<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes"?>
<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Mon, 08 Jun 2026 19:01:29 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss/politics" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[CM Vijay: வாவ்.! பாட்ஷா பட ஸ்டைலில் கெத்தாக அமர்ந்த முதல்வர் விஜய்.! மர நாற்காலி டூ அதி நவீன சொகுசு குஷன் சேர்.! இணையத்தில் வரலாகும் புகைப்படங்கள்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/politics/cm-vijay-stuns-in-baashha-style-pose-from-wooden-chair-to-ultra-luxury-cushioned-seat-photos-go-viral-2g97gsv</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/politics/cm-vijay-stuns-in-baashha-style-pose-from-wooden-chair-to-ultra-luxury-cushioned-seat-photos-go-viral-2g97gsv</guid>
            <pubDate>Mon, 08 Jun 2026 14:21:31 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ஆரம்பத்தில் எளிமையான மர நாற்காலியைப் பயன்படுத்தி வந்த முதல்வர் விஜய், அதுகுறித்த சர்ச்சைகளுக்குப் பிறகு தற்போது 'பாட்ஷா' ஸ்டைல் அதிநவீன சொகுசு சேருக்கு மாறியுள்ளார். இதற்கான காரணம் குறித்த தகவல்களும் இணையத்தில் பரவி வருகிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktk652txf58472216cqejsyb,imgname-chatgpt-image-jun-8--2026--02-07-27-pm--1--1780907936604.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஆரம்பத்தில் எளிமையான மர நாற்காலியைப் பயன்படுத்தி வந்த முதல்வர் விஜய், அதுகுறித்த சர்ச்சைகளுக்குப் பிறகு தற்போது 'பாட்ஷா' ஸ்டைல் அதிநவீன சொகுசு சேருக்கு மாறியுள்ளார். இதற்கான காரணம் குறித்த தகவல்களும் இணையத்தில் பரவி வருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதலே மக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறார் த.வெ.க தலைவர் விஜய். கடந்த 10-ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்று, சட்டசபையில் தன் பெரும்பான்மையையும் நிரூபித்த அவர், தற்போது பம்பரமாகச் சுழன்று மக்கள் பணியாற்றி வருகிறார்.&lt;/p&gt;&lt;p&gt;காலை 9:30 அல்லது 10:00 மணிக்கெல்லாம் தலைமைச் செயலகம் வந்துவிடும் அவர், மாலை 4:00 மணி வரை அங்கேயே தங்கி துறை சார்ந்த அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனைகளை மேற்கொள்கிறார். மதிய உணவிற்காகக் கூட வீட்டிற்குச் செல்லாமல், கொண்டு வரும் உணவை அங்கேயே முடித்துவிட்டு உடனே அடுத்த பணிகளுக்குத் தயாராகி விடுகிறார். இவரின் இந்த நேரக் கட்டுப்பாடும் எளிமையான அணுகுமுறையும் பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விஜய் முதல்வராகப் பொறுப்பேற்றது முதல், தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையில் ஒரு சாதாரண மர நாற்காலியில்தான் அமர்ந்து கோப்புகளில் கையெழுத்திட்டு வந்தார். கடந்த 2-ஆம் தேதி தென்னிந்தியப் பிராந்தியங்களுக்கான ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் வி. ஸ்ரீஹரி, முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்துப் பேசினார்.&lt;/p&gt;&lt;p&gt;அப்போது அரசு வெளியிட்ட புகைப்படத்தில், ராணுவத் தளபதிக்கு இணையாக முதல்வர் விஜய் அந்த மர நாற்காலியில் அமர்ந்திருந்த காட்சி வெளியானது. &quot;முதலமைச்சர் அறைக்கு இந்த நாற்காலி பொருத்தமானதா?&quot; என அரசியல் வட்டாரங்களில் இது விவாதப் பொருளாகவும், சில விமர்சனங்களுக்கும் ஆளானது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில், &amp;nbsp;தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி எஸ். மணிகுமார், முதல்வர் விஜய்யை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு தொடர்பாக அரசு வெளியிட்ட புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் அரசியல் நோக்கர்கள் அப்படியே ஆடிப்போயுள்ளனர்!&lt;/p&gt;&lt;p&gt;விஜய்யின் அறையில் இருந்த அந்தப் பழைய மர நாற்காலி மாற்றப்பட்டு, அதற்குப் பதிலாகப் பார்ப்பதற்கே பிரம்மாண்டமாக, 'பாட்ஷா' பட ரஜினி ஸ்டைலில் செம கெத்தாக வடிவமைக்கப்பட்ட அதிநவீன சொகுசு குஷன் சேர் அங்கு இடம் பிடித்துள்ளது. அதில் முதல்வர் விஜய் அமர்ந்திருக்கும் லுக் சமூக வலைதளங்களில் மரண மாஸாக வைரலாகி வருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தினமும் 6 மணி நேரத்திற்கும் மேலாக ஒரே இடத்தில் உட்கார்ந்து தொடர்ந்து முதல்வர் விஜய் கோப்புகளைப் பரிசீலித்து வருகிறார். இதனால் அவருக்கு லேசான முதுகு வலி (Back pain) ஏற்பட்டதாம். நீண்ட நேரம் அமர்ந்து பணியாற்ற ஏதுவாக, மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில், முதுகுக்கு நல்ல பிடிமானம் தரும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த அதிநவீன குஷன் சேர் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.&lt;/p&gt;&lt;p&gt;எளிமை ஒரு பக்கம் இருந்தாலும், தமிழ்நாட்டின் முதலமைச்சர் அமரும் நாற்காலி &quot;கெத்தாக&quot; இருக்க வேண்டும் என்று விரும்பிய அவரது தொண்டர்களுக்கு, இந்த புதிய 'சொகுசு குஷன் சேர்' படம் பெரும் குஷியைக் கொடுத்துள்ளது!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>politics</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/politics/cm-vijay-stuns-in-baashha-style-pose-from-wooden-chair-to-ultra-luxury-cushioned-seat-photos-go-viral-2g97gsv"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Annamalai: புதிய அரசியல் கட்சி.. அடுத்த தேர்தலில் போட்டி.. அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/annamalai-quits-bjp-announces-new-political-party-for-next-elections-2l3nbq8</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/annamalai-quits-bjp-announces-new-political-party-for-next-elections-2l3nbq8</guid>
            <pubDate>Fri, 05 Jun 2026 13:04:13 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Annamalai New Political Party: பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் தொடங்க உள்ளதாகவும், அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் இன்று (மே 5) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kt8p21fg2ttt6xtgpp032tzb,imgname-annamalai-bjp-news-1780555515375.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Annamalai New Political Party: பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் தொடங்க உள்ளதாகவும், அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் இன்று (மே 5) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் தொடங்க உள்ளதாக இன்று (மே 5) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தனது அரசியல் இயக்கத்தை கட்சியாக மாற்ற உள்ளதாகவும், தனது கட்சி அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியியும் எண்றும் அண்ணாமலை அதிரடியாக அறிவித்துள்ளார். மேலும் தனது கட்சியில் இணைவதற்காக இணைய லிங்கையும் (www.wetheleader.org) அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நான் தொடங்கும் கட்சியில் எந்த நாற்காலியும் யாருக்கும் நிரந்தரம் இல்லை எனக்கூறிய அண்ணாமலை, நமது கட்சியில் எந்த தலைவருக்கும் நிரந்தர பதவி கிடையாது என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தொடர்ந்து வீடியோ வெளியிட்டு பேசிய அண்ணாமலை, ''தமிழகத்தில் இன்றும் புதிய அரசியல் கட்சிக்கான தேவை உள்ளது. 18 ஆண்டுகளாக புதிய பாதையை உருவாக்க முயற்சி செய்து வருகிறேன். அனைத்து இடங்களிலும் நாம் சுத்தமான அரசியலை கொண்டு வர வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நாம் தொடங்கப்போகும் இயக்கம் யாருக்கும் எதிரி கிடையாது. நாம் செய்யப்போவது சாதாரண விஷயம் இல்லை; பெரிய விஷயம். ஆகவே கொஞ்சம் பொறுமை தேவை. மாற்றத்தை தர வேண்டியது நம் வேலை. மாற்றம் வேண்டும் என துடித்துக் கொண்டிருந்த மக்கள் இப்போது வாக்களித்துள்ளனர். ஆகவே இன்றில் இருந்து நமது அரசியல் இயக்கம் தொடக்கம். உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராக வேண்டும். நாம் மாறுவோம்; மாற்றம் தானாக வரும்'' என்று கூறியுள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேலும் தொடர்ந்து வீடியோ மூலம் பேசிய அண்ணாமலை, ''தமிழ்நாட்டின் அரசியல், இலக்கணத்தை மாற்ற வேண்டியதே எனது விருப்பம். நமது கட்சிக்குள் சிறந்த மூளைகளை கொண்டு வருவேன். நிரந்த எம்.பி, நிரந்தர எம்.எல்.ஏ என்ற நடைமுறையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இங்கு நிரந்தர சித்தாந்தம் என்று ஏதும் இல்லை. அடுத்த தலைமுறைக்கு பிடிக்காத சித்தாந்தம் அழியும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சட்டப்பேரவை தொடங்கி ஊராட்சி வரை சிறப்பான, சுத்தமான ஊராட்சி அமைய வேண்டும். நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக கூறியபோது என்னை அதில் இணைய அழைத்தார். ஆனால் எப்போது என்னால் இணைய முடியவில்லை. நமது கட்சியில் அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். புதியவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டும். முதலில் இயக்கமாக அனைவரையும் உள்ளே கொண்டு வந்து பிறகு அரசியல் சொல்லி கொடுத்து கட்சியாக மாற்றுவேன். சமரசமில்லாத கொள்கை கொண்ட இயக்கமாக வழிநடத்துவதே எனது இலக்கு'' என்று தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேலும் தான் வெளியிட்ட வீடியோவில் பாஜகவில் இருந்து விலகியது ஏன்? என்பதற்கும் அண்ணாமலை விளக்கம் அளித்தார். ''பாஜகவில் இருந்து விலகுவதாக டிசம்பர் மாதமே பாஜக தலைமையிடம் தெரிவித்து விட்டேன். 18 மாதங்களாக எனது கருத்து வேறுபாடுகளை பாஜகவிடம் தெரிவித்தேன். தனிப்பட்ட ஒரு கட்சிக்கும், எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. பாஜக அனைத்து தேர்தல்களிலும் தனித்து போட்டியிட விரும்பினேன். பிரதமர் மோடி மீது எனக்கு எப்போதும் பெரும் மரியாதை உண்டு'' என்று கூறியுள்ளார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>politics</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/annamalai-quits-bjp-announces-new-political-party-for-next-elections-2l3nbq8"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Annamalai: தமிழக அரசியலில் யாரும் செய்யாத சாதனை.! அண்ணாமலை கட்சி ஆரம்பித்த சிறிது நேரத்தில் எத்தனை லட்சம் பேர் இணைந்துள்ளார்கள் தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/politics/annamalai-new-party-annamalai-creates-history-in-tamilnadu-politics-with-5-lakh-party-members-in-short-time-5n1a3si</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/politics/annamalai-new-party-annamalai-creates-history-in-tamilnadu-politics-with-5-lakh-party-members-in-short-time-5n1a3si</guid>
            <pubDate>Fri, 05 Jun 2026 16:41:16 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Annamalai New Party: பாஜகவின் முக்கிய தலைவராக இருந்த அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகி உள்ள நிலையில், அவர் புதிய இயக்கத்தை தொடங்கி இருக்கிறார். கட்சி ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே லட்சக்கணக்கானோர் அந்த கட்சியில் இணைந்துள்ளனர்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k06e7p4wzz192qdav8qca0fd,imgname-annamalai-1752562915484.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Annamalai New Party: பாஜகவின் முக்கிய தலைவராக இருந்த அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகி உள்ள நிலையில், அவர் புதிய இயக்கத்தை தொடங்கி இருக்கிறார். கட்சி ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே லட்சக்கணக்கானோர் அந்த கட்சியில் இணைந்துள்ளனர்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பாஜகவின் முக்கிய தலைவராக இருந்த அண்ணாமலை அந்த கட்சியில் இருந்து விலகி இருப்பது தமிழக அரசியல் கரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் பாஜகவில் இருந்து விலகிய உடனேயே, வீ த லீடர்ஸ் (We the Leaders) என்ற புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கி இருக்கிறார். அவரின் இந்த புதிய அரசியல் நகர்வு, அதன் பின்னணி கட்சியின் கொள்கைகள் குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ்நாட்டில் பாஜகவின் முக்கிய முகமாக அறியப்பட்டவர் அண்ணாமலை. தமிழகத்தில் பாஜகவை குறிப்பிட்ட வளர்ச்சிக்கு கொண்டு சென்றார். சில காலமாக கட்சிக்குள் அவருக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்ட நிலையில், தேசிய தலைமைக்கு தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்டார். டெல்லியில் அமித்ஷா மற்றும் முக்கிய தலைவர்களை சந்தித்த பின்னர் அவர் இந்த முடிவை எடுத்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ்நாட்டின் எதிர்காலம் மற்றும் அரசியல் நிலைப்பாடு குறித்து பாஜகவின் தேசிய தலைமைக்கும், தமக்கும் கருத்து வேறுபாடுகள் இருப்பதாக அவர் கூறியுள்ளார். தான் பாஜகவில் இருந்த போது நான் பாஜகவை சேர்ந்தவனா அல்லது தமிழனா என்கிற மனப்போராட்டம் இருந்ததாகவும், 2025 டிசம்பர் மாதமே ராஜினாமா செய்ய முடிவு எடுத்ததாகவும் அவர் தெரிவித்தார். மேலும் தனது அரசியல் பயணத்தை கட்சியாக அறிவிக்காமல் வீ த லீடர்ஸ் என்கிற அரசியல் இயக்கமாக தொடங்கி இருக்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த இயக்கம் விரைவில் பிராந்திய அரசியல் கட்சியாக உருவெடுக்கும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் வரவிருக்கும் தேர்தல்களில் தனது கட்சி பங்கெடுக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார். மோடி நம்முடைய பிரதமர். அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். பிரச்சனை, பிரச்சனை என்று அவரை என்னால் தொடர்ந்து தொந்தரவு செய்ய முடியாது. சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் இருந்தன. எனவே கட்சியில் இருந்து விலக இருப்பதாக முன்கூட்டியே தலைமையிடம் தெரிவித்தேன். தேர்தலை முடித்துவிட்டு செல்லுங்கள் என்று கூறினார்கள். எனவே நான் பொறுமையாக இருந்தேன்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை தொடர்ந்து எதிர்த்து வந்தேன். பெருமைமிகு இந்தியன், பாரம்பரியமிக்க தமிழர் என்பதை எனது அடையாளம். நீங்கள் தமிழனா அல்லது இந்தியனா என்று கூட வடமாநிலத்தவர்கள் என்னை கேட்டார்கள். கடந்த 18 மாதங்களாக கருத்து வேறுபாடுகள் நிலவி வந்த சூழ்நிலையில் கட்சியில் இருந்து விலகும் முடிவு எடுக்க நேரிட்டது. புதிய பாதை, புதிய இயக்கம், புதிய பரிமாணத்தோடு ஆரம்பிக்கிறேன். தமிழகத்தில் அடுத்த நடக்கும் பொதுத் தேர்தலில் நமது கட்சிப் போட்டியிடும். நிரந்தர எம்எல்ஏ, நிரந்தர அமைச்சர் என்பதை உடைக்க வேண்டும். பதவி என்பது ஒருவருக்கு மட்டுமே நிரந்தரம் இல்லை என்று அவர் கூறினார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த நிலையில் அண்ணாமலை தனது கட்சியின் உறுப்பினர் சேர்க்கையை wetheleader.org என்கிற இணையதளம் மூலம் தொடங்கி இருக்கிறார். இணையதளம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கானோர் அந்த கட்சியில் இணைந்துள்ளனர். காலையில் கட்சி அறிவிப்பு வெளியான நிலையில், மாலை 4 மணி நிலவரப்படி சுமார் 5,43,000-க்கும் அதிகமானோர் கட்சியில் இணைந்துள்ளனர். நடிகர் விஜய், உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலை என தமிழக அரசியல் இளைஞர்களின் பக்கம் திரும்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>politics</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/politics/annamalai-new-party-annamalai-creates-history-in-tamilnadu-politics-with-5-lakh-party-members-in-short-time-5n1a3si"/>
