<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes"?>
<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Fri, 24 Jul 2026 15:41:40 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss/business" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[D-Mart-ல் உங்க பொருளை விற்கணுமா? மாதா மாதம் லட்சக்கணக்கில் லாபம் பார்க்க சூப்பர் வாய்ப்பு!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/how-to-sell-products-in-d-mart-08avb4n</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/how-to-sell-products-in-d-mart-08avb4n</guid>
            <pubDate>Thu, 23 Jul 2026 14:51:38 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;D-Mart-ல் உங்கள் பொருட்களை விற்று மாதம் லட்சங்களில் லாபம் சம்பாதிக்க ஆசையா? D-Mart சப்ளையர் ஆவது எப்படி, தகுதிகள், ஆவணங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்து பார்ப்போம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ky73zvsthjsxze8w1fe0v0jt,imgname-d-mart-1784797982522.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;D-Mart-ல் உங்கள் பொருட்களை விற்று மாதம் லட்சங்களில் லாபம் சம்பாதிக்க ஆசையா? D-Mart சப்ளையர் ஆவது எப்படி, தகுதிகள், ஆவணங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்து பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;D-Mart நிறுவனத்தில் எப்போதும் மற்ற கடைகளை விட விலை குறைவாக இருக்கும். அங்கு இல்லாத பொருட்களே இல்லை. நமது பொருளையும் அங்கு விற்பனை செய்ய வேண்டும் என்று பலருக்கும் ஆசை இருக்கும். ஆனால் அதற்கு என்ன செய்வது என்றுதான் தெரியாது. அதற்கான வழிமுறை இதோ:&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;D-Mart-ல் வாய்ப்பு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;D-Mart-ல் நீங்கள் உங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்யலாம். ஆனால் முதலில் ஒரு விஷயத்தை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். D-Mart யாருக்கும் பிரான்சைஸ் வழங்குவது இல்லை. அதாவது, நீங்கள் உங்கள் ஊரில் D-Mart கடையைத் திறக்க முடியாது. ஆனால், உங்கள் தயாரிப்புகளை D-Mart-க்கு விநியோகம் செய்யும் ஒரு வெண்டர் (Vendor) அல்லது சப்ளையராக மாறலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க: &lt;/strong&gt;D-Mart Shopping: டி-மார்ட் போறீங்களா? இந்த 'ஸ்மார்ட் ட்ரிக்ஸ்' தெரிஞ்சா நிறைய பணம் மிச்சப்படுத்தலாம்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உங்கள் பொருளை D-Mart வாங்குவதற்கு முன்பாக சில விஷயங்களைச் சரிபார்ப்பார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;தரம்:&lt;/strong&gt; உங்கள் பொருளின் தரம் நன்றாக இருக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;விலை:&lt;/strong&gt; விலை மற்றவர்களுடன் போட்டி போடும் வகையில் இருக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பேக்கிங்: &lt;/strong&gt;பேக்கிங் பார்ப்பதற்குக் கவர்ச்சியாக இருக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;தொடர் விநியோகம்: &lt;/strong&gt;முக்கியமாக, அவர்கள் கேட்கும் போதெல்லாம் தட்டுப்பாடு இல்லாமல் பொருளைச் சப்ளை செய்யும் திறன் இருக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க&lt;/strong&gt; பெங்களூரு, மும்பை, சென்னை இல்லை! இந்தியாவின் 'நம்பர் 1' பணக்கார மாவட்டம் எது தெரியுமா?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உங்கள் பொருள் என்ன வகையைச் சேர்ந்தது என்பதைப் பொறுத்து சில ஆவணங்கள் தேவைப்படும்.&lt;/p&gt;&lt;p&gt;GST மற்றும் PAN எண்கள் கண்டிப்பாகத் தேவை.&lt;/p&gt;&lt;p&gt;உணவுப் பொருளாக இருந்தால் FSSAI உரிமம் அவசியம்.&lt;/p&gt;&lt;p&gt;சில பொருட்களுக்கு BIS போன்ற அரசுச் சான்றிதழ்களும் தேவைப்படலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சப்ளையர் ஆவதற்குத் தனியாக பிரான்சைஸ் கட்டணம் எதுவும் கிடையாது. ஆனால், பொருளைத் தயாரிக்க, பேக்கிங் செய்ய, கையிருப்பு (Stock) வைக்க, போக்குவரத்து செய்ய, சரியான நேரத்தில் டெலிவரி செய்ய என்று பார்த்தால், கையில் ஓரளவிற்கு முதலீடு இருக்க வேண்டும். சில சமயங்களில், பொருளை ஷெல்ப்பில் (Shelf) வைப்பதற்குத் தனியாகக் கட்டணம் கூட இருக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;மாதம் எவ்வளவு லாபம் கிடைக்கும்?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;D-Mart-ல் உங்கள் பொருளை விற்பனை செய்வதன் மூலமாக எவ்வளவு லாபம் கிடைக்கும் என்று துல்லியமாகச் சொல்ல முடியாது. அது உங்கள் பொருளின் தரம், அதற்கு இருக்கும் தேவை (Demand), விற்பனை அளவு, உங்கள் செலவு, D-Mart நிறுவனத்துடன் நீங்கள் போடும் ஒப்பந்தம் ஆகியவற்றைப்பொறுத்து மாறும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;விண்ணப்பிக்கும் முறை:&lt;/strong&gt; D-Mart-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (Avenue Supermarts Ltd - Partner With Us) சென்று 'Vendor Registration' படிவத்தைப் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். நேரடி அலுவலக அணுகுமுறையை விட இதுவே சரியான வழியாகும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;MSME / Udyam பதிவு:&lt;/strong&gt; நீங்கள் சிறு அல்லது குறுந்தொழில் நிறுவனமாக இருந்தால், மத்திய அரசின் Udyam / MSME சான்றிதழ் வைத்திருப்பது முன்னுரிமை பெறவும் வணிகப் பாதுகாப்பிற்கும் உதவும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;கடைப்பணம் அளிக்கும் காலம்:&lt;/strong&gt; D-Mart வழக்கமாகப் பொருட்களைப் பெற்றுக் கொண்ட பிறகு 30 முதல் 60 நாட்களுக்குள் பணப் பரிவர்த்தனையைச் செய்யும். இதற்கான சுழற்சி நிதி உங்களிடம் இருக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பொருட்களைத் திருப்பி அனுப்புதல்: &lt;/strong&gt;விற்பனையாகாத அல்லது சேதமடைந்த பொருட்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ளும் (RTV - Return to Vendor) நிபந்தனைகளுக்கு நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பார்கோடு (Barcode):&lt;/strong&gt; உங்கள் தயாரிப்புகள் ஒவ்வொன்றிலும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட GS1 Barcode கட்டாயம் அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;உங்கள் பொருளின் தரம் மிகச் சிறப்பாக இருந்து, அனைத்து ஆவணங்களும் சரியாக வைத்திருந்து, கேட்கும் போது சப்ளை செய்யும் திறன் இருந்தால், D-Mart போன்ற பெரிய அங்காடியில் உங்கள் பொருளுக்கு நிச்சயம் இடம் கிடைக்கும். எனவே, முதலில் உங்கள் பிராண்டைச் சரியாக உருவாக்குவதில் கவனம் செலுத்துங்கள்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/how-to-sell-products-in-d-mart-08avb4n"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Gold Loan: நகைக்கடன் வாங்குறீங்களா? இந்த 5 தவறுகளை செய்தால் உங்க தங்கம் ஏலத்துக்கு போயிடும்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/5-gold-loan-mistakes-avoid-auction-0puyfog</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/5-gold-loan-mistakes-avoid-auction-0puyfog</guid>
            <pubDate>Fri, 24 Jul 2026 14:23:58 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Gold Loan: அவசரப் பணத்தேவைக்கு நகைக்கடன் வாங்கும் முன் இந்த 5 முக்கிய விஷயங்களைக் கண்டிப்பதாக தெரிந்துகொள்ளுங்கள். தவறினால் உங்கள் தங்கம் ஏலத்திற்குச் செல்லும் அபாயம் உள்ளது. இது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ky9mvdswexmmc3qyda6w2ng8,imgname-gold-loan-1784882771772.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Gold Loan: அவசரப் பணத்தேவைக்கு நகைக்கடன் வாங்கும் முன் இந்த 5 முக்கிய விஷயங்களைக் கண்டிப்பதாக தெரிந்துகொள்ளுங்கள். தவறினால் உங்கள் தங்கம் ஏலத்திற்குச் செல்லும் அபாயம் உள்ளது. இது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அவசரப் பணத் தேவைக்குத் தங்கத்தை விற்பனை செய்யாமல், கடன் பெறுவது ஒரு சிறந்த தீர்வாகும். இருப்பினும், கடன் கிடைக்கும் என்ற ஒரே காரணத்திற்காக அவசரமாக முடிவெடுத்து, அதிகத் தொகையைக் கடனாகப் பெறக் கூடாது. முதன்முறையாகக் கடன் பெறுபவர்கள், தங்களின் மாதாந்திரத் திருப்பிச் செலுத்தும் திறனை முன்கூட்டியே கணக்கிடுவது அவசியமாகும். சமீபத்தில் தங்கத்தின் விலை குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்ந்து சாதனை படைத்த நிலையில், தற்போது சற்று குறைந்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க: &lt;/strong&gt;D-Mart-ல் உங்க பொருளை விற்கணுமா? மாதா மாதம் லட்சக்கணக்கில் லாபம் பார்க்க சூப்பர் வாய்ப்பு!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இருப்பினும், கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இதன் விலை அதிகமாகவே உள்ளது. இதனால், குறைந்த அளவு தங்கத்திற்கும் தற்போது அதிகக் கடன் தொகை கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால், வங்கிகள் அதிகக் கடன் தொகையை வழங்க முன்வந்தாலும், தேவைக்கு அதிகமாகப் பெறுவது பாதுகாப்பற்றது ஆகும். எனவே, கடன் பெறத் தகுதி இருந்தாலும், உண்மையான தேவை மற்றும் திருப்பிச் செலுத்தும் திறனைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும். தகுதிக்குக் குறைவான தொகையைக் கடனாகப் பெறும்போது, எதிர்காலத்தில் தங்கத்தின் விலை குறைந்தாலும் கடன் கணக்கு பாதுகாப்பாக இருக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க:&lt;/strong&gt; பெங்களூரு, மும்பை, சென்னை இல்லை! இந்தியாவின் 'நம்பர் 1' பணக்கார மாவட்டம் எது தெரியுமா?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பொதுவாகக் கடன் பெறும்போது வட்டி விகிதத்தை மட்டுமே பலரும் கவனத்தில் கொள்கின்றனர். ஆனால், அதனுடன் இணைந்த பல்வேறு மறைமுகக் கட்டணங்களையும் அறிவது அவசியமாகும். பரிசீலனைக் கட்டணம் (Processing fees), மதிப்பீட்டுக் கட்டணம் (Appraisal charges), முன்கூட்டியே கடனை முடிப்பதற்கான கட்டணம் (Foreclosure charges) மற்றும் தாமதக் கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் கணக்கிட வேண்டும். மேலும், உள்ளூர் அடகுக் கடைகளைத் தவிர்த்து, இந்திய ரிசர்வ் வங்கியால் (RBI) அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் அல்லது முன்னணி வங்கிசாரா நிதி நிறுவனங்களில் (NBFC) கடன் பெறுவது பாதுகாப்பானது. இங்குத் தங்கத்திற்குப் பாதுகாப்பான பெட்டக (Locker) வசதியும், காப்பீட்டுப் பாதுகாப்பும் கிடைக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க&lt;/strong&gt;: Toilet Cleaning: இனி மணிக்கணக்கில் தேய்க்க தேவையில்லை! டாய்லெட் கறைகளை நொடியில் போக்க சூப்பர் டிப்ஸ்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நகைக்கடன் வாங்கும்போது கீழ்க்காணும் விஷயங்களை கவனியுங்க.&lt;/p&gt;&lt;p&gt;உண்மையான தேவைக்கு மட்டுமே கடன் பெற வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;18 முதல் 22 காரட் தூய்மை கொண்ட தங்கத்திற்கு மட்டுமே கடன் வழங்கப்படும்.&lt;/p&gt;&lt;p&gt;நகைகளில் உள்ள கற்கள் மற்றும் முத்துக்களின் எடையைக் கழித்து, சுத்தமான தங்கத்தின் எடை மட்டுமே கணக்கில் கொள்ளப்படும்.&lt;/p&gt;&lt;p&gt;வட்டி விகிதத்துடன் சேர்த்துப் பரிசீலனைக் கட்டணங்களையும் ஒப்பீடு செய்து சரிபார்க்க வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சந்தையில் தங்கத்தின் விலை திடீரெனக் குறையும்போது, ரிசர்வ் வங்கி நிர்ணயித்த கடன்-மதிப்பு விகிதம் (LTV) மாறுபடும். அதாவது, தங்கத்தின் மதிப்பு குறையும்போது, வழங்கப்பட்ட கடன் தொகை வங்கிக்கு நிதிச் சுமையாக மாறக்கூடும். இத்தகைய சூழலில், வங்கிகள் 'மார்ஜின் கால்' (Margin calls) அறிவிப்பை வெளியிடும். அதன்படி, நிலுவை தொகையின் வித்தியாசத்தைச் சரிசெய்யக் கூடுதல் தொகையைச் செலுத்தவோ அல்லது கூடுதல் தங்கத்தைப் பிணையமாக வைக்கவோ கோருவார்கள். 'புல்லட் ரீபேமென்ட்' (Bullet repayment) முறையைத் தேர்ந்தெடுத்தவர்களுக்கு இத்தகைய அபாயம் அதிகமாகும். எனவே, மாதாந்திரத் தவணை (EMI) முறையைத் தேர்ந்தெடுப்பதே சிறந்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நகைக்கடன்கள் பொதுவாக 3 முதல் 12 மாதங்கள் வரையிலான குறுகிய கால அளவிலேயே வழங்கப்படுகின்றன. வங்கிகள் முதன்மையாக நான்கு வகையான திருப்பிச் செலுத்தும் முறைகளை வழங்குகின்றன:&lt;/p&gt;&lt;p&gt;பகுதித் தவணைகள் (Part payments)&lt;/p&gt;&lt;p&gt;மாதாந்திர வட்டி மட்டும் செலுத்தி, இறுதியில் அசலைச் செலுத்தும் முறை&lt;/p&gt;&lt;p&gt;புல்லட் ரீபேமென்ட் (அசல் மற்றும் வட்டியை இறுதியாக மொத்தமாகச் செலுத்துதல்)&lt;/p&gt;&lt;p&gt;வழக்கமான மாதாந்திரத் தவணை முறை (EMI)&lt;/p&gt;&lt;p&gt;உங்களின் மாதாந்திர வருமானம் மற்றும் பணப்புழக்கத்திற்கு ஏற்பப் பொருத்தமான முறையைத் தேர்ந்தெடுக்கலாம். மேலும், வங்கியிலிருந்து பெறப்படும் அறிவிப்புகளுக்கு உடனுக்குடன் பதிலளிப்பதன் மூலம், நகைகள் ஏலத்திற்குச் செல்வதைத் தவிர்க்க முடியும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/5-gold-loan-mistakes-avoid-auction-0puyfog"/>
