<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes"?>
<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Thu, 09 Apr 2026 20:11:24 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss/business" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[RBI: வெளிநாட்டு பணம் இனி 1 மணி நேரத்தில் கிரெடிட் ஆகும்.. ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/rbi-new-rules-faster-foreign-remittance-credit-for-bank-customers-137l244</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/rbi-new-rules-faster-foreign-remittance-credit-for-bank-customers-137l244</guid>
            <pubDate>Thu, 09 Apr 2026 20:11:22 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;RBI New Rules: வெளிநாட்டுப் பணம் வாடிக்கையாளர்களின் கைக்கு இனிமேல் உடனே வந்து சேரும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01knsakxmvqb071f8kdqwswycq,imgname-rbi-rules-1775745234587.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;RBI New Rules: வெளிநாட்டுப் பணம் வாடிக்கையாளர்களின் கைக்கு இனிமேல் உடனே வந்து சேரும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பப்படும் பணத்தை பரிமாற்றம் செய்வதில் உள்ள சிக்கல்களை களைய ரிசர்வ் வங்கி புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு பணம் அனுப்பினால், அது நம்முடைய பேங்க் அக்கவுன்ட்டுக்கு வந்து சேர சில சமயம் தாமதம் ஆகும். இந்த பிரச்சனையை சரிசெய்ய இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வங்கிகளுக்கான புதிய விதிகளை வெளியிட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;வங்கிகளுக்கு அறிவுறுத்தல்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;வெளிநாட்டிலிருந்து வரும் பணத்தை வாடிக்கையாளர் கணக்கில் வேகமாக வரவு வைக்க, நடைமுறைகளை எளிதாக்க வேண்டும் என்று வங்கிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது. அனைத்து வர்த்தக வங்கிகளுக்கும் அனுப்பப்பட்ட இந்த சுற்றறிக்கையில், வெளிநாட்டு பணப் பரிமாற்றங்களில் செயல்திறனை அதிகரிப்பதே இதன் நோக்கம் என்று RBI கூறியுள்ளது. மேலும், G20 நாடுகள் நிர்ணயித்த உலகளாவிய இலக்குகளுடன் இது ஒத்துப்போகிறது என்றும் தெரிவித்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&quot;RBI-யின் 'Payments Vision 2025' திட்டத்தின் முக்கிய நோக்கமே, வெளிநாட்டு பணப் பரிமாற்றங்களை இன்னும் திறமையாக மாற்றுவதுதான். மலிவான, வேகமான, வெளிப்படையான மற்றும் எளிதில் அணுகக்கூடிய பணப் பரிமாற்றங்களை உருவாக்க வேண்டும் என்ற G20 நாடுகளின் இலக்குடன் இது இணைந்து செயல்படுகிறது&quot; என்று RBI குறிப்பிட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;வெளிநாட்டுப் பணம், பயனாளியின் வங்கிக்கு வந்து சேர்ந்த பிறகு, அதை வாடிக்கையாளரின் கணக்கில் வரவு வைக்கும் கட்டத்தில்தான் அதிக தாமதம் ஏற்படுவதாக RBI கண்டறிந்துள்ளது. &quot;பணப் பரிமாற்ற வேகத்தில் உள்ள சவால்களில் ஒன்று, பயனாளியின் வங்கியில் நடக்கிறது. அதாவது, பணம் வங்கிக்கு வந்ததிலிருந்து, வாடிக்கையாளர் கணக்கில் வரவு வைக்கப்படும் வரை அதிக நேரம் எடுக்கிறது,&quot; என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;வாடிக்கையாளர்களுக்கு உடனே தகவல்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;தற்போதுள்ள நடைமுறைகளை ஆய்வு செய்த பிறகு, பணத்தை விரைவாக வரவு வைக்கவும், வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கவும் செயல்முறைகளை சீரமைக்க வேண்டியதன் அவசியத்தை ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது. &quot;வெளிநாட்டிலிருந்து பணம் வந்தவுடன், அந்தத் தகவலை உடனடியாக வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் தெரிவிக்க வேண்டும். ஒருவேளை, வங்கி வேலை நேரத்திற்குப் பிறகு பணம் வந்தால், அடுத்த வேலை நாளின் தொடக்கத்திலேயே வாடிக்கையாளருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்&quot; என்று RBI உத்தரவிட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேலும், வங்கிகள் தங்கள் 'Nostro' கணக்குகளின் அன்றைய தின இறுதி ஸ்டேட்மென்ட்டை நம்பி இருப்பதால் தாமதம் ஏற்படுவதையும் RBI சுட்டிக்காட்டியுள்ளது. Nostro கணக்கு என்பது, ஒரு இந்திய வங்கி, வெளிநாட்டு வங்கியில் அந்த நாட்டின் கரன்சியில் வைத்திருக்கும் வங்கிக் கணக்கு ஆகும். &quot;பல வங்கிகள் Nostro கணக்குகளில் பணம் வந்ததை உறுதிப்படுத்த, நாள் முடிவில் வரும் ஸ்டேட்மென்ட்டிற்காக காத்திருக்கின்றன. இதுவே வாடிக்கையாளர் கணக்கில் பணம் வரவு வைக்க தாமதம் ஏற்படக் காரணம்,&quot; என்று சுற்றறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஒரு மணி நேரத்துக்குள் முடிக்க வேண்டும்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்த தாமதத்தைக் குறைக்க, வங்கிகள் அடிக்கடி கணக்குகளை சரிபார்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. &quot;இந்த செயல்முறையை விரைவுபடுத்த, வங்கிகள் Nostro கணக்குகளை அடிக்கடி சரிபார்க்க வேண்டும். முடிந்தால், நிகழ்நேரத்தில் அல்லது ஒரு மணி நேரத்திற்கு மிகாமல் குறிப்பிட்ட இடைவெளியில் இதைச் செய்ய வேண்டும்&quot; என்று RBI கூறியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&quot;அந்நியச் செலாவணி சந்தை நேரத்தில் பெறப்படும் வெளிநாட்டுப் பணத்தை, அதே வேலை நாளில் பயனாளியின் கணக்கில் வரவு வைக்க வங்கிகள் முயற்சி செய்ய வேண்டும்&quot; என்றும் அது மேலும் கூறியது. கூடுதலாக, வங்கிகள் தங்கள் இடர் மதிப்பீட்டின் அடிப்படையில் மற்றும் FEMA விதிகளுக்கு உட்பட்டு, தனிநபர்களின் கணக்குகளுக்கு வரும் பணத்தை நேரடியாக வரவு வைக்க 'ஸ்ட்ரெய்ட்-த்ரூ பிராசஸிங்' (Straight-Through Processing) முறையை அறிமுகப்படுத்தலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&quot;வாடிக்கையாளர்கள் அந்நியச் செலாவணி தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும், தங்கள் பரிவர்த்தனைகளின் நிலையைக் கண்காணிக்கவும் டிஜிட்டல் தளங்களை வங்கிகள் உருவாக்க வேண்டும்,&quot; என்றும் RBI கேட்டுக்கொண்டுள்ளது. இந்த புதிய உத்தரவுகள், சுற்றறிக்கை வெளியான நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு நடைமுறைக்கு வரும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/rbi-new-rules-faster-foreign-remittance-credit-for-bank-customers-137l244"/>
        </item>
        <item>
            <title><![CDATA[How to reduce charges while buying jewellery? நகை வாங்கும் போது செய்கூலியைக் குறைக்க சில வழிகள்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/business/smart-ways-to-reduce-jewellery-making-charges-videoshow-1akm43g</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/business/smart-ways-to-reduce-jewellery-making-charges-videoshow-1akm43g</guid>
            <pubDate>Wed, 08 Apr 2026 20:02:41 +0530</pubDate>
            <description><![CDATA[]]></description>
            <media:content url="https://geo.dailymotion.com/player/x1tbu.html?video=xa4tdsg" medium="video" height="768" width="1024"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;வருங்கால தேவைகளுக்கும், சேமிப்புக்காகவும் பொதுமக்கள் முதலீட்டையும், சேமிப்பையும் மேற்கொள்வதால் அவர்கள் அதிக ரிஸ்க் உள்ள இடங்களுக்கு செல்ல மாட்டார்கள். அப்படியிருக்க, தங்கத்தில் முதலீடு செய்வதே பாதுகாப்பானது என மக்கள் பெரிதும் நம்புகின்றனர். தங்கத்தின் விலையும் உயர்ந்துகொண்ட இருக்க, மக்கள் அதில் முதலீடு செய்யும் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/business/smart-ways-to-reduce-jewellery-making-charges-videoshow-1akm43g"/>
        </item>
        <item>
            <title><![CDATA[இனி கவலை இல்லை.. LPG சிலிண்டர் விலை குறையப் போகுது.. இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/good-news-for-homemakers-lpg-cylinder-prices-may-drop-by-rs-317-55ze3tc</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/good-news-for-homemakers-lpg-cylinder-prices-may-drop-by-rs-317-55ze3tc</guid>
            <pubDate>Wed, 08 Apr 2026 15:21:48 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;இந்தியாவில், வீட்டு உபயோக மற்றும் வர்த்தக சிலிண்டர்களுக்கு அரசு தனித்தனியாக வரி விதிக்கிறது. வீட்டு உபயோக சிலிண்டருக்கு 5% ஜிஎஸ்டியும், வர்த்தக சிலிண்டருக்கு 18% ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படுகிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01knp7xjr1z3yhnyvzj9epcm8x,imgname-lpg-price-cut-1775641742074.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;இந்தியாவில், வீட்டு உபயோக மற்றும் வர்த்தக சிலிண்டர்களுக்கு அரசு தனித்தனியாக வரி விதிக்கிறது. வீட்டு உபயோக சிலிண்டருக்கு 5% ஜிஎஸ்டியும், வர்த்தக சிலிண்டருக்கு 18% ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக சமையல் எரிவாயு சிலிண்டர் குறித்த பேச்சு தான் இருந்து வருகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிய போர் சூழலால் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் காரணமாக நமது நாட்டில் வர்த்தக சிலிண்டர்கள் மற்றும் வீட்டு சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் ஹோட்டல்கள் மூடப்பட்டன. உணவின் விலையும் பலமடங்கு உயர்ந்தது. நாடு முழுவதும் ஊரடங்கு போடும் நிலை உருவானது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;LPG சிலிண்டர் விலை குறையும்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்த நிலையில், ஈரானும், அமெரிக்காவும் இரண்டு வாரங்களுக்கு போர் நிறுத்த ஒப்பந்தம் செய்துள்ளன. இதனால் கேஸ் சிலிண்டர் விநியோகம் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், எல்பிஜி சிலிண்டர் விலை சுமார் ரூ.317 வரை குறைய வாய்ப்புள்ளது என்ற மகிழ்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சேம்பர் ஆஃப் டிரேட் அண்ட் இண்டஸ்ட்ரி (CTI) அமைப்பு, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், சமையல் எரிவாயு மீதான வரியை நீக்கப் பரிந்துரைத்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், சேம்பர் ஆஃப் டிரேட் அண்ட் இண்டஸ்ட்ரி ஒரு முக்கிய விஷயத்தை குறிப்பிட்டுள்ளது. ஈரான்-அமெரிக்கா போரால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எல்பிஜி நெருக்கடிக்கு மத்தியில், எரிவாயு மீதான வரியை முழுமையாக நீக்கினால், சாமானிய மக்கள் நிம்மதி அடைவார்கள். இது இந்திய வீடுகளில் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டை எளிதாக தீர்க்கும் என்றும் அந்த கடிதத்தில் கூறியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;அரசு என்ன முடிவு எடுக்கப் போகிறது?