<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes"?>
<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Sat, 13 Jun 2026 22:19:26 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss/business" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[Term Insurance Mistakes: டேர்ம் இன்ஷூரன்ஸ் வாங்கும் முன் இந்த 5 விஷயங்களை மறக்காதீங்க.!!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/avoid-these-costly-mistakes-before-buying-term-insurance-qhn5w51</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/avoid-these-costly-mistakes-before-buying-term-insurance-qhn5w51</guid>
            <pubDate>Sat, 13 Jun 2026 22:19:24 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Term Insurance Mistakes: டேர்ம் இன்ஷூரன்ஸ் குடும்பத்தின் எதிர்கால நிதிப் பாதுகாப்பிற்கு முக்கியமானதாக இருந்தாலும், குறைந்த பிரீமியம் மட்டுமே பார்த்து பாலிசி தேர்வு செய்வது ஆபத்தானதாக இருக்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kmf750r9gw18mh4rt60fwbyz,imgname-whatsapp-image-2026-03-24-at-11.22.07-am-1774332314377.jpeg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Term Insurance Mistakes: டேர்ம் இன்ஷூரன்ஸ் குடும்பத்தின் எதிர்கால நிதிப் பாதுகாப்பிற்கு முக்கியமானதாக இருந்தாலும், குறைந்த பிரீமியம் மட்டுமே பார்த்து பாலிசி தேர்வு செய்வது ஆபத்தானதாக இருக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்றைய சூழலில், குடும்பத்தின் நிதி பாதுகாப்பை உறுதி செய்வதில் டேர்ம் இன்ஷூரன்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்பட்டாலும், குடும்பத்தின் பொருளாதார நிலை பாதிக்கப்படாமல் இருக்க இது உதவுகிறது. ஆனால், பாலிசி வாங்கும் போது பலர் சில முக்கிய அம்சங்களை கவனிக்காமல் விடுகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பலர் குறைந்த பிரீமியம் கொண்ட திட்டங்களையே தேர்வு செய்கிறார்கள். ஆனால், இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் நம்பகத்தன்மை, கிளைம் செயல்முறை, வாடிக்கையாளர் சேவை மற்றும் நிறுவனத்தின் அனுபவம் போன்ற அம்சங்களும் அதே அளவுக்கு முக்கியமானவை. எதிர்கால பாதுகாப்பிற்காக தரமான நிறுவனத்தைத் தேர்வு செய்வது அவசியம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குடும்பச் செலவுகள், குழந்தைகளின் கல்வி, வீட்டுக் கடன், வாகனக் கடன் மற்றும் நீண்டகால நிதிப் பொறுப்புகளைக் கருத்தில் கொண்டு காப்பீட்டுத் தொகையை முடிவு செய்ய வேண்டும். போதுமான கவரேஜ் இல்லை, குடும்ப நிதி சிரமங்களை எதிர்கொள்ள நேரிடலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பாலிசியின் விதிமுறைகள், விலக்குகள் மற்றும் கிளைம் நிராகரிக்கப்படும் சூழ்நிலைகளை முழுமையாகப் புரிந்துகொள்வது அவசியம். மேலும், உடல்நலப் பிரச்சனைகள், புகைப்பிடிக்கும் பழக்கம் போன்ற தகவல்களை மறைப்பது எதிர்காலத்தில் கிளிம் சிக்கல்களுக்கு வழிவகுக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;க்ளைம் செட்டில்மென்ட் ரேஷியோ ஒரு முக்கிய குறியீடாக இருந்தாலும், அதையே வைத்து முடிவு எடுக்கக்கூடாது. டிஜிட்டல் வசதிகள், வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் கிளைம் செயல்முறையின் எளிமையையும் மதிப்பிட வேண்டும். சரியான டேர்ம் இன்ஷூரன்ஸ் திட்டம் என்பது வெறும் பாலிசி அல்ல; அந்த குடும்பத்தின் எதிர்கால நிதி பாதுகாப்பிற்கான நீண்டகால முதலீடாகும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/avoid-these-costly-mistakes-before-buying-term-insurance-qhn5w51"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Good News For Central Employees: ஜூலை மாத சம்பளத்தில் கூடுதல் பணம்? அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அப்டேட்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/8th-pay-commission-big-salary-update-for-central-employees-elzi5ss</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/8th-pay-commission-big-salary-update-for-central-employees-elzi5ss</guid>
            <pubDate>Sat, 13 Jun 2026 20:26:25 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Good News For Central Employees: தற்போது 60% ஆக உள்ள அகவிலைப்படி, ஜூலையில் 63% ஆக உயரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால், லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kekr4j4a7a292ek75g9b8yyz,imgname-8th-pay-commission-da-hike-1768041891978.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Good News For Central Employees: தற்போது 60% ஆக உள்ள அகவிலைப்படி, ஜூலையில் 63% ஆக உயரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால், லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தற்போது உன்னிப்பாக கவனித்து வரும் விஷயம் 8வது ஊதியக் குழு மற்றும் அகவிலைப்படி (டிஏ) உயர்வுதான். ஊழியர் சங்கங்கள் குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்றும், ஃபிட்மென்ட் பேக்டர் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அகவிலைப்படி கணக்கீட்டில் முக்கிய பங்கு வகிக்கும் AICPI-IW குறியீட்டில் சமீபத்திய மாதங்களில் உயர்வு பதிவாகியுள்ளது. மார்ச் மாதத்தில் 149.1 ஆக இருந்த இந்த குறியீடு, ஏப்ரல் மாதத்தில் 149.9 ஆக உயர்ந்துள்ளது. இதனுடன், தொழிலாளர் பணவீக்கமும் 4.27 சதவீதத்திலிருந்து 4.46 சதவீதமாக அதிகரித்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;2016 அடிப்படை ஆண்டை 2001 அடிப்படை ஆண்டாக மாற்றப்பட்டது 2.88 இணைப்பு பேக்டர்யின் அடிப்படையில், தற்போதைய கணக்கீடுகள் டிஏ சுமார் 62.51 சதவீதத்தை எட்டக்கூடும் என்று காட்டுகின்றன. இதனால், அகவிலைப்படி 3 சதவீதம் உயர்ந்து 63 சதவீதமாக அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மத்திய அரசு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படியை திருத்தி வருகிறது. ஜனவரி மாதத்திற்கான உயர்வு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த திருத்தம் ஜூலை மாதத்திற்கானதாக இருக்கும். அரசு இதற்கு ஒப்புதல் அளித்தால், உயர்த்தப்பட்ட டிஏ ஜூலையிலேயே சம்பளம் பிரதிபலிக்க வாய்ப்புள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஏ 60 சதவீதமாக உள்ளது. அது 63 சதவீதமாக உயர்ந்தால், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் மாதாந்திர வருவாய் பட்டியலில் குறிப்பிடத்தக்க மாற்றம். இருப்பினும், இறுதி முடிவு மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு பிறகே உறுதியாகும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/8th-pay-commission-big-salary-update-for-central-employees-elzi5ss"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Gold Buying Tips : தங்கம் வாங்க உகந்த நாள், நேரம் என்ன? ஜோதிடம் சொல்லும் அதிர்ஷ்ட ரகசியங்கள்!?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/business/auspicious-times-to-buy-gold-astrological-secrets-videoshow-ful9att</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/business/auspicious-times-to-buy-gold-astrological-secrets-videoshow-ful9att</guid>
            <pubDate>Sat, 13 Jun 2026 19:07:24 +0530</pubDate>
            <description><![CDATA[]]></description>
            <media:content url="https://www.youtube.com/embed/ruaJtxRnxio" medium="video" height="350" width="560"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஜோதிடத்தின் படி, தங்கம் வாங்க வியாழன் மற்றும் வெள்ளி ஆகியவை மிகவும் உகந்த நாட்களாக கருதப்படுகின்றன. குரு மற்றும் சுக்கிர ஹோரை போன்ற சுப நேரங்களில் தங்கம் வாங்குவது செல்வ வளத்தையும், குடும்ப முன்னேற்றத்தையும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/business/auspicious-times-to-buy-gold-astrological-secrets-videoshow-ful9att"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகையில் மெகா மோசடி.! 4.30 லட்சம் பயனாளர்கள் நீக்கம்.! கர்நாடக அரசு எடுத்த அதிரடி முடிவு.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/magalir-urimai-thogai-karantaka-govt-removed-4-lakh-beneficiaries-from-gruhalakshmi-scheme-over-alleged-irregularities-dylhmy1</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/magalir-urimai-thogai-karantaka-govt-removed-4-lakh-beneficiaries-from-gruhalakshmi-scheme-over-alleged-irregularities-dylhmy1</guid>
            <pubDate>Sat, 13 Jun 2026 17:22:18 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத்தொகை பெறுவதில் முறைகேடு நடந்துள்ளதால் 4.30 லட்சம் பயனாளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் இணையத்தில் பரவி வருகிறது. அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kv0cyxtvs11p204jz388fwhh,imgname-magalir-urimai-thogai-1781351282523.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத்தொகை பெறுவதில் முறைகேடு நடந்துள்ளதால் 4.30 லட்சம் பயனாளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் இணையத்தில் பரவி வருகிறது. அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழகத்தில் பெண்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஒரு திட்டம் தான் &lsquo;கலைஞர் மகளிர் உரிமைத்தொகை'. 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது, திமுக வெற்றி பெற்றால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று மு.க ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்தார். இது பெண்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்று ஆட்சியும் அமைத்தது. திமுக ஆட்சிக்கு வருவதற்கு இந்த திட்டமும் முக்கிய காரணமாக இருந்தது. திமுக அரசு தொடரும் பட்சத்தில் இந்த தொகை ரூ.2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று திமுக அறிவித்திருந்தது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Top Stories: &amp;nbsp;&lt;/strong&gt;Govt Scheme: வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.4,000 உதவித் தொகை.! இவர்களுக்கெல்லாம் கிடைக்காது? தகுதிகள் மற்றும் நிபந்தனைகள் என்ன?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;திமுகவைப் போலவே அதிமுகவும் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,500 ஆகவும், தவெக ரூ.2,500 ஆகவும் வழங்குவோம் என தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசியிருந்தனர். ஆனால் தமிழகத்தின் கடன் சுமையால், இந்த திட்டம் பழைய முறையிலேயே மாதம் ரூ.1,000 ஆக தொடருமா? அல்லது முதலமைச்சர் விஜய் தேர்தல் வாக்குறுதியில் கொடுத்தது போல ரூ2,500-ஐ வழங்குவாரா என்கிற சஸ்பென்ஸ் நீடிக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் வழங்கப்படும் உரிமைத் தொகையை பார்த்து கர்நாடகாவின் காங்கிரஸ் தலைமையிலான அரசும் மகளிருக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகையை வழங்கி வருகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Top Stories: &amp;nbsp;&lt;/strong&gt;PMMVY Scheme: கர்ப்பிணிகளுக்கு மத்திய அரசு ரூ.11,000 உதவித் தொகை.! விண்ணப்பிப்பது எப்படி? தகுதிகள் என்ன? முழு விவரம் இதோ.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மு. க ஸ்டாலின் கொண்டு வந்த இந்தத் திட்டத்தை காப்பி அடித்த கர்நாடக மாநில காங்கிரஸ், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூ.2,000 ரூபாய் வழங்குவோம் எனத் தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தது. தொடர்ந்து வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி இந்த திட்டத்தை &lsquo;கிரஹலட்சுமி&rsquo; என்கிற பெயரில் அறிமுகப்படுத்தியது. அன்ன பாக்யா, சக்தி, கிரஹலட்சுமி, கிரக ஜோதி, யுவ நிதி போன்ற மகளிருக்கான ஐந்து வாக்குறுதிகளை அளித்தது. அதில் &lsquo;கிரஹலட்சுமி&rsquo; திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.2,000 கர்நாடக மாநில பெண்களுக்கு வழங்கப்பட்டது. இது அம்மாநில பெண்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Top Stories:&amp;nbsp;&lt;/strong&gt; Facts: அமெரிக்க வீடுகள்ல ஏன் மொட்டை மாடில தண்ணி டேங்க் இல்ல? என்ன காரணம் தெரியுமா?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தத் திட்டத்தால் மகிழ்ச்சியடைந்த பெண்கள் பலரும் காங்கிரஸ் அரசை பாராட்டி வந்தனர். இந்தத் திட்டம் மூலம் கிடைத்த நிதியை வைத்து பலர் சிறு தொழில் தொடங்கியதாகவும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டனர். இந்த நிலையில் கிரஹலட்சுமி திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்திருப்பது அரசின் கவனத்திற்கு தெரிய வந்தது. இறந்தவர்களின் வங்கி கணக்கிற்கு பணம் செலுத்துவது உட்பட பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறைக்கு புகார்கள் வரத் தொடங்கின. இதைத் தீவிரமாக எடுத்துக் கொண்ட அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Top Stories: &amp;nbsp;&lt;/strong&gt;Train: ரயிலில் உங்கள் உடைமைகளை தவறவிட்டால் என்ன செய்ய வேண்டும்? திரும்ப பெறுவது எப்படி? வழிமுறைகள் இதோ.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆய்வுகளின் முடிவுகளில் அதிர்ச்சியான தகவல்கள் தெரியவந்தது. அதில் இறந்து போனவர்கள், ஆதார் எண்ணை வங்கிக் கணக்கில் இணைக்காதவர்கள், ஜிஎஸ்டி செலுத்தும் குடும்பத்தினர் என தகுதியில்லாத பல்வேறு தரப்பினருக்கும் ரூ.2,000 வரவு வைக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து பலரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநில முழுவதும் 1.20 கோடி கிரஹலட்சுமி பயனாளிகள் இருக்கும் நிலையில் தற்போது 4.30 லட்சம் பயனாளிகன் பெயர்கள் தற்போது நீக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேலும் முறைகேடுகளை தவிர்ப்பதற்காக பயோமெட்ரிக் முறையை கொண்டு வரவும் கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின்படி கிரஹலட்சுமி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பயனாளியும் தங்கள் இருப்பை உறுதி செய்யும் வண்ணம், ஆதார் போலவே கண்கள், முகம், கைரேகை ஆகியவற்றை பதிவு செய்யும் முறையை கொண்டு வரவுள்ளது. இந்த பயோமெட்ரிக் செயல்முறைகள் நிறைவான பிறகு அடுத்த மாதத்திற்கான பணம் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த செய்தி வெளியானதை தொடர்ந்து தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை பயனாளிகள் 4.30 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளதாக சிலர் தவறான தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். ஆனால் இது கர்நாடக மாநிலத்தில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/magalir-urimai-thogai-karantaka-govt-removed-4-lakh-beneficiaries-from-gruhalakshmi-scheme-over-alleged-irregularities-dylhmy1"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Sleeper Coach: வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் இருந்தால் ஸ்லீப்பர் கோச்சில் செல்லலாமா? ரயில்வே விளக்கம்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/can-waiting-list-passengers-travel-in-reserved-coaches-d47sx71</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/can-waiting-list-passengers-travel-in-reserved-coaches-d47sx71</guid>
