<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes"?>
<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Sun, 24 May 2026 21:13:07 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss/business" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[Gold: தங்க நகை அணிந்தால் அலர்ஜியா? யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/gold-can-wearing-gold-jewellery-cause-allergies-do-you-know-who-should-be-more-careful-0vtrrg2</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/gold-can-wearing-gold-jewellery-cause-allergies-do-you-know-who-should-be-more-careful-0vtrrg2</guid>
            <pubDate>Fri, 22 May 2026 10:41:38 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;பலருக்கு தங்க நகை அணிவதால் ஏற்படும் தோல் அரிப்பு மற்றும் சிவப்பிற்கு தூய தங்கம் காரணமல்ல, அதில் கலக்கப்படும் நிக்கல் போன்ற உலோகங்களே காரணம். இது தொடு ஒவ்வாமையை (contact dermatitis) ஏற்படுத்தலாம்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ks6zzyb48qk387z9tqwd708g,imgname-chatgpt-image-may-22--2026--10-13-03-am--1--1779425081700.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;பலருக்கு தங்க நகை அணிவதால் ஏற்படும் தோல் அரிப்பு மற்றும் சிவப்பிற்கு தூய தங்கம் காரணமல்ல, அதில் கலக்கப்படும் நிக்கல் போன்ற உலோகங்களே காரணம். இது தொடு ஒவ்வாமையை (contact dermatitis) ஏற்படுத்தலாம்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தங்க நகைகள் பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களிடமும் பெரும் விருப்பமான அலங்கார பொருளாக இருக்கின்றன. ஆனால் சிலருக்கு தங்க நகைகள் அணிந்த பிறகு தோலில் சிவப்பு, அரிப்பு, எரிச்சல் போன்ற பிரச்சனைகள் தோன்றுவது உண்டு. இதனால் &ldquo;தங்கத்திற்கே ஒவ்வாமையா?&rdquo; என்ற கேள்வி பலரிடமும் எழுகிறது. உண்மையில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பிரச்சனையை உருவாக்குவது தூய தங்கம் அல்ல; அதில் கலக்கப்படும் பிற உலோகங்கள்தான்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பொதுவாக 24 காரட் தூய தங்கம் மிகவும் மென்மையானதாக இருப்பதால் நேரடியாக நகை தயாரிக்கப் பயன்படாது. அதனால் நகைகளுக்கு வலிமை மற்றும் அழகான நிறம் கிடைக்க நிக்கல், தாமிரம், வெள்ளி, கோபால்ட் போன்ற உலோகங்கள் கலக்கப்படுகின்றன. இதில் குறிப்பாக நிக்கல் மிகவும் பொதுவான தோல் ஒவ்வாமை உண்டாக்கும் காரணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தங்க நகைகள் நீண்ட நேரம் தோலுடன் தொடர்பில் இருந்தால் சிலருக்கு contact dermatitis எனப்படும் தொடு ஒவ்வாமை ஏற்படலாம். இதன் அறிகுறிகளாக தோல் சிவத்தல், அரிப்பு, எரிச்சல், வீக்கம், சிறிய கொப்புளங்கள் மற்றும் தோல் உலர்தல் போன்றவை காணப்படலாம். குறிப்பாக காதணி, மோதிரம், சங்கிலி, வளையல் போன்றவை அணியும் இடங்களில் இந்த பாதிப்பு அதிகமாக தெரியும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மருத்துவ ஆய்வுகளின்படி எல்லோருக்கும் தங்க நகைகள் ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்பது தவறான நம்பிக்கை. சிலருக்கு மட்டும் உடல் தன்மையின் காரணமாக பிரச்சினை உருவாகிறது. குறிப்பாக நிக்கல் ஒவ்வாமை ஏற்கனவே உள்ளவர்களுக்கு இந்த பாதிப்பு அதிகமாக இருக்கும். மிகச் சிறிய அளவு நிக்கல் கூட கடுமையான அரிப்பு மற்றும் தோல் அழற்சியை உருவாக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதேபோல் எக்ஸிமா அல்லது atopic dermatitis போன்ற நாள்பட்ட தோல் பிரச்சினைகள் உள்ளவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். இவர்களின் தோல் பாதுகாப்பு அடுக்கு பலவீனமாக இருப்பதால் உலோகத் துகள்கள் எளிதில் உடலுக்குள் சென்று எதிர்ப்பு மண்டலத்தை தூண்டக்கூடும். மேலும் குறைந்த காரட் தங்க நகைகளில் பிற உலோகங்களின் கலவை அதிகமாக இருக்கும் என்பதால் அவை சிலருக்கு அதிக ஒவ்வாமையை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த பிரச்சனையை தவிர்க்க சில எளிய வழிமுறைகளை பின்பற்றலாம். 22 அல்லது 24 காரட் போன்ற அதிக தூய்மையான தங்க நகைகள் பயன்படுத்துவது பாதுகாப்பான தேர்வாக இருக்கலாம். &ldquo;Nickel-free&rdquo; அல்லது &ldquo;Hypoallergenic&rdquo; என்று சான்றளிக்கப்பட்ட நகைகளை தேர்வு செய்வதும் நல்லது. நகைகளை சுத்தமாக பராமரிப்பதும் அவசியம். வாசனைமிக்க லோஷன், பர்ஃப்யூம், நீச்சல் குள நீர் போன்றவை நகையின் மேற்பரப்பை பாதித்து தோல் எரிச்சலை அதிகரிக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;தங்க நகை அணிந்த பிறகு தோலில் அரிப்பு அல்லது சிவப்பு தெரிந்தால் உடனே அந்த நகையை அகற்ற வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதியை மென்மையான சோப்பு மற்றும் குளிர்ந்த நீரால் சுத்தம் செய்யலாம். எரிச்சல் நீடித்தால் தோல் மருத்துவரை அணுகுவது மிகவும் அவசியம். தேவையானால் patch test மூலம் எந்த உலோகத்திற்கே ஒவ்வாமை உள்ளது என்பதை கண்டறியலாம்.&lt;/p&gt;&lt;p&gt;மொத்தத்தில் பார்க்கும்போது, தங்கம் எல்லோருக்கும் ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்பது உண்மை அல்ல. பெரும்பாலும் தங்கத்தில் கலக்கப்படும் நிக்கல் போன்ற உலோகங்களே காரணமாக இருக்கின்றன. எனவே நிக்கல் ஒவ்வாமை அல்லது தோல் பிரச்சனைகள் உள்ளவர்கள் கவனமாக நகைகளை தேர்வு செய்து அணிவது நல்லது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/gold-can-wearing-gold-jewellery-cause-allergies-do-you-know-who-should-be-more-careful-0vtrrg2"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Bank Strike: வங்கிகள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு! வாடிக்கையாளர்களுக்கு நிம்மதி! முழு விவரம் உள்ளே!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/bank-strike-postponed-banks-to-open-on-may-25-and-26-big-relief-for-customers-0xod5fg</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/bank-strike-postponed-banks-to-open-on-may-25-and-26-big-relief-for-customers-0xod5fg</guid>
            <pubDate>Sun, 24 May 2026 21:12:38 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Bank Strike: திங்கள், செவ்வாய் கிழமைகளில் வங்கிகள் இயங்காது என்று கூறப்பட்ட நிலையில், அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் வேலைநிறுத்தத்தை ஒத்திவைத்துள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kh5bkbthfbxggpd4dwy7v6h1,imgname-tamil-news---2026-02-11t085313.948-1770780208977.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Bank Strike: திங்கள், செவ்வாய் கிழமைகளில் வங்கிகள் இயங்காது என்று கூறப்பட்ட நிலையில், அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் வேலைநிறுத்தத்தை ஒத்திவைத்துள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (State Bank of India) நாடு தழுவிய வங்கி வேலைநிறுத்தத்திற்கு (Bank Strike) அழைப்பு விடுத்திருந்தது. இதனால், மே 25 மற்றும் 26 தேதிகளில் வங்கிச் சேவைகள் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. வாரத்தின் முதல் இரண்டு நாட்களான திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் வங்கிகள் இயங்காது என்று கூறப்பட்டதால், அவசர வங்கி வேலைகள் உள்ளவர்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடும் என கவலைப்பட்டனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த நிலையில் கடைசி நேரத்தில் வங்கி ஊழியர் சங்கங்கள் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளன. திட்டமிடப்பட்டிருந்த இரண்டு நாள் வங்கி வேலைநிறுத்தத்தை அவர்கள் ஒத்திவைத்துள்ளனர். சனி, ஞாயிறு விடுமுறை, வேலைநிறுத்தம் மற்றும் பண்டிகைகள் காரணமாக மே 23 முதல் 28 வரை, ஆறு நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என கூறப்பட்டது. ஆனால், வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டதால் மே 25, 26 தேதிகளில் வங்கிகள் திறந்திருக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;வங்கி ஊழியர்களின் கோரிக்கை என்ன?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் இந்த வேலைநிறுத்தத்தை ஒத்திவைத்துள்ளதாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் வங்கிகள் திறந்திருக்கும், வங்கிச் சேவைகள் வழக்கம் போல் இயங்கும். வாரத்திற்கு ஐந்து நாட்கள் வேலை என்ற கோரிக்கையை வலியுறுத்தி வங்கி சங்கங்கள் இந்த இரண்டு நாள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தன. மத்திய அரசு அலுவலகங்கள், ஆர்பிஐ, எல்ஐசி, ஜிஐசி மற்றும் பங்குச் சந்தை போல வங்கிகளுக்கும் சனிக்கிழமை விடுமுறை வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தற்போது வங்கிகளுக்கு மாதத்தின் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் மட்டுமே விடுமுறை அளிக்கப்படுகிறது. 1-வது, 3-வது மற்றும் 5-வது (மாதத்தில் இருந்தால்) சனிக்கிழமைகளில் வங்கிகள் வழக்கம் போல் இயங்குகின்றன. இந்திய வங்கிகள் சங்கம் (IBA) மற்றும் மத்திய அரசு இந்த 5 நாட்கள் வேலை முறைக்குக் கொள்கை அளவில் உடன்பட்டிருந்தாலும், இதற்கான இறுதி அறிவிப்பு மற்றும் வேலை நேர மாற்றம் குறித்த முறையான அரசாணை இன்னும் முழுமையாக அமலுக்கு வரவில்லை. இதனால்தான் ஊழியர் சங்கங்கள் அவ்வப்போது அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றன.&lt;/p&gt;&lt;p&gt;ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியலின்படி, மே 26 (காசி நஸ்ருல் இஸ்லாம் பிறந்தநாள்), மே 27 (ஈத் உல்-ஆதா) மற்றும் மே 28 (பக்ரீத்) ஆகிய நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை. இருப்பினும், ஆன்லைன் பேங்கிங், யுபிஐ மற்றும் ஏடிஎம் சேவைகள் தொடர்ந்து செயல்படும். &amp;nbsp;இதில் பக்ரீத் பண்டிகை மட்டும் தமிழ்நாட்டுக்கு பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/bank-strike-postponed-banks-to-open-on-may-25-and-26-big-relief-for-customers-0xod5fg"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Budget Cars: மாசம் 20,000 ரூபாய் சம்பளமா? உங்க பட்ஜெட்டுக்கு இந்த கார்கள் சூப்பர்..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/auto/best-maruti-cars-for-a-20000-rupee-monthly-salary-1807y9e</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/auto/best-maruti-cars-for-a-20000-rupee-monthly-salary-1807y9e</guid>
            <pubDate>Sat, 23 May 2026 21:15:26 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;சிறந்த மலிவு விலை மாருதி கார்கள்: தற்காலத்தில், நான்கு பேர் கொண்ட ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்திற்குக் கூட கார் என்பது கட்டாயமாகிவிட்டது. இந்த வகையில், மாதம் ரூ. 20,000 சம்பாதிப்பவர்களால் கூட பராமரிக்கக்கூடிய மாருதி கார்கள் எவை என்பதைப் பார்ப்போம்&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kev0hc2f6b90rpf6hz71cazm,imgname-4-1768285581391.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சிறந்த மலிவு விலை மாருதி கார்கள்: தற்காலத்தில், நான்கு பேர் கொண்ட ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்திற்குக் கூட கார் என்பது கட்டாயமாகிவிட்டது. இந்த வகையில், மாதம் ரூ. 20,000 சம்பாதிப்பவர்களால் கூட பராமரிக்கக்கூடிய மாருதி கார்கள் எவை என்பதைப் பார்ப்போம்&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குறைந்த பட்ஜெட்டில், சற்றே உயரமான எஸ்யூவி (SUV) தோற்றம் கொண்ட கார் உங்களுக்கு வேண்டுமென்றால், எஸ்-பிரஸ்ஸோ (S-Presso) ஒரு சிறந்த தேர்வாகும். இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் நன்றாக இருப்பதால், சேதமடைந்த சாலைகள் மற்றும் பள்ளங்களை இது எளிதாகக் கையாளும். இதன் எக்ஸ்-ஷோரூம் ஆரம்ப விலை ரூ. 3.50 லட்சம் முதல் ரூ. 5.25 லட்சம் வரை உள்ளது. இது பெட்ரோலில் ஒரு லிட்டருக்கு 21.4 கி.மீ மைலேஜையும், சிஎன்ஜி-யில் (CNG) ஒரு கிலோவிற்கு 32.7 கி.மீ மைலேஜையும் தருகிறது. நீங்கள் சுமார் ரூ. 1 லட்சம் முன்பணம் செலுத்தினால், மாதாந்திர இஎம்ஐ (EMI) ரூ. 5,500 முதல் ரூ. 6,500 வரை இருக்கும். ரூ. 