<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes"?>
<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Tue, 28 Jul 2026 09:05:25 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss/life-style" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[USA Salary: அமெரிக்காவில் மாதம் ரூ.5 லட்சம் சம்பளம்! செலவு போக கையில் எவ்வளவு மிஞ்சும் தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/usa-cost-of-living-indian-earning-5-lakhs-monthly-expenses-and-savings-breakdown-7ed6w8a</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/usa-cost-of-living-indian-earning-5-lakhs-monthly-expenses-and-savings-breakdown-7ed6w8a</guid>
            <pubDate>Tue, 28 Jul 2026 09:05:19 +0530</pubDate>
            <description><![CDATA[அமெரிக்கா போனா கை நிறைய சம்பாதிக்கலாம்னு நம்ம ஊர்ல பலரும் நினைக்கிறாங்க. ஆனா, அங்கே மாசம் 5 லட்சம் ரூபாய் சம்பாதிச்சா கூட, செலவு போக கையில எவ்வளவு நிக்கும்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க. வாங்க பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kyjb6mdg40as3myxqr9t7t49,imgname-salary-1785174643120.jfif" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[அமெரிக்கா போனா கை நிறைய சம்பாதிக்கலாம்னு நம்ம ஊர்ல பலரும் நினைக்கிறாங்க. ஆனா, அங்கே மாசம் 5 லட்சம் ரூபாய் சம்பாதிச்சா கூட, செலவு போக கையில எவ்வளவு நிக்கும்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க. வாங்க பார்க்கலாம்.&lt;img&gt;இந்தியாவிலிருந்து பல இளைஞர்கள் அமெரிக்காவில் செட்டில் ஆக கனவு காண்கிறார்கள். மாதம் $6,000 (சுமார் ₹5 லட்சம்) சம்பாதித்தால், வாழ்க்கை சொர்க்கமாக இருக்கும் என நினைக்கிறார்கள். ஆனால், டாலரில் சம்பாதித்து டாலரிலேயே செலவு செய்யும்போதுதான் நிஜம் புரியும்.&lt;img&gt;அமெரிக்காவில் நீங்கள் சம்பளம் வாங்கியதும், முதலில் கை வைப்பது வரிகள்தான். ஃபெடரல், ஸ்டேட், சோஷியல் செக்யூரிட்டி என சுமார் 20% முதல் 25% வரை வரி பிடித்தம் செய்யப்படும். அதாவது, $6,000 சம்பளத்தில், உங்கள் கைக்கு வருவது சுமார் $4,500 முதல் $4,800 மட்டுமே.&lt;img&gt;செலவுகளில் பெரும் பகுதி வீட்டு வாடகைக்கே போய்விடும். கலிஃபோர்னியா, நியூயார்க் போன்ற நகரங்களில் ஒரு 1BHK வீட்டுக்கு $1,800 முதல் $2,500 வரை வாடகை கேட்கிறார்கள். கரண்ட், கேஸ், வைஃபை பில்களுக்கு தனியாக மாதம் $300 வரை செலவாகும்.&lt;img&gt;வெளியில் சாப்பிட்டால் செலவு எகிறிவிடும். வீட்டிலேயே சமைத்தாலும், இந்திய மளிகைப் பொருட்களின் விலை அதிகம். காய்கறிகள், அரிசி என எல்லாமே காஸ்ட்லி. வீட்டில் சமைத்துச் சாப்பிட்டாலே மாதம் $500 (சுமார் ₹42,000) வரை செலவாகும்.&lt;img&gt;அமெரிக்காவின் பல நகரங்களில் கார் ஒரு அத்தியாவசியத் தேவை. காரின் EMI, பெட்ரோல், இன்சூரன்ஸ் என மாதம் $700 வரை செலவு பிடிக்கும். மருத்துவச் செலவுகள் மிக அதிகம் என்பதால், ஹெல்த் இன்சூரன்ஸ் கட்டாயம். இதுபோக, போன் பில், ஷாப்பிங் என இதர செலவுகளும் உண்டு.&lt;img&gt;இவ்வளவு செலவுகளுக்குப் பிறகு, தனியாக வசிக்கும் ஒருவரால் மாதம் $500 முதல் $1,000 வரை (₹40,000 - ₹80,000) சேமிக்க முடிந்தால் அது பெரிய விஷயம். குடும்பத்துடன் வசித்தால் அல்லது காஸ்ட்லியான நகரத்தில் இருந்தால், சேமிப்பது இன்னும் கடினம். சம்பளம் அதிகம் என்றாலும், வாழ்க்கைச் செலவும் அதிகம் என்பதே அமெரிக்காவின் நிஜம்.]]></content:encoded>
            <category>life-style</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/usa-cost-of-living-indian-earning-5-lakhs-monthly-expenses-and-savings-breakdown-7ed6w8a"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Garden Tips: தினமும் தண்ணி ஊத்த நேரமில்லையா? செடிகள் வாடாமல் இருக்க 5 சூப்பர் டிப்ஸ்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/how-to-keep-plants-alive-without-daily-watering-5-easy-garden-tips-pmk7ysb</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/how-to-keep-plants-alive-without-daily-watering-5-easy-garden-tips-pmk7ysb</guid>
            <pubDate>Tue, 28 Jul 2026 08:29:05 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Garden Tips: உங்கள் வீட்டில் வளர்க்கும் செடிகளுக்கு தினமும் தண்ணீர் ஊற்ற நேரம் இல்லையா? ஆனாலும் நீண்ட நாட்களாக செடிகளை வாடாமல் பிரெஷ்ஷாக வைத்திருக்க முடியும். இது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kyk9dn05fyydjgeq3j0evr08,imgname-garden-tips-1785206330373.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Garden Tips: உங்கள் வீட்டில் வளர்க்கும் செடிகளுக்கு தினமும் தண்ணீர் ஊற்ற நேரம் இல்லையா? ஆனாலும் நீண்ட நாட்களாக செடிகளை வாடாமல் பிரெஷ்ஷாக வைத்திருக்க முடியும். இது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வீட்டில் பசுமையான செடிகளை வளர்ப்பது பலருக்கும் பிடித்தமான ஒன்று. ஆனால், தினமும் அவற்றுக்குத் தண்ணீர் ஊற்ற நேரம் இல்லாதபோது அல்லது கோடைக்காலத்தில் அவை எளிதில் வாடிவிடுவது பெரும் கவலையாக இருக்கும். உண்மையில், தினமும் தண்ணீர் ஊற்றாமலேயே தொட்டிச் செடிகளை பசுமையாக வைத்திருக்க முடியும். அதற்கு, சில அடிப்படையான விஷயங்களில் கவனம் செலுத்தினால் போதும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;தொட்டி முதல் மண் வரை.. கவனிக்க வேண்டியவை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;செடிகள் வாடுவதற்கு முக்கியக் காரணம், நாம் பயன்படுத்தும் தொட்டியும் மண் கலவையும்தான். பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது என்பதற்காக பலரும் சுடுமண் (Terracotta) தொட்டிகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால், இந்தத் தொட்டிகளின் பக்கவாட்டுகள் வழியாகவும் நீர் ஆவியாகி, மண் சீக்கிரமே காய்ந்துவிடும். இதற்குப் பதிலாக, நீரை நீண்ட நேரம் தக்கவைக்கும் பிளாஸ்டிக் அல்லது மெருகூட்டப்பட்ட (Glazed) பீங்கான் தொட்டிகளைப் பயன்படுத்துவது புத்திசாலித்தனம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க&lt;/strong&gt;: Cooker Hacks: குக்கர் விசில் அடிக்கும்போது தண்ணீர் கொட்டுதா? இந்த சிம்பிள் ட்ரிக்ஸ் ஃபாலோ பண்ணுங்க!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதேபோல, தொட்டியின் அளவும் முக்கியம். சிறிய தொட்டிகளில் மண் குறைவாக இருப்பதால், வெயிலில் சில மணி நேரங்களிலேயே ஈரப்பதம் போய்விடும். சற்று பெரிய தொட்டிகளைப் பயன்படுத்தும்போது, மண் மெதுவாகவே சூடாகும், ஈரப்பதமும் நீண்ட நேரம் நீடிக்கும். வெறும் தோட்டத்து மண்ணை மட்டும் பயன்படுத்தாமல், 40% மண், 30% மக்கிய உரம், 20% தேங்காய் நார் கழிவு (Cocopeat) மற்றும் 10% மணல் கலந்த கலவையைத் தயார் செய்தால், அது நீரை உறிஞ்சி மெதுவாக வேர்களுக்குக் கொடுக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;மண்ணின் மேற்பரப்பில் காய்ந்த இலைகள், மரத்தூள் அல்லது வைக்கோல் கொண்டு சுமார் 2 அங்குல தடிமனுக்கு மூடாக்கு (Mulch) அமைப்பது ஒரு சிறந்த தந்திரம். இது நேரடியாக வெயில் படுவதைத் தடுத்து, நீர் ஆவியாவதைக் குறைத்து, மண்ணைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும். இதனால், களைகளின் வளர்ச்சியும் கட்டுப்படுத்தப்படும் என்பது கூடுதல் நன்மை.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க: &lt;/strong&gt;AC Hack: ஏசி கரண்ட் பில்லை பாதியாக குறைக்கும் 'அந்த' ஒரு பட்டன்! இது தெரியாம போச்சே!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;செடிகளுக்கு தினமும் கொஞ்சமாகத் தண்ணீர் தெளிப்பதை விட, வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை ஆழமாக நீர் பாய்ச்சுவது மிகவும் சிறந்தது. தொட்டியின் அடியில் உள்ள துளைகள் வழியாக நீர் லேசாக வெளியேறும் வரை தண்ணீர் ஊற்ற வேண்டும். இப்படிச் செய்வதால், வேர்கள் ஆழமாகச் சென்று, மண்ணின் கீழ்ப்பகுதியில் உள்ள ஈரப்பதத்தையும் எடுத்துக்கொள்ளும். தண்ணீர் ஊற்றுவதற்கு மிகச் சரியான நேரம் அதிகாலை வேளைதான்.&lt;/p&gt;&lt;p&gt;மதிய வெயிலில் தண்ணீர் ஊற்றினால், அது செடியின் வேர்களைச் சென்றடைவதற்கு முன்பே ஆவியாகிவிடும். அதே சமயம், ஈரப்பதம் தேவை என்பதற்காக தொட்டியில் நீர் தேங்கிவிடாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். தொட்டியின் அடியில் முறையான வடிகால் துளைகள் இருப்பது அவசியம், இல்லையெனில் வேர்கள் அழுகிவிடும் அபாயம் உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கடுமையான மதிய வெயில் படும் இடத்தில் செடிகளை வைப்பதைத் தவிர்க்க வேண்டும். காலை வெயில் மட்டும் படும் பால்கனி அல்லது மர நிழலில் வைப்பது நல்லது. தேவைப்பட்டால், 40 முதல் 50 சதவிகிதம் நிழல் தரும் பச்சை வலைகளைப் (Shade Net) பயன்படுத்தலாம். இது செடிகளின் நீர் தேவையைக் கணிசமாகக் குறைக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;சில நாட்கள் ஊருக்குச் செல்ல வேண்டியிருந்தால், தண்ணீர் பாட்டிலில் சிறிய துளையிட்டு, அதைத் தலைகீழாக மண்ணில் சொருகி வைக்கும் எளிய முறையைப் பின்பற்றலாம். இது சொட்டு நீர் பாசனம் போலச் செயல்பட்டு, செடிகளைக் காயாமல் பாதுகாக்கும். இது பெரிய ராக்கெட் சைன்ஸ் எல்லாம் இல்லை, கொஞ்சம் மெனக்கெட்டால் போதும், உங்கள் வீட்டுத் தோட்டம் எப்போதும் பசுமையாக இருக்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>life-style</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/how-to-keep-plants-alive-without-daily-watering-5-easy-garden-tips-pmk7ysb"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Harm Your Brain : மூளையைக் மெதுவாகப் பாதிக்கும் 8 அன்றாடப் பழக்கங்கள்: நரம்பியல் நிபுணரின் முக்கிய எச்சரிக்கை!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/8-daily-habits-that-can-harm-your-brain-according-to-a-neurosurgeon-n3yoft3</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/8-daily-habits-that-can-harm-your-brain-according-to-a-neurosurgeon-n3yoft3</guid>
            <pubDate>Mon, 27 Jul 2026 20:30:20 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;நாம் செய்யும் சில சாதாரண பழக்கங்கள் மூளையின் ஆரோக்கியத்தையும் நினைவாற்றலையும் பாதிக்கும். நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் சுட்டிக்காட்டும், மூளையை பாதிக்கும் 8 தவறான பழக்கங்கள் மற்றும் அவற்றை தவிர்க்கும் வழிகளைப் பற்றி இங்கு காண்போம்!&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kyhzec9akmzya4ragbwq8tp3,imgname-brain-health--1--1785162314026.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;நாம் செய்யும் சில சாதாரண பழக்கங்கள் மூளையின் ஆரோக்கியத்தையும் நினைவாற்றலையும் பாதிக்கும். நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் சுட்டிக்காட்டும், மூளையை பாதிக்கும் 8 தவறான பழக்கங்கள் மற்றும் அவற்றை தவிர்க்கும் வழிகளைப் பற்றி இங்கு காண்போம்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இரவில் 6 முதல் 8 மணி நேரத்திற்கும் குறைவாகத் தூங்குவது மூளையின் நினைவாற்றலை நேரடியாகப் பாதிக்கும். நாம் தூங்கும்போதுதான் மூளை தனது கழிவுகளை வெளியேற்றி, அன்றாட நினைவுகளை ஒழுங்குபடுத்துகிறது. தூக்கம் குறையும் போது மூளை சோர்வடைவதோடு, நினைவாற்றல் இழப்பு மற்றும் ஸ்ட்ரோக் (Brain Stroke) ஆபத்தும் அதிகரிக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தொடர்ந்து 6 முதல் 8 மணி நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்வது மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தைக் குறைக்கிறது. இது புதிய நினைவுகளை உருவாக்கும் மூளையின் பகுதியான 'மீடியல் டெம்போரல் லோப்' (Medial Temporal Lobe) சுருங்குவதற்குக் காரணமாகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இரவில் தூங்குவதற்கு முன் மொபைல், லேப்டாப் அல்லது டிவிகளைப் பார்ப்பதால், அதிலிருந்து வரும் நீல வெளிச்சம் (Blue Light) மெலடோனின் (Melatonin) என்ற தூக்க ஹார்மோன் உற்பத்தியைத் தடுக்கிறது. இதனால் ஆழ்ந்த தூக்கம் பாதிக்கப்பட்டு மூளை ஓய்வின்றித் தவிக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தொடர்ச்சியான கவலை மற்றும் மன அழுத்தம் உடலில் 'கார்டிசோல்' (Cortisol) என்ற ஹார்மோனை அதிகளவில் சுரக்கச் செய்கிறது. இது மூளையின் கற்றல் மற்றும் நினைவாற்றலுக்குக் காரணமான செல்களுக்குச் சேதத்தை ஏற்படுத்துகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதிக சர்க்கரை, கொழுப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை (Ultra-processed foods) உண்பது மூளையில் வீக்கத்தை (Inflammation) உண்டாக்கும். ஆரோக்கியமான காய்கறிகள், பழங்கள், கொட்டைகள் (Nuts) மற்றும் தானியங்களை உணவில் சேர்ப்பது மூளையின் இளமையைத் தக்கவைக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பேசிப் பழகாமல் தனிமையில் இருப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும். சமூகத் தொடர்பு குறைவாக உள்ளவர்களுக்கு மூளையின் 'சாம்பல் நிறப் பகுதி' (Gray Matter) விரைவாகச் சுருங்கி, 'அல்சைமர்' (Alzheimer's) போன்ற நோய்கள் வர அதிக வாய்ப்புள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஹெட்போன்களில் அதிக சத்தத்துடன் தொடர்ந்து பாட்டு கேட்பது காது கேட்கும் திறனைப் பாதிப்பதுடன், மூளையின் தகவல் செயலாக்கத் திறனையும் (Information Processing) குறைக்கிறது. சத்தத்தைக் கட்டுக்குள் வைப்பது மூளைக்கும் நல்லது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உடற்பயிற்சி செய்யாததும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளாமல் மூளையை ஒரே மாதிரியாக வைத்திருப்பதும் மூளையின் சுறுசுறுப்பைக் குறைக்கும். தினமும் சிறிது நடைபயிற்சி செய்வதும், புதிர் போட்டிகள் அல்லது புதிய திறன்களைக் கற்பதும் மூளை செல்களைப் புத்துணர்ச்சியுடன் வைக்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>life-style</category>
