<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes"?>
<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Sun, 03 May 2026 19:27:21 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss/business" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[New Labour Code 2026 : மாத சம்பளம் வாங்குபவர்கள் தலையில் விழுந்த பேரிடி.! இந்த மாதம் முதல் 'கைக்கு வரும் சம்பளம்' குறையும்.! இதுதான் காரணம்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/new-labour-code-2026-new-labor-laws-may-reduce-take-home-salary-from-this-month-here-is-why-and-what-changes-explained-2k1st3c</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/new-labour-code-2026-new-labor-laws-may-reduce-take-home-salary-from-this-month-here-is-why-and-what-changes-explained-2k1st3c</guid>
            <pubDate>Fri, 01 May 2026 19:43:30 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Take Home Salary Reduction : இந்த மாதம் முதல் உங்கள் கைக்கு வரும் சம்பளம் குறைந்தால் கவலைப்பட வேண்டாம். புதிய தொழிலாளர் விதிகள் அமலுக்கு வந்துள்ளதே இதற்குக் காரணம். இதனால் உங்கள் மாதச் சம்பளத்தில் சில மாற்றங்கள் ஏற்படலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kqhy0na34ntengfxa8eeev27,imgname-new-labour-code-india-take-home-salary-reduction---1--1777644623171.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Take Home Salary Reduction : இந்த மாதம் முதல் உங்கள் கைக்கு வரும் சம்பளம் குறைந்தால் கவலைப்பட வேண்டாம். புதிய தொழிலாளர் விதிகள் அமலுக்கு வந்துள்ளதே இதற்குக் காரணம். இதனால் உங்கள் மாதச் சம்பளத்தில் சில மாற்றங்கள் ஏற்படலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சம்பளம் வாங்கும் ஊழியர்கள் புதிய தொழிலாளர் விதிகளைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். இந்த புதிய விதிகளால், உங்கள் அடிப்படைச் சம்பளம் (Basic Salary), பி.எஃப் (PF), மற்றும் பணிக்கொடை (Gratuity) ஆகியவற்றில் முக்கிய மாற்றங்கள் வந்துள்ளன. இந்த புதிய விதிகள் மே 1 முதல் அமலுக்கு வந்துள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய தொழிலாளர் சட்டத் திருத்தங்கள், ஊழியர்களின் சம்பளக் கட்டமைப்பை முழுமையாக மாற்றுகின்றன. இதன்படி, ஒரு ஊழியரின் அடிப்படைச் சம்பளம் (Basic Salary) அவரின் மொத்த சம்பளத்தில் (CTC) 50% ஆக இருக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பல நிறுவனங்கள் அடிப்படை சம்பளத்தைக் குறைத்து, இதர படிகளை (Allowances) அதிகமாகக் காட்டும். ஆனால், புதிய விதிகளின்படி இதைச் செய்ய முடியாது. உதாரணமாக, உங்கள் மொத்த சம்பளம் (CTC) ₹50,000 என்றால், அதில் அடிப்படைச் சம்பளம் (Basic Pay) ₹25,000 ஆக இருக்க வேண்டும். இதனால் உங்கள் பி.எஃப் மற்றும் பணிக்கொடை தொகை உயரும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த மாற்றத்தால், உங்கள் கைக்கு வரும் சம்பளம் (Take-home salary) குறைய வாய்ப்புள்ளது. காரணம், சம்பளத்தில் இருந்து பிடிக்கப்படும் பி.எஃப் தொகை அதிகரிக்கும். மாதா மாதம் பிடித்தம் அதிகரித்தாலும், இது உங்கள் எதிர்கால நிதிப் பாதுகாப்பை உறுதி செய்யும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;புதிய தொழிலாளர் விதிகள், வேலை நேரம் மற்றும் விடுமுறை நாட்களையும் எளிமையாக்கியுள்ளன. நிறுவனங்கள் விரும்பினால், வாரத்திற்கு 5 நாட்கள் வேலை, 2 நாட்கள் விடுமுறை அல்லது வாரத்திற்கு 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுமுறை என்ற முறையைத் தேர்ந்தெடுக்கலாம். ஆனால், வாரத்தில் மொத்த வேலை நேரம் 48 மணி நேரத்திற்கு மேல் இருக்கக் கூடாது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;புதிய விதிகளால், ஊழியர்களுக்கான பி.எஃப் பங்களிப்புத் தொகை அதிகரிக்கும் என்பதால், நிறுவனங்களுக்கு இது கூடுதல் சுமையாக இருக்கலாம். ஆனால், பல நிறுவனங்கள் இந்த கூடுதல் தொகையை ஊழியரின் மொத்த சம்பளத்தில் (CTC) ஒரு பகுதியாகக் காட்டி, தங்களைக் காத்துக்கொள்ள வாய்ப்புள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/new-labour-code-2026-new-labor-laws-may-reduce-take-home-salary-from-this-month-here-is-why-and-what-changes-explained-2k1st3c"/>
        </item>
        <item>
            <title><![CDATA[வீட்டு சாப்பாடு Vs ஆன்லைன் ஆர்டர்.. இந்தியா எதை நோக்கிப் பயணிக்கிறது? Investec ஆய்வின் சுவாரஸ்ய தகவல்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/home-food-vs-online-delivery-india-booming-food-service-market-trends-351qrgz</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/home-food-vs-online-delivery-india-booming-food-service-market-trends-351qrgz</guid>
            <pubDate>Sat, 02 May 2026 15:36:17 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ஆன்லைன் உணவை பொறுத்தவரை இந்தியர்கள் மாதத்திற்கு சராசரியாக 3-5 முறை ஆர்டர் செய்கிறார்கள் என்று ஆய்வு சொல்கிறது. இதன் பின்னணியில் உள்ள சுவாரஸ்யத் தகவல்கள் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kqm278ba4ksmmgkwwwtb7vs7,imgname-online-order-1777716142442.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஆன்லைன் உணவை பொறுத்தவரை இந்தியர்கள் மாதத்திற்கு சராசரியாக 3-5 முறை ஆர்டர் செய்கிறார்கள் என்று ஆய்வு சொல்கிறது. இதன் பின்னணியில் உள்ள சுவாரஸ்யத் தகவல்கள் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவின் ஆன்லைன் உணவு டெலிவரி சந்தை, அடுத்தகட்ட வளர்ச்சிப் பாதைக்குள் நுழைந்துள்ளது. இந்த வளர்ச்சி, இனிமேலும் புதிதாக செயலிகளை பதிவிறக்கம் செய்யும் வாடிக்கையாளர்களால் வராது. மாறாக, ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்கள் அடிக்கடி ஆர்டர் செய்வதாலும், இரண்டாம் கட்ட நகரங்களில் இதன் பயன்பாடு அதிகரிப்பதாலும், ஒரு ஆர்டரின் சராசரி மதிப்பு சீராக உயர்வதாலும் தான் இந்த வளர்ச்சி சாத்தியமாகும் என்று 'இன்வெஸ்டெக் ஈக்விட்டிஸ்' (Investec Equities) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;இந்தத் துறை, 2024-ல் 9.1 பில்லியன் டாலராக இருக்கும் நிலையில், 2030-க்குள் சுமார் 27 பில்லியன் டாலராக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்டுக்கு 19% கூட்டு வளர்ச்சி விகிதத்தில் (CAGR) இது நிகழும். டிஜிட்டல் பயன்பாடு மற்றும் நகரமயமாதல் ஆகியவை மக்களின் நுகர்வு முறைகளை மாற்றிவருவதே இதற்குக் காரணம். இந்தியாவின் ஒட்டுமொத்த உணவு சேவை சந்தை, 2020 நிதியாண்டில் (FY20) ₹4 லட்சம் கோடியாக இருந்து, 2025 நிதியாண்டில் (FY25) ₹7 லட்சம் கோடியாக வளர்ந்துள்ளது. இது 2030 நிதியாண்டில் ₹11-12 லட்சம் கோடியை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆனாலும், மக்கள் உணவுக்காக செலவிடும் மொத்த தொகையில், ஆன்லைன் டெலிவரிக்கான பங்கு வெறும் 13% மட்டுமே. இதுவே அமெரிக்காவில் 58-62%, சீனாவில் 42-46% ஆக உள்ளது. இந்தியர்கள் வீட்டு சமையலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதும், வெளியே சாப்பிடுவதற்கு அதிகம் செலவு செய்யத் தயங்குவதுமே இதற்குக் காரணம். இருப்பினும், சிறிய குடும்பங்கள், நீண்ட வேலை நேரம், நகரமயமாதல், குடும்பத்தை விட்டு தனியாக வசிப்பது போன்ற கட்டமைப்பு மாற்றங்களால், வெளியே சாப்பிடுவதும், ஆன்லைனில் ஆர்டர் செய்வதும் படிப்படியாக அதிகரித்து வருகிறது.&lt;/p&gt;&lt;p&gt;பெரிய பிராண்டட் உணவகங்கள், கிளவுட் கிச்சன்கள் போன்ற ஒழுங்கமைக்கப்பட்ட துறையின் (organised segment) சந்தைப் பங்கு வேகமாக அதிகரித்து வருகிறது. 2020 நிதியாண்டில் 36-41% ஆக இருந்த இதன் பங்கு, 2025 நிதியாண்டில் 47-52% ஆக உயர்ந்துள்ளது. இது 2030-க்குள் 60-65% ஐ எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2025 நிதியாண்டில் ₹3.2-3.5 லட்சம் கோடியாக இருக்கும் இந்த ஒழுங்கமைக்கப்பட்ட சந்தை, 2030-க்குள் ₹6.6-7.8 லட்சம் கோடியாக வளரும் என கணிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதில், ஆன்லைன் உணவு டெலிவரிதான் வேகமாக வளரும் பிரிவாக உள்ளது. 2020 நிதியாண்டில் ₹270 பில்லியனாக இருந்த இதன் மதிப்பு, 2025-ல் ₹790 பில்லியனாக உயர்ந்துள்ளது. இது 2030-க்குள் ₹1.7-2.2 லட்சம் கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், இது மொத்த உணவுச் சேவையில் 11% மட்டுமே. 2018-ல் இது வெறும் 3% ஆக இருந்தது. எனவே, இந்தத் துறை வளர இன்னும் நிறைய வாய்ப்புகள் உள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;சென்னை, பெங்களூரு போன்ற மெட்ரோ மற்றும் முதல்நிலை நகரங்கள் சந்தையின் மொத்த மதிப்பில் 75-80% பங்களித்தாலும், கோயம்புத்தூர், மதுரை போன்ற இரண்டாம் கட்ட நகரங்களின் பங்கு ஏற்கனவே 20-25% ஐ எட்டியுள்ளது. இது சந்தை பெரிய நகரங்களைத் தாண்டி விரிவடைவதைக் காட்டுகிறது. 2029-க்குள் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 13.7 கோடியை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;மாதத்திற்கு சராசரியாக 3-5 முறை ஆர்டர்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;தற்போது இந்தியர்கள் மாதத்திற்கு சராசரியாக 3-5 முறை ஆர்டர் செய்கிறார்கள். இதுவே அமெரிக்காவில் 8-10 ஆகவும், சீனாவில் 5-10 ஆகவும் உள்ளது. இந்த இடைவெளியை நிரப்புவதன் மூலம் நிறுவனங்கள் வளர முடியும். ஒரு ஆர்டரின் சராசரி மதிப்பும் (AOV) அதிகரித்து வருகிறது. Zomato-வின் சராசரி ஆர்டர் மதிப்பு FY22-ல் ₹282-லிருந்து FY26-ல் ₹461 ஆகவும், Swiggy-க்கு ₹407-லிருந்து ₹463 ஆகவும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. Redseer நிறுவனத்தின் கணிப்புப்படி, 2028-க்குள் இந்தத் துறையின் சராசரி ஆர்டர் மதிப்பு ₹542 ஆக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/home-food-vs-online-delivery-india-booming-food-service-market-trends-351qrgz"/>
        </item>
        <item>
            <title><![CDATA[தங்கம் அடகு வைப்பதில் இந்த 5 மாநிலங்கள்தான் டாப்! நம்ம தமிழ்நாடு எந்த இடத்தில் இருக்கு?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/gold-loan-growth-in-india-where-does-tamil-nadu-rank-61peh2p</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/gold-loan-growth-in-india-where-does-tamil-nadu-rank-61peh2p</guid>