20,000 சம்பளம் வாங்குபவர்கள் கூட இதை மிக எளிதாகச் செலுத்த முடியும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தினரிடையே ஆல்டோ மிகவும் விரும்பப்படும் காராக உள்ளது. புதிய K10 மாடலில் அதிக இடவசதி, அழகான தோற்றம் மற்றும் சக்திவாய்ந்த இன்ஜின் ஆகியவை உள்ளன. நகரப் போக்குவரத்து மற்றும் குறுகிய தெருக்களுக்கு இது ஒரு சரியான தேர்வாகும். இதன் எக்ஸ்-ஷோரூம் ஆரம்ப விலை ரூ. 3.70 லட்சம் முதல் ரூ. 5.45 லட்சம் வரை உள்ளது. இது பெட்ரோலில் ஒரு லிட்டருக்கு 24.4 கி.மீ மைலேஜையும், CNG-யில் ஒரு கிலோவிற்கு 33.9 கி.மீ மைலேஜையும் தருகிறது. இதன் அடிப்படை மாடலுக்கு, நீங்கள் மாதம் ரூ. 6,000 EMI செலுத்தினால் போதும். இதன் பராமரிப்புச் செலவும் மிகவும் குறைவு. எனவே, இது உங்கள் பணத்திற்குப் பெரிய சுமையை ஏற்படுத்தாது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நீங்கள் தினமும் பயணம் செய்பவராக இருந்து, பெட்ரோல் செலவைக் குறைக்க விரும்பினால், மாருதி செலரியோ ஒரு சிறந்த தேர்வாகும். இது செலவிடும் ஒவ்வொரு துளி பெட்ரோலுக்கும் முழு மதிப்பைத் தரும் ஒரு கார். இதன் உட்புறம் பார்ப்பதற்கு மிகவும் நவீனமாகவும் ஸ்டைலாகவும் உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;செலரியோவின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 4.70 லட்சம் முதல் ரூ. 6.73 லட்சம் வரை உள்ளது. இது பெட்ரோலில் ஒரு லிட்டருக்கு 25.0 கி.மீ மைலேஜையும், சிஎன்ஜியில் ஒரு கிலோகிராமுக்கு 34.4 கி.மீ மைலேஜையும் வழங்குகிறது. அடிப்படை வேரியண்டிற்கான மாதாந்திர இஎம்ஐ சுமார் ரூ. 7,500 ஆக இருக்கலாம். உங்கள் ரூ. 20,000 சம்பளத்தில் சிறிதளவு சேமிக்க முடிந்தால், இது ஒரு நல்ல தேர்வாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மாருதி வேகன்ஆர் இந்தியாவின் 'டால்-பாய்' கார் என்று அழைக்கப்படுகிறது. இதில் தலைக்கும் கால்களுக்கும் அதிக இடவசதி உள்ளது. அதனால்தான் 5 பேர் கொண்ட குடும்பம் மிகவும் வசதியாகப் பயணிக்க முடியும். இதன் எக்ஸ்-ஷோரூம் ஆரம்ப விலை ரூ.4.99 லட்சம் முதல் ரூ.6.84 லட்சம் வரை உள்ளது. இது பெட்ரோலில் ஒரு லிட்டருக்கு 20.5 கி.மீ மைலேஜையும், சிஎன்ஜியில் ஒரு கிலோவிற்கு 33.5 கி.மீ மைலேஜையும் தருகிறது.&lt;/p&gt;&lt;p&gt;நீங்கள் WagonR-இன் அடிப்படை மாடலை வாங்கினால், மாதாந்திர EMI சுமார் ரூ.7,800 முதல் ரூ.8,200 வரை வரலாம். உங்கள் சம்பளம் ரூ.30,000-க்கும் குறைவாக இருந்தாலும் அல்லது வீட்டில் வேறு கூடுதல் வருமானம் இருந்தாலும், நீங்கள் யோசிக்காமல் இந்தக் காரைத் தேர்ந்தெடுக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நிதி நிபுணர்களின் கூற்றுப்படி, உங்கள் கார் மாதத் தவணை (EMI) உங்கள் மாதச் சம்பளத்தில் பாதியை விட அதிகமாக இருக்கக்கூடாது. நீங்கள் 5 அல்லது 7 வருடக் கடன் எடுத்தால், உங்கள் மாதத் தவணை ரூ. 6,000 முதல் ரூ. 7,500 வரை இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அப்படி இருந்தால், உங்களுக்கு மாதம் ரூ. 20,000 சம்பளம் கிடைத்தாலும், கார் மாதத் தவணை நின்றுவிடாது. மேலும், மீதமுள்ள ரூ. 13,000 முதல் ரூ. 14,000 வரை உங்கள் வீட்டுச் செலவுகள் மற்றும் பிற தேவைகளுக்குப் போதுமானதாக இருக்கும். அதனால்தான், கார் மாதத் தவணை உங்கள் சம்பளத்தில் 30-40 சதவீதத்தைத் தாண்டாமல் இருப்பதை உறுதி செய்வது சிறந்தது.&lt;/p&gt;&lt;h3&gt;&lt;strong&gt;குறிப்பு&hellip;&lt;/strong&gt;&lt;/h3&gt;&lt;p&gt;இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள மாருதி சுசுகி கார்களின் விலைகள் (எக்ஸ்-ஷோரூம்) மற்றும் மைலேஜ் விவரங்கள், நிறுவனத்தின் அதிகாரப்பூர்வத் தரவுகளின் அடிப்படையில் அமைந்துள்ளன. உங்கள் நகரம், மாநிலம், RTO பதிவு மற்றும் காப்பீட்டு விதிமுறைகளைப் பொறுத்து ஆன்-ரோடு விலைகள் மாறுபடலாம். கடனுக்கான மாதாந்திர EMI, நீங்கள் செலுத்தும் முன்பணம், வங்கி வட்டி விகிதங்கள் மற்றும் கடன் காலம் ஆகியவற்றைப் பொறுத்தது. எந்தவொரு இறுதி முடிவையும் எடுப்பதற்கு முன், சமீபத்திய விலைகள் மற்றும் சலுகைகளை உறுதிப்படுத்திக்கொள்ள, உங்களுக்கு அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட டீலரைத் தொடர்புகொள்ளவும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/auto/best-maruti-cars-for-a-20000-rupee-monthly-salary-1807y9e"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Tatkal Ticket : இந்த சூப்பர் ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க இனி தட்கல் டிக்கெட் ஈஸியா கிடைக்கும்..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/irctc-tatkal-booking-trick-get-confirmed-ticket-in-2-minutes-1u951ci</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/irctc-tatkal-booking-trick-get-confirmed-ticket-in-2-minutes-1u951ci</guid>
            <pubDate>Thu, 21 May 2026 11:20:36 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Tatkal Ticket Booking Tips : IRCTC-யில் தட்கல் டிக்கெட் புக் செய்யும்போது, கன்ஃபார்ம் டிக்கெட் கிடைப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் இந்த ஆப் ட்ரிக்கை தெரிந்துகொள்ளுங்கள்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kby10bgffmbt1jxrrq8gzphk,imgname-irctc-1765165510158.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Tatkal Ticket Booking Tips : IRCTC-யில் தட்கல் டிக்கெட் புக் செய்யும்போது, கன்ஃபார்ம் டிக்கெட் கிடைப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் இந்த ஆப் ட்ரிக்கை தெரிந்துகொள்ளுங்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கோடை விடுமுறை ஆரம்பித்தாலே போதும், ரயில்களில் கால் வைக்கக்கூட இடம் இருக்காது. இப்படிப்பட்ட சமயத்தில் திடீரென எங்காவது பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், நம்மிடம் இருக்கும் ஒரே வழி தட்கல் டிக்கெட்தான். ஆனால், புக்கிங் தொடங்கிய அடுத்த நொடியே எல்லா டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிடும் என்பதுதான் இதில் உள்ள சிக்கல். லாகின் செய்து, விவரங்களைப் பூர்த்தி செய்வதற்குள் 'வெயிட்டிங்' லிஸ்ட் வந்துவிடும். உங்களுக்கும் இப்படித்தான் அடிக்கடி நடக்கிறதா? இனி அந்த டென்ஷனை விடுங்கள். இன்று, வெறும் 2 நிமிடங்களில் கன்ஃபார்ம் தட்கல் டிக்கெட்டை புக் செய்ய உதவும் IRCTC-யின் ஒரு சூப்பர் 'மாஸ்டர் ட்ரிக்' பற்றி உங்களுக்குச் சொல்கிறோம். அந்த எளிய வழிகளைப் பற்றிப் பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முதலில், சரியான நேரத்தைக் குறித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால், தட்கல் புக்கிங்கில் ஒவ்வொரு நொடியும் முக்கியம். ஏசி வகுப்பு (2AC, 3AC, CC) டிக்கெட்டுகளுக்கான புக்கிங் காலை 10:00 மணிக்கும், ஏசி இல்லாத வகுப்பு (Sleeper) டிக்கெட்டுகளுக்கான புக்கிங் காலை 11:00 மணிக்கும் தொடங்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தட்கல் டிக்கெட் கிடைக்காமல் போவதற்கு முக்கியக் காரணம், புக்கிங் செய்யும்போது பயணிகளின் பெயர், வயது மற்றும் பெர்த் விருப்பம் போன்றவற்றை டைப் செய்ய ஆகும் நேரம்தான். நீங்கள் இதையெல்லாம் டைப் செய்து முடிப்பதற்குள், வேறு யாராவது டிக்கெட்டை வாங்கிவிடுவார்கள். இதற்கு மிக எளிமையான தீர்வுதான் IRCTC-யின் 'மாஸ்டர் லிஸ்ட்' (Master List Feature) வசதி. புக்கிங் தொடங்குவதற்கு முன்பு நீங்கள் ஒரு சிறிய வேலையைச் செய்து வைத்தால் போதும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தட்கல் புக்கிங் நேரத்திற்கு (காலை 10 அல்லது 11 மணி) சுமார் 15-20 நிமிடங்களுக்கு முன்பே IRCTC ஆப் அல்லது வெப்சைட்டைத் திறந்து கொள்ளுங்கள். உங்கள் கணக்கின் 'My Account' பகுதிக்குச் சென்று, அங்குள்ள 'My Master List' ஆப்ஷனைக் கிளிக் செய்யுங்கள்.இங்கே, நீங்கள் யாருக்கெல்லாம் டிக்கெட் புக் செய்ய விரும்புகிறீர்களோ, அவர்களின் பெயர், வயது மற்றும் பாலினம் போன்ற விவரங்களை முன்கூட்டியே 'Add Passenger' கொடுத்து சேமித்துக்கொள்ளுங்கள்.&lt;/p&gt;&lt;p&gt;இப்போது, புக்கிங் நேரத்தில் நீங்கள் பயணிகள் விவரம் உள்ள பக்கத்திற்கு வரும்போது, பெயரை டைப் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. அங்கே 'Add Existing' என்ற ஆப்ஷன் தோன்றும். அதைக் கிளிக் செய்தவுடன், நீங்கள் சேமித்து வைத்த மாஸ்டர் லிஸ்ட் திறக்கும். பெயர்களைத் தேர்ந்தெடுத்து, நேரடியாக பேமெண்ட் பக்கத்திற்குச் செல்லுங்கள்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நெட் பேங்கிங் அல்லது கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும்போது, OTP வருவதற்கும் பாஸ்வேர்ட் போடுவதற்கும் நேரம் வீணாகும். தட்கல் டிக்கெட்டிற்கு எப்போதும் UPI (BHIM, பேடிஎம், போன்பே அல்லது ஜீபே) முறையைப் பயன்படுத்துங்கள். இதில் உங்கள் போனுக்கு நேரடியாக ஒரு கோரிக்கை வரும், பின் நம்பரை உள்ளிட்டதும் பணம் செலுத்திவிடலாம். அதைவிட வேகமாக பணம் செலுத்த, IRCTC வேலட்டில் முன்கூட்டிய பணம் போட்டு வைத்திருந்தால், சட்டென பணம் செலுத்தி டிக்கெட் புக் செய்துவிடலாம். புக்கிங் தொடங்குவதற்குச் சரியாக 2-3 நிமிடங்களுக்கு முன்பு லாகின் செய்யுங்கள். நீங்கள் அரை மணி நேரத்திற்கு முன்பே லாகின் செய்து காத்திருந்தால், சரியாக 10 அல்லது 11 மணிக்கு ஆப் உங்களை தானாகவே லாக் அவுட் செய்துவிட வாய்ப்புள்ளது. அதையும் கவனத்தில் கொண்டு புக்கிங் செய்யுங்கள்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/irctc-tatkal-booking-trick-get-confirmed-ticket-in-2-minutes-1u951ci"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Chennai Trains: சென்னை சுற்றுவட்ட ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! அரக்கோணம் – செங்கல்பட்டு ரயில் பாதையில் பெரிய மாற்றம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/good-news-for-train-passengers-key-tamil-nadu-rail-project-cleared-491b37i</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/good-news-for-train-passengers-key-tamil-nadu-rail-project-cleared-491b37i</guid>
            <pubDate>Sun, 24 May 2026 14:53:51 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;அதிக நெரிசலில் இயங்கும் இந்த பாதை, இரட்டை வழித்தடமாக மாறுவதால் ரயில் சேவைகள் அதிகரித்து, பயண நேரம் குறையும். இந்த திட்டம் சென்னை புறநகர் சுற்றுவட்ட ரயில் இணைப்பின் முக்கிய பகுதியாக கருதப்படுகிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jfrp5aztxhxzh1de81xh5rjt,imgname-tamil-news.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;அதிக நெரிசலில் இயங்கும் இந்த பாதை, இரட்டை வழித்தடமாக மாறுவதால் ரயில் சேவைகள் அதிகரித்து, பயண நேரம் குறையும். இந்த திட்டம் சென்னை புறநகர் சுற்றுவட்ட ரயில் இணைப்பின் முக்கிய பகுதியாக கருதப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சென்னை புறநகர் ரயில் பயணிகளுக்கு முக்கியமான கட்டமைப்பு பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது. அரக்கோணம்&ndash;செங்கல்பட்டு இடையே 68 கி.மீ. ரயில் பாதையை இரட்டை வழித்தடமாக மாற்றும் ரூ.993 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு இந்திய ரயில்வே ஒப்புதல் வழங்கியுள்ளது. நீண்ட காலமாக அதிக நெரிசலில் இயங்கி இந்த பாதைக்கு இந்த திட்டம் பெரிய நிவாரணமாக பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தற்போது ஒற்றை வழித்தடமாக செயல்படும் இந்த ரயில் பாதை, காஞ்சிபுரம், திருமால்பூர், தக்கோலம், வாலாஜாபாத் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன. திறனை மீறி 104% முதல் 105% வரை பயன்பாட்டில் இயங்கும் இந்த பாதையில், ரயில் சேவைகளை அதிகரிப்பது சவாலாக இருந்தது. இதனால் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து இரண்டிலும் அழுத்தம் அதிகரித்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த திட்டம், சென்னை புறநகர் சுற்றுவட்ட ரயில் இணைப்பு திட்டத்தின் முக்கிய பகுதியாக கருதப்படுகிறது. சென்னை பீச், தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம், ராணிப்பேட்டை, ஆவடி ஆகிய பகுதிகளை இணைக்கும் பெரிய ரயில் பாதையில் இது முக்கியமானது. திட்டம் நிறைவேறினால், தற்போதைய நீண்ட வழித்தடத்தை விட நேரடி மற்றும் வேகமான புறநகர் இணைப்பு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரயில்வே தரப்பின் கணக்குப்படி, இந்த பாதையில் தினசரி இயக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கலாம். தற்போது குறைந்த எண்ணிக்கையிலேயே இயங்கும் சேவைகள், எதிர்காலத்தில் பல மடங்கு உயர வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் நேர்த்தி, தாமதக் குறைவு மற்றும் பயண வசதி மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த பாதை பயணிகள் மட்டுமல்ல, தொழிற்பேட்டைகள் மற்றும் எதிர்கால பரந்தூர் விமான நிலைய இணைப்புக்கும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதனால் ரயில் திட்டம், சென்னை மற்றும் சுற்றுப்புற வளர்ச்சிக்கான முக்கிய முதலீடாக இது கருதப்படுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/good-news-for-train-passengers-key-tamil-nadu-rail-project-cleared-491b37i"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Post Office: வங்கிகளை விட அதிக வட்டி! இந்த 'பம்பர்' திட்டங்கள் பற்றி தெரியுமா? மாதம் ரூ.9,250 லாபம்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/forget-banks-post-office-schemes-offering-up-to-8-2-percentage-interest-with-100-percentage-safety-6beo56a</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/forget-banks-post-office-schemes-offering-up-to-8-2-percentage-interest-with-100-percentage-safety-6beo56a</guid>
