<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes"?>
<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/">
    <channel>
        <title>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description>Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News</description>
        <image>
            <url>https://static.asianetnews.com/v1/images/tamil_logo.png</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Thu, 02 Jan 2020 18:35:00 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss/election-2019" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title>ஊராட்சித் தலைவராகும் கல்லூரி மாணவி,பாட்டி , திருநங்கை..  களைகட்டிய தேர்தல் முடிவு..!வீடியோ</title>
            <link>https://tamil.asianetnews.com/video/election-2019/75-years-old-lady-college-lady-and-transgender-won-the-local-body-election-q3hdpv</link>
            <guid>https://tamil.asianetnews.com/video/election-2019/75-years-old-lady-college-lady-and-transgender-won-the-local-body-election-q3hdpv</guid>
            <pubDate>Thu, 02 Jan 2020 18:35:00 +0530</pubDate>
            <description>நீண்ட இழுபறிக்கு பிறகு தமிழகத்தில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சித்தேர்தல் இரண்டு கட்டங்களாக கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து எஞ்சிய 27 மாவட்டங்களிலும் ஊராட்சி பதவிகளுக்கான தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. திமுகவும் அதிமுகவும் சம பலத்துடன் மாறி மாறி முன்னிலையில் இருக்கின்றன.  இந்தநிலையில் மதுரை மாவட்டத்தில் 79 வயது மூதாட்டி ஒருவர் பஞ்சாயத்து தலைவராக வெற்றிபெற்றுள்ளார். மதுரை மாவட்டம் மேலூர் ஒன்றியத்தில் இருக்கும் அரிட்டாபட்டி ஊராட்சிக்கு தேர்தல் நடைபெற்றது. இங்கு தலைவர் பதவிக்கு வீரம்மாள் என்கிற 79 வயது மூதாட்டி போட்டியிட முடிவு செய்திருந்தார். அதற்காக வேட்புமனு தாக்கல் செய்த அவர் தீவிர வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டிருந்தார். தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.  7 வேட்பாளர்கள் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட போதிலும் தொடக்கம் முதலே வீரம்மாள் முன்னிலை வகித்து வந்தார். இறுதியில் 195 வாக்குகள் அதிகம் பெற்று அவர் ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்றார். இதுவரை 2 முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்திருக்கும் அவர் மூன்றாவது முறையாக மீண்டும் போட்டியிட்டு தற்போது வெற்றி பெற்றுள்ளார். வெற்றியை தனது பகுதியின் இளைஞர்களுக்கு காணிக்கையாக்குவதாக கூறிய வீரம்மாள், விவசாயம் மற்றும் தண்ணீர் பிரச்னையை தீர்ப்பதே தனது முதல் வேலை என தெரிவித்துள்ளார்.  அதைபோல் சென்னை: தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் 2ஆவது வார்டில் திருநங்கை ரியா வெற்றி பெற்றுள்ளார்.  மேலும் கிருஷ்ணகிரி மாவட்டம் கே என் தொட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சுயேச்சை வெற்றி. 21 வயது கல்லூரி மாணவி ஜெய்சந்தியா ராணி வெற்றி பெற்றார் என்பது குறிப்படத்தக்கது </description>
            <media:content height="400" width="760" medium="image" url="https://static.asianetnews.com/images/01dxk5pz2qwky3gd1chaqkh0r6/thumbnail-jpg_760x400.jpg"/>
        </item>
        <item>
            <title>ஓட்டு போட்ட கையேடு 25 கிலோ அரிசி மூட்டை..ஆலையையே குத்தைகைக்கு எடுத்த அமைச்சரின் உறவினர்கள்..! அலைமோதிய கூட்டம் வீடியோ..!</title>
            <link>https://tamil.asianetnews.com/video/election-2019/for-one-vote-admk-candidate-given-25-kg-rice-bag-a-viral-video-q3brmw</link>
            <guid>https://tamil.asianetnews.com/video/election-2019/for-one-vote-admk-candidate-given-25-kg-rice-bag-a-viral-video-q3brmw</guid>
            <pubDate>Mon, 30 Dec 2019 17:50:00 +0530</pubDate>
            <description>திருவண்ணாமலையில் தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்காளர்களின் ஒரு ஓட்டுக்கு 25 கிலோ அரிசியை அதிமுகவினர் விநியோகம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். </description>
            <media:content height="400" width="760" medium="image" url="https://static.asianetnews.com/images/01dxbbyzkarvstbaczh8ejny9g/thumbnail-jpg_760x400.jpg"/>
        </item>
        <item>
            <title>சுமார் 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை வீழ்த்திய சி.என்.அண்ணாதுரை..!</title>
            <link>https://tamil.asianetnews.com/election-2019/thiruvannamalai-constituency-agri-krishnamoorthy-loss-prylar</link>
            <guid>https://tamil.asianetnews.com/election-2019/thiruvannamalai-constituency-agri-krishnamoorthy-loss-prylar</guid>
            <pubDate>Thu, 23 May 2019 18:55:00 +0530</pubDate>
            <description>திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை 3,00,073 வாக்குகள் வித்தியாசத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி வீழ்த்தியுள்ளார்.&amp;nbsp;  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 39 மக்களவை தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் மற்றும் 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 18 மற்றும் மே 19-ம் தேதி நடந்தது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. ஆரம்பித்தில் இருந்தே திமுக கூட்டணி 38 இடங்களில் முன்னிலையில் இருந்து வந்தது. இடைத்தேர்தலில் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்பதால் அதிமுக மக்களவை தேர்தலை கணக்கிலேயே எடுத்து கொள்ளவில்லை. அப்படி இருந்த போதிலும் தேனி மக்களவை தொகுதிகளில் மட்டுமே அதிமுக முன்னிலையில் இருந்து வருகிறது.  இதில் திருவண்ணாமலை மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரான அண்ணாதுரை 6,59,060 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி 3,58,620 வாக்குகள் வெற்றி தோல்வியடைந்தார். சுமார் 3,00,073 வாக்குகள் வித்தியாசத்தில் சி.என்.அண்ணாதுரை வெற்றி பெற்றுள்ளார்.&amp;nbsp;  தமிழக அளவில் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றாலும், தேசிய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மைக்கும் தேவையானன இடங்களை வென்றுள்ளது. வெற்றி பெற்றும் திமுகவினரின் பொழிவு இழந்து காணப்படுகின்றனர்.&amp;nbsp; </description>
            <media:content height="400" width="760" medium="image" url="https://static.asianetnews.com/images/01dbjdtvq8tzvngxc2tvc4az34/dmk-3_760x400.gif"/>
        </item>
        <item>
            <title>மெட்ரோ சிட்டிகளில் பட்டையை கிளப்பிய மோடி... எகிறியது பா.ஜ.க.வின் வாக்கு வங்கி..!</title>
            <link>https://tamil.asianetnews.com/election-2019/modi-stamped-the-band-on-metro-city-pryg95</link>
            <guid>https://tamil.asianetnews.com/election-2019/modi-stamped-the-band-on-metro-city-pryg95</guid>
            <pubDate>Thu, 23 May 2019 17:06:00 +0530</pubDate>
            <description>வளர்ந்த நகரமான மெட்ரோ சிட்டிகளில் இம்முறை பா.ஜ.க அலை வீசுகிறது வளர்ந்த நகரமான மற்ற நகரங்களைக் காட்டிலும் இந்திய மெட்ரோ நகரங்களில் படித்தவர்களின் எண்ணிக்கையும், அமைப்பு சார்ந்த துறைகளில் பணியாற்றுகிற இளைஞர்களின் எண்ணிக்கையும் சற்று அதிகமாக இருக்கிறது.&amp;nbsp;  இதனால் இவர்களின் வாக்கு யாருக்கு என்பது கவனிக்கப்படும் ஒன்றாக உள்ளது. இம்முறை இந்திய மெட்ரோ நகர வாக்காளர்களின் வாக்கை காங்கிரஸ் கட்சி வெகுவாக இழந்து இருக்கிறது. அதேசமயத்தில் பாஜக கூட்டணி 50 விழுக்காட்டுக்கும் அதிகமான தொகுதிகளைக் கைப்பற்றும் சூழல் நிலவுகிறது. மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் 30 தொகுதிகள் சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா, ஹைதராபாத் ஆகிய மெட்ரோ நகரங்களில் வருகின்றன.&amp;nbsp;  இவற்றில் மும்பையில் உள்ள 6 தொகுதியிலும் (பாஜக 3, சிவசேனா 3), டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும், ஹைதராபாத்தில் 1 தொகுதியிலும், பெங்களூருவில் 3 தொகுதிகளிலும் என 17 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. இவற்றில் 14 தொகுதிகளில் பாஜகவே நேரடியாகப் போட்டியிட்டுள்ளது.   கொல்கத்தாவில் உள்ள 8 தொகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும், சென்னையில் உள்ள 3 தொகுதிகளில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் திமுகவும், ஹைதராபாத்தில் 1 தொகுதியில் அனைத்திந்திய மஜீஸ் இதேஹதுல் முஸ்லிமீன், தெலங்கானா ராஷ்ட்ர சமிதி 1 தொகுதியிலும் முன்னிலை வகித்து வருகின்றன. இப்போதுள்ள நிலவரப்படி இந்திய மெட்ரோ நகரங்களின் ஒரு தொகுதியில் கூட நேரடியாக காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இல்லை </description>
            <media:content height="400" width="760" medium="image" url="https://static.asianetnews.com/images/01dar63hz162jxckxefkdm3q62/pm-modi-1_760x400.gif"/>
        </item>
        <item>
            <title>காங்கிரஸை கதறவிட்ட பாஜக... மே 26-ம் தேதி மீண்டும் பிரதமர் பதவியேற்கும் மோடி 2.0</title>
