<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes"?>
<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Wed, 08 Apr 2026 19:33:30 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss/career" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[இந்தியன் ரயில்வேயில் வேலை; ரூ.1.4 லட்சம் வரை சம்பளம்.. விண்ணப்பிப்பது எப்படி?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/career/rfc-recruitment-2026-apply-online-for-23-assistant-and-manager-posts-salary-in-lakhs-in-tamil-05bp8fx</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/career/rfc-recruitment-2026-apply-online-for-23-assistant-and-manager-posts-salary-in-lakhs-in-tamil-05bp8fx</guid>
            <pubDate>Mon, 06 Apr 2026 14:29:15 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;RFC Recruitment 2026 : &lt;/strong&gt;மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ரயில்வே ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (IRFC), 2026-ஆம் ஆண்டிற்கான ஒரு முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kkxn3g6cqmh02rpg8gzy24et,imgname-indian-railway-ticket-1773742964940.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;RFC Recruitment 2026 : &lt;/strong&gt;மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ரயில்வே ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (IRFC), 2026-ஆம் ஆண்டிற்கான ஒரு முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ரயில்வே ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (IRFC), 2026-ஆம் ஆண்டிற்கான ஒரு முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிதி மற்றும் கணக்கியல் துறையில் ஆர்வமுள்ள தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து மொத்தம் 23 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த அறிவிப்பின்படி, அசிஸ்டண்ட் மற்றும் அசிஸ்டண்ட் மேலாளர் ஆகிய இரண்டு நிலைகளில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் அசிஸ்டண்ட் பதவிக்கு 16 இடங்களும், அசிஸ்டண்ட் மேலாளர் பதவிக்கு 7 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இது மத்திய அரசுப் பணியை எதிர்நோக்கி இருக்கும் பட்டதாரிகளுக்கு ஒரு பொன்னான வாய்ப்பாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கல்வித் தகுதியைப் பொறுத்தவரை, அசிஸ்டண்ட் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் 60% மதிப்பெண்களுடன் பி.காம் (B.Com) பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் CA அல்லது CMA இன்டர்மீடியட் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும். அசிஸ்டண்ட் மேலாளர் பதவிக்கு, பட்டப்படிப்புடன் கூடிய CA/CMA முழுமையாகத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது நிதித்துறையில் (Finance) எம்பிஏ (MBA/PGDM) முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 30 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும். இருப்பினும், அரசு விதிகளின்படி எஸ்சி/எஸ்டி (SC/ST) மற்றும் ஓபிசி (OBC) பிரிவினருக்கு முறையே 5 ஆண்டுகள் மற்றும் 3 ஆண்டுகள் வரை வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த வேலை வாய்ப்பிற்கான ஊதிய விகிதம் மிகவும் ஈர்க்கக்கூடியதாக உள்ளது. அசிஸ்டண்ட் பணிகளுக்கு மாதம் ரூ.21,000 முதல் ரூ.74,000 வரையிலும், அசிஸ்டண்ட் மேலாளர் பணிகளுக்கு ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரையிலும் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியான நபர்கள் கணினி வழித் தேர்வு (Computer Based Test - CBT) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் பொது அறிவு, ஆங்கிலம், கணக்கு மற்றும் அந்தந்த துறை சார்ந்த கேள்விகள் 100 மதிப்பெண்களுக்குக் கேட்கப்படும். மேலாளர் பதவிக்கு மட்டும் கூடுதலாக நேர்காணல் (Interview) நடத்தப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விருப்பமுள்ளவர்கள், மே 1, 2026-க்குள் [irfc.co.in](https://irfc.co.in) என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 வசூலிக்கப்படும், மற்ற பிரிவினருக்குக் கட்டணம் கிடையாது. இந்த தேர்வுகள் வரும் ஜூன் மாதம் நடைபெற வாய்ப்புள்ளதால், விண்ணப்பதாரர்கள் இப்போதே தங்களது தயாரிப்புகளைத் தொடங்க அறிவுறுத்தப்படுகிறார்கள். தகுதியும் திறமையும் வாய்ந்த இளைஞர்கள் இந்த மத்திய அரசு வாய்ப்பினைத் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>career</category>
            <dc:creator>Rsiva kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/career/rfc-recruitment-2026-apply-online-for-23-assistant-and-manager-posts-salary-in-lakhs-in-tamil-05bp8fx"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Job Vacancy: இளைஞர்களுக்கு ஜாக்பாட்.! ரூ.1.4 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை.! விண்ணப்பிப்பது எப்படி?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/career/job-vacancy-jackpot-opportunity-for-youth-central-government-job-with-salary-up-to-rs1-lakh-how-to-apply-1lss926</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/career/job-vacancy-jackpot-opportunity-for-youth-central-government-job-with-salary-up-to-rs1-lakh-how-to-apply-1lss926</guid>
            <pubDate>Mon, 06 Apr 2026 09:34:11 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;இந்திய ரயில்வே நிதி கழகம் 23 காலியிடங்களை அறிவித்துள்ளது. வணிகம் மற்றும் நிதித்துறையில் பட்டம் பெற்ற தகுதியானவர்கள், இந்தியா முழுவதும் உள்ள இந்த நிரந்தர அரசுப் பணிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kc5dwze4rn4aky2s5jjtgrb6,imgname-d667f063-a12d-43d3-a69b-045e96d80936-1765413912004.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;இந்திய ரயில்வே நிதி கழகம் 23 காலியிடங்களை அறிவித்துள்ளது. வணிகம் மற்றும் நிதித்துறையில் பட்டம் பெற்ற தகுதியானவர்கள், இந்தியா முழுவதும் உள்ள இந்த நிரந்தர அரசுப் பணிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மத்திய அரசுத் துறையில் நல்ல சம்பளத்துடன் நிரந்தர வேலை தேடும் இளைஞர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. இந்திய ரயில்வே நிதி கழகமான IRFC (Indian Railway Finance Corporation Limited) தனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு, Assistant மற்றும் Assistant Manager (Finance) பணியிடங்களை நிரப்ப அறிவித்துள்ளது. வணிகம் மற்றும் நிதி துறையில் கல்வி பெற்றவர்களுக்கு இது ஒரு பொற்கால வாய்ப்பாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த அறிவிப்பு (Advt. No. 01/2026) 04 ஏப்ரல் 2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 23 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் Assistant (NE5 Level) 16 பணியிடங்களும், Assistant Manager (Finance) &ndash; E1 Level 7 பணியிடங்களும் அடங்கும். இந்தியா முழுவதும் பணியமர்த்தல் நடைபெறும் என்பதால், நாடு முழுவதும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;Assistant பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் B.Com பட்டப்படிப்புடன் குறைந்தது 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். மேலும் ICMAI அல்லது ICAI மூலம் Intermediate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Assistant Manager (Finance) பணிக்கு B.Com உடன் CA/CMA அல்லது MBA (Finance)/PGDM (Finance) தகுதி அவசியம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வயது வரம்பு இரு பணிகளுக்கும் 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி SC/ST, OBC, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு வயது தளர்வு வழங்கப்படும். சம்பளத்தைப் பொருத்தவரை Assistant பணிக்கு ரூ.21,000 முதல் ரூ.74,000 வரை வழங்கப்படும். Assistant Manager பணிக்கு ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை உயர்ந்த சம்பளம் வழங்கப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தேர்வு முறை கணினி அடிப்படையிலான தேர்வு (CBT), ஆவண சரிபார்ப்பு, நேர்காணல் மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். விண்ணப்பக் கட்டணம் SC/ST/Ex-Servicemen/PWD விண்ணப்பதாரர்களுக்கு இல்லை. மற்றவர்களுக்கு ரூ.500 ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் 04.04.2026 முதல் 01.05.2026 இரவு 11.45 மணி வரை IRFC அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கான ஹால் டிக்கெட் தேர்விற்கு 4 முதல் 7 நாட்களுக்கு முன் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும். தேர்வு ஜூன் 2026ல் நடைபெற வாய்ப்புள்ளது. இந்த வாய்ப்பை தவறவிடாமல், தகுதியுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து உங்கள் அரசு வேலை கனவை நனவாக்கிக் கொள்ளுங்கள்!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>career</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/career/job-vacancy-jackpot-opportunity-for-youth-central-government-job-with-salary-up-to-rs1-lakh-how-to-apply-1lss926"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Job Alert: தமிழ் தெரிந்தால் ரூ.85,000 வரை சம்பளம்! வங்கி வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/career/job-alert-earn-up-to-rs85000-jackpot-opportunity-for-tamil-speaking-bank-job-seekers-78osvgr</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/career/job-alert-earn-up-to-rs85000-jackpot-opportunity-for-tamil-speaking-bank-job-seekers-78osvgr</guid>
            <pubDate>Fri, 03 Apr 2026 10:02:22 +0530</pubDate>
