<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes"?>
<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Mon, 08 Jun 2026 11:25:10 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss/career" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[Govt Scheme: அரசு தரும் ரூ.4,000 உதவித்தொகை... முதலில் இந்த சான்றிதழை வாங்குங்கள்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/govt-scheme-rs-4000-financial-assistance-from-the-government-first-get-this-certificate-096vqs6</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/govt-scheme-rs-4000-financial-assistance-from-the-government-first-get-this-certificate-096vqs6</guid>
            <pubDate>Sat, 06 Jun 2026 13:54:26 +0530</pubDate>
            <description><![CDATA[வேலையில்லா சான்றிதழ் என்பது ஒருவர் வேலையில் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் ஆவணமாகும். இந்தச் சான்றிதழைப் பயன்படுத்தி மாதம் ரூ.4,000 வரை உதவித்தொகை பெறலாம், மேலும் இதை தமிழ்நாடு இ-சேவை இணையதளம் மூலம் ஆன்லைனிலேயே எளிதாக விண்ணப்பித்துப் பெற முடியும்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktdzv56sndt916ay4673t6ft,imgname-chatgpt-image-jun-6--2026--01-12-28-pm--1--1780733547737.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[வேலையில்லா சான்றிதழ் என்பது ஒருவர் வேலையில் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் ஆவணமாகும். இந்தச் சான்றிதழைப் பயன்படுத்தி மாதம் ரூ.4,000 வரை உதவித்தொகை பெறலாம், மேலும் இதை தமிழ்நாடு இ-சேவை இணையதளம் மூலம் ஆன்லைனிலேயே எளிதாக விண்ணப்பித்துப் பெற முடியும்.&lt;img&gt;&lt;p&gt;படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வரும் இளைஞர்களுக்கு அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் உதவித்தொகைகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளன. குறிப்பாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பல ஆண்டுகளாக வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு அரசால் வழங்கப்படும் உதவித்தொகைகளை பெற சில முக்கிய ஆவணங்கள் அவசியமாகின்றன. அவற்றில் முக்கியமான ஒன்று தான் வேலையில்லா சான்றிதழ் (Unemployment Certificate).&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தச் சான்றிதழ், விண்ணப்பதாரர் தற்போது எந்தவொரு அரசு அல்லது தனியார் நிறுவனத்திலும் பணியில் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ ஆவணமாகும். அரசு வேலைவாய்ப்பு தொடர்பான திட்டங்கள், கல்வி உதவித்தொகைகள் மற்றும் வேலையில்லா இளைஞர்களுக்கான சிறப்பு சலுகைகளை பெற இந்த ஆவணம் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக தகுதியான நபர்கள் மாதம் ரூ.4,000 வரை பெறக்கூடிய சில உதவித்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும்போது இந்தச் சான்றிதழ் கட்டாயமாக கேட்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முன்னதாக இந்தச் சான்றிதழைப் பெற தாலுகா அலுவலகம் அல்லது இ-சேவை மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால் தற்போது தமிழ்நாடு அரசின் டிஜிட்டல் சேவைகள் மூலம் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பிக்க முடிகிறது. இதனால் பொதுமக்களின் நேரமும் செலவும் பெருமளவில் மிச்சமாகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வேலையில்லா சான்றிதழுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் முதலில் தமிழ்நாடு அரசின் இ-சேவை இணையதளத்தில் தங்களது கணக்கை உருவாக்க வேண்டும். ஏற்கனவே கணக்கு வைத்திருப்பவர்கள் நேரடியாக உள்நுழையலாம். அதன் பின்னர் வருவாய்த் துறை சேவைகள் (Revenue Department Services) பிரிவுக்குச் சென்று &quot;Unemployment Certificate&quot; என்ற சேவையைத் தேர்வு செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;விண்ணப்பத்தில் பெயர், முகவரி, ஆதார் எண், குடும்ப விவரங்கள், கல்வித் தகுதி உள்ளிட்ட தகவல்கள் சரியாக பதிவிடப்பட வேண்டும். இதனுடன் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, முகவரி சான்று, கல்விச் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படம் போன்ற ஆவணங்களின் நகல்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். அனைத்து தகவல்களையும் சரிபார்த்த பிறகு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டதும் ஒரு விண்ணப்ப எண் வழங்கப்படும். அந்த எண்ணைப் பயன்படுத்தி விண்ணப்பத்தின் தற்போதைய நிலையை ஆன்லைனில் அறிந்து கொள்ளலாம். அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்த்து ஒப்புதல் அளித்த பிறகு வேலையில்லா சான்றிதழ் வழங்கப்படும்.&lt;/p&gt;&lt;p&gt;வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்கள் அரசின் பல்வேறு நலத்திட்டங்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள இந்தச் சான்றிதழ் மிகவும் அவசியமானதாகும். குறிப்பாக மாதம் ரூ.4,000 வரை வழங்கப்படும் உதவித்தொகைகளை பெற விரும்புவோர் இந்த ஆவணத்தை உடனடியாக பெற்றுக் கொள்வது நல்லது. ஆன்லைன் வசதி இருப்பதால் எந்த சிரமமும் இல்லாமல் சில நிமிடங்களில் விண்ணப்ப செயல்முறையை முடிக்க முடியும்.&lt;/p&gt;&lt;p&gt;எனவே வேலை தேடி வரும் இளைஞர்கள் மற்றும் பட்டதாரிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வேலையில்லா சான்றிதழுக்கு விண்ணப்பித்து அரசின் நலத்திட்ட பயன்களைப் பெற்றுக் கொள்ளலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>career</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/govt-scheme-rs-4000-financial-assistance-from-the-government-first-get-this-certificate-096vqs6"/>
        </item>
        <item>
            <title><![CDATA[யுபிஎஸ்சி தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு.. தேர்வு ஹாலில் தடை செய்யப்பட்ட பொருட்கள் லிஸ்ட் இதோ]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/career/upsc-warns-candidates-about-strict-exam-hall-guidelines-0erdt33</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/career/upsc-warns-candidates-about-strict-exam-hall-guidelines-0erdt33</guid>
            <pubDate>Mon, 18 May 2026 10:51:56 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;UPSC Exam Rules 2026 : யுபிஎஸ்சி தேர்வு மே 24ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்வு ஹாலில் அனுமதிக்கப்படும் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் குறித்து UPSC முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kgpay6fwp3vpj8swv8tf1w6m,imgname-upsc-cse-2026-attempt-rules-changed-1770276198907.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;UPSC Exam Rules 2026 : யுபிஎஸ்சி தேர்வு மே 24ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்வு ஹாலில் அனுமதிக்கப்படும் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் குறித்து UPSC முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;யுபிஎஸ்சி (UPSC Civil Services Preliminary Examination 2026) வரும் மே 24ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அனுமதி அட்டைகளையும் யுபிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அனைத்து மாணவர்களும் தேர்வு மையத்திற்கு செல்லும் முன் அட்மிட் கார்டு பிரிண்ட்அவுட் எடுத்துச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;மாணவர்கள் கவனிக்க வேண்டியது:&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;அனுமதி அட்டை கட்டாயம்&lt;/p&gt;&lt;p&gt;தேர்வு நேரத்திற்கு முன் வருகை&lt;/p&gt;&lt;p&gt;விதிமுறைகளை முன்கூட்டியே படிக்க வேண்டும்&lt;/p&gt;&lt;p&gt;தேர்வு ஹாலில் அனுமதிக்கப்படும் பொருட்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;யுபிஎஸ்சி தெளிவாக சில பொருட்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எளிய கிளிப்போர்டு அல்லது ஹார்ட்போர்டு, பிளாக் பால்பாயிண்ட் பேனா போன்றவற்றை மட்டும் எடுத்துச் செல்லலாம். ரஃப் ஷீட் தேர்வு மையத்திலேயே வழங்கப்படும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;அனுமதிக்கப்படும் பொருட்கள்:&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;கருப்பு பால் பாயிண்ட் பேனா&lt;/p&gt;&lt;p&gt;எளிய கிளிப்போர்டு&lt;/p&gt;&lt;p&gt;அட்மிட் கார்டு&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;தடை செய்யப்பட்ட பொருட்கள் என்ன?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;மொபைல் போன், புளூடூத், கால்குலேட்டர், புத்தகங்கள், குறிப்புகள், ஸ்மார்ட் சாதனங்கள் போன்றவை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளன. இந்த விதிகளை மீறும் மாணவர்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என யுபிஎஸ்சி எச்சரித்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;தடை செய்யப்பட்டவை:&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;மொபைல் போன்&lt;/li&gt; &lt;li&gt;புளூடூத் சாதனங்கள்&lt;/li&gt; &lt;li&gt;கால்குலேட்டர்&lt;/li&gt; &lt;li&gt;எழுதப்பட்ட குறிப்புகள்&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;&lt;strong&gt;நெகட்டிவ் மார்க்கிங் விதி எப்படி?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;பொது அறிவு (General Studies) பேப்பரில் மொத்தம் 100 கேள்விகள் இடம்பெறும். ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 0.33 மதிப்பெண்கள் குறைக்கப்படும். ஒரே கேள்விக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பதில்களைக் குறித்தாலும் அது தவறான பதிலாகக் கருதப்படும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;மாணவர்களுக்கு யுபிஎஸ்சி கொடுத்த முக்கிய அறிவுரை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;மாணவர்கள் பதட்டமின்றி அமைதியாக தேர்வுக்கு தயாராக வேண்டும் என்று யுபிஎஸ்சி அறிவுறுத்தியுள்ளது. சரியான திட்டமிடல், நம்பிக்கை மற்றும் விதிமுறைகளை பின்பற்றுவது வெற்றிக்கு முக்கியம் என கல்வி நிபுணர்கள் கூறுகின்றனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>career</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/career/upsc-warns-candidates-about-strict-exam-hall-guidelines-0erdt33"/>
        </item>
        <item>
            <title><![CDATA[10ம் வகுப்பு படித்தவர்களுக்கு பெரிய வாய்ப்பு.. இந்திய ராணுவத்தில் வேலைகள்! எப்படி அப்ளை பண்ணலாம்?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/career/indian-army-civilian-jobs-2026-10th-pass-can-apply-articleshow-19a39c1</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/career/indian-army-civilian-jobs-2026-10th-pass-can-apply-articleshow-19a39c1</guid>
            <pubDate>Sun, 03 May 2026 13:47:47 +0530</pubDate>
            <description><![CDATA[இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு அமைச்சகம், 190 CSBO (Civilian Switch Board Operator) கிரேடு-II பணியிடங்களுக்கு ஆள்சேர்ப்பு அறிவித்துள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் PBX அனுபவம் உள்ள தகுதியானவர்கள், மே 31, 2026-க்குள் இ-மெயில் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்வு முறையானது எழுத்துத் தேர்வு மற்றும் நடைமுறைத் தேர்வை உள்ளடக்கியது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kqpedmkp2b4hryvxkyd410n6,imgname-tamil-news--6--1777796043382.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;இந்திய ராணுவத்தில் சிவிலியன் பணியில் சேர விரும்புவோருக்கு முக்கிய வாய்ப்பு வெளியாகியுள்ளது. இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அமைப்பு, CSBO (Civilian Switch Board Operator) கிரேடு-II பணியிடங்களுக்கு ஆள்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை கோவா மாநிலம் பனாஜியில் உள்ள 2 சிக்னல் பயிற்சி மையம் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள தகுதியானவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;&lt;p&gt;இந்த ஆள்சேர்ப்பின் மூலம் மொத்தம் 190 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அவற்றின் பிரிவு விவரம்:&lt;/p&gt;&lt;p&gt;- பொதுப் பிரிவு (UR): 94&lt;/p&gt;&lt;p&gt;- பட்டியலினத்தவர் (SC): 22&lt;/p&gt;&lt;p&gt;- பழங்குடியினர் (ST): 12&lt;/p&gt;&lt;p&gt;-இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC): 43&lt;/p&gt;&lt;p&gt;- பொருளாதாரத்தில் பின்தங்கியோர் (EWS): 19&lt;/p&gt;&lt;p&gt;- மாற்றுத்திறனாளிகள்: 12&lt;/p&gt;&lt;p&gt;- முன்னாள் ராணுவத்தினர்: 20&lt;/p&gt;&lt;p&gt;விண்ணப்ப செயல்முறை மே 2, 2026 முதல் தொடங்கியுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி மே 31, 2026. விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் மட்டும், குறிப்பாக இ-மெயில் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். முதலில் இந்திய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, அதை முறையாக நிரப்ப வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;தகுதி குறித்து பார்க்கும்போது:&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;- குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு (மெட்ரிகுலேஷன்) தேர்ச்சி&lt;/p&gt;&lt;p&gt;- PBX (Telephone Switchboard) இயக்கத்தில் குறைந்தது 6 மாத அனுபவம்&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இந்த வேலைக்கு தேர்வு முறை இரு கட்டங்களாக இருக்கும்:&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;- எழுத்துத் தேர்வு (100 மதிப்பெண்கள்)&lt;/p&gt;&lt;p&gt;- பொது அறிவு&lt;/p&gt;&lt;p&gt;- நுண்ணறிவு&lt;/p&gt;&lt;p&gt;- கணித திறன்&lt;/p&gt;&lt;p&gt;- ஆங்கிலம் மற்றும் காரணம்&lt;/p&gt;&lt;p&gt;- பின்னர்: நடைமுறைத் தேர்வு + நேர்காணல் (தகுதி மட்டும்)&lt;/p&gt;&lt;p&gt;எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் இறுதித் தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;விண்ணப்பிக்கும் போது கவனிக்க வேண்டியவை:&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் (PDF)&lt;/p&gt;&lt;p&gt;- ஆதார் அட்டை&lt;/p&gt;&lt;p&gt;- 10ஆம் வகுப்பு சான்றிதழ்&lt;/p&gt;&lt;p&gt;- PBX அனுபவச் சான்று&lt;/p&gt;&lt;p&gt;- பிற தேவையான ஆவணங்கள்&lt;/p&gt;&lt;p&gt;இவை அனைத்தையும் இணைத்து [sunshine.rise@nic.in](mailto:sunshine.rise@nic.in) என்ற இ-மெயிலுக்கு அனுப்ப வேண்டும். பொருள்-ல் &ldquo;CSBO விண்ணப்பம் &ndash; உங்கள் பெயர்&rdquo; என்று குறிப்பிட வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;முழுமையற்ற அல்லது கடைசி தேதிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். எனவே, விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கவனமாக படித்து, அனைத்து பொருட்களையும் தயார் செய்து சரியான முறையில் ஆவணங்களை அனுப்புவது அவசியம். மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தை சரிபாருங்கள்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>career</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/career/indian-army-civilian-jobs-2026-10th-pass-can-apply-articleshow-19a39c1"/>