            <link>https://tamil.asianetnews.com/election-2019/pm-modi-2-0-to-sworn-in-on-may-26-pryeab</link>
            <guid>https://tamil.asianetnews.com/election-2019/pm-modi-2-0-to-sworn-in-on-may-26-pryeab</guid>
            <pubDate>Thu, 23 May 2019 16:24:00 +0530</pubDate>
            <description>மே 26-ம் தேதி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆட்சி அமைக்க பிரதமர் மோடி உரிமை கோருகிறார்.  நாடு முழுவதும் 542 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 11-ம் தேதி தொடங்கி கடந்த 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தின் வேலூர் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கும், காலியாக உள்ள 22 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது.    இதில் வாக்கு எண்ணிக்கை தொடக்கத்தில் இருந்தே பாஜக 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. கிட்டத்தட்ட பாஜகவின் வெற்றி உறுதியாகிவிட்ட நிலையில் பாஜக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டு வருகின்றனர். மீண்டும் பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும் சூழ்நிலை எழுந்துள்ளது.&amp;nbsp;  இந்நிலையில் வரும் 26-ம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து மோடி ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அன்றைய தினமே மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்பார் என்றும் கூறப்படுகிறது.&amp;nbsp; </description>
            <media:content height="400" width="760" medium="image" url="https://static.asianetnews.com/images/01dbj4v9q9nv0a5cvvn8x2qd5q/pm-modi_760x400.gif"/>
        </item>
        <item>
            <title>ஸ்டாலினை நிராகரித்த தமிழக மக்கள்... வித்தியாசமான தேர்தல் முடிவுகள்..! விழிபிதுங்கும் திமுக..!</title>
            <link>https://tamil.asianetnews.com/election-2019/tamilnadu-people-who-rejected-mk-stalin-prycyu</link>
            <guid>https://tamil.asianetnews.com/election-2019/tamilnadu-people-who-rejected-mk-stalin-prycyu</guid>
            <pubDate>Thu, 23 May 2019 15:55:00 +0530</pubDate>
            <description>மத்தியில் காங்கிரஸ் ஆட்சியமைந்தால் அதிமுகவை எளிதில் வீழ்த்தி முதல்வராக வந்துவிடலாம் என்று மனக்கோட்டை கட்டியிருந்த மு.க.ஸ்டாலினுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.&amp;nbsp;  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 39 மக்களவை தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் மற்றும் 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 18 மற்றும் மே 19-ம் தேதி நடந்தது. இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக தேர்தல் முடிவுகளில் 39 தொகுதிகளில், 37 இடங்களை தி.மு.க., கூட்டணிக்கு அள்ளி வழங்கிய தமிழக மக்கள், 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களில் அப்படி தீர்ப்பை வழங்கவில்லை. அதில் 8 தொகுதிகளில் அ.தி.மு.க., முன்னிலை வகிக்கிறது.&amp;nbsp;  மக்களை தேர்தலில் பிரதமர் மோடிக்கு எதிராக தெளிவான தீர்ப்பை தமிழக மக்கள் அளித்துள்ளனர். ஆனால் தமிழக அரசுக்கு எதிராக அப்படி ஓட்டளிக்கவில்லை என்பதையே இடைத்தேர்தல் முடிவுகள் வெளிப்படையாக காட்டுகிறது. இதில் மாநிலத்தில் ஆட்சி மாற்றம் வேண்டாம் என்பதையே நேரடியாக தமிழக மக்கள் உணர்த்தி இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர்.&amp;nbsp;  ஏற்கனவே பாஜகவின் உதவியோடு அதிமுக ஆட்சி நடைபெறுவதால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தது. இந்நிலையில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், அதிமுக &amp;nbsp;எளிதில் வீழ்த்தி முதல்வராகிவிடாமல் என்று கனவு கண்ட ஸ்டாலினுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இந்த முடிவை பார்க்கும் போது திமுக ஆட்சிக்கு வருதை தமிழக மக்கள் விரும்பவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.&amp;nbsp; </description>
            <media:content height="400" width="760" medium="image" url="http://static.asianetnews.com/images/01danah8fx3frq48zpcegtv5fh/MK-Stalin_760x400.jpg"/>
        </item>
        <item>
            <title>உள்ளடி போட்டு மச்சானை ஜெயிக்க வைத்த அன்புமணி!! ஆரணியில் அல்லு தெறிக்கவிடும் அசால்ட் ஸ்கெட்ச்...</title>
            <link>https://tamil.asianetnews.com/election-2019/anbumani-plan-and-secret-help-to-brother-in-law-vishnuprasath-pryct2</link>
            <guid>https://tamil.asianetnews.com/election-2019/anbumani-plan-and-secret-help-to-brother-in-law-vishnuprasath-pryct2</guid>
            <pubDate>Thu, 23 May 2019 15:52:00 +0530</pubDate>
            <description>ஆரணியில் போட்டியிட்டு அன்புமணியின் மச்சான் டாக்டர் விஷ்ணுபிரசாத், அதிமுக வேட்பாளர் சேவல் ஏழுமலையை பாமகவின் வாக்குவங்கியின் பலத்தோடு படுதோல்வி அடைய வைத்துள்ளார்.  அதிமுகவின் கோட்டையாகவும், பாமகவின் பலமான வாக்கு வங்கியை வைத்துள்ள இந்த ஆரணி தொகுதியில் அதிமுக படு தோல்வியை சந்தித்துள்ளது. ஆரணி மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ளார் என முன்பே தெரிந்து வைத்திருந்த அன்புமணி, அதிமுக கூட்டணியில் அந்த தொகுதியை பிளான் போட்டு தள்ளிவிட்டுள்ளார். வட மாவட்டங்களில் வன்னியர்கள் வாக்கு வங்கிகளில் ஆரணி தொகுதியும் ஒன்று. கட்சியின் வாக்கு வங்கியை பலமாக வைத்திருக்கும் பாமக வேண்டாமென்று சொன்னது அதிமுகவை அதிரவைத்தது.    அந்த தொகுதியை வேண்டாவெறுப்பாக சேவல் ஏழுமலைக்கு மீண்டும் கொடுத்தது. இவர் தான் கடந்த 5 வருஷம் MPயா இருந்தாருன்னு இவர் சொன்னாதான் மக்களுக்கே தெரியும். அந்தளவுக்கு தான் இவருக்கும் இவர் இருந்துள்ளார். மக்களுக்கும் இவருக்கும் தொடர்பே இருந்ததே இல்லை, செஞ்சி, செய்யார் ஆகிய இரண்டு தொகுதியில் தான் இவரை எப்பவாவது பாக்க முடியும். மத்தப்படி எந்த அரசு நிகழ்ச்சி, கட்சிக்காரன் வீட்டு விசேஷம், துக்கம் எதுக்கும் மனுஷன் தலய காட்டவே மாட்டாரு. இவருக்கு சீட் கொடுத்ததும் பதிலா கூட்டணிக்கு இந்த தொகுதியை அறிவிச்சிருந்தா நாங்களே சிறப்பா வேல பார்த்து ஜெயிக்க வைப்போம், இவருக்காக தொகுதிக்குள்ள ஒட்டு கேட்க அழைச்சிட்டுப் போனால் மக்கள் வெறித்துப் பார்ப்பதாக அதிமுகவினரே சொன்னார்கள்.    இந்நிலையில், சேவல் ஏழுமலைக்கு ஆதரவாக கூட்டணியில் உள்ள அன்புமணி தேர்தல் பரப்புரை செய்தார். அப்போது &amp;nbsp;பேசிய அவர், நாங்க வேகாத வெயிலிலே நிற்கிறோம். நீங்க வேட்பாளர் உட்கார்ந்து கொண்டிருக்கிறார் என அமைச்சர் சி.வி.சண்முகத்தை மேடையில் வைத்துக்கொண்டே பேசினார். அதுமட்டுமா? அந்த மேடையின் தனது மச்ச்சானை ஒரு வார்த்தைக் கூட விமர்சிக்கவில்லை. குடும்ப உறவைவிட கூட்டணி தர்மத்துக்காக பாமக உழைக்க வேண்டும் எனப் பேசியும் தேர்தல் பரப்புரையின் போது விஷ்ணுபிரசாத் குறித்து பேசாதது மச்சானுக்கு மறைமுகமாக அன்புமணி ஆதரவளிக்கிறார் என அப்போதே பேச்சு நிலவியது.    பணபலம், வன்னியர்கள் வாக்குவங்கியென வெயிட்டான பின்புலத்தோடு களமிறங்கிய இந்த விஷ்ணுபிரசத்தின் தந்தை தான் கிருஷ்ணசாமி, இவரும் ஏற்கனவே எம்பியாக இருந்தவர். அதோடு அன்புமணியின் மைத்துனர், அதாவது அன்புமணி மனைவியின் தம்பிதான் இந்த விஷ்ணு பிரசாத். கூட்டணியில் பாமக இருந்தாலும், வன்னியர் வாக்குகள் அப்படியே அன்புமணியின் மைத்துனருக்கே மொத்தமாக விழுந்துள்ளது தெளிவாக தெரிகிறது. </description>
            <media:content height="400" width="760" medium="image" url="http://static.asianetnews.com/images/01dbj3a36qczx0ztp9w40fh9wr/ramadoss_760x400.jpg"/>
        </item>
        <item>
            <title>கோட்டைவிட்ட கனிமொழி…  அதிர்ச்சியில் உடன்பிறப்புகள்..!</title>
            <link>https://tamil.asianetnews.com/election-2019/fortified-kanimozhi-dmk-party-shock-pryax5</link>
            <guid>https://tamil.asianetnews.com/election-2019/fortified-kanimozhi-dmk-party-shock-pryax5</guid>
            <pubDate>Thu, 23 May 2019 15:11:00 +0530</pubDate>
            <description>தி.மு.க தமிழகத்தில் லோக்சபா மற்றும் மினிசட்டமன்ற தொகுதியில் முன்னிலை வகித்தாலும் கனிமொழி பொறுப்பாளராக இருந்த விளாத்திகுளத்தில் அ.தி.மு.க முன்னிலையில் இருப்பது கழக உடன்பிறப்புகளை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.&amp;nbsp;  தி.மு.க மகளிர் அணி தலைவர் கனிமொழி இம்முறை ராஜ்யசபா பதவிக்கு ஆசைப்படாமல் தூத்துகுடியில் களம் இறங்கி போட்டியிட்டார். அவர் போட்டியிடும் போதே அவரின் வெற்றி உறுதியானதாக சொல்லப்பட்ட து. ஆனாலும் பிரசாரத்தில் தீவிரப்படுத்தி வெற்றிக்காக உழைத்தார். தூத்துகுடியில் தி.மு.க வேட்பாளராக இருக்கும் கனிமொழிக்கு விளாத்திகுளத்தை வெற்றி பெற வைக்கும் பொறுப்பு தலைமையால் தரப்பட்டது.&amp;nbsp;  இதனால் இடைத்தேர்தலில் நடக்கும் ஒரு தொகுதியான விளாத்திகுளம் தி.மு.க வசமாகும் என சொல்லப்பட்டது. ஆனால் தற்போது தேர்தல் வாக்கு எண்ணிக்கை போய் கொண்டிருக்கும் இந்நிலையில் தி.மு.க விளாத்திகுளத்தில் பின்னடைவை சந்தித்து இருக்கிறது. இதை பார்த்த கனிமொழி &amp;nbsp;“ஏன் இப்படி ஆச்சு” என தூத்துகுடியில் இருக்கும் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மற்றும் கழக நிர்வாகிகளிடம் கேட்டு வருவதோடு ஓட்டு எண்ணும் இடத்தில் கவனமாக இருங்கள் என சொல்லி இருக்கிறாராம். </description>