            <description><![CDATA[பஞ்சாப் &amp;amp; சிந்து வங்கி, 'Local Bank Officer' பணிக்காக 145 காலியிடங்களை அறிவித்துள்ளது, இதில் 65 இடங்கள் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன. வங்கி அனுபவம் உள்ள பட்டதாரிகள், சொந்த ஊரிலேயே நல்ல சம்பளத்துடன் பணியாற்ற இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kn3speabdfed80bcmw5yrvbp,imgname-career-options-after-12th-1775022848331.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[பஞ்சாப் &amp;amp; சிந்து வங்கி, 'Local Bank Officer' பணிக்காக 145 காலியிடங்களை அறிவித்துள்ளது, இதில் 65 இடங்கள் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன. வங்கி அனுபவம் உள்ள பட்டதாரிகள், சொந்த ஊரிலேயே நல்ல சம்பளத்துடன் பணியாற்ற இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.&lt;img&gt;&lt;p&gt;வேலை தேடுவோருக்கு ஒரு நிம்மதியான செய்தி காத்திருக்கு என்றால் அது மிகையல்ல. இன்றைய காலத்தில் நிலையான வேலை, நல்ல சம்பளம், சமூக மரியாதை &ndash; இந்த மூன்றையும் ஒரே நேரத்தில் தரக்கூடிய துறையாக வங்கித் துறை திகழ்கிறது. குறிப்பாக அரசுத்துறை வங்கிகளில் வேலை செய்வது பல இளைஞர்களின் கனவாக உள்ளது. அதிலும், சொந்த ஊரிலேயே பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தால், அது இன்னும் சிறப்பானதாக மாறுகிறது. அந்த வகையில், Punjab &amp;amp; Sind Bank வெளியிட்டுள்ள புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு, தமிழக இளைஞர்களுக்கு மிகப்பெரிய சந்தர்ப்பமாக உள்ளது. &lsquo;Local Bank Officer&rsquo; பணியிடங்களுக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு, வங்கி அனுபவம் கொண்ட பட்டதாரிகளுக்கு ஒரு வலுவான தொழில் வளர்ச்சி பாதையை உருவாக்குகிறது. வேலை தேடும் இளைஞர்கள் தாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த அறிவிப்பின் படி, மொத்தமாக 145 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க வகையில் தமிழ்நாட்டிற்கு மட்டும் 65 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளதால் அரசு வேலைக்கு காத்திருப்போருக்கு இது ஜாக்பாட் ஆகும். இது ஒப்பந்த அடிப்படையிலான பணியாக இருந்தாலும், சம்பளம் மற்றும் சலுகைகள் அரசுத்துறை வங்கி தரத்திலேயே வழங்கப்படுகின்றன என்பதால் வேலை தேடும் இளைஞர்களுக்கு பொன்னான வாய்ப்பாகும். இதனால், பணியில் நம்பிக்கை மற்றும் நிலைத்தன்மை கிடைக்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். எந்த துறையில் பட்டம் பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்கலாம் என்பதால் டிகிரி முடித்து வேலைக்கு காத்திருக்கும் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பணி அனுபவம்&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்த பணிக்கு விண்ணப்பிக்க, பட்டப்படிப்பு முடித்த பிறகு ஏதேனும் ஒரு வங்கியில் குறைந்தது 18 மாதங்கள் அதிகாரியாக பணிபுரிந்த அனுபவம் அவசியமாகும். இதன் மூலம், அனுபவமுள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. எனவே ஒராண்டு அனுபவம் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குறைந்தபட்ச வயது:&lt;strong&gt; &lt;/strong&gt;20&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;அதிகபட்ச வயது: 30&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;அரசு விதிமுறைகளின்படி, SC/ST/OBC போன்ற பிரிவினருக்கு வயது தளர்வு வழங்கப்படும். மொழித்திறன்&lt;/p&gt;&lt;p&gt;இந்தப் பணியின் முக்கிய அம்சம் &ldquo;Local Officer&rdquo; என்பதால், தமிழ் மொழியில் சரளமாக பேசத் தெரிந்திருக்க வேண்டும் வாசிக்கவும் எழுதவும் திறமை இருக்க வேண்டும். இது வாடிக்கையாளர்களுடன் நேரடி தொடர்பு கொள்ள மிகவும் அவசியமான திறனாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தப் பணிக்கான மாத சம்பளம்:&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;₹48,480 முதல் ₹85,920 வரை&lt;/li&gt; &lt;li&gt;DA (Dearness Allowance) HRA (House Rent Allowance) மருத்துவ சலுகைகள் பிற வங்கி நலன்கள் என பல சலுகைகளும் வழங்கப்படும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;&lt;strong&gt;தேர்வு முறை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட கட்டங்களின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு ஸ்கிரீனிங், நேர்காணல், &amp;nbsp;மொழித்திறன் தேர்வு ஆகியற்றில் தேர்வாக வேண்டும். இத்தகைய அனைத்து நிலைகளிலும் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் Merit List தயாரிக்கப்பட்டு இறுதி தேர்வு செய்யப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. Chennai, Coimbatore, Madurai, மற்றும் Tiruchirappalli இல் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். &amp;nbsp;இதனால், விண்ணப்பதாரர்கள் தங்களுக்குச் சுலபமான மையத்தை தேர்வு செய்யலாம்.&lt;/p&gt;&lt;p&gt;விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: IBPS அதிகாரப்பூர்வ தளம் கடைசி தேதி: ஏப்ரல் 20, 2026, ஆன்லைன் விண்ணப்பத்தை சரியாக நிரப்பி, தேவையான ஆவணங்களை பதிவேற்றுவது மிக முக்கியம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வங்கித் துறையில் ஏற்கனவே அனுபவம் பெற்றவர்களுக்கு, இந்த அறிவிப்பு ஒரு மிகச் சிறந்த முன்னேற்ற வாய்ப்பாகும். குறிப்பாக தமிழ்நாட்டிலேயே பணிபுரிய விரும்புபவர்களுக்கு இது ஒரு &ldquo;Golden Opportunity&rdquo; என்று சொல்லலாம். முறையான திட்டமிடல், தேர்வு தயாரிப்பு மற்றும் நேர்முகத் தேர்வில் தன்னம்பிக்கை ஆகியவற்றுடன் அணுகினால், இந்த வேலைவாய்ப்பை பெறுவது சாத்தியமே அல்ல &ndash; நிச்சயமாகும். அதனால், தகுதி மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் உடனே விண்ணப்பிக்கவும். உங்கள் வங்கி கனவு நனவாகும் நாள் இதுவாக இருக்கலாம்!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>career</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/career/job-alert-earn-up-to-rs85000-jackpot-opportunity-for-tamil-speaking-bank-job-seekers-78osvgr"/>
        </item>
        <item>
            <title><![CDATA[10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து..! மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க அரசு அதிரடி அறிவிப்பு..]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/india/massive-update-10th-board-exams-scrapped-as-new-education-policy-takes-over-in-telangana-7a6tmkq</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/india/massive-update-10th-board-exams-scrapped-as-new-education-policy-takes-over-in-telangana-7a6tmkq</guid>
            <pubDate>Tue, 24 Mar 2026 14:17:54 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைத்து, தொடர்ச்சியான கற்றலை உறுதிசெய்யும் நோக்கில், நர்சரி முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒருங்கிணைந்த கல்வி முறையை அறிமுகப்படுத்தி, அடுத்த கல்வியாண்டு முதல் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்வதாக அரசு அறிவித்துள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kmffvp51smj5f8vsk8f5dtr6,imgname-gemini-generated-image-ujzmt5ujzmt5ujzm-1774341445792.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைத்து, தொடர்ச்சியான கற்றலை உறுதிசெய்யும் நோக்கில், நர்சரி முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒருங்கிணைந்த கல்வி முறையை அறிமுகப்படுத்தி, அடுத்த கல்வியாண்டு முதல் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்வதாக அரசு அறிவித்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கல்வி முறையில் ஒரு பெரிய மாற்றமாக, அடுத்த கல்வியாண்டு முதல் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பு மாநிலம் முழுவதும் உள்ள மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;மாணவர்கள் மீதான கல்வி அழுத்தத்தைக் குறைத்து, அவர்களின் கற்றல் பயணத்தை எளிதாக்குவதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தெரிவித்தார். தற்போதைய கல்வி முறைக்கு பதிலாக, நர்சரி முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களை உள்ளடக்கிய ஒரு ஒருங்கிணைந்த கல்வி கட்டமைப்பை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த புதிய கொள்கையின் கீழ், மாணவர்கள் இனி 10-ஆம் வகுப்பு மட்டத்தில் அதிக அழுத்தமுள்ள பொதுத் தேர்வை எதிர்கொள்ள மாட்டார்கள். தொடர்ச்சியான மதிப்பீடு மற்றும் ஒட்டுமொத்த கல்வி மேம்பாட்டில் கவனம் செலுத்தப்படும். இதன் மூலம், மாணவர்கள் தங்கள் கல்வியின் ஒரு முக்கியமான கட்டத்தில் சுமையாக உணராமல் இருப்பது உறுதி செய்யப்படும்.&lt;/p&gt;&lt;p&gt;பள்ளி மற்றும் இடைநிலைக் கல்விக்கு இடையில் மாணவர்கள் தங்கள் படிப்பைத் தடையின்றித் தொடர இந்த மாற்றம் உதவும் என்று அரசு நம்புகிறது. முழுப் பள்ளிக் கல்வி முறையையும் ஒரே கட்டமைப்பிற்குள் கொண்டு வருவதன் மூலம், மேம்பட்ட நிலைத்தன்மையையும் சிறந்த கற்றல் விளைவுகளையும் அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தெலங்கானாவில் கல்வித் துறையை வலுப்படுத்தும் ஒரு பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகவும் இந்த முடிவு அமைந்துள்ளது. இந்தச் சீர்திருத்தங்களுடன், மாணவர்களுக்கான ஆதரவு மற்றும் பள்ளி அளவிலான முன்னெடுப்புகள் உள்ளிட்ட சமீபத்திய நிதிநிலை அறிக்கை நடவடிக்கைகள் மூலம், நலன் மற்றும் மேம்பாட்டிற்கான தனது அர்ப்பணிப்பை அரசு எடுத்துக்காட்டியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;இந்த அறிவிப்பு, தெலங்கானா கல்விக் கொள்கையில் ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையாகும். இது, நீண்டகால வளர்ச்சிக்காக வடிவமைக்கப்பட்ட, மாணவர்களுக்கு மிகவும் உகந்த மற்றும் முற்போக்கான கல்வி முறையை நோக்கிய ஒரு நகர்வைக் குறிக்கிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>career</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/india/massive-update-10th-board-exams-scrapped-as-new-education-policy-takes-over-in-telangana-7a6tmkq"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஜேஇஇ மெயின் 2026: ஏப்ரல் தேர்வில் 'சென்டம்' அடிக்க ஆசையா? இதோ நிபுணர்கள் பரிந்துரைக்கும் மேஜிக் புத்தகங்கள்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/career/prepare-for-jee-main-2026-april-session-with-these-must-read-books-7z32cbf</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/career/prepare-for-jee-main-2026-april-session-with-these-must-read-books-7z32cbf</guid>
            <pubDate>Mon, 30 Mar 2026 21:29:16 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;JEE Main 2026 ஜேஇஇ மெயின் 2026 ஏப்ரல் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கான முக்கிய புத்தகங்கள் மற்றும் கடைசி நேரத் திருப்புதல் ஆலோசனைகள். இதோ நிபுணர்கள் பரிந்துரைக்கும் மேஜிக் புத்தகங்கள்!&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kmzqdg0mwenfndtejj2z74yj,imgname-jee-main-2026--3--1774886240276.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;JEE Main 2026 ஜேஇஇ மெயின் 2026 ஏப்ரல் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கான முக்கிய புத்தகங்கள் மற்றும் கடைசி நேரத் திருப்புதல் ஆலோசனைகள். இதோ நிபுணர்கள் பரிந்துரைக்கும் மேஜிக் புத்தகங்கள்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜேஇஇ மெயின் (JEE Main) 2026 ஏப்ரல் மாதத் தேர்வுகள் ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளன. இந்த இறுதி நேரத்தில் மாணவர்கள் புதிய பாடங்களைக் கற்பதை விட, படித்தவற்றைச் சரியாகத் திருப்புதல் (Revision) செய்வதே வெற்றிக்கான வழியாகும். குறைவான புத்தகங்களைத் தேர்வு செய்து, அவற்றை முழுமையாகப் படிப்பது எப்படி என்பது குறித்த நிபுணர்களின் ஆலோசனைகளை இங்கே காண்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜேஇஇ தேர்வைப் பொறுத்தவரை 11 மற்றும் 12-ஆம் வகுப்பு என்சிஇஆர்டி புத்தகங்களே மிக முக்கியமானவை. குறிப்பாக வேதியியல் (Chemistry) பாடத்தில் பெரும்பாலான கேள்விகள் நேரடியாக என்சிஇஆர்டி புத்தகத்திலிருந்தே கேட்கப்படுகின்றன. பாடப்புத்தகத்தில் உள்ள உதாரணங்கள், கருத்துக்கள் மற்றும் கேள்விகளைத் திரும்பத் திரும்பப் படிப்பது அவசியம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;என்சிஇஆர்டி-யைத் தவிர, பிசிகல் கெமிஸ்ட்ரிக்கு R.C. Mukherjee, ஆர்கானிக் கெமிஸ்ட்ரிக்கு M.S. Chauhan மற்றும் இன்ஆர்கானிக் கெமிஸ்ட்ரிக்கு J.D. Lee ஆகிய புத்தகங்கள் கூடுதல் பயிற்சிக்கு உதவும். கணிதத்தைப் பொறுத்தவரை, அடிப்படை கருத்துக்களைப் புரிந்துகொண்ட பிறகு R.D. Sharma (Objective Mathematics) புத்தகத்தில் உள்ள கணக்குகளைப் பயிற்சி செய்வது வேகத்தையும் துல்லியத்தையும் அதிகரிக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கடைசி நேரத் திருப்புதலில் புதிய கருத்துக்களைக் கற்க முயற்சிப்பதைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக, சூத்திரங்களை (Formulae) மீண்டும் மீண்டும் பார்ப்பது மற்றும் முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள்களை (Previous Year Questions) வைத்துப் பயிற்சி செய்வது சிறந்தது. முழுமையான மாதிரித் தேர்வுகளை (Mock Tests) எழுதிப் பார்ப்பது உங்கள் நேர மேலாண்மைத் திறனை (Time Management) மேம்படுத்தும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதிகப்படியான புத்தகங்களைச் சேகரிப்பதை விட, தரமான சில புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து முறையாகப் படிப்பதே உங்களை ஐஐடி (IIT) கனவை நோக்கி அழைத்துச் செல்லும். தெளிவான திட்டமிடல், தொடர்ச்சியான பயிற்சி மற்றும் முறையான திருப்புதல் ஆகிய மூன்றையும் கடைப்பிடித்தால் ஜேஇஇ மெயின் தேர்வில் நிச்சயம் சாதிக்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>career</category>
