<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes"?>
<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Thu, 04 Jun 2026 17:55:13 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss/entertainment" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[Pradeep Rangathan Film Update : மீண்டும் இணையும் Dude ஜோடி! தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கும் பிரதீப் ரங்கநாதன்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/entertainment/pradeep-ranganathan-reunites-with-the-dude-duo-and-turns-producer-0ptkbkv</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/entertainment/pradeep-ranganathan-reunites-with-the-dude-duo-and-turns-producer-0ptkbkv</guid>
            <pubDate>Tue, 26 May 2026 13:37:47 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Pradeep Rangathan Film Update : தமிழ் திரையுலகில் குறுகிய காலத்திலேயே இளைஞர்களின் மனதைக் கவர்ந்து முன்னணி நட்சத்திரமாக உருவெடுத்திருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இப்போது இவர் தமிழ் திரைப்படம் ஒன்றை தயாரித்து வருவது எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k8j3h95a1d24hrnjv1phzyqs,imgname-fotojet--15--1761544283306.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Pradeep Rangathan Film Update : தமிழ் திரையுலகில் குறுகிய காலத்திலேயே இளைஞர்களின் மனதைக் கவர்ந்து முன்னணி நட்சத்திரமாக உருவெடுத்திருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இப்போது இவர் தமிழ் திரைப்படம் ஒன்றை தயாரித்து வருவது எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜெயம் ரவி நடித்த 'கோமாளி' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப், அடுத்ததாகத் தானே இயக்கி, நாயகனாக நடித்த 'லவ் டுடே' படத்தின் மூலம் ஒட்டுமொத்த கோலிவுட்டையும் தன் பக்கம் திருப்பினார்.&lt;/p&gt;&lt;p&gt;அந்தப் படத்தைத் தொடர்ந்து இவர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடித்த 'டிராகன்' மற்றும் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடித்த 'டியூட்' ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து பாக்ஸ் ஆபீஸில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்து இமாலய வெற்றி பெற்றன. தான் கதாநாயகனாக நடித்த முதல் மூன்று படங்களுமே ரூ. 100 கோடி கிளப்பில் இணைந்ததால், கோலிவுட்டில் பிரதீப்பின் மார்க்கெட் மதிப்பு மளமளவென உயர்ந்தது. இதன் பின்னர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (LIK) திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று, சுமார் 70 கோடி ரூபாய் வரை வசூலை ஈட்டியது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதற்கிடையே, ஏஜிஎஸ் (AGS) என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் ஒரு புதிய பிரம்மாண்ட திரைப்படத்தை பிரதீப் ரங்கநாதன் மீண்டும் இயக்கவுள்ளதாகவும், அவரே அதில் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில், திரைத்துறையில் இயக்குநர் மற்றும் நடிகராகத் தடம் பதித்த பிரதீப், தற்போது தனது அடுத்த பரிமாணமாகப் புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றைச் சத்தமில்லாமல் தொடங்கியுள்ளார். தனது தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படத்திற்கான வேலைகளையும் அவர் முழுவீச்சில் ஆரம்பித்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தளபதி விஜய்யின் வெளிவரவிருக்கும் ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் பார்வையை ஈர்த்த மமிதா பைஜூ, இந்த புதிய திரைப்படத்தில், கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 'டியூட்' திரைப்படத்திற்கு பின்னர் அவர் பிரதீப்புடன் இணைந்துள்ளார். தற்போது இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் எவ்வித ஆரவாரமும் இன்றி சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகத் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.&lt;/p&gt;&lt;p&gt;இயக்கம், நடிப்பு எனப் பன்முகத்திறமை காட்டி வரும் பிரதீப் ரங்கநாதன், தற்போது தயாரிப்பாளர் அவதாரம எடுத்திருப்பது அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>entertainment</category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/entertainment/pradeep-ranganathan-reunites-with-the-dude-duo-and-turns-producer-0ptkbkv"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ரஜினி முதல் விஜய் வரை.. 2026-ல் நம்ம ஊரு ஸ்டார்களின் டாப் 5 'காஸ்ட்லி' கார்கள்.. முழு லிஸ்ட் இதோ!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/auto/top-5-costliest-cars-of-tamil-cinema-stars-in-2026-rajini-to-vijay-0qud11w</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/auto/top-5-costliest-cars-of-tamil-cinema-stars-in-2026-rajini-to-vijay-0qud11w</guid>
            <pubDate>Tue, 14 Apr 2026 20:10:54 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Tamil Actor Luxury Cars 2026: ரஜினி முதல் விஜய் வரை காஸ்ட்லி கார்களை வைத்திருக்கும் பிரபலங்கள் யார்? அந்த கார்களின் ஸ்பெஷல் என்ன? என்பது குறித்து பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kp66pzdctd6hyb16k03sg97d,imgname-cinema-top-5-cars-1776177348012.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Tamil Actor Luxury Cars 2026: ரஜினி முதல் விஜய் வரை காஸ்ட்லி கார்களை வைத்திருக்கும் பிரபலங்கள் யார்? அந்த கார்களின் ஸ்பெஷல் என்ன? என்பது குறித்து பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழகத்தில் சென்னை, கோவை போன்ற பெரு மாநகரங்களில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார்களை பார்ப்பது இப்போது சாதாரணமான ஒன்றாகிவிட்டது. திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள் தங்களின் அந்தஸ்திற்கு ஏற்ப உலகின் மிகச்சிறந்த கார்களை இறக்குமதி செய்து பயன்படுத்துகின்றனர். 2026-ஆம் ஆண்டின் நிலவரப்படி, சினிமா பிரபலங்கள் வைத்திருக்கும் டாப் 5 கார்களை விரிவாக பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நடிகர் தனுஷ் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் என்ற விலை உயர்ந்த காரை வைத்துள்ளார். சொகுசு கார்களின் சக்கரவர்த்தி என்று அழைக்கப்படும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதல் SUV ரகம் இது. நடிகர் தனுஷ் தனது பிரத்யேகத் தேவைகளுக்கேற்ப இதனை வடிவமைத்துள்ளார். இதில் 6.75 லிட்டர் V12 ட்வின்-டர்போ எஞ்சின் உள்ளது. இதன் உட்புறம் ஒரு நடமாடும் அரண்மனை போலவே இருக்கும். தார் சாலைகள் மட்டுமின்றி, கரடுமுரடான பாதைகளிலும் மிக மென்மையாகச் செல்லும் திறன் கொண்டது. இதன் விலை ரூ.10.5 கோடி முதல் ரூ.12.5 கோடி வரை இருக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நடிகரும், தவெக தலைவருமான விஜய் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரின் பிரியராக இருந்து வருகிறார். இவரிடம் உள்ள 'கோஸ்ட்' மாடல் அதன் அமைதியான பயணத்திற்குப் பெயர் பெற்றது. ஒரு வாகனம் சாலையில் ஓடும்போது சத்தமே கேட்காத அளவிற்கு இதன் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் கதவுகள் பட்டனை அழுத்தினால் தானாகவே மூடிக்கொள்ளும் வசதி கொண்டது. இந்த மாடலின் விலை ரூ.8.5 கோடி முதல் ரூ.9.5 கோடி வரை ஆகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் STRஎனப்படும் சிலம்பரசன் ₹4.2 - ₹4.6 கோடி மதிப்புடைய லம்போர்கினி உருஸ் மாடல் காரை வைத்துள்ளனர். சூப்பர் கார்களின் வேகமும், SUV கார்களின் கம்பீரமும் இணைந்ததுதான் இந்த லம்போர்கினி உருஸ். இந்த கார் வெறும் 3.6 வினாடிகளில் 100 கி.மீ வேகத்தை எட்டும் திறன் கொண்டது. இளைஞர்களின் கனவு காரான இது, தமிழ்நாட்டின் ஸ்போர்ட்ஸ் கார் சந்தையில் முதலிடத்தில் உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் மெர்சிடிஸ் மேபேக் S-கிளாஸ் மாடல் காரை வைத்துள்ளனர். இந்த காரின் விலை ரூ.3.5 கோடி முதல் ரூ.4 கோடி வரை இருக்கும். சொகுசு மற்றும் பாதுகாப்பிற்கு மெர்சிடிஸ் மேபேக் ஒரு சிறந்த உதாரணம். இதன் பின் இருக்கைகள் விமானத்தின் 'பிசினஸ் கிளாஸ்' இருக்கைகள் போல சாய்ந்து படுக்கும் வசதி கொண்டவை. மசாஜ் செய்யும் வசதி, குளிர்சாதனப் பெட்டி என ஒரு வீட்டிற்குத் தேவையான அனைத்து வசதிகளும் இந்த காரில் உள்ளது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகை நயன்தாரா ₹2.15 - ₹2.75 கோடி மதிப்புடைய பிஎம்டபிள்யூ i7 கார் மாடலை வைத்துள்ளார். இது முழுமையான மின்சார சொகுசு கார் ஆகும். இதில் உள்ள 31.3 அங்குல 'தியேட்டர் ஸ்கிரீன்' பயணத்தின்போது சினிமா பார்க்கும் அனுபவத்தைத் தரும். பெட்ரோல் செலவு இல்லாமல், அதிநவீன தொழில்நுட்பத்துடன் வலம் வரும் இந்த மாடல் எதிர்காலத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>entertainment</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/auto/top-5-costliest-cars-of-tamil-cinema-stars-in-2026-rajini-to-vijay-0qud11w"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Lagaan Re-Release: 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தியேட்டருக்கு வரும் 'லகான்'!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/aamir-khan-classic-lagaan-returns-to-cinemas-for-25th-anniversary-0rf0tk6</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/aamir-khan-classic-lagaan-returns-to-cinemas-for-25th-anniversary-0rf0tk6</guid>