            <pubDate>Sat, 13 Jun 2026 15:51:14 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Sleeper Coach: ஜெனரல் டிக்கெட் அல்லது வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுடன் ஸ்லீப்பர் மற்றும் ஏசி கோச்சுகளில் பயணித்தால் என்ன நடக்கும்? அபராதம் விதிக்கப்படுமா? இதுதொடர்பான ரயில்வே விதிகளை அறிந்து கொள்ளுங்கள்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktxerfpfbd3zgy8748hs3sbw,imgname-train-lower-berth--1--1781252505295.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Sleeper Coach: ஜெனரல் டிக்கெட் அல்லது வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுடன் ஸ்லீப்பர் மற்றும் ஏசி கோச்சுகளில் பயணித்தால் என்ன நடக்கும்? அபராதம் விதிக்கப்படுமா? இதுதொடர்பான ரயில்வே விதிகளை அறிந்து கொள்ளுங்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அவசர தேவையால் பலர் கடைசி நேரத்தில் ரயில் பயணத்தைத் திட்டமிடுவார்கள். ஆனால், கன்ஃபார்ம் டிக்கெட் கிடைக்காத சூழலில் ஜெனரல் டிக்கெட் எடுத்துக்கொண்டு நேரடியாக ஸ்லீப்பர் அல்லது ஏசி கோச்சுகளில் ஏறுவது அதிகரித்து வருகிறது. இது ஒரு சாதாரண விதிமீறல் அல்ல என இந்திய ரயில்வே மீண்டும் எச்சரித்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரயில்வே விதிகளின்படி, ஜெனரல் டிக்கெட் என்பது முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணம் செய்வதற்காக மட்டுமே வழங்கப்படுகிறது. ஸ்லீப்பர் அல்லது ஈசி கோச்சுகளில் பயணிக்க தனிப்பட்ட முன்பதிவு அவசியம். காலியிடங்கள் இருந்தால், டிடிஇயிடம் கூடுதல் கட்டணம் செலுத்தி டிக்கெட்டை மேம்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வெயிட்டிங் லிஸ்டில் உள்ள டிக்கெட் வைத்திருப்பவர்கள் கூட ரிசர்வ் செய்யப்பட்ட கோச்சுகளில் பயணிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள். பலர் இதை அறியாமல் விதிகளை மீறுகின்றனர். ஆனால், பரிசோதனையின் போது டிடிஇ நடவடிக்கை எடுப்பது உறுதி.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஸ்லீப்பர் கோச்சில் ஜெனரல் டிக்கெட்டுடன் பிடிபட்டால் குறைந்தபட்சம் ரூ.250 அபராதம் விதிக்கப்படலாம். ஏசி கோச்சில் இதே தவறு செய்தால், அபராதம் ரூ.440 வரை உயரக்கூடும். சில நேரங்களில் அடுத்த இடத்தில் ஜெனரல் கோச்சுக்கு மாறும்படியும் உத்தரவிடப்படலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒரு சிறிய அலட்சியம் தேவையற்ற அபராதத்தையும், பயண சிரமத்தையும் ஏற்படுத்தலாம். எனவே, ரயில் பயணத்திற்கு முன் டிக்கெட்டின் நிலை மற்றும் அதற்கான விதிகளை உறுதிப்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/can-waiting-list-passengers-travel-in-reserved-coaches-d47sx71"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Vijay's Gold Scheme: கல்யாணத்துக்கு 8 கிராம் தங்கம், குழந்தை பிறந்தா மோதிரம்! எப்போ கிடைக்கும் தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/vijays-gold-scheme-8-grams-of-gold-for-marriage-gold-ring-for-newborns-when-will-it-be-available-l0piozr</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/vijays-gold-scheme-8-grams-of-gold-for-marriage-gold-ring-for-newborns-when-will-it-be-available-l0piozr</guid>
            <pubDate>Sat, 13 Jun 2026 14:32:04 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 4 முதல் 5 லட்சம் திருமணங்கள் நடக்குது. ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கு கீழ் உள்ள குடும்பத்து மணப்பெண்களுக்கு 8 கிராம் தங்கம், பட்டுப் புடவை வழங்கப்படும்னு விஜய் சொல்லியுள்ள நிலையில், இது எப்போ கிடைக்குமுன்னு பார்ப்போம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kv036kx602keehczg8vywc0k,imgname-chatgpt-image-jun-13--2026--02-26-07-pm--1--1781341048739.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 4 முதல் 5 லட்சம் திருமணங்கள் நடக்குது. ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கு கீழ் உள்ள குடும்பத்து மணப்பெண்களுக்கு 8 கிராம் தங்கம், பட்டுப் புடவை வழங்கப்படும்னு விஜய் சொல்லியுள்ள நிலையில், இது எப்போ கிடைக்குமுன்னு பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ்நாட்டு அரசியல்னாலே பிரம்மாண்டமான, கவர்ச்சிகரமான வாக்குறுதிகளுக்குப் பெயர் போனது. ஆனா, விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (TVK) &amp;nbsp;அளித்த வாக்குறுதிபடி வீட்ல புதுசா ஒரு குழந்தை பிறந்தா, அரசாங்கமே தங்க மோதிரம் போடுமாம். பொண்ணுக்கு கல்யாணம்னா, 8 கிராம் தங்கம், பட்டுப் புடவைன்னு அரசாங்கமே சீர் செய்யுமாம். கேட்கவே கனவு மாதிரி இருக்குல்ல? இது எப்போதிலிருந்து நடக்கும் தெரியுமா?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விஜய் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றனும்னா, மாநில அரசு கஜானாவுக்கு வருஷத்துக்கு 3,300 கோடி ரூபாய்க்கு மேல சுமை ஏற்படும். தமிழ்நாட்டின் மக்கள் தொகை சுமார் 7.76 கோடி. இங்க எந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினாலும், அதுக்கு பெரிய நிதிச்சுமை ஏற்படும். புள்ளிவிவரப்படி, நாட்டிலேயே குறைவான பிறப்பு விகிதம் இங்கதான் இருக்கு. 2025-க்குள் சுமார் 7.8 லட்சம் குழந்தைகள் பிறக்கும்னு எதிர்பார்க்கப்படுது.&lt;/p&gt;&lt;img&gt;விஜய்யின் திட்டப்படி, பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தங்க மோதிரம் வழங்கப்படும். இதில் 60% குழந்தைகள் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களில் பிறப்பதாகக் கொண்டால், ஒவ்வொரு வருஷமும் சுமார் 4.7 லட்சம் குழந்தைகளுக்கு இந்த மோதிரம் கிடைக்கும். ஒரு சின்ன மோதிரத்தோட விலை சுமார் 5,000 ரூபாய். அப்போ, லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு ஆகும் செலவு, வருஷத்துக்கு 235 கோடி ரூபாய்.&lt;img&gt;திருமணம் தொடர்பான வாக்குறுதிதான் இன்னும் முக்கியமானது, செலவும் அதிகம். தமிழ்நாட்டுல ஒவ்வொரு வருஷமும் சுமார் 4 முதல் 5 லட்சம் திருமணங்கள் நடக்குது. இதுல, வருஷத்துக்கு 5 லட்சம் ரூபாய்க்கும் (சுமார் 15 லட்சம் டாலர்) குறைவான வருமானம் உள்ள குடும்பத்து மணப்பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப் புடவை தர்றதா விஜய்யின் கட்சி வாக்குறுதி கொடுத்திருக்கு.&lt;img&gt;&lt;p&gt;மாநிலத்தில் வருமானப் பங்கீடு சமமா இல்லாததால, சுமார் 60% குடும்பங்கள் இந்த உதவிக்கு தகுதி பெறலாம்னு கணிக்கப்படுது. அதாவது, வருஷத்துக்கு சுமார் 2,70,000 மணப்பெண்கள் இந்த தங்கத்தைப் பெற தகுதியுடையவர்கள். 22 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் 13,835 ரூபாய். அப்போ, ஒரு மணப்பெண்ணுக்கு கிடைக்கும் தங்கத்தின் மதிப்பு மட்டுமே சுமார் 1,10,680 ரூபாய். இதோட 3,000 ரூபாய் மதிப்புள்ள புடவை செலவையும் சேர்த்தா, ஒரு மணப்பெண்ணுக்கு அரசாங்கத்தோட செலவு 1,13,680 ரூபாயைத் தாண்டும். இப்போ, தகுதியுள்ள எல்லா மணப்பெண்களுக்கும் கணக்குப் போட்டா, இந்த ஒரு திட்டத்துக்கு மட்டுமே அரசு கஜானாவில் இருந்து சுமார் 3,070 கோடி ரூபாய் செலவாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிறந்த குழந்தைகளுக்கான மோதிரம், மணப்பெண்களுக்கான தங்கம்னு இந்த ரெண்டு செலவையும் சேர்த்தா, விஜய்யின் அரசாங்கம் இந்த ரெண்டு திட்டங்களுக்கு மட்டுமே வருஷத்துக்கு 3,300 கோடியிலிருந்து 4,000 கோடி ரூபாய் வரை ஒதுக்க வேண்டியிருக்கும். தங்கத்தின் விலை நிலையாக இருக்கும்னு வெச்சுதான் இந்தக் கணக்கு. ஆனா, கடந்த ரெண்டு வருஷத்துல தங்கம் விலை ராக்கெட் வேகத்துல ஏறியிருக்கு. எதிர்காலத்துல என்ன நடக்கும்னு யாருக்கும் தெரியாது. பட்ஜெட் ரொம்ப கையை கடிக்கும் என்பதால் இந்த திட்டத்தில் சில கண்டிஷன்களை சேர்க்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த வாக்குறுதியை கடைசியா வச்சுக்கலாமுன்னும் பொருளாதார நிபுணர்கள் ஆலோசனை சொல்லி இருக்காங்க. ஆனா இந்த திட்டத்தை மட்டும் செயல்படுத்திட்ட விஜய் அரசை அசைக்க முடியாது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/vijays-gold-scheme-8-grams-of-gold-for-marriage-gold-ring-for-newborns-when-will-it-be-available-l0piozr"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Facts: ரயில் தண்டவாளத்தின் நடுவில் ஜல்லிக்கற்கள் ஏன் கொட்டப்படுது? இதன் பின்னால் உள்ள அறிவியல் தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/importance-of-stones-on-railway-tracks-the-science-behind-why-gravels-are-used-on-railway-tracks-yvkhs34</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/importance-of-stones-on-railway-tracks-the-science-behind-why-gravels-are-used-on-railway-tracks-yvkhs34</guid>
            <pubDate>Sat, 13 Jun 2026 14:20:38 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Importance of Stones on Railway Tracks: ரயில் தண்டவாளங்களுக்கு நடுவில் ஜல்லி கற்கள் பரப்பி இருப்பதை பார்த்திருப்போம். இது எதுக்குனு எப்போதாவது யோசிச்சிருக்கீங்களா? இந்த ஜல்லிக்கற்களுக்குப் பின்னால் இருக்கும் அறிவியல் என்னன்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kv02n95kwpppvmpk1qz06ypa,imgname-importance-of-stones-on-railway-tracks---1-1781340480691.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Importance of Stones on Railway Tracks: ரயில் தண்டவாளங்களுக்கு நடுவில் ஜல்லி கற்கள் பரப்பி இருப்பதை பார்த்திருப்போம். இது எதுக்குனு எப்போதாவது யோசிச்சிருக்கீங்களா? இந்த ஜல்லிக்கற்களுக்குப் பின்னால் இருக்கும் அறிவியல் என்னன்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒரு ரயில் பொதுவாக நூற்றுக்கணக்கான டன் எடை கொண்டது. அந்தப் பெரிய பாரம் முழுவதும் தண்டவாளத்தில் இறங்காமல், அந்த அழுத்தத்தை இந்த ஜல்லிக்கற்கள் சீராகப் பிரித்து பூமிக்கு அனுப்புகின்றன. ஒருவேளை இந்தக் கற்கள் இல்லை என்றால், ரயிலின் பாரத்தால் தரைப்பகுதி தாழ்ந்துபோகவோ அல்லது தண்டவாளங்கள் வளைந்துவிடவோ வாய்ப்புள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்: &amp;nbsp;&lt;/strong&gt;Facts: அமெரிக்க வீடுகள்ல ஏன் மொட்டை மாடில தண்ணி டேங்க் இல்ல? என்ன காரணம் தெரியுமா?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரயில்கள் அதிவேகத்தில் செல்லும்போது கடுமையான அதிர்வுகள் ஏற்படும். அந்த நேரத்தில் தண்டவாளங்கள் நகரக் கூடாது. இந்த ஜல்லிக்கற்கள், தண்டவாளத்தின் கீழ் உள்ள கட்டைகளை (Sleeper) இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு, டிராக்கை நிலையாக வைத்திருக்க உதவுகின்றன. இவை இல்லையென்றால், ரயில் பயணத்தின்போது டிராக் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;Lower Berth: ரயிலில் 'லோயர் பெர்த்' வேண்டுமா? இந்த ரகசிய ட்ரிக்கை பின்பற்றுங்கள்.! கண்டிப்பா கீழ் இருக்கை கிடைக்கும்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மழைக்காலங்களில் தண்டவாளங்களுக்கு இடையில் தண்ணீர் தேங்காமல் வெளியேற இந்தக் கற்கள் உதவுகின்றன. சாதாரண மண் அல்லது மணலைக் கொண்டு டிராக் அமைத்தால், மழைநீர் தேங்கி தரைப்பகுதி சேதமடையும். ஆனால், ஜல்லிக்கற்களுக்கு இடையே உள்ள இடைவெளிகள் மூலம் தண்ணீர் எளிதாகக் கீழே வடிந்துவிடுவதால், டிராக்கின் அடித்தளம் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;Irctc Rules: ரயிலை தவறவிட்டால் அதே டிக்கெட்டில் வேறு ரயிலில் பயணிக்கலாமா? ரீஃபண்ட் கிடைக்குமா?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தண்டவாளத்தைச் சுற்றி புல், செடி, கொடிகள் வளர்வதை இந்தக் கற்கள் தடுக்கின்றன. சாதாரண நிலமாக இருந்தால், செடிகள் வேகமாக வளர்ந்து டிராக்கைப் பாதிக்கும். செடிகளின் வேர்கள் டிராக்கின் கட்டமைப்பைப் பலவீனப்படுத்தக்கூடும். ஆனால், ஜல்லிக்கற்கள் இருப்பதால், செடிகள் வளர்வதற்கான வாய்ப்பு மிகக் குறைவாகவே உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;Train Speed : இரவில் ரயில் ஏன் ஸ்பீடாக போகுது தெரியுமா? ராத்திரியில மட்டும் வேகம் அதிகரிக்க காரணம் என்ன? பின்னணியில் உள்ள சுவாரஸ்யமான ரகசியங்கள்!&lt;/p&gt;&lt;img&gt;ரயில் பயணத்தின்போது ஏற்படும் அதிர்வுகளையும், சத்தத்தையும் குறைப்பதிலும் இந்த ஜல்லிக்கற்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ரயில் சக்கரங்கள் தண்டவாளத்தில் உருளும்போது உருவாகும் ஆற்றலை இந்தக் கற்கள் ஓரளவு உறிஞ்சிக்கொள்கின்றன. இதற்காக சாதாரண கற்களைப் பயன்படுத்தாமல், கிரானைட் போன்ற வலிமையான, கடினமான கற்களைத் தேர்வு செய்து பயன்படுத்துகிறார்கள்.]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/importance-of-stones-on-railway-tracks-the-science-behind-why-gravels-are-used-on-railway-tracks-yvkhs34"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Gold Loan: கோல்டு லோன் வாங்க ஐடியா இருக்கா? தங்க நகைக்கடன் வாங்குவதில் புதிய சிக்கல்கள் காத்திருக்கு.! ஜாக்கிரதை.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/gold-loan-2026-why-borrowers-should-stay-alert-to-upcoming-policy-changes-g2nt5vp</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/gold-loan-2026-why-borrowers-should-stay-alert-to-upcoming-policy-changes-g2nt5vp</guid>
