<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes"?>
<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Fri, 10 Jul 2026 12:59:56 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss/cinema" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[Jana Nayagan: விஜய்யின் ஜனநாயகன் படத்துக்கு 'A' சான்றிதழ்! ரன்னிங் டைம், ரிலீஸ் தேதி என்ன?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/vijay-jananayagan-movie-cbfc-a-certificate-runtime-183-mins-20ycr61</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/vijay-jananayagan-movie-cbfc-a-certificate-runtime-183-mins-20ycr61</guid>
            <pubDate>Thu, 09 Jul 2026 22:40:16 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Jana Nayagan: நடிகரும், முதல்வருமான விஜய்யின் 'ஜனநாயகன்' படத்துக்கு பல மாத தாமதத்துக்குப் பிறகு சென்சார் போர்டு 'A' சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனால் படம் விரைவில் தியேட்டர்களில் வெளியாகும் என ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kr988jsvfse5nnpf4vgdm5y9,imgname-jananayakan-1778427120443.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Jana Nayagan: நடிகரும், முதல்வருமான விஜய்யின் 'ஜனநாயகன்' படத்துக்கு பல மாத தாமதத்துக்குப் பிறகு சென்சார் போர்டு 'A' சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனால் படம் விரைவில் தியேட்டர்களில் வெளியாகும் என ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ்நாடு முதல்வரும், நடிகருமான சி. ஜோசப் விஜய்யின் 'ஜனநாயகன்' படத்திற்கு சென்சார் போர்டு 'A' சர்டிபிகேட் (வயது வந்தவர்களுக்கு மட்டும்) கொடுத்துள்ளது. ரொம்ப நாளாகத் தாமதமாகிக்கொண்டிருந்த இந்தப் படம், இனி தியேட்டர்களுக்கு வரப்போகிறது. படத்தினுடைய ரிலீஸுக்காக ரொம்ப ஆவலாகக் காத்துக்கொண்டு இருந்த ரசிகர்கள், இந்த அறிவிப்பால் உற்சாகமாகியிருக்கிறார்கள். CBFC-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் படத்தினுடைய நீளம் 183 நிமிடங்கள் என்றும் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சென்சார் சான்றிதழ் பிரச்சனையால், விஜய்யின் 'ஜன நாயகன்' படம் கடந்த பல மாதமாக ரிலீஸ் ஆகாமல் தாமதமாகிக் கொண்டு இருந்தது. முதலில், இந்தப் படத்தை ஜனவரி 9-ம் தேதி பொங்கலுக்கு ரிலீஸ் பண்ண திட்டமிட்டு இருந்தார்கள். படத்தில் சில காட்சிகள் மத உணர்வுகளைப் புண்படுத்தக்கூடும் என்று சொல்லி, CBFC சான்றிதழ் கொடுக்காமல் நிறுத்தி வைத்தார்கள். இதனால்தான் படத்திற்குச் சிக்கல் ஆரம்பித்தது. அப்போது, தனி நீதிபதி ஒருவர், படத்திற்கு U/A 16+ சான்றிதழ் கொடுக்கச் சொல்லி CBFC-க்கு உத்தரவிட்டார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இது படக்குழுவிற்குத் தற்காலிக நிம்மதியைக் கொடுத்தாலும், CBFC இதை எதிர்த்து உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்சிற்குப் போனார்கள். அங்கே, ஜனவரி 9-ம் தேதி தனி நீதிபதியினுடைய உத்தரவிற்குத் தடை விதித்தார்கள். இதனால், படத்தினுடைய தயாரிப்பாளர்கள் உயர் நீதிமன்றத் தீர்ப்பிற்கு உடனடித் தடை கேட்டு சுப்ரீம் கோர்ட்டிற்குப் போனார்கள். இதுமட்டுமில்லாமல், படத்தினுடைய சில காட்சிகள் ஆன்லைனில் லீக் ஆகிப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. படத்தினுடைய தயாரிப்பு நிறுவனமான KVN புரொடக்ஷன்ஸ், 'லீக் ஆன காட்சிகளை யாரும் பார்க்கவோ, பகிரவோ வேண்டாம்' என்று ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;படத்தினுடைய சில பாகங்கள், சில சமயம் முழுப் படமுமே சட்டவிரோதமாக ஆன்லைனில் பரவியிருப்பதாக அவர்கள் சொன்னார்கள். இந்த விஷயத்தில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்துக் கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார்கள். 'ஜனநாயகன்' படத்தை H. வினோத் இயக்கியிருக்கிறார்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;KVN புரொடக்ஷன்ஸ் சார்பாக வெங்கட் K. நாராயணா தயாரித்திருக்கிறார். படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசை அமைத்திருக்கிறார். இந்தப் படத்தில் விஜய், பாபி தியோல் கூடவே மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி, நரேன் என்று பல முக்கிய நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>cinema</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/vijay-jananayagan-movie-cbfc-a-certificate-runtime-183-mins-20ycr61"/>
        </item>
        <item>
            <title><![CDATA[பாரதிராஜா, பாக்யராஜை தொடர்ந்து தமிழ் திரையுலகில் மற்றுமொரு எதிர்பாரா மரணம் - சோகத்தில் ரசிகர்கள்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/national-award-winning-filmmaker-noted-cinematographer-and-writer-chezhiyan-passed-away-2loce8z</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/national-award-winning-filmmaker-noted-cinematographer-and-writer-chezhiyan-passed-away-2loce8z</guid>
            <pubDate>Fri, 10 Jul 2026 09:44:41 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;cinematographer Chezhiyan passed away : தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளராக வலம் வந்த செழியன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 57.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kx53jmn0dxkpvrp3rr6v3q6p,imgname-chezhiyan-1783656698528.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;cinematographer Chezhiyan passed away : தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளராக வலம் வந்த செழியன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 57.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ் திரைப்பட உலகில் தனது தனித்துவமான ஒளிப்பதிவு பாணி மற்றும் யதார்த்தமான காட்சியமைப்புகளால் தனி அடையாளத்தை உருவாக்கிய தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன் இன்று காலை காலமானார். அவரது மறைவு செய்தி திரையுலகினரையும், திரைப்பட ரசிகர்களையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;இயற்கை ஒளியையும், வாழ்வியலை மையமாகக் கொண்ட காட்சிகளையும் மிக நேர்த்தியாக திரையில் பதிவு செய்வதில் செழியன் தனி முத்திரை பதித்தவர். பல்வேறு இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றிய அவர், பரதேசி, கல்லூரி, தென்மேற்கு பருவக்காற்று, ஜோக்கர் உள்ளிட்ட பாராட்டுப் பெற்ற திரைப்படங்களில் தனது ஒளிப்பதிவு திறமையை வெளிப்படுத்தி விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்தார். அவரது கேமரா மொழி, கதையின் உணர்வுகளை இயல்பாக பார்வையாளர்களிடம் கொண்டு சேர்த்ததாகப் பலரும் பாராட்டியுள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒளிப்பதிவாளராக மட்டுமல்லாமல், இயக்குநராகவும் செழியன் குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்தார். அவர் இயக்கிய டூலெட் திரைப்படம் தேசிய திரைப்பட விருதைப் பெற்றதுடன், உலகின் பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றது. இந்தப் படம் மூலம் தமிழ் சினிமாவின் படைப்பாற்றலை உலக அரங்கில் எடுத்துச் சென்ற இயக்குநர்களில் ஒருவராகவும் அவர் மதிக்கப்பட்டார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த செழியன், இன்ஜினியரிங் படித்து முடித்து ஒளிப்பதிவாளராகும் ஆசையுடன் பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளராக சேர்ந்து பணியாற்றினார். பாலாஜி சக்திவேல் இயக்கிய கல்லூரி படம் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார் செழியன். இதையடுத்து ஏராளமான ஹிட் படங்களில் பணியாற்றிய அவர், தி ஃபிலிம் ஸ்கூல் என்கிற திரைப்பட பயிற்சி அமைப்பை நடத்தி வந்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தனது படைப்புகள் மூலம் தமிழ் சினிமாவிற்கு புதிய காட்சிமொழியை அறிமுகப்படுத்திய செழியனின் மறைவு, திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது. அவரது படைப்புகளும், திரைப்படங்களுக்காக அவர் விட்டுச் சென்ற கலைப் பாரம்பரியமும் என்றும் ரசிகர்களின் நினைவில் நிலைத்திருக்கும். பாரதிராஜா, பாக்யராஜ் என இரண்டு பெரும் ஜாம்பவான்களின் மறைவில் இருந்து மீள முடியாமல் உள்ள தமிழ் சினிமா ரசிகர்களுக்கு செழியனின் மறைவு மற்றுமொரு பேரிடியாக அமைந்துள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>cinema</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/national-award-winning-filmmaker-noted-cinematographer-and-writer-chezhiyan-passed-away-2loce8z"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Siragadikka Aasai : அருணிடம் அடிவாங்கிய சீதா.... ரோகிணிக்கு உதவிய ஸ்ருதி; வசமா சிக்கப்போகும் மனோஜ்..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/shruti-help-rohini-in-siragadikka-aasai-serial-july-07-today-1050th-episode-3kao7ua</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/shruti-help-rohini-in-siragadikka-aasai-serial-july-07-today-1050th-episode-3kao7ua</guid>
            <pubDate>Tue, 07 Jul 2026 10:20:47 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial 07 July 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் சத்யாவின் கல்யாணத்திற்கு தன்னிடம் பொய் சொல்லிவிட்டு சென்ற சீதாவை அடிவெளுத்துள்ளார் அருண்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwxedwdtq75ekwbq8ps5qav1,imgname-siragadikka-aasai---2026-07-07t101607.182-1783399641530.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial 07 July 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் சத்யாவின் கல்யாணத்திற்கு தன்னிடம் பொய் சொல்லிவிட்டு சென்ற சீதாவை அடிவெளுத்துள்ளார் அருண்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;சிறகடிக்க ஆசை&lt;/strong&gt; சீரியலின் இன்றைய எபிசோடில், ரேகாவும், சத்யாவும் கல்யாணம் முடிந்த கையோடு வீட்டுக்கு வருகிறார்கள். ரேகா ரொம்ப வசதியா வாழ்ந்த பொண்ணு, இந்த வீட்டுல படுக்குறதுக்கு ஒரு கட்டில் கூட இல்லையே என முத்துவும், மீனாவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதைக்கேட்ட ரேகா, இதுவரை நான் வசதியாக வாழ்ந்தாலும் சந்தோஷமாக இல்லை, ஆனால் இங்க எனக்காக நீங்கெல்லாம் இருக்கீங்க, அதனால எனக்கு எந்த ஒரு கவலையும் இல்லை. எனக்கு இந்த வாழ்க்கை தான் புடிச்சிருக்கு என கூறுகிறார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Siragadikka Aasai : விஜயாவுக்கு தெரியாமல் இரண்டாம் கல்யாணம்... வில்லங்கத்தில் சிக்கப்போகும் மனோஜ்..!