        </item>
        <item>
            <title><![CDATA[DK Shivakumar: பதவியேற்றதும் முதல் கையெழுத்து: மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/india/dk-shivakumar-announces-free-bus-travel-for-all-karnataka-students-articleshow-6pv504t</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/india/dk-shivakumar-announces-free-bus-travel-for-all-karnataka-students-articleshow-6pv504t</guid>
            <pubDate>Wed, 03 Jun 2026 21:59:11 +0530</pubDate>
            <description><![CDATA[கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்ற டி.கே.சிவகுமார், தனது முதல் முடிவாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். முந்தைய திட்டத்தை விரிவுபடுத்தும் இந்த நடவடிக்கையை அவர் அறிவித்தார். மேலும், வேலை தேடும் இளைஞர்கள் அரசுடன் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-external,imgname-image-23b80b05-f666-4150-b75e-932f102a8a48.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;h2&gt;கர்நாடகாவில் அனைத்து மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ்&lt;/h2&gt;&lt;p&gt;கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக புதன்கிழமை பதவியேற்ற டி.கே.சிவகுமார், பொறுப்பேற்ற உடனேயே ஒரு அதிரடி முடிவை எடுத்திருக்கிறார். மாநிலம் முழுவதும் உள்ள &quot;அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும்&quot; பஸ் பாஸ் இலவசமாக வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய சிவகுமார், &quot;ஏன் பெண்களுக்கு மட்டும் இலவச பஸ் பயணம் என்று நிறைய பேர் கேட்டார்கள். அதனால்தான் இந்தத் திட்டத்தை இப்போது அனைவருக்கும் விரிவுபடுத்தியுள்ளோம்&quot; என்று கூறினார். இந்தத் திட்டம் முறையாக அறிவிக்கப்பட்டதும், மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.&lt;/p&gt;&lt;p&gt;&quot;இது இளைஞர்களின் காலம். ஏன் பெண்களுக்கு மட்டும் இலவச பஸ் என்று மாணவர்கள் கேட்டார்கள். அதனால் இப்போது நாங்கள் அனைத்து மாணவர்களுக்கும் கட்டணமில்லாமல் இலவச பஸ் பாஸ் வழங்குகிறோம். இதுதான் டி.கே.சிவகுமார் அமைச்சரவையின் முதல் முடிவு. போக்குவரத்துத் துறையுடன் இதுகுறித்து பேசி, மாணவர்கள் எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதை அறிவிப்போம்,&quot; என்று அவர் கூறினார்.&lt;/p&gt;&lt;h2&gt;இளைஞர் நலன் மற்றும் வேலைவாய்ப்பில் கவனம்&lt;/h2&gt;&lt;p&gt;போக்குவரத்துத் துறையுடன் கலந்தாலோசித்து இந்தத் திட்டத்தை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும், தகுதியுள்ள மாணவர்கள் திட்டம் அறிவிக்கப்பட்டவுடன் பாஸ்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கூறினார். கர்நாடக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உறுதியாக இருப்பதாகக் கூறிய சிவகுமார், இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்தல் மற்றும் வாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட முயற்சிகளில் அரசு கவனம் செலுத்தும் என்றார்.&lt;/p&gt;&lt;p&gt;&quot;இளைஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு சில முடிவுகளை எடுத்துள்ளோம். இந்த மாநில மக்கள் என் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்கள் கடந்த காலத்தில் என்னை விமர்சித்திருக்கலாம், பாராட்டியிருக்கலாம். எனக்கு அரசியல் அனுபவம் உள்ளது. நான் கஷ்டங்களையும் பார்த்துள்ளேன், மகிழ்ச்சியையும் பார்த்துள்ளேன். இளம் வயதிலேயே அதிகாரத்தையும் பார்த்துள்ளேன். நான் அவர்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளேன்.&quot;&lt;/p&gt;&lt;p&gt;இதனுடன், வேலை தேடும் இளைஞர்கள் அரசு இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளுமாறு சிவகுமார் கேட்டுக்கொண்டார். &quot;வேலை தேடும் வேலையில்லாத இளைஞர்கள் அரசிடம் பதிவு செய்ய வேண்டும். நாங்கள் நிறுவனங்களுடன் பேசி, அவர்களுக்குத் தேவையான வேலைகளை ஏற்பாடு செய்து கொடுப்போம்,&quot; என்று அவர் கூறினார்.&lt;/p&gt;&lt;h2&gt;34-வது முதல்வராக பதவியேற்ற டி.கே.சிவகுமார்&lt;/h2&gt;&lt;p&gt;முன்னதாக, லோக் பவனில் நடைபெற்ற விழாவில் கர்நாடகாவின் 34-வது முதலமைச்சராக சிவகுமார் பதவியேற்றார். மூத்த காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஸ்வரா துணை முதலமைச்சராகவும், 13 சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாகவும் பதவியேற்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;இந்த பதவியேற்பு விழாவில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள், மதத் தலைவர்கள் மற்றும் நாடு முழுவதிலுமிருந்து வந்திருந்த முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.&lt;/p&gt;&lt;h2&gt;அரசியல் தலைவர்கள் வாழ்த்து&lt;/h2&gt;&lt;p&gt;பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சராக பதவியேற்ற சிவகுமாருக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், மத்திய அரசின் ஆதரவையும் உறுதி செய்தார். &quot;கர்நாடக முதலமைச்சராக பதவியேற்றிருக்கும் திரு. டி.கே.சிவகுமார் ஜி-க்கு வாழ்த்துகள். அவரது பதவிக்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன். மக்களின் நலனுக்காக கர்நாடக அரசுடன் மத்திய அரசு நெருக்கமாகப் பணியாற்றும்,&quot; என்று அவர் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவின் பங்களிப்புகளையும் பாராட்டினார். &quot;கர்நாடக மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர், அந்த நம்பிக்கைதான் எங்கள் மிகப்பெரிய பொறுப்பு. கர்நாடக மக்களின் எதிர்பார்ப்புகளை முன்னெடுத்துச் செல்லும் முதல்வர் திரு. டி.கே.சிவகுமார் மற்றும் அமைச்சரவைக்கு என் அன்பான வாழ்த்துகள். கர்நாடகாவை வலுப்படுத்தி, லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மேம்படுத்திய திரு. சித்தராமையா ஜி-யின் தலைமைக்கும் சேவைக்கும் எனது மனமார்ந்த நன்றி,&quot; என்று காந்தி கூறினார்.&lt;/p&gt;&lt;p&gt;&quot;காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகளே எங்கள் ஆட்சி மற்றும் சமூக நீதிக்கான அர்ப்பணிப்பின் அடித்தளமாக இருக்கும். நாங்கள் தொடர்ந்து கர்நாடக மக்களின் குரலைக் கேட்போம், சேவையாற்றுவோம்,&quot; என்றும் அவர் добавил.&lt;/p&gt;&lt;p&gt;காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான ஹிமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, தெலங்கானா முதல்வர் ஏ.ரேவந்த் ரெட்டி, கேரளாவின் வி.டி.சதீசன் ஆகியோரும் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>politics</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/india/dk-shivakumar-announces-free-bus-travel-for-all-karnataka-students-articleshow-6pv504t"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Jantar Mantar Protest: 'ஹிட்' அடிச்சாலும் சாகாத கரப்பான் பூச்சிகள் நாங்கள்! - தலை நகரில் போராட்டம்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/india/cockroach-janata-party-demands-minister-resignation-at-jantar-mantar-protest-79sgufl</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/india/cockroach-janata-party-demands-minister-resignation-at-jantar-mantar-protest-79sgufl</guid>
            <pubDate>Sat, 06 Jun 2026 19:31:53 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;டெல்லி ஜந்தர் மந்தரில் 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்தது. கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய ஒரு வாரம் கெடு விதித்துள்ளார் அபிஜீத் தீபகே. இல்லையென்றால், நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும் என எச்சரித்துள்ளார்&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktdpxms4cb9gcfbdq6prfzq5,imgname-cockroach-janta-party-jantar-mantar-protest-delhi-police-approval-abhijeet-dipke-education-reform-2-1780724192036.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;டெல்லி ஜந்தர் மந்தரில் 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்தது. கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய ஒரு வாரம் கெடு விதித்துள்ளார் அபிஜீத் தீபகே. இல்லையென்றால், நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும் என எச்சரித்துள்ளார்&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நீட் 2026 வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங் (OSM) முறைகேடுகளை எதிர்த்து, 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' (CJP) டெல்லி ஜந்தர் மந்தரில் சனிக்கிழமை போராட்டம் நடத்தியது. இந்த போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக, கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீபகே அமெரிக்காவிலிருந்து டெல்லி வந்திருந்தார்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;தர்மேந்திர பிரதான் ராஜினாமா&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அழைப்பு விடுத்த இந்த போராட்டத்தில், நாடு முழுவதிலுமிருந்து இளைஞர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் கைகளில் பதாகைகளை ஏந்தி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர்.&lt;/p&gt;&lt;img&gt;போராட்டத்தில் கலந்துகொண்ட சில இளைஞர்கள் 'கரப்பான் பூச்சிகள் சாவதில்லை' என்று எழுதப்பட்ட டி-ஷர்ட்களை அணிந்திருந்தனர். அப்போது, பூச்சி மருந்து 'ஹிட்' டப்பாவுடன் வந்த ஒரு இளைஞரை சிஜேபி கட்சியினர் ஜந்தர் மந்தரிலிருந்து வெளியேற்றினர். 'நாங்கள் ஹிட்டால் கூட சாக மாட்டோம்' என்று அவர்கள் கூறினர்.&lt;img&gt;போராட்டத்தின் போது, 'தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்', 'நாங்கள் கேட்டது மேக் இன் இந்தியா, நீங்கள் தந்தது லீக் இன் இந்தியா' என இளைஞர்கள் ஆவேசமாக முழக்கமிட்டனர். ஆயிரக்கணக்கான மாணவர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.&lt;img&gt;கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீபகே இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். இதற்காகவே அமெரிக்காவின் பாஸ்டனிலிருந்து புது டெல்லி வந்த அவர், விமான நிலையத்திலிருந்து டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் சுயசரிதை புத்தகத்தை கையில் ஏந்தியபடி காணப்பட்டார்.&lt;img&gt;ஜந்தர் மந்தரில் சுமார் 5 மணி நேரம் இந்த போராட்டம் நீடித்தது. அதன் பிறகு போராட்டம் முடிவுக்கு வந்தது. ஆனால், 'தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யாவிட்டால், நாடு முழுவதும் போராட்டம் நடத்துவோம். அடுத்த சனிக்கிழமை மீண்டும் ஜந்தர் மந்தரில் போராட வருவோம்' என்று கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீபகே எச்சரித்துள்ளார்.&lt;img&gt;இந்த போராட்டத்தில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கும் கலந்துகொண்டார். அவருடன் சிஜேபி கட்சியின் செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரங்காவும் இருந்தார். அசுதோஷ், ஐஐடி கான்பூரில் படித்தவர், முன்பு லண்டனில் வசித்து வந்தார்.&lt;img&gt;புது டெல்லி ஜந்தர் மந்தரில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் மதியம் 12 மணியளவில் தொடங்கியது. மதியம் 3 மணிக்கு போராட்டம் முடிவடைந்ததும், அபிஜீத் காரில் புறப்பட்டுச் சென்றார்.&lt;img&gt;கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்தையொட்டி, இந்திரா காந்தி விமான நிலையம், முக்கிய ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், டெல்லி எல்லைப் பகுதிகள் மற்றும் பிற இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். குறிப்பாக ஜந்தர் மந்தரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.&lt;img&gt;'நாடு முழுவதிலும் உள்ள இளைஞர்கள், குறிப்பாக வேலையில்லாதவர்களிடமிருந்து எங்களுக்கு ஆதரவு கிடைக்கிறது. தற்போதைய சூழ்நிலைகளால் அவர்கள் மத்திய அரசு மீது கடும் கோபத்தில் உள்ளனர்' என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹித் பவார் கூறினார். 'இளைஞர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும்' என்றும் அவர் எச்சரித்தார்.]]></content:encoded>