            <pubDate>Thu, 04 Jun 2026 17:55:11 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Lagaan Re-Release:அமீர் கானின் கல்ட் கிளாசிக் படமான 'லகான்' வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, ஜூன் 12, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதை முன்னிட்டு, அப்படத்தின் புதிய டிரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kh1n80mchd80c1a59vkx2v6p,imgname-lagaan-1770656105099.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Lagaan Re-Release:அமீர் கானின் கல்ட் கிளாசிக் படமான 'லகான்' வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, ஜூன் 12, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதை முன்னிட்டு, அப்படத்தின் புதிய டிரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;லகான் வெளியாகி கால் நூற்றாண்டு கடந்த நிலையில் அது மீண்டும் பெரிய திரைக்கு வருகிறது. படத்தின் 25வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் விதமாக, ஜூன் 12, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் சிறப்புத் திரையிடலை தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். அமீர் கான் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சமூக வலைத்தளத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டது. கோடிக்கணக்கான இதயங்களைத் தொட்ட இந்த காவியத்தின் மேஜிக்கை மீண்டும் திரையரங்குகளில் கொண்டாடுமாறு ரசிகர்களை அழைத்துள்ளது. ரசிகர்கள் கமெண்ட்ஸ் பகுதியில் ஹார்ட்டின்களைப் பறக்கவிட்டு, இது ஒரு மிகச்சிறந்த திரைப்படம் என்று பாராட்டி வருகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;மேலும் படிக்க: அமீர் கானின் சொகுசு வீடுகள்: மும்பை அபார்ட்மெண்ட் முதல் பஞ்ச்கனி பங்களா வரை (புகைப்படங்கள்)&lt;/strong&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;புதிதாக வெளியிடப்பட்ட டிரெய்லர், இந்திய சினிமாவில் நீங்கா இடம்பிடித்த இந்தப் படத்தின் நினைவுகளுக்கு ஒரு சமர்ப்பணமாக அமைந்துள்ளது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இருந்த கிராமப்புற இந்தியாவிற்கு இது நம்மை அழைத்துச் செல்கிறது. படத்தின் சக்திவாய்ந்த கதை மற்றும் உணர்ச்சிகரமான தருணங்களை மீண்டும் நினைவூட்டுகிறது. நட்பு, தைரியம், ஒற்றுமை, காதல், மற்றும் வெற்றிக்கான போராட்டம் என 'லகான்' படத்தை ஒரு கலாச்சார நிகழ்வாக மாற்றிய அனைத்தையும் இந்த டிரெய்லர் காட்டுகிறது. படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்களின் காட்சிகள், 2001-ல் தியேட்டரில் பார்த்தவர்களுக்கும், அதைப் பார்க்கத் தவறிய இளம் தலைமுறைக்கும் ஒரு புதுவித அனுபவத்தை அளிக்கும்.&lt;img&gt;ஆஷுதோஷ் கௌரிகர் இயக்கி, அமீர் கான் நடிப்பில் 2001-ல் வெளியான 'லகான்: ஒன்ஸ் அபான் எ டைம் இன் இந்தியா' திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. 1893-ல் நடக்கும் இந்தக் கதையில், கடுமையான வரி மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள், ஒரு பிரிட்டிஷ் அதிகாரியின் வினோதமான சவாலை ஏற்கிறார்கள். தங்களுக்குத் தெரியாத கிரிக்கெட் விளையாட்டில் வெற்றி பெற்றால் மட்டுமே அவர்களின் வரி ரத்து செய்யப்படும். ஏ.ஆர். ரஹ்மானின் இசை மற்றும் சிறப்பான நடிப்பு, இந்தப் படத்தை உலகளவில் வெற்றி பெறச் செய்தது. 'லகான்' திரைப்படம், சிறந்த வெளிநாட்டு மொழிப் படத்திற்கான அகாடமி விருதுக்கு (ஆஸ்கர்) பரிந்துரைக்கப்பட்டது. மேலும், தேசிய திரைப்பட விருதுகளில் எட்டு விருதுகளை வென்று, இந்திய சினிமா வரலாற்றில் மிக முக்கியமான படங்களில் ஒன்றாக அதன் இடத்தைப் பிடித்துள்ளது.]]></content:encoded>
            <category>entertainment</category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/aamir-khan-classic-lagaan-returns-to-cinemas-for-25th-anniversary-0rf0tk6"/>
        </item>
        <item>
            <title><![CDATA[இந்தியாவின் பணக்கார பாடகி.. ஆஷா போஸ்லே சொத்து மதிப்பு என்ன தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/webstories/entertainment/legendary-singer-asha-bhosle-passes-away-at-92-net-worth-1mgpm91</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/webstories/entertainment/legendary-singer-asha-bhosle-passes-away-at-92-net-worth-1mgpm91</guid>
            <pubDate>Sun, 12 Apr 2026 16:17:51 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;இந்தியாவின் இசைக்குயில் எனப் போற்றப்படும் ஆஷா போஸ்லே, தனது 92 வயதில் காலமானார். அவரின் வாழ்க்கை மற்றும் சொத்து மதிப்பு குறித்து பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kp0131ahd1wvktt9e5gkzdkz,imgname-untitled-design---2026-04-12t102916.965-1775970125137.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <category>entertainment</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/webstories/entertainment/legendary-singer-asha-bhosle-passes-away-at-92-net-worth-1mgpm91"/>
        </item>
        <item>
            <title><![CDATA[விவாகரத்து முடிவுக்கு பின்னால் இருக்கும் 'ரயில்' ரகசியம்.. மனம் திறந்த ஹன்சிகா!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/entertainment/hansika-motwani-opens-up-about-divorce-from-sohael-khaturiya-5tmogg4</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/entertainment/hansika-motwani-opens-up-about-divorce-from-sohael-khaturiya-5tmogg4</guid>
            <pubDate>Fri, 17 Apr 2026 20:20:08 +0530</pubDate>
            <description><![CDATA[நடிகை ஹன்சிகா மோத்வானி, கணவர் சோஹைல் கத்தூரியாவுடனான தனது விவாகரத்து குறித்து முதல்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். இந்த கடினமான நேரத்தில் தனது குடும்பம் கொடுத்த ஆதரவை நினைவுகூர்ந்த அவர், இப்போது மனதளவில் நல்ல நிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kkka65gvnsdkbf93vx4hf7mt,imgname-hansika-motwani-divorce-news-1773395973659.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[நடிகை ஹன்சிகா மோத்வானி, கணவர் சோஹைல் கத்தூரியாவுடனான தனது விவாகரத்து குறித்து முதல்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். இந்த கடினமான நேரத்தில் தனது குடும்பம் கொடுத்த ஆதரவை நினைவுகூர்ந்த அவர், இப்போது மனதளவில் நல்ல நிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.&lt;img&gt;நடிகை ஹன்சிகா மோத்வானி, கணவர் சோஹைல் கத்தூரியாவிடமிருந்து சட்டப்படி பிரிந்து ஒரு மாதத்திற்குப் பிறகு, இதுகுறித்து முதல்முறையாகப் பேசியுள்ளார். இந்த ஜோடியின் பிரிவு பல விவாதங்களை ஏற்படுத்தினாலும், வதந்திகளைப் பற்றி தான் கவலைப்படவில்லை என்று அவர் தெளிவாகக் கூறியுள்ளார்.&lt;img&gt;மும்பை பாந்த்ரா குடும்பநல நீதிமன்றத்தில் மார்ச் 11 அன்று ஹன்சிகாவும் சோஹைலும் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெற்றனர். சமீபத்தில் 'Hauterrfly'க்கு அளித்த பேட்டியில், &quot;அவங்களுக்கு கிளிக்பைட் வேணும், கிடைச்சது. ஹெட்லைன்ஸ் வேணும், கிடைச்சது. நான் எப்பவும் விளக்கம் கொடுத்ததில்லை, கொடுக்கவும் மாட்டேன்&quot; என்று ஹன்சிகா கூறியுள்ளார்.&lt;img&gt;&quot;ஏன்னா அது எனக்கு முக்கியமில்லை. எனக்கு எந்த வருத்தமும் இல்லை. கஷ்டப்படுறதை விட, தப்பான டிரெய்ன்ல இருந்து இறங்குறதுதான் நல்லது&quot; என்று அவர் விளக்கியுள்ளார். பிரிவுக்குப் பிறகு, இப்போது மனதளவில் நல்ல நிலையில் இருப்பதாகவும், மற்றவர்களின் கருத்தை விட தனது நலனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும் ஹன்சிகா கூறியுள்ளார்.&lt;img&gt;விவாகரத்துக்கான காரணங்கள் ரகசியமாகவே இருக்கும் என்று ஹன்சிகா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். இதுபோன்ற விஷயங்கள் சம்பந்தப்பட்டவர்களுக்குள் மட்டுமே இருக்க வேண்டும் என்பது அவரது கருத்து. இந்த நேரத்தில் தனக்கு உறுதுணையாக இருந்த தனது தாய் மற்றும் சகோதரருக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.&lt;img&gt;டிசம்பர் 2022-ல் ஜெய்ப்பூரில் உள்ள முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனையில் ஹன்சிகா மற்றும் சோஹைல் திருமணம் பிரம்மாண்டமாக நடந்தது. இவர்களது திருமணத்தை 'ஹன்சிகாஸ் லவ் ஷாதி டிராமா' என்ற பெயரில் 2023-ல் ஜியோ ஹாட்ஸ்டார் ஒரு வெப் சீரிஸாக வெளியிட்டது. விவாகரத்துக்குப் பிறகு, ஹன்சிகா தனது குடும்பத்துடன் ஜப்பான் நாட்டிற்கு சுற்றுலா சென்றிருந்தார்.&lt;img&gt;&lt;p&gt;ஹன்சிகா சமீபத்தில் 2024-ல் வெளியான 'கார்டியன்' படத்தில் நடித்திருந்தார். சபரி மற்றும் குரு சரவணன் இயக்கிய இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. மேலும், தெலுங்கு நடன நிகழ்ச்சியானடி செலப்ரிடி ஸ்பெஷல் 2ல் நடுவராகவும், வரவிருக்கும் 'நஷா' என்ற தெலுங்குப் படத்திலும் அவர் நடிக்கிறார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>entertainment</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/entertainment/hansika-motwani-opens-up-about-divorce-from-sohael-khaturiya-5tmogg4"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Dhanush Political Entry : தனுஷின் அரசியல் என்ட்ரி குறித்து பேசிய அப்பா கஸ்தூரிராஜா]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/dhanush-father-kasthuri-raja-opens-up-about-his-political-entry-66g5f5y</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/dhanush-father-kasthuri-raja-opens-up-about-his-political-entry-66g5f5y</guid>
            <pubDate>Mon, 01 Jun 2026 10:30:58 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Dhanush Political Entry : தனுஷின் 55-வது திரைப்படத்தில் மம்மூட்டியுடன் மற்றுமொரு பிரபல மலையாள நடிகர் இணைந்துள்ள நிலையில், தனுஷின் அரசியல் பிரவேசம் குறித்து அவரது தந்தை கஸ்தூரிராஜா பேசியுள்ளது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kjmcqcbrravbsfmdxag1am7a,imgname-dhanushs-kara-release-date-1772358447480.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Dhanush Political Entry : தனுஷின் 55-வது திரைப்படத்தில் மம்மூட்டியுடன் மற்றுமொரு பிரபல மலையாள நடிகர் இணைந்துள்ள நிலையில், தனுஷின் அரசியல் பிரவேசம் குறித்து அவரது தந்தை கஸ்தூரிராஜா பேசியுள்ளது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாகவும், பான்-இந்தியா நடிகராகவும் வலம் வரும் தனுஷ் குறித்து அடுத்தடுத்து இரண்டு முக்கிய செய்திகள் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஒருபுறம் அவரது 55-வது படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ள நிலையில், மறுபுறம் அவரது தந்தை மற்றும் இயக்குநருமான கஸ்தூரிராஜா தனுஷின் அரசியல் வருகை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷின் 55-வது திரைப்படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. தனுஷின் 'வுண்டர்பார் பிலிம்ஸ்' மற்றும் 'ஆர் டேக் ஸ்டுடியோஸ்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு, இளம் இசையமைப்பாளர் சாய் அப்யன்கர் இசையமைக்கிறார்.&lt;/p&gt;&lt;p&gt;ஏற்கனவே இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க, கதாநாயகிகளாக சாய் பல்லவி மற்றும் ஸ்ரீ லீலா ஆகியோர் இணைந்து நடித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு சுவாரசியமான சேர்க்கையாக, சமீபத்தில் தமிழில் வெளியாகி கவனம் ஈர்த்த 'கருப்பு' திரைப்படத்தில் பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்திய மூத்த மலையாள நடிகர் இந்திரன்ஸ் இப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். அவருக்கான காட்சிகள் விரைவில் படமாக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சென்னையில் நடைபெற்ற ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குநர் கஸ்தூரிராஜாவிடம், &quot;போயஸ் கார்டனில் வசிக்கும் நடிகர் தனுஷ் வருங்காலத்தில் அரசியலுக்கு வருவாரா?