<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes"?>
<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Fri, 17 Apr 2026 20:20:10 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss/entertainment" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[ரஜினி முதல் விஜய் வரை.. 2026-ல் நம்ம ஊரு ஸ்டார்களின் டாப் 5 'காஸ்ட்லி' கார்கள்.. முழு லிஸ்ட் இதோ!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/auto/top-5-costliest-cars-of-tamil-cinema-stars-in-2026-rajini-to-vijay-0qud11w</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/auto/top-5-costliest-cars-of-tamil-cinema-stars-in-2026-rajini-to-vijay-0qud11w</guid>
            <pubDate>Tue, 14 Apr 2026 20:10:54 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Tamil Actor Luxury Cars 2026: ரஜினி முதல் விஜய் வரை காஸ்ட்லி கார்களை வைத்திருக்கும் பிரபலங்கள் யார்? அந்த கார்களின் ஸ்பெஷல் என்ன? என்பது குறித்து பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kp66pzdctd6hyb16k03sg97d,imgname-cinema-top-5-cars-1776177348012.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Tamil Actor Luxury Cars 2026: ரஜினி முதல் விஜய் வரை காஸ்ட்லி கார்களை வைத்திருக்கும் பிரபலங்கள் யார்? அந்த கார்களின் ஸ்பெஷல் என்ன? என்பது குறித்து பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழகத்தில் சென்னை, கோவை போன்ற பெரு மாநகரங்களில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார்களை பார்ப்பது இப்போது சாதாரணமான ஒன்றாகிவிட்டது. திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள் தங்களின் அந்தஸ்திற்கு ஏற்ப உலகின் மிகச்சிறந்த கார்களை இறக்குமதி செய்து பயன்படுத்துகின்றனர். 2026-ஆம் ஆண்டின் நிலவரப்படி, சினிமா பிரபலங்கள் வைத்திருக்கும் டாப் 5 கார்களை விரிவாக பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நடிகர் தனுஷ் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் என்ற விலை உயர்ந்த காரை வைத்துள்ளார். சொகுசு கார்களின் சக்கரவர்த்தி என்று அழைக்கப்படும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதல் SUV ரகம் இது. நடிகர் தனுஷ் தனது பிரத்யேகத் தேவைகளுக்கேற்ப இதனை வடிவமைத்துள்ளார். இதில் 6.75 லிட்டர் V12 ட்வின்-டர்போ எஞ்சின் உள்ளது. இதன் உட்புறம் ஒரு நடமாடும் அரண்மனை போலவே இருக்கும். தார் சாலைகள் மட்டுமின்றி, கரடுமுரடான பாதைகளிலும் மிக மென்மையாகச் செல்லும் திறன் கொண்டது. இதன் விலை ரூ.10.5 கோடி முதல் ரூ.12.5 கோடி வரை இருக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நடிகரும், தவெக தலைவருமான விஜய் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரின் பிரியராக இருந்து வருகிறார். இவரிடம் உள்ள 'கோஸ்ட்' மாடல் அதன் அமைதியான பயணத்திற்குப் பெயர் பெற்றது. ஒரு வாகனம் சாலையில் ஓடும்போது சத்தமே கேட்காத அளவிற்கு இதன் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் கதவுகள் பட்டனை அழுத்தினால் தானாகவே மூடிக்கொள்ளும் வசதி கொண்டது. இந்த மாடலின் விலை ரூ.8.5 கோடி முதல் ரூ.9.5 கோடி வரை ஆகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் STRஎனப்படும் சிலம்பரசன் ₹4.2 - ₹4.6 கோடி மதிப்புடைய லம்போர்கினி உருஸ் மாடல் காரை வைத்துள்ளனர். சூப்பர் கார்களின் வேகமும், SUV கார்களின் கம்பீரமும் இணைந்ததுதான் இந்த லம்போர்கினி உருஸ். இந்த கார் வெறும் 3.6 வினாடிகளில் 100 கி.மீ வேகத்தை எட்டும் திறன் கொண்டது. இளைஞர்களின் கனவு காரான இது, தமிழ்நாட்டின் ஸ்போர்ட்ஸ் கார் சந்தையில் முதலிடத்தில் உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் மெர்சிடிஸ் மேபேக் S-கிளாஸ் மாடல் காரை வைத்துள்ளனர். இந்த காரின் விலை ரூ.3.5 கோடி முதல் ரூ.4 கோடி வரை இருக்கும். சொகுசு மற்றும் பாதுகாப்பிற்கு மெர்சிடிஸ் மேபேக் ஒரு சிறந்த உதாரணம். இதன் பின் இருக்கைகள் விமானத்தின் 'பிசினஸ் கிளாஸ்' இருக்கைகள் போல சாய்ந்து படுக்கும் வசதி கொண்டவை. மசாஜ் செய்யும் வசதி, குளிர்சாதனப் பெட்டி என ஒரு வீட்டிற்குத் தேவையான அனைத்து வசதிகளும் இந்த காரில் உள்ளது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகை நயன்தாரா ₹2.15 - ₹2.75 கோடி மதிப்புடைய பிஎம்டபிள்யூ i7 கார் மாடலை வைத்துள்ளார். இது முழுமையான மின்சார சொகுசு கார் ஆகும். இதில் உள்ள 31.3 அங்குல 'தியேட்டர் ஸ்கிரீன்' பயணத்தின்போது சினிமா பார்க்கும் அனுபவத்தைத் தரும். பெட்ரோல் செலவு இல்லாமல், அதிநவீன தொழில்நுட்பத்துடன் வலம் வரும் இந்த மாடல் எதிர்காலத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>entertainment</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/auto/top-5-costliest-cars-of-tamil-cinema-stars-in-2026-rajini-to-vijay-0qud11w"/>
        </item>
        <item>
            <title><![CDATA[இந்தியாவின் பணக்கார பாடகி.. ஆஷா போஸ்லே சொத்து மதிப்பு என்ன தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/webstories/entertainment/legendary-singer-asha-bhosle-passes-away-at-92-net-worth-1mgpm91</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/webstories/entertainment/legendary-singer-asha-bhosle-passes-away-at-92-net-worth-1mgpm91</guid>
            <pubDate>Sun, 12 Apr 2026 16:17:51 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;இந்தியாவின் இசைக்குயில் எனப் போற்றப்படும் ஆஷா போஸ்லே, தனது 92 வயதில் காலமானார். அவரின் வாழ்க்கை மற்றும் சொத்து மதிப்பு குறித்து பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kp0131ahd1wvktt9e5gkzdkz,imgname-untitled-design---2026-04-12t102916.965-1775970125137.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <category>entertainment</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/webstories/entertainment/legendary-singer-asha-bhosle-passes-away-at-92-net-worth-1mgpm91"/>
        </item>
        <item>
            <title><![CDATA[விவாகரத்து முடிவுக்கு பின்னால் இருக்கும் 'ரயில்' ரகசியம்.. மனம் திறந்த ஹன்சிகா!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/entertainment/hansika-motwani-opens-up-about-divorce-from-sohael-khaturiya-5tmogg4</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/entertainment/hansika-motwani-opens-up-about-divorce-from-sohael-khaturiya-5tmogg4</guid>
            <pubDate>Fri, 17 Apr 2026 20:20:08 +0530</pubDate>
            <description><![CDATA[நடிகை ஹன்சிகா மோத்வானி, கணவர் சோஹைல் கத்தூரியாவுடனான தனது விவாகரத்து குறித்து முதல்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். இந்த கடினமான நேரத்தில் தனது குடும்பம் கொடுத்த ஆதரவை நினைவுகூர்ந்த அவர், இப்போது மனதளவில் நல்ல நிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kkka65gvnsdkbf93vx4hf7mt,imgname-hansika-motwani-divorce-news-1773395973659.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[நடிகை ஹன்சிகா மோத்வானி, கணவர் சோஹைல் கத்தூரியாவுடனான தனது விவாகரத்து குறித்து முதல்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். இந்த கடினமான நேரத்தில் தனது குடும்பம் கொடுத்த ஆதரவை நினைவுகூர்ந்த அவர், இப்போது மனதளவில் நல்ல நிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.&lt;img&gt;நடிகை ஹன்சிகா மோத்வானி, கணவர் சோஹைல் கத்தூரியாவிடமிருந்து சட்டப்படி பிரிந்து ஒரு மாதத்திற்குப் பிறகு, இதுகுறித்து முதல்முறையாகப் பேசியுள்ளார். இந்த ஜோடியின் பிரிவு பல விவாதங்களை ஏற்படுத்தினாலும், வதந்திகளைப் பற்றி தான் கவலைப்படவில்லை என்று அவர் தெளிவாகக் கூறியுள்ளார்.&lt;img&gt;மும்பை பாந்த்ரா குடும்பநல நீதிமன்றத்தில் மார்ச் 11 அன்று ஹன்சிகாவும் சோஹைலும் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெற்றனர். சமீபத்தில் 'Hauterrfly'க்கு அளித்த பேட்டியில், &quot;அவங்களுக்கு கிளிக்பைட் வேணும், கிடைச்சது. ஹெட்லைன்ஸ் வேணும், கிடைச்சது. நான் எப்பவும் விளக்கம் கொடுத்ததில்லை, கொடுக்கவும் மாட்டேன்&quot; என்று ஹன்சிகா கூறியுள்ளார்.&lt;img&gt;&quot;ஏன்னா அது எனக்கு முக்கியமில்லை. எனக்கு எந்த வருத்தமும் இல்லை. கஷ்டப்படுறதை விட, தப்பான டிரெய்ன்ல இருந்து இறங்குறதுதான் நல்லது&quot; என்று அவர் விளக்கியுள்ளார். பிரிவுக்குப் பிறகு, இப்போது மனதளவில் நல்ல நிலையில் இருப்பதாகவும், மற்றவர்களின் கருத்தை விட தனது நலனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும் ஹன்சிகா கூறியுள்ளார்.&lt;img&gt;விவாகரத்துக்கான காரணங்கள் ரகசியமாகவே இருக்கும் என்று ஹன்சிகா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். இதுபோன்ற விஷயங்கள் சம்பந்தப்பட்டவர்களுக்குள் மட்டுமே இருக்க வேண்டும் என்பது அவரது கருத்து. இந்த நேரத்தில் தனக்கு உறுதுணையாக இருந்த தனது தாய் மற்றும் சகோதரருக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.&lt;img&gt;டிசம்பர் 2022-ல் ஜெய்ப்பூரில் உள்ள முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனையில் ஹன்சிகா மற்றும் சோஹைல் திருமணம் பிரம்மாண்டமாக நடந்தது. இவர்களது திருமணத்தை 'ஹன்சிகாஸ் லவ் ஷாதி டிராமா' என்ற பெயரில் 2023-ல் ஜியோ ஹாட்ஸ்டார் ஒரு வெப் சீரிஸாக வெளியிட்டது. விவாகரத்துக்குப் பிறகு, ஹன்சிகா தனது குடும்பத்துடன் ஜப்பான் நாட்டிற்கு சுற்றுலா சென்றிருந்தார்.&lt;img&gt;&lt;p&gt;ஹன்சிகா சமீபத்தில் 2024-ல் வெளியான 'கார்டியன்' படத்தில் நடித்திருந்தார். சபரி மற்றும் குரு சரவணன் இயக்கிய இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. மேலும், தெலுங்கு நடன நிகழ்ச்சியானடி செலப்ரிடி ஸ்பெஷல் 2ல் நடுவராகவும், வரவிருக்கும் 'நஷா' என்ற தெலுங்குப் படத்திலும் அவர் நடிக்கிறார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>entertainment</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/entertainment/hansika-motwani-opens-up-about-divorce-from-sohael-khaturiya-5tmogg4"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Songs: சொன்னது நீதானா?! பாடல் மூலம் கேள்வி கேட்ட கண்ணதாசன்.! பட்டிதொட்டியெல்லாம் ஹிட்டான பாட்டு.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/songs-the-mega-hit-written-by-kannadasan-in-anger-the-poet-who-shook-the-film-director-with-his-lyrics-av22di4</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/songs-the-mega-hit-written-by-kannadasan-in-anger-the-poet-who-shook-the-film-director-with-his-lyrics-av22di4</guid>