            <pubDate>Sat, 23 May 2026 16:20:52 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;நடுத்தர மக்களுக்கு 100% அரசு உத்தரவாதத்துடன் அதிக வட்டி தரும் போஸ்ட் ஆபிஸின் சேமிப்புத் திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் முதலீடு செய்வதன் மூலம் பணத்தை பாதுகாப்பாக இரட்டிப்பாக்கலாம் அல்லது மாதம் ரூ.9,250 வரை நிலையான வருமானத்தைப் பெறலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ksa6yhycbhh095g7d05s9mjb,imgname-post-office-savings-schemes-2026-1779533039564.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;நடுத்தர மக்களுக்கு 100% அரசு உத்தரவாதத்துடன் அதிக வட்டி தரும் போஸ்ட் ஆபிஸின் சேமிப்புத் திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் முதலீடு செய்வதன் மூலம் பணத்தை பாதுகாப்பாக இரட்டிப்பாக்கலாம் அல்லது மாதம் ரூ.9,250 வரை நிலையான வருமானத்தைப் பெறலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வங்கிகளில் வட்டி விகிதங்கள் தொடர்ந்து ஏற்ற இறக்கமாக இருக்கும் இந்தச் சூழலில், நடுத்தர மக்களுக்கு 100% அரசு உத்தரவாதத்துடன், அதிக லாபம் தரும் முதலீட்டுத் தளமாக விளங்குவது போஸ்ட் ஆபிஸ் (Post Office Savings Schemes) சேமிப்புத் திட்டங்கள் தான். தற்போதைய நிதியாண்டில், போஸ்ட் ஆபிஸின் சில முக்கியத் திட்டங்களுக்குப் பொதுத்துறை மற்றும் முன்னணி தனியார் வங்கிகளை விடக் கூடுதல் வட்டி வழங்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;பங்குச்சந்தை போன்ற சந்தை அபாயங்கள் (Market Risks) ஏதுமின்றி, உழைத்த பணத்தைப் பாதுகாப்பாக இரட்டிப்பாக்கவும், அதே நேரத்தில் மாதந்தோறும் ஒரு நிரந்தர வருமானத்தைப் பெறவும் உதவும் 3 சூப்பர் போஸ்ட் ஆபிஸ் திட்டங்களின் விரிவான விவரங்கள் இதோ:&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;போஸ்ட் ஆபிஸின் மாதாந்திர வருமானத் திட்டம் (Post Office Monthly Income Scheme - POMIS) ஓய்வு பெற்றவர்களுக்கும், கையில் உள்ள மொத்தத் தொகையை வைத்து மாதந்தோறும் நிலையான வருமானம் ஈட்ட நினைப்பவர்களுக்கும் ஒரு சிறந்த ஜாக்பாட் ஆகும்.&lt;/p&gt;&lt;p&gt;தற்போதைய வட்டி விகிதம்: 7.4% (இதன் வட்டித் தொகை ஒவ்வொரு மாதமும் உங்கள் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்).&lt;/p&gt;&lt;p&gt;முதலீட்டு வரம்பு: இத்திட்டத்தில் தனிநபர் கணக்காக இருந்தால் அதிகபட்சமாக ரூ.9 லட்சம் வரையும், அதுவே கணவன்-மனைவி இணைந்து கூட்டு கணக்காக (Joint Account) தொடங்கினால் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையும் முதலீடு செய்யலாம்.&lt;/p&gt;&lt;p&gt;முதிர்வுக் காலம்: 5 ஆண்டுகள்.&lt;/p&gt;&lt;p&gt;மாதாந்திர லாபம்: நீங்கள் கூட்டு கணக்கில் அதிகபட்ச வரம்பான ரூ.15 லட்சத்தை ஒரே முறையில் முதலீடு செய்தால், தற்போதைய 7.4% வட்டி விகிதத்தின்படி, அடுத்த 5 ஆண்டுகளுக்கு மாதம் தோறும் ரூ.9,250 வட்டி வருமானமாக மட்டுமே உங்கள் கைக்கு வந்து சேரும். 5 ஆண்டுகள் முடிந்த பின், நீங்கள் முதலீடு செய்த ரூ.15 லட்சம் அப்படியே உங்களிடம் திருப்பித் தரப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விவசாயிகள் மட்டுமின்றி அனைத்து இந்தியக் குடிமக்களும் முதலீடு செய்யக்கூடிய ஒரு அற்புதமான திட்டம் தான் கிசான் விகாஸ் பத்ரா (KVP). &quot;நான் போடும் பணம் எப்போது இரட்டிப்பாகும்?&quot; என்று எதிர்பார்ப்பவர்களுக்கு இதுவே மிகச்சிறந்த தேர்வு.&lt;/p&gt;&lt;p&gt;தற்போதைய வட்டி விகிதம்: 7.5% (கூட்டு வட்டி முறையில் கணக்கிடப்படுகிறது).&lt;/p&gt;&lt;p&gt;பணம் இரட்டிப்பாகும் காலம்: இத்திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் தொகை சரியாக 115 மாதங்களில் (அதாவது 9 ஆண்டுகள் மற்றும் 7 மாதங்கள்) அப்படியே இரண்டு மடங்காக (Double) உயர்ந்து உங்கள் கைக்குக் கிடைக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;முதலீட்டு வரம்பு: இத்திட்டத்தில் கணக்கைத் தொடங்க குறைந்தபட்சம் ரூ.1,000 தேவை. ஆனால், அதிகபட்ச முதலீட்டிற்கு எந்தவித வரம்பும் (No Upper Limit) இல்லை. நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.&lt;/p&gt;&lt;p&gt;பயன்பாடு: அவசரக் காலங்களில் இந்தச் சான்றிதழ்களைப் பிணையாக வைத்து வங்கிகளில் எளிதாகக் கடன் பெற முடியும் என்பதால், இது அவசரத் தேவைகளுக்கும் பெரிதும் உதவுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உங்கள் வீட்டில் 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் இருந்தால், அவர்களின் எதிர்காலக் கல்வி மற்றும் திருமணச் செலவு குறித்த கவலை இனி உங்களுக்கு வேண்டாம். மத்திய அரசின் 'பெட்டி பச்சாவோ, பெட்டி பதாவோ' இயக்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட சுகன்யா சம்ரித்தி யோஜனா (Sukanya Samriddhi Account) இதற்குச் சிறந்த தீர்வாகும்.&lt;/p&gt;&lt;p&gt;தற்போதைய வட்டி விகிதம்: 8.2% (போஸ்ட் ஆபிஸ் சேமிப்புத் திட்டங்களிலேயே மிக அதிக வட்டி தரும் திட்டம் இதுதான்!)&lt;/p&gt;&lt;p&gt;முதலீட்டு முறை: ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ.250 முதல் அதிகபட்சமாக ரூ.1,500,000 வரை இதில் சேமிக்கலாம். பெண் குழந்தைக்கு 15 வயது ஆகும் வரை (அதாவது கணக்கு தொடங்கியதில் இருந்து 15 ஆண்டுகள்) பணம் செலுத்த வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;வரி விலக்கு (Tax Benefit): இத்திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் தொகை, அதற்குப் பெறப்படும் வட்டி மற்றும் முதிர்வுத் தொகை என மூன்றிற்குமே வருமான வரிச் சட்டம் 80C-ன் கீழ் முழுமையான வரி விலக்கு (EEE Category) உண்டு.&lt;/p&gt;&lt;p&gt;முதிர்வு காலம்: பெண் குழந்தைக்கு 18 வயது நிறைந்தவுடன் கல்விச் செலவிற்காக 50% தொகையைப் பெற்றுக்கொள்ளலாம். கணக்கு தொடங்கி 21 ஆண்டுகள் நிறைவடைந்ததும் மொத்தத் தொகையும் வட்டியுடன் ஜாக்பாட்டாகக் கைக்குக் கிடைக்கும்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;100% பாதுகாப்பிற்கு உத்தரவாதம்..&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;வங்கி திவாலானால் குறிப்பிட்ட தொகைக்கு மட்டுமே காப்பீடு கிடைக்கும். ஆனால், போஸ்ட் ஆபிஸ் திட்டங்கள் அனைத்தும் இந்திய மத்திய அரசின் நேரடிப் பாதுகாப்பில் வருவதால், இதில் உங்கள் முதலீட்டிற்கும் வட்டிக்கும் 100% இறையாண்மை உத்தரவாதம் (Sovereign Guarantee) உண்டு.&lt;/p&gt;&lt;p&gt;உங்களுக்கு அருகிலுள்ள தபால் நிலையத்திற்குச் சென்று, ஆதார் மற்றும் பான் கார்டு நகல்களைச் சமர்ப்பித்து, வெறும் ரூ.500 அல்லது ரூ.1000 செலுத்தி கூட இந்த கணக்குகளை நீங்கள் எளிதாகத் தொடங்கலாம். உங்கள் எதிர்காலத்தை வளமாக்க இன்றே தபால் நிலைய முதலீட்டைத் தேர்ந்தெடுங்கள்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/forget-banks-post-office-schemes-offering-up-to-8-2-percentage-interest-with-100-percentage-safety-6beo56a"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Petrol Diesel Price Hike: அதிகாலையில் பேரதிர்ச்சி! 10 நாட்களில் 3வது முறையாக! பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு.]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/petrol-and-diesel-prices-hike-again-in-chennai-98dq84t</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/petrol-and-diesel-prices-hike-again-in-chennai-98dq84t</guid>
            <pubDate>Sat, 23 May 2026 07:50:45 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Petrol Diesel Price: சர்வதேச சந்தை நிலவரங்களால் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த 10 நாட்களில் 3வது முறையாக விலை உயர்த்தப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ks987swyh69red3ex152kxjs,imgname-india-fuel-price-hike-petrol-diesel-rates-rise-middle-east-oil-crisis-may-2026-1779500836766.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Petrol Diesel Price: சர்வதேச சந்தை நிலவரங்களால் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த 10 நாட்களில் 3வது முறையாக விலை உயர்த்தப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கடந்த சில ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் உயர்த்தப்பட்டாமல் இருந்து வந்தது. இந்நிலையில் ஈரான்- அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர் காரணமாக மேற்காசிய நாடுகளில் கடந்த இரண்டு மாதங்களாக போர் பதற்றம் நீடித்து வந்தது. இதன் காரணமாக சிலிண்டர் மற்றும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தற்போது போர் பதற்றம் இல்லாத நிலையில், ஈரான் பகுதியில் உள்ள ஹார்மூஸ் நீர் ஜலசந்தி பகுதியை அமெரிக்க முற்றுகையிட்டுள்ளது. இதனால் ஈரான் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இருந்து பெட்ரோல் மற்றும் எரிவாயு மற்ற நாடுகளுக்கு கொண்டு செல்வது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டத்தில் ஒரு பகுதியை ஈடுகட்ட கடந்த 15-ம் தேதி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதாவது சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ.3 உயர்த்தப்பட்டது. அடுத்தாக கடந்த மே 19ம் தேதி பெட்ரோல் டீசலுக்கு 90 காசுகள் உயர்ந்தது. நேற்று முன்தினம் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 35 காசுகள் குறைந்த நிலையில், நேற்று மேலும் 6 காசுகள் குறைந்தது. பின்னர் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வந்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 82 காசுகள் உயர்ந்து 105.31 ரூபாயாகவும், டீசல் விலை லிட்டருக்கு 87 காசுகள் உயர்ந்து 96.98 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 நாட்களில் பெட்ரோல் டீசல் விலை 3வது முறையாக உயர்ந்துள்ளது வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக ஆட்டோ, கார் ஆகியவற்றின் வாடகை அதிகரிக்கப்பட்டது. உணவு பொருட்களின் விலையும் வரும் புதிய உச்சத்தை எட்ட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவதன் மூலமும், வீட்டிலிருந்து வேலை செய்வதைத் தேர்ந்தெடுப்பதன் மூலமும் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/petrol-and-diesel-prices-hike-again-in-chennai-98dq84t"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Loan Prepayment: லோனை முன்கூட்டியே கட்டினால் லாபமா? நஷ்டமா? 'ப்ரீபேமென்ட்' ரகசியங்கள்! இது தெரியாம போச்சே!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/is-loan-prepayment-profitable-pros-cons-and-rbi-rules-explained-egpvw0o</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/is-loan-prepayment-profitable-pros-cons-and-rbi-rules-explained-egpvw0o</guid>
