<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes"?>
<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Tue, 07 Jul 2026 12:04:29 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss/life-style" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[Salt Cleaning: உப்பு சமையலுக்கு மட்டும் இல்லீங்க! வெறும் ஒரு ஸ்பூன் போதும்! கிச்சனை பளிச்னு மாத்த இதோ 4 சூப்பர் டிப்ஸ்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/salt-is-not-just-for-cooking-4-magic-kitchen-cleaning-tips-hbwxrbs</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/salt-is-not-just-for-cooking-4-magic-kitchen-cleaning-tips-hbwxrbs</guid>
            <pubDate>Tue, 07 Jul 2026 12:04:27 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Kitchen Cleaning: உப்பு இல்லை என்றால் அது நாக்கில் வைக்க முடியாத அளவுக்குச் சுவையற்றதாக மாறிவிடும். ஆனால் கிளீனிங் கெமிக்கல்களுக்குப் பதிலாக, வெறும் ஒரு ஸ்பூன் உப்பை வைத்தே கிச்சன் கறைகளை விரட்டலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwxkstag5qhxpggb8n5es93h,imgname-salt-1783405275472.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Kitchen Cleaning: உப்பு இல்லை என்றால் அது நாக்கில் வைக்க முடியாத அளவுக்குச் சுவையற்றதாக மாறிவிடும். ஆனால் கிளீனிங் கெமிக்கல்களுக்குப் பதிலாக, வெறும் ஒரு ஸ்பூன் உப்பை வைத்தே கிச்சன் கறைகளை விரட்டலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உலகிலேயே மிகச்சிறந்த அறுசுவை உணவாக இருந்தாலும், அதில் ஒரு சிட்டிகை உப்பு இல்லை என்றால் அது நாக்கில் வைக்க முடியாத அளவுக்குச் சுவையற்றதாக மாறிவிடும். ஆனால் கிளீனிங் கெமிக்கல்களுக்குப் பதிலாக, வெறும் ஒரு ஸ்பூன் உப்பை வைத்தே கிச்சன் கறைகளையும், கெட்ட வாசனையையும் விரட்டியடிக்க முடியும் என்பது தெரியுமா?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;காய்கறிகள், அசைவம் வெட்டிய பிறகு கட்டிங் போர்டில் தங்கிவிடும் கறைகளும் வாடையும் அப்படியே இருக்கும். கட்டிங் போர்டின் மேல் உப்பைத் தூவி, பாதி எலுமிச்சை பழத்தைக் கொண்டு நன்றாகத் தேய்த்து, பின்னர் தண்ணீரில் கழுவ வேண்டும். இதே முறையை கிச்சன் மேடையைச் சுத்தம் செய்யவும் பயன்படுத்தலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Leftover Rice Recipes: மிச்சமான சாதமா? கவலையை விடுங்க! 10 நிமிடத்தில் 5 அசத்தல் பிரேக்ஃபாஸ்ட் ரெசிபிஸ்!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கிச்சன் சிங்க் அல்லது ஸ்டீல் பாத்திரங்களில் படிந்திருக்கும் விடாப்பிடியான கறைகள் கறை படிந்த இடங்களில் கொஞ்சம் உப்பைத் தூவி, ஸ்பான்ச் கொண்டு மென்மையாகத் தேய்த்துக் கழுவினால் அழுக்குகள் நீங்கி பாத்திரங்கள் பளிச்சென்று மின்னும். மிக மென்மையான பாத்திரங்களில் தேய்க்கும்போது கீறல் விழ வாய்ப்புள்ளதால் மென்மையாக தேய்க்க வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;டைல்ஸ் அல்லது சில உலோகப் பொருட்கள்ல லேசா துரு அல்லது கறை இருக்கா? உப்பு, எலுமிச்சை சாறு கலவையை அது மேல தடவி கொஞ்ச நேரம் விட்டுடுங்க. அப்புறம் ஒரு சாஃப்ட் பிரஷ் அல்லது ஸ்பான்ச் வெச்சு தேயுங்க. எல்லா இடத்துக்கும் இந்த முறை செட் ஆகாது. அதனால, முதல்ல ஒரு சின்ன இடத்துல டெஸ்ட் பண்ணிப் பாருங்க.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;லஞ்ச் பாக்ஸ், பிளாஸ்டிக் டப்பாக்கள் மற்றும் ஃபிரிட்ஜில் வீசும் ஒருவிதமான கெட்ட வாசனை வரும். வெதுவெதுப்பான தண்ணீரில் கொஞ்சம் உப்பைக் கலந்து, அந்த நீரைக் கொண்டு டப்பாக்களைக் கழுவ வேண்டும். இதனால் துர்நாற்றம் நீங்கி, டப்பாக்கள் எப்போதும் ஃபிரெஷ்ஷாக இருக்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>life-style</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/salt-is-not-just-for-cooking-4-magic-kitchen-cleaning-tips-hbwxrbs"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Loyal Couples Shocking Survey: நேர்மையான ஜோடிகள் அதிகம் இருக்கும் நகரம் எது.?! தெறிக்கவிட்ட ஏடாகூடா சர்வே.! மாஸ் காட்டிய சென்னை.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/which-city-has-the-most-loyal-couples-shocking-survey-reveals-chennai-tops-the-list-ey5lkrz</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/which-city-has-the-most-loyal-couples-shocking-survey-reveals-chennai-tops-the-list-ey5lkrz</guid>
            <pubDate>Tue, 07 Jul 2026 11:58:55 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;இந்தியாவின் முக்கிய நகரங்களில் வாழும் ஜோடிகளிடையே நடத்தப்பட்ட ஒரு சுவாரஸ்யமான சர்வேயில், காதலில் மிகவும் நேர்மையாக இருப்பது யார் என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது. இந்த ஆய்வில் சென்னை மாஸ் கட்டியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwxkfwd4e60tm7gkq7zhb6rz,imgname-gemini-generated-image-o47kpo47kpo47kpo--1--1783404949924.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;இந்தியாவின் முக்கிய நகரங்களில் வாழும் ஜோடிகளிடையே நடத்தப்பட்ட ஒரு சுவாரஸ்யமான சர்வேயில், காதலில் மிகவும் நேர்மையாக இருப்பது யார் என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது. இந்த ஆய்வில் சென்னை மாஸ் கட்டியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&quot;காதல்&quot; என்றாலே அதில் சுவாரசியங்களுக்கும், திருப்பங்களுக்கும் பஞ்சம் இருக்காது. ஆனால், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் காதலில் நேர்மை என்பது எவ்வளவு தூரம் சாத்தியம்? இந்த கேள்விக்கு விடை தேடும் வகையில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு &quot;ஏடாகூடா&quot; சர்வே, இணையதளங்களில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது. இந்தியாவின் முக்கிய பெருநகரங்களில் வாழும் ஜோடிகளில், காதலில் மிகவும் நேர்மையாக இருப்பது யார் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள், பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதில் நம்ம சிங்காரச் சென்னை மாஸ் காட்டியுள்ளது!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பொதுவாக காதலைப் பற்றி கவித்துவமான ஆய்வுகள் மட்டுமே நடக்கும் நிலையில், இந்த சர்வே சற்று வித்தியாசமாக, தற்போதைய காலகட்டத்து ஜோடிகளின் &quot;ரகசியங்கள் மற்றும் நேர்மை&quot; குறித்து ஆராய்ந்தது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஆய்வின் நோக்கம்:&lt;/strong&gt; பார்ட்னரின் மொபைல் போனை ரகசியமாகப் பார்ப்பது, முன்னாள் காதலர்களைப் பற்றிய உண்மைகளை மறைப்பது, தங்களின் உண்மையான சம்பளம் அல்லது செலவுகளைப் பொய் சொல்வது போன்ற பல &quot;ஏடாகூடான&quot; கேள்விகள் இந்த சர்வேயில் கேட்கப்பட்டன.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பங்கேற்பாளர்கள்: &lt;/strong&gt;மும்பை, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை போன்ற இந்தியாவின் முன்னணி மெட்ரோ நகரங்களில் வசிக்கும் 18 முதல் 35 வயதுக்குட்பட்ட ஆயிரக்கணக்கான ஜோடிகளிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சர்வேயின் முடிவுகள் வெளியானபோது, ஒட்டுமொத்த இந்தியாவிலும் சென்னை நகரம் 72% மதிப்பெண்களுடன் &quot;மிகவும் நேர்மையான ஜோடிகள் வாழும் நகரம்&quot; என்ற பெருமையைப் பெற்று முதலிடத்தைத் தட்டிச் சென்றுள்ளது. இதற்கு சென்னை ஜோடிகளிடம் காணப்பட்ட சில முக்கிய குணங்கள் காரணங்களாகக் கூறப்படுகின்றன.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;மொபைல் போன் ரகசியம் இல்லை: &lt;/strong&gt;டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் 80%-க்கும் அதிகமானோர் தங்களின் பார்ட்னருக்குத் தெரியாமல் மொபைல் பாஸ்வேர்டை மாற்றுவதாகவும், சாட்களை மறைப்பதாகவும் ஒப்புக்கொண்டனர். ஆனால், சென்னையில் 65%-க்கும் அதிகமான ஜோடிகள் தங்களுக்குள் மொபைல் பாஸ்வேர்டுகளைப் பகிர்ந்து கொள்வதாகவும், ரகசியங்கள் ஏதும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;வெளிப்படையான கடந்த காலம் (Past Life):&lt;/strong&gt; தங்களுடைய பழைய காதல் கதைகள் அல்லது கடந்த காலத்தைப் பற்றி தற்போதைய பார்ட்னரிடம் மறைக்காமல் கூறுவதில் சென்னை இளைஞர்கள் அதிக நேர்மையைக் கடைப்பிடிக்கின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பண விஷயங்களில் வெளிப்படைத்தன்மை: &lt;/strong&gt;சம்பளம், கடன் மற்றும் குடும்பச் செலவுகள் குறித்த விபரங்களை சென்னை ஜோடிகள் ஒருவருக்கொருவர் மறைப்பதில்லை என்பது இந்த சர்வேயில் தெரியவந்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சென்னை முதலிடத்தைப் பிடிக்க, மற்ற நகரங்களின் &quot;ஏடாகூட&quot; புள்ளிவிவரங்களும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தன.&lt;/p&gt;&lt;p&gt;சென்னை: 72% - மொபைல் பகிர்வு மற்றும் வெளிப்படைத்தன்மையில் முதலிடம்.&lt;/p&gt;&lt;p&gt;பெங்களூரு: 58% - வேலைப்பளு காரணமாகப் பொய்கள் குறைவு, ஆனால் ரகசியங்கள் உண்டு.&lt;/p&gt;&lt;p&gt;மும்பை: 45% - சமூக வலைத்தளப் பழக்கங்களால் ரகசிய நட்புகள் அதிகம்.&lt;/p&gt;&lt;p&gt;டெல்லி: 38% - பார்ட்னருக்குத் தெரியாமல் மொபைல் போனை வேவு பார்ப்பதில் அதிகம்.&lt;/p&gt;&lt;p&gt;இந்த அட்டவணையின்படி, டெல்லி மற்றும் மும்பை நகர ஜோடிகளிடையே பரஸ்பர நம்பிக்கைக் குறைபாடு சற்று அதிகமாக இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சென்னை ஜோடிகள் இந்த அளவுக்கு நேர்மையாக இருப்பதற்குப் பின்னால் சென்னையின் கலாச்சாரமும், வளர்ப்பு முறையும் முக்கியப் பங்கு வகிப்பதாக சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். சென்னை மக்கள் அடிப்படையில் எளிமையையும், குடும்ப மாண்புகளையும் அதிகம் மதிக்கக்கூடியவர்கள். ஆடம்பரமான பொய்களை விட, கசப்பான உண்மைகளைப் பேசிப் தீர்த்துக் கொள்வதையே இங்குள்ள ஜோடிகள் விரும்புகின்றனர்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&ldquo;லிவ்-இன் ரிலேஷன்ஷிப்&rdquo; மற்றும் நவீனக் காதல் கலாச்சாரம் சென்னைக்குள் நுழைந்திருந்தாலும், தங்களின் துணையிடம் உண்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் சென்னை இளைஞர்களிடம் மாறாமல் இருப்பது இந்த சர்வே மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>life-style</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/which-city-has-the-most-loyal-couples-shocking-survey-reveals-chennai-tops-the-list-ey5lkrz"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Types of Lovers: வாரத்திற்கு 20 முறையா? காதலில் நீங்கள் எந்த வகை? புதிய ஆய்வு சொல்லும் ரகசியம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/types-of-lovers-new-study-reveals-4-love-styles-67m2uqi</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/types-of-lovers-new-study-reveals-4-love-styles-67m2uqi</guid>
            <pubDate>Tue, 07 Jul 2026 11:07:46 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Types of Lovers: ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஒரு புதிய ஆய்வு, மனிதர்களின் காதல் வெளிப்பாட்டு முறைகளை நான்கு முக்கிய வகைகளாகப் பிரித்துள்ளது. காதலில் நாம் அனைவரும் ஒரே மாதிரியான உணர்வுகளைக் கொண்டிருப்பதில்லை என்கிறது இந்த ஆய்வு.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwxfft5bekacvye8wbph6jaa,imgname-chatgpt-image-jul-7--2026--10-32-24-am-1783400753323.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Types of Lovers: ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஒரு புதிய ஆய்வு, மனிதர்களின் காதல் வெளிப்பாட்டு முறைகளை நான்கு முக்கிய வகைகளாகப் பிரித்துள்ளது. காதலில் நாம் அனைவரும் ஒரே மாதிரியான உணர்வுகளைக் கொண்டிருப்பதில்லை என்கிறது இந்த ஆய்வு.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் (ANU) உயிரியல் மானுடவியல் ஆய்வாளர் ஆடம் போட் மற்றும் அவரது குழுவினர் இந்த ஆய்வை மேற்கொண்டனர். உலகம் முழுவதும் காதலில் இருக்கும் 1,556 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வுத் தரவுகளைக் கொண்டு, காதலின் தீவிரம், ஈடுபாடு, ஒருவரைப் பற்றியே சிந்திக்கும் ஆர்வம் (obsessive thinking) மற்றும் உடலுறவு ஆகியவற்றின் அடிப்படையில் காதலர்கள் நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இவர்கள் மொத்த ஆய்வில் சுமார் 20% பேர் உள்ளனர். இவர்களிடம் காதல் மற்றும் உறவின் தீவிரம் மிகக் குறைவாகவே உள்ளது. ஒருவரைப் பற்றியே சிந்திக்கும் ஆர்வம், அர்ப்பணிப்பு உணர்வு மற்றும் தாம்பத்யம் கொள்ளும் ஆர்வம் இவர்களுக்கு மற்றவர்களை விடக் குறைவு.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சுமார் 41% பேர் இந்த வகையைச் சேர்ந்தவர்கள். இதுவே மிக அதிகமான மக்கள் பின்பற்றும் முறையாகும். இவர்கள் காதலில் ஓரளவு ஈடுபாடும், ஓரளவு அர்ப்பணிப்பு உணர்வும் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களில் பெரும்பாலோர் ஆண்கள் என்றும், இவர்களுக்குக் குழந்தைகள் இருப்பதற்கான வாய்ப்பு குறைவு என்றும் ஆய்வு கூறுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இவர்கள் சுமார் 29% பேர். இவர்கள் &quot;உன்மத்தமான காதல்&quot; கொண்டவர்கள் என அழைக்கப்படுகிறார்கள். தீவிரமான உணர்வுகள், ஒருவரைப் பற்றியே இடைவிடாமல் சிந்திக்கும் பழக்கம் மற்றும் அதிகப்படியான அர்ப்பணிப்பு உணர்வு கொண்டவர்கள் இவர்கள். இவர்களில் சுமார் 60% பேர் பெண்கள்.&lt;/p&gt;&lt;p&gt;Secret Relationship : கள்ளக் காதலில் முதலிடம் பிடித்த தமிழகம்! இந்த நகரம்தான் ஃபர்ஸ்ட்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சுமார் 10% பேர் இந்த வகையில் உள்ளனர். இவர்கள் மிகவும் தனித்துவமானவர்கள். இவர்களது காதலில் தாம்பத்யம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இவர்கள் வாரத்திற்கு சராசரியாக 10 முறையும், சில சமயங்களில் 20 முறையும் இணை சேர்கின்றனர். இவர்களுக்குக் காதலில் தீவிரமான ஆர்வமும், அர்ப்பணிப்பும் உண்டு. இந்த வகை நபர்கள் பொதுவாக அதிகப் பயணம் செய்பவர்களாகவும், மற்றவர்களை விடக் கொஞ்சம் செலவு செய்பவர்களாகவும் இருக்க வாய்ப்புள்ளதாக ஆய்வு குறிப்பிடுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஆய்வின் முக்கியத்துவம்: &lt;/strong&gt;மனித பரிணாம வளர்ச்சியில் காதல் என்பது ஒரு முக்கியமான அங்கமாகும். இது நீண்ட கால உறவுகளை உருவாக்கவும், இனப்பெருக்கத்திற்கும், பிணைப்பிற்கும் உதவுகிறது. இருப்பினும், ஒவ்வொரு தனிமனிதனும் காதலை வெளிப்படுத்தும் விதம் மாறுபடுகிறது என்பதை இந்த ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;இந்த ஆய்வு 'பர்சனாலிட்டி அண்ட் இன்டிவிஜுவல் டிஃபரன்சஸ்' (Personality and Individual Differences) என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. காதல் மற்றும் உறவுகள் குறித்துப் புரிந்துகொள்ள இந்த ஆய்வு ஒரு புதிய பார்வையை வழங்குகிறது.&lt;/p&gt;&lt;p&gt;Men vs Women : ஆண்களை விட பெண்கள் அதிக காலம் வாழ்வது ஏன்? ரகசியம் இதுதானா?&lt;/p&gt;]]></content:encoded>