            <pubDate>Thu, 16 Apr 2026 13:15:05 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கண்ணதாசனின் மனக்கசப்பிலிருந்து பிறந்ததாகக் கூறப்படும் &quot;சொன்னது நீதானா&quot;பாடல், சாருகேசி ராகத்தில் எம்.எஸ். விஸ்வநாதனால் இசையமைக்கப்பட்டுள்ளது. அந்த பாடல் உருவான கதை, இசை நுணுக்கங்கள் மற்றும் காலத்தால் அழியாத புகழை விவரிக்கிறது இந்த கட்டுரை.!&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kpak72wqq5jgybtr73abwnkf,imgname-gemini-generated-image-vfj7lcvfj7lcvfj7--1--1776324676502.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கண்ணதாசனின் மனக்கசப்பிலிருந்து பிறந்ததாகக் கூறப்படும் &quot;சொன்னது நீதானா&quot;பாடல், சாருகேசி ராகத்தில் எம்.எஸ். விஸ்வநாதனால் இசையமைக்கப்பட்டுள்ளது. அந்த பாடல் உருவான கதை, இசை நுணுக்கங்கள் மற்றும் காலத்தால் அழியாத புகழை விவரிக்கிறது இந்த கட்டுரை.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ் திரையிசையில் சில பாடல்கள் வெறும் இசையோ அல்லது வரிகளோ அல்ல &mdash; அவை ஒரு உணர்ச்சி வெடிப்பின் வெளிப்பாடு. &ldquo;சொன்னது நீதானா&rdquo; என்ற பாடல் அப்படிப்பட்ட ஒரு அரிய படைப்பு. 1962ஆம் ஆண்டு வெளிவந்த நெஞ்சில் ஓர் ஆலயம் திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல், காதல், வலி, சந்தேகம் போன்ற நுண்ணிய உணர்வுகளை மிக ஆழமாக வெளிப்படுத்துகிறது. இந்தப் பாடலின் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான சம்பவமும், இசை மற்றும் இலக்கியம் இணையும் அழகிய தருணமும் உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தப் படத்தை இயக்கியது சி.வி. ஸ்ரீதர். மருத்துவம், காதல், தியாகம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட இந்தக் கதை, அந்த காலத்தில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. படத்திற்கு இசையமைத்தவர் எம்.எஸ். விஸ்வநாதன் &mdash; தமிழ் சினிமாவின் மெலோடி மன்னன். பாடல் வரிகளை எழுதியவர் கண்ணதாசன். இவர்களின் கூட்டணி என்றாலே அது ஒரு இசை விழா போலவே இருக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தப் பாடலின் பிறப்பு ஒரு சாதாரண படைப்புச் செயல்முறை அல்ல. கண்ணதாசன் அவர்கள் பாடல்களை எழுதுவதில் தாமதம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் இயக்குநர் ஸ்ரீதர் சில கடுமையான வார்த்தைகளைப் பேசியதாகவும், அதை எம்.எஸ். விஸ்வநாதன் கூறியதாக கண்ணதாசன் தவறாக புரிந்துகொண்டதாகவும் ஒரு கதையுண்டு. அந்த உணர்ச்சி வெடிப்பே &ldquo;சொன்னது நீதானா&hellip; சொல் சொல்&rdquo; என்ற வரியாக வெளிவந்தது. ஒருவகையில், இந்தப் பாடல் ஒரு மனக்கசப்பின் கலை வடிவம் என்று சொல்லலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&ldquo;சொன்னது நீதானா&rdquo; பாடல் பெரும்பாலும் சாருகேசி ராகத்தின் அடிப்படையில் அமைந்ததாக இசை ஆர்வலர்கள் கூறுகிறார்கள். சாருகேசி ராகம் என்பது ஏக்கம், வலி, உணர்ச்சி ஆகியவற்றை மிக நுட்பமாக வெளிப்படுத்தக்கூடியது. இந்த ராகத்தில் உருவான பாடல்கள் பெரும்பாலும் மனதை உலுக்கும் தன்மை கொண்டவை. இந்தப் பாடலிலும் அதே உணர்ச்சி ஆழம் தெளிவாக தெரிகிறது. இசையில் உள்ள மென்மையான கர்நாடக நுணுக்கங்கள், பாடலின் உணர்ச்சியை இன்னும் உயர்த்துகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&ldquo;சொன்னது நீதானா&rdquo; என்ற கேள்வி, காதலில் ஏற்படும் சந்தேகத்தின் உச்ச நிலையை வெளிப்படுத்துகிறது. கண்ணதாசன் தனது சொற்களால் ஒரு மனிதனின் மன உளைச்சலை மிகவும் எளிமையாகவும் ஆழமாகவும் காட்டியுள்ளார். குற்றம் சாட்டுவது போலவும், பதில் கேட்பது போலவும் இருக்கும் இந்த வரிகள், கேட்பவரின் மனதில் உடனே ஒரு உணர்ச்சி தாக்கத்தை உருவாக்குகின்றன. இதுவே கண்ணதாசனின் எழுத்தின் வலிமை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தப் பாடலைப் பாடிய குரலும் அதன் வெற்றிக்கு முக்கிய காரணம். மென்மையான இசை, மெதுவான தாளம், குரலின் உணர்ச்சி &mdash; இவை அனைத்தும் சேர்ந்து ஒரு கண்ணீர்த்துளி போல மனதில் விழுகிறது. எம்.எஸ். விஸ்வநாதன் இந்தப் பாடலுக்காக தேர்ந்தெடுத்த இசைக்கருவிகள் கூட பாடலின் உணர்ச்சியை மெருகேற்றுகின்றன. குறிப்பாக, பின்னணி வயலின் இசை மனதை நெகிழச் செய்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&ldquo;சொன்னது நீதானா&rdquo; என்பது ஒரு பாடல் மட்டுமல்ல; அது ஒரு உணர்ச்சி அனுபவம். ஒரு தவறான புரிதல் எப்படி ஒரு அற்புதமான கலைப்பாடலாக மாறுகிறது என்பதற்கு இது சிறந்த உதாரணம். இன்று வரை இந்தப் பாடல் கேட்கும் போது மனதில் ஏதோ ஒரு துடிப்பு உருவாகிறது. அதுவே உண்மையான கலை &mdash; காலத்தையும், தலைமுறைகளையும் கடந்து உயிருடன் இருக்கும் சக்தி.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>entertainment</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/songs-the-mega-hit-written-by-kannadasan-in-anger-the-poet-who-shook-the-film-director-with-his-lyrics-av22di4"/>
        </item>
        <item>
            <title><![CDATA[நான் உள்ள போறேன்... கம்ருதின் மட்டும் என் கையில கிடைச்சான் - ஆத்திரத்தை கொட்டிய பிரஜின்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/bigg-boss/prajin-warn-kamrudin-for-his-behaviour-against-sandra-in-bigg-boss-tamil-b0fbuaw</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/bigg-boss/prajin-warn-kamrudin-for-his-behaviour-against-sandra-in-bigg-boss-tamil-b0fbuaw</guid>
            <pubDate>Sat, 03 Jan 2026 10:02:27 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதில் &lsquo;டிக்கெட் டூ ஃபினாலி&rsquo; டாஸ்க்கின் போது, நடந்த ஒரு சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ke111hwpx88g7cnajc7xzhp1,imgname-bigg-boss-tamil--6--1767413696406.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதில் &lsquo;டிக்கெட் டூ ஃபினாலி&rsquo; டாஸ்க்கின் போது, நடந்த ஒரு சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிக் பாஸ் நிகழ்ச்சியில் 9 போட்டியாளர்கள் பங்கேற்ற கார் டாஸ்கில், சான்ட்ராவை பார்வதி மற்றும் கம்ருதின் இணைந்து காரிலிருந்து தள்ளிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. அதே நேரத்தில் உடல்நலக் குறைவு காரணமாக சான்ட்ரா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதும் பரபரப்பை அதிகரித்தது.&lt;/p&gt;&lt;p&gt;இந்த நிலையில், சான்ட்ராவின் கணவரும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான பிரஜின் செய்தியாளர்களை சந்தித்து தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தனது வாழ்க்கையில் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியதாக கூறிய பிரஜின், ஏற்கனவே மூன்று படங்களில் நடித்துவிட்டதாகவும், தற்போது புதிய திரைப்பட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாகவும் தெரிவித்தார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறினார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேலும் பிக்பாஸில் இருந்து வெளியேறிய பிறகும் தன்னைப் பற்றிய பேச்சுகள் தொடர்வதாக கூறிய அவர், தான் ஏன் வெளியேற்றப்பட்டேன் என்பதற்கான காரணம் இன்னும் புரியவில்லை என்றும், நல்ல விஷயங்கள் செய்ததால்தான் தனது பெயர் இன்னும் பேசப்படுகிறது என நம்புவதாகவும் தெரிவித்தார். பிக்பாஸ் 9வது சீசன் குறித்து பேசும்போது, முந்தைய சீசன்களில் 50 நாட்களிலேயே வெற்றியாளரை கணிக்க முடியும் என்றும், ஆனால் இந்த சீசனில் யார் ஜெயிப்பார் என்பது இன்னும் புதிராகவே இருப்பதாகவும் பிரஜின் கூறினார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lsquo;டிக்கெட் டூ ஃபினாலி&rsquo; டாஸ்கில் அரோரா வெற்றி பெறுவார் என நினைக்கவில்லை என்றும், சான்ட்ரா வென்றிருக்க வேண்டும் என எண்ணியதாகவும் அவர் தெரிவித்தார். சான்ட்ராவுக்கு நடந்த சம்பவம் குறித்து மன வேதனை தெரிவித்த பிரஜின், &ldquo;என்னுடைய மனைவியை காரிலிருந்து தள்ளியதைப் பார்த்ததும் கஷ்டமாக இருந்தது. இந்த தகவல் வெளியில் இருந்து தான் எனக்கு கிடைத்தது. பிக்பாஸ் ஒப்பந்தத்தில் இருந்ததால் உடனே பேச முடியவில்லை. நிகழ்ச்சி குழுவை தொடர்பு கொண்டு கேட்டபோது, சான்ட்ரா தற்போது நலமாக இருப்பதாக கூறினர்&rdquo; என்றார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேலும், &ldquo;அங்கு நடந்த சம்பவங்கள் நடந்திருக்கக் கூடாது. என்ன பேச வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது போட்டியாளர்களுக்கு சுய அறிவாக இருக்க வேண்டும். கம்ருதின் மற்றும் பார்வதி தவறு செய்திருந்தால், அவர்களுக்கு உரிய தண்டனை இந்த வாரமே வழங்கப்பட வேண்டும். மீண்டும் நான் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருக்கிறேன். அப்போது கம்ருதின் உள்ளே இருந்தால் அது அவருக்கு கெட்ட நேரம், இல்லையெனில் நல்ல நேரம். இது ஒரு எச்சரிக்கையாக கூட இருக்கலாம்&rdquo; என கூறியுள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;இந்த விவகாரம் பிக்பாஸ் ரசிகர்களிடையே மேலும் சூடுபிடித்துள்ள நிலையில், நிகழ்ச்சி குழு எடுக்கப்போகும் நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>entertainment</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/bigg-boss/prajin-warn-kamrudin-for-his-behaviour-against-sandra-in-bigg-boss-tamil-b0fbuaw"/>
        </item>
        <item>
            <title><![CDATA[பிக் பாஸ் பைனல்ஸில் பார்வதி - கம்ருதீன்... ஷாக் ஆன சாண்ட்ரா; இன்ப அதிர்ச்சியில் விஜய் சேதுபதி..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/bigg-boss/parvathy-kamrudhin-mass-comeback-in-bigg-boss-tamil-season-9-grand-finale-d7ehnd7</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/bigg-boss/parvathy-kamrudhin-mass-comeback-in-bigg-boss-tamil-season-9-grand-finale-d7ehnd7</guid>
