<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes"?>
<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Fri, 17 Jul 2026 12:51:43 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss/career" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[Bank Job : ரூ.85,920 வரை சம்பளத்துடன் ஜம்முனு பேங்க் வேலைக்கு போகணுமா... இந்த சூப்பர் சான்ஸ மிஸ் பண்ணிடாதீங்க]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/career/ibps-po-recruitment-2026-apply-for-6715-officer-vacancies-salary-up-to-rs-85920-3sh2kad</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/career/ibps-po-recruitment-2026-apply-for-6715-officer-vacancies-salary-up-to-rs-85920-3sh2kad</guid>
            <pubDate>Thu, 02 Jul 2026 12:43:13 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;IBPS எனப்படும் வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம், நாடு முழுவதும் உள்ள அரசு வங்கிகளில் 6715 புரொபேஷனரி ஆபிசர்/மேனேஜ்மென்ட் டிரெய்னி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwgths59q5jefm0gsvde6w20,imgname-bank-jobs-1782976144553.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;IBPS எனப்படும் வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம், நாடு முழுவதும் உள்ள அரசு வங்கிகளில் 6715 புரொபேஷனரி ஆபிசர்/மேனேஜ்மென்ட் டிரெய்னி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வங்கி வேலை கனவில் இருக்கும் இளைஞர்களுக்கு ஒரு சூப்பர் வாய்ப்பு. IBPS எனப்படும் வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் (Institute of Banking Personnel Selection), நாடு முழுவதும் உள்ள முக்கிய அரசு வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பணி விவரங்கள்:&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;நிறுவனம்: வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS)&lt;/p&gt;&lt;p&gt;பணியிடங்களின் எண்ணிக்கை: 6715&lt;/p&gt;&lt;p&gt;பணியின் பெயர்: புரொபேஷனரி ஆபிசர்/ மேனேஜ்மென்ட் டிரெய்னி&lt;/p&gt;&lt;p&gt;பணியிடம்: இந்தியா முழுவதும்&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;கல்வித் தகுதி:&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;வயது வரம்பு:&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 20 வயதும், அதிகபட்சம் 30 வயதும் இருக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;வயது வரம்பு தளர்வு:&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஓபிசி பிரிவினருக்கு: 03 ஆண்டுகள்&lt;/p&gt;&lt;p&gt;எஸ்சி/எஸ்டி/ESM பிரிவினருக்கு: 05 ஆண்டுகள்&lt;/p&gt;&lt;p&gt;மாற்றுத்திறனாளிகளுக்கு (PwBD): 10 ஆண்டுகள்&lt;/p&gt;&lt;p&gt;இந்தப் பணியிடங்களுக்குத் தேர்வாகும் நபர்களுக்கு ஆரம்பத்திலேயே மாதம் ₹48,480 முதல் ₹85,920 வரை சிறப்பான சம்பளம் வழங்கப்படும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;தேர்வு முறை:&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;முதல்நிலைத் தேர்வு (Preliminary Exam)&lt;/p&gt;&lt;p&gt;முதன்மைத் தேர்வு (Main Exam)&lt;/p&gt;&lt;p&gt;நேர்காணல் (Interview)&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;விண்ணப்பக் கட்டணம்:&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;SC/ ST/ PwBD பிரிவினருக்கு: ரூ. 175&lt;/p&gt;&lt;p&gt;மற்ற அனைத்து பிரிவினருக்கும் (General/OBC/EWS): ரூ. 850&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முதலில், அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று அறிவிப்பை முழுமையாகப் படிக்கவும்.&lt;/p&gt;&lt;p&gt;உங்கள் சமீபத்திய புகைப்படம், கையொப்பம், இமெயில் ஐடி மற்றும் தேவையான கல்விச் சான்றிதழ்களைத் தயாராக வைத்திருக்கவும்.&lt;/p&gt;&lt;p&gt;கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைப் பயன்படுத்தி ஆன்லைன் விண்ணப்பத்தை சரியாகப் பூர்த்தி செய்யவும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;https://ibpsreg.ibps.in/crppoxvijun26/&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;உங்கள் பிரிவுக்கு ஏற்ப விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி, 'Submit' பட்டனை கிளிக் செய்யவும்.&lt;/p&gt;&lt;p&gt;எதிர்காலத் தேவைக்காக விண்ணப்பப் படிவத்தை ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;முக்கிய தேதிகள்:&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;விண்ணப்பம் தொடங்கும் நாள்: ஜூலை 01, 2026&lt;/p&gt;&lt;p&gt;விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 21, 2026&lt;/p&gt;&lt;p&gt;விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி நாள்: ஜூலை 21, 2026&lt;/p&gt;]]></content:encoded>
            <category>career</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/career/ibps-po-recruitment-2026-apply-for-6715-officer-vacancies-salary-up-to-rs-85920-3sh2kad"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Work From Home: வீட்டிலிருந்து வேலை செய்கிறீர்களா? இந்த பழக்கங்கள் உங்கள் Career-ஐ அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/work-from-home-tips-10-proven-ways-to-boost-productivity-while-working-from-home-4acbizt</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/work-from-home-tips-10-proven-ways-to-boost-productivity-while-working-from-home-4acbizt</guid>
            <pubDate>Fri, 26 Jun 2026 10:01:06 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;வீட்டிலிருந்து வேலை செய்வது சுதந்திரத்தை அளித்தாலும், சரியான திட்டமிடல் இல்லையெனில் உற்பத்தித்திறன் குறையலாம். கவனச்சிதறலைத் தவிர்த்து, நேரத்தை திறமையாக நிர்வகிக்க உதவும் எளிய மற்றும் பயனுள்ள குறிப்புகளை இங்கே தெரிந்துகொள்ளலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01em6p55pxv0dyarrz0c7t5jzp,imgname-gettyimages-1153816803-170667a-jpg.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;வீட்டிலிருந்து வேலை செய்வது சுதந்திரத்தை அளித்தாலும், சரியான திட்டமிடல் இல்லையெனில் உற்பத்தித்திறன் குறையலாம். கவனச்சிதறலைத் தவிர்த்து, நேரத்தை திறமையாக நிர்வகிக்க உதவும் எளிய மற்றும் பயனுள்ள குறிப்புகளை இங்கே தெரிந்துகொள்ளலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வீட்டிலிருந்து வேலை செய்யும் ஊழியர்களுக்கு டைம்டேபிள் அமைப்பது வெற்றிக்கான முக்கிய பழக்கமாகும். நாள் முழுவதும் செய்ய வேண்டிய பணிகளை நேர வாரியாக திட்டமிட்டு எழுதிவைத்தால், எந்த வேலையை முதலில் முடிக்க வேண்டும், எது நிலுவையில் உள்ளது என்பதை எளிதாக அறிந்துகொள்ள முடியும். இதனால் தேவையற்ற அவசரம், கவனச்சிதறல் மற்றும் நேர விரயம் குறையும். ஒவ்வொரு பணிக்கும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குவதால் வேலைகள் சீராக முடிவதோடு, மன அழுத்தமும் குறையும். திட்டமிட்ட முறையில் செயல்படுவதன் மூலம் உற்பத்தித்திறன் அதிகரித்து, வேலை&ndash;தனிப்பட்ட வாழ்க்கை சமநிலையையும் சிறப்பாக பராமரிக்க முடியும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வீட்டிலிருந்து வேலை செய்யும்போது, வேலைக்காக ஒரு பிரத்யேக இடத்தை ஒதுக்குவது மிகவும் முக்கியம். படுக்கை, சோஃபா போன்ற ஓய்வுக்கான இடங்களில் அமர்ந்து வேலை செய்தால் சோம்பேறித்தனமும் கவனச்சிதறலும் அதிகரிக்கலாம். அதற்கு பதிலாக, மேஜை மற்றும் நாற்காலியுடன் கூடிய அமைதியான இடத்தைத் தேர்வு செய்தால், மனம் இயல்பாகவே வேலை செய்யும் மனநிலைக்கு மாறும். இது படிக்கும் மாணவர்கள் படிப்பு மேஜையில் அமரும்போது அதிக கவனத்துடன் இருப்பதைப் போன்றதே. தனி வேலைப்பகுதி இருப்பது ஒழுக்கத்தையும், உற்பத்தித்திறனையும் மேம்படுத்தி, வேலைகளை நேரத்திற்குள் முடிக்க உதவும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வொர்க் ஃப்ரம் ஹோம் என்பதால் எப்போது வேண்டுமானாலும் வேலை செய்யலாம் என்று நினைப்பது தவறான அணுகுமுறை. அலுவலகத்தில் இருப்பது போலவே, வீட்டிலும் ஒரு நிர்ணயிக்கப்பட்ட வேலை நேரத்தைப் பின்பற்றுவது அவசியம். இதனால் வீட்டு வேலைகளை எப்போது முடிக்க வேண்டும், எந்த நேரத்தில் முழு கவனத்துடன் அலுவலகப் பணியைத் தொடங்க வேண்டும் என்பது தெளிவாக இருக்கும். வேலை நேரத்திற்கு ஒழுக்கம் கடைப்பிடிப்பதால் கவனச்சிதறல் குறையும், வேலை&ndash;தனிப்பட்ட வாழ்க்கை சமநிலை மேம்படும். மேலும், பணிகளை குறிப்பிட்ட நேரத்தில் முடித்து உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் இது பெரிதும் உதவும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வீட்டிலிருந்து வேலை செய்வதால் பலருக்கு தனிமை உணர்வு ஏற்படலாம். இதைத் தவிர்க்க, சக ஊழியர்கள் மற்றும் பிற தொழில் வல்லுநர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பது அவசியம். ஆன்லைன் மீட்டிங்குகள், தொழில்முறை குழுக்கள், சமூக வலைத்தளங்கள் போன்றவற்றின் மூலம் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளலாம். இது அலுவலகச் சூழலை உணரச் செய்வதோடு, புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளவும் உதவும். மேலும், இந்த நெட்வொர்க்கிங் மூலம் புதிய வேலை வாய்ப்புகள், தொழில் வளர்ச்சிக்கான தொடர்புகள் மற்றும் எதிர்கால முன்னேற்றத்திற்கான பல புதிய வாய்ப்புகளும் உருவாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வீட்டிலிருந்து வேலை செய்யும்போது, சரியான டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்துவது வெற்றிக்கு முக்கியமான அடித்தளமாகும். அதிவேக இணைய இணைப்பு, நம்பகமான தகவல் தொடர்பு செயலிகள், கோப்புகளைப் பகிரும் தளங்கள் மற்றும் திட்ட மேலாண்மை கருவிகள் ஆகியவை பணிகளை தடையின்றி மேற்கொள்ள உதவுகின்றன. குறிப்பாக குழுவுடன் அல்லது வாடிக்கையாளர்களுடன் இணைந்து பணிபுரியும் போது, வேலையின் முன்னேற்றத்தை உடனுக்குடன் பகிரவும், புதிய அப்டேட்களை அறியவும், தகவல் பரிமாற்றத்தை எளிமையாக்கவும் இந்த கருவிகள் பெரிதும் உதவுகின்றன. இதனால் நேரம் மிச்சமாகி, தவறுகள் குறைந்து, உற்பத்தித்திறனும் கணிசமாக அதிகரிக்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>career</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/work-from-home-tips-10-proven-ways-to-boost-productivity-while-working-from-home-4acbizt"/>
        </item>
        <item>
            <title><![CDATA[RBI Jobs Without Exam: தேர்வு கிடையாது.. ரிசர்வ் வங்கியில் மாசம் ரூ.1.5 லட்சம் சம்பளத்துடன் காத்திருக்கும் வேலை]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/career/rbi-recruitment-2026-no-written-test-high-paying-jobs-7ilzkas</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/career/rbi-recruitment-2026-no-written-test-high-paying-jobs-7ilzkas</guid>
            <pubDate>Wed, 17 Jun 2026 16:40:18 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;RBI Jobs Without Exam: இந்திய ரிசர்வ் வங்கி, பல்வேறு துறைகளில் யங் புரொஃபஷனல் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. எழுத்துத் தேர்வு இல்லாமல், நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் இந்த வாய்ப்பு இளைஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kv29t9sxnqqdkqz4xnmgenz3,imgname-gemini-generated-image-ttuo5wttuo5wttuo-1781415094076.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;RBI Jobs Without Exam: இந்திய ரிசர்வ் வங்கி, பல்வேறு துறைகளில் யங் புரொஃபஷனல் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. எழுத்துத் தேர்வு இல்லாமல், நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் இந்த வாய்ப்பு இளைஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி, இளைஞர்களுக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, எழுத்துத் தேர்வு இல்லாமல் நேரடியாக தேர்வு செயல்முறையில் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. பல்வேறு துறைகளில் திறமையான இளைஞர்களை ஈர்க்கும் நோக்கில் இந்த ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;செயற்கை நுண்ணறிவு, தரவு பகுப்பாய்வு, நிதிச் சந்தை ஆய்வு, கொள்கை ஆராய்ச்சி, இணையப் பாதுகாப்பு மற்றும் நிலை நிதி உள்ளிட்ட பல துறைகளில் யங் புரொஃபஷனல் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் அனைத்தும் மும்பையில் உள்ள ஆர்பிஐ தலைமை அலுவலகத்தில் செயல்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது, அதிகபட்சம் 30 வயது இருக்க வேண்டும். ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி கல்வித் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன, விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கவனமாகப் படிப்பது அவசியம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த பணியிடங்கள் மூன்று ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படுகின்றன. தேவைக்கேற்ப காலம் நீட்டிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது. தேர்வாகும் நபர்களுக்கு மாதந்தோறும் ரூ.1.5 லட்சம் நிரந்தர ஸ்டைஃபண்ட் வழங்கப்படும். உயர்ந்த வருமானம் மற்றும் மதிப்புமிக்க நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பு என்பதால் இந்த அறிவிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த ஆட்சேர்ப்பில் எழுத்துத் தேர்வு இல்லை. முதற்கட்ட தகுதி சரிபார்ப்பு, ஆவணப் பரிசோதனை மற்றும் நேர்காணல் மூலமாகவே இறுதித் தேர்வு நடைபெறும். விண்ணப்பிக்க விரும்புவோர் ஆர்பிஐ-யின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்த்து, தேவையான ஆவணங்களுடன் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>career</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/career/rbi-recruitment-2026-no-written-test-high-paying-jobs-7ilzkas"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Loco Pilot: மாதம் ரூ.70,000+ சம்பளம்! ரயில் ஓட்டுநர் ஆவது எப்படி? முழு விவரம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/career/indian-railway-loco-pilot-salary-and-job-profile-explained-89n7f86</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/career/indian-railway-loco-pilot-salary-and-job-profile-explained-89n7f86</guid>
