<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes"?>
<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Fri, 21 Aug 2026 15:50:36 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss/india" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[Bengaluru Traffic Alert: பெங்களூரு போறீங்களா? அக்டோபர் முதல் ஜனவரி வரை டிராஃபிக் இன்னும் மோசமாகும்.. காரணம் இதுதான்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/india/bengaluru-traffic-outer-ring-road-white-topping-work-to-begin-in-october-2026-36cnoc9</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/india/bengaluru-traffic-outer-ring-road-white-topping-work-to-begin-in-october-2026-36cnoc9</guid>
            <pubDate>Sun, 16 Aug 2026 14:17:06 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Bengaluru Traffic Alert: பெங்களூரு அவுட்டர் ரிங் ரோட்டில் சாலை மேம்பாட்டுப் பணிகள் தொடங்கவுள்ளன. இந்த கட்டுமானப் பணிகள் பயணிகளுக்கு தற்காலிக சிரமங்களை ஏற்படுத்தினாலும், நீண்ட காலத்திற்கு சாலையின் தரத்தை மேம்படுத்துவதே இதன் நோக்கம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01knnq11ydw6ty7a57pqsdgtwm,imgname-bengaluru-traffic-mega-plan-flyover-underpass-skywalk-whitefield-silk-board-congestion-solution-india-2-1775624030157.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Bengaluru Traffic Alert: பெங்களூரு அவுட்டர் ரிங் ரோட்டில் சாலை மேம்பாட்டுப் பணிகள் தொடங்கவுள்ளன. இந்த கட்டுமானப் பணிகள் பயணிகளுக்கு தற்காலிக சிரமங்களை ஏற்படுத்தினாலும், நீண்ட காலத்திற்கு சாலையின் தரத்தை மேம்படுத்துவதே இதன் நோக்கம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பெங்களூருவின் முக்கியமான தொழில்நுட்ப வழித்தடங்களில் ஒன்றாக இருக்கும் அவுட்டர் ரிங் ரோட்டில் சாலை மேம்பாட்டுப் பணிகள் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சில்க் போர்டு முதல் கே.ஆர்.புரம் வரையிலான சுமார் 17 கிலோமீட்டர் பகுதியை மேம்படுத்த சுமார் ரூ.450 கோடி மதிப்பிலான திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக வெள்ளைச் சிமெண்டு சாலை அமைக்கும் பணிகள் அக்டோபர் மாதம் தொடங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் ஏராளமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வருவதால், பணிகள் தொடங்கும் போது போக்குவரத்தில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சாலைப் பணிகளுடன் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக நடைபாதைகள், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் பயணிகள் ஏறும், இறங்கும் இடங்கள் உள்ளிட்டவை சீரமைக்கப்படலாம். நீண்ட காலத்தில் சாலையின் தரத்தை உயர்த்துவதுடன், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துபவர்களுக்கும் வசதியை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாக உள்ளது. ஆனால் கட்டுமானப் பணிகள் நடைபெறும் காலத்தில் வாகனங்களை மாற்றுப்பாதைகளில் திருப்ப வேண்டிய சூழல் உருவாகலாம். ஏற்கனவே அலுவலக நேரங்களில் கடுமையான நெரிசலை சந்தித்து வரும் இந்த வழித்தடத்தில், கட்டுமானப் பணிகள் கூடுதல் போக்குவரத்து அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும்.&lt;/p&gt;&lt;p&gt;August 16 Deadline: இன்றே கடைசி.. கேஸ் சிலிண்டர் பயனர்களே கவனம்.. வெளியான அறிவிப்பு&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதன் காரணமாக தொழில்நுட்ப ஊழியர்களின் அலுவலகப் பயணத்தை குறைப்பது குறித்து அரசு மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் இடையே ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட நாட்களில் மட்டும் அலுவலகத்திற்கு வருவது அல்லது வீட்டிலிருந்து பணியாற்றுவதை அதிகரிப்பது போன்ற கலப்புப் பணிகள் மூலம் சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும். குறிப்பாக காலை மற்றும் மாலை உச்சநேரங்களில் அலுவலகப் பயணத்தை குறைப்பது நெரிசலை கட்டுப்படுத்த உதவுகிறது. இருப்பினும் அனைத்து நிறுவனங்களாலும் ஒரே மாதிரியான பணிமுறையை பின்பற்ற முடியாது. பணியின் தன்மை, வாடிக்கையாளர் தேவைகள் மற்றும் தகவல் பாதுகாப்பு போன்ற அம்சங்களும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மாற்றுப்பாதைகளை திட்டமிடுவது அதிகாரிகளுக்கு முக்கிய சவாலாக இருக்கும். அவுட்டர் ரிங் ரோட்டின் அருகிலேயே ஒரே நேரத்தில் பல்வேறு கட்டுமானப் பணிகள் நடைபெற்றால், போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக அலுவலக நேரங்களில் சில கிலோமீட்டர் தூரத்தை கடக்கவே அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் நிலை உருவாகலாம். இதனால் அந்தப் பகுதிகளில் தினசரி பயணம் செய்பவர்கள் முன்கூட்டியே புறப்படுவது, பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவது அல்லது அலுவலக நேரத்தை மாற்றிக்கொள்வது போன்ற வழிகளை பரிசீலிக்கலாம். கட்டுமானப் பணிகள் தொடங்கிய பிறகு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் போக்குவரத்து மாற்றங்களையும் தொடர்ந்து கவனிப்பது அவசியம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எனினும், இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் நீண்ட காலத்தில் பெங்களூருவின் மிக முக்கியமான தொழில்நுட்ப வழித்தடங்களில் ஒன்றை மேம்படுத்துவதுதான். சாலை தரத்துடன் நடைபாதைகள் மற்றும் பேருந்து வசதிகள் சிறப்பாக அமைந்தால், தனியார் வாகனங்களை மட்டுமே சார்ந்திருக்கும் நிலையை ஓரளவு குறைக்க முடியும். ஆனால் பணிகள் நடைபெறும் தொடக்கக் காலத்தில் பயணிகளுக்கு ஏற்படும் இடையூறுகளை குறைப்பது மிகவும் அவசியம். எனவே அக்டோபர் முதல் அடுத்த சில மாதங்களில் சில்க் போர்டு முதல் கே.ஆர்.புரம் வரையிலான பகுதியில் பயணம் செய்பவர்கள், சாலைப் பணிகள் நடைபெறும் இடங்கள், மாற்றுப்பாதைகள் மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை முன்கூட்டியே பார்த்து பயணத்தைத் திட்டமிடுவது நல்லது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>india</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/india/bengaluru-traffic-outer-ring-road-white-topping-work-to-begin-in-october-2026-36cnoc9"/>
        </item>
        <item>
            <title><![CDATA[River : இந்தியாவில் பின்னோக்கி ஓடும் ஒரே நதி! இது எங்க இருக்கு தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/india/backward-flowing-yamuna-river-at-bateshwar-explained-3up9vh3</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/india/backward-flowing-yamuna-river-at-bateshwar-explained-3up9vh3</guid>
            <pubDate>Sat, 15 Aug 2026 09:13:37 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Backward Flowing River : நம்ம நாட்டுல எத்தனையோ நதிகள் இருக்கு. எல்லா நதியும் மேடான பகுதியில் இருந்து பள்ளத்தை நோக்கித்தான் பாயும். ஆனா, ஒரே ஒரு நதி மட்டும் பின்னோக்கிப் பாயுதுன்னு சொன்னா நம்புவீங்களா? வாங்க, அந்த நதியைப் பத்திப் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m01qvg23rx516ypa2ns9vhpq,imgname-river-1786764968003.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Backward Flowing River : நம்ம நாட்டுல எத்தனையோ நதிகள் இருக்கு. எல்லா நதியும் மேடான பகுதியில் இருந்து பள்ளத்தை நோக்கித்தான் பாயும். ஆனா, ஒரே ஒரு நதி மட்டும் பின்னோக்கிப் பாயுதுன்னு சொன்னா நம்புவீங்களா? வாங்க, அந்த நதியைப் பத்திப் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பொதுவா, நதிகள் உயரமான மலைகள்ல இருந்து சமவெளிப் பகுதிக்குத்தான் பாயும். இதுதான் நாம சின்ன வயசுல இருந்து படிச்சது. ஆனா, நம்ம இந்தியாவில ஒரு நதி ரொம்ப வித்தியாசமா பாயுது. கேட்கவே ஆச்சரியமா இருந்தாலும், பார்க்க ரொம்ப அழகா இருக்கும். அமைதியான சூழல், கரையோரமா நூற்றுக்கணக்கான சிவன் கோயில்கள், அதுக்கு நடுவுல யூ-டர்ன் எடுத்துப் போற இந்த நதியைப் பார்க்க ரெண்டு கண்ணு போதாது. சரி, இந்த விசித்திர நதி எங்க இருக்கு? உண்மையாவே பின்னோக்கிப் பாயுதா? இதுக்குப் பின்னால இருக்குற வரலாறு என்னன்னு பார்க்கலாம் வாங்க.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த இடம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பட்டேஷ்வர். யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள இந்தப் பகுதி, அதன் தனித்துவமான நதிப் பாதைக்காக மட்டுமல்லாமல், ஆன்மிக முக்கியத்துவத்திற்காகவும் புகழ்பெற்றது. பட்டேஷ்வரில் யமுனையின் கரையோரமாக 101-க்கும் மேற்பட்ட சிவன் கோயில்கள் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரே பகுதியில் இத்தனை கோயில்கள் நதிக்கரையை ஒட்டி அமைந்திருப்பது இந்த இடத்தின் முக்கியமான சிறப்புகளில் ஒன்றாகும்.&lt;/p&gt;&lt;p&gt;இந்த நதிக்குப் பின்னாடி ஒரு சுவாரஸ்யமான வரலாறு இருக்கு. பதாவர் வம்சத்தைச் சேர்ந்த ராஜா பதன் சிங், யமுனை நதியோட ஓட்டத்தை, அங்க இருக்குற கோயில் படிக்கட்டுகளைத் தொட்டுட்டுப் போற மாதிரி மாத்த நினைச்சார். இதுக்காக, சுமார் 3 கி.மீ. நீளத்துக்கு அரைவட்ட வடிவில் ஒரு கல் அணையைக் கட்டினார். இதனாலதான் நதி பின்னோக்கிப் பாயுதுன்னு உள்ளூர் மக்கள் நம்புறாங்க. ஆனா, அந்த அணை மட்டும் காரணம் இல்லை. அந்தப் பகுதியோட இயற்கையான புவியியல் அமைப்பு, நிலப்பரப்பு, வரலாற்று ரீதியான கட்டுமானம் எல்லாமே சேர்ந்துதான் பட்டேஷ்வர்ல இந்த அரைவட்டத் திருப்பத்தை உருவாக்கியிருக்கு.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Blood River: தண்ணி இல்ல, ரத்தம் ஓடுற ஆறு நம்ம நாட்டுல எங்க இருக்கு தெரியுமா?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பட்டேஷ்வர், வெறும் நதித் திருப்பத்துக்கு மட்டும் ஃபேமஸ் இல்லை. ஆன்மிக ரீதியாகவும் ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்த இடம். யமுனைக் கரையில வரிசையா 101-க்கும் அதிகமான சிவன் கோயில்கள் இருக்கு. இந்து மத நம்பிக்கையின்படி, வடக்கு அல்லது வடமேற்கு திசையை நோக்கிப் பாயும் நதிகளை (உத்தரவாஹினி) ரொம்பப் புனிதமா கருதுவாங்க. அதனால, காசியைப் போலவே பட்டேஷ்வரையும் ஒரு புண்ணியத் தலமா மக்கள் வழிபடுறாங்க.&lt;/p&gt;&lt;p&gt;முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயோட சொந்த ஊரும் இந்த பட்டேஷ்வர்தான். சரி, உண்மையாவே தண்ணி ரிவர்ஸ்ல போகுதா? இல்லை. யமுனை நதி தன்னோட மொத்தப் பயணத்தையும் மாத்திக்கிட்டு பின்னோக்கிப் போகலை. ஆனா, பட்டேஷ்வர்ல ஒரு பெரிய அரைவட்ட வளைவுல திரும்புறதால, அங்க நின்னு பார்க்கும்போது நதி எதிர் திசையில போற மாதிரி ஒரு பிரம்மை ஏற்படுது. அவ்வளவுதான் விஷயம்!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>india</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/india/backward-flowing-yamuna-river-at-bateshwar-explained-3up9vh3"/>
        </item>
        <item>
            <title><![CDATA[குளத்தில் வாழ்ந்த இளைஞரின் வாழ்வையே மாற்றிய ஆனந்த் அம்பானி!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/india/anant-ambani-changed-the-life-of-a-young-man-who-lived-in-a-pond-4e6r2n5</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/india/anant-ambani-changed-the-life-of-a-young-man-who-lived-in-a-pond-4e6r2n5</guid>
            <pubDate>Wed, 19 Aug 2026 13:34:19 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுப்ரதா தாஸ், பல ஆண்டுகளாகக் குளத்தில் வசித்து வந்த அவரது சோகமான கதை, ஒரு வைரல் வீடியோவாக மாறியது. இந்த வீடியோ ஆனந்த் அம்பானியின் கவனத்தை ஈர்க்க, அவர் உடனடியாக அந்த இளைஞருக்கு மருத்துவ மற்றும் நிதி உதவிகளை வழங்க முன்வந்தார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0abpnwcczy3abjaaax7ay42,imgname-anant-ambani-took-a-teenager-living-in-a-pond-with-a-strange-disease-to-mumbai-for-treatment-1787054217100.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுப்ரதா தாஸ், பல ஆண்டுகளாகக் குளத்தில் வசித்து வந்த அவரது சோகமான கதை, ஒரு வைரல் வீடியோவாக மாறியது. இந்த வீடியோ ஆனந்த் அம்பானியின் கவனத்தை ஈர்க்க, அவர் உடனடியாக அந்த இளைஞருக்கு மருத்துவ மற்றும் நிதி உதவிகளை வழங்க முன்வந்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சுப்ரதா தாஸ் மேற்கு வங்கத்தின் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர். கடந்த நான்கு ஆண்டுகளாக, தனது முதுகுத்தண்டில் ஏற்பட்ட காயத்தால், அவரது உடல் கிட்டத்தட்ட செயலிழந்தது. அவருக்குக் குளிர்ந்த நீர் மட்டுமே சவுகரியமாக இருந்ததால், வீட்டிற்கு அருகிலுள்ள குளத்தில் அவர் நிரந்தரமாக வசித்து வந்தார். உணவுக்காகவும் அத்தியாவசியத் தேவைகளுக்காகவும் மட்டுமே கரையேறும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். அவரது வறுமைதான் இதற்கு காரணம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Raja Maaligai Dhanayoga : 4 ராசிகளை திடீர் கோடீஸ்வரர் ஆக்கும் ராஜ மாளிகை தனயோகம்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சஞ்சய் டெக் யூடியூப் சேனலின் சஞ்சய் மஹாட்டோ, சுப்ரதா தாஸின் துயரமான வாழ்வைக் கண்டு ஒரு வீடியோவை உருவாக்கினார். இந்த வீடியோவில், சுப்ரதா குளத்தில் வாழும் காட்சிகள், அவரது குடும்பத்தின் வறுமை நிலை, மற்றும் சிகிச்சைக்கான கோரிக்கை ஆகியவை விளக்கமாகப் பதிவு செய்யப்பட்டன. வெறும் 500 ரூபாய்க்கான மருந்துகூட வாங்க முடியாத குடும்பத்தின் நிலைமையை சஞ்சய் மஹாட்டோ உலகின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். இந்த வீடியோ லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டு, பகிர்ந்து கொள்ளப்பட்டது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Ginger Garlic Paste : இஞ்சி-பூண்டு பேஸ்ட் மாதக்கணக்கில் ஃப்ரெஷ்ஷா இருக்கணுமா? இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சஞ்சய் மஹாட்டோ வெளியிட்ட இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் மின்னல் வேகத்தில் பரவியது. பலரும் அதை லட்சக்கணக்கான முறை பகிர்ந்தனர். இது மும்பையில் இருந்த ஆனந்த் அம்பானியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த், இந்த வீடியோவைக் கண்டவுடன், சுப்ரதாவின் நிலை குறித்து வருந்தினார். உடனடியாகத் தன்னார்வக் குழுக்கள் மூலமாக, சுப்ரதா தாஸைத் தொடர்புகொள்ள ஏற்பாடு செய்தார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;White Clothes : வெள்ளைத் துணிகளை எப்பயும் பளிச்சுன்னு வச்சுக்க 6 சூப்பர் டிப்ஸ்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆனந்த் அம்பானி இந்த விவகாரத்தைக் கேள்விப்பட்டவுடன் தாமதிக்கவில்லை. உடனடியாக சுப்ரதா தாஸுக்கு மருத்துவ மற்றும் நிதி உதவிகளை வழங்கத் தயாரானார். சுப்ரதாவின் வீட்டுக்கு ஆட்களை அனுப்பி, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தார். அவருக்குத் தேவையான அனைத்து மருத்துவ சிகிச்சைகளுக்கான செலவுகளையும் முழுமையாக ஏற்றுக்கொண்டார். மேலும், அவரது குடும்பத்தின் வறுமை நிலையைக் கருதி, தேவையான நிதி உதவிகளையும் வழங்க உறுதியளித்தார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Instant Noodles : 5 வயதுக்குக் கீழுள்ள குழந்தைக்கு நூடுல்ஸ்? மறைந்திருக்கும் 8 ஆபத்துகள்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தத் தலையீடு சுப்ரதா தாஸின் வாழ்வில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளது. மருத்துவச் சிகிச்சைக்குப் பிறகு, அவர் குளத்தில் வாழ்வதைத் தவிர்த்து, வீட்டிலேயே தங்கியிருக்கத் தொடங்கியுள்ளார். அவரது குடும்பத்தினரும், கிராம மக்களும் இந்த உதவிக்காக அனந்த் அம்பானிக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளனர். சுப்ரதா விரைவில் குணமடைந்து, ஒரு சாதாரண வாழ்க்கையை வாழத் தொடங்குவார் என்ற நம்பிக்கை தற்போது எழுந்துள்ளது. இது ஒரு சிறந்த முன்மாதிரி.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Hair Care : உங்கள் தலைமுடிக்கு சரியான ஷாம்பு எது? நிபுணர்களின் 7 டிப்ஸ்!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>india</category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/india/anant-ambani-changed-the-life-of-a-young-man-who-lived-in-a-pond-4e6r2n5"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Smartphone EMI : EMI கட்டலேன்னா போன் வேலை செய்யாதா? ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் என்ன?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/smartphone-emi-not-paid-will-your-phone-stop-working-rbi-new-rules-4guo76c</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/smartphone-emi-not-paid-will-your-phone-stop-working-rbi-new-rules-4guo76c</guid>
