<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes"?>
<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Sun, 26 Apr 2026 13:57:19 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss/crime" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[கதறிய மாமியார்.. விடாத மருமகன்.. நடந்தது என்ன? பரபரப்பு தகவல்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/crime/son-in-law-murders-mother-in-law-what-happened-1at51l3</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/crime/son-in-law-murders-mother-in-law-what-happened-1at51l3</guid>
            <pubDate>Sat, 18 Apr 2026 22:10:38 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Crime News: பழனி அருகே பிரிந்து சென்ற மனைவியுடன் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பிய கணவர், அதற்கு தடையாக இருந்ததாகக் கூறி தனது மாமியாரை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k4yeke4833npavv74h0h54ar,imgname-dindigul-1-1757663574152.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Crime News: பழனி அருகே பிரிந்து சென்ற மனைவியுடன் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பிய கணவர், அதற்கு தடையாக இருந்ததாகக் கூறி தனது மாமியாரை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்தவர் அஜ்மத் உசேன்(41). கூலித்தொழிலாளி. இவரது மனைவி தஸ்லீமா பேகம் (35). இருவருக்கும் 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக பிரிந்து வருகின்றனர். தஸ்லீமா பேகம் தாய் ஆசியம்மாள் (48) வீட்டில் வசித்து வந்தார். மேலும் அவர் அஜ்மத் உசேனை விவாகரத்து செய்யவும் முயற்சி செய்து வந்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சேர்ந்து வாழ விரும்பிய அஜ்மத் உசேன் கடந்த 16ம் தேதி இரவு அமராவதியில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றார். அப்போது தஸ்லீமா பேகமும் குழந்தைகளும் வீட்டில் இல்லை. மாமியார் ஆசியம்மாள் மட்டும் தனியாக இருந்துள்ளார். அஜ்மத் உசேன் தனது மனைவி மற்றும் குழந்தைகளை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு மாமியார் ஆசியம்மாள் சம்மதிக்கவில்லை. இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆத்திரமடைந்த அஜ்மத் உசேன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாமியார் ஆசியம்மாளைச் சரமாரியாகக் குத்திவிட்டு அங்கிருந்து தப்பித்தார். ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆசியம்மாள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஆசியம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த அஜ்மத் உசேனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் அப்பகுதியில் பதுங்கியிருந்த அஜ்மத் உசேனை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் நான் என் மனைவியுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டேன். ஆனால் அதற்கு இடையூறாக இருந்துள்ளார். அவர் இருக்கும் வரை என் குடும்பம் ஒன்று சேராது என்பதால் ஆத்திரத்தில் அவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்தேன் என்று தெரிவித்துள்ளார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>crime</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/crime/son-in-law-murders-mother-in-law-what-happened-1at51l3"/>
        </item>
        <item>
            <title><![CDATA[20 தூக்க மாத்திரைகள்.. துடிதுடித்த கணவர்.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி விடிய விடிய!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/crime/woman-poisons-husband-with-sleeping-pills-for-affair-kills-1us56a5</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/crime/woman-poisons-husband-with-sleeping-pills-for-affair-kills-1us56a5</guid>
            <pubDate>Sat, 24 Jan 2026 10:36:25 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;கள்ளக்காதலுக்காக, லட்சுமி மாதுரி என்ற பெண் தனது கணவருக்கு பிரியாணியில் தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்துள்ளார். பின்னர், காதலன் கோபியுடன் சேர்ந்து தலையணையால் அமுக்கி கணவனைக் கொலை செய்தார்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jyr5yw31r5myt2t3dsb9fhaj,imgname-illegal-love-4-1751010734177.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கள்ளக்காதலுக்காக, லட்சுமி மாதுரி என்ற பெண் தனது கணவருக்கு பிரியாணியில் தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்துள்ளார். பின்னர், காதலன் கோபியுடன் சேர்ந்து தலையணையால் அமுக்கி கணவனைக் கொலை செய்தார்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம் சிலுவூரை சேர்ந்தவர் சிவ நாகராஜு (45). இவரது மனைவி லட்சுமி மாதுரி (37). இந்த தம்பதிக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்ளுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். லட்சுமி மாதுரி சினிமா தியேட்டர் ஒன்றில் கவுண்டரில் டிக்கெட் கொடுக்கும் வேலை செய்து வந்தார். அப்போது கோபி என்பவருடன் லட்சுமி மாதுரிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கணவர் இல்லாத நேரத்தில் கள்ளக்காதலனை வீட்டிற்கு வரழைத்து லட்சுமி மாதுரி உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கள்ளக்காதலுக்கு தடையாக இருக்கும் கணவனை கொலை செய்ய மனைவி திட்டமிட்டார். அதன்படி மாதுரி 20 தூக்க மாத்திரைகளைப் பொடியாக்கி பிரியாணியில் கலந்து கணவருக்கு கொடுத்துள்ளார். சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே சிவனாகராஜு ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுவிட்டார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பின்னர் லட்சுமி மாதுரி காதலன் கோபியை போன் செய்து வீட்டிற்கு வரவழைத்துள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து சிவனாகராஜுவின் முகத்தில் தலையணையை வைத்து மூச்சுத் திணறடித்து துடிதுடிக்க கொலை செய்யப்பட்டார். கணவனை கொன்ற பிறகு அந்த பெண்ணும் அவரது கள்ளக்காதலனும் சடலத்தின் அருகே அமர்ந்து ஆபாச படங்களைப் பார்த்தது மட்டுமல்லாமல் உல்லாசமாக இருந்துள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கணவர் மாரடைப்பால் இறந்ததாக கிராம மக்களை நம்ப வைத்துள்ளார். சிவனாகராஜுவின் தந்தையும் நண்பர்களும் உடலை பார்த்தபோது, காயங்களுடன் இரத்தக் கறைகளும் இருந்ததால் சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து நாகராஜுவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நாகராஜு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் மார்பில் ஏற்பட்ட காயங்கள் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாகவே உயிரிழந்தது தெரியவந்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதையடுத்து போலீசார் லட்சுமி மாதுரியை பிடித்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அவருடைய செல்போனை பரிசோதித்த போது கடைசியாக கோபி என்பவருடன் பேசியது தெரியவந்தது. இறுதியில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ததை மனைவி லட்சுமி மாதுரி ஒப்புக்கொண்டார். இதனையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>crime</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/crime/woman-poisons-husband-with-sleeping-pills-for-affair-kills-1us56a5"/>
        </item>
        <item>
            <title><![CDATA[பெற்ற குழந்தையை  கொன்ற கொடூர தாய்.. கோர்ட் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு.. கள்ளக்காதலன் எஸ்கேப்..]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/crime/mother-kills-own-child-court-verdict-2pmos97</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/crime/mother-kills-own-child-court-verdict-2pmos97</guid>
            <pubDate>Wed, 21 Jan 2026 16:12:30 +0530</pubDate>
            <description><![CDATA[கண்ணூரில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த ஒன்றரை வயது குழந்தையை, அதன் தாய் சரண்யா பாறையில் மோதிக் கொலை செய்துள்ளார். இந்த வழக்கில், நீதிமன்றம் தாய் சரண்யாவை குற்றவாளி என தீர்ப்பளித்து, கள்ளக்காதலனை போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுதலை செய்தது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k4yeke49hssekt44bsy5f7fx,imgname-illegal-love-3-1757663574153.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[கண்ணூரில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த ஒன்றரை வயது குழந்தையை, அதன் தாய் சரண்யா பாறையில் மோதிக் கொலை செய்துள்ளார். இந்த வழக்கில், நீதிமன்றம் தாய் சரண்யாவை குற்றவாளி என தீர்ப்பளித்து, கள்ளக்காதலனை போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுதலை செய்தது.&lt;img&gt;&lt;p&gt;கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தையில் பகுதியை சேர்ந்தவர் பிரணவ். இவரது மனைவி சரண்யா. இந்த தம்பதிக்கு வியான் என்ற ஆண் குழந்தை இருந்து வந்தது. இந்நிலையில் கணவன் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சரண்யா தனது ஒன்றரை வயது ஆண் குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில் சரண்யாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த நிதின் (34) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. பின்னர் இருவரும் தனிமையில் சந்தித்து அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தனர். இதனையடுத்து உல்லாசத்துக்கு இடையூறாக இருக்கும் குழந்தையை கொலை செய்ய தாய் மற்றும் கள்ளக்காதலன் திட்டமிட்டனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதன்படி, கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17ம் தேதி அதே பகுதியில் உள்ள கடற்கரையில் தடுப்புச்சுவர் போல உள்ள பாறைகளில் குழந்தையை வீசியும், தலையை பாறையில் மோத செய்தும் 2 பேரும் சேர்ந்து கொலை செய்தனர். ஆனால் எதுவும் தெரியாதது போல சரண்யா குழந்தையை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் கணவர் பிரணவ் மீது சந்தேகம் இருப்பதாக கூறினார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;போலீஸ் விசாரணையில் குழந்தையை தான் கொலை செய்யவில்லை எனக்கூறிய பிரணவ், மனைவி மீது தான் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார். சரண்யாவிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து குழந்தையை கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தளிப்பரம்பு கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், குழந்தையை கொன்ற சரண்யா குற்றவாளி என்றும் நிதின் மீதான குற்றத்தை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என்று விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். சரண்யா தண்டனை விவரம் இன்று வெளியாக உள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>crime</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/crime/mother-kills-own-child-court-verdict-2pmos97"/>