            <category>politics</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/india/cockroach-janata-party-demands-minister-resignation-at-jantar-mantar-protest-79sgufl"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Annamalai: அண்ணாமலை எடுத்த விஸ்வரூப முடிவின் பின்னணி.!  'அல்டிமேட்'  ஐந்து காரணங்கள் இதுதான்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/politics/the-story-behind-annamalai-massive-political-move-here-are-the-5-ultimate-reasons-behind-the-decision-7e484yw</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/politics/the-story-behind-annamalai-massive-political-move-here-are-the-5-ultimate-reasons-behind-the-decision-7e484yw</guid>
            <pubDate>Fri, 05 Jun 2026 13:39:16 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;பா.ஜ.க-விலிருந்து விலகி, 'தமிழ்-முதல்' கொள்கையுடன் புதிய பிராந்திய கட்சியைத் தொடங்க அண்ணாமலை முடிவெடுத்துள்ளார். அதற்கு ஐந்து முக்கிய காரணங்கள் இந்த அதிரடி முடிவின் பின்னணியில் உள்ளன.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktbck2c0acx2pygcvcga1qyy,imgname-chatgpt-image-jun-5--2026--01-19-45-pm--1--1780646250880.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;பா.ஜ.க-விலிருந்து விலகி, 'தமிழ்-முதல்' கொள்கையுடன் புதிய பிராந்திய கட்சியைத் தொடங்க அண்ணாமலை முடிவெடுத்துள்ளார். அதற்கு ஐந்து முக்கிய காரணங்கள் இந்த அதிரடி முடிவின் பின்னணியில் உள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழக அரசியலில் தற்போதைய மிக முக்கிய பேசுபொருளாக மாறியிருப்பது, பா.ஜ.க-விலிருந்து விலகி தன் சொந்த அரசியல் பயணத்தைத் தொடங்க அண்ணாமலை எடுத்துள்ள அதிரடி விஸ்வரூப முடிவுதான். தமிழக பா.ஜ.க தலைவராகப் பொறுப்பேற்றது முதல், திராவிடக் கட்சிகளுக்கு எதிராக ஆக்ரோஷமான அரசியலை முன்வைத்து வந்த முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை தற்போது புதிய அரசியல் கட்சியை தொடங்கவுள்ளார். திராவிட கட்சிகளுக்கு மாற்றாகத் தன்னை முன்னிறுத்தி, 'தமிழ்-முதல்' (Tamil-first) கொள்கையோடு ஒரு புதிய பிராந்திய இயக்கத்தைத் தொடங்க அவர் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அண்ணாமலையின் இந்த விஸ்வரூப முடிவின் பின்னணியில் இருக்கும் &lsquo;அல்டிமேட்&rsquo; ஐந்து முக்கிய காரணங்கள் இதோ:&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;2024 மக்களவைத் தேர்தலில் அண்ணாமலையின் தீவிரப் பிரச்சாரத்தால் பா.ஜ.க தமிழகத்தில் தனித்துப் போட்டியிட்டு 11.38% வாக்கு வங்கியை எட்டி சாதனை படைத்தது. எனினும், 2026 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வின் டெல்லி தலைமை மீண்டும் அதிமுக-வுடன் கூட்டணி வைக்க விரும்பி, அண்ணாமலையின் 'தனி வழி' உத்தியை நிராகரித்தது. கட்சியின் இந்த முடிவும், தேர்தலுக்கு முந்தைய தொகுதிப் பங்கீட்டில் அதிமுக விதித்த நிபந்தனைகளும் அண்ணாமலைக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தின.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அண்ணாமலை மாநிலத் தலைவர் பதவியிலிருந்து மாற்றப்பட்டு, நயினார் நாகேந்திரன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். அதன் தொடர்ச்சியாக, முக்கிய தேர்தல் பொறுப்புக் குழுக்களில் இருந்தும் அவர் திட்டமிட்டு ஓரங்கட்டப்பட்டார். வேட்பாளர் தேர்விலும் அவரது பரிந்துரைகள் ஏற்கப்படாததால், பா.ஜ.க-வுக்குள் தன் கை ஓங்காது என்பதை உணர்ந்தே அவர் இந்த விலகல் முடிவை எடுத்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழகத்தில் பா.ஜ.க-வை விடவும் நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்' (TVK) மிகக் குறுகிய காலத்தில் மாற்று சக்தியாக உருவெடுத்தது அண்ணாமலையை சிந்திக்க வைத்துள்ளது. பா.ஜ.க என்ற தேசிய முத்திரை இருக்கும் வரை தமிழக மக்கள் தன்னை முழுமையாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதையும், விஜய் போல ஒரு பிராந்திய அடையாளத்தோடு களம் இறங்கினால் மட்டுமே இளைஞர்களின் ஆதரவைப் பெற முடியும் என்பதையும் அண்ணாமலை கணித்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மத்திய கல்வி அமைச்சகம் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்று மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்கியபோது, பா.ஜ.க-வில் இருந்துகொண்டே அண்ணாமலை அதை பகிரங்கமாக எதிர்த்தார். தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் தேசியக் கட்சியின் கொள்கைகளை இங்கே திணிக்க முடியாது என்ற அவரது எண்ணமே, ஒரு 'செக்குலர்' மற்றும் 'தமிழ் அடையாள' அரசியல் இயக்கத்தை நோக்கி அவரை நகர்த்தியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதிமுக-வுடன் கூட்டணி வைத்து பா.ஜ.க களம் கண்ட 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில், பா.ஜ.க வெறும் 1 இடத்தை மட்டுமே வென்று, வாக்கு வங்கியும் 3 சதவீதமாகச் சரிந்தது. இதன் மூலம் தன் 'தனித்துப் போட்டி' என்ற உத்தியே சரியானது என்பது நிரூபிக்கப்பட்டதாக அண்ணாமலை கருதுகிறார். டெல்லி தலைமையிடம் 5 பக்க தேர்தல் தோல்வி அறிக்கையைச் சமர்ப்பித்துவிட்டு, சுயேச்சையான பிராந்திய அரசியலே தனக்கான எதிர்காலம் என்ற விஸ்வரூப முடிவை அவர் எடுத்துள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;பா.ஜ.க-வின் அகில இந்தியக் கொள்கைகள் தமிழகத்தில் எடுபடாது என்பதை உணர்ந்து, 'தமிழ் மண் சார்ந்த மாற்று அரசியல்' செய்யப் புறப்பட்டுள்ள அண்ணாமலையின் இந்த நகர்வு, 2026-க்குப் பிந்தைய தமிழக அரசியலில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.&amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>politics</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/politics/the-story-behind-annamalai-massive-political-move-here-are-the-5-ultimate-reasons-behind-the-decision-7e484yw"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Annamalai: ரூட்டை மாற்றிய அண்ணாமலை.! தமிழக அரசியலில் என்ன மாற்றம் ஏற்படும்? மலைக்க வைக்கும் திருப்பங்கள்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/politics/annamalai-changed-his-political-route-what-changes-could-this-bring-to-tamil-nadu-politics-stunning-twists-ahead-9fp6o2x</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/politics/annamalai-changed-his-political-route-what-changes-could-this-bring-to-tamil-nadu-politics-stunning-twists-ahead-9fp6o2x</guid>
            <pubDate>Wed, 03 Jun 2026 12:01:59 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;அண்ணாமலை புதிய மக்கள் இயக்கம் ஒன்றைத் தொடங்கி, நடிகர் விஜய்யின் கட்சிக்குப் பிறகு, தமிழக அரசியலில் மேலும் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kt62qmacdtt9m3qxaxctc25m,imgname-chatgpt-image-jun-3--2026--11-57-18-am--1--1780468142412.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;அண்ணாமலை புதிய மக்கள் இயக்கம் ஒன்றைத் தொடங்கி, நடிகர் விஜய்யின் கட்சிக்குப் பிறகு, தமிழக அரசியலில் மேலும் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ்நாடு அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய சூழல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், &amp;nbsp;தமிழக பாஜாகவின் மாநில முகமாக அறியப்பட்ட கே. அண்ணாமலை அக்கட்சியிலிருந்து விலக முடிவெடுத்து டெல்லி சென்றுள்ள விவகாரம் அனல் பறக்கும் விவாதமாக மாறியுள்ளது. பாஜாக தேசியத் தலைவர் நிதின் நபின், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பி.எல். சந்தோஷ் ஆகியோரை அண்ணாமலை டெல்லியில் சந்தித்ததன் பின்னணியில், தமிழக அரசியல் களத்தையே உலுக்கக்கூடிய பல்வேறு மலைக்க வைக்கும் திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&amp;nbsp;அண்ணாமலையின் இந்த அதிரடி முடிவு திடீரென எடுக்கப்பட்ட ஒன்று அல்ல என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். கடந்த சில காலங்களாகவே கட்சியின் தேசியத் தலைமைக்கும், அவருக்கும் இடையே நிலவி வந்த சில உள்கட்சி முரண்பாடுகளும், தமிழ்நாட்டில் பாஜாகவின் தற்போதைய அரசியல் நகர்வுகளும் அவரை இந்த புதிய பாதையை நோக்கித் தள்ளியுள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;கட்சிக்குள்ளான அதிருப்தி&lt;/strong&gt;: பாஜாக மேலிடத்தின் சில முக்கிய முடிவுகள் மற்றும் தமிழகப் பொறுப்பாளர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் அண்ணாமலை மிகுந்த ஏமாற்றமடைந்ததாகக் கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;கவுரவமான விலகல்&lt;/strong&gt;: இது கட்சியின் தலைமைக்கு அழுத்தம் கொடுப்பதற்கோ அல்லது கூடுதல் பதவி வாங்குவதற்கோ நடத்தப்படும் நாடகம் அல்ல; மாறாக, சுயமரியாதையுடனும் சுமுகமாகவும் கட்சியிலிருந்து வெளியேறும் ஒரு நேரடி முடிவு என்றே பார்க்கப்படுகிறது. டெல்லிக்குச் சென்றபோது அவரது வாகனத்தில் பாஜாக கொடி கட்டப்படாமல் இருந்தது முதலே அவர் தனது 'ரூட்டை' மாற்றிவிட்டார் என்பது தெளிவாகத் தெரிந்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;டெல்லியில் நிதின் நபின் மற்றும் அமித் ஷா போன்ற உயர்மட்டத் தலைவர்களைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அண்ணாமலை ஒப்படைத்துள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;மறுக்கப்படும் சமரசங்கள்&lt;/strong&gt;: பாஜாக மேலிடம் அவரை சமாதானப்படுத்த முயன்றாலும், அண்ணாமலை தனது முடிவில் உறுதியாக இருப்பதாகத் தெரிவதால் டெல்லி தலைமைகளே சற்று மலைத்துப் போயுள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;மேலிடத்தின் ஃபார்முலா&lt;/strong&gt;: தமிழகத்தில் பாஜாக மேலிடம் வகுத்த சில தேர்தல் வியூகங்கள் எதிர்பார்த்த வெற்றியைத் தராததும், அதன் விளைவாக அண்ணாமலை மீது விழுந்த விமர்சனங்களும் இந்த விலகலுக்கு முக்கிய உந்துசக்தியாக அமைந்துள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழக பாஜாகவில் அண்ணாமலையின் வருகைக்குப் பின் ஒரு பெரும் இளைஞர் பட்டாளம் கட்சிக்குள் வந்தது. தற்போது அவர் விலகுவதாக அறிவித்தவுடன், கட்சியின் மீனவர் அணித் தலைவர் எம்.சி. முனுசாமி போன்ற முக்கிய நிர்வாகிகளும் அடுத்தடுத்து விலகத் தொடங்கியுள்ளனர். இது ஒட்டுமொத்த தமிழக அரசியல் களத்திலும் பெரும் மாற்றங்களை விதைக்கப் போகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;புதிய மக்கள் இயக்கம்? &lt;/strong&gt;அண்ணாமலை பாஜாகவிலிருந்து விலகி, மக்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்ளும் வகையில் ஒரு புதிய &quot;மக்கள் இயக்கம்&quot; (People's Movement) அல்லது புதிய அரசியல் தளம் ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;மாற்றமடையும் அரசியல் களம்&lt;/strong&gt;: ஏற்கனவே நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) 2026 தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி திமுக-அதிமுகவின் இருதுருவ அரசியலை உடைத்துள்ள நிலையில், அண்ணாமலையின் இந்தத் தனிப் பாதை தமிழக அரசியலில் மிகப்பெரிய மூன்றாம் கட்டப் புரட்சியை அல்லது புதியதொரு கூட்டணியை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அண்ணாமலையின் இந்த விலகல் பாஜாகவிற்குத் தமிழகத்தில் தற்காலிகப் பின்னடைவை ஏற்படுத்தினாலும், அவரது தனிப்பட்ட அரசியல் எதிர்காலத்திற்கு இது ஒரு புதிய பாதையைத் திறந்துவிட்டுள்ளது. திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகத் தன்னை முன்னிறுத்திக் கொள்ள விரும்பும் அண்ணாமலை, தேசியக் கட்சியின் பிடியிலிருந்து விடுபட்டு சொந்தமாகத் தமிழ்நாட்டு மண்ணில் களம் காணத் தயாராகி வருகிறார் என்பதே தற்போதைய அரசியல் சூழல் உணர்த்தும் நிதர்சனம். இந்த மலைக்க வைக்கும் திருப்பங்கள் தமிழக அரசியலை எத்திசை நோக்கி நகர்த்தப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>politics</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/politics/annamalai-changed-his-political-route-what-changes-could-this-bring-to-tamil-nadu-politics-stunning-twists-ahead-9fp6o2x"/>
        </item>
        <item>
            <title><![CDATA[TN Politics: இந்தியா கூட்டணி கூட்டத்தை கைகழுவிய திமுக! அறிவாலயம் முடிவுக்கு பின்னணியில் கமலாலயம்? பரபரப்பு தகவல்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/dmk-boycotts-india-alliance-meet-is-bjp-behind-arivalayam-bold-move-9pmqo9a</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/dmk-boycotts-india-alliance-meet-is-bjp-behind-arivalayam-bold-move-9pmqo9a</guid>