&quot; என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்:&lt;/p&gt;&lt;p&gt;&quot;யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். என் மகன்களோ அல்லது பேரன்களோ கூட அரசியலுக்கு வரலாம். சென்னையில் மிக பவர்ஃபுல்லான இடம் கோபாலபுரம்தான், கலைஞர் கருணாநிதி வாழ்ந்த அந்த இடம்தான் ஒளி பிறந்த இடம். வருங்காலத்தில் தனுஷின் மகன்களும் சினிமாவுக்கு வரலாம், இப்போது என் மகள் வழிப் பேரன் பவிஷ் நடித்து வருகிறார்&quot; என்று கூறினார்.&lt;/p&gt;&lt;p&gt;மேலும், தனுஷ் என்ற பெயருக்குப் பின்னால் இருக்கும் பெருமை குறித்துப் பேசுகையில், &quot;தனுஷின் நிஜப் பெயர் வெங்கடேச பிரபு. சினிமாவுக்காக அவர் தனுஷ் என மாற்றிக்கொண்டார். ஆனால், இப்போது விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் அவரை 'தனுஷ் கே ராஜா' (Dhanush K Raja) என்றுதான் அழைக்கிறார்கள். என் பெயரோடு சேர்த்து அவர் பெயர் ஒலிப்பது எனக்கு மிகுந்த பெருமை&quot; என்றார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>entertainment</category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/dhanush-father-kasthuri-raja-opens-up-about-his-political-entry-66g5f5y"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Bigg Boss சீசன் 10-ல் காமன்மேனுக்கு விஜய் சேதுபதி கொடுத்த கோல்டன் சான்ஸ் - இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/vijay-sethupathi-opens-bigg-boss-tamil-doors-for-commonmans-in-season-10-army3vz</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/vijay-sethupathi-opens-bigg-boss-tamil-doors-for-commonmans-in-season-10-army3vz</guid>
            <pubDate>Tue, 02 Jun 2026 14:53:58 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Bigg Boss Tamil Season 10 : பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 10வது சீசன் இன்னும் சில மாதங்களில் தொடங்க உள்ள நிலையில், அதற்கான புது புரோமோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kt3t4gxfkqsh7gkkaz092dqx,imgname-bigg-boss-tamil-1780392018863.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Bigg Boss Tamil Season 10 : பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 10வது சீசன் இன்னும் சில மாதங்களில் தொடங்க உள்ள நிலையில், அதற்கான புது புரோமோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவின் நம்பர் ஒன் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ், பல மொழிகளில் ஒவ்வொரு சீசனிலும் தனது ரசிகர் பட்டாளத்தை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில், தமிழ் மற்றும் மலையாளத்தில் அடுத்த சீசனுக்கான அறிவிப்புகள் வரத் தொடங்கியுள்ளன. மலையாளத்தில் 11 நாட்களுக்கு முன்பு ஒரு முக்கிய அறிவிப்பு வந்த நிலையில், தமிழ் பிக் பாஸ் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது. இந்த இரண்டு அறிவிப்புகளுக்கும் இடையே ஒரு சுவாரஸ்யமான ஒற்றுமை உள்ளது. பிரபலங்கள் மட்டுமல்லாமல், பொதுமக்களும் பிக் பாஸ் வீட்டில் போட்டியிடும் 'காமன் மேன்' குறித்த அறிவிப்புதான் அது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிக் பாஸ் தமிழை ஒளிபரப்பும் ஸ்டார் விஜய் வெளியிட்டுள்ள புதிய ப்ரோமோவில், நிகழ்ச்சியின் தொகுப்பாளரான விஜய் சேதுபதி, பொதுமக்களை அடுத்த சீசனில் பங்கேற்க அழைக்கிறார். இதற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அந்த ப்ரோமோவில் விளக்கப்பட்டுள்ளது. உங்களை அறிமுகப்படுத்தி, பிக் பாஸில் ஏன் பங்கேற்க விரும்புகிறீர்கள் என்பதை விளக்கி இரண்டு நிமிட வீடியோவை அனுப்ப வேண்டும். வரவிருப்பது தமிழ் பிக் பாஸின் 10-வது சீசன் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மறுபுறம், மலையாளத்தில் வரவிருக்கும் 8-வது சீசனில், பொதுமக்களை வெறுமனே அழைப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், அவர்களுக்காகவே ஒரு பிரத்யேக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய உள்ளனர். அடுத்த சீசனில் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் பங்கேற்பார்கள் என தொகுப்பாளர் மோகன்லால் ஒரு ப்ரோமோவில் கூறியுள்ளார். இவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 'பிக் பாஸ் அக்னிபரீட்சை' என்ற பெயரில் ஒரு போட்டி நிகழ்ச்சியை ஏசியாநெட் நடத்தவுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த 'அக்னிபரீட்சை'யில் வெற்றி பெறுபவர்களுக்கு, பிக் பாஸ் மலையாளம் சீசன் 8-ல் நேரடியாக நுழையும் வாய்ப்பு கிடைக்கும். பிக் பாஸில் பங்கேற்க வேண்டும் என்ற கனவோடு இருப்பவர்களுக்கு இது ஒரு அருமையான வாய்ப்பு. ஆனால், இதற்கு எப்படி விண்ணப்பிப்பது போன்ற விவரங்களை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இன்னும் அறிவிக்கவில்லை. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய முயற்சி, நிகழ்ச்சியை இன்னும் விறுவிறுப்பாக மாற்றும் என்பதில் சந்தேகமில்லை.&lt;/p&gt;&lt;p&gt;இப்படி காமன்மேனை உள்ளே அனுப்புவது இது முதன்முறை அல்ல, இதற்கு முன்னதாக தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் காமன்மேன் சிலரை உள்ளே அனுப்பி இருந்தனர். அதில் ஆச்சர்யம் என்னவென்றால், காமன் மேனாக உள்ளே அனுப்பப்பட்ட மூவரில் ஒருவர் தான் டைட்டில் ஜெயித்து இருந்தார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>entertainment</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/vijay-sethupathi-opens-bigg-boss-tamil-doors-for-commonmans-in-season-10-army3vz"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Songs: சொன்னது நீதானா?! பாடல் மூலம் கேள்வி கேட்ட கண்ணதாசன்.! பட்டிதொட்டியெல்லாம் ஹிட்டான பாட்டு.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/songs-the-mega-hit-written-by-kannadasan-in-anger-the-poet-who-shook-the-film-director-with-his-lyrics-av22di4</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/songs-the-mega-hit-written-by-kannadasan-in-anger-the-poet-who-shook-the-film-director-with-his-lyrics-av22di4</guid>
            <pubDate>Thu, 16 Apr 2026 13:15:05 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கண்ணதாசனின் மனக்கசப்பிலிருந்து பிறந்ததாகக் கூறப்படும் &quot;சொன்னது நீதானா&quot;பாடல், சாருகேசி ராகத்தில் எம்.எஸ். விஸ்வநாதனால் இசையமைக்கப்பட்டுள்ளது. அந்த பாடல் உருவான கதை, இசை நுணுக்கங்கள் மற்றும் காலத்தால் அழியாத புகழை விவரிக்கிறது இந்த கட்டுரை.!&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kpak72wqq5jgybtr73abwnkf,imgname-gemini-generated-image-vfj7lcvfj7lcvfj7--1--1776324676502.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கண்ணதாசனின் மனக்கசப்பிலிருந்து பிறந்ததாகக் கூறப்படும் &quot;சொன்னது நீதானா&quot;பாடல், சாருகேசி ராகத்தில் எம்.எஸ். விஸ்வநாதனால் இசையமைக்கப்பட்டுள்ளது. அந்த பாடல் உருவான கதை, இசை நுணுக்கங்கள் மற்றும் காலத்தால் அழியாத புகழை விவரிக்கிறது இந்த கட்டுரை.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ் திரையிசையில் சில பாடல்கள் வெறும் இசையோ அல்லது வரிகளோ அல்ல &mdash; அவை ஒரு உணர்ச்சி வெடிப்பின் வெளிப்பாடு. &ldquo;சொன்னது நீதானா&rdquo; என்ற பாடல் அப்படிப்பட்ட ஒரு அரிய படைப்பு. 1962ஆம் ஆண்டு வெளிவந்த நெஞ்சில் ஓர் ஆலயம் திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல், காதல், வலி, சந்தேகம் போன்ற நுண்ணிய உணர்வுகளை மிக ஆழமாக வெளிப்படுத்துகிறது. இந்தப் பாடலின் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான சம்பவமும், இசை மற்றும் இலக்கியம் இணையும் அழகிய தருணமும் உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தப் படத்தை இயக்கியது சி.வி. ஸ்ரீதர். மருத்துவம், காதல், தியாகம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட இந்தக் கதை, அந்த காலத்தில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. படத்திற்கு இசையமைத்தவர் எம்.எஸ். விஸ்வநாதன் &mdash; தமிழ் சினிமாவின் மெலோடி மன்னன். பாடல் வரிகளை எழுதியவர் கண்ணதாசன். இவர்களின் கூட்டணி என்றாலே அது ஒரு இசை விழா போலவே இருக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தப் பாடலின் பிறப்பு ஒரு சாதாரண படைப்புச் செயல்முறை அல்ல. கண்ணதாசன் அவர்கள் பாடல்களை எழுதுவதில் தாமதம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் இயக்குநர் ஸ்ரீதர் சில கடுமையான வார்த்தைகளைப் பேசியதாகவும், அதை எம்.எஸ். விஸ்வநாதன் கூறியதாக கண்ணதாசன் தவறாக புரிந்துகொண்டதாகவும் ஒரு கதையுண்டு. அந்த உணர்ச்சி வெடிப்பே &ldquo;சொன்னது நீதானா&hellip; சொல் சொல்&rdquo; என்ற வரியாக வெளிவந்தது. ஒருவகையில், இந்தப் பாடல் ஒரு மனக்கசப்பின் கலை வடிவம் என்று சொல்லலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&ldquo;சொன்னது நீதானா&rdquo; பாடல் பெரும்பாலும் சாருகேசி ராகத்தின் அடிப்படையில் அமைந்ததாக இசை ஆர்வலர்கள் கூறுகிறார்கள். சாருகேசி ராகம் என்பது ஏக்கம், வலி, உணர்ச்சி ஆகியவற்றை மிக நுட்பமாக வெளிப்படுத்தக்கூடியது. இந்த ராகத்தில் உருவான பாடல்கள் பெரும்பாலும் மனதை உலுக்கும் தன்மை கொண்டவை. இந்தப் பாடலிலும் அதே உணர்ச்சி ஆழம் தெளிவாக தெரிகிறது. இசையில் உள்ள மென்மையான கர்நாடக நுணுக்கங்கள், பாடலின் உணர்ச்சியை இன்னும் உயர்த்துகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&ldquo;சொன்னது நீதானா&rdquo; என்ற கேள்வி, காதலில் ஏற்படும் சந்தேகத்தின் உச்ச நிலையை வெளிப்படுத்துகிறது. கண்ணதாசன் தனது சொற்களால் ஒரு மனிதனின் மன உளைச்சலை மிகவும் எளிமையாகவும் ஆழமாகவும் காட்டியுள்ளார். குற்றம் சாட்டுவது போலவும், பதில் கேட்பது போலவும் இருக்கும் இந்த வரிகள், கேட்பவரின் மனதில் உடனே ஒரு உணர்ச்சி தாக்கத்தை உருவாக்குகின்றன. இதுவே கண்ணதாசனின் எழுத்தின் வலிமை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தப் பாடலைப் பாடிய குரலும் அதன் வெற்றிக்கு முக்கிய காரணம். மென்மையான இசை, மெதுவான தாளம், குரலின் உணர்ச்சி &mdash; இவை அனைத்தும் சேர்ந்து ஒரு கண்ணீர்த்துளி போல மனதில் விழுகிறது. எம்.எஸ். விஸ்வநாதன் இந்தப் பாடலுக்காக தேர்ந்தெடுத்த இசைக்கருவிகள் கூட பாடலின் உணர்ச்சியை மெருகேற்றுகின்றன. குறிப்பாக, பின்னணி வயலின் இசை மனதை நெகிழச் செய்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&ldquo;சொன்னது நீதானா&rdquo; என்பது ஒரு பாடல் மட்டுமல்ல; அது ஒரு உணர்ச்சி அனுபவம். ஒரு தவறான புரிதல் எப்படி ஒரு அற்புதமான கலைப்பாடலாக மாறுகிறது என்பதற்கு இது சிறந்த உதாரணம். இன்று வரை இந்தப் பாடல் கேட்கும் போது மனதில் ஏதோ ஒரு துடிப்பு உருவாகிறது. அதுவே உண்மையான கலை &mdash; காலத்தையும், தலைமுறைகளையும் கடந்து உயிருடன் இருக்கும் சக்தி.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>entertainment</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/songs-the-mega-hit-written-by-kannadasan-in-anger-the-poet-who-shook-the-film-director-with-his-lyrics-av22di4"/>