            <pubDate>Sat, 23 May 2026 13:24:58 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Loan Prepayment: நாம் வாங்கும் லோன்களை முன்கூட்டியே கட்டினால் லாபமா? நஷ்டமா? முன்கூட்டியே செலுத்தினாலும் சில நேரங்களில் அபராதம் விதிக்கப்படுவது ஏன்? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ks9wyw6y4wrjjnchy5jc0psy,imgname-loan-prepayment-1779522564318.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Loan Prepayment: நாம் வாங்கும் லோன்களை முன்கூட்டியே கட்டினால் லாபமா? நஷ்டமா? முன்கூட்டியே செலுத்தினாலும் சில நேரங்களில் அபராதம் விதிக்கப்படுவது ஏன்? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நம்மில் பலர் வீடு வாங்க, கார் வாங்க, மேற்படிப்புக்கு, அல்லது திடீர் பணத் தேவைக்கு லோன் வாங்குவது வழக்கம். ஆனால், சில சமயம் நாம் எதிர்பார்த்ததை விட நமது நிதி நிலைமை சீக்கிரமே மேம்படும். அப்போது, லோனில் ஒரு பெரிய தொகையை முன்கூட்டியே கட்டி, கடன் சுமையைக் குறைக்கலாம் என்று தோன்றும்.&lt;/p&gt;&lt;p&gt;லோனை குறிப்பிட்ட காலத்திற்கு முன்னரே கட்டி முடிப்பது, நாம் செலுத்த வேண்டிய மொத்த வட்டிச் சுமையைக் குறைத்து, கடனில் இருந்து விரைவில் விடுபட உதவும். ஆனால், கையில் பணம் வந்ததும் உடனே வங்கிக்கு ஓடுவதற்கு முன் சில முக்கிய விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். லோன் தவணை தாமதமானால் அபராதம் விதிப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் லோனை முன்கூட்டியே கட்டி முடித்தாலும் சில நிதி நிறுவனங்கள் கட்டணம் வசூலிப்பார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஃப்ளோட்டிங் வட்டி விகிதத்தில் வாங்கிய லோன்களை, முன்கூட்டியே கட்டி முடித்தால், அதற்காக ப்ரீபேமென்ட் அல்லது ஃபோர்குளோஷர் கட்டணங்களை வசூலிக்கக் கூடாது என்று ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கும் (NBFCs) கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது. லோன் எந்தத் தேவைக்காக வாங்கப்பட்டிருந்தாலும் இந்த விதி பொருந்தும். ஆனால், ஃபிக்ஸட் வட்டி விகிதத்தில் உள்ள லோன்களுக்கு ப்ரீபேமென்ட் பெனால்டி வசூலிக்க வங்கிகளுக்கு இன்னும் அனுமதி உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;பெயருக்கு ஏற்றாற்போல், வங்கியுடன் ஒப்புக்கொண்ட காலத்துக்குள் முடிவதற்குள் லோன் தொகையைத் திருப்பிச் செலுத்தும்போது வங்கிகள் விதிக்கும் அபராதம்தான் இது. உங்கள் லோன் ஒப்பந்தத்தில் ப்ரீபேமென்ட் விதி இருந்தால், முன்கூட்டியே லோனை முடிக்கும்போது நீங்கள் இந்த அபராதத்தைச் செலுத்த வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பணம் சீக்கிரம் திரும்ப வரும்போது வங்கிகள் ஏன் அபராதம் விதிக்க வேண்டும் என நீங்கள் கேள்வி கேட்கலாம். வங்கிகளின் முக்கிய லாபமே, லோன் காலம் முழுவதும் வாடிக்கையாளர் செலுத்தும் வட்டியில் இருந்துதான் வருகிறது. லோனை முன்கூட்டியே கட்டி முடிக்கும்போது, வங்கிக்குக் கிடைக்க வேண்டிய வட்டி வருமானம் இழக்கப்படுகிறது. இந்த இழப்பை ஈடுகட்டவே சில வங்கிகள் ப்ரீபேமென்ட் கட்டணத்தை வசூலிக்கின்றன.&lt;/p&gt;&lt;p&gt;இந்த அபராதத் தொகை ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும். மேலும், எல்லா லோன்களுக்கும் இது பொருந்தாது. இது முற்றிலும் உங்கள் லோன் ஒப்பந்தத்தின் விதிமுறைகளைப் பொறுத்தது. எனவே, லோன் ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு முன், அதில் சிறிய எழுத்துக்களில் உள்ள நிபந்தனைகளைக் கூட கவனமாகப் படிப்பது அவசியம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உங்கள் வங்கி ப்ரீபேமென்ட் கட்டணம் வசூலிக்கவில்லை என்றால், லோனை முன்கூட்டியே கட்டி முடிப்பதன் மூலம் பெரிய தொகையைச் சேமிக்க முடியும். ஒருவேளை அபராதம் இருந்தாலும், வட்டி வகையில் கிடைக்கும் லாபத்தையும், லோனின் மீதமுள்ள காலத்தையும் கருத்தில் கொள்ளும்போது, முன்கூட்டியே செலுத்துவதுதான் நிதி ரீதியாகப் பயனளிக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;இதை அறிய, முதலில் லோனை முன்கூட்டியே செலுத்துவதால் வட்டி வகையில் எவ்வளவு சேமிக்க முடியும் என்று கணக்கிடுங்கள். மீதமுள்ள காலத்துக்கு நீங்கள் செலுத்த வேண்டிய வட்டி மற்றும் பிற கட்டணங்களைச் சேர்த்து இதைக் கண்டுபிடிக்க வேண்டும். இந்தத் தொகைதான் லோனை விரைவில் முடிக்கும்போது நீங்கள் சேமிக்கக்கூடியது.&lt;/p&gt;&lt;p&gt;பின்னர், இந்த லாபத்தில் இருந்து ப்ரீபேமென்ட் பெனால்டி மற்றும் பிற கூடுதல் கட்டணங்களைக் கழிக்கவும். இந்த அபராதம் ஒரு குறிப்பிட்ட தொகையா அல்லது லோனின் மீதமுள்ள அசலின் குறிப்பிட்ட சதவீதமா என்பதையும் சரிபார்க்க வேண்டும். இவற்றைக் கழித்த பிறகு கிடைக்கும் தொகைதான் உங்கள் உண்மையான லாபம். இந்த மதிப்பு மைனஸில் இருந்தால், முன்கூட்டியே செலுத்துவதால் கிடைக்கும் லாபத்தை விட அபராதத்திற்காக நீங்கள் அதிகம் செலவழிக்கிறீர்கள் என்று அர்த்தம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;லோன் முன்கூட்டியே கட்டும்போது வட்டி குறைவதால் அதிக பணத்தைச் சேமிக்கலாம். கடன் சுமை விரைவில் தீருவது உங்கள் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்த உதவும். கையில் வரும் கூடுதல் பணத்தை மற்ற முதலீடுகளுக்கோ அல்லது தனிப்பட்ட தேவைகளுக்கோ பயன்படுத்தலாம். குறைந்த வட்டி விகிதத்தில் புதிய லோன்கள் பெற வாய்ப்பு கிடைக்கிறது. செலுத்த வேண்டிய பராமரிப்பு அல்லது பிராசஸிங் கட்டணங்களைத் தவிர்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சிக்கல்கள்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;பிசினஸ் லோன்களுக்குச் செலுத்தும் வட்டிக்கு வரி விலக்கு உண்டு. லோனை முன்கூட்டியே முடிக்கும்போது இந்தச் சலுகையை இழக்க நேரிடலாம். ப்ரீபேமென்ட் பெனால்டி, சில சமயங்களில் முன்கூட்டியே செலுத்துவதால் கிடைக்கும் லாபத்தை பெருமளவில் குறைத்துவிடக்கூடும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/is-loan-prepayment-profitable-pros-cons-and-rbi-rules-explained-egpvw0o"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Amazon Offer: 50% தள்ளுபடியில் சமையல் பொருட்கள்! அமேசானின் சூப்பர் ஆஃபர்! மிஸ் பண்ணிடாதீங்க!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/amazon-grocery-sale-get-50-percent-off-on-kitchen-essentials-and-free-delivery-gcen6fa</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/amazon-grocery-sale-get-50-percent-off-on-kitchen-essentials-and-free-delivery-gcen6fa</guid>
            <pubDate>Sun, 24 May 2026 18:20:02 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Amazon Offer: அமேசான் 50% தள்ளுபடியில் சமையல் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. எந்தெந்த பொருட்கள் தள்ளுபடியில் கிடைக்கின்றன? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ksd09xn0x6kcdeprxxk2yw8t,imgname-amazon-offer-1779626735264.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Amazon Offer: அமேசான் 50% தள்ளுபடியில் சமையல் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. எந்தெந்த பொருட்கள் தள்ளுபடியில் கிடைக்கின்றன? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்றைய காலகட்டத்தில் பட்ஜெட்டுக்குள் குடும்பம் நடத்துவது என்பது சவாலான காரியமாக மாறிவிட்டது. இதனால், மாதத் தொடக்கத்திலும் வார இறுதி நாட்களிலும் மளிகைப் பொருட்களை எங்கு மலிவாக வாங்கலாம் என்று தேடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அத்தகைய நடுத்தரக் குடும்பங்களுக்குப் பயன் தரும் வகையில், அமேசான் நிறுவனம் தனது மளிகைப் பொருட்கள் பிரிவில் அதிரடிச் சலுகைகளை வாரி வழங்கி வருகிறது.&lt;/p&gt;&lt;p&gt;தமிழ்நாட்டின் சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வசிக்கும் மக்கள், அமேசான் நவ் (அமேசான் பிரெஷ் சேவையின் கீழ் உள்ள விரைவு விநியோகப் பிரிவு) அமேசான் நவ் (Amazon Now) சேவை மூலம் தங்களுக்குத் தேவையான மளிகைப் பொருட்களைக் கணிசமான தள்ளுபடியுடன் வீட்டிலிருந்தபடியே ஆர்டர் செய்து பெற்று வருகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;பாதி விலை:&lt;/strong&gt; அமேசான் செயலியில் உள்ள இந்த சிறப்புப் பிரிவில், சமையலுக்குத் தேவையான முக்கியப் பொருட்கள் 50 சதவீத நேரடித் தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகின்றன.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;அன்றாட சமையல் பொருட்கள்: &lt;/strong&gt;பிராண்டட் சமையல் எண்ணெய், பிரீமியம் தர அரிசி வகைகள், பருப்பு மற்றும் நெய் போன்ற பொருட்களுக்கு 30% முதல் 45% வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;வீட்டுப் பராமரிப்பு பொருட்கள்:&lt;/strong&gt; துணி துவைக்கும் பவுடர், பாத்திரம் கழுவும் லிக்விட், தரை சுத்தப்படுத்திகள் (Floor Cleaners) போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு 50% க்கும் மேல் ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;அதிக அளவு, அதிக சேமிப்பு: &lt;/strong&gt;சமையல் எண்ணெய், அரிசி, துவரம்பருப்பு போன்றவற்றை 5 கிலோ அல்லது 10 கிலோ போன்ற பெரிய அளவுகளில் வாங்கும்போது, சில்லறை விலையை விட இன்னும் கூடுதலான தள்ளுபடி கிடைக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;காம்போ ஆஃபர்கள்:&lt;/strong&gt; ஒரே பிராண்டின் சோப்பு + ஷாம்பு, அல்லது சமையல் எண்ணெய் + நெய் போன்ற காம்போக்களை ஒன்றாக வாங்கும் போது தனியாக வாங்குவதை விட விலை கணிசமாகக் குறையும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;கூடுதல் வங்கிச் சலுகைகள்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;மளிகைப் பொருட்களின் தள்ளுபடி மட்டுமின்றி, குறிப்பிட்ட சில முன்னணி வங்கிகளின் கிரெடிட் கார்டுகள் அல்லது அமேசான் பே (Amazon Pay) கணக்கு மூலம் பணம் செலுத்தும் போது, வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் கேஷ்பேக் மற்றும் உடனடித் தள்ளுபடியும் கிடைக்கிறது. அமேசான் பிரைம் (Prime) சந்தாதாரர்களுக்கு எக்ஸ்பிரஸ் டெலிவரி வசதியும் உண்டு.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த ஆன்லைன் சலுகைகள் நீங்கள் வசிக்கும் பகுதி மற்றும் பின்கோடைப் (Pincode) பொறுத்து மாறுபட வாய்ப்புள்ளது. எனவே, உங்கள் பகுதியில் உள்ள தற்போதைய லைவ் ஆஃபர்களைத் தெரிந்துகொள்ள அமேசான் செயலியைச் சரிபார்த்துக் கொள்ளலாம். ஸ்மார்ட்டாக ஷாப்பிங் செய்து பணத்தைச் சேமிக்க நினைப்போருக்கு இந்தச் சலுகை ஒரு நல்ல வாய்ப்பாகும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/amazon-grocery-sale-get-50-percent-off-on-kitchen-essentials-and-free-delivery-gcen6fa"/>
        </item>
        <item>
            <title><![CDATA[SSY Withdrawal: மகளுக்காக சேமித்த பணம்.. 21 வயதுக்கு முன் எடுக்க முடியுமா? சுகன்யா சம்ரிதி யோஜனா ரூல்ஸ் இதோ]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/can-you-withdraw-sukanya-samriddhi-yojana-money-before-21-years-h043frf</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/can-you-withdraw-sukanya-samriddhi-yojana-money-before-21-years-h043frf</guid>