        </item>
        <item>
            <title><![CDATA[10ம் வகுப்பு போதும்.. ரூ.69,100 வரை சம்பளம்.. மத்திய அரசில் காத்திருக்கும் 9,195 கான்ஸ்டபிள் வேலைகள்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/career/crpf-recruitment-2026-9195-constable-posts-apply-online-bizux2s</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/career/crpf-recruitment-2026-9195-constable-posts-apply-online-bizux2s</guid>
            <pubDate>Sat, 25 Apr 2026 17:17:03 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) கான்ஸ்டபிள் டிரேட்ஸ்மேன் மற்றும் டெக்னிக்கல் பிரிவுகளில் 9,195 காலியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த மத்திய அரசு வேலைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kq27273e0f31bd79cwa1ws4t,imgname-tamil-news---2026-04-25t170953.834-1777117240430.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) கான்ஸ்டபிள் டிரேட்ஸ்மேன் மற்றும் டெக்னிக்கல் பிரிவுகளில் 9,195 காலியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த மத்திய அரசு வேலைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வேலை வாய்ப்பை எதிர்நோக்கும் இளைஞர்களுக்கு மத்திய அரசில் ஒரு முக்கிய வாய்ப்பு திறக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கே விண்ணப்பிக்க இயலும் வகையில், மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு பெரிய அளவில் ஆட்சேர்ப்பு தெரிவித்துள்ளது. மொத்தம் 9,195 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால், குறைந்த தகுதியில் அரசு வேலை தேடுபவர்களுக்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, கான்ஸ்டபிள் டிரெட்ஸ்மேன் மற்றும் டெக்னிக்கல் பிரிவுகளில் பெரும்பாலான இடங்கள் உள்ளன. அதோடு, பியூனியர் விங் பிரிவிலும் சில பணியிடங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தப் பதவிகள் நாட்டின் பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு சட்ட ஒழுங்குப் பணிகளில் முக்கிய பங்கேற்பதால், தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு நிலையான அரசு சேவையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைன் மூலம் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். CRPF-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் &lsquo;கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்பு 2026&rsquo; இணைப்பைத் திறந்து, புதிய பயனராகப் பதிவு செய்து விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டும். தேவையான ஆவணங்களை பதிவேற்றி, விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்திய பின் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். விண்ணப்ப செயல்முறை ஏப்ரல் 20 முதல், மே 19 வரை நடைபெறும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சம்பளத்தைப் பொருத்தவரை, தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு Pay Level 3 அடிப்படையில் ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை மாத சம்பளம் வழங்கப்படும். இதனுடன் பல்வேறு அலவன்ஸ் மற்றும் அரசு சலுகைகளும் கிடைக்கும். எனவே, நீண்டகால நிதி பாதுகாப்பை விரும்புவோருக்கு இது ஒரு உறுதியான வேலை வாய்ப்பாக அமையும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தேர்வு நடைமுறை பல கட்டங்களாக இருக்கும். முதலில் கணினி அடிப்படையிலான தேர்வு நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு டிரேடு தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்தகுதி பரிசோதனை மற்றும் நேர்காணல் நடைபெறும். அனைத்து கட்டங்களையும் வெற்றிகரமாக முடித்தவர்கள் இறுதியாக பணியில் சேர்க்கப்படுவார்கள். ஆர்வமுள்ளவர்கள் காலதாமதம் செய்யாமல் விண்ணப்பிக்க தயாராக இருப்பது நல்லது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>career</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/career/crpf-recruitment-2026-9195-constable-posts-apply-online-bizux2s"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Vastu Tips: உங்கள் குழந்தை படிப்பில் கவனம் செலுத்தவில்லையா? இந்த பொருட்களை முதல்ல அப்புறப்படுத்துங்க]]></title>
            <link>https://tamil.asianetnews.com/life-style/vastu-for-students-how-to-improve-focus-by-decluttering-your-study-room-articleshow-d505chd</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/life-style/vastu-for-students-how-to-improve-focus-by-decluttering-your-study-room-articleshow-d505chd</guid>
            <pubDate>Sat, 16 May 2026 18:05:39 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;மாணவர்களுக்கான வாஸ்து குறிப்புகள்: படிக்கும் அறை வீட்டின் மிக முக்கியமான பகுதியாகும், எனவே இங்கு கவனம் செலுத்துவது அவசியம். இந்தப் பகுதியில் வாஸ்து குறைபாடுகள் இருந்தால், மாணவர்கள் தங்கள் படிப்பில் ஆர்வத்தை இழக்கக்கூடும். இங்குள்ள சில பொருட்கள் எதிர்மறை ஆற்றலைப் பரப்புவதால், அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01krrc9vehv01f79hqrb1xge9g,imgname-vastu-tips-1778934672849.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;படிக்கும் அறைக்கான குறிப்புகள்: மாணவர்கள் பெரும்பாலும் தங்கள் வசதிக்கேற்ப படிக்கும் அறைகளையோ அல்லது படிக்கும் இடங்களையோ அலங்கரிக்கிறார்கள், ஆனால் சில சமயங்களில் அவர்கள் அறியாமலேயே, வாஸ்து சாஸ்திரத்தின்படி எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கக்கூடிய பொருட்களை அங்கே வைத்துவிடுகிறார்கள். இது படிப்பில் ஆர்வமின்மை, அடிக்கடி கவனச்சிதறல்கள், அதிகரித்த மன அழுத்தம் மற்றும் தொழில் முன்னேற்றத்தில் மந்தநிலை ஆகியவற்றை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. உங்கள் படிப்பில் கவனம் செலுத்த விரும்பினால், உங்கள் படிக்கும் அறையில் உள்ள இந்தப் பொருட்களில் கவனம் செலுத்துங்கள். இந்தப் பொருட்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்&hellip;&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;உடைந்த படிப்பு மேசை அல்லது நாற்காலி&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;உங்கள் படிக்கும் மேசை அல்லது நாற்காலி உடைந்திருந்தால், அதை உடனடியாக மாற்றிவிடுங்கள். வாஸ்து சாஸ்திரத்தில், உடைந்த பொருட்கள் எதிர்மறை ஆற்றலின் ஆதாரமாகக் கருதப்படுகின்றன. இந்த எதிர்மறை ஆற்றல் ஒருமுகத்தன்மையைத் தடுக்கக்கூடும். அத்தகைய பொருட்களைத் தவறுதலாகக் கூட படிக்கும் அறையில் வைத்திருக்கக் கூடாது.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;சிதறிய புத்தகங்களும் மங்கலான வெளிச்சமும்&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;மேசை முழுவதும் சிதறிக் கிடக்கும் புத்தகங்கள், பழைய குறிப்புகள் மற்றும் ஒழுங்கற்ற பொருட்கள் கவனத்தைச் சிதறடிக்கக்கூடும். சுத்தமான மற்றும் ஒழுங்கான படிக்கும் இடம், படிப்பதற்கு உதவியாக இருக்கும். மங்கலான ஒளியில் படிப்பது உங்கள் கண்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தி, உங்களை விரைவாகச் சோர்வடையச் செய்யும். உங்கள் படிக்கும் அறை நல்ல வெளிச்சத்துடனும் காற்றோட்டத்துடனும் இருப்பதை உறுதி செய்யுங்கள்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;குறைபாடுள்ள மின்னணு சாதனங்கள்&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;பழைய ஹெட்ஃபோன்கள், பழுதடைந்த மடிக்கணினிகள், உடைந்த சார்ஜர்கள் அல்லது பயனற்ற சாதனங்களை உங்கள் படிக்கும் அறையில் குவித்து வைக்காதீர்கள். இவை அறையைச் ஒழுங்கீனமாக்குகின்றன. உங்கள் படிக்கும் அறையில் நின்ற கடிகாரத்தை வைத்திருப்பது அசுபமாகக் கருதப்படுகிறது. இது வேலையைத் தடுக்கும் என்று நம்பப்படுகிறது. இந்தப் பொருட்களை உடனடியாக அகற்றிவிடுங்கள்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;படுக்கையில் அமர்ந்துகொண்டு படிக்காதீர்கள்&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;படுக்கையில் அமர்ந்து படிப்பது உங்கள் கவனத்தை சிதறடித்து, சோம்பலை அதிகரிக்கும். தனியாக ஒரு படிப்பு மேசையைப் பயன்படுத்துவதே சிறந்தது. படுக்கை தூங்குவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும், ஏனெனில் அது தூக்க தேவதையின் இருப்பிடமாகக் கருதப்படுகிறது.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;படிக்கும் அறையில் எவ்வகையான படங்களை வைக்க வேண்டும்?&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;ஊக்கமளிக்கும் புகைப்படங்கள், இயற்கைக் காட்சிகள் அல்லது வெற்றியை உணர்த்தும் படங்களை படிக்கும் அறையில் வைக்கலாம். இருப்பினும், வன்முறை, சோகம் அல்லது எதிர்மறை உணர்வுகளைச் சித்தரிக்கும் படங்களைத் தவிர்க்க வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பொறுப்புத் துறப்பு:&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் சமய நூல்கள், அறிஞர்கள் மற்றும் ஜோதிடர்களிடமிருந்து பெறப்பட்டவை. நாங்கள் இந்தத் தகவல்களை உங்களுக்கு வழங்குவதற்கான ஒரு ஊடகம் மட்டுமே. பயனர்கள் இந்தத் தகவல்களைத் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>career</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/life-style/vastu-for-students-how-to-improve-focus-by-decluttering-your-study-room-articleshow-d505chd"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Internship Apply : DRDO-வில் இன்டர்ன்ஷிப்.. மாணவர்களுக்கு ரூ.30,000 உதவித்தொகை!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/career/drdo-internship-2026-offers-rs-30000-stipend-for-students-ecg7yrg</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/career/drdo-internship-2026-offers-rs-30000-stipend-for-students-ecg7yrg</guid>
            <pubDate>Sun, 17 May 2026 11:12:15 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;DRDO Internship 2026 : பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் DRDO, மாணவர்களுக்காக புதிய இன்டர்ன்ஷிப் வாய்ப்பை அறிவித்துள்ளது. தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ரூ.30,000 வரை உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01krt6wagpsn4nwqqc44f1bg6f,imgname-tamil-news--77--1778996095509.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;DRDO Internship 2026 : பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் DRDO, மாணவர்களுக்காக புதிய இன்டர்ன்ஷிப் வாய்ப்பை அறிவித்துள்ளது. தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ரூ.30,000 வரை உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்றைய போட்டி உலகில் வெறும் டிகிரி மட்டும் போதுமானதாக இல்லை. நிறுவனங்கள் அனுபவமும் திறமையும் கொண்ட இளைஞர்களை தேடுகின்றன. இந்த சூழலில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் டிஆர்டிஓ மாணவர்களுக்காக முக்கியமான இன்டர்ன்ஷிப் வாய்ப்பை அறிவித்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;எந்த பிரிவினர் விண்ணப்பிக்கலாம்?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;பெங்களூருவில் செயல்படும் டிஆர்டிஓ-வின் DEBEL ஆய்வகத்தில் இந்த இன்டர்ன்ஷிப் நடைபெறுகிறது. UGC அல்லது AICTE அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் பொறியியல் அல்லது அறிவியல் பிரிவில் படிக்கும் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;முக்கிய தகுதிகள்:&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;பொறியியல் / அறிவியல் மாணவர்கள் மட்டும்&lt;/li&gt; &lt;li&gt;அங்கீகாரம் பெற்ற கல்லூரி அவசியம்&lt;/li&gt; &lt;li&gt;முழுமையான விண்ணப்பம் கட்டாயம்&lt;/li&gt; &lt;li&gt;மெரிட் அடிப்படையில் தேர்வு&lt;/li&gt; &lt;li&gt;ரூ.30,000 வரை உதவித்தொகை.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;&lt;strong&gt;ரூ.16,999க்கு OnePlus Pad.. iPad முதல் Xiaomi Pad வரை செம்ம ஆஃபர்.. அதிரடி விலை குறைப்பு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த இன்டர்ன்ஷிப் சுமார் 6 மாதங்கள் நடைபெறும். தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மொத்தம் ரூ.30,000 உதவித்தொகை வழங்கப்படும். முதல் 3 மாதங்கள் முடிந்தது ரூ.15,000 மற்றும் இறுதியில் மற்ற தொகை வழங்கப்படும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;மாணவர்களுக்கு கிடைக்கும் பலன்கள்:&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;நடைமுறை பயிற்சி&lt;/li&gt; &lt;li&gt;ஆராய்ச்சி அனுபவம்&lt;/li&gt; &lt;li&gt;டிஆர்டிஓ வெளிப்பாடு&lt;/li&gt; &lt;li&gt;தொழில் வளர்ச்சி வாய்ப்பு&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;&lt;strong&gt;விண்ணப்பிக்கும் முறை என்ன?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்த இன்டர்ன்ஷிப்பிற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாது. விண்ணப்பப் படிவத்தை பிரிண்ட் எடுத்து தேவையான விவரங்களை நிரப்பி, மார்க் ஷீட் மற்றும் கல்லூரி அனுமதி கடிதத்துடன் அனுப்ப வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;அனுப்ப வேண்டிய முகவரி:&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இயக்குனர், DEBEL, டிஆர்டிஓ, ADE வளாகம், புதிய திப்பசந்திரா, பெங்களூரு - 560075&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;முக்கிய தேதிகள்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 31, 2026&lt;/li&gt; &lt;li&gt;தேர்வு தகவல் வெளியீடு: ஜூன் 18, 2026&lt;/li&gt; &lt;li&gt;இன்டர்ன்ஷிப் தொடக்கம்: ஜூலை 1, 2026&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;எழுத்துத் தேர்வு எதுவும் நடத்தப்படாது என்பது மாணவர்களுக்கு கூடுதல் பலனாக பார்க்கப்படுகிறது. ஆராய்ச்சி துறையில் எதிர்காலத்தை உருவாக்க நினைக்கும் மாணவர்களுக்கு இது முக்கிய வாய்ப்பாக அமைந்துள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>career</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/career/drdo-internship-2026-offers-rs-30000-stipend-for-students-ecg7yrg"/>