            <category>life-style</category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/types-of-lovers-new-study-reveals-4-love-styles-67m2uqi"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Leftover Rice Recipes:  மிச்சமான சாதமா? கவலையை விடுங்க! 10 நிமிடத்தில் 5 அசத்தல் பிரேக்ஃபாஸ்ட் ரெசிபிஸ்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/leftover-rice-5-quick-10-min-breakfast-recipes-axuhmn5</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/leftover-rice-5-quick-10-min-breakfast-recipes-axuhmn5</guid>
            <pubDate>Tue, 07 Jul 2026 10:07:09 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Breakfast Dishes: மிச்சமான சாதத்தை வீணாக்காமல், காலையிலேயே சட்டுப்புட்டுனு அசத்தலான 5 டிபன் வகைகளாக எப்படி மாற்றுவது அதுவும் 10 நிமிடத்தில் எப்படி என்பதை பார்ப்போம்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwxdg5sarxn1z57t9yz8kt06,imgname-lifestyle-1783398668074.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Breakfast Dishes: மிச்சமான சாதத்தை வீணாக்காமல், காலையிலேயே சட்டுப்புட்டுனு அசத்தலான 5 டிபன் வகைகளாக எப்படி மாற்றுவது அதுவும் 10 நிமிடத்தில் எப்படி என்பதை பார்ப்போம்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ராத்திரி மிச்சமான சாதத்தை என்ன செய்வது என்று இனி யோசிக்க வேண்டாம். கொஞ்சம் கிரியேட்டிவா யோசிச்சா, சாப்பாடு வீணாகாமல் 10 நிமிடத்தில் சுவையான காலை உணவை ரெடி பண்ணிடலாம். உங்க வீட்டு பழைய சாதத்தை வச்சு இந்த 5 ரெசிபிகளையும் ட்ரை பண்ணிப் பாருங்க.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தினமும் தோசை, அடை சாப்பிட்டு போர் அடித்தவர்களுக்கு இது ஒரு புது விதமானதாக இருக்கும். சாதத்துடன் ரவை, தயிர், இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், கேரட் மற்றும் குடைமிளகாய் சேர்த்து கெட்டியான மாவாக அரைக்கவும். தோசைக்கல்லில் லேசாக எண்ணெய் விட்டு, இருபுறமும் பொன்னிறமாக சுட்டு எடுத்தால் மொறுமொறுப்பான 'சீலா' தயார். இதற்கு தக்காளி சாஸ் அல்லது புதினா சட்னியோடு சாப்பிட்டால் செம டேஸ்டாக இருக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஸ்நாக்ஸ். சாதத்துடன் வேகவைத்த உருளைக்கிழங்கு, சீஸ், சோளம், மிளகுத்தூள் மற்றும் ஒரிகானோ சேர்த்து சிறிய உருண்டைகளாகப் பிடித்துக் கொள்ளுங்கள். இதை பிரெட் தூளில் புரட்டி, ஏர் ஃப்ரை அல்லது லைட்டாக எண்ணெயில் பொரித்து எடுத்தால், வெளிய கிரிஸ்பியா உள்ளே சீஸியா சூப்பரா இருக்கும். குறிப்பாக இந்த ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;காலை டிபனுக்கும் சரி, மாலை நேர டீ டைமிற்கும் சரி... ஒரு பர்ஃபெக்ட் சாய்ஸ். சாதத்துடன் வேகவைத்த உருளைக்கிழங்கு, பிரெட் தூள், காய்கறிகள், கொத்தமல்லி மற்றும் மசாலாக்களை சேர்த்து கட்லெட் வடிவில் தட்டிக்கொள்ளவும். இதை ஷாலோ ஃப்ரை அல்லது ஏர் ஃப்ரை செய்து, தக்காளி சாஸ் அல்லது புதினா சட்னியுடன் தொட்டுச் சாப்பிடலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வெறும் 10 நிமிடத்தில் ஆபீஸ் அல்லது ஸ்கூல் லஞ்ச் பாக்ஸிற்கு பேக் செய்யக்கூடிய ஈஸி ரெசிபி. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, வேர்க்கடலை, பச்சை மிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து தாளிக்கவும். இதில் மிச்சமிருக்கும் சாதத்தைப் போட்டு கிளறி, இறக்கும் போது பிரெஷ்ஷான எலுமிச்சை சாறு பிழிந்து கலக்கினால், சுவையான லெமன் ரைஸ் தயார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சின்னவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ஹெல்தி டிபன். சாதத்துடன் தயிர் மற்றும் கொஞ்சம் ரவை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இந்த மாவை தோசையாக ஊற்றி, அதன் மேல் தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், குடைமிளகாய், கொத்தமல்லி தூவி மிதமான தீயில் வேக வைத்து எடுத்தால் சுவையான ஊத்தப்பம் ரெடி. இதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>life-style</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/leftover-rice-5-quick-10-min-breakfast-recipes-axuhmn5"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Old Clothes Recycling: பாத்திரத்துக்கு பழைய துணி தர்றீங்களா? அது எங்கே போகுதுன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/the-journey-of-your-discarded-clothes-from-home-to-factory-in724ge</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/the-journey-of-your-discarded-clothes-from-home-to-factory-in724ge</guid>
            <pubDate>Tue, 07 Jul 2026 08:47:31 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;பழைய துணிக்கு ஸ்டீல் பாத்திரம்னு நம்ம தெருவுல தினமும் யாராவது கூவிக்கிட்டே போவாங்க. நீங்களும் அவங்ககிட்ட பழைய துணியைக் கொடுத்து பாத்திரம் வாங்கியிருப்பீங்க. ஆனா, நீங்க கொடுத்த துணி எங்கே போகுது? இதனால யாருக்கெல்லாம் லாபம்னு யோசிச்சிருக்கீங்களா?&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwvd239ya9fn0bvjxjce2hdh,imgname-chatgpt-image-jul-6--2026--03-13-37-pm--1--1783331097917.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;பழைய துணிக்கு ஸ்டீல் பாத்திரம்னு நம்ம தெருவுல தினமும் யாராவது கூவிக்கிட்டே போவாங்க. நீங்களும் அவங்ககிட்ட பழைய துணியைக் கொடுத்து பாத்திரம் வாங்கியிருப்பீங்க. ஆனா, நீங்க கொடுத்த துணி எங்கே போகுது? இதனால யாருக்கெல்லாம் லாபம்னு யோசிச்சிருக்கீங்களா?&lt;/p&gt;&lt;img&gt;இந்தியாவுல இருக்குற எல்லா நகரம், டவுன் மட்டுமில்ல, கிராமங்களுக்கும் பழைய துணி வாங்க ஆட்கள் வர்றாங்க. இந்த துணிகளை அவங்க எங்கேயோ விக்கிறாங்கன்னு நமக்கு பொதுவா தெரியும். ஆனா, இதுக்கு பின்னாடி பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு மறுசுழற்சி பிசினஸ் இருக்குற விஷயம் பலருக்கும் தெரியாது.&lt;img&gt;நம்ம வீட்ல இருந்து வாங்குற துணிகள் நேரா கடைக்குப் போகாது. எந்த கடைக்காரரும் அதை அப்படியே விற்கவும் மாட்டாங்க. எல்லா பழைய துணிகளும் ஒரு பெரிய குடோனுக்குப் போகுது. அங்கே ஒவ்வொரு துணியையும் கையாலேயே செக் பண்ணி மூணு வகையா பிரிக்கிறாங்க. புதுசு மாதிரி இருக்குற துணி, பயன்படுத்தக்கூடிய துணி, அப்புறம் முழுசா கிழிஞ்சுபோன துணி.&lt;img&gt;நல்ல கண்டிஷன்ல இருக்குற துணிகளைத் துவைச்சு, அயர்ன் பண்ணி, பேக் செஞ்சு செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டுக்கு அனுப்புறாங்க. இந்தியாவுல லட்சக்கணக்கான மக்கள் குறைஞ்ச விலையில நல்ல துணிகளை இந்த செகண்ட் ஹேண்ட் சேல்-ல வாங்குறாங்க. சில துணிகள் மற்ற மாநிலங்களுக்கும், சில வெளிநாடுகளுக்கும் கூட ஏற்றுமதி ஆகுது.&lt;img&gt;கிழிஞ்சு போன துணிகளை குப்பையில போட மாட்டாங்க. இந்த துணிகளை மெஷின்ல போட்டு சின்ன சின்ன துண்டுகளா வெட்டுறாங்க. அதுல இருந்து நாரை தனியா பிரிக்கிறாங்க. அந்த நாரை வெச்சு புதுசா நூல் செஞ்சு, அதிலிருந்து கார்பெட், போர்வை, மாப், குஷன், தொழிற்சாலைகளுக்கான துணி மாதிரியான பல பொருட்களைத் தயாரிக்கிறாங்க.&lt;img&gt;நீங்க கொடுத்த துணிகளை கார் சீட் செய்யக் கூட பயன்படுத்துறாங்க. உங்களோட பழைய சட்டை, நாளைக்கு வேற யாருடைய காரோட சீட்டா மாறலாம். இந்த மறுசுழற்சியால சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுது. ஒவ்வொரு வருஷமும் லட்சக்கணக்கான டன் துணிகள் குப்பைக்குப் போறதுக்கு பதிலா, இப்படி மறுசுழற்சி செய்யுறதால தண்ணீர் மிச்சமாகுது. புதுசா பருத்தி உற்பத்தி செய்யுற தேவையும் குறையுது. மாசுபாடும் குறையுது. லட்சக்கணக்கான மக்களுக்கு வேலையும் கிடைக்குது.]]></content:encoded>
            <category>life-style</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/the-journey-of-your-discarded-clothes-from-home-to-factory-in724ge"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Nameless Station: 18 வருஷமா பெயரே இல்லாத இந்திய ரயில் நிலையம்! டிக்கெட் எப்படி எடுப்பாங்க தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/why-this-nameless-west-bengal-railway-station-is-a-mystery-for-18-years-2lpo7z2</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/why-this-nameless-west-bengal-railway-station-is-a-mystery-for-18-years-2lpo7z2</guid>
            <pubDate>Mon, 06 Jul 2026 22:24:50 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Nameless Station: இந்தியாவில் 18 ஆண்டுகளாக ஒரு ரயில் நிலையத்துக்கு பெயரே கிடையாது. இந்த ரயில் நிலையம் எங்கே இருக்கு? இங்கே போக டிக்கெட் எப்படி வாங்குவது? என்பது குறித்து பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kww0s58v429qc3xhfbdnzjh2,imgname-nameless-railway-1783351776539.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Nameless Station: இந்தியாவில் 18 ஆண்டுகளாக ஒரு ரயில் நிலையத்துக்கு பெயரே கிடையாது. இந்த ரயில் நிலையம் எங்கே இருக்கு? இங்கே போக டிக்கெட் எப்படி வாங்குவது? என்பது குறித்து பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்திய ரயில்வே உலகின் மிகப்பெரிய நெட்வொர்க்குகளில் ஒன்று. தினமும் கோடிக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணிக்கின்றனர். பொதுவாக ரயில் நிலையங்களில் பெரிய மஞ்சள் போர்டில் ஊரின் பெயர் எழுதியிருப்பதைப் பார்ப்போம். ஆனால், இந்தியாவில் ஒரு ரயில் நிலையத்திற்கு கடந்த 18 ஆண்டுகளாக பெயரே இல்லை. அந்த ஸ்டேஷனில் உள்ள போர்டு காலியாகவே காட்சியளிக்கிறது. அந்த விசித்திரமான&zwnj; ஸ்டேஷன் எங்கே இருக்கிறது, ஏன் அதற்கு பெயர் இல்லை என்ற சுவாரஸ்யமான தகவல்களைப் பார்ப்போம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க:&lt;/strong&gt; ஒரே ஒரு ரயில் டிக்கெட்டில் இந்தியாவையே சுத்தலாம்! 56 நாள் டூர்! 40% பணம் மிச்சம்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பெயரே இல்லாத இந்த ரயில் நிலையம் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளது. புர்த்வான் (பர்தமான்) மாவட்டத் தலைமையகத்திலிருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள 'ரைனா' என்ற கிராமத்தில் இந்த நிலையம் அமைந்துள்ளது. ரயில்வே துறை, இப்பகுதி மக்களின் வசதிக்காக 2008-ல் ஒரு புதிய நிலையத்தைக் கட்டியது. ஆனால், அன்று முதல் இன்று வரை, அதிகாரிகளால் இந்த நிலையத்திற்கு ஒரு பெயரைக்கூட இறுதி செய்ய முடியவில்லை.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க&lt;/strong&gt;:ரயிலில் இந்த 3 'தப்பு' பண்ணா ரூ.2000 ஃபைன், ஜெயில்! பயணிகளே உஷார்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த ரயில் நிலையம் 'ரைனா' மற்றும் 'ரைனாகர்' என்ற இரண்டு அண்டை கிராமங்களுக்கு இடையில் அமைந்துள்ளது. நிலையம் கட்டி முடிக்கப்பட்டதும், ரயில்வே அதிகாரிகள் தொடக்கத்தில் இதற்கு 'ரைனாகர்' என்று பெயரிட்டனர். அந்தப் பெயரை ஸ்டேஷன் போர்டிலும் எழுதினார்கள்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;இதனால் ரைனாகர் கிராம மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், பக்கத்து ஊரான ரைனா கிராம மக்கள், ரயில்வேயின் இந்த முடிவை கடுமையாக எதிர்த்தனர். நிலையம் தங்கள் கிராமப் பகுதிக்குள்ளும் வருவதால், அதற்கு 'ரைனா' என்று பெயரிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இப்படி, இரண்டு கிராமங்களுக்கு இடையே ரயில் நிலையப் பெயருக்காக தகராறு முற்றியது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க: &lt;/strong&gt;ரயிலில் லோயர் பெர்த் இனி ஈஸி! டிக்கெட் புக்கிங்கில் 'இந்த' ட்ரிக் யூஸ் பண்ணுங்க!&lt;/p&gt;&lt;img&gt;ரயில் நிலையப் பெயர் தொடர்பான தகராறு பெரிதானது. இரு தரப்பு மக்களும் போராட்டம் நடத்தியதால், அந்தப் பகுதியில் பதற்றம் நிலவியது. ரயில்வே உயர் அதிகாரிகளின் அலுவலகங்கள் முன்பும் பெரிய அளவில் தர்ணாக்கள் நடந்தன. இந்த சண்டை அத்துடன் நிற்காமல், நீதிமன்றம் வரை சென்றது. சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் முயன்றும், இரு கிராம மக்களும் தங்கள் பிடிவாதத்தை விடவில்லை. இதனால் வெறுத்துப்போன ரயில்வே அதிகாரிகள், ஸ்டேஷன் போர்டில் இருந்த 'ரைனாகர்' என்ற பெயரை முற்றிலுமாக அழித்துவிட்டனர். அன்று முதல் இன்று வரை, அதாவது சுமார் 17 ஆண்டுகளாக, அந்த போர்டு காலியாகவே உள்ளது.&lt;img&gt;&lt;p&gt;போர்டில் பெயர் இல்லை என்றாலும், இந்த நிலையத்தில் ரயில்கள் நிற்பதற்கு எந்தத் தடையும் இல்லை. உள்ளூர் பயணிகள் ஒரு நாளைக்கு 6 முறை இந்த வழியாகச் செல்லும் ரயில்களில் பயணிக்கின்றனர். பயணிகள் வழக்கம் போல் இங்கே ஏறி இறங்குகிறார்கள். ஆனால் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், போர்டு காலியாக இருந்தாலும், பயணிகளுக்கு வழங்கப்படும் டிக்கெட்டில் 'ரைனாகர்' என்ற பெயர் அச்சிடப்பட்டிருக்கிறது. கிராம மக்களின் ஈகோ, &amp;nbsp;விசித்திரமான சூழ்நிலைகளை உருவாக்கும் என்பதற்கு இந்த பெயர் இல்லாத ரயில் நிலையமே ஒரு சிறந்த உதாரணம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>life-style</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/why-this-nameless-west-bengal-railway-station-is-a-mystery-for-18-years-2lpo7z2"/>
        </item>
        <item>
            <title><![CDATA[பதற்றம், டென்ஷன் குறைய வேண்டுமா? மன அமைதிக்கு உதவும் 8 உணவுகள்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/webstories/life-style/best-foods-to-help-manage-anxiety-and-stress-gfmi9iu</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/webstories/life-style/best-foods-to-help-manage-anxiety-and-stress-gfmi9iu</guid>
