<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes"?>
<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Fri, 03 Jul 2026 18:12:12 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss/astrology" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[Mars Conjunction: ராகுவின் அங்காரக யோகம் ஆரம்பம்... இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இல்லனா பெரிய பாதிப்பு]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/angarak-yoga-formed-by-rahu-these-3-zodiac-signs-need-to-be-extra-careful-b4kh4po</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/angarak-yoga-formed-by-rahu-these-3-zodiac-signs-need-to-be-extra-careful-b4kh4po</guid>
            <pubDate>Fri, 03 Jul 2026 18:12:10 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Rahu Mars Conjunction | ராகு மற்றும் செவ்வாய் இணைவதால் உருவாகும் அங்காரக யோகம், சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்களையும் சவால்களையும் ஏற்படுத்தும் என ஜோதிட நம்பிக்கைகள் கூறுகின்றன.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwkz16re0kqpmgdfe6ms0jp6,imgname-rahu-mars-conjunction-1783081507598.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Rahu Mars Conjunction | ராகு மற்றும் செவ்வாய் இணைவதால் உருவாகும் அங்காரக யோகம், சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்களையும் சவால்களையும் ஏற்படுத்தும் என ஜோதிட நம்பிக்கைகள் கூறுகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அங்காரக யோகம் என்பது செவ்வாய் (அங்காரகன்) மற்றும் ராகு ஒரே ராசியில் அல்லது ஒரே வீட்டில் இணையும் போது உருவாகும் ஒரு முக்கியமான கிரக அமைப்பாகும்.&lt;/p&gt;&lt;p&gt;செவ்வாய் ஆற்றல், துணிச்சல், கோபம், வேகம் ஆகியவற்றைக் குறிக்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;ராகு மாயை, எதிர்பாராத சம்பவங்கள், ஆசைகள், குழப்பம் மற்றும் திடீர் மாற்றங்களைக் குறிக்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;இந்த இரண்டு கிரகங்களும் சேரும்போது, ஒருவரின் முடிவெடுக்கும் திறன், கோபம், அவசரம் மற்றும் வாழ்க்கையில் ஏற்படும் திடீர் மாற்றங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பாரம்பரிய ஜோதிடம் கூறுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த யோகம் அனைவருக்கும் ஒரே மாதிரியான பலனை வழங்காது. ஜாதகத்தில் கிரக நிலை, தசா-புக்தி மற்றும் பிற அம்சங்களைப் பொறுத்தே பலன்கள் மாறுபடும்.&lt;/p&gt;&lt;p&gt;சாத்தியமான பலன்கள்:&lt;/p&gt;&lt;p&gt;திடீர் கோபம் அதிகரிக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;அவசர முடிவுகள் பிரச்சனையை உருவாக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;வாகனங்களில் கவனமாக இருக்க வேண்டிய சூழல் உருவாகலாம்.&lt;/p&gt;&lt;p&gt;பண விஷயங்களில் எதிர்பாராத செலவுகள் வரலாம்.&lt;/p&gt;&lt;p&gt;குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;உடல்நலத்தில் சிறிய காயங்கள் அல்லது விபத்துகளைத் தவிர்க்க எச்சரிக்கை அவசியம்.&lt;/p&gt;&lt;p&gt;அதே நேரத்தில் சிலருக்கு தொழிலில் தைரியமான முடிவுகள் நல்ல முன்னேற்றத்தையும் தரக்கூடும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;செவ்வாயை ஆட்சி கிரகமாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்கள் இந்த காலத்தில் கோபத்தைக் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;கவனிக்க வேண்டியவை:&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;வேலை இடத்தில் வாக்குவாதத்தைத் தவிர்க்கவும்.&lt;/p&gt;&lt;p&gt;வாகனம் ஓட்டும்போது கூடுதல் கவனம் தேவை.&lt;/p&gt;&lt;p&gt;முதலீடுகளை அவசரமாக செய்ய வேண்டாம்.&lt;/p&gt;&lt;p&gt;குடும்ப உறுப்பினர்களிடம் பொறுமையுடன் நடந்து கொள்ளுங்கள்.&lt;/p&gt;&lt;h3&gt;&lt;strong&gt;விருச்சிகம்&lt;/strong&gt;&lt;/h3&gt;&lt;p&gt;விருச்சிக ராசிக்கும் செவ்வாயே அதிபதி என்பதால் இந்த யோகத்தின் தாக்கம் சற்று அதிகமாக உணரப்படலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;கவனிக்க வேண்டியவை:&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;கூட்டாளிகளுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம்.&lt;/p&gt;&lt;p&gt;தேவையற்ற கடன் வாங்குவதைத் தவிர்க்கவும்.&lt;/p&gt;&lt;p&gt;ரகசிய விஷயங்களை அனைவரிடமும் பகிர வேண்டாம்.&lt;/p&gt;&lt;p&gt;மன அழுத்தத்தை குறைக்க தியானம் அல்லது யோகா உதவியாக இருக்கும்.&lt;/p&gt;&lt;h3&gt;&lt;strong&gt;மகரம்&lt;/strong&gt;&lt;/h3&gt;&lt;p&gt;மகர ராசிக்காரர்கள் தொழில் மற்றும் பொருளாதார விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டிய காலமாக இது இருக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;கவனிக்க வேண்டியவை:&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் முழுமையாக ஆய்வு செய்யுங்கள்.&lt;/p&gt;&lt;p&gt;அலுவலக அரசியலில் ஈடுபட வேண்டாம்.&lt;/p&gt;&lt;p&gt;உடல்நல பரிசோதனையை அலட்சியப்படுத்தாதீர்கள்.&lt;/p&gt;&lt;p&gt;பெரிய செலவுகளை திட்டமிட்டு செய்யுங்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜோதிட நம்பிக்கையின்படி இந்த காலத்தில் சில ஆன்மிக வழிபாடுகள் மன அமைதியையும் தன்னம்பிக்கையையும் அதிகரிக்க உதவும் என்று கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;செவ்வாய்க்கிழமைகளில் முருகப் பெருமானை வழிபடலாம்.&lt;/p&gt;&lt;p&gt;துர்கை அம்மன் அல்லது காளி அம்மன் வழிபாடு செய்யலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&quot;ஓம் அங்காரகாய நம:&quot; அல்லது &quot;ஓம் ராஹவே நம:&quot; போன்ற மந்திரங்களை பக்தியுடன் ஜபிக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;அவசர முடிவுகளைத் தவிர்த்து பொறுமையுடன் செயல்படுங்கள்.&lt;/p&gt;&lt;p&gt;வாகனம் ஓட்டும்போது போக்குவரத்து விதிகளை கண்டிப்பாக பின்பற்றுங்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;முக்கிய குறிப்பு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;அங்காரக யோகம் அனைவருக்கும் ஒரே மாதிரியான பலனை அளிக்காது. ஒருவரின் முழு ஜாதகம், தசா-புக்தி, கிரக பார்வைகள் மற்றும் பிற யோகங்கள் ஆகியவற்றின் அடிப்படையில்தான் துல்லியமான பலன்களை மதிப்பிட முடியும். எனவே, மேற்கண்ட தகவல்கள் பொதுவான ஜோதிட விளக்கங்களாகவே எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்; இவை உறுதியான எதிர்காலக் கணிப்புகள் அல்ல.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>astrology</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/angarak-yoga-formed-by-rahu-these-3-zodiac-signs-need-to-be-extra-careful-b4kh4po"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Mahalakshmi Raja Yoga: மகாலட்சுமி ராஜயோகம்! இந்த 2 ராசிக்காரர்களுக்கு பணம், அதிர்ஷ்டம் குவியும்.. லிஸ்ட் உள்ளே]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/mahalakshmi-raja-yoga-these-2-zodiac-signs-may-attract-wealth-and-success-ai7gr89</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/mahalakshmi-raja-yoga-these-2-zodiac-signs-may-attract-wealth-and-success-ai7gr89</guid>
            <pubDate>Fri, 03 Jul 2026 11:58:15 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Mahalakshmi Raja Yoga: இந்த மாதத்தின் இரண்டாவது வாரத்தில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம், ஜோதிட நம்பிக்கையின்படி இரண்டு ராசிக்காரர்களுக்கு பணவரவு, புதிய வாய்ப்புகள் மற்றும் சாதகமான மாற்றங்களை அளிக்கக்கூடும்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwka6rxjd8kz9nr765gyxk2t,imgname-mahalakshmi-raja-yoga-1783059669938.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Mahalakshmi Raja Yoga: இந்த மாதத்தின் இரண்டாவது வாரத்தில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம், ஜோதிட நம்பிக்கையின்படி இரண்டு ராசிக்காரர்களுக்கு பணவரவு, புதிய வாய்ப்புகள் மற்றும் சாதகமான மாற்றங்களை அளிக்கக்கூடும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த மாதத்தின் இரண்டாவது வாரத்தில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம், ஜோதிட நம்பிக்கைகளின்படி சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படக்கூடும். ரிஷப ராசியில் செவ்வாய் மற்றும் சந்திரன் இணையும் இந்த கிரகச் சேர்க்கை, செல்வம், தொழில், புதிய வாய்ப்புகள் மற்றும் தன்னம்பிக்கையில் முன்னேற்றத்தை அளிக்கும் யோகமாக சில ஜோதிடர்கள் கருதுகின்றனர். இருப்பினும், இவை பொதுவான ஜோதிடக் கணிப்புகள் மட்டுமே என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜோதிட நம்பிக்கையின்படி, மேஷ ராசிக்காரர்களுக்கு இந்தக் காலம் புதிய தொடக்கங்களை உருவாக்கக்கூடும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வேலை வாய்ப்பு அல்லது தொழில் முன்னேற்றம் கிடைக்கலாம் என கூறப்படுகிறது. முதலீட்டு முடிவுகளில் சாதகமான சூழல் உருவாகலாம். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறவும், புதிய பொறுப்புகள் கிடைக்கவும் வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது. மேலும், தன்னம்பிக்கை அதிகரிப்பதன் காரணமாக மனநிலை உருவாகலாம் என்றும் கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;மூக்கின் மேல் கோபம் வரும் ராசிக்காரர்கள் இவர்கள்தான்.. முழு லிஸ்ட் இதோ!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தனுசு ராசிக்காரர்களுக்கும் இந்த யோகம் சாதகமான பலன்களை அளிக்கலாம் என்று ஜோதிடர்கள் குறிப்பிடுகின்றனர். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்ற வாய்ப்புகள் உருவாகலாம். நிலம் அல்லது வீடு வாங்குவது தொடர்பான முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படக்கூடும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த சில பிரச்சினைகள் அல்லது சட்டம் தொடர்பான விவகாரங்களில் சாதகமான மாற்றங்கள் கிடைக்கலாம் என்றும், எதிர்பாராத பயணங்கள் பயனுள்ளதாக அமையலாம் என்றும் ஜோதிட நம்பிக்கைகள் தெரிவிக்கின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜோதிட பலன்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட ஜாதகம், கிரக நிலைகள் மற்றும் பிற காரணிகளைப் பொறுத்து மாறுபடலாம். எனவே, இத்தகைய பலன்களை உறுதியான எதிர்கால நிகழ்வுகளாக அல்லாமல், பாரம்பரிய ஜோதிட நம்பிக்கைகளின் அடிப்படையிலான பொதுவான தகவல்களாகவே பார்க்க வேண்டும். முக்கியமான நிதி அல்லது வாழ்க்கை முடிவுகளை எடுக்கும் முன், உரிய ஆலோசனைகளைப் பெறுவது சிறந்த அணுகுமுறையாகும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>astrology</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/mahalakshmi-raja-yoga-these-2-zodiac-signs-may-attract-wealth-and-success-ai7gr89"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Astrology: அடிச்சு கேட்டாலும் சொல்ல மாட்டாங்க! உயிரே போனாலும் ரகசியம் காக்கும் டாப் 3 ராசிக்காரர்கள்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/top-3-zodiac-signs-who-keep-secrets-forever-astrology-4ga7qeh</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/top-3-zodiac-signs-who-keep-secrets-forever-astrology-4ga7qeh</guid>
            <pubDate>Fri, 03 Jul 2026 11:58:36 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Astrology: ஜோதிர சாஸ்திரத்தின்படி சில ராசிக்காரர்கள் உயிரே போனாலும் நீங்கள் சொன்ன ரகசியத்தை வெளியே சொல்ல மாட்டார்கள். அப்படிப்பட்ட டாப் 3 ராசிக்காரர்கள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwka0jspm9wzs6gjxdkyxnn2,imgname-astrology-1783059467062.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Astrology: ஜோதிர சாஸ்திரத்தின்படி சில ராசிக்காரர்கள் உயிரே போனாலும் நீங்கள் சொன்ன ரகசியத்தை வெளியே சொல்ல மாட்டார்கள். அப்படிப்பட்ட டாப் 3 ராசிக்காரர்கள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்றைய நவீன காலகட்டத்தில் யாரையும் நம்பி எந்த ஒரு முக்கியமான விஷயத்தையும் சொல்ல முடியவிலை. நமக்கு நெருக்கமான ஒருவரிடம் கூட நம்முடைய மனதிற்கு நெருக்கமான ரகசியத்தைப் பகிர்வது என்பது மிக ஆபத்தான விஷயமாக மாறிவிட்டது. &quot;இதை யாரிடமும் சொல்லாதே, உன்னை நம்பி மட்டும்தான் சொல்கிறேன்&quot; என்று நாம் உருகிச் சொல்லும் ஒரு விஷயம், அடுத்த சில நிமிடங்களில் வாட்ஸ்அப், சோசியல் மீடியா என காட்டுத்தீ போல பரவிவிடுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;உறவுகளுக்குள் விரிசல் விழுவதற்கும், நம்பிக்கைத் துரோகங்கள் நடப்பதற்கும் இந்த ரகசியங்களை அடுத்தவரிடம் பொதுப்படையாகப் பேசுவதே முக்கியக் காரணமாக அமைகிறது. ஆனால், ஜோதிட சாஸ்திரத்தின்படி சில ராசிக்காரர்களிடம் நீங்கள் எந்த ஒரு பரம ரகசியத்தைக் கூட எவ்வித பயமும் இன்றி தைரியமாக ஒப்படைக்கலாம். அவர்கள் உயிரே போனாலும் அடுத்தவரிடம் அதைச் சொல்ல மாட்டார்கள். அந்த டாப் 3 ராசிகள் யார் என்று விரிவாகப் பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சனி பகவானை அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்காரர்கள் மிகவும் முதிர்ச்சியான, ஒழுக்கமான மற்றும் பொறுப்புணர்வு மிக்கவர்கள். தேவையில்லாத வதந்திகளைப் பரப்புவதோ அல்லது அடுத்தவர் வீட்டு விஷயங்களில் தேவையின்றி மூக்கை நுழைப்பதோ இவர்களுக்குச் சற்றும் பிடிக்காத காரியம்.&lt;/p&gt;&lt;p&gt;ஒருவர் தங்களை நம்பி ஒரு தனிப்பட்ட ரகசியத்தைக் கூறும்போது, அதைத் தங்களுக்குக் கிடைத்த ஒரு கௌரவமாகப் பார்ப்பார்கள். காலப்போக்கில் உங்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலோ அல்லது உங்களுக்கு எதிராகச் சூழ்நிலை மாறினாலோ கூட, உங்கள் பலவீனத்தையோ, ரகசியத்தையோ இவர்கள் ஒருபோதும் தங்களுக்குச் சாதகமாக ஆயுதமாகப் பயன்படுத்த மாட்டார்கள். 'உயிரே போனாலும் உன்னை பற்றிய ரகசியத்தை வெளியே சொல்ல மாட்டான் இந்த கோட்டைசாமி' என்ற நகைச்சுவை சொல்லுக்கு பொருத்தமானவர்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜோதிட உலகத்தில் விருச்சிக ராசிக்காரர்களை &quot;மர்மங்களின் குறியீடு&quot; என்றுதான் அழைப்பார்கள். இவர்களது மனதை ஒரு வலுவான இரும்பு லாக்கர் என்றே கூறலாம். தங்களுக்குள் இருக்கும் சொந்த ரகசியங்களை இவர்களே எளிதில் வெளியில் சொல்ல மாட்டார்கள். அப்படியிருக்க, அடுத்தவர்கள் நம்பிச் சொன்ன ரகசியங்களை இவர்களின் வாழ்நாளுக்கும் வெளியில் சொல்லவே மாட்டார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;இவர்களிடம் நீங்கள் ஒரு ரகசியத்தைக் கூறினால், அது அவர்களின் இதயத்தோடு புதைந்து போகுமே தவிர, ஒருபோதும் அடுத்தவர் காதுகளுக்குச் செல்லாது. விசுவாசம் என்பது இவர்களின் ரத்தத்தில் ஊறிய ஒன்று என்பதால், இவர்களை நீங்கள் 100% கண்களை மூடிக்கொண்டு நம்பலாம். 'அடித்துக் கூட கேட்பாங்க அப்பவும் சொல்லாத' என்ற வார்த்தைகளுக்கு இவர்கள் மிகவும் பொருத்தமானவர்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்கள் இயற்கையிலேயே பாசக்காரர்கள் மற்றும் மற்றவர்களின் உணர்வுகளுக்கு அதிக மதிப்பு கொடுப்பவர்கள். ஒருவருடைய ரகசியம் வெளியில் தெரிந்தால், சம்பந்தப்பட்ட நபர் சமூகத்தில் எவ்வளவு மன உளைச்சலுக்கும், அவமானத்திற்கும் ஆளாவார் என்பதை இவர்கள் தங்களின் சொந்த வலியாக உணர்வார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;தங்களை நம்பியவர்களை எந்தச் சூழ்நிலையிலும், எவ்வளவு பெரிய இக்கட்டான கட்டத்திலும் காட்டிக் கொடுக்கக் கூடாது என்பதில் இவர்கள் உறுதியாக இருப்பார்கள். இவர்களிடம் ஒரு ரகசியத்தைச் சொன்னால், அதைத் தன் சொந்தக் குடும்ப விஷயம் போலப் பாதுகாப்பார்கள்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>astrology</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/top-3-zodiac-signs-who-keep-secrets-forever-astrology-4ga7qeh"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Numerology : இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இரண்டாவது திருமண யோகம் அதிகமாம்..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/numerology-says-these-birth-dates-are-believed-to-have-higher-chances-of-second-marriage-4hdoozh</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/numerology-says-these-birth-dates-are-believed-to-have-higher-chances-of-second-marriage-4hdoozh</guid>
