<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes"?>
<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Sat, 22 Aug 2026 15:22:00 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss/politics" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[CM Vijay: டைவர்ஸ் கேஸை வாபஸ் வாங்கிய சங்கீதா! சமரசமா? அரசியல் நிர்பந்தமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/vijay-sangeetha-divorce-news-sangeetha-withdraws-divorce-petition-against-cm-vijay-what-happened-articleshow-27gneze</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/vijay-sangeetha-divorce-news-sangeetha-withdraws-divorce-petition-against-cm-vijay-what-happened-articleshow-27gneze</guid>
            <pubDate>Sat, 08 Aug 2026 14:32:12 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Vijay Sangeetha Divorce: நடிகர் விஜயின் குடும்பப் பிரச்சனை முடிவுக்கு வந்ததா? மனைவி சங்கீதா விவாகரத்து மனுவை வாபஸ் பெற்றதன் பின்னணி என்ன? முழு விவரம் உள்ளே.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kze9jfz7mgabxx3askq4sxpm,imgname-vijay-sangeetha-divorce-petition-withdrawn-reason-1786112458727.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;சென்னை (தமிழ்நாடு):&lt;/strong&gt; தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் பர்சனல் லைஃப் மீண்டும் செய்திகளில் அடிபடுகிறது. சில மாதங்களாகவே விஜய்க்கும் அவரது மனைவி சங்கீதா சொர்ணலிங்கத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகப் பேசப்பட்டது. இருவரும் விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்றும் செய்திகள் பரவின. ஆனால் இப்போது, சங்கீதா தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவை வாபஸ் பெற்றுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;ஆறு மாதங்களுக்கு முன்பு யாருக்கும் தெரியாமல் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்த சங்கீதா, இப்போது அதை திடீரென வாபஸ் பெற என்ன காரணம்? இதோ முழு விவரம்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;விவாகரத்து மனு தாக்கல் செய்தது ஏன்?&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;கடந்த 2026 பிப்ரவரியில் சங்கீதா விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், விஜய் மீது சில தீவிரமான குற்றச்சாட்டுகளை அவர் வைத்திருந்தார். விஜய் மற்றொரு நடிகையுடன் தொடர்பில் இருப்பதாகவும், இந்த விஷயம் தனக்கு 2021-லேயே தெரியும் என்றும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், திருமண வாழ்க்கையில் விஜய் தன்னைப் புறக்கணிப்பதாகவும், மனரீதியாகத் துன்புறுத்துவதாகவும், பொது நிகழ்ச்சிகளில் இருந்து தன்னை ஒதுக்கி வைப்பதாகவும் சங்கீதா புகார் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, இருவரும் தனித்தனியாக வசித்து வருவதாகவும் கூறப்பட்டது.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;நடிகை த்ரிஷா கிருஷ்ணன் பெயர் எப்படி வந்தது?&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;சங்கீதா விவாகரத்து மனு தாக்கல் செய்ததும், சோஷியல் மீடியாவில் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் பெயர் பரவலாகப் பேசப்பட்டது. விஜய்யும் த்ரிஷாவும் பல ஹிட் படங்களில் இணைந்து நடித்துள்ளனர். சமீபத்திய ஆண்டுகளில் அவர்களது நட்பு, திருமணத்தை மீறிய உறவாக மாறியதாக வதந்திகள் பரவின. ஆனால், சங்கீதா தனது மனுவில் எந்த நடிகையின் பெயரையும் நேரடியாகக் குறிப்பிடவில்லை. விஜயோ அல்லது த்ரிஷாவோ இந்த வதந்திகள் குறித்து எந்த அதிகாரப்பூர்வ பதிலும் அளிக்கவில்லை. அதனால், த்ரிஷாவின் பெயர் வெறும் யூகமாகவே உள்ளது.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;மனுவை வாபஸ் பெற்றதற்கு என்ன காரணம்?&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;ஆகஸ்ட் 7-ஆம் தேதி, சங்கீதா தனது விவாகரத்து மனுவை வாபஸ் பெற்றுள்ளார். இதற்கான சரியான காரணம் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், மூன்று முக்கிய சாத்தியக்கூறுகள் விவாதிக்கப்படுகின்றன.&lt;/p&gt;&lt;ol&gt; &lt;li&gt;&lt;strong&gt;சமரசம்:&lt;/strong&gt; குடும்பப் பெரியவர்கள் அல்லது நண்பர்களின் தலையீட்டால், தம்பதியினருக்கு இடையேயான கருத்து வேறுபாடுகள் தீர்க்கப்பட்டிருக்கலாம். குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இருவரும் மீண்டும் ஒன்றாக வாழ முடிவு செய்திருக்க வாய்ப்புள்ளது.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;அரசியல் இமேஜ்:&lt;/strong&gt; மே 2026-ல் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்றார். இத்தகைய உயர் பதவியில் இருக்கும்போது, தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சைகள் அரசியலில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் இந்த முடிவை எடுத்திருக்கலாம்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;புதிய சட்ட உத்தி:&lt;/strong&gt; விவாகரத்துக்காக ஒருவருக்கொருவர் சண்டையிட்டுப் பிரிவதற்குப் (Contested Divorce) பதிலாக, இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் (Mutual Divorce) பிரிய முடிவு செய்திருக்கலாம். அதற்காக பழைய மனுவை வாபஸ் பெற்றிருக்கலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது. மொத்தத்தில், விஜய் மற்றும் சங்கீதாவின் நீண்டகால திருமண வாழ்க்கை மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்புமா அல்லது இது ஒரு சட்டரீதியான மாற்றம்தானா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.&lt;/li&gt;&lt;/ol&gt;]]></content:encoded>
            <category>politics</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/vijay-sangeetha-divorce-news-sangeetha-withdraws-divorce-petition-against-cm-vijay-what-happened-articleshow-27gneze"/>
        </item>
        <item>
            <title><![CDATA[சட்டைப் பையில் படம்... நெஞ்சுக்குள்ள விசுவாசம்? சட்டப்பேரவையில் ஓபிஎஸ் - செங்கோட்டையன் 'போட்டோ' மோதல்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/politics/tn-assembly-debates-shirt-pocket-photos-ops-and-sengottaiyan-trade-barbs-over-loyalties-392zy55</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/politics/tn-assembly-debates-shirt-pocket-photos-ops-and-sengottaiyan-trade-barbs-over-loyalties-392zy55</guid>
            <pubDate>Tue, 11 Aug 2026 13:26:16 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கே.ஏ.செங்கோட்டையன் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. கட்சி மாறியது யார் எனத் தொடங்கிய வாக்குவாதம், இறுதியில் இருவரின் சட்டைப் பையில் உள்ள புகைப்படம் குறித்த அரசியல் விசுவாச விவாதமாக மாறியது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kzqwjm7g7my2bj6k1psg5fhq,imgname-chatgpt-image-aug-11--2026--01-14-42-pm--1--1786434375919.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கே.ஏ.செங்கோட்டையன் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. கட்சி மாறியது யார் எனத் தொடங்கிய வாக்குவாதம், இறுதியில் இருவரின் சட்டைப் பையில் உள்ள புகைப்படம் குறித்த அரசியல் விசுவாச விவாதமாக மாறியது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ்நாடு சட்டப்பேரவைனாலே வழக்கமான அறிக்கைகளும், காரசாரமான வாக்குவாதங்களும் தான் நினைவுக்கு வரும். ஆனா, சமீபத்துல நடந்த நிதிநிலை அறிக்கை விவாதத்துல, அரசியலோட டூ-டாப் சீனியர் தலைவர்களான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கே.ஏ.செங்கோட்டையன் இடையே நடந்த &quot;சட்டைப் பை போட்டோ&quot; விவாதம் தான் இப்போ சோசியல் மீடியாவோட ஹாட் டாபிக்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழக சட்டமன்றத்தில் திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருந்தது. திமுக உறுப்பினராகப் பேரவையில் வீற்றிருக்கும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பட்ஜெட் மீதான தனது உரையைத் தொடங்கி, அரசின் செயல்பாடுகள் குறித்து சில விமர்சனங்களை முன்வைத்தார்.&lt;/p&gt;&lt;p&gt;அப்போது குறுக்கிட்ட அவை முன்னவரும், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன், &quot;தமிழ்நாடே பாராட்டிக் கொண்டிருக்கும் ஒரு தூய ஆட்சியைப் பற்றி, ஏமாற்றத்தை உருவாக்குகிற ஆட்சி என்று ஓபிஎஸ் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. நீங்க கட்சி மாறி இடத்திற்கு வந்ததற்காக இவ்வளவு தூரம் துதிபாட வேண்டிய அவசியமில்லையே!&quot; என்று நேரடியாகவே ஒரு சவாலை வீசினார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;செங்கோட்டையனின் இந்தத் திடீர் விமர்சனத்தை எதிர்பார்க்காத ஓபிஎஸ், தமக்குரிய அமைதியான பாணியிலேயே ஆனால் அழுத்தமாக ஒரு ரிட்டர்ன் பஞ்ச் கொடுத்தார்.&lt;/p&gt;&lt;p&gt;&quot;அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் என்னைப் பார்த்து இடம் மாறியவர் என்று கூறுகிறார். ஆனால், இந்த அவையில் அந்த இடத்தை முதன்முதலில் மாற்றியவர் நமது அமைச்சர் செங்கோட்டையன் தான் என்பதை நான் இங்கு பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளேன்!&quot;&lt;/p&gt;&lt;p&gt;என்று ஓபிஎஸ் கூற, அவையில் இருந்த உறுப்பினர்கள் இடையே லேசான சிரிப்பலையும் பரபரப்பும் தொற்றிக்கொண்டது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஓபிஎஸ்-ன் இந்த பதிலடிக்கு அடுத்து, தவெக அமைச்சர்கள் களத்தில் இறங்கி அடுத்தடுத்து கொடுத்த கவுன்ட்டர்கள் தான் ஆட்டத்தையே மாற்றின. அமைச்சர் ராஜ்மோகன் குறுக்கிட்டுப் பேசியது பேரவையின் கவனத்தை மொத்தமாக ஈர்த்தது.&lt;/p&gt;&lt;p&gt;&quot;முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பேசும்போது, இடத்தை முதன்முதலில் மாற்றியவர் நம்ம அமைச்சர் செங்கோட்டையன் தான் என்றார். ஆனால், இதில் என்ன ஒரு ஆச்சரியம் என்றால்... அவர் இடத்தை மாற்றியபோதும், அவரது இதயத்தின் அருகே உள்ள அந்த அம்மா (ஜெயலலிதா) புகைப்படத்தை மாற்றவே வேண்டாம் என்று சொன்னவர் எங்கள் தலைவர்! ஆனால், அண்ணன் ஓபிஎஸ் அவர்களின் சட்டைப் பையைப் பார்க்கும்போது... இடமும் மாறி இருக்கிறது, இதயமும் மாறி இருக்கிறதோ என்றுதான் தோன்றுகிறது!&quot; என்று அவர் கூறியது பேரவையில் செம வைப் ஒன்றை உருவாக்கியது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அமைச்சர் ராஜ்மோகனின் பேச்சுக்கு ஆதரவாக மற்றொரு அமைச்சரான ஆதவ் அர்ஜுனாவும் களமிறங்கினார். ஓபிஎஸ்-ன் பழைய அரசியல் வரலாற்றைச் சுட்டிக்காட்டி அவர் எழுப்பிய கேள்வி, விவாதத்தை மேலும் காரசாரமாக்கியது. &ldquo;அமைச்சர் செங்கோட்டையன் இடம் மாறி இருக்கலாம். ஆனால், இன்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தைத்தான் தன் சட்டைப் பையில் வைத்திருக்கிறார். ஆனால், அதே ஜெயலலிதா அம்மாவால் முதல்வராக அமர்த்தப்பட்டவர் அண்ணன் ஓபிஎஸ்... இன்று அவரது சட்டைப் பையில் யாருடைய படம் இருக்கிறது?&rdquo; என ஆதவ் அர்ஜுனா நேரிடையாகவே கேள்வி எழுப்பி, ஓபிஎஸ்-க்கு அரசியல் ரீதியான செக் வைத்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் செங்கோட்டையன் ஆகிய இருவருமே அதிமுக எனும் ஒரே இயக்கத்தில் பல தசாப்தங்களாகத் தோளோடு தோள் நின்று பயணித்த மூத்த தலைவர்கள். கடந்த தேர்தலுக்கு முன்பாக ஏற்பட்ட அரசியல் புயலில் இருவரும் ஆளுக்கொரு பாதையைத் தேர்ந்தெடுத்தனர். செங்கோட்டையன் தவெக-வில் இணைந்து அமைச்சரானார்; ஓபிஎஸ் திமுக-வில் இணைந்து சட்டமன்ற உறுப்பினரானார்.&lt;/p&gt;&lt;p&gt;எதிரெதிர் அரசியல் தளங்களில் நின்றாலும், சட்டைப் பையில் இருக்கும் ஒரு புகைப்படத்தின் மூலம் வெளிப்பட்ட 'அரசியல் விசுவாசம்' பற்றிய இந்த விவாதம், சட்டமன்றத்தின் வரலாற்றுப் பக்கங்களில் ஒரு சுவாரஸ்யமான சம்பவமாகப் பதிவாகியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;பதவிகளும் இடங்களும் மாறினாலும், சட்டைப் பையில் இருக்கும் படம் மூலமாக வெளிப்படும் 'ஜென்-சி ட்ரெண்ட்' விவாதம் தான் இப்போதைக்கு இணையதளங்களின் அல்டிமேட் பொலிட்டிக்கல் டிரெண்டிங்!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>politics</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/politics/tn-assembly-debates-shirt-pocket-photos-ops-and-sengottaiyan-trade-barbs-over-loyalties-392zy55"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Astrology: நல்ல காலம் பொறந்தாச்சு.! 6 நட்சத்திரங்களுக்கு இனி அற்புத யோகம்.! தொட்டதெல்லாம் பொன்னாகும் நேரம்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/politics/6-nakshatras-set-for-powerful-luck-and-golden-opportunities-astrology-prediction-4pirhwk</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/politics/6-nakshatras-set-for-powerful-luck-and-golden-opportunities-astrology-prediction-4pirhwk</guid>
            <pubDate>Sat, 08 Aug 2026 07:12:59 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Astrology: 6 நட்சத்திரங்களுக்கு இனி அதிர்ஷ்டம், தன யோகம், ராஜ யோகம், பணவரவு, தொழில் வளர்ச்சி என அற்புதமான பலன்கள் காத்திருக்கின்றன. பரிகாரம் மற்றும் கூடுதல் யோகம் பெறும் வழிமுறைகளையும் தெரிந்துகொள்ளுங்கள்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kzfftc7zbsbsvj5c3m4c544e,imgname-chatgpt-image-aug-8--2026--06-58-20-am--1--1786152562942.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Astrology: 6 நட்சத்திரங்களுக்கு இனி அதிர்ஷ்டம், தன யோகம், ராஜ யோகம், பணவரவு, தொழில் வளர்ச்சி என அற்புதமான பலன்கள் காத்திருக்கின்றன. பரிகாரம் மற்றும் கூடுதல் யோகம் பெறும் வழிமுறைகளையும் தெரிந்துகொள்ளுங்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜோதிட சாஸ்திரத்தில் ஒருவரின் வாழ்க்கையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை நிர்ணயிப்பதில் நட்சத்திரம், ராசி, லக்னம், கிரக நிலைகள், தசா-புக்தி, கோச்சார பலன்கள் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக குரு, சனி, செவ்வாய், சுக்கிரன், புதன் போன்ற கிரகங்களின் சஞ்சாரம் ஒருவரின் தொழில், பொருளாதாரம், குடும்ப வாழ்க்கை, திருமணம், கல்வி, ஆரோக்கியம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று ஜோதிடம் கூறுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;தற்போது சில நட்சத்திரக்காரர்களுக்கு குரு பார்வை, சுப கிரகங்களின் அனுகூலம், தன யோகம், ராஜ யோகம், லாப ஸ்தான பலம் போன்ற சாதகமான அம்சங்கள் உருவாகும் காலமாக பார்க்கப்படுகிறது. இதனால் நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த காரியங்கள் கைகூடும் வாய்ப்பு, வருமானத்தில் முன்னேற்றம், புதிய தொழில் வாய்ப்புகள், எதிர்பாராத பணவரவு, குடும்பத்தில் மகிழ்ச்சி என பல்வேறு நல்ல மாற்றங்கள் ஏற்படலாம்.&lt;/p&gt;&lt;p&gt;குறிப்பாக முயற்சிக்கு பலன் கிடைக்காமல் தவித்தவர்கள், தொழிலில் தடைகளை சந்தித்தவர்கள், பணப்பிரச்சினையில் இருந்தவர்கள் இனி நம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய காலமாக இது அமையலாம். அதிர்ஷ்டம், பாக்கியம், தன லாபம், தொழில் விருத்தி, கீர்த்தி, புகழ் என வாழ்க்கையின் பல்வேறு துறைகளிலும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உருவாகலாம்.&lt;/p&gt;&lt;p&gt;அந்த வகையில், இனி வரும் காலகட்டத்தில் அற்புதமான யோக பலன்களைப் பெறக்கூடிய 6 நட்சத்திரங்கள் குறித்து பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இனி பாக்கிய ஸ்தான பலம் அதிகரிக்கும் காலமாக அமையலாம். நீண்ட நாட்களாக மனதில் வைத்திருந்த புதிய முயற்சிகளை தொடங்குவதற்கு சாதகமான சூழல் உருவாகும். குரு பார்வை, சுப கிரக அனுகூலம், தன லாப யோகம் போன்ற பலன்கள் பொருளாதார நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தலாம். தொழில் செய்பவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள், புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கும் சூழல் உருவாகலாம். