்ளிய போதிலும், படத்தின் நீளம் குறையவில்லை. தணிக்கைக்குப் பிறகு 'ஜனநாயகன்' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரன்னிங் டைம் 3 மணி நேரம் 3 நிமிடங்கள் (183 நிமிடங்கள்) என உறுதி செய்யப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு சென்சார் சிக்கல்கள் முடிவுக்கு வந்துள்ளதால், 'ஜனநாயகன்' படத்தின் புதிய அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என ஒட்டுமொத்த கோலிவுட்டும், விஜய் ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>politics</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/jana-nayagan-censor-board-makes-12-major-cuts-what-are-the-12-key-scenes-removed-from-vijay-film-uq9u6zy"/>
        </item>
        <item>
            <title><![CDATA[CM Vijay: விஜய்க்கு சிம்மாசனம் கிடைத்தது எப்படி.?! சினிமாவிலும், அரசியலிலும் வெற்றியை தேடி கொடுத்த சீக்ரெட் இதுதான்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/politics/cm-vijay-success-secret-how-he-conquered-cinema-and-politics-to-claim-his-throne-v9grtli</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/politics/cm-vijay-success-secret-how-he-conquered-cinema-and-politics-to-claim-his-throne-v9grtli</guid>
            <pubDate>Mon, 22 Jun 2026 11:21:30 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ஆரம்பகால தோல்விகளை தனது விடாமுயற்சி மற்றும் ஒழுக்கத்தால் வெற்றிகளாக மாற்றியவர் தளபதி விஜய். பல சவால்களையும் கடந்து, அரசியலிலும் மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்று தமிழக முதல்வராக உயர்ந்த அவரது பயணம், உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kvpy05qraqfd4sh2vqc1ch6b,imgname-chatgpt-image-jun-22--2026--11-18-03-am--1--1782107346680.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஆரம்பகால தோல்விகளை தனது விடாமுயற்சி மற்றும் ஒழுக்கத்தால் வெற்றிகளாக மாற்றியவர் தளபதி விஜய். பல சவால்களையும் கடந்து, அரசியலிலும் மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்று தமிழக முதல்வராக உயர்ந்த அவரது பயணம், உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒரு மனிதரின் வெற்றிக்கு அதிர்ஷ்டம் மட்டும் காரணமல்ல; விடாமுயற்சி, ஒழுக்கம், சரியான நேரத்தில் எடுத்த முடிவுகள் ஆகியவையே உண்மையான காரணங்கள். அதற்கு சிறந்த உதாரணமாக திகழ்பவர் தமிழக முதல்வர் தளபதி விஜய். சினிமாவில் இயக்குநரின் மகனாக அறிமுகமானாலும், அதன் பின்னர் ஒவ்வொரு வெற்றியையும் தனது உழைப்பால் மட்டுமே கட்டியெழுப்பியவர். இன்று அரசியலிலும் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருப்பது, தொடர்ந்து போராடிய மனப்பக்குவத்திற்கும் தன்னம்பிக்கைக்கும் கிடைத்த பரிசாகவே பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விஜயின் ஆரம்பகால சினிமா பயணம் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் தனது மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்த பல இயக்குநர்களிடம் பேசியதாக கூறப்பட்டாலும், பலரும் தயக்கம் காட்டினர். இறுதியில் ரசிகன் படத்தின் மூலம் அவரை கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். ஆனால் அந்த அறிமுகம் மட்டுமே வெற்றியை உறுதி செய்யவில்லை. ஆரம்பத்தில் பல படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இருந்தாலும் அவர் மனம் தளரவில்லை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விஜயை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தியது அவரது ஒழுக்கமும், அர்ப்பணிப்பும். படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் வருவது, தினமும் நடனப் பயிற்சி செய்வது, சண்டைக் காட்சிகளுக்காக தனியாக தயாராவது, நடிப்பில் தொடர்ந்து முன்னேற்றம் காண முயற்சிப்பது போன்ற பழக்கங்கள் அவரை மெல்ல மெல்ல உயர்த்தின. அவரைப் பற்றிய