        </item>
        <item>
            <title><![CDATA[TET Exam: ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்.. டெட் தேர்வு தேவையில்லை.. தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/career/good-news-for-teachers-no-need-for-tet-exam-tamil-nadu-government-issues-major-order-fapsvge</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/career/good-news-for-teachers-no-need-for-tet-exam-tamil-nadu-government-issues-major-order-fapsvge</guid>
            <pubDate>Mon, 08 Jun 2026 11:25:08 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தமிழக அரசின் புதிய அரசிதழ் அறிவிப்பு ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி, உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுகளுக்கு டெட் தேர்வு கட்டாயமில்லை என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktjvmmgzg0abqcfhseb93p1e,imgname-chatgpt-image-jun-8--2026--11-03-38-am--1--1780896911902.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழக அரசின் புதிய அரசிதழ் அறிவிப்பு ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி, உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுகளுக்கு டெட் தேர்வு கட்டாயமில்லை என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய அரசிதழ் அறிவிப்பு, பதவி உயர்வுக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கு சேர விரும்புபவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) கட்டாயமாக உள்ளது. இந்த தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்தி வருகிறது. 1 முதல் 5-ம் வகுப்பு வரை கற்பிக்க விரும்புவோருக்கு தாள்-1 மற்றும் 6 முதல் 8-ம் வகுப்பு வரை கற்பிக்க விரும்புவோருக்கு தாள்-2 என இரண்டு பிரிவுகளாக இந்த தேர்வு நடத்தப்படுகிறது. ஆசிரியர் பணியில் நியமனம் பெறுவதற்கான முக்கிய தகுதிகளில் ஒன்றாக டெட் தேர்வு கருதப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கடந்த ஆண்டு டெட் தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியது. அதன்படி, ஆசிரியர் பணியில் தொடரவும், பதவி உயர்வு பெறவும் டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம் என கூறப்பட்டது.&lt;/p&gt;&lt;p&gt;மேலும், இரண்டு ஆண்டுகளுக்குள் டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் விருப்ப ஓய்வு பெறலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. இதனால் மாநிலம் முழுவதும் பல ஆசிரியர்கள் கவலை அடைந்தனர்.&lt;/p&gt;&lt;p&gt;அதே நேரத்தில், ஓய்வு பெற இன்னும் 5 ஆண்டுகள் மட்டுமே உள்ள ஆசிரியர்களுக்கு டெட் தேர்வில் இருந்து விலக்கு வழங்கப்பட்டது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உச்ச நீதிமன்ற உத்தரவின் காரணமாக சுமார் 1.75 லட்சம் ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறப்பு டெட் தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. முதல் கட்ட சிறப்பு டெட் தேர்வு ஜூலை 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த சூழ்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய அரசிதழ் ஆசிரியர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அரசிதழில் இடம்பெற்றுள்ள தகவலின்படி, உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் (High School Headmaster) பதவி உயர்வுக்கும், முதுகலை ஆசிரியர் (PG Assistant) பதவி உயர்வுக்கும் டெட் தேர்வு அவசியம் என எந்தக் குறிப்பும் இடம்பெறவில்லை. இதனால் இந்த இரண்டு பதவி உயர்வுகளுக்கும் டெட் தேர்வு கட்டாயமில்லை என்ற விளக்கம் ஆசிரியர் வட்டாரங்களில் உருவாகியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதே நேரத்தில், PSHM, MSHM மற்றும் பட்டதாரி ஆசிரியர் (Graduate Teacher) பதவி உயர்வுகளுக்கு டெட் தேர்ச்சி அவசியம் என அரசிதழில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அனைத்து பதவி உயர்வுகளுக்கும் ஒரே விதிமுறை இல்லை என்பது தற்போது தெளிவாகியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;மேலும் ஒரு முக்கிய அறிவிப்பு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;பள்ளிக்கல்வித்துறையில் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும் போது, 18 சதவீத இடங்கள் தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் தகுதியான பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நீண்ட காலமாக பதவி உயர்வுக்காக காத்திருந்த பல ஆசிரியர்களுக்கு இந்த அறிவிப்பு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வை எதிர்நோக்கியிருந்த ஆசிரியர்கள் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளனர். தமிழக அரசின் இந்த புதிய உத்தரவு, டெட் தேர்வு தொடர்பான குழப்பங்களுக்கு ஓரளவு தீர்வு அளித்துள்ளதுடன், ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் பதவி உயர்வு பாதையை எளிதாக்கும் நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>career</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/career/good-news-for-teachers-no-need-for-tet-exam-tamil-nadu-government-issues-major-order-fapsvge"/>
        </item>
        <item>
            <title><![CDATA[மாதம் ரூ.14,500 உதவித்தொகையுடன் பி.இ படிக்கலாம்.. அண்ணா பல்கலைக்கழகத்தின் சூப்பர் வாய்ப்பு]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/career/anna-university-be-admission-2026-14500-stipend-details-fhgq0m5</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/career/anna-university-be-admission-2026-14500-stipend-details-fhgq0m5</guid>
            <pubDate>Sun, 26 Apr 2026 09:30:23 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;அண்ணா பல்கலைக்கழகம் (anna university), தொழில்பயிற்சியுடன் கூடிய பி.இ படிப்பை வழங்குகிறது. தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு மாதம் ரூ.14,500 உதவித்தொகையுடன், கல்விக்கட்டணம், விடுதி உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் நிறுவனமே ஏற்கும்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kq3yqj9emq5jbr8rk1zpwe9c,imgname-tamil-news---2026-04-26t092259.559-1777175611694.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;அண்ணா பல்கலைக்கழகம் (anna university), தொழில்பயிற்சியுடன் கூடிய பி.இ படிப்பை வழங்குகிறது. தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு மாதம் ரூ.14,500 உதவித்தொகையுடன், கல்விக்கட்டணம், விடுதி உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் நிறுவனமே ஏற்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அண்ணா பல்கலைக்கழகம் 2026&ndash;27 கல்வியாண்டிற்கான ஒரு முக்கியமான வாய்ப்பை பொறியியல் டிப்ளமா முடித்த மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்பயிற்சியுடன் இணைந்த பி.இ. படிப்புகளை தேர்வு செய்யும் மாணவர்களுக்கு மாதம் ரூ.14,500 உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி பயிலும் காலத்திலேயே வருமான ஆதாரம் கிடைக்கும் இந்த திட்டம், தொழில்நுட்ப கல்வியை நாடும் மாணவர்களுக்கு குறிப்பிடத்தக்க ஆதரவாக பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த திட்டம் காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. எச்எல் மண்டோ ஆனந்த் இந்தியா முழுமையான நிறுவனம் ஆதரவுடன் இந்த படிப்புகள் நடத்தப்படுகின்றன. பி.இ எலக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங், பி.இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் ஆகிய இரு முக்கிய பிரிவுகளில் சேர்க்கை நடைபெற உள்ளது. நான்கு ஆண்டுகள் கொண்ட இந்த படிப்புகள் தொழில்நுட்ப அறிவுடன் கூடிய பயிற்சியையும் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. சேர்க்கைக்கான தகுதியில், டிப்ளமா படிப்பில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் அவசியமாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், ஈசிஐ, இன்ஸ்ட்ரூமென்டேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐடி, மெக்கானிக்கல் போன்ற பிரிவுகளில் டிப்ளமா முடித்தவர்கள் EEE பிரிவிற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், புரொடக்ஷன், மெட்டலர்ஜி உள்ளிட்ட துறைகளில் டிப்ளமா முடித்தவர்கள் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிப்பிற்கு தகுதி பெறுகின்றனர். மாணவர் சேர்க்கை முழுவதும் டிப்ளமா மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும். இந்த திட்டத்தின் சிறப்பம்சமாக, மாணவர்களின் கல்விக்கட்டணம், விடுதி வசதி, உணவு, போக்குவரத்து மற்றும் மருத்துவ காப்பீடு உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் நிறுவனமே ஏற்றுக்கொள்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதனால், பொருளாதார சுமையின்றி உயர் கல்வியைத் தொடரும் வாய்ப்பு மாணவர்களுக்குக் கிடைக்கிறது. மேலும், படிக்கும் காலத்திலேயே தொழில் அனுபவம் கிடைப்பது, வேலைவாய்ப்பில் முன்னிலை பெற உதவும். இந்த படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியாக பெறப்படுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் 60 இடங்கள் மட்டுமே உள்ளதால், போட்டி நிலை அதிகமாக இருக்கும். 2023&ndash;24, 2024&ndash;25 மற்றும் 2025&ndash;26 கல்வியாண்டுகளில் டிப்ளமா முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் ஜூன் 30க்குள் பதிவு செய்ய வேண்டும். விரிவான தகவல்களை அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>career</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/career/anna-university-be-admission-2026-14500-stipend-details-fhgq0m5"/>
        </item>
        <item>
            <title><![CDATA[JOB VACANCY: 12th முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.35,400 சம்பளத்தில் அரசு வேலை.! மிஸ் பண்ணாதீங்க!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/career/job-vacancy-great-opportunity-for-12th-pass-candidates-government-job-with-rs-35400-salary-do-not-miss-out-h4gxxfv</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/career/job-vacancy-great-opportunity-for-12th-pass-candidates-government-job-with-rs-35400-salary-do-not-miss-out-h4gxxfv</guid>
            <pubDate>Sat, 25 Apr 2026 08:59:34 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Staff Selection Commission (SSC) 2026 ஆம் ஆண்டிற்கான 731 ஸ்டெனோகிராபர் Grade &lsquo;C&rsquo; &amp;amp; &lsquo;D&rsquo; காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த மத்திய அரசு வேலைக்கு ஏப்ரல் 24 முதல் மே 15, 2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kq17pbs61425msw2t8xyhqs5,imgname-gemini-generated-image-k826ltk826ltk826--1--1777084346150.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Staff Selection Commission (SSC) 2026 ஆம் ஆண்டிற்கான 731 ஸ்டெனோகிராபர் Grade &lsquo;C&rsquo; &amp;amp; &lsquo;D&rsquo; காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த மத்திய அரசு வேலைக்கு ஏப்ரல் 24 முதல் மே 15, 2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;Staff Selection Commission (SSC) நிறுவனம் 2026 ஆம் ஆண்டிற்கான ஸ்டெனோகிராபர் Grade &lsquo;C&rsquo; மற்றும் Grade &lsquo;D&rsquo; பணியிடங்களுக்கான புதிய ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 731 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள இந்த வேலை வாய்ப்பு, 12ஆம் வகுப்பு முடித்த இளைஞர்களுக்கு மத்திய அரசு துறையில் சேர ஒரு சிறந்த சந்தர்ப்பமாக இருக்கிறது. இந்தியா முழுவதும் பணியிடங்கள் உள்ளதால், நிலையான வேலை மற்றும் நல்ல வருமானம் தேடும் நபர்களுக்கு இது மிகுந்த பயன் தரக்கூடியதாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த அறிவிப்பின் மூலம் Stenographer Grade &lsquo;C&rsquo; (Group B) மற்றும் Grade &lsquo;D&rsquo; (Group C) பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. ஆன்லைன் விண்ணப்ப பதிவு 24 ஏப்ரல் 2026 முதல் தொடங்கி 15 மே 2026 வரை நடைபெறும். விண்ணப்பிக்க விரும்பும் அனைவரும் இந்த காலக்கெடுவுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;கல்வித் தகுதி&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்த பணிக்கான அடிப்படை தகுதியாக, விண்ணப்பதாரர்கள் 12ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து இந்த தகுதி பெற்றிருந்தால் போதுமானது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;Grade &lsquo;C&rsquo; பதவிக்கு 18 முதல் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம். Grade &lsquo;D&rsquo; பதவிக்கு 18 முதல் 27 வயது வரை வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு விதிமுறைகளின்படி SC, ST, OBC மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வயது தளர்வு வழங்கப்படும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சம்பளம் மற்றும் சலுகைகள்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஆரம்ப சம்பளமாக ₹35,400 வழங்கப்படும். இதற்கு மேலாக, மத்திய அரசு ஊழியர்களுக்கான DA, HRA போன்ற கூடுதல் சலுகைகளும் கிடைக்கும். இதனால் இந்த வேலை பொருளாதார ரீதியாக பாதுகாப்பானதாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;SSC இந்த ஆட்சேர்ப்பை இரண்டு கட்டங்களாக நடத்துகிறது. முதலில் Computer Based Examination (CBT) நடைபெறும். அதில் தேர்ச்சி பெறுபவர்கள் Stenography Skill Testக்கு அழைக்கப்படுவார்கள். இறுதியாக இரு கட்டங்களிலும் வெற்றி பெறுபவர்களே தேர்வு செய்யப்படுவார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;தேர்வு வடிவம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்த தேர்வில் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். General Intelligence, General Awareness மற்றும் English Language ஆகிய பகுதிகளில் கேள்விகள் இடம்பெறும். ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 0.25 மதிப்பெண் குறைக்கப்படும் என்பதால் கவனமாக பதிலளிக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், கிருஷ்ணகிரி, தேனி மற்றும் புதுச்சேரி ஆகிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன. இதனால் தமிழக மாணவர்களுக்கு அருகிலேயே தேர்வு எழுத வசதி உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;விண்ணப்பக் கட்டணம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;பெண்கள், SC/ST, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. மற்ற விண்ணப்பதாரர்கள் ₹100 கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணம் ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விண்ணப்பதாரர்கள் SSC அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது அனைத்து விவரங்களையும் சரியாக உள்ளிடுவது முக்கியம். கடைசி தேதிக்குப் பிறகு மாற்றங்கள் செய்ய முடியாது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;முக்கிய தேதிகள்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;விண்ணப்ப பதிவு 24.04.2026 அன்று தொடங்கி 15.05.2026 அன்று முடிவடைகிறது. கட்டணம் செலுத்த 16.05.2026 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்ப திருத்தம் 20.05.2026 முதல் 21.05.2026 வரை செய்யலாம். தேர்வு ஜூலை &ndash; ஆகஸ்ட் 2026 காலத்தில் நடைபெறும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;SSC Stenographer வேலை வாய்ப்பு என்பது 12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மிகச்சிறந்த மத்திய அரசு வேலை வாய்ப்பாகும். நல்ல சம்பளம், நிலையான வேலை மற்றும் வளர்ச்சி வாய்ப்புகள் இருப்பதால் போட்டி அதிகமாக இருக்கும். எனவே தாமதிக்காமல் உடனே விண்ணப்பித்து, தேர்வுக்கான தயாரிப்பை ஆரம்பிப்பது வெற்றிக்கான முதல் படியாக இருக்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>career</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/career/job-vacancy-great-opportunity-for-12th-pass-candidates-government-job-with-rs-35400-salary-do-not-miss-out-h4gxxfv"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Railway Jobs : ரயில்வேயில் 11,127 வேலை வாய்ப்புகள்.. அரசு வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி.. முழு விபரம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/career/railway-jobs-2026-11127-assistant-loco-pilot-posts-to-be-filled-soon-h69sb0k</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/career/railway-jobs-2026-11127-assistant-loco-pilot-posts-to-be-filled-soon-h69sb0k</guid>
            <pubDate>Tue, 12 May 2026 15:16:57 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம், அசிஸ்டண்ட் லோகோ பைலட் (ALP) பதவிக்கு 11,127 காலிப்பணியிடங்களை நிரப்ப ஒரு பெரிய ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஐடிஐ, டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு இது ஒரு முக்கிய வாய்ப்பாகும்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kqct7mpyyfbrsbp62p0hmtj1,imgname-indian-railways-1777472885470.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம், அசிஸ்டண்ட் லோகோ பைலட் (ALP) பதவிக்கு 11,127 காலிப்பணியிடங்களை நிரப்ப ஒரு பெரிய ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஐடிஐ, டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு இது ஒரு முக்கிய வாய்ப்பாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்திய ரயில்வேயில் வேலை கிடைக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் சார்பில் அசிஸ்டண்ட் லோகோ பைலட் (ஏஎல்பி) பணியிடங்களுக்கு மிகப்பெரிய ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 11,127 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, நாடு முழுவதும் ரயில்வே தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களிடையே அதிக உற்சாகம் உருவாகியுள்ளது. குறிப்பாக அரசு வேலைக்காக முயற்சி செய்து வரும் டிப்ளமோ, ஐடிஐ மற்றும் இன்ஜினியரிங் மாணவர்களுக்கு இது முக்கிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதிகாரப்பூர்வ தகவலின்படி, இந்த பணிகளுக்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 15 முதல் தொடங்குகிறது. விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் காலக்கெடுவுக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜூன் 14 வரை விண்ணப்பிக்க வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரயில்வே துறையில் நிரந்தர வேலை, நல்ல சம்பளம் மற்றும் எதிர்கால வளர்ச்சி வாய்ப்பு இருப்பதால் இந்த ஆட்சேர்ப்புக்கு கடும் போட்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கல்வித் தகுதியைப் பொறுத்தவரை, அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு ஐடிஐ முடித்திருக்க வேண்டும். குறிப்பாக ஃபிட்டர், எலக்ட்ரீஷியன், மெக்கானிக் போன்ற தொழில்நுட்ப பிரிவுகளில் ஐடிஐ படித்தவர்களுக்கு முன்னுரிமை கிடைக்கும். மேலும் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் போன்ற பிரிவுகளில் டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். வயது வரம்பு 18 முதல் 30 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு விதிகளின்படி SC, ST மற்றும் OBC பிரிவினருக்கு வயது தளர்வு வழங்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உதவி லோகோ பைலட் தேர்வு முறை பல கட்டங்களாக நடைபெறும். முதலில் CBT-1 என்ற கணினி அடிப்படையிலான தேர்வு நடத்தப்படும். அதன்பின் CBT-2 தேர்வு, தொடர்ந்து CBAT எனப்படும் aptitude test நடைபெறும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனைக்கு அழைக்கப்படுவார்கள். குறிப்பாக லோகோ பைலட் பணிக்கான கண் பார்வை A-1 தரத்தில் இருக்க வேண்டும் என்பதால் மருத்துவ பரிசோதனை மிகவும் முக்கியமானது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஆரம்ப அடிப்படை சம்பளமாக ரூ.19,900 வழங்கப்படும். இதனுடன் DA, HRA, Running Allowance உள்ளிட்ட பல்வேறு அலவன்ஸ்கள் சேர்த்து மாதம் ரூ.35,000 முதல் ரூ.45,000 வரை சம்பளம் கிடைக்கும் என கூறப்படுகிறது. அதனால் தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையை முன்கூட்டியே புரிந்து கொண்டு தயாராக ஆரம்பித்தால் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என்று நிபுணர்கள் ஆலோசனை வழங்குகின்றனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>career</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/career/railway-jobs-2026-11127-assistant-loco-pilot-posts-to-be-filled-soon-h69sb0k"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000 சம்பளம்.. ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. MBBS முடித்தவர்களுக்கான சூப்பர் சான்ஸ்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/career/rbi-recruitment-2026-earn-rs-1000-per-hour-as-medical-consultant-kp6cpbk</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/career/rbi-recruitment-2026-earn-rs-1000-per-hour-as-medical-consultant-kp6cpbk</guid>
            <pubDate>Tue, 19 May 2026 14:28:38 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;RBI Medical Consultant Vacancy 2026 : இந்திய ரிசர்வ் வங்கி மருத்துவ ஆலோசகர் பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. MBBS முடித்து 2 வருட அனுபவம் உள்ளவர்கள் ஜூன் 16க்குள் விண்ணப்பிக்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jx1rt9wvqnmkm8xcvaze0w8k,imgname-rbi-1749185013659.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;RBI Medical Consultant Vacancy 2026 : இந்திய ரிசர்வ் வங்கி மருத்துவ ஆலோசகர் பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. MBBS முடித்து 2 வருட அனுபவம் உள்ளவர்கள் ஜூன் 16க்குள் விண்ணப்பிக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவில் அரசு வேலைக்கான போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது மருத்துவ துறையில் இருப்பவர்களுக்கு ஒரு முக்கிய வாய்ப்பை இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தெரிவித்துள்ளது. குறிப்பாக &ldquo;நல்ல சம்பளத்துடன் மதிப்புள்ள வேலை வேண்டும்&rdquo; என்று எதிர்பார்த்து காத்திருக்கும் மருத்துவர்களுக்கு இந்த அறிவிப்பு கவனத்தை ஈர்த்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த வேலைவாய்ப்பு சாதாரண பணியமர்த்தல் அல்ல. இந்தியாவின் மிக முக்கியமான நிதி நிறுவனங்களில் ஒன்றான ஆர்பிஐ-யில் &quot;மருத்துவ ஆலோசகர்&quot; பதவிக்கான ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. குவஹாத்தியில் பணிபுரிய வேண்டிய இந்த பணி தொடக்கத்தில் 3 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது. தேவைப்பட்டால் பின்னர் பணி காலம் நீட்டிக்கப்படவும் வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இப்பணியில் சேரும் இளைஞர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000 வரை சம்பளம் வழங்கப்படுவது இளைஞர்களிடையே அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க MBBS பட்டம் கட்டாயம். இந்திய மருத்துவக் கவுன்சில் அங்கீகரித்த கல்வி நிறுவனத்தில் இருந்து பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் பொது மருத்துவத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். அதோடு, சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 2 வருட அனுபவம் இருக்க வேண்டும் என்பது முக்கிய நிபந்தனையாக அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விண்ணப்பிக்க விரும்புவோர் இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று வேலைவாய்ப்பு அறிவிப்பை கவனமாகப் படிக்க வேண்டும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளின்படி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பித்த பிறகு தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு உள்ளிட்ட அடுத்தகட்ட செயல்முறைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த வேலைவாய்ப்பின் முக்கிய அம்சம், அரசு அமைப்பில் பணியாற்றும் அனுபவத்துடன் நல்ல வருமானமும் கிடைப்பதுதான். தற்போது தனியார் மருத்துவ துறையில் பணிபுரியும் பல இளைஞர்கள் கூட ஆர்பிஐ போன்ற மத்திய அமைப்புகளில் வேலை பெற ஆர்வம் காட்டி வருகின்றனர். ஜூன் 16 விண்ணப்பிக்க கடைசி நாள், தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் கடைசி நேரம் வரை காத்திருக்காமல் உடனே விண்ணப்பிக்க வேண்டும் என்று வேலைவாய்ப்பு வட்டாரங்கள் அறிவுறுத்துகின்றன.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>career</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/career/rbi-recruitment-2026-earn-rs-1000-per-hour-as-medical-consultant-kp6cpbk"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Training: சொந்தமா தொழில் தொடங்கலாம் ஈசியா? அரசு வழங்கும் 4 நாட்கள் பயிற்சி எங்க நடக்குது தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/msme-training-want-to-start-your-own-business-easily-4-day-government-training-program-in-chennai-m3runkv</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/msme-training-want-to-start-your-own-business-easily-4-day-government-training-program-in-chennai-m3runkv</guid>