            <pubDate>Sat, 13 Jun 2026 13:29:10 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;இந்தியாவில் தங்க இறக்குமதி அதிகரித்துள்ளதால், மத்திய நிதியமைச்சகம் தங்க நகைக்கடன்களை தீவிரமாக கண்காணிக்கத் தொடங்கியுள்ளது. வங்கிகளிடம் கடன் விவரங்கள் கேட்கப்பட்டுள்ளதால், கடன் வழங்கும் விதிமுறைகள் கடுமையாக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktzz4wdvy50f9ctzf0x4x0n4,imgname-chatgpt-image-jun-13--2026--01-14-16-pm--1--1781336797626.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;இந்தியாவில் தங்க இறக்குமதி அதிகரித்துள்ளதால், மத்திய நிதியமைச்சகம் தங்க நகைக்கடன்களை தீவிரமாக கண்காணிக்கத் தொடங்கியுள்ளது. வங்கிகளிடம் கடன் விவரங்கள் கேட்கப்பட்டுள்ளதால், கடன் வழங்கும் விதிமுறைகள் கடுமையாக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவில் தங்க நகைக்கடன் (Gold Loan) என்பது மக்களுக்கு அவசர நேரங்களில் உடனடி நிதி உதவியை வழங்கும் முக்கியமான கடன் முறையாக இருந்து வருகிறது. குறிப்பாக மருத்துவ செலவுகள், கல்வி, தொழில் முதலீடு மற்றும் குடும்பத் தேவைகளுக்காக பலர் தங்க நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்று வருகின்றனர். ஆனால் தற்போது தங்கக் கடன்களைச் சுற்றி புதிய கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் வரக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளதால், தங்க நகைக்கடன் வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவில் தங்கத்தின் மீதான மக்களின் ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தங்க இறக்குமதியும் ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டே செல்கிறது. 2025-26 நிதியாண்டில் இந்தியாவின் தங்க இறக்குமதி மதிப்பு சுமார் 72 பில்லியன் டாலரை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த உயர்வு நாட்டின் அந்நியச் செலாவணி மற்றும் வர்த்தக பற்றாக்குறையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், மத்திய நிதியமைச்சகம் தங்கம் தொடர்பான நிதி நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்கத் தொடங்கியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மத்திய நிதியமைச்சகம் அனைத்து வங்கிகளிடமும் தங்கம் சார்ந்த கடன் விவரங்களை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக 2023 முதல் வழங்கப்பட்ட தங்க நகைக்கடன்கள் மற்றும் தங்க உலோகக் கடன்கள் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.&lt;/p&gt;&lt;p&gt;இதில் வழங்கப்பட்ட கடன் தொகைகள், கடன் வளர்ச்சி விகிதம், வாடிக்கையாளர்களின் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் ஆய்வு செய்யப்பட உள்ளன. இந்த நடவடிக்கை சாதாரண தரவு சேகரிப்பாக மட்டும் பார்க்கப்படவில்லை. எதிர்கால கொள்கை மாற்றங்களுக்கான முன்னோட்டமாகவும் கருதப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தங்க இறக்குமதி அதிகரிப்பது இந்திய பொருளாதாரத்திற்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறது. தங்கத்தின் மீதான தேவை அதிகரிக்கும்போது வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் தங்கம் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் நாட்டின் அந்நியச் செலாவணி செலவு அதிகரிக்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;மேலும் கடந்த சில ஆண்டுகளில் தங்கக் கடன்களின் எண்ணிக்கையும் வேகமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் கோல்டு லோன் முக்கியமான கடன் தயாரிப்பாக மாறியுள்ளது. இதனால் இந்தத் துறையை கட்டுப்படுத்தும் நோக்கிலும் அரசு மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தற்போது தங்க நகைக்கடன்களுக்கு நேரடி தடை எதுவும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் எதிர்காலத்தில் சில முக்கிய மாற்றங்கள் வர வாய்ப்பு இருப்பதாக நிதி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;முதலாவதாக, கடன் வழங்கும் விதிமுறைகள் கடுமையாக்கப்படலாம். இதனால் முன்புபோல் எளிதாக கடன் பெற முடியாத நிலை ஏற்படலாம்.&lt;/li&gt; &lt;li&gt;இரண்டாவதாக, Loan-to-Value (LTV) விகிதம் குறைக்கப்படலாம். தற்போது தங்கத்தின் மதிப்பில் சுமார் 75 சதவீதம் வரை கடன் வழங்கப்படும் நிலையில், இந்த விகிதம் குறைந்தால் பெறும் கடன் தொகையும் குறையக்கூடும்.&lt;/li&gt; &lt;li&gt;மூன்றாவதாக, கூடுதல் ஆவணங்கள், அடையாளச் சான்றுகள் மற்றும் தங்கத்தின் உரிமையை நிரூபிக்கும் தகவல்கள் கேட்கப்படலாம். இதனால் கடன் ஒப்புதல் பெறும் காலமும் நீளலாம்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;img&gt;&lt;p&gt;கோல்டு லோன் பெற திட்டமிட்டுள்ளவர்கள் தற்போதைய வட்டி விகிதங்கள், செயல்முறை கட்டணங்கள் மற்றும் விதிமுறைகளை முன்கூட்டியே சரிபார்ப்பது அவசியம். மேலும் வங்கிகள் மற்றும் நம்பகமான நிதி நிறுவனங்களிடம்தான் கடன் பெற வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;தங்கத்தின் சந்தை மதிப்பு, திருப்பிச் செலுத்தும் திறன் மற்றும் வட்டி சுமை ஆகியவற்றை கணக்கில் கொண்டு முடிவு எடுப்பது மிகவும் முக்கியம். விதிமுறைகள் மாறும் சூழலில் அவசர முடிவுகளைத் தவிர்ப்பதும் நல்லது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தங்க நகைக்கடன் என்பது இந்திய குடும்பங்களின் முக்கிய நிதி ஆதாரங்களில் ஒன்றாக இருந்தாலும், தற்போது இந்தத் துறையில் புதிய கட்டுப்பாடுகள் மற்றும் கொள்கை மாற்றங்கள் வரக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. மத்திய நிதியமைச்சகத்தின் சமீபத்திய நடவடிக்கைகள் தங்கக் கடன் சந்தையில் பெரிய மாற்றங்களுக்கு வழிவகுக்கலாம். எனவே கோல்டு லோன் வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் புதிய அறிவிப்புகளை தொடர்ந்து கவனித்து, முழு தகவல்களுடன் மட்டுமே முடிவு எடுப்பது பாதுகாப்பான அணுகுமுறையாக இருக்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/gold-loan-2026-why-borrowers-should-stay-alert-to-upcoming-policy-changes-g2nt5vp"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Government Subsidy Scheme: சுயதொழில் தொடங்க நீங்க ரெடியா? 50% மானியத்தில் புதிய தொழில் வாய்ப்பு.! அரசு வழங்கும் ரூ.2 லட்சத்தை பெற தகுதி இதுதான்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/self-employment-scheme-2025-get-up-to-rs2-lakh-government-subsidy-check-eligibility-now-1b9t2zp</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/self-employment-scheme-2025-get-up-to-rs2-lakh-government-subsidy-check-eligibility-now-1b9t2zp</guid>
            <pubDate>Sat, 13 Jun 2026 12:50:05 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தமிழ்நாடு அரசு, சுயதொழில் தொடங்க விரும்புவோருக்காக 50% மானியத்தில் &amp;nbsp;2 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்குகிறது. கிராமப்புற மக்கள், பெண்கள் மற்றும் விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நிலையான வருமானம் ஈட்டலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktzx1qaf08mk9p2vqf4xpr5k,imgname-chatgpt-image-jun-13--2026--12-02-02-pm--1--1781334596943.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழ்நாடு அரசு, சுயதொழில் தொடங்க விரும்புவோருக்காக 50% மானியத்தில் &amp;nbsp;2 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்குகிறது. கிராமப்புற மக்கள், பெண்கள் மற்றும் விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நிலையான வருமானம் ஈட்டலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்றைய காலகட்டத்தில் அரசு வேலைக்கு இணையாக சுயதொழில் மீதான ஆர்வமும் அதிகரித்து வருகிறது. குறைந்த முதலீட்டில் நிலையான வருமானம் ஈட்டும் வழிகளை பலரும் தேடி வருகின்றனர். குறிப்பாக கிராமப்புற இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகள் தங்களுக்கென ஒரு தொழிலைத் தொடங்கி பொருளாதார முன்னேற்றம் அடைய விரும்புகின்றனர். இதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு மானியத் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் தற்போது 50 சதவீத மானியத்தில் தொழிலைத் தொடங்கும் அரிய வாய்ப்பை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் 2 லட்சம் ரூபாய் வரை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு நடைமுறைபடுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், 250 நாட்டுக்கோழிகள் கொண்ட பண்ணையை அமைப்பதற்கு அரசு 50 சதவீதம் வரை மானியம் வழங்குகிறது. திட்டத்தின் மொத்த மதிப்பீட்டு செலவு ரூ.3 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் நிலையில், அதில் சுமார் ரூ.1.65 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை மானிய உதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த மானியத்தின் மூலம் தொழில் தொடங்க விரும்புவோரின் நிதிச்சுமை குறைவதுடன், சொந்தமாக வருமானம் ஈட்டும் வாய்ப்பும் உருவாகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தத் திட்டத்தில் கோழிக்குஞ்சுகள் மட்டுமல்லாமல், தொழில் தொடங்க தேவையான அடிப்படை வசதிகளும் வழங்கப்படுகின்றன. 4 வார வயதுடைய 250 நாட்டுக்கோழி குஞ்சுகள், கோழி வளர்ப்பு கொட்டகை அமைப்பதற்கான உதவி, தீவனத் தட்டு, குடிநீர் பாத்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் மற்றும் ஆரம்ப காலத்திற்குத் தேவையான தீவன வசதிகளும் இதில் அடங்கும். இதனால் புதியதாக தொழில் தொடங்குபவர்களுக்கு ஆரம்ப முதலீட்டு சுமை குறைகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கிராமப்புறங்களில் வசிக்கும் விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் சுயதொழில் தொடங்க விரும்பும் தொழில் முனைவோர் இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். குறிப்பாக பெண்கள் சுய உதவிக் குழு உறுப்பினர்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.மேலும் நாட்டுக்கோழி வளர்ப்பில் ஆர்வம் மற்றும் அடிப்படை அறிவு கொண்டவர்களுக்கு தேர்வில் கூடுதல் வாய்ப்பு கிடைக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நாட்டுக்கோழி இறைச்சி மற்றும் முட்டைகளுக்கு சந்தையில் தொடர்ந்து அதிக தேவை உள்ளது. ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை மக்கள் அதிகம் விரும்பத் தொடங்கியுள்ளதால் நாட்டுக்கோழி பொருட்களின் விலையும் உயர்ந்தே காணப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;நாட்டுக்கோழிகள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டவை என்பதால் பராமரிப்பு செலவு குறைவாக இருக்கும். அதே நேரத்தில் இறைச்சி, முட்டை மற்றும் குஞ்சுகள் விற்பனை மூலமாக பல்வேறு வழிகளில் வருமானம் ஈட்ட முடியும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தத் திட்டத்தில் சேர விரும்புவோர் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். மேலும் தொழிலை மேற்கொள்ள தேவையான இட வசதி மற்றும் ஆர்வம் இருக்க வேண்டும். மாவட்ட அளவில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;அடையாள அட்டை, முகவரி சான்று, வங்கி கணக்கு விவரங்கள், புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்கள் விண்ணப்பத்தின் போது சமர்ப்பிக்கப்பட வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;இந்த கட்டுரையையும் உங்களுக்கு பிடிக்கும் &amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;https://tamil.asianetnews.com/gallery/business/gold-savings-scheme-2026-follow-these-6-smart-tips-to-accumulate-up-to-100-sovereigns-of-gold-fma8bfy&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குறைந்த முதலீட்டில் சொந்த தொழிலைத் தொடங்கி நீண்டகால வருமானம் பெற விரும்புபவர்களுக்கு இந்த 50% மானிய நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டம் சிறந்த வாய்ப்பாக உள்ளது. அரசின் மானிய உதவியுடன் தொழிலைத் தொடங்குவதால் நிதி அபாயம் குறைவதோடு, எதிர்காலத்தில் நிலையான வருமானத்தையும் உருவாக்க முடியும். சுயதொழிலில் வெற்றி பெற வேண்டும் என்ற கனவு இருந்தால், இந்த வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/self-employment-scheme-2025-get-up-to-rs2-lakh-government-subsidy-check-eligibility-now-1b9t2zp"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Gold Buying Tips: தங்கம் வாங்க உகந்த நாள், நேரம் என்ன? ஜோதிடம் சொல்லும் அதிர்ஷ்ட ரகசியங்கள்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/planning-to-buy-gold-discover-the-most-auspicious-day-and-time-according-to-astrology-ymzri8v</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/planning-to-buy-gold-discover-the-most-auspicious-day-and-time-according-to-astrology-ymzri8v</guid>
            <pubDate>Sat, 13 Jun 2026 09:22:49 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ஜோதிடத்தின் படி, தங்கம் வாங்க வியாழன் மற்றும் வெள்ளி ஆகியவை மிகவும் உகந்த நாட்களாக கருதப்படுகின்றன. குரு மற்றும் சுக்கிர ஹோரை போன்ற சுப நேரங்களில் தங்கம் வாங்குவது செல்வ வளத்தையும், குடும்ப முன்னேற்றத்தையும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktzgb09pwnkd6h4j6daa97w7,imgname-chatgpt-image-jun-13--2026--12-52-56-am--1--1781321269557.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஜோதிடத்தின் படி, தங்கம் வாங்க வியாழன் மற்றும் வெள்ளி ஆகியவை மிகவும் உகந்த நாட்களாக கருதப்படுகின்றன. குரு மற்றும் சுக்கிர ஹோரை போன்ற சுப நேரங்களில் தங்கம் வாங்குவது செல்வ வளத்தையும், குடும்ப முன்னேற்றத்தையும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியர்களின் வாழ்க்கையில் தங்கத்திற்கு தனி முக்கியத்துவம் உள்ளது. திருமணம், குழந்தை பிறப்பு, விழாக்கள், முதலீடு என பல காரணங்களுக்காக மக்கள் தங்கம் வாங்குகின்றனர். அதனால் தங்கம் வாங்கும் போது நல்ல நாள் மற்றும் நல்ல நேரத்தை தேர்வு செய்வது பல குடும்பங்களில் பாரம்பரியமாக கடைபிடிக்கப்படும் ஒரு வழக்கமாக உள்ளது. ஜோதிட சாஸ்திரத்தின் படி, சுப நாளில் வாங்கப்படும் தங்கம் செல்வ வளத்தையும், குடும்ப முன்னேற்றத்தையும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜோதிடத்தில் வியாழக்கிழமைக்கு சிறப்பு இடம் உண்டு. இந்த நாள் குரு பகவானின் நாளாக கருதப்படுகிறது. குரு பகவான் அறிவு, செல்வம், வளம் மற்றும் வளர்ச்சிக்கு காரணமான கிரகமாக பார்க்கப்படுகிறார். எனவே வியாழக்கிழமையில் தங்கம் வாங்குவது குடும்பத்தில் பொருளாதார நிலைத்தன்மையை ஏற்படுத்தும் என்றும், வாங்கப்படும் தங்கம் எதிர்காலத்தில் பல மடங்கு நன்மையை தரும் என்றும் நம்பப்படுகிறது. பலர் புதிய நகைகள், தங்க நாணயங்கள் மற்றும் முதலீட்டு தங்கங்களை வியாழக்கிழமைகளில் வாங்குவதையே விரும்புகின்றனர். குறிப்பாக காலை நேரங்களில் வாங்குவது மேலும் சிறப்பாக கருதப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தேவியின் நாளாக கருதப்படுகிறது. செல்வம், வளம் மற்றும் குடும்ப மகிழ்ச்சியை அருளும் நாளாக இந்த நாள் பார்க்கப்படுகிறது. அதனால் வெள்ளிக்கிழமையில் தங்கம் வாங்கினால் வீட்டில் லட்சுமி வாசம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. பெண்கள் அதிக அளவில் நகைகள் வாங்குவதற்கும், புதிய நகைகளை அணிவதற்கும் வெள்ளிக்கிழமையை தேர்வு செய்வது இதன் காரணமாகும். பல நகைக்கடைகளும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு சலுகைகளை அறிவிப்பதும் குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நல்ல நாள் மட்டும் போதாது, நல்ல நேரமும் முக்கியம் என்று ஜோதிடம் கூறுகிறது. இதற்காக ஹோரை நேரங்கள் பார்க்கப்படுகின்றன. குறிப்பாக குரு ஹோரை மற்றும் சுக்கிர ஹோரை தங்கம் வாங்குவதற்கு மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;குரு ஹோரை செல்வ வளர்ச்சியையும், சுக்கிர ஹோரை ஆடம்பர வாழ்க்கை மற்றும் பொருளாதார முன்னேற்றத்தையும் குறிக்கும் என்பதால் இந்த நேரங்களில் தங்கம் வாங்குவது நல்ல பலன்களை தரும் என்று நம்பப்படுகிறது. பொதுவாக சூரிய உதயத்திற்குப் பிறகு வரும் சுப ஹோரை நேரங்களை தேர்வு செய்வது நல்லதாக கருதப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சில ஜோதிட நம்பிக்கைகளின்படி அமாவாசை, சில ஏகாதசி திதிகள் மற்றும் அசுப முகூர்த்த நேரங்களில் தங்கம் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இது அனைவருக்கும் ஒரே மாதிரி பொருந்தாது. ஒருவரின் ஜாதக அமைப்பு மற்றும் குடும்ப பாரம்பரியத்தைப் பொறுத்து இந்த கருத்துகள் மாறுபடலாம். எனவே முக்கியமான தங்க முதலீடு அல்லது அதிக மதிப்புள்ள நகை வாங்க திட்டமிட்டால் அனுபவம் வாய்ந்த ஜோதிடரின் ஆலோசனையை பெறுவது நல்லது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜோதிட ரீதியாக நல்ல நாள் பார்த்து வாங்குவது மட்டுமல்லாமல், தங்கத்தின் தரத்தையும் உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக BIS Hallmark முத்திரை உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். இது தங்கத்தின் தூய்மைக்கு அரசின் அங்கீகாரமாகும்.