        </item>
        <item>
            <title><![CDATA[SBI IPO: எதிர்பார்த்ததை விட கம்மி லாபம்! 7% பிரீமியத்தில் லிஸ்டிங்.! முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/sbi-ipo-debuts-below-grey-market-expectations-1zwloot</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/sbi-ipo-debuts-below-grey-market-expectations-1zwloot</guid>
            <pubDate>Tue, 21 Jul 2026 22:39:51 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;SBI IPO: எஸ்பிஐ ஃபண்ட்ஸ் மேனேஜ்மென்ட் பங்குகள், அதன் ஐபிஓ வெளியீட்டு விலையை விட 7% பிரீமியத்தில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டன. இருப்பினும், இந்த லிஸ்டிங் விலை, முதலீட்டாளர்கள் மற்றும் கிரே மார்க்கெட் கணிப்புகளை விட குறைவாகவே இருந்தது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxn018q5gqrbbaxrtv2s7q1y,imgname-sbi-funds-management-ipo-1784189854437.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;SBI IPO: எஸ்பிஐ ஃபண்ட்ஸ் மேனேஜ்மென்ட் பங்குகள், அதன் ஐபிஓ வெளியீட்டு விலையை விட 7% பிரீமியத்தில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டன. இருப்பினும், இந்த லிஸ்டிங் விலை, முதலீட்டாளர்கள் மற்றும் கிரே மார்க்கெட் கணிப்புகளை விட குறைவாகவே இருந்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எஸ்பிஐ ஃபண்ட்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் பங்குகள் செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தையில் நுழைந்தன. அதன் ஆரம்ப பொதுப் பங்கு (ஐபிஓ) வெளியீட்டு விலையை விட 7% அதிக பிரீமியத்தில் பட்டியலிடப்பட்டன. BSE-யில், ஒரு பங்கின் விலை ரூ.610-க்கு தொடங்கியது. இது, ரூ.574 என்ற வெளியீட்டு விலையை விட 6.27% அதிகம். அதேபோல, NSE-யில், அதன் பங்கு விலை 6.85% உயர்ந்து ரூ.613.30-க்கு பட்டியலிடப்பட்டது.&lt;/p&gt;&lt;p&gt;முதலீட்டாளர்கள் இந்த ரூ.9,813 கோடி ஐபிஓ மீது அதிக ஆர்வம் காட்டினர். கிரே மார்க்கெட்டும் நல்ல தொடக்கத்தையே சுட்டிக்காட்டியது. லிஸ்டிங்கிற்கு முன்பு, ஒரு பங்கின் கிரே மார்க்கெட் பிரீமியம் (GMP) சுமார் ரூ.97 ஆக இருந்தது. இதனால், ஒரு பங்கு சுமார் ரூ.671-க்கு பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இது வெளியீட்டு விலையை விட 16.9% அதிகம். ஆனால், உண்மையான லிஸ்டிங் விலை கிரே மார்க்கெட் கணிப்பை விட மிகவும் குறைவாகவே இருந்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;காலை 10:20 மணியளவில், BSE-யில் எஸ்பிஐ ஃபண்ட்ஸ் மேனேஜ்மென்ட் பங்கு, வெளியீட்டு விலையை விட சுமார் 8% அதிகரித்து ரூ.617.50-க்கு வர்த்தகமானது. வர்த்தகத்தின் போது, ஒரு பங்கின் விலை ரூ.624.80 வரை உயர்ந்தது. இது இரட்டை இலக்க வருமானம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மறுபுறம், தேசிய பங்குச் சந்தையில் (NSE), இதன் பங்கு வெளியீட்டு விலையை விட 7% மேல் உயர்ந்து ரூ.615.70-க்கு வர்த்தகமானது. வர்த்தகத்தின் போது, இதன் விலை வெளியீட்டு விலையை விட சுமார் 9% அதிகரித்து ரூ.624.80-ஐ எட்டியது.&lt;/p&gt;&lt;p&gt;பங்குச் சந்தை ஒரு சரிவுப் போக்கை சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வர்த்தகத்தின் போது சென்செக்ஸ் 215 புள்ளிகள் சரிந்து 77,493.03 புள்ளிகளை எட்டியது. சென்செக்ஸ் 77,649.63 புள்ளிகளில் சிறிய சரிவுடன் தொடங்கினாலும், தேசிய பங்குச் சந்தையின் முக்கிய குறியீடான நிஃப்டியும் கணிசமான அழுத்தத்தில் இருந்தது. காலை 10:25 மணியளவில், நிஃப்டி 50 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 24,188.10 புள்ளிகளை எட்டியது. காலையில் நிஃப்டி ஆரம்பத்தில் 24,216.05 புள்ளிகளில் தொடங்கியது.&lt;/p&gt;&lt;p&gt;இந்த ஐபிஓ, ஜூலை 14 முதல் 16 வரை சந்தா செலுத்துவதற்காக திறக்கப்பட்டிருந்தது. இது ஒட்டுமொத்தமாக 41.66 மடங்கு சந்தா பெற்றது. இது அனைத்து வகை முதலீட்டாளர்களிடமிருந்தும் வலுவான தேவையைக் குறிக்கிறது. நிறுவன முதலீட்டாளர்கள் தான் இதில் அதிக ஆர்வம் காட்டியுள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தகுதிவாய்ந்த நிறுவன வாங்குவோர் (QIB) பகுதி 140.11 மடங்கு சந்தா பெற்றது. நிறுவனம் சாரா முதலீட்டாளர்கள் (NII) பகுதி 22.51 மடங்கும், சில்லறை தனிநபர் முதலீட்டாளர்கள் (RII) பிரிவு 3.60 மடங்கும் சந்தா பெற்றன. இந்த வெளியீட்டின் விலை ஒரு பங்குக்கு ரூ.545 முதல் ரூ.574 வரை நிர்ணயிக்கப்பட்டது.&lt;/p&gt;&lt;p&gt;இந்த ஐபிஓ, முழுக்க முழுக்க தற்போதுள்ள பங்குதாரர்களான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) மற்றும் அமுண்டி (Amundi) ஆகியோரால் 171 மில்லியன் பங்குகளை விற்பனை செய்யும் 'ஆஃபர் ஃபார் சேல்' (OFS) ஆகும். புதிய பங்குகள் எதுவும் வெளியிடப்படாததால், இந்த விற்பனையிலிருந்து நிறுவனத்திற்கு எந்தப் பணமும் கிடைக்காது.&lt;/p&gt;&lt;p&gt;விற்பனையிலிருந்து கிடைக்கும் முழுப் பணமும் விற்கும் பங்குதாரர்களுக்கே செல்லும். இந்த லிஸ்டிங்கிற்குப் பிறகு, புரமோட்டர் மற்றும் புரமோட்டர் குழுமத்தின் மொத்த பங்கு 98.2%-லிருந்து 89.8% ஆகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், பொதுமக்களின் பங்கு 10.2% ஆக உயரும். இது பங்கின் பணப்புழக்கத்தை (liquidity) அதிகரிக்கக்கூடும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/sbi-ipo-debuts-below-grey-market-expectations-1zwloot"/>
        </item>
        <item>
            <title><![CDATA[D-Mart Shopping: டி-மார்ட் போறீங்களா? இந்த 'ஸ்மார்ட் ட்ரிக்ஸ்' தெரிஞ்சா நிறைய பணம் மிச்சப்படுத்தலாம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/d-mart-smart-shopping-hacks-to-save-time-and-money-3d7g7eo</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/d-mart-smart-shopping-hacks-to-save-time-and-money-3d7g7eo</guid>
            <pubDate>Tue, 21 Jul 2026 18:23:00 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;D-Mart Shopping: டி-மார்ட்-ல் மளிகை சாமான் விலை கம்மினு ஒரே கூட்டமா இருக்கு. ஆனா, சில சிம்பிள் டிப்ஸ் ஃபாலோ பண்ணா, உங்க நேரத்தையும் பணத்தையும் ஈஸியா மிச்சப்படுத்தலாம் தெரியுமா?&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ky21dythmc2p07m5gzxw2pmj,imgname-dmart-1784627526480.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;D-Mart Shopping: டி-மார்ட்-ல் மளிகை சாமான் விலை கம்மினு ஒரே கூட்டமா இருக்கு. ஆனா, சில சிம்பிள் டிப்ஸ் ஃபாலோ பண்ணா, உங்க நேரத்தையும் பணத்தையும் ஈஸியா மிச்சப்படுத்தலாம் தெரியுமா?&lt;/p&gt;&lt;img&gt;மாச சம்பளம் வந்ததும் முதல் 10 நாள் D-Mart-ல் பயங்கர கூட்டம் இருக்கும். பில்லிங் கவுன்ட்டர்ல ரொம்ப நேரம் நிக்கணும். அதனால, ஒவ்வொரு மாசமும் 10-ம் தேதில இருந்து 25-ம் தேதிக்குள்ள ஷாப்பிங் போறது பெஸ்ட். கூட்டம் கம்மியா இருக்கும், சில சமயம் புது ஆஃபர் கூட கிடைக்கும்.&lt;img&gt;&lt;p&gt;சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் D-Mart-ல் கால் வைக்கக்கூட இடம் இருக்காது. குடும்பத்தோடு வர்றவங்களால தள்ளுவண்டி எடுக்கறதுல இருந்து பில்லிங் வரைக்கும் ஒரே தள்ளுமுள்ளுதான். அதனால, முடிஞ்சா திங்கள் முதல் வியாழன் வரை ஷாப்பிங் போங்க. நிம்மதியா பொருட்களைப் பார்த்து வாங்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;நிறைய பேர் வேலை முடிஞ்சு சாயங்காலம்தான் D-Mart-க்கு வராங்க. இதனால க்யூ நீளமா இருக்கும். அதுக்கு பதிலா, காலையில ஷாப்பிங் போனா கூட்டம் கம்மியா இருக்கும். பில்லிங்ல நிற்காம, வேலையை சீக்கிரம் முடிச்சுட்டு வீட்டுக்குக் கிளம்பலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;D-Mart-ல நிறைய பேர் செய்யுற பெரிய தப்பு இதுதான். வாங்கப் போனதை விட்டுட்டு, ஆஃபர்ல இருக்குனு தேவையில்லாததை வாங்கி டிராலியை நிரப்பிடுவாங்க. இதைத் தவிர்க்க, வீட்டுல இருந்தே வாங்க வேண்டிய பொருட்களுக்கு ஒரு லிஸ்ட் ரெடி பண்ணுங்க. அந்த லிஸ்ட்ல இருக்குறதை மட்டும் வாங்குங்க. தேவையில்லாத செலவு குறையும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;D-Mart-ல விலை கம்மினு எப்ப வேணாலும் போறதை விட, சரியான நாள், சரியான நேரத்துல, ஒரு லிஸ்ட்டோட போனா நிறைய நன்மை இருக்கு. இந்த சின்ன சின்ன டிப்ஸை ஃபாலோ பண்ணா, உங்க மாசாந்திர பட்ஜெட்ல நிச்சயம் ஒரு தொகையை மிச்சப்படுத்தலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிராண்ட் பொருட்கள் vs டி-மார்ட் பிராண்ட்: டி-மார்ட்டின் சொந்த பிராண்டுகளான Premia (மளிகைப் பொருட்கள்) மற்றும் DMart Homes/Unique (வீட்டு உபயோகப் பொருட்கள்) ஆகியவற்றின் தரம் முன்னணி பிராண்டுகளுக்கு இணையாக இருக்கும். பிரபல பிராண்டுகளை விட இவைகளின் விலை 10% முதல் 30% வரை குறைவாக இருக்கும். ஆகவே இவற்றை வாங்கி பணத்தை மிச்சபப்டுத்தலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;'Buy 1 Get 1' மற்றும் காம்போ ஆஃபர்கள்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;சோப், பேஸ்ட், ஷாம்பூ மற்றும் துணி துவைக்கும் பவுடர்களில் BOGO (Buy 1 Get 1) அல்லது பெரிய பேக் (Combo Packs) வாங்கும்போது கூடுதல் தள்ளுபடி கிடைக்கும். காலாவதியாகும் தேதியை (Expiry Date) மட்டும் பார்த்து &lt;strong&gt;வாங்குவது அவசியம்.&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;டி-மார்ட் ரெடி (DMart Ready App) பயன்படுத்துங்கள்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;நேரில் சென்று வாங்கும் முன் DMart Ready செயலியில் (App) பொருட்களின் விலையை சரிபார்த்துக் கொள்ளலாம். சில சமயம் ஆப் வழியே ஆர்டர் செய்து 'Pick-up Point' மூலம் பெற்றுக் கொண்டால் கூடுதல் தள்ளுபடியும், நேரமும் மிச்சமாகும்!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/d-mart-smart-shopping-hacks-to-save-time-and-money-3d7g7eo"/>
        </item>
        <item>
            <title><![CDATA[EPFO: PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! 5 புதிய விதிகள் இதோ.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/epfo-new-rules-2026-make-pf-claim-and-transfer-process-easier-6uc9ef7</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/epfo-new-rules-2026-make-pf-claim-and-transfer-process-easier-6uc9ef7</guid>
            <pubDate>Fri, 24 Jul 2026 15:41:37 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;EPFO New Rules 2026: 2026-ல் EPFO 5 புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது. இதனால், கிளைம் செட்டில்மென்ட், ஆட்டோ டிரான்ஸ்ஃபர், KYC செயல்முறை எல்லாம் இப்போது ரொம்ப சிம்பிள் ஆகிவிட்டது. முழு விவரங்களையும் இங்கே பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ky9sk78secph9ksxbenyzxxj,imgname-epfo-new-rules-2026-1784887745800.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;EPFO New Rules 2026: 2026-ல் EPFO 5 புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது. இதனால், கிளைம் செட்டில்மென்ட், ஆட்டோ டிரான்ஸ்ஃபர், KYC செயல்முறை எல்லாம் இப்போது ரொம்ப சிம்பிள் ஆகிவிட்டது. முழு விவரங்களையும் இங்கே பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;வேலை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் வருங்கால வைப்பு நிதி (EPFO) என்பது வெறும் சேமிப்பு கணக்கு மட்டுமல்ல, அது ஒரு பெரிய நிதிப் பாதுகாப்பு. ஆனால், பலருக்கும் பிஎஃப் கிளைம் தாமதமாவது, KYC அப்டேட் செய்வதில் சிக்கல், வேலை மாறும்போது பிஎஃப் பணத்தை மாற்றுவதில் சிரமம் போன்ற பிரச்சனைகள் இருந்தன. இந்தச் சிக்கல்களைத் தீர்க்க, EPFO 2026-ல் தனது ஐடி சிஸ்டத்தை முழுமையாக அப்கிரேட் செய்துள்ளது. இதனால் UMANG ஆப் மற்றும் Unified Member Portal சர்வர்கள் பிஸியான நேரத்தில்கூட டவுன் ஆகாது. இப்போது பாஸ்வேர்டு மாற்றுவது, பாஸ்புக் டவுன்லோட் செய்வது, கிளைம் ஸ்டேட்டஸ் பார்ப்பது எல்லாம் வேகமாக நடக்கிறது.&lt;img&gt;முன்பெல்லாம் பிஎஃப் கிளைம் செய்த பிறகு, பணம் வங்கி கணக்கிற்கு வர 7 முதல் 20 நாட்கள் ஆகும். ஆனால், புதிய ஆட்டோ செட்டில்மென்ட் சிஸ்டம் மூலம், தகுதியான கிளைம்கள் மிக வேகமாக முடிக்கப்படுகின்றன. உங்கள் விவரங்கள் சரியாக இருந்தால், உடல்நலக்குறைவு, படிப்பு, திருமணம் அல்லது வீடு வாங்குவது போன்ற தேவைகளுக்கான அட்வான்ஸ் கிளைம்களை கம்ப்யூட்டர் சிஸ்டமே தானாக அங்கீகரித்துவிடும். மனித தலையீடு இல்லாமல் இந்த செயல்முறை முடிவதால், கிளைம் பணம் 3 முதல் 4 நாட்களுக்குள் நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கில் டெபாசிட் ஆகிவிடும்.