            <pubDate>Sun, 03 May 2026 16:08:25 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;இந்தியாவில் தங்கம் அடகு வைக்கும் பழக்கம் புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது. ஆனால் எல்லா மாநிலங்களிலும் ஒரே அளவா? இல்லை. சில மாநிலங்கள் தான் இந்த பட்டியலில் டாப் இடத்தை பிடிச்சிருக்கிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kkn1y9e7jzekb8xj9b1xrxq4,imgname-1-1773454435783.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;இந்தியாவில் தங்கம் அடகு வைக்கும் பழக்கம் புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது. ஆனால் எல்லா மாநிலங்களிலும் ஒரே அளவா? இல்லை. சில மாநிலங்கள் தான் இந்த பட்டியலில் டாப் இடத்தை பிடிச்சிருக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இப்போதைய சூழலில் தங்கம் வெறும் ஆபரணம் மட்டுமல்ல, அவசர நேரத்தில் கைகொடுக்கும் ஒரு நிதி கருவியாக மாறியுள்ளது. யாருக்காவது அவசரமாகப் பணம் தேவைப்பட்டால், வங்கியில் பெரிய நடைமுறைகள் இல்லாமல் தங்கத்தை வைத்து உடனடியாக கடன் பெறலாம். அதனால்தான், வீட்டுக் கடனுக்குப் பிறகு தங்கக் கடன் இரண்டாவது பெரிய சந்தையாக வளர்ந்துள்ளது. இதன் சந்தை மதிப்பு சுமார் ரூ.16.8 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இது கடந்த சில ஆண்டுகளில் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தங்கக் கடன் வாங்கும் விஷயத்தில் மற்ற பகுதிகளை விட தென்னிந்திய மாநிலங்கள் முன்னணியில் உள்ளன. தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் மட்டும் நாட்டின் மொத்த தங்கக் கடன் சந்தையில் பாதிக்கும் மேலான பங்கைக் கொண்டுள்ளன. இந்தப் பகுதிகளில் தங்கம் சேமிக்கும் கலாச்சாரமும், தேவைப்படும்போது அதை எளிதாகப் பணமாக மாற்றும் பழக்கமும் இருப்பதால் இந்த ட்ரெண்ட் காணப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவில் தங்கக் கடன் வாங்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. இந்த மாநிலம் மட்டுமே நாட்டின் மொத்த சந்தையில் சுமார் 25.8% பங்கைக் கொண்டுள்ளது. இதற்கு அடுத்து, ஆந்திரப் பிரதேசம் 13.6% சந்தைப் பங்குடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. கர்நாடகா 11.7% பங்குடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. கேரளா 9% பங்குடன் நான்காவது இடத்திலும், தெலங்கானா 8.8% பங்குடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன. குறிப்பாக, தெலங்கானாவில் சமீபகாலமாக தங்கக் கடன் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தென்னிந்திய மாநிலங்களுக்குப் பிறகு, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களும் தங்கக் கடன் பக்கம் திரும்புகின்றன. இந்த மாநிலத்தில் சந்தைப் பங்கு குறைவாக இருந்தாலும், வளர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது. அதே நேரத்தில், உத்தரப் பிரதேசம், குஜராத், மேற்கு வங்கம், ஒடிசா போன்ற மாநிலங்களிலும் தங்கக் கடன் பயன்பாடு படிப்படியாக அதிகரித்து வருகிறது. கிராமப்புறங்களில் வங்கிச் சேவைகள் விரிவடைவதும், மக்களிடையே நிதி விழிப்புணர்வு அதிகரிப்பதும் இந்த மாற்றத்திற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தென்னிந்திய மாநிலங்களில் தங்கத்தின் மீது ஒரு தனிப்பட்ட உணர்வுப்பூர்வமான பிணைப்பு உள்ளது. இங்குள்ள குடும்பங்கள் அதிக அளவில் தங்கம் சேமிப்பதும், தேவைப்படும்போது அதை பயன்படுத்துவதும் சாதாரணமாகக் காணப்படுகிறது. மேலும், இந்தப் பகுதிகளில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பரவலாக இருப்பதால், தங்கக் கடன் பெறுவது மிகவும் எளிதாகியுள்ளது. இந்த அனைத்து காரணங்களும் சேர்ந்து தென்னிந்திய மாநிலங்களை இந்தத் துறையில் முன்னணியில் வைத்துள்ளன.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/gold-loan-growth-in-india-where-does-tamil-nadu-rank-61peh2p"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஓய்வுக்குப் பிறகு நிம்மதியாக வாழ எவ்வளவு பணம் தேவை?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/how-much-money-do-you-need-to-retire-comfortably-in-india-77r5lla</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/how-much-money-do-you-need-to-retire-comfortably-in-india-77r5lla</guid>
            <pubDate>Fri, 01 May 2026 18:08:07 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ஓய்வுக்காலத்திற்கு ஒரு கோடி ரூபாய் போதும் என்ற கருத்து நகர வாழ்க்கைக்குப் பொருந்தாது என நிதி நிபுணர்கள் கூறுகின்றனர். பணவீக்கம் மற்றும் மருத்துவச் செலவுகளால், சிலருக்கு ரூ.40 கோடி வரை தேவைப்படலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kq54qtvj1ddn7x5kw7wrh6qd,imgname-sip-investment-tips--1--1777215466354.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஓய்வுக்காலத்திற்கு ஒரு கோடி ரூபாய் போதும் என்ற கருத்து நகர வாழ்க்கைக்குப் பொருந்தாது என நிதி நிபுணர்கள் கூறுகின்றனர். பணவீக்கம் மற்றும் மருத்துவச் செலவுகளால், சிலருக்கு ரூ.40 கோடி வரை தேவைப்படலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஓய்வு பெற்ற பிறகு வாழ எவ்வளவு பணம் என்ற கேள்வி பலருக்கும் குழப்பமாக இருக்கிறது. பொதுவாக &ldquo;ஒரு கோடி இருந்தால் போதும்&rdquo; என்று பலர் நினைத்தாலும், இன்றைய நகர வாழ்க்கையை கணக்கில் எடுத்தால் அது போதாது என்று நிதி நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக பெரிய நகரங்களில் வாழ்பவர்களுக்கு, ஓய்வுக்கால நிதி ரூ.40 கோடி வரை இருக்க வேண்டும் என்ற கருத்து வெளியாகியுள்ளது. இது கேட்கும் போது ஆச்சர்யமாக இருந்தாலும், அதன் பின்னணிக் கணக்குகளைப் பார்த்தால் இந்த எண்ணிக்கைக்கு ஒரு வலுவான காரணம் இருப்பதைப் புரிந்துகொள்ளலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த பெரிய தொகைக்கான முக்கிய காரணம் விலைவாசி உயர்வாகும். சாதாரணமாக 5-6% என்று நாம் கருதும் பணவீக்கம், நகர வாழ்க்கையில் 8-10% வரை உயர்கிறது. மருத்துவச் செலவுகள் ஆண்டுக்கு 12% வரை அதிகரிக்கின்றன. இதனால், இன்று மாதம் ரூ.2 லட்சம் செலவாகும் ஒருவர், 20 ஆண்டுகளுக்குப் பிறகு அதே வாழ்க்கை முறையைத் தொடர ரூ.10 லட்சத்திற்கும் மேல் செலவழிக்க வேண்டிய நிலை உருவாகும். அதாவது, வருடத்திற்கு ரூ.1 கோடியைத் தாண்டும் செலவாக மாறும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேலும், மனிதர்களின் ஆயுட்காலமும் அதிகரித்து வருகிறது. முன்பு 70 வயது வரை வாழ்ந்தவர்கள், இப்போது 85-90 வயது வரை வாழ்கிறார்கள். இதனால், ஓய்வு பெற்ற பிறகு குறைந்தது 25 முதல் 30 ஆண்டுகள் வருமானம் இல்லாமல் வாழ்க்கையை நடத்த தேவையான பணத்தை முன்கூட்டியே சேமிக்க வேண்டும். இதுவே ஓய்வுக்கால நிதியை அதிகமாக நிர்ணயிக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதே நேரத்தில், ரூ.40 கோடி என்பது எல்லோருக்கும் தேவையான தொகை அல்ல. இது பெரும்பாலும் மும்பை, டெல்லி போன்ற உயர்ந்த வாழ்க்கைச் செலவு கொண்ட நகரங்களுக்கு பொருந்தும். சிறிய நகரங்கள் அல்லது கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ரூ.1.5 முதல் ரூ.2 கோடி வரை இருந்தாலே ஓய்வுக்கால வாழ்க்கையை நிம்மதியாக நடத்த முடியும். எனவே, தனிப்பட்ட வாழ்க்கை முறை மற்றும் தேவைகளைப் பொறுத்து இந்த இலக்கை நிர்ணயிக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முடிவாக, ஓய்வுக்கால திட்டமிடலில் முக்கியமான தொகை அல்ல, தொடங்கும் நேரம் தான். இளம் வயதில் முதலீட்டைத் தொடங்கி, கூட்டு வட்டி பலனைப் பயன்படுத்தினால் பெரிய இலக்குகளையும் எளிதாக அடையலாம். சரியான திட்டமிடல், ஒழுங்கான சேமிப்பு மற்றும் புத்திசாலித்தனமான முதலீடு இருந்தால், ஓய்வுக்காலம் நிச்சயம் சுமூகமாக அமையும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/how-much-money-do-you-need-to-retire-comfortably-in-india-77r5lla"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Cylinder Price Hike: காலையிலேயே பேரதிர்ச்சி! ஒரே நாளில் ரூ.1000 எகிறிய சிலிண்டர் விலை! வீட்டு உபயோக சிலிண்டர் நிலவரம்?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/commercial-lpg-price-hiked-by-rs-993-no-change-in-domestic-cylinder-rates-7ed3iog</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/commercial-lpg-price-hiked-by-rs-993-no-change-in-domestic-cylinder-rates-7ed3iog</guid>
            <pubDate>Fri, 01 May 2026 07:42:03 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;மே 1 முதல், வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் சுமார் ரூ.1000 உயர்த்தியுள்ளன. இந்த திடீர் விலை உயர்வால் உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jz1r61qvanaenjrzc672z9qn,imgname-cylinder-price-2-1751331833595.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;மே 1 முதல், வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் சுமார் ரூ.1000 உயர்த்தியுள்ளன. இந்த திடீர் விலை உயர்வால் உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா விலை மற்றும் இந்திய ரூபாயின் மதிப்புக்கு ஏற்றார் போல இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதன்படி பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மாற்றி அமைத்து வருகிறது. ஆனால், கிட்டத்தட்ட பல மாதங்களாகவே பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடிக்கிறது. அதே நேரத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து வருகின்றன. இந்நிலையில், மே 1ம் தேதியான இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்தியுள்ளது. அதாவது 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.993 உயர்த்தப்பட்டதை அடுத்து 3,237 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதேநேரத்தில் வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலை ஏறியதா? இறங்கியதா? என்பதை பார்ப்போம். அதாவது வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலை ரூ.928க்கு விற்பனையாகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஏற்கனவே நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள பதற்றம் காரணமாக சிலிண்டர் தட்டுப்பாடு பிரச்சனையால் பல ஹோட்டல்கள் மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. இந்நிலையில் தற்போது வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ஒரேயடியாக சுமார் ரூ.1000 அளவுக்கு உயர்ந்திருப்பது வியாபாரிகளுக்கு இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உணவு பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/commercial-lpg-price-hiked-by-rs-993-no-change-in-domestic-cylinder-rates-7ed3iog"/>
        </item>
        <item>
            <title><![CDATA[நம்ம தங்கம் நம்ம வீட்டில்! இந்தியாவின் பெரிய மூவ்.. வியப்பில் உலக நாடுகள்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/why-india-is-bringing-back-gold-from-london-and-new-york-9gt1wwo</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/why-india-is-bringing-back-gold-from-london-and-new-york-9gt1wwo</guid>