            <pubDate>Tue, 23 Jun 2026 22:30:08 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Loco Pilot: இந்தியாவில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கிறார்கள். பயணிகளைப் பாதுகாப்பாக கொண்டு சேர்க்கும் லோகோ பைலட் எனப்படும் ரயில் ஓட்டுநர் வேலை எவ்வளவு சவாலானது? இதற்கான தகுதிகள் குறித்து பார்ப்போம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kvtc8spqjxz1xv7pw9qrtb6d,imgname-chatgpt-image-jun-23--2026--07-25-24-pm--1--1782222972631.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Loco Pilot: இந்தியாவில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கிறார்கள். பயணிகளைப் பாதுகாப்பாக கொண்டு சேர்க்கும் லோகோ பைலட் எனப்படும் ரயில் ஓட்டுநர் வேலை எவ்வளவு சவாலானது? இதற்கான தகுதிகள் குறித்து பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;இந்திய ரயில்வேயில் ஒரு உதவி லோகோ பைலட் (ALP) வேலைக்குச் சேர்ந்தால், 7வது ஊதியக் குழுவின்படி ஆரம்ப அடிப்படைச் சம்பளம் சுமார் ₹19,900. இதனுடன் அகவிலைப்படி (DA), வீட்டு வாடகைப்படி (HRA), போக்குவரத்துப் படி போன்ற படிகளும் கூடுதலாகக் கிடைக்கும்.&lt;img&gt;எல்லா படிகளையும் சேர்த்தால், ஒரு உதவி லோகோ பைலட் மாதம் ₹35,000 முதல் ₹55,000 வரை சம்பாதிக்கலாம். அனுபவம் கூடக்கூட, சீனியர் உதவி லோகோ பைலட், லோகோ பைலட், சீனியர் லோகோ பைலட் எனப் பதவி உயர்வுகளும் உண்டு.&lt;img&gt;ஒரு முழுமையான லோகோ பைலட் மாதத்திற்கு ₹60,000 முதல் ₹1 லட்சத்திற்கும் மேல் சம்பளம் பெறலாம். சிறப்பு வழித்தடங்கள், கூடுதல் வேலை நேரம், இரவுப் பணி மற்றும் ஓவர்டைம் போன்றவை வருமானத்தை இன்னும் அதிகரிக்கும். அனுபவமிக்க சீனியர் லோகோ பைலட்களின் சம்பளம் சில சமயம் ஒரு லட்சத்தைத் தாண்டும்.&lt;img&gt;லோகோ பைலட் ஆக, 12ஆம் வகுப்புக்குப் பிறகு ஐடிஐ (ITI) அல்லது டிப்ளமோ போன்ற தொழில்நுட்பப் படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிறகு, ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) நடத்தும் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும். எழுத்துத் தேர்வு, சைக்கோமெட்ரிக் தேர்வு, மருத்துவப் பரிசோதனை ஆகியவற்றில் தகுதி பெற்ற பிறகே பணிக்குத் தேர்வு செய்வார்கள்.&lt;img&gt;இந்த வேலையில் சம்பளம் அதிகமாக இருந்தாலும், இது அதிகப் பொறுப்புள்ள பணி. பல மணி நேரம் கேபினில் அமர்ந்து, பல்வேறு வானிலைச் சூழல்களைச் சமாளிக்க வேண்டும். நேரக் கட்டுப்பாடுகளும் அதிகம். ஆனாலும், நல்ல சம்பளம், அரசுப் பணிப் பாதுகாப்பு, பதவி உயர்வு வாய்ப்புகள் இருப்பதால், இளைஞர்கள் மத்தியில் இந்த வேலைக்கு நல்ல வரவேற்பு உள்ளது.]]></content:encoded>
            <category>career</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/career/indian-railway-loco-pilot-salary-and-job-profile-explained-89n7f86"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Gold Loan: தொழில் தொடங்க உதவும் நகைக்கடன்.! கட்டு கட்டா பணம் பெற எளிய வழிமுறைகள்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/gold-loan-for-business-smart-ways-to-get-huge-funding-for-your-startup-91hw36y</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/gold-loan-for-business-smart-ways-to-get-huge-funding-for-your-startup-91hw36y</guid>
            <pubDate>Wed, 01 Jul 2026 05:00:02 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தொழில் தொடங்கப் பணம் இல்லாமல் தவிக்கும் சாமானிய மக்களுக்கு, வீட்டில் இருக்கும் தங்க நகைகளே ஒரு சிறந்த மூலதனம். நகைக்கடன் மூலம் குறைந்த வட்டியில், எளிதாகப் பணம் பெற்று, தொழில் கனவை நனவாக்குவது எப்படி என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwcpbrfcnpyb6hnk0h7te1bp,imgname-gemini-generated-image-s85jmxs85jmxs85j--1--1782837535212.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தொழில் தொடங்கப் பணம் இல்லாமல் தவிக்கும் சாமானிய மக்களுக்கு, வீட்டில் இருக்கும் தங்க நகைகளே ஒரு சிறந்த மூலதனம். நகைக்கடன் மூலம் குறைந்த வட்டியில், எளிதாகப் பணம் பெற்று, தொழில் கனவை நனவாக்குவது எப்படி என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சொந்தமாக ஒரு தொழில் தொடங்கி, நான்கு பேருக்கு வேலை கொடுத்து, வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பது இன்றைய காலகட்டத்தில் சாமானிய மக்கள் பலரின் மிகப்பெரிய கனவாக உள்ளது. ஆனால், ஒரு நல்ல தொழிலைத் தொடங்குவதற்குப் போதிய பணம் இல்லாததே பலருடைய முட்டுக்கட்டையாக இருக்கிறது. வங்கிகளில் 'பிசினஸ் லோன்' (Business Loan) என்று சொல்லப்படும் தொழில் கடன் வாங்கப் போனால், அவர்கள் கேட்கும் கணக்கு வழக்குகளும், ஆவணங்களும் சாதாரண மனிதர்களுக்குத் தலைச்சுற்றலை ஏற்படுத்திவிடும்.&lt;/p&gt;&lt;p&gt;இப்படிப்பட்ட சூழ்நிலையில், சாமானிய மக்களின் கைகளில் இருக்கும் ஒரு எளிய, பாதுகாப்பான ஆயுதம் தான் &quot;நகைக்கடன்&quot;. நம் வீட்டில் அவசரத்திற்கு உதவும் வகையில் பூட்டி வைக்கப்பட்டிருக்கும் தங்க நகைகளை மூலதனமாக மாற்றினால், தொழில் தொடங்குவதற்குத் தேவையான பணத்தை மிக எளிதாகப் பெற முடியும். அது எப்படி, அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி சாமானிய மக்களும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் இந்த கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நகைக்கடன் என்பது நாம் கஷ்டப்பட்டுச் சேர்த்த தங்க நகைகளை வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் அடகு வைத்து, அதற்கு ஈடாகப் பணம் பெறும் ஒரு எளிய முறை ஆகும். மற்ற கடன்களை விட இது ஏன் தொழில் தொடங்குபவர்களுக்குச் சிறந்தது என்பதற்குச் சில முக்கியக் காரணங்கள் உள்ளன:&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;குறைந்த வட்டி&lt;/strong&gt;: நாம் அவசரத்திற்கு வாங்கும் தனிநபர் கடன் (Personal Loan) அல்லது கந்து வட்டிக் கடன்களுடன் ஒப்பிடும்போது, நகைக்கடனுக்கான வட்டி விகிதம் மிகவும் குறைவு.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;கிரெடிட் ஸ்கோர் தேவையில்லை&lt;/strong&gt;: வழக்கமாக வங்கிக்குச் சென்றால் நமது சிபில் ஸ்கோர் (CIBIL Score) எனப்படும் கடன் தகுதியைத் தான் பார்ப்பார்கள். ஆனால், நகைக்கடனுக்கு அது தேவையில்லை. உங்கள் கையில் தங்கம் இருந்தால் மட்டுமே போதும், கடன் கிடைத்துவிடும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;விரைவான செயல்முறை&lt;/strong&gt;: எந்தவொரு நீண்ட காத்திருப்பும் இல்லாமல், நகையைக் கொடுத்த சில நிமிடங்களிலேயே பணம் உங்கள் கைக்கு வந்துவிடும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வங்கியில் நகையைக் கொடுத்த உடனே அவர்கள் லட்சக்கணக்கில் பணம் கொடுத்துவிட மாட்டார்கள். அதற்குச் சில வழிமுறைகள் உள்ளன. உங்கள் நகைக்கு அதிகபட்ச தொகையைப் பெற நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இதோ:&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;தங்கத்தின் தூய்மையும் எடையும்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;நீங்கள் கொண்டு செல்லும் நகை 22 கேரட் (916 KDM) தங்கமாக இருந்தால், அதற்கு மிக உயர்ந்த மதிப்பு கிடைக்கும். நகையில் அதிக அளவில் கற்களோ (Stone weight), முத்துக்களோ அல்லது அரக்கோ இருந்தால், அவற்றின் எடை கழிக்கப்பட்டுவிடும். வெறும் சுத்தமான தங்கத்தின் எடைக்கு மட்டுமே வங்கிப் பணம் தரும். எனவே, கல் இல்லாத தூய்மையான நகைகளைத் தேர்ந்தெடுத்துச் சென்றால் அதிகப் பணம் பெறலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி, நீங்கள் கொண்டு செல்லும் தங்கத்தின் அன்றைய சந்தை மதிப்பில் அதிகபட்சமாக 75% வரை கடனாகப் பெற முடியும். உதாரணமாக, உங்கள் நகையின் மொத்த மதிப்பு ₹10 லட்சம் என்று வங்கியாளர்கள் கணக்கிட்டால், உங்களுக்கு ₹7.5 லட்சம் வரை ரொக்கமாகவோ அல்லது வங்கிக் கணக்கிலோ பணம் கிடைக்கும். எனவே, சந்தையில் தங்கத்தின் விலை அதிகமாக இருக்கும் நேரத்தில் கடன் வாங்கினால், கூடுதல் பணம் பெற வாய்ப்புள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தொழிலுக்குத் தேவையான பெரிய தொகையைத் தடையின்றிப் பெற, சாமானிய மக்கள் சில எளிய உத்திகளைக் கையாள வேண்டும்:&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;நிறுவனங்களை ஒப்பிட்டுப் பாருங்கள்&lt;/strong&gt;: அவசரப்பட்டு முதலாவது பார்க்கும் வங்கியில் நகையை வைக்க வேண்டாம். பொதுத்துறை வங்கிகள் (SBI, Indian Bank போன்றவை), தனியார் வங்கிகள் மற்றும் முத்தூட், மணப்புரம் போன்ற தங்கக் கடன் வழங்கும் நிறுவனங்களில் வட்டி விகிதம் மற்றும் நகைக்குத் தரும் மதிப்பு மாறுபடும். எங்கு வட்டி குறைவாகவும், நகைக்கு அதிகப் பணமும் தருகிறார்களோ, அங்கு நகையை வைக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;அத்தியாவசிய ஆவணங்களை எடுத்துச் செல்லுங்கள்&lt;/strong&gt;: நகைக்கடனுக்குப் பெரிய ஆவணங்கள் தேவையில்லை என்றாலும், உங்கள் ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் தற்போதைய முகவரிச் சான்று (Identity and Address Proof) ஆகியவற்றைத் தவறாமல் கையில் வைத்திருக்க வேண்டும். இது பணப் பரிவர்த்தனையை வேகப்படுத்தும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நகைக்கடனில் உள்ள மிகப்பெரிய வசதியே, நாம் வாங்கிய பணத்தைத் திருப்பிச் செலுத்துவதில் இருக்கும் நெகிழ்வுத்தன்மை (Flexibility) தான். தொழில் தொடங்கும் ஆரம்பக் கட்டத்தில் பெரிய அளவில் லாபம் வராது என்பதை வங்கிகள் புரிந்து வைத்துள்ளன. அதற்கேற்ப மூன்று முறைகளில் நாம் கடனைத் திருப்பிக் கொடுக்கலாம்:&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;மாதாந்திர வட்டி முறை&lt;/strong&gt;: இதில் நீங்கள் வாங்கிய அசல் தொகை அப்படியே இருக்கும். மாதம் மாதம் அதற்கான வட்டியை மட்டும் கட்டிக்கொண்டு வரலாம். தொழில் சூடுபிடித்து நல்ல லாபம் வரும்போது, மொத்த அசலையும் கட்டி நகையை மீட்டுக்கொள்ளலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;புல்லட் ரீபேமென்ட் (Bullet Repayment)&lt;/strong&gt;: இந்த முறையில் ஓராண்டு வரை நீங்கள் மாதாமாதம் வட்டியோ, அசலோ கட்டத் தேவையில்லை. ஒரு வருடத்தின் முடிவில் அசல் மற்றும் வட்டியைச் சேர்த்து மொத்தமாகக் கட்டி நகையை மீட்கலாம். ஆரம்பத்தில் முதலீடு மட்டுமே செய்யும் புதிய தொழில்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஓவர் டிராப்ட் (Overdraft) வசதி&lt;/strong&gt;: இது ஒரு வங்கிச் கணக்கு போலச் செயல்படும். உங்களுக்கு ₹5 லட்சம் கடன் (Approve) ஆகியிருந்தால், அதில் நீங்கள் தொழிலுக்காக எவ்வளவு பணம் (உதாரணமாக ₹2 லட்சம்) எடுக்கிறீர்களோ, அந்தத் தொகைக்கு மட்டும் வட்டி கட்டினால் போதும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&quot;முடங்கிக் கிடக்கும் தங்கம், முதலீடாய் மாறினால்... உங்கள் உழைப்பு உங்களை முதலாளியாக்கும்!&quot;&lt;/p&gt;&lt;p&gt;வீட்டுப் பெட்டியில் பூட்டி வைத்திருக்கும் தங்கம் நமக்கு வெறும் மனநிறைவைத் தருமே தவிர, வருமானத்தைத் தராது. ஆனால், அதைத் தொழிலுக்கான மூலதனமாக மாற்றும்போது, அது பல மடங்கு லாபத்தைப் பெருக்கித் தரும் ஆற்றல் கொண்டது.&lt;/p&gt;&lt;p&gt;சாமானிய மக்கள் கந்து வட்டி கொடுப்பவர்களிடமோ அல்லது அதிக வட்டி வாங்கும் நபர்களிடமோ சிக்கித் தவிப்பதற்குப் பதிலாக, தங்களிடம் உள்ள நகையைச் சரியான வங்கியில் அடகு வைத்து, முறையான திட்டமிடலுடன் தொழில் தொடங்கினால்... நிச்சயமாகக் கட்டு கட்டாகப் பணம் சம்பாதித்து, தொழிலிலும் வெற்றி பெற்று, நகையையும் பத்திரமாக மீட்க முடியும்!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>career</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/gold-loan-for-business-smart-ways-to-get-huge-funding-for-your-startup-91hw36y"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Mukesh Ambani House: அம்பானி வீட்ல வேலை வேணுமா? அரசு வேலையை விட கடினமாம்.! என்ன தகுதிகள் இருக்கணும்னு தெரிஞ்சிக்கோங்க.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/ambani-house-job-vacancy-eligibility-qualifications-selection-process-and-how-to-apply-for-jobs-at-ambanis-antilia-aghc5h8</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/ambani-house-job-vacancy-eligibility-qualifications-selection-process-and-how-to-apply-for-jobs-at-ambanis-antilia-aghc5h8</guid>