&lt;img&gt;ஒரு நிறுவனத்தை விட்டு வேறு நிறுவனத்தில் சேரும்போது, பழைய பிஎஃப் பேலன்ஸை புதிய கணக்கிற்கு மாற்றுவது பெரிய வேலையாக இருந்தது. பழைய நிறுவனத்தின் ஒப்புதலுக்காக மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருந்தது. இப்போது அந்தப் பிரச்சனைக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. நீங்கள் வேலை மாறிய உடனேயே, உங்கள் UAN கீழ் உள்ள பழைய பிஎஃப் பேலன்ஸ், புதிய நிறுவனத்தின் கணக்கிற்குத் தானாகவே மாற்றப்பட்டுவிடும். மீண்டும் மீண்டும் ஆன்லைனில் ஃபார்ம் 13 நிரப்பத் தேவையில்லை. மேலும், EPFO 'Anywhere Service' என்ற சேவையையும் தொடங்கியுள்ளது. நீங்கள் எந்த நகரத்தில் இருந்தாலும், உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள எந்த EPFO அலுவலகத்திற்கும் சென்று உங்கள் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ளலாம்.&lt;img&gt;பிஎஃப் கணக்கிலிருந்து பணம் எடுக்கவோ அல்லது சுயவிவரங்களை மாற்றவோ KYC மிகவும் அவசியம். முன்பு, பெயர், பிறந்த தேதி அல்லது பெற்றோர் பெயர்களில் சிறிய எழுத்துப்பிழை இருந்தால்கூட KYC நிராகரிக்கப்பட்டது. ஆனால், இந்த புதிய மாற்றங்களுக்குப் பிறகு, வங்கி விவரங்கள், பான் கார்டு மற்றும் பிற விவரங்களை அப்டேட் செய்வது மிகவும் எளிதாகிவிட்டது. தேவையான ஆவணங்களை ஆன்லைன் போர்ட்டலில் பதிவேற்றியதும், சிஸ்டம் உடனடியாகச் சரிபார்க்கிறது. இதனால், நிலுவையில் உள்ள கோரிக்கைகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.&lt;img&gt;இந்திய அரசு 'EPFO 3.0' என்ற பெயரில் ஒரு புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டுவரத் தயாராகி வருகிறது. இது பங்களிப்பு மாதிரியில் (contributory model) செயல்படும். இதில் ஊழியர், நிறுவனம், அரசு, கிக் வொர்க்கர்களுக்கான பிளாட்ஃபார்ம்கள் மற்றும் CSR நிதிகள் இணைந்து பங்களிக்கும். இந்தத் திட்டம் மூலம், இதுவரை EPFO வரம்புக்குள் வராத கிக் வொர்க்கர்கள், பிளாட்ஃபார்ம் ஊழியர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய வசதி கிடைக்கும். இது ஒரு குறிப்பிட்ட ஓய்வூதியத் தொகையை இலக்காகக் கொண்டு செயல்படும். இதன் மூலம், ஓய்வுக்குப் பிறகு எவ்வளவு பணம் தேவை என்பதை முன்கூட்டியே திட்டமிடலாம்.&lt;img&gt;&lt;p&gt;பிஎஃப் பேலன்ஸ் குறித்த சரியான புரிதல் இல்லாததால், சுமார் 48.7% ஊழியர்கள் ஓய்வுபெறும் நேரத்தில் தங்கள் கணக்கில் வெறும் 10,000 முதல் 20,000 ரூபாய் மட்டுமே வைத்திருப்பதாக EPFO தெரிவித்துள்ளது. இந்தச் சிக்கலைத் தவிர்க்க, ஜூலை 1, 2026 முதல் புதிய EPF திட்டம் அமலுக்கு வருகிறது. இதன்படி, ஒவ்வொரு ஊழியரும் தங்கள் பிஎஃப் கணக்கில் வைப்பு செய்யப்பட்ட மொத்த தொகையில் குறைந்தபட்சம் 25% இருப்பை வைத்திருக்க வேண்டும். 12 மாத சேவைக்குப் பிறகு கல்வி, திருமணம், மருத்துவச் செலவுகளுக்காகப் பணம் எடுக்கலாம், ஆனால் 25% பேலன்ஸ் கணக்கிலேயே இருக்க வேண்டும். உதாரணமாக, ஒரு ஊழியர் மாதம் 15,000 ரூபாய் சம்பளத்தில் 20 ஆண்டுகள் வேலை செய்தால், சுமார் 14 லட்சம் ரூபாய் வைப்புத்தொகை ஆகும். இடையில் 75% எடுத்தாலும், இறுதியில் 3.5 லட்சம் ரூபாய் பேலன்ஸ் இருக்கும். இது ஓய்வு காலத்தில் ஒரு பெரிய நிதிப் பாதுகாப்பைத் தரும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/epfo-new-rules-2026-make-pf-claim-and-transfer-process-easier-6uc9ef7"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Govt Scheme: ரூ. 15 லட்சம் கொடுக்கும் அரசு.! நீங்களும் முதலாளியாக நேரம் வந்தாச்சு.! உடனே அப்ளை பண்ணுங்க.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/govt-scheme-get-up-to-rs-15-lakh-to-start-your-business-apply-now-94nhsi1</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/govt-scheme-get-up-to-rs-15-lakh-to-start-your-business-apply-now-94nhsi1</guid>
            <pubDate>Wed, 22 Jul 2026 13:47:46 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தமிழ்நாடு அரசின் UYEGP திட்டம், வேலையற்ற இளைஞர்களைத் தொழில்முனைவோராக்க உதவுகிறது. இத்திட்டத்தின் கீழ், உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரத் தொழில்கள் தொடங்க ரூ.15 லட்சம் வரை கடன் மற்றும் 25% அரசு மானியம் வழங்கப்படுகிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ky4dsc66tycma4rch2t7866f,imgname-chatgpt-image-jul-22--2026--01-12-09-pm--1--1784707592389.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழ்நாடு அரசின் UYEGP திட்டம், வேலையற்ற இளைஞர்களைத் தொழில்முனைவோராக்க உதவுகிறது. இத்திட்டத்தின் கீழ், உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரத் தொழில்கள் தொடங்க ரூ.15 லட்சம் வரை கடன் மற்றும் 25% அரசு மானியம் வழங்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME) துறையால் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வரும் ஒரு மகத்தான திட்டம் தான் 'வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்' (Unemployed Youth Employment Generation Programme - UYEGP) ஆகும். இத்திட்டத்தின் முதன்மை நோக்கம், வேலையில்லா இளைஞர்களை வெறும் வேலை தேடுபவர்களாக மாற்றாமல், புதிய தொழில்முனைவோர்களாக (Entrepreneurs) உருவெடுக்க வைப்பதாகும். குறிப்பாகச் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்குத் தேவையான நிதி உதவிகளை வழங்கி, அவர்களைத் தங்களின் சொந்தக் காலில் நிற்க வைப்பதில் இத்திட்டம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இத்திட்டத்தின் மூலம் உற்பத்தி (Manufacturing), சேவை (Service) மற்றும் வியாபாரம் (Business/Trading) போன்ற பல்வேறு துறைகளில் புதிய தொழில்களைத் தொடங்குவதற்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை வங்கிகள் மூலம் கடன் உதவி வழங்கப்படுகிறது. இக்கடனுக்கான முக்கியச் சிறப்பம்சமே அரசு வழங்கும் 25% மானியம் (Subsidy) ஆகும். அதாவது, அதிகபட்சமாக ரூ.3.75 லட்சம் வரை அரசு மானியமாகவே வழங்குகிறது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;தொழிலைத் தொடங்குபவரின் சொந்தப் பங்களிப்பாகப் (Promoter Contribution) பொதுப் பிரிவினருக்கு 10 சதவீதமும், சிறப்புப் பிரிவினருக்கு 5 சதவீதமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இக்கடனைத் திருப்பிச் செலுத்த 6 மாதங்கள் வரை சலுகைக் காலம் (Moratorium) சேர்க்கப்பட்டு, மொத்தம் 5 ஆண்டுகள் வரை கால அவகாசம் அளிக்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இளைஞர்களிடையே அதிகரித்து வரும் வேலையின்மையைக் குறைப்பது, வேலை தேடி கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு இளைஞர்கள் இடம்பெயர்வதைத் தடுப்பது மற்றும் சொந்த ஊரிலேயே தொழில் தொடங்கிப் பலருக்குச் சுயவேலைவாய்ப்பை உருவாக்குவது ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும். இதில் பெண்கள், ஆதிதிராவிடர்/பழங்குடியினர் (SC/ST), பிற்படுத்தப்பட்டோர் (BC/MBC), சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் போன்ற சிறப்புப் பிரிவினருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;இத்திட்டத்தில் பயன்பெறக் குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 18 முதல் 45 வயதாகவும், சிறப்புப் பிரிவினருக்கு 18 முதல் 55 வயதாகவும் இருக்க வேண்டும். மேலும், விண்ணப்பிப்பவரின் குடும்ப ஆண்டு வருமானம் நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்குள் இருக்க வேண்டும் மற்றும் அவர்கள் தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் தொடர்ந்து வசித்த முதல் தலைமுறை தொழில்முனைவோராக இருக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் (www.msmeonline.tn.gov.in) வாயிலாக ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் போது புகைப்படத்துடன் முகவரிச் சான்று, அடையாளச் சான்றுகள், கல்விச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்று, திட்ட அறிக்கை (Project Report) மற்றும் ஜி.எஸ்.டி-யுடன் கூடிய விலைப்பட்டியல் (Quotations) போன்ற தேவையான ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, தேவையான நகல் ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்டத் தொழில் மைய (DIC) அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். நேர்முகத் தேர்வுக்குப் பின் மாவட்டப் பணிக்குழுக் குழுவால் (District Task Force Committee) தேர்வாகும் விண்ணப்பங்கள் வங்கிக்கு அனுப்பப்பட்டு கடன் ஒப்புதல் பெறப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தேர்ந்தெடுக்கப்படும் தொழில்முனைவோருக்குத் தொழில் மேலாண்மை குறித்தும் சந்தைப்படுத்தல் குறித்தும் தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி (EDP) இலவசமாக வழங்கப்படுகிறது. சொந்த ஊரிலேயே தொழிலதிபராகிப் பொருளாதார ரீதியாக உயர விரும்பும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு இத்திட்டம் ஒரு பொன்னான வாய்ப்பாகும். தகுதியும் ஆர்வமும் உள்ள இளைஞர்கள் இத்திட்டத்தைப் பயன்படுத்தி தங்களின் தொழில் கனவை நனவாக்கிக் கொள்ளலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/govt-scheme-get-up-to-rs-15-lakh-to-start-your-business-apply-now-94nhsi1"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Digital Toll Pass: டோல் பிளாசா அலைய வேண்டாம்.. மொபைல் இருந்தா போதும்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/webstories/business/apply-local-toll-pass-online-without-visiting-toll-plaza-de5k8yh</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/webstories/business/apply-local-toll-pass-online-without-visiting-toll-plaza-de5k8yh</guid>
            <pubDate>Wed, 22 Jul 2026 21:44:53 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Digital Toll Pass: டோல் பிளாசாவிலிருந்து 20 கி.மீ. தொலைவில் வசிப்பவர்கள், இனி வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் லோக்கல் பாஸுக்கு விண்ணப்பிக்கலாம். NHAI அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய வசதி, ராஜ்மார்க் யாத்ரா ஆப் மூலம் கிடைக்கிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jy64z0wrpwn19gpyn6jjrjjz,imgname-fastag-1750405710744.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <category>business</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/webstories/business/apply-local-toll-pass-online-without-visiting-toll-plaza-de5k8yh"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Magalir Urimai Thogai: ரூ.2,500 உடனே கிடைக்க இந்த அப்டேட் அவசியம்.!  2 நிமிடத்தில் ஈசியா செய்யலாம்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/magalir-urimai-thogai-essential-update-to-receive-rs-2500-immediately-easy-to-do-in-2-minutes-f6ty35a</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/magalir-urimai-thogai-essential-update-to-receive-rs-2500-immediately-easy-to-do-in-2-minutes-f6ty35a</guid>
            <pubDate>Wed, 22 Jul 2026 11:06:18 +0530</pubDate>