        </item>
        <item>
            <title><![CDATA[சென்னையில் பேரதிர்ச்சி! பீகார் இளைஞரின் குடும்பத்தையே கருவறுத்த கொடூர கும்பல்..]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/brutal-murder-of-bihar-youth-family-in-chennai-2psdi45</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/brutal-murder-of-bihar-youth-family-in-chennai-2psdi45</guid>
            <pubDate>Wed, 28 Jan 2026 15:21:25 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;சென்னை அடையாறில் சாக்குமூட்டையில் கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கொலை செய்யப்பட்டது பீகாரை சேர்ந்த கவுரவ் குமார் என தெரியவந்துள்ளது. மேலும் மனைவி மற்றும் கொலை செய்துள்ளனர்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kg1zz5yns230ygrsp0avw2ce,imgname-perungudi-1769593608149.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சென்னை அடையாறில் சாக்குமூட்டையில் கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கொலை செய்யப்பட்டது பீகாரை சேர்ந்த கவுரவ் குமார் என தெரியவந்துள்ளது. மேலும் மனைவி மற்றும் கொலை செய்துள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சென்னை அடையாறு இந்திரா நகர் முதலாவது அவென்யூவில் உள்ள இருசக்கர வாகனம் விற்பனை நிலையம் அருகே சாலையோரமாக சாக்குமூட்டை ஒன்று கிடந்துள்ளது. அதில் இருந்து ரத்தமும் வழிந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இதுகுறித்து அடையாறு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மூட்டையை திறந்து பார்த்த போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில், 30 வயது மதிக்கத்தக்க கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனையடுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட நபர் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பின்னர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அடையாளம் தெரியாத இரண்டு பேர் பைக்கில் வந்து இந்த சாக்கு மூட்டையை வீசி சென்ற காட்சிகள் பாதிவாகி இருந்தது. மேலும் பைக்கின் பதிவு எண்ணை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளியை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில் கொலை செய்யப்பட்டது பீகார் மாநிலத்தை சேர்ந்த கவுரவ் குமார்(30) என்பது தெரியவந்தது. சந்தேகத்தின் பேரில் சிக்கந்தர் (30) உள்ளிட்ட 7 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அப்போது, கவுரவ் குமாரின் மனைவி மற்றும் குழந்தையும் காணாமல் போனது தெரியவந்தது. பிடிபட்டவர்களிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், கவுரவ் குமாரை மட்டுமின்றி அவரது மனைவி மற்றும் குழந்தையையும் தாங்கள் கொலை செய்துவிட்டதாக அவர்கள் வாக்குமூலத்தில் தெரிவித்தனர். கொலையாளிகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் கொலை செய்யப்பட்ட மனைவி முனிதா குமாரி மற்றும் குழந்தையின் சடலங்களை பெருங்குடி குப்பைக் கிடங்கில் தீவிரமாக தேடி வருகின்றனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>crime</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/brutal-murder-of-bihar-youth-family-in-chennai-2psdi45"/>
        </item>
        <item>
            <title><![CDATA[பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி... லஷ்கர்-இ-தொய்பா பயங்கர ஸ்கெட்ச்..! டெல்லியில் பரபரப்பு..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/crime/lashkar-e-taiba-planning-a-terrorist-attack-in-delhi-target-chandni-chowk-temple-78aqcqg</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/crime/lashkar-e-taiba-planning-a-terrorist-attack-in-delhi-target-chandni-chowk-temple-78aqcqg</guid>
            <pubDate>Sat, 21 Feb 2026 13:49:06 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;பிப்ரவரி 6 ஆம் தேதி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது ஒரு குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. பலர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01khzm8wv1cbfvv1b6xa5ass9h,imgname-laskhar-1771661718369.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;பிப்ரவரி 6 ஆம் தேதி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது ஒரு குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. பலர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தேசிய தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு அமைப்புகள் மீண்டும் பயங்கரவாத எச்சரிக்கையை விடுத்துள்ளன. செங்கோட்டை அருகே லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக புலனாய்வு வட்டாரங்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளன. பயங்கரவாதிகள் குறிப்பாக சாந்தினி சௌக்கில் உள்ள முக்கிய கோவிலை குறிவைத்துள்ளதாக கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள ஒரு மசூதியில் பிப்ரவரி 6 ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்புக்குப் பிறகு, அந்த அமைப்பு இந்தியாவில் ஒரு பெரிய பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;பாதுகாப்பு நிறுவனங்களுக்கு தகவல்கள் கிடைத்தவுடன், டெல்லி காவல்துறை, மத்திய புலனாய்வு அமைப்புகள் செங்கோட்டை, சாந்தினி சவுக் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மதத் தலங்களில் பாதுகாப்பை அதிகரித்துள்ளன. நெரிசலான பகுதிகளில் கூடுதல் போலீஸ் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் நாட்டின் முக்கிய கோயில்களை குறிவைக்கலாம் என்று பாதுகாப்பு நிறுவனங்கள் நம்புகின்றன. டெல்லியில் உள்ள சாந்தினி சவுக் கோயில் ஒரு குறிப்பிட்ட இலக்காக இருக்கலாம். எந்தவொரு சாத்தியமான அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தேசியத் தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே, நவம்பர் 10, 2025 அன்று மாலை நேரத்தில் ஒரு குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. பலர் காயமடைந்தனர். பல வாகனங்களும் எரிக்கப்பட்டன. இந்த சம்பவத்தில் பலர் இறந்தனர். பலர் படுகாயமடைந்தனர். ஒரு காரில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. வெடிப்பதற்கு சுமார் மூன்று மணி நேரத்திற்கு முன்பு கார் செங்கோட்டை பகுதி வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பல பகுதிகளில் சோதனைகள் நடத்தப்பட்டன. மேலும் பலர் கைது செய்யப்பட்டனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிப்ரவரி 6 ஆம் தேதி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது ஒரு குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. பலர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். இஸ்லாமாபாத்தின் ஷாஜாத் டவுன் பகுதியில் உள்ள டெர்லாய் இமாம் பர்காவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. அங்கு வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தது. தற்கொலை குண்டுதாரி உள்ளே நுழைந்த பிறகு வாயிலுக்கு அருகில் தன்னை வெடிக்கச் செய்து கொண்டார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>crime</category>
            <dc:creator>Thiraviya raj</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/crime/lashkar-e-taiba-planning-a-terrorist-attack-in-delhi-target-chandni-chowk-temple-78aqcqg"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Sathankulam Case: இந்தியாவையே உலுக்கிய தீர்ப்பு! 9 போலீசாருக்கு மரண தண்டனை.. நடந்தது என்ன?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/sathankulam-custodial-death-verdict-madurai-court-sentences-nine-policemen-to-death-b9g7c14</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/sathankulam-custodial-death-verdict-madurai-court-sentences-nine-policemen-to-death-b9g7c14</guid>
            <pubDate>Tue, 07 Apr 2026 12:40:47 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;சாத்தான்குளம் லாக்-அப் மரண வழக்கில் மதுரை சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இந்தியாவையே உலுக்கியுள்ளது. 9 போலீசாருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.இந்த வழக்கு என்ன? உண்மையில் என்ன நடந்தது என்பதை விரிவாகப் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01knk97xcaz6nnjep5yf4f9mds,imgname-custodial-death-case-1775542465930.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சாத்தான்குளம் லாக்-அப் மரண வழக்கில் மதுரை சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இந்தியாவையே உலுக்கியுள்ளது. 9 போலீசாருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.இந்த வழக்கு என்ன? உண்மையில் என்ன நடந்தது என்பதை விரிவாகப் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய சாத்தான்குளம் லாக்-அப் மரண வழக்கில், மதுரை சிறப்பு நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் மரணத்திற்கு காரணமான 9 போலீசாருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. மக்களைக் காக்க வேண்டிய போலீசாரே மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொண்டதாக நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது. இந்தத் தீர்ப்பு, நாடு முழுவதும் கஸ்டடி மரணங்கள் குறித்த விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது.&lt;img&gt;2020-ல் கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் லாக்-டவுன் அமலில் இருந்தபோது, தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்தது. அங்கு மொபைல் கடை நடத்தி வந்த பி. ஜெயராஜ் மற்றும் அவரது மகன் ஜே. பென்னிக்ஸ், அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி கடையைத் திறந்து வைத்திருந்ததாகக் கூறி, ஜூன் 19, 2020 அன்று போலீசார் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஒரு சாதாரண வழக்காகத் தொடங்கியது, பின்னர் நாட்டையே உலுக்கிய ஒரு பெரும் துயரமாக மாறியது.