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;சேம்பர் ஆஃப் டிரேட் அண்ட் இண்டஸ்ட்ரியின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்று, ஜிஎஸ்டியை நீக்கினால், வீட்டு உபயோக மற்றும் வர்த்தக சிலிண்டர்களின் விலை கணிசமாகக் குறையும். தற்போதைய பணவீக்க சூழலில், எரிவாயு விலை குறைந்தால் பொதுமக்களுக்கு இது பெரும் நிவாரணமாக அமையும். அரசு என்ன இறுதி முடிவு எடுக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவில், வீட்டு உபயோக மற்றும் வர்த்தக சிலிண்டர்களுக்கு அரசு தனித்தனியாக வரி விதிக்கிறது. வீட்டு உபயோக சிலிண்டருக்கு 5% ஜிஎஸ்டியும், வர்த்தக சிலிண்டருக்கு 18% ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படுகிறது. CTI-யின் கோரிக்கை ஏற்கப்பட்டால், வர்த்தக சிலிண்டர் மீதான வரி நீக்கப்பட்டு, அதன் விலை ரூ.317 வரை குறையும். வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.43 வரை குறையலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஏற்கெனவே வைத்த கோரிக்கை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;சமீபத்தில், CTI அமைப்பு மத்திய அரசிடம் சமையல் மற்றும் வர்த்தக எரிவாயு மீதான வரி விலக்கு கோரி கோரிக்கை வைத்துள்ளது. ஈரான்-அமெரிக்கா மோதலால் எரிவாயு விலை தொடர்ந்து அதிகரித்து, விநியோகத்திலும் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. இந்த சூழலில், வரியை நீக்கினால் வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைவார்கள், அவர்களின் பணமும் சேமிக்கப்படும் என CTI கூறியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;PNG மீது வாட் வரி விதிப்பதால் விலை அதிகரிப்பு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;அரசு தரவுகளின்படி, சமையல் மற்றும் ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் எல்பிஜி சிலிண்டர்களுக்கு மட்டுமே மத்திய அரசு வரி விதிக்கிறது. இந்த வரி விகிதங்கள் 5% மற்றும் 18% ஆகும். ஆனால், குழாய் மூலம் விநியோகிக்கப்படும் PNG எரிவாயுவை ஜிஎஸ்டி வரம்பிற்கு வெளியே வைத்துள்ளது. இருப்பினும், மாநில அரசுகள் PNG மீது வாட் வரி விதிப்பதால் அதன் விலை அதிகரிக்கிறது. CTI-யின் கோரிக்கை மீது மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/good-news-for-homemakers-lpg-cylinder-prices-may-drop-by-rs-317-55ze3tc"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Investment: தினமும் ரூ.300 சேமித்தால் போதும்.! அசால்டா ரூ.15 லட்சம் கிடைக்கும்.! இதுதான் ஸ்மார்ட்டான திட்டமிடல்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/just-saving-rs-300-a-day-is-enough-you-can-easily-get-rs15-lakhs-this-is-what-smart-planning-looks-like-6t1gbnw</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/just-saving-rs-300-a-day-is-enough-you-can-easily-get-rs15-lakhs-this-is-what-smart-planning-looks-like-6t1gbnw</guid>
            <pubDate>Thu, 09 Apr 2026 10:14:58 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தபால் நிலையத் தொடர் வைப்பு நிதி (RD) திட்டத்தில் தினமும் சிறிய தொகையைச் சேமிப்பதன் மூலம் லட்சங்களில் நிதிப் பாதுகாப்பை உருவாக்கலாம். அரசு உத்தரவாதத்துடன் 6.7% வட்டி வழங்கும் இத்திட்டம், 10 ஆண்டுகளில் ரூ.15 லட்சம் வரை வருமானம் ஈட்ட உதவுகிறது.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kgsb43rd9xa1aqx01knck063,imgname-savings-1770377056013.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தபால் நிலையத் தொடர் வைப்பு நிதி (RD) திட்டத்தில் தினமும் சிறிய தொகையைச் சேமிப்பதன் மூலம் லட்சங்களில் நிதிப் பாதுகாப்பை உருவாக்கலாம். அரசு உத்தரவாதத்துடன் 6.7% வட்டி வழங்கும் இத்திட்டம், 10 ஆண்டுகளில் ரூ.15 லட்சம் வரை வருமானம் ஈட்ட உதவுகிறது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்றைய வேகமான உலகில் பணம் சம்பாதிப்பதை விட, ஈட்டிய பணத்தைச் சரியான வழியில் சேமித்து வளர்ப்பதே உண்மையான சாமர்த்தியம். பலரும் பெரிய தொகையைச் சேமிக்க வேண்டும் என்று நினைப்பார்கள், ஆனால் நடைமுறையில் அது சாத்தியமாவதில்லை. இதற்குத் தீர்வு, சிறுகச் சிறுகச் சேமிக்கும் &quot;தபால் நிலையத் தொடர் வைப்பு நிதி&quot; (Post Office Recurring Deposit) திட்டமாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நாம் அன்றாடம் செய்யும் தேவையற்றச் செலவுகளில் சிறிய கட்டுப்பாட்டைக் கொண்டு வந்தால் போதும். தினமும் வெறும் ரூ.300 ஒதுக்கினால், ஒரு மாதத்திற்கு அது ரூ.9,000 ஆக மாறுகிறது. இந்த எளிய முதலீடு உங்களை ஒரு கோடீஸ்வரராக மாற்றாவிட்டாலும், உங்கள் எதிர்காலத் தேவைகளுக்குப் பெரிய நிதிப் பாதுகாப்பை (Financial Cushion) வழங்கும் என்பதில் சந்தேகமில்லை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தத் திட்டத்தில் தொடர்ந்து 10 ஆண்டுகள் முதலீடு செய்வதன் மூலம் கிடைக்கும் பலன்கள் ஆச்சரியமானவை:&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;மாதாந்திர முதலீடு: ரூ.9,000&lt;/li&gt; &lt;li&gt;முதலீட்டுக் காலம்: 10 ஆண்டுகள் (120 மாதங்கள்)&lt;/li&gt; &lt;li&gt;உங்கள் மொத்த முதலீடு: ரூ.10,80,000&lt;/li&gt; &lt;li&gt;வட்டி வருமானம் மட்டும்: சுமார் ரூ.4,40,000&lt;/li&gt; &lt;li&gt;முதிர்வுத் தொகை (Maturity): ஏறத்தாழ ரூ.15,20,000&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;தற்போதைய நிலவரப்படி, மத்திய அரசு இத்திட்டத்திற்கு சுமார் 6.7% வட்டி விகிதத்தை வழங்குகிறது. பங்குச் சந்தை போன்ற முதலீடுகளில் ரிஸ்க் அதிகம், ஆனால் தபால் நிலையச் சேமிப்பு என்பது அரசு உத்தரவாதம் கொண்டது. எனவே, உங்கள் பணம் 100% பாதுகாப்பானது என்பதோடு உறுதியான லாபத்தையும் அளிக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;ol&gt; &lt;li&gt;குறைந்தபட்சத் தொடக்கம்: இத்திட்டத்தை வெறும் ரூ.100 முதலே தொடங்க முடியும். 18 வயது பூர்த்தியடைந்த எவரும் அருகில் உள்ள தபால் நிலையத்தில் இந்தக் கணக்கைத் தொடங்கலாம்.&lt;/li&gt; &lt;li&gt;கால நீட்டிப்பு: இத்திட்டத்தின் அடிப்படைக் காலம் 5 ஆண்டுகள். ஆனால், முதிர்வுக்குப் பிறகு மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்துக் கொள்ளலாம். இவ்வாறு நீட்டிக்கும் போது &quot;கூட்டு வட்டி&quot; (Compound Interest) பலன்களால் உங்கள் பணம் வேகமாக வளரும்.&lt;/li&gt; &lt;li&gt;கடன் வசதி: கணக்கைத் தொடங்கி ஒரு வருடம் முடிந்த பிறகு, உங்கள் சேமிப்புத் தொகையில் 50% வரை கடனாகப் பெற்றுக் கொள்ளலாம். அவசரத் தேவைகளுக்கு இது மிகச்சிறந்த வாய்ப்பாகும்.&lt;/li&gt; &lt;li&gt;முன்கூட்டியே முடித்தல்: தவிர்க்க முடியாத காரணங்களால் கணக்கை மூட வேண்டியிருந்தால், 3 ஆண்டுகளுக்குப் பிறகு கணக்கை முடித்துக் கொள்ளும் வசதியும் உள்ளது.&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;img&gt;&lt;p&gt;நிதி சுதந்திரம் என்பது ஒரே நாளில் கிடைப்பதல்ல; அது தொடர்ச்சியான சேமிப்புப் பழக்கத்தால் உருவாவது. தினமும் ரூ.300 போன்ற சிறிய தொகையைச் சேமிப்பதன் மூலம், உங்களின் எதிர்காலப் பொருளாதாரத் தேவைகளை எவ்விதச் சிரமமுமின்றிப் பூர்த்தி செய்யலாம். பாதுகாப்பான, ரிஸ்க் இல்லாத மற்றும் லாபகரமான முதலீட்டைத் தேடுபவர்களுக்குத் தபால் நிலைய RD திட்டம் ஒரு வரப்பிரசாதம். இன்றே உங்கள் சேமிப்பைத் தொடங்குங்கள், உங்கள் எதிர்காலத்தை வளமாக்குங்கள்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சேமிப்பு என்பது வெறும் பணத்தைச் சேர்த்து வைப்பது மட்டுமல்ல, அது நம் எதிர்காலத்திற்கான ஒரு பாதுகாப்பு அரண். &quot;சிறு துளி பெரு வெள்ளம்&quot; என்ற முதுமொழிக்கேற்ப, நாம் இன்று செய்யும் மிகச்சிறிய முதலீடு, பின்னாளில் ஒரு பெரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து நம்மைக் காக்கும் கருவியாக மாறும். முறையான திட்டமிடலும், சேமிப்பில் தொடர்ச்சியான ஒழுக்கமும் இருந்தால், எளிய வருமானம் ஈட்டுபவர்களும் நிதி சுதந்திரத்தை (Financial Freedom) அடைய முடியும். எனவே, வரவுக்குள் செலவு செய்யும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டு, பாதுகாப்பான திட்டங்களில் முதலீடு செய்வதே ஒரு புத்திசாலித்தனமான அணுகுமுறையாகும். இன்றைய சேமிப்பே நாளைய நிம்மதியான வாழ்விற்கு அச்சாணி என்பதை உணர்ந்து செயல்படுவோம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/just-saving-rs-300-a-day-is-enough-you-can-easily-get-rs15-lakhs-this-is-what-smart-planning-looks-like-6t1gbnw"/>
        </item>
        <item>
            <title><![CDATA[காலி பாட்டில் குப்பைன்னு நினைச்சீங்களா? பணம் கொட்டும் ரகசியம் இதோ!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/make-money-from-plastic-bottles-simple-home-business-idea-a0bwg1n</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/make-money-from-plastic-bottles-simple-home-business-idea-a0bwg1n</guid>
            <pubDate>Tue, 07 Apr 2026 16:58:10 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;உங்கள் வீட்டில் சேர்ந்து கிடக்கும் காலி பிளாஸ்டிக் பாட்டில்கள் குப்பை அல்ல. சரியாக பயன்படுத்தினால் அது ஒரு சிறிய வருமானம் தரக்கூடியதாக மாறும். அது எப்படி என்று விரிவாக இப்பதிவில் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01knktsgydmane2f2rdtbdy8e3,imgname-tamil-news--44--1775560868813.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;உங்கள் வீட்டில் சேர்ந்து கிடக்கும் காலி பிளாஸ்டிக் பாட்டில்கள் குப்பை அல்ல. சரியாக பயன்படுத்தினால் அது ஒரு சிறிய வருமானம் தரக்கூடியதாக மாறும். அது எப்படி என்று விரிவாக இப்பதிவில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உங்கள் வீட்டில் சேர்ந்து கிடக்கும் காலி பிளாஸ்டிக் பாட்டில்கள் குப்பை அல்ல. சரியாக பயன்படுத்தினால் அது ஒரு சிறிய வருமானம் தரக்கூடியதாக மாறும். இன்றைய நகர வாழ்க்கையில் இடப்பற்றாக்குறை அதிகம். அதனால் தான் &ldquo;வெர்டிகல் கார்டன்&rdquo; என்ற செங்குத்துத் தோட்டங்களுக்கு மக்கள் மத்தியில் ஆர்வம் வேகமாக உயர்ந்து வருகிறது. பால்கனி சுவர்களில் பசுமை சேர்க்க விரும்பும் பலர், வித்தியாசமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த கார்டன் செட்களை தேடுகிறார்கள். இந்த தேவைதான் உங்கள் பிசினஸ் வாய்ப்பாக மாறலாம்.&lt;/p&gt;&lt;p&gt;வெர்டிகல் கார்டன் பிசினஸ் என்பது, பழைய பிளாஸ்டிக் பாட்டில்களை அழகான செடி தொட்டிகளாக மாற்றி விற்பதே. நிலம் இல்லாத வீடுகளில் கூட சுவர்களில் செடிகளை வளர்க்க இது உதவும். நீங்கள் பாட்டில்களை வெட்டி, அதற்கு கலைநயம் சேர்த்து, சிறிய செடிகளை நட்டு &ldquo;ரெடி-டு-யூஸ்&rdquo; கார்டன் செட்களை உருவாக்கலாம். பார்ப்பதற்கு அழகாகவும், பயன்படுத்த எளிதாகவும் இருக்கும் இந்த தயாரிப்புகள் வீட்டை புதுமையாக மாற்றும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த பிசினஸை தொடங்குவது மிகவும் சுலபம். முதலில், 1 அல்லது 2 லிட்டர் கொள்ளளவு கொண்ட காலி பாட்டில்களை சேகரிக்க வேண்டும். பழைய பேப்பர் கடைகள் அல்லது ஸ்கிராப் கடைகளில் இதை மிகக் குறைந்த விலையில் வாங்கலாம். அதன் பிறகு, பாட்டில்களை வெட்டி அல்லது துளையிட்டு, ஒரு செடி தொட்டியின் வடிவத்திற்கு மாற்ற வேண்டும். இதில்தான் உங்கள் கலை திறமை வேலை செய்கிறது. கார்ட்டூன், ஜியாமெட்ரிக் டிசைன் அல்லது இயற்கை வடிவங்கள் போன்றவற்றை உருவாக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;அடுத்து வரும் முக்கியமான கட்டம் பெயின்ட்டிங். பிரகாசமான வண்ணங்கள், அழகான டிசைன்கள் தான் வாடிக்கையாளர்களை ஈர்க்கும். அக்ரிலிக் அல்லது ஆயில் பெயின்ட் பயன்படுத்தி பாட்டில்களை அலங்கரிக்கலாம். பின்னர், மணி பிளான்ட், கற்றாழை போன்ற சிறிய செடிகளை நட்டு விற்பனைக்கு தயாராகலாம். செடியுடன் கூடிய தயாரிப்புகளுக்கு சந்தையில் அதிக மதிப்பு கிடைக்கும். தயாரிப்பு செலவு மிகக் குறைவு என்றாலும், ஒரு செட்டை ரூ.150 முதல் ரூ.300 வரை விற்க முடியும்.&lt;/p&gt;&lt;p&gt;விற்பனைக்கு பல வழிகள் உள்ளன. அருகிலுள்ள நர்சரிகளுக்கு சப்ளை செய்யலாம் அல்லது Instagram, WhatsApp, Facebook போன்ற சமூக வலைதளங்களில் உங்கள் தயாரிப்புகளைப் பகிரலாம். மேலும், ஆன்லைன் மார்க்கெட்ப்ளேஸ்கள் மற்றும் உள்ளூர் சந்தைகளிலும் விற்பனை செய்யலாம். &ldquo;Go Green&rdquo; என்ற எண்ணம் அதிகரித்து வரும் நிலையில், மறுசுழற்சி செய்யப்பட்ட இந்த கார்டன் செட்களுக்கு நல்ல தேவை உள்ளது. குறைந்த முதலீட்டில் தொடங்கி, படைப்பாற்றலுடன் வளர்த்தால் இது ஒரு சிறந்த ஹோம் பிசினஸாக மாறும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/make-money-from-plastic-bottles-simple-home-business-idea-a0bwg1n"/>
        </item>
        <item>
            <title><![CDATA[நகைக்கடன் பெறுவதில் புதிய சிக்கல்? ஆர்.பி.ஐ-யின் அதிரடி உத்தரவு இதோ!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/rbi-new-rules-for-gold-loan-2026-impact-on-customers-in-tamil-cw9zm99</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/rbi-new-rules-for-gold-loan-2026-impact-on-customers-in-tamil-cw9zm99</guid>