            <pubDate>Mon, 06 Jul 2026 22:12:23 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;மன அழுத்தம், பதற்றம் போன்றவை இன்றைய வாழ்க்கைமுறையில் தவிர்க்க முடியாததாகிவிட்டது. சில குறிப்பிட்ட உணவுகள் மனப்பதற்றத்தைக் கட்டுப்படுத்த உதவும். அவை என்னென்ன என்று பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jdkgw75n66fsk0xtnat171zq,imgname-1-1732600798389.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <category>life-style</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/webstories/life-style/best-foods-to-help-manage-anxiety-and-stress-gfmi9iu"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Fruit-Vegetable Decor: காய்கறி, பழம் சாப்பிட அடம் பிடிக்குதா? இந்த டெக்கரேஷன் ஐடியாஸ் ட்ரை பண்ணுங்க!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/creative-food-art-to-make-kids-love-fruits-and-veggies-fpycead</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/creative-food-art-to-make-kids-love-fruits-and-veggies-fpycead</guid>
            <pubDate>Mon, 06 Jul 2026 21:34:18 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;உங்க குழந்தைங்க காய்கறி, பழம் சாப்பிட மாட்டேன்னு அடம் பிடிக்கிறாங்களா? கவலைய விடுங்க. இந்த 5 சிம்பிள் டெக்கரேஷன் ஐடியாஸ் மூலமா அவங்க சாப்பாட்டு தட்டை கலர்ஃபுல்லா மாத்தி, அவங்களையே விரும்பி சாப்பிட வைக்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwpegqjbb4cqqq4s72jqx6sx,imgname-healthy-food-art-for-kids-1783164853835.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;உங்க குழந்தைங்க காய்கறி, பழம் சாப்பிட மாட்டேன்னு அடம் பிடிக்கிறாங்களா? கவலைய விடுங்க. இந்த 5 சிம்பிள் டெக்கரேஷன் ஐடியாஸ் மூலமா அவங்க சாப்பாட்டு தட்டை கலர்ஃபுல்லா மாத்தி, அவங்களையே விரும்பி சாப்பிட வைக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;விலங்குகள் வடிவத்தில் தட்டு குழந்தைகளுக்கு விலங்குகள்னா ரொம்ப பிடிக்கும். நீங்க வாழைப்பழம், திராட்சை, ஸ்ட்ராபெர்ரி, வெள்ளரி, கேரட், தக்காளி வெச்சு முயல், பட்டாம்பூச்சி, சிங்கம், மீன் மாதிரி உருவங்களை உருவாக்கலாம். தட்டுல இப்படி ஒரு க்யூட் கேரக்டர் இருந்தா, குழந்தைங்க அதை பார்த்ததும் சாப்பிட ஆர்வம் காட்டுவாங்க.&lt;img&gt;வானவில் ஃப்ரூட் பிளேட் ரெடி பண்ணுங்க பல்வேறு நிறங்களில் உள்ள பழங்களையும் காய்கறிகளையும் வானவில் மாதிரி வரிசையா அடுக்கி வைங்க. சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, ஊதா நிறங்களை வரிசையா வைக்கும்போது தட்டு ரொம்ப அழகா தெரியும். இந்த கலர்ஃபுல் தட்டு குழந்தைகளை ஈர்க்கும், அவங்க எல்லா வகையான பழங்களையும் சாப்பிடவும் தூண்டும்.&lt;img&gt;பூக்கள் மற்றும் கார்டன் தீம் வெள்ளரிக்காய் துண்டுகள், கேரட் பூக்கள், தக்காளி, ப்ரோக்கோலி, கீரைகள் உதவியோட தட்டை ஒரு குட்டி கார்டன் மாதிரி மாத்துங்க. இந்த டெக்கரேஷன் பார்க்க அழகா இருக்குறது மட்டுமில்ல, காய்கறிகளோட விளையாடிக்கிட்டே சாப்பிடவும் குழந்தைகளுக்கு ஆர்வம் வரும்.&lt;img&gt;&lt;p&gt;கார்ட்டூன் முகங்களை உருவாக்குங்க பழங்கள், காய்கறிகளை வெச்சு ஒரு ஸ்மைலி அல்லது ஏதாவது கார்ட்டூன் முகம் மாதிரி தட்டை அலங்கரிக்கலாம். கண்களுக்கு ப்ளூபெர்ரி அல்லது திராட்சை, மூக்குக்கு ஸ்ட்ராபெர்ரி, சிரிப்புக்கு ஒரு வாழைப்பழத் துண்டு பயன்படுத்தலாம். இந்த மாதிரி ஜாலியான முகங்கள், குழந்தைகளை ஹெல்தி ஃபுட் சாப்பிட தூண்டும்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஸ்டிக் மற்றும் பைட்-சைஸ் ஸ்நாக்ஸ் பழங்களையும் காய்கறிகளையும் சின்ன சின்ன துண்டுகளா வெட்டி, கலர்ஃபுல்லான குச்சிகள்ல கோர்க்கலாம். இந்த மாதிரி பைட்-சைஸ் ஸ்நாக்ஸ், குழந்தைங்க பிடிச்சு சாப்பிட ரொம்ப ஈஸியா இருக்கும். இது பார்ட்டி அல்லது ஸ்கூல் ஸ்நாக்ஸ்க்கு ஒரு சூப்பர் சாய்ஸ்.&amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>life-style</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/creative-food-art-to-make-kids-love-fruits-and-veggies-fpycead"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Parenting Tips: குழந்தைகளின் உணர்ச்சிகரமான நுண்ணறிவை வளர்க்கும் 6 எளிய பழக்கங்கள்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/6-simple-daily-habits-to-boost-your-childs-emotional-intelligence-dc1qift</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/6-simple-daily-habits-to-boost-your-childs-emotional-intelligence-dc1qift</guid>
            <pubDate>Mon, 06 Jul 2026 19:21:54 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;குழந்தைகளின் கல்விக்கு இணையான முக்கியத்துவத்தை அவர்களின் உணர்ச்சிப்பூர்வ அறிவுத்திறனுக்கும் (EQ) தர வேண்டும்.பெரிய முயற்சிகள் இன்றி, அன்றாட வாழ்வில் நாம் செய்யும் சில எளிய மாற்றங்கள் மூலமே குழந்தைகளின் EQ-வை எளிதாக மேம்படுத்த முடியும்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwvtv692wrmgh6cafvv3db77,imgname-child-s-emotional-intelligence--1--1783345551650.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;குழந்தைகளின் கல்விக்கு இணையான முக்கியத்துவத்தை அவர்களின் உணர்ச்சிப்பூர்வ அறிவுத்திறனுக்கும் (EQ) தர வேண்டும்.பெரிய முயற்சிகள் இன்றி, அன்றாட வாழ்வில் நாம் செய்யும் சில எளிய மாற்றங்கள் மூலமே குழந்தைகளின் EQ-வை எளிதாக மேம்படுத்த முடியும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குழந்தைகள் தங்கள் உணர்ச்சிகளைப் பெயரிட்டு அழைக்க ஊக்குவியுங்கள். உதாரணமாக, அவர்கள் கோபமாகவோ அல்லது சோகமாகவோ இருக்கும்போது, &quot;நான் இப்போது கோபமாக இருக்கிறேன்&quot; அல்லது &quot;எனக்கு வருத்தமாக இருக்கிறது&quot; என்று சொல்லப் பழக்குங்கள். தங்கள் உணர்வுகளைச் சரியாக அடையாளம் காணும்போது, அவற்றை ஆரோக்கியமான முறையில் வெளிப்படுத்த அவர்களுக்குத் தெரியும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குழந்தைகள் உங்களைப் பார்த்தே அதிகம் கற்றுக்கொள்கிறார்கள். மற்றவர்களிடம் கனிவாக நடப்பது, தவறு செய்யும் போது மன்னிப்பு கேட்பது, மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது போன்றவற்றை நீங்கள் செய்து காட்டுங்கள். நீங்கள் பச்சாதாபத்துடன் செயல்படுவதைப் பார்க்கும்போது, அவர்களும் அதை இயற்கையாகவே கற்றுக்கொள்வார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குழந்தைகளுக்கு ஏதேனும் சவால்கள் வரும்போது, உடனே நீங்களே தலையிட்டு சரிசெய்யாதீர்கள். மாறாக, &quot;அடுத்த முறை இதை எப்படிச் சரியாகச் செய்யலாம்?&quot; என்பது போன்ற கேள்விகளைக் கேட்டு, அவர்களையே சிந்திக்கத் தூண்டுங்கள். இது அவர்களுக்குப் பொறுமையையும், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் திறனையும் வளர்க்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குழந்தைகள் மிகுந்த உணர்ச்சிவசப்படும்போது, அவர்களை அமைதிப்படுத்த சில உத்திகளைக் கற்றுக்கொடுங்கள். ஆழ்ந்த சுவாசம் (Deep breathing), பத்து வரை எண்ணுதல் அல்லது சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருத்தல் போன்ற பழக்கங்கள், அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு தவறான முடிவுகளை எடுப்பதைத் தடுத்து, நிதானமாகச் செயல்பட உதவும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பெற்றோர்களாகிய நாமும் தவறு செய்யலாம் என்பதைப் புரிந்துகொள்ள வையுங்கள். கடினமான நேரங்களில் நீங்கள் உங்கள் உணர்ச்சிகளை எப்படி கையாண்டீர்கள் என்பதை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். தவறுகள் என்பவை தோல்விகள் அல்ல, அவை வளர்ச்சிக் கதவுகள் என்பதை அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உங்கள் குழந்தை மற்றவர்களுக்கு உதவும்போதோ அல்லது விட்டுக்கொடுத்துப் பழகும்போதோ, அதைப் பாராட்டுங்கள். நேர்மறையான இந்த அங்கீகாரம், மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதை ஒரு சிறந்த பழக்கமாக மாற்ற அவர்களுக்கு ஊக்கமளிக்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>life-style</category>
            <dc:creator>Priya Velan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/6-simple-daily-habits-to-boost-your-childs-emotional-intelligence-dc1qift"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Auspicious Day: செவ்வாய் இருவாய்.. சனி பிணி.. இந்த கிழமையில் புதிய வேலை தொடங்கினா வெற்றி நிச்சயமாம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/tuesday-brings-two-outcomes-saturday-brings-delays-best-weekdays-to-start-new-ventures-according-to-tamil-astrology-0xlw9tn</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/tuesday-brings-two-outcomes-saturday-brings-delays-best-weekdays-to-start-new-ventures-according-to-tamil-astrology-0xlw9tn</guid>
            <pubDate>Mon, 06 Jul 2026 17:43:32 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;புதிய தொழில், வேலை, வீடு, முதலீடு என எந்த முக்கிய காரியத்தையும் தொடங்க நல்ல நாள் எது? &quot;செவ்வாய் இருவாய்... சனி பிணி&quot; என்ற பழமொழியின் உண்மையான அர்த்தத்தையும், வாரத்தின் எந்த நாளில் என்ன தொடங்கலாம் என்பதையும் ஜோதிட கண்ணோட்டத்தில் தெரிந்துகொள்ளுங்கள்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwvmz583cdt1qkgpfns2c28y,imgname-auspicious-day-1783339390211.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;புதிய தொழில், வேலை, வீடு, முதலீடு என எந்த முக்கிய காரியத்தையும் தொடங்க நல்ல நாள் எது? &quot;செவ்வாய் இருவாய்... சனி பிணி&quot; என்ற பழமொழியின் உண்மையான அர்த்தத்தையும், வாரத்தின் எந்த நாளில் என்ன தொடங்கலாம் என்பதையும் ஜோதிட கண்ணோட்டத்தில் தெரிந்துகொள்ளுங்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழர்களின் பாரம்பரிய வாழ்க்கை முறையில் வாரத்தின் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு தனித்துவமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், &quot;செவ்வாய் இருவாய்... சனி பிணி&quot; என்ற பழமொழி தலைமுறைகளாக சொல்லப்பட்டு வருகிறது.&lt;/p&gt;&lt;p&gt;இதன் பொருள், செவ்வாய்க்கிழமை தொடங்கும் காரியங்கள் இரண்டு விதமான பலன்களை (வெற்றி அல்லது தோல்வி) தரக்கூடும் என்பதையும், சனிக்கிழமை தொடங்கும் முயற்சிகளில் தாமதம், சோதனை அல்லது அதிக உழைப்பு இருக்கலாம் என்பதையும் குறிக்கும் பாரம்பரிய நம்பிக்கையாகும்.&lt;/p&gt;&lt;p&gt;இது அனைவரின் வாழ்க்கையிலும் ஒரே மாதிரியாக நடக்கும் என்ற அர்த்தமல்ல. மாறாக, முன்னோர்கள் அனுபவத்தின் அடிப்படையில் கூறிய ஒரு வழிகாட்டும் கருத்தாகவே பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஞாயிற்றுக்கிழமைக்கு சூரிய பகவான் அதிபதியாக கருதப்படுகிறார்.&lt;/p&gt;&lt;p&gt;இந்த நாளில்:&lt;/p&gt;&lt;p&gt;&bull; அரசு தொடர்பான பணிகளை தொடங்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&bull; புதிய பொறுப்புகளை ஏற்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&bull; தலைமைப் பதவி அல்லது நிர்வாக முடிவுகளை எடுக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&bull; அதிகாரிகள், உயரதிகாரிகளை சந்திக்க ஏற்ற நாளாகவும் கருதப்படுகிறது.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;திங்கட்கிழமை &ndash; குடும்பம், வீடு, மன அமைதிக்கான நாள்&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;சந்திரனின் நாளான திங்கட்கிழமை மன அமைதியையும், குடும்ப ஒற்றுமையையும் குறிக்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;இந்த நாளில்:&lt;/p&gt;&lt;p&gt;&bull; வீடு வாங்குதல் அல்லது வாடகைக்கு எடுப்பது.&lt;/p&gt;&lt;p&gt;&bull; குடும்ப நலன் தொடர்பான முடிவுகள்.&lt;/p&gt;&lt;p&gt;&bull; கிணறு, தண்ணீர் வசதி போன்ற பணிகள்.&lt;/p&gt;&lt;p&gt;&bull; புதிய குடும்ப வாழ்க்கையைத் திட்டமிடுதல்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;செவ்வாய்க்கிழமைக்கு செவ்வாய் கிரகம் அதிபதியாக இருப்பதால் வீரமும் ஆற்றலும் அதிகரிக்கும் நாள் என்று கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;இந்த நாளில்:&lt;/p&gt;&lt;p&gt;&bull; நிலம் வாங்குதல்.&lt;/p&gt;&lt;p&gt;&bull; வீடு கட்டும் பணியைத் தொடங்குதல்.&lt;/p&gt;&lt;p&gt;&bull; பாதுகாப்பு, காவல், ராணுவம் போன்ற துறைகளில் புதிய முயற்சிகள்.&lt;/p&gt;&lt;p&gt;&bull; உடற்பயிற்சி, விளையாட்டு, போட்டி சார்ந்த செயல்கள்.&lt;/p&gt;&lt;p&gt;ஆனால், திருமணம், நிச்சயதார்த்தம் போன்ற சுப நிகழ்வுகளை இந்த நாளில் பலர் தவிர்க்கும் வழக்கமும் உள்ளது.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;புதன்கிழமை &ndash; வியாபாரத்திற்கு மிகவும் சிறந்த நாள்&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;புதன் அறிவு, பேச்சுத்திறன் மற்றும் வணிகத்தை குறிக்கும் கிரகமாக கருதப்படுகிறார்.&lt;/p&gt;&lt;p&gt;இந்த நாளில்:&lt;/p&gt;&lt;p&gt;&bull; புதிய தொழில் தொடங்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&bull; கடை திறக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&bull; ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&bull; கல்வி, தகவல் தொழில்நுட்பம், வணிகம் தொடர்பான முயற்சிகளை ஆரம்பிக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குரு பகவானின் நாளான வியாழக்கிழமை மிகவும் மங்களகரமான நாளாகக் கருதப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;இந்த நாளில்:&lt;/p&gt;&lt;p&gt;&bull; குழந்தைகளின் கல்வியைத் தொடங்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&bull; ஆன்மிக நிகழ்வுகள் நடத்தலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&bull; குரு தரிசனம் செய்யலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&bull; புதிய கல்வி நிறுவனங்கள் அல்லது பயிற்சி மையங்களைத் தொடங்கலாம்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;வெள்ளிக்கிழமை &ndash; செல்வமும் சுபமும் தரும் நாள்&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;வெள்ளிக்கிழமை மகாலட்சுமியின் அருள் நிறைந்த நாளாக கருதப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;இந்த நாளில்:&lt;/p&gt;&lt;p&gt;&bull; திருமணம்.