            <pubDate>Sat, 23 May 2026 12:45:36 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;SSY Withdrawal: சுகன்யா சம்ருத்தி யோஜனா கணக்கில் பணம் போட்ட பிறகு, தேவையான நேரத்தில் எடுக்க முடியுமா என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. 21 ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமா அல்லது இடைப்பட்ட காலத்தில் பணம் பெற வழி இருக்கிறதா? என்பதை காண்போம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ks9tp4s71x3mh1vv3d23fq8j,imgname-tamil-news--27--1779520181031.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;SSY Withdrawal: சுகன்யா சம்ருத்தி யோஜனா கணக்கில் பணம் போட்ட பிறகு, தேவையான நேரத்தில் எடுக்க முடியுமா என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. 21 ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமா அல்லது இடைப்பட்ட காலத்தில் பணம் பெற வழி இருக்கிறதா? என்பதை காண்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மகளின் எதிர்காலத்தை பாதுகாக்கும் நோக்கில் பல பெற்றோர்கள் தேர்வு செய்யும் முதலீட்டு திட்டங்களில் முக்கியமானதாக சுகன்யா சம்ரிதி யோஜனா பார்க்கப்படுகிறது. அதிக வட்டி, நீண்டகால சேமிப்பு மற்றும் அரசு ஆதரவு போன்ற காரணங்களால் இந்த திட்டம் பல குடும்பங்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது. ஆனால், இந்த திட்டம் குறித்து இன்று ஒரு பெரிய குழப்பம் நிலவுகிறது. அதாவது, கணக்கில் செலுத்திய பணத்தை 21 ஆண்டுகள் நிறைவதற்கு முன்பே எடுக்க முடியுமா என்ற கேள்விதான்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பொதுவாக, சுகன்யா சம்ரிதி யோஜனா ஒரு நீண்டகால சேமிப்பு திட்டமாக உள்ளது. கணக்கு தொடங்கிய நாளிலிருந்து 21 ஆண்டுகள் முடிந்த பிறகே முழுத் தொகையும் முதிர்வடையும். இதனால், பலர் நினைப்பது போல இது சாதாரண வங்கி சேமிப்பு கணக்கு அல்ல. தேவையான நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம் என்ற வசதி இதில் கிடையாது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆனால் இதற்கு சில விதிவிலக்குகளும் உள்ளன. மகள் 18 வயதை கடந்த பிறகு, உயர்கல்வி செலவுகளுக்காக கணக்கில் இருக்கும் தொகையின் 50 சதவீதம் வரை பெற அனுமதி வழங்கப்படுகிறது. கல்லூரி சேர்க்கை கட்டணம், கல்விக் கட்டணம் மற்றும் தொடர்புடைய செலவுகளுக்காக இந்தத் தொகை பயன்படுத்தப்படலாம். இந்த சேர்க்கை சான்று அல்லது கட்டண விவரங்கள் போன்ற ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மற்றொரு முக்கிய அம்சம் கணக்கை முன்கூட்டியே முடிப்பது தொடர்பானது. பெண் குழந்தை 18 வயதுக்கு பிறகு திருமணம் செய்துகொண்டால், குறிப்பிட்ட நடைமுறைகளின் கீழ் கணக்கை மூட அனுமதி கிடைக்கும். மேலும், கணக்கு வைத்திருப்பவர் உயிரிழப்பு அல்லது கடுமையான நிதி நெருக்கடி போன்ற விசேஷ சூழல்களிலும் முன்கூட்டிய முடிப்பு சாத்தியமாக உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பல பெற்றோர்கள் இந்த திட்டத்தை &ldquo;பணம் போட்டு மறந்துவிடும் சேமிப்பு&rdquo; என நினைத்தாலும், அதற்கான பல விதிமுறைகள் மறைந்துள்ளன. எனவே முதலீடு செய்வதற்கு முன்பும், இடைப்பட்ட காலத்தில் பணம் எடுக்க திட்டமிட்டாலும், திட்டத்தின் நிபந்தனைகளை முழுமையாக புரிந்துகொள்வது மிகவும் அவசியம். சரியான தகவலுடன் அணுகினால், சுகன்யா சம்ரிதி யோஜனா மகளின் எதிர்காலத்திற்கான வலுவான நிதி பாதுகாப்பாக மாறக்கூடும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/can-you-withdraw-sukanya-samriddhi-yojana-money-before-21-years-h043frf"/>
        </item>
        <item>
            <title><![CDATA[RBI: ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்கு இருந்தால் ரூ.10,000 அபராதம்? ஆர்பிஐ ரூல்ஸ் சொல்வது என்ன?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/rbi-rules-on-multiple-bank-accounts-10000-fine-fact-check-h20ayka</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/rbi-rules-on-multiple-bank-accounts-10000-fine-fact-check-h20ayka</guid>
            <pubDate>Thu, 21 May 2026 19:47:40 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;RBI: ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்கு இருந்தால் ஆர்பிஐ ரூ.10,000 அபராதம் விதிப்பதாக தகவல் பரவி வருகிறது. இது உண்மையா? ஆர்பிஐ ரூல்ஸ் என்ன? என்பது குறித்து இந்த செய்தியில் பார்ப்போம்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ks4trmj8hzxctmy0294rmj2g,imgname-rbi--1--1779352490568.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;RBI: ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்கு இருந்தால் ஆர்பிஐ ரூ.10,000 அபராதம் விதிப்பதாக தகவல் பரவி வருகிறது. இது உண்மையா? ஆர்பிஐ ரூல்ஸ் என்ன? என்பது குறித்து இந்த செய்தியில் பார்ப்போம்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவில் வங்கி சேவைகள் பெரும் அத்தியாவசிய தேவையாக உள்ளது. நாடு முழுவதும் நிறைந்துள்ள தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் மக்களுக்கு சேவையை வழங்கி வருகின்றன. என்னதான் டிஜிட்டல் யுகமாக இருந்தாலும் பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்ய, அரசு திட்டங்களின் பலன்களை பெற, ஓய்வூதியம் பெற என அனைத்து வகைகளுக்கும் வங்கிகளின் தேவை அதிகாகி வருகிறது. இந்த நிலையில், ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ரூ.10,000 அபராதம் விதிக்க உள்ளது என்ற ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வந்தது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதாவது தனிநபர்கள் தங்களின் பெயரில் பல வங்கிக் கணக்குகளை வைத்திருப்பதைத் தடுக்க அரசு புதிய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகள் வைத்திருப்பவர்கள் உடனடியாக அவற்றை மூட வேண்டும், தவறினால் ₹10,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டு இருந்தது. ஆர்பிஐ தரப்பில் இதுகுறித்து ஆராய்ந்தபோது, இப்படி ஒரு உத்தரவை ரிசர்வ் வங்கி பிறப்பிக்கவே இல்லை என்பது தெளிவாகியுள்ளது. ஆகவே இது முற்றிலும் வதந்தி மற்றும் போலிச் செய்தியாகும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஆர்பிஐ ரூல்ஸ் என்ன?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்திய சட்டப்படி மற்றும் ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி, ஒரு தனிநபர் தனது தேவைக்கேற்ப எத்தனை வங்கிகளில் வேண்டுமானாலும், எத்தனை சேமிப்புக் கணக்குகளை (Savings Accounts) வேண்டுமானாலும் வைத்துக் கொள்ள முழு உரிமை உண்டு. கணக்குகளின் எண்ணிக்கைக்கு எந்தவித உச்சவரம்பும் கிடையாது, அபராதமும் கிடையாது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிறகு ரூ.10,000 அபராதம் என்ற குழப்பம் எங்கிருந்து வந்தது? என்று நீங்கள் கேட்கலாம். அண்மை காலமாக அதிகரித்து வரும் ஆன்லைன் பணப் பரிவர்த்தனை மோசடிகளைத் தடுப்பதற்காக, ரிசர்வ் வங்கி ஒரு புதிய பாதுகாப்பு அம்சத்தை ஆலோசித்து வருகிறது. அதன்படி ஒரு பயனர், தனக்கு அறிமுகமில்லாத ஒரு புதிய நபரின் கணக்கிற்கு முதன்முறையாக ₹10,000-க்கும் அதிகமாக டிஜிட்டல் முறையில் (UPI, IMPS, NEFT) பணம் அனுப்பும்போது, அந்தப் பரிவர்த்தனை உடனடியாகப் போய்ச் சேராமல் 1 மணி நேரம் நிறுத்தி வைக்கப்படும்&lt;/p&gt;&lt;p&gt;இந்த இடைவெளியில், தவறுதலாகப் பணம் அனுப்பப்பட்டிருந்தால் அதை வாடிக்கையாளர் ரத்து செய்ய முடியும். இந்த ஆன்லைன் மோசடி தடுப்பு நடவடிக்கைக்கான &quot;ரூ.10,000&quot; என்ற வரம்பை தவறாகப் புரிந்துகொண்ட சிலர், 'பல கணக்குகள் வைத்திருந்தால் ரூ.10,000 அபராதம்' என வதந்தியாகத் திரித்து சமூக வலைதளங்களில் பரப்பி விட்டனர். இது மக்களிடையே குழப்பம் ஏற்படுவதற்கு காரணமாகி விட்டது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதே வேளையில் ரிசர்வ் வங்கி அபராதம் விதிக்காது என்றாலும், நிதி மேலாண்மை அடிப்படையில் அதிக வங்கி கணக்குகளை வைத்திருப்பது சில மறைமுக இழப்புகளை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது ஒவ்வொரு வங்கியிலும் ரூ.1,000 முதல் ரூ.10,000 வரை என குறிப்பிட்ட மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும். இதை பராமரிக்கத் தவறினால், சம்பந்தப்பட்ட வங்கி உங்களிடம் இருந்து மறைமுகக் கட்டணங்களை வசூலிக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;மேலும் நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு வங்கி கணக்கின் ஏடிஎம் கார்டு (Debit Card), எஸ்.எம்.எஸ் அலர்ட் (SMS Alerts) போன்ற சேவைகளுக்கு ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொகை உங்கள் கணக்கில் இருந்து கழிக்கப்படும். இந்த தொகை வங்கிகளுக்கு ஏற்ப மாறுபடும். இது தவிர ஒரு வங்கிக் கணக்கில் தொடர்ந்து 2 ஆண்டுகள் எந்தவொரு பரிவர்த்தனையும் செய்யவில்லை எனில், அது 'செயலற்ற கணக்காக' மாற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/rbi-rules-on-multiple-bank-accounts-10000-fine-fact-check-h20ayka"/>
        </item>
        <item>
            <title><![CDATA[6 Days Bank Holiday: 6 நாட்கள் வங்கிகள் மூடப்படும்.! மக்களே உஷார்.! எந்தெந்த தேதிகளில் தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/banks-to-remain-closed-for-six-consecutive-days-this-month-hgyewaw</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/banks-to-remain-closed-for-six-consecutive-days-this-month-hgyewaw</guid>
            <pubDate>Fri, 22 May 2026 16:20:39 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;6 Days Bank Holiday: எஸ்பிஐ ஊழியர்களின் வேலைநிறுத்தம், வார இறுதி மற்றும் பக்ரீத் பண்டிகை காரணமாக சில பகுதிகளில் வங்கிகள் தொடர்ந்து 6 நாட்கள் மூடப்பட உள்ளன. இதனால் கிளை வங்கி சேவைகள் பாதிக்கப்படும்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ks7hv49ebt1ckbf2aent2hyh,imgname-tamil-news--20--1779443798317.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;6 Days Bank Holiday: எஸ்பிஐ ஊழியர்களின் வேலைநிறுத்தம், வார இறுதி மற்றும் பக்ரீத் பண்டிகை காரணமாக சில பகுதிகளில் வங்கிகள் தொடர்ந்து 6 நாட்கள் மூடப்பட உள்ளன. இதனால் கிளை வங்கி சேவைகள் பாதிக்கப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வங்கி தொடர்பான வேலைகளை திட்டமிட்டு செய்து வருபவர்களுக்கு தற்போது முக்கிய எச்சரிக்கை வெளியாகியுள்ளது. எஸ்பிஐ ஊழியர்கள் அறிவித்துள்ள இரண்டு நாள் வேலைநிறுத்தம், வார இறுதி விடுமுறை மற்றும் பக்ரீத் பண்டிகை காரணமாக சில பகுதிகளில் வங்கிகள் தொடர்ந்து 6 நாட்கள் மூடப்படவுள்ளன. இதனால் கிளை வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மே 23 மற்றும் 24 தேதிகளில் நான்காவது சனிக்கிழமை மற்றும் ஞாயிறு காரணமாக வங்கிகள் இயங்காது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Free Aadhaar Update : ரூ.75 செலவில்லாமல் ஆதாரை அப்டேட் செய்யலாம்.. மக்களுக்கு வந்த பெரிய குட் நியூஸ்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதனைத் தொடர்ந்து மே 25 மற்றும் 26 தேதிகளில் எஸ்பிஐ ஊழியர் கூட்டமைப்பு வேலைநிறுத்தம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த வேலைநிறுத்த ஆட்சேர்ப்பு கொள்கை, அவுட்சோர்சிங் வேலைகள், பதவி உயர்வு பிரச்சினைகள் மற்றும் ஓய்வூதிய நிதி மேலாளர் தேர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை மையமாக கொண்டு நடைபெறுகிறது. இதனால் தொடர்ந்து 4 நாட்கள் கிளை செயல்பாடுகள் பாதிக்கப்படும். அதன் பிறகு மே 27 மற்றும் 28 தேதிகளில் பக்ரீத் பண்டிகை விடுமுறை சில மாநிலங்களில் அமலுக்கு வரும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குறிப்பாக ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு நாட்கள் விடுமுறை காரணமாக வங்கிகள் தொடர்ந்து 6 நாட்கள் மூடப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள எஸ்பிஐ கிளை சேவைகள் முழுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இந்த காலத்தில் ஏடிஎம், யுபிஐ, மொபைல் பேங்கிங் மற்றும் நெட் பேங்கிங் சேவைகள் வழக்கம்போல செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கிளைக்கு நேரடியாக சென்று செய்ய வேண்டிய பணிகள் பாதிக்கப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குறிப்பாக பாஸ்புக் புதுப்பிப்பு, காசோலை வைப்பு, லாக்கர் அணுகல், பண வைப்பு, கடன் ஆவணம் சமர்ப்பிப்பு போன்ற சேவைகள் கிடைக்காமல் போகலாம். இதனால் வங்கி கிளைகளில் செய்ய வேண்டிய அவசர வேலைகளை முன்கூட்டியே முடித்து விடுமாறு வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மூத்த குடிமக்கள் மற்றும் வணிக வாடிக்கையாளர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என வங்கி வட்டாரங்கள் எச்சரித்துள்ளன. ஒரு சிறிய அலட்சியம் கூட பெரிய சிக்கலை உருவாக்கக்கூடும் என்பதால், வங்கி விடுமுறை நாள்காட்டி-ஐ சரிபார்த்து செயல்படுவது நல்லது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/banks-to-remain-closed-for-six-consecutive-days-this-month-hgyewaw"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Indian Railways: இனி சார்ட் போடுற வரைக்கும் பதற வேண்டாம்! ரயில் டிக்கெட் குறியீடுகளின் ஏ டூ இசட் அர்த்தங்கள்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/indian-railways-ticket-status-explained-wl-rac-cnf-meanings-km5uy4b</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/indian-railways-ticket-status-explained-wl-rac-cnf-meanings-km5uy4b</guid>