            <pubDate>Fri, 03 Jul 2026 11:23:48 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Numerology Secrets: காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் அதிக சவால்களை சந்தித்தாலும் இரண்டாம் திருமண யோகம் யார்... யாருக்கு உண்டு என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwk8891cg3jc0mz48008t6nw,imgname-numerology--4--1783057622060.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Numerology Secrets: காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் அதிக சவால்களை சந்தித்தாலும் இரண்டாம் திருமண யோகம் யார்... யாருக்கு உண்டு என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எண் கணிதத்தில், ஒருவரின் பிறந்த தேதி அவர்களின் குணநலன், சிந்தனை முறை, உறவுகள் மற்றும் வாழ்க்கைப் பாதை குறித்து சில குறிப்புகளை வழங்குவதாக நம்பப்படுகிறது. அதன்படி, சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் அதிக சவால்களை சந்திக்கும் வாய்ப்பு இருப்பதாக எண் கணித நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக, அவர்களின் ஜாதக அமைப்பு மற்றும் வாழ்க்கைச் சூழலைப் பொறுத்து இரண்டாவது திருமண யோகமும் அமையக்கூடும் என்று கருதப்படுகிறது. இருப்பினும், இது அனைவருக்கும் பொருந்தும் விதியாக அல்ல; ஒரு சாத்தியக்கூறாக மட்டுமே பார்க்கப்பட வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Numerology: இந்த தேதிகள்ல பொறந்த பொண்ணுங்க பெஸ்ட் பொண்டாட்டியா இருப்பாங்களாம்!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எந்த மாதமாக இருந்தாலும் 5, 14 அல்லது 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களின் மூல எண் 5 ஆகும். இந்த எண்ணின் அதிபதியாக புதன் கருதப்படுகிறார். மூல எண் 5 கொண்டவர்கள் புதிய அனுபவங்களை விரும்புபவர்கள். சுதந்திரமான வாழ்க்கை முறையை விரும்பும் இவர்கள், ஒரே மாதிரியான சூழ்நிலையை எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உறவுகளில் பொறுமை குறைவாகவும், முடிவுகளை வேகமாக எடுக்கும் இயல்பும் இருப்பதால், கருத்து வேறுபாடுகள் உருவாகும் வாய்ப்பு அதிகமாக இருக்கும். இதன் காரணமாக, சிலருக்கு திருமண வாழ்க்கையில் பிரிவு அல்லது மறுமண வாய்ப்பு உருவாகலாம் என எண் கணிதம் குறிப்பிடுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Astrology : சமசப்தக யோகம்... தொட்டதெல்லாம் ஹிட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;7, 16 அல்லது 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களின் மூல எண் 7. இந்த எண்ணின் மீது கேதுவின் தாக்கம் அதிகமாக இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த எண்ணைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள தயங்குபவர்கள். மனதில் இருப்பதை சொல்லாமல் வைத்துக்கொள்வது, உறவுகளில் தேவையற்ற குழப்பங்களையும் தவறான புரிதல்களையும் ஏற்படுத்தலாம். மனநிலை அடிக்கடி மாறும் இயல்பும் சிலரிடம் காணப்படுவதால், திருமண வாழ்க்கையில் சவால்கள் உருவாகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதனால், சிலருக்கு இரண்டாவது திருமண யோகம் அமையலாம் என்று எண் கணிதம் விளக்குகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;9, 18 அல்லது 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களின் மூல எண் 9. இந்த எண்ணின் மீது செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கம் இருப்பதாக நம்பப்படுகிறது. மூல எண் 9 கொண்டவர்கள் தைரியமானவர்களாகவும், ஆற்றல் மிக்கவர்களாகவும் இருப்பார்கள். ஆனால், சில நேரங்களில் அவசரமாக முடிவெடுக்கும் பழக்கம் மற்றும் கோபத்தை கட்டுப்படுத்த முடியாத தன்மை உறவுகளில் விரிசலை ஏற்படுத்தலாம். இதுபோன்ற குணாதிசயங்கள் திருமண வாழ்க்கையில் சிக்கல்களை உருவாக்கி, சிலருக்கு மறுமண வாய்ப்பையும் ஏற்படுத்தக்கூடும் என எண் கணிதம் கூறுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>astrology</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/numerology-says-these-birth-dates-are-believed-to-have-higher-chances-of-second-marriage-4hdoozh"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Sani Peyarchi 2026: ரிஷப ராசிக்கு ஆரம்பமாகும் ஏழரை சனி.! சோதனையா, சாதனையா? தப்பிக்க எளிய பரிகாரங்கள்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/elarai-sani-for-rishaba-rasi-sani-peyarchi-2026-astrology-predictions-benefits-challenges-and-remedies-for-taurus-lcasemr</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/elarai-sani-for-rishaba-rasi-sani-peyarchi-2026-astrology-predictions-benefits-challenges-and-remedies-for-taurus-lcasemr</guid>
            <pubDate>Fri, 03 Jul 2026 11:00:03 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Elarai Sani for Rishaba Rasi: ரிஷப ராசிக்கு விரைவில் ஏழரை சனி தொடங்குகிறது. சனி பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு என்ன பலன்களைக் கொடுக்கும் என்று இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwk70amp8qgtqerdfmkzndg6,imgname-elarai-sani-for-rishaba-rasi-1783056312982.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Elarai Sani for Rishaba Rasi: ரிஷப ராசிக்கு விரைவில் ஏழரை சனி தொடங்குகிறது. சனி பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு என்ன பலன்களைக் கொடுக்கும் என்று இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜோதிடத்தில் சனி பகவான் முக்கிய கிரகமாக அறியப்படுகிறார். இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை அவர் ராசியை மாற்றுகிறார். அவர் ஒரு ராசிக்கு வரும் பொழுது அந்த ராசிக்கு முந்தைய ராசி மற்றும் அதற்கு அடுத்த ராசி ஆகியவற்றிலும் தாக்கம் ஏற்படும். இது விரய சனி, ஜென்ம சனி, பாத சனி என்று வகைப்படுத்தப்படுகிறது. தற்போது மீன ராசியில் பயணித்து வரும் சனி பகவான் ஜூன் 3, 2027 ஆம் ஆண்டு மேஷ ராசிக்கு பெயர்ச்சியாக இருக்கிறார். இதன் காரணமாக ரிஷப ராசிக்கு ஏழரை சனியின் முதல் பகுதியான விரய சனி தொடங்க இருக்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்:&amp;nbsp;&lt;/strong&gt; Venus Transit 2026: ஜூலையில் இந்த 4 ராசிகளுக்கு சுக்கிர திசை ஆரம்பம்.! ராஜயோகம், வெற்றி, அதிர்ஷ்டம் கிடைக்கும்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மீன ராசிக்கு பாத சனியும், மேஷ ராசிக்கு ஜென்ம சனியும், ரிஷப ராசிக்கு விரய சனியும் நடக்க இருக்கிறது. இந்த காலத்தில் ரிஷப ராசியை சேர்ந்தவர்களுக்கு சனியின் தாக்கம் எவ்வாறு இருக்கப் போகிறது, பரிகாரங்கள் என்ன என்பது பற்றி இங்கு காணலாம். ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி பகவான் யோககாரகன் ஆவார். பாக்கியம் மற்றும் தொழிற்ஸ்தான வீடுகளான ஒன்பது மற்றும் பத்தாம் வீடுகளின் அதிபதியாகவும் விளங்குகிறார். ஜோதிட விதிகளின்படி ஒரு ராசிக்கு ஏழரை சனி என்பது சனி பகவான் அந்த ராசிக்கு முந்தைய வீடு (12ஆம் வீடு), ராசி (1ஆம் வீடு), அடுத்த வீடு (2ஆம் வீடு) ஆகியவற்றில் சஞ்சரிக்கும் காலத்தைக் குறிக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்:&amp;nbsp;&lt;/strong&gt; Tamil Astrology: 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சூரியனின் அபூர்வ சேர்க்கை.! ஜூலையில் இந்த 4 ராசிகளுக்கு ஏறுமுகம் தான்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜோதிடத்தின்படி ரிஷப ராசிக்கு ஏழரை சனி ஜூன் 3, 2027 அன்று தொடங்குகிறது. ஆனால் சனி பகவான் அக்டோபர் 20, 2027 வக்ர நிலையில் பின்னோக்கி நகர்ந்து மீன ராசிக்குள் நுழைவார். மீண்டும் பிப்ரவரி 23, 2028 அன்று மேஷ ராசிக்கு வருவார். அப்போதுதான் ரிஷப ராசிக்கு ஏழரை சனியின் முழுமையாகத் தொடங்கும் ஜூன் 3, 2027 அவர் மேஷ ராசிக்கு வந்தாலும் பிப்ரவரி 23, 2028 முதலே அவரின் முழுமையான பலன்கள் ரிஷப ராசிக்கு தெரிய வரும். இதனால் ரிஷப ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் தாக்கம் தற்காலிகமாக நீங்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்:&amp;nbsp;&lt;/strong&gt; Numerology: உங்களுக்கு அடுத்த பிறவி இருக்குமா? இல்லை இதுவே கடைசி பிறவியா? பிறந்த தேதியை வைத்தே தெரிஞ்சிக்கலாம் வாங்க.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரிஷப ராசிக்கு ஏழரை சனியின் காலகட்டம் மூன்று கட்டங்களாக நடக்க இருக்கிறது. முதல் காலகட்டம் விரய சனி. மேஷ ராசியில் சனி பகவான் இருக்கும் பொழுது விரய சனி தொடங்குகிறது. இந்த முதல் இரண்டரை ஆண்டுகள் ரிஷப ராசிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியாக முன்னேறுவது கடினமாக இருக்கும். தேவையற்ற விரயங்கள் ஏற்படலாம். வீடு கட்டுதல், சுப நிகழ்ச்சிகள் போன்ற சுப விரயங்களும் அதிகரிக்கும். தூக்கமின்மை, வீண் அலைச்சல், மனதில் ஒருவித இனம் புரியாத பதற்றம் ஏற்படலாம். புதிய தொழில் முதலீடுகள் மற்றும் பெரிய அளவிலான கடன் கொடுப்பதை இந்த காலகட்டத்தில் தவிர்க்க வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சனி பகவான் உங்கள் சொந்த ராசியான ரிஷபத்திலேயே சஞ்சரிக்கும் அடுத்த இரண்டரை ஆண்டுகள் ஜென்ம சனி தொடங்குகிறது. இந்த காலகட்டத்தில் இன்னும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். உடல் சோர்வு, அஜீரணக் கோளாறுகள், சோம்பல் அதிகரிக்கலாம். பணியிடத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்காமல் போகலாம். உயர் அதிகாரிகளுடன் பேசும்பொழுது நிதானம் தேவை. உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்து கொள்ளும் நேரம் உருவாகும். கடுமையான உழைப்பும், நேர்மையும் மட்டுமே உங்களைக் காப்பாற்றும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சனி பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான மிதுனத்தில் சஞ்சரிக்கும் இறுதிக்கட்டம் கடைசி இரண்டரை ஆண்டுகள் பாத சனி நடக்கிறது. இதன் காரணமாக குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வரலாம். வார்த்தைகளில் நிதானம் அவசியம். கோபப்பட்டு பேசும் வார்த்தைகள் உறவுகளை பாதிக்கலாம். பணப்புழக்கம் ஓரளவு சீராக இருக்கும் என்றாலும் சேமிப்பும் குறைய வாய்ப்பு உண்டு. ஏழரை சனியின் இறுதி கட்டம் என்பதால் இந்த இரண்டு ஆண்டுகள் சனி பகவான் உங்களை பக்குவப்படுத்தி சோதனைகளில் இருந்து விடுதலை கொடுத்து, புதிய விடியலை தரத் தொடங்குவார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரிஷப ராசியின் அதிபதி சுக்கிர பகவான். சுக்கிரனும் சனியும் ஜோதிடத்தில் நட்பு கிரகங்கள். மேலும் ரிஷபத்திற்கு சனி பகவான் தர்ம கர்மாதிபதி என்பதால் அவர் மற்ற ராசிகளுக்கு கொடுப்பது போல கடுமையான தீமைகளை அள்ளிக் கொடுக்க மாட்டார். இந்த காலகட்டம் உங்களை வாழ்க்கையில் பக்குவப்பட்ட மனிதராக மாற்றும். கடினமாக உழைப்பவர்களுக்கு சனி பகவான் அதற்கான பலன்களை அள்ளிக் கொடுப்பார். குறுக்கு வழிகளைத் தவிர்த்து, நேர்மையாக இருப்பவர்கள் ஏழரை சனியின் பாதிப்புகளில் இருந்து விடுபட்டு நல்ல பலன்களைப் பெற முடியும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சனி பகவானின் அருளைப் பெறுவதற்கு சில எளிய பரிகாரங்களை செய்யலாம். சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபமும், ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலையும் சாற்றி வழிபட்டு வர அமைதி கிடைக்கும். ஏழை எளியவர்கள், முன்களப் பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்கு உணவு அல்லது உடை வழங்கி உதவுங்கள். தினமும் காலையில் காக்கைக்கு எள் கலந்த சாதம் வைப்பது சனியின் வீரியத்தைக் குறைக்கும். சனிக்கிழமைகளில் அசைவ உணவை தவிர்த்து விரதம் இருந்து வழிபடுவது நன்மைகளைத் தரும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>astrology</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/elarai-sani-for-rishaba-rasi-sani-peyarchi-2026-astrology-predictions-benefits-challenges-and-remedies-for-taurus-lcasemr"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Karma Siddhi Yoga : கர்ம சித்தி யோகத்தால் மேஜிக் பண்ணப் போற 4 ராசிகள்! உங்க ராசி இருக்கா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/karma-siddhi-yoga-benefits-these-4-zodiac-signs-1xan86d</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/karma-siddhi-yoga-benefits-these-4-zodiac-signs-1xan86d</guid>
            <pubDate>Fri, 03 Jul 2026 10:35:59 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Karma Siddhi Yoga : ஜூலை 5ஆம் தேதி செவ்வாய் பகவான் ரோகிணி நட்சத்திரத்திற்குள் நுழைவதால் 4 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும். இந்த கர்ம சித்தி யோகத்தால் வேலையில் பதவி உயர்வும், வியாபாரத்தில் நல்ல லாபமும் கிடைக்கும்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwk5n07a776vpb9dcfs14ny7,imgname-chatgpt-image-jul-3--2026--10-31-06-am-1783054893289.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Karma Siddhi Yoga : ஜூலை 5ஆம் தேதி செவ்வாய் பகவான் ரோகிணி நட்சத்திரத்திற்குள் நுழைவதால் 4 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும். இந்த கர்ம சித்தி யோகத்தால் வேலையில் பதவி உயர்வும், வியாபாரத்தில் நல்ல லாபமும் கிடைக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;செவ்வாய் பகவான் ரோகிணி நட்சத்திரத்திற்குள் நுழைவதால், மேஷ ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தானாகவே தேடி வரும். பணியில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். செய்யும் ஒவ்வொரு செயலிலும் வெற்றி காண்பீர்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;செவ்வாய் பகவான் ரோகிணி நட்சத்திரத்திற்குள் பெயர்ச்சி அடைவதால், கடக ராசிக்காரர்கள் சுப பலன்களைப் பெறுவார்கள். பணியில் இருப்பவர்கள் செய்யும் அனைத்து வேலைகளிலும் வெற்றி பெறுவார்கள். இவர்கள் செய்யும் கடின உழைப்பை அனைவரும் அங்கீகரிப்பார்கள். பாராட்டுக்களைப் பெறுவீர்கள். வாழ்க்கையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத விதமாக வருமானம் உயரும். குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளும் தீரும். மிகவும் மகிழ்ச்சியாக நேரத்தைக் கழிப்பீர்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;செவ்வாய் பகவான் ரோகிணி நட்சத்திரத்திற்குள் நுழைவதால், சிம்ம ராசிக்காரர்களின் வாழ்க்கை அற்புதமாக மாறும். உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். நிலுவையில் உள்ள பணிகள் அனைத்தும் முடிவடையும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். குறிப்பாக பணியில் இருப்பவர்களுக்கு இந்த காலம் மிகவும் சாதகமாக இருக்கும். ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது, வருமானம் இரட்டிப்பாகும்.&lt;/p&gt;&lt;p&gt;Astrology : கூட்டணி அமைத்த எதிரி கிரகங்கள்! இந்த 5 ராசிகளுக்கு ஜாக்பாட்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;செவ்வாய் பகவான் ரோகிணி நட்சத்திரத்திற்குள் பெயர்ச்சி அடைவது விருச்சிக ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். அவற்றைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டால், வருமானத்தில் இரட்டிப்பு பலன்களைப் பெறுவீர்கள். வியாபாரத்திலும் சிறப்பாகச் செயல்படுவீர்கள். கடந்த காலத்தில் செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். பணியில் இருப்பவர்கள் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த அனைத்துப் பிரச்சனைகளும் தீரும்.&lt;/p&gt;&lt;p&gt;Kubera Kungumam : இதை 41 நாட்கள் பயன்படுத்தினால் பணம் உங்க பின்னாடியே வரும்! பச்சைக் குங்குமப் பலன்கள்!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>astrology</category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/karma-siddhi-yoga-benefits-these-4-zodiac-signs-1xan86d"/>