            <media:content height="400" width="760" medium="image" url="http://static.asianetnews.com/images/01d381gyzrc0nwnpacmav7f4h4/kanimozhi_760x400.jpg"/>
        </item>
        <item>
            <title>வயநாட்டில் வெற்றி... அமேதியில் இழுபறி... பரிதாபத்தில் ராகுல் காந்தி..!</title>
            <link>https://tamil.asianetnews.com/election-2019/rahul-gandhi-wayanad-won-pry9vz</link>
            <guid>https://tamil.asianetnews.com/election-2019/rahul-gandhi-wayanad-won-pry9vz</guid>
            <pubDate>Thu, 23 May 2019 14:49:00 +0530</pubDate>
            <description>அமேதி தொகுதியில் பின்னடைவை சந்தித்திருக்கும் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி, கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.&amp;nbsp;  கேரளாவின் வயநாடு தொகுதியில் முதல்முறையாக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி போட்டியிட்டார். இத்தொகுதியின் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டபோது ஆரம்பம் முதலே ராகுல்காந்தி அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வந்தார்.&amp;nbsp;  இந்நிலையில் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுனீரை சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். கேரளாவில் 20 தொதிகளில் 19 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் இருந்து வருகிறது. ஆனால் அமேதி தொகுதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இராணி, ராகுலை விட சுமார் 9000 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.&amp;nbsp; </description>
            <media:content height="400" width="760" medium="image" url="http://static.asianetnews.com/images/01dbhsexc532v1ssg4dh09sxk2/rahul-gandhi_760x400.jpg"/>
        </item>
        <item>
            <title>படு பயங்கர தோல்வியை சந்திக்கும் கமல் நாயகி!!</title>
            <link>https://tamil.asianetnews.com/election-2019/kamal-heroine-urmila-matondkar-set-back-pry6fk</link>
            <guid>https://tamil.asianetnews.com/election-2019/kamal-heroine-urmila-matondkar-set-back-pry6fk</guid>
            <pubDate>Thu, 23 May 2019 13:34:00 +0530</pubDate>
            <description>காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த மறுநாளே மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிட சீட் தரப்பட்ட கமலின் ‘இந்தியன்’ பட நாயகி ஊர்மிளா மடோன்கர் தன்னை எதிர்த்துப்போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளரை விட 50 ஆயிரம் வாக்குகள் பின் தங்கி உள்ளார். அவரது தோல்வி ஏறத்தாழ நிச்சயிக்கப்பட்டுவிட்டது. </description>
            <media:content height="400" width="760" medium="image" url="http://static.asianetnews.com/images/01dbhvg3xaecg093x83d0prfq5/urmila_760x400.jpg"/>
        </item>
        <item>
            <title>ஆம் ஆத்மி கோட்டையில் ஓட்டை...! டெல்லியில் அடித்து தூக்கிய பாஜக..!</title>
            <link>https://tamil.asianetnews.com/election-2019/parliment-election-aap-setback-pry64x</link>
            <guid>https://tamil.asianetnews.com/election-2019/parliment-election-aap-setback-pry64x</guid>
            <pubDate>Thu, 23 May 2019 13:28:00 +0530</pubDate>
            <description>தலைநகரான டெல்லியில் மொத்தம் 7 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. இங்கு ஆளும் கட்சியாக அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி உள்ளது.    டெல்லியில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவியது.&amp;nbsp;தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், டெல்லியில் 7 தொகுதிகளிலும் பாஜக முன்னிலை வகிக்கிறது. ஆம் ஆத்மி 2ம் இடத்திலும், காங்கிரஸ் 3ம் இடத்திலும் உள்ளன. இது ஆம் ஆத்மிக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.&amp;nbsp;  டெல்லி முன்னாள் முதல்வரான காங்கிரஸைச் சேர்ந்த ஷீலா தீட்சித் கூட 2ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். வடகிழக்கு டெல்லியில் போட்டியிட்ட ஷீலா தீட்சித், பாஜக வேட்பாளர் மனோஜ் திவாரியை விடவும் சுமார் 30 ஆயிரம் வாக்குகள் பின்தங்கி இருக்கிறார்.&amp;nbsp;கிழக்கு டில்லியில் பாஜக சார்பில் போட்டியிட்ட கிரிக்கெட் வீரர் காம்பீர் முன்னிலை வகிக்கிறார். இவர் ஆம் ஆத்மி கட்சியால் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.    ஆம் ஆத்மியும் காங்கிரசும் கூட்டணி அமைக்க முயற்சிகள் நடந்தன. இதற்கான ஏற்பாடுகளை ஆம் ஆத்மி மேற்கொண்டது. ஆனால் இதை நிராகரித்த ராகுல், காங்கிரஸ் தனித்து போட்டியிட முடிவு செய்து வேட்பாளர்களை அறிவித்தார். இதுவே பாஜகவுக்கு அனுகூலமாக அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.&amp;nbsp;ஊழலுக்கு எதிரான அரசியல் இயக்கமாகக் கிளர்ந்தெழுந்த ஆம் ஆத்மி அதன் கோட்டையான டெல்லியிலேயே தலைகவிழ்ந்துள்ளது. </description>
            <media:content height="400" width="760" medium="image" url="http://static.asianetnews.com/images/01dajpk760cv2bgpah4cft0ksf/Arvind-Kejriwal_760x400.jpg"/>
        </item>
        <item>
            <title>குன்றத்திலே சரவணனுக்கு கொண்டாட்டம்…  அ.தி.மு.க, அ.ம.மு.க திண்டாட்டம்..!</title>
            <link>https://tamil.asianetnews.com/election-2019/thiruparankundram-dmk-candidate-leading-pry3j5</link>
            <guid>https://tamil.asianetnews.com/election-2019/thiruparankundram-dmk-candidate-leading-pry3j5</guid>
            <pubDate>Thu, 23 May 2019 12:31:00 +0530</pubDate>
            <description>தூங்காநகரத்தில் ஒரு தொகுதியாக இருக்கும் திருப்பரங்குன்றத்தில் தி.மு.க முன்னிலை வகிக்கிறது. தமிழகத்தில் 22 தொகுதிகளில் மினி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.    இதில் கடைசியாக நான்கு தொகுதியான சூலூர்,ஓட்டப்பிடாரம்,திருப்பரங்குன்றம்,அரவக்குறிச்சிக்கு தனியாக தேர்தல் நடைபெற்றது. இதில் முக்கியமாக திருப்பரங்குன்றம் பார்க்கப்பட்டது.காரணம் அ.தி.மு.க கோட்டையாக இத்தொகுதி இருப்பதுதான். இத்தொகுதியை பொறுத்தவரை முக்குலத்தோர் வாக்கு வங்கி அதிகம் என்பதால் அவர்களையே அனைத்து கட்சியும் களம் இறக்கினர்.&amp;nbsp;  தி.மு.க சார்பில் டாக்டர்.சரவணன், அ.தி.மு.க சார்பில் முனியாண்டி, அ.ம.மு.க சார்பில் மகேந்திரன், மக்கள் நீதிமைய கட்சியின் சார்பில் சக்திவேல், நாம்தமிழர் கட்சியின் சார்பில் ரேவதியும் போட்டி இடுகின்றனர். இன்று வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றின் முடிவில் தி.மு.க வேட்பாளர் டாக்டர்.சரவணன் 3571, அ.தி.மு.க வேட்பாளர் முனியாண்டி 3086,அ.ம.மு.க வேட்பாளர் மகேந்திரன் 239 ஓட்டுகளும் வாங்கியிருக்கின்றனர். முதல்சுற்றின் முடிவில் தி.மு.க முன்னிலையில் இருப்பதால் இக்கட்சியின் வேட்பாளர் டாக்டர்.சரவணன் கொண்டாட்டத்தில் இருக்கிறார். </description>
            <media:content height="400" width="760" medium="image" url="http://static.asianetnews.com/images/01cz8nacewwexdc7rsm13mqkzh/OPS_760x400.jpg"/>
        </item>
        <item>
            <title>ஜெயலலிதாவின் இரட்டை இலை சின்னத்துக்கு வெறும் 2 தொகுதி தானா..?  அதிர்ச்சியில் ஒன்றரை கோடி தொண்டர்கள்..!</title>
            <link>https://tamil.asianetnews.com/election-2019/parliment-election-aiadmk-shock-pry31i</link>
            <guid>https://tamil.asianetnews.com/election-2019/parliment-election-aiadmk-shock-pry31i</guid>
            <pubDate>Thu, 23 May 2019 12:21:00 +0530</pubDate>
            <description>தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக போகிறது. இந்தியாவில் பி.ஜே.பி அலை மீண்டும் விசுகிறது. ஆனால் தமிழகத்தில் அ.தி.மு.க- பா.ஜ.க கூட்டணிக்கு ஒரு அலையும் வீசுவதாக தெரியவில்லை.&amp;nbsp;  காரணம் தமிழகத்தில் 38 தொகுதிகளில் தி.மு.க 36 இடங்களிலும் அ.தி.மு.க 2 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறார்கள். அதுவும் அ.தி.மு.க கூட்டணி கட்சியாக இருக்கும் தர்மபுரியில் பா.ம.க வேட்பாளர் அன்புமணி மற்றும் கோவையில் பா.ஜ.க வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் மட்டுமே அ.தி.மு.க கூட்டணியில் முன்னிலை வேட்பாளர்களாக இருக்கிறார்கள்.&amp;nbsp;  தமிழகத்தை பொறுத்தவரை ஆளும்கட்சியான அ.தி.மு.கவிற்கு ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள். இதை அக்கட்சியின் முன்னாள் பொது செயலாளர் ஜெயலலிதா மக்களிடம் பேசும் போது உரக்க சொல்லுவார். ஆனால் தற்போதுள்ள தேர்தல் முடிவில் தமிழகத்தில் 2 தொகுதிகளை மட்டுமே பிடிக்கும் பரிதாபகரமான இருக்கிறது தற்போது ஓ.பி.எஸ், இ.பி.எஸ் தலைமையிலான அ.தி.மு.க. இப்படி ஒரு நிலை இருந்தால் தொடர்ந்தால் பேரியக்கமான அ.தி.மு.க நிலை இனி என்ன ஆகும் என்ற அதிர்ச்சி அ.தி.மு.க தொண்டர்கள் அனைவருக்கும் எழுந்துள்ளது. </description>
            <media:content height="400" width="760" medium="image" url="http://static.asianetnews.com/images/01d10ngz94dzyn1vcb7bj02086/jayalalitha_760x400.jpg"/>
        </item>
        <item>