            <pubDate>Sun, 16 Aug 2026 08:30:14 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Smartphone EMI : நீங்கள் வாங்கிய ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட் போன்ற மின்னணு சாதனங்களுக்கான EMI தவணையைச் செலுத்தத் தவறினால், நிதி நிறுவனங்கள் உங்கள் சாதனத்தை முடக்க முடியுமா? இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளை காண்போம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m032bhbghvenzad852xq3f0f,imgname-smartphone-emi-not-paid-will-your-phone-stop-working-rbi-new-rules-1786809533808.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Smartphone EMI : நீங்கள் வாங்கிய ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட் போன்ற மின்னணு சாதனங்களுக்கான EMI தவணையைச் செலுத்தத் தவறினால், நிதி நிறுவனங்கள் உங்கள் சாதனத்தை முடக்க முடியுமா? இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளை காண்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கடன் வசூலிக்கும் பெயரில் நிதி நிறுவனங்கள் அத்துமீறல் செய்வதாகவும், சமூக வலைத்தளங்களில் மிரட்டுவதாகவும், தவறான வார்த்தைகளைப் பயன்படுத்துவதாகவும் பொதுமக்களிடமிருந்து எழுந்த புகார்களைத் தொடர்ந்து, ரிசர்வ் வங்கி இந்த புதிய சட்ட கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;முக்கிய விதிகள்&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;&lt;strong&gt;1. எந்தெந்த சாதனங்களுக்குப் பொருந்தும்?: &lt;/strong&gt;வீட்டுக்கடன், வாகனக் கடன் அல்லது தனிநபர் கடன்களுக்கு உங்கள் ஸ்மார்ட்போனையோ அல்லது லேப்டாப்பையோ நிதி நிறுவனங்கள் முடக்க முடியாது. அந்தந்த குறிப்பிட்ட சாதனத்தை வாங்குவதற்காக மட்டுமே கடன் பெறப்பட்டிருந்தால் மட்டுமே, அதற்கான விதிமுறைகளைப் பின்பற்றி நடவடிக்கை எடுக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;2. எப்போது முடக்கலாம்?:&lt;/strong&gt; EMI கட்டணம் செலுத்தி 30 நாட்களுக்குள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. 30 நாட்களுக்கு மேல் தாமதமானால் மட்டுமே படிப்படியான கட்டுப்பாடுகளை விதிக்கலாம். 60 நாட்களுக்கு மேல் நிலுவையில் இருந்தால் மட்டுமே ஒப்பந்தப்படி முழுமையான கட்டுப்பாடுகளை விதிக்க முடியும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;3. முடக்கத்தின் போது என்ன செய்யலாம்?:&lt;/strong&gt; போனை முடக்கினாலும், வரும் அழைப்புகள் மற்றும் செல்லும் அழைப்புகளை தடுக்கக்கூடாது. அதேபோல் SMS மற்றும் அவசரக்கால SOS வசதிகளைத் துண்டிக்க அனுமதி இல்லை.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;4. தனியுரிமை பாதுகாப்பு:&lt;/strong&gt; போனை முடக்கும் போது, பயனரின் தனிப்பட்ட புகைப்படங்கள், தொடர்புகள், குறுஞ்செய்திகள் அல்லது லொகேஷன் ஹிஸ்டரி ஆகியவற்றை நிதி நிறுவனங்கள் எக்காரணம் கொண்டும் பார்க்கவோ அல்லது அணுகவோ கூடாது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Rice Business : IT வேலையை உதறி அரிசி வியாபாரத்தில் ஆண்டுக்கு ரூ.25 லட்சம் வருமானம் ஈட்டும் இளைஞர்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;தகுதியுள்ள மென்பொருள்: &lt;/strong&gt;சாதனத்தை முடக்கப் பயன்படுத்தும் மென்பொருள், அந்த நிறுவனத்தின் (OEM) அல்லது ஆப்பரேட்டிங் சிஸ்டம் வழங்கும் அதிகாரப்பூர்வமான மென்பொருளாக மட்டுமே இருக்க வேண்டும்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;மீண்டும் திறக்கும் காலக்கெடு: &lt;/strong&gt;நிலுவைத் தொகையைச் செலுத்திய ஒரு மணி நேரத்திற்குள் சாதனம் அன்லாக் செய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ரூ. 250 வீதம் வாடிக்கையாளருக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;அங்கீகரிக்கப்படாத நபர்கள்: &lt;/strong&gt;கடன் வசூலிக்க வரும் நபர்கள் முறையான அங்கீகாரம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Bank : வங்கியில் பழைய கிழிந்த நோட்டுகளை மாற்றுவது எப்படி? தெரிய வேண்டிய விதிமுறைகள்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நிதி நிறுவனங்களின் இத்தகைய செயல்பாடுகள் குறித்து விவேக் ஐயர் (கிராண்ட் தார்ன்டன் பாரத் நிறுவனத்தின் நிதி சேவைகள் இடர் ஆலோசனைப் பிரிவு பங்குதாரர் மற்றும் தேசியத் தலைவர்) கூறுகையில், &quot;ஜனவரி 1, 2027 முதல், அந்தந்த சாதனத்திற்காகக் கடன்பெற்றிருந்தால் மட்டுமே அதை முடக்க முடியும். இதர கடன்களுக்காக போனை முடக்க முடியாது. கடன் வாங்கும் போதே ஒப்பந்தத்தில் நிபந்தனைகளைச் சரியாக வாசித்துப் பார்க்க வேண்டும்,&quot; என்று அறிவுறுத்துகிறார்.&lt;/p&gt;&lt;p&gt;அதேபோல், பேங்க் பஜார் தலைமை நிர்வாக அதிகாரி அதில் ஷெட்டி கூறுகையில், &quot;இந்த விதிமுறைகள் கடன் வாங்குபவர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கிறது. அதே வேளையில், கடனைத் திருப்பிச் செலுத்தும் கடமை பயனர்களுக்கு உண்டு. கடன் வாங்குவதற்கு முன் அதன் நிபந்தனைகளை முழுமையாகப் புரிந்துகொள்வது அவசியம்,&quot; என்றார்.&lt;/p&gt;&lt;p&gt;கடன் முழுவதையும் செலுத்திய பிறகு, நிதி நிறுவனத்திடம் முறையாகத் தகவல் தெரிவித்து, சாதனத்தில் உள்ள முடக்க மென்பொருளை நீக்கிவிட்டதை உறுதி செய்யுமாறு பைசா பஜார் தலைமை நிர்வாக அதிகாரி சந்தோஷ் அகர்வால் அறிவுறுத்துகிறார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Old Notes Sale : பழைய 50, 100 ரூபாய் நோட்டுகள் கோடிகளில் விலை போகுதா? உண்மை என்ன?&lt;/p&gt;]]></content:encoded>
            <category>india</category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/smartphone-emi-not-paid-will-your-phone-stop-working-rbi-new-rules-4guo76c"/>
        </item>
        <item>
            <title><![CDATA[தெலங்கானா தேர்தலில் விஜய் பாணி வியூகம்: கே.கவிதாவுடன் ரத்தன் பண்டிட் திடீர் சந்திப்பு.. பின்னணி என்ன?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/india/k-kavitha-meets-astrologer-rattan-pandit-strategic-move-ahead-of-telangana-politics-articleshow-75dw9dw</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/india/k-kavitha-meets-astrologer-rattan-pandit-strategic-move-ahead-of-telangana-politics-articleshow-75dw9dw</guid>
            <pubDate>Thu, 20 Aug 2026 16:47:54 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;K. Kavitha Meets Astrologer Rattan Pandit: பிரபல ஜோதிட ஆலோசகர் ரத்தன் பண்டிட் &lsquo;தெலங்கானா ராஷ்டிர சேனா கட்சியின் தலைவர் கே.கவிதாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு தெலங்கானா தேர்தலுக்கான வியூகமா? என்பதை இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0fdwj3sq9fcqja1vx5rv522,imgname-k.-kavitha-meets-astrologer-rattan-pandit-1787224279161.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தெலங்கானா மாநிலத்தின் &lsquo;தெலங்கானா ராஷ்டிர சேனா&rsquo; (TRS) கட்சியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவின் மகளுமான கே.கவிதாவை, இந்தியாவின் முன்னணி ஜோதிட மற்றும் ஆன்மீக ஆலோசகரான ரத்தன் பண்டிட் வெற்றிவேல் ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி, அரசியல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் கவனத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;விஜய்யின் அரசியல் வாழ்க்கையையே மாற்றியவர் ரத்தன் பண்டிட்&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;துல்லியமான கணிப்புகளுக்குப் பெயர் பெற்ற ரத்தன் பண்டிட், இந்திய அளவிலான அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களுக்கு ஆன்மீக மற்றும் ஜோதிட வழிகாட்டியாக திகழந்துள்ளார். வேத ஜோதிடம் மற்றும் எண்கணிதத் துறையில் நான்கு தசாப்தங்களுக்கும் மேலான நீண்ட அனுபவம் கொண்டவர். தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் நம்பிக்கைக்குரிய ஆன்மீக ஆலோசகராக இருந்தவர் என்ற சிறப்பு இவருக்கு உண்டு.&lt;/p&gt;&lt;p&gt;மேலும் தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரும் புரட்சியை ஏற்படுத்தி இரு பெரும் திராவிட கட்சிகளை வீழ்த்தி முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய்யின் வெற்றியை முன்கூட்டியே கணித்து வியக்க வைத்தவர் ரத்தன் பண்டிட். விஜய்யின் ஜாதக அமைப்பையும், கட்சியின் பெயரையும் துல்லியமாக பகுப்பாய்வு செய்து அவர் அளித்த கணிப்புகள் அனைத்தும் நிஜமாகி தவெகவை இன்று ஆட்சியில் அமர்த்தியுள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க&lt;/strong&gt;: Aawin Milk Price: ஆவின் பால் விலையை குறைக்க தமிழக அரசு முடிவு?! தமிழக வரலாற்றிலேயே முதன் முறையாக நடக்கும் சம்பவம்.! லிட்டருக்கு எவ்ளோ தெரியுமா?&lt;/p&gt;&lt;h3&gt;&lt;strong&gt;கே.கவிதா - ரத்தன் பண்டிட் சந்திப்பு&lt;/strong&gt;&lt;/h3&gt;&lt;p&gt;இந்த நிலையில் தான் கே.கவிதாவை ரத்தன் பண்டிட் சந்தித்து பேசியுள்ளது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. ஏனெனில் தெலங்கானாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. கே.கவிதாவின் புதிய அரசியல் நகர்வுகளுக்கு வழிகாட்டும் பொருட்டு இந்தச் சந்திப்பு அமைந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. தமிழகத்தின் முதல்வர் விஜய்யின் ஜோதிட ஆலோசகராக மட்டுமின்றி அவருடைய தனிப்பட்ட ஆலோசகராகவும் விளங்கினார் ரத்தன் பண்டிட்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சந்திப்பின் பின்னணி என்ன?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இது விஜய்க்கு பெரும் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியையும் தேடிக் கொடுத்தது. ஆகவே தான் கே.கவிதாவும் விஜய்யின் பாணியில் ரத்தன் பண்டிட் ஆலோசனையின் பேரில் 2028 சட்டப்பேரை தேர்தலில் வெற்றி பெற வியூகம் வகுத்துள்ளாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனெனில் துல்லியமான கணிப்புகளுக்குப் பெயர் பெற்ற ரத்தன் பண்டிட்டின் இந்த வழிகாட்டுதல், ஆலோசனை கவிதாவின் அரசியல் பயணத்தில் ஒரு நேர்மறையான மாற்றத்தையும் புதிய உவேகத்தையும் தரும் என அவரது ஆதரவாளர்கள் நம்புகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க&lt;/strong&gt; தமிழகத்தின் நீர்நிலைகளை காப்பாற்றுங்கள்; ரூ.1 லட்சம் கோடி செலவில் கடனையும் அடைக்கலாம்: சௌமியா அன்புமணி&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;விஜய் பாதையில் கே.கவிதா?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஒட்டுமொத்தத்தில் அரசியல் களத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள ரத்தன் பண்டிட், கே.கவிதா சந்திப்பு வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்பா? இல்லை கவிதாவின் அரசியல் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தப் போகும் சந்திப்பா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>india</category>
            <dc:creator>Rayar A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/india/k-kavitha-meets-astrologer-rattan-pandit-strategic-move-ahead-of-telangana-politics-articleshow-75dw9dw"/>
        </item>
        <item>
            <title><![CDATA[1947 Newspaper: ஆகஸ்ட் 15, 1947-ல என்ன நடந்தது? அந்த நியூஸ் பேப்பரை இப்ப படிக்கலாம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/india/how-to-read-the-hindu-1947-independence-day-newspaper-via-zepto-90hesty</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/india/how-to-read-the-hindu-1947-independence-day-newspaper-via-zepto-90hesty</guid>
            <pubDate>Fri, 14 Aug 2026 15:23:49 +0530</pubDate>
            <description><![CDATA[இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்ச நாள், அதாவது ஆகஸ்ட் 15, 1947-ல என்ன நடந்ததுனு தெரிஞ்சுக்க ஆசையா? இந்த சுதந்திர தினத்துல, அந்த நாள் நியூஸ் பேப்பரை உங்க வீட்டுக்கே வரவழைக்கலாம். எப்படி தெரியுமா?]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kzzs4tk0qcgpvhq3w65zhpak,imgname-id-2-1786699213408.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்ச நாள், அதாவது ஆகஸ்ட் 15, 1947-ல என்ன நடந்ததுனு தெரிஞ்சுக்க ஆசையா? இந்த சுதந்திர தினத்துல, அந்த நாள் நியூஸ் பேப்பரை உங்க வீட்டுக்கே வரவழைக்கலாம். எப்படி தெரியுமா?&lt;img&gt;&lt;p&gt;நமக்கு நியூஸ் பேப்பர்னா என்ன? காலையில எழுந்ததும் கையில வர்ற ஒரு பேப்பர். உலகத்துல, நாட்டுல, ஊர்ல என்ன நடக்குதுனு தெரிஞ்சுக்கிட்டு, கொஞ்ச நேரத்துல ஓரமா வெச்சிடுவோம். ஆனா, ஒரு நிமிஷம் யோசிச்சு பாருங்க... அதே நியூஸ் பேப்பர் 79 வருஷத்துக்கு முன்னாடி அச்சடிச்சதுனா? அது வெறும் பேப்பர் இல்லை. ஒரு தலைமுறையோட கனவு, ஒரு தேசத்தோட போராட்டம், கோடிக்கணக்கான மக்களோட எதிர்பார்ப்பு, சந்தோஷம், வலி, நம்பிக்கை எல்லாத்தையும் அடக்கின ஒரு வரலாற்றுப் புத்தகம். இப்போ, அந்த அனுபவத்தைத்தான் Zepto-வில் கிடைக்கும் &lsquo;தி ஹிந்து&rsquo; பத்திரிகையின் ஸ்பெஷல் கலெக்டர்ஸ் எடிஷன் நமக்குக் கொடுக்குது.&lt;/p&gt;&lt;p&gt;2026-ல் நாம ஒரு மொபைல் கிளிக்ல உலக செய்திகளைப் படிக்கிறோம். நிమిஷத்துக்கு நிமிஷம் நியூஸ் மாறுது. சோஷியல் மீடியாவுல வீடியோ, போட்டோ, லைவ் அப்டேட்ஸ்னு வெள்ளம் மாதிரி வருது. ஆனா, 1947-ல நிலைமையே வேற. அப்போ ஒரு செய்திக்காக மக்கள் பேப்பருக்காக காத்திருந்தாங்க. சுதந்திரம் கிடைச்சிருச்சுங்கிற செய்தியை ஒரு பேப்பர்ல படிக்கிறதுங்கிறது, இன்னைக்கு ஒரு வைரல் வீடியோ பார்க்குற மாதிரி இல்லை. அது வாழ்க்கையில ஒரே ஒரு முறை வர்ற சரித்திர தருணத்தை நேர்ல பார்க்குற மாதிரி ஒரு ஃபீல். 1947 ஆகஸ்ட் 15... இந்திய சரித்திரத்துல அழிக்கவே முடியாத ஒரு நாள். கிட்டத்தட்ட 200 வருஷ பிரிட்டிஷ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வெச்சு, இந்தியா சுதந்திர நாடா உருவானது. தேசமே கொண்டாட்டத்துல மூழ்கியிருந்தது. ஆனா, அந்த சந்தோஷத்துக்குப் பின்னாடி பல தியாகம் இருக்கு.&lt;/p&gt;&lt;p&gt;சிறைத் தண்டனை அனுபவிச்ச சுதந்திரப் போராட்ட வீரர்கள், லத்தி அடி வாங்கினவங்க, பகத் சிங் மாதிரி தூக்குக் கயிறை முத்தமிட்ட இளம் வீரர்கள்னு பல பேர் இருக்காங்க. குடும்பம், சொத்து, சுகம் எல்லாத்தையும் விட்டுட்டு நாட்டுக்காகப் போராடின லட்சக்கணக்கான மக்களோட கனவு நனவான நாள்தான் 1947 ஆகஸ்ட் 15. அதனால, அந்த நாள்ல வெளியான நியூஸ் பேப்பரை இப்போ நாம கையில எடுக்குறது ஒரு ஸ்பெஷலான அனுபவம்.