<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes"?>
<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Thu, 23 Apr 2026 12:15:21 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss/health-relationship" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[உறவுகளிடம் மறைக்கக்  கூடாத 3 உணர்ச்சிகள் இவைதான்!!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/health-relationship/three-emotional-values-you-should-not-suppress-in-tamil-mks-0fit42u</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/health-relationship/three-emotional-values-you-should-not-suppress-in-tamil-mks-0fit42u</guid>
            <pubDate>Mon, 02 Jun 2025 17:13:49 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;நெருக்கமான உறவுகளிடம் மறைக்காமல் வெளிப்படுத்த வேண்டிய 3 உணர்ச்சிகளை இங்கு காணலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jrs3n42mzxc41j2y467fdyqa,imgname-Husband-Wife-Lover-Attack-1744599421012.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;நெருக்கமான உறவுகளிடம் மறைக்காமல் வெளிப்படுத்த வேண்டிய 3 உணர்ச்சிகளை இங்கு காணலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;Three Emotional Values You Should Not Suppress&lt;/strong&gt; : உறவுகள் பலப்பட சில விஷயங்களில் வெளிப்படையாகவும், சில விஷயங்களில் சூசகமாகவும், சில விஷயங்களை பட்டும்படாமலும் சொல்ல வேண்டும். இப்படியிருக்க மனிதர்கள் 3 உணர்ச்சிகளை அதிகம் அடக்குவதாக உளவியலாளர்கள் கூறுகின்றனர். இப்படி உணர்வுகளை அடக்குவதால் மனச்சோர்வு, மன அழுத்தம் ஏற்படுகிறது. இந்தப் பதிவில் நெருங்கிய உறவுகளிடம் எந்தெந்த உணர்ச்சிகளை மறைக்காமல் வெளிப்படுத்த வேண்டும் என்பதை காணலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;உணர்ச்சிகளை அடக்குதல்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;எண்ணங்கள் தான் நம்முடைய வாழ்க்கையில் பெரிய பங்கு வகிக்கிறது. நாம் எதை சிந்திக்கிறோமோ அதை வாழ்க்கையில் பெறுகிறோம். உதாரணமாக நீங்கள் பிரச்சனைகளையே சிந்தித்தால் பிரச்சனைகள் இன்னும் அதிகமாகவும், பிரச்சனைக்கான தீர்வுகளை யோசிக்கும்போது அதற்கான தீர்வுகளை அதிகமாகவும் ஈர்ப்பீர்கள். ஆனால் அதற்காக நேர்மையான சிந்தனைகளை மட்டும் தான் சிந்திக்க வேண்டும் என உங்களை நீங்களே கட்டுப்படுத்தக்கூடாது. மேகங்கள் போல எண்ணங்கள் உங்களை கடந்து போக அனுமதிக்க வேண்டும். நேர்மறையான சிந்தனைகளை மட்டுமே சிந்திக்க வேண்டுமென உங்களுக்குள் இயல்பாக எழும் எதிர்மறை சிந்தனைகளை அடக்கி வைப்பதால் உளவியல் ரீதியாக பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;கோபம்! கோபம்!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;கோபப்படுவதே தவறு. கோபம் ஒருவரை அளிக்கக் கூடியது என சொல்வார்கள். ஆனால் கோபத்தை எப்போதுமே அடக்குவதன் மூலமாக உங்களுடைய மன ஆரோக்கியம் மோசமாக மாறிவிடுகிறது. சில நேரங்களில் நீங்கள் கோபத்தை வெளிப்படுத்துவது அவசியம். அது மாதிரி தவிர்க்க முடியாத நேரத்தில் கோபத்தை வெளிப்படுத்தலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;பொறாமை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;யார் மீதாவது உங்களுக்கு பொறாமை ஏற்படும்போது அதை அடக்கி வைக்கக் கூடாது. இந்த மாதிரி பொறாமை ஏற்படும்போது அதை அடக்கி வைப்பதால் நாளடைவில் அது வன்மமாக மாறிவிடும். உங்களுக்கு பொறாமை ஏற்படும்போது நீங்கள் உங்களை மேம்படுத்திக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். அதுதான் சரியான தீர்வாக இருக்கும். யார் மீது உங்களுக்கு பொறாமை வருகிறதோ அதுவே உங்களுக்குள் தேங்கியிருக்கும் ஆசையாக இருக்கலாம். அதை அடைய உழைப்பை செலுத்துங்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;வருத்தம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;கடந்த காலத்தில் செய்த தவறுகளுக்காக நிகழ்காலத்தில் உங்களை நீங்களே வருத்தி கொள்வது நல்லதல்ல. ஈகோவை விடுத்து தவறை உணரும்போது அந்த நபரிடம் மன்னிப்பு கேட்டு சமாதானம் ஆகிவிட வேண்டும். அந்த உறவை இழப்பதோடு வருத்தத்தில் உங்களையும் இழப்பீர்கள். இதற்கு பதிலாக அவர்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டால் அன்பு பெருகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் உங்களுடைய பொறாமை, கோபம், வருத்தம் போன்றவற்றை வெளிப்படுத்துவதில் எந்த தவறும் இல்லை. அதனால் நீங்கள் பலவீனவராகவும் ஆகிவிடமாட்டீர்கள். அதனால் இவற்றை தவிர்க்காமல் வெளிப்படுத்துவது நல்லது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>health-relationship</category>
            <dc:creator>Kalai Selvi</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/health-relationship/three-emotional-values-you-should-not-suppress-in-tamil-mks-0fit42u"/>
        </item>
        <item>
            <title><![CDATA[பெண்கள் கணவரிடம் எதிர்பார்க்கும் 7 விஷயங்கள்!! இது புரிஞ்சவன் பிஸ்தா!!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/health-relationship/seven-things-women-expect-from-their-husbands-in-tamil-mks/articleshow-2uu4ycg</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/health-relationship/seven-things-women-expect-from-their-husbands-in-tamil-mks/articleshow-2uu4ycg</guid>
            <pubDate>Tue, 27 May 2025 17:49:01 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;பெண்கள் தங்களுடைய கணவனிடம் எந்த மாதிரியான விஷயங்களை எதிர்பார்ப்பார்கள் என்பதை இந்தப் பதிவில் காணலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jqycck4jrdp1sty0tpzfmhhj,imgname-relation-1743702609042.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;Seven Things Women Expect From Their Husbands&lt;/strong&gt; : பொதுவாகவே பெண்கள் ஆண்களை காட்டிலும் உணர்ச்சிகள் அதிகம் கொண்டவர்கள். தங்கள் மீதான பாசத்தை வார்த்தைகளால் வெளிப்படையாக கூறுவது, உரையாடுவது, நகைச்சுவையாக பேசுவது போன்றவை பல பெண்களுக்கும் பிடித்தமானதாகும். பெரும்பாலான பெண்கள் சின்ன சின்ன விஷயங்களில் மகிழ்ச்சியாகக் கூடியவர்களாக இருப்பார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;சில பெண்களிடம், 'ஏன்டி அவனை காதலிக்குறனு கேட்டால், அவன் தைரியமானவன்' என சொல்வார்கள். 'உன் கணவன் எதில் பெஸ்ட்னு கேட்டால், எனக்கு ஒன்னுன்னா துடிச்சுடுவார்' என்பார்கள். ஏனென்றால் தங்களை மகிழ்ச்சியாக உணர வைக்கும் ஆண்களை போலவே பாதுகாப்பாக உணர வைக்கும் ஆண்களும் பெண்களுக்கு பிடித்தமானவர்கள். இந்தப் பதிவில் பெண்கள் தங்களுடைய கணவனிடம் எதிர்பார்க்கும் விஷயங்களை காணலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;கவனித்தல்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஒரு மனைவி தான் பேசும்போது எந்த இடையூறும் இல்லாமல் கணவன் அதை கேட்க வேண்டும் என எதிர்ப்பார்ப்பாள். தான் சொல்வதைக் கணவர் கேட்டு கொண்டிருக்கிறார் என்பது அவளுக்கு மனதிற்கு மிகவும் இன்பமாக இருக்கும். கணவன் தான் பேசும்போது கேட்க வேண்டும் என்பதுதான் பெண்களின் முதல் எதிர்பார்ப்பு.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;குட்டி பரிசுகள்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;கணவனிடம் மனைவி சின்ன பரிசுகளை எதிர்பார்ப்பார். பெரிய பொருள்களாக கொடுப்பதை விடவும் அவர்கள் தேவையறிந்து குட்டி பொருள்களாக கொடுத்தாலும் கூட அது சிறந்ததுதான். உங்கள் மனைவி உங்களிடம் செருப்பு வாங்கி கேட்டால், அதை அவர்களே 100 முறை நியாபகப்படுத்தும்படி வைக்கக் கூடாது. நீங்களே வெளியே கூட்டி சென்று வாங்கி தரவேண்டும். இது பெரும்பாலான பெண்களின் எதிர்பார்ப்பு.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சிறு தொடுதல்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;தங்களிடம் உணர்வுரீதியாக கணவன் நெருக்கத்தில் இருப்பதை மனைவி விரும்புவாள். சின்ன சின்ன தொடுதல், அன்பான முத்தம், அரவணைப்பு போன்றவை பெண்களுக்கு பிடிக்கும். பொது இடங்களில் கை பிடித்தபடி நடப்பது, அவர்கள் இரவில் சோர்வாக இருந்தால் ஆறுதலாக பேசி தலை கோதிவிடுவது போன்றவை அக்கறையை வெளிப்படுத்தக் கூடிய செயல்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சுதந்திரம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;சுந்தரம் என்பது பெண்களுக்கு ஆண்கள் கொடுப்பதல்ல. எப்படி ஒரு ஆண் சுதந்திரமான முடிவு எடுக்கிறானோ அதை போலவே பெண்களும் சொந்தமாக முடிவெடுக்கவே விரும்புவார்கள். ஒரு பெண் தனக்கான நேரத்தை ஒதுக்குதல், தன் லட்சியத்திற்கான பாதையை தேர்ந்தெடுத்தல் போன்றவற்றில் தலையிடாமல் அவருக்கு உறுதுணையாக இருக்கும் மனப்பக்குவம் கணவருக்கு இருக்க வேண்டும் என பெண் எதிர்பார்ப்பாள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;லட்சியங்களுக்கு துணைநிற்றல்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;பெண்களை பொறுத்தவரை வார்த்தைகளை விட செயல்களை நம்பக் கூடியவர்கள். உன் லட்சுயத்திற்கு நான் துணை நிற்கிறேன் என சொல்லிவிட்டு அதற்கான பயணத்தில் கொஞ்சமும் பங்கு கொள்ளாமல் இருக்கக் கூடாது. அவர்கள் எந்த லட்சியத்தை அடைய போராடுகிறார்களோ அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அவர்கள் சோர்ந்து போனால் உற்சாகப்படுத்த வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;உதவுதல்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;வீட்டு வேலைகளில் அவ்வப்போது கணவர் தனக்கு உதவுவதே பெண்கள் விரும்புவார்கள். பெரிய வேலைகளை செய்யாவிட்டாலும் சிறு சிறு வேலைகளில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள். மனைவி சோர்வாக இருக்கும் போது அவருக்கு தேநீர் தயாரித்து தருதல் போன்ற விஷயங்களை செய்தாலும் கணவன் தன் மீது அக்கறையாக இருக்கிறார் என பெண்களின் மனதை ஆனந்தமாக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பாராட்டுக்கள் தேவை!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் ஒரு மனிதனை இன்னும் வளர்த்தெடுக்கும். சிறு முயற்சிகளாக இருந்தாலும் அவற்றை பாராட்டும் போது இன்னும் கூட அதிகமாக முயல ஒரு உத்வேகம் வரும். அந்த வகையில் தங்களுடைய முயற்சிகளை கவனித்து அதை பாராட்டவும் அங்கீகரிக்கவும் வேண்டும் என பெண்கள் எதிர்பார்க்கிறார்கள். நீங்கள் உங்கள் மனைவியுடைய முயற்சிகளை எந்த போலித்தனங்களும் இல்லாமல் அங்கீகரிக்கும்போது அது அவர்களை உற்சாகப்படுத்தும்.&lt;/p&gt;&lt;p&gt;இந்த விஷயங்களை நீங்கள் செய்யும் போது நிச்சயமாக உங்களுடைய மனைவி உங்களிடம் நடந்து கொள்ளும் முறை மாறுபடும். உங்களுடைய உறவு முன்பை விட இன்னும் நெருக்கமாகும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>health-relationship</category>
            <dc:creator>Kalai Selvi</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/health-relationship/seven-things-women-expect-from-their-husbands-in-tamil-mks/articleshow-2uu4ycg"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Relationship Tips : பெண்களுக்கு திருமணமான ஆண்கள் மீது ஏன் காதல் வருது? நீங்கள் அறியாத பல உண்மைகள்!!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/health-relationship/relationship-tips-girls-fall-in-love-with-married-men-heres-why-in-tamil-articleshow-3dxo3rg</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/health-relationship/relationship-tips-girls-fall-in-love-with-married-men-heres-why-in-tamil-articleshow-3dxo3rg</guid>