&lt;/p&gt;&lt;p&gt;&bull; நகை வாங்குதல்.&lt;/p&gt;&lt;p&gt;&bull; புதிய வீடு குடியேறுதல்.&lt;/p&gt;&lt;p&gt;&bull; ஆடை, அழகு, ஆபரண வியாபாரம் தொடங்குதல்.&lt;/p&gt;&lt;p&gt;&bull; பெண்கள் தொடர்பான தொழில்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சனி பகவான் நீதியின் அடையாளமாக கருதப்படுகிறார்.&lt;/p&gt;&lt;p&gt;இந்த நாளில்:&lt;/p&gt;&lt;p&gt;&bull; இரும்பு, இயந்திரம், தொழிற்சாலை சார்ந்த பணிகள்.&lt;/p&gt;&lt;p&gt;&bull; விவசாயம்.&lt;/p&gt;&lt;p&gt;&bull; நீண்டகால முதலீடுகள்.&lt;/p&gt;&lt;p&gt;&bull; கடின உழைப்பு தேவைப்படும் தொழில்கள்.&lt;/p&gt;&lt;p&gt;இருப்பினும், சுப நிகழ்வுகளை இந்த நாளில் தொடங்குவதை சிலர் தவிர்க்கும் வழக்கம் உள்ளது.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;கிழமையை மட்டும் பார்த்தால் போதுமா?&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;ஜோதிடத்தில் ஒரு நல்ல நாள் என்பது வாரக் கிழமையை மட்டும் வைத்து தீர்மானிக்கப்படுவதில்லை.&lt;/p&gt;&lt;p&gt;அதோடு சேர்த்து:&lt;/p&gt;&lt;p&gt;&bull; திதி&lt;/p&gt;&lt;p&gt;&bull; நட்சத்திரம்&lt;/p&gt;&lt;p&gt;&bull; யோகம்&lt;/p&gt;&lt;p&gt;&bull; கரணம்&lt;/p&gt;&lt;p&gt;&bull; லக்னம்&lt;/p&gt;&lt;p&gt;&bull; தனிநபரின் ஜாதக நிலை&lt;/p&gt;&lt;p&gt;ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு முகூர்த்தம் நிர்ணயிக்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பண்டைய காலங்களில் மக்கள் இயற்கையோடும், காலநிலையோடும், கிரக இயக்கங்களோடும் வாழ்க்கையை இணைத்து வாழ்ந்தனர். அந்த அனுபவங்களின் அடிப்படையில் உருவான நம்பிக்கைகளே இத்தகைய பழமொழிகளாக தலைமுறைகள் கடந்து பரவியுள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;இன்றைய காலத்தில் பலர் இவற்றை பாரம்பரிய நம்பிக்கையாகக் கடைப்பிடிக்கிறார்கள்; மற்றவர்கள் தனிப்பட்ட நம்பிக்கை மற்றும் வசதிக்கேற்ப முடிவெடுக்கிறார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&quot;செவ்வாய் இருவாய்... சனி பிணி&quot; என்பது பயமுறுத்தும் பழமொழி அல்ல; மாறாக, முக்கியமான காரியங்களைத் திட்டமிட்டு தொடங்க வேண்டும் என்பதை நினைவூட்டும் பாரம்பரிய அறிவுரையாகவும் பார்க்கலாம். முக்கியமான வாழ்க்கை முடிவுகளை எடுக்கும்போது, நாள் மட்டுமல்லாமல் சரியான திட்டமிடல், உழைப்பு, அனுபவம் மற்றும் நம்பிக்கையும் வெற்றிக்கான முக்கிய காரணிகளாகும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;குறிப்பு: &lt;/strong&gt;இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பாரம்பரிய தமிழ் மற்றும் இந்து ஜோதிட நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. இவை மத மற்றும் கலாசார மரபுகளின் விளக்கங்களாகவே கருதப்பட வேண்டும்; அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் அல்ல.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>life-style</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/tuesday-brings-two-outcomes-saturday-brings-delays-best-weekdays-to-start-new-ventures-according-to-tamil-astrology-0xlw9tn"/>
        </item>
        <item>
            <title><![CDATA[kumbakonam special kadappa: கும்பகோணம் ஸ்பெஷல் கடப்பா...இப்படி ஒருமுறை செய்து பாருங்க]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/kumbakonam-special-kadappa-recipe-for-idli-dosa-sz4ndh0</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/kumbakonam-special-kadappa-recipe-for-idli-dosa-sz4ndh0</guid>
            <pubDate>Mon, 06 Jul 2026 16:40:25 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தென்னிந்திய காலை உணவுகளான இட்லி, தோசைக்கு சாம்பார், சட்னி போர் அடித்துவிட்டதா? சோழர் காலத்து பாரம்பரியமிக்க 'கடப்பா' ஒரு சிறந்த மாற்று! ஹோட்டல் சுவையில் இந்த சுவையான கடப்பாவை வீட்டிலேயே எளிதாகச் செய்வதற்கான ரகசியக் குறிப்புகளை இங்கு தெரிந்துகொள்ளலாம்&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwvhhtd13ayrkyzvnzcqn3df,imgname-kumbakonam-special-kadappa-1783335807393.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தென்னிந்திய காலை உணவுகளான இட்லி, தோசைக்கு சாம்பார், சட்னி போர் அடித்துவிட்டதா? சோழர் காலத்து பாரம்பரியமிக்க 'கடப்பா' ஒரு சிறந்த மாற்று! ஹோட்டல் சுவையில் இந்த சுவையான கடப்பாவை வீட்டிலேயே எளிதாகச் செய்வதற்கான ரகசியக் குறிப்புகளை இங்கு தெரிந்துகொள்ளலாம்&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தஞ்சாவூர் மாவட்டத்தின் சமையல் கலைக்கு உலகளவில் ஒரு தனித்தன்மை உண்டு. அதில் கும்பகோணம் என்றாலே டிகிரி காபிக்கு அடுத்தபடியாக நம் நினைவுக்கு வருவது சுடச்சுட இட்லியுடன் பரிமாறப்படும் &quot;கடப்பா&quot; ஆகும். உருளைக்கிழங்கு, பாசிப்பருப்பு மற்றும் தேங்காய் விழுதின் கூட்டணியில் தயாராகும் இந்த உணவின் சுவை, சாம்பார் மற்றும் குருமாவிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இதை ஒரு முறை சாப்பிட்டால் அதற்கு பிறகு சட்னி, சாம்பாரையே மறந்துடுவீங்க. சாப்பிடுவதற்கு மிகவும் லேசானதாகவும் (Light food), அதே சமயம் நாவிற்கு அலாதி சுவையையும் தரும் இந்த கும்பகோணம் ஸ்பெஷல் கடப்பாவை, அதன் பாரம்பரியம் மாறாமல் வீட்டில் எப்படித் தயாரிப்பது என்பதை தெரிந்து கொள்ளலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கடப்பாவின் அடிப்படையே பாசிப்பருப்பு தான். ஆனால், பருப்பை சாம்பாருக்கு வேகவைப்பது போல குழைய வேகவைக்கக் கூடாது. பருப்பு மலர்ந்திருக்க வேண்டும், ஆனால் அதன் வடிவம் சிதையாமல் கைவிரலால் அழுத்தினால் மசியும் பதத்தில் இருக்க வேண்டும். பருப்பை வேகவைக்கும் போது ஒரு துளி நெய் சேர்த்தால் அதன் வாசனை அற்புதம் தரும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உருளைக்கிழங்கைத் தனியாக வேகவைத்து, தோலுரித்து மசித்துக் கொள்ள வேண்டும். கைகளால் மசிக்கும் போது கட்டிகள் ஏதும் இல்லாமல், அதே சமயம் கூழ் போல ஆகாமல் நடுத்தரமாக மசிக்க வேண்டும். பருப்பின் அளவும், மசித்த உருளைக்கிழங்கின் அளவும் சமமாக (1:1 என்ற விகிதத்தில்) இருப்பது தான் சரியான பக்குவம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதன் அசல் சுவைக்குத் தேவையானது பச்சையாக அரைக்கப்படும் மசாலா விழுது. துருவிய தேங்காயுடன் பொட்டுக்கடலை, சோம்பு, பூண்டுப் பற்கள் மற்றும் காரத்திற்கு பச்சை மிளகாய் மட்டுமே சேர்க்க வேண்டும். கடப்பாவிற்கு வண்ணமே பச்சை மிளகாய் தான், இதில் மிளகாய்த்தூள் சேர்க்கக் கூடாது. இந்த விழுதை மிக நைஸாக அரைக்காமல் லேசான கொரகொரப்புடன் அரைக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கடப்பாவின் தனித்துவமான புளிப்புச் சுவைக்கு எலுமிச்சை சாறு தான் காரணம். தக்காளி சேர்க்கக் கூடாது. குழம்பு முழுமையாகக் கொதித்து, அடுப்பை அணைத்த இரண்டு நிமிடங்களுக்குப் பிறகுதான் எலுமிச்சை சாற்றைக் கலக்க வேண்டும். கொதிக்கும் போதே சேர்த்தால் குழம்பு கசப்புத் தன்மையைப் பெற்றுவிடும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தாளிப்பதற்குச் சமையல் எண்ணெயுடன் சிறிதளவு வெண்ணெய் சேர்த்தால் கும்பகோணம் ஹோட்டல் சுவை அப்படியே கிடைக்கும். பட்டை, கிராம்பு, பிரியாணி இலை தாளித்து, நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயத்தைச் சேர்க்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக மாறக் கூடாது, கண்ணாடி பதத்திற்கு வதங்கினால் மட்டுமே கடப்பாவின் நிறம் மாறாமல் வெண்மையாக இருக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மசாலா விழுது மற்றும் பருப்பு சேர்த்த பிறகு குழம்பு ஆறியவுடன் கெட்டியாகும் தன்மை கொண்டது. எனவே, கொதிக்க வைக்கும் போதே தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, சற்றுத் தளர்வான (Watery consistency) பதத்தில் இறக்க வேண்டும். அப்போதுதான் இட்லியின் மீது ஊற்றிச் சாப்பிடும் போது அது நன்றாக ஊறிச் சுவை கூடும்.&lt;/p&gt;&lt;p&gt;ஃபைனல் டச்: &amp;nbsp;நறுக்கிய புதிய கொத்தமல்லித் தழைகளைத் தூவி, சுடச்சுட மல்லிகைப்பூ இட்லி அல்லது மொறுமொறு தோசையுடன் இதனைப் பரிமாறலாம். இதன் மென்மையான காரமும், தேங்காயின் பாலும் கலந்த சுவை குழந்தைகளையும், பெரியவர்களையும் மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>life-style</category>
            <dc:creator>Priya Velan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/kumbakonam-special-kadappa-recipe-for-idli-dosa-sz4ndh0"/>
        </item>
        <item>
            <title><![CDATA[chicken thanni kuzhambu : கிராமத்து ஸ்டைல் சிக்கன் தண்ணிகுழம்பு...இப்படி செய்து பாருங்க]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/village-style-chicken-thanni-kuzhambu-cooking-tips-recipe-0lg5soh</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/village-style-chicken-thanni-kuzhambu-cooking-tips-recipe-0lg5soh</guid>
            <pubDate>Mon, 06 Jul 2026 12:30:53 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;சிக்கன் கிரேவி, ஃபிரை சாப்பிட்டிருப்போம். ஆனால் கிராமத்து சிக்கன் தண்ணிகுழம்பு ஒருமுறை சாப்பிட்டாலே மீண்டும் கேட்கத் தூண்டும். சுடச்சுட சாதத்துடன் இதைச் சேர்த்துச் சாப்பிட்டால், நாவில் ஊறும் இதன் அசாத்திய சுவையால் வழக்கத்தை விட அதிகமாகவே சாப்பிடுவோம்&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwv353x0ddzfthaxwawnrh79,imgname-chicken-kulambu--1--1783320711072.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சிக்கன் கிரேவி, ஃபிரை சாப்பிட்டிருப்போம். ஆனால் கிராமத்து சிக்கன் தண்ணிகுழம்பு ஒருமுறை சாப்பிட்டாலே மீண்டும் கேட்கத் தூண்டும். சுடச்சுட சாதத்துடன் இதைச் சேர்த்துச் சாப்பிட்டால், நாவில் ஊறும் இதன் அசாத்திய சுவையால் வழக்கத்தை விட அதிகமாகவே சாப்பிடுவோம்&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கிராமத்துச் சமையல் என்றாலே அதன் மணமும் சுவையும் தனித்துவமானது. அம்மியில் அரைத்த மசாலா, மண் சட்டியில் கொதிக்கும் குழம்பு என அந்தச் சுவைக்கு ஈடு இணையே இல்லை. அந்த வகையில், கிராமங்களில் மிகவும் பிரபலமான, சளி மற்றும் இருமலுக்கு அருமருந்தான கிராமத்து ஸ்டைல் சிக்கன் தண்ணிகுழம்பு எப்படி வைப்பது என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். வாசனைக்காகச் சேர்க்கப்படும் செயற்கை பொடிகளைத் தவிர்த்து, முற்றிலும் இயற்கையான முறையில், உடலுக்கு ஆரோக்கியம் தரும் வகையில் செய்தால் சுவை அமோகமாக இருக்கும். இதை சரியான முறையில் செய்தால் சிக்கன் பிடிக்காது என்று சொல்பவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தண்ணிக்குழம்பு செய்வதற்கு பிராய்லர் கோழியை விட நாட்டுக்கோழி மிகவும் உகந்தது. கறியை நறுக்கிய பின், சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் கல் உப்பு சேர்த்து பிசைந்து கழுவ வேண்டும். இது கோழியின் கவுச்சி வாடையை முற்றிலும் நீக்குவதுடன், கறியை மென்மையாக்கவும் உதவும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கடையில் வாங்கும் மசாலா பொடிகளைப் பயன்படுத்தக் கூடாது. வெறும் வாணலியில் மல்லி (தனியா), வரமிளகாய், சீரகம், சோம்பு மற்றும் அதிகப்படியான மிளகு சேர்த்து வறுக்க வேண்டும். மிளகுத்தூள் தான் இந்த தண்ணிக்குழம்பின் பிரதான சுவையூட்டி ஆகும். இவற்றை மிக்ஸியில் நைஸாக அரைக்காமல், சற்று கொரகொரப்பாக அரைப்பது கிராமத்து சுவையைத் தரும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தக் குழம்பிற்கு பெரிய வெங்காயத்தைத் தவிர்த்து, முழுமையாக சின்ன வெங்காயத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சின்ன வெங்காயத்தையும், தோலுரித்த பூண்டையும் மிக்ஸியில் அரைக்காமல், இஞ்சியுடன் சேர்த்து இடிக்கல்லில் நசுக்கி (நசுக்கல் பதம்) சேர்க்க வேண்டும். இது குழம்பிற்கு கூடுதல் தடிமனையும், பாரம்பரிய மணத்தையும் கொடுக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முடிந்தவரை இந்த குழம்பை மண் சட்டியில் சமைக்கப் பழகுங்கள். சட்டி சூடானதும் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, சோம்பு, கறிவேப்பிலை தாளிக்க வேண்டும். நல்லெண்ணெய் கோழிக்கறியின் வெப்பத்தைத் தணித்து, குழம்பின் சுவையை தூக்கலாக காட்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தாளித்த பின் இடித்த வெங்காயம், பூண்டு, இஞ்சி மற்றும் தக்காளியை வதக்க வேண்டும். தக்காளி அதிகம் சேர்க்கக் கூடாது (ஒரு சிறிய தக்காளி போதும்). அதன் பிறகு கோழிக்கறியைச் சேர்த்து, சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு, கறியிலிருந்து தண்ணீர் பிரிந்து வரும் வரை நன்றாக வதக்க வேண்டும். இதுவே கறியில் மசாலா சாறு இறங்க வழிவகுக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வறுத்தரைத்த மசாலாவைச் சேர்த்து வதக்கிய பின், குழம்பிற்குத் தேவையான அளவை விட கூடுதலாக இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்ற வேண்டும். ஏனெனில், தண்ணிக்குழம்பு நீண்ட நேரம் கொதித்து சுண்ட வேண்டும். அதோடு நாட்டுக்கோழி நன்கு வெந்து வருவதற்கு அதிக நேரம் எடுக்கும். மூடி போட்டு மிதமான தீயில் கறி பஞ்சு போல் வேகும் வரை கொதிக்க விட வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;பைனல் டச் : குழம்பு நன்றாகக் கொதித்து, மேலே எண்ணெய் பிரிந்து வரும்போது, கைப்பிடி அளவு நறுக்கிய கொத்தமல்லித் தழை மற்றும் கறிவேப்பிலை தூவி இறக்க வேண்டும். இந்தக் குழம்பை சுடச்சுட சாதம், இட்லி அல்லது தோசையுடன் பரிமாறலாம். குறிப்பாக, இதன் காரசாரமான ரசம் போன்ற பகுதி, சளி மற்றும் உடல் அசதியைப் போக்கவல்லது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>life-style</category>
            <dc:creator>Priya Velan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/village-style-chicken-thanni-kuzhambu-cooking-tips-recipe-0lg5soh"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Hotel: ஹோட்டல்களில் ரூம் நம்பர் 13 ஏன் இருப்பதில்லை? இதன் பின்னணியில் உள்ள ஷாக்கிங் சீக்ரெட் இதுதான்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/the-mystery-of-room-13-why-hotels-worldwide-skip-this-unlucky-number-87vyequ</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/the-mystery-of-room-13-why-hotels-worldwide-skip-this-unlucky-number-87vyequ</guid>