        </item>
        <item>
            <title><![CDATA[K Rajan: தயாரிப்பாளர் கே.ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொ**லை! இதுதான் காரணமா? பரபரப்பு தகவல்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/entertainment/producer-k-rajan-dies-by-suicide-veteran-tamil-film-producer-jumps-into-adyar-river-ditank0</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/entertainment/producer-k-rajan-dies-by-suicide-veteran-tamil-film-producer-jumps-into-adyar-river-ditank0</guid>
            <pubDate>Sun, 17 May 2026 19:08:47 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;K Rajan: பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது திரையிலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01krv2c3vq14jw6qzvy2n918ty,imgname-k-rajan-1779024924535.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;K Rajan: பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது திரையிலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ் திரையுகக மூத்த தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான கே.ராஜன் இன்று (மே 17) தற்கொலை செய்து கொண்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு வயது 85. சென்னை அடையாறு பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து அவர் இந்த விபரீத முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு, மீட்புப் படையினர் மற்றும் காவல் துறையினர் கே.ராஜன் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.&lt;/p&gt;&lt;p&gt;இது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கே.ராஜன் தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 1980-களில் தயாரிப்பாளராக அறிமுகமான கே. ராஜன், நடிகர் சுரேஷ் நடித்த 'பிரம்மச்சாரிகள்' (1983) உள்ளிட்ட சில படங்களைத் தயாரித்துள்ளார். தயாரிப்பாளராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் இருந்துள்ளார். அப்பாஸ் மற்றும் குணால் நடித்த 'உணர்ச்சிகள்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சர்ச்சைகளுக்கு பெயர் போனவர்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;சென்னை திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்த இவர் சினிமா தொழிலாளர்களின் நலன்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். தயாரிப்பாளராக மட்டுமின்றி சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர் கே.ராஜன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் வாங்கும் கோடிக்கணக்கான சம்பளத்தை பட விழாக்களிலும், பொது மேடைகளிலும் கடுமையாக விமர்சித்து வந்தார்.&lt;/p&gt;&lt;p&gt;&quot;நடிகர்கள் தங்கள் சம்பளத்தைக் குறைத்துக் கொண்டால்தான் தயாரிப்பாளர்கள் பிழைக்க முடியும். தயாரிப்பாளர்களை அழித்துவிட்டு நடிகர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள்&quot; என்று வெளிப்படையாக பேசி பரபரப்பை உண்டாக்கினார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சிறு தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக இருந்தார்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;''திரைப்படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு வராத முன்னணி நட்சத்திரங்களை &quot;தயாரிப்பாளர்களின் பணத்தில் சம்பளம் வாங்கிவிட்டு, பட விளம்பரத்திற்கு வர இவர்களுக்கு என்ன திமிர்?&quot; என நேரடியாகவே சாடியுள்ளார். அண்மைகாலமாக பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து வந்த அவர், சினிமாவின் இருண்ட பக்கங்களையும், ரகசியங்களையும் வெளிப்படையாகப் பேசி பலமுறை சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆனார். கே. ராஜனின் பேச்சுக்கள் சில நேரங்களில் திரையுலகினரிடையே சலசலப்பை ஏற்படுத்தினாலும், நலிவடைந்த, சிறு, குறு தயாரிப்பாளர்களுக்காகவும், தியேட்டர் உரிமையாளர்களுக்காகவும் அவர் பேசி வந்ததால் ஒருபக்கம் ஆதரவும் இருந்து வந்தது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;தற்கொலைக்கு என்ன காரணம்?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இப்படிப்பட்ட நிலையில் கே.ராஜன் திடீரென தற்கொலை செய்து கொண்டது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது தெரியவில்லை. விசாரணை முடிவில் தான் இதற்கான காரணம் தெரிய வரும். இவரது மகன் பிரபுகாந்தும் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>entertainment</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/entertainment/producer-k-rajan-dies-by-suicide-veteran-tamil-film-producer-jumps-into-adyar-river-ditank0"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Rashmika: குட் நியூஸ் சொன்ன விஜய் - ராஷ்மிகா.! குவியும் வாழ்த்துக்கள்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/webstories/entertainment/rashmika-mandanna-vijay-deverakonda-announce-they-are-three-after-one-month-of-marriage-e6358v9</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/webstories/entertainment/rashmika-mandanna-vijay-deverakonda-announce-they-are-three-after-one-month-of-marriage-e6358v9</guid>
            <pubDate>Sat, 04 Apr 2026 14:37:39 +0530</pubDate>
            <description><![CDATA[விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் பிப்ரவரி மாதம் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், தாங்கள் மூவராகப் போகிறோம் என்று அவர்கள் வெளியிட்ட ஒரு பதிவு இணையத்தில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01km00c7bfrwwd7h5exmh90j6d,imgname-rashmika-mandanna-1773668405-3854132269527387250-1381101303-1773821893999.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <category>entertainment</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/webstories/entertainment/rashmika-mandanna-vijay-deverakonda-announce-they-are-three-after-one-month-of-marriage-e6358v9"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Jananayagan Release : ஜனநாயகன் ரிலீஸ் ஏன் தள்ளிப்போகிறது? உண்மையை சொல்லத் தயங்கும் எச்.வினோத்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/why-is-jananayagan-release-getting-delayed-h-vinoth-response-fuels-speculation-flov24r</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/why-is-jananayagan-release-getting-delayed-h-vinoth-response-fuels-speculation-flov24r</guid>
            <pubDate>Sun, 31 May 2026 16:08:01 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Jananayagan Release : இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில், விஜய்யின் கடைசித் திரைப்படமாக உருவாகியிருக்கும் 'ஜனநாயகன்' திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற கேள்வி ஒட்டுமொத்த கோலிவுட்டிலும், சினிமா ரசிகர்களிடமும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kbj27m0z4mctwp1wcgchgqf7,imgname-fotojet--5--1764764143647.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Jananayagan Release : இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில், விஜய்யின் கடைசித் திரைப்படமாக உருவாகியிருக்கும் 'ஜனநாயகன்' திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற கேள்வி ஒட்டுமொத்த கோலிவுட்டிலும், சினிமா ரசிகர்களிடமும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கடந்த ஜனவரி 9-ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக வேண்டிய 'ஜனநாயகன்' திரைப்படம், மே மாதம் முடிந்தும் இன்னும் திரைக்கு வராமல் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. சென்சார் சான்றிதழ் (தணிக்கைச் சான்றிதழ்) பெறுவதில் ஏற்பட்ட சிக்கல்களே இந்தத் தாமதத்திற்குக் காரணம் என்று படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா இரண்டு முறை விளக்கம் அளித்திருந்தார். அண்மையில், ஜூன் 19-ஆம் தேதி படம் வெளியாகலாம் என்று தகவல்கள் கசிந்ததால் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரோடக்&zwnj;ஷன்ஸ் (KVN Productions) சமூக வலைத்தள பக்கங்களில் விஜய் ரசிகர்கள் தவமாய் காத்திருந்தனர். ஆனால், தயாரிப்பு நிறுவனம் ஜூன் 19 அன்று 'பாலன்' என்ற படம் வெளியாவதாக அறிவித்ததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். தற்போது ஜூன் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில், குறிப்பாக விஜய்யின் பிறந்தநாளை ஒட்டி படம் வெளியாகலாம் என அரசல் புரசலாகப் பேசப்பட்டு வருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இப்படியானச் சூழலில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் ஹெச். வினோத்திடம் 'ஜனநாயகன்' எப்போது ரிலீஸ் ஆகும் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த வினோத், &quot;படம் வரும்போது வரும். அதை என்னால் இப்போது உறுதியாகச் சொல்ல முடியாது. அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ரிலீஸ் தேதி நம் கையில் இல்லை&quot; என்று கூறினார்.&lt;/p&gt;&lt;p&gt;அத்துடன் நிறுத்தாமல், படம் தாமதமாவது குறித்த பின்னணி உண்மைகளைப் பற்றிப் பேசும்போது, &quot;அந்த உண்மையைச் சொல்லும் அளவுக்கு எனக்கு தைரியம் இல்லை. ஒருவேளை அந்த உண்மையைச் சொல்லும் தைரியம் எனக்கு வந்தாலும், அதை அப்படியே போடும் தைரியம் உங்களுக்கு (ஊடகங்களுக்கு) இல்லை. அதனால் படம் வரும்போது பார்ப்போம்&quot; என்று மிகவும் வெளிப்படையாகவும், அதிரடியாகவும் பேசி அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். வினோத் இப்படிப் பேசும்போது அருகில் இருந்த இயக்குநர் பா. ரஞ்சித் சிரித்தது, இந்த ரிலீஸ் தள்ளிப்போவதற்குப் பின்னால் இருக்கும் அரசியல் காரணங்கள் ரஞ்சித்துக்கும் தெரிந்திருக்குமோ என்ற சந்தேகத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதற்கிடையே, கடந்த ஏப்ரல் மாதம் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே 'ஜனநாயகன்' திரைப்படம் இணையதளங்களில் நல்ல பிரிண்ட்டில் கசிந்து (Leak) ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சியை அளித்தது. &quot;மாநில முதல்வரின் படத்திற்கே சென்சார் சான்றிதழ் வாங்க 5 மாதங்கள் ஆகுமா? படத்தைத் தள்ளிப்போட வைப்பது யார் என்பது இப்போது ஓரளவுக்குப் புரிகிறது&quot; என்று சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் தங்களது குமுறல்களையும், கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>entertainment</category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/why-is-jananayagan-release-getting-delayed-h-vinoth-response-fuels-speculation-flov24r"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Ilaiyaraaja Birthday Special : ஞானதேசிகன் இசைஞானியாக மாறிய கதை! இது வெறும் பெயரல்ல; தமிழர்களின் எமோஷன்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/ilaiyaraaja-birthday-special-the-story-of-how-gnanadesikan-became-isaignani-h2uefly</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/ilaiyaraaja-birthday-special-the-story-of-how-gnanadesikan-became-isaignani-h2uefly</guid>