            <pubDate>Fri, 03 Oct 2025 16:36:49 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;திருமணமான ஆண்கள் மீது பெண்களுக்கு காதல் வருவது ஏன் தெரியுமா? உங்களுக்கு தெரியாத பல உளவியல் தகவல்களை இங்கு காணலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jyhanc37wq9f5rzyf82922ey,imgname-relationship-tips-1750780784743.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;காதல் என்ற உணர்வுக்கு வார்த்தையில் சொல்ல முடியாதது. பாலினம், மதம், வயது என பல விஷயங்களைக் கடந்து காதல் வாழ்ந்து வருகிறது. ஆனால் திருமணமானவர்களுடன் வரும் காதலை அப்படி ஏற்றுக் கொள்ள முடியாது. இதனால் ஏற்படும் விளைவுகள் மோசமானவை. திருமணத்தை மீறிய உறவுகள் தவிர்க்கப்பட வேண்டியவை.&lt;/p&gt;&lt;p&gt;இந்நிலையில் பெண்கள் திருமணமான ஆணுடன் காதல்வயப்படுவது இப்போது அதிகம் நடந்துவருகிறது. பல பெண்கள் தங்கள் அறியாமலே இந்தக் காதல் சுழலில் சிக்கிவிடுகின்றனர். பெண்கள் இந்த தவறை செய்ய என்ன காரணம் என்பதை இங்கு காணலாம்.&lt;/p&gt;&lt;p&gt;பெண்கள் ஓர் ஆணின் அக்கறைக்கு மயங்குகிறார்கள். தங்கள் மீது கவனம் செலுத்தும் ஆண்களை அவர்களுக்கு அதிகம் பிடிக்கிறது. பொதுவாக திருமணமான ஆண்கள், திருமணம் செய்யாத ஆண்களை விடவும் அதிகமாக மென்மையாக நடந்துகொள்கிறார்கள். அக்கறையை வெளிப்படுத்துகிறார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;அதிலும் 30 வயதை கடந்த ஆண்கள் பக்குவப்பட்டு விடுகிறார்கள். அதனால் பெண்களை கையாள அவர்களுக்கு தெரிந்திருக்கும். இதில் சில பெண்கள் ஈர்க்கப்படுகிறார்கள். இங்கு வெறும் ஈர்ப்பையும், காதலையும் பல பெண்கள் குழப்பிக் கொள்கிறார்கள். ஈர்ப்பும் மோகமும் தற்காலிகமானவை. இதில் உணர்ச்சிரீதியான தொடர்பு இருப்பதில்லை. வெறும் த்ரில் வேண்டுமென்றால் கிடைக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;திருமணமான ஆண்கள் மீது காதல் கொள்ளும் பெண்கள் சுயமரியாதை, சுய மதிப்பை பெரிதாக எண்ணுவதில்லை. அவர்கள் ஏற்கனவே பழைய உறவில் காயப்பட்டிருப்பார்கள். அங்கீகாரத்திற்கும், அன்புக்கும் ஏங்குவார்கள். அதனால் புதியதாக கிடைக்கும் உறவுக்காக தங்களை மாற்றிக் கொள்ள துணிவார்கள். தங்களுடைய சொந்த விருப்பங்களை ஒதுக்கி வைத்துவிடுவார்கள். சில ஆண்கள் இதை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;திருமணமான ஆண்கள் மீது காதல் கொள்ளும் பெண்கள் தனிமையில் இருக்க அஞ்சுகிறார்கள். என்றாவது ஒருநாள் தங்களுக்கான அன்பைக் கண்டுபிடிக்கும் நோக்கில் அந்த உறவை பற்றிக் கொள்ள நினைக்கிறார்கள். ஆனால் இந்த உறவில்தான் அதிகமாகம் காயப்படும் சாத்தியமுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பெண்களே!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;திருமணமான ஆணிடம் காதல்வயப்பட்டால் யோசிக்காமல் பின்வாங்குங்கள். உங்களுக்கான மதிப்பும் மரியாதையும் முக்கியம். தனிமை பயமாக இருந்தால் நண்பர்கள், குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்கலாம். அதற்கு வழியில்லை என்றால் பிடித்த பொழுதுபோக்குகளுடன் நேரத்தை செலவிடுங்கள். திருமணமான ஆணை காதலிப்பது தீர்வல்ல.&lt;/p&gt;&lt;p&gt;எந்த உறவாக இருந்தாலும் சுயமரியாதை அவசியம். வெறும் ஈர்ப்பையும் மோகத்தையும் காதல் என நம்பவேண்டாம். காதல் அதையும் தாண்டி, உங்களை உணர்வுரீதியாக சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் உணரச் செய்யும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>health-relationship</category>
            <dc:creator>Kalai Selvi</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/health-relationship/relationship-tips-girls-fall-in-love-with-married-men-heres-why-in-tamil-articleshow-3dxo3rg"/>
        </item>
        <item>
            <title><![CDATA[heartbreak: உங்கள் "எக்ஸ்" ன் ஞாபகம் அடிக்கடி வருதா? இதற்கான உளவியல் காரணம் இது தானாம்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/health-relationship/psychological-reasons-for-not-forgetting-your-ex-even-after-years-6s1h2u2</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/health-relationship/psychological-reasons-for-not-forgetting-your-ex-even-after-years-6s1h2u2</guid>
            <pubDate>Sat, 26 Jul 2025 16:32:30 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;உங்களின் முன்னாள் காதலன் அல்லது காதலியை பிரிந்த பல ஆண்டுகள் ஆன பிறகும் கூட அவர்களை மறக்க முடியாமல், அவர்களை பற்றிய நினைவுகள் அடிக்கடி வருவதற்காக என்ன காரணம் என உளவியல் ரீதியான ஆய்வுகள் கூறுகின்றன. இந்த பிரச்சனை உங்களுக்கும் இருக்கா?&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k1365xf87bxwxy7ryk1f0zy1,imgname-heart-break--1--1753527547368.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;உங்களின் முன்னாள் காதலன் அல்லது காதலியை பிரிந்த பல ஆண்டுகள் ஆன பிறகும் கூட அவர்களை மறக்க முடியாமல், அவர்களை பற்றிய நினைவுகள் அடிக்கடி வருவதற்காக என்ன காரணம் என உளவியல் ரீதியான ஆய்வுகள் கூறுகின்றன. இந்த பிரச்சனை உங்களுக்கும் இருக்கா?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒருவரைக் காதலிக்கும்போது, நம் மனதில் பெரிய மகிழ்ச்சி உண்டாகும். அந்த மகிழ்ச்சியைத் தரும் டோபமைன் எனும் ரசாயனம் அதிகமாகச் சுரக்கிறது. இது ஒருவித மகிழ்ச்சியையும், துணையைத் தேடும் ஆர்வத்தையும் உருவாக்குகிறது. ஆனால், துணையைப் பிரிந்ததும், மூளை மீண்டும் அந்த இன்பத்தை அடையத் துடிக்கிறது. இது போதைப் பழக்கத்திற்கு அடிமையானது போல, மீண்டும் அந்த நபருடன் சேர வேண்டும் என்ற தீவிரமான ஏக்கத்தை ஏற்படுத்துகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சில உறவுகளில் சண்டையும் சமாதானமும் மாறி மாறி வரும். இப்படிப்பட்ட சமயத்துல, நம் மனதில் மகிழ்ச்சியும், அதே சமயத்தில் ஒருவித அழுத்தமும் மாறி மாறி உண்டாகும். இந்தத் தொடர்ச்சியான ஏற்றத்தாழ்ங்கள், நம் மனசுல ஒருவிதமான பிணைப்பை உண்டாக்கிடும். இதைத்தான் &quot;அதிர்ச்சிப் பிணைப்பு&quot;ன்னு சொல்றோம். இந்த உறவு முடிவுக்கு வந்த பிறகும், இந்த பிணைப்பால அந்த நபரை மறக்க முடியாம ரொம்பவே கஷ்டப்படுவோம். இந்த மாதிரி உறவுகள்ல, ஒருநாள் சண்டை வந்தா, அடுத்த நாள் நல்லபடியா சமாதானம் ஆகிடுவோம்ங்கிற நம்பிக்கைலயே நாம இருப்போம். இதுவும் அந்த பிணைப்பை இன்னும் பலப்படுத்தும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எதிர்பாராத விதமாகப் பிரிவு ஏற்படும்போது, மூளைக்கு அது ஒரு பெரிய அதிர்ச்சியாக இருக்கும். உறவில் இருந்தபோது நாம் பழகிய விஷயங்கள், வழக்கமான செயல்பாடுகள், எதிர்காலத் திட்டங்கள் என அனைத்தும் திடீரென முடிவுக்கு வரும்போது, மூளை அதை ஏற்றுக்கொள்ளத் தடுமாறுகிறது. இது ஒருவித பாதுகாப்பற்ற உணர்வையும், பழைய நினைவுகளையே மீண்டும் மீண்டும் எண்ணிப் பார்க்கத் தூண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிரிவுக்குப் பிறகு, பலர் உறவில் இருந்த நல்ல தருணங்களை மட்டுமே நினைத்துப் பார்ப்பார்கள். இது ஒருவகையில் தனிமையிலிருந்தும், வலியிலிருந்தும் தப்பிக்க மனம் எடுக்கும் முயற்சி. இந்த நல்ல நினைவுகள் தற்காலிகமாக ஆறுதல் அளித்தாலும், முன்னாள் துணையை மறப்பது கடினமாகிவிடும். ஏனெனில், நல்ல நினைவுகள் மட்டுமே மனதில் நிறைந்து, உறவின் கசப்பான விஷயங்கள் எல்லாம் மறைஞ்சு போயிடும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிரிவுக்கான உண்மையான காரணம் சரியாகத் தெரியாதபோது அல்லது சில கேள்விகளுக்கு விடை கிடைக்காதபோது, மனம் ஒருவித குழப்பத்திலேயே இருக்கும். &quot;ஏன் இப்படி நடந்தது?&quot;, &quot;நான் ஏதாவது தவறு செய்தேனா?&quot; போன்ற கேள்விகள் மீண்டும் மீண்டும் வந்து, அந்த நபரைப் பற்றிய சிந்தனைகளிலிருந்து வெளிவர முடியாமல் செய்கின்றன. இந்த முடிக்கப்படாத கேள்விகள் நம் மூளையை அந்த உறவையே சுற்றிச் சுற்றி யோசிக்க வைக்கின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பாதியில் நின்ற அல்லது முடிக்கப்படாத விஷயங்களை, முடிந்த விஷயங்களை விட நாம் எளிதாக நினைவில் வைத்திருப்போம். இது ஒரு உளவியல் உண்மை. ஒரு உறவு திடீரென முடிவுக்கு வரும்போது, அது மனதில் ஒரு &quot;முடிக்கப்படாத வேலை&quot; போல பதிந்துவிடுகிறது. இதனால், அந்த உறவையும், அதனுடன் தொடர்புடைய நபர்களையும் மறப்பது கடினமாகிறது. மூளை அந்த &quot;முடிக்கப்படாத வேலையை&quot; முடிக்க முயற்சிப்பதன் ஒரு பகுதியாக இது இருக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒரு உறவில் இருக்கும்போது, துணை ஒரு நல்ல நண்பரா, நம்பகமானவரா, நமக்கு ஆதரவா இருந்திருப்பார். பிரிவு ஏற்படும்போது, நமக்குக் கிடைச்ச அந்த முக்கிய ஆதரவை நாம இழக்குறோம். இந்த வெற்றிடத்தை நிரப்ப முடியாம நாம தவிக்கும்போது, மனம் பழைய நினைவுகளையே தேடிப் போகும். இது அந்த நபரைப் பற்றிய சிந்தனைகளைத் தூண்டும், கூடவே தனிமையையும் அதிகப்படுத்தும். இனிமே யார்கிட்ட பேசுறது, யார்கிட்ட கஷ்டங்களைச் சொல்றதுங்கிற உணர்வு ரொம்பவே பாதிக்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>health-relationship</category>
            <dc:creator>Priya Velan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/health-relationship/psychological-reasons-for-not-forgetting-your-ex-even-after-years-6s1h2u2"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Age Gap For Marriage : மனைவிக்கும் கணவனுக்கும் எவ்வளவு வயசு வித்தியாசம் இருக்கனும்? இது தெரியாம கல்யாணம் பண்ணாதீங்க!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/health-relationship/what-age-gap-is-good-for-marriage-in-tamil-84g0gvm</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/health-relationship/what-age-gap-is-good-for-marriage-in-tamil-84g0gvm</guid>
            <pubDate>Mon, 22 Sep 2025 15:51:20 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;மகிழ்ச்சியான இல்லறத்திற்கு கணவனுக்கும், மனைவிக்கும் எவ்வளவு வயசு வித்தியாசம் இருக்க வேண்டும் என்பதை இந்தப் பதிவில் காணலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k3yxbng1r4mkfy83nncvbrhe,imgname-marriage-1756605306369.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;மகிழ்ச்சியான இல்லறத்திற்கு கணவனுக்கும், மனைவிக்கும் எவ்வளவு வயசு வித்தியாசம் இருக்க வேண்டும் என்பதை இந்தப் பதிவில் காணலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இருமனம் இணைய வயது ஒரு தடையில்லை. காதலுக்கு சாதி, வயது, பாலினம் எதுவும் தெரியாது. ஆனால் வெற்றிகரமான திருமணத்திற்கு அறிவியல்ரீதியாக குறிப்பிட்ட வயது வித்தியாசம் சொல்லப்படுகிறது. பொதுவாக நம் நாட்டில் கணவனை விட மனைவி வயது குறைந்தவராகவே இருக்கிறார்கள். பலரும் குறைந்தபட்சம் ஒரு மாதமாவது மனைவி வயது குறைந்தவராக இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார்கள். ஏனென்றால் இங்கு வயது வெறும் வயதல்ல. இந்தப் பதிவில் மகிழ்ச்சியான இல்லறத்திற்கு கணவனுக்கும், மனைவிக்கும் எவ்வளவு வயசு வித்தியாசம் இருக்க வேண்டும் என்பதை காணலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்திய கலாச்சாரத்தில் கணவனுக்கும் மனைவிக்கும் 3 முதல் 5 வயதுவரை வித்தியாசம் இருப்பது பரவலாக பின்பற்றப்படுகிறது. கணவரே மூத்தவராக இருப்பார். பெரும்பாலும் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் அப்படிதான் இருக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பொதுசமூகம் இப்படி வயது வித்தியாசத்தை பின்பற்றி வந்தாலும், பாரிய வயது வித்தியாசம் கொண்ட திருமணங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அவை பெரும்பாலும் காதல்திருமணங்களாகும். ஆனால் வயது வித்தியாசம் வெறும் கலாச்சார நம்பிக்கை இல்லை. அதில் அறிவியல்ரீதியான காரணங்களும் இருக்கத்தான் செய்கின்றன. திருமண பந்தத்திற்கு உடல், மன முதிர்ச்சி தேவை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பெண்கள் ஆண்களைவிட வேகமாக முதிர்ச்சி அடைபவர்கள். அவர்களுடைய 7 முதல் 13 வயதுக்குள் அவர்கள் பருவத்திற்கான ஹார்மோன் மாற்றங்கள் நிகழ்கின்றன. இதே ஆண் பிள்ளைகளுக்கு 9 முதல் 15 வயதில் தான் பருவ ஹார்மோன் மாற்றங்கள் நடக்கும். ஆகவே ஆண்களுக்கு முன்பே பெண்கள் மனநிலை, உடல்ரீதியாக முதிர்ச்சியடைகிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;திருமணத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் 3 வயது வித்தியாசம் போதுமானது என சொல்லப்படுகிறது. இதை அறிவியல் கண்ணோட்டத்துடன் நோக்கினால் உடல் முதிர்ச்சியை அடிப்படையாக கொண்டு தீர்மானிப்பார்கள். உண்மையில் திருமணம் என்பது உடல் வளர்ச்சியைத் தாண்டி மன வளர்ச்சியையும், தயார் நிலையையும் சார்ந்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இருவரின் திருமண வாழ்க்கை சந்தோஷமாக அமைய வயது முக்கிய காரணம் இல்லை. இல்லறம் வெற்றிகரமாக இருக்க தம்பதிகளுக்குள் அன்பு, மரியாதை, பகிர்தல், புரிதல் ஆகியவை இருக்க வேண்டும். அது சரியாக இருந்தால் வயது வித்தியாசம் 3 அல்லது 30 எதுவாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>health-relationship</category>
            <dc:creator>Kalai Selvi</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/health-relationship/what-age-gap-is-good-for-marriage-in-tamil-84g0gvm"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Happy Life: சந்தோஷமா வாழணுமா? இந்த சீக்ரெட்ஸ் ஃபாலோ பண்ணுங்க]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/health-relationship/ten-simple-secrets-for-a-joyful-and-balanced-life-dub8md0</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/health-relationship/ten-simple-secrets-for-a-joyful-and-balanced-life-dub8md0</guid>