            <dc:creator>Suresh Manthiram</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/career/prepare-for-jee-main-2026-april-session-with-these-must-read-books-7z32cbf"/>
        </item>
        <item>
            <title><![CDATA[சென்னை ஐஐடி முன்னாள் மாணவரின் மெகா கிப்ட்: ₹5 கோடியில் உருவான ஆன்மீக அறிவியல் மையம்.. பின்னணி என்ன?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/career/iit-madras-launches-carsss-to-study-the-link-between-spirituality-bq279o5</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/career/iit-madras-launches-carsss-to-study-the-link-between-spirituality-bq279o5</guid>
            <pubDate>Wed, 25 Mar 2026 22:35:12 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;IIT Madras அறிவியல் மற்றும் ஆன்மீகத்தை இணைக்க ஐஐடி மெட்ராஸில் புதிய ஆராய்ச்சி மையம் தொடக்கம். மாணவர்களின் மனநலனில் புதிய அக்கறை! ஆன்மீக அறிவியல் மையம்.. பின்னணி என்ன?&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kmjz7700ty3ea6dhhye89e2h,imgname-iit-madras-2-1774458215424.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;IIT Madras அறிவியல் மற்றும் ஆன்மீகத்தை இணைக்க ஐஐடி மெட்ராஸில் புதிய ஆராய்ச்சி மையம் தொடக்கம். மாணவர்களின் மனநலனில் புதிய அக்கறை! ஆன்மீக அறிவியல் மையம்.. பின்னணி என்ன?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனமான சென்னை ஐஐடி (IIT Madras), ஒரு முன்னோடி முயற்சியாக &quot;ஆன்மீகம், அறிவியல் மற்றும் சமூகம்&quot; (Centre for Advanced Research on Spirituality, Science and Society - CARSSS) என்ற புதிய மேம்பட்ட ஆராய்ச்சி மையத்தை நிறுவியுள்ளது. இந்த மையத்தின் முக்கிய நோக்கம் ஆன்மீகம், தியானம் மற்றும் அறிவியல் ஆகியவற்றுக்கு இடையே உள்ள தொடர்பை ஆராய்ந்து, அவை சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தைப் படிப்பதே ஆகும்.&lt;/p&gt;&lt;p&gt;அறிவியல் முன்னேற்றங்கள் ஒருபுறம் இருந்தாலும், மனித மனதின் அமைதி மற்றும் மேம்பாட்டிற்கு ஆன்மீகத்தின் பங்கு என்ன என்பதை நவீன ஆராய்ச்சி முறைகள் மூலம் நிரூபிப்பதே இந்த மையத்தின் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த புதிய மையமானது அறிவியல், மனிதநேயம் (Humanities), மருத்துவம் மற்றும் கட்டிடக்கலை போன்ற பல்வேறு துறைகளை ஒன்றிணைத்து செயல்பட உள்ளது. தியானம் மற்றும் ஆன்மீகப் பயிற்சிகள் ஒரு நபரின் அன்றாட வாழ்க்கையில் எந்த மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை இந்தத் துறைகளின் வல்லுநர்கள் இணைந்து ஆராய்வார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;குறிப்பாக, மனித நல்வாழ்வு (Human Well-being) மற்றும் உணர்வு நிலை (Consciousness) குறித்த ஆராய்ச்சிகளுக்கு இந்த மையம் அதிக முக்கியத்துவம் அளிக்க உள்ளது. இது தொடர்பான கல்வித் திட்டங்கள் மற்றும் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வுகளையும் இந்த மையம் முன்னெடுக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த பிரம்மாண்டமான மையத்தை உருவாக்க சென்னை ஐஐடியின் 1967-ம் ஆண்டு முன்னாள் மாணவர் (Electrical Engineering) சந்த் ராஜேந்தர் சிங் ஜி மஹராஜ் (Sant Rajinder Singh Ji Maharaj) ₹5 கோடி நிதி உதவி வழங்கியுள்ளார். இவர் தற்போது 'சயின்ஸ் ஆஃப் ஸ்பிரிச்சுவாலிட்டி' (Science of Spirituality) அமைப்பின் தலைவராக இருந்து வருகிறார்.&lt;/p&gt;&lt;p&gt;அறிவியல் ரீதியாக தியானத்தின் பலன்களை உலகம் முழுவதற்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. ஐஐடி போன்ற ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தில் இத்தகைய மையம் தொடங்கப்படுவது ஆரோக்கியமான மாற்றமாகக் கருதப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சமீபகாலமாக ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் மன அழுத்தம் ஒரு பெரும் சவாலாக இருந்து வருகிறது. இந்த சூழலில், CARSSS மையம் மாணவர்களின் மனநலம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான ஒரு தீர்வாக அமையும் என ஐஐடி நிர்வாகம் நம்புகிறது.&lt;/p&gt;&lt;p&gt;அறிவியல் பூர்வமான தியானப் பயிற்சிகள் மூலம் மாணவர்களின் கவனிப்புத் திறன், முடிவெடுக்கும் திறன் மற்றும் மன உறுதி ஆகியவற்றை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சமூக மேம்பாட்டிற்கு ஆன்மீக அறிவியலை எவ்வாறு பயன்படுத்தலாம் என்ற புதிய கோணத்தில் இந்த மையம் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>career</category>
            <dc:creator>Suresh Manthiram</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/career/iit-madras-launches-carsss-to-study-the-link-between-spirituality-bq279o5"/>
        </item>
        <item>
            <title><![CDATA[அரசு வேலை மட்டும் இல்ல… இந்த வேலைகளில் லட்சம் சம்பளம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/webstories/career/no-government-job-try-these-high-salary-careers-c5h66fn</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/webstories/career/no-government-job-try-these-high-salary-careers-c5h66fn</guid>
            <pubDate>Fri, 03 Apr 2026 22:23:35 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;அரசு வேலை கிடைத்தால் வாழ்க்கை செட்டில்னு நினைக்கிற காலம் மலையேறிடுச்சு. அரசு வேலைகளில் மட்டும்தான் அதிக சம்பளம்னு இல்லை.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jv17k6t0zzfwq7aa32vxhttx,imgname-money-making-1747019471680.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <category>career</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/webstories/career/no-government-job-try-these-high-salary-careers-c5h66fn"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Interview மட்டும் கிளியர் பண்ணுங்க… Bank Job உங்களுக்கே! சம்பளத்தை அள்ளிக்கொடுக்குறாங்க.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/career/bank-of-baroda-recruitment-2026-104-vacancies-apply-before-april-16-fcgembh</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/career/bank-of-baroda-recruitment-2026-104-vacancies-apply-before-april-16-fcgembh</guid>
            <pubDate>Fri, 03 Apr 2026 10:48:07 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;பேங்க் ஆஃப் பரோடா வங்கி, 104 காலிப்பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எந்த டிகிரி படித்தவர்களும் அனுபவத்துடன் AVP II மற்றும் துணை மேலாளர் போன்ற ஒப்பந்த அடிப்படையிலான பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k9tr2z3y72qd3ez00gwdcxrf,imgname-41526096-92ec-45f2-a985-a228092e2043--1--1762908011646.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;பேங்க் ஆஃப் பரோடா வங்கி, 104 காலிப்பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எந்த டிகிரி படித்தவர்களும் அனுபவத்துடன் AVP II மற்றும் துணை மேலாளர் போன்ற ஒப்பந்த அடிப்படையிலான பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்றைய போட்டி மிகுந்த வேலைவாய்ப்பு சூழலில், வங்கித் துறையில் ஒரு நிலையான வேலை கிடைப்பது பலரின் கனவாக உள்ளது. அந்த வகையில், Bank of Baroda தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு வேலை தேடுபவர்களுக்கு சிறந்த வாய்ப்பை வழங்கியுள்ளது. குறிப்பாக, எந்த டிகிரி படித்தவர்களும் அனுபவத்துடன் விண்ணப்பிக்கலாம் என்பதால், இது பலருக்கும் பெரிய சந்தர்ப்பமாக பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த அறிவிப்பின் மூலம் AVP II பிரிவில் Group Head, Territory Head போன்ற உயர்நிலைப் பணிகளும், Deputy Manager பிரிவில் Senior Relationship Manager, Wealth Strategist போன்ற பணிகளும் நிரப்பப்பட உள்ளன. இவை அனைத்தும் ஒப்பந்த அடிப்படையிலான (Contract) பணியிடங்கள் ஆகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மொத்தமாக 104 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 24 மற்றும் அதிகபட்ச வயது 45 ஆகும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது தளர்வும் வழங்கப்படுகிறது. கல்வித் தகுதி எந்த டிகிரியாக இருந்தாலும் பரவாயில்லை; ஆனால் சம்பந்தப்பட்ட துறையில் அனுபவம் இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விண்ணப்பதாரர்கள் முதலில் விண்ணப்பச் சரிபார்ப்புக்கு உட்படுத்தப்படுவார்கள். பின்னர் ஆன்லைன் தேர்வு, Psychometric Test மற்றும் இறுதியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இது முறையான மற்றும் துல்லியமான தேர்வு செயல்முறையாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்ரல் 16, 2026 என்பதால், தகுதி உள்ளவர்கள் விரைவாக விண்ணப்பிப்பது நல்லது.&lt;/p&gt;&lt;p&gt;விண்ணப்பிக்கும் இணையதளம்: bankappsweb.bankofbaroda.bank.in&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அனுபவம் உள்ள பட்டதாரிகளுக்கு இது ஒரு சிறந்த வங்கி வேலை வாய்ப்பாகும். நல்ல சம்பளம், வளர்ச்சி வாய்ப்பு மற்றும் மதிப்புமிக்க வேலை சூழல் ஆகியவை இந்த வேலைவாய்ப்பின் முக்கிய அம்சங்களாகும். சரியான நேரத்தில் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டால், உங்கள் தொழில் வாழ்க்கையில் ஒரு பெரிய முன்னேற்றத்தை பெறலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>career</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/career/bank-of-baroda-recruitment-2026-104-vacancies-apply-before-april-16-fcgembh"/>
        </item>
        <item>
            <title><![CDATA[உலகை ஆளும் இந்திய மூளைகள்! QS தரவரிசையில் சீனா, அமெரிக்காவுக்கு டஃப் கொடுக்கும் இந்தியா - ஐஐடி-களின் மாஸ் சாதனை!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/career/india-sees-massive-surge-in-qs-subject-rankings-2026-gexn3rs</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/career/india-sees-massive-surge-in-qs-subject-rankings-2026-gexn3rs</guid>
