<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes"?>
<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Sat, 04 Jul 2026 08:07:50 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss/business" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[RBI: 2005-க்கு முன் அச்சிடப்பட்ட ரூ.10, 20, 50, 100 நோட்டுகள் செல்லாதா? ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/rbi-clarifies-truth-on-pre-2005-rs-10-rs-20-rs-50-rs-100-notes-viral-claim-ri9b272</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/rbi-clarifies-truth-on-pre-2005-rs-10-rs-20-rs-50-rs-100-notes-viral-claim-ri9b272</guid>
            <pubDate>Sat, 04 Jul 2026 07:27:19 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;RBI: பழைய ரூபாய் நோட்டுகள் குறித்து வைரலான அறிவிப்பு மக்களிடையே மீண்டும் பணமதிப்பிழப்பு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 2005-க்கு முன் அச்சிடப்பட்ட ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100 நோட்டுகள் செல்லாது என்ற தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwnd49xp478cyt4r7v25dke6,imgname-rbi--1783129843638.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;RBI: பழைய ரூபாய் நோட்டுகள் குறித்து வைரலான அறிவிப்பு மக்களிடையே மீண்டும் பணமதிப்பிழப்பு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 2005-க்கு முன் அச்சிடப்பட்ட ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100 நோட்டுகள் செல்லாது என்ற தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக ஒரு தகவல் மிக வேகமாக பரவி வருகிறது. அதில், 2005-க்கு முன் அச்சிடப்பட்ட ரூ.10, ரூ.20, ரூ.50 மற்றும் ரூ.100 நோட்டுகள் ஜூலை 1 முதல் செல்லாது என்றும், அவை பணமதிப்பிழப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த தகவல் பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா லோகோவுடன் பகிரப்பட்டதால், அது உண்மையான அரசு அறிவிப்பைப் போலவே தோன்றியதால் பலரும் அதை நம்பி குழப்பமடைந்தனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த வைரல் தகவல் குறித்து தற்போது பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) தெளிவான விளக்கம் அளித்துள்ளது. தனது உண்மைச் சரிபார்ப்பு பதிவில், சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்தத் தகவல் முற்றிலும் பொய்யானது, இதற்கு எந்த சட்ட அடிப்படையோ அல்லது அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்போ இல்லை என்றும் தெரிவித்துள்ளது. மேலும், இந்த சிறிய மதிப்புடைய நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்யும் எந்த முடிவும் மத்திய அரசோ அல்லது இந்திய ரிசர்வ் வங்கியோ எடுக்கவில்லை எனவும் உறுதிப்படுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;மகாலட்சுமி ராஜயோகம்! இந்த 2 ராசிக்காரர்களுக்கு பணம், அதிர்ஷ்டம் குவியும்.. லிஸ்ட் உள்ளே&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதனுடன், பாங்க் ஆஃப் மகாராஷ்டிராவும் தனது பெயரில் பரப்பப்படும் இந்த செய்தியை திட்டவட்டமாக மறுத்துள்ளது. சமூக வலைதளங்களில் வங்கியின் பெயரைப் பயன்படுத்தி தவறான தகவல்கள் பகிரப்படுவதாக கூறியுள்ள வங்கி, வாடிக்கையாளர்களும் பொதுமக்களும் இந்த வதந்திகளை நம்பவோ, மற்றவர்களுக்கு பகிரவோ கூடாது என்று எச்சரித்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த விவகாரம் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) மீண்டும் விளக்கம் அளித்துள்ளது. 2005-க்கு முன் அச்சிடப்பட்ட ரூ.10, ரூ.20, ரூ.50 மற்றும் ரூ.100 நோட்டுகள் இன்று முழுமையாக செல்லுபடியாகும் என்றும், அவற்றைப் பயன்படுத்த எந்தத் தடையும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தும் நோக்கில் பழைய மகாத்மா காந்தி தொடர் நோட்டுகளை மாற்றிக்கொள்ளுமாறு கடந்த காலங்களில் அறிவுறுத்தப்பட்டிருந்தாலும், அவை செல்லாது என்று ஒருபோதும் அறிவிக்கவில்லை எனவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;2016-ஆம் ஆண்டு ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் திடீரென பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட சம்பவம் மக்களின் நினைவில் இருப்பதால், இதுபோன்ற செய்திகள் வேகமாக பரவி அச்சத்தை ஏற்படுத்துகின்றன. எனவே, ரூபாய் நோட்டுகள், வங்கி சேவைகள் அல்லது ஆர்பிஐ தொடர்பான எந்த தகவலாக இருந்தாலும், சமூக வலைதள பதிவுகளை மட்டும் நம்பாமல், ஆர்பிஐ மற்றும் பிஐபி பேக்ட் செக் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை உறுதிப்படுத்திய பிறகே நம்புவது பாதுகாப்பான அணுகுமுறையாகும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/rbi-clarifies-truth-on-pre-2005-rs-10-rs-20-rs-50-rs-100-notes-viral-claim-ri9b272"/>
        </item>
        <item>
            <title><![CDATA[iPhone 17: பிளிப்கார்ட் சேலில் நம்ப முடியாத தள்ளுபடி! ஐபோன் வாங்கும் கனவு இனி ஈஸி!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/technology/flipkart-goat-sale-2026-offers-huge-discount-on-iphone-17-ntd8ldi</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/technology/flipkart-goat-sale-2026-offers-huge-discount-on-iphone-17-ntd8ldi</guid>
            <pubDate>Fri, 03 Jul 2026 21:38:51 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ஐபோன் 17: புதிய ஸ்மார்ட்போன் வாங்க விரும்புவோருக்கு ஃபிளிப்கார்ட் GOAT சேல் 2026 ஒரு நல்ல வாய்ப்பை வழங்கியுள்ளது. குறிப்பாக, ஆப்பிள் ஐபோன் 17 வாங்க விரும்புவோர் இந்த விற்பனையில் மிகப்பெரிய விலை குறைப்பைப் பெறுகிறார்கள்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwm756gzcj68t76ycm3mcvfe,imgname-iphone-17-1783090027039.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஐபோன் 17: புதிய ஸ்மார்ட்போன் வாங்க விரும்புவோருக்கு ஃபிளிப்கார்ட் GOAT சேல் 2026 ஒரு நல்ல வாய்ப்பை வழங்கியுள்ளது. குறிப்பாக, ஆப்பிள் ஐபோன் 17 வாங்க விரும்புவோர் இந்த விற்பனையில் மிகப்பெரிய விலை குறைப்பைப் பெறுகிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்திய சந்தையில் ஐபோன் 17 (256GB) மாடலின் ஆரம்ப விலை ரூ. 82,900 ஆக இருக்கும் நிலையில், ஃபிளிப்கார்ட் GOAT விற்பனையின் போது இந்த போனை ரூ. 70,900-க்கு வாங்க முடியும். அதாவது, வழக்கமான விலையுடன் ஒப்பிடும்போது பயனர்கள் ரூ. 12,000 வரை தள்ளுபடி பெறலாம். இந்த சிறப்பு விற்பனை ஜூலை 4 முதல் தொடங்கும். கையிருப்பு இருக்கும் வரை மட்டுமே இந்தச் சலுகை பொருந்தும் என்பதால், முன்கூட்டியே வாங்குவது நல்லது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விலைக் குறைப்புடன், பல்வேறு வங்கிகளின் அட்டைகளில் கூடுதல் பலன்களும் கிடைக்கின்றன. HSBC, பேங்க் ஆஃப் பரோடா (BOB) மற்றும் ICICI வங்கி கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி பணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் 10 சதவீதம் வரை உடனடித் தள்ளுபடியைப் பெறலாம். மேலும், Flipkart Axis Bank மற்றும் Flipkart SBI கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தும் பயனர்கள் ரூ. 6,995 வரை கூடுதல் பலனைப் பெறலாம். முழுத் தொகையையும் ஒரே நேரத்தில் செலுத்த முடியாதவர்களுக்காக, வட்டியில்லா EMI வசதியும் உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 17-ல் புதிய A19 சிப்செட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இது வேகமான செயல்திறன், சிறந்த பேட்டரி ஆயுள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான அம்சங்களுக்கான ஆதரவை வழங்குகிறது. இந்த ஃபோனில் 6.3-இன்ச் சூப்பர் ரெட்டினா XDR OLED டிஸ்ப்ளே இடம்பெற்றுள்ளது. இது 2556 &times; 1179 பிக்சல்கள் ரெசல்யூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டை வழங்குவதால், ஸ்க்ரோலிங், கேமிங் மற்றும் வீடியோ பார்ப்பது மிகவும் மென்மையாகிறது. குறைந்த ஒளியிலும் சிறப்பாகச் செயல்படும் வகையில் இந்த டிஸ்ப்ளே வடிவமைக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;புகைப்படம் எடுப்பதற்காக, ஐபோன் 17-ல் இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இதில் 48 மெகாபிக்சல் ஃபியூஷன் முதன்மை கேமராவுடன், 12 மெகாபிக்சல் 2x டெலிஃபோட்டோ லென்ஸும் உள்ளது. இது தெளிவான புகைப்படங்களையும் சிறந்த ஜூம் தரத்தையும் வழங்குகிறது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 18 மெகாபிக்சல் முன்புற கேமரா வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் AI அடிப்படையிலான படச் செயலாக்கம் போன்ற அம்சங்களுடன், ஐபோன் 17 ஒரு பிரீமியம் அனுபவத்தை வழங்கும் ஸ்மார்ட்போனாகத் தனித்து நிற்கிறது. ஃபிளிப்கார்ட் GOAT விற்பனையில் தற்போது கிடைக்கும் விலையைக் கருத்தில் கொண்டால், ஐபோன் வாங்க விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/technology/flipkart-goat-sale-2026-offers-huge-discount-on-iphone-17-ntd8ldi"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Amazon Prime Day Sale: ரூ.1 லட்ச லேப்டாப் வெறும் ரூ.66,000-க்கா? ரூ.42,000 தள்ளுபடி!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/technology/hp-omnibook-3-laptop-deal-on-amazon-prime-day-sale-2026-cprghf6</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/technology/hp-omnibook-3-laptop-deal-on-amazon-prime-day-sale-2026-cprghf6</guid>
            <pubDate>Fri, 03 Jul 2026 20:44:32 +0530</pubDate>
            <description><![CDATA[அமேசான் பிரைம் டே சேல் ஆரம்பிக்கப் போகுது. பல பொருட்கள் மேல 40-50% வரை தள்ளுபடி அறிவிச்சிருக்காங்க. இதுல, ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு லேப்டாப் எவ்வளவு கம்மி விலைக்கு கிடைக்குது தெரியுமா?]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01krgakaxyreg0cc517j67csj2,imgname-hp-india-1778664451006.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[அமேசான் பிரைம் டே சேல் ஆரம்பிக்கப் போகுது. பல பொருட்கள் மேல 40-50% வரை தள்ளுபடி அறிவிச்சிருக்காங்க. இதுல, ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு லேப்டாப் எவ்வளவு கம்மி விலைக்கு கிடைக்குது தெரியுமா?&lt;img&gt;&lt;p&gt;அமேசான் விற்பனை: நீங்கள் ஒரு புதிய லேப்டாப் வாங்கத் திட்டமிடுகிறீர்களா? ஒரு நல்ல சலுகைக்காகக் காத்திருக்கிறீர்களா? அப்படியானால், இந்த நற்செய்தி உங்களுக்கானது. அமேசான் தனது 10வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் விதமாக, ஜூலை 4 முதல் 'அமேசான் பிரைம் டே சேல் 2026' என்ற விற்பனையை நடத்துகிறது. இந்த விற்பனையின் ஒரு பகுதியாக, அது சில அற்புதமான சலுகைகளை அறிவித்துள்ளது. அவற்றுள், HP பிரீமியம் லேப்டாப்களுக்கான ஒரு சலுகை அனைவரையும் கவர்ந்து வருகிறது. இந்த லேப்டாப் அதன் அசல் விலையை விட ரூ. 42,500 குறைவாகக் கிடைக்கிறது. அந்தச் சலுகை என்னவென்று பார்ப்போமா..?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;HP-யின் சமீபத்திய, பிரீமியம் மாடலான ஓம்னிபுக் 3 லேப்டாப், அமேசான் பிரைம் டே விற்பனையில் கிடைக்கிறது. சந்தையில் இதன் அசல் விலை ரூ. 1,08,510... ஆனால் அமேசான் விற்பனையில் இது வெறும் ரூ. 65,990-க்குக் கிடைக்கிறது. அதாவது, நீங்கள் நேரடியாக ரூ. 42,520 சேமிப்பீர்கள்... உங்களுக்கு கிட்டத்தட்ட 39% தள்ளுபடி கிடைக்கிறது. பிரீமியம் லேப்டாப் பிரிவில் இது ஒரு மிகப் பெரிய சலுகை என்றுதான் சொல்ல வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;strong&gt;16GB சூப்பர் ஃபாஸ்ட் ரேம் (RAM)&lt;/strong&gt;&lt;p&gt;இதுல 16GB LPDDR5x ரேம் இருக்கு. ஒரே நேரத்துல 20 இன்டர்நெட் டேப் ஓபன் பண்ணாலும், வீடியோ எடிட்டிங் செஞ்சாலும், கோடிங் பண்ணாலும் லேப்டாப் கொஞ்சம் கூட ஹேங் (Lag) ஆகாது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;512GB ஹை-ஸ்பீட் SSD ஸ்டோரேஜ்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;படங்கள், ஃபைல்ஸ் சேமிக்க 512GB சூப்பர் ஃபாஸ்ட் SSD கொடுத்திருக்காங்க. இதனால, வெறும் 3 செகண்ட்ல லேப்டாப் ஆன் ஆகிடும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;அட்டகாசமான டிஸ்ப்ளே, குறைவான எடை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இதோட ஸ்கிரீன் பார்க்க ரொம்ப நல்லா இருக்கும். எடை ரொம்ப கம்மியா இருக்கறதால, காலேஜ், ஆபீஸுக்கு பேக்ல வெச்சு ஈஸியா எடுத்துட்டுப் போகலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இ-காமர்ஸ் ஜாம்பவானான அமேசான், தனது அமேசான் பிரைம் டே விற்பனையை ஜூலை 4 (நாளை, சனிக்கிழமை) முதல் தொடங்குகிறது. இது ஒரு 'பிளாட்டினம் டீல்' என்பதால், கையிருப்பு மிகவும் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. நீங்கள் எஸ்பிஐ கிரெடிட் கார்டு அல்லது ஆக்சிஸ் வங்கி கார்டைப் பயன்படுத்தினால், கூடுதலாக 10% உடனடித் தள்ளுபடியும் பெறுவீர்கள். உங்களிடம் பழைய லேப்டாப் இருந்தால், அதை எக்ஸ்சேஞ்ச் செய்து இந்த லேப்டாப்பின் விலையை மேலும் குறைக்கலாம். இந்தத் தொகையை ஒரே நேரத்தில் செலுத்த முடியாதவர்கள், கூடுதல் வட்டி ஏதுமின்றி மாதாந்திரத் தவணை (EMI) முறையிலும் இதை வாங்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பொதுவா 16GB ரேம், 512GB SSD இருக்கிற பிரீமியம் லேப்டாப்களின் விலை ரூ.80,000-90,000-ல இருந்துதான் தொடங்கும். ஆனா, இந்த வசதிகளோட ஒரு லேப்டாப் வெறும் ரூ.65,990-க்கு கிடைக்கிறது உண்மையிலேயே நல்ல வாய்ப்பு. இது அமேசானோட 10-வது ஆண்டு விழா சேல்ங்கிறதால, இந்த விலை கொஞ்ச நாளைக்கு, ஸ்டாக் இருக்கிற வரைக்கும்தான் இருக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;லேப்டாப் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;வாங்குறதுக்கு முன்னாடி லேப்டாப்போட வாரன்டி விவரங்களை செக் பண்ணிக்கோங்க.&lt;/p&gt;&lt;p&gt;பேங்க் கார்டு ஆஃபர் அல்லது நோ-காஸ்ட் EMI ஆப்ஷன் இருக்கான்னு பாருங்க. பணம் மிச்சமாகும்.&lt;/p&gt;&lt;p&gt;512GB ஸ்டோரேஜ் உங்களுக்குப் போதுமான்னு உங்க தேவையை வெச்சு முடிவு பண்ணுங்க.&lt;/p&gt;&lt;p&gt;சேல் நேரத்துல ஆஃபரும் ஸ்டாக்கும் மாறிட்டே இருக்கும். அதனால, ஆர்டர் பண்றதுக்கு முன்னாடி புராடக்ட் பேஜ்ல கடைசி விலையை ஒருமுறை செக் பண்ணிக்கோங்க.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பொறுப்புத் துறப்பு: &lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்த கட்டுரையில் உள்ள விலைகள் மற்றும் சலுகைகள், சேல் நேரத்தில் மாறலாம். வாங்குவதற்கு முன் அமேசான் இணையதளத்தில் தற்போதைய விலை மற்றும் சலுகைகளைச் சரிபார்ப்பது நல்லது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/technology/hp-omnibook-3-laptop-deal-on-amazon-prime-day-sale-2026-cprghf6"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Unclaimed Deposits: பழைய பேங்க் அக்கவுன்ட்ல பணம் இருக்கா? சில நிமிடங்களில் திரும்ப வாங்கலாம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/how-to-reclaim-forgotten-money-from-old-inactive-bank-accounts-usg4tul</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/how-to-reclaim-forgotten-money-from-old-inactive-bank-accounts-usg4tul</guid>