            <pubDate>Fri, 10 Apr 2026 11:44:29 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;சந்தோஷமான வாழ்க்கை வாழ ஆசையா? நிகழ்காலத்தில் வாழ்வது, பாசிட்டிவ் எண்ணங்கள், தன்னம்பிக்கை, ஆரோக்கியம், சரியான செலவுகள், வலுவான உறவுகள்னு 10 எளிய விதிகள் உங்க வாழ்க்கையை மாற்றிவிடும். இந்த மந்திரங்களை இன்றே பின்பற்றி உண்மையான மகிழ்ச்சியைப் பெறுங்கள்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k16g11rjrwdjmm6tg3002jrg,imgname-bollywood-fresh-couples-4-1753638536978.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சந்தோஷமான வாழ்க்கை வாழ ஆசையா? நிகழ்காலத்தில் வாழ்வது, பாசிட்டிவ் எண்ணங்கள், தன்னம்பிக்கை, ஆரோக்கியம், சரியான செலவுகள், வலுவான உறவுகள்னு 10 எளிய விதிகள் உங்க வாழ்க்கையை மாற்றிவிடும். இந்த மந்திரங்களை இன்றே பின்பற்றி உண்மையான மகிழ்ச்சியைப் பெறுங்கள்.&lt;/p&gt;&lt;img&gt;இன்றைய வேகமான வாழ்க்கையில், மன அழுத்தம், ஒப்பீடு, ஓட்டம் போன்றவற்றால் நம் மகிழ்ச்சி பின்தங்கிவிட்டது. ஆனால், சந்தோஷம் என்பது வெளிப்பொருட்களைச் சார்ந்தது அல்ல; அது நம் எண்ணங்களையும் பழக்கங்களையும் சார்ந்தது. நீங்கள் நிஜமாகவே அமைதியான, சமநிலையான, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ விரும்பினால், இந்த 10 எளிய விதிகளை இன்றே பின்பற்றுங்கள். இது உங்களை எப்போதும் பாசிட்டிவாகவும் சந்தோஷமாகவும் வைத்திருக்கும்.&lt;img&gt;&lt;p&gt;தவறுகள் வாழ்க்கையின் ஒரு இயல்பான பகுதி. யாரும் தவறுகள் செய்யாமல் முன்னேற முடியாது. ஆனால் அந்த தவறுகளை நாம் எப்படி அணுகுகிறோம் என்பதே நம் வளர்ச்சியை நிர்ணயிக்கிறது. தவறுகளை தோல்வியாக பார்க்காமல், அது ஒரு கற்றல் வாய்ப்பாக எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியம். ஒவ்வொரு தவறும் நமக்கு ஒரு புதிய பாடத்தை கற்பிக்கிறது. அந்த அனுபவம் நம்மை இன்னும் வலுவாகவும் புத்திசாலியாகவும் மாற்றுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;ஒரு விஷயத்தில் நாம் தோல்வியடைந்தால், அது நம்முடைய திறமையின் குறைபாடு அல்ல; அது இன்னும் நம் முயற்சி சரியான திசையில் செல்லவில்லை என்பதற்கான சுட்டிக்காட்டாகும். அந்த தருணத்தில் நம் தவறுகளை அமைதியாக ஆராய்ந்து, எங்கு தவறினோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதனை திருத்திக் கொண்டு மீண்டும் முயற்சி செய்தால், வெற்றி நிச்சயம் கிடைக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;தவறுகளை மறைப்பது அல்லது அவற்றை புறக்கணிப்பது வளர்ச்சியை தடுக்கிறது. அதற்கு பதிலாக, அவற்றை ஏற்றுக்கொண்டு, மீண்டும் அதே தவறுகளை செய்யாமல் இருப்பது நம்மை முன்னேற்றும். வாழ்க்கையில் வெற்றி பெற விரும்பினால், ஒவ்வொரு தவறும் ஒரு படிக்கட்டாக மாற வேண்டும். தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு முன்னேறுபவர்களே உண்மையான வெற்றியாளர்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உறவுகள் மனித வாழ்க்கையின் மிக முக்கியமான அடிப்படையாகும். பணம், பதவி, வெற்றி அனைத்தும் இருந்தாலும், நம்மை உண்மையாக மகிழ்விக்கக் கூடியது குடும்பமும் நண்பர்களும் தான். அதனால், உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்களுடன் தரமான நேரத்தை செலவிடுவது மிகவும் அவசியம். வேலைப்பழுத்த வாழ்க்கையில் பல நேரங்களில் நம்முடைய அன்பானவர்களை புறக்கணித்து விடுகிறோம். ஆனால் வாழ்க்கையின் உண்மையான மகிழ்ச்சி, அவர்களுடன் பகிரும் சிறிய தருணங்களில்தான் இருக்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;குடும்பத்தினருடன் பேசுவது, நண்பர்களுடன் சிரிப்பது, அவர்களுடன் நேரம் செலவிடுவது மன அழுத்தத்தை குறைத்து, மனநிம்மதியை அதிகரிக்கிறது. அன்பும் ஆதரவும் கொண்ட உறவுகள், சிரமமான நேரங்களில் நமக்கு துணையாக நிற்கும் வலிமையாக இருக்கும். உறவுகளை பேணுவது என்பது பெரிய விஷயமல்ல; சிறிய கவனம், உண்மையான அக்கறை, மற்றும் நேரம் கொடுத்தால் போதும்.&lt;/p&gt;&lt;p&gt;எப்போதும் உங்களுக்குப் பிடித்தமானவர்களுடன் தொடர்பில் இருங்கள். அவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, அன்பாக நடந்து கொள்ளுங்கள். உறவுகளை மதித்து காப்பது வாழ்க்கையை நிறைவாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாற்றும். உறவுகளே நம்முடைய உண்மையான செல்வம் என்பதை ஒருபோதும் மறக்க வேண்டாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மன்னிப்பு என்பது மனிதர்களின் உயர்ந்த குணங்களில் ஒன்றாகும். பலர் மன்னிப்பதை பலவீனமாக நினைக்கலாம், ஆனால் உண்மையில் அது மன வலிமையின் வெளிப்பாடாகும். யாராவது நம்மை புண்படுத்தினால், அந்த கோபத்தையும் வேதனையையும் மனதில் வைத்துக்கொள்வது நம்மையே சோர்வடையச் செய்யும். அதற்கு பதிலாக, மன்னிக்கக் கற்றுக்கொண்டால் மனம் இலகுவாகி, அமைதி நிலவும்.&lt;/p&gt;&lt;p&gt;மன்னிப்பது என்பது நடந்ததை மறந்து விடுவது அல்ல; அது அந்த வலியை விடுவிப்பதற்கான ஒரு முடிவு. இதனால் மன அழுத்தம் குறையும், நம் சிந்தனை தெளிவாகும். மேலும், மன்னிப்பு உறவுகளை சரிசெய்யும் சக்தி கொண்டது. குடும்பம் மற்றும் நண்பர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்புகளை மன்னிப்பின் மூலம் சரி செய்து, உறவுகளை மீண்டும் வலுப்படுத்தலாம்.&lt;/p&gt;&lt;p&gt;ஒவ்வொரு மனிதரும் தவறுகள் செய்யக்கூடியவர்களே. அதனால், மற்றவர்களின் தவறுகளை புரிந்து கொண்டு, அவர்களை மன்னிப்பது நம் உள்ளத்தை உயர்த்தும். மன்னிக்கும் பழக்கம் நமக்கு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அளிக்கும். வாழ்க்கையை சுமையாக அல்ல, இலகுவாக வாழ விரும்பினால், மன்னிப்பை ஒரு பழக்கமாக மாற்ற வேண்டும். மன்னிப்பதே மன அமைதிக்கான உண்மையான சாவி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பாசிட்டிவ் எண்ணங்கள் வாழ்க்கையை மாற்றும் சக்தி கொண்டவை. நாம் எந்த சூழ்நிலையிலும் இருக்கிறோம் என்பதைக் காட்டிலும், அதை எப்படி பார்க்கிறோம் என்பதே முக்கியம். சிரமங்கள் வந்தாலும், அதில் ஒரு நல்ல பக்கம் இருக்கிறது என்று நம்பும் மனப்பாங்கு நமக்கு தைரியத்தையும் நம்பிக்கையையும் தருகிறது. ஒவ்வொரு பிரச்சனையும் ஒரு முடிவு அல்ல; அது ஒரு புதிய வாய்ப்பாக இருக்கலாம் என்று எண்ணும் போது, வாழ்க்கையை எளிதாக எதிர்கொள்ள முடியும்.&lt;/p&gt;&lt;p&gt;கடினமான நேரங்களில் நெகட்டிவ் சிந்தனைகள் எளிதில் வந்து விடும். ஆனால் அவற்றை கட்டுப்படுத்தி, &ldquo;இதற்கும் ஒரு தீர்வு இருக்கிறது&rdquo; என்று நம்புவது முக்கியம். இந்த நம்பிக்கை நம்மை முன்னேறச் செய்யும். பாசிட்டிவ் சிந்தனை என்பது வெறும் வார்த்தை அல்ல; அது தினசரி பழக்கமாக மாற்ற வேண்டிய ஒன்று. நாம் எதை நினைக்கிறோமோ, அது நம்முடைய செயல்களிலும், முடிவுகளிலும் பிரதிபலிக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;சந்தோஷமாக இருப்பது சூழ்நிலைகளால் மட்டுமே நிர்ணயிக்கப்படுவதில்லை. அது நாம் எடுக்கும் ஒரு முடிவு. நன்றாக சிந்தித்து, நம்பிக்கையுடன் செயல்பட்டால், வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்கள் நடக்கும். பாசிட்டிவ் எண்ணங்களை வளர்த்துக் கொண்டால், மன அமைதியும் வெற்றியும் இயல்பாகவே நம்மை தேடி வரும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>health-relationship</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/health-relationship/ten-simple-secrets-for-a-joyful-and-balanced-life-dub8md0"/>
        </item>
        <item>
            <title><![CDATA[உறவில் இந்த 6 விஷயங்களை தவிர்ப்பவரா நீங்க? பின்னால வருத்தப்படுவீங்க]]></title>
            <link>https://tamil.asianetnews.com/webstories/health-relationship/relationship-tips-for-these-6-things-ruin-your-life-in-tamil-mks-dzpkg1y</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/webstories/health-relationship/relationship-tips-for-these-6-things-ruin-your-life-in-tamil-mks-dzpkg1y</guid>
            <pubDate>Tue, 24 Jun 2025 19:14:04 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;நீங்கள் ஒரு உறவில் இருக்கும் போது எந்த மாதிரியான விஷயங்களை புறக்கணிக்கக் கூடாது என்பதை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jrmqznz32tvnze1qntqac8wh,imgname-relation-5-1744452966371.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <category>health-relationship</category>
            <dc:creator>Kalai Selvi</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/webstories/health-relationship/relationship-tips-for-these-6-things-ruin-your-life-in-tamil-mks-dzpkg1y"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Relationship Tips : கள்ளக்காதல் செய்யுற ஆண்களை எப்படி கண்டுபிடிக்கனும்? மனைவிகள் தெரிந்து கொள்ள வேண்டிய '5' பாடங்கள்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/health-relationship/how-to-know-if-your-husband-is-cheating-in-tamil-articleshow-e6d9g0q</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/health-relationship/how-to-know-if-your-husband-is-cheating-in-tamil-articleshow-e6d9g0q</guid>
            <pubDate>Wed, 12 Nov 2025 17:03:40 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கள்ளக்காதலில் ஈடுபடும் ஆண்கள் என்னென்ன காரியங்களில் ஈடுபடுவார்கள் என்பதை கவனித்து பார்த்தால் எளிதில் கண்டுபிடிக்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01h68vecj41qbha1p92j402m7r,imgname-cheating--1-.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கள்ளக்காதல் எனச் சொல்லக் கூடிய திருமணத்தை மீறிய உறவுகள் ஒரே நாளில் நிகழ்ந்துவிடுவதில்லை. அவை நாளடைவில் உருவாகக் கூடியது. இந்த உறவுக்குள் செல்லும் நபர்கள் அதற்கு முன்னதாக சில காரியங்களைச் செய்வார்கள். அவர்களை அறியாமல் வெளிப்படும் இந்த சிக்னல்களை வாழ்க்கைத்துணை கண்டுபிடித்துவிட்டால் முன்கூட்டியே ஒரு துரோகத்தில் இருந்து தப்பலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;நேரம் தாழ்த்துதல்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;உங்கள் கணவர் இரவில் வீட்டுக்கு தாமதமாக வருவதை திடீரென வழக்கப்படுத்தினால் அது சாதாரண விஷயம் அல்ல. வழக்கமாக வரும் நேரத்தை விட அதிக நேரம் தாமதமாக வருதல். விடுமுறை நாட்களிலும் வேலை இருப்பதாகச் சொல்லி வெளியே கிளம்பினால் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள். இதுவே அவர்கள் புதிய நபருடன் அல்லது வேறொரு நபருடன் நேரம் செலவழிக்கத் தொடங்கும் காலமாக இருக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;செல்போன் பாஸ்வேர்ட்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;ரகசியங்களின் புகலிடம் செல்போன். அதை உங்களிடம் தராமல் தவிர்த்தால் ஏதோ குளறுபடி இருப்பது உறுதி. புதிய பாஸ்வேர்ட்களை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருப்பதும் கவனிக்க வேண்டிய விஷயம். தங்களுடைய புதிய துணையின் விவரங்களை மற்றவர்கள் பார்த்துவிடுவார்கள் என்ற பாதுகாப்பின்மை உணர்வினால் செல்போனை யாரிடமும் தர மாட்டார்கள். அவர்களால் வெளிப்படையாக இருக்க முடியாது. குறிப்பாக மனைவிக்கு தன்னுடைய பாஸ்வேர்ட் தெரிந்த பின்னர் மீண்டும் பாஸ்வேர்டை மாற்றுவார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;உண்மைகளை மறைத்தல்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;கள்ளக்காதலில் ஈடுபட துணியும் ஆண்கள் தாங்கள் சந்திக்கும் நபர்களைக் குறித்து பகிர்ந்து கொள்ளமாட்டார்கள். தினமும் பொய் சொல்ல ஆரம்பிப்பார்கள். சில உண்மைகளை மறக்க தயங்கமாட்டார்கள். உங்களுக்கு முன் எந்த செல்போன் அழைப்பையும் எடுத்து பேசமாட்டார்கள். போனை எடுத்துக் கொண்டு உடனே வெளியேறி விடுவார்கள். புதிய விஷயங்களை செய்ய தொடங்குவார்கள். ஆடையில் தொடங்கி தோற்றம் போன்றவற்றில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வார்கள். காதல் ஸ்டேட்டஸுகளை தனித்துவமான எமோஜியில் போடுவது, அதிக புகைப்படங்கள் எடுப்பது என சில உற்சாகமாகக் காணப்படுவார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;புதிய பழக்கங்கள்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;சில ஆண்கள் தங்களுக்கு பிடிக்காத விஷயங்களை கூட கள்ளக்காதலில் ஈடுபடும் போது செய்வார்கள். உதாரணமாக பிடிக்காத உடைகளை உடுத்துவது, உணவுப் பழக்கம், புதிய ஹேர் ஸ்டைல் என புதிய பழக்கங்களை கற்றுக் கொள்வதை கவனத்தில் கொள்ள வேண்டும். இவை சாதாரணமாக விஷயங்களாக இருந்தாலும் திடீரென இது மாதிரி புதிய விஷயங்களில் ஈடுபடுவது சற்று கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;நடத்தை மாறுதல்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;தங்களுடைய குணநலன்களை திடீரென ஒரு ஆண் மாற்றுவது சாதாரண விஷயம் கிடையாது. புதிய நபர் வாழ்க்கையில் வரும்போது கண்டிப்பாக நடத்தையில் மாற்றம் வரும். வாழ்க்கைத் துணையை விமர்சிப்பது, வீட்டில் உள்ளவர்களுடன் எப்போதும் சிடுசிடு என பேசுவது கள்ளக்காதலில் ஒரு ஆரம்ப அறிகுறி. குடும்பம் இருந்தும் இல்லாதது போல இருப்பது, குடும்ப புகைப்படங்களை பகிர்வதை தவிர்ப்பது கவனிக்க வேண்டிய விஷயமாகும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;தோற்றப் பொலிவு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;மேலே சொன்னபடி ஆண்கள் தங்களுடைய தோற்றத்திற்கு திடீரென முக்கியத்துவம் கொடுப்பது எதார்த்தமான விஷயமல்ல. தங்களை இளமையாக காட்டிக் கொள்வது, தொப்பையை குறைக்க உடற்பயிற்சிகள் செய்வது போன்றவற்றை திடீரென எந்த காரணமும் இன்றி ஒரு ஆண் தொடங்கினால் அதை மனைவிகள் கண்காணிக்க வேண்டும். சில ஆரோக்கிய நோக்கங்களுக்காக செய்யலாம். ஆனால் எல்லோரும் அப்படியல்ல.