விமர்சனங்களையும் வதந்திகளையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், தனது இலக்கில் மட்டுமே கவனம் செலுத்தியதே அவரது மிகப்பெரிய பலமாக அமைந்தது. முதல் 10 படங்கள் அவருக்கு பல &amp;nbsp;புதிய அனுபவங்களை தந்ததாக விஜய் தனது நண்பர்களிடம் சொல்லி வந்துள்ளார். &amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அடித்தட்டு மக்களிடம் தனது முகத்தை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக விஜயகாந்துடன் இணைந்து நடித்ததும் அவரது சினிமா பயணத்தில் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிறகு பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, குஷி, கில்லி, திருப்பாச்சி, போக்கிரி, துப்பாக்கி, கத்தி, மெர்சல், மாஸ்டர், லியோ போன்ற வெற்றிப்படங்கள் மூலம் வசூல் நாயகனாக மட்டுமல்லாமல், ரசிகர்களின் மனதிலும் நிரந்தர இடத்தைப் பிடித்தார். எந்த வகையான கதைகள் ரசிகர்களை கவரும் என்பதை சரியாக கணித்து, அதற்கேற்ற கதைகளை தேர்வு செய்ததே அவரது வெற்றியின் முக்கிய ரகசியமாக அமைந்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அரசியலிலும் விஜயின் பயணம் சவால்கள் நிறைந்ததாகவே இருந்தது. தேர்தல் களத்தில் குதித்த பிறகு பல்வேறு தடைகள், விமர்சனங்கள், அரசியல் தாக்குதல்கள் என பல சோதனைகளை அவர் எதிர்கொண்டார். பிரசாரம் செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தனிப்பட்ட வாழ்க்க குறித்து விமர்சனம் செய்து அவதூறு பரப்பப்பட்டது. &amp;nbsp;ஆனால் அவற்றை எல்லாம் அமைதியாக சமாளித்து, மக்கள் மத்தியில் நேரடியாக சென்று தனது கொள்கைகளை எடுத்துரைத்தார். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல் முறை வாக்களித்தவர்களின் நம்பிக்கையை பெற்றது அவரது மிகப்பெரிய பலமாக அமைந்தது. இறுதியில் மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்று தமிழக முதல்வராக உயர்ந்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விஜயின் வாழ்க்கை சொல்லும் மிகப்பெரிய பாடம் ஒன்று தான் &ndash; வாய்ப்பு கிடைப்பது முக்கியமல்ல; கிடைத்த வாய்ப்பை உழைப்பால் வெற்றியாக மாற்றுவதுதான் உண்மையான சாதனை. தோல்வியை கண்டு துவளாமல், விமர்சனங்களை பொருட்படுத்தாமல், தொடர்ந்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் எந்த உயரத்தையும் அடைய முடியும் என்பதை அவர் நிரூபித்துள்ளார். அதனால் தான் இன்று பல லட்சம் இளைஞர்களுக்கு அவர் ஒரு நடிகர் மட்டுமல்ல, விடாமுயற்சி, ஒழுக்கம் மற்றும் தன்னம்பிக்கையின் அடையாளமாக திகழும் ஒரு ரோல் மாடலாக பார்க்கப்படுகிறார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>politics</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/politics/cm-vijay-success-secret-how-he-conquered-cinema-and-politics-to-claim-his-throne-v9grtli"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Kollur Temple: விஜய்யைத் தொடர்ந்து கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு படையெடுத்த மற்றொரு முதல்வர்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/politics/kerala-leader-vd-satheesan-visits-kollur-mookambika-temple-after-vijay-w8yy6yl</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/politics/kerala-leader-vd-satheesan-visits-kollur-mookambika-temple-after-vijay-w8yy6yl</guid>
            <pubDate>Sat, 11 Jul 2026 09:45:20 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தமிழக முதலமைச்சர் விஜயை போலவே கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு சென்றுள்ளார் மற்றொரு முதல்வர். தென்னிந்திய அரசியல்வாதிகளுக்கு இந்த கோயில் ஒரு முக்கிய சக்தி மையமாக மாறியுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktxrv4zmkzgsqqa1gcbdtcm0,imgname-thalapathy-vijay-kolluru-1781263078388.