            <pubDate>Fri, 03 Jul 2026 19:46:45 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;உங்களுக்கே தெரியாமல் பழைய வங்கி கணக்கில் பணம் கிடக்கிறதா? பல ஆண்டுகளாக பயன்படுத்தாத கணக்குகளில் இருக்கும் Unclaimed Deposits-ஐ &amp;nbsp;மீண்டும் பெறலாம். அது எப்படி? எங்கே செக் செய்வது? என்னென்ன ஆவணங்கள் தேவை? முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktbkmeh3kwg2r1pry5at5c8g,imgname-rbi--1--1779352490568-1780653636131.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;உங்களுக்கே தெரியாமல் பழைய வங்கி கணக்கில் பணம் கிடக்கிறதா? பல ஆண்டுகளாக பயன்படுத்தாத கணக்குகளில் இருக்கும் Unclaimed Deposits-ஐ &amp;nbsp;மீண்டும் பெறலாம். அது எப்படி? எங்கே செக் செய்வது? என்னென்ன ஆவணங்கள் தேவை? முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இப்போதெல்லாம், பலர் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருக்கிறார்கள். அவர்கள் வேலை மாறும்போதோ அல்லது புதிய நகரத்திற்குக் குடிபெயரும்போதோ, தங்களுடைய பழைய கணக்குகளை நிர்வகிப்பது கடினமாகிறது, மேலும் காலப்போக்கில் அவர்கள் அவற்றைப் பயன்படுத்துவதை நிறுத்திவிடுகிறார்கள்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;சிலர் தங்களுடைய பழைய கணக்குகளிலோ அல்லது நிலையான வைப்புத்தொகைகளிலோ (FDs) உள்ள பணத்தைப் பற்றியே மறந்துவிடுகிறார்கள். எனவே, வங்கிகளில் உள்ள, நீங்கள் உரிமை கோராத உங்கள் பணத்தைப் பாதுகாப்பாக உங்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு சிறப்புத் திட்டத்தை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கொண்டு வந்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விதிகளின்படி, எந்தவொரு சேமிப்புக் கணக்கிலோ அல்லது நடப்புக் கணக்கிலோ 2 ஆண்டுகளுக்கு மேல் எந்தப் பரிவர்த்தனையும் நடைபெறவில்லை என்றால், அது 'செயலற்ற' கணக்காகக் கருதப்படுகிறது. அத்தகைய கணக்கில் உள்ள பணத்தை யாரும் எடுக்கவில்லை என்றாலோ அல்லது 10 ஆண்டுகளாக எந்தப் பரிவர்த்தனையும் நடைபெறவில்லை என்றாலோ, அது உரிமை கோரப்படாத வைப்புத்தொகை என்று அழைக்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எனவே, 10 ஆண்டுகளுக்கான மீதமுள்ள பணம், இந்திய ரிசர்வ் வங்கியின் DEA (வைப்புத்தொகையாளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு) நிதிக்கு மாற்றப்படும். ஆனால், இந்தப் பணம் முழுமையாக இழக்கப்படாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். கணக்கு வைத்திருப்பவர் அல்லது அவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகள் ஆவணங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் எப்போது வேண்டுமானாலும் பணத்தைத் திரும்பப் பெறலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பழைய கணக்கில் உள்ள பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு, இந்திய ரிசர்வ் வங்கி பின்வரும் மூன்று எளிய வழிகளை வழங்கியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;வங்கி கிளையைத் தொடர்பு கொள்ளுங்கள்: &lt;/strong&gt;உங்கள் பணம் வைக்கப்பட்டுள்ள வங்கியின் அருகிலுள்ள எந்தக் கிளைக்கும் நீங்கள் செல்லலாம். அது உங்கள் சொந்த ஊர்க் கிளையாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;கேஒய்சி ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும்: &lt;/strong&gt;உங்கள் அடையாளத்தைச் சரிபார்ப்பதற்காக, ஆதார் அட்டை, பான் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஓட்டுநர் உரிமம் போன்ற கேஒய்சி ஆவணங்களை அதற்கான படிவத்துடன் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;வட்டியுடன் பணம் பெறுங்கள்: &lt;/strong&gt;வங்கி அதிகாரிகள் உங்கள் விவரங்களைச் சரிபார்த்த பிறகு, உங்கள் கணக்கில் உள்ள பணத்தை அதற்கான வட்டியுடன் உங்களுக்குத் திருப்பித் தருவார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எந்த வங்கியில் உங்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதில் உங்களுக்குக் குழப்பம் இருந்தால், அதை எளிதாகக் கண்காணிக்க இந்திய ரிசர்வ் வங்கி ஒரு மையப்படுத்தப்பட்ட வலைதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;உத்கம் இணையதளம்: &lt;/strong&gt;நீங்கள் நேரடியாக அந்தந்த வங்கியின் இணையதளத்தில் தேடலாம் அல்லது ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ உத்கம் இணையதளத்திற்கு (https://udgam.rbi.org.in) சென்று உள்நுழைவதன் மூலம் உங்கள் விவரங்களைச் சரிபார்க்கலாம். தற்போது, ​​30-க்கும் மேற்பட்ட முக்கிய வங்கிகளின் தகவல்கள் இந்த இணையதளத்தில் கிடைக்கின்றன.&lt;/p&gt;&lt;p&gt;வங்கிப் பணம் தொடர்பான சமூக ஊடகப் போலி இணைப்புகளையோ செய்திகளையோ நம்பாதீர்கள். இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள தகவல்களை மட்டுமே உண்மையானதாகக் கருதுங்கள். உங்கள் பழைய பணத்தைத் திரும்பப் பெற இதுவே சரியான தருணம்!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/how-to-reclaim-forgotten-money-from-old-inactive-bank-accounts-usg4tul"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Cash Deposit Limit: வங்கி கணக்கில் இவ்வளவு பணத்தை போடாதீங்க.. உஷார்.! வருமான வரி விதியை தெரிஞ்சுக்கோங்க]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/bank-cash-transaction-limit-explained-what-you-should-know-9m6cb6e</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/bank-cash-transaction-limit-explained-what-you-should-know-9m6cb6e</guid>
            <pubDate>Fri, 03 Jul 2026 15:18:45 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Cash Deposit Limit: வங்கி கணக்கில் அதிக அளவில் ரொக்க பணம் செலுத்துவது அல்லது எடுப்பது தவறல்ல. ஆனால் குறிப்பிட்ட வரம்பை கடந்தால், அந்த விவரங்கள் வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்படலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jn845s4jtbrcbstq0hh4yx8q,imgname-tamil-news---2025-03-01t111829.715.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Cash Deposit Limit: வங்கி கணக்கில் அதிக அளவில் ரொக்க பணம் செலுத்துவது அல்லது எடுப்பது தவறல்ல. ஆனால் குறிப்பிட்ட வரம்பை கடந்தால், அந்த விவரங்கள் வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்படலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்றைய காலத்தில் வங்கி கணக்கு என்பது ஒவ்வொருவரின் நிதி வாழ்க்கையின் முக்கிய அங்கமாக மாறியுள்ளது. சம்பளம் பெறுவது முதல் அரசு நலத்திட்ட உதவிகள், சேமிப்பு மற்றும் முதலீடுகள் வரை அனைத்திற்கும் வங்கி கணக்கு பயன்படுத்தப்படுகிறது. வங்கி கணக்கில் எவ்வளவு வேண்டுமானாலும் பணம் செலுத்தலாம் அல்லது எடுக்கலாம் என்றாலும், குறிப்பிட்ட அளவை மீறும் ரொக்க பரிவர்த்தனைகள் சில சூழல்களில் வருமான வரித்துறையின் கண்காணிப்புக்குள் வரக்கூடும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வருமான வரி விதிகளின்படி, ஒரு நிதியாண்டில் சேமிப்பு வங்கி கணக்கில் மொத்த ரொக்க வரவு அல்லது ரொக்க எடுப்பு ரூ.10 லட்சத்தை கடந்தால், அந்த பரிவர்த்தனை விவரங்கள் நடப்பு முறையின் கீழ் வருமான வரித்துறைக்கு தெரிவிக்கலாம். இது சட்டப்படி நடைமுறையில் உள்ள தகவல் பகிர்வு செயல்முறையின் ஒரு பகுதியாகும். தகவல் தெரிவிக்கப்படுவது மட்டுமே தவறு செய்ததாக அர்த்தமல்ல.&lt;/p&gt;&lt;p&gt;ஜூன் மாதத்தில் அதிகம் விற்ற பைக்குகள் என்னென்ன தெரியுமா? முழு பட்டியல் இதோ!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த தகவல்கள் உங்கள் நிரந்தர கணக்கு எண்ணுடன் இணைக்கப்பட்டு, வருமான வரி கணக்கு தாக்கல் விவரங்கள், ஆண்டு தகவல் அறிக்கை மற்றும் பிற நிதி பதிவுகளை ஒப்பிட்டு பார்க்கப்படலாம். உங்கள் கணக்கில் நடைபெற்ற ரொக்க பரிவர்த்தனைகள் மற்றும் அறிவிக்கப்பட்ட வருமானம் இடையே பெரிய வேறுபாடு இருந்தால் மட்டுமே, கூடுதல் விளக்கம் கேட்கப்பட வாய்ப்பு உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எனவே, அதிக மதிப்புள்ள ரொக்க பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் போது, ​​அந்தப் பணத்தின் வருவாய் ஆதாரம் தொடர்பான ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். வணிக வருமானம், சொத்து விற்பனை, பரிசுத் தொகை அல்லது பிற சட்டபூர்வமான வருவாய் என்றால், அதற்கான ஆதாரங்கள் இருப்பது எதிர்காலத்தில் உதவியாக இருக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வங்கி கணக்கில் அதிக தொகையை செலுத்துவது அல்லது எடுப்பது சட்டவிரோதம் அல்ல. ஆனால் அனைத்து பரிவர்த்தனைகளும் உங்கள் வருமான விவரங்களுடன் பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது நல்ல நடைமுறையாகும். தேவையான ஆவணங்கள் முறையாக இருந்தால், வருமான வரித்துறையிடம் விளக்கம் அளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டாலும் அதை எளிதாக சமாளிக்க முடியும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/bank-cash-transaction-limit-explained-what-you-should-know-9m6cb6e"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Flight: இனி கம்மி காசுல விமானத்தில் பறக்கலாம்! டிக்கெட் விலையை அதிரடியாக குறைத்த இண்டிகோ!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/indigo-launches-indigo-lite-cheaper-flight-tickets-09lca7z</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/indigo-launches-indigo-lite-cheaper-flight-tickets-09lca7z</guid>
            <pubDate>Fri, 03 Jul 2026 14:46:27 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Flight: குறைந்த செலவில் விமானப் பயணம் செய்ய விரும்புபவர்களுக்காக 'இண்டிகோ லைட்' என்ற புதிய கட்டண முறையை இண்டிகோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kw8s0r21zrysr1vepf7wwrhe,imgname-indigo-flight-1782706102337.jpeg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Flight: குறைந்த செலவில் விமானப் பயணம் செய்ய விரும்புபவர்களுக்காக 'இண்டிகோ லைட்' என்ற புதிய கட்டண முறையை இண்டிகோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விமானத்தில் பயணம் செய்யும்போது, கேபின் பேக்கேஜ் மட்டும் எடுத்துச் செல்லும் பயணிகளுக்காகவே இண்டிகோ நிறுவனம் ஒரு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 'இண்டிகோ லைட்' (IndiGo Lite) என்ற பெயரில் ஒரு புதிய எகானமி கட்டணத்தை அறிமுகம் செய்திருக்கிறார்கள். இதன் முக்கிய நோக்கமே, குறைந்த லக்கேஜுடன் பயணம் செய்பவர்களுக்கு டிக்கெட் விலையைக் குறைப்பதுதான். அதாவது, உங்களுக்குத் தேவையான சேவைகளுக்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த 'இண்டிகோ லைட்' கட்டணத்தில் டிக்கெட் புக் செய்யும் வசதி, ஜூலை 1-ம் தேதி முதல் இண்டிகோவின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மற்றும் செயலியில் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், 2026 ஜூலை 15-ம் தேதி முதல் பயணம் செய்யலாம். இண்டிகோவின் அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச நான்-ஸ்டாப் விமான சேவைகளுக்கும் இந்த கட்டணம் பொருந்தும். ஒருமுறை பயணம், சுற்றுப் பயணம், பல நகரங்களுக்கான பயணம் என அனைத்து விதமான புக்கிங்குகளுக்கும் இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் இருவருக்குமே இந்த வசதி உண்டு.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தக் கட்டணத்தில் பயணம் செய்பவர்கள், 7 கிலோ வரை எடை கொண்ட ஒரு கேபின் பேக்கை மட்டும் உடன் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். விமானத்தில் இருக்கை தானாகவே இலவசமாக ஒதுக்கப்படும். உங்களுக்கு செக்-இன் பேக்கேஜ், விருப்பமான இருக்கை, விமானத்தில் உணவு, அல்லது 'ஃபாஸ்ட் ஃபார்வர்டு' போன்ற பிரத்யேக சேவைகள் தேவைப்பட்டால், அதற்குக் கூடுதலாகப் பணம் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம். இந்த சேவைகள், அந்த நேரத்தில் இருப்புக்கு ஏற்ப வழங்கப்படும்.&lt;/p&gt;&lt;p&gt;இந்த புதிய கட்டணத்தைத் தேர்ந்தெடுக்கும் பயணிகள், இண்டிகோவின் 'ப்ளூசிப்' லாயல்டி திட்டத்தின் கீழ் புள்ளிகளைப் பெறவும், பயன்படுத்தவும் முடியும். அதே சமயம், கைக்குழந்தைகளுடன் பயணம் செய்பவர்கள், கார்ப்பரேட் புக்கிங் மற்றும் குழுவாக புக்கிங் செய்பவர்களுக்கு இந்த 'இண்டிகோ லைட்' கட்டணம் பொருந்தாது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இது குறித்து இண்டிகோவின் தலைமை வியூக அதிகாரி அலோக் சிங் பேசும்போது, &quot;குறைந்த லக்கேஜுடன் பயணம் செய்பவர்களுக்கும், தாங்கள் பயன்படுத்தும் சேவைகளுக்கு மட்டும் பணம் செலுத்த விரும்பும் பயணிகளுக்கும் ஏற்ற வகையில் 'இண்டிகோ லைட்' வடிவமைக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு வசதியான மற்றும் குறைந்த செலவிலான பயண அனுபவத்தை வழங்குவதற்கான எங்கள் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதிதான் இது&quot; என்று குறிப்பிட்டார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/indigo-launches-indigo-lite-cheaper-flight-tickets-09lca7z"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Fridge: ஃபிரிட்ஜில் வைத்தால் விஷமாகும் உணவுகள்.! நாள் கணக்கை மறந்தால் அவ்ளோதான்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/fridge-foods-that-turn-harmful-if-stored-too-long-in-the-refrigerator-do-not-ignore-the-number-of-days-3xiccm7</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/fridge-foods-that-turn-harmful-if-stored-too-long-in-the-refrigerator-do-not-ignore-the-number-of-days-3xiccm7</guid>
            <pubDate>Fri, 03 Jul 2026 14:27:04 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ஃபிரிட்ஜில் உணவுகளை நீண்ட நாட்கள் வைப்பது அவற்றின் ஊட்டச்சத்தை அழித்து, நஞ்சாக மாற்றிவிடும். எனவே, கால அளவை அறிந்து ஆரோக்கியமாகப் பயன்படுத்துவது மிகவும் அவசியமாகும்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwkj2x4ehmbpr8ps9tt09eyk,imgname-chatgpt-image-jul-3--2026--02-07-38-pm--1--1783067931790.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஃபிரிட்ஜில் உணவுகளை நீண்ட நாட்கள் வைப்பது அவற்றின் ஊட்டச்சத்தை அழித்து, நஞ்சாக மாற்றிவிடும். எனவே, கால அளவை அறிந்து ஆரோக்கியமாகப் பயன்படுத்துவது மிகவும் அவசியமாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்றைய அவசர உலகத்துல 'ஃபிரிட்ஜ்' இல்லாத வீடே இல்லைனு சொல்லலாம். மிச்சமான சாப்பாடு, காய்கறிகள், பால், பழங்கள்னு எதை எடுத்தாலும் &quot;ஃபிரிட்ஜில் வை, அப்புறம் பாத்துக்கலாம்&quot; என்ற மனநிலை நமக்கு வந்துடுச்சு. ஆனா, ஃபிரிட்ஜ்ங்கிறது உணவை எத்தனை நாட்கள் வேணாலும் கெடாம வச்சிருக்கப் போற மந்திரப் பெட்டி இல்லைங்க.!&lt;/p&gt;&lt;p&gt;நம்மள பல பேரு &quot;ஃபிரிட்ஜில் தானே இருக்கு, எதுவும் ஆகாது&quot;னு வாரக்கணக்குல உணவை வச்சு சாப்பிடுறோம். ஆனா, குறிப்பிட்ட நாட்களைத் தாண்டினா அந்த உணவுகள்ல பாக்டீரியா, பூஞ்சை காளான்கள் (Fungus) மற்றும் நச்சுப் பொருட்கள் உருவாகி, அதுவே ஒரு 'ஸ்லோ பாய்சனா' மாறிடும். இதைத்தான் 'ஃபுட் பாய்ஸனிங்' (Food Poisoning) அல்லது உணவு நச்சாக்கம்னு சொல்றாங்க. நாள் கணக்கை மறந்து ஃபிரிட்ஜ் உணவை சாப்பிட்டா, உயிருக்கே ஆபத்தாகிடும். எந்தெந்த உணவை எத்தனை நாள் தான் வைக்கணும்? எப்போ தூக்கி வீசணும்? இதோ ஒரு ஷாக்கிங் லிஸ்ட்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;சமைத்த சாதம் (1 நாள் மட்டுமே)&lt;/strong&gt;: &quot;நேத்து வச்ச சாதம் தானே, இன்னைக்கு சூடு பண்ணி சாப்பிடலாம்&quot;னு நினைக்காதீங்க. சமைத்த சாதத்துல 'Bacillus cereus அப்படிங்கிற பாக்டீரியா ரொம்ப வேகமா வளரும். இதை நீங்க மறுபடி சூடு பண்ணினாலும் அந்த விஷத்தன்மை அழியாது. சாப்பிட்டா வாந்தி, வயிற்றுப்போக்கு கன்பார்ம்.!&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சிக்கன், மட்டன், மீன் குழம்பு (3 &ndash; 4 நாட்கள்)&lt;/strong&gt;: அசைவ உணவுகளை 3 நாட்களுக்கு மேல ஃபிரிட்ஜில் வச்சா, அதுல 'சால்மோனெல்லா', 'ஈ-கோலை' போன்ற ஆபத்தான பாக்டீரியாக்கள் பெருகிடும். அப்புறம் பயங்கரமான ஃபுட் பாய்ஸனிங் ஆகிடும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சாம்பார், ரசம், காரக்குழம்பு (2 &ndash; 3 நாட்கள்)&lt;/strong&gt;: தினமும் கொதிக்க வச்சு எடுத்தா கூட 3 நாட்களுக்கு மேல இதை ஃபிரிட்ஜில் வச்சு சாப்பிடவே கூடாது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;காய்கறி பொரியல், கூட்டு (2 நாட்கள்)&lt;/strong&gt;: ஈரப்பதம் அதிகமுள்ள பொரியல் வகைகள்ல சீக்கிரமே பூஞ்சை (Fungus) பிடிச்சுடும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;பால் (திறந்த பாக்கெட் / பாத்திரம்)&lt;/strong&gt;: 2 முதல் 3 நாட்களுக்குள் பயன்படுத்திடணும். அதுக்கு மேல போனா புளிப்பு வாசனையும், தயிர் மாதிரி உறையவும் ஆரம்பிக்கும். இது வயிற்றுப் பிரச்சனையை உண்டாக்கும்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;தயிர்&lt;/strong&gt;: கடையில் வாங்கிய தயிர்னா 5-7 நாட்கள் தாங்கும். அதுவே வீட்டில் தோய்த்த தயிர்னா 3-4 நாட்களுக்குள் காலி பண்ணிடுங்க.