<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Tue, 09 Jun 2026 17:00:34 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss/cinema" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[Siragadikka Aasai : சத்யாவை ஸ்கெட்ச் போட்டு தூக்கும் சிந்தாமணி... போலீஸில் புகார் கொடுத்த ரேகாவின் தந்தை]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-09-june-2026-today-episode-chinthamani-master-plan-against-sathya-0g0cmsf</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-09-june-2026-today-episode-chinthamani-master-plan-against-sathya-0g0cmsf</guid>
            <pubDate>Tue, 09 Jun 2026 08:56:04 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் சத்யா, ரேகாவை காதலிக்கும் விஷயத்தை சிந்தாமணியின் கணவரிடம் சொன்னதை அடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktn6e8bwnf3gd3mh2fg2rfvp,imgname-siragadikka-aasai---2026-06-09t084931.398-1780975346044.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் சத்யா, ரேகாவை காதலிக்கும் விஷயத்தை சிந்தாமணியின் கணவரிடம் சொன்னதை அடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;சிறகடிக்க ஆசை&lt;/strong&gt; சீரியலில் ரேகாவை காதலிக்கும் சத்யா, தங்களின் காதல் விவகாரம் ரேகாவின் வீட்டுக்கு தெரிந்துவிட்டதால், அவளை ஐதராபாத்தில் ஹவுஸ் அரெஸ்ட் செய்து வைத்திருக்கிறார்கள் என முத்துவிடம் சொல்ல, உடனே முத்து, சத்யாவை ரேகாவின் தந்தையிடம் போய் பேசு என சொல்வதோடு மட்டுமின்றி அவருக்கு துணையாகவும் சென்றுள்ளார். அங்கு சென்று சத்யா, தான் ரேகாவை காதலிக்கும் விஷயத்தை சொல்ல, அதற்கு அவர் தனக்கு யோசிக்க டைம் வேண்டும் என கேட்டிருக்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Ethirneechal : ஆதி குணசேகரனை கிட்னாப் பண்ணியது யார்? ஜனனியால் அரங்கேறும் மெகா ட்விஸ்ட்..!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மறுபுறம் மனோஜ் தன்னுடைய அம்மா விஜயாவை அழைத்துக் கொண்டு ஒரு விருது விழாவுக்கு சென்றிருக்கிறார். அங்கு சென்று பார்த்தால், ரோகிணி அழைத்த விழாவுக்கு தான் விஜயாவும் மனோஜை அழைத்து வந்திருக்கிறார். அங்கு சிறந்த அம்மா - பையனுக்கான விருதும் மனோஜ் - விஜயாவுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து சிறந்த ஜோடிக்கான விருது போட்டியில் கலந்துகொள்ள ரோகிணி, மனோஜ் பெயரையும் கொடுத்திருந்த நிலையில், அதைக்கேட்ட விஜயா, செம கடுப்பாகி, ரோகிணியை திட்டுவதோடு, அவன் உன் கூடலாம் வரமாட்டான் என சொல்லி மனோஜை தன் கையோடு அழைத்துச் செல்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதையடுத்து முத்து வீட்டுக்கு வந்ததும் மீனாவிடம் இன்னைக்கு என்னவெல்லாம் நடந்துச்சு என கேட்க, அதற்கு மீனா, தான் சத்யாவை சந்தித்ததை தவிர எல்லாவற்றையும் முத்துவிடம் சொல்கிறார். பின்னர் முத்து தான் என்னவெல்லாம் செய்தேன் என சொல்லும் போது முதலாவதாக, தான் சத்யாவுடன் சென்று ரேகாவின் அப்பாவை சந்தித்ததாக கூறுகிறார். இதைக்கேட்டு ஷாக் ஆன மீனா, அய்யய்யோ ஏதாவது பிரச்சனை ஆயிடுச்சா என கேட்க, நீ ஏன் சத்யாவை சந்தித்து அவனை திட்டியதை மட்டும் சொல்லல என கேட்கிறார் முத்து.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பின்னர் மீனா, அவங்க பெரிய இடம், அவங்களுக்கும் நமக்கு செட் ஆகாதுங்க, அதனால் தான் அவனை சந்தித்து அந்த பொண்ணை மறந்துருனு சொன்னேன் என கூறுகிறார். ரேகாவின் தந்தை கொஞ்சம் டைம் கேட்டிருக்கும் விஷயத்தையும் சொல்லிவிடுகிறார் முத்து. மறுபுறம் சிந்தாமணி தன்னுடைய கணவரை ஒரு ஓட்டலில் சந்தித்து பேசுகிறார். அப்போது அந்த சத்யாவுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்டயே வந்து பொண்ணு கேட்பான். அவனை உடனே வேலையை விட்டு தூக்குறேன் என சொல்கிறார் ரேகாவின் தந்தை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதற்கு சிந்தாமணி, அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காதீங்க, முதலில் ரேகாவை ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு வர வைங்க. அவளை உங்க வீட்டில் அடைச்சி, அவளிடம் இருந்து போனை எல்லாம் பிடுங்கீருங்க. அதுக்கப்புறம் அந்த சத்யா நம்ம பொண்ணை கடத்திட்டான்னு போலீஸ்ல புகார் கொடுப்போம். அவனை போலீஸ் அரெஸ்ட் பண்ணி சாத்துவாங்க, அதுக்கு அவனோட குடும்பத்தாரே பயந்து அந்த பொண்ணு வேண்டாம்னு அவனை சொல்ல வச்சிடுவாங்க என ஐடியா கொடுக்கிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>cinema</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-09-june-2026-today-episode-chinthamani-master-plan-against-sathya-0g0cmsf"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Samantha : ஹேட்டர்ஸ்-க்கு சமந்தா கொடுத்த 'ஸ்வீட்' பதிலடி... சாய் பல்லவி பற்றி சொன்ன டாப் சீக்ரெட்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/samantha-ruth-prabhu-on-haters-and-how-she-replace-sai-pallavi-in-maa-inti-bangaaram-1uq2h1l</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/samantha-ruth-prabhu-on-haters-and-how-she-replace-sai-pallavi-in-maa-inti-bangaaram-1uq2h1l</guid>
            <pubDate>Mon, 08 Jun 2026 13:22:56 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Samantha replace Sai Pallavi : நடிகை சமந்தா ரூத் பிரபு, தனது தயாரிப்பில் உருவாகும் 'மா இன்டி பங்காரம்' படத்திற்கு முதலில் நடிகை சாய் பல்லவி தான் தேர்வாகியிருந்தார் என்ற சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01km7j5rwj9mz81tms3dqev2a9,imgname-samantha-ruth-prabhu-1774075437970.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Samantha replace Sai Pallavi : நடிகை சமந்தா ரூத் பிரபு, தனது தயாரிப்பில் உருவாகும் 'மா இன்டி பங்காரம்' படத்திற்கு முதலில் நடிகை சாய் பல்லவி தான் தேர்வாகியிருந்தார் என்ற சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தென்னிந்திய சினிமாவின் 'குயின்' சமந்தா ரூத் பிரபு, அடுத்ததாக 'மா இன்டி பங்காரம்' படம் மூலம் மீண்டும் திரையில் கலக்க தயாராகி வருகிறார். சமீபகாலமாக சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, ரசிகர்களுடன் நடத்திய கேள்வி-பதில் செஷனில் பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, தன்னை வெறுப்பவர்கள் (ஹேட்டர்ஸ்) பற்றி அவர் கொடுத்த ஒரு பதில் இப்போது சோஷியல் மீடியாவில் செம வைரலாகி வருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ரசிகர்களின் கேள்விகளுக்கு சமந்தா பதிலளித்துக் கொண்டிருந்தார். அப்போது ரசிகர் ஒருவர், &quot;உங்களை வெறுப்பவர்களை ஒரே வார்த்தையில் எப்படி விவரிப்பீர்கள்?&quot; என்று கேட்டிருந்தார். இதற்கு சமந்தா கோபமாகவோ அல்லது சீரியஸாகவோ பதில் சொல்லாமல், ஒரு சின்ன புன்னகையுடன் ரொம்பவே ஜாலியாக பதிலளித்தார். &quot;ஹேட்டர்ஸ்-ஆ? யாருடைய ஹேட்டர்ஸ்? எனக்கெல்லாம் ஹேட்டர்ஸ் இருக்காங்களா என்ன?&quot; என்று ஜாலியாக அவர் திருப்பிக் கேட்டார். எந்த ஒரு நெகட்டிவிட்டியையும் கண்டுகொள்ளாமல் சமந்தா கொடுத்த இந்த பாசிட்டிவான பதில், ரசிகர்களின் மனதை வென்றுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதே உரையாடலில் சமந்தா ஒரு பெரிய சீக்ரெட்டையும் உடைத்துள்ளார். 'மா இன்டி பங்காரம்' படத்தின் கதாநாயகி தேர்விற்கு படக்குழு முதலில் நடிகை சாய் பல்லவியை தான் அணுகியதாம். ஆனால், சாய் பல்லவியின் டேட்ஸ் பிரச்சினை காரணமாக, அந்த வாய்ப்பு கடைசியாக சமந்தாவுக்கு வந்துள்ளது. இதுபற்றி பேசிய சமந்தா, &quot;நான் இந்தப் படத்தை தேர்ந்தெடுக்கவில்லை, இந்தப் படம் தான் என்னைத் தேர்ந்தெடுத்தது&quot; என்று எமோஷனலாகக் கூறினார். மேலும், தனது கேரக்டருக்கு ஏற்றவாறு படத்தின் கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். சாய் பல்லவியைப் பாராட்டிய சமந்தா, எதிர்காலத்தில் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் விருப்பம் தெரிவித்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தப் படத்தில் சமந்தா ஒரு சாதாரண குடும்பத் தலைவியாக வருவது மட்டுமல்லாமல், அநீதிக்கு எதிராகப் போராடும் ஒரு வலிமையான ஃபைட்டராகவும் மிரட்டப் போகிறார். இது ஒரு காமெடி கலந்த ஆக்&zwnj;ஷன் டிராமாவாக இருக்கும் என்றும், சமந்தாவின் கேரக்டருக்கு பல பரிமாணங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;முன்னதாக சமந்தா நடிப்பில் சூப்பர் ஹிட்டான 'ஓ பேபி' படத்தை இயக்கிய நந்தினி ரெட்டி தான் இந்தப் படத்தையும் இயக்குகிறார். ஒரு ஸ்பெஷல் விஷயம் என்னவென்றால், கன்னடாவின் பிரபல நடிகர் திகாந்த் மன்சாலே இந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் குல்ஷன் தேவையா, கௌதமி தடிமல்லா, ஸ்ரீமுகி மற்றும் மஞ்சுஷா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சமந்தாவே இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளராகவும் இருக்கிறார். ராஜ் நிடிமோரு மற்றும் ஹிமான்க் ரெட்டி ஆகியோருடன் இணைந்து தனது சொந்த பேனரில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இந்தப் படம், 2026 ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், சமந்தாவின் இந்த 'கம் பேக்' படமும், அவரது சுவாரஸ்யமான பதில்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>cinema</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/samantha-ruth-prabhu-on-haters-and-how-she-replace-sai-pallavi-in-maa-inti-bangaaram-1uq2h1l"/>
        </item>
        <item>
            <title><![CDATA[CM Vijay: ஒரே வீட்டில் முதல்வர் விஜய் - சங்கீதா?! குடும்ப உறவுகள் செய்த மேஜிக்... துள்ளிக்குதிக்கும் தாவெக தொண்டர்கள்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/cm-vijay-living-under-the-same-roof-again-with-sangeetha-family-magic-reunion-sparks-celebration-among-tvk-supporters-49wtfgx</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/cm-vijay-living-under-the-same-roof-again-with-sangeetha-family-magic-reunion-sparks-celebration-among-tvk-supporters-49wtfgx</guid>