            <pubDate>Thu, 28 May 2026 10:03:58 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;மத்திய அரசின் MSME தொழில்நுட்ப மேம்பாட்டு மையம், தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்காக &quot;How to Start Your Own Business&quot; என்ற 4 நாள் &amp;nbsp;பயிற்சி திட்டத்தை அறிவித்துள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kspcsp456c9dq55pb926zngk,imgname-chatgpt-image-may-28--2026--09-45-32-am--1--1779941824645.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;மத்திய அரசின் MSME தொழில்நுட்ப மேம்பாட்டு மையம், தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்காக &quot;How to Start Your Own Business&quot; என்ற 4 நாள் &amp;nbsp;பயிற்சி திட்டத்தை அறிவித்துள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்றைய காலத்தில் பலரும் வேலை தேடுபவர்களாக இல்லாமல், வேலை வழங்குபவர்களாக மாற வேண்டும் என்ற ஆசையில் சொந்த தொழில் தொடங்க விரும்புகின்றனர். ஆனால் &ldquo;எப்படி தொடங்குவது?&rdquo;, &ldquo;எந்த பதிவு செய்ய வேண்டும்?&rdquo;, &ldquo;கடன் எப்படி பெறுவது?&rdquo; போன்ற கேள்விகள் காரணமாக பலர் தங்களது கனவை தள்ளிப்போடுகின்றனர். இதற்காகவே மத்திய அரசின் MSME தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் (MSME Technology Development Centre) சிறப்பு 4 நாட்கள் பயிற்சி திட்டத்தை அறிவித்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&ldquo;How to Start Your Own Business&rdquo; என்ற தலைப்பில் அரசு சான்றிதழுடன் கூடிய தொழில்முனைவோர் பயிற்சி நடைபெறுகிறது. இந்த பயிற்சி சென்னை கிண்டியில் உள்ள MSME Technology Development Centre மூலம் ஆன்லைனில் நடத்தப்படுகிறது. தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்கள், பெண்கள் மற்றும் புதிய ஸ்டார்ட்அப் முயற்சியாளர்களுக்கு இது பெரிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த 2 வார இறுதி (Weekend) ஆன்லைன் பயிற்சி வரும் ஜூன் 6, 7, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. தினமும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;என்னென்ன கற்றுக்கொடுக்கப்படும்?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்த பயிற்சியில் தொழில் தொடங்குவதற்கான அடிப்படை முதல் முழுமையான நடைமுறைகள் வரை விரிவாக கற்றுக்கொடுக்கப்பட உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;அதில் சில முக்கிய அம்சங்கள்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;சொந்த தொழிலை எப்படி தொடங்குவது?&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;தொழிலை திட்டமிடுவது எப்படி?&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;தொழில்முனைவோராக மாற 10 முக்கிய படிகள்&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;MSME திட்டங்கள் மற்றும் உத்யம் பதிவு&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;TIIC கடன் பெறும் முறை&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;நிறுவனம் பதிவு மற்றும் பெயர் ஒப்புதல்&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;GST, PAN, TAN, ESI, PF பதிவு&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;வங்கிக் கடன் மற்றும் நிதி வசதிகள்&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;தொழிலுக்கு தேவையான இயந்திரங்கள் மற்றும் இடத் தேர்வு&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;Feasibility Study மற்றும் Project Planning&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;போன்ற பல விஷயங்கள் விரிவாக எடுத்துரைக்கப்பட உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த அரசு சான்றிதழ் பயிற்சிக்கான கட்டணம் ரூ.3,540 (GST உட்பட) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;எப்படி பதிவு செய்வது?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஆன்லைன் மூலமாக கட்டணம் செலுத்தி பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு:&lt;/p&gt;&lt;p&gt;95000 34831 96772 90237 72005 26886&lt;/p&gt;&lt;p&gt;என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.&lt;/p&gt;&lt;p&gt;சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் இருப்பவர்களுக்கு இந்த அரசு அங்கீகாரம் பெற்ற பயிற்சி ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும். தொழிலை சரியான முறையில் தொடங்கி வெற்றிகரமாக நடத்த தேவையான வழிகாட்டுதல்களை இந்த 4 நாள் பயிற்சி வழங்குகிறது. தொழில்முனைவோர் கனவை நனவாக்க விரும்புபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>career</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/msme-training-want-to-start-your-own-business-easily-4-day-government-training-program-in-chennai-m3runkv"/>
        </item>
        <item>
            <title><![CDATA[BSNL Recruitment 2026 : BSNL-ல் அரசு வேலை வாய்ப்பு.. இன்ஜினியரிங், IT படித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/career/bsnl-jto-recruitment-2026-govt-job-alert-for-engineers-pgglg1q</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/career/bsnl-jto-recruitment-2026-govt-job-alert-for-engineers-pgglg1q</guid>
            <pubDate>Mon, 01 Jun 2026 14:08:18 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;BSNL Recruitment 2026 : பிஎஸ்என்எல் நிறுவனம், 100 ஜூனியர் டெலிகாம் அதிகாரி (JTO) பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்ஜினியரிங் மற்றும் ஐடி பட்டதாரிகள் இந்த அரசு வேலைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kt0tpgc7yncnq8sbweraxmpb,imgname-tamil-news--97--1780291944838.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;BSNL Recruitment 2026 : பிஎஸ்என்எல் நிறுவனம், 100 ஜூனியர் டெலிகாம் அதிகாரி (JTO) பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்ஜினியரிங் மற்றும் ஐடி பட்டதாரிகள் இந்த அரசு வேலைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அரசு வேலைக்காக காத்திருக்கும் இன்ஜினியரிங் மற்றும் ஐடி பட்டதாரிகளுக்கு முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. நாட்டின் முன்னணி அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், ஜூனியர் டெலிகாம் அதிகாரி (JTO) பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தொலைத்தொடர்பு துறையில் நிலையான அரசு வேலையை எதிர்பார்க்கும் இளைஞர்களுக்கு இந்த அறிவிப்பு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;பிஎஸ்என்எல்-ல் வேலை பெறுவது பலருக்கும் கனவாக இருந்து வருகிறது. குறிப்பாக, தொழில்நுட்ப துறையில் படித்து அரசு வேலை வாய்ப்பு தேடுபவர்களுக்கு இந்த JTO ஆட்சேர்ப்பு ஒரு முக்கிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு வட்டங்களில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால், தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை தவறவிடக்கூடாது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&bull; ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்: ஜூன் 4, 2026&lt;/p&gt;&lt;p&gt;&bull; விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 3, 2026&lt;/p&gt;&lt;p&gt;&bull; மொத்த காலிப்பணியிடங்கள்: 100&lt;/p&gt;&lt;p&gt;&bull; விண்ணப்பிக்கும் முறை: முழுவதும் ஆன்லைன்&lt;/p&gt;&lt;p&gt;விண்ணப்பிக்க விரும்புவோர் பிஎஸ்என்எல் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். கடைசி நேர அவசரத்தை தவிர்க்க தேவையான கல்வி மற்றும் அடையாள ஆவணங்களை முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திருப்பது நல்லது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;BE, BTech அல்லது அதற்கு இணையான பட்டப்படிப்பை தொடர்புடைய தொழில்நுட்ப துறைகளில் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். டெலிகாம், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், எலக்ட்ரிக்கல், ஐடி மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன் துறைகள் இதில் அடங்கும். மேலும், மின்னணுவியல் அல்லது கணினி அறிவியல் துறையில் எம்எஸ்சி முடித்தவர்களும், தொடர்புடைய எம்டெக் பட்டதாரிகளும் தகுதி பெறுகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;வயது வரம்பு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&bull; குறைந்தபட்ச வயது: 20&lt;/p&gt;&lt;p&gt;&bull; அதிகபட்ச வயது: 30&lt;/p&gt;&lt;p&gt;&bull; OBC (NCL): 3 ஆண்டு தளர்வு&lt;/p&gt;&lt;p&gt;&bull; SC/ST: 5 ஆண்டு தளர்வு&lt;/p&gt;&lt;p&gt;&bull; மாற்றுத்திறனாளிகள்: 10 முதல் 15 ஆண்டு வரை தளர்வு&lt;/p&gt;&lt;p&gt;தொழில்நுட்ப துறையில் அரசு பணியை இலக்காகக் கொண்ட இளைஞர்களுக்கு, பிஎஸ்என்எல் JTO 2026 ஆட்சேர்ப்பு ஒரு குறிப்பிடத்தக்க வாய்ப்பாக உருவெடுத்துள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>career</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/career/bsnl-jto-recruitment-2026-govt-job-alert-for-engineers-pgglg1q"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Microgreens Training: மைக்ரோ கிரீன்ஸ் மூலம் மாதம் ரூ.50 ஆயிரம் சம்பாதிக்கலாம் ஈசியா.! பயிற்சி எங்க நடக்குது தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/microgreens-business-earn-rs-50000-a-month-easily-do-you-know-where-the-training-is-conducted-pgq9o52</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/microgreens-business-earn-rs-50000-a-month-easily-do-you-know-where-the-training-is-conducted-pgq9o52</guid>
            <pubDate>Thu, 04 Jun 2026 12:16:43 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் தரும் மைக்ரோகிரீன்ஸ் சாகுபடி மூலம் மாதம் ரூ.50,000 வரை சம்பாதிக்கலாம். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்கள் வழங்கும் சிறப்பு பயிற்சிகள், சந்தைப்படுத்தல் உத்திகள் குறித்து இந்த கட்டுரை விவரிக்கிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kt8nbmdkfhct9kgc34qe4c6e,imgname-chatgpt-image-jun-4--2026--12-01-11-pm--1--1780554781107.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் தரும் மைக்ரோகிரீன்ஸ் சாகுபடி மூலம் மாதம் ரூ.50,000 வரை சம்பாதிக்கலாம். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்கள் வழங்கும் சிறப்பு பயிற்சிகள், சந்தைப்படுத்தல் உத்திகள் குறித்து இந்த கட்டுரை விவரிக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் தரும் தொழில்களில் தற்போது முதலிடத்தில் பேசப்படுவது மைக்ரோகிரீன்ஸ் (Microgreens) சாகுபடிதான். வெறும் 7 முதல் 15 நாட்களுக்குள் அறுவடை செய்யக்கூடிய இந்த சிறிய கீரைகள், நகர்ப்புறங்களில் ஆரோக்கிய உணவாக வேகமாக பிரபலமாகி வருகின்றன. சரியான சந்தைப்படுத்தல் மற்றும் வாடிக்கையாளர் வலையமைப்பு இருந்தால், மைக்ரோகிரீன்ஸ் தொழிலின் மூலம் மாதம் ரூ.50 ஆயிரம் அல்லது அதற்கும் அதிக வருமானம் ஈட்ட முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;காய்கறி மற்றும் கீரை விதைகள் முளைத்து முதல் இலைகள் தோன்றும் நிலையில் அறுவடை செய்யப்படுபவையே மைக்ரோகிரீன்ஸ் ஆகும். வெந்தயம், கடுகு, சூரியகாந்தி, பீட்ரூட், முட்டைக்கோஸ் உள்ளிட்ட பல்வேறு வகை விதைகளில் இருந்து இவை வளர்க்கப்படுகின்றன. சாதாரண காய்கறிகளை விட அதிக ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதில் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மைக்ரோகிரீன்ஸ் உற்பத்திக்கு பெரிய நிலப்பரப்பு தேவையில்லை. வீட்டின் மாடி, காலியான அறை அல்லது சிறிய ஷெட்டில்கூட இதை வளர்க்க முடியும். ஹோட்டல்கள், உணவகங்கள், ஜிம்கள், ஆர்கானிக் கடைகள் மற்றும் நேரடி வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வதன் மூலம் நல்ல வருமானம் பெறலாம். மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களான மைக்ரோகிரீன்ஸ் பவுடர், ஹெல்த் மிக்ஸ் மற்றும் ஜூஸ் தயாரிப்புகளையும் விற்பனை செய்தால் லாபம் மேலும் அதிகரிக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் (TNAU), கோயம்புத்தூரில் உள்ள தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் &quot;Microgreen Production and Value Addition&quot; என்ற தலைப்பில் சிறப்பு பயிற்சிகள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன. இதில் மைக்ரோகிரீன்ஸ் வளர்ப்பு, அறுவடை, மதிப்புக் கூட்டல், சந்தைப்படுத்தல் மற்றும் தொழில் தொடங்கும் முறைகள் குறித்து நேரடி பயிற்சி வழங்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;அதேபோல், மதுரையில் NABARD MABIF மற்றும் TNAU வளாகத்தில் &quot;Microgreens Production and Utilization Techniques&quot; என்ற ஒரு நாள் பயிற்சியும் நடத்தப்பட்டது. இதில் தொழில் வாய்ப்புகள், சந்தை தேவை, மதிப்புக் கூட்டல் மற்றும் வணிக உத்திகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.&lt;/p&gt;&lt;p&gt;மேலும், தமிழக அரசின் EDII-TN அமைப்பும் மைக்ரோகிரீன்ஸ் தொடர்பான 3 நாள் தொழில்முனைவோர் பயிற்சிகளை நடத்தி வருகிறது. இதில் சாகுபடி மட்டுமின்றி மார்க்கெட்டிங் மற்றும் தொழில் தொடங்குவதற்கான முழுமையான வழிகாட்டுதலும் வழங்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;ul&gt; &lt;li&gt;மைக்ரோகிரீன்ஸ் விதைத் தேர்வு&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;வளர்ப்பு தொழில்நுட்பங்கள்&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;அறுவடை மற்றும் சேமிப்பு முறைகள்&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;உணவு பாதுகாப்பு நடைமுறைகள்&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல்&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;சந்தைப்படுத்தல் மற்றும் வணிக வாய்ப்புகள்&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;வருமானம் அதிகரிக்கும் உத்திகள்&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;பயிற்சிக்குப் பிறகு வீட்டிலிருந்தே தொழிலைத் தொடங்கும் அளவுக்கு நடைமுறை அறிவு வழங்கப்படுவதாக பயிற்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குறைந்த முதலீடு, குறைந்த இடவசதி மற்றும் குறுகிய கால உற்பத்தி சுழற்சி காரணமாக மைக்ரோகிரீன்ஸ் தொழில் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு சிறந்த சுயதொழில் வாய்ப்பாக உருவெடுத்து வருகிறது. சரியான பயிற்சி பெற்று, சந்தையைப் புரிந்து கொண்டு செயல்பட்டால், மைக்ரோகிரீன்ஸ் மூலம் மாதம் ரூ.50 ஆயிரம் வரை சம்பாதிப்பது சாத்தியமான இலக்காக இருக்கலாம். அதற்கான முதல் படியாக, TNAU மற்றும் பிற நிறுவனங்கள் நடத்தும் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்பது பயனுள்ளதாக இருக்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>career</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/microgreens-business-earn-rs-50000-a-month-easily-do-you-know-where-the-training-is-conducted-pgq9o52"/>
        </item>
        <item>
            <title><![CDATA[10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை.. 5 வழிகளில் மாணவர்கள் பார்க்கலாம்.. முழு விபரம் இதோ]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/career/tn-sslc-result-2026-5-easy-ways-to-check-marks-online-cbseo-qwq3969</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/career/tn-sslc-result-2026-5-easy-ways-to-check-marks-online-cbseo-qwq3969</guid>