            <pubDate>Fri, 17 Jul 2026 12:49:23 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Ambani House Job Vacancy: இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி வீட்டில் வேலைக்குச் சேர ஆசைப்பட்டால், என்ன தகுதிகள் இருக்க வேண்டும்? என்ன தகுதிகளைப் பார்த்து வேலைக்கு எடுக்கிறார்கள்? முழு விவரம் உள்ளே.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxqejrdrywkc5sn701z11476,imgname-ambani-house-job-vacancy-1784272216504.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Ambani House Job Vacancy: இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி வீட்டில் வேலைக்குச் சேர ஆசைப்பட்டால், என்ன தகுதிகள் இருக்க வேண்டும்? என்ன தகுதிகளைப் பார்த்து வேலைக்கு எடுக்கிறார்கள்? முழு விவரம் உள்ளே.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முகேஷ் அம்பானியின் 'ஆண்டிலியா' இல்லத்தில் வேலைக்குச் சேருவது என்பது ஒரு அரசு வேலைக்குத் தேர்வாவது போல மிகவும் கடினமான மற்றும் கடுமையான ஒரு செயல்முறையாகும். அங்கு வேலை செய்யும் பணியாளர்களுக்குத் தங்குமிடம், உணவு, மருத்துவக் காப்பீடு மற்றும் பல லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அம்பானி வீட்டில் வேலைக்குச் சேர என்ன தகுதிகள் வேண்டும்? எப்படி தேர்வு நடைபெறும் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் - &lt;/strong&gt;Bathroom Cleaning: குழாயில் உப்புக்கறையா? இந்த குட்டி பந்து போதும்.! ஒரு நிமிடத்தில் பளபளன்னு ஆகிடும்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பல்வேறு செய்தி நிறுவனங்களின் அறிக்கைகளின்படி, அம்பானி வீட்டில் ஒரு என்ட்ரி-லெவல் செஃப்புக்கு மாதம் சுமார் ரூ.1.5 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சம் வரை சம்பளம் கொடுக்கிறார்கள். சீனியர் அல்லது எக்ஸிகியூட்டிவ் செஃப் என்றால், மாதம் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சம் அல்லது அதற்கும் மேல் சம்பளம் கிடைக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;செஃப் ஆக என்ன தகுதிகள் வேண்டும்?&lt;/strong&gt; ஹோட்டல் மேனேஜ்மென்ட் அல்லது கல்னரி ஆர்ட்ஸில் டிகிரி/டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். ஏதாவது 5 ஸ்டார் ஹோட்டலில் வேலை பார்த்த அனுபவம் அவசியம். இந்திய மற்றும் சர்வதேச உணவுகள் செய்யத் தெரிந்திருக்க வேண்டும். சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு விதிகளைப் பற்றியும் அறிந்திருக்க வேண்டும். ரகசியங்களைக் காப்பவராக இருக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் - &lt;/strong&gt;Green Chutney: ஹோட்டல் ஸ்டைல் புதினா சட்னி வேணுமா? அரைக்கும் போது இந்த 2 சீக்ரெட் பொருளை மட்டும் சேருங்க.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அம்பானி வீட்டில் செஃப் வேலைக்கு, சமையல் தெரிந்தால் மட்டும் போதாது. இன்டர்வியூ மிகவும் கடினமாக இருக்கும். சுவையாக சமைப்பதோடு, உணவை அழகாக பரிமாறவும் தெரிந்திருக்க வேண்டும். எவ்வளவு பிரஷரிலும் வேலை செய்யும் திறன் இருக்கிறதா என்று சோதிப்பார்கள். உங்கள் நடத்தை, பின்னணி என அனைத்தையும் சரிபார்த்த பிறகே வேலை உறுதியாகும். முகேஷ் அம்பானிக்கு குஜராத்தி, தென்னிந்திய உணவுகள் போன்ற எளிய இந்திய உணவுகள்தான் பிடிக்குமாம். அதனால், தினமும் இதுபோன்ற உணவுகள்தான் செய்ய வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் - &lt;/strong&gt;Floor Cleaning: தரை பிசுபிசுன்னு இருக்கா? இந்த ஒரு பொருளை கலந்து துடைங்க, தரை கண்ணாடி போல ஜொலிக்கும்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சமையல்காரர், மேலாளர் அல்லது ஓட்டுநர் என எந்தப் பணியாக இருந்தாலும், அதற்கான முறையான கல்வி அல்லது சான்றிதழ் (உதாரணமாக, ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் பணிபுரிந்த அனுபவம் அல்லது கேட்டரிங் முடித்ததற்கான சான்றிதழ்) பெற்றிருக்க வேண்டும்.எந்தச் சூழ்நிலையிலும் பதற்றமடையாமல், ஒரே நேரத்தில் பல வேலைகளைத் துல்லியமாகச் செய்யும் திறன் இருக்க வேண்டும்.ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் சரளமாகப் பேசத் தெரிந்திருப்பது மிக முக்கியம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் - &lt;/strong&gt;Pressure Cooker: அலுமினியம் குக்கர் vs ஸ்டீல் குக்கர்.! சமையலுக்கும், ஆரோக்கியத்திற்கும் எது பெஸ்ட்?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குற்றப் பின்னணிகள் எதுவும் இருக்கக்கூடாது.விண்ணப்பதாரரின் குடும்பப் பின்னணி, முந்தைய வேலை விவரங்கள் மற்றும் அவர்களின் குணம் குறித்துப் போலீஸ் மூலம் மிகத் தீவிரமான பின்னணி சரிபார்ப்பு (Background Check) நடத்தப்படும். அம்பானி குடும்பத்தின் தனிப்பட்ட விஷயங்கள், பாதுகாப்பு மற்றும் அன்றாட நிகழ்வுகள் குறித்த ரகசியங்களை எக்காரணம் கொண்டும் வெளியே சொல்ல மாட்டேன் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் - &lt;/strong&gt;Actress Uma Shankari: 'சொக்கத் தங்கம்' பட நடிகையை ஞாபகம் இருக்கா? அவருக்கு என்ன ஆனது? மருத்துவமனையில் இருந்து வெளியான அதிர்ச்சி புகைப்படம்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அம்பானி குடும்பத்தினர் நேரடியாக ஆட்களை எடுப்பதில்லை. இதற்கென இருக்கும் முன்னணி மற்றும் நம்பகமான மனிதவள நிறுவனங்கள் மூலமாகவே தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஓட்டுநராக இருந்தால், எவ்வளவு கடினமான சூழ்நிலையிலும் காரைச் சரியாக ஓட்டுகிறாரா என்பதை அறியத் தனியாகத் தேர்வுகள் நடத்தப்படும். சமையல்காரர்களுக்கு அவர்களின் சமையல் திறமையைச் சோதிக்கப் பலகட்ட தேர்வுகள் இருக்கும். பணியாளர்கள் அனைவரும் முழுமையான மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். தொற்றுநோய்கள் ஏதேனும் இல்லாத, நல்ல உடற்தகுதி கொண்டவர்களே தேர்வு செய்யப்படுவர்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;Top Stories: அதிகம் படிக்கப்பட்டவை&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;ol&gt; &lt;li&gt;Bathroom Cleaning: பாத்ரூம் சுவர்களில் பூஞ்சை வளர்கிறதா? தடுப்பதற்கான 5 ட்ரிக்ஸ்.! இனி பாத்ரூம் டைல்ஸ் பளபளக்கும்.!&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;Vedic Astrology: இடம் மாறும் குரு பகவான்.! குரு பெயர்ச்சியால் கோடீஸ்வர யோகம் பெறும் 5 அதிர்ஷ்ட ராசிகள்.!&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;Astrology Tamil: சுக்கிர புத்தி ஆரம்பம்.! அடுத்த 6 மாதம் 5 ராசிகளுக்கு ராஜயோகம்.! இனி இவர்கள் தொட்டதெல்லாம் தங்கமாகும்.!&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;Chanakya Niti: கோடி ரூபாய் கொடுத்தாலும், இவர்களை மட்டும் திருமணம் செய்யாதீர்கள்.! சாணக்கியர் கூறும் அறிவுரை.!&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;Aadi Masam 2026: ஆடி வெள்ளி அம்மன் உங்க வீட்டுக்கு வரணுமா? இதை மட்டும் செய்யுங்கள்! தேச மங்கையர்கரசி சொன்ன ரகசியம்.!&lt;/li&gt;&lt;/ol&gt;]]></content:encoded>
            <category>career</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/ambani-house-job-vacancy-eligibility-qualifications-selection-process-and-how-to-apply-for-jobs-at-ambanis-antilia-aghc5h8"/>
        </item>
        <item>
            <title><![CDATA[RRB Recruitment: 10-ம் வகுப்பு படித்தவர்களே ரெடியா? ரயில்வேயில் 6,565 வேலைகள்... ஜூன் 30 முதல் விண்ணப்பம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/career/rrb-recruitment-2026-6565-railway-technician-jobs-announced-for-10th-pass-bl6p4fg</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/career/rrb-recruitment-2026-6565-railway-technician-jobs-announced-for-10th-pass-bl6p4fg</guid>
            <pubDate>Fri, 19 Jun 2026 08:29:52 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;RRB Recruitment: ரயில்வேயில் நிரந்தர அரசு வேலை பெற விரும்புவோருக்கு இது நல்ல வாய்ப்பாகும். தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் கடைசி தேதி உள்ளிட்ட முக்கிய தகவல்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்க தயாராகுங்கள்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kvews2vae8hvewcn4kqpqwdj,imgname-tamil-news---2026-06-19t082325.129-1781837630314.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;RRB Recruitment: ரயில்வேயில் நிரந்தர அரசு வேலை பெற விரும்புவோருக்கு இது நல்ல வாய்ப்பாகும். தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் கடைசி தேதி உள்ளிட்ட முக்கிய தகவல்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்க தயாராகுங்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அரசு வேலைக்கு காத்திருக்கும் இளைஞர்களுக்கு மத்திய ரயில்வே பணியாளர் வாரியம் (RRB) முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு ரயில்வே மண்டலங்களில் 6,565 டெக்னீஷியன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஜூன் 30 அன்று வெளியாகிறது. அதே நாளில் தகுதியானவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 29, 2026 என அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதில் டெக்னீஷியன் கிரேடு-1 சிக்னல் பணியிடங்கள் மற்றும் டெக்னீஷியன் கிரேடு-3 பணியிடங்கள் இடம்பெற்றுள்ளன. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதுடன் ஐடிஐ அல்லது சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளமோ, பி.எஸ்.சி. உள்ளிட்ட தகுதிகள் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கிரேடு-1 பணியிடங்களுக்கு வயது 18 முதல் 33 வரை, கிரேடு-3 பணியிடங்களுக்கு 18 முதல் 30 வயது வரை இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் கிரேடு-1 பணியாளர்களுக்கு மாதம் ரூ.29,200 அடிப்படை சம்பளமும், கிரேடு-3 பணியாளர்களுக்கு ரூ.19,900 அடிப்படை சம்பளமும் வழங்கப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எழுத்துத் தேர்வு, மருத்துவப் பரிசோதனை மற்றும் ஆவணச் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இறுதித் தேர்வு நடைபெறும். சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, திருவனந்தபுரம், செகந்திராபாத், அகமதாபாத், அஜ்மேர், போபால், பாட்னா, ராஞ்சி உள்ளிட்ட பல்வேறு ரயில்வே மண்டலங்களில் இந்த பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இது நாடு முழுவதும் அரசு வேலை தேடுபவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மண்டல வாரியான காலிப்பணியிடங்கள், கல்வித் தகுதி, தேர்வு முறை, பாடத்திட்டம், விண்ணப்பக் கட்டணம், ஒதுக்கீடு உள்ளிட்ட முழுமையான தகவல்கள் ஜூன் 30 அன்று வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இடம்பெறும். விண்ணப்பிக்கும் முன் அனைத்து விவரங்களையும் கவனமாக படித்து, காலக்கெடுவுக்குள் விண்ணப்பிப்பது அவசியம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>career</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/career/rrb-recruitment-2026-6565-railway-technician-jobs-announced-for-10th-pass-bl6p4fg"/>
        </item>
        <item>
            <title><![CDATA[TNHRCE Job: 757 கோவில்களில் அறங்காவலர் பணி! அறநிலையத்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/career/trustee-jobs-in-757-temples-big-announcement-from-hr-and-ce-how-to-apply-online-bx1p5n3</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/career/trustee-jobs-in-757-temples-big-announcement-from-hr-and-ce-how-to-apply-online-bx1p5n3</guid>
            <pubDate>Sat, 11 Jul 2026 13:26:05 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Temples: தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை, சட்டப்பிரிவு 46(1) மற்றும் 46(2) கீழ் உள்ள 757 திருக்கோயில்களுக்கு பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்களை நியமிக்க விண்ணப்பங்களை வரவேற்கிறது.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01h71tw785m7aad1aqpvfhvy2a,imgname-trichy--2.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Temples: தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை, சட்டப்பிரிவு 46(1) மற்றும் 46(2) கீழ் உள்ள 757 திருக்கோயில்களுக்கு பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்களை நியமிக்க விண்ணப்பங்களை வரவேற்கிறது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்து சமய அறநிலையத்துறை என்பது தமிழ்நாடு அரசின் மிக முக்கியமான துறைகளில் ஒன்றாகும். தமிழ்நாட்டில் உள்ள பழமையான மற்றும் புகழ்பெற்ற இந்துக் கோவில்கள், மடங்கள் மற்றும் அறக்கட்டளைகளை நிர்வகிப்பதற்கும், அவற்றின் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கும் இந்தத் துறை உருவாக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள சுமார் 44,000-க்கும் மேற்பட்ட இந்து கோவில்கள் மற்றும் சமணக் கோவில்கள் இந்த துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில் அவ்வப்போது அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் உள்ள காலியான பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது முக்கியமான அறிவிப்பு ஒன்றை அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் சீர்மிகு நல்லாட்சியில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் அவர்களின் வழிக்காட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள சட்டப்பிரிவு 46 (1) ன் கீழ் உள்ள 673 திருக்கோயில்களுக்கும் மற்றும் 46(2) ல் உள்ள 84 திருக்கோயில்களுக்கும் பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்கள் நியமனம் செய்வதற்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அறங்காவலர் நியமன அறிவிப்பு, திருக்கோயில்கள் விவரம், தகுதிகள் விண்ணப்ப படிவம் ஆகியவை (www.hrce.tn.gov.in) இத்துறையின் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை இணைய வழியில் (online) பூர்த்தி செய்தோ அல்லது பதிவிறக்கம் செய்தோ உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். அல்லது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ விரைவஞ்சல் (Speed Post) மூலமாகவோ சம்பந்தப்பட்ட இணை ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேலும் ஆகஸ்ட் 12ம் தேதி மாலை 5.45 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஏற்கனவே, சட்டப்பிரிவு 46(3)ன் கீழ் உள்ள 220 திருக்கோயில்களுக்கும். நிர்வாகத்திட்டம் உள்ள 35 திருக்கோயில்களுக்கும் பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்கள் நியமனம் மற்றும் 14 மாவட்டங்களில் மாவட்டக்குழு உறுப்பினர்களின் நியமனத்திற்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>career</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/career/trustee-jobs-in-757-temples-big-announcement-from-hr-and-ce-how-to-apply-online-bx1p5n3"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Dosa Job : தோசை சுடத் தெரிஞ்சா வருஷத்துக்கு ₹32 லட்சம் சம்பாதிக்கலாம்! எங்கன்னு தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/health-food/where-can-you-earn-rs-32-lakh-by-making-dosa-g1srudh</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/health-food/where-can-you-earn-rs-32-lakh-by-making-dosa-g1srudh</guid>