            <pubDate>Thu, 04 Jun 2026 19:54:28 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;TN Politics: காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கூட்டத்தை புறக்கணிப்பதாக திமுக அறிவித்துள்ளது. திமுக முடிவுக்கு பின்னணியில் பாஜக உள்ளதா? என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kt9g17r7jpqk3v83pacj2xb2,imgname-tn-politics-1780582752007.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;TN Politics: காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கூட்டத்தை புறக்கணிப்பதாக திமுக அறிவித்துள்ளது. திமுக முடிவுக்கு பின்னணியில் பாஜக உள்ளதா? என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தவெக ஆட்சியை பிடித்தது முதல் தமிழகத்தில் அரசியல் நிலைமை தலைகீழாக மாறி விட்டது. திமுகவுடன் ஒரே குடும்பம் போல் இணைந்திருந்த காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தவெக பக்கம் சென்று விட்டன. இதில் காங்கிரஸ் சொல்லாமல் கொள்ளாமல் தவெக&zwnj;வுக்கு தாவி முதல் ஆளாக அக்கட்சியுடன் கூட்டணி அமைத்தது திமுகவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. தேர்தலுக்கு முன்பாக திமுக தயவால் மாநிலங்களவை எம்.பி.யை பெற்ற காங்கிரஸ், இப்போது தேர்தலுக்கு பின்னாக தவெக தயவில் ஒரு மாநிலங்களவை எம்.பி.யை உறுதி செய்து விட்டது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறிய காங்கிரஸ்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;காங்கிரஸ் குறைந்தபட்சம் அரசியல் நாகரீகம் கூட இல்லாமல் நடந்து கொள்வதாக திமுக மட்டுமின்றி நடுநிலை வகிப்பவர்களே குற்றம்சாட்டுகின்றனர். மத்திய அளவில் பாஜகவுக்கு எதிரான இந்தியா கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை வகித்து வருகிறது. ஜூன் 8ம் தேதி இந்தியா கூட்டணியின் கூட்டத்துக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்த நிலையில், இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக திமுக அதிரடியாக அறிவித்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இது தொடர்பாக திமுக வெளியிட்ட அறிக்கையில், 'டெல்லி &ldquo;கான்ஸ்டிடியூஷன் கிளப்பில்&rdquo; வருகின்ற ஜூன் 8-ஆம் தேதி நடைபெறும் &ldquo;இந்தியா&quot; கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்திற்கு வருமாறு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை நீட் தேர்வு, தொகுதி மறுசீரமைப்பு, அவசர அவசரமாகத் தேர்தல் நேரத்தில் திணிக்கப்பட்ட SIR, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள், ஒரே நாடு - ஒரே தேர்தல், வக்பு சட்டம், FCRA சட்டத் திருத்தம் உள்ளிட்ட - ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், மாநில உரிமைகளுக்கும் எதிரான அனைத்திற்கும் தொடக்கம் முதலே, முதல் அரசியல் இயக்கமாகத் துணிச்சலுடன் எதிர்த்து நின்றது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;அதற்கான நடவடிக்கைகளை ஜனநாயக ரீதியில் நாடாளுமன்றத்திலும், ஆட்சியில் இருந்த நேரத்தில் சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும், உரிய நேரத்தில் நீதிமன்றங்களிலும் எடுத்து வைத்து வாதாடியும், போராடியும் வந்திருக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&quot;இந்தியா&quot; கூட்டணி தொடங்கியதிலிருந்து அக்கூட்டணியின் மையச் சக்தியாக திராவிட முன்னேற்றக் கழகம் இயங்கியது. திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்தான் நாட்டு மக்களுக்கான முக்கியப் பிரச்சினைகளில் முதன்மைக் குரல் எழுப்பி வந்தார். இது இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளும் அக்கட்சிகளின் தலைவர்களும் நன்கு அறிவார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்குப் பின், காங்கிரஸ் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இழைத்த துரோகத்தினால் மிகுந்த மனக்காயமுற்றிருக்கும் கழகத் தோழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கின்ற வகையில், வருகின்ற ஜூன் 8-ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் &quot;இந்தியா&quot; கூட்டணிக் கூட்டத்தில், அதாவது காங்கிரஸ் பங்கேற்கும் கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது. அதேநேரத்தில் -இந்தக் கூட்டத்தில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகள் முன்வைக்கும் நாட்டு நலனைப் பாதிக்கும் பிரச்சினைகளில், திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் குரல் கொடுக்கும்' என்று கூறப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;காங்கிரசை துரோகி என தெரிவித்துள்ள திமுக, இந்தியா கூட்டணி கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறியுள்ளது. காங்கிரஸ் சொல்லாமல் கொள்ளாமல் தவெகவுக்கு ஓடியதால் தான் திமுக இந்த முடிவை எடுத்து இருப்பதாக கூறப்பட்டாலும் அறிவாலயத்தின் முடிவுக்கு பின்னணியில் கமலாலயம் இருப்பதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். பாஜகவின் ஒரே நோக்கம். காங்கிரஸ் இல்லாத இந்தியா தான். இந்தியா கூட்டணி வலுவாக இருப்பதை விரும்பாத பாஜக, இப்போது இந்தியா கூட்டணி துண்டு துண்டாக சிதறி போவதை ரசித்து வருகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;தேசிய அளவில் புதிய கூட்டணியா?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஏற்கெனவே அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி, ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவால், திரிணாமுல் காங்கிரசின் மம்தா பானர்ஜி ஆகியோர் இந்தியா கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை வகிப்பதை விரும்பாத நிலையில், இப்போது திமுகவும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது. இந்தியா கூட்டணியில் இருந்து விலகி சமாஜ்வாடி, ஆம் ஆத்மி, திமுக ஆகிய கட்சிகள் சேர்ந்து தேசிய அளவில் புதிய கூட்டணி அமைக்க உள்ளதாகவும் இதற்கு மம்தா தலைமை வகிக்க உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மறுபக்கம் பாஜக, திமுகவை தூண்டி விட்டு காரியம் சாதித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது தொகுதி மறுவரையறை திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு திமுக எம்.பி.க்களின் ஆதரவை பாஜக கேட்க உள்ளதாகவும், இதற்கு பலனாக மத்திய அமைச்சரவையில் திமுகவுக்கு இடம் அளிப்பது தொடர்பாக பேசப்படுவதாகவும் ஒரு சில தகவல்கள் காட்டுத்தீ போல் பரவி வருகின்றன&zwnj;. இதில் திமுக பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் ஆதரவு அளிக்காமல் நடுநிலை வகிக்க உள்ளதாக ஒருசிலரும், காங்கிரஸின் துரோகத்துக்கு பழிவாங்க பாஜகவுடன் திமுக கைகோர்க்க உள்ளதாக மற்றொரு சிலரும் கருத்துகளை தெரிவிக்கின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;திமுக முடிவு என்ன?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஏற்கெனவே அதிமுகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க திமுக திட்டம் போட்டது பூதாகரமாக வெடித்த நிலையில், தேர்தலுக்கு பிறகு நீட் தேர்வு மோசடி, பெட்ரோல், டீசல் விலை உள்ளிட்ட விவகாரங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் பாஜகவை முன்பு போல் கடுமையாக விமர்சிக்காதது பல்வேறு கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சாப்ட் கார்னர் பாஜகவுடன் கூட்டணிக்கு அச்சாரமா? என ஒருசிலர் கேள்விகளை முன்வைக்கின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லாத நிலையில், திமுக முன்புபோல் பாஜகவை விமர்சித்து தனித்து நிற்குமா? இல்லை அவர்களுடன் கைகோர்க்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>politics</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/dmk-boycotts-india-alliance-meet-is-bjp-behind-arivalayam-bold-move-9pmqo9a"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Annamalai: என் போட்டோ, பெயரை பயன்படுத்தாதீங்க.. அண்ணாமலை அதிரடி அறிவிப்பு.. என்னாச்சு?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/annamalai-warning-dont-use-my-name-and-photo-for-other-outfits-we-the-leaders-nears-17-lakh-members-cgn5i7p</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/annamalai-warning-dont-use-my-name-and-photo-for-other-outfits-we-the-leaders-nears-17-lakh-members-cgn5i7p</guid>
            <pubDate>Mon, 08 Jun 2026 19:01:26 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Annamalai: சில இயக்கங்கள் தனது பெயர், போட்டோவை பயன்படுத்தக்கூடாது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். அண்ணாமலை தொடங்கிய இயக்கத்துக்கு பெரும் ஆதரவு பெருகி வருகிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktc4s5ctdys1az4s7v41ect4,imgname-k-annamalai-we-the-leaders-1780671616410.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Annamalai: சில இயக்கங்கள் தனது பெயர், போட்டோவை பயன்படுத்தக்கூடாது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். அண்ணாமலை தொடங்கிய இயக்கத்துக்கு பெரும் ஆதரவு பெருகி வருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, சில நாட்களுக்கு முன்பு பாஜகவில் இருந்து விலகினார். தனி இயக்கத்தை தொடங்கிய அவர் இதனை அரசியல் கட்சியாக மாற்றப் போவதாகவும் அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடியாக அறிவித்தார். இந்த நிலையில், சில இயக்கங்கள் தன்னுடைய படம் மற்றும் பெயரை பயன்படுத்தக் கூடாது என்று அண்ணாமலை அறிவித்துள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;இது தொடர்பாக அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''அன்பு சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். தமிழகத்தில், ஒரு அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு தொடங்கப்பட்டுள்ள நமது We the Leaders இயக்கம், உங்கள் அனைவரின் பேரன்பையும், ஆதரவையும் துணையாக கொண்டு, தொடங்கப்பட்ட மூன்று நாட்களில், 17 லட்சம் உறுப்பினர்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இது சிறு தொடக்கம் மட்டுமே. ஒவ்வொருவரும் ஒன்றிணைந்து, தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை நிச்சயம் உருவாக்குவோம். அதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போதைய சூழலில், நான் உட்பட, அனைவருமே இந்தப் பேரியக்கத்தின் ஒரு அங்கம் மட்டுமே தவிர, யாருக்கும் எந்தப் பொறுப்புகளோ, பதவியோ வழங்கப்படவில்லை. தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கான பொறுப்புகள் விரைவில் வழங்கப்படும். நான் முன்பே கூறியிருந்ததைப் போல, நிரந்தரப் பதவி என்பது நமது இயக்கத்தில் இருக்காது. இந்த ஒரு மாத காலம் என்பது உறுப்பினர் சேர்க்கையில் மட்டுமே We the Leaders இயக்கம் ஈடுபடும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இது முறையான செயல் அல்ல&zwnj;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்தச் சூழலில், சில தன்னார்வலர்கள் இணைந்து, எனது பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்தி, சில இயக்கங்கள் தொடங்கியிருப்பதாகத் தெரிய வருகிறது. மேலும், மாவட்ட வாரியான பொறுப்புகளும் அந்த இயக்கங்களில் அறிவிக்கப்பட்டுள்ளன என்பது தெரிய வருகிறது. இது முறையான செயல் அல்ல என்றும், அந்த இயக்கங்களுக்கும், நமது We the Leaders இயக்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு நல்ல நோக்கத்துக்காக தொடங்கப்பட்டுள்ள நமது முயற்சி, ஒரு சிலரின் இது போன்ற செயல்பாடுகளால், நீர்த்துப் போய்விடும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஏற்கனவே, எனது பெயரைப் பயன்படுத்தி அண்ணாமலை அன்புக் கூட்டம், அண்ணாமலை நற்பணி மன்றம் போன்ற பெயர்களில் தொடங்கப்பட்ட அமைப்புகளுக்கு, இனி எனது பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என சில மாதங்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தோம். ஆனால், தொடர்ந்து இது போன்ற செயல்பாடுகளில் அந்த அமைப்புகள் ஈடுபடுவது வருத்தத்திற்குரியது.&lt;/p&gt;&lt;p&gt;எனவே, அண்ணாமலை அன்புக் கூட்டம், அண்ணாமலை நற்பணி மன்றம், அண்ணாமலை மக்கள் இயக்கம் என, எனது பெயரைப் பயன்படுத்தும் பல்வேறு அமைப்புகள், உடனடியாக எனது பெயரையோ, புகைப்படங்களையோ பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். நமது இயக்கத்தில் இணைய விரும்பும் சகோதர சகோதரிகள் http://wetheleader.org என்ற இணையதளம் மூலமாக தங்களை இணைத்துக்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>politics</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/annamalai-warning-dont-use-my-name-and-photo-for-other-outfits-we-the-leaders-nears-17-lakh-members-cgn5i7p"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Annamalai: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்! அதிகாரப்பூர்வமாக அறிவித்த தலைமை! அடுத்தது என்ன?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/annamalai-resigns-from-bjp-official-announcement-fp9mi59</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/annamalai-resigns-from-bjp-official-announcement-fp9mi59</guid>
            <pubDate>Fri, 05 Jun 2026 13:13:24 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Annamalai: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், தமிழக பாஜக முன்னாள் தலைருமான அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகியதாக அக்கட்சியின் தேசிய தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktb4f2qcabkxa83b1rj0453z,imgname-k-annamalai-quits-bjp-1780637731563.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Annamalai: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், தமிழக பாஜக முன்னாள் தலைருமான அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகியதாக அக்கட்சியின் தேசிய தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழக பாஜக முன்னாள் தலைவரான அண்ணாமலை பாஜகவில் இருந்து அதிரடியாக விலகியுள்ளார். கடந்த சில மாதங்களாக பாஜக தலைமை மீது அண்ணாமலை அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. அவர் பாஜகவில் இருந்து விலகி புதிய இயக்கத்தை தொடங்கி அதனை கட்சியாக மாற்ற உள்ளதாகவும் தகவல்கள் பரவி வந்தன. இதற்கிடையே டெல்லி சென்ற அண்ணாமலை பாஜக தேசியத் தலைவர் நிதின் நபினை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் அண்ணாமலை சந்தித்து பேசினார். மேலும் பிரதமர் மோடியையும் அவர் சந்தித்ததாக தகவல்கள் கூறின. இந்த நிலையில், அண்ணாமலை ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதாக பாஜக தேசிய தலைமை இன்று (மே 5) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகும் முடிவை ஏற்பதாக பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் தெரிவித்துள்ளார். அண்ணாமலை பாஜகவில் இருந்து ஒட்டுமொத்தமாக அதாவது அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகியுள்ளார். இதன்மூலம் பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகியது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை பிரதமர் மோடி மீது பற்று கொண்டு பாஜகவில் இணைந்தார். பாஜகவின் தமிழக தலைவராக பொறுப்பேற்ற அவர் தமிழகத்தில் பாஜகவை இளைஞர்களிடத்திலும், மாநிலத்தின் மூலை முடுக்கிலும் கொண்டு சென்றதில் முக்கிய பங்காற்றினார். இந்த நிலையில் அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகி இருப்பது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை அடுத்து எப்போது கட்சி ஆரம்பிக்க போகிறார்? என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், புதிய இயக்கத்தை தொடங்கி அதனை கட்சியாக மாற்ற உள்ளதாவும், அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அண்ணாமலை இன்று அதிரடியாக அறிவித்துள்ளார். ''முதலில் இயக்கமாக அனைவரையும் உள்ளே கொண்டு வந்து பிறகு அரசியல் சொல்லி கொடுத்து கட்சியாக மாற்றுவேன். சமரசமில்லாத கொள்கை கொண்ட இயக்கமாக வழிநடத்துவதே எனது இலக்கு. நமது கட்சியில் எந்த தலைவர்களின் பதவியும் நிரந்தரம் அல்ல'' என்று அண்ணாமலை வீடியொ வெளியிட்டு கூறியுள்ளார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>politics</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/annamalai-resigns-from-bjp-official-announcement-fp9mi59"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Annamalai Exit: பாஜகவை விட்டு அண்ணாமலை வெளியேற இதுதான் காரணமா? டெல்லி கூட்டத்தில் கசிந்த அதிர்ச்சி தகவல்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/politics/reason-behind-annamalai-bjp-exit-shocking-delhi-meeting-leak-g6xkrl1</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/politics/reason-behind-annamalai-bjp-exit-shocking-delhi-meeting-leak-g6xkrl1</guid>