            <pubDate>Wed, 25 Mar 2026 22:28:43 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;QS Subject Rankings QS உலக பல்கலைக்கழக தரவரிசை 2026: இந்திய கல்வி நிறுவனங்கள் அபார வளர்ச்சி. ஐஐடி பாம்பே மற்றும் ஐஐஎம் அகமதாபாத் முதலிடம்! ஐஐடி-களின் மாஸ் சாதனை!&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kmjysz3270van2zp4p2d0xw7,imgname-qs-subject-rankings-1774457781346.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;QS Subject Rankings QS உலக பல்கலைக்கழக தரவரிசை 2026: இந்திய கல்வி நிறுவனங்கள் அபார வளர்ச்சி. ஐஐடி பாம்பே மற்றும் ஐஐஎம் அகமதாபாத் முதலிடம்! ஐஐடி-களின் மாஸ் சாதனை!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சர்வதேச அளவில் பல்கலைக்கழகங்களின் தரத்தை ஆய்வு செய்து வெளியிடும் 'QS உலக பல்கலைக்கழக தரவரிசை 2026' (QS World University Rankings by Subject 2026) சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் இந்திய கல்வி நிறுவனங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளன. உலக அளவில் புதிய பாடப்பிரிவு சேர்க்கைகளில் அமெரிக்கா, சீனா மற்றும் இங்கிலாந்துக்கு அடுத்தபடியாக இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இந்தியாவின் முன்னேற்ற விகிதம் 44 சதவீதமாக உள்ளது. இது இங்கிலாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகளை விட அதிகமாகும். மொத்தம் 99 இந்திய கல்வி நிறுவனங்கள் இந்தத் தரவரிசையில் இடம்பிடித்துள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவின் உயர்கல்வி வளர்ச்சியில் ஐஐடி-கள் (IITs) தொடர்ந்து முதுகெலும்பாக இருந்து வருகின்றன. குறிப்பாக ஐஐடி பாம்பே (IIT Bombay) 30 பாடப்பிரிவுகளில் தரவரிசைப்படுத்தப்பட்டு இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து ஐஐடி காரக்பூர், டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் ஐஐடி மெட்ராஸ் ஆகியவை முன்னிலையில் உள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;கணினி அறிவியல் (Computer Science) துறையில் இந்தியா மிகப்பெரிய பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளது. கடந்த ஆண்டு உலக அளவில் டாப் 100 இடங்களில் 2 இந்திய நிறுவனங்கள் மட்டுமே இருந்த நிலையில், இந்த ஆண்டு அது 6 ஆக உயர்ந்துள்ளது. ஐஐடி பாம்பே மற்றும் ஐஐடி டெல்லி ஆகியவை டாப் 50 இடங்களுக்குள் நுழைந்துள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பொறியியல் துறையைத் தாண்டி, வணிக மேலாண்மை (Business Education) துறையிலும் இந்தியா முத்திரை பதித்துள்ளது. முதல்முறையாக, 'மார்க்கெட்டிங்' (Marketing) பாடப்பிரிவில் ஐஐஎம் அகமதாபாத் (IIM Ahmedabad) உலக அளவில் 21-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;மேலும், மேலாண்மை படிப்புகளில் இந்தியாவின் 7 நிறுவனங்கள் உலக அளவில் டாப் 100 இடங்களுக்குள் வந்துள்ளன. இது இந்திய மேலாண்மை கல்வியின் தரம் சர்வதேச தரத்திற்கு உயர்ந்துள்ளதைக் காட்டுகிறது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU) வளர்ச்சி ஆய்வுகள் (Development Studies) பிரிவில் உலக அளவில் 26-வது இடத்தைப் பிடித்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அறிவியல், தொழில்நுட்பம் (STEM) மற்றும் மேலாண்மைத் துறைகளில் இந்தியா வலுவாக இருந்தாலும், கலை மற்றும் மானுடவியல் (Arts and Humanities) துறைகளில் இன்னும் முன்னேற வேண்டியுள்ளது. இந்தத் துறைகளில் பெரும்பாலான இந்திய நிறுவனங்களின் தரவரிசை சற்று குறைந்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;இருப்பினும், இயற்கை அறிவியல் (Natural Sciences) மற்றும் வாழ்க்கை அறிவியல் (Life Sciences) பிரிவுகளில் இந்தியாவின் வளர்ச்சி சீராக உள்ளது. எய்ம்ஸ் (AIIMS) மற்றும் ஐஐஎஸ்சி பெங்களூரு (IISc Bangalore) போன்ற நிறுவனங்கள் தங்களது உலகளாவிய இருப்பைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளன. மொத்தத்தில், 2026-ம் ஆண்டு QS தரவரிசை இந்தியாவின் உயர்கல்வித் துறை ஒரு புதிய பொற்காலத்தை நோக்கி நகர்வதை உறுதிப்படுத்துகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>career</category>
            <dc:creator>Suresh Manthiram</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/career/india-sees-massive-surge-in-qs-subject-rankings-2026-gexn3rs"/>
        </item>
        <item>
            <title><![CDATA[இனி ஸ்கூல்லயும் AI தான்!  பள்ளிகளில் AI மொழி ஆய்வகங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் - கல்வித்துறையில் புதிய புரட்சி!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/career/ai-language-labs-school-infrastructure-fund-articleshow-gmawtqw</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/career/ai-language-labs-school-infrastructure-fund-articleshow-gmawtqw</guid>
            <pubDate>Wed, 25 Mar 2026 22:42:54 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;AI பள்ளிகளில் AI மொழி ஆய்வகங்கள் மற்றும் ₹475 கோடி உட்கட்டமைப்பு வசதிகள் - கல்வித்துறையில் புதிய புரட்சி! இனி ஸ்கூல்லயும் AI தான்! கல்வித்துறையில் புதிய புரட்சி!&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kmhk8fsw96n53tsr7zf9pty9,imgname-ai-jobs-1-1774412119868.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;இந்தியாவின் தலைநகரான டெல்லி, கல்வித்துறையில் எப்போதும் ஒரு முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது. அந்த வரிசையில், 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை முதல்வர் ரேகா குப்தா தாக்கல் செய்துள்ளார். இதில் கல்வித்துறைக்கு மட்டும் சுமார் ₹19,148 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மாணவர்களின் எதிர்காலத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் வகையில் பல அதிரடி திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பள்ளிக் கல்வியில் புகுத்துவது மற்றும் ஆரம்பக்கால கல்வி முறையில் பெரிய மாற்றங்களைச் செய்வது என இந்த பட்ஜெட் ஒரு &quot;கல்விப் புரட்சியை&quot; நோக்கிய பயணமாக அமைந்துள்ளது.&lt;/p&gt;&lt;h2&gt;டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் AI மொழி ஆய்வகங்கள்&lt;/h2&gt;&lt;p&gt;மாணவர்களின் கவனித்தல், பேசுதல், வாசித்தல் மற்றும் எழுதும் திறன்களை (LSRW) மேம்படுத்தும் நோக்கில், &quot;டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மொழி ஆய்வகங்கள்&quot; என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவை சாதாரண ஆய்வகங்கள் அல்ல; செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் அதிநவீன மையங்கள்.&lt;/p&gt;&lt;p&gt;முதற்கட்டமாக 100 அரசுப் பள்ளிகளில் சோதனை முறையில் தொடங்கப்பட்ட இத்திட்டம், தற்போது 6, 9 மற்றும் 11-ம் வகுப்பு படிக்கும் 60,000 மாணவர்களுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது. இதன் மூலம் தமிழ், இந்தி, சமஸ்கிருதம் போன்ற இந்திய மொழிகளுடன் பிரஞ்சு, ஜெர்மன் மற்றும் ஸ்பானிஷ் போன்ற வெளிநாட்டு மொழிகளையும் மாணவர்கள் எளிதாகக் கற்றுக்கொள்ள முடியும்.&lt;/p&gt;&lt;h2&gt;3 வயது முதல் பள்ளி: ஆரம்பக் கல்வியில் புதிய மாற்றம்&lt;/h2&gt;&lt;p&gt;தேசிய கல்வி கொள்கையின் (NEP) பரிந்துரைகளை ஏற்று, டெல்லி அரசு தனது பள்ளிக் கல்வி அமைப்பில் ஒரு முக்கிய மாற்றத்தைச் செய்துள்ளது. 2026-27 கல்வியாண்டு முதல், ஒன்றாம் வகுப்பில் சேர்வதற்கு முன்னதாக 3 ஆண்டுகள் முன்-தொடக்கக் கல்வி (Pre-primary education) முறை கட்டாயமாக்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;இதன்படி, 3 முதல் 5 வயது வரையிலான குழந்தைகள் இந்த முறையின்கீழ் கல்வி பயில்வார்கள். மேலும், 2028-29 முதல் ஒன்றாம் வகுப்பில் சேர குறைந்தபட்ச வயது 6 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது குழந்தைகளின் ஆரம்பக்கால கற்றல் திறனை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;h2&gt;₹475 கோடியில் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாடு&lt;/h2&gt;&lt;p&gt;டெல்லி அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், நிலவும் இடநெருக்கடியைச் சமாளிக்கப் பெரிய அளவிலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய பள்ளி கட்டிடங்களைக் கட்ட ₹200 கோடியும், ஏற்கனவே உள்ள பள்ளிகளை விரிவுபடுத்த ₹275 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;இது தவிர, நரேலாவில் ஒரு &quot;ஒருங்கிணைந்த கல்வி நகரம்&quot; (Integrated Education City), முண்ட்காவில் விளையாட்டு பல்கலைக்கழகம் மற்றும் தேசிய சட்டப் பல்கலைக்கழகம் என டெல்லியின் கல்வி வரைபடமே மாறப்போகிறது. மனப்பாடம் செய்யும் முறையிலிருந்து மாறி, சிந்திக்கும் திறனை வளர்க்கும் வகையில் தேர்வுகள் மற்றும் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட உள்ளன.&lt;/p&gt;&lt;h2&gt;மாணவர்களுக்கான சலுகைகளும் டிஜிட்டல் உதவியும்&lt;/h2&gt;&lt;p&gt;பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் உதவும் வகையில் சீருடை மானியம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி:&lt;/p&gt;&lt;p&gt;&bull; நர்சரி முதல் 5-ம் வகுப்பு வரை: ₹1,250&lt;/p&gt;&lt;p&gt;&bull; 6 முதல் 8-ம் வகுப்பு வரை: ₹1,500&lt;/p&gt;&lt;p&gt;&bull; 9 முதல் 12-ம் வகுப்பு வரை: ₹1,700&lt;/p&gt;&lt;p&gt;மேலும், 9-ம் வகுப்பு மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் மற்றும் 10-ம் வகுப்பில் சிறப்பாகச் செயல்படும் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டங்களும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், டெல்லி அரசின் இந்த பட்ஜெட் வெறும் எண்களின் தொகுப்பாக இல்லாமல், எதிர்கால தலைமுறையை உலகளாவிய போட்டிக்குத் தயார் செய்யும் ஒரு உன்னத முயற்சியாகத் தெரிகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>career</category>
            <dc:creator>Suresh Manthiram</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/career/ai-language-labs-school-infrastructure-fund-articleshow-gmawtqw"/>
        </item>
        <item>
            <title><![CDATA[படிக்கும்போதே மாதம் ₹20,000 சம்பாதிக்கலாம்! இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) சூப்பர் இன்டர்ன்ஷிப் வாய்ப்பு!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/career/nhai-summer-internship-2026-keg62ac</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/career/nhai-summer-internship-2026-keg62ac</guid>
            <pubDate>Mon, 30 Mar 2026 21:34:36 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;NHAI Summer Internship மாதம் ரூ. 20,000 உதவித்தொகை! இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் கோடைக்கால இன்டர்ன்ஷிப் - உடனே விண்ணப்பியுங்கள்! &amp;nbsp;மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு! NHAI-யில் மாதம் ரூ. 20,000 உதவித்தொகையுடன் இன்டர்ன்ஷிப்!&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kmzqq3ykz5enjt61yvq5ab7x,imgname-nhai-summer-internship-1774886555603.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;NHAI Summer Internship மாதம் ரூ. 20,000 உதவித்தொகை! இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் கோடைக்கால இன்டர்ன்ஷிப் - உடனே விண்ணப்பியுங்கள்! &amp;nbsp;மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு! NHAI-யில் மாதம் ரூ. 20,000 உதவித்தொகையுடன் இன்டர்ன்ஷிப்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) தனது 2026-ஆம் ஆண்டிற்கான கோடைக்கால இன்டர்ன்ஷிப் திட்டத்திற்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்து நேரடியாகக் கற்றுக்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு இது ஒரு சிறந்த தளமாகும். தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மாதம் ₹20,000 உதவித்தொகை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த இன்டர்ன்ஷிப் திட்டம் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&bull; பொறியியல்: சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐடி, எலக்ட்ரானிக்ஸ்.&lt;/p&gt;&lt;p&gt;&bull; மற்ற துறைகள்: டேட்டா சயின்ஸ், நிதி (Finance), சட்டம், மேலாண்மை (Management), வணிகம் (Commerce), மற்றும் மாஸ் கம்யூனிகேஷன்.&lt;/p&gt;&lt;p&gt;இளங்கலை (UG) மற்றும் முதுகலை (PG) பயிலும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த இன்டர்ன்ஷிப் மொத்தம் இரண்டு மாதங்கள் நடைபெறும். தேர்வு செய்யப்படும் மாணவர்கள் NHAI-யின் தலைமை அலுவலகம் அல்லது மண்டல அலுவலகங்களில் பணியமர்த்தப்படுவார்கள். சிவில் பொறியியல் மாணவர்கள் சாலை வடிவமைப்பு மற்றும் கட்டுமான மேற்பார்வையில் ஈடுபடுவார்கள். மற்ற துறை மாணவர்கள் தரவு பகுப்பாய்வு, ஐடி சிஸ்டம்ஸ், சுங்கச்சாவடி செயல்பாடுகள் மற்றும் சட்ட ரீதியான பணிகளில் உதவி புரிவார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வெற்றிகரமாக இன்டர்ன்ஷிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு மாதம் ₹20,000 உதவித்தொகையுடன் கூடிய அதிகாரப்பூர்வ சான்றிதழ் வழங்கப்படும். இது மாணவர்களின் எதிர்கால வேலைவாய்ப்பிற்கு பெரும் உதவியாக இருக்கும். ஆண்டுதோறும் சுமார் 500 மாணவர்களை இந்தத் திட்டத்தின் கீழ் இணைக்க NHAI திட்டமிட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆர்வமுள்ள மாணவர்கள் internshipsatnhai.digitalindiacorporation.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கக் கடைசி நாள் ஏப்ரல் 15, 2026 ஆகும்.&lt;/p&gt;&lt;p&gt;அரசுத் துறையில் நேரடியாகப் பணிபுரிந்து அனுபவம் பெற விரும்பும் மாணவர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு. கடைசி நேரத் தடையைத் தவிர்க்க முன்கூட்டியே விண்ணப்பிப்பது நல்லது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>career</category>