            <pubDate>Thu, 16 Jul 2026 13:41:56 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Dosa Job : உங்களுக்கு அட்டகாசமாக தோசை சுடத் தெரியுமா? அப்படியென்றால், தோசை சுடுவதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 32 லட்சம் சம்பாதிக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? அந்த வேலை எங்கே கிடைக்கும் தெரியுமா?&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxmzmqd4n2c433fdtrrfz3nb,imgname-chatgpt-image-jul-16--2026--01-40-24-pm-1784189443492.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Dosa Job : உங்களுக்கு அட்டகாசமாக தோசை சுடத் தெரியுமா? அப்படியென்றால், தோசை சுடுவதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 32 லட்சம் சம்பாதிக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? அந்த வேலை எங்கே கிடைக்கும் தெரியுமா?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உலகளவில் இந்திய உணவுகளுக்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக தோசை, இட்லி, வடை போன்ற தென்னிந்திய உணவுகள் வெளிநாடுகளிலும் மிகவும் பிரபலமாகி வருகின்றன. இதனால், இந்த உணவுகளைச் சமைக்கத் தெரிந்தவர்களுக்கான மவுசு (தேவை) அதிகரித்து வருகிறது.&lt;/p&gt;&lt;p&gt;குறிப்பாக, உங்களுக்குத் தோசை சுடத் தெரிந்தால், வெளிநாடுகளில் அதிக சம்பளத்துடன் (பெரிய பேக்கேஜில்) வேலைகள் வழங்கப்படுவது உங்களுக்குத் தெரியுமா? இது தொடர்பான ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், தோசை சுடத் தெரிந்தால் ரூ. 32 லட்சம் சம்பளம் என்று கூறப்பட்டுள்ளது. உண்மையிலேயே இதுபோன்ற வேலைகள் இருக்கிறதா? இதுபோன்ற வேலைகளுக்கான டிமாண்ட் எங்கே இருக்கிறது? என்பதை இப்போது பார்ப்போம்..&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கடந்த சில ஆண்டுகளாக உலகெங்கிலும் இந்திய உணவகங்கள் வேகமாக விரிவடைந்து வருகின்றன. குறிப்பாக, தென்னிந்திய உணவகங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனாலேயே, தோசை, இட்லி, ஊத்தப்பம் போன்ற உணவுகளைத் தயாரிக்கும் திறமையான செஃப்களைத் தேடுகின்றனர். அவ்வாறு தகுதியானவர்கள் கிடைக்கும்போது, அவர்களுக்கு மிக அதிக சம்பளத்தை வழங்குகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஐக்கிய அரபு அமீரகம் (UAE), கத்தார், சவுதி அரேபியா, குவைத், ஓமன், சிங்கப்பூர், மலேசியா, கனடா, ஆஸ்திரேலியா, யுகே (UK) மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் (தோசை செஃப்களுக்கு) அதிக டிமாண்ட் உள்ளது. இந்த நாடுகளில் உள்ள பல உணவகங்களில் தோசை செஃப்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;இந்த நாடுகளில் சம்பளமும் மிக அதிகமாகவே வழங்கப்படுவதாகத் தெரிகிறது. வளைகுடா நாடுகளில் (Gulf Countries) மாதத்திற்குச் சுமார் ஒன்றரை லட்சம் முதல் இரண்டரை லட்சம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. அதேபோல், கனடா, ஆஸ்திரேலியா, யுகே மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் ஆண்டுக்கு ரூ. 20 லட்சம் முதல் ரூ. 32 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வெளிநாடுகளில் தோசை செஃப் ஆக வேலை பெற வேண்டுமென்றால், சில தகுதிகள் அவசியம். குறிப்பாக, ஹோட்டல்களில் குறைந்தபட்சம் 2 முதல் 5 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும். சாதாரண தோசை சுடத் தெரிந்தால் மட்டும் போதாது; பல்வேறு வகையான தோசைகளைச் சுடத் தெரிந்திருக்க வேண்டும். அத்துடன், சிறந்த தகவல் தொடர்புத் திறனும் (Communication Skills) அவசியமாகும். தரமான தோசை மாவைத் தயாரிப்பதுடன், ருசியான சாம்பார் மற்றும் சட்னி வகைகளைத் தயாரிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;Vada Curry Recipe : ஹோட்டல் சுவையில் அட்டகாசமான வடகறி செய்வது எப்படி?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உங்களுக்கும் இதுபோன்ற வேலை தேவையென்றால், லிங்க்டுஇன் (LinkedIn), இண்டீட் (Indeed), கிளாஸ்டோர் (Glassdoor), மற்றும் கல்ஃப் டேலண்ட் (Gulf Talent) போன்ற தளங்களில் தேடினால், மிக எளிதாக வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;ஒரு காலத்தில் தென்னிந்தியாவிற்கு மட்டுமே உரித்தானதாக இருந்த இந்தத் தோசை, தற்போது உலகம் முழுவதும் அங்கீகாரம் பெற்று வருகிறது. தோசை சுடத் தெரிந்தால் மட்டும் போதும், எளிதாக லட்சக்கணக்கில் சம்பளம் பெறலாம்.&lt;/p&gt;&lt;p&gt;வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்குத் தயாராகும் போது, அந்தந்த நாட்டின் விசா நடைமுறைகள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு (Certification) போன்ற சட்டப்பூர்வமான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இது குறித்து மேலும் ஏதேனும் தகவல் அறிய விரும்புகிறீர்களா?&lt;/p&gt;&lt;p&gt;Cooker Biriyani : அரிசி ஒட்டாமல்-குழையாமல் குக்கரில் கச்சிதமாக மட்டன் பிரியாணி செய்வது எப்படி?&lt;/p&gt;]]></content:encoded>
            <category>career</category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/health-food/where-can-you-earn-rs-32-lakh-by-making-dosa-g1srudh"/>
        </item>
        <item>
            <title><![CDATA[எழுத்து தேர்வு கிடையாது... நேர்காணல் மட்டும்..! RBI-ல் மாஸ் வேலைவாய்ப்பு! மாதம் ₹4.10 லட்சம் சம்பளம்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/career/rbi-recruitment-2026-no-exam-for-engineer-posts-salary-up-to-4-lakh-g288ggg</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/career/rbi-recruitment-2026-no-exam-for-engineer-posts-salary-up-to-4-lakh-g288ggg</guid>
            <pubDate>Mon, 06 Jul 2026 11:29:37 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது. இந்த வேலைக்கு எழுத்துத் தேர்வு கிடையாது. தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் ₹4.10 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும். ஆர்வமுள்ளவர்கள் ஜூலை 20, 2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwtzgwncn08zpw4k42dh168x,imgname-rbi-1783316902572.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது. இந்த வேலைக்கு எழுத்துத் தேர்வு கிடையாது. தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் ₹4.10 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும். ஆர்வமுள்ளவர்கள் ஜூலை 20, 2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நீங்கள் சிவில் அல்லது எலக்ட்ரானிக்ஸ் துறையில் பி.டெக் பட்டமும், பொறியியல் துறையில் விரிவான அனுபவமும் பெற்று, ஒரு அரசு வேலையைத் தேடிக்கொண்டிருந்தால், இந்த ஆட்சேர்ப்பு உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும். இந்திய ரிசர்வ் வங்கி, ஆலோசகர் தளப் பொறியாளர் (Consultant Site Engineer) பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. இந்த ஆட்சேர்ப்பின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், இதற்கு எழுத்துத் தேர்வு இல்லை. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் ஜூலை 20, 2026 அன்று மாலை 6 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் சிவில் அல்லது எலக்ட்ரிக்கல் துறையில் பி.டெக் பட்டம் அல்லது அதற்கு இணையான தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்கள் கட்டுமானம் மற்றும் கட்டிடத் திட்ட மேலாண்மையில் 15 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சில பதவிகளுக்கு, அரசுத் துறை அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் முன் அனுபவமும் தேவைப்படுகிறது.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;சம்பளம் எவ்வளவு?&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நிலை-2 பதவிகளுக்கு மாதத்திற்கு சுமார் 2.40 லட்சம் முதல் 3.40 லட்சம் டாக்கா வரையிலும், நிலை-3 பதவிகளுக்கு மாதத்திற்கு சுமார் 3.10 லட்சம் முதல் 4.10 லட்சம் டாக்கா வரையிலும் சம்பளம் வழங்கப்படும். இதர அரசுப் படிகளும் வழங்கப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் சிவில் அல்லது எலக்ட்ரிக்கல் துறையில் பி.டெக் பட்டம் அல்லது அதற்கு இணையான தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்கள் கட்டுமானம் மற்றும் கட்டிடத் திட்ட மேலாண்மையில் 15 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சில பதவிகளுக்கு, அரசுத் துறை அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் முன் அனுபவமும் தேவைப்படுகிறது.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;சம்பளம் எவ்வளவு?&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நிலை-2 பதவிகளுக்கு மாதத்திற்கு சுமார் 2.40 லட்சம் முதல் 3.40 லட்சம் டாக்கா வரையிலும், நிலை-3 பதவிகளுக்கு மாதத்திற்கு சுமார் 3.10 லட்சம் முதல் 4.10 லட்சம் டாக்கா வரையிலும் சம்பளம் வழங்கப்படும். இதர அரசுப் படிகளும் வழங்கப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த ஆட்சேர்ப்பு மூலம் மொத்தம் 8 பணியிடங்கள் நிரப்பப்படும். இவற்றில், சிவில் மற்றும் எலக்ட்ரிக்கல் ஆகிய இரு பிரிவுகளிலும் பொறியாளர் பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணியிடங்கள் முழுநேர ஒப்பந்த அடிப்படையில் இருக்கும். ஆரம்பக்கட்ட நியமனம் 3 ஆண்டுகளுக்கு இருக்கும், தேவைப்பட்டால் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படலாம்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;வயது வரம்பு என்ன?&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;இந்த ஆட்சேர்ப்புக்கான குறைந்தபட்ச வயது வரம்பு 40 ஆண்டுகள் மற்றும் அதிகபட்ச வயது வரம்பு 65 ஆண்டுகள் ஆகும்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;பணியிட மாற்றம் எங்கு நடைபெறும்?&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;தேர்வு செய்யப்பட்ட பிறகு, விண்ணப்பதாரர்கள் வெவ்வேறு நகரங்களில் பணியமர்த்தப்படுவார்கள். சில சிவில் இன்ஜினியர் பணியிடங்களுக்கு, ராய்ப்பூர், சண்டிகர், ஜம்மு, லக்னோ மற்றும் மும்பை போன்ற இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் பணியிடங்களுக்கு, மும்பை பிரதான பணியிடமாக இருக்கும். விண்ணப்பிக்கும்போது விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு விருப்பமான இடத்தையும் குறிப்பிடலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த ஆட்சேர்ப்புக்கு எழுத்துத் தேர்வு இல்லை. முதலில், விண்ணப்பதாரர்களின் விண்ணப்பப் படிவம் மற்றும் அனுபவம் சரிபார்க்கப்படும். பின்னர், தகுதியான விண்ணப்பதாரர்களின் சுருக்கப் பட்டியல் தயாரிக்கப்படும். அதனைத் தொடர்ந்து ஆவணச் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் நடத்தப்படும். நேர்காணலில் காட்டும் செயல்திறனின் அடிப்படையில் இறுதித் தேர்வு செய்யப்படும்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு இருக்கும்?&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;இந்த ஆட்சேர்ப்புப் படிவத்தைப் பூர்த்தி செய்ய, பொது, ஓபிசி மற்றும் ஈடபிள்யூஎஸ் பிரிவுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.600-ம், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.100-ம் செலுத்த வேண்டும்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;எப்படி விண்ணப்பிப்பது?&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;முதலில், இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான rbi.org.in-க்குச் செல்லவும். அங்குள்ள ஆட்சேர்ப்பு அறிவிப்பைப் படிக்கவும். பின்னர், ஆன்லைன் விண்ணப்ப இணைப்பைத் திறந்து, தேவையான தகவல்களை நிரப்பவும். தேவையான ஆவணங்களைப் பதிவேற்றி, கட்டணத்தைச் செலுத்தி, படிவத்தைச் சமர்ப்பிக்கவும். விண்ணப்பத்தின் அச்சுப் பிரதியை உங்களுடன் வைத்துக் கொள்ளவும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>career</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/career/rbi-recruitment-2026-no-exam-for-engineer-posts-salary-up-to-4-lakh-g288ggg"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Elon Musk: சம்பளம் மட்டும் இல்லை... ஷேரும் தர்றாரு! உலகையே ஆச்சரியப்பட வைத்த எலான் மஸ்க்! வேலை இருந்தா சொல்லுங்கப்பா..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/world/elon-musk-not-just-salary-he-gives-company-shares-too-how-thousands-of-employees-became-millionaires-geu0mdg</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/world/elon-musk-not-just-salary-he-gives-company-shares-too-how-thousands-of-employees-became-millionaires-geu0mdg</guid>
            <pubDate>Wed, 24 Jun 2026 12:41:40 +0530</pubDate>
            <description><![CDATA[எலான் மஸ்க் தனது நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்துடன் நிறுவனப் பங்குகளையும் வழங்கியுள்ளார். இந்த மாஸ்டர் பிளான் மூலம், SpaceX-ல் பணியாற்றிய சுத்திகரிப்பு தொழிலாளர்கள் முதல் வெல்டர்கள் வரை ஆயிரக்கணக்கானோர் இன்று மில்லியனர்களாக மாறியுள்ளனர்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kvw550n78gtx82vgbcemp55s,imgname-chatgpt-image-jun-24--2026--11-56-16-am--1--1782282617509.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[எலான் மஸ்க் தனது நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்துடன் நிறுவனப் பங்குகளையும் வழங்கியுள்ளார். இந்த மாஸ்டர் பிளான் மூலம், SpaceX-ல் பணியாற்றிய சுத்திகரிப்பு தொழிலாளர்கள் முதல் வெல்டர்கள் வரை ஆயிரக்கணக்கானோர் இன்று மில்லியனர்களாக மாறியுள்ளனர்.&lt;img&gt;&lt;p&gt;பொதுவாக ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தால் மாதந்தோறும் சம்பளம் கிடைக்கும். சில நிறுவனங்களில் போனஸ் கிடைக்கும். ஆனால் உலகின் மிகப்பெரிய தொழிலதிபரான எலான் மஸ்க் வேற லெவல். &quot;நிறுவனம் வளர்ந்தால், அதில் உழைக்கும் ஊழியர்களும் வளர வேண்டும்&quot; என்ற கொள்கையில், தனது நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்துடன் நிறுவன பங்குகளையும் வழங்கினார். இன்று அந்த முடிவு ஆயிரக்கணக்கான சாதாரண தொழிலாளர்களையே மில்லியனர்களாக மாற்றியுள்ளது. அதனால்தான் சமூக வலைதளங்களில் பலரும் ஜாலியாக, &quot;வேலை இருந்தா சொல்லுங்கப்பா!