&lt;/p&gt;&lt;p&gt;மேலும் அன்றைய சந்தை விலையை ஒப்பிட்டு வாங்குவது, செய்கூலி மற்றும் சேதார கட்டணங்களை முன்கூட்டியே தெரிந்து கொள்வது போன்ற விஷயங்களும் முக்கியமானவை. நல்ல நாளில் வாங்கிய தங்கம் தரமற்றதாக இருந்தால் அதன் பயன் குறைந்து விடும்.&lt;/p&gt;&lt;p&gt;இதுவும் உங்களுக்கான செய்திதான்&lt;/p&gt;&lt;p&gt;https://tamil.asianetnews.com/gallery/business/best-low-investment-business-idea-earn-rs-40000-profit-every-month-p85z98e&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பலர் தங்கம் வாங்கும் முன் மகாலட்சுமி தேவியை மனதில் நினைத்து வழிபடுவார்கள். சிலர் &ldquo;ஓம் ஸ்ரீம் மகாலட்சுமியே நம:&rdquo; என்ற மந்திரத்தை ஜபித்த பிறகே தங்கம் வாங்குவார்கள். இது மனநிறைவு மற்றும் நேர்மறை எண்ணங்களை உருவாக்கும் என்று நம்பப்படுகிறது. தங்கத்தை வீட்டிற்கு கொண்டு வந்த பிறகு பூஜையறையில் வைத்து வழிபடுவதும் சில குடும்பங்களில் பாரம்பரியமாக பின்பற்றப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தங்கம் வாங்குவது ஒரு சாதாரண செலவு அல்ல; அது ஒரு முக்கிய முதலீடு மற்றும் எதிர்கால சேமிப்பு. அதனால் நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து வாங்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடமும் உள்ளது. ஜோதிடக் கருத்துகளின்படி வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை தங்கம் வாங்க மிகவும் உகந்த நாட்களாக கருதப்படுகின்றன. அதேபோல் குரு ஹோரை மற்றும் சுக்கிர ஹோரை நேரங்களும் சிறப்பானதாக பார்க்கப்படுகின்றன. இருப்பினும் ஜோதிட நம்பிக்கைகளுடன் சேர்த்து தங்கத்தின் தரம், விலை மற்றும் நம்பகத்தன்மையையும் கவனித்து வாங்குவது மிகவும் அவசியம்.&lt;/p&gt;&lt;p&gt;இந்த செய்தியையும் படித்து பாருங்களேன்.!&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;https://tamil.asianetnews.com/business/gold-savings-scheme-6-steps-to-owning-100-sovereigns-videoshow-x7eyhap&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/planning-to-buy-gold-discover-the-most-auspicious-day-and-time-according-to-astrology-ymzri8v"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Tomato and Onion Price: பெட்டி பெட்டியாக தக்காளி.! மூட்டை மூட்டையாக வெங்காயம்.! போட்டி போட்டு அள்ளும் இல்லத்தரசிகள்! விலை நிலவரம்?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/today-vegetable-price-13th-june-2026-tomato-and-onion-rate-in-chennai-2ggfcph</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/today-vegetable-price-13th-june-2026-tomato-and-onion-rate-in-chennai-2ggfcph</guid>
            <pubDate>Sat, 13 Jun 2026 08:29:39 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Vegetable Prices: ரசம் முதல் பிரியாணி வரை அனைத்து வகையான உணவு தயாரிப்புகளிலும் வெங்காயம், தக்காளி முக்கிய பங்கு வகிக்கிறது. காய்கறிகளை விட பை நிறைய தக்காளி, வெங்காயத்தை அதிகளவில் இல்லத்தரசிகள் வாங்கி செல்வது வழக்கம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktze3892gr0rjtdsmn8ysad7,imgname-vegetable-1781318918432.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Vegetable Prices: ரசம் முதல் பிரியாணி வரை அனைத்து வகையான உணவு தயாரிப்புகளிலும் வெங்காயம், தக்காளி முக்கிய பங்கு வகிக்கிறது. காய்கறிகளை விட பை நிறைய தக்காளி, வெங்காயத்தை அதிகளவில் இல்லத்தரசிகள் வாங்கி செல்வது வழக்கம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சமையலுக்கு எவ்வளவு தான் காய்கறிகளை போட்டு செய்தாலும் ருசியை அள்ளிக்கொடுப்பது தக்காளி, வெங்காயம் மட்டும் தான். அதாவது ரசம் முதல் பிரியாணி வரை அனைத்து விதமான உணவு தயாரிப்புகளிலும் வெங்காயம், தக்காளி பயன்பாடு தேவையே முக்கியமாக இருந்து வருகிறது. குறிப்பாக காய்கறிகளை விட பை நிறைய தக்காளி, வெங்காயத்தையே இல்லத்தரசிகள் அதிகம் வாங்கி செல்வது வழக்கம். மேலும் காய்கறிகளின் வரத்தை பொறுத்து விலையும் தினமும் நிர்ணயிக்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பருவமழை மற்றும் கோடை வெயில் காலத்தில் தக்காளி, வெங்காயம் விலை உச்சப்பெறும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். இந்நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்றைய தக்காளி, வெங்காயம் மற்றும் காய்கறிகளின் விலை என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;School Holiday: பள்ளி திறந்த கையோடு.! தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை.! குஷியில் துள்ளிக்குதிக்கும் மாணவர்கள்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பெரிய வெங்காயம் ஒரு கிலோ 28 முதல் 35 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 58 முதல் 72 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 47 முதல் 59 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 47 முதல் 59 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 44 முதல் 56 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சிறு கீரை 10 முதல் 15 ரூபாய்க்கும், நெல்லிக்காய் 96 முதல் 120 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 59 முதல் 74 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 44 முதல் 56 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 42 முதல் 53 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 50 முதல் 63 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 49 முதல் 62 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 41 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 58 முதல் 72 ரூபாய்க்கும், காலிஃபிளவர் ஒரு கிலோ 38 முதல் 48 ரூபாய்க்கும், கொத்தவரை 53 முதல் 66 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 34 முதல் 42 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 60 முதல் 75 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 37 முதல் 47 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.&lt;/p&gt;&lt;p&gt;TASMAC New Order: டாஸ்மாக்கில் அடுத்த அதிரடி! இனி இவர்கள் பீர், குவாட்டர் வாங்க முடியாது! அதிர்ச்சியில் குடிமகன்கள்&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சேனைக்கிழங்கு ஒரு கிலோ 43 முதல் 54 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 72 முதல் 90 ரூபாய்க்கும், பூண்டு 150 முதல் 188 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 102 முதல் 128 ரூபாய்க்கும், கோவைக்காய் ஒரு கிலோ 35 முதல் 44 ரூபாய்க்கும், மாங்காய் 22 முதல் 27 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 50 முதல் 63 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 29 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 43 முதல் 54 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 முதல் 63 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 46 முதல் 57 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/today-vegetable-price-13th-june-2026-tomato-and-onion-rate-in-chennai-2ggfcph"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Tatkal டிக்கெட் எடுப்பது இனி ரொம்ப ஈஸி..! 15ம் தேதி முதல் அதிரடியாக மாறும் IRCTC இணையதளம்..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/india/irctc-gets-a-massive-makeover-after-student-feedback-new-portal-from-july-15-idvpw2g</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/india/irctc-gets-a-massive-makeover-after-student-feedback-new-portal-from-july-15-idvpw2g</guid>
            <pubDate>Sat, 13 Jun 2026 07:38:24 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Train Ticket Booking: இந்திய ரயில்வே பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பாக, டிக்கெட் முன்பதிவுக்கான IRCTC நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட இணையதளம் 2026 ஜூலை 15-ஆம் தேதிக்குள் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktzbbvgkx3192hxjtp7dz5vc,imgname-irctc-new-website-1781316054545.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Train Ticket Booking: இந்திய ரயில்வே பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பாக, டிக்கெட் முன்பதிவுக்கான IRCTC நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட இணையதளம் 2026 ஜூலை 15-ஆம் தேதிக்குள் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள NIT மாணவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, தற்போதைய IRCTC இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ஏற்படும் சிக்கல்கள் குறித்து மாணவர்கள் நேரடியாக அமைச்சரிடம் தெரிவித்தனர். குறிப்பாக CAPTCHA சரிபார்ப்பு, இணையதள மந்தநிலை மற்றும் அதிக நெரிசல் நேரங்களில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகள் குறித்து புகார்கள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து அதிகாரிகளுடன் உடனடியாக பேசிய அமைச்சர், ஜூலை 15-க்குள் புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்த உத்தரவிட்டார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;IRCTC தளம் இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் அரசு சார்ந்த ஆன்லைன் சேவைகளில் ஒன்றாகும். தினசரி லட்சக்கணக்கான பயணிகள் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்கின்றனர். குறிப்பாக தத்கால் (Tatkal) முன்பதிவு நேரங்களில் இணையதளம் மெதுவாக செயல்படுவது, சர்வர் சுமை காரணமாக பக்கம் திறக்க தாமதமாகுவது, OTP மற்றும் CAPTCHA சிக்கல்கள் போன்றவை பயணிகளிடையே நீண்டகால அதிருப்தியை ஏற்படுத்தி வந்தன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரயில்வே அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, புதிய இணையதளம் வேகமான மற்றும் பயனர் நட்பு (User-Friendly) அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. டிக்கெட் முன்பதிவு செயல்முறையை எளிதாக்குவது, தத்கால் முன்பதிவு நிலையை விரைவாக அறியும் வசதி, இருக்கை தேர்வு (Seat Selection) போன்ற மேம்பாடுகள் இடம்பெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அதிக பயனர்கள் ஒரே நேரத்தில் பயன்படுத்தினாலும் தடையின்றி செயல்படும் வகையில் தொழில்நுட்ப கட்டமைப்பு வலுப்படுத்தப்பட உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்திய ரயில்வே கடந்த சில ஆண்டுகளாக தனது டிஜிட்டல் சேவைகளை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு, நேரடி ரயில் கண்காணிப்பு, மொபைல் செயலிகள் மற்றும் ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பு போன்ற பல்வேறு சேவைகள் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வரிசையில் புதிய IRCTC இணையதளம், பயணிகளின் அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;புதிய இணையதளம் குறித்து அறிவிப்பு வெளியானதும் சமூக வலைதளங்களில் பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், வெறும் இணையதள வடிவமைப்பு மாற்றம் மட்டுமல்லாமல், பின்னணி (Backend) தொழில்நுட்ப அமைப்புகளும் மேம்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. குறிப்பாக தத்கால் முன்பதிவு நேரங்களில் ஏற்படும் நெரிசலை சமாளிக்கும் திறன் கொண்ட அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;ஜூலை 15-ஆம் தேதி அறிமுகமாகவுள்ள புதிய IRCTC இணையதளம், இந்திய ரயில்வேயின் டிஜிட்டல் சேவைகளில் முக்கிய மைல்கல்லாக அமையலாம். டிக்கெட் முன்பதிவு வேகம், பயன்பாட்டு எளிமை மற்றும் தொழில்நுட்ப நம்பகத்தன்மை ஆகியவற்றில் உண்மையான முன்னேற்றம் ஏற்பட்டால், கோடிக்கணக்கான ரயில் பயணிகளுக்கு இது பெரிய நிவாரணமாக இருக்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/india/irctc-gets-a-massive-makeover-after-student-feedback-new-portal-from-july-15-idvpw2g"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Free Sewing Machine: பெண்களுக்கு இலவச தையல் எந்திரம்! தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்! விண்ணப்பிப்பது எப்படி?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/free-sewing-machine-for-women-good-news-from-tn-govt-how-to-apply-online-gndof8c</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/free-sewing-machine-for-women-good-news-from-tn-govt-how-to-apply-online-gndof8c</guid>