            <pubDate>Fri, 22 May 2026 20:13:18 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Indian Railways: ரயிலில் டிக்கெட் புக் பண்ணும்போது WL, RAC, CNF-ன்னு சில வார்த்தைகள் வரும். இதுக்கு என்ன அர்த்தம்னு தெரியாம நிறைய பேர் குழம்பிப் போறாங்க. இது குறித்த அர்த்தங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jvy9exny0nshjbpmvc1psng6,imgname-train-ticket-1747994506942.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Indian Railways: ரயிலில் டிக்கெட் புக் பண்ணும்போது WL, RAC, CNF-ன்னு சில வார்த்தைகள் வரும். இதுக்கு என்ன அர்த்தம்னு தெரியாம நிறைய பேர் குழம்பிப் போறாங்க. இது குறித்த அர்த்தங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;ஆன்லைன்ல ரயில் டிக்கெட் புக் பண்றது இப்போ ரொம்ப சுலபம். ஆனா, டிக்கெட் புக் பண்ணதுக்கு அப்புறம் வர்ற ஸ்டேட்டஸ் தான் பலருக்கும் புரியாத புதிரா இருக்கு. WL, RAC, CNF-ன்னு காட்டுதே, இதுக்கு என்ன அர்த்தம்னு நிறைய பேர் யோசிக்கிறாங்க. முதல்முறை பயணம் செய்றவங்க இந்த வார்த்தைகளால குழம்பிடறாங்க. வாங்க, இந்த குழப்பத்துக்கு ஒரு தீர்வு காணலாம்.&lt;img&gt;CNF-னா 'கன்ஃபர்ம்டு டிக்கெட்' (Confirmed Ticket)னு அர்த்தம். உங்க டிக்கெட் உறுதியாயிடுச்சு, ரயில்ல உங்களுக்கு சீட் கன்ஃபார்ம்னு இதுக்கு அர்த்தம். டிக்கெட்ல கோச் நம்பர், பெர்த் நம்பர் எல்லாமே தெளிவா இருக்கும். எந்த டென்ஷனும் இல்லாம நேரா போய் உங்க சீட்ல உட்காரலாம். வழக்கமா, ரயில்ல சீட் காலியா இருந்தாலோ அல்லது நீங்க முன்கூட்டியே புக் பண்ணாலோ CNF ஸ்டேட்டஸ் கிடைக்கும்.&lt;img&gt;WL-னா 'வெயிட்டிங் லிஸ்ட்' (Waiting List). ரயில்ல இருக்குற எல்லா சீட்டும் ஏற்கெனவே புக் ஆகிடுச்சுன்னா, புதுசா புக் பண்றவங்களுக்கு இந்த ஸ்டேட்டஸ் வரும். இப்போதைக்கு உங்களுக்கு சீட் இல்லை, ஆனா யாராவது டிக்கெட்டை கேன்சல் பண்ணா உங்க டிக்கெட் கன்ஃபார்ம் ஆக வாய்ப்பு இருக்குனு அர்த்தம். உங்களுக்கு WL 15-னு காட்டுனா, உங்களுக்கு முன்னாடி 14 பேர் வெயிட்டிங்ல இருக்காங்கனு அர்த்தம். டிக்கெட் கேன்சல் ஆக ஆக, WL நம்பர் குறைஞ்சிட்டே வரும். கடைசியா WL பூஜ்ஜியத்துக்கு வந்தா டிக்கெட் கன்ஃபார்ம் ஆகும். இல்லைனா, டிக்கெட் தானாவே கேன்சல் ஆகி, பணம் உங்க அக்கவுண்ட்க்கு திரும்பி வந்துடும்.&lt;img&gt;RAC-னா 'ரிசர்வேஷன் அகெய்ன்ஸ்ட் கேன்சலேஷன்' (Reservation Against Cancellation). இது WL-க்கும் CNF-க்கும் நடுவுல இருக்குற ஒரு ஸ்டேட்டஸ். RAC டிக்கெட் வச்சிருக்கறவங்களுக்கு ரயில்ல பயணம் செய்ய உரிமை உண்டு, ஆனா முழு பெர்த் இருக்காது. வழக்கமா, ரெண்டு RAC பயணிகள் ஒரே பெர்த்தை ஷேர் பண்ணிக்கணும். அதாவது, உட்கார்ந்துட்டு போகலாம், ஆனா படுத்துத் தூங்க முழு பெர்த் கேரண்டி கிடையாது. ஆனா, சில கன்ஃபர்ம் டிக்கெட்டுகள் கேன்சல் ஆனா, RAC டிக்கெட்டுகள் CNF-ஆ மாற வாய்ப்பு இருக்கு.&lt;img&gt;WL, RAC, CNF-க்கு நடுவுல இருக்குற முக்கிய வித்தியாசம், பயண உரிமை மற்றும் சீட் கிடைக்கிறதுலதான் இருக்கு. CNF டிக்கெட் இருந்தா முழு சீட் அல்லது பெர்த் நிச்சயம். RAC இருந்தா பயணம் செய்ய உரிமை உண்டு, ஆனா முழு பெர்த் கிடைக்காம போகலாம். WL டிக்கெட் கன்ஃபார்ம் ஆகலைனா, ரிசர்வேஷன் கோச்ல பயணம் செய்ய அனுமதி கிடையாது.&lt;img&gt;வெயிட்டிங் லிஸ்ட்லயும் பல வகை இருக்கு. GNWL - ஜெனரல் வெயிட்டிங் லிஸ்ட் (General Waiting List), PQWL - பூல்டு கோட்டா வெயிட்டிங் லிஸ்ட் (Pooled Quota Waiting List), RLWL - ரிமோட் லொகேஷன் வெயிட்டிங் லிஸ்ட் (Remote Location Waiting List)-னு பல பிரிவுகள் இருக்கு. இதுல, GNWL டிக்கெட்தான் கன்ஃபார்ம் ஆக அதிக வாய்ப்பு இருக்கு. அதனால, டிக்கெட் புக் பண்ணும்போது இந்த விவரங்களையும் பார்க்கிறது நல்லது. ரயில் போற வழி, சீசன், பண்டிகை நாட்கள், விடுமுறை நாட்களைப் பொறுத்தும் டிக்கெட் கன்ஃபர்மேஷன் மாறும்.]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/indian-railways-ticket-status-explained-wl-rac-cnf-meanings-km5uy4b"/>
        </item>
        <item>
            <title><![CDATA[SBI: ஊழியர்கள் வேலை நிறுத்தம், 6 நாள் திண்டாட்டம் தான்..? SBI வாடிக்கையாளர்களே மிஸ் பண்ணிடாதீங்க..]]></title>
            <link>https://tamil.asianetnews.com/business/sbi-issues-advisory-for-customers-explains-dos-and-donts-during-the-two-day-strike-articleshow-lgf01sb</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/business/sbi-issues-advisory-for-customers-explains-dos-and-donts-during-the-two-day-strike-articleshow-lgf01sb</guid>
            <pubDate>Sat, 23 May 2026 20:24:02 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;State Bank of India | எஸ்பிஐ ஊழியர் வேலைநிறுத்தம்: எஸ்பிஐ ஊழியர்களின் இரண்டு நாள் வேலைநிறுத்தத்தால் அதன் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதன் விளைவாக, இது தொடர்பாக வங்கி ஓர் அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kr41k792fvy6dp3teeh1zqgp,imgname-tamil-news--23--1778252356898.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;எஸ்பிஐ ஊழியர் வேலைநிறுத்தம்: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, எப்போதும் தனது வாடிக்கையாளர்களின் வசதிக்கு முன்னுரிமை அளிப்பதாக குறிப்பிடப்படுகிறது. இரண்டு நாள் வேலைநிறுத்தம் காரணமாக வங்கி தொடர்பான பணிகள் இருந்தால் வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கி, வெள்ளிக்கிழமை அன்று வங்கி ஒரு அறிவுறுத்தலை வெளியிட்டது.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;வங்கி அறிவுறுத்தல் வெளியீடு&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;வேலைநிறுத்தத்தின் போது அதன் கிளைகளில் அத்தியாவசிய வங்கிச் சேவைகளைத் தொடர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்கும் வகையில், வங்கியின் அதிகாரப்பூர்வ கணக்கு மூலம் ஒரு பதிவு பகிரப்பட்டது. இருப்பினும், சிரமங்களைக் குறைப்பதற்காக மாற்று வங்கிச் சேவைகளைப் பயன்படுத்துமாறு வங்கி வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியது.&lt;/p&gt;&lt;p&gt;அந்தப் பதிவில், &ldquo;அகில இந்திய ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பணியாளர் கூட்டமைப்பு (AISBISF) மே 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். வாடிக்கையாளர்கள் தங்களது கிளைகளில் தேவையான சேவைகளைப் பெறுவதை உறுதிசெய்ய நாங்கள் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்&rdquo; என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, வங்கி வாடிக்கையாளர்களுக்கு மூன்று முக்கியக் கோரிக்கைகளை விடுத்தது:&lt;/p&gt;&lt;p&gt;உங்களுக்குப் பணம் தேவைப்பட்டால் ஏடிஎம்கள்/ADWM-களைப் பயன்படுத்துங்கள்.&lt;/p&gt;&lt;p&gt;வாடிக்கையாளர் சேவை மையங்களைப் (CSPs) பயன்படுத்துங்கள்.&lt;/p&gt;&lt;p&gt;இணைய வங்கிச் சேவை, யோனோ (YONO), மொபைல் பேங்கிங், யுபிஐ (UPI) மற்றும் பிற டிஜிட்டல் தளங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்.&lt;/p&gt;&lt;p&gt;இதனால் ஏற்பட்ட சிரமங்களுக்கு வங்கி பின்னர் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்புக் கோரியது.&lt;/p&gt;&lt;p&gt;ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஊழியர்கள் மே 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மே 23 மற்றும் 24 ஆகிய தேதிகள் சனி மற்றும் ஞாயிறு ஆகும், மேலும் வங்கிக்கு ஈத் பண்டிகைக்காக விடுமுறையும் உள்ளது. இதன் விளைவாக, எஸ்பிஐ முழு ஆறு நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும். கிளை தொடர்பான ஏதேனும் வேலைகள் இருந்தால், அவற்றை முன்கூட்டியே முடித்துக் கொள்ளுங்கள்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/business/sbi-issues-advisory-for-customers-explains-dos-and-donts-during-the-two-day-strike-articleshow-lgf01sb"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Gold Rate: ஞாயிற்றுக்கிழமை அதுவுமா அதிர்ச்சி.. தங்கம் விலை இன்று உயர்ந்ததா? குறைந்ததா? வாங்க இதுதான் சரியான நேரமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/gold-rate-today-may-24-in-chennai-and-tamilnadu-lpax03k</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/gold-rate-today-may-24-in-chennai-and-tamilnadu-lpax03k</guid>
            <pubDate>Sun, 24 May 2026 10:22:29 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Gold Silver Rate: சர்வதேச காரணிகள் மற்றும் சுங்க வரி உயர்வால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்கள் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், இன்றைய (மே 24) நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j5a50h632q410dxyepefar37,imgname-gold-rate-5.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Gold Silver Rate: சர்வதேச காரணிகள் மற்றும் சுங்க வரி உயர்வால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்கள் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், இன்றைய (மே 24) நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கடந்த சில ஆண்டுகளாகவே தங்கம் விலை தொடர்ந்து புதிய உச்சத்தைதொட்டு, வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் தங்கம் வாங்கும் எண்ணம் கனவாக போய்விடுகிறது. தங்கம் விலை உயர்வுக்கான காரணம் சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படை​யில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில், கடந்த 13-ம் தேதி தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு அதிரடியாக உயர்த்தியது. இதையடுத்து அன்றைய தினமே தங்கம் விலை கிராமுக்கு ரூ.670 உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் இறக்கம் கண்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி ஒரு சவரன் ஒரு லட்சத்து 17 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் இன்று இன்றை தங்கம் விலை ஏறியதா இறங்கியதா என்பதை பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நேற்று காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.14,730க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,17,840க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில் இன்றைய (மே 24) நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடிக்கிறது. ஒரு சவரன் ரூ.1,17,840க்கும் விற்பனையாகிறது. 22 கேரட் தங்கம் கிராம் ரூ.14,730ஆக விற்பனையாகிறது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வெள்ளி விலை கடந்த மூன்று நாட்களாக எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் விலை ரூ.295க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.295,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/gold-rate-today-may-24-in-chennai-and-tamilnadu-lpax03k"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Atal Pension: அடல் ஓய்வூதியத் திட்டத்தில் இனி மாதம் ரூ.10,000 ஓய்வூதியம்? மத்திய அரசு தீவிர பரிசீலனை]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/pension-double-dhamaka-atal-pension-yojana-limit-set-to-hit-rs-10000-month-cbseo-qxe6ygb</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/pension-double-dhamaka-atal-pension-yojana-limit-set-to-hit-rs-10000-month-cbseo-qxe6ygb</guid>