&lt;img&gt;கைது செய்யப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை, போலீசார் பல மணி நேரம் காவல் நிலையத்தில் வைத்து கொடூரமாக சித்திரவதை செய்ததாக விசாரணையில் தெரியவந்தது. லத்தி மற்றும் இரும்புக் கம்பிகளால் தாக்கியதில் இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டன. பின்னர், அவர்களை கோவில்பட்டி கிளைச் சிறைக்கு மாற்றினர். ஆனால், காயங்கள் తీవ్రமடைந்ததால், ஜூன் 22 அன்று பென்னிக்ஸும், மறுநாள் ஜூன் 23 அன்று ஜெயராஜும் மருத்துவமனையில் உயிரிழந்தனர். இந்த வழக்கை விசாரித்த சிபிஐ, போலீசார் ஆதாரங்களை மறைக்க முயன்றதையும், பதிவேடுகளை மாற்றியதையும் கண்டுபிடித்தது. ஒரு பெண் காவலர் அளித்த வாக்குமூலம் இந்த வழக்கில் மிக முக்கிய சாட்சியமாக அமைந்தது.&lt;img&gt;இந்த வழக்கில் நீண்ட விசாரணைக்குப் பிறகு, மதுரை சிறப்பு நீதிமன்றம் இந்த முக்கிய தீர்ப்பை வழங்கியது. தந்தை-மகன் மரணத்திற்கு காரணமான 9 போலீஸ் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. தண்டனை பெற்றவர்களில் ஸ்ரீதர், ரகு கணேஷ், முருகன், பாலகிருஷ்ணன், முத்துராஜ், செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், சமுத்துரை மற்றும் வெயில்முத்து ஆகியோர் அடங்குவர். இவர்களில் ஸ்ரீதருக்கு 15 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. சட்டத்தை அமல்படுத்த வேண்டிய போலீசாரே, தங்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி இந்த மனிதாபிமானமற்ற செயலில் ஈடுபட்டதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.&lt;img&gt;இந்தத் தீர்ப்பு ஒரு குறிப்பிட்ட வழக்கோட தீர்ப்பு மட்டுமல்ல. இது, கஸ்டடி வன்முறைக்கு எதிராக காவல்துறைக்கு விடுக்கப்பட்ட ஒரு கடுமையான எச்சரிக்கை என சட்ட வல்லுநர்கள் கருதுகின்றனர். கஸ்டடி சித்திரவதைகளைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் அவசியம் என்ற செய்தியை இந்தத் தீர்ப்பு சொல்வதாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் தடுக்க, இந்தத் தீர்ப்பு ஒரு மைல்கல்லாக அமையும் எனப் பலரும் நம்புகிறார்கள்.]]></content:encoded>
            <category>crime</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/sathankulam-custodial-death-verdict-madurai-court-sentences-nine-policemen-to-death-b9g7c14"/>
        </item>
        <item>
            <title><![CDATA[விசிக கொடியை நட்டுட்டோம்.. இந்த இடம் எங்களுக்குத்தான்.. சிறுத்தைகள் அட்டூழியம்..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/crime/we-have-planted-the-vck-flag-this-place-belongs-to-us-the-panthers-hooliganism-articleshow-elbicfv</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/crime/we-have-planted-the-vck-flag-this-place-belongs-to-us-the-panthers-hooliganism-articleshow-elbicfv</guid>
            <pubDate>Fri, 30 Jan 2026 15:58:31 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;புதுக்கோட்டை மாவட்டம். கந்தர்வகோட்டை அருகே விவசாய நிலத்தில் கொட்டகை போட்டு கொடியை நட்டு இனி இந்த இடம் எங்களுக்குத்தான் என விசிக கட்சியினர் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kg7709snvgtyswg71w6adbvd,imgname-vck-1769768757045.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;புதுக்கோட்டை மாவட்டம். கந்தர்வகோட்டை அருகே விவசாய நிலத்தில் கொட்டகை போட்டு கொடியை நட்டு இனி இந்த இடம் எங்களுக்குத்தான் என விசிக கட்சியினர் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;இதுகுறித்து பாதிக்கப்பட்ட தரப்பை சேர்ந்த கேசவன் கூறுகையில், &lsquo;&lsquo; எங்க சித்தப்பா சின்னதுரை பேரில் 1988 சுப்பையா செட்டியாரிடம் இருந்து ரெஜிஸ்டர் செய்து வாங்கிய சொத்து இது. நாங்கள்தான் விவசாயம் பண்ணிட்டு வரோம். இப்போ சமீபத்துல ரெண்டு மூணு வருஷமா நமச்சிவாயம் என்பவர் &lsquo;இது எங்க இடம்னு சொல்லி பிரச்சனை பண்ணிட்டு இருக்காரு. கடந்த ரெண்டு வாரத்துக்கு முன்னால விசிக கட்சியில் இருந்து வடுகப்பட்டி பாஸ்கர், கோமாபுரத்தில் இருந்து ஒரு நாலஞ்சு பேரை கூட்டிட்டு வந் &lsquo;இது எங்க இடம். நான் வாங்கிட்டேன்&rsquo;&rsquo;எனச் சொல்லி கொட்டகை போட்டிருந்தாங்க.&lt;/p&gt;&lt;p&gt;&lt;img&gt;&lt;/p&gt;&lt;p&gt;எங்களுக்கு அந்த விஷயம் தெரியல. நாங்க அடுத்த நாள் வந்து பாக்குறோம். விவசாயம் பண்ணிருக்க வயல்ல வந்து கொட்டகை போட்டு இருந்தாங்க. நாங்க பிரிச்சு போட்டுட்டோம். அந்த பிரிச்சுப் போட்டதுக்கு அப்புறம் எங்ககிட்ட வந்து பிரச்சினை செய்தாங்க. எங்க மேல பிசிஆர் கேஸ் கொடுத்தாங்க. எங்கள கூப்பிட்டு விசாரிச்சு இருந்தாங்க. நாங்க எங்கிட்ட இருந்த டாக்குமெண்டையும் கொடுத்தோம். அடங்கல் வாங்கி வரச்சொன்னாங்க. அதையும் கொண்டு போய் கொடுத்தோம்து. இது எங்க இடம்தான்னு சொன்னோம். நாங்க விசாரிக்கிறோம்னு போலீஸ் தரப்பில் சொன்னாங்க. அதுக்குப் பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கல.&lt;/p&gt;&lt;p&gt;மறுபடியும் அடுத்த ரெண்டு நாள் கழிச்சு மறுபடியும் இது எங்களோட இடம்னு வந்து கொட்டகையையும், கொடியும் ஏத்திட்டு இருந்தாங்க. அந்த விஷயங்கள் தெரிய வந்து, நாங்க இடத்துக்கு போனோம். அப்போ, &lsquo;&lsquo;இங்க விடுதலை சிறுத்தை கட்சி கொடி இருக்கும். இதை தாண்டி நீங்க தடுக்க வந்தீங்கன்னா உங்களை வெட்டுவோம், குத்துவோம், கொலை பண்ணுவோம்னு சொல்லி மிரட்டுனாங்க. அதையும் தாண்டி வந்து நான் இல்லாத நேரத்தில் பிரிச்சு போட்டா நான் பிற்படுத்தப்பட்ட சமூகம். என்னை அவதூரா பேசினாங்கனு சொல்லி உங்க மேல பிசிஆர் கேஸ் கொடுப்பேன்னு சொல்லி மிரட்டுனாங்க. நாங்க உயிருக்கு பயந்துட்டு போயிட்டோம். எங்களுக்கு தனிப்பட்ட முறையில் விசிக மீது நல்ல அபிப்ராயம் இருக்கு. ஆனா இவங்க சாதியை சொல்லி தப்பா பயன்படுத்த அபகரிக்க பார்க்கிறார்கள்.&lt;img&gt;&lt;/p&gt;&lt;p&gt;பாஸ்கரன் ஆட்கள் சேர்ந்துக்கிட்டு இந்த இடத்த எடுக்கணும்னு திட்டம்போட்டு தப்பான வேலைகளை பார்த்துட்டு இருக்காங்க. இது தொடர்பா புதுக்கோட்டையிலும், கந்தர்வக்கோட்டையிலும் புகார் கொடுத்தோம். அவங்க நடவடிக்கை எடுக்கிறோம்ன்னு சொல்றாங்க. அதுக்கப்புறம் எந்த பதிலும் இருக்க மாட்டேங்குது. நாங்க போய் கேட்டா பொறுமையா இருங்க. நடவடிக்கை எடுக்கிறோம்னு சொல்றாங்க. அதுக்கப்புறம் எதுமே செய்ய மாட்டேங்கிறாங்க. இப்போ ஒரு வாரமா இந்த கொட்டா இருக்கு. விவசாயம் பண்ண முடியல. அப்புறம் என்ன ஆகும்னு எங்களுக்கே தெரியல. அதான இடத்தை மீட்டு கொடுக்கணும். எங்க உயிருக்கு பாதுகாப்பு தரணும்.&lt;/p&gt;&lt;p&gt;சித்தப்பா சின்னத்துரை பேரில் தான் இடம் இருக்கு. நமச்சிவாயம் என்பவர் ஒவ்வொரு வருஷமும் பிரச்சனை பண்ணிட்டே இருந்தார். அவரிடம் எங்க எங்க அப்பா முத்துசாமியிடம் வட்டிக்கு பணம் வாங்கிருக்காரு. அதுக்கு ஒரு ஆதாரமா எங்க சித்தப்பா பேரில் ரெஜிஸ்டர் செய்யப்பட்ட ஒரு பத்திரத்தை கொடுத்திருந்தார். அதை மூணு வருஷம் கழிச்சு எங்க அப்பா வட்டியோட சேர்த்து 88,000 கொடுத்துட்டு அந்த பத்திரத்தை கேட்டிருக்கார். கொஞ்ச நாள் கழிச்சு நமச்சிவாயம் இறந்துவிட்டார். அவர் இறந்ததுக்கு அப்புறம் அந்த பத்திரத்தை சின்னதுரை எடுத்து வைத்து இருக்கிறார். அதை வைத்து இப்போ பிரச்சினை செய்து வருகிறார்&rsquo;&rsquo; என்கிறார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>crime</category>
            <dc:creator>Thiraviya raj</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/crime/we-have-planted-the-vck-flag-this-place-belongs-to-us-the-panthers-hooliganism-articleshow-elbicfv"/>
        </item>
        <item>
            <title><![CDATA[அதிகாலையிலேயே பதறிய தமிழகம்.. பிரபல ரவுடி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! யார் இந்த கொட்டு ராஜா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/rowdy-azhaguraja-encounter-death-gb92f1u</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/rowdy-azhaguraja-encounter-death-gb92f1u</guid>
            <pubDate>Tue, 27 Jan 2026 08:02:37 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;மதுரை ரவுடி வெள்ளைகாளி மீது நடந்த தாக்குதல் வழக்கில், கைது செய்யப்பட்ட கொட்டு ராஜா என்பவர் போலீசாரால் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆயுதங்களை மீட்க அழைத்துச் சென்றபோது, போலீசாரை தாக்கி தப்ப முயன்றதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kfym5xtexgv2cmxk43rhvdzg,imgname-encounter--3-1769480582990.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;மதுரை ரவுடி வெள்ளைகாளி மீது நடந்த தாக்குதல் வழக்கில், கைது செய்யப்பட்ட கொட்டு ராஜா என்பவர் போலீசாரால் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆயுதங்களை மீட்க அழைத்துச் சென்றபோது, போலீசாரை தாக்கி தப்ப முயன்றதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மதுரையைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான வெள்ளைகாளி. இவர் மீது 9 கொலை வழக்குகள், 8 கொலை முயற்சி வழக்குகள் என 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் வழக்கு ஒன்றில் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் வெள்ளைகாளியை ஆஜர்படுத்தப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது பின்தொடர்ந்து இரண்டு கார்களில் ரவுடி கும்பல் வந்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில், போலீசார் பெரம்பலூர் அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருமாந்துறை பகுதியில், சாப்பிடுவதற்காக வாகனத்தை நிறுத்தியுள்ளனர். அப்போது அந்த கும்பல் வெள்ளைக்காளி மீது நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளனர். இதில், ரவுடி வெள்ளைக்காளி உயிர் தப்பியதை அறிந்த கும்பல் அரிவாளால் அவரை முயன்றனர். இதனையடுத்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியது அடுத்து அந்த கும்பல் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பித்தது. இதில், மூன்று போலீசார் காயமடைந்தனர். இந்த சம்பவத்தால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய கும்பலை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடப்பட்டு வந்தனர். தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக ரவுடி கொட்டு ராஜா என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அழைத்து வந்துள்ளனர். அப்போது அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகளை வனப்பகுதியில் பதுக்கி வைத்திருப்பதாக கொட்டு ராஜா தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதனைத்தொடர்ந்து ஆயுதங்களை கைப்பற்றுவற்காக போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது திடீரென, போலீசார் வாகனத்தின் மீது நாட்டு வெடிகுண்டு ஒன்றை வீசியது மட்டுமல்லாமல் கொட்டு ராஜா தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் எஸ்.ஐ சங்கர் என்பவரை வெட்டிவிட்டு தப்பி ஓட முயற்சித்துள்ளார். அப்போது மங்களமேடு காவல் ஆய்வாளர் நந்தகுமார் துப்பாக்கியால் சுட்டதில் அழகுராஜா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் ரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் காயமடைந்த எஸ்.ஐ சங்கர் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றியம் அரியமங்கலம் ஊராட்சியில் உள்ள கருத்தரிவான் குக்கிராமத்தை சேர்ந்தவர் ராஜபாண்டி. அதே ஊரைச் சேர்ந்தவர் வி.கே. குருசாமி. இவரும் நெருங்கிய உறவினர். இருவரும், 40 ஆண்டுகளுக்கு முன்பே, மதுரை மேல அனுப்பானடி பகுதியில் தனித்தனியாக குடியேறினர். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த 23 ஆண்டுகளாக 21 கொலைகள் பழிக்கு பழியாக இரு தரப்பிலும் கொலைகள் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>crime</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/rowdy-azhaguraja-encounter-death-gb92f1u"/>