        </item>
        <item>
            <title><![CDATA[வாழ்க்கையில் அடி மேல் அடி வாங்கும் 6 ராசிக்காரர்கள் இவங்க தான்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/6-zodiac-signs-facing-struggles-in-life-astrology-tips-bg8szvy</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/6-zodiac-signs-facing-struggles-in-life-astrology-tips-bg8szvy</guid>
            <pubDate>Fri, 03 Jul 2026 09:50:20 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;மனித வாழ்வில் இன்ப, துன்பங்கள் இயல்பு. ஆனால் சிலருக்கு மட்டும் கிரகங்களின் சாதகமற்ற அமைப்பால், அவர்கள் எந்தத் தவறும் செய்யாவிட்டாலும் கூட, வாழ்க்கை எப்போதும் போராட்டமாகவும், தானாகவே வந்து சேரும் பிரச்சனைகள் நிறைந்ததாகவும் மாறிவிடுகிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kvytpspba2ty9ff5ysw32dpj,imgname-even-though-ketu-is-a-malefic-planet-it-is-beneficial-for-these-3-zodiac-signs-1782372329163.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;மனித வாழ்வில் இன்ப, துன்பங்கள் இயல்பு. ஆனால் சிலருக்கு மட்டும் கிரகங்களின் சாதகமற்ற அமைப்பால், அவர்கள் எந்தத் தவறும் செய்யாவிட்டாலும் கூட, வாழ்க்கை எப்போதும் போராட்டமாகவும், தானாகவே வந்து சேரும் பிரச்சனைகள் நிறைந்ததாகவும் மாறிவிடுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&quot;சூளையில் வெந்த தங்கம் தான் ஆபரணமாகும்&quot; என்பார்கள். அதுபோல், வாழ்க்கையில் தொடர் சோதனைகளையும் ஏமாற்றங்களையும் சந்தித்து, அதன் மூலமே பக்குவப்பட்டு வரலாறாக மாறும் மனிதர்கள் பலர் உண்டு. ஜோதிட ரீதியாக, கிரகங்களின் இருப்பிடம் மற்றும் தசா புத்திகளால் காலகட்ட அடிப்படையில் அதிக போராட்டங்களைச் சந்திக்கும் 6 ராசிக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் யார், ஏன் அவர்களுக்கு இந்தச் சோதனைகள், அதிலிருந்து மீள்வதற்கான ஆன்மீக மற்றும் வாழ்வியல் சூட்சுமங்கள் என்ன என்பதை இங்கு காண்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;புதனை அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்கள், அனைவரையும் எளிதில் நம்பி தங்களின் ரகசியங்களை பகிர்ந்து விடுவார்கள். இதுவே இவர்களுக்குப் பெரிய அடியாக மாறும். மற்றவர்களின் போலியான முகத்தைக் கண்டறியத் தவறுவது மற்றும் ஒரே நேரத்தில் பல காரியங்களில் கையை வைப்பது தான் இவர்களுக்கு வரும் பிரச்சனைகளுக்கு காரணம். மீள்வதற்கான வழி: எவரிடமும் உங்கள் பலவீனங்களைப் பகிராதீர்கள்; எந்தவொரு செயலிலும் ஒரு இலக்கை மட்டும் நோக்கிப் பயணிக்கப் பழகுங்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சந்திரனின் ஆதிக்கம் பெற்ற கடக ராசியினர், பாசத்திற்கு அடிமையானவர்கள். எதிர்பார்ப்புகளே இவர்களின் வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றிவிடும். உறவுகளிடம் வைக்கும் அதீத எதிர்பார்ப்பு மற்றும் கடந்த கால கசப்பான நினைவுகளை மறக்க முடியாமல் தவிப்பது தான் இவர்களின் முக்கிய பிரச்சனையே. மீள்வதற்கான வழி: &quot;எதிர்பார்ப்பற்ற அன்பே&quot; உங்களை ஏமாற்றங்களில் இருந்து காக்கும். பௌர்ணமி தோறும் அம்பிகை வழிபாடு செய்வது மன அமைதி தரும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எல்லாவற்றிலும் துல்லியத்தன்மையை (Perfection) எதிர்பார்க்கும் கன்னி ராசிக்காரர்கள், பிறரின் தவறுகளைச் சுட்டிக்காட்டி பலரின் எதிர்ப்புகளைச் சம்பாதித்துக் கொள்வார்கள். மற்றவர்களைத் திருத்த நினைப்பதும், அளவுக்கு அதிகமாகச் சிந்தித்து (Overthinking) மன அழுத்தத்திற்கு ஆளாவதும் தான் இவர்களின் வாழ்க்கை போராட்டமாக இருக்கக் காரணம். மீள்வதற்கான வழி: எல்லோரையும் உங்களைப் போல் மாற்ற முயற்சிக்காதீர்கள். மற்றவர்களின் குறைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளப் பழகுங்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நீதி நேர்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் துலாம் ராசியினர், வாழ்க்கையில் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்கத் தயங்குவதால் பல அடிகளைச் சந்திப்பார்கள். பிறரின் கருத்துகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, சொந்தப் புத்தியை யோசிக்கத் தவறுவது தான் இவர்களின் பல பிரச்சனைகளுக்கு காரணம். மீள்வதற்கான வழி: காலத்தின் அருமையை உணர்ந்து, தீர்க்கமான முடிவுகளை நீங்களாகவே எடுக்கப் பழகுங்கள். சனிக்கிழமைகளில் பெருமாள் வழிபாடு நலம் தரும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மந்தன் எனப்படும் சனியின் ஆதிக்கத்தில் உள்ள மகர ராசிக்காரர்கள், வாழ்க்கையின் ஆரம்பக் காலத்தில் கடுமையான சோதனைகளையும் உழைப்புக்கேற்ற பலனின்மையையும் சந்திப்பார்கள். விதியின் சோதனைகளும், எவ்வளவு உழைத்தாலும் மற்றவர்கள் அதைக் குறைத்து மதிப்பிடுவதும் தான் இவர்களின் பெரிய வலி. மீள்வதற்கான டிப்: காலம் கடந்துதான் உங்களுக்குப் பலன் கிடைக்கும் என்பது விதியின் விதி. எனவே, பொறுமையைக் கைவிடாமல் தர்மத்தின் வழி நில்லுங்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குருவின் ஆதிக்கம் கொண்ட மீன ராசியினர், பிறருக்காகத் தங்களது நன்மைகளைத் தியாகம் செய்துவிட்டு, இறுதியில் தனியாக நின்று தவிப்பார்கள். 'இல்லை' என்று சொல்லத் தெரியாத குணமும், அடுத்தவர்களின் சுமையைத் தன் தோளில் ஏற்றிக் கொள்வதும் தான் இவர்களின் பிரச்சனைகளுக்கு காரணம். மீள்வதற்கான வழி: பிறருக்கு உதவி செய்யும் முன், உங்கள் குடும்பத்தின் நிலையை யோசியுங்கள். சுய ஒழுக்கமும் எல்லையும் உங்களை அடியில் இருந்து காக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;வாழ்வியல் குறிப்பு: அடி மேல் அடி வாங்கும் ராசிக்காரர்கள் யாவரும் சோர்ந்து போகத் தேவையில்லை. ஏனெனில், பிரபஞ்சம் உங்களை ஏதோ ஒரு பெரிய உயரத்திற்குத் தயார்படுத்துகிறது என்று அர்த்தம். குலதெய்வ வழிபாட்டைத் தடையின்றித் தொடருங்கள்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>astrology</category>
            <dc:creator>Priya Velan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/6-zodiac-signs-facing-struggles-in-life-astrology-tips-bg8szvy"/>
        </item>
        <item>
            <title><![CDATA[சிவபெருமானின் அம்சம் கொண்ட 5 ராசிக்காரர்கள்: இவர்களிடம் இருக்கும் மகாசக்தி என்ன தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/5-zodiac-signs-blessed-by-lord-shiva-know-their-super-personality-7rdhlf2</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/5-zodiac-signs-blessed-by-lord-shiva-know-their-super-personality-7rdhlf2</guid>
            <pubDate>Fri, 03 Jul 2026 08:53:29 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ஆன்மீக ரீதியாக, சில ராசிக்காரர்கள் சிவபெருமானின் பேராற்றலையும் பிரபஞ்ச காந்த ஈர்ப்பையும் இயல்பாகவே பெற்றிருப்பார்கள். நவகிரகங்களையும் கட்டுப்படுத்தும் சிவனின் அருள் பெற்ற அந்த அதிர்ஷ்டசாலி ராசிகள் யார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kw5zb56d56re4qjnf5ac0stc,imgname-moon-in-jyeshtha-nakshatra-wealth-property-and-job-comforts-for-these-4-zodiac-signs-1782612071629.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஆன்மீக ரீதியாக, சில ராசிக்காரர்கள் சிவபெருமானின் பேராற்றலையும் பிரபஞ்ச காந்த ஈர்ப்பையும் இயல்பாகவே பெற்றிருப்பார்கள். நவகிரகங்களையும் கட்டுப்படுத்தும் சிவனின் அருள் பெற்ற அந்த அதிர்ஷ்டசாலி ராசிகள் யார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பொதுவாி ஆன்மீகத்தில் சிவ குணங்கள் என சொல்லப்படுவது அமைதி, கோபம், கருணை, கம்பீரம், தலைமைத்துவம், ஆழ்ந்த ஞானம், தர்ம சிந்தனை, மற்றவர்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியாத ஆழமான சிந்தனைகள், செயல்பாடுகள் என்பவை தான். இந்த அனைத்து குணங்களும் சில ராசிக்காரர்களிடம் கலந்திருக்கும் என ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. சாதாரண மனிதர்களால் அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள முடியாத விசித்திர பிறவிகளாக இருப்பவர்களுக்கு சிவனின் அம்சம் இருக்கும் என சொல்லப்படுகிறது. கோபத்தில் ருத்ரனாகவும், கருணையில் போலாநாதனாகவும் விளங்கும் ஈசனின் அம்சம் பொருந்திய அந்த 5 ராசிகள் யார், அவர்களின் ரகசிய பலங்கள் என்ன என்பதை இங்கே காண்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் என்பதால், இவர்களிடம் சிவபெருமானின் வீரமும், அநீதியைக் கண்டு பொங்கும் குணமும் இயல்பாகவே இருக்கும். எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளும் துணிச்சல் மற்றும் மூன்றாவது கண் போன்ற கூர்மையான புத்திசாலித்தனம் இருக்கும். இவர்கள் தங்களின் கோபத்தை ஆக்கப்பூர்வமான காரியங்களுக்குப் பயன்படுத்தினால், இவர்களை யாராலும் வெல்ல முடியாது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்கள், ஈசனின் பிரபஞ்சக் கட்டுப்பாடு மற்றும் கம்பீரமான தோற்றத்திற்கு இணையானவர்கள். இவர்களின் சொல்லுக்குப் பிறர் கட்டுப்படுவார்கள். பிறரை வழிநடத்தும் காந்த சக்தி இவர்களிடம் அதிகம். அதிகாரத் தோரணையைக் குறைத்து, சிவனைப் போல எளியவர்களிடம் கருணை காட்டினால் இவர்களின் புகழ் ஓங்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;காலபுருஷ தத்துவப்படி எட்டாவது ராசியான விருச்சிகம், சிவபெருமானின் ஆக்கல் மற்றும் அழித்தல் (மறுபிறவி) தத்துவத்தைக் குறிக்கிறது. இவர்களைப் புரிந்து கொள்வது கடினம்; எதையும் தாங்கும் மனவலிமையும், ஆன்மீக உள்ளுணர்வும் இவர்களிடம் ஒளிந்திருக்கும். ஆனால் பழிவாங்கும் எண்ணத்தை கைவிட்டு, தியானம் மற்றும் வழிபாடுகளில் கவனம் செலுத்தினால் பேராற்றல் கிட்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குருவின் ஆதிக்கத்தில் பிறந்த தனுசு ராசிக்காரர்கள், தட்சிணாமூர்த்தி வடிவமாக விளங்கும் ஈசனின் ஞானப் பண்பைப் பெற்றவர்கள். நியாயத்தின் பக்கம் நிற்பது, பிறருக்கு நல்வழி காட்டுவது மற்றும் உலக பந்தங்களை எளிதில் கடந்து செல்லும் பக்குவம் இவர்களிடம் இயல்பாக இருக்கும். இவர்களின் நேர்மையான வார்த்தைகளே இவர்களின் ஆயுதம். அதை மற்றவர்களின் நன்மைக்காக மட்டுமே பயன்படுத்துங்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சனியின் ராசியான கும்பம், உலக நன்மைகாக ஆலகால விஷத்தை அருந்திய நீலகண்டனின் தியாக மனப்பான்மையைக் கொண்டது.பொதுநலன் விரும்புவது, தனிமையை விரும்புவது மற்றும் எவ்வளவு துன்பம் வந்தாலும் கொள்கையிலிருந்து மாறாத வைராக்கியம் இவர்களிடம் இருக்கும். உலகிற்கு நன்மை செய்ய நினைக்கும் நீங்கள், உங்களின் சுய முன்னேற்றத்திலும் சற்றே கவனம் செலுத்துவது அவசியம்.&lt;/p&gt;&lt;p&gt;ஆன்மீகக் குறிப்பு: சிவபெருமானின் அம்சம் பெற்ற இந்த ராசிக்காரர்கள், திங்கட்கிழமைகளில் சிவபெருமானுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வர, வாழ்வில் சகல ஐஸ்வர்யங்களும் கைகூடும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>astrology</category>
            <dc:creator>Priya Velan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/5-zodiac-signs-blessed-by-lord-shiva-know-their-super-personality-7rdhlf2"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Angry Zodiac Signs: மூக்கின் மேல் கோபம் வரும் ராசிக்காரர்கள் இவர்கள்தான்.. முழு லிஸ்ட் இதோ!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/astrology-says-these-4-zodiac-signs-hide-a-gentle-heart-behind-their-anger-zhzph0w</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/astrology-says-these-4-zodiac-signs-hide-a-gentle-heart-behind-their-anger-zhzph0w</guid>
            <pubDate>Fri, 03 Jul 2026 08:38:23 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Angry Zodiac Signs: சிலர் சிறிய விஷயத்திற்கே கோபப்படுவார்கள். அதனால் அவர்கள் கெட்டவர்கள் என்று அர்த்தமில்லை. ஜோதிடத்தின் படி, வெளியில் கடுமையாகத் தோன்றினாலும் உள்ளுக்குள் மிகவும் பாசமான 4 ராசிகள் உள்ளன.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwjyzvbmvrtt5rf2jr22a7d8,imgname-astrology-1783047908723.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Angry Zodiac Signs: சிலர் சிறிய விஷயத்திற்கே கோபப்படுவார்கள். அதனால் அவர்கள் கெட்டவர்கள் என்று அர்த்தமில்லை. ஜோதிடத்தின் படி, வெளியில் கடுமையாகத் தோன்றினாலும் உள்ளுக்குள் மிகவும் பாசமான 4 ராசிகள் உள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒரு சிலரை பார்த்தாலே அவர்கள் எப்போதும் கோபமாக இருப்பது போல தோன்றும். சிறிய விஷயத்திற்கே சத்தமாகப் பேசுவார்கள். அதனால் அவர்கள் கடுமையான குணம் கொண்டவர்கள் என்று பலரும் நினைத்துவிடுகிறார்கள். ஆனால் ஜோதிடக் கண்ணோட்டத்தில் பார்த்தால், வெளிப்படையாகக் காட்டும் கோபத்துக்கும், மனதிற்குள் இருக்கும் உண்மையான குணத்துக்கும் பல நேரங்களில் பெரிய வித்தியாசம் இருக்கும். குறிப்பாக நான்கு ராசிக்காரர்கள் வெளியில் கோபக்காரர்களாகத் தெரிந்தாலும், உள்ளுக்குள் மிகவும் மென்மையான மனம் கொண்டவர்களாகக் கருதப்படுகிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அந்தப் பட்டியலில் முதலில் இடம் பெறுவது மேஷ ராசி. இந்த ராசிக்காரர்கள் வேகமாக செயல்படுபவர்கள். சிறிய பிரச்சினை ஏற்பட்டாலும் உடனடியாக கோபத்தை வெளிப்படுத்துவார்கள். ஆனால், அந்த கோபம் நீண்ட நேரம் நீடிக்காது. மனதில் பகையை வைத்துக்கொள்ளாமல், தவறு செய்தவர்களையும் எளிதாக மன்னிக்கும் குணம் இவர்களிடம் காணப்படும்.&lt;/p&gt;&lt;p&gt;இவர்களுக்கு எதிரி நண்பனாகும் யோகம்.. 12 ராசிகளுக்கும் இன்றைய முழு பலன்கள்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அடுத்ததாக சிம்ம ராசியினர். சுயமரியாதைக்கும் நேர்மைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள். தங்களை அவமதித்தாலோ அல்லது பொறுப்பாக எடுத்த வேலையில் தடைகள் ஏற்பட்டதாலோ கோபம் வெளிப்படும். ஆனால் அதே நேரத்தில், பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணமும், அன்பை வெளிப்படுத்தும் மனப்பான்மையும் இவர்களிடம் அதிகமாக இருக்கும். உறவுகளை பலமாக மதிக்கும் குணம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விருச்சிக ராசியினர் வெளிப்படையாக கோபத்தை காட்ட மாட்டார்கள். ஆனால் ஒருமுறை உணர்ச்சிவசப்பட்டால் அதை கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கும். அநீதியை சகித்துக்கொள்ளாத மனநிலையும், தங்களை நம்புபவர்களுக்காக எந்த அளவுக்கும் நிற்கும் உறுதியும் இவர்களின் தனிச்சிறப்பாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேலும், தனுசு ராசியினர் பொய்யையும் வஞ்சகத்தையும் விரும்பாதவர்கள். தவறு நடந்தால் நேருக்கு நேர் கண்டிப்பார்கள். ஆனால் அவர்களின் நோக்கம் யாரையும் காயப்படுத்துவது அல்ல. எனவே, இந்த நான்கு ராசிக்காரர்களின் கோபத்தை மட்டுமே வைத்து அவர்களை மதிப்பிடுவது சரியான அணுகுமுறை அல்ல என்று ஜோதிட நம்பிக்கைகள் கூறுகின்றன. அவர்கள் வெளியில் கடினமாகத் தோன்றினாலும், உள்ளுக்குள் அன்பு, நேர்மை மற்றும் உறவுகளுக்கு மதிப்பு கொடுக்கும் குணம் அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>astrology</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/astrology-says-these-4-zodiac-signs-hide-a-gentle-heart-behind-their-anger-zhzph0w"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Astrology: ஆடி மாதத்தில் கோடிகள் குவியப்போகுது.! 5 ராசிகள் வாழ்வில் இனி சரவெடி.!  ஆடி கார் வாங்கும் யோகம் காத்திருக்கு.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/aadi-month-astrology-2026-5-zodiac-signs-set-for-wealth-success-and-car-purchase-yoga-g7lq4wg</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/aadi-month-astrology-2026-5-zodiac-signs-set-for-wealth-success-and-car-purchase-yoga-g7lq4wg</guid>