            <pubDate>Tue, 02 Jun 2026 12:59:53 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Ilaiyaraaja Birthday Special : இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாளான இன்று அவருடைய பெயர் குறித்த சுவாராசிய தகவல்களையும், பிறந்தநாள் மாற்றத்தின் பின்னணி குறித்தும் சுவைபட காண்போம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kt3k0fgt0vb0v7t29hrtp1ca,imgname-raja-birthday-special---june-2-1780384546329.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Ilaiyaraaja Birthday Special : இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாளான இன்று அவருடைய பெயர் குறித்த சுவாராசிய தகவல்களையும், பிறந்தநாள் மாற்றத்தின் பின்னணி குறித்தும் சுவைபட காண்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உலகத் தமிழர்களின் இதய சிம்மாசனத்தில் அரை நூற்றாண்டு காலமாக தன்னிகரில்லாத பேரரசராக வீற்றிருப்பவர் இசைஞானி இளையராஜா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 1,500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து, 8000-க்கும் அதிகமான பாடல்களை உருவாக்கி, உலகமெங்கும் ஆயிரக்கணக்கான மேடைக் கச்சேரிகளை நடத்திய பெருமை இவருக்கு உண்டு.&lt;/p&gt;&lt;p&gt;இன்று உலகமே வியந்து பார்க்கும் &lsquo;இளையராஜா&rsquo; என்ற மந்திரச் சொல் அவருக்கு எப்படி வந்தது தெரியுமா? அதைப் பற்றி இளையராஜாவே பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகளில் பகிர்ந்து கொண்ட தகவல்களின் விரிவான தொகுப்பு இதோ!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தேனி மாவட்டம் பண்ணைப்புரத்தில் பிறந்த இளையராஜாவின் தந்தை, அவருக்கு இரண்டு பெயர்களைச் சூட்டினார். ஒன்று, ஜாதகத்தைப் பார்த்து வைத்த &lsquo;ஞானதேசிகன்&rsquo;. மற்றொன்று, பள்ளியில் சேர்க்கும்போது சுருக்கமாகவும் எளிமையாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக வைத்த &lsquo;ராஜய்யா&rsquo; (ராசய்யா) என்ற பெயர். பள்ளிப் பருவத்திலும், ஊரிலும் அனைவரும் அவரை &lsquo;ராஜய்யா&rsquo; என்றே அழைத்து வந்தனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இசை மீது கொண்ட தீராத தாகத்தால், எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த ராஜய்யா, கையில் பணமே இல்லாமல் வெற்று நம்பிக்கையை மட்டுமே முதலீடாகக் கொண்டு சென்னைக்கு ரயில் ஏறினார். சென்னைக்குக் கிளம்பும்போது, &quot;பணமில்லாமல் என்ன செய்வாய்?&quot; என்று தாய் கேட்க, &quot;லைட் மியூசிக்கில் வாசிப்பேன், அதுவும் கிடைக்காவிட்டால் பிளாட்பாரத்தில் உட்கார்ந்தாவது ஹார்மோனியம் வாசித்துப் பிழைப்பேன்&quot; என்று தன்னம்பிக்கையோடு கூறிவிட்டு வந்தவர் ராஜா.&lt;/p&gt;&lt;p&gt;சென்னைக்கு வந்தவுடன் மேற்கத்திய இசையைக் கற்றுக்கொள்வதற்காக, தன்ராஜ் மாஸ்டரிடம் சென்றார். அன்றைய காலகட்டத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன், எஸ்.வி.வெங்கட்ராமன், சி.ஆர்.சுப்பராமன் போன்ற ஆளுமைகளின் இசைக் கலைஞர்களுக்குப் பயிற்சியளித்தவர் தன்ராஜ் மாஸ்டர்.&lt;/p&gt;&lt;p&gt;ராஜய்யாவிடம் மாஸ்டர் பெயரைப் பற்றிக் கேட்க, அவர் &lsquo;ராஜய்யா&rsquo; என்று கூறியுள்ளார். அந்தப் பெயர் நன்றாக இல்லை எனக் கருதிய தன்ராஜ் மாஸ்டர், அதைச் சுருக்கி &lsquo;ராஜா&rsquo; என்று மாற்றி வைத்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;திரைத்துறையில் நுழைவதற்கு முன்பு, இளையராஜா &lsquo;கோவர்த்தனன்&rsquo; என்ற இசையமைப்பாளருடன் இணைந்து &lsquo;வரப்பிரசாதம்&rsquo; என்ற படத்தில் பணியாற்றினார். அதனால், தனது பெயரை &lsquo;கோவர்த்தன் - ராஜா&rsquo; என்று போட வேண்டும் என்று நினைத்திருந்தார்.&lt;/p&gt;&lt;p&gt;அதே நேரத்தில், ராஜா கம்போஸ் செய்த பாடல்களைக் கேட்டு வியந்த பிரபல தயாரிப்பாளரும் கதாசிரியருமான பஞ்சு அருணாசலம், அந்தப் பாடல்களுக்காகவே ஒரு கிராமத்துப் பின்னணிக் கதையை உருவாக்கி, &lsquo;அன்னக்கிளி&rsquo; (1976) என்ற திரைப்படத்தைத் தயாரித்தார்.&lt;/p&gt;&lt;p&gt;அப்போது ஒரு லாட்ஜ் அறையில் ஹார்மோனியம் கூட இல்லாமல், வெறும் மேஜையின் மீது தாளமிட்டபடி, &lsquo;மச்சான பாத்தீங்களா...&rsquo;, &lsquo;அன்னக்கிளி உன்ன தேடுதே...&rsquo;, &lsquo;சுத்தச் சம்பா பச்ச நெல்லு...&rsquo; ஆகிய பாடல்களை ராஜா வரிசையாகப் பாடிக்காட்டினார்.&lt;/p&gt;&lt;p&gt;படம் முடிந்து டைட்டிலில் பெயர் போடும் நேரம் வந்தது. ராஜா, பஞ்சு அருணாசலத்திடம், &quot;சார், கோவர்த்தன் - ராஜா என்று பெயர் போடுங்கள்&quot; என்றார். ஆனால் பஞ்சு அருணாசலமோ, &quot;நான் உனக்குத்தான் வேலை தருகிறேன், உனது பெயரை மட்டுமே போடுவோம். &lsquo;ராஜா&rsquo; என்றே போடலாம்&quot; என்றார்.&lt;/p&gt;&lt;p&gt;அதற்கு ராஜா, &quot;திரைத்துறையில் ஏற்கனவே புகழ்பெற்ற &lsquo;ஏ.எம். ராஜா&rsquo; இருக்கிறார். &lsquo;ராஜா&rsquo; என்று போட்டால் ரசிகர்களுக்குக் குழப்பம் ஏற்படும்&quot; என்று கூறி, தங்களின் குழுவான &lsquo;பாவலர் பிரதர்ஸ்&rsquo; (பாவலர் சகோதரர்கள்) என்ற பெயரைப் பரிந்துரைத்தார். ஆனால், அது பழைய பாணியில் இருப்பதாகக் கூறி பஞ்சு அருணாசலம் மறுத்துவிட்டார்.&lt;/p&gt;&lt;p&gt;இறுதியாக, &quot;ஏற்கனவே ஒரு பெரிய ராஜா இருக்கிறார்; நீ வயதில் சிறியவன், அதனால் உனக்கு &lsquo;இளையராஜா&rsquo; என்று பெயர் வைக்கிறேன்&quot; என்று பஞ்சு அருணாசலம் அறிவித்தார். &quot;சரி, போனால் போகிறது, நீங்கள் எப்படி வேண்டுமானாலும் கூப்பிட்டுக் கொள்ளுங்கள்&quot; என்று இளையராஜாவும் அதை ஏற்றுக்கொண்டார். அதுவே, காலத்தால் அழியாத வரலாற்றுப் பெயராக நிலைத்து நின்றது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;1974-ல் உதவி இசையமைப்பாளராக இருந்தபோது, கடவுள் நம்பிக்கையற்றவராக இருந்த இளையராஜா, கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்குச் சென்றார். அங்கு முதல் அடி எடுத்து வைத்தபோதே, நெஞ்சில் ஒரு மின்னல் தாக்கியது போன்ற உணர்வைப் பெற்று ஆன்மீகப் பாதைக்குத் திரும்பினார். &quot;எனது இசை செவியோடு போவது கிடையாது, அது உள்ளே இறங்கி நெஞ்சைத் தைக்கும்; எனது பாடல்கள் அனைத்துமே ஒரு வகையில் பக்திப் பாடல்கள்தான். இசைதான் ஆன்மீகம், ஆன்மீகம்தான் இசை&quot; என்பது அவரது அசைக்க முடியாத தத்துவமாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இளையராஜா பிறந்தது 1943, ஜூன் 3 ஆம் தேதி ஆகும். தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பிறந்தநாளும் அதே ஜூன் 3 தான். கருணாநிதி தமிழ் மொழிக்கு ஆற்றிய மாபெரும் பணிக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், ஒரே நாளில் இரண்டு பெரிய கொண்டாட்டங்கள் வேண்டாம் என்பதற்காகவும், இளையராஜா தனது பிறந்தநாளை ஒரு நாள் முன்னதாக, அதாவது ஜூன் 2 ஆம் தேதியே கொண்டாட முடிவு செய்தார். இளையராஜாவுக்குப் புகழ்பெற்ற &lsquo;இசைஞானி&rsquo; என்ற பட்டத்தை வழங்கியவர் கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, லண்டனின் ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா இவருக்கு &lsquo;மேஸ்ட்ரோ&rsquo; என்ற சர்வதேச அங்கீகாரப் பட்டத்தையும் வழங்கியது.&lt;/p&gt;&lt;p&gt;வறுமை மற்றும் எளிய பின்னணியில் இருந்து வந்து, பெயர்கள் பல மாறி, தன் அசாத்திய தன்னம்பிக்கையாலும், உழைப்பாலும் இன்று உலகத் தமிழர்களின் ஆன்மாவோடு கலந்திருக்கும் இசைப்பேரரசு இளையராஜா!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>entertainment</category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/ilaiyaraaja-birthday-special-the-story-of-how-gnanadesikan-became-isaignani-h2uefly"/>
        </item>
        <item>
            <title><![CDATA[சூப்பர்ஸ்டாரின் ‘தலைவர் 173’ இயக்குனர் மீண்டும் மாற்றமா? வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய ராஜ்கமல் நிறுவனம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/rajinikanth-thalaivar-173-director-changed-again-nf9462b</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/rajinikanth-thalaivar-173-director-changed-again-nf9462b</guid>