            <dc:creator>Suresh Manthiram</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/career/nhai-summer-internship-2026-keg62ac"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Training: மாதம் ரூ.50 ஆயிரம் வருமானம் வேண்டுமா.?! இந்த இலவச பயிற்சியில் பங்கேற்றால் போதும்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/career/training-want-to-earn-rs50000-per-month-just-join-this-free-training-program-n03o1cd</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/career/training-want-to-earn-rs50000-per-month-just-join-this-free-training-program-n03o1cd</guid>
            <pubDate>Sat, 28 Mar 2026 09:33:58 +0530</pubDate>
            <description><![CDATA[பெரம்பலூரில் பெண்களுக்கு தையல் மற்றும் அழகு கலைகளில் இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சியில் உணவு, அரசு சான்றிதழுடன், சுயதொழில் தொடங்க வங்கிக் கடன் பெற வழிகாட்டுதலும் அளிக்கப்பட்டு, மாதந்தோறும் நல்ல வருமானம் ஈட்ட வழிவகை செய்யப்படுகிறது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ke0tsgpt82pw4ykbnbdh0z3j,imgname-df4958b4-4853-457d-9c57-c57676894a83-1767407141594.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[பெரம்பலூரில் பெண்களுக்கு தையல் மற்றும் அழகு கலைகளில் இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சியில் உணவு, அரசு சான்றிதழுடன், சுயதொழில் தொடங்க வங்கிக் கடன் பெற வழிகாட்டுதலும் அளிக்கப்பட்டு, மாதந்தோறும் நல்ல வருமானம் ஈட்ட வழிவகை செய்யப்படுகிறது.&lt;img&gt;&lt;p&gt;இன்றைய காலத்தில் வேலை தேடி அலைவதற்குப் பதிலாக, சுயதொழில் தொடங்கி நிலையான வருமானத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் ஆண்கள், பெண்கள் மற்றும் இளைஞர்களிடம் &amp;nbsp;அதிகரித்து வருகிறது. குறிப்பாக இல்லத்தரசிகள் தங்கள் திறமைகளை பயன்படுத்தி குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் ஆதரவாக நிற்க முயற்சிக்கிறார்கள். ஆனால் சரியான பயிற்சி, வழிகாட்டுதல், முதலீட்டு ஆதரவு ஆகியவை இல்லாததால் பலரின் கனவு பாதியிலேயே &amp;nbsp;காணாமல் &amp;nbsp;போகிறது. இப்படிப்பட்ட சூழலில், இலவசமாக திறமைகளை கற்றுக்கொடுத்து, தொழில் தொடங்க வழிகாட்டும் பயிற்சி மையங்கள் உண்மையிலேயே பெரிய வாய்ப்பாக மாறுகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தையல் பயிற்சி 31 நாட்களும் அழகு கலை பயிற்சி 35 நாட்களும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும் இந்த பயிற்சியில் &amp;nbsp;பங்கேற்பவர்கள் காலை மற்றும் மதிய உணவும் இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிவில் அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழும் வழங்கப்படும் என்பது முக்கிய அம்சமாகும். ஒரே மாதத்தில் எல்லா வியாபார விஷயங்களும் கற்றுக்கொடுக்கப்படுவதால் நீங்கள் உடனே தொழில் தொடங்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பயிற்சி மட்டுமல்லாமல் அதன் பிறகு என்ன செய்யலாம் என்பது குறித்தும் பெண்களுக்கு வழிகாட்டப்படுகிறது. இந்த பயிற்சியின் மூலம் திறமைகளை கற்றுக்கொண்ட பெண்களுக்கு வங்கிக் கடன் பெறுவதற்கான வழிகாட்டுதலும் வழங்கப்படும். இதன் மூலம் தையல் கடை அல்லது பியூட்டி பார்லர் போன்ற சுயதொழில்களை தொடங்கி, மாதம் ரூ.50,000 வரை வருமானம் ஈட்டும் வாய்ப்பும் உருவாகிறது. குடும்ப பொருளாதாரத்தை உயர்த்த விரும்பும் பெண்களுக்கு இது ஒரு சிறந்த தொடக்கமாக இருக்கும். கடின உழைப்பும், கொஞ்சம் கிரியேட்டிவிட்டியும் இருந்தால் வருமானத்தை மேலும் அதிகரிக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த பயிற்சியில் சேர விரும்புவோர் ஏப்ரல் 5ஆம் தேதிக்குள் தேவையான ஆவணங்கள் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்களுடன் பெரம்பலூரில் உள்ள பயிற்சி மைய அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு வழங்கப்பட்டுள்ள தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம். தங்களின் எதிர்காலத்தை மாற்றிக் கொள்ள விரும்பும் பெண்கள் இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். &lt;strong&gt;மேலும் விபரங்கள் தேவைப்பட்டால் 04328 - 277896, 8489065899, 9488840328 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மொத்தத்தில், தங்களுடைய வாழ்க்கையை முன்னேற்ற விரும்பும் பெண்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பாகும். Indian Overseas Bank வழங்கும் இந்த இலவச பயிற்சி மூலம் திறமையை வளர்த்துக் கொண்டு, தன்னம்பிக்கையுடன் சுயதொழிலை தொடங்க முடியும். குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் பெறும் பாதையை இது திறந்து வைக்கிறது. சரியான பயிற்சி, வழிகாட்டுதல் மற்றும் ஆதரவு கிடைக்கும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டால், குடும்பத்தின் பொருளாதார நிலை உயர்வதோடு, சமூகத்தில் ஒரு முன்னுதாரணமாகவும் மாறலாம். இன்று எடுத்த ஒரு சிறிய முடிவு, நாளைய பெரிய வெற்றிக்கான அடித்தளமாக இருக்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>career</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/career/training-want-to-earn-rs50000-per-month-just-join-this-free-training-program-n03o1cd"/>
        </item>
        <item>
            <title><![CDATA[இனி வீட்டிலிருந்தே தேர்வு எழுதலாம்.. ஆனால் ஏஐ உங்களை கவனிக்கும்! சிபிஎஸ்இ-யின் மாடர்ன் பிளான்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/career/cbse-introduces-ai-powered-remote-exams-for-school-counsellors-across-india-articleshow-nvqkgv5</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/career/cbse-introduces-ai-powered-remote-exams-for-school-counsellors-across-india-articleshow-nvqkgv5</guid>
            <pubDate>Mon, 23 Mar 2026 21:38:42 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;CBSE சிபிஎஸ்இ பள்ளி ஆலோசகர்களுக்கு ஏஐ தொழில்நுட்பத்தில் புதிய ஆன்லைன் தேர்வு. 10,000 ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கத் திட்டம். &amp;nbsp;சிபிஎஸ்இ-யின் மாடர்ன் பிளான்!&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kmdq854xyygkqpkj6z4wfxfy,imgname-cbse-ai-exams-1774282085533.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;மாணவர்களின் மனநலன் மற்றும் சமூக-உணர்ச்சி ரீதியான தேவைகளை கவனிக்கும் பள்ளி ஆலோசகர்களின் திறனை மதிப்பிட மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) முடிவு செய்துள்ளது. இதற்காக &quot;ஆன்லைன் ரிமோட் இன்விஜிலேஷன் எக்ஸாம்&quot; (Online Remote Invigilation Exam) எனப்படும் பிரத்யேக தேர்வை வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;இந்தத் திட்டத்தின் கீழ், சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் உள்ள சுமார் 10,000 ஆலோசகர்கள் மற்றும் நல்வாழ்வு ஆசிரியர்களுக்கு (Wellness Teachers) சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இதன் முதற்கட்ட மதிப்பீட்டு பணிகள் கடந்த பிப்ரவரி 2026-லேயே தொடங்கிவிட்டன.&lt;/p&gt;&lt;h2&gt;DIGI-EXAM: ஏஐ தொழில்நுட்பத்தில் இயங்கும் தளம்&lt;/h2&gt;&lt;p&gt;இந்தத் தேர்வுகள் சாதாரண முறையில் நடைபெறாமல், DIGI-EXAM என்ற செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் கொண்ட தளம் மூலம் நடத்தப்படும். இது 'புரோக்டர்டு' (Proctored) முறையில் அமைவதால், மாணவர்கள் தங்களின் இடத்திலிருந்தே தேர்வு எழுதினாலும், ஏஐ மூலம் அவர்கள் கண்காணிக்கப்படுவார்கள். இது தேர்வின் வெளிப்படைத்தன்மையையும், பாதுகாப்பையும் உறுதி செய்கிறது.&lt;/p&gt;&lt;h2&gt;மதிப்பீடு செய்யப்படும் திறன்கள் என்னென்ன?&lt;/h2&gt;&lt;p&gt;இந்தத் தேர்வு ஆலோசகர்களின் மனப்பாடத் திறனை சோதிப்பதற்கல்ல. மாறாக, அவர்களின் பின்வரும் திறன்களை மதிப்பிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது:&lt;/p&gt;&lt;p&gt;&bull; மாணவர்களுக்கு மனநல ஆதரவு வழங்கும் நடைமுறைத் திறன்.&lt;/p&gt;&lt;p&gt;&bull; தொழில்முறை சார்ந்த ஒழுக்க நெறிமுறைகள் (Ethical Understanding).&lt;/p&gt;&lt;p&gt;&bull; சிக்கலான சூழல்களில் மாணவர்களைக் கையாளும் விதம்.&lt;/p&gt;&lt;h2&gt;பள்ளிகளுக்கான முக்கிய அறிவுறுத்தல்கள்&lt;/h2&gt;&lt;p&gt;சிபிஎஸ்இ பள்ளிகள் தங்கள் பள்ளியில் பணியாற்றும் ஆலோசகர்களின் விவரங்களை OASIS இணையதளத்தில் உடனுக்குடன் புதுப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. வாரியத்தால் பரிந்துரைக்கப்படும் போது, அந்த ஆலோசகர்கள் கட்டாயம் இந்த மதிப்பீட்டுத் தேர்வில் பங்கேற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;இத்துடன், அனைத்து பள்ளிகளிலும் மாதவிடாய் கால சுகாதாரம் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, கண்ணியமான மாதவிடாய் சுகாதார உரிமையை அடிப்படை உரிமையாகக் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>career</category>
            <dc:creator>Suresh Manthiram</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/career/cbse-introduces-ai-powered-remote-exams-for-school-counsellors-across-india-articleshow-nvqkgv5"/>
        </item>
        <item>
            <title><![CDATA[இனி AI கத்துக்க காசு தேவையில்லை! மத்திய அரசு & கூகுள் அதிரடி - 15,000 பேருக்கு இலவச ஸ்காலர்ஷிப்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/career/government-ai-scholarship-2026-articleshow-p22scfu</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/career/government-ai-scholarship-2026-articleshow-p22scfu</guid>