        </item>
        <item>
            <title><![CDATA[சீன ராணுவத்தை அமெரிக்காவிடம் காட்டிக் கொடுத்த ஜாங்... ஜி-ஜின்பிங்கின் முதுகில் குத்திய பால்ய நண்பன்..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/world/chinese-army-top-general-zhang-youxia-us-trump-xi-jinping-nuclear-leak-gnwkqq2</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/world/chinese-army-top-general-zhang-youxia-us-trump-xi-jinping-nuclear-leak-gnwkqq2</guid>
            <pubDate>Mon, 26 Jan 2026 11:39:05 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ஜாங் யூக்ஸியா பணத்திற்காக நாட்டைக் காட்டிக் கொடுத்ததாகவும், அதனால்தான் அவர் தனது பதவியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் சீன இராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kfwegtk3zmep9g3rqfxqdawv,imgname-zhang-youxia-1769407539811.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஜாங் யூக்ஸியா பணத்திற்காக நாட்டைக் காட்டிக் கொடுத்ததாகவும், அதனால்தான் அவர் தனது பதவியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் சீன இராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதிர்ச்சியூட்டும் வகையில் சீனாவின் ஜி ஜின்பிங் அரசு உயர்மட்ட ராணுவ அதிகாரியான ஜாங் யூக்ஸியாவை பதவி நீக்கம் செய்துள்ளது. ஜாங் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு மிகவும் நெருக்கமானவராகக் கருதப்பட்டவர். இருவரும் குழந்தை பருவம் முதல் நண்பர்கள். இப்போது, ​​ஜாங் நீக்கப்பட்டது தொடர்பாக ஒரு பெரிய ரகசியம் வெளிவந்துள்ளது. ஜாங் யூக்ஸியா பணத்திற்காக நாட்டைக் காட்டிக் கொடுத்ததாகவும், அதனால்தான் அவர் தனது பதவியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் சீன இராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;சீன அதிகாரிகள் கூறியதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல், ஜாங் பற்றி ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. ஜாங் பணத்திற்காக அமெரிக்காவுடன் அணுசக்தி தொடர்பான உளவுத்துறையைப் பகிர்ந்து கொண்டதாகக் கூறுகிறது. இதை அறிந்ததும், ஜி ஜின்பிங் அவரை தனது பதவியில் இருந்து நீக்க முடிவு செய்தார். ஜாங்கை நீக்கும் முடிவை ஒரு மறு சீரமைப்பு நடவடிக்கை நடவடிக்கை என்று கூறுகிறது. இதை சீன அதிபரால் இராணுவத்திற்குள் ஊழலை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஜி ஜின்பிங்கிற்கு எதிரான சதியில் ஜாங் ஈடுபட்டதாகவும் சீன அரசியல் வட்டாரங்களில் பேச்சு உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சீனாவின் அணுசக்தி திட்டங்களை நிர்வகிக்கும் அரசுக்கு சொந்தமான நிறுவனமான சீனா தேசிய அணுசக்தி நிறுவனத்தின் முன்னாள் பொது மேலாளர் கு ஜுன், சமீபத்தில் ஜி ஜின்பிங்கிற்கு ஒரு அறிக்கையை சமர்ப்பித்தார். இந்த அறிக்கையில் ஜாங் பற்றிய தகவல்களையும் வழன்கப்பட்டுள்ளது. 75 வயதான ஜாங், சீனாவின் அணு ஆயுதங்கள் பற்றிய தொழில்நுட்ப தகவல்களை அமெரிக்காவுடன் பகிர்ந்து கொண்டதாக அறிக்கை கூறுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;சீனாவின் அணு ஆயுதங்கள் அமெரிக்காவின் டார்கெட்டாக உள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் ஒரு அறிக்கையில் சீனா தொடர்ந்து அணு ஆயுதங்களை உருவாக்கி வருவதாகக் கூறினார். அமெரிக்காவும் சோதனைகளை நடத்த உள்ளது. சீனாவில் சுமார் 600 அணு ஆயுதங்கள் உள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜாங் யூக்ஸியா 1950 ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் பிறந்தார். அவரது தந்தை ஜாங் யூக்ஸியா, ஒரு முக்கிய சீன புரட்சிகரத் தலைவர். ஜாங் 1968 ஆம் ஆண்டு சீன இராணுவத்தில் சேர்ந்தார். 2012 ஆம் ஆண்டு ஜி ஜின்பிங் சீனாவின் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டபோது ஜான் முக்கிய பதவியைப் பெற்றார். அந்த ஆண்டு, ஜாங் ஆயுதத் துறையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.&lt;/p&gt;&lt;p&gt;2017 ஆம் ஆண்டில், ஜாங் இராணுவத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். இது ஜனாதிபதிக்குப் பிறகு சீனாவில் இரண்டாவது மிக முக்கியமான பதவி. ஜாங்கும், ஜி ஜின்பிங்கும் குழந்தை பருவ நண்பர்கள். எனவே, அவர் சீன அரசியலில் மிகவும் பாதுகாப்பான பதவியாகக் கருதப்பட்டார். ஜாங் 2027-ல் ஓய்வு பெறவிருந்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சீனாவின் இராணுவம் ஊழலால் பாதிக்கப்பட்டுள்ளது. 2023 முதல், சீனாவில் 80 க்கும் மேற்பட்ட இராணுவ அதிகாரிகள் ஊழல் குற்றச்சாட்டில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஸ்டாக்ஹோம் இன்டர்நேஷனலின் தகவல்படி, 2024 ஆம் ஆண்டில் உலகெங்கிலும் உள்ள நாடுகள் கணிசமான அளவு ஆயுதங்களை விற்றாலும், சீனா பின்தங்கியுள்ளது. ஊழல் சீன நிறுவனங்கள் பல ஆயுதங்களை விற்பனை செய்வதைத் தடுத்துள்ளது. இதன் காரணமாக வருவாய் இழப்பு ஏற்பட்டது.&lt;/p&gt;&lt;p&gt;இதனால், சீன அரசு இப்போது உச்ச தலைவர் ஜி ஜின்பிங் தலைமையில் ஒரு இராணுவ தூய்மைப்படுத்தும் மறுசீரமைப்பை தொடங்க முடிவு செய்துள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>crime</category>
            <dc:creator>Thiraviya raj</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/world/chinese-army-top-general-zhang-youxia-us-trump-xi-jinping-nuclear-leak-gnwkqq2"/>
        </item>
        <item>
            <title><![CDATA[அப்பா.. என்னை காப்பாத்து.. தந்தையிடம் கதறிய 33 வயது சத்யா.. வெறியாட்டம் ஆடிய சக்திவேல்.. யார் இவர்?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/crime/10-year-old-boy-murdered-in-salem-gsf24gb</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/crime/10-year-old-boy-murdered-in-salem-gsf24gb</guid>
            <pubDate>Sat, 25 Apr 2026 22:57:54 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ஓமலூர் அருகே கள்ளக்காதல் தகராறில், உல்லாசத்திற்கு மறுத்த பெண்ணையும், அவரது 10 வயது மகனையும் மேலாளர் அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், தாய் படுகாயமடைந்தார்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jyr5yw306m6j5q9fddgv2za4,imgname-illegal-love-2-1751010734176.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஓமலூர் அருகே கள்ளக்காதல் தகராறில், உல்லாசத்திற்கு மறுத்த பெண்ணையும், அவரது 10 வயது மகனையும் மேலாளர் அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், தாய் படுகாயமடைந்தார்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த பொட்டியபுரம் ஊராட்சி கருத்தானூர் பகுதியை சேர்ந்தவர் சத்யா (33). இவரது கணவர் ராஜ்குமார். இந்த தம்பதிக்கு 13 வயதில் மகளும், 10 வயதில் மகனும் உள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். சத்யா தனது மகன் மற்றும் மகளுடன் தந்தையின் வீட்டின் வசித்து வந்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில், ஓமலூரில் உள்ள பிரபல வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடையில் சத்யா வேலை செய்து வந்தார். அதே ஷோரூமில் வேலை செய்து வந்த சக்திவேல் (30) என்பவர் மேலாளராக பணியாற்றி வந்தார். அவருக்கும், சத்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. சக்திவேல் அடிக்கடி சத்யாவின் வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நேற்று முன்தினம் இரவு சத்யா வீட்டில் இருந்து உடலில் பலத்த வெட்டு காயங்களுடன், வலது கை மணிக்கட்டு துண்டான நிலையில் கதறியபடி அருகில் வசிக்கும் தந்தையின் வீட்டை நோக்கி ஓடி வந்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சி பெற்றோர் மற்றும் உறவினர்கள் பதறியபடி வெளியே வந்தனர். மகள் வெள்ளத்தில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரது வீட்டுக்குள் சென்று பார்த்த போது சிறுவன் கிஷாந்த் தலை மற்றும் கழுத்தில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்தான்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பின்னர் ரத்த வெள்ளத்தில் இருந்த இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் கிஷாந்த் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். சத்யாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது நேற்று முன்தினம் நள்ளிரவு சக்திவேல் சத்யாவின் வீட்டிற்கு வந்து உல்லாசத்திற்கு அழைத்ததற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அப்போது, சத்தம் கேட்டு தூங்கிக்கொண்டிருந்த சிறுவன் கிஷாந்த் எழுந்து வந்து சக்திவேலை வெளியே செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல், அரிவாளை எடுத்து கிஷாந்தை வெட்டியுள்ளார். தடுக்க முயன்ற சத்யாவையும் வெட்டியது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய சக்திவேலை தேடி வந்தனர். இதனிடையே போலீஸ்க்கு பயந்து சக்திவேல் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>crime</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/crime/10-year-old-boy-murdered-in-salem-gsf24gb"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஏசி வாங்கி தராத காதல் கணவர்.! உயிரை மாய்துகொண்ட 25 வயது இளம்பெண்.! திருவள்ளூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/crime/ac-purchase-dispute-in-tiruvallur-leads-to-tragic-incident-wife-dies-by-suicide-shocking-case-explained-articleshow-iw9so88</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/crime/ac-purchase-dispute-in-tiruvallur-leads-to-tragic-incident-wife-dies-by-suicide-shocking-case-explained-articleshow-iw9so88</guid>