            <pubDate>Sat, 02 May 2026 10:30:26 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;உலகளாவிய பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையின்மையால், இந்தியா தனது தங்கச் சேமிப்பை வெளிநாடுகளில் இருந்து பாதுகாப்பாக நாட்டுக்குள் கொண்டு வருகிறது. இது எதிர்கால நிதி நெருக்கடிகளுக்கு எதிரான ஒரு முக்கிய பாதுகாப்பு நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kqkgm3rmevjr4mpqbxbqj3m7,imgname-tamil-news---2026-05-02t102053.531-1777697689363.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;உலகளாவிய பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையின்மையால், இந்தியா தனது தங்கச் சேமிப்பை வெளிநாடுகளில் இருந்து பாதுகாப்பாக நாட்டுக்குள் கொண்டு வருகிறது. இது எதிர்கால நிதி நெருக்கடிகளுக்கு எதிரான ஒரு முக்கிய பாதுகாப்பு நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உலகளாவிய பொருளாதார சூழல் வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. இப்படியான நிலையில், இந்தியா தனது தங்கச் சேமிப்பை பாதுகாப்பான முறையில் நாட்டுக்குள் கொண்டு வர ஆரம்பித்துள்ளது. லண்டன், நியூயார்க் போன்ற நகரங்களில் வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான டன் தங்கத்தை, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) படிப்படியாக திரும்பப் பெறுகிறது. இது ஒரு சாதாரண நிதி நடவடிக்கை அல்ல. எதிர்கால அசாதாரண சூழ்நிலைகளுக்கு எதிரான ஒரு முக்கிய பாதுகாப்பு திட்டமாக பார்க்கப்படுகிறது. ஆர்பிஐ வெளியிட்ட சமீபத்திய அரையாண்டு அறிக்கையின் படி (அக்டோபர் 2025 - மார்ச் 2026), இந்தியாவிடம் மொத்தமாக 880.52 மெட்ரிக் டன் தங்கம் உள்ளது. இதில் சுமார் 77% அல்லது 680 டன் தங்கம் தற்போது இந்தியாவிலேயே பாதுகாக்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேலும் 197.67 டன் தங்கம் Bank of England மற்றும் BIS அமைப்புகளில் உள்ளது; 2.8 டன் டெபாசிட்களாக உள்ளது. குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், வெறும் 6 மாதங்களில் மட்டும் 104.23 டன் தங்கம் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 2023 மார்ச் வரை நாட்டுக்குள் இருந்த தங்கம் 37% மட்டுமே என்பதால், இந்த மாற்றத்தின் வேகம் கவனிக்கத்தக்கது. இந்த மாற்றத்துக்கு பின்னால் உலக அரசியல் நிகழ்வுகள் முக்கிய காரணமாக உள்ளன. குறிப்பாக ரஷ்யா&ndash;உக்ரைன் போர் மற்றும் அதன் பின் ரஷ்யா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளின் வெளிநாட்டு நிதிகள் முடக்கப்பட்ட சம்பவங்கள், பல நாடுகளுக்கு எச்சரிக்கையாக அமைந்தன. வெளிநாடுகளில் வைத்திருக்கும் சொத்துக்கள் அரசியல் முடிவுகளால் பாதிக்கப்படலாம் என்ற உணர்வு அதிகரித்துள்ளது. அதனால், &ldquo;தங்கம் நம் கையில் இருந்தால்தான் அது உண்மையிலேயே நம்மது&rdquo; என்ற அணுகுமுறையை பல நாடுகள் எடுத்துள்ளன. இந்தியாவும் இதே பாதையை தேர்ந்தெடுத்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வெளிநாட்டு நாணய கையிருப்பு சற்று குறைந்திருந்தாலும், அதில் தங்கத்தின் பங்கு 13.9% இலிருந்து 16.7% ஆக உயர்ந்துள்ளது. இது ஒரு &ldquo;ஸ்ட்ராடஜிக் இன்சூரன்ஸ்&rdquo; போன்று செயல்படுகிறது. அவசர காலங்களில் உடனடி லிக்விடிட்டி கிடைக்க, தங்கம் நாட்டுக்குள் இருக்க வேண்டியது அவசியம் என்பதையே இது வலியுறுத்துகிறது. இந்த போக்கு இந்தியாவில் மட்டும் அல்ல. உலகம் முழுவதும் பரவியுள்ளது. பிரான்ஸ், ஜெர்மனி, போலந்து போன்ற நாடுகளும் தங்க சேமிப்பை மீண்டும் நாட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்து வருகின்றன. உலகளாவிய நிதி அமைப்புகள் இந்த நேரத்தில் மாறிக்கொண்டிருக்கும், தங்கத்தை பாதுகாப்பாக வைத்திருப்பது நாடுகளின் முக்கிய முன்னுரிமையாக மாறியுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/why-india-is-bringing-back-gold-from-london-and-new-york-9gt1wwo"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஜவான்களின் ரகசிய ‘பார்’! ₹1500 பாட்டில் CSD-யில் ₹500-க்கு... மது மாயாஜாலத்தின் உண்மைக் கதை..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/army-canteen-liquor-at-50-percentage-off-the-tax-magic-behind-csds-rs-500-whisky-b1ofazq</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/army-canteen-liquor-at-50-percentage-off-the-tax-magic-behind-csds-rs-500-whisky-b1ofazq</guid>
            <pubDate>Sun, 03 May 2026 09:02:11 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தேசத்தைக் காக்கும் வீரர்களின் தியாகத்திற்கு, நாடு செலுத்தும் ஒரு சிறு நன்றிக்கடன்தான் CSD-ன் விலைச்சலுகை. சந்தை விலையை விடப் பாதியாகக் குறைத்து, அவர்களின் சுமையைக் குறைக்கும் இந்த 'கேண்டீன் ஸ்டோர்ஸ் டிபார்ட்மென்ட்' பற்றி விரிவாகக் காண்போம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kqnxngrsyghrxqy87raa5zq1,imgname-gemini-generated-image-5i89da5i89da5i89-1777778475801.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தேசத்தைக் காக்கும் வீரர்களின் தியாகத்திற்கு, நாடு செலுத்தும் ஒரு சிறு நன்றிக்கடன்தான் CSD-ன் விலைச்சலுகை. சந்தை விலையை விடப் பாதியாகக் குறைத்து, அவர்களின் சுமையைக் குறைக்கும் இந்த 'கேண்டீன் ஸ்டோர்ஸ் டிபார்ட்மென்ட்' பற்றி விரிவாகக் காண்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒரு ராணுவ வீரன் எல்லைப் பகுதியில் பனி, வெயில், எதிரி என்று தன்னுயிரைப் பணயம் வைத்து நாட்டைக் காக்கிறான். அவனுக்கு ஒரு சின்ன இளைப்பாறுதல் தேவைப்படும்போது, அவன் செல்லும் இடம்... CSD கேண்டீன்! அங்கு ஒரு பாட்டில் விஸ்கி வெளிச் சந்தையில் ₹1,500 என்றால், உள்ளே ₹500-க்குள் கிடைக்கிறது. 30 முதல் 50 சதவீதம் மலிவு! இது எப்படி சாத்தியம்? இது வெறும் தள்ளுபடி அல்ல &ndash; தேசத்தின் நன்றியின் அடையாளம்!CSD என்றால் என்ன?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;1948-ல் பாதுகாப்பு அமைச்சகம் உருவாக்கிய &lsquo;வீரர்களின் சொந்த சூப்பர் மார்க்கெட்&rsquo;. இன்று நாடு முழுவதும் 4,500-க்கும் மேற்பட்ட யூனிட் ரன் கேண்டீன்கள் (URC) மூலம் இயங்குகிறது. மளிகை, மின்சாதனப் பொருட்கள், உடைகள்... எல்லாவற்றையும் மலிவாகத் தரும் இந்த அமைப்பு, மதுவிலும் மாஸ்டர் ஸ்ட்ரோக் அடிக்கிறது.ஏன் இத்தனை மலிவு? மூன்று பெரிய ரகசியங்கள்! வரி மேஜிக்: மது GST-க்கு உட்படாது. ஆனால் எக்சைஸ், VAT போன்ற வரிகள் பெரும்பாலான மாநிலங்களில் (குறிப்பாக தமிழ்நாடு, குஜராத், உத்தரப் பிரதேசம்) முழுவதும் அல்லது பெருமளவு விலக்கு அளிக்கப்படுகின்றன. அரசே வரி வருவாயைத் தியாகம் செய்து வீரர்களுக்கு உதவுகிறது. தமிழ்நாட்டில் CSD மதுவுக்கு முழு VAT விலக்கு உண்டு &ndash; அதனால்தான் இங்கு இன்னும் மலிவு!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;CSD ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பாட்டில்களை வாங்குகிறது. உற்பத்தியாளர்கள் குறைந்த விலை தருகிறார்கள். CSD-யின் இலாபம் வெறும் 1% மட்டுமே. வெளி கடைக்காரர்கள் 8-18% இலாபம் வைக்கும்போது, CSD &ldquo;நண்பன்&rdquo; மோடில் இயங்குகிறது.&lt;/p&gt;&lt;p&gt;வீரர்களுக்கான நலன் பரிசு: ராணுவ வாழ்க்கை அழுத்தம் நிறைந்தது. உடல் உழைப்பு, மன உளைச்சல், குடும்பத்திலிருந்து தொலைவு... இந்த &ldquo;சிறு இன்பம்&rdquo; அவர்களின் மன உறுதியை அதிகரிக்க உதவுகிறது என்பது அரசின் நம்பிக்கை. அதனால்தான் இந்த சலுகை!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;CSD ஸ்மார்ட் கார்டு இல்லாமல் யாரும் உள்ளே நுழைய முடியாது. பணியில் இருப்பவர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள், ஜவான்கள், அவர்களின் குடும்பத்தினர் மட்டுமே தகுதி. ஒவ்வொரு மாதமும் ராங்க் அடிப்படையில் கோட்டா:அதிகாரிகள் &rarr; 10 பாட்டில்கள்&lt;/p&gt;&lt;p&gt;JCOக்கள் &rarr; 7 பாட்டில்கள்&lt;/p&gt;&lt;p&gt;ஜவான்கள் &rarr; 5 பாட்டில்கள்&lt;/p&gt;&lt;p&gt;ஓய்வு பெற்றவர்களுக்கும் இதே அளவு (சிறு மாற்றங்கள் உண்டு). புதிய விதியின்படி இரு மாத கோட்டாவை ஒரே மாதத்தில் வாங்கலாம். எந்த URC-யிலும் வாங்கலாம். பாட்டில்களில் &ldquo;CSD Only&rdquo; என்ற முத்திரை &ndash; வெளியில் விற்க முடியாது. மீறினால் தண்டனை!2020 முதல் இறக்குமதி மது இல்லை. இந்திய தயாரிப்பு (IMFL) மட்டுமே &ndash; அதுவும் தரமானவை. இது வீரர்களுக்கு மட்டுமான சிறப்பு சலுகை. சிவிலியன்கள் முயற்சித்தாலும் முடியாது!&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஒரு சுவாரசிய உண்மை: &lt;/strong&gt;பல வீரர்கள் CSD-யை &ldquo;எங்கள் சொந்த டிரெஷர்&rdquo; என்று அழைக்கிறார்கள். மலிவான, தூய்மையான மது கிடைப்பதால் அவர்களின் இளைப்பாறுதல் நிமிடங்கள் இன்னும் இனிமையாகின்றன. ஆனால் இது தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருக்க கோட்டா, கார்டு, முத்திரை என்று கடுமையான கட்டுப்பாடுகள்.CSD என்பது வெறும் கடை அல்ல &ndash; நாட்டின் வீரர்களுக்கு அரசு அளிக்கும் அன்பின் அடையாளம். எல்லைப் பாதுகாப்புக்கு உயிர் கொடுக்கும் ஜவான்களுக்கு ஒரு சின்ன &ldquo;தேங்க்யூ&rdquo;! அடுத்த முறை ஒரு ராணுவ நண்பரைப் பார்த்தால், அவர்களின் இந்த சிறப்பு சலுகையை நினைத்துப் புன்னகைத்துப் பாருங்கள்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/army-canteen-liquor-at-50-percentage-off-the-tax-magic-behind-csds-rs-500-whisky-b1ofazq"/>
        </item>
        <item>
            <title><![CDATA[இனி டோல்கேட்டில் நிற்க தேவையில்லை.. பயண நேரம் பாதியாக குறையும்.. வாகன ஓட்டிகளுக்கு குட்நியூஸ்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/indias-first-barrier-free-mlft-toll-system-launched-faster-travel-no-more-waiting-cvv3uot</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/indias-first-barrier-free-mlft-toll-system-launched-faster-travel-no-more-waiting-cvv3uot</guid>
            <pubDate>Sun, 03 May 2026 14:00:15 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;MLFF Toll System: இனி வாகனங்கள் டோல்கேட்டில் நிற்க தேவையில்லாத 'மல்டி-லேன் ஃப்ரீ ஃப்ளோ' சிஸ்டம் முறை இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பயண நேரம் பாதியாக குறையும்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kqpf4rtb6cnzvn250s0txtg2,imgname-toll-plaza-1777796801355.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;MLFF Toll System: இனி வாகனங்கள் டோல்கேட்டில் நிற்க தேவையில்லாத 'மல்டி-லேன் ஃப்ரீ ஃப்ளோ' சிஸ்டம் முறை இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பயண நேரம் பாதியாக குறையும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவிலேயே முதல்முறையாக, டோல்கேட்களில் வாகனங்கள் நிற்காமல் செல்லும் புதிய தொழில்நுட்பத்தை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முன்னோடித் திட்டம், நெடுஞ்சாலைப் பயண அனுபவத்தை முற்றிலுமாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத்தில் உள்ள சூரத்-பரூச் இடையேயான தேசிய நெடுஞ்சாலை-48ல் இருக்கும் சோரயாசி டோல் பிளாசாவில்தான் இந்த 'மல்டி-லேன் ஃப்ரீ ஃப்ளோ' (MLFF) சிஸ்டம் தொடங்கப்பட்டுள்ளது. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த புதிய முறையில், டோல் பூத்களில் தடுப்புகள் இருக்காது. வாகனங்கள் நிற்காமலேயே கடந்து செல்லலாம். ஆட்டோமேட்டிக் நம்பர் பிளேட் ரெகக்னிஷன் (ANPR) கேமராக்கள் மற்றும் ஃபாஸ்டேக் தொழில்நுட்பம் மூலம் டோல் கட்டணம் தானாகவே வசூலிக்கப்படும். இந்த சிஸ்டம் அமல்படுத்தப்பட்ட முதல் நாளிலேயே சுமார் 41,500 வாகனங்கள் இந்த டோல் பிளாசாவைக் கடந்து சென்றுள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பயண நேரம் மிச்சமாகும்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்த புதிய வசதியால், டோல்களில் போக்குவரத்து நெரிசல் குறையும், பயண நேரம் மிச்சமாகும், எரிபொருள் சிக்கனமாகும், மற்றும் வாகனப் புகையால் ஏற்படும் மாசும் குறையும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தேசிய நெடுஞ்சாலைப் பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவத்தைத் தரும்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;இந்த வசதியைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், தங்கள் ஃபாஸ்டேக் கணக்கில் போதுமான பணம் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒருவேளை ஃபாஸ்டேக்கில் பணம் இல்லாவிட்டாலோ அல்லது ஃபாஸ்டேக் செல்லுபடியாகாவிட்டாலோ, வாகன உரிமையாளருக்கு 'எலக்ட்ரானிக் நோட்டீஸ்' (E-Notice) அனுப்பப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த நோட்டீஸ் கிடைத்த 72 மணி நேரத்திற்குள் சாதாரண டோல் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். தவறினால், சாதாரண கட்டணத்தை விட இரண்டு மடங்கு அபராதம் செலுத்த நேரிடும். தொடர்ந்து கட்டணம் செலுத்தாமல் இருந்தால், ஃபாஸ்டேக் பிளாக்லிஸ்ட் செய்யப்பட்டு, 'வாகன்' (VAHAN) தளம் மூலமான மற்ற வாகன சேவைகளிலும் சிக்கல் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த MLFF சிஸ்டம், டோல் வசூலிக்கும் செயல்பாடுகளை மேலும் வெளிப்படையானதாக மாற்றும். டோல் பிளாசாக்களை அமைப்பதற்கான செலவுகளையும் குறைக்கும். இதன் மூலம், நாடு முழுவதும் டோல் வசூலிக்கும் முறை இன்னும் திறமையாகவும், சிக்கனமாகவும் மாறும் என்று அமைச்சகம் கூறியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குஜராத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த முன்னோடி திட்டத்தை தொடர்ந்து தமிழகத்திலும் இதற்கான முதற்கட்ட பணிகளை தொடங்க தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதாவது சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் (NH-48) உள்ள நெமிலி மற்றும் செந்நசமுத்திரம் டோல் பிளாசாக்கள், சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் (NH-45) உள்ள பரனூர் டோல் பிளாசா என மூன்று முக்கிய டோல் பிளாசாக்களில் இந்த 'மல்டி-லேன் ஃப்ரீ ஃப்ளோ' (MLFF) முறையை அமல்படுத்த நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/indias-first-barrier-free-mlft-toll-system-launched-faster-travel-no-more-waiting-cvv3uot"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஓய்வூதியத்துக்கும் வரி இருக்கா? யாருக்கு வரி, யாருக்கு விலக்கு? முழு விதிகள் இங்கே]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/do-pensioners-pay-tax-latest-income-tax-rules-explained-d8mvprx</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/do-pensioners-pay-tax-latest-income-tax-rules-explained-d8mvprx</guid>
            <pubDate>Sat, 02 May 2026 12:04:17 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு கம்யூட், அன்கம்யூட் மற்றும் குடும்ப ஓய்வூதியங்களுக்கான வரி விதிகள் வேறுபடுகின்றன. இந்த விதிகளை சரியாகப் புரிந்துகொள்வது தேவையற்ற வரி செலுத்துவதைத் தவிர்க்க உதவும்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kqkm6sefwcj8zgma9664vjvf,imgname-tamil-news---2026-05-02t112701.957-1777701447098.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு கம்யூட், அன்கம்யூட் மற்றும் குடும்ப ஓய்வூதியங்களுக்கான வரி விதிகள் வேறுபடுகின்றன. இந்த விதிகளை சரியாகப் புரிந்துகொள்வது தேவையற்ற வரி செலுத்துவதைத் தவிர்க்க உதவும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஓய்வூதியம் என்பது முதிய வயதில் நிதி பாதுகாப்பாக கருதப்படும் முக்கிய வருவாய். ஆனால், பலர் கவனிக்காமல் விடும் விஷயம் என்னவென்றால், இந்த ஓய்வூதியத்திற்கும் வருமான வரி விதிக்கப்படலாம். இந்தியாவில், ஓய்வூதிய வரி விதிப்பு நீங்கள் பெறும் தொகையின் வகை மற்றும் உங்கள் வேலை வகையைப் பொறுத்து மாறுபடும். சரியான தகவல் இல்லாமல் ITR தாக்கல் செய்தால், ஓய்வூதியத்தில் இருந்து தேவையற்ற வரி செலுத்தும் நிலை உருவாகலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முதலில், ஓய்வூதியம் இரண்டு வகைப்படும்: 'அன்கம்யூடட் பென்ஷன்' மற்றும் 'கம்யூட் பென்ஷன்'. மாதந்தோறும் கிடைக்கும் ஓய்வூதியம் &lsquo;Uncommuted Pension&rsquo; எனப்படுகிறது. வருமான வரி விதிகளின்படி, இது &ldquo;சம்பள வருமானம்&rdquo; (சம்பளத்திலிருந்து வருமானம்) என்ற தலைப்பில் கணக்கிடப்படுகிறது. அதனால், இதற்கு வரி விதிக்கப்படும். ஆனால், சேவையில் ஏற்பட்ட உடல் ஊனமுற்ற காரணத்தால் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு ஊனமுற்றோர் ஓய்வூதியம் முழுவதும் வரிவிலக்கு பெறும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மற்றொரு வகையான &lsquo;கம்யூட் பென்ஷன்&rsquo; என்பது, மாதாந்திர ஓய்வூதியத்தின் ஒரு பகுதியை விட்டுக் கொடுத்து, அதற்குப் பதிலாக ஒரே முறை பெரிய தொகையைப் பெறுவது. அரசு ஊழியர்கள், மாநில அரசு, உள்ளாட்சி அமைப்புகள் அல்லது பாதுகாப்பு துறையில் பணிபுரிந்தவர்கள் இந்த தொகையை முழுமையாக வரிவிலக்கு பெறலாம். இது அவர்களுக்கு பெரிய நிதி சலுகையாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆனால், தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு விதிகள் சற்று வேறுபடும். ஓய்வுபெறும் போது பணிக்கொடை பெற்றிருந்தால், மாற்றியமைக்கப்பட்ட ஓய்வூதியத் தொகையின் 1/3 பகுதி மட்டும் வரிவிலக்கு பெறும். பணிக்கொடை பெறாதவர்களுக்கு, மொத்த ஓய்வூதியத்தின் 50% வரை வரிவிலக்கு கிடைக்கும். இதைத் தாண்டிய தொகை மட்டுமே வரிக்கு உட்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேலும், ஊழியர் மரணமடைந்த பிறகு குடும்பத்தினருக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியம் &ldquo;மற்ற வருவாய்&rdquo; (பிற ஆதாரங்களில் இருந்து வருமானம்) என வகைப்படுத்தப்படுகிறது. இதில், மொத்த தொகையின் 1/3 அல்லது ₹15,000 (எது குறைவோ அது) வரை வரிவிலக்கு வழங்கப்படுகிறது. புதிய வரி முறையில் இந்த வரம்பு ரூ.25,000 வரை உயர்த்தப்படலாம். ஆனால், நாட்டுக்காக உயிர்நீத்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் முழுவதும் வரிவிலக்கு பெறுவது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/do-pensioners-pay-tax-latest-income-tax-rules-explained-d8mvprx"/>
        </item>
        <item>
            <title><![CDATA[LPG New Rules 2026 : சிலிண்டர் முன்பதிவு விதிகளில் மாற்றம்.! அமலுக்கு வந்துள்ள புதிய கட்டுப்பாடுகள்.! தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/gas-cylinder-new-rules-from-may-1-new-lpg-cylinder-booking-and-delivery-rules-in-india-from-may-1-explained-f8xy6r5</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/gas-cylinder-new-rules-from-may-1-new-lpg-cylinder-booking-and-delivery-rules-in-india-from-may-1-explained-f8xy6r5</guid>
            <pubDate>Sun, 03 May 2026 17:56:20 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Gas Cylinder New Rules From May 1 : மே 1 முதல் அமலுக்கு வந்துள்ள எல்பிஜி சிலிண்டர் விநியோகம் மற்றும் முன்பதிவு தொடர்பான புதிய விதிமுறைகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kqpwpk4k8p59t48adnwyyr9t,imgname-gas-cylinder-new-rules-from-may-1-1777811016851.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Gas Cylinder New Rules From May 1 : மே 1 முதல் அமலுக்கு வந்துள்ள எல்பிஜி சிலிண்டர் விநியோகம் மற்றும் முன்பதிவு தொடர்பான புதிய விதிமுறைகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சமையல் எரிவாயு விநியோகத்தில் முறைகேடுகளைத் தவிர்க்கவும், வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. மே 1 ஆம் தேதி முதல் சிலிண்டர் முன்பதிவு மற்றும் நடைமுறைக்கு வந்துள்ள பிற முக்கிய மாற்றங்கள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இனிமேல் சிலிண்டர் டெலிவரி எடுக்கும்போது உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் DAC (Delivery Authentication Code) என்ற ஓடிபி (OTP) எண்ணைச் சொன்னால் மட்டுமே சிலிண்டர் வழங்கப்படும். பழையபடி வெறும் கேஸ் புத்தகத்தைக் காட்டி சிலிண்டர் வாங்கும் முறை இனி செல்லாது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிலிண்டர் இணைப்பு வைத்திருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களும் தங்களின் ஆதார் எண்ணைக் கொண்டு e-KYC சரிபார்ப்பை முடிக்க வேண்டும். இதைச் செய்யாதவர்களுக்கு வருங்காலத்தில் சிலிண்டர் முன்பதிவு செய்வதில் சிக்கல்கள் ஏற்படலாம். இது சிலிண்டர்கள் கறுப்புச் சந்தையில் விற்கப்படுவதைத் தடுக்க உதவும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான கால இடைவெளியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது:&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;நகர்ப்புறங்களில்: &lt;/strong&gt;ஒரு சிலிண்டர் வாங்கிய பிறகு, அடுத்த சிலிண்டரை முன்பதிவு செய்ய 25 நாட்கள் காத்திருக்க வேண்டும் (முன்பு இது 21 நாட்களாக இருந்தது).&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;கிராமப்புறங்களில்:&lt;/strong&gt; வழக்கம்போல 45 நாட்கள் இடைவெளி தொடரும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;img&gt;&lt;p&gt;மே 1 முதல் 19 கிலோ எடையுள்ள வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களின் விலை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. உதாரணமாக, டெல்லியில் இதன் விலை சுமார் ₹993 வரை அதிகரித்துள்ளது. ஆனால், வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு (Domestic LPG) விலையில் மாற்றம் ஏதுமில்லை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சர்வதேச அளவில் வளைகுடா நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக எல்பிஜி விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதைச் சமாளிக்க இந்தியா தற்போது அமெரிக்காவிலிருந்து எரிவாயுவை இறக்குமதி செய்து வருகிறது. இதனால் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.&lt;strong&gt;வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு:&lt;/strong&gt; உங்களின் மொபைல் எண் எரிவாயு நிறுவனத்தில் சரியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அப்போதுதான் சிலிண்டர் டெலிவரியின் போது DAC குறியீடு பெறுவதில் சிரமம் இருக்காது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/gas-cylinder-new-rules-from-may-1-new-lpg-cylinder-booking-and-delivery-rules-in-india-from-may-1-explained-f8xy6r5"/>
        </item>
        <item>
            <title><![CDATA[உங்ககிட்ட Google Pay, PhonePe இருக்கா? 99% பேருக்கு தெரியாத சீக்ரெட்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/using-phonepe-or-google-pay-this-upi-fact-will-surprise-you-fhb08de</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/using-phonepe-or-google-pay-this-upi-fact-will-surprise-you-fhb08de</guid>