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து அமைதி ஏற்படலாம். தடைபட்ட திருமணப் பேச்சுகள் மீண்டும் நகரலாம். முதலீடு செய்வோர் அவசர முடிவுகளை தவிர்த்து நிதானமாக செயல்பட்டால் நல்ல பலன் கிடைக்கலாம். வெற்றி, புகழ், தனவரவு ஆகியவை அதிகரிக்கும் காலமாக அமையலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு சுக்கிர பலம் மற்றும் தன ஸ்தான அனுகூலம் வாழ்க்கையில் இனிய மாற்றங்களை கொண்டு வரலாம். பணவரவு தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராமல் கிடைக்கும் வாய்ப்புகள் மூலம் வருமானம் அதிகரிக்கலாம். தொழிலில் இருப்பவர்கள் விரிவாக்கம் செய்வதற்கான எண்ணங்களை செயல்படுத்தலாம். தொழில் விருத்தி, லாப யோகம், தன யோகம் போன்ற சாதகமான பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. வீட்டில் சுப காரியங்கள் நடைபெறுவதற்கான சூழல் உருவாகலாம். பெண்களுக்கு ஆபரணம், வாகனம், வீடு போன்ற சொத்து சார்ந்த ஆசைகள் நிறைவேறும் வாய்ப்பு உள்ளது. நீண்ட காலமாக வசூலாகாமல் இருந்த பணம் கிடைக்கலாம். உங்களின் திறமைக்கு அங்கீகாரம் கிடைத்து சமூகத்தில் மதிப்பு, மரியாதை, கீர்த்தி உயரும். தொட்ட காரியங்கள் சாதகமாக முடியும் காலமாக அமையலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதன் மற்றும் குருவின் அனுகூல பார்வை அறிவு மற்றும் செயல்திறனை அதிகரிக்கும் காலமாக அமையலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கதவைத் தட்டும். போட்டியாளர்களை சமாளிக்கும் திறன் அதிகரிக்கும். அலுவலகத்தில் நீண்ட காலமாக எதிர்பார்த்த பதவி உயர்வு அல்லது பொறுப்பு கிடைக்கலாம். கர்ம ஸ்தான பலம், லாப ஸ்தான பலம் அதிகரிப்பதால் வருமானத்தில் முன்னேற்றம் ஏற்படலாம். வெளிநாடு தொடர்பான வேலை அல்லது தொழில் வாய்ப்புகளும் சிலருக்கு அமையலாம். கடன் சுமையை குறைக்க வழி பிறக்கும். புதிய முதலீடுகளில் ஆலோசனையுடன் செயல்பட்டால் நல்ல பலன் கிடைக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்களின் பேச்சுத்திறன் மற்றும் அறிவாற்றல் மூலம் முக்கியமான வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு சுக்கிரனின் ஆதிக்கம் காரணமாக கலை, தொழில், வியாபாரம், அழகு, ஆடம்பரம் உள்ளிட்ட துறைகளில் சிறப்பான முன்னேற்றம் கிடைக்கலாம். பொருளாதார ரீதியாக வலுப்பெறும் வாய்ப்பு உள்ளது. நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த ஆசைகள் ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேறலாம். ராஜ யோகம், தன யோகம், சுக போக யோகம் போன்ற சாதகமான பலன்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை அதிகரிக்கலாம். திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல வரன் அமையும் வாய்ப்பு உள்ளது. தம்பதிகளிடையே அன்பும் புரிதலும் அதிகரிக்கும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும் சூழல் உருவாகலாம். தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு நல்ல காலம். எதிரிகளின் தொல்லை குறைந்து, உங்களுடைய முயற்சிக்கு சமூகத்தில் பாராட்டும் அங்கீகாரமும் கிடைக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அனுஷம் நட்சத்திரக்காரர்களுக்கு இதுவரை இருந்த தடைகள் படிப்படியாக விலகும் காலமாக அமையலாம். சனி பகவானின் கர்ம பலன்கள் உழைப்புக்கு ஏற்ப பலன் தரும் வகையில் செயல்படலாம். தாமதமாக இருந்தாலும் நிலையான வெற்றியைப் பெறுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். தொழில் செய்பவர்கள் புதிய தொடர்புகள் மூலம் லாபம் பெறலாம். பணியிடத்தில் உங்களுடைய உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். லாப ஸ்தானம், பாக்கிய ஸ்தானம் வலுப்பெறும் சூழலில் வருமானம் அதிகரிக்கலாம். பழைய கடன்களை அடைக்கும் வாய்ப்பு உருவாகலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி, குழந்தைகள் மூலம் பெருமை, உறவினர்களின் ஆதரவு ஆகியவை கிடைக்கலாம். ஆன்மிக ஈடுபாடு அதிகரித்து மன அமைதி கிடைக்கும். பொறுமையுடன் தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையை இந்த காலம் தரும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குரு அனுகூலம், பாக்கிய பலம், தன லாப யோகம் போன்ற சாதகமான அம்சங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தலாம். வேலை, தொழில், வியாபாரம் என எந்த துறையில் இருந்தாலும் புதிய வாய்ப்புகள் உருவாகலாம். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைத்து பதவி உயர்வு அல்லது முக்கிய பொறுப்பு கிடைக்கலாம். வியாபாரத்தில் புதிய கிளைகள், புதிய வாடிக்கையாளர்கள், புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு சேமிப்பு அதிகரிக்கலாம். வீடு அல்லது நிலம் வாங்கும் முயற்சியில் நல்ல செய்தி கிடைக்கலாம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறலாம். பாக்கிய யோகம், ராஜ யோகம், தன யோகம் ஆகியவற்றின் சாதகமான பலன்களை அனுபவிக்கும் வாய்ப்பு உள்ளது. இறை நம்பிக்கையுடன் செயல்பட்டால் மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த 6 நட்சத்திரக்காரர்களுக்கும் வரக்கூடிய காலம் முயற்சிக்கு பலன், உழைப்புக்கு உயர்வு, தடைகளுக்கு தீர்வு, பணத்திற்கு வளர்ச்சி என நம்பிக்கையளிக்கும் காலமாக அமையலாம். ஜோதிட ரீதியாக கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக இருந்தாலும், எந்த ஒரு யோகமும் உழைப்புக்கு மாற்றாக அமையாது.&lt;/p&gt;&lt;p&gt;எனவே அதிர்ஷ்டத்தை மட்டும் நம்பாமல், கிரக பலம் + தன்னம்பிக்கை + விடாமுயற்சி + சரியான முடிவு ஆகியவற்றை இணைத்து செயல்பட்டால் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை உருவாக்க முடியும். இறைவனை வழிபட்டு, தர்ம காரியங்களில் ஈடுபட்டு, பெரியோர்களின் ஆசீர்வாதத்தைப் பெற்று செயல்படுவது மன அமைதியையும் நம்பிக்கையையும் அதிகரிக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&ldquo;நல்ல காலம் தொடங்கிவிட்டது&rdquo; என்ற நம்பிக்கையுடன் ஒவ்வொரு வாய்ப்பையும் சரியாக பயன்படுத்திக் கொண்டால், இன்று சாதாரணமாகத் தோன்றும் ஒரு சிறிய முயற்சியே நாளை மிகப்பெரிய வெற்றிக்கான அடித்தளமாக மாறலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அஸ்வினி, ரோகிணி, மிருகசீரிஷம், பூரம், அனுஷம், திருவோணம் ஆகிய 6 நட்சத்திரக்காரர்களும் தங்கள் நட்சத்திரத்திற்கு ஏற்ற தெய்வங்களை வழிபட்டு வருவது நல்ல பலன்களை அதிகரிக்க உதவும். தினமும் இஷ்ட தெய்வத்தை மனதார வழிபட்டு, விளக்கேற்றி, இறை நாமத்தை ஜபிக்கலாம். வியாழக்கிழமைகளில் குரு பகவானை வழிபடுவதும், வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு தீபம் ஏற்றுவதும் தன யோகத்திற்கு சாதகமாகக் கருதப்படுகிறது. ஏழைகள், முதியவர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உணவு, உடை அல்லது கல்வி உதவி வழங்குவது புண்ணிய பலனை அதிகரிக்கும். கோயிலுக்கு சென்று வழிபடுதல், அன்னதானம் செய்தல், பெரியோர்களின் ஆசீர்வாதம் பெறுதல் ஆகியவை பாக்கியத்தை மேம்படுத்தும். நேர்மை, விடாமுயற்சி, தர்ம சிந்தனை ஆகியவற்றுடன் செயல்பட்டால் தன யோகம், ராஜ யோகம், பாக்கிய யோகம், லாப யோகம் போன்ற சாதகமான பலன்களை அனுபவிக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ந்த 6 நட்சத்திரக்காரர்களுக்கும் வரவிருக்கும் காலம் நம்பிக்கை, முன்னேற்றம், அதிர்ஷ்டம் நிறைந்ததாக அமையலாம். கிரகங்களின் அனுகூலம், பாக்கிய ஸ்தான பலம், தன யோகம் கைகொடுத்தாலும், விடாமுயற்சியும் நேர்மையும் அவசியம். இறை நம்பிக்கையுடன் செயல்பட்டு, கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினால் வாழ்க்கையில் வெற்றி, செல்வம், புகழ், மனநிறைவு நிச்சயம் அதிகரிக்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>politics</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/politics/6-nakshatras-set-for-powerful-luck-and-golden-opportunities-astrology-prediction-4pirhwk"/>
        </item>
        <item>
            <title><![CDATA[தெலங்கானா தேர்தலில் விஜய் பாணி வியூகம்: கே.கவிதாவுடன் ரத்தன் பண்டிட் திடீர் சந்திப்பு.. பின்னணி என்ன?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/india/k-kavitha-meets-astrologer-rattan-pandit-strategic-move-ahead-of-telangana-politics-articleshow-75dw9dw</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/india/k-kavitha-meets-astrologer-rattan-pandit-strategic-move-ahead-of-telangana-politics-articleshow-75dw9dw</guid>
            <pubDate>Thu, 20 Aug 2026 16:47:54 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;K. Kavitha Meets Astrologer Rattan Pandit: பிரபல ஜோதிட ஆலோசகர் ரத்தன் பண்டிட் &lsquo;தெலங்கானா ராஷ்டிர சேனா கட்சியின் தலைவர் கே.கவிதாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு தெலங்கானா தேர்தலுக்கான வியூகமா? என்பதை இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0fdwj3sq9fcqja1vx5rv522,imgname-k.-kavitha-meets-astrologer-rattan-pandit-1787224279161.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தெலங்கானா மாநிலத்தின் &lsquo;தெலங்கானா ராஷ்டிர சேனா&rsquo; (TRS) கட்சியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவின் மகளுமான கே.கவிதாவை, இந்தியாவின் முன்னணி ஜோதிட மற்றும் ஆன்மீக ஆலோசகரான ரத்தன் பண்டிட் வெற்றிவேல் ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி, அரசியல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் கவனத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;விஜய்யின் அரசியல் வாழ்க்கையையே மாற்றியவர் ரத்தன் பண்டிட்&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;துல்லியமான கணிப்புகளுக்குப் பெயர் பெற்ற ரத்தன் பண்டிட், இந்திய அளவிலான அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களுக்கு ஆன்மீக மற்றும் ஜோதிட வழிகாட்டியாக திகழந்துள்ளார். வேத ஜோதிடம் மற்றும் எண்கணிதத் துறையில் நான்கு தசாப்தங்களுக்கும் மேலான நீண்ட அனுபவம் கொண்டவர். தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் நம்பிக்கைக்குரிய ஆன்மீக ஆலோசகராக இருந்தவர் என்ற சிறப்பு இவருக்கு உண்டு.&lt;/p&gt;&lt;p&gt;மேலும் தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரும் புரட்சியை ஏற்படுத்தி இரு பெரும் திராவிட கட்சிகளை வீழ்த்தி முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய்யின் வெற்றியை முன்கூட்டியே கணித்து வியக்க வைத்தவர் ரத்தன் பண்டிட். விஜய்யின் ஜாதக அமைப்பையும், கட்சியின் பெயரையும் துல்லியமாக பகுப்பாய்வு செய்து அவர் அளித்த கணிப்புகள் அனைத்தும் நிஜமாகி தவெகவை இன்று ஆட்சியில் அமர்த்தியுள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க&lt;/strong&gt;: Aawin Milk Price: ஆவின் பால் விலையை குறைக்க தமிழக அரசு முடிவு?! தமிழக வரலாற்றிலேயே முதன் முறையாக நடக்கும் சம்பவம்.! லிட்டருக்கு எவ்ளோ தெரியுமா?&lt;/p&gt;&lt;h3&gt;&lt;strong&gt;கே.கவிதா - ரத்தன் பண்டிட் சந்திப்பு&lt;/strong&gt;&lt;/h3&gt;&lt;p&gt;இந்த நிலையில் தான் கே.கவிதாவை ரத்தன் பண்டிட் சந்தித்து பேசியுள்ளது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. ஏனெனில் தெலங்கானாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. கே.கவிதாவின் புதிய அரசியல் நகர்வுகளுக்கு வழிகாட்டும் பொருட்டு இந்தச் சந்திப்பு அமைந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. தமிழகத்தின் முதல்வர் விஜய்யின் ஜோதிட ஆலோசகராக மட்டுமின்றி அவருடைய தனிப்பட்ட ஆலோசகராகவும் விளங்கினார் ரத்தன் பண்டிட்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சந்திப்பின் பின்னணி என்ன?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இது விஜய்க்கு பெரும் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியையும் தேடிக் கொடுத்தது. ஆகவே தான் கே.கவிதாவும் விஜய்யின் பாணியில் ரத்தன் பண்டிட் ஆலோசனையின் பேரில் 2028 சட்டப்பேரை தேர்தலில் வெற்றி பெற வியூகம் வகுத்துள்ளாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனெனில் துல்லியமான கணிப்புகளுக்குப் பெயர் பெற்ற ரத்தன் பண்டிட்டின் இந்த வழிகாட்டுதல், ஆலோசனை கவிதாவின் அரசியல் பயணத்தில் ஒரு நேர்மறையான மாற்றத்தையும் புதிய உவேகத்தையும் தரும் என அவரது ஆதரவாளர்கள் நம்புகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க&lt;/strong&gt; தமிழகத்தின் நீர்நிலைகளை காப்பாற்றுங்கள்; ரூ.1 லட்சம் கோடி செலவில் கடனையும் அடைக்கலாம்: சௌமியா அன்புமணி&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;விஜய் பாதையில் கே.கவிதா?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஒட்டுமொத்தத்தில் அரசியல் களத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள ரத்தன் பண்டிட், கே.கவிதா சந்திப்பு வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்பா? இல்லை கவிதாவின் அரசியல் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தப் போகும் சந்திப்பா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>politics</category>
            <dc:creator>Rayar A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/india/k-kavitha-meets-astrologer-rattan-pandit-strategic-move-ahead-of-telangana-politics-articleshow-75dw9dw"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Archana Kalpathi: திரிஷாவின் நெருங்கிய தோழிக்கு அரசுப் பதவி.! மீண்டும் சர்ச்சையில் சிக்கிய தமிழக அரசு.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/politics/archana-kalpathi-appointed-as-member-of-tn-govt-hrce-special-committee-sparks-political-controversy-in-tamil-nadu-7b6kuq4</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/politics/archana-kalpathi-appointed-as-member-of-tn-govt-hrce-special-committee-sparks-political-controversy-in-tamil-nadu-7b6kuq4</guid>
            <pubDate>Mon, 10 Aug 2026 15:36:18 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Archana Kalpathi: நடிகை திரிஷாவின் நெருங்கிய தோழியும், திரைப்பட தயாரிப்பாளருமான அர்ச்சனா கல்பாத்திக்கு தமிழக அரசு முக்கிய பதவி ஒன்றை வழங்கியுள்ளது. இது தமிழக அரசியில் களத்தில் புது சர்ச்சையை கிளப்பியுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kznhxthhxmk0qy5s9q6077kv,imgname-archana-kalpathi--1786356099633.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Archana Kalpathi: நடிகை திரிஷாவின் நெருங்கிய தோழியும், திரைப்பட தயாரிப்பாளருமான அர்ச்சனா கல்பாத்திக்கு தமிழக அரசு முக்கிய பதவி ஒன்றை வழங்கியுள்ளது. இது தமிழக அரசியில் களத்தில் புது சர்ச்சையை கிளப்பியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அரசு அமைந்தது முதல் அரசுப் பதவிகள் நெருங்கியவர்களுக்கும், கட்சிக்காரர்களுக்கும் வழங்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏற்கனவே விஜயின் தனிப்பட்ட ஜோதிட ஆலோசகர் ரத்தன் பண்டிட் முதல்வரின் தனி ஆலோசகராக நியமிக்கப்பட்டார். கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் அவரது நியமனம் ரத்து செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து முதல்வரின் நெருங்கிய நண்பரான ஜெகதீஷ் பழனிச்சாதி முதல்வரின் தனிச் செயலாளராக நியமிக்கப்பட்டார். முதல்வர் விஜயின் கடைசி படமான &lsquo;ஜனநாயகன்&rsquo; படத்தை தயாரித்த தயாரிப்பாளர் கே.வி வெங்கட்ரமணா தமிழ்நாடு டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த நிலையில் விஜய் நடித்த &lsquo;பிகில்', &lsquo;கோட்' போன்ற படங்களை தயாரித்த ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான அர்ச்சனா கல்பாத்திக்கு தமிழ்நாடு அரசு முக்கிய பொறுப்பு ஒன்றை வழங்கியுள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்திற்கும் மேல் உள்ள திருக்கோயில்களுக்கு பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்களை நியமிப்பதற்கான தகுதியான விண்ணப்பதாரர்களை தேர்வு செய்யும் சிறப்பு குழுவின் உறுப்பினராக அர்ச்சனா கல்பாத்தி நியமிக்கப்பட்டுள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தக் குழு மயிலம் பொம்மபுரம் ஆதீனம் ஸ்ரீ சிவஞான பாலய ஸ்வாமிகள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. ஏழு உறுப்பினர்களை கொண்ட இந்த குழுவில் அர்ச்சனா கல்பாத்தி உறுப்பினராக இடம் பெற்றுள்ளார். இந்த குழுவின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும். இந்த குழு, இந்து சமய அறநிலையத்துறை கொடைகள் சட்டம் 1959 படி, இது பெரிய திருக்கோயில்களுக்கு தகுதியும் ஆன்மீக ஈடுபாடும் கொண்ட அறங்காவலர்களை விண்ணப்பங்கள் அடிப்படையில் பரிசீலித்து தகுதியான பெயர் பட்டியலை அரசுக்கு பரிந்துரைக்கும் பணிகளை செய்யும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தற்போது உள்ள குழுவின் பதவிக்காலம் ஜூலை 24, 2026 ஆம் தேதியுடன் முடிவுற்றதையடுத்து புதிய குழுவை அமைக்க அறநிலையத்துறை ஆணையர் கேட்டுக்கொண்டார். இவரின் பரிந்துரை ஏற்று கீழ் கண்ட உறுப்பினர்களைக் கொண்ட மாநில குழுவினை அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் தலைவராக மயிலம் பொம்மபுர ஆதீனம் தவத்திரு சிவஞான பாலய சுவாமிகளும், துணைத்தலைவராக ஓய்வு பெற்ற மாவட்ட அமர்வு நீதிபதி டாக்டர் கே ராமநாதனும், இடம்பெற்றுள்ளனர். அர்ச்சனா கல்பாத்தி, ஓய்வு பெற்ற இந்தியா ஆட்சிய பணியாளர் ப.ரா சம்பத், திருமதி. மா. சுமதி ஸ்ரீ, பிரபல பின்னணி பாடகர் டாக்டர் த வேல்முருகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஆகியோரும் உறுப்பினராக இடம் பெற்றுள்ளனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>politics</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/politics/archana-kalpathi-appointed-as-member-of-tn-govt-hrce-special-committee-sparks-political-controversy-in-tamil-nadu-7b6kuq4"/>
        </item>
        <item>
            <title><![CDATA[1947 Newspaper: ஆகஸ்ட் 15, 1947-ல என்ன நடந்தது? அந்த நியூஸ் பேப்பரை இப்ப படிக்கலாம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/india/how-to-read-the-hindu-1947-independence-day-newspaper-via-zepto-90hesty</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/india/how-to-read-the-hindu-1947-independence-day-newspaper-via-zepto-90hesty</guid>
            <pubDate>Fri, 14 Aug 2026 15:23:49 +0530</pubDate>