&quot; என்று பதிவிட்டு வருகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;1971-ல் தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் பிறந்த எலான் மஸ்க், சாதாரண குடும்பத்தில் இருந்து உலகின் மிகப்பெரிய தொழில்முனைவோராக உயர்ந்துள்ளார். Zip2, PayPal, Tesla, SpaceX, xAI, Neuralink என தொடர்ந்து உலகையே மாற்றும் நிறுவனங்களை உருவாக்கினார். சமீபத்தில் SpaceX பங்குச் சந்தையில் பட்டியலானதைத் தொடர்ந்து, அவரது சொத்து மதிப்பு 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலரைத் தாண்டி (இந்திய மதிப்பில் சுமார் ₹86 லட்சம் கோடி) உலகின் முதல் ட்ரில்லியனர் என்ற சாதனையை படைத்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பல நிறுவனங்களில் உயரதிகாரிகளுக்கு மட்டுமே பங்குகள் வழங்கப்படுகின்றன. ஆனால் எலான் மஸ்க் தனது நிறுவன வளர்ச்சியில் பங்காற்றிய ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு Stock Options வழங்கினார். நிறுவனம் வளர வளர, அந்த பங்குகளின் மதிப்பும் பல மடங்கு உயர்ந்தது. இதனால் சம்பளம் வாங்கிய அதே ஊழியர்கள், இன்று கோடிக்கணக்கான சொத்துகளுக்கு உரிமையாளர்களாக மாறியுள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;SpaceX நிறுவனத்தில் பணியாற்றிய தற்போதைய மற்றும் முன்னாள் ஊழியர்கள் சேர்த்து 4,400-க்கும் மேற்பட்டோர் இன்று மில்லியனர்களாகியுள்ளனர். இவர்களில் சுமார் 400 பேரின் பங்கு மதிப்பு 100 மில்லியன் டாலருக்கும் அதிகமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுத்திகரிப்பு பணியாளர்கள், வெல்டர்கள், இயந்திர பராமரிப்பு ஊழியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் என பலரும் நிறுவனத்தின் வளர்ச்சியால் நேரடியாக செல்வந்தர்களாகியுள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சில ஊழியர்கள் ஆரம்ப காலத்திலேயே பெற்ற பங்குகளின் மதிப்பு, இன்று பல கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மணிக்கு சாதாரண ஊதியத்தில் வேலை பார்த்தவர்களே, இன்று பங்கு மதிப்பால் நிதி சுதந்திரம் பெற்றுள்ளனர். ஒரு நிறுவனத்தின் வெற்றி, அதில் உழைத்தவர்களின் வெற்றியாகவும் மாற வேண்டும் என்பதற்கு SpaceX சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவில் பல பெரிய நிறுவனங்கள் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் லாபம் ஈட்டுகின்றன. ஆனால் அந்த வளர்ச்சியின் பலன் அனைத்து ஊழியர்களையும் சமமாக சென்றடைகிறதா என்ற கேள்வி எழுகிறது. எலான் மஸ்கின் அணுகுமுறை, &quot;ஊழியர்கள் செலவு அல்ல; நிறுவனத்தின் உண்மையான சொத்து&quot; என்பதை உலகுக்கு மீண்டும் நினைவூட்டியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சம்பளம் வாங்கி வாழ்க்கையை நடத்துவது ஒரு விஷயம். அதே வேலையால் கோடிக்கணக்கான சொத்து சேர்ப்பது வேறு விஷயம். SpaceX ஊழியர்களின் வெற்றிக் கதைகளைப் பார்த்த பிறகு, சமூக வலைதளங்களில் பலரும் நகைச்சுவையாக, &quot;எலான் மஸ்க் கம்பெனியில் வேலை இருந்தா சொல்லுங்கப்பா!&quot; என்று பதிவிட்டு வருகின்றனர். அந்த ஒரு வரி நகைச்சுவையாக இருந்தாலும், அதன் பின்னால் ஒரு பெரிய உண்மை இருக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எலான் மஸ்க் இன்று உலகின் முதல் ட்ரில்லியனராக உயர்ந்திருக்கலாம். ஆனால் அவரை மற்ற தொழிலதிபர்களிடமிருந்து வேறுபடுத்தியது அவரது சொத்து மதிப்பு மட்டுமல்ல; தனது வெற்றியை ஆயிரக்கணக்கான ஊழியர்களுடனும் பகிர்ந்து கொண்ட மனப்பான்மையே. ஒரு நல்ல முதலாளி, லாபத்தை மட்டும் சம்பாதிப்பதில்லை; தன்னுடன் உழைப்பவர்களின் வாழ்க்கையையும் உயர்த்துவார் என்பதை எலான் மஸ்க் உலகிற்கு நிரூபித்துள்ளார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>career</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/world/elon-musk-not-just-salary-he-gives-company-shares-too-how-thousands-of-employees-became-millionaires-geu0mdg"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Zepto-வில் டெலிவரி பார்ட்னராக சேர்வது எப்படி? எவ்வளவு சம்பாதிக்கலாம்? முழு விவரம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/career/how-to-become-a-zepto-delivery-partner-and-earn-money-gl1e440</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/career/how-to-become-a-zepto-delivery-partner-and-earn-money-gl1e440</guid>
            <pubDate>Tue, 16 Jun 2026 15:16:01 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Zepto-விழ டெலிவரி பார்ட்னராக சேர்வது எப்படி மற்றும் அதன் மூலம் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்பது குறித்த முழுமையான தகவல்களை இங்கே அறிந்துகொள்வோம். தேவைப்படும் ஆவணங்கள், ஆன்லைன் பதிவு, வேலை நேரம் மற்றும் மாத வருவாய் பற்றிய விவரங்களையும் அலசுவோம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k0zsdtacsy7rpy2vctt6gv0q,imgname-tamil-news---2025-07-25t084538.959-1753413511500.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Zepto-விழ டெலிவரி பார்ட்னராக சேர்வது எப்படி மற்றும் அதன் மூலம் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்பது குறித்த முழுமையான தகவல்களை இங்கே அறிந்துகொள்வோம். தேவைப்படும் ஆவணங்கள், ஆன்லைன் பதிவு, வேலை நேரம் மற்றும் மாத வருவாய் பற்றிய விவரங்களையும் அலசுவோம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;Zepto டெலிவரி பார்ட்னராக சேரும் செயல்முறை மிகவும் எளிமையானது. இது பெரும்பாலும் டிஜிட்டல் முறையில் நடைபெறுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;தேவையான ஆவணங்கள்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஆதார் அட்டை&lt;/p&gt;&lt;p&gt;ஓட்டுநர் உரிமம்&lt;/p&gt;&lt;p&gt;பைக் அல்லது இரு சக்கர வாகனம்&lt;/p&gt;&lt;p&gt;ஸ்மார்ட்போன்&lt;/p&gt;&lt;p&gt;செயலில் உள்ள வங்கி கணக்கு&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பதிவு செய்யும் செயல்முறை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;1. Zepto செயலியின் பதிவிறக்கம்: &lt;/strong&gt;முதலில் Zepto டெலிவரி பார்ட்னர் செயலியை உங்கள் ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;2. விவரங்களைச் சமர்ப்பித்தல்: &lt;/strong&gt;செயலியில் 'Delivery Partner Registration' பகுதியைத் தேர்வு செய்து, உங்கள் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் தேவையான ஆவணங்களை (ID Proof, Address Proof, Bank Details) பதிவேற்ற வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;3. ஆன்லைன் பயிற்சி: &lt;/strong&gt;பதிவு செய்த பிறகு, ஆன்லைன் பயிற்சியை முடிக்க வேண்டும். இது டெலிவரி செயல்முறை மற்றும் Zepto கொள்கைகள் பற்றிய அறிவை வழங்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;4. கணக்குச் செயல்படுத்தல்:&lt;/strong&gt; அனைத்து சரிபார்ப்புகளும் முடிந்ததும், உங்கள் டெலிவரி பார்ட்னர் கணக்கு செயல்படுத்தப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;Zepto டெலிவரி பார்ட்னர்கள் மாதத்திற்கு ₹20,000 முதல் ₹45,000 வரை சம்பாதிக்க முடியும். இது டெலிவரிகளின் எண்ணிக்கை, வேலை நேரம் மற்றும் பணிபுரியும் நகரத்தைப் பொறுத்து மாறுபடும். பகுதிநேர அல்லது முழுநேர ஷிப்ட்களைத் தேர்வு செய்ய முடியும், இது மாணவர்கள், இல்லத்தரசிகள் மற்றும் கூடுதல் வருமானம் ஈட்ட விரும்புபவர்களுக்கு ஏற்றது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஊக்கத்தொகைகள்&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;உச்சபட்ச நேர டெலிவரிகள் (peak hours), சிறப்பாக செயல்படும் டெலிவரி பார்ட்னர்களுக்குக்கான ஊக்கத்தொகைகள் (incentives) மற்றும் போனஸ்கள் வழங்கப்படுகின்றன. மேலும், வெற்றிகரமான பரிந்துரைகளுக்கு ₹7,000 வரை பரிந்துரை போனஸ்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. வருவாய்கள் நேரடியாக வங்கிக் கணக்கில் வாராந்திர அடிப்படையில் செலுத்தப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;டெலிவரி பார்ட்னர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;உள்ளூர் வேலை வாய்ப்பு&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;உங்கள் ஸ்டோரில் இருந்து 3 கி.மீ. சுற்றளவுக்குள் டெலிவரி செய்யலாம். எந்த நேரத்திலும் ரைடர் ஆதரவு குழுவிடம் இருந்து உதவியும் பெற முடியும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>career</category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/career/how-to-become-a-zepto-delivery-partner-and-earn-money-gl1e440"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Career Tips: வேலையை விடுறதுக்கு முன்னாடி இந்த 17 விஷயங்களை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/career/17-things-you-must-know-before-quitting-your-job-hwioke0</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/career/17-things-you-must-know-before-quitting-your-job-hwioke0</guid>
            <pubDate>Mon, 22 Jun 2026 12:27:08 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Career Tips: வேலை மாற்றத்தைப் பற்றிய முடிவை எடுப்பது சவாலானது. தற்போதைய வேலையை விட்டுவிட்டு புதிய பயணத்தைத் தொடங்கத் திட்டமிடும் முன், உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய 17 கேள்விகள் இங்கே உள்ளன. இவை உங்கள் மனக் குழப்பங்களைத் தெளிவுபடுத்தும்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kvq126pfwdx947w58jfwzcx4,imgname-chatgpt-image-jun-22--2026--12-09-03-pm-1782110558927.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Career Tips: வேலை மாற்றத்தைப் பற்றிய முடிவை எடுப்பது சவாலானது. தற்போதைய வேலையை விட்டுவிட்டு புதிய பயணத்தைத் தொடங்கத் திட்டமிடும் முன், உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய 17 கேள்விகள் இங்கே உள்ளன. இவை உங்கள் மனக் குழப்பங்களைத் தெளிவுபடுத்தும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;1. நான் ஏன் இந்த வேலையை விட்டுவிட நினைக்கிறேன்?&lt;/strong&gt; முதலில், பிரச்சனையின் மூல காரணத்தை கண்டறியுங்கள். சம்பளம், பணிச்சூழல், மேலதிகாரிகள் அல்லது வேலையின் தன்மை எது உங்களை அதிகம் பாதிக்கிறது என்பதைத் துல்லியமாகக் கவனியுங்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;2. நான் ஏன் இந்த வேலையைத் தேர்ந்தெடுத்தேன்? &lt;/strong&gt;உங்கள் கடந்த கால பயணத்தையும், இந்த வேலைக்கு வந்ததற்கான காரணத்தையும் யோசித்துப் பாருங்கள். இது உங்கள் தற்போதைய நிலையைத் தெளிவாகப் புரிந்துகொள்ள உதவும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;3. எத்தனை காலமாக நான் இப்படி உணர்கிறேன்? &lt;/strong&gt;இது சமீபத்திய உணர்வா அல்லது நீண்ட நாட்களாகத் தொடரும் விரக்தியா? இது வெறும் சோர்வு மனநிலைதானா அல்லது உண்மையான மாற்றத் தேவையா என்று சிந்தியுங்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;4. எனக்கு உண்மையில் என்ன வேண்டும்? &lt;/strong&gt;வேலையை வெறுப்பது மட்டும் போதாது; உங்களுக்கு எது பிடிக்கும், உங்கள் வாழ்க்கையின் மதிப்புகள் என்ன என்பதில் கவனம் செலுத்துங்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;5. எனது 'சரியான ஒரு நாள்' (Perfect Day) எப்படி இருக்கும்?&lt;/strong&gt; எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி, உங்கள் ஒரு நாளை எப்படி செலவிட விரும்புகிறீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். இது உங்கள் விருப்பங்களைத் தெளிவாக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;6. எனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் என்ன சொல்கிறார்கள்? &lt;/strong&gt;அன்புக்குரியவர்களின் பார்வை, நீங்கள் கவனிக்கத் தவறிய பல உண்மைகளை உங்களுக்கு உணர்த்தக்கூடும். அவர்களின் ஆதரவு இந்த மாற்றத்தில் முக்கியமானது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;7. வேலையை விடுவதால் நான் எதை இழப்பேன்? &lt;/strong&gt;வருமானம், நண்பர்கள், சலுகைகள் என நீங்கள் இழக்கப்போகும் விஷயங்களை பட்டியலிடுங்கள். இது உங்கள் முடிவை உறுதியாக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;8. வேலையை விடுவதால் நான் எதை அடைவேன்?&lt;/strong&gt; வேலையை விடுவதை ஒரு வாய்ப்பாகப் பாருங்கள். உங்களுக்குள் இருக்கும் ஆற்றல் மற்றும் சந்தை மதிப்பைக் (Market value) கருத்தில் கொள்ளுங்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;9. எனது மேலதிகாரியிடம் எல்லா விருப்பங்களையும் பேசிவிட்டேனா? &lt;/strong&gt;Flexible working, சம்பள உயர்வு அல்லது பொறுப்பு மாற்றம் போன்றவற்றை மேலதிகாரியிடம் கேட்டுப் பார்த்தீர்களா? பேசாமலேயே முடிவெடுப்பது அவசரம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;10. அலுவலகத்திற்குத் திரும்பும் வரை காத்திருக்க வேண்டுமா? &lt;/strong&gt;நிலைமை சீராகும் வரை காத்திருந்து முடிவெடுப்பது சிலருக்கு நல்லது. ஆனால் மாற்றம் உறுதியானால், தாமதிக்க வேண்டிய அவசியமில்லை.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;11. நச்சுத்தன்மை கொண்ட மேலதிகாரியால் (Toxic Boss) வெளியேற நினைக்கிறேனா?&lt;/strong&gt; அதிகாரியை மாற்ற முடியுமா? முடியாத பட்சத்தில், உங்கள் மன ஆரோக்கியமே முக்கியம். தாமதிக்காமல் முடிவெடுங்கள்.&lt;/p&gt;&lt;p&gt;இதையும் படிங்க : Zepto-வில் டெலிவரி பார்ட்னராக சேர்வது எப்படி? எவ்வளவு சம்பாதிக்கலாம்? முழு விவரம்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;12. அதிக மன அழுத்தத்தால் வெளியேற நினைக்கிறேனா? &lt;/strong&gt;மன அழுத்தம் உங்கள் அன்றாட வாழ்க்கையையும், குடும்பத்தையுமே பாதிக்கும் அளவுக்கு இருந்தால், அது எச்சரிக்கை மணி.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;13. எனது எதிர்பார்ப்புகள் யதார்த்தமானவையா? &lt;/strong&gt;எந்த வேலையும் 'கனவு வேலை' (Perfect job) என்று ஒன்று இல்லை. எல்லா மாற்றங்களிலும் ஒரு கற்றல் பாதை இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;14. வேலையை விட்டுவிட்டுப் பிழைக்க எனக்குப் பொருளாதார வசதி உள்ளதா? &lt;/strong&gt;குறைந்தது 3 முதல் 6 மாதங்களுக்குத் தேவையான சேமிப்பு (Emergency fund) வைத்திருப்பது அவசியம். தொழில் முனைவோர் எனில் 12 மாதங்கள் தேவைப்படும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;15. வேலையிலிருந்து விலகிச் சிந்திப்பது (Detachment) உதவாதா? &lt;/strong&gt;உங்களின் அடையாளத்தை வேலை மட்டும்தான் என்று வைத்துக்கொள்ளாதீர்கள். பொழுதுபோக்குகள் மற்றும் உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது வேலையின் அழுத்தத்தைக் குறைக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;16. இப்போது சரியான நேரமா? &lt;/strong&gt;சந்தை சூழல், உங்கள் தனிப்பட்ட நிலைமை ஆகியவற்றை ஆராயுங்கள். பதற்றத்தில் எடுக்கப்படும் முடிவு தோல்விக்கு இட்டுச் செல்லும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;17. என்னால் ஏன் முடிவெடுக்க முடியவில்லை? &lt;/strong&gt;முடிவெடுப்பதற்கு ஒரு தேதியைத் திட்டமிடுங்கள். அத்தேதி வரை ஆலோசித்துவிட்டு, அதன்பின் தைரியமாக முடிவெடுங்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஒரு சிறிய அறிவுரை:&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்தக் கேள்விகள் உங்களுக்கு தெளிவான பார்வையைத் தரும். எந்த முடிவாக இருந்தாலும், பயப்படாமல் பொறுப்பேற்றுச் செயல்படுங்கள். உங்கள் மனநலம் மற்றும் மகிழ்ச்சியே எந்தவொரு சம்பளத்தையும் விட முக்கியமானது.&lt;/p&gt;&lt;p&gt;இதையும் படிங்க : மாதம் ₹3 லட்சம் வரை சம்பாதிக்கணுமா? Amazon-Flipkart ஏஜெண்டா மாறுங்க!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>career</category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/career/17-things-you-must-know-before-quitting-your-job-hwioke0"/>