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;பன்னீர் / சீஸ் (Open செய்த பின்)&lt;/strong&gt;: 5-7 நாட்கள் மட்டுமே. பன்னீரின் மேல்பகுதி வழுவழுப்பாகவோ அல்லது நிறம் மாறியோ இருந்தா உடனே குப்பையில போடுங்க.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;வெண்ணெய் &amp;amp; நெய்&lt;/strong&gt;: வெண்ணெயை 1 மாதம் வரை வைக்கலாம். நெய்க்கு ஃபிரிட்ஜே தேவையில்லை, வெளியவே பல மாதங்கள் இருக்கும். ஆனா வாசனை மாறினா தவிர்த்துடுங்க.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;img&gt;&lt;p&gt;முட்டையை ஃபிரிட்ஜில் 3 முதல் 4 வாரங்கள் வரை தாராளமாக வைக்கலாம். ஆனா, ஒருமுறை முட்டையை உடைச்சு கிண்ணத்துல வச்சுட்டீங்கன்னா, அதை 1 அல்லது 2 நாட்களுக்குள்ள பயன்படுத்திடணும். பழைய முட்டைகள்ல 'சால்மோனெல்லா' தொற்று ஏற்படும் ஆபத்து மிக அதிகம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;கீரை மற்றும் இலைக் காய்கறிகள் (2 &ndash; 3 நாட்கள்)&lt;/strong&gt;: கீரைகளை ரொம்ப நாள் வச்சா அது வாடிப் போறது மட்டுமில்லாம, அதுல 'நைட்ரேட்' அளவு ஆபத்தான முறையில அதிகரிக்கும். இது குறிப்பா குழந்தைகளுக்கு ரொம்பவே விஷம்.!&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;நறுக்கிய காய்கறிகள் (1 &ndash; 2 நாட்கள்)&lt;/strong&gt;: காய்கறிகளை வெட்டி வச்ச உடனே அதுல ஆக்சிஜனேற்றம் (Oxidation) ஆரம்பிச்சுடும். சத்துக்கள் அழியுறது மட்டுமில்லாம, பாக்டீரியாவும் குடியேறிடும்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;வெட்டிய பழங்கள் (1 நாள் மட்டுமே)&lt;/strong&gt;: தர்பூசணி, பப்பாளி போன்ற பழங்களை வெட்டி ஃபிரிட்ஜில் வச்சா, 24 மணி நேரத்துக்குள்ள சாப்பிட்டுடனும். இல்லைன்னா அது பாக்டீரியாக்களின் கூடாரமாக மாறிடும்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;முழு காய்கறிகள்&lt;/strong&gt;: உருளைக்கிழங்கு, வெங்காயத்தை ஃபிரிட்ஜில் வைக்கவே கூடாது. மற்ற காய்கறிகளை 5-7 நாட்கள் வரை வைக்கலாம்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;img&gt;&lt;p&gt;&amp;nbsp;&quot;பார்க்க நல்லாதான் இருக்கு, வாசனையும் வரலை&quot;னு பழைய உணவை சாப்பிட்டா, உடம்புக்குள் நடக்கும் விபரீதங்கள் இதோ.&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;ஃபுட் பாய்ஸனிங்: கடுமையான வயிற்று வலி, நிற்காத வாந்தி, வயிற்றுப்போக்கு.&lt;/li&gt; &lt;li&gt;டைபாய்டு &amp;amp; காய்ச்சல்: 'சால்மோனெல்லா' பாக்டீரியாவால் காய்ச்சலும், உடல் நடுக்கமும் ஏற்படும்.&lt;/li&gt; &lt;li&gt;கர்ப்பிணிகளுக்கு ஆபத்து: 'லிஸ்டீரியா' (Listeria) என்கிற பாக்டீரியா தொற்று ஏற்பட்டால், கர்ப்பிணிப் பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படும் அளவுக்கு ஆபத்து உண்டு.&lt;/li&gt; &lt;li&gt;சிறுநீரக பாதிப்பு: 'ஈ-கோலை' (E.coli) பாக்டீரியா நச்சு முற்றிப்போனால் சிறுநீரகமே செயலிழக்க வாய்ப்புள்ளது.&lt;/li&gt; &lt;li&gt;புற்றுநோய் அபாயம்: பூஞ்சை பிடித்த உணவுகளில் 'மைக்கோடாக்ஸின்' (Mycotoxin) என்ற விஷம் உருவாகும். இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நீண்ட காலத்தில் புற்றுநோய் வரலாம்.&lt;/li&gt; &lt;li&gt;முக்கிய குறிப்பு: ஆபத்தான பாக்டீரியாக்கள் உணவில் பெருகும்போது பல நேரங்களில் வாசனை, நிறம், சுவை எதுவுமே மாறாது. அதனால், &quot;நல்லாத்தானே இருக்கு&quot;னு வாசனை பார்த்து ஏமாந்துடாதீங்க.!&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;img&gt;&lt;ul&gt; &lt;li&gt;&amp;nbsp;ஃபிரிட்ஜில் வைக்கும் டப்பாக்களின் மேல் எந்த தேதி வச்சீங்கன்னு ஒரு ஸ்டிக்கர் ஒட்டி வைங்க. நாள் கணக்கு மறக்காது.&lt;/li&gt; &lt;li&gt;சூடாக வைக்காதீங்க: சமைத்த உணவை அப்படியே சூடோடு ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது. நன்றாக ஆறிய பிறகே வைக்க வேண்டும்.&lt;/li&gt; &lt;li&gt;டெம்பரேச்சர் செக்: ஃபிரிட்ஜின் வெப்பநிலை எப்போதும் 4&deg;C அல்லது அதற்குக் கீழ் இருக்க வேண்டும்.&lt;/li&gt; &lt;li&gt;மூடி வைங்க: எல்லா உணவுகளையும் தனித்தனி காற்றுப்புகாத (Air-tight) டப்பாக்கள்ல மூடி வைங்க.&lt;/li&gt; &lt;li&gt;சந்தேகமா இருந்தா தூக்கிப் போடுங்க: &quot;இந்த சாப்பாடு நல்லா இருக்குமா, கெட்டுப்போயிருக்குமா?&quot;னு லேசான சந்தேகம் வந்தா கூட, யோசிக்காம குப்பையில போடுங்க (When in doubt, throw it out). ஆரோக்கியத்தை விட உணவு முக்கியமில்லை.!&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;img&gt;&lt;p&gt;ஃபிரிட்ஜ் நமக்கு வரம் தான், ஆனா அதை நாம முறையா பயன்படுத்தலைனா அதுவே நமக்கான எமனாக மாறிடும். &quot;ஃபிரிட்ஜில் இருக்கிறதே&quot; என்ற அலட்சியத்தை தூக்கிப் போட்டுட்டு, எந்த உணவை எத்தனை நாள் வைக்கணும்ங்கிற விழிப்புணர்வோடு செயல்படுவோம். ஆரோக்கியமான உணவை உண்போம், ஆபத்துகளைத் தவிர்ப்போம்.!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/fridge-foods-that-turn-harmful-if-stored-too-long-in-the-refrigerator-do-not-ignore-the-number-of-days-3xiccm7"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Petrol Bunk: இந்தியாவின் முதல் பெட்ரோல் பங்க்! அப்போலாம் இப்படித்தான் பெட்ரோல் நிரப்புவாங்களாம்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/interesting-facts-the-story-of-indias-first-petrol-bunk-where-it-started-and-how-vehicles-refueled-in-the-early-days-ebsdnzd</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/interesting-facts-the-story-of-indias-first-petrol-bunk-where-it-started-and-how-vehicles-refueled-in-the-early-days-ebsdnzd</guid>
            <pubDate>Fri, 03 Jul 2026 14:14:12 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;The Story of Indias First Petrol Bunk: இப்போ தெருவுக்குத் தெரு பெட்ரோல் பங்க் இருக்கு. ஆனா, ஒருகாலத்துல அப்படி இல்ல. நம்ம நாட்டுல முதல் பெட்ரோல் பங்க் எங்க ஆரம்பிச்சாங்க தெரியுமா? அப்போ வண்டிகளுக்கு எப்படி பெட்ரோல் போட்டாங்கனு தெரிஞ்சுக்கலாம் வாங்க.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwkj82q2sypc1vrm2xgfex1e,imgname-interesting-facts---the-story-of-indias-first-petrol-bunk-1783068101346.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;The Story of Indias First Petrol Bunk: இப்போ தெருவுக்குத் தெரு பெட்ரோல் பங்க் இருக்கு. ஆனா, ஒருகாலத்துல அப்படி இல்ல. நம்ம நாட்டுல முதல் பெட்ரோல் பங்க் எங்க ஆரம்பிச்சாங்க தெரியுமா? அப்போ வண்டிகளுக்கு எப்படி பெட்ரோல் போட்டாங்கனு தெரிஞ்சுக்கலாம் வாங்க.&lt;/p&gt;&lt;img&gt;நம்ம நாட்டுல முதல் பெட்ரோல் பங்க் 1928-ல் மும்பையில்தான் தொடங்கப்பட்டது. 'பர்மா ஷெல்' என்ற கம்பெனிதான் இதை ஆரம்பிச்சது. அப்போலாம் வண்டிகள் ரொம்ப கம்மி. இப்போ அந்த பர்மா ஷெல் நிறுவனம்தான் 'பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்' ஆக இருக்கு.&lt;img&gt;பெட்ரோல் பங்க் வர்றதுக்கு முன்னாடி, பெரிய டிரம் அல்லது டின்ல வெச்சுதான் பெட்ரோல், டீசல் வித்தாங்க. பங்க் வந்த பிறகும், ஆட்டோமேட்டிக் மெஷின்லாம் கிடையாது. ஊழியர்கள் கையாலதான் பெட்ரோல் நிரப்புவாங்க. எவ்வளவு போட்டிருக்காங்கனு பார்க்க மெக்கானிக்கல் மீட்டர்களைப் பயன்படுத்தினாங்க.&lt;img&gt;ஆரம்பத்துல மக்கள் பங்குகளை நம்பல. சரியா பெட்ரோல் போடுறாங்களானு சந்தேகம் இருந்துச்சு. அதனால, பர்மா ஷெல் நிறுவனம் வாடிக்கையாளர்கள் கண் முன்னாடியே பெட்ரோலை அளந்து ஊத்துனாங்க. இதுதான் மக்கள் மத்தியில நம்பிக்கையை வளர்த்தது.&lt;img&gt;1928-ல் ஒற்றைப் பங்கில் தொடங்கியது, இன்னைக்கு ஆயிரக்கணக்கான பங்க்களாக வளர்ந்திருக்கு. கையால் இயக்கிய பம்ப்களில் இருந்து, இப்போ AI டிஜிட்டல் மெஷின்கள் வரை வந்தாச்சு. ஒருகாலத்தில் ஆடம்பரமா இருந்த கார், இப்போ நடுத்தர குடும்பத்துலயும் இருக்கு. இந்த வளர்ச்சி இப்போ எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் ஸ்டேஷன் வரை நீண்டிருக்கு.]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/interesting-facts-the-story-of-indias-first-petrol-bunk-where-it-started-and-how-vehicles-refueled-in-the-early-days-ebsdnzd"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Gold Loan Waiver: நகை கடன் தள்ளுபடி?! வங்கிகளுக்கு வந்த புதிய உத்தரவு என்ன? யாருக்கெல்லாம் கிடைக்கலாம்?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/gold-loan-waiver-in-tamil-nadu-2026-new-orders-issued-to-banks-who-may-benefit-5dds8u7</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/gold-loan-waiver-in-tamil-nadu-2026-new-orders-issued-to-banks-who-may-benefit-5dds8u7</guid>
            <pubDate>Fri, 03 Jul 2026 10:06:03 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தமிழ்நாட்டில் நகை கடன் தள்ளுபடி குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கூட்டுறவு மற்றும் அரசு வங்கிகள் இது தொடர்பான விவரங்களை சேகரிப்பதாக கூறப்படும் நிலையில் தகுதியான பயனாளிகள் யார் என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwk3j7heraqdxrh3002a9grz,imgname-chatgpt-image-jul-3--2026--09-53-54-am--1--1783052705326.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழ்நாட்டில் நகை கடன் தள்ளுபடி குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கூட்டுறவு மற்றும் அரசு வங்கிகள் இது தொடர்பான விவரங்களை சேகரிப்பதாக கூறப்படும் நிலையில் தகுதியான பயனாளிகள் யார் என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் விஷயங்களில் ஒன்றாக நகை கடன் தள்ளுபடி மாறியுள்ளது. குறிப்பாக, கூட்டுறவு வங்கிகள் மற்றும் அரசு வங்கிகளில் நகை அடமானம் வைத்து கடன் பெற்றவர்கள் மத்தியில் இந்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில், வங்கிகளுக்கு சில முக்கிய உத்தரவுகள் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த உத்தரவு என்ன? யாருக்கு பயன் கிடைக்கலாம்? தற்போது என்ன நிலை? என்பதை விரிவாகப் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ்நாடு அரசு சமீபத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க் கடன் பெற்ற விவசாயிகளுக்கு ரூ.75,000 வரை கடன் தள்ளுபடி வழங்கும் திட்டத்தை அறிவித்தது. குறு, சிறு மற்றும் பெரிய விவசாயிகள் என பலரும் இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்தனர். இந்த நடவடிக்கை தேர்தல் வாக்குறுதியின் ஒரு பகுதியாக செயல்படுத்தப்பட்டது. இதையடுத்து, இதேபோன்ற நிவாரணம் நகை கடன் பெற்றவர்களுக்கும் கிடைக்குமா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழத் தொடங்கியது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வெளியாகியுள்ள தகவல்களின்படி, கூட்டுறவு வங்கிகள் மற்றும் சில பொதுத்துறை வங்கிகளிடம் நகை கடன் தொடர்பான விவரங்களை சேகரிக்கவும், தகுதியான பயனாளிகளின் பட்டியலை தயாரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடன் பெற்றவர்களின் விவரங்கள், கடன் தொகை, அடமானமாக வைத்த தங்கத்தின் அளவு போன்ற தகவல்கள் ஆய்வு செய்யப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தற்போது வெளியாகும் தகவல்களின்படி, கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட நகை கடன்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல், சில பொதுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட நகை கடன்களும் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் தனியார் வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் பெறப்பட்ட நகை கடன்களுக்கு இந்த திட்டம் பொருந்த வாய்ப்பு குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதுவரை வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்கள், சிறு மற்றும் குறு விவசாயிகள், குறைந்த அளவு நகையை அடமானம் வைத்து கடன் பெற்றவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, 5 சவரன் வரையிலான நகை கடன்கள் பரிசீலிக்கப்படலாம் என்ற தகவலும் பரவி வருகிறது. இருப்பினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வங்கி வட்டாரங்களில் வெளியாகும் தகவல்களின்படி, தகுதியான பயனாளிகளின் பட்டியலை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. கடந்த காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களைப் போல, தகுதியின் அடிப்படையில் பட்டியல் வெளியிடப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், நகை கடன் பெற்றவர்கள் தங்களது வங்கி கணக்கு மற்றும் கடன் ஆவணங்களை சரியாக வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சமூக வலைதளங்களில் &quot;அனைத்து நகை கடன்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன&quot;, &quot;உடனே கடன் ரத்து&quot; போன்ற பல தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் இதுபோன்ற தகவல்களை உறுதி செய்யாமல் நம்புவது தவறான முடிவுகளுக்கு வழிவகுக்கும். அரசு வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளே இறுதியானதாக கருதப்பட வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நகை கடன் பெற்றவர்கள் தேவையற்ற பதற்றம் அடையாமல், தாங்கள் கடன் பெற்றுள்ள கூட்டுறவு அல்லது அரசு வங்கிகளுடன் தொடர்பில் இருக்கலாம். புதிய அறிவிப்புகள் வெளியாகும்போது அவற்றை கவனமாகப் பின்பற்ற வேண்டும். சமூக வலைதளங்களில் பரவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்பி எந்த முடிவையும் எடுக்க வேண்டாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ்நாட்டில் நகை கடன் தள்ளுபடி குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், வங்கிகளில் தகவல் சேகரிப்பு நடைபெறுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இருப்பினும், நகை கடன் தள்ளுபடி தொடர்பாக தமிழக அரசு இதுவரை அதிகாரப்பூர்வ அரசாணை அல்லது இறுதி அறிவிப்பை வெளியிடவில்லை. எனவே, தள்ளுபடி குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகும் வரை அரசு மற்றும் சம்பந்தப்பட்ட வங்கிகள் வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பொதுமக்கள் நம்புவது மிகவும் அவசியம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/gold-loan-waiver-in-tamil-nadu-2026-new-orders-issued-to-banks-who-may-benefit-5dds8u7"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Indian Railways: ரயிலில் இந்த 3 'தப்பு' பண்ணா ரூ.2000 ஃபைன், ஜெயில்! பயணிகளே உஷார்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/indian-railways-rules-avoid-these-3-mistakes-or-face-a-rs-2000-fine-and-jail-8bmbdmk</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/indian-railways-rules-avoid-these-3-mistakes-or-face-a-rs-2000-fine-and-jail-8bmbdmk</guid>