            <pubDate>Mon, 06 Apr 2026 13:00:15 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;RBI New Rules For Gold Loan 2026 : &lt;/strong&gt;வங்கிகளில் நகைக்கடன் வாங்கத் திட்டமிட்டுள்ளீர்களா? இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நகைக்கடன் விதிகளில் அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. அதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k71zkqqbt568bm2manbtpkst,imgname-gold-1759929556715.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;RBI New Rules For Gold Loan 2026 : &lt;/strong&gt;வங்கிகளில் நகைக்கடன் வாங்கத் திட்டமிட்டுள்ளீர்களா? இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நகைக்கடன் விதிகளில் அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. அதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஏப்ரல் 1, 2026 முதல் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தங்க நகைக்கடன்களுக்கான புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது. கடன் வழங்கும் முறையை அதிக வெளிப்படைத்தன்மையுடனும், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் இந்த அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த விதிகள் தங்கம் மட்டுமின்றி, வெள்ளி நகைகள் மீது பெறப்படும் கடன்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இனி நீங்கள் அடகு வைக்கும் தங்கத்தின் சந்தை மதிப்பில் அதிகபட்சமாக 75 சதவீதம் மட்டுமே கடனாகப் பெற முடியும். உதாரணமாக, உங்கள் தங்கத்தின் மதிப்பு ₹1 லட்சம் எனில், உங்களுக்கு ₹75,000 மட்டுமே கடனாகக் கிடைக்கும். தங்கத்தின் விலை திடீரென வீழ்ச்சியடையும் போது ஏற்படும் நிதி இடர்பாடுகளைத் தவிர்க்க இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வங்கி சாரா நிதி நிறுவனங்களில் (NBFCs) நகைக்கடனுக்கான வட்டி விகிதங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, கடன் வாங்குவதற்கு முன் பல்வேறு வங்கிகளின் வட்டி விகிதங்களை ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியமாகும். &lt;strong&gt;கட்டாய KYC மற்றும் ஆவணச் சரிபார்ப்பு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;நகைக்கடன் பெறுபவர்கள் தங்களின் அடையாளச் சான்று (KYC) ஆவணங்களைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பணப் பரிமாற்றங்கள் மற்றும் வாடிக்கையாளரின் பின்னணி குறித்து வங்கிகள் இனி கூடுதல் சோதனைகளை மேற்கொள்ளும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அடகு வைக்கப்படும் தங்கத்தின் தூய்மை மற்றும் எடையைக் கணக்கிடுவதில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான தரநிலை பின்பற்றப்படும். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்குத் தங்களின் நகையயிற்குச் சரியான மற்றும் நியாயமான மதிப்பு கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது. &lt;strong&gt;திருப்பிச் செலுத்தும் கெடு மற்றும் ஏல விதிமுறைகள்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;கடனைத் திருப்பிச் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால், கூடுதல் வட்டியுடன் அபராதமும் வசூலிக்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் கடனை அடைக்கத் தவறினால், வங்கிகள் எவ்வித முன்னறிவிப்புமின்றி நகைகளை ஏலம் விட சட்டப்பூர்வ அதிகாரம் பெற்றுள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நகைக்கடன் வாங்கும் சாமானிய மக்கள், கடன் ஒப்பந்தப் பத்திரங்களை முழுமையாகப் படித்துப் பார்த்த பின்னரே கையெழுத்திட வேண்டும். சரியான திட்டமிடலுடன் கடனைத் திருப்பிச் செலுத்துவதன் மூலம் உங்கள் குடும்ப நகைகளைப் பாதுகாத்துக்கொள்ளலாம் என நிதி நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Rsiva kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/rbi-new-rules-for-gold-loan-2026-impact-on-customers-in-tamil-cw9zm99"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Loan EMI: ரெப்போ ரேட் மாறலையா? கவலைப்படாதீங்க, உங்க லோன் EMI-யை குறைக்க 5 சூப்பர் வழிகள்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/5-smart-tricks-to-lower-your-loan-emi-burden-d1dw1p4</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/5-smart-tricks-to-lower-your-loan-emi-burden-d1dw1p4</guid>
            <pubDate>Wed, 08 Apr 2026 12:35:06 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 5.25% ஆகவே வைத்திருப்பதால், வீட்டுக்கடன் அல்லது கார் லோன் EMI குறையும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துவிட்டது. ஆனால் கவலைப்பட வேண்டாம். உங்கள் EMI-யை குறைக்க 5 சூப்பரான நிதி தந்திரங்கள் உள்ளன.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k27qzb8rsvp1hyxmpxg0s3er,imgname-best-investment-options-1754754166040.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 5.25% ஆகவே வைத்திருப்பதால், வீட்டுக்கடன் அல்லது கார் லோன் EMI குறையும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துவிட்டது. ஆனால் கவலைப்பட வேண்டாம். உங்கள் EMI-யை குறைக்க 5 சூப்பரான நிதி தந்திரங்கள் உள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உங்களிடம் கூடுதல் சேமிப்பு இருந்தால், அதை ஒரு வழக்கமான சேமிப்புக் கணக்கில் வைப்பதற்குப் பதிலாக, உங்கள் கடன் கணக்குடன் இணைக்கப்பட்ட ஓவர் டிராஃப்ட் கணக்கில் வைப்பதைப் பரிசீலிக்கவும். கடன் தொகையிலிருந்து உங்கள் ஓவர் டிராஃப்ட் இருப்பைக் கழித்த பிறகு மீதமுள்ள தொகைக்கு மட்டுமே வங்கி வட்டி வசூலிக்கிறது. இது உங்கள் அசல் தொகையை விரைவாகக் குறைத்து, வட்டியையும் சேமிக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒவ்வொரு ஆண்டும் உங்கள் கடனில் 5% முதல் 10% வரை முன்கூட்டியே செலுத்த முயற்சி செய்யுங்கள். ஆண்டுக்கு ஒரு கூடுதல் EMI செலுத்துவது கூட, உங்கள் 20 வருடக் கடனை வெறும் 12-15 ஆண்டுகளில் முடிக்க உதவும். இதன் மூலம் மொத்த வட்டியில் லட்சக்கணக்கில் சேமிக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தாததால், பல வங்கிகள் புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காகப் போட்டித்தன்மை வாய்ந்த வட்டி விகிதங்களை வழங்குகின்றன. உங்கள் தற்போதைய வங்கி 9% வட்டி வசூலித்து, மற்றொரு வங்கி 8.5% வட்டி வழங்கினால், 'கடன் இருப்புப் பரிமாற்றம்' (Loan Balance Transfer) என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். செயலாக்கக் கட்டணத்தைச் சரிபார்க்க மறவாதீர்கள். சேமிப்பு கட்டணத்தை விட அதிகமாக இருந்தால் மட்டுமே வங்கியை மாற்றவும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மக்கள் பெரும்பாலும் தங்கள் மாதாந்திரத் தவணைகளைக் (EMI) குறைப்பதற்காகக் கடன் காலத்தை நீட்டிக்கிறார்கள். இது குறுகிய காலத்திற்கு நிவாரணம் அளித்தாலும், நீண்ட கால அடிப்படையில், நீங்கள் வங்கிக்கு கணிசமான வட்டியைச் செலுத்த வேண்டியிருக்கும். எனவே, உங்கள் மாதாந்திரத் தவணைகளை உங்கள் வசதிக்கேற்ப வைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள், மேலும் உங்கள் சம்பளம் அதிகரிக்கும்போது, ​​கடன் காலத்தை அல்ல, மாதாந்திரத் தவணைத் தொகையை (ஸ்டெப்-அப் EMI) அதிகரியுங்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;800-க்கும் மேற்பட்ட கடன் மதிப்பீடு (கிரெடிட் ஸ்கோர்) உள்ளவர்களுக்கு வங்கிகள் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்குகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்கள் சிபில் ஸ்கோரைச் சரிபார்க்கவும். அது மேம்பட்டிருந்தால், உங்கள் தற்போதைய வங்கியைத் தொடர்புகொண்டு, குறைந்த வட்டி விகிதங்களுக்காக அதை மீட்டமைக்கக் கோருங்கள். வங்கிகள் தங்கள் நல்ல வாடிக்கையாளர்களை இழக்க விரும்புவதில்லை, எனவே அவை பெரும்பாலும் வட்டி விகிதங்களைக் குறைக்கின்றன.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/5-smart-tricks-to-lower-your-loan-emi-burden-d1dw1p4"/>
        </item>
        <item>
            <title><![CDATA[அகர்பத்தி தயாரிப்பில் அசத்தல் வருமானம் - மாதம் ₹60,000 சம்பாதிக்கலாம் ஈசியா!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/business/profitable-agarbatti-making-earn-60-000-monthly-videoshow-danvrd4</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/business/profitable-agarbatti-making-earn-60-000-monthly-videoshow-danvrd4</guid>
            <pubDate>Thu, 09 Apr 2026 17:03:56 +0530</pubDate>
            <description><![CDATA[]]></description>
            <media:content url="https://geo.dailymotion.com/player/x1tbu.html?video=xa4ythe" medium="video" height="768" width="1024"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;எல்லோருமே சொந்தமாக தொழில் செய்து லாபம் ஈட்டிவிட முடியாது. அதற்கும் திறமை, தொழில் அறிவு, சந்தை வாய்ப்பு, தேவை போன்ற பல்வேறு விஷயங்களில் போதுமான புரிதல் இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தத் தொழிலை சிறப்பாக நடத்தி வெற்றிபெறமுடியும். வசதி படைத்தவர்கள் மட்டுமே சொந்தமாக தொழில் செய்ய முடியும் என்று இல்லை. நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களும் கூட சிறு முதலீட்டில் தொழில் தொடங்கி அசத்தலாம். அதற்கு நிறைய குடிசைத் தொழில்கள் உள்ள நிலையில், அதில் ஒரு முக்கியான தொழில் தான் ஊதுவத்தி தயாரிக்கும் தொழில்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/business/profitable-agarbatti-making-earn-60-000-monthly-videoshow-danvrd4"/>
        </item>
        <item>
            <title><![CDATA[சமையலுக்கு இனி கவலை இல்லை! போட்டி போடும் தக்காளி, வெங்காயம்.!  எந்தெந்த காய்கள் என்ன விலை?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/today-vegetable-price-08-april-2026-tomato-and-onion-rate-in-tamilnadu-ebumla5</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/today-vegetable-price-08-april-2026-tomato-and-onion-rate-in-tamilnadu-ebumla5</guid>
            <pubDate>Wed, 08 Apr 2026 08:37:11 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;காய்கறிகளை அதிகம் வாங்குகிறார்களோ இல்லையோ பை நிறைய தக்காளி, வெங்காயத்தை அதிகளவில் வாங்கி செல்வது வழக்கம். மேலும் காய்கறிகளின் வரத்தை பொறுத்து விலையும் நிர்ணயிக்கப்படுகிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jvv8y2581axg181jpzsp2x94,imgname-vegetables--4-1747893291176.