            <pubDate>Tue, 19 May 2026 10:40:53 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;TN SSLC Result 2026 : தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 20ஆம் தேதி வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார். மாணவர்கள் இணையதளம், எஸஎம்எஸ் உள்ளிட்ட 5 வழிகளில் தேர்வு முடிவுகளை அறியலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01krza0fk655w4jz4s2hnmgpb2,imgname-tamil-news--1--1779167149670.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;TN SSLC Result 2026 : தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 20ஆம் தேதி வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார். மாணவர்கள் இணையதளம், எஸஎம்எஸ் உள்ளிட்ட 5 வழிகளில் தேர்வு முடிவுகளை அறியலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் தொடக்கம் வரை நடைபெற்ற SSLC பொதுத்தேர்வுகளை சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். தற்போது அனைவரின் கவனமும் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியில்தான் உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால், வழக்கத்தை விட முன்னதாகவே 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டன. தேர்வுகள் முடிந்த உடனே விடைத்தாள் திருத்தும் பணிகளும் வேகமாக நடைபெற்றன. ஏப்ரல் இறுதிக்குள் மதிப்பீட்டு பணிகள் நிறைவடைந்த நிலையில், மாணவர்களும் பெற்றோர்களும் முடிவு ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த சூழலில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 20ஆம் தேதி வெளியாக உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேசமயம் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும், 1 முதல் 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 4ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை பல்வேறு வழிகளில் அறிந்து கொள்ளலாம். குறிப்பாக www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து முடிவுகளை பார்க்கலாம். மேலும் DigiLocker செயலி மற்றும் results.digilocker.gov.in மூலமும் தேர்வு முடிவுகளை அணுக முடியும். மேலும் பள்ளிகளில் சமர்ப்பித்த கைப்பேசி எண்ணுக்கு SMS வழியாகவும் முடிவுகள் அனுப்பப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதுமட்டுமல்லாமல், மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே நேரடியாக முடிவுகளை அறிந்து கொள்ளும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் குறித்த சந்தேகங்கள் இருப்பின் 14417 உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தற்போது மாணவர்களிடையே &ldquo;எத்தனை மதிப்பெண் வரும்?&rdquo; என்ற பரபரப்பே அதிகமாக பேசப்பட்டு வருகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>career</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/career/tn-sslc-result-2026-5-easy-ways-to-check-marks-online-cbseo-qwq3969"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Tamilnadu Government: மருத்துவ துறையில் வேலைவாய்ப்பு.. எத்தனை காலி இடங்கள்? என்னென்ன தகுதிகள்? தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/career/sdat-recruitment-2026-apply-online-for-ophthalmic-assistant-posts-under-sports-quota-from-may-25-rdupwkw</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/career/sdat-recruitment-2026-apply-online-for-ophthalmic-assistant-posts-under-sports-quota-from-may-25-rdupwkw</guid>
            <pubDate>Sat, 23 May 2026 11:04:29 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;SDAT Recruitment: கடந்த 5 ஆண்டுகளில் தகுதியான சர்வதேச, தேசிய, அல்லது மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த வீரர்கள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) இணையதளம் மூலம் ஜூன் 24-க்குள் விண்ணப்பிக்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ks9m8zdsd7zvn99dcq3x8hjt,imgname-tamil-nadu-government-1779513458105.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;SDAT Recruitment: கடந்த 5 ஆண்டுகளில் தகுதியான சர்வதேச, தேசிய, அல்லது மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த வீரர்கள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) இணையதளம் மூலம் ஜூன் 24-க்குள் விண்ணப்பிக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ்நாட்டில் விளையாட்டு மற்றும் விளையாட்டு வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகள், திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டின் சார்பாக ஒலிம்பிக், பிற சர்வதேச அளவிலான போட்டிகளில், தேசிய, மாநில அளவில் பங்கேற்று பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவித்திடும் வகையில் அவர்களுக்கு அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 3 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 3% இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ துறையில் கண் மருத்துவ உதவியாளர்கள் 3 பணியிடங்களுக்கான விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. வேலை வாய்ப்பு பெறுவதற்கு கீழ்காணும் விளையாட்டுப் போட்டிகளில் விண்ணப்பிக்கும் ஆண்டிற்கு முந்தைய கடந்த 5 ஆண்டுகளில் பெறப்பட்ட விளையாட்டு சாதனைகள் மட்டுமே தகுதியானவையாக கருதப்படும். குழு விளையாட்டுகளில், மாநில அளவில் குறைந்தது 50% போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதற்கு தகுதிகளாக கீழ்காணும் சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்றவர்களாகவோ அல்லது பங்கேற்றவர்களாகவோ இருத்தல் வேண்டும். அந்தவகையில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், ஆசிய விளையாட்டுப் போட்டிகள், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் அங்கீகரிக்கப்ட்ட சர்வதேச விளையாட்டு கூட்டமைப்பால் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது ஆண்டுதோறும் நடத்தப்படும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேலும் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது ஆண்டுக்கு ஒருமுறை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச விளையாட்டு கூட்டமைப்பின் கீழ் நடத்தப்படும் காமன்வேல்த் சாம்பியன்ஷிப் போட்டிகள், 4 ஆண்டுக்கு ஒருமுறை அல்லது 2 ஆண்டுக்கு ஒருமுறை அல்லது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச விளையாட்டு கூட்டமைப்பின் கீழ் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகள், தெற்காசிய கூட்டமைப்பு விளையாட்டுப் போட்டிகள், பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள், சர்வதேச பார்வையற்றோர் விளையாட்டு சங்கம் மற்றும் காது கேளாதோருக்கான சர்வதேச விளையாட்டு குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட உலக விளையாட்டுகள் மற்றும் காது கேளாதோர் விளையாட்டுகள், தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மட்டும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளால் நடத்தப்படும் தேசிய சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகள் ஆகியவை, மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மட்டும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டு சங்கங்கள் நடத்தும் போட்டிகள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேலும் போட்டிகளின் அனைத்து நிலைகளிலும், சீனியர் அளவிலான போட்டிகள் மட்டுமே தகுதியான போட்டிகளாக கருதப்படும். மேற்கண்ட வழிகாட்டுதல்களின் அடிப்படையில், தமிழ்நாடு மருத்துவ துணைப் பணியாளர் சேவையில் கண் மருத்துவ உதவியாளர் பணிக்கான 3 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் வழியாக விண்ணப்பங்களை வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு இணையதளம் வழியாக 25.05.2026 காலை 10 மணி முதல் 24.06.2026 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். விளையாட்டு வீரர்கள் தங்கள் விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களுடன் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளமான www.sdat.tn.gov.inஇல் பதிவேற்றம் செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>career</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/career/sdat-recruitment-2026-apply-online-for-ophthalmic-assistant-posts-under-sports-quota-from-may-25-rdupwkw"/>
        </item>
        <item>
            <title><![CDATA[12ம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? அதிக சம்பளம் தரும் 5 சிறந்த கேரியர் ஆப்ஷன்கள்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/career/best-courses-after-12th-that-guarantee-high-income-careers-syt07f6</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/career/best-courses-after-12th-that-guarantee-high-income-careers-syt07f6</guid>
            <pubDate>Mon, 27 Apr 2026 09:04:40 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;12ம் வகுப்பு முடிந்ததும் &ldquo;அடுத்தது என்ன?&rdquo; என்ற கேள்வி பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தும். ஆனால் சரியான கேரியர் தேர்வு தான் வாழ்க்கையை உயரத்திற்கு கொண்டு செல்லும் ரகசியம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kq6fkk6896ptv2hgsr15fsbm,imgname-tamil-news---2026-04-27t085600.057-1777260416199.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;12ம் வகுப்பு முடிந்ததும் &ldquo;அடுத்தது என்ன?&rdquo; என்ற கேள்வி பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தும். ஆனால் சரியான கேரியர் தேர்வு தான் வாழ்க்கையை உயரத்திற்கு கொண்டு செல்லும் ரகசியம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ப்ளஸ் டூ முடிந்ததும் வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி பெரிய கேள்வியாக எழுந்து நிற்கும். &ldquo;இப்போ என்ன படிக்கலாம்?&rdquo; என்ற கேள்வி மாணவர்களையும் பெற்றோர்களையும் ஒரே நேரத்தில் சிந்திக்க வைக்கும். பழைய காலத்தில் மருத்துவர் அல்லது பொறியாளர் என்ற இரண்டு பாதைகள் மட்டும் இருந்ததாக நினைத்தாலும், இன்றைய உலகம் பல புதிய வாய்ப்புகளால் நிரம்பி வழிகிறது. சரியான துறையை தேர்வு செய்வது வெறும் வேலைக்காக அல்ல. அது உங்கள் வருமானம், சமூக மதிப்பு, வாழ்க்கை சமநிலை ஆகிய அனைத்தையும் தீர்மானிக்கும் முக்கிய முடிவாக மாறுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இப்போது வேலைக்காக மட்டும் படிப்பது போதாது. உங்கள் திறமையும் ஆர்வமும் இணையும் துறையை தேர்வு செய்வது அவசியம். பலர் &ldquo;எல்லாரும் இதுதான் படிக்கிறார்கள்&rdquo; என்று கூட்டத்தை பின்தொடர்கிறார்கள். ஆனால் அந்த பாதை எல்லோருக்கும் வேலை தராது. உங்களுக்கு பிடித்த விஷயத்தில் பயணம் செய்தால் தான் நீண்ட காலத்தில் வளர்ச்சி கிடைக்கும். அதனால் உங்கள் பலவீனங்கள், பலம், விருப்பங்கள் அனைத்தையும் மதிப்பிட்டு தேர்வு செய்வது புத்திசாலித்தனமான முடிவு.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;டேட்டா சயின்ஸ் மற்றும் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் போன்ற துறைகள் இன்று மிக வேகமாக வளர்ந்து வருகின்றன. சமூக ஊடகங்கள், ஆன்லைன் வணிகம், டிஜிட்டல் சேவைகள் அனைத்தும் தரவின் மீது இயங்குகின்றன. அந்தத் தரவை புரிந்து கொண்டு நிறுவனங்களுக்கு சரியான முடிவை எடுக்க உதவும் நிபுணர்களுக்கு மிகுந்த தேவை உள்ளது. கணிதம், லாஜிக் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த துறையை தேர்வு செய்தால் நல்ல ஆரம்ப சம்பளத்துடன் வளர்ச்சி வாய்ப்புகளும் அதிகம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சட்டத் துறையும் தற்போது புதிய உயரத்தை எட்டியுள்ளது. வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில், கார்ப்பரேட் உலகிலும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். பி.ஏ. LLB அல்லது BBA LLB போன்ற ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புகள் மூலம் நேரடியாக இந்தத் துறைக்கு செல்லலாம். மேலும், மேலாண்மை துறையில் ஆர்வம் உள்ளவர்கள் IPM (நிர்வாகத்தில் ஒருங்கிணைந்த திட்டம்) தேர்வு செய்து நேரடியாக மேலாண்மை கல்வியை தொடங்கலாம். இது நேரத்தையும் சேமிக்கிறது, தொழில் பாதையையும் விரைவாக அமைக்க உதவுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தேச சேவையில் ஈடுபட விரும்புபவர்கள் NDA மூலம் இந்திய ராணுவத்தில் அதிகாரியாக சேரலாம். இது ஒரு வேலை மட்டும் அல்ல. மரியாதை, ஒழுக்கம், நாட்டுப்பற்று ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் வாழ்க்கை முறை. அதே சமயம், டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் கண்டென்ட் கிரியேஷன் துறைகளும் இன்றைய இளம் தலைமுறைக்கு மிகப்பெரிய வாய்ப்புகளை வழங்குகின்றன. சமூக ஊடக வளர்ச்சியுடன், படைப்பாற்றல் உள்ளவர்களுக்கு உலகளாவிய அளவில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது. சரியான தேர்வு செய்தால், உங்கள் வாழ்க்கை பாதை வெற்றியின் வெளிச்சத்தில் ஒளிரும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>career</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/career/best-courses-after-12th-that-guarantee-high-income-careers-syt07f6"/>
        </item>
        <item>
            <title><![CDATA[பாரத் பெட்ரோலியத்தில் வேலை.. ரூ.1.40 லட்சம் வரை சம்பளம்.. முழு விவரம் இங்கே]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/career/bpcl-vacancy-2026-check-eligibility-salary-and-how-to-apply-wdthbyt</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/career/bpcl-vacancy-2026-check-eligibility-salary-and-how-to-apply-wdthbyt</guid>