            <pubDate>Tue, 02 Jun 2026 15:33:36 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தமிழக அரசியலில் அண்ணாமலையின் வரவும், அவரது அதிரடி அரசியல் பாணியும் பெரும் விவாதப் பொருளாக இருந்து வந்தது. இந்நிலையில், அவர் பாஜக-விலிருந்து விலகி, தனது சொந்த அரசியல் பாதையைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kt343znd07yayj1v9jb0hm1d,imgname-annamalai-bjp-exit-new-political-party-tamil-nadu-politics-amit-shah-aiadmk-alliance-rift-9-1780368932525.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழக அரசியலில் அண்ணாமலையின் வரவும், அவரது அதிரடி அரசியல் பாணியும் பெரும் விவாதப் பொருளாக இருந்து வந்தது. இந்நிலையில், அவர் பாஜக-விலிருந்து விலகி, தனது சொந்த அரசியல் பாதையைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை அண்ணாமலை நேரில் சந்தித்துப் பேசினார். இந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், தனது ராஜினாமா கடிதத்தை அவர் அதிகாரப்பூர்வமாகச் சமர்ப்பித்துள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;கட்சித் தலைமையிடம் பேசிய அண்ணாமலை, &quot;நான் மிகுந்த மரியாதையுடன் கட்சியில் இருந்து வெளியேற விரும்புகிறேன். எனக்கான புதிய பாதையை நானே வகுத்துக் கொள்ளத் தயாராகிவிட்டேன்&quot; என்று மிகத் தெளிவாகக் கூறிவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், கடந்த சில மாதங்களாகவே தேசியத் தலைமைக்கும் அவருக்கும் இடையே நீடித்து வந்த கருத்து வேறுபாடுகளே இந்த இறுதி முடிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கடந்த 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது, பாஜக தேசியத் தலைமை அஇஅதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தது. திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கில், அண்ணாமலையின் விருப்பத்திற்கு மாறாக இந்த கூட்டணி முடிவு எடுக்கப்பட்டது.&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;அண்ணாமலையின் நிலைப்பாடு: &lt;/strong&gt;பாஜக தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக, தனித்து நின்று தனது சொந்த பலத்தை நிரூபிக்க வேண்டும். கூட்டணி வைப்பது கட்சியின் நீண்டகால வளர்ச்சியைப் பாதிக்கும் என்று அண்ணாமலை கருதினார்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;தேசியத் தலைமையின் அழுத்தம்: &lt;/strong&gt;ஆனால், தேசியத் தலைமை அஇஅதிமுகவுடனான கூட்டணியை வற்புறுத்தி நடைமுறைப்படுத்தியது. தலைமைக்குக் கட்டுப்பட்டு அவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டாலும், இந்த முடிவில் அவருக்குக் கடுமையான அதிருப்தி இருந்தது.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;தேர்தல் முடிவு: &lt;/strong&gt;234 தொகுதிகளைக் கொண்ட தமிழக சட்டமன்றத்தில், பாஜக வெறும் 1 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த மோசமான தோல்வி, அண்ணாமலைக்குக் கட்சியில் இனி எதிர்காலம் இல்லை என்ற எண்ணத்தை வலுப்படுத்தியது.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;img&gt;&lt;p&gt;பாஜகவில் இருந்து வெளியேறிய கையோடு, அண்ணாமலை உடனடியாகத் தனது சொந்த அரசியல் கட்சியைத் தொடங்குவதற்கான முதற்கட்டப் பணிகளைத் தீவிரப்படுத்தியிருப்பதாக தெரிகிறது.&lt;/p&gt;&lt;p&gt;அவரது ஆதரவாளர்கள் ஏற்கனவே எக்ஸ் (X) உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் புதிய கட்சியின் சாத்தியமான பெயர்கள், கொடி வடிவமைப்பு போன்றவற்றைத் தற்போதே விவாதிக்கத் தொடங்கிவிட்டனர். கோயம்புத்தூரில் அண்ணாமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, &quot;எங்கள் தலைவரே, வாருங்கள், எங்களை வழிநடத்துங்கள்&quot; என்ற வாசகங்களுடன் அவரது ஆதரவாளர்கள் பிரம்மாண்ட போஸ்டர்களை ஒட்டி தங்களின் ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பாஜகவில் இருந்து அவர் விலகப் போகிறார் என்பதற்கான அறிகுறிகள் அவரது சமீபத்திய செயல்பாடுகளிலேயே தெரியத் தொடங்கின. ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு சிபிஎஸ்இ கொண்டு வந்த மும்மொழிக் கொள்கையை அண்ணாமலை பகிரங்கமாக விமர்சித்தார். மேலும், பிரதமர் மோடியின் 'மன் கி பாத்' நிகழ்ச்சி குறித்தும் அவர் அண்மைக் காலமாக எந்தப் பதிவுகளையும் சமூக ஊடகங்களில் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;&lt;p&gt;முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை, 2020-ல் பாஜகவில் இணைந்து, 2021 முதல் 2025 வரை தமிழக பாஜக தலைவராகச் செயல்பட்டு இளைஞர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். தற்போது அவர் எடுத்துள்ள இந்த புதிய முடிவு, தமிழகத்தின் அரசியல் களத்தில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>politics</category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/politics/reason-behind-annamalai-bjp-exit-shocking-delhi-meeting-leak-g6xkrl1"/>
        </item>
        <item>
            <title><![CDATA[இரண்டாவது முறையாக டெல்லி செல்லும் CM Vijay! : நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பு!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/politics/cm-vijay-delhi-visit-for-niti-aayog-meet-as-tn-signs-jal-jeevan-deal-articleshow-l656geg</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/politics/cm-vijay-delhi-visit-for-niti-aayog-meet-as-tn-signs-jal-jeevan-deal-articleshow-l656geg</guid>
            <pubDate>Sun, 07 Jun 2026 13:12:40 +0530</pubDate>
            <description><![CDATA[தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்ல உள்ளார். அங்கு அவர் அமித் ஷாவை சந்திக்க வாய்ப்புள்ளது. இதற்கிடையே, மேம்படுத்தப்பட்ட குடிநீர் விநியோகத்திற்காக, ஜல் ஜீவன் மிஷன் 2.0 திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-external,imgname-image-216544b0-e1d8-4341-acfe-ed07449ab8c2.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், வரும் ஜூன் 11-ஆம் தேதி நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக டெல்லி செல்ல இருக்கிறார். முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, அவர் டெல்லிக்குச் செல்லும் இரண்டாவது பயணம் இதுவாகும். இந்தப் பயணத்தின்போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களை அவர் சந்திக்க வாய்ப்புள்ளது. முன்னதாக, தனது முதல் டெல்லி பயணத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியை விஜய் சந்தித்திருந்தார்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;ஜல் ஜீவன் மிஷன் 2.0-க்கு தமிழக அரசு ஒப்பந்தம்&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;செவ்வாய்க்கிழமை அன்று, தமிழகம் முழுவதும் 'ஜல் ஜீவன் மிஷன் 2.0' (உயிர் நீர் இயக்கம்) திட்டத்தைச் செயல்படுத்த, மத்திய அரசுடன் தமிழ்நாடு அரசு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் ஆகியோர் முன்னிலையில், காணொலி காட்சி மூலம் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நிகழ்ச்சியில், மத்திய மற்றும் மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.&lt;/p&gt;&lt;p&gt;அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பின்படி, இந்த ஒப்பந்தம் தமிழ்நாட்டின் குடிநீர் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய படியாகும். மேலும், தமிழகத்தில் உள்ள வீடுகளுக்குப் பாதுகாப்பான மற்றும் போதுமான குடிநீர் கிடைப்பதை இது உறுதி செய்யும். புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ஜல் ஜீவன் மிஷன் 2.0, தற்போதுள்ள குடிநீர் விநியோக முறைகளை மேம்படுத்துவதையும், சேவை வழங்குவதை செம்மைப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த முயற்சியால், நீண்ட கால நீர் பாதுகாப்பை இது ஆதரிக்கும்.&lt;/p&gt;&lt;h3&gt;&lt;strong&gt;முதலமைச்சரின் திட்டத்துடன் இணக்கம்&lt;/strong&gt;&lt;/h3&gt;&lt;p&gt;மேம்படுத்தப்பட்ட குடிநீர் திட்டங்களுக்கான இந்த முயற்சி, முதலமைச்சர் விஜய்யின் நிர்வாகத் திட்டங்களுடன் நேரடியாகப் பொருந்துகிறது என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு தனது முதல் உரையில், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில், குறிப்பாக முக்கிய குடிமை உள்கட்டமைப்புகளில் மாநிலத்தின் முழு கவனத்தையும் செலுத்துவதாக அவர் உறுதியளித்திருந்தார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>politics</category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/politics/cm-vijay-delhi-visit-for-niti-aayog-meet-as-tn-signs-jal-jeevan-deal-articleshow-l656geg"/>
        </item>
        <item>
            <title><![CDATA[7 நாட்களில் பதவி விலக வேண்டும்.. மத்திய அமைச்சருக்கு கெடு விதித்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி]]></title>
            <link>https://tamil.asianetnews.com/india/if-modi-can-stop-wars-why-cant-he-stop-paper-leaks-cockroach-partys-dipke-targets-pm-articleshow-li8m8ch</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/india/if-modi-can-stop-wars-why-cant-he-stop-paper-leaks-cockroach-partys-dipke-targets-pm-articleshow-li8m8ch</guid>
            <pubDate>Sun, 07 Jun 2026 21:41:12 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை அல்லது நீக்கப்படும் வரை போராட்டம் தொடரும் என்று கூறியுள்ள கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர், நீட் போராட்டம் குறித்த பாஜகவின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kthdgehg26wq1rxd5w747sv2,imgname-neet-paper-leak-protest-1780848540208.jpeg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;நீட் தேர்வுத்தாள் கசிவு சர்ச்சை தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய மறுநாள், கரப்பான் பூ ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே, மத்திய அரசு மீதான தனது தாக்குதலைக் கூர்மைப்படுத்தியதோடு, போராட்டத்தை விமர்சித்த பாஜக தலைவர்களுக்கும் பதிலடி கொடுத்தார்.&lt;/p&gt;&lt;p&gt;ஞாயிற்றுக்கிழமை சத்ரபதி சம்பாஜிநகரில் செய்தியாளர்களிடம் பேசிய கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி) நிறுவனர் அபிஜித் திப்கே, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்யும் வரை அல்லது பிரதமர் நரேந்திர மோடியால் பதவி நீக்கம் செய்யப்படும் வரை தங்கள் குழுவின் போராட்டம் தொடரும் என்று கூறினார். தேர்வுத்தாள் கசிவு விவகாரத்தை பிரதமர் நரேந்திர மோடி கையாண்ட விதம் குறித்தும் திப்கே கேள்வி எழுப்பினார்.&lt;/p&gt;&lt;p&gt;&ldquo;பிரதமர் நரேந்திர மோடி, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவைக் கோர வேண்டும். நாங்கள் ஆரம்பத்திலிருந்தே இந்தக் கோரிக்கையை முன்வைத்து வருகிறோம். பிரதமர் நரேந்திர மோடியால் ரஷ்யா-உக்ரைன் போரைத் தடுக்க முடியுமென்றால், அவரால் ஏன் வினாத்தாள் கசிவுகளைத் தடுக்க முடியாது?&rdquo; என்று அவர் கூறினார்.&lt;/p&gt;&lt;p&gt;நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சையைத் தொடர்ந்து, பொறுப்புக்கூறலைக் கோரும் விதமாக ஜந்தர் மந்தரில் ஜூன் 6 அன்று நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கலந்துகொண்டனர்.&lt;/p&gt;&lt;p&gt;கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் எதிர்கால செயல்திட்டம் குறித்துக் கேட்டபோது, நகர்ப்புற மற்றும் கிராமப்புற இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்களைப் பாதிக்கும் பிரச்சினைகளில் தங்கள் அமைப்பு தொடர்ந்து கவனம் செலுத்தும் என்று திப்கே கூறினார்.&lt;/p&gt;&lt;p&gt;&quot;நகர்ப்புற அல்லது கிராமப்புற இளைஞர்களைப் பாதிக்கும் பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும், நாங்கள் அனைத்தையும் கையில் எடுப்போம். இன்றைய இளைஞர்களுக்கு தற்போதுள்ள அரசியல் கட்சிகளிடமிருந்தோ அல்லது அரசாங்கத்திடமிருந்தோ எந்த எதிர்பார்ப்புகளும் இல்லை,&quot; என்று அவர் கூறினார்.&lt;/p&gt;&lt;p&gt;இந்த இயக்கம் காலப்போக்கில் ஒரு அரசியல் கட்சியாக மாறக்கூடும் என்ற யூகங்கள் குறித்து, இதுபற்றி முடிவெடுப்பதற்கு இது மிகவும் முன்கூட்டியே எடுக்கப்படும் முடிவு என்று திப்கே கூறினார்.&lt;/p&gt;&lt;p&gt;&ldquo;நான் சமீபத்தில்தான் அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பியுள்ளேன். எனவே, இப்போதைக்கு அதைப் பற்றிப் பேசுவது பொருத்தமாக இருக்காது. நாங்கள் எங்கள் ஆதரவாளர்களுடன் கலந்துரையாடவும், அவர்கள் சொல்வதைக் கேட்கவும், அவர்களின் கவலைகளையும் பிரச்சனைகளையும் புரிந்துகொள்ளவும் முயற்சிப்போம். அதன் பிறகுதான் எதிர்கால நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம்,&rdquo; என்று அவர் கூறினார்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;அரசியல் சார்பு குறித்த விமர்சகர்களுக்கான பதில்&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;அமெரிக்காவில் வசிக்கும்போதே அரசாங்கத்திற்கு எதிரான செயல்திட்டத்தை முன்னெடுப்பதாகக் குற்றம் சாட்டி, அவரது தகுதிகளைக் கேள்விக்குட்படுத்திய பாஜக தலைவர்கள் மற்றும் சமூக ஊடகப் பயனர்களின் விமர்சனங்களுக்கும் தீப்கே பதிலளித்தார்.