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;நெருக்கம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;உங்களிடம் அன்பாக நடந்துகொள்ளாமல் எப்போதும் அதிருப்தியாக இருந்தால், பாலியல் நெருக்கத்தைத் தவிர்த்தால் உங்களுடையை வாழ்க்கைத் துணைக்கு வேறொருவர் மீது ஆர்வம் வந்துவிட்டது என அர்த்தம். புதிய நபர் மீது ஆர்வம் இருந்தால்தான் உங்கள் மீது ஆர்வம் குறையும். நெருக்கத்தை தவிர்ப்பார்கள். சில ஆண்கள் இந்த குற்ற உணர்ச்சியினால் உட**வு வைத்துக் கொள்ளாமல் தவிர்க்கலாம். ஆனால் சில ஆண்கள் உங்களிடம் அன்பாகவும் அரவணைப்பாவும் நடந்து கொள்ளாமல், வெறும் உட***க்காக மட்டும் உங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். அதனால் ஒரு சில அறிகுறிகளை வைத்து முடிவு செய்யாமல் அனைத்து அறிகுறிகளையும் கவனித்து பாருங்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&quot;அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்&quot; என்பதுபோல உங்கள் கணவர் தப்பானவர்தான் என்ற எண்ணத்தில் பார்த்தால் எல்லாமே தவறாகத் தெரியும். முன்முடிவுகளின்றி எதார்த்தமாக கவனியுங்கள்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>health-relationship</category>
            <dc:creator>Kalai Selvi</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/health-relationship/how-to-know-if-your-husband-is-cheating-in-tamil-articleshow-e6d9g0q"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Relationship: காதல் என்றால் என்ன? 90% பேருக்கு தெரியாத உண்மை இதுதான்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/health-relationship/what-is-real-love-most-people-get-it-wrong-ezpb8eg</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/health-relationship/what-is-real-love-most-people-get-it-wrong-ezpb8eg</guid>
            <pubDate>Sat, 11 Apr 2026 09:32:55 +0530</pubDate>
            <description><![CDATA[கணவன்-மனைவி உறவு என்பது வெறும் சேர்ந்து வாழ்வது மட்டுமல்ல. ஒருவருக்கொருவர் துணையாக நின்று, ஒருவரையொருவர் மெருகேற்றிக்கொள்ளும் ஒரு புனிதமான பந்தம். இந்த உறவில் தர்மம், நம்பிக்கை, மரியாதை, தியாகம் ஆகியவை இருந்தால் மட்டுமே உண்மையான காதல் மலரும்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kkdr1gmp4gt29tabvhzq4ets,imgname-4-1773209174678.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[கணவன்-மனைவி உறவு என்பது வெறும் சேர்ந்து வாழ்வது மட்டுமல்ல. ஒருவருக்கொருவர் துணையாக நின்று, ஒருவரையொருவர் மெருகேற்றிக்கொள்ளும் ஒரு புனிதமான பந்தம். இந்த உறவில் தர்மம், நம்பிக்கை, மரியாதை, தியாகம் ஆகியவை இருந்தால் மட்டுமே உண்மையான காதல் மலரும்.&lt;img&gt;&lt;p&gt;கணவன்-மனைவி உறவை ஒரு தேரின் இரண்டு சக்கரங்களோடு ஒப்பிடுவது மிகச் சரியானது. அந்த இரண்டு சக்கரங்களும் சமநிலையுடன், ஒரே திசையில் சுழன்றால்தான் தேர் சீராக முன்னேறும். அதுபோல, குடும்ப வாழ்க்கையும் இருவரின் இணைந்த முயற்சியால் மட்டுமே நிலைபெறும். ஒருவரே எல்லா பொறுப்பையும் ஏற்றுக்கொள்வது உறவை சோர்வடையச் செய்யும்; ஆனால் பொறுப்புகளை பகிர்ந்துகொள்வது நம்பிக்கையையும் புரிதலையும் வளர்க்கும்.&lt;/p&gt;&lt;p&gt;இந்த உறவில் போட்டி இருக்கக் கூடாது; பதிலாக, பரஸ்பர ஆதரவு மற்றும் ஊக்கமே இருக்க வேண்டும். ஒருவரின் பலவீனத்தை மற்றொருவர் நிரப்பி, பலமாக மாற்றும் மனப்பான்மை அவசியம். சிறிய விஷயங்களில்கூட கருத்து வேறுபாடுகள் வரலாம், ஆனால் அவற்றை சமரசத்துடன் சமாளிப்பதே உறவை வலுப்படுத்தும்.&lt;/p&gt;&lt;p&gt;மனஅழுத்தமான காலங்களில் துணையாக நிற்பதும், மகிழ்ச்சியான தருணங்களில் இணைந்து கொண்டாடுவதும் தான் உண்மையான உறவின் அடையாளம். இவ்வாறு இருவரும் இணைந்து செயல்பட்டால், குடும்பம் உறுதியான அடித்தளத்தில் நின்று நீண்ட காலம் மகிழ்ச்சியாக இருக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பலர் காதலை வெறும் ஈர்ப்பு அல்லது தற்காலிக உணர்ச்சியாகவே கருதுகிறார்கள். ஆனால் உண்மையான காதல் அதைவிட ஆழமானது. அது எந்த நிபந்தனையும் இன்றி ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையில் தொடங்குகிறது. வாழ்க்கையில் சவால்கள் வந்தபோது விலகாமல், ஒருவருக்கொருவர் துணையாக நிற்பதே காதலின் உண்மையான பரிமாணம்.&lt;/p&gt;&lt;p&gt;கணவன்-மனைவி உறவில் ஈகோக்கு இடமில்லை; &ldquo;நாம்&rdquo; என்பதே முக்கியம். ஒருவரின் வெற்றியை மற்றொருவர் கொண்டாடி, தோல்வியில் உற்சாகம் அளிப்பது காதலை வலுப்படுத்தும். மேலும், வார்த்தைகளால் மட்டுமல்லாமல், செயல்களால் அன்பை வெளிப்படுத்துவது உறவை நிலைத்திருக்கச் செய்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;உணர்வுகளை புரிந்துகொண்டு, சிறிய விஷயங்களிலும் கவனம் செலுத்தி, பரஸ்பரம் மதிப்பளிப்பதே உண்மையான காதலின் அடையாளம். இத்தகைய குணங்கள் இருந்தால் மட்டுமே கணவன்-மனைவி உறவு உறுதியானதாகவும், நீண்ட நாள் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதர்வண வேதத்தில் கணவன்-மனைவி உறவைப் பற்றி கூறப்படும் செய்தி மிகவும் ஆழமானது மற்றும் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக உள்ளது. &ldquo;தாய் தன் பிள்ளையை எப்படி நேசிக்கிறாளோ, அதுபோலவே கணவன்-மனைவி ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும்&rdquo; என்ற கருத்து, காதலின் உயர்ந்த நிலையை வெளிப்படுத்துகிறது. தாய் அன்பு என்பது எந்த எதிர்பார்ப்பும் இல்லாத, முழுமையான தியாக உணர்வுடன் கூடியது. அதுபோல, தம்பதியரிடையே இருக்கும் அன்பும் சுயநலமில்லாமல் இருக்க வேண்டும் என்பதையே இது வலியுறுத்துகிறது.&lt;/p&gt;&lt;p&gt;மேலும், &ldquo;பூமியைப் போல உறுதியாக இருக்க வேண்டும்&rdquo; என்ற உபதேசம், உறவில் நிலைத்தன்மையின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. வாழ்க்கையில் சோதனைகள், சவால்கள் வந்தாலும், ஒருவரை ஒருவர் கைவிடாமல் உறுதியாக நிற்பதே உண்மையான உறவு. அதே நேரத்தில், கஷ்ட காலத்திலும் தர்மத்தை கைவிடாமல் நடப்பது, உறவின் மதிப்பை உயர்த்தும்.&lt;/p&gt;&lt;p&gt;இந்த மந்திரம் சொல்லும் முக்கிய உண்மை என்னவென்றால், காதல் என்பது வெறும் ஈர்ப்பு அல்லது உணர்ச்சி அல்ல; அது தாய் அன்பைப் போன்ற தூய்மையான, தியாகம் நிறைந்த, நிலையான பந்தம். இப்படிப்பட்ட காதல் தான் குடும்பத்தை உறுதியாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க உதவும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்து பாரம்பரியத்தில் திருமணம் என்பது வெறும் சமூக ஒப்பந்தம் அல்ல; அது ஒரு புனிதமான வாழ்க்கை நிலையமாகக் கருதப்படுகிறது. இதையே &ldquo;கிருஹஸ்தாஸ்ரமம்&rdquo; என்று அழைக்கிறார்கள். மனித வாழ்க்கையின் முக்கியமான இந்த கட்டத்தில், கணவன்-மனைவி இருவரும் இணைந்து ஒரு குடும்பத்தை உருவாக்கி, அதனை மதிப்புடன் வளர்க்க வேண்டும். இது பொறுப்பு, பகிர்வு மற்றும் பரஸ்பர புரிதலின் அடிப்படையில் அமைந்த உறவாகும்.&lt;/p&gt;&lt;p&gt;இந்த நிலையில், ஒருவரின் வெற்றிக்கும் முன்னேற்றத்திற்கும் மற்றொருவர் ஆதரவாக இருப்பது மிகவும் அவசியம். வாழ்க்கையில் வரும் சவால்களை ஒன்றாக எதிர்கொண்டு, மகிழ்ச்சிகளையும் துயரங்களையும் பகிர்ந்துகொள்வதே இந்த உறவின் சிறப்பு.&lt;/p&gt;&lt;p&gt;இதற்கு சிறந்த உதாரணமாக சிவன் மற்றும் பார்வதி தேவியின் தம்பத்யம் குறிப்பிடப்படுகிறது. அவர்கள் இருவரும் சமநிலையுடன், ஒருவருக்கொருவர் பலமாக இருந்து, வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் ஒன்றிணைந்து செயல்பட்டனர். அவர்களின் உறவு, அன்பு, மதிப்பு மற்றும் பொறுப்பின் சின்னமாக விளங்குகிறது.&lt;/p&gt;&lt;p&gt;இதனால், கிருஹஸ்தாஸ்ரமம் என்பது வெறும் குடும்ப வாழ்க்கை அல்ல; அது இருவரும் இணைந்து வளர்ந்து, சமநிலையுடன் வாழ்வை அமைக்கும் ஒரு உயர்ந்த பாதையாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தார்மீக நூல்களின்படி, காதல் நிலைத்திருக்க மரியாதையும் நம்பிக்கையும் மிகவும் அவசியமானவை. ஒரு உறவில் இவ்விரண்டும் இல்லையெனில், அது மெதுவாக பலவீனமடைந்து விடும். கணவன்-மனைவி உறவில் நம்பிக்கை என்பது அடித்தளமாகவும், மரியாதை அதன் உறுதிப் பாறையாகவும் அமைகிறது. ஒருவரை ஒருவர் சந்தேகப்படாமல், திறந்த மனதுடன் அணுகும்போது மட்டுமே உறவு வலுவாகும்.&lt;/p&gt;&lt;p&gt;இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக ராமர் மற்றும் சீதாதேவியின் தம்பத்ய வாழ்க்கை கூறப்படுகிறது. அவர்களின் உறவில் மரியாதை, நம்பிக்கை மற்றும் தர்மம் முக்கிய பங்காற்றின. வாழ்க்கையில் பல சோதனைகள் வந்தபோதும், அவர்கள் உறவின் மதிப்பை காப்பாற்றினர். இது உறவில் நம்பிக்கை எவ்வளவு முக்கியம் என்பதை எடுத்துக்காட்டுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;மேலும், ஒருவரின் உணர்வுகளை மற்றொருவர் புரிந்துகொள்வதும் அவசியம். கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அதை அமைதியாக பேசித் தீர்ப்பது உறவை மேலும் வலுப்படுத்தும். பரஸ்பரம் மதித்து, ஆதரவு அளித்து, நம்பிக்கையை காக்கும் போது மட்டுமே காதல் நீண்ட காலம் நிலைத்து நிற்கும். இதுவே உண்மையான, நிலையான காதலின் அடித்தளம் ஆகும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>health-relationship</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/health-relationship/what-is-real-love-most-people-get-it-wrong-ezpb8eg"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Relationship Tips : ஆண்களே! மனைவியோட டார்ச்சர் தாங்கலயா? இந்த 5 விஷயங்களை பண்ற ஆளா நீங்க? செக் பண்ணுங்க!!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/health-relationship/relationship-tips-five-things-that-irritate-every-wife-in-tamil-ge628un</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/health-relationship/relationship-tips-five-things-that-irritate-every-wife-in-tamil-ge628un</guid>