            <dc:creator>Priya Velan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/8-daily-habits-that-can-harm-your-brain-according-to-a-neurosurgeon-n3yoft3"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Hibiscus Shampoo : இரசாயனம் இல்லாத செம்பருத்தி மூலிகை ஷாம்பூ வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/how-to-make-chemical-free-homemade-hibiscus-shampoo-for-healthy-hair-tohy63t</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/how-to-make-chemical-free-homemade-hibiscus-shampoo-for-healthy-hair-tohy63t</guid>
            <pubDate>Mon, 27 Jul 2026 19:45:17 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;இரசாயன ஷாம்பூக்களுக்கு மாற்றாக, வீட்டிலேயே செம்பருத்தி பூ மற்றும் இலைகளைக் கொண்டு இயற்கை மூலிகை ஷாம்பூ தயாரிக்கலாம். இது முடி உதிர்வைக் கட்டுப்படுத்தி, தலைமுடியை பளபளப்பாகவும் வலுவாகவும் மாற்றும் சிறந்த இயற்கை தீர்வாகும்!&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kyhvmn0e5cj6r0rswey5bsw6,imgname-hibiscus-shampoo--1--1785158325262.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;இரசாயன ஷாம்பூக்களுக்கு மாற்றாக, வீட்டிலேயே செம்பருத்தி பூ மற்றும் இலைகளைக் கொண்டு இயற்கை மூலிகை ஷாம்பூ தயாரிக்கலாம். இது முடி உதிர்வைக் கட்டுப்படுத்தி, தலைமுடியை பளபளப்பாகவும் வலுவாகவும் மாற்றும் சிறந்த இயற்கை தீர்வாகும்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்றைய காலத்தில் கடைகளில் கிடைக்கும் பெரும்பாலான ஷாம்பூக்களில் சல்பேட், பாராபென் போன்ற வீரியமிக்க இரசாயனங்கள் கலந்திருக்கின்றன. இவை ஆரம்பத்தில் முடியை சுத்தப்படுத்துவது போல தெரிந்தாலும், நாளடைவில் உச்சந்தலையின் இயற்கை எண்ணெய்யை உறிஞ்சி முடி உதிர்வையும் வறட்சியையும் ஏற்படுத்துகின்றன. இதற்கு தீர்வாக, நமது வீட்டிலேயே உள்ள இயற்கை பொருட்களைக் கொண்டு கெமிக்கல் இல்லாத செம்பருத்தி மூலிகை ஷாம்பூவை எளிதாகத் தயாரிக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;செம்பருத்தி பூக்கள் மற்றும் இலைகளில் அமினோ அமிலங்கள், வைட்டமின் சி மற்றும் இயற்கை ஈரப்பதம் (mucilage) அதிகளவில் உள்ளன. இவை கூந்தல் வேர்களை வலுப்படுத்தி, முடி உதிர்வதைத் தடுக்கின்றன. மேலும், பொடுகுத் தொல்லையைக் குறைத்து, முடிக்கு இயற்கையான பளபளப்பையும் மென்மையையும் தருகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;செம்பருத்தி பூக்கள்: 4 - 5&lt;/p&gt;&lt;p&gt;செம்பருத்தி இலைகள்: 8 - 10&lt;/p&gt;&lt;p&gt;பாசிப்பயறு மாவு அல்லது சிகக்காய் தூள்: 2 ஸ்பூன் (சுத்தப்படுத்துவதற்காக)&lt;/p&gt;&lt;p&gt;தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்: 1 ஸ்பூன்&lt;/p&gt;&lt;p&gt;தண்ணீர்: தேவையான அளவு&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முதலில் செம்பருத்தி பூக்கள் மற்றும் இலைகளை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.&lt;/p&gt;&lt;p&gt;ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் இலைகள் மற்றும் பூக்களை சேர்த்து மிதமான தீயில் 5 முதல் 7 நிமிடங்கள் வேக வைக்கவும்.&lt;/p&gt;&lt;p&gt;சாறு இறங்கி தண்ணீர் சற்று தடிமனாக மாறும்போது அடுப்பை அணைத்து குளிர வைக்கவும்.&lt;/p&gt;&lt;p&gt;பின்னர், இலைகளையும் பூக்களையும் நன்றாகக் பிசைந்து சாற்றை வடிகட்டிக் கொள்ளவும்.&lt;/p&gt;&lt;p&gt;இந்த சாற்றுடன் பாசிப்பயறு மாவு மற்றும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலக்கினால் நுரை போன்ற இயற்கை ஷாம்பூ தயார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தலையை நனைத்து, தயாரித்த செம்பருத்தி கலவையை உச்சந்தலையிலும் கூந்தலிலும் தேய்த்து லேசாக மசாஜ் செய்யவும். இதில் இரசாயன நுரை வராது என்றாலும், முடியில் உள்ள அழுக்குகள் மற்றும் எண்ணெய்யை இது முழுமையாக அகற்றிவிடும். 3 முதல் 5 நிமிடங்கள் கழித்து சாதாரண தண்ணீரில் கூந்தலை அலசலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த இயற்கை ஷாம்பூவில் கெமிக்கல் பிரசர்வேடிவ்கள் இல்லாததால், தயாரித்த அன்றே பயன்படுத்துவது சிறந்தது.&lt;/p&gt;&lt;p&gt;வாரம் ஒரு முறை அல்லது இரு முறை இந்த முறையைப் பின்பற்றி வந்தால், கூந்தல் அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரத் தொடங்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>life-style</category>
            <dc:creator>Priya Velan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/how-to-make-chemical-free-homemade-hibiscus-shampoo-for-healthy-hair-tohy63t"/>
        </item>
        <item>
            <title><![CDATA[chicken recipe : பேச்சுலர்ஸ் சிக்கன் - இவ்வளவு ஈஸியா யாராலையும் செய்ய முடியாது]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/easy-and-simple-bachelor-chicken-recipe-in-tamil-931e28t</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/easy-and-simple-bachelor-chicken-recipe-in-tamil-931e28t</guid>
            <pubDate>Mon, 27 Jul 2026 17:30:17 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;பேச்சுலர்களுக்கான ஈஸி சிக்கன் கிரேவி! மசாலா அரைக்கவோ, வெங்காயம்-தக்காளி வதக்கவோ தேவையில்லை. கடைகளில் வாங்கி ஆரோக்கியத்தை கெடுத்துக்காம, வீட்டிலேயே மிகக் குறைந்த நேரத்தில் அட்டகாசமான சுவையில் செய்யலாம். முயற்சித்துப் பாருங்கள்!&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kyhnxx2xqeabsr49pzbgxevc,imgname-chicken-recipe--1--1785152336989.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;பேச்சுலர்களுக்கான ஈஸி சிக்கன் கிரேவி! மசாலா அரைக்கவோ, வெங்காயம்-தக்காளி வதக்கவோ தேவையில்லை. கடைகளில் வாங்கி ஆரோக்கியத்தை கெடுத்துக்காம, வீட்டிலேயே மிகக் குறைந்த நேரத்தில் அட்டகாசமான சுவையில் செய்யலாம். முயற்சித்துப் பாருங்கள்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சொந்த ஊரை விட்டு வெளியூரில் தங்கி வேலை செய்யும் அல்லது படிக்கும் பிரமச்சாரிகளுக்கு (பேச்சுலர்ஸ்) சமையல் என்பது எப்போதும் ஒரு சவாலான விஷயமாகவே இருக்கிறது. குறிப்பாக, விடுமுறை நாட்களில் நாவை அடிமையாக்கும் அசைவ உணவைச் சாப்பிடத் தோன்றும் போது, அதிக மசாலாக்கள் மற்றும் சிக்கலான செய்முறைகள் இல்லாத எளிய சமையல் முறைகளையே அனைவரும் விரும்புவார்கள். மிகக் குறைந்த பொருட்கள், குறைந்த நேரம், ஆனால் நாவில் எச்சில் ஊறவைக்கும் சுவை&mdash;இவை அனைத்தையும் ஒரே உணவில் கொண்டு வருவது தான் இந்த 'பேச்சுலர்ஸ் சிக்கன்'. பெரிய அளவில் சமையல் அனுபவம் இல்லாதவர்களும் கூட மிக எளிதாகச் செய்து அசத்தக்கூடிய இந்தச் சுவையான சமையல் ரெசிபி இதோ உங்களுக்காக...&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தனியாக மசாலா வதக்குவது போன்ற சிரமங்களைத் தவிர்க்க, கழுவிய கோழிக்கறியுடன் இஞ்சி-பூண்டு விழுது, தயிர், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், எண்ணெய் மற்றும் தேவையான அளவு கல் உப்பு சேர்த்து நேரடியாகச் சமைக்கும் பாத்திரத்திலேயே 15 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பேச்சுலர்களுக்கு மிக்ஸி பயன்படுத்துவது சிரமமாக இருக்கும். எனவே, பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை ஊறிய கறியோடு நேரடியாகச் சேர்த்து, சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். வெங்காயம், தக்காளி வேண்டாம் என்றால் தவிர்த்து விடலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இக்கறிக்குத் தனியாகத் தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியமில்லை. பாத்திரத்தை மூடி வைத்து மிதமான தீயில் வேகவைக்கும் போது, கோழிக்கறி மற்றும் தயிரில் இருந்து வெளிவரும் நீரே கறி வெந்து திக்கான கிரேவியாக மாறப் போதுமானது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கறி முக்கால் பதம் வெந்ததும், கடைகளில் கிடைக்கும் மிளகுத் தூள் மற்றும் சீரகத் தூளைத் தூவி நன்கு கிளறி விட வேண்டும். இது கறிக்குக் கூடுதல் நிறத்தையும், செரிமானத்திற்கு உதவும் நறுமணத்தையும் தரும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இறுதியாக, அடுப்பை அணைப்பதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன், இரண்டு பச்சை மிளகாய்களை நீளவாக்கில் கீறிப்போட்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலைகளை தூவி மூடி வைக்க வேண்டும். கிரேவி பதத்திற்கோ அல்லது தண்ணீர் முழுவதுமாக வற்றி வறுவல் பதத்திற்கோ வந்ததும் இறக்கி பரிமாறலாம். இந்த எளிய தாளிப்பற்ற முறை உணவிற்கு அற்புதமான வாசனையைக் கொடுக்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>life-style</category>
            <dc:creator>Priya Velan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/easy-and-simple-bachelor-chicken-recipe-in-tamil-931e28t"/>
        </item>
        <item>
            <title><![CDATA[fish gravy : செட்டிநாடு ஃபிஷ் கிரேவி இப்படி செய்து பாருங்க: பல நாட்களுக்கு சுவை மறக்காது]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/spicy-and-tasty-chettinad-fish-gravy-recipe-in-tamil-oit5350</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/spicy-and-tasty-chettinad-fish-gravy-recipe-in-tamil-oit5350</guid>
            <pubDate>Mon, 27 Jul 2026 16:43:30 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;அசைவ உணவுகளில் மீன் கறிக்கு இருக்கும் நறுமணமும் சுவையும் வேறு எதற்கும் ஈடாகாது. குறிப்பாக, காரைக்குடி மற்றும் செட்டிநாட்டு பகுதிகளில் பாரம்பரிய சமையல் முறையில் தயாரிக்கப்படும் மீன் குழம்பு, அதன் அடர்த்தியான கிரேவி பதம் மற்றும் நாவைத் தூண்டும்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kyhm0mznxth8xy9yjb40jbnb,imgname-fish-gravy-8--1--1785150329843.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;அசைவ உணவுகளில் மீன் கறிக்கு இருக்கும் நறுமணமும் சுவையும் வேறு எதற்கும் ஈடாகாது. குறிப்பாக, காரைக்குடி மற்றும் செட்டிநாட்டு பகுதிகளில் பாரம்பரிய சமையல் முறையில் தயாரிக்கப்படும் மீன் குழம்பு, அதன் அடர்த்தியான கிரேவி பதம் மற்றும் நாவைத் தூண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;செட்டிநாட்டுச் சமையல் என்றாலே அதன் தனித்துவமான நறுமணமும், நாவை அடிமையாக்கும் காரசாரமான சுவையும் தான் நினைவிற்கு வரும். வழக்கமாகச் செய்யப்படும் மீன் குழம்புகளில் இருந்து மாறுபட்டு, வறுத்து அரைத்த பிரத்யேக மசாலாக்களின் சேர்க்கையோடு தயாரிக்கப்படும் செட்டிநாடு மீன் கிரேவி, உணவப்பிரியர்களின் இதயத்தைக் கவரும் ஒரு அற்புத உணவுப் படைப்பாகும். மீனின் மென்மை கெடாமலும், மசாலாவின் காரம் மீனின் ஒவ்வொரு துண்டிலும் ஆழமாக இறங்கும் வகையிலும் பாரம்பரிய முறையில் இந்த உணவை எப்படித் தயாரிப்பது? அதே செட்டிநாட்டு சுவையில் நம் வீட்டிலும் ஃபிஷ் கிரேவி செய்து பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;செட்டிநாட்டுச் சுவையின் ரகசியமே மசாலாவை உடனுக்குடன் வறுத்து அரைப்பதில் தான் உள்ளது. வரக்கொத்தமல்லி, காய்ந்த மிளகாய், சீரகம், சோம்பு, மிளகு ஆகியவற்றுடன் சிறிதளவு கல்பாசி மற்றும் சோம்பு சேர்த்து மிதமான தீயில் வறுத்து, பொடி செய்யாமல் விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இக்கறிக்கு நறுக்கிய பெரிய வெங்காயத்திற்குப் பதிலாக, தோலுரித்த சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை முழுதாகப் பயன்படுத்துவது நறுமணத்தைக் கூட்டும். நல்லெண்ணெயில் பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் பொன்னிறமாக வதங்கும் போது வெளிப்படும் நறுமணமே இக்கறியின் அடிப்படைச் சுவையாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பழைய புளியைக் கரைத்து ஊற்றுவது செட்டிநாட்டு மீன் குழம்பிற்குத் தனி நிறத்தையும் சுவையையும் தரும். புளிக்கரைசலுடன், புதிதாக அரைத்த மசாலா விழுதைச் சேர்த்துப் பச்சை வாசனை போக நன்கு கொதிக்க வைக்க வேண்டும். எண்ணெய் பிரிந்து மேலே வரும் பதம் மிகவும் முக்கியம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மசாலா நன்கு கொதித்து திக் ஆன பிறகு, தீயைக் குறைத்து நறுக்கிய மீன் துண்டுகளைச் சேர்க்க வேண்டும். மீன் சேர்த்த பிறகு கரண்டியால் அதிகமாகக் கிளறக் கூடாது. மிதமான தீயில் 5 முதல் 7 நிமிடங்கள் வரை மட்டுமே வேகவைப்பது மீன் உடையாமல் இருக்க உதவும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இறுதியாகச் சிறிதளவு நல்லெண்ணெயில் கடுகு, வெந்தயம், சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை தாளித்துக் கொட்ட வேண்டும். இந்த மீன் கிரேவியை மண் பாத்திரத்தில் சமைத்து, குறைந்தது இரண்டு மணி நேரம் கழித்துப் பரிமாறினால் அதன் சுவை பன்மடங்கு அதிகரிக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கிரேவி இன்னும் திக்காக வேண்டும், காரம் அதிகம் வேண்டாம் என்பவர்கள் மசாலா வறுத்து அரைக்கும் போலு அதில் சிறிதளவு தேங்காய் துருவல் ஒரு ஸ்பூன் சேர்த்து அரைத்து சேர்க்கலாம். அதன் சுவை இன்னும் தனித்துவமானதாக இருக்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>life-style</category>