            <pubDate>Tue, 02 Jun 2026 11:56:17 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கமல்ஹாசனின் RKFI தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் &lsquo;தலைவர் 173&rsquo; படத்தின் இயக்குனர் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறார். இந்த நிலையில் ராஜ் கமல் பிலிம்ஸ் வெளியிட்டிருக்கும் வீடியோ தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kt3fe40jw340nk26vbf906rm,imgname-rajini-ashwath---june-2-1780380798994.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கமல்ஹாசனின் RKFI தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் &lsquo;தலைவர் 173&rsquo; படத்தின் இயக்குனர் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறார். இந்த நிலையில் ராஜ் கமல் பிலிம்ஸ் வெளியிட்டிருக்கும் வீடியோ தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கோலிவுட் வட்டாரத்தில் தற்போதைய ஹாட் டாபிக் என்றால் அது கமல்ஹாசனின் &lsquo;ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்&rsquo; (RKFI) தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் &lsquo;தலைவர் 173&rsquo; திரைப்படம் தான். தொடர் திருப்பங்களுடன் நகர்ந்து வரும் இப்படத்தின் இயக்குனர் தேர்வு மற்றும் புதிய கூட்டணி குறித்த சுவாரசியமான தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lsquo;தலைவர் 173&rsquo; திரைப்படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே இயக்குனர் நாற்காலியில் பெரும் குழப்பம் நீடித்து வருகிறது. முதலில் இத்திரைப்படத்தை பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்குவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் படத்திலிருந்து விலகினார்.&lt;/p&gt;&lt;p&gt;அவருக்குப் பின், சிவகார்த்திகேயனின் &lsquo;டான்&rsquo; பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி உள்ளே வந்தார். ரஜினிகாந்தின் 83 விதமான கெட்-அப்களை வடிவமைப்பது வரை ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்தன. ஆனால், சமீபத்திய சினிமா வட்டார தகவல்களின்படி, ரஜினிகாந்த் கதையில் சில மாற்றங்களை செய்யக் கோரியதாகவும், அதில் ஏற்பட்ட சில குழப்பங்களால் சிபி சக்கரவர்த்தியும் இப்படத்திலிருந்து விலகியதாகவோ அல்லது அவருக்குப் பதிலாக வேறு இயக்குனர் பரிசீலிக்கப்படுவதாகவோ செய்திகள் வெளியாகி வந்தன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிபி சக்கரவர்த்தியின் விலகல் வதந்திகளுக்கு மத்தியில், &lsquo;ஓ மை கடவுளே&rsquo; மற்றும் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்த &lsquo;டிராகன்&rsquo; படங்களின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து, &lsquo;தலைவர் 173&rsquo; படத்தை இயக்கப் போவதாக பரவலாக பேசப்பட்டது. அவர் ராஜ் கமல் நிறுவனத்தை அணுகி கதை சொல்லியிருப்பதாகவும் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது. தற்போது சிம்புவின் &lsquo;STR 51&rsquo; (காட் ஆப் லவ்) படத்தை இயக்க கமிட் ஆகியிருக்கும் அஸ்வத், ரஜினி படத்தையும் இயக்குவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த வதந்திகளுக்கு வலு சேர்க்கும் விதமாக ஒரு சுவாரசியமான சம்பவம் இன்று நடந்துள்ளது. இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்களும் திரைத்துறையினரும் வாழ்த்துகளைக் குவித்து வரும் வேளையில், கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் அஸ்வத் மாரிமுத்துவுக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு சிறப்பு வீடியோவை வெளியிட்டுள்ளது.&lt;/p&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;View this post on Instagram&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&lt;p&gt;A post shared by Raaj Kamal Films International (@rkfioffl)&lt;/p&gt;&lt;p&gt;இன்னும் அதிகாரப்பூர்வமாக படம் எதையும் இயக்க ஒப்பந்தம் ஆகாத ஒரு இளம் இயக்குனருக்கு, கமலின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் பிரத்யேக வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவிப்பது சாதாரண விஷயம் அல்ல என்கிறார்கள் சினிமா விமர்சகர்கள்.&lt;/p&gt;&lt;p&gt;இந்த வீடியோ வெளியானது முதல், &lsquo;தலைவர் 173&rsquo; படத்தின் புதிய இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து தான் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக ரஜினி மற்றும் கமல் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். சுந்தர் சி, சிபி சக்கரவர்த்தியைத் தொடர்ந்து இப்போது அஸ்வத் மாரிமுத்து கைகளுக்கு &lsquo;தலைவர் 173&rsquo; சென்றுள்ளதா என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>entertainment</category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/rajinikanth-thalaivar-173-director-changed-again-nf9462b"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Ilaiyaraaja Music: "சொர்க்கமே என்றாலும்" பாட்டில் உள்ள இசை சூட்சமங்கள்.! தமிழ்நாட்டு பெருமையை எடுத்து சொன்ன கங்கை அமரன்! ஹேட் போனில் கேட்டுப்பாருங்க!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/ilaiyaraaja-music-hidden-musical-secrets-in-sorggame-endralum-tamil-pride-by-gangai-amaran-best-with-headphones-nfeluqv</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/ilaiyaraaja-music-hidden-musical-secrets-in-sorggame-endralum-tamil-pride-by-gangai-amaran-best-with-headphones-nfeluqv</guid>
            <pubDate>Tue, 12 May 2026 10:44:06 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;&amp;nbsp;'ஊரு விட்டு ஊரு வந்து' திரைப்படத்தின் &quot;சொர்க்கமே என்றாலும்&quot; பாடலின் இசை சூட்சுமங்களை இக்கட்டுரை ஆராய்கிறது. இளையராஜாவின் இசை அமைப்பு, ராகங்களின் பயன்பாடு, கங்கை அமரனின் வரிகள் தமிழ்நாட்டின் பெருமையை எப்படி பறைசாற்றுகின்றன என்பதை இது விவரிக்கிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01krd8s73xwsqqa0pjg9g0n4f2,imgname-chatgpt-image-may-12--2026--10-26-39-am--1--1778561883260.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;&amp;nbsp;'ஊரு விட்டு ஊரு வந்து' திரைப்படத்தின் &quot;சொர்க்கமே என்றாலும்&quot; பாடலின் இசை சூட்சுமங்களை இக்கட்டுரை ஆராய்கிறது. இளையராஜாவின் இசை அமைப்பு, ராகங்களின் பயன்பாடு, கங்கை அமரனின் வரிகள் தமிழ்நாட்டின் பெருமையை எப்படி பறைசாற்றுகின்றன என்பதை இது விவரிக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;1990-ஆம் ஆண்டு வெளியான ஊரு விட்டு ஊரு வந்து திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல், தமிழ் இசையின் அழகியல் உச்சமாகத் திகழ்கிறது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;இயக்கம்: கே. பி. ராஜா, நடிப்பு: ராமராஜன், கௌதமி, இசை: 'இசைஞானி' இளையராஜா.&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;பாடியவர்கள்: இளையராஜா, எஸ்.ஜானகி.&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;வரிகள்: கங்கை அமரன்.&amp;nbsp;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;வெளிநாட்டு வசதிகள் சொர்க்கமாக இருந்தாலும், தமிழ்நாட்டின் இயற்கை, கலாச்சாரம், தமிழ் மொழி ஆகியவற்றுக்கு அது ஈடு இல்லை எனும் உணர்வை இப்பாடல் அழகாகப் பாடுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஹேட் போனில் கேட்டால், பாடலின் ஆழம் தெரியும்! தொடக்கத்தில் வீணையின் மென்மையான ஸ்வரங்கள், கிராமிய இயல்பை ஊதுகின்றன. &quot;சொர்க்கமே என்றாலும்...&quot; என்று இளையராஜா தொடங்கும் போது, பின்னணியில் நாயாண்டி மெளத்ஸம் (folk rhythm) இணைந்து கிராம வாழ்க்கையின் துடிப்பை உருவாக்குகிறது. இதில் ராகம் காம்போஜியின் சாரம் (pentatonic scale) பயன்படுத்தி, தமிழ் ஊர்களின் இனிமையை வெளிப்படுத்துகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மிட்-பார்ட்டில், ஜானகியின் குரலுடன் நாதஸ்வரம் அமைப்பு உச்சம் தொடுகிறது &ndash; இது தமிழ்நாட்டு கல்யாணி ராகத்தின் (similar to Mohanam) இணைப்பு, திருமணங்கள், பண்டிகைகளின் சிரம்பலை நினைவூட்டுகிறது. &quot;பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா&quot; என்ற வரி வரும்போது, வயலின்கள்யின் ஸ்வர ஓட்டம் (string ensemble) தமிழின் இனிமையை உணர்த்துகிறது. இளையராஜா இங்கு கானுனு (kanjira) மற்றும் மிருதங்கம் அடி துடிப்புகளைச் சேர்த்து, குத்துப்பாட்டு தொனியை ஏற்படுத்தியுள்ளார் &ndash; இது தமிழக கிராமங்களின் கும்பமேளைக்கு ஒத்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பாடலின் கிளைமாக்ஸில், நான்டு (nadaswaram drone) மற்றும் தம்புரா சஞ்சாரங்கள் தமிழ்நாட்டின் ஆன்மீகத்தை (கோயில் இசை) பிரதிபலிக்கின்றன. இளையராஜா 500-க்கும் மேற்பட்ட இசைகருவிகளைப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது; இதில் தமிழ்நாட்டு பாரம்பரிய வாத்தியங்கள் (thavil, parai) மறைமுகமாக இணைந்துள்ளன. இந்த சூட்சுமங்கள், டிஜிட்டல் இசையின்முன் (1990-களில்) ஆனாலாக் ரெகார்டிங்கால் உயிரோட்டமாக உணரப்படுகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கங்கை அமரன், தமிழ் இலக்கியப் புலவராக, &quot;காவிரி சாரல் போல் தெளிந்திடுமா&quot;, &quot;தென்னை மரங்கள் நிலவ போல் திளைத்திடுமா&quot; என்ற வரிகளால் தமிழ்நாட்டின் இயற்கை அழகை (காவிரி, தென்னைக்காடுகள், பசுமை) பாடுகிறார். &quot;தமிழ் போல் இனித்திடுமா&quot; என தமிழ் மொழியின் உலகளாவிய இனிமையைப் பறைசாற்றுகிறார். இது தமிழர்களின் பெருமையை &ndash; கலை, இலக்கியம், பண்பாடு &ndash; உயர்த்துகிறது. பாடல் வெளியானபோது, தமிழ் பாமர மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது; இன்றும் யூடியூபில் கோடணி பார்வைகள்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இப்பாடல் தமிழ்நாட்டின் அடையாளத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தியது. ராமராஜனின் நடிப்பில் கிராம-நகர வாழ்க்கை முரண்பாடு அழகாக வெளிப்படுகிறது. ஹேட் போனில் கேட்டு, இளையராஜாவின் சூட்சுமங்களை உணருங்கள் &ndash; தமிழ்நாட்டு பெருமை உங்கள் இதயத்தில் ஒலிக்கும்!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>entertainment</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/ilaiyaraaja-music-hidden-musical-secrets-in-sorggame-endralum-tamil-pride-by-gangai-amaran-best-with-headphones-nfeluqv"/>
        </item>
        <item>
            <title><![CDATA[திரைத்துறையிலும் கோலோச்சிய சி.ஜே. ராய்.. இத்தனை படங்கள் தயாரித்துள்ளாரா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/entertainment/confident-group-founder-cj-roy-dies-a-look-at-his-major-film-productions-articleshow-rvma860</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/entertainment/confident-group-founder-cj-roy-dies-a-look-at-his-major-film-productions-articleshow-rvma860</guid>