            <pubDate>Tue, 09 Jun 2026 12:26:28 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா மீண்டும் இணையவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குடும்ப உறவினர்களின் முயற்சியால் இந்த இணைவு சாத்தியமானதாக கூறப்படுகிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktnhzmgst85yrn340e01t96g,imgname-chatgpt-image-jun-9--2026--11-49-10-am--1--1780987449881.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா மீண்டும் இணையவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குடும்ப உறவினர்களின் முயற்சியால் இந்த இணைவு சாத்தியமானதாக கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழக அரசியலிலும் திரைத்துறையிலும் தற்போதைய மிக முக்கிய பேசுபொருளாக மாறியிருப்பது தமிழக வெற்றிக் கழகத்தின் (தாவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோரின் குடும்ப வாழ்வுதான். கடந்த சில காலங்களாக இவர்களைப் பற்றி பரவி வந்த பல்வேறு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தற்போது தம்பதியினர் மீண்டும் ஒரே வீட்டில் இணைந்து வாழத் தொடங்கியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த செய்தி ஒட்டுமொத்த தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் மத்தியிலும் பெரும் மகிழ்ச்சியையும், புது உத்வேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நடிகராக இருந்து அரசியல் தலைவராக உருவெடுத்த விஜய், கடந்த காலங்களில் தனது அரசியல் மற்றும் சினிமா பயணங்களில் தீவிரமாக இருந்தபோது, அவருக்கும் அவரது மனைவி சங்கீதாவிற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாக சமூக ஊடகங்களில் பல்வேறு செய்திகள் உலா வந்தன. சங்கீதா லண்டனில் தங்கியிருந்ததும், விஜய்யின் முக்கிய பொது நிகழ்ச்சிகள் மற்றும் அரசியல் பொதுக்கூட்டங்களில் அவர் கலந்து கொள்ளாததும் இந்த வதந்திகளுக்கு மேலும் வலு சேர்த்தன. இதனால் இவர்களது குடும்ப வாழ்க்கை என்னவாகுமோ என்ற கவலை தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நீண்ட நாட்களாகவே இருந்து வந்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில், இந்த குடும்பப் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு காண விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் மற்றும் நெருங்கிய குடும்ப உறவுகள் தீவிர முயற்சியில் இறங்கியதாகக் கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;குடும்பப் பின்னணி: எந்தவொரு பெரிய அரசியல் பயணத்திற்கும் குடும்பத்தின் நிம்மதியும், ஆதரவும் மிக முக்கியம் என்பதை உணர்ந்த பெரியவர்கள், இருதரப்பிடமும் பேசி மனக்கசப்புகளை நீக்கியுள்ளனர். குறிப்பாக, கணவன்-மனைவி இருவருக்குள்ளும் இருந்த ஈகோ மற்றும் சிறுசிறு கருத்து வேறுபாடுகளைக் களைந்து, அவர்களை மீண்டும் ஒரே கூரையின் கீழ் கொண்டு வருவதில் உறவினர்களின் பங்களிப்பு முக்கியமானது எனத் தெரியவருகிறது.&lt;/p&gt;&lt;p&gt;தற்போது சங்கீதா சென்னை திரும்பயுள்ளதாகவும், இருவரும் தங்களது நீலாங்கரை இல்லத்தில் இணைந்து வாழத் தொடங்கியள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த செய்தி வெளியானதிலிருந்து தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் எல்லையற்ற மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். சமூக வலைதளங்களில் &quot;தலைவன் குடும்பம் ஒன்று சேர்ந்துவிட்டது&quot; எனக் கூறி, பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியைக் கொண்டாடி வருகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;தொண்டர்களின் இந்த மகிழ்ச்சிக்கு முக்கிய காரணங்கள்:&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;அரசியல் பலம்&lt;/strong&gt;: ஒரு தலைவனின் குடும்ப வாழ்க்கை சீராக இருக்கும்போது, அவரால் முழு கவனத்தையும் மக்கள் பணியில் செலுத்த முடியும் என்று தொண்டர்கள் நம்புகின்றனர்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி&lt;/strong&gt;: இதுவரை விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையை வைத்து மறைமுகமாக விமர்சித்து வந்த அரசியல் எதிரிகளுக்கு இந்த இணைவு பலத்தடியாக அமைந்துள்ளது.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;உளவியல் ரீதியான உத்வேகம்&lt;/strong&gt;: தங்களது கட்சியின் முதன்மைத் தலைவர் மனரீதியாகவும், குடும்ப ரீதியாகவும் மகிழ்ச்சியாக இருப்பது தொண்டர்களுக்கு கூடுதல் உற்சாகத்தைத் தந்துள்ளது.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;img&gt;&lt;p&gt;&quot;எல்லா பிரச்சினையும் முடிந்துவிட்டது&quot; என்ற இந்த பாசிட்டிவ் செய்தி, தமிழக வெற்றிக் கழகத்தின் எதிர்கால அரசியல் நகர்வுகளுக்கு மிகப்பெரிய பலமாகப் பார்க்கப்படுகிறது. குடும்ப உறவுகளின் சாதுரியமான தலையீட்டால் முதல்வர் விஜய் மற்றும் சங்கீதா மீண்டும் இணைய உள்ளதாக கூறப்படும் இந்த நிகழ்வு, தற்போதைய அரசியல் வட்டாரத்தில் மிக பாசிட்டிவான திருப்பமாக அமைந்து, தாவெக தொண்டர்களை துள்ளிக்குதிக்க வைத்துள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>cinema</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/cm-vijay-living-under-the-same-roof-again-with-sangeetha-family-magic-reunion-sparks-celebration-among-tvk-supporters-49wtfgx"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Ethirneechal : ஆதி குணசேகரனை கிட்னாப் பண்ணியது யார்? ஜனனியால் அரங்கேறும் மெகா ட்விஸ்ட்..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/ethirneechal-thodargiradhu-serial-09-june-2026-today-episode-aadhi-gunasekaran-house-arrest-4d517vm</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/ethirneechal-thodargiradhu-serial-09-june-2026-today-episode-aadhi-gunasekaran-house-arrest-4d517vm</guid>
            <pubDate>Tue, 09 Jun 2026 11:31:36 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Ethirneechal Thodargiradhu Serial Today Episode : எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷினியை கண்டுபிடிக்க சென்றுள்ள ஜனனிக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருக்கிறது. அதைப்பற்றி பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktnfgxahjqgbxk8ej3dw3hh3,imgname-ethirneechal-thodargiradhu---2026-06-09t112623.748-1780984870225.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Ethirneechal Thodargiradhu Serial Today Episode : எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷினியை கண்டுபிடிக்க சென்றுள்ள ஜனனிக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருக்கிறது. அதைப்பற்றி பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;எதிர்நீச்சல் தொடர்கிறது&lt;/strong&gt; சீரியலில் தர்ஷினியை இராவணனின் ஆட்கள் கடத்தி வைத்துள்ள நிலையில், அவரைத் தேடிக் கண்டுபிடிக்க ஜனனி களத்தில் இறங்கி உள்ளார். இந்த தேடுதல் வேட்டையின்போது ஜனனிக்கு துணையாக அருந்ததியும் வந்துள்ளார். மலை கிராம பெண்ணான அருந்ததி, ஜனனியிடம் தான் ஏற்கனவே தர்ஷினியை பார்த்திருப்பதாக சொல்ல, எங்கு, எப்போ என ஜனனி கேட்கிறார். தர்ஷினி சென்ற கார் விபத்தில் சிக்கியதாகவும் அது இங்கிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கு என அருந்ததி சொன்னதை அடுத்து இருவரும் அங்கு கிளம்பி செல்கிறார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Siragadikka Aasai : சத்யாவை ஸ்கெட்ச் போட்டு தூக்கும் சிந்தாமணி... போலீஸில் புகார் கொடுத்த ரேகாவின் தந்தை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மறுபுறம் ஆதி குணசேகரனும் தன்னுடைய பங்கிற்கு தர்ஷினியை ஆள் வைத்து தேடி வருகிறார். இதனிடையே வீட்டிற்கு வந்த வக்கீல், கேஸ் விசாரணைக்கு வரும் நாளை சொல்லி, அது வரை நீங்கள் வீட்டை விட்டு வெளியே போகாமல் இருப்பது நல்லது என கூறி உள்ளார். அதையும் மீறி வெளியே போனால் இந்த வழக்கில் நீங்கள் வெளியவே வர முடியாதபடி ஆகிவிடும் என எச்சரித்துள்ளார் வக்கீல். இதனால் வழக்கு விசாரணைக்கு வரும் வரை வீட்டுச் சிறையிலேயே இருக்கும் சூழல் ஆதி குணசேகரனுக்கு உருவாகி உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அநேகமாக ஜனனி, அருந்ததி உதவியுடன் தர்ஷினி இருக்கும் இடத்தை கண்டுபிடித்துவிட வாய்ப்பு உள்ளது. இராவணனின் ஆட்களிடம் இருந்து தர்ஷினியை காப்பாற்றிக் கொண்டு வரும் ஜனனி, அவரை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து, கோர்ட்டில் வழக்கு விசாரணை வரும்போது தர்ஷினியோடு வந்து நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல திட்டமிட்டு இருக்கிறார் ஜனனி. தர்ஷினியும் ஆதி குணசேகரனுக்கு எதிராக சாட்சி சொல்ல வேண்டும் என்கிற முனைப்போடு இருப்பதால், இந்த வழக்கில் மிகப்பெரிய ட்விஸ்ட் காத்திருக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதுமட்டுமின்றி இந்த வழக்கில் முக்கிய ஆதாரமான ஆதி குணசேகரன், ஈஸ்வரியை தாக்கிய வீடியோ, சக்தி கைக்கு கிடைத்துள்ளது. அவரும் அந்த வீடியோவை கோர்ட்டில் ஒப்படைத்து உள்ளார். இதனால் அந்த வீடியோ இந்த வழக்கு விசாரணையின் போது கேம் சேஞ்சராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இராவணன் கடைசி நேரத்தில் ஏதேனும் ட்விஸ்ட் கொடுக்கவும் வாய்ப்பு உள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;அதன் ஒரு பகுதியாக வெளியே காரில் சென்றிருந்த ஆதி குணசேகரனை, தீர்த்துக் கட்ட திட்டமிட்டிருக்கிறார் இராவணன். அவர் கார் டிரைவரிடம் சொல்லி, ஆதி குணசேகரனை காரின் உள்ளே வைத்து அடைக்க சொல்ல, அவரும் அவ்வாறே செய்துவிட்டு எஸ்கேப் ஆகிறார். பின்னர் காருக்குள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கிப் போகிறார் ஆதி குணசேகரன். இந்த பழியும் ஜனனி மீது விழ வாய்ப்பு உள்ளது. அதை ஜனனி எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்கிற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இனி வரும் எபிசோடுகளில் விடை கிடைக்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>cinema</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/ethirneechal-thodargiradhu-serial-09-june-2026-today-episode-aadhi-gunasekaran-house-arrest-4d517vm"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Sukanya : வீரப்பன் பேட்டியால் ஏற்பட்ட சர்ச்சை... 30 ஆண்டுகளுக்கு பிறகு நடிகை சுகன்யாவுக்கு கிடைத்த நீதி]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/sukanya-wins-compensation-in-case-linked-to-controversial-veerappan-interview-8bomge8</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/sukanya-wins-compensation-in-case-linked-to-controversial-veerappan-interview-8bomge8</guid>