            <pubDate>Fri, 03 Jul 2026 07:40:16 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ஆடி மாதம் 16ஆம் தேதி சூரியன் கடக ராசிக்குள் நுழைகிறார். அங்கு ஏற்கனவே உச்சம் பெற்ற குருவுடன் இணைவதால், 5 ராசிக்காரர்களுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம், சொத்து சேர்க்கை போன்ற ராஜயோக பலன்கள் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwjtzpbch97yk2mf5sy8gnq0,imgname-chatgpt-image-jul-3--2026--07-23-30-am--1--1783043709291.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஆடி மாதம் 16ஆம் தேதி சூரியன் கடக ராசிக்குள் நுழைகிறார். அங்கு ஏற்கனவே உச்சம் பெற்ற குருவுடன் இணைவதால், 5 ராசிக்காரர்களுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம், சொத்து சேர்க்கை போன்ற ராஜயோக பலன்கள் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆடி மாதம் பலருக்கும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த காலமாகக் கருதப்படுகிறது. இந்த ஆண்டின் ஆடி மாதத்தில் மிக முக்கியமான ஜோதிட நிகழ்வாக, ஜூலை 16ஆம் தேதி சூரிய பகவான் கடக ராசிக்குள் பெயர்ச்சி அடைகிறார். ஏற்கனவே கடக ராசியில் உச்ச பலத்துடன் அமர்ந்திருக்கும் குரு பகவானுடன் சூரியன் இணைவது சக்திவாய்ந்த ராஜயோக பலன்களை உருவாக்கும் என ஜோதிடர்கள் கருதுகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;சூரியன் அதிகாரம், புகழ், அரசு ஆதரவு, தந்தை, தலைமைத்துவம் ஆகியவற்றைக் குறிக்கிறார். குரு பகவான் செல்வம், அதிர்ஷ்டம், கல்வி, விரிவாக்கம் மற்றும் தெய்வ அருளின் காரகர். இந்த இரு சுப கிரகங்களின் இணைவு சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பணவரவு, தொழில் முன்னேற்றம், சொத்து சேர்க்கை, வாகன யோகம் மற்றும் குடும்ப மகிழ்ச்சியை அதிகரிக்கக்கூடிய காலமாக அமையும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கன்னி ராசிக்காரர்களுக்கு சூரியன்&ndash;குரு இணைவு லாப ஸ்தானத்தை வலுப்படுத்துகிறது. இதனால் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பண வரவுகள் கைக்கு வந்து சேரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். சம்பள உயர்வு, போனஸ் அல்லது எதிர்பாராத வருமானம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;இதுவரை தள்ளிப்போன முதலீட்டு திட்டங்களை தொடங்க ஏற்ற காலம் இது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் முக்கியமான நபர்களின் ஆதரவால் புதிய தொழில் வாய்ப்புகளும் கிடைக்கலாம். சிலருக்கு புதிய இருசக்கர அல்லது நான்கு சக்கர வாகனம் வாங்கும் யோகம் கூட உருவாகும். அதிர்ஷ்ட நேரம் ஆரம்பம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த கிரக அமைப்பு தொழில் வளர்ச்சிக்கு மிகச் சிறந்த பலன்களை அளிக்கும். வேலை தொடர்பான பயணங்கள் வெற்றியைத் தரும். வெளிநாட்டு வேலை அல்லது வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணையும் வாய்ப்பு உருவாகலாம்.&lt;/p&gt;&lt;p&gt;உயர் கல்வி, அரசு தேர்வுகள், சட்ட விவகாரங்கள் போன்றவற்றில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். வருமானம் உயர்வதால் குடும்பத்தின் பொருளாதார நிலை வலுவடையும். நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட கார் அல்லது வாகனம் வாங்கும் எண்ணமும் நிறைவேற வாய்ப்பு உள்ளது. தொட்டதெல்லாம் பொன்னாகப்போகுது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தனுசு ராசிக்காரர்களுக்கு தொழில் ஸ்தானத்தில் சூரியன் மற்றும் குருவின் இணைவு மிகப்பெரிய வளர்ச்சியை ஏற்படுத்தும். பணியிடத்தில் பதவி உயர்வு, புதிய பொறுப்புகள் மற்றும் அங்கீகாரம் கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் மற்றும் லாபகரமான வாய்ப்புகள் கிடைக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த முன்னேற்றம் தற்போது கைகூடும். வங்கிக் கடன் பெற முயற்சித்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கலாம். பொருளாதார நிலை வலுப்பெற்று, புதிய கார், நிலம் அல்லது மதிப்புள்ள சொத்துகளை வாங்கும் வாய்ப்பும் அதிகரிக்கும். காசு, பணம், துட்டு, மணி மணி பாட்ட ஜாலியா பாடலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மகர ராசிக்காரர்களின் வாழ்க்கையில் இருந்த பல தடைகள் இந்த ஆடி மாதத்தில் படிப்படியாக விலகும். தொழில் விரிவாக்கம் செய்ய விரும்புபவர்களுக்கு சிறந்த காலமாக இருக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும்.&lt;/p&gt;&lt;p&gt;மேலதிகாரிகளின் நம்பிக்கையைப் பெற்று முக்கியமான பொறுப்புகள் கிடைக்கும். அரசு தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும். நீதிமன்றம் அல்லது சட்டரீதியான பிரச்சினைகள் இருந்தால் அதிலும் வெற்றி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. குடும்பத்தின் ஆதரவுடன் புதிய வாகனம் அல்லது சொத்து வாங்கும் யோகமும் உருவாகலாம். தொட்டதெல்லாம் பொன்னாகும் காலம் இதுதான்&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மீன ராசிக்காரர்களுக்கு இந்த கிரக இணைவு மிகுந்த அதிர்ஷ்டத்தை வழங்கும். புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;உறவினர்கள் மற்றும் நண்பர்களின் உதவியால் முக்கியமான திட்டங்கள் வெற்றியடையும். ஆன்மீக நாட்டம் அதிகரித்து மன அமைதி கிடைக்கும். பணப் பற்றாக்குறை குறைந்து சேமிப்பு அதிகரிக்கும். சிலருக்கு புதிய கார், வீட்டு உபயோகப் பொருட்கள் அல்லது சொத்து வாங்கும் அதிர்ஷ்டமும் அமையும். இனி வீட்டில் ஜாலியோ ஜாலிதான், சந்தோஷம் கொட்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜோதிட சாஸ்திரத்தில் சூரியன் அதிகாரம், குரு செல்வம் மற்றும் அதிர்ஷ்டத்தை குறிக்கின்றனர். இந்த இரு கிரகங்களின் இணைவு வாழ்க்கையில் வளர்ச்சி, புகழ், பணவரவு மற்றும் உயர்வை அளிக்கும் சக்திவாய்ந்த அமைப்பாக கருதப்படுகிறது. குறிப்பாக ஆடி மாதத்தில் இந்த இணைவு உருவாகுவதால், பலருக்கு புதிய தொடக்கங்கள், தொழில் விரிவாக்கம், வாகன யோகம், சொத்து சேர்க்கை மற்றும் பொருளாதார முன்னேற்றம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த ஐந்து ராசிக்காரர்களும் தினமும் காலை சூரிய உதய நேரத்தில் சூரிய பகவானுக்கு அர்க்கியம் செலுத்துவது மிகவும் சிறந்ததாகும். ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருந்து, &quot;ஓம் சூர்யாய நமஹ&quot; என்ற மந்திரத்தை 108 முறை ஜெபிப்பது நல்ல பலன்களை அதிகரிக்கும் என ஜோதிட நம்பிக்கை கூறுகிறது. மேலும் குரு பகவானின் அருளைப் பெற வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற உடை அணிந்து, கொண்டைக்கடலை அல்லது மஞ்சள் தானம் செய்வதும் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;குறிப்பு: மேற்கண்ட பலன்கள் பொதுவான ராசி அடிப்படையிலான ஜோதிடக் கணிப்புகள் மட்டுமே. ஒருவரின் பிறந்த நேரம், லக்னம், தசா-புத்தி, நவாம்சம் உள்ளிட்ட தனிப்பட்ட ஜாதக அமைப்புகளின் அடிப்படையில் பலன்கள் மாறுபடலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>astrology</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/aadi-month-astrology-2026-5-zodiac-signs-set-for-wealth-success-and-car-purchase-yoga-g7lq4wg"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Astrology: சனி-கேது சேர்க்கை 2026: இந்த 3 ராசிகளின் காட்டில் 'இனி' பண மழை தான்! உங்க ராசி இருக்கா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/shani-ketu-shadashtaka-yog-2026-financial-windfall-for-these-3-zodiac-signs-until-the-year-end-00zfnlt</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/shani-ketu-shadashtaka-yog-2026-financial-windfall-for-these-3-zodiac-signs-until-the-year-end-00zfnlt</guid>
            <pubDate>Fri, 03 Jul 2026 07:34:37 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Shani Ketu Conjunction 2026: சனி-கேது சேர்க்கையால் உருவாகும் ஷடாஷ்டக யோகத்தால் 2026 இறுதி வரை 3 ராசிகளின் காட்டில் பணமழை பொழிய போகிறது. அவை என்னென்ன ராசிகள்? என்பது குறித்து பார்ப்போம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwjv2mczyqmq22hxnhjwqaks,imgname-shani-ketu-conjunction-2026-1783043805599.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Shani Ketu Conjunction 2026: சனி-கேது சேர்க்கையால் உருவாகும் ஷடாஷ்டக யோகத்தால் 2026 இறுதி வரை 3 ராசிகளின் காட்டில் பணமழை பொழிய போகிறது. அவை என்னென்ன ராசிகள்? என்பது குறித்து பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் பெயர்ச்சியும், அவற்றால் ஏற்படும் சேர்க்கைகளும் மனித வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில், தற்போது சனி மற்றும் கேது ஆகிய கிரகங்களின் இணைப்பால் 'ஷடாஷ்டக யோகம்' உருவாகியுள்ளது. இந்த கிரக நிலை வரும் நவம்பர் 2026 இறுதி வரை நீடிக்கும் என்று ஜோதிட நிபுணர்கள் கணிக்கின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;இந்தக் கிரக அமைப்பானது சில ராசிக்காரர்களின் வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தப் போகிறது. குறிப்பாக, மூன்று ராசியினருக்கு தொழில், வியாபாரம் மற்றும் நிதி நிலைகளில் எதிர்பாராத நன்மைகளும் அதிர்ஷ்டமும் கிடைக்கவுள்ளன. அந்த அதிர்ஷ்டப் பிரசாதத்தைப் பெறப்போகும் ராசிகள் எவை என்று கீழே பார்ப்போம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க: &lt;/strong&gt;உயிரே போனாலும் இந்த 5 பேர் வீட்ல சாப்பிடாதீங்க!: https://tamil.asianetnews.com/gallery/astrology/why-not-eat-at-these-5-houses-chanakya-niti-w3lxmx8&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேஷ ராசியினருக்கு இந்த 'ஷடாஷ்டக யோகம்' பல சாதகமான திருப்பங்களைக் கொண்டுவரவுள்ளது. இவர்களின் சுயநம்பிக்கை பலமடங்கு அதிகரிப்பதுடன், கூட்டுத்தொழில் மற்றும் சுயதொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு மற்றும் புதிய பொறுப்புகள் தேடிவரும்.&lt;/p&gt;&lt;p&gt;பொருளாதார ரீதியாகப் பணப்புழக்கம் அதிகரித்து, நிதி நிலைமை சீராகும். புதிய சொத்துக்கள் அல்லது வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபகாரியங்களுக்கான பேச்சுவார்த்தைகளும் கைகூடும். திருமணமானவர்களின் வாழ்வில் அன்யோன்யம் கூடும்; சிங்கிளாக இருப்பவர்களுக்குப் பொருத்தமான வரன் அமைய வாய்ப்புள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பரிகாரம்: &lt;/strong&gt;ஏழை எளியவர்களுக்கு அல்லது துப்புரவுத் தொழிலாளர்களுக்கு உங்களால் இயன்ற உளுந்து கலந்த உணவு அல்லது கருப்பு நிற ஆடைகளைத் தானமாக வழங்கலாம். இது கூடுதல் முன்னேற்றத்தை கொடுக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் பல்வேறு வழிகளில் பண வரவைத் தேடித்தரும். நீண்ட நாட்களாக மனதை வாட்டி வதைத்த குழப்பங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் ஒரு தெளிவான தீர்வு கிடைக்கும். தொழிலில் முதலீடுகளுக்கு ஏத்த இரட்டிப்பு லாபத்தைக் காணலாம்.&lt;/p&gt;&lt;p&gt;பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவோடு உங்கள் திறமைகள் அங்கீகரிக்கப்படும். மாணவர்கள் கல்வி மற்றும் போட்டித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களுடன் சாதனை படைக்க வாய்ப்புள்ளது. ஒட்டுமொத்தமாக உங்கள் லட்சியங்களை நோக்கி எளிதாக முன்னேறும் பொற்காலமாக இது அமையும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பரிகாரம்: &lt;/strong&gt;புதன்கிழமைகளில் பசு மாட்டிற்கு அகத்திக் கீரை அல்லது பச்சைப் பயறு வழங்குவது கல்வியிலும் தொழிலிலும் பெரும் முன்னேற்றத்தைத் தரும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க: &lt;/strong&gt;மகாலட்சுமி யோகத்தால் 'ஓஹோன்னு' வாழப்போகும் 4 ராசிகள்!: https://tamil.asianetnews.com/gallery/astrology/maha-lakshmi-rajayoga-july-2026-4-zodiac-signs-to-get-wealth-and-success-nqpmx59&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தனுசு ராசியினருக்கு நீண்ட நாள் கனவுகளும் ஆசைகளும் நிறைவேறும் காலகட்டமாக இது இருக்கும். சமுதாயத்தில் உங்களுக்கான மதிப்பும் மரியாதையும் அந்தஸ்தும் உயரும். உங்களின் கனிவான பேச்சும் சாதுரியமான நடத்தையும் குடும்பத்தினரிடமும், சுற்றத்தாரிடமும் நல்ல உறவை மேம்படுத்த உதவும்.&lt;/p&gt;&lt;p&gt;குறிப்பாக, வெளிநாட்டுத் தொடர்புகள் மற்றும் ஏற்றுமதி-இறக்குமதி வணிகத்தில் இருப்பவர்களுக்குப் பெருமளவு லாபம் கிடைக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் வருமானம் வருவதற்கான புதிய வாய்ப்புகள் கதவைத் தட்டும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இது மிகவும் சாதகமான நேரமாகும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பரிகாரம்:&lt;/strong&gt; சனிக்கிழமைகளில் அரச மரத்திற்கு அடியில் நல்லெண்ணெய் தீபமேற்றி, காகங்களுக்கு சமைத்த சாதத்தில் கொஞ்சம் கருப்பு எள் கலந்து வைப்பது கேது மற்றும் சனியின் தோஷங்களை நீக்கி நன்மைகளைத் தரும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>astrology</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/shani-ketu-shadashtaka-yog-2026-financial-windfall-for-these-3-zodiac-signs-until-the-year-end-00zfnlt"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Pancha Mahapurusha Yoga: அள்ளிக்கொடுக்கும் பஞ்ச மகாபுருஷ யோகம்.! 3 ராசிகளுக்கு காசு, பணம் கொட்ட போகுது.! சக்சஸ் ஆரம்பம்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/pancha-mahapurusha-yoga-money-wealth-to-pour-in-for-3-zodiac-signs-success-journey-begins-fnkwuzf</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/pancha-mahapurusha-yoga-money-wealth-to-pour-in-for-3-zodiac-signs-success-journey-begins-fnkwuzf</guid>