            <pubDate>Wed, 25 Mar 2026 22:38:29 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;AI Scholarship மத்திய அரசு, கூகுள் மற்றும் யூடியூப் இணைந்து வழங்கும் 15,000 AI உதவித்தொகை! படைப்பாற்றல் மிக்க மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு. 15,000 பேருக்கு இலவச ஸ்காலர்ஷிப்!&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kmjzertjsv94bpvzqgh9swjh,imgname-ai-scholarship-1774458463058.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;இன்றைய டிஜிட்டல் யுகத்தில், செயற்கை நுண்ணறிவு (AI) என்பது வெறும் தொழில்நுட்பம் மட்டுமல்ல, அது ஒரு வாழ்க்கைத் தேவையாக மாறிவிட்டது. இதனை உணர்ந்த மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் (MIB), மும்பையில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் கிரியேட்டிவ் டெக்னாலஜிஸ் (IICT) உடன் இணைந்து ஒரு மாபெரும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. உலகப் புகழ்பெற்ற கூகுள் மற்றும் யூடியூப் நிறுவனங்களுடன் கைகோர்த்து, சுமார் 15,000 மாணவர்களுக்கு AI பயிற்சி மற்றும் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;இந்தத் திட்டம் குறிப்பாக மீடியா, பொழுதுபோக்கு, அனிமேஷன், கேமிங் மற்றும் டிஜிட்டல் கதைசொல்லல் (Storytelling) ஆகிய துறைகளில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;h2&gt;யாரெல்லாம் பயன்பெறலாம்? என்னென்ன கற்றுத் தரப்படும்?&lt;/h2&gt;&lt;p&gt;இந்த &quot;நேஷனல் AI ஸ்கில்லிங்&quot; முன்முயற்சி, வேலைவாய்ப்பிற்குத் தயாராகும் மாணவர்களையும், இளம் தொழில் வல்லுநர்களையும் மையமாகக் கொண்டது. இதில் மாணவர்கள் வெறும் தியரி மட்டும் கற்காமல், நிஜ உலகப் பணிச்சூழலில் AI கருவிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைத் நடைமுறையாகக் கற்பார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;குறிப்பாக, கூகுளின் 'கேரியர் சர்டிபிகேட்ஸ்' மற்றும் கூகுள் கிளவுட் மூலம் அடிப்படை AI கருத்துக்கள், பொறுப்பான AI பயன்பாடு மற்றும் உருவாக்கப்படும் AI (Generative AI) போன்ற நவீன நுணுக்கங்கள் கற்றுக் கொடுக்கப்படும்.&lt;/p&gt;&lt;h2&gt;இரண்டு கட்டங்களாக நடைபெறும் பயிற்சி&lt;/h2&gt;&lt;p&gt;இந்தத் திட்டம் மிகத் தெளிவாக இரண்டு கட்டங்களாகத் திட்டமிடப்பட்டுள்ளது:&lt;/p&gt;&lt;p&gt;1. முதல் கட்டம்: தேர்ந்தெடுக்கப்படும் அனைத்து மாணவர்களுக்கும் AI-ன் அடிப்படைகள் மற்றும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றிய அடிப்படைப் பயிற்சி வழங்கப்படும்.&lt;/p&gt;&lt;p&gt;2. இரண்டாம் கட்டம்: முதற்கட்டத்தை வெற்றிகரமாக முடிப்பவர்கள், அடுத்த கட்டத்திற்குத் தகுதி பெறுவார்கள். இதில் ஹேண்ட்ஸ்-ஆன் புராஜெக்ட்ஸ் (Hands-on projects), யூடியூப் தளத்தில் உள்ள சிறந்த நடைமுறைகள் மற்றும் கூகுளின் உயர் ரக AI கருவிகளைப் பயன்படுத்தும் பயிற்சிகள் வழங்கப்படும்.&lt;/p&gt;&lt;p&gt;இந்த இரண்டாம் கட்டப் பயிற்சியானது இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ள 'கிரியேட்டிவ் ஹப்களில்' நேரடி மற்றும் ஆன்லைன் என இரு முறைகளிலும் (Hybrid Mode) நடைபெறும்.&lt;/p&gt;&lt;h2&gt;இந்தியாவின் 'ஆரஞ்சு எக்கனாமி' (Orange Economy)&lt;/h2&gt;&lt;p&gt;2026-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில், 'ஆரஞ்சு எக்கனாமி' எனப்படும் படைப்பாற்றல் சார்ந்த பொருளாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அனிமேஷன், கேமிங், டிஜிட்டல் கன்டென்ட் போன்ற துறைகளே இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்குத் தூணாக இருக்கும் என அரசு நம்புகிறது. அதற்குத் தேவையான திறமையான மனிதவளத்தை உருவாக்கவே இந்த IICT, கூகுள் மற்றும் யூடியூப் கூட்டணி உருவாகியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;ஏற்கனவே IICT மற்றும் யூடியூப் இணைந்து வழங்கிய &quot;Create with AI&quot; என்ற திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது இது தேசிய அளவிலான ஒரு கட்டமைக்கப்பட்ட திட்டமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய இளைஞர்கள் உலகளாவிய டிஜிட்டல் சந்தையில் முன்னணி இடத்தைப் பிடிக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>career</category>
            <dc:creator>Suresh Manthiram</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/career/government-ai-scholarship-2026-articleshow-p22scfu"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Job Alert: 10th முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை.! ரூ.63,000 சம்பளத்துடன் சென்னையில் பணி வாய்ப்பு.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/career/customs-chennai-recruitment-2026-10-group-c-vacancies-apply-now-pixrhit</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/career/customs-chennai-recruitment-2026-10-group-c-vacancies-apply-now-pixrhit</guid>
            <pubDate>Mon, 06 Apr 2026 10:15:07 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;சென்னை கஸ்டம்ஸ் துறை 2026-ஆம் ஆண்டிற்கான &amp;nbsp;Group C பணிகளுக்கு காலியிடங்களை அறிவித்துள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் தொடர்புடைய அனுபவம் உள்ளவர்கள் இந்த மத்திய அரசு வேலைக்கு ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kg459egvqatgph9xkqx2epvq,imgname-sbi-cbo-selection-process-1769666296347.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சென்னை கஸ்டம்ஸ் துறை 2026-ஆம் ஆண்டிற்கான &amp;nbsp;Group C பணிகளுக்கு காலியிடங்களை அறிவித்துள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் தொடர்புடைய அனுபவம் உள்ளவர்கள் இந்த மத்திய அரசு வேலைக்கு ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மத்திய அரசு துறையில் நிலையான வேலை பெற வேண்டும் என்பது பல இளைஞர்களின் கனவாக உள்ளது. அந்த கனவை நனவாக்கும் வகையில் சென்னை கஸ்டம்ஸ் துறை (Customs Chennai) 2026 ஆம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Tradesman, Seaman, Greaser போன்ற Group C பணியிடங்களுக்கு மொத்தம் 10 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறைந்த கல்வித் தகுதி மற்றும் அனுபவம் உள்ளவர்களுக்கும் இந்த வாய்ப்பு திறந்திருக்கிறது என்பதால், இது ஒரு அரிய சந்தர்ப்பமாக பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த ஆட்சேர்ப்பின் மூலம் மொத்தம் 10 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் Seaman பணிக்கு 6 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. Tradesman மற்றும் Greaser பணிகளுக்கு தலா 2 இடங்கள் உள்ளன. இவை அனைத்தும் சென்னை நகரில் உள்ள Marine Wing &ndash; Customs (Preventive) பிரிவில் பணியமர்த்தப்படவுள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;Tradesman பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு ITI சான்றிதழ் (Mechanic, Diesel, Fitter, Turner, Welder, Electrician போன்ற துறைகள்) கட்டாயமாக வேண்டும். மேலும் குறைந்தது 2 ஆண்டுகள் சம்பந்தப்பட்ட துறையில் அனுபவம் இருக்க வேண்டும். Seaman பணிக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் கடலில் இயங்கும் இயந்திர கப்பல்களில் 3 ஆண்டுகள் அனுபவம் அவசியம். அதில் குறைந்தது 2 ஆண்டுகள் Helmsman மற்றும் seamanship பணிகளில் ஈடுபட்டிருக்க வேண்டும். Greaser பணிக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் கப்பல்களின் இயந்திர பராமரிப்பு பணிகளில் 3 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். மேலும் FRP வேலை, Fire Safety, First Aid போன்ற சான்றிதழ்கள் இருந்தால் கூடுதல் முன்னுரிமை வழங்கப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். Tradesman பணிக்கும் அதிகபட்ச வயது 25 ஆகும். அரசு விதிமுறைகளின்படி SC/ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள், OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகள் தளர்வு வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் வயது தளர்வும் வழங்கப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;Tradesman பணிக்கு Level 2 சம்பளமாக ₹19,900 முதல் ₹63,200 வரை வழங்கப்படும். Seaman மற்றும் Greaser பணிகளுக்கு Level 1 சம்பளமாக ₹18,000 முதல் ₹56,900 வரை கிடைக்கும். இதற்கு கூடுதலாக DA, HRA, TA போன்ற மத்திய அரசு அலவன்ஸ்களும் வழங்கப்படும். மருத்துவ வசதி, ஓய்வூதியம் போன்ற நலன்களும் கிடைக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் இரண்டு கட்டங்களில் தேர்வு செய்யப்படுவார்கள். முதலில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் Physical Endurance Test (Swimming Test)க்கு அழைக்கப்படுவார்கள். கடல் தொடர்பான பணிகள் என்பதால் நீந்தும் திறன் மிகவும் முக்கியமானதாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த ஆட்சேர்ப்புக்கு Offline முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். https://chennaicustoms.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வி சான்றிதழ்கள், வயது ஆதாரம், அனுபவ சான்றிதழ்கள், 4 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் மற்றும் தேவையான ஆவணங்களின் நகல்கள் இணைக்க வேண்டும். மேலும் இரண்டு Self-addressed envelopes சேர்க்க வேண்டும். அனைத்து ஆவணங்களும் சரியாக இணைக்கப்பட்ட விண்ணப்பத்தை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;The Additional Commissioner of Customs (Establishment), Office of the Commissioner of Customs (General), Rajaji Salai, Chennai &ndash; 600001.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விண்ணப்பிக்க தொடங்கிய தேதி &ndash; 04 ஏப்ரல் 2026 விண்ணப்பிக்க கடைசி தேதி &ndash; 30 ஏப்ரல் 2026&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;முக்கிய குறிப்புகள்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து தகுதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தில் தவறுகள் இருந்தால் நிராகரிக்கப்படும்.&lt;/p&gt;&lt;p&gt;சென்னை கஸ்டம்ஸ் வேலைவாய்ப்பு 2026, மத்திய அரசு துறையில் பணிபுரிய விரும்புவோருக்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும். குறைந்த தகுதியிலேயே நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும் இந்த வாய்ப்பை தவறவிடாமல் உடனே விண்ணப்பித்து உங்கள் வாழ்க்கையை முன்னேற்றுங்கள்!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>career</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/career/customs-chennai-recruitment-2026-10-group-c-vacancies-apply-now-pixrhit"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஜேஇஇ மெயின் 2026: இனி கோச்சிங் சென்டர் மட்டும் போதாது! 'ஏஐ' (AI) மூலம் டாப் ரேங்க் வாங்குவது எப்படி?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/career/learn-how-ai-chatbots-and-analytics-are-transforming-jee-main-2026-preparation-q6evl4x</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/career/learn-how-ai-chatbots-and-analytics-are-transforming-jee-main-2026-preparation-q6evl4x</guid>