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சீதா தன்னுடைய தம்பி சத்யாவின் கல்யாணம் முடிந்ததால் வீட்டுக்கு செல்கிறார். அங்கு அருண், சீதா மீது பயங்கர கோபத்தில் இருக்கிறார். ஏனெனில் குலதெய்வம் கோவிலுக்கு போறேன்னு பொய் சொல்லிட்டு, கல்யாணத்துக்கு போயிட்டு வந்த சீதாவுக்கு கோபத்தில் கன்னத்திலேயே பளார் என அறைவிடுகிறார். அருண் அடித்ததில் சீதாவுக்கு இரத்தம் வருகிறது. அந்த அளவுக்கு தன்னுடைய மனைவியை அடிச்சு டார்ச்சர் பண்ணுகிறார் அருண். அவரின் இந்த அட்டூழியங்களை எல்லாம் சகித்துக் கொண்டிருக்கிறார் சீதா.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மறுபுறம் ஸ்ருதியின் ஹோட்டலுக்கு கனகாவின் அம்மா மேனகா வருகிறார். அவர் தன்னுடைய மகள் கனகாவின் திருமணத்திற்காக உணவு ஆர்டர் கொடுக்க வந்திருக்கிறார். பேப்பர்ல தான் உங்க ஹோட்டலோட விளம்பரத்தை பார்த்தேன். எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அதனால் தான் என் பொண்ணோட கல்யாணத்துக்கு ஆர்டர் கொடுக்க வந்தேன். வீட்டிலேயே சிம்பிளா பண்றோம், 25 பேர் தான் வருவாங்க, அதனால நீங்க தான் அந்த பங்க்&zwnj;ஷனுக்கு நல்லபடியா, உணவு டெலிவரி செய்ய வேண்டும் என கேட்கிறார் மேனகா.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அந்த நேரம் பார்த்து மீனா, பூ கொடுப்பதற்காக அங்கு வருகிறார். அப்போது கனகாவின் அம்மாவிடம், பூ அலங்காரத்திற்கு, இவங்களிடம் ஆர்டர் கொடுங்க, கம்மி ரேட்ல, நல்லா பண்ணுவாங்க என சிபாரிசு செய்கிறார். அதற்கு கனகாவின் அம்மா மேனகாவும் ஓகே சொல்லிவிடுகிறார். பின்னர் அவர்கள் இருவரிடமும் அட்வான்ஸ் பணத்தை கொடுத்துவிட்டு செல்கிறார் மேனகா. அந்த நேரத்தில் ரோகிணியும் ஸ்ருதியின் ரெஸ்டாரண்டுக்கு வருகிறார். அவர் மீனாவிடம், தான் டைவர்ஸ் கொடுக்க சம்மதம் தெரிவித்த விஷயத்தை சொல்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சீக்கிரமா மனோஜை 5 லட்சத்தை கொடுக்க சொன்னீங்கனா, அந்த பணத்தை வாங்கிட்டு நான் ஊரைவிட்டே போயிடுவேன் என சொல்கிறார். ரோகிணி பணக்கஷ்டத்தில் இருப்பதை உணர்ந்த ஸ்ருதி, அங்கு வந்திருந்த கனவாவின் அம்மா மேனகாவிடமே, பொண்ணுக்கு மேக் அப் போடும் ஆர்டரை பெற்றுக் கொடுக்கிறார். இறுதியாக வீட்டில் இருக்கும் விஜயா, மனோஜிடம் நாளைக்கு கோவிலுக்கு போகணும் என சொல்கிறார். நாளை தான் கல்யாணம் என்பதால், மனோஜ், தனக்கு வேலை இருப்பதாக சாக்குபோக்கு சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>cinema</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/shruti-help-rohini-in-siragadikka-aasai-serial-july-07-today-1050th-episode-3kao7ua"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Velpari Movie : ஷங்கரின் வேள்பாரியில் சூர்யாவா? தனுஷா? யார் ஹீரோ?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/shankar-velpari-movie-suriya-or-dhanush-who-is-the-hero-4ywed3u</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/shankar-velpari-movie-suriya-or-dhanush-who-is-the-hero-4ywed3u</guid>
            <pubDate>Fri, 10 Jul 2026 12:30:55 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Velpari Movie : இயக்குனர் ஷங்கர், சு.வெங்கடேசன் எழுதிய புகழ்பெற்ற நாவலான 'வீரயுக நாயகன் வேள்பாரி'யை திரைப்படமாக எடுக்கத் திட்டமிட்டது முதலே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதில் யார் ஹீரோவாக நடிப்பார்கள் என்ற கேள்வி தற்போது பெசுபொருளாகியுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kx5cqbh26355mjqrcv14fdhj,imgname-chatgpt-image-jul-10--2026--12-21-09-pm-1783666290210.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Velpari Movie : இயக்குனர் ஷங்கர், சு.வெங்கடேசன் எழுதிய புகழ்பெற்ற நாவலான 'வீரயுக நாயகன் வேள்பாரி'யை திரைப்படமாக எடுக்கத் திட்டமிட்டது முதலே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதில் யார் ஹீரோவாக நடிப்பார்கள் என்ற கேள்வி தற்போது பெசுபொருளாகியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இயக்குனர் ஷங்கர் தற்போது தொடர்ச்சியான சில சவாலான சூழல்களைச் சந்தித்து வருகிறார். அவரது இயக்கத்தில் வெளியான 'இந்தியன் 2' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது, அதனைத் தொடர்ந்து ராம் சரண் நடிப்பில் வெளியான 'கேம் சேஞ்சர்' திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்தச் சூழலில், தனது அடுத்த படமான 'வேள்பாரி' மூலம் ஒரு பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் ஷங்கர் உள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;'வேள்பாரி' நாவலின் கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமான, அதே சமயம் பிரம்மாண்டத்தை தாங்கக்கூடிய ஒரு கதாநாயகன் யார் என்பதுதான் தற்போதைய ஹாட் டாபிக். ஆரம்பத்தில் சூர்யா அல்லது தனுஷ் இந்தப் படத்தில் நடிக்கக்கூடும் என்று பரவலாகப் பேசப்பட்டது. ஆனால், தற்போதைய நிலவரப்படி, அவர்கள் இருவருமே ஏற்கனவே பிற இயக்குனர்களின் படங்களில் பிஸியாக இருப்பதால், வேள்பாரி படத்தில் அவர்களது பங்களிப்பு குறித்த ஐயம் எழுந்துள்ளது.&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;சூர்யா: &lt;/strong&gt;தனது 48-வது படத்தை த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;தனுஷ்: &lt;/strong&gt;ஓம் படத்தைத் தொடர்ந்து தமிழரசன் பச்சமுத்து மற்றும் வெங்கட் பிரபு என வரிசையாகப் பல திட்டங்களைக் கைவசம் வைத்துள்ளார்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;இந்தச் சூழலில், சமூக வலைத்தளங்களிலும் திரை வட்டாரங்களிலும் பல்வேறு யூகங்கள் வலம் வருகின்றன. குறிப்பாக, 'வேள்பாரி' போன்ற வரலாற்றுப் பின்னணி கொண்ட கதைக்களத்திற்கு, தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் மட்டுமின்றி, திறமையான இளம் நடிகர்கள் யாராவது தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதா என்றும் விவாதிக்கப்படுகிறது. ஷங்கர் போன்ற ஒரு இயக்குனர், காலத்திற்கு ஏற்ப எத்தகைய ஆச்சரியமான தேர்வை மேற்கொள்வார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;Suriya-Jyothika : சூர்யா-ஜோதிகாவின் சொத்து மதிப்பு எவ்ளோ தெரியுமா? ராஜா-ராணியின் அசைக்க முடியாத சாம்ராஜ்யம்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;2026 ஜூன் மாதமே படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. இந்தத் தாமதம் ரசிகர்களைச் சற்றே சோகத்தில் ஆழ்த்தினாலும், படத்தின் தரம் குறித்து எந்த சமரசமும் செய்து கொள்ளக்கூடாது என்பதில் ஷங்கர் உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;தமிழர் வரலாற்றைப் பேசும் இந்த பிரம்மாண்ட படைப்பில், பாரி மன்னனாக எந்த நடிகர் உருவெடுக்கப் போகிறார் என்ற விடைக்காக ஒட்டுமொத்த ரசிகர் கூட்டமும் ஆவலோடு காத்திருக்கிறது. ஷங்கரின் இந்த 'வேள்பாரி' அப்டேட் எப்போது வரும்? பொறுத்திருந்து பார்ப்போம்!&lt;/p&gt;&lt;p&gt;ஏன் ஜெயிலர் 2 முதல் பாகத்தை விட பெஸ்ட்? முத்துவேல் பாண்டியனின் விஸ்வரூபமும், இறங்கி அடிக்கும் நெல்சனும்!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>cinema</category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/shankar-velpari-movie-suriya-or-dhanush-who-is-the-hero-4ywed3u"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Jana Nayagan படத்துக்கு முன் சென்சாரில் A சான்றிதழ் வாங்கிய ஒரே ஒரு விஜய் படம் எது தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/before-jana-nayagan-vijay-already-had-an-a-certified-film-9efaziz</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/before-jana-nayagan-vijay-already-had-an-a-certified-film-9efaziz</guid>
            <pubDate>Fri, 10 Jul 2026 11:40:27 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Vijay First A Certified Film : விஜய் நடித்த ஜன நாயகன் படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன் ஏ சர்டிபிகேட் வாங்கிய தளபதி படம் பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kx5a7bwkrm1axaw7q0k8xawj,imgname-jana-nayagan--1--1783663669139.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Vijay First A Certified Film : விஜய் நடித்த ஜன நாயகன் படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன் ஏ சர்டிபிகேட் வாங்கிய தளபதி படம் பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழக முதலமைச்சரும் நடிகருமான விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' திரைப்படத்திற்கு, மத்திய திரைப்படத் தணிக்கைக் குழு (CBFC) 'A' சான்றிதழ் வழங்கியுள்ளது. இதன் மூலம் நீண்ட நாட்களாக நிலவி வந்த சென்சார் சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;CBFC-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ள தகவலின்படி, 'ஜன நாயகன்' திரைப்படத்தின் மொத்த ரன்னிங் டைம் 183 நிமிடங்கள் என பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியாகியதையடுத்து, படத்தின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்நோக்கி இருந்த விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விஜய் படங்களுக்கு பெரும்பாலும் யு அல்லது யு/ஏ சான்றிதழ் தான் கிடைக்கும். ஆனால் ஜனநாயகனுக்கு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதை பார்த்ததும் ஏராளமானோர் முதன்முறையாக அவர் படத்துக்கு ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதாக நினைக்கின்றனர். ஆனால் 25 ஆண்டுகளுக்கு முன்பே விஜய் படம் ஒன்றிற்கு ஏ சான்றிதழ் கிடைத்திருக்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;அந்த படத்தின் பெயர் பகவதி, அதற்கு ஏன் ஏ சான்றிதழ் என்று தானே யோசிக்கிறீர்கள். அந்த சமயத்தில் சென்சார் போர்டு ரொம்ப ஸ்ட்ரிக்டாம். படத்தில் ஒரு ஆக்&zwnj;ஷன் காட்சியில் சிறிதாக ரத்தம் வருவதை காட்டினாலே ஏ சான்றிதழ் கொடுப்பார்களாம். அதனால் தான் பகவதி படத்திற்கும் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டதாக இயக்குநர் ஏ.வெங்கடேஷ் தெரிவித்திருந்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜன நாயகன் திரைப்படம் முதலில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில காட்சிகள் மத உணர்வுகளை பாதிக்கக்கூடும் என்ற காரணத்தால், CBFC சான்றிதழ் வழங்கப்படாமல் இருந்ததால் வெளியீடு தள்ளிப்போனது.&lt;/p&gt;&lt;p&gt;பின்னர், இந்த விவகாரம் நீதிமன்றத்தை சென்றடைந்தது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி, படத்திற்கு U/A 16+ சான்றிதழ் வழங்குமாறு CBFC-க்கு உத்தரவிட்டார். எனினும், அந்த உத்தரவை எதிர்த்து CBFC மேல்முறையீடு செய்ததைத் தொடர்ந்து, உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.&lt;/p&gt;&lt;p&gt;இதையடுத்து, தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தை அணுகி உடனடி நிவாரணம் கோரியது. இந்த சட்டப் போராட்டம் காரணமாகவே திரைப்படத்தின் வெளியீடு பல மாதங்கள் தாமதமானது. இதற்கிடையில், 'ஜன நாயகன்' திரைப்படத்தின் சில காட்சிகள் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியான சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை வெங்கட் கே. நாராயணா தயாரித்துள்ளார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இப்படத்தில் விஜய்யுடன் பாபி தியோல், மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி, நரேன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.&lt;/p&gt;&lt;p&gt;சென்சார் சிக்கல்கள் அனைத்தும் முடிவுக்கு வந்துள்ள நிலையில், 'ஜன நாயகன்' திரைப்படத்தின் புதிய வெளியீட்டு தேதி குறித்து தயாரிப்பு நிறுவனம் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>cinema</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/before-jana-nayagan-vijay-already-had-an-a-certified-film-9efaziz"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Siragadikka Aasai : கல்யாண வீட்டில் முத்து - மீனா என்ட்ரி... மனோஜ் சிக்கினாரா? எஸ்கேப் ஆனாரா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/manoj-tries-to-escape-after-seeing-muthu-in-siragadikka-aasai-serial-july-09-today-1052nd-episode-dcr37s3</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/manoj-tries-to-escape-after-seeing-muthu-in-siragadikka-aasai-serial-july-09-today-1052nd-episode-dcr37s3</guid>