            <pubDate>Sun, 03 May 2026 09:01:35 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;2016-ல் தொடங்கப்பட்ட யுபிஐ, இன்று இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் 85% ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த வளர்ச்சி இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு பெரும் உந்துசக்தியாக அமைந்துள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jgkejdp06p7cs1x38bm5nemd,imgname-tamil-news---2025-01-02t173540.221.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;2016-ல் தொடங்கப்பட்ட யுபிஐ, இன்று இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் 85% ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த வளர்ச்சி இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு பெரும் உந்துசக்தியாக அமைந்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நம்மில் உள்ளோர் தினமும் போன்பே, கூகுள் பே, பேடிஎம், பீம் போன்ற யுபிஐ ஆப்களை பயன்படுத்துகிறோம். டீக்கடையிலிருந்து பெரிய மால்கள் வரை, &ldquo;ஸ்கேன் பண்ணி பணம் அனுப்புவது&rdquo; ஒரு வழக்கமான பழக்கமாகிவிட்டது. ஆனால், இந்த அனைத்து ஆப்களும் ஒரே தளத்தில் இயங்குகிறது என்பது பலருக்கு தெரியாது. அந்த தளம் தான் Unified Payments Interface எனப்படும் யுபிஐ.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;டிஜிட்டல் இந்தியாவின் முக்கிய தூணாக மாறிய யுபிஐ, வெறும் ஒரு டெக்னாலஜி அல்ல; பொதுமக்களுக்கு அதிகாரம் கொடுத்த ஒரு மாற்று கருவி. 2016 ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, இன்று உலகின் மிகப்பெரிய ரியல்-டைம் பண பரிவர்த்தனை தளமாக வளர்ந்துள்ளது. இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சியில் இதன் பங்கு மிகப் பெரியது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தொடக்கத்தில் இருந்த நிலையை பார்த்தால் இந்த வளர்ச்சி இன்னும் ஆச்சரியமாக இருக்கும். அறிமுகமான முதல் மாதத்தில் வெறும் 373 பரிவர்த்தனைகள் மட்டுமே நடந்தன. ஆனால், 2025-26 நிதியாண்டில் இது 24,000 கோடியை கடந்துள்ளது. ஆரம்ப காலத்துடன் ஒப்பிடும்போது 12,000 மடங்கு உயர்வு என்பது யுபிஐ வளர்ச்சியின் அளவைக் காட்டுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பண மதிப்பிலும் இதே போன்று மிகப்பெரிய உயர்வு பதிவாகியுள்ளது. 2016-17ல் ரூ.0.07 லட்சம் கோடி மட்டுமே இருந்த பரிவர்த்தனை மதிப்பு, 2025-26ல் ரூ.314 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. தினசரி பயன்பாடு வேகமாக அதிகரித்து, தற்போது ஒரு நாளுக்கு சுமார் 66 கோடி பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு நாளும் ரூ.0.86 லட்சம் கோடி மதிப்பிலான பணம் இதன் மூலம் பரிமாறப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்றைக்கு இந்தியாவில் நடைபெறும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் 85% யுபிஐ-யே ஆதிக்கம் செலுத்துகிறது. ஆரம்பத்தில் 21 வங்கிகள் மட்டும் இணைந்திருந்த இந்த தளம், தற்போது 700க்கும் மேற்பட்ட வங்கிகளை உள்ளடக்கியுள்ளது. நகரங்கள், கிராமங்களிலும் கூட வங்கிசேவைகளை எளிதாக கிடைக்கச் செய்த இந்த வளர்ச்சி, இந்தியாவின் டிஜிட்டல் முன்னேற்றத்திற்கு பெரிய அடித்தளமாக உள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/using-phonepe-or-google-pay-this-upi-fact-will-surprise-you-fhb08de"/>
        </item>
        <item>
            <title><![CDATA[மே மாதத்தில் 13 நாட்கள் வங்கி மூடப்படும்.. பேங்க் லீவு விடுமுறை லிஸ்ட்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/may-bank-holidays-india-dates-state-wise-closures-details-fq621y6</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/may-bank-holidays-india-dates-state-wise-closures-details-fq621y6</guid>
            <pubDate>Fri, 01 May 2026 19:56:45 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;மே மாதத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகைகள் காரணமாக வங்கிகளுக்கு சுமார் 13 நாட்கள் விடுமுறை வரவுள்ளது. எனவே, வங்கி கிளைக்கு நேரில் சென்று செய்ய வேண்டிய பணிகளை முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k139mhbzjbpxamnhrq868j63,imgname-bank-holidays-1753531172223.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;மே மாதத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகைகள் காரணமாக வங்கிகளுக்கு சுமார் 13 நாட்கள் விடுமுறை வரவுள்ளது. எனவே, வங்கி கிளைக்கு நேரில் சென்று செய்ய வேண்டிய பணிகளை முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஏப்ரல் மாதம் முடிந்து மே மாதம் தொடங்கும் நேரத்தில், பலர் வங்கி தொடர்பான முக்கிய பணிகளை முடிக்க திட்டமிட்டு இருப்பார்கள். ஆனால் இந்த மாதத்தில் வங்கிகளுக்கு கணிசமான அளவில் விடுமுறை இருப்பது கவனிக்க வேண்டிய விஷயம். எனவே, உங்கள் வங்கி வேலைகளை முன்கூட்டியே திட்டமிடுவது மிகவும் அவசியம். இல்லையெனில், கடைசி நேரத்தில் தேவையற்ற சிரமங்களை சந்திக்க நேரிடலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விடுமுறை பட்டியலின்படி, மே மாத வார இறுதி நாட்கள், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள், மேலும் பல்வேறு பண்டிகைகள் காரணமாக வங்கிகள் மூடப்பட்டிருக்கும். மொத்தத்தில் சுமார் 13 நாட்கள் வரை வங்கிகள் செயல்படாமல் இருக்க வாய்ப்பு உள்ளது. இதனால், நேரில் கிளைக்கு சென்று செய்ய வேண்டிய பணிகளை சரியான நாளில் முடிப்பது முக்கியம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மே 1, 3, 9, 10, 16, 17, 23, 24, 26, 27, 28 மற்றும் 31 ஆகிய தேதிகளில் பல மாநிலங்களில் வங்கிகள் இயங்காது. இதில் மாநில சில நாட்கள் நாடு முழுவதும் விடுமுறை இருக்கும் நிலையில், சில நாட்கள் குறிப்பிட்ட மட்டுமே பொருந்தும். உதாரணமாக, மே 1 தொழிலாளர் தினம் மற்றும் மகாராஷ்டிரா தினம் என்பதால் பல இடங்களில் வங்கிகள் மூடப்படும். மேலும், சில தேதிகளில் உள்ளூர் பண்டிகைகள் காரணமாக சேவைகள் பாதிக்கப்படலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எந்த தேதியில் வங்கிகள் இயங்காது என்பதை முன்கூட்டியே சரிபார்த்து கொள்வது நல்லது. குறிப்பாக, பெரிய அளவிலான பணப் பரிவர்த்தனைகள், செக் கிளியரன்ஸ், கடன் தொடர்பான செயல்பாடுகள் போன்றவை தாமதமாகாமல் இருக்க திட்டமிடுவது அவசியம். கடைசி நேரத்தில் செய்வது சிக்கல்களை உருவாக்கக்கூடும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆனால் வங்கிகள் மூடப்பட்டிருந்தாலும், டிஜிட்டல் சேவைகள் தொடர்ந்து கிடைக்கும் என்பது ஒரு நன்மை. நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், யுபிஐ, ஏடிஎம் போன்ற வசதிகள் மூலம் அவசர தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம். இருந்தாலும், கிளைக்குச் சென்று செய்ய வேண்டிய முக்கிய பணிகளை முன்பே முடித்துவிடுவது பாதுகாப்பான தேர்வாகும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/may-bank-holidays-india-dates-state-wise-closures-details-fq621y6"/>
        </item>
        <item>
            <title><![CDATA[தேங்காய் முதல் பவர் பேங்க் வரை.. விமானத்தில் எதற்கெல்லாம் 'நோ' என்ட்ரி? முழு லிஸ்ட்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/prohibited-items-in-flight-why-coconuts-and-power-banks-are-banned-gptuqt4</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/prohibited-items-in-flight-why-coconuts-and-power-banks-are-banned-gptuqt4</guid>
            <pubDate>Thu, 30 Apr 2026 17:49:42 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Prohibited Items in Flights: விமானங்களில் என்னென்ன உணவுப்பொருட்கள் கொண்டு செல்ல தடை? அதற்கான காரணங்கள் என்னென்ன? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kqc4hq954hy7qhkyp21q7k9e,imgname-air-india-hub-spoke-varanasi-international-connectivity-udan-india-aviation-model-updates-5-1777450147109.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Prohibited Items in Flights: விமானங்களில் என்னென்ன உணவுப்பொருட்கள் கொண்டு செல்ல தடை? அதற்கான காரணங்கள் என்னென்ன? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவில் சுற்றுலாவுக்காவும், படிப்பு மற்றும் வேலைக்காவும் வெளிநாடுகளுக்கு செல்வபர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வேலை, படிப்புக்காக வெளிநாடு செல்லும் பிள்ளைகளுக்காக, பெற்றோர்கள் பாசத்துடன் பலகாரஙகள், ஊறுகாய், பொடிகள் ஆகிய உணவுப் பொருட்களை கொடுத்து அனுப்புவது வழக்கம். ஆனால் விமானத்தில் நாம் நினைத்தபடி அனைத்து உணவுப் பொருட்களையும் கொண்டு செல்ல முடியாது. விமானத்தில் என்னென்ன பொருட்கள் கொண்டு செல்லக் கூடாது? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதாவது சூப், ஜாம், தேன், சட்னி, ஜூஸ் போன்ற 100ml-க்கு அதிகமான திரவப் பொருட்களை விமான கேபின் பேக்கில் கொண்டு செல்ல முடியாது. இதில் மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகள், குழந்தைகளின் பாலுக்கு மட்டும் சில விதிவிலக்குகள் உண்டு. விமானத்தின் ஏசி கேபினில் கடுமையான வாசனை பரவி மற்ற பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் என்பதால் வெங்காயம், பூண்டு, சில வகை மீன் உணவுகள் மற்றும் துரியன் (Durian) போன்ற பழங்களுக்கு பல சர்வதேச விமானங்கள் தடை விதித்துள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உலர்ந்த தேங்காயில் எண்ணெய் அதிகம் இருப்பதால், அது எளிதில் தீப்பற்றக்கூடியது. தீ விபத்து அபாயத்தைக் கருத்தில் கொண்டு, விமான கேபின் பேக்கில் இதை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. மேலும், வெளிநாட்டுப் பயணங்களின்போது, புதிய பழங்கள், காய்கறிகள், விதைகளைக் கொண்டு செல்ல கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. இவை அந்த நாட்டின் விவசாயத்தைப் பாதிக்கும் பூச்சிகள் அல்லது நோய்களைக் கொண்டு வரக்கூடும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதேபோல் விமான பயணத்தின்போது பலரும் செய்யும் தவறு, பவர் பேங்க்களை பெரிய சூட்கேஸில் (Check-in Bag) வைத்துவிடுவது. பவர் பேங்க்கள் மற்றும் லித்தியம் பேட்டரிகள் எப்போதும் கேபின் பேக்கில் மட்டுமே இருக்க வேண்டும். இவை செக்-இன் பேக்கேஜில் இருந்தால், ஸ்கேன் செய்யும்போதே கண்டறியப்பட்டு அகற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதேப்போல் ஊறுகாயில் எண்ணெய் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளதாலும், அது திரவப் பொருள் (Liquid) கணக்கில் வருவதாலும், அதை கேபின் பேக்கில் வைப்பதைத் தவிர்த்து, நன்றாக பேக் செய்து செக்-இன் பேக்கில் வைப்பதே சிறந்தது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இறக்குமதி செய்யப்படும் இறைச்சிகளுக்கு தடை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள் போன்றவை, இறக்குமதி செய்யப்படும் இறைச்சி, சீஸ் அல்லது பால் பொருட்களை அனுமதிப்பதில்லை. உங்கள் பைகளை பேக் செய்வதற்கு முன், சம்பந்தப்பட்ட ஏர்லைன்ஸின் இணையதளத்தில் உள்ள 'Prohibited Items' பட்டியலை ஒருமுறை சரிபார்த்துக் கொள்வது அவசியம் ஆகும். உணவுகளை எடுத்துச் செல்லும்போது 'Vacuum Sealed' செய்யப்பட்ட பாக்கெட்டுகளை பயன்படுத்துவம் முக்கியம். நீங்கள் எடுத்து செல்லும் பொருட்களில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிப்பது அபராதத்தை தவிர்க்க உதவும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/prohibited-items-in-flight-why-coconuts-and-power-banks-are-banned-gptuqt4"/>