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;காய்கறிகளை அதிகம் வாங்குகிறார்களோ இல்லையோ பை நிறைய தக்காளி, வெங்காயத்தை அதிகளவில் வாங்கி செல்வது வழக்கம். மேலும் காய்கறிகளின் வரத்தை பொறுத்து விலையும் நிர்ணயிக்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சமையலுக்கு எவ்வளவு காய்கறிகள் போட்டு செய்தாலும் ருசியை அள்ளிக்கொடுப்பது தக்காளி, வெங்காயம். அதாவது இந்த இரண்டும் சமையலுக்கு இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது. ரசம் முதல் பிரியாணி வரை இந்தியாவில் அனைத்து வகையான உணவு தயாரிப்புகளிலும் வெங்காயம், தக்காளி பயன்படுத்தப்படுவதால் இதன் தேவை மிக அதிகமாக உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;காய்கறிகளை அதிகம் வாங்குகிறார்களோ இல்லையோ பை நிறைய தக்காளி, வெங்காயத்தை அதிகளவில் வாங்கி செல்வது வழக்கம். இதன் காரணமாகவே லாரியில் மூட்டை மூட்டையாக வெங்காயமும், பெட்டி பெட்டியாக தக்காளி சந்தையில் அதிகளவில் குவிந்து வருகின்றது. மேலும் காய்கறிகளின் வரத்தை பொறுத்து விலையும் நிர்ணயிக்கப்படுகிறது. பருவமழை காலத்தில் மட்டும் தக்காளி, வெங்காயம் விலை உச்சப்பெறும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில் வரத்து அதிகரிப்பால் தக்காளி மற்றும் வெங்காயம் விலை போட்டி போட்டு குறைந்து வருகிறது. அதாவது சிறிய அளவிலான தக்காளி 6 முதல் 8 கிலோ 100 ரூபாய்க்கும், அடுத்த ரக தக்காளி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், தரமான தக்காளி ஒரு கிலோ 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரம் ஒரு கிலோ வெங்காயம் 20 முதல் 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் எந்தெந்த காய்கறிகள் என்னென்ன விலை என்பதை பார்ப்போம். பெரிய வெங்காயம் ஒரு கிலோ 26 முதல் 33 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 49 முதல் 62 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 18 முதல் 23 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 71 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 30 முதல் 38 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 23 ரூபாய்க்கும், நெல்லிக்காய் ரூ.120, குடைமிளகாய் ஒரு கிலோ 62 முதல் 78 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 41 முதல் 51 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 31 முதல் 39 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 46 முதல் 57 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 38 முதல் 48 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 26 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 29 முதல் 36 ரூபாய்க்கும், காலிஃபிளவர் ஒரு கிலோ 48 ரூபாய், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 60 முதல் 75 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 48 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சேனைக்கிழங்கு ஒரு கிலோ 44 முதல் 56 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 42 முதல் 53 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 91 முதல் 114 ரூபாய்க்கும், மாங்காய் ரூ.62 முதல் 78 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 26 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 35 முதல் 44 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ48 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 35 முதல் 44 ரூபாய்க்கும், கோவைக்காய் ஒரு கிலோ 37 முதல் 47 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/today-vegetable-price-08-april-2026-tomato-and-onion-rate-in-tamilnadu-ebumla5"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Gold Price Today: நகை வாங்க நல்ல நேரம் இதுதான்.! தாறுமாறாக குறைந்த தங்கம்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/gold-price-today-april-06-2026-in-chennai-and-tamil-nadu-gwmu23d</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/gold-price-today-april-06-2026-in-chennai-and-tamil-nadu-gwmu23d</guid>
            <pubDate>Mon, 06 Apr 2026 10:42:34 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;வாரத்தின் தொடக்கத்தில் தங்கம் விலை கணிசமாகக் குறைந்து, முதலீட்டாளர்களையும் நகை வாங்குபவர்களையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த திடீர் சரிவு, தங்கம் வாங்க திட்டமிடுபவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக கருதப்படுகிறது.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kc5stzb3dhgzx9kzgz59mz2x,imgname-e20dbf34-cbb0-4722-bcb0-3e5a4cd1d5ca-1765426429283.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;வாரத்தின் தொடக்கத்தில் தங்கம் விலை கணிசமாகக் குறைந்து, முதலீட்டாளர்களையும் நகை வாங்குபவர்களையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த திடீர் சரிவு, தங்கம் வாங்க திட்டமிடுபவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக கருதப்படுகிறது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வாரத்தின் முதல் நாளிலேயே தங்கம் விலையில் ஏற்பட்ட திடீர் சரிவு, நகைப்பிரியர்களையும் முதலீட்டாளர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றத்திலும் இறக்கத்திலும் இருந்த தங்கம், இன்று கணிசமாக குறைந்திருப்பது சந்தையில் புதிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;தங்கம் எப்போதும் பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது. உலகளாவிய பொருளாதார சிக்கல்கள், பணவீக்கம், மற்றும் அரசியல் பதற்றங்கள் அதிகரிக்கும் போது, முதலீட்டாளர்கள் தங்கத்தை நோக்கி திரும்புவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்கத்தின் விலை வேகமாக உயர்ந்ததற்கும் இதுவே முக்கிய காரணமாகும். பல நாடுகளின் மத்திய வங்கிகள் தங்க சேமிப்பை அதிகரித்திருப்பதும் விலை உயர்விற்கு துணைபுரிந்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சமீப காலங்களில் சர்வதேச சந்தைகளில் ஏற்பட்ட மாற்றங்கள், குறிப்பாக கச்சா எண்ணெய் விலையின் ஏற்றம், முதலீட்டாளர்களின் கவனத்தை தங்கத்திலிருந்து மாற்றியுள்ளது. இதன் விளைவாக தங்கம் விலை சில நாட்களாக குறைந்து வந்தது. இடையே சிறிய உயர்வுகளும் ஏற்பட்டாலும், மொத்தத்தில் விலை நிலைமை மாறிக்கொண்டே உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்றைய நிலவரப்படி, ஒரு கிராம் தங்கம் ₹13,810 ஆகவும், ஒரு சவரன் ₹1,10,480 ஆகவும் விற்பனையாகிறது. ஒரே நாளில் ₹1,000-க்கும் அதிகமாக குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது நகை வாங்க நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பாக கருதப்படுகிறது. திருமணம், விழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளை முன்னிட்டு தங்கம் வாங்க திட்டமிடுபவர்கள் இந்த சரிவை பயன்படுத்தலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வெள்ளி விலை பற்றி பேசும்போது, அது தற்போது நிலைத்தன்மையுடன் காணப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ₹255 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ₹2,55,000 ஆகவும் உள்ளது. தொழில்துறை பயன்பாடுகள் அதிகம் உள்ளதால், வெள்ளியின் விலையும் நீண்டகாலத்தில் உயர வாய்ப்பு உள்ளது என நிபுணர்கள் கருதுகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தங்கத்தில் முதலீடு செய்யும் முன் சில முக்கிய அம்சங்களை கவனிக்க வேண்டும். குறுகிய கால லாபத்தை எதிர்பார்க்காமல், நீண்டகால சேமிப்பாக தங்கத்தை பார்க்க வேண்டும். டிஜிட்டல் தங்கம், ETF, மற்றும் நகை போன்ற பல்வேறு வடிவங்களில் முதலீடு செய்யும் வாய்ப்புகள் தற்போது உள்ளன. ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான நன்மைகள் மற்றும் ஆபத்துகள் உள்ளன. முடிவாக, தங்கம் விலை இவ்வாறு ஏறி இறங்குவது இயல்பானது. ஆனால் இன்றைய சரிவு போன்ற தருணங்கள், சரியான திட்டமிடலுடன் செயல்பட்டால் நல்ல முதலீட்டு வாய்ப்பாக மாறும். எனவே, சந்தை நிலவரத்தை கவனித்து, தேவைக்கேற்ற முடிவெடுப்பது மிகவும் முக்கியம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/gold-price-today-april-06-2026-in-chennai-and-tamil-nadu-gwmu23d"/>
        </item>
        <item>
            <title><![CDATA[PF பணத்தில் சிக்கலா..? உடனே சரிபார்க்க வேண்டிய 'Exit Date' ரகசியம்..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/dont-lose-your-pension-why-your-epfo-exit-date-matters-more-than-you-think-i5r1t27</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/dont-lose-your-pension-why-your-epfo-exit-date-matters-more-than-you-think-i5r1t27</guid>
            <pubDate>Wed, 08 Apr 2026 10:43:50 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;பணி தேதியில் ஏற்படும் சிறிய பிழை உங்கள் வருங்கால வைப்பு நிதி இருப்பு மற்றும் ஓய்வூதியத் தகுதியை பாதிக்கக்கூடும் என்று EPFO எச்சரித்துள்ளது. வருங்கால வைப்பு நிதி கணக்கில், பணியில் சேர்ந்த, விலகிய தேதியை புதுப்பித்து வைக்குமாறு EPFO அறிவுறுத்துகிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jwrnqjzyj3ajatyty4ydsmxn,imgname-epfo-uan-activation-1748879789054.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;பணி தேதியில் ஏற்படும் சிறிய பிழை உங்கள் வருங்கால வைப்பு நிதி இருப்பு மற்றும் ஓய்வூதியத் தகுதியை பாதிக்கக்கூடும் என்று EPFO எச்சரித்துள்ளது. வருங்கால வைப்பு நிதி கணக்கில், பணியில் சேர்ந்த, விலகிய தேதியை புதுப்பித்து வைக்குமாறு EPFO அறிவுறுத்துகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நீங்கள் பணியில் இருந்து, உங்கள் எதிர்காலத்திற்காக ஊழியர் சேமநிதி (EPFO) கணக்கில் பங்களித்து வந்தால், இந்தச் செய்தி உங்களுக்கு மிகவும் முக்கியமானது. ஒரு சிறிய பிழை கூட பயனர்களுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தக்கூடும். EPFO தனது உறுப்பினர்களுக்கு, தங்களது சேமநிதி (PF) கணக்குகளில் உள்ள சேர்ந்த தேதி (DoJ) மற்றும் வெளியேறும் தேதியைக் கண்டிப்பாகச் சரிபார்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது. ஏதேனும் முரண்பாடு இருந்தால், அதை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும். இந்தத் தேதிகளில் ஏற்படும் எந்தவொரு பிழையும், PF நிதியைத் திரும்பப் பெறும்போது அல்லது ஓய்வு பெறும் நேரத்தில் நிதி இழப்பை ஏற்படுத்தக்கூடும், மேலும் அது உங்கள் ஓய்வூதிய உரிமைகளையும் பாதகமாகப் பாதிக்கக்கூடும்.&lt;/p&gt;&lt;p&gt;சமூக ஊடகத் தளத்தில் சமீபத்தில் பகிரப்பட்ட ஒரு பதிவில், இந்தத் தேதிகளில் &quot;ஒரு சிறிய பிழை கூட&quot; PF சேமிப்பு மற்றும் ஓய்வூதியத் தகுதி ஆகிய இரண்டையும் பாதிக்கக்கூடும் என்று EPFO கூறியுள்ளது. எனவே, உறுப்பினர்கள் இதுபோன்ற பிழைகளைப் புறக்கணிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பணியில் சேர்ந்த தேதி (DoJ) மற்றும் பணியிலிருந்து விலகிய தேதி ஆகியவை எந்தவொரு ஊழியரின் PF பதிவிற்கும் அடித்தளமாக அமைகின்றன. பணியில் சேர்ந்த தேதியானது (DoJ) ஊழியர் எப்போது நிறுவனத்தில் சேர்ந்தார் என்பதையும், பணியிலிருந்து விலகிய தேதியானது (Exit Date) அவர்கள் எப்போது வேலையை விட்டு விலகினார்கள் என்பதையும் குறிக்கிறது. இந்த இரண்டு தேதிகளின் அடிப்படையில்தான் EPFO, ஊழியரின் பங்களிப்புகளின் கால அளவையும், அவர்கள் பெறத் தகுதியான பலன்களையும் தீர்மானிக்கிறது. இந்தத் தேதிகளில் ஏற்படும் எந்தவொரு முரண்பாடும் முழு சேவைப் பதிவையும் பாதகமாகப் பாதிக்கக்கூடும்.&lt;/p&gt;&lt;p&gt;உங்கள் பணியிலிருந்து விலகிய தேதி புதுப்பிக்கப்படவில்லை என்றால், உங்கள் PF பணத்தை ஆன்லைனில் எடுக்க முடியாது. நீங்கள் ஓய்வூதியப் பலன்களைக் கோரவோ அல்லது உங்கள் பழைய PF கணக்கை மூடவோ முடியாது. முன்பு, இந்தத் தகவலை முதலாளி மட்டுமே புதுப்பிக்க முடியும் என்பதும், இது பெரும்பாலும் தாமதங்களுக்கு வழிவகுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போது, ஊழியர்கள் UAN போர்ட்டலுக்குச் சென்று தாங்களாகவே அதைப் புதுப்பிக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;EPFO-வின்படி, தவறான பணிசேரும் தேதி (DoJ) அல்லது பணி விலகும் தேதி பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;உங்கள் PF கோரிக்கை நிராகரிக்கப்படலாம்.&lt;/p&gt;&lt;p&gt;பணம் எடுக்கும் செயல்முறை தாமதமாகலாம்.&lt;/p&gt;&lt;p&gt;நீங்கள் வேலை மாறும்போது, உங்கள் PF நிதி பரிமாற்றம் தடைபடலாம்.&lt;/p&gt;&lt;p&gt;உங்கள் ஓய்வூதியக் கணக்கீடு (EPS) தவறாக இருக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;ஓய்வு பெறும் நேரத்தில் பெறப்படும் பலன்கள் குறைக்கப்படலாம்.&lt;/p&gt;&lt;p&gt;வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒரு சிறிய தரவு உள்ளீட்டுப் பிழை நீண்ட காலத்திற்கு குறிப்பிடத்தக்க நிதி இழப்புகளை ஏற்படுத்தக்கூடும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தப் பிழைகள் பெரும்பாலும் முதலாளியால் தரவு உள்ளீடு செய்யப்படும்போது நிகழ்கின்றன. அடிக்கடி, ஒரு ஊழியர் வேலை மாறும்போது, 'பணி விலகும் தேதி' புதுப்பிக்கப்படாமல் இருக்கலாம் அல்லது தவறான தேதி உள்ளிடப்படலாம். மேலும், பழைய பதிவுகளைப் புதுப்பிக்கும்போதும் பிழைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, ஊழியர்கள் தங்கள் தரவுகளைத் தாங்களே சரிபார்க்குமாறு EPFO அறிவுறுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உங்கள் PF கணக்கு விவரங்களை ஆன்லைனில் எளிதாகச் சரிபார்க்கலாம். அவ்வாறு செய்ய:&lt;/p&gt;&lt;p&gt;UAN போர்ட்டலில் உள்நுழையவும்.