            <pubDate>Mon, 08 Jun 2026 10:17:05 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Actress Sukanya&rsquo;s Long Legal Fight Ends : சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி, நடிகை சுகன்யாவுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktjrnsfzw8m500wq0390d6py,imgname-sukanya--1--1780893804031.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Actress Sukanya&rsquo;s Long Legal Fight Ends : சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி, நடிகை சுகன்யாவுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;90களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் சுகன்யா. இயக்குநர் பாரதிராஜா இயக்கிய புது நெல்லு புது நாத்து திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான அவர், தனது இயல்பான நடிப்பு மற்றும் பரதநாட்டியப் பின்னணியால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அறிமுகப் படத்திற்குப் பிறகு சுகன்யாவின் திரைப்பயணம் வேகமெடுத்தது. விஜயகாந்த் ஜோடியாக சின்ன கவுண்டர், கமல்ஹாசனின் மகாநதி, சத்யராஜ் உடன் திருமதி பழனிச்சாமி, வால்டர் வெற்றிவேல் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்தார். குடும்பப் பெண் கதாபாத்திரங்கள் முதல் உணர்ச்சிகரமான வேடங்கள் வரை பல்வேறு கதாபாத்திரங்களில் தனது திறமையை நிரூபித்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குறிப்பாக இயக்குநர் ஷங்கரின் இந்தியன் திரைப்படத்தில் வயதான பெண்ணாக நடித்த அவரது தோற்றமும் மேக்கப்பும் பாராட்டுகளை பெற்றன. தொடர்ந்து பல படங்களில் நடித்துக்கொண்டிருந்த நிலையில், திருமணத்திற்குப் பிறகு வெளிநாட்டில் குடியேறிய சுகன்யா சில ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்றார். அதன் பின்னர் தனியாகவே வாழ்ந்து வரும் அவர், தற்போது ஒரு சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில், 1996ஆம் ஆண்டு சந்தனக் கடத்தல் குற்றவாளி வீரப்பனிடம் நடத்தப்பட்ட ஒரு பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் வெளியான பேட்டியில் சுகன்யா குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த பேட்டி தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பானதால் தனது நற்பெயருக்கு பாதிப்பு ஏற்பட்டதாக சுகன்யா பின்னர் நீதிமன்றத்தை நாடினார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அந்த நிகழ்வால் மனஉளைச்சலும், தொழில் வாய்ப்புகளிலும் பாதிப்பும் ஏற்பட்டதாக தெரிவித்த அவர், சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனத்திடம் நஷ்டஈடு கோரி வழக்கு தொடர்ந்தார். நீண்டகாலமாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த இந்த வழக்கில் தற்போது முக்கிய தீர்ப்பு வெளியாகியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி, நடிகை சுகன்யாவுக்கு ரூ.10 லட்சத்து 500 நஷ்டஈடு வழங்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. சுமார் மூன்று தசாப்தங்களுக்கு பிறகு கிடைத்த இந்த தீர்ப்பு, சுகன்யாவுக்கு சட்டரீதியான நியாயம் கிடைத்ததாக பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>cinema</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/sukanya-wins-compensation-in-case-linked-to-controversial-veerappan-interview-8bomge8"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Parimala and Co vs Blast Box Office : பரிமளா அண்ட் கோ-வை விட டபுள் மடங்கு வசூல் அள்ளிய பிளாஸ்ட்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/blast-movie-beat-parimala-and-co-in-box-office-collection-8ql6frf</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/blast-movie-beat-parimala-and-co-in-box-office-collection-8ql6frf</guid>
            <pubDate>Mon, 08 Jun 2026 11:50:52 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Blast and Parimala And Co Box Office : அர்ஜுன் நடித்த பிளாஸ்ட் திரைப்படம், பாண்டிராஜ் இயக்கிய பரிமளா அண்ட் கோ படத்தைவிட டபுள் மடங்கு வசூலை வாரிசுருட்டி சாதனை படைத்துள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktjy4as8892rxzdcpwh3gt5r,imgname-blast-1780899523368.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Blast and Parimala And Co Box Office : அர்ஜுன் நடித்த பிளாஸ்ட் திரைப்படம், பாண்டிராஜ் இயக்கிய பரிமளா அண்ட் கோ படத்தைவிட டபுள் மடங்கு வசூலை வாரிசுருட்டி சாதனை படைத்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பாண்டிராஜ் இயக்கிய பரிமளா அண்ட் கோ திரைப்படம் திரையரங்குகளில் கடந்த ஜூன் 5-ந் தேதி ரிலீஸ் ஆனது. அப்படத்தில் ஜெயராம், ஊர்வசி, சாண்டி மாஸ்டர், சஞ்சனா, சிங்கம்புலி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. பரிமளா அண்ட் கோ திரைப்படத்திற்கு போட்டியாக வேறு எந்த பெரிய படமும் ரிலீஸ் ஆகாததால், இப்படம் பாக்ஸ் ஆபிஸில் சம்பவம் பண்ணும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருவதால் வசூலிலும் பெரியளவில் சோபிக்கவில்லை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பரிமளா அண்ட் கோ திரைப்படம் ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியாவில் மட்டும் ரூ.2.23 கோடி வசூலை வாரிக்குவித்து உள்ளது. இதன்மூலம் தற்போது 3 நாட்கள் முடிவில் ஒட்டுமொத்தமாக 6.70 கோடி வசூலித்துள்ளது. இப்படம் வார நாட்களிலும் அதன் வசூல் வேட்டையை தொடருமா என்பது புரியாத புதிராக உள்ளது. பரிமளா அண்ட் கோ திரைப்படத்தைவிட நேற்று அதிக வசூலை வாரிக்குவித்த படம் பிளாஸ்ட். அர்ஜுன் ஹீரோவாக நடித்த இப்படம் ரிலீஸ் ஆகி இரண்டு வாரங்களை கடந்து திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு வருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிளாஸ்ட் திரைப்படம் நேற்று மட்டும் இந்தியாவில் ரூ.4.35 கோடி வசூலை வாரிக்குவித்து உள்ளது. இதில் அப்படத்தின் தமிழ் பதிப்பு மட்டும் ரூ.3.92 கோடி வசூலித்துள்ளது. அதன் தெலுங்கு வெர்ஷன் ரூ.43 லட்சம் வசூலித்திருக்கிறது. அப்படம் இதுவரை உலகளவில் ரூ.52.80 கோடி வசூலித்துள்ளது. நடிகர் அர்ஜுனின் கெரியரில் மிகப்பெரிய கம்பேக் படமாக இது அமைந்துள்ளது. அவர் ஹீரோவாக நடித்த படம் ஹிட்டாகி கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அதனால் இந்த பிளாஸ்ட் படம் அவரின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிளாஸ்ட் திரைப்படத்தை சுபாஷ் கே ராஜ் இயக்கி உள்ளார். அப்படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை அபிராமி நடித்துள்ளார். இவர்கள் இருவரும் கணவன், மனைவியாக நடித்துள்ள இப்படத்தில் அவர்களின் மகளாக நடிகை ப்ரீத்தி முகுந்தன் நடித்திருக்கிறார். இப்படத்திற்கு கேஜிஎஃப் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்து உள்ளார். அதிரடி ஆக்&zwnj;ஷன் படமாக வந்துள்ள இதற்கு ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>cinema</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/blast-movie-beat-parimala-and-co-in-box-office-collection-8ql6frf"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Karuppu OTT Release : இந்த வாரம் ஓடிடியில் ரிலீசாகும் கருப்பு! வேற என்னென்ன படங்கள் ரிலீஸ்?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/karuppu-ott-release-this-week-when-and-where-to-watch-plus-other-new-ott-releases-8vgi4k0</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/karuppu-ott-release-this-week-when-and-where-to-watch-plus-other-new-ott-releases-8vgi4k0</guid>
            <pubDate>Mon, 08 Jun 2026 11:13:36 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Karuppu OTT Release : ஜூன் 2-வது வாரத்தில், ஓடிடி தளங்களில் வரிசையாக கருப்பு உள்ளிட்ட புதிய படங்கள் மற்றும் தொடர்கள் வெளியாக உள்ளன. விறுவிறுப்பான திரில்லர்கள் முதல் குடும்பங்கள் கொண்டாடும் ரியாலிட்டி ஷோக்கள் வரை என்னென்ன வெளியாகின்றன என பார்ப்போம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktjvpfvj0756gmxhengcxmw8,imgname-karuppu-ott-1780896972658.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Karuppu OTT Release : ஜூன் 2-வது வாரத்தில், ஓடிடி தளங்களில் வரிசையாக கருப்பு உள்ளிட்ட புதிய படங்கள் மற்றும் தொடர்கள் வெளியாக உள்ளன. விறுவிறுப்பான திரில்லர்கள் முதல் குடும்பங்கள் கொண்டாடும் ரியாலிட்டி ஷோக்கள் வரை என்னென்ன வெளியாகின்றன என பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சூர்யா நடிப்பில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான அதிரடிப் படமான 'கருப்பு', தியேட்டர்களில் பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இப்போது ஓடிடிக்கு வரத் தயாராகிவிட்டது. வரும் ஜூன் 12-ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகும் எனத் தெரிகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அக்&zwnj;ஷய் குமார் மற்றும் இயக்குநர் பிரியதர்ஷன் கூட்டணியில் உருவாகியுள்ள திகில் கலந்த நகைச்சுவைப் படம் 'பூத் பங்களா'. தபு, வாமிகா கபி மற்றும் பரேஷ் ராவல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம், ஜூன் 12-ம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;1970-களின் பின்னணியில் உருவாகியுள்ள கிரைம் திரில்லர் தொடர் 'ராக்'. காணாமல் போனவர்கள் பற்றிய விசாரணையில் தொடங்கும் கதை, ஒரு மிகப்பெரிய குற்றச் சதியை நோக்கி நகர்வதுதான் இதன் மையக்கரு. சோனாலி பிந்த்ரே, அலி ஃபசல் நடிக்கும் இத்தொடர் ஜூன் 12-ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நடிகை ஷில்பா ஷெட்டி குந்த்ரா தொகுத்து வழங்கும் இந்த ரியாலிட்டி ஷோ, ஜூன் 12-ம் தேதி ஜீ5 தளத்தில் வெளியாகிறது. இதில் பிரபலங்கள் மற்றும் அவர்களின் அம்மாக்கள் கலந்துகொண்டு சமையல் போட்டிகள் மற்றும் சுவாரஸ்யமான உரையாடல்களில் ஈடுபடுகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;எவ்ரி இயர் ஆஃப்டர் (Every Year After):&lt;/strong&gt; காதல் மற்றும் நட்பைப் போற்றும் இந்தத் தொடர் ஜூன் 10-ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;திரிடம் (Dridam): &lt;/strong&gt;ஜீத்து ஜோசப் தயாரிப்பில் உருவாகியுள்ள மலையாள திரில்லர் படம், ஜூன் 12-ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;தார்கடா (Taarkata): &lt;/strong&gt;பழிவாங்கும் படலமும், த்ரில்லர் அம்சங்களும் கலந்த வங்காளத் தொடர் ஜூன் 12 அன்று ஜீ5 தளத்தில் ஒளிபரப்பாகிறது.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;செல்டர் (Shelter):&lt;/strong&gt; ஜேசன் ஸ்டாதம் நடித்துள்ள சர்வைவல் திரில்லர் படம் ஜூன் 12 அன்று ஓடிடியில் வருகிறது.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;ஸ்வீட் மேக்னோலியாஸ் சீசன் 5 (Sweet Magnolias Season 5): &lt;/strong&gt;ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தத் தொடரின் புதிய சீசன் நெட்ஃபிளிக்ஸில் இந்த வாரம் வெளியாகிறது.&lt;/li&gt;&lt;/ul&gt;]]></content:encoded>