        </item>
        <item>
            <title><![CDATA[இனி 'கோடிங்' செய்ய ஆள் தேவையில்லை? ஐடி ஊழியர்களின் தலையில் இடியாய் இறங்கிய AI]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/will-replace-coders-the-rise-of-ai-deflation-in-indian-it-industry-i1ceyw0</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/will-replace-coders-the-rise-of-ai-deflation-in-indian-it-industry-i1ceyw0</guid>
            <pubDate>Sun, 03 May 2026 17:36:08 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;லாபத்தில் ஏற்படும் சரிவைச் சமாளிக்க, ஐடி நிறுவனங்கள் ஆட்டோமேஷன் மற்றும் ஆட்குறைப்பு போன்ற மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. இதன் மூலம் கிடைக்கும் பணத்தை AI திறன்களை வளர்ப்பதற்கும், எதிர்கால வளர்ச்சி பணிகளுக்கும் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளன.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kqpvd9s95p1ejv6rgx9rfez9,imgname-ai-1777809663785.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;லாபத்தில் ஏற்படும் சரிவைச் சமாளிக்க, ஐடி நிறுவனங்கள் ஆட்டோமேஷன் மற்றும் ஆட்குறைப்பு போன்ற மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. இதன் மூலம் கிடைக்கும் பணத்தை AI திறன்களை வளர்ப்பதற்கும், எதிர்கால வளர்ச்சி பணிகளுக்கும் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்திய ஐடி நிறுவனங்களுக்கு ஏஐ எனப்படும் ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (AI) ஒருபக்கம் புதிய வருமான வாய்ப்புகளைக் கொண்டு வந்தாலும், மறுபக்கம் கடுமையான விலை அழுத்தத்தையும் (pricing pressure) கொடுத்து வருகிறது. இதனால், ஐடி துறையின் வளர்ச்சி மற்றும் லாபக் கண்ணோட்டம் முற்றிலுமாக மாறி வருவதாக கோடக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டிஸ் சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;போட்டி அதிகரித்திருப்பதையும், AI தொழில்நுட்பத்தால் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. AI மூலம் உற்பத்தித் திறன் அதிகரிப்பதால், அதன் பலனை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டிய கட்டாயம் ஐடி நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதை &quot;AI-டீஃப்ளேஷன்&quot; (AI-deflation) என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதாவது, &quot;GenAI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதால் உங்கள் வேலைத்திறன் கூடுகிறது. அதனால், ஒப்பந்தங்களைப் புதுப்பிக்கும்போது விலையைக் குறைக்க வேண்டும்&quot; என வாடிக்கையாளர்கள் அழுத்தம் கொடுப்பதாக இந்தத் துறையைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். தற்போது செலவுகளைக் குறைப்பதற்கும், AI தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதற்கும் பெரிய அளவிலான ஒப்பந்தங்கள் (large transformation deals) அதிகரித்து வருகின்றன. இப்படி பெரிய டீல்கள் கிடைப்பது நல்ல விஷயமாகத் தெரிந்தாலும், &quot;AI-டீஃப்ளேஷன்&quot; காரணமாக இதில் லாபம் குறைவாகவும், வேலையை முடிப்பதில் சிக்கல்களும் ஏற்பட வாய்ப்புள்ளது என அறிக்கை எச்சரிக்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஐடி வர்த்தக முறை மாறியுள்ளது&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;பாரம்பரிய ஐடி சேவைகளின் வர்த்தக மாடலும் இப்போது மாறத் தொடங்கியுள்ளது. முன்பு, எத்தனை பேர் வேலை செய்கிறார்கள் என்பதைப் பொறுத்து கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால் இப்போது, வேலையின் முடிவைப் பொறுத்து (outcome-based models) கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. மனித உழைப்பு மற்றும் டிஜிட்டல் உழைப்பு இரண்டையும் கலந்து &quot;AI-infused rate cards&quot; என்ற புதிய விலைப்பட்டியல் முறைக்கு ஐடி நிறுவனங்கள் மாறி வருகின்றன.&lt;/p&gt;&lt;p&gt;லாபத்தில் ஏற்படும் சரிவைச் சமாளிக்க, நிறுவனங்கள் ஆட்டோமேஷன் மற்றும் ஆட்குறைப்பு போன்ற மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. இதன் மூலம் கிடைக்கும் பணத்தை, AI திறன்களை வளர்ப்பதற்கும், எதிர்கால வளர்ச்சிப் பணிகளுக்கும் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளன. அதே நேரத்தில், AI புதிய வருமான வழிகளையும் திறந்துவிட்டுள்ளது. AI தொடர்பான சேவைகளுக்கு நல்ல டிமாண்ட் இருப்பதாகவும், நிறுவனங்கள் ஏற்கனவே 5,000-க்கும் மேற்பட்ட AI திட்டங்களில் கொண்டு வருவதாகவும் அறிக்கை கூறுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வாடிக்கையாளர் சேவை, நிறுவன tự động h&oacute;a (enterprise automation), மற்றும் உள்கட்டமைப்பு விரிவாக்கம் போன்ற துறைகளில் AI-க்கு அதிக தேவை உள்ளது. குறிப்பாக, உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள் AI-ல் அதிக முதலீடு செய்வதால், AI டேட்டா சென்டர் உள்கட்டமைப்பை உருவாக்குவது ஒரு பெரிய வாய்ப்பாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், தற்போதைய சூழல் சவாலாகவே உள்ளது. &quot;சந்தையில் தேவை குறைந்துள்ளது&quot; என்றும், &quot;பொருளாதார மந்தநிலை மற்றும் AI-டீஃப்ளேஷன் ஆகியவற்றால் ஐடி துறை கூடுதல் அழுத்தத்தில் உள்ளது&quot; என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;முடிவாக, AI என்பது நீண்ட காலத்திற்கு ஒரு வலுவான வளர்ச்சி இயந்திரமாக இருந்தாலும், தற்போதைக்கு அது பாரம்பரிய வருமான வழிகளை நெருக்குகிறது. இதனால், இந்திய ஐடி துறை குறைந்த லாபம், மாறும் விலை நிர்ணய முறைகள் மற்றும் அதிகரித்த போட்டி என ஒரு மாற்றுக் காலகட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/will-replace-coders-the-rise-of-ai-deflation-in-indian-it-industry-i1ceyw0"/>
        </item>
        <item>
            <title><![CDATA[வாகன ஓட்டிகளுக்கு ஷாக்.. பெட்ரோல், டீசல், கேஸ் விலை 5 நாள்ல ஏறுமா? உஷார்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/fuel-price-hike-alert-petrol-diesel-rates-set-to-increase-in-india-p3sy70a</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/fuel-price-hike-alert-petrol-diesel-rates-set-to-increase-in-india-p3sy70a</guid>
            <pubDate>Sat, 02 May 2026 11:17:37 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;மேற்கு ஆசிய பதற்றத்தால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி சிலிண்டர் விலைகளை உயர்த்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kmn48jxqa9zr2athgt3hwywq,imgname-untitled-design--39--1774530612151.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;மேற்கு ஆசிய பதற்றத்தால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி சிலிண்டர் விலைகளை உயர்த்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் பதற்றம் உலக எண்ணெய் சந்தையை அதிரவைத்துள்ளது. கச்சா எண்ணெய் விலை திடீரென உயர்ந்ததால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் வீட்டு எல்.பி.ஜி சிலிண்டர் விலைகளை திருத்துவது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. அதிகாரப்பூர்வ தகவல்களை மேற்கோள் காட்டிய செய்திகளின் படி, பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ.4 முதல் ரூ.5 வரை உயர வாய்ப்பு இருப்பதாகவும், சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.40 முதல் ரூ.50 வரை அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த மாற்றம் அமலுக்கு வந்தால், கடந்த சில ஆண்டுகளாக நிலைத்திருந்த எரிபொருள் விலையில் இது முதல் பெரிய உயர்வாக அமையும். 2022க்கு பிறகு பெட்ரோல், டீசல் விலையில் பெரிய மாற்றம் இல்லாமல் இருந்த நிலையில், தற்போதைய சூழல் புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் செலவினம் நேரடியாக பாதிக்கப்படும் என்ற கவலையும் உருவாகியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விலை உயர்வுக்கு முக்கிய காரணம் உலகளவில் கச்சா எண்ணெய் விலை ஏற்றமே. மேற்கு ஆசியப் பகுதிகளில் நிலவும் போர் சூழ்நிலை, எண்ணெய் உற்பத்தி மற்றும் சப்ளையில் ஏற்படும் அச்சம் அதிகரித்துள்ளது. கடல் மார்க்க போக்குவரத்து பாதிப்பு, கப்பல் செலவில் உயர்வு, நீண்டகால அரசியல் பதற்றம் போன்றவை சந்தையை மேலும் சிக்கலாக்கி, விலையை வேகமாக உயர்த்தியுள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில், இந்திய எண்ணெய் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் அதிக செலவில் கச்சா எண்ணெயை வாங்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளன. ஆனால், சில்லறை விலை மாற்றமின்றி தொடர்ந்ததால், அதன் நஷ்டம் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், மானியம் அல்லது வரி குறைப்புகள் மூலம் சுமையை தாங்குவது அரசுக்கு சவாலாக வருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதனால், அடுத்த 5 முதல் 7 நாட்களில் இறுதி முடிவு வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக சந்தை நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வரும் அரசு, நிறுவனங்களின் நஷ்டத்தையும், மக்களுக்கு ஏற்படும் பணவீக்க தாக்கத்தையும் சமநிலைப்படுத்தும் தீர்வை தேடி வருகிறது. எரிபொருள் விலை உயர்வு எப்போது, ​​எவ்வளவு என்ற முடிவு விரைவில் வெளியாகும் என்பதால், பொதுமக்கள் கவனமாக எதிர்பார்த்து வருகின்றனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/fuel-price-hike-alert-petrol-diesel-rates-set-to-increase-in-india-p3sy70a"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Chemically Ripened Mangoes: உஷார்! நீங்கள் வாங்கும் மாம்பழம் இனிப்பானதா? அல்லது விஷமானதா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/health-food/fake-mango-alert-do-not-buy-before-checking-these-tips-plzw7zg</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/health-food/fake-mango-alert-do-not-buy-before-checking-these-tips-plzw7zg</guid>