            <pubDate>Sat, 25 Apr 2026 11:09:34 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;நாட்டின் முன்னணி பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்), 250-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kq1hmf90438jnnhjwbd406a9,imgname-tamil-news---2026-04-25t105512.611-1777094769951.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;நாட்டின் முன்னணி பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்), 250-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நாட்டின் முன்னணி பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்), வேலை தேடுபவர்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பை அறிவித்துள்ளது. பல்வேறு துறைகளில் 250-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நல்ல சம்பளத்துடன், நிலையான அரசு வேலை தேடும் இளைஞர்களுக்கு இது ஒரு முக்கிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.1.40 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதில் முக்கியமாக &lsquo;அசோசியேட் எக்ஸிகியூட்டிவ்&rsquo; மற்றும் &lsquo;ஜூனியர் எக்ஸிகியூட்டிவ்&rsquo; பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. அசோசியேட் எக்ஸிகியூட்டிவ் பதவிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை சம்பளம் வழங்கப்படும். அதேபோல், தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கு ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனுடன் மருத்துவ வசதி, விடுப்பு சலுகை உள்ளிட்ட பல அரசு நலன்களும் கிடைக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கல்வித் தகுதி மற்றும் அனுபவம் ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Quality Assurance பிரிவுக்கு Chemistry-யில் M.Sc. பட்டம் மற்றும் குறைந்தது 3 ஆண்டுகள் அனுபவம் தேவை. பொறியியல் பிரிவில் ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணிக்குத் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் அல்லது சிவில் டிப்ளமோ மற்றும் 5 ஆண்டுகள் அனுபவம் அவசியம். கணக்குகள் மற்றும் நிதி பிரிவில் CA அல்லது CMA இடைநிலை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அதிகாரப்பூர்வ மொழிப் பிரிவில் எம்.ஏ இந்தி முடித்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வயது வரம்பு குறைந்தபட்சம் 21 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வயது, பணியிடத்தைப் பொறுத்து 32 முதல் 35 வயது வரை இருக்கும். அரசு விதிமுறைகளின்படி SC/ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள் மற்றும் OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகள் வயது தளர்வு வழங்கப்படும். தேர்வு செயல்முறை பல கட்டங்களாக நடைபெறும். முதலில் விண்ணப்பங்கள் 筛ning செய்யப்படும்; பின்னர் கணினி அடிப்படையிலான தேர்வு (CBT), குழு விவாதம் (GD), தனிப்பட்ட நேர்காணல் (PI) மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் இறுதித் தேர்வு செய்யப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விண்ணப்பிக்க விரும்புவோர், பிபிசிஎல்லின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் &lsquo;கேரியர்ஸ்&rsquo; பிரிவில் உள்ள அறிவிப்பைத் தேர்வு செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தேவையான ஆவணங்களை பதிவேற்றி விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். பொதுப் பிரிவு மற்றும் OBC விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1180 விண்ணப்பக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது; SC/ST விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை. நல்ல சம்பளமும் பாதுகாப்பான வேலை வாய்ப்பும் தேடும் நபர்களுக்கு இந்த ஆட்சேர்ப்பு ஒரு சிறந்த சந்தர்ப்பமாகும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>career</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/career/bpcl-vacancy-2026-check-eligibility-salary-and-how-to-apply-wdthbyt"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Job Vacancy Alert : கோல் இந்தியாவில் மாதம் ₹1.80 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை! சீக்கிரம் ஆன்லைனில் அப்ளை பண்ணுங்க!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/career/coal-india-jobs-2026-earn-up-to-rs1lakh-80-thousand-per-month-apply-online-x46kt1c</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/career/coal-india-jobs-2026-earn-up-to-rs1lakh-80-thousand-per-month-apply-online-x46kt1c</guid>
            <pubDate>Mon, 01 Jun 2026 11:24:38 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Job Vacancy Alert : இந்த ஆண்டு முதல், கேட் (GATE) தேர்வுக்குப் பதிலாக நிறுவனமே நடத்தும் கணினி வழித் தேர்வு (CBT) மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியான பொறியியல் பட்டதாரிகள் ஜூன் 11, 2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kt0v22s9ns4zvsff89bykt7w,imgname-job-openings---june-1-1780292324137.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Job Vacancy Alert : இந்த ஆண்டு முதல், கேட் (GATE) தேர்வுக்குப் பதிலாக நிறுவனமே நடத்தும் கணினி வழித் தேர்வு (CBT) மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியான பொறியியல் பட்டதாரிகள் ஜூன் 11, 2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமும், நாட்டின் மதிப்புமிக்க 'மகாரத்னா' அந்தஸ்து பெற்றதுமான கோல் இந்தியா லிமிடெட் (Coal India Limited - CIL), நடப்பு ஆண்டிற்கான மேனேஜ்மென்ட் டிரெய்னி (Management Trainee - MT) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பை (Advt No. 03/2026) வெளியிட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;இந்த அறிவிப்பின் மூலம் சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் மற்றும் சிஸ்டம்ஸ் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 660 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவுத் துவங்கப்பட்டு, தகுதியான பொறியியல் மற்றும் பட்டதாரி இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இந்த ஆண்டின் முக்கிய அதிரடி மாற்றம்!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இதுவரை கோல் இந்தியா நிறுவனம் தனது மேனேஜ்மென்ட் டிரெய்னி பணியிடங்களை கேட் (GATE) தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையிலேயே நிரப்பி வந்தது. ஆனால், இந்த ஆண்டு முதல் மைனிங் (Mining) பிரிவு தவிர மற்ற அனைத்து தொழில்நுட்ப மற்றும் இதர பிரிவுகளுக்கும் கேட் (GATE) தேர்வு கிடையாது. அதற்குப் பதிலாக, கோல் இந்தியா நிறுவனமே பிரத்யேகமாக நடத்தும் கணினி வழி எழுத்துத் தேர்வு (Computer Based Test - CBT) மூலம் தகுதியானவர்கள் நேரடியாகத் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நிறுவனம்: கோல் இந்தியா லிமிடெட் (CIL)&lt;/p&gt;&lt;p&gt;&bull; பதவியின் பெயர்: மேனேஜ்மென்ட் டிரெய்னி (Management Trainee - MT)&lt;/p&gt;&lt;p&gt;&bull; பணி தரம்: E-1 கிரேடு (Executive Level)&lt;/p&gt;&lt;p&gt;&bull; மொத்த காலிப்பணியிடங்கள்: 660 இடங்கள் (CBT முறை) (இவை தவிர 276 இடங்கள் Mining பிரிவிற்கு GATE முறை மூலம் நிரப்பப்படும்)&lt;/p&gt;&lt;p&gt;&bull; விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் (Online) மூலம் மட்டுமே&lt;/p&gt;&lt;p&gt;&bull; சம்பள விவரம்: மாதம் ₹60,000/- முதல் ₹1,80,000/- வரை&lt;/p&gt;&lt;p&gt;&bull; அதிகாரப்பூர்வ இணையதளம்: www.coalindia.in&lt;/p&gt;&lt;p&gt;முக்கியத் தேதிகள் (Important Dates)&lt;/p&gt;&lt;p&gt;&bull; அறிவிப்பு வெளியான நாள்: 05 மே 2026&lt;/p&gt;&lt;p&gt;&bull; ஆன்லைன் விண்ணப்பம் துவங்கும் நாள்: 12 மே 2026 (காலை 10:00 மணி முதல்)&lt;/p&gt;&lt;p&gt;&bull; ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 11 ஜூன் 2026 (மாலை 06:00 மணி வரை)&lt;/p&gt;&lt;p&gt;&bull; வயது வரம்பு கணக்கிடப்படும் நாள்: 30 ஏப்ரல் 2026&lt;/p&gt;&lt;p&gt;&bull; எழுத்துத் தேர்வு (CBT) நடைபெறும் காலம்: ஜூலை 2026 (தற்காலிகமாக)&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பல்வேறு பிரிவுகளுக்கான மொத்த இடங்கள் மற்றும் அவற்றுக்கான இட ஒதுக்கீடு விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:&lt;/p&gt;&lt;p&gt;&bull; எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் (Electrical) - Post Code: 12&lt;/p&gt;&lt;p&gt;o மொத்த இடங்கள்: 221&lt;/p&gt;&lt;p&gt;o பிரிவுகள் வாரியாக: UR - 91 | EWS - 22 | SC - 33 | ST - 16 | OBC-NCL - 59 (மாற்றுத்திறனாளிகள் - 16)&lt;/p&gt;&lt;p&gt;&bull; சிவில் இன்ஜினியரிங் (Civil) - Post Code: 11&lt;/p&gt;&lt;p&gt;o மொத்த இடங்கள்: 178&lt;/p&gt;&lt;p&gt;o பிரிவுகள் வாரியாக: UR - 72 | EWS - 17 | SC - 26 | ST - 13 | OBC-NCL - 46 (மாற்றுத்திறனாளிகள் - 15)&lt;/p&gt;&lt;p&gt;&bull; மெக்கானிக்கல் இன்ஜினியரிங் (Mechanical) - Post Code: 13&lt;/p&gt;&lt;p&gt;o மொத்த இடங்கள்: 145&lt;/p&gt;&lt;p&gt;o பிரிவுகள் வாரியாக: UR - 61 | EWS - 14 | SC - 21 | ST - 10 | OBC-NCL - 39 (மாற்றுத்திறனாளிகள் - 7)&lt;/p&gt;&lt;p&gt;&bull; சிஸ்டம்ஸ் (IT / Computer Science) - Post Code: 14&lt;/p&gt;&lt;p&gt;o மொத்த இடங்கள்: 43&lt;/p&gt;&lt;p&gt;o பிரிவுகள் வாரியாக: UR - 19 | EWS - 4 | SC - 6 | ST - 3 | OBC-NCL - 11 (மாற்றுத்திறனாளிகள் - 19)&lt;/p&gt;&lt;p&gt;&bull; எலக்ட்ரானிக்ஸ் &amp;amp; டெலிகாம் (E&amp;amp;T) - Post Code: 15&lt;/p&gt;&lt;p&gt;o மொத்த இடங்கள்: 38&lt;/p&gt;&lt;p&gt;o பிரிவுகள் வாரியாக: UR - 18 | EWS - 3 | SC - 5 | ST - 2 | OBC-NCL - 10 (மாற்றுத்திறனாளிகள் - 5)&lt;/p&gt;&lt;p&gt;&bull; ஜியாலஜி (Geology) - Post Code: 16&lt;/p&gt;&lt;p&gt;o மொத்த இடங்கள்: 15&lt;/p&gt;&lt;p&gt;o பிரிவுகள் வாரியாக: UR - 7 | EWS - 1 | SC - 2 | ST - 1 | OBC-NCL - 3&lt;/p&gt;&lt;p&gt;&bull; இண்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங் (Industrial) - Post Code: 17&lt;/p&gt;&lt;p&gt;o மொத்த இடங்கள்: 11&lt;/p&gt;&lt;p&gt;o பிரிவுகள் வாரியாக: UR - 4 (மற்ற பிரிவுகளுக்கு இடங்கள் இல்லை)&lt;/p&gt;&lt;p&gt;&bull; ராஜ்பாஷா (இந்தி) - Post Code: 18&lt;/p&gt;&lt;p&gt;o மொத்த இடங்கள்: 5&lt;/p&gt;&lt;p&gt;o பிரிவுகள் வாரியாக: UR - 3 | OBC-NCL - 1 (மாற்றுத்திறனாளிகள் - 1)&lt;/p&gt;&lt;p&gt;&bull; கம்பனி செக்ரட்டரி (CS) - Post Code: 19&lt;/p&gt;&lt;p&gt;o மொத்த இடங்கள்: 4&lt;/p&gt;&lt;p&gt;o பிரிவுகள் வாரியாக: UR - 3 | SC - 1 (மாற்றுத்திறனாளிகள் - 1)&lt;/p&gt;&lt;p&gt;குறிப்பு (Mining Branch): மைனிங் பிரிவிற்கான 276 இடங்கள் வழக்கம்போல் GATE மதிப்பெண்கள் அடிப்படையிலேயே நிரப்பப்படும். இதற்கான விண்ணப்பக் காலம் மே 8 முதல் ஜூன் 7 வரை ஆகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;1. கல்வித் தகுதி (Educational Qualification):&lt;/p&gt;&lt;p&gt;விண்ணப்பதாரர்கள் பொது/OBC/EWS பிரிவினராக இருந்தால் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடனும், SC/ST/PwBD பிரிவினராக இருந்தால் 55% மதிப்பெண்களுடனும் தங்களது பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&bull; பொறியியல் துறைகள் (Civil, Electrical, Mechanical, Industrial, E&amp;amp;T): அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் தொடர்புடைய பிரிவில் B.E / B.Tech / B.Sc (Engineering) முடித்திருக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&bull; சிஸ்டம்ஸ் (Systems): கணினி அறிவியல் அல்லது தகவல் தொழில்நுட்ப பிரிவில் (CS / IT) 1-ஆம் வகுப்பு B.E / B.Tech / B.Sc (Engg.) பட்டம் அல்லது ஏதேனும் ஒரு இளங்கலை பட்டத்துடன் MCA தேர்ச்சி.&lt;/p&gt;&lt;p&gt;&bull; ஜியாலஜி (Geology): M.Sc. / M.Tech. இன் Geology அல்லது Applied Geology அல்லது Geophysics பிரிவில் தேர்ச்சி.&lt;/p&gt;&lt;p&gt;&bull; ராஜ்பாஷா (இந்தி): குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் இந்தியில் எம்.ஏ (M.A) பட்டம். மேலும் இளங்கலை பட்டப்படிப்பில் இந்தி மற்றும் ஆங்கிலம் முக்கிய பாடங்களாக (Main subjects) படித்து 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&bull; கம்பனி செக்ரட்டரி (CS): ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் ICSI-யின் அசோசியேட்/பெல்லோஷிப் உறுப்பினர் தகுதி பெற்றிருக்க வேண்டும் (பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை).&lt;/p&gt;&lt;p&gt;இறுதி ஆண்டு மாணவர்கள்: 2025-26 கல்வியாண்டின் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் இத்தேர்விற்கு விண்ணப்பம் செய்யலாம். ஆனால், அவர்களது இறுதி ஆண்டு தேர்வு முடிவுகள் 31 ஆகஸ்ட் 2026 அல்லது அதற்கு முன்பாக வெளியாகி இருக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;2. வயது வரம்பு (Age Limit - 30 ஏப்ரல் 2026 தேதியின்படி):&lt;/p&gt;&lt;p&gt;&bull; பொதுப் பிரிவு / EWS விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 30 ஆண்டுகள் ஆகும்.&lt;/p&gt;&lt;p&gt;&bull; வயது வரம்பு தளர்வுகள் (மத்திய அரசு விதிமுறைப்படி):&lt;/p&gt;&lt;p&gt;o OBC (Non-Creamy Layer) பிரிவினருக்கு: 3 ஆண்டுகள் தளர்வு (அதிகபட்சம் 33 வயது)&lt;/p&gt;&lt;p&gt;o SC / ST பிரிவினருக்கு: 5 ஆண்டுகள் தளர்வு (அதிகபட்சம் 35 வயது)&lt;/p&gt;&lt;p&gt;o மாற்றுத்திறனாளிகள் (PwBD): அரசு விதிமுறைப்படி கூடுதல் தளர்வு அளிக்கப்படும்.&lt;/p&gt;&lt;p&gt;o கோல் இந்தியா (CIL) மற்றும் அதன் துணை நிறுவனங்களில் பணிபுரியும் துறைசார் ஊழியர்களுக்கு (Departmental Candidates) அதிகபட்ச வயது வரம்பு எதுவுமில்லை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கோல் இந்தியா மேனேஜ்மென்ட் டிரெய்னி பணிக்கு நேர்காணல் (Interview) கிடையாது. தகுதியானவர்கள் பின்வரும் நிலைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்:&lt;/p&gt;&lt;p&gt;1. கணினி வழி தேர்வு (Computer Based Test - CBT)&lt;/p&gt;&lt;p&gt;2. சான்றிதழ் சரிபார்ப்பு (Document Verification)&lt;/p&gt;&lt;p&gt;3. ஆரம்ப மருத்துவப் பரிசோதனை (Initial Medical Examination - IME)&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;கணினி வழி தேர்வு மாதிரி (CBT Pattern):&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;தேர்வு மொத்தம் 3 மணி நேரம் (ஒரே அமர்வாக) நடைபெறும். இதில் மொத்தம் 200 கொள்குறி வகை வினாக்கள் (MCQs) கேட்கப்படும். எதிர்மறை மதிப்பெண்கள் (No Negative Marking) கிடையாது. வினாக்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் இருக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;தாள் 1 (Paper-I): பொதுப் பாடங்கள்&lt;/p&gt;&lt;p&gt;உள்ளடக்கிய பகுதிகள்: பொது அறிவு (General Awareness), தர்க்க அறிவு (Reasoning), கணிதத் திறன் (Aptitude) மற்றும் பொது ஆங்கிலம் (General English).