            <title>ஓடி ஓடி ஆள்சேர்த்த சந்திரபாபு நாயுடு அவுட்... ஆந்திர முதல்வராகிறார் ஜெகன்மோகன் ரெட்டி..!</title>
            <link>https://tamil.asianetnews.com/election-2019/jagan-reddy-led-ysrcp-pry2ol</link>
            <guid>https://tamil.asianetnews.com/election-2019/jagan-reddy-led-ysrcp-pry2ol</guid>
            <pubDate>Thu, 23 May 2019 12:13:00 +0530</pubDate>
            <description>ஆந்திராவில் 145 இடங்களில் முன்னிலை வகித்து வருவதால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி அமைக்க வாய்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் மோடிக்கு எதிராக ஓடி ஓடி உழைத்த சந்திரபாபு நாயுடு படுதோல்வி அடைந்துள்ளார்.&amp;nbsp;  மக்களவைத் தேர்தலுக்கு கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி கடந்த 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சிக்கும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கும் இடையே ஆட்சியை பிடிக்க கடும் போட்டி நிலவியது.&amp;nbsp;  இந்நிலையில் ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகின. அதில் இந்தியா டுடே வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பின்படி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 130 முதல் 135 இடங்களில் வெற்றி பெறும் எனக் கணிக்கப்பட்டிருந்தது. அதேநேரத்தில் தெலுங்குதேசம் கட்சி 37 முதல் 40 இடங்களிலே வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில், ஆந்திரபிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 145 இடங்களிலும், மக்களவை தொகுதியில் 23 இடங்களிலும்&amp;nbsp;முன்னிலை பெற்று முதல் முறையாக ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராகிறார். அதேபோல் ஆளும் தெலுங்கு தேசம் கட்சி 20 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பவன்கல்யாணின் ஜனசேனா கட்சி 2 இடங்களிலும் காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கிறது. இதனிடையே பிரதமர் மோடிக்கு எதிராக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அனைத்து மாநில தலைவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது </description>
            <media:content height="400" width="760" medium="image" url="https://static.asianetnews.com/images/01dbhpnhtn4y9jpw9nz78frzam/jagan-mohan-reddy-2_760x400.gif"/>
        </item>
        <item>
            <title>தாத்தா - பேரன் 2 பேருக்குமே ஆப்பு.. பாஜகவிடம் கும்மாங்குத்து வாங்கும் குமாரசாமி குடும்பம்</title>
            <link>https://tamil.asianetnews.com/election-2019/karnataka-cm-kumaraswamys-family-members-trailing-to-bjp-in-lok-sabha-election-2019-pry03s</link>
            <guid>https://tamil.asianetnews.com/election-2019/karnataka-cm-kumaraswamys-family-members-trailing-to-bjp-in-lok-sabha-election-2019-pry03s</guid>
            <pubDate>Thu, 23 May 2019 11:17:00 +0530</pubDate>
            <description>நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்துமுடிந்த மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடந்துவருகிறது.&amp;nbsp;  மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில் வேலூர் தொகுதியை தவிர மற்ற 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டும் வாக்கு எண்ணிக்கை நடந்துவருகிறது. 542 தொகுதிகளில் 327 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெறும் 104 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. மற்ற கட்சிகள் 111 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன.&amp;nbsp;  கர்நாடகாவை பொறுத்தமட்டில் பாஜகவே ஆதிக்கம் செலுத்துகிறது. கடந்த ஆண்டு நடந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் அரிதி பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக தனிப்பெரும் கட்சியாக இருந்த நிலையில், காங்கிரஸும் ஜேடிஎஸும் தேர்தலுக்கு பின் கூட்டணியமைத்து ஆட்சியமைத்தது; குமாரசாமி முதல்வரானார்.&amp;nbsp;    இந்நிலையில், மக்களவை தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், முன்னாள் பிரதமர் தேவெகௌடாவின் குடும்பமே பாஜகவிடம் குத்து வாங்குகிறது. முன்னாள் பிரதமர் தேவெகௌடா தும்கூர் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஜிஎஸ் பசவராஜுவைவிட 8500 வாக்குகள் குறைவாக பெற்று பின் தங்கியுள்ளார்.&amp;nbsp;  தேவெகௌடாவின் பேரனும் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மகனுமாகிய நிகில் குமாரசாமி, மண்டியா தொகுதியில் பாஜக ஆதரவுடன் சுயேட்சையாக களமிறங்கியுள்ள சுமலதாவிடம் தோல்வியடையும் நிலையில் உள்ளார். நிகில் குமாரசாமியை விட சுமார் 57000 வாக்குகள் அதிகம் பெற்று சுமலதா வலுவான முன்னிலையில் உள்ளார்.&amp;nbsp;    தேவெகௌடா குடும்பத்தில் ஒருவர் மட்டும் தப்பி பிழைத்துள்ளார். தேவெகௌடாவின் முதல் மகனும் குமாரசாமியின் அண்ணனுமான ரேவன்னாவின் மகன் பிரஜ்வல் ரேவன்னா, ஹாசன் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் மஞ்சுவை பின்னுக்குத்தள்ளி முன்னிலை வகிக்கிறார்.&amp;nbsp; &amp;nbsp; </description>
            <media:content height="400" width="760" medium="image" url="http://static.asianetnews.com/images/01dbhkm6rzsb71vkhavbxeh2m8/kumaraswamy-family_760x400.jpg"/>
        </item>
        <item>
            <title>ஓவரா சவுண்டு விட்ட சந்திரபாபு நாயுடுவுக்கு சம்மட்டி அடி.. ஆந்திராவில் ஆளுங்கட்சிக்கு மரண அடி</title>
            <link>https://tamil.asianetnews.com/election-2019/ysr-congress-leading-in-both-assembly-and-lok-sabha-election-results-in-andhra-prxy5e</link>
            <guid>https://tamil.asianetnews.com/election-2019/ysr-congress-leading-in-both-assembly-and-lok-sabha-election-results-in-andhra-prxy5e</guid>
            <pubDate>Thu, 23 May 2019 10:35:00 +0530</pubDate>
            <description>17வது மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்தது. மக்களவை தேர்தலுடன் தமிழ்நாட்டில் சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் ஆந்திராவில் சட்டமன்ற தேர்தல் ஆகியவையும் நடத்தப்பட்டன.&amp;nbsp;  இன்று காலை 8 மணிக்கு தொடங்கி வாக்கு எண்ணிக்கை நடந்துவருகிறது. மக்களவை தேர்தல் முடிவுடன் சட்டமன்ற தேர்தல் வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன. ஆந்திராவில் சட்டமன்ற வாக்கு எண்ணிக்கையும் நடந்துவருகிறது.&amp;nbsp;  கடந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தெலுங்கு தேசம் கட்சி, ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் பாஜகவுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் பாஜக கூட்டணியிலிருந்து விலகியது. பாஜகவிற்கு எதிராக தீவிரமாக களமிறங்கிய சந்திரபாபு நாயுடு, பாஜகவை வீழ்த்தும் முயற்சிகளில் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து ஈடுபட்டார்.&amp;nbsp;    ஆனால் ஆந்திராவில் ஆளுங்கட்சியாக இருக்கும் தெலுங்கு தேசம் கட்சிக்கு மக்களவை தேர்தலில் மட்டுமல்லாமல் சட்டமன்ற தேர்தலிலும் கடும் அடி விழுந்துள்ளது. ஆந்திராவில் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகளில் 131 தொகுதிகளில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது. வெறும் 22 தொகுதிகளில் மட்டும் தான் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி முன்னிலை வகிக்கிறது. இதனால் கண்டிப்பாக ஆந்திராவில் ஆட்சியை இழக்கும் நிலைக்கு தெலுங்கு தேசம் கட்சி வந்துள்ளது.&amp;nbsp;  25 மக்களவை தொகுதிகளில் 16ல் ஒய்.எஸ்.ஆர் கட்சியும் 4ல் மட்டுமே தெலுங்கு தேசம் கட்சியும் முன்னிலை வகிக்கிறது.&amp;nbsp;  ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து பெறும் விவகாரத்தில் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறி, பாஜகவிற்கு ஓவரா சவுண்டு கொடுத்த சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஆந்திராவில் ஆட்சியை இழப்பதோடு மக்களவை தேர்தலிலும் மண்ணை கவ்வியது.&amp;nbsp; &amp;nbsp; </description>
            <media:content height="400" width="760" medium="image" url="http://static.asianetnews.com/images/01dbhh7p2y5fbedbd8nqmqpned/modi-naidu_760x400.jpg"/>
        </item>
        <item>
            <title>இரண்டில் ஒன்று போய்விடுமோ... பதற்றத்தில் திருமாவளவன்..!</title>
            <link>https://tamil.asianetnews.com/election-2019/vkc-thirumavalan-trailing-prxy5n</link>
            <guid>https://tamil.asianetnews.com/election-2019/vkc-thirumavalan-trailing-prxy5n</guid>
            <pubDate>Thu, 23 May 2019 10:35:00 +0530</pubDate>
            <description>மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பின்னடைவை சந்தித்துள்ளார். அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் முன்னிலையில் இருந்து வருகிறார்.&amp;nbsp;  நாடு முழுவதும் மக்களவை தேர்தல் முடிவுகள் வாக்கு எண்ணிக்கை சுற்றுகளின்படி வெளியாகி வருகிறது. மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் திருமாவளவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் சந்திரசேகர் போட்டியிடுகிறார்.&amp;nbsp;&amp;nbsp;  இன்று வாக்குகள் எண்ணியதும் தொடக்கத்தில் திருமாவளவன் பின்னடைவை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்டுள்ள அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் முன்னிலையை பெற்றுள்ளார். மத்தியில் பாஜக 330 இடங்களுக்கு மேல் முன்னிலையில் இருந்து வருகிறது. இதில் தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணியே 37 இடங்களில் முன்னிலை பெற்று வருகின்றனர். விழுப்புரத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் விடுதலை சிறுத்தை வேட்பாளர் ரவிக்குமார் முன்னிலையில் இருந்து வருகிறார்.&amp;nbsp; </description>