            <pubDate>Sat, 13 Jun 2026 07:02:12 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Tamil Nadu Government: பெண்களின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு பல்வேறு அசத்தலான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் சொந்த தொழில் தொடங்க திட்டமிடுபவர்களுக்கு இலவச பயிற்சி வழங்கி தேவையான கடனு உதவிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kcjrkp6ygqshnfxsv5yd3xed,imgname-e0acadd9-737a-4706-aa35-2b8e00baac63-1765861349598.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Tamil Nadu Government: பெண்களின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு பல்வேறு அசத்தலான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் சொந்த தொழில் தொடங்க திட்டமிடுபவர்களுக்கு இலவச பயிற்சி வழங்கி தேவையான கடனு உதவிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பெண்களின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு பல்வேறு அசத்தலான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பெண்கள் சொந்தமாக முன்னேற வேண்டும் ஒருவரை நம்பி இருக்கக்கூடாது என்ற நோக்கத்தின் அடிப்படையில் திட்டமானது வகுக்கப்படுகிறது. அதன் படி மாதந்தோறும் மகளிர் உரிமை தொகை, திருமண உதவித்திட்டம், கர்ப்பிணி பெண்கள் உதவி திட்டம், கணவனை இழந்த மற்றும் கைம்பெண்களுக்கு சுய தொழில் தொடங்க உதவி திட்டம் போன்ற பல்வேறு சூப்பரான திட்டங்கள் நடைமுறையில் இருந்து வருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேலும் சொந்த தொழில் தொடங்க திட்டமிடுபவர்களுக்கு இலவச பயிற்சி வழங்கி தேவையான கடனு உதவிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மற்றும் சமூக ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச தையல் இயந்திரங்களை வழங்கி வருகிறது.&lt;/p&gt;&lt;p&gt;School Holida&lt;strong&gt;y: பள்ளி திறந்த கையோடு.! தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை.! குஷியில் துள்ளிக்குதிக்கும் மாணவர்கள்!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இத்திட்டம் சுயவேலைவாய்ப்பு மற்றும் நிலையான வருமானத்தை ஊக்குவிக்கும் நோக்கில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் பயன் பெற மூன்று மாதம் தையல் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் தையல் தெரிந்தவராக இருக்க வேண்டும். இவர்களின் ஆண்டு வருமானம் ரூ.72,000 மேல் இருக்கக்கூடாது. குறிப்பாக அவர்களுக்கு 20 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டவரகாவும் இருக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் UDID அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். இரு கைகளும் நல்ல நிலையில் உள்ள கால்கள் பாதிக்கப்பட்ட மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள், மிதமான மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள். 75% மேல் உள்ள மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளின் தாய்மாராக இருத்தல் வேண்டும். தையல் பயிற்சி பயின்றதற்கான சான்று பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக விண்ணப்பதாரர் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த திட்டத்திற்கு இ சேவை மையம் மூலமாகவும், https://www.tnesevai.tn.gov.in/Citizen/Registration.aspx தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆவணங்களை சரிபார்த்து, அதிகாரிகள் அவற்றை பரிசீலித்த பிறகு தகுதியானவர்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/free-sewing-machine-for-women-good-news-from-tn-govt-how-to-apply-online-gndof8c"/>
        </item>
        <item>
            <title><![CDATA[EPFO Alert: பிஎப் கணக்கு இருக்கா.. இதை உடனே பண்ணுங்க.. இல்லைனா பணம் அவ்ளோதான்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/epfo-warning-pension-benefits-could-shrink-unexpectedly-0sda305</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/epfo-warning-pension-benefits-could-shrink-unexpectedly-0sda305</guid>
            <pubDate>Fri, 12 Jun 2026 19:55:52 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;EPFO Alert: ஒரு நிறுவனத்திலிருந்து விலகிய பிறகு பிஎப் தொகையை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இபிஎஸ் சேவை காலம் பழைய உறுப்பினர் ID-யுடன் இணைந்தே இருக்கும் என்பது பலருக்கும் தெரிவதில்லை.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kr0tqe6e3a1dctqysm5kkqcn,imgname-epfo--8--1778144491726.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;EPFO Alert: ஒரு நிறுவனத்திலிருந்து விலகிய பிறகு பிஎப் தொகையை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இபிஎஸ் சேவை காலம் பழைய உறுப்பினர் ID-யுடன் இணைந்தே இருக்கும் என்பது பலருக்கும் தெரிவதில்லை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வேலை மாறும் ஊழியர்களில் பெரும்பாலானோர் புதிய நிறுவனத்தில் சேரும் போது பிஎப் கணக்கை மட்டுமே கவனிக்கிறார்கள். ஆனால் ஊழியர் ஓய்வூதியத் திட்டம் (இபிஎஸ்) சேவை தொடர்பான காலப் பதிவுகளை மாற்ற மறந்து விடுகின்றனர். இது சிறிய விஷயமாக தோன்றினாலும், எதிர்கால பென்ஷன் பலன்களை நேரடியாக பாதிக்கக்கூடியது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒரு நிறுவனத்திலிருந்து விலகிய பிறகு பிஎப் தொகையை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இபிஎஸ் சேவை காலம் பழைய உறுப்பினர் ID-யுடன் இணைந்தே இருக்கும். அந்த சேவை பதிவை புதிய நிறுவனத்தின் பிஎப் கணக்கிற்கு மாற்றவில்லை என்றால், முந்தைய பணிக்காலம் பென்ஷன் கணக்கீட்டில் சேர்க்கப்படாமல் போகலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பென்ஷனுக்கான தகுதி காலம் குறையலாம். மாதாந்திர பென்ஷன் தொகையும் பாதிக்கப்படலாம். குறிப்பாக பல நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் சேவை கால பதிவுகளை சரியாக இணைக்கவில்லை என்றால், எதிர்காலத்தில் தேவையற்ற சிக்கல்களை சந்திக்க நேரிடும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;UAN எண்ணுடன் இபிஎப்ஓ ​​போர்ட்டலில் உள்நுழைந்து, 'ஆன்லைன் சேவைகள்' பிரிவில் உள்ள 'ஒரு உறுப்பினர் - ஒரு Eபிஎப் கணக்கு' வசதியைப் பயன்படுத்தலாம். பழைய உறுப்பினர் ஐடி விவரங்களை உள்ளிட்டு, பழைய அல்லது தற்போதைய நிறுவனத்தின் ஒப்புதலுடன் மாற்றக் கோரிக்கையை சமர்ப்பிக்கலாம். ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் ஓடிபியை பதிவுசெய்து விண்ணப்பத்தை நிறைவு செய்ய வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஓய்வுக்கால நிதி பாதுகாப்பை உறுதி செய்ய விரும்புபவர்கள், வேலை மாறும் ஒவ்வொரு முறையும் பிஎப் மற்றும் இபிஎஸ் சேவை பதிவுகள் சரியாக மாற்றப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். சிறிய அலட்சியம், எதிர்கால பென்ஷன் வருமானத்தில் பெரிய இழப்பை ஏற்படுத்தக்கூடும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/epfo-warning-pension-benefits-could-shrink-unexpectedly-0sda305"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Govt Loan Scheme : ரூ.60,000 முதல் ரூ.25 லட்சம் வரை கடன்! தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/business/govt-loan-scheme-tn-announces-loans-up-to-25-lakh-videoshow-4m3rz0d</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/business/govt-loan-scheme-tn-announces-loans-up-to-25-lakh-videoshow-4m3rz0d</guid>
            <pubDate>Fri, 12 Jun 2026 19:04:15 +0530</pubDate>
            <description><![CDATA[]]></description>
            <media:content url="https://geo.dailymotion.com/player/x1tbu.html?video=xaexvmm" medium="video" height="768" width="1024"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TABCEDCO) மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. தனிநபர்கள், சுய உதவிக்குழுக்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் ரூ.25 லட்சம் வரை கடன் பெற்று சிறுதொழில் தொடங்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/business/govt-loan-scheme-tn-announces-loans-up-to-25-lakh-videoshow-4m3rz0d"/>
        </item>
        <item>
            <title><![CDATA[RBI Credit Score Rules: 730-க்கு கீழ் சிபில் ஸ்கோர் இருக்கா? கடன் வாங்குவது கனவாகிவிடுமா? ஆர்பிஐ அதிரடி]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/rbi-shock-low-cibil-scores-may-block-loans-soon-an86rt4</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/rbi-shock-low-cibil-scores-may-block-loans-soon-an86rt4</guid>
            <pubDate>Fri, 12 Jun 2026 17:39:34 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;RBI Credit Score Rules: இதுவரை தவறிய பிறகே நடவடிக்கை எடுத்த வங்கிகள், இனி தவறு நடப்பதற்குமுன் அபாயத்தை கணிக்க உள்ளன. ஆர்பிஐயின் புதிய ECL கட்டமைப்பு, கோடிக்கணக்கான கடன் விண்ணப்பதாரர்களின் எதிர்காலத்தை மாற்றக்கூடும்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktbkmeh3kwg2r1pry5at5c8g,imgname-rbi--1--1779352490568-1780653636131.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;RBI Credit Score Rules: இதுவரை தவறிய பிறகே நடவடிக்கை எடுத்த வங்கிகள், இனி தவறு நடப்பதற்குமுன் அபாயத்தை கணிக்க உள்ளன. ஆர்பிஐயின் புதிய ECL கட்டமைப்பு, கோடிக்கணக்கான கடன் விண்ணப்பதாரர்களின் எதிர்காலத்தை மாற்றக்கூடும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கடன் வாங்க திட்டமிட்டு இருக்கும் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு முக்கியமான மாற்றம் வரவுள்ளது. ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது எதிர்பார்க்கப்படும் கடன் இழப்பு (ECL) கட்டமைப்பு, வங்கிகளின் கடன் வழங்கும் முறையையே மாற்றக்கூடியதாக பார்க்கப்படுகிறது. 2027 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரவுள்ள இந்த விதிகள், குறிப்பாக குறைந்த சிபில் ஸ்கோர் உள்ளவர்களை நேரடியாக பாதிக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தற்போதைய முறையில், கடன் தவணை செலுத்துவதில் பிரச்சினை ஏற்பட்ட பிறகே வங்கிகள் அபாயத்தை மதிப்பிடுகின்றன. ஆனால் புதிய ECL முறை, எதிர்கால அபாயத்தை முன்கூட்டியே கணிக்க உதவும். இஎம்ஐ தாமதம், வருமானத்தில் நிலைத்தன்மையின்மை, அதிகரிக்கும் கிரெடிட் பயன்பாடு போன்ற காரணிகள் கடன் தகுதியை தீர்மானிக்க முக்கியம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வங்கி துறையில் வெளியாகும் மதிப்பீடுகளின்படி, 730-க்கு குறைவான சிபில் ஸ்கோர் பெற்றவர்களுக்கு கடன் பெறுவது சவாலாக மாறலாம். அதிக வட்டி விகிதம், கூடுதல் ஆவணங்கள், அடமானம் கோருதல் போன்ற நிபந்தனைகள் விதிக்கப்படலாம். சில நேரங்களில், விண்ணப்பங்கள் நேரடியாக நிராகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;730-க்கு மேல் சிபில் ஸ்கோர் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் வங்கிப் பட்டியலில் இடம்பிடிக்கலாம். போட்டித்தன்மை கொண்ட வட்டி விகிதங்கள், சிறப்பு சலுகைகள் மற்றும் பல்வேறு நிதி தயாரிப்புகள் அவர்களுக்கு எளிதில் கிடைக்கக்கூடும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கடன் பெற திட்டமிடுபவர்கள் தங்களின் சிபில் ஸ்கோரை சீராக பராமரிப்பது அவசியம். இஎம்ஐ-களை சரியான நேரத்தில் செலுத்துதல், தேவையற்ற கடன் விண்ணப்பங்களைத் தவிர்த்தல் மற்றும் கிரெடிட் கார்டு பயன்பாடு போன்றவை எதிர்கால கடன் வாய்ப்புகளைப் பாதுகாக்க உதவும். புதிய விதிகள் இந்த அமலுக்கு வராத நிலையில் இருந்தாலும், நல்ல கிரெடிட் பழக்கவழக்கங்களை இப்போதே தொடங்குவது புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/rbi-shock-low-cibil-scores-may-block-loans-soon-an86rt4"/>
        </item>
        <item>
            <title><![CDATA[New Diesel Rules: இனி இவங்களுக்கு பெட்ரோல் பங்க்கில் டீசல் கிடையாது! மத்திய அரசு கட்டுப்பாடு!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/new-diesel-rules-central-govt-bans-bulk-buyers-from-purchasing-diesel-at-petrol-pumps-7egryog</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/new-diesel-rules-central-govt-bans-bulk-buyers-from-purchasing-diesel-at-petrol-pumps-7egryog</guid>
            <pubDate>Fri, 12 Jun 2026 16:10:18 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;New Diesel Rules: உலக அளவில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் பெட்ரோல் பங்குகளில் டீசல் வாங்க மத்திய அரசு அதிரடி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktxpe65vxxxdkdmhck2hvajn,imgname-new-diesel-rules-1781260556475.