        </item>
        <item>
            <title><![CDATA[அப்படியா! வேலை செய்வது போல் நடிக்கும் Gen Z ஊழியர்கள்?! அலுவலகங்களில் அதிகரிக்கும் புதிய டிரெண்ட்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/task-masking-why-gen-z-employees-are-pretending-to-work-the-viral-office-trend-explained-imimea4</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/task-masking-why-gen-z-employees-are-pretending-to-work-the-viral-office-trend-explained-imimea4</guid>
            <pubDate>Fri, 17 Jul 2026 09:15:43 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Gen Z தலைமுறையினரிடையே பேசப்படும் &quot;Task Masking&quot; என்ற புதிய டிரெண்ட் நிறுவனங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது உண்மையில் என்ன? ஏன் இப்படிச் செய்கிறார்கள்? இதனால் நிறுவனங்களுக்கும் ஊழியர்களுக்கும் என்ன தாக்கம் ஏற்படுகிறது என்பதை விரிவாகப் பார்ப்போம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxq2r3zg9ja39v5dd8kr618n,imgname-chatgpt-image-jul-17--2026--08-43-30-am--1--1784259809264.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Gen Z தலைமுறையினரிடையே பேசப்படும் &quot;Task Masking&quot; என்ற புதிய டிரெண்ட் நிறுவனங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது உண்மையில் என்ன? ஏன் இப்படிச் செய்கிறார்கள்? இதனால் நிறுவனங்களுக்கும் ஊழியர்களுக்கும் என்ன தாக்கம் ஏற்படுகிறது என்பதை விரிவாகப் பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பணியிட கலாச்சாரம் வேகமாக மாறி வரும் இந்த காலத்தில், Gen Z (1997&ndash;2012 காலகட்டத்தில் பிறந்தவர்கள்) தலைமுறையினர் குறித்து புதிய விவாதம் ஒன்று சமூக வலைதளங்களிலும், நிறுவனங்களிலும் பரவி வருகிறது. &quot;வேலை செய்வது போல் நடிப்பது&quot; (Task Masking) என்ற புதிய பழக்கம் தற்போது பல நிறுவனங்களில் பேசுபொருளாகியுள்ளது. உண்மையில் அவர்கள் வேலை செய்யாமல் இருப்பதில்லை. ஆனால், வேலை செய்கிறார்கள் என்ற தோற்றத்தை உருவாக்கும் விதத்தில் சில செயல்களை மேற்கொள்வதே இந்த டிரெண்டின் மையக்கரு.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;Task Masking என்பது, ஒரு பணியாளர் உண்மையில் வேலையில் முழுமையாக ஈடுபடாமல் அல்லது உற்பத்தித்திறன் இல்லாமல் இருக்கும்போதும், வெளியில் பார்ப்பவர்களுக்குத் தான் மிகவும் பிஸியாக உழைத்துக் கொண்டிருப்பது போன்ற ஒரு போலித் தோற்றத்தை உருவாக்குவதாகும்.&lt;/p&gt;&lt;p&gt;தங்களைச் சோம்பேறி என்றோ அல்லது திறமையற்றவர் என்றோ மேலாளர்களோ, சக ஊழியர்களோ தவறாக மதிப்பிட்டுவிடக் கூடாது என்ற பயத்தினால் பலர் இந்த உத்தியைக் கையாளுகின்றனர். குறிப்பாக, Hybrid Work (கலப்பு வேலை முறை) மற்றும் நிறுவனங்கள் மீண்டும் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்கும் கலாச்சாரம் அதிகரித்த பிறகு இந்த நடத்தை பரவலாகக் கவனிக்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;சும்மா கணினித் திரையைப் பார்த்துக் கொண்டிருப்பது, தேவையில்லாமல் மின்னஞ்சல்களைத் தட்டச்சு செய்வது அல்லது எப்போதும் பிஸியாக இருப்பது போல் காட்டிக் கொள்வது இதன் அறிகுறிகளாகும். இது நிறுவனத்தின் உண்மையான வளர்ச்சிக்கும், தனிநபரின் மனநலனுக்கும் ஆரோக்கியமற்ற ஒன்றாகக் கருதப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;ul&gt; &lt;li&gt;சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் தகவல்களின்படி, சில Gen Z ஊழியர்கள் பயன்படுத்தும் வழிமுறைகள்.&lt;/li&gt; &lt;li&gt;Mouse-ஐ தொடர்ந்து நகர்த்திக்கொண்டே இருப்பது.&lt;/li&gt; &lt;li&gt;&amp;nbsp;Keyboard-ல் அடிக்கடி Typing செய்வது போல நடிப்பது.&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;அடிக்கடி Tab-களை மாற்றி மாற்றி திறப்பது.&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;Meeting-களில் மிகவும் கவனமாக குறிப்பெடுப்பது போல தோற்றம் காட்டுவது.&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;Excel அல்லது Coding Screen-ஐ திறந்து வைத்துக்கொண்டு வேறு வேலைகளைச் செய்வது.&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;Laptop-ஐ எப்போதும் திறந்தபடியே வைத்திருப்பது.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;இவை அனைத்தும் &quot;நான் மிகவும் பிஸியாக இருக்கிறேன்&quot; என்ற தோற்றத்தை ஏற்படுத்தும் உளவியல் செயல்பாடுகளாக பார்க்கப்படுகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்களின்படி, Software Finder நிறுவனம் நடத்திய ஆய்வில், சுமார் 80% Gen Z ஊழியர்கள் வாழ்க்கையில் ஒரு கட்டத்திலாவது Task Masking செய்ததாக தெரிவித்துள்ளனர் என்று கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அனைவரும் வேலை செய்யாமல் இருப்பதற்காக இதைச் செய்யவில்லை. சிலர் வேலை முடிந்த பிறகும் பிஸியாகத் தெரிய வேண்டும் என்ற அழுத்தம் காரணமாகவும், சிலர் மேலாளர்களின் கண்காணிப்பைத் தவிர்க்கவும் இப்படிச் செய்கிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பணியாளர்களின் கருத்துப்படி, இதற்கு பல காரணங்கள் உள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;1. எப்போதும் பிஸியாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;பல நிறுவனங்களில் வேலை முடிந்தாலும், &quot;பிஸியாக இருப்பது&quot; தான் திறமையின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;2. அலுவலக கண்காணிப்பு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;Employee Monitoring Software, Screen Tracking போன்ற தொழில்நுட்பங்கள் அதிகரித்துள்ளதால், பலர் தங்களை எப்போதும் Active-ஆக காட்ட முயல்கிறார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;3. வேலை முடிவை விட நேரம் முக்கியம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;சில நிறுவனங்களில், வேலை எவ்வளவு செய்தோம் என்பதைக் காட்டிலும், எவ்வளவு நேரம் Online-ல் இருந்தோம் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக ஊழியர்கள் கருதுகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;Task Masking அதிகரித்தால், உண்மையான Productivity குறைய வாய்ப்பு உள்ளது. மேலும், குழு ஒத்துழைப்பு பாதிக்கப்படும். உண்மையாக உழைக்கும் ஊழியர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகலாம். மேலாளர்களுக்கும் பணியாளர்களுக்கும் இடையிலான நம்பிக்கை குறையலாம். நிறுவனத்தின் செயல்திறனும் பாதிக்கப்படலாம். இதனால் பல நிறுவனங்கள் தற்போது &quot;Output-based Performance&quot; முறைக்கு மாறி வருகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த தலைமுறையைச் சேர்ந்த பலர், &quot;வேலை முடிவதே முக்கியம்; அலுவலகத்தில் எத்தனை மணி நேரம் அமர்ந்தோம் என்பது முக்கியமல்ல&quot; என்ற கருத்தை முன்வைக்கின்றனர். அவர்களுடைய பார்வையில், தேவையான பணிகளை நேரத்தில் முடித்துவிட்டால், மீதமுள்ள நேரத்தை வேறு பயனுள்ள செயல்களுக்கு பயன்படுத்துவதில் தவறு இல்லை என்கிறார்கள். இதனால், பழைய தலைமுறை மற்றும் புதிய தலைமுறைக்கு இடையே வேலை குறித்த அணுகுமுறையில் பெரிய வித்தியாசம் உருவாகியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மனிதவள (HR) நிபுணர்களின் கருத்துப்படி, Task Masking என்பது தனிநபரின் பிரச்சினை மட்டுமல்ல. அது நிறுவனத்தின் பணியிட கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கிறது. ஊழியர்கள் தங்களை நிரூபிக்க எப்போதும் பிஸியாக இருக்க வேண்டிய சூழல் உருவாகும்போது, இப்படிப்பட்ட பழக்கங்கள் அதிகரிக்கும். அதற்கு பதிலாக, பணியின் தரம், இலக்கு நிறைவு மற்றும் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடு செய்யும் நிறுவனங்களில் இந்த பிரச்சினை குறைவாக இருக்கும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;Task Masking என்பது வெறும் சமூக வலைதள டிரெண்ட் மட்டுமல்ல; இன்றைய பணியிட கலாச்சாரத்தில் உருவாகி வரும் புதிய மாற்றத்தின் அறிகுறியாகவும் பார்க்கப்படுகிறது. ஊழியர்கள் உண்மையில் உழைக்கிறார்களா அல்லது பிஸியாக இருப்பது போலத் தோற்றமளிக்கிறார்களா என்பதை கண்காணிப்பதை விட, அவர்கள் அளிக்கும் முடிவுகள் மற்றும் செயல்திறனுக்கே நிறுவனங்கள் முக்கியத்துவம் அளித்தால் மட்டுமே ஆரோக்கியமான பணிச்சூழலை உருவாக்க முடியும். Gen Z தலைமுறையின் புதிய அணுகுமுறையைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப பணியிட கொள்கைகளை மாற்றுவது நிறுவனங்களுக்கும், ஊழியர்களுக்கும் நீண்ட கால நன்மையை அளிக்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>career</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/task-masking-why-gen-z-employees-are-pretending-to-work-the-viral-office-trend-explained-imimea4"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Govt Scheme: வங்கி கணக்கில் ரூ.15000 வரவு வைத்த மத்திய அரசு.! உங்களுக்கு வந்து இருக்கா? உடனே செக் பண்ணுங்க.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/first-time-employees-linked-to-epfo-accounts-to-receive-15000-govt-scheme-eligibility-benefits-and-payment-details-leiwsii</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/first-time-employees-linked-to-epfo-accounts-to-receive-15000-govt-scheme-eligibility-benefits-and-payment-details-leiwsii</guid>
            <pubDate>Fri, 19 Jun 2026 13:02:24 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;EPFO - PMVBRY Benefits - முதல்முறையாக வேலைக்கு சேர்ந்து பிஎப் கணக்கில் இணைந்தவர்களுக்கு ரூ.15,000 இன்று முதல் வரவு வைக்கப்படுகிறது. அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kvfc5xr8pyaz2bqst0q0t8c7,imgname-epfo--1781853779720.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;EPFO - PMVBRY Benefits - முதல்முறையாக வேலைக்கு சேர்ந்து பிஎப் கணக்கில் இணைந்தவர்களுக்கு ரூ.15,000 இன்று முதல் வரவு வைக்கப்படுகிறது. அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், இளைஞர்கள் வேலைக்கு செல்வதை ஊக்குவிக்கவும் &lsquo;பிரதம மந்திரி விக்சித் பாரத வேலைவாய்ப்பு திட்டம்&rsquo; கடந்த ஆண்டு துவங்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி தனியார் துறையில் வேலைக்கு சேரும் ஊழியர்களுக்கு மொத்தம் ரூ.15,000 உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. இது முதல்முறை வேலைக்கு சேரும் பணியாளர்களுக்கு மட்டுமல்லாமல் அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கும் வழங்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்: &amp;nbsp;&lt;/strong&gt;Facts: நம்ம போன் நம்பர்ல 10 இலக்கம் ஏன் இருக்கு? 8, 9-னு ஏன் இல்ல? இதற்குப் பின்னால் உள்ள காரணம் என்ன தெரியுமா?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒருவர் இதற்கு முன் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் எந்த நிறுவனத்திலும் வேலை பார்த்து இருக்கக் கூடாது. முதல் முறையாக வேலை பெற்று, பிஎப் கணக்கில் இணைந்திருக்க வேண்டும். மாத சம்பளம் ஒரு லட்சம் ரூபாய்க்குள் குறைவாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் பணியில் இருக்க வேண்டும். வேலையில் இணைந்து ஆறு மாதம் பூர்த்தி செய்தவர்களுக்கு முதல் தவணையில் ரூ.7,500-ம் இரண்டாவது தவணையில் ரூ.7,500-ம் மொத்தம் ரூ.15,000 நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்: &amp;nbsp;&lt;/strong&gt;Cashew: ஒரு கிலோ முந்திரி வெறும் 50 ரூபாய் தான்.! இந்த கிராமத்துக்கு போனா மூட்டை மூட்டையா வாங்கலாம்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதேபோல் புதிய ஊழியர்களை பணியில் சேர்க்கும் நிறுவனங்களுக்கு ஒரு ஊழியருக்கு மாதம் ரூ.3,000 ஊக்கத்தொகை என இரண்டு ஆண்டுகள் வரை வழங்கப்படும். கடந்த ஏப்ரல் மாதம் 6 மாத பணியை நிறைவு செய்த 4.4 லட்சம் ஊழியர்களுக்கு 446 கோடி ரூபாய் அளிக்கப்பட்டது. அதேபோல் புதிய ஊழியர்களை வேலைக்கு சேர்த்த 18,000 நிறுவனங்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இந்த நிலையில் அடுத்த தவணையாக 15 லட்சம் ஊழியர்களுக்கான ரூ.2,400 கோடியை பிரதமர் மோடி இன்று விடுவிக்கிறார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்: &amp;nbsp;&lt;/strong&gt;EB Bill: கரண்ட் பில் ஏறிட்டே போகுதா? மத்திய அரசின் சூப்பர் சோலார் திட்டம் இதோ.! எப்படி விண்ணப்பிப்பது? விரிவான தகவல்கள்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;டெல்லி விஞ்ஞான் பவனில் நடக்கும் நிகழ்ச்சியில் பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு ஊக்கத்தொகை நேரடியாக வரவு வைக்கப்பட உள்ளது. கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் இந்த திட்டம் துவங்கப்பட்டதிலிருந்து தற்போது வரை புதிதாக 63 லட்சம் பேர் வேலை வாய்ப்புகளை பெற்றுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. இதில் 30% பெண்கள் ஆவர்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்: &amp;nbsp;&lt;/strong&gt;PNG: சிலிண்டர் வேண்டாம்.! இனி 24 மணி நேரமும் பைப் மூலம் கேஸ் வரும்.! PNG இணைப்பு வாங்குவது எப்படி?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தத் திட்டம் 2027 ஆம் ஆண்டு வரை செயல்பட உள்ளது. அதற்குள் மூன்று கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், இதற்கு ரூ.99,446 கோடி செலவிடவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது..&lt;/p&gt;]]></content:encoded>
            <category>career</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/first-time-employees-linked-to-epfo-accounts-to-receive-15000-govt-scheme-eligibility-benefits-and-payment-details-leiwsii"/>