            <pubDate>Thu, 02 Jul 2026 10:21:09 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Indian Railways: ரயிலில் தெரியாமக கூட சில தவறுகளை செய்தால் ரூ.2,000 அபராதமும், சிறை தண்டனையும் கிடைக்கும். ரயிலில் என்னென்ன தவறுகளை செய்யக்கூடாது? என பார்ப்போம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwgfgcn5e8w7jhzmv6tbbk4h,imgname-indian-train--5--1782964564645.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Indian Railways: ரயிலில் தெரியாமக கூட சில தவறுகளை செய்தால் ரூ.2,000 அபராதமும், சிறை தண்டனையும் கிடைக்கும். ரயிலில் என்னென்ன தவறுகளை செய்யக்கூடாது? என பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவில் தினமும் பல லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர். பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ரயிலில் பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இனி ரயில்கள் மற்றும் ரயில் நிலைய வளாகங்களில் புகைப்பிடிப்பது, பிச்சை எடுப்பது, உரிமம் இல்லாமல் வியாபாரம் செய்வது ஆகியவை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளன. விதிகளை மீறுபவர்களுக்குக் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரயிலுக்குள் யாராவது சிகரெட் மற்றும் பீடி புகைப்பிடித்துப் பிடிபட்டால், அவர்களுக்கு உடனடியாக ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும். அபராதம் மட்டுமல்ல, அவர்களை ரயிலில் இருந்து உடனடியாக இறக்கிவிடவும், அவர்களின் டிக்கெட் அல்லது ரயில்வே பாஸை ரத்து செய்யவும் சட்டத்தில் இடமுள்ளது. ஒருவேளை அபராதம் கட்ட மறுத்தால், இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு மாற்றப்படும். அங்கு நீதிமன்றம் அபராதத்தை ரூ.5,000 வரை உயர்த்த வாய்ப்புள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரயில்வே துறையிடம் முறையான உரிமம் பெறாமல், ரயில்களிலும் பிளாட்பாரங்களிலும் தின்பண்டங்கள் அல்லது மற்ற பொருட்களை விற்கும் வியாபாரிகளுக்கு ரயில்வே துறை அதிர்ச்சி கொடுத்துள்ளது. இதுபோன்ற அங்கீகரிக்கப்படாத வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு நேரடியாக ரூ.2,000 அபராதம் விதிக்க புதிய விதிகளில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பிச்சை எடுத்தால் ஜெயில் போக வேண்டியது வரும்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;ரயில்களிலோ அல்லது ரயில் நிலையங்களிலோ பிச்சை எடுப்பவர்களுக்கும் ரூ.2,000 அபராதம் விதிக்கும் правило பொருந்தும். பிச்சை எடுப்பவர்களைப் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினால், நீதிமன்றம் அவர்களுக்கு அதிகபட்சமாக 3 மாதங்கள் சிறைத் தண்டனை, ரூ.5,000 அபராதம் அல்லது இரண்டையும் சேர்த்து விதிக்க முடியும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அபராதம் செலுத்திய பிறகும், அங்கீகரிக்கப்படாத வியாபாரம் மற்றும் பிச்சை எடுத்தல் போன்ற குற்றங்களைத் தொடர்ந்து செய்யும் குற்றவாளிகளுக்கு (Repeat Offenders) கடுமையான தண்டனை காத்திருக்கிறது. இதே குற்றத்தை 4 அல்லது அதற்கு மேற்பட்ட முறை செய்பவர்களுக்கு, அதிகபட்சமாக 1 ஆண்டு வரை சிறைத் தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதிக்க புதிய சட்டத்தில் ரயில்வே துறை வழிவகை செய்துள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/indian-railways-rules-avoid-these-3-mistakes-or-face-a-rs-2000-fine-and-jail-8bmbdmk"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Gas Saving Tips: வெறும் ₹230 செலவு... கேஸ் சிலிண்டர் 15 நாள் எக்ஸ்ட்ரா ஓடும்!1]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/simple-device-to-extend-your-lpg-cylinder-life-by-15-days-8n8ps7n</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/simple-device-to-extend-your-lpg-cylinder-life-by-15-days-8n8ps7n</guid>
            <pubDate>Thu, 02 Jul 2026 21:23:35 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;சமீபத்தில் எல்பிஜி சிலிண்டர்களின் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு சாமானிய மக்களின் நிதிநிலையை நேரடியாகப் பாதிக்கும் என்பது தெளிவாகிறது. பெரும்பாலான வீடுகளில், ஒரு சிலிண்டர் சுமார் ஒரு மாதம் அல்லது அதற்கும் குறைவான காலத்திலேயே தீர்ந்துவிடுகிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kv9wkr9cdm6gkwqb65b9cgdk,imgname-lpg-1781669683498.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சமீபத்தில் எல்பிஜி சிலிண்டர்களின் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு சாமானிய மக்களின் நிதிநிலையை நேரடியாகப் பாதிக்கும் என்பது தெளிவாகிறது. பெரும்பாலான வீடுகளில், ஒரு சிலிண்டர் சுமார் ஒரு மாதம் அல்லது அதற்கும் குறைவான காலத்திலேயே தீர்ந்துவிடுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சமீபத்தில் வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர்களின் விலை உயர்ந்துள்ளது. விலை உயர்ந்தால், அது சாமானிய மக்களின் நிதிநிலையை நேரடியாகப் பாதிக்கும் என்பது தெளிவாகிறது. பெரும்பாலான வீடுகளில், ஒரு சிலிண்டர் சுமார் ஒரு மாதம் அல்லது அதற்கும் குறைவான காலத்தில் தீர்ந்துவிடுகிறது. சற்று யோசித்துப் பாருங்கள், உங்கள் எல்பிஜி சிலிண்டர் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்தால், உங்களுக்கு எவ்வளவு நன்மை கிடைக்கும் என்று.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கேஸ் சேமிப்பதாகச் சொல்லப்படும் ஒரு சிறிய கேஸ் சேவர் சாதனம் பற்றித்தான் இப்போது பார்க்கப் போகிறோம். இது உங்கள் மாதாந்திர செலவைக் குறைக்க உதவும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதிகப்படியான எரிவாயுப் பயன்பாட்டைத் தவிர்க்க உதவும் ஒரு தனித்துவமான தொழில்நுட்பம் இது. இது ஒரு உலோக எரிவாயு சேமிப்பு ஸ்டாண்ட் ஆகும், இதை எரிவாயு அடுப்பின் மீது வைக்கும்போது, ​​எரிவாயுச் சுடரைத் திறம்படப் பயன்படுத்துகிறது. இந்த ஸ்டாண்ட், சுடர் பரவாமல் பாத்திரத்தின் அடிப்பகுதியை அடைந்து அங்கேயே செறிவாக நிலைத்திருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது எரிவாயு வீணாவதைத் தடுக்க உதவுவதோடு, மேம்பட்ட வெப்பப் பரவல் காரணமாக விரைவான சமையலையும் உறுதி செய்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதன் விலையைப் பொறுத்தவரை, இந்த எரிவாயு சேமிப்பு ஸ்டாண்டின் விலை 230 முதல் 250 ரூபாய் வரை இருக்கும். இதை வாங்கும் போது, ​​இதன் அளவு உங்கள் எரிவாயு அடுப்பிற்குப் பொருத்தமானதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இருப்பினும், இந்த ஸ்டாண்ட் மிகவும் பயனுள்ளதாக இருப்பதுடன், கணிசமான அளவு எரிவாயுவையும் சேமிக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;இந்த ஸ்டாண்ட் கேஸ் வீணாவதை கணிசமாகக் குறைக்கும். ஆனால், இதை நிறுவுவதால் மட்டுமே சிலிண்டர் அதிக நாட்கள் நீடிக்கும் என்று சொல்ல முடியாது. நீங்கள் எப்படி கேஸ் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்துதான் இது அமையும்.&lt;img&gt;உங்கள் வீட்டில் அதிக நபர்கள் இருந்தால், கேஸ் பயன்பாடு அதிகமாக இருக்கும். ஒரு நாளைக்கு பலமுறை சமைத்தால், சிலிண்டர் அதிக நாட்கள் நீடிக்காது. ஆனால், இந்த கேஸ் சேவர் ஸ்டாண்டை சரியாகப் பயன்படுத்தினால், கேஸ் பயன்பாட்டைக் குறைக்க முடியும் என்பது உறுதி.]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/simple-device-to-extend-your-lpg-cylinder-life-by-15-days-8n8ps7n"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Indian Railways: ஒரே ஒரு ரயில் டிக்கெட்டில் இந்தியாவையே சுத்தலாம்! 56 நாள் டூர்! 40% பணம் மிச்சம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/indian-railways-circular-journey-ticket-guide-56-day-tour-money-savings-8yhqwcr</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/indian-railways-circular-journey-ticket-guide-56-day-tour-money-savings-8yhqwcr</guid>
            <pubDate>Fri, 03 Jul 2026 08:38:24 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Indian Railways: இந்திய ரயில்வேயின் சர்குலர் ஜர்னி டிக்கெட் மூலம் ஒரே ஒரு டிக்கெட்டில் 56 நாட்கள் இந்தியா முழுக்க சுத்தி பார்க்கலாம். இதன்மூலம் 40% வரை கட்டணம் மிச்சமாகும். ரயில்வேயின் இந்த ரகசிய வசதி குறித்து பார்ப்போம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwjw86gpd9nnv3ht5ad964qz,imgname-indian-railways-1783045036566.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Indian Railways: இந்திய ரயில்வேயின் சர்குலர் ஜர்னி டிக்கெட் மூலம் ஒரே ஒரு டிக்கெட்டில் 56 நாட்கள் இந்தியா முழுக்க சுத்தி பார்க்கலாம். இதன்மூலம் 40% வரை கட்டணம் மிச்சமாகும். ரயில்வேயின் இந்த ரகசிய வசதி குறித்து பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவில் ரயில் போக்குவரத்து முதுகெலும்பாக உள்ளது. தொலைதூர இடங்களுக்கும் சொகுசாக களைப்பின்றி பயணம் செய்ய முடியும் என்பதால் பலரும் ரயில்களை நாடி வருகின்றனர். நாம் ரயிலில் சொந்த ஊருக்கு செல்வதற்காகவோ அல்லது வேறு மாநிலம் செல்வதற்கோ தனிதனியாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்கிறோம். ஆனால், ஒரே பயணத்தில் பல ஊர்களுக்குச் செல்ல நினைத்தால், ஒவ்வொரு ஸ்டேஷனுக்கும் தனித்தனி டிக்கெட் எடுத்துப் பணத்தையும் நேரத்தையும் வீணடிக்கிறோம்.&lt;/p&gt;&lt;p&gt;ஆனால் இந்திய ரயில்வேயில் பலரும் அறியாத, பயணிகளுக்குப் பணத்தை மிச்சப்படுத்தும் 'சர்குலர் ஜர்னி டிக்கெட்' (Circular Journey Ticket) என்றொரு அற்புதமான வசதி உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? இதில் ஒரே ஒரு டிக்கெட் எடுத்து 2 மாதம் இந்தியா முழுக்க சுற்றலாம். அது என்ன சர்குலர் டிக்கெட்? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நீங்கள் ஒரு குறிப்பிட்ட ரயில் நிலையத்திலிருந்து பயணத்தைத் தொடங்கி, வழியில் பல ஆன்மீகத் தலங்கள் அல்லது சுற்றுலா இடங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு, மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வர விரும்பினால் இந்த ஒரே ஒரு டிக்கெட்டை எடுத்தால் போதும்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;உதாரணத்துக்கு நீங்கள் சென்னையில் இருந்து கிளம்பி திருச்சியில் மலைக்கோட்டை, மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில், ராமேஸ்வரம் கோயில் மற்றும் அங்குள்ள&zwnj; சுற்றுலாத் தலங்கள், கடைசியாக கன்னியாகுமரியில் கால்பதித்து மீண்டும் சென்னை வர விரும்பினால், மேற்கண்ட இந்த ஊர்களுக்கு தனித்தனியாக 5 டிக்கெட்டுகள் எடுக்கத் தேவையில்லை. உங்களிடம் இந்த ஒரே ஒரு சர்குலர் டிக்கெட் இருந்தால் மேற்கண்ட இந்த இடங்களில் ஒரே டிக்கெட்டில் பயணம் செய்ய முடியும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க: &lt;/strong&gt;ரயிலில் இந்த 3 'தப்பு' பண்ணா ரூ.2000 ஃபைன், ஜெயில்!: https://tamil.asianetnews.com/gallery/business/indian-railways-rules-avoid-these-3-mistakes-or-face-a-rs-2000-fine-and-jail-8bmbdmk&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;8 ஊர்களில் தங்கலாம்: உங்கள் பயணப் பாதையில் அதிகபட்சமாக 8 வெவ்வேறு முக்கிய ரயில் நிலையங்களில் நீங்கள் இறங்கி, அந்த ஊர்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு, சில நாட்கள் தங்கிவிட்டு, மீண்டும் அடுத்த ரயிலில் பயணத்தைத் தொடரலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பணம் மிச்சம்: &lt;/strong&gt;தனித்தனி டிக்கெட் எடுப்பதை விட, மொத்த கிலோமீட்டர் கணக்கிடப்பட்டு டெலிஸ்கோபிக் (Telescopic Rates) முறையில் கட்டணம் குறைக்கப்படும். இதனால் சாதாரண டிக்கெட் விலையை விட 30% முதல் 40% வரை பணம் மிச்சமாகும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;56 நாட்கள் வேலிடிட்டி: &lt;/strong&gt;இந்த ஒரு டிக்கெட்டின் ஆயுட்காலம் கிட்டத்தட்ட 2 மாதங்கள் (56 நாட்கள்) ஆகும். அதுவரை நீங்கள் நிம்மதியாக இந்தியா முழுக்கத் திட்டமிட்டுச் சுற்றலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதில் முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் சர்குலர் டிக்கெட்டை ஆன்லைனில் எடுக்க முடியாது. நீங்கள் பயணத்தைத் தொடங்கவிருக்கும் முக்கிய ரயில் நிலையத்தின் வணிக மேலாளரை (Divisional Commercial Manager) அணுகி, உங்கள் பயணப் பாதையைக் (Route Map) கொடுத்தால், அவர்கள் கட்டணத்தைக் கணக்கிட்டு இந்த சிறப்பு டிக்கெட்டை வழங்குவார்கள். பட்ஜெட் செலவில் சுற்றுலா செல்ல விரும்புபவர்களுக்கு இந்த சர்குலர் டிக்கெட் ஒரு வரப்பிரசாதமாகும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/indian-railways-circular-journey-ticket-guide-56-day-tour-money-savings-8yhqwcr"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500.! புது ரூல்ஸ் வந்தாலும் இவங்களுக்கெல்லாம் கண்டிப்பா கிடைக்கும்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/politics/magalir-urimai-thogai-rs-2500-benefit-continues-despite-new-rules-check-who-is-still-eligible-aiax8ae</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/politics/magalir-urimai-thogai-rs-2500-benefit-continues-despite-new-rules-check-who-is-still-eligible-aiax8ae</guid>
            <pubDate>Thu, 02 Jul 2026 11:39:29 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தவெக அரசின் தேர்தல் வாக்குறுதியான ₹2,500 மகளிர் உரிமைத் தொகை, திட்ட மறுசீரமைப்பு மற்றும் புதிய தகுதி வரம்புகளால் தாமதமாகியுள்ளது. ஆகஸ்ட் மாதம் முதல் இந்த உயர்வு அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwgnvg6z2j77fr23ejeza2wz,imgname-chatgpt-image-jul-2--2026--11-15-15-am--1--1782971220191.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தவெக அரசின் தேர்தல் வாக்குறுதியான ₹2,500 மகளிர் உரிமைத் தொகை, திட்ட மறுசீரமைப்பு மற்றும் புதிய தகுதி வரம்புகளால் தாமதமாகியுள்ளது. ஆகஸ்ட் மாதம் முதல் இந்த உயர்வு அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ்நாட்டுப் பெண்களின் பொருளாதார வாழ்வில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்திய 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டம், தற்போது அரசியல் மற்றும் சமூக வெளியில் மிக முக்கியமான விவாதப் பொருளாக மாறியுள்ளது. கடந்த 2023 செப்டம்பர் 15 அன்று, முந்தைய திமுக அரசால் தொடங்கப்பட்ட இத்திட்டம், சுமார் 1.3 கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1,000 வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அரணாக விளங்கியது. இந்நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது தேர்தல் வாக்குறுதியின்படி இத்தொகையை ₹2,500 ஆக (60 வயதுக்கு மேற்பட்டோருக்கு ₹3,000 வரை) உயர்த்தும் என்று பெண்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்தனர். ஆனால், ஜூன்-ஜூலை மாதங்களில் வழக்கமான ₹1,000 மட்டுமே வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதால், தற்காலிக ஏமாற்றமும், புதிய விதிமுறைகள் (புது ரூல்ஸ்) குறித்த விவாதங்களும் எழுந்துள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான புதிய தவெக அரசு, இத்திட்டத்தை முழுமையாகக் கைவிடவில்லை. மாறாக, தேர்தல் வாக்குறுதியான ₹2,500-ஐ வழங்குவதற்கான திட்ட மறுசீரமைப்பு (Restructuring) பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. நிதிச் சுமையைக் கையாள்வது, தகுதியான பயனாளிகளைத் துல்லியமாகக் கண்டறிவது, 60 வயதுக்கு மேற்பட்டோரை முதியோர் ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றுவது மற்றும் புதிய விண்ணப்பங்களை பரிசீலிப்பது போன்ற காரணங்களால் இந்தத் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. நிதி நிலைத்தன்மையை உறுதி செய்யாமல் இவ்வளவு பெரிய தொகையை வழங்குவது சாத்தியமற்றது என்பதால், பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக அதிகாரிகளுடன் ஆலோசித்து இறுதி வடிவம் கொடுக்க அரசு திட்டமிட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அரசு திட்டத்தை முறைப்படுத்தப் புதிய தகுதி வரம்புகளையும், கட்டுப்பாடுகளையும் விதித்தாலும், பின்வரும் அடித்தட்டு மற்றும் தேவையுள்ள பிரிவினருக்கு இந்த ₹2,500 உரிமைத் தொகை எவ்வித தடையுமின்றி கண்டிப்பாகக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது:&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்கள் (BPL)&lt;/strong&gt;: மிகக் குறைந்த வருமானம் கொண்ட, அன்றாடக் கூலி வேலை செய்யும் குடும்பங்களின் தலைவிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;மாற்றுத்திறனாளிப் பெண்கள் மற்றும் பராமரிப்பாளர்கள்&lt;/strong&gt;: மாற்றுத்திறனாளிப் பெண்கள் அல்லது தங்களைச் சார்ந்துள்ள மாற்றுத்திறனாளிகளைப் பராமரிக்கும் பெண்மணிகளுக்கு இத்திட்டம் தொடர்ந்து பாதுகாப்பு அளிக்கும்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;விதவைகள் மற்றும் ஆதரவற்ற பெண்கள்&lt;/strong&gt;: கணவனை இழந்த, குடும்பத்தை தனியாகத் தாங்கிப் பிடிக்கும் பெண் தலைவிகளுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி இத்தொகை சென்றடையும்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;உண்மையான ஏழைப் பெண்கள்&lt;/strong&gt;: ஆண்டு வருமானம் ₹2.5 லட்சத்திற்கும் குறைவாக இருந்து, சொந்தமாக நிலமோ, நான்கு சக்கர வாகனங்களோ இல்லாத எளிய குடும்பத்துப் பெண்களுக்கு இந்த உயர்வு நிச்சயம் பலன் தரும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;img&gt;&lt;p&gt;தகுதியற்றவர்கள், அதாவது நல்ல வருமானம் உள்ளவர்கள் மற்றும் அரசு விதிமுறைகளைத் தவறாகப் பயன்படுத்திப் பலன் பெறுபவர்களைக் கண்டறிந்து நீக்கவே இந்த 'புது ரூல்ஸ்' கொண்டுவரப்படுகிறது. இதனால் உண்மையான ஏழைப் பெண்களுக்கான வாய்ப்பு எங்கும் போகாது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான பெண்கள் இந்த உரிமைத் தொகையை வெறும் உதவித்தொகையாகப் பார்க்காமல், தங்களின் வீட்டு வாடகை, மருத்துவச் செலவுகள், குழந்தைகளின் கல்வி மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்கான முக்கிய வாழ்வாதாரமாக நம்பியுள்ளனர். எனவே, இந்தத் தொகை உயர்வு தாமதமாவது அவர்களின் மாதாந்திரப் பொருளாதாரத் திட்டமிடலைப் பாதித்துள்ளது உண்மைதான்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இருப்பினும், அரசின் இந்தத் தற்காலிகத் தாமதம் இத்திட்டத்தை மேலும் சீரமைத்து, முறைகேடுகளைத் தவிர்த்து, நீண்ட காலத்திற்கு நிதி ரீதியாகத் தடையின்றிச் செயல்படுத்தவே உதவும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். பெண்களின் உண்மையான நிதிச் சுதந்திரத்தை உறுதி செய்ய, புதிய அரசு தனது தேர்தல் வாக்குறுதியான ₹2,500 உயர்வு குறித்த தெளிவான அரசாணையை விரைவில் வெளியிட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழக மகளிரின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் கண்டிப்பா கிடைக்கும் என்ற நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் கிடைத்துளளன.