            <pubDate>Thu, 21 May 2026 16:05:29 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Atal Pension | மாதம் ரூ.5,000 மட்டுமே கிடைத்து வந்த அடல் ஓய்வூதியத் திட்டத்தை, இனி ரூ.10,000 ஆக இரட்டிப்பாக்க அதிரடிப் பரிசீலனை. விலைவாசி உயர்வுக்கு மத்தியில் லட்சக்கணக்கான மக்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் இந்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ks50qwye20tzsn64f1vec2qr,imgname-atal-pension-1779358757838.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Atal Pension | மாதம் ரூ.5,000 மட்டுமே கிடைத்து வந்த அடல் ஓய்வூதியத் திட்டத்தை, இனி ரூ.10,000 ஆக இரட்டிப்பாக்க அதிரடிப் பரிசீலனை. விலைவாசி உயர்வுக்கு மத்தியில் லட்சக்கணக்கான மக்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் இந்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவில் உள்ள நடுத்தர மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களின் எதிர்காலப் பாதுகாப்பிற்காக மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மிக முக்கியமான திட்டம் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana - APY) ஆகும். தற்போதைய நிலவரப்படி, இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக மாதம் ரூ.5,000 மட்டுமே ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.&lt;/p&gt;&lt;p&gt;இந்நிலையில், அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் ஓய்வு பெற்ற பிறகு முதியவர்களின் வாழ்க்கைச் செலவுகளைக் கருத்தில் கொண்டு, இந்த அதிகபட்ச ஓய்வூதிய வரம்பை மாதம் ரூ.10,000 ஆக உயர்த்த மத்திய நிதி அமைச்சகம் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக அரசுத் தரப்பு நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த விரிவான மற்றும் உண்மையான தகவல்களை இங்கு பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) இத்திட்டம் நிர்வகிக்கப்படுகிறது. 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டம், சமீபத்தில் (ஏப்ரல் 2026 நிலவரப்படி) 9 கோடி சந்தாதாரர்கள் என்ற பிரம்மாண்ட மைல்கல்லைக் கடந்து சாதனை படைத்துள்ளது. கடந்த 2025-26 நிதியாண்டில் மட்டும் Record பிரேக்கிங்காக 1.35 கோடிக்கும் அதிகமான புதிய சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர்.&lt;/p&gt;&lt;p&gt;தற்போது அமலில் உள்ள விதிகளின்படி, 60 வயது நிறைவடைந்தவுடன் சந்தாதாரர்களுக்கு அவர்கள் செலுத்திய பிரீமியம் தொகையின் அடிப்படையில் பின்வரும் ஓய்வூதியங்கள் உத்தரவாதமாக வழங்கப்படுகின்றன:&lt;/p&gt;&lt;p&gt;ரூ.1,000, ரூ.2,000, ரூ.3,000, ரூ.4,000 மற்றும் அதிகபட்சமாக ரூ.5,000.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த உழைப்பாளர்களில் சுமார் 90% பேர் அமைப்புசாரா துறையிலேயே (சுயதொழில் செய்பவர்கள், தினக்கூலிகள், சிறு வியாபாரிகள்) உள்ளனர். இவர்களுக்கு முறையான பி.எஃப் (PF) அல்லது நிறுவன ஓய்வூதியப் பலன்கள் இருப்பதில்லை.&lt;/p&gt;&lt;p&gt;தற்போதைய பொருளாதாரச் சூழல் மற்றும் விலைவாசி உயர்வுக்கு மாதம் ரூ.5,000 என்பது முதியோர்களின் மருத்துவச் செலவிற்கே போதாத ஒன்றாக உள்ளது. எனவே, சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்தும் 'ஜன் சுரக்ஷா 2.0' (Jan Suraksha 2.0) திட்டத்தின் கீழ், ஓய்வூதிய வரம்பை ரூ.10,000 ஆக உயர்த்த அரசு ஆலோசித்து வருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த ஓய்வூதிய உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், தற்போது இத்திட்டத்தில் இணைவதற்கான தகுதிகள் மாற்றமின்றி தொடர்கின்றன:&lt;/p&gt;&lt;p&gt;வயது வரம்பு: 18 வயது முதல் 40 வயதுக்குட்பட்ட எந்தவொரு இந்தியக் குடிமகனும் இதில் இணையலாம்.&lt;/p&gt;&lt;p&gt;வங்கி கணக்கு: சேமிப்பு வங்கிக் கணக்கு அல்லது அஞ்சலக சேமிப்புக் கணக்குடன் ஆதார் மற்றும் மொபைல் எண் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;முக்கிய நிபந்தனை: வருமான வரி செலுத்துபவராக இருக்கக் கூடாது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உத்தரவாத ஓய்வூதியம்: சந்தாதாரர் தனது 60 வயது வரை (அவர் இணையும் வயதைப் பொறுத்து) குறிப்பிட்ட பிரீமியம் தொகையை மாதந்தோறும் செலுத்தி வர வேண்டும். 60 வயதுக்குப் பின் வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் கிடைக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;துணைவிக்கான பாதுகாப்பு: சந்தாதாரர் காலமானால், அவரது கணவர் அல்லது மனைவிக்கு அதே ஓய்வூதியத் தொகை தொடர்ந்து வழங்கப்படும்.&lt;/p&gt;&lt;p&gt;வாரிசுதாரருக்கு மொத்தத் தொகை: கணவன், மனைவி இருவருமே காலமான பிறகு, அவர்கள் சேர்த்து வைத்த மொத்த கார்ப்பஸ் (Corpus) தொகையும் வாரிசுதாரரிடம் (Nominee) ஒப்படைக்கப்படும்.&lt;/p&gt;&lt;p&gt;அடல் ஓய்வூதியத் திட்டத்தை 2031-ம் நிதியாண்டு வரை நீட்டிக்க அண்மையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தச் சூழலில், ஓய்வூதியத் தொகையை ரூ.10,000 ஆக உயர்த்தும் அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில், சந்தாதாரர்கள் செலுத்த வேண்டிய மாத பிரீமியம் தொகையும் சற்று அதிகரிக்கும். எனினும், இது நாட்டின் லட்சக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தர மக்களின் முதுமைக் காலத்திற்கு மிகப்பெரிய பொருளாதாரப் பாதுகாப்பை வழங்கும் என்பதில் ஐயமில்லை. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/pension-double-dhamaka-atal-pension-yojana-limit-set-to-hit-rs-10000-month-cbseo-qxe6ygb"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Savings Account: சேவிங்ஸ் அக்கவுன்ட்டில் எவ்வளவு பணம் வைக்கலாம்? இந்த தப்பெல்லாம் செஞ்சா சிக்கல்தான்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/savings-account-income-tax-rules-cash-deposit-limits-and-tax-implication-rc2xw6c</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/savings-account-income-tax-rules-cash-deposit-limits-and-tax-implication-rc2xw6c</guid>
            <pubDate>Sun, 24 May 2026 19:57:00 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Savings Account: சேவிங்ஸ் அக்கவுன்ட்டில் எவ்வளவு பண்ம் வைத்திருக்கலாம்? எவ்வளவு பணத்துக்கு மேல் வரி பிடிக்கப்படும்? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j6bddk63fp6rkqwn92kb748j,imgname-tamil-news--47-.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Savings Account: சேவிங்ஸ் அக்கவுன்ட்டில் எவ்வளவு பண்ம் வைத்திருக்கலாம்? எவ்வளவு பணத்துக்கு மேல் வரி பிடிக்கப்படும்? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பொதுவாக, சேவிங்ஸ் அக்கவுன்ட்டில் பணம் வைக்க குறிப்பிட்ட உச்சவரம்பு எதுவும் கிடையாது. உங்கள் வருமானத்துக்கு ஏற்ற மாதிரி எவ்வளவு வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். ஆனால், உங்கள் கணக்கில் இருக்கும் பணம், நீங்கள் அறிவித்த வருமானத்துடன் பொருந்த வேண்டும். இல்லை என்றால், வங்கி அல்லது வருமான வரித்துறை விளக்கம் கேட்க வாய்ப்புள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;வங்கி விதிகளின்படி, ஒரே தடவையாக ₹50,000 அல்லது அதற்கு மேல் ரொக்கமாக டெபாசிட் செய்தால், பான் கார்டு விவரங்களைக் கொடுப்பது கட்டாயம். பான் கார்டு இல்லையென்றால், ஃபார்ம் 60 அல்லது ஃபார்ம் 61 சமர்ப்பிக்க வேண்டும். சில வங்கிகள் தினசரி ரொக்க டெபாசிட்டுக்கு ஒரு வரம்பை வைத்துள்ளன. சில வங்கிகளில் ஒரு நாளைக்கு ₹1 லட்சம் வரை டெபாசிட் செய்ய அனுமதி உண்டு. இந்த வரம்பு வங்கி மற்றும் கணக்கு வகையைப் பொறுத்து மாறும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வருமான வரி விதிகளின்படி, ஒரு நிதி ஆண்டில் (ஏப்ரல் முதல் மார்ச் வரை) உங்கள் சேவிங்ஸ் அக்கவுன்ட்டில் மொத்தம் ₹10 லட்சம் அல்லது அதற்கு மேல் ரொக்கமாக டெபாசிட் ஆனால், அந்த விவரத்தை வங்கி வருமான வரித்துறைக்குத் தெரிவிக்கும். இந்த விதி ரொக்கப் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்தும். ஆன்லைன் பரிமாற்றங்கள் அல்லது காசோலைகள் மூலம் வரும் பணத்திற்கு இது பொருந்தாது.&lt;/p&gt;&lt;p&gt;உங்கள் கணக்கில் ₹10 லட்சத்திற்கு மேல் டெபாசிட் ஆன உடனேயே வரி விதிப்பார்கள் என்று அர்த்தமில்லை. ஆனால், அந்தப் பணத்தின் ஆதாரம் குறித்து வருமான வரித்துறை விசாரிக்க வாய்ப்புள்ளது. அந்தப் பணம் எங்கிருந்து வந்தது என்பதற்கு நீங்கள் முறையான ஆவணங்களைக் காட்டினால், எந்தப் பிரச்சினையும் வராது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சேவிங்ஸ் அக்கவுன்ட்டில் பெரிய தொகையை டெபாசிட் செய்யும்போது சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். ₹50,000-க்கு மேல் டெபாசிட் செய்தால் பான் கார்டு கட்டாயம். பணத்திற்கான சரியான ஆதாரங்களை வைத்துக்கொள்ளுங்கள். வருமான வரி ரிட்டர்னில் வருமானத்தைச் சரியாகக் காட்டுங்கள். சந்தேகத்திற்குரிய பணப் பரிவர்த்தனைகளைத் தவிர்ப்பது நல்லது. இந்த விதிகளைப் பின்பற்றினால் எந்தப் பிரச்சினையும் வராது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;வட்டி வருமானத்திற்கான வரி&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;₹10,000 வரம்பு: உங்கள் சேவிங்ஸ் அக்கவுன்ட்டில் இருக்கும் பணத்திற்கு வங்கி வட்டி வழங்கும். ஒரு நிதியாண்டில் இந்த வட்டி வருமானம் ₹10,000 தாண்டினால், அதற்கு நீங்கள் வரி செலுத்த வேண்டும் (வருமான வரிச் சட்டம் பிரிவு 80TTA-இன் படி ₹10,000 வரை விலக்கு உண்டு). மூத்த குடிமக்கள் (Senior Citizens): இவர்களுக்கு பிரிவு 80TTB-இன் கீழ் சேவிங்ஸ் மற்றும் பிக்ஸட் டெபாசிட் (FD) இரண்டையும் சேர்த்து ₹50,000 வரை வட்டி வருமானத்திற்கு வரி விலக்கு உண்டு.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பல கணக்குகள் வைத்திருப்பவர்கள்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஒரு நபர் ஒரே வங்கியில் அல்லது வெவ்வேறு வங்கிகளில் பல சேவிங்ஸ் கணக்குகள் வைத்திருந்து, எல்லாவற்றிலும் சேர்த்து மொத்தமாக ரொக்க டெபாசிட் ₹10 லட்சத்தைத் தாண்டினாலும், பான் கார்டு (PAN) எண் ஒன்றாக இருப்பதால் வருமான வரித்துறைக்கு அந்தத் தகவல் தானாகவே சென்றுவிடும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/savings-account-income-tax-rules-cash-deposit-limits-and-tax-implication-rc2xw6c"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Training: வீட்டில் இருந்தே தினமும் ரூ.5000 சம்பாதிக்கலாம் ஈசியா.! உங்கள் வாழ்க்கையை மாற்றும் 3 நாள் அரசு பயிற்சி வகுப்பு.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/home-business-idea-earn-rs-5000-daily-easily-from-home-a-3-day-government-training-program-that-can-change-your-life-rtuutb2</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/home-business-idea-earn-rs-5000-daily-easily-from-home-a-3-day-government-training-program-that-can-change-your-life-rtuutb2</guid>
            <pubDate>Fri, 22 May 2026 12:08:22 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தமிழக அரசு EDII-TN மூலம் சென்னையில் 3 நாள் சிறப்பு தொழில்முனைவர் பயிற்சியை வழங்குகிறது. குறைந்த முதலீட்டில் வீட்டு பராமரிப்பு, ரசாயனப் பொருட்கள் தயாரித்து சுயதொழில் தொடங்குவது எப்படி என்பது குறித்து இந்த பயிற்சி முழுமையான வழிகாட்டுதலை வழங்குகிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ks75cnzdmsmvqh6b2swh9rhv,imgname-mr7qn--1--1779430741996.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழக அரசு EDII-TN மூலம் சென்னையில் 3 நாள் சிறப்பு தொழில்முனைவர் பயிற்சியை வழங்குகிறது. குறைந்த முதலீட்டில் வீட்டு பராமரிப்பு, ரசாயனப் பொருட்கள் தயாரித்து சுயதொழில் தொடங்குவது எப்படி என்பது குறித்து இந்த பயிற்சி முழுமையான வழிகாட்டுதலை வழங்குகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வேலை தேடி அலையும் இளைஞர்கள், வீட்டிலிருந்தே வருமானம் பெற விரும்பும் பெண்கள், புதிதாக தொழில் தொடங்க ஆசைப்படுபவர்கள் என அனைவருக்கும் ஒரு அரிய வாய்ப்பை தமிழக அரசு வழங்கியுள்ளது. குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய வீட்டு பராமரிப்பு மற்றும் ரசாயன பொருட்கள் தயாரிப்பு தொடர்பான 3 நாள் சிறப்பு தொழில்முனைவர் பயிற்சி வகுப்பு சென்னைையில் நடைபெற உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;இந்த பயிற்சியை Entrepreneurship Development and Innovation Institute (EDII-TN) நடத்துகிறது. தொழில் தொடங்குவதற்கான அடிப்படை அறிவிலிருந்து, தயாரிப்பு முறைகள், சந்தைப்படுத்தல் யுக்திகள் வரை அனைத்தும் நேரடி பயிற்சியாக கற்றுத்தரப்பட உள்ளதால் இந்த முகாமுக்கு அதிக வரவேற்பு உருவாகியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்றைய காலத்தில் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு சந்தையில் மிகப்பெரிய தேவை உள்ளது. குறிப்பாக டிடர்ஜென்ட், ஃப்ளோர் கிளீனர், டிஷ் வாஷ் லிக்விட், ஏர் ஃப்ரெஷ்னர் போன்ற பொருட்கள் தினசரி மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களாக மாறிவிட்டன.