            <pubDate>Sun, 18 Jan 2026 18:51:48 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் பைனல் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில், இதில் ரெட் கார்டு வாங்கிய கம்ருதீனும் கலந்துகொண்டார். பார்வதி லேட்டாக வந்து இந்த குழுவில் ஐக்கியமானார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kf8m0jbn2ydbgqna2wnssvwh,imgname-bigg-boss-tamil--13--1768742209909.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் பைனல் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில், இதில் ரெட் கார்டு வாங்கிய கம்ருதீனும் கலந்துகொண்டார். பார்வதி லேட்டாக வந்து இந்த குழுவில் ஐக்கியமானார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி இன்றுடன் நிறைவடைந்தது. பிக் பாஸ் என்றாலே சர்ச்சைகளுக்கும் பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது. அந்த வகையில் இந்த சீசனில் சர்ச்சைக்குரிய போட்டியாளராக வலம் வந்தவர் தான் கம்ருதீன். விஜய் டிவியின் மகாநதி சீரியலில் நடித்து பிரபலமான கம்புருதீன் இந்த சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கினார். இந்த சீசனில் ஆரம்பத்தில் சண்டை போட்டுக் கொண்டே இருந்த கமருதின், ஒரு கட்டத்தில் விஜய் சேதுபதியின் பேச்சைக் கேட்டு அடங்கியிருந்தார். கம்ருதீன் சைலன்டாக இருந்த சில வாரங்கள் அவருக்கு நல்ல பெயரும் கிடைத்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அவர் எப்போது பார்வதியுடன் சேர்ந்து விளையாட ஆரம்பித்தாரோ அப்போதிலிருந்து அவரின் கேம் டைவர்ட் ஆக தொடங்கியது என்று தான் சொல்ல வேண்டும். பிரச்சனைகளை உருவாக்குவதே பார்வதியின் வேலையாக இருந்து வந்த நிலையில் அவரின் பிரச்சனைகளுக்கு எல்லாம் சப்போர்ட்டாக நின்று கம்ருதினும் கெட்ட பெயர் வாங்கினார். ஒரு கட்டத்தில் பார்வதியை கண்மூடித்தனமாக நம்பத் தொடங்கியதன் பலனாக கம்ருதீனுக்கு ரெட் கார்டும் கிடைத்தது. கார் டாஸ்கின் போது சான்ட்ராவை பார்வதியுடன் சேர்ந்து வெளியே தள்ளி விட்டதற்காக கம்ருதீனுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பைனல்ஸ் வரை செல்லும் அளவுக்கு தகுதி உள்ள போட்டியாளராக இருந்த கம்ருதீன் உடனடியாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் வரலாற்றில் ஜோடியாக ரெட் கார்டு வாங்கிய நபர்கள் என்றால் அது பார்வதியும் காமருதினும் தான். ரெட் கார்டு வாங்கி வெளியே சென்றாலும் மக்கள் மத்தியில் கம்ருதீனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இருப்பினும் பார்வதிக்கு மக்கள் மத்தியில் சப்போர்ட் கிடைக்கவில்லை. அவரும் வெளியே சென்ற பின்னர் நான் தான் டைட்டில் வின்னர் என்கிற ரேஞ்சுக்கு எடிட் பண்ண வீடியோக்களை ஷேர் செய்து இன்ஸ்டாவில் டிரெயின் விட்டுக் கொண்டிருந்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் பைனலுக்கு பார்வதி மற்றும் கம்ருதீன் இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பை ஏற்று கம்ருதீன் பிக் பாஸ் பைனலில் கலந்து கொண்டார். அவரை மேடைக்கு விஜய் சேதுபதி அழைத்து பொழுது அரங்கம் அதிர மக்கள் கைதட்டியும் விசில் அடித்தும் அவருக்கு வரவேற்பு கொடுத்தனர். அப்போது பேசிய விஜய் சேதுபதி தாங்கள் பார்வதியையும் அழைத்ததாகவும் அவர் பிஸியாக இருந்ததால் வர முடியவில்லை எனவும் கூறினார். ஆனால் சிறிது நேரத்தில் பார்வதியும் கலந்துகொண்டார். இருவரும் ஜோடியாக பிக் பாஸ் பைனல்ஸ் மேடையில் எடுத்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.&lt;/p&gt;&lt;p&gt;#Paaru and #Kamrudhin on finale da tharkurigala  #BiggBossTamil9 pic.twitter.com/cbr1yZfo4B&lt;/p&gt;&lt;p&gt;&mdash; ꪶꪖꪜꪖꪀꪗꪖ ✍️✿꧂ (@pklavanya_kar) January 18, 2026&lt;/p&gt;]]></content:encoded>
            <category>entertainment</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/bigg-boss/parvathy-kamrudhin-mass-comeback-in-bigg-boss-tamil-season-9-grand-finale-d7ehnd7"/>
        </item>
        <item>
            <title><![CDATA[பொறுக்கி பார்வதிக்கு ரெட் கார்டு கொடுங்க... கொந்தளிக்கும் நெட்டிசன்கள்; ஆக்‌ஷன் எடுப்பாரா விஜய் சேதுபதி?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/bigg-boss/netizens-demand-red-card-for-vj-parvathy-in-bigg-boss-tamil-dbto7mi</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/bigg-boss/netizens-demand-red-card-for-vj-parvathy-in-bigg-boss-tamil-dbto7mi</guid>
            <pubDate>Sat, 03 Jan 2026 13:20:05 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள பார்வதி, சாண்ட்ராவை எட்டி உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், பாருவை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற வலியுறுத்தி வருகின்றனர்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ke1d24tgsm5cn6yctcxfnjx2,imgname-bigg-boss-tamil--7--1767426298704.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள பார்வதி, சாண்ட்ராவை எட்டி உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், பாருவை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற வலியுறுத்தி வருகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆரம்பத்தில் 24 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில், இதுவரை 15 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போது விஜே பார்வதி, கானா வினோத், திவ்யா கணேஷ், கம்ரூதின், விக்கல்ஸ் விக்ரம், சாண்ட்ரா, சுபிக்&zwnj;ஷா, சபரி, அரோரா ஆகிய ஒன்பது பேர் மட்டுமே போட்டியில் நீடித்து வருகின்றனர். டைட்டிலை கைப்பற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கில் அனைவரும் தீவிரமாக விளையாடி வருகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில், விஜே பார்வதி &ndash; சாண்ட்ரா இடையே நடந்த ஒரு சம்பவம் ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. டாஸ்க் ஒன்றின் போது, காரிலிருந்து சாண்ட்ராவை எட்டி உதைத்ததாக கூறப்படும் நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி, பார்வதிக்கு எதிரான விமர்சனங்கள் அதிகரித்துள்ளது. இந்த சீசனில் சர்ச்சைக்குரிய போட்டியாளர்களில் ஒருவராக விஜே பார்வதி திகழ்கிறார். முதல் நாளில் இருந்தே சண்டையிடுவதை மட்டுமே முழு நேர வேலையாக செய்து வருகிறார் பார்வதி.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இடையில் கம்ருதின் மீது காதல் வயப்பட்டதால், சில எபிசோடுகள் ரொமாண்டிக் டிராக் ஓடியது. பின்னர் இந்த காதலும் ஒரு கட்டத்தில் கசந்துபோக, இருவரும் கடுமையாக மோதிக்கொண்டனர். சண்டைபோட்டு இனி இவர்கள் பேசவே மாட்டார்கள் என எண்ணும்போது சகஜமாக கட்டிப்பிடித்து மீண்டும் ரொமான்ஸ் செய்ய ஆரம்பிக்கிறார்கள். இதனால் உள்ளே இருக்கும் சக போட்டியாளர்களுக்கே இது ஒரு டாக்ஸிக் காதல் ஜோடி என்பது அப்பட்டமாக தெரிகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த சீசனில் பார்வதிக்கு சப்போர்டாக இருந்தவர்கள் வெகு சிலரே, அதில் ஒருவர் தான் சாண்ட்ரா. அவரையே, டிக்கெட் டூ பினாலே டாஸ்கின் போது பார்வதி எட்டி உதைத்து காரில் இருந்து வெளியே தள்ளியது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. பார்வதி வெளியே தள்ளிவிட்டதும் சாண்ட்ராவுக்கு வலிப்பு வந்து அவர் மருத்துவர்கள் கண்காணிப்புக்காக அழைத்து செல்லப்பட்டார். இந்த சம்பவம் நடந்த பின்னரும், தான் செய்தது தான் கரெக்ட் என சொல்லி சக போட்டியாளர்களிடம் சண்டை போட்டுள்ளார் பார்வதி.&lt;/p&gt;&lt;p&gt;#Sandra மிக மோசமான ஆள்தான். #VJPaaru &amp;amp; #Kamrudin-க்கு equalஆன toxicity நிறைந்த ஆள்தான். No doubtஆனால் இன்று சாண்ட்ராவுக்கு நடந்தது மிகக்கொடுமை. Inhumanஇந்த சைக்கோத்தனத்தை உரம்போட்டு வளர்த்தது #VijaySethupathi&amp;nbsp;இந்த #BiggBossTamil9 கேவலத்தின் உச்சம்!pic.twitter.com/68dDQDi8cH&lt;/p&gt;&lt;p&gt;&mdash; Surya Born To Win (@Surya_BornToWin) January 2, 2026&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பார்வதியின் இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம், தெரிவித்து வருவதோடு, அந்த பொறுக்கி பார்வதியை ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்புங்க என விஜய் சேதுபதிக்கும் வலியுறுத்தி வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி பார்வதிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. அதுமட்டும் நடந்தால் பிக் பாஸ் வரலாற்றில் ரெட் கார்டு வாங்கிக் கொண்டு வெளியேறும் முதல் பெண் போட்டியாளராக பார்வதி இருப்பார்.&lt;/p&gt;&lt;p&gt;இவையெல்லாம் விஜய் சேதுபதி கையில் தான் இருக்கிறது. அவர் இதற்கு முன்னர் மைக் போடாமல் பார்வதியும் கம்ருதினும் ரூல்ஸை மீறிய போது, அவர்களை பேச விடாமல் ஒரு ஓரமாக சைலண்டாக உட்கார வைத்து எஸ்கேப் ஆக்கியது போல், இந்த முறையும் செய்துவிடாதீர்கள் என நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;Next Evicted contestants re entry irukum... Ellarum vanthu porukki #VJParvathy aka peedaiAnd#Kamrudin aka KaamarudhinMoonji la Kaari thuppa poranga #BiggBossTamil9&lt;/p&gt;&lt;p&gt;&mdash; Laugh Out Tamil (@LaughOutTamil) January 2, 2026&lt;/p&gt;]]></content:encoded>
            <category>entertainment</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/bigg-boss/netizens-demand-red-card-for-vj-parvathy-in-bigg-boss-tamil-dbto7mi"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Rashmika: குட் நியூஸ் சொன்ன விஜய் - ராஷ்மிகா.! குவியும் வாழ்த்துக்கள்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/webstories/entertainment/rashmika-mandanna-vijay-deverakonda-announce-they-are-three-after-one-month-of-marriage-e6358v9</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/webstories/entertainment/rashmika-mandanna-vijay-deverakonda-announce-they-are-three-after-one-month-of-marriage-e6358v9</guid>
            <pubDate>Sat, 04 Apr 2026 14:37:39 +0530</pubDate>