            <description><![CDATA[இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்ச நாள், அதாவது ஆகஸ்ட் 15, 1947-ல என்ன நடந்ததுனு தெரிஞ்சுக்க ஆசையா? இந்த சுதந்திர தினத்துல, அந்த நாள் நியூஸ் பேப்பரை உங்க வீட்டுக்கே வரவழைக்கலாம். எப்படி தெரியுமா?]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kzzs4tk0qcgpvhq3w65zhpak,imgname-id-2-1786699213408.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்ச நாள், அதாவது ஆகஸ்ட் 15, 1947-ல என்ன நடந்ததுனு தெரிஞ்சுக்க ஆசையா? இந்த சுதந்திர தினத்துல, அந்த நாள் நியூஸ் பேப்பரை உங்க வீட்டுக்கே வரவழைக்கலாம். எப்படி தெரியுமா?&lt;img&gt;&lt;p&gt;நமக்கு நியூஸ் பேப்பர்னா என்ன? காலையில எழுந்ததும் கையில வர்ற ஒரு பேப்பர். உலகத்துல, நாட்டுல, ஊர்ல என்ன நடக்குதுனு தெரிஞ்சுக்கிட்டு, கொஞ்ச நேரத்துல ஓரமா வெச்சிடுவோம். ஆனா, ஒரு நிமிஷம் யோசிச்சு பாருங்க... அதே நியூஸ் பேப்பர் 79 வருஷத்துக்கு முன்னாடி அச்சடிச்சதுனா? அது வெறும் பேப்பர் இல்லை. ஒரு தலைமுறையோட கனவு, ஒரு தேசத்தோட போராட்டம், கோடிக்கணக்கான மக்களோட எதிர்பார்ப்பு, சந்தோஷம், வலி, நம்பிக்கை எல்லாத்தையும் அடக்கின ஒரு வரலாற்றுப் புத்தகம். இப்போ, அந்த அனுபவத்தைத்தான் Zepto-வில் கிடைக்கும் &lsquo;தி ஹிந்து&rsquo; பத்திரிகையின் ஸ்பெஷல் கலெக்டர்ஸ் எடிஷன் நமக்குக் கொடுக்குது.&lt;/p&gt;&lt;p&gt;2026-ல் நாம ஒரு மொபைல் கிளிக்ல உலக செய்திகளைப் படிக்கிறோம். நிమిஷத்துக்கு நிமிஷம் நியூஸ் மாறுது. சோஷியல் மீடியாவுல வீடியோ, போட்டோ, லைவ் அப்டேட்ஸ்னு வெள்ளம் மாதிரி வருது. ஆனா, 1947-ல நிலைமையே வேற. அப்போ ஒரு செய்திக்காக மக்கள் பேப்பருக்காக காத்திருந்தாங்க. சுதந்திரம் கிடைச்சிருச்சுங்கிற செய்தியை ஒரு பேப்பர்ல படிக்கிறதுங்கிறது, இன்னைக்கு ஒரு வைரல் வீடியோ பார்க்குற மாதிரி இல்லை. அது வாழ்க்கையில ஒரே ஒரு முறை வர்ற சரித்திர தருணத்தை நேர்ல பார்க்குற மாதிரி ஒரு ஃபீல். 1947 ஆகஸ்ட் 15... இந்திய சரித்திரத்துல அழிக்கவே முடியாத ஒரு நாள். கிட்டத்தட்ட 200 வருஷ பிரிட்டிஷ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வெச்சு, இந்தியா சுதந்திர நாடா உருவானது. தேசமே கொண்டாட்டத்துல மூழ்கியிருந்தது. ஆனா, அந்த சந்தோஷத்துக்குப் பின்னாடி பல தியாகம் இருக்கு.&lt;/p&gt;&lt;p&gt;சிறைத் தண்டனை அனுபவிச்ச சுதந்திரப் போராட்ட வீரர்கள், லத்தி அடி வாங்கினவங்க, பகத் சிங் மாதிரி தூக்குக் கயிறை முத்தமிட்ட இளம் வீரர்கள்னு பல பேர் இருக்காங்க. குடும்பம், சொத்து, சுகம் எல்லாத்தையும் விட்டுட்டு நாட்டுக்காகப் போராடின லட்சக்கணக்கான மக்களோட கனவு நனவான நாள்தான் 1947 ஆகஸ்ட் 15. அதனால, அந்த நாள்ல வெளியான நியூஸ் பேப்பரை இப்போ நாம கையில எடுக்குறது ஒரு ஸ்பெஷலான அனுபவம்.&lt;/p&gt;&lt;p&gt;நாம இன்னைக்கு படிக்கிற பேப்பர்ல &lsquo;இந்தியா&rsquo;ங்கிற வார்த்தை சாதாரணமா தெரியலாம். ஆனா, 1947-ல அதே வார்த்தைக்கு ஒரு புது அர்த்தம் இருந்துச்சு. &lsquo;இந்தியா சுதந்திர நாடு ஆகிவிட்டது&rsquo;ங்கிற செய்தி, அப்போதைய வாசகருக்கு வெறும் தகவல் இல்லை. அது அவங்க வாழ்க்கையையே மாத்தின ஒரு அறிவிப்பு. அப்பா படிச்சு மகனுக்கு சொல்லியிருக்கலாம். ஒரு வீட்டுல பேப்பரை சுத்தி மொத்த குடும்பமும் கூடியிருக்கலாம். டீக்கடையில ஒருத்தர் படிக்க, சுத்தி இருந்தவங்க ஆர்வமா கேட்டிருக்கலாம். அந்த ஒரு பக்கம், பல வீடுகள்ல சந்தோஷத்துக்குக் காரணமா இருந்திருக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இங்கேதான் இந்த பழைய பேப்பர் நம்மகூட ஒரு எமோஷனல் கனெக்ட் ஏற்படுத்துது. நாம 1947-ஐ புத்தகங்கள்ல படிக்கிறோம். &lsquo;ஆகஸ்ட் 15-ல சுதந்திரம் கிடைச்சது&rsquo;னு தெரிஞ்சுக்கிறோம். ஆனா, 1947-ஆம் வருஷத்து நியூஸ் பேப்பரை கையில எடுக்கும்போது, அது வெறும் தேதியா தெரியாது. அந்த நாள்ல மக்கள் நிஜமாவே எப்படி உணர்ந்திருப்பாங்கனு நம்மால கற்பனை பண்ண முடியும். அந்த காலத்து எழுத்துகள், விளம்பரங்கள், செய்தியோட மொழி, பேப்பர் டிசைன்னு எல்லாமே சேர்ந்து நம்மள கொஞ்ச நேரத்துக்கு சுதந்திரம் கிடைச்ச காலத்துக்கே கூட்டிட்டுப் போகும்.&lt;/p&gt;&lt;p&gt;இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னன்னா, அந்த பேப்பர்ல இருக்குற சின்ன சின்ன விளம்பரங்கள் கூட இன்னைக்கு நமக்கு வரலாறுதான். அப்போ மக்கள் என்ன பொருட்கள் வாங்குனாங்க? என்ன கம்பெனிகள் இருந்துச்சு? பிஸ்னஸ் எப்படி விளம்பரம் செஞ்சாங்க? நகர வாழ்க்கை எப்படி இருந்துச்சு? இப்படி பேப்பர்ல இருக்குற விளம்பரங்கள், செய்திகள், போட்டோக்கள் எல்லாமே அந்த கால இந்திய சமூகத்துக்கு ஒரு கண்ணாடியா இருக்கு. நாம வரலாற்றுப் புத்தகங்கள்ல படிக்க முடியாத பல சின்ன விஷயங்கள் ஒரு பழைய நியூஸ் பேப்பர் பக்கத்துல கிடைக்கலாம். Zepto-வில் கிடைக்கும் இந்த சுதந்திர கால &lsquo;தி ஹிந்து&rsquo; பேப்பர்ல சுவாரஸ்யமான விளம்பரங்கள் இருக்கு.&lt;/p&gt;&lt;p&gt;நாம இப்போ பயன்படுத்துற கோல்கேட் விளம்பரத்தை அதுல பார்க்கும்போது ஆச்சரியமா இருக்கும். அப்போ இருந்து இப்ப வரைக்கும் இந்த பிராண்ட் இருக்கானு தோணும். இதுமாதிரி பல பிராண்டுகள் நாட்டுக்கு சுதந்திரம் கிடைச்சதை ஒட்டி வாழ்த்து சொல்லி விளம்பரம் கொடுத்திருக்கு. அதுமட்டுமில்லாம, அன்னைக்கு (ஆகஸ்ட் 15) பிரபல பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியோட கச்சேரி இருந்ததற்கான அறிவிப்பும் இருக்கு. கூடவே, சுதந்திரப் போராட்ட வீரர்களோட செய்திகள், தலைவர்களோட போட்டோக்களோட &lsquo;தி ஹிந்து&rsquo; பேப்பர் ரொம்பவே ஈர்ப்பா இருக்கு.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சுதந்திரம் கிடைச்ச அந்த நாட்கள்ல தேசம் வெறும் கொண்டாட்டத்துல மட்டும் இல்லை. இன்னொரு பக்கம், பிரிவினையோட காயமும் இருந்துச்சு. இந்தியா, பாகிஸ்தான்னு ரெண்டு புதிய டொமினியன்கள் உருவானதால, லட்சக்கணக்கான மக்கள் தங்களோட வீடுகளை விட்டு அகதிகளா மாற வேண்டியிருந்தது. குடும்பங்கள் பிரிஞ்சது. வன்முறை வெடிச்சது. ஒரு பக்கம் விடுதலை தந்த சந்தோஷம்னா, இன்னொரு பக்கம் பிரிவினை தந்த சோகம். அதனால, 1947 நியூஸ் பேப்பரை படிக்கிறதுனா, வெறும் &lsquo;சுதந்திரக் கொண்டாட்டத்தை&rsquo; பார்க்குறது மட்டும் இல்லை, அந்த காலத்தோட சிக்கலான நிஜங்களையும் புரிஞ்சுக்கிறதுதான்.&lt;/p&gt;&lt;p&gt;இன்னைக்கு நமக்கு சுதந்திரம் ஒரு இயல்பான உரிமை மாதிரி தெரியுது. ஓட்டுரிமை இருக்கு. நமக்கு பிடிக்காத தலைவரை விமர்சிக்க முடியுது. நாட்டுல எங்க வேணும்னாலும் போக முடியுது. நம்ம கருத்துக்களை சொல்ல முடியுது. நம்ம மொழியில செய்திகளைப் படிக்க முடியுது. ஆனா, இதெல்லாம் எப்போதுமே இருந்தவை இல்லை. இதுக்குப் பின்னாடி ஒரு நீண்ட போராட்டம் இருக்கு. அதனால, 1947 பேப்பர் நம்மகிட்ட ஒரு கேள்வியையும் கேட்குது &mdash; நமக்கு கிடைச்ச சுதந்திரத்தை நாம எந்த அளவுக்கு மதிக்கிறோம்?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த பழைய பேப்பரை Zepto மாதிரியான ஒரு நவீன குயிக்-காமர்ஸ் பிளாட்ஃபார்ம் மூலமா நம்ம வீட்டுக்கு வரவழைக்கிறது ஒரு அழகான டைம் டிராவல் மாதிரிதான். ஒரு பக்கம், நிమిஷங்கள்ல பால், காய்கறி, மளிகை சாமான்கள் வீட்டுக்கு வர்ற டிஜிட்டல் யுகம். இன்னொரு பக்கம், அச்சடிச்ச ஒரு பேப்பர். ஒண்ணு எதிர்காலத்தோட வேகத்தைக் காட்டுது, இன்னொன்னு நம்ம கடந்த காலத்தை ஞாபகப்படுத்துது. டெக்னாலஜி எவ்வளவுதான் வளர்ந்தாலும், நம்ம வரலாற்றைத் தொட்டுப் பார்க்கும்போது வர்ற அந்த ஃபீல் எப்போதுமே ஸ்பெஷல்தான். ஒருவேளை, இந்த பழைய பேப்பரோட மதிப்பு அதோட காகிதத்துல இல்லை, அதுல அச்சடிச்ச சரித்திரத்துலதான் இருக்கு.&lt;/p&gt;&lt;p&gt;எப்போதோ யாரோ ஒருத்தர் கையில பிடிச்சிருந்த ஒரு பக்கத்தை, இன்னைக்கு நாம பிடிக்கிறோம். எப்போதோ யாரோ சுதந்திர இந்தியாவைப் பத்தி படிச்ச அதே எழுத்துக்களை நாம பார்க்கிறோம். நடுவுல 79 வருஷம் ஓடிப்போச்சு. தலைமுறைகள் மாறிடுச்சு. டெக்னாலஜி மாறிடுச்சு. நகரங்கள் மாறிடுச்சு. ஆனா, &lsquo;சுதந்திரம்&rsquo;ங்கிற உணர்வு மட்டும் நம்ம வாழ்க்கையில இன்னும் அதே வலிமையோட இருக்கு. அதனால, Zepto-ல கிடைக்கிற இந்த பழைய &lsquo;தி ஹிந்து&rsquo; பதிப்பை ஒரு சாதாரண கலெக்டர் ஐட்டமா மட்டும் பார்க்கத் தேவையில்லை. இது நம்ம தாத்தா, பாட்டி பார்த்த இந்தியாவுக்கு ஒரு ஜன்னல். அவங்க எதிர்பார்த்த சுதந்திரத்தை நாம இன்னைக்கு அனுபவிக்கிறோம்னு ஞாபகப்படுத்துற ஒரு நினைவுப் பரிசு.&lt;/p&gt;&lt;p&gt;அந்த பேப்பரை கையில பிடிக்கும்போது நமக்கு ஒரு விஷயம் நல்லா புரியும் &mdash; வரலாறு புத்தகங்கள்ல மட்டும் இல்லை, சில சமயம் அது நம்ம கையில பிடிச்சிருக்கிற ஒரு பழைய பேப்பர் வடிவத்திலயும் நம்ம முன்னாடி வரும். இந்த சுதந்திர தினத்துல, இப்படி ஒரு பழைய பேப்பரை பார்க்குறது வெறும் கடந்த காலத்தை நினைச்சுப் பார்க்குறது இல்லை. நமக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த தலைமுறைக்கு நாம செய்யுற ஒரு சின்ன மரியாதை. ஏன்னா, 1947-ல ஒரு தலைமுறை கனவு கண்ட சுதந்திர இந்தியாவுலதான் நாம இன்னைக்கு வாழ்ந்துட்டு இருக்கோம். அந்த விஷயம் ஒருமுறை நினைவுக்கு வந்தா, கையில இருக்குற அந்த பழைய பேப்பரோட மதிப்பு உடனே மாறிடும். இந்த பேப்பர் ரூ.250-399 விலையில் கிடைக்குது. உங்களுக்கு வேணும்னா Zepto-ல ஆர்டர் பண்ணலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>politics</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/india/how-to-read-the-hindu-1947-independence-day-newspaper-via-zepto-90hesty"/>
        </item>
        <item>
            <title><![CDATA[FCRA Amendment Bill : FCRA திருத்த மசோதா விவகாரம்.! ஜேபிசி ஆய்வை வரவேற்ற பி.வில்சன் வைத்த அதிரடி கோரிக்கை என்ன தெரியுமா?!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/fcra-amendment-bill-p-wilson-welcomes-jpc-review-demands-complete-withdrawal-articleshow-9n9c503</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/fcra-amendment-bill-p-wilson-welcomes-jpc-review-demands-complete-withdrawal-articleshow-9n9c503</guid>
            <pubDate>Thu, 13 Aug 2026 07:27:54 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன், FCRA திருத்த மசோதாவை நாடாளுமன்றக் குழுவிற்கு அனுப்பும் முடிவை வரவேற்றுள்ளார். இருப்பினும், தொண்டு மற்றும் சிறுபான்மை நிறுவனங்களைப் பாதிக்கும் இந்த மசோதாவை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்பதே தங்கள் முதன்மைக் கோரிக்கை என அவர் வலியுறுத்தியுள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kzwd6apjd8k0z8dtnvpm0gcq,imgname-whatsapp-image-2026-08-13-at-7.00.51-am--1--1786586016465.jpeg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;FCRA திருத்த மசோதா முழுமையாக திரும்பப் பெற வேண்டும்: பி.வில்சன்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டத் திருத்த மசோதாவை விரிவான ஆய்விற்காக கூட்டு நாடாளுமன்றக் குழுவிற்கு அனுப்ப மத்திய அரசு எடுத்துள்ள முடிவை வரவேற்பதாகவும், அதேவேளையில் மசோதாவை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்பதே தங்களது முதன்மையான கோரிக்கை என்றும் சிறுபான்மையினருக்கான கூட்டு நடவடிக்கை மன்றத்தின் தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;மத்திய அரசு கொண்டு வந்துள்ள CRA திருத்த மசோதாவுக்கு எதிராக சிறுபான்மையினருக்கான கூட்டு நடவடிக்கை மன்றம் தொடர்ந்து பல்வேறு ஜனநாயக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மசோதாவை கூட்டு நாடாளுமன்றக் குழுவிற்கு அனுப்ப மத்திய அரசு முடிவு செய்திருப்பது தொடர்பாக பி.வில்சன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;அதில், FCRA திருத்த மசோதாவை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், மசோதாவை கூட்டு நாடாளுமன்றக் குழுவிற்கு அனுப்பியிருப்பது நேர்மறையான மற்றும் ஆக்கபூர்வமான நடவடிக்கைஎன்று குறிப்பிட்டுள்ளார்.&lt;/p&gt;&lt;h2&gt;அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்க வாய்ப்பு&lt;/h2&gt;&lt;p&gt;மசோதா கூட்டு நாடாளுமன்றக் குழுவிற்கு அனுப்பப்படுவதன் மூலம், அதனை நாடாளுமன்ற அளவில் விரிவாக ஆய்வு செய்வதற்கும், பல்வேறு தரப்பினரிடம் விரிவான ஆலோசனைகளை மேற்கொள்வதற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக பி.வில்சன் தெரிவித்துள்ளார். குறிப்பாக நாடு முழுவதும் உள்ள தேவாலயங்கள், தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், சுகாதார நிறுவனங்கள், சட்ட வல்லுநர்கள், சமூக அமைப்புகள் மற்றும் சிறுபான்மை பிரதிநிதிகள் எழுப்பியுள்ள கவலைகளை முழுமையாகப் பரிசீலிக்க இது முக்கியமான வாய்ப்பாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;தொண்டு, கல்வி, சுகாதார நிறுவனங்கள் பாதிக்கப்படும் என கவலை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;முன்மொழியப்பட்டுள்ள FCRA திருத்தங்கள், தொண்டு, கல்வி, சுகாதாரம், மனிதநேய சேவை, சமூக சேவை மற்றும் மதப் பணிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் செயல்பாடுகளில் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், ஆரம்பம் முதலே மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருவதாக பி.வில்சன் கூறியுள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;அதே நேரத்தில், மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெற முடியாத சூழலில், தங்களுடைய கருத்துகள், கவலைகள் மற்றும் பரிந்துரைகளை நாடாளுமன்றத்தின் முன் விரிவாக வைப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில், மசோதாவை கூட்டு நாடாளுமன்றக் குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஜனநாயக முறையில் தொடர் போராட்டம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;கடந்த பல மாதங்களாக சிறுபான்மையினருக்கான கூட்டு நடவடிக்கை மன்றம் மேற்கொண்ட பிரசாரம் அமைதியானதாகவும், ஜனநாயக ரீதியானதாகவும், அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதாகவும், தொடர்ச்சியானதாகவும் இருந்து வந்துள்ளதாக பி.வில்சன் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம், அப்போதைய தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், FCRA திருத்த மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு பிரதமருக்கு கடிதம் எழுதியதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், ஏப்ரல் 16-ஆம் தேதி தனது தலைமையில் டெல்லி அரசியலமைப்பு கிளப்பில் முக்கியமான தேசிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;150-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;தொடர்ந்து கூட்டு நடவடிக்கை மன்றம் நடத்திய தேசிய இணையவழி ஆலோசனைக் கூட்டத்தில், நாடு முழுவதிலுமிருந்து 150-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், திருச்சபைத் தலைவர்கள், சட்ட வல்லுநர்கள் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றதாக பி.வில்சன் குறிப்பிட்டுள்ளார். ஜூன் 17-ஆம் தேதி நடைபெற்ற முக்கியமான தேசியத் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்திலும் 100-க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;&lt;h3&gt;நாடு தழுவிய பிரார்த்தனை, உண்ணாநோன்பு&lt;/h3&gt;&lt;p&gt;கூட்டு நடவடிக்கை மன்றத்தின் அழைப்பை ஏற்று, ஜூன் 28-ஆம் தேதி இந்தியா முழுவதும் உள்ள தேவாலயங்கள், கிறிஸ்தவ குடும்பங்கள் மற்றும் மிஷன் அமைப்புகள் சார்பில் தேசிய பிரார்த்தனை மற்றும் உண்ணாநோன்பு கடைபிடிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, ஜூலை 3-ஆம் தேதி JAFM சார்பில் நாடு தழுவிய தேசிய எதிர்ப்பு தினம் நடத்தப்பட்டதாகவும் பி.வில்சன் கூறியுள்ளார். அன்றைய தினம் நாடு முழுவதும் அமைதியான ஆர்ப்பாட்டங்கள், கையெழுத்து சேகரிப்பு இயக்கங்கள் மற்றும் மனுக்கள் சமர்ப்பிக்கும் நிகழ்வுகள் நடைபெற்றதாகவும், பொதுமக்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பிரதமருக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இந்தியா சர்வதேச மையத்தில் ஆலோசனைக் கூட்டம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஜூலை 20-ஆம் தேதி புதுடெல்லியில் உள்ள இந்தியா சர்வதேச மையத்தில் முக்கியமான தேசிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாகவும் பி.வில்சன் தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், திருச்சபைத் தலைவர்கள், சுகாதாரத் துறை வல்லுநர்கள், கல்வியாளர்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;அமித் ஷாவை சந்தித்த குழு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஆகஸ்ட் 6-ஆம் தேதி தனது தலைமையில் இந்தியாவில் உள்ள பல்வேறு கிறிஸ்தவப் பிரிவுகளைச் சேர்ந்த மதத் தலைவர்கள், அரசு சாரா நிறுவனங்கள், சுகாதார மற்றும் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்ததாகவும் பி.வில்சன் தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பின்போது, FCRA திருத்த மசோதாவால் பாதிக்கப்படக்கூடிய கிறிஸ்தவ சமூகத்தினர் மற்றும் நிறுவனங்களின் கவலைகளை விரிவாக மத்திய உள்துறை அமைச்சரிடம் எடுத்துரைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;மு.க.ஸ்டாலினுக்கு நன்றி&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;மத்திய உள்துறை அமைச்சருடனான சந்திப்பைத் தொடர்ந்து, கிறிஸ்தவ சமூகத் தலைவர்களுடன் இணைந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும் சந்தித்ததாக பி.வில்சன் தெரிவித்துள்ளார். சிறுபான்மையினர் மற்றும் கிறிஸ்தவ சமூகத்தினரின் பிரச்சினைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருவதற்கும், ஆதரவு அளித்து வருவதற்கும் மு.க.ஸ்டாலினுக்கு அப்போது நன்றி தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;மசோதாவை திரும்பப் பெறுவதே முதன்மை கோரிக்கை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;FCRA திருத்த மசோதா கூட்டு நாடாளுமன்றக் குழுவிற்கு அனுப்பப்பட்டிருப்பதை வரவேற்றாலும், மசோதாவை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்ற தங்களது பிரதான கோரிக்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று பி.வில்சன் தெரிவித்துள்ளார். கூட்டு நாடாளுமன்றக் குழுவின் ஆய்வு மூலம் பல்வேறு தரப்பினரின் கருத்துகள், கவலைகள் மற்றும் பரிந்துரைகள் விரிவாக முன்வைக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.கடந்த பல மாதங்களாக தங்களுடன் நின்ற தலைவர்கள், அரசியல் கட்சிகள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் அனைவருக்கும் தனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் மாநிலங்களவை உறுப்பினரும், சிறுபான்மையினருக்கான கூட்டு நடவடிக்கை மன்றத்தின் தலைவருமான பி.வில்சன் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>politics</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/fcra-amendment-bill-p-wilson-welcomes-jpc-review-demands-complete-withdrawal-articleshow-9n9c503"/>
        </item>
        <item>