&lt;/p&gt;&lt;p&gt;&lsquo;சேவை வரலாற்றைக் காண்க&rsquo; (View Service History) பகுதிக்குச் செல்லவும்.&lt;/p&gt;&lt;p&gt;அங்கு உங்கள் அனைத்து முதலாளிகளின் விவரங்களையும் பார்க்கவும்.&lt;/p&gt;&lt;p&gt;பணியில் சேர்ந்த தேதி (DoJ) மற்றும் வெளியேறிய தேதியை (Exit Date) கவனமாகச் சரிபார்க்கவும்.&lt;/p&gt;&lt;p&gt;ஏதேனும் தகவல் தவறாகத் தோன்றினால், அதைப் புறக்கணிக்காதீர்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உங்கள் PF பதிவுகளில் பணியில் சேர்ந்த தேதி (DoJ) அல்லது வெளியேறிய தேதி தவறாக இருந்தால், நீங்கள் அதைச் சரிசெய்யலாம். அவ்வாறு செய்ய:&lt;/p&gt;&lt;p&gt;UAN போர்ட்டலில் உள்நுழையவும்.&lt;/p&gt;&lt;p&gt;&lsquo;வெளியேறிய தேதியைப் புதுப்பிக்கவும்&rsquo; (Update Date of Exit) அல்லது பொருத்தமான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.&lt;/p&gt;&lt;p&gt;சரியான தகவலை உள்ளிடவும்.&lt;/p&gt;&lt;p&gt;தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும்.&lt;/p&gt;&lt;p&gt;உங்கள் முதலாளியின் ஒப்புதலுக்குப் பிறகு புதுப்பித்தல் செயல்படுத்தப்படும்.&lt;/p&gt;&lt;p&gt;சில சமயங்களில், உங்கள் மனிதவளத் துறை (HR department) அல்லது நிறுவனத்தையும் நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டியிருக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தரவுத் திருத்தத்திற்காக, பின்வரும் ஆவணங்கள் பொதுவாகக் கோரப்படுகின்றன:&lt;/p&gt;&lt;p&gt;பணியில் சேரும் கடிதம் அல்லது பணி நியமனக் கடிதம்&lt;/p&gt;&lt;p&gt;பணியிலிருந்து விடுவிக்கும் கடிதம்&lt;/p&gt;&lt;p&gt;சம்பளச் சீட்டு&lt;/p&gt;&lt;p&gt;ஆதார் அட்டை&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;1. முதலில், நீங்கள் EPF உறுப்பினர் போர்ட்டலுக்குச் செல்ல வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;2. அடுத்து, உங்கள் UAN, கடவுச்சொல் மற்றும் கேப்ட்சாவைப் பயன்படுத்தி உள்நுழையவும்.&lt;/p&gt;&lt;p&gt;3. இப்போது, &lsquo;Manage&rsquo; என்பதைக் கிளிக் செய்து, பின்னர் &lsquo;Mark Exit&rsquo; என்பதைக் கிளிக் செய்யவும்.&lt;/p&gt;&lt;p&gt;4. இங்கே, உங்களின் முந்தைய மற்றும் தற்போதைய வேலையளிப்பாளர் கணக்குகளின் பட்டியலைக் காண்பீர்கள்.&lt;/p&gt;&lt;p&gt;5. இப்போது, நீங்கள் எந்த நிறுவனத்திலிருந்து ராஜினாமா செய்தீர்களோ, அந்த நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கவும்.&lt;/p&gt;&lt;p&gt;6. நீங்கள் வெளியேறிய தேதியைப் புதுப்பிக்க விரும்பும் குறிப்பிட்ட PF கணக்கைத் தேர்ந்தெடுக்கவும்.&lt;/p&gt;&lt;p&gt;7. இப்போது, வெளியேறிய தேதி, வெளியேறுவதற்கான காரணம் மற்றும் பிற தொடர்புடைய விவரங்களை உள்ளிடவும்.&lt;/p&gt;&lt;p&gt;8. உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட OTP-ஐப் பயன்படுத்தி விவரங்களைச் சரிபார்த்து, பின்னர் சமர்ப்பிக்கவும்.&lt;/p&gt;&lt;p&gt;9. இதைத் தொடர்ந்து, நீங்கள் வேலையை விட்டு வெளியேறும் தேதி உங்கள் PF கணக்கில் உடனடியாகப் புதுப்பிக்கப்படும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/dont-lose-your-pension-why-your-epfo-exit-date-matters-more-than-you-think-i5r1t27"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Post Office Scheme: மாசம் ₹2000 சேமித்தால் போதும், ₹1.43 லட்சம்.. போஸ்ட் ஆபீஸின் சூப்பர் திட்டம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/post-office-rd-scheme-how-to-get-1-43-lakhs-by-investing-2000-monthly-mggb0yx</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/post-office-rd-scheme-how-to-get-1-43-lakhs-by-investing-2000-monthly-mggb0yx</guid>
            <pubDate>Thu, 09 Apr 2026 14:47:04 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;இப்போதெல்லாம் பணவீக்கம் மிக வேகமாக அதிகரித்து வருவதால் அனைவரும் சிறந்த வருமானத்துடன் கூடிய பாதுகாப்பான முதலீடுகளை விரும்புகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு தபால் அலுவலக மாதாந்திர சேமிப்புத் திட்டம் சிறந்த தேர்வாக இருக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k18jfkec3e61q8pcp06yb101,imgname-money-making-tips-1753708219851.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;இப்போதெல்லாம் பணவீக்கம் மிக வேகமாக அதிகரித்து வருவதால் அனைவரும் சிறந்த வருமானத்துடன் கூடிய பாதுகாப்பான முதலீடுகளை விரும்புகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு தபால் அலுவலக மாதாந்திர சேமிப்புத் திட்டம் சிறந்த தேர்வாக இருக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தத் தபால் அலுவலகத் திட்டத்தின் கீழ், மாதாந்திர வைப்புத்தொகைக்கு அரசாங்கம் உங்களுக்குக் கணிசமான வட்டியை வழங்குகிறது. இந்த 5 ஆண்டுத் திட்டம், உங்கள் சிறிய சேமிப்பை ஒரு பெரிய நிதியாக மாற்ற உதவுகிறது. முதலீடு செய்வது எளிதானது மற்றும் இது சாமானிய மக்களுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒவ்வொரு மாதமும் உங்கள் சம்பளம் அல்லது வருமானத்திலிருந்து வெறும் ₹2,000 சேமித்து இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால், 5 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களிடம் சுமார் ₹1,42,732 மொத்த நிதி இருக்கும். இந்தக் காலகட்டத்தில், நீங்கள் மொத்தமாக ₹1,20,000 டெபாசிட் செய்வீர்கள், மேலும் அரசாங்கம் உங்களுக்கு வட்டியாக ₹22,732 மட்டுமே வழங்கும். இதேபோல், நீங்கள் மாதம் ₹1,000 டெபாசிட் செய்தால், முதிர்வு காலத்தில் உங்களுக்கு சுமார் ₹71,369 கிடைக்கும். மாதம் ₹5,000 சேமிப்பதன் மூலம் நீங்கள் ₹3,56,830-க்கு உரிமையாளராகலாம். தற்போது, ​​அரசாங்கம் இதற்கு ஆண்டுக்கு 6.7% வட்டி வழங்குகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தேவைப்படும்போது பணம் முடங்கிவிடும் என்ற அச்சத்தால், மக்கள் பெரும்பாலும் நீண்ட காலத் திட்டங்களில் முதலீடு செய்யத் தயங்குகிறார்கள். ஆனால், தபால் அலுவலக தொடர் வைப்புத்தொகை (RD) விஷயத்தில் அப்படி இல்லை. உங்களுக்கு அவசரமாக நிதி தேவைப்பட்டால், உங்கள் சொந்த வைப்புத்தொகைக்கு எதிராக நீங்கள் கடன் பெறலாம். ஒரு வருடத்திற்குத் தவறாமல் தவணைகளைச் செலுத்திய பிறகு, உங்கள் கணக்கு இருப்பில் 50% வரை கடனாகப் பெறலாம். இதன் சிறப்பு என்னவென்றால், இந்தக் கடன் தனிநபர் கடனை விட மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் கிடைக்கிறது. உங்கள் தொடர் வைப்புத்தொகையில் நீங்கள் பெறும் வட்டியை விட 2% மட்டுமே கூடுதலாகச் செலுத்தினால் போதும்; தற்போது அந்த வட்டி விகிதம் 8.7% ஆக உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தபால் அலுவலக தொடர் முதலீட்டுத் திட்டம் (Post Office RD) என்பது இந்திய அரசின் ஆதரவு பெற்ற ஒரு திட்டமாகும், எனவே உங்கள் பணத்தின் ஒவ்வொரு பைசாவும் முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும். நீங்கள் வெறும் ₹100-இல் இருந்தே முதலீடு செய்யத் தொடங்கலாம், இதற்கு உச்ச வரம்பு எதுவும் இல்லை. ₹100-க்கு மேல், நீங்கள் ₹10-இன் மடங்குகளில் எந்தத் தொகையையும் தேர்வு செய்யலாம். இந்தத் திட்டத்தின் கீழ், 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் பெயரில்கூட யார் வேண்டுமானாலும் கணக்கைத் திறக்கலாம். மூன்று பேர் கூட்டாகவும் கணக்கைத் திறக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை, பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்கள் இன்றி பாதுகாப்பாகப் பெருக்க விரும்புபவர்களுக்கு இந்தத் திட்டம் மிகவும் ஏற்றது. உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தில் நீங்கள் ஒரு தொடர் மேம்பாட்டுக் கணக்கைத் (RD account) தொடங்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பொறுப்புத் துறப்பு: &lt;/strong&gt;இந்தக் கட்டுரை உங்கள் தகவலுக்கும் பொதுவான புரிதலுக்கும் மட்டுமே. தபால் அலுவலகத் திட்டங்களுக்கான (RD போன்றவை) வட்டி விகிதங்களும் விதிகளும் அரசாங்கத்தால் அவ்வப்போது மாற்றத்திற்கு உட்பட்டவை. முதலீட்டுத் தொகைகள் தோராயமான கணக்கீடுகளின் அடிப்படையில் அமைந்தவை. எந்தவொரு நிதி ஆதாயத்திற்கோ அல்லது இழப்பிற்கோ நாங்கள் பொறுப்பல்ல. எந்தவொரு திட்டத்திலும் முதலீடு செய்வதற்கு முன், தயவுசெய்து உங்கள் அருகிலுள்ள தபால் அலுவலகத்திற்குச் செல்லவும், அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும் அல்லது சான்றளிக்கப்பட்ட நிதி ஆலோசகரை அணுகவும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/post-office-rd-scheme-how-to-get-1-43-lakhs-by-investing-2000-monthly-mggb0yx"/>
        </item>
        <item>
            <title><![CDATA[சொத்து வரி செலுத்துபவரா நீங்க? அரசு சொன்ன குட் நியூஸ்..! வட்டியில் தள்ளுபடி பெறுவது எப்படி? முழு விவரம் இதோ!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/tn-property-tax-discount-how-to-get-5-percentage-rebate-and-penalty-waiver-tips-nss9hyq</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/tn-property-tax-discount-how-to-get-5-percentage-rebate-and-penalty-waiver-tips-nss9hyq</guid>
            <pubDate>Wed, 08 Apr 2026 12:25:20 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;சொத்து வரி செலுத்துபவர்களுக்கு 5% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதை எப்படி பெறலாம்? யாரெல்லாம் சொத்து வரி செலுத்த வேண்டியதில்லை? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01knnxpx85ksj18n6684pmheak,imgname-proper-tax-1775631037701.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சொத்து வரி செலுத்துபவர்களுக்கு 5% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதை எப்படி பெறலாம்? யாரெல்லாம் சொத்து வரி செலுத்த வேண்டியதில்லை? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழகத்தில் சென்னை, கோவை போன்ற பெரு நகரங்களில் சொத்து வரி அதிகமாக உள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை சொத்து வரி வசூலிக்கப்படும் நிலையில், மக்களுக்கு பெரும் சுமையாக இருந்து வருகிறது. உள்ளாட்சி அமைப்புகள் மக்களிடம் இருந்து சொத்து வரியை வசூல் செய்து மாநகராட்சி சாலைகளை அமைப்பது, தெரு விளக்குகளை பராமரிப்பது, பாதாள சாக்கடைகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றன.