            <description><![CDATA[தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகையை ₹2,500 ஆக உயர்த்தலாம் என்ற செய்தி பரவி வருகிறது. இந்த நிதி உதவியை தடையின்றிப் பெற, வங்கி கணக்கில் ஆதார் இணைப்பு மற்றும் e-KYC போன்ற அப்டேட்களை செய்வது அவசியம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ky44ep78rrybcbm3f82y17bd,imgname-gemini-generated-image-kq65h3kq65h3kq65--1--1784697805032.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகையை ₹2,500 ஆக உயர்த்தலாம் என்ற செய்தி பரவி வருகிறது. இந்த நிதி உதவியை தடையின்றிப் பெற, வங்கி கணக்கில் ஆதார் இணைப்பு மற்றும் e-KYC போன்ற அப்டேட்களை செய்வது அவசியம்.&lt;img&gt;&lt;p&gt;தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் அடித்தட்டு மற்றும் நடுத்தர குடும்பப் பெண்களுக்குப் பெரும் நிதி உதவியாகவும், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் ஒரு முக்கியத் தூணாகவும் அமைந்துள்ளது. இந்நிலையில்தான், வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகையை 2,500 ரூபாயாக உயர்த்தி வழங்குவது தொடர்பான புதிய அறிவிப்பு அல்லது திட்டமிடல் குறித்த செய்திகள் இணையத்திலும், சமூக வலைதளங்களிலும் வேகமாகப் பரவி வருகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முதல்வர் விஜய் தரப்பில் இருந்து மகளிர் மேம்பாட்டிற்காக அதிரடித் திட்டங்கள் தயார் செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. ஆகஸ்ட் 15-ல் இது குறித்த முக்கிய அறிவிப்புகள் அல்லது அக்கட்சியின் நிலைப்பாடு வெளியாகலாம் என்ற தகவல்கள் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. தற்போதைய ₹1,000 தொகையை விட, ₹2,500 என்பது குடும்பப் பெண்களின் மாதாந்திரப் பொருளாதாரத் தேவைகளைப் பெருமளவில் பூர்த்தி செய்யும் என்பதால், இச்செய்தி தாய்மார்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எந்தவொரு அரசு நிதி உதவி அல்லது உரிமைத் தொகைத் திட்டமாக இருந்தாலும், வங்கிப் கணக்கில் பணம் தடையின்றி வந்து சேர சில அடிப்படை டிஜிட்டல் சரிபார்ப்புகள் மிக அவசியமாகும். குறிப்பாக, உங்களின் தற்போதைய உரிமைத் தொகை கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள விவரங்கள் சரியாக இருக்க வேண்டும். இந்தத் தொகையைப் பெற அல்லது எதிர்காலப் பயன்பாட்டிற்கு உங்கள் கணக்கைத் தயார்படுத்த நீங்கள் வெறும் 2 நிமிடத்தில் செய்ய வேண்டிய முக்கியமான அப்டேட்டுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உங்கள் வங்கிக் கணக்கில் ஆதார் எண் இணைக்கப்பட்டு, அது 'Active' நிலையில் இருக்க வேண்டும். அரசு வழங்கும் நேரடிப் பணப்பரிமாற்றம் (DBT) அனைத்தும் ஆதார் அடிப்படையிலேயே அனுப்பப்படுவதால், இதுவே மிக முக்கியமான படிநிலையாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நீண்ட நாட்களாகப் பரிவர்த்தனை செய்யப்படாத வங்கிப் கணக்குகள் முடக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, உங்கள் வங்கியின் மொபைல் ஆப் (Mobile Banking App) அல்லது இணைய வங்கி (Net Banking) மூலம் 2 நிமிடத்தில் e-KYC விவரங்களைப் புதுப்பித்துக் கொள்வது அவசியம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உங்களுக்கு வரும் எஸ்.எம்.எஸ் (SMS) விழிப்பூட்டல்கள் மற்றும் ஓ.டி.பி (OTP) சரிபார்ப்புகளுக்கு, தற்போதைய பயன்பாட்டில் உள்ள மொபைல் எண் ஆதாருடன் இணைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வங்கிக்கு நேரடியாகச் செல்லாமல், உங்கள் மொபைல் போன் மூலமாகவே வங்கி கணக்கின் e-KYC மற்றும் ஆதார் இணைப்பு நிலையை எளிதாகச் சரிபார்க்கலாம்.&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;உங்களின் வங்கி மொபைல் செயலியைத் திறந்து, 'Profile' அல்லது 'Services' பகுதிக்குச் செல்லவும்.&lt;/li&gt; &lt;li&gt;அதில் 'KYC Status' அல்லது 'Aadhaar Seeding Status' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;உங்கள் விவரங்கள் சரியாக இருந்தால், உடனடியாக 'Updated' எனக் காட்டும். ஒருவேளை நிலுவையில் இருந்தால், ஓ.டி.பி (OTP) மூலம் 2 நிமிடத்தில் புதுப்பித்துக் கொள்ளலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அரசியல் களத்தில் வெளியாகும் இதுபோன்ற ₹2,500 உரிமைத் தொகை பற்றிய தகவல்கள் ஒருபுறம் விவாதப் பொருளாக இருந்தாலும், அரசு அறிவிக்கும் சலுகைகள் மற்றும் நிதி உதவிகள் நம் கைக்குச் சரியாக வந்து சேர வங்கி மற்றும் ஆதார் கணக்குகளைப் புதுப்பித்து வைத்திருப்பது மிக அவசியமாகும். மேலே குறிப்பிட்டுள்ள எளிய அப்டேட்டுகளைச் செய்து வைப்பதன் மூலம், எதிர்காலத்தில் எந்தவிதத் தடையுமின்றி உரிமைத் தொகையைப் பெற முடியும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/magalir-urimai-thogai-essential-update-to-receive-rs-2500-immediately-easy-to-do-in-2-minutes-f6ty35a"/>
        </item>
        <item>
            <title><![CDATA[PM Kisan: பிஎம் கிசான் பணம் உயருமா? ரூ.2000 வரணும்னா இந்த 3 வேலையை உடனே முடிங்க!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/agriculture/pm-kisan-24th-installment-guide-get-your-rs-2000-without-fail-fhmrt7m</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/agriculture/pm-kisan-24th-installment-guide-get-your-rs-2000-without-fail-fhmrt7m</guid>
            <pubDate>Wed, 22 Jul 2026 12:18:24 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;பிஎம் கிசான் உதவித்தொகை உயர்வு பற்றி மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெளிவுபடுத்தியுள்ளார். 24-வது தவணை ரூ.2,000 உங்கள் அக்கவுன்ட்டுக்கு வர, இ-கேஒய்சி, ஆதார் இணைப்பு, நில ஆவண சரிபார்ப்பு போன்ற வேலைகளை உடனே முடிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ke8xzaqpbgwr8035dcptrprd,imgname-f9062584-bda2-477b-90b4-7beb912a3167-1767678913270.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;பிஎம் கிசான் உதவித்தொகை உயர்வு பற்றி மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெளிவுபடுத்தியுள்ளார். 24-வது தவணை ரூ.2,000 உங்கள் அக்கவுன்ட்டுக்கு வர, இ-கேஒய்சி, ஆதார் இணைப்பு, நில ஆவண சரிபார்ப்பு போன்ற வேலைகளை உடனே முடிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;நாடு முழுவதும் கோடிக்கணக்கான விவசாயிகள் பிஎம் கிசான் உதவித்தொகை உயரும்னு எதிர்பார்த்துட்டு இருக்காங்க. ஆனா, வருஷத்துக்கு கொடுக்குற ரூ.6,000 நிதியை உயர்த்துற திட்டம் எதுவும் இப்போதைக்கு இல்லைன்னு மத்திய அரசு மக்களவையில தெளிவா சொல்லிருச்சு. கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. பென்னி பெஹனான், சிபிஐ எம்.பி. கே. ராதாகிருஷ்ணன் கேட்ட கேள்விக்கு, மத்திய விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் எழுத்துப்பூர்வமா பதில் கொடுத்தார். பிஎம் கிசான் தொகையை உயர்த்தும் திட்டம் இப்போதைக்கு இல்லைன்னு அவர் உறுதியா சொல்லியிருக்கார்.&lt;img&gt;சிறு, குறு விவசாயிகளுக்கு மத்திய அரசு வருஷத்துக்கு ரூ.6,000 உதவித்தொகை கொடுக்குது. இந்த பணத்தை நாலு மாசத்துக்கு ஒருமுறை ரூ.2,000 வீதம், மூணு தவணையா விவசாயிகளோட பேங்க் அக்கவுன்ட்ல நேரடியாக டெபாசிட் செய்றாங்க. இதுவரைக்கும் 23 தவணைகளை அரசு வெற்றிகரமா கொடுத்திருக்கு. போன வருஷம் ஜூன் மாசம் 23-வது தவணை பணம் விவசாயிகளுக்கு கிடைச்சது. முந்தைய தவணைகள் வந்த நேரத்தை வெச்சுப் பார்த்தா, அடுத்த 24-வது தவணை ரூ.2,000 செப்டம்பர் முதல் நவம்பர் மாசத்துக்குள்ள எப்போ வேணும்னாலும் வரலாம். ஆனா, இதுபத்தி மத்திய அரசு இன்னும் அதிகாரப்பூர்வமா தேதி எதையும் அறிவிக்கல. சீக்கிரமே அறிவிப்பு வரும்னு எதிர்பார்க்கலாம்.&lt;img&gt;திட்டத்துல வெளிப்படைத்தன்மையை கொண்டு வரவும், தகுதியான விவசாயிகளுக்கு மட்டும் பணம் போய்ச் சேரவும் மத்திய அரசு சில விதிகளை கடுமையாக்கியிருக்கு. கீழே சொல்லியிருக்கிற மூணு வேலைகளையும் நீங்க முடிக்கலைன்னா, உங்க 24-வது தவணை ரூ.2,000 வர்றது நின்னுபோக வாய்ப்பிருக்கு. 1. இ-கேஒய்சி கட்டாயம்: இ-கேஒய்சி முடிக்காத விவசாயிகளுக்கு அடுத்த தவணை பணம் வராது. பக்கத்துல இருக்குற சிஎஸ்சி மையத்துக்குப் போய் அல்லது மொபைல் ஓடிபி மூலமா ஆன்லைன்லயே இதை முடிக்கலாம். 2. ஆதார் - வங்கி கணக்கு இணைப்பு &amp;amp; டிபிடி: உங்க பேங்க் அக்கவுன்ட் ஆதார் கூட இணைச்சிருக்கணும். நேரடிப் பணப் பரிமாற்ற (DBT) ஆப்ஷன் ஆக்டிவா இருக்கானு செக் பண்ணிக்கோங்க. 3. நில ஆவணப் பதிவு: உங்க நில விவரங்கள் பிஎம் கிசான் போர்ட்டல்ல சரியா பதிவாகி, சரிபார்க்கப்பட்டிருக்கணும். ரெக்கார்டுல ஏதாவது வித்தியாசம் இருந்தா பணம் வராது.&lt;img&gt;உங்க அக்கவுன்ட்டுக்கு 24-வது தவணை பணம் வருமா வராதான்னு நீங்க ஈஸியா ஆன்லைன்ல ஸ்டேட்டஸ் செக் பண்ணிக்கலாம். &bull; முதல்ல பிஎம் கிசான் அதிகாரப்பூர்வ வெப்சைட்டுக்கு போங்க. &bull; ஹோம் பேஜ்ல இருக்குற 'Know Your Status' ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. &bull; உங்க ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர் அல்லது ஆதார் நம்பரை டைப் பண்ணுங்க. &bull; உங்க விவரங்கள், இ-கேஒய்சி, நில ஆவண சரிபார்ப்பு ஸ்டேட்டஸ் எல்லாமே 'YES'னு இருந்தா, உங்க பணம் பத்திரமா அக்கவுன்ட்ல விழுந்திடும்.&lt;img&gt;நிறைய விவசாயிகள் கடைசி நிமிஷம் வரைக்கும் காத்திருந்து, சின்ன சின்ன டெக்னிக்கல் பிரச்னைகளால பணத்தை இழந்துடுறாங்க. ஆதார் விவரங்கள்ல வித்தியாசம் இருந்தாலோ, பேங்க் அக்கவுன்ட் ஆக்டிவா இல்லைனாலோ பணம் நின்னுடும். அதனால, 24-வது தவணை பணம் வர்றதுக்கு முன்னாடியே உங்க விவரங்கள் எல்லாம் சரியா இருக்கானு செக் பண்ணிக்கிறது நல்லது. மாநில அரசுகள் சரிபார்த்த தகுதியான விவசாயிகளுக்கு அடுத்த தவணை பணம் உடனே டெபாசிட் ஆகும்னு விவசாயத்துறை அமைச்சர் சொல்லியிருக்கார். அதனால உடனே உங்க இ-கேஒய்சி, நில ஆவண விவரங்களை சரிபார்த்துக்கோங்க.]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/agriculture/pm-kisan-24th-installment-guide-get-your-rs-2000-without-fail-fhmrt7m"/>
        </item>
        <item>
            <title><![CDATA[டிஏ இணைப்பு வந்தால் மத்திய அரசு ஊழியர்களுக்கு என்ன பலன்? முழு கணக்கீடு]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/8th-pay-commission-demand-to-merge-da-with-basic-pay-g6fzzhr</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/8th-pay-commission-demand-to-merge-da-with-basic-pay-g6fzzhr</guid>
            <pubDate>Wed, 22 Jul 2026 20:48:11 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;8வது மத்திய கமிஷன் சம்பளம் தொடர்பான எதிர்பார்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் முக்கிய கோரிக்கையாக அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ky438qmtwgyk3rt2asj97vye,imgname-8th-pay-commission-1784696561306.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;8வது மத்திய கமிஷன் சம்பளம் தொடர்பான எதிர்பார்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் முக்கிய கோரிக்கையாக அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சங்கங்கள் ஒரு முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ளன. அதிகரித்து வரும் பணவீக்கத்திலிருந்து ஊழியர்களுக்கு நிவாரணம் அளிக்க, 8வது சம்பள கமிஷனில் அகவிலைப்படியை (டிஏ) அடிப்படை சம்பளத்துடன் இணைக்க வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். 8வது மத்திய சம்பள கமிஷன் தற்போது தனது அறிக்கையைத் தயாரித்து வருகிறது. எனவே, அகவிலைப்படியை (DA) அடிப்படை சம்பளத்துடன் இணைப்பார்கள் என ஊழியர் சங்கங்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அகவிலைப்படி (DA) என்பது ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளத்தின் ஒரு பகுதியாகும். வாழ்க்கைச் செலவினங்கள் அதிகரிக்கும்போது, அந்த பணவீக்கத்தின் தாக்கத்தைக் குறைக்க இது உதவுகிறது. டிஏ உயர்ந்தால், ஊழியரின் கைக்கு வரும் சம்பளம் அதிகரித்து, பணவீக்கத்திலிருந்து நிவாரணம் கிடைக்கும். அரசு பொதுவாக இரண்டு முறை அகவிலைப்படி உயர்வை அறிவிக்கிறது. ஜனவரி-ஜூன் காலத்திற்கு மார்ச் மாதத்திலும், ஜூலை-டிசம்பர் காலத்திற்கு செப்டம்பர்/அக்டோபரிலும் இந்த அறிவிப்பு வரும். இது அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI-IW) அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;டோல் பிளாசா அருகே வசிக்கிறீர்களா? வீட்டிலிருந்தே மொபைலில் டிஜிட்டல் டோல் பாஸ் பெறலாம்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;7வது சம்பள கமிஷனின் கீழ், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை (DA) இந்தக் ஃபார்முலாவைப் பயன்படுத்தி கணக்கிட்டார்கள்: DA% = (சராசரி AICPI (12 மாதங்கள்) &ndash; 261.42) / 261.42 &times; 100. இந்த ஃபார்முலாவில் உள்ள 261.42 என்ற எண், 2016-ஐ அடிப்படை ஆண்டாகக் கொண்டு கணக்கிடப்பட்டது. இது 7வது சம்பள கமிஷன் தொடங்கியபோது இருந்த 12 மாத சராசரி AICPI-IW ஆகும். இதுவே பணவீக்கத்தைக் கணக்கிடுவதற்கான அடிப்படையாக உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், மோடி அரசு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 2% உயர்த்தி அறிவித்தது. இந்த மாற்றத்தின் மூலம், அகவிலைப்படி அடிப்படை சம்பளத்தில் 58%-லிருந்து 60% ஆக அதிகரித்துள்ளது. முதல் நன்மை, கைக்கு வரும் சம்பளம் அதிகரிக்கும். கையில் அதிக பணம் இருப்பதால் வாழ்க்கைத்தரம் உயரும். அடிப்படை சம்பளம் உயர்வதால், ஊழியர் மற்றும் அரசு ஆகிய இரு தரப்பிலிருந்தும் பிஎஃப் (PF) பங்களிப்பு அதிகரிக்கும். இதனால், ஓய்வூதிய நிதி பெரியதாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கிராஜுவிட்டி மற்றும் விடுப்பு பணமாக்குதல் (Leave Encashment) போன்றவையும் இதனால் பயனடையும். ஏனெனில், அகவிலைப்படியின் அடிப்படையில்தான் கிராஜுவிட்டி கணக்கிடப்படுகிறது. அடிப்படை சம்பளம் உயர்வதால், ஓய்வுபெறும்போது லட்சக்கணக்கான ரூபாய் கூடுதல் பலன் கிடைக்கும். அகவிலைப்படி இணைப்பு (DA Merger) தற்போது பணியில் உள்ள ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆகிய இருவருக்கும் பொருந்தும். அகவிலை நிவாரணம் (DR) இணைக்கப்படுவதால், மாதாந்திர ஓய்வூதியமும் அதிகரிக்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/8th-pay-commission-demand-to-merge-da-with-basic-pay-g6fzzhr"/>
        </item>
        <item>