            <media:content height="400" width="760" medium="image" url="http://static.asianetnews.com/images/01cx6qke1srk32sktqzyawsyk4/vck-vs-dmk_760x400.jpg"/>
        </item>
        <item>
            <title>தேனி தொகுதியில் கல்வெட்டு எம்.பி. ஓபிஎஸ் மகன் காலியாகிறார்...!</title>
            <link>https://tamil.asianetnews.com/election-2019/ops-son-raveendranath-kumar-trail-prxvyu</link>
            <guid>https://tamil.asianetnews.com/election-2019/ops-son-raveendranath-kumar-trail-prxvyu</guid>
            <pubDate>Thu, 23 May 2019 09:48:00 +0530</pubDate>
            <description>தேனி தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் பின்னடைவை சந்தித்துள்ளார். இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் இருந்து வருகிறார்.&amp;nbsp;  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் மற்றும் 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 18 மற்றும் மே 19ம் தேதி நடந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. இந்த 39 மக்களவை தொகுதி விஐபி தொகுதிகளில் ஒன்றாக தேனி தொகுதி கருதப்பட்டது. இந்த தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்தும், காங்கிரஸ் வேட்பாளராக இளங்கோவனும், இவர்களை எதிர்த்து அமமுக சார்பாக தங்க தமிழ்ச்செல்வனும் களம் இறங்கினார்.&amp;nbsp;  இந்நிலையில் தேனியில் அதிமுக வேட்பாளர் ஒபிஎஸ் மகன் ரவீந்திரநாத் பின்னடைவை சந்தித்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 600 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்கிறார். இருவரும் மாறி மாறி முன்னிலை வகித்து வருகிறார். இப்போது தான் வாக்கு எண்ணிக்கை ஆரம்பம் ஆகி உள்ளதால் முடிவுகள் மாறிக்கொண்டே இருந்து வருகிறது.&amp;nbsp; </description>
            <media:content height="400" width="760" medium="image" url="http://static.asianetnews.com/images/01d8jcty03d847mstcv09y65es/evks_760x400.jpg"/>
        </item>
        <item>
            <title>மண்டியாவில் மண்ணை கவ்விய முதல்வர் மகன்.. கர்நாடகாவில் காங்கிரஸை கதறவிடும் பாஜக</title>
            <link>https://tamil.asianetnews.com/election-2019/bjp-is-dominating-in-karnataka-in-lok-sabha-election-results-prxvxc</link>
            <guid>https://tamil.asianetnews.com/election-2019/bjp-is-dominating-in-karnataka-in-lok-sabha-election-results-prxvxc</guid>
            <pubDate>Thu, 23 May 2019 09:47:00 +0530</pubDate>
            <description>இந்தியாவில் 17வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. மொத்தமாக 543 தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்ட வேலூர் தொகுதியை தவிர மற்ற 542 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்துவருகிறது.&amp;nbsp;  கர்நாடகாவில் 28 மக்களவை தொகுதிகள் உள்ளன. இவற்றில் மண்டியா, ஷிமோகா, ஹாசன் ஆகிய தொகுதிகளில் வாரிசுகள் களமிறங்கியுள்ளதால் இந்த தொகுதிகள் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.&amp;nbsp;  காலை 8 மணிக்கு தொடங்கி வாக்கு எண்ணிக்கை நடந்துவரும் நிலையில், கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில் 22ல் பாஜக முன்னிலை வகிக்கிறது. எஞ்சிய 6 இடங்களில் காங்கிரஸ் - ஜேடிஎஸ் கூட்டணி முன்னிலை வகிக்கிறது.&amp;nbsp;  மண்டியா தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய முன்னாள் காங்கிரஸ் எம்பி அம்ப்ரீஷின் மனைவி சுமலதாவிற்கு பாஜக ஆதரவு தெரிவித்தது. சுமலதாவை எதிர்த்து போட்டியிட்டிருப்பது கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி. இந்த தொகுதியில் சுமலதா முன்னிலை வகிக்கிறார்.&amp;nbsp;    ஷிமோகா தொகுதியில் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜேடிஎஸ்-ன் மதுபங்காரப்பா களம் கண்டார். இந்த தொகுதியில் ராகவேந்திரா முன்னிலை வகிக்கிறார்.&amp;nbsp;  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான மல்லிகார்ஜுன கார்கேவை விட அதிக வாக்குகள் பெற்று பாஜக வேட்பாளர் உமேஷ் ஜாதவ் முன்னிலை வகிக்கிறார்.&amp;nbsp; &amp;nbsp; </description>
            <media:content height="400" width="760" medium="image" url="http://static.asianetnews.com/images/01dbhee6xvxy05zg3nya7mvad5/bjp_760x400.jpg"/>
        </item>
        <item>
            <title>சந்தோஷத்துடன் கவுண்டிங்கை துவக்கிய தி.மு.க: திக் திக் திக் இ.பி.எஸ்., ஓ.பி.ஸ்.</title>
            <link>https://tamil.asianetnews.com/election-2019/by-poll-vote-counting-started-in-tamilnadu-prxv74</link>
            <guid>https://tamil.asianetnews.com/election-2019/by-poll-vote-counting-started-in-tamilnadu-prxv74</guid>
            <pubDate>Thu, 23 May 2019 09:31:00 +0530</pubDate>
            <description>இந்திய தேர்தல் வரலாற்றில் இந்த நாள் மிக முக்கியநாள். காரணம், நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தினம் இன்று. அது மட்டுமல்ல தமிழகத்தில் ஆட்சி மாற்றமே நிகழுமோ!? எனும் கேள்விக்கும் பதில் தெரியும் நாள் இன்று.&amp;nbsp;  எக்ஸிட் போல்- முடிவுகள் சொன்னது போலவே அகில இந்திய அளவில் பி.ஜே.பி. கூட்டணி அடித்து நொறுக்கி முன்னிலை பெற்றுக் கொண்டிருக்கிறது. அதேவேளையில் தமிழகத்தை பொறுத்தவரையில் &amp;nbsp;தி.மு.க. கூட்டணியே அதிக இடங்களில் முன்னிலை பெற்றுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.&amp;nbsp;  தமிழகத்தின் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான முடிவுகளில் மட்டுமல்லாது &amp;nbsp;சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகளிலும் தி.மு.க. அடித்து ஏறுகிறது. இந்த நிலையானது முதல்வர் இ.பி.எஸ். மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ். ஆகியோர் மனதில் ஆட்சியை நினைத்து திக் திக் திக் நிலையை உருவாக்கி இருக்கிறது.&amp;nbsp;  இவ்வளவு இக்கட்டான சூழலிலும் தேனியில் தன் மகன் ரவீந்திரநாத் சற்று முன்னிலை பெற்று வருவதால் ஓ.பி.எஸ். லேசான ஆறுதலுடன் இருக்கிறார். </description>
            <media:content height="400" width="760" medium="image" url="http://static.asianetnews.com/images/01d7k8yd7dk1vgk0eb08kfxaza/18-assmbly-constituency-result_760x400.jpg"/>
        </item>
        <item>
            <title>நாடு முழுவதும் பாஜக முன்னிலை... தமிழகத்தில் தட்டித்தூக்கும் திமுக...!</title>
            <link>https://tamil.asianetnews.com/election-2019/bjp-leading-tamilnadu-dmk-leading-prxueh</link>
            <guid>https://tamil.asianetnews.com/election-2019/bjp-leading-tamilnadu-dmk-leading-prxueh</guid>
            <pubDate>Thu, 23 May 2019 09:14:00 +0530</pubDate>
            <description>நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சி 233 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தமிழகத்தில் திமுக கூட்டணி 23 முன்னிலை வகிக்கிறது.  நாடு முழுவதும் 542 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 11-ம் தேதி தொடங்கி கடந்த 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தின் வேலூர் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டது. மக்களவைத் தேர்தலை பாரதிய ஜனதா பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கூட்டணியும் சந்தித்தன. இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.&amp;nbsp;  முதலில் தபால் வாக்குகள் எண்ணிக்கை நடந்தது. அதைத் தொடர்ந்து &amp;nbsp;மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வழக்கமாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் மாலைக்குள் முடிவுகள் வெளியாகி விடும். இந்தத் தேர்தலில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வாக்கு &amp;nbsp;ஒப்புகைச்சீட்டுகளும் எண்ணப்படுவதால் அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.    முதல் கட்டமாக பாரதிய ஜனதா கட்சி 233 தொகுதிகளிலும், காங்கிரஸ் 98 &amp;nbsp;தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. மற்றவர்கள் 75 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர். தமிழகத்தில் திமுக கூட்டணி 25 இடங்களிலும், அதிமுக 4 தொகுதிகளிலும் முன்னிவை வகிக்கிறது. அமேதி தொகுதியில் ராகுல் காந்தியும், ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தியும், மதுராவில் ஹேமமாலினியும் முன்னிலை வகிக்கின்றனர். </description>
            <media:content height="400" width="760" medium="image" url="http://static.asianetnews.com/images/01d1046kzgp4k0zfj291gqxck2/pm-modi_760x400.jpg"/>
        </item>
        <item>
            <title>அடித்து நொறுக்கும் திமுக... 16 தொகுதிகளில் முன்னிலை!!</title>