            <dc:creator>Priya Velan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/spicy-and-tasty-chettinad-fish-gravy-recipe-in-tamil-oit5350"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Dad and Daughter: மகள்களை பெற்ற அப்பாவா நீங்க? மகள் பிறந்ததும் அப்பாக்களுக்கு வர்ற 5 ஷாக்கிங் மாற்றங்கள் என்னனு தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/dad-and-daughter-5-surprising-ways-a-father-changes-after-the-birth-of-a-baby-girl-gqh59i5</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/dad-and-daughter-5-surprising-ways-a-father-changes-after-the-birth-of-a-baby-girl-gqh59i5</guid>
            <pubDate>Mon, 27 Jul 2026 15:34:59 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Dad and Daughter: ஒரு பெண் குழந்தை பிறந்த தருணம் முதல், ஒரு தந்தையின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் தொடங்குகின்றன. மகள் பிறந்த பிறகு தந்தையிடம் காணப்படும் சில ஆச்சரியமான மாற்றங்களைப் பற்றிப் பார்ப்போம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kyhg7zrgdyzwvkkjn06xh12c,imgname-dad-and-daughter---1-1785146375952.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Dad and Daughter: ஒரு பெண் குழந்தை பிறந்த தருணம் முதல், ஒரு தந்தையின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் தொடங்குகின்றன. மகள் பிறந்த பிறகு தந்தையிடம் காணப்படும் சில ஆச்சரியமான மாற்றங்களைப் பற்றிப் பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒரு குடும்பத்துல பெண் குழந்தை பிறந்தா, அந்த அப்பாவோட வாழ்க்கையில ஒரு பெரிய மாற்றம் ஆரம்பிக்குதுன்னு அர்த்தம். மகளோட சிரிப்பு, அவளோட மழலை பேச்சு, அப்பான்னு கூப்பிடுறதுன்னு எல்லாமே ஒரு அப்பாவோட மனசுல புது உணர்வுகளைக் கொண்டு வரும். அதுவரைக்கும் உணர்ச்சிகளை வெளிக்காட்டாத, கடினமான மனுஷனா இருந்தவர் கூட, மக பிறந்ததும் மொத்தமா மாறிடுவார். அப்படி ஒரு அப்பாகிட்ட வர்ற 5 முக்கியமான மாற்றங்கள் என்னென்னன்னு இப்போ பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் -&lt;/strong&gt; Sani Peyarchi: 30 வருடங்களுக்குப் பின் மேஷ ராசியில் சனி பெயர்ச்சி.! 4 ராசிகளுக்கு கொட்டி கொடுக்கப்போகும் சனி பகவான்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நிபுணர்கள் சொல்றபடி, மகள் பிறக்கிறதுக்கு முன்னாடி பல அப்பாக்கள் தங்களோட உணர்ச்சிகளை வெளியே காட்ட தயங்குவாங்க. ஆனா, மகள் முதல் முறையா அவரோட விரலைப் பிடிச்ச அந்த நொடியில இருந்து, அவரோட இதயம் ரொம்ப மென்மையாகிடும். அவ சிரிச்சா சந்தோஷத்துல கண்ணு கலங்கும், அவளுக்கு சின்னதா அடிபட்டா கூட அப்பாவோட மனசு துடிச்சுப் போகும். இதுக்கு முன்னாடி அழாத ஆள் கூட, மகளுக்காக ரொம்ப எமோஷனல் ஆகுறதப் பார்க்கலாம். இந்த நேரத்துலதான் அன்பு காட்டுறது, குடும்பத்தோட நேரம் செலவிடுறதுன்னு நல்ல மாற்றங்கள் தெரியும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் -&lt;/strong&gt; Jasmine: மல்லிகை பூ சீக்கிரம் வாடிப் போகுதா? இந்த ட்ரிக் மட்டும் பண்ணுங்க.! ஒரு வாரம் ஆனாலும் அப்படியே இருக்கும்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மகள் பிறந்ததும், ஒவ்வொரு அப்பாவும் தன்னோட மகளோட எதிர்காலத்தைப் பத்தி யோசிக்க ஆரம்பிச்சிடுவார். அவளோட படிப்பு, பாதுகாப்பு, சமூகத்துல அவ சந்திக்கப்போற சவால்கள்னு எல்லாத்தையும் யோசிப்பார். இதனால, பெண்கள் வாழ்க்கையில சந்திக்கிற பாகுபாடு, பயம், கஷ்டங்கள், பொறுப்புகள் எவ்வளவு கடினமானதுன்னு அவருக்கு இன்னும் தெளிவா புரியும். இதோட விளைவா, பெண்கள் மேல அவருக்கு மரியாதை அதிகமாகும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் - &lt;/strong&gt;Vande Bharat: ஒரு வந்தே பாரத் ரயில் செய்ய எத்தனை கோடி செலவாகும் தெரியுமா? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மகளோட எதிர்காலத்தை நினைக்கிற ஒவ்வொரு அப்பாவுக்கும் பொறுப்பு உணர்வு தானாகவே அதிகமாகிடும். அவளுக்கு நல்ல படிப்பு, ஆரோக்கியம், வாழ்க்கையில எந்த குறையும் இருக்கக் கூடாதுன்னு ஒரு தவிப்பு வரும். இந்த எண்ணம்தான் அவரை இன்னும் கடினமா உழைக்க வைக்கும். வேலையில அதிக கவனம் செலுத்துறது, பொருளாதார ரீதியா வலுவாக புது வாய்ப்புகளைத் தேடுறது, சேமிக்கிறதுன்னு பழக்கங்கள் அதிகமாகும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் - &lt;/strong&gt;Shower Tips: பச்சைத் தண்ணி குளியலா, வெந்நீர் குளியலா? எது பெஸ்ட்? சயின்ஸ் என்ன சொல்லுது?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒவ்வொரு அப்பாவும்தான் தன் மகளோட முதல் ஹீரோ. அவ பாதுகாப்பா இருக்கணும், எந்த ஆபத்தும் அவ பக்கத்துல வரக்கூடாதுன்னு ஒவ்வொரு நிமிஷமும் நினைப்பார். சின்ன வயசுல ஸ்கூலுக்கு போறதுல இருந்து, படிப்பு, நண்பர்கள், எதிர்காலம்னு எல்லா விஷயத்துலயும் அவளுக்குத் துணையா நிக்கணும்னு நினைப்பார். மக பயப்படும்போது தைரியம் சொல்றதும் அப்பாதான். அவளோட வெற்றியைப் பார்த்து பெருமைப்படுறதும் அப்பாதான். தேவைப்பட்டா, தன்னோட சந்தோஷத்தைக்கூட தியாகம் செஞ்சு, மகளுக்காக எந்த கஷ்டத்தையும் தாங்குவார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் - &lt;/strong&gt;ரயில் &lsquo;சந்திப்பு&rsquo; vs &lsquo;முனையம்&rsquo;.! ரெண்டும் ஒன்னு கிடையாதா? இவ்வளவு வித்தியாசம் இருக்கா? 90% பேருக்கு தெரியாது.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மகள் பிறந்ததும், பல அப்பாக்களோட வாழ்க்கையில முன்னுரிமைகள் மாறிடும். இதுக்கு முன்னாடி நண்பர்கள், பொழுதுபோக்குன்னு நேரம் செலவழிச்சவங்க, இப்போ சீக்கிரமா வீட்டுக்கு வரணும், மகளோட நேரம் செலவழிக்கணும்னு ஆசைப்படுவாங்க. அவளோட ஒரு சிரிப்புக்காக என்ன வேணா செய்யத் தயாரா இருப்பாங்க. அதனாலதான், ஒரு குடும்பத்துக்கு மகளின் பிறப்பு ஒரு வரம்னா, ஒரு அப்பாவுக்கு அது வாழ்க்கையையே மாத்துற ஒரு அற்புதமான அனுபவம்னு நிபுணர்கள் சொல்றாங்க.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>life-style</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/dad-and-daughter-5-surprising-ways-a-father-changes-after-the-birth-of-a-baby-girl-gqh59i5"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Oil-Free Poori: தண்ணியில பூரி சுட்டு சாப்பிட்டு இருக்கீங்களா?!!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/webstories/life-style/healthy-oil-free-poori-recipe-fried-in-water-58seu9y</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/webstories/life-style/healthy-oil-free-poori-recipe-fried-in-water-58seu9y</guid>
            <pubDate>Mon, 27 Jul 2026 15:06:10 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;பூரியும் குருமாவும் நம்மில் பலருக்கும் பிடிக்கும். புசுபுசுன்னு பூரி சாப்பிட யாருக்குத்தான் பிடிக்காது? ஆனா, இப்போ உடல்நலன்ல அக்கறை அதிகமாயிடுச்சு. அதனால, எண்ணெயில் பொரித்த உணவுகளை நிறைய பேர் தவிர்க்கிறாங்க. பூரியையும் மிஸ் பண்றாங்க.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jqasnrm3cvbpzykx2x373exs,imgname-poori-masal--1-.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <category>life-style</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/webstories/life-style/healthy-oil-free-poori-recipe-fried-in-water-58seu9y"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Cooking Tips: 1 கிலோ சிக்கன் சமைக்க எவ்வளவு இஞ்சி, பூண்டு தேவை?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/webstories/life-style/perfect-ginger-garlic-ratio-for-1-kg-chicken-curry-au3o18f</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/webstories/life-style/perfect-ginger-garlic-ratio-for-1-kg-chicken-curry-au3o18f</guid>
            <pubDate>Mon, 27 Jul 2026 14:47:07 +0530</pubDate>
            <description><![CDATA[சிக்கன் சமைக்கும்போது இஞ்சி, பூண்டு சரியான அளவில் சேர்ப்பது முக்கியம். மட்டனுக்குப் பயன்படுத்தும் அளவு வேறு, சிக்கனுக்குப் பயன்படுத்தும் அளவு வேறு. சரியான அளவு என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jvpvj7p7hfrcfma1h2pfdphs,imgname-chicken-curry--1--1747745054407.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <category>life-style</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/webstories/life-style/perfect-ginger-garlic-ratio-for-1-kg-chicken-curry-au3o18f"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Jasmine: மல்லிகை பூ சீக்கிரம் வாடிப் போகுதா? இந்த ட்ரிக் மட்டும் பண்ணுங்க.! ஒரு வாரம் ஆனாலும் அப்படியே இருக்கும்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/jasmine-flower-storage-tips-how-to-keep-jasmine-fresh-fragrant-and-unwilted-for-up-to-a-week-naturally-ge2ildq</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/jasmine-flower-storage-tips-how-to-keep-jasmine-fresh-fragrant-and-unwilted-for-up-to-a-week-naturally-ge2ildq</guid>