            <pubDate>Mon, 06 Jul 2026 08:48:43 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Why Hotels Skip Room No 13? : பெரிய ஹோட்டல்களில் 12-ம் நம்பருக்குப் பிறகு நேராக 14-ம் நம்பர் ரூம் அல்லது தளம் இருப்பதை கவனித்திருக்கிறீர்களா? 13-ம் எண் அங்கே மாயமாகி இருக்கும்! அதன் பின்னணியை பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwtphnrcsxddddxhnyg58x9k,imgname-hotel--1--1783307491084.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Why Hotels Skip Room No 13? : பெரிய ஹோட்டல்களில் 12-ம் நம்பருக்குப் பிறகு நேராக 14-ம் நம்பர் ரூம் அல்லது தளம் இருப்பதை கவனித்திருக்கிறீர்களா? 13-ம் எண் அங்கே மாயமாகி இருக்கும்! அதன் பின்னணியை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உலகெங்கிலும் உள்ள பல ஹோட்டல்கள் வேண்டுமென்றே 13-ம் எண்ணைப் பயன்படுத்துவதில்லை. 12ம் நம்பர் ரூமுக்கு பின்னர் 14ம் நம்பர் ரூம் இருக்கும், அல்லது வேறு ஒரு ரூம் இருக்கும். இது ஏன் என்று தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இதனை இன்றளவும் பல ஹோட்டல்களில் காணலாம். பல நூற்றாண்டுகளாகத் தொடரும் ஒருவித பயம்தான் இதற்குக் காரணம்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;விருந்தினர்கள் பலர், பயம் காரணமாக 13-ம் நம்பர் அறையில் தங்க விரும்புவதில்லை. இதனால் அந்த ரூம் காலியாகவே இருந்து, ஹோட்டல்களுக்கு நஷ்டம் ஏற்படும். இந்த நஷ்டத்தைத் தவிர்க்க, ஹோட்டல் உரிமையாளர்கள் 13-க்கு பதிலாக 12A, 14 அல்லது 'M' (ஆங்கில எழுத்துக்களில் 13-வது எழுத்து) போன்ற பெயர்களைப் பயன்படுத்துகிறார்கள்.&lt;img&gt;அறிவியல் மொழியில், 13-ம் எண்ணின் மீதான இந்த விசித்திரமான பயத்தை 'டிரிஸ்கைடெகாஃபோபியா' (Triskaidekaphobia) என்று சொல்கிறார்கள். அதாவது, 13-ம் எண்ணை ஒரு துரதிர்ஷ்டவசமான அல்லது கெட்ட சகுனமாக கருதுவது. இந்தப் பயம் பல நூற்றாண்டுகள் பழமையான நம்பிக்கைகளோடு தொடர்புடையது.&lt;img&gt;நார்ஸ் புராணங்களின்படி, ஒரு விருந்துக்கு 13-வதாக வந்த விருந்தாளியால் பெரும் சோகம் நடந்ததாகச் சொல்லப்படுகிறது. கிறிஸ்தவ நம்பிக்கையின்படி, இயேசுவின் கடைசி இரவு விருந்தில் (Last Supper) 13-வதாக இருந்த 'யூதாஸ்' துரோகம் செய்தார். இதனால் இந்த எண் துரதிர்ஷ்டத்தின் அடையாளமானது. ஆனால், சில ஆசிய நாடுகளில் 4 மற்றும் 9 ஆகிய எண்களை ராசியில்லாததாகக் கருதுகிறார்கள். தொழில்நுட்பம் வளர்ந்த காலத்திலும் இந்த நம்பிக்கைகள் தொடர்வது ஆச்சரியம்தான்.]]></content:encoded>
            <category>life-style</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/the-mystery-of-room-13-why-hotels-worldwide-skip-this-unlucky-number-87vyequ"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Mutton: ஆட்டுக்கறிக்கு ஏன் 'மட்டன்'-னு பேரு? அப்ப வெள்ளாட்டுக்கறிக்கு என்ன பேரு?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/the-real-difference-between-mutton-and-goat-meat-explained-8kmhkvs</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/the-real-difference-between-mutton-and-goat-meat-explained-8kmhkvs</guid>
            <pubDate>Sun, 05 Jul 2026 16:41:31 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Mutton vs Goat Meat: நாம பொதுவா யூஸ் பண்ற 'மட்டன்' பிரெஞ்சு மொழியில இருந்து வந்த வார்த்தை. ஆனா, இந்தியாவுல செம்மறியாடு, வெள்ளாடு ரெண்டு கறிக்குமே மட்டன்னு தான் சொல்றோம். அப்போ வெள்ளாட்டுக்கறிக்கு என்ன பேரு? வாங்க பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwrze3g4meader30csrxtjsr,imgname-mutton-curry-mutton-sukka-1783249702404.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Mutton vs Goat Meat: நாம பொதுவா யூஸ் பண்ற 'மட்டன்' பிரெஞ்சு மொழியில இருந்து வந்த வார்த்தை. ஆனா, இந்தியாவுல செம்மறியாடு, வெள்ளாடு ரெண்டு கறிக்குமே மட்டன்னு தான் சொல்றோம். அப்போ வெள்ளாட்டுக்கறிக்கு என்ன பேரு? வாங்க பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;ஞாயிற்றுக்கிழமை வந்தாலே அசைவ பிரியர்கள் வீட்ல திருவிழா கோலம்தான். கிச்சன்ல இருந்து வர்ற மட்டன் குழம்பு வாசனை பசியைத் தூண்டும். ஆனா, நாம தினமும் சொல்ற இந்த 'மட்டன்' வார்த்தைக்குப் பின்னாடி ஒரு பெரிய வரலாறே இருக்கு. அது என்னனு தெரியுமா?&lt;img&gt;'மட்டன்' ஒரு ஆங்கில வார்த்தைனு நாம நினைக்கிறோம். ஆனா, இதோட மூலம் பிரெஞ்சு மொழி. பழைய பிரெஞ்சு மொழியில 'Mouton' (மௌட்டன்) அப்படின்னா 'செம்மறியாடு'. பிரிட்டனை நார்மன்கள் கைப்பற்றியபோது, இந்த வார்த்தை ஆங்கிலத்துக்குள் வந்து, காலப்போக்குல 'Mutton' (மட்டன்) ஆக மாறிடுச்சு.&lt;img&gt;பிரிட்டிஷ்காரங்க இந்தியாவை ஆண்டப்போ, அவங்க செம்மறியாட்டு கறிக்கு பயன்படுத்தின 'மட்டன்'ங்கிற வார்த்தை நமக்கும் பழகிப்போச்சு. அதனாலதான் நாம இன்னைக்கும் செம்மறியாட்டுக் கறியை 'மட்டன்'னு சொல்றோம். நம்ம ஊர்ல கறியை வெட்டுற ஸ்டைலை வெச்சு குடல்-கறி, தலைக்கறி, போன்லெஸ்னு விதவிதமா சொல்ற பழக்கமும் இருக்கு.&lt;img&gt;நம்மில் பலருக்கு இருக்கிற குழப்பமே இதுதான். செம்மறியாடு, வெள்ளாடு ரெண்டு கறியையும் மட்டன்னு சொல்றது. ஆனா, வெள்ளாட்டுக்கறிக்கு சர்வதேச அளவுல 'Chevon' (ஷெவான்) அப்படின்னு ஒரு பெயர் இருக்கு. இதுவும் 'Chevre' (ஷெவ்ரே - வெள்ளாடு) என்ற பிரெஞ்சு வார்த்தையிலிருந்து வந்ததுதான். சில இடங்களில் இதை 'Goat Meat'னும் சொல்றாங்க.&lt;img&gt;வெளிநாடுகள்ல செம்மறியாட்டின் வயதை வெச்சு கறியை ரெண்டு வகையா பிரிக்கிறாங்க. ஒரு வயசுக்கு குறைவான இளம் ஆட்டுக்குட்டி கறியை 'Lamb' (லாம்ப்)னு சொல்வாங்க. இது ரொம்ப சாஃப்டா இருக்கும். ஒரு வயசுக்கு மேலான, வளர்ந்த ஆட்டோட கறியை 'Mutton' (மட்டன்)னு சொல்வாங்க. இதோட சுவை கொஞ்சம் வித்தியாசமா இருக்கும்.&lt;img&gt;வெளிநாடுகள்ல செம்மறியாடு, வெள்ளாடு கறிக்கு தனித்தனி பெயர் இருந்தாலும், இந்தியாவுல ரெண்டுக்குமே 'மட்டன்' தான் பொதுவான பெயர். ஹோட்டல், கறிக்கடைன்னு எங்க போனாலும் நாம 'மட்டன்'னு தான் கேட்கிறோம். அடுத்தமுறை நீங்க மட்டன் சாப்பிடும்போது, இந்த சுவாரஸ்யமான தகவலை உங்க நண்பர்கள்கிட்டயும் ஷேர் பண்ணுங்க!]]></content:encoded>
            <category>life-style</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/the-real-difference-between-mutton-and-goat-meat-explained-8kmhkvs"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Hair Dye Facts : முடிக்கு டை அடிப்பதால் என்னென்ன ஆபத்து வரும்? மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/is-hair-dye-safe-doctors-explain-the-risks-91o7dq8</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/is-hair-dye-safe-doctors-explain-the-risks-91o7dq8</guid>
            <pubDate>Sun, 05 Jul 2026 12:22:33 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Hair Dye Facts : நவீன உலகில், இளமையாகவும் அழகாகவும் தோற்றமளிக்க முடிக்கு சாயம் பூசுவது ஒரு வழக்கமான விஷயமாகிவிட்டது. ஆனால், இதில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள் புற்றுநோயை உண்டாக்கிவிடுமோ என்ற அச்சம் பலருக்கும் உண்டு. இதுகுறித்து விரிவாக காண்போம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwrgg2cykw78wm5q8npdh93z,imgname-chatgpt-image-jul-5--2026--12-15-36-pm-1783234038174.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Hair Dye Facts : நவீன உலகில், இளமையாகவும் அழகாகவும் தோற்றமளிக்க முடிக்கு சாயம் பூசுவது ஒரு வழக்கமான விஷயமாகிவிட்டது. ஆனால், இதில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள் புற்றுநோயை உண்டாக்கிவிடுமோ என்ற அச்சம் பலருக்கும் உண்டு. இதுகுறித்து விரிவாக காண்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;1. ஒட்டுமொத்த புற்றுநோய் அபாயம்: &lt;/strong&gt;உலக சுகாதார நிறுவனத்தின் கீழ் செயல்படும் சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் (IARC), முடிக்கு சாயம் பூசுவதை நேரடியாக புற்றுநோயை உண்டாக்கும் காரணியாக வகைப்படுத்தவில்லை. பெரிய அளவிலான ஆய்வுகள் (உதாரணமாக, 36 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஹார்வர்ட் ஆய்வுகள்), தனிப்பட்ட முறையில் சாயம் பூசுபவர்களுக்கு ஒட்டுமொத்த புற்றுநோய் அபாயம் அதிகரிப்பதற்கான வலுவான ஆதாரங்களை எங்கும் காட்டவில்லை.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;2. பழைய vs புதிய சாயங்கள்:&lt;/strong&gt; 1980-களுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட சாயங்களில் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய சில வேதிப்பொருட்கள் (உதாரணமாக, சில நறுமண அமீன்கள்) இருந்தன. ஆனால், 1980-க்குப் பிறகு இந்த வேதிப்பொருட்கள் பெருமளவில் நீக்கப்பட்டு, சாயங்களின் தயாரிப்பு முறை முற்றிலும் பாதுகாப்பானதாக மாற்றப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;3. சந்தேகத்திற்குரிய சில முடிவுகள்: &lt;/strong&gt;சில குறிப்பிட்ட ஆய்வுகள் நீண்டகாலம் தொடர்ந்து சாயம் பூசுபவர்களுக்கு மார்பகப் புற்றுநோய், கருப்பை புற்றுநோய் அல்லது லிம்போமா (Lymphoma) போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டாலும், இந்த முடிவுகள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. அதாவது, &quot;தொடர்பு&quot; (Association) மட்டுமே காணப்படுகிறதே தவிர, &quot;காரணம்&quot; (Causation) என்பது நிரூபிக்கப்படவில்லை.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;4. தொழில்முறை ஆபத்து:&lt;/strong&gt; சாயம் பூசுபவர்களுக்கு இருப்பதை விட, முடி அலங்கார நிபுணர்களுக்கு (Hairdressers/Barbers) புறறுநோய் அபாயம் சற்று அதிகம் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஏனெனில், அவர்கள் தினமும் பல மணிநேரம் இந்த வேதிப்பொருட்களுடன் பணிபுரிகிறார்கள். இதை IARC &quot;மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புள்ளவை&quot; என வகைப்படுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நீங்கள் முடிக்கு சாயம் பூசுவதைத் தவிர்க்க விரும்பவில்லை எனில், சில எளிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்:&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;பேட்ச் டெஸ்ட் (Patch Test): &lt;/strong&gt;ஒவ்வொரு முறை சாயம் பூசுவதற்கு முன்பும், உங்கள் தோலின் ஒரு சிறிய பகுதியில் சோதனை செய்து, ஒவ்வாமை (Allergy) இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;கையுறைகளை அணியுங்கள்: &lt;/strong&gt;சாயத்தை நேரடியாக கைகளால் கையாளாமல், எப்போதும் கையுறைகளை (Gloves) பயன்படுத்தவும்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;நேரத்தைக் கவனியுங்கள்: &lt;/strong&gt;பாக்கெட்டில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைத் துல்லியமாகப் பின்பற்றுங்கள். சாயத்தை உங்கள் தலைமுடியில் பரிந்துரைக்கப்பட்ட நேரத்திற்கு மேல் வைத்திருப்பதைத் தவிர்க்கவும்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;நன்கு கழுவுங்கள்: &lt;/strong&gt;சாயம் பூசிய பிறகு, தலையை நன்றாக நீரில் கழுவி, வேதிப்பொருட்கள் தோலில் தங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;இயற்கை சாயங்கள்: &lt;/strong&gt;கெமிக்கல் சாயங்களுக்கு மாற்றாக மெஹந்தி (Henna) அல்லது இயற்கை சார்ந்த சாயங்களைப் பயன்படுத்துவது சிறந்த தேர்வாகும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;Fridge Storage : பிரியாணியை எத்தனை நாள் ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடலாம்? பாதுகாப்பா சேமிப்பது எப்படி?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தற்போதைய அறிவியல் சான்றுகளின்படி, வீட்டிலோ அல்லது சலூனிலோ முடிக்கு சாயம் பூசுவதால் புற்றுநோய் ஏற்படும் என்பதற்கு உறுதியான ஆதாரம் இல்லை. இருப்பினும், அதிகப்படியான வேதிப்பொருட்களைத் தவிர்ப்பது மற்றும் தரமான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது எப்போதும் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது.&lt;/p&gt;&lt;p&gt;ஏதேனும் சந்தேகம் இருந்தால், தோல் மருத்துவர் அல்லது புற்றுநோய் நிபுணரிடம் ஆலோசிப்பது சிறந்ததாகும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;குறிப்பு: &lt;/strong&gt;இந்தத் தகவல் பொதுவான விழிப்புணர்விற்காக மட்டுமே. தீவிரமான உடல்நலக் கவலைகள் இருந்தால் மருத்துவரை அணுகவும்.&lt;/p&gt;&lt;p&gt;Honey Facts : 3000 ஆண்டுகளானாலும் தேன் கெட்டுப்போகாதா? ஆச்சரியமூட்டும் அறிவியல் உண்மை!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>life-style</category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/is-hair-dye-safe-doctors-explain-the-risks-91o7dq8"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Soft Chapati: சப்பாத்தி சாஃப்ட்-ஆ வரலையா? இந்த ட்ரிக் யூஸ் பண்ணுங்க.! ஹோட்டல் மாதிரி ரவுண்டாவும், செம்ம மிருதுவாகவும் வரும்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/how-to-make-soft-chapatis-at-home-easy-tricks-to-make-perfectly-round-and-soft-chapatis-like-hotels-eddcn4c</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/how-to-make-soft-chapatis-at-home-easy-tricks-to-make-perfectly-round-and-soft-chapatis-like-hotels-eddcn4c</guid>