            <pubDate>Sun, 26 Apr 2026 13:57:16 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Wife Found Dead in Tiruvallur After Fight With Husband Over Buying AC : திருவள்ளூரில் ஏசி வாங்குவது தொடர்பாக கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனைவி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kq4e1nxqqgnb8wegwpk8pf9h,imgname-wife-found-dead-in-tiruvallur-after-fight-with-husband-over-ac--1--1777191671735.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;h2&gt;&lt;strong&gt;ஏசி வாங்கி தராததால் உயிரை மாய்துகொண்ட இளம்பெண்&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஜெயராம் தெருவை சேர்ந்தவர் ஆகாஷ். இவருக்கு வயது 26. இவரும் புல்லரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மோனிகா என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பள்ளி காலம் முதலே இருவரும் காதலித்து வந்த நிலையில் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லாத நிலையில் இருவரும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;ஏசி வாங்குவது தொடர்பாக முற்றிய சண்டை&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;ஆகாஷ் திருவள்ளூர் பகுதியில் உள்ள தனியார் துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். மோனிகா வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் சில நாட்களாக அதிகரித்து வரும் கோடை வெப்பத்தால் இரவு நேரத்தில் புழுக்கம் அதிகமாக இருந்துள்ளது. இதன் காரணமாக வீட்டிற்கு ஏசி வாங்கி தருமாறு மோனிகா ஆகாஷிடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது. இந்த நிலையில் ஆகாஷ் நேற்று இரவு தனது தம்பி அவினாஷ், தந்தை மற்றும் தாயார் ஆகியோருடன் வீட்டில் மொட்டை மாடிக்கு தூங்க சென்றார். மோனிகா மட்டும் வீட்டில் தனியாக தூங்கினார்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;ஃபேனில் சடலமாக தொங்கிய மனைவி&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;காலையில் எழுந்து வந்து பார்த்தபோது மோனிகாவின் அறை உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதனையடுத்து ஆகாஷ் போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மோனிகா ஃபேனில் சடலமாக தொங்கியுள்ளார். தகவலறிந்த புல்லரம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மோனிகாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மோனிகாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து போலீசார் சந்தேகம் மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;உதவி எண்கள்&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகளே ஆன நிலையில் மோனிகா உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல. மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணங்கள் ஏற்பட்டால் அதிலிருந்து மீண்டு வர கீழ்கண்ட எண்களை தொடர்பு கொண்டு ஆலோசனைப் பெறலாம். சினேகா தற்கொலை தடுப்பு மையம் - 044-24640050, 044-24640060, help@snehaindia.org.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>crime</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/crime/ac-purchase-dispute-in-tiruvallur-leads-to-tragic-incident-wife-dies-by-suicide-shocking-case-explained-articleshow-iw9so88"/>
        </item>
        <item>
            <title><![CDATA[சீனாவில்  ஆட்சியை கவிழ்க்கும் டிரம்ப்..! உளவு பார்த்த அமெரிக்கா.. அணு ரகசிய ஃபைல்கள் லீக்..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/world/trump-china-coup-plot-xi-jinping-top-general-leaks-nuclear-secrets-ix66rtc</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/world/trump-china-coup-plot-xi-jinping-top-general-leaks-nuclear-secrets-ix66rtc</guid>
            <pubDate>Tue, 27 Jan 2026 15:52:21 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ஜி ஜின்பிங்கிற்குப் பிறகு, சீனாவில் உள்ள இந்த மிகவும் சக்திவாய்ந்த ஜெனரல், ஜாங், சீனாவின் அணு ரகசியங்கள் பற்றிய தகவல்களையும் அமெரிக்காவிற்கு கசியவிட்டார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kfzfa2c6d4ga9grpphxesd9r,imgname-xi-jinping-1769509030278.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஜி ஜின்பிங்கிற்குப் பிறகு, சீனாவில் உள்ள இந்த மிகவும் சக்திவாய்ந்த ஜெனரல், ஜாங், சீனாவின் அணு ரகசியங்கள் பற்றிய தகவல்களையும் அமெரிக்காவிற்கு கசியவிட்டார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இப்போது தனது பரந்து பட்ட லட்சியங்களை நிறைவேற்ற ஒரு புதிய வியூகத்தை தொடங்கியுள்ளார். இந்த வியூகம் அமெரிக்காவின் மிகப்பெரிய போட்டியாளரை சிக்க வைக்கும். அந்த போட்டியாளர் ரஷ்யாவை விட அமெரிக்காவிற்கு பெரிய எதிரியாக டிரம்ப் கருதுகிறார். அமெரிக்காவில் இருந்து வரும் அறிக்கைகள், செய்திகள் நம்பப்பட வேண்டுமானால், ஜி ஜின்பிங்கிற்கு எதிரான மிகப்பெரிய கிளர்ச்சி சீனாவில் தொடங்கியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;ஜி ஜின்பிங்கை அதிகாரத்தில் இருந்து நீக்க, ஒரு உயர்மட்ட ராணுவ ஜெனரல், அவரது மிகவும் நம்பகமான, இரண்டாவது தளபதி, சீனாவிற்கு எதிராக டிரம்புடன் ரகசியமாக ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டார். ஜி ஜின்பிங்கிற்குப் பிறகு, சீனாவில் உள்ள இந்த மிகவும் சக்திவாய்ந்த ஜெனரல், ஜாங், சீனாவின் அணு ரகசியங்கள் பற்றிய தகவல்களையும் அமெரிக்காவிற்கு கசியவிட்டார்.&lt;/p&gt;&lt;p&gt;சினாவில் ஊடுருவியுள்ள டிரம்பின் உயர்மட்ட உளவாளிகள், ஜி ஜின்பிங்கை வீழ்த்தத் திட்டமிடுகிறார்களா? ஜி ஜின்பிங்கிற்கு எதிரான டிரம்பின் ஆட்சிக் கவிழ்ப்புத் திட்டம் என்ன? சீனாவும் டிரம்பின் விரிவாக்கப் பொறியில் விழப் போகிறதா? ஜி ஜின் பிங்கின் ஆட்சி முடிவுக்கு வரப்போகிறதா?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உண்மையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது மிகப்பெரிய விரிவாக்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். உலகின் மிகப்பெரிய விரிவாக்கவாதி என்று தன்னைக் கருதும் சீனா, டிரம்பின் இணைப்புக் கொள்கையில் விழுந்துள்ளது. டிரம்பின் அபகரிப்புக் கொள்கை ஜி ஜின்பிங்கின் நிலையை நேரடியாக அச்சுறுத்தியுள்ளது. டிரம்ப் தனது உளவாளியை ஜி ஜின்பிங்கின் மூக்கின் கீழ் வைத்தார். அமெரிக்க உளவுத்துறை நிறுவனமான சிஐஏ, சீனாவில் ஒரு வலையை பின்னியுள்ளதால், ஜி ஜின்பிங்கின் அதிகாரம் அதில் சிக்கியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;ஜி ஜின்பிங்கிற்கு எதிரான ஆட்சிக் கவிழ்ப்பு பயம் சீனாவில் ஒரு பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜி ஜின்பிங்கின் ஆட்சிக் கவிழ்ப்புக்கான குறியீடு டிகோட் செய்யப்பட்டுள்ளது. ஒரு உயர் சீன ஜெனரல் ஜி ஜின்பிங்கிற்கு எதிரான சிப்பாய் ஆகிவிட்டார். இந்த உயர் ஜெனரலின் பெயர் ஜாங் யூசியா. அவரது முழு வாழ்க்கை வரலாற்றை வெளியிடுவதற்கு முன், இந்த ஜெனரல் யாங் ஏன் சீனாவில் ஒரு துரோகி, டிரம்ப் உளவாளியாகக் கருதப்படுகிறார்?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தகவல்படி, ஜி ஜின்பிங்கின் உயர் ஜெனரல் ஜாங் யூசியா, சீனாவின் அணுசக்தி ரகசியங்களை கசியவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த ஜெனரல் யாங் சீனாவின் அணுசக்தி ரகசியங்கள் பற்றிய தகவல்களை அமெரிக்காவிற்கு வழங்கியதாகக் கூறப்படுகிறது. இந்த சீன ஜெனரல் யாங், சிஐஏவுடன் தொடர்புகளைக் கொண்டிருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சீனாவின் அணு ஆயுதத் திட்டம் பற்றிய தகவல்களை அமெரிக்காவிற்கு கசியவிட்டதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;ஆனால் சீன அதிபர் ஜி ஜின்பிங் இதை அறிந்தார். இந்த ஜெனரல் ஜாங் அவரது ரேடாரின் கீழ் வந்தார். இப்போது, ​​சீனாவின் சக்திவாய்ந்த ஜெனரல் ஜாங் யூசியா மீது விசாரணை நடந்து வருகிறது. ஜி ஜின்பிங்கின் இந்த ஜெனரல், ஜியை வீழ்த்த அமெரிக்காவின் கட்டளைப்படி செயல்பட்டதாக நம்பப்படுகிறது. சீனாவின் அணு ஆயுதங்கள் பற்றிய தொழில்நுட்ப தகவல்களை ஜெனரல் ஜாங் யூசியா அமெரிக்காவுடன் பகிர்ந்து கொண்டாரா என்பது குறித்து விசாரிக்கப்படுகிறது. ஆனால் கேள்வி என்னவென்றால், அமெரிக்காவிற்கு இந்த சீன ஜெனரல் ஏன் தேவைப்பட்டார்?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எதிர்காலத்தில் அமெரிக்கா மிகப்பெரிய அச்சுறுத்தலை எதிர்கொண்டால், அது ரஷ்யா அல்ல. சீனா என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஒருவேளை அதனால்தான் சீனாவின் அணுசக்தி திட்டத்தின் ஒவ்வொரு ரகசிய விவரத்தையும் டிரம்ப் பெற விரும்புகிறார். சீன ஜெனரல் யூசியா, டிரம்பின் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம். இதன் மூலம் அமெரிக்கா ஒரு பெரிய உத்தியை உருவாக்கி வந்தது.&lt;/p&gt;&lt;p&gt;ஆதாரங்களின்படி, அணுசக்தி தகவல்களை சேகரிப்பதோடு, சீனாவில் ஒரு ஆட்சிக்கவிழ்ப்பை நடத்துவதற்கான சதித்திட்டமும் இருந்தது. ஜி ஜின்பிங்கின் இந்த ஜெனரல் அணுசக்தி திட்டத்தில் பணியாற்றியது மட்டுமல்லாமல், அமெரிக்காவின் கட்டளைப்படி சீனாவில் ஒரு பெரிய எழுச்சியையும் ஏற்படுத்தக்கூடும். சீனாவின் சர்வ வல்லமையுள்ள மத்திய இராணுவ ஆணையத்திற்குள் ஜெனரல் யூசியா தனது செல்வாக்கை அதிகரித்துக் கொண்டிருந்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நேரம் வரும்போது, ​​அமைப்பைப் பிரிக்க ஜெனரல் யூசியா தனது சொந்தப் பிரிவைத் தயார் செய்து கொண்டிருந்தார். மத்திய இராணுவ ஆணையம் என்பது கம்யூனிஸ்ட் கட்சியின் மிக உயர்ந்த இராணுவ முடிவெடுக்கும் அமைப்பு. இராணுவம் தொடர்பான அனைத்து முக்கிய முடிவுகளையும் எடுக்க அதிகாரம் பெற்றது. அதில், ஜெனரல் ஜாங் யூசியா, ஜி ஜின்பிங்கிற்குப் பிறகு இரண்டாவது மிக உயர்ந்த பதவியை வகித்தார். எனவே, அமெரிக்கா தனது உளவாளியை ஜியின் மூக்கின் கீழ் வைத்ததாகக் கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;அவரது உயர் ஜெனரல், சீன இராணுவத்திற்குள் ஜின் பிங்கிற்கு எதிராக கிளர்ச்சியின் தீப்பிழம்புகளை மூட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. ஷியின் ஜெனரலின் நடவடிக்கைகள் வெள்ளை மாளிகையின் நலன்களுக்காக இருந்திருக்கலாம். ஆனால் அவை ஜின் பிங்கின் அதிகாரத்திற்கு மோசமான செய்தியாக இருந்தன. சீனாவில் முழு கொந்தளிப்பும் சனிக்கிழமை தொடங்கியது. சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம் அதன் சொந்த ஜெனரல்களில் ஒருவர் மீதான விசாரணை குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டபோது, ​​உண்மை அதில் மட்டும் நின்றுவிடவில்லை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சீனாவில் உண்மையை மறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் ரகசியம் அதன் சொந்த மக்களால் வெளிப்படுத்தப்பட்டது. அதே பத்திரிகையாளர் சந்திப்பில் இருந்த சில அதிகாரிகள் தி வால் ஸ்ட்ரீட் ஜர்னலுடன் பேசி முழு கதையையும் வெளியிட்டனர். அப்போதுதான் ஜின்பிங்கின் நிழலாக இருக்கும் ஜெனரல் உண்மையில் டிரம்பின் உளவாளி என்பதை உலகம் அறிந்துகொண்டது.&lt;/p&gt;&lt;p&gt;ஜின்பிங் அவரை தனது மிக உயர்ந்த இராணுவ அமைப்பில் சேர்த்தாலும், அவர் வெள்ளை மாளிகையில் பணிபுரிந்து வந்தார்.மத்திய இராணுவ ஆணையத்திற்குள் ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கு விசுவாசத்தை உறுதி செய்வதற்காக யூக்ஸியாவுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சில ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>crime</category>