            <pubDate>Mon, 27 Jul 2026 13:44:18 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Jasmine: மல்லிகைப் பூ வாடாமலும், நறுமணம் மாறாமலும் ஒரு வாரம் வரை புதிதாக வைத்திருக்க சில எளிய ட்ரிக்ஸ் மற்றும் பயனுள்ள வழிமுறைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kyh9xksamnz8che5fdjp0pf8,imgname-jasmine-1785139744554.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Jasmine: மல்லிகைப் பூ வாடாமலும், நறுமணம் மாறாமலும் ஒரு வாரம் வரை புதிதாக வைத்திருக்க சில எளிய ட்ரிக்ஸ் மற்றும் பயனுள்ள வழிமுறைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பூக்கள் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. குறிப்பாக மல்லிகை பூவின் நறுமணம் அனைவரையும் புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும். ஆனால் பூக்களை சேமிப்பது என்பது பெண்களுக்கு சவாலான காரியமாக உள்ளது. சரியாக பராமரிக்காவிட்டால் வாங்கிய ஒரு நாளிலேயே பூக்கள் வாடி பழுப்பு நிறத்தில் மாறிவிடும். ஆனால் சில எளிய முறைகளை பின்பற்றினால் மல்லிகை பூவை வாடாமல் சுமார் ஒரு வாரம் வரை ஃப்ரஷ்ஷாக வைத்திருக்க முடியும். அது குறித்த சில டிப்ஸ்களை இந்த பதிவில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் -&lt;/strong&gt; 30 வருடங்களுக்குப் பின் மேஷ ராசியில் சனி பெயர்ச்சி.! 4 ராசிகளுக்கு கொட்டி கொடுக்கப்போகும் சனி பகவான்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பொதுவாக மல்லிகை பூவை பலரும் பிளாஸ்டிக் அல்லது எவர்சில்வர் டப்பாவில் போட்டு வைப்பது வழக்கம். ஆனால் நேரடியாக போடாமல் அதன் அடியில் ஒரு உலர்ந்த டிஷ்யூ பேப்பரை பரப்பி வைக்கவும். அதன் மேல் மல்லிகைப் பூக்களை வைத்து, பூக்களின் மேல் மற்றொரு டிஷ்யூ பேப்பரை வைத்து மூடி ஃபிரிட்ஜில் வைக்கவும். டிஷ்யூ பேப்பர் அதிகப்படியான ஈரப்பதத்தை உறிஞ்சி, பூக்கள் அழுகாமல் தடுத்து ஒரு வாரம் வரை ஃபிரஷ்ஷாக வைத்திருக்க உதவும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் - &lt;/strong&gt;பச்சைத் தண்ணி குளியலா, வெந்நீர் குளியலா? எது பெஸ்ட்? சயின்ஸ் என்ன சொல்லுது?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மல்லிகை பூவை வாங்கியவுடன் அதன் மீது லேசாக தண்ணீர் தெளித்து (அதிகப்படியான தண்ணீரை தெளிக்க கூடாது, ஈரப்பதம் அதிகமாக இருந்தால் பூக்கள் விரைவில் அழுகி துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும்) ஒரு மெல்லிய பருத்தி துணியை நீரில் நனைத்து பிழிந்து பூவை சுற்றி வைக்க வேண்டும். சுற்றிய பூவை ஒரு காற்று புகாத பிளாஸ்டிக் டப்பா அல்லது ஜிப்லாக் பையில் வைத்து ஃபிரிட்ஜில் வைத்து விட வேண்டும். பூவை பயன்படுத்தும் அரை மணி நேரத்திற்கு முன்னர் வெளியில் எடுத்து பயன்படுத்தினால் இப்போதுதான் செடியில் இருந்து பறித்தது போல பூ மிகவும் ஃபிரஷ்ஷாக இருக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் - &lt;/strong&gt;ஒரு வந்தே பாரத் ரயில் செய்ய எத்தனை கோடி செலவாகும் தெரியுமா? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;டப்பாவில் வைப்பதற்கு முன்பாகவே ஏற்கனவே பழுப்பு நிறமாக மாறிய பூக்கள் அல்லது வாடிய பூக்களை தனியாக எடுத்து விட வேண்டும். இல்லையெனில் அவை மற்ற பூக்களையும் சீக்கிரம் பாழ்படுத்திவிடும். பூவை டப்பாவில் வைக்கும் பொழுது பூவின் மேல் அதிக அளவு நீர் இருக்கக்கூடாது. நீர் சொட்ட சொட்ட இருக்க கூடாது. லேசான ஈரப்பதம் மட்டுமே இருக்க வேண்டும். பூவை பிளாஸ்டிக் கவரில் நேரடியாக வைத்தால் காஸ் உருவாகி பூக்கள் சீக்கிரம் பறித்து விடும். எனவே காற்று புகாத டப்பாக்களையே பயன்படுத்த வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் - &lt;/strong&gt;குரு சந்திரன் கூட்டணியால் உபயசாரி யோகம் - 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமும் பண மழையும் கொட்டப்போகுது.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பூக்களை செய்தித்தாள்களில் சுற்றி வைக்கக் கூடாது. செய்தித்தாளில் உள்ள மை பூக்களின் வெள்ளை நிறத்தில் ஒட்டக்கூடும். இதனால் பூக்கள் கருமை அல்லது மங்கலான நிறத்திற்கு மாறிவிடும். எனவே வெள்ளை டிஷ்யூ பேப்பர் அல்லது மை இல்லாத வெள்ளை காகிதம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். பூக்களை வாங்கி வந்த உடனேயே ஃபிரிட்ஜில் வைக்க கூடாது. அதை காற்றோட்டமாக இடத்தில் வைத்து நன்கு உலர்ந்த பின்னரே பேப்பரில் சுற்ற வேண்டும். பேப்பரில் சுற்றிய பூக்களை ஒரு பிளாஸ்டிக் கண்டெய்னரில் வைக்க வேண்டும். இல்லை என்றால் பூக்களின் வாசம் ஃபிரிட்ஜில் உள்ள பிற உணவுகளின் மீதும் கலந்து விடும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் -&lt;/strong&gt; ரயில் &lsquo;சந்திப்பு&rsquo; vs &lsquo;முனையம்&rsquo;.! ரெண்டும் ஒன்னு கிடையாதா? இவ்வளவு வித்தியாசம் இருக்கா? 90% பேருக்கு தெரியாது.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மல்லிகை பூவை ஃபிரீசர் பகுதியில் வைக்கக் கூடாது. இங்கு அதிக குளிர் இருப்பதால் அவை உறைந்து போகக்கூடும். வெளியே எடுத்தவுடன் உடனடியாக கருகிவிடும். ஃபிரீசரில் வைப்பதற்குப் பதிலாக நடுத்தர ஷெல்ப் அல்லது காய்கறி வைக்கும் இடத்தில் வைக்கலாம். முழுவதுமாக பூத்த மலர்களை விட பாதி அல்லது விரியாத மொட்டுக்களை வாங்கினால் அவை மெதுவாக மலர்ந்து நீண்ட நாட்கள் பசுமையாக இருக்கும். வீட்டில் விசேஷங்கள், விழாக்கள் போன்ற சமயங்களில் முன்கூட்டியே வாங்கி வைக்கும் சூழலில் இந்த முறை மிகவும் உதவியாக இருக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் -&lt;/strong&gt; Tiffin vs Breakfast: டிபன், பிரேக்ஃபாஸ்ட் ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்? பலருக்கும் தெரியாத தகவல்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பூக்களின் பச்சை காம்புகளை சிறிதளவு நறுக்கி விட்டால் அதில் தேங்கும் ஈரப்பதம் குறைந்து பூக்கள் பழுப்பு நிறமாக மாறும் வேகம் குறையும். ஆனால் பூவை சேதப்படுத்தும் அளவிற்கு அதிகப்படியாக வெட்டக்கூடாது. குறைந்த அளவு மட்டுமே வெட்டி வைக்க வேண்டும். பூக்களை அடிக்கடி ஃபிரிட்ஜில் இருந்து வெளியே எடுத்து மீண்டும் உள்ளே வைப்பதை தவிர்க்க வேண்டும். வெப்பநிலை அடிக்கடி மாறும் பொழுது பூக்களின் ஆயுள் குறைந்துவிடும். தேவையான அளவு வெளியே எடுத்து விட்டு மீதமுள்ளவற்றை மீண்டும் ஃபிரிட்ஜில் வைத்து விட வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;பழங்கள், வெங்காயம், பூண்டு போன்ற அதிக வாசனை கொண்ட பொருட்களுடன் சேர்த்து வைக்கக்கூடாது. அவற்றின் வாசனையை பூக்கள் உறிஞ்சக்கூடும். தனி டப்பாவில் வைப்பது மல்லிகைப்பூவின் இயற்கையான நறுமணம் நீண்ட நேரம் மாறாமல் இருப்பதற்கு உதவும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>life-style</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/jasmine-flower-storage-tips-how-to-keep-jasmine-fresh-fragrant-and-unwilted-for-up-to-a-week-naturally-ge2ildq"/>
        </item>
        <item>
            <title><![CDATA[தினமும் உணவில் கிராம்பு சேர்ப்பதால் கிடைக்கும் 7 முக்கிய நன்மைகள்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/webstories/life-style/daily-cloves-can-do-wonders-for-your-health-7-benefits-you-need-to-know-kn47g8e</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/webstories/life-style/daily-cloves-can-do-wonders-for-your-health-7-benefits-you-need-to-know-kn47g8e</guid>
            <pubDate>Mon, 27 Jul 2026 13:31:10 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;உணவின் சுவையைக் கூட்டவும், நல்ல மணம் கிடைக்கவும் நாம கிராம்பு பயன்படுத்துவோம். ஆனா, கிராம்பு வெறும் வாசனைக்கு மட்டும் இல்ல, அதுல நெறைய மருத்துவ குணங்களும் இருக்கு. அது என்னென்னனு பார்க்கலாம் வாங்க.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k92e877wpmgywx1b08tcjgwh,imgname-c7a61ae8-5717-4443-b9bb-f4312e65a4bd-1762092391674.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <category>life-style</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/webstories/life-style/daily-cloves-can-do-wonders-for-your-health-7-benefits-you-need-to-know-kn47g8e"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Lizard Vastu: ரெண்டு பல்லிங்க சண்டை போடுதா? வீட்டுல இதைப் பார்த்தா என்ன அர்த்தம் தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/spiritual-meaning-of-two-lizards-fighting-at-home-0x5ugey</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/spiritual-meaning-of-two-lizards-fighting-at-home-0x5ugey</guid>
            <pubDate>Sun, 26 Jul 2026 09:39:13 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;வீட்டின் சுவர்களில் இரண்டு பல்லிகள் ஒன்றுடன் ஒன்று சண்டையிடுவதைப் பார்ப்பதற்கு வாஸ்து சாஸ்திரத்தின்படி ஒரு சிறப்பு அர்த்தம் உண்டு. அது மங்களகரமானதா அல்லது அமங்களகரமானதா என்பது குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kyd44nxjty2sca04fp4p59jg,imgname-thumbnail---2026-07-25t223950.598-1784999466930.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;வீட்டின் சுவர்களில் இரண்டு பல்லிகள் ஒன்றுடன் ஒன்று சண்டையிடுவதைப் பார்ப்பதற்கு வாஸ்து சாஸ்திரத்தின்படி ஒரு சிறப்பு அர்த்தம் உண்டு. அது மங்களகரமானதா அல்லது அமங்களகரமானதா என்பது குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒரு வீட்டின் சுவர்களில் அடிக்கடி தோன்றும் பல்லிகளுக்கு வாஸ்து மற்றும் சகுண சாஸ்திரத்தில் ஒரு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. பல்லி, லட்சுமி தேவியின் ஒரு வடிவமாகக் கருதப்படுகிறது. இருப்பினும், ஒரு வீட்டில் இரண்டு பல்லிகள் ஒன்றுடன் ஒன்று சண்டையிடுவதைக் காண்பது மங்களகரமானதா அல்லது அமங்களகரமானதா என்பது குறித்து பலருக்கு சந்தேகம் உள்ளது. சகுண சாஸ்திரத்தின்படி, இரண்டு பல்லிகள் சண்டையிடுவது ஒரு மங்களகரமான அறிகுறி அல்ல. இதுபோன்ற காட்சியைக் காணும்போது, ​​வீட்டில் அமைதியும் நிம்மதியும் நிலவ தகுந்த வாஸ்து பரிகாரங்களைச் செய்வது நல்லது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்து சனாதன தர்மம் மற்றும் வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் காணப்படும் பல்வேறு விலங்குகள் மற்றும் உயிரினங்களின் நடமாட்டங்களுக்கு சில குறியீட்டு அர்த்தங்கள் உள்ளன. பொதுவாக, வீட்டில் ஒரு பல்லி தோன்றுவது லட்சுமி தேவியின் வருகைக்கான அறிகுறியாகக் கருதப்படுகிறது. தீபாவளி அன்று ஒரு பல்லியைக் கண்டால், செல்வம் பெருகும் என்று நம்பப்படுகிறது. இருப்பினும், இரண்டு பல்லிகள் சண்டையிடுவதைக் காண்பது சில எதிர்மறை விளைவுகளைக் குறிக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இரண்டு பல்லிகள் சண்டையிடுவது, குடும்ப உறுப்பினர்களிடையே வரவிருக்கும் கருத்து வேறுபாடுகளின் அறிகுறியாகும். தம்பதியினருக்கோ அல்லது வீட்டின் மற்ற உறுப்பினர்களுக்கோ இடையே சிறிய விஷயங்களில் கூட கருத்து வேறுபாடுகள், தேவையற்ற வாக்குவாதங்கள் அல்லது குழப்பங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சகுண சாஸ்திரத்தின்படி, இரண்டு பல்லிகளுக்கு இடையேயான சண்டை, லட்சுமி தேவியின் அதிருப்தி அல்லது அமங்கலத்தின் அறிகுறியாகும். இது வீட்டில் பண இழப்பு, எதிர்பாராத செலவுகள் அல்லது கையில் போதுமான பணம் இல்லாத நிலை போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இரண்டு பல்லிகள் சண்டையிடுவதை நீங்கள் கண்டால், வரும் நாட்களில் உங்கள் நெருங்கிய நண்பர்கள் அல்லது அன்புக்குரியவர்களுடனான உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது என்று அர்த்தம். உங்கள் தொழில் கூட்டாளிகள் அல்லது நெருங்கிய நண்பர்களிடமிருந்து நீங்கள் பிரிக்கப்படும் சூழ்நிலை ஏற்படலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சண்டையிட்டு வெவ்வேறு திசைகளில் செல்வதைக் குறிக்கும் சின்னங்களாகும். இதன் பொருள், பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அவை விரைவில் தீர்க்கப்படும் என்பதாகும்.&lt;/p&gt;&lt;p&gt;பல்லி உடலின் எந்தப் பகுதியில் விழுகிறது என்பதைப் பொறுத்து லாப நஷ்டங்கள் கணக்கிடப்படுகின்றன (உதாரணமாக, அது தலையில் விழுந்தால் மங்களகரமானது, இடது கையில் விழுந்தால் செலவாகும்).&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உங்கள் வீட்டில் இரண்டு பல்லிகள் சண்டையிடுவதைக் கண்டால், நீங்கள் பீதியடையாமல் பின்வரும் எளிய தீர்வுகளைக் கையாளலாம்.&lt;/p&gt;&lt;p&gt;பல்லிகளை அடிக்காமலோ அல்லது காயப்படுத்தாமலோ, மென்மையாக வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;வீட்டில் கங்கை நீர் அல்லது உப்பு நீரைத் தெளித்து, பூஜை அறையில் விளக்கேற்ற வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;*லக்ஷ்மி அஷ்டோத்திரம் அல்லது விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வது எதிர்மறை சக்தியை நீக்குகிறது.&lt;/p&gt;&lt;p&gt;சாஸ்திரங்களின்படி, சகுனங்கள் வரவிருக்கும் சூழ்நிலைகளைப் பற்றி நமக்கு எச்சரிக்கின்றன. அத்தகைய அறிகுறிகள் தோன்றும்போது, ​​கவலைப்படாமல் குடும்பத்தில் பொறுமையையும் அமைதியையும் கடைப்பிடிப்பது நல்லது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>life-style</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/spiritual-meaning-of-two-lizards-fighting-at-home-0x5ugey"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Washing Machine Tips: வாஷிங் மெஷினில் இதை செய்யாதீங்க! - துணிகளையும் மெஷினையும் காப்பாற்றும் சீக்ரெட் டிப்ஸ்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/washing-machine-tips-never-do-this-in-your-washing-machine-secret-tips-to-protect-your-clothes-and-machine-3ggt8xs</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/washing-machine-tips-never-do-this-in-your-washing-machine-secret-tips-to-protect-your-clothes-and-machine-3ggt8xs</guid>