&lt;/p&gt;&lt;p&gt;நாம இன்னைக்கு படிக்கிற பேப்பர்ல &lsquo;இந்தியா&rsquo;ங்கிற வார்த்தை சாதாரணமா தெரியலாம். ஆனா, 1947-ல அதே வார்த்தைக்கு ஒரு புது அர்த்தம் இருந்துச்சு. &lsquo;இந்தியா சுதந்திர நாடு ஆகிவிட்டது&rsquo;ங்கிற செய்தி, அப்போதைய வாசகருக்கு வெறும் தகவல் இல்லை. அது அவங்க வாழ்க்கையையே மாத்தின ஒரு அறிவிப்பு. அப்பா படிச்சு மகனுக்கு சொல்லியிருக்கலாம். ஒரு வீட்டுல பேப்பரை சுத்தி மொத்த குடும்பமும் கூடியிருக்கலாம். டீக்கடையில ஒருத்தர் படிக்க, சுத்தி இருந்தவங்க ஆர்வமா கேட்டிருக்கலாம். அந்த ஒரு பக்கம், பல வீடுகள்ல சந்தோஷத்துக்குக் காரணமா இருந்திருக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இங்கேதான் இந்த பழைய பேப்பர் நம்மகூட ஒரு எமோஷனல் கனெக்ட் ஏற்படுத்துது. நாம 1947-ஐ புத்தகங்கள்ல படிக்கிறோம். &lsquo;ஆகஸ்ட் 15-ல சுதந்திரம் கிடைச்சது&rsquo;னு தெரிஞ்சுக்கிறோம். ஆனா, 1947-ஆம் வருஷத்து நியூஸ் பேப்பரை கையில எடுக்கும்போது, அது வெறும் தேதியா தெரியாது. அந்த நாள்ல மக்கள் நிஜமாவே எப்படி உணர்ந்திருப்பாங்கனு நம்மால கற்பனை பண்ண முடியும். அந்த காலத்து எழுத்துகள், விளம்பரங்கள், செய்தியோட மொழி, பேப்பர் டிசைன்னு எல்லாமே சேர்ந்து நம்மள கொஞ்ச நேரத்துக்கு சுதந்திரம் கிடைச்ச காலத்துக்கே கூட்டிட்டுப் போகும்.&lt;/p&gt;&lt;p&gt;இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னன்னா, அந்த பேப்பர்ல இருக்குற சின்ன சின்ன விளம்பரங்கள் கூட இன்னைக்கு நமக்கு வரலாறுதான். அப்போ மக்கள் என்ன பொருட்கள் வாங்குனாங்க? என்ன கம்பெனிகள் இருந்துச்சு? பிஸ்னஸ் எப்படி விளம்பரம் செஞ்சாங்க? நகர வாழ்க்கை எப்படி இருந்துச்சு? இப்படி பேப்பர்ல இருக்குற விளம்பரங்கள், செய்திகள், போட்டோக்கள் எல்லாமே அந்த கால இந்திய சமூகத்துக்கு ஒரு கண்ணாடியா இருக்கு. நாம வரலாற்றுப் புத்தகங்கள்ல படிக்க முடியாத பல சின்ன விஷயங்கள் ஒரு பழைய நியூஸ் பேப்பர் பக்கத்துல கிடைக்கலாம். Zepto-வில் கிடைக்கும் இந்த சுதந்திர கால &lsquo;தி ஹிந்து&rsquo; பேப்பர்ல சுவாரஸ்யமான விளம்பரங்கள் இருக்கு.&lt;/p&gt;&lt;p&gt;நாம இப்போ பயன்படுத்துற கோல்கேட் விளம்பரத்தை அதுல பார்க்கும்போது ஆச்சரியமா இருக்கும். அப்போ இருந்து இப்ப வரைக்கும் இந்த பிராண்ட் இருக்கானு தோணும். இதுமாதிரி பல பிராண்டுகள் நாட்டுக்கு சுதந்திரம் கிடைச்சதை ஒட்டி வாழ்த்து சொல்லி விளம்பரம் கொடுத்திருக்கு. அதுமட்டுமில்லாம, அன்னைக்கு (ஆகஸ்ட் 15) பிரபல பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியோட கச்சேரி இருந்ததற்கான அறிவிப்பும் இருக்கு. கூடவே, சுதந்திரப் போராட்ட வீரர்களோட செய்திகள், தலைவர்களோட போட்டோக்களோட &lsquo;தி ஹிந்து&rsquo; பேப்பர் ரொம்பவே ஈர்ப்பா இருக்கு.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சுதந்திரம் கிடைச்ச அந்த நாட்கள்ல தேசம் வெறும் கொண்டாட்டத்துல மட்டும் இல்லை. இன்னொரு பக்கம், பிரிவினையோட காயமும் இருந்துச்சு. இந்தியா, பாகிஸ்தான்னு ரெண்டு புதிய டொமினியன்கள் உருவானதால, லட்சக்கணக்கான மக்கள் தங்களோட வீடுகளை விட்டு அகதிகளா மாற வேண்டியிருந்தது. குடும்பங்கள் பிரிஞ்சது. வன்முறை வெடிச்சது. ஒரு பக்கம் விடுதலை தந்த சந்தோஷம்னா, இன்னொரு பக்கம் பிரிவினை தந்த சோகம். அதனால, 1947 நியூஸ் பேப்பரை படிக்கிறதுனா, வெறும் &lsquo;சுதந்திரக் கொண்டாட்டத்தை&rsquo; பார்க்குறது மட்டும் இல்லை, அந்த காலத்தோட சிக்கலான நிஜங்களையும் புரிஞ்சுக்கிறதுதான்.&lt;/p&gt;&lt;p&gt;இன்னைக்கு நமக்கு சுதந்திரம் ஒரு இயல்பான உரிமை மாதிரி தெரியுது. ஓட்டுரிமை இருக்கு. நமக்கு பிடிக்காத தலைவரை விமர்சிக்க முடியுது. நாட்டுல எங்க வேணும்னாலும் போக முடியுது. நம்ம கருத்துக்களை சொல்ல முடியுது. நம்ம மொழியில செய்திகளைப் படிக்க முடியுது. ஆனா, இதெல்லாம் எப்போதுமே இருந்தவை இல்லை. இதுக்குப் பின்னாடி ஒரு நீண்ட போராட்டம் இருக்கு. அதனால, 1947 பேப்பர் நம்மகிட்ட ஒரு கேள்வியையும் கேட்குது &mdash; நமக்கு கிடைச்ச சுதந்திரத்தை நாம எந்த அளவுக்கு மதிக்கிறோம்?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த பழைய பேப்பரை Zepto மாதிரியான ஒரு நவீன குயிக்-காமர்ஸ் பிளாட்ஃபார்ம் மூலமா நம்ம வீட்டுக்கு வரவழைக்கிறது ஒரு அழகான டைம் டிராவல் மாதிரிதான். ஒரு பக்கம், நிమిஷங்கள்ல பால், காய்கறி, மளிகை சாமான்கள் வீட்டுக்கு வர்ற டிஜிட்டல் யுகம். இன்னொரு பக்கம், அச்சடிச்ச ஒரு பேப்பர். ஒண்ணு எதிர்காலத்தோட வேகத்தைக் காட்டுது, இன்னொன்னு நம்ம கடந்த காலத்தை ஞாபகப்படுத்துது. டெக்னாலஜி எவ்வளவுதான் வளர்ந்தாலும், நம்ம வரலாற்றைத் தொட்டுப் பார்க்கும்போது வர்ற அந்த ஃபீல் எப்போதுமே ஸ்பெஷல்தான். ஒருவேளை, இந்த பழைய பேப்பரோட மதிப்பு அதோட காகிதத்துல இல்லை, அதுல அச்சடிச்ச சரித்திரத்துலதான் இருக்கு.&lt;/p&gt;&lt;p&gt;எப்போதோ யாரோ ஒருத்தர் கையில பிடிச்சிருந்த ஒரு பக்கத்தை, இன்னைக்கு நாம பிடிக்கிறோம். எப்போதோ யாரோ சுதந்திர இந்தியாவைப் பத்தி படிச்ச அதே எழுத்துக்களை நாம பார்க்கிறோம். நடுவுல 79 வருஷம் ஓடிப்போச்சு. தலைமுறைகள் மாறிடுச்சு. டெக்னாலஜி மாறிடுச்சு. நகரங்கள் மாறிடுச்சு. ஆனா, &lsquo;சுதந்திரம்&rsquo;ங்கிற உணர்வு மட்டும் நம்ம வாழ்க்கையில இன்னும் அதே வலிமையோட இருக்கு. அதனால, Zepto-ல கிடைக்கிற இந்த பழைய &lsquo;தி ஹிந்து&rsquo; பதிப்பை ஒரு சாதாரண கலெக்டர் ஐட்டமா மட்டும் பார்க்கத் தேவையில்லை. இது நம்ம தாத்தா, பாட்டி பார்த்த இந்தியாவுக்கு ஒரு ஜன்னல். அவங்க எதிர்பார்த்த சுதந்திரத்தை நாம இன்னைக்கு அனுபவிக்கிறோம்னு ஞாபகப்படுத்துற ஒரு நினைவுப் பரிசு.&lt;/p&gt;&lt;p&gt;அந்த பேப்பரை கையில பிடிக்கும்போது நமக்கு ஒரு விஷயம் நல்லா புரியும் &mdash; வரலாறு புத்தகங்கள்ல மட்டும் இல்லை, சில சமயம் அது நம்ம கையில பிடிச்சிருக்கிற ஒரு பழைய பேப்பர் வடிவத்திலயும் நம்ம முன்னாடி வரும். இந்த சுதந்திர தினத்துல, இப்படி ஒரு பழைய பேப்பரை பார்க்குறது வெறும் கடந்த காலத்தை நினைச்சுப் பார்க்குறது இல்லை. நமக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த தலைமுறைக்கு நாம செய்யுற ஒரு சின்ன மரியாதை. ஏன்னா, 1947-ல ஒரு தலைமுறை கனவு கண்ட சுதந்திர இந்தியாவுலதான் நாம இன்னைக்கு வாழ்ந்துட்டு இருக்கோம். அந்த விஷயம் ஒருமுறை நினைவுக்கு வந்தா, கையில இருக்குற அந்த பழைய பேப்பரோட மதிப்பு உடனே மாறிடும். இந்த பேப்பர் ரூ.250-399 விலையில் கிடைக்குது. உங்களுக்கு வேணும்னா Zepto-ல ஆர்டர் பண்ணலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>india</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/india/how-to-read-the-hindu-1947-independence-day-newspaper-via-zepto-90hesty"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Independence Day: இந்தியாவில் 'இந்த' ஊரில் மட்டும் ஆகஸ்ட் 16 தான் சுதந்திர தினம்! ஏன் தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/india/why-this-indian-town-celebrates-independence-day-on-august-16-d66ufzu</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/india/why-this-indian-town-celebrates-independence-day-on-august-16-d66ufzu</guid>
            <pubDate>Fri, 14 Aug 2026 16:04:39 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Independence Day: நாடு முழுவதும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், இந்தியாவில் ஒரு ஊரில் மட்டும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாப்படுகிறது. இது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kzzht2v1na2jhv7bm2d9q5as,imgname-----------------------2026-08-14t124145.469-1786691521377.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Independence Day: நாடு முழுவதும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், இந்தியாவில் ஒரு ஊரில் மட்டும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாப்படுகிறது. இது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவில் ஆகஸ்ட் 15-ம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடுகிறோம். ஆனால், பீகாரில் உள்ள பக்ஸர் மாவட்டத்தின் டும்ரான் (Dumraon) நகரத்தில் மட்டும் ஆகஸ்ட் 16-ம் தேதியும் சுதந்திர தினத்தைப் போலவே மிக முக்கியமான நாளாகக் கொண்டாடப்படுகிறது. அது ஏன் தெரியுமா?&lt;/p&gt;&lt;p&gt;1942 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தின் போது உயிர்நீத்த நான்கு தியாகிகளை கௌரவிக்க, டும்ரான் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 16-ம் தேதியைச் சுதந்திர தினம் போலவே கொண்டாடுகிறார்கள். நாடு முழுவதும் ஆகஸ்ட் 15-ல் கொடியேற்றம், அணிவகுப்பு நடக்கும்போது, இந்த ஊரில் ஆகஸ்ட் 16-ம் தேதிக்குத் தனி முக்கியத்துவம் உண்டு.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க:&lt;/strong&gt; Facts: கரண்ட் கம்பியில் பறவைகளுக்கு ஏன் ஷாக் அடிப்பதில்லை? 99% பேருக்கு தெரியாத ரகசியம்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;1942 ஆகஸ்ட் மாதம், மகாத்மா காந்தியின் 'செய் அல்லது செத்து மடி' என்ற முழக்கம் நாடு முழுவதும் மக்களை ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகத் தூண்டியது. குறிப்பாக, ஆகஸ்ட் 11 அன்று பாட்னா செயலகத்தில் 7 மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பீகார் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.&lt;/p&gt;&lt;p&gt;ஸ்ரீகிருஷ்ண சரளாவின் 'Indian Revolutionaries' புத்தகத்தின்படி, பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் 5,000 பேர் மூவர்ணக் கொடியுடன் டும்ரான் காவல் நிலையத்தை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். அவர்களின் நோக்கம், ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் இருந்த அந்தக் கட்டிடத்தில் கொடியேற்றுவதுதான்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க: &lt;/strong&gt;Boiled Eggs: ஃப்ரிட்ஜில் வச்ச அவிச்ச முட்டை.. எத்தனை நாள் வரை சேஃப்? முட்டை பிரியர்கள் கவனத்திற்கு!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;போலீசார் ஊர்வலத்தைத் தடுத்தபோது, மக்கள் நிற்க மறுத்தனர். உடனே போலீசார் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். சுமார் 14-15 வயதே நிரம்பிய இளம் பள்ளி மாணவனான கபில் முனி என்பவர் கொடியை ஏந்திச் சென்று சுட்டுக் கொல்லப்பட்டார். அவரைத் தொடர்ந்து கொடியை ஏந்திய மேலும் மூன்று பேர் உயிரிழந்தனர். ஆனாலும், மக்கள் பின்வாங்காமல் இறுதியில் போலீசாரை விரட்டிவிட்டு, காவல் நிலையத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றியே தீர்த்தனர்.&lt;/p&gt;&lt;p&gt;சுதந்திரத்திற்குப் பிறகு, தியாகிகள் உயிர்நீத்த அந்த காவல் நிலையமே ஒரு நினைவுச்சின்னமாக மாற்றப்பட்டது. கபில் முனி, கோபால் கஹர், ராம்தாஸ் சோனார், ராம்தாஸ் லோஹர் ஆகிய நான்கு தியாகிகளின் நினைவாக இது கட்டப்பட்டது. 1943-ம் ஆண்டு முதல், உள்ளூர் மக்கள் ஆகஸ்ட் 16-ம் தேதி அவர்களின் தியாகத்தை நினைவுகூரத் தொடங்கினர். இந்த வழக்கம் 80 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;'தி பெட்டர் இந்தியா' தகவலின்படி, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் டும்ரானின் பங்களிப்பை ஏற்று, பீகார் அரசு 2015-ல் இந்த ஆகஸ்ட் 16-ம் தேதி நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது. 2017 ஜனவரியில், முதல்வர் நிதிஷ் குமார் அந்த நினைவுச்சின்ன வளாகத்தில் நான்கு தியாகிகளின் சிலைகளைத் திறந்து வைத்தார்.&lt;/p&gt;&lt;p&gt;ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 16 அன்று, இந்த நினைவிடத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு, காவல் துறையினரின் அரசு மரியாதையுடன் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. ஆகஸ்ட் 15-ல் நாடு சுதந்திர தினத்தைக் கொண்டாடும்போது, டும்ரான் மக்கள் அடுத்த நாள் கூடி, தங்களுக்குச் சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த அந்த மாபெரும் தியாகத்தை நினைவுகூர்கிறார்கள்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>india</category>
            <dc:creator>Rayar A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/india/why-this-indian-town-celebrates-independence-day-on-august-16-d66ufzu"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Tirumala: திருப்பதி திருமலைக்கு போறீங்களா? இந்த மோசடி கும்பலிடம் சிக்காதீங்க.. பணத்தை இழக்க நேரிடும்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/india/tirumala-room-booking-fraud-devotees-warned-about-fake-aadhaar-and-brokers-eyvdpcq</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/india/tirumala-room-booking-fraud-devotees-warned-about-fake-aadhaar-and-brokers-eyvdpcq</guid>
            <pubDate>Wed, 19 Aug 2026 19:48:43 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Tirumala Devotees Alert: திருமலைக்கு சென்று ஏழுமலையானை தரிசிக்க திட்டமிடுகிறீர்களா? பக்தர்களுக்கான அறைகளைப் பெற்று, அவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்யும் மோசடி முயற்சிகள் குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் தொடர்ந்து எச்சரித்து வருகிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j1h99d4xpa6nddckq9pvnys4,imgname-tamil-news--49-.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Tirumala Devotees Alert: திருமலைக்கு சென்று ஏழுமலையானை தரிசிக்க திட்டமிடுகிறீர்களா? பக்தர்களுக்கான அறைகளைப் பெற்று, அவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்யும் மோசடி முயற்சிகள் குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் தொடர்ந்து எச்சரித்து வருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;திருமலைக்கு வரும் பக்தர்களை குறிவைத்து தங்குமிடங்களை முறைகேடாகப் பெறும் மோசடி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், திருமலை திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களை எச்சரித்துள்ளது. போலி அடையாள ஆவணங்களை பயன்படுத்தி பக்தர்களுக்காக ஒதுக்கப்படும் அறைகளை பெற்றுக்கொண்டு, பின்னர் அவற்றை அதிக விலைக்கு மற்றவர்களுக்கு விற்பனை செய்யும் இடைத்தரகர்களை கண்காணித்து வருவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், போலி அடையாள ஆவணத்தை பயன்படுத்தி மீண்டும் தங்குமிட அறை பெற முயன்றதாக கூறப்படும் நபர் ஒருவர் அதிகாரிகளால் பிடிக்கப்பட்ட சம்பவம் திருமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கிடைத்துள்ள தகவலின்படி, ஆகஸ்ட் 16ஆம் தேதி ஏற்கனவே போலி அடையாள ஆவணத்தை பயன்படுத்தி அறை பெற்றதாக கூறப்படும் ஒருவர், மற்றொரு போலி அடையாள அட்டையுடன் மீண்டும் அறை பெற வரிசையில் நின்றுள்ளார். அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த மத்திய வரவேற்பு அலுவலக ஊழியர்கள் அவரை தடுத்து விசாரித்தனர். விசாரணையில் அவர் கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த 32 வயதான ஆஷிக் அலி பி.எம். என தெரியவந்ததாக கூறப்படுகிறது. அவரிடமிருந்து இரண்டு போலி ஆதார் அட்டைகள், அறை பதிவு சீட்டு, ரூ.800 ரொக்கம் மற்றும் கைபேசி ஆகியவை கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;Sun Mercury Ketu Conjunction: சூரியன், புதன், கேது சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணமழை... உங்க ராசி இருக்கா?