            <dc:creator>Thiraviya raj</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/world/trump-china-coup-plot-xi-jinping-top-general-leaks-nuclear-secrets-ix66rtc"/>
        </item>
        <item>
            <title><![CDATA[சகோதரியை கண்டித்த ஆசிரியர்..! பள்ளியில் துப்பாக்கிச் சூட்டில் 22 குழந்தைகள் பலி..! பணயக் கைதிகளான ஆசிரியர்கள்..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/world/firing-in-thailand-school-many-dead-students-and-teachers-hostage-kbcwycy</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/world/firing-in-thailand-school-many-dead-students-and-teachers-hostage-kbcwycy</guid>
            <pubDate>Wed, 11 Feb 2026 18:01:54 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, தாக்குதல் நடத்தியவர் பல மாணவர்கள், ஆசிரியர்களை பணயக்கைதிகளாகப் பிடித்தார். இன்னும் பல மாணவர்கள் பள்ளிக்குள் சிக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kh6adv4tjfapyc8jtgz6js4j,imgname-thailand-firing-1770812533914.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, தாக்குதல் நடத்தியவர் பல மாணவர்கள், ஆசிரியர்களை பணயக்கைதிகளாகப் பிடித்தார். இன்னும் பல மாணவர்கள் பள்ளிக்குள் சிக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தாய்லாந்தின் சோங்க்லா மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஒருவர் நடடத்திய துப்பாக்கி சூட்டில் 34 பேர் கொல்லப்பட்டனர். 18 வயது இளைஞர் ஒருவர் எம்-4 துப்பாக்கியால் சுட்டார். அந்த நபரின் சகோதரி அதே பள்ளியில் படித்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். துப்பாக்கி ஏந்திய அந்த நபர், சில நாட்களுக்கு முன்பு தனது சகோதரியைக் கண்டித்த ஆசிரியரைத் தேடிக்கொண்டு இருந்தார். சம்பவம் குறித்து போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி சீல் வைக்கப்பட்டு, முழுப் பகுதியிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, தாக்குதல் நடத்தியவர் பல மாணவர்கள், ஆசிரியர்களை பணயக்கைதிகளாகப் பிடித்தார். இன்னும் பல மாணவர்கள் பள்ளிக்குள் சிக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவ இடத்தில் இருந்து தப்பிய ஒரு பாதுகாப்பு காவலர், தாக்குதல் நடத்தியவர் பள்ளி முதல்வரையும் சுட்டுக் கொன்றதாகத் தெரிவித்தார். சிறப்புப் படைகள், மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளன. தாக்குதல் நடத்திய நபருடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிகள் நடந்து வருகின்றன. அவரது அடையாளம் தெரியவில்லை. போலீசார் முழுப் பகுதியையும் சுற்றி வளைத்து நிலைமையைக் கட்டுப்படுத்த முயற்சித்து வருகின்றனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;தாக்குதலுக்கு முன்பு, பள்ளிக்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் துப்பாக்கி ஏந்திய ஒருவர் இருப்பதாகவும், அவரது தாயாருக்கு தீங்கு விளைவிப்பதாக அச்சுறுத்துவதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. துப்பாக்கிச் சூட்டின் போது நூற்றுக்கணக்கான மாணவர்கள் பள்ளியை விட்டு ஓடிக்கொண்டிருந்தனர். தாக்குதல் நடத்தியவர் எத்தனை மாணவர்கள், ஆசிரியர்களை பிணைக் கைதிகளாகப் பிடித்தார் என்பது தெரியவில்லை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மற்றொரு சம்பவமாக இன்று காலை கனடாவில் உள்ள ஒரு பள்ளியில் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 10 பேர் கொல்லப்பட்டனர். டம்ளர் ரிட்ஜ் மேல்நிலைப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருபத்தைந்து பேர் காயமடைந்தனர். ஒரு வீட்டிற்குள் மேலும் இரண்டு உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. காயமடைந்தவர்களில் இருவரின் நிலை இன்னும் கவலைக்கிடமாக உள்ளது. கொல்லப்பட்டவர்களின் அடையாளங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. தாக்குதல் நடத்தியவரும் கொல்லப்பட்டுள்ளார்&lt;/p&gt;]]></content:encoded>
            <category>crime</category>
            <dc:creator>Thiraviya raj</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/world/firing-in-thailand-school-many-dead-students-and-teachers-hostage-kbcwycy"/>
        </item>
        <item>
            <title><![CDATA[பாகிஸ்தானில் இஸ்லாமியர்களுக்குள் மதத் தீண்டாமை..! ஷியா மசூதிகள் குறிவைக்கப்படுவது ஏன்?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/world/islamabad-shiite-mosque-blast-why-shias-are-targeted-in-pakistan-lzdah4k</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/world/islamabad-shiite-mosque-blast-why-shias-are-targeted-in-pakistan-lzdah4k</guid>
            <pubDate>Fri, 06 Feb 2026 19:22:09 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;2025 ஆம் ஆண்டு உலகளாவிய பயங்கரவாத குறியீட்டின்படி, பாகிஸ்தான் இப்போது உலகின் இரண்டாவது பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடாக மாறியுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kgskas68se9xn0m82qgapgj4,imgname-pakistan-mosque-1770385663176.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;2025 ஆம் ஆண்டு உலகளாவிய பயங்கரவாத குறியீட்டின்படி, பாகிஸ்தான் இப்போது உலகின் இரண்டாவது பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடாக மாறியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பாகிஸ்தானில் மத வன்முறை முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல. ஷியா முஸ்லிம்களும் அங்கு அடிக்கடி பயங்கரவாத தாக்குதல்களுக்கு இலக்காகி வருகின்றனர். இன்று தலைநகர் இஸ்லாமாபாத்தில் தொழுகையின் போது ஒரு தற்கொலை குண்டுதாரி ஷியா மசூதியில் தாக்குதல் நடத்தினார். இந்த குண்டுவெடிப்பில் இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 70 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, நிர்வாகம் நகரம் முழுவதும் அவசரகால நிலையை அறிவித்துள்ளது. பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் மற்றும் இஸ்லாமிய அரசு போன்ற பயங்கரவாத அமைப்புகள் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இரு அமைப்புகளும் முன்னர் சன்னி பெரும்பான்மை பாகிஸ்தானில் உள்ள ஷியா முஸ்லிம்களை குறிவைத்துள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஷியா முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் பாகிஸ்தானில் புதிதல்ல. நாட்டின் மொத்த முஸ்லிம் மக்கள்தொகையில் ஷியாக்கள் 10-15 சதவீதம் பேர் உள்ளனர். மேலும் ஈரானுக்குப் பிறகு உலகின் இரண்டாவது பெரிய ஷியா மக்கள்தொகை பாகிஸ்தானில் உள்ளது. இருந்தபோதிலும், ஷியா சமூகம் நீண்ட காலமாக மதவெறி வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள சில தீவிர சன்னி பயங்கரவாத அமைப்புகள் ஷியாக்களை காஃபிர்களாகவும் இஸ்லாத்திற்கு வெளியே உள்ளவர்களாகவும் கருதுகின்றன. இந்தக் கண்ணோட்டம் அடிக்கடி ஷியா மசூதிகள், இமாம்பர்காக்கள், ஊர்வலங்கள், மதக் கூட்டங்களை குறிவைக்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;முஹர்ரமின் போது நிலைமை மோசமடைகிறது. ஷியா சமூகம் இமாம் உசேனின் தியாகத்திற்கு இரங்கல் தெரிவிக்கும்போது, ​​வெறுப்புணர்வை பரப்புபவர்கள் மேலும் சுறுசுறுப்பாகிறார்கள். கராச்சி போன்ற நகரங்களில் முஹர்ரமுக்குப் பிறகு சுவர்களில் &lsquo;ஷியாக்கள் காஃபிர்கள்&rsquo; போன்ற வாசகங்கள் வரையப்பட்டிருப்பதைப் பார்ப்பது அசாதாரணமானது அல்ல. இந்த வெறுப்பு உணர்வு 1980களில் இருந்து பரவி வருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஷியா சமூகத்திற்குள் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் ஹசாரா ஷியாக்கள். அவர்கள் முதன்மையாக பலுசிஸ்தானின் தலைநகரான குவெட்டாவில் வசிக்கின்றனர். அவர்களின் தோற்றம், மொழியால் அவர்கள் எளிதில் அடையாளம் காணப்படுகிறார்கள். இதனால் அவர்கள் பயங்கரவாதிகளுக்கு எளிதான இலக்குகளாகிறார்கள். சமீபத்திய ஆண்டுகளில், குவெட்டாவில் ஹசாரா ஷியாக்கள் மீது பல பெரிய தாக்குதல்கள் நடந்துள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;பாகிஸ்தானின் நிறுவனர் முகமது அலி ஜின்னா ஒரு ஷியா முஸ்லிமாக இருந்தார் என்பது மிகப்பெரிய முரண்பாடு. இருப்பினும், காலப்போக்கில், ஒவ்வொரு குடிமகனுக்கும் சமத்துவம், மத சுதந்திரம் பற்றிய ஜின்னாவின் பார்வை மங்கிவிட்டது. இன்று, முஸ்லிம் அல்லாதவர்கள் மட்டுமல்ல, ஷியாக்கள் போன்ற முஸ்லிம் பிரிவுகளும் கூட பாதுகாப்பற்றதாக உணரும் அளவுக்கு நிலைமை உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;2025 ஆம் ஆண்டு உலகளாவிய பயங்கரவாத குறியீட்டின்படி, பாகிஸ்தான் இப்போது உலகின் இரண்டாவது பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடாக மாறியுள்ளது. தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் தாக்குதல்கள் 90% அதிகரித்துள்ளன. பலூச் விடுதலை இராணுவத்தின் தாக்குதல்கள் 60% அதிகரித்துள்ளன. இஸ்லாமாபாத்தில் நடந்த இந்த குண்டுவெடிப்பு, நாடு ஏற்கனவே வன்முறையில் மூழ்கியுள்ள நேரத்தில் நிகழ்ந்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;சில நாட்களுக்கு முன்பு, பலூச் விடுதலை இராணுவம் பலூசிஸ்தானில் பெரிய அளவிலான, ஒருங்கிணைந்த தாக்குதல்களை நடத்தியது. கடந்த சில மாதங்களில், பாகிஸ்தான் அரசாங்கத்தை எதிர்க்கும் பயங்கரவாத, கிளர்ச்சி அமைப்புகள் தங்கள் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன. இந்த இரு அமைப்புகள் இனி கைபர் பக்துன்க்வா அல்லது பலூசிஸ்தானுடன் மட்டுப்படுத்தப்படவில்லை. ஆனால், தலைநகர் இஸ்லாமாபாத் போன்ற உயர் பாதுகாப்பு பகுதிகளையும் குறிவைக்கத் தொடங்கியுள்ளன.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>crime</category>
            <dc:creator>Thiraviya raj</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/world/islamabad-shiite-mosque-blast-why-shias-are-targeted-in-pakistan-lzdah4k"/>
        </item>
        <item>
            <title><![CDATA[28 வயது ஜிம் மாஸ்டர்.! 42 வயது யோகிதா! எந்நேரமும் ஓயாமல்! இறுதியில் நடந்த அதிர்ச்சி.. வெளியான பரபரப்பு தகவல்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/crime/blackmail-from-married-woman-gym-trainer-commits-suicide-t1fzpbi</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/crime/blackmail-from-married-woman-gym-trainer-commits-suicide-t1fzpbi</guid>