            <link>https://tamil.asianetnews.com/election-2019/dmk-leading-in-postal-votes-prxttl</link>
            <guid>https://tamil.asianetnews.com/election-2019/dmk-leading-in-postal-votes-prxttl</guid>
            <pubDate>Thu, 23 May 2019 09:02:00 +0530</pubDate>
            <description>நாடு முழுவதும் 17 -ஆவது மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மொத்தம் உள்ள 542 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கே தொடங்கியது. தமிழ்நாட்டில் 20 நாடாளுமன்ற தொகுதிகளில் &amp;nbsp;முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணத் தொடங்கியதிலிருந்து, தமிழகத்தில் உள்ள 38 மக்களவை தொகுதிகளில் திமுக 16 இடங்களில் முன்னிலை, அதிமுக 4 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. &amp;nbsp;  கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியான எக்ஸிட் போல் ரிசல்டின் படி, திமுகவே அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது. </description>
            <media:content height="400" width="760" medium="image" url="http://static.asianetnews.com/images/01db89md6v06b718z4kc2wtnqf/dmk-will-in-tamilnadu_760x400.jpg"/>
        </item>
        <item>
            <title>விருப்ப மனு கொடுத்த கந்துவட்டி அன்புச்செழியன்!! திருப்பரங்குன்றம் தொகுதியை கைப்பற்ற தீவிரம்...</title>
            <link>https://tamil.asianetnews.com/election-2019/anbu-cheziyan-interested-to-contest-in-thiruparankundram-bye-election-pqcuq2</link>
            <guid>https://tamil.asianetnews.com/election-2019/anbu-cheziyan-interested-to-contest-in-thiruparankundram-bye-election-pqcuq2</guid>
            <pubDate>Mon, 22 Apr 2019 14:38:00 +0530</pubDate>
            <description>பிரபல சினிமா தயாரிப்பாளரும், மதுரை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணியின் துணை செயலாளர் கந்துவட்டி அன்புசெழியன் திருப்பரங்குன்றம் தொகுதியை கைப்பற்ற விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.  காலியாக அறிவிக்கப்பட்ட சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கு, அடுத்த மாதம் இடைத்தேர்தல் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதிகளில் போட்டியிட விரும்பும் அதிமுகவினருக்கு விருப்ப மனு வினியோகம் இன்று காலை தொடங்கியது.  சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தொண்டர்கள், விண்ணப்பக் கட்டணம் 25 ஆயிரம் ரூபாயை செலுத்தி விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். காலை முதலே இந்த தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அதிமுகவினர் பலர் விருப்ப மனு அளித்தனர். &amp;nbsp;அதனை தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிருப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் நேர்காணல் மேற்கொண்டனர்.&amp;nbsp;  அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடைபெற்றாலும் திருப்பரங்குன்றம் தொகுதிக்கான வாக்குப்பதிவு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. &amp;nbsp;இந்த தொகுதியில் பலர் விருப்ப மனு செய்திருந்தாலும், அனைவரும் உற்று நோக்குவது மதுரை கந்துவட்டி அன்பு செழியனைத் தான். அதிமுகவின் மதுரை மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணியின் துணை செயலாளராக உள்ளார். திரைப்பட தயாரிப்பாளர், சினிமா வட்டிக்கு பைனான்ஸ் கொடுக்கும் கந்துவட்டி அன்பு செழியன், அதிமுகவின் மேல் மட்டத்திலுள்ள முக்கிய புள்ளிகளுக்கு நன்கு தெரிந்தவர் தான்.  அன்புசெழியனும், விருப்ப மனு தாக்கல் செய்து, நேர்காணலில் கலந்துகொண்டு விட்டார். நேர் காணல் முடிந்துவிட்ட நிலையில் யார், யார் வேட்பாளர்கள் என்பது விரைவில் அறிவிக்கப்படும், அதற்க்கு முன்பாக தனக்கு உள்ள ஆதரவு வட்டராத்தின்மூலம் திருப்பரங்குன்றத்தைக் கைப்பற்றிய ஆகவேண்டும் என்ற நோக்கத்தில் களத்தில் இறங்கியிருக்கிறாராம் கந்துவட்டி அன்புசெழியன். &amp;nbsp; </description>
            <media:content height="400" width="760" medium="image" url="https://static.asianetnews.com/images/01d924sh89rpz4mgs7janbj5rq/201711300205358859-onfinancier-anbu-sezhiyan-nterest-case-secvpf_760x400.gif"/>
        </item>
        <item>
            <title>களத்தில் குதித்த ராஜிவ் - சோனியா பேரன், பேத்தி!! வயநாட்டில் மாமாவுக்கு ஓட்டு வேட்டை</title>
            <link>https://tamil.asianetnews.com/election-2019/rajiv-gandhi-soniya-gandhi-grand-son-vote-campaign-for-rahul-gandhi-pqat25</link>
            <guid>https://tamil.asianetnews.com/election-2019/rajiv-gandhi-soniya-gandhi-grand-son-vote-campaign-for-rahul-gandhi-pqat25</guid>
            <pubDate>Sun, 21 Apr 2019 12:07:00 +0530</pubDate>
            <description>ராகுல் காந்திக்கு ஆதரவாக சகோதரி பிரியங்கா காந்தி பிரசாரம் மேற்கொண்டு வரும் நேரத்தில், தனது மாமாவிற்காக அவரது வாரிசுகள் வயநாடு தொகுதியில் ஓட்டு வேட்டையில் இறங்கியுள்ளனர்.  ராகுல் காந்திக்கு ஆதரவாக சகோதரி பிரியங்கா காந்தி பிரசாரம் மேற்கொண்டு வரும் நேரத்தில், தனது மாமாவிற்காக அவரது வாரிசுகள் வயநாடு தொகுதியில் ஓட்டு வேட்டையில் இறங்கியுள்ளனர்.  கேரளாவில் மொத்தமுள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கு வரும் 23-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி இடையே கடும் போட்டி நிலவுகிறது. பாஜக, பாரத் தர்ம ஜன சேனாவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது.  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். இதுவரை உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியில் மட்டுமே போட்டியிட்ட ராகுல் இந்த முறை கேரளாவின் வயநாட்டிலிருந்தும் போட்டியிடுகிறார்.  தென்மாநிலம் ஒன்றிலிருந்து ராகுல் போட்டியிடுவது இதுவே முதன்முறை.கேரளாவில் இறுதிக்கட்டப் பிரச்சாரம் கேரளாவில் பரபரப்படைந்துள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ராகுல்க்கு வயநாடு தொகுதியில் செல்வாக்கு அதிகரித்திருப்பதாக தேர்தல் கணிப்புகள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் கட்சியின் தலைவா் ராகுல் காந்தி வருகின்ற மக்களவைத் தே்ாதலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறாா். &amp;nbsp;  இந்நிலையில் அண்ணன், ராகுல் காந்திக்காக தங்கை பிரியங்கா காந்தி, அவரது கணவா் ராபா்ட் வதேரா, பிரசாரம் மேற்கொண்டனர். இவர்களைத் தொடர்ந்து தனது மாமா ராகுல் காந்திக்காக பிரியங்கா காந்தியின் மகன் ரேகன், மகள் மிரயா உள்ளிட்டோா் திறந்தவெளி வாகனத்தில் பிரசாரத்தில் இருந்த அவர்கள், வயநாட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு வாக்கு சேகரித்தனர்.  கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அரசியல் களத்திற்கு வந்து கவனத்தை ஈர்த்த பிரியங்கா காந்தியைப் போல, அவரது வாரிசுகளும் அரசியல் லைம் லைட்டுக்குள் வந்துள்ளனர். </description>
            <media:content height="400" width="760" medium="image" url="http://static.asianetnews.com/images/01d8z9r1tq73zgq9vpaekfje7d/Rahul-gandhi_760x400.jpg"/>
        </item>
        <item>
            <title>திமுகவில் திடீர் திருப்பம்! வேலூரில் துரைமுருகனின் மருமகள் சங்கீதா போட்டி...</title>
            <link>https://tamil.asianetnews.com/election-2019/dhuraimurugan-s-daughter-in-law-will-participate-vellore-pqanq1</link>
            <guid>https://tamil.asianetnews.com/election-2019/dhuraimurugan-s-daughter-in-law-will-participate-vellore-pqanq1</guid>
            <pubDate>Sun, 21 Apr 2019 10:12:00 +0530</pubDate>
            <description>பல்வேறு சட்ட சிக்கல்கள் உள்ளதால், மீண்டும் கதிர் ஆனந்த் &amp;nbsp;போட்டியிட வாய்ப்பில்லை என்பதால் மீண்டும் வேலூர் தேர்தல் நடக்கும்போது திமுக வேட்பாளராக கதிர் ஆனந்தின் மனைவியும், துரைமுருகனின் மருமகளுமான சங்கீதாவை வேட்பாளராக நிறுத்த முயற்சிகள் தீவிரமாக நடக்கின்றன.&amp;nbsp;  வேலூர் தொகுதியில் திமுக சார்பில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்ட நிலையில், தேர்தல் ரத்து செய்யப்பட்டது. கடந்த மார்ச் 30, ஏப்ரல் 1 தேதிகளில் துரைமுருகன் வீடு, மற்றும் சில திமுகவினரின் வீடுகளில் வருமான வரி ரெய்டு நடத்தப்பட்டது. இதில் துரைமுருகனின் நண்பரான சீனிவாசனின் &amp;nbsp;குடோனில் இருந்து சுமார் 11 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது.    இதுதொடர்பாக கடந்த 3ஆம் தேதி தேர்தல் ஆணையத்திடம் வருமான வரித் துறை அறிக்கை சமர்ப்பித்த நிலையில், வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதனையடுத்து தேர்தல் செலவின உதவி அலுவலர் சிலுப்பன் காட்பாடி போலீசில் அளித்த புகாரில், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வேட்புமனுவில் குறிப்பிட்டதைக் காட்டிலும் அதிக பணம் அவரது இல்லத்தில் நடந்த வருமான வரி சோதனையில் பிடிபட்டுள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.    இந்தப் புகாரின் அடிப்படையில் வேட்பாளர் கதிர் ஆனந்த், சீனிவாசன், தாமோதரன் ஆகிய 3 பேர் மீது காட்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதையே காரணமாக வைத்து &amp;nbsp;வேலூர் தேர்தல் ரத்து செய்யப்படுகிறது என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.  