            <pubDate>Thu, 09 Oct 2025 15:31:07 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கணவர்கள் செய்யும் இந்த 5 செயல்கள் மனைவியை எரிச்சலடைய செய்யும். அந்த தவறுகளைக் குறித்து இங்கு காணலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jkyxzkk6trd6e6wpwj5wh5zx,imgname-relationship-1739426090598.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கணவர்கள் செய்யும் இந்த 5 செயல்கள் மனைவியை எரிச்சலடைய செய்யும். அந்த தவறுகளைக் குறித்து இங்கு காணலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மனைவி மகிழ்ச்சியாக இருந்தால் தான் கணவன் மகிழ்ச்சியாக இருக்க முடியும். நிம்மதியாக வாழ நினைக்கும் எந்த ஆணும் தன்னுடைய மனைவியை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். இதைத்தான் ஆங்கிலத்தில Happy wife, Happy Life என்பார்கள். மனைவியை மகிழ்சியாக வைக்க எதை செய்ய வேண்டும் என்பதை விட எதை செய்யக் கூடாது என்பது முக்கியம். திருமணத்திற்கு பிறகு ஆண்கள் செய்யும் எந்தெந்த விஷயங்கள் மனைவியை எரிச்சலடைய செய்யும் என்பதை அறிந்து கொள்வது அவசியம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கணவன் தன் மனைவியை எந்த பெண்ணோடும் ஒப்பிடவே கூடாது. குறிப்பாக தன் சொந்த அம்மாவுடன் ஒப்பிட்டு பேசுவதை தவிர்க்க வேண்டும். தன்னை இன்னொரு பெண்ணுடன் ஒப்பிடுவதை எந்த மனைவியும் விரும்பமாட்டார்கள். நீங்கள் தற்செயலாக இந்த காரியத்தை செய்தால் கூட அது விபரீதத்தில் தான் முடியும். முடிந்தவரை மனைவியை யாருடனும் ஒப்பிடாமல் இருக்க பழகுங்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உங்களுடைய மனைவியை எப்போதும் மதிக்க வேண்டும். மரியாதை இல்லாத எந்த உறவும் காயத்தை ஏற்படுத்தும். தனக்கு முன்னுரிமை அளிப்பதையும், மரியாதையாக நடத்துவதையும் ஒவ்வொரு பெண்ணும் விரும்புகிறாள். அதை மீண்டும் மீண்டும் ஓர் ஆண் செய்ய தவறும்போது அவருடைய மனைவி மிகவும் காயப்படுகிறார். இதனால் அந்த உறவில் சலிப்பி ஏற்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பல விவாகரத்திற்கு காரணமாகச் சொல்லப்படுவது கணவன் தன் மனைவியை புரிந்து கொள்ள முயற்சி செய்யாததும், அவளுடன் நேரம் செலவிடாததும் தான். கணவர் தன் மனைவிக்கு நேரத்தை ஒதுக்க மறந்து அலட்சியம் காட்டினால் அங்கு நல்ல உறவு இருக்காது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பொய் சொல்லி உறவை காப்பாற்றிக் கொள்ள பலர் முயற்சி செய்கிறார்கள். ஆனால் மீண்டும் மீண்டும் பொய் சொல்வது அந்த உறவில் இருக்கும் நம்பிக்கையை முற்றிலும் உடைக்கிறது. கணவர் அதிகமாக பொய் சொல்வதை எந்த பெண்ணும் விரும்புவதில்லை. முழுவதுமாக நேர்மையாக இல்லாவிட்டாலும் கூட எப்போதும் பொய் சொல்லும் குணத்தை யாவது ஆண்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். பொய்கள் மனைவியை மிகவும் காயப்படுத்தும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கணவர் தன் மனைவி என்ன பேசுகிறார் என்பதை காது கொடுத்து கேட்க வேண்டும். நாள் முழுக்க வீட்டிலேயே இருக்கும் பல பெண்கள் கணவன் தங்களிடம் பேச வேண்டும் என நினைக்கிறார்கள். மனைவியின் பேச்சை கவனமாக கேட்கும் கணவர்களையே அவர்கள் ரசிக்கிறார்கள். தாங்கள் புரிந்து கொள்ளப்படுவதை மனைவிகள் விரும்புகிறார்கள். இதை செய்ய தவறும் ஆண்கள் மீது பெண்கள் வெறுப்பு கொள்கிறார்கள். சிலர் விவாகரத்து வாங்கிக் கொள்கிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நீங்கள் அறிந்தோ, அறியாமலோ உங்களுடைய மனைவியை பிறருடன் தொடர்ந்து ஒப்பிட்டால் அது அவர்களுடைய சுயமரியாதையை சீண்டிவிடும். இதனால் உங்களுடைய உறவில் கசப்பான உணர்வுகள் வந்துவிடும். நீங்கள் உங்களுடைய திருமண உறவை காப்பாற்ற பல ஆயிரங்களை செலவு செய்ய வேண்டியது இல்லை. உங்களுடைய நேரத்தில் சில நிமிடங்களை மனைவிக்காக ஒதுக்கி அவர் சொல்வதை காது கொடுத்து கேட்டாலே போதும். இதை நீங்கள் செய்ய தவறும் போது உங்கள் உறவில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் எழுவதை தவிர்க்க முடியாது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>health-relationship</category>
            <dc:creator>Kalai Selvi</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/health-relationship/relationship-tips-five-things-that-irritate-every-wife-in-tamil-ge628un"/>
        </item>
        <item>
            <title><![CDATA[இனி சண்டையே வராது, காதலும் பொங்கி வழியும்.! கணவன் -  மனைவியை நெருக்கமாக்கும் love ரகசியங்கள்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/health-relationship/no-more-fights-only-love-overflowing-secrets-that-bring-husband-and-wife-closer-iba44w7</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/health-relationship/no-more-fights-only-love-overflowing-secrets-that-bring-husband-and-wife-closer-iba44w7</guid>
            <pubDate>Thu, 23 Apr 2026 12:15:17 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கணவன்-மனைவி உறவில் ஏற்படும் சண்டைகளுக்குச் சிறிய தவறான புரிதல்களே காரணம். படுக்கையறை சூழல், குறிப்பாக தலையணை மற்றும் சுவர்களின் நிறங்கள் மனநிலையை பாதித்து உறவின் தரத்தை தீர்மானிக்கின்றன.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kpwghpr5mv2y4npdvxx0yz6c,imgname-gemini-generated-image-ft2gk7ft2gk7ft2g--1--1776925858561.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கணவன்-மனைவி உறவில் ஏற்படும் சண்டைகளுக்குச் சிறிய தவறான புரிதல்களே காரணம். படுக்கையறை சூழல், குறிப்பாக தலையணை மற்றும் சுவர்களின் நிறங்கள் மனநிலையை பாதித்து உறவின் தரத்தை தீர்மானிக்கின்றன.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்றைய வேகமான வாழ்க்கையில், கணவன்&ndash;மனைவி உறவில் சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட பெரிய பிரச்சினைகள் உருவாகுவது சாதாரணம். வேலைப்பளு, மன அழுத்தம், நேரம் இல்லாமை போன்றவை இதற்கு காரணமாக இருக்கும். ஆனால் சில நேரங்களில் நம்ம சுற்றுப்புற சூழல் கூட நம்ம மனநிலையை பாதிக்கும். அதனால்தான் படுக்கையறை அமைப்பு, நிறங்கள், பயன்படுத்தும் பொருட்கள் போன்றவை உறவின் தரத்தை பாதிக்குமா என்ற கேள்வி எழுகிறது. வாஸ்து மற்றும் உளவியல் இரண்டுமே, &ldquo;சூழல் சரி என்றால் மனமும் சரியாகும்&rdquo; என்று சொல்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கணவன்&ndash;மனைவிக்குள் ஏற்படும் சண்டைகள் பெரும்பாலும் பெரிய காரணங்களால் இல்லாமல், சிறிய தவறான புரிதல்களால்தான் ஆரம்பமாகிறது. யார் முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும், யார் சரி என்ற வாதம் நீளும்போது, அது மனதளவில் தூரத்தை உருவாக்கும். இதை சமாளிக்க பேசும் திறன் முக்கியமானது என்றாலும், மனநிலையை அமைதியாக்கும் சூழல் இருந்தால் பிரச்சினைகள் தானாகவே குறையும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒரு தம்பதியின் உறவுக்கு மிக முக்கியமான இடம் அவர்களின் படுக்கையறை. அங்கே இருக்கும் ஒளி, காற்றோட்டம், நிறங்கள், பொருட்களின் அமைப்பு எல்லாம் மனநிலையை பாதிக்கக்கூடியவை. சுத்தமான, ஒழுங்கான அறை மனதில் அமைதியை ஏற்படுத்தும். அதே சமயம், குழப்பமான மற்றும் குரூபான சூழல் மன அழுத்தத்தையும் கோபத்தையும் அதிகரிக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நிறங்களுக்கு மனநிலையை மாற்றும் சக்தி இருக்கிறது என்பது உளவியல் ஆய்வுகளால் நிரூபிக்கப்பட்டது. மென்மையான நிறங்கள் (இளஞ்சிவப்பு, இளநீலம், வெள்ளை) மனதிற்கு அமைதியையும் நிம்மதியையும் தரும். இவை காதல் உணர்வை தூண்டி, இருவருக்கிடையே உள்ள இணக்கத்தை அதிகரிக்க உதவும். அதே நேரத்தில் அடர் சிவப்பு அல்லது கருப்பு போன்ற நிறங்கள் அதிகமாக இருந்தால் அது மனத்தில் அழுத்தத்தையும் சண்டை உணர்வையும் தூண்டக்கூடும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;படுக்கையில் பயன்படுத்தும் தலையணை கூட உறவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இளஞ்சிவப்பு நிற தலையணை காதல் உணர்வை அதிகரிக்க உதவும். பச்சை நிறம் அமைதி மற்றும் நம்பிக்கையை உருவாக்கும். வெள்ளை நிறம் தூய்மையையும் நேர்மையையும் குறிக்கும். இந்த மாதிரியான நிறங்களை பயன்படுத்துவது மனநிலையை மென்மையாக மாற்றி, பேசும் விதத்தையும் மாற்றக்கூடும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&amp;nbsp;அடர் சிவப்பு, கருப்பு போன்ற வலுவான நிறங்கள் அதிகமாக இருந்தால் அது உறவில் பதட்டத்தை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இவை மனதில் ஒரு விதமான அழுத்தத்தையும் சினத்தையும் தூண்டும். அதனால் படுக்கையறையில் இத்தகைய நிறங்களை குறைத்து, மென்மையான நிறங்களை அதிகப்படுத்துவது நல்லது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தலையணை நிறம் மட்டுமல்லாமல், படுக்கை விரிப்பு, திரை, சுவர் நிறம் போன்றவற்றையும் கவனிக்கலாம். அறையில் அதிக வெளிச்சம் இருக்க வேண்டும். தேவையற்ற பொருட்களை அகற்றுவது நல்ல ஆற்றலை உருவாக்கும். மேலும், மொபைல் மற்றும் டிவி பயன்படுத்தும் நேரத்தை குறைத்து, ஒருவருடன் ஒருவர் பேசும் நேரத்தை அதிகரிப்பதும் உறவை பலப்படுத்தும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தலையணை நிறம் மாற்றினாலே எல்லா பிரச்சினைகளும் மறைந்து போய்விடும் என்று சொல்ல முடியாது. ஆனால் சூழலை மாற்றுவது மனநிலையை மாற்றும் என்பது உண்மை. அதனால் சிறிய மாற்றங்களைக் கூட முயற்சி செய்து பார்க்கலாம். உண்மையான உறவை காப்பாற்றுவது புரிதல், பொறுமை, அன்பு ஆகியவற்றால்தான். ஆனால் அந்த அன்பை வளர்க்க ஒரு நல்ல சூழல் உதவியாக இருக்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>health-relationship</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/health-relationship/no-more-fights-only-love-overflowing-secrets-that-bring-husband-and-wife-closer-iba44w7"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Law of Attraction for Love : இன்னும் சிங்கிளாவே இருக்கீங்களா? காதல் துணையை அடைய 'ஈர்ப்பு விதி' எப்படி செய்யனும்?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/health-relationship/how-to-use-the-law-of-attraction-to-find-life-partner-in-tamil-articleshow-k4kvxav</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/health-relationship/how-to-use-the-law-of-attraction-to-find-life-partner-in-tamil-articleshow-k4kvxav</guid>
            <pubDate>Tue, 30 Sep 2025 16:48:38 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;காதல் துணையை கண்டடைய ஈர்ப்பு விதியை எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற தெளிவான விளக்கத்தைக் காணலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k18z3sscbz6zra1cpatwpj60,imgname-love-01-1753721464620.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;நம்முடைய எண்ணங்களும், உணர்வுகளும் ஒருமித்து உருவாக்கும் நம்பிக்கையே நாம் வாழும் எதார்த்த வாழ்க்கையை வடிவமைக்கிறது. இதை தான் ஈர்ப்பு விதியும் செய்கிறது. இந்த விதி உண்மையா என இன்னும் விவாதம் இருந்தாலும், நம் ஆழ்மனதில் விரும்பும் விஷயங்களைதான் வாழ்வில் ஈர்க்கிறோம்.&lt;/p&gt;&lt;p&gt;எண்ணம்போல் தான் வாழ்க்கை. ஆகவேதான் நேர்மறையான எண்ணங்களை வளர்க்கச் சொல்லி மனநல நிபுணர்கள் கூட அறிவுறுத்துகின்றனர். எதை விரும்புகிறோமோ, எதை நினைக்கிறோமோ, எதைக் கண்டு அஞ்சுகிறோமோ அதைத் தான் நாம் ஈர்க்கிறோம். இந்தப் பதிவில் காதல் விஷயத்தில் எப்படி ஈர்ப்பு விதியை பயன்படுத்தி புதிய உறவைத் தேடலாம் என்பதை காணலாம்.&lt;/p&gt;&lt;p&gt;மற்றவர்கள் உங்களை நேசிக்கவேண்டும் என நினைத்தால் உங்களிடம் சுய அன்பு இருக்க வேண்டும். உங்களைக் குறித்த சுய மதிப்பு மீது உயர்வான நம்பிக்கை இருக்க வேண்டும். உதாரணமாக, &quot;எனக்கு எங்க லவ் செட் ஆக போகுது&quot; எனச் சிந்திக்கக் கூடாது. கண்டிப்பாக நான் என் காதலை கண்டடைவேன் என்றுதான் நினைக்கவேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சுய மதிப்பீடு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;எப்போது உங்களை நீங்கள் மதிக்கிறீர்களோ அப்போது உங்களுக்கு ஒரு தரத்தை உருவாக்குகிறீர்கள். அதுவே பிறர் உங்களை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கான மதிப்பீடாக இருக்கும். பிரபஞ்சம் அப்போது உங்களுக்கு ஆதரவாக செயல்படத் தொடங்கும். தாழ்வு மனப்பான்மை, பயம், பொறாமை போன்ற எதிர்மறை சிந்தனைகள் ஈர்ப்பு விதியை செயல்பட விடாது.&lt;/p&gt;&lt;p&gt;காதல் உறவை தேடுபவர்கள் தங்களைக் குறித்து நல்ல அபிப்ராயம் வைத்திருக்க வேண்டும். சுய அக்கறையுடன் தங்களை நன்கு பராமரித்தும் கொள்ள வேண்டும். நேர்மறையான குணங்கள் வெளிப்படும் செயல்களை செய்ய வேண்டும். இதுவே உங்களுக்கான துணையை ஈர்க்க முதல்படி.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;காட்சிப்படுத்தல்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஈர்ப்பு விதியில் காட்சிப்படுத்தல் தான் முக்கியமான பகுதி. நீங்கள் எந்த மாதிரி உறவில் இருக்க விரும்புகிறீகளோ அதை கற்பனை செய்து பார்க்க வேண்டும். அன்பான, அரவணைப்பான உறவில் இருப்பது போல கற்பனை செய்யுங்கள். அப்படி கற்பனை செய்ய தினமும் தனி நேரம் ஒதுக்குங்கள். உங்களுடைய துணையின் குணங்கள், அவர்களுடன் எப்படி இருக்க வேண்டும் என்ற அனுபவங்களை கற்பனை செய்யுங்கள். அந்த சந்தோஷத்தை, மனநிறைவை உணருங்கள். இதை தினமும் செய்வதால் உங்கள் துணையை ஈர்க்கத் தொடங்குவீர்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;நன்றியுணர்வு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;நீங்கள் எதற்கு நன்றியுணர்வாக இருக்கிறீர்களோ அதை ஈர்ப்பீர்கள். சிறந்த நண்பர்கள், நல்ல குடும்பம் அல்லது சுய அன்பு என உங்களுக்கு கிடைத்த அன்பிற்கு நன்றி கூறுங்கள். இதன்மூலம் மறைமுகமாக பிரபஞ்சத்திற்கு இன்னும் அதிக அன்பை ஈர்க்கும் சிக்னலை அனுப்புகிறீர்கள். இதுவும் காதல் துணையை பெற்றுத் தரும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;உறுதிமொழிகள்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;தினமும் நேர்மறையான சில விஷயங்களை சொல்வதால் உங்கள் துணையை ஈர்ப்பீர்கள். &quot;நான் பேரன்பான உறவுக்கு தகுதியானர் நபர்&quot; அல்லது &quot;ஆரோக்கியமான, அன்பான துணையை நான் ஈர்க்கிறேன்&quot; ஆகிய உறுதிமொழிகளை சொல்லுங்கள். ஈர்ப்பு விதிக்கு மனநிலைதான் அடிப்படை. ஆனால் சரியான நடவடிக்கைகள் மூலம் தான் அடைய முடியும். வெறும் உறுதிமொழி உறவுகளை ஈர்க்காது. உங்கள் துணையை ஈர்க்கும் நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்த வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;உதாரணமாக நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்ய நினைப்பவர்கள் மேட்ரிமோனியில் பதிவு செய்யலாம். காதல் திருமணம் செய்ய நினைப்பவர்கள் பொதுநிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு சார் அம்சங்களில் கவனம் செலுத்தி மற்றவர்களுடன் பழகத் தொடங்கலாம். மேலே சொன்ன விஷயங்களை பின்பற்றினால் நீங்கள் கண்டிப்பாக உங்களை துணையை ஈர்ப்பீர்கள். நேர்மறையான எண்ணங்கள், கற்பனை, உறுதிமொழி மூன்றும் சேரும்போது கண்டிப்பாக ஈர்ப்புவிதி செயல்படும். ஏனென்றால் நீங்கள் ஆழமாக விரும்புவதை பிரபஞ்சம் நிறைவேற்றித் தரும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>health-relationship</category>