            <pubDate>Wed, 15 Apr 2026 16:54:24 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;பெங்களூருவில் ஜிம் பயிற்சியாளராக இருந்த திலீப், தன்னை விட மூத்தவரான யோகிதா என்ற பெண்ணுடன் கள்ளக்காதலில் இருந்துள்ளார். சொத்து கேட்டு யோகிதா மிரட்டியதால் மனமுடைந்த திலீப் தற்கொலை செய்து கொண்டார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kp2dtprq4zp67b2b30y8a3as,imgname-gym-trainer-1776050592535.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;பெங்களூருவில் ஜிம் பயிற்சியாளராக இருந்த திலீப், தன்னை விட மூத்தவரான யோகிதா என்ற பெண்ணுடன் கள்ளக்காதலில் இருந்துள்ளார். சொத்து கேட்டு யோகிதா மிரட்டியதால் மனமுடைந்த திலீப் தற்கொலை செய்து கொண்டார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்த நெலமங்கள வஜ்ரஹள்ளி பகுதியை சேர்ந்தவர் திலீப் (28). பாடி பில்டரான இவர் மாநில அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் வென்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் ஜிம் ஒன்றை நடத்தி கொண்டு பயிற்சியாளராக பணியாற்றி வந்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திலீப்பின் ஜிம்மிற்கு எடையை குறைக்க யோகிதா (42) என்ற பெண் வந்துள்ளார். அப்போது அவருக்கு திலீப் பயிற்சி கொடுத்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி வெளியில் சென்று தனிமையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் யோகிதா நாளடைவில் தனது சுயரூபத்தை காட்ட ஆரம்பித்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேலும் பெண்ணின் கணவர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது சமரசம் செய்து இனி ஒருவருக்கொருவர் சந்திக்க கூடாது என்று இருவரிடமும் போலீசார் எழுதி வாங்கியுள்ளனர். இருப்பினும் சொந்தமான வீட்டை தனது பெயரில் எழுதி வைக்க சொல்லி யோகிதா விடாமல் டார்ச்சர் செய்துள்ளார். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான திலீப் வீட்டின் மேல் மாடிக்கு சென்று தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;திலீப்புக்கு பலமுறை போன் செய்தும் எடுக்காததால் இதோ விபரீதம் நடத்துள்ளதை அறிந்த யோகிதா இன்ஸ்டாகிராம் மூலம் திலீப்பின் சகோதரிக்கு தகவல் தெரிவித்துள்ளார். பதறியடித்துக் கொண்டு திலீப்பின் சகோதரி தனது தந்தையிடம் கூறியுள்ளார். அவர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது திலீப் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீலிப் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த சம்பவம் தொடர்பாக திலீப்பின் பெற்றோர் யோகிதா மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதில் யோகிதா தொடர்ந்து கொடுத்த மிரட்டல் மற்றும் சொத்து கேட்டு செய்த டார்ச்சர் தான் திலீப்பின் இந்த முடிவுக்கு காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், திலீப்பின் செல்போனை கைப்பற்றி அதில் உள்ள வீடியோக்கள் மற்றும் உரையாடல்களை ஆய்வு செய்து வருகின்றனர். ரகசிய காதலி கொடுத்த டார்ச்சர் தாங்க முடியாமல் ஜிம் மாஸ்டர், வீடியோ கால் பேசியபடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>crime</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/crime/blackmail-from-married-woman-gym-trainer-commits-suicide-t1fzpbi"/>
        </item>
        <item>
            <title><![CDATA[இரண்டு குழந்தைகளின் தாயான 26 வயது அமிர்தா.. 32 வயது சித்தேஷ்.. 24 மணி நேரத்தில் சிக்கியது எப்படி?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/crime/wife-and-lover-arrested-for-husbands-murder-ui5qpdd</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/crime/wife-and-lover-arrested-for-husbands-murder-ui5qpdd</guid>
            <pubDate>Sun, 19 Apr 2026 12:47:48 +0530</pubDate>
            <description><![CDATA[மைசூரு, சரகூர் தாலுகாவில் நடந்த ஜவரப்பா கொலை வழக்கை 24 மணி நேரத்தில் போலீசார் ఛேதித்துள்ளனர். கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த கணவரைக் கொன்ற மனைவி அமிர்தா மற்றும் அவரது காதலன் சித்தேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kpj3hj7kfz2rwgzekeczx1g1,imgname-mysuru-murder--2--1776576678131.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[மைசூரு, சரகூர் தாலுகாவில் நடந்த ஜவரப்பா கொலை வழக்கை 24 மணி நேரத்தில் போலீசார் ఛேதித்துள்ளனர். கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த கணவரைக் கொன்ற மனைவி அமிர்தா மற்றும் அவரது காதலன் சித்தேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.&lt;img&gt;&lt;p&gt;கர்நாடகா மாநிலம் மைசூரு மாவட்டம், சரகூர் தாலுகாவில் குர்ணேகாலா கிராமத்தைச் சேர்ந்த ஜவரப்பா என்பவர் கொலை செய்யப்பட்டவர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் மாவினஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த சித்தேஷ் (32) மற்றும் ஜவரப்பாவின் மனைவி அமிர்தா (26) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குர்ணேகாலா கிராமத்தின் ஒதுக்குப்புறமான பகுதியில் ஜவரப்பாவின் உடல் சந்தேகத்திற்கிடமான முறையில் கிடந்தது. இதுகுறித்து ஜவரப்பாவின் சகோதரர் ரவி, தனது அண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது மாவினஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த சித்தேஷ் என்பவருடன் அமிர்தாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளைடவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இரண்டு குழந்தைகள் இருந்த போதிலும், அமிர்தா சித்தேஷுடன் உறவைத் தொடர்ந்துள்ளார். இவர்களது கள்ளக்காதல் விவகாரம் கணவருக்கு ஜவரப்பாவிற்கு தெரியவந்ததை அடுத்து மனைவியை கண்டித்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;12 நாட்களுக்கு முன்பு, பண்டிகைக்காக அமிர்தா தனது குழந்தைகளுடன் தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். ஏப்ரல் 16 ம் தேதி அன்று தன் மனைவியின் ஊருக்குச் செல்வதாக ஜவரப்பா தனது சகோதரர் ரவியிடம் கூறியுள்ளார். ஆனால், அன்று ஊருக்குச் சென்ற ஜவரப்பா மீண்டும் கிராமத்திற்குத் திரும்பவில்லை. மறுநாள் காலை சுமார் 6:30 மணியளவில், அவரது உடல் சந்தேகத்திற்கிடமான முறையில் கண்டெடுக்கப்பட்டது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;யாரோ கொலை செய்திருக்கலாம் என ரவி சந்தேகப்பட்டு புகார் அளித்திருந்தார். புகாரைப் பெற்ற சரகூர் போலீசார், விசாரிக்க மூன்று தனிப்படைகளை அமைத்தனர். அப்போது, ஜவரப்பாவின் கொலைக்கு அவரது மனைவியின் கள்ளக்காதலே காரணம் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர். அமிர்தாவின் தூண்டுதலின் பேரிலேயே சித்தேஷ் இந்தக் கொலையைச் செய்திருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>crime</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/crime/wife-and-lover-arrested-for-husbands-murder-ui5qpdd"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஐசியூ-வில் இருந்த 29 வயது இளம்பெண் அலறி கூச்சல்.. 3 மாதத்திற்கு பிறகு வெளிவந்த அதிர்ச்சி தகவல்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/india/young-woman-rape-by-hospital-staff-w2bgit6</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/india/young-woman-rape-by-hospital-staff-w2bgit6</guid>
            <pubDate>Thu, 29 Jan 2026 15:22:43 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;அகமதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம்பெண், மருத்துவமனை ஊழியரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் அளித்துள்ளார். சுயநினைவு திரும்பியதும் அவர் கூச்சலிட்டதால் அந்த நபர் தப்பி ஓடியுள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k888spe8avrcmfxszrxpszab,imgname-woman-1761214257608.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;அகமதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம்பெண், மருத்துவமனை ஊழியரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் அளித்துள்ளார். சுயநினைவு திரும்பியதும் அவர் கூச்சலிட்டதால் அந்த நபர் தப்பி ஓடியுள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குஜராத் மாநிலம் அகமதாபாத் சபர்மதி பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் 29 வயது இளம்பெண் ஒருவர் தூக்க மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டதால் கடந்த 2025ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அரை மயக்க நிலையில் படுக்கையில் இருந்த அவரை அக்டோபர் 20ம் தேதி அதிகாலையில் ஊழியர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சுயநினைவு திரும்பிய அப்பெண் அலறி கூச்சலிட்டதை அடுத்து அந்த நபர் அங்கிருந்து தப்பித்தார். இதுகுறித்து பணியில் இருந்த ஊழியர்கள் மற்றும் பெற்றோரிடம் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை பார்க்க வேண்டும் என மருத்துவமனை நிர்வாகத்திடம் தந்தை கோரிக்கை விடுத்தார். ஆனால் அவர்கள் தர மறுத்துவிட்டனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பாதிக்கப்பட்ட பெண் வீடு திரும்பிய நிலையில் மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது குணமடைந்த அப்பபெண் சபர்மதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பெற்றோருடன் வசித்து வரும் அப்பெண் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். சம்பவத்தின் போது பணியில் இருந்த ஊழியர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>crime</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/india/young-woman-rape-by-hospital-staff-w2bgit6"/>
        </item>
        <item>
            <title><![CDATA[லெஸ்பியன் உறவு! மால்தி தேவியுடன் மனைவி உல்லாசம்! நேரில் பார்த்த கணவர்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/crime/lesbian-relationship-wife-kills-husband-wvuo06x</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/crime/lesbian-relationship-wife-kills-husband-wvuo06x</guid>
            <pubDate>Tue, 20 Jan 2026 14:23:59 +0530</pubDate>