            <pubDate>Mon, 27 Jul 2026 10:32:48 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Washing Machine Tips: வாஷிங் மெஷினை தவறாகப் பயன்படுத்துவதால் துணிகளும் மெஷினும் சேதமடைகின்றன. சில வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் துணிகளையும் வாஷிங் மெஷினையும் பாதுகாக்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ksa9j8xvs05t73ss28wvsxzv,imgname-eco-mode--1--1779535782843.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Washing Machine Tips: வாஷிங் மெஷினை தவறாகப் பயன்படுத்துவதால் துணிகளும் மெஷினும் சேதமடைகின்றன. சில வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் துணிகளையும் வாஷிங் மெஷினையும் பாதுகாக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்றைய அவசரமான நவீன வாழ்க்கைமுறையில், வாஷிங் மெஷின் (Washing Machine) ஒவ்வொரு குடும்பத்திற்கும் தவிர்க்க முடியாத ஒரு வரப்பிரசாதமாக மாறியுள்ளது. நேரத்தையும் உழைப்பையும் மிச்சப்படுத்தும் இந்த இயந்திரத்தை நாம் தினமும் பயன்படுத்தினாலும், அதைச் சரியாகக் கையாள்வதில் பல தவறுகளைச் செய்து விடுகிறோம். அனைத்து வகையான துணிகளையும் யோசிக்காமல் வாஷிங் மெஷினில் போடுவது, ஆடைகள் கிழிவதற்கும் மெஷின் சீக்கிரமே பழுதாவதுற்கும் முதன்மை காரணமாகிறது. உங்கள் துணிகளின் ஆயுளை நீட்டித்து, வாஷிங் மெஷினையும் பல வருடங்களுக்குப் பழுதில்லாமல் காப்பாற்றுவதற்கான முக்கியமான 'சீக்ரெட் டிப்ஸ்' மற்றும் வழிமுறைகளைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;செல்லப்பிராணிகளான நாய் மற்றும் பூனைகளின் முடிகள் ஒட்டியுள்ள போர்வைகள் அல்லது ஆடைகளை நேரடியாக மெஷினில் போடக் கூடாது. இவை மெஷினின் வடிகட்டியை அடைத்து, நீரைக் வெளியேற்றுவதில் சிக்கலை உண்டாக்கும். அதேபோல, அதிக சேறும் சகதியும் நிறைந்த துணிகளை அப்படியே மெஷினில் போடும்போது, சேறு உட்காரும் பகுதியில் படிந்து மோட்டாரைப் பாதிக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சீக்ரெட் டிப்: முடிகளை அகற்ற லிண்ட் ரோலர் (Lint Roller) பயன்படுத்திய பிறகும், சேறு நிறைந்த ஆடைகளைக் குப்பைத்தொட்டியில் நன்றாக உதறிவிட்டு, கைகளால் ஒருமுறை அலசிய பிறகே மெஷினில் போட வேண்டும்.&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கழுத்து மற்றும் தலைக்கு நல்ல சப்போர்ட் தரும் திடமான 'மெமரி போம்' தலையணைகளை எக்காரணத்தைக் கொண்டும் வாஷிங் மெஷினில் துவைக்கக் கூடாது. மெஷினின் வேகமான சுழற்சி (Spin Cycle) இந்த போமின் அமைப்பைக் குலைத்து, முற்றிலும் கிழித்துவிடும். சாதாரண பஞ்சுத் தலையணைகளைத் துவைக்கலாம், ஆனால் மெமரி போம் பொருட்களைக் கைகளால் மட்டுமே சுத்தம் செய்ய வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வாஷிங் மெஷினில் போர்வைகளைத் துவைக்கலாம் என்று லேபிளில் போட்டு இருந்தாலும், மெஷினின் கொள்ளளவை மீறி பெரிய போர்வைகளை அடைக்கக் கூடாது. நனைந்த பிறகு போர்வையின் எடை இருமடங்காகும். 10 கிலோ திறன் கொண்ட மெஷினாகவே இருந்தாலும், அதிக எடையுள்ள போர்வைகள் சுழலும் போது மெஷினின் ட்ரம் (Drum) மற்றும் மோட்டாருக்குப் பெரிய அழுத்தத்தைக் கொடுத்து பழுதாக்கிவிடும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;துணிகளில் இருக்கும் லேபிளில் &quot;Dry Clean Only&quot; என்று குறிப்பிடப்பட்டிருந்தால், அவற்றை வாஷிங் மெஷினில் போடும் தவறை ஒருபோதும் செய்யாதீர்கள். பட்டு (Silk), காஷ்மீர் (Cashmere), லெதர் (Leather) மற்றும் அதிக வேலைப்பாடு கொண்ட சூட்கள், கவுன்களை மெஷினில் துவைக்கும்போது அவை சுருங்கி, நிறம் மங்கி, கிழிந்து போகும் அபாயம் உள்ளது. இவற்றை டிரை கிளீனிங் நிறுவனங்களிடம் கொடுப்பதே சிறந்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பழைய தலைமுறையின் நினைவாக இருக்கும் உடைகள், சூட் (Suede), லேஸ் (Lace) ஆடைகள், மடிப்புள்ள ஸ்கர்ட்டுகள் (Pleated skirts), மற்றும் மணிகள், மினுமினுப்புகள் (Sequins) த தைக்கப்பட்ட உடைகளை மெஷினில் போட்டால் அவை பாழாகிவிடும். இவற்றை மைல்டான டிடர்ஜென்ட் பயன்படுத்தி, குளிர்ந்த நீரில் கைகளால் மட்டுமே துவைக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜீன்ஸ், ஜாக்கெட் போன்ற ஆடைகளை மெஷினில் போடும்போது ஜிப் (Zip) திறந்திருந்தால், அதன் கூர்மையான பற்கள் வேகமான சுழற்சியின் போது மற்ற மென்மையான ஆடைகளில் மாட்டி அவற்றைக் கிழித்துவிடும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சீக்ரெட் டிப்&lt;/strong&gt;: ஜிப்களை முழுமையாக மூடி (Lock) மெஷினில் போட வேண்டும். அல்லது இதுபோன்ற ஆடைகளை தனியாக மேஷ் லான்டரி பைகளில் (Mesh laundry bags) வைத்துத் துவைப்பது பாதுகாப்பானது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;துணிகளை வாஷிங் மெஷினுக்குள் போடும் முன் பாக்கெட்டுகளைச் சரிபார்ப்பது மிக மிக முக்கியம்:&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;நாணயங்கள் &amp;amp; சாவிகள்: இவை சுழலும் போது மெஷினின் உட்புற கண்ணாடியையோ அல்லது ட்ரம்மையோ உடைத்து பெரிய சேதத்தை ஏற்படுத்தும்.&lt;/li&gt; &lt;li&gt;டிஷ்யூ பேப்பர் &amp;amp; ரசீதுகள்: நீரிலும் டிடர்ஜென்ட்டிலும் கரைந்து, எல்லா துணிகளிலும் வெள்ளைப் புள்ளிகளாக ஒட்டிக் கொண்டு பாழாக்கிவிடும்.&lt;/li&gt; &lt;li&gt;லிப் பாம்கள்: மெஷினின் சூட்டில் உருகித் துணிகளில் நிரந்தரக் கறையை உண்டாக்கும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;img&gt;&lt;p&gt;தோலால் செய்யப்பட்ட லெதர் ஜாக்கெட்டுகள், பேண்ட்டுகளை மெஷினில் துவைக்கவே கூடாது. மெஷினின் சுழற்சி மற்றும் வெதுவெதுப்பான நீர் லெதரின் ஈரப்பதத்தை உறிஞ்சி, அதைச் சுருங்கச் செய்து, வெடிப்புகளை உண்டாக்கிவிடும். லெதர் ஆடைகளில் கறை இருந்தால், ஈரத் துணியால் லேசாகத் துடைத்து எடுப்பதே சரியான முறை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிவப்பு, ஆரஞ்சு, அடர் நீலம் போன்ற துணிகள் சாயம் போவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. இவற்றை மற்ற வெளுத்த நிறத் துணிகளோடு சேர்த்துத் துவைத்தால், சாயம் பரவி மற்ற ஆடைகளின் நிறத்தையும் முற்றிலும் மாற்றிவிடும். புதிய அடர்நிற ஆடைகளை எப்போதும் தனியாகக் கைகளால் துவைப்பதே நல்லது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வாஷிங் மெஷின் மற்றும் துணிகள் இரண்டையும் நீண்ட காலம் தங்கு தடையின்றிப் பயன்படுத்த, துணிகளின் தன்மையறிந்து துவைப்பதே ஒரே வழி. சிறிய கவனக்குறைவு பெரிய செலவுக்கு வழிவகுக்கும் என்பதால், இந்த எளிய 'சீக்ரெட் டிப்ஸ்களை' பின்பற்றி ஆடைகளையும் வாஷிங் மெஷினையும் பாதுகாப்பாகப் பராமரியுங்கள்!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>life-style</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/washing-machine-tips-never-do-this-in-your-washing-machine-secret-tips-to-protect-your-clothes-and-machine-3ggt8xs"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Home Decor: 1 ரூபாய் செலவில்லாமல் உங்க வீட்டை அழகா மாத்தலாம்.. 5 சூப்பர் ஐடியா!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/5-diy-home-decor-ideas-to-transform-your-home-for-free-3r94e9v</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/5-diy-home-decor-ideas-to-transform-your-home-for-free-3r94e9v</guid>
            <pubDate>Sun, 26 Jul 2026 22:55:53 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Home Decor: பழைய குடை, துணி வேஸ்ட், அட்டைப்பெட்டி, பிளாஸ்டிக் மற்றும் பழைய பூஜாடி போன்ற பொருட்களை வைத்து உங்கள் வீட்டை அழகாக்க சூப்பரான DIY ஐடியாக்களை இங்கு பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kyaa5jw4rhqtfj4y47rhe33t,imgname-diy-ideas-to-make-your-home-1784905124740.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Home Decor: பழைய குடை, துணி வேஸ்ட், அட்டைப்பெட்டி, பிளாஸ்டிக் மற்றும் பழைய பூஜாடி போன்ற பொருட்களை வைத்து உங்கள் வீட்டை அழகாக்க சூப்பரான DIY ஐடியாக்களை இங்கு பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;உங்ககிட்ட பழைய துணி வேஸ்ட் மிச்சம் இருக்கா? அதை வெச்சு அழகான DIY ஃபேப்ரிக் வால் ஆர்கனைசர் ரெடி பண்ணலாம். சரியான அளவை மனசுல வெச்சு கட் பண்ணுங்க. கலர்ஃபுல்லான துணிகள்ல பாக்கெட் செஞ்சு தைச்சா, அதுல சின்ன சின்ன பொருட்களை ஈஸியா மாட்டி வெச்சுக்கலாம்.&lt;img&gt;வீட்ல பார்சல் வந்த அட்டைப்பெட்டிகள் இருக்கா? அத தூக்கிப் போடாம, அதுல இருந்து ஒண்ணுக்கொண்ணு சூப்பரான டெக்கரேஷன் பொருட்களை செய்யலாம். பூந்தொட்டி செஞ்சு கலர் கலரா பூக்களை வைக்கலாம், இல்லனா பேனா ஸ்டாண்ட் ரெடி பண்ணலாம். பார்க்கவும் அழகா இருக்கும், செய்றதும் ரொம்ப ஈஸி.&lt;img&gt;&lt;p&gt;வீட்ல பழைய குடைகள் இருந்தா, அத வெச்சு ஈஸியா ஒரு சூப்பர் DIY டெக்கரேஷன் செய்யலாம். சின்ன குடையை செவத்துல மாட்டி அழகு பார்க்கலாம். பெரிய குடையை தொங்கவிட்டு, அதுல LED லைட் செட் பண்ணலாம். இப்படி செஞ்சா, உங்க சிம்பிளான வீடு கூட ஜொலிக்கும். பூ டிசைன் போட்ட குடைகளை செவத்துல மாட்டினா, பார்க்க இன்னும் அழகா இருக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பட்ஜெட்ல DIY டெக்கரேஷன் செய்யணுமா? அப்போ அழகான DIY பிளாஸ்டிக் பிளான்டர்ஸ் செஞ்சு செடி வளர்க்கலாம். அந்த பிளான்டர்ல உங்களுக்கு பிடிச்ச முகத்தை வரைஞ்சு, ഇഷ്ടமான கலர்ல பெயின்ட் பண்ணுங்க. இந்த மாதிரி ஃபேஸ் பெயின்டிங் பிளான்டரை பெட்ரூம்ல இருந்து லிவிங் ரூம் வரை எங்க வேணும்னாலும் வைக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;உங்ககிட்ட பழைய பூஜாடி இருந்தா, அதுல கடல் சிப்பிகளை ஒட்டி டெக்கரேட் பண்ணலாம். அதுக்குள்ள நிஜ பூக்கள் அல்லது செயற்கை பூக்களை வெச்சு இன்னும் அழகா காட்டலாம். நீங்க வித்தியாசமான வடிவங்கள்ல இருக்குற சிப்பிகளை கூட இதுக்கு பயன்படுத்தலாம்.]]></content:encoded>
            <category>life-style</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/5-diy-home-decor-ideas-to-transform-your-home-for-free-3r94e9v"/>
        </item>
        <item>
            <title><![CDATA[AC Hack: ஏசி கரண்ட் பில்லை பாதியாக குறைக்கும் 'அந்த' ஒரு பட்டன்! இது தெரியாம போச்சே!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/how-to-reduce-ac-electricity-bill-dry-mode-monsoon-972o39p</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/how-to-reduce-ac-electricity-bill-dry-mode-monsoon-972o39p</guid>
            <pubDate>Sun, 26 Jul 2026 21:26:21 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;AC Hack: மழைக்காலத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகரித்து ஏற்படும் பிசுபிசுப்பை போக்க ஏசியின் 'டிரை மோடு' (Dry Mode) சிறந்தது. இதனால் கரண்ட் பில் எப்படி குறையும்? என்பது குறித்து பார்ப்போம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kyfhv928kng9dh36h4qjkyg3,imgname-ac-hack-1785080947784.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;AC Hack: மழைக்காலத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகரித்து ஏற்படும் பிசுபிசுப்பை போக்க ஏசியின் 'டிரை மோடு' (Dry Mode) சிறந்தது. இதனால் கரண்ட் பில் எப்படி குறையும்? என்பது குறித்து பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மழைக்காலத்தில் வெயிலின் தாக்கத்தைக் குறைத்தாலும், காற்றில் ஈரப்பதம் அதிகரித்து ஒருவித பிசுபிசுப்பு உணர்வைத் தரும். இதனால் பலரும் ஏசியைப் பயன்படுத்துவார்கள். ஆனால், கரண்ட் பில் அதிகமாகிவிடுமோ என்ற பயம் இருக்கும். உங்கள் ஏசி ரிமோட்டில் உள்ள ஒரு பட்டன் இந்த சிக்கலைத் தீர்க்கும். அது என்னவென்று இங்கே பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;டிரை மோடு என்றால் என்ன?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இப்போதெல்லாம் வரும் பெரும்பாலான ஏசிகளில் 'டிரை மோடு' அல்லது 'மான்சூன் மோடு' என்ற வசதி உள்ளது. இது குறிப்பாக மழைக்காலத்திற்காகவே வடிவமைக்கப்பட்டது. இதை ஆன் செய்தால், ஏசி காற்றில் உள்ள ஈரப்பதத்தைக் குறைக்கும். இதனால், அறை அதிகமாகக் குளிராகாமலேயே, பிசுபிசுப்பு நீங்கி இதமாக இருக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க:&lt;/strong&gt; Kitchen Tips: வெண்டைக்காய் சீக்கிரம் வாடிப்போகுதா? நீண்ட நாள் ப்ரெஷ்ஷாக வைக்க சூப்பர் டிப்ஸ்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உங்கள் ஏசி ரிமோட்டில் 'Dry' அல்லது 'Monsoon' என்று ஒரு பட்டன் இருக்கும். அதை அழுத்தினால் போதும். சில ஏசிகளில் 'Mode' என்ற பட்டனுக்குள் இந்த ஆப்ஷன் இருக்கும். அந்த பட்டனை அழுத்தி 'டிரை மோடு'க்கு மாற்றிக்கொள்ளலாம்.&lt;/p&gt;&lt;p&gt;'டிரை மோடு' இயங்கும்போது, ஏசி கம்ப்ரசர் தொடர்ந்து முழுத் திறனில் இயங்காது. அது விட்டு விட்டு இயங்கும். இதனால் மின்சாரப் பயன்பாடு கணிசமாகக் குறையும். மேலும், இது ஈரப்பதத்தைக் குறைப்பதால், அறை விரைவாகவே ஃபிரெஷ்ஷாகிவிடும். நீண்ட நேரம் ஏசியை ஓட வேண்டிய அவசியம் இருக்காது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க&lt;/strong&gt;: Hotel Bathrooms: ஹோட்டல் பாத்ரூம்ல எதுக்கு 2 வாஷ்பேசின்? இதுக்கு பின்னாடி இருக்கும் மாஸ்டர் பிளான்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மழைக்காலத்தில் ஏசி ஃபில்டரில் சீக்கிரமாக அழுக்கு சேரும். அழுக்கான ஃபில்டர், காற்றோட்டத்தைத் தடுத்து, ஏசிக்கு அதிக அழுத்தத்தைக் கொடுக்கும். எனவே, சில நாட்களுக்கு ஒருமுறை ஃபில்டரை சுத்தம் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இது நல்ல காற்றோட்டத்தையும், சிறந்த குளிரூட்டலையும் உறுதி செய்யும்.