            <category>cinema</category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/karuppu-ott-release-this-week-when-and-where-to-watch-plus-other-new-ott-releases-8vgi4k0"/>
        </item>
        <item>
            <title><![CDATA[61 வயதில் 3வது திருமணத்திற்கு தயாராகும் அமீர்கான்! காதலி கௌரி ஸ்ப்ராட்டுடன் விரைவில் திருமணம்?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/cinema/aamir-khan-s-3rd-marriage-at-61-with-gauri-spratt-videoshow-9zohyz4</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/cinema/aamir-khan-s-3rd-marriage-at-61-with-gauri-spratt-videoshow-9zohyz4</guid>
            <pubDate>Sat, 06 Jun 2026 21:03:00 +0530</pubDate>
            <description><![CDATA[]]></description>
            <media:content url="https://geo.dailymotion.com/player/x1tbu.html?video=xadngqu" medium="video" height="768" width="1024"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;61 வயதான பாலிவுட் நடிகர் அமீர்கான், தனது காதலியான கௌரி ஸ்ப்ராட்டை விரைவில் திருமணம் செய்யவிருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>cinema</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/cinema/aamir-khan-s-3rd-marriage-at-61-with-gauri-spratt-videoshow-9zohyz4"/>
        </item>
        <item>
            <title><![CDATA[New Tamil Movies : அடுத்த 2 மாதங்களில் ரிலீசாகும் படங்கள்! அடுத்தடுத்து வரும் மிரட்டலான அறிவிப்புகள்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/new-tamil-movies-big-releases-and-major-announcements-in-the-next-2-months-c7m42ef</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/new-tamil-movies-big-releases-and-major-announcements-in-the-next-2-months-c7m42ef</guid>
            <pubDate>Sun, 07 Jun 2026 11:05:38 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;New Tamil Movies : 2026-ம் ஆண்டு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டமான ஆண்டாக அமைந்துள்ளது. கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி சாதனை படைத்துள்ளன.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kkxtrj6wn4mx6bx6jyfmxpak,imgname-jvjvjv-1773748898012.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;New Tamil Movies : 2026-ம் ஆண்டு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டமான ஆண்டாக அமைந்துள்ளது. கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி சாதனை படைத்துள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, திரையுலகில் ஒரு உற்சாகமான சூழல் நிலவுகிறது. தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் தங்கள் படங்களை வரிசையாக அறிவித்து வருவதால், கிட்டத்தட்ட தினமும் ஏதோ ஒரு புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை மகிழ்விக்கிறது. ஆகஸ்ட் மாதம் வரையிலான பல படங்களின் வெளியீட்டுத் தேதிகள் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுவிட்டன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வரும் நாட்களில் திரையரங்குகளில் வரிசையாகப் படங்கள் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளன:&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;ஜூன் 12: &lt;/strong&gt;ஆட்டி, சாருகேசி, டபுள் ஆக்குபன்சி, ஹபீபி, மூன்றாம் கண், வள்ளுவன் மற்றும் வருகை பதிவேடு ஆகிய படங்கள் வெளியாகின்றன.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;ஜூன் 19: &lt;/strong&gt;நூறு சாமி.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;ஜூன் 25: &lt;/strong&gt;அந்தரன், அனந்தன் காடு.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;ஜூன் 26: &lt;/strong&gt;ப்ராமிஸ்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;ஜூலை : &lt;/strong&gt;ஜூலை 3-ல் &lsquo;கட்டா குஸ்தி 2&rsquo;, ஜூலை 10-ல் &lsquo;இதயம் முரளி&rsquo;, ஜூலை 17-ல் &lsquo;ஜிடிஎன்&rsquo;, ஜூலை 31-ல் &lsquo;சிக்மா&rsquo; ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;ஆகஸ்ட்: &lt;/strong&gt;ஆகஸ்ட் 14-ம் தேதி &lsquo;விஸ்வநாத் அண்ட் சன்ஸ்&rsquo; படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;img&gt;&lt;p&gt;தொடர்ந்து புதிய படங்கள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், தளபதி விஜய் நடிக்கும் &lsquo;ஜனநாயகன்&rsquo; படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வரும் என்பதுதான் தற்போது கோலிவுட்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;எதிர்வரும் வாரங்களில் இன்னும் பல படங்களின் வெளியீட்டுத் தேதிகள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால், தியேட்டர்களில் அடுத்தடுத்த மாதங்கள் திருவிழாக் கோலமாக இருக்கும் என்பது உறுதி!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>cinema</category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/new-tamil-movies-big-releases-and-major-announcements-in-the-next-2-months-c7m42ef"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Ethirneechal Thodargiradhu : தர்ஷினி பற்றி கிடைத்த ஹிண்ட்... அருந்ததியுடன் ஆக்‌ஷனில் இறங்கிய ஜனனி]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/ethirneechal-thodargiradhu-serial-08-june-2026-episode-janani-got-hint-about-dharshini-from-arundhathi-c8z3hdu</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/ethirneechal-thodargiradhu-serial-08-june-2026-episode-janani-got-hint-about-dharshini-from-arundhathi-c8z3hdu</guid>
            <pubDate>Mon, 08 Jun 2026 09:35:14 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Ethirneechal Thodargiradhu Serial Today Episode : எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் காணாமல் போன தர்ஷினி பற்றி ஜனனிக்கு மிகப்பெரிய ஹிண்ட் ஒன்று கிடைத்துள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktjp8re07ga5cqg525z4k85x,imgname-ethirneechal-thodargiradhu---2026-06-08t092836.871-1780891279808.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Ethirneechal Thodargiradhu Serial Today Episode : எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் காணாமல் போன தர்ஷினி பற்றி ஜனனிக்கு மிகப்பெரிய ஹிண்ட் ஒன்று கிடைத்துள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;எதிர்நீச்சல் தொடர்கிறது&lt;/strong&gt; சீரியலில் தர்ஷினி காணாமல் போன நிலையில், அவரை ஆதி குணசேகரன் ஒரு பக்கம் வலைவீசி தேடிவர, மறுபுறம் ஜனனி, தர்ஷினியை தேடி சிறுமலை காட்டுக்கு சென்றிருக்கிறார். அங்கு தான் தர்ஷினியின் தோழன் சுவாமிநாதன் சொந்த ஊர் சிறுமலை என்பதால், அவரைத் தேடி அங்கு சென்றுள்ளார் ஜனனி. அங்கு அருந்ததி என்கிற பெண் ஜனனியை பத்திரமாக அழைத்து சென்று தன்னுடைய வீட்டில் தங்க வைத்திருக்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Ethirneechal Thodargiradhu : ஆதாரத்துடன் ஆதி குணசேகரனை மிரட்டும் சக்தி... ஜனனிக்கு என்ன ஆச்சு?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜனனி சிறுமலையில் இருக்கும் தகவல் தெரிந்து அவரை அந்த மலை கிராமத்தை விட்டு வெளியேறுமாரு சொல்லி இரு நபர்கள் வந்து பிரச்சனை பண்ணுகிறார்கள். அப்போது ஜனனியை அங்கிருந்து அனுப்ப முடியாது என அருந்ததி சொல்லிக் கொண்டிருக்க, அந்த நபர்கள் தர தரவென ஜனனியை இழுத்துச் செல்கிறார்கள். அதைப் பார்த்து கோபமடைந்த அருந்ததி உடனே துப்பாக்கியை எடுத்து, அந்த இரு நபர்களையும் சுட்டுவிடுகிறார். அவர் சுட்டதில் அந்த இரு நபர்களும் சம்பவ இடத்திலேயே பலியாகிவிடுகிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதையடுத்து மறுதினம் அருந்ததியோடு சென்று அவரின் கதைகளை கேட்டு தெரிந்துகொள்கிறார் ஜனனி. அப்போது தான் தர்ஷினியை தேடி வந்திருப்பதாக சொல்லி தர்ஷினியின் புகைப்படத்தை காட்டுகிறார். அதைப்பார்த்த அருந்ததி, அந்த பொண்ணை நான் பாத்திருக்கேன் என கூறுகிறார். எப்போ என ஜனனி கேட்க, கடந்த சில தினங்களுக்கு முன் தான் சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது ஒரு கார் கவிழ்ந்து கிடந்தது. அந்த காரில் சில ஆண்களும், இந்த பெண்ணும் இருந்தனர் என கூறுகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அப்போது அந்த காரில் இருந்த பசங்களிடம் இந்த புள்ளைக்கு என்னாச்சு டா என கேட்டதாகவும், அதற்கு அவர்கள் அந்த பொண்ணு எங்க தங்கச்சி தான். அவளை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போறோம்னு சொன்னாங்க. சரி மயங்கி கிடக்குறா சீக்கிரம் கூட்டிட்டு போங்கனு சொல்லிட்டு நான் அங்கிருந்து கிளம்பி வந்துட்டேன் என கூறுகிறார். இதைக்கேட்டு ஷாக் ஆன ஜனனி, அந்த விபத்து நடந்த இடத்துக்கு தன்னை அழைத்து செல்லுமாறு கூறுகிறார். இதையடுத்து தர்ஷினியை தேடி அருந்ததி உடன் கிளம்பிச் செல்கிறார் ஜனனி.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மறுபுறம் ஈஸ்வரி வீட்டில் தர்ஷினியை நினைத்துக் கொண்டே சாப்பிடாமல் இருந்ததால் மயக்கம் போட்டு விழுந்து கிடக்க, அவரை ஆதி குணசேகரன் தண்ணீர் தெளித்து எழுப்பி அவரிடம் உனக்கு என்ன ஆச்சு என கேட்கிறார். எனக்கு என் பொண்ணு வீட்டுக்கு வந்து சேரணும் அதுவரைக்கும் எனக்கு நிம்மதியே இல்லை. நம்ம பொண்ணு வந்திரும் என சொல்லி அவரை ஆஸ்வாசப்படுத்துகிறார் குணசேகரன். ஜனனி தனக்கு கிடைத்துள்ள ஹிண்ட் மூலம் தர்ஷினியை ஆபத்தில் இருந்து மீட்பாரா? இல்லையா? என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>cinema</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/ethirneechal-thodargiradhu-serial-08-june-2026-episode-janani-got-hint-about-dharshini-from-arundhathi-c8z3hdu"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Salim Kumar: மலையாள நடிகர் ச‌லீம் குமார் திடீர் மரணம்! தனுஷ், சரத்குமார் படங்களில் கலக்கியவரின் உயிரிழப்புக்கு காரணம் என்ன?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/malayalam-actor-salim-kumar-dies-at-56-cause-of-death-and-tamil-movies-list-e5onwst</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/malayalam-actor-salim-kumar-dies-at-56-cause-of-death-and-tamil-movies-list-e5onwst</guid>