            <description><![CDATA[உத்தரபிரதேசத்தில் விவசாயி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவி ரேணு தேவி கூலிப்படையை ஏவி கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. தனது லெஸ்பியன் உறவுக்கு கணவர் தடையாக இருந்ததால், தனது காதலியுடன் சேர்ந்து இந்த கொலையை செய்துள்ளார்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j1ek9h0n03p5hedzsykm955n,imgname-lesbian-1719550657557.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[உத்தரபிரதேசத்தில் விவசாயி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவி ரேணு தேவி கூலிப்படையை ஏவி கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. தனது லெஸ்பியன் உறவுக்கு கணவர் தடையாக இருந்ததால், தனது காதலியுடன் சேர்ந்து இந்த கொலையை செய்துள்ளார்.&lt;img&gt;&lt;p&gt;உத்தரபிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டம் திகார் கிராமத்தில் கடந்த 14-ம் தேதி ஆண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை செய்யப்பட்டவர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதில், கொலை செய்யப்பட்டது விவசாயி சுமர் சிங் (33) என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில் பல்வேறு பகீர் தகவல் வெளியாகின. சுமர் சிங்கை அவரது மனைவியே கூலிப்படையை ஏவி கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுமர்சிங்கின் மனைவி ரேணு தேவி (28). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மால்தி தேவி (27) என்ற பெண்ணுக்கும் லெஸ்பியன் உறவு இருந்து வந்துள்ளது. மால்தி தேவி ஏற்கெனவே 3 பேரை திருமணம் செய்து கணவர்களை பிரிந்து வாழ்ந்து வந்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சுமர் சிங் வீட்டில் இல்லாத நேரத்தில் மால்தி தேவி அங்கு ரேணுதேவியுடன் தனிமையில் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தனர். திடீரென ஒருநாள் விவசாய வேலையை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய சுமர் சிங் மனைவி மால்தி தேவியுடன் நிர்வாண கோலத்தில் உல்லாசமாக இருந்துள்ளார். இதனை கண்டு கணவர் அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பான மனைவி ரேணு தேவியை கண்டித்தது மட்டுமல்லாமல் இனி அவரை பார்க்க கூடாது பேசக்கூடாது என கூறியுள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எனினும் ரேணு தேவியால் மால்தியை பார்க்காமல் இருக்க முடியவில்லை. அப்போது தங்கள் உறவுக்கு இடையூறாக இருக்கும் சுமர் சிங்கை கொலை செய்ய திட்டமிட்டனர். சுமர்சிங்கை கொலை செய்வதற்காக ஜித்தேர்ந்திர குப்தாவுக்கு ரூ.60,000 பேசப்பட்டது. இதையடுத்து முதல் கட்டமாக ரூ.8,000 கொடுத்த ரேணுதேவி கொலைக்கு பின்னர் மீதமுள்ள தொகையை கொடுப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து ஜித்தேந்தர் குப்தா தனது கூட்டளிகளுடன் சேர்ந்து சுமர்சிங்கை கொடூரமான முறையில் துடிக்க துடிக்க கொலை செய்து பின்னர் உடலை அங்குள்ள வயல்வெளியில் வீசி சென்றனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக ரேணு தேவி, மால்தி தேவி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>crime</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/crime/lesbian-relationship-wife-kills-husband-wvuo06x"/>
        </item>
        <item>
            <title><![CDATA[புதுச்சேரியில் சிறுமையை சீரழித்த 2 கிரிக்கெட் வீரர்கள்..! ரூமில் பாலியல் சேட்டை..! விரட்டியடித்த ஹோட்டல் நிர்வாகம்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/crime/delhi-u-23-players-accused-of-molesting-minor-in-puducherry-ddca-launches-probe-yohn74o</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/crime/delhi-u-23-players-accused-of-molesting-minor-in-puducherry-ddca-launches-probe-yohn74o</guid>
            <pubDate>Thu, 29 Jan 2026 14:10:31 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;இந்த சம்பவம் தெரிய வந்ததால் டெல்லி மாவட்ட கிரிக்கெட் வீரர்களை ஹோட்டலில் நிர்வாகம் உடனடியாக வெளியேற்றி வேறு ஹோட்டலுக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kg4ed411xhwwpsyw15avbe2s,imgname-ddca-1769675853857.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;இந்த சம்பவம் தெரிய வந்ததால் டெல்லி மாவட்ட கிரிக்கெட் வீரர்களை ஹோட்டலில் நிர்வாகம் உடனடியாக வெளியேற்றி வேறு ஹோட்டலுக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;புதுச்சேரியில் நடந்த கிரிக்கெட் போட்டியின் போது டெல்லி யு-23 கிரிக்கெட் அணியைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் மைனர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தெரிய வந்ததால் டெல்லி மாவட்ட கிரிக்கெட் வீரர்களை ஹோட்டலில் நிர்வாகம் உடனடியாக வெளியேற்றி வேறு ஹோட்டலுக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இது குற்றச்சாட்டுகள் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுவதாக டெல்லி மாவட்ட கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுத்து விசாரணையையும் தொடங்கியுள்ளது,&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;டெல்லி வீரர்கள் மீதான குற்றச்சாட்டுகள்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இதுபோன்ற சம்பவங்கள் விளையாட்டின் கண்ணியத்தை கெடுக்கும், அமைப்பின் நற்பெயருக்கு சேதம் விளைவிக்கும் என்று எதிர்ப்பு கிளம்பியுள்ளன. ஆனாலும், இதனை மறுத்து, &lsquo;&lsquo;வீரர்கள் வெறுமனே இசையைக் கேட்டுக்கொண்டு இருந்ததாகவும், மைனர் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக எந்த வழக்கும் பதிவாகவில்லை என்றும் டெல்லி மாவட்ட கிரிக்கெட் சங்க இணைச் செயலாளர் அமித் குரோவர் கூறினார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;டெல்லி அணி ரஞ்சி டிராபியின் குரூப்- டி விளையாடும்போது இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த போட்டியில் அணி வீரர்களில் செயல்பாடுகள் மோசமாக உள்ளது. இதுவரை ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. ஐந்து போட்டிகளை டிரா செய்து, ஒன்றில் தோல்வியடைந்துள்ளது. அவர்கள் அடுத்த போட்டியில் மும்பைக்கு எதிராக ஆடுகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;இந்த முழு விஷயமும் டெல்லி மாவட்ட கிரிக்கெட் சங்கடத்திற்கு ஒரு பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. வீரர்கள் மீதான குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானது. விசாரணை முடிந்த பின்னரே உண்மை வெளிப்படும். இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை கிரிக்கெட் உலகில் வீரர்களின் நடத்தை, ஒழுக்கம் குறித்து ஒரு விவாதத்தைத் தூண்டியுள்ளது. டெல்லி மாவட்ட கிரிக்கெட் சங்கம் இந்த விஷயத்தில் மிகவும் விழிப்புடன் உள்ளது. விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கிறது. இந்த விசாரணையின் முடிவு, வீரர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதைப் பொருத்திருந்து பார்ப்பது முக்கியம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>crime</category>
            <dc:creator>Thiraviya raj</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/crime/delhi-u-23-players-accused-of-molesting-minor-in-puducherry-ddca-launches-probe-yohn74o"/>
        </item>
        <item>
            <title><![CDATA['இந்தியாவை எதிர்க்கும் எவருக்கும் இதுதான் நடக்கும்..!' சிறையில் கதறக் கதற கொல்லப்பட்ட பயங்கரவாதி.. கொலையாளிக்கு பெருகும் ஆதரவு..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/india/faridabad-jail-terror-suspect-murder-rohit-godara-gang-support-killer-arun-chaudhary-zm8i5lu</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/india/faridabad-jail-terror-suspect-murder-rohit-godara-gang-support-killer-arun-chaudhary-zm8i5lu</guid>
            <pubDate>Tue, 10 Feb 2026 11:11:02 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;விசாரணையில் பயங்கரவாத அமைப்பு, அண்டை நாடான பாகிஸ்தானுடனான அவரது தொடர்புகள் தெரியவந்ததை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kh30n452mr57a8nfv6yjrgpg,imgname-terrorist-1770701623458.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;விசாரணையில் பயங்கரவாத அமைப்பு, அண்டை நாடான பாகிஸ்தானுடனான அவரது தொடர்புகள் தெரியவந்ததை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஹரியானாவின் ஃபரிதாபாத் சிறையில் சந்தேகிக்கப்படும் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். ஃபரிதாபாத் சிறையில் பயங்கரவாதி அப்துல் ரெஹ்மான் கொலை செய்யப்பட்டது தொடர்பாக ரோஹித் கோதாரா கும்பலின் சமூக ஊடகப் பதிவு ஒன்று வெளியாகியுள்ளது. பயங்கரவாதியைக் கொன்ற கொலைக் குற்றவாளி அருண் சவுத்ரிக்கு ரோஹித் கோதாரா கும்பலை சேர்ந்த மகேந்திர டெலானா சமூக ஊடகப் பதிவில், &lsquo;&lsquo;&quot;நாட்டிற்கு எதிராகச் செல்லும் எவருக்கும் இதுதான் நடக்கும்&quot; என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டு ஆதரவு தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சந்தேகத்திற்குரிய பயங்கரவாதி அப்துல் ரெஹ்மான் ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 2 மணியளவில் ஃபரிதாபாத்தின் நீம்கா சிறையில் சக கைதியால் கொலை செய்யப்பட்டார். மார்ச் 2025-ல், ஹரியானா சிறப்புப் பணிப் படை, ஹரியானாவின் பாலியில் இருந்து அயோத்தியின் இனாயத் நகரில் வசிக்கும் சந்தேகத்திற்குரிய பயங்கரவாதி அப்துல் ரெஹ்மானை கையெறி குண்டுடன் கைது செய்தது. விசாரணையில் பயங்கரவாத அமைப்பு, அண்டை நாடான பாகிஸ்தானுடனான அவரது தொடர்புகள் தெரியவந்ததை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட பிறகு, அப்துல் ஃபரிதாபாத்தில் உள்ள நீம்கா சிறையில் அடைக்கப்பட்டார். சக கைதி அருண் சவுத்ரியால் அவர் கொலை செய்யப்பட்டார். திங்களன்று, அப்துலின் தந்தை அபு பக்கர், தனது மகனின் உடலை எடுக்க ஃபரிதாபாத் சென்றார். அவரது தாயும், சகோதரியும் வீட்டில் ஆறுதல் அடைய முடியாத நிலையில் உள்ளனர். ஒரு சமூக ஊடகப் பதிவு இப்போது வெளியாகியுள்ளது. அதில் , &lsquo;&lsquo;நாட்டிற்கு எதிராகச் செல்லும் எவருக்கும் அதே விதி ஏற்படும்&rsquo;&rsquo; என்று கூறுகிறது. கொலைக் குற்றவாளி அருண் சவுத்ரிக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த சமூக ஊடகப் பதிவை ரோஹித் கோதாரா கும்பல் வெளியிட்டது. ஒரு சமூக ஊடகப் பதிவில், &lsquo;&lsquo;ராமர் கோயில் தாக்குதலைத் திட்டமிட்ட பயங்கரவாதி அப்துல் ரெஹ்மானை ஃபரிதாபாத் சிறையில் கொன்றதாக மகேந்திர டெலானா கூறியுள்ளார். ஃபரிதாபாத்தில் பயங்கரவாதி கைது செய்யப்பட்டபோது அவரிடம் கையெறி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>crime</category>
            <dc:creator>Thiraviya raj</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/india/faridabad-jail-terror-suspect-murder-rohit-godara-gang-support-killer-arun-chaudhary-zm8i5lu"/>
        </item>
    </channel>
</rss>