            <title><![CDATA[PhonePe, Google Pay பயனர்கள் காத்திருக்கும் அதிர்ச்சி? யுபிஐ கட்டணம் குறித்து வெளியான முக்கிய தகவல்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/phonepe-google-pay-upi-fee-proposal-explained-gmlm5mm</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/phonepe-google-pay-upi-fee-proposal-explained-gmlm5mm</guid>
            <pubDate>Wed, 22 Jul 2026 14:19:23 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;UPI Charges: தேநீர் கடை முதல் பெரிய ஷாப்பிங் மால் வரை இன்று யுபிஐ பணப் பரிவர்த்தனை இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்வது கடினம். Google Pay, PhonePe, BHIM உள்ளிட்ட செயலிகள் மூலம் கோடிக்கணக்கான மக்கள் தினமும் டிஜிட்டல் கட்டணங்களை மேற்கொள்கிறார்கள்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jgkejdp06p7cs1x38bm5nemd,imgname-tamil-news---2025-01-02t173540.221.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;UPI Charges: தேநீர் கடை முதல் பெரிய ஷாப்பிங் மால் வரை இன்று யுபிஐ பணப் பரிவர்த்தனை இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்வது கடினம். Google Pay, PhonePe, BHIM உள்ளிட்ட செயலிகள் மூலம் கோடிக்கணக்கான மக்கள் தினமும் டிஜிட்டல் கட்டணங்களை மேற்கொள்கிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையின் முகமாக மாறியுள்ள யுபிஐ முறையில் முக்கியமான மாற்றம் ஒன்று வரலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் ரூ.2,000-க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு வணிகர் தள்ளுபடி விகிதம் (MDR) எனப்படும் வணிகர் கட்டணத்தை மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இந்த முடிவு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தற்போது பரிசீலனையில் உள்ள முன்மொழிவின்படி, பெரிய நிறுவனங்கள் மற்றும் பெரிய வணிகர்களிடம் மேற்கொள்ளப்படும் ரூ.2,000-க்கு மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே MDR விதிக்கப்படலாம். இந்த கட்டண விகிதம் 0.5 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்த முன்மொழிவு குறித்து அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மத்திய அரசு முடிவு எடுக்கக்கூடும் என்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த மாற்றம் பொதுமக்களை நேரடியாக பாதிக்காது என்று அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அதாவது, யுபிஐ மூலம் பணம் அனுப்பப்படும் தனிநபர்கள் அல்லது அன்றாட பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது. மாறாக, குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் பெரிய வணிகர்களுக்கே இந்த வணிகக் கட்டணம் பொருந்தும் வகையில் திட்டமிடப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த மாற்றம் ஏன் பரிசீலிக்கப்படுகிறது என்ற கேள்விக்கும் காரணம் கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் யுபிஐ பரிவர்த்தனைகள் மிக வேகமாக உயர்ந்துள்ளன. இந்த நேரடி பரிவர்த்தனைகளை தடையின்றி செயல்படுத்த வங்கிகள் மற்றும் டிஜிட்டல் கட்டண சேவை நிறுவனங்கள் தொடர்ந்து தங்களது தொழில்நுட்ப உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். தற்போது ரூ.2,000-க்கு குறைவான யுபிஐ பரிவர்த்தனைகள் மற்றும் RuPay டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு மத்திய அரசு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. ஆனால், அதிகரித்து வரும் செயல்பாட்டு செலவுகளால், நீண்ட கால நிதி நிலைத்தன்மைக்காக புதிய வருவாய் முறை அவசியமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/phonepe-google-pay-upi-fee-proposal-explained-gmlm5mm"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Tax Refund: ஐடிஆர் ரீஃபண்ட் வேண்டுமா? இந்த ஒரு தவறு செய்தால் பணம் தாமதமாகலாம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/itr-refund-may-get-delayed-if-you-miss-this-step-huldqg9</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/itr-refund-may-get-delayed-if-you-miss-this-step-huldqg9</guid>
            <pubDate>Fri, 24 Jul 2026 14:40:23 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Tax Refund: வரி செலுத்துவோருக்கு தற்போது மிகக் குறைந்த கால அவகாசமே உள்ளது. தாமதம் ஏற்பட்டால் அபராதம் தவிர, வரி திருப்பிச் செலுத்தும் தாமதம் உள்ளிட்ட சிக்கல்களும் உள்ளன.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k58andmzq89mkewm1pj1g4r2,imgname-tamil-news-1757994989215.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Tax Refund: வரி செலுத்துவோருக்கு தற்போது மிகக் குறைந்த கால அவகாசமே உள்ளது. தாமதம் ஏற்பட்டால் அபராதம் தவிர, வரி திருப்பிச் செலுத்தும் தாமதம் உள்ளிட்ட சிக்கல்களும் உள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மதிப்பீட்டு ஆண்டு 2026-27-க்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய சில நாட்களே உள்ளன. ஜூலை 31, 2026 கடைசி நாளாக இருப்பதால், இதுவரை தாக்கல் செய்யாதவர்கள் தாமதிக்காமல் உடனடியாக பதிவு செய்து முடிக்குமாறு வருமான வரித்துறை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. நாட்டில் வருமான வரித் துறையின் இணையதளத்தில் 14 கோடிக்கும் அதிகமானோர் பதிவு செய்திருந்தாலும், ஜூலை 21 நிலவரப்படி சுமார் 3.15 கோடி பேர் மட்டுமே கணக்கை தாக்கல் செய்துள்ளனர். கடைசி நாட்களில் அதிக நெரிசல் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், இறுதி நேரத்தை காத்திருக்காமல் முன்கூட்டியே செயல்முறையை நிறைவு செய்வது சிக்கல்களைத் தவிர்க்க உதவும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த ஆண்டு வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யும் போது, ​​தற்போது பயன்படுத்தி வரும் அனைத்து வங்கி கணக்குகளின் விவரங்களையும் கட்டாயமாக குறிப்பிட வேண்டும். சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு, கடன் வசதியுடன் இயங்கும் கணக்கு, வரவு செலவு வசதி கொண்ட கணக்கு, வெளிநாட்டில் வசிப்போருக்கான வங்கிக் கணக்கு உள்ளிட்ட அனைத்தும் இதில் அடங்கும். செயலில் இருக்கும் ஏதேனும் ஒரு வங்கி கணக்கை மறைத்து தகவல் அளித்தால், பின்னர் வருமான வரித்துறையின் ஆய்வில் தெரியவந்தால், ஒவ்வொரு மறைக்கப்பட்ட வங்கி கணக்கிற்கும் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கின்றன. எனவே, அனைத்து விவரங்களும் முழுமையாக பதிவு செய்வது மிகவும் முக்கியம்.&lt;/p&gt;&lt;p&gt;நகைக்கடன் வாங்குறீங்களா? இந்த 5 தவறுகளை செய்தால் உங்க தங்கம் ஏலத்துக்கு போயிடும்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வருமான வரி ரீபண்ட் தொகையை எதிர்பார்ப்பவர்கள், தங்களின் வங்கி கணக்கை வருமான வரித் துறையின் இணையதளத்தில் முன்கூட்டியே சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும். முதன்மை வங்கி கணக்கில் ஏதேனும் தொழில்நுட்ப சிக்கல் ஏற்பட்டாலும், ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட மற்றொரு வங்கி கணக்கின் மூலம் ரீபண்ட் தொகையை அனுப்புவதற்கு வசதி உள்ளது. ஆனால், வங்கி விவரங்கள் முழுமையாக வழங்கப்படவில்லை அல்லது சரிபார்க்கப்படாதது போன்ற காரணங்களால் திருப்பித் தொகை கிடைப்பதில் தேவையற்ற தாமதம் தேதி. பின்வரும் சிக்கல்களைத் தவிர்க்க, வங்கி விவரங்களை முன்கூட்டியே சரிபார்த்து உறுதி செய்வது நல்லது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜூலை 31-க்குள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய முடியாதவர்களுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளது. வருமான வரிச் சட்டம், 1961-ன் பிரிவு 139(4)-ன் கீழ் தாமதமாகவும் கணக்கை தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதற்காக தாமதக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு அதிகமாக இருந்தால் அதிகபட்சமாக ரூ.5,000 வரை கட்டணம் விதிக்கப்படும். ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் அல்லது அதற்குக் குறைவாக இருந்தால் ரூ.1,000 தாமதக் கட்டணமாக செலுத்த வேண்டும். எனவே, தேவையற்ற கூடுதல் செலவைத் தவிர்க்க கடைசி நாளுக்குள் தாக்கல் செய்வதே சிறந்த முடிவாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;புதிய வருமான வரிச் சட்டம் 2025, 2026 ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வந்திருந்தாலும், தற்போது தாக்கல் செய்யப்படும் வருமான வரிக் கணக்கு 2025 ஏப்ரல் 1 முதல் 2026 மார்ச் 31 வரையிலான வருமானத்தைக் கொண்டுள்ளது. அதனால், இந்த மதிப்பீட்டு ஆண்டுக்கான கணக்கீடு மற்றும் நடைமுறை தாக்கல்கள் அனைத்தும் பழைய வருமான வரிச் சட்டம், 1961-ன் விதிகளின்படியே மேற்கொள்ளப்படுகின்றன. புதிய சட்டத்தின் விதிகள், 2026-27 நிதியாண்டில் கிடைக்கும் வருமானத்திற்காக அடுத்த ஆண்டு தாக்கல் செய்யப்படும் வருமான வரி கணக்கில்தான் முழுமையாக அமலுக்கு வரும். எனவே, இந்த ஆண்டுக்கான தாக்கலில் பழைய சட்ட விதிகளே பொருந்தும் என்பதை வரி செலுத்துவோர் நினைவில் கொள்ள வேண்டும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/itr-refund-may-get-delayed-if-you-miss-this-step-huldqg9"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Business Idea: மாசம் 1 லட்சம் சம்பாதிக்கலாம்! இந்த டிரெண்டிங் பிசினஸ் ஐடியா பற்றி தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/private-theatre-business-idea-can-you-earn-1-lakh-a-month-k1obooe</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/private-theatre-business-idea-can-you-earn-1-lakh-a-month-k1obooe</guid>
            <pubDate>Wed, 22 Jul 2026 23:11:46 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Business Idea: சமீப காலமாக நகர்ப்புறங்களில் வேகமாக பிரபலமடைந்து வரும் தொழில்களில் ஒன்றாக பிரைவேட் தியேட்டர் பார்க்கப்படுகிறது. இந்த தொழிலை தொடங்க எவ்வளவு முதலீடு தேவை, வருமான வாய்ப்பு என்ன என்பதைப் பார்ப்போம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ky4k5m2sq3qqcks69hjpx44z,imgname-2-1784713236569.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Business Idea: சமீப காலமாக நகர்ப்புறங்களில் வேகமாக பிரபலமடைந்து வரும் தொழில்களில் ஒன்றாக பிரைவேட் தியேட்டர் பார்க்கப்படுகிறது. இந்த தொழிலை தொடங்க எவ்வளவு முதலீடு தேவை, வருமான வாய்ப்பு என்ன என்பதைப் பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இப்போதெல்லாம் இளைஞர்கள், குடும்பங்கள் என எல்லோருமே பிரைவசிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதனால்தான் பிரைவேட் தியேட்டர் கான்செப்ட் பிரபலமாகி வருகிறது. ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி போன்ற மெட்ரோ நகரங்களில் மட்டும் இருந்த இந்த பிசினஸ், இப்போது சிறிய நகரங்களுக்கும் பரவியுள்ளது. பிறந்தநாள், திருமண நாள், நண்பர்களின் சந்திப்பு என பலரும் இதை புக் செய்கிறார்கள். இந்தத் தொழிலைத் தொடங்க பெரிய வணிக வளாகம் தேவையில்லை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;500 முதல் 1,000 சதுர அடி இடம் இருந்தால் போதும். சொந்த பிளாட் அல்லது வாடகைக்கு ஒரு ஹால் எடுத்தும் ஆரம்பிக்கலாம். ஒரு நல்ல புரொஜெக்டர் அல்லது பெரிய டிவி, சவுண்ட் சிஸ்டம், சொகுசான சோஃபாக்கள், ஏசி, அழகான இன்டீரியர் மற்றும் லைட்டிங் ஆகியவை முக்கிய தேவைகள். இவற்றை ஒருமுறை அமைத்தால் பல ஆண்டுகள் பயன்படுத்தலாம். பொதுவாக, வாடிக்கையாளர்கள் 1 முதல் 3 மணி நேரம் வரை புக் செய்வார்கள். இடத்தைப் பொறுத்து, ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,000 முதல் ரூ.2,500 வரை கட்டணம் வசூலிக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;சோலார் பிசினஸில் களமிறங்கிய எம்.எஸ் தோனி.. புதிய ஸ்டார்ட்அப்பில் முதலீடு.. எவ்வளவு தெரியுமா?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒரு நாளைக்கு இரண்டு புக்கிங் வந்தால்கூட, குறைந்தபட்சம் ரூ.2,000 முதல் ரூ.5,000 வரை வருமானம் கிடைக்கும். வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் புக்கிங் இன்னும் அதிகரிக்கும். பிரைவேட் தியேட்டரை படம் பார்க்க மட்டுமல்லாமல், பிறந்தநாள், திருமண நாள், ப்ரொபோசல், பேபி ஷவர், ஃபேர்வெல் பார்ட்டி, சிறிய கார்ப்பரேட் மீட்டிங் போன்ற பல நிகழ்வுகளுக்கும் பயன்படுத்துகின்றனர். இந்த நிகழ்ச்சிகளுக்கு சீசன் கிடையாது என்பதால், ஆண்டு முழுவதும் டிமாண்ட் இருக்கும். சோஷியல் மீடியா தாக்கத்தால், விசேஷமான கொண்டாட்டங்களை விரும்பும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த பிசினஸில் உண்மையான லாபம் கூடுதல் சேவைகளில்தான் இருக்கிறது. வாடிக்கையாளர் கேட்கும் தீமிற்கு ஏற்ப பலூன், பூக்கள், கேண்டில் லைட் டெக்கரேஷன் செய்து தரலாம். சாதாரண புக்கிங்கிற்கு ரூ.1,000 வாங்கினால், தீம் டெக்கரேஷனுடன் சேர்த்து ரூ.3,000 முதல் ரூ.8,000 வரை பேக்கேஜாக விற்க முடியும். போட்டோகிராபர்கள், கேக் கடைகளுடன் பார்ட்னர்ஷிப் வைத்தால் கமிஷன் மூலமும் சம்பாதிக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;டோல் பிளாசா அருகே வசிக்கிறீர்களா? வீட்டிலிருந்தே மொபைலில் டிஜிட்டல் டோல் பாஸ் பெறலாம்!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/private-theatre-business-idea-can-you-earn-1-lakh-a-month-k1obooe"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Green Chilli Price : 100 கிராம் மிளகாய் 400 ரூபாயா? பாவம் இந்த மக்கள்! வைரலாகும் வீடியோ!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/world/why-does-100-grams-of-green-chilli-cost-rs-400-here-kqrfl0m</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/world/why-does-100-grams-of-green-chilli-cost-rs-400-here-kqrfl0m</guid>