            <pubDate>Fri, 03 Jul 2026 06:38:23 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ஜோதிடத்தின் பஞ்ச மகாபுருஷ யோகத்தால் மூன்று ராசிகளுக்கு ஜூலை முதல் ராஜயோகம் தொடங்குகிறது. இந்த யோகத்தின் பலனாக, இந்த ராசியினர் பணம், பதவி, மற்றும் தொழில் வெற்றியைப் பெற்று, வாழ்வில் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைய உள்ளனர்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwjqz2hwkfwy5s5k8w702vy4,imgname-chatgpt-image-jul-3--2026--06-31-20-am--1--1783040543292.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஜோதிடத்தின் பஞ்ச மகாபுருஷ யோகத்தால் மூன்று ராசிகளுக்கு ஜூலை முதல் ராஜயோகம் தொடங்குகிறது. இந்த யோகத்தின் பலனாக, இந்த ராசியினர் பணம், பதவி, மற்றும் தொழில் வெற்றியைப் பெற்று, வாழ்வில் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைய உள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜோதிட சாஸ்திரத்தில் ஒருவரை அடிமட்ட நிலையிலிருந்து ராஜாதி ராஜ நிலைக்கு உயர்த்தும் வல்லமை கொண்டது பஞ்ச மகாபுருஷ யோகம் ஆகும். நவகிரகங்களில் சூரியன், சந்திரன் மற்றும் நிழல் கிரகங்களான ராகு-கேதுக்களைத் தவிர்த்து, மற்ற 5 முக்கிய கிரகங்களான செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகியவை கேந்திர ஸ்தானங்கள் எனப்படும் 1, 4, 7, 10 ஆகிய வீடுகளில் ஆட்சி அல்லது உச்சம் பெற்று அமையும் போது இந்த யோகம் உண்டாகிறது. இது கொடுக்கும் காலம் எனவும் கொடைகாலம் எனவும் சொல்லப்படுகிறது. இந்த காலத்தில் சும்மா இருந்தால் கூட பணமு்ம பதவியும் சந்தோஷமும் உங்களை வந்தடையும் என்கின்றனர் ஜோதிடர்கள்.&lt;/p&gt;&lt;p&gt;செவ்வாயால் ருசக யோகமும், புதனால் பத்ர யோகமும், குருவால் ஹம்ச யோகமும், சுக்கிரனால் மாளவ்ய யோகமும், சனியால் சச யோகமும் உருவாகின்றன. தற்போதைய கோச்சார கிரக நிலைகளின்படி விருச்சிகம், கும்பம், கடகம் ஆகிய 3 ராசிகளுக்கு இந்த பஞ்ச மகாபுருஷ யோகத்தின் பலன்கள் முழுமையாகக் கிடைத்து, காசு பணம் கொட்டப்போவதோடு, வாழ்க்கையில் புதிய சக்சஸ் ஆரம்பமாகப் போகிறது என்றால் அது மிகையல்ல!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நீங்க விருச்சிக ராசியா? அப்போ ஜூலை முதல் வாரத்தில் இருந்து அதிர்ஷ்ட காற்று வீசப்போகிறது. &amp;nbsp;விருச்சிக ராசிக்கு அதிபதியான செவ்வாய் மற்றும் கர்ம காரகனான சனி பகவானின் சாதகமான அமைப்பால், இந்த ராசியினருக்குப் பஞ்ச மகாபுருஷ யோகத்தின் பலன்கள் அதிரடியாகக் கிடைக்கத் தொடங்குபோகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பண வரவு மற்றும் சொத்து சேர்க்கை&lt;/strong&gt;: நீண்ட நாட்களாக முடங்கிக் கிடந்த பணம் கைக்கு வந்து சேரும். ரியல் எஸ்டேட், பூமி சேர்க்கை, புதிய வீடு அல்லது நிலம் வாங்கும் யோகம் கைகூடும் என்பதால் அதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம் . விருச்சிக ராசியினருக்கு தொழிலில் எதிர்பார்த்ததை விட இரட்டிப்பு லாபம் கிடைக்கும் எனவும் ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;தொழில் வெற்றி&lt;/strong&gt;: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகளும், பெரிய பதவிகளும் திடீரென தேடி வரும். எதிர்ப்புகள் யாவும் தவிடுபொடியாகி காணாமல் போகும். உங்களின் தைரியமும், நிர்வாகத் திறனும் உங்களை வெற்றியின் உச்சத்துக்கே கொண்டு செல்லும் என ஜோதிட நூல்கள் அடித்து கூறுகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நீங்க கடக ராசியா? அப்போ உங்களுக்கு லாட்டரி சீட்டு போல ஜாக்பாட் அடிக்க போகுது. உடல், மனம் மற்றும் பொருளாதாரத்தில் நல்ல ஆரோக்கியமான முன்னேற்றம் இருக்கும். சந்தோஷம் பொங்கும். செல்வம் குவியும். பிரிந்த உறவுகள் சேர்வார்கள். கைகளில் காசு புழங்கியபடியே இருக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;ஜூலை இரண்டாவது வாரத்தில் இருந்து கடக ராசி நேயர்களுக்குக் குரு பகவான் உச்சம் பெற்று 'ஹம்ச யோகத்தை' உருவாக்குவதாலும், சுக்கிரனின் அருளாலும் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படப் போகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பொருளாதார உச்சம்&lt;/strong&gt;: பல வழிகளில் இருந்தும் வருமானம் வந்து குவியும் நேரம் வந்துவிட்டது. தடைப்பட்டுக் கொண்டிருந்த சுபகாரியங்கள், திருமணப் பேச்சுகள் நல்லபடியாக முடியும். ஆன்மீகப் பயணங்கள் மூலம் மன அமைதியும், கௌரவமும் அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்கள் மற்றும் உடன் பணியாற்றுவோர் உங்களுக்கு சாதகமாக இருப்பர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பதவி உயர்வு&lt;/strong&gt;: அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதாக உடனே கிடைக்கும். உத்தியோகத்தில் சம்பள உயர்வுடன் கூடிய இடமாற்றம் சாதகமாக அமையும். &amp;nbsp;பிடித் இடத்தில் பிடித்த வேலை கிடைக்கும் வியாபாரத்தில் புதிய உத்திகளைக் கையாண்டு போட்டியாளர்களை வென்று காட்டுவீர்கள். இனி உங்களுக்கு வெற்றி முகம்தான்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நீங்க கும்ப ராசியா? அப்படீன்னா உங்களுக்கு நல்லகாலம் தொடங்கியாச்சு. இனிய செய்திகள், சந்தோஷ வெற்றிகள், தொழில் முன்னேற்றண் ஆகியவை இனி உங்களுக்கே.&lt;/p&gt;&lt;p&gt;கும்ப ராசியின் அதிபதியான சனி பகவான் தன் சொந்த வீடான கும்பத்திலேயே அமர்ந்து 'சச யோகத்தை' தருவதோடு, சுக்கிரனின் சுப பார்வையும் இணைவதால் இவர்களுக்குப் பொற்காலம் தொடங்குகிறது. தொழில் தொடங்கினால் &amp;nbsp;வெற்றி கிடைக்கும். நிலம், வீடு, தோட்டம் வாங்க வாய்ப்பு வரும். நண்பர்கள், உறவினர்கள் தானாக வந்து உதவி செய்வர். நீங்களும் உங்களுக்கு பிடித்தவர்களை தேடிச்சென்று உதவி செய்வீர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பண மழை பொழியும்:&lt;/strong&gt; காசு, பணத்திற்கு இனி தட்டுப்பாடே இருக்காது. கடன் காணாமல் போகும் புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றி அடையும். தொடங்கும் தொழில் அனைத்தும் பெருத்த லாபத்தைத் தரும். பழைய கடன்கள் அனைத்தும் அடைபட்டு நிம்மதி பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவம் ஆடும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஆடம்பர வாழ்க்கை&lt;/strong&gt;: வாகன யோகம், ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். சமுதாயத்தில் பெரிய மனிதர்களின் நட்பு கிடைத்து, அந்தஸ்து உயரும் நிலை ஏற்படும். கூட்டு வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடப் பெரிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மொத்தத்தில் இந்த ஜூலை இரண்டாவது தொடங்கும் அதிர்ஷ்டத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டால் வாழ்வில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒருவருடைய ஜாதகத்தில் இந்த பஞ்ச மகாபுருஷ யோகங்களில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட யோகங்கள் அமைந்திருந்தால், அவர்கள் அரசனைப் போன்ற வாழ்க்கையை வாழ்வார்கள் என்று பண்டைய நூல்கள் கூறுகின்றன. இந்த யோகங்கள் தற்காலிகமாக ஜாதகத்தில் அமையாதவர்கள் கூட, தங்களின் நன்னடத்தை மற்றும் கடின உழைப்பால் கஜகேசரி யோகம், புதாதித்ய யோகம் போன்ற மற்ற ராஜயோகங்களின் பலன்களைப் பெற முடியும். தற்போது இந்த 3 ராசிகளுக்கும் அதிர்ஷ்டக் காற்று பலமாக வீசுவதால், சுறுசுறுப்புடன் உழைத்தால் காசு, பணத்துடன் வாழ்க்கையில் மிகப்பெரிய சிகரத்தை எட்டலாம்!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>astrology</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/pancha-mahapurusha-yoga-money-wealth-to-pour-in-for-3-zodiac-signs-success-journey-begins-fnkwuzf"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Horoscope Today: இவர்களுக்கு எதிரி நண்பனாகும் யோகம்.. 12 ராசிகளுக்கும் இன்றைய முழு பலன்கள்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/today-rasi-palan-03-july-2026-enemy-becomes-friend-for-these-zodiac-signs-kgiqs5i</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/today-rasi-palan-03-july-2026-enemy-becomes-friend-for-these-zodiac-signs-kgiqs5i</guid>
            <pubDate>Fri, 03 Jul 2026 06:33:08 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Horoscope Today: இன்றைய நாள் சில ராசிகளுக்கு எதிர்பாராத நல்ல மாற்றங்களையும், சிலருக்கு முக்கிய முடிவுகளையும் கொண்டு வரலாம். எதிரியாக இருந்தவர் கூட நண்பனாக மாறும் யோகம் யாருக்கு இருக்கிறது? உங்கள் ராசிக்கான பலனை தெரிந்துகொள்ளுங்கள்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kvs69gb4nkr8v3yqaahrg5sm,imgname-horoscope-23rd-june-2026-1782183149924.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Horoscope Today: இன்றைய நாள் சில ராசிகளுக்கு எதிர்பாராத நல்ல மாற்றங்களையும், சிலருக்கு முக்கிய முடிவுகளையும் கொண்டு வரலாம். எதிரியாக இருந்தவர் கூட நண்பனாக மாறும் யோகம் யாருக்கு இருக்கிறது? உங்கள் ராசிக்கான பலனை தெரிந்துகொள்ளுங்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வேலை, தொழில், பணவரவு, குடும்பம், காதல் என ஒவ்வொரு ராசிக்கும் இன்று வெவ்வேறு பலன்கள் காத்திருக்கின்றன. ஜூலை 3 வெள்ளிக்கிழமை உங்கள் ராசி என்ன சொல்லுகிறது என்பதை தவறாமல் படியுங்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வேலை பார்க்கும் இடத்தில் முக்கிய டாக்குமென்ட்ஸ் விஷயத்தில் கவனமாக இருங்க. வருமானம் போதுமானதாக இருக்காது. குடும்பத்தில் பெரியவங்களோட உடல்நிலையில் எச்சரிக்கை தேவை. வெளிநாடு போக வாய்ப்பு இருக்கு. கோவில், சேவை நிகழ்ச்சிகளில் கலந்துக்குவீங்க. வேலை இல்லாதவங்களுக்கு முயற்சிகள் கொஞ்சம் மெதுவாகவே நடக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தொழில், வேலையில் அதிகாரிகளுடன் சண்டை சச்சரவைத் தவிர்ப்பது நல்லது. பயணங்கள் தள்ளிப்போகும். எடுத்த வேலைகள் சரியான நேரத்தில் முடியாமல் டென்ஷன் அதிகமாகும். பண விஷயங்கள் உங்களை ஏமாற்றமடையச் செய்யும். புதிய தொழில்களில் முதலீடு செய்வதற்கு முன் யோசிப்பது நல்லது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நெருங்கிய நண்பர்களிடமிருந்து புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்வீர்கள். உறவினர்கள், நண்பர்களின் வருகை உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கொஞ்சம் கவனமாக இருங்க. வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொழில், வேலையில் சாதகமான சூழல் அதிகரிக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வராமல் இருந்த கடன் பாக்கிகள் வசூலாகும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். எதிரிகள் கூட நண்பர்களாக மாறி உங்களுக்கு உதவி செய்வார்கள். சமூகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். வேலையில் உங்கள் திறமையால் அதிகாரிகளைக் கவர்வீர்கள். வியாபாரம் லாபகரமாக நடக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முக்கியமான விஷயங்களில் பெரியவர்களின் ஆலோசனையைக் கேட்டு முடிவெடுப்பது நல்லது. கோவில், சேவை நிகழ்ச்சிகளுக்குப் பணம் செலவு செய்வீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவதில் தடைகள் ஏற்படும். வேலை இல்லாதவங்களுக்கு முயற்சிகள் ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். சின்ன வயசு நண்பர்களுடன் விருந்து, விழாக்களில் கலந்து கொள்வீர்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எடுத்த வேலைகளை சரியான நேரத்தில் முடிப்பீர்கள். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள். கோவில், சேவை நிகழ்ச்சிகளில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரம் லாபப் பாதையில் செல்லும். மற்றவர்களுக்குப் பணம் சம்பந்தமாக வாக்கு கொடுக்கும் முன், கொஞ்சம் யோசித்து செயல்படுவது நல்லது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;புதிய தொழில் தொடங்குவதில் தடைகள் இருக்கும். சகோதரர்களுடன் சொத்துத் தகராறுகள் ஏற்படலாம். வீட்டிலும் வெளியிலும் உங்கள் சொல்லுக்கு மதிப்பு குறையும். வாழ்க்கைத்துணையுடன் கோவிலுக்குச் சென்று வருவீர்கள். வியாபார விஷயங்கள் கொஞ்சம் மெதுவாகவே நடக்கும். தொழில், வேலையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பொருளாதார நிலைமை குழப்பமாக இருக்கும். தேவையில்லாத செலவுகள் விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருங்க. உடல்நலப் பிரச்சினைகள் உங்களை தொந்தரவு செய்யும். கோவில், சேவை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வேலையில் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை சாதகமாக இருக்காது. வேலை இல்லாதவங்களுக்கு முயற்சிகள் மெதுவாகவே நடக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குடும்ப உறுப்பினர்களிடமிருந்து எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வேலை இல்லாதவர்கள் பெரியவர்களின் ஆசியுடன் புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். தூரப் பயணங்கள் லாபகரமாக அமையும். தொழில், வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தி லாபம் பார்ப்பீர்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தொழில், வேலையில் அதிகாரிகளுடனான பிரச்சினைகள் உங்களுக்கு டென்ஷனை கொடுக்கும். நிதி நெருக்கடிகளைச் சமாளிப்பீர்கள். நீண்டகால கடன் அழுத்தம் அதிகரிக்கும். தூரப் பயணங்கள் தள்ளிப்போகும். கோவில், சேவை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பிள்ளைகளின் கல்வி, வேலை முயற்சிகள் உங்களை ஏமாற்றமடையச் செய்யும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தொழில், வியாபாரம் ஓரளவுக்கு சாதகமாக நடக்கும். அரசியல் சார்ந்த நபர்களிடம் அரிதான அழைப்புகள் வரும். சின்ன வயசு நண்பர்களிடமிருந்து தேவைக்கு பண உதவி கிடைக்கும். எடுத்த வேலைகள் சரியான நேரத்தில் முடியும். வேலையில் எதிர்பார்த்த மாற்றங்கள் இருக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முக்கியமான விஷயங்களில் உழைப்பு அதிகமாக இருக்கும். வேலை இல்லாதவர்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தூரப் பயணங்களில் அவசரம் வேண்டாம். தொழில், வியாபாரத்தில் சொந்த யோசனைகளைச் செயல்படுத்துவீர்கள். வேலையில் உடன் வேலை பார்ப்பவர்களுடன் சண்டையைத் தவிர்க்கவும். பண நிலைமை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>astrology</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/today-rasi-palan-03-july-2026-enemy-becomes-friend-for-these-zodiac-signs-kgiqs5i"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Saturn Transit 2026: சனியின் வக்ர ஆட்டம்! இனி இவங்கதான் டாப்! கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/saturn-retrograde-2026-these-4-zodiac-signs-will-become-super-rich-now-5gezz4s</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/saturn-retrograde-2026-these-4-zodiac-signs-will-become-super-rich-now-5gezz4s</guid>
            <pubDate>Thu, 02 Jul 2026 21:24:47 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;நாம் செய்யும் நற்செயல்களுக்கும், தீய செயல்களுக்கும் ஏற்ப பலன்களை வழங்குவதில் இவர் மிகவும் துல்லியமானவர். யாராக இருந்தாலும் நடுநிலையாக நின்று பலன் தருவதால் இவரை &quot;கர்ம வினைத் தீர்ப்பாளர்&quot; என்று ஜோதிடம் கூறுகிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwhrbmrbbdwn486e6f61q7rw,imgname-zodiac-signs-4-1783007400714.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;நாம் செய்யும் நற்செயல்களுக்கும், தீய செயல்களுக்கும் ஏற்ப பலன்களை வழங்குவதில் இவர் மிகவும் துல்லியமானவர். யாராக இருந்தாலும் நடுநிலையாக நின்று பலன் தருவதால் இவரை &quot;கர்ம வினைத் தீர்ப்பாளர்&quot; என்று ஜோதிடம் கூறுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சனி பகவானை 'மந்த காரகன்' என்றும் 'நீதிமான்' என்றும் அழைப்பார்கள். நாம் செய்யும் நற்செயல்களுக்கும், தீய செயல்களுக்கும் ஏற்ப பலன்களை வழங்குவதில் இவர் மிகவும் துல்லியமானவர். யாராக இருந்தாலும் நடுநிலையாக நின்று பலன் தருவதால் இவரை &quot;கர்ம வினைத் தீர்ப்பாளர்&quot; என்று ஜோதிடம் கூறுகிறது. இந்நிலையில் ஜூலை மாதத்தில் ஒரு முக்கிய கிரக மாற்றம் நிகழவுள்ளது. அதன்படி, 2026 ஜூலை 27 முதல் சனிபகவான் மீன ராசியில் 'வக்ர கதி' அடைந்து பயணிக்கத் தொடங்குகிறார். பொதுவாக சனி வக்ரம் அடையும் போது அதிக ஆற்றல் மிக்கவராக மாறுவார். இந்த வக்ர பெயர்ச்சி அனைத்து ராசிகளின் தொழில், நிதி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், குறிப்பாக 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித்தரப்போகிறார். அந்த அதிர்ஷ்ட ராசிகள் என்ன என்று பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த சனி வக்ர பெயர்ச்சி சனிபகவானின் முழுமையான ஆசியைப் பெற்றுத் தரவுள்ளது. எதிர்பாராத பண வரவும், திடீர் நிதி ஆதாயங்களும் உண்டாகும். புதிய முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலை அடுத்த கட்டத்திற்கு விரிவுபடுத்த நினைப்பவர்களுக்கு இது ஏற்ற காலம். நீண்ட நாட்களாகத் திட்டமிட்டுக் கொண்டிருந்த தூரத்துப் பயணங்களை இப்போது மேற்கொள்வீர்கள். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு நல்ல செய்திகள் தேடி வரும். குடும்பத்தில் அமைதியும், கணவன்-மனைவி இடையே அன்யோன்யமும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதால், சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மிதுன ராசிக்காரர்களுக்குச் சனியின் வக்ர நிலை மங்களகரமான பலன்களையும், அசாத்திய தைரியத்தையும் கொடுக்கும். உங்களின் ஆளுமையும், தன்னம்பிக்கையும் பல மடங்கு அதிகரிக்கும். எந்தவொரு சவாலான காரியத்தையும் துணிச்சலோடு செய்து முடித்து லாபம் காண்பீர்கள். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் அல்லது அலுவலகத்தில் இடமாற்றம் (Job Change) பெற நினைப்பவர்களுக்கும் சாதகமான சூழல் அமையும். குடும்பத்தினரின் முழு ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். குறிப்பாக, வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களின் கனவு இந்த காலகட்டத்தில் நனவாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;துலாம் ராசிக்காரர்களின் வாழ்வில் இருந்த இருள் மறைந்து, வசந்த காலம் தொடங்கப் போகிறது. நீண்ட நாட்களாக உங்களை வாட்டி வதைத்த பணப் பிரச்சனைகள் மற்றும் கடன் தொல்லைகள் முடிவுக்கு வரும். எதிர்பார்த்ததை விடவும் பொருளாதார ரீதியாகப் பெரிய முன்னேற்றம் இருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள் மற்றும் வியாபாரிகளுக்குப் புதிய ஆர்டர்கள் கிடைத்து, அதிக லாபத்தை ஈட்டுவீர்கள். நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். மன அழுத்தங்கள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கைத்துணைக்கு ஆச்சரியமான பரிசுகளை வழங்கி மகிழ்விப்பீர்கள். நண்பர்களுடன் இன்ப உல்லாசப் பயணங்கள் செல்ல வாய்ப்புகள் கூடி வரும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர பெயர்ச்சி வாழ்வில் பல நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது. நீண்ட நாட்களாக வீடு, மனை அல்லது புதிய வாகனம் வாங்க வேண்டும் என்ற உங்கள் கனவு இந்த காலகட்டத்தில் தடையின்றி நிறைவேறும். சமுதாயத்திலும் நீங்கள் வேலை செய்யும் இடத்திலும் உங்களுடைய புகழும் அந்தஸ்தும் உயரும். உங்களின் தைரியமும் வீரியமும் கூடும். அலுவலகத்தில் உங்களுக்குப் புதிய பொறுப்புகளும், பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் பெரிய முதலீடுகள் மூலம் அசுர லாபம் ஈட்டுவீர்கள். உடல் ஆரோக்கியம் மிகச் சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்களாக வீடு, மனை அல்லது புதிய வாகனம் வாங்க வேண்டும் என்ற உங்கள் கனவு இந்த காலகட்டத்தில் தடையின்றி நிறைவேறும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>astrology</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/saturn-retrograde-2026-these-4-zodiac-signs-will-become-super-rich-now-5gezz4s"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Chanakya Niti: உயிரே போனாலும் இந்த 5 பேர் வீட்ல சாப்பிடாதீங்க! சாணக்கியர் எச்சரிப்பது ஏன்?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/why-not-eat-at-these-5-houses-chanakya-niti-w3lxmx8</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/why-not-eat-at-these-5-houses-chanakya-niti-w3lxmx8</guid>
            <pubDate>Thu, 02 Jul 2026 19:45:24 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Chanakya Niti: சாணக்கிய நீதி படி, &amp;nbsp;உயிர்போகும் நிலை வந்தால் கூட சில பேர் வீட்டில் சாப்பிடக் கூடாதாம். அப்படி சாப்பிட்டால் என்ன ஆகும்? அந்த 5 பேர் யார்? வாங்க பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwhbfbnakv8115m905p6yr8n,imgname-chatgpt-image-jul-2--2026--05-34-02-pm-1782993890985.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Chanakya Niti: சாணக்கிய நீதி படி, &amp;nbsp;உயிர்போகும் நிலை வந்தால் கூட சில பேர் வீட்டில் சாப்பிடக் கூடாதாம். அப்படி சாப்பிட்டால் என்ன ஆகும்? அந்த 5 பேர் யார்? வாங்க பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உணவை நாம் தெய்வீகமாக பார்க்கிறோம். யாராவது கூப்பிட்டு சாப்பாடு போட்டால் இல்லை அன்னதானம் செய்தால் அதை நாம தெய்வ பிரசாதமாக நினைச்சு வாங்கி சாப்பிடுவோம். ஆனால் சாணக்கியர் என்ன சொல்றாருன்னா, 5 பேர் கையால மட்டும் சாப்பாடு வாங்கவே கூடாதாம். அப்படி என்னதான் காரணம்? அந்த 5 பேர் யார்? அவங்க வீட்ல ஏன் சாப்பிடக் கூடாது? சாணக்கியர் சொன்னதை இப்ப பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நேர்மை இல்லாதவங்க வீட்டில் நாம் சாப்பிடக் கூடாது. தில்லுமுல்லு, அநியாயம், அதர்மம் செய்து சம்பாதிக்கிறவங்க வீட்டில் தெரியாம கூட சாப்பிடக் கூடாதாம். பசியால வாடினாலும் சரி, இந்த மாதிரி வீடுகளில் சாப்பிடறது நல்லது இல்லை என்று சாணக்கியர் சொல்கிறார். அவங்க கையால சாப்பாடு வாங்கினால் அவங்களோட பாவத்தில் நமக்கும் பங்கு வந்து சேரும்னு சொல்றாங்க.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மனுஷங்களுக்கு கோபம் வர்றது சகஜம்தான். ஆனால் நேரம் காலம் பார்க்காம எல்லார் மேலயும் கோபத்தைக் காட்டி, வாய்க்கு வந்தபடி திட்றவங்க வீட்ல சாப்பிடறது நல்லதே இல்லைன்னு சாணக்கியர் சொல்கிறார். ஏன் என்றால் இவங்க சாப்பாடு போடுற பேர்ல மத்தவங்களை அவமானப்படுத்துவாங்க. இந்த மாதிரி ஆட்கள் வீட்ல சாப்பிட்டால் அந்த சாப்பாடு நம்ம உடம்புக்கும் ஒத்துக்காது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;நாத்திகர் வீடு&lt;/strong&gt;: க&zwnj;டவுளை நம்பாத, பூஜைகள் செய்யாத வீட்டில் சாப்பிடக் கூடாது. வேதங்களை அவமதிப்பவர்கள், தர்மத்தை பின்பற்றாதவர்கள் வீட்டில் சாப்பிடுவது எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;விருந்தினரை மதிக்காதவர் வீடு:&lt;/strong&gt; 'விருந்தினர் கடவுளுக்கு சமம்' என்பது நம்ம ஊர் பழமொழி. ஆனால் வீட்டுக்கு வர்றவங்களை மதிக்காமல் அவமானப்படுத்துறவங்க வீட்டில் சாப்பிடறது நல்லதல்ல. அவங்க கூப்பிட்டாலும் போகக் கூடாது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;வட்டிக்கு பணம் கொடுப்பவர் வீடு: &lt;/strong&gt;வட்டிக்கு பணம் கொடுத்து மக்களை கஷ்டப்படுத்துறவங்க வீட்டில் சாப்பிடக் கூடாதுன்னு சாணக்கியர் சொல்றார். ஏன்னா, அது நியாயமில்லாத வழியில சம்பாதிச்ச பணம். அந்த பாவப் பணத்துல செஞ்ச சாப்பாட்டை சாப்பிட்டா, அந்த பாவத்துல நமக்கும் பங்கு கிடைச்சிடும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>astrology</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/why-not-eat-at-these-5-houses-chanakya-niti-w3lxmx8"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Name Numerology Calculator: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.! நீங்க எந்த துறையில் முதலீடு செய்தால் பெரிய ஆளா வருவீங்கன்னு நாங்க சொல்றோம்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/name-numerology-calculator-best-business-options-for-birth-numbers-1-to-9-according-to-numerology-for-wealth-and-success-8l4zsro</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/name-numerology-calculator-best-business-options-for-birth-numbers-1-to-9-according-to-numerology-for-wealth-and-success-8l4zsro</guid>
            <pubDate>Thu, 02 Jul 2026 17:26:09 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Name Numerology Calculator: எண் கணிதத்தின்படி ஒருவருடைய பிறந்த தேதி அவர்களின் குணாதிசயங்களையும், அவர்களுக்கு எந்தத் துறையில் முதலீடு செய்தால் அதிக லாபமும் அதிர்ஷ்டமும் கிடைக்கும் என்பதையும் தீர்மானிக்கிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwh9dck4q83gejpjd2sg59nx,imgname-name-numerology-calculator---2-1782991729252.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Name Numerology Calculator: எண் கணிதத்தின்படி ஒருவருடைய பிறந்த தேதி அவர்களின் குணாதிசயங்களையும், அவர்களுக்கு எந்தத் துறையில் முதலீடு செய்தால் அதிக லாபமும் அதிர்ஷ்டமும் கிடைக்கும் என்பதையும் தீர்மானிக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நம் அனைவருக்குமே பிறரிடம் கைகட்டி வேலை பார்க்காமல் சொந்தமாக தொழில் செய்து முன்னேற வேண்டும் என்கிற ஆசை இருக்கும். ஆனால் சிலருக்கு சொந்த தொழில் கை கொடுப்பதில்லை. தொழிலில் அதிக நஷ்டத்தை சந்திப்பார்கள். அதற்கு அவர்கள் பிறந்த தேதியும் ஒரு காரணமாக அமைகிறது. ஒருவரின் பிறந்த தேதியின்படி யார் என்ன தொழில் செய்தால் நல்ல லாபத்தை ஈட்ட முடியும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மூல எண் 1-ல் பிறந்தவர்களை சூரிய பகவான் ஆட்சி செய்கிறார். இவர்களது குணம் - தலைமைப்பண்பு, தைரியம், புதிய முயற்சிகள். இவர்கள் அரசு பத்திரங்கள் (Government Bonds), தங்கம், மற்றும் வெள்ளி, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Solar/Renewable Energy) சார்ந்த பங்குகள், பிசினஸில் புதிய ஸ்டார்ட்-அப்களில் (Start-ups) ஆகியவற்றில் முதலீடு செய்யலாம்.&lt;/p&gt;&lt;p&gt;முக்கிய குறிப்பு: இவர்கள் பிறரை நம்பி முதலீடு செய்யாமல், சொந்தமாக ஆராய்ந்து முதலீடு செய்வது நல்ல லாபத்தைத் தரும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மூல எண் 2-ல் பிறந்தவர்களை சந்திர பகவான் ஆட்சி செய்கிறார். இவர்களது குணம் - கற்பனைத்திறன், அமைதி, ஏற்ற இறக்கங்கள் நிறைந்த மனநிலை. இவர்கள் திரவப் பொருட்கள் சார்ந்த தொழில்கள் (பால், பலசரக்கு, ரசாயனம், அல்லது மெடிக்கல்), விவசாய நிலங்கள் அல்லது நீர்நிலை சார்ந்த சொத்துக்கள், கலை, சினிமா மற்றும் ஊடகத்துறை சார்ந்த பங்குகள் ஆகியவற்றில் முதலீடு செய்யலாம்.&lt;/p&gt;&lt;p&gt;முக்கிய குறிப்பு: பங்குச்சந்தையில் தினசரி வர்த்தகம் செய்வதைத் தவிர்த்து, நீண்ட கால முதலீடுகளை தேர்வு செய்வது பாதுகாப்பானது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மூல எண் 3-ல் பிறந்தவர்களை குரு பகவான் ஆட்சி செய்கிறார். இவர்களது குணம் - அறிவுக்கூர்மை, ஆன்மீகம், நேர்மை. இவர்கள் கல்வி நிறுவனங்கள், புத்தக வெளியீடு, மற்றும் பயிற்சி மையங்கள். பரஸ்பர நிதிகள் (Mutual Funds) மற்றும் வங்கி நிலையான வைப்புத்தொகை (FD), தங்கம் மற்றும் மஞ்சள் நிறப் பொருட்கள் ஆகியவற்றில் முதலீடு செய்யலாம்.&lt;/p&gt;&lt;p&gt;முக்கிய குறிப்பு: இவர்களின் அறிவுசார்ந்த முதலீடுகள் எப்பொழுதும் நஷ்டமடையாது. திட்டமிட்ட முதலீடுகள் பெரும் லாபத்தை தரும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மூல எண் 4-ல் பிறந்தவர்களை ராகு பகவான் ஆட்சி செய்கிறார். இவர்களது குணம் - திடீர் மாற்றங்கள், புதுமையான சிந்தனை, ரிஸ்க் எடுப்பது. இவர்கள் தகவல் தொழில்நுட்பம் (IT), மென்பொருள் (Software), மற்றும் கிரிப்டோகரன்சி (Crypto), பழைய வாகனங்கள் வாங்குதல்/விற்றல் அல்லது ஆட்டோமொபைல் துறை, பங்குச்சந்தை ஆகியவற்றில் முதலீடு செய்யலாம்.&lt;/p&gt;&lt;p&gt;முக்கிய குறிப்பு: பேராசைப்பட்டு பங்குச்சந்தையில் அதிகப் பணத்தை இழக்க வாய்ப்புள்ளது. நிதானமும், நிபுணர்களின் ஆலோசனையும் அவசியம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மூல எண் 5-ல் பிறந்தவர்களை புதன் பகவான் ஆட்சி செய்கிறார். இவர்களது குணம் - வியாபார புத்தி, தகவல் தொடர்பு, வேகமான முடிவுகள். இவர்கள் பங்குச்சந்தை (Stock Market) மற்றும் கமாடிட்டி (Commodity trading), வர்த்தக ரீதியான ரியல் எஸ்டேட் (Commercial Real Estate), விளம்பரம், ஆன்லைன் வணிகம் (E-commerce), மற்றும் லாஜிஸ்டிக்ஸ் ஆகியவற்றில் முதலீடு செய்யலாம்.&lt;/p&gt;&lt;p&gt;முக்கிய குறிப்பு: எண்களோடு விளையாடுவதில் இவர்கள் கெட்டிக்காரர்கள் என்பதால் எண்கள் தொடர்பான தொழில்கள் இவர்களுக்குப் லாபத்தைக் கொடுக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மூல எண் 6-ல் பிறந்தவர்களை சுக்கிர பகவான் ஆட்சி செய்கிறார். இவர்களது குணம் - ஆடம்பரம், கலைநயம், அழகுணர்வு. இவர்கள் சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகள் (Luxury Real Estate), ஆடை, ஆபரணங்கள், அழகு சாதனப் பொருட்கள் (Cosmetics) மற்றும் ஹோட்டல் துறை, பொழுதுபோக்கு மற்றும் வடிவமைப்பு (Interior Designing) சார்ந்த தொழில்கள் ஆகியவற்றில் முதலீடு செய்யலாம்.&lt;/p&gt;&lt;p&gt;முக்கிய குறிப்பு: பெண்களைக் கவரும் மற்றும் ஆடம்பரப் பொருட்கள் சார்ந்த முதலீடுகள் இவர்களுக்கு அசுர வளர்ச்சியைத் தரும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மூல எண் 7-ல் பிறந்தவர்களை கேது பகவான் ஆட்சி செய்கிறார். இவர்களது குணம் - ஆராய்ச்சி மனப்பான்மை, ஆன்மீகம், தனிமை. இவர்கள் மருந்து உற்பத்தி (Pharmaceuticals) மற்றும் மருத்துவக் காப்பீடுகள், ஆன்மீகப் பொருட்கள், யோகா, மற்றும் இயற்கை மருத்துவம் சார்ந்த துறைகள், நிலத்தடி பொருட்கள் மற்றும் சுரங்கத்துறை ஆகியவற்றில் முதலீடு செய்யலாம்.&lt;/p&gt;&lt;p&gt;முக்கிய குறிப்பு: குறுக்கு வழி முதலீடுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நீண்ட கால அரசு திட்டங்கள் இவர்களுக்கு நல்லது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மூல எண் 8-ல் பிறந்தவர்களை சனி பகவான் ஆட்சி செய்கிறார். இவர்களது குணம் - கடின உழைப்பு, பொறுமை, தாமதமான வெற்றி. இவர்கள் ரியல் எஸ்டேட், நிலம், மற்றும் கட்டுமானத் தொழில் (Construction/Infrastructure), இரும்பு, எஃகு, எண்ணெய் (Oil &amp;amp; Gas), மற்றும் கனரக வாகனங்கள், நீண்ட கால முதலீடுகள் (Long-term Stocks/Property) ஆகியவற்றில் முதலீடு செய்யலாம்.&lt;/p&gt;&lt;p&gt;முக்கிய குறிப்பு: இவர்களுக்கு ஆரம்பத்தில் லாபம் மெதுவாக இருந்தாலும், நீண்ட காலத்தில் அது பல மடங்கு பெருகும். குறுகிய கால முதலீடுகளைத் தவிர்க்கவும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மூல எண் 9-ல் பிறந்தவர்களை செவ்வாய் பகவான் ஆட்சி செய்கிறார். இவர்களது குணம் - வேகம், ஆக்ரோஷம், பாதுகாப்பு உணர்வு. இவர்கள் நிலம் வாங்குதல் (விவசாய நிலம் அல்லது வீட்டு மனை), பாதுகாப்பு உபகரணங்கள் (Security Systems) மற்றும் ஆயுத உற்பத்தி சார்ந்த துறைகள், விளையாட்டு, உடற்பயிற்சி கூடங்கள் (Gym), மற்றும் மருந்துப் பொருட்கள் ஆகியவற்றில் முதலீடு செய்யலாம்.&lt;/p&gt;&lt;p&gt;முக்கிய குறிப்பு: அவசரப்பட்டு அல்லது உணர்ச்சிவசப்பட்டு முதலீட்டு முடிவுகளை எடுக்கக் கூடாது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எண் கணிதம் என்பது உங்களுக்கு சாதகமான துறைகளை வழிகாட்ட மட்டுமே உதவும். எந்தவொரு முதலீட்டிலும் இறங்குவதற்கு முன், சந்தை நிலவரத்தை ஆராய்ந்து, முறையான நிதி ஆலோசகரின் ஆலோசனையைப் பெறுவது எப்போதும் நல்லது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)&lt;/strong&gt;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>astrology</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/name-numerology-calculator-best-business-options-for-birth-numbers-1-to-9-according-to-numerology-for-wealth-and-success-8l4zsro"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Garuda Purana: மரணத்திற்கு பின் ஆன்மா எத்தனை நாள் வீட்டிலேயே இருக்கும்? எப்போது வீட்டை விட்டு வெளியேறும் தெரியுமா? கருட புராணம் சொல்வது என்ன?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/garuda-purana-death-rituals-how-many-days-the-soul-is-believed-to-remain-at-home-after-death-explained-b8nx7u8</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/garuda-purana-death-rituals-how-many-days-the-soul-is-believed-to-remain-at-home-after-death-explained-b8nx7u8</guid>