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/politics/magalir-urimai-thogai-rs-2500-benefit-continues-despite-new-rules-check-who-is-still-eligible-aiax8ae"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Moringa Business : மாதம் லட்சங்களில் வருமானம் தரும் முருங்கை இலை பிசினஸ்! வெறும் 3 ஏக்கர் நிலம் இருந்தா போதும்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/start-a-moringa-leaf-business-with-3-acres-and-earn-big-ggvdd3g</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/start-a-moringa-leaf-business-with-3-acres-and-earn-big-ggvdd3g</guid>
            <pubDate>Thu, 02 Jul 2026 10:20:08 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Moringa Business : ராணுவத்தில் 20 ஆண்டுகள் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்ற தீபக் கடேகர் மற்றும் சந்தோஷ் நார்வாடே இருவரும், வெறும் 3 ஏக்கர் நிலத்தில் ஆண்டுக்கு 2 டன் முருங்கை பவுடர் தயாரித்து, கிலோவை ரூ.800 வரை விற்று பெரும் லாபம் ஈட்டி வருகிறார்கள்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwgj1x7sxx2fkrqqwtp5mk08,imgname-chatgpt-image-jul-2--2026--10-10-04-am-1782967235833.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Moringa Business : ராணுவத்தில் 20 ஆண்டுகள் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்ற தீபக் கடேகர் மற்றும் சந்தோஷ் நார்வாடே இருவரும், வெறும் 3 ஏக்கர் நிலத்தில் ஆண்டுக்கு 2 டன் முருங்கை பவுடர் தயாரித்து, கிலோவை ரூ.800 வரை விற்று பெரும் லாபம் ஈட்டி வருகிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முருங்கை இலைகளில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தி மற்றும் ஊட்டச்சத்துகள் காரணமாக, உலகம் முழுவதும் இதன் தேவை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. உலகளாவிய முருங்கை பவுடர் சந்தை மதிப்பு 2025-ல் 0.65 பில்லியன் டாலராக இருந்தது, இது வரும் 2035-க்குள் 1.16 பில்லியன் டாலரை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், உலகளாவிய தேவையில் 80%-ஐ இந்தியா தான் பூர்த்தி செய்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;தீபக் மற்றும் சந்தோஷ் ஆகியோர் தங்களது 15 ஏக்கர் பாரம்பரிய நிலத்தில், சோதனை முயற்சியாக தலா 1.5 ஏக்கர் (மொத்தம் 3 ஏக்கர்) நிலத்தில் முருங்கை சாகுபடியைத் தொடங்கினர். இதற்காக அவர்கள் தமிழ்நாட்டின் கோயம்புத்தூருக்கே நேரில் வந்து, அதிக இலை மகசூல் தரும் &quot;வலியாபட்டி&quot; (Valiyapatti) ரக முருங்கை விதைகளைத் தேர்ந்தெடுத்தனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பெரும்பாலான விவசாயிகள் முருங்கை இலையை அப்படியே மலிவான விலைக்கு விற்றுவிடுவார்கள். ஆனால் இந்த ராணுவ நண்பர்கள் அங்கேயே தங்களின் புத்திசாலித்தனத்தைக் காட்டினர். இலையை நேரடியாக விற்காமல், அதை பவுடராக மாற்றி &quot;Divyaniti Agro and Food Products&quot; என்ற பெயரில் சொந்த பிராண்டாக சந்தைப்படுத்தினர்.&lt;/p&gt;&lt;p&gt;இவர்களின் பிசினஸ் மாடலின் ரகசியம் இதுதான்:&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;மொத்த விற்பனை (Wholesale):&lt;/strong&gt; வியாபாரிகளுக்கு மொத்தமாக விற்கும்போது கிலோ ரூ.400 வரை மட்டுமே கிடைக்கிறது.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;சொந்த பிராண்டிங் (Retail Branding): &lt;/strong&gt;அதையே அழகாக 100 கிராம் பாக்கெட்டுகளாக (விலை ரூ.80) மாற்றி, தங்கள் சொந்த பிராண்டில் விற்கும்போது கிலோவுக்கு ரூ.800 கிடைக்கிறது! அதாவது லாபம் அப்படியே இரட்டிப்பாகிறது.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;img&gt;&lt;p&gt;முருங்கை விவசாயத்தின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் &mdash; இதற்கு அதிகப் பராமரிப்போ, தண்ணீரோ தேவையில்லை. ஆரம்பத்தில் நிழலில் உலர்த்தும் உள்கட்டமைப்பு மற்றும் இலைகளைத் தூளாக்கும் 'பல்வரைசர்' (Pulveriser) இயந்திரம் ஆகியவற்றிற்கு மட்டுமே சுமார் ரூ.5 லட்சம் முதலீடு செய்தனர்.&lt;/p&gt;&lt;p&gt;அதன் பின், கெமிக்கல் உரங்களைத் தவிர்த்து, இயற்கை முறையில் மாட்டுச் சாணம், மண்புழு உரம் மற்றும் உள்ளூரிலேயே தயாரிக்கப்படும் &quot;மோர்-முட்டை-வெல்லம்&quot; கலந்த இயற்கை ஊட்டச்சத்து கரைசலை (Tak Andi Sanjeevak) மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். வருடத்திற்கு 3 முதல் 4 முறை தாராளமாக இலைகளை அறுவடை செய்யலாம்.&lt;/p&gt;&lt;p&gt;Chanakya Rahasya: பிசினஸ் உலகம் அறியாத சாணக்கியரின் 8 ரகசியங்கள்! கோடிகளில் புரள மகா வியூகம்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நீங்களும் முருங்கை பவுடர் பிசினஸில் இறங்கி நல்ல லாபம் பார்க்க, இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றலாம்:&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;1.சரியான ரகத்தைத் தேர்ந்தெடுங்கள்: &lt;/strong&gt;முருங்கைக்காய் விற்க வேண்டும் என்றால் ODC-3 போன்ற ரகங்களையும், இலை பவுடர் பிசினஸ் என்றால் அதிக இலைகள் தரும் 'வலியாபட்டி' போன்ற ரகங்களையும் தேர்வு செய்ய வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;2.நிழலில் உலர்த்துதல் (Shade Drying): &lt;/strong&gt;பறித்த இலைகளை நேரடி வெயிலில் காய வைக்கக் கூடாது. நிழலில் உலர்த்தினால் மட்டுமே அதன் பச்சையமும் (Nutritional profile) மருத்துவக் குணங்களும் மாறாமல் இருக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;3.மெஷின் மூலம் பவுடராக்குதல்: &lt;/strong&gt;நன்கு காய்ந்த இலைகளை ஒரு பல்வரைசர் மற்றும் ஃபில்டரிங் மெஷின் கொண்டு மிக நைசான பவுடராக மாற்ற வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;4.அழகான பேக்கிங் &amp;amp; பிராண்டிங்: &lt;/strong&gt;FSSAI உரிமம் பெற்று, 100 கிராம், 250 கிராம் பாக்கெட்டுகளில் கவர்ச்சியாக பேக் செய்து ஆன்லைனிலும் (Amazon, Flipkart) உள்ளூர் ஆர்கானிக் கடைகளிலும் விற்கத் தொடங்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;பாரம்பரிய விவசாய முறைகளிலிருந்து மாறி, விளைபொருட்களை நாமே மதிப்புக்கூட்டி, பிராண்டிங் செய்து விற்கப் பழகினால் விவசாயத்திலும் ஐடி வேலைகளை விட பல மடங்கு அதிகமாகச் சம்பாதிக்க முடியும் என்பதற்கு இந்த இரு நண்பர்களின் வெற்றியே சாட்சி!&lt;/p&gt;&lt;p&gt;Kubera Yoga : இனி இவர்களைப் பிடிக்கவே முடியாது! அவிட்ட ராகுவால் குபேரனாக மாறப்போகும் 'அந்த' 4 ராசிகள்!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/start-a-moringa-leaf-business-with-3-acres-and-earn-big-ggvdd3g"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Business: மாதம் ரூ.30,000 வருமானத்தை தரும் சுண்டல் விற்பனை.! தெரிந்த தொழில் தெரியாத சீக்ரெட்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/business-earn-rs-30000-per-month-selling-sundal-the-hidden-secret-of-a-profitable-low-investment-business-gy1hhmw</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/business-earn-rs-30000-per-month-selling-sundal-the-hidden-secret-of-a-profitable-low-investment-business-gy1hhmw</guid>
            <pubDate>Thu, 02 Jul 2026 15:25:05 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;சுண்டல் தொழில் என்பது குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் ஒரு சிறந்த சுயதொழில். சரியான திட்டமிடல், தனித்துவமான மசாலா மற்றும் வாடிக்கையாளர்களைக் கவரும் உத்திகள் மூலம் மாதம் ரூ.30,000 வரை எளிதாகச் சம்பாதிக்க முடியும்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwh1fwvnnwww9wqzd7mk4qhh,imgname-chatgpt-image-jul-2--2026--02-39-16-pm--1--1782983422837.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சுண்டல் தொழில் என்பது குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் ஒரு சிறந்த சுயதொழில். சரியான திட்டமிடல், தனித்துவமான மசாலா மற்றும் வாடிக்கையாளர்களைக் கவரும் உத்திகள் மூலம் மாதம் ரூ.30,000 வரை எளிதாகச் சம்பாதிக்க முடியும்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நம் ஊர் திருவிழாக்கள், கடற்கரைகள், மாலை நேரப் பூங்காக்கள் என மக்கள் கூடும் இடங்களில் தவிர்க்க முடியாத ஒரு உணவுப் பொருள் 'சுண்டல்'. பார்ப்பதற்கு எளிய தொழிலாகத் தோன்றினாலும், மிகக் குறைந்த முதலீட்டில், தினசரி லாபம் தரும் ஒரு அற்புதம் இது. சரியான திட்டமிடல் இருந்தால், இத்தொழில் மூலம் மாதம் ரூ.30,000 வரை மிக எளிதாகச் சம்பாதிக்க முடியும். அந்தத் தெரிந்த தொழிலில் ஒளிந்திருக்கும் தெரியாத ரகசியங்களைப் பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சுண்டல் தொழிலின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட்டே அதன் குறைந்த முதலீடுதான்.&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;ஆரம்ப முதலீடு&lt;/strong&gt;: ஒரு சிறிய தள்ளுவண்டி அல்லது எஃகு பாத்திரங்கள், அடுப்பு, மற்றும் மூலப்பொருட்கள் (கொண்டைக்கடலை, பட்டாணி, மசாலாக்கள்) என அனைத்திற்கும் சேர்த்து ரூ.5,000 முதல் ரூ.10,000 மட்டுமே தேவைப்படும்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;லாப வரம்பு&lt;/strong&gt;: 1 கிலோ சுண்டல் தயாரிக்க (மசாலா, கேஸ் செலவு உட்பட) தோராயமாக ரூ.80 முதல் ரூ.100 வரை செலவாகும். அதனைச் சிறு தட்டுகளாக விற்கும்போது ரூ.300 முதல் ரூ.400 வரை வருமானம் கிடைக்கும். அதாவது, 60% முதல் 70% வரை இதில் நிகர லாபம் மட்டுமே!&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒரு நாளைக்குச் சராசரியாக 50 தட்டுகள் (Plates) சுண்டல் விற்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஒரு தட்டின் விலை ரூ.30 என நிர்ணயித்தால்:&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;தினசரி வருமானம்: 50 x ரூ.30 = ரூ.1,500&lt;/li&gt; &lt;li&gt;தினசரி லாபம் (60%): ரூ.900&lt;/li&gt; &lt;li&gt;மாதாந்திர லாபம்: ரூ.900 x 30 நாட்கள் = ரூ.27,000 முதல் ரூ.30,000 வரை.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை என வெறும் 5 மணி நேர உழைப்பில் இந்த வருமானத்தைச் சாத்தியப்படுத்தலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சுண்டல் எல்லாரும் வைப்பார்கள், ஆனால் சில கடைகளில் மட்டுமே கூட்டம் அலைமோதும். அதற்குப் பின்னால் உள்ள ரகசியங்கள் இதோ:&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;'ரகசிய' மசாலா பொடி&lt;/strong&gt;: கடலை வேகவைப்பது பெரிய விஷயமல்ல. தனியா, சீரகம், காய்ந்த மிளகாய், மற்றும் சில மூலிகைகளை வறுத்து நீங்களாகவே தயாரிக்கும் 'ஸ்பெஷல் மசாலா' தான் வாடிக்கையாளர்களை மீண்டும் மீண்டும் வரவழைக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;டாப்பிங்ஸ் மேஜிக்&lt;/strong&gt;: சுண்டலின் மேல் தூவப்படும் துருவிய மாங்காய், கேரட், பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி மற்றும் மொறுமொறுப்பான ஓமப்பொடி அல்லது சுடச்சுட சுண்டல் மசாலா நீர் ஊற்றித் தருவது சுவையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பல்வகைத் தன்மை&lt;/strong&gt;: வெறும் வெள்ளைக்கொண்டைக் கடலையோடு நிறுத்தாமல், பச்சைப்பட்டாணி, தட்டைப்பயறு, வேர்க்கடலை, மற்றும் காராமணி என தினமும் ஒரு ஸ்பெஷல் சுண்டல் அறிமுகப்படுத்த வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;ul&gt; &lt;li&gt;இடம்: மாலை நேரத்தில் மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்கள், பூங்காக்கள், பள்ளிக்கூட/கல்லூரி வளாகங்கள் அல்லது திரையரங்கு அருகில் கடையை அமைக்க வேண்டும்.&lt;/li&gt; &lt;li&gt;சுத்தம்: இன்றைய காலகட்டத்தில் மக்கள் சுவையை விட சுத்தத்திற்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். கைகளில் கையுறை (Gloves), தலைக்கவசம் அணிந்து, ஈக்கள் மொய்க்காதவாறு கண்ணாடிப் பெட்டிக்குள் சுண்டலை வைத்திருப்பது உங்கள் கடையின் மதிப்பை உயர்த்தும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;img&gt;&lt;p&gt;சுண்டல் வியாபாரம் என்பது முதலீட்டில் சிறியது, ஆனால் லாபத்தில் பெரியது. &quot;தொழிலில் வெட்கப்பட ஒன்றுமில்லை&quot; என்ற மனப்பக்குவமும், வாடிக்கையாளர்களை இன்முகத்தோடு வரவேற்கும் குணமும் இருந்தால், இந்த எளிய சுண்டல் வியாபாரம் உங்களை ஒரு வெற்றிகரமான சுயதொழில் முனைவோராக மாற்றும் என்பதில் ஐயமில்லை.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/business-earn-rs-30000-per-month-selling-sundal-the-hidden-secret-of-a-profitable-low-investment-business-gy1hhmw"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Hotel Safety Tips: ஹோட்டல் ரூமில் உள்ள இந்த ஒரு பொருளை கையால் கூட தொடாதீர்கள்.! அருவருக்க வைக்கும் காரணங்கள்.! உண்மை தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/hotel-room-safety-hacks-why-experts-warn-against-using-hotel-room-kettles-shocking-reasons-you-should-know-gz9sa2i</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/hotel-room-safety-hacks-why-experts-warn-against-using-hotel-room-kettles-shocking-reasons-you-should-know-gz9sa2i</guid>