            <pubDate>Thu, 23 Jul 2026 11:33:11 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Green Chilli Price : சமையல் செய்ய பச்சை மிளகாய் மிகவும் அவசியமாகும். அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களுக்கும் பச்சை மிளகாய் தேவைப்படுகிறது. ஆனால் அங்கே உள்ள விலைகள் இந்தியர்களை பயமுறுத்தும் வகையில் உள்ளன.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ky6rqq2hrd6k2p5k41zn63z4,imgname-chatgpt-image-jul-23--2026--11-25-35-am-1784786181201.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Green Chilli Price : சமையல் செய்ய பச்சை மிளகாய் மிகவும் அவசியமாகும். அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களுக்கும் பச்சை மிளகாய் தேவைப்படுகிறது. ஆனால் அங்கே உள்ள விலைகள் இந்தியர்களை பயமுறுத்தும் வகையில் உள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்திய சமையலில் பச்சை மிளகாய் கட்டாயம் இருக்க வேண்டிய ஒன்றாகும். பருப்பு, குழம்பு, சட்னி, பிரியாணி என எது சமைத்தாலும் அதில் பச்சை மிளகாய் துண்டுகள் சேர்க்கப்பட வேண்டும். நம் நாட்டில் பச்சை மிளகாயின் விலை குறைவாகவே இருக்கும். ஒரு 20 ரூபாய்க்கு வாங்கி வந்தால் ஒரு வாரத்திற்குப் போதுமானதாக இருக்கும். ஆனால், அதே பச்சை மிளகாயை அமெரிக்காவில் வாங்க வேண்டும் என்றால் பாக்கெட்டை காலியாக்க வேண்டிவரும்.&lt;/p&gt;&lt;p&gt;சமூக வலைத்தளத்தில் சமீபத்தில் ஒரு இந்தியப் பெண் அங்கு பச்சை மிளகாயின் விலையைக் காட்டி வெளியிட்ட காணொளி நெட்டிசன்களை ஈர்த்துள்ளது. இந்தியாவுடன் ஒப்பிடுகையில் அமெரிக்காவில் பச்சை மிளகாயின் விலை எவ்வளவு அதிகமாக இருக்கிறது என்பதைப் பார்த்து இந்திய வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க :&lt;/strong&gt; Dharma Karma Yoga : இனி ராஜ வாழ்க்கைதான்! காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரம் இது!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வைரல் காணொளியின்படி, ஒரு பெண் அமெரிக்காவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் (சூப்பர் மார்க்கெட்) 114 கிராம் எடையுள்ள பச்சை மிளகாய் பாக்கெட்டைக் காட்டினார். அந்த பாக்கெட்டில் தோராயமாக 12 முதல் 13 மிளகாய்கள் மட்டுமே இருந்தன. ஆனால் அதன் விலை இந்திய ரூபாயில் பார்த்தால் கிட்டத்தட்ட ரூ.400 ஆக உள்ளது. இந்த கணக்கின்படி ஒரு கிலோ பச்சை மிளகாயின் விலையைப் பார்த்தால் சுமார் ரூ.3,500 வரை இருக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;நம் நாட்டில் வெறும் ரூ.20 முதல் ரூ.30-க்கே கால் கிலோ கிடைக்கும் பச்சை மிளகாய்க்கு, அமெரிக்காவில் நூற்றுக்கணக்கான ரூபாய்களைச் செலவிட வேண்டியுள்ளது. இந்தியாவில் ரூ.400 கொடுத்தால் பை நிறையா விதவிதமான காய்கறிகள் வரும், அப்படியிருக்க அமெரிக்காவில் வெறும் ஒரு பிடி மிளகாய்க்காக இவ்வளவு பணம் செலவழிக்க வேண்டுமா என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Baahubali : பாகுபலியில் நீங்கள் யார்? உங்க பிறந்த தேதி சொன்னா போதும்!&lt;/p&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;இந்த பதிவை இன்ஸ்டாகிராமில் பார்க்கவும்&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&lt;p&gt;Neha Jain| USA life (@neha_in_usa) பகிர்ந்த ஒரு பதிவு&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அமெரிக்காவில் பச்சை மிளகாய் இவ்வளவு விலை அதிகமாக இருப்பதற்கான முக்கியக் காரணங்கள் சில உள்ளன. நாம் பயன்படுத்தும் இந்திய வகை பச்சை மிளகாய்கள் அங்கே எல்லா இடங்களிலும் விளைவதில்லை. இவற்றை பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்தல், போக்குவரத்து, பேக்கேஜிங், குளிர்சாதன சேமிப்பு (கோல்ட் ஸ்டோரேஜ்) மற்றும் அங்கே வழங்கப்படும் அதிக ஊதியச் செலவுகள் காரணமாக இவை விலையுயர்ந்ததாக மாறுகின்றன.&lt;/p&gt;&lt;p&gt;அதுமட்டுமின்றி, அமெரிக்காவில் வருமானம், வாழ்க்கைச் செலவு மற்றும் வாங்கும் திறன் நம் நாட்டை விட அதிகமாக இருக்கும். டாலர்களை நேராக ரூபாயாக மாற்றிப் பார்க்கும்போது விலை மிகவும் அதிகமாகத் தெரியும். எவ்வாறாயினும், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு நம் ஊர் மிளகாயின் மதிப்பு இப்போது நன்றாகப் புரிகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Fridge : Single Door-ஆ? Double Door-ஆ? இந்த விஷயம் தெரியாம ஃபிரிட்ஜ் வாங்காதீங்க!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/world/why-does-100-grams-of-green-chilli-cost-rs-400-here-kqrfl0m"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Ration Card Update: ரேஷன் கார்டு வச்சிருக்கீங்களா? இந்த வேலையை உடனே முடியுங்க... இல்லைனா பொருட்கள் கிடைக்காது!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/ration-card-update-complete-this-mandatory-process-immediately-or-you-may-stop-receiving-ration-supplies-oalq65o</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/ration-card-update-complete-this-mandatory-process-immediately-or-you-may-stop-receiving-ration-supplies-oalq65o</guid>
            <pubDate>Thu, 23 Jul 2026 13:37:27 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ரேஷன் கார்டு எனப்படும் குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் இந்த மாதத்திற்குள் செய்ய வேண்டிய அப்டேட் ஒன்னு இருக்கு. உடனே செய்யாட்டி இலவச பொருட்கள் கிடைக்காது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ky7071fz6mdz0zs9a0zr4ntq,imgname-gemini-generated-image-4qy1mn4qy1mn4qy1--1--1784794023423.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ரேஷன் கார்டு எனப்படும் குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் இந்த மாதத்திற்குள் செய்ய வேண்டிய அப்டேட் ஒன்னு இருக்கு. உடனே செய்யாட்டி இலவச பொருட்கள் கிடைக்காது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் எளிய மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், தினசரி வாழ்வாதாரத்தைத் தாங்கிப் பிடிப்பதிலும் ரேஷன் கார்டு மிக முக்கிய ஆவணமாகத் திகழ்கிறது. இதன் மூலம் இலவச அரிசி மட்டுமின்றி, சர்க்கரை, கோதுமை மற்றும் பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்கள் மானிய விலையில் மக்களுக்குக் கிடைக்கின்றன. இந்நிலையில், ரேஷன் அட்டைதாரர்கள் வரும் ஜூலை 31, 2026-க்குள் தங்கள் கணக்கில் ஒரு முக்கியமான சரிபார்ப்பை முடிக்காவிட்டால், தொடர்ந்து பொருட்கள் பெறுவதில் சிக்கல் ஏற்படும் என அரசு எச்சரித்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அரசு வழங்கக்கூடிய இலவச மற்றும் மானிய விலை ரேஷன் பொருட்கள் தங்குதடையின்றித் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்றால், குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் e-KYC (மின்னணு பயோமெட்ரிக் சரிபார்ப்பு) செய்வதைக் கட்டாயமாக்கியுள்ளனர். இதற்காக, ரேஷன் கார்டில் பெயருள்ள உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் பகுதிக்குட்பட்ட நியாயவிலைக் கடைக்கு நேரில் சென்று, விரல்ரேகையைப் பதிவு செய்ய வேண்டும். இச்செயல்முறையை குறிப்பிட்ட கெடுவுக்குள் முடிக்கத் தவறினால், அட்டைக்கான உணவுப் பொருட்கள் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பொது விநியோகத் திட்டத்தில் நிலவி வரும் பல்வேறு முறைகேடுகளையும், தகுதியற்ற நபர்கள் சலுகைகளைப் பெறுவதையும் தடுப்பதே அரசின் இந்த நடவடிக்கைக்கு முதன்மை காரணமாகும். குறிப்பாக, உயிரிழந்த குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை நீக்காமல் தொடர்ந்து பொருட்கள் வாங்குவது மற்றும் போலி அட்டைகளைப் பயன்படுத்துவது போன்ற செயல்களுக்கு இதன் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. இதன் வழியாக, அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) போன்ற திட்டங்களின் பயன்கள் உண்மையான ஏழை எளிய குடும்பங்களுக்குச் சென்றடைவது உறுதி செய்யப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கடைசி நேரத்தில் ஏற்படும் தேவையற்ற நெரிசலையும், ரேஷன் பொருட்கள் நிறுத்தப்படுவதையும் தவிர்க்க பொதுமக்கள் உடனே விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியமாகும். உங்கள் குடும்பத்தில் யாரேனும் உயிரிழந்திருந்தால் அவர்களின் பெயரை ரேஷன் கார்டில் இருந்து நீக்குவதற்கான விண்ணப்பத்தை அளிப்பதோடு, கார்டில் உள்ள மற்ற உறுப்பினர்கள் அனைவரும் உடனே ரேஷன் கடைக்குச் சென்று பயோமெட்ரிக் சரிபார்ப்பை முடிக்க வேண்டும். ஜூலை 31-ஆம் தேதிக்குள் இந்த வேலையை நிறைவு செய்து, அரசின் இலவச உணவுப் பொருட்களைத் தொடர்ந்து பெற்றுப் பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரேஷன் கார்டு என்பது எளிய குடும்பங்களின் அன்றாட உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் மிக முக்கியமான வாழ்வாதார சான்றாகும். அரசு வழங்கக்கூடிய இலவச அரிசி மற்றும் மானிய விலையிலான உணவுப் பொருட்கள் தடையின்றித் தொடர்ந்து கிடைக்க வேண்டுமென்றால், குறிப்பிடப்பட்டுள்ள கெடுவுக்குள் e-KYC சரிபார்ப்பை முடிப்பது மிகவும் அவசியமாகும்.&lt;/p&gt;&lt;p&gt;எனவே, கடைசி நேர நெரிசலையும், ரேஷன் பொருட்கள் நிறுத்தப்படும் அபாயத்தையும் தவிர்க்க, அனைத்து குடும்ப உறுப்பினர்களும் உடனே தங்கள் பகுதி ரேஷன் கடைக்குச் சென்று கைரேகை பதிவை நிறைவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விழிப்புடன் செயல்பட்டு அரசின் சலுகைகளைத் தொடர்ந்து பெறுவோம்!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/ration-card-update-complete-this-mandatory-process-immediately-or-you-may-stop-receiving-ration-supplies-oalq65o"/>
        </item>
        <item>
            <title><![CDATA[சோலார் பிசினஸில் களமிறங்கிய எம்.எஸ் தோனி.. புதிய ஸ்டார்ட்அப்பில் முதலீடு.. எவ்வளவு தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/ms-dhoni-invests-in-solarsquare-startup-pbpbi5e</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/ms-dhoni-invests-in-solarsquare-startup-pbpbi5e</guid>