&lt;/p&gt;&lt;p&gt;இந்த பொருட்களை வீட்டிலிருந்தே சிறிய அளவில் தயாரித்து விற்பனை செய்தாலும் தினசரி நல்ல வருமானம் பெற முடியும். சரியான தரம் மற்றும் குறைந்த விலையில் தயாரித்தால் அருகிலுள்ள கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் ஆன்லைன் மூலமாக கூட விற்பனை செய்து தொழிலை வளர்க்கலாம் என பயிற்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த 3 நாள் பயிற்சியில் பல வகையான Home Care மற்றும் Industrial Chemical பொருட்கள் தயாரிப்பு குறித்து நேரடி விளக்கங்களுடன் கற்றுத்தரப்பட உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Laundry Care Products&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;லிக்விட் டிடர்ஜென்ட் தயாரிப்பு&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;டிடர்ஜென்ட் பவுடர் தயாரிப்பு&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;ஃபேப்ரிக் சாப்ட்னர் தயாரிப்பு&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Surface Care Products&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;மல்டி பர்பஸ் கிளீனிங் ஸ்ப்ரே&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;ஃப்ளோர் கிளீனர் தயாரிப்பு&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;கிளாஸ் கிளீனர் தயாரிப்பு&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Dishwashing Products&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;டிஷ் வாஷ்&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;லிக்விட் டிஷ் வாஷ்&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;டேப்லெட்ஸ் ரின்ஸ் எய்ட்ஸ் தயாரிப்பு&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Air Care Products&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஏரோசோல்&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;ஏர் ஃப்ரெஷ்னர்கள்&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;ப்ளக்-இன் டிஃப்யூசர்கள்&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;வாசனை ஜெல்கள் தயாரிப்பு&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;இந்த பயிற்சியில் தயாரிப்பு செய்வது மட்டுமல்லாமல்&lt;/strong&gt;:&lt;/p&gt;&lt;p&gt;மூலப்பொருட்கள் எங்கு வாங்குவது? குறைந்த செலவில் தயாரிப்பது எப்படி? பேக்கேஜிங் மற்றும் லேபிள் டிசைன் செய்வது எப்படி? கடைகளில் பொருட்களை விற்பனைக்கு வைப்பது எப்படி? சமூக வலைத்தளங்கள் மூலம் விற்பனை அதிகரிப்பது எப்படி?&lt;/p&gt;&lt;p&gt;என்பதுபோன்ற பல முக்கிய தகவல்களும் வழங்கப்படுகின்றன.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;எப்போது? எங்கு நடைபெறுகிறது?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்த 3 நாள் பயிற்சி வகுப்பு: மே 25 முதல் 27, 2026 வரை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.&lt;/p&gt;&lt;p&gt;இடம்: EDII-TN Campus, பார்த்தசாரதி கோவில் தெரு, எக்காடுத்தாங்கல், சென்னை &ndash; 600032.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பயிற்சி கட்டணம் எவ்வளவு?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்த முழுமையான தொழில்முனைவர் பயிற்சிக்கான கட்டணம் ரூ.5000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்க விரும்புவோருக்கு இது மிகச்சிறந்த வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;தொடர்புக்கு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt; +91-9080609783  +91-9360221280  8668102600&lt;/p&gt;&lt;p&gt;info@editn.in, adldir.edii@tn.gov.in&lt;/p&gt;&lt;p&gt;சுயதொழில் செய்து முன்னேற வேண்டும் என்ற கனவு கொண்டவர்களுக்கு இந்த 3 நாள் அரசு பயிற்சி வகுப்பு வாழ்க்கையை மாற்றக்கூடிய பெரிய வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/home-business-idea-earn-rs-5000-daily-easily-from-home-a-3-day-government-training-program-that-can-change-your-life-rtuutb2"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Irctc Rules: ரயிலை தவறவிட்டால் அதே டிக்கெட்டில் வேறு ரயிலில் பயணிக்கலாமா? ரீஃபண்ட் கிடைக்குமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/indian-railways-rules-for-missed-trains-explained-v376ed5</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/indian-railways-rules-for-missed-trains-explained-v376ed5</guid>
            <pubDate>Thu, 21 May 2026 17:15:45 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;What To Do If Train Is Missed : ரிசர்வ் செய்த டிக்கெட்டில் ரயிலை தவறவிட்டால் என்ன செய்வது? அந்த டிக்கெட்டை வைத்து வேறு ரயிலில் பயணிக்க முடியுமா? அல்லது பணம் ரீஃபண்ட் கிடைக்குமா? என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ks55dnsvtdqj5rht9bt78gtm,imgname-what-to-do-if-train-is-missed-1779363665722.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;What To Do If Train Is Missed : ரிசர்வ் செய்த டிக்கெட்டில் ரயிலை தவறவிட்டால் என்ன செய்வது? அந்த டிக்கெட்டை வைத்து வேறு ரயிலில் பயணிக்க முடியுமா? அல்லது பணம் ரீஃபண்ட் கிடைக்குமா? என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரயில்வே விதிகளின்படி, ஒவ்வொரு டிக்கெட்டும் ஒரு குறிப்பிட்ட ரயில், தேதி, வகுப்பு மற்றும் பயணத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். நீங்கள் முன்பதிவு செய்த ரயிலை தவறவிட்டால், அதே டிக்கெட்டில் மற்றொரு ரயிலில் பயணிக்க பொதுவாக அனுமதி இல்லை. குறிப்பாக, ரிசர்வ் செய்யப்பட்ட டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு இந்த விதி மிகவும் கடுமையானது. நீங்கள் ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஸ்லீப்பர் அல்லது ஏசி டிக்கெட் முன்பதிவு செய்து, அந்த ரயிலை தவறவிட்டால், அதே டிக்கெட்டில் மற்றொரு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறினால் அது செல்லாது. டிக்கெட் இருப்பதால் எந்த ரயிலிலும் செல்லலாம் என நினைப்பது தவறு.&lt;/p&gt;&lt;p&gt;IRCTC : ஸ்லீப்பர் டிக்கெட்டில் ஏசி கோச்சில் பயணம் செய்ய வேண்டுமா? புக்கிங் போது இந்த ஒரு ஆப்ஷனை மட்டும் கிளிக் செய்யுங்க.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரிசர்வ் செய்யப்படாத, அதாவது ஜெனரல் டிக்கெட் விஷயத்தில் நிலைமை சற்று வித்தியாசமானது. ஜெனரல் டிக்கெட் எடுத்தவர்கள், அதே வழித்தடத்தில் செல்லும் மற்ற பயணிகள் ரயில் அல்லது ஜெனரல் கோச் உள்ள ரயில்களில் பயணிக்க வாய்ப்புள்ளது. ஆனால், அதுவும் டிக்கெட்டில் உள்ள தேதி மற்றும் சேருமிடத்தைப் பொறுத்தது. பொதுவாக, ஒரு ஜெனரல் டிக்கெட் குறிப்பிட்ட காலத்திற்கு (சுமார் 3 மணி நேரம்) மட்டுமே செல்லுபடியாகும். எனவே, அதே நாளில் அல்லது அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் மற்றொரு ரயிலில் ஏறினால் சிக்கல் இருக்காது.&lt;/p&gt;&lt;p&gt;Tatkal Ticket : இந்த சூப்பர் ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க இனி தட்கல் டிக்கெட் ஈஸியா கிடைக்கும்..!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சில சிறப்புச் சூழ்நிலைகளில், ரிசர்வ் டிக்கெட் வைத்திருக்கும் பயணிகளுக்கு நிவாரணம் கிடைக்கலாம். இணைப்பு ரயில் தாமதத்தால் நீங்கள் அடுத்த ரயிலை தவறவிட்டால், ரயில் நிலைய அதிகாரிகளைத் தொடர்புகொண்டால், அவர்கள் சில சமயங்களில் உதவ வாய்ப்புள்ளது. குறிப்பாக, ஒரே PNR எண்ணில் இணைப்புப் பயணம் இருந்தாலோ அல்லது ரயில்வேயின் காரணத்தால் தாமதம் ஏற்பட்டாலோ, மாற்று ஏற்பாடுகள் செய்ய அதிகாரிகள் முயற்சிக்கலாம். இருப்பினும், இது முற்றிலும் அதிகாரிகளின் முடிவைப் பொறுத்தது.&lt;/p&gt;&lt;p&gt;Train Ticket: சார்ட் ரெடியான பிறகும் கன்ஃபார்ம் டிக்கெட்! 90% பேருக்கு தெரியாத IRCTC ட்ரிக்&lt;/p&gt;&lt;img&gt;ரயில் புறப்படுவதற்கு முன்பு டிக்கெட்டை ரத்து செய்தால், சில கட்டணங்களைக் கழித்துக்கொண்டு ரீஃபண்ட் வழங்கப்படும். ஆனால் ரயில் புறப்பட்ட பிறகு, ரிசர்வ் செய்யப்பட்ட டிக்கெட் பொதுவாக 'நோ ரீஃபண்ட்' வகைக்குள் சென்றுவிடும். இருப்பினும், சில சிறப்புச் சூழ்நிலைகளில் TDR (Ticket Deposit Receipt) தாக்கல் செய்து ரீஃபண்ட் கோர வாய்ப்புள்ளது. ரயில் அதிக தாமதம், கோச்சில் பிரச்சினை அல்லது ரயில்வே காரணங்களால் பயணிக்க முடியாமல் போவது போன்ற சந்தர்ப்பங்களில் TDR பயன்படும்.&lt;img&gt;ரயிலை தவறவிடாமல் இருக்க, முன்கூட்டியே சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது நல்லது. பயணத்திற்கு குறைந்தது 30 முதல் 45 நிமிடங்களுக்கு முன்பே ரயில் நிலையத்தை அடைவது சிறந்தது. பிளாட்ஃபார்ம் எண்ணை முன்கூட்டியே சரிபார்ப்பது, ரயிலின் ஓடும் நிலையை (Running Status) செயலிகள் மூலம் கண்காணிப்பது போன்ற செயல்கள் மூலம் இதுபோன்ற சிக்கல்களைத் தவிர்க்கலாம்.]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/indian-railways-rules-for-missed-trains-explained-v376ed5"/>
        </item>
        <item>
            <title><![CDATA[SBI Alert: எஸ்பிஐ வெளியிட்ட அவசர அறிவிப்பு.! வாடிக்கையாளர்களுக்கு வங்கியின் முக்கிய வேண்டுகோள்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/sbi-issues-urgent-advisory-important-request-for-customers-w4uxosl</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/sbi-issues-urgent-advisory-important-request-for-customers-w4uxosl</guid>
            <pubDate>Sun, 24 May 2026 09:57:20 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;SBI Alert: எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு முக்கிய தகவல் வெளியிட்டுள்ளது. 2 நாட்கள் வேலை நிறுத்தம் உள்ள நிலையில் எஸ்பிஐ முக்கிய அறிவுரைகளை வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jp76fs9gqyffxzy33shb7rsy,imgname-sbi-amrit-kalash.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;SBI Alert: எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு முக்கிய தகவல் வெளியிட்டுள்ளது. 2 நாட்கள் வேலை நிறுத்தம் உள்ள நிலையில் எஸ்பிஐ முக்கிய அறிவுரைகளை வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் முன்னணியில் இருக்கும் எஸ்பிஐ, வாடிக்கையாளர் சேவையை மையமாகக் கொண்டு செயல்படும் நிறுவனமாக அறியப்படுகிறது. இதனால் ஊழியர்கள் வேலைநிறுத்தம் குறித்த தகவல் வெளியானது, வங்கி உடனடியாக தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது. வங்கி தொடர்பான பணிகள் உள்ளவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எஸ்பிஐ வெளியிட்ட அறிவிப்பில், அகில இந்திய ஸ்டேட் பேங்க் ஊழியர் அமைப்பு அறிவித்திருந்த வேலைநிறுத்த சூழ்நிலையிலும் அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கிளைகளில் ஏற்படக்கூடிய சிரமங்களைக் கருத்தில் கொண்டு, மாற்று வங்கி சேவைகளைப் பயன்படுத்துபவர்களுக்கு வங்கி ஆலோசனை வழங்கியது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதன் ஒரு மூன்று முக்கிய பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. அவசரமாக பணம் எடுக்க வேண்டியவர்கள் ஏடிஎம் மற்றும் ADWM வசதிகளை பயன்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர் சேவை புள்ளி (CSP) மையங்களும் பயன்பாட்டுக்கு உள்ளன. அதோடு இணைய வங்கி சேவை, YONO செயலி, மொபைல் பேங்கிங், யுபிஐ உள்ளிட்ட டிஜிட்டல் தளங்களை அதிகமாக பயன்படுத்துமாறு வங்கி கேட்டுக்கொண்டது. சேவையில் இடையூறு ஏற்பட்டதால் வருத்தம் தெரிவித்து எஸ்பிஐ பதிவு செய்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வேலைநிறுத்தம் தொடர்பான தகவல் முதலில் வெளியாகும்போது, ​​வாடிக்கையாளர்களிடையே கிளை சேவைகள் பாதிக்கப்படுமா என்ற அச்சம் எழுந்தது. ஆனால் பின்னர் நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கத்திற்கிடையே நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அதன்படி, மே 25 மற்றும் 26ஆம் தேதிகளுக்கு திட்டமிடப்பட்ட வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கிளை செயல்பாடுகள் வழக்கம்போல நடைபெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இருப்பினும், வங்கி பணிகளை கடைசி நேரத்தில் தள்ளாமல் முன்கூட்டியே முடித்துக்கொள்வது பாதுகாப்பான தேர்வாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக இன்று டிஜிட்டல் பேங்கிங் சேவைகள், வாடிக்கையாளர்களின் தினசரி நிதி பரிவர்த்தனைகளில் முக்கிய ஆதாரமாக மாறியுள்ளன.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/sbi-issues-urgent-advisory-important-request-for-customers-w4uxosl"/>
        </item>
    </channel>
</rss>