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;New Diesel Rules: உலக அளவில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் பெட்ரோல் பங்குகளில் டீசல் வாங்க மத்திய அரசு அதிரடி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இனிமேல் தொழிற்சாலைகள், பெரிய வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பேருந்துகள், லாரிகள் போன்ற மொத்தமாக எரிபொருள் வாங்கும் வாடிக்கையாளர்கள் பெட்ரோல் பங்குகளில் டீசல் வாங்க முடியாது. மத்திய அரசு இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. சாதாரண மக்களுக்காக பெட்ரோல் பங்குகளில் விற்கப்படும் டீசலை, இந்த நிறுவனங்கள் மொத்தமாக வாங்கிச் செல்வதால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இது தொடர்பாக ஜூன் 11-ம் தேதியான நேற்று மத்திய பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், &quot;மொத்த விற்பனை விலையை விட, பெட்ரோல் பங்குகளில் விற்கப்படும் டீசல் விலை குறைவாக இருப்பதால், பல தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் பங்குகளை நோக்கி படையெடுக்கின்றன. இதனால், நாட்டின் சில பகுதிகளில் டீசல் விற்பனை அசாதாரணமாக அதிகரித்துள்ளது&quot; என்று குறிப்பிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;இந்த நிலைமை, &quot;சாதாரண வாடிக்கையாளர்களுக்காக ஒதுக்கப்படும் டீசல், வேறு பாதைக்குத் திருப்பப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கான அத்தியாவசிய சேவைகளில் பாதிப்பு ஏற்படவும், உள்ளூர் அளவில் தட்டுப்பாடு உண்டாகவும் வாய்ப்புள்ளது&quot; என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தப் பிரச்சனையைச் சமாளிக்க, அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ், 'Motor Spirit and High Speed Diesel (Temporary Regulation of Supply through Retail Outlets) Order, 2026' என்ற புதிய உத்தரவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;இந்த உத்தரவின்படி, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்ட எரிபொருள் விற்பனையாளர்கள், தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு பெட்ரோல் பங்குகளில் டீசல் விற்பதை நிறுத்தும்படி அரசு அறிவுறுத்தலாம். இந்த மொத்த வாடிக்கையாளர்கள், தங்களுக்குத் தேவையான எரிபொருளை தங்களது சொந்த 'கன்ஸ்யூமர் பம்ப்கள்' மூலமாகவே பெற்றுக்கொள்ள வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேலும், பெட்ரோல் பங்க் டீலர்களுக்கும் சில முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன:&lt;/p&gt;&lt;p&gt;&quot;பெட்ரோல் பங்க் டீலர்கள், வாகனங்களின் எரிபொருள் டேங்கில் அல்லது PESO (பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு) அங்கீகரித்த கேன்களில் மட்டுமே டீசலை நிரப்ப வேண்டும். ஒரு வாடிக்கையாளருக்கு அல்லது ஒரு வாகனத்திற்கு ஒரு நாளைக்கு 200 லிட்டருக்கு மேல் விற்கக் கூடாது. இப்படி விற்கப்படும் டீசலை மறுவிற்பனை செய்யவும் கூடாது&quot; என அந்த அறிவிப்பில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&quot;பங்குகளில் இப்படி மொத்தமாக டீசல் வாங்குவது, பதுக்கலுக்கும், முறைகேடுகளுக்கும் வழிவகுக்கும். உண்மையான சில்லறை வாடிக்கையாளர்களுக்கு டீசல் கிடைப்பதில் சிக்கலை உருவாக்கும்&quot; என அரசு இந்த நடவடிக்கைக்குக் காரணம் கூறியுள்ளது. உலக அளவில் சில பகுதிகளில் நிலவும் பதட்டமான சூழல், சர்வதேச பெட்ரோலிய விநியோகச் சங்கிலி மற்றும் போக்குவரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதும் இந்த முடிவுக்கு ஒரு காரணம் என அரசு தெரிவித்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;இந்தக் கட்டுப்பாடுகள், முதற்கட்டமாக 90 நாட்களுக்கு அமலில் இருக்கும். அதற்கு முன்பே திரும்பப் பெறப்படலாம் அல்லது தேவைப்பட்டால் நீட்டிக்கப்படலாம். இந்த உத்தரவின் விதிகளை மீறுவோர் மீது அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் மற்றும் பிற சட்டங்களின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/new-diesel-rules-central-govt-bans-bulk-buyers-from-purchasing-diesel-at-petrol-pumps-7egryog"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Gold Savings Scheme : புதுசா நகை சீட்டு போட போறீங்களா? இந்த 6 விஷயங்களை செஞ்சா 100 பவுன் வாங்காலம்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/business/gold-savings-scheme-6-steps-to-owning-100-sovereigns-videoshow-x7eyhap</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/business/gold-savings-scheme-6-steps-to-owning-100-sovereigns-videoshow-x7eyhap</guid>
            <pubDate>Fri, 12 Jun 2026 16:04:41 +0530</pubDate>
            <description><![CDATA[]]></description>
            <media:content url="https://geo.dailymotion.com/player/x1tbu.html?video=xaewpay" medium="video" height="768" width="1024"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சரியான திட்டமிடலுடன் நகை சீட்டு போன்ற தங்க சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தால், 100 பவுன் தங்கம் கூட சேமிக்க முடியும். யாருக்கும் தெரியாத யாரும் சொல்லாத சில வழிமுறைகள் உங்கள் தங்க சேமிப்பு இலக்கை அடைய உதவும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/business/gold-savings-scheme-6-steps-to-owning-100-sovereigns-videoshow-x7eyhap"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Govt Scheme: தொழில் தொடங்க ரூ.30 லட்சம் கடன் பெறலாம் ஈசியா.! தகுதிகள் மற்றும் விண்ணப்ப விவரங்கள் இதோ]]></title>
            <link>https://tamil.asianetnews.com/business/govt-scheme-how-to-get-a-rs-30-lakh-business-loan-videoshow-yq7o805</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/business/govt-scheme-how-to-get-a-rs-30-lakh-business-loan-videoshow-yq7o805</guid>
            <pubDate>Fri, 12 Jun 2026 16:04:04 +0530</pubDate>
            <description><![CDATA[]]></description>
            <media:content url="https://geo.dailymotion.com/player/x1tbu.html?video=xaewp3e" medium="video" height="768" width="1024"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழ்நாடு அரசு, இளைஞர்கள், பெண்கள் மற்றும் சிறு தொழில் முனைவோருக்காக சிறப்பு கடன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், குறைந்த வட்டியில் ரூ.30 லட்சம் வரை கடன் பெற்று புதிய தொழில்களை தொடங்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/business/govt-scheme-how-to-get-a-rs-30-lakh-business-loan-videoshow-yq7o805"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Govt Loan Scheme: ரூ.60,000 முதல் ரூ.25 லட்சம் வரை கடன்! தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/tamil-nadu-announces-new-loan-scheme-get-up-to-rs-25-lakh-at-low-interest-mlwq0y0</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/tamil-nadu-announces-new-loan-scheme-get-up-to-rs-25-lakh-at-low-interest-mlwq0y0</guid>
            <pubDate>Fri, 12 Jun 2026 15:30:01 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TABCEDCO) மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. தனிநபர்கள், சுய உதவிக்குழுக்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் ரூ.25 லட்சம் வரை கடன் பெற்று சிறுதொழில் தொடங்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktxkfyvkfw46n5axrhdvfjpn,imgname-chatgpt-image-jun-12--2026--03-13-03-pm--1--1781257468786.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TABCEDCO) மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. தனிநபர்கள், சுய உதவிக்குழுக்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் ரூ.25 லட்சம் வரை கடன் பெற்று சிறுதொழில் தொடங்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். ஆனால் முதலீட்டு பற்றாக்குறை, வங்கிக் கடன் கிடைப்பதில் உள்ள சிக்கல்கள் போன்ற காரணங்களால் பல நல்ல தொழில் யோசனைகள் ஆரம்ப நிலையிலேயே நின்றுவிடுகின்றன. இதுபோன்ற சூழலில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய சமூகத்தினருக்கு ஆதரவாக தமிழக அரசு பல்வேறு கடன் உதவித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போது தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TABCEDCO) மூலம் ரூ.60,000 முதல் ரூ.25 லட்சம் வரை குறைந்த வட்டியில் கடன்கள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறுதொழில், வியாபாரம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களை தொடங்க விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பொருளாதார நிலையை உயர்த்தும் நோக்கில் பல்வேறு கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தனிநபர் தொழில், குழு தொழில், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட பல துறைகளில் கடன் உதவிகள் வழங்கப்படுகின்றன. இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம், சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்கி வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதும், தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பதுமாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த கடன் திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோர் சில அடிப்படை தகுதிகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் அல்லது சீர்மரபினர் சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்தை தாண்டக்கூடாது. விண்ணப்பிக்கும் நபர் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 60 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். மேலும் ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே இந்த கடன் உதவி வழங்கப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிறு வணிகம், வர்த்தகம், விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த தொழில்கள், கைவினைப் பொருட்கள் உற்பத்தி மற்றும் மரபு சார்ந்த தொழில்களை மேற்கொள்ள விரும்பும் தனிநபர்களுக்கு அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இந்த கடனுக்கான வட்டி விகிதம் மிகவும் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.1.25 லட்சம் வரை பெறப்படும் கடன்களுக்கு ஆண்டுக்கு 7 சதவீத வட்டியும், ரூ.1.25 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சம் வரை பெறப்படும் கடன்களுக்கு 8 சதவீத வட்டியும் விதிக்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சுய உதவிக்குழு உறுப்பினர்களும் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். குழுவில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரை கடன் வழங்கப்படும். ஒரு குழுவிற்கு மொத்தமாக ரூ.25 லட்சம் வரை கடன் உதவி கிடைக்கும். இந்த கடனை பெறுவதற்கு சுய உதவிக்குழு தொடங்கி குறைந்தது ஆறு மாதங்கள் நிறைவடைந்திருக்க வேண்டும். மேலும் மகளிர் திட்ட அலுவலரால் தர மதிப்பீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் வரை அனுமதிக்கப்படுவர். ஆண்கள் மற்றும் பெண்கள் இணைந்த குழுக்களும் இந்த திட்டத்தில் சேர்க்கப்படலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்காகவும் தனி கடன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கறவை மாடுகள் வாங்க விரும்பும் விவசாயிகளுக்கு ஒரு மாட்டிற்கு ரூ.60,000 வீதம் இரண்டு மாடுகள் வாங்க அதிகபட்சமாக ரூ.1.20 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடனுக்கு ஆண்டுக்கு 7 சதவீதம் மட்டுமே வட்டி விதிக்கப்படுகிறது. இதன் மூலம் பால் உற்பத்தியை அதிகரித்து கூடுதல் வருமானம் பெறும் வாய்ப்பு உருவாகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த கடன் திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம். அதேபோல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளிலும் விண்ணப்பப் படிவங்கள் கிடைக்கின்றன. மேலும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tabcedco.tn.gov.in மூலம் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சுயதொழில் தொடங்க விரும்புபவர்கள், தொழிலை விரிவுபடுத்த திட்டமிடுபவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட விரும்பும் விவசாயிகள் ஆகியோருக்கு இந்த கடன் திட்டம் மிகப்பெரிய உதவியாக இருக்கும். குறைந்த வட்டி, அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை கடன் மற்றும் எளிய தகுதிகள் ஆகியவை இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்களாகும். தொழில் வளர்ச்சிக்கான நிதி தேவைப்படுபவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/tamil-nadu-announces-new-loan-scheme-get-up-to-rs-25-lakh-at-low-interest-mlwq0y0"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Gold Loan: 10 கிராம் தங்க செயினுக்கு எவ்வளவு கடன் கிடைக்கும்? வங்கிகளின் புதிய கணக்கு இதோ!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/how-much-gold-loan-can-you-get-for-10-grams-check-here-g63tsfx</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/how-much-gold-loan-can-you-get-for-10-grams-check-here-g63tsfx</guid>
            <pubDate>Fri, 12 Jun 2026 14:03:22 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Gold Loan: அவசர பணத் தேவைக்கு தங்கக் கடன் பலருக்கு உடனடி தீர்வாக மாறியுள்ளது. ஆனால், 10 கிராம் தங்கத்திற்கு எவ்வளவு கடன் கிடைக்கும், எந்த நிறுவனத்தை தேர்வு செய்ய வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kf7yw4v1gbmdtdkn9k455tbe,imgname-gold-loan-1768720044897.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Gold Loan: அவசர பணத் தேவைக்கு தங்கக் கடன் பலருக்கு உடனடி தீர்வாக மாறியுள்ளது. ஆனால், 10 கிராம் தங்கத்திற்கு எவ்வளவு கடன் கிடைக்கும், எந்த நிறுவனத்தை தேர்வு செய்ய வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மருத்துவச் செலவுகள், கல்விக் கட்டணம் அல்லது எதிர்பாராத நிதி நெருக்கடிகள் போன்ற சூழ்நிலைகளில், தங்கக் கடன் பலருக்கும் உடனடி உதவியாக அமைகிறது. குறிப்பாக, கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருந்தாலும், தங்கத்தின் அடிப்படையில் எளிதில் கடன் பெற முடிவதால், அதற்கான தேவை அதிகரித்து வருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பொதுவாக, வங்கிகள் தங்கத்தின் சந்தை மதிப்பில் 75 சதவீதம் வரை கடன் வழங்குகின்றன. உதாரணமாக, 10 கிராம் தங்கத்தின் மதிப்பு ரூ.1 லட்சம் என்றால், வங்கிகளில் இருந்து சுமார் ரூ.75,000 வரை பெற முடியும். அதே நேரத்தில், சில NBFC-கள் 85 சதவீதம் வரை LTV விகிதத்தில் கடன் வழங்குகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அரசுத் துறை வங்கிகளில் தங்கக் கடனுக்கான வட்டி விகிதம் பொதுவாக 8.65% முதல் 10% வரை இருக்கும். தனியார் வங்கிகளில் இது சற்று அதிகமாக இருக்கலாம். NBFC-களில் 9% முதல் 24% வரை வட்டி வசூலிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே, குறைந்த வட்டியை விரும்புவோர் வங்கிகளை தேர்வு செய்வது நல்லது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இஎம்ஐ முறை, காலம் முழுவதும் வட்டி மட்டும் செலுத்தி இறுதியில் அசலை திருப்பிச் செலுத்தும் முறை, 'Bullet Repayment' போன்ற பல ஆப்ஷன்கள் உள்ளன. உங்கள் மாதாந்திர வருமானத்திற்கு ஏற்ற திட்டத்தை தேர்வு செய்வது அவசியம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தங்கக் கடன் பெறுவது எளிது என்பதற்காக தேவையில்லாமல் கடன் வாங்குவது ஆபத்தானது. செயலாக்கக் கட்டணம், அபராதக் கட்டணம் உள்ளிட்ட மறைமுக செலவுகளை முன்கூட்டியே தெரிந்துகொள்ள வேண்டும். கடனை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்த தவறினால், நகைகள் ஏலத்தில் விடப்படும் அபாயம் உள்ளது. எனவே, தங்கக் கடனை அவசர தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்துவது புத்திசாலித்தனமான முடிவாகும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/how-much-gold-loan-can-you-get-for-10-grams-check-here-g63tsfx"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Cashew Farming: கோடிகளில் வருமானம் தரும் முந்திரி விவசாயம்.! முந்திரி சாகுபடி செய்யவது எப்படி? எளிய வழிமுறை இதோ.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/agriculture/cashew-farming-business-high-demand-export-opportunities-profits-and-benefits-for-farmers-explained-8i1maf9</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/agriculture/cashew-farming-business-high-demand-export-opportunities-profits-and-benefits-for-farmers-explained-8i1maf9</guid>