            <pubDate>Thu, 09 Jul 2026 09:21:16 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial 09 July 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் திருமணம் நடைபெறும் வீட்டுக்கு முத்துவும் மீனாவும் வந்திருக்கிறார்கள். இதன் பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kx2frvvpwb8mx2m17ce4n335,imgname-siragadikka-aasai---2026-07-09t091546.378-1783568822134.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial 09 July 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் திருமணம் நடைபெறும் வீட்டுக்கு முத்துவும் மீனாவும் வந்திருக்கிறார்கள். இதன் பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;சிறகடிக்க ஆசை&lt;/strong&gt; சீரியலில் மனோஜ் பணத்திற்கு ஆசைப்பட்டு, வீட்டுக்கே தெரியாமல் கனகா என்கிற மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கிறார். மேலும் இந்த திருமணம் உங்களுக்கு டைவர்ஸ் ஆகும் முன்பே நடக்க வேண்டும் என கனகாவின் அம்மா கேட்டுக்கொண்டதை அடுத்து, மனோஜும் இந்த திருமணத்தை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வீட்டிலேயே நடத்தலாம் என ஐடியா கொடுக்கிறார். ஆனால் கனகாவின் அம்மா, திருமணத்திற்கான பூ ஆர்டரை மீனாவுக்கும், சமையல் ஆர்டரை ஸ்ருதிக்கும் கொடுத்துவிடுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Siragadikka Aasai : அருணிடம் அடிவாங்கிய சீதா.... ரோகிணிக்கு உதவிய ஸ்ருதி; வசமா சிக்கப்போகும் மனோஜ்..!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கல்யாண வீட்டில் அலங்கார வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு இருக்கும் முத்து மற்றும் மீனா ஆகியோரை மணமகளின் தாய் சந்திக்கிறார். அப்போது முத்துவைப் பார்த்ததும் அவருக்கு முதலில் அடையாளம் தெரியவில்லை. உடனே முத்து, &quot;என்னை நினைவில் இல்லையா? உங்கள் மகள் காணாமல் போனபோது நீங்கள் என் காரில் வந்தீர்கள். அப்போது இருவரும் சேர்ந்து அவரை தேடிக் கண்டுபிடித்தோமே&quot; என்று நினைவூட்டுகிறார். அதன் பிறகே அந்த பெண்ணின் தாய்க்கு முத்து யார் என்பது ஞாபகம் வருகிறது. மறுபுறம், ரவி மற்றும் ஸ்ருதி திருமண விருந்துக்கான உணவுகளை கொண்டு வந்து, அவற்றை மேல்தளத்தில் வைத்து அனைவருக்கும் பரிமாற ஏற்பாடு செய்கின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதே நேரத்தில், மணமகளுக்கு மேக்கப் போடுவதற்காக ரோகிணி வருகிறார். ஆரம்பத்தில் மேக்கப் போட மறுக்கும் மணமகளை, &quot;மாப்பிள்ளையை சந்திக்கும் போது அழகாக இருக்க வேண்டும்&quot; என்று சமாதானப்படுத்தி, இறுதியில் மேக்கப் செய்ய வைக்கிறார். இதற்கிடையில் மனோஜ், தனது நண்பருடனும் ஜோதிடருடனும் கனகாவின் வீட்டுக்கு வருகிறார். அவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்ற பிறகு, நேராக அறைக்குள் அழைத்துச் செல்கின்றனர். மாப்பிள்ளைக்கும் அவரது நண்பருக்கும் காபி கொடுக்குமாறு மணமகளின் தாய் கூறியதால், முதலில் முத்து செல்ல முயற்சிக்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆனால் அங்கிருந்த மற்றொரு பெண், &quot;நானே கொடுத்து விடுகிறேன்&quot; என்று காபியை வாங்கிச் செல்வதால், முத்துவால் மாப்பிள்ளையை நேரில் பார்க்க முடியாமல் போகிறது. அனைவரும் தங்களது வேலைகளில் பிஸியாக இருக்கும் நிலையில், சந்தோஷ் மற்றும் ஜீவா திருமண ஏற்பாடுகளைப் பார்ப்பதற்காக கீழே வருகிறார்கள். அப்போது அங்கே முத்து மற்றும் மீனாவை பார்த்ததும் இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உடனே அவர்கள் மனோஜ் இருக்கும் அறைக்குச் சென்று, முத்துவும் மீனாவும் அங்கு வந்திருப்பதாக கூறுகின்றனர். இதைக் கேட்ட மனோஜ் பதற்றமடைந்து, அங்கிருந்து ஜன்னல் வழியாக தப்பிக்க முயற்சிக்கிறார். ஆனால் அவரது நண்பர்கள் அவரைத் தடுத்து நிறுத்தி, &quot;முதலில் அவர்கள் எதற்காக வந்திருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வோம். அதன்பிறகு என்ன செய்யலாம் என்று முடிவு செய்வோம்&quot; என்று அறிவுறுத்துகின்றனர். இதனால், அடுத்த எபிசோடில் மனோஜின் ரகசியம் அம்பலமாகுமா? முத்து அவரை நேருக்கு நேர் சந்திப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>cinema</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/manoj-tries-to-escape-after-seeing-muthu-in-siragadikka-aasai-serial-july-09-today-1052nd-episode-dcr37s3"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Idhayam Murali Review : இதயம் தொட்டதா? இரிடேட் பண்ணியதா? இதயம் முரளி விமர்சனம்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/review/idhayam-murali-review-atharvaa-shines-in-this-feel-good-drama-eli8f08</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/review/idhayam-murali-review-atharvaa-shines-in-this-feel-good-drama-eli8f08</guid>
            <pubDate>Fri, 10 Jul 2026 12:59:54 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Idhayam Murali Movie Review : ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் அதர்வா, கயாடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் ரிலீஸ் ஆகி உள்ள இதயம் முரளி திரைப்படத்தின் எக்ஸ் தள விமர்சனத்தை பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kx5eptdw4d34063atq7mqc3t,imgname-idhayam-murali--3--1783668369852.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Idhayam Murali Movie Review : ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் அதர்வா, கயாடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் ரிலீஸ் ஆகி உள்ள இதயம் முரளி திரைப்படத்தின் எக்ஸ் தள விமர்சனத்தை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதர்வா முரளி ஹீரோவாக நடித்துள்ள படம் இதயம் முரளி. அப்படத்தில் அவருக்கு ஜோடியாக கயாடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் விஜய் டிவி பிரபலம் ரக்&zwnj;ஷன், ஏஞ்சலின் மற்றும் பரிதாபங்கள் சுதாகர், டிராவிட், இசையமைப்பாளர் தமன், சிறப்பு தோற்றத்தில் நடிகர் பகத் பாசில் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. இதயம் முரளி படத்தை ஆகாஷ் பாஸ்கரன் இயக்கி உள்ளதோடு, டான் பிக்சர்ஸ் மூலம் தயாரித்தும் உள்ளார். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் ஷோ பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனத்தை பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அதைப் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதயம் தொட்ட உணர்வுகள் நிறைந்த அழகான ஃபீல் குட் திரைப்படமாக இந்தப் படம் அமைந்துள்ளது. காதல், நட்பு, குடும்ப பாசம் மற்றும் எமோஷனல் தருணங்கள் அனைத்தும் இயல்பாக இணைந்து, ரசிகர்களை படத்துடன் ஒன்றிப்போக வைக்கின்றன. சுமார் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் ஓடும் படம் என்றாலும், விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் தொடர்ந்து வரும் மனதை வருடும் காட்சிகள் காரணமாக எங்கும் சலிப்பு ஏற்படுவதில்லை.&lt;/p&gt;&lt;p&gt;படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களுக்கு முழு நியாயம் செய்துள்ளனர். குறிப்பாக அதர்வா, ப்ரீத்தி, கயாடு ஆகியோரின் நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. தமன் இசை, காட்சிகளின் உணர்வுகளை மேலும் அழகாக உயர்த்தியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;திரையரங்கில் ரசிகர்கள் ரசிக்கும் பல சிறப்பான தருணங்கள், எதிர்பாராத திருப்பம் மற்றும் சஸ்பென்ஸான சர்ப்ரைஸ் கேமியோ ஆகியவை படத்தை கடைசி வரை சுவாரஸ்யமாக நகர்த்துகின்றன. தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தரமான பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கியுள்ளார். மொத்தத்தில், மனதை நெகிழ வைக்கும், திருப்தியான ஃபீல் குட் என்டர்டெய்னர் இது. திரையரங்கில் குடும்பத்துடன் பார்த்து ரசிக்க ஏற்ற, புன்னகையுடன் வெளியே வர வைக்கும் முழுமையான திரைப்பட அனுபவத்தை இந்தப் படம் வழங்குகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;படத்தின் தொடக்கமே லேசான, மனதை வருடும் 90ஸ் காதல் நினைவுகளை மீட்டெடுக்கும் வகையில் அமைந்துள்ளது. அந்த பழைய கால காதல் உணர்வை அழகாக திரையில் கொண்டு வந்திருப்பது ரசிகர்களை உடனே படத்துடன் ஒன்றச் செய்கிறது. அதர்வா தனது இயல்பான மற்றும் கவர்ச்சிகரமான நடிப்பால் கவனத்தை ஈர்க்கிறார். அதேபோல் ப்ரீத்தி முகுந்தன் மற்றும் கயாடு லோஹர் இருவரும் தங்களது திரை தோற்றம் மற்றும் நடிப்பின் மூலம் படத்திற்கு தனி அழகை சேர்த்துள்ளனர்.&lt;/p&gt;&lt;p&gt;நட்பை மையமாகக் கொண்ட காட்சிகள், பள்ளி வாழ்க்கையின் கலகலப்பான தருணங்கள் மற்றும் சுதாகரின் நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களை சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கின்றன. தமன் இசை படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. பாடல்களும் பின்னணி இசையும் ஒவ்வொரு உணர்வையும் இன்னும் அழகாக வெளிப்படுத்துகின்றன. ஆகாஷ் பாஸ்கரன் எழுதிய திரைக்கதை, 90-களின் இனிய நினைவுகளை மீண்டும் கண்முன் நிறுத்துகிறது. குறிப்பாக உணர்வுபூர்வமான காட்சிகள் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.