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சொத்து வரியில் 5% தள்ளுபடி&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஆண்டுக்கு இருமுறை சொத்து வரி வசூலிப்பதால் நாம் அதிருப்தி அடைந்தாலும் சொத்து வரி செலுத்தும் சென்னைவாசிகளுக்கு 5% தள்ளுபடி கிடைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம்.. ஒவ்வொரு அரை ஆண்டின் ஆரம்பத்திலும் அதாவது முதல் பாதியான ஏப்ரல் 1ம் தேதி முதல் ஏப்ரல் 30ம் தேதிக்குள்ளும் மற்றும் இரண்டாம் பாதியான அக்டோபர் 1ம் தேதி முதல் அக்டோபர் 30ம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்தினால் உங்களுக்கு 5% ஊக்கத்தொகை வழங்கப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆகவே மேற்குறிப்பிட்ட தேதிக்குள் நீங்கள் சொத்து வரியை சரியாக செலுத்தினீர்கள் என்றால் சொத்து வரியில் 5% தள்ளுபடி பணத்தை உங்களால் சேமிக்க முடியும். ஏப்ரல் 30ம் தேதிக்கு மேல் அக்டோபர் 30ம் தேதிக்கு மேல் சொத்து வரி செலுத்தினால் 5% தள்ளுபடி கிடைக்காது. இது மட்டுமின்றி தாமதமாக வரி செலுத்தினால் தாமதக் கட்டணமாக மாதம் 1% தனி வட்டியும் வசூலிக்கப்படும் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சென்னை மக்கள் அறியாத 3 விஷயங்கள்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;சொத்து வரி செலுத்தும் சென்னை மக்கள் அறியாத 3 முக்கியமான விஷயங்கள் உள்ளன. முதலாவது பலர் சொத்து வரி செலுத்தி விட்டு அதன் ரசீதை பெறுவதற்காக அலுவலகங்களுக்கு அலைகிறார்கள். இனிமேல் இது தேவையே இல்லை. ஏனெனில் நீங்கள் ஆன்லைனில் பணம் செலுத்திய உடனே அதற்கான டிஜிட்டல் ரசீதை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண் (+91 94454 77205) மூலம் உங்கள் சொத்து வரி நிலுவை மற்றும் விவரங்களை எளிதாக அறிந்து கொள்ள முடியும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இரண்டாவது, உங்களின் கட்டிடம் நீண்ட நாட்களாக குறைந்தபட்சம் 30 நாட்கள் அல்லது அதற்கு மேல் வாடகைக்கு விடப்படாமல் காலியாக இருந்தால் அல்லது அதில் நீங்கள் வசிக்காமல் பூட்டியே கிடந்தால், அதற்கு வரி விலக்கு அல்லது குறைப்பு கோர சட்டத்தில் இடம் இருக்கிறது. இதற்கு நீங்கள் உரிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் சென்னை மாநகராட்சி அதிகாரிகளை தொர்பு கொண்டால் நிவாரணம் பெற முடியும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இனி பெயர் மாற்றம் செய்ய அலைய வேண்டாம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;மூன்றாவது, இதற்கு முன்பு சொத்து வாங்கிய பிறகு மாநகராட்சி அலுவலகத்தில் பெயர் மாற்றம் செய்ய நீண்ட நாட்கள் ஆகும். ஒவ்வொரு முறையும் மாநகராட்சி அலுவலக படிகளில் ஏறி இறங்க வேண்டியது இருந்தது. ஆனால் இப்போது பதிவுத் துறையும், மாநகராட்சியும் இணைக்கப்பட்டுள்ளன. நீங்கள் பத்திரப் பதிவு செய்யும் போதே விவரங்கள் மாநகராட்சிக்குத் தானாகவே பகிரப்பட்டு, தானியங்கி முறையில் பெயர் மாற்றம் செய்யும் வசதி அமலுக்கு வந்துள்ளது. ஆகையால் உங்களுக்கு இனிமேல் எந்த சிக்கலும் இல்லை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சொத்து வரியை முன்கூட்டியே செலுத்தினால் சென்னைவாசிகளுக்கு மட்டும் தள்ளுபடியா? மற்றவர்களுக்கு இல்லையா? என நீங்கள் கேட்கலாம். சொத்து வரியில் 5% தள்ளுபடி சென்னை மட்டுமல்ல, கோவை, மதுரை, திருச்சி போன்ற மாநகராட்சிகளுக்கும், தமிழகத்தின் நகராட்சிகளுக்கும் மற்றும் பேரூராட்சிகளில் வரி செலுத்துபவர்களும் இந்த தள்ளுபடியை பெறலாம். ஆனால் இந்த தள்ளுபடியை பெறுவதற்கு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நீங்கள் சொத்து வரியை செலுத்தி இருப்பது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/tn-property-tax-discount-how-to-get-5-percentage-rebate-and-penalty-waiver-tips-nss9hyq"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Post Office RD: 5 வருடத்தில் ₹7 லட்சம் சம்பாதிக்கணுமா? மாசம் எவ்வளவு கட்டணும்?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/post-office-rd-scheme-best-recurring-deposit-option-for-safe-savings-explained-benefits-and-returns-qh1zswc</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/post-office-rd-scheme-best-recurring-deposit-option-for-safe-savings-explained-benefits-and-returns-qh1zswc</guid>
            <pubDate>Mon, 06 Apr 2026 17:22:08 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Post Office RD : இன்றைய பொருளாதார சூழலில், நிறைய பேர் முன்கூட்டியே சேமிக்கத் தொடங்கியிருக்காங்க. அவங்களுக்கு, மத்திய அரசின் கீழ் செயல்படும் போஸ்ட் ஆபீஸ் வழங்கும் தொடர் வைப்பு நிதி (RD) திட்டம் ஒரு சூப்பர் சாய்ஸ்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kne21fhe2n4d69zb9kefm1w2,imgname-post-office--23--1775367142957.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Post Office RD : இன்றைய பொருளாதார சூழலில், நிறைய பேர் முன்கூட்டியே சேமிக்கத் தொடங்கியிருக்காங்க. அவங்களுக்கு, மத்திய அரசின் கீழ் செயல்படும் போஸ்ட் ஆபீஸ் வழங்கும் தொடர் வைப்பு நிதி (RD) திட்டம் ஒரு சூப்பர் சாய்ஸ்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;போஸ்ட் ஆபீஸ் RD திட்டம் என்பது மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையைச் சேமிக்கும் ஒரு சேமிப்புத் திட்டம். இது சிறிய தொகையிலும் சேமிப்பைத் தொடங்க உதவுகிறது. இந்தத் திட்டத்தில், உங்கள் முதலீட்டுக்கு வட்டி கிடைப்பதோடு, அந்த வட்டிக்கும் வட்டி கிடைக்கும் (கூட்டு வட்டி). இதன் மூலம் 5 ஆண்டுகளில் நல்ல தொகையைச் சேர்க்கலாம்.&amp;nbsp;இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சம் மாதம் ₹100 முதலீடு செய்யலாம், அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை. தற்போது, வட்டி விகிதம் 6.7% ஆக உள்ளது. வட்டி, காலாண்டுக்கு ஒருமுறை கூட்டு வட்டி முறையில் கணக்கிடப்படுகிறது. இந்தத் திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். இது மத்திய அரசின் கீழ் இயங்குவதால், உங்கள் முதலீட்டுக்கு முழுப் பாதுகாப்பு உண்டு.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;போஸ்ட் ஆபீஸ் RD திட்டத்தின் முக்கிய முதிர்வு காலம் 5 ஆண்டுகள். அதாவது, மொத்தம் 60 மாதங்களுக்கு நீங்கள் தவறாமல் பணம் செலுத்த வேண்டும். முதிர்வு காலத்திற்குப் பிறகும், இந்தத் திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் வசதி உள்ளது. மேலும், இந்தத் திட்டத்தில் சில கூடுதல் வசதிகளும் இருக்கின்றன.&amp;nbsp;ஒரு வருடம் கழித்து கடன் பெறும் வசதி உண்டு. 3 ஆண்டுகளுக்குப் பிறகு, கணக்கை முன்கூட்டியே முடித்துக்கொள்ளும் வாய்ப்பும் உள்ளது (ஆனால் வட்டியில் பிடித்தம் செய்யப்படும்). ஒரு போஸ்ட் ஆபீஸிலிருந்து மற்றொரு போஸ்ட் ஆபீஸுக்கு கணக்கை மாற்றிக்கொள்ளலாம்.&lt;/p&gt;&lt;img&gt;நீங்கள் ஒவ்வொரு மாதமும் ₹10,000 வீதம் 5 ஆண்டுகளுக்குப் பணம் செலுத்தினால், கணக்கு இப்படி இருக்கும்: 60 மாதங்களில் உங்கள் மொத்த முதலீடு ₹6,00,000 ஆக இருக்கும். இதற்கு வட்டியாக சுமார் ₹1,12,000 கிடைக்கும். முதிர்வு காலத்தில், உங்கள் கையில் மொத்தம் ₹7,12,000 கிடைக்கும். அதாவது, 5 ஆண்டுகளில் உங்கள் முதலீட்டுக்கு ஒரு லட்சத்துக்கும் மேல் வட்டி கிடைக்கிறது. இது ஒரு நிலையான மற்றும் பாதுகாப்பான வருமானமாகக் கருதப்படுகிறது.&lt;img&gt;5 ஆண்டுகளுக்குப் பிறகு கணக்கை முடிக்காமல், மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்தால், உங்கள் மொத்த சேமிப்பு கணிசமாக அதிகரிக்கும். உதாரணமாக, 10 ஆண்டுகளுக்கு மாதம் ₹10,000 செலுத்தினால், உங்கள் மொத்த முதலீடு ₹12,00,000 ஆக இருக்கும். வட்டியுடன் சேர்த்து, உங்களுக்கு சுமார் ₹17 லட்சத்துக்கும் மேல் கிடைக்க வாய்ப்புள்ளது. கூட்டு வட்டி முறை இருப்பதால், காலம் அதிகரிக்க அதிகரிக்க வட்டியும் அதிகமாகும்.&lt;img&gt;&lt;p&gt;போஸ்ட் ஆபீஸ் RD கணக்கைத் தொடங்குவது மிகவும் சுலபம். இதற்கு, உங்கள் அருகில் உள்ள தபால் நிலையத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு RD கணக்கு தொடங்குவதற்கான படிவத்தை வாங்கிப் பூர்த்தி செய்ய வேண்டும். ஆதார், பான் கார்டு போன்ற KYC ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். முதல் மாத டெபாசிட் தொகையைச் செலுத்த வேண்டும்.&amp;nbsp;கணக்கு தொடங்கிய பிறகு, ஒவ்வொரு மாதமும் பணத்தைச் செலுத்த வேண்டும். இப்போது பல தபால் நிலையங்களில் ஆன்லைன் பேங்கிங் மூலமாகவும் RD டெபாசிட் செய்யும் வசதி உள்ளது. **கவனத்திற்கு:** மேலே உள்ள தகவல்கள் அடிப்படை விவரங்களுக்காக மட்டுமே. எந்தவொரு திட்டத்திலும் முதலீடு செய்வதற்கு முன்பு, நிதி ஆலோசகரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/post-office-rd-scheme-best-recurring-deposit-option-for-safe-savings-explained-benefits-and-returns-qh1zswc"/>
        </item>
        <item>
            <title><![CDATA[EPFO ​​3.0: இனி பிஎஃப் அலுவலகம் அலைய வேண்டாம்! UPI மூலம் PF பணம் எடுக்கும் வசதி - EPFO 3.0 அதிரடி மாற்றம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/how-to-withdraw-pf-money-via-atm-and-upi-limits-bank-list-explained-rmeiaae</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/how-to-withdraw-pf-money-via-atm-and-upi-limits-bank-list-explained-rmeiaae</guid>
            <pubDate>Wed, 08 Apr 2026 19:01:20 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;EPFO 3.0 UPI Withdrawal Rules 2026 : &lt;/strong&gt;மத்திய அரசின் EPFO 3.0 சீர்திருத்தத்தின் கீழ், தொழிலாளர்கள் இனி பிஎஃப் அலுவலகத்திற்குச் செல்லாமல் தங்களது மொபைலில் உள்ள UPI அல்லது ATM கார்டு மூலமாகவே பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kh095ezfzxny56nysmytq0f7,imgname-tamil-news---2026-02-09t090525.107-1770609884142.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;EPFO 3.0 UPI Withdrawal Rules 2026 : &lt;/strong&gt;மத்திய அரசின் EPFO 3.0 சீர்திருத்தத்தின் கீழ், தொழிலாளர்கள் இனி பிஎஃப் அலுவலகத்திற்குச் செல்லாமல் தங்களது மொபைலில் உள்ள UPI அல்லது ATM கார்டு மூலமாகவே பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மத்திய அரசு, வருங்கால வைப்பு நிதி (PF) சந்தாதாரர்களுக்கான EPFO ​​3.0 திட்டத்தை விரைவுபடுத்துகிறது. இந்த புதிய அமைப்பின் ஒரு பகுதியாக, சந்தாதாரர்கள் தங்களது PF நிதியை ஏடிஎம் அட்டைகள் அல்லது யுபிஐ செயலிகள் மூலம் நேரடியாகப் பெறலாம். இது 2026-ஆம் ஆண்டின் மத்தியில் முழுமையாகச் செயல்படுத்தப்பட வாய்ப்புள்ளது. மேலும், தானாகச் செலுத்தப்படும் தொகையின் வரம்பை ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்துவதன் மூலம், கோரிக்கை செயல்முறை மேலும் விரைவுபடுத்தப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இருப்பினும், ஏடிஎம் மற்றும் யுபிஐ மூலம் எவ்வளவு பிஎஃப் தொகையை எடுக்க முடியும் என்பதில் சந்தேகங்கள் உள்ளன. விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள். வரம்பு: மொத்த பிஎஃப் இருப்பில் 50% முதல் 75% வரை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பு இருக்கலாம். கடந்த ஆண்டு, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் வசதி மார்ச் 2026-க்குள் வரும் என்றும், மொத்த நிதியில் 75% வரை திரும்பப் பெறலாம் என்றும் கூறியிருந்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;யுபிஐ வரம்பு: யுபிஐ மூலம் செய்யப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் சுமார் ரூ. 25,000 என்ற வரம்பு விதிக்கப்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், இந்தக் கட்டுப்பாடுகள் குறித்த தெளிவு, அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட பின்னரே தெரியவரும். &lt;strong&gt;ஏடிஎம் அட்டைகள் மற்றும் வங்கி ஒப்பந்தங்கள்: &lt;/strong&gt;அரசு, வருங்கால வைப்பு நிதி (PF) கணக்குகளுடன் இணைக்கப்பட்ட சிறப்பு ஏடிஎம் அட்டைகளையும் அறிமுகப்படுத்தும். இதற்காக, EPFO ​​பொது மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த 32 வங்கிகளுடன் கூட்டு சேர்ந்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, ஆக்சிஸ், கோடக் மஹிந்திரா, பிஎன்பி, பேங்க் ஆஃப் பரோடா, கனரா வங்கி, இண்டஸ்இண்ட், ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க், யெஸ் பேங்க், ஃபெடரல் பேங்க், பந்தன் பேங்க், ஹெச்எஸ்பிசி போன்ற முக்கிய வங்கிகள் மூலம் எடுத்து கொள்ளலாம்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;இந்த வசதியைப் பெறுவதற்கு, உறுப்பினர்கள் பின்வருவனவற்றைச் செய்ய வேண்டும்:&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;செயலில் உள்ள ஒரு யுஏஎன் (யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர்) இருக்க வேண்டும், மேலும் அதனுடன் ஒரு மொபைல் எண்ணும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆதார், பான் மற்றும் வங்கிக் கணக்கு போன்ற கேஒய்சி (KYC) விவரங்கள் சரிபார்க்கப்பட வேண்டும். தற்போது, ​​கைமுறையான செயலாக்கத்தின் காரணமாக ஒரு பிஎஃப் கோரிக்கையைத் தீர்த்து வைக்க நேரம் எடுக்கிறது. புதிய அமைப்பில், எந்தவொரு கைமுறைத் தலையீடும் இல்லாமல், மின்னணுச் செயல்முறை மூலம் 3 நாட்களுக்குள் கோரிக்கை தீர்த்து வைக்கப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அரசு ஏற்கனவே தானியங்கி தீர்வு வரம்பை ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தியுள்ளது. இது, ஆண்டுதோறும் பெறப்படும் 5 கோடி கோரிக்கைகளைச் செயலாக்கும் பணியை விரைவுபடுத்தும். &lt;strong&gt;அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்- ஏடிஎம் கார்டு/யுபிஐ மூலம் பிஎஃப் எடுப்பதற்கு ஏதேனும் சேவைக் கட்டணங்கள் உண்டா?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;கட்டணங்கள் குறித்து அரசு இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. இருப்பினும், இது ஒரு வழக்கமான வங்கிப் பரிவர்த்தனை போலவே செயல்படுவதால், மற்ற வங்கி ஏடிஎம்களைப் பயன்படுத்தும்போது பொருந்தும் நிலையான கட்டணங்களே இதற்கும் பொருந்த வாய்ப்புள்ளது. பணம் எடுப்பதை ஊக்குவிப்பதற்காக, ஆரம்பத்தில் சில இலவசப் பரிவர்த்தனைகளை அரசு அனுமதிக்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Rsiva kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/how-to-withdraw-pf-money-via-atm-and-upi-limits-bank-list-explained-rmeiaae"/>