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழக முதலமைச்சர் விஜயை போலவே கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு சென்றுள்ளார் மற்றொரு முதல்வர். தென்னிந்திய அரசியல்வாதிகளுக்கு இந்த கோயில் ஒரு முக்கிய சக்தி மையமாக மாறியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;உடுப்பி: கர்நாடகாவின் கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகை கோயில், தென்னிந்திய அரசியல் தலைவர்களின் நம்பிக்கைக்குரிய இடமாக மாறியுள்ளது. சமீபத்தில் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய் இங்கு வந்து சிறப்புப் பூஜை செய்தார். அவரைத் தொடர்ந்து, இப்போது கேரளாவின் புதிய முதல்வர் வி.டி. சதீசனும் மூகாம்பிகை அம்மனை தரிசனம் செய்துள்ளார். அதிகாலையிலேயே கோயிலுக்கு வந்த அவருக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் சிறப்புப் பூஜைகளிலும் கலந்துகொண்டு அம்மனின் ஆசிகளைப் பெற்றார்.&lt;img&gt;வி.டி. சதீசனின் வருகையை முன்னிட்டு கொல்லூர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. Z-பிளஸ் பிரிவு பாதுகாப்புடன் அவர் கோயிலுக்கு வந்தார். பூஜைக்குப் பிறகு, கோயில் நிர்வாகம் அவருக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தது. இங்கிருந்து சாலை மார்க்கமாக மங்களூர் சென்று, அங்கிருந்து விமானம் மூலம் பெங்களூருக்குப் பயணமானார். தென்னிந்திய அரசியல்வாதிகளுக்கு, குறிப்பாக கேரளா மற்றும் தமிழ்நாட்டுத் தலைவர்களுக்கு, கொல்லூர் ஒரு பவர் ஹவுஸ் போல. முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா முதல் மறைந்த எம்.ஜி.ஆர் வரை பலரும் இந்த அம்மனின் தீவிர பக்தர்கள். நடிகர் விஜய் தனது 'டிவிகே' கட்சியின் வெற்றிக்காக இங்கு வந்ததாகக் கூறப்படுகிறது. இப்போது சதீசனின் வருகையும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.&lt;img&gt;கொல்லூரில் நடத்தப்படும் 'சண்டிகா யாகத்திற்கு' ஒரு சிறப்பு சக்தி இருப்பதாக நம்பப்படுகிறது. அரசியல் எதிரிகளை வெல்லவும், ஆட்சியில் வரும் தடைகளை நீக்கவும் பெரிய தலைவர்கள் இங்கு ரகசியமாகவோ அல்லது வெளிப்படையாகவோ இந்த யாகத்தை நடத்துகிறார்கள். மூகாம்பிகை கல்விக்கும் அதிபதி என்பதால், நல்ல முடிவுகளை எடுக்கும் அறிவைப் பெறவும் தலைவர்கள் இங்கு வந்து வேண்டிக்கொள்கின்றனர். மொத்தத்தில், கொல்லூர் மூகாம்பிகை சந்நிதி தென்னிந்தியாவின் அரசியல் சக்தி மையமாகவே மாறிவிட்டது. விஜய், சதீசன் போன்ற புதிய தலைமுறை தலைவர்களும் இந்த பாரம்பரியத்தைத் தொடர்வது கோயிலின் மகிமைக்குச் சான்றாக உள்ளது.]]></content:encoded>
            <category>politics</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/politics/kerala-leader-vd-satheesan-visits-kollur-mookambika-temple-after-vijay-w8yy6yl"/>
        </item>
        <item>
            <title><![CDATA[திமுக, அதிமுகவுக்கு விஜய் வைத்த செக்! 16 தொகுதிகளில் நடக்கப்போகும் ‘அந்த’ சம்பவம்..அலறும் அறிவாலயம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/politics/vijays-big-plan-for-16-assembly-constituencies-zw3aq3y</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/politics/vijays-big-plan-for-16-assembly-constituencies-zw3aq3y</guid>
            <pubDate>Tue, 30 Jun 2026 10:39:59 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தற்போதைய அரசியல் சூழலில், தமிழகத்தின் பிரதானக் கட்சிகளான திமுக, அதிமுக மற்றும் தவெக ஆகியவற்றுக்கு இடையே நடக்கும் உள்கட்சி மோதல்கள், கட்சித் தாவல்கள், மற்றும் வரவிருக்கும் இடைத்தேர்தல் வியூகங்கள் குறித்து ஒரு விரிவான ஆய்வுப் பார்வை இதோ!&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwbemnp87yckg0djw5jmfh73,imgname-chatgpt-image-jun-30--2026--10-34-07-am-1782795884232.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தற்போதைய அரசியல் சூழலில், தமிழகத்தின் பிரதானக் கட்சிகளான திமுக, அதிமுக மற்றும் தவெக ஆகியவற்றுக்கு இடையே நடக்கும் உள்கட்சி மோதல்கள், கட்சித் தாவல்கள், மற்றும் வரவிருக்கும் இடைத்தேர்தல் வியூகங்கள் குறித்து ஒரு விரிவான ஆய்வுப் பார்வை இதோ!