&lt;/p&gt;&lt;p&gt;பகத் பாசிலின் சிறப்பு தோற்றம் ரசிகர்களுக்கு இனிய ஆச்சரியமாக அமைகிறது. அவரது வருகை கதைக்கு கூடுதல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறது. ஒளிப்பதிவு படத்திற்கு வண்ணமயமான தோற்றத்தையும், 90-களின் ஏக்கமான நினைவுகளையும் அழகாகக் கொடுத்துள்ளது. குறிப்பாக ரயில் நிலைய காட்சிகள் மற்றும் இடைவேளை (Interval) பிளாக், இரண்டாம் பாதி மீது அதிக எதிர்பார்ப்பை உருவாக்குகின்றன. மொத்தத்தில், 90-களின் இனிய நினைவுகளையும், காதல், நட்பு, உணர்வுகளையும் அழகாக இணைத்து, மனதை வருடும் ஒரு அழகான ஃபீல் குட் திரைப்பட அனுபவத்தை இந்தப் படம் வழங்குகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;'இதயம் முரளி' ஒரு அற்புதமான திரைப்படமாக அமைந்துள்ளது. படம் தொடங்கியது முதல் முடியும் வரை ஒவ்வொரு நிமிடமும் முழுமையாக ரசிக்க வைத்தது. குறிப்பாக பகத் பாசில் (FaFa) தனது சிறப்பான தோற்றம் மற்றும் நடிப்பால் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். அவருக்கு ஒரு பெரிய பாராட்டு சொல்லியே ஆக வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;அதேபோல் அதர்வா, சுதாகர், நட்டி (நட்ராஜ்) மற்றும் திராவிட் ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர். இவர்களைத் தவிர மற்ற நடிகர்களின் நடிப்பும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. மொத்தத்தில், தொடக்கம் முதல் இறுதி வரை எந்த இடத்திலும் சோர்வடையாமல் ரசிக்க வைக்கும், நகைச்சுவை, உணர்வு மற்றும் பொழுதுபோக்கு நிறைந்த ஒரு முழுமையான திரைப்படமாக 'இதயம் முரளி' அமைந்துள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>cinema</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/review/idhayam-murali-review-atharvaa-shines-in-this-feel-good-drama-eli8f08"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Jailer 2 உலகத்தரம் வாய்ந்த படமா மாறப்போகுது! இதுதான் உண்மையான காரணம்! ]]></title>
            <link>https://tamil.asianetnews.com/cinema/jailer-2-the-secret-to-becoming-a-global-blockbuster-videoshow-fpuht1z</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/cinema/jailer-2-the-secret-to-becoming-a-global-blockbuster-videoshow-fpuht1z</guid>
            <pubDate>Mon, 06 Jul 2026 16:02:40 +0530</pubDate>
            <description><![CDATA[]]></description>
            <media:content url="https://geo.dailymotion.com/player/x1tbu.html?video=xam15km" medium="video" height="768" width="1024"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஜெயிலர் 2 படத்தில் இணையப்போகும் பிரம்மாண்ட நட்சத்திரப் பட்டாளம் குறித்த தகவல்கள் ஏற்கனவே ரசிகர்களுக்குத் தெரிந்த ஒன்றுதான். ஆனால், இதையும் தாண்டி 'ஜெயிலர் 2' ஏன் முதல் பாகத்தை விட உலகத்தரம் வாய்ந்த படைப்பாக இருக்கப்போகிறது&lt;/p&gt;]]></content:encoded>
            <category>cinema</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/cinema/jailer-2-the-secret-to-becoming-a-global-blockbuster-videoshow-fpuht1z"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Siragadikka Aasai : விஜயாவிடம் பொய் சொல்லி எஸ்கேப் ஆன மனோஜ்... கல்யாண வீட்டில் காத்திருக்கும் ட்விஸ்ட்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/manoj-marriage-twist-loading-in-siragadikka-aasai-serial-july-08-today-1051st-episode-gkp0zg6</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/manoj-marriage-twist-loading-in-siragadikka-aasai-serial-july-08-today-1051st-episode-gkp0zg6</guid>
            <pubDate>Wed, 08 Jul 2026 09:43:34 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial 08 July 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜின் திருமணம் என தெரியாமல் முத்து, மீனா, ஸ்ருதி, ரவி கிளம்பி சென்றுள்ளனர். அதைப்பற்றி பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwzyqdkdjmy98pccs2pzhkzp,imgname-siragadikka-aasai---2026-07-08t093842.918-1783483840109.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial 08 July 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜின் திருமணம் என தெரியாமல் முத்து, மீனா, ஸ்ருதி, ரவி கிளம்பி சென்றுள்ளனர். அதைப்பற்றி பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;சிறகடிக்க ஆசை&lt;/strong&gt; சீரியலின் இன்றைய எபிசோடில் என்ன நடந்திருக்கு அப்படிங்கறத பார்க்கலாம். விஜயா மனோஜ கோயிலுக்கு போயிட்டு பரிகாரம் பண்ணனும்னு கூப்பிடுறாங்க. ஆனா மனோஜுக்கு கல்யாணம் இருக்கு இல்லையா, அவரே வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்றாப்ல அதனால என்னால வர முடியாது என்னோட பிரண்டோட கல்யாணம், அவன் எனக்கு டிரஸ் எல்லாம் வாங்கி கொடுத்திருக்கான். அப்படி இப்படின்னு மனோஜ் சாக்கு போக்கு சொல்லிக்கிட்டு இருக்கறாப்பல. விஜயா எவ்வளோ கூப்பிட்டும் மனோஜ் முடியாதுனு சொல்லிவிடுகிறார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடித்த நடிகைகள்.... இன்ஸ்டா சப்ஸ்கிரிப்ஷனில் அன்லிமிடெட் கவர்ச்சிகாட்டி கோடிக்கணக்கில் வசூல் வேட்டை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதுக்கப்புறம் என்ன, நம்ம மனோஜ் நான் போய் பிரண்டோட கல்யாணத்துக்கே கிளம்புறேன் அப்படின்னு சொல்லிட்டு தன்னோட கல்யாணத்துக்கே ரெடி ஆயிட்டு இருக்கறாப்ல, இந்த பக்கம் மீனா, முத்துவை அழைச்சுக்கிட்டு போயிட்டு நீங்க இதுக்கப்புறம் இந்த மாதிரிதான் டிரஸ் பண்ணனும் அப்படின்னு ஒரு ஆபீசர் மாதிரி டக் இன் பண்ற மாதிரி டிரஸ் எல்லாம் கொடுத்து போட்டுக்கிட்டு வாங்க அப்படின்னு சொல்லி, முத்துவோட கெட்டப்பையே மாத்திடுறாங்க. அதுக்கப்புறம் முத்துவோட கெட்டப்ப பாத்துட்டு விஜயா அண்ணாமலையே அசந்து போறாங்கன்னா பாத்துக்கோங்களே, அந்த அளவுக்கு இன் பண்ணிக்கிட்டே சும்மா டிப் டாப்பா இருக்கறாப்பல முத்து.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதுக்கப்புறம் மீனா போயிட்டு ஸ்ருதிக்காக கல்யாணத்துக்கு கேசரி எல்லாம் பண்ணி கொடுக்குறாங்க. மனோஜ் ஒரு பக்கம் ரெடி ஆகிட்டு இருக்கறாரு. மனோஜ் பட்டு வேஸ்டி சட்டையில ரெடியாகி வந்ததை பாத்துட்டு எல்லாருமே ஷாக் ஆகுறாங்க. என்னடா உன் பிரண்டோட கல்யாணம்னு சொன்ன, நீ மாப்பிள்ளை மாதிரி ரெடி ஆயிருக்க அப்படின்னு கேக்குறாரு முத்து. என் பிரண்ட் தான்டா வாங்கி கொடுத்தான் அப்படின்னு வாய் கூசாம நம்ம மனோஜ் பொய் சொல்றாப்ல. அதுக்கப்புறம் என்ன ஸ்ருதி, ரவி, மீனா, முத்து&lt;/p&gt;&lt;p&gt;எல்லாருமே அந்த கல்யாணத்துக்கு கிளம்பி போறாங்க.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஏன்னா இவங்கதானே ஆர்டர் எடுத்திருக்காங்க. அவங்களுக்கு தெரியாது அது மனோஜோட கல்யாணம்னு. இறுதியாக கல்யாண பொண்ணு வீட்டை காமிக்கிறாங்க கல்யாண பொண்ணு கனகா ஒரு மனநால பாதிக்கப்பட்ட பொண்ணு அப்படிங்கறதுனால சேலை கட்டிக்க மாட்டேன் அப்படின்னு அட்டகாசம் பண்ணிக்கிட்டு இருக்கு. அதுக்கப்புறம் அவங்க அம்மாதான் வந்து உனக்கும் மனோஜ்-க்கும் தான் கல்யாணம் நடக்க போகுது, அதுக்கப்புறம் நீ மனோஜ் கூடயே போயிட்டு அவன் கடையிலேயே உட்கார்ந்து பிரிட்ஜ பாத்துக்கிட்டே இருக்கலாம் அப்படின்னு சொன்ன உடனே அந்த பொண்ணு அடங்கிடுது.&lt;/p&gt;&lt;p&gt;முத்து அந்த வீட்ல வந்து டெக்கரேஷன் எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கறாப்ல. மாப்பிள்ளை வந்துட்டாரு அப்படின்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க. இதோட இன்றைய எபிசோடு முடிஞ்சிருச்சு. வெயிட் பண்ணி பார்க்கலாம் நாளைக்கு என்ன நடக்க போகுதுன்னு.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>cinema</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/manoj-marriage-twist-loading-in-siragadikka-aasai-serial-july-08-today-1051st-episode-gkp0zg6"/>
        </item>
        <item>
            <title><![CDATA[MGR : ஜெயலலிதா தான் வில்லி... எம்ஜிஆரின் பிடிவாதத்தால் பிளாப் ஆன படம்... பல ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்த ரகசியம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/did-mgr-and-jayalalitha-decision-lead-to-the-failure-of-kannan-en-kadhalan-rm-veerappan-reveals-guiys4h</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/did-mgr-and-jayalalitha-decision-lead-to-the-failure-of-kannan-en-kadhalan-rm-veerappan-reveals-guiys4h</guid>
            <pubDate>Wed, 08 Jul 2026 11:42:53 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Jayalalitha Villi For MGR : எம்ஜிஆருக்கு ஜோடியாக ஏராளமான படங்களில் நடித்த ஜெயலலிதா, அவருக்கு வில்லியாக நடித்த படம் அட்டர் பிளாப் ஆனது. அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kjc7764jz41amgadd46ez90g,imgname-f7ad2c04-20b4-444c-be9a-9767cce06330--1--1772084238482.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Jayalalitha Villi For MGR : எம்ஜிஆருக்கு ஜோடியாக ஏராளமான படங்களில் நடித்த ஜெயலலிதா, அவருக்கு வில்லியாக நடித்த படம் அட்டர் பிளாப் ஆனது. அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சத்யா மூவீஸ், நடிகரும் முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆரை வைத்து பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளது. ஆனால் அந்த நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான 'கண்ணன் என் காதலன்' திரைப்படம் மட்டும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமல் போனதாக கூறப்படுகிறது. இந்த தோல்விக்கான காரணத்தை தயாரிப்பாளரும், எம்ஜிஆரின் நெருங்கிய நம்பிக்கையாளர்ுமான ஆர்எம்.வீரப்பன், பழைய பேட்டி ஒன்றில் பகிர்ந்திருந்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆர்எம்.வீரப்பன், எம்ஜிஆரின் நாடக மன்றம் மற்றும் திரைப்பட நிறுவனத்தின் நிர்வாகியாக மட்டுமல்லாமல், பின்னர் அவரது அமைச்சரவையிலும் முக்கிய பொறுப்பில் இருந்தவர். சத்யா மூவீஸ் சார்பில் எம்ஜிஆரை வைத்து ஆறு திரைப்படங்களை தயாரித்த அவர், அதில் நான்காவது படமாக வெளியான 'கண்ணன் என் காதலன்' எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;அந்தப் படத்தின் கதையில் இரண்டு கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் இருந்ததாக அவர் கூறியுள்ளார். அதில், ஒரு பெண்ணை கதாநாயகன் காதலிப்பார். மற்றொரு பெண், கதாநாயகனை அடைய வேண்டும் என்பதற்காக உடல்நலக் குறைவு ஏற்பட்டது போல நடித்து, அவரது இரக்கத்தையும் அன்பையும் பெற்று திருமணம் செய்து கொள்வார் என்ற திருப்பத்துடன் கதை அமைந்திருந்ததாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த கதாபாத்திரத்தில் ஜெயலலிதா நடித்தால் ரசிகர்களால் இயல்பாக ஏற்றுக்கொள்ளப்படாது என்று ஆர்எம்.