            <pubDate>Sun, 07 Jun 2026 09:30:58 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Salim Kumar: பிரபல மலையாள நடிகர் ச&zwnj;லீம் குமார் 56 வயதில் திடீரென மரணம் அடைந்துள்ளார். அவரது இறப்புக்கு காரணம் என்ன? என்னெனன் தமிழ் படங்களில் நடித்துள்ளார்? என்பது குறித்து பார்ப்போம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktfyd9sntq26w6zfe0cecj9b,imgname-salim-kumar-death-malayalam-actor-comedian-pneumonia-heart-attack-funeral-paravur-2026-1780799153973.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Salim Kumar: பிரபல மலையாள நடிகர் ச&zwnj;லீம் குமார் 56 வயதில் திடீரென மரணம் அடைந்துள்ளார். அவரது இறப்புக்கு காரணம் என்ன? என்னெனன் தமிழ் படங்களில் நடித்துள்ளார்? என்பது குறித்து பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிரபல மலையாள நடிகரும், தேசிய விருது பெற்றவருமான சலீம் குமார் காலமானார். அவருக்கு வயது 56. உடல்நலக்குறைவு காரணமாக கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்துள்ளது. நிமோனியா பாதிப்புக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டதே மரணத்திற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கேரள முதல்வர் வி.டி. சதீசனின் பரவூர் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டதுதான் சலீம் குமாரின் கடைசி பொது நிகழ்ச்சி ஆகும். மிமிக்ரி மற்றும் காமெடி மூலம் சினிமாவுக்குள் நுழைந்தவர் சலீம் குமார். 1990-களின் மத்தியில் நடிக்க வந்தாலும், 2000-ம் ஆண்டுக்குப் பிறகு வெளியான படங்களில் இவரது காமெடி கதாபாத்திரங்கள் மலையாள ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தன. காமெடி நடிகர் என்ற வட்டத்தைத் தாண்டி, பல சீரியஸான கதாபாத்திரங்களிலும் நடித்து தனது நடிப்புத் திறமையை நிரூபித்தார். இவரது பல 'தக் லைஃப்' வசனங்கள் இன்றும் மீம்ஸ்களில் கொண்டாடப்பட்டு வருகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சலீம் குமார், 1969 அக்டோபர் 9-ம் தேதி வடக்கன் பரவூரில் பிறந்தார். கொச்சின் கலாபவன், சாகர் போன்ற மிமிக்ரி குழுக்களில் தீவிரமாக செயல்பட்டார். அவரது நெருங்கிய நண்பரான நாதிர்ஷாதான் அவரை சினிமாவுக்கு அழைத்து வந்தார். 'இஷ்டமாண் நூறுவட்டம்' அவரது முதல் படம். 2000-ல் வெளியான 'தென்காசிப்பட்டணம்' படம் சூப்பர்ஹிட் ஆனதால் சலீம் குமார் மலையாள சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகரானார். அவர் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், 'கம்பார்ட்மென்ட்', 'கருத்த ஜூதன்', 'தெய்வமே கை தொழாம் கே.குமாராக்கணம்' ஆகிய மூன்று படங்களையும் இயக்கியுள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சலீம் குமார், 2005-ல் 'அச்சனுறங்காத வீடு' படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான மாநில விருதை வென்றார். 2010-ல் 'ஆதாமிண்டே மகன் அபு' படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும், மாநில விருதையும் ஒருங்கே பெற்றார். 2013&zwj;ல் 'அயாளும் நானும் தம்மில்' படத்திற்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான மாநில விருதையும் வென்றுள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;சலீம் குமார் சில நேரடி தமிழ படங்களிலும் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார். மலையாளத்தில் சலீம் குமார் நடித்து சூப்பர்ஹிட் ஆன 'தென்காசிப்பட்டணம்' திரைப்படம் தமிழிலும் அதே பெயரில் 2002ஆம் ஆண்டு வெளியானது. சரத்குமார், நெப்போலியன் நடித்த இந்த படத்தில் மலையாளத்தில் தான் நடித்த அதே 'நெருப்பு' கதாபாத்திரத்தை தமிழிலும் சலீம் குமார் ந&zwnj;டித்திருந்தார்.&lt;/p&gt;&lt;p&gt;கடந்த 2013ல் பரத் பாலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான மரியான் திரைப்படத்தில் மிக முக்கியமான குணச்சித்திர கதாபாத்திரத்தில் சலீம் குமார் நடித்து பலரின் பாராட்டுகளையும் பெற்றார். கடந்த 2014ல் ஆரி மற்றும் ஷிவதா நடிப்பில் வெளியான நெடுஞ்சாலை திரைப்படத்தில் 'மாட்டுச் சேகர்' என்ற நகைச்சுவை கலந்த வில்லன் கதாபாத்திரத்தில் சலீம் குமார் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கடந்த சில ஆண்டுகளாக கல்லீரல் சம்பந்தமான நோய்களால் அவர் உடல்நலப் பிரச்சினைகளை சந்தித்து வந்தார். தனக்கு வந்த லிவர் சிரோசிஸ் மதுப்பழக்கத்தால் வரவில்லை என்றும், அது பரம்பரையாக வந்த நோய் என்றும் அவர் முன்பே தெரிவித்திருந்தார். நோய்வாய்ப்பட்டிருந்தபோது போலி சிகிச்சைகளை நாடியதால் தனது உடல்நிலை மேலும் மோசமடைந்ததையும் அவர் வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>cinema</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/malayalam-actor-salim-kumar-dies-at-56-cause-of-death-and-tamil-movies-list-e5onwst"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Siragadikka Aasai : காதல் விவகாரத்தை போட்டுடைத்த சத்யா... ரேகாவின் தந்தை எடுத்த தடாலடி முடிவு]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-08-june-2026-episode-rekha-father-shocking-decision-in-sathya-love-issue-ihrouys</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-08-june-2026-episode-rekha-father-shocking-decision-in-sathya-love-issue-ihrouys</guid>
            <pubDate>Mon, 08 Jun 2026 08:32:57 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் ரேகாவின் தந்தையை சந்தித்த சத்யா, தான் ரேகாவை காதலிக்கும் விஷயத்தை போட்டுடைத்துள்ளார். இதன்பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktjjrem091jftpskdq3d6ky9,imgname-siragadikka-aasai---2026-06-08t082751.561-1780887599744.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் ரேகாவின் தந்தையை சந்தித்த சத்யா, தான் ரேகாவை காதலிக்கும் விஷயத்தை போட்டுடைத்துள்ளார். இதன்பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;சிறகடிக்க ஆசை&lt;/strong&gt; சீரியலில் சிந்தாமணியின் மகள் ரேகாவும், மீனாவின் தம்பி சத்யாவும் காதலித்து வரும் விஷயம் அனைவரும் அறிந்ததே. இந்த விஷயம் சிந்தாமணிக்கும் அவருடைய கணவருக்கும் தெரிந்ததை அடுத்து, அவர்கள் ரேகாவை ஐதராபாத்துக்கு அனுப்பிவைத்துவிட்டனர். தற்போது ரேகா அங்கு ஹவுஸ் அரெஸ்ட் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், இந்த விவகாரத்தை மீனாவிடம் சொன்ன சத்யா, ரேகா இல்லேனா நானும் செத்துருவேன் என்று எமோஷனலாக பேசுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Siragadikka Aasai : சிந்தாமணியை வம்பிழுத்த மீனா... வீட்டை மீட்ட குஷியில் முத்து; வயித்தெரிச்சலில் மனோஜ்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மீனாவும், அவருடைய அம்மாவும், சத்யாவை பிரையின் வாஷ் பண்ண பார்க்கிறார்கள். ரேகாவை மறந்துவிடு, அவங்க ரொம்ப மோசமானவங்க, அவங்களுக்கும் நமக்கும் செட் ஆகாது என சொல்கிறார். அதற்கு சத்யா, இந்த விஷயத்தை மாமாவிடம் சொல்லவா என கேட்க, தயவு செஞ்சு உங்க மாமாகிட்ட மட்டும் சொல்லிடாத என ஸ்ட்ரிக்ட் ஆக சொல்லிவிடுகிறார் மீனா. ஆனால் அக்கா பேச்சை கேட்காத சத்யா, நேராக முத்துவிடம் சென்று விஷயத்தை சொல்லிவிடுகிறார். அதற்கு முத்து, நீ நேரடியாக சென்று அவங்க அப்பாகிட்ட பேசு என சொல்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரேகாவின் அப்பா என் மீது ரொம்ப மரியாதை வச்சிருக்கார், நான் எப்படி பேசுவேன், எனக்காக நீங்க வந்து பேசுறீங்களா மாமா என கேட்கிறார் சத்யா. அதற்கு முத்து, நான் உனக்கு துணைக்கு வேணா வர்றேன், ஆனா நான் பேசமாட்டேன், நீ தான் போய் பேசணும் என கூறுகிறார். இதையடுத்து சத்யா ரேகாவின் அப்பாவை சந்தித்து பேச செல்கிறார். அங்கு சென்று அவரிடம் எப்படி சொல்வது என தெரியாமல் தயங்கி நிற்கிறார் சத்யா. பின்னர் அவர் சத்யாவுக்கு தண்ணி கொடுத்து என்ன ஆச்சு என கேட்க, தான் ரேகாவை காதலிக்கும் விஷயத்தை சொல்லிவிடுகிறார் சத்யா.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதற்கு அவர் இப்படி திடீர்னு வந்து சொல்லுற எனக்கு கொஞ்சம் டைம் வேண்டும் என கேட்கிறார். ரேகா எனக்கு ஒரே பொண்ணு அதனால் அவளுடைய வாழ்க்கை பத்தி யோசிக்க எனக்கு டைம் கொடு என சொல்கிறார். அதற்கு சத்யாவும் ஓகே சொல்ல, பின்னர் முத்துவிடம் வந்து நடந்ததை கூறுகிறார். அவரும் உங்க ஓனர் நல்ல மனுஷன் டா நல்ல முடிவா தான் சொல்லுவாரு என சொல்லிவிட்டு கிளம்புகிறார். மறுபுறம் ரோகிணி ஒரு கார்பரேட் விழாவில், ஜோடியாக கலந்துகொள்ள மனோஜுக்கு போன் போட்டு வரச் சொல்ல, மனோஜும் அந்த விழாவுக்கு கிளம்புகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அந்த நேரம் பார்த்து விஜயா, மனோஜிடம் வந்து, தன்னுடைய தோழி ஒரு விழாவுக்கு அழைத்திருப்பதாகவும், அங்கு சென்றால் சிறந்த அம்மா, பையன் விருது நமக்கு கிடைக்கும், உடனே கிளம்பு என மனோஜை அழைக்க, அவர் என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியாமல் விஜயாவுடன் கிளம்பிச் செல்கிறார். பின்னர் தான் தெரிகிறது, ரோகிணி அழைத்த பார்ட்டிக்கு தான் விஜயாவும் வந்திருக்கிறார். அங்கு ரோகிணியை பார்த்ததும் விஜயாவுக்கு கோபம் உச்சிக்கு ஏறுகிறது. இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதன்பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>cinema</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-08-june-2026-episode-rekha-father-shocking-decision-in-sathya-love-issue-ihrouys"/>
        </item>
        <item>