&lt;/p&gt;&lt;p&gt;&ldquo;நான் இன்று உங்கள் முன் அமர்ந்திருக்கிறேன். நேற்று டெல்லியில் ஒரு போராட்டத்திற்குத் தலைமை தாங்கினேன். அதற்காக, ஒரு பாகிஸ்தான் குடிமகன் டெல்லியில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட்டார் என்று அவர்கள் கூறுகிறார்களா? இந்த நாட்டில் எத்தனை பேரை நீங்கள் பாகிஸ்தானியர்கள் என்று முத்திரை குத்தப் போகிறீர்கள்? பாஜக உறுப்பினர்களும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஊழியர்களும் மட்டும்தானா இந்தியர்கள்? இது தொடர முடியாது. நீங்கள் உங்கள் வேலையைச் சரியாகச் செய்தால், நாங்கள் பேச வேண்டிய அவசியம் இருக்காது,&rdquo; என்று அவர் கூறினார்.&lt;/p&gt;&lt;p&gt;காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகளின் ஆதரவை ஏற்றுக்கொள்வீர்களா என்று கேட்டதற்கு, இந்த இயக்கம் சுதந்திரமாகவே இருக்கும் என்றும், ஆனால் கொள்கைகள் சார்ந்த ஆதரவை ஏற்கத் தயாராக இருப்பதாகவும் திப்கே பதிலளித்தார்.&lt;/p&gt;&lt;p&gt;&quot;இளைஞர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு ஆதரவளிக்க விரும்பும் எவரும் வெளியிலிருந்து எங்களுக்கு ஆதரவளிக்கலாம். நாங்கள் இளைஞர்களுக்காகப் பணியாற்றுகிறோம். எங்களுக்கு காங்கிரஸ் அல்லது ஆம் ஆத்மி கட்சியுடன் எந்தத் தொடர்பும் இல்லை. இருப்பினும், இளைஞர்கள் தொடர்பான பிரச்சினைகளில் எங்களுக்கு ஆதரவளிக்க விரும்பும் எவரும் வெளியிலிருந்து அவ்வாறு செய்யலாம்,&quot; என்று அவர் கூறினார்.&lt;/p&gt;&lt;p&gt;&quot;நான் இனி இந்தியாவிலேயே தங்குவேன், அமெரிக்காவுக்குத் திரும்ப மாட்டேன்,&quot; என்று அவர் கூறினார்.&lt;/p&gt;&lt;p&gt;மராத்தா இட ஒதுக்கீடு ஆர்வலர் மனோஜ் ஜரங்கே பாட்டிலைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளீர்களா என்று கேட்டபோது, திப்கே நேரடிப் பதிலைத் தவிர்த்து, &quot;நான் இன்று காலைதான் வீடு திரும்பினேன். தயவுசெய்து எனக்குச் சிறிது அவகாசம் கொடுங்கள்,&quot; என்றார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>politics</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/india/if-modi-can-stop-wars-why-cant-he-stop-paper-leaks-cockroach-partys-dipke-targets-pm-articleshow-li8m8ch"/>
        </item>
        <item>
            <title><![CDATA[TVK vs DMK: புறக்கணித்த மேயர்... புறந்தள்ளிய எம்.எல்.ஏ! அரசு விழாவில் அரங்கேறிய பனிப்போர்!  சென்னையில் அரங்கேறும்  ‘ஈகோ’ யுத்தம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/politics/tvk-vs-dmk-mayor-snubs-mla-sidelined-cold-war-erupts-at-government-event-an-ego-battle-unfolds-in-chennai-oae1g85</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/politics/tvk-vs-dmk-mayor-snubs-mla-sidelined-cold-war-erupts-at-government-event-an-ego-battle-unfolds-in-chennai-oae1g85</guid>
            <pubDate>Thu, 04 Jun 2026 13:54:11 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;சென்னை மாநகராட்சி பள்ளி விழா ஒன்றில், மேயர் பிரியாவிற்கும் தவெக எம்.எல்.ஏ பல்லவிக்கும் இடையே 'ரிப்பன்' வெட்டுவதிலும், 'மெழுகுவர்த்தி' ஏற்றுவதிலும் ஈகோ மோதல் ஏற்பட்டது. இது திமுக - தவெக இடையேயான அரசியல் போட்டியின் தீவிரத்தை காட்டுகிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kt8tkzk4xy14pvcvx0zpv65e,imgname-chatgpt-image-jun-4--2026--01-33-38-pm--1--1780560297571.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சென்னை மாநகராட்சி பள்ளி விழா ஒன்றில், மேயர் பிரியாவிற்கும் தவெக எம்.எல்.ஏ பல்லவிக்கும் இடையே 'ரிப்பன்' வெட்டுவதிலும், 'மெழுகுவர்த்தி' ஏற்றுவதிலும் ஈகோ மோதல் ஏற்பட்டது. இது திமுக - தவெக இடையேயான அரசியல் போட்டியின் தீவிரத்தை காட்டுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தி.மு.க-விற்கும், புதிதாக களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கும் (த.வெ.க) இடையேயான அரசியல் மோதல் அடித்தட்டு அளவில் தீவிரமடைந்துள்ளது. அதற்குச் சான்றாக, சென்னை திரு.வி.க நகரில் உள்ள மாநகராட்சிப் பள்ளி விழா ஒன்றில் சென்னை மேயர் பிரியாவிற்கும், த.வெ.க எம்.எல்.ஏ பல்லவிக்கும் இடையே அரங்கேறியுள்ள &lsquo;மெழுகுவர்த்தி&rsquo; மற்றும் &lsquo;ரிப்பன்&rsquo; அரசியல் விவாதப் பொருளாக மாறியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சென்னை உருது பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளி புதிய கட்டடத் திறப்பு விழா என அடுத்தடுத்து நடந்த அரசு நிகழ்ச்சிகளில், மக்கள் பிரதிநிதிகளுக்கு இடையே நிலவும் பனிப்போர் பகிரங்கமாக வெளிப்பட்டுள்ளது. கட்டடத் திறப்பு விழாவின் போது, ஒரே ஒரு ரிப்பனை வெட்டுவதற்கு மேயர் பிரியாவும் த.வெ.க எம்.எல்.ஏ பல்லவியும் முண்டியடித்துக் கொண்டு காட்டிய ஆர்வம் அங்கிருந்தோரை முகம் சுளிக்க வைத்தது. &quot;ஒரு ரிப்பன்... இரு கத்திகள்&quot; என்ற நிலைக்கு இருதரப்பும் போட்டி போட்டன.&lt;/p&gt;&lt;p&gt;இதன் தொடர்ச்சியாக, குத்துவிளக்கேற்றும் நிகழ்வின் போது அரசியல் ஈகோ உச்சக்கட்டத்தை எட்டியது. மேயர் பிரியா விளக்கேற்றிய பின், அடுத்ததாக விளக்கேற்ற எம்.எல்.ஏ பல்லவி கையை நீட்டியுள்ளார். ஆனால், மேயர் பிரியா அவருக்கு மெழுகுவர்த்தியைத் தராமல், அருகில் இருந்த அதிகாரிகளுக்குக் கொடுத்து பல்லவியைப் புறக்கணித்ததாகக் கூறப்படுகிறது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அரசியலில் பழிவாங்கும் படலம் உடனடியாகவே அரங்கேறியது. அடுத்த நிகழ்வில், மேயர் பிரியா அதே மெழுகுவர்த்தியை எம்.எல்.ஏ பல்லவியிடம் நீட்டியபோது, முந்தைய புறக்கணிப்புக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பல்லவி அதை வாங்க மறுத்து அங்கிருந்து நகர்ந்தார். இந்தத் தற்காப்புப் பதிலடியை அங்கிருந்த த.வெ.க தொண்டர்கள் கைகளைத் தட்டி ஆரவாரத்தோடு வரவேற்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த மோதல் குறித்து த.வெ.க எம்.எல்.ஏ பல்லவி பேசுகையில், தங்களின் அரசியல் அணுகுமுறையைத் தெளிவுபடுத்தியுள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;&quot;விட்டுக்கொடுக்குறதால நாம ஒன்னும் கெட்டுப்போகமாட்டோம். எங்க தளபதியே (விஜய்) பொறுமையா இருக்குறதால தான் இந்த இடத்துக்கு வந்திருக்காரு. அவருக்கு பின்னாடி இருக்குற நாங்களும் பொறுமையா தான் இருப்போம். பொறுமையா இருக்குறதால நாம ஒன்னும் தாழ்ந்து போயிட மாட்டோம்ல...&quot; என்று அவர் பேசியிருப்பது, தி.மு.க-வின் ஆதிக்கப் போக்குக்கு எதிராக த.வெ.க தொண்டர்களிடையே ஒரு தார்மீக பலத்தை உருவாக்க முயல்வதைக் காட்டுகிறது. அதேநேரம், ஆளுங்கட்சியின் அதிகாரத் தோரணைக்குத் தங்களின் அமைதியே தகுந்த பதிலடி என்றும் அவர் மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த மோதல்களுக்குப் பின்னால் வெறும் தனிநபர் ஈகோ மட்டுமே இல்லை; ஆழமான அரசியல் காரணங்களும் உண்டு. தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலில், த.வெ.க தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில் &amp;nbsp;சென்னை மேயர் பிரியா இதுவரை அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆளுங்கட்சியான தி.மு.க-வின் மேயர், மாற்று அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ள த.வெ.க-வை அங்கீகரிக்கத் தயங்குவதே இந்த நிர்வாக ரீதியிலான புறக்கணிப்புகளுக்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அரசு விழாக்கள் என்பது மக்களுக்கான திட்டங்களைக் கொண்டு சேர்க்கும் தளமே தவிர, அரசியல் கட்சிகள் தங்களின் பலத்தைக் காட்டும் போர்க்களம் அல்ல. மேயர் பிரியாவின் புறக்கணிப்பு அரசியலும், அதற்கு எம்.எல்.ஏ பல்லவியின் 'பொறுமை' கலந்த பதிலடியும், வரவிருக்கும் நாள்களில் தி.மு.க மற்றும் த.வெ.க இடையேயான மோதல் இன்னும் தீவிரமடையும் என்பதையே உணர்த்துகிறது. சென்னையில் தொடங்கியுள்ள இந்த 'ஈகோ' யுத்தம், தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசியல் திசையையும் மாற்றியமைக்கும் காரணியாக மாறக்கூடும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>politics</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/politics/tvk-vs-dmk-mayor-snubs-mla-sidelined-cold-war-erupts-at-government-event-an-ego-battle-unfolds-in-chennai-oae1g85"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Amma Unavagam: அம்மா உணவகத்தின் தினசரி வருமானம் எவ்ளோ தெரியுமா?! ஆகும் செலவை சொன்னா நம்பிதான் ஆகனும்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/do-you-know-amma-unavagam-daily-income-the-operating-cost-will-leave-you-surprised-pzy5mgk</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/do-you-know-amma-unavagam-daily-income-the-operating-cost-will-leave-you-surprised-pzy5mgk</guid>
            <pubDate>Mon, 08 Jun 2026 13:32:32 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ஏழை, எளிய மக்களின் பசிப்பிணியைப் போக்கத் தொடங்கப்பட்ட அம்மா உணவகம், மலிவு விலையில் தரமான உணவை வழங்கும் உன்னதத் திட்டமாகும். லாப நோக்கமின்றி, மனிதநேய அடிப்படையில் கோடிக்கணக்கான மக்களின் அன்றாட உணவுத் தேவையை இது பூர்த்தி செய்கிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktk334j06dzqnhbpzmgb7s92,imgname-chatgpt-image-jun-8--2026--01-07-36-pm--1--1780904727104.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஏழை, எளிய மக்களின் பசிப்பிணியைப் போக்கத் தொடங்கப்பட்ட அம்மா உணவகம், மலிவு விலையில் தரமான உணவை வழங்கும் உன்னதத் திட்டமாகும். லாப நோக்கமின்றி, மனிதநேய அடிப்படையில் கோடிக்கணக்கான மக்களின் அன்றாட உணவுத் தேவையை இது பூர்த்தி செய்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;அம்மா உணவகத்தின் தினசரி வருமானம் மற்றும் செலவுகள்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களால் கடந்த 2013-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட 'அம்மா உணவகம்', தமிழகத்தில் குறைந்த விலையில் தரமான உணவை வழங்கும் மக்கள் நலத் திட்டங்களில் மிக முக்கியமானதாகத் திகழ்கிறது. இந்தத் திட்டம் தினக்கூலி தொழிலாளர்கள், முதியவர்கள், ஆதரவற்றோர் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்து வருகிறது. இன்று வரை பல லட்சம் மக்கள் அம்மா உணவகங்களை நம்பி தங்களின் அன்றாட உணவுத் தேவையைப் பூர்த்தி செய்து வருகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;இங்கு ஒரு இட்லி வெறும் ரூ.1, சாம்பார் சாதம் ரூ.5, எலுமிச்சை சாதம் ரூ.5, தயிர் சாதம் ரூ.3, சப்பாத்தி இரண்டு ரூ.3 என்ற விலைக்கு வழங்கப்படுகிறது. இந்த விலையைப் பார்த்தாலே உணவகத்திற்கு நல்ல வருமானம் கிடைக்கிறதா என்ற கேள்வி பலருக்கும் எழுகிறது. இவ்வளவு மலிவான விலையில் உணவளிக்கும் இந்த உணவகங்களின் தினசரி வருமானம் மற்றும் அதன் பின்னணியில் இருக்கும் செலவுகள் ஆச்சரியமளிக்கக் கூடியவை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உண்மையில் அம்மா உணவகங்கள் லாப நோக்கத்திற்காகச் செயல்படுவதில்லை. சமூக நலத் திட்டமாகவே இவை இயக்கப்படுகின்றன. ஒரு நாளில் ஒரு அம்மா உணவகத்தில் ஆயிரக்கணக்கானோர் உணவருந்தினாலும், வசூலாகும் தொகை மிகக் குறைவாகவே இருக்கும். பொதுவாக, சென்னையில் உள்ள ஒரு சராசரி அம்மா உணவகத்திற்கு தினசரி வருமனமாக ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை கிடைக்கிறது. சில பெரிய மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள உணவகங்களில் இந்த வருமானம் ரூ.8,000 முதல் ரூ.10,000 வரை கூட உயரலாம். உதாரணமாக, 1,000 பேர் சராசரியாக ரூ.10 மதிப்புள்ள உணவை வாங்கினாலும், தினசரி வருமானம் சுமார் ரூ.10,000 மட்டுமே இருக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வருமானம் ஆயிரங்களில் இருக்கும் போது, இதற்கான தினசரி செலவுகள் பல மடங்கு அதிகமாகும். அரிசி, பருப்பு, காய்கறிகள், மசாலா பொருட்கள், எரிவாயு (Gas), மின்சாரம், குடிநீர், பராமரிப்பு செலவுகள் மற்றும் பணியாளர்களின் ஊதியம் ஆகியவை சேர்த்து தினசரி செலவு கணிசமான அளவில் உயர்கிறது. ஒவ்வொரு உணவகத்திலும் மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த 10 முதல் 12 பெண்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு வழங்கப்படும் தினசரி ஊதியமே, அந்த உணவகத்தின் மொத்த வருமானத்தை விடப் பல மடங்கு அதிகம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கணக்குப் போட்டுப் பார்த்தால், ஒரு ரூபாய் இட்லியைத் தயாரிக்க அரசுக்குத் தோராயமாக ₹5 முதல் ₹7 வரை செலவாகிறது. இதனால் அம்மா உணவகங்கள் நேரடி லாபம் ஈட்டுவதில்லை. பல ஆண்டுகளாக இத்திட்டம் அரசின் மானிய உதவியுடன் செயல்பட்டு வருகிறது. சில மதிப்பீடுகளின்படி, அம்மா உணவகங்கள் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய் மானியத்துடன் இயங்குகின்றன. இதன் காரணமாக, சென்னை மாநகராட்சி மற்றும் பிற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆண்டுதோறும் நிதிப் பற்றாக்குறை ஏற்படுகிறது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இருப்பினும், இந்தத் திட்டத்தின் வெற்றி வருமானத்தில் இல்லை; மக்களின் பசியைப் போக்குவதில்தான் உள்ளது. சமீபத்திய தகவல்களின்படி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் அம்மா உணவகங்களில் உணவருந்துவோரின் எண்ணிக்கை 1.5 லட்சத்தைக் கடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது மக்கள் மத்தியில் இந்தத் திட்டத்திற்கு இருக்கும் பிரம்மாண்ட வரவேற்பைக் காட்டுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வியாபார நோக்கில் பார்த்தால் அம்மா உணவகம் என்பது ஒரு நஷ்டமடையும் நிறுவனம். ஆனால், அரசாங்கத்தின் நோக்கம் லாபம் ஈட்டுவது அல்ல. அதனால் அம்மா உணவகத்தின் தினசரி வருமானத்தை மட்டும் பார்த்து அதன் செயல்பாட்டை மதிப்பிட முடியாது. குறைந்த விலையில் சத்தான உணவை வழங்கி, ஏழை மற்றும் எளிய மக்களின் பசியைப் போக்கும் சமூகப் பொறுப்பை நிறைவேற்றுவதுதான் அதன் உண்மையான சாதனை. வருமானத்தை விட மனிதநேயமே அம்மா உணவகத்தின் மிகப்பெரிய பலமாக உள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>politics</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/do-you-know-amma-unavagam-daily-income-the-operating-cost-will-leave-you-surprised-pzy5mgk"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Latha Rajinikanth: அண்ணாமலைக்கு போட்டியாக புதிய இயக்கம்? அரசியலில் குதிக்கிறாரா லதா ரஜினிகாந்த்? பரபரக்கும் தமிழக அரசியல் களம்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/politics/latha-rajinikanth-launches-makkal-medai-movement-amid-growing-political-buzz-in-tamil-nadu-explained-q8asn7p</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/politics/latha-rajinikanth-launches-makkal-medai-movement-amid-growing-political-buzz-in-tamil-nadu-explained-q8asn7p</guid>