            <pubDate>Thu, 02 Jul 2026 12:27:48 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Travel Safety Tips for Tourists: ஹோட்டல் அறைகளில் வைக்கப்பட்டிருக்கும் கெட்டில்களை பயன்படுத்த வேண்டாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதற்கு பின்னால் சில அருவருப்பான காரணங்களும் உள்ளது. அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwgsvttjwcq2t518c0n1a2qv,imgname-travel-safety-tips-for-tourists-1782975425362.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Travel Safety Tips for Tourists: ஹோட்டல் அறைகளில் வைக்கப்பட்டிருக்கும் கெட்டில்களை பயன்படுத்த வேண்டாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதற்கு பின்னால் சில அருவருப்பான காரணங்களும் உள்ளது. அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நாம் அனைவருமே ஏதாவது ஒரு காரணத்திற்காக ஹோட்டல்களில் தங்கும் சூழல் ஏற்படுகிறது. சுற்றுலாத்தலங்கள், ஆன்மீகச் சுற்றுலா அல்லது வேலை விஷயமாக பிற ஊர்களுக்கு செல்லும் பொழுது அங்கு ஒரு சில நாட்கள் அறை எடுத்து தங்கும் கட்டாயம் உருவாகிறது. அந்த அறையில் உள்ள பல பொருட்களை நாம் பயன்படுத்துவோம். ஆனால் அங்கு வைக்கப்பட்டிருக்கும் கெட்டில் போன்ற பொருளை பயன்படுத்த வேண்டாம் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். அதற்கான காரணம் என்ன என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்: &amp;nbsp;&lt;/strong&gt;Hotel Safety Tips: ஹோட்டல் அறைக்குள் போனதும் பெட்டுக்கு அடியில பாட்டில உருட்டி விடுங்க! 99% பேருக்கு இந்த சேஃப்டி ட்ரிக் தெரியாது.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஹோட்டல் நிர்வாகம் தங்கும் பயணிகளுக்காக அறைகளில் பல வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கிறது. படுக்கைகள், போர்வைகள், தொலைக்காட்சி, ஏசி, நாற்காலி போன்ற வசதிகள் இருக்கும். மேலும் தேநீர் அல்லது டீ தயாரிப்பதற்கு ஒரு மின்சார கெட்டிலும் வழங்கப்பட்டிருக்கும். குளிர் பிரதேசங்களில் உள்ள அறைகளில் கட்டாயம் இது இருக்கும். பல முன்னணி ஹோட்டல்களிலும் இந்த கெட்டில் இருப்பதை நம்மால் காண முடியும். இதை பயன்படுத்தி தண்ணீர் சுட வைப்பது, தேநீர் தயாரிப்பது, காபி போடுவது போன்றவற்றை எளிதாக செய்ய முடியும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்:&amp;nbsp;&lt;/strong&gt; Mutton Curry: மட்டன் பஞ்சு மாதிரி வேகணுமா? இந்த ஒரு ட்ரிக் மட்டும் பண்ணுங்க.! ஹோட்டல் டேஸ்ட்ல வரும்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆனால் இந்த கெட்டில்களை பயன்படுத்துவதற்கு ஒரு முறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும் என ஹோட்டல் நன்னடத்தை நிபுணரான வில்லியம் ஹான்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹோட்டல் அறையில் வைக்கப்பட்டுள்ள கெட்டிலை பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல என்று கூறியுள்ள அவர், நாம் எதிர்பாராத நோக்கங்களுக்காக பலரும் கெட்டிலை பயன்படுத்துவதாக கூறியிருக்கிறார். ஒரு அறிக்கையின் படி பலர் ஹோட்டல் கெட்டில்களை தண்ணீர் கொதிக்க வைக்க மட்டுமல்லாமல், உள்ளாடைகள் போன்ற சிறிய பொருட்களை துவைக்கவும் பயன்படுத்துவதாக அவர் கூறியுள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்: &amp;nbsp;&lt;/strong&gt;Water Bottle: வாட்டர் பாட்டிலில் இந்த கோடுகள் ஏன் இருக்கு? இது வெறும் டிசைன் இல்ல, செம இன்ஜினியரிங் ட்ரிக்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒரு கணக்கெடுப்பில் 23 சதவீத மக்கள் தங்கள் உள்ளாடைகளை ஹோட்டல் கெட்டிலில் துவைப்பதை ஒப்புக்கொண்டுள்ளதாகவும், குழந்தைகளுக்கான உள்ளாடைகள் மற்றும் சிறிய துணிகளையும் கெட்டிலைப் பயன்படுத்தி துவைப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இது போன்ற காரணங்கள் தெரிய வந்த பின்னர் ஹோட்டல் கெட்டில்களை முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் பயன்படுத்த வேண்டாம் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். கெட்டிலை பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டால் அதில் தண்ணீரை நிரப்பி ஒரு முறைக்கு இருமுறை கொதிக்க வைத்து அதை ஊற்றிவிட்டு புதிய தண்ணீர் கொண்டு அலசி அதன் பின்னரே பயன்படுத்த வேண்டும் என்று வில்லியம் கூறுகிறார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்: &amp;nbsp;&lt;/strong&gt;Fun Facts: டைப்-சி சார்ஜரில் உள்ள 'C'-க்கு என்ன அர்த்தம்? 90% பேருக்கு இது தெரியாது.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எல்லா ஹோட்டல்களும் ஒரே மாதிரியானவை கிடையாது. பெரும்பாலான ஹோட்டல்கள் தங்கள் அறைகளை தவறாமல் சுத்தம் செய்கின்றனர். கெட்டில் போன்ற உபகரணங்களை நன்கு கழுவி பராமரிக்கின்றனர். இருப்பினும் ஹோட்டல்களில் தங்கும் பொழுது கூடுதல் முன்னெச்சரிக்கை எடுக்க வேண்டியது அவசியம். கெட்டிலை பயன்படுத்துவதற்கு முன்னர் அதை முழுமையாக சுத்தம் செய்து, ஒரு முறை கொதிக்க வைத்து அந்த தண்ணீரை ஊற்றிவிட்டு, பின்னர் பயன்படுத்துவது பாதுகாப்பானது. ஹோட்டல்களுக்கு செல்லும் பொழுது இதை மறக்காமல் நினைவில் கொள்ளுங்கள்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/hotel-room-safety-hacks-why-experts-warn-against-using-hotel-room-kettles-shocking-reasons-you-should-know-gz9sa2i"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Indian Food Ban: அட நம்ம ஊரு சமோசா, நெய் எல்லாம் வெளிநாட்டுல தடையா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/webstories/life-style/popular-indian-foods-that-are-banned-in-other-countries-h53vt66</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/webstories/life-style/popular-indian-foods-that-are-banned-in-other-countries-h53vt66</guid>
            <pubDate>Thu, 02 Jul 2026 16:17:33 +0530</pubDate>
            <description><![CDATA[உடல்நல அபாயங்கள், கலாச்சார காரணங்கள் அல்லது இறக்குமதி விதிமுறைகள் காரணமாக பல பிரபலமான இந்திய உணவுகள் வெளிநாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன. இந்த சர்ச்சைக்குரிய பட்டியலில் இடம்பிடித்துள்ள உணவுகள் எவை என்று இங்கே பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j853151z7aqq2zd66z9n56b7,imgname-fotojet--90-.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <category>business</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/webstories/life-style/popular-indian-foods-that-are-banned-in-other-countries-h53vt66"/>
        </item>
        <item>
            <title><![CDATA[புனேயில் பிரம்மாண்டமான புதிய அலுவலகத்தைத் திறந்தது அப்னாரூபி ஃபின் இந்தியா மற்றும் MYSP என்டர்பிரைசஸ் குழுமம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/business/apnarupee-fin-india-and-mysp-open-new-corporate-office-in-pune-articleshow-koxqy5t</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/business/apnarupee-fin-india-and-mysp-open-new-corporate-office-in-pune-articleshow-koxqy5t</guid>
            <pubDate>Thu, 02 Jul 2026 15:02:39 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;புனேயில் அப்னாரூபி ஃபின் இந்தியா மற்றும் MYSP என்டர்பிரைசஸ் குழுமத்தின் 10,000 ச.அடி அதிநவீன கார்ப்பரேட் அலுவலகம் திறக்கப்பட்டது. 2008 முதல் நிதித்துறையில் முன்னணியில் உள்ள இந்நிறுவனம், அனைத்து வகை கடன்கள் மற்றும் 57 காப்பீட்டு சேவைகளை ஒரே இடத்தில் வழங்குகிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwh2r94pwq0m9paxjpjf22zx,imgname-whatsapp-image-2026-07-02-at-1.01.25-pm-16x9-1782984746134.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;h2&gt;அப்னாரூபி ஃபின் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் MYSP என்டர்பிரைசஸ் குழுமம் புனேயில் 10,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள நவீன கார்ப்பரேட் அலுவலகத்தை பிரம்மாண்டமாக திறந்து வைத்தது; 2008 முதல் இந்தியா முழுவதும் &lsquo;ஆல் இந்தியா டாப்&rsquo; இடங்களைத் தொடர்ந்து பெற்று வரும் முன்னணி நிதிச் சேவை நிறுவனம்&lt;/h2&gt;&lt;p&gt;புனே: இந்தியாவின் முன்னணி நிதிச் சேவை நிறுவனங்களில் ஒன்றான அப்னாரூபி ஃபின் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் MYSP என்டர்பிரைசஸ் குழுமம் புனேயின் சிவாஜிநகர் பகுதியில் உள்ள சிட்டி மாலில் தங்களின் புதிய, அதிநவீன கார்ப்பரேட் அலுவலகத்தை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தது. மெட்ரோ வசதியுடன் நேரடி இணைப்பைக் கொண்ட முக்கிய இடத்தில் அமைந்துள்ள இந்த 10,000 சதுர அடி பரப்பளவு கொண்ட அலுவலகம் உயர்தர உள்கட்டமைப்புடன் வடிவமைக்கப்பட்டு, 207-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றக்கூடிய அமர்வு வசதியைக் கொண்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;நம்பிக்கையின் பாரம்பரியம் மற்றும் &lsquo;ஆல் இந்தியா டாப்&rsquo; சாதனைகள்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த குழுமம், இந்திய நிதித் துறையில் 18 ஆண்டுகளாக சிறப்பான பயணத்தை மேற்கொண்டு வருகிறது. 75-க்கும் மேற்பட்ட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் NBFC நிறுவனங்களுடன் வலுவான கூட்டாண்மையை உருவாக்கியுள்ள அப்னாரூபி ஃபின் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் MYSP என்டர்பிரைசஸ் குழுமம், பல்வேறு வங்கி சேனல்களில் கடன் விநியோகம் மற்றும் வணிக அளவின் அடிப்படையில் தொடர்ந்து &lsquo;ஆல் இந்தியா டாப்&rsquo; இடங்களைப் பெற்று வருகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஒரே இடத்தில் அனைத்து வகையான கடன்களும் 57 காப்பீட்டு நிறுவனங்களின் சேவைகளும்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்த புதிய கார்ப்பரேட் அலுவலகம், தனிநபர் மற்றும் வணிக நிதித் தேவைகளுக்கான அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வீட்டுக் கடன், சொத்தின் மீதான கடன் (LAP), வணிகக் கடன், கார் கடன், கல்விக் கடன், இயந்திரக் கடன், தனிநபர் கடன், தொழில் கடன், CC/OD வசதி மற்றும் MSME நிதி உதவி உள்ளிட்ட பல்வேறு கடன் சேவைகள் இங்கு வழங்கப்படுகின்றன.&lt;/p&gt;&lt;p&gt;இதற்கு மேலாக, நிறுவனம் காப்பீட்டு துறையிலும் தனது சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது. Altsure Insurance Brokers Private Limited நிறுவனத்தின் கார்ப்பரேட் புரோக்கிங் உரிமத்தின் கீழ் மற்றும் Let&rsquo;s Insurance என்ற அதிகாரப்பூர்வ பிராண்டின் மூலம், இந்தியாவின் 57 முன்னணி காப்பீட்டு நிறுவனங்களின் மருத்துவக் காப்பீடு, மோட்டார் காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு காப்பீட்டு தயாரிப்புகள் ஒரே இடத்தில் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு முழுமையான வெளிப்படைத்தன்மை, அதிக தேர்வுகள் மற்றும் சிறந்த சேவைகள் கிடைக்கின்றன.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;முக்கிய வங்கி அதிகாரிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்பு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்த பிரம்மாண்ட தொடக்க விழாவில் பல்வேறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். LIC Housing Finance நிறுவனத்தின் சார்பில் பிராந்திய மேலாளர் திரு. விகாஸ் அவஸ்தி, DRM திரு. தேவாங் நவ்லே, DRM திரு. ஸ்ரீபதி, கிளஸ்டர் ஹெட் திரு. மனீஷ் ஷர்மா மற்றும் ஏரியா மேலாளர்கள் திரு. ஸ்ரீரங் ராஜஹன்ஸ், திரு. யுவராஜ் ஜாதவ், திரு. மந்தார் பார்கவே மற்றும் திரு. பிஜோய் ராய் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், பல்வேறு பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் மூத்த நிர்வாகிகளும் MYSP என்டர்பிரைசஸ் குழுமத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;தொலைநோக்கு பார்வையுடைய தலைமைத்துவம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்த நிகழ்ச்சியை நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் திரு. சச்சின் பாம்குடே மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. பிரவீண் பாம்குடே தலைமையேற்று நடத்தினர். இயக்குநர் குழுவினரும் மூத்த நிர்வாகிகளும் சிறப்பு விருந்தினர்களை அன்புடன் வரவேற்றனர். இதில் திரு. கோவிந்த் குல்கர்ணி, திரு. சேதன் ராஜ்புத், திரு. ராம் ஜாதவ், திரு. சஷிகாந்த் தமங்கர், திரு. தத்தா பாம்குடே, திரு. உல்ஹாஸ் ஹாகே, திருமதி மம்தா பிரஜாபதி, திரு. சதீஷ் பாம்குடே, திரு. சுதீர் ஜான்ஜே, திரு. நீரஜ் தோனே, திரு. அதுல் வௌத்ரே, திரு. நிகில் கனடே, திரு. கோரக் தோம்பரே, திரு. நிகில் நிம்போர்கர், திரு. அபிஜித் பசாரே, திருமதி சுமிதி அகர்வால் மற்றும் திரு. ஷஹாஜி ஆகியோர் இடம்பெற்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;DSA கூட்டாளர்களும் பணியாளர்களும் நிறுவனத்தின் உண்மையான தூண்கள்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, ஹைதராபாத், டெல்லி, நாசிக், கோலாப்பூர், நாக்பூர், போபால் மற்றும் ஜெய்ப்பூர் உள்ளிட்ட இந்தியாவின் பல முக்கிய நகரங்களில் இருந்து ஏராளமான B2B DSA (Direct Selling Agent) கூட்டாளர்கள் கலந்து கொண்டனர்.&lt;/p&gt;&lt;p&gt;இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய நிறுவனர் திரு. சச்சின் பாம்குடே, &ldquo;எங்கள் DSA கூட்டாளர்கள்தான் இந்த நிறுவனத்தின் உண்மையான பலம்.&rdquo; என்று கூறினார். மேலும், நிறுவனத்தின் அனைத்து பணியாளர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து, அவர்களின் கடின உழைப்பு, நேர்மை மற்றும் அர்ப்பணிப்புதான் நிறுவனத்தின் இந்தியா முழுவதும் ஏற்பட்ட வேகமான வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என்று குறிப்பிட்டார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/business/apnarupee-fin-india-and-mysp-open-new-corporate-office-in-pune-articleshow-koxqy5t"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Bangalore Biryani : பிரியாணி பிரியர்களின் சொர்க்கம்! பெங்களூருவின் டாப் 5 பிரியாணி கடைகள்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/best-biryani-places-to-visit-in-bangalore-lbqid5r</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/best-biryani-places-to-visit-in-bangalore-lbqid5r</guid>
            <pubDate>Thu, 02 Jul 2026 13:11:09 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Bangalore Biryani : பிரியாணி பிரியர்களுக்கு பெங்களூரு மாநகரம் ஒரு சொர்க்கம் என்றே கூறலாம். ஆந்திரா காரசாரம் முதல் பாரம்பரிய தொன்னே பிரியாணி வரை, பெங்களூருவில் நீங்கள் கண்டிப்பாக மிஸ் செய்யக் கூடாத 5 பிரசித்தி பெற்ற பிரியாணி உணவகங்களின் பட்டியல் இதோ!&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwgvq370cnqjq650cka2k4jr,imgname-chatgpt-image-jul-2--2026--12-58-58-pm-1782977367264.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Bangalore Biryani : பிரியாணி பிரியர்களுக்கு பெங்களூரு மாநகரம் ஒரு சொர்க்கம் என்றே கூறலாம். ஆந்திரா காரசாரம் முதல் பாரம்பரிய தொன்னே பிரியாணி வரை, பெங்களூருவில் நீங்கள் கண்டிப்பாக மிஸ் செய்யக் கூடாத 5 பிரசித்தி பெற்ற பிரியாணி உணவகங்களின் பட்டியல் இதோ!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;காரசாரமான ஆந்திரா ஸ்டைல் பிரியாணிக்கு இந்த உணவகம் மிகவும் பிரபலமானது. நாவில் எச்சில் ஊறவைக்கும் காரமான உணவுகளை விரும்புபவர்கள் கண்டிப்பாக இங்கு ஒருமுறை சாப்பிட வேண்டும்.&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;முக்கிய டிஷ்: &lt;/strong&gt;சிக்கன் போனலெஸ் 555 பிரியாணி (Chicken Boneless 555 Biryani), ஆந்திரா ஸ்டைல் ஸ்பைசி பிரியாணிகள்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;இருப்பிடம்: &lt;/strong&gt;பெங்களூரு நகரம் முழுவதும் இதன் கிளைகள் உள்ளன.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;நேரம்: &lt;/strong&gt;மதியம் 11:30 முதல் இரவு 11:00 மணி வரை.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;img&gt;&lt;p&gt;பெங்களூருவின் பாரம்பரிய சுவையை அனுபவிக்க நினைப்பவர்கள், ஜெயநகரில் உள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஹோட்டலுக்குச் செல்லலாம். இங்கு மந்தாரை இலையால் செய்யப்பட்ட தொன்னையில் (Donne) வழங்கப்படும் பிரியாணி உலகப் பிரசித்தி பெற்றது.&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;முக்கிய டிஷ்:&lt;/strong&gt; சிக்கன் அல்லது மட்டன் தொன்னே பிரியாணி (Donne Biryani).&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;இருப்பிடம்:&lt;/strong&gt; ஜெயநகர் (Jayanagar).&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;நேரம்: &lt;/strong&gt;காலை 08:00 மணி முதல் அதிகாலை 03:30 மணி வரை (திங்கட்கிழமைகளில் விடுமுறை).