            <title><![CDATA[SPB Song : அஜித்துக்காக ரிஸ்க் எடுத்து பாடிய பாடல்... எஸ்பிபி-க்கு பெரும் சிக்கலாக மாறிய கதை தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/spb-remark-after-recording-satham-illatha-thanimai-ketten-song-for-ajith-amarkalam-movie-kgaq1nt</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/spb-remark-after-recording-satham-illatha-thanimai-ketten-song-for-ajith-amarkalam-movie-kgaq1nt</guid>
            <pubDate>Tue, 09 Jun 2026 14:28:13 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;SPB Song Secret : எஸ்.பி.பாலசுப்ரமணியம் நடிகர் அஜித்துக்காக ரிஸ்க் எடுத்து பாடிய பாடல் ஒன்று அவருக்கு பெரும் சிக்கலாக மாறி இருக்கிறது. அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktnrw096fhawqy0bpntapcjz,imgname-ajith-1780994670886.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;SPB Song Secret : எஸ்.பி.பாலசுப்ரமணியம் நடிகர் அஜித்துக்காக ரிஸ்க் எடுத்து பாடிய பாடல் ஒன்று அவருக்கு பெரும் சிக்கலாக மாறி இருக்கிறது. அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழும் அஜித்தின் திரைப்பயணத்தின் தொடக்கத்தில் மறக்க முடியாத பங்களிப்பை வழங்கியவர் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். அஜித்தின் பள்ளித் தோழராக இருந்தவர் எஸ்.பி.பி-யின் மகன் எஸ்.பி.பி.சரண். அந்த நட்பின் மூலமாகவே தெலுங்கில் உருவான பிரேம புஸ்தகம் திரைப்படத்தில் நடிக்க அஜித்தை எஸ்.பி.பி பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதன்பின்னர் தமிழில் அமராவதி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான அஜித், இன்று தென்னிந்திய சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார். அவரது ஆரம்பகால படங்கள் பலவற்றில் எஸ்.பி.பி பின்னணிப் பாடல்கள் பாடி பெரும் ஆதரவாக இருந்தார். குறிப்பாக அன்னமே அன்னமே போன்ற பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. மேலும் உல்லாசம் திரைப்படத்தில் அஜித்தின் தந்தை கதாபாத்திரத்திலும் எஸ்.பி.பி நடித்திருந்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த நிலையில், அமர்க்களம் திரைப்படத்தில் இடம்பெற்ற &ldquo;சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்&rdquo; பாடல் உருவான பின்னணி தற்போது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. இயக்குநர் சரண் மற்றும் இசையமைப்பாளர் பரத்வாஜ், கேளடி கண்மணி படத்தில் இடம்பெற்ற &ldquo;மண்ணில் இந்த காதலன்றி&rdquo; பாடலின் தனித்துவத்தைப் போலவே, மூச்சு விடாமல் பாடப்படும் வகையில் இந்தப் பாடலையும் அமைக்க விரும்பியதாக கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;அதற்கேற்ப எஸ்.பி.பி தனது குரல் திறமையை முழுமையாக வெளிப்படுத்தி, அதிக உயர்தர ஸ்ருதியில் பாடலை பதிவு செய்தாராம். பாடலின் கடினத்தன்மையை கருத்தில் கொண்டு சில இடங்களில் சுவாச இடைவெளிகளையும் பயன்படுத்திக் கொண்டாராம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அமர்க்களம் படத்தில் இடம்பெற்ற &ldquo;சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்&rdquo; மற்றும் &ldquo;மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு&rdquo; ஆகிய இரு பாடல்களும் முதலில் திரைப்படத்திற்காக எழுதப்பட்டவை அல்ல. கவிஞர் வைரமுத்துவின் கவிதைத் தொகுப்புகளில் இடம்பெற்ற வரிகளை தேர்வு செய்து, பின்னர் இசையமைத்து பாடல்களாக மாற்றியிருந்தனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பாடல் பதிவு முடிந்தபின் இசையமைப்பாளர் பரத்வாஜிடம் எஸ்.பி.பி நகைச்சுவையாக ஒரு கருத்தை பகிர்ந்தாராம். &ldquo;இந்தப் பாடல் நிச்சயம் பெரிய வெற்றி பெறும். ஆனால் எனக்கு தான் சிக்கல். இனிமேல் நான் செல்லும் ஒவ்வொரு இசை நிகழ்ச்சியிலும் ரசிகர்கள் இந்தப் பாடலை ஒன்ஸ்மோர் கேட்கப் போகிறார்கள். நான் என்ன செய்யப்போறேனோ&rdquo; என்று கலகலப்பாக கூறினாராம். அவர் கணித்ததுபோலவே அமர்க்களம் திரைப்படமும் வெற்றி பெற்றது. அதில் இடம்பெற்ற &ldquo;சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்&rdquo; பாடல், இன்றளவும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் கெரியரில் சிறந்த பாடல்களில் ஒன்றாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>cinema</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/spb-remark-after-recording-satham-illatha-thanimai-ketten-song-for-ajith-amarkalam-movie-kgaq1nt"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ரஜினியோட முதல் ஹீரோ பாட்டை எழுதிய கவிஞர் யார் தெரியுமா?! இசை, இயக்கம் என கலக்கிய சகலகலா வல்லவன் கதை!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/cinema/the-mastermind-behind-rajinikanth-s-first-hero-song-videoshow-ki6yolf</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/cinema/the-mastermind-behind-rajinikanth-s-first-hero-song-videoshow-ki6yolf</guid>
            <pubDate>Sat, 06 Jun 2026 19:02:52 +0530</pubDate>
            <description><![CDATA[]]></description>
            <media:content url="https://geo.dailymotion.com/player/x1tbu.html?video=xadmun2" medium="video" height="768" width="1024"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கேரியரையே தலைகீழாக மாற்றிய அந்த முதல் மாஸ் ஓப்பனிங் பாடலுக்குப் பின்னால் இருந்த &quot;சீக்ரெட் மாஸ்டர்மைண்ட்&quot; கங்கை அமரன் தான். இசை, இயக்கம், பாடல் என திரையுலகை ஆட்டிப்படைத்த இந்த சகலகலா வல்லவனின் மறைக்கப்பட்ட சாதித்த கதை இதோ.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>cinema</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/cinema/the-mastermind-behind-rajinikanth-s-first-hero-song-videoshow-ki6yolf"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Taapsee : கவர்ச்சியாக தெரிய 'கப் பிரா போடச் சொன்னாங்க' - பரபரப்பை கிளப்பிய நடிகை டாப்ஸி-யின் பேட்டி]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/taapsee-pannu-old-padded-bra-comment-resurfaces-amid-janhvi-kapoor-peddi-film-controversy-kmgaezs</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/taapsee-pannu-old-padded-bra-comment-resurfaces-amid-janhvi-kapoor-peddi-film-controversy-kmgaezs</guid>
            <pubDate>Tue, 09 Jun 2026 12:28:24 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Taapsee Pannu : ஜான்வி கபூரின் 'பெத்தி' படம் தொடர்பான சர்ச்சை சூடுபிடித்துள்ள நிலையில், நடிகை டாப்ஸி பன்னு தென்னிந்திய சினிமா குறித்து முன்பு பேசிய ஒரு விஷயம் மீண்டும் வைரலாகி வருகிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktnjp30vfjx7rs5hwxv33nry,imgname-taapsee-1780988185626.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Taapsee Pannu : ஜான்வி கபூரின் 'பெத்தி' படம் தொடர்பான சர்ச்சை சூடுபிடித்துள்ள நிலையில், நடிகை டாப்ஸி பன்னு தென்னிந்திய சினிமா குறித்து முன்பு பேசிய ஒரு விஷயம் மீண்டும் வைரலாகி வருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜான்வி கபூரின் 'பெத்தி' (Peddi) படம் தொடர்பான சர்ச்சை சோஷியல் மீடியாவில் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகை டாப்ஸி பன்னுவின் பழைய பேட்டி ஒன்று மீண்டும் கவனம் ஈர்த்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் நடிகைகளின் தோற்றம் மற்றும் கவர்ச்சிக்கு அளவுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கப்படுவது குறித்து டாப்ஸி முன்பு சில பகீர் தகவல்களைப் பகிர்ந்திருந்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சமீபத்தில், ஜான்வி கபூர் நடித்த 'பெத்தி' படத்தில் வரும் சில கவர்ச்சியான காட்சிகளுக்காக அவர் விமர்சிக்கப்பட்டு வருகிறார். ஒரு பெண் கதாபாத்திரத்தை, கதை மற்றும் நடிப்பு என்பதைத் தாண்டி, அவரது உடல் கவர்ச்சியின் மூலம் ஏன் காட்ட வேண்டும் என்று சோஷியல் மீடியாவில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். தென்னிந்தியப் படங்களில் பல சமயங்களில் ஹீரோயின்களை, அவர்களது கதாபாத்திரத்தை விட அழகு மற்றும் கவர்ச்சியை முன்னிலைப்படுத்தியே காட்டுகிறார்கள் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;&lt;p&gt;இந்த சர்ச்சை பெரிதானதும், ஜான்வி கபூர் ஒரு விளக்கம் கொடுத்தார். படத்தில் தனது கதாபாத்திரம் இப்படி காட்டப்படும் என்று தனக்குத் தெரியாது என்றும், இது படத்தின் இயக்குநர் புச்சி பாபு சனாவின் கிரியேட்டிவ் முடிவு என்றும் அவர் கூறியுள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த விவாதங்களுக்கு நடுவே, நடிகை டாப்ஸி பன்னுவின் பழைய பேட்டி ஒன்று மீண்டும் வைரலாகி வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்த அனுபவம் உள்ள டாப்ஸி, தென்னிந்திய சினிமாவில் நடிகைகளின் தோற்றம் மற்றும் உடல் அமைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக முன்பு கூறியிருந்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய டாப்ஸி, சில சமயங்களில் நடிகைகளை 'பேடட் பிரா' (padded bra) அணியச் சொல்வார்கள், அப்போதுதான் கேமராவில் அவர்களது தோற்றம் இன்னும் கவர்ச்சியாகவும் போல்டாகவும் தெரியும் என்று கூறியிருந்தார். இந்த மாதிரி விஷயங்களை நேரடியாகச் சொல்லாமல், ஸ்டைலிங் டீம் அல்லது உதவி ஆட்கள் மூலமாகச் சொல்வார்கள், இது சில நேரங்களில் மிகவும் சங்கடமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும், ஷூட்டிங்கின் போது தோற்றம் எதிர்பார்த்தபடி இல்லை என்றால், மீண்டும் மாற்றச் சொல்வார்கள். இது மனரீதியாகச் சங்கடப்படுத்தும் ஒரு அனுபவமாக இருக்கும் என்றும் அவர் பகிர்ந்திருந்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சில படங்களில் கேமரா கோணங்கள், குறிப்பாக உடலின் சில பாகங்களில் அதிகம் கவனம் செலுத்துவதாகவும் டாப்ஸி குறிப்பிட்டிருந்தார். இது ரசிகர்களின் கற்பனையைத் தூண்டுவதற்கும், படத்தின் கவர்ச்சியை அதிகப்படுத்துவதற்கும் செய்யப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார்.&lt;/p&gt;&lt;p&gt;'பெத்தி' சர்ச்சை மூலம், சினிமாவில் பெண் கதாபாத்திரங்கள் அவர்களது நடிப்பு மற்றும் கதைக்காக நினைவுகூரப்பட வேண்டுமா அல்லது கவர்ச்சிக்காகவும், ஈர்ப்புக்காகவும் மட்டுமே காட்டப்பட வேண்டுமா என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது. இந்த விவாதம் ஒன்றும் புதிதல்ல, ஆனால் ஒவ்வொரு புதிய படம் அல்லது பேட்டியின் போதும் இந்த விஷயம் மீண்டும் விவாதப் பொருளாகிவிடுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>cinema</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/taapsee-pannu-old-padded-bra-comment-resurfaces-amid-janhvi-kapoor-peddi-film-controversy-kmgaezs"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஒரே வீட்டில் முதல்வர் விஜய் - சங்கீதா? குடும்ப உறவுகள் செய்த மேஜிக்...துள்ளிக்குதிக்கும் தொண்டர்கள்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/cinema/vijay-and-sangeetha-reunited-a-family-s-magic-videoshow-nc77t28</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/cinema/vijay-and-sangeetha-reunited-a-family-s-magic-videoshow-nc77t28</guid>