வீரப்பன் கருதியதாகவும், அதனால் அந்த வேடத்தை அப்போது வளர்ந்து வந்த நடிகை வாணிஸ்ரீக்கு வழங்க திட்டமிட்டதாகவும் கூறியுள்ளார். ஜெயலலிதாவுக்கு, எம்ஜிஆர் காதலிக்கும் கதாநாயகி வேடத்தை அளிக்க முடிவு செய்திருந்தாராம்.&lt;/p&gt;&lt;p&gt;ஆனால், கதை குறித்து அறிந்த ஜெயலலிதா, வாணிஸ்ரீக்கு ஒதுக்கப்பட்டிருந்த சவாலான கதாபாத்திரத்தில் தான் நடிக்க விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதை எம்ஜிஆரிடமும் அவர் நேரடியாக தெரிவித்ததாகவும், அதன்பிறகு ஜெயலலிதாவின் விருப்பத்திற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று எம்ஜிஆர் தெரிவித்ததாகவும் ஆர்எம்.வீரப்பன் நினைவுகூர்ந்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜெயலலிதா ஏற்கனவே எம்ஜிஆருடன் பல வெற்றிப் படங்களில் ஜோடியாக நடித்திருந்ததால், ரசிகர்களின் மனதில் உருவாகியிருந்த அவர்களின் திரைமுகப் பிம்பம் காரணமாக இந்தக் கதாபாத்திரம் பொருந்தாது என்று பலமுறை எச்சரித்ததாகவும் அவர் கூறியுள்ளார். இருந்தாலும், ஜெயலலிதாவின் விருப்பத்தையே எம்ஜிஆர் இறுதியாக ஏற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;அந்த முடிவை அப்போது தான் உறுதியாக எதிர்த்திருக்க வேண்டும் என்றும், அப்படி செய்திருந்தால் 'கண்ணன் என் காதலன்' வெற்றிப் படமாக மாறியிருக்கும் என்றும் ஆர்எம்.வீரப்பன் தனது பேட்டியில் கருத்து தெரிவித்துள்ளார். படத்தின் தோல்விக்கு கதாபாத்திரத் தேர்வில் ஏற்பட்ட இந்த மாற்றமே முக்கிய காரணம் என அவர் வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>cinema</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/did-mgr-and-jayalalitha-decision-lead-to-the-failure-of-kannan-en-kadhalan-rm-veerappan-reveals-guiys4h"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Vishwambhara: அக்டோபர் 16-ல் வர்றேன், ரெடியா இருங்க! - ரசிகர்களுக்கு த்ரிஷா கொடுத்த சர்ப்ரைஸ்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/trisha-krishnan-reveals-vishwambhara-movie-release-date-with-megastar-chiranjeevi-gyc9p31</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/trisha-krishnan-reveals-vishwambhara-movie-release-date-with-megastar-chiranjeevi-gyc9p31</guid>
            <pubDate>Mon, 06 Jul 2026 15:02:32 +0530</pubDate>
            <description><![CDATA[நடிகை த்ரிஷா கிருஷ்ணன் தற்போது சினிமா மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை என இரண்டு விஷயங்களுக்காகவும் செம ட்ரெண்டிங்கில் இருக்கிறார். இந்நிலையில், தனது அடுத்த படம் குறித்த ஒரு சூப்பர் அப்டேட்டை ரசிகர்களுக்காக அவர் வெளியிட்டுள்ளார்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwv32fy6cqt7wjnq6xszzr61,imgname-trisha-krishnan-1783320625094.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[நடிகை த்ரிஷா கிருஷ்ணன் தற்போது சினிமா மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை என இரண்டு விஷயங்களுக்காகவும் செம ட்ரெண்டிங்கில் இருக்கிறார். இந்நிலையில், தனது அடுத்த படம் குறித்த ஒரு சூப்பர் அப்டேட்டை ரசிகர்களுக்காக அவர் வெளியிட்டுள்ளார்.&lt;img&gt;&lt;p&gt;சூர்யாவுடன் நடித்த 'கருப்பு' படத்திற்குப் பிறகு த்ரிஷாவின் எந்தப் படமும் வெளியாகவில்லை. ஆனாலும், ரசிகர்கள் இன்னும் அந்தப் படத்தின் ஹேங்ஓவரில் இருந்து வெளியே வரவில்லை என கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;த்ரிஷா தற்போது பயங்கர ட்ரெண்டிங்கில் இருக்கிறார். அதற்கு காரணம் சினிமா மட்டுமல்ல, அவரது தனிப்பட்ட வாழ்க்கையும்தான். தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கும் நடிகர் தళപതി விஜய்யுடன் த்ரிஷாவுக்கு இருக்கும் 'நட்பு' குறித்தும் செய்திகள் பரவி வருகின்றன.&lt;img&gt;விஜய் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரான கொண்டாட்டங்களின் போது, த்ரிஷா அவருடன் மிகவும் நெருக்கமாக காணப்பட்டார். அவரது குடும்ப உறுப்பினர் போலவே விஜய் அருகிலேயே அவர் வலம் வந்தது, அவர் விஜய்க்கு மிகவும் நெருக்கமானவர் என்ற பேச்சை கிளப்பியது.&lt;img&gt;சமீபத்தில், விஜய்யின் பிறந்தநாளின் போது, த்ரிஷா அவருடன் ஒரு ஸ்பெஷல் கேக்குடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தினார். இருவரும் தனிமையில் பிறந்தநாள் கொண்டாடியதாக செய்திகள் பரவின. ஆனால், இதன் உண்மைத்தன்மை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.&lt;img&gt;இந்த சர்ச்சைகள் ஒருபுறம் இருந்தாலும், த்ரிஷாவின் படங்களுக்காக ஏராளமான ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 'த்ரிஷா மேடம், உங்களை மீண்டும் எப்போது திரையில் பார்ப்பது?' என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் நேரடியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.&lt;img&gt;ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ள த்ரிஷா, 'நான் உங்களை நீண்ட காலம் மிஸ் செய்ய விரும்பவில்லை. அக்டோபர் 16, 2026 அன்று உங்களை சந்திக்க வருகிறேன். வரவேற்க தயாராக இருங்கள்' என்று கூறியுள்ளார். வேறு ஒன்றுமில்லை, மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் த்ரிஷா நடித்துள்ள 'விஷ்வம்பரா' திரைப்படம் தான் 2026 அக்டோபர் 16 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. அன்று திரையில் தோன்றி ரசிகர்களுக்கு தரிசனம் கொடுக்க இருக்கிறார் த்ரிஷா.]]></content:encoded>
            <category>cinema</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/trisha-krishnan-reveals-vishwambhara-movie-release-date-with-megastar-chiranjeevi-gyc9p31"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Dada Ganguly : கங்குலியாக மாறி சட்டையைக் கழற்றிய ராஜ்குமார் ராவ்! தாதா படத்தின் மிரட்டல் லுக்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/rajkummar-rao-first-look-as-ganguly-in-dada-biopic-ohdsyvf</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/rajkummar-rao-first-look-as-ganguly-in-dada-biopic-ohdsyvf</guid>
            <pubDate>Wed, 08 Jul 2026 12:18:35 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Dada Ganguly : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது வாழ்க்கை வரலாற்றுப் படமான 'தாதா - தி சௌரவ் கங்குலி ஸ்டோரி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kx076njpnpf5mf8wbpq7cnf3,imgname-pixoate-converted-landscape--4-3--the-best-gift-ever--can---t-wait-to-see-you-play-my-cover-drive---rajkummar-rao--dada--dadathesour-1783492728406.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Dada Ganguly : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது வாழ்க்கை வரலாற்றுப் படமான 'தாதா - தி சௌரவ் கங்குலி ஸ்டோரி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த படத்தில் சௌரவ் கங்குலியாக பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் நடிக்கிறார். படத்தின் முதல் போஸ்டரில், 2002-ம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நாட்வெஸ்ட் கோப்பை இறுதிப் போட்டியின்போது, இந்தியா வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில் கங்குலி தனது சட்டையைக் கழற்றி சுழற்றிய அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தை ராஜ்குமார் ராவ் அப்படியே தத்ரூபமாகப் பிரதிபலித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;படம் சொல்லும் கதை: &lt;/strong&gt;ஒரு சாதாரண கிரிக்கெட் வீரராகத் தனது பயணத்தைத் தொடங்கி, இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த மற்றும் செல்வாக்கு மிக்க கேப்டனாக கங்குலி உருவெடுத்த பின்னணியையும், அவரது விடாமுயற்சி, உறுதி மற்றும் இந்திய கிரிக்கெட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற அந்தப் போராட்டமான தருணங்களையும் இந்தப் படம் பேசவிருக்கிறது.&lt;/p&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;View this post on Instagram&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&lt;p&gt;A post shared by SOURAV GANGULY (@souravganguly)&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;படக்குழுவினர்: &lt;/strong&gt;இந்த படத்திற்குப் புகழ்பெற்ற இயக்குநர் விக்ரம் ஆதித்யா மோத்வானே இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ளார். லவ் ரஞ்சன் மற்றும் அன்குர் கார்க் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர். டி-சீரிஸ் (T-Series) மற்றும் எல்.யு.வி ஃபிலிம்ஸ் (Luv Films) நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை வழங்குகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கிரிக்கெட் ரசிகர்களும், சினிமா ஆர்வலர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் 'தாதா' திரைப்படம், உலகம் முழுவதும் வரும் மே 14, 2027 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;இந்திய கிரிக்கெட்டில் ஒரு புதிய சகாப்தத்தைப் படைத்த 'தாதாவின்' கதை திரையில் எப்படி இருக்கப்போகிறது என்பதைப் பார்க்க ரசிகர்கள் அனைவரும் காத்துக்கொண்டிருக்கின்றனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>cinema</category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/rajkummar-rao-first-look-as-ganguly-in-dada-biopic-ohdsyvf"/>
        </item>
        <item>
            <title><![CDATA[I Nobody Review : பிருத்விராஜ் சுகுமாரன் நடிச்ச 'ஐ நோபடி' சூப்பரா? சுமாரா? முழு விமர்சனம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/review/i-nobody-movie-review-prithviraj-sukumaran-thriller-film-analysis-pngnw05</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/review/i-nobody-movie-review-prithviraj-sukumaran-thriller-film-analysis-pngnw05</guid>