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விசாரணையின்போது, ஒரு அறைக்கு ரூ.1,000 வழங்குவதாக கூறி ரஞ்சித் என்ற இடைத்தரகர் தன்னை இந்தப் பணியில் ஈடுபடுத்தியதாக அந்த நபர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. போலி அடையாள ஆவணங்களை பயன்படுத்தி திருமலையில் தங்குமிட அறைகளை பெறுவதும், பின்னர் அவற்றை இடைத்தரகரிடம் ஒப்படைப்பதும் தனது பணியாக இருந்ததாக அவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த அறைகள் பின்னர் பக்தர்களுக்கு அதிக விலைக்கு வழங்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து தேவஸ்தான கண்காணிப்புப் பிரிவு திருமலை 2 காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. இந்த மோசடியில் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த சம்பவத்தைத் தொடர்ந்து திருமலைக்கு வரும் பக்தர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது. தங்குமிடம் அல்லது தரிசன ஏற்பாடு செய்து தருவதாக கூறும் இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆதார் விவரங்கள், புகைப்படம், கைபேசி எண் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை அறிமுகமில்லாத நபர்களிடம் வழங்குவதையும் தவிர்க்க வேண்டும். தரிசனம் மற்றும் தங்குமிடம் உள்ளிட்ட தேவஸ்தான சேவைகளுக்கு அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது அதிகாரப்பூர்வ கைபேசி செயலியை மட்டுமே பயன்படுத்துவது பாதுகாப்பானது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தங்குமிடம் அல்லது தரிசனத்தை ஏற்பாடு செய்து தருவதாக கூறி யாராவது பணம் கேட்டால், பக்தர்கள் உடனடியாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது இடைத்தரகர்கள் குறித்து தேவஸ்தானத்திற்கு தகவல் தெரிவிக்கலாம். அதிகாரப்பூர்வ தகவல்கள் மற்றும் உதவிக்காக 155257 என்ற கட்டணமில்லா உதவி எண்ணை தொடர்புகொள்ளலாம். மேலும், இடைத்தரகர்கள் தொடர்பான புகார்களுக்கு 9866898630 என்ற தேவஸ்தான கண்காணிப்பு எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம். திருமலை பயணத்தை திட்டமிடுபவர்கள் குறைந்த விலையில் அறை கிடைக்கும் என்ற ஆசையில் அறிமுகமில்லாதவர்களை நம்பாமல், அதிகாரப்பூர்வ வழிகளில் மட்டுமே முன்பதிவு செய்வது மோசடியில் சிக்காமல் இருக்க உதவும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>india</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/india/tirumala-room-booking-fraud-devotees-warned-about-fake-aadhaar-and-brokers-eyvdpcq"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Air Pollution : எல்லை தாண்டும் விஷக்காற்று! தமிழகம், கேரளாவுக்கு எச்சரிக்கை மணி!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/air-pollution-crosses-borders-warning-for-tamil-nadu-and-kerala-fvi5srp</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/air-pollution-crosses-borders-warning-for-tamil-nadu-and-kerala-fvi5srp</guid>
            <pubDate>Thu, 20 Aug 2026 10:45:34 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Air Pollution : நகர எல்லைகளைத் தாண்டி பரவும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த பிராந்திய அளவிலான ஒருங்கிணைந்த மேலாண்மை அவசியம் என சிஸ்டெப் (CSTEP) ஆய்வு தெரிவித்துள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0es0pva4wex3p7gh3h538jk,imgname-air-pollution-crosses-borders-warning-for-tamil-nadu-and-kerala-1787202394985.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Air Pollution : நகர எல்லைகளைத் தாண்டி பரவும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த பிராந்திய அளவிலான ஒருங்கிணைந்த மேலாண்மை அவசியம் என சிஸ்டெப் (CSTEP) ஆய்வு தெரிவித்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;'தென்னிந்தியாவில் காற்று மேலாண்மைக்கான நிர்வாகக் கட்டமைப்பு' என்ற தலைப்பில் சிஸ்டெப் வெளியிட்ட ஆய்வு, தமிழகம் உள்ளிட்ட ஐந்து தென்னிந்திய மாநிலங்களில் காற்று மாசுபாட்டின் தோற்றம் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான பரிமாற்றத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. இந்த ஆய்வின்படி:&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;உள்நாட்டு மாசுபாடு: &lt;/strong&gt;தமிழகத்தின் ஆண்டு சராசரி காற்று மாசுபாட்டில் 61% தென்னிந்திய மாநிலங்களிலிருந்தே உருவாகிறது என ஆய்வு தெரிவித்துள்ளது. கேரளா (65%) முதலிடத்தில் இருக்க, தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;மாசுபாட்டை ஏற்றுமதி செய்யும் மாநிலம்: &lt;/strong&gt;அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழகம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களும் தாங்கள் பெறும் மாசுபாட்டை விட, அண்டை மாநிலங்களுக்கு அதிக மாசுபாட்டை 'ஏற்றுமதி' செய்யும் மாநிலங்களாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Raja Maaligai Dhanayoga : 4 ராசிகளை திடீர் கோடீஸ்வரர் ஆக்கும் ராஜ மாளிகை தனயோகம்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;காற்று மாசுபாட்டைப் பொறுத்தவரை, தமிழகம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் அதிகளவில் மாசுபாட்டை வெளியேற்றும் மாநிலங்களாக உள்ள நிலையில், கேரளா மற்றும் தெலங்கானா அதிகளவில் மாசுபாட்டைப் பெறும் மாநிலங்களாக உள்ளன. மத்திய பகுதியில் அமைந்துள்ள கர்நாடகா, மாசுபாட்டைப் பெறுவதிலும் வெளியேற்றுவதிலும் மிதமான பங்களிப்பைக் கொண்டுள்ளது.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;தரநிலையை எட்டாத பட்டியலில் 25 நகரங்கள்!&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, தென்னிந்தியாவின் முக்கிய நகர்ப்புற பகுதிகளில் ஆண்டு சராசரி பிஎம்10 அளவு பரிந்துரைக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக உள்ளது. இதன் அடிப்படையில், தேசிய சுற்றுப்புற காற்றுத் தரநிலைகளை பூர்த்தி செய்யாத 25 தென்னிந்திய நகரங்கள் தரநிலையை எட்டாதவை என தேசிய தூய்மையான காற்றுத் திட்டத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;White Clothes : வெள்ளைத் துணிகளை எப்பயும் பளிச்சுன்னு வச்சுக்க 6 சூப்பர் டிப்ஸ்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தென்னிந்தியாவின் ஐந்து மாநிலங்களிலும் வீட்டு பயன்பாடுகள், தொழிற்சாலைகள் மற்றும் திறந்தவெளி எரிப்பு ஆகியவை உள்ளூர் காற்று மாசுபாட்டின் முக்கிய ஆதாரங்களாக இருப்பதாக ஆய்வு தெரிவித்துள்ளது. பிற பகுதிகளில் இருந்து வரும் பிஎம்2.5 மாசுபாட்டில் வீட்டு பயன்பாடுகள், எரிசக்தி மற்றும் தொழிற்துறை ஆகியவையும் முக்கிய பங்கு வகிக்கின்றன.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;தென்னிந்தியாவுக்கும் CAQM போன்ற அமைப்பு வருமா?&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;டெல்லி மற்றும் இந்தோ-கங்கை சமவெளி பகுதிகளில் காற்று மாசுபாடு எப்படி எல்லைகளைத் தாண்டுகிறதோ, அதேபோல தென்னிந்தியாவிலும் காற்று மாசு எல்லைகளைக் கடந்து பயணிக்கிறது. இங்கு டெல்லியைப் போல குறிப்பிட்ட 'ஹாட்ஸ்பாட்' பகுதிகள் இல்லை என்றாலும், மாநிலங்களுக்கு இடையே காற்று மாசு பரிமாற்றம் நிகழ்ந்து கொண்டே இருப்பது கவலைக்குரியதாக உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;இதனைத் தடுக்கவே, டெல்லியில் இருப்பது போன்றே தென்னிந்தியாவிற்கும் ஒரு பிரத்யேகமான 'காற்று மேலாண்மை ஆணையம்' (CAQM) உருவாக்கப்பட வேண்டும் என்று இந்த ஆய்வு பரிந்துரைத்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Washing Machine : துணி துவைக்கும்போது இந்த 7 தவறுகளை செய்றீங்களா? மெஷினும் துணியும் பாதிக்கலாம்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தப் பிரச்சினையைத் தவிர்க்க, தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் இணைந்து செயல்பட வேண்டிய சில முக்கியப் பாதைகள்:&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;1. பொதுவான எரிபொருள் கொள்கை:&lt;/strong&gt; அனைத்து மாநிலங்களும் ஒரே மாதிரியான சுத்தமான எரிபொருள் கொள்கையை அமல்படுத்த வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;2. மின்சார வாகனங்கள் : &lt;/strong&gt;மின்சார வாகனங்களை ஊக்குவிப்பதிலும், பழைய வாகனங்களை அகற்றுவதிலும் ஒரே மாதிரியான இலக்குகள் இருக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;3. கூட்டு முயற்சி: &lt;/strong&gt;தேசிய தூய்மையான காற்றுத் திட்டம் மற்றும் மாநில காற்றுத் தர செயல் திட்டங்களின் கீழ் கிடைக்கும் நிதியை இந்த நடவடிக்கைகளைச் செயல்படுத்தப் பயன்படுத்தலாம்.&lt;/p&gt;&lt;p&gt;காற்றுக்கு மாநில எல்லைகள் இல்லாத நிலையில், காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மாநில எல்லைகளைத் தாண்டிய ஒருங்கிணைப்புடன் இருக்க வேண்டும் என்பதையே இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;குளத்தில் வாழ்ந்த இளைஞரின் வாழ்வையே மாற்றிய ஆனந்த் அம்பானி!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>india</category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/air-pollution-crosses-borders-warning-for-tamil-nadu-and-kerala-fvi5srp"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Branded Train:  இந்தியாவில் இதுதான் முதல்முறை.. ரயிலுக்கே பிராண்ட் பெயரா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/india/sprite-tejas-express-indian-railways-introduces-branded-train-naming-for-the-first-time-g7q4fan</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/india/sprite-tejas-express-indian-railways-introduces-branded-train-naming-for-the-first-time-g7q4fan</guid>
            <pubDate>Sat, 15 Aug 2026 12:12:06 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Branded Train: இந்த மாற்றம் ரயிலின் இயக்கம் அல்லது உரிமையை பாதிக்காது. இது இந்திய ரயில்வேயின் புதிய விளம்பர வருவாய் உத்தியாகும். ரயிலின் நிர்வாகம் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தின் (IRCTC) வசமே தொடரும்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m003vnmd1766ak6czvnbm8t9,imgname-sprite-tejas-express-1786710447755.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Branded Train: இந்த மாற்றம் ரயிலின் இயக்கம் அல்லது உரிமையை பாதிக்காது. இது இந்திய ரயில்வேயின் புதிய விளம்பர வருவாய் உத்தியாகும். ரயிலின் நிர்வாகம் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தின் (IRCTC) வசமே தொடரும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;லக்னோ மற்றும் புதுடெல்லி இடையே இயக்கப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில், இனி வழக்கமான பெயருடன் &lsquo;ஸ்ப்ரைட் தேஜஸ் எக்ஸ்பிரஸ்&rsquo; என்ற பெயரிலும் அழைக்கப்படும். கிடைத்துள்ள தகவல்களின்படி, ஸ்ப்ரைட் நிறுவனத்திற்கு இந்த ரயிலில் குறிப்பிட்ட காலத்திற்கான விளம்பரம் மற்றும் பெயரிடல் உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 19 முதல் ரயில் நிலைய அறிவிப்புகள் மற்றும் பயணிகள் தொடர்பான சில இடங்களில் இந்த புதிய பெயர் பயன்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;இதன் மூலம் ரயிலின் பெயருடன் ஒரு பிரபலமான வணிக நிறுவனத்தின் பெயர் இணைக்கப்படுவது பயணிகள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால் இங்கு முக்கியமாக புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. ஸ்ப்ரைட் நிறுவனம் இந்த ரயிலை இயக்கப் போவதில்லை. ரயிலின் இயக்கம், பயணிகள் சேவை, பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் ரயில்வே தொடர்பான வழக்கமான செயல்பாடுகள் தொடர்ந்து அதே முறையில் நடைபெறும். ஸ்ப்ரைட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருப்பது விளம்பரம் மற்றும் பெயருடன் தொடர்புடைய வணிக உரிமைகள் மட்டுமே.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதன் ஒரு பகுதியாக ரயிலின் வெளிப்புறம் மற்றும் அனுமதிக்கப்பட்ட விளம்பரப் பகுதிகளில் ஸ்ப்ரைட் தொடர்பான விளம்பர வடிவமைப்புகள் இடம்பெறலாம். எனவே &lsquo;ஸ்ப்ரைட் தேஜஸ் எக்ஸ்பிரஸ்&rsquo; என்பது புதிய தனியார் ரயில் என்பது அர்த்தமில்லை. மேலும் லக்னோ-டெல்லி தேஜஸ் எக்ஸ்பிரஸை முழுமையாக தனியார் ரயில் என்று அழைப்பதும் சரியான விளக்கம் அல்ல. இந்த ரயில் சேவையை இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் நிர்வகித்து வருகிறது.&lt;/p&gt;&lt;p&gt;அதே நேரத்தில் ரயில் இயக்கப்படும் தண்டவாளங்கள், நிலையங்கள், சமிக்ஞை அமைப்புகள் உள்ளிட்ட அடிப்படை ரயில்வே கட்டமைப்புகள் இந்திய ரயில்வேயின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. எனவே ரயிலின் பெயரில் ஒரு வணிக நிறுவனத்தின் பெயர் சேர்க்கப்படுவதால், ரயிலின் உரிமை அல்லது முழுமையான இயக்க உரிமை அந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுவிட்டது என்று கருதக்கூடாது. லக்னோடெல்லி தேஜஸ் எக்ஸ்பிரஸ் கடந்த 2019ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. பயணிகளுக்கு வசதியான அதிவேகப் பயண அனுபவத்தை வழங்கும் நோக்கத்துடன் அறிமுகமான இந்த ரயில், முழுமையான குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள், உணவு மற்றும் பல்வேறு பயணிகள் சேவைகளால் கவனம் பெற்றது.&lt;/p&gt;&lt;p&gt;FD vs SIP: ரூ.10 லட்சம் எஃப்டி vs மாதம் ரூ.10,000 எஸ்ஐபி.. 15 ஆண்டில் எது அதிக பணம் தரும்?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதன் நிர்வாகத்தை இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் மேற்கொள்வதால், வழக்கமான இந்திய ரயில்வே சேவைகளுடன் சில செயல்பாட்டு அம்சங்களில் வேறுபாடு காணப்படுகிறது. இருப்பினும் ரயில் பாதுகாப்பு மற்றும் இயக்கக் கட்டுப்பாடுகள் தொடர்பான நடைமுறைகள் வழக்கம்போல தொடர்கின்றன. ரயில்களின் விளம்பர வருவாயை அதிகரிக்க புதிய வழிகளை உருவாக்கும் முயற்சியாக இந்த பெயரிடல் ஒப்பந்தம் பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;ஏற்கனவே ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பல்வேறு நிறுவனங்களின் விளம்பரங்கள் இடம்பெற்று வரும் நிலையில், ரயிலின் பெயருடன் ஒரு வணிக நிறுவனத்தின் பெயரை இணைக்கும் புதிய முயற்சியாக உள்ளது. இந்த நடவடிக்கையை சிலர் புதிய விளம்பர உத்தியாக வரவேற்கும் நிலையில், ரயில்களின் பாரம்பரிய பெயர்களில் வணிகப் பெயர்களை இணைப்பது குறித்து சிலர் கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர். எப்படியிருந்தாலும், ஆகஸ்ட் 19 முதல் &lsquo;ஸ்ப்ரைட் தேஜஸ் எக்ஸ்பிரஸ்&rsquo; என்ற பெயர் பயன்பாட்டுக்கு வருவது இந்திய ரயில்வேயின் விளம்பர முயற்சிகளில் கவனம் பெறக்கூடிய புதிய அத்தியாயமாக அமைய உள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>india</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/india/sprite-tejas-express-indian-railways-introduces-branded-train-naming-for-the-first-time-g7q4fan"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Independence Day: காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை... மூவர்ணத்தில் ஜொலிக்கும் இந்தியா!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/india/independence-day-2024-tricolor-illuminates-india-from-kashmir-to-kanyakumari-articleshow-gaa3hlh</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/india/independence-day-2024-tricolor-illuminates-india-from-kashmir-to-kanyakumari-articleshow-gaa3hlh</guid>