            <description><![CDATA[விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் பிப்ரவரி மாதம் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், தாங்கள் மூவராகப் போகிறோம் என்று அவர்கள் வெளியிட்ட ஒரு பதிவு இணையத்தில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01km00c7bfrwwd7h5exmh90j6d,imgname-rashmika-mandanna-1773668405-3854132269527387250-1381101303-1773821893999.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <category>entertainment</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/webstories/entertainment/rashmika-mandanna-vijay-deverakonda-announce-they-are-three-after-one-month-of-marriage-e6358v9"/>
        </item>
        <item>
            <title><![CDATA[பாரு - கம்ருதீன் கேம் ஓவர்... ரெட் கார்டு கொடுத்த விஜய் சேதுபதி - பிக் பாஸ் ரசிகர்கள் செம ஹாப்பி..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/vijay-sethupathi-gives-red-card-for-parvathy-and-kamrudin-in-bigg-boss-tamil-ftn72vc</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/vijay-sethupathi-gives-red-card-for-parvathy-and-kamrudin-in-bigg-boss-tamil-ftn72vc</guid>
            <pubDate>Sat, 03 Jan 2026 16:08:36 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் முதன்முறையாக ரெட் கார்டு கொடுத்து ஒரே நேரத்தில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். விஜய் சேதுபதியின் இந்த நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் குவிகிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ke1pqd3ajk7vmm0t3cf4wm68,imgname-bigg-boss-tamil--9--1767436432490.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் முதன்முறையாக ரெட் கார்டு கொடுத்து ஒரே நேரத்தில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். விஜய் சேதுபதியின் இந்த நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் குவிகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே எந்தவித விறுவிறுப்பும் இன்றி மந்தமாக சென்றுகொண்டிருந்த நிலையில், தற்போது இந்த சீசன் முடியும் தருவாயில் ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இந்த சீசனில் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் வெற்றி பெருபவர்கள் நேரடியாக பைனலுக்குள் நுழையும் வாய்ப்பை பெற முடியும். இந்த டிக்கெட் டூ பினாலேவின் கடைசி டாஸ்க்காக கார் டாஸ்க் வைக்கப்பட்டது. ஒரே காருக்குள் 9 பேரும் ஏறிக் கொள்ள வேண்டும். அதில் இறுதி வரை யார் தாக்குப்பிடிக்குறார்களோ அவர்களே வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த டாஸ்க் தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே, பார்வதியும் கம்ருதீனும் போட்டியாளர்களை ஒவ்வொருவராக வம்பிழுக்க தொடங்கினர். அதில் மற்றவர்கள் அமைதியாக இருந்தாலும், சாண்ட்ரா இவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது கம்ருதீனை அவர் காமருதீன் என திட்டினார். அதேபோல் பார்வதியையும் பொறுக்கி பார்வதி என சொன்னதோடு, நீங்கள் இருவரும் பாத்ரூமில் என்னென்ன செஞ்சீங்கனு எனக்கு தெரியும் என்றெல்லாம் சொல்ல, கம்ருதீன் மற்றும் பார்வதி இருவரும் சேர்ந்துகொண்டு சாண்ட்ராவை மிகவும் கொச்சையாக விமர்சிக்க தொடங்கினார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒருகட்டத்தில் சாண்ட்ரா அமைதியான பின்னர், அவரை எப்படியாவது வெளியே தள்ளிவிட வேண்டும் என முடிவெடுத்த பார்வதி, கார் கதவை திறக்க முயல, சாண்ட்ரா தடுத்துவிட்டார். பின்னர் கம்ருதீன் உதவியுடன் கார் கதவை திறந்து, சாண்ட்ராவை தன் காலால் மிதித்து இருவரும் வெளியே தள்ளிவிட்டனர். இதனால் தலைகுப்புற விழுந்த சாண்ட்ராவுக்கு அந்த பதற்றத்தில் வலிப்பு வந்துவிட்டது. இதையடுத்து வினோத், சபரி, விக்ரம் ஆகியோர் டாஸ்க் போனாலும் பரவாயில்லை என இறங்கி வந்து சாண்ட்ராவை மருத்துவர்களிடம் அழைத்து சென்றனர். இதனால் பிக் பாஸ் வீடே பரபரப்பானது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இப்படி ஒரு மனிதாபிமானற்ற செயலை செய்தபின்னரும் தாங்கள் செய்தது தான் சரி என்றும் பாரு - கம்ருதீன் இருவருமே பேசிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில், இன்று நடைபெற்ற வீக் எண்ட் எபிசோடில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, முதல் வேளையாக பார்வதி, கம்ருதீன் இருவரையும் வறுத்தெடுத்திருக்கிறார்.&lt;/p&gt;&lt;p&gt;தற்போது வெளியாகி உள்ள புரோமோவில் பேசிய விஜய் சேதுபதி, கம்ருதீன் உனக்கு பலமுறை சொல்லி இருக்கிறேன். இப்படி பேசுறீங்களே அது பார்ப்பவர்களுக்கு நெருடலாக இருக்காதா... உங்க அக்கா இதை பார்த்து தம்பி நீ நல்லா பண்ணுனப்பானா சொல்லுவாங்க. பாரு வீட்டுக்கு போன உடனே பாராட்டு விழா தான் நடத்தனும். ஒரு பொண்ணை எட்டி உதைச்சதை நான் பார்த்து ரசிச்சேன் என அவங்க அம்மா பாராட்டுவாங்க என சொல்லி நீங்க 2 பேரும் கிளம்புங்க என ரெட் கார்டை எடுத்து நீட்டி உள்ளார் விஜய் சேதுபதி. இதைப்பார்த்த ரசிகர்கள், இதைத் தான் எதிர்பார்த்தோம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;#Day90 #Promo2 of #BiggBossTamilBigg Boss Tamil Season 9 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/pQfMdynnI0&lt;/p&gt;&lt;p&gt;&mdash; Vijay Television (@vijaytelevision) January 3, 2026&lt;/p&gt;]]></content:encoded>
            <category>entertainment</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/vijay-sethupathi-gives-red-card-for-parvathy-and-kamrudin-in-bigg-boss-tamil-ftn72vc"/>
        </item>
        <item>
            <title><![CDATA[பிக் பாஸ் பைனலிஸ்டுகளுக்கு வாரி வழங்கப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா? இதிலும் திவ்யா தான் டாப்பு..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/bigg-boss/bigg-boss-tamil-finalist-divya-ganesh-aurora-sabari-vikram-salary-details-g8vg4zc</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/bigg-boss/bigg-boss-tamil-finalist-divya-ganesh-aurora-sabari-vikram-salary-details-g8vg4zc</guid>
            <pubDate>Sun, 18 Jan 2026 20:38:54 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் பைனலிஸ்டுகளாக இருந்த திவ்யா கணேஷ், விக்கல்ஸ் விக்ரம், அரோரா, சபரி ஆகியோர் இந்த சீசனில் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kf8t3bry9g2s2cd9qz84da7e,imgname-bigg-boss-tamil--14--1768748592926.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் பைனலிஸ்டுகளாக இருந்த திவ்யா கணேஷ், விக்கல்ஸ் விக்ரம், அரோரா, சபரி ஆகியோர் இந்த சீசனில் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிவுக்கு வந்துள்ளது. 24 போட்டியாளர்களுடன் நடந்த இந்நிகழ்ச்சியில், திவ்யா கணேஷ், அரோரா, சபரி, விக்கல்ஸ் விக்ரம் ஆகிய நான்கு பேர் மட்டுமே பைனலுக்கு தேர்வானார்கள். இவர்களில் திவ்யா கணேஷ் தான் டைட்டில் வின்னர் ஆகி உள்ளார். இதையடுத்து இரண்டாவது இடத்தை சபரி பிடித்துள்ளார். மூன்றாம் இடத்தை விக்கல்ஸ் விக்ரம் பிடித்திருக்கிறார். நான்காம் இடம் அரோராவுக்கு கிடைத்தது. இந்த நான்கு பைனலிஸ்டுகளும் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அரோராவின் வாழ்க்கை பிக் பாஸுக்கு முன் பிக்பாஸுக்கு பின் என பிரித்துவிடலாம். இதற்கு முன்னர் சோசியல் மீடியா பிரபலமாக அறியப்பட்ட அரோரா, தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உலகமெங்கும் பிரபலமடைந்து இருக்கிறார். அவர் இந்த பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 105 நாட்கள் இருந்துள்ளார். இவருக்கு ஒரு நாளைக்கு 12 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளது. ஒட்டுமொத்தமாக ரூ.12 லட்சத்து 60 ஆயிரம் சம்பளமாக வாங்கி இருக்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு வரை யூடியூபராகவும் ஸ்டாண்ட் அப் காமெடியனாகவும் அறியப்பட்ட விக்கல்ஸ் விக்ரம், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தன்னுடைய புதிய பரிணாமத்தை காட்டி மக்கள் மனதை வென்றார். இந்நிகழ்ச்சியில் மொத்தம் 105 நாட்கள் இருந்த விக்கல்ஸ் விக்ரம், ஒரு நாளைக்கு ரூ.15 ஆயிரம் சம்பளமாக வாங்கி இருக்கிறார். இதன்மூலம் ஒட்டுமொத்தமாக அவருக்கு ரூ. 15 லட்சத்து 75 ஆயிரம் சம்பளமாக வாங்கி உள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விஜய் டிவி சீரியல்களில் நாயகனாக நடித்து பிரபலமானவர் சபரி. இவர் இந்த பிக் பாஸ் சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கி பைனல் வரை முன்னேறி அசத்தி உள்ளார். இவர் இந்த வீட்டில் 105 நாட்கள் இருந்துள்ளார். இவருக்கு ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு இருக்கிறது. அதன்படி மொத்தம் அவர் தங்கி இருந்த 105 நாட்களுக்கு அவருக்கு ரூ.21 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டு இருக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்ட திவ்யா கணேஷ், இந்த சீசனின் 28வது நாளில் வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே எண்ட்ரி கொடுத்தார். இவர் இந்த பிக் பாஸ் வீட்டில் ஒட்டுமொத்தமாக 77 நாட்கள் இருந்துள்ளார். திவ்யா தான் இந்த சீசனில் அதிக சம்பளம் வாங்கிய போட்டியாளர். இவருக்கு ஒரு நாளைக்கு ரூ.30 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டது. அதன்படி 77 நாட்களுக்கு ரூ.23 லட்சத்து 10 ஆயிரம் சம்பளமாக வாங்கி இருக்கிறார் திவ்யா.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>entertainment</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/bigg-boss/bigg-boss-tamil-finalist-divya-ganesh-aurora-sabari-vikram-salary-details-g8vg4zc"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Bigg Boss Season 9 Title Winner : பிக் பாஸ் வெற்றியாளர் யார்? லீக்கான தகவல் - ஷாக் ஆன ரசிகர்கள்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/bigg-boss/divya-ganesh-aurora-vikram-sabari-who-is-bigg-boss-tamil-season-9-title-winner-hnxyek6</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/bigg-boss/divya-ganesh-aurora-vikram-sabari-who-is-bigg-boss-tamil-season-9-title-winner-hnxyek6</guid>