            <title><![CDATA[India Independence: இந்திய சுதந்திரம் உலக விடுதலைக்கு வித்திட்ட கதை! இதன் பிறகு எத்தனை நாடுகள் சுதந்திரம் பெற்றன தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/india/how-indias-independence-sparked-a-global-wave-of-freedom-blm7cdw</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/india/how-indias-independence-sparked-a-global-wave-of-freedom-blm7cdw</guid>
            <pubDate>Thu, 13 Aug 2026 09:29:56 +0530</pubDate>
            <description><![CDATA[இந்தியாவின் சுதந்திரம், ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள பல நாடுகளை காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுபடத் தூண்டியது. இதன் விளைவாக, சுமார் 118 நாடுகள் சுதந்திரம் பெற்று, உலக வரைபடத்தையே மாற்றியமைத்தன.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kzwkpg9t6am1trmdk8d8p55j,imgname-chatgpt-image-aug-13--2026--09-16-09-am--1--1786592837946.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[இந்தியாவின் சுதந்திரம், ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள பல நாடுகளை காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுபடத் தூண்டியது. இதன் விளைவாக, சுமார் 118 நாடுகள் சுதந்திரம் பெற்று, உலக வரைபடத்தையே மாற்றியமைத்தன.&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;India Independence Day: &lt;/strong&gt;இந்தியா தனது 79வது சுதந்திர ஆண்டை நெருங்கிக் கொண்டிருக்கிறது. 140 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட இந்த நாடு, தனக்கு மட்டும் சுதந்திரம் பெறவில்லை, மற்ற பல நாடுகளுக்கும் ஒரு உத்வேகமாக அமைந்தது. இந்தியாவின் சுதந்திர அறிவிப்புக்குப் பிறகு, பல இடங்களில் காலனி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்தன. இதன் விளைவாக, அவர்களின் போராட்டங்களுக்கு முன்னால் காலனித்துவம் தோற்கடிக்கப்பட்டது. உலக வரைபடத்தில் சுமார் 118 இறையாண்மை கொண்ட நாடுகள் தோன்றின.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த எண்ணிக்கையில் சிறிய வேறுபாடுகள் இருந்தாலும், அடிமைத்தனத்திலிருந்து சுதந்திரம் பெற்ற நாடுகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்கது என்பது உண்மை. சில நாடுகள் பிரிட்டனிடமிருந்தும், சில பிரான்ஸ், போர்ச்சுகல் மற்றும் பிற நாடுகளிடமிருந்தும் சுதந்திரம் பெற்றன. ஒரு காலத்தில் ஐரோப்பிய நாடுகள் உலகின் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவின் சுதந்திரம் ஒரு நாட்டின் அரசியல் வெற்றி மட்டுமல்ல. இது ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் உலகின் பிற பகுதிகளுக்கும் உத்வேகம் அளித்தது. 1947-க்குப் பிறகு, காலனித்துவத்திற்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்தது. பிரிட்டன், பிரான்ஸ், நெதர்லாந்து, போர்ச்சுகல், பெல்ஜியம் மற்றும் பிற ஐரோப்பியப் பேரரசுகளிடமிருந்து பல நாடுகள் சுதந்திரம் பெற்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பிய சக்திகள் பலவீனமடைந்தன. தொலைதூர காலனிகளைக் கட்டுப்படுத்துவது அவர்களுக்கு கடினமாகி வந்தது. உள்ளூர் மக்களும் அரசியல் உரிமைகள், அடையாளம் மற்றும் தன்னாட்சியை விரும்பினர். இந்த நேரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் செல்வாக்கு அதிகரித்தது. சுயநிர்ணய உரிமை என்ற கருத்து வலுப்பெற்றது. இந்த செயல்பாட்டில் இந்தியாவும் தார்மீக ஆதரவை வழங்கியது.&lt;/p&gt;&lt;p&gt;இந்தியத் தலைவர்கள் காலனித்துவத்தை எதிர்த்தனர். ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிடையே ஒத்துழைப்பு அதிகரித்தது. பின்னர், அணிசேரா இயக்கமும் புதிய நாடுகளுக்கு ஒரு பொதுவான தளத்தை வழங்கியது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவின் வழியைப் பின்பற்றி, ஆசியாவின் பல நாடுகள் சுதந்திரம் பெற்றன. 1948-ல், மியான்மர் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றது. அதே ஆண்டில் இலங்கையும் சுதந்திரம் அடைந்தது. 1957-ல் மலேசியா சுதந்திர நாடானது. 1965-ல் மாலத்தீவுகள் பிரிட்டிஷ் பாதுகாப்பிலிருந்து விடுபட்டது.&lt;/p&gt;&lt;p&gt;நீண்ட மற்றும் வலிமிகுந்த போருக்குப் பிறகு, 1971-ல் வங்கதேசம் சுதந்திரம் பெற்றது. அதன் விடுதலைப் போராட்டத்தில் இந்தியா முக்கியப் பங்காற்றியது. இன்று திமோர்-லெஸ்டே என்று அழைக்கப்படும் கிழக்கு திமோர், 2002-ல் சுதந்திரம் பெற்றது. இது 21-ம் நூற்றாண்டில் சுதந்திரம் பெற்ற முக்கிய நாடுகளில் ஒன்றாகும். ஆசியாவில் சுதந்திரம் என்பது கொடியை மாற்றுவது மட்டுமல்ல. புதிய நாடுகள் எல்லை, மொழி, இன அடையாளம் மற்றும் பொருளாதார வளர்ச்சி தொடர்பான சவால்களையும் சந்தித்தன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவிற்குப் பிறகு ஆப்பிரிக்காவில்தான் அதிக எண்ணிக்கையிலான நாடுகள் சுதந்திரம் பெற்றன. 1950 மற்றும் 1960-கள் ஆப்பிரிக்க சுதந்திரத்தின் காலமாக இருந்தன. குறிப்பாக 1960-ம் ஆண்டு 'ஆப்பிரிக்காவின் ஆண்டு' என்று அழைக்கப்படுகிறது. அந்த ஆண்டில் பல ஆப்பிரிக்க நாடுகள் சுதந்திரம் பெற்றன. 1957-ல் கானா சுதந்திரம் பெற்றது, இது துணை-சஹாரா ஆப்பிரிக்காவின் முதல் சுதந்திர நாடுகளில் ஒன்றாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நைஜீரியா, காங்கோ, செனகல், சோமாலியா, மாலி, நைஜர், சாட், காபோன் மற்றும் பல நாடுகள் 1960-ம் ஆண்டு வாக்கில் சுதந்திரம் பெற்றன. பிரான்சுக்கு எதிரான நீண்ட போராட்டத்திற்குப் பிறகு 1962-ல் அல்ஜீரியா சுதந்திரம் பெற்றது. கென்யா 1963-லும், ஜாம்பியா மற்றும் மலாவி 1964-லும் சுதந்திரம் பெற்றன.&lt;/p&gt;&lt;p&gt;அங்கோலா மற்றும் மொசாம்பிக் 1975-ல் போர்த்துகீசிய ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றன. நமீபியா 1990-லும், தெற்கு சூடான் 2011-லும் சுதந்திரம் பெற்றன. தெற்கு சூடான் உலகின் இளைய, பரவலாக அங்கீகரிக்கப்பட்ட நாடாகக் கருதப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவிற்குப் பிறகு, கரீபியன் பிராந்தியத்தில் உள்ள பல சிறிய நாடுகளும் சுதந்திரம் பெற்றன. ஜமைக்கா மற்றும் டிரினிடாட் மற்றும் டோபாகோ 1962-ல் சுதந்திரம் பெற்றன. கயானா மற்றும் பார்படாஸ் 1966-ல் சுதந்திரம் பெற்றன. பஹாமாஸ் 1973-ல் சுதந்திரம் பெற்றது. கிரெனடா, டொமினிகா, செயின்ட் லூசியா, மற்றும் செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் போன்ற சிறிய தீவு நாடுகளும் அடுத்தடுத்த ஆண்டுகளில் சுதந்திரம் பெற்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பசிபிக் பெருங்கடல் பகுதியில் பிஜி, பப்புவா நியூ கினியா, சாலமன் தீவுகள், வனுவாட்டு, கிரிபாட்டி, துவாலு, மார்ஷல் தீவுகள் மற்றும் பலாவ் போன்ற நாடுகள் சுதந்திரம் பெற்றன. இந்த நாடுகளில் மக்கள் தொகை குறைவாகவும், வளங்கள் குறைவாகவும் இருந்தாலும், அவற்றின் கடல் பகுதி வளத்தைகொடுத்தன. பருவநிலை மாற்றம் இவர்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க சவாலாக உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;1991-க்குப் பிறகு உலக அரசியல் வரைபடம் மீண்டும் மாறியது. சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்தது. எஸ்டோனியா, லாட்வியா, லிதுவேனியா, உக்ரைன், ஜார்ஜியா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஆர்மீனியா, அஜர்பைஜான் மற்றும் பல நாடுகள் சுதந்திரம் பெற்றன அல்லது தங்கள் சுதந்திரத்தை மீண்டும் நிலைநாட்டின. இதேபோல், யூகோஸ்லாவியாவின் உடைவால் ஸ்லோவேனியா, குரோஷியா, போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, வடக்கு மாசிடோனியா, மாண்டினீக்ரோ மற்றும் செர்பியா போன்ற தனித்தனி அரசியல் அமைப்புகள் தோன்றின. மொத்த எண்ணிக்கையில் உள்ள சிறிய வேறுபாட்டிற்கு இதுவே காரணம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்று, சுதந்திரம் பெற்ற நாடுகளின் நிலைமை ஒரே மாதிரியாக இல்லை. சில நாடுகள் விரைவான பொருளாதார வளர்ச்சியை அடைகின்றன. சில நாடுகள் ஜனநாயகத்தை வலுப்படுத்துகின்றன. சில நாடுகள் இன்னும் போர், வறுமை, ஸ்திரத்தன்மை இல்லாமை மற்றும் காலநிலை நெருக்கடியுடன் போராடுகின்றன. சிங்கப்பூர் ஒரு வெற்றிகரமான உதாரணம். 1965-ல் சுதந்திரம் பெற்ற பிறகு, வர்த்தகம், கல்வி, துறைமுகம் மற்றும் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு வலுவான பொருளாதாரத்தை இந்த நாடு உருவாக்கியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பஹ்ரைன் போன்ற நாடுகள் எண்ணெய், எரிவாயு, வர்த்தகம் மற்றும் உலகளாவிய முதலீடுகளால் செழிப்படைந்துள்ளன. வங்கதேசம் ஆடைத் தொழில், பெண்கள் கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. இருப்பினும், இது காலநிலை மாற்றம், வெள்ளம் மற்றும் அதிக மக்கள் தொகை போன்ற சவால்களை எதிர்கொள்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆப்பிரிக்காவில், ருவாண்டா, போட்ஸ்வானா மற்றும் மொரிஷியஸ் வளர்ச்சி மற்றும் நல்லாட்சிக்கான நேர்மறையான எடுத்துக்காட்டுகளாகக் கருதப்படுகின்றன. மறுபுறம், தெற்கு சூடான், சோமாலியா, சூடான் மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசு ஆகியவை ஸ்திரத்தன்மையின்மை, வன்முறை, இடப்பெயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடிகள் போன்ற சவால்களுடன் போராடுகின்றன. உக்ரைன், ஜார்ஜியா மற்றும் வேறு சில முன்னாள் சோவியத் நாடுகள் பாதுகாப்பு மற்றும் புவிசார் அரசியல் பதட்டங்களை எதிர்கொள்கின்றன. பல சிறிய தீவு நாடுகள் கடல் மட்ட உயர்வு, புயல்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து கவலை கொண்டுள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆக, இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு, உலகம் காலனித்துவ ஆட்சியின் முடிவைக் கொண்டாடியது என்று சொல்லலாம். சுமார் 118 நாடுகள் சுதந்திரம் பெற்றது மனித வரலாற்றின் மிக முக்கியமான அரசியல் நிகழ்வுகளில் ஒன்றாகும். இந்த செயல்முறை எப்போதும் அமைதியானதாக இருக்கவில்லை. பல நாடுகள் போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது, பல சமூகங்கள் அதற்காக பெரும் விலை கொடுக்க வேண்டியிருந்தது. இருப்பினும், இந்த நாடுகளின் சுதந்திரம் உலகை மேலும் பன்முகத்தன்மை கொண்டதாக மாற்றியது. உலக அரங்கில் ஆசியா, ஆப்பிரிக்கா, கரீபியன் மற்றும் பசிபிக் பிராந்தியங்களின் குரல்கள் வலுப்பெற்றன. இந்த ஆழமான மாற்றத்திற்கு இந்தியாவின் சுதந்திரமே ஒரு ஊக்கியாக இருந்தது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>politics</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/india/how-indias-independence-sparked-a-global-wave-of-freedom-blm7cdw"/>
        </item>
        <item>
            <title><![CDATA[தொகுதி மறுவரையறை.. ஒரே வாரத்தில் பல்டி அடித்தாரா முதல்வர் விஜய்? அமித்ஷா முன் பேசியது என்ன?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/cm-vijay-delimitation-stand-dmk-allegation-tvk-clarification-c6ap6gr</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/cm-vijay-delimitation-stand-dmk-allegation-tvk-clarification-c6ap6gr</guid>
            <pubDate>Thu, 20 Aug 2026 18:40:19 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Delimitation Controversy: தொகுதி மறுவரையறை விவகராத்தில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய ஒரே வாரத்தில் முதல்வர் விஜய் இன்று பல்டி அடித்துள்ளதாக திமுக குற்றம்சாட்டியுள்ளது. அமித்ஷா முன் விஜய் என்ன பேசினார்? என பார்ப்போம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0fmapq41477kwyk6nhfjmxt,imgname-vijay-amit-sha-1787231034084.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Delimitation Controversy: தொகுதி மறுவரையறை விவகராத்தில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய ஒரே வாரத்தில் முதல்வர் விஜய் இன்று பல்டி அடித்துள்ளதாக திமுக குற்றம்சாட்டியுள்ளது. அமித்ஷா முன் விஜய் என்ன பேசினார்? என பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென் மண்டல கவுன்சிலின் 31-வது கூட்டம் கோவளத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதல்வர் விஜய், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்பட கேரளா, தெலங்கானா மற்றும் கர்நாடக மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில், தென் மண்டல கவுன்சிலின் கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய், தொகுதி மறுவரையறை சட்டத்தால், எந்த மாநிலமும் தங்களது நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழக்காது என்று மத்திய அரசு தெளிவான உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;தொகுதி மறுவரையறை குறித்து பேசிய விஜய்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;அதாவது &quot;1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் லோக்சபா இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான முடக்கம் முடிவுக்கு வரவிருக்கிறது. இந்த நிலையில், 2026 தொகுதி மறுவரையறை மசோதா பரிசீலனையில் உள்ளது. மக்கள் தொகையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தொகுதி மறுவரையறை செய்தால், நாடாளுமன்றத்தில் நமது ஒட்டுமொத்த குரல் குறைந்துவிடுமோ என்ற உண்மையான மற்றும் பொதுவான கவலை அனைத்து தென் மாநிலங்களிலும் உள்ளது&quot; என்று அவர் கூறினார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தொடந்து பேசிய முதல்வர் விஜய், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டதற்காக தென் மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது என்றும் கூறினார். &quot;மக்கள் தொகையை நிலைப்படுத்துதல், மனிதவள மேம்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் தென் மாநிலங்கள் முன்னணியில் உள்ளன. இந்த சாதனைகள், தேசிய முன்னுரிமைகளை வெற்றிகரமாக செயல்படுத்தியதையே காட்டுகின்றன. இதற்காக எங்கள் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பது சரியாகாது. தேசிய நோக்கங்களை நிறைவேற்றும் மாநிலங்களை, பொதுக் கொள்கைகள் தண்டிக்கும் வகையில் அமைந்துவிடக் கூடாது&quot; என்றார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;மத்திய அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;மேலும் ''மக்கள் தொகையை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியதன் காரணமாக, எந்த மாநிலத்தின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவ சதவீதமும் குறைக்கப்படாது என்று மத்திய அரசு தெளிவான சட்டப்பூர்வ உத்தரவாதத்தை வழங்க வேண்டும். இது நமது அரசியலமைப்புச் சட்டம் கூறும் கூட்டாட்சி தத்துவத்தையும், சமத்துவக் கொள்கைகளையும் நிலைநிறுத்தும். மேலும், நமது ஜனநாயக அமைப்புகள் மீது அனைத்து மாநிலங்களுக்கும் உள்ள நம்பிக்கையை வலுப்படுத்தும்'' விஜய் தனது பேச்சின்போது சுட்டிக்காட்டினார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த நிலையில், தொகுதி மறுவரையறை விவாகரத்தில் ஒரே வாரத்தில் முதல்வர் விஜய் ஒரே வாரத்தில் பல்டி அடித்து விட்டதாக திமுக குற்றம்சாட்டியுள்ளது. அதாவது தொகுதி மறுவரையறை செய்யக்கூடாது. மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 ஆக நிரந்தரமாக்கப்பட வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.&lt;/p&gt;&lt;p&gt;இந்த தீர்மானத்துக்கு எதிர்க்கட்சியான திமுகவும் ஆதரவு தெரிவித்து இருந்தது. அதே வேளையில் இன்று அமித்ஷா முன்பு பேசிய முதல்வர் விஜய், மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 ஆக நிரந்தரமாக்கப்பட வேண்டும் என்பதை கூறவில்லை. மாறாக, தொகுதி மறுவரையறை சட்டத்தால், எந்த மாநிலமும் தங்களது நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழக்காது என்று மத்திய அரசு தெளிவான உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று மாற்றி பேசியுள்ளதாக திமுக குற்றம்சாட்டியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;திமுகவுக்கு பதிலடி கொடுத்துள்ள தவெக, திமுக வழக்கம்போல் தவறான தகவலை பரப்புவதாக குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட தவெக, ''மாமல்லபுரத்தில் இன்று நடந்த 31வது தென் மண்டல குழு கூட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் ஆற்றப்பட்ட உரையில் மக்கள்தொகைக் கட்டுப்பாட்டில் வெற்றி பெற்ற தென் மாநிலங்களின் தற்போதைய பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கும் பரந்த தொலைநோக்கு கருத்தை தெரிவித்தார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;தமிழ் நாடு சட்டமன்றத்தில் 12.8.2026 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இதனைச் செயல் வடிவில் கூறுகிறது. அதாவது, மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543 ஆக நிர்ணயித்தல், மாநிலங்களுக்கு இடையேயான தற்போதைய இட ஒதுக்கீடு விகிதாச்சாரதை மாற்றாமல் தொடரச் செய்தல், மற்றும் வருங்காலத் தேர்தல்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீட்டை உறுதி செய்தல் ஆகிய பொருளில் தீர்மானங்களை நிறைவேற்றி 12.8.2026 அன்றே மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கும் நேர்முகக் கடிதம் எழுதிய நிலையில், இது குறித்து குறைந்த பட்ச புரிதல் இல்லாமல் தொகுதி மறுவரையறை குறித்து தவறானக் கருத்து பரப்பப்படுகிறது'' என்று கூறியுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>politics</category>
            <dc:creator>Rayar A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/cm-vijay-delimitation-stand-dmk-allegation-tvk-clarification-c6ap6gr"/>
        </item>
        <item>
            <title><![CDATA[STR on CM Vijay: அரசியல் பிரவேசம் எப்போது.! சூசகமாக பதில் சொன்ன சிம்பு.! என்ன சொன்னார் தெரியுமா?!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/str-on-cm-vijay-my-brother-is-doing-well-let-him-serve-the-people-says-silambarasan-d4xq3r8</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/str-on-cm-vijay-my-brother-is-doing-well-let-him-serve-the-people-says-silambarasan-d4xq3r8</guid>