            <dc:creator>Kalai Selvi</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/health-relationship/how-to-use-the-law-of-attraction-to-find-life-partner-in-tamil-articleshow-k4kvxav"/>
        </item>
        <item>
            <title><![CDATA[மனைவிக்கு துரோகம் பண்ற ஆண்கள்!! எந்த துறைல வேலை பார்ப்பாங்க?  உண்மை தகவல்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/health-relationship/which-professions-do-cheating-husbands-belong-to-in-tamil-mks-lcx4cex</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/health-relationship/which-professions-do-cheating-husbands-belong-to-in-tamil-mks-lcx4cex</guid>
            <pubDate>Wed, 28 May 2025 15:37:40 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;மனைவிக்கு துரோகம் செய்யும் கணவர்கள் எந்த துறையில் வேலை செய்வார்கள் என்பதை உண்மை தகவல்களுடன் இந்தப் பதிவில் காணலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j93j9kg05v17dcjrg3y1m4tp,imgname-gettyimages-614745222--1-.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;மனைவிக்கு துரோகம் செய்யும் கணவர்கள் எந்த துறையில் வேலை செய்வார்கள் என்பதை உண்மை தகவல்களுடன் இந்தப் பதிவில் காணலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;Which Professions Do Cheating Husbands Belong To&lt;/strong&gt; : பெரும்பாலும் கணவன் மனைவி உறவுக்குள் ஒளிவு மறைவு இருக்கக் கூடாது. ஆனால் சிலர் உறவில் அப்படி இருக்காது. கணவர் மனைவியிடம் வேறொரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பார். பொய் பித்தலாட்டம் தான் அவரது இன்னொரு முகமாக இருக்கும். இந்தப் பதிவில் மனைவிக்கு துரோகம் செய்யும் கணவர்கள் எந்த துறையில் வேலை செய்வார்கள் என்பதை உண்மை தகவல்களுடன் காணலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சமூக வலைதளங்களில் பல சுவாரசிய தகவல்கள் கிடைக்கும். அந்த வகையில் மேட்லைன் ஸ்மித் என்பவர் பகிர்ந்து கொண்ட சில விஷயங்களை காணலாம். ஸ்மித் மனைவியை ஏமாற்றும் ஆண்களை கண்டுபிடிப்பதை தான் தன் தொழிலாக வைத்துள்ளார். இவரது தொழில் என்னவோ துப்பறிவாளர் போலதான். இவரது வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் பெண்கள். அதிலும் தன் கணவனை, காதலனை கண்காணிக்க சொல்லி இவரை பெண்கள் தொடர்பு கொள்கிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கடந்த மூன்று ஆண்டுகளில் கிட்டத்தட்ட ஐந்தாயிரம் சோதனைகளை ஸ்மித் செய்திருக்கிறார். அதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களின் இன்னொரு முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த ஆண்களைக் குறித்து ஸ்மித் குறிப்பிடும் போது, அவர்கள் தங்களுடைய விருப்பத்திற்காக மட்டுமே வாழ்வதாகவும் வாய்ப்புக்காக காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஸ்மித்தின் சேவையை பெற பெண்கள் நம் இந்திய கட்டணத்திற்கு ஒப்பிடும்போது கிட்டத்தட்ட 6 ஆயிரம் வரை கொடுக்கிறார்கள். மேட்லைன் ஸ்மித், சம்பந்தபட்ட பெண்களின் கணவர்களை சோசியல் மீடியாவில் தொடர்பு கொள்வார். வாய்ப்புக்காக காத்திருக்கும் ஆண்கள் எனில் அவர்கள் வசமாக சிக்கும் தருணத்தில் அதை ஸ்கிரீன் ஷாட்களாக்கி தன்னுடைய வாடிக்கையாளருக்கு ஸ்மித் பகிர்ந்துவிடுவார். இப்படிதான் சீட்டிங் கணவர்களை கையும் களவுமாக பிடிக்கிறார் ஸ்மித்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;எந்த துறை ஆண்கள் ஏமாற்றுகிறார்கள்?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;காவல் துறையில் வேலை செய்யும் ஆண்கள் பெரும்பாலும் மனைவியை ஏமாற்றுவதாக ஸ்மித் கூறுகிறார். அவர் இந்த வேலை செய்ய தொடங்கியதிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளின் மனைவிகள் அவரிடம் தங்கள் கணவரை கண்காணிக்க கூறியுள்ளனர். அதில் பலர் ஸ்மித்தின் வலையில் சிக்கியுள்ளனர். இவர்கள் தவிர தீயணைப்பு வீரர்கள், துணை மருத்துவர்கள், ராணுவ வீரர்கள் கூட இதில் விதிவிலக்கல்ல. உடற்பயிற்சி பயிற்சியாளர்கள் கூட கொஞ்சம் அப்படிதான் இருக்கின்றனர். இந்த பட்டியலில் வழக்கறிஞர்களும் உள்ளனர். மருத்துவர்கள் தான் கடைசியாக வரக் கூடியவர்கள்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>health-relationship</category>
            <dc:creator>Kalai Selvi</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/health-relationship/which-professions-do-cheating-husbands-belong-to-in-tamil-mks-lcx4cex"/>
        </item>
        <item>
            <title><![CDATA[YouTuber : இப்படியும் ஒரு உறவா? தாயையும், மகளையும் காதலில் விழவைத்த இளைஞர்; இருவரும் ஒரே நேரத்தில் கர்ப்பம்?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/health-relationship/youtuber-reveals-he-got-his-girlfriend-and-her-mom-pregnant-in-tamil-articleshow-ovb221d</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/health-relationship/youtuber-reveals-he-got-his-girlfriend-and-her-mom-pregnant-in-tamil-articleshow-ovb221d</guid>
            <pubDate>Fri, 19 Sep 2025 16:52:07 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;அமெரிக்காவில் தாய், மகள் இருவரும் ஒரே இளைஞரின் மீது காதல்வயப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k5gtted2tj0qmmbqdv333j6c,imgname-nick-yardy-with-dani-and-jade-screenshot--1--1758280366498.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;உறவுகளில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்ப்பது சற்று சவாலான விஷயம்தான். இப்போதெல்லாம் வித்தியாசமான உறவுச் சிக்கல்கள் ஏற்படுகின்றன. ஆண், பெண் உறவு மட்டுமின்றி பெண்- பெண், ஆண்- ஆண் ஆகியோரின் காதலும் சபைக்கு வரத் தொடங்கியுள்ளது. இதற்கு முன்னும் இப்படி காதல்கள் இருந்தாலும், அதை யாரும் வெளிப்படுத்தியதில்லை. இப்போது மக்கள் தங்கள் அடையாளங்களை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர். அது வரவேற்க வேண்டிய விஷயம்.&lt;/p&gt;&lt;p&gt;ஆனால் சில உறவுகள் ஒட்டுமொத்தமாகவே வேறுமாதிரி உள்ளன. தாய், மகள் இருவர் மீதும் காதல் வயப்பட்ட இளைஞரின் கதையும் அப்படிதான். அந்த இளைஞரின் கதையை பொறுத்தவரை, உண்மையில் நமக்குதான் அது உறவுச் சிக்கல். அவர்களுக்கு இயல்பான வாழ்க்கை. அமெரிக்காவை சேர்ந்த யூடியூபர் நிக் யார்டி. 29 வயதான இவர், சில மாதங்களுக்கு முன்பு தன் காதலி ஜேட், அவரது தாயார் டானி ஆகிய இருவரும் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். இந்த காலகட்டத்தில் தாயும் மகளும் ஒரே நேரத்தில் கர்ப்பமாக இருப்பது சாதாரணம் தான். ஆனால் இருவரின் கர்ப்பத்திற்கும் நிக் யார்டி என்ற ஒரே ஆள்தான் காரணம் என்பது தான் கவன ஈர்ப்புக்கு காரணம்.&lt;/p&gt;&lt;p&gt;டானி ஸ்விங்ஸுக்கு சுமார் 44 வயது. விவாகரத்தானவர். இவர் நிக் யார்டியுடன் உறவில் இருந்துள்ளார். இருவரும் ஒரே வீட்டில் வசித்துள்ளனர். அங்கு டானியின் மகள் ஜேட் வரவே, அவருக்கும் நிக் மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இருவரும் ஒரே நேரத்தில் கருத்தரித்தாகவும் இணையத்தில் பதிவிட நெட்டிசன்கள் கொதித்து எழுந்துவிட்டனர்.&lt;/p&gt;&lt;p&gt;இதற்கு பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், டானி கூலாக, 'என் மகளை இப்போதுதான் நான் நன்றாக புரிந்துகொள்கிறேன்' என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். இப்படி ஒரு உறவுமுறையை கற்பனை கூட செய்யமுடியாது என பலரும் சொல்லி வருகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;இந்த சம்பவத்தின் உண்மைத்தன்மையை ஆராயும்போது, சில உண்மைகள் தெரிய வந்தன. சில செய்தி ஊடகங்கள் நிக் யார்டியிடம் இது குறித்து கேட்டபோது, தாய் மற்றும் மகளுடன் தொடர்பில் இருப்பது உண்மை என்றும், ஆனால் அவர்கள் இப்போது கர்ப்பமாக இல்லை அவ்வளவுதான் எனவும் அவர் கூறியுள்ளார். நிக் யார்டியின் இந்த அறிவிப்பு வெறும் கவன ஈர்ப்பு என சமூக வலைதளங்களில் முன்பே கருத்து தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>health-relationship</category>
            <dc:creator>Kalai Selvi</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/health-relationship/youtuber-reveals-he-got-his-girlfriend-and-her-mom-pregnant-in-tamil-articleshow-ovb221d"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Breakup Mistakes: பிரேக்கப் வேதனை குறையணுமா? இதை மட்டும் செய்யாதீங்க!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/health-relationship/5-common-mistakes-to-avoid-after-a-breakup-for-healthy-healing-px8g60d</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/health-relationship/5-common-mistakes-to-avoid-after-a-breakup-for-healthy-healing-px8g60d</guid>
            <pubDate>Sat, 18 Apr 2026 14:15:45 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;பிரேக்கப்பிற்குப் பிறகு செய்யும் சில தவறுகள் உங்கள் வலியை இன்னும் அதிகமாக்கலாம். முன்னாள் காதலருடன் பேசுவது, சோஷியல் மீடியாவில் பின்தொடர்வது, உங்களையே குறை சொல்வது போன்றவை மன ஆரோக்கியத்தை பாதிக்கும். பிரேக்கப்பிற்கு இதனை தவிர்க்கவும்.!&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kpfw0etchxnm74xyswyxam34,imgname-gemini-generated-image-vrly6ivrly6ivrly--1--1776501668683.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;பிரேக்கப்பிற்குப் பிறகு செய்யும் சில தவறுகள் உங்கள் வலியை இன்னும் அதிகமாக்கலாம். முன்னாள் காதலருடன் பேசுவது, சோஷியல் மீடியாவில் பின்தொடர்வது, உங்களையே குறை சொல்வது போன்றவை மன ஆரோக்கியத்தை பாதிக்கும். பிரேக்கப்பிற்கு இதனை தவிர்க்கவும்.!&lt;/p&gt;&lt;img&gt;ஒரு உறவு முடிவுக்கு வருவது என்பது இரண்டு பேர் பிரிவது மட்டுமல்ல, அது ஒருவரின் உலகத்தையே சில காலத்திற்கு தலைகீழாக மாற்றிவிடும். தினசரி பழக்கமாக இருந்த விஷயங்கள் திடீரென அமைதியாகிவிடும். மனம் மீண்டும் மீண்டும் பின்னோக்கிச் செல்லும், இதயம் இன்னும் அதிக வலியைத் தரும் முடிவுகளை எடுக்க வைக்கும். இந்த நேரத்தில் செய்யும் சின்னச் சின்ன தவறுகள், உங்கள் காயங்கள் ஆறுவதை மெதுவாக்கிவிடும். நீங்கள் உண்மையிலேயே உங்களைச் சமாளித்து முன்னேற விரும்பினால், பிரேக்கப்பிற்குப் பிறகு இந்த ஐந்து விஷயங்களிலிருந்து விலகி இருப்பது மிகவும் அவசியம்.