&lt;/p&gt;&lt;p&gt;மழைக்காலத்தில் பெரிய பிரச்சினை வெப்பம் அல்ல, காற்றில் உள்ள அதிக ஈரப்பதம்தான். 'டிரை மோடு' இந்த ஈரப்பதத்தைக் குறைக்க உதவுகிறது. இது அறையை மிகவும் இதமானதாக மாற்றுவதோடு, உங்கள் கரண்ட் பில்லையும் குறைக்க உதவும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;டிரை மோடை ஆன் செய்தவுடன் ஏசியின் ஃபேன் வேகம் தானாகவே குறைந்த அளவுக்கு மாறிவிடும். இதில் நீங்கள் வெப்பநிலையை அடிக்கடி மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது; ஏசியே காற்றில் உள்ள ஈரப்பதத்திற்கு ஏற்ப இயங்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பாக்டீரியா மற்றும் பூஞ்சை வளர்ச்சியைத் தடுக்கும்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;மழைக்காலத்தில் அறையில் ஈரப்பதம் அதிகமிருந்தால் சுவர்களிலும், துணிகளிலும் பூஞ்சை காளான்கள் மற்றும் துர்நாற்றம் வீசும் பாக்டீரியாக்கள் வளரும். டிரை மோடு ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்துவதால், அறை துர்நாற்றமின்றி ஆரோக்கியமாக இருக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;வெயில் காலத்தில் டிரை மோடு செட்டாகாது&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;டிரை மோடு என்பது காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் மழைக்காலம் மற்றும் மேகமூட்டமான நாட்களுக்கு மட்டுமே ஏற்றது. கோடைகாலத்தின் அதிக வெப்பத்தை தணிக்க வழக்கமான 'Cool Mode' மட்டுமே சரியான தேர்வாகும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>life-style</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/how-to-reduce-ac-electricity-bill-dry-mode-monsoon-972o39p"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Driving Facts: நெடுஞ்சாலை சைன்போர்டுகள் ஏன் பச்சை நிறத்தில் இருக்கிறது தெரியுமா? ஷாக் ஆயிடுவீங்க]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/why-are-highway-signboards-green-the-real-reason-explained-e3duedh</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/why-are-highway-signboards-green-the-real-reason-explained-e3duedh</guid>
            <pubDate>Mon, 27 Jul 2026 12:22:28 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Driving Facts: தேசிய நெடுஞ்சாலை அல்லது எக்ஸ்பிரஸ்வே வழியாக பயணம் செய்யும்போது, ​​பச்சை நிற சைன்போர்டுகளை நிச்சயம் பார்த்திருப்பீர்கள். ஆனால், அந்த பலகைகள் ஏன் குறிப்பாக பச்சை நிறத்தில் உள்ளன என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kyh4rxbqbx5qyx940aa5ctb8,imgname-highway-signboards--2--1785134347639.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Driving Facts: தேசிய நெடுஞ்சாலை அல்லது எக்ஸ்பிரஸ்வே வழியாக பயணம் செய்யும்போது, ​​பச்சை நிற சைன்போர்டுகளை நிச்சயம் பார்த்திருப்பீர்கள். ஆனால், அந்த பலகைகள் ஏன் குறிப்பாக பச்சை நிறத்தில் உள்ளன என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் எக்ஸ்பிரஸ்வேக்களில் பயணம் செய்யும்போது பச்சை நிற சைன்போர்டுகள் அதிகம் காணப்படுகின்றன. இந்த பலகைகளில் நகரங்களின் பெயர், தூரம், வெளியேறும் வழி (Exit), சாலை எண் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் வெள்ளை எழுத்துக்களில் குறிப்பிடப்பட்டிருக்கும். இது வெறும் வடிவமைப்பு தேர்வு அல்ல. சாலைப் பாதுகாப்பு மற்றும் தகவல் பரிமாற்றத்தை எளிதாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஒரு சர்வதேச நடைமுறையாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சாலை சைகைகளில் ஒவ்வொரு நிறத்திற்கும் தனித்தனி அர்த்தம் உள்ளது. சிவப்பு நிறம் ஆபத்து, நிறுத்தம் அல்லது தடை அறிவிப்புகளைக் குறிக்கிறது. மஞ்சள் நிறம் எச்சரிக்கை அல்லது கவனமாகச் செல்ல வேண்டிய இடங்களைக் காட்டுகிறது. நீலம் நிற சைகைகள் மருத்துவமனை, பெட்ரோல் நிலையம், ஓய்வு பகுதி போன்ற பொது வசதிகளைக் குறிக்கப் பயன்படுகின்றன. மேலும், பச்சை நிறம் வழிகாட்டும் தகவல்கள் மற்றும் திசை குறிக்கும் பலகைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;ஹீரோ பைக் விலை திடீர் குறைப்பு.. ரூ.59,999-க்கு வாங்கலாம்; ஆனால் இந்த 4 மாநிலங்களுக்கு மட்டும்&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பச்சை நிறத்தைத் தேர்வு செய்ததற்கு முக்கிய காரணம் மனிதக் கண்களின் செயல்பாடாகும். நிபுணர்களின் கருத்துப்படி, பச்சை நிறம் கண்களுக்கு சோர்வை ஏற்படுத்துகிறது. நீண்ட நேரம் வாகனம் ஓட்டும்போது இந்த நிறம் பார்வைக்கு சிரமத்தை ஏற்படுத்தாது. மேலும், பச்சை நிறம் இயற்கையுடன் தொடர்புடையதாக இருப்பதால் மன அமைதியையும், கவனத்தையும் அதிகரிக்க உதவுகிறது. இதனால் ஓட்டுநர்கள் சாலையில் அதிக கவனத்துடன் பயணிக்க முடிகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேலும், பச்சை பின்னணியில் வெள்ளை எழுத்துக்கள் பயன்படுத்தப்படுவதால் அதிக கான்ட்ராஸ்ட் (கான்ட்ராஸ்ட்) கிடைக்கிறது. இதனால் பகலிலும், இரவிலும் தகவல்களை தொலைவிலிருந்து தெளிவாகப் படிக்க முடியும். பல நெடுஞ்சாலை சைன்போர்டுகளில் ரெட்ரோ-ரெஃப்ளெக்டிவ் பொருள் பயன்படுத்தப்படுவதால், வாகன ஹெட்லைட் ஒளி பட்டவுடன் எழுத்துகள் தெளிவாக ஒளிரும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதுவே ஓட்டுநர்கள் சரியான நேரத்தில் வழித்தடத்தைப் புரிந்துகொண்டு பாதுகாப்பாக முடிவெடுக்க உதவுகிறது. அதனால்தான் இந்தியா மட்டுமல்ல, உலகின் பல நாடுகளிலும் நெடுஞ்சாலை வழிகாட்டி பலகைகளுக்கு பச்சை நிறமே பரவலாக பயன்படுத்தப்படுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>life-style</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/why-are-highway-signboards-green-the-real-reason-explained-e3duedh"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Shower Tips: பச்சைத் தண்ணி குளியலா, வெந்நீர் குளியலா? எது பெஸ்ட்? சயின்ஸ் என்ன சொல்லுது?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/hot-water-bath-vs-cold-water-bath-benefits-and-differences-which-is-better-according-to-science-and-best-practices-ffeplcv</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/hot-water-bath-vs-cold-water-bath-benefits-and-differences-which-is-better-according-to-science-and-best-practices-ffeplcv</guid>
            <pubDate>Sun, 26 Jul 2026 12:25:54 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Hot Water Bath vs Cold Water Bath: பச்சைத் தண்ணியில குளிக்கிறது நல்லதா, இல்ல வெந்நீர்ல குளிக்கிறது நல்லதா? எந்த நேரத்துக்கு எது சரி? அறிவியல் ஆய்வுகள் என்ன சொல்லுதுன்னு முழுசா இங்க பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kyek4xme0germet9gxs9vt8j,imgname-hot-water-bath-vs-cold-water-bath-1785048757902.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Hot Water Bath vs Cold Water Bath: பச்சைத் தண்ணியில குளிக்கிறது நல்லதா, இல்ல வெந்நீர்ல குளிக்கிறது நல்லதா? எந்த நேரத்துக்கு எது சரி? அறிவியல் ஆய்வுகள் என்ன சொல்லுதுன்னு முழுசா இங்க பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தினமும் குளிப்பது நம் வழக்கத்தின் ஒரு பகுதி. ஆனால் பச்சைத் தண்ணியா, வெந்நீரா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். இரண்டில் எது சிறந்தது என்பதை விட, எந்த நேரத்தில் குளிக்கிறீர்கள், அப்போது உங்கள் உடலுக்கு என்ன தேவை என்பதைப் பொறுத்துதான் அதன் பலன்கள் அமையும். உடல் மற்றும் நரம்பியல் ரீதியாக இரண்டுக்கும் வெவ்வேறு நன்மைகள் உள்ளன. மருத்துவ அறிக்கைகள் சொல்வதை இங்கே விரிவாகப் பார்ப்போம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் - &lt;/strong&gt;Train: ரயில் &lsquo;சந்திப்பு&rsquo; vs &lsquo;முனையம்&rsquo;.! ரெண்டும் ஒன்னு கிடையாதா? இவ்வளவு வித்தியாசம் இருக்கா? 90% பேருக்கு தெரியாது.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;காலை நேரங்களிலும், ஜிம் அல்லது வொர்க் அவுட் செய்த பிறகும் பச்சைத் தண்ணீரில் (10&deg;C முதல் 15&deg;C) குளிப்பது மிகவும் நல்லது. இது உடலுக்கு ஒரு நேச்சுரல் பயாலாஜிக்கல் ரீசெட் போல செயல்படுகிறது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;உடனடி சுறுசுறுப்பு: &lt;/strong&gt;பச்சைத் தண்ணீர் உடலில் பட்டதும், உடல் ஒருவித ஷாக் நிலைக்குச் செல்லும். இதனால் எண்டோர்பின்கள், அட்ரினலின் ஹார்மோன்கள் சுரக்கும். இதயத் துடிப்பு அதிகரித்து, ஆக்சிஜன் உள்வாங்குதல் அதிகமாகும். இதனால் நொடிகளில் தூக்கக் கலக்கம் நீங்கி, சுறுசுறுப்பாக உணர்வீர்கள்.&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;தசை வலி குறையும்: &lt;/strong&gt;வொர்க் அவுட் செய்யும்போது தசைகளில் லாக்டிக் அமிலம் சேரும். பச்சைத் தண்ணீர் ரத்தக் குழாய்களைச் சுருங்கச் செய்து, லாக்டிக் அமிலத்தை வெளியேற்ற உதவுகிறது. தசை வீக்கத்தையும் குறைக்கிறது.&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;சருமம் மற்றும் முடி: &lt;/strong&gt;வெந்நீரைப் போல பச்சைத் தண்ணீர் சருமத்தில் உள்ள இயற்கையான எண்ணெய்களை அகற்றாது. முடியின் வேர்க்கால்களைப் பூட்டி, சருமம் வறண்டு போகாமல் பாதுகாக்கும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் -&lt;/strong&gt; Mental Health: ராத்திரி ஆனா மட்டும் ஏன் மனசு பாரமா இருக்கு? சைக்காலஜி சொல்லும் காரணங்கள்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மாலை அல்லது இரவு நேரங்களிலும், உடல் வலி இருக்கும்போதும் வெதுவெதுப்பான அல்லது சூடான நீரில் குளிப்பது ஒரு ஹீட் தெரபி போல வேலை செய்யும்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;ஆழமான தூக்கம்: &lt;/strong&gt;தூங்குவதற்கு 90 நிமிடங்களுக்கு முன்பு வெந்நீரில் குளித்தால், ரத்தக் குழாய்கள் விரிவடையும். குளித்துவிட்டு வெளியே வந்ததும், உடல் வெப்பநிலை வேகமாகக் குறையும். இது, தூங்குவதற்கான நேரம் வந்துவிட்டது என்று மூளைக்கு சிக்னல் கொடுக்கும்.&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;மூட்டு வலிகளுக்கு நிவாரணம்:&lt;/strong&gt; வெந்நீர், தசைகள் மற்றும் மூட்டுகளின் இறுக்கத்தைக் குறைக்கிறது. ரத்த ஓட்டத்தை அதிகரித்து, நாள்பட்ட வலிகளைக் குறைக்கும்.&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;மூக்கடைப்பு நீங்கும்: &lt;/strong&gt;வெந்நீரிலிருந்து வரும் நீராவி, மூக்கின் துவாரங்களைத் திறந்து, சளியை இளகச் செய்யும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் -&lt;/strong&gt; Mineral Water vs Bore Water: மினரல் வாட்டரா? போர் வாட்டரா? உடம்புக்கு எது நல்லது? எது பெஸ்ட்?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வெந்நீரில் குளிப்பதால் மன அழுத்தம் குறைந்து, மன அமைதி கிடைக்கும். உடலில் உள்ள அழுக்கு மற்றும் எண்ணெய் பிசுக்கு எளிதாக நீங்கும். ஆனால், அதிக சூடான நீரைப் பயன்படுத்தினால் சருமமும் முடியும் வறண்டுவிடும். எக்ஸிமா அல்லது சென்சிடிவ் சருமம் உள்ளவர்களுக்குப் பிரச்னைகள் அதிகமாகலாம். மறுபுறம், 15&deg;C முதல் 25&deg;C வெப்பநிலையில் உள்ள பச்சைத் தண்ணீர் மனதை ஃப்ரெஷ் ஆக்கும். வொர்க் அவுட்டுக்குப் பிறகு நல்ல நிவாரணம் தரும். ஆனால், குளிர்காலத்தில் பச்சைத் தண்ணீரில் குளிப்பது சற்று அசௌகரியமாக இருக்கும். மேலும், இதய நோய் அல்லது ரத்த ஓட்டப் பிரச்னைகள் உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் குளிர்ந்த நீரில் குளிக்கக் கூடாது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் -&lt;/strong&gt; Milk: பசும்பால் vs எருமை பால்.! குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இரண்டு விதமான குளியலின் பலன்களும் உங்களுக்கு வேண்டுமென்றால், 'கான்ட்ராஸ்ட் ஷவர்' ஒரு நல்ல வழி. முதலில் வெந்நீரில் குளித்துவிட்டு, கடைசியாக 30 முதல் 60 வினாடிகள் வரை பச்சைத் தண்ணீரை உடம்பில் ஊற்றிக்கொள்ள வேண்டும். இந்த திடீர் மாற்றம், ரத்த நுண் சுழற்சியை (micro-circulation) அதிகரித்து, சருமத்தின் ஈரப்பதம் குறையாமல் நாள் முழுவதும் உங்களை ஆற்றலுடன் வைத்திருக்கும். பொதுவாக, வெதுவெதுப்பான நீரே பலருக்கும் பாதுகாப்பானது. இது சருமத்தை வறண்டு போகாமல் சுத்தம் செய்யும். எனவே, நிம்மதியான தூக்கத்திற்கு இரவில் வெந்நீரையும், ஆற்றல் மற்றும் புத்துணர்ச்சிக்கு காலையில் அல்லது வொர்க் அவுட்டுக்குப் பிறகு பச்சைத் தண்ணீரையும் தேர்ந்தெடுப்பது சிறந்தது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>life-style</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/hot-water-bath-vs-cold-water-bath-benefits-and-differences-which-is-better-according-to-science-and-best-practices-ffeplcv"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Cooker Hacks: குக்கர் விசில் அடிக்கும்போது தண்ணீர் கொட்டுதா? இந்த சிம்பிள் ட்ரிக்ஸ் ஃபாலோ பண்ணுங்க!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/how-to-stop-cooker-water-overflowing-g8aswn6</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/how-to-stop-cooker-water-overflowing-g8aswn6</guid>