            <pubDate>Wed, 22 Jul 2026 20:09:07 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;MS Dhoni Solar Startup Investment: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தொழில்முனைவு முதலீடுகளில் மேலும் ஒரு முக்கிய அடியை எடுத்துள்ளார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் தோனியின் இந்த முதலீடு, கவனத்தை ஈர்த்துள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01krx6c7v6zq15bkracge941ty,imgname-ms-dhoni-1779096231782.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;MS Dhoni Solar Startup Investment: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தொழில்முனைவு முதலீடுகளில் மேலும் ஒரு முக்கிய அடியை எடுத்துள்ளார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் தோனியின் இந்த முதலீடு, கவனத்தை ஈர்த்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி, ஸ்டார்ட்அப் உலகில் மீண்டும் ஒரு பெரிய முதலீட்டை செய்துள்ளார். தனது 'மிடாஸ் டீல்ஸ்' ஃபேமிலி ஆபிஸ் மூலம், ரூஃப்டாப் சோலார் ஸ்டார்ட்அப் நிறுவனமான 'சோலார்ஸ்கொயர்'-ல் முதலீடு செய்துள்ளார். இவர் இந்த நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராகவும் இருப்பார். ஆனால், முதலீட்டுத் தொகை எவ்வளவு என்பதை நிறுவனம் வெளியிடவில்லை.&lt;/p&gt;&lt;p&gt;சோலார்ஸ்கொயர் நிறுவனம் சமீபத்தில் சீரிஸ் சி சுற்றில் $53 மில்லியன் (சுமார் ரூ.510 கோடி) நிதி திரட்டியது. தோனியின் முதலீடு இந்த நிதியின் ஒரு பகுதியாகும். இந்த நிதி திரட்டலுக்கு லைட்ஸ்பீட் நிறுவனம் தலைமை தாங்கியது. லோயர்கார்பன் கேப்பிட்டல், ரெயின்மேட்டர், மற்றும் குட் கேப்பிட்டல் ஆகிய நிறுவனங்களும் இதில் முதலீடு செய்துள்ளன. தோனியின் இந்த ஈடுபாடு, இந்திய ரூஃப்டாப் சோலார் சந்தையின் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது என நிறுவனம் கூறுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சோலார்ஸ்கொயர் நிறுவனம் இந்த புதிய மூலதனத்தைப் பயன்படுத்தி, தனது வர்த்தகத்தை வேகமாக விரிவுபடுத்த உள்ளது. அடுத்த கட்டமாக 30 முதல் 40 புதிய நகரங்களில் சேவையைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. மேலும், தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது, வாடிக்கையாளர்களுக்கு எளிதான நிதி வசதிகளை வழங்குவது, வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துவது, மற்றும் புதிய பணியாளர்களை சேர்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்த உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;ஷ்ரேயா மிஸ்ரா, நீரஜ் ஜெயின், மற்றும் நிகில் நஹார் ஆகியோர் 2015-ல் சோலார்ஸ்கொயர் நிறுவனத்தை நிறுவினர். ஆரம்பத்தில், நிறுவனம் வர்த்தக மற்றும் தொழில் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கியது. ஆனால் 2021-ல், வீட்டு உபயோக ரூஃப்டாப் சோலார் சந்தையில் நுழைந்தது. தற்போது, சோலார் சிஸ்டம் ஆலோசனை, வடிவமைப்பு, நிறுவுதல், நிதி, கண்காணிப்பு மற்றும் பராமரிப்பு என முழுமையான சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.&lt;/p&gt;&lt;p&gt;டோல் பிளாசா அருகே வசிக்கிறீர்களா? வீட்டிலிருந்தே மொபைலில் டிஜிட்டல் டோல் பாஸ் பெறலாம்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிறுவனம் 29 நகரங்களில் 50,000-க்கும் மேற்பட்ட வீடுகளில் ரூஃப்டாப் சோலார் சிஸ்டங்களை நிறுவியுள்ளதாகக் கூறுகிறது. சோலார்ஸ்கொயர் இதுவரை $100 மில்லியனுக்கும் அதிகமான நிதியைத் திரட்டியுள்ளது. அதன் ஆண்டு வருவாய் விகிதம் (ARR) சுமார் ரூ.1,000 கோடியை எட்டியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;இந்தியாவில் வீட்டு உபயோக ரூஃப்டாப் சோலார் சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. அதிகரித்து வரும் மின்சாரக் கட்டணம், அரசு மானியங்கள், மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிசக்தி மீதான ஆர்வம் ஆகியவை இந்தத் துறைக்கு ஊக்கமளிக்கின்றன. நாட்டில் சுமார் 7 கோடி வீடுகளில் ரூஃப்டாப் சோலார் சிஸ்டங்களை நிறுவ முடியும் என சோலார்ஸ்கொயர் மதிப்பிடுகிறது. 2030-க்குள் இந்தியாவின் கிளீன்டெக் சந்தை $152 பில்லியன் மதிப்புள்ள வாய்ப்பாக மாறும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சோலார்ஸ்கொயர் நிறுவனத்தில் தோனி செய்துள்ள இந்த முதலீடு, 2026-ஆம் ஆண்டில் அவர் செய்த மூன்றாவது ஸ்டார்ட்அப் முதலீடாகும். இதற்கு முன்பு, அவர் குக்கு (Kuku) மற்றும் லைட்ஃப்யூரி கேம்ஸ் (LightFury Games) போன்ற ஸ்டார்ட்அப்களில் முதலீடு செய்துள்ளார். சமீப மாதங்களில் பல இந்திய கிரிக்கெட் வீரர்களும் ஸ்டார்ட்அப்களில் இணைந்துள்ளனர்.&lt;/p&gt;&lt;p&gt;ரோஹித் சர்மா ஃபிட்னஸ் ஸ்டார்ட்அப் 'ஃபிட்டர்' (Fittr)-ல் முதலீட்டாளராகவும், பங்குதாரராகவும் உள்ளார். அதேபோல, அஜிங்க்யா ரஹானே 'சூப்ஸ்' (Chupps) என்ற காலணி பிராண்டிலும், ரியான் பராக் 'ப்ராக்ஸி' (Proxy) என்ற டீப்டெக் ஸ்டார்ட்அப்பிலும் முதலீடு செய்துள்ளனர். இது, இந்திய கிரிக்கெட் வீரர்கள் இப்போது களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் புதிய தொழில்களில் தீவிரமாகப் பங்கு வகிக்கிறார்கள் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/ms-dhoni-invests-in-solarsquare-startup-pbpbi5e"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Gold Rate Today: ஆடி தள்ளுப்படியா?! ஒரே நாளில் ரூ.2,000 குறைந்த தங்கம் விலை.! நாளைக்கும் காத்திருக்குமா இந்த ஜாக்பாட்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/gold-rate-today-july-24-in-chennai-and-tamil-nadu-update-price-qagshzx</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/gold-rate-today-july-24-in-chennai-and-tamil-nadu-update-price-qagshzx</guid>
            <pubDate>Fri, 24 Jul 2026 11:03:24 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ஆடி மாதத்தில் தங்கம் விலை சவரனுக்கு சுமார் ரூ.2,000-க்கும் மேல் குறைந்து, நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு எதிர்பாராத மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த திடீர் விலை சரிவை வாடிக்கையாளர்கள் எப்படி பயன்படுத்திக்கொள்ள வேண்டும் தெரியுமா?&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ky99497c0qytwrq9mtd7n0yr,imgname-chatgpt-image-jul-24--2026--10-50-00-am--1--1784870479083.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஆடி மாதத்தில் தங்கம் விலை சவரனுக்கு சுமார் ரூ.2,000-க்கும் மேல் குறைந்து, நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு எதிர்பாராத மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த திடீர் விலை சரிவை வாடிக்கையாளர்கள் எப்படி பயன்படுத்திக்கொள்ள வேண்டும் தெரியுமா?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆடி மாதம் என்றாலே துணி, வீட்டு உபயோகப் பொருட்கள், மின்னணு சாதனங்கள் என பல பொருட்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்படும். ஆனால் இந்த முறை, மக்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் &quot;ஆடி தள்ளுபடி&quot; தங்கம் விலையில்தான் கிடைத்துள்ளது. ஒரே நாளில் சவரனுக்கு சுமார் ரூ.2,000-க்கும் அதிகமாக விலை குறைந்திருப்பது நகை வாங்க திட்டமிட்டிருந்த குடும்பங்களுக்கு எதிர்பாராத மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கடந்த சில வாரங்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருந்ததால், திருமணம், நிச்சயதார்த்தம் மற்றும் குடும்ப விழாக்களுக்காக நகை வாங்க திட்டமிட்டிருந்த பலர் வாங்குவதை ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில், இன்று பதிவான திடீர் விலைச் சரிவு சந்தையில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒரு சவரன் தங்கத்தின் விலை நேற்று இருந்ததை விட சுமார் ரூ.2,000 குறைந்து விற்பனையாகிறது. இதனால் நகைக் கடைகளில் வாங்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக ஆடி மாத சலுகைகளுடன் சேர்த்து சில நகைக் கடைகள் செய்கூலி தள்ளுபடி, சேதாரம் குறைப்பு, சிறப்பு சலுகைகள் போன்றவற்றையும் அறிவிக்கும் வாய்ப்பு இருப்பதால், வாடிக்கையாளர்கள் ஆர்வமாக விலை நிலவரத்தை கவனித்து வருகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இருப்பினும், &quot;இன்று குறைந்தது... நாளையும் இதே விலை தொடருமா?&quot; என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது. தங்கம் விலை என்பது தினந்தோறும் மாறக்கூடிய ஒன்று. சர்வதேச சந்தையில் தங்கத்தின் தேவை, அமெரிக்க டாலரின் மதிப்பு, உலக பொருளாதார சூழல், மத்திய வங்கிகளின் வட்டி விகித முடிவுகள், முதலீட்டாளர்களின் நடவடிக்கைகள் போன்ற பல காரணிகள் தங்கத்தின் விலையை தீர்மானிக்கின்றன. எனவே இன்று குறைந்த விலை நாளையும் தொடரும் என்று உறுதியாகக் கூற முடியாது. பொதுவாக விலை குறையும் நாட்களில் மக்கள் அதிக அளவில் வாங்கத் தொடங்கினால், அதுவும் அடுத்த சில நாட்களில் விலையில் மீண்டும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். அதனால் திருமணம் அல்லது முக்கிய தேவைக்காக நகை வாங்க திட்டமிட்டிருப்பவர்கள், தற்போதைய விலை தங்களுக்கு ஏற்றதாக இருந்தால் தேவையை கருத்தில் கொண்டு முடிவு எடுப்பது நல்லது என சந்தை வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தங்கம் வாங்கும்போது கிராம் விலையை மட்டும் பார்க்காமல் செய்கூலி, ஜிஎஸ்டி, சேதாரம் உள்ளிட்ட கூடுதல் செலவுகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். சில கடைகள் குறைந்த செய்கூலி அல்லது சிறப்பு சலுகைகளை வழங்குவதால், பல நகைக் கடைகளின் விலையை ஒப்பிட்டு வாங்குவது புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;தங்கம் என்பது வெறும் ஆபரணம் மட்டுமல்ல; பல குடும்பங்களுக்கு அது ஒரு பாதுகாப்பான முதலீடாகவும் பார்க்கப்படுகிறது. விலை உயர்ந்தாலும், குறைந்தாலும் நீண்டகால முதலீட்டில் தங்கம் முக்கிய இடத்தைப் பிடித்து வருகிறது. அதனால் தற்காலிக விலை மாற்றங்களை விட, தங்களின் தேவையும் பட்ஜெட்டையும் கருத்தில் கொண்டு வாங்குவது சிறந்த அணுகுமுறையாகும்.&lt;/p&gt;&lt;p&gt;ஆடி மாதத்தில் கிடைத்த இந்த எதிர்பாராத விலைச் சரிவு நகை வாங்க காத்திருந்தவர்களுக்கு நிச்சயம் ஒரு நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த &quot;ஜாக்பாட்&quot; நாளையும் தொடருமா அல்லது மீண்டும் விலை உயருமா என்பது நாளைய சந்தை நிலவரத்தைப் பொறுத்தே தெரியும். எனவே தங்கம் வாங்க நினைப்பவர்கள் அன்றைய விலையை சரிபார்த்து, நம்பகமான நகைக் கடைகளில் விலை மற்றும் சலுகைகளை ஒப்பிட்டு வாங்குவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/gold-rate-today-july-24-in-chennai-and-tamil-nadu-update-price-qagshzx"/>
        </item>
        <item>
            <title><![CDATA[UPI பயனர்களுக்கு மிகப்பெரிய ரிலாக்ஸ்..! இனி இன்டர்நெட் இல்லாமலேயே பணம் அனுப்பலாம்..]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/npcis-big-upi-upgrade-pay-up-to-rs-2000-without-internet-soon-umzwgyd</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/npcis-big-upi-upgrade-pay-up-to-rs-2000-without-internet-soon-umzwgyd</guid>
            <pubDate>Wed, 22 Jul 2026 07:41:02 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;NPCI: இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகம் (NPCI) இத்தகைய ஒரு அம்சத்தில் பணியாற்றி வருகிறது. இது அறிமுகப்படுத்தப்படும்போது, இணைய இணைப்பு இல்லாமலேயே ரூ.2000 வரை பணம் செலுத்த முடியும். இது &lsquo;UPI லைட் எக்ஸ்&rsquo; சேவையின் ஒரு நீட்டிப்பு என்று கூறப்படுகிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ky3s48swhqyr9q8x3y5h8p8h,imgname-online-payment-1784685929275.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;NPCI: இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகம் (NPCI) இத்தகைய ஒரு அம்சத்தில் பணியாற்றி வருகிறது. இது அறிமுகப்படுத்தப்படும்போது, இணைய இணைப்பு இல்லாமலேயே ரூ.2000 வரை பணம் செலுத்த முடியும். இது &lsquo;UPI லைட் எக்ஸ்&rsquo; சேவையின் ஒரு நீட்டிப்பு என்று கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கடந்த எட்டு முதல் பத்து ஆண்டுகளில் நாட்டில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளைச் செய்பவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. ஆனால் இப்போது இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைப் புரட்சிக்கு ஒரு புதிய பரிமாணத்தை அளிக்கத் தயாராகி வருகிறது. ஆம், இப்போது வாடிக்கையாளர் மற்றும் கடைக்காரர் இருவரின் தொலைபேசி அல்லது சாதனத்தில் இணைய இணைப்பு இல்லாவிட்டாலும் கூட, ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை இடைமுகம் (UPI) மூலம் பரிவர்த்தனைகளைச் செய்ய முடியும். இந்திய தேசிய பணப்பரிவர்த்தனைக் கழகம் (NPCI) இணையம் இல்லாமலேயே செயல்படும் ஒரு புதிய ஆஃப்லைன் பணப்பரிவர்த்தனைத் தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த ஆஃப்லைன் பணப்பரிவர்த்தனைத் தொழில்நுட்பம், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் ஏற்கனவே உள்ள 'தட்டிப் பணம் செலுத்தும்' அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, நுகர்வோர் ஒரே ஒரு தட்டலில் ₹2,000 வரை பணம் செலுத்த அனுமதிக்கும். இந்தத் திட்டத்தின் கீழ், NPCI இந்த ஆண்டு முக்கிய பாயிண்ட்-ஆஃப்-சேல் (PoS) டெர்மினல் உற்பத்தியாளர்களின் இயந்திரங்களுக்குச் சான்றளிக்கும். இந்தத் தொழில்நுட்பம் அருகாமைத் தொடர்பு (NFC) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் செயல்படும். இது 2023-ல் தொடங்கப்பட்ட NPCI-யின் 'UPI லைட் எக்ஸ்' சேவையின் நீட்டிப்பாகும், இது இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கு இடையில் ஆஃப்லைன் பரிமாற்றங்களைச் சாத்தியமாக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த அம்சம் PoS இயந்திரங்களில் நேரடியாக ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது, இதன் மூலம் இணையம் இல்லாமலேயே வணிகர்களிடமிருந்து பணம் பெற முடியும். இந்த புதிய ஆஃப்லைன் அம்சத்தின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், நெட்வொர்க் இணைப்பு குறைவாக உள்ள சூழ்நிலைகளிலும் பரிவர்த்தனைகளைச் செய்ய முடியும். நுகர்வோர் விமானத்தில் பயணம் செய்யும்போதும் அல்லது நிலத்தடி மெட்ரோ போன்ற இடங்களிலும் எளிதாகப் பொருட்களை வாங்க முடியும். செயலி மூலம் ஒருமுறை தட்டியவுடன் பணம் செலுத்தும் தகவல் பாதுகாக்கப்படும், மேலும் டெர்மினலில் மீண்டும் நெட்வொர்க் இணைப்பு கிடைத்தவுடன் பரிவர்த்தனை தானாகவே சரிபார்க்கப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த புதிய அமைப்பு, வாடிக்கையாளர்கள் தங்கள் UPI PIN-ஐ மீண்டும் மீண்டும் உள்ளிடும் சிரமத்திலிருந்தும் விடுவிக்கும். பயனர்கள் தங்கள் சாதனத்தில் உள்ள UPI Lite வாலட்டில் முன்கூட்டியே பணத்தை ஏற்றிக்கொள்ள முடியும். நீங்கள் மோசமான நெட்வொர்க் இணைப்பு உள்ள பகுதியில் இருந்தால், அந்தப் பகுதிகளில் பணம் செலுத்துவது மிகவும் வேகமாகவும் எளிதாகவும் மாறும். இந்த நடவடிக்கை, UPI மற்றும் பாரம்பரிய கார்டு நெட்வொர்க்குகளுக்கு இடையிலான இடைவெளியைக் குறைத்து, பாதுகாப்பு மற்றும் அம்சங்களின் அடிப்படையில் டிஜிட்டல் கொடுப்பனவுகளை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/npcis-big-upi-upgrade-pay-up-to-rs-2000-without-internet-soon-umzwgyd"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Train Ticket Discount: ரயில் பயணிகளுக்கு ரியல் ஜாக்பாட் அறிவிப்பு: டிக்கெட் கட்டணத்தில் 3% தள்ளுபடி!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/good-news-for-train-passengers-get-3-percentage-discount-on-tickets-booked-via-railone-app-yq3u7sf</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/good-news-for-train-passengers-get-3-percentage-discount-on-tickets-booked-via-railone-app-yq3u7sf</guid>