            <pubDate>Mon, 06 Jul 2026 16:07:30 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;How to Make Soft Chapatis at Home: பூ மாதிரி சாஃப்டா, பர்ஃபெக்ட் ரவுண்டா சப்பாத்தி செய்றது ஒரு கலைதான். ஆனா, சில ஈஸி டெக்னிக் ஃபாலோ பண்ணா, நீங்களும் சுலபமா ரவுண்ட் சப்பாத்தி செய்யலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwvfwp7psx80w2meg8b87pnm,imgname-how-to-make-soft-chapatis-at-home-1783334066422.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;How to Make Soft Chapatis at Home: பூ மாதிரி சாஃப்டா, பர்ஃபெக்ட் ரவுண்டா சப்பாத்தி செய்றது ஒரு கலைதான். ஆனா, சில ஈஸி டெக்னிக் ஃபாலோ பண்ணா, நீங்களும் சுலபமா ரவுண்ட் சப்பாத்தி செய்யலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரவுண்டா, சாஃப்டா சப்பாத்தி பண்றது பார்க்க ஈஸியா இருந்தாலும், அதுக்கு கொஞ்சம் டெக்னிக்கும் பிராக்டிஸும் தேவை. சரியான முறை தெரியாதப்போ, சப்பாத்தி வட்டமா வர்றதுக்கு பதிலா, அங்கங்க வளைஞ்சு நெளிஞ்சு, ஏதோ ஒரு நாட்டு மேப் மாதிரி ஆகிடும். குறிப்பா, சமையல் கத்துக்கிற புதுசுல இப்படி நடக்குறது சகஜம். இதனால நிறைய பேர் சங்கடப்படுறதும் உண்டு. ஆனா, இனிமே கவலைப்படத் தேவையில்லை. மாவை சரியா பிசையுறது, ஒரே அளவுல உருண்டை பிடிக்கிறது, மெதுவா தேய்க்கிறதுன்னு கத்துக்கிட்டா, சப்பாத்தி தானா ரவுண்டாவும் சாஃப்டாவும் வரும். பிராக்டிஸ் பண்ணப் பண்ண இந்தக் கலை கைக்கு வந்துடும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்: &amp;nbsp;&lt;/strong&gt;Idli Recipe: இட்லி பஞ்சு மாதிரி வேகணுமா? இந்த டெக்னிக் ட்ரை பண்ணி பாருங்க.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சாப்பிடும்போது சப்பாத்தியோட ஷேப் முக்கியம் இல்லைன்னாலும், தட்டுல பார்க்க அழகா ரவுண்டா இருந்தா எல்லாருக்குமே பிடிக்கும். நம்ம ஊர்ல ரவுண்டான சப்பாத்தி மேல ஒரு தனி எதிர்பார்ப்பு இருக்கு. இதனாலயே பல பேருக்கு சரியா செய்ய வரலைன்னா ஒரு மாதிரி தாழ்வு மனப்பான்மை வந்துடும். நீங்களும் ரவுண்டா சப்பாத்தி செய்ய கஷ்டப்படுறீங்கன்னா, இனி கவலைப்படாதீங்க. மாவை சரியா பிசையுறது, ஒரே அளவுல உருண்டை பிடிக்கிறது, மெதுவான கையால தேய்க்கிறதுன்னு சில டெக்னிக்குகளை ஃபாலோ பண்ணா, பர்ஃபெக்ட் ரவுண்ட் சப்பாத்தியை ஈஸியா செய்யலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்:&amp;nbsp;&lt;/strong&gt; Water Bottle: வாட்டர் பாட்டிலில் இந்த கோடுகள் ஏன் இருக்கு? இது வெறும் டிசைன் இல்ல, செம இன்ஜினியரிங் ட்ரிக்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மாவு பிசையும்போது ரொம்ப முக்கியமான விஷயம் அதோட பதம். நீங்க சப்பாத்தி செய்வதில் எக்ஸ்பர்ட் ஆகும் வரை, மாவை ரொம்ப கவனமா பிசையணும். மாவு ரொம்ப தண்ணியாவும் இருக்கக் கூடாது, ரொம்ப கெட்டியாவும் இருக்கக் கூடாதுன்னு ஞாபகம் வெச்சுக்கோங்க. மாவு ரொம்ப சாஃப்டா இருந்தா தேய்க்கும்போது ஒட்டிக்கும், ஷேப் மாறிடும். அதே மாதிரி, ரொம்ப கெட்டியா இருந்தா சப்பாத்தியும் கல்லு மாதிரி ஆகிடும். பிசைஞ்ச மாவை குறைஞ்சது 15-20 நிமிஷம் மூடி வெச்சா, அது நல்லா சாஃப்டாகி, தேய்க்கிறதுக்கு ஈஸியா இருக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்:&amp;nbsp;&lt;/strong&gt; Mutton Curry: மட்டன் பஞ்சு மாதிரி வேகணுமா? இந்த ஒரு ட்ரிக் மட்டும் பண்ணுங்க.! ஹோட்டல் டேஸ்ட்ல வரும்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மாவு பிசைய சாதாரண தண்ணிக்கு பதிலா, வெதுவெதுப்பான நீர், பால் அல்லது கொஞ்சம் நெய் சேர்த்தா இன்னும் நல்லா இருக்கும். இது மாவை சாஃப்டாக்கவும், சப்பாத்தி ரொம்ப நேரம் மென்மையா இருக்கவும் உதவும். குறிப்பா, பால் அல்லது நெய் பயன்படுத்தும்போது சப்பாத்தியோட சுவையும் அதிகமாகும். மாவு பிசைஞ்ச உடனே சப்பாத்தி செய்யாதீங்க. அதுக்கு பதிலா, ஒரு ஈரமான காட்டன் துணியால மூடி வைங்க, இல்லன்னா லேசா தண்ணி தெளிச்சு கொஞ்ச நேரம் ரெஸ்ட்ல விடுங்க. சுமார் 15-20 நிமிஷம் இப்படி ரெஸ்ட் கொடுக்கிறதுனால, மாவு நல்லா செட் ஆகி, சப்பாத்தி தேய்க்கிறதுக்கு சுலபமா இருக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரவுண்டான சப்பாத்தி செய்ய, முதல்ல மாவு உருண்டையை நல்லா வட்டமா உருட்டிக்கோங்க. அப்புறம் அது மேல கொஞ்சம் மாவு (வறண்ட மாவு) தூவி தட்டையாக்குங்க. இதனால தேய்க்கும்போது ஒட்டாம வரும். இப்போ, சப்பாத்தி கட்டையை லேசான கையால அழுத்தி, சப்பாத்தியை ஆன்டி-கிளாக்வைஸ் (கடிகார முள்ளுக்கு எதிர் திசையில்) மெதுவா சுத்திட்டே இருங்க. இதனால சப்பாத்தி பலகை மேல சமமா பரவி, ரவுண்ட் ஷேப் கிடைக்கும். சில முறை தேய்ச்சதுக்கு அப்புறம், சப்பாத்தியை திருப்பிப் போட்டு இன்னொரு பக்கமும் சமமா தேயுங்க. சரியான டெக்னிக் மற்றும் லேசான கை அழுத்தம் இருந்தா, உங்க சப்பாத்தி ரவுண்டா மட்டும் இல்ல, மெலிசாவும் சாஃப்டாவும் வரும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உப்பலான, சாஃப்டான சப்பாத்தி செய்ய சில விஷயங்களை கவனிக்கணும். சப்பாத்தியை தேய்க்கும்போது ரொம்ப மெலிசா தேய்ச்சிடாதீங்க, ஏன்னா அது உப்பி வர்றதை தடுத்துடும். அதே மாதிரி, தேவைக்கு அதிகமா மாவு பயன்படுத்தினாலும் சப்பாத்தி கெட்டியாகிடும். சப்பாத்தியை தவா மேல போடும்போது மிதமான சூட்டுல வேக வைங்க. ஒரு பக்கம் லேசா வெந்ததும், இன்னொரு பக்கத்தை நல்லா வேக விடுங்க. இதுக்கு அப்புறம், தீயை அதிகப்படுத்தி, ஒரு துணியால ஓரங்களை லேசா அழுத்துங்க. இதனால சப்பாத்திக்குள்ள நீராவி உருவாகி, அது அழகா உப்பி வரும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>life-style</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/how-to-make-soft-chapatis-at-home-easy-tricks-to-make-perfectly-round-and-soft-chapatis-like-hotels-eddcn4c"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Energy Drinks: உங்க குழந்தை எனர்ஜி ட்ரிங்க் குடிக்குதா? நிபுணர்கள் சொல்ற இந்த எச்சரிக்கையை தெரிஞ்சுக்கோங்க!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/are-energy-drinks-safe-for-kids-experts-issue-health-warning-g9l81nb</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/are-energy-drinks-safe-for-kids-experts-issue-health-warning-g9l81nb</guid>
            <pubDate>Sun, 05 Jul 2026 16:00:23 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Energy Drinks For Kids: குழந்தைகள் மத்தியில் எனர்ஜி ட்ரிங்க்ஸ் பயன்பாட்டை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பெற்றோர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் இங்கே பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwrv7r8rygjfskb0psknxzj9,imgname-energy-drinks-1783245299991.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Energy Drinks For Kids: குழந்தைகள் மத்தியில் எனர்ஜி ட்ரிங்க்ஸ் பயன்பாட்டை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பெற்றோர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் இங்கே பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சமீப ஆண்டுகளில் குழந்தைகள் மற்றும் பதின்பருவத்தினரிடையே எனர்ஜி டிரிங்க்ஸ் அருந்தும் பழக்கம் அதிகரித்து வருகிறது. கவர்ச்சிகரமான விளம்பரங்கள், வண்ணமயமான பாட்டில்கள் மற்றும் &quot;உடனடி ஆற்றல்&quot; என்ற வாக்குறுதிகள் பலரையும் ஈர்க்கின்றன. ஆனால், இந்த பானங்கள் சாதாரண குளிர்பானங்கள் அல்ல என்றும், குழந்தைகளின் உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;இதன் பின்னணியில், பள்ளிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் எனர்ஜி டிரிங்க்ஸ் விற்பனையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும் சில மாநிலங்களில் அறிவிக்கப்பட்டுள்ளன. எனர்ஜி டிரிங்க்ஸ்களில் அதிக அளவு காஃபின், சர்க்கரை, டாரின், குரானா மற்றும் சில வைட்டமின்கள் சேர்க்கப்படுகின்றன.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;இந்த கலவைகள் தற்காலிகமாக விழிப்புணர்வை அதிகரிக்கலாம். ஆனால், வளர்ந்து வரும் குழந்தைகளின் உடலில் இதன் தாக்கம் வேறுபடும். குறிப்பாக அதிகப்படியான காஃபின், இதயத் துடிப்பு அதிகரிப்பு, பதட்டம், அமைதியின்மை மற்றும் ரத்த அழுத்த உயர்வு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.&lt;/p&gt;&lt;p&gt;முடிக்கு டை அடிப்பதால் என்னென்ன ஆபத்து வரும்? மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த பானங்களை அடிக்கடி அருந்தும் குழந்தைகளுக்கு தூக்கக் குறைபாடு ஏற்படும் அபாயமும் உள்ளது. போதுமான தூக்கம் இல்லாததால், கவனச்சிதறல், நினைவாற்றல் குறைவு, ஆர்வமின்மை மற்றும் மனநிலை மாற்றங்கள் படிப்பில். மேலும், அதிக சர்க்கரை உள்ளதால் உடல் எடை அதிகரிப்பு, பல் சேதம் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களுக்கும் இது வழிவகுக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;இதனால்தான் பல எனர்ஜி ட்ரிங்க் தயாரிப்புகளின் லேபிள்களில், &quot;குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு பரிந்துரைக்கப்படவில்லை&quot; என்ற எச்சரிக்கை இடம்பெறுகிறது. மேலும், இந்த வகை பானங்களின் விளம்பரங்கள் மற்றும் பெயரிடல் குறித்து இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமும் (FSSAI) அண்மையில் கவனம் செலுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;குழந்தைகளுக்கு எனர்ஜி டிரிங்க்ஸ் கொடுப்பதற்குப் பதிலாக, பால், இளநீர், மோர், அளவான இயற்கை பழச்சாறு அல்லது வீட்டிலேயே தயாரிக்கும் பழ ஸ்மூத்திகள் போன்ற ஆரோக்கியமான பானங்களை வழங்குவது நல்லது. குழந்தை சோர்வாக இருப்பதாகத் தோன்றினால், எனர்ஜி ட்ரிங்கைத் தேர்வு செய்வதற்குப் பதிலாக அதன் காரணத்தை மருத்துவரிடம் ஆலோசித்து கண்டறிவதே பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான அணுகுமுறை.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>life-style</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/are-energy-drinks-safe-for-kids-experts-issue-health-warning-g9l81nb"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Instant Idli : பழைய சாதம் இருக்கா? 10 நிமிடத்தில் சூப்பரான இன்ஸ்டன்ட் இட்லி ரெடி!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/health-food/leftover-rice-instant-idli-recipe-how-to-make-soft-and-fluffy-idli-using-leftover-rice-marak5y</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/health-food/leftover-rice-instant-idli-recipe-how-to-make-soft-and-fluffy-idli-using-leftover-rice-marak5y</guid>
            <pubDate>Mon, 06 Jul 2026 09:43:24 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;நம்மில் பல வீடுகளில் தினமும் சாதம் வடிப்பது வழக்கம். சில நேரங்களில் சாதம் மிஞ்சிப்போனால், அதை வைத்து அடுத்த நாள் புளியோதரை அல்லது லெமன் சாதம் செய்வோம். ஆனால், அதே பழைய சாதத்தை வைத்து சூப்பரான இட்லி செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwtsxjn6gbtxvwvkkjv47amn,imgname-chatgpt-image-jul-6--2026--09-39-05-am--1--1783311026854.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;நம்மில் பல வீடுகளில் தினமும் சாதம் வடிப்பது வழக்கம். சில நேரங்களில் சாதம் மிஞ்சிப்போனால், அதை வைத்து அடுத்த நாள் புளியோதரை அல்லது லெமன் சாதம் செய்வோம். ஆனால், அதே பழைய சாதத்தை வைத்து சூப்பரான இட்லி செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆமாம், முதல் நாள் மிஞ்சிய சாதத்தை காலையில் சாப்பிட பலருக்கும் பிடிக்காது. சிலர் அதை சூடு செய்து சாப்பிடுவார்கள், அல்லது வேண்டா வெறுப்பாக தூக்கி எறிந்துவிடுவார்கள். ஆனால் இனி நீங்கள் பழைய சாதத்தை வீணாக்கத் தேவையில்லை. ஏனென்றால், அந்த சாதத்தை வைத்து சூப்பரான, சாஃப்ட்டான இன்ஸ்டன்ட் இட்லி எப்படி செய்வது என்று இங்கே பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;பழைய சாதத்தில் இட்லி செய்யத் தேவையான பொருட்கள் என்னென்ன என்று தெரிந்துகொள்ளுங்கள். 1 கப் பழைய சாதம், 1 கப் ரவை, 1/2 கப் தயிர், 1 டீஸ்பூன் எண்ணெய், 1 பாக்கெட் ஈனோ (Eno), தேவையான அளவு உப்பு, தண்ணீர்.&lt;img&gt;இட்லி எல்லோருக்கும் பிடித்தமான உணவு. இது சுவையாக இருப்பதுடன், எளிதில் ஜீரணமாகும். ஆரோக்கியத்திற்கும் நல்லது. ஆனால் வழக்கமாக இட்லி செய்ய, பருப்பு, அரிசியை பல மணி நேரம் ஊறவைத்து, அரைத்து, புளிக்க வைக்க வேண்டும். ஆனால் இப்போது, இரவில் மிஞ்சிய சாதத்தை வைத்தே பஞ்சு போன்ற மென்மையான இட்லியை உடனே செய்யலாம்.&lt;img&gt;பழைய சாதத்தில் இட்லி செய்ய, முதலில் மிஞ்சிய சாதத்தை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். இந்த பேஸ்ட் மிகவும் தண்ணீராகவோ அல்லது மிகவும் கெட்டியாகவோ இருக்கக்கூடாது. சாதாரண இட்லி மாவின் பதத்தில் இது இருக்க வேண்டும்.&lt;img&gt;இப்போது அரைத்த விழுதை ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். அதனுடன் ரவை, உப்பு, தயிர் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்குங்கள். எல்லாப் பொருட்களும் ஒன்றுடன் ஒன்று நன்கு கலந்திருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். அப்போதுதான் இட்லி நன்றாக வரும்.&lt;img&gt;தயாரான இட்லி மாவை நன்றாக அடித்து, எல்லாப் பொருட்களையும் ஒன்றாகக் கலக்குங்கள். மாவு சரியான இட்லி மாவு பதத்தில் இருப்பதை உறுதி செய்யுங்கள். தேவைப்பட்டால் மட்டும் தண்ணீர் சேர்க்கவும். அதிக தண்ணீர் சேர்த்தால் இட்லி மென்மையாக வராது. அதனால் கவனமாக இருங்கள்.&lt;img&gt;இப்போது இட்லி தட்டுகளில் எண்ணெய் தடவி, இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடு செய்யுங்கள். மாவை தட்டில் ஊற்றுவதற்கு முன்பு, அதில் ஈனோ (Eno) சேர்த்து லேசாகக் கலக்குங்கள். இது இட்லி உப்பி வரவும், மென்மையாகவும் இருக்க உதவும்.&lt;img&gt;இப்போது தயாரித்த மாவை இட்லி தட்டுகளில் ஊற்றி, மிதமான தீயில் பத்து நிமிடங்கள் ஆவியில் வேக வையுங்கள். இடையில் இட்லி பாத்திரத்தைத் திறக்க வேண்டாம். இந்த இன்ஸ்டன்ட் இட்லி செய்ய அதிக நேரமும் எடுக்காது.&lt;img&gt;10 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும். இட்லி ஆறிய பிறகு, ஒரு ஸ்பூன் உதவியுடன் தட்டுகளில் இருந்து இட்லியை எடுக்கவும். பழைய சாதத்தில் இருந்து மிக மென்மையான இட்லி இப்போது தயார். இதை சட்னி, சாம்பாருடன் சூடாகப் பரிமாறலாம்.]]></content:encoded>
            <category>life-style</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/health-food/leftover-rice-instant-idli-recipe-how-to-make-soft-and-fluffy-idli-using-leftover-rice-marak5y"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Dandruff Remedies : பொடுகை விரட்ட 6 எளிய வீட்டு வைத்தியங்கள்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/webstories/life-style/6-easy-home-remedies-to-control-dandruff-naturally-n65bdwl</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/webstories/life-style/6-easy-home-remedies-to-control-dandruff-naturally-n65bdwl</guid>