&lt;/p&gt;&lt;p&gt;வினாக்கள் மற்றும் மதிப்பெண்கள்: 100 வினாக்கள் / 100 மதிப்பெண்கள்&lt;/p&gt;&lt;p&gt;தாள் 2 (Paper-II): துறை சார்ந்த பாடங்கள்&lt;/p&gt;&lt;p&gt;உள்ளடக்கிய பகுதி: விண்ணப்பதாரரின் குறிப்பிட்ட தொழில்நுட்ப பாடப்பிரிவு (Professional / Discipline Knowledge).&lt;/p&gt;&lt;p&gt;வினாக்கள் மற்றும் மதிப்பெண்கள்: 100 வினாக்கள் / 100 மதிப்பெண்கள்&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;விண்ணப்பதாரர்கள் தாள்-1 மற்றும் தாள்-2 ஆகிய இரண்டிலும் தனித்தனியாகக் கீழே குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச மதிப்பெண்களைப் பெற வேண்டும்:&lt;/p&gt;&lt;p&gt;&bull; General / EWS பிரிவினர்: ஒவ்வொரு தாளிலும் 40 மதிப்பெண்கள்&lt;/p&gt;&lt;p&gt;&bull; OBC-NCL பிரிவினர்: ஒவ்வொரு தாளிலும் 35 மதிப்பெண்கள்&lt;/p&gt;&lt;p&gt;&bull; SC / ST / PwD பிரிவினர்: ஒவ்வொரு தாளிலும் 30 மதிப்பெண்கள்&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சம்பளம் மற்றும் பிணைப் பத்திரம் (Salary &amp;amp; Service Bond)&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&bull; பயிற்சி காலம் (Training Period): தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் E-1 கிரேடில் ஓராண்டு கால பயிற்சிப் பணியில் அமர்த்தப்படுவார்கள். இக்காலத்தில் அடிப்படைச் சம்பளமாக மாதம் ₹60,000/- வழங்கப்படும்.&lt;/p&gt;&lt;p&gt;&bull; பயிற்சிக்குப் பின்: வெற்றிகரமாகப் பயிற்சியை முடித்த பின், அவர்கள் E-2 கிரேடிற்கு மாற்றப்பட்டு, ₹60,000 - ₹1,80,000 என்ற சம்பள விகிதத்தில் பிக்சட் செய்யப்படுவார்கள். இதனுடன் அகவிலைப்படி (DA), வீட்டு வாடகைப்படி (HRA), மற்றும் மகாரத்னா நிறுவனத்தின் இதர சலுகைகளும் கிடைக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&bull; பணி நியமனப் பகுதி: தேர்வாகும் நபர்கள் இந்தியாவின் முக்கிய நிலக்கரி உற்பத்தி மாநிலங்களான ஜார்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், மேற்கு वங்கள் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற பகுதிகளில் உள்ள சுரங்கத் திட்டங்கள் அல்லது அலுவலகங்களில் பணியமர்த்தப்படுவர்.&lt;/p&gt;&lt;p&gt;&bull; சேவைப் பிணைப் பத்திரம் (Service Bond): பணியில் சேரும்போது நிறுவனத்தில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன் ₹3 லட்சம் மதிப்பிலான பாண்ட் (Service Bond) சமர்ப்பிக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;விண்ணப்பக் கட்டணம் (Application Fee)&lt;/p&gt;&lt;p&gt;&bull; General / OBC (NCL) / EWS பிரிவினருக்கு: ₹1000 + ₹180 (GST) = ₹1180/-&lt;/p&gt;&lt;p&gt;&bull; SC / ST / PwBD / கோல் இந்தியா ஊழியர்களுக்கு: கட்டணம் செலுத்துவதிலிருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது (Exempted).&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;1. கோல் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.coalindia.in பக்கத்திற்குச் செல்லவும்.&lt;/p&gt;&lt;p&gt;2. முகப்புப் பக்கத்தில் உள்ள &quot;Career with CIL&quot; -&amp;gt; &quot;Jobs at Coal India&quot; என்ற பிரிவை கிளிக் செய்யவும்.&lt;/p&gt;&lt;p&gt;3. அங்கிருக்கும் &quot;CIL MT Recruitment 2026 (Advt No. 03/2026)&quot; என்ற அறிவிப்பு லிங்கை தேர்வு செய்யவும்.&lt;/p&gt;&lt;p&gt;4. உங்களது மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி முதலில் பதிவு (Registration) செய்யவும்.&lt;/p&gt;&lt;p&gt;5. அதன்பின் விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள தங்களின் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் கல்வித் தகுதிகளைச் சரியாக நிரப்பவும்.&lt;/p&gt;&lt;p&gt;6. உங்களது தற்போதைய வண்ணப் புகைப்படம், கையொப்பம் மற்றும் தேவையான கல்விச் சான்றிதழ்களை (PDF வடிவில்) பதிவேற்றம் செய்யவும்.&lt;/p&gt;&lt;p&gt;7. உங்களுக்கான விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தவும்.&lt;/p&gt;&lt;p&gt;8. இறுதியாக, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முன் அனைத்து விவரங்களும் சரியாக உள்ளதா என சரிபார்த்து &quot;Submit&quot; செய்யவும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை எதிர்காலத் தேவைக்காக ஒரு அச்சுப்பிரதி (Printout) எடுத்து வைத்துக்கொள்ளவும்.&lt;/p&gt;&lt;p&gt;குறிப்பு : மத்திய அரசுப் பொதுத்துறை நிறுவனத்தில் உயரிய நிர்வாகப் பணியில் (Executive Level Job) சேர விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள், கடைசி நாள் வரை காத்திருக்காமல் உடனடியாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>career</category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/career/coal-india-jobs-2026-earn-up-to-rs1lakh-80-thousand-per-month-apply-online-x46kt1c"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Jobs: AI-யால் நெருங்க முடியாத துறைகள்.! அடுத்த 50 வருஷத்துக்கு 100% பாதுகாப்பான வேலைகள் பட்டியல்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/career/which-jobs-cannot-be-replaced-by-ai-list-of-jobs-that-are-likely-to-remain-safe-and-in-demand-for-the-next-50-years-zgsndf6</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/career/which-jobs-cannot-be-replaced-by-ai-list-of-jobs-that-are-likely-to-remain-safe-and-in-demand-for-the-next-50-years-zgsndf6</guid>
            <pubDate>Sat, 30 May 2026 13:55:49 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Which Jobs Cannot be Replaced by AI: செயற்கை நுண்ணறிவு (AI) எவ்வளவு வேகமாக வளர்ந்தாலும், சில வேலைகளை அதனால் தொடவே முடியாது. அடுத்த 50 ஆண்டுகளுக்கு 100% பாதுகாப்பான அந்த வேலைகள் என்னென்ன என்று இங்கே பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ksvyxyafyet3dwwzvkaz0rgd,imgname-which-jobs-cannot-be-replaced-by-ai-1780128610639.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Which Jobs Cannot be Replaced by AI: செயற்கை நுண்ணறிவு (AI) எவ்வளவு வேகமாக வளர்ந்தாலும், சில வேலைகளை அதனால் தொடவே முடியாது. அடுத்த 50 ஆண்டுகளுக்கு 100% பாதுகாப்பான அந்த வேலைகள் என்னென்ன என்று இங்கே பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எங்கு பார்த்தாலும் இப்போது 'செயற்கை நுண்ணறிவு' (AI) பற்றிதான் பேச்சு. சாட் ஜிபிடி, மிட்ஜர்னி, ஜெமினி போன்ற டூல்ஸ்களால், சாஃப்ட்வேர் இன்ஜினியர்கள் முதல் கன்டென்ட் ரைட்டர்கள் வரை 'வேலை போயிடுமோ?' என பயத்தில் உள்ளனர். ஆனால், சில துறைகளைச் சேர்ந்த வேலைகளுக்கு அடுத்த 50 ஆண்டுகளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. அந்த வேலைகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;இந்த 7 AI Skills இருந்தா நீங்க தான் ராஜா.! உங்க கிட்ட கூட யாரும் நெருங்க முடியாது.! வேலையும் பறிபோகாது.! கெத்து காட்டலாம்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;AI புரட்சி டிஜிட்டல் திரையோடு நின்றுவிடும். பிளம்பிங், எலக்ட்ரிக்கல், தச்சு வேலை, HVAC ரிப்பேர் போன்ற நிஜ உலக வேலைகளை ரோபோக்களால் செய்ய முடியாது. ஒவ்வொரு இடத்திலும் உள்ள தனிப்பட்ட சிக்கல்களுக்கு மனித மூளையால் மட்டுமே தீர்வு காண முடியும். அதனால், கோடிங் செய்பவரை விட வெல்டர் அல்லது பிளம்பரின் வேலை பாதுகாப்பானது. அன்றாட வாழ்வில் எதிர்பாராத பழுதுகள் மற்றும் சிக்கல்களைத் தீர்க்கும் வேலைகளை AI-யால் செய்ய முடியாது.&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;​&lt;strong&gt;பிளம்பர்கள், எலக்ட்ரீஷியன்கள் மற்றும் கார்பெண்டர்கள் (Plumbers, Electricians, Carpenters):&lt;/strong&gt; ஒவ்வொரு வீட்டின் அமைப்பும், அங்கு ஏற்படும் பழுதுகளும் வெவ்வேறானவை. இதற்குத் தேவையான நுணுக்கமான உடல் உழைப்பும், அந்தந்த இடத்திற்கு ஏற்றவாறு சிந்திக்கும் திறனும் ரோபோக்களுக்கு இன்னும் வரவில்லை.&lt;/li&gt; &lt;li&gt;​&lt;strong&gt;கட்டிடக் கலை வல்லுநர்கள் (Construction Workers &amp;amp; Architects):&lt;/strong&gt; தளத்தின் சூழலுக்கு ஏற்ப மாறும் வேலைகளுக்கு மனிதர்களின் நேரடிப் பங்களிப்பு தேவை&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;AI Skills: இந்த 5 திறன்களைக் கற்றுக்கொண்டால் கெரியரில் நீங்கள்தான் டாப்! பின்தங்கி விடாதீர்கள்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மருத்துவத் துறையில் AI ஒரு துணைக்கருவி மட்டுமே. ஆனால் நர்சிங், தெரபி போன்ற வேலைகளில் நோயாளிகளுக்குத் தேவைப்படும் மனரீதியான ஆதரவையும், அனுதாபத்தையும் மனிதர்களால் மட்டுமே வழங்க முடியும். அறுவை சிகிச்சையின்போது நொடியில் முடிவெடுக்கும் திறன் மனிதர்களுக்கு மட்டுமே உண்டு. எனவே இந்த வேலைகள் எப்போதும் பாதுகாப்பானவை. மருத்துவத் துறையில் நோயைக் கண்டறிய AI உதவலாமே தவிர, நோயாளியைக் கவனித்துக் கொள்ள முடியாது.&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;​&lt;strong&gt;செவிலியர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் (Nurses &amp;amp; Caregivers):&lt;/strong&gt; நோயாளிகளுக்குத் தேவையான அரவணைப்பு, ஆறுதல் மற்றும் உடல்ரீதியான அவசரக் காலப் பராமரிப்பை ஒரு இயந்திரத்தால் தர முடியாது.&lt;/li&gt; &lt;li&gt;​&lt;strong&gt;மனநல மருத்துவர்கள் மற்றும் ஆலோசகர்கள் (Psychologists &amp;amp; Therapists):&lt;/strong&gt; மனிதர்களின் மன உளைச்சல், ஏமாற்றம், மற்றும் உணர்வுப் போராட்டங்களை ஆழமாகப் புரிந்து கொண்டு, அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க மனித மனம் மட்டுமே சாத்தியம்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;​அறுவை சிகிச்சை நிபுணர்கள் (Surgeons): &lt;/strong&gt;ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் இருந்தாலும், ஆபத்தான கட்டத்தில் உடனடி முடிவுகளை எடுக்கும் நிபுணத்துவம் மனித மருத்துவர்களிடமே உள்ளது.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;AI: மனித மூளைக்கு பெரும் ஆபத்தை உண்டாக்கும் AI தொழில்நுட்பம்.. ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நிறுவனங்களை வழிநடத்தும் பொறுப்புகளில் AI வெறும் தரவுகளை மட்டுமே தர முடியும், முடிவுகளை எடுக்க முடியாது.&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;​&lt;strong&gt;நிறுவனத் தலைவர்கள் (CEOs &amp;amp; Business Leaders):&lt;/strong&gt; ஒரு நிறுவனத்தின் எதிர்காலப் பார்வை, கலாச்சாரம், மற்றும் மனித வளங்களை (Employees) கையாள்வது போன்றவற்றுக்கு தலைமைத்துவப் பண்பு (Leadership) அவசியம்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;​அரசியல்வாதிகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் (Politicians &amp;amp; Policy Makers):&lt;/strong&gt; சட்டங்களை உருவாக்குவது, மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு திட்டங்களைச் செயல்படுத்துவது போன்றவற்றிற்கு சமூகப் புரிதல் தேவை.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;தங்கம் விலை விண்ணைத் தொடும்.! AI-யால் அனைவரின் வேலை பறிபோகும்.! பணம் செல்லாமல் போகும்.! அதிர வைக்கும் பாபா வங்கா கணிப்புகள்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;ul&gt; &lt;li&gt;​&lt;strong&gt;ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் (Teachers &amp;amp; Professors):&lt;/strong&gt; AI ஒரு பாடத்தை நடத்தலாம், ஆனால் ஒரு மாணவனின் தனிப்பட்ட திறமையைக் கண்டறிந்து, அவனை ஊக்குவித்து, நல்ல ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுக்கும் 'குரு'வாக மாற முடியாது.&lt;/li&gt; &lt;li&gt;​&lt;strong&gt;விளையாட்டுப் பயிற்சியாளர்கள் (Sports Coaches):&lt;/strong&gt; வீரர்களின் உடல் மற்றும் மன நிலையை அறிந்து, அவர்களை உத்வேகப்படுத்தி வெற்றி பெறச் செய்யும் கலை மனிதர்களுக்கே உரியது.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;img&gt;&lt;p&gt;சட்டம் போன்ற உரிமம் பெற்ற தொழில்களை AI-யால் நிரப்ப முடியாது. சட்டச் சிக்கல்களைப் புரிந்துகொள்வதற்கும், நீதிமன்றத்தில் தர்க்கரீதியாகவும், உணர்வுப்பூர்வமாகவும் வாதிடுவதற்கும் மனித மூளை அவசியம். ஒருவரின் மனநிலையைப் புரிந்துகொண்டு வாதிடும் திறன் வழக்கறிஞர்களுக்கு மட்டுமே உள்ளது. எனவே சட்டத்துறையில் AI ஆதிக்கம் செலுத்த முடியாது.&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் (Judges &amp;amp; Lawyers):&lt;/strong&gt; சட்டம் என்பது வெறும் விதிகள் மட்டுமல்ல, அதில் உள்ள மனிதாபிமானம் மற்றும் சூழ்நிலை சாட்சியங்களை ஆராய்ந்து தீர்ப்பு வழங்க மனித அறிவு அவசியம்.&lt;/li&gt; &lt;li&gt;​&lt;strong&gt;காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் (Police &amp;amp; Firefighters):&lt;/strong&gt; கலவரக் காலங்கள் அல்லது விபத்து நேரங்களில் ஆபத்தான சூழலை உணர்ந்து, சமயோசிதமாகச் செயல்பட இவர்களால் மட்டுமே முடியும்.&amp;nbsp;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;h2&gt;&lt;strong&gt;திறன்களை வளர்த்தால் எதிர்காலம் நமதே!&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;உடல் உழைப்பு, அனுதாபம், உணர்வுப்பூர்வ நுண்ணறிவு தேவைப்படும் வேலைகளுக்கு எதிர்காலத்தில் அதிக தேவை இருக்கும். தொழில்நுட்பம் நமது வேலையை எளிதாக்குமே தவிர, நம்மை முழுமையாக மாற்றிவிடாது. எனவே, AI-யால் செய்ய முடியாத திறன்களை வளர்த்துக்கொண்டு, அப்டேட்டாக இருப்பது அவசியம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>career</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/career/which-jobs-cannot-be-replaced-by-ai-list-of-jobs-that-are-likely-to-remain-safe-and-in-demand-for-the-next-50-years-zgsndf6"/>
        </item>
    </channel>
</rss>