            <pubDate>Sat, 15 Aug 2026 06:49:50 +0530</pubDate>
            <description><![CDATA[சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நகரங்கள் மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, 'திரங்கா யாத்திரை' மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் இந்த நாள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j5b1pjz80z68735kpz8req4x,imgname-indian-national-flag.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;15 August Independence Day:&lt;/strong&gt; சுதந்திர தினம் வந்துவிட்டது, நாடு முழுக்க ஒரே கொண்டாட்டம்தான். மக்கள் தேசபக்தியோட இந்த நாளை கொண்டாடிட்டு இருக்காங்க. நாடு முழுவதும் மூவர்ணக் கொடி ஏற்றுவது, 'திரங்கா யாத்திரை' நடத்துவது, சிறப்பு நிகழ்ச்சிகள்னு ஒரே அமர்க்களமா இருக்கு. காஷ்மீர்ல இருந்து கன்னியாகுமரி வரைக்கும், நாட்டின் மூலை முடுக்கெல்லாம் மூவர்ண விளக்குகளால் ஜொலிக்குது. இப்படி அலங்கரிக்கப்பட்ட இடங்களோட போட்டோக்களை மக்கள் பெருமையா சோஷியல் மீடியாவுல ஷேர் பண்ணிட்டு வராங்க.&lt;/p&gt;&lt;p&gt;இந்த அலங்காரங்களைப் பார்க்கும்போது மக்களுக்கு உற்சாகம் கரைபுரண்டு ஓடுது. கொல்கத்தாவில் இருக்கிற விக்டோரியா மெமோரியல், பைபாஸ் ரோட்டில் உள்ள சில கட்டிடங்கள்னு பல இடங்கள்ல மூவர்ண விளக்கு அலங்காரம் பண்ணியிருக்காங்க. இந்த போட்டோஸ் எல்லாம் சில நாட்களுக்கு முன்னாடியே சோஷியல் மீடியாவுல வைரல் ஆகிடுச்சு. அதே மாதிரி, தலைநகர் டெல்லியில நடக்கப்போற அணிவகுப்புல கலந்துக்க மக்கள் கூட்டம் அலைமோதுது. மொத்தத்துல, நாடு முழுக்க ஒரு திருவிழா கோலம்தான்.&lt;/p&gt;&lt;h2&gt;தேசபக்தியில் மூழ்கிய தேசம்&lt;/h2&gt;&lt;p&gt;சுதந்திர தினத்துக்கு முன்னாடியே, நாட்டின் முக்கிய சாலைகள், ராஜ்பவன்,செங்கோட்டை மாதிரியான இடங்கள்ல விளக்கு அலங்காரங்கள் ஜொலிக்குது. 80வது சுதந்திர தினத்தை கொண்டாடறதுக்கு முன்னாடி, வெள்ளிக்கிழமையிலிருந்தே நாடு முழுக்க இருக்கிற ஸ்கூல், காலேஜ்ல 'திரங்கா யாத்திரை' நிகழ்ச்சிகள் ஆரம்பிச்சிடுச்சு. இதுமட்டுமில்லாம, 'கர் கர் திரங்கா' திட்டத்தின்படி, வீடுகள் தோறும் மூவர்ணக் கொடி பட்டொளி வீசிப் பறக்குது.&lt;/p&gt;&lt;h3&gt;திரங்கா யாத்திரை ஏற்பாடு&lt;/h3&gt;&lt;p&gt;பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கலாச்சாரக் குழுக்கள், மாணவர்கள், இளைஞர்கள்னு பலரும் அவங்கவங்க பாரம்பரிய உடையில இந்த யாத்திரையில கலந்துக்கிட்டாங்க. யாத்திரை போன வழியெல்லாம், நாட்டுப்பற்று பாடல்களுக்கு நடனமாடி, அங்கிருந்தவங்களை உற்சாகப்படுத்தினாங்க. மக்களும் அவங்களை உற்சாகமா வரவேற்றாங்க. 80வது சுதந்திர தினத்தை ஒட்டி, ஜம்மு-காஷ்மீரின் கோடைகால தலைநகரான ஸ்ரீநகர் மற்றும் பள்ளத்தாக்கின் மற்ற மாவட்டங்களும் தேசியக் கொடியின் மூவர்ண நிறத்துல மூழ்கியிருக்கு.&lt;/p&gt;&lt;h3&gt;தேசியக் கொடியின் நிறத்தில் காஷ்மீர்&lt;/h3&gt;&lt;p&gt;பள்ளத்தாக்கின் மற்ற பகுதிகளிலும் மூவர்ண பேரணிகள் நடந்துச்சு. இதுல மாணவர்கள் உட்பட ஏகப்பட்ட பேர் கலந்துக்கிட்டாங்க. முக்கியமான இடங்கள், அரசு கட்டிடங்கள், சாலைகள், மசூதி கோபுரங்கள்னு எல்லாத்தையும் மூவர்ண கொடிகளால அலங்கரிச்சிருக்காங்க. LoC எனப்படும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு பக்கத்துல இருக்கிற பல இடங்கள்லயும் தேசியக் கொடி ஏத்தப்பட்டிருக்கு. சுதந்திர தின கொண்டாட்டங்கள் அமைதியா நடக்குறதை உறுதி செய்ய, பள்ளத்தாக்கு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கு.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>india</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/india/independence-day-2024-tricolor-illuminates-india-from-kashmir-to-kanyakumari-articleshow-gaa3hlh"/>
        </item>
        <item>
            <title><![CDATA[September Crops: விவசாயிகளே கவலை வேண்டாம்! செப்டம்பரில் சாகுபடி செய்ய ஏற்ற 6 பயிர்கள்.. நல்ல வருமானம் பெறலாம்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/agriculture/september-crops-best-crops-farmers-can-grow-for-better-yield-and-income-articleshow-im1uhxi</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/agriculture/september-crops-best-crops-farmers-can-grow-for-better-yield-and-income-articleshow-im1uhxi</guid>
            <pubDate>Wed, 19 Aug 2026 21:01:49 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;September Crops: பருவமழை தாமதமாகும் போது, காரிப் பருவ சாகுபடி பாதிக்கப்பட்டாலும், செப்டம்பர் மாதத்தில் கிடைக்கும் மழை மற்றும் ஈரப்பதத்தைப் பொறுத்து மாற்று வாய்ப்புகள் உள்ளன. நிலக்கடலை, பாசிப்பயறு, உளுந்து போன்ற குறுகிய காலப் பயிர்களை சரியான திட்டமிடலுடன் சாகுபடி செய்யலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01gh45dxgrkwn089aztnhca825,imgname-photos--8-.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;பருவமழை தாமதமாகும் போது அல்லது எதிர்பார்த்த அளவுக்கு மழை கிடைக்காதபோது, ​​ஏற்கனவே திட்டமிட்ட காரிப் பருவ சாகுபடி பாதிக்கப்படலாம். ஆனால் ஒரு பயிர் பாதிக்கப்பட்டுவிட்டால் அடுத்த சாகுபடி வாய்ப்புகள் முழுமையாக முடிந்துவிடுவதில்லை. செப்டம்பர் மாதத்தில் கிடைக்கும் மழை, நிலத்தில் ஈரப்பதம் மற்றும் பாசன வசதியைப் பொறுத்து குறுகிய காலத்தில் அறுவடைக்கு வரும் சில பயிர்களைத் தேர்வு செய்யலாம்.&lt;/p&gt;&lt;p&gt;நிலக்கடலை மற்றும் பயறு வகைகள் உள்ளிட்ட சில பயிர்கள் காரிப் பருவத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன. எனினும், எந்தப் பயிரை தேர்வு செய்வது என்பது மாவட்டம் மற்றும் மண் தன்மையைப் பொறுத்தே முடிவு செய்யப்பட வேண்டும். செப்டம்பர் மாதத்தில் சில பகுதிகளில் நிலக்கடலை சாகுபடியை பரிசீலிக்கலாம். ஆனால் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே விதமான விதைப்பு காலம் பொருந்தாது.&lt;/p&gt;&lt;p&gt;சில பகுதிகளில் செப்டம்பர் முதல் அக்டோபர் வரையிலான காலம் நிலக்கடலைக்கு ஏற்றதாக பரிந்துரைக்கப்படுகிறது. மண்ணின் தன்மை, மழையின் அளவு மற்றும் பாசன வசதிக்கு ஏற்ப சரியான ரகத்தையும் தேர்வு செய்ய வேண்டும். எனவே விதைகளை வாங்குவதற்கு முன்பு உங்கள் மாவட்டத்திற்கான வேளாண்மை பரிந்துரையை தெரிந்துகொள்வது முக்கியம்.&lt;/p&gt;&lt;p&gt;பருவத்தை மட்டும் பார்த்து அவசரமாக விதைப்பதைவிட, நிலத்தில் போதுமான ஈரப்பதம் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். பாசிப்பயறு மற்றும் உளுந்து போன்ற பயறு வகைகளும் குறுகிய கால சாகுபடிக்கு சில பகுதிகளில் ஏற்றதாக இருக்கலாம். குறிப்பாக நல்ல வடிகால் வசதியுள்ள நிலங்களிலும், தேவையான ஈரப்பதம் கிடைக்கும் பகுதிகளிலும் இவற்றை தேர்வு செய்ய முடியும்.&lt;/p&gt;&lt;p&gt;வீட்டு மூலையில இந்த மசாலாவை வைங்க.. சிலந்தி, பூச்சிகள் பக்கத்துல கூட வராது!&lt;/p&gt;&lt;p&gt;விதைகளை விதைப்பதற்கு முன்பு முறையான விதை நேர்த்தி செய்வது நல்ல முளைப்பு மற்றும் ஆரம்பகட்ட வளர்ச்சிக்கு உதவலாம். நிலத்தின் தன்மைக்கு ஏற்ப இவற்றை தனிப்பயிராகவும், சில சூழ்நிலைகளில் ஊடுபயிராகவும் பயன்படுத்த முடியும். இதனால் மழை குறைவாக இருக்கும் காலத்திலும் கிடைக்கும் நிலத்தையும் தண்ணீரையும் திட்டமிட்டு பயன்படுத்தும் வாய்ப்பு விவசாயிகளுக்கு கிடைக்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;இதுதவிர, சிறுதானியங்கள் மற்றும் பிற குறுகிய காலப் பயிர்களையும் சில பகுதிகளில் பரிசீலிக்கலாம். குறிப்பாக மழை சார்ந்த நிலங்களில் பயிரை தேர்வு செய்யும்போது அடுத்த சில வாரங்களில் மழை, மண்ணில் ஈரப்பதம் மற்றும் அறுவடைக்கு இருக்கும் கால அவகாசம் ஆகியவற்றை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். எள் போன்ற பயிர்களையும் எல்லா இடங்களிலும் செப்டம்பர் மாதத்தில் உடனடியாக தேர்வு செய்வது சரியான முடிவாக இருக்காது.&lt;/p&gt;&lt;p&gt;அதன் விதைப்பு காலமும் பகுதி மற்றும் பருவத்திற்கு ஏற்ப மாறுபடும். எனவே அதிக லாபம் கிடைக்கும் என்ற தகவலை மட்டும் வைத்து பயிரை தேர்வு செய்வதைவிட, உள்ளூர் வேளாண்மை அதிகாரிகள் அல்லது அருகிலுள்ள வேளாண் அறிவியல் மையத்தைப் பெறுவது பாதுகாப்பானது. முக்கியமாக, செப்டம்பரில் விதைத்தால் எந்தப் பயிரிலும் உறுதியாக அதிக மகசூல் கிடைக்கும் என்று கூற முடியாது.&lt;/p&gt;&lt;p&gt;விதைப்பு நேரம், விதை ரகம், மண்ணின் தன்மை, மழைப்பொழிவு, பாசன வசதி, பூச்சி மற்றும் நோய் தாக்குதல், அறுவடை காலநிலை மற்றும் சந்தை விலை என பல காரணிகள் விவசாயிகளின் இறுதி வருமானத்தை தீர்மானிக்கின்றன.&lt;/p&gt;&lt;p&gt;எனவேயை தொடங்குவதற்கு முன்பு உங்கள் நிலத்தில் கிடைக்கும் தண்ணீரின் அளவு, உள்ளூர் வானிலை நிலவரம், விதை மற்றும் இடுபொருள் செலவு, எதிர்பார்க்கப்படும் மகசூல் மற்றும் சந்தை தேவையை கணக்கிட்டு முடிவு எடுப்பது நல்லது. அதிக மகசூல் தரும் பயிர்தான் சிறந்த பயிர் என்பதில்லை; உங்கள் நிலம், நீர் வசதி மற்றும் பருவத்திற்கு பொருத்தமான பயிரே சரியான தேர்வு ஆகும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>india</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/agriculture/september-crops-best-crops-farmers-can-grow-for-better-yield-and-income-articleshow-im1uhxi"/>
        </item>
        <item>
            <title><![CDATA[LPG Gas: எல்பிஜி கேஸ்.. நுகர்வோருக்கு குட் நியூஸ்.. 21 நிறுவனங்களுக்கு அரசு போட்ட அதிரடி உத்தரவு]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/lpg-gas-centre-sets-new-production-targets-to-strengthen-domestic-supply-irnu6g4</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/lpg-gas-centre-sets-new-production-targets-to-strengthen-domestic-supply-irnu6g4</guid>
            <pubDate>Wed, 19 Aug 2026 14:18:08 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;LPG Gas: சர்வதேச வர்த்தகப் பாதிப்புகளால் சமையல் எரிவாயு விநியோகத்தில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க, மத்திய அரசு புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்த விவரங்களை முழுமையாக இங்கு பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01knrrbencn733jj8zgznekdt2,imgname-india-lpg-supply-shortage-black-market-prices-delays-2026-strict-regulations-5-1775726082732.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;LPG Gas: சர்வதேச வர்த்தகப் பாதிப்புகளால் சமையல் எரிவாயு விநியோகத்தில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க, மத்திய அரசு புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்த விவரங்களை முழுமையாக இங்கு பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவில் சமையல் எரிவாயு விநியோகத்தை மேலும் பாதுகாப்பாகவும் தடையின்றியும் வைத்திருக்கும் மத்திய அரசு புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்திய மேற்கு ஆசிய மோதலால் சர்வதேச வர்த்தகப் பாதைகளில் ஏற்பட்ட பாதிப்புகள், வெளிநாடுகளில் இருந்து வரும் எரிவாயு விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டால் அதன் தாக்கம் இந்தியாவிலும் உள்ளது என்பதை வெளிப்படுத்தியது. இதையடுத்து நாட்டுக்குள் உற்பத்தி செய்யப்படும் சமையல் எரிவாயுவின் அளவை அதிகரிப்பதுடன், அவசர காலங்களில் பயன்படுத்துவதற்கான இருப்பையும் வலுப்படுத்த அரசு கவனம் செலுத்தியுள்ளது. இதன் மூலம் சர்வதேச சூழ்நிலை காரணமாக உள்நாட்டு சந்தையில் ஏற்படக்கூடிய அழுத்தத்தை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக அரசு மற்றும் தனியார் துறை சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட உற்பத்தி இலக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, நாடு முழுவதும் தினசரி அதிகபட்சமாக 63,810 மெட்ரிக் டன் வரை எல்பிஜி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு தேவையின் ஒரு பகுதியை நாட்டிலேயே தயாரிக்கப்படும் எரிவாயு மூலம் சமாளிப்பது, விநியோகத்தில் திடீர் தடைகள் ஏற்பட்டால் அதன் தாக்கத்தை குறைப்பது இதன் முக்கிய நோக்கமாகும். இந்த உற்பத்தி இலக்குகள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மறுபரிசீலனை செய்யப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.&lt;/p&gt;&lt;p&gt;Monthly Income Scheme: மாதம் ரூ.5,000க்கு மேல் வருமானம் வேண்டுமா? ஒருமுறை பணம் போட்டால் ஒவ்வொரு மாதமும் வருமானம் கிடைக்கும்&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவின் சமையல் எரிவாயு தேவையில் இறக்குமதி செய்யும் முக்கிய பங்கு உள்ளது. குறிப்பாக மேற்கு ஆசியப் பகுதிகளில் போர், அரசியல் பதற்றம் அல்லது கப்பல் போக்குவரத்தில் ஏற்படும் இடையூறுகள் காரணமாக எரிவாயு விநியோகச் சங்கிலியில் சிக்கல் உருவாகலாம். இதை எதிர்கொள்ள உள்நாட்டு சுத்திகரிப்பு நிலையங்களின் உற்பத்தித் திறனை அதிகமாகப் பயன்படுத்துவதுடன், நாட்டிற்குள் கிடைக்கும் எல்பிஜி அளவை உயர்த்தும் முயற்சிகளும் செய்யப்படுகின்றன. இதன் மூலம் சர்வதேச சந்தையில் ஏற்படும் திடீர் மாற்றங்களுக்கு இந்தியா ஓரளவு பாதுகாப்பான நிலையில் இருக்க முடியும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உற்பத்தியை அதிகரிப்பதுடன் எரிவாயுவை பாதுகாப்பாக சேமித்து வைக்கும் வசதிகளையும் மேம்படுத்துவது முக்கியமானது. தேவைக்கு ஏற்ப நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு எல்பிஜியை விரைவாக கொண்டு செல்லும் விநியோகக் கட்டமைப்பு வலுப்படுத்தப்பட வேண்டும். ஏனெனில் உற்பத்தி அதிகமாக இருந்தாலும், அதை தேவையான இடங்களுக்கு சரியான நேரத்தில் கொண்டு செல்ல முடியாவிட்டால் தட்டுப்பாட்டை முழுமையாக சமாளிக்க முடியாது. எனவே சேமிப்பு மையங்கள், போக்குவரத்து வசதிகள் மற்றும் விநியோக அமைப்புகளை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதன் மூலம் அவசர காலங்களில் உள்நாட்டு சந்தைக்கு தொடர்ந்து எரிவாயு கிடைப்பதை உறுதி செய்ய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மொத்தத்தில், மத்திய அரசின் இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் சமையல் எரிவாயு விலையை உடனடியாக குறைப்பது அல்ல; அதன் விநியோகப் பாதுகாப்பை அதிகரிப்பதே ஆகும். உள்நாட்டு உற்பத்தியை உயர்த்துவதன் மூலம் வெளிநாட்டு இறக்குமதியை ஓரளவு சார்ந்திருக்கும் நிலையை குறைக்க முடியும். ஆனால் இதனால் இனி எரிவாயு சிலிண்டர் விலை குறையும் அல்லது எந்த சூழ்நிலையிலும் தட்டுப்பாடு ஏற்படாது என்று கூற முடியாது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, போக்குவரத்து செலவு மற்றும் அரசு நிர்ணயிக்கும் விலை உள்ளிட்ட பல காரணிகளே வீட்டு உபயோக எல்பிஜி விலையை தீர்மானிக்கின்றன. எனவே இந்த புதிய உற்பத்தி மற்றும் சேமிப்பு நடவடிக்கைகளின் உண்மையான பலன் வரும் மாதங்களில் விநியோக நிலைமை எவ்வாறு மாறுகிறது என்பதன் மூலம் தெரியவரும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>india</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/lpg-gas-centre-sets-new-production-targets-to-strengthen-domestic-supply-irnu6g4"/>
        </item>
        <item>
            <title><![CDATA[இந்தியா காட்டிய பாதை.. ஆசியா, ஆப்பிரிக்காவில் அடுத்தடுத்து சுதந்திரம் பெற்ற நாடுகளின் வரலாறு]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/india/indian-independence-and-decolonization-how-1947-shaped-a-new-world-n90m161</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/india/indian-independence-and-decolonization-how-1947-shaped-a-new-world-n90m161</guid>