            <pubDate>Fri, 10 Jul 2026 12:13:01 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;I Nobody Movie Review : பிருத்விராஜ் சுகுமாரன் நடித்த 'ஐ நோபடி' திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்தப் படம் ரசிகர்களைக் கவர்வதில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kx5c4f92885hfvs2qjaghe4k,imgname-i-nobody-review-1783665671457.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;I Nobody Movie Review : பிருத்விராஜ் சுகுமாரன் நடித்த 'ஐ நோபடி' திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்தப் படம் ரசிகர்களைக் கவர்வதில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன், ஒரு பன்முகத் திறமைசாலியாக ஜொலிக்கிறார். அவர் ஹீரோ, இயக்குனர், எழுத்தாளர், தயாரிப்பாளர் என பல துறைகளில் கலக்கி வருகிறார். 'சலார்' படத்தில் பிரபாஸுடன் நடித்தார். இப்போது மகேஷ் பாபுவின் 'வாரணாசி' படத்தில் வில்லனாக நடிக்கிறார். 'லூசிஃபர் 2' மூலம் இயக்குனராகவும் வெற்றிகண்டார். இந்தச் சூழலில், அவர் நடித்து தயாரித்துள்ள லேட்டஸ்ட் மலையாளப் படம்தான் 'ஐ நோபடி'. பிருத்விராஜ் புரொடக்&zwnj;ஷன்ஸ் மற்றும் E4 எக்ஸ்பெரிமெண்ட்ஸ் பேனர்களில் சுப்ரியா மேனன், முகேஷ் ஆர். மேத்தா, சி.வி. சாரதி ஆகியோர் தயாரித்துள்ளனர். நிசாம் பஷீர் இயக்கிய இந்தப் படம், மலையாளத்தில் வியாழக்கிழமையும், தமிழில் ஜூலை 10 வெள்ளிக்கிழமையும் வெளியானது. இந்தப் படம் எப்படி இருக்கிறது, ரசிகர்களைக் கவர்ந்ததா என்பதை இந்த விமர்சனத்தில் பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ராஜீவ் (பிருத்விராஜ் சுகுமாரன்) ஒரு அரசு ஊழியர். அவரது மனைவி மீரா (பார்வதி திருவொத்து) ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பம். ஆனால், மீராவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருக்கிறது. இந்த விஷயம் ராஜீவுக்குத் தெரியவர, அவரை மிரட்டுவதற்காக ராஜீவ் வங்கிக்குச் செல்கிறார். அதே நேரத்தில், மூன்று திருடர்கள் அந்த வங்கியில் நுழைந்து 17 கோடி ரூபாயைக் கொள்ளையடிக்கிறார்கள்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;அவர்கள் ராஜீவைத் தாக்கி, கடத்திச் சென்று வழியில் இறக்கிவிட்டுச் செல்கின்றனர். ஆனால், ஒரு சாலை விபத்தில் அந்த மூன்று திருடர்களும் இறந்துவிடுகிறார்கள். இதனால், இந்த கொள்ளையில் ராஜீவுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி போலீசார் அவரை விசாரிக்கிறார்கள். செய்யாத குற்றத்திற்காக ராஜீவ் எப்படி பலியானார்? இந்த சிக்கலில் இருந்து எப்படி மீண்டார்? அந்தப் பணத்தை உண்மையில் எடுத்தது யார்? என்பதுதான் மீதிக்கதை.&lt;/p&gt;&lt;img&gt;பணத்தைச் சுற்றி நடக்கும் கதைகள் பல வந்திருந்தாலும், இந்தப் படம் ஒரு ஆக்&zwnj;ஷன் த்ரில்லர் ஜானரில் பயணிக்கிறது. இதில் குடும்பம், சென்டிமென்ட், எமோஷன்ஸ், ஆக்&zwnj;ஷன், த்ரில்லர் என எல்லாமே இருக்கிறது. அதிரடி திருப்பங்களும் உள்ளன. வங்கி்க் கொள்ளைக் காட்சியுடன் படம் ஆரம்பித்து, முதல் காட்சியிலிருந்தே ரசிகர்களை கதைக்குள் இழுத்துவிடுகிறது. ஒரு தனி நபரை இந்த சமூகம் எப்படி வேட்டையாடுகிறது என்பதைப் படம் யதார்த்தமாகக் காட்டுகிறது. இரண்டாம் பாதி முழுவதும், இந்த அமைப்பிலிருந்து ஹீரோ எப்படித் தப்பிக்கிறார், தன் குடும்பத்தை எப்படி மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குக் கொண்டுவருகிறார் என்பதைச் சுற்றி நகர்கிறது.&lt;img&gt;முதல் பாதியில் இருந்த வேகம் இரண்டாம் பாதியில் சற்று குறைகிறது. சில லாஜிக் குறைபாடுகளும் தென்படுகின்றன. ஹீரோ சுதந்திரமாகச் சுற்றும்போது போலீசார் ஏன் அவரைக் கண்டுபிடிக்கவில்லை? சிசிடிவி ஆதாரம் இருந்தும் விசாரணை ஏன் நகரவில்லை? போன்ற கேள்விகள் எழுகின்றன. இருப்பினும், படம் இறுதிவரை சுவாரஸ்யமாகவே இருக்கிறது. கிளைமாக்ஸை ஓரளவிற்கு யூகிக்க முடிகிறது. ஒரு சிறிய வதந்தியை சோஷியல் மீடியா எப்படிப் பெரிதாக்குகிறது என்பதைப் படம் தோலுரித்துக் காட்டுகிறது. மீடியா, அரசியல் மற்றும் போலீஸ் அமைப்பை நையாண்டியாகவும் இந்தப் படம் சித்தரிக்கிறது.&lt;img&gt;&lt;p&gt;பிருத்விராஜ் மீண்டும் தனது நடிப்பால் அசத்தியுள்ளார். ராஜீவன் கதாபாத்திரத்தின் வலி, போராட்டம் மற்றும் உணர்ச்சிகளை மிக இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். ஆக்&zwnj;ஷன் காட்சிகளில் அவரது கடின உழைப்பு திரையில் தெளிவாகத் தெரிகிறது. மீரா கேரக்டரில் பார்வதி தனது இயல்பான நடிப்பால் கவர்கிறார். போலீஸ் அதிகாரிகள் மற்றும் முதிய தம்பதியரின் கதாபாத்திரங்களும் கதைக்கு வலு சேர்க்கின்றன. மற்ற நடிகர்களும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு சிறப்பாக நடித்துள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தொழில்நுட்ப ரீதியாக 'ஐ, நோபடி' சிறப்பாக உள்ளது. யதார்த்தமான இடங்களில் படமாக்கியதால், ஒவ்வொரு காட்சியும் நிஜத்திற்கு நெருக்கமாக இருக்கிறது. பஸ்ஸில் வரும் சண்டைக் காட்சியில் விஷுவல் எஃபெக்ட்ஸ் சற்று தெரிந்தாலும், லிஃப்ட் ஆக்&zwnj;ஷன் காட்சி ஈர்க்கிறது. ஒளிப்பதிவு படத்திற்கு ஒரு பெரிய பலம். ஜேக்ஸ் பிஜோயின் பின்னணி இசை காட்சிகளை மேலும் மெருகேற்றுகிறது. எடிட்டிங், ஆடை வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு கதைக்கு ஏற்றவாறு அமைந்துள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;மொத்தத்தில், 'ஐ, நோபடி' ஒரு நல்ல படத்தைப் பார்த்த அனுபவத்தைத் தருகிறது. சமூகத்தின் ஓட்டைகளை இந்தப் படம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. த்ரில்லர் படங்களை விரும்புபவர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும்.&amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>cinema</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/review/i-nobody-movie-review-prithviraj-sukumaran-thriller-film-analysis-pngnw05"/>
        </item>
        <item>
            <title><![CDATA[த்ரிஷா புகழ்பாடும் கோலிவுட்.! சரோஜா தேவி மாதிரி நல்ல கேரக்டர்..! சர்ட்டிஃபிகேட் கொடுக்கும் நடிகர்கள்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/cinema/why-actors-hail-trisha-as-kollywood-s-modern-legend-videoshow-q7xfa7s</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/cinema/why-actors-hail-trisha-as-kollywood-s-modern-legend-videoshow-q7xfa7s</guid>
            <pubDate>Mon, 06 Jul 2026 16:05:12 +0530</pubDate>
            <description><![CDATA[]]></description>
            <media:content url="https://geo.dailymotion.com/player/x1tbu.html?video=xam1622" medium="video" height="768" width="1024"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நீடித்து நிற்கும் நடிகை த்ரிஷாவின் வெற்றிப் பயணம், அவரது நடிப்புத் திறமையை மட்டுமல்ல, அவரது மனிதநேயம், எளிமை மற்றும் நட்பையும் அடிப்படையாகக் கொண்டது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>cinema</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/cinema/why-actors-hail-trisha-as-kollywood-s-modern-legend-videoshow-q7xfa7s"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Swasika Vijay: முருகதாஸை பார்க்க 1 லட்சம் கேட்டாங்க; சினிமாவில் நிறைய பேர் ஏமாத்திட்டாங்க - நடிகை ஸ்வாசிகா உருக்கம்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/swasika-vijay-recalls-losing-1-lakh-after-being-scammed-for-ar-murugadoss-meeting-qga3ggg</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/swasika-vijay-recalls-losing-1-lakh-after-being-scammed-for-ar-murugadoss-meeting-qga3ggg</guid>
            <pubDate>Thu, 09 Jul 2026 14:56:24 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Actress Swasika Cheated for cinema opportunity : சினிமாவுக்கு வந்த ஆரம்ப காலத்தில், வாய்ப்பு தருவதாகச் சொல்லி நிறைய பேர் தன்னை ஏமாற்றியதாக நடிகை ஸ்வாசிகா விஜய் வேதனையுடன் பகிர்ந்துள்ளார். அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k53essz53035chskhgvr26gc,imgname-fotojet--15--1757831555045.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Actress Swasika Cheated for cinema opportunity : சினிமாவுக்கு வந்த ஆரம்ப காலத்தில், வாய்ப்பு தருவதாகச் சொல்லி நிறைய பேர் தன்னை ஏமாற்றியதாக நடிகை ஸ்வாசிகா விஜய் வேதனையுடன் பகிர்ந்துள்ளார். அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நடிகை ஸ்வாசிகா, ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான ஒரு முகம். சின்னத்திரையில் தனது பயணத்தைத் தொடங்கி, பின்னர் சினிமாவுக்குள் நுழைந்தவர். சிறந்த நடிகைக்கான கேரள மாநில அரசின் விருதையும் வென்றுள்ளார். சூர்யா நாயகனாக நடித்த 'கருப்பு' படத்திலும் ஸ்வாசிகா சிறப்பாக நடித்திருந்தார். அண்மையில் வெளிவந்த நூறு சாமி படத்தில் ஸ்வாசிகாவின் நடிப்பை ஒட்டுமொத்த கோலிவுட்டே கொண்டாடியது. தனது குடும்ப வாழ்க்கை பற்றி வெளிப்படையாகப் பேசுவதால், ஸ்வாசிகா அடிக்கடி சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறுவது வழக்கம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில், சினிமாவுக்கு வந்த புதிதில் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்கள் குறித்து ஸ்வாசிகா மனம் திறந்துள்ளார். முதல் படத்திற்குப் பிறகு சரியான வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி பல மேனேஜர்கள் தன்னை ஏமாற்றியதாக அவர் கூறுகிறார். ஒருமுறை, இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸை சந்திக்க வைக்கிறேன் என்று சொல்லி ஒரு லட்சம் ரூபாய் கேட்டதாகவும், அதற்காக அம்மா தன் கையில் இருந்த நகைகளை எல்லாம் கழற்றிக் கொடுத்ததாகவும் ஸ்வாசிகா வேதனையுடன் நினைவுகூர்ந்தார். சுமார் பதினைந்து வருடக் கடின உழைப்புக்குப் பிறகுதான் இப்போது இருக்கும் நிலைக்கு வந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில்தான் ஸ்வாசிகா இந்த விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&quot;பதினாறு, பதினேழு வயசுல ஆரம்பிச்ச பயணம் இது. அந்த வயசுல இதையெல்லாம் புரிஞ்சுக்கிற பக்குவம் எனக்கு இல்லை. முதல் தமிழ் ஆடிஷன்லயே நான் செலக்ட் ஆகிட்டேன். அப்போ எனக்கு ஒரே ஆச்சரியம். 'அவ்வளவுதானா, ரிஜெக்&zwnj;ஷன்லாம் இல்லையா, எல்லாமே சூப்பரா போகுதே'ன்னு ஒரு நினைப்பு. படமும் ரிலீஸ் ஆச்சு. ஆனா, அது பெரிய அளவுல ரீச் ஆகல, எனக்கும் பெரிய அங்கீகாரம் கிடைக்கல. அப்போதான் ஏதோ சரியில்லைன்னு எனக்குத் தோணுச்சு. அந்த வயசுல அது எனக்கு பெரிய கவலையா இருந்துச்சு. ஏன்னா, படிப்பை பாதியில விட்டுட்டு, எல்லார் கிட்டயும் சண்டை போட்டுட்டுதான் சென்னைக்கு வந்தேன். எனக்காக அம்மாவும் பேசினாங்க. நான் நடிக்கிறதுல அப்போ அப்பாவுக்கு விருப்பம் இல்லை,&quot; என்று ஸ்வாசிகா கூறினார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&quot;திரும்பிப் போனா என்ன ஆகும்னு தெரியாம, தினமும் ராத்திரி உட்கார்ந்து அழுத காலம் அது. டிப்ரஷன்னு சொல்றதை விட, அந்த நிலைமை என்னன்னு கூட புரிஞ்சுக்க முடியல. கடைசியா, கண்ணுல படுற ஆடிஷன் எல்லாத்துக்கும் போக ஆரம்பிச்சோம். நிறைய மேனேஜருங்க எங்களை ஏமாத்திட்டாங்க. 'அந்த டைரக்டரைப் பார்க்கலாம், இங்க போகலாம், அங்க போகலாம்'னு சொல்லி பல இடங்களுக்குக் கூட்டிக்கிட்டுப் போனாங்க. முருகதாஸ் சாரைப் பார்க்கப் போகணும்னு சொல்லி ஒரு லட்சம் ரூபாய் கேட்டாங்க. அம்மா அங்கேயே கையில, கழுத்துல இருந்த நகையையெல்லாம் கழட்டி பணத்தை ரெடி பண்ணாங்க. ஹோட்டலுக்குப் போனா, அங்க அந்த மேனேஜர் இல்லை. கடைசியில அந்த ஹோட்டல் பில்லைக்கூட நாங்கதான் கட்ட வேண்டியதாப் போச்சு,&quot; என்றார் ஸ்வாசிகா.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&quot;ஊருக்குத் திரும்பி வந்து சீரியல்கள்ல கவனம் செலுத்தினேன். சின்னச் சின்ன ரோல்ல நடிச்சேன். ஸ்டேஜ் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினேன், ஆங்கரிங் பண்ணினேன். எனக்கான வாய்ப்புக்காகக் காத்துக்கிட்டே இருந்தேன். அதுக்கு பதினைந்து வருஷம் ஆச்சு. கடைசியில அது நடந்துச்சு. இன்னைக்கு ஒரு பெரிய மேடையில ஏ.ஆர். முருகதாஸ் சார் மாதிரி ஒருத்தர் என் நடிப்பைப் பாராட்டும்போது, அந்த வட்டம் நிறைவடைஞ்ச மாதிரி ஒரு ஃபீல். அன்னைக்கு முதல் முறையா எனக்கு நானே தேங்க்ஸ் சொல்லிக்கிட்டேன், தோத்துப்போய் பின்வாங்காம தைரியமா முன்னேறி போனதுக்கு. கடவுள் புண்ணியத்துல பணம் மட்டும்தான் போச்சு, வேற எதுவும் போகல,&quot; என்று ஸ்வாசிகா நெகிழ்ச்சியுடன் முடித்தார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>cinema</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/swasika-vijay-recalls-losing-1-lakh-after-being-scammed-for-ar-murugadoss-meeting-qga3ggg"/>