            <pubDate>Tue, 09 Jun 2026 17:00:33 +0530</pubDate>
            <description><![CDATA[]]></description>
            <media:content url="https://www.youtube.com/embed/r8_QBD_LRiI" medium="video" height="350" width="560"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா மீண்டும் இணையவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குடும்ப உறவினர்களின் முயற்சியால் இந்த இணைவு சாத்தியமானதாக கூறப்படுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>cinema</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/cinema/vijay-and-sangeetha-reunited-a-family-s-magic-videoshow-nc77t28"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Bhanupriya: நடிகை பானுபிரியாவுக்கு என்ன ஆனது? உண்மைகளை போட்டு உடைத்த நடிகை குஷ்பூ.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/khushbu-sundar-reveals-the-real-reason-why-bhanupriya-skips-the-80s-heroines-reunion-explained-q6radp0</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/khushbu-sundar-reveals-the-real-reason-why-bhanupriya-skips-the-80s-heroines-reunion-explained-q6radp0</guid>
            <pubDate>Sat, 06 Jun 2026 18:22:09 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Bhanupriya: 80-களில் கொடிகட்டிப் பறந்த நடிகைகள் எல்லோரும் ரீயூனியன் நிகழ்ச்சிகளில் சந்தித்துக்கொள்கிறார்கள். ஆனால், பானுபிரியா மட்டும் எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்வதில்லை. அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து நடிகை குஷ்பு பேசியுள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kteffy7m21kxfp5850kytn5n,imgname-khusbhu-about-actress-bhanupriya-1780749957364.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Bhanupriya: 80-களில் கொடிகட்டிப் பறந்த நடிகைகள் எல்லோரும் ரீயூனியன் நிகழ்ச்சிகளில் சந்தித்துக்கொள்கிறார்கள். ஆனால், பானுபிரியா மட்டும் எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்வதில்லை. அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து நடிகை குஷ்பு பேசியுள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;80-90களில் தென்னிந்திய சினிமாவை பல நடிகைகள் ஆட்சி செய்தனர். அவர்களில் பானுபிரியாவும் ஒருவர். அழகு, நடிப்பு, அற்புதமான நடனம் என ரசிகர்களைக் கவர்ந்தார். நடிகர்களுக்கு இணையாக நடனமாடும் சில நடிகைகளில் பானுபிரியாவும் ஒருவர். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடப் படங்களிலும் நடித்து பிரபலமானார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்:&lt;/strong&gt; Actor Jai: கோவிலில் எனக்கு நடந்த அவமானம்.! இஸ்லாம் மதத்திற்கு மாறியது குறித்து உண்மைகளை உடைத்த நடிகர் ஜெய்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பானுபிரியா தனது கிளாசிக்கல் நடனத்தால் மிகவும் பிரபலமானார். பல படங்களில் அவரது நடனத்தைப் பார்த்து ரசிகர்கள் அசந்துபோனார்கள். குறிப்பாக, மீன் போன்ற அவரது கண்களுக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். படங்களில் அவரது கண்களை க்ளோசப்பில் காட்டுவதற்கென்றே தனி ஷாட்கள் இருக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்:&lt;/strong&gt; Karuppu Controversy: கருப்பு பட டைரக்டர் ஆர்.ஜே.பாலாஜியை வறுத்தெடுக்கும் சூர்யா ஃபேன்ஸ்.! இதுதான் காரணமா?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;80-களின் நடிகைகள் ஒவ்வொரு வருடமும் 'ரீயூனியன்' என்ற பெயரில் சந்திக்கிறார்கள். ஆனால் பானுபிரியா மட்டும் இதில் கலந்துகொள்வதில்லை. அவரை அழைக்கவில்லையா? அல்லது அவரே வரவில்லையா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுவது வழக்கம். இந்த நிலையில் பானுப்பிரியா குறித்து சில உண்மைகளை நடிகை குஷ்பு வெளிப்படுத்தியுள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்:&lt;/strong&gt; Savitri: இறப்பதற்கு முன் நடிகையர் திலகம் சாவித்திரி கூறிய கடைசி வார்த்தைகள்.! கண்ணீர் வரவைக்கும் இறுதி நிமிடங்கள்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நடிகை குஷ்பு, 'நாங்கள் பானுபிரியாவை இரண்டு-மூன்று முறை ரீயூனியனுக்கு அழைத்தோம். ஆனால் அவர் வரவில்லை. அவர் யாருடனும் அவ்வளவு எளிதாக பழகமாட்டார். ஷூட்டிங்கில் கூட அவர் தனியாகத்தான் இருப்பார். சினிமாவில் பானுபிரியாவுக்கு நண்பர்கள் யார் என்று கேட்டால், யாரும் இல்லை என்றுதான் பதில் வரும். அவர் எப்போதும் எல்லோரிடமிருந்தும் விலகியே இருப்பார்' என்று கூறியுள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்: &lt;/strong&gt;Roja Selvamani: எந்த ஹீரோவும் என்கிட்டே நெருங்க கூட இல்ல.! அதுக்கு காரணம் என்ன தெரியுமா? பல ஆண்டுகளுக்குப் உண்மைகளை போட்டு உடைத்த நடிகை ரோஜா.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;80-களின் இந்த ரீயூனியனில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தித் திரையுலகைச் சேர்ந்த பல நட்சத்திரங்கள் உள்ளனர். ஆனால் மலையாளத்திலிருந்து மம்மூட்டி, தமிழிலிருந்து கமல்ஹாசன், தெலுங்கிலிருந்து பாலகிருஷ்ணா ஆகியோர் இந்தக் குழுவில் இல்லை. 'எங்க டீம்ல 36 பேர் இருக்காங்க, எல்லோரும் சேர்ந்து பிளான் பண்ணி நிகழ்ச்சிகளுக்குப் போவோம்' என்று குஷ்பு கூறியுள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்:&lt;/strong&gt; பாட முடியாமல் கதறி அழுத S ஜானகி.! பாதியிலே ரெக்கார்டிங்கை நிறுத்திய இளையராஜா.! ஜானகியை அழ வைத்த வரிகள்.! எந்த பாட்டு தெரியுமா?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முன்பு ஒரு பேட்டியில், ஒரு இயக்குநர் பானுபிரியா பற்றிப் பேசினார். 'பானுபிரியா ரொம்ப நல்ல மனசுக்காரங்க. ஆனால் அம்மாவின் சுயநலம், கணவரின் பழக்கவழக்கங்கள் அவரது வாழ்க்கையை பாழாக்கியது. சொத்துக்களை அம்மா பெயரில் எழுதி வைத்துவிட்டு அமெரிக்கா சென்றார். அங்கே கணவரால் கஷ்டப்பட்டு, சென்னை திரும்பினார். அதன் பிறகு உடல்நலக்குறைவு அவரை பாதித்தது' என்று அந்த இயக்குநர் கூறியிருந்தார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>cinema</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/khushbu-sundar-reveals-the-real-reason-why-bhanupriya-skips-the-80s-heroines-reunion-explained-q6radp0"/>
        </item>
        <item>
            <title><![CDATA[CM Vijay ராஜினாமா செய்த தொகுதியில் போட்டியிடும் ராகவா லாரன்ஸ்? பரபரக்கும் திருச்சி கிழக்கு! ஜூன் 11 முக்கிய அறிவுப்பு!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/is-raghava-lawrence-set-to-contest-from-trichy-east-all-eyes-on-june-11-s305aps</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/is-raghava-lawrence-set-to-contest-from-trichy-east-all-eyes-on-june-11-s305aps</guid>
            <pubDate>Sun, 07 Jun 2026 12:53:55 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தமிழக அரசியல் களத்தில் தற்போது திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. இந்தத் தொகுதியில் ராகவா லாரன்ஸ் போட்டியிடக்கூடும் என்ற தகவல் காட்டுத்தீ போல பரவி வரும் நிலையில், அவர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktgf49b91m482ey25g153bs4,imgname-raghava-lawrence---trichy-east-1780816684393.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழக அரசியல் களத்தில் தற்போது திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. இந்தத் தொகுதியில் ராகவா லாரன்ஸ் போட்டியிடக்கூடும் என்ற தகவல் காட்டுத்தீ போல பரவி வரும் நிலையில், அவர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழக சட்டசபை தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் வெற்றி பெற்ற முதல்வர் ஜோசப் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, அங்கு இடைத்தேர்தல் நடைபெற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;இந்த இடைத்தேர்தலில் த.வெ.க. சார்பில் போட்டியிடப்போவது யார் என்ற கேள்வி எழுந்தபோது, சமூக வலைத்தளங்களில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் அல்லது நடிகர் ராகவா லாரன்ஸ் ஆகியோரின் பெயர்கள் தீவிரமாக அடிபட்டன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த விவகாரம் குறித்து மௌனம் கலைத்த ராகவா லாரன்ஸ், இது தொடர்பான ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:&lt;/p&gt;&lt;p&gt;&quot;திருச்சி கிழக்கு தொகுதி தேர்தலில் நான் போட்டியிடுவதாக வெளியாகும் செய்திகள் குறித்து பலரும் என்னை தொடர்புகொண்டு விளக்கம் கேட்கின்றனர். இது தொடர்பான வதந்திகள் மற்றும் ஊகங்கள் ஒரு எல்லையைத் தாண்டிவிட்டன,&quot; என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தற்போது தாம் 'பென்ஸ்' திரைப்படத்தின் படப்பிடிப்பில் முழுமையாக ஈடுபட்டுள்ளதாகவும், அந்தப் பணி ஜூன் 10-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளதாகவும் லாரன்ஸ் கூறியுள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;இதனைத் தொடர்ந்து, வரும் ஜூன் 11-ம் தேதி காலை 9.30 மணிக்கு, தனது தாயாரின் ஆசியுடன், தனது வாழ்க்கையின் மிக முக்கியமான முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;Hi everyone, News about me contesting in Trichy East election has been circulating across various media platforms.