            <pubDate>Mon, 06 Jul 2026 15:58:58 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Remedies to Control Dandruff : பொடுகுத் தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? இதோ, அதை எளிதாக விரட்ட உதவும் 6 வீட்டு வைத்தியங்கள் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jkhzrje9qqazf1h8qsv8nxjn,imgname-dandruff-145-1738991749577.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <category>life-style</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/webstories/life-style/6-easy-home-remedies-to-control-dandruff-naturally-n65bdwl"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Interesting Facts: இடி இடிக்கும் போது மரத்துக்கு கீழ ஏன் நிக்க கூடாதுனு தெரியுமா? தெரிஞ்சிக்க வேண்டிய ஷாக்கிங் உண்மைகள்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/interesting-facts-the-science-behind-why-lightning-strikes-trees-during-thunderstorms-nr9lnfy</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/interesting-facts-the-science-behind-why-lightning-strikes-trees-during-thunderstorms-nr9lnfy</guid>
            <pubDate>Sun, 05 Jul 2026 12:30:15 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Interesting Facts: மழைக்காலத்துல இடி இடிக்கும்போது மரத்துக்குக் கீழ நிக்காதீங்கன்னு பெரியவங்க சொல்வாங்க. அது ஏன்? மரங்களை குறிவைச்சு இடி தாக்குறதுக்குப் பின்னாடி இருக்கிற அறிவியல் காரணங்கள் என்னன்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwrcfct1w96eqe8cy65d4dcy,imgname-interesting-facts-thunderstrom-1783229821761.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Interesting Facts: மழைக்காலத்துல இடி இடிக்கும்போது மரத்துக்குக் கீழ நிக்காதீங்கன்னு பெரியவங்க சொல்வாங்க. அது ஏன்? மரங்களை குறிவைச்சு இடி தாக்குறதுக்குப் பின்னாடி இருக்கிற அறிவியல் காரணங்கள் என்னன்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.&lt;/p&gt;&lt;img&gt;பொதுவா மழைக்காலத்துல பெருமழை, புயல், இடி, மின்னல், சூறைக்காத்துன்னு அடிக்கடி கேட்போம். மழை வரும்போது முதல்ல மரத்துக்குக் கீழ போகக்கூடாதுன்னு பலரும் சொல்வாங்க. மரங்கள் மேல இடி விழ அதிக வாய்ப்பு இருக்கிறதால, மழை நேரத்துல அங்க போக வேண்டாம்னு நம்ம பெரியவங்கள்ல இருந்து வானிலை நிபுணர்கள் வரைக்கும் எச்சரிக்கிறாங்க. ஆனா, இடினா என்ன? அது ஏன் மரங்கள் மேல அதிகமா விழுது? இதுக்குப் பின்னாடி இருக்கிற அறிவியல் காரணங்கள் என்ன? இடி தாக்குதல்ல இருந்து தப்பிக்க என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கணும்? இதையெல்லாம் பத்தி இங்க தெரிஞ்சுக்கலாம்.&lt;img&gt;நிறைய பேர் இடியை நெருப்புன்னு நினைக்கிறாங்க. ஆனா அது ஒரு சக்திவாய்ந்த மின்சாரப் பாய்ச்சல். வானத்துல மேகங்களுக்கு நடுவுல சுமார் 30 கோடி மெகாவாட் மின்சாரம் உருவாகுது. இது பூமியை நோக்கி வரும்போது, காத்தை சூடாக்கி பிளாஸ்மாவா மாத்துது. இப்படி ஒளியையும் வெப்பத்தையும் வெளியிடுற இந்த மின்சாரம்தான் இடி. இது பூமியை அடையும்போது 27,000 செல்சியஸ் வெப்பநிலையில இருக்கும். அதனாலதான் இடி தாக்கும்போது மரங்கள் எரிஞ்சு சாம்பலாகுது, மனிதர்கள் உயிரிழக்குறாங்க.&lt;img&gt;இடிங்கிறது ஒரு மின்சாரப் பாய்ச்சல். அது வானத்துல இருந்து பூமியை நோக்கி வரும்போது, உயரமான மரங்கள் அதை ஈர்க்குது. அதாவது, மரங்கள் மின்சாரத்தைக் கடத்தியா (conductor) செயல்படுது. அதனாலதான் மரங்கள் மேல இடி அதிகமா விழுது. குறிப்பா, தனியா நிக்குற உயரமான பனை, தென்னை மரங்கள் இயற்கையான மின் கடத்திகளா வேலை செய்யுது. சில மரங்களோட தண்டுல மின்சாரத்தைக் கடத்தும் திரவங்கள் இருக்கிறதால, அது இடியை ஈர்க்குது. ஆச்சரியமான விஷயம் என்னன்னா, பனை மரங்களுக்கு இடியைத் தாங்குற சக்தி இருக்கு. அதனால சில சமயம் இடி தாக்கியும் பனை மரங்கள் தப்பிச்சுடும்.&lt;img&gt;மரங்கள் மேல மட்டுமில்ல, உயரமான மலைகள், பரந்த சமவெளிகள்லயும் இடி அதிகமா தாக்கும். டிரான்ஸ்ஃபார்மர், பெரிய கரண்ட் கம்பங்கள் மாதிரியான மின்சார உபகரணங்கள் மேலயும் இடி விழ வாய்ப்பிருக்கு. அதிகமா மரங்களும், மலைகளும் கிராமங்கள்லதான் இருக்கு. அதனால நகரங்களை விட கிராமங்கள்லதான் இடி அதிகமா விழுது. இந்தியால நடக்குற இடி தாக்குதல்கள்ல சுமார் 96% கிராமப்புறங்கள்லதான் நடக்குதுன்னு வானிலை நிபுணர்கள் சொல்றாங்க. இதனால விவசாயிகள், விவசாய கூலிகள், கால்நடைகள் அதிகமா உயிரிழக்குறாங்க.&lt;img&gt;மழைக்காலத்துல பெருமழை, வெள்ளம் மட்டுமில்ல, இடி, சூறைக்காற்றும் ஆபத்தை ஏற்படுத்தும். அதனால இடி, மின்னலோட மழை பெய்யும்போது மக்கள் ரொம்ப கவனமா இருக்கணும். 1. மரங்கள் இடியை ஈர்க்கும், அதனால மழை நேரத்துல மரத்துக்குக் கீழ நிக்காதீங்க. 2. வயல் வேலை செய்ற விவசாயிகள், கூலிகள் பாதுகாப்பான இடத்துக்குப் போயிடுங்க. 3. திறந்தவெளியில வேலை செய்றவங்களும் இடி விழும்போது ஜாக்கிரதையா இருக்கணும். 4. மின்சார துணை நிலையங்கள், டிரான்ஸ்ஃபார்மர்கள், கரண்ட் கம்பங்கள் பக்கத்துல போகாதீங்க. 5. ஆடு, மாடு போன்ற கால்நடைகளையும் மழை நேரத்துல மரத்தடியில கட்டாதீங்க. 6. குடிசை, தகரக் கொட்டகை மாதிரி தற்காலிக வீடுகள்ல இருக்கிறவங்க கவனமா இருங்க. 7. இடி, மின்னல் இருக்கும்போது செல்போன், மற்ற எலக்ட்ரானிக் பொருட்களைப் பயன்படுத்தாதீங்க.]]></content:encoded>
            <category>life-style</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/interesting-facts-the-science-behind-why-lightning-strikes-trees-during-thunderstorms-nr9lnfy"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Diet Recipe: வயிறு ஃபுல்லாகும்.. வெயிட் மட்டும் குறையும்.! டயட்டுக்கு செம்ம சாய்ஸ் இந்த உணவு.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/want-to-lose-weight-try-this-10-minute-moong-dal-chaat-recipe-qgygln3</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/want-to-lose-weight-try-this-10-minute-moong-dal-chaat-recipe-qgygln3</guid>
            <pubDate>Sun, 05 Jul 2026 23:30:27 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Diet Recipe: டயட் என்றாலே சாட் சாப்பிடக் கூடாது என்று நினைக்கிறீர்களா? ஒரு சிறிய மாற்றம் செய்தாலே, அதே சாட் எடை குறைப்புக்கும் உதவும் ஆரோக்கியமான உணவாக மாறிவிடும்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kfzm95asbpwdw5g22cg650k3,imgname-devil-diet-weight-loss-side-effect-1769514243415.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Diet Recipe: டயட் என்றாலே சாட் சாப்பிடக் கூடாது என்று நினைக்கிறீர்களா? ஒரு சிறிய மாற்றம் செய்தாலே, அதே சாட் எடை குறைப்புக்கும் உதவும் ஆரோக்கியமான உணவாக மாறிவிடும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உடல் எடையை குறைக்க டயட் தொடங்கியது பலரும் முதலில் தவிர்ப்பது சாட், பானிபூரி போன்ற ஸ்நாக்ஸ்கள்தான். ஆனால், ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுவது வேறு. சாட் வகைகளை முழுமையாக தவிர்க்க வேண்டியதில்லை. அதில் பயன்படுத்தப்படும் பொருட்களை ஆரோக்கியமானதாக மாற்றினாலே போதும். அப்படிப்பட்ட சிறந்த தேர்வாக தற்போது பேசப்படுவது பாசிப்பருப்பு சாட். குறைந்த கலோரியுடன் அதிக நேரம் வயிறு நிறைவாக இருக்க உதவுவதால், எடை குறைக்க முயற்சிப்பவர்களின் பட்டியலில் இது இடம்பிடித்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் சோமா பானர்ஜி கூறுவதன்படி, பாசிப்பருப்பில் புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் நீண்ட நேரம் பசி ஏற்படாமல் தடுக்கிறது. இதன் கிளைசெமிக் இன்டெக்ஸ் குறைவாக இருப்பதால் ரத்தத்தில் சர்க்கரை திடீரென உயர்வதையும் கட்டுப்படுத்த உதவுகிறது. அதனால், எடை மேலாண்மையுடன் சர்க்கரை நோய் அல்லது PCOS உள்ளவர்களுக்கு இது நல்ல உணவாகக் கருதப்படுகிறது. எண்ணெய் இல்லாமல் தயாரிக்கப்படுவதால் செரிமானத்துக்கு ஏற்றதாக உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த சாட் தயாரிப்பதும் மிகவும் எளிது. இரவு முழுவதும் ஊறவைத்த பாசிப்பருப்புடன் வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காய், கேரட், கொத்தமல்லி, வறுத்த சீரகப் பொடி, எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு சாட் மசாலா கலந்தால் சில நிமிடங்களிலேயே சுவையான சாட் தயாராகிவிடும். விருப்பப்பட்டால் முளைகட்டிய பாசிப்பருப்பையோ அல்லது சிறிதளவு தயிரையோ சேர்த்து சாப்பிடலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மாலை நேர ஸ்நாக்ஸ், இரவு உணவுக்கு முன்பு அல்லது உடற்பயிற்சிக்குப் பிறகு இந்த சாட்டை சாப்பிடுவது சிறந்ததாக நிபுணர்கள் கூறுகின்றனர். இது தேவையற்ற ஸ்நாக்ஸ் சாப்பிடும் பழக்கத்தை குறைப்பதோடு, புரோட்டீன் தேவையையும் பூர்த்தி செய்ய உதவுகிறது. தொடர்ந்து சரியான உணவுமுறை மற்றும் உடற்பயிற்சியுடன் சேர்த்து எடுத்துக்கொண்டால் உடல் எடையை ஆரோக்கியமாகக் குறைக்க உதவலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இருப்பினும், சிறுநீரக நோய் அல்லது யூரிக் அமிலம் அதிகமாக இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டுமே இதை உணவில் சேர்க்க வேண்டும். மேலும், எடை குறைக்க பாசிப்பருப்பு சாட் மட்டும் போதாது. தினசரி நடைப்பயிற்சி, போதுமான தண்ணீர் குடித்தல் மற்றும் சமநிலையான உணவுமுறையை பின்பற்றினால் மட்டுமே நீடித்த பலனை பெற முடியும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>life-style</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/want-to-lose-weight-try-this-10-minute-moong-dal-chaat-recipe-qgygln3"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Bhagyaraj சமாச்சாரம்: கறிக்குழம்புல முருங்கைக்காய்.! புது மாப்பிள்ளைக்கு விருந்து படைக்கும் டெல்டா வாசிகள்.! சாப்பிட்டா விடவே மாட்டீங்க.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/mutton-kuzhambu-with-drumstick-the-famous-tamil-nadu-new-groom-feast-txddcvw</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/mutton-kuzhambu-with-drumstick-the-famous-tamil-nadu-new-groom-feast-txddcvw</guid>
            <pubDate>Mon, 06 Jul 2026 14:04:52 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தமிழகத்தின் டெல்டா பகுதிகளில், புது மாப்பிள்ளையை வரவேற்க 'முருங்கைக்காய் ஆட்டுக்கறிக் குழம்பு' எனும் சிறப்பு விருந்து பரிமாறப்படுகிறது.இந்த பாரம்பரிய உணவின் செய்முறையையும் இக்கட்டுரை விவரிக்கிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwv7jjntwnk06ye4tcjpcy6g,imgname-chatgpt-image-jul-6--2026--01-31-38-pm--1--1783325346489.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழகத்தின் டெல்டா பகுதிகளில், புது மாப்பிள்ளையை வரவேற்க 'முருங்கைக்காய் ஆட்டுக்கறிக் குழம்பு' எனும் சிறப்பு விருந்து பரிமாறப்படுகிறது.இந்த பாரம்பரிய உணவின் செய்முறையையும் இக்கட்டுரை விவரிக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் தஞ்சை மண், விவசாயத்திற்கு மட்டுமல்ல... பாசத்திற்கும், பாரம்பரிய சுவைகளுக்கும் உலகப் புகழ்பெற்றது. தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட &quot;டெல்டா&quot; மாவட்டங்களில் விருந்தோம்பல் என்பது ஒரு கலை. அதிலும் குறிப்பாக, வீட்டுக்கு வரும் புது மாப்பிள்ளையை உபசரிப்பதில் இவர்களுக்கு நிகர் இவர்களே!&lt;/p&gt;&lt;p&gt;இயக்குநர் பாக்யராஜ் பட பாணியில், பல அர்த்தமுள்ள புன்னகைகளுடனும், பண்பாட்டு மரபுகளுடனும் டெல்டா வாசிகள் தயாரிக்கும் ஒரு பிரத்யேக உணவு தான் &quot;முருங்கைக்காய் ஆட்டுக்கறிக் குழம்பு&quot;. வெறும் கறிக்குழம்பாக இல்லாமல், அதில் முருங்கைக்காயும் உருளைக்கிழங்கும் சேர்த்துச் செய்யப்படும் இந்த காம்பினேஷன், புது மணமக்களை வரவேற்கும் ஒரு சுவையான பண்பாட்டு சடங்காகவே இன்றும் கொண்டாடப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;டெல்டா பகுதி கிராமங்களில் திருமணத்திற்குப் பிறகு புது மாப்பிள்ளையை, மனைவி வீட்டாருக்கும் சுற்றத்தாருக்கும் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தும் &quot;மறுவீட்டு விருந்து&quot; மிக விமரிசையாக நடக்கும். இந்த விருந்தின் பிரதான நாயகனே இந்த முருங்கைக்காய் ஆட்டுக்கறிக் குழம்பு தான். சினிமாவில் இயக்குநர் பாக்யராஜ் முருங்கைக்காயை எதற்கெல்லாம் குறியீடாகப் பயன்படுத்தினாரோ, அதே தத்துவம் தான் இந்த கிராமத்து விருந்தின் பின்னணியிலும் இருக்கிறது!&lt;/p&gt;&lt;img&gt;&lt;ul&gt; &lt;li&gt;ஆரோக்கியமும் வலிமையும்: முருங்கைக்காய் &amp;nbsp;அசாத்திய உடல் வலிமைக்கும், நல்வாழ்விற்கும் அடையாளமாகக் கருதப்படும் ஒரு உணவு.&lt;/li&gt; &lt;li&gt;செழிப்பின் குறியீடு: உருளைக்கிழங்கு குழம்புக்கு ஒரு மாவுச்சத்தான தடிமனையும், இனிமையான சுவையையும் தருகிறது.&lt;/li&gt; &lt;li&gt;தாம்பத்திய வாழ்த்து: புதுமணத் தம்பதிகள் ஆரோக்கியத்துடனும், செழிப்புடனும் தங்களின் புதிய வாழ்க்கையைத் தொடங்க வேண்டும் என்று ஊர் மூத்தோர்கள் வாழ்த்திப் பரிமாறும் பாச உணவு இது.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;மருமகன் வெட்கப்பட்டுக்கொண்டே இந்த குழம்பை ருசித்து சாப்பிடுவதும், அதைச் சுற்றியுள்ள சொந்தங்கள் கிண்டல் செய்வதும் டெல்டா திருமண வீடுகளின் ஆகச்சிறந்த கொண்டாட்டத் தருணமாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த பாரம்பரிய &quot;டெல்டா ஸ்பெஷல்&quot; குழம்பை உங்கள் வீட்டிலும் சமைத்து அசத்த, தேவையான பொருட்கள் இதோ:&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;ஆட்டுக்கறி (மட்டன்) &ndash; அரை கிலோ (கொழுப்பு கலந்தது கூடுதல் சுவை தரும்)&lt;/li&gt; &lt;li&gt;முருங்கைக்காய் &ndash; 2 (நடுத்தர அளவு துண்டுகளாக நறுக்கியது)&lt;/li&gt; &lt;li&gt;உருளைக்கிழங்கு &ndash; 2 (தோல் சீவி, கறித் துண்டுகளின் அளவில் பெரியதாக நறுக்கியது)&lt;/li&gt; &lt;li&gt;பெரிய வெங்காயம் &ndash; 2 (பொடியாக நறுக்கியது)&lt;/li&gt; &lt;li&gt;தக்காளி &ndash; 2 (நன்கு பழுத்தது)&lt;/li&gt; &lt;li&gt;இஞ்சி-பூண்டு விழுது &ndash; 2 டேபிள் ஸ்பூன்&lt;/li&gt; &lt;li&gt;மசாலாக்கள்: மிளகாய்த் தூள், மல்லித்தூள் (தனியா தூள்), மஞ்சள்தூள் &ndash; உங்கள் காரத்திற்கு ஏற்ப&lt;/li&gt; &lt;li&gt;தாளிக்க: கடுகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை&lt;/li&gt; &lt;li&gt;எண்ணெய்: பாரம்பரிய சுவைக்கு நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்&lt;/li&gt; &lt;li&gt;உப்பு &ndash; தேவையான அளவு&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;img&gt;&lt;ul&gt; &lt;li&gt;படி 1: கறியை பக்குவப்படுத்துதல் முதலில் ஆட்டுக்கறியை தண்ணீரில் நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். பிரஷர் குக்கரில் கறியைச் சேர்த்து, அதனுடன் ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, அரை ஸ்பூன் மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு மற்றும் கறி மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 3 முதல் 4 விசில் விட்டு, கறி சாஃப்டாகும் வரை வேகவைத்து தனியாக எடுத்து வைக்கவும்.