            <pubDate>Thu, 20 Aug 2026 06:39:48 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;STR on CM Vijay: நடிகர் சிலம்பரசன், முதல்வர் விஜய்யின் ஆட்சி மற்றும் மக்கள் நம்பிக்கை குறித்து பேசியுள்ளார். மேலும், அரசியலுக்கு வருவது தொடர்பான கேள்விக்கும் பதிலளித்துள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0eberkzjz8t6pd5a0m6kfce,imgname-chatgpt-image-aug-20--2026--06-34-31-am--1--1787188175487.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;STR on CM Vijay: நடிகர் சிலம்பரசன், முதல்வர் விஜய்யின் ஆட்சி மற்றும் மக்கள் நம்பிக்கை குறித்து பேசியுள்ளார். மேலும், அரசியலுக்கு வருவது தொடர்பான கேள்விக்கும் பதிலளித்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் அரசியல் பயணம் தொடர்ந்து கவனம் பெற்றுவரும் நிலையில், நடிகர் சிலம்பரசன் (STR) தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கருத்துகள் தற்போது பேசுபொருளாகியுள்ளன. விஜய்யின் செயல்பாடுகள் குறித்து தனது பார்வையை வெளிப்படுத்திய சிலம்பரசன், &ldquo;இப்போதைக்கு என் சகோதரன் நன்றாக செயல்படுகிறார். அவர் மக்களுக்கு சேவை செய்யட்டும்&rdquo; என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விஜய் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை தேர்தல் முடிவுகளில் தெளிவாக வெளிப்பட்டதாகவும் சிலம்பரசன் குறிப்பிட்டுள்ளார். விஜய்யை நேரில் பார்த்ததும், அவரது அணுகுமுறையையும் செயல்பாடுகளையும் கவனித்ததும் மக்களுக்கு அவர் மீது நம்பிக்கை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அந்த நம்பிக்கையின் வெளிப்பாடாகவே விஜய் முதலமைச்சராகியுள்ளதாகவும் சிலம்பரசன் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேலும், &ldquo;CM விஜய் ஆட்சியில் எந்த பிரச்சனையும் இல்லை&rdquo; என்றும் சிலம்பரசன் தெரிவித்ததாக கூறப்படுகிறது. புதிய அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்துகளை தெரிவித்து வரும் சூழலில், விஜய்க்கு ஆதரவாக சிலம்பரசன் கூறியதாக வெளியாகியுள்ள இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சினிமா துறையில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் சிலம்பரசன், அரசியல் தொடர்பான கேள்விகளுக்கும் அவ்வப்போது தனது கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்து வருகிறார். அந்த வகையில், விஜய்யின் அரசியல் செயல்பாடு குறித்து அவர் தெரிவித்துள்ள இந்த கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதனிடையே, சிலம்பரசனிடம் நீங்களும் அரசியலுக்கு வருவீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பதிலளித்த அவர், &ldquo;டைம் இருக்கு&rdquo; என்று தெரிவித்துள்ளார். சிலம்பரசனின் இந்த பதில், எதிர்காலத்தில் அவர் அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்பு உள்ளதா என்ற எதிர்பார்ப்பை அவரது ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு பதில் அளித்து பேசிய சிம்பு, தற்போது விஜய் இருக்கும் போது தற்போது நான் எதற்கு என சிரித்தார். பின்னர் தனது சகோதரன் என விஜய்யை குறிப்பிட்டு, அவர் மக்களுக்கு சேவை செய்யட்டும் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விஜய்யின் அரசியல் பயணம் தொடங்கியுள்ள நிலையில், திரையுலகைச் சேர்ந்த முக்கிய பிரபலங்களின் கருத்துகள் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றன. அந்த வரிசையில் சிலம்பரசனின் சமீபத்திய பேச்சும் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, &ldquo;டைம் இருக்கு&rdquo; என்ற அவரது பதில், எதிர்காலத்தில் அரசியலில் சிலம்பரசனின் பங்கு என்னவாக இருக்கும் என்ற கேள்வியை மேலும் அதிகரித்துள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>politics</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/str-on-cm-vijay-my-brother-is-doing-well-let-him-serve-the-people-says-silambarasan-d4xq3r8"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Maternity Leave: 3-வது குழந்தைக்கும் 1 வருஷ லீவு! அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/tamil-nadu-government-announces-365-day-maternity-leave-for-third-child-fzk5676</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/tamil-nadu-government-announces-365-day-maternity-leave-for-third-child-fzk5676</guid>
            <pubDate>Wed, 19 Aug 2026 11:34:47 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தமிழ்நாடு அரசு பெண் ஊழியர்களுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்டிருக்கு. இனிமே மூன்றாவது குழந்தைக்கும் 12 வாரங்களுக்கு பதிலா 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு கிடைக்கும். இது பெண்களின் நலன், அதிகாரமளித்தலுக்கான முக்கியமான நடவடிக்கைன்னு அரசு சொல்லியிருக்கு.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kx10kvqqycsgzzcdh5yrer9b,imgname-vijay-at-govt-hospital-1783519375095.jpeg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழ்நாடு அரசு பெண் ஊழியர்களுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்டிருக்கு. இனிமே மூன்றாவது குழந்தைக்கும் 12 வாரங்களுக்கு பதிலா 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு கிடைக்கும். இது பெண்களின் நலன், அதிகாரமளித்தலுக்கான முக்கியமான நடவடிக்கைன்னு அரசு சொல்லியிருக்கு.&lt;/p&gt;&lt;img&gt;முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு, பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு விதிகளில் ஒரு பெரிய மாற்றத்தை அறிவித்துள்ளது. மூன்றாவது குழந்தை பிறக்கும் பெண் ஊழியர்களுக்கு, தற்போதுள்ள 12 வார விடுப்பை 365 நாட்களாக உயர்த்தி உள்ளது. மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் டி. சரத்குமார், சட்டப்பேரவையில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதன் மூலம், முதல் இரண்டு குழந்தைகளுக்குக் கிடைக்கும் அதே ஒரு வருட விடுப்பு, இனி மூன்றாவது குழந்தைக்கும் கிடைக்கும். இதற்கான அரசாணை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;img&gt;தற்போது, இரண்டுக்கும் குறைவான குழந்தைகளைப் பெற்ற அரசு பெண் ஊழியர்களுக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது. ஆனால், ஏற்கனவே இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், அவர்களுக்கு 12 வாரங்கள் (84 நாட்கள்) மட்டுமே சம்பளத்துடன் கூடிய விடுப்பு கிடைத்தது. இந்த புதிய அறிவிப்பு, மூன்றாவது குழந்தை பெறும் ஊழியர்களுக்கான விடுப்பை 12 வாரங்களிலிருந்து 365 நாட்களாக உயர்த்துகிறது. 'சமூக நலன் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தலுக்கு முன்னுரிமை அளிக்கும் அரசாக இருப்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது' என அமைச்சர் சரத்குமார் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.&lt;img&gt;தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு விதிகள் பல ஆண்டுகளாக விரிவுபடுத்தப்பட்டு வந்துள்ளன. ஆரம்பத்தில் 90 நாட்களாக இருந்த இந்த விடுப்பு, 2011-ல் ஆறு மாதங்களாகவும், 2016-ல் ஒன்பது மாதங்களாகவும் உயர்த்தப்பட்டது. பின்னர், ஜூலை 2021-ல், தகுதியுள்ள பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 365 நாட்களாக அதிகரிக்கப்பட்டது. தற்போது, இந்த 365 நாட்கள் விடுப்பு மூன்றாவது குழந்தைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.&lt;img&gt;&lt;p&gt;இந்த மாற்றம், அரசுப் பெண் ஊழியர்களுக்கு குழந்தை பிறப்புக்குப் பிறகு ஓய்வெடுக்கவும், குழந்தையைக் கவனித்துக் கொள்ளவும் அதிக நேரத்தை வழங்கும். தற்போதுள்ள 84 நாட்கள் விடுப்பு, 365 நாட்களாக மாறுவது ஒரு பெரிய வித்தியாசம். இந்த அறிவிப்பு அரசாணை மூலம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட பின்னரே நடைமுறைக்கு வரும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இந்தியாவின் மகப்பேறு சட்டம் என்ன சொல்கிறது?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;தமிழ்நாட்டின் இந்த முடிவு மாநில அரசு ஊழியர்களுக்கானது. இது இந்தியாவில் உள்ள அனைத்து பெண் ஊழியர்களுக்கும் பொருந்தாது. தேசிய அளவில், மகப்பேறு நலச் சட்டம், 1961-ன்படி, இரண்டுக்கும் குறைவான குழந்தைகளைக் கொண்ட பெண்களுக்கு 26 வாரங்கள் வரை விடுப்பு வழங்கப்படுகிறது. இரண்டுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், 12 வாரங்கள் விடுப்பு கிடைக்கும். தத்தெடுக்கும் தாய்மார்களுக்கும் இந்தச் சட்டத்தில் விதிகள் உள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சட்டப்பேரவை அறிவிப்பு ஒரு முக்கியமான படி என்றாலும், அரசாணை வெளியான பிறகே இது நடைமுறைக்கு வரும். இந்த 365 நாட்கள் விடுப்பு எந்தெந்த ஊழியர்களுக்கு, எப்படிப் பொருந்தும் என்பது போன்ற விவரங்கள் அந்த அரசாணையில் தெளிவாகக் குறிப்பிடப்படும். அதுவரை, ஊழியர்கள் இந்த புதிய விதியின் கீழ் விடுப்பு கோரக் காத்திருக்க வேண்டும். இந்த அறிவிப்பு முழுமையாகச் செயல்படுத்தப்பட்டால், முதல் இரண்டு குழந்தைகளைப் போலவே மூன்றாவது குழந்தைக்கும் 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>politics</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/tamil-nadu-government-announces-365-day-maternity-leave-for-third-child-fzk5676"/>
        </item>
        <item>
            <title><![CDATA[தமிழக உரிமைக்காக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்.! அடித்து தூள் கிளப்பும் அன்புமணி ராமதாஸ்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/politics/tamil-nadu-rights-all-parties-must-unite-for-tamil-nadu-interests-anbumani-ramadoss-launches-strong-attack-articleshow-hhx93qy</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/politics/tamil-nadu-rights-all-parties-must-unite-for-tamil-nadu-interests-anbumani-ramadoss-launches-strong-attack-articleshow-hhx93qy</guid>
            <pubDate>Thu, 20 Aug 2026 08:00:13 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், மேகதாது அணைக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் பிரதமரை சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.மாணவர்கள் போராட்டம், பட்டியலின நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தமிழக அரசுக்கு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kbm960yy7n7g64feem3pbdhk,imgname-whatsapp-image-2025-12-04-at-14.24.41-1764838540254.jpeg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;h2&gt;மேகதாது அணை கட்டக்கூடாது.! பிரதமரை சந்தித்து தமிழக கட்சிகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்&lt;/h2&gt;&lt;p&gt;கர்நாடகாவில் வனத்துறையினரால் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்கி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், உயிரிழந்தவர்கள் அனைவரும் கூலித் தொழிலாளர்கள் என்றும், மாடு காணாமல் போனதைத் தேடி காட்டுக்குள் சென்றபோது அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், இந்த விவகாரம் கர்நாடகாவின் உள்நாட்டுப் பிரச்சனை எனக் கருத முடியாது என்றும், உலகின் எந்தப் பகுதியில் தமிழர்கள் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்காக குரல் கொடுப்போம் என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;மேகதாது விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;காவிரி நீர் மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார். மேகதாது விவகாரம் தமிழக வெற்றிக் கழகத்துக்கோ, காங்கிரஸ் கட்சிக்கோ மட்டுமே உரிய பிரச்சனை அல்ல; இது ஒட்டுமொத்த தமிழகத்தின் பிரச்சனை என்று அவர் குறிப்பிட்டார். தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை ஒருங்கிணைத்து டெல்லிக்கு அழைத்துச் சென்று பிரதமர் மற்றும் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். கர்நாடக அரசு கடந்த இரண்டு மாதங்களில் பலமுறை அனைத்துக் கட்சி கூட்டங்களை நடத்தியுள்ள நிலையில், தமிழகத்தில் இதுபோன்ற ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;காங்கிரஸ் கட்சிக்கு அன்புமணி கேள்வி&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் அரசியல் செய்து வருவதாக அன்புமணி விமர்சித்தார். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் நிலையில், கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் தொடர்ந்து டெல்லி சென்று தனது மாநிலத்திற்காக அழுத்தம் கொடுத்து வருகிறார். ஆனால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி இதற்கு மாறாக செயல்படுகிறது என அவர் சுட்டிக்காட்டினார். அந்தமான் கிரேட் நிக்கோபர் திட்டத்தில் காடுகள் அழிக்கப்படுவதாகக் கூறி எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ் தலைமை, மேகதாது திட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் வனப்பகுதி பாதிக்கப்படும் விவகாரத்தில் ஏன் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுக்கிறது என்றும் அன்புமணி கேள்வி எழுப்பினார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;மாணவர்கள் போராட்டத்திற்கு எதிரான சுற்றறிக்கை தவறு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;கல்லூரி கல்வித்துறை சார்பில் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபடுவது தொடர்பாக அனுப்பப்பட்ட சுற்றறிக்கை குறித்தும் அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அந்த சுற்றறிக்கையை யார் அனுப்பியது என்பது குறித்து விசாரணை நடத்தி, பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார். மாணவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று கூறுவது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும், உலகம் முழுவதும் மாணவர்கள் தங்களுடைய உரிமைகள் மற்றும் பிரச்சனைகளுக்காக போராடி வருகிறார்கள் என்றும் குறிப்பிட்டார். தமிழுக்காக மாணவர்கள் நடத்திய போராட்டங்களும் தமிழக அரசியலில் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. எனவே மாணவர்களின் ஜனநாயக உரிமைகளை கட்டுப்படுத்தும் வகையிலான சுற்றறிக்கைகளை அரசு தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;அதிகாரிகள் அரசை வழிநடத்தக் கூடாது&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;தற்போதைய அரசுக்கு போதிய நிர்வாக அனுபவம் இல்லாததை சில அதிகாரிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றும் அன்புமணி குற்றம்சாட்டினார். அதிகாரிகள் கூறுவதை மட்டுமே முதலமைச்சர் கேட்காமல், தனது மனசாட்சிப்படி மக்களின் நலனை கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பட்டியலின மக்களுக்கான நிதி ஒதுக்கீடு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;புரட்சி பாரதம் கட்சி சார்பில் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கான நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டிருப்பதையும் அன்புமணி வரவேற்றார். கடந்த காலங்களில் ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாகவும் முறையாகவும் செலவிடப்படாதது தொடர்பான தரவுகள் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த விவகாரத்தை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார். பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும் என்றும், நீண்ட காலமாக நிரப்பப்படாமல் உள்ள பின்னடைவு காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;நீர் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு தேவை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் ஆகியவற்றுடன் தொடர்ந்து நீர் தொடர்பான பிரச்சனைகள் இருந்து வருகின்றன. கேரளாவுடன் முல்லைப் பெரியாறு, கர்நாடகாவுடன் காவிரி மற்றும் மேகதாது உள்ளிட்ட விவகாரங்கள் நிலுவையில் உள்ளன. இவற்றில் தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் வலுவான நடவடிக்கைகள் தேவை என்று அன்புமணி கூறினார்.&lt;/p&gt;&lt;p&gt;தமிழ்நாடு தனி நாடாக இருந்தால் உலகின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாக இருக்கும் அளவுக்கு மக்கள் தொகையும் பொருளாதார வளமும் கொண்ட மாநிலமாக உள்ளது. இத்தகைய சூழலில் தமிழகத்தின் உரிமைகள் மற்றும் வளங்களை பாதுகாக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே முக்கியம் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>politics</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/politics/tamil-nadu-rights-all-parties-must-unite-for-tamil-nadu-interests-anbumani-ramadoss-launches-strong-attack-articleshow-hhx93qy"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Govt Scheme: இனி நீங்க சொந்த வீட்டுல இருக்க போறீங்க.! வீடு கட்ட அள்ளிக்கொடுக்கும் விஜய்.! உடனே இடத்த ரெடி பண்ணுங்க.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/your-dream-of-owning-a-home-is-coming-true-vijay-government-to-offer-rs5-lakh-for-house-construction-isx679s</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/your-dream-of-owning-a-home-is-coming-true-vijay-government-to-offer-rs5-lakh-for-house-construction-isx679s</guid>