            <pubDate>Wed, 22 Jul 2026 12:48:52 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ரயில் பயணிகளுக்கு இந்திய ரயில்வே சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. &lsquo;ரெயில் ஒன்&rsquo; செயலி மூலம் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை பதிவு செய்யும் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த 3 சதவீத கட்டணத் தள்ளுபடி மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ky4afgntw94ve3371hbbbq46,imgname-rail-one--1--1784704123578.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ரயில் பயணிகளுக்கு இந்திய ரயில்வே சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. &lsquo;ரெயில் ஒன்&rsquo; செயலி மூலம் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை பதிவு செய்யும் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த 3 சதவீத கட்டணத் தள்ளுபடி மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரயிலில் தினமும் பயணம் செய்யும் லட்சக்கணக்கான மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. ரயில்வே நிர்வாகம், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், &lsquo;ரெயில் ஒன்&rsquo; (RailOne) செயலி மூலம் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளைப் பதிவு செய்யும் பயணிகளுக்கு 3 சதவீத கட்டணச் சலுகையை அறிவித்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;இந்த புதிய திட்டம் மூலம் பயணிகளின் செலவு குறைவதோடு மட்டுமல்லாமல், ரயில் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் சிரமமும் இனி இருக்காது. வீட்டிலிருந்தபடியே சில நொடிகளில் டிக்கெட் பதிவு செய்யும் வசதி கிடைக்கிறது.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;யாருக்கு இந்த 3% சலுகை கிடைக்கும்?&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;ஜம்மு ரயில்வே பிரிவின் மக்கள் தொடர்பு ஆய்வாளர் ராகவேந்தர் சிங் வெளியிட்ட தகவலின்படி, &lsquo;ரெயில் ஒன்&rsquo; செயலி மூலம் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளைப் பதிவு செய்யும் பயணிகள், யூபிஐ (UPI), டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் உள்ளிட்ட அனைத்து டிஜிட்டல் கட்டண முறைகளையும் பயன்படுத்தினால், உடனடியாக 3 சதவீத தள்ளுபடி பெற முடியும்.&lt;/p&gt;&lt;p&gt;ஆனால், இந்தச் சலுகை &lsquo;ஆர்-வாலெட்&rsquo; (R-Wallet) மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lsquo;ஆர்-வாலெட்&rsquo; பயன்படுத்தும் பயணிகளுக்கு ஏற்கனவே 3 சதவீத கேஷ்பேக் போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் 2028 ஆகஸ்ட் 24-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும், தற்போது இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் ரயில்வே நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;இதன் மூலம், பயணிகள் தாங்கள் விரும்பும் கட்டண முறையைத் தேர்ந்தெடுத்து பலனடையலாம்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;தினசரி பயணிகளுக்கு இரட்டை பலன்&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;இந்த புதிய திட்டத்தின் மூலம் தினமும் வேலை, கல்வி மற்றும் தொழில் காரணங்களுக்காக ரயிலில் பயணம் செய்பவர்கள் கணிசமான அளவில் பணத்தைச் சேமிக்க முடியும்.&lt;/p&gt;&lt;p&gt;ஒவ்வொரு டிக்கெட்டிலும் கிடைக்கும் 3 சதவீத தள்ளுபடி, மாதந்தோறும் பயணச் செலவைக் குறைக்க உதவும். குறிப்பாக, தினசரி ரயில் சேவையை நம்பி வாழும் அலுவலக ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் சிறு வியாபாரிகளுக்கு இந்தச் சலுகை பெரும் ஆதாயமாக அமையும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பொதுவாக, ரயில் நிலையங்களில் டிக்கெட் வாங்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. பண்டிகைக் காலங்கள் மற்றும் பரபரப்பான நேரங்களில் இந்த சிக்கல் மேலும் அதிகரிக்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;ஆனால், &lsquo;ரெயில் ஒன்&rsquo; செயலி மூலம் பயணிகள் தங்கள் மொபைல் போனிலேயே சில நொடிகளில் டிக்கெட் பதிவு செய்ய முடியும். இதன் மூலம்:&lt;/p&gt;&lt;p&gt;&bull; டிக்கெட் கவுன்டர்களில் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இருக்காது.&lt;/p&gt;&lt;p&gt;&bull; பயணிகளின் நேரம் மிச்சமாகும்.&lt;/p&gt;&lt;p&gt;&bull; கூட்ட நெரிசல் குறையும்.&lt;/p&gt;&lt;p&gt;&bull; அவசர பயணங்களுக்குக் கூட உடனடியாக டிக்கெட் பெற முடியும்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;காகித டிக்கெட்டுக்கு குட்பை!&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;இந்த திட்டத்தின் மற்றொரு முக்கிய அம்சம், முழுமையான &lsquo;பேப்பர்லெஸ்&rsquo; சேவை என்பதாகும்.&lt;/p&gt;&lt;p&gt;டிக்கெட் பதிவு செய்தவுடன், அது நேரடியாக பயணிகளின் மொபைல் போனில் கிடைக்கும். இதனால், காகித டிக்கெட்டை அச்சிட்டு எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் இந்த முயற்சி உதவும் என ரயில்வே அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த திட்டம் குறித்து ஜம்மு ரயில்வே பிரிவின் மூத்த வணிக மேலாளர் உச்சித் சிங்கால் கூறுகையில், &ldquo;பயணிகளுக்கு வேகமான, பாதுகாப்பான மற்றும் குறைந்த செலவிலான பயண வசதிகளை வழங்குவதே இந்திய ரயில்வேயின் நோக்கம். &lsquo;ரெயில் ஒன்&rsquo; செயலி மூலம் வழங்கப்படும் 3 சதவீத தள்ளுபடி திட்டம், பயணிகளுக்கு பொருளாதார பலனை வழங்குவதோடு, &lsquo;டிஜிட்டல் இந்தியா&rsquo; முயற்சிக்கும் வலுசேர்க்கும்&rdquo; என்றார்.&lt;/p&gt;&lt;p&gt;மேலும், அதிகமான பயணிகள் இந்த வசதியைப் பயன்படுத்தி பயனடைய வேண்டும் என்றும், பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;பயணிகளுக்கு கிடைக்கும் முக்கிய நன்மைகள்&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;&bull; &lsquo;ரெயில் ஒன்&rsquo; செயலி மூலம் பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு 3% தள்ளுபடி.&lt;/p&gt;&lt;p&gt;&bull; யூபிஐ, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலம் கட்டணம் செலுத்தலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&bull; டிக்கெட் கவுன்டர்களில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.&lt;/p&gt;&lt;p&gt;&bull; மொபைலில் சில நொடிகளில் டிக்கெட் பதிவு செய்யலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&bull; காகித டிக்கெட் தேவையில்லை.&lt;/p&gt;&lt;p&gt;&bull; ஆர்-வாலெட் பயனர்களுக்கு 3% கேஷ்பேக் திட்டம் தொடரும்.&lt;/p&gt;&lt;p&gt;&bull; டிஜிட்டல் மற்றும் பணமில்லா பரிவர்த்தனைகள் ஊக்குவிக்கப்படும்.&lt;/p&gt;&lt;p&gt;ரயில்வேயின் இந்த புதிய முயற்சி, பயணிகளுக்கு நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தினசரி ரயில் பயணிகளை மையமாகக் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டம், எதிர்காலத்தில் நாடு முழுவதும் அதிக வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/good-news-for-train-passengers-get-3-percentage-discount-on-tickets-booked-via-railone-app-yq3u7sf"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Toll Plaza: டோல் பிளாசா அருகே வசிக்கிறீர்களா? வீட்டிலிருந்தே மொபைலில் டிஜிட்டல் டோல் பாஸ் பெறலாம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/nhai-digital-local-toll-pass-available-via-mobile-app-yzwtx3l</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/nhai-digital-local-toll-pass-available-via-mobile-app-yzwtx3l</guid>
            <pubDate>Wed, 22 Jul 2026 17:31:31 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Toll Plaza: அடையாள ஆவணங்களுடன் டோல் பிளாசாவுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டிய சிரமமும் இருந்தது. இந்த நடைமுறையை எளிதாக்கும் வகையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) புதிய டிஜிட்டல் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kkeavb45cdxchgjrmmf9exv9,imgname-toll-plaza--2--1773228895365.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Toll Plaza: அடையாள ஆவணங்களுடன் டோல் பிளாசாவுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டிய சிரமமும் இருந்தது. இந்த நடைமுறையை எளிதாக்கும் வகையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) புதிய டிஜிட்டல் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI), டோல் பிளாசா அருகே வசிக்கும் வாகன ஓட்டிகளுக்காக புதிய டிஜிட்டல் லோக்கல் பாஸ் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், டோல் பிளாசாவுக்கு நேரில் செல்லாமல், வீட்டிலிருந்தபடியே மொபைல் செயலி வழியாக லோக்கல் பாஸ்-ஐ பெற முடியும். இந்த முயற்சி, டோல் பாஸ் பெறும் நடைமுறையை எளிமைப்படுத்துவதுடன், தேவையற்ற நேர விரயத்தையும் குறைக்கும் வகையில் உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;புதிய வசதியின் கீழ், டோல் பிளாசாவிலிருந்து 20 கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கும் வாகன உரிமையாளர்கள், 'ராஜ்மார்க் யாத்ரா' செயலி மூலம் டிஜிட்டல் லோக்கல் பாஸ்-க்கு விண்ணப்பிக்கலாம். இந்த பாஸ் ஒரு மாத காலத்திற்கு செல்லுபடியாக இருக்கும். அந்த காலத்தில், சம்பந்தப்பட்ட டோல் பிளாசாவை எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது. இதற்கு முன்பு, உள்ளூர் பாஸ் பெற அடையாளம் மற்றும் முகவரி சான்றுகளை எடுத்துக்கொண்டு டோல் பிளாசாவுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டியிருந்தது. புதிய முறையில் இந்த முழு செயல்முறையும் சில நிமிடங்களில் ஆன்லைனிலேயே முடிவடைகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த டிஜிட்டல் லோக்கல் பாஸ் வசதி தற்போது 'ராஜ்மார்க் யாத்ரா' செயலியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக டெல்லியில் உள்ள நகர்ப்புற விரிவாக்க சாலை-2 (UER-2) பகுதியில் முண்ட்கா-பக்கர்வாலா டோல் பிளாசாவில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. வரும் மாதங்களில் நாடு முழுவதும் உள்ள பிற டோல் பிளாசாக்களுக்கும் இந்த வசதி விரிவுபடுத்தப்படும் என்று NHAI தெரிவித்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;வாஷிங் மெஷினில் எத்தனை துணிகள் போட வேண்டும்? முழு லிஸ்ட் இதோ&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விண்ணப்பதாரர் உண்மையில் டோல் பிளாசாவிலிருந்து 20 கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கிறாரா என்பது ஜிஐஎஸ் (புவியியல் தகவல் அமைப்பு) தொழில்நுட்பத்தின் மூலம் சரிபார்க்கப்படுகிறது. இதனால் துல்லியமாகவும் உறுதி செய்ய முடியும். இந்த முறை, வெளிப்படைத்தன்மையையும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதே நேரத்தில், இந்த டிஜிட்டல் லோக்கல் பாஸ் வசதி அனைவருக்கும் பொருந்தாது. டோல் பிளாசாவிலிருந்து 20 கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கும் வாகன உரிமையாளர்களுக்கு மட்டுமே இது வழங்கப்படும். இந்த புதிய முயற்சி முழுமையாக நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்ட பிறகு, உள்ளூர் பயணிகளுக்கு டோல் பாஸ் பெறும் நடைமுறை மேலும் எளிதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/nhai-digital-local-toll-pass-available-via-mobile-app-yzwtx3l"/>
        </item>
    </channel>
</rss>