            <pubDate>Fri, 05 Jun 2026 19:27:39 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Makkal Medai - Latha Rajinikanth Started New Movement: தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் சூடு பிடித்து வரும் நிலையில், லதா ரஜினிகாந்த் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். அது குறித்து இங்கு விரிவாகப் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktc1394w6kkgnjvawa1ztfec,imgname-makkal-medai---latha-rajinikanth-started-new-movement-1780667753628.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Makkal Medai - Latha Rajinikanth Started New Movement: தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் சூடு பிடித்து வரும் நிலையில், லதா ரஜினிகாந்த் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். அது குறித்து இங்கு விரிவாகப் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரபுக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. இன்றைய தினம் பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை &lsquo;வீ த லீடர்ஸ்&rsquo; என்கிற புதிய அமைப்பை தோற்றுவித்திருக்கிறார். இந்த இயக்கம் தேர்தலில் போட்டியிடும் என்றும் அவர் அறிவித்துள்ளார். மேலும் அவர் ஆரம்பித்துள்ள இயக்கத்தில் இணைவதற்கு இணையதளம் ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளார். குறைந்த நேரத்தில் லட்சக்கணக்கானோர் இயக்கத்தில் இணைத்து சாதனை புரிந்திருக்கிறார் அண்ணாமலை. இந்த பரபரப்பு ஓய்வதற்குள் லதா ரஜினிகாந்த் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் ஏற்கனவே பல அமைப்புகள் மூலம் தொண்டாற்றி வருகிறார். இந்த நிலையில் அவர் &lsquo;மக்கள் மேடை&rsquo; என்கிற புதிய இயக்கம் ஒன்றை தொடங்கியிருக்கிறார். மாற்றத்தை விரும்பும் அனைத்து தரப்பு மக்களும் எங்களோடு கைகோர்க்கலாம் என்று அவர் அறிவித்துள்ளார். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து மக்கள் சக்தியாக உருவெடுத்து, பல நல்ல காரியங்களை செய்வோம் என அவர் கூறியுள்ளார். இந்த இயக்கத்தில் சேர்வதற்காக மொபைல் எண்ணும், மின்னஞ்சலும் அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், சிட்டிசன் பிளாட்பார்ம் என்ற தங்கள் இயக்கத்தில் சேர்ந்து மக்கள் சேவையாற்ற அவர் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மக்கள் சக்தியாக உருவாகி சமூகத்திற்கு பல சேவைகளை செய்ய முன் வாருங்கள். அனைவரும் ஒன்றாக இணைவோம். ஆக்கபூர்வமான காரியங்களை செய்வோம். மூத்த குடிமக்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ், அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள் என யாராக இருந்தாலும் உங்கள் அனுபவங்களை எங்களுக்கு கொடுக்கலாம். எங்களோடு தொடர்பு கொண்டு தமிழ்நாட்டிற்காகவும் தொகுதிகளுக்காகவும் நீங்கள் வேலை செய்யலாம். உள்ளூர் தலைவர்களை உருவாக்க விரும்புகிறோம் என்று அவர் அறிவித்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இது வெறுமனே ஒரு அமைப்பாக இல்லாமல் சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒவ்வொரு குடிமக்களுக்கும் பொதுவான தளமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம் ஆகிய அனைத்து துறைகளிலும் தமிழகம் அடைந்து வரும் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும், சாதி, மத, அரசியல் பாகுபாடுகளைக் கடந்து மாநிலத்தின் பொதுவான நன்மைகளுக்காக மக்களை நேர்கோட்டில் இணைப்பதையும், அடித்தட்டு மக்களின் அடிப்படைத் தேவைகளையும், சமூகப் பிரச்சனைகளையும் கண்டறிந்து அவற்றுக்கான தீர்வுகள் காண்பதையும் இந்த இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் கூறியிருக்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;லதா ரஜினிகாந்த் குழந்தைகள் நலன் சார்ந்த பணிகள் மற்றும் கல்விப் பணிகளில் ஏற்கனவே நீண்ட அனுபவம் கொண்டவர். ஆஷ்ரம் பள்ளி மூலம் தரமான கல்வியை வழங்கி வருகிறார். தயா பவுண்டேஷன் மற்றும் பீஸ் ஃபார் சில்ட்ரன் போன்ற அமைப்புகளின் மூலம் ஏழைக் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பதற்காக அவர் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். தற்போது அவர் அறிவித்துள்ள மக்கள் மேடை இயக்கம் அவர்களின் சமூகப் பணிகளில் அடுத்த கட்ட பரிமாணமாக பார்க்கப்படுகிறது. இந்த இயக்கத்தில் இணைய விரும்புபவர்கள் 7550080515 என்கிற நம்பரிலும், makkalmedaitn12@gmail.com என்ற இணையதளம் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;அண்ணாமலைக்கு போட்டியா?&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;ஏற்கனவே இன்று காலை அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகி புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ள நிலையில், லதா ரஜினிகாந்த் புதிய இயக்கம் ஒன்றை தொடங்கியிருப்பதால் லதா ரஜினிகாந்த் அரசியலுக்கு வர விரும்புகிறாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. அண்ணாமலை மற்றும் லதா ரஜினிகாந்த் இருவரும் இணைந்து செயல்படுவார்களா? இந்த இரண்டு இயக்கங்களும் வருங்காலத்தில் கட்சியாக மாறுமா? இருவரும் இணைந்து தேர்தலில் போட்டியிடுவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>politics</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/politics/latha-rajinikanth-launches-makkal-medai-movement-amid-growing-political-buzz-in-tamil-nadu-explained-q8asn7p"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Praveen Chakravarty: தவெக தயவில் எம்.பி.யாகும் ராகுலின் வலது கரம்! யார் இந்த பிரவீன் சக்கரவர்த்தி?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/who-is-praveen-chakravarty-rahul-gandhi-aide-to-become-rajya-sabha-mp-q8c7gks</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/who-is-praveen-chakravarty-rahul-gandhi-aide-to-become-rajya-sabha-mp-q8c7gks</guid>
            <pubDate>Fri, 05 Jun 2026 09:09:24 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Praveen Chakravarty: ராகுல் காந்திக்கு நெருக்கமான பிரவீன் சக்கரவர்த்தி தவெக தயவில் மாநிலங்களவை எம்.பி. ஆகிறார்? யார் இவர்? விஜய்க்கும் இவருக்கும் என்ன தொடர்பு? என்பது குறித்து பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kebgvt0sebx8tv2a823bj48w,imgname-untitled-design--14--1767765829657.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Praveen Chakravarty: ராகுல் காந்திக்கு நெருக்கமான பிரவீன் சக்கரவர்த்தி தவெக தயவில் மாநிலங்களவை எம்.பி. ஆகிறார்? யார் இவர்? விஜய்க்கும் இவருக்கும் என்ன தொடர்பு? என்பது குறித்து பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதிமுகவின் மூத்த தலைவர் சி.வி.சண்முகம் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக தனது மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து ஒரு இடம் காலியானது. சட்டமனற உறுப்பினர்களின் பெரும்பான்மை அடிப்படையில் நடிகர் விஜய்யின் தவெகவில் ஒருவருக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி கிடைக்கும் வாய்ப்பு கனிந்தது. தவெக சார்பில் முதன் முதலாக டெல்லி யார் செல்ல போகிறார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், விஜய் பெருந்தன்மையாக மாநிலங்களவை எம்.பி. பதவியை கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கினார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;தவெக தயவில் எம்.பி.யாகும் பிரவீன் சக்கரவர்த்தி&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்த நிலையில், மாநிலங்களவை எம்.பி பதவிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியும், ராகுல் காந்திக்கு மிக நெருக்கமானவருமான பிரவீன் சக்கரவர்த்தி அதிகாரப்பூர்வ வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்த பிரவீன் சக்கரவர்த்தி, ''தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் (TVK+INC+VCK+IUML+CPI+CPM) கூட்டணியின் முதல் MP வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை பெருமையாகவும் பெரும் பொறுப்பாகவும் கருதுகிறேன்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;என் மீது நம்பிக்கை வைத்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் தமிழக முதல்வர் விஜய்க்கு மனமார்ந்த நன்றி. தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, இந்திய நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் துணிச்சலான, விசுவாசமான மற்றும் நேர்மையான குரலாக ஒலிப்பேன் என்று லட்சக்கணக்கான கூட்டணித் தொண்டர்களுக்கு உறுதியளிக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ராகுல் காந்தியின் வலது கரமாக அறியப்படும் பிரவீன் சக்கரவர்த்தி, வெறும் அரசியல்வாதி மட்டுமல்ல, மிகச் சிறந்த பொருளாதார நிபுணரும் கூட. அமெரிக்காவின் புகழ்பெற்ற வார்டன் வணிகப் பள்ளியில் எம்பிஏ பட்டம் பெற்ற இவர் நியூயார்க், சான் பிரான்சிஸ்கோ போன்ற உலகளாவிய நிதி மையங்களில் முதலீட்டு வங்கியாளராக உயர் பதவிகளில் பணியாற்றிய நீண்ட அனுபவம் கொண்டவர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ராகுல் காந்தியின் வலது கரம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்தியாவின் மிக முக்கிய அடையாளத் திட்டமான ஆதார் (Aadhaar) உருவாக்கத்தின்போது, நந்தன் நிலேகனி தலைமையிலான உயர்மட்டக் குழுவில் இணைந்து முக்கியப் பங்காற்றினார். அரசியலை பொறுத்தவரை பிரவீன் சக்கரவர்த்தி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் (AICC) தரவு பகுப்பாய்வு (Data Analytics) பிரிவின் தலைவராகவும், அகில இந்திய தொழில்முறை காங்கிரஸ் (AIPC) அமைப்பின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். ராகுல் காந்தியின் தேர்தல் வியூகங்கள் மற்றும் கொள்கை முடிவுகளுக்கு பின்னால் இருக்கும் மிக முக்கிய மூளையாக பிரவீன் சக்கரவர்த்தி செயல்படுவதால் டெல்லி மேலிடத்தில் இவருக்கு பெரும் செல்வாக்கு உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ராகுல் காந்தியுடன் நெருக்கமாக இருக்கும் பிரவீன் சக்கரவர்த்தி தவெக தலைவரும், முதல்வருமான விஜய் உடனும் நீண்ட நாட்களாக நல்லதொரு பரஸ்பர நட்புறவை பேணி வருகிறார். தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் தவெகவுடன் கூட்டணி வைக்க பல்வேறு முயற்சிகள் எடுத்தார். ஆனால் சிலரின் தலையீட்டால் அது நிறைவேறாமல் போனது. தேர்தலுக்கு பின்பு ஆளும் கட்சியான தவெக கூட்டணியில் காங்கிரஸ் ஐக்கியமாவதற்கு முக்கிய காரணகர்த்தா பிரவீன் சக்கரவர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>politics</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/who-is-praveen-chakravarty-rahul-gandhi-aide-to-become-rajya-sabha-mp-q8c7gks"/>
        </item>
        <item>
            <title><![CDATA[INDIA Alliance: உடைகிறதா இண்டியா கூட்டணி? ராகுல் காந்தியை விமர்சித்து டெல்லி முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/politics/rahul-gandhi-targeted-by-posters-with-allies-quotes-before-india-alliance-meeting-ve9h4el</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/politics/rahul-gandhi-targeted-by-posters-with-allies-quotes-before-india-alliance-meeting-ve9h4el</guid>
            <pubDate>Mon, 08 Jun 2026 12:46:38 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;INDIA Alliance Meeting: 'இண்டியா' கூட்டணிக் கூட்டம் நடப்பதற்கு முன்பாக, புது டெல்லியில் ராகுல் காந்திக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதில் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பழைய விமர்சனங்களே இடம்பெற்றுள்ளது, பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktk17czh4tkxpsjx9c0108e8,imgname-india-alliance-meeting-rahul-gandhi-posters-1780902769649.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;INDIA Alliance Meeting: 'இண்டியா' கூட்டணிக் கூட்டம் நடப்பதற்கு முன்பாக, புது டெல்லியில் ராகுல் காந்திக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதில் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பழைய விமர்சனங்களே இடம்பெற்றுள்ளது, பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்று இண்டியா கூட்டணியின் கூட்டம் டெல்லியில் நடைபெற்று வரும் நிலையில், ராகுல் காந்திக்கு எதிராக டெல்லி முழுவதும் போஸ்டர்கள் ஓட்டப்பட்டுள்ளன. இதனால் இண்டியா கூட்டணி உடைகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;புது டெல்லியில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களில், என்சிபி (எஸ்சிபி) தலைவர் சரத் பவார், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, திமுக தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸுக்கு எதிராக முன்பு தெரிவித்த கருத்துகள் இடம்பெற்றுள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த போஸ்டர்களில் சரத் பவார், மம்தா பானர்ஜி, உதயநிதி ஸ்டாலின், அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் பற்றி முன்பு கூறிய காட்டமான விமர்சனங்கள் மீண்டும் விமர்சிக்கக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;'இண்டியா' கூட்டணியில் விரிசல்கள் தெளிவாகத் தெரியும் நேரத்தில் இந்த போஸ்டர் சர்ச்சை வெடித்துள்ளது. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்துடன் (TVK) காங்கிரஸ் கைகோர்த்ததால், திமுக இந்த கூட்டத்தில் பங்கேற்காது என அறிவித்துள்ளது. இது திமுக-காங்கிரஸ் உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;திமுக தலைவர் டிகேஎஸ் இளங்கோவன், காங்கிரஸ் ஒரு &quot;நம்பிக்கையற்ற கட்சி&quot; என்று கடுமையாக விமர்சித்துள்ளார். காங்கிரஸால்தான் மற்ற கட்சிகளும் 'இண்டியா' கூட்டணியை விட்டு வெளியேறப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ், இந்தக் கூட்டத்தில் 23 அரசியல் கட்சிகள் பங்கேற்கும் என்று தெரிவித்துள்ளார். தேசிய தலைநகரில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் இந்தக் கூட்டம் நடைபெறும். எதிர்க்கட்சிகள் &quot;ஒற்றுமையாக&quot; இருப்பதாக அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.&lt;img&gt;மம்தா பானர்ஜி இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஒரு நாள் முன்னதாகவே கொல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு வந்துவிட்டார். சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே காணொளி வாயிலாக கூட்டத்தில் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;img&gt;டெல்லி சாலைகளில் காங்கிரஸுக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களை யார் தயாரித்து ஒட்டினார்கள் என்பது பற்றிய எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இது அரசியல் வட்டாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.]]></content:encoded>