        </item>
        <item>
            <title><![CDATA[SBI PO Recruitment 2026: மாதம் ரூ.41,960 சம்பளத்தில் எஸ்பிஐயில் காத்திருக்கும் 1,500 வேலைகள்.. உடனே அப்ளை பண்ணுங்க]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/career/sbi-po-jobs-2026-salary-41960-apply-before-july-8-nd6zdmx</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/career/sbi-po-jobs-2026-salary-41960-apply-before-july-8-nd6zdmx</guid>
            <pubDate>Fri, 19 Jun 2026 13:25:27 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;SBI PO Recruitment 2026: அரசு வங்கி வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சி செய்தி. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) நாடு முழுவதும் 1,500 புரொபேஷனரி அதிகாரி (PO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kvf97jc5m5c7g4vx3v6k0561,imgname-tamil-news---2026-06-19t120056.444-1781850687876.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;SBI PO Recruitment 2026: அரசு வங்கி வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சி செய்தி. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) நாடு முழுவதும் 1,500 புரொபேஷனரி அதிகாரி (PO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அரசு வங்கி வேலைக்காக நீண்ட நாட்களாக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வங்கியில் புரொபேஷனரி அதிகாரி பதவிக்காக நாடு முழுவதும் 1,500 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பணியமர்த்தப்படுவார்கள். ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஜூலை 8-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தப் பணிக்குத் தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.41,960 தொடக்க அடிப்படை சம்பளம் வழங்கப்படும். ஆரம்பத்தில் இரண்டு ஆண்டுகள் தகுதிகாண் பருவத்தில் பணியாற்றிய பிறகு, செயல்திறன் அடிப்படையில் ஜூனியர் மேனேஜ்மென்ட் ஸ்கேல்-1 பதவி உயர்வு கிடைக்கும். விண்ணப்பதாரர்களின் வயது 21 முதல் 30 ஆண்டுகள் வரை இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு வயது தளர்வு வழங்கப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு அல்லது ஒருங்கிணைந்த இரட்டைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இறுதியாண்டு மாணவர்களுக்கு விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த ஆட்சேர்ப்பில் முதற்கட்டத் தேர்வு, முதன்மைத் தேர்வு, சைக்கோமெட்ரிக் மதிப்பீடு, குழுப் பயிற்சி மற்றும் நேர்காணல் என பல கட்டங்கள் இடம்பெறும். ஒவ்வொரு கட்டத்திலும் தகுதி பெறுபவர்களே அடுத்த கட்டத்திற்கு தேர்வு செய்யப்படுவார்கள். பொதுப் பிரிவு விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.750 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வு பாடத்திட்டம், ஒதுக்கீட்டு விதிமுறைகள் மற்றும் தேவையான ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சரிபார்த்து, கடைசி தேதிக்குள் விண்ணப்பிப்பது அவசியம். அரசு வங்கியில் அதிகாரி பதவியை இலக்காகக் கொண்டிருப்பவர்களுக்கு இது தவறவிடக் கூடாத ஒரு முக்கிய வாய்ப்பாகும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>career</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/career/sbi-po-jobs-2026-salary-41960-apply-before-july-8-nd6zdmx"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Bank of Baroda Jobs: சம்பளம் ரூ.1.20 லட்சம் வரை! பேங்க் ஆஃப் பரோடாவில் கொட்டிக்கிடக்கும் காலிப்பணியிடங்கள்! தேர்வு எழுத தேவையில்லை!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/career/bank-of-baroda-recruitment-huge-vacancies-with-salary-up-to-rs1-20-lakh-ou1i08l</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/career/bank-of-baroda-recruitment-huge-vacancies-with-salary-up-to-rs1-20-lakh-ou1i08l</guid>
            <pubDate>Fri, 19 Jun 2026 16:29:37 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Bank of Baroda: பேங்க் ஆப் பரோடா வங்கியில் மேலாளர், மூத்த மேலாளர், மற்றும் தலைமை மேலாளர் உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான கல்வித் தகுதி, சம்பள விவரங்களை பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kvfr47737gef1vqrv0gxfmst,imgname-bank-of-baroda-1781866306787.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Bank of Baroda: பேங்க் ஆப் பரோடா வங்கியில் மேலாளர், மூத்த மேலாளர், மற்றும் தலைமை மேலாளர் உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான கல்வித் தகுதி, சம்பள விவரங்களை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது பேங்க் ஆப் பரோடா வங்கி. இந்தியாவிலேயே பாரத் ஸ்டேட் வங்கிக்கு பின்னர் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாகும். 9,693 கிளைகளுடன் 74,227க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான சூப்பர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி, சம்பளம், தேர்வு செய்யும் முறை உள்ளிட்ட விவரங்கள் என்ன என்பதை விரிவாக பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேலாளர் - கிரெடிட் அனலிஸ்ட் - 04, மூத்த மேலாளர் - கிரெடிட் அனலிஸ்ட் - 38 , தலைமை மேலாளர் - கிரெடிட் அனலிஸ்ட் - 01, மூத்த மேலாளர் - C &amp;amp; IC ரிலேஷன்ஷிப் - 36 , தலைமை மேலாளர் - C &amp;amp; IC ரிலேஷன்ஷிப் - 07 காலி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;கல்வித் தகுதி&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;விண்ணப்பதாரர்கள் ஏதாவது ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் நிதியியல் துறையில் முதுநிலை பட்டம் அல்லது டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும். CA, CMA, CS அல்லது CFA தகுதி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். சம்பந்தப்பட்ட வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் பணியாற்றி இருப்பது ரொம்ப முக்கியம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;* MMG/S - II: ரூ.64,820 முதல் ரூ.93,960, SMG/S-IV: ரூ. 85,920 முதல் ரூ. 1,05,280, SMG/S-IV: ரூ. 102,300 முதல் ரூ. 120,940&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;வயது வரம்பு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;மேலாளர் - கிரெடிட் அனலிஸ்ட் - 25 முதல் 30 வயதும், மூத்த மேலாளர் - கிரெடிட் அனலிஸ்ட் - 28 முதல் 35 வயதும், தலைமை மேலாளர் - கிரெடிட் அனலிஸ்ட் - 32 முதல் 42 வயமட், மூத்த மேலாளர் - C &amp;amp; IC ரிலேஷன்ஷிப் - 28 முதல் 35 வயதும், தலைமை மேலாளர் - C &amp;amp; IC ரிலேஷன்ஷிப் - 32 முதல் 42 வயது வரை உள்ளவர்கள் விண்ணபிக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேலாளர் - கிரெடிட் அனலிஸ்ட் - 25 முதல் 30 வயதும், மூத்த மேலாளர் - கிரெடிட் அனலிஸ்ட் - 28 முதல் 35 வயதும், தலைமை மேலாளர் - கிரெடிட் அனலிஸ்ட் - 32 முதல் 42 வயமட், மூத்த மேலாளர் - C &amp;amp; IC ரிலேஷன்ஷிப் - 28 முதல் 35 வயதும், தலைமை மேலாளர் - C &amp;amp; IC ரிலேஷன்ஷிப் - 32 முதல் 42 வயது வரை உள்ளவர்கள் விண்ணபிக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;யாருக்கெல்லாம் வயது தளர்வு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிகளின்படி வயது தளர்வு வழங்கப்படும். எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகள் (PwD - பொதுப் பிரிவு): 10 ஆண்டுகள், (PwD - OBC): 13 ஆண்டுகள், (PwD - SC/ST): 15 ஆண்டுகள் வரை தளர்வு வழங்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;தேர்வு முறை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;நேர்காணல் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படுவோர் இந்தியா முழுவதும் உள்ள வங்கி கிளைகள் மற்றும் அலுவலகங்களில் பணியமர்த்தப்படுவர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;விண்ணப்ப கட்டணம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;பெண்கள், எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.175 ஆகவும், மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு ரூ.850 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைன் வழியாக மட்டுமே செலுத்த வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;விண்ணப்பிக்கும் முறை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஜூலை 6ம் தேதிக்குள் பேங்க் ஆஃப் பரோடாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://bankofbaroda.bank.in/) வழங்கப்பட்டுள்ள 'Careers' பக்கத்திற்குச் சென்று ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>career</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/career/bank-of-baroda-recruitment-huge-vacancies-with-salary-up-to-rs1-20-lakh-ou1i08l"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Job Guarantee Update : ஹேப்பி.! இன்று முதல் ஹேப்பி.! இனி 125 நாட்கள் வேலை உறுதி..! இன்று முதல் புதிய திட்டம் அமல்..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/india/mgnrega-big-update-100-day-work-scheme-extended-to-125-days-new-rules-effective-today-oxv2s7q</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/india/mgnrega-big-update-100-day-work-scheme-extended-to-125-days-new-rules-effective-today-oxv2s7q</guid>
            <pubDate>Wed, 01 Jul 2026 07:56:21 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் புதிய விதிகளுடன் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி வேலை நாட்கள் 100-லிருந்து 125 ஆக உயர்த்தப்பட்டுள்ளதுடன், பயோமெட்ரிக் வருகைப்பதிவு மற்றும் வேலை இழப்பு உதவித்தொகை போன்ற அம்சங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwdqxy9v3hxs5xqv13qf04nq,imgname-chatgpt-image-jul-1--2026--07-54-21-am--1--1782872734010.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் புதிய விதிகளுடன் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி வேலை நாட்கள் 100-லிருந்து 125 ஆக உயர்த்தப்பட்டுள்ளதுடன், பயோமெட்ரிக் வருகைப்பதிவு மற்றும் வேலை இழப்பு உதவித்தொகை போன்ற அம்சங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வந்த 100 நாள் வேலைத் திட்டத்தில் முக்கிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று (ஜூலை 1) முதல் நாடு முழுவதும் இந்த திட்டம் புதிய பெயரிலும், புதிய விதிமுறைகளுடனும் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் வேலை நாட்கள் 100-ல் இருந்து 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளதால், கிராமப்புற குடும்பங்களுக்கு கூடுதல் வருமான வாய்ப்பு கிடைக்க உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;இதுவரை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (MGNREGS) என்ற பெயரில் செயல்பட்டு வந்த திட்டம், இனி &quot;வளர்ச்சியடைந்த பாரதம் கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டம்&quot; என்ற புதிய பெயரில் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ள நிலையில், தமிழக அரசும் அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த திட்டத்தின் மிகப்பெரிய மாற்றமாக, ஒவ்வொரு தகுதியான கிராமப்புற குடும்பத்திற்கும் ஆண்டுக்கு வழங்கப்படும் வேலை நாட்கள் 100-ல் இருந்து 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளன. இதன் மூலம் ஏழை மற்றும் நடுத்தர கிராமப்புற குடும்பங்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பும், நிலையான வருமானமும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வேலை கோரி விண்ணப்பிக்கும் நபர்களுக்கு 15 நாட்களுக்குள் வேலை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் வேலை வழங்க முடியாவிட்டால், சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு வேலை இழப்பு உதவித்தொகை வழங்கப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;புதிய நடைமுறையின்படி, வேலை வழங்கப்படாத முதல் 30 நாட்களுக்கு அறிவிக்கப்பட்ட தினக்கூலியின் குறைந்தபட்சம் நான்கில் ஒரு பங்கு உதவித்தொகையாக வழங்கப்படும். அதன் பின்னரும் வேலை கிடைக்காவிட்டால், தினக்கூலியின் குறைந்தபட்சம் பாதி தொகை வேலை இழப்பு நிவாரணமாக வழங்கப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;திட்டத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், வேலைக்கு வரும் தொழிலாளர்களின் வருகை இனி பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்படும். இதன் மூலம் போலியான வருகை பதிவுகளைத் தடுக்கவும், ஊதியம் நேரடியாக தகுதியானவர்களிடம் சென்றடையவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த திட்டத்திற்கான மொத்த நிதியில் 60 சதவீதத்தை மத்திய அரசும், 40 சதவீதத்தை மாநில அரசும் வழங்குகின்றன. தமிழகத்தின் அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் இந்த புதிய திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வேலை நாட்கள் அதிகரிப்பு, வேலை கிடைக்காவிட்டால் உதவித்தொகை, பயோமெட்ரிக் பதிவு உள்ளிட்ட மாற்றங்கள் கிராமப்புற தொழிலாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பையும், வருமான உறுதியையும் வழங்கும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த புதிய திட்டம் கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்துவதோடு, ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>career</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/india/mgnrega-big-update-100-day-work-scheme-extended-to-125-days-new-rules-effective-today-oxv2s7q"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Business: இட்லி விற்றே மாதம் ரூ.50,000 சம்பாதிக்கலாம் தெரியுமா? தெரிஞ்ச தொழில் தெரியாத ரகசியம்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/idli-business-earn-rs-50000-per-month-selling-idlis-the-hidden-secret-to-a-profitable-small-business-roeugk1</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/idli-business-earn-rs-50000-per-month-selling-idlis-the-hidden-secret-to-a-profitable-small-business-roeugk1</guid>