        </item>
        <item>
            <title><![CDATA[சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடித்த நடிகைகள்.... இன்ஸ்டா சப்ஸ்கிரிப்ஷனில் அன்லிமிடெட் கவர்ச்சிகாட்டி கோடிக்கணக்கில் வசூல் வேட்டை]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/serial-actress-janani-ashokkumar-dharsha-gupta-reshma-abirami-earn-huge-money-through-instagram-subscription-vcr92gi</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/serial-actress-janani-ashokkumar-dharsha-gupta-reshma-abirami-earn-huge-money-through-instagram-subscription-vcr92gi</guid>
            <pubDate>Tue, 07 Jul 2026 13:48:22 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Serial Actress Instagram Subscription : தமிழில் சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகைகள் சிலர் இன்ஸ்டாகிராம் சப்ஸ்கிரிப்ஷன் மூலம் மிகப்பெரிய தொகையை சம்பாதித்து வருகின்றனர்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwxt71jsr83gdqqh5e25t9gm,imgname-dharsha-gupta--1--1783412000345.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Serial Actress Instagram Subscription : தமிழில் சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகைகள் சிலர் இன்ஸ்டாகிராம் சப்ஸ்கிரிப்ஷன் மூலம் மிகப்பெரிய தொகையை சம்பாதித்து வருகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்ஸ்டார்கிராம் தான் இன்றைய இளசுகள் மத்தியில் பாப்புலராக உள்ளது. இன்ஸ்டாவை திறந்தாலே அடுத்தடுத்து விதவிதமான ரீல்ஸ் வீடியோக்கள் வருவதால், பொழுதுபோக்குக்கு சிறந்த செயலியாக அது இருக்கிறது. அந்த இன்ஸ்டாகிராமில் சப்ஸ்கிரைபர் ஆப்ஷன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டது. அதைப் பயன்படுத்திக் கொண்ட நடிகைகள் சிலர் அதில் தங்களுடைய கவர்ச்சிகரமான போட்டோக்களை வெளியிட்டு அதைப்பார்க்க காசும் வசூலிக்கிறார்கள். அதிலும் தற்போது சின்னத்திரை சீரியல் நடிகைகளும் அந்த கவர்ச்சி ரூட்டுக்கு தாவி ஆண்டுக்கு கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். அவர்கள் யார்... யார் என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்ஸ்டாவில் தற்போது டிரெண்டிங்கே இவர் தான். இவர் விஜய் டிவி, ஜீ தமிழ் உள்ளிட்ட சேனல்களில் சில சீரியல்களில் நடித்தாலும் அது பெரியளவில் அவருக்கு கைகொடுக்கவில்லை. பின்னர் சினிமாவிலும் நடித்தார். அதிலும் சோபிக்க முடியவில்லை. இதனால் இன்ஸ்டா சப்ஸ்கிரிப்ஷனில் தன்னுடைய கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட தொடங்கினார். பிகினி உடையில் அன்லிமிட்டெட் கவர்ச்சியில் ரசிகர்களை திக்குமுக்காட வைக்கிறாராம் தர்ஷா. அவருக்கு தற்போது 1428 சப்ஸ்கிரைபர்கள் இருக்கிறார்கள். ஒரு ஆளுக்கு மாதம் 390 ரூபாய் வசூலிப்பதன் மூலமாக அவருக்கு மாதந்தோறும் ரூ.5 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறதாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்ஸ்டாவில் வசூல் வேட்டையாடும் மற்றுமொரு சீரியல் நடிகை தான் அபிராமி. இவர் சினிமாவில் பெரியளவில் வாய்ப்பு கிடைக்காததால் சீரியலில் நடிக்க வந்தார். அதிலும் அடுத்தடுத்து வாய்ப்பு வராததால், கிளாமர் ரூட்டுக்கு திரும்பிய அவர், வித விதமாக போட்டோஷூட் நடத்தி, அதன் புகைப்படங்களை தன்னுடைய சப்ஸ்கிரைபர்களுக்காக அடிக்கடி பதிவிட்டு வருகிறார். இவருக்கு இன்ஸ்டாவில் 1846 சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். அவர்களிடம் இருந்து மாதத்துக்கு ரூ.390 வசூலிக்கிறார் அபிராமி. அதன்மூலம் அவருக்கு மாதந்தோறும் 7 லட்சத்து 19 ஆயிரத்து 940 ரூபாய் கிடைக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்ஸ்டா சப்ஸ்கிரிப்ஷன் மூலம் டிரெண்டான சீரியல் நடிகை என்றால் அது ஜனனி அசோக் குமார் தான். இவர் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் தொடர்களில் நடித்திருந்தாலும், அதில் ஹோம்லி லுக்கில் வந்திருப்பார். ஆனால் இன்ஸ்டாவில் ஆளே டோட்டலாக மாறி, விதவிதமான கிளாமர் உடைகளில் கிளுகிளுப்பாக போஸ் கொடுத்து, ரசிகர்களுக்கு கவர்ச்சிவிருந்து படைத்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாவில் 2450 சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். மாதம் 390 ரூபாய் வீதம் கணக்கிட்டு பார்த்தால், ஜனனிக்கு மாதந்தோறும் இதன்மூலம் 9 லட்சத்து 55 ஆயிரத்து 500 ரூபாய் கிடைக்கிறது. ஆண்டுக்கு கணக்கு போட்டால் கோடிகளை தாண்டிவிடுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்ஸ்டா சப்ஸ்கிரிப்ஷன் மூலம் அதிகம் சம்பாதிக்கும் நடிகை என்றால் அது ரேஷ்மா பசுபுலேட்டி தான். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி சீரியல் மூலம் பேமஸ் ஆனார். அந்த சீரியல் முடிந்த பின்னர் கிளாமர் ரூட்டுக்கு திரும்பிய ரேஷ்மா, இன்ஸ்டா சப்ஸ்கிரைபர்களை கவர்ச்சியால் கிறங்கடித்து வருகிறார். அவருக்கு இன்ஸ்டாகிராமில் 2481 சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். ஒரு மாதத்துக்கு 390 ரூபாய் நிர்ணயம் செய்திருக்கிறார். அதை கணக்கிட்டால், மாதந்தோறும் 9 லட்சத்து 67 ஆயிரத்து 590 ரூபாய் சம்பாதிக்கிறார் ரேஷ்மா.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>cinema</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/serial-actress-janani-ashokkumar-dharsha-gupta-reshma-abirami-earn-huge-money-through-instagram-subscription-vcr92gi"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Swathi Reddy Marriage: ரகசியமாக 2-வது திருமணம் செய்த 'சுப்ரமணியபுரம்' சுவாதி: மாப்ள யார் தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/subramaniapuram-actress-swathi-reddy-ties-knot-with-director-srikanth-nagothi-in-second-marriage-wxdo1tw</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/subramaniapuram-actress-swathi-reddy-ties-knot-with-director-srikanth-nagothi-in-second-marriage-wxdo1tw</guid>
            <pubDate>Thu, 09 Jul 2026 14:37:53 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Subramaniapuram Actress Swathi Reddy Marriage: சுப்ரமணியபுரம் பட நடிகை சுவாதி ரெட்டி, பைலட் விகாஸ் வாசுவை விவாகரத்து செய்திருந்த நிலையில், தற்போது தனது பட இயக்குநரையே கரம் பிடித்துள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kx31ym9vywq84ye9dxbr2kwx,imgname-swathi-1783587885371.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Subramaniapuram Actress Swathi Reddy Marriage: சுப்ரமணியபுரம் பட நடிகை சுவாதி ரெட்டி, பைலட் விகாஸ் வாசுவை விவாகரத்து செய்திருந்த நிலையில், தற்போது தனது பட இயக்குநரையே கரம் பிடித்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நடிகை சுவாதி, தனது 'மந்த் ஆஃப் மது' பட இயக்குநர் ஸ்ரீகாந்த் நாகோடியை ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. தமிழில் 'சுப்ரமணியபுரம்' படம் மூலம் பிரபலமானவர் சுவாதி. இவர் தனது திருமணப் படங்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து, &quot;திருமணமாகிவிட்டது&quot; என ஒரே வார்த்தையில் பதிவிட்டுள்ளார். இந்த போஸ்ட் வைரலாகியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;2023-ல் வெளியான 'மந்த் ஆஃப் மது' படம் மூலம் சுவாதி மீண்டும் நடிக்க வந்தார். இதன் இயக்குநர் ஸ்ரீகாந்த் நாகோடி. இப்படத்தில் பணியாற்றியபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து, தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது. முன்னதாக சுவாதி, 2018-ல் மலையாள பைலட் விகாஸ் வாசு என்பவரைத் திருமணம் செய்தார். ஆனால், 2022-ல் அவரை விவாகரத்து செய்தார். தனது சமூக வலைதளப் பக்கங்களிலிருந்து கணவரின் படங்களை நீக்கியபோது இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சுவாதி, தெலுங்கில் 'டேஞ்சர்' படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். ஆனால், 'ஆடவாரி மாடலகு அர்த்தாலே வேருலே' படத்தில் த்ரிஷாவின் தங்கையாக நடித்து பெரும் புகழ் பெற்றார். தெலுங்கு மட்டுமல்லாமல், தமிழிலும் சுவாதி தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். குறிப்பாக, 'சுப்ரமணியபுரம்' படத்தில் இவரது இயல்பான நடிப்புக்கு பெரும் பாராட்டு கிடைத்தது. நடிப்பால் மட்டுமல்லாமல், தனது எளிமையான குணத்தாலும் ரசிகர்களைக் கவர்ந்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நடிகை சுவாதி ரெட்டி தமிழில் சுப்ரமணியபுரம் மட்டுமின்றி, இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி போன்ற படங்களிலும் நாயகியாக நடித்திருந்தார். இவர் முதல் திருமணத்துக்கு பின் தமிழ் சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்தார். இருப்பினும் அந்த திருமணம் விவாகரத்தில் முடிந்ததால், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் மட்டும் நடிக்கத் தொடங்கினார். தற்போது இயக்குநரையே அவர் இரண்டாவது திருமணம் செய்துள்ளதால், அவர் தொடர்ந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>cinema</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/subramaniapuram-actress-swathi-reddy-ties-knot-with-director-srikanth-nagothi-in-second-marriage-wxdo1tw"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Actress: ஆமீர் கான் மகனுடன் முதல் படம் ஃபிளாப்; இப்போது இந்தியாவின் காஸ்ட்லி படத்தில் ஹீரோயின்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/sai-pallavi-bags-mega-film-after-ek-din-box-office-failure-xhz9ac4</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/sai-pallavi-bags-mega-film-after-ek-din-box-office-failure-xhz9ac4</guid>