&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;img&gt;&lt;p&gt;இரவு நேரங்களில் பசி எடுத்தால் பெங்களூருவாசிகளின் முதல் சாய்ஸ் எம்பயர் தான். நறுமணம் மிக்க ஹைதராபாத் மற்றும் வட இந்திய பிரியாணி வகைகளுக்கு இந்த உணவகம் பெயர் பெற்றது.&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;முக்கிய டிஷ்:&lt;/strong&gt; கிரில்டு சிக்கன் பிரியாணி (Grilled Chicken Biryani) மற்றும் மட்டன் பிரியாணி.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;இருப்பிடம்:&lt;/strong&gt; நகரின் முக்கிய பகுதிகளில் பல கிளைகள் செயல்பட்டு வருகின்றன.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;நேரம்:&lt;/strong&gt; காலை 11:00 மணி முதல் அதிகாலை 02:30 மணி வரை.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;img&gt;&lt;p&gt;பெங்களூரு பிரியாணி பிரியர்களின் 'ஆல்-டைம் ஃபேவரிட்' ஸ்பாட் இது. அசைவ பிரியர்கள் மட்டுமின்றி, சைவ பிரியர்களுக்கும் ஏற்ற பிரமாதமான பிரியாணி தேர்வுகள் இங்கு கிடைக்கின்றன.&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;முக்கிய டிஷ்:&lt;/strong&gt; மேகனா ஸ்பெஷல் பிரியாணி (Meghana Special), போனலெஸ் சிக்கன் பிரியாணி, மற்றும் சைவ பிரியர்களுக்கான மேகனா ஸ்பெஷல் வெஜிடபிள் பிரியாணி.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;இருப்பிடம்: &lt;/strong&gt;நகரம் முழுவதும் பரவலாக கிளைகள் உள்ளன.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;நேரம்: &lt;/strong&gt;தினமும் மதியம் 11:30 முதல் இரவு 01:00 மணி வரை.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;இதையும் படிங்க : Chanakya Rahasya: பிசினஸ் உலகம் அறியாத சாணக்கியரின் 8 ரகசியங்கள்! கோடிகளில் புரள மகா வியூகம்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிரியாணி என்றாலே ஹைதராபாத் தம் பிரியாணிதான் என்று நினைப்பவர்களுக்கான சரியான 'பாரடைஸ்' இது. பாஸ்மதி அரிசியின் நறுமணமும், மசாலாக்களின் அசல் சுவையும் இவர்களின் தனிச்சிறப்பு.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;முக்கிய டிஷ்: &lt;/strong&gt;ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி, ஹைதராபாத் மட்டன் தம் பிரியாணி. அத்துடன் பிரத்யேகமாக 'குட்டி வங்காயா பிரியாணி' (Gutti Vankaya Biryani - கத்தரிக்காய் பிரியாணி).&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இருப்பிடம்: &lt;/strong&gt;ஜே.பி நகர், எச்.எஸ்.ஆர் லேஅவுட் உட்பட நகரின் பல பகுதிகளில் கிளைகள் உள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;நேரம்: &lt;/strong&gt;காலை 11:00 மணி முதல் இரவு 11:00 அல்லது நள்ளிரவு 12:00 மணி வரை (கிளைகளைப் பொறுத்து மாறுபடும்).&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;உங்களுக்குத் தெரியுமா? :&lt;/strong&gt; பெங்களூருவில் உள்ள சிவாஜி மிலிட்டரி ஹோட்டல் அதிகாலை 8 மணிக்கே திறக்கப்பட்டு, காலை உணவாகவே பிரியாணி பரிமாறப்படும் ஒரு அசல் பாரம்பரியத்தை இன்றளவும் பின்பற்றி வருகிறது!&lt;/p&gt;&lt;p&gt;Petrol Bikes : ஏப்ரல் 2028 முதல் பெட்ரோல் பைக்குகளுக்கு தடையா? அரசு எடுத்த அதிரடி முடிவு! எங்க தெரியுமா?&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/best-biryani-places-to-visit-in-bangalore-lbqid5r"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Post Office Scheme: ஒரே முதலீட்டில் ரூ.5 லட்சம் வரை லாபம்! போஸ்ட் ஆபீஸ் சூப்பர் திட்டம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/post-office-time-deposit-scheme-earn-over-5-lakh-with-smart-investing-lw7xv0w</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/post-office-time-deposit-scheme-earn-over-5-lakh-with-smart-investing-lw7xv0w</guid>
            <pubDate>Fri, 03 Jul 2026 13:51:39 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Post Office Scheme: போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டம் மூலம் உங்கள் முதலீட்டுக்கு சூப்பரான வட்டி கிடைக்கும். இந்த பாதுகாப்பான அரசு திட்டத்தில் ரூ. 5 லட்சத்துக்கும் மேல் லாபம் பார்க்கும் வாய்ப்பு உள்ளது. இந்த சூப்பர் திட்டத்தின் முழு விவரங்கள் இதோ.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kfn5b5q4ar0301cdr8rpmpyy,imgname-post-office--18--1769163036388.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Post Office Scheme: போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டம் மூலம் உங்கள் முதலீட்டுக்கு சூப்பரான வட்டி கிடைக்கும். இந்த பாதுகாப்பான அரசு திட்டத்தில் ரூ. 5 லட்சத்துக்கும் மேல் லாபம் பார்க்கும் வாய்ப்பு உள்ளது. இந்த சூப்பர் திட்டத்தின் முழு விவரங்கள் இதோ.&lt;/p&gt;&lt;img&gt;கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்ய போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் சிறந்த வழி. 'போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் ஸ்கீம்' திட்டத்தில் ஒரே ஒரு முறை முதலீடு செய்து, வட்டி மூலமாகவே ரூ. 5 லட்சத்துக்கும் அதிகமாக சம்பாதிக்க சூப்பர் வாய்ப்பு உள்ளது.&lt;img&gt;&lt;p&gt;போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் முதலீடு செய்வதன் மிகப்பெரிய நன்மை, அதன் பாதுகாப்புதான். இதில் போடும் ஒவ்வொரு ரூபாய்க்கும் அரசாங்கமே கேரண்டி தருகிறது. அதனால் உங்கள் பணம் போய்விடுமோ என்ற பயம் தேவையில்லை. மார்க்கெட் ரிஸ்க் இல்லாததால், இது ஒரு சிறந்த முதலீட்டு வழியாகும்.&lt;/p&gt;&lt;p&gt;மகாலட்சுமி ராஜயோகம்! இந்த 2 ராசிக்காரர்களுக்கு பணம், அதிர்ஷ்டம் குவியும்.. லிஸ்ட் உள்ளே&lt;/p&gt;&lt;img&gt;இந்த டைம் டெபாசிட் திட்டத்தில் 1, 2, 3 மற்றும் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யலாம். 1 ஆண்டுக்கு 6.9%, 2 ஆண்டுகளுக்கு 7.0%, 3 ஆண்டுகளுக்கு 7.1% மற்றும் 5 ஆண்டுகளுக்கு அதிகபட்சமாக 7.5% வட்டி கிடைக்கிறது. இது ஒரு 'ஒன் டைம் இன்வெஸ்ட்மென்ட்' பிளான்.&lt;img&gt;இந்தத் திட்டத்தில் நீங்கள் ரூ. 12 லட்சத்தை 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், 7.5% வட்டி விகிதத்தில் உங்கள் மொத்தத் தொகை ரூ. 17,39,938 ஆக மாறும். இதில் வட்டி மூலம் மட்டுமே உங்களுக்கு ரூ. 5,39,938 லாபம் கிடைக்கும். இதுவே ரூ. 4.5 லட்சம் முதலீடு செய்தால், வட்டி லாபம் ரூ. 2,02,477.&lt;img&gt;நீங்கள் 3 ஆண்டுகளில் ரூ. 2 லட்சம் லாபம் பார்க்க விரும்பினால், ரூ. 10 லட்சம் முதலீடு செய்ய வேண்டும். 7.1% வட்டி விகிதத்தில், 3 ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் மொத்தத் தொகை ரூ. 12,35,075 ஆக இருக்கும். இதில் வட்டி லாபம் மட்டும் ரூ. 2,35,075. உங்கள் நிதி இலக்குக்கு ஏற்ப கால அளவைத் தேர்ந்தெடுக்கலாம்.]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/post-office-time-deposit-scheme-earn-over-5-lakh-with-smart-investing-lw7xv0w"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Crorepati Plan : மாசம் ₹5000 போதும்...நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்! எப்படி தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/how-to-become-a-crorepati-by-investing-5000-rupees-a-month-mr0ucdb</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/how-to-become-a-crorepati-by-investing-5000-rupees-a-month-mr0ucdb</guid>
            <pubDate>Thu, 02 Jul 2026 13:29:15 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Crorepati Plan : கோடீஸ்வரர் ஆகணும்னு எல்லாருக்கும் ஆசை இருக்கும். ஆனா, அதுக்கு எங்க முதலீடு செய்யணும்னுதான் பலருக்கும் தெரியாது. மாசம் வெறும் 5000 ரூபாய் முதலீடு செஞ்சே கோடீஸ்வரர் ஆக முடியும். அதுக்கான சிம்பிள் கணக்கைப் பார்க்கலாம் வாங்க.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwgx6w794nzydcfat1a2ccmq,imgname-chatgpt-image-jul-2--2026--01-24-27-pm-1782978932969.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Crorepati Plan : கோடீஸ்வரர் ஆகணும்னு எல்லாருக்கும் ஆசை இருக்கும். ஆனா, அதுக்கு எங்க முதலீடு செய்யணும்னுதான் பலருக்கும் தெரியாது. மாசம் வெறும் 5000 ரூபாய் முதலீடு செஞ்சே கோடீஸ்வரர் ஆக முடியும். அதுக்கான சிம்பிள் கணக்கைப் பார்க்கலாம் வாங்க.&lt;/p&gt;&lt;img&gt;பணம் சம்பாதிச்சு கோடீஸ்வரர் ஆகணும்னு எல்லாருக்கும் ஒரு கனவு இருக்கும். சிலர் இதை சாதிப்பாங்க, ஆனா சிலர் எவ்வளவு சம்பளம் வந்தாலும் கடன்லதான் இருப்பாங்க. வர்ற சம்பளத்தை பேங்க் அக்கவுன்ட்ல சும்மா வெச்சிருந்தா பணம் சேருமே தவிர, வளராது.&lt;img&gt;உதாரணமா, நீங்க 10 வருஷமா ஒரு கம்பெனியில வேலை செய்றீங்க. மாசம் ₹30,000 சம்பளம். எல்லா செலவும் போக மாசம் ₹10,000 சேமிக்கிறீங்க. ஆனா, இந்த பணம் பேங்க்ல சும்மா இருந்தா, அது சேமிப்பு மட்டும்தான், வளர்ச்சி இல்லை. இதே பணத்தை SIP-ல போட்டிருந்தா, இன்னைக்கு பல மடங்கு பெருகியிருக்குமே?&lt;img&gt;இந்த கணக்கைத் தெரிஞ்சுகிட்டா, நீங்க மாசம் ₹5000 முதலீடு செஞ்சே கோடீஸ்வரர் ஆகிடலாம். ஆனா, இதுக்கு நீங்க எந்த முதலீட்டுத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கிறீங்க, எத்தனை வருஷம் முதலீடு செய்றீங்கங்கிறது ரொம்ப முக்கியம்.&lt;img&gt;மியூச்சுவல் ஃபண்ட் SIP-ல் மாசம் ₹5,000 முதலீடு செஞ்சு, வருஷத்துக்கு சராசரியா 12% வருமானம் கிடைச்சா, சுமார் 25.5 வருஷத்துல உங்ககிட்ட ₹1 கோடிக்கு மேல இருக்கும். இதுல உங்க மொத்த முதலீடு ₹15.3 லட்சம்தான். மீதி எல்லாமே வட்டி மற்றும் கூட்டு வட்டியோட (Compounding) மேஜிக்!&lt;img&gt;தங்கமும் ஒரு நல்ல முதலீடுதான். மாசம் ₹5,000 தங்கத்துல முதலீடு செஞ்சா, வருஷத்துக்கு சராசரியா 10% வருமானம் கிடைக்க வாய்ப்பிருக்கு. ஆனா, இதுல ₹1 கோடி சேர்க்கிறதுக்கு சுமார் 29 வருஷம் வரைக்கும் ஆகலாம்.&lt;img&gt;&lt;p&gt;பொது வருங்கால வைப்பு நிதினு (PPF) சொல்லப்படுற திட்டத்துல, வருஷத்துக்கு ₹60,000 (மாசம் ₹5,000) முதலீடு செஞ்சா, தற்போதைய வட்டி விகிதமான 7.1% தொடர்ந்தா, நீங்க ₹1 கோடி சேர்க்கிறதுக்கு 37 வருஷம் ஆகலாம்.&lt;/p&gt;&lt;p&gt;Chanakya Rahasya: பிசினஸ் உலகம் அறியாத சாணக்கியரின் 8 ரகசியங்கள்! கோடிகளில் புரள மகா வியூகம்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;ul&gt; &lt;li&gt;SIP: அதிக வருமானம் கிடைக்க வாய்ப்பு இருக்கு, ஆனா சந்தை அபாயங்களும் உண்டு.&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;தங்கம்: பணவீக்கத்துக்கு எதிரா ஒரு பாதுகாப்பு. ஆனா, வளர்ச்சி மெதுவா இருக்கும். சில சமயம் விலை ஏறும், சில சமயம் திடீர்னு சரியும். சமீபத்துல கூட தங்க விலை ₹50,000-க்கு மேல குறைஞ்சதை நீங்க கவனிச்சிருக்கலாம்.&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;PPF: அரசாங்க ஆதரவு இருக்கிறதால பாதுகாப்பான திட்டம், ஆனா வருமானம் குறைவு.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;எச்சரிக்கை : இந்தக் கணக்குகள் எல்லாமே ஒரு தோராயமான வருடாந்திர வருமானத்தின் அடிப்படையிலானது. உண்மையான வருமானம் சந்தை நிலவரம் மற்றும் வட்டி விகித மாற்றங்களைப் பொறுத்து மாறுபடலாம். முதலீடு செய்றதுக்கு முன்னாடி, உங்க நிதி இலக்குகளைப் பொறுத்து ஒரு நல்ல முடிவை எடுங்க.&lt;/p&gt;&lt;p&gt;EPFO : PF பணம் எடுப்பவரா நீங்க? புதியவிதியைத் தெரியாமல் அப்ளை பண்ணாதீங்க!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/how-to-become-a-crorepati-by-investing-5000-rupees-a-month-mr0ucdb"/>
        </item>
        <item>
            <title><![CDATA[KYC என்றால் என்ன? KYC மோசடிகளில் இருந்து தப்பிப்பது எப்படி? நிதி நிபுணர்கள் கூறும் எச்சரிக்கை குறிப்புகள்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/what-is-kyc-how-to-avoid-kyc-frauds-financial-experts-share-essential-safety-tips-rbzu8mz</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/what-is-kyc-how-to-avoid-kyc-frauds-financial-experts-share-essential-safety-tips-rbzu8mz</guid>
            <pubDate>Thu, 02 Jul 2026 12:47:07 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;நிதி மோசடிகளைத் தடுத்து, வங்கி அமைப்பைப் பாதுகாக்கும் கே.ஒய்.சி (KYC) முறையின் முக்கியத்துவத்தை இக்கட்டுரை விளக்குகிறது. கே.ஒய்.சி., சி.கே.ஒய்.சி., இ-கே.ஒய்.சியின் அவசியத்தை இது விரிவாக எடுத்துரைக்கிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwgt7j14yxtd28r4raj7y9kt,imgname-chatgpt-image-jul-2--2026--12-17-36-pm--2--1782975809571.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;நிதி மோசடிகளைத் தடுத்து, வங்கி அமைப்பைப் பாதுகாக்கும் கே.ஒய்.சி (KYC) முறையின் முக்கியத்துவத்தை இக்கட்டுரை விளக்குகிறது. கே.ஒய்.சி., சி.கே.ஒய்.சி., இ-கே.ஒய்.சியின் அவசியத்தை இது விரிவாக எடுத்துரைக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்றைய நவீன டிஜிட்டல் யுகத்தில், வங்கிச் சேவைகள் முதல் பங்குச்சந்தை முதலீடுகள் வரை அனைத்து நிதிசார்ந்த நடவடிக்கைகளிலும் &lsquo;கே.ஒய்.சி&rsquo; (KYC) என்ற வார்த்தை மிக முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது. சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள், போலி கணக்குகள் மூலம் நடக்கும் நிதி மோசடிகள் மற்றும் அடையாளத் திருட்டுகளைத் தடுத்து, ஒட்டுமொத்த நிதி அமைப்பையும் பாதுகாப்பாக வைத்திருப்பதே இதன் முதன்மை நோக்கமாகும். தொழில்நுட்ப வளர்ச்சியால் இந்த அடையாளச் சரிபார்ப்பு முறை பல புதிய வடிவங்களை எடுத்துள்ளது. கே.ஒய்.சி., சி.கே.ஒய்.சி., இ-கே.ஒய்.சி., வீடியோ கே.ஒய்.சி. மற்றும் மறு கே.ஒய்.சி. ஆகியவற்றுக்கு இடையேயான செயல்பாட்டு வேறுபாடுகளையும், அவற்றின் அவசியத்தையும் இக்கட்டுரையில் விரிவாகக் காண்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கே.ஒய்.சி. என்பது &quot;உங்கள் வாடிக்கையாளரை அறிந்துகொள்ளுதல்&quot; என்பதாகும். ஒரு நபர் புதிய வங்கி கணக்கு தொடங்கும்போதோ அல்லது நிதி நிறுவனங்களை அணுகும்போதோ, அவர் உண்மையானவர் தானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும் அடிப்படை நடைமுறை இதுவாகும். இதற்கு பான் கார்டு, ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் அல்லது பாஸ்போர்ட் போன்ற அரசு அங்கீகரித்த ஆவணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பாரம்பரியமாக, ஒவ்வொரு நிறுவனமும் தங்களின் தேவைக்கேற்ப வாடிக்கையாளரின் ஆவண நகல்களைப் பெற்று, தனித்தனியாக இந்தச் சரிபார்ப்பைச் செய்து தங்களின் பதிவேடுகளில் பராமரித்து வருகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒவ்வொரு முறை வெவ்வேறு நிதி நிறுவனங்களை அணுகும்போதும், தனித்தனியாக ஆவணங்களைச் சமர்ப்பித்து கே.ஒய்.சி. செய்வதால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் காலவிரயத்தையும் சிரமத்தையும் தவிர்க்கக் கொண்டுவரப்பட்டதே மத்திய கே.ஒய்.சி. (Central KYC) ஆகும். இந்த முறையில் ஒருமுறை பதிவு செய்தவுடன் வாடிக்கையாளருக்கு 14 இலக்க பிரத்யேக 'சி.கே.ஒய்.சி எண்' வழங்கப்படும். அதன் பிறகு, வேறு ஏதேனும் வங்கிக்கோ அல்லது மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்திற்கோ செல்லும்போது இந்த எண்ணை மட்டும் குறிப்பிட்டால் போதும்; சம்பந்தப்பட்ட நிறுவனம் மத்திய பதிவகத்தில் இருந்து வாடிக்கையாளரின் விவரங்களைப் பாதுகாப்பாகப் பெற்றுக் கொள்ளும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இது முழுக்க முழுக்க மின்னணு முறையில், காகிதப் பயன்பாடு இன்றி அதிவேகமாக நடைபெறும் சரிபார்ப்பு முறையாகும். இதில் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஒருமுறை கடவுச்சொல் (OTP) அல்லது வாடிக்கையாளரின் கைரேகை, விழித்திரை போன்ற பயோமெட்ரிக் (Biometric) தரவுகள் மூலம் அடையாளங்கள் சரிபார்க்கப்படுகின்றன. உடல்ரீதியான ஆவண நகல்களைச் சமர்ப்பிக்கத் தேவையில்லை என்பதால், சில நிமிடங்களிலேயே கணக்குகள் உடனடியாகச் செயல்படத் தொடங்கிவிடுவது இதனுடைய மிகப்பெரிய நன்மையாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தொழில்நுட்ப முன்னேற்றத்தால் வாடிக்கையாளர்கள் வங்கிக் கிளைகளுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியத்தைக் குறைப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட அதிநவீன வசதி இதுவாகும். இந்த முறையில், வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி ஒருவர் வாடிக்கையாளருடன் நேரடி வீடியோ அழைப்பு (Video Call) மூலம் உரையாடுவார். அப்போது வாடிக்கையாளரின் அசல் ஆவணங்கள் (பான், ஆதார் போன்றவை) கேமரா மூலம் சரிபார்க்கப்பட்டு, அவரது நேரடிப் புகைப்படமும், டிஜிட்டல் கையொப்பமும் பதிவு செய்யப்படும். வீட்டில் இருந்தபடியே கணக்கு தொடங்க இது பெரிதும் உதவுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒருமுறை கே.