            <pubDate>Sun, 18 Jan 2026 10:58:14 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி இன்றுடன் முடிவடைந்துள்ள நிலையில், அதன் பிரம்மாண்ட பைனலில் வெற்றிபெற்று யார் டைட்டிலை தட்டி தூக்கி இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kf7s0ardpky2vw4qbs5bvcxk,imgname-bigg-boss-tamil--12--1768713890573.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி இன்றுடன் முடிவடைந்துள்ள நிலையில், அதன் பிரம்மாண்ட பைனலில் வெற்றிபெற்று யார் டைட்டிலை தட்டி தூக்கி இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி 8 சீசன்கள் முடிந்து தற்போது 9-வது சீசன் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில், 20 போட்டியாளர்கள் களமிறங்கினர். இதையடுத்து நான்கு வைல்டு கார்டு போட்டியாளர்களும் உள்ளே எண்ட்ரி ஆனார்கள். இவர்களில் இறுதிப்போட்டிக்கு திவ்யா கணேஷ், சபரி, அரோரா மற்றும் விக்கல்ஸ் விக்ரம் ஆகிய நான்கு போட்டியாளர்கள் மட்டுமே தகுதி பெற்றனர். டைட்டில் வெல்ல அதிக வாய்ப்புகள் இருந்த போட்டியாளரான கானா வினோத், பணப்பெட்டி டாஸ்க்கின் முடிவில் 18 லட்சத்துடன் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் 75 நாட்கள் வரை எந்தவித சுவாரஸ்யமும் இன்றி சென்று கொண்டிருந்தது. ஃபேமிலி ரவுண்டுக்கு பின்னர் சூடுபிடிக்க தொடங்கிய இந்த சீசன், டிக்கெட் டூ பினாலே டாஸ்கின் போது உச்சத்தை தொட்டது என்றே சொல்லலாம். அந்த டாஸ்கின் ஒருபகுதியாக நடைபெற்ற கார் டாஸ்க்கில் சாண்ட்ராவை பார்வதி மற்றும் கம்ருதீன் காரில் இருந்து கீழே தள்ளிவிட்டது மிகப்பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்தது. அவர்களின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த விஜய் சேதுபதி, அவர்கள் இருவரையும் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பினார். பிக் பாஸ் வரலாற்றில் ஒரே நேரத்தில் இருவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது இதுவே முதன்முறை ஆகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரெட் கார்டு கொடுக்கப்பட்ட பின்னர் ஆட்டமே அப்படியே தலைகீழாக மாறியது. அந்த கார் டாஸ்க்கின் போது பார்வதியை இரவு முழுக்க வறுத்தெடுத்த திவ்யா ஒரே நாளில் மக்கள் மனதை வென்று அசைக்கமுடியாத உயரத்தை தொட்டார். மறுபுறம் அரோரா டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் வெற்றிபெற்று முதல் ஆளாக பைனலுக்குள் காலடி எடுத்து வைத்தார். எஞ்சியுள்ள போட்டியாளர்களில் சபரி மற்றும் விக்ரம் ஆகியோர் அதிகப்படியான வாக்குகளை பெற்று பைனலுக்குள் எண்ட்ரி ஆனார். இவர்களில் யார் வெற்றி பெற்று பிக் பாஸ் டைட்டிலை வென்றுள்ளார் என்கிற தகவல் கசிந்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த நான்கு பைனலிஸ்டுகளில் விக்ரம் நான்காவது இடத்தை பிடித்திருக்கிறார். இவருக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடம் அரோராவுக்கு கிடைத்திருக்கிறது. எஞ்சியுள்ள இருவரில் அதிக வாக்குகளை பெற்று டைட்டில் வின்னர் ஆகி இருக்கிறார் திவ்யா கணேஷ். மேலும் இந்த சீசனில் இரண்டாவது இடம் சபரிக்கு கிடைத்துள்ளது. இதன்மூலம் வைல்டு கார்டு போட்டியாளராக வந்து டைட்டில் வெல்லும் இரண்டாவது போட்டியாளராக திவ்யா உள்ளார். இதற்கு முன்னர் அர்ச்சனா 7வது சீசனில் டைட்டில் வென்றிருந்தார். அதேபோல் தமிழ் பிக் பாஸ் வரலாற்றில் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்ட மூன்றாவது பெண் போட்டியாளர் திவ்யா, இதற்கு முன்னர் ரித்விகா மற்றும் அர்ச்சனா கோப்பையை வென்றிருக்கிறார்கள்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>entertainment</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/bigg-boss/divya-ganesh-aurora-vikram-sabari-who-is-bigg-boss-tamil-season-9-title-winner-hnxyek6"/>
        </item>
        <item>
            <title><![CDATA[விருது விழாவுக்கு இப்படியா டிரெஸ் போட்டுட்டு வர்றது... ஆடையால் சர்ச்சையில் சிக்கிய மணிரத்னம் பட நடிகை]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/entertainment/malaika-arora-dress-controversy-at-gulf-idol-event-sparks-debate-ht9dum1</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/entertainment/malaika-arora-dress-controversy-at-gulf-idol-event-sparks-debate-ht9dum1</guid>
            <pubDate>Tue, 20 Jan 2026 21:36:17 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;நடிகை மலைக்கா அரோரா டீப் நெக் உடையில் காணப்பட்டார். அதுமட்டுமின்றி, அவர் தனது உடையை முடியால் மீண்டும் மீண்டும் மறைக்க முயன்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kfdt78j8kzgx7kwvazqbnnkr,imgname-thumbnail---2026-01-20t191054.173-1768916492872.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;நடிகை மலைக்கா அரோரா டீப் நெக் உடையில் காணப்பட்டார். அதுமட்டுமின்றி, அவர் தனது உடையை முடியால் மீண்டும் மீண்டும் மறைக்க முயன்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பாலிவுட் நடிகையும், நடனக் கலைஞருமான மலைக்கா அரோரா சமீபத்தில் கல்ஃப் ஐடல் 2025 நிகழ்ச்சியில் பங்கேற்றார். டாக்டர் பூ அப்துல்லா இளம் வெற்றியாளர்களை கவுரவித்தார். மலைக்காவிற்கும் பாராட்டு விருது வழங்கப்பட்டது. ஆனால், நிகழ்ச்சியின் போது மலைக்கா அணிந்திருந்த உடை சமூக ஊடக பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால் அவர் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கல்ஃப் ஐடல் 2025 மேடையில் மலைக்கா ஸ்டைலாக காணப்பட்டாலும், அவரது டீப்-கட் உடை விவாதப் பொருளானது. நிகழ்ச்சியின் போது, அவர் தனது முடியால் ஆடையை மறைக்க முயன்றது, அவர் சங்கடமாக உணர்ந்ததாகக் கூறப்படுகிறது. சமூக ஊடகங்களில் பரவும் வீடியோவில், மேடையில் இருந்த ஷேக் ஒருவர் மலைக்காவின் சங்கடத்தை கவனித்து, அவருக்கு சால்வை போர்த்தியதாகக் கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஷேக்கின் இந்த செயல் சர்ச்சையை மேலும் அதிகரித்துள்ளது. இந்த வீடியோ வைரலானதும், நெட்டிசன்கள் பலவிதமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர், &quot;சங்கடமாக உணரும் ஆடையை ஏன் அணிய வேண்டும்?&quot; என்று கேட்கின்றனர். சில ரசிகர்கள் இது அவரது தனிப்பட்ட விருப்பம் என மலைக்காவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நடிகை மலைக்கா அரோரா பாலிவுட்டில் கிளாமர் குயினாக வலம் வருகிறார். 50 வயதை எட்டியும் அவரின் அழகு குறையாமல் இளம் நடிகை போலவே இருப்பதால் அவருக்கு பாலிவுட்டில் பட வாய்ப்புகள் குறையாமல் இருக்கின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நடிகை மலைக்கா அரோரா, மணிரத்னம் இயக்கிய உயிரே திரைப்படத்தில் இடம்பெற்ற சூப்பர் டூப்பர் ஹிட் பாடலான தைய்யா தையா பாடலுக்கு நடனமாடியதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>entertainment</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/entertainment/malaika-arora-dress-controversy-at-gulf-idol-event-sparks-debate-ht9dum1"/>
        </item>
        <item>
            <title><![CDATA[பிக் பாஸ் டைட்டிலை தட்டிதூக்கிய திவ்யா கணேஷ்... டிராபியோடு அவர் அள்ளிச் சென்ற பரிசுகள் என்னென்ன?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/bigg-boss/bigg-boss-tamil-season-9-title-winner-divya-ganesh-and-her-prize-details-o9k4nps</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/bigg-boss/bigg-boss-tamil-season-9-title-winner-divya-ganesh-and-her-prize-details-o9k4nps</guid>
            <pubDate>Mon, 19 Jan 2026 00:01:09 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் அதிக வாக்குகளை பெற்று டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார் திவ்யா கணேஷ். அவர் டிராபியை தவிர என்னென்ன பரிசுகள் வென்றுள்ளார் என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kf8za4tzgkrrbaeyherrj02y,imgname-divya-ganesh--1--1768754058079.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் அதிக வாக்குகளை பெற்று டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார் திவ்யா கணேஷ். அவர் டிராபியை தவிர என்னென்ன பரிசுகள் வென்றுள்ளார் என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கிய இந்நிகழ்ச்சியின் முதல் 7 சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இதன்பின்னர் கமல்ஹாசன் விலகியதை அடுத்து 8-வது சீசனில் இருந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். அவர் தொகுத்து வழங்கும் இரண்டாவது சீசன் இதுவாகும். இந்த சீசன் முதல் ஐம்பது நாட்கள் நமத்துப்போன பட்டாசு போல இருந்தாலும், அடுத்த ஐம்பது நாட்கள் சரவெடி போல் இருந்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசனில் நந்தினி, பிரவீன் காந்தி, ஆதிரை, அப்சரா, கலையரசன், பிரவீன் ராஜ், துஷார், திவாகர், பிரஜன், வியானா, பார்வதி, கம்ருதீன், சாண்ட்ரா, கானா வினோத், ரம்யா ஜோ, கெமி, கனி, எஃப் ஜே, சுபிக்&zwnj;ஷா, சபரி, விக்கல்ஸ் விக்ரம், அரோரா, திவ்யா கணேஷ் உள்பட மொத்தம் 24 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதில் திவ்யா, சபரி, விக்ரம், அரோரா ஆகிய நான்கு பேர் பைனலுக்கு தேர்வாகி இருந்தனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிக் பாஸ் சீசன் 9-ல் நான்காவது இடத்தை அரோரா தட்டிச் சென்றார். இதையடுத்து மூன்றாவது இடம் விக்கல் விக்ரமுக்கு சென்றது. பின்னர் இறுதி மேடையில் சபரி மற்றும் திவ்யா கணேஷ் இருந்தனர். அவர்களில் மக்கள் மத்தியில் அதிக வாக்குகளை பெற்ற திவ்யா கணேஷின் கையை தூக்கி வெற்றி பெற்றதாக அறிவித்தார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இதன்மூலம் பிக் பாஸ் டைட்டில் வென்ற இரண்டாவது வைல்டு கார்டு போட்டியாளர் என்கிற சாதனையை படைத்தார் திவ்யா. இதற்கு முன்னர் 7-வது சீசனில் அர்ச்சனா டைட்டில் வென்றார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிக் பாஸ் சீசன் 9 டைட்டில் வென்ற திவ்யா கணேஷுக்கு டிராபி வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி முதலிடம் பிடித்ததற்காக அவருக்கு ரூ.50 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. இந்த சீசனில் அதிக சம்பளம் வாங்கிய போட்டியாளரும் திவ்யா தான். இவருக்கு ஒரு நாளைக்கு ரூ.30 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டது. அதன் படி மொத்தம் இருந்த 77 நாட்களுக்கு ரூ.23 லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்கி இருக்கிறார். கிட்டத்தட்ட இந்த பிக் பாஸ் சீசன் மூலம் 73 லட்சத்துக்கு மேல் பணத்தை அள்ளிச் சென்றிருக்கிறார் திவ்யா. அதுமட்டுமின்றி திவ்யாவுக்கு மாருதி விக்டோரிஸ் என்கிற சொகுசு காரும் பரிசாக வழங்கப்பட்டது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்தா திவ்யா. 28வது நாளில் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுத்தார். வந்த முதல் வாரத்திலேயே வீட்டு தலயாக தேர்வு செய்யப்பட்டார். அதன்பின்னர் சாண்ட்ரா உடன் இவர் செய்த அட்ராசிட்டியால் அடுத்த வாரமே பின்னடைவை சந்தித்தார். அதன்பின்னர் சுதாரித்துக் கொண்டு கேம் ஆடினார். டிக்கெட் டூ பினாலேவில் கார் டாஸ்கின் போது பார்வதி மற்றும் கம்ருதீனை தில்லாக எதிர்த்ததால் திவ்யாவுக்கு மக்கள் மத்தியில் மவுசு அதிகரித்து அவரை டைட்டில் வின்னராகவும் மாற்றி இருக்கிறது. இனி சினிமாவிலும் அவர் ஹீரோயினாக ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>entertainment</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/bigg-boss/bigg-boss-tamil-season-9-title-winner-divya-ganesh-and-her-prize-details-o9k4nps"/>