            <pubDate>Mon, 30 Mar 2026 21:41:47 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;JEE Main 2026 preparation ஜேஇஇ மெயின் தேர்வில் அதிக மதிப்பெண் பெற ஏஐ கருவிகள் மற்றும் சாட்போட்கள் எவ்வாறு உதவுகின்றன? ஒரு விரிவான பார்வை. 'ஏஐ' (AI) மூலம் டாப் ரேங்க் வாங்குவது எப்படி?&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kmzr2mp1m0amh2bs5vmmx4sj,imgname-jee-main--2--1774886933185.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;JEE Main 2026 preparation ஜேஇஇ மெயின் தேர்வில் அதிக மதிப்பெண் பெற ஏஐ கருவிகள் மற்றும் சாட்போட்கள் எவ்வாறு உதவுகின்றன? ஒரு விரிவான பார்வை. 'ஏஐ' (AI) மூலம் டாப் ரேங்க் வாங்குவது எப்படி?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவின் கடினமான போட்டித் தேர்வுகளில் ஒன்றான ஜேஇஇ மெயின் (JEE Main) 2026 தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்குத் தொழில்நுட்பம் இப்போது பெரும் துணையாக மாறி வருகிறது. பாரம்பரியமான பயிற்சி முறைகளுடன் செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகள் இணைவது, மாணவர்கள் தங்கள் பலம் மற்றும் பலவீனங்களைத் துல்லியமாக அறிய உதவுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முன்பெல்லாம் மாதிரித் தேர்வுகளில் (Mock Tests) மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் மட்டுமே அவர்களுக்குத் தெரியும். ஆனால் இப்போது ஏஐ கருவிகள், ஒரு மாணவர் எந்தப் பாடத்தில் பலவீனமாக இருக்கிறார், ஒரு கேள்வியைத் தீர்க்க எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறார் என்பது வரை துல்லியமாகப் பகுப்பாய்வு செய்து வழங்குகின்றன. இது மாணவர்கள் தங்களுக்குக் கடினமாக இருக்கும் பாடங்களில் அதிக கவனம் செலுத்த உதவுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இரவு நேரங்களில் அல்லது ஆசிரியர்கள் இல்லாத நேரத்தில் ஏற்படும் சந்தேகங்களைத் தீர்க்க கூகுள் ஜெமினி (Gemini) மற்றும் சாட்ஜிபிடி (ChatGPT) போன்ற ஏஐ சாட்போட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை சிக்கலான இயற்பியல் மற்றும் கணிதக் கணக்குகளைப் படிநிலை வாரியாக (Step-by-step) விளக்குவதுடன், மாற்று வழிகளையும் கற்றுத் தருகின்றன. கூகுள் நிறுவனம் இதற்காகப் பிரத்யேகமான கல்வி சார்ந்த ஏஐ வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆகாஷ் (Aakash) மற்றும் அரிஹந்த் (Arihant) போன்ற முன்னணி கல்வி நிறுவனங்கள் இப்போது ஏஐ அடிப்படையிலான செயலிகளைப் பயன்படுத்தி வருகின்றன. ஒரு வகுப்பில் 40 மாணவர்கள் இருந்தாலும், ஒவ்வொரு மாணவரின் கற்றல் இடைவெளியையும் ஏஐ மூலம் கண்டறிந்து அவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் கூடுதல் பயிற்சிகளை வழங்க முடிகிறது. இது மாணவர்களின் துல்லியத்தன்மை (Accuracy) மற்றும் வேகத்தை அதிகரிக்க உதவுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தொழில்நுட்பம் உதவினாலும், ஏஐ கருவிகள் தரும் விளக்கங்கள் 100% துல்லியமாக இருக்காது என்று கல்வியாளர்கள் எச்சரிக்கின்றனர். அடிப்படை கருத்துக்களைப் புரிந்துகொள்ள ஆசிரியர்களின் வழிகாட்டுதலும், என்சிஇஆர்டி (NCERT) பாடப்புத்தகங்களும் மிக அவசியம். ஏஐ ஒரு துணைக் கருவியாக மட்டுமே இருக்க வேண்டுமே தவிர, அதுவே முழுமையான தீர்வாகாது.&lt;/p&gt;&lt;p&gt;ஸ்மார்ட்டான முறையில் திட்டமிட்டு, ஏஐ கருவிகளைச் சரியாகப் பயன்படுத்தினால் ஜேஇஇ மெயின் தேர்வில் மாணவர்கள் தங்களது இலக்கை எளிதாக அடையலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>career</category>
            <dc:creator>Suresh Manthiram</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/career/learn-how-ai-chatbots-and-analytics-are-transforming-jee-main-2026-preparation-q6evl4x"/>
        </item>
        <item>
            <title><![CDATA[கைநிறைய சம்பளம்.. புகழ்பெற்ற ஆராய்ச்சி நிறுவனங்கள்! ஐசர் (IISER) 2026 நுழைவுத் தேர்வு - விண்ணப்பிப்பது எப்படி?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/career/iiser-iat-2026-registration-articleshow-q9c4xlk</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/career/iiser-iat-2026-registration-articleshow-q9c4xlk</guid>
            <pubDate>Mon, 23 Mar 2026 21:35:47 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;IISER IAT 2026 IISER 2026 சேர்க்கைக்கான IAT தேர்வு ஜூன் 7-ல் நடைபெறுகிறது. ஏப்ரல் 13-க்குள் விண்ணப்பிக்கவும். தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை இதோ! b&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kmdq3d9c569d6352gc6nzyhk,imgname-iiser-1774281930028.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;இந்தியாவில் மருத்துவத்திற்கு நீட் (NEET), பொறியியலுக்கு ஜே.இ.இ (JEE) இருப்பது போலவே, அடிப்படை அறிவியல் மற்றும் ஆராய்ச்சியில் சிறந்து விளங்க விரும்பும் மாணவர்களுக்கான முதன்மையான நுழைவுத் தேர்வு IAT (IISER Aptitude Test). 2026-27 கல்வி ஆண்டிற்கான இந்தத் தேர்வு குறித்த முக்கிய அறிவிப்புகள் தற்போது வெளியாகியுள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;பெர்ஹாம்பூர், போபால், கொல்கத்தா, மொஹாலி, புனே, திருவனந்தபுரம் மற்றும் திருப்பதி ஆகிய ஏழு இடங்களில் அமைந்துள்ள ஐசர் (IISER) கல்வி நிறுவனங்களில் இளநிலை அறிவியல் படிப்புகளில் சேர இந்த ஒரு தேர்வு மட்டுமே வழியாகும். குறிப்பாக, இந்த ஆண்டு முதல் ஜே.இ.இ மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறாது என்பதால், ஐஏடி தேர்வு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.&lt;/p&gt;&lt;h2&gt;முக்கிய தேதிகள்: எப்போது விண்ணப்பிக்கலாம்?&lt;/h2&gt;&lt;p&gt;ஐஏடி 2026 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான ஆன்லைன் விண்டோ மார்ச் 5, 2026 அன்று திறக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள மாணவர்கள் ஏப்ரல் 13, 2026 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால், ஏப்ரல் 16 முதல் 18 வரை மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;தேர்விற்கான ஹால் டிக்கெட்டுகள் மே 24, 2026 அன்று வெளியாகும். நாடு முழுவதும் உள்ள பல்வேறு மையங்களில் ஜூன் 7, 2026 அன்று காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை நுழைவுத் தேர்வு நடைபெறும்.&lt;/p&gt;&lt;h2&gt;கல்வித் தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை&lt;/h2&gt;&lt;p&gt;இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க, மாணவர்கள் 2024, 2025 அல்லது 2026 ஆகிய ஆண்டுகளில் 12-ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் (அறிவியல் பிரிவு) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களும், SC/ST/PwD பிரிவினர் 55% மதிப்பெண்களும் பெற்றிருப்பது அவசியம்.&lt;/p&gt;&lt;p&gt;மாணவர்கள் உயிரியல், வேதியியல், கணிதம் மற்றும் இயற்பியல் ஆகிய நான்கு பாடங்களில் குறைந்தது மூன்றையாவது படித்திருக்க வேண்டும். சில குறிப்பிட்ட படிப்புகளுக்கு (உதாரணமாக போபால் ஐசரில் பி.டெக் பொருளாதார அறிவியல்) கணிதம் கட்டாயப் பாடமாகும்.&lt;/p&gt;&lt;h2&gt;விண்ணப்பிப்பது எப்படி?&lt;/h2&gt;&lt;p&gt;ஆர்வமுள்ள மாணவர்கள் iiseradmission.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். முதலில் யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு பெற்று, பின் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். தேவையான ஆவணங்களைப் பதிவேற்றி, விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தியவுடன் விண்ணப்ப செயல்முறை நிறைவடையும்.&lt;/p&gt;&lt;p&gt;மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின், உதவி மைய எண்ணான +91 7205457461-ஐ தொடர்பு கொள்ளலாம் அல்லது askjac2026@iiserbpr.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்பு கொள்ளலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>career</category>
            <dc:creator>Suresh Manthiram</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/career/iiser-iat-2026-registration-articleshow-q9c4xlk"/>
        </item>
        <item>
            <title><![CDATA[10ம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. ரயில்வேயில் 11,000+ வேலைகள் காத்திருக்கு.. முழு விபரம் உள்ளே]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/career/rrb-alp-notification-2026-eligibility-dates-salary-details-quxmzow</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/career/rrb-alp-notification-2026-eligibility-dates-salary-details-quxmzow</guid>
            <pubDate>Sat, 28 Mar 2026 13:10:16 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) உதவி லோகோ பைலட் (ALP) பதவிக்கு 11,127 காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ அல்லது டிப்ளமோ முடித்த 18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01gzz1p1tac89msnwa7sjpacea,imgname-railway-1683595396938.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) உதவி லோகோ பைலட் (ALP) பதவிக்கு 11,127 காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ அல்லது டிப்ளமோ முடித்த 18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்திய ரயில்வே துறையில் வேலை பெற விரும்பும் இளைஞர்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பு திறக்கப்பட்டுள்ளது. ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) சார்பில் உதவி லோகோ பைலட் (ALP) பதவிக்கான 11,127 காலிப்பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு மண்டலங்களில் இந்த நியமனம் நடைபெறவுள்ளதால், வேலை தேடுபவர்களுக்கு இது மிகப்பெரிய சந்தர்ப்பமாக பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த ஆட்சேர்ப்பு இந்தியாவின் 21 முக்கிய ரயில்வே மண்டலங்களில் நடைபெறும். சென்னை, மும்பை, பெங்களூரு, செக்குந்தராபாத் உள்ளிட்ட நகரங்களில் இந்த பணிகள் உள்ளன. அதிக அளவில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன, போட்டி இருந்தாலும் தேர்வு வாய்ப்பு அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித்தகுதி 10ஆம் வகுப்பு தேர்ச்சி ஆகும். அதனுடன் ஐடிஐ அல்லது தொடர்புடைய துறையில் டிப்ளமோ படிப்பு முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள் மற்றும் OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வயது தளர்வு வழங்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விண்ணப்ப செயல்முறை முழுவதும் ஆன்லைன் மூலம் மட்டுமே நடைபெறும். மே 15 முதல் விண்ணப்பங்கள் தொடங்கும் நிலையில், ஜூன் 14 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வானவர்களுக்கு ஆரம்ப ஊதியமாக மாதம் ரூ.19,900 வழங்கப்படும். இதனுடன் மத்திய அரசின் பல்வேறு அலவன்ஸ்கள் மற்றும் நலன்களும் கிடைக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தேர்வு செயல்முறையில் பல கட்டங்கள் உள்ளன. முதலில் CBT-1 மற்றும் CBT-2 என இரண்டு கணினி அடிப்படையிலான தேர்வுகள் நடைபெறும். பின்னர் திறன் தேர்வு, ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை நடைபெறும். இந்த அனைத்து நிலைகளையும் வெற்றிகரமாக முடித்தவர்களே இறுதியாக தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்கள் விரைவில் முழுமையான அறிவிப்பில் வெளியாகும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>career</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/career/rrb-alp-notification-2026-eligibility-dates-salary-details-quxmzow"/>
        </item>
        <item>
            <title><![CDATA[யுபிஎஸ்சி தேர்வில் அநீதியா? ஆணிவேரையே பிடுங்கியெறியும் மத்திய அரசு! மாநிலங்களவையில் புயலை கிளப்பிய வில்சன்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/upsc-exam-injustice-wilson-stirs-storm-in-rajya-sabha-articleshow-sxsmd1v</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/upsc-exam-injustice-wilson-stirs-storm-in-rajya-sabha-articleshow-sxsmd1v</guid>