ஒய்.சி. செய்துவிட்டால் அது வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் என்று நினைப்பது தவறாகும். காலப்போக்கில் ஒரு நபரின் இருப்பிட முகவரி, மொபைல் எண், தொழில் அல்லது வருமானம் மாற வாய்ப்புள்ளது. எனவே, நிதி நிறுவனங்கள் தங்களிடம் உள்ள வாடிக்கையாளரின் தகவல்களைப் புதுப்பிக்க மேற்கொள்ளும் நடவடிக்கையே 'மறு கே.ஒய்.சி' ஆகும். வாடிக்கையாளரின் கணக்கு செயல்பாடுகள் மற்றும் 'ரிஸ்க்' (Risk Profile) தன்மையைப் பொறுத்து குறைந்த ரிஸ்க் உள்ளவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கும், நடுத்தர ரிஸ்க் உள்ளவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கும், அதிக ரிஸ்க் உள்ளவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் இந்த விபரங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப கே.ஒய்.சி. நடைமுறைகள் இன்று மிகவும் எளிமையாகவும் விரைவாகவும் மாற்றப்பட்டிருந்தாலும், அவற்றின் அடிப்படை நோக்கம் நமது கணக்குகளையும், நாட்டின் பொருளாதாரத்தையும் நிதி மோசடிகளில் இருந்து பாதுகாப்பது மட்டுமேயாகும். வாடிக்கையாளர்கள் தங்களுடைய ஆவண விவரங்களைச் சரியாகப் பராமரிப்பதோடு, கே.ஒய்.சி. புதுப்பித்தல் என்ற பெயரில் வரும் போலி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் (Links) குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். வங்கி அதிகாரிகள் கேட்கும் முறையான ஆவணங்களை உரிய நேரத்தில் சமர்ப்பித்து, மறு கே.ஒய்.சி. போன்ற நடைமுறைகளைத் தாமதமின்றி முடிப்பதன் மூலம், நமது நிதிச் சேவைகளை எந்தவொரு தடையுமின்றி பாதுகாப்பாகப் பயன்படுத்த முடியும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/what-is-kyc-how-to-avoid-kyc-frauds-financial-experts-share-essential-safety-tips-rbzu8mz"/>
        </item>
        <item>
            <title><![CDATA[மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்! 8.2% வட்டியுடன் SCSS சேமிப்பு திட்டம்! புதிய 5 ரூல்ஸ் தெரிஞ்சிக்கோங்க!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/scss-new-rules-2026-5-big-changes-for-senior-citizens-savings-scheme-effective-from-july-1-s0qp283</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/scss-new-rules-2026-5-big-changes-for-senior-citizens-savings-scheme-effective-from-july-1-s0qp283</guid>
            <pubDate>Thu, 02 Jul 2026 07:37:23 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;SCSS New Rules 2026: மூத்த குடிமக்களுக்கு 8.2% வட்டி வழங்கும் SCSS சேமிப்பு திட்டத்தில் ஜூலை 1 ஆம் தேதி முதல் 5 புதிய ரூல்ஸ் அமலுக்கு வந்துள்ளன. அது என்னென்ன விதிகள்? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwg90e3s8192eedn1mkftazc,imgname-scss-new-rules-2026-1782957750393.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;SCSS New Rules 2026: மூத்த குடிமக்களுக்கு 8.2% வட்டி வழங்கும் SCSS சேமிப்பு திட்டத்தில் ஜூலை 1 ஆம் தேதி முதல் 5 புதிய ரூல்ஸ் அமலுக்கு வந்துள்ளன. அது என்னென்ன விதிகள்? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மூத்த குடிமக்கள் நலன் பயக்கும் வகையில் பல்வேறு சேமிப்புத் திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அந்த வகையில் மத்திய அரசால் ஆதரிக்கப்படும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS), ஓய்வு பெற்றவர்களுக்குப் பாதுகாப்பான மற்றும் நிலையான வருமானத்தை வழங்கும் சிறந்த முதலீட்டுத் திட்டமாகும். 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் இத்திட்டத்திற்கான வட்டி விகிதம் 8.2% ஆக உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் அதிகபட்சம் ரூ.30 லட்சம் வரை இதில் முதலீடு செய்யலாம். 5 ஆண்டுகள் முதிர்வுக் காலம் கொண்ட இத்திட்டத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும். பழைய வரிமுறையின்கீழ் பிரிவு 80C-ன் படி ₹1.5 லட்சம் வரை இதற்கு வரிவிலக்கு உண்டு. இந்த திட்டத்தில் ஜூலை 1, 2026 முதல் நடைமுறைக்கு வந்துள்ள 5 முக்கியமான விதிகள் குறித்து இந்த செய்தியில் பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முதலீட்டாளர் கணக்கைத் தொடங்கிய ஒரு வருடத்திற்குள் அதை முன்கூட்டியே மூடினால், எந்த வட்டியும் வழங்கப்பட மாட்டாது. அதற்குள் ஏதேனும் வட்டிப் பணம் பெற்றிருந்தால், அது அசல் தொகையிலிருந்து வங்கியால் அல்லது தபால் நிலையத்தால் திரும்பப் பெறப்படும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;2. முன்கூட்டியே கணக்கை முடித்தால் அபராதம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;கணக்கு தொடங்கி 1 முதல் 2 ஆண்டுகளுக்குள் பணத்தைத் திரும்பப் பெற்றால், அசல் தொகையிலிருந்து 1.5% அபராதமாகப் பிடிக்கப்படும். 2 ஆண்டுகளுக்குப் பிறகு கணக்கை முடித்தால், 1% தொகை அபராதமாகக் குறைக்கப்படும். மேலும், 5 ஆண்டுகளுக்கு முன் பணத்தை எடுத்தால் 80C வரிச் சலுகை ரத்தாகி, அந்தத் தொகை உங்களின் வரிக்குரிய வருமானத்துடன் சேர்க்கப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இத்திட்டத்தில் தனி நபராவோ அல்லது கூட்டுக் கணக்காகவோ (Joint Account) முதலீடு செய்யலாம். ஆனால், கூட்டுக் கணக்கை தனது கணவன் அல்லது மனைவியுடன் மட்டுமே தொடங்க முடியும். கூட்டுக் கணக்கின் மொத்த முதலீடும் முதல் கணக்குதாரருக்கே சொந்தமானதாகக் கருதப்படும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;4. டிடிஎஸ் (TDS) வரம்பு மற்றும் படிவம் 15H&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;மூத்த குடிமக்களுக்கான டிடிஎஸ் வரம்பு ரூ.1 லட்சம் ஆகும். வட்டி வருமானம் ரூ.1 லட்சத்தைத் தாண்டினால் 10% டிடிஎஸ் (பான் கார்டு இல்லை எனில் 20%) பிடிக்கப்படும். மொத்த வருமானம் வரி வரம்பிற்குள் வராதவர்கள், டிடிஎஸ் பிடிப்பதைத் தவிர்க்க தகுந்த படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். பாதுகாப்புப் படை வீரர்கள் ஓய்வூதியப் பலன்களைப் பெற்ற 1 மாதத்திற்குள் 50 வயதிலேயே இக்கணக்கைத் தொடங்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இத்திட்டத்தின் உச்சவரம்பான ரூ.30 லட்சத்திற்கும் அதிகமாகத் தவறுதலாக டெபாசிட் செய்யப்படும் உபரித் தொகை, முதலீட்டாளருக்கு உடனடியாகத் திருப்பித் தரப்படும். அந்த உபரித் தொகை திரும்பக் கிடைக்கும் வரையிலான காலத்திற்கு, தபால் நிலைய சாதாரண சேமிப்புக் கணக்கிற்கான வட்டி மட்டுமே வழங்கப்படும்; இத்திட்டத்தின் 8.2% வட்டி கிடைக்காது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/scss-new-rules-2026-5-big-changes-for-senior-citizens-savings-scheme-effective-from-july-1-s0qp283"/>
        </item>
        <item>
            <title><![CDATA[EPFO : PF பணம் எடுப்பவரா நீங்க? புதியவிதியைத் தெரியாமல் அப்ளை பண்ணாதீங்க!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/dont-withdraw-your-pf-before-knowing-this-new-rule-t9ol67d</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/dont-withdraw-your-pf-before-knowing-this-new-rule-t9ol67d</guid>
            <pubDate>Thu, 02 Jul 2026 12:28:53 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;EPFO : சமூக பாதுகாப்பு குறியீடு 2020-ன் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள புதிய விதிகள் ஜூன் 29, 2026 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளன. இதன் மூலம் PF சந்தாதாரர்களுக்கு ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள் மற்றும் தொடரும் நடைமுறைகள் என்னென்ன என்பதைபார்ப்போம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwgsexqdfgj08rkyp7cczqsa,imgname-chatgpt-image-jul-2--2026--12-16-21-pm-1782975002349.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;EPFO : சமூக பாதுகாப்பு குறியீடு 2020-ன் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள புதிய விதிகள் ஜூன் 29, 2026 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளன. இதன் மூலம் PF சந்தாதாரர்களுக்கு ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள் மற்றும் தொடரும் நடைமுறைகள் என்னென்ன என்பதைபார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;புதிய விதிகளின்படி, அவசரத் தேவைகளுக்காக பிஎஃப் கணக்கிலிருந்து பகுதிப் பணம் எடுக்கும் வசதி எளிதாக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு ஒரு முக்கிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;25% குறைந்தபட்ச இருப்பு: &lt;/strong&gt;சந்தாதாரர்கள் தங்கள் கணக்கில் இருக்கும் மொத்த தொகையில் (Eligible Member Balance) குறைந்தபட்சம் 25 விழுக்காடு தொகையை எப்போதும் கணக்கிலேயே வைத்திருக்க வேண்டும். மீதமுள்ள 75 விழுக்காடு தொகையை மட்டுமே குறிப்பிட்ட காரணங்களுக்காக எடுக்க முடியும்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;உதாரணமாக:&lt;/strong&gt; உங்கள் கணக்கில் ₹1 லட்சம் இருந்தால், ₹25,000 கணக்கிலேயே இருக்க வேண்டும். மீதமுள்ள ₹75,000 தொகையை மட்டுமே உங்களால் எடுக்க முடியும். இந்த விதி ஊழியர் மற்றும் நிறுவனத்தின் பங்களிப்பு ஆகிய இரண்டிற்கும் பொருந்தும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;மருத்துவ சிகிச்சை: &lt;/strong&gt;12 மாத கால சந்தா முடித்த பிறகு, அவசர மருத்துவத் தேவைகளுக்குத் தகுதியான தொகையில் 100% வரை எடுக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;கல்விச் செலவு:&lt;/strong&gt; 12 மாதங்களுக்குப் பிறகு, குழந்தைகளின் கல்விக்காக 100% வரை எடுக்கலாம் (பணிக்காலத்தில் அதிகபட்சமாக 10 முறை அனுமதிக்கப்படும்).&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;திருமணம்:&lt;/strong&gt; 12 மாதங்களுக்குப் பிறகு, திருமணம் சார்ந்த செலவுகளுக்கு 100% வரை எடுக்கலாம் (பணிக்காலத்தில் அதிகபட்சமாக 5 முறை அனுமதிக்கப்படும்).&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;வீடு கட்டுதல்/வாங்குதல்:&lt;/strong&gt; 12 மாதங்களுக்குப் பிறகு, புதிய வீடு அல்லது மனை வாங்குவதற்கும், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கும் தகுதியான தொகையை முழுமையாக எடுக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;வேலை இழப்பு அல்லது வெளியேற்றம்: &lt;/strong&gt;வேலைக்குச் சேர்ந்து 12 மாதங்கள் முடிவடைவதற்கு முன்பாகவே வேலையை விட்டு நின்றாலும், குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக 2 முறை 100% வரை பகுதிப் பணத்தை எடுத்துக் கொள்ள புதிய விதி வழிவகை செய்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;பங்களிப்பு விகிதம்: &lt;/strong&gt;ஊழியர் மற்றும் முதலாளி ஆகிய இரு தரப்பும் தலா 12 விழுக்காடு தொகையைத் தொடர்ந்து பிஎஃப் கணக்கில் செலுத்த வேண்டும். இதில் எந்த மாற்றமும் இல்லை.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;அடிப்படைச் சம்பள வரம்பு: &lt;/strong&gt;சட்டப்பூர்வ சம்பள வரம்பிற்கு (Wage Ceiling) மேல் சம்பளம் வாங்குபவர்களுக்கு, அந்த வரம்பு வரையிலான தொகைக்கு மட்டுமே கட்டாயப் பங்களிப்பு கணக்கிடப்படும்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;சுயவிருப்ப பிஎஃப் (VPF): &lt;/strong&gt;ஊழியர்கள் விரும்பினால் 12 விழுக்காட்டிற்கு அதிகமாக விபிஎஃப் மூலம் கூடுதல் தொகையைச் சேமிக்கலாம். இந்த கூடுதல் தொகையை எப்போது வேண்டுமானாலும் குறைத்துக் கொள்ளவோ அல்லது நிறுத்திக் கொள்ளவோ புதிய விதிகளில் கூடுதல் நெகிழ்வுத்தன்மை வழங்கப்பட்டுள்ளது.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;அவசரகால சலுகை: &lt;/strong&gt;பேரிடர்கள், பெருந்தொற்று போன்ற அசாதாரண சூழ்நிலைகளின் போது மத்திய அரசு தற்காலிகமாக பிஎஃப் பங்களிப்பைக் குறைக்கவோ அல்லது ஒத்திவைக்கவோ (அதிகபட்சமாக 3 மாதங்கள் வரை) புதிய சட்டம் அதிகாரம் அளிக்கிறது.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;img&gt;&lt;p&gt;முந்தைய இபிஎஸ்-95 (EPS-95) மற்றும் 1971 ஆம் ஆண்டின் குடும்ப ஓய்வூதிய திட்டங்களுக்கு மாற்றாக இந்த புதிய 'இபிஎஸ் 2026' கொண்டு வரப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;ஏற்கனவே வாங்குபவர்களுக்குப் பாதிப்பில்லை:&lt;/strong&gt; தற்போதைய ஓய்வூதியதாரர்களின் மாதாந்திர ஓய்வூதியம் எவ்வித தடையுமின்றித் தொடர்ந்து வழங்கப்படும்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;ஓய்வூதியக் கணக்கீட்டு முறை: &lt;/strong&gt;ஓய்வூதியத்தைக் கணக்கிடும் ஃபார்முலாவில் எந்த மாற்றமும் இல்லை. பிஎஃப் கணக்கிலிருந்து விலகுவதற்கு முந்தைய கடைசி 60 மாதங்களின் சராசரி சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டே ஓய்வூதியம் கணக்கிடப்படும். குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகை தொடர்ந்து மாதாந்திரம் ₹1,000 ஆக நீடிக்கிறது.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;20 நாட்களில் தீர்வு மற்றும் 12% வட்டி அபராதம்: &lt;/strong&gt;புதிய விதிகளின்படி, ஓய்வூதியக் கோரிக்கைகளை (Pension Claims) 20 நாட்களுக்குள் இபிஎஃப்ஓ (EPFO) அமைப்பு தீர்க்க வேண்டும். ஆவணங்களில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அதை அதே 20 நாட்களுக்குள் விண்ணப்பதாரருக்குத் தெரிவிக்க வேண்டும். எவ்வித நியாயமான காரணமுமின்றி ஓய்வூதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால், இபிஎஃப்ஓ அமைப்பு 12 விழுக்காடு ஆண்டு வட்டியுடன் சேர்த்து அந்தத் தொகையை வழங்க வேண்டும். இந்த வட்டித் தொகையானது தாமதத்திற்கு காரணமான இபிஎஃப் அதிகாரியின் (EPF Commissioner) சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;இதையும் படிங்க : Astrology : கூட்டணி அமைத்த எதிரி கிரகங்கள்! இந்த 5 ராசிகளுக்கு ஜாக்பாட்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;புதிய திட்டமானது இபிஎஃப்ஓ-வின் ஆன்லைன் சேவைகளான ஆன்லைன் ரிட்டர்ன்ஸ் தாக்கல், மின்னணு கணக்குகள் (Digital Accounts), டிஜிட்டல் பாஸ்புக் மற்றும் ஆன்லைன் கிளைம்கள் போன்றவற்றை முழுமையாக முறைப்படுத்துகிறது.&lt;/p&gt;&lt;p&gt;நிறுவனங்கள் புதிய விதிகள் அமலுக்கு வந்த 15 நாட்களுக்குள் 'Form V' என்ற ஒருங்கிணைந்த படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். இதில் ஊழியர்களின் யுஏஎன் (UAN), பான் (PAN) மற்றும் ஆதார் (Aadhaar number) போன்ற விவரங்களை இணைப்பது அவசியமாக்கப்பட்டுள்ளது. மேலும், தன்னாட்சி பெற்ற பிஎஃப் டிரஸ்டுகளை (Exempted EPF Trusts) நடத்தும் நிறுவனங்களுக்கான தணிக்கை மற்றும் முதலீட்டு விதிகள் மிகவும் கடுமையானதாக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;சுருக்கமாகச் சொன்னால், புதிய இபிஎஃப் மற்றும் இபிஎஸ் 2026 திட்டங்கள், சந்தாதாரர்களின் நீண்டகால ஓய்வூதியப் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அவசரத் தேவைகளுக்கான பணப்புழக்கத்தையும், நிர்வாக ரீதியான வெளிப்படைத்தன்மையையும் கணிசமாக அதிகரித்துள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;இதையும் படிங்க : Angarak Yoga : ராகு-செவ்வாய் சேர்க்கையால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு கஷ்ட காலம்! உங்க ராசி இருக்கா?&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/dont-withdraw-your-pf-before-knowing-this-new-rule-t9ol67d"/>
        </item>
    </channel>
</rss>