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தவெக தலைவர் விஜய், திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பின்னர் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். சபாநாயகராக தவெகவின் ஜே.சி.டி பிராபகர் பொறுப்பேற்றதால், சட்டமன்றத்தில் தவெகவின் நேரடிப் பலம் 106 ஆகக் குறைந்தது. காங்கிரஸ் கட்சி மட்டுமே தவெக அமைச்சரவையில் இணைந்துள்ளது; கம்யூனிஸ்ட்கள், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் வெளியிலிருந்து மட்டுமே ஆதரவளிக்கின்றன.&lt;/p&gt;&lt;p&gt;ஆட்சியைக் கவிழ்க்க திமுக மற்றும் அதிமுக வியூகம் வகுக்கலாம் என்ற அச்சத்தில், தவெக இடைத்தேர்தல்கள் மூலம் தனி மெஜாரிட்டி (தனிப் பெரும்பான்மை) பெறத் திட்டமிட்டுள்ளது.&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;அதிமுகவில் இருந்து விலகல்: &lt;/strong&gt;அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர் (விராலிமலை எம்எல்ஏ) மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் (கரூர் எம்எல்ஏ) ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். ஏற்கனவே 4 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்துள்ள நிலையில், தற்போது 7 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் உறுதியாகியுள்ளது.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;இடைத்தேர்தல் டார்கெட்: &lt;/strong&gt;மேலும் 4 வட மாவட்ட அதிமுக எம்எல்ஏக்களும், திமுகவில் அதிருப்தியில் இருக்கும் 4 எம்எல்ஏக்களும் தவெகவுடன் ரகசியப் பேச்சில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தத் திட்டங்கள் பலித்தால், மொத்தம் 16 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தவெக காய் நகர்த்தி வருகிறது. இதில் தவெக தனித்து வென்றுவிட்டால், பிற கட்சிகளின் தயவின்றி 5 ஆண்டுகள் நிலையான ஆட்சியைத் தர முடியும் என்பது விஜய்யின் கணக்கு.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;img&gt;&lt;p&gt;தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் நிலவும் உட்கட்சிப் பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கொங்கு மண்டலத்தின் வலுவான தலைவரான எஸ்.பி. வேலுமணி, எடப்பாடி பழனிசாமிக்கு (EPS) எதிராகத் தனது அதிருப்திக் கொடியைத் தூக்கியுள்ளார்.&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;பதவிப் போட்டி: &lt;/strong&gt;வேலுமணி தலைமையில் 25-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் இபிஎஸ்-க்கு எதிராகச் செயல்பட்டு, பின்னர் மீண்டும் இணைந்தனர். ஆனால், 21 ஆண்டுகள் மாவட்டச் செயலாளராக இருந்த வேலுமணிக்கு மீண்டும் அதே பதவி வழங்கப்படாதது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக கொடியோ, இபிஎஸ் புகைப்படமோ இடம்பெறவில்லை என்பது உள்கட்சிப் பிளவை அப்பட்டமாக்கியுள்ளது.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;பலவீனப்படும் அதிமுக:&lt;/strong&gt; ஒருபுறம் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தவெகவை நோக்கித் தாவுகின்றனர்; மறுபுறம் எஞ்சியிருக்கும் தலைவர்களும் இபிஎஸ் மீது கடுமையான அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றனர். இது அதிமுகவின் வாக்கு வங்கியைப் பலவீனப்படுத்தி, தவெகவை முதன்மை எதிர்க்கட்சியாகவோ அல்லது மாற்று சக்தியாகவோ மாற்ற வழிவகுக்கிறது.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆட்சியை இழந்த அதிர்ச்சியில் இருக்கும் திமுக, தவெக மற்றும் அதிமுகவில் இருந்து நடக்கும் எம்எல்ஏக்கள் இடமாற்றத்தைக் &quot;குதிரை பேரம்&quot; என்று விமர்சித்து வருகிறது. ஆனால், திமுகவின் கூட்டணிக் கட்சிகளுக்குள்ளேயே அதிருப்தி வெடித்துள்ளது.