            <pubDate>Thu, 13 Aug 2026 10:37:48 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;&lsquo;வெற்றி வீடு&rsquo; திட்டத்தின் கீழ் வீடு கட்ட வழங்கப்படும் நிதி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சொந்த வீடு கட்ட காத்திருக்கும் பயனாளிகளுக்கு பெரும் நம்பிக்கையையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kzwr5dxg8a4a46jjacf2scr3,imgname-chatgpt-image-aug-13--2026--10-17-35-am--1--1786597521328.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;&lsquo;வெற்றி வீடு&rsquo; திட்டத்தின் கீழ் வீடு கட்ட வழங்கப்படும் நிதி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சொந்த வீடு கட்ட காத்திருக்கும் பயனாளிகளுக்கு பெரும் நம்பிக்கையையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழக சட்டமன்றத்தில் 2026-27ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மற்றும் வரவு செலவு திட்டங்கள் மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்களுக்கு நேரடியாக பயனளிக்கும் வகையில் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. குறிப்பாக சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற கனவில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், &lsquo;வெற்றி வீடு&rsquo; திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சட்டமன்றத்தில் பட்ஜெட் விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் மரிய வில்சன், முந்தைய ஆட்சியில் &lsquo;வெற்றி வீடு&rsquo; திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு ரூ.3.11 லட்சம் வரை நிதி வழங்கப்பட்டதாக தெரிவித்தார். தற்போது அந்த நிதி உதவியை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக அவர் அறிவித்தார்.&lt;/p&gt;&lt;p&gt;வீடு கட்டுவதற்கான கட்டுமானப் பொருட்களின் விலை, தொழிலாளர் கூலி உள்ளிட்ட செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நிதி உதவியை உயர்த்துவது பயனாளிகளுக்கு கூடுதல் ஆதரவாக அமையும். இதன் மூலம் சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற கனவில் இருக்கும் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அரசின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கும் அமைச்சர் அவையில் பதிலளித்தார். நிதி நிலைமை சீரடைந்ததும் அரசு அளித்துள்ள அனைத்து தேர்தல் வாக்குறுதிகளும் படிப்படியாக முழுமையாக நிறைவேற்றப்படும் என்று அவர் உறுதியளித்தார்.&lt;/p&gt;&lt;p&gt;ஆட்சிப் பொறுப்பேற்றபோது மாநிலத்தின் நிதிநிலை சவாலான நிலையில் இருந்ததாகவும், வருவாயை அதிகரிப்பது மற்றும் செலவினங்களை முறையாக நிர்வகிப்பது தொடர்பாக உயர்மட்டக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அரசின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் சில ஏற்கனவே நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம், 200 யூனிட் இலவச மின்சாரம், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம், அண்ணன் சீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.&lt;/p&gt;&lt;p&gt;மேலும், முந்தைய அரசின் திட்டங்களை அப்படியே நகலெடுப்பதாக கூறப்படும் விமர்சனத்தையும் அமைச்சர் மறுத்தார். ஏற்கனவே இருந்த திட்டங்களில் பொதுமக்களுக்கான பயன்களை அதிகரிக்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் விளக்கினார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மகளிர் உரிமைத்தொகை திட்டத்தையும் அமைச்சர் உதாரணமாகக் குறிப்பிட்டார். 2021ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம், ஆட்சி அமைந்த பின்னர் சுமார் 28 மாதங்கள் கழித்து, 2023 செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது என்பதை அவர் நினைவுபடுத்தினார்.&lt;/p&gt;&lt;p&gt;அந்த நேரத்தில் மாநிலத்தின் நிதிநிலை காரணமாக திட்டத்தை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்பட்டதை சுட்டிக்காட்டிய அமைச்சர், தற்போதைய அரசின் நிதி நிலையும் படிப்படியாக சீரமைக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.&lt;/p&gt;&lt;p&gt;இதை படிச்சுட்டீங்களா? https://tamil.asianetnews.com/gallery/agriculture/kisan-credit-card-2026-how-to-get-a-loan-without-owning-land-5wxykr6&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் அமைச்சர் முக்கிய தகவல்களை வெளியிட்டார். 2026-27 நிதியாண்டில் மூலதனச் செலவின வளர்ச்சி விகிதம் 11.25 சதவீதமாக அதிகரித்து, ரூ.56,985 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மக்களுக்கு பயனளிக்கும் உண்மையான வளர்ச்சிப் பணிகளை உருவாக்குவதில் அரசு கவனம் செலுத்தி வருவதாகவும் அமைச்சர் கூறினார்.&lt;/p&gt;&lt;p&gt;இதனால், &lsquo;வெற்றி வீடு&rsquo; திட்டத்தின் நிதி ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு, சொந்த வீடு கட்டத் திட்டமிடும் குடும்பங்களுக்கு முக்கியமான அறிவிப்பாக பார்க்கப்படுகிறது. அரசு நிதி உதவியை எவ்வாறு, எந்த தகுதிகளின் அடிப்படையில் வழங்கும் என்பது தொடர்பான விரிவான வழிகாட்டுதல்கள் வெளியாகும் போது, பயனாளிகளுக்கு கூடுதல் தெளிவு கிடைக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;இதையும் படிக்கலாமே&lt;/p&gt;&lt;p&gt;https://tamil.asianetnews.com/gallery/career/indira-gandhi-national-open-university-job-vacancy-apply-now-7c0vm0i&lt;/p&gt;&lt;p&gt;https://tamil.asianetnews.com/gallery/career/indira-gandhi-national-open-university-job-vacancy-apply-now-7c0vm0i&lt;/p&gt;]]></content:encoded>
            <category>politics</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/your-dream-of-owning-a-home-is-coming-true-vijay-government-to-offer-rs5-lakh-for-house-construction-isx679s"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Sowmya Anbumani: “மனசாட்சியே இல்லாத நிறுவனம் NLC.! சட்டப்பேரவையில் கொந்தளித்த சௌமியா அன்புமணி..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/nlc-controversy-sowmya-anbumani-raises-strong-allegations-over-jobs-for-locals-k4dny40</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/nlc-controversy-sowmya-anbumani-raises-strong-allegations-over-jobs-for-locals-k4dny40</guid>
            <pubDate>Thu, 20 Aug 2026 11:54:23 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தமிழ்நாடு சட்டப்பேரவையில் என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக சௌமியா அன்புமணி கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். நிலம் வழங்கிய உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0ewv6b455fkygspnpwf59sm,imgname-chatgpt-image-aug-20--2026--11-42-20-am--1--1787206408548.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழ்நாடு சட்டப்பேரவையில் என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக சௌமியா அன்புமணி கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். நிலம் வழங்கிய உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ்நாட்டில் நிலம் வழங்கிய உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்காமல், நுழைவுத் தேர்வு மூலம் வெளிமாநிலத்தவர்களை என்எல்சி நிறுவனம் தேர்வு செய்வதாக பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி சட்டப்பேரவையில் கடுமையாக குற்றம்சாட்டினார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சட்டப்பேரவையில் சிறப்பு கவனயீர்ப்பின் மீது பேசிய அவர், &ldquo;தமிழ்நாட்டிலேயே மனசாட்சியே இல்லாமல் இயங்கும் நிறுவனம் என்றால் அது என்எல்சி நிறுவனம்தான்&rdquo; என விமர்சித்தார். விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்தியதுடன், நிலத்தடி நீரை அதிகளவில் உறிஞ்சி நிலத்தையும் பாதித்துள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேலும், தலைமுறை தலைமுறையாக அந்த பகுதியில் வசித்து வரும் மண்ணின் மைந்தர்களிடம் இருந்து நிலங்களை பெற்றுக்கொண்ட என்எல்சி நிறுவனம், அவர்களுக்கு உரிய வேலைவாய்ப்பை வழங்காமல் நுழைவுத் தேர்வு நடத்தி வெளிமாநிலத்தவர்களை பணியில் சேர்ப்பதாக சௌமியா அன்புமணி தெரிவித்தார். &ldquo;மருத்துவப் படிப்புக்கு ஆள் எடுப்பது போல ஏன் நுழைவுத் தேர்வு நடத்துகிறீர்கள்?&rdquo; என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.&lt;/p&gt;&lt;p&gt;என்எல்சி நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியான சிஎஸ்ஆர் நிதி முழுமையாக மக்களுக்கு பயன்படும் வகையில் செலவிடப்படுவதில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். சாலை, மேம்பாலம் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டதாக கூறினாலும், அவை பெரும்பாலும் நிறுவன வளாகத்திற்குள்ளேயே இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதற்கு பதிலளித்த தொழில்துறை அமைச்சர், என்எல்சி நிறுவனம் தொடர்பாக தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்துகொண்டிருப்பதாக தெரிவித்தார். தமிழக வெற்றி கழகம் விவசாயிகள் பக்கமே இருக்கும் என்றும், அரசு பொறுப்பேற்று மூன்று மாதங்களே ஆன நிலையில், பிரச்சினையை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.&lt;/p&gt;&lt;p&gt;மேலும், முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு எதிராக அரசு ஒருபோதும் செயல்படாது என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>politics</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/nlc-controversy-sowmya-anbumani-raises-strong-allegations-over-jobs-for-locals-k4dny40"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Vijay - Sangeetha: பிரியமானவருக்காக இறங்கி வந்த சங்கீதா விஜய்.! தடைகளை உடைத்து குடும்பத்தை ஒன்று சேர்த்தது யார் தெரியுமா?!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/politics/vijay-sangeetha-family-reunion-how-their-children-helped-vijay-and-sangeetha-resolve-differences-lclcigy</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/politics/vijay-sangeetha-family-reunion-how-their-children-helped-vijay-and-sangeetha-resolve-differences-lclcigy</guid>
            <pubDate>Sat, 08 Aug 2026 10:41:49 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;விஜய்&ndash;சங்கீதா இடையிலான மனக்கசப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தது யார்? திருமண வீடியோவை பார்த்து சங்கீதா கண்கலங்கியதாகவும், சஞ்சய் எடுத்த முயற்சியால் குடும்பம் மீண்டும் இணைந்ததாகவும் கூறப்படும் தகவல்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kzfw1d4wztz8998r3a2pebvw,imgname-chatgpt-image-aug-8--2026--10-31-41-am--1--1786165376156.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;விஜய்&ndash;சங்கீதா இடையிலான மனக்கசப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தது யார்? திருமண வீடியோவை பார்த்து சங்கீதா கண்கலங்கியதாகவும், சஞ்சய் எடுத்த முயற்சியால் குடும்பம் மீண்டும் இணைந்ததாகவும் கூறப்படும் தகவல்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;திரையில் சாதித்த விஜய் தற்போது அரசியலிலும் சாதித்து முதல்வர் நாற்காலியில் அமர்ந்து புதிய வரலாற்றை பதிவு செய்துள்ளார். திரையுலகில் வெற்றி பெற்ற நடிகராக மட்டுமல்லாமல், தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல ஆண்டுகளாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருபவர் விஜய். அவரது சினிமா பயணத்தில் ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும், குடும்ப வாழ்க்கையைப் பொறுத்தவரை மனைவி சங்கீதா மற்றும் குழந்தைகள் மீது அவர் வைத்திருக்கும் பாசம் குறித்து பல்வேறு தருணங்களில் பேசப்பட்டிருக்கிறது. இந்நிலையில், குடும்பத்தில் ஏற்பட்டதாக கூறப்படும் சில மனக்கசப்புகளுக்கு தற்போது ஒரு முடிவு ஏற்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் மீண்டும் கவனம் பெற்றுள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விஜய் மற்றும் சங்கீதாவின் திருமண வாழ்க்கை ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான ஒன்று. விஜயின் சினிமா பயணம் வேகமாக வளர்ந்து கொண்டிருந்த காலகட்டத்திலேயே சங்கீதா அவரது வாழ்க்கையில் முக்கியமான துணையாக இணைந்தார்.&lt;/p&gt;&lt;p&gt;திருமணத்திற்குப் பிறகு விஜயின் வாழ்க்கையில் குடும்பம் மிகப்பெரிய இடத்தைப் பிடித்தது. படப்பிடிப்பு, வெளியூர் பயணங்கள், தொடர் திரைப்படங்கள் என விஜய் பிஸியாக இருந்தாலும், குடும்பத்திற்காக நேரம் ஒதுக்குவது அவரது வாழ்க்கையின் முக்கிய அம்சமாக இருந்ததாக அவருக்கு நெருக்கமானவர்கள் பலமுறை தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;&lt;p&gt;விஜய் - சங்கீதா தம்பதிக்கு ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். காலம் செல்லச் செல்ல குழந்தைகள் வளர்ந்து, தங்களது பெற்றோரின் வாழ்க்கையிலும் முக்கியமான ஆதரவாக மாறியுள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சமீப காலமாக விஜய் - சங்கீதா குடும்ப வாழ்க்கை குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் உலா வந்தன. குறிப்பாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகவும், குடும்பத்தில் சில பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும் பல்வேறு தகவல்கள் பரவின.ஆனால் இந்த தகவல்களில் பெரும்பாலானவை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம். இதற்கிடையில், குடும்பத்தில் ஏற்பட்ட மனக்கசப்பை பெரியவர்கள் பேசி தீர்க்க முயன்றதாகவும், விஜயின் பெற்றோர்களும் சமரச முயற்சிகளில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் ஆரம்பகட்ட முயற்சிகள் எதிர்பார்த்த அளவுக்கு பலனளிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒரு குடும்பத்தில் பெற்றோருக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டால், அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான். அதே நேரத்தில், அவர்கள்தான் பல நேரங்களில் குடும்பத்தை மீண்டும் ஒன்றிணைக்கும் பாலமாகவும் மாறுகிறார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;அந்த வகையில் விஜய் மற்றும் சங்கீதாவுக்கு இடையிலான மனக்கசப்பை முடிவுக்கு கொண்டு வர அவர்களது மகன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா முயற்சி எடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;பெற்றோரின் வாழ்க்கையில் ஏற்பட்ட இடைவெளி நீடிக்கக் கூடாது என்பதில் குழந்தைகள் உறுதியாக இருந்ததாகவும், தொடர்ந்து இருவரிடமும் பேசி குடும்பமாக ஒன்றாக இருக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துச் சொன்னதாகவும் கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;இந்த முயற்சியே நீண்ட நாட்களாக இருந்ததாகக் கூறப்பட்ட மனக்கசப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக அமைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதற்கிடையே, விஜய் - சங்கீதா இடையிலான பிரச்சினையை பெரிதுபடுத்தும் வகையில் சிலர் தேவையில்லாத தகவல்களை கொண்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;இதனால், குடும்பத்தின் அமைதியை கருத்தில் கொண்டு சங்கீதா சில முக்கிய நபர்களுடனான தொடர்புகளை குறைத்துக் கொண்டதாகவும், தேவையற்ற விஷயங்கள் குடும்பத்திற்குள் வராமல் பார்த்துக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;இவை அனைத்தும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்ட தகவல்கள் அல்ல என்றாலும், குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதால்தான் சங்கீதா சில முக்கிய முடிவுகளை எடுத்ததாக கூறப்படுவது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தக் கதையில் அதிக கவனம் பெற்றதாக கூறப்படும் மற்றொரு சம்பவம் விஜய் - சங்கீதாவின் திருமண வீடியோவை சங்கீதா பார்த்ததாக வெளியாகும் தகவல்.&lt;/p&gt;&lt;p&gt;பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அந்த திருமண தருணங்களை மீண்டும் பார்த்தபோது, பழைய நினைவுகள் கண்முன்னே வந்து சங்கீதா உணர்ச்சிவசப்பட்டதாக கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;திருமண நாள், இருவரும் இணைந்த தருணங்கள், குடும்பத்தினரின் மகிழ்ச்சி, பின்னர் குழந்தைகள் பிறந்தது என வாழ்க்கையில் கடந்து வந்த ஒவ்வொரு கட்டமும் அந்த வீடியோவை பார்த்தபோது நினைவுக்கு வந்திருக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;சில நேரங்களில் பல ஆண்டுகளாக மனதில் இருக்கும் கோபத்தை விட, ஒரு பழைய புகைப்படமோ, வீடியோவோ, நினைவோ மனிதர்களின் மனதை அதிகமாக மாற்றிவிடும். விஜய் - சங்கீதா விஷயத்திலும் அப்படியொரு உணர்வுப்பூர்வமான தருணம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தச் சூழ்நிலையில்தான் சஞ்சய் தனது தந்தை விஜயிடம் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது தாய் மற்றும் தந்தை மீண்டும் பழையபடி ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே சஞ்சயின் விருப்பமாக இருந்ததாக கூறப்படுகிறது. குடும்ப உறவை விட வேறு எந்த விஷயமும் பெரியதல்ல என்பதையும் அவர் தனது தந்தையிடம் எடுத்துக் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு மகன் தனது தந்தையிடம் பேசும் அந்த சில நிமிடங்கள், பல ஆண்டுகளாக உருவான மனக்கசப்புகளையே மாற்றக்கூடியதாக இருந்திருக்கலாம். அதன் தொடர்ச்சியாகவே விஜய் - சங்கீதா இடையிலான பிரச்சினைக்கு சுபம் போடப்பட்டதாக தற்போது பேசப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குடும்பத்தை ஒன்றாக வைத்திருப்பதில் குழந்தைகளின் எதிர்காலமும், உறவுகளின் முக்கியத்துவமும் மிகப்பெரிய காரணமாக இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதோடு, விஜய் தற்போது அரசியலிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அவரது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான ஒவ்வொரு தகவலும் அரசியல் ரீதியாகவும் விவாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் குடும்ப விவகாரம் தொடர்ந்து பேசுபொருளாக மாறாமல் இருக்க வேண்டும் என்பதையும் சங்கீதா கருத்தில் கொண்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. குழந்தைகள், குடும்பம், உறவுகள் மட்டுமல்லாமல், விஜயின் அரசியல் பயணத்தையும் கருத்தில் கொண்டு சங்கீதா சில விஷயங்களில் விட்டுக்கொடுத்து வந்ததாக கூறப்படுவது அவரது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விஜயின் சினிமா பயணத்தைப் பார்த்தால், அவர் மிகப்பெரிய உயரத்தை அடைந்த காலங்களில் சங்கீதா அவருடன் இருந்திருக்கிறார்.