            <pubDate>Fri, 12 Jun 2026 13:15:07 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Cashew Farming: உலகம் முழுவதும் முந்திரிக்கு அதிக டிமாண்ட் உள்ளது. நல்ல விலை, ஏற்றுமதி வாய்ப்பு, உடல்நலப் பலன்கள் என பல காரணங்களால், இது விவசாயிகளுக்கு லாபகரமான ஒரு பயிராக மாறியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktxcggdqqfh1cvdk63zj8af5,imgname-cashew-farming-1781250146743.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Cashew Farming: உலகம் முழுவதும் முந்திரிக்கு அதிக டிமாண்ட் உள்ளது. நல்ல விலை, ஏற்றுமதி வாய்ப்பு, உடல்நலப் பலன்கள் என பல காரணங்களால், இது விவசாயிகளுக்கு லாபகரமான ஒரு பயிராக மாறியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முந்திரியின் பூர்வீகம் தென் அமெரிக்காவில் உள்ள பிரேசில் ஆகும். பல நூற்றாண்டுகளுக்கு முன், போர்ச்சுகீசிய வியாபாரிகள் இதை இந்தியாவுக்கு கொண்டு வந்தனர். ஆரம்பத்தில் கடற்கரையோர மண் அரிப்பைத் தடுக்கவே இந்தச் செடிகளை நட்டார்கள். ஆனால், உலகளவில் டிமாண்ட் அதிகமானதால், இது ஒரு மதிப்புமிக்க வணிகப் பயிராக மாறியது. காபி, தேயிலைக்குப் பிறகு, அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் முக்கிய விவசாயப் பொருட்களில் முந்திரியும் ஒன்று. உள்நாட்டு சந்தையிலும் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முந்திரி மரங்கள் வெப்பமண்டல காலநிலையை விரும்பும். ஆண்டுக்கு 1000 முதல் 2000 மி.மீ. மழைப்பொழிவு உள்ள பகுதிகள் இந்த பயிருக்கு ஏற்றவை. 20 முதல் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருந்தால் நல்ல விளைச்சல் கிடைக்கும். செம்மண், மணல், கடலோர மண் என அதிக வளம் இல்லாத நிலத்திலும் இது நன்றாக வளரும். ஆனால், வயலில் தண்ணீர் தேங்கக் கூடாது. செடிகளை 7 முதல் 8 மீட்டர் இடைவெளியில் நட வேண்டும். நட்ட முதல் 3-4 ஆண்டுகள் பராமரிப்பு முக்கியம். அதன்பிறகு, 30 முதல் 40 ஆண்டுகள் வரை வருமானம் கொடுக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முந்திரி சாகுபடி செய்ய பெரிய விவசாய அனுபவம் தேவையில்லை. சரியான பயிற்சி, தரமான செடிகள் இருந்தால் போதும். ஆந்திரா, ஒடிசா, மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, கோவா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் முந்திரி முக்கியமாகப் பயிரிடப்படுகிறது. சமீபத்தில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநில விவசாயிகளும் இதில் ஆர்வம் காட்டுகின்றனர். இந்தத் தொழில் கிராமப்புற வேலைவாய்ப்புக்கும் உதவுகிறது. குறிப்பாக, பதப்படுத்தும் ஆலைகளில் லட்சக்கணக்கான பெண்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மற்ற பயிர்களைப் போலவே, முந்திரி சாகுபடியிலும் சில சவால்கள் உள்ளன. தண்டு துளைப்பான், பூக்களைத் தாக்கும் பூச்சிகள், பழங்களை அழிக்கும் புழுக்கள் போன்றவை பாதிப்பை ஏற்படுத்தும். சரியான நேரத்தில் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தினால் இழப்பைக் குறைக்கலாம். சில சமயங்களில் பூஞ்சை நோய்களும் பயிரைத் தாக்கும். வேளாண்மைத் துறையின் ஆலோசனைகளைப் பின்பற்றி, சரியான நேரத்தில் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சொட்டுநீர்ப் பாசனம் இருந்தால் இன்னும் நல்ல பலன் கிடைக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முந்திரி சாகுபடியை ஒரு 'நீண்ட கால முதலீடு' என விவசாயிகள் கருதுகின்றனர். ஆரம்பத்தில் பொறுமை தேவைப்பட்டாலும், பிறகு நல்ல வருமானம் கிடைக்கும். சந்தையில் முந்திரி விலை நிலையாக இருப்பதால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது. உடல்நலம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவதால், உலர் பழங்களின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. எனவே, எதிர்காலத்திலும் இந்த பயிருக்கான தேவை குறைய வாய்ப்பில்லை. சரியான ரகங்களைத் தேர்ந்தெடுத்து, அறிவியல் முறையில் சாகுபடி செய்தால், முந்திரி தோட்டம் ஒரு நிரந்தர வருமானம் தரும் தங்கப் பயிராக மாறும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பொறுப்பு துறப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அடிப்படை புரிதலுக்காக மட்டுமே. இந்தத் தொழிலைத் தொடங்கும் முன், அனுபவம் வாய்ந்தவர்களிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.&lt;/strong&gt;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/agriculture/cashew-farming-business-high-demand-export-opportunities-profits-and-benefits-for-farmers-explained-8i1maf9"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Magalir Urimai Thogai Scheme: குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை.! உடனே கிடைக்க என்ன செய்ய வேண்டும்?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/magalir-urimai-thogai-how-to-get-rs-2500-monthly-assistance-scheme-benefits-ynqg57i</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/magalir-urimai-thogai-how-to-get-rs-2500-monthly-assistance-scheme-benefits-ynqg57i</guid>
            <pubDate>Fri, 12 Jun 2026 12:29:31 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;இல்லத்தரசிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 கிடைக்கவுள்ளது. இத்தொகையை உடனடியாகப் பெற தேவையான தகுதிகள், ஆவணங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறைகள் குறித்து இந்த கட்டுரை விவரிக்கிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktx90tvtkzv18z8xr27fkx3n,imgname-chatgpt-image-jun-12--2026--12-08-52-pm--1--1781246487418.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;இல்லத்தரசிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 கிடைக்கவுள்ளது. இத்தொகையை உடனடியாகப் பெற தேவையான தகுதிகள், ஆவணங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறைகள் குறித்து இந்த கட்டுரை விவரிக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும், பெண்களின் பொருளாதாரச் சுயசார்பை உறுதி செய்வதிலும் மகளிர் உதவித்தொகை திட்டங்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பெண்களுக்கான மாதாந்திர உதவித்தொகையை ரூ.2,500 ஆக வழங்குவது மற்றும் உயர்த்துவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் எதிர்பார்ப்புகள் தற்சமயம் பெண்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஜூன் 15 ஆம் தேதிக்கு பிறகு இது குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், &amp;nbsp;மகளிர் உரிமை தொகையை உடனை பெற என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;புதுச்சேரி அரசு நடவடிக்கை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவர்களின் தலைமையிலான அரசு, வறுமைக் கோட்டிற்குக் கீழ் (BPL) உள்ள குடும்பத் தலைவிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை ரூ.1,000 இலிருந்து ரூ.2,500 ஆக உயர்த்தி பட்ஜெட்டில் அறிவித்தது. இத்திட்டத்திற்கான அரசாங்கக் கோப்பிற்குத் துணைநிலை ஆளுநரின் அதிகாரப்பூர்வ ஒப்புதலும் கிடைத்துள்ளது. இதன் மூலம் புதுச்சேரியில் உள்ள சுமார் 64,000-க்கும் மேற்பட்ட பெண்கள் நேரடியாகப் பயனடைந்து வருகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;தமிழ்நாடு நிலைமை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;தமிழகத்தில் தற்போது தகுதியான பெண்களுக்கு &quot;கலைஞர் மகளிர் உரிமைத் தொகை&quot; திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. தற்போதைய அரசு, இத்தொகையை தேர்தல் வாக்குறுதியின்படி ரூ.2,500 ஆக உயர்த்துவது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. ஜூன் 15-க்கு பிறகு இதற்கான அதிகாரப்பூர்வ வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் புதிய அறிவிப்புகள் வெளியாகலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மாதம் ரூ.2,500 உதவித்தொகை தடையின்றி கிடைக்க வேண்டுமெனில் பின்வரும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;வயது வரம்பு&lt;/strong&gt;: விண்ணப்பிக்கும் குடும்பத் தலைவி 21 வயது பூர்த்தியடைந்தவராகவும் 55 வயதிற்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;வருமான வரம்பு&lt;/strong&gt;: குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;குடும்ப அட்டை&lt;/strong&gt;: புதுச்சேரியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கான சிவப்பு நிற ரேஷன் கார்டும், தமிழ்நாட்டில் தகுதியான குடும்ப அட்டையும் (PHH/NPHH) பெற்றிருக்க வேண்டும்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;சொத்து விவரங்கள்&lt;/strong&gt;: சொந்தமாக 5 ஏக்கருக்கு மேல் நன்செய் நிலமோ அல்லது 10 ஏக்கருக்கு மேல் புன்செய் நிலமோ வைத்திருக்கக் கூடாது. மேலும், நான்கு சக்கர வாகனங்கள் (கார், ஜீப் போன்றவை) சொந்தமாக இருக்கக் கூடாது.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;விதிவிலக்கு&lt;/strong&gt;: அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் வருமான வரி செலுத்துவோர் உள்ள குடும்பங்களுக்கு இத்திட்டம் பொருந்தாது.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;img&gt;&lt;p&gt;உதவித்தொகைக்கான அறிவிப்பு வந்தவுடன் விண்ணப்பம் நிராகரிக்கப்படாமல் உடனடியாக அனுமதி பெற, பின்வரும் ஆவணங்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;குடும்ப அட்டை (Ration Card) - புதுப்பிக்கப்பட்ட நகல்.&lt;/li&gt; &lt;li&gt;ஆதார் அட்டை (Aadhaar Card) - குடும்ப அட்டையுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். வங்கி கணக்கு புத்தகம் (Bank Passbook) - மிக முக்கியமாக, தங்களது வங்கிக் கணக்குடன் ஆதார் எண் மற்றும் மொபைல் எண் கண்டிப்பாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும் (Aadhaar Seeding / e-KYC). அப்போதுதான் நேரடிப் பணப்பரிமாற்றம் (DBT) மூலம் பணம் கணக்கிற்கு வரும்.&lt;/li&gt; &lt;li&gt;வருமான சான்றிதழ் மற்றும் வயது சான்று.&lt;/li&gt; &lt;li&gt;பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;img&gt;&lt;p&gt;அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பிறகு, விண்ணப்ப முறைகள் பின்வருமாறு அமையும்:&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;புதுச்சேரி வாசிகள்&lt;/strong&gt;: புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் ([https://wcdservices.py.gov.in/](https://wcdservices.py.gov.in/)) வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;தமிழ்நாடு வாசிகள்&lt;/strong&gt;: தமிழக அரசின் புதிய அறிவிப்பு வெளியானவுடன், அந்தந்த மாவட்ட மகளிர் சமூக நல அலுவலகங்கள், இ-சேவை மையங்கள் அல்லது இதற்கென ஒதுக்கப்படும் பிரத்யேக அரசு இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்படும். கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட வாய்ப்புள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜூன் 15 ஆம் தேதிக்கு பிறகு அரசு வெளியிடும் அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, போலி இணையதளங்களை நம்பாமல், அரசு அலுவலகங்கள் அல்லது இ-சேவை மையங்கள் மூலமாக மட்டுமே தங்களின் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/magalir-urimai-thogai-how-to-get-rs-2500-monthly-assistance-scheme-benefits-ynqg57i"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Construction Material Prices: வீடு கட்டுபவர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த விஜய் அரசு அதிரடி!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/happy-news-for-home-builders-vijay-govt-mega-action-to-control-construction-material-prices-4mtple8</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/happy-news-for-home-builders-vijay-govt-mega-action-to-control-construction-material-prices-4mtple8</guid>
            <pubDate>Fri, 12 Jun 2026 11:31:15 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Tamilnadu Government: தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் தலைமையில் கல்குவாரி, கிரஷர், மற்றும் லாரி உரிமையாளர் சங்கங்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், சட்டவிரோத குவாரிகளைத் தடுப்பது, பசுமை வரியை உயர்த்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktx6d0hr8kk802tjbeybxdrj,imgname-construction-work-1-1781243740728.