            <pubDate>Mon, 27 Jul 2026 06:02:06 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Cooker Hacks: குக்கர் விசில் அடிக்கும்போது தண்ணீர் கசிவதைத் தடுக்க கேஸ்கெட்டை ஃப்ரீஸரில் வைப்பது, விசில் துவாரத்தைச் சுத்தம் செய்வது போன்ற டிரிக்ஸ்களை பின்பற்றுங்கள். இது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kyfpqwxvqs9vgvag11e8rcfq,imgname-cooker-hacks-1785086079931.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Cooker Hacks: குக்கர் விசில் அடிக்கும்போது தண்ணீர் கசிவதைத் தடுக்க கேஸ்கெட்டை ஃப்ரீஸரில் வைப்பது, விசில் துவாரத்தைச் சுத்தம் செய்வது போன்ற டிரிக்ஸ்களை பின்பற்றுங்கள். இது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எல்லார் வீட்டு சமையலறையிலும் பிரஷர் குக்கர் ஒரு முக்கியமான பாத்திரம். ஆனால், சில சமயங்களில் விசில் வரும்போது பருப்பு தண்ணீரோ, கஞ்சியோ வெளியே சிதறி, அடுப்பு, சமையலறை எல்லாம் ஒரே அழுக்காகிவிடும். இதைச் சுத்தம் செய்வது பெரிய தலைவலி. உங்களுக்கும் இந்தப் பிரச்சினை இருந்தால், இந்த எளிய குறிப்புகளைப் பின்பற்றுங்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;கேஸ்கெட் பராமரிப்பு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;குக்கரில் இருந்து தண்ணீர் கசிவதற்கு முக்கிய காரணம், அதன் கேஸ்கெட் (ரப்பர்) தளர்வாக (Loose) இருப்பதுதான். குக்கரைப் பயன்படுத்துவதற்கு 10 நிமிடங்கள் முன்னதாக, கேஸ்கெட்டை எடுத்து உறைவிப்பானில் (Freezer) வையுங்கள். இல்லையென்றால், குளிர்ந்த தண்ணீரில் போடுங்கள். இதனால் ரப்பர் சுருங்கி, மூடியில் சரியாகப் பொருந்திவிடும். அவசரத்திற்கு, கேஸ்கெட்டைச் சுற்றி கொஞ்சம் கோதுமை மாவு தடவினாலும் கசிவைத் தடுக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க: &lt;/strong&gt;AC Hack: ஏசி கரண்ட் பில்லை பாதியாக குறைக்கும் 'அந்த' ஒரு பட்டன்! இது தெரியாம போச்சே!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நிறைய நேரங்களில் நாம் குக்கரைத் துவைக்கும்போது, விசில் பகுதியைச் சரியாகக் கவனிக்க மாட்டோம். விசில் துவாரத்தில் பழைய உணவுத் துகள்கள் சிக்கியிருந்தால், நீராவி சரியாக வெளியே வராமல் தண்ணீர் பீய்ச்சியடிக்கும். சமைப்பதற்கு முன்னதாக, விசில் துவாரம் சுத்தமாக இருக்கிறதா என்று பரிசோதியுங்கள். தேவைப்பட்டால், ஒரு சிறிய குச்சி வைத்துச் சுத்தம் செய்யுங்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சமையல் எண்ணெய் பயன்படுத்துதல்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;குக்கர் மூடியின் உள்பக்க ஓரங்களிலும், விசில் வரும் துவாரத்தைச் சுற்றியும் கொஞ்சம் சமையல் எண்ணெய் தடவுங்கள். இப்படிச் செய்தால், சமைக்கும்போது நுரை பொங்கி தண்ணீர் வெளியே கொட்டுவதை எண்ணெய் தடுத்துவிடும். இது மிகவும் எளிய, ஆனால் பயனுள்ள ஒரு வழியாகும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க: &lt;/strong&gt;Kitchen Tips: வெண்டைக்காய் சீக்கிரம் வாடிப்போகுதா? நீண்ட நாள் ப்ரெஷ்ஷாக வைக்க சூப்பர் டிப்ஸ்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சமைக்கும் அவசரத்தில் குக்கரில் அதிக தண்ணீர் ஊற்றக்கூடாது. குக்கரின் முக்கால் பங்கிற்கு மட்டும்தான் உணவும், தண்ணீரும் இருக்க வேண்டும். மிகவும் அதிகமாகத் தண்ணீர் ஊற்றினால், விசில் வரும்போது தண்ணீர் வெளியே கொட்டுவது இயல்பு.&lt;/p&gt;&lt;p&gt;ஆரம்பத்தில் மட்டும் தீயை அதிகமாக வையுங்கள். குக்கர் சூடானதும், மிதமான தீயில் (Medium Flame) சமைத்தால், உணவு சரியாக வேகும்; தண்ணீர் கசிவதும் குறையும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஸ்பூன், சிறிய கிண்ணம் பயன்படுத்தும் முறை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;குக்கரில் பருப்பு அல்லது கிழங்கு போன்றவற்றை வேக வைக்கும் போது, ஒரு சிறிய எஃகு (Stainless Steel) ஸ்பூன் அல்லது சிறிய எஃகு கிண்ணத்தை உணவோடு சேர்த்து குக்கருக்குள் போட்டு மூடுங்கள். சமைக்கும் போது உள்ளே ஏற்படும் அதிகப்படியான கொதிநிலையையும் கொந்தளிப்பையும் இந்த ஸ்பூன் கட்டுப்படுத்தும். இதனால் நுரை அதிகளவில் பொங்கி விசில் வழியாக வெளியேறுவது முற்றிலும் தடுக்கப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பருப்பு அல்லது அரிசியை குக்கரில் வேக வைக்கும் போது, தண்ணீரோடு சேர்த்து அரை ஸ்பூன் நெய் அல்லது சமையல் எண்ணெயை நேரடியாக உணவிலேயே ஊற்றி வேகவையுங்கள். இது பருப்பு கொதிக்கும் போது உருவாகும் மாவுச்சத்து நுரையின் மேற்பரப்பு இழுவிசையை உடைத்து, நுரை அளவுக்கு அதிகமாகப் பொங்குவதைக் கட்டுப்படுத்தும். இதனால் விசில் வழியே நீர் வெளியேறாமல் இருப்பதோடு, பருப்பும் சீக்கிரமாக மலர வெந்து நல்ல மணத்துடனும் சுவையுடனும் இருக்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>life-style</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/how-to-stop-cooker-water-overflowing-g8aswn6"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Kitchen Tips: வெண்டைக்காய் சீக்கிரம் வாடிப்போகுதா? நீண்ட நாள் ப்ரெஷ்ஷாக வைக்க சூப்பர் டிப்ஸ்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/how-to-keep-ladies-finger-fresh-and-non-sticky-kitchen-hacks-knnxc4f</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/how-to-keep-ladies-finger-fresh-and-non-sticky-kitchen-hacks-knnxc4f</guid>
            <pubDate>Sun, 26 Jul 2026 15:04:07 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Kitchen Tips: உங்கள் வீட்டில் வெண்டைக்காய் சீக்கிரம் வாடிப்போய் விடுகிறதா? வெண்டைக்காய் வாடாமல் நீண்ட நாள் பிரெஷ்ஷாக வைத்திருப்பது எப்படி? என்பது குறித்து எளிய டிப்ஸ் இந்த செய்தியில் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kyew22gfxh3fnsw6tre3z8x0,imgname-kitchen-tips-1785058101775.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Kitchen Tips: உங்கள் வீட்டில் வெண்டைக்காய் சீக்கிரம் வாடிப்போய் விடுகிறதா? வெண்டைக்காய் வாடாமல் நீண்ட நாள் பிரெஷ்ஷாக வைத்திருப்பது எப்படி? என்பது குறித்து எளிய டிப்ஸ் இந்த செய்தியில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மழைக்காலத்துல வாரக்கணக்குல காய்கறிகளை மொத்தமா வாங்கி வெச்சுக்கிறது நம்ம பழக்கம். ஆனா, சரியா ஸ்டோர் பண்ணலைன்னா சில காய்கறிகள் சீக்கிரம் வீணாகிடும். அதுல வெண்டைக்காயும் ஒண்ணு. சரியா பாதுகாக்கலைன்னா, அது காய்ஞ்சுடும் அல்லது கொழகொழப்பு அதிகமாகி அழுக ஆரம்பிச்சுடும். வெண்டைக்காய் நீண்ட நாள் ஃப்ரெஷ்ஷா இருக்க சில ஈஸி டிப்ஸை ஃபாலோ பண்ணா போதும்.&lt;/p&gt;&lt;p&gt;வெண்டைக்காயில் ஏகப்பட்ட சத்துக்கள் இருக்கு. இதுல கலோரிகள் குறைவு, ஆனா நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் அதிகம். வைட்டமின் சி, வைட்டமின் கே, ஃபோலேட் இதுல நிறைய இருக்கு. பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் போன்ற அத்தியாவசிய சத்துக்களும் இதில் உள்ளன. வெண்டைக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் செரிமானத்தை மேம்படுத்தி, உடல்நலப் பிரச்சினைகளைக் குறைக்க உதவுது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க: &lt;/strong&gt;Hotel Bathrooms: ஹோட்டல் பாத்ரூம்ல எதுக்கு 2 வாஷ்பேசின்? இதுக்கு பின்னாடி இருக்கும் மாஸ்டர் பிளான்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சரியான வெண்டைக்காயை வாங்குவது முதல் படி. எப்போதுமே பிஞ்சு வெண்டைக்காயா பார்த்து வாங்குங்க. அதோட நுனியை உடைச்சா, சுலபமா உடையணும். முத்தின வெண்டைக்காய் சீக்கிரம் கெட்டுப்போயிடும். வெண்டைக்காயை ஈரப்பதத்திலிருந்து தள்ளி வைங்க. மார்க்கெட்டிலிருந்து வாங்கிட்டு வந்ததும், கொஞ்ச நேரம் காய வைங்க. பிறகு, ஒரு காய்ந்த துணியில சுத்தி, காத்து புகாத டப்பாவுல போட்டு வைங்க. இதனால ஈரம் உள்ளே போகாம, வெண்டைக்காய் வீணாகாது.&lt;/p&gt;&lt;p&gt;வெண்டைக்காயை ஃபிரிட்ஜில் வைப்பதா இருந்தா, ஒரு பாலிதீன் பை அல்லது காய்கறிப் பையில் போடுங்க. காத்தோட்டத்துக்காக பையில ஒண்ணு ரெண்டு சின்ன ஓட்டை போடுங்க. ஃபிரிட்ஜின் காய்கறி ட்ரேயில் வைப்பதற்கு முன்னாடி, அடியில் நியூஸ்பேப்பர் அல்லது டிஷ்யூ பேப்பரை விரிச்சு வைங்க. இது அதிகப்படியான ஈரத்தை உறிஞ்சிடும். ஈரமான காய்கறிகளோட சேர்த்து வெண்டைக்காயை வைக்காதீங்க. ஈரம் பட்டா சீக்கிரம் அழுகிடும். வாங்குன காய்கறிகளை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பயன்படுத்துவது நல்லது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க: &lt;/strong&gt;Chips Packet: பாதி சிப்ஸ்... பாதி காற்று.. கம்பெனிகள் நம்மை ஏமாற்றுகின்றனவா? பின்னாடி சயின்ஸ் இருக்கு!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வெண்டைக்காயைக் கழுவிய உடனேயே நறுக்கினால் கொழகொழப்பு அதிகமாகும். கழுவிய பிறகு, ஒரு சுத்தமான துணியால் துடைத்து அல்லது முழுமையாகக் காய்ந்த பிறகே நறுக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;அளவோடு நறுக்குங்கள்:&lt;/strong&gt; மிகவும் பொடியாக நறுக்குவதைத் தவிர்த்து, சற்று பெரிய துண்டுகளாக நறுக்கினால் கொழகொழப்பு வெளிப்படுவது குறையும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;புளிப்புச் சுவை சேர்த்தல்: &lt;/strong&gt;வெண்டைக்காய் வதக்கும் போது சிறிதளவு தயிர், எலுமிச்சை சாறு, புளி அல்லது தக்காளி சேர்த்தால், கொழகொழப்புத் தன்மை உடனே மறைந்துவிடும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வெண்டைக்காயைச் சமைக்கும் போது ஆரம்பத்திலேயே மூடி போட்டு சமைக்கக் கூடாது. மூடியில் உருவாகும் நீராவி நீர் காயில் விழுந்து கொழகொழப்பை அதிகமாக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;உப்பை கடைசியில் சேர்க்கவும்&lt;/strong&gt;: சமைக்கத் தொடங்கிய உடனேயே உப்பு போட்டால் காயிலிருந்து நீர் வெளிப்பட்டு கொழகொழப்பாகிவிடும். காய் முக்கால் பாகம் வெந்த பிறகே உப்பு சேர்க்க வேண்டும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>life-style</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/how-to-keep-ladies-finger-fresh-and-non-sticky-kitchen-hacks-knnxc4f"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Dark Chocolate: டார்க் சாக்லேட் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/webstories/life-style/can-dark-chocolate-really-help-with-weight-loss-experts-explain-l6aggyn</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/webstories/life-style/can-dark-chocolate-really-help-with-weight-loss-experts-explain-l6aggyn</guid>
            <pubDate>Sun, 26 Jul 2026 20:07:50 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;டார்க் சாக்லேட் சாப்பிடுவது உடல் எடையைக் குறைக்க உதவுமா? இதன் மற்ற ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kvcwwwscdgy1gh5nrypk1pfw,imgname-fotojet---2026-06-18t134614.674-1781770646316.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <category>life-style</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/webstories/life-style/can-dark-chocolate-really-help-with-weight-loss-experts-explain-l6aggyn"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Gas Cylinder : கேஸ் சிலிண்டர் தீரப்போகிறதா? இந்த அறிகுறிகளை வைத்து முன்கூட்டியே கண்டுபிடிக்கலாம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/how-to-tell-if-your-gas-cylinder-is-about-to-run-out-lidzezq</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/how-to-tell-if-your-gas-cylinder-is-about-to-run-out-lidzezq</guid>