            <category>politics</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/politics/rahul-gandhi-targeted-by-posters-with-allies-quotes-before-india-alliance-meeting-ve9h4el"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Kalaignar Birthday: இங்க் பேனா முதல் மீன் குழம்பு வரை..! கருணாநிதி பற்றி பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்கள்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/politics/unknown-and-interesting-facts-of-kalaignar-karunanidhi-on-his-103rd-birth-anniversary-explained-ydgexqb</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/politics/unknown-and-interesting-facts-of-kalaignar-karunanidhi-on-his-103rd-birth-anniversary-explained-ydgexqb</guid>
            <pubDate>Wed, 03 Jun 2026 13:58:21 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Unknown and Interesting Facts of Kalaignar Karunanidhi: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் இன்று (ஜூன் 3) கொண்டாடப்படுகிறது. பன்முகத் திறமையாளராக வலம் வந்த அவர் குறித்து தெரியாத சில தகவல்களை பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kt68qt8pcp9hqj0p2htjpq24,imgname-karunanidhi---10--1780474439958.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Unknown and Interesting Facts of Kalaignar Karunanidhi: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் இன்று (ஜூன் 3) கொண்டாடப்படுகிறது. பன்முகத் திறமையாளராக வலம் வந்த அவர் குறித்து தெரியாத சில தகவல்களை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழக அரசியலில் அழியாத முத்திரையை பதித்த தலைவர்களில் முக்கியமானவர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி. எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர், பேச்சாளர் மற்றும் அரசியல்வாதி என பல துறைகளில் தனித்துவம் காட்டிய அவர் குறித்து பலருக்கும் தெரியாத சில சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கலைஞரின் வாழ்க்கையில் எழுத்துக்கு தனி இடம் இருந்தது. தொழில்நுட்பம் வளர்ந்த பிறகும், அவர் பெரும்பாலும் மை நிரப்பும் பேனாக்களையே பயன்படுத்த விரும்பினார். குறிப்பாக இந்தியாவில் தயாரிக்கப்படும் &lsquo;Wality 69T&rsquo; மாடல் பேனா அவருக்குப் பிடித்தமானதாக இருந்ததாக கூறப்படுகிறது. நிறைய இங்க் ஊற்றும் வண்ணம் அளவில் பெரியதாகவும், இங்க் அளவு வெளியில் தெரியும் வண்ணம் கண்ணாடி அமைப்பில், வண்ண மூடிகளுடன் இந்த பேனா மிக அழகாக இருக்கும். இதன் விலை ஆரம்பத்தில் ரூ.150 என இருந்த நிலையில், கருணாநிதி மறைவுக்குப் பின்னர் பலரும் வாங்க தொடங்கியதால் தற்போது ரூ.1,000-க்கும் அதிகமாக விற்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கருணாநிதியை நினைத்தாலே மஞ்சள் நிறத் துண்டு நினைவுக்கு வரும். ஆரம்ப காலங்களில் அவர் பெரும்பாலும் வெள்ளை நிறத் துண்டுகளை பயன்படுத்தியிருந்தாலும், பின்னர் மஞ்சள் நிறத் துண்டு அவரது நிரந்தர அடையாளமாக மாறியது. அரசியல் நிகழ்வொன்றில் கிடைத்த அந்த நிறத் துண்டை தொடர்ந்து அணிந்ததே இதற்குக் காரணமாக கூறப்படுகிறது. கருணாநிதியின் இயற்பெயர் தட்சிணாமூர்த்தி என்பதாலும், மஞ்சள் குரு பகவானுக்கு உகந்தது என்பதாலும் அவர் மஞ்சள் துண்டு அணிந்தார் என கூறுவதுண்டு. ஆனால் கூட்டணி பேச வந்த பாமக நிறுவனர் ராமதாஸ், பாமகவின் பிரதான நிறமான மஞ்சள் நிறத்துடன் கூடிய துண்டை கருணாநிதிக்கு அணிவித்தது முதல், அதை தன்னுடைய அடையாளமாக மாற்றிக்கொண்டார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;டெல்டா பகுதியைச் சேர்ந்த கருணாநிதிக்கு கடல் உணவுகள் மிகவும் பிடித்தமானவை. குறிப்பாக வீட்டில் தயாரிக்கப்படும் மீன் குழம்பை ரசித்து சாப்பிடுவார். தனது மனைவி தயாளு வைக்கும் மீன் குழம்பு என்றால் அவருக்கு கொள்ளை விருப்பமாம். மற்ற இறைச்சிகளை விட மீன் மற்றும் கடல் உணவுகளை விரும்பி சாப்பிடும் வழக்கம் கொண்டிருந்தார். வயது அதிகரித்த பின்னர் உடல்நலக் காரணங்களால் அசைவ உணவுகளை குறைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கருணாநிதியின் கையில் அடிக்கடி காணப்பட்ட பவள மோதிரத்துக்கும் ஒரு சிறப்பு வரலாறு உள்ளது. திமுக முதல் முறையாக தேர்தலில் களம் இறங்கிய போது, பொருளாளராக இருந்த கருணாநிதி, தேர்தல் நிதியாக ரூ.11 லட்சம் திரட்டி கொடுத்ததற்காக அறிஞர் அண்ணா அளித்த பரிசு தான் அந்த பவளம் மோதிரம். கருணாநிதி இறக்கும் வரை அவரது கைகளில் அந்த மோதிரத்தை அணிந்திருந்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உணவு கட்டுப்பாட்டில் மிகவும் கவனமாக இருந்தாலும், சில உணவுகள் மீது அவருக்கு தனி விருப்பம் இருந்தது. குறிப்பாக காபியுடன் போண்டா சாப்பிடுவதை அவர் விரும்பியதாக அவரது நெருங்கியவர்கள் பலமுறை குறிப்பிட்டுள்ளனர். தேர்தல் பிரச்சாரங்களின் போது கூட, ஹோட்டல்களில் சாப்பிடாமல் அந்தந்த மாவட்டங்களில் இருக்கும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வீட்டிற்குச் சென்று, அவர்கள் வீட்டில் சமைத்த உணவுகளையே சாப்பிடுவார். இருப்பினும் அண்ணா அறிவாலயம் அருகில் இருக்கும் ஆனந்த பவன் ஹோட்டல் போண்டா என்றால் அவருக்கு அதிக பிரியம். உதவியாளர்களை அடிக்கடி அனுப்பி போண்டா வாங்கி வரச் சொல்லி விரும்பி சாப்பிடுவாராம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;செல்லப்பிராணிகள் மற்றும் அலங்கார மீன்கள் வளர்ப்பதில் கருணாநிதிக்கு அதிக ஈடுபாடு இருந்தது. அவர் இருந்த இடங்களில் மீன் தொட்டிகள் அமைத்து அவற்றை பராமரிப்பதில் ஆர்வம் காட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓமாந்தூரார் அரசினர் வளாகத்தில் கட்டிய புதிய சட்டசபையில் சிறு நீச்சல் குளம் அமைத்து, அதில் மீன்கள் வளர்த்து வந்தார். தினமும் சட்டசபைக்கு வரும்போது மீன்களுக்கு உணவு அளித்துவிட்டு, அதை சில மணி அமர்ந்து நேரம் பார்த்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கருணாநிதி கைக்கடிகாரம் அணிவதில் தனித்துவமான பழக்கத்தை கொண்டிருந்தார். புதிய மற்றும் விலையுயர்ந்த மாடல்களை விட பழக்கமான வடிவமைப்புகளையே தொடர்ந்து பயன்படுத்தினார். கருணாநிதி வழக்கமாக அணிவது போல் அல்லாமல், பின்பக்கமாக கைக்கடிகாரம் அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர். ஆரம்பத்தில் கருப்பு நிறப் பட்டையில் கை கடிகாரம் அணிந்து வந்த அவர், பின்னர் சிகப்பு நிற பட்டையை அணிவதை வழக்கமாக்கி கொண்டார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கருணாநிதிக்கு செல்லப்பிராணிகள் வளர்ப்பது என்றால் மிக பிடிக்கும். ஆலிவர் ரோடு இல்லத்தில் குடியிருந்தபோது பிளாக்கி என்னும் நாயை வளர்த்திருக்கிறார். அது இறந்த பின்னர் வீட்டு வாசலிலேயே புதைத்து அந்த இடத்தில் ஒரு செடியையும் வளர்த்திருக்கிறார். அதன் பின்னர் சில நாய்களை வளர்த்து வந்த அவர், பின்னர் நாய்கள் வளர்ப்பதை முற்றிலும் நிறுத்திவிட்டார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கலைஞரின் அடையாளங்களில் ஒன்றாக கருப்பு நிறக் கண்ணாடி இருந்தது. வெளியூருக்கு காரில் சென்று கொண்டிருந்த போது, விபத்தில் சிக்கிய கருணாநிதியின் இடது கண் பலத்த சேதமடைந்தது. இதற்காக அந்த கண்ணில் மட்டும் 12 முறை அறுவை சிகிச்சை செய்யப்படிருக்கிறது. அதன் பின்னர் தொடர்ந்து அவர் கருப்பு கண்ணாடி அணியத் தொடங்கினார். பின்னர் அது அவரது தோற்றத்தின் பிரிக்க முடியாத அம்சமாக மாறியது. கண்ணாடி இல்லாமல் கருணாநிதியை பார்ப்பது என்பது அரிதான காரியங்களில் ஒன்று.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;2005-ம் ஆண்டு முதுகு வலி காரணமாக, முதுகுத் தண்டுவட அறுவை சிகிச்சைக்குப் பிறகு நடப்பதில் சிரமம் ஏற்பட்டதால் கருணாநிதி சக்கர நாற்காலியை பயன்படுத்த வேண்டிய நிலை உருவானது. இருப்பினும், அரசியல் மற்றும் இலக்கியப் பணிகளை அவர் தொடர்ந்து மேற்கொண்டார். 50 ஆண்டுகளாக இந்தியாவின் அரசியலை நிர்ணயித்த அந்த தலைவரின் சக்கர நாற்காலி அவருக்குப் பின்னர் நிரந்தர ஓய்வுக்குச் சென்றது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>politics</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/politics/unknown-and-interesting-facts-of-kalaignar-karunanidhi-on-his-103rd-birth-anniversary-explained-ydgexqb"/>
        </item>
        <item>
            <title><![CDATA[CM Vijay: காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை சீட்..! முதல்வர் விஜய் அறிவிப்பு..]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/cm-vijay-allocates-rajya-sabha-seat-to-congress-strengthening-alliance-ahead-of-key-political-battles-articleshow-z8ogiz8</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/cm-vijay-allocates-rajya-sabha-seat-to-congress-strengthening-alliance-ahead-of-key-political-battles-articleshow-z8ogiz8</guid>
            <pubDate>Wed, 03 Jun 2026 19:12:15 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் வகையில், காலியாக உள்ள மாநிலங்களவை இடத்தை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குவதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kt6sxzeykg9cpmv0z515kstb,imgname-vijay-congress-1780492467678.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை (ராஜ்யசபா) இடத்தை கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு ஒதுக்குவதாக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான C. Joseph Vijay அறிவித்திருப்பது மாநில அரசியலில் முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. இந்த முடிவு, தவெக&ndash;காங்கிரஸ் கூட்டணியின் உறவை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கையாக அரசியல் வட்டாரங்களில் மதிப்பிடப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சி.வி.சண்முகம், சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தனது மாநிலங்களவை பதவியை ராஜினாமா செய்ததால் அந்த இடம் காலியானது. இதற்கான இடைத்தேர்தல் ஜூன் 18, 2026 அன்று நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் ஜூன் 1 முதல் 8 வரை நடைபெறுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;சட்டமன்றத்தில் தனிப்பெரும் கட்சியாக உள்ள தவெகவுக்கு இந்த மாநிலங்களவை இடத்தை வெல்ல தேவையான எண்கள் இருப்பதால், அந்த இடத்தை தங்கள் கட்சிக்காக வைத்துக்கொள்ளலாமா அல்லது கூட்டணிக் கட்சிக்கு வழங்கலாமா என்ற விவாதம் கடந்த சில நாட்களாக நீடித்து வந்தது. இந்த நிலையில் காங்கிரஸுக்கு அந்த வாய்ப்பை வழங்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;காங்கிரஸ் தரப்பில், கட்சியின் தேசிய அளவிலான முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும், தரவு மற்றும் தேர்தல் வியூக நிபுணருமான Praveen Chakravarty மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் இறுதி வேட்பாளர் அறிவிப்பு காங்கிரஸ் தலைமையால் வெளியிடப்பட வேண்டியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அரசு அமைப்பதில் காங்கிரஸ் அளித்த ஆதரவு முக்கிய பங்காற்றியது. மேலும், காங்கிரஸ் உறுப்பினர்கள் அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ள நிலையில், மாநிலங்களவை இட ஒதுக்கீடு கூட்டணியின் நம்பிக்கையை பிரதிபலிக்கும் அரசியல் முடிவாக கருதப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;அரசியல் ஆய்வாளர்கள் கூறுவதாவது, இந்த முடிவின் மூலம் தேசிய அரசியலில் காங்கிரஸுடனான உறவை வலுப்படுத்துவதோடு, எதிர்கால கூட்டணி அரசியலுக்கான தெளிவான சிக்னலையும் முதல்வர் விஜய் வழங்கியுள்ளார். அதே நேரத்தில், தவெக தனது முதல் மாநிலங்களவை உறுப்பினரை உடனடியாக அனுப்பும் வாய்ப்பை தியாகம் செய்து கூட்டணித் தர்மத்தை முன்னிலைப்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் மதிப்பிடுகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;ஜூன் 18-ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் எதிர்பாராத மாற்றங்கள் ஏதும் இல்லையெனில், காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்று மாநிலங்களவைக்கு செல்லும் வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>politics</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/cm-vijay-allocates-rajya-sabha-seat-to-congress-strengthening-alliance-ahead-of-key-political-battles-articleshow-z8ogiz8"/>
        </item>
    </channel>
</rss>