            <pubDate>Thu, 02 Jul 2026 15:19:23 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Garuda Purana Death Rituals: ஒரு மனிதன் இறந்த பின்னர் அவரது ஆன்மா எத்தனை நாட்கள் அவரது வீட்டைச் சுற்றியே இருக்கும் என்று கருட புராணம் சில தகவல்களை கூறுகிறது. அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwh36jcftc86y0qgpg3kht8c,imgname-garuda-purana-death-rituals-1782985214351.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Garuda Purana Death Rituals: ஒரு மனிதன் இறந்த பின்னர் அவரது ஆன்மா எத்தனை நாட்கள் அவரது வீட்டைச் சுற்றியே இருக்கும் என்று கருட புராணம் சில தகவல்களை கூறுகிறது. அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த உலகில் ஜீவராசிகளாக பிறந்த ஒவ்வொருவரும் என்றாவது ஒருநாள் மரணித்தே தீர வேண்டும் என்பது நியதி. மரணம் என்ற வார்த்தையை கேட்டாலே பலருக்கும் நடுக்கம் ஏற்படும். மரணத்திற்குப் பின்னர் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் இறைவனுடன் தொடர்புடையது. ஒருவரின் மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கும் என்பது குறித்து யாருக்கும் தெரியாது. ஒரு உயிர் மரணம் அடைந்த பின்னர் அந்த ஆன்மாவின் பயணம் தொடங்குகிறது. இது குறித்து கருட புராணம் பல தகவல்களை வழங்குகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்:&amp;nbsp;&lt;/strong&gt; Venus Transit 2026: ஜூலையில் இந்த 4 ராசிகளுக்கு சுக்கிர திசை ஆரம்பம்.! ராஜயோகம், வெற்றி, அதிர்ஷ்டம் கிடைக்கும்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்து மதத்தில் உள்ள 18 புராணங்களில் கருட புராணமும் ஒன்றாகும். இதில் ஒருவரின் மரணத்திற்கு பின்பு என்ன நடக்கும்? அந்த ஆன்மாவின் பயணம் மற்றும் இயக்கம் உள்ளிட்ட பல தகவல்களை விவரிக்கிறது. கருட புராணத்தின்படி ஒருவரின் மரணத்திற்கு பிறகு அவரது ஆன்மா உடனடியாக வீட்டை விட்டு நிரந்தரமாக வெளியேறுவதில்லை. உடல் அழிந்தாலும் அந்த ஆன்மாவானது, குடும்பத்தினர் மற்றும் வீட்டின் மீதான பற்றுதலால் சில நாட்கள் அங்கேயே சுற்றி இருக்கும். ஆன்மாவின் பயணம் பற்றி கருட புராணம் கூறும் கால வரிசைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்:&amp;nbsp;&lt;/strong&gt; Tamil Astrology: 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சூரியனின் அபூர்வ சேர்க்கை.! ஜூலையில் இந்த 4 ராசிகளுக்கு ஏறுமுகம் தான்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒருவர் இறந்தவுடன் யம தூதர்கள் அவரது ஆன்மாவை பிடித்து எமலோகத்திற்கு அழைத்துச் செல்வார்கள். அங்கே ஆன்மாவின் பாவ புண்ணிய கணக்குகள் சித்திரகுப்தனால் சரி பார்க்கப்படும். இந்த முதல் பயணம் மிகக் குறுகிய காலமே நீடிக்கும். கணக்குகளை பார்த்த பிறகு யம தூதர்கள் ஆன்மாவை மீண்டும் அவரது சொந்த வீட்டிற்கு கொண்டுவந்து விட்டு விடுவார்கள். இந்த நிகழ்வு மரணம் சம்பவித்த முதல் 24 மணி நேரத்திற்குள் நடந்து முடிந்து விடும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்: &amp;nbsp;&lt;/strong&gt;இறந்தவர்களின் துணிகள் மற்றும் நகைகளை அணியலாமா? கருட புராணம் தரும் எச்சரிக்கை.! மீறினால் ஏற்படும் விளைவுகள்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வீட்டிற்கு திரும்பும் ஆன்மா தன் உடலை எரித்த சாம்பல் அல்லது புதைத்த இடத்தின் அருகிலும், தான் வாழ்ந்த வீட்டைச் சுற்றியும் உலவி வரும். இந்த நாட்களில் ஆன்மாவிற்கு மிகச்சிறிய அளவிலான உடலே, அதாவது சூட்சும சரீரம் மட்டுமே இருக்கும். குடும்பத்தினர் செய்யும் பிண்ட தானம் மற்றும் கிரியைகள் அந்த ஆன்மாவிற்கு உணவாகவும், அடுத்த கட்ட பயணத்திற்கு ஆற்றலாகவும் மாறும். இந்த நிகழ்வு மரணம் சம்பவித்த 10 நாட்கள் வரை நடைபெறும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மரணம் சம்பவித்த 11 மற்றும் 12-ஆம் நாட்களில் செய்யப்படும் சிறப்பு சடங்குகள், தானங்கள் மற்றும் பிற காரியங்கள் மூலம் ஆன்மா தனது பசியை ஆற்றிக்கொண்டு பூலோகப் பற்றுக்களை கொஞ்சம் கொஞ்சமாக விடத்தொடங்கும். இது ஆன்மா யமலோக பயணத்திற்கு தயாராக இருப்பதைக் குறிக்கும். இந்த காலகட்டத்தில் நாம் செய்யும் பூஜைகள் மற்றும் மாலையில் ஏற்றப்படும் விளக்குகளின் வெளிச்சத்தின் துணைகொண்டு ஆன்மா யமலோக பயணத்திற்கு தன்னை தயார்படுத்திக் கொள்ளும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கருட புராணத்தின் படி மரணத்திற்குப் பிறகு 13-வது நாளில் தான் ஆன்மா வீட்டை விட்டு நிரந்தரமாக வெளியேறும். வீட்டை விட்டு மட்டுமல்லாமல் இந்த பூலோகத்தை விட்டும் நிரந்தரமாக விலகிச் செல்லும். 13 ஆம் நாள் செய்யப்படும் சடங்கிற்கு பிறகு யம தூதர்கள் ஆன்மாவை எம லோகத்தை நோக்கி அழைத்துச் செல்லத் தொடங்குவார்கள். இந்த பயணம் சுமார் 47 நாட்கள் அல்லது சில மத நூல்களின் படி ஒரு வருடம் நீடித்து ஆன்மா தன் அடுத்த நிலையை அடையும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் மரணம் அடைந்த முதல் நாளில் எமலோகம் சென்று திரும்பும் ஆன்மா, 13 நாட்கள் வரை தன் வீட்டிலேயே தங்கியிருக்கும். 13வது நாள் சடங்குகள் முடிந்த பிறகு அது வீட்டை விட்டு முழுமையாக வெளியேறி தன் இறுதிப் பயணத்தைத் தொடங்கும். இதனால் தான் 13 நாட்கள் வரை வீட்டில் தீட்டு காக்கப்பட்டு, சடங்குகள் முழுமையாக செய்யப்படுகின்றன. மரணம் நிகழ்ந்த வீட்டில் 13 நாட்கள் வீட்டில் தூய்மை பேணப்பட வேண்டும். அதிகாலை எழுந்து குளிக்க வேண்டும். இரவில் அழுவதை தவிர்க்க வேண்டும். இறந்தவரை மீண்டும் மீண்டும் அழைக்கக்கூடாது. அவ்வாறு செய்வது இறந்தவரின் ஆன்மாவிற்கு துன்பத்தை ஏற்படுத்தலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;13 நாட்கள் இறந்தவர்களை மனதார நினைத்து அவர்கள் ஆன்மா முக்தி அடைய வேண்டி பூஜைகளை சிரத்தையுடன் மேற்கொள்ள வேண்டும். மது அருந்துதல், புகைப்பிடித்தல், இறைச்சி உண்ணுதல் போன்றவற்றை செய்தல் கூடாது. இறந்தவர்களுக்குப் பிடித்த உணவுகள், பக்ஷணங்களை படைத்து விளக்கேற்றி வழிபட வேண்டும். இறந்தவர்களை நினைத்து அழுவது அல்லது அவர்களை மீண்டும் வந்துவிடுமாறு அழைப்பது அந்த ஆன்மாவிற்கு துன்பத்தை ஏற்படுத்தும். இது பூலோகத்தின் மீதான அவர்களின் பற்றுதல் துண்டிக்கப்படாமல் செய்து, ஆன்மா அமைதியடைவதற்குப் பதிலாக துன்பத்தை அதிகரிக்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>astrology</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/garuda-purana-death-rituals-how-many-days-the-soul-is-believed-to-remain-at-home-after-death-explained-b8nx7u8"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Astrology : சமசப்தக யோகம்... தொட்டதெல்லாம் ஹிட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/samasaptaka-yoga-brings-big-luck-these-3-zodiac-signs-may-see-major-success-aaom49s</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/samasaptaka-yoga-brings-big-luck-these-3-zodiac-signs-may-see-major-success-aaom49s</guid>
            <pubDate>Thu, 02 Jul 2026 14:55:40 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Astrology Prediction : 'சமசப்தக யோகம்' சில ராசிக்காரர்களுக்கு புதிய வாய்ப்புகள், தொழில் முன்னேற்றம் மற்றும் மன உற்சாகத்தை அளிக்கக்கூடும். அது எந்தெந்த ராசிகள் என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwh2382fe74562f69wn9dw94,imgname-astrology--7--1782984056911.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Astrology Prediction : 'சமசப்தக யோகம்' சில ராசிக்காரர்களுக்கு புதிய வாய்ப்புகள், தொழில் முன்னேற்றம் மற்றும் மன உற்சாகத்தை அளிக்கக்கூடும். அது எந்தெந்த ராசிகள் என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் சஞ்சாரம் மற்றும் அவற்றின் பரஸ்பர நிலைகள் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. அந்த வகையில், சூரியனும் சந்திரனும் ஒருவருக்கொருவர் ஏழாவது இடத்தில் அமையும் நிலையில் உருவாகும் 'சமசப்தக யோகம்' தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;சூரியன் மிதுன ராசியிலும், சந்திரன் தனுசு ராசியிலும் சஞ்சரிக்கும் இந்த காலகட்டம், சில ராசிக்காரர்களுக்கு புதிய வாய்ப்புகள், தொழில் முன்னேற்றம் மற்றும் மன உற்சாகத்தை அளிக்கக்கூடும். குறிப்பாக கீழ்க்கண்ட மூன்று ராசிகளுக்கு இந்த யோகம் சாதகமான பலன்களை வழங்கும் எனக் கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சமசப்தக யோகத்தின் தாக்கத்தால் சிம்ம ராசிக்காரர்களின் சிந்தனைத் திறனும், முடிவெடுக்கும் ஆற்றலும் மேம்படக்கூடும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் காண வாய்ப்புள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;அரசு வேலைக்காக தயாராகி வருபவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்கள் கிடைக்கலாம். பணியில் இருப்பவர்களின் உழைப்புக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும் சூழல் உருவாகலாம். மாணவர்களுக்கு கவனச் சிதறல் குறைந்து, கல்வியில் சிறந்த முன்னேற்றம் ஏற்படக்கூடும். குடும்பத்திலும் அமைதி மற்றும் மகிழ்ச்சி நிலவும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சந்திரன் நேரடியாக தனுசு ராசியில் சஞ்சரிப்பதால், இந்த ராசிக்காரர்களுக்கு சமசப்தக யோகத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;ஆன்மிகம் மற்றும் மதம் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடும் ஆர்வம் அதிகரிக்கலாம். மன அமைதி மற்றும் தன்னம்பிக்கை உயரும். பணியிடத்தில் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;எழுத்து, இசை, பாடல், கலை போன்ற துறைகளில் இருப்பவர்களின் படைப்புகள் பாராட்டைப் பெறலாம். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் வழிகாட்டிகளின் முழு ஆதரவு கிடைக்கக்கூடும். திருமண வாழ்க்கையிலும் நல்ல புரிதல் மற்றும் மகிழ்ச்சியான மாற்றங்கள் உருவாக வாய்ப்புள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் புதிய உற்சாகத்தையும் செயல்திறனையும் அளிக்கக்கூடும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகளை வெற்றிகரமாக முடிக்கும் வாய்ப்பு அமையும்.&lt;/p&gt;&lt;p&gt;வேலை தொடர்பான பயணங்கள் எதிர்காலத்தில் நல்ல பலன்களைத் தரக்கூடும். தொழில் வளர்ச்சியை தடுத்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கலாம். புதிய வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வாய்ப்பு அமையக்கூடும்.&lt;/p&gt;&lt;p&gt;வெளிநாட்டில் உயர்கல்வி பெற நினைக்கும் மாணவர்களின் முயற்சிகளும் சாதகமாக அமைய வாய்ப்பு உள்ளது. உடல் மற்றும் மன ஆற்றல் அதிகரிப்பதால் புதிய இலக்குகளை நோக்கி தன்னம்பிக்கையுடன் முன்னேற முடியும்&lt;/p&gt;]]></content:encoded>
            <category>astrology</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/samasaptaka-yoga-brings-big-luck-these-3-zodiac-signs-may-see-major-success-aaom49s"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Venus Transit 2026: ஜூலையில் இந்த 4 ராசிகளுக்கு சுக்கிர திசை ஆரம்பம்.! ராஜயோகம், வெற்றி, அதிர்ஷ்டம் கிடைக்கும்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/venus-transit-2026-these-4-zodiac-signs-may-enjoy-luck-wealth-and-success-after-venus-changes-sign-in-july-zwg7dtl</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/venus-transit-2026-these-4-zodiac-signs-may-enjoy-luck-wealth-and-success-after-venus-changes-sign-in-july-zwg7dtl</guid>
            <pubDate>Thu, 02 Jul 2026 14:19:21 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Venus Transit 2026: ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள 9 கிரகங்களில் சுக்கிரனும் ஒன்று. இது ஒரு சுப கிரகம். ஜூலை 2026-ல் சுக்கிரன் ராசி மாறுவதால், எல்லா ராசிகளுக்கும் பலன்கள் மாறும். ஆனால் 4 ராசிகளுக்கு இது அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwgzwyd620t9h8058tdcaxvn,imgname-venus-transit-2026-vedic-astrology-1782981753253.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Venus Transit 2026: ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள 9 கிரகங்களில் சுக்கிரனும் ஒன்று. இது ஒரு சுப கிரகம். ஜூலை 2026-ல் சுக்கிரன் ராசி மாறுவதால், எல்லா ராசிகளுக்கும் பலன்கள் மாறும். ஆனால் 4 ராசிகளுக்கு இது அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜோதிட சாஸ்திரத்தில் சுக்கிரன் கிரகத்தை சுகம், ஆடம்பரம், காதல், அழகு, கலை, சொகுசு வாழ்க்கை மற்றும் பணத்துக்கான காரகனாக பார்க்கிறார்கள். வரும் 2026, ஜூலை 4-ஆம் தேதி, சுக்கிரன் கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். ஜோதிட நம்பிக்கைகளின்படி, இந்த ராசி மாற்றத்தால் 12 ராசிகளுக்குமே பலன்கள் கிடைக்கும் என்றாலும், 4 ராசிக்காரர்களுக்கு இது ரொம்பவே விசேஷமான, நல்ல பலன்களைக் கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த ராசிக்காரர்களுக்கு வேலை, பணம், உறவுகள் மற்றும் சமூக அந்தஸ்து போன்றவற்றில் நல்ல முடிவுகள் கிடைக்கலாம். அந்த 4 ராசிகள் எவை என்று பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்: &amp;nbsp;&lt;/strong&gt;Tamil Astrology: 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சூரியனின் அபூர்வ சேர்க்கை.! ஜூலையில் இந்த 4 ராசிகளுக்கு ஏறுமுகம் தான்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சுக்கிரனின் இந்த ராசி மாற்றம் மேஷ ராசிக்காரர்களுக்கு லாபகரமாக இருக்கும். வேலை பார்ப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் அல்லது பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. பிசினஸ் செய்பவர்களுக்குப் புதிய வாடிக்கையாளர்கள் மற்றும் அதிக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. காதல் உறவுகளில் இனிமை அதிகரிக்கும். திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும். நிதி நிலைமை முன்பை விட வலுப்பெறும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்:&amp;nbsp;&lt;/strong&gt; Astrology Tamil: மிருகசீரிஷத்தில் செவ்வாய்: இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்ககை திடீரென மாறப்போகுது.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மிதுன ராசிக்காரர்களுக்கு சுக்கிர பகவானின் ராசி மாற்றம் தன்னம்பிக்கையையும் வெற்றியையும் கொண்டு வரும். நீண்ட நாட்களாகத் தேங்கிக் கிடந்த பணிகள் நிறைவடையும். தொழிலை விரிவுபடுத்தும் திட்டம் வெற்றி அடையலாம். குடும்பத்துடன் நல்ல நேரத்தைச் செலவிட வாய்ப்பு கிடைக்கும். மாணவர்களுக்குப் படிப்பு மற்றும் போட்டித் தேர்வுகளில் விரும்பிய முடிவுகள் கிடைக்க வாய்ப்புள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்: &amp;nbsp;&lt;/strong&gt;Name Numerology: உங்கள் பிறந்த தேதிப்படி ஜூலை 2026 எப்படி இருக்கும்? அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போவது யாருக்கு?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சுக்கிரன் உங்கள் ராசிக்குள்ளேயே பிரவேசிப்பது பல விஷயங்களில் நல்ல அறிகுறியாக இருக்கிறது. இவர்களின் ஆளுமையில் ஒரு ஈர்ப்பு அதிகரிக்கும், சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். வேலை மற்றும் வியாபாரம் இரண்டிலும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உருவாகும். வருமானத்திற்குப் புதிய வழிகள் பிறக்கும். திருமணமாகாதவர்களுக்குத் திருமணம் அல்லது புதிய உறவுக்கான பேச்சுவார்த்தை தொடங்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்: &amp;nbsp;&lt;/strong&gt;Numerology: உங்களுக்கு அடுத்த பிறவி இருக்குமா? இல்லை இதுவே கடைசி பிறவியா? பிறந்த தேதியை வைத்தே தெரிஞ்சிக்கலாம் வாங்க.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சுக்கிரன் துலாம் ராசியின் அதிபதி, அதனால் இந்த ராசி மாற்றம் இவர்களுக்கு விசேஷமாக லாபகரமானதாகக் கருதப்படுகிறது. தொழிலில் புதிய சாதனைகள் படைக்கலாம். நிதி நிலைமை வலுப்பெறும், முதலீடுகள் மூலமாகவும் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. காதல் வாழ்க்கையில் நிலவி வந்த தவறான புரிதல்கள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும், ஒரு நல்ல செய்தியும் வரலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பொறுப்புத் துறப்பு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், மத நூல்கள், அறிஞர்கள் மற்றும் ஜோதிடர்களிடமிருந்து பெறப்பட்டவை. இந்தத் தகவல்களை உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பதற்கான ஒரு ஊடகம் மட்டுமே நாங்கள். வாசகர்கள் இந்தத் தகவல்களை ஒரு குறிப்பாக மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.&lt;/strong&gt;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>astrology</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/venus-transit-2026-these-4-zodiac-signs-may-enjoy-luck-wealth-and-success-after-venus-changes-sign-in-july-zwg7dtl"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Maha Lakshmi Rajayoga: கஷ்ட காலம் முடியுது! மகாலட்சுமி யோகத்தால் 'ஓஹோன்னு' வாழப்போகும் 4 ராசிகள்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/maha-lakshmi-rajayoga-july-2026-4-zodiac-signs-to-get-wealth-and-success-nqpmx59</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/maha-lakshmi-rajayoga-july-2026-4-zodiac-signs-to-get-wealth-and-success-nqpmx59</guid>