&lt;/p&gt;&lt;p&gt;ஒரு நடிகரின் வெற்றிக்குப் பின்னால் அவரது குடும்பத்தின் ஆதரவு மிகப்பெரிய பங்கு வகிக்கும். குறிப்பாக திரைப்பட வாழ்க்கையில் வரும் அழுத்தங்கள், தோல்விகள், விமர்சனங்கள், வெற்றிகள் என அனைத்தையும் கடந்து செல்ல ஒரு வாழ்க்கைத் துணையின் ஆதரவு முக்கியமானதாக இருக்கும். விஜயின் ரசிகர்கள் பலரும் சங்கீதாவை அவரது வாழ்க்கையின் முக்கியமான தூண்களில் ஒருவராகவே பார்த்து வந்துள்ளனர்.&lt;/p&gt;&lt;p&gt;திருமணத்திற்கு பிறகு விஜயின் வாழ்க்கையில் ஏற்பட்ட பல முக்கியமான மாற்றங்களிலும் சங்கீதாவின் பங்கு இருந்ததாக கூறப்படுகிறது. குடும்பத்தின் பொறுப்புகளை கவனித்துக் கொண்டு, விஜய் தனது சினிமா பணிகளில் முழு கவனம் செலுத்துவதற்கான சூழலை உருவாக்கியவர் என்ற பார்வையும் ரசிகர்கள் மத்தியில் உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒரு குடும்பத்தில் பிரச்சினை ஏற்படுவது பெரிய விஷயம் அல்ல; அந்த பிரச்சினையை எப்படி முடிவுக்கு கொண்டு வருகிறார்கள் என்பதுதான் முக்கியம். விஜய் - சங்கீதா தொடர்பாக தற்போது வெளியாகும் தகவல்கள் உண்மையாக இருந்தால், இந்த குடும்பத்தை மீண்டும் ஒன்றிணைப்பதில் அவர்களது குழந்தைகளின் பங்கு மிகப்பெரியதாக இருந்திருக்கிறது என்றே சொல்லலாம்.&lt;/p&gt;&lt;p&gt;ஒரு பக்கம் பெற்றோரின் பாசம், இன்னொரு பக்கம் குழந்தைகளின் அன்பு, மறுபக்கம் பல ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்த வாழ்க்கை நினைவுகள் என அனைத்தும் சேர்ந்து மனக்கசப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;திருமண வீடியோவை பார்த்து சங்கீதா கண்கலங்கியதாக கூறப்படும் தகவலும், அதன்பின்னர் சஞ்சய் தனது தந்தையிடம் பேசியதாக வெளியாகும் தகவலும் இந்தக் கதைக்கு மேலும் உணர்ச்சிப்பூர்வமான திருப்பத்தை கொடுத்துள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விஜய் தற்போது திரைப்பட நடிகர் என்ற அடையாளத்தைத் தாண்டி அரசியல் களத்திலும் கவனம் பெற்றிருக்கிறார். அவர் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் மக்கள் மத்தியில் பேசப்படுகிறது. அப்படிப்பட்ட சூழலில், தனிப்பட்ட வாழ்க்கையில் குடும்பத்தின் ஒற்றுமை மிகவும் முக்கியமானதாக மாறுகிறது. சினிமா, அரசியல், புகழ், விமர்சனம் என அனைத்தையும் தாண்டி, இறுதியில் ஒரு மனிதனுக்கு குடும்பமே மிகப்பெரிய பலம். அந்த வகையில், விஜய் - சங்கீதா குடும்பம் மீண்டும் இணைந்ததாக கூறப்படும் தகவல் உண்மையானதாக இருந்தால், அது அவர்களது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், குடும்ப உறவுகளின் மீது நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தியாகவே இருக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;குறிப்பு: விஜய் - சங்கீதா குடும்பம் தொடர்பான மேற்கண்ட சமரசம், சஞ்சய் பேச்சு உள்ளிட்ட தகவல்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படாதவை. எனவே இவை வெளியாகியுள்ள தகவல்கள் மற்றும் ஊடகங்களில் பேசப்படும் தகவல்களின் அடிப்படையிலான செய்தியாக மட்டுமே பார்க்கப்பட வேண்டும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>politics</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/politics/vijay-sangeetha-family-reunion-how-their-children-helped-vijay-and-sangeetha-resolve-differences-lclcigy"/>
        </item>
        <item>
            <title><![CDATA[சாட்டையை கையில் எடுத்த ஸ்டாலின்.. எ.வ.வேலு, ரகுபதி உள்பட 13 சீனியர்கள் பதவி காலி? திமுகவில் அதிரடி மாற்றம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/dmk-organisational-revamp-mk-stalin-enforces-age-caps-and-two-term-limit-articleshow-lix7970</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/dmk-organisational-revamp-mk-stalin-enforces-age-caps-and-two-term-limit-articleshow-lix7970</guid>
            <pubDate>Sat, 22 Aug 2026 15:21:55 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;MK Stalin: திமுகவில் இதுவரை இல்லாத வகையில் அதிரடி முடிவுகளை மு.க.ஸ்டாலின் எடுத்துள்ளார். இதன்மூலம் . எ.வ.வேலு, ரகுபதி உள்பட 13 சீனியர்கள் பதவியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kcemfbdsmmjte99p259kcbsz,imgname-ccporayjvxljo9ck-1765722795449.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;2026 சட்டப்பேரவை தேர்தல் தமிழக அரசியல் வரலாற்றையே புரட்டிப் போட்டு விட்டது. ஆளும் கட்சியான திமுக, பெரிய கட்சியான அதிமுக என இரு பெரும் திராவிட கட்சிகளை வீழ்த்தி அரசியலில் மாயாஜாலம் நிகழ்த்தி விட்டார் தவெக தலைவர் விஜய். இது போதாதென்று திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ள விஜய், திமுகவின் தூக்கத்தை முழுமையாக கெடுத்து விட்டார் என்றே கூற வேண்டும். சட்டப்பேரவை தேர்தலில் வெறும் 59 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற திமுக தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து வருகிறது.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;திமுகவில் அதிரடி மாற்றம்&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுகவில் இதுவரை இல்லாத வகையில் அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளன. அதாவது திமுக கட்டமைப்பில் புது ரத்தம் பாய்ச்சிட, கிளைக்கழகச் செயலாளருக்கான அதிகபட்ச வயது 45 என்றும், கிளைக்கழகச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க:&lt;/strong&gt; கருணாநிதி மஞ்சள் துண்டு அணிந்தது ஏன் தெரியுமா? அவரே விளக்கம் அளித்த வைரல் கடிதத்தை பாருங்க!&lt;/p&gt;&lt;h3&gt;&lt;strong&gt;திமுகவில் பொறுப்புகளுக்கு வயது வரம்பு நிர்ணயம்&lt;/strong&gt;&lt;/h3&gt;&lt;p&gt;சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாநகரகங்களிலும், சூழலுக்கு ஏற்ப பிற மாநகராட்சிகளிலும் வட்டக்கழகங்களை வலிமைப்படுத்திட கிளைக்கழகம் அமைக்கப்படுகிறது. 45 வயதுக்கு மிகாதவர் கிளைச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே இப்பொறுப்பை வகிக்க முடியும்.&lt;/p&gt;&lt;p&gt;சென்னை மாநகராட்சியின் வட்டக்கழகங்கள் சராசரியாக 10 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும், பிற மாநகராட்சிகளில் சராசரியாக 5 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும் அமையும். மாநகர-நகர-பேரூர் வட்டக்கழகச் செயலாளர்களின் அதிகபட்ச வயது 50 என நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும் என செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஒருவருக்கு இரண்டு முறை மட்டுமே பதவி&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;வருவாய் மாவட்டங்களின் அடிப்படையில் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு கழக மாவட்டம் என்ற வகையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படுகிறது. பிரிக்கும் போது ஒரு தொகுதி மட்டும் எஞ்சியிருப்பின் அதே வருவாய் மாவட்டத்தில் பொருத்தமான கழக மாவட்டத்துடன் மூன்றாவது தொகுதியாக இணைக்கப்படும். மாவட்டக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 70 என நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும். இனி மாநகரச் செயலாளர் என்ற பொறுப்பு இருக்காது.&lt;/p&gt;&lt;p&gt;சராசரியாக 30 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றியக் கழகம் உருவாக்கப்பட வேண்டும். ஒன்றியக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 என நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும் என்பது உள்பட பல்வேறு அதிரடி தீர்மானங்கள் திமுகவில் நிறைவேற்றப்பட்டுள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க:&lt;/strong&gt; Government Housing Scheme: ரூ.3 லட்சத்தில் வீடு, மனை வாங்கலாம்.! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.! எப்படி விண்ணப்பிக்கனும் தெரியுமா?&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சாட்டையை கையில் எடுத்த ஸ்டாலின்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;திமுகவை பொறுத்தவரை அமைப்புரீதியாக வலுவான கட்டமைப்பு கொண்ட கட்சி. ஆனால் அரசியலில் கத்துக்குட்டியான தவெகவிடம் அக்கட்சி படுதோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அதிக பொறுப்புகள் வழக்கப்பட்டதும், இளைஞர்கள் புறக்கணிக்கப்பட்டதுமே ஆகும். இதனால் தான் எதிர்கால தேர்தல்களில் தவெகவை வீழ்த்த கட்சியில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் சீனியர்களின் பதவிக்கு வயது நிர்ணயம் செய்யும் முடிவை கையில் எடுத்துள்ளார் ஸ்டாலின்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;13 சீனியர்களின் பதவி காலி&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;மாவட்டக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 70 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் இப்போது மாவட்ட செயலாளர்களாக இருக்கும் சீனியர்கள் எ.வ.வேலு, ரகுபதி, செஞ்சி மஸ்தான், சுந்தர், கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், எஸ்.ஆர்.சிவலிங்கம், அனிதா ராதாகிருஷ்ணன், கோ.தளபதி, ஆர்.காந்தி, ராமகிருஷ்ணன், முத்துசாமி, ஆவுடையப்பன், சாக்கோட்டை அன்பழகன் ஆகிய 13 பேர் தங்கள் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>politics</category>
            <dc:creator>Rayar A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/dmk-organisational-revamp-mk-stalin-enforces-age-caps-and-two-term-limit-articleshow-lix7970"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Anbumani Ramadoss: திமுக, அதிமுகவுக்கு மாற்றாக பாமக.! 2031-ல் ஆட்சியை பிடிப்போம் – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை]]></title>
            <link>https://tamil.asianetnews.com/politics/pmk-eyes-2031-tamil-nadu-assembly-election-anbumani-ramadoss-says-state-power-is-the-party-main-goal-articleshow-mboq2iy</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/politics/pmk-eyes-2031-tamil-nadu-assembly-election-anbumani-ramadoss-says-state-power-is-the-party-main-goal-articleshow-mboq2iy</guid>
            <pubDate>Tue, 18 Aug 2026 22:11:19 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;திமுக, அதிமுகவுக்கு மாற்றாக புதிய அரசியல் உருவாகியுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 2031-ல் தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வருவதே இலக்கு என்றும், மத்திய அமைச்சர் பதவியில் தனக்கு விருப்பமில்லை என்றும் அவர் கூறியுள்ளார். தொகுதி மறுவரையறை மற்றும் காவிரி விவகாரம் குறித்தும் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0arqdpk7te1gtfy4zkenhgh,imgname-chatgpt-image-aug-18--2026--09-11-26-pm--1--1787067872979.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;h2&gt;தமிழ்நாட்டில் 2031-ல் ஆட்சி மாற்றம் உறுதி.? பாமக தலைவர் அன்புமணி சொன்ன முக்கிய தகவல்&lt;/h2&gt;&lt;p&gt;&lt;strong&gt;திமுக, அதிமுகவுக்கு மாற்றாக புதிய அரசியல்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;தமிழ்நாட்டில் சுமார் 60 ஆண்டுகளாக திமுகவும் அதிமுகவும் மாறி மாறி ஆட்சி செய்து வந்த நிலையில், தற்போது தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்திருப்பது அரசியலில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை எம்.ஆர்.சி. நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழக மக்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்த மாற்றம் தற்போது ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பாமக போன்ற கட்சிகளுக்கும் புதிய நம்பிக்கை உருவாகியுள்ளதாகவும் கூறினார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&amp;nbsp;2031-ல் பாமக ஆட்சி&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;தமிழ்நாட்டில் 2031-ம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் தீவிரமாக களப்பணி செய்து வருவதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். தமிழக மக்களுக்கு பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்பதே தங்களின் முக்கிய இலக்கு என்றும், மக்கள் தங்களுக்கு நிச்சயம் வாய்ப்பு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறினார். மத்திய அமைச்சர் பதவியில் தனக்கு விருப்பம் இல்லை என்றும், தங்களின் முழு கவனமும் தமிழ்நாட்டின் அரசியலை நோக்கியே இருப்பதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சாதிக் கட்சி என்ற விமர்சனத்துக்கு பதில்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;பாமகவை சாதிக் கட்சி என முத்திரை குத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அன்புமணி கூறினார். தங்கள் கட்சி சமூக நீதிக்காக தொடர்ந்து போராடி வருவதாகவும், பல்வேறு சமூகங்களுக்கு இடஒதுக்கீடு உள்ளிட்ட உரிமைகளை பெற்றுத் தந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் பிரச்சினைகளை விவரங்களுடன் சட்டப்பேரவையில் தொடர்ந்து எடுத்துரைத்து வருவதாகவும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களில் தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.&lt;/p&gt;&lt;h3&gt;நியாயமான தொகுதி மறுவரையறை தேவை&lt;/h3&gt;&lt;p&gt;தொகுதி மறுவரையறை குறித்து பேசிய அன்புமணி, மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு நியாயமான முறையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்றார். தமிழ்நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ப தற்போது உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகள் அதிகரித்து 59 தொகுதிகளாகும் வாய்ப்பு இருப்பதாகவும், இதன் மூலம் அதிகமான பெண் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்திற்கு செல்லும் சூழல் உருவாகும் என்றும் அவர் கூறினார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;மத்திய அமைச்சர் பதவி வேண்டாம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;முன்னாள் மத்திய சுகாதார அமைச்சராக இருந்தபோது 108 ஆம்புலன்ஸ் திட்டம், தேசிய ஊரக சுகாதார இயக்கம், பொது இடங்களில் புகைபிடிக்கத் தடை உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அன்புமணி நினைவுகூர்ந்தார். இருப்பினும், மீண்டும் மத்திய அமைச்சர் பதவி பெறுவது தமது இலக்கு அல்ல என்றும், 2031-ல் தமிழ்நாட்டில் பாமக ஆட்சியை அமைப்பதே முக்கிய நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;காவிரியை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;காவிரி நீரை அரசியலாக மாற்றி இரண்டு மாநிலத்தையும் எதிரிகளாக்க வேண்டாம் என அன்புமணி தெரிவித்தார். கர்நாடகத்தில் உள்ள தலைவர்களிடம் கொள்கைகளைத் தாண்டி தனிப்பட்ட முறையில் நண்பர்களாக இருக்கிறோம். ஆனால் காவிரி நீர் விவகாரத்தில் அரசியல் செய்து அந்த நட்பை பிளவுபடுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>politics</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/politics/pmk-eyes-2031-tamil-nadu-assembly-election-anbumani-ramadoss-says-state-power-is-the-party-main-goal-articleshow-mboq2iy"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Thirumavalavan Speech: “தமிழகத்தில் ஆளும் கட்சியாக விசிக...” - மாநாட்டில் திருமாவளவன் சூளுரை.! மெய்மறந்து கேட்ட சிறுத்தைகள்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/politics/thirumavalavan-speech-at-tamil-nationalism-conference-kallakurichi-vck-tvk-alliance-mt6o2tv</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/politics/thirumavalavan-speech-at-tamil-nationalism-conference-kallakurichi-vck-tvk-alliance-mt6o2tv</guid>