        </item>
        <item>
            <title><![CDATA[பார்வதி செஞ்சது தப்புன்னா பிக் பாஸ் தடுத்து நிறுத்திருப்பார் - பாருவுக்கு வக்காலத்து வாங்கிய வியானா]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/bigg-boss/bigg-boss-fame-viyana-supporting-post-for-vj-parvathy-creates-controversy-q7bx5zg</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/bigg-boss/bigg-boss-fame-viyana-supporting-post-for-vj-parvathy-creates-controversy-q7bx5zg</guid>
            <pubDate>Sat, 03 Jan 2026 14:53:47 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் சாண்ட்ராவை டாஸ்கின் போது தள்ளிவிட்ட பார்வதிக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில், அவருக்கு சப்போர்ட் பண்ணி வியானா போட்டுள்ள பதிவு சர்ச்சையில் சிக்கி உள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ke1jc2bwkv3vh8x5wqz6r35r,imgname-bigg-boss-tamil--8--1767431866748.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் சாண்ட்ராவை டாஸ்கின் போது தள்ளிவிட்ட பார்வதிக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில், அவருக்கு சப்போர்ட் பண்ணி வியானா போட்டுள்ள பதிவு சர்ச்சையில் சிக்கி உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிக் பாஸில் நேற்று நடைபெற்ற சம்பவம் தொடர்பாக, சான்ட்ராவுக்கு ஏற்பட்ட நிலை குறித்து தான் மிகவும் வருத்தமடைந்துள்ளதாக வியானா தெரிவித்துள்ளார். பிக்பாஸ் 9 நிகழ்ச்சியில் இடம்பெற்ற கார் டாஸ்க்கை பார்த்தபோது, சான்ட்ராவுக்காக உண்மையிலேயே மனம் கனிந்ததாக அவர் கூறியுள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;அதே நேரத்தில், இந்த சம்பவத்தை வீட்டுக்குள் நடந்ததை விட வெளியே மிகவும் பெரிய பிரச்சினையாக சில போட்டியாளர்கள் மாற்றிக் காட்டி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். பிக்பாஸ் 9-இன் இரண்டாவது டாஸ்க்கிலிருந்தே போட்டியாளர்கள் தீவிரமாகவும், சில நேரங்களில் வன்முறையுடனும் விளையாடி வருவதாகவும், அதை &ldquo;விளையாட்டு இப்படித்தான் இருக்க வேண்டும்&rdquo; என்று நியாயப்படுத்தி வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கார் டாஸ்க் தவறான முறையில் நடைபெற்றிருந்தால், பிக்பாஸ் உடனடியாக அதை நிறுத்தியிருப்பார் அல்லது ரீ-கேம் அறிவித்திருப்பார். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. மாஸ்க் டாஸ்க், தொப்பி டாஸ்க், கேப்டன்சி டாஸ்க், காயின் டாஸ்க், ஜூஸ் டாஸ்க் உள்ளிட்ட பல டாஸ்க்களிலும் இதே போட்டியாளர்கள் அதீதமாக விளையாடியதாக அவர் நினைவூட்டியுள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;மேலும், இதே போட்டியாளர்கள் கடந்த காலங்களில் வீட்டுக்குள் கண் காயம், தலையில் காயம், கால்தசை முறிவு போன்ற கடுமையான காயங்களுக்கு காரணமாக இருந்ததாகவும், அப்போது அனைத்தும் &ldquo;விளையாட்டின் ஒரு பகுதி&rdquo; என சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மென்மையாக விளையாடுபவர்கள் விமர்சனத்துக்கு உள்ளானதாகவும் கூறியுள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சான்ட்ராவுக்கு நடந்தது குறித்து தனக்கு மிகுந்த வருத்தம் இருப்பதாக கூறிய அவர், தற்போதைய நிலையில் சில சக போட்டியாளர்களின் எதிர்வினைகள் மிகைப்படுத்தப்பட்டதாகவும், இதனை சிலர் தங்களுக்கான வெளிச்சமாகவும், புள்ளிகள் சேர்ப்பதற்குமான வாய்ப்பாகவும் பயன்படுத்துவதாகவும் விமர்சித்துள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;இந்த டாஸ்க் உண்மையிலேயே தவறானதாக இருந்திருந்தால், பிக்பாஸ் தலையிட்டிருப்பார். அது நடக்காத நிலையில், இப்போது மட்டும் உணர்ச்சிப்பூர்வமாக பேசுவது கேள்விக்குறியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இரண்டாவது டாஸ்க்கிலிருந்தே இந்த உணர்வு இருந்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பொதுவாக ஒருவரை குறிவைத்து, குழுக்கள் உருவாகி, தனிப்பட்ட லாபத்திற்காக விதிகள் வளைத்துக்கொள்ளப்படுவது வழக்கமாகிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதே செயலை வேறு ஒருவர் செய்திருந்தால், அது சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;இறுதியாக, எல்லாம் யார் விளையாடுகிறார்கள் என்பதையே பொறுத்திருக்கிறது என்றும், தனது பார்வையில் இது திட்டமிட்ட குறிவைப்பாகவே தெரிகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். தன் கருத்துகளில் ஏதேனும் தவறு இருந்தால், அதற்காக மன்னிப்புக் கோருவதாகவும் அவர் கூறியுள்ளார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>entertainment</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/bigg-boss/bigg-boss-fame-viyana-supporting-post-for-vj-parvathy-creates-controversy-q7bx5zg"/>
        </item>
        <item>
            <title><![CDATA[18 லட்சத்தோடு பிக் பாஸ் வீட்டை விட்டு கிளம்பிய பிரபலம்... அவசரப்பட்டுட்டியே தலைவா என குமுறும் ரசிகர்கள்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/bigg-boss/gana-vinoth-takes-cash-box-and-exit-bigg-boss-tamil-season-9-house-qtvgwa5</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/bigg-boss/gana-vinoth-takes-cash-box-and-exit-bigg-boss-tamil-season-9-house-qtvgwa5</guid>
            <pubDate>Thu, 08 Jan 2026 20:43:09 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் பணப்பெட்டி டாஸ்க்கின் முடிவில் 18 லட்சம் பணத்தோடு போட்டியாளர் ஒருவர் வெளியேறி உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அந்த பிரபலம் யார் என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kef2bre5wfys4vknnn7mpygs,imgname-bigg-boss-tamil--11--1767884841412.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் பணப்பெட்டி டாஸ்க்கின் முடிவில் 18 லட்சம் பணத்தோடு போட்டியாளர் ஒருவர் வெளியேறி உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அந்த பிரபலம் யார் என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அந்நிகழ்ச்சி முடிவடைய இன்னும் ஒரு வாரம் மட்டுமே எஞ்சி உள்ளது. தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் கானா வினோத், திவ்யா கணேஷ், சாண்ட்ரா, விக்கல்ஸ் விக்ரம், அரோரா, சபரிநாதன் ஆகிய 6 போட்டியாளர்கள் உள்ளனர். அவர்களை ஊக்குவிக்க இந்த சீசனில் இதுவரை எலிமினேட் ஆன திவாகர், பிரவீன், ரம்யா ஜோ, பிரவீன் காந்தி, அப்சரா, வியானா உள்ளிட்ட போட்டியாளர்களும் உள்ளே சென்றுள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பதே பிக் பாஸின் தாரக மந்திரம். அதற்கு ஏற்றார் போல் பல்வேறு ட்விஸ்ட்களும் இந்த நிகழ்ச்சியில் அடங்கியிருக்கும். அதன்படி இந்த வாரம் பணப்பெட்டி டாஸ்க் நடத்தப்பட்டது. இதுவரை எந்த சீசனிலும் இல்லாத வகையில் புதுமையாக இந்த டாஸ்கை நடத்தினர். போட்டியாளர்களுக்கு வெவ்வேறு விதமான டாஸ்க் கொடுக்கப்பட்டு அதில் அவர்கள் ஜெயிக்கும் பணத்தை கேஸ் பாக்ஸ் இல் வைத்து இறுதியாக எவ்வளவு வருகிறதோ அதை எடுத்துச் செல்லலாம் என்கிற ஜாக்பாட் அறிவிப்பை பிக் பாஸ் வெளியிட்டு இருந்தார். இதனால் ஒவ்வொரு டாஸ்கையும் போட்டியாளர்கள் முனைப்போடு விளையாடினர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பணப்பெட்டி டாஸ்கின் தொடக்கத்தில் இந்தப் பெட்டியை சான்ட்ரா தான் எடுத்துச் செல்வார் என அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் அதில் ஒரு எதிர்பாராத ட்விஸ்ட் நடந்துள்ளது. கானா வினோத் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். இந்த சீசனில் டைட்டில் வெல்லும் அளவுக்கு மவுசோடு இருந்த கானா வினோத் தற்போது பணப்பெட்டியோடு வெளியேறி இருப்பது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அவர் 18 லட்சம் பணத்துடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கானா வினோத்தின் இந்த முடிவு பிக் பாஸ் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் ஒரு வாரம் காத்திருந்தால் 50 லட்சம் பணத்தை வென்றிருக்கலாமே என ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை கொட்டி வருகின்றனர். கானா வினோத் பணப்பெட்டியோடு வெளியேறி உள்ளதால் இந்த சீசனில் திவ்ய கணேஷ் டைட்டில் வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக நெட்டிசன்கள் கணித்துள்ளனர். அது நடக்குமா இல்லையா என்பது இன்னும் ஒரு வாரத்தில் தெரிந்து விடும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>entertainment</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/bigg-boss/gana-vinoth-takes-cash-box-and-exit-bigg-boss-tamil-season-9-house-qtvgwa5"/>
        </item>
        <item>