            <pubDate>Tue, 07 Jul 2026 21:25:12 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Actress: தென்னிந்தியாவின் பிரபல நடிகை ஒருவர், இந்தியாவின் மிக விலையுயர்ந்த திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். ஆமீர் கான் மகனுடன் அவர் நடித்த முதல் படம் தோல்வியடைந்தது. இப்போது ஒரு பாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேர உள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kpmwb3exwrmp3jp110sr4ggb,imgname-saipallavi.senthamarai-1763553441-3769281921219222313-2108210535-1776669789661.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Actress: தென்னிந்தியாவின் பிரபல நடிகை ஒருவர், இந்தியாவின் மிக விலையுயர்ந்த திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். ஆமீர் கான் மகனுடன் அவர் நடித்த முதல் படம் தோல்வியடைந்தது. இப்போது ஒரு பாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேர உள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவின் மிக விலையுயர்ந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் பெருமையை இந்த நடிகை பெற்றுள்ளார். தென்னிந்தியாவைச் சேர்ந்த இந்த நடிகை, பாலிவுட்டின் மிக காஸ்ட்லியான படத்தில் இடம்பிடித்துள்ளார். இவர் கங்கனா ரனாவத் உடனும் பணியாற்றியுள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பாலிவுட்டின் மிக விலையுயர்ந்த திரைப்படத்தில் நடிக்கும் அந்த நடிகை சாய் பல்லவிதான். 34 வயதான சாய் பல்லவி, பல சூப்பர்ஹிட் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;சாய் பல்லவி, மே 9, 1992 அன்று தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் பிறந்தார். பள்ளி நாட்களில் பாட்மிண்டன் வீராங்கனையாக இருந்தார். பின்னர், குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்கத் தொடங்கினார்.&lt;img&gt;2005-ல் 'கஸ்தூரி' என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதன்பிறகு, 2008-ல் வெளியான கங்கனா ரனாவத்தின் முதல் படமான 'தாம் தூம்' படத்தில் ஜூனியர் ஆர்டிஸ்டாக பணியாற்றினார்.&lt;img&gt;&lt;p&gt;சமீபத்தில் சாய் பல்லவி தனது முதல் பாலிவுட் படமான 'ஏக் தின்' படத்தில் ஆமீர் கானின் மகன் ஜுனைத் கானுடன் இணைந்து நடித்தார். ஆனால், அவரது முதல் படமே தோல்வியடைந்தது.&lt;/p&gt;&lt;img&gt;தற்போது சாய் பல்லவி, நடிகர் ரன்பீர் கபூருடன் 'ராமாயணம்' திரைப்படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வரும். இதன் பட்ஜெட் 4000 கோடி ரூபாய். இந்த ராமாயணமே இந்தியாவின் மிக விலையுயர்ந்த படம்.]]></content:encoded>
            <category>cinema</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/sai-pallavi-bags-mega-film-after-ek-din-box-office-failure-xhz9ac4"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Prabhas Marriage : பேச்சிலர் வாழ்க்கைக்கு எண்டு கார்டு போடும் பிரபாஸ்? கல்யாணம் எப்போ?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/prabhas-builds-200-crore-mansion-amid-persistent-wedding-rumors-xkvs4f2</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/prabhas-builds-200-crore-mansion-amid-persistent-wedding-rumors-xkvs4f2</guid>
            <pubDate>Thu, 09 Jul 2026 10:51:15 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Prabhas Marriage : யங் ரெபல் ஸ்டார் பிரபாஸின் திருமண செய்திகள் மீண்டும் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. 200 கோடியில் பிரம்மாண்ட வீடு கட்டி வருவதாக தகவல் பரவுகின்றன.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kq28dhs53tx406tfww5468mq,imgname-whatsapp-image-2026-04-25-at-5.32.40-pm-1777118660389.jpeg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Prabhas Marriage : யங் ரெபல் ஸ்டார் பிரபாஸின் திருமண செய்திகள் மீண்டும் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. 200 கோடியில் பிரம்மாண்ட வீடு கட்டி வருவதாக தகவல் பரவுகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பான்-இந்தியா ஸ்டார் பிரபாஸ், ஹைதராபாத்தின் காஸ்ட்லியான பகுதியில் சுமார் 200 கோடி ரூபாய் செலவில் ஒரு பிரம்மாண்ட அரண்மனை போன்ற வீட்டைக் கட்டி வருகிறார். இந்த செய்தி டோலிவுட்டில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில், சர்வதேச தரத்தில் இந்த வீடு தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;இந்த 200 கோடி பங்களாவை, பிரபாஸ் தனது வருங்கால மனைவிக்கு பரிசாக வழங்கப் போகிறார் என்று ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்த ஆண்டு ஒரு தொழிலதிபரின் மகளை அவர் திருமணம் செய்யப் போவதாகவும், திருமண ஏற்பாடுகளை அவரது பெரியம்மா ஷ்யாமளா தேவி கவனித்து வருவதாகவும் வதந்திகள் பரவுகின்றன. திருமணத்திற்குள் இந்த வீட்டை கட்டி முடிக்க பிரபாஸ் குடும்பம் திட்டமிட்டுள்ளதாம்.&lt;img&gt;&lt;p&gt;பிரபாஸ் வீடு கட்டுவது உண்மைதான். ஆனால், அவரது திருமணம் குறித்த செய்திகளில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை. பிரபாஸ் தரப்பிலிருந்தோ அல்லது அவரது டீமிடமிருந்தோ இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. ஒவ்வொரு சீசனிலும் பிரபாஸின் திருமணம் பற்றி இப்படி செய்திகள் வருவது சகஜம்தான். இந்த முறை, புதிய வீட்டுடன் முடிச்சுப் போட்டு பேசுகிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முன்பு அனுஷ்கா ஷெட்டி, கிருத்தி சனோன் போன்ற நடிகைகளுடன் பிரபாஸுக்கு திருமணம் என பல செய்திகள் வந்தன. தற்போது 46 வயதாகும் பிரபாஸ், முழு கவனத்தையும் படங்களில் வைத்துள்ளார். 'சலார்-2', 'கல்கி-2', 'ஸ்பிரிட்' என அடுத்த 3-4 ஆண்டுகளுக்கு அவரது கால்ஷீட் புல்லாகி இருக்கிறது. அதனால், அடுத்த ஆண்டு திருமணம் என்பது சந்தேகம்தான். 'டார்லிங்' ரசிகர்களின் இந்த ஆசை எப்போது நிறைவேறுமெனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>cinema</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/prabhas-builds-200-crore-mansion-amid-persistent-wedding-rumors-xkvs4f2"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Siragadikka Aasai : மனோஜ் - கனகாவின் திருமணத்தில் அடுத்தடுத்து அரங்கேறிய ட்விஸ்ட்... அடிபொலி எபிசோடு இதோ]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/manoj-kanaga-marriage-completed-with-sudden-twist-in-siragadikka-aasai-serial-july-10-today-1053rd-episode-zwi2uzg</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/manoj-kanaga-marriage-completed-with-sudden-twist-in-siragadikka-aasai-serial-july-10-today-1053rd-episode-zwi2uzg</guid>
            <pubDate>Fri, 10 Jul 2026 09:14:45 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial 10 July 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில் மனோஜ் - கனகாவின் திருமணத்தின் போது பல எதிர்பாராத திருப்பங்கள் அரங்கேறி உள்ளன. அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kx51t3005gfs6p3nez6qvt44,imgname-siragadikka-aasai---2026-07-10t090830.094-1783654845440.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial 10 July 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில் மனோஜ் - கனகாவின் திருமணத்தின் போது பல எதிர்பாராத திருப்பங்கள் அரங்கேறி உள்ளன. அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடின் தொடக்கத்தில், ரோகிணி கனகாவுக்கு மேக்கப் செய்து முடித்துவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். அப்போது அவரை மொட்டை சந்தோஷ் பார்த்துவிடுகிறார். ஆனால், &quot;என்னுடைய நண்பரின் திருமணத்திற்குத்தான் வந்திருக்கிறேன்&quot; என்று கூறி ரோகிணியிடம் சமாளிக்கிறார். அதன்பிறகு, சந்தோஷிடம் தனது 5 லட்சம் ரூபாய் குறித்து ரோகிணி கேட்க, &quot;விரைவில் கொடுத்துவிடுகிறோம்&quot; என்று உறுதியளித்து அவரை அனுப்பி வைக்கிறார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Siragadikka Aasai : விஜயாவிடம் பொய் சொல்லி எஸ்கேப் ஆன மனோஜ்... கல்யாண வீட்டில் காத்திருக்கும் ட்விஸ்ட்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதற்கிடையில், சந்தோஷை முத்துவும் மீனாவும் பார்த்து, அவர் அங்கு என்ன செய்கிறார் என்று விசாரிக்கிறார்கள். அதற்கு, நண்பரின் திருமணம் என்று கூறி சமாளிக்கும் சந்தோஷிடம், &quot;மனோஜுக்காக இந்தப் பெண்ணைப் பார்த்தது நீங்கள்தானே? மனோஜ் மறுத்ததால் வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்கிறீர்களா?&quot; என்று கேட்கிறார்கள். அதற்கும் எப்படியோ சமாளித்துவிட்டு, சந்தோஷ் அவசரமாக அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதன்பின், மனோஜிடம் சென்று, முத்து, மீனா, ரவி மற்றும் ஸ்ருதி ஆகியோர் திருமண நடக்கும் இடத்திலேயே இருப்பதாகவும், அவர்கள் திருமண ஏற்பாடுகளையே கவனித்து வருவதாகவும் கூறுகிறார். இதைக் கேட்டு மனோஜ் என்ன செய்வது என்று தெரியாமல் பதற்றமடைகிறார். அந்த நேரத்தில், ஜோதிடர் மணப்பெண்ணின் தாயாரை தனியாக அழைத்து, முத்துவும் ரவியும் மனோஜின் சகோதரர்கள் என்றும், அவர்கள் அங்கு இருந்தால் இந்தத் திருமணத்தை தடுக்கக்கூடும் என்றும் எச்சரிக்கிறார். இதனால், மணப்பெண் வீட்டார் முத்து, மீனா, ரவி, ஸ்ருதி ஆகியோரிடம் திருமணம் நடக்க தாமதமாகும் என சொன்னதும், அவர்களும் தங்களுக்கு வேலை இருப்பதாக கூறி அங்கிருந்து கிளம்பிவிடுகிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அவர்கள் சென்றுவிட்டதாக நினைத்து மனோஜை கீழே அழைத்து வருகிறார்கள். ஆனால், அப்போது எதிர்பாராத விதமாக முத்து மீண்டும் அங்கு வருகிறார். இதைப் பார்த்த மனோஜ் பதற்றத்தில் ஒளிந்துகொள்கிறார். பின்னர், மீனா தனது பர்ஸை மறந்துவிட்டதால் அதை எடுக்கத்தான் முத்து திரும்பி வந்தது தெரியவருகிறது. பர்ஸை எடுத்துக்கொண்டு அவர்கள் மீண்டும் கிளம்பிச் செல்கிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதையடுத்து, எந்தத் தடையும் இல்லாமல் மனோஜ், கனகாவின் கழுத்தில் தாலி கட்டி திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்திற்குப் பிறகு வழக்கம்போல் கோயிலுக்கு செல்ல முடிவு செய்கிறார்கள். ஆச்சரியமாக, அவர்கள் செல்லும் கோயில், விஜயா செல்ல விரும்பிய அதே கோயிலாக இருக்கிறது. அங்கு பார்வதியுடன் விஜயா சாமி தரிசனம் செய்து கொண்டிருக்கும் நேரத்தில், புதுமணக் கோலத்தில் மனோஜும் கனகாவும் கோயிலுக்கு வருகிறார்கள். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. மனோஜை விஜயா பார்ப்பாரா? இல்லையா? என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>cinema</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/manoj-kanaga-marriage-completed-with-sudden-twist-in-siragadikka-aasai-serial-july-10-today-1053rd-episode-zwi2uzg"/>
        </item>
    </channel>
</rss>