இந்த பின்னணியில் வேலூர் தொகுதிக்கான தேர்தல் வரும் மே 19 ஆம் தேதி நடக்கும் நான்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலோடு சேர்ந்து நடத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு வேலூர் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. இது ஒருபக்கம் என்றால் மீண்டும் தேர்தல் அறிவிக்கப்படும் பட்சத்தில் திமுகவின் வேட்பாளராக ஏற்கனவே நின்ற கதிர் ஆனந்த் நிற்பாரா, நிற்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.    கடைசி கட்ட தேர்தலோடு வேலூர் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருக்கிறது. அப்போது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் மீண்டும் போட்டியிடும் பட்சத்தில், கதிர் ஆனந்தை தகுதி நீக்கம் செய்யக் கோரி வற்புறுத்த அதிமுக வேட்பாளர் ஏ.சி. சண்முகம் திட்டமிட்டிருக்கிறார். &amp;nbsp;கதிர் ஆனந்தை தகுதி நீக்கம் செய்வதற்கான காரணங்கள் வலுவாக இருக்கின்றன என்கின்றனர் எதிர் தரப்பினர்.  இப்படி பல சட்ட சிக்கல்கள் உள்ளதால், கதிர் மீண்டும் போட்டியிட வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. மீண்டும் வேலூர் தேர்தல் நடக்கும்போது திமுக வேட்பாளராக கதிர் ஆனந்தின் மனைவியும், துரைமுருகனின் மருமகளுமான சங்கீதாவை வேட்பாளராக நிறுத்த முயற்சிகள் தீவிரமாக நநடந்து வருகிறதாம்.&amp;nbsp;    ஐடி ரெய்டு சமயத்தில் கதிர் ஆனந்த் சில நாட்கள் பிரச்சாரத்துக்கே போகாமல் &amp;nbsp;வீட்டிலேயே இருந்தார். அந்த சமயத்தில் பிரசாரத்தை தனது கையில் எடுத்த கதிர் ஆனந்தின் மனைவி சங்கீதா கழுத்தில் கறுப்பு -சிகப்பு நிற துண்டை போட்டுக்கொண்டு களத்தில் குதித்தார். தனது கணவர் கதிர் ஆனந்துக்காக வேலூர் தொகுதியின் மூளை முடுக்கிலுள்ள கிராமங்களில் சங்கீதா தேர்தல் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். மக்களிடையே துண்டுப் பிரசுரங்கள் கொடுத்தார். சங்கீதா செய்த பிரச்சாரத்தால் அதிமுக வேட்பாளரான ஏ.சி..சண்முகமேகடைசி சில நாட்களில் கொஞ்சம் திணறித்தான் போனார்.  இந்நிலையில் மீண்டும் கதிர் ஆனந்துக்கு வாய்ப்பு இல்லையென்ற நிலையில், தன் மனைவிக்கு சீட் வேண்டும் என்று கதிர் ஆனந்த் துரைமுருகனிடம் வற்புறுத்தியுள்ளார். துரைமுருகன் இதுபற்றி இன்னும் ஸ்டாலினிடம் பேசவில்லை என்றாலும் மாவட்டம் முழுதும் துரைமுருகனின் ஆதரவாளர்கள் கதிர் ஆனந்துக்கு இல்லையென்றால் அவர் மனைவி சங்கீதாவுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கத் தொடங்கிவிட்டார்கள். காரணம் எந்த பந்தாவும் இல்லாமல் தொண்டர்களிடம் எளிமையாக பழகுவது, கிராமப்புறங்களில் அவருக்கு கிடைத்த வரவேற்பால் ஆதரவு குவிக்கிறதாம். இதனால் ஒரு படி மேலே போய் கதிர் ஆனந்தே தன்னுடைய முகநூலில் இதுபோன்ற விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார்.  மீண்டும் ஏ.சி. சண்முகம் அதிமுக சார்பாக நிற்கும் பட்சத்தில், சங்கீதாவை திமுக சார்பாக நிறுத்தினால் மரணமாஸ் பைட் கொடுப்பார் என்பதால் சந்தேகம் இல்லை என சொல்கிறார்கள் வேலூர் உபிக்கள். ஏற்கனவே தேர்தலில் நிற்கும் ஆசையை கைவிட்ட நிலையில் சோகத்தில் இருக்கும் &amp;nbsp;ஏ.சி. சண்முகம் நிற்காவிட்டால், அதிமுக சார்பில் போட்டியிட பல முக்கிய கைகள் இப்போதே சீட் வாங்க முயற்சித்து வருகிறதாம்.&amp;nbsp;எந்த எதிர்ப்பலையும் இல்லாமல் வேலூர் திமுகவே துரைமுருகன் பின்னால் நிற்பதால், எப்போ தேர்தல் நடத்தினாலும், கதிர் ஆனந்தின் மனைவி சங்கீதா தேர்தலில் நிற்க தயாராக இருக்கிறாராம். </description>
            <media:content height="400" width="760" medium="image" url="http://static.asianetnews.com/images/01d8z31s0pw0hqnqqggnrpwn48/Sangeetha_760x400.jpg"/>
        </item>
        <item>
            <title>வெயிலில் 20 நிமிடம் வரிசையில் மக்களோடு மக்களாக காத்திருந்து ஒட்டு போட்ட ஸ்டாலின்!</title>
            <link>https://tamil.asianetnews.com/election-2019/mk-stalin-his-voting-at-south-chennai-pq5626</link>
            <guid>https://tamil.asianetnews.com/election-2019/mk-stalin-his-voting-at-south-chennai-pq5626</guid>
            <pubDate>Thu, 18 Apr 2019 11:02:00 +0530</pubDate>
            <description>தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட எஸ்.ஐ.ஈ.டி. கல்லூரியில் அமைந்துள்ள 24 ம் எண் வாக்குச் சாவடியில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் வாக்களித்தனர்.&amp;nbsp;  இன்று நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பொதுமக்கள் அனைவரும் ஆர்வத்தோடு வாக்களிக்கின்றனர். அரசியல் பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்கள் வரிசையில் நின்று தங்கள் வாக்கினை செலுத்தி வருகின்றனர். ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் வாக்களிக்க வந்தனர். காலை 9.05 மணி அளவில் அவர் வாக்குப்பதிவு மையத்திற்கு வந்தனர்.&amp;nbsp;&amp;nbsp;  9 மணிக்கு பிறகு ஸ்டாலின் வந்ததால் வாக்குப்பதிவு மையத்தில் பெரிய அளவில் கூட்டம் நிலவியது. இதனால் ஸ்டாலின் தனது மனைவியுடன் வரிசையில் காத்து இருந்தார், வெயிலில் சுமார் 20 நிமிடம் வரை ஸ்டாலின் வரிசையில், மக்களோடு மக்களாக காத்திருந்தார். அதன்பின் 9.25 மணிக்கு வாக்குப்பதிவு மையத்திற்குள் சென்று தனது வாக்கை பதிவு செய்தார்.&amp;nbsp;  இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின்; தென் சென்னை தொகுதிக்குட்பட்ட இந்த வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்து இருக்கிறேன். நான் தமிழக வாக்காளர்களை &amp;nbsp;கேட்டுக் கொள்ள விரும்புவது, ஒவ்வொரு வாக்காளரும் தங்களது வாக்குகளை பதிவு செய்து ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். ஒரு ஆட்சி மாற்றத்தை உருவாக்க உங்கள் வாக்கு நிச்சயமாக அமைந்திட வேண்டும்.  எனவே ஒவ்வொருவரும் தவறாமல் தன்னுடைய வாக்குகளை பதிவு செய்ய என்னுடைய பணிவான வேண்டுகோளை வாக்காளர்களுக்கு கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். அதே நேரத்தில் இந்த தேர்தல் என்பது ஒரு முக்கியமான தேர்தலாக அமையப்போகிறது. காரணம் 500 ரூபாய் 1000 ரூபாய் 2000 ரூபாய் ஐயாயிரம் ரூபாய் பத்தாயிரம் ரூபாய் என அதையும் தாண்டி சென்னையில் வாக்குகளை வாங்க பணம் விநியோகம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.  அதையும் மீறி அந்த நோட்டுகளுக்கு அடிபணியாமல் நிச்சயமாக தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய வாக்காளர்கள் ஜனநாயகத்தை முறையாக பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது எனக் கூறினார். </description>
            <media:content height="400" width="760" medium="image" url="http://static.asianetnews.com/images/01d8qetxajqcwtvjhgvg8ayg3n/stalin_760x400.jpg"/>
        </item>
        <item>
            <title>சர்வ சாதாரணமாக மக்களோடு மக்களாக வரிசையில் நின்று ஒட்டு போட்ட முதல்வர்...</title>
            <link>https://tamil.asianetnews.com/election-2019/tamil-nadu-cm-edappadi-k-palanisamy-cast-his-vote-in-edappadi-pq517a</link>
            <guid>https://tamil.asianetnews.com/election-2019/tamil-nadu-cm-edappadi-k-palanisamy-cast-his-vote-in-edappadi-pq517a</guid>
            <pubDate>Thu, 18 Apr 2019 09:17:00 +0530</pubDate>
            <description>சொந்த ஊரில் எந்தவித பந்தாவும் இல்லாமல் மக்களோடு மக்களாக &amp;nbsp;வரிசையில் நின்று முதல்வர் வாக்களித்தது ஒட்டுமொத்தமாக்களின் கவனத்தையும் ஈர்த்தது.  இன்று நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகம் முழுவதும் வேகமாக பதிவாகி வருகிறது. அரசியல் தலைவர்கள்,சினிமா பிரபலங்கள் தங்கள் வாக்கினை அந்தந்த தொகுதிகளில் காலையிலேயே வரிசையில் நின்று செலுத்தி வருகின்றனர்.&amp;nbsp;  தனது சொந்த &amp;nbsp;தொகுதியில் தன் கட்சி வேட்பாளரை நிறுத்தி உள்ளார். தான் நிறுத்திய வேட்பாளர் வெற்றிபெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. &amp;nbsp;இந்நிலையில் இன்று நடக்கும் வாக்குப்பதிவில் வாக்களிக்க தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் வாக்களிக்க கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பே கடைசி கட்ட பிரசாரத்தை இங்கே முடித்தார்.&amp;nbsp;    இந்நிலையில், தந்து சொந்த கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்தான் இன்று காலை 8 மணிக்கு முதல்வர் வாக்களிக்க வருவார் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. மூத்தவர் என்றதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போன்ற பந்தாவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தான் வாக்களிக்கப்போவது சொந்த கிராமம், சுத்தி உள்ளவர்கள் அண்ணன், தம்பி, மாமன், மச்சான் என சுற்றி இருப்பதால் அப்படியான எந்த பந்தாவும் வேண்டாம் என சொல்லிவிட்டாராம். வீட்டுக்கு பக்கத்திலேயேதான் இந்த வாக்கு சாவடி உள்ளது. அதனால் நடந்தே வந்தார் முதல்வர்.&amp;nbsp;  ஏராகவே சொன்னதைப்போல, சரியாக 8 மணிக்கு வெள்ளை-சேட்டி, விபூதி என பக்காவாக வாக்குச்சாவடிக்கு வந்தார். அப்போது ஏராளமான போலீசார் முதல்வரின் பாதுகாப்பு பின் நின்றிருந்தாலும், சயரு விலகியே இருந்துள்ளனர். அந்த ஊர் மக்கள் ஏராளமானோர் நடந்து போய் கொண்டிருந்தனர். சாவடிக்கு வந்த முதல்வர், கியூவில் போய் நின்று கொண்டார். அங்கு மக்களோடு மக்களாக இணைந்து தன் தனது வாக்கை செலுத்தினார்.  ஒரு முதல்வர் எந்தவித பந்தாவும் இல்லாமல், சொந்த ஊரில் சர்வ சாதாரணமாக ஒரு கிராமத்து வாக்குச் சாவடியில் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று &amp;nbsp;வாக்களித்தது ஒட்டுமொத்தமாக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. </description>