&amp;nbsp;All my Media friends have been reaching out to me over phone and requesting to meet me asking for clarification. Since the speculation has grown to a point where I&hellip; pic.twitter.com/68ZyN6P0l9&lt;/p&gt;&lt;p&gt;&mdash; Raghava Lawrence (@offl_Lawrence) June 7, 2026&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ரசிகர்களிடையே எழும் கேள்விகள்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;ராகவா லாரன்ஸின் இந்த அறிவிப்பு அரசியல் தொடர்பானதாக இருக்குமா அல்லது சமூக சேவை அல்லது புதிய திரைப்பட அறிவிப்பு என வேறேதேனும் இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மற்றும் அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எது எப்படியோ, ஜூன் 11-ம் தேதி லாரன்ஸ் சொல்லப்போகும் அந்தச் செய்தி, தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>cinema</category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/is-raghava-lawrence-set-to-contest-from-trichy-east-all-eyes-on-june-11-s305aps"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Swasika : கணவரைப் பற்றி உல்டா பேச்சு... கருப்பு பட நடிகையை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/swasika-vijay-faces-backlash-for-contradictory-statements-on-marriage-in-tamil-and-malayalam-interviews-va13fp3</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/swasika-vijay-faces-backlash-for-contradictory-statements-on-marriage-in-tamil-and-malayalam-interviews-va13fp3</guid>
            <pubDate>Mon, 08 Jun 2026 12:39:16 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Swasika Vijay Faces Backlash : தன் கணவரைச் சார்ந்து வாழ்வதுதான் தனக்கு பிடிக்கும் என்றும், அவருக்காக சமைப்பது, பணத்துக்காக அவரை நம்பியிருப்பது போன்ற விஷயங்கள் தனது 'ஃபேன்டஸி' என்றும் நடிகை ஸ்வாசிகா விஜய் கூறியுள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktk0zf2025nnfzz4a6zhj3zd,imgname-swasika-1780902509632.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Swasika Vijay Faces Backlash : தன் கணவரைச் சார்ந்து வாழ்வதுதான் தனக்கு பிடிக்கும் என்றும், அவருக்காக சமைப்பது, பணத்துக்காக அவரை நம்பியிருப்பது போன்ற விஷயங்கள் தனது 'ஃபேன்டஸி' என்றும் நடிகை ஸ்வாசிகா விஜய் கூறியுள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;டிவி சீரியல்கள் மூலம் மீடியாவுக்குள் நுழைந்து, பிறகு சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை ஸ்வாசிகா. மலையாளத்தில் பல முக்கிய கேரக்டர் ரோல்களில் நடித்து கைதட்டல் வாங்கிய இவர், தற்போது தமிழ் சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் இவருக்கு திருமணம் நடந்தது. அப்போது, தினமும் காலையில் கணவரின் காலில் விழுந்து வணங்குவதாக ஸ்வாசிகா சொன்னது மலையாளத்தில் பெரும் ட்ரோல்களுக்கு வழிவகுத்தது. இந்நிலையில், இப்போது ஒரு தமிழ் பேட்டியில் கணவர் குறித்து அவர் பேசியிருப்பது மீண்டும் கவனம் ஈர்த்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&quot;மலையாள இன்டர்வியூக்களில் இதையெல்லாம் சொல்லி நான் நிறைய ட்ரோல்களை வாங்கியிருக்கேன். தமிழ்ல இதுவரைக்கும் அப்படி எதுவும் வரல. இங்கேயும் சொல்லி ட்ரோல் வாங்கலாம்னு இருக்கேன். நான் வீட்ல இருந்தா, என் கணவருக்கு நானே சமைச்சுக் கொடுத்து, அந்தப் பாத்திரத்தையெல்லாம் கழுவி வெச்சுட்டு, அதுக்கப்புறம் சாப்பிடறது எனக்கு ரொம்பப் பிடிக்கும். இது ஏதோ பெரிய விஷயம்னு நான் சொல்லல. ஆனா, அப்படிச் செய்யறது எனக்குப் பிடிக்கும். என்கிட்ட பேங்க் பேலன்ஸ் எல்லாம் இருக்கு. ஆனாலும், என் போன் பில் கட்டச் சொல்லி கணவர்கிட்டதான் சொல்வேன்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எனக்குப் பணம் வேணும்னாலும் அவர்கிட்டதான் கேட்பேன். என்கிட்ட காசு இருந்தாலும், அனுப்பச் சொல்லுவேன். ஒருவேளை இதெல்லாம் என் ஃபேன்டஸியா இருக்கலாம். ஆனா எனக்கு இது பிடிச்சிருக்கு. நான் செய்யற மாதிரி எல்லாரும் வாழ்க்கையில செய்யணும்னு நான் சொல்ல மாட்டேன். அதுக்கு அவசியமும் இல்லை. ஆனா, அப்படி இருக்கிறது எனக்குப் பிடிக்கும். அதுக்கு காரணம் என்னன்னு எனக்குத் தெரியல. ஆனா பிடிச்சிருக்கு.&quot;&lt;/p&gt;&lt;p&gt;&quot;இந்த Gen Z டேர்ம், அவங்களோட ரிலேஷன்ஷிப்ல இருக்கிற 'சிச்சுவேஷன்ஷிப்' என்னன்னு எனக்குத் தெரியாது. அதைப் பத்தி நான் யோசிக்கிறதும் இல்லை. என் கரியரை நான் எப்படி கவனமா கொண்டு போறேனோ, அதே மாதிரிதான் குடும்ப வாழ்க்கையையும் கொண்டு போறேன். 9 வயசுல சம்பாதிக்க ஆரம்பிச்சேன். எல்லாமே எனக்காக நானேதான் செஞ்சேன். இப்போ அது போர் அடிக்குது. எனக்கு ஏதாவது வேணும்னா கணவர்கிட்டதான் சொல்வேன். கணவரைச் சார்ந்து இருக்கிறது எனக்கு சந்தோஷமா இருக்கு. அந்த ஃபேன்டஸியை நான் என்ஜாய் பண்றேன்,&quot; என்று ஸ்வாசிகா கூறியுள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த வீடியோ வெளியான பிறகு, பலரும் கமென்ட் செய்து வந்தனர். தமிழ்நாட்டு ரசிகர்கள், &quot;இதுல ட்ரோல் பண்ண என்ன இருக்கு? நிறைய பெண்களுக்கு இதெல்லாம் பிடிக்கும்,&quot; என்று ஆதரவாகக் கருத்து தெரிவித்தனர். ஆனால், இதைப் பார்த்த மலையாள ரசிகர்கள், &quot;மலையாளப் பேட்டியில அவங்க இப்படிச் சொல்லவே இல்லையே. அதனாலதான் அவங்களை எல்லாரும் ட்ரோல் செஞ்சாங்க. அது தெரிஞ்சதால இப்போ கதையை மாத்தி இப்படிப் பேசுறாங்க&quot;, &quot;அப்போ சொன்னது இது இல்லையே&quot; என்று கமென்ட் செய்து வருகின்றனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>cinema</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/swasika-vijay-faces-backlash-for-contradictory-statements-on-marriage-in-tamil-and-malayalam-interviews-va13fp3"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Slum Dog : விஜய் சேதுபதியின் ஸ்லம் டாக் பட கதை இதுதானா? டீசரில் இதெல்லாம் நோட் பண்ணீங்களா..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/vijay-sethupathi-and-puri-jagannadh-pan-indian-film-slum-dog-teaser-decoding-yafuqzi</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/vijay-sethupathi-and-puri-jagannadh-pan-indian-film-slum-dog-teaser-decoding-yafuqzi</guid>
            <pubDate>Tue, 09 Jun 2026 11:16:58 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Slum Dog Teaser Decoding : பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள ஸ்லம் டாக் திரைப்படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktnara2yyytztc8367reqd50,imgname-vijay-setupathis-slum-dog-teaser-out-1780979869789.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Slum Dog Teaser Decoding : பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள ஸ்லம் டாக் திரைப்படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஹீரோவாகவும், தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஹிட் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்திலும் உருவாகும் பான்-இந்தியன் படமான &quot;ஸ்லம் டாக்&quot; டீசர் வெளியாகி பட்டையைக் கிளப்பி வருகிறது. &quot;33 டெம்பிள் ரோடு&quot; என்பது இந்தப் படத்தின் டேக்லைன். பூரி கனெக்ட்ஸ் பேனரில் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர், ஜேபி மோஷன் பிக்சர்ஸ் பேனரில் ஜே.பி. நாராயண் ராவ் கொண்ட்ரோள்ள ஆகியோருடன் இணைந்து இந்தப் பிரம்மாண்ட படத்தை தயாரிக்கின்றனர். சம்யுக்தா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரசிகர்களை சீட் நுனியில் உட்கார வைக்கும் அளவுக்கு டீசர் மிரட்டலாக இருக்கிறது. இதுவரை ரசிகர்கள் பார்த்திராத ஒரு மாஸ் மற்றும் ஸ்டைலிஷான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் தோன்றுகிறார். சுமார் ஒன்றேகால் நிமிடம் ஓடும் இந்த டீசரின் முக்கிய சிறப்பம்சமே விஜய் சேதுபதியின் அதிரடி ஆக்&zwnj;ஷன் காட்சிகள் தான். ஒரு காட்சியில் பார்வையற்றவராகவும், மற்ற காட்சிகளில் சாதாரணமாகவும் விஜய் சேதுபதி தோன்றுவது படம் குறித்த எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. டீசரில் வரும் வசனங்கள் மூலம், பிச்சைக்காரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தக் கதை அமைந்திருக்கும் என யூகிக்க முடிகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முன்னதாக வெளியான இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்தது. படத்தின் கதையை இயக்குநரே எழுதியுள்ளார். ஆக்&zwnj;ஷன், எமோஷன், மாஸ், இசை, காமெடி என அனைத்தும் கலந்த ஒரு கமர்ஷியல் பேக்கேஜாக, தனது கரியரின் மிகப்பெரிய படமாக பூரி ஜெகன்நாத் 'ஸ்லம் டாக்'கை உருவாக்கியுள்ளார் என்பதை டீசர் காட்சிகள் உறுதி செய்கின்றன.&lt;/p&gt;&lt;p&gt;பாலிவுட் நடிகை தபு மற்றும் கன்னட நடிகர் விஜய் குமார் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். விஜய் குமார் இதில் நெகடிவ் கதாபாத்திரத்தில் வருகிறார். மேலும், சரீனா வஹாப், பிரம்மாஜி, விடிவி கணேஷ் ஆகியோரும் தங்களது நகைச்சுவையான நடிப்பால் படத்திற்கு பலம் சேர்த்துள்ளனர். தேசிய விருது பெற்ற ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்', 'அனிமல்' போன்ற சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்த இவர், தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்&zwnj;ஷன் பணிகள் அனைத்து மொழிகளிலும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் பான்-இந்தியன் படமாக இது வெளியாக உள்ளது. மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள்: எழுத்து, இயக்கம் - பூரி ஜெகன்நாத், தயாரிப்பாளர்கள் - பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், ஜே.பி. நாராயண் ராவ் கொண்ட்ரோள்ள, பேனர் - பூரி கனெக்ட்ஸ், ஜேபி மோஷன் பிக்சர்ஸ், ஒளிப்பதிவு - சாம் கே. நாயுடு, இசை - ஹர்ஷவர்தன் ராமேஷ்வர், எடிட்டர் - சந்தோஷ் நூசிலா, கலை இயக்குநர்கள் - ஆஷிஷ் தேஜா, ஜானி ஷேக் என மிகப்பெரிய டெக்னிக்கல் டீம் இப்படத்தில் பணியாற்றி உள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>cinema</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/vijay-sethupathi-and-puri-jagannadh-pan-indian-film-slum-dog-teaser-decoding-yafuqzi"/>
        </item>
    </channel>
</rss>