        </item>
        <item>
            <title><![CDATA[விலை ஏறுனாலும் 'சீப்'பா போலாம்..! விமான டிக்கெட் புக்கிங்கில் பணத்தை சேமிப்பது எப்படி..?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/air-india-fare-hike-2026-how-to-book-cheaper-flight-tickets-ssfi2f8</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/air-india-fare-hike-2026-how-to-book-cheaper-flight-tickets-ssfi2f8</guid>
            <pubDate>Tue, 07 Apr 2026 19:37:51 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ஏப்ரல் 8 முதல் ஏர் இந்தியா உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானப் பயணங்களுக்கு 'எரிபொருள் கூடுதல் கட்டணத்தை' (Fuel Surcharge) உயர்த்துகிறது. இதனால், டெல்லியிலிருந்து மும்பை அல்லது அமெரிக்கா செல்ல ₹299 முதல் ₹23,000 வரை கூடுதலாக செலவாகும்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01knkkzfx2san2r4ht1f4gwy3e,imgname-air-india-fuel-surcharge-domestic-international-fare-increase-jet-fuel-price-update-1775553724322.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஏப்ரல் 8 முதல் ஏர் இந்தியா உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானப் பயணங்களுக்கு 'எரிபொருள் கூடுதல் கட்டணத்தை' (Fuel Surcharge) உயர்த்துகிறது. இதனால், டெல்லியிலிருந்து மும்பை அல்லது அமெரிக்கா செல்ல ₹299 முதல் ₹23,000 வரை கூடுதலாக செலவாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வரும் நாட்களில் நீங்கள் ஒரு பயணத்திற்கோ அல்லது பணி நிமித்தமான விமானப் பயணத்திற்கோ திட்டமிட்டிருந்தால், ஏர் இந்தியா உங்கள் பணப்பையில் ஒரு கூடுதல் சுமையை ஏற்றியுள்ளது. உலக சந்தையில் விமான எரிபொருளின் (ATF) விலை உயர்ந்து வருவதால், இந்த விமான நிறுவனம் தனது எரிபொருள் கூடுதல் கட்டணத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இந்தப் புதிய கட்டணங்கள் ஏப்ரல் 8, 2026, புதன்கிழமை முதல் அமலுக்கு வரும். ஆனால் கவலை வேண்டாம். இந்த பணவீக்க காலத்திலும் கூட, மலிவான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய சில சிறந்த வழிகள் உள்ளன. ஏர் இந்தியாவின் புதிய கட்டணங்கள் என்ன, நீங்கள் எப்படி பணத்தை சேமிக்கலாம் என்பதைத் தெரிந்து கொள்வோம்&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே தற்போது நடந்து வரும் போர், எரிபொருள் விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பிப்ரவரி 2026 இறுதியில் ஒரு பேரல் சுமார் 99 டாலராக இருந்த விமான எரிபொருளின் விலை, தற்போது 195 டாலருக்கும் மேல் உயர்ந்துள்ளது. செலவுகள் கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்துள்ளதால், கூடுதல் கட்டணங்களை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒரு நிலையான கட்டணத்தை வசூலிப்பதற்குப் பதிலாக, ஏர் இந்தியா இப்போது &quot;தூரம் கூடக்கூட, கட்டணமும் கூடும்&quot; என்ற கொள்கையை அமல்படுத்தியுள்ளது. 500 கி.மீ. வரை ₹299 கூடுதலாகவும், 501 முதல் 1000 கி.மீ. வரை ₹399, 1001 முதல் 1500 கி.மீ. வரை ₹549, 1501 முதல் 2000 கி.மீ. வரை ₹749 மற்றும் 2000 கி.மீ.க்கு மேல் ₹899 கட்டணம் வசூலிக்கப்படும். இந்த விதி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சேவைக்கும் பொருந்தும்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;வெளிநாடு பயணம் செய்வது அதிக செலவு மிக்கதாகி வருகிறது&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;நீங்கள் கடல் கடந்து பயணம் செய்யத் திட்டமிட்டால், அதிர்ச்சி சற்று அதிகமாக இருக்கும். அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு, நீங்கள் கூடுதலாக சுமார் ₹23,000 ($280) செலுத்த வேண்டியிருக்கும். ஐரோப்பா மற்றும் இங்கிலாந்திற்கு, இது சுமார் ₹17,000 ($205) ஆகவும், நேபாளம் மற்றும் இலங்கை போன்ற சார்க் நாடுகளுக்கு, இது $24-இல் இருந்தும் தொடங்குகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;இன்றிரவு 12 மணிக்கு முன் முன்பதிவு செய்யவும்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;புதிய கட்டணங்கள் ஏப்ரல் 8 முதல் அமலுக்கு வரும். நீங்கள் இன்றே உங்கள் பயணச்சீட்டை முன்பதிவு செய்தால், இந்த அதிகரித்த கூடுதல் கட்டணத்திலிருந்து தப்பிக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;மறைநிலைப் பயன்முறையின் பயன்பாடு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;டிக்கெட்டுகளைத் தேடும்போது எப்போதும் உங்கள் உலாவியின் பிரைவேட் விண்டோவை (மறைநிலைப் பயன்முறை) பயன்படுத்தவும். இதனால், நீங்கள் மீண்டும் மீண்டும் டிக்கெட்டுகளைத் தேடுவதை இணையதளங்கள் கண்டறிவது தடுக்கப்படும், மேலும் விலையும் அதிகரிக்காது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;கிரெடிட் கார்டு வெகுமதிகள்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;பல ஏர் இந்தியா அட்டைகள் எரிபொருள் கூடுதல் கட்டணத் தள்ளுபடிகள் அல்லது வெகுமதிப் புள்ளிகளை வழங்குகின்றன. முன்பதிவு செய்யும் நேரத்தில் இவற்றை நிச்சயம் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இணைப்பு விமானங்களை முயற்சிக்கவும்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;சில நேரங்களில், நேரடி விமானத்தை விட இணைப்பு விமானத்தின் கூடுதல் கட்டணமும் அடிப்படைக் கட்டணமும் மலிவாக இருக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;விலை எச்சரிக்கைகளை அமைக்கவும்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;Google Flights அல்லது பிற செயலிகளில் விலை எச்சரிக்கையை அமைக்கவும். விலைகள் சிறிதளவு குறைந்தாலும், உடனடியாக முன்பதிவு செய்யுங்கள்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/air-india-fare-hike-2026-how-to-book-cheaper-flight-tickets-ssfi2f8"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Business Idea: சொந்த ஊரிலேயே மெடிக்கல் ஷாப்... MedPlus தரும் சூப்பர் வாய்ப்பு..! முதலீடு எவ்வளவு?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/medplus-franchise-opportunity-for-rural-india-2026-low-cost-business-wfnkhzh</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/medplus-franchise-opportunity-for-rural-india-2026-low-cost-business-wfnkhzh</guid>
            <pubDate>Thu, 09 Apr 2026 15:03:58 +0530</pubDate>
            <description><![CDATA[கிராமப்புறங்களில் மெடிக்கல் ஸ்டோர் தொடங்க நினைப்பவர்களுக்காக MedPlus ஒரு புதிய பிரான்சைஸ் மாடலைக் கொண்டுவந்துள்ளது. இதற்கு D.Pharm அல்லது B.Pharm படித்திருக்க வேண்டிய அவசியமில்லை, யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01km9wxkzq9x38a144mtcx0y7s,imgname-money-1774153814007.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[கிராமப்புறங்களில் மெடிக்கல் ஸ்டோர் தொடங்க நினைப்பவர்களுக்காக MedPlus ஒரு புதிய பிரான்சைஸ் மாடலைக் கொண்டுவந்துள்ளது. இதற்கு D.Pharm அல்லது B.Pharm படித்திருக்க வேண்டிய அவசியமில்லை, யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.&lt;img&gt;இந்தியாவின் இரண்டாவது பெரிய ஃபார்மசி செயினான MedPlus, இப்போது கிராமப்புறங்களிலும் தனது சேவையை விரிவுபடுத்துகிறது. முன்பு, MedPlus பிரான்சைஸ் எடுக்க ஃபார்மசி படித்திருக்க வேண்டும், இரண்டு வருட அனுபவம் தேவை போன்ற கடுமையான விதிகள் இருந்தன. ஆனால் இப்போது, சாதாரண மக்களும் தொழில்முனைவோர் ஆகும்படி புதிய விதிகளை MedPlus உருவாக்கியுள்ளது.&lt;img&gt;இந்த புதிய மாடலின்படி, பிரான்சைஸ் எடுக்க சுமார் 8.5 லட்சம் ரூபாய் முதலீடு தேவைப்படும். இதில், 50,000 ரூபாய் பிரான்சைஸ் கட்டணமாகவும், மீதமுள்ள 8 லட்சம் ரூபாய் மருந்துகளை ஸ்டாக் வைப்பதற்காகவும் ஒதுக்கப்படும்.&lt;img&gt;இதில் ஒரு சிறப்பு என்னவென்றால், நீங்கள் முதலீடு செய்யும் 8 லட்ச ரூபாயிலேயே, கடையின் இன்டீரியர், கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் மற்றும் பிராண்டிங் போர்டுகளை நிறுவனமே இலவசமாக அமைத்துக் கொடுக்கும். இந்த ஸ்டோரைத் தொடங்க 150 முதல் 300 சதுர அடி இடம் இருந்தால் போதும்.&lt;img&gt;&lt;p&gt;இந்த புதிய வாய்ப்பிற்கு யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். நீங்கள் மருந்தாளுநராக இல்லாவிட்டாலும், ஒரு மருந்தாளுநரை நியமித்து கடையை நடத்தலாம். வியாபார அறிவு இல்லாதவர்களுக்கு, ஹைதராபாத்தில் ஒரு மாத கால சிறப்புப் பயிற்சியும் வழங்கப்படும். இந்தக் கடை பிரதான சாலைக்கு அருகில் அமையவிருப்பதால், சுமார் 4 முதல் 5 ஆயிரம் மக்கள்தொகை கொண்ட கிராமங்களில் இதற்கு நல்ல வரவேற்பு இருக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மருத்துவத் தொழில் என்பது ஆண்டு முழுவதும் இயங்கும் ஒரு நிலையான தொழிலாகும். மெட் பிளஸின் பிராண்ட் மதிப்பால் வாடிக்கையாளர்கள் எளிதில் ஈர்க்கப்படுகிறார்கள். ஜெனரிக் மருந்துகளில் 15-20 சதவிகித லாப வரம்பு இருந்தால், மெட் பிளஸ் தனது சொந்த லேபிள் மற்றும் ஜெனரிக் மருந்துகளுக்கு 50 முதல் 80 சதவிகிதம் வரை தள்ளுபடி வழங்குவதன் மூலம் நல்ல லாபம் ஈட்ட முடியும். மருந்துகளைத் தவிர, அது அன்றாட நுகர்வோர் பொருட்கள் (FMCG) மற்றும் கண்ணாடிகளையும் விற்க முடியும். தங்கள் சொந்த ஊரில் ஒரு மரியாதைக்குரிய தொழிலைச் செய்ய விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/medplus-franchise-opportunity-for-rural-india-2026-low-cost-business-wfnkhzh"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Highest FD Rates: SBI, HDFC எல்லாம் ஓரமா போங்க..! இந்த பேங்க் 7.75% வட்டி தருது: வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/best-bank-fd-rates-2026-sbi-hdfc-icici-yes-bank-compared-xqawmmo</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/best-bank-fd-rates-2026-sbi-hdfc-icici-yes-bank-compared-xqawmmo</guid>