            <pubDate>Thu, 30 Apr 2026 09:13:13 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;போலி மாம்பழம் டிப்ஸ்&lt;/strong&gt;: கோடை காலத்தில் மாம்பழம் வாங்கும் போது கவனமாக இருங்கள். இந்த எளிய டிப்ஸ் மூலம், ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை அடையாளம் கண்டு, உங்கள் குடும்பத்தைப் பாதுகாக்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kqe72yxeg7b5x2rdx5qqmqwe,imgname-gemini-generated-image-wjog3qwjog3qwjog--1--1777519917998.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;போலி மாம்பழம் டிப்ஸ்&lt;/strong&gt;: கோடை காலத்தில் மாம்பழம் வாங்கும் போது கவனமாக இருங்கள். இந்த எளிய டிப்ஸ் மூலம், ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை அடையாளம் கண்டு, உங்கள் குடும்பத்தைப் பாதுகாக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கோடை காலத்தில் சந்தையில் காணப்படும் பளபளப்பான மாம்பழங்கள் அனைத்தும் இயற்கையாக பழுத்தவை அல்ல. சில விற்பனையாளர்கள் கால்சியம் கார்பைடு போன்ற ஆபத்தான ரசாயனங்களை பயன்படுத்தி மாம்பழங்களை வேகமாக பழுக்க வைக்கிறார்கள். இவ்வாறு ரசாயனத்தால் பழுத்த மாம்பழங்களை சாப்பிடுவது உணவு விஷம், வயிற்று வலி, வாந்தி, தலைச்சுற்றல் போன்ற உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். நீண்ட காலத்தில் இது உடலில் நச்சுத் தாக்கத்தை அதிகரித்து புற்றுநோய் போன்ற ஆபத்துகளுக்கும் வழிவகுக்கலாம். ஆகவே, மிகப் பளபளப்பாக இருக்கும் மாம்பழங்களை தவிர்த்து, இயற்கையாக பழுத்தவற்றை தேர்வு செய்வது பாதுகாப்பானது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மாம்பழத்தின் மேல் பகுதியில் உள்ள சிறிய துளைகளிலிருந்து கருப்பு அல்லது பழுப்பு நிற திரவம் வெளியேறுவது ஒரு முக்கிய எச்சரிக்கை அறிகுறியாக கருதப்படுகிறது. இது பெரும்பாலும் ரசாயனங்கள் பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்டதைக் காட்டலாம். இப்படிப்பட்ட மாம்பழங்களை நீரில் நன்றாக கழுவினாலும் அந்த கறை அல்லது ஒட்டுண்ணி தன்மை எளிதில் நீங்காது. மேலும், இவை சுவையிலும் இயற்கை இனிப்பை இழந்து இருக்கும். அதனால், இத்தகைய அறிகுறிகள் உள்ள மாம்பழங்களை தவிர்ப்பது நல்லது. இயற்கையாக பழுத்த மாம்பழங்களில் இவ்வாறு கருப்பு திரவம் வெளியேறுவது சாதாரணமாக இருக்காது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரசாயனங்கள் பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் வெளியே பார்க்க அழகாக மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஆனால் அதை வெட்டிப் பார்த்தால், உள்ளே வெள்ளையாக அல்லது சமமாக பழுக்காமல் இருக்கும். இது இயற்கை பழுத்ததல்ல என்பதற்கான முக்கிய அறிகுறி. இயற்கையாக பழுத்த மாம்பழங்களில் வெளியும் உள்ளும் ஒரே மாதிரி சீரான மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறம் காணப்படும், மேலும் நறுமணமும் இனிப்பும் அதிகமாக இருக்கும். அதனால் வாங்கும் போது வெளிப்புற நிறத்துடன் சேர்த்து உள்ளமைப்பையும் கவனிப்பது மிகவும் அவசியம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மாம்பழம் வாங்கும் முன் அதை முகர்ந்து பார்ப்பது ஒரு எளிய ஆனால் முக்கியமான வழி. இயற்கையாக பழுத்த மாம்பழங்களுக்கு இனிமையான, தனித்துவமான நறுமணம் இருக்கும். அந்த வாசனை தூரத்திலிருந்தே உணர முடியும். ஆனால் ரசாயனங்கள் பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களில் இந்த இயற்கை மணம் குறைவாகவோ அல்லது சற்றே விசித்திரமாகவோ இருக்கும். சில நேரங்களில் எந்த வாசனையும் இல்லாமல் இருக்கும். ஆகவே, மாம்பழத்தை தேர்வு செய்யும் போது அதன் மணத்தை கவனித்தால், நல்ல மற்றும் பாதுகாப்பான பழத்தை எளிதாக அடையாளம் காணலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி மாம்பழத்தை அதில் விடுவது ஒரு பொதுவான சோதனை. சில நேரங்களில் இயற்கையாக பழுத்த மாம்பழங்கள் அடர்த்தி அதிகமாக இருப்பதால் மூழ்கலாம்; ரசாயனத்தால் பழுத்தவை மிதக்கும் என கூறப்படுகிறது. ஆனால் இது 100% நம்பகமான முறையல்ல. பழத்தின் வகை, உள்ளே உள்ள காற்று, பழுத்த நிலை போன்ற காரணங்களாலும் மிதக்க அல்லது மூழ்க முடியும். ஆகவே இந்த ஒரு முறையை மட்டும் நம்பாமல், நிறம், மணம், உள்ளமைப்பு போன்ற மற்ற அறிகுறிகளையும் சேர்த்து பார்த்து மாம்பழத்தை தேர்வு செய்வது பாதுகாப்பானது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/health-food/fake-mango-alert-do-not-buy-before-checking-these-tips-plzw7zg"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Summer Passive Income: ₹20,000 முதலீட்டில் போர்ட்டபிள் AC வாடகை பிசினஸ்! கோடையில் வருமானம் கொட்டும்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/start-a-portable-ac-rental-business-for-summer-passive-income-q85m4x2</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/start-a-portable-ac-rental-business-for-summer-passive-income-q85m4x2</guid>
            <pubDate>Sun, 03 May 2026 15:06:39 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;வெயிலும், அதிக மின் கட்டணமும். இந்த காலத்தில் அனைவரும் தங்கள் அறை குளிர்ச்சியாக இருக்க விரும்புகிறார்கள், ஆனால் ஒரு புதிய ஏசிக்காக ரூ.40,000 செலவழிக்க எல்லோரிடமும் பட்ஜெட் இருப்பதில்லை. இது வருமானம் ஈட்டுவதற்கான சிறந்த வாய்ப்பாக இருக்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kqpk0r2zykkh2yb6mhctvxgv,imgname-gemini-generated-image-qlzyu6qlzyu6qlzy--1--1777800863838.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;வெயிலும், அதிக மின் கட்டணமும். இந்த காலத்தில் அனைவரும் தங்கள் அறை குளிர்ச்சியாக இருக்க விரும்புகிறார்கள், ஆனால் ஒரு புதிய ஏசிக்காக ரூ.40,000 செலவழிக்க எல்லோரிடமும் பட்ஜெட் இருப்பதில்லை. இது வருமானம் ஈட்டுவதற்கான சிறந்த வாய்ப்பாக இருக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பெரும்பாலான மாணவர்கள், வாடகைதாரர்கள் அல்லது சிறு கடைக்காரர்களால் அடிக்கடி இடம் மாற வேண்டியிருப்பதால், அவர்களால் நிரந்தர ஏசி பொருத்திக்கொள்ள இயலாது. இதுபோன்ற சூழ்நிலைகளில், எடுத்துச் செல்லக்கூடிய ஏசிகளே அவர்களின் விருப்பத் தேர்வாக இருக்கின்றன. நீங்கள் ஒன்று அல்லது இரண்டு எடுத்துச் செல்லக்கூடிய ஏசிகளை வாங்கி, சில மாதங்களுக்குக் குளிர்ச்சியான, உலர்ந்த ஏர் கண்டிஷனர் தேவைப்படும் நபர்களுக்கு அவற்றை வாடகைக்கு விடலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சந்தையில் ₹18,000 முதல் ₹22,000 வரையிலான விலையில் ஒரு நல்ல போர்ட்டபிள் ஏசி கிடைக்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;சந்தையில் ஒரு போர்ட்டபிள் ஏசியின் மாத வாடகை ₹2,500 முதல் ₹4,000 வரை உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;உங்கள் ஏசியை 4 மாதங்களுக்கு வாடகைக்கு விட்டால்கூட, ஒரு இயந்திரத்தின் மூலம் சுமார் ₹12,000 முதல் ₹15,000 வரை சம்பாதிக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;இதன் பொருள் என்னவென்றால், உங்கள் இயந்திரத்தின் செலவு இரண்டாம் ஆண்டிலிருந்து மீட்கப்பட்டுவிடும், அதன்பிறகு ஈட்டப்படும் வருமானமே உங்கள் நிகர இலாபமாக இருக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கையடக்க ஏசிகளை சுவரில் பொருத்த வேண்டிய அவசியமில்லை, அதனால் அவை உடைந்துபோகும் அபாயமும், பராமரிப்புச் சிரமமும் குறைவாக இருக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;இப்போதெல்லாம் மக்கள் கடினமான நிறுவல் பணிகளைத் தவிர்க்க விரும்புவதால், வாடகைக்கு எடுக்கும் போக்கு அதிகரித்து வருகிறது.&lt;/p&gt;&lt;p&gt;நீங்கள் இந்த வேலையை உங்கள் வீட்டிலிருந்தோ அல்லது எங்கிருந்தும் தொடங்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உங்கள் ஏசியைப் புகைப்படம் எடுத்து OLX, இன்ஸ்டாகிராம் அல்லது ஃபேஸ்புக் மார்க்கெட்பிளேஸில் பதிவிடுங்கள், உங்களுக்கு அழைப்புகள் வரத் தொடங்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;கல்லூரிக்கு அருகிலுள்ள பேயிங் கெஸ்ட் (PG) மற்றும் விடுதிக்குச் சென்று, உங்கள் சிறிய துண்டுப் பிரசுரத்தை ஒட்டுங்கள்.&lt;/p&gt;&lt;p&gt;உங்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ், உள்ளூர் ஃபேஸ்புக் குழுக்கள் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிடுங்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒருவருக்கு ஏசியை வாடகைக்கு விடும்போது, ​​அடையாள அட்டை (ஆதார் அட்டை) மற்றும் பாதுகாப்பு வைப்புத்தொகையைக் கேட்க மறவாதீர்கள். இது உங்கள் உடைமைகள் பாதுகாப்பாக இருப்பதையும், உங்கள் பணம் சரியான நேரத்தில் உங்களுக்குக் கிடைப்பதையும் உறுதி செய்யும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பொறுப்புத் துறப்பு: &lt;/strong&gt;இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் பொது விழிப்புணர்வு நோக்கங்களுக்காக மட்டுமே. (கையடக்க ஏசி போன்ற) எந்தவொரு சாதனத்தையும் வாங்குவதற்கு அல்லது குத்தகைக்கு எடுப்பதற்கு முன்பு, சந்தை நிலவரங்கள், தயாரிப்பு உத்தரவாதங்கள் மற்றும் உள்ளூர் விதிமுறைகளைச் சரிபார்க்கவும். இந்தத் தொழிலில் லாபம் ஈட்டுவது உங்கள் முதலீடு, சேவையின் தரம் மற்றும் அப்பகுதியில் உள்ள தேவை ஆகியவற்றைப் பொறுத்தது. எந்தவொரு முயற்சியையும் தொடங்குவதற்கு முன்பு எப்போதும் நிபுணர் ஆலோசனையைப் பெறவும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/start-a-portable-ac-rental-business-for-summer-passive-income-q85m4x2"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Vi 99 plan validity: விஸ்வரூபம் எடுக்கும் Vi: ரூ.99 ரீசார்ஜில் இவ்வளவு மாற்றங்களா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/vi-strikes-back-new-rs-99-prepaid-plan-launched-with-14-day-validity-wpcg40m</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/vi-strikes-back-new-rs-99-prepaid-plan-launched-with-14-day-validity-wpcg40m</guid>
            <pubDate>Sun, 03 May 2026 19:27:19 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;வோடஃபோன் ஐடியா சமீபத்தில் ரூ.99 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பழைய வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே ரூ.99 ப்ரீபெய்ட் திட்டம் ஒன்று இருந்தது. அந்தத் திட்டம் 14 நாட்கள் சேவை செல்லுபடியாகும் காலம் மற்றும் 200MB டேட்டாவுடன் வழங்கப்பட்டு வந்தது&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k0r8q7vkhrp2r0hn33y850mn,imgname-vi-pack-details-1753161113459.