            <pubDate>Wed, 01 Apr 2026 12:39:16 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;wilson: மாநிலங்களவையில் திமுக எம்.பி. பி.வில்சன், யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வை தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளிலும் நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். நேர்காணல் முறையில் சமூக நீதி மறுக்கப்பட்டு வெளிப்படைத்தன்மை இல்லை.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kn3xzg8bg5twr9whqfhqxbkn,imgname-upsc-exam-1775027339531.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;நாடாளுமன்ற பூஜ்ய நேரத்தில் உரையாற்றிய திமுக-வை சேர்ந்த மாநிலங்களவை எம்.பியும், மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன், அரசுப் பணியில் சேர்வதன் மூலம் அரசு வேலைவாய்ப்புகளில் சம வாய்ப்புகளுக்கும், பங்கேற்பு மற்றும் நல்லாட்சிக்கும் ஓர் உந்துசக்தியாக விளங்கும் என்ற நம்பிக்கையில், லட்சக்கணக்கானோர் தங்கள் கனவுகளை நனவாக்க முற்படுவோருக்கு மத்திய பணியாளர் தேர்வாணையமமான யுபிஎஸ்சி ஒரு நுழைவாயிலாகத் திகழ்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;தென்னிந்திய மாணவர்கள் பாதிப்பு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஆனால், முதன் நிலை தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படுகின்றன. அதே நேரத்தில் முதன்மை தேர்வுகள் அரசமைப்பு சட்டத்தில் பட்டியலிடப்பட்டுள்ள 22 மொழிகளில் நடத்தப்படுகின்றன. முதன் நிலை தேர்வுகளை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே எழுத முடியும் என கட்டுப்படுத்துவது தடையை உருவாக்குகிறது. இந்தி அல்லாத மற்றும் ஆங்கிலம் அல்லாத பின்னணியைச் சேர்ந்த அறிவார்ந்த மாணவர்களுக்கு, குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களை சேர்ந்த தென்னிந்திய மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;விண்ணப்பிக்கத் தயங்கும் மாணவர்கள்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இறுதி கட்டத்தில் சமத்துவத்தை அனுமதிக்கும் வேளையில், நுழைவு கட்டத்திலேயே மறுப்பது என்ன மாதிரியான அமைப்பு? தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா அல்லது வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த ஒரு மாணவர், தனது தாய்மொழியில் அறிவுத்திறனை வளர்த்தும், அந்த உண்மையான திறனைப் பிரதிபலிக்காத ஒரு மொழியில் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் முதல் நிலையிலேயே வெளியேற்றப்படுவது, அவர்கள் தகுதி இல்லாததால் அல்ல, மொழியியல் நீதியை மறுப்பதே காரணமாகும். ஆரம்ப வினாத்தாள் ஆங்கிலம் அல்லது இந்தியில் இருப்பதால், கிராமப்புறங்களைச் சேர்ந்த பல மாணவர்கள் குடிமைப் பணித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கத் தயங்குகிறார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;கிட்டத்தட்ட 15 மாதங்கள்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்த கட்டுப்பாடு சமமற்ற ஒரு போட்டிச் சூழலை உருவாக்குவதுடன், அரசு பணிகளில் சமமான வாய்ப்பை மறுப்பதன் மூலம் இந்திய அரசியலமைப்பின் அடிப்படையையே மீறுகிறது. இது தகுதியல்ல, மாறாக திட்டமிட்டு செய்யப்படும் புறக்கணிப்பு. எனவே, தமிழ் உட்பட அனைத்து 22 அட்டவணைப்படுத்தப்பட்ட மொழிகளிலும் முதல்நிலைத் தேர்வு உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்று நான் கோருகிறேன். முதல்நிலைத் தேர்விலிருந்து இறுதித் தேர்வு வரை கிட்டத்தட்ட 15 மாதங்கள் என்கிற தேர்வு நடைமுறை காலமே மிக நீண்டதாக உள்ளது. அதனால் ஒரு தேர்வர் ஒரு முயற்சியில் தோல்வியடைந்தால் ஓராண்டில் அவரது வாய்ப்பை இழக்க நேரிடுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;முதல் மூன்று முயற்சிகளுக்கு நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் செலவாகிவிடுவதால், நாடாளுமன்ற நிலைக்குழு கூட இந்த அதிகப்படியான கால அளவைச் சுட்டிக்காட்டியும், ஒன்றிய அரசிடம் எந்தப் பதிலும் அளிக்கவில்லை. இந்த கால அளவைக் குறைத்து, முதல்நிலைத் தேர்வை ஆண்டுக்கு இருமுறை நடத்துவதைக் கருத்தில் கொள்ள வேண்டும் என ஒன்றிய அரசை கேட்டுக்கொள்கிறேன். நேர்காணல் செயல்முறையும், ஆளுமைத் தேர்வும் வெளிப்படைத் தன்மையற்றதாகவும், பொறுப்பேற்க முடியாததாகவும், மறுஆய்வு செய்ய முடியாததாகவும் உள்ளன. மதிப்பெண் வழங்கும் முறைகள் ஆங்கிலப் புலமை, நகர்ப்புற அனுபவம், உயர் கல்வி நிறுவனப் பின்னணிகளுக்குச் சாதகமாக உள்ளன என்ற தெளிவான கருத்தும், அதற்கான ஆதாரங்களும் அதிகரித்து வருகின்றன.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;மாணவர்களை திட்டமிட்டு அகற்றும் ஒரு வழி&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC), சமூகப் பொருளாதாரப் பிரிவினர் (SE), பழங்குடியினர் (ST) ஆகியோரிடையே ஒரு தீவிரமான அச்சம் நிலவுகிறது. அது என்னவென்றால், எழுத்துத் தேர்வில் பொதுப் பிரிவினருக்கு இணையாக மதிப்பெண்களைப் பெற்றாலும், நேர்காணலில் தங்களுக்கு விகிதாசாரத்திற்கு அதிகமாகக் குறைந்த மதிப்பெண்கள் வழங்கப்படுவதாகவும், அதன் விளைவாகக் குறைந்த தரவரிசைகள், குறைக்கப்பட்ட வாய்ப்புகள் கிடைப்பதாகவும், தங்களை தகுதியானவர்களாகக் கருதப்படவில்லை என்றும் அவர்கள் அஞ்சுகிறார்கள். இது இதர பிற்படுத்தப்பட்டோர், சமூகப் பொருளாதாரப் பிரிவினர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களை திட்டமிட்டு அகற்றும் ஒரு வழியாகவும். சமூக நீதியின் ஆணிவேரையே பிடுங்கியெறிகிறது. எனவே ஒன்றிய அரசாங்கம் நேர்காணல் மதிப்பெண்களைப் பிரிவினர் வாரியாகவும், கல்வி வாரியம் வாரியாகவும் வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>career</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/upsc-exam-injustice-wilson-stirs-storm-in-rajya-sabha-articleshow-sxsmd1v"/>
        </item>
        <item>
            <title><![CDATA[AI குழந்தைகளின் நண்பனா? எதிரியா? பிரம்மாண்ட சர்வதேச மாநாடு.. முழு விவரம் உள்ளே!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/career/bennett-university-to-host-global-summit-on-ai-and-child-development-articleshow-ut51lpq</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/career/bennett-university-to-host-global-summit-on-ai-and-child-development-articleshow-ut51lpq</guid>
            <pubDate>Wed, 08 Apr 2026 19:33:26 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;புகழ்பெற்ற பென்னட் பல்கலைக்கழகம், குழந்தைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த ஒரு சர்வதேச மாநாட்டை நடத்த உள்ளது. இந்த தொழில்நுட்பம் இளம் தலைமுறையினரின் மனதையும் சமூகத்தையும் எப்படி வடிவமைக்கிறது என்பது பற்றி இதில் விவாதிக்கப்படும்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01knpjpqeqssqmkm3gfszymevf,imgname-international-conference-on-ai-and-children-to-be-held-at-bennett-university-whatsapp-image-2026-04-08-at-5.56.08-pm-1775653051863.jpeg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;'செயற்கை நுண்ணறிவு மற்றும் குழந்தைகள்: சமூகங்கள், மனித விழுமியங்கள் மற்றும் நிர்வாகத்தில் அதன் தாக்கம்' என்ற தலைப்பில் ஒரு சர்வதேச மாநாட்டை பென்னட் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கிரேட்டர் நொய்டாவில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில், டைம்ஸ் ஸ்கூல் ஆஃப் மீடியா மற்றும் ஸ்கூல் ஆஃப் ஆர்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் உடன் இணைந்து இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;குழந்தைகள் மீது AI-யின் தாக்கம்&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;செயற்கை நுண்ணறிவு (செயற்கை நுண்ணறிவு) மற்றும் புதிய டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் குழந்தைகளின் வாழ்க்கையை எப்படி மாற்றுகின்றன? என்பதைப் பற்றி இந்த மாநாட்டில் விரிவாக ஆய்வு செய்ய இருக்கிறார்கள். இன்றைய வேகமான டிஜிட்டல் உலகில், குழந்தைகளின் கற்றல், நடத்தை, அடையாளம் மற்றும் மதிப்பீடுகளில் AI-யின் தாக்கம் எப்படி இருக்கிறது என்பதை நிபுணர்கள் விவாதிக்க உள்ளனர்.&lt;/p&gt;&lt;p&gt;குழந்தைகள் பெர்சனலைஸ்டு கன்டென்ட், வாய்ஸ் அசிஸ்டன்ட்கள் மற்றும் இமர்சிவ் மீடியா போன்ற AI கருவிகளைப் பயன்படுத்தும் நிலையில், இதன் நன்மைகள் மற்றும் அபாயங்கள் இரண்டுமே இந்த நிகழ்வில் உன்னிப்பாகக் கவனிக்கப்படும்.&lt;/p&gt;&lt;h3&gt;&lt;strong&gt;என்னென்ன விஷயங்கள் விவாதிக்கப்படும்?&lt;/strong&gt;&lt;/h3&gt;&lt;p&gt;குழந்தைகளின் தனியுரிமை (privacy), ஆன்லைன் பாதுகாப்பு, மற்றும் டிஜிட்டல் தளங்களில் அவர்களின் பிரதிநிதித்துவம் போன்ற முக்கிய கேள்விகளை இந்த மாநாடு எழுப்பும். குழந்தைகள் ஆன்லைனில் என்ன பார்க்கிறார்கள், என்ன கற்றுக்கொள்கிறார்கள் என்பதை அல்காரிதம்கள் எப்படி தீர்மானிக்கின்றன என்பது குறித்தும் விவாதிக்கப்படும். தொழில்நுட்பம், பெற்றோர் வளர்ப்பு, கல்வி, மற்றும் குழந்தைகளிடையே சமூக தொடர்புகளை எப்படி மாற்றுகிறது என்பதையும் நிபுணர்கள் விவாதிப்பார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பல்துறை நிபுணர்கள் பங்கேற்பு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;உலகம் முழுவதிலுமிருந்து ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் குழந்தைகள் உரிமை ஆர்வலர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளனர். AI-யால் உருவாகும் சவால்களுக்குத் தீர்வு காணவும், புதிய யோசனைகளைப் பகிர்ந்து கொள்ளவும் ஒரு தளத்தை உருவாக்குவதே இதன் நோக்கம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஆய்வுக் கட்டுரைகளுக்கு அழைப்பு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;பல்வேறு தலைப்புகளில் இதுவரை வெளியிடப்படாத புதிய ஆய்வுக் கட்டுரைகள் இந்த நிகழ்வுக்கு வரவேற்கப்படுகிறது. கல்வியில் AI, டிஜிட்டல் பெற்றோர் வளர்ப்பு, இமர்சிவ் மீடியா, அடையாளம், சுகாதாரம், உள்ளடக்கம், அணுகல்தன்மை மற்றும் கொள்கை சிக்கல்கள் போன்ற தலைப்புகளில் கட்டுரைகளை அனுப்பலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள், புகழ்பெற்ற சர்வதேச பதிப்பகம் மூலம் ஒரு புத்தகமாக வெளியிடப்படும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;முக்கிய தேதிகள் மற்றும் பங்கேற்பு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஆய்வுச் சுருக்கங்களைச் சமர்ப்பிக்க கடைசி தேதி மே 3 ஆகும். முழு ஆய்வுக் கட்டுரைகளை ஜூன் 21ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பற்றிய அறிவிப்பு ஜூலை 10, 2026 அன்று வெளியிடப்படும். இந்த மாநாடு பென்னட் பல்கலைக்கழக வளாகத்தில் நேரடியாக நடைபெறும். இருப்பினும், வெளிநாட்டுப் பங்கேற்பாளர்கள் ஆன்லைன் மூலமாகவும் கலந்துகொள்ள வாய்ப்பு வழங்கப்படும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;மாநாட்டின் நோக்கம் இதுதான்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;குழந்தைகளின் எதிர்காலத்தை AI எப்படி வடிவமைக்கிறது என்பது குறித்த ஒரு முக்கியமான உலகளாவிய விவாதத்தை இந்த மாநாடு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிஜிட்டல் யுகத்தில், கண்டுபிடிப்புகளுடன் பாதுகாப்பையும் நெறிமுறைகளையும் சமநிலைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இது எடுத்துக்காட்டுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>career</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/career/bennett-university-to-host-global-summit-on-ai-and-child-development-articleshow-ut51lpq"/>
        </item>
    </channel>
</rss>