            <pubDate>Thu, 13 Aug 2026 11:14:50 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;India Independence: இந்தியாவின் சுதந்திரம், ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள பல நாடுகளை காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுபடத் தூண்டியது. இதன் விளைவாக, சுமார் 118 நாடுகள் சுதந்திரம் பெற்று, உலக வரைபடத்தையே மாற்றியமைத்தன.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j5b1pjz80z68735kpz8req4x,imgname-indian-national-flag.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;India Independence: இந்தியாவின் சுதந்திரம், ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள பல நாடுகளை காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுபடத் தூண்டியது. இதன் விளைவாக, சுமார் 118 நாடுகள் சுதந்திரம் பெற்று, உலக வரைபடத்தையே மாற்றியமைத்தன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;India Independence Day: &lt;/strong&gt;இந்தியா தனது 79வது சுதந்திர ஆண்டை நெருங்கிக் கொண்டிருக்கிறது. 140 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட இந்த நாடு, தனக்கு மட்டும் சுதந்திரம் பெறவில்லை, மற்ற பல நாடுகளுக்கும் ஒரு உத்வேகமாக அமைந்தது. இந்தியாவின் சுதந்திர அறிவிப்புக்குப் பிறகு, பல இடங்களில் காலனி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்தன. இதன் விளைவாக, அவர்களின் போராட்டங்களுக்கு முன்னால் காலனித்துவம் தோற்கடிக்கப்பட்டது. உலக வரைபடத்தில் சுமார் 118 இறையாண்மை கொண்ட நாடுகள் தோன்றின.&lt;/p&gt;&lt;p&gt;இந்த எண்ணிக்கையில் சிறிய வேறுபாடுகள் இருந்தாலும், அடிமைத்தனத்திலிருந்து சுதந்திரம் பெற்ற நாடுகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்கது என்பது உண்மை. சில நாடுகள் பிரிட்டனிடமிருந்தும், சில பிரான்ஸ், போர்ச்சுகல் மற்றும் பிற நாடுகளிடமிருந்தும் சுதந்திரம் பெற்றன. ஒரு காலத்தில் ஐரோப்பிய நாடுகள் உலகின் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவின் சுதந்திரம் ஒரு நாட்டின் அரசியல் வெற்றி மட்டுமல்ல. இது ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் உலகின் பிற பகுதிகளுக்கும் உத்வேகம் அளித்தது. 1947-க்குப் பிறகு, காலனித்துவத்திற்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்தது. பிரிட்டன், பிரான்ஸ், நெதர்லாந்து, போர்ச்சுகல், பெல்ஜியம் மற்றும் பிற ஐரோப்பியப் பேரரசுகளிடமிருந்து பல நாடுகள் சுதந்திரம் பெற்றன.&lt;/p&gt;&lt;p&gt;இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பிய சக்திகள் பலவீனமடைந்தன. தொலைதூர காலனிகளைக் கட்டுப்படுத்துவது அவர்களுக்கு கடினமாகி வந்தது. உள்ளூர் மக்களும் அரசியல் உரிமைகள், அடையாளம் மற்றும் தன்னாட்சியை விரும்பினர். இந்த நேரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் செல்வாக்கு அதிகரித்தது. சுயநிர்ணய உரிமை என்ற கருத்து வலுப்பெற்றது. இந்த செயல்பாட்டில் இந்தியாவும் தார்மீக ஆதரவை வழங்கியது. இந்தியத் தலைவர்கள் காலனித்துவத்தை எதிர்த்தனர். ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிடையே ஒத்துழைப்பு அதிகரித்தது. பின்னர், அணிசேரா இயக்கமும் புதிய நாடுகளுக்கு ஒரு பொதுவான தளத்தை வழங்கியது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவின் வழியைப் பின்பற்றி, ஆசியாவின் பல நாடுகள் சுதந்திரம் பெற்றன. 1948-ல், மியான்மர் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றது. அதே ஆண்டில் இலங்கையும் சுதந்திரம் அடைந்தது. 1957-ல் மலேசியா சுதந்திர நாடானது. 1965-ல் மாலத்தீவுகள் பிரிட்டிஷ் பாதுகாப்பிலிருந்து விடுபட்டது. நீண்ட மற்றும் வலிமிகுந்த போருக்குப் பிறகு, 1971-ல் வங்கதேசம் சுதந்திரம் பெற்றது. அதன் விடுதலைப் போராட்டத்தில் இந்தியா முக்கியப் பங்காற்றியது. இன்று திமோர்-லெஸ்டே என்று அழைக்கப்படும் கிழக்கு திமோர், 2002-ல் சுதந்திரம் பெற்றது. இது 21-ம் நூற்றாண்டில் சுதந்திரம் பெற்ற முக்கிய நாடுகளில் ஒன்றாகும். ஆசியாவில் சுதந்திரம் என்பது கொடியை மாற்றுவது மட்டுமல்ல. புதிய நாடுகள் எல்லை, மொழி, இன அடையாளம் மற்றும் பொருளாதார வளர்ச்சி தொடர்பான சவால்களையும் சந்தித்தன.&lt;/p&gt;&lt;p&gt;இந்தியாவிற்குப் பிறகு ஆப்பிரிக்காவில்தான் அதிக எண்ணிக்கையிலான நாடுகள் சுதந்திரம் பெற்றன. 1950 மற்றும் 1960-கள் ஆப்பிரிக்க சுதந்திரத்தின் காலமாக இருந்தன. குறிப்பாக 1960-ம் ஆண்டு 'ஆப்பிரிக்காவின் ஆண்டு' என்று அழைக்கப்படுகிறது. அந்த ஆண்டில் பல ஆப்பிரிக்க நாடுகள் சுதந்திரம் பெற்றன. 1957-ல் கானா சுதந்திரம் பெற்றது, இது துணை-சஹாரா ஆப்பிரிக்காவின் முதல் சுதந்திர நாடுகளில் ஒன்றாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நைஜீரியா, காங்கோ, செனகல், சோமாலியா, மாலி, நைஜர், சாட், காபோன் மற்றும் பல நாடுகள் 1960-ம் ஆண்டு வாக்கில் சுதந்திரம் பெற்றன. பிரான்சுக்கு எதிரான நீண்ட போராட்டத்திற்குப் பிறகு 1962-ல் அல்ஜீரியா சுதந்திரம் பெற்றது. கென்யா 1963-லும், ஜாம்பியா மற்றும் மலாவி 1964-லும் சுதந்திரம் பெற்றன. அங்கோலா மற்றும் மொசாம்பிக் 1975-ல் போர்த்துகீசிய ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றன. நமீபியா 1990-லும், தெற்கு சூடான் 2011-லும் சுதந்திரம் பெற்றன. தெற்கு சூடான் உலகின் இளைய, பரவலாக அங்கீகரிக்கப்பட்ட நாடாகக் கருதப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;இந்தியாவிற்குப் பிறகு, கரீபியன் பிராந்தியத்தில் உள்ள பல சிறிய நாடுகளும் சுதந்திரம் பெற்றன. ஜமைக்கா மற்றும் டிரினிடாட் மற்றும் டோபாகோ 1962-ல் சுதந்திரம் பெற்றன. கயானா மற்றும் பார்படாஸ் 1966-ல் சுதந்திரம் பெற்றன. பஹாமாஸ் 1973-ல் சுதந்திரம் பெற்றது. கிரெனடா, டொமினிகா, செயின்ட் லூசியா, மற்றும் செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் போன்ற சிறிய தீவு நாடுகளும் அடுத்தடுத்த ஆண்டுகளில் சுதந்திரம் பெற்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பசிபிக் பெருங்கடல் பகுதியில் பிஜி, பப்புவா நியூ கினியா, சாலமன் தீவுகள், வனுவாட்டு, கிரிபாட்டி, துவாலு, மார்ஷல் தீவுகள் மற்றும் பலாவ் போன்ற நாடுகள் சுதந்திரம் பெற்றன. இந்த நாடுகளில் மக்கள் தொகை குறைவாகவும், வளங்கள் குறைவாகவும் இருந்தாலும், அவற்றின் கடல் பகுதி நீளமானது. பருவநிலை மாற்றம் இவர்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க சவாலாக உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;1991-க்குப் பிறகு உலக அரசியல் வரைபடம் மீண்டும் மாறியது. சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்தது. எஸ்டோனியா, லாட்வியா, லிதுவேனியா, உக்ரைன், ஜார்ஜியா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஆர்மீனியா, அஜர்பைஜான் மற்றும் பல நாடுகள் சுதந்திரம் பெற்றன அல்லது தங்கள் சுதந்திரத்தை மீண்டும் நிலைநாட்டின. இதேபோல், யூகோஸ்லாவியாவின் உடைவால் ஸ்லோவேனியா, குரோஷியா, போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, வடக்கு மாசிடோனியா, மாண்டினீக்ரோ மற்றும் செர்பியா போன்ற தனித்தனி அரசியல் அமைப்புகள் தோன்றின. மொத்த எண்ணிக்கையில் உள்ள சிறிய வேறுபாட்டிற்கு இதுவே காரணம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்று, சுதந்திரம் பெற்ற நாடுகளின் நிலைமை ஒரே மாதிரியாக இல்லை. சில நாடுகள் விரைவான பொருளாதார வளர்ச்சியை அடைகின்றன. சில நாடுகள் ஜனநாயகத்தை வலுப்படுத்துகின்றன. சில நாடுகள் இன்னும் போர், வறுமை, ஸ்திரத்தன்மை இல்லாமை மற்றும் காலநிலை நெருக்கடியுடன் போராடுகின்றன. சிங்கப்பூர் ஒரு வெற்றிகரமான உதாரணம். 1965-ல் சுதந்திரம் பெற்ற பிறகு, வர்த்தகம், கல்வி, துறைமுகம் மற்றும் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு வலுவான பொருளாதாரத்தை இந்த நாடு உருவாக்கியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பஹ்ரைன் போன்ற நாடுகள் எண்ணெய், எரிவாயு, வர்த்தகம் மற்றும் உலகளாவிய முதலீடுகளால் செழிப்படைந்துள்ளன. வங்கதேசம் ஆடைத் தொழில், பெண்கள் கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. இருப்பினும், இது காலநிலை மாற்றம், வெள்ளம் மற்றும் அதிக மக்கள் தொகை போன்ற சவால்களை எதிர்கொள்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆப்பிரிக்காவில், ருவாண்டா, போட்ஸ்வானா மற்றும் மொரிஷியஸ் வளர்ச்சி மற்றும் நல்லாட்சிக்கான நேர்மறையான எடுத்துக்காட்டுகளாகக் கருதப்படுகின்றன. மறுபுறம், தெற்கு சூடான், சோமாலியா, சூடான் மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசு ஆகியவை ஸ்திரத்தன்மையின்மை, வன்முறை, இடப்பெயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடிகள் போன்ற சவால்களுடன் போராடுகின்றன. உக்ரைன், ஜார்ஜியா மற்றும் வேறு சில முன்னாள் சோவியத் நாடுகள் பாதுகாப்பு மற்றும் புவிசார் அரசியல் பதட்டங்களை எதிர்கொள்கின்றன. பல சிறிய தீவு நாடுகள் கடல் மட்ட உயர்வு, புயல்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து கவலை கொண்டுள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆக, இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு, உலகம் காலனித்துவ ஆட்சியின் முடிவைக் கொண்டாடியது என்று சொல்லலாம். சுமார் 118 நாடுகள் சுதந்திரம் பெற்றது மனித வரலாற்றின் மிக முக்கியமான அரசியல் நிகழ்வுகளில் ஒன்றாகும். இந்த செயல்முறை எப்போதும் அமைதியானதாக இருக்கவில்லை. பல நாடுகள் போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது, பல சமூகங்கள் அதற்காக பெரும் விலை கொடுக்க வேண்டியிருந்தது. இருப்பினும், இந்த நாடுகளின் சுதந்திரம் உலகை மேலும் பன்முகத்தன்மை கொண்டதாக மாற்றியது. உலக அரங்கில் ஆசியா, ஆப்பிரிக்கா, கரீபியன் மற்றும் பசிபிக் பிராந்தியங்களின் குரல்கள் வலுப்பெற்றன. இந்த ஆழமான மாற்றத்திற்கு இந்தியாவின் சுதந்திரமே ஒரு ஊக்கியாக இருந்தது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>india</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/india/indian-independence-and-decolonization-how-1947-shaped-a-new-world-n90m161"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Male River : இந்தியாவில் எல்லாமே பெண் நதிகள்தான்! அந்த ஒரே ஒரு ஆண் நதி பற்றி தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/india/the-only-male-river-in-india-you-should-know-about-pmoc9ud</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/india/the-only-male-river-in-india-you-should-know-about-pmoc9ud</guid>
            <pubDate>Thu, 13 Aug 2026 11:47:09 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Male River : இந்தியாவின் பெரும்பாலான நதிகளுக்கு கங்கை, யமுனை, காவேரி என பெண் பெயர்களே உள்ளன. ஆனால், ஒரே ஒரு நதிக்கு மட்டும் ஆண் பெயர் உள்ளது. அது எது? அதன் சிறப்புகள் என்ன?&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kzwvyrhhf83rxye7v75170ss,imgname-the-only-male-river-in-india-you-should-know-about-1786601497137.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Male River : இந்தியாவின் பெரும்பாலான நதிகளுக்கு கங்கை, யமுனை, காவேரி என பெண் பெயர்களே உள்ளன. ஆனால், ஒரே ஒரு நதிக்கு மட்டும் ஆண் பெயர் உள்ளது. அது எது? அதன் சிறப்புகள் என்ன?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவில் பாயும் பெரும்பாலான நதிகளுக்குப் பெண் பெயர்களே சூட்டப்பட்டுள்ள நிலையில், இதற்கு முற்றிலும் மாறுபட்டதாக விளங்குவது பிரம்மபுத்திரா நதியாகும்.&lt;/p&gt;&lt;p&gt;'பிரம்மபுத்திரா' என்றால் சமஸ்கிருத மொழியில் 'பிரம்ம தேவனின் மகன்' என்று பொருள். இதன் காரணமாகவே இந்தியாவின் ஒரே 'ஆண் நதி' என்று இது அழைக்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;உற்பத்தியும் பயணமும்: &lt;/strong&gt;திபெத்தில் உருவாகும் இந்நதி, அருணாச்சலப் பிரதேசம் வழியாக இந்தியாவிற்குள் நுழைகிறது.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;பெயர் மாற்றம்: &lt;/strong&gt;அருணாச்சலப் பிரதேசத்தில் நுழையும் போது இது 'சியாங்' என்றும், அசாம் மாநிலத்தை அடைந்த பிறகு 'பிரம்மபுத்திரா' என்றும் அழைக்கப்படுகிறது.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;முடிவு: &lt;/strong&gt;இறுதியாக பங்களாதேஷில் நுழைந்து கங்கை நதியுடன் இணைந்து கடலில் கலக்கிறது.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Home Gardening : வீட்டு தொட்டியிலேயே ஸ்ட்ராபெர்ரி முதல் கொய்யா வரை வளர்ப்பது எப்படி?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியப் புராணங்களின்படி பிரம்மதேவனின் மகனாகக் கருதப்படுவதால், இந்நதிக்கு 'பிரம்மபுத்திரா' (சமஸ்கிருதத்தில் 'புத்ரா' என்றால் மகன்) என்னும் தனித்துவமான பெயர் அமைந்தது. பிற முக்கிய நதிகளிலிருந்து இது பெயரளவில் மட்டுமல்லாமல், பல்வேறு சிறப்புகளாலும் வேறுபடுகிறது.&lt;/p&gt;&lt;h3&gt;&lt;strong&gt;பல்வேறு பெயர்கள்&lt;/strong&gt;&lt;/h3&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;திபெத்: &lt;/strong&gt;'யார்லுங் சாங்போ'&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;இந்தியாவுக்குள் நுழைந்தவுடன்:&lt;/strong&gt; 'சியாங்' அல்லது 'திஹாங்'&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;அசாம் பகுதி:&lt;/strong&gt; 'பிரம்மபுத்திரா'&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;உலகளாவிய சிறப்பு: &lt;/strong&gt;அதிக நீர்வரத்து, நீண்ட நெடிய பயணம் மற்றும் பருவமழைக் காலங்களில் ஏற்படும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஆகியவற்றால் உலகின் மிக முக்கியமான நதிகளுள் ஒன்றாக இது விளங்குகிறது.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Family Time : இந்த 5 படங்களை இன்னும் பார்க்கலையா? குடும்பத்துடன் சேர்ந்து பார்க்க செம சாய்ஸ்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிரம்மபுத்திரா நதியின் நடுவே உருவான மஜூலி, உலகின் மிகப்பெரிய நதித் தீவாக உலகப்புகழ் பெற்றுள்ளது. நதியின் போக்கில் ஏற்பட்ட தொடர்ச்சியான மாற்றங்களால் உருவான இந்தத் தீவு, அசாமின் வைஷ்ணவ கலாச்சாரத்தின் மிக முக்கியமான மையமாகத் திகழ்கிறது.&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;பாரம்பரியக் கலைகளின் இருப்பிடம்:&lt;/strong&gt; இங்கு பல நூற்றாண்டுகளாக சத்ராக்கள், பாரம்பரிய முகமூடி தயாரிப்பு, மண் பாண்டங்கள் மற்றும் நாட்டுப்புறக் கலைகள் மிகச் சிறப்பாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;சத்ராக்களின் பங்கு: &lt;/strong&gt;மஜூலியின் சத்ராக்கள் வெறும் வழிபாட்டுத் தலங்களாக மட்டும் இல்லாமல், கல்வி மற்றும் கலை மையங்களாகவும் செயல்பட்டு வருகின்றன.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;தலைமுறைத் தொடர்ச்சி: &lt;/strong&gt;சத்ரிய நடனம், இசை, நாடகம் மற்றும் பாரம்பரிய கைவினைக் கலைகள் இங்கு தலைமுறை தலைமுறையாகப் பேணிக் காக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, சமகுரி சத்ராவின் பாரம்பரிய முகமூடி தயாரிப்புக் கலை உலகளவில் மிகவும் புகழ்பெற்றது.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Snakes : காதுகளே இல்லாம பாம்புகள் எப்படி சத்தத்தைக் கேட்குது? இதுதான் அந்த சீக்ரெட்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வடகிழக்கு இந்தியாவின், குறிப்பாக அசாம் மாநிலத்தின் வாழ்வாதாரமாக விளங்கும் பிரம்மபுத்திரா நதி, விவசாயம், மீன்பிடித்தல், போக்குவரத்து மற்றும் குடிநீர் போன்ற பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;வெள்ளப்பெருக்கு மற்றும் வலிமை: &lt;/strong&gt;பருவமழைக் காலத்தில் கரைபுரண்டு ஓடும் இந்த நதியால் அசாமில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இதன் வலிமையான நீரோட்டமும் கூட, இதனை 'ஆண் நதி' என்று அழைப்பதற்கான காரணங்களில் ஒன்றாகும்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;நம்பிக்கையும் அறிவியலும்: &lt;/strong&gt;இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளையும் 'பெண் நதிகள்' என்று அழைப்பது அறிவியல் ரீதியான வகைப்பாடு கிடையாது; இது நம்முடைய மொழி, புராணங்கள் மற்றும் பண்பாட்டு மரபுகள் வழிவந்த நம்பிக்கையாகும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Petrol Car : பெட்ரோல் கார்ல தெரியாம டீசல் போட்டுட்டா என்ன ஆகும்? உடனே என்ன செய்யணும் தெரியுமா?&lt;/p&gt;]]></content:encoded>