            <pubDate>Fri, 30 Jan 2026 19:11:32 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;திரைப்படத் தயாரிப்பு மட்டுமின்றி, தொலைக்காட்சித் துறையிலும் சி.ஜே. ராய் தீவிரமாக இருந்தார். பிக் பாஸ் கன்னட சீசன் 11-க்கு கான்ஃபிடன்ட் குரூப் ஸ்பான்சர் செய்தது.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kg7fyvat1nks64v17zycjc3g,imgname-movies-produced-by-cj-roy-1769778146649.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கான்ஃபிடன்ட் குரூப் உரிமையாளர் சி.ஜே. ராய் இன்று பெங்களூருவில் உள்ள தனது அலுவலகத்தில் தற்கொலை செய்து கொண்டார். வரி ஏய்ப்பு புகாரைத் தொடர்ந்து இன்று அவரது அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தியபோது அவர் தன்னைத் தானே துப்ப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;திரைத்துறையிலும் கோலோச்சிய சி.ஜே. ராய்&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;கான்ஃபிடன்ட் குரூப் ரியல் எஸ்டேட் நிறுவனம் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் சிறந்து விளங்கிய நிலையில், சி.ஜே. ராயின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொழில் அதிபர் என்பதைத் தாண்டி, திரைப்படத் தயாரிப்பிலும் சி.ஜே. ராய் தீவிரமாக இருந்தார். பாவனாவின் 90வது படமாக உருவாகும் 'அனோமி' என்ற படத்தின் தயாரிப்பு பங்குதாரராகவும் சி.ஜே. ராய் இருந்தார்.&lt;/p&gt;&lt;h3&gt;&lt;strong&gt;மோகன்லால் பட தயாரிப்பாளர்&lt;/strong&gt;&lt;/h3&gt;&lt;p&gt;மோகன்லால் நாயகனாக நடித்த, ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கிய 'காசனோவா' படத்தின் மூலம் கான்ஃபிடன்ட் குரூப் திரைப்படத் தயாரிப்பில் இறங்கியது. பின்னர், சித்திக் இயக்கிய 'லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன்' படத்தையும் சி.ஜே. ராய் தயாரித்தார். இந்தப் படம் 2013-ல் வெளியானது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;மரைக்காயர், அரபிக்கடலின் சிங்கம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;'வெள்ளிமூங்கா' படம் மூலம் பிரபலமான ஜிபு ஜேக்கப் இயக்கிய சுரேஷ் கோபியின் 'மே ஹூம் மூசா' மற்றும் மோகன்லால் நாயகனாக நடித்த பிரியதர்ஷன் இயக்கிய பிரம்மாண்ட படமான 'மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம்' ஆகியவற்றின் தயாரிப்புப் பணிகளிலும் சி.ஜே. ராய் ஈடுபட்டிருந்தார். கடந்த ஆண்டு வெளியான, டோவினோ தாமஸ் நடித்த 'ஐடென்டிட்டி' படத்தையும் சி.ஜே. ராயின் கான்ஃபிடன்ட் குரூப் தயாரித்தது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;தொலைக்காட்சித் துறையிலும் ஸ்பான்சர்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;திரைப்படத் தயாரிப்பு மட்டுமின்றி, தொலைக்காட்சித் துறையிலும் சி.ஜே. ராய் தீவிரமாக இருந்தார். பிக் பாஸ் கன்னட சீசன் 11-க்கு கான்ஃபிடன்ட் குரூப் ஸ்பான்சர் செய்தது. மேலும், ஸ்டார் சுவர்ணாவின் ஸ்டார் சிங்கர் மியூசிக் ரியாலிட்டி ஷோவையும் கான்ஃபிடன்ட் குரூப் ஸ்பான்சர் செய்தது. மலையாள பிக் பாஸ் சீசன் 7 ரன்னர்-அப் அனீஷ் டி.ஏ-க்கு நிகழ்ச்சி முடிந்த பிறகு பத்து லட்சம் ரூபாய் பரிசாக வழங்கியதும் விவாதமானது என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>entertainment</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/entertainment/confident-group-founder-cj-roy-dies-a-look-at-his-major-film-productions-articleshow-rvma860"/>
        </item>
        <item>
            <title><![CDATA[‘ஊரையே அடக்கி ஆண்ட தேவரய்யா...’ சிவாஜிக்கு இப்படி ஒரு மரணமா..? ரகசியம் உடைத்த கவுண்டமணி..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/is-this-the-death-of-shivaji-goundamani-broke-the-secret-u3ygo42</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/is-this-the-death-of-shivaji-goundamani-broke-the-secret-u3ygo42</guid>
            <pubDate>Thu, 12 Feb 2026 13:01:44 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;அந்த பதிலை எதிர்பார்க்காத சிவாஜி வாயை பொத்தி திகைத்துப் போனார். முன்னாள் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை இப்போது வெகுமானம் ஆக்கிக் கொண்டு வீடு திரும்பினார் கவுண்டமணி.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kh8bxbmp2cpp3mmkr7c2q088,imgname-goundamani-1770881199765.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;அந்த பதிலை எதிர்பார்க்காத சிவாஜி வாயை பொத்தி திகைத்துப் போனார். முன்னாள் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை இப்போது வெகுமானம் ஆக்கிக் கொண்டு வீடு திரும்பினார் கவுண்டமணி.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நடிகர் திலகம் சிவாஜி சோர்வாகவோ அல்லது மனக்கஷ்டத்தில் இருந்தாலோ &lsquo;&lsquo;யேப்பா.. அந்த கவுண்டமணி ஜோக்குகளை கொஞ்சம் போட்டு விடுங்கப்பா..&rsquo;&rsquo; எனச் சொல்லி அவரது நகைச்சுவை காட்சிகளை பார்த்து மனதை புத்துணர்ச்சி ஆக்கிக் கொள்வாராம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். ஆனாலும், கவுண்டமணிக்கும், சிவாஜிக்கும் இடையே ஒரு ஈகோ யுத்தம் நடந்து கொண்டே இருந்திருக்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;சிவாஜி கணேசன் வீட்டில் அடிக்கடி விருந்து நடப்பது வழக்கம். ஆனால், கவுண்டமணி யார் வீட்டிற்கும் விருந்துக்கு செல்ல மாட்டார். கவுண்டமணியின் இந்தக் கொள்கையை அறிந்து, அதை உடைத்தெரிய வேண்டும் என்கிற முடிவுக்கு வந்துவிட்டார் சிவாஜி. அப்போது பல படங்களில் இணைந்து நடித்துக் கொண்டு இருந்ததால் பிரபுவுக்கும், கவுண்டமணிக்கும் நல்ல நட்பு இருந்தது. அந்த நட்பை வைத்து பிரபு மூலம் கவுண்டமணியை வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுக்கத் திட்டமிட்டார் சிவாஜி.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lsquo;அந்த கவுண்டரை விருந்துக்கு அழைத்து வா..&rsquo;&rsquo; என சிவாஜி கட்டளையிட, பிரபு, கவுண்டமணி வீட்டிற்கு கிளம்பினார். அங்கே சென்ற பிறகு &lsquo;&lsquo;அண்ணே... அப்பா இதுவரை யாரையுமே வீட்டிற்கு சென்று விருந்துக்கு அழைத்ததில்லை. உங்களைத் தான் இப்படி முதல் முறையாக அழைத்திருக்கிறார். எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது&rsquo;&rsquo; என சிலாகித்துச் சொல்ல, கவுண்டமணியால் மறுக்க முடியவில்லை. அப்போது சிவாஜியின் அன்னை இல்லத்திற்குள் பலரும் உணவருந்திக் கொண்டிருந்தனர். கவுண்டமணி காரிலிருந்து இறங்கி வருவதை பார்த்து விட்ட சிவாஜி. &lsquo;&lsquo; என்னய்யா கவுண்டர்... நலமா..?&rsquo;&rsquo; என வரவேற்று உட்கார வைத்துவிட்டார்.&lt;/p&gt;&lt;p&gt;எல்லோரும் வீட்டிற்குள் விருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க, கவுண்டமணிக்கு வரவேற்பு அறையிலேயே சாப்பாட்டை போட்டார்கள். அத்தோடு அவமானப்படுத்தாமல் விட்டாரா சிவாஜி? &lsquo;&lsquo;கவுண்டரே நம்ம வீட்ல இப்படி விருந்து வைக்கிறது அடிக்கடி நடக்கிறதுதான். நாலு பேருக்கு சாப்பாடு போட்டு அனுப்புவது எங்க வீட்டு வழக்கம். பாவம் இல்லாத ஏழைகளுக்கு சாப்பாடு போட்டா அந்த புண்ணியம் நமக்கு தானே. அதுதான் உன்னையும் கூப்பிட்டேன்&rsquo;&rsquo; என நேராகவே கவுண்டமணியை அவமானப்படுத்தி விட்டார் சிவாஜி.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த சம்பவம் நடந்து ஓரிரு ஆண்டுகள் கழிந்தது. தேவர்மகன் படத்தின் பிரிவியூ காட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த தியேட்டருக்கு கவுண்டமணியும் வந்திருந்தார். எல்லோரும் படத்தைப் பார்த்து வெகுவாக சிலாகித்துக் கொண்டிருந்தார்கள். இதனால் மிகவும் சந்தோஷமாக காணப்பட்டார் சிவாஜி. படம் முடிந்த பிறகு கவுண்டமணி ஓரமாக ஒதுங்கி வெளியேற முயற்சித்தார். அதை பார்த்துவிட்ட சிவாஜி, &lsquo;&lsquo;அதோ போறான் பாரு கவுண்டர். அவனை கூப்பிடுங்க&rsquo;&rsquo; என அழைக்க, கவுண்டமணி, சிவாஜி அருகில் வந்தார். அப்போது &lsquo;&lsquo;தேவர் இந்த படத்துல வாழ்ந்திருக்காரா..? எப்படி நம்ம நடிப்பு? ஊரையே கட்டுப்பாட்டுக்குள்ள வைச்சிருக்கிற தேவர் கம்பீரமா இருக்காரா? எனக் கேட்டார்.&lt;/p&gt;&lt;p&gt;&lsquo;&lsquo;படத்தை பத்தி ஒன்னு சொல்வேன். நீங்க தப்பா எடுத்துக்கக்கூடாது&rsquo;&rsquo; என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார். சிவாஜியும் அதெல்லாம் எதுவும் சொல்ல மாட்டேன். படத்தை பற்றிய உன் கருத்தை சொல்லு என கேட்டிருக்கிறார். உடனே கவுண்டமணி, &lsquo;&lsquo;நீங்க படத்துல பெரிய தேவர். நீங்க நடந்தா ஊரே நடக்குது... நீங்க நின்னா ஊரே உட்காருது. அப்படி அவ்வளவு பெரிய ஆளா படத்துல வரீங்க. ஆனா ஒன்னு இவ்ளோ பெரிய மனுஷன் நீங்க. ஒரு சின்ன புள்ளை மிதிச்சதால செத்து போயிட்டீங்களே. இதைத் தாண்டி படத்துல சொல்ல ஒன்னும் இல்லை&rsquo;&rsquo; என ஒரே போடாக போட்டிருக்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அந்த பதிலை எதிர்பார்க்காத சிவாஜி வாயை பொத்தி திகைத்துப் போனார். முன்னாள் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை இப்போது வெகுமானம் ஆக்கிக் கொண்டு வீடு திரும்பினார் கவுண்டமணி. இந்த தகவலை மறைந்த முன்னாள் சினிமா பத்திரிகையாளர் நெல்லை பாரதி பகிர்ந்து கொண்டுள்ளார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>entertainment</category>
            <dc:creator>Thiraviya raj</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/is-this-the-death-of-shivaji-goundamani-broke-the-secret-u3ygo42"/>
        </item>
        <item>
            <title><![CDATA[சீட்டின் நுனிக்கே வரவைக்கும் சஸ்பென்ஸ்! இந்த Survival த்ரில்லர் படங்களை மிஸ் பண்ணாதீங்க!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/webstories/entertainment/best-survival-thriller-movies-to-watch-on-ott-platforms-wdwsoqz</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/webstories/entertainment/best-survival-thriller-movies-to-watch-on-ott-platforms-wdwsoqz</guid>
            <pubDate>Thu, 09 Apr 2026 19:31:51 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Best Survival Movies: மரணத்தின் விளிம்பு வரை சென்று உயிர் பிழைக்கும் கதைகள் உங்களுக்குப் பிடிக்குமா? அப்படி ஒரு த்ரில்லிங் அனுபவத்தைத் தரும் சில சிறந்த சர்வைவல் படங்களின் பட்டியலை பார்ப்போம்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kns5zymk1jn6qh4te0jw1mts,imgname-survaival-movies-1775740385938.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <category>entertainment</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/webstories/entertainment/best-survival-thriller-movies-to-watch-on-ott-platforms-wdwsoqz"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Samantha: நூலிழையில் தப்பித்தேன்.. இல்லனா சாவித்திரி போல.. காதல் வலிகள் குறித்து சமந்தா உருக்கம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/entertainment/samantha-reveals-she-almost-had-a-tragic-love-life-like-savitri-wgrqxbf</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/entertainment/samantha-reveals-she-almost-had-a-tragic-love-life-like-savitri-wgrqxbf</guid>