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Tamilnadu Government: தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் தலைமையில் கல்குவாரி, கிரஷர், மற்றும் லாரி உரிமையாளர் சங்கங்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், சட்டவிரோத குவாரிகளைத் தடுப்பது, பசுமை வரியை உயர்த்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க கல்குவாரிகள் மற்றும் கிரஷர்களில் வெளிப்படைத்தன்மையுடன் பணிகள் நடைபெறுவதை உறுதிசெய்யவும், அவர்களின் நடைமுறை சிக்கல்களையும் மற்றும் புவியியல் மற்றும் சுரங்கத்துறையால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், கட்டுமான பொருட்கள் உரிய விலையில் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்வது மற்றும் கனிம வளத்துறையால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கருத்துக்கள் பெற பல்வேறு குவாரி மற்றும் கிரசர் உரிமையாளர்கள், மணல் லாரி மற்றும் டிப்பர் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் செங்கல்சூளை உரிமையாளர்கள் சங்கங்களின் பிரதிநிதிகளோடு இன்று 11.06.2026 கிண்டியில் அமைந்துள்ள புவியியல் மற்றம் சுரங்கத்துறை ஆணையரகத்தில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இக்கூட்டத்தில் சங்க பிரதிநிதிகளால் பல்வேறு கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டன. குறிப்பாக கனிமங்கள் உற்பத்தி மற்றும் விநியோகத்தினை அதிகரிக்கும் பொருட்டு அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள தகுதியான பகுதிகளை கண்டறிந்து ஏல முறையில் குத்தகை உரிமங்கள் வழங்க துரித நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும், குவாரி குத்தகை உரிமம் வழங்கும் முறையினை எளிமைப்படுத்துவது மற்றும் சுற்றுச்சூழல் அனுமதியின் கால அளவினை நீட்டிப்பது குறித்து மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்துடன் புவியியல் மற்றும் சுரங்கத்துறை இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரால் தமிழகம் முழுவதும் உள்ள கிரஷர்களில் இருந்து எடுத்துச்செல்லும் கனிமத்திற்கு உரிய அனுமதி சீட்டு வழங்க வழிவகை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கனிம கடத்தலை முற்றிலும் தடுப்பதற்கு புவியியல் மற்றும் சுரங்கத்துறையில் மின்னணு சீட்டு (e-way bill) அமல்படுத்த அறிவுறுத்தப்பட்டது. செங்கல்சூளை உரிமையாளர்களால் செங்கல் சூளைகளுக்கு தேவையான மண் எளிதில் கிடைப்பதனை உறுதி செய்யும் விதத்தில் விதிகளை எளிமையாக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. அனைத்து சங்கத்தினரின் கோரிக்கைகள் மற்றும் கருத்துக்களை புவியியல் மற்றும் சுரங்கத்துறை மற்றும் அரசினால் ஆய்வுசெய்யப்பட்டு நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று மாண்புமிகு அமைச்சர் அவர்களால் தெரிவிக்கப்பட்டது. மேலும், சட்டவிரோத குவாரிப் பணிகளை தடுப்பதில் இவ்வரசு உறுதியாக உள்ளது என்றும், விதிகளின்படி முறையாக மற்றும் நேர்மையாக குவாரி பணிகள் செய்யும் குத்தகைதாரர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்றும், வருங்காலங்களில் குவாரி குத்தகை உரிமங்கள் பெறுவதில் வெளிப்படை தன்மை இருப்பதினை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் அவர்களால் தெரிவிக்கப்பட்டது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேலும், இவ்வாய்வு கூட்டத்தில் தமிழ்நாட்டில் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாக உண்மைக்கு புறம்பான செய்திகள் பரப்பப்பட்டு வந்த நிலையில் இது தவறான செய்தி என நாளிதழ்களில் தமிழ்நாடு கல்குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அரசின் அனுமதியின்றி சட்டவிரோதமாகக் கல்குவாரிகள் இயங்குவதை ஊக்குவிக்கும் நோக்கில், கட்டுமானப் பொருட்களின் விலை அதிகரித்துவிட்டது என்ற தவறான தகவல் பரப்பிவரும் நபர்களின் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இவ்வாய்வு கூட்டத்திற்கு பிறகு தமிழ்நாட்டிலுள்ள கட்டுமானத்துறையின் தேவைக்கு போதுமான அளவில் கட்டுமானப் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்வது குறித்து புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர்களுடன் அமைச்சர் அவர்களால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் போது தமிழ்நாட்டில் கட்டுமான பொருட்கள் தேவையினை உறுதி செய்யும் பொருட்டு, தமிழ்நாட்டிலிருந்து அண்டை மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லும் கனிமங்களுக்குண்டான பசுமை வரியினை 50 சதவீதத்திலிருந்து 200 சதவீதமாக உயர்த்துவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து அமல்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள மாண்புமிகு அமைச்சர் அவர்களால் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/happy-news-for-home-builders-vijay-govt-mega-action-to-control-construction-material-prices-4mtple8"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Govt Scheme: தொழில் தொடங்க ரூ.30 லட்சம் கடன் பெறலாம் ஈசியா.!  தகுதிகள் மற்றும் விண்ணப்ப விவரங்கள் இதோ]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/up-to-rs-30-lakh-business-loan-for-minorities-check-eligibility-and-apply-now-al1m2cc</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/up-to-rs-30-lakh-business-loan-for-minorities-check-eligibility-and-apply-now-al1m2cc</guid>
            <pubDate>Fri, 12 Jun 2026 10:32:36 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தமிழ்நாடு அரசு, இளைஞர்கள், பெண்கள் மற்றும் சிறு தொழில் முனைவோருக்காக சிறப்பு கடன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், குறைந்த வட்டியில் ரூ.30 லட்சம் வரை கடன் பெற்று புதிய தொழில்களை தொடங்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktx29r16ysqrp0wgmct02ard,imgname-chatgpt-image-jun-12--2026--10-12-04-am--1--1781239439398.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழ்நாடு அரசு, இளைஞர்கள், பெண்கள் மற்றும் சிறு தொழில் முனைவோருக்காக சிறப்பு கடன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், குறைந்த வட்டியில் ரூ.30 லட்சம் வரை கடன் பெற்று புதிய தொழில்களை தொடங்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்றைய காலகட்டத்தில் வேலை தேடுபவர்களை விட வேலை வழங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு சுயதொழில் மற்றும் தொழில் முனைவோர் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. குறிப்பாக குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்கள், பெண்கள் மற்றும் சிறு தொழில் முனைவோருக்கு கடன் உதவிகள் முக்கிய பங்காற்றுகின்றன. வங்கிக் கடன் பெறுவதில் சிரமம் எதிர்கொள்ளும் பலருக்கு அரசின் மானிய மற்றும் குறைந்த வட்டி கடன் திட்டங்கள் ஒரு பெரிய ஆதரவாக உள்ளன. அந்த வகையில், மக்களின் பொருளாதார முன்னேற்றத்தை மேம்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பு கடன் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த திட்டத்தின் கீழ் தனிநபர் தொழில் கடன், சிறு வணிக கடன், சேவைத் தொழில் கடன் மற்றும் தொழில் விரிவாக்கக் கடன் போன்ற பல்வேறு வசதிகள் வழங்கப்படுகின்றன. தனிநபர் தொழில் கடன் திட்டத்தின் மூலம் ரூ.20 லட்சம் வரை கடன் பெற முடியும். மேலும் திட்ட விதிமுறைகளின் அடிப்படையில் ரூ.30 லட்சம் வரை கடன் வழங்கப்படும் வாய்ப்பும் உள்ளது. இந்தக் கடன்களுக்கு சுமார் 6 சதவீதம் மட்டுமே வட்டி வசூலிக்கப்படுவதால், தனியார் நிதி நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது இது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த நிதி உதவியை பயன்படுத்தி சிறிய அளவிலான உற்பத்தித் தொழில்கள், உணவுப் பொருள் தயாரிப்பு மையங்கள், மளிகைக் கடைகள், கணினி மையங்கள், மொபைல் சேவை மையங்கள், வாகன பராமரிப்பு நிலையங்கள், தையல் மற்றும் கைத்தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை தொடங்கலாம். ஏற்கனவே தொழில் செய்து வருபவர்களும் தங்களது தொழிலை விரிவுபடுத்த இந்தக் கடனை பயன்படுத்திக் கொள்ளலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;ul&gt; &lt;li&gt;விண்ணப்பதாரர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;அரசால் அறிவிக்கப்பட்ட சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;பொதுவாக 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;குடும்ப ஆண்டு வருமானம் அரசால் நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்குள் இருக்க வேண்டும்.&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;தொழில் தொடங்குவதற்கான திட்ட அறிக்கை அல்லது தொழில் தொடர்பான விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;ஆதார் அட்டை, சமூகச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், முகவரி ஆதாரம் மற்றும் புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்கள் அவசியம்.&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;வங்கி கணக்கு மற்றும் தேவையான பிற நிதி ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆர்வமுள்ளவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் சிறுபான்மையினர் நல அலுவலகம் அல்லது தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு, தகுதி சரிபார்க்கப்பட்டு கடன் ஒப்புதல் வழங்கப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சொந்தமாக தொழில் தொடங்கி பொருளாதார முன்னேற்றம் அடைய விரும்பும் சிறுபான்மையின மக்களுக்கு தமிழ்நாடு அரசின் இந்த கடன் உதவித் திட்டம் ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. குறைந்த வட்டி, அதிகபட்ச கடன் தொகை மற்றும் தொழில் வளர்ச்சிக்கான ஆதரவு போன்ற அம்சங்கள் இந்த திட்டத்தை மேலும் பயனுள்ளதாக மாற்றுகின்றன. தொழில் தொடங்கும் கனவை நனவாக்க விரும்புபவர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/up-to-rs-30-lakh-business-loan-for-minorities-check-eligibility-and-apply-now-al1m2cc"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Gold Savings Scheme 2026: புதுசா நகை சீட்டு போட போறீங்களா? இந்த 6 விஷயங்களை செஞ்சா 100 பவுன் வாங்காலம்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/gold-savings-scheme-2026-follow-these-6-smart-tips-to-accumulate-up-to-100-sovereigns-of-gold-fma8bfy</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/gold-savings-scheme-2026-follow-these-6-smart-tips-to-accumulate-up-to-100-sovereigns-of-gold-fma8bfy</guid>
            <pubDate>Fri, 12 Jun 2026 09:15:33 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;சரியான திட்டமிடலுடன் நகை சீட்டு போன்ற தங்க சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தால், 100 பவுன் தங்கம் கூட சேமிக்க முடியும். யாருக்கும் தெரியாத &amp;nbsp;யாரும் சொல்லாத சில வழிமுறைகள் உங்கள் தங்க சேமிப்பு இலக்கை அடைய உதவும்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktwxzbxk0yfnsz0305ztt6vz,imgname-chatgpt-image-jun-12--2026--08-56-38-am--1--1781234905010.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சரியான திட்டமிடலுடன் நகை சீட்டு போன்ற தங்க சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தால், 100 பவுன் தங்கம் கூட சேமிக்க முடியும். யாருக்கும் தெரியாத &amp;nbsp;யாரும் சொல்லாத சில வழிமுறைகள் உங்கள் தங்க சேமிப்பு இலக்கை அடைய உதவும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழர்களின் வாழ்க்கையில் தங்கத்திற்கு எப்போதும் தனி மதிப்பு உண்டு. திருமணம், குழந்தைகளின் எதிர்காலம், குடும்ப விழாக்கள், முதலீடு என பல காரணங்களுக்காக மக்கள் தங்கத்தை சேமித்து வருகின்றனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், ஒரே நேரத்தில் அதிக அளவு தங்கம் வாங்குவது பலருக்கு சாத்தியமற்ற ஒன்றாக மாறியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;அதனால்தான் பலர் நகை சீட்டு அல்லது தங்க சேமிப்பு திட்டங்களில் சேர்ந்து மாதந்தோறும் சிறு தொகைகளை சேமித்து தங்கத்தை வாங்கும் வழியை தேர்வு செய்கிறார்கள். சரியான திட்டமிடலுடன் செயல்பட்டால், நீண்ட காலத்தில் 50 பவுன், 75 பவுன் மட்டுமல்ல, 100 பவுன் தங்கத்தைக் கூட சேமிக்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் அதற்கு சில முக்கியமான விஷயங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நகை சீட்டு போடும்போது பலர் ஆரம்பத்திலேயே ரூ.10,000 அல்லது ரூ.20,000 மாத தவணையை தேர்வு செய்கிறார்கள். ஆனால் சில மாதங்கள் கழித்து அதை தொடர்ந்து செலுத்த முடியாமல் சிரமப்படுகிறார்கள். எனவே முதலில் உங்கள் வருமானத்திற்கு ஏற்ற வகையில்ரூ.500, ரூ.1,000 அல்லது ரூ.2,000 போன்ற சிறிய தொகையில் தொடங்குங்கள். முக்கியமானது தொகை அல்ல; தொடர்ந்து சேமிக்கும் பழக்கம்தான். இந்த ஒழுக்கம் உருவானால் பின்னர் பெரிய தொகைகளில் சீட்டு போட்டு அதிக தங்கத்தை சேமிக்க முடியும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நகை சீட்டு போடும் முன் &quot;ஏன் தங்கம் வாங்க வேண்டும்?&quot; என்ற கேள்விக்கு பதில் தெரிந்திருக்க வேண்டும். மகளின் திருமணத்திற்காகவா? குழந்தையின் எதிர்காலத்திற்காகவா? அல்லது முதலீட்டுக்காகவா?&lt;/p&gt;&lt;p&gt;இலக்கு தெளிவாக இருந்தால் அதற்கேற்ற திட்டத்தை தேர்வு செய்யலாம். உதாரணமாக 10 ஆண்டுகள் தொடர்ந்து மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமித்தால், 100 பவுன் தங்கத்தைக்கூட எளிதாக சேர்க்க முடியும். இலக்கு இல்லாமல் சேமித்தால் இடையில் திட்டம் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பலர் தங்கத்தின் விலையை மட்டுமே கவனிக்கிறார்கள். ஆனால் உண்மையில் அதிக பணத்தை விழுங்குவது சேதாரம் மற்றும் செய்கூலிதான். ஒரு நகைக்கடை 18% சேதாரம் வசூலிக்கிறது என்றால், மற்றொரு கடை 8% அல்லது 10% மட்டுமே வசூலிக்கலாம். இந்த வித்தியாசம் நீண்ட காலத்தில் பல கிராம் தங்கத்தை உங்களுக்கு கூடுதலாக பெற்றுத்தரும்.எனவே சீட்டில் சேரும் முன் குறைந்த சேதாரம், குறைந்த செய்கூலி மற்றும் சிறப்பு சலுகைகள் உள்ள கடைகளை ஒப்பிட்டு தேர்வு செய்யுங்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிலர் விலை குறைவாக கிடைக்கிறது என்பதற்காக தரம் குறைந்த நகைகளை வாங்கி பின்னர் நஷ்டம் அடைகிறார்கள். எப்போதும் 916 ஹால்மார்க் முத்திரை கொண்ட 22 காரட் தங்க நகைகளையே வாங்க வேண்டும். அதோடு ரசீது, தரச் சான்றிதழ் மற்றும் BIS ஹால்மார்க் விவரங்கள் உள்ளதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.தரம் உள்ள தங்கம் வாங்கினால் எதிர்காலத்தில் அடகு வைப்பதற்கும், மறுவிற்பனை செய்வதற்கும் எந்த பிரச்சனையும் இருக்காது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அழகாக இருப்பதால் பலர் கல் பதித்த நகைகளை தேர்வு செய்கிறார்கள். ஆனால் முதலீட்டு நோக்கில் பார்க்கும்போது இது நல்ல முடிவு அல்ல. ஏனெனில் கற்களுக்காக நீங்கள் செலுத்தும் பணம் பின்னர் திரும்ப கிடைக்காது. அடகு வைக்கும் போது கற்களின் மதிப்பு கணக்கில் எடுக்கப்படுவதில்லை. இதனால் கணிசமான இழப்பு ஏற்படலாம். அதனால் அதிக தங்கத்தை சேமிக்க வேண்டும் என்றால் எளிமையான, தூய தங்க நகைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தங்க விலை எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சில நாட்களில் விலை குறையும். அந்த நேரங்களில் தங்க நாணயங்கள் அல்லது சிறிய அளவிலான நகைகளை வாங்கி சேமித்து வைத்தால் நீண்ட காலத்தில் பெரிய பலன் கிடைக்கும். தொடர்ந்து சேமிக்கும் பழக்கத்துடன் இதையும் இணைத்தால் பல ஆண்டுகளில் 100 பவுன் தங்கம் என்ற இலக்கை அடைவது கடினமான விஷயம் அல்ல.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நகை சீட்டு என்பது வெறும் சேமிப்பு திட்டம் அல்ல. அது குடும்பத்தின் எதிர்கால பாதுகாப்புக்கான ஒரு புத்திசாலித்தனமான நிதித் திட்டமாகும். மாதந்தோறும் ஒழுங்காக சேமிப்பது, குறைந்த சேதாரம் உள்ள கடைகளை தேர்வு செய்வது, தரமான ஹால்மார்க் தங்கத்தை வாங்குவது, கல் பதித்த நகைகளை தவிர்ப்பது போன்ற எளிய வழிமுறைகளை பின்பற்றினால், நீண்ட காலத்தில் கணிசமான அளவு தங்கத்தை சேமிக்க முடியும்.இன்று சிறிய தொகையில் தொடங்கும் சேமிப்புதான் நாளை உங்கள் குடும்பத்திற்கு 50 பவுன், 75 பவுன் அல்லது 100 பவுன் தங்கமாக மாறக்கூடும். எனவே திட்டமிட்டு சேமியுங்கள்; தங்கமான எதிர்காலத்தை உருவாக்குங்கள்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>business</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/gold-savings-scheme-2026-follow-these-6-smart-tips-to-accumulate-up-to-100-sovereigns-of-gold-fma8bfy"/>
        </item>
    </channel>
</rss>