            <pubDate>Sun, 26 Jul 2026 12:11:03 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Gas Cylinder : சமையலின் நடுவே கேஸ் சிலிண்டர் காலியாகிவிட்டால், அன்றைய வேலைகளே பாதிக்கப்படலாம். ஆனால் சில அறிகுறிகளை முன்கூட்டியே கவனித்தால், சிலிண்டர் தீரப்போகிறதை ஓரளவு கணித்து, புதிய சிலிண்டரை சரியான நேரத்தில் முன்பதிவு செய்யலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kyeht6d0nt37bgpv880m464k,imgname-chatgpt-image-jul-26--2026--11-51-30-am-1785047357856.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Gas Cylinder : சமையலின் நடுவே கேஸ் சிலிண்டர் காலியாகிவிட்டால், அன்றைய வேலைகளே பாதிக்கப்படலாம். ஆனால் சில அறிகுறிகளை முன்கூட்டியே கவனித்தால், சிலிண்டர் தீரப்போகிறதை ஓரளவு கணித்து, புதிய சிலிண்டரை சரியான நேரத்தில் முன்பதிவு செய்யலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சமையலறையில் கேஸ் சிலிண்டர் தீரப்போகிறது என்பது பல குடும்பங்களுக்கு ஒரு பெரிய தலைவலி. குறிப்பாக, காலை அவசரத்தில் அல்லது விருந்தினர்கள் வந்திருக்கும் நேரத்தில் சிலிண்டர் காலியானால், சமையல் வேலைகள் பாதிக்கப்படலாம்.&lt;/p&gt;&lt;p&gt;சிலிண்டர் தீரப்போகிறது என்பதற்கான சில ஆரம்ப அறிகுறிகளை அன்றாட சமையலின்போதே கவனிக்க முடியும். எடுத்துக்காட்டாக, அடுப்பின் தீ வழக்கத்தை விட சற்று குறைவாக எரிவது அல்லது உணவு சமைக்க வழக்கத்தை விட அதிக நேரம் எடுப்பது போன்ற மாற்றங்கள் சில நேரங்களில் தெரியும். இவற்றை முன்கூட்டியே கவனித்தால், அடுத்த சிலிண்டரை சரியான நேரத்தில் முன்பதிவு செய்து தேவையற்ற சிரமங்களைத் தவிர்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;LPG Cylinder : உங்க கேஸ் சிலிண்டர் 2 மாதம் வரணுமா? பலருக்கும் தெரியாத சூப்பர் டிப்ஸ் இதோ!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பொதுவாக, கேஸ் அடுப்பில் நீல நிறத்தில் தீப்பிழம்பு சீராக எரிவதே சரியான எரிப்பைக் குறிக்கிறது. சிலிண்டரில் கேஸ் மிகவும் குறைவாக இருக்கும்போது, தீயின் வேகம் குறைவது அல்லது உணவு சமைக்க வழக்கத்தை விட அதிக நேரம் எடுப்பது போன்ற மாற்றங்கள் சில நேரங்களில் காணப்படலாம்.&lt;/p&gt;&lt;p&gt;ஆனால், மஞ்சள் அல்லது சிவப்பு நிறத்தில் தீ எரிவது மட்டும் சிலிண்டர் தீரப்போகிறது என்பதற்கான அறிகுறி என்று சொல்ல முடியாது. அது பர்னரில் அழுக்கு சேர்ந்திருப்பது அல்லது காற்றோட்டக் குறைபாடு போன்ற காரணங்களாலும் ஏற்படலாம். எனவே, பர்னரை சுத்தம் செய்து சரிபார்த்த பிறகும் இதே பிரச்சனை தொடர்ந்தால், சிலிண்டரில் கேஸ் குறைந்திருக்கிறதா என்பதை கவனிக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Agni Marutha Yoga : 30 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் அதிசயம்! அக்னி மாருத யோகத்தால் டாப் கியரில் செல்லப்போகும் 4 ராசிகள்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வீடுகளில் பலர் பயன்படுத்தும் எளிய வழிகளில் ஒன்று, சிலிண்டரை மெதுவாகத் தூக்கிப் பார்த்து அதன் எடையை உணர்வதாகும். புதிய சிலிண்டர் கனமாக இருக்கும். பயன்படுத்தப் பயன்படுத்த அதிலுள்ள எரிவாயு குறைவதால், அதன் எடையும் படிப்படியாகக் குறையும்.&lt;/p&gt;&lt;p&gt;இது துல்லியமான அளவீடு அல்ல. இருப்பினும், வீட்டுப் பயன்பாட்டில் கேஸ் எவ்வளவு மீதமிருக்கிறது என்பதை ஓரளவு கணிக்க உதவும் எளிய வழியாகும். இதன் மூலம் புதிய சிலிண்டரை எப்போது முன்பதிவு செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்ய வசதியாக இருக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Washing Machine : கரண்டு பில் எதுல கம்மியா வரும்? Top Load-ஆ? Front Load-ஆ?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிலிண்டர் தீரப்போகிறது என்பதற்கான அறிகுறிகளை கவனித்தவுடன், உடனடியாக அடுத்த சிலிண்டருக்கான முன்பதிவைச் செய்துவிடுவது நல்லது. சில பகுதிகளில் டெலிவரிக்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் ஆகக்கூடும். எனவே, கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல் இருப்பது நல்லது.&lt;/p&gt;&lt;p&gt;அடிக்கடி சமையல் செய்யும் குடும்பங்கள், ஒரு கூடுதல் சிலிண்டர் வைத்திருந்தால் அவசர நேரங்களில் சிரமம் ஏற்படாமல் தவிர்க்கலாம். முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுவதன் மூலம், சமையல் வேலைகள் எந்த தடையும் இல்லாமல் தொடரும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Kala Lakshmi Rajayoga : கோடியில் புரளப் போகும் 3 ராசிகள்! வாழ்க்கையையே மாற்றும் கலா லட்சுமி ராஜயோகம்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சமையல் முடிந்ததும், அடுப்பை மட்டும் அணைக்காமல், சிலிண்டரின் ரெகுலேட்டரையும் அணைப்பது நல்ல பழக்கமாகும். மேலும், பாத்திரங்களை மூடி வைத்து சமைப்பது, பிரஷர் குக்கரை பயன்படுத்துவது, பர்னர்களை சுத்தமாக வைத்திருப்பது போன்ற பழக்கங்கள் எரிவாயு வீணாவதை குறைத்து, சிலிண்டரை சிக்கனமாக பயன்படுத்த உதவும்.&lt;/p&gt;&lt;p&gt;கேஸ் கசிவு இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டால், தீப்பெட்டி அல்லது லைட்டரை பயன்படுத்தக் கூடாது. அதற்கு பதிலாக, ஜன்னல்களைத் திறந்து காற்றோட்டம் ஏற்படுத்தி, ரெகுலேட்டரை அணைத்துவிட்டு, உடனடியாக எரிவாயு நிறுவனத்தை தொடர்புகொள்ள வேண்டும். இந்த எளிய பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், கேஸ் சிலிண்டரை பாதுகாப்பாகவும், நீண்ட நாட்கள் சிக்கனமாகவும் பயன்படுத்த முடியும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>life-style</category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/how-to-tell-if-your-gas-cylinder-is-about-to-run-out-lidzezq"/>
        </item>
        <item>
            <title><![CDATA[பிரிட்ஜ் மேல இந்த 3 பொருள்ல ஒன்னு வைங்க.. பணம் தேடி வரும்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/webstories/life-style/vastu-tips-for-refrigerator-to-attract-money-and-prosperity-s9bowk0</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/webstories/life-style/vastu-tips-for-refrigerator-to-attract-money-and-prosperity-s9bowk0</guid>
            <pubDate>Sun, 26 Jul 2026 15:14:11 +0530</pubDate>
            <description><![CDATA[நம்மில் பெரும்பாலானோர் பிரிட்ஜ் மேல் ஏதாவது பொருட்களை வைத்துவிடுவோம். ஆனால், வாஸ்து சாஸ்திரத்தின்படி, பிரிட்ஜ் மீது வைக்கப்படும் சில பொருட்கள் நமது நிதி நிலையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். அவை என்னென்ன என்று பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kshg88rrgtbff2wq6phfqx01,imgname-printed-fridge-cover-1779777676056.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <category>life-style</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/webstories/life-style/vastu-tips-for-refrigerator-to-attract-money-and-prosperity-s9bowk0"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Vande Bharat: ஒரு வந்தே பாரத் ரயில் செய்ய எத்தனை கோடி செலவாகும் தெரியுமா? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/interesting-facts-vande-bharat-and-hydrogen-train-manufacturing-cost-explained-yd5551l</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/interesting-facts-vande-bharat-and-hydrogen-train-manufacturing-cost-explained-yd5551l</guid>
            <pubDate>Sun, 26 Jul 2026 13:57:28 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Interesting Facts: ரயில்வே துறை நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில்களை படிப்படியாக அறிமுகப்படுத்தி வருகிறது. இன்னொரு பக்கம், ஹைட்ரஜன் ரயிலையும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. ஒரு வந்தே பாரத் ரயிலை உருவாக்க உண்மையில் எவ்வளவு செலவாகும் தெரியுமா?&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kyer86ewhn12jt483m51x53s,imgname-interesting-facts---vande-bharat-1785054108124.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Interesting Facts: ரயில்வே துறை நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில்களை படிப்படியாக அறிமுகப்படுத்தி வருகிறது. இன்னொரு பக்கம், ஹைட்ரஜன் ரயிலையும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. ஒரு வந்தே பாரத் ரயிலை உருவாக்க உண்மையில் எவ்வளவு செலவாகும் தெரியுமா?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து அமைப்பான இந்தியன் ரயில்வே, வேகமான பயணத்திற்கு மட்டுமல்ல, சுற்றுச்சூழலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது. இதன் ஒரு பகுதியாக செமி-ஹைஸ்பீட் ரயிலான வந்தே பாரத் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த ஹைட்ரஜன் ரயிலையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இரண்டு ரயில்களுக்கும் உள்ள முக்கிய வேறுபாடுகள் மற்றும் அவற்றின் சிறப்பம்சங்கள் என்னவென்று பார்ப்போம்.&lt;/p&gt;&lt;p&gt;ரயில் &lsquo;சந்திப்பு&rsquo; vs &lsquo;முனையம்&rsquo;.! ரெண்டும் ஒன்னு கிடையாதா? இவ்வளவு வித்தியாசம் இருக்கா? 90% பேருக்கு தெரியாது.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வந்தே பாரத், மேலே உள்ள மின்சாரக் கம்பிகள் மூலம் நேரடியாக மின்சாரம் பெற்று மணிக்கு 160 முதல் 180 கி.மீ வேகத்தில் பயணிக்கிறது. ஆனால், ஹைட்ரஜன் ரயில் தனக்குள் இருக்கும் எரிபொருள் செல் (fuel cell) மூலம் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனை இணைத்து, தனக்கான மின்சாரத்தை தானே உற்பத்தி செய்து இயங்குகிறது. இதன் வேகம் மணிக்கு 75 முதல் 120 கி.மீ வரை மட்டுமே. பரபரப்பான நகரங்களுக்கு இடையேயான நீண்ட தூர பயணங்களுக்கு வந்தே பாரத் பயன்படுகிறது. மின்மயமாக்கப்படாத மலைப்பகுதிகள், பாரம்பரிய வழித்தடங்களில் ஹைட்ரஜன் ரயில் இயக்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;பச்சைத் தண்ணி குளியலா, வெந்நீர் குளியலா? எது பெஸ்ட்? சயின்ஸ் என்ன சொல்லுது?&lt;/p&gt;&lt;img&gt;வந்தே பாரத் ரயில் முழுவதுமாக ஏசி வசதி மற்றும் 'கவச்' பாதுகாப்பு அமைப்புடன் வருகிறது. இந்த ரயிலை உருவாக்க சுமார் ₹97 கோடி செலவாகிறது. மறுபுறம், ஹைட்ரஜன் எளிதில் தீப்பற்றக்கூடிய வாயு என்பதால், ஹைட்ரஜன் ரயிலில் கசிவைக் கண்டறியும் கருவிகள், தானியங்கி ஷட்-ஆஃப் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. இந்த ரயிலை உருவாக்க ₹111.83 கோடி செலவாகிறது. வந்தே பாரத் வேகம் மற்றும் சொகுசு பயணத்திற்கும், ஹைட்ரஜன் ரயில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் உதவுகிறது.&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;செலவு:&lt;/strong&gt; சுமார் ₹115 கோடி முதல் ₹120 கோடி வரை.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஒரு பெட்டியின் செலவு: &lt;/strong&gt;தோராயமாக ₹6.5 கோடி முதல் ₹7.5 கோடி வரை.&lt;/p&gt;&lt;p&gt;சென்னை இணைப்புப் பெட்டி தொழிற்சாலையில் (ICF) தயாரிக்கப்பட்ட ஆரம்பகால ரயில்கள் ₹100 - ₹106 கோடியில் தயாரிக்கப்பட்ட நிலையில், கூடுதல் பாதுகாப்பு மற்றும் சொகுசு வசதிகள் சேர்க்கப்பட்டு தற்போது ஒரு ரயிலுக்கு சராசரியாக ₹115 கோடி செலவாகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் (24 பெட்டிகள்):&lt;/strong&gt; அதிக தூர இரவுக் பயணங்களுக்கான நவீன வசதிகள் கொண்ட 24 பெட்டிகள் அடங்கிய பெரிய ஸ்லீப்பர் ரயில்கள் சுமார் ₹200 - ₹290 கோடி வரை தயாரிப்பு மதிப்பிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;அலுமினிய உடலமைப்பு கொண்ட ரயில்கள்:&lt;/strong&gt; குறைந்த எடையில் அதிக வேகத்தில் (மணிக்கு 200 கி.மீ வரை) செல்லக்கூடிய அலுமினிய வந்தே பாரத் ரயிலை தயாரிக்க ஒரு ரயிலுக்குச் சுமார் ₹150 கோடி வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;தனி இன்ஜின் இல்லாத தொழில்நுட்பம்:&lt;/strong&gt; சாதாரண ரயில்கள் போல தனியாக ஒரு இன்ஜின் இழுக்காமல், ஒவ்வொரு மாற்றுப் பெட்டியிலும் என்ஜின் மோட்டார்கள் (Distributed Traction Power) இணைக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;தானியங்கி கதவுகள் &amp;amp; பாதுகாப்பு:&lt;/strong&gt; மெட்ரோ ரயில்களைப் போலத் தானாகத் திறக்கும் கதவுகள் மற்றும் 'கவச்' (Kavach - Train Collision Avoidance System) விபத்து தடுப்புத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;நவீன வசதிகள்: &lt;/strong&gt;சுழலும் நாற்காலிகள் (Rotating Chairs), தொடுதிரை வசதிகள், வைஃபை, பயோ-வேகப் கழிப்பறைகள் மற்றும் நவீன பிரேக்கிங் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;வெளிநாடுகளில் இருந்து இதேபோன்ற சொகுசு ரயில்களை இறக்குமதி செய்தால் ஒரு ரயிலுக்கு ₹250 கோடிக்கும் மேல் செலவாகும் என்ற நிலையில், முற்றிலும் இந்தியாவில் 'மேக் இன் இந்தியா' (Make in India) திட்டத்தின் கீழ் தயாரிப்பதால் இந்தச் செலவு மிகக் குறைவாகவே உள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>life-style</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/interesting-facts-vande-bharat-and-hydrogen-train-manufacturing-cost-explained-yd5551l"/>
        </item>
    </channel>
</rss>