            <pubDate>Thu, 09 Apr 2026 15:44:15 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;காதல் குறித்து நடிகை சமந்தா பேசிய ஒரு பழைய பேச்சு இப்போது வைரலாகி வருகிறது. ஒருவரை கண்மூடித்தனமாக நம்பியதாகவும், நூலிழையில் தப்பித்ததாகவும், இல்லையென்றால் தன் வாழ்க்கையும் நடிகை சாவித்திரி போல ஆகியிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jkj4tfyfg3cy5m7yee9t9sqz,imgname-naga-chaitanya-samantha.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;காதல் குறித்து நடிகை சமந்தா பேசிய ஒரு பழைய பேச்சு இப்போது வைரலாகி வருகிறது. ஒருவரை கண்மூடித்தனமாக நம்பியதாகவும், நூலிழையில் தப்பித்ததாகவும், இல்லையென்றால் தன் வாழ்க்கையும் நடிகை சாவித்திரி போல ஆகியிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சமந்தா சமீபத்தில் இயக்குநர் ராஜ் நிடிமோருவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகின. இதற்கு முன்பு, அவர் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார். சுமார் ஏழு வருட காதல், பெற்றோர் சம்மதத்துடன் பிரம்மாண்டமாக நடந்த திருமணம் என எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால், திருமணமான நான்கே ஆண்டுகளில் இருவரும் பிரிந்துவிட்டனர். இந்நிலையில், காதல் குறித்து சமந்தா பேசிய ஒரு பழைய கருத்து இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;சமந்தா, 2018-ல் வெளியான 'மகாநடி' படத்தில் நடித்திருந்தார். இது பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு. நாக் அஸ்வின் இயக்கிய இந்த படத்தில், கீர்த்தி சுரேஷ் சாவித்திரியாகவும், துல்கர் சல்மான் ஜெமினி கணேசனாகவும் நடித்திருந்தனர். இதில் சமந்தா ஒரு ரிப்போர்ட்டராக நடித்தார். அவருக்கு ஜோடியாக விஜய் தேவரகொண்டா நடித்திருந்தார். இந்த படம் பெரிய ஹிட் ஆனதுடன், கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருதையும் பெற்றுத் தந்தது.&lt;img&gt;&lt;p&gt;'மகாநடி' படம் வெளியான சமயத்தில் சமந்தா ஒரு பேட்டியில், &quot;சாவித்திரி அம்மாவைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. இந்த படம் நடித்த பிறகுதான் பல விஷயங்கள் புரிந்தது. சில இடங்களில், 'அட... இது என் கதை போலவே இருக்கிறதே' என்று தோன்றியது. காதல் விஷயத்தில் ஒருமுறை நானும் இப்படித்தான் ஒருவரை நம்பினேன். ஆனால், அதிர்ஷ்டவசமாக நூலிழையில் தப்பித்தேன். அதிலிருந்து சீக்கிரம் வெளியே வந்துவிட்டேன். &amp;nbsp;இல்லையென்றால் என் கதையும் சாவித்திரி போல ஆகியிருக்கும். நான் செய்த புண்ணியம், என் அதிர்ஷ்டத்தால்தான் எனக்கு சை (நாக சைதன்யா) கிடைத்தார்&quot; என்று கூறியிருந்தார். நாக சைதன்யாவுக்கு முன்பு அவர் சித்தார்த் என்ற நடிகருடன் காதலில் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், சமந்தா அவரைத்தான் குறிப்பிடுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சமந்தாவும் நாக சைதன்யாவும் 'ஏ மாய சேசாவே' படத்தில் இணைந்து நடித்தபோது காதலில் விழுந்தனர். அதன்பிறகு 'மனம்', 'ஆட்டோநகர் சூர்யா', 'மஜிலி' போன்ற படங்களிலும் சேர்ந்து நடித்தனர். 2017-ல் திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடி, 2021-ல் பிரிந்தது. தற்போது நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவையும், சமந்தா, இயக்குநர் ராஜ் நிடிமோருவையும் திருமணம் செய்துகொண்டதாக செய்திகள் பரவி வருகின்றன. சமந்தா அடுத்ததாக &lsquo;மா இன்டி பங்காரம்&rsquo; என்ற படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>entertainment</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/entertainment/samantha-reveals-she-almost-had-a-tragic-love-life-like-savitri-wgrqxbf"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Jailer 2: ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பில் கோர விபத்து.. இளைஞர் பலி.. என்ன நடந்தது? பரபரப்பு தகவல்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/entertainment/jailer-2-set-accident-youth-electrocuted-in-chennai-rajinikanth-movie-news-yygwqkv</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/entertainment/jailer-2-set-accident-youth-electrocuted-in-chennai-rajinikanth-movie-news-yygwqkv</guid>
            <pubDate>Thu, 14 May 2026 19:21:44 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Jailer 2: 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் இளைஞர் பலியானார். என்ன நடந்தது? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01krkbyvbvx6c9a5hhpk5gfann,imgname-jailer-2-1778766540154.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Jailer 2: 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் இளைஞர் பலியானார். என்ன நடந்தது? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கடந்த 2023ம் ஆண்டு இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் சுமார் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து பெரும் சாதனை படைத்தது. முதல் பாகம் பெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து 'ஜெயிலர் 2' திரைப்படம் உருவாகி வருகிறது. அதே சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக 'ஜெயிலர் 2' உருவாகி வருகிறது. 2ம் பாகத்தில் ரஜினிகாந்துடன் எஸ்.ஜே.சூர்யா, பாலிவுட் நடிகர் வித்யா பாலன், பாலிவுட் மூத்த நடிகர் மிதுன் சக்கரவர்த்தி ஆகியோரும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;'ஜெயிலர் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில், . ஒரு சில பேட்ச் வர்க் காட்சிகளை படமாக்கும் பணி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூர் ஆதித்யாராம் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. அங்கு அமைக்கப்பட்ட வீடு போன்ற செட் அமைப்பில் மின்விசிறிகளை மாட்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (28) என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் படப்பிடிப்பு தளமே சோகத்தில் மூழ்கியது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;விபத்துக்கு காரணம் என்ன?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இது குறித்து தகவல் அறிந்ததும் கானத்தூர் காவல்துறையினர் விரைந்து வந்து கார்த்திகேயன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மின்கசிவே விபத்துக்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. படப்பிடிப்பு தளத்தில் போதிய பாதுகாப்பு வசதிகள் இருந்ததா என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;'ஜெயிலர் 2' படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே சென்னை, கோவா மற்றும் கேரளா உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துவிட்டதாகக் கூறப்பட்ட நிலையில், சில கூடுதல் காட்சிகளுக்காக (Patchwork) கடந்த 15 நாட்களாக இந்த செட்டில் பணிகள் நடைபெற்று வந்தபோது இந்த சோக சம்பவம் நிகழ்ந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அண்மை காலமாக தமிழ் சினிமா படப்பிடிப்புகளின்போது அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு பா.ரஞ்சித் இயத்தில் உருவான 'வேட்டுவம்' படத்தில் விபத்து ஏற்பட்டு ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் என்பவர் உயிரிழந்தார். இதேபோல் கார்த்தி நடித்து வந்த 'சர்தார் 2' படப்பிடிப்பின் போது ஸ்டண்ட் கலைஞர் ஒருவர் 20 அடி உயரத்தில் இருந்து விழுந்து இறந்தார். இப்படியாக தொடர் விபத்துகள் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், படப்பிடிப்புகளின்போது உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>entertainment</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/entertainment/jailer-2-set-accident-youth-electrocuted-in-chennai-rajinikanth-movie-news-yygwqkv"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Silambarasan Video : “யார் பெத்த புள்ளையோ?” – வைரலாகும் சிம்புவின் இன்ஸ்டா வீடியோ]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/simbu-instagram-video-goes-viral-fans-curious-about-the-little-child-z3av4tk</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/simbu-instagram-video-goes-viral-fans-curious-about-the-little-child-z3av4tk</guid>
            <pubDate>Mon, 01 Jun 2026 16:02:51 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Silambarasan Video : தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான நடிகர் சிலம்பரசன், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள கியூட்டான விடியோ ஒன்று இணையத்தில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ks865t238yy0f2ncfrh2x748,imgname-simbu-1779465119811.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Silambarasan Video : தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான நடிகர் சிலம்பரசன், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள கியூட்டான விடியோ ஒன்று இணையத்தில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தற்போது சிலம்பரசன், இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'அரசன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். 'வடசென்னை' பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகும் இத்திரைப்படத்தின் மீது ரசிகர்களிடையே இப்போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு, சில நாட்கள் இடைவெளி விட்டே நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு முக்கியக் காரணம், இயக்குநர் வெற்றி மாறன் ஒரே நேரத்தில் நடிகர் கென் கருணாஸை முதன்மைப் பாத்திரமாக வைத்து 'ராஜன் வகையறா' திரைப்படத்தையும் இயக்கி வருவதுதான். இதனால் 'அரசன்' படப்பிடிப்புக்குக் கிடைத்த ஓய்வு நாட்களைக் கழிப்பதற்காக எஸ்டிஆர் வெளிநாடு சென்றுள்ளார். (இதனைத் தொடர்ந்து சிலம்பரசன் அடுத்ததாக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது).&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்றுள்ள சிலம்பரசன் அங்கிருக்கும் ஒரு கடற்கரையில் ரிலாக்ஸாக நேரத்தைச் செலவிட்டுள்ளார். அப்போது அங்கிருந்த ஒரு குட்டிப் பையன் கடற்கரையில் விளையாடிக்கொண்டே, தன்னிடம் இருந்த சில கற்களை திடீரென சிலம்பரசனிடம் கொண்டு வந்து கொடுத்துள்ளான்.&lt;/p&gt;&lt;p&gt;சற்றும் எதிர்பாராத எஸ்டிஆர், அந்தச் சிறுவன் கொடுத்த கற்களைப் புன்னகையோடு வாங்கிக்கொண்டு:&lt;/p&gt;&lt;p&gt;&quot;இதை வச்சு நான் என்ன பண்றது? யார் பெத்த புள்ளையோ...&quot;&lt;/p&gt;&lt;p&gt;என்று செல்லமாகக் கலாய்த்துக் பேசியுள்ளார்.&lt;/p&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;View this post on Instagram&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&lt;p&gt;A post shared by Silambarasan TR (@silambarasantrofficial)&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;சிலம்பரசன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்தச் சுவாரசியமான மற்றும் கியூட்டான விடியோதான் தற்போது எஸ்டிஆர் ரசிகர்களால் சோசியல் மீடியாவில் செம வேகமாகப் பகிரப்பட்டு, லைக்குகளைக் குவித்து வருகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>entertainment</category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/simbu-instagram-video-goes-viral-fans-curious-about-the-little-child-z3av4tk"/>
        </item>
    </channel>
</rss>