&lt;img&gt;&lt;p&gt;பிரேக்கப்பிற்குப் பிறகு மக்கள் செய்யும் பொதுவான தவறு இதுதான். தொடர்பில் இருப்பது போல காட்டிக்கொள்வார்கள். நள்ளிரவில் எமோஷனலாக கால் செய்வது, திடீரென மெசேஜ் அனுப்புவது, &quot;சும்மாதான் ஞாபகம் வந்தது&quot; என்று பேச்சைத் தொடங்குவது அந்த நேரத்தில் ஆறுதல் தரலாம். ஆனால், இது காயங்களை மீண்டும் கீறிவிடும். இதனால் ஒரு முடிவும் கிடைக்காது, மனரீதியான சுதந்திரமும் கிடைக்காது. உங்களை நீங்களே சமாளிக்கவும், சுயமரியாதையை மீட்டெடுக்கவும் இந்த இடைவெளி மிகவும் அவசியம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முன்னாள் காதலரின் புரொஃபைலை மீண்டும் மீண்டும் பார்ப்பது, அவரது ஸ்டோரி, லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸை கவனிப்பது மெதுவாக உங்கள் மன அமைதியைப் பறித்துவிடும். அவர் சந்தோஷமாக இருந்தால், உங்களுக்குள் தாழ்வு மனப்பான்மையும், ஒப்பீடும் தொடங்கும். ஆனால், சோஷியல் மீடியா எப்போதும் உண்மையைக் காட்டுவதில்லை. சில காலத்திற்கு அவரை மியூட் அல்லது அன்ஃபாலோ செய்வது நல்லது. அப்போதுதான் உங்கள் வாழ்க்கையிலும், காயங்களை ஆற்றுவதிலும் கவனம் செலுத்த முடியும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிரேக்கப்பிற்கு பிறகு தனியாக இருக்க விரும்புவது இயல்புதான். ஆனால், உங்களை முழுமையாக ஒரு அறைக்குள் பூட்டிக்கொள்வது பாதிப்பை ஏற்படுத்தும். நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சமூகப் பேச்சுகளிலிருந்து விலகி இருப்பது, அதிகமாக சிந்திப்பதையும், பதட்டத்தையும், தனிமையையும் இன்னும் அதிகரிக்கும். நம்பிக்கையானவர்களிடம் பேசுவது மனதை இலகுவாக்கும். உங்கள் உலகம் அந்த ஒரு உறவோடு முடிந்துவிடவில்லை என்பதை இது உங்களுக்கு நினைவூட்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வலியிலிருந்து தப்பிக்க, பலர் அவசரமாக ஒரு புதிய உறவைத் தேடிச் செல்கிறார்கள். இந்த உறவு பெரும்பாலும் தனிமையிலிருந்து பிறக்குமே தவிர, உண்மையான பிணைப்பிலிருந்து அல்ல. பழைய காயங்கள் ஆறாதபோது, அதன் தாக்கம் புதிய உறவிலும் தெரியும். உங்களைப் புரிந்துகொண்டு, உங்களைச் சமாளிக்க சிறிது நேரம் எடுத்துக்கொள்வது, எதிர்காலத்தில் ஆரோக்கியமான உறவுகளுக்கு அடித்தளமிடும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சுயபரிசோதனை செய்வது அவசியம், ஆனால் எல்லாவற்றுக்கும் உங்களை மட்டுமே குற்றவாளியாக நினைப்பது தவறு. பழைய சண்டைகளையும், தவறுகளையும் மீண்டும் மீண்டும் நினைத்து உங்களைத் நீங்களே தண்டிப்பது மனரீதியாக உங்களை உடைத்துவிடும். உறவுகள் ஒரே காரணத்தால் முடிவதில்லை, பல காரணங்களால் முடிகின்றன. இதிலிருந்து பாடம் கற்றுக்கொள்வது அவசியம், ஆனால் தேவையற்ற குற்ற உணர்வை விடுவது அதைவிட முக்கியம். பிரேக்கப் என்பது வாழ்க்கையின் முடிவல்ல, இது ஒரு மாற்றத்திற்கான காலகட்டம். இந்த பொதுவான தவறுகளைத் தவிர்ப்பதன் மூலம், உங்கள் காயங்களை விரைவாக ஆற்றலாம், மீண்டும் உங்களை வலிமையாக மாற்றிக்கொள்ளலாம். குணமடைய நேரம் எடுக்கும், ஆனால் சரியான முடிவுகளுடன் நீங்கள் முன்பை விட புத்திசாலியாக, சமநிலையுடன், தன்னம்பிக்கையுடன் முன்னேறலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>health-relationship</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/health-relationship/5-common-mistakes-to-avoid-after-a-breakup-for-healthy-healing-px8g60d"/>
        </item>
        <item>
            <title><![CDATA[துணைகிட்ட சொல்லக் கூடாத '3' வார்த்தைகள்!! உறவை மொத்தமா நாசம் பண்ணிடும்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/health-relationship/3-toxic-phrases-which-you-should-avoid-in-relationship-in-tamil-mks/articleshow-qr1eh3p</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/health-relationship/3-toxic-phrases-which-you-should-avoid-in-relationship-in-tamil-mks/articleshow-qr1eh3p</guid>
            <pubDate>Wed, 25 Jun 2025 15:50:23 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;வாழ்க்கை துணையிடம் சொல்லவே கூடாது மூன்று சொற்றொடர்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jrtgjv28e4ce8dnrgcvfwhhy,imgname-tips-1744646532168.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;&quot;தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு&quot; என்ற குறளில் சொல்வதை போலவே ஒருவர் வார்த்தைகளால் பேசும் போது ஏற்படும் காயம் மனதை அரித்து கொண்டே இருக்கும். ஒரு வார்த்தைக்கு உறவை சேர்க்கும் பலமும் உண்டு; உறவை ஒட்டுமொத்தமாக பிரிக்கும் ஆற்றலும் உண்டு. அதனால் நாம் பேசும் வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். அதிலும் கணவன், மனைவி உறவுக்குள் சில வார்த்தைகளை பேசவேகூடாது என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றார்கள். இந்தப் பதிவில் கணவன் மனைவி உறவு மேம்பட அதில் எந்த வார்த்தைகளை தவிர்க்க வேண்டும் என காணலாம்.&lt;/p&gt;&lt;p&gt;பொதுவாக உறவுகள் தொடக்க காலத்தில் இருப்பது போல சில காலத்திற்கு பின்னர் இருப்பதில்லை. முதல் சந்திப்பில் இருக்கும் தித்திப்பான வார்த்தைகள் சில வருடங்களுக்கு பின்னர் காணாமல் போய்விடுகின்றன. இது நடத்தையிலும் வெளிப்படுகிறது. கோபத்தில் என்னென்னவோ பேசிவிட்டு பின்னர் அதற்கு மன்னிப்பு கேட்டாலும், பேசிய வார்த்தைகளின் வலியும் அந்த தருணத்தில் ஏற்பட்ட வேதனையும் மாறுவதில்லை.&lt;/p&gt;&lt;p&gt;கோபத்தை வெளிப்படுத்துவது தவறு இல்லை. ஆனால் கோபத்தில் பேசும் வார்த்தைகளில் கவனம் இருக்க வேண்டும். உங்களுடைய துணையின் மனதில் வலியை ஏற்படுத்தும் விஷயங்கள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வதோடு நிறுத்தி விடாமல் அதை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துவது அவசியம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;எந்த வார்த்தைகளை சொல்லக் கூடாது?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&quot;உனக்கு அறிவே இல்ல&quot;&lt;/p&gt;&lt;p&gt;&quot;சின்ன விஷயத்துக்கு தேவையில்லாம சண்டை போடுற&quot;&lt;/p&gt;&lt;p&gt;&quot;இது ஒரு விஷயமே இல்ல&quot;&lt;/p&gt;&lt;p&gt;&quot;நீ சின்ன விஷயத்துக்கும் உணர்ச்சிவச படுற&quot;&lt;/p&gt;&lt;p&gt;சில நேரங்களில் நமக்கு பெரிய விஷயங்களாக தெரியாதவை நம்முடைய துணைக்கு பெரியவையாக இருக்கலாம். அவை அவர்களின் மனதை உண்மையில் காயப்படுத்தி இருக்கலாம். அந்த விஷயத்தை புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டுமே தவிர அதை ஒரு விஷயமே இல்லை என்று கூறக்கூடாது. அது மட்டுமின்றி ஒவ்வொரு பிரச்சனைக்கு பிறகும் யார் மன்னிப்பு கேட்கிறார்கள்? யார் அந்த உறவை காப்பாற்ற முயற்சி செய்கிறார்கள்? போன்ற விஷயங்களை கணக்கிட்டு சொல்லக் கூடாது. &quot;நான் செய்தேன், நீ செய்யவில்லை&quot; என்று குற்றப்படுத்தக்கூடாது இது உறவில் பிரச்சனைகளை அதிகமாக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;இப்படி பேசுவதால் உங்களுடைய துணை நீங்கள் அவரை நிராகரிப்பதாக நினைக்கக்கூடும் அவர்களுக்கு எந்த எதுவும் நீங்கள் கொடுக்காமல் இருப்பதாக உணர வைக்கும் நீங்கள் பிரச்சனையை சரி செய்ய நினைத்தாலும் உங்களுடைய இந்த வார்த்தைகள் பிரச்சனையை வளர்க்கவே செய்யும்.&lt;/p&gt;&lt;p&gt;எவ்வளவு பிரச்சனை வந்தாலும் உங்களுடைய வாழ்க்கை துணையிடம் இந்த மூன்று விஷயங்களையும் ஒருபோதும் சொல்ல வேண்டாம். இது அவர்களை வேதனை அடையச் செய்யும். உங்களுடன் நெருக்கமாக இருப்பதை தவிர்க்க வழிவகை செய்யக்கூடியது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>health-relationship</category>
            <dc:creator>Kalai Selvi</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/health-relationship/3-toxic-phrases-which-you-should-avoid-in-relationship-in-tamil-mks/articleshow-qr1eh3p"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Relationship Tips : திருமணமான பெண்கள் கள்ளக்காதல் செய்ய இதுதான் காரணமா? கணவர்களே இனியாவது உஷாரா இருங்க!!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/health-relationship/relationship-tips-why-do-some-married-women-have-extramarital-affairs-in-tamil-trfa1p4</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/health-relationship/relationship-tips-why-do-some-married-women-have-extramarital-affairs-in-tamil-trfa1p4</guid>
            <pubDate>Sat, 04 Oct 2025 15:57:15 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;திருமணமான பெண்கள் தங்கள் கணவரை விட்டு இன்னொரு ஆண் மீது காதல் கொள்ள என்ன காரணம் என்பதை இங்கு காணலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01gr3fq61y85yszty4fjceczt2,imgname-Three-reason-why-women-cheat-in-your-relationship-1675154397245.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;திருமணமான பெண்கள் தங்கள் கணவரை விட்டு இன்னொரு ஆண் மீது காதல் கொள்ள என்ன காரணம் என்பதை இங்கு காணலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்றைய காலத்தில் திருமணத்தை மீறிய உறவுகள் அதிகரித்து வருகின்றன. திருமணமான ஆண்களும், பெண்களும் தங்களுடைய துணைக்கு உண்மையாக இல்லாமல் துரோகம் செய்யும் சம்பவங்கள் அனுதினமும் நடந்து வருகின்றன. சிலர் கொலை கூட செய்யத் துணிகிறார்கள். இந்தப் பதிவில் மணமான பெண்கள் ஏன் இன்னொரு நபருடன் உறவை ஏற்படுத்திக் கொள்கிறார்கள் என்பது குறித்து காணலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;திருமண வாழ்க்கையில் குழந்தைகள், வீடு, வசதி இதையெல்லாம் தாண்டி அந்தரங்க வாழ்க்கையும் நன்றாக இருக்க வேண்டும். கணவன் மனைவி இடையே நெருக்கம் இருப்பது முக்கியம். மனைவி தன் கணவனுடன் அந்தரங்க உறவில் ஆர்வம் காட்டவில்லை என்றால் அவருக்கு சலிப்பு ஏற்பட்டது என அர்த்தம். இது அவர்களுடைய ஒட்டுமொத்த குடும்ப வாழ்க்கையையும் தலைகீழாக்கிவிடும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த சமயம் கணவன் மனைவி சலிப்பை சரிசெய்ய தவறினால் சில பெண்கள் திருமணத்தை மீறிய உறவை நாடிச் செல்கிறார்கள். தன் மனைவி தாம்பத்ய வாழ்க்கையில் திருப்தியாக இருக்கிறாரா என்பதை கணவன் தெரிந்துகொள்ள வேண்டும். அன்பும், பாசமும் இருந்தால் போதாது. வெளிப்படுத்தவேண்டும். அதை செய்யத் தவறினால் இதுபோன்ற பிரச்சனைகள் தலைதூக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிலர் வசதிக்காகவும் சமூகத்திற்காகவும் தான் திருமணம் செய்கின்றனர். இந்த உறவில் காதலோ, அன்போ, ஈர்ப்போ இருக்காது. இந்த மாதிரி தம்பதிகளுக்குள் இருக்கும் இடைவெளி அவர்களை இன்னொரு உறவை நோக்கி அழைத்துச் செல்லும். சிலர் அந்த உறவில் இருந்து வெளியேறத் துடிப்பார்கள். சில பெண்கள் தான் விரும்பிய காதலை வேறொரு ஆணிடம் கண்டால் அங்கு மனதை செலுத்திவிடுகிறாள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குடும்ப வன்முறையும் இதற்கு காரணம். திருமணமான பெண்கள் கணவர் வீட்டில் அதிக கொடுமைகளை சந்தித்தாலும், கணவன் சரியாக புரிந்து நடந்துகொள்ளவில்லை என்றாலும் அந்த உறவில் இடைவெளி ஏற்பட்டு திருமணத்தை மீறிய உறவுக்கு இட்டுச் செல்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முன்னாள் காதல் இருக்கும் பெண்கள் திருமணத்திற்கு பின் கணவருடன் வாழ்க்கை சரியாக அமையாவிட்டால் விரைவில் மற்றொரு நபருடன் காதல் வயப்படுகிறார்கள். இது ஆரம்பத்தில் குற்ற உணர்ச்சியை அளித்தாலும் யாரும் பெரிதாக கண்டுகொள்வதில்லை. கணவருக்கு ஏற்கனவே திருமணத்தை மீறிய உறவு இருப்பது தெரிந்தால் அந்த பெண்கள் வெறுப்பில் இன்னொரு ஆணுடன் பழகுகிறார்கள். இது ஒரு பழிவாங்கும்போக்கு ஆகும்.&lt;/p&gt;&lt;p&gt;என்ன காரணம் சொன்னாலும் திருமணத்தை மீறிய உறவுகள் சரியானவை அல்ல. இது பிரச்சனைகளை அதிகம் தரக்கூடியது. தவிர்ப்பது நல்லது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>health-relationship</category>
            <dc:creator>Kalai Selvi</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/health-relationship/relationship-tips-why-do-some-married-women-have-extramarital-affairs-in-tamil-trfa1p4"/>
        </item>
        <item>
            <title><![CDATA[மீண்டும் வருகிறது கொரோனா பூதம்! அமெரிக்காவை அதிரவைக்கும் புது மாறுபாடு BA.3.2... தடுப்பூசியையும் ஏமாற்றுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/health/new-covid-variant-ba-32-spreads-globally-can-it-evade-vaccines-x6muegi</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/health/new-covid-variant-ba-32-spreads-globally-can-it-evade-vaccines-x6muegi</guid>