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;வோடஃபோன் ஐடியா சமீபத்தில் ரூ.99 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பழைய வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே ரூ.99 ப்ரீபெய்ட் திட்டம் ஒன்று இருந்தது. அந்தத் திட்டம் 14 நாட்கள் சேவை செல்லுபடியாகும் காலம் மற்றும் 200MB டேட்டாவுடன் வழங்கப்பட்டு வந்தது&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வோடஃபோன் ஐடியா சமீபத்தில் ரூ.99 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பழைய வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே ரூ.99 ப்ரீபெய்ட் திட்டம் ஒன்று இருந்தது. அந்தத் திட்டம் 14 நாட்கள் சேவை செல்லுபடியாகும் காலம் மற்றும் 200MB டேட்டாவுடன் வழங்கப்பட்டது. ஆனால் இப்போதுள்ள ரூ.99 திட்டத்தில், உங்களுக்கு சேவை செல்லுபடியாகும் காலம் கிடைக்காது. இதைப்பற்றி விரைவில் பார்ப்போம். ஆனால் அதற்கு முன், வோடஃபோன் ஐடியா சமீபத்தில் செய்த ஒரு மிக சுவாரஸ்யமான விஷயத்தைப் பற்றி நாம் பேச வேண்டும்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;இந்த ரூ.99 திட்டம், Vi-யின் இந்த சுவாரஸ்யமான நடவடிக்கைக்கு ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. இந்த தொலைத்தொடர்பு நிறுவனம் தனது 4G மற்றும் 5G ப்ரீபெய்ட் திட்டங்களுடன் வரம்பற்ற டேட்டாவை வழங்கத் தொடங்கியது. இந்த வரம்பற்ற டேட்டாவிற்கு ஒரு வரம்பு உள்ளது, மேலும் 300GB என்ற FUP (நியாயமான பயன்பாட்டுக் கொள்கை) வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், உங்களுக்குப் போதுமான டேட்டா கிடைக்கிறது. இப்போது, வோடஃபோன் ஐடியா 4G டேட்டா வவுச்சர்களுடனும் வரம்பற்ற டேட்டாவை வழங்கத் தொடங்கியுள்ளது. இதுதான் இப்போது Vi வழங்கும் ரூ.99 ப்ரீபெய்ட் திட்டத்தின் சிறப்பம்சமாகும். இதை நன்கு புரிந்துகொள்ள, இந்தத் திட்டத்தின் நன்மைகளைப் பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வோடஃபோன் ஐடியாவின் ரூ.99 டேட்டா வவுச்சர் வரம்பற்ற டேட்டாவுடன் வருகிறது. இருப்பினும், இது ஒரு புதிய திட்டம் அல்ல. ரூ.99 டேட்டா வவுச்சர் ஏற்கனவே இருந்தது, மேலும் இது நாட்டின் ஒவ்வொரு தொலைத்தொடர்பு வட்டத்திலும் உள்ள வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கிறது. ரூ.99 திட்டம் 2 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் வருகிறது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;இது சேவைக்கான செல்லுபடியாகும் காலம் அல்ல, இது டேட்டா வவுச்சரின் தனிப்பட்ட செல்லுபடியாகும் காலம் மட்டுமே. பொதுவாக, டேட்டா வவுச்சர்கள் நுகர்வோருக்கு எந்த சேவைக்கான செல்லுபடியாகும் காலத்தையும் வழங்குவதில்லை என்பதை நினைவில் கொள்ளவும். டேட்டா வவுச்சர் மூலம் ரீசார்ஜ் செய்து அதன் நன்மைகளைப் பயன்படுத்த, உங்களிடம் ஒரு செயலில் உள்ள அடிப்படை ப்ரீபெய்ட் திட்டம் இருக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரூ.99 திட்டத்திற்கு அடிப்படையில் ஒரு நாளைக்கு சுமார் ரூ.50 செலவாகும். எனவே, இந்தத் திட்டத்தின் மூலம் நீங்கள் ஒவ்வொரு நாளும் 20GB டேட்டாவைப் பெறுவீர்கள். இதன் மூலம், இரண்டு நாட்களில் பயன்படுத்தப்படும் 40GB டேட்டாவிற்கு நீங்கள் ரூ.99 செலுத்துகிறீர்கள். இந்த வவுச்சரில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால், தொலைத்தொடர்பு நிறுவனத்தின் மொபைல் செயலி மற்றும் இணையதளம் மூலமாகவும் ரீசார்ஜ் செய்யலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/vi-strikes-back-new-rs-99-prepaid-plan-launched-with-14-day-validity-wpcg40m"/>
        </item>
        <item>
            <title><![CDATA[KVP Scheme: ரூ.5 லட்சம் போட்டா ரூ.10 லட்சம் கிடைக்கும்.! மத்திய அரசின் சூப்பர் முதலீடு திட்டம்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/post-office-savings-schemes-kisan-vikas-patra-scheme-doubles-your-money-with-100-percent-safety-wwzpiih</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/post-office-savings-schemes-kisan-vikas-patra-scheme-doubles-your-money-with-100-percent-safety-wwzpiih</guid>
            <pubDate>Thu, 30 Apr 2026 19:02:17 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Kisan Vikas Patra Scheme in Tamil : இப்போதைய பொருளாதார சூழலில், ரிஸ்க் இல்லாத பாதுகாப்பான முதலீட்டுத் திட்டங்களை நிறைய பேர் தேடுகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு சூப்பர் திட்டம்தான் தபால் அலுவலகம் வழங்கும் கிசான் விகாஸ் பத்திரம் (KVP).&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kqe0emcyxne77dfhd2nba1wn,imgname-post-office--26--1777512960414.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Kisan Vikas Patra Scheme in Tamil : இப்போதைய பொருளாதார சூழலில், ரிஸ்க் இல்லாத பாதுகாப்பான முதலீட்டுத் திட்டங்களை நிறைய பேர் தேடுகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு சூப்பர் திட்டம்தான் தபால் அலுவலகம் வழங்கும் கிசான் விகாஸ் பத்திரம் (KVP).&lt;/p&gt;&lt;img&gt;பங்குச் சந்தை ரிஸ்க் வேண்டாம், ஆனால் பணம் பாதுகாப்பாக வளர வேண்டும் என நினைப்பவர்களுக்கு போஸ்ட் ஆபீஸின் 'கிசான் விகாஸ் பத்திரம்' (KVP) ஒரு சரியான சாய்ஸ். இது மத்திய அரசு உத்தரவாதம் கொடுக்கும் திட்டம் என்பதால், உங்கள் பணத்துக்கு 100% பாதுகாப்பு. தற்போது இதற்கு ஆண்டுக்கு 7.5% வட்டி தருகிறார்கள்.&lt;img&gt;இந்தத் திட்டத்தில் நீங்கள் போடும் பணம் 115 மாதங்களில், அதாவது சுமார் 9 ஆண்டுகள் 7 மாதங்களில் இரட்டிப்பாகிவிடும். சந்தை ஏற்ற இறக்கங்கள் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல், சொன்ன காலத்தில் உங்கள் முதலீடு டபுள் ஆகிவிடும். உதாரணமாக, நீங்கள் ரூ.5 லட்சம் முதலீடு செய்தால், முதிர்வு காலத்தில் உங்களுக்கு ரூ.10 லட்சம் கிடைக்கும்.&lt;img&gt;18 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு இந்தியக் குடிமகனும் இந்தத் திட்டத்தில் எளிதாக முதலீடு செய்யலாம். ஒருவர் தனியாகவோ அல்லது இருவர் சேர்ந்தோ ஜாயின்ட் அக்கவுன்ட் திறக்கலாம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பெயரிலும் இந்த சான்றிதழை வாங்கலாம். குறைந்தபட்சம் ரூ.1000-ல் இருந்து முதலீட்டைத் தொடங்கலாம். அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை என்பது இதன் பெரிய ப்ளஸ்.&lt;img&gt;இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் பணத்துக்கு 100% அரசு உத்தரவாதம் இருப்பதால் பாதுகாப்பு பற்றி எந்த சந்தேகமும் வேண்டாம். முதலீட்டாளர்கள் நாமினியை நியமிக்கும் வசதி உள்ளது. இதனால், எதிர்காலத்தில் குடும்ப உறுப்பினர்களுக்கு பணத்தை மாற்றுவது சுலபம். நாட்டின் எந்த தபால் நிலையத்திலும் இந்தத் திட்டத்தில் சேரலாம். தேவைப்பட்டால் ஒரு தபால் நிலையத்திலிருந்து மற்றொரு கிளைக்கு மாற்றிக்கொள்ளும் வசதியும் உண்டு.&lt;img&gt;இந்தத் திட்டத்தில் போட்ட பணத்தை உடனடியாக எடுக்க முடியாது. இதற்கு 2.5 ஆண்டுகள் லாக்-இன் காலம் உள்ளது. ஆனால், அந்தக் காலம் முடிந்த பிறகு தேவைப்பட்டால் பணத்தை எடுத்துக்கொள்ளலாம். அவசரத் தேவை ஏற்பட்டால், இந்த KVP சான்றிதழை வங்கியில் அடமானம் வைத்து கடன் பெறும் வாய்ப்பும் உள்ளது.]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/post-office-savings-schemes-kisan-vikas-patra-scheme-doubles-your-money-with-100-percent-safety-wwzpiih"/>
        </item>
        <item>
            <title><![CDATA[DMart-ல் தள்ளுபடி மழை: ₹99-க்கு இவ்வளவு பொருட்களா? கியூவில் நிற்கும் மக்கள்! மிஸ் பண்ணிடாதீங்க!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/d-mart-summer-sale-2026-kitchen-essentials-and-groceries-starting-at-rs-99-zvp88gu</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/d-mart-summer-sale-2026-kitchen-essentials-and-groceries-starting-at-rs-99-zvp88gu</guid>
            <pubDate>Fri, 01 May 2026 14:04:04 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;டிமார்ட்டில் ரூ.99 முதல் அதிரடி சலுகைகள் வழங்கப்படுகிறது. மளிகை, வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் கோடை கால ஆடைகளுக்கு என்னென்ன தள்ளுபடி வழங்கப்படுகிறது? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kqhaf61y2a1rxmc8twde6v76,imgname-dmart-1777624127550.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;டிமார்ட்டில் ரூ.99 முதல் அதிரடி சலுகைகள் வழங்கப்படுகிறது. மளிகை, வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் கோடை கால ஆடைகளுக்கு என்னென்ன தள்ளுபடி வழங்கப்படுகிறது? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவில் அரிசி, பருப்பு, எண்ணெய் என அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து நிற்கிறது. விலை உயர்வால் பரிதவிக்கும் மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது டிமார்ட் (D-Mart). இங்கு நீங்கள் வீட்டு உயயோக பொருட்கள் முதல் மளிகை பொருட்கள் வரை வாங்கும்போது தள்ளுபடி விலையில் வழங்கப்படுவதால் பணத்தை நிறைய சேமிக்க முடியும். தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், ஓசூர், திருப்பூர் என பல்வேறு இடங்களில் டிமார்ட் கிளைகள் அமைந்துள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;டிமார்ட் கிளைகளில் சிறப்பு விற்பனை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இப்போது கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள டிமார்ட் கிளைகளில் சிறப்பு விற்பனை தொடங்கி நடைபெற்று வருகிறது. டிமார்ட்டில் சிறப்பு தள்ளுபடி விற்பனையாக பல்வேறு பொருட்கள் ரூ.99 முதல் விறபனை செய்யப்பட்டு வருகின்றன. கோடை வெயிலைச் சமாளிக்கத் தேவையான வாட்டர் பாட்டில்கள் மற்றும் ஜூஸ் ஜாக்குகள் வெறும் ₹49 முதல் ₹149 வரையிலான விலையில் விற்பனையாகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த வாரச் சிறப்பு சலுகையாக சமையலறைக்குத் தேவையான ஸ்டீல் பாத்திரங்கள், டிபன் பாக்ஸ்கள், மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வெறும் ரூ.99 முதல் விற்கப்படுகின்றன. மேலும் ஒரு கிலோ சர்க்கரை, துணி துவைக்கும் பவுடர் மற்றும் சோப்பு வகைகளுக்கு Buy 1 Get 1 ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம். டிமார்ட்டில் பெரும்பாலான மளிகை பொருட்கள் 6% முதல் 20% வரை குறைவான விலையில் கிடைக்கின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நீங்கள் மொத்தமாக 5 கிலோ மற்றும் 10 கிலோ அரிசி மூட்டைகள், சமையல் எண்ணெய், பருப்பு வகைகளை வாங்கினாலும் அதிக தள்ளுபடி விலையில் கிடைக்கும். டிமார்ட்டில் கோடைகால ஸ்பெஷலாக பருத்தி ஆடைகள் ரூ.199 முதல் விற்பனை செய்யப்படுகிறது. டிடர்ஜென்ட் &amp;amp; சோப்புகள் காம்போ ஆஃபரில் ரூ.20 முதல் கிடைக்கிறது. டம்ளர், தட்டுகள் என கிச்சனுக்கு தேவையான பொருட்கள் சுமார் 30% முதல் 40% வரையிலான தள்ளுபடியில் ரூ.99 விலையில் இருந்து விற்பனையாகின்றன. டிமார்ட்டில் பிஸ்கெட்டுகள் மற்றும் சிப்ஸ், மிக்சர் போன்ற ஸ்நாக்ஸ் ஐட்டங்கள் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் (Buy 2 Get 1 Free) என்ற ஆபரில் கிடைக்கப் பெறுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேலும் கோடை விடுமுறையை முன்னிட்டு குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் மற்றும் ஸ்டேஷனரி பொருட்கள் குறைந்த விலையில் விற்கப்படுகிறன. இது மட்டுமின்றி ஏசி, ஏர் கூலர், மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகளுக்கு வாரண்டி உடன் சிறப்பு எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் சில கிளைகளில் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் உள்ள டிமார்ட் கிளைகளில் 99 ரூபாயில் இருந்து தள்ளுபடி விலையில் பொருட்கள் விற்கப்படுவது உறுதியாகியுள்ளது. எனினும் ஒவ்வொரு கிளைகளிலும் அந்தந்த பொருட்களின் இருப்பை பொறுத்து தள்ளுபடிகள் மாறுபடலாம்.&lt;/p&gt;&lt;p&gt;டிமார்ட்டில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், ஆஃபர்களைப் பொறுமையாகத் தேர்வு செய்ய வார நாட்களின் காலை நேரத்தில் செல்வது சிறந்தது என அனுபவமுள்ள வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/d-mart-summer-sale-2026-kitchen-essentials-and-groceries-starting-at-rs-99-zvp88gu"/>
        </item>
    </channel>
</rss>