            <pubDate>Tue, 18 Aug 2026 06:30:32 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற விசிக தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டில், தவெகவுடன் இணைந்து பயணிப்போம் என்றும் வரும் காலத்தில் விசிக தமிழகத்தில் ஆளும் கட்சியாக உருவெடுக்கும் என்றும் தலைவர் தொல். திருமாவளவன் அதிரடியாகப் பேசியுள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m08a79t26062zktkv22x02mz,imgname-7xim7-1786985555777.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற விசிக தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டில், தவெகவுடன் இணைந்து பயணிப்போம் என்றும் வரும் காலத்தில் விசிக தமிழகத்தில் ஆளும் கட்சியாக உருவெடுக்கும் என்றும் தலைவர் தொல். திருமாவளவன் அதிரடியாகப் பேசியுள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் (விசிக) சார்பில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்ற 'தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு', தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. லட்சக்கணக்கான தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கடல் போல் திரண்டிருந்த இந்த மாநாட்டில், விசிக தலைவர் தொல். திருமாவளவன் கலந்துகொண்டு உரையாற்றினார். தமிழக அரசியலின் எதிர்கால நகர்வுகள், புதிய கூட்டணிச் சூழல் மற்றும் சர்வதேசத் தமிழர்களின் உரிமைகள் குறித்து அவர் ஆற்றிய உரை, மாநாட்டின் முக்கிய மையப்பொருளாக அமைந்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மாநாட்டில் பேசிய தொல். திருமாவளவன், தமிழக அரசியல் களத்தில் விசிக அடைந்துள்ள வளர்ச்சியை மிக அழுத்தமாகப் பதிவு செய்தார். தேர்தல் ஆணையத்தின் மூலம் விசிக இப்போது முறைப்படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், கட்சியின் அடுத்தகட்ட இலக்கு தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதுதான் என்பதைத் தெளிவுபடுத்தினார். &quot;இதுவரை நாம் திமுக, அதிமுக, காங்கிரஸ் போன்ற பல்வேறு முன்னணி கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் பயணித்துள்ளோம். ஆனால் இன்று, ஆளும் முதல்வராக இருக்கும் ஜோசப் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்துடன் (தவெக) கூட்டணி வைத்துள்ளோம். இனிவரும் காலங்களில் விசிகவும் தவெகவும் இணைந்து தமிழக அரசியல் களத்தில் பயணிக்கும். இந்த இணைப்பின் மூலம் விசிகவும் விரைவில் தமிழகத்தில் ஆளும் கட்சியாகப் பரிணமிக்கும்&quot; என அவர் சூளுரைத்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழக அரசியல் மட்டுமன்றி, எல்லை கடந்த தமிழர்களின் உரிமைகள் குறித்தும் மாநாட்டில் திருமாவளவன் விரிவாகப் பேசினார். குறிப்பாக, இலங்கை அரசு புதிதாக வரையறுக்கத் திட்டமிட்டுள்ள அரசியலமைப்புச் சட்டம் குறித்துத் தனது கடுமையான கவலைகளை வெளிப்படுத்தினார். கடந்த 77 ஆண்டுகளாக ஈழத் தமிழர்கள் சந்தித்து வரும் இனப் பாகுபாடு, அரசியல் உரிமைகள் மறுப்பு, திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் மற்றும் தமிழர் நில ஆக்கிரமிப்பு போன்ற கொடுமைகளை இந்தப் புதிய சட்டம் மேலும் தீவிரப்படுத்தும் என்ற அச்சம் தமிழர்களிடையே மேலோங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார். முழுமையான ஒற்றையாட்சி முறையைத் திணித்து, தமிழ் மக்களின் வாழ்வுரிமையை முற்றுமுழுதாகச் சிதைக்கும் வகையில் இச்சட்டம் வடிவமைக்கப்படுவதாகத் தெரிகிறது என்றும், தமிழர்களின் ஜனநாயக மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் இச்சட்டம் அமைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மாநாட்டிற்கு வருகை தந்திருந்த தொண்டர்களின் பிரம்மாண்டமான கூட்டத்தைச் சுட்டிக்காட்டிய திருமாவளவன், விசிக என்பது தமிழகத்தில் யாராலும் தவிர்க்க முடியாத ஓர் அரசியல் சக்தி என்பதை இம்மாநாடு மீண்டும் உலகிற்கு நிரூபித்துள்ளதாகப் பெருமிதம் தெரிவித்தார். நீண்ட நேரம் பேச வேண்டும் என்ற விருப்பம் இருந்தபோதிலும், லட்சக்கணக்கான சிறுத்தைகள் திரண்டுள்ள இந்தச் சூழலில் தொண்டர்களின் பாதுகாப்பே தனக்கு மிக முக்கியம் என்று குறிப்பிட்ட அவர், கூட்ட நெரிசலில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காகத் தனது உரையை விரைவாக நிறைவு செய்வதாகக் கூறினார். மேலும், மாநாட்டில் பங்கேற்ற அனைவரும் எவ்வித அசம்பாவிதமும் இன்றித் தங்களது வீடுகளுக்குப் பாதுகாப்பாகக் கலைந்து செல்ல வேண்டும் என்றும் அன்போடு கேட்டுக்கொண்டார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>politics</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/politics/thirumavalavan-speech-at-tamil-nationalism-conference-kallakurichi-vck-tvk-alliance-mt6o2tv"/>
        </item>
        <item>
            <title><![CDATA[கருணாநிதி மஞ்சள் துண்டு அணிந்தது ஏன் தெரியுமா? அவரே விளக்கம் அளித்த வைரல் கடிதத்தை பாருங்க!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/why-did-karunanidhi-wear-a-yellow-shawl-the-viral-1997-letter-explained-articleshow-r28ayss</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/why-did-karunanidhi-wear-a-yellow-shawl-the-viral-1997-letter-explained-articleshow-r28ayss</guid>
            <pubDate>Fri, 21 Aug 2026 19:49:31 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Karunanidhi: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மஞ்சள் துண்டு அணிந்த விவகாரம் தமிழகத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளித்து கருணாநிதி 1997 ஆம் ஆண்டு எழுதிய கடிதம் வைரலாகி வருகிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0jape7mdg9jsnv9c9wfrrba,imgname-karunanidhi-1787321596148.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மஞ்சள் துண்டு அணிந்த விவகாரம் சட்டப்பேரவை மூலம் இன்று தமிழகம் முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. அதாவது 'திமுக ஆட்சியின் ஊழல் தொடர்பான 3 கோப்புகள் எனது டேபிளில் தான் உள்ளது. அதை திறக்க வைத்து விடாதீர்கள்' என முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் பேசியிருந்தார். இதற்கு பதில் அளித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ''அந்த கோப்புகளை திறந்து நடவடிக்கை எடுங்கள். ஏன் பயம்? ஜோசியக்காரன் சொன்னால் தான் கோப்புகளை திறப்பீர்களா? திமுக எதற்கும் அஞ்சாது; அடிபணியாது'' என்று கூறியிருந்தார்.&lt;/p&gt;&lt;p&gt;இதற்கு பின்பு பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், ''மஞ்சள் துண்டு போட்ட வரலாறெல்லாம் தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும்'' என்று கருணாநிதி மஞ்சள் துண்டு அணிந்ததை மறைமுகமாக விமர்சித்து இருந்தார். இதன்மூலம் கருணாநிதி மஞ்சள் துண்டு அணிந்தது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;கருணாநிதி மஞ்சள் துண்டு அணிந்தது ஏன்?&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;''கடவுள் நம்பிக்கையில்லாத பெரியார் கொள்கையில் உறுதியாக நின்ற கருணாநிதி, ஜோசியக்காரன் சொல் கேட்டு தான் மஞ்சள் துண்டு அணிந்தார்'' என பாஜக, அதிமுக, தவெக கட்சியை சேர்ந்தவர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் மறுபக்கம், ''உடல்நல பிரச்சனைகளுக்காக மருத்துவர்கள் கூறியதால் தான் கருணாநிதி துண்டு அணிந்தார். முதலில் அணிந்த துண்டு மஞ்சள் நிறம் என்பதால் அது அப்படியே அவரது அடையாளமாக மாறி விட்டது'' என்று திமுகவினர் விளக்கம் அளித்து வருகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க:&lt;/strong&gt; Three Language Policy : இனி 3 மொழி படிக்கணுமா? உச்சநீதிமன்றத்தின் அதிரடி கருத்து!&lt;/p&gt;&lt;h3&gt;&lt;strong&gt;கருணாநிதியே அளித்த விளக்கம்&lt;/strong&gt;&lt;/h3&gt;&lt;p&gt;கருணாநிதி மஞ்சள் துண்டு அணிந்ததை அப்போதே எதிர்க்கட்சிகள் விமர்சித்து இருந்த நிலையில், தான் ஏன் மஞ்சள் துண்டு அணிந்தேன் என 10.04.1997 ஆம் ஆண்டு திமுக உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதத்தில் கருணாநிதி விளக்கி இருந்தார். இந்த கடித்தத்தை திமுகவினர் இப்போது வைரலாக்கி வருகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;கருணாநிதி எழுதிய விளக்க கடிதம் இதோ:&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;உடன்பிறப்பே,&lt;/p&gt;&lt;p&gt;சுமார் மூன்றாண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் எண்ணெய் தடவி உடம்பு வழித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று என் வலது கன்னத்தில் மாம்பிஞ்சு அளவுக்கு ஒரு வீக்கம் ஏற்பட்டு. அது கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாகவும் தொடங்கியது. உடனே நரம்பியல் நிபுணர் டாக்டர் இராமமூர்த்தி அவர்களும், டாக்டர் கோபால் அவர்களும் என்னை சென்னை மலர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பல்வேறு சோதனைகளைச் செய்தனர். வலது கன்னத்தில் உமிழ் நீர் சுரப்பியுடன் இணைந்துள்ள மெல்லிய நரம்புக் குழாயில் சிறிய அளவு வெடிப்பு ஏற்பட்டு அதன் காரணமாக உமிழ்நீர்த் தேக்கம் ஏற்பட்டு அதனால் அந்த வீக்கம் என்று கண்டறியப்பட்டது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;உடல்நல பிரச்சனை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;வலதுபுறம் வாய்க்குள் அறுவை சிகிச்சை செய்து அந்த மெல்லிய குழாயை ஒட்ட வைக்கலாமென முடிவெடுத்த டாக்டர்கள் என்னை ஆப்பரேஷன் தியேட்டருக்குள் இட்டுச் சென்றனர். அறுவை சிகிச்சைக்குத் தயாராக முன்னேற்பாடுகள் அனைத்தும் நடந்து முடிந்தபிறகு மீண்டும் டாக்டர்கள் கலந்துபேசிக் கொண்டிருந்தனர், அந்த அறுவை சிகிச்சையினால் எதிர்விளைவுகள் எதுவும் ஏற்படுமோ என்ற அய்யப்பாட்டின் அடிப்படையில்தான் டாக்டர்களுக்கிடையே அந்த விவாதம் நடைபெற்றிருக்கிறது. டாக்டர்கள் வீக்கமும் சிறிது குறைந்து கொண்டு வந்திருக்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;கடைசியாக ஒரு வழியாக அறுவை சிகிச்சை வேண்டாமென முடிவு செய்யப்பட்டு சில நாட்கள் சில மாத்திரைகள் மட்டும் நாள்தோறும் சாப்பிட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். அதற்குள் மலர் மருத்துவமனைக்கு ஏராளமான தொலைபேசிகள் - நண்பர்கள் கழகக் கண்மணிகள்!&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க&lt;/strong&gt;: தொகுதி மறுவரையறை.. ஒரே வாரத்தில் பல்டி அடித்தாரா முதல்வர் விஜய்? அமித்ஷா முன் பேசியது என்ன?&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;மருத்துவர்கள் சொன்ன அறிவுரை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;கழுத்துப் பகுதியும் முகம் உள்ளிட்ட தோள் பகுதியும் எப்போதும் கதகதப்பான வெம்மையுடன் இருக்க வேண்டுமென்றும் அதற்கு நான் வழக்கமாக அணியும் கைத்தறித் துண்டுக்குப் பதிலாகக் கம்பளிச் சால்வையும் கழுத்தின் மேல் பட்டுக கொண்டிருக்கும்படியாக அணிவது நல்லது என்றும் டாக்டர் வலியுறுத்திக் கூறினார். அப்படிக் கம்பளிச் சால்வை அணிந்து கொண்டால் கழுத்து வலிக்காமல் இருப்பதற்கும் நல்ல பாதுகாப்பு என்றும் டாக்டர்கள் கூறினர்.&lt;/p&gt;&lt;p&gt;அவர்களின் அறிவுரை கேட்டு அப்போது நான் உடனடியாக அணிந்து கொண்டது மஞ்சள் நிற சால்வையாக இருந்தது தொடர்ந்து இரண்டொரு நாள் மஞ்சள் சால்வையை என் கழுத்தை வளைத்துப் போட்டுக் கொண்டதைக் கண்ட என் வீட்டில் உள்ளவர்களும், நண்பர்களும் இது நன்றாக இருக்கிறது இதையே உங்களுக்குத் தனி அடையாளமாக இதே வண்ணத்தில் எப்போதும் அணிந்திடுங்கள் என்று அன்புக் கட்டளையிட்டனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;எனக்குச் சிரிப்பு மேலிடுகிறது&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;அடையாளமாகச் சிலர் தாடி வைத்துக் கொண்டிருப்பதைபோல சிலர் தொப்பி அணிந்து கொண்டிருப்பதைப்போல சிலர் கையில் பிரம்பு வைத்துக் கொண்டிருப்பதைப்போல நமக்கும் இந்த மஞ்சள் சால்வை அடையாளமாக இருக்கட்டுமே என்று எண்ணினேன். தொடர்ந்து அணிந்து வருகிறேன். இந்தச் சால்வை சிலரது கேலிக்கும் கிண்டலுக்கும் உரியதாகியிருக்கிறது என்பதைக் கண்டும் கேட்டும் எனக்குச் சிரிப்பு மேலிடுகிறதே தவிர. சீற்றம் பிறக்கவில்லை. அன்புள்ள மு.கருணாநிதி (10.04.1997). கருணாநிதி எழுதிய இந்த கடிதத்தை திமுகவினர் இப்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>politics</category>
            <dc:creator>Rayar A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/why-did-karunanidhi-wear-a-yellow-shawl-the-viral-1997-letter-explained-articleshow-r28ayss"/>
        </item>
        <item>
            <title><![CDATA[திமுக-விடம் மன்னிப்பு கேட்ட விஜய்! தவெக அமைச்சர் செய்த தவறு! நடந்தது என்ன?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/politics/vijay-apologizes-to-dmk-for-ministers-mistake-what-happened-x0tz6xa</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/politics/vijay-apologizes-to-dmk-for-ministers-mistake-what-happened-x0tz6xa</guid>
            <pubDate>Mon, 17 Aug 2026 15:33:10 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;திமுகவை கடுமையாக எதிர்த்து ஆட்சிக்கு வந்த தவெக அரசின் முதல்வர் திமுக-விடம் மன்னிப்பு கேட்கும் சூழல் ஏன் உருவானது? அப்படி என்ன நடந்தது? வாங்க விவரமாக பார்ப்போம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ky4zjn6tw6vcahvc9mntaf3q,imgname-untitled-design---2026-07-22t184702.779-1784726246618.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;திமுகவை கடுமையாக எதிர்த்து ஆட்சிக்கு வந்த தவெக அரசின் முதல்வர் திமுக-விடம் மன்னிப்பு கேட்கும் சூழல் ஏன் உருவானது? அப்படி என்ன நடந்தது? வாங்க விவரமாக பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நான்கு நாள் இடைவெளிக்குப் பிறகு தமிழக சட்டப்பேரவை இன்று (17-08-2026) மீண்டும் கூடியது. மானியக் கோரிக்கை மீதான விவாதம் தொடங்கிய நிலையில், வருவாய்த்துறை மானியக் கோரிக்கை தொடர்பான விவாதத்தில் திமுக முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசினார்.&lt;/p&gt;&lt;p&gt;அப்போது அவர் தவெக அரசை கடுமையாக விமர்சித்ததுடன். திமுகவின் நீண்ட அரசியல் வரலாற்றையும், சாதனைகளையும் பட்டிலிட்டு, கலைஞர் கருணாநிதியின் கொள்கைப் பிடிப்பை விதந்தோதினார்.&lt;/p&gt;&lt;p&gt;இதன் தொடர்ச்சியாக அவர் திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட நலத்திட்டங்களையும், தவெக தேர்தல் வாக்குறுதிகளையும் ஒப்பிட்டு பேசினார்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;குறுக்கிட்ட தவெக அமைச்சர் ரஞ்சித் குமார்&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசிக்கொண்டிருந்தபோது, வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் குறுக்கிட்டார். அப்போது விவாதம் வேறு திசைக்கு மாறியது. குறிப்பாக தேர்தலில் பணம் கொடுப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்த ரஞ்சித் குமார், &ldquo;திருமங்கலம் ஃபார்முலா&rdquo; முதல் 2026-ல் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் திட்டம் வரை என்ற வகையில் திமுகவை நோக்கி விமர்சனம் செய்தார். அதே நேரம், 2026 தேர்தலில் ஓட்டுக்கு ஒரு ரூபாய்கூட பணம் கொடுக்காமல் தவெக ஆட்சிக்கு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க :&lt;/strong&gt; Ayana Sayana Raja Yoga : இடம் மாறினால் கோடீஸ்வரர் ஆகும் ராசிகள்! அயன-சயன ராஜயோகம் செய்யும் மேஜிக்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தேர்தல் பணம் தொடர்பான விவாதத்தில் ரஞ்சித் குமார், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெயரை குறிப்பிட்டு பேசியது திமுக உறுப்பினர்களை கொந்தளிக்கச் செய்தது.&lt;/p&gt;&lt;p&gt;ஏனென்றால், சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர்கள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களை குறிப்பிட்ட மரியாதையான முறையில் அழைப்பது தொடர்பான நடைமுறை இருந்து வருகிறது என்று திமுக உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;அவைக் குறிப்பிலிருந்து நீக்கம்&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;விவகாரம் இதோடு முடிந்துவிடவில்லை. கருணாநிதியின் பெயரை அமைச்சர் ரஞ்சித் குமார் குறிப்பிட்டபோது, சபாநாயகர் குறுக்கிட்டு அவரது பேச்சை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் அமைச்சர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அவரது அந்தப் பேச்சு அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது.&lt;/p&gt;&lt;p&gt;அதன்பிறகும் அமைச்சர் ரஞ்சித் குமார் எழுந்து பேச முயன்றார். ஆனால் சபாநாயகர் அவரை அமருமாறு கூறியதுடன், அவருக்கு மைக் கொடுக்க வேண்டாம் என்றும் உத்தரவிட்டார்.&lt;/p&gt;&lt;p&gt;இதனால் சட்டப்பேரவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Ginger Garlic Paste : இஞ்சி-பூண்டு பேஸ்ட் மாதக்கணக்கில் ஃப்ரெஷ்ஷா இருக்கணுமா? இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த சம்பவத்துக்கு திமுக முன்னாள் அமைச்சர்கள் எ.வ. வேலு, கே.என். நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். முன்னாள் முதலமைச்சர் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை சட்டப்பேரவையில் குறிப்பிடும்போது, &ldquo;மாண்புமிகு முதலமைச்சர்&rdquo;, &ldquo;மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர்&rdquo;, &ldquo;மாண்புமிகு உறுப்பினர்&rdquo;, &ldquo;முன்னாள் முதலமைச்சர்&rdquo; போன்ற மரியாதையான அழைப்புமுறைகள் பயன்படுத்தப்படுவது அவையின் நடைமுறை என்று அவர்கள் கூறினர்.&lt;/p&gt;&lt;p&gt;அப்படியிருக்கும்போது, ஒரு அமைச்சர் முன்னாள் முதலமைச்சரின் பெயரை நேரடியாக குறிப்பிட்டது சரியா என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Chidambara Rahasyam : சிதம்பர ரகசியம் என்றால் என்ன? அதன் நிஜமான அர்த்தம் இதுதான்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த விவகாரம் சட்டப்பேரவையில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், முதலமைச்சர் விஜய் பின்னர் விதி 110-ன் கீழ் அரசின் அறிவிப்புகளை வெளியிட எழுந்தார். அப்போது அவர் திமுக உறுப்பினர்களை நோக்கி பேசியது தான் இன்றைய சம்பவத்தின் முக்கியமான தருணமாக மாறியது.&lt;/p&gt;&lt;p&gt;&ldquo;உங்கள் கட்சித் தலைவரின் பெயரை குறிப்பிட்டது தவறுதான். அமைச்சர் சார்பில் நான் சாரி கேட்டுக்கொள்கிறேன்&rdquo; என்று விஜய் தெரிவித்தார். விஜய் தனது அமைச்சரின் பேச்சை நியாயப்படுத்த முயற்சிக்கவில்லை. மாறாக, அந்தப் பேச்சு தவறு என்று வெளிப்படையாக ஏற்றுக்கொண்டு, அமைச்சர் சார்பாக தானே மன்னிப்பு கேட்டிருக்கிறார்.&lt;/p&gt;&lt;p&gt;விஜய் மன்னிப்பு கேட்டதைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் ஏற்பட்ட திடீர் சர்ச்சை அடுத்த கட்ட மோதலாக செல்லாமல் முடிவுக்கு வந்தது.&lt;/p&gt;&lt;p&gt;கொள்கைகளை கடுமையாக விமர்சிக்கலாம். ஆட்சியை விமர்சிக்கலாம். தேர்தல் முறையை விமர்சிக்கலாம். ஆனால் சட்டப்பேரவையின் மரபுகளையும், முன்னாள் முதலமைச்சர் பதவிக்குரிய மரியாதையையும் காப்பாற்ற வேண்டும் என்பதையே இந்த சம்பவம் உணர்த்துகிறது. முதல்வர் விஜய் அதை நன்றாக உணர்ந்து முதிர்ச்சியுடன் செயல்பட்டிருக்கிறார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Milk : பாலை திரும்பத் திரும்ப கொதிக்க வைக்கிறீங்களா? இந்த விஷயம் தெரிஞ்சுக்கோங்க!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>politics</category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/politics/vijay-apologizes-to-dmk-for-ministers-mistake-what-happened-x0tz6xa"/>
        </item>
    </channel>
</rss>