            <pubDate>Thu, 26 Mar 2026 15:27:52 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ஒரு மிகப்பெரிய கோவிட் அலையை இந்தியா இனி எதிர்கொள்ள வாய்ப்பில்லை என்றாலும், சர்வதேச பயணங்கள் அதிகரித்து வரும் சூழலில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kmms39ed5xrmz169y0hgqpg1,imgname-corona-virus-1774518904269.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஒரு மிகப்பெரிய கோவிட் அலையை இந்தியா இனி எதிர்கொள்ள வாய்ப்பில்லை என்றாலும், சர்வதேச பயணங்கள் அதிகரித்து வரும் சூழலில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கடந்த சில ஆண்டுகளாக அமைதியாக இருந்த கொரோனா வைரஸ், தற்போது SARS-CoV-2 BA.3.2 என்ற புதிய உருமாறிய வடிவில் மீண்டும் உலக நாடுகளை எட்டிப்பார்க்கத் தொடங்கியுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளதால், சர்வதேச சுகாதார நிறுவனங்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;இந்த BA.3.2 மாறுபாடு முதன்முதலில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இடையில் இதன் தாக்கம் குறைந்திருந்தாலும், தற்போது 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின்படி, சர்வதேச பயணிகளுக்கான மரபணு கண்காணிப்புத் திட்டம் மூலம் இந்த வைரஸின் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. மார்ச் 2026 நிலவரப்படி, அமெரிக்காவின் 29 மாகாணங்களில் இந்த பாதிப்பு பதிவாகியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த புதிய மாறுபாட்டின் மிக முக்கியமான கவலை அதன் ஸ்பைக் புரதத்தில் ஏற்பட்டுள்ள சுமார் 75 பிறழ்வுகள் ஆகும். வைரஸ் தொடர்ந்து தன்னைத்தானே உருமாற்றிக் கொள்வதால், ஏற்கனவே நாம் போட்டுக்கொண்ட தடுப்பூசிகளின் செயல்திறன் இதில் குறையக்கூடும் என்ற அச்சம் மருத்துவ நிபுணர்களிடையே எழுந்துள்ளது. இந்த பிறழ்வுகள் காரணமாக, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைத் தாண்டிச் செல்லும் திறன் இந்த வைரஸுக்கு இருப்பதாகக் கருதப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;அமெரிக்காவிற்கு முன்பாகவே ஐரோப்பிய நாடுகளில் இதன் தாக்கம் உணரப்பட்டது. கடந்த ஆண்டில் ஐரோப்பாவில் பதிவான மொத்த கோவிட் பாதிப்புகளில் சுமார் 35% இந்த BA.3.2 வகையைச் சேர்ந்தவை எனத் தரவுகள் கூறுகின்றன. குறிப்பாக டென்மார்க், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் பாதிப்புகள் வேகமாக அதிகரித்தன. இருப்பினும், பாதிக்கப்பட்டவர்களுக்கு லேசான அறிகுறிகளே தென்பட்டது ஒரு நிம்மதியான விஷயமாகப் பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவைப் பொறுத்தவரை, தற்போது இந்த புதிய மாறுபாட்டினால் பெரிய அச்சுறுத்தல் இல்லை என்றே தொற்றுநோயியல் நிபுவணர்கள் கருதுகின்றனர். இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், ' 'இந்தியாவில் இதுவரை அதிகாரப்பூர்வமாக BA.3.2 பாதிப்புகள் பெரிய அளவில் பதிவாகவில்லை. இந்திய மக்கள் தொகையில் பெரும்பாலானோர் ஏற்கனவே தடுப்பூசி பெற்றுள்ளனர். பலருக்கு இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. தற்போதைய அறிகுறிகள் சாதாரண சளி மற்றும் காய்ச்சலைப் போலவே இருப்பதால், மக்கள் பீதியடையத் தேவையில்லை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முன்பு இருந்தது போன்ற ஒரு மிகப்பெரிய கோவிட் அலையை இந்தியா இனி எதிர்கொள்ள வாய்ப்பில்லை என்றாலும், சர்வதேச பயணங்கள் அதிகரித்து வரும் சூழலில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். முதியவர்கள், இணை நோய் உள்ளவர்கள் பொது இடங்களுக்குச் செல்லும்போது தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது. வைரஸ் உருமாறினாலும், அடிப்படை சுகாதார முறைகளே அதற்கான சிறந்த தீர்வு.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>health-relationship</category>
            <dc:creator>Thiraviya raj</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/health/new-covid-variant-ba-32-spreads-globally-can-it-evade-vaccines-x6muegi"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Relationship Tips : பெண்களே! இந்த '5' விஷயங்களை நோட் பண்ணுங்க! இதை உங்க கணவர் பண்ணா உங்கள ஏமாத்துறார்னு அர்த்தம்!!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/health-relationship/relationship-tips-signs-your-husband-may-be-cheating-in-tamil-xc1b2qg</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/health-relationship/relationship-tips-signs-your-husband-may-be-cheating-in-tamil-xc1b2qg</guid>
            <pubDate>Tue, 16 Sep 2025 16:27:31 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Cheating Husband Signs : உங்களுடைய வாழ்க்கைத் துணை உங்களை ஏமாற்றுகிறாரா? அல்லது உண்மையா இருக்கிறாரா? என கண்டறியும் வகையில் 5 விஷயங்களை இங்கே பார்ப்போம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01h68vecj41qbha1p92j402m7r,imgname-cheating--1-.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Cheating Husband Signs : உங்களுடைய வாழ்க்கைத் துணை உங்களை ஏமாற்றுகிறாரா? அல்லது உண்மையா இருக்கிறாரா? என கண்டறியும் வகையில் 5 விஷயங்களை இங்கே பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நட்பு, காதல், திருமணம் என எந்த உறவை எடுத்துக் கொண்டாலும், அதற்கு நம்பிக்கைதான் அடிப்படை. ஒரு உறவில் நம்பிக்கை இல்லையென்றால் அந்த உறவுக்கு எந்த அர்த்தமும் இல்லை. ஒன்றாக இணைந்திருக்கும் இரு நபர்களுக்கு இடையே நம்பிக்கையில்லை என்றால் அந்த உறவு வெகுகாலம் வராது. சீக்கிரம் முறிந்துவிடும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்றைய காலத்தில் திருமணத்தை மீறிய உறவுகள் சாதாரணமாகி வருகின்றன. எல்லா உறவிலும் ஏமாற்றுவது, நம்பிக்கை துரோகம் செய்வது இயல்பாகி வருகிறது. இதனால் இருவரில் ஒருவர் கண்டிப்பாக பாதிக்கப்படுகிறார். இந்தப் பதிவில் உங்களுடைய துணை உங்களை ஏமாற்றினால் எந்த 5 விஷயங்களை செய்வார், அவர் நடத்தை எவ்வாறு மாறும் என்பதை குறித்து காணலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உங்களுடைய துணை உங்களை ஏமாற்றுகிறார் என்றால் பல விஷயங்களை ரகசியமாக வைத்திருக்க முயற்சி செய்வார்கள். உங்களிடம் வெளிப்படையாக இருக்கமாட்டார்கள். செல்போன் பயன்படுத்தும்போது கூட வெளிப்படையாக இருக்கமாட்டார்கள். ஆரம்ப காலத்தில் வெளிப்படையாக இருந்தாலும், ஏமாற்றத் தொடங்கிய பின் மாறிவிடுவார்கள். அடிக்கடி செல்போனை சைலன்ட் மோடுக்கு மாற்றி விடுவார்கள். பாஸ்வேர்ட்டை மாற்றுவது, இரவில் செல்போனில் அதிக கவனம் செலுத்துவது என உங்களுக்கு கவனம் கொடுக்கமாட்டார்கள்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;இப்படி உங்களுக்கு தெரியாமல் செல்போன் பயன்படுத்த தொடங்கினாலே அவர்கள் உங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம். பொதுவாக ஒவ்வொருவரும் தனியுரிமையை விரும்புவது இயல்பானது தான். ஆனால் உங்களுடைய துணை திடீரென இது மாதிரி நடந்து கொண்டால் அது சாதாரணமான விஷயம் கிடையாது. துணையின் நடத்தையில் ஏற்படும் திடீர் மாற்றம் அவர்கள் உங்களிடமிருந்து ஏதேனும் விஷயத்தை மறைப்பதன் அறிகுறியாக இருக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உங்களுடைய துணை அடிக்கடி வீட்டிற்கு தாமதமாக வருவது சரியானது அல்ல. வேலை, நண்பர்கள் என ஏதேனும் காரணம் சொல்லி அடிக்கடி தாமதமாக வீட்டுக்கு வந்தால் அவர் உங்களிடம் எதையோ மறைக்கிறார். உங்களுடைய செல்போன் அழைப்புகளுக்கு சரியாக பதில் சொல்லாமல், பயணத் திட்டங்களைக் குறித்து முடிவு செய்த பின் 'வேண்டாம்' மாற்றி பேசுவது போன்றவை அவர்கள் எதையோ மறைக்கிறார்கள் என்பதன் அறிகுறி. அதிக நேரம் வேலை, ஆபிஸ் மீட்டிங் போன்றவை பல நேரங்களில் உண்மையாக இருக்காது. அடிக்கடி உங்கள் வாழ்க்கையில் இப்படி நடந்தால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பொதுவாகவே மனிதர்கள் ஏதேனும் தவறு செய்யும் போது அதை மறைக்க வேண்டுமென்று போலியான அன்பை செலுத்தத் தொடங்குவார்கள். எந்நாளும் இல்லாத திருநாளாக திடீரென பாச மழை பொழிவது, பாராட்டுக்கள், பரிசுகள் போன்றவற்றை வாரி வழங்குவது, அன்பான வார்த்தைகளால் உங்களை கிரங்கடிப்பது என உங்கள் துணை அன்பினால் உங்களை திக்குமுக்காடச் செய்தால் உஷாராக இருங்கள். இவை பாசத்தில் அல்ல; குற்ற உணர்ச்சியால் ஏற்படும் தற்காலிக அன்பாக கூட இருக்கலாம். உடனே நம்ப வேண்டாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உங்களுடைய துணை உங்களுடன் தனிப்பட்ட நேரத்தை செலவிடுவதை தவிர்த்தால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்களுடைய கண்களை பார்த்து பேசாமல் தவிர்ப்பது, தொட்டு பேசாமல் இருப்பது, காதல் தருணங்களை குறைப்பது போன்றவை அவர் உங்களை ஏமாற்றுவதன் அறிகுறியாகும். இது உங்களுக்குள் இடைவெளியை ஏற்படுத்தும் கவனமாக இருங்கள்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>health-relationship</category>
            <dc:creator>Kalai Selvi</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/health-relationship/relationship-tips-signs-your-husband-may-be-cheating-in-tamil-xc1b2qg"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Relationship Advice : அழுத பேரக்குழந்தை.. பதறியடித்து தாய்ப்பாலூட்டிய மாமியார்;  மருமகள் செய்ய நினைத்தக் காரியம்!!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/health-relationship/daughter-in-law-saw-mother-in-law-breastfeeding-her-newborn-in-tamil-articleshow-y3o0o7f</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/health-relationship/daughter-in-law-saw-mother-in-law-breastfeeding-her-newborn-in-tamil-articleshow-y3o0o7f</guid>
            <pubDate>Wed, 24 Sep 2025 15:51:06 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;அழுது கொண்டிருந்த பேரக்குழந்தையைத் தேற்ற மாமியார் தாய்ப்பாலூட்டியதைக் கண்டு மருமகள் ஆத்திரம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jkqxbztz8txpga8x2sm1t9kb,imgname-Baby-Feeding-Problems-1739190566751.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;பொதுவாக குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவதில் எல்லா தாய்க்கும் தனி பிணைப்பு உண்டு. இது தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் உள்ள உறவை உணர்வுரீதியாகப் பிணைக்கும். இந்த உறவில் யாரேனும் பங்குபோடுவதை எந்த தாயும் விரும்பமாட்டார். ஆனால் இங்கு ஒரு பெண்ணுக்கு அப்படியொரு நிகழ்வு நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தால் குழப்பத்தில் நிபுணரை தொடர்பு கொண்ட ஒரு பெண்ணின் பகிர்வை இங்கு காணலாம்.&lt;/p&gt;&lt;p&gt;மருமகள் குளிக்கப் போனபோது பிறந்து சில வாரங்களான பச்சிளங்குழந்தைக்கு மாமியார் தாய்ப்பாலூட்டியுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்த மருமகள் சத்தமிட, அழும் குழந்தையை சமாதானம் செய்யவே பாலூட்டியதாக மாமியார் கூறியுள்ளார். இந்தக் காரணம் ஏற்றுக் கொள்ளும்படியாக இருந்தாலும், ஒரு தாயாக அந்தப் பெண்ணால் அதை சற்றும் அனுமதிக்கமுடியவில்லை. அன்றிரவே கணவரிடம் ஆதங்கமாக இதை முறையிட, அவரோ இதை கண்டுகொள்ளாமல் விடச் சொல்லியிருக்கிறார்.&lt;/p&gt;&lt;p&gt;மாமியார் தன் பேரக்குழந்தைக்கு பாலூட்டியதும் பாசம்தான், தாய் தன் குழந்தைக்கு தன்னை தவிர எந்தப் பெண்ணும் பாலூட்டக் கூடாது என நினைப்பதும் பாசம்தான். ஆனால் மருமகளால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தன் மாமியாரிடம் இதை எப்படிச் சொல்ல என குழம்பிய பெண்ணுக்கு, நிபுணர் சொன்ன விளக்கம்.. சற்று தெளிவை வழங்கியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;இந்த மாதிரி சம்பவங்களுக்கு எளிதான விளக்கம் ஒன்றும் இல்லை. இது மருமகளுக்கும் மாமியாருக்கும் இருக்கும் இணக்கமான உறவை பொறுத்தது. சில தம்பதிகள் விஷயத்தில் கணவர் மாமியார், மருமகள் விஷயங்களில் தலையிடமாட்டார்கள். சிலருக்கு மாமியாரிமே இது போன்ற விஷயங்களை வெளிப்படையாகப் பேச வாய்ப்பிருக்கும். சிலருக்கு அது கடினம். உங்களுடைய மாமியாரிடம் உங்களது மன வருத்தத்தைப் பகிர்வதை குறித்து சிந்தியுங்கள்.&lt;/p&gt;&lt;p&gt;ஆனால் இதுபற்றி பேசும்போது மாமியாரிடம் மரியாதையுடன் பேசுவது அவசியம். அவருக்கு கெட்ட நோக்கங்கள் எதுவும் இல்லை என தெரியவந்தால் மட்டுமே உங்கள் எண்ணங்களை வெளிப்படையாகப் பகிருங்கள். அதைக் குற்றச்சாட்டாக சொல்லவேண்டாம். நேர்மறையாக பேச முயற்சி செய்யுங்கள். சில எளிய உதாரணங்கள் மூலம் விளக்கலாம். மாமியாரின் செயலுக்கும், உங்கள் எண்ணங்களுக்கும் கலாச்சார அல்லது தலைமுறை காரணங்கள் இருக்கலாம். இருவருக்கும் உகந்த ஒருமுடிவுக்கு வருவது நல்லது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>health-relationship</category>
            <dc:creator>Kalai Selvi</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/health-relationship/daughter-in-law-saw-mother-in-law-breastfeeding-her-newborn-in-tamil-articleshow-y3o0o7f"/>
        </item>
    </channel>
</rss>