            <title><![CDATA[திரைத்துறையிலும் கோலோச்சிய சி.ஜே. ராய்.. இத்தனை படங்கள் தயாரித்துள்ளாரா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/entertainment/confident-group-founder-cj-roy-dies-a-look-at-his-major-film-productions-articleshow-rvma860</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/entertainment/confident-group-founder-cj-roy-dies-a-look-at-his-major-film-productions-articleshow-rvma860</guid>
            <pubDate>Fri, 30 Jan 2026 19:11:32 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;திரைப்படத் தயாரிப்பு மட்டுமின்றி, தொலைக்காட்சித் துறையிலும் சி.ஜே. ராய் தீவிரமாக இருந்தார். பிக் பாஸ் கன்னட சீசன் 11-க்கு கான்ஃபிடன்ட் குரூப் ஸ்பான்சர் செய்தது.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kg7fyvat1nks64v17zycjc3g,imgname-movies-produced-by-cj-roy-1769778146649.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கான்ஃபிடன்ட் குரூப் உரிமையாளர் சி.ஜே. ராய் இன்று பெங்களூருவில் உள்ள தனது அலுவலகத்தில் தற்கொலை செய்து கொண்டார். வரி ஏய்ப்பு புகாரைத் தொடர்ந்து இன்று அவரது அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தியபோது அவர் தன்னைத் தானே துப்ப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;திரைத்துறையிலும் கோலோச்சிய சி.ஜே. ராய்&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;கான்ஃபிடன்ட் குரூப் ரியல் எஸ்டேட் நிறுவனம் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் சிறந்து விளங்கிய நிலையில், சி.ஜே. ராயின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொழில் அதிபர் என்பதைத் தாண்டி, திரைப்படத் தயாரிப்பிலும் சி.ஜே. ராய் தீவிரமாக இருந்தார். பாவனாவின் 90வது படமாக உருவாகும் 'அனோமி' என்ற படத்தின் தயாரிப்பு பங்குதாரராகவும் சி.ஜே. ராய் இருந்தார்.&lt;/p&gt;&lt;h3&gt;&lt;strong&gt;மோகன்லால் பட தயாரிப்பாளர்&lt;/strong&gt;&lt;/h3&gt;&lt;p&gt;மோகன்லால் நாயகனாக நடித்த, ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கிய 'காசனோவா' படத்தின் மூலம் கான்ஃபிடன்ட் குரூப் திரைப்படத் தயாரிப்பில் இறங்கியது. பின்னர், சித்திக் இயக்கிய 'லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன்' படத்தையும் சி.ஜே. ராய் தயாரித்தார். இந்தப் படம் 2013-ல் வெளியானது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;மரைக்காயர், அரபிக்கடலின் சிங்கம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;'வெள்ளிமூங்கா' படம் மூலம் பிரபலமான ஜிபு ஜேக்கப் இயக்கிய சுரேஷ் கோபியின் 'மே ஹூம் மூசா' மற்றும் மோகன்லால் நாயகனாக நடித்த பிரியதர்ஷன் இயக்கிய பிரம்மாண்ட படமான 'மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம்' ஆகியவற்றின் தயாரிப்புப் பணிகளிலும் சி.ஜே. ராய் ஈடுபட்டிருந்தார். கடந்த ஆண்டு வெளியான, டோவினோ தாமஸ் நடித்த 'ஐடென்டிட்டி' படத்தையும் சி.ஜே. ராயின் கான்ஃபிடன்ட் குரூப் தயாரித்தது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;தொலைக்காட்சித் துறையிலும் ஸ்பான்சர்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;திரைப்படத் தயாரிப்பு மட்டுமின்றி, தொலைக்காட்சித் துறையிலும் சி.ஜே. ராய் தீவிரமாக இருந்தார். பிக் பாஸ் கன்னட சீசன் 11-க்கு கான்ஃபிடன்ட் குரூப் ஸ்பான்சர் செய்தது. மேலும், ஸ்டார் சுவர்ணாவின் ஸ்டார் சிங்கர் மியூசிக் ரியாலிட்டி ஷோவையும் கான்ஃபிடன்ட் குரூப் ஸ்பான்சர் செய்தது. மலையாள பிக் பாஸ் சீசன் 7 ரன்னர்-அப் அனீஷ் டி.ஏ-க்கு நிகழ்ச்சி முடிந்த பிறகு பத்து லட்சம் ரூபாய் பரிசாக வழங்கியதும் விவாதமானது என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>entertainment</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/entertainment/confident-group-founder-cj-roy-dies-a-look-at-his-major-film-productions-articleshow-rvma860"/>
        </item>
        <item>
            <title><![CDATA[காட்டுத்தீ போல் பரவும் வில்லங்கமான வீடியோ... பாரு - கம்ருதீனுக்கு ரெட் கார்டு கொடுக்கப்படுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/bigg-boss/bigg-boss-vj-parvathy-and-kamrudin-viral-video-surfing-on-social-media-toxuh3v</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/bigg-boss/bigg-boss-vj-parvathy-and-kamrudin-viral-video-surfing-on-social-media-toxuh3v</guid>
            <pubDate>Fri, 02 Jan 2026 17:29:12 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் காதல் ஜோடியாக வலம் வரும் பார்வதி மற்றும் கம்ருதீனை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகிறார்கள். அதைப்பற்றி பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kdz81drhkvnqp5xwemd806kb,imgname-bigg-boss-tamil-1767353923345.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் காதல் ஜோடியாக வலம் வரும் பார்வதி மற்றும் கம்ருதீனை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகிறார்கள். அதைப்பற்றி பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சண்டைகளும் சர்ச்சைகளும் நிறைந்த நிகழ்ச்சி தான் பிக் பாஸ். தமிழில் இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக 8 சீசன்கள் இதுவரை நடந்து முடிந்துள்ள நிலையில், கடந்த அக்டோபர் மாதம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் தொடங்கப்பட்டது. இந்த சீசன் தொடங்கியதில் இருந்து எந்த விறுவிறுப்பும் இன்றி மந்தமாக சென்று கொண்டிருந்தது. பிக் பாஸ் வரலாற்றிலேயே மிகவும் மோசமான சீசன் என்கிற பெயரையும் எடுத்தது. இந்த சீசன் இன்னும் ஓரிரு வாரங்களில் முடிவடைய உள்ள நிலையில் தற்போது ஆட்டம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிக் பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை ஒவ்வொரு சீசனிலும் சர்ச்சைக்குரிய போட்டியாளர் சிலர் இருப்பர். அந்த வகையில் இந்த சீசனிலும் அதற்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. இந்த சீசனில் சர்ச்சைக்குரிய ஜோடியாக பார்வதி மற்றும் கம்ருதீன் வலம் வருகிறார்கள். இவர்களை ரசிகர்களே டாக்ஸிக் கப்பிள்ஸ் என அழைக்கும் அளவுக்கு தரக்குறைவான செயல்களை செய்து தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகின்றனர். இவர்களை உடனடியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என இணையத்தில் ஏராளமானோர் வலியுறுத்தி வருகிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த நிலையில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்கில் சான்றாவை மிகவும் கொச்சையான வார்த்தைகளால் திட்டி அவரை கீழே தள்ளி வெளியேற்றிய கம்ருதீனுக்கு கடும் கண்டனங்கள் எழுத வண்ணம் உள்ளன. அதை உடனிருந்து பார்த்துக் கொண்டிருந்த பார்வதியையும் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள். கம்ரோதனின் இந்த செயலால் அவரை இந்த வாரம் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர். விஜய் சேதுபதியை டேக் செய்து கம்ருதீன் மற்றும் பார்வதி செய்யும் லீலைகளை பதிவிட்டு வருகிறார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;pic.twitter.com/ljedgG7NyS&lt;/p&gt;&lt;p&gt;&mdash; Monster  (@mons_bbt8) January 2, 2026&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதேபோல் இந்த வாரம் விஜய் சேதுபதி புத்தாண்டுக்காக வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவருக்கும் புது ஆடைகள் வழங்கியது மட்டுமின்றி, இரவு விருந்தும் ஏற்பாடு செய்திருந்தார். இந்த இந்த விருந்தின் போது பார்வதியும் கம்யூனிதிலும் அருகருகே அமர்ந்து சாப்பிட்ட நிலையில், கம்ருதீன் பார்வதியை பார்த்து ஹோமிலியாக இருக்கிறாய் என சொல்ல, அதற்கு அவர் வேணும்னா ஹாட்டா மாறிடவா என டபுள் மீனிங்கில் ஜோக் அடித்து சிரித்துள்ளார். அவர்கள் இருவரும் இப்படி கொச்சையாக பேசிக் கொள்ளும் வீடியோவை நெட்டிசன்கள் வைரலாக்கி வருவதோடு, இந்த வாரம் இருவரையும் ஜோடியாக எலிமினேட் செய்யுங்கள் உங்களுக்கு டிஆர்பி பிச்சிக்கும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;Paaru to Kamrudin : Hot ah maridava~ Naalaiku Paaru ku Adi iruku #BiggBossTamil9 #BiggBossTamil&amp;nbsp;pic.twitter.com/jnOt3o8prl https://t.co/Fsm4yDGTUR&lt;/p&gt;&lt;p&gt;&mdash; Tharani ʀᴛᴋ (@iam_Tharani) January 1, 2026&lt;/p&gt;&lt;p&gt;She don&rsquo;t even deserve top 5! Worst creature. If she win TTF, it&rsquo;s a disgrace. #Biggbosstamil9&amp;nbsp;pic.twitter.com/0v2Mt4ATaA&lt;/p&gt;&lt;p&gt;&mdash; Realityfan (@Reality28548778) January 2, 2026&lt;/p&gt;]]></content:encoded>
            <category>entertainment</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/bigg-boss/bigg-boss-vj-parvathy-and-kamrudin-viral-video-surfing-on-social-media-toxuh3v"/>
        </item>
        <item>
            <title><![CDATA[‘ஊரையே அடக்கி ஆண்ட தேவரய்யா...’ சிவாஜிக்கு இப்படி ஒரு மரணமா..? ரகசியம் உடைத்த கவுண்டமணி..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/is-this-the-death-of-shivaji-goundamani-broke-the-secret-u3ygo42</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/is-this-the-death-of-shivaji-goundamani-broke-the-secret-u3ygo42</guid>