            <category>india</category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/india/the-only-male-river-in-india-you-should-know-about-pmoc9ud"/>
        </item>
        <item>
            <title><![CDATA[LPG அப்டேட்: ஆகஸ்ட் 16-க்குள் e-KYC, இல்லையெனில் சிலிண்டர் விலை டபுளாகும் தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/lpg-ekyc-update-complete-by-august-16-2026-to-avoid-higher-cylinder-prices-vgbvg4k</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/lpg-ekyc-update-complete-by-august-16-2026-to-avoid-higher-cylinder-prices-vgbvg4k</guid>
            <pubDate>Fri, 14 Aug 2026 06:00:25 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;LPG e-KYC: நீங்க எல்பிஜி கேஸ் சிலிண்டர் பயன்படுத்துறீங்கன்னா, ஒரு முக்கியமான விஷயத்தை செய்யணும். ஆகஸ்ட் 16-ஆம் தேதிக்குள்ள e-KYC முடிக்கணும். அப்படி செய்யலன்னா, சிலிண்டர் வாங்குறதுல சிக்கல் வரலாம். சிலிண்டருக்கு அதிக பணம் கொடுக்க வேண்டியிருக்கும்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kr3rwv0hk7vmf4gw4kkkdtwq,imgname-save-gas-cylinder-life--1--1778243234833.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;LPG e-KYC: நீங்க எல்பிஜி கேஸ் சிலிண்டர் பயன்படுத்துறீங்கன்னா, ஒரு முக்கியமான விஷயத்தை செய்யணும். ஆகஸ்ட் 16-ஆம் தேதிக்குள்ள e-KYC முடிக்கணும். அப்படி செய்யலன்னா, சிலிண்டர் வாங்குறதுல சிக்கல் வரலாம். சிலிண்டருக்கு அதிக பணம் கொடுக்க வேண்டியிருக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;உங்கள் எல்பிஜி இணைப்பைத் தொடர, ஆதார் அடிப்படையிலான முக அங்கீகார e-KYC-ஐ குறிப்பிட்ட தேதிக்குள் முடிக்கவும். இல்லையெனில், சிலிண்டர் பெறுவதில் சிக்கல் ஏற்படும்.&lt;img&gt;₹940 சிலிண்டரை ₹2,700-க்கு மேல் கொடுத்து வாங்க நேரிடும். ஆகஸ்ட் 16-க்குள் e-KYC முடிக்காவிட்டால், மானிய விலை சிலிண்டர் கிடைக்காது.&lt;img&gt;வீட்டு உபயோக சிலிண்டர்கள் வணிக ரீதியாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க, பயோமெட்ரிக் e-KYC அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் உண்மையான பயனாளிகளுக்கு மட்டுமே சிலிண்டர் கிடைக்கும்.&lt;img&gt;e-KYC பெயரில் OTP, பின் நம்பர் கேட்கும் மோசடியாளர்களிடம் ஜாக்கிரதை. அதிகாரப்பூர்வ செயலிகள் அல்லது ஏஜென்சி மூலமாக மட்டுமே இதைச் செய்யவும்.&lt;img&gt;பயோமெட்ரிக் (ஃபேஸ் ஸ்கேன்) மூலம், உங்கள் பெயரில் உள்ள இணைப்புக்கு நீங்கள்தான் உரிமையாளர் என்பதை உறுதிப்படுத்தி, மானிய விலையில் சிலிண்டரை தடையின்றிப் பெறுங்கள்.]]></content:encoded>
            <category>india</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/lpg-ekyc-update-complete-by-august-16-2026-to-avoid-higher-cylinder-prices-vgbvg4k"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Three Language Policy : இனி 3 மொழி படிக்கணுமா? உச்சநீதிமன்றத்தின் அதிரடி கருத்து!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/india/do-students-have-to-learn-3-languages-supreme-court-comments-w1vb0po</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/india/do-students-have-to-learn-3-languages-supreme-court-comments-w1vb0po</guid>
            <pubDate>Fri, 21 Aug 2026 15:50:32 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Three Language Policy : 9-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கையை திடீரென அமல்படுத்துவது மாணவர்களுக்கு சுமையாகக் கூடாது எனவும், ஆசிரியர்களின் தேவையைக் கருத்தில் கொண்டு உரிய முறையில் திட்டமிட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0hwqh1zwn90k8qs0kj268h7,imgname-do-students-have-to-learn-3-languages-supreme-court-comments-1787306951743.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Three Language Policy : 9-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கையை திடீரென அமல்படுத்துவது மாணவர்களுக்கு சுமையாகக் கூடாது எனவும், ஆசிரியர்களின் தேவையைக் கருத்தில் கொண்டு உரிய முறையில் திட்டமிட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிபிஎஸ்இ பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு முதல் மும்மொழிக் கொள்கையை கட்டாயமாக்கும் புதிய நடைமுறை தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த நிலையில், மாணவர்களுக்கு கூடுதல் கல்விச்சுமை ஏற்படாத வகையில் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;மும்மொழி கற்பிப்பதில் அடிப்படையில் தவறு இல்லை என்றாலும், அதை எப்போது, எப்படி அறிமுகப்படுத்துவது, அதனால் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களை எப்படி சமாளிப்பது என்பதுதான் முக்கியம் என்று தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Plastic Business : பிளாஸ்டிக் வேஸ்ட் வச்சு மாதம் ₹40 லட்சம் சம்பாதிப்பது எப்படி? அல்டிமேட் பிசினஸ் ஐடியா!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள புதிய திட்டத்தின்படி, 2026 ஜூலை 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்கள் மூன்று மொழிகளைப் படிப்பது கட்டாயம். அதில் குறைந்தது இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும். மூன்றாவது மொழியாக மாணவர்கள் வெளிநாட்டு மொழியையும் தேர்வு செய்யும் வாய்ப்பு உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;இந்த மாற்றம் தேசிய கல்விக் கொள்கை மற்றும் தேசிய பள்ளிக் கல்வி பாடத்திட்டக் கட்டமைப்பு ஆகியவற்றுடன் சிபிஎஸ்இயின் பாடத்திட்டத்தை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகக் கொண்டு வரப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;மாணவர்களின் சுமையைக் குறைக்கும் வகையில், மூன்றாவது மொழிக்கு 10-ஆம் வகுப்பில் பொதுத்தேர்வு இருக்காது என்றும், அதன் மதிப்பீடு பள்ளி அளவில் உள்மதிப்பீடாக நடைபெறும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Instant Tea : பால் வேண்டாம், கேஸ் வேண்டாம்.. 1 நிமிஷத்துல ஸ்ட்ராங் டீ ரெடி!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மும்மொழிக் கொள்கையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில், போதுமான ஆசிரியர்கள், பாடப்புத்தகங்கள் மற்றும் தேவையான உள்கட்டமைப்பு இல்லாமல் புதிய மொழியை திடீரென அறிமுகப்படுத்துவது மாணவர்களுக்கு சுமையாகலாம் என்ற கவலை முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ஏற்கெனவே 9-ஆம் வகுப்பில் படித்து, 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு புதிய மொழியை சேர்ப்பது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தலாம் என வாதிடப்பட்டது.&lt;/p&gt;&lt;p&gt;இதைக் கருத்தில் கொண்ட உச்சநீதிமன்றம், புதிய மொழியைக் கற்றுக்கொள்வது ஒரு நல்ல திறன் என்றாலும், அதை அறிமுகப்படுத்தும் முறை மாணவர்களுக்கு சுமையாக மாறக்கூடாது என்று கூறியுள்ளது. போதுமான தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Revati Pokkisham Yoga : பொக்கிஷங்களை அள்ளப் போகும் 4 ராசிகள்! ரேவதி பொக்கிஷ யோகத்தால் இனி தொட்டதெல்லாம் ஹிட்டு!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மும்மொழிக் கொள்கையை 9-ஆம் வகுப்பில் திடீரென அறிமுகப்படுத்துவதற்கு பதிலாக, முன்னதாகவே ஒரு வகுப்பில் இருந்து தொடங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;உதாரணமாக, 6-ஆம் வகுப்பை தொடக்கப் புள்ளியாகக் கொண்டால், இந்த ஆண்டு 6-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு விலக்கு அளித்து, அடுத்த கல்வியாண்டில் இருந்து தொடங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என நீதிபதிகள் குறிப்பிட்டனர். 6, 4 அல்லது 3-ஆம் வகுப்பு என எந்த நிலையில் மொழிக் கற்றலை தொடங்குவது என்பது பாடத்திட்டத்தைப் பொறுத்து கவனமாக முடிவு செய்யப்பட வேண்டும் என்றும் கூறினர்.&lt;/p&gt;&lt;p&gt;மேலும், ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கருதுவதா அல்லது வெளிநாட்டு மொழியாகக் கருதுவதா என்பதும் கொள்கையில் தெளிவுபடுத்த வேண்டிய விஷயமாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. சிபிஎஸ்இ மட்டுமின்றி நாட்டில் உள்ள பிற கல்வி வாரியங்களின் நிலையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவித்தது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க :&lt;/strong&gt;Necklace Designs : ரூ.300-க்குள் இவ்ளோ அசத்தலான நெக்லஸ்களா? செம்ம டிசைன்ஸ்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மும்மொழிக் கொள்கை தொடர்பான விவாதத்தில், பிராந்திய மொழிகள் மீது தாழ்வு மனப்பான்மை இருக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. அனைத்து மொழிகளுக்கும் உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.&lt;/p&gt;&lt;p&gt;மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பட்டீ, இந்தக் கொள்கையை உருவாக்கும் பணியில் ஆயிரக்கணக்கான நிபுணர்களிடம் கருத்துகள் பெறப்பட்டதாகத் தெரிவித்தார். நாட்டில் உள்ள மொத்த பள்ளிகளில் சிபிஎஸ்இ பள்ளிகள் 4.45% மட்டுமே என்றும், 99.19% பள்ளிகளில் ஏற்கெனவே இரண்டு இந்திய/உள்ளூர் மொழிகளை கற்பிக்கும் நடைமுறை உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.&lt;/p&gt;&lt;p&gt;இறுதியாக, &ldquo;மொழி கற்றலில் தவறில்லை; ஆனால் மாணவர்களுக்கு அழுத்தம் வரக்கூடாது&rdquo; என்பதே இந்த விசாரணையில் உச்சநீதிமன்றம் வலியுறுத்திய முக்கிய அம்சமாக உள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை 10 நாட்களுக்குப் பிறகு நடைபெறும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;White Clothes : வெள்ளைத் துணிகளை எப்பயும் பளிச்சுன்னு வச்சுக்க 6 சூப்பர் டிப்ஸ்!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>india</category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/india/do-students-have-to-learn-3-languages-supreme-court-comments-w1vb0po"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Russia-India Train: பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு ரயில்..! ரஷ்யாவின் மாஸ்டர் பிளான்..]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/world/russia-explores-new-railway-corridor-to-india-via-central-asia-and-pakistan-wfw2dc2</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/world/russia-explores-new-railway-corridor-to-india-via-central-asia-and-pakistan-wfw2dc2</guid>
            <pubDate>Thu, 13 Aug 2026 19:07:09 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ரஷ்யாவிலிருந்து இந்தியாவிற்கு நேரடி ரயில் சேவை அமையுமா? பல அறிக்கைகள் ஆம் என்கின்றன. துர்க்மெனிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் வழியாக இந்தியாவை இந்தியப் பெருங்கடலுடன் இணைக்கும் ஒரு புதிய ரயில் பாதை அமைய உள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kzx8w522xnwh67xvfn4b3jee,imgname-russia-india-train-route-1786615043138.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ரஷ்யாவிலிருந்து இந்தியாவிற்கு நேரடி ரயில் சேவை அமையுமா? பல அறிக்கைகள் ஆம் என்கின்றன. துர்க்மெனிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் வழியாக இந்தியாவை இந்தியப் பெருங்கடலுடன் இணைக்கும் ஒரு புதிய ரயில் பாதை அமைய உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் பாரம்பரிய கடல் வழித்தடங்களில் நிலவும் பாதுகாப்பு குறித்த கவலைகளுக்கு மத்தியில், ரஷ்யா ஆசிய சந்தைகளுடனும், குறிப்பாக இந்தியாவுடனும், மற்றும் ஆசியப் பிராந்தியத்துடனும் தனது தரைவழிப் போக்குவரத்து இணைப்பை அதிகரிக்க ஆர்வமாக உள்ளது. இந்த நோக்கத்திற்காக, துர்க்மெனிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் வழியாக ஒரு இரயில் பாதையை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ரஷ்யா ஆராயத் தொடங்கியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;ரஷ்ய துணைப் பிரதமர் மராட் குஸ்னுல்லின், 'டாஸ்' என்ற அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இந்தத் தகவலை வெளிப்படுத்தினார். போஸ்பரஸ் ஜலசந்தி மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி போன்ற முக்கிய கடல்வழிப் பாதைகளில் எழும் அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு, ரயில் பாதை அமைப்பது குறித்து ஒரு விரிவான பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும் என்று அவர் தெளிவுபடுத்தினார். இந்தியாவிற்கு இணைப்பை வழங்கும் எந்தவொரு தேர்வும் தங்களுக்கு உள்ள ஒரே வழி என்றும் அவர் கூறினார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரஷ்ய துணைப் பிரதமர் தெரிவித்த கருத்துக்கள், ரஷ்யாவிலிருந்து இந்தியாவிற்கு நேரடி பயணிகள் அல்லது சரக்கு ரயில் உடனடியாகத் தொடங்கப்படவுள்ளது என்பதைக் குறிக்கவில்லை என ஆய்வாளர்கள் தெளிவாகக் கூறுகின்றனர். இது, மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கு வழியாக ரஷ்யாவை இந்தியாவுடன் இணைக்கும் தரைவழிப் போக்குவரத்து வலையமைப்பை விரிவுபடுத்தும் திட்டத்தின் ஒரு பகுதி மட்டுமே.&lt;/p&gt;&lt;p&gt;தற்போது, ​​ரஷ்யா, இந்தியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் கூட்டு முயற்சியான சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடம் (INSTC), இரயில், சாலை மற்றும் கடல் வழிகளின் கலவையைப் பயன்படுத்தி சுமார் 7,200 கி.