&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;மதிமுக - திமுக மோதல்: &lt;/strong&gt;மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ திமுக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மதிமுகவின் 2 எம்எல்ஏக்கள், திமுகவின் சின்னமான 'உதயசூரியன்' சின்னத்தில் போட்டியிட்டு வென்றதால், டெக்னிக்கலாக அவர்கள் திமுக எம்எல்ஏக்களாகவே மாற்றப்பட்டுள்ளனர்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;கழுதை பேரமா? யானை பேரமா?: &lt;/strong&gt;மதிமுக பொதுக்குழு முடிவின்படி அந்த எம்எல்ஏக்களை ராஜினாமா செய்யச் சொல்லியும், அவர்களைத் தடுத்துத் தன்வசமே வைத்திருக்க திமுக முயல்வதாக துரை வைகோ சாடியுள்ளார். &quot;தேர்தலில் 6,000 கோடி ரூபாய் செலவு செய்தும் திமுக தோற்றுள்ளது; மக்கள் மாற்றத்திற்காக ஒற்றைக் காசு வாங்காமல் தவெகவுக்கு வாக்களித்துள்ளனர். அப்படியிருக்க, தவெகவா குதிரை பேரம் பேசுகிறது? எங்கள் எம்எல்ஏக்களைத் தடுத்து வைத்துள்ள திமுக செய்வது என்ன பேரம்? கழுதை பேரமா அல்லது யானை பேரமா?&quot; என்று அவர் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;இதையும் படிங்க : Amazon Offer : அமேசானின் அதிரடி ஆஃபர்! குறைந்த விலையில் எந்த ஃபோன் வாங்கலாம்?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தவெகவின் இந்தத் திடீர் அரசியல் பாய்ச்சல் மற்றும் மாற்றுக்கட்சித் தலைவர்களை இழுக்கும் உத்தி குறித்து மூத்த பத்திரிகையாளர் மற்றும் அரசியல் விமர்சகர் அய்யநாதன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்:&lt;/p&gt;&lt;p&gt;&quot;ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 88 கோடி ரூபாய் பணம் கொடுத்ததாக சிபிஐ வழக்குகளையும், சோதனைகளையும் எதிர்கொண்ட முன்னாள் அதிமுக அமைச்சர் சி. விஜயபாஸ்கர் போன்றவர்களைக் கட்சிக்குள் இணைத்துக் கொண்டு விஜய் ஊழலை ஒழிப்பதாகக் கூறுவது ஆகப் பெரிய முரண்பாடு.&quot;&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;வாஷிங் மெஷின் அரசியல்: &lt;/strong&gt;மத்தியில் பாஜக எத்தகைய &quot;வாஷிங் மெஷின்&quot; அரசியலைச் செய்து ஊழல் குற்றச்சாட்டு உள்ளவர்களைத் தூய்மையாக்குகிறதோ, அதையேதான் தமிழகத்தில் விஜய்யும், தவெகவின் ஆதவ் அர்ஜுனாவும் செய்கிறார்கள் என்று அய்யநாதன் சாடியுள்ளார்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;உட்கட்சிப் பூசல் அபாயம்:&lt;/strong&gt; தவெகவில் ஆட்கள் பற்றாக்குறை இருப்பதால், வெளியிலிருந்து வரும் பணபலமும், அதிகார பலமும் கொண்ட தலைவர்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. இதனால், தவெகவின் ஆரம்பகால உண்மையான தொண்டர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, மிகக் குறுகிய காலத்திலேயே தவெகவுக்குள் மிகப்பெரிய உட்கட்சிப் பூசலும் அதிகாரப் போட்டியும் வெடிக்கும் என்றும் அவர் எச்சரிக்கிறார்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;2026 தமிழக அரசியல் களம் ஒரு பெரும் மாற்றத்தின் விளிம்பில் நிற்கிறது. தவெக ஆட்சியைப் பிடித்திருந்தாலும், அதன் அடித்தளம் இன்னும் ஸ்திரமடையவில்லை. வரவிருக்கும் 12 முதல் 16 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள்தான் விஜய்யின் அரசியல் எதிர்காலத்தையும், அவரது ஆட்சியின் ஆயுளையும் தீர்மானிக்கப் போகின்றன.&lt;/p&gt;&lt;p&gt;அதிமுகவின் உட்கட்சிப் பிளவுகளும், திமுக கூட்டணியில் ஏற்பட்டுள்ள விரிசல்களும் தவெகவுக்குச் சாதகமாக அமைந்தாலும், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான பழைய முகங்களை உள்வாங்குவதன் மூலம் தவெக தனது &quot;மாற்று அரசியல்&quot; மற்றும் &quot;ஊழல் எதிர்ப்பு&quot; என்ற தார்மீகக் கொள்கையில் சமரசம் செய்துகொள்கிறதா என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழாமல் இல்லை.&lt;/p&gt;&lt;p&gt;இதையும் படிங்க : தினமும் RO Water குடிக்கிறீர்களா? உங்கள் உடலில் நடக்கும் ஆபத்தான மாற்றங்கள்!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>politics</category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/politics/vijays-big-plan-for-16-assembly-constituencies-zw3aq3y"/>
        </item>
    </channel>
</rss>