            <pubDate>Tue, 30 Jun 2026 09:47:51 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;இட்லி விற்பனை என்பது குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் ஒரு எளிய தொழில். தரமான மாவு, சரியான இடம் தேர்வு, மற்றும் செலவு மேலாண்மை போன்ற ரகசியங்களை அறிந்து செயல்பட்டால், மாதம் ரூ.50,000க்கு மேல் எளிதாக லாபம் ஈட்ட முடியும்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwbasstrpf45pfqsvvbj2w4q,imgname-chatgpt-image-jun-30--2026--09-20-41-am--2--1782791858008.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;இட்லி விற்பனை என்பது குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் ஒரு எளிய தொழில். தரமான மாவு, சரியான இடம் தேர்வு, மற்றும் செலவு மேலாண்மை போன்ற ரகசியங்களை அறிந்து செயல்பட்டால், மாதம் ரூ.50,000க்கு மேல் எளிதாக லாபம் ஈட்ட முடியும்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்றைய வேகமான உலகில், பலர் வேலை தேடி அலைந்து கொண்டிருக்க, சிலர் வீட்டில் இருந்தபடியே அல்லது சிறிய கடையில் இருந்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். அப்படி ஒரு எளிய, ஆனால் லாபகரமான தொழில் தான் இட்லி விற்பனை. தெரிஞ்ச தொழிலாகத் தெரிந்தாலும், அதன் உண்மையான ரகசியங்களை அறிந்து செயல்படுபவர்கள் மட்டுமே மாதம் ரூ.50,000க்கு மேல் லாபம் ஈட்டுகின்றனர். இந்தக் கட்டுரையில் அந்த ரகசியங்களை விரிவாகப் பார்ப்போம். இந்த தொழிலை செய்தால் நீங்கள் கோடீஸ்வரன் ஆவது உறுதி.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இட்லி தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் மட்டுமல்ல, வட இந்தியா, வெளிநாட்டு இந்தியர்கள் அதிகம் உள்ள பகுதிகளிலும் பிரபலம். காலைச் சிற்றுண்டி, மதிய உணவு, இரவு டிபன் என எல்லா நேரத்திலும் தேவை.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;ஒரு சாதாரண நாளில் ஒரு இட்லி கடை 300-500 இட்லிகளை விற்கலாம். விலை ஒன்றுக்கு ரூ.10-15 என்றால், நாள் வருமானம் ரூ.4,000-7,000 வரை இருக்கும். மாதம் 25 நாட்கள் விற்பனை செய்தால், மொத்த வருமானம் ரூ.1,00,000 முதல் ரூ.1,75,000 வரை சாத்தியம். செலவுகளைக் குறைத்து நிர்வகித்தால், லாபம் ரூ.50,000க்கு மேல் எளிது. சிறிய அளவில் தொடங்கினால் பெரிய அளவில் வருமானத்தை ஈட்டலாம். ஒரு முயற்சித்துதான் பாருங்களேன்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பலர் இட்லி விற்கத் தொடங்கி தோற்றுப் போவதற்கு முக்கிய காரணம் தரம். ரகசியம் என்னவென்றால், பழைய அரிசி + உளுந்து சரியான விகிதத்தில் (4:1 அல்லது 3:1) ஊற வைத்து, சரியான புளிப்புடன் அரைக்க வேண்டும். சிலர் சிறிது பொன்னி அரிசி, தவிட்டு அரிசி கலந்து தனித்துவ ருசி தருகின்றனர். மாவில் சிறிது உப்பு, சோடா சரியாகப் போடுவது மென்மைக்கு உதவும். சட்னி, சாம்பார், மிளகாய் துவையல் ஆகியவற்றில் தனித்துவம் கொண்டு வாடிக்கையாளர்களைத் தக்க வைக்க வேண்டும். வீட்டில் தயாரிக்கும் ருசியை விற்பனை இடத்தில் கொண்டு வருவதே பெரிய ரகசியம். காரச்சட்னி, ரோசாப்பூ சட்னி, தேங்காய் சட்னி, புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி என வகை வகையாய் சட்னி செய்து வாடிக்கையாளர்களை அசத்தினால் அவர்கள் உங்களை விட்டு அசர மாட்டார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நல்ல இடம் தேர்வு முக்கியம் &ndash; பஸ் ஸ்டாண்ட் அருகில், ஆஃபீஸ் பகுதி, கல்லூரி அருகில் அல்லது குடியிருப்பு பகுதியில் காலை 6 மணி முதல் 10 மணி வரை விற்பனை சூடுபிடிக்கும். மொபைல் கார்ட் அல்லது சிறிய கடை போதும்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;ஆரம்பத்தில் ரூ.20,000-50,000 முதலீடு (இட்லி மேக்கர், ஸ்டவ், பாத்திரங்கள், மேசை) போதுமானது. WhatsApp, Instagram மூலம் &ldquo;ஹோம் ஸ்டைல் இட்லி&rdquo; என்று விளம்பரம் செய்யலாம். சிலர் &ldquo;இலவச டெலிவரி&rdquo; அல்லது &ldquo;5 இட்லிக்கு ஒன்று இலவசம்&rdquo; போன்ற ஆஃபர்களை வைத்து வாடிக்கையாளர்களை அதிகரிக்கின்றனர். மேலும் தரம் இருந்தால் ஒருவாட்டி வாங்கியவர்கள் திரும்ப திரும்ப வருவார்கள் உங்களை தேடி.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒரு இட்லிக்கு அரிசி, உளுந்து, எரிபொருள், தொழிலாளர் செலவு உள்ளிட்டவை சுமார் ரூ.4-6 வரை இருக்கும். விலை ரூ.12-15 என்றால், ஒவ்வொரு இட்லியிலும் ரூ.6-9 லாபம் கிடைக்கும். 500 இட்லி விற்றால் நாள் லாபம் ரூ.3,000-4,500. மாதம் ரூ.75,000-1,00,000 வரை லாபம் சாத்தியம்.&lt;/p&gt;&lt;p&gt;செலவைக் குறைக்க பெரிய அளவில் மாவு அரைத்தல், மின்சார இட்லி மேக்கர் பயன்படுத்துதல் போன்றவை உதவும். பின்னர் டோசை, உப்புமா, பொங்கல், வடை ஆகியவற்றைச் சேர்த்து வருமானத்தைப் பெருக்கலாம். சிலர் பிராண்ட் உருவாக்கி, பல கிளைகள் அல்லது ஃப்ரான்சைசி கொடுத்து லட்சங்களில் சம்பாதிக்கின்றனர். கண்டிப்பாக விருப்பமுடன் செய்தால் இந்த தொழிலில் கொடிகட்டி பறக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தினசரி காலை எழுந்து வேலை செய்வது சிரமம். ஆனால் குடும்ப உறுப்பினர்களுடன் பங்கு பிரித்துக் கொண்டால் எளிது. சுகாதாரம், FSSAI உரிமம், GST (தேவைப்பட்டால்) போன்றவற்றை கவனிக்க வேண்டும். தரத்தை ஒரே மாதிரி வைத்திருப்பதே நீண்டகால வெற்றிக்கு அடிப்படை. முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும் என்பதற்கு இட்லி வியாபாரம் ஒரு எடுத்துக்காட்டு என்றால் அது மிகையல்ல.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இட்லி விற்பனை என்பது சாதாரண தொழில் அல்ல; அது உழைப்பு, தரம் மற்றும் புத்திசாலித்தனத்தின் கலவை. சரியான திட்டமிடலுடன் தொடங்கினால், மாதம் ரூ.50,000 லாபம் என்பது கனவு அல்ல, யதார்த்தம். பல இளைஞர்கள், பெண்கள் இந்தத் தொழிலில் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கின்றனர். நீங்களும் விரும்பினால் இன்றே தொடங்குங்கள். உங்கள் கைவிரல்களால் உருவாகும் இட்லி உங்கள் எதிர்காலத்தைப் பளிச்சென மாற்றும்!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>career</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/idli-business-earn-rs-50000-per-month-selling-idlis-the-hidden-secret-to-a-profitable-small-business-roeugk1"/>
        </item>
        <item>
            <title><![CDATA[State Bank of India: SBI வழங்கும் ரூ.75 லட்சம் கடன்.! யாருக்கு கிடைக்கும்? எப்படி விண்ணப்பிப்பது?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/pm-vidyalaxmi-education-loan-scheme-sbi-offers-loan-up-to-rs-75-lakh-eligibility-criteria-application-process-explained-uvmb0np</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/pm-vidyalaxmi-education-loan-scheme-sbi-offers-loan-up-to-rs-75-lakh-eligibility-criteria-application-process-explained-uvmb0np</guid>
            <pubDate>Thu, 25 Jun 2026 16:50:31 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;PM Vidyalaxmi Education Loan Scheme: SBI வங்கி வழங்கும் &lsquo;பிரதான் மந்திரி வித்யாலக்ஷ்மி கல்வி கடன் திட்டம்&rsquo; குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kvz7svv3wtdg09hvvqajw2kh,imgname-pm-vidyalaxmi-education-loan-scheme-1782386061154.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;PM Vidyalaxmi Education Loan Scheme: SBI வங்கி வழங்கும் &lsquo;பிரதான் மந்திரி வித்யாலக்ஷ்மி கல்வி கடன் திட்டம்&rsquo; குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உயர்கல்வி பயில வேண்டும் என்கிற விருப்பம் இருந்தும், நிதி நெருக்கடியால் தவித்து வரும் திறமையான மாணவர்களுக்கு, பணப் பற்றாக்குறை காரணமாக உயர்கல்வி கற்க முடியாமல் போவதை தடுப்பதற்காக இந்திய அரசால் கொண்டுவரப்பட்ட மிகச் சிறந்த திட்டம் தான் &lsquo;பிரதான் மந்திரி வித்யா லட்சுமி கல்வி கடன் திட்டம்&rsquo;. நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த கடன் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள், தகுதிகள் மற்றும் விரிவான விவரங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;Govt Scheme: பிறந்த குழந்தைக்கு ஒரு கிராம் தங்க மோதிரம்.! விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன? வழிமுறைகள் இதோ.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தத் திட்டத்தின் கீழ் கடன் பெற எந்த விதமான சொத்துப் பிணையமோ அல்லது மூன்றாம் நபர் உத்தரவாதமோ தேவையில்லை. மாணவர்களின் படிப்புச் செலவு, விடுதிகட்டணம், புத்தகங்கள், லேப்டாப் இதற்கு கல்வி சார்ந்த செலவுகளின் அடிப்படையில் கடன் தொகை நிர்ணயிக்கப்படும். ரூ.7.5 லட்சம் வரையிலான கடன்களுக்கு இந்திய அரசு 75% கடன் உத்திரவாதத்தை வங்கிகளுக்கு வழங்குகிறது. மெரிட் அடிப்படையில் அல்லது நுழைவுத் தேர்வு மூலம் இடம்பிடித்த மாணவர்களுக்கு மட்டுமே இந்த கடன் பொருந்தும். மேனேஜ்மென்ட் கோட்டாவில் சேரும் மாணவர்களுக்கு இந்த கடன் கிடைக்காது.&lt;/p&gt;&lt;p&gt;Govt Scheme: வங்கி கணக்கில் ரூ.15000 வரவு வைத்த மத்திய அரசு.! உங்களுக்கு வந்து இருக்கா? உடனே செக் பண்ணுங்க.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தக் கல்விக் கடன் உள்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் வழங்கும் இளங்கலை, முதுகலை படிப்புகள், பட்டயப் படிப்புகளுக்கு பொருந்தும். வெளிநாடு கல்வி நிறுவனங்கள் அல்லது இந்திய நிறுவனங்களின் வெளிநாட்டு வளாகங்களில் மேற்கொள்ளப்படும் படிப்புகளுக்கு இந்தத் திட்டம் பொருந்தாது. இந்தத் திட்டத்தில் மாணவர்களின் குடும்ப வருமானத்தின் அடிப்படையில் படிப்பு காலத்தின் போது வட்டி மானியம் வழங்கப்படுகிறது. குடும்ப வருமானம் ரூ.4.5 லட்சத்திற்குள் இருந்தால் தொழில்நுட்பம் மற்றும் தொழில்முறை படிப்புகளுக்கு 100% வட்டி மானியமும், இதர படிப்புகளுக்கு மூன்று சதவீத வட்டி மானியமும் கிடைக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;Govt Scheme: வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.4,000 உதவித் தொகை.! இவர்களுக்கெல்லாம் கிடைக்காது? தகுதிகள் மற்றும் நிபந்தனைகள் என்ன?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குடும்ப வருமானம் ரூ.4.5 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை இருந்தால் 10 லட்சம் வரையிலான கடங்களுக்கு மூன்று சதவீத வட்டி மானியம் வழங்கப்படும். ஆண்டுக்கு அதிகபட்சமாக ஒரு லட்சம் மாணவர்களுக்கு இந்த சலுகை முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும். படிப்பு காலத்தின் பொழுதே வட்டித் தொகையை முறையாக செலுத்தி வந்தால், கூடுதலாக ஒரு சதவீதம் வரை வட்டி சலுகை பெற வாய்ப்பு உள்ளது. வட்டி மானியத்தொகை நேரடியாக &lsquo;PM வித்யாலட்சுமி டிஜிட்டல் ரூபி மொபைல் செயலி&rsquo; மூலம் மாணவர்களின் கடன் கணக்கில் செலுத்தப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த கடனைப் பெறுவதற்கு விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நாட்டின் சிறந்த 860 தரமான உயர்கல்வி நிறுவனங்களில் முதல் 100 இடங்களுக்குள் இருக்கும் நிறுவனங்கள் அல்லது 101 முதல் 200 இடங்களுக்குள் இருக்கும் அரசு கல்லூரிகளில் சேர்க்கை பெற்று இருக்க வேண்டும். பொது நுழைவுத்தேர்வு அல்லது மதிப்பெண் தகுதி அடிப்படையில் சேர்க்கை பெற்று இருக்க வேண்டும். மேனேஜ்மென்ட் கோட்டா அல்லது பிற வழிகளில் வாய்ப்பு பெற்றவர்களுக்கு இந்த கடனைப் பெற முடியாது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;படிப்பு காலம் முடிந்த பிறகு ஒரு ஆண்டு வரை கடன் தவணை செலுத்த வேண்டியதில்லை. படிப்பு முடிந்து அவகாச காலமும் முடிந்த பிறகு அதிகபட்சமாக 15 ஆண்டுகள் 180 மாதத் தவணைகள் வரை கடனை திருப்பி செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்கப்படுகிறது. கடனை முன்கூட்டியே அடைக்க நினைத்தால் அபராத கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது. விண்ணப்பிக்கும் பொழுது சில ஆவணங்கள் கட்டாயமாகும். ஆதார் கார்டு, பான் கார்டு, 10 மற்றும் 12-ம் வகுப்பு மற்றும் அதற்கு முந்தைய தகுதி தேர்வுகளில் மதிப்பெண் சான்றிதழ்கள், கல்லூரி சேர்க்கைக்கான சான்று, கல்லூரியின் கட்டண விவரப்பட்டியல், நுழைவுத் தேர்வு முடிவுகள், வருமானச் சான்றிதழ், மாணவர் மற்றும் பெற்றோரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த திட்டம் முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் வங்கிக் கிளைக்கு நேரடியாக செல்வதற்கு முன்னர் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மத்திய அரசின் அதிகாரப்பூர்வ PM வித்யாலட்சுமி போர்டலுக்கு சென்று பதிவு செய்ய வேண்டும். அங்குள்ள காமன் எஜுகேஷன் லோன் அப்ளிகேஷன் ஃபார்ம் என்கிற பொதுவான விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும். தேவையான ஆவணங்களை அப்லோடு செய்து வங்கிகளின் பட்டியலில் எஸ்பிஐ மற்றும் உங்களின் தகுதிக்கேற்ற கடன் திட்டத்தை தேர்ந்தெடுத்து விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு வங்கி குறிப்பிட்ட கல்வி நிறுவனத்தில் அல்லது உங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள கிளை மூலம் கடன் விரைவாக பரிசீலிக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரூ.7.5 லட்சத்திற்கும் மேல் கடன் வாங்குபவர்களுக்கு அசையும் மற்றும் அசையா சொத்துக்களை பிணையாக வழங்க வேண்டும். அசையா சொத்துக்கள் என்றால் நிலம் அல்லது கட்டிடத்தின் மீதான உரிமையை நிரூபிக்கும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். விவசாயம் சாராத நிலப் பயன்பாடு, விற்பனை பத்திரம், பதிவு செய்யப்பட்ட மேம்பாடு ஒப்பந்தம், கட்டட வரைபடம் ஆகியவற்றை வழங்க வேண்டும். அசையும் சொத்துக்கள் என்றால், வைப்பு நிதி சான்றிதழ்கள், எல்ஐசி காப்பீட்டு திட்டங்கள், பொதுத்துறை நிறுவனங்களின் அரசு பத்திரங்கள் எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் ஆகியவற்றைப் பிணையமாகத் தரலாம். நிதி நெருக்கடியால் உயர் கல்வி பயிலும் முடியாத மாணவர்களுக்வு எஸ்பிஐ இந்த பொன்னான வாய்ப்பை வழங்குகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>career</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/pm-vidyalaxmi-education-loan-scheme-sbi-offers-loan-up-to-rs-75-lakh-eligibility-criteria-application-process-explained-uvmb0np"/>
        </item>
    </channel>
</rss>