மீ. தூரத்திற்கு இயங்கி வருகிறது. இதன் மேற்கு வழித்தடம் ரஷ்யா, அஜர்பைஜான் மற்றும் ஈரான் வழியாகச் செல்கிறது, அதே சமயம் கிழக்கு வழித்தடம் கஜகஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் வழியாக ஈரானை அடைகிறது. அங்கிருந்து, பொருட்கள் கடல் வழியாக இந்தியாவை வந்தடையும். இருப்பினும், தற்போது முன்மொழியப்படும் புதிய வழித்தடமானது, இந்தப் போக்குவரத்தை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உலகளாவிய எரிசக்திப் போக்குவரத்தின் முக்கிய அங்கமான ஹோர்முஸ் ஜலசந்தி, உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதியில் 25 சதவீதத்தையும், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஏற்றுமதியில் 20 சதவீதத்தையும் கையாளுகிறது. கருங்கடலையும் மர்மாரா கடலையும் இணைக்கும் போஸ்பரஸ் ஜலசந்தியையும் துருக்கி தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதட்டங்கள், இவ்விரு பகுதிகளிலும் கப்பல் போக்குவரத்தைப் பாதித்துள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;இந்தப் பின்னணியில்தான், ஆசியாவுடனான தனது வர்த்தகத்தைப் பாதுகாப்பாக நடத்துவதற்காக ரஷ்யா இந்தப் புதிய வழித்தடங்களைக் கருத்தில் கொண்டு வருகிறது. இருப்பினும், மாறுபட்ட ரயில் பாதை அகல அமைப்புகள், எல்லைச் சோதனைகள் மற்றும் உள்கட்டமைப்புப் பற்றாக்குறை ஆகியவை இந்த ரயில் பாதைக்குப் பெரும் சவால்களை ஏற்படுத்துகின்றன. ஆயினும்கூட, 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியா-ரஷ்யா இருதரப்பு வர்த்தகத்தை 100 பில்லியன் டாலராக உயர்த்துவதற்கான இலக்கிற்கு இந்த வழித்தடங்கள் மிக முக்கியமானதாக இருக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் அரசாங்கம், முன்மொழியப்பட்ட ரயில் பாதை திட்டத்திற்கு சாதகமாக பதிலளித்துள்ளது. ஆப்கானிஸ்தான் நிதி அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல் ரஹ்மான் ஹபீப், தங்கள் பிரதேசம் வழியாகச் செல்லும் ரயில் பாதையின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிப்பதாகவும், இதுபோன்ற திட்டங்கள் தங்கள் நாட்டில் வேலைவாய்ப்புகளையும் போக்குவரத்து கட்டணங்களையும் அதிகரிக்கும் என்றும் கூறினார். இதற்கிடையில், 2025-ல் தலிபான்கள் மீதான தடைகளை நீக்கிய ரஷ்யா, 2026 மே மாதம் அவர்களுடன் ஒரு இராணுவ-தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தையும் கையெழுத்திட்டது.&lt;/p&gt;&lt;p&gt;இருப்பினும், இத்திட்டத்திற்கான முக்கியத் தடையாக பாகிஸ்தான் இருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். எரிவாயுப் பற்றாக்குறை இருந்தபோதிலும், TAPI (துர்க்மெனிஸ்தான்-ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான்-இந்தியா) எரிவாயுக் குழாய்த் திட்டம் இந்தியாவிற்குப் பயனளிக்கும் என்ற அடிப்படையில் அத்திட்டத்தைத் தடுத்த வரலாறு பாகிஸ்தானுக்கு உண்டு. இந்த இரயில் பாதை குறித்த பாகிஸ்தானின் நிலைப்பாடும் சந்தேகத்திற்குரியதாகவே நீடிக்க வாய்ப்புள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த அறிவிப்புக்கு முன்னதாக, ஆகஸ்ட் 7 அன்று புது தில்லியில் நடைபெற்ற 'நவீனமயமாக்கல் மற்றும் தொழில்துறை ஒத்துழைப்புக்கான இந்தியா-ரஷ்யா பணிக்குழுவின்' 12வது கூட்டத்தில் இரு நாடுகளும் பல்வேறு விடயங்கள் குறித்து விவாதித்தன. ரயில்வே உள்கட்டமைப்பு, பாரத் வந்தே பாரத் திட்டம் மற்றும் சமிக்ஞை அமைப்புகள் ஆகியவற்றில் பரஸ்பர ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை இரு நாடுகளும் ஆராய்ந்தன.&lt;/p&gt;&lt;p&gt;இதனுடன், ட்ரோன்கள், 3D அச்சிடுதல், ரஷ்யாவின் SJ-100 பிராந்திய விமானத்தின் உற்பத்தி மற்றும் விமான இயந்திரங்களின் மேம்பாடு போன்ற பிற தொழில்துறை துறைகளின் விரிவாக்கம் குறித்தும் இரு நாடுகளும் விரிவாக விவாதித்தன. சர்வதேச கடல்வழிப் பாதைகள் சிரமங்களைச் சந்தித்து வரும் வேளையில், தரைவழிப் பாதைகளின் மேம்பாடு இரு நாடுகளின் பொருளாதார நலன்களுக்கும் இன்றியமையாதது என்பதை ரஷ்யா தெளிவுபடுத்துகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>india</category>
            <dc:creator>Asianet News</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/world/russia-explores-new-railway-corridor-to-india-via-central-asia-and-pakistan-wfw2dc2"/>
        </item>
        <item>
            <title><![CDATA[இந்தியா உலகின் முன்னணி நாடாக மாற இதுதான் வழி.. பிரதமர் மோடி குறிப்பிட்ட 7 முக்கிய சக்திகள்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/india/sapt-shakti-pm-modi-lists-7-key-forces-to-drive-india-growth-articleshow-xni9sgz</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/india/sapt-shakti-pm-modi-lists-7-key-forces-to-drive-india-growth-articleshow-xni9sgz</guid>
            <pubDate>Sat, 15 Aug 2026 11:45:06 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் அடுத்தகட்ட பொருளாதார வளர்ச்சி மற்றும் தற்சார்புக்காக உற்பத்தி, விவசாயம், தொழில்நுட்பம் உள்ளிட்ட ஏழு முக்கிய துறைகளை முன்னிலைப்படுத்தியுள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m01sg368pwgax7e7nq6n6n43,imgname-narendra-modi-1786766691528.jpeg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;இந்தியாவின் அடுத்தகட்ட பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் தற்சார்பு ஆகியவற்றை வலுப்படுத்தும் வகையில் முக்கியமான ஏழு துறைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி முக்கியத்துவம் அளித்துள்ளார். உற்பத்தி, விவசாயம் மற்றும் உணவு பதப்படுத்துதல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை, கதி சக்தி, பாதுகாப்பு, பசுமை மற்றும் நீலப் பொருளாதாரம், இந்தியாவின் மென் சக்தி ஆகியவை இந்த ஏழு துறைகளாகும்.&lt;/p&gt;&lt;p&gt;இவை தனித்தனியாக செயல்படுவதைக் காட்டிலும் ஒன்றுடன் ஒன்று இணைந்து வளர்ந்தால், இந்தியாவின் உற்பத்தித் திறன், வேலைவாய்ப்பு, ஏற்றுமதி மற்றும் உலகளாவிய போட்டித்திறனை மேலும் அதிகரிக்க முடியும் என்பதே இந்த அணுகுமுறையின் அடிப்படை நோக்கமாக உள்ளது. முதலாவது முக்கிய துறையாக உற்பத்தி மற்றும் தற்சார்பு பார்க்கப்படுகிறது. ஒரு பொருளின் வடிவமைப்பு முதல் உதிரிபாகங்கள் தயாரிப்பு வரை முடிந்தவரை முழுமையான உற்பத்திச் சங்கிலியை இந்தியாவுக்குள் உருவாக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.&lt;/p&gt;&lt;p&gt;இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்கள் உலகத் தரத்துடன் இருப்பதுடன், போட்டி விலையில் கிடைக்க வேண்டும் என்பதும் வலியுறுத்தப்படுகிறது. மின்னணு சாதனங்கள், வாகனங்கள், மருந்துகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் போன்ற துறைகளில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் இறக்குமதி சார்பை குறைத்து, இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றும் முயற்சிக்கு மேலும் வலு சேர்க்க முடியும்.&lt;/p&gt;&lt;p&gt;அடுத்ததாக விவசாயம் மற்றும் உணவு பதப்படுத்துதலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. விவசாயப் பொருட்களை உற்பத்தி செய்வதோடு நிறுத்தாமல், அவற்றை பதப்படுத்தி கூடுதல் மதிப்பை உருவாக்கி உலகச் சந்தைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே இதன் நோக்கம். சிறுதானியங்கள், மசாலாப் பொருட்கள், பழங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு விவசாய நிலத்திலிருந்து ஏற்றுமதி சந்தை வரை ஒருங்கிணைந்த விநியோக அமைப்புகளை உருவாக்க முடியும்.&lt;/p&gt;&lt;p&gt;இதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதுடன், கிராமப்புறங்களில் பதப்படுத்துதல் மற்றும் தொடர்புடைய தொழில்களில் வேலைவாய்ப்பையும் உருவாக்க முடியும். இதனுடன் செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பம், விண்வெளி, ரோபோட்டிக்ஸ், தரவு மையங்கள் மற்றும் அடுத்த தலைமுறை தகவல் தொடர்பு போன்ற துறைகளில் இந்தியா புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் நாடாக மாற வேண்டும் என்ற இலக்கும் முன்வைக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;நான்காவது துறையான கதி சக்தி, நாட்டின் போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்புகளை ஒருங்கிணைப்பதை மையமாகக் கொண்டது. சாலைகள், ரயில்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், நீர்வழிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து ஆகியவை ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்பட்டால், பொருட்களை வேகமாகவும் குறைந்த செலவிலும் கொண்டு செல்ல முடியும். இதனுடன் பாதுகாப்புத் துறையிலும் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய அவசியம் வலியுறுத்தப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;ஆளில்லா விமானங்கள், அவற்றை எதிர்கொள்ளும் தொழில்நுட்பங்கள் மற்றும் நவீன பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்ட துறைகளில் இந்தியா தற்சார்பை நோக்கி நகர வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். இதனால் பாதுகாப்புத் தேவைகளை பூர்த்தி செய்வதுடன், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் தொழில் வாய்ப்புகளும் உருவாகலாம். ஆறாவது துறையாக பசுமை மற்றும் நீலப் பொருளாதாரம் முன்வைக்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;பசுமை ஹைட்ரஜன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, எரிசக்தி சேமிப்பு, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற போக்குவரத்து மற்றும் பசுமை உற்பத்தி ஆகியவற்றுடன் கடல் வளங்களையும் பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கம். கடலோர சுற்றுலா, மீன்வளம் மற்றும் கடல்சார் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இந்தியாவுக்கு உள்ள வாய்ப்புகளும் இதில் அடங்கும். ஏழாவது துறையாக இந்தியாவின் மென் சக்தி குறிப்பிடப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;யோகா, ஆயுர்வேதம் மற்றும் இந்திய கலாச்சாரம் ஏற்கெனவே உலக அளவில் நாட்டின் அடையாளத்தை வலுப்படுத்தியுள்ள நிலையில், விளையாட்டு, திரைப்படம், அனிமேஷன், காட்சித் தொழில்நுட்பம் மற்றும் படைப்புத் துறைகளிலும் இந்தியாவின் செல்வாக்கை அதிகரிக்க முடியும். இவ்வாறு உற்பத்தி முதல் தொழில்நுட்பம், விவசாயம் முதல் பாதுகாப்பு, பசுமை வளர்ச்சி முதல் கலாச்சார செல்வாக்கு வரை இந்த ஏழு துறைகளையும் ஒருங்கிணைத்து முன்னெடுத்துச் செல்வது இந்தியாவின் நீண்டகால வளர்ச்சிக்கு புதிய அடித்தளத்தை அமைக்கக்கூடும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>india</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/india/sapt-shakti-pm-modi-lists-7-key-forces-to-drive-india-growth-articleshow-xni9sgz"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Mahatma Gandhi: சுதந்திரம் வந்தாச்சு! ஆனா காந்தி ஏன் கொண்டாடல? ஆகஸ்ட் 15-ல் அவர் என்ன செய்தார்?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/india/why-mahatma-gandhi-skipped-indias-first-independence-day-celebrations-yid2w6u</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/india/why-mahatma-gandhi-skipped-indias-first-independence-day-celebrations-yid2w6u</guid>
            <pubDate>Sat, 15 Aug 2026 12:09:32 +0530</pubDate>
            <description><![CDATA[1947 ஆகஸ்ட் 15 அன்று நாடு முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்தது. ஆனால், மகாத்மா காந்தி மட்டும் அதில் பங்கேற்கவில்லை. சுதந்திர தின உரைகூட நிகழ்த்தாத காந்தி, அன்று என்ன செய்தார்? எங்கே இருந்தார்?]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m022a56d9nzvm2r1b0vdkr8r,imgname-chatgpt-image-aug-15--2026--12-08-02-pm--1--1786775934157.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[1947 ஆகஸ்ட் 15 அன்று நாடு முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்தது. ஆனால், மகாத்மா காந்தி மட்டும் அதில் பங்கேற்கவில்லை. சுதந்திர தின உரைகூட நிகழ்த்தாத காந்தி, அன்று என்ன செய்தார்? எங்கே இருந்தார்?&lt;img&gt;1947, ஆகஸ்ட் 15 அன்று இந்தியாவுக்கு ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் கிடைத்தது. நாடு முழுவதும் மக்கள் கொண்டாட்டத்தில் இருந்தனர். ஆனால், தேசத் தந்தை மகாத்மா காந்தி அந்த வரலாற்று சிறப்புமிக்க நாளில் என்ன செய்தார்? கொண்டாட்டங்களில் பங்கேற்றாரா இல்லையா? என்பது பலருக்கும் தெரியாது. காந்தி ஹெரிடேஜ் போர்ட்டல் தகவல்படி, அன்று அவர் என்ன செய்தார் என்பதை முழுமையாகப் பார்க்கலாம்.&lt;img&gt;இந்தியா முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடந்தபோது, மகாத்மா காந்தி தலைநகர் டெல்லியில் இல்லை. அவர் அப்போது கல்கத்தாவில் இருந்தார். ஆச்சரியம் என்னவென்றால், சுதந்திரம் கிடைத்த அந்த நல்ல நாளில் காந்தி எந்த பெரிய கொண்டாட்டத்திலும் ஈடுபடவில்லை. ஒரு சுதந்திர தின உரை கூட அவர் ஆற்றவில்லை. அந்த நாள் முழுவதையும் அவர் உண்ணாவிரதம், பிரார்த்தனை மற்றும் மக்களைச் சந்திப்பதில் செலவிட்டார். காந்தி ஹெரிடேஜ் போர்ட்டல் தகவலின்படி, ஆகஸ்ட் 15, 1947 அன்று அவர் முழுமையாக பிரார்த்தனை மற்றும் உண்ணாவிரதத்தில் இருந்தார்.&lt;img&gt;&lt;p&gt;ஒருபுறம் சுதந்திரம் கிடைத்த மகிழ்ச்சி இருந்தாலும், மறுபுறம் நாடு இரண்டாகப் பிரிந்தது. இந்தப் பிரிவினையால் பல பகுதிகளில் இந்து-முஸ்லிம் இடையே கொடூரமான கலவரங்கள் நடந்தன. இந்த பதற்றமான சூழலில், காந்தி டெல்லியில் கொண்டாடாமல், கல்கத்தாவில் தங்கி அமைதியைப் பாதுகாக்க முயன்றார். ஆகஸ்ட் 13 முதலே அவர் கல்கத்தாவின் பேலியாட்டா பகுதியில் உள்ள 'ஹைதரி மாளிகை'யில் தங்கியிருந்தார். மதக் கலவரங்களுக்கு மத்தியில் இந்து-முஸ்லிம் ஒற்றுமையை நிலைநாட்டவே அவர் அங்கு இருந்தார்.&lt;/p&gt;&lt;img&gt;ஆகஸ்ட் 14 மாலை நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் காந்தி ஒரு முக்கிய விஷயத்தை அறிவித்தார். ஆகஸ்ட் 15 அன்று தான் 24 மணி நேரம் உண்ணாவிரதம் இருக்கப்போவதாகத் தெரிவித்தார். அன்று பிரார்த்தனை செய்வதும், ராட்டையில் நூல் நூற்பதும் மட்டுமே தனது வேலை என்றார். ஒருபக்கம் சுதந்திரம் கிடைத்தாலும், மறுபக்கம் பிரிவினையால் லட்சக்கணக்கான மக்கள் வன்முறையை அனுபவித்ததால், காந்திக்கு அந்த நாள் மகிழ்ச்சியானதாக மட்டும் இல்லை. அதனால்தான் அவர் அந்த நாளை சுயபரிசோதனைக்கு ஒதுக்கினார்.&lt;img&gt;ஆகஸ்ட் 15 காலை முதலே காந்தி தங்கியிருந்த இடத்திற்கு மக்கள் பெருமளவில் வரத் தொடங்கினர். காந்தி ஹெரிடேஜ் போர்ட்டல் தகவல்படி, நாள் முழுவதும் மக்கள் அவரைச் சந்திக்க வந்துகொண்டே இருந்தனர். காந்தியின் உறவினரான மனு காந்தி, அன்றைய நிகழ்வுகளைப் பற்றி எழுதும்போது, 'பாபுஜி அன்று தனது தனிப்பட்ட வேலைகள் எதையும் செய்ய முடியவில்லை. ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒருமுறை அவர் மக்களைச் சந்திக்க வெளியே வர வேண்டியிருந்தது' என்று குறிப்பிட்டுள்ளார். ஆயிரக்கணக்கான மக்கள் அவரது தரிசனத்திற்காகக் காத்திருந்தனர்.&lt;img&gt;கல்கத்தாவில் இந்து, முஸ்லிம் சமூகத்தினரிடையே கடுமையான பதற்றம் நிலவியது. அதனால் காந்தி, மக்களுடன் உள்ளூர் தலைவர்களையும் தொடர்ந்து சந்தித்துப் பேசினார். நாட்டு மக்கள் அனைவரும் அன்புடனும் அமைதியுடனும் வாழும்போதுதான் இந்த சுதந்திரத்திற்கு உண்மையான அர்த்தம் கிடைக்கும் என்று அவர் உறுதியாக நம்பினார். அன்று காந்தி பல கட்சி உறுப்பினர்களுடனும் பிரத்யேகமாக சந்தித்துப் பேசினார். மாணவர்களுடனும் உரையாடினார். சுதந்திரம் கிடைத்த அந்த நாளிலும், காந்தியின் நேரம் முழுவதும் நாட்டின் பிரச்சினைகள் மற்றும் மக்கள் சந்திப்புகளிலேயே கழிந்தது.&lt;img&gt;நாள் முழுவதும் உண்ணாவிரதம் மற்றும் சந்திப்புகளுக்குப் பிறகு, காந்தி மாலை நேரப் பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்றார். சுதந்திரத்திற்குப் பிறகு நமது மிகப்பெரிய சவால், அமைதியைப் பாதுகாப்பதுதான் என்று அவர் செய்தி விடுத்தார். கல்கத்தாவில் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ்ந்து, நாட்டின் பிற பகுதிகளுக்கு உதாரணமாக விளங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். உண்மையில், ஆகஸ்ட் 14 அன்றே காந்தி, 'சுதந்திர தினம் ஒருபுறம் மகிழ்ச்சியையும், மறுபுறம் தேசப் பிரிவினையால் மிகுந்த துக்கத்தையும் தருகிறது' என்று கூறியிருந்தார்.]]></content:encoded>
            <category>india</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/india/why-mahatma-gandhi-skipped-indias-first-independence-day-celebrations-yid2w6u"/>
        </item>
    </channel>
</rss>