            <pubDate>Thu, 12 Feb 2026 13:01:44 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;அந்த பதிலை எதிர்பார்க்காத சிவாஜி வாயை பொத்தி திகைத்துப் போனார். முன்னாள் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை இப்போது வெகுமானம் ஆக்கிக் கொண்டு வீடு திரும்பினார் கவுண்டமணி.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kh8bxbmp2cpp3mmkr7c2q088,imgname-goundamani-1770881199765.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;அந்த பதிலை எதிர்பார்க்காத சிவாஜி வாயை பொத்தி திகைத்துப் போனார். முன்னாள் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை இப்போது வெகுமானம் ஆக்கிக் கொண்டு வீடு திரும்பினார் கவுண்டமணி.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நடிகர் திலகம் சிவாஜி சோர்வாகவோ அல்லது மனக்கஷ்டத்தில் இருந்தாலோ &lsquo;&lsquo;யேப்பா.. அந்த கவுண்டமணி ஜோக்குகளை கொஞ்சம் போட்டு விடுங்கப்பா..&rsquo;&rsquo; எனச் சொல்லி அவரது நகைச்சுவை காட்சிகளை பார்த்து மனதை புத்துணர்ச்சி ஆக்கிக் கொள்வாராம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். ஆனாலும், கவுண்டமணிக்கும், சிவாஜிக்கும் இடையே ஒரு ஈகோ யுத்தம் நடந்து கொண்டே இருந்திருக்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;சிவாஜி கணேசன் வீட்டில் அடிக்கடி விருந்து நடப்பது வழக்கம். ஆனால், கவுண்டமணி யார் வீட்டிற்கும் விருந்துக்கு செல்ல மாட்டார். கவுண்டமணியின் இந்தக் கொள்கையை அறிந்து, அதை உடைத்தெரிய வேண்டும் என்கிற முடிவுக்கு வந்துவிட்டார் சிவாஜி. அப்போது பல படங்களில் இணைந்து நடித்துக் கொண்டு இருந்ததால் பிரபுவுக்கும், கவுண்டமணிக்கும் நல்ல நட்பு இருந்தது. அந்த நட்பை வைத்து பிரபு மூலம் கவுண்டமணியை வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுக்கத் திட்டமிட்டார் சிவாஜி.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lsquo;அந்த கவுண்டரை விருந்துக்கு அழைத்து வா..&rsquo;&rsquo; என சிவாஜி கட்டளையிட, பிரபு, கவுண்டமணி வீட்டிற்கு கிளம்பினார். அங்கே சென்ற பிறகு &lsquo;&lsquo;அண்ணே... அப்பா இதுவரை யாரையுமே வீட்டிற்கு சென்று விருந்துக்கு அழைத்ததில்லை. உங்களைத் தான் இப்படி முதல் முறையாக அழைத்திருக்கிறார். எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது&rsquo;&rsquo; என சிலாகித்துச் சொல்ல, கவுண்டமணியால் மறுக்க முடியவில்லை. அப்போது சிவாஜியின் அன்னை இல்லத்திற்குள் பலரும் உணவருந்திக் கொண்டிருந்தனர். கவுண்டமணி காரிலிருந்து இறங்கி வருவதை பார்த்து விட்ட சிவாஜி. &lsquo;&lsquo; என்னய்யா கவுண்டர்... நலமா..?&rsquo;&rsquo; என வரவேற்று உட்கார வைத்துவிட்டார்.&lt;/p&gt;&lt;p&gt;எல்லோரும் வீட்டிற்குள் விருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க, கவுண்டமணிக்கு வரவேற்பு அறையிலேயே சாப்பாட்டை போட்டார்கள். அத்தோடு அவமானப்படுத்தாமல் விட்டாரா சிவாஜி? &lsquo;&lsquo;கவுண்டரே நம்ம வீட்ல இப்படி விருந்து வைக்கிறது அடிக்கடி நடக்கிறதுதான். நாலு பேருக்கு சாப்பாடு போட்டு அனுப்புவது எங்க வீட்டு வழக்கம். பாவம் இல்லாத ஏழைகளுக்கு சாப்பாடு போட்டா அந்த புண்ணியம் நமக்கு தானே. அதுதான் உன்னையும் கூப்பிட்டேன்&rsquo;&rsquo; என நேராகவே கவுண்டமணியை அவமானப்படுத்தி விட்டார் சிவாஜி.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த சம்பவம் நடந்து ஓரிரு ஆண்டுகள் கழிந்தது. தேவர்மகன் படத்தின் பிரிவியூ காட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த தியேட்டருக்கு கவுண்டமணியும் வந்திருந்தார். எல்லோரும் படத்தைப் பார்த்து வெகுவாக சிலாகித்துக் கொண்டிருந்தார்கள். இதனால் மிகவும் சந்தோஷமாக காணப்பட்டார் சிவாஜி. படம் முடிந்த பிறகு கவுண்டமணி ஓரமாக ஒதுங்கி வெளியேற முயற்சித்தார். அதை பார்த்துவிட்ட சிவாஜி, &lsquo;&lsquo;அதோ போறான் பாரு கவுண்டர். அவனை கூப்பிடுங்க&rsquo;&rsquo; என அழைக்க, கவுண்டமணி, சிவாஜி அருகில் வந்தார். அப்போது &lsquo;&lsquo;தேவர் இந்த படத்துல வாழ்ந்திருக்காரா..? எப்படி நம்ம நடிப்பு? ஊரையே கட்டுப்பாட்டுக்குள்ள வைச்சிருக்கிற தேவர் கம்பீரமா இருக்காரா? எனக் கேட்டார்.&lt;/p&gt;&lt;p&gt;&lsquo;&lsquo;படத்தை பத்தி ஒன்னு சொல்வேன். நீங்க தப்பா எடுத்துக்கக்கூடாது&rsquo;&rsquo; என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார். சிவாஜியும் அதெல்லாம் எதுவும் சொல்ல மாட்டேன். படத்தை பற்றிய உன் கருத்தை சொல்லு என கேட்டிருக்கிறார். உடனே கவுண்டமணி, &lsquo;&lsquo;நீங்க படத்துல பெரிய தேவர். நீங்க நடந்தா ஊரே நடக்குது... நீங்க நின்னா ஊரே உட்காருது. அப்படி அவ்வளவு பெரிய ஆளா படத்துல வரீங்க. ஆனா ஒன்னு இவ்ளோ பெரிய மனுஷன் நீங்க. ஒரு சின்ன புள்ளை மிதிச்சதால செத்து போயிட்டீங்களே. இதைத் தாண்டி படத்துல சொல்ல ஒன்னும் இல்லை&rsquo;&rsquo; என ஒரே போடாக போட்டிருக்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அந்த பதிலை எதிர்பார்க்காத சிவாஜி வாயை பொத்தி திகைத்துப் போனார். முன்னாள் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை இப்போது வெகுமானம் ஆக்கிக் கொண்டு வீடு திரும்பினார் கவுண்டமணி. இந்த தகவலை மறைந்த முன்னாள் சினிமா பத்திரிகையாளர் நெல்லை பாரதி பகிர்ந்து கொண்டுள்ளார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>entertainment</category>
            <dc:creator>Thiraviya raj</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/is-this-the-death-of-shivaji-goundamani-broke-the-secret-u3ygo42"/>
        </item>
        <item>
            <title><![CDATA[சீட்டின் நுனிக்கே வரவைக்கும் சஸ்பென்ஸ்! இந்த Survival த்ரில்லர் படங்களை மிஸ் பண்ணாதீங்க!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/webstories/entertainment/best-survival-thriller-movies-to-watch-on-ott-platforms-wdwsoqz</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/webstories/entertainment/best-survival-thriller-movies-to-watch-on-ott-platforms-wdwsoqz</guid>
            <pubDate>Thu, 09 Apr 2026 19:31:51 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Best Survival Movies: மரணத்தின் விளிம்பு வரை சென்று உயிர் பிழைக்கும் கதைகள் உங்களுக்குப் பிடிக்குமா? அப்படி ஒரு த்ரில்லிங் அனுபவத்தைத் தரும் சில சிறந்த சர்வைவல் படங்களின் பட்டியலை பார்ப்போம்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kns5zymk1jn6qh4te0jw1mts,imgname-survaival-movies-1775740385938.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <category>entertainment</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/webstories/entertainment/best-survival-thriller-movies-to-watch-on-ott-platforms-wdwsoqz"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Samantha: நூலிழையில் தப்பித்தேன்.. இல்லனா சாவித்திரி போல.. காதல் வலிகள் குறித்து சமந்தா உருக்கம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/entertainment/samantha-reveals-she-almost-had-a-tragic-love-life-like-savitri-wgrqxbf</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/entertainment/samantha-reveals-she-almost-had-a-tragic-love-life-like-savitri-wgrqxbf</guid>
            <pubDate>Thu, 09 Apr 2026 15:44:15 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;காதல் குறித்து நடிகை சமந்தா பேசிய ஒரு பழைய பேச்சு இப்போது வைரலாகி வருகிறது. ஒருவரை கண்மூடித்தனமாக நம்பியதாகவும், நூலிழையில் தப்பித்ததாகவும், இல்லையென்றால் தன் வாழ்க்கையும் நடிகை சாவித்திரி போல ஆகியிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jkj4tfyfg3cy5m7yee9t9sqz,imgname-naga-chaitanya-samantha.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;காதல் குறித்து நடிகை சமந்தா பேசிய ஒரு பழைய பேச்சு இப்போது வைரலாகி வருகிறது. ஒருவரை கண்மூடித்தனமாக நம்பியதாகவும், நூலிழையில் தப்பித்ததாகவும், இல்லையென்றால் தன் வாழ்க்கையும் நடிகை சாவித்திரி போல ஆகியிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சமந்தா சமீபத்தில் இயக்குநர் ராஜ் நிடிமோருவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகின. இதற்கு முன்பு, அவர் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார். சுமார் ஏழு வருட காதல், பெற்றோர் சம்மதத்துடன் பிரம்மாண்டமாக நடந்த திருமணம் என எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால், திருமணமான நான்கே ஆண்டுகளில் இருவரும் பிரிந்துவிட்டனர். இந்நிலையில், காதல் குறித்து சமந்தா பேசிய ஒரு பழைய கருத்து இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;சமந்தா, 2018-ல் வெளியான 'மகாநடி' படத்தில் நடித்திருந்தார். இது பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு. நாக் அஸ்வின் இயக்கிய இந்த படத்தில், கீர்த்தி சுரேஷ் சாவித்திரியாகவும், துல்கர் சல்மான் ஜெமினி கணேசனாகவும் நடித்திருந்தனர். இதில் சமந்தா ஒரு ரிப்போர்ட்டராக நடித்தார். அவருக்கு ஜோடியாக விஜய் தேவரகொண்டா நடித்திருந்தார். இந்த படம் பெரிய ஹிட் ஆனதுடன், கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருதையும் பெற்றுத் தந்தது.&lt;img&gt;&lt;p&gt;'மகாநடி' படம் வெளியான சமயத்தில் சமந்தா ஒரு பேட்டியில், &quot;சாவித்திரி அம்மாவைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. இந்த படம் நடித்த பிறகுதான் பல விஷயங்கள் புரிந்தது. சில இடங்களில், 'அட... இது என் கதை போலவே இருக்கிறதே' என்று தோன்றியது. காதல் விஷயத்தில் ஒருமுறை நானும் இப்படித்தான் ஒருவரை நம்பினேன். ஆனால், அதிர்ஷ்டவசமாக நூலிழையில் தப்பித்தேன். அதிலிருந்து சீக்கிரம் வெளியே வந்துவிட்டேன். &amp;nbsp;இல்லையென்றால் என் கதையும் சாவித்திரி போல ஆகியிருக்கும். நான் செய்த புண்ணியம், என் அதிர்ஷ்டத்தால்தான் எனக்கு சை (நாக சைதன்யா) கிடைத்தார்&quot; என்று கூறியிருந்தார். நாக சைதன்யாவுக்கு முன்பு அவர் சித்தார்த் என்ற நடிகருடன் காதலில் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், சமந்தா அவரைத்தான் குறிப்பிடுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சமந்தாவும் நாக சைதன்யாவும் 'ஏ மாய சேசாவே' படத்தில் இணைந்து நடித்தபோது காதலில் விழுந்தனர். அதன்பிறகு 'மனம்', 'ஆட்டோநகர் சூர்யா', 'மஜிலி' போன்ற படங்களிலும் சேர்ந்து நடித்தனர். 2017-ல் திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடி, 2021-ல் பிரிந்தது. தற்போது நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவையும், சமந்தா, இயக்குநர் ராஜ் நிடிமோருவையும் திருமணம் செய்துகொண்டதாக செய்திகள் பரவி வருகின்றன. சமந்தா அடுத்ததாக &lsquo;மா இன்டி பங்காரம்&rsquo; என்ற படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>entertainment</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/entertainment/samantha-reveals-she-almost-had-a-tragic-love-life-like-savitri-wgrqxbf"/>
        </item>
    </channel>
</rss>