            <pubDate>Tue, 07 Apr 2026 20:22:49 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;மக்கள் பெரும்பாலும் பெரிய பொது அல்லது தனியார் வங்கிகளில் கண்மூடித்தனமாக முதலீடு செய்கிறார்கள், ஆனால் வட்டி விகிதங்களில் SBI, HDFCயை விடவும் சிறந்து விளங்கும் ஒரு வங்கி உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? அது எந்த வங்கி என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்&hellip;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k45591m5y14ab8j88yzc5v8e,imgname-personal-loan-offers-1756814935684.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;மக்கள் பெரும்பாலும் பெரிய பொது அல்லது தனியார் வங்கிகளில் கண்மூடித்தனமாக முதலீடு செய்கிறார்கள், ஆனால் வட்டி விகிதங்களில் SBI, HDFCயை விடவும் சிறந்து விளங்கும் ஒரு வங்கி உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? அது எந்த வங்கி என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்&hellip;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கோடக் மஹிந்திரா வங்கி, மூத்த குடிமக்களுக்கு 15 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரையிலான கால அளவிற்கு 7.20% வட்டியை வழங்குகிறது, அதே சமயம் பொது மக்கள் அதே கால அளவிற்கு 6.70% வரை வருமானத்தைப் பெறுகிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஐசிஐசிஐ வங்கி, மூத்த குடிமக்களுக்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரையிலான நிலையான வைப்பு நிதிகளுக்கு 7.10% வட்டியையும், பொதுமக்களுக்கு 3 முதல் 10 ஆண்டுகள் வரையிலான நீண்ட கால நிலையான வைப்பு நிதிகளுக்கு 6.50% வட்டியையும் வழங்குகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி, பாதுகாப்பின் அடிப்படையில் முதலிடத்தில் உள்ளது, ஆனால் வட்டி விகிதங்கள் சற்றுக் குறைவாக இருக்கின்றன. இங்கு மூத்த குடிமக்களுக்கு, 5 முதல் 10 ஆண்டுகள் வரையிலான காலவரையறையுடைய நிலையான வைப்புத்தொகைகளுக்கு அதிகபட்சமாக 7.05% வட்டி வழங்கப்படுகிறது. இருப்பினும், பொதுமக்களுக்கு, 2 முதல் 3 ஆண்டுகள் வரையிலான காலவரையறையுடைய நிலையான வைப்புத்தொகைகளுக்கு 6.45% வட்டி விகிதம் கிடைக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான SDFC, மூத்த குடிமக்களுக்கு 18 மாதங்கள் முதல் 3 ஆண்டுகளில் முதிர்வடையும் நிலையான வைப்பு நிதிகளுக்கு 6.95% வட்டியையும், பொதுமக்களுக்கு 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகளில் முதிர்வடையும் நிலையான வைப்பு நிதிகளுக்கு 6.50% வட்டியையும் வழங்குகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தற்போது, ​​நிலையான வைப்பு நிதி (FD) வருமானத்தைப் பொறுத்தவரை, முக்கிய வங்கிகளின் பட்டியலில் யெஸ் வங்கி முன்னணியில் உள்ளது. மூத்த குடிமக்களுக்கு, 3 முதல் 5 ஆண்டுகள் வரையிலான முதிர்வுக் காலங்களைக் கொண்ட நிலையான வைப்பு நிதிகளுக்கு 7.75% என்ற கணிசமான வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. பொதுமக்களுக்கு, 1.5 முதல் 5 ஆண்டுகள் வரையிலான முதிர்வுக் காலங்களைக் கொண்ட நிலையான வைப்பு நிதிகள் 7% வட்டியை வழங்குகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சேமிப்புக் கணக்குகள் மிதமான வட்டியை வழங்கும் அதே வேளையில், நிலையான வைப்புத்தொகைகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நிலையான வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கின்றன. நீங்கள் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான காலங்களுக்கு முதலீடு செய்யலாம். பங்குச் சந்தையின் அபாயங்களைத் தவிர்த்து, பாதுகாப்பாக வருமானம் ஈட்ட விரும்புபவர்களுக்கு இது மிகவும் ஏற்றது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பொறுப்புத் துறப்பு: &lt;/strong&gt;இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே. நிலையான வைப்புத்தொகை (FD) வட்டி விகிதங்கள் வங்கிகளால் அவ்வப்போது திருத்தி அமைக்கப்படுகின்றன, எனவே முதலீடு செய்வதற்கு முன், சமீபத்திய விகிதங்களை உறுதிப்படுத்திக்கொள்ள சம்பந்தப்பட்ட வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும். எந்தவொரு முதலீட்டையும் செய்வதற்கு முன் உங்கள் நிதி ஆலோசகரை அணுகவும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/best-bank-fd-rates-2026-sbi-hdfc-icici-yes-bank-compared-xqawmmo"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Gold Price : சரிவை காணும் தங்கம், வெள்ளி விலை.! இப்போது வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா? நிபுணர்கள் கூறுவது என்ன?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/is-this-the-right-time-to-buy-gold-and-silver-after-recent-price-drop-explained-yv6gknd</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/is-this-the-right-time-to-buy-gold-and-silver-after-recent-price-drop-explained-yv6gknd</guid>
            <pubDate>Thu, 09 Apr 2026 17:02:53 +0530</pubDate>
            <description><![CDATA[தங்கம், வெள்ளி வாங்க பிளான் இருக்கா? அப்போ உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. கடந்த சில மாசமா ராக்கெட் வேகத்துல ஏறுன விலை, இப்போ தடாலடியா குறைஞ்சிருக்கு. ஆனா, இது வாங்க சரியான நேரமா? இல்ல இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணலாமா? வாங்க பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01knrvh8ent423nzjdd2w0hsng,imgname-gold-silve-price-1775729418708.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[தங்கம், வெள்ளி வாங்க பிளான் இருக்கா? அப்போ உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. கடந்த சில மாசமா ராக்கெட் வேகத்துல ஏறுன விலை, இப்போ தடாலடியா குறைஞ்சிருக்கு. ஆனா, இது வாங்க சரியான நேரமா? இல்ல இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணலாமா? வாங்க பார்க்கலாம்.&lt;img&gt;IBJA (இந்தியா புல்லியன் அண்ட் ஜுவல்லர்ஸ் அசோசியேஷன்) வெளியிட்ட லேட்டஸ்ட் டேட்டா படி, இன்னைக்கு வியாழக்கிழமை மார்க்கெட்ல ஒரு பரபரப்பு இருக்கு. ஈரான்-அமெரிக்கா, இஸ்ரேல் இடையே நடக்குற பதற்றம் காரணமா, 24 காரட் தங்கம் (10 கிராம்) விலை ₹1.50 லட்சமா குறைஞ்சிருக்கு. இன்னைக்கு மட்டும் ₹1,000 சரிஞ்சிருக்கு.&lt;img&gt;இந்த வருஷத்தோட ஆல்-டைம் ஹை விலையோட இன்னைக்கு ரேட்டை ஒப்பிட்டுப் பார்த்தா, வித்தியாசம் நல்லாவே தெரியுது. ஜனவரி 29, 2026-ல தங்கம் ₹1.76 லட்சம் என்ற உச்சத்தை தொட்டுச்சு. ஆனா இன்னைக்கு, அந்த உச்ச விலையில இருந்து சுமார் ₹25,000 வரைக்கும் விலை குறைஞ்சிருக்கு.&lt;img&gt;IBJA டேட்டா படி, புதன்கிழமை, ஏப்ரல் 8-ம் தேதி தங்கம் விலை ₹1.51 லட்சமா இருந்துச்சு. வெள்ளியின் விலையிலும் பெரிய சரிவு ஏற்பட்டுருக்கு. இன்னைக்கு ஒரு கிலோ வெள்ளி விலை ₹9,000 குறைஞ்சு, இப்போ ₹2.35 லட்சமா இருக்கு.&lt;img&gt;வெள்ளியோட கதை இன்னும் ஆச்சரியமா இருக்கு. ஜனவரியில ஒரு கிலோ வெள்ளி ₹3.86 லட்சம் என்ற ரெக்கார்டு விலையில இருந்துச்சு. ஆனா இப்போ, அது ₹2.35 லட்சமா குறைஞ்சிருக்கு. இதனால, வெள்ளி வாங்குறவங்களுக்கு கிலோவுக்கு ₹1.51 லட்சம் வரை பம்பர் லாபம் கிடைக்குது. தங்கத்தை விட வெள்ளியின் விலைலதான் அதிக ஏற்ற இறக்கம் இருக்கு.&lt;img&gt;வருஷ தொடக்கத்துல ராக்கெட் மாதிரி ஏறுன விலை, இப்போ குறையுறதுக்கு ரெண்டு முக்கிய காரணம் இருக்கு. முதல் காரணம், லாபம் பார்க்குறது (profit-booking). குறைஞ்ச விலைக்கு தங்கம் வாங்குனவங்க, இப்போ அதிக விலைக்கு வித்து லாபம் பார்க்குறாங்க. இதனால மார்க்கெட்ல சப்ளை அதிகமாகி, விலை குறையுது. ரெண்டாவது பெரிய காரணம், ஈரான் போர் பதற்றம். உலக அரசியல் சூழல், குளோபல் மார்க்கெட்ல நடக்குற குழப்பம் காரணமா தங்கம், வெள்ளி விலை மந்தமா இருக்கு.&lt;img&gt;&lt;p&gt;மார்க்கெட் நிபுணர்கள் என்ன சொல்றாங்கன்னா, ரெக்கார்டு விலையில இருந்து ₹25,000 குறைஞ்சிருக்கிறது முதலீடு செய்ய ஒரு கோல்டன் சான்ஸ். ஆனாலும், மார்க்கெட் இன்னும் கொஞ்சம் ஏறலாம், இறங்கலாம். அதனால, மொத்த பணத்தையும் ஒரே நேரத்துல முதலீடு செய்யாம, கொஞ்சம் கொஞ்சமா பிரிச்சு வாங்குறது புத்திசாலித்தனம்.**பொறுப்புத்துறப்பு:** இந்த கட்டுரை உங்களுக்கு தகவல் கொடுக்கறதுக்கு மட்டும்தான். தங்கம், வெள்ளி விலை ஒவ்வொரு நகரத்திலும் மார்க்கெட் நிலவரம், உலக சூழல், உள்ளூர் வரிகளைப் பொறுத்து மாறும். இங்கே கொடுத்திருக்கிற விலைகள் இந்தியா புல்லியன் அண்ட் ஜுவல்லர்ஸ் அசோசியேஷன் (IBJA) உடையது. இதில் ஜிஎஸ்டி, செய்கூலி சேர்க்கப்படவில்லை. எந்த முதலீடும் செய்யுறதுக்கு முன்னாடி உங்க நிதி ஆலோசகர்கிட்ட பேசுங்க. உங்க ஊர் நகைக்கடையில சரியான விலையை கேட்டு தெரிஞ்சுக்கோங்க.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/is-this-the-right-time-to-buy-gold-and-silver-after-recent-price-drop-explained-yv6gknd"/>
        </item>
        <item>
            <title><![CDATA[டி-மார்ட் விலை ஏன் குறைவு? பின்னால இருக்குற ட்ரிக் இதுதான்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/why-dmart-prices-are-low-retail-strategy-explained-z2gx1xn</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/why-dmart-prices-are-low-retail-strategy-explained-z2gx1xn</guid>
            <pubDate>Tue, 07 Apr 2026 15:47:30 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ராதாகிருஷ்னன் தமாணியால் தொடங்கப்பட்ட டி-மார்ட், தனது 'லோ-காஸ்ட்' பிஸினஸ் மாடல் மூலம் இந்திய ரீட்டெயில் உலகில் புரட்சி செய்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை வழங்கி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kjp8cmcb8zmnv7t4zgh47hfp,imgname-tamil-news--87--1772421009803.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ராதாகிருஷ்னன் தமாணியால் தொடங்கப்பட்ட டி-மார்ட், தனது 'லோ-காஸ்ட்' பிஸினஸ் மாடல் மூலம் இந்திய ரீட்டெயில் உலகில் புரட்சி செய்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை வழங்கி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்திய ரீட்டெயில் உலகில் &ldquo;குறைந்த விலை &ndash; அதிக சேமிப்பு&rdquo; என்ற மந்திரத்தை கொண்டு மக்கள் மனதில் பதிந்த பெயர் டி-மார்ட். ஒரு சாதாரண கிராசரி கடையாக தொடங்கிய இது இன்று இந்தியாவின் மிகப்பெரிய ரீட்டெயில் சங்கிலிகளில் ஒன்றாக உயர்ந்துள்ளது. பலர் தினசரி வாங்கும் பொருட்களுக்கு முதலில் நினைப்பது டி-மார்ட் தான். ஆனால், இந்த வெற்றியின் பின்னால் இருக்கும் சில ரகசியங்களை தெரிந்துகொண்டால், டி-மார்ட்-க்கு செல்லும் பலரும் ஆச்சரியப்படுவார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த சாதனையின் பின்னால் உள்ள முக்கிய மனிதர் ராதாகிருஷ்னன் தமாணி. அவர் 2002-ல் மும்பை பவாயில் முதல் கடையைத் தொடங்கினார். அப்போது ஒரு சிறிய முயற்சியாகத் தொடங்கிய இது இன்று 500-க்கும் மேற்பட்ட கடைகளாக வளர்ந்து புதிய வரலாறு படைத்துள்ளது. கடந்த 24 ஆண்டுகளில், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை இழக்காமல், மெதுவாகவும் திட்டமிட்டும் வளர்ந்ததே இந்த நிறுவனத்தின் மிகப்பெரிய பலமாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;டி-மார்ட் வெற்றியின் முக்கிய ரகசியம் அதன் &lsquo;லோ-காஸ்ட்&rsquo; பிஸினஸ் மாடல். இங்கு பொருட்கள் MRP-யை விட குறைந்த விலையில் கிடைக்கும். அதற்கு காரணம், பெரும்பாலான கடைகள் வாடகைக்கு அல்லாமல் சொந்தமாக வாங்கப்பட்டவை. இதனால் வாடகை செலவு குறைகிறது. மேலும், சப்ளையர்களிடம் பொருட்களை உடனடி பணம் கொடுத்து வாங்குவதால் குறைந்த விலைக்கு பொருட்கள் கிடைக்கிறது. அந்த லாபத்தை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடியாக வழங்குகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மற்றொரு முக்கியமான விஷயம், டி-மார்ட்-ன் விரிவாக்க திட்டம். இது எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் கடைகள் திறக்காது. ஒரு நகரத்தில் ஒரு கடை வெற்றி அடைந்த பிறகு, அதே பகுதியிலேயே மேலும் கடைகள் திறக்கும். இதனால் போக்குவரத்து மற்றும் சப்ளைச் செலவுகள் குறைகின்றன. இதேபோல், மற்ற ரீட்டெயில் கடைகள் போல &ldquo;ஷெல்ஃப் ஸ்பேஸ்&rdquo; கட்டணம் வசூலிக்காமல், வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற மற்றும் அதிகம் விற்பனையாகும் பொருட்களையே முன்னிலைப்படுத்துகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்றைக்கு டி-மார்ட் ஆன்லைன் தளமான &ldquo;டி-மார்ட் ரெடி&rdquo; மூலமும் தனது சேவையை விரிவுபடுத்தியுள்ளது. மேலும், எதிர்காலத்தில் டியர்-2 மற்றும் டியர்-3 நகரங்களில் அதிக கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது. ஒரு சிறிய கடையாக தொடங்கி, கட்டுப்பாடு, திட்டமிடல் மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கையை அடிப்படையாக கொண்டு இந்தியாவின் மிகப்பெரிய ரீட்டெயில் பேரரசாக வளர்ந்தது டி-மார்ட் என்றால், அது ஒரு சாதாரண வெற்றி கதை அல்ல, ஒரு வணிக பாடமாகும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/why-dmart-prices-are-low-retail-strategy-explained-z2gx1xn"/>
        </item>
    </channel>
</rss>