            <media:content height="400" width="760" medium="image" url="http://static.asianetnews.com/images/01d8q8t9ax2w1q73yvftrgzt1c/Edapapdi_760x400.jpg"/>
        </item>
        <item>
            <title>ஓட்டு போடப்போகும் போது என்னவெல்லாம் செய்யக்கூடாது... கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்!</title>
            <link>https://tamil.asianetnews.com/election-2019/what-you-do-not-when-you-vote-pq42jw</link>
            <guid>https://tamil.asianetnews.com/election-2019/what-you-do-not-when-you-vote-pq42jw</guid>
            <pubDate>Wed, 17 Apr 2019 20:49:00 +0530</pubDate>
            <description>தமிழகத்தில் நாளை நாடாளுமன்றத் தேர்தலுக்கும் 18 தொகுதிகளுக்கான கிடைத்த தேர்தலுக்கும் வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக அனைவரும் தமிழக மக்கள் தயாராகி வருகின்றனர். ஒட்டுப் போட &amp;nbsp;போகும்போது என்ன செய்யக்கூடாது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.  *ஆண், பெண் வரிசை தனித்தனியாக இருக்கும், அதைப்பார்த்து நிற்கவேண்டும்.&amp;nbsp;  *மாற்றுத்திறனாளிகள், மற்றும் முதியவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும்.&amp;nbsp;  *பெண்களுக்கென இருக்கும் சிறப்பு வாக்குச்சாவடிக்குள் ஆண்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.  *வாக்குச்சாவடிக்குள் செல்ஃபி எடுப்பது, வாக்கு செலுத்துவதை போட்டோ எடுப்பதை தவிர்க்கணும்.&amp;nbsp;  *வாக்குச்சாவடியிலிருந்து 100 மீட்டருக்குள் எவ்விதமான வாகனங்களையும் நிறுத்தக்கூடாது.  *வாக்குச்சாவடிகளில் முன்பு கூட்டமாக நின்று பேசக்கூடாது.&amp;nbsp;  *அந்த இடங்களில் முதியவர்கள் மற்றும் இயலாதவர்கள் வரும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும்.&amp;nbsp; &amp;nbsp; *மறக்காமல் பூத் ஸ்லி, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை போன்ற ஏதேனும் ஒரு அதிகாரப்பூர்வ அட்டையை எடுத்துச்செல்லவேண்டும்.&amp;nbsp; &amp;nbsp; முதலில் அடையாள அட்டை பரிசோதனை, அடையாள மை ஆகியவற்றை முடித்தபின்பு சென்று ஓட்டுப்போட செல்லவேண்டும்.&amp;nbsp; &amp;nbsp; *உங்கள் வாக்கு நீங்கள் வாக்களித்தவருக்குதான் பதிவாகிறதா என்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும்.&amp;nbsp;  *வாக்குப்பதிவு மின்னணு சாதனத்திலும், ஒப்புகைச்சீட்டு சாதனத்திலும் சரியாக இருக்கிறதா என்பதை பார்க்கவேண்டும்.&amp;nbsp;  *ஏதும் குளறுபடி இருப்பின் அதை அதிகாரியிடம் தெரிவிக்கவேண்டும்.&amp;nbsp; &amp;nbsp; *வாக்குச்சாவடிகளில் சத்தமாக பேசுவது, கூட்டமாக நின்றுப் பேசுவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.&amp;nbsp; &amp;nbsp; *அடையாள அட்டை இல்லாமல் செல்லக்கூடாது.  * நீண்ட நேரம் வாக்கு செலுத்தும் இடத்தில் நிற்கக்கூடாது.&amp;nbsp;  *அந்த இடத்தில் வீண் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது இவ்வாறு நீங்கள் கடைபிடிக்கவேண்டும். </description>
            <media:content height="400" width="760" medium="image" url="http://static.asianetnews.com/images/01d8ny0wx90pq3vsnkj1xkwb55/Ajith_760x400.jpg"/>
        </item>
        <item>
            <title>அமமுகவை குறிவைத்து அடிக்கும் பறக்கும் படை... 18 இடைத்தேர்தல் தொகுதிகளில் அதிரடி வேட்டை!</title>
            <link>https://tamil.asianetnews.com/election-2019/special-police-force-target-18-ammk-candidate-pq417n</link>
            <guid>https://tamil.asianetnews.com/election-2019/special-police-force-target-18-ammk-candidate-pq417n</guid>
            <pubDate>Wed, 17 Apr 2019 20:20:00 +0530</pubDate>
            <description>நாளை நடக்கவுள்ள நாடாளுமன்ற மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கும் நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. &amp;nbsp;ஆனால் பணப்பட்டுவாடா தமிழகம் முழுவதும் தாறுமாறாக நடந்துகொண்டிருக்கிறது. இதனால், இடைத்தேர்தல்களில் போட்டியிடும் அமமுகவை குறிவைத்து வேட்டையில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதனை அடுத்து, &amp;nbsp;தூத்துக்குடியில் தங்கியிருந்த திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருந்த வீட்டில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் எதுவும் கிடைக்காததால் வெறும் கையோடு திரும்பினர். இதனைத் தொடர்ந்து, இடைத்தேர்தல் நடக்கும் தேனி ஆண்டிபட்டியில் அமமுக தேர்தல் அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானதால் போலீசார் அங்கும் ரெய்டு விட்டனர்.    அப்போது அமமுகவினர் தடுத்ததால், வானத்தை நோக்கி 4 முறை துப்பாக்கியால் சுட்டு பரபரப்பை கூட்டினர். பின்னர் அலுவலகத்திற்குள் நுழைந்து கோடிக்கணக்கில் பணத்தை பறிமுதல் செய்தனர். இதில் சிலரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த கிடுக்கிப்பிடி விசாரணையில் 18 தொகுதிகளுக்கும் பணப்பட்டுவாடா செய்யவிருப்பதும், சில தொகுதிகளில் டோக்கன் கொடுத்து வருகிறார்களாம்.  இந்த விசாரணையின் அடிப்படையில், 18 தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் குறிவைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இன்று சாத்தூரில் உள்ள அமமுக தேர்தல் அலுவலகத்தில் பறக்கும் படையினர் அதிரடியாக சோதனை செய்தனர். &amp;nbsp;    இந்த ரெய்டில், அதில் சுமார் ரூ.10 லட்சம் வரை பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் சாத்தூர் இடைத்தேர்தல் அமமுக வேட்பாளர் சுப்பிரமணியன் தோட்டத்தில் இருந்து ரூ.33 லட்சம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். &amp;nbsp;இந்த ரெய்டின் மூலம், 18 தொகுதியிலுள்ள அமமுகவினரை குறிவைத்து போலீசார் செயல்படுவதாக சொல்லப்படுகிறது. </description>
            <media:content height="400" width="760" medium="image" url="http://static.asianetnews.com/images/01d8nwb06ch07epexa4808cr6x/AMMK_760x400.jpg"/>
        </item>
        <item>
            <title>மக்கள் பணம் வாங்கிக்கிட்டு ஓட்டு போடக்கூடாது... தஞ்சாவூரில் டரியலாக்கிய வீரமணி</title>
            <link>https://tamil.asianetnews.com/election-2019/veeramani-support-speech-for-dmk-at-tanjavur-pq3cjk</link>
            <guid>https://tamil.asianetnews.com/election-2019/veeramani-support-speech-for-dmk-at-tanjavur-pq3cjk</guid>
            <pubDate>Wed, 17 Apr 2019 11:27:00 +0530</pubDate>
            <description>தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பேசிய &amp;nbsp;கி.வீரமணி; தி.மு.க கூட்டணி கொள்கைக் கூட்டணி. மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட கூட்டணி. எதிர் அணியில் இருக்கும் அதிமுக கூட்டணி மாட்டுச்சந்தை கூட்டணி. இவர்கள் பேரம் பேசிவந்த கூட்டணி. திமுக வின் தேர்தல் அறிக்கை இந்தியாவிற்கே முதன்மையாக அமையும் வகையில், ஸ்டாலின் வடிவமைத்துள்ளார்.&amp;nbsp;  நீட் தேர்வு ரத்து. நீட் தேர்வால் மருத்துவபடிப்பைப் படிக்க முடியாமல் அறியலூர் அனிதா தற்கொலை செய்துகொண்டார். மற்ற மாநிலங்களைவிட அதிக அளவில் தமிழகத்தில்தான் அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. தமிழகத்தை சேர்ந்த மாணவ மாணவிகள், அதிக அளவில் மருத்துவம் படிக்கத்தான், கருணாநிதி அதிக அளவிலான மருத்துவக்கல்லூரிகளை உருவாக்கினார்.&amp;nbsp;  ஆனால், ஏழை மாணவர்கள் பாதிக்க வேண்டும் என்பதற்காகத்தான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. அதிமுக &amp;nbsp;கூட்டணி, நீட் தேர்வு ரத்து என்று சொல்ல முடியுமா... அவர்களுக்கு அதிகாரம் இருக்கிறதா? ஏனெனில், அவர்கள் மத்திய அரசிடம் அடிமையாக இருக்கிறார்கள். தமிழக முதல்வர் பழனிசாமி பேசும்போது, கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில்தான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது என்கிறார். நுழைவுத் தேர்வு என்றால் என்ன என்றே அவருக்குத் தெரியாது. கருணாநிதி எதைக் கொண்டுவந்தார். ஜெயலலிதா எதைக் கொண்டு வந்தார் என்று எதையும் தெரியாமல் ஆட்சிசெய்யும் ஒரே முதல்வர் இவர்தான்.  நான் விவசாயி என்று முதல்வர் பேசுகிறார். அவர்தான் விவசாயிகளின் நிலத்தைப் பிடிங்கி, அவர்கள் கண்ணீர் விட்டும் கவலைப்படாமல் 8 வழிச்சாலை கொண்டுவந்தார். &amp;nbsp;கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபம்கூட தெரிவிக்காதவர்தான் மோடி. அவர் இன்று தேர்தலுக்காக தமிழகத்தை நாடி வருகிறார். முதல் தலைமுறை இளைஞர்கள் மோடியின் வித்தையில் மயங்கிவிடக் கூடாது.&amp;nbsp;  மீண்டும் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்படும். &amp;nbsp;மோடியையும் பழனிசாமியையும் வீட்டுக்கு அனுப்ப நேரம் வந்துவிட்டது. தோல்வி பயத்தால் அவர்கள் எதையும் செய்வார்கள். மக்கள் நோட்டுக்கும் நோட்டாவுக்கும் அடிபணியாமல், அதையும் தாண்டி உதயசூரியனை வெற்றிபெறச் செய்ய வேண்டும். உதயசூரியன் வானத்தில் எரிந்தால்தான். உங்கள் வீடுகளில் விளக்கு எரியும் எனக் கூறினார். </description>
            <media:content height="400" width="760" medium="image" url="http://static.asianetnews.com/images/01d0vrx8v4dvpcp7bzxjrdja65/veeramani-speech_760x400.jpg"/>
        </item>
    </channel>
</rss>