&lt;/li&gt; &lt;li&gt;படி 2: மசாலா வதக்கல் அடுப்பில் ஒரு கனமான பாத்திரத்தை (அடி கனமான சட்டி அல்லது மண் சட்டி சிறந்தது) வைத்து நல்லெண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பின் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து, அது பொன்னிறமாக மாறும் வரை பொறுமையாக வதக்கவும்.&lt;/li&gt; &lt;li&gt;படி 3: தக்காளி மற்றும் இஞ்சி-பூண்டு சேர்க்கை வெங்காயம் வதங்கியதும் மீதமுள்ள இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசம் போகும் வரை வதக்க வேண்டும். பிறகு, நறுக்கிய தக்காளியைச் சேர்த்து, அது குழைய வதங்கி தொக்கு பதத்திற்கு வரும் வரை வதக்கவும்.&lt;/li&gt; &lt;li&gt;படி 4: காய்கறிகளின் சங்கமம் இப்போது மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து மசாலாவிலிருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்க வேண்டும். இந்த நறுமண தருணத்தில், நறுக்கி வைத்துள்ள முருங்கைக்காய் மற்றும் உருளைக்கிழங்கு துண்டுகளைச் சேர்த்து, மசாலா காய்கறிகளில் சாறும் படி 2 நிமிடங்கள் வதக்கவும்.&lt;/li&gt; &lt;li&gt;படி 5: கறியுடன் கூட்டு சேர்த்தல் காய்கறிகள் வதங்கியதும், தேவையான அளவு தண்ணீர் (அல்லது கறி வேகவைத்த தண்ணீர்) ஊற்றி, தட்டு போட்டு மூடி காய்கறிகளை அரை பதம் வேகவிடவும். காய்கறிகள் வெந்து வரும்போது, நாம் ஏற்கனவே வேகவைத்து வைத்துள்ள ஆட்டுக்கறியை அந்தத் தண்ணீருடன் அப்படியே குழம்பில் சேர்க்கவும்.&lt;/li&gt; &lt;li&gt;படி 6: மசமசவென கொதிக்கும் பக்குவம் இப்போது கறியும், காய்கறிகளும் மசாலாவோடு ஒன்று சேர்ந்து 10 முதல் 15 நிமிடங்கள் மிதமான தீயில் நன்கு கொதிக்க வேண்டும். குழம்பு தட்டியாகி, முருங்கைக்காயின் சதைப்பகுதி வெந்து, உருளைக்கிழங்கு மசமசவென வெந்து, கறித்துண்டுகள் குழம்பை உறிஞ்சி மென்மையாகும் போது, மேலாக நறுக்கிய கொத்தமல்லி தழையைத் தூவி அடுப்பை அணைக்கவும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;img&gt;&lt;p&gt;மணக்க மணக்கத் தயாரான இந்த முருங்கைக்காய் ஆட்டுக்கறிக் குழம்பை, தட்டில் சுடச்சுடப் பரப்பிய வெள்ளைச் சாதத்தின் மேல் ஊற்றி, குழம்பில் ஊறிய முருங்கைக்காயை எடுத்து வாயில் வைத்து உறிஞ்சினால்... அந்த சுவை சொர்க்கம்! கறியின் சாறும், முருங்கைக்காயின் தனித்துவமான நறுமணமும், உருளைக்கிழங்கின் குழைவும் நாக்கில் நடனமாடும்.&lt;/p&gt;&lt;p&gt;டெல்டா பகுதியின் இந்த பாரம்பரிய உணவுச் சிறப்பு, வெறும் பசியை போக்குவதற்கானது மட்டுமல்ல; அது மாப்பிள்ளையைத் தங்கள் வீட்டுப் பிள்ளையாக ஏற்கும் பாசம், உறவுகளைப் பலப்படுத்தும் பண்பாடு, மற்றும் ஆரோக்கிய வாழ்விற்கான அடித்தளம். ஒருமுறை இந்த காம்பினேஷனை ருசித்துப் பார்த்தால், அப்புறம் கறிக்குழம்பு வைக்கும் போதெல்லாம் முருங்கைக்காயைத் தேடி ஓடுவீர்கள் என்பது மட்டும் நிச்சயம்!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>life-style</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/mutton-kuzhambu-with-drumstick-the-famous-tamil-nadu-new-groom-feast-txddcvw"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Amazing Facts: 350 வருட பழமையான இந்திய மார்க்கெட் எங்க இருக்கு தெரியுமா? இங்கு கிடைக்காத பொருளே இல்லை.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/chandni-chowk-bazaar-in-delhi-a-350-year-oldest-market-in-india-history-unique-attractions-and-why-it-is-still-famous-xb8tcix</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/chandni-chowk-bazaar-in-delhi-a-350-year-oldest-market-in-india-history-unique-attractions-and-why-it-is-still-famous-xb8tcix</guid>
            <pubDate>Mon, 06 Jul 2026 12:43:16 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Chandni Chowk Bazaar in Delhi: இந்தியாவின் பழமையான மார்க்கெட்டைப் பார்க்க ஆசையா? சாப்பாட்டுல இருந்து ஷாப்பிங் வரை அங்கே கிடைக்காத பொருளே இல்லை. அந்த பஜார் எங்கே இருக்கிறது, அதன் சிறப்புகள் என்ன என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம் வாங்க.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwv44rp5q27ygm1aed9f64n4,imgname-chandni-chowk-bazaar-in-delhi---1--1783321748164.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Chandni Chowk Bazaar in Delhi: இந்தியாவின் பழமையான மார்க்கெட்டைப் பார்க்க ஆசையா? சாப்பாட்டுல இருந்து ஷாப்பிங் வரை அங்கே கிடைக்காத பொருளே இல்லை. அந்த பஜார் எங்கே இருக்கிறது, அதன் சிறப்புகள் என்ன என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம் வாங்க.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இப்போதெல்லாம் ஷாப்பிங் என்றாலே பெரிய ஷாப்பிங் மால்கள்தான் நினைவுக்கு வரும். ஆனால், உண்மையான ஷாப்பிங் அனுபவத்திற்கு, இது போன்ற பஜார்களுக்குத்தான் செல்ல வேண்டும். நம்ம நாட்டில் 350 வருடமாக இயங்கும் ஒரு பழமையான பஜார் இருக்கிறது. இங்கு கிடைக்காத பொருளே இல்லை. தெருவோர உணவுகள் முதல் உங்களுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் இங்கே கிடைக்கும். அந்த பஜார் எங்கே இருக்கிறது, அதன் சிறப்பு என்ன என்பதைப் பற்றிப் பார்ப்போம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்: &amp;nbsp;&lt;/strong&gt;Mutton: ஆட்டுக்கறிக்கு ஏன் 'மட்டன்'-னு பேரு? அப்ப வெள்ளாட்டுக்கறிக்கு என்ன பேரு?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த பஜாரின் பெயர் சாந்தினி சவுக். இது தலைநகர் டெல்லியில் அமைந்துள்ளது. இந்த சந்தைக்குப் பின்னால் ஒரு பெரிய வரலாறு இருக்கிறது. 1650-ல், முகலாயப் பேரரசர் ஷாஜஹான் தனது தலைநகரை ஆக்ராவிலிருந்து ஷாஜஹானாபாத்திற்கு (பழைய டெல்லி) மாற்றினார். அப்போது, தனது மகள் ஜஹனாரா பேகத்துடன் சேர்ந்து இந்த சிறப்புமிக்க சந்தையை அவர் நிறுவினார்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்:&amp;nbsp;&lt;/strong&gt; iD Idli Batter: 6-ம் வகுப்பு ஃபெயில், இன்று ரூ.4000 கோடிக்கு அதிபதி! இட்லி மாவு விற்று சாதித்த இளைஞரின் கதை.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதை அரைவட்ட வடிவில் வடிவமைத்தது ஒரு சிறப்பு. இந்த சந்தையின் வழியாக யமுனை நதியின் கிளை நதி ஓடியது. அந்த நீரில் சந்தையின் நிழல் நிலா வெளிச்சத்தில் தெரிவதால், இதற்கு 'சாந்தினி சவுக்' (நிலவொளி சதுக்கம்) என்று பெயர் வந்தது. இந்த சந்தை 40 கஜ அகலமும், 1520 கஜ நீளமும் கொண்டது. ஆரம்பத்தில், இங்கு வெள்ளி வியாபாரிகள் அதிகமாக இருந்ததால், இதை 'சில்வர் ஸ்ட்ரீட்' என்றும் அழைத்தார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்: &amp;nbsp;&lt;/strong&gt;Train Science: வழுவழுப்பான தண்டவாளத்தில் ரயில் சக்கரம் வழுக்காதது ஏன்? ஆச்சரியமூட்டும் அறிவியல்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த சந்தை பல சிறப்புகளைக் கொண்டது. 1739-ல் கர்னால் போரின்போது நாதிர் ஷா இந்த சந்தையைக் கொள்ளையடித்தார். 1857-ல் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சியின் போது சந்தையின் ஒரு பகுதி சேதமடைந்தது. இத்தனை பாதிப்புகளுக்குப் பிறகும், இந்த சந்தை இன்றும் உயிர்ப்புடன் காணப்படுகிறது. ஆனால், கட்டப்பட்டபோது இருந்த அரைவட்ட வடிவம் இப்போது இல்லை. இங்கு மசாலாப் பொருட்கள், உலர் பழங்கள், மூலிகைகள், கிராம்பு போன்றவை அதிகளவில் விற்கப்படுகின்றன. ஆசியாவின் மிகப்பெரிய மசாலாப் பொருட்கள் சந்தை இது என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்: &amp;nbsp;&lt;/strong&gt;Bathroom Cleaner: உப்புத் தண்ணி கறையா? பக்கெட், பைப்பை பளபளன்னு மாத்த சூப்பர் டிப்ஸ்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரத்தினங்கள், தங்கம், வெள்ளி, வைரம், முத்துக்கள் போன்றவற்றை விற்கும் நோக்கத்தில்தான் இந்த சந்தை முதலில் உருவாக்கப்பட்டது. அதனால்தான், இன்றும் திருமண நகைகள் வாங்க பலர் இங்கு வருகிறார்கள். இவை மட்டுமல்லாமல், குறைந்த விலையில் ஆடைகள், வளையல்கள், புடவைகள், லேஸ்கள் என இங்கு கிடைக்காத பொருட்களே இல்லை. வீட்டு அலங்காரப் பொருட்கள் முதல் விதவிதமான உணவுகள் வரை அனைத்தும் இங்கே கிடைக்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>life-style</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/chandni-chowk-bazaar-in-delhi-a-350-year-oldest-market-in-india-history-unique-attractions-and-why-it-is-still-famous-xb8tcix"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Kitchen Sink: இரவு தூங்கச் செல்லும் முன் சிங்க் தொட்டியில் ஒரு கைப்பிடி உப்பை போடுங்க.! இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/kitchen-sink-cleaning-with-salt-benefits-of-putting-salt-in-the-sink-before-bed-and-how-it-helps-keep-drains-fresh-y72yuax</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/kitchen-sink-cleaning-with-salt-benefits-of-putting-salt-in-the-sink-before-bed-and-how-it-helps-keep-drains-fresh-y72yuax</guid>
            <pubDate>Mon, 06 Jul 2026 10:57:48 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Kitchen Sink Cleaning with Salt: தூங்கச் செல்வதற்கு முன்னர் சிங்க் தொட்டியில் ஒரு கைப்பிடி உப்பை போட்டால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் விரிவாகக் காணலாம்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwtxvzc24gxs9sr8t795dchk,imgname-kitchen-sink-cleaning-with-salt-1783315168641.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Kitchen Sink Cleaning with Salt: தூங்கச் செல்வதற்கு முன்னர் சிங்க் தொட்டியில் ஒரு கைப்பிடி உப்பை போட்டால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் விரிவாகக் காணலாம்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பெரும்பாலான வீடுகளில் சிங்க்கை சுத்தம் செய்ய விலையுயர்ந்த கிளீனர்களை பயன்படுத்துகிறோம். இருந்தாலும் சிங்க் அவ்வபோது அடைத்துக் கொள்வது, துர்நாற்றம் வீசுவது, தண்ணீர் சரியாக வெளியேறாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் மீண்டும் மீண்டும் ஏற்படும். இதற்காக சிலர் பிளம்பரை அழைத்து செலவு செய்து பழுது பார்க்கிறார்கள். ஆனால் மேற்கூறிய எதுவும் இல்லாமல் உப்பை மட்டும் பயன்படுத்தி சிங்க்கை எப்படி சுத்தம் செய்வது என்பது குறித்து இந்த பதிவில் விளக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்:&amp;nbsp;&lt;/strong&gt; Interesting Facts: இடி இடிக்கும் போது மரத்துக்கு கீழ ஏன் நிக்க கூடாதுனு தெரியுமா? தெரிஞ்சிக்க வேண்டிய ஷாக்கிங் உண்மைகள்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சமையலறை சுத்தத்தில் சிங்க் தொட்டி முக்கிய பங்காற்றுகிறது. காய்கறி கழுவுதல், பாத்திரங்களை கழுவுதல், கை கழுவுதல் போன்ற பல வேலைகள் சிங்க்கில் செய்யப்படுகிறது. ஆனால் இரவில் எவ்வளவு தான் சுத்தம் செய்துவிட்டு உறங்கச் சென்றாலும் காலையில் எழும்பொழுது சமையலறையில் இருந்து துர்நாற்றம் வீசுவதை காண்கிறோம். இதற்கு காரணம் சிங்க் தொட்டியில் உள்ள வடிகால் அல்லது அந்த குழாய்களின் தேங்கி இருக்கும் நீர் தான். இந்த பிரச்சனை குறிப்பாக மழைக்காலங்களில் அதிகமாக காணப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்: &amp;nbsp;&lt;/strong&gt;Interesting Facts: விண்வெளியில் வீரர் இறந்தால் உடலை என்ன செய்வார்கள்? இதுவரை அப்படி நடந்திருக்கா?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதற்கு ஒரு கைப்பிடி உப்பைக் கொண்டே நம்மால் தீர்வு காண முடியும். இரவு உறங்கச் செல்வதற்கு முன்னர் சிங் தொட்டியில் ஒரு கைப்பிடி உப்பை சேர்க்கவும். இது சிங்க் துர்நாற்றம் மற்றும் குழாய் அடைப்பிலிருந்து நிவாரணம் தரும் எளிய வழிமுறையாகும். உப்பிற்கு ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மையும், அழுக்கை தளர்த்தும் இயற்கையான திறமையும் உள்ளது. இது சிங்க் குழாய்களில் உள்ள பிசுபிசுப்பான அழுக்கை நீக்க உதவும். சமையலறையில் சிங்க் குழாய்களில் எண்ணெய், மசாலாக்கள், சிறிய உணவு துகள்கள், சோப்பு ஆகியவை தினமும் சேர்ந்து நாளடைவில் குழாய்களில் ஒட்டுக்கொண்டு துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்: &amp;nbsp;&lt;/strong&gt;Train Science: வழுவழுப்பான தண்டவாளத்தில் ரயில் சக்கரம் வழுக்காதது ஏன்? ஆச்சரியமூட்டும் அறிவியல்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இரவில் சிங்கை சுத்தம் செய்த பின்னர் ஒரு கைப்பிடி கல் உப்பு சேர்த்து விட்டு செல்வது குழாய்களில் உள்ள ஈரப்பதத்தை நீக்கும். பிசுபிசுப்பை குறைக்கும். அடப்புகளைச் சரி செய்யும். துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்தும். மேலும் பூச்சிகள், கரப்பான் பூச்சிகளையும் இது கட்டுப்படுத்தும். ஒரு சிறிய பாத்திரத்தில் சிறிதளவு சுடு தண்ணீர், ஒரு தேக்கரண்டி உப்பு, ஒரு தேக்கரண்டி சமையல் சோடா ஆகியவற்றை கலந்து குழாய்களில் ஊற்றலாம். இது குழாய் அடைபட்டு இருந்தாலோ அல்லது அதிக துர்நாற்றம் வீசினாலோ ஒரு தற்காலிக தீர்வைத் தரும். ஆனால் பெரிய அடைப்பு அல்லது வடிகால் பிரச்சினை இருந்தால் இந்த பிரச்சனை தீர்ந்து தராது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்:&amp;nbsp;&lt;/strong&gt; Electricity Bill: ஜீரோ வாட்ஸ் பல்பு எவ்வளவு மின்சாரம் இழுக்கும் தெரியுமா? உண்மை தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேலும் சமையலறையில் எண்ணெய் நிறைந்த உணவுகள், பயன்படுத்திய எண்ணெய்களை நேரடியாக சிங்க்கில் கொட்டக் கூடாது. உணவுத் துண்டுகளை குப்பைத் தொட்டியில் போட வேண்டும். வாரத்திற்கு ஒருமுறை சுடு தண்ணீர் கொண்டு சிங்கை கழுவ வேண்டும். சிங்க் குழாயில் சிறிய வடிகட்டிகளை பயன்படுத்த வேண்டும். இதுபோன்ற சிறிய பழக்கங்கள் சமையலறையை சுத்தமாகவும், துர்நாற்றம் இல்லாமலும் வைத்திருக்க உதவும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>life-style</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/kitchen-sink-cleaning-with-salt-benefits-of-putting-salt-in-the-sink-before-bed-and-how-it-helps-keep-drains-fresh-y72yuax"/>
        </item>
    </channel>
</rss>