            <pubDate>Thu, 02 Jul 2026 12:36:05 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Maha Lakshmi Rajayoga 2026: ஜோதிட சாஸ்திரப்படி, ஜூலை இரண்டாவது வாரத்தில் மிகவும் மங்களகரமான மகாலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. இது 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகிறது. அவை எந்தெந்த ராசிகள்? என்பது குறித்து பார்ப்போம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwgsyrthtdnxv6bpskk80eys,imgname-maha-lakshmi-rajayoga-2026-1782975521617.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Maha Lakshmi Rajayoga 2026: ஜோதிட சாஸ்திரப்படி, ஜூலை இரண்டாவது வாரத்தில் மிகவும் மங்களகரமான மகாலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. இது 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகிறது. அவை எந்தெந்த ராசிகள்? என்பது குறித்து பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜோதிட சாஸ்திரங்களின்படி ஜூலை இரண்டாவது வாரத்தில் மிகவும் மங்களகரமான மகாலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. ரிஷப ராசியில் உருவாகும். செவ்வாய் மற்றும் சந்திரன் சேர்க்கையால் இந்த யோகம் ஏற்படுகிறது. மங்களகரமான மகாலட்சுமி ராஜயோகம் மிதுனம், மேஷம், மகரம் மற்றும் தனுசு ராசிக்காரர்களுக்கு பெரும் அதிர்ஷ்டத்தையும், செல்வாக்கையும் கொண்டு வரப்போகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மகாலட்சுமி யோகம் மிதுன ராசிக்காரர்களின் வாழ்வில் ஒளியேற்றும். இவர்களின் அதிர்ஷ்டக் கதவுகள் திறக்கும். செவ்வாய் கிரகத்தின் தாக்கத்தால், நல்ல செய்திகளைக் கேட்பார்கள். எந்த வேலையைச் செய்தாலும் வெற்றி நிச்சயம். குறிப்பாக, அரசியல் மற்றும் மீடியா துறையில் இருப்பவர்களுக்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும். உங்களின் கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். லட்சுமி தேவி மற்றும் குபேரனின் அருளால், புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மகாலட்சுமி யோகம் மேஷ ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பலன்களைக் கொண்டு வரும். இந்த ராசிக்காரர்கள் அளவற்ற நன்மைகளைப் பெறுவார்கள். குறைந்த உழைப்பில் அதிகப் பலன்களை அடைவார்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். தொழிலில் பெரிய லாபம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரும்பிய துணை அமையும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வருமானம் உயரும், ஆரோக்கியமும் மேம்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மகாலட்சுமி யோகம் மகர ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில் இவர்களுக்கு பண வரவு அதிகரிக்கும். இந்த யோகத்தால், இவர்களின் வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். ஊழியர்களுக்கு வருமானம் உயரும். தொழில்களிலும் நல்ல லாபம் காண்பார்கள். பணிபுரியும் இடத்தில் பாராட்டுக்களைப் பெறுவார்கள். பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மகாலட்சுமி ராஜயோகம் தனுசு ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். வேலையில் அங்கீகாரம் கிடைக்கும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கடந்த காலங்களில் செய்த முதலீடுகளுக்கு இப்போது நல்ல லாபம் கிடைக்கும். குடும்பச் சொத்துக்கள் உங்கள் கைக்கு வர வாய்ப்புள்ளது. உத்தியோகம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பொறுப்புத் துறப்பு:&lt;/strong&gt; இத்தகவல்கள் பொதுவான ஜோதிட அனுமானங்களின் அடிப்படையில் எழுதப்பட்டவை மட்டுமே. இந்த செய்தி வாசகர்களின் சுவாரஸ்ய நோக்கங்களுக்கு மட்டுமே எழுதப்படுகின்றன. துல்லியமான பலன்களுக்குத் தனிப்பட்ட ஜாதகக் கட்டங்களை ஆராய்வது அவசியமாகும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>astrology</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/maha-lakshmi-rajayoga-july-2026-4-zodiac-signs-to-get-wealth-and-success-nqpmx59"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Angarak Yoga : ராகு-செவ்வாய் சேர்க்கையால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு கஷ்ட காலம்! உங்க ராசி இருக்கா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/angarak-yoga-could-bring-troubles-for-these-3-zodiac-signs-bbdzvm9</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/angarak-yoga-could-bring-troubles-for-these-3-zodiac-signs-bbdzvm9</guid>
            <pubDate>Thu, 02 Jul 2026 11:26:42 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Angarak Yoga : ராகு-செவ்வாய் இணைவதால் அங்காரக யோகம் உருவாகிறது. தற்போது ராகு, செவ்வாய்க்கு உரிய தனிஷ்டா நட்சத்திரத்தில் நுழைந்துள்ளது. இதனால் அங்காரக யோகம் ஏற்பட்டுள்ளது. இந்த யோகத்தால் மூன்று ராசிக்காரர்கள் சில கஷ்டங்களைச் சந்திக்க நேரிடலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01h34j9nv1r56104cqerfehvn5,imgname-aries-gfa2a5c0e5_1280-1687001814881.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Angarak Yoga : ராகு-செவ்வாய் இணைவதால் அங்காரக யோகம் உருவாகிறது. தற்போது ராகு, செவ்வாய்க்கு உரிய தனிஷ்டா நட்சத்திரத்தில் நுழைந்துள்ளது. இதனால் அங்காரக யோகம் ஏற்பட்டுள்ளது. இந்த யோகத்தால் மூன்று ராசிக்காரர்கள் சில கஷ்டங்களைச் சந்திக்க நேரிடலாம்.&lt;/p&gt;&lt;img&gt;மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். அங்காரக யோகத்தால், மேஷ ராசிக்காரர்கள் ஜூலை மாதம் முழுவதும் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இல்லையெனில், குடும்பம், வேலை, மற்றும் வியாபாரத்தில் பிரச்சனைகள் வரலாம்.&lt;img&gt;&lt;p&gt;இந்த அங்காரக யோகத்தால், கடக ராசிக்காரர்கள் ஜூலை மாதம் கடுமையான மன அழுத்தத்தைச் சந்திப்பார்கள். எதிர்காலத்தைப் பற்றிய பயம் அதிகரிக்கும். வாகனம் ஓட்டும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;Kubera Yoga : இனி இவர்களைப் பிடிக்கவே முடியாது! அவிட்ட ராகுவால் குபேரனாக மாறப்போகும் 'அந்த' 4 ராசிகள்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விருச்சிக ராசியின் அதிபதியும் செவ்வாய்தான். ராகுவுடன் சேர்ந்து அங்காரக யோகம் உருவாவதால், இந்த ராசிக்காரர்களுக்கு கோபம் அதிகரிக்கும். ஜூலை மாதம் முழுவதும் பொறுமையுடன் இருப்பது அவசியம். இல்லையெனில், துணைவருடன் சண்டை வர வாய்ப்புள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;Astrology : கூட்டணி அமைத்த எதிரி கிரகங்கள்! இந்த 5 ராசிகளுக்கு ஜாக்பாட்!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>astrology</category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/angarak-yoga-could-bring-troubles-for-these-3-zodiac-signs-bbdzvm9"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Numerology: இந்த தேதிகள்ல பொறந்த பொண்ணுங்க பெஸ்ட் பொண்டாட்டியா இருப்பாங்களாம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/numerology-reveals-women-born-on-these-dates-are-best-life-partners-811ne19</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/numerology-reveals-women-born-on-these-dates-are-best-life-partners-811ne19</guid>
            <pubDate>Thu, 02 Jul 2026 11:00:52 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;DOB Numerology: ஒருத்தரோட பிறந்த தேதியை வெச்சே அவங்க குணத்தையும் எதிர்காலத்தையும் தெரிஞ்சுக்கலாம். எந்தெந்த தேதிகள்ல பிறந்த பொண்ணுங்க சிறந்த வாழ்க்கைத்துணையா இருப்பாங்கன்னு எண் கணிதம் சொல்லுது. வாங்க பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwgkzw624v738bcvznqa9rz8,imgname-numerology--3--1782969266370.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;DOB Numerology: ஒருத்தரோட பிறந்த தேதியை வெச்சே அவங்க குணத்தையும் எதிர்காலத்தையும் தெரிஞ்சுக்கலாம். எந்தெந்த தேதிகள்ல பிறந்த பொண்ணுங்க சிறந்த வாழ்க்கைத்துணையா இருப்பாங்கன்னு எண் கணிதம் சொல்லுது. வாங்க பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;நியூமராலஜி&lt;/strong&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;படி, ஒருத்தரோட பிறந்த தேதி அவங்களுடைய குணம், சிந்தனை, உறவுகள்னு பல விஷயங்களை சொல்லும். சில குறிப்பிட்ட தேதிகள்ல பிறந்த பொண்ணுங்க உறவுகளை ரொம்ப நல்லா கையாள்வாங்க, குடும்பத்தை ஒண்ணா சேர்த்து வெச்சுப் பார்க்குறதுல கெட்டிக்காரங்களா இருப்பாங்கன்னு சொல்லப்படுது. இதனாலேயே அவங்கள 'பெர்ஃபெக்ட் வைஃப் மெட்டீரியல்'னு கூட சொல்றாங்க. கல்யாணத்துக்கு அப்புறம் இவங்க கணவரோட அதிர்ஷ்டத்தையும் பிரகாசிக்க வைப்பாங்களாம். அந்த ஸ்பெஷல் தேதிகள் என்னென்னன்னு பார்க்கலாம் வாங்க.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Numerology : எந்த வயதில் சொந்த வீடு வாங்கும் யோகம் கிடைக்கும்? பிறந்த தேதி சொல்லும் ரகசியம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நியூமராலஜி படி, இந்த தேதிகள்ல பிறந்த பெண்களோட மூல எண் 2. இது சந்திரனோட தொடர்புடையது. இந்த தேதிகள்ல பிறந்த பொண்ணுங்க ரொம்ப உணர்ச்சிப்பூர்வமானவங்க, குடும்பத்து மேல அதிக அக்கறை காட்டுறவங்க, உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறவங்களா இருப்பாங்க. இவங்க தங்களோட பார்ட்னர் மற்றும் குடும்பத்தோட உணர்வுகளை நல்லா புரிஞ்சுக்குவாங்க. கல்யாணத்துக்கு அப்புறம் கணவரோட ஒவ்வொரு சந்தோஷத்துலயும் அக்கறை காட்டுவாங்க.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த தேதிகள்ல பிறந்த பெண்களோட மூல எண் 6. இது சுக்கிர கிரகத்தோட தொடர்புடையது. இந்த தேதிகள்ல பிறந்த பொண்ணுங்க பார்க்க ரொம்ப அழகா இருப்பாங்க. வீடு, குடும்பம்னு எல்லா விஷயத்துலயும் கவனமா இருப்பாங்க. உறவுகள்ல அன்பும், சமநிலையும் இருக்கணும்னு விரும்புவாங்க. இவங்க தங்களோட கணவருக்கு ரொம்ப அதிர்ஷ்டமானவங்களா இருப்பாங்க, அவருக்கு எந்த குறையும் வைக்க மாட்டாங்க. இந்த பெண்கள் குடும்பத்துக்காக தங்களை அர்ப்பணிச்சுக்குவாங்க.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த தேதிகள்ல பிறந்த பெண்களோட மூல எண் 1. இது சூரியனோட தொடர்புடையது. இந்த தேதிகள்ல பிறந்த பொண்ணுங்க ரொம்ப பொறுப்பான சிந்தனை கொண்டவங்களா இருப்பாங்க. கஷ்டமான சூழ்நிலைகள்ல கூட குடும்பத்தை விட்டுக்கொடுக்க மாட்டாங்க. இவங்க தங்களோட அமைதியான சுபாவத்துக்கும், புரிதலுக்கும் பெயர் போனவங்க. உறவுகள்ல நேர்மைக்கும் நம்பிக்கைக்கும் தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பாங்க. கல்யாணத்துக்கு அப்புறம் கணவரையும் குடும்பத்தையும் முழுசா பார்த்துப்பாங்க.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>astrology</category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/numerology-reveals-women-born-on-these-dates-are-best-life-partners-811ne19"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Astrology: நீசபங்கு ராஜயோகம் எனும் ஜாக்பாட்.! ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆகப்போகும் ராசிகள்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/nechabanga-rajayogam-these-zodiac-signs-will-become-millionaires-overnight-d3o11f3</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/nechabanga-rajayogam-these-zodiac-signs-will-become-millionaires-overnight-d3o11f3</guid>
            <pubDate>Thu, 02 Jul 2026 09:25:05 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;ஜோதிடத்தில், பலவீனமான கிரகம் பலம் பெற்று திடீர் அதிர்ஷ்டத்தை வழங்கும் 'நீசபங்கு ராஜயோகம்' பற்றி இந்த கட்டுரை விவரிக்கிறது. இந்த யோகத்தால் 4 ராசிகளை சேர்ந்தவர்கள் எவ்வாறு திடீர் கோடீஸ்வரர் ஆகும் வாய்ப்பை பெறுகிறார்கள் என்பதை இது விளக்குகிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwge0r67wzwatk22mncv6wyb,imgname-gemini-generated-image-rz91forz91forz91--1--1782963003591.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஜோதிடத்தில், பலவீனமான கிரகம் பலம் பெற்று திடீர் அதிர்ஷ்டத்தை வழங்கும் 'நீசபங்கு ராஜயோகம்' பற்றி இந்த கட்டுரை விவரிக்கிறது. இந்த யோகத்தால் 4 ராசிகளை சேர்ந்தவர்கள் எவ்வாறு திடீர் கோடீஸ்வரர் ஆகும் வாய்ப்பை பெறுகிறார்கள் என்பதை இது விளக்குகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜோதிட சாஸ்திரத்தில் பலவிதமான சுப யோகங்கள் விவரிக்கப்பட்டிருந்தாலும், மனித வாழ்க்கையை தலைகீழாக மாற்றும் அசாத்திய வல்லமை படைத்தது &lsquo;நீசபங்கு ராஜயோகம்&rsquo; ஆகும். ஒரு ஜாதகத்தில் கிரகம் பலவீனமடையும் போது சோதனைகளைத் தந்தாலும், அதுவே விதிவிலக்காகப் பலம் பெறும் போது பிரம்மாண்டமான அதிர்ஷ்டத்தை வாரி வழங்குகிறது. அந்த வகையில், அடிமட்டத்திலிருக்கும் ஒருவரை அசுர வேகத்தில் உச்சத்திற்குக் கொண்டு செல்லும் இந்த ஜாக்பாட் யோகம் பற்றியும், இதனால் கோடீஸ்வர யோகத்தைப் பெறும் ராசிகள் பற்றியும் விரிவாகக் காண்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜோதிட விதிகளின்படி நவக்கிரகங்களில் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு குறிப்பிட்ட வீடு நீச வீடாகும். நீசம் என்றால் அந்த கிரகம் தனது முழு ஆற்றலையும் இழந்து பலவீனமான நிலையில் இருக்கிறது என்று பொருள். ஆனால், இந்த நீச நிலைக்குக் காரணமான அதிபதியோ அல்லது அந்த வீட்டில் உச்சமடையும் கிரகமோ கேந்திர ஸ்தானங்களிலோ (1, 4, 7, 10) அல்லது பரிவர்த்தனை பெற்றgeneric அமைப்பிலோ அமையும் போது, அந்த நீசத் தன்மை முழுமையாக நீங்கிவிடுகிறது. இதையே 'நீசபங்கு' என்கிறோம். இவ்வாறு பங்கமடையும் கிரகம், சாதாரண உச்ச கிரகத்தை விடவும் நூறு மடங்கு சக்தி வாய்ந்ததாக மாறி, ஜாதகருக்குத் திடீர் ராஜயோக வாழ்க்கையைத் தருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேஷ ராசி மற்றும் லக்னக்காரர்களுக்கு இந்த யோகம் மிக முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும். மேஷ ராசியின் அதிபதியான செவ்வாய் கடகத்தில் நீசமடைந்தாலும், அங்கு குருவின் சேர்க்கையோ அல்லது சந்திரனின் கேந்திர அமைப்போ ஏற்படும் போது இந்த விசித்திர யோகம் உருவாகிறது. இதன் காரணியாக, அதுவரை முடங்கிக் கிடந்த இவர்களது தொழில்கள் அசுர வேகத்தில் வளர்ச்சியடையும். எதிர்பாராத ஒரு நாளில், கற்பனைக்கு எட்டாத வகையில் பெரிய தொகையோ அல்லது பெரும் முதலீடுகளோ இவர்களைத் தேடி வரும். அடிமைத் தொழிலில் இருந்து விடுபட்டு, ஓவர் நைட்டில் பலருக்கு வேலை கொடுக்கும் முதலாளியாக மாறும் அதிர்ஷ்டம் இவர்களுக்குக் கூடி வரும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கடக ராசியினருக்குப் பூர்வபுண்ணிய ஸ்தான அதிபதியான செவ்வாய் மற்றும் ராசி நாதனான சந்திரன் ஆகியோரின் இணைவினால் இந்த யோகம் பிரம்மாண்டமாக வேலை செய்யும். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த பூர்வீக சொத்து விவகாரங்கள், கோர்ட் வழக்குகள் யாவும் இவர்களுக்குச் சாதகமாக முடியும். பங்குச்சந்தை (Share Market), கிரிப்டோ அல்லது எதிர்பாராத லொட்டரி மற்றும் பந்தயங்கள் மூலம் திடீர் ஜாக்பாட் அடிக்கும் யோகம் இவர்களுக்கு உண்டு. ஏழ்மை நிலையில் வாழ்ந்தவர்கள் கூட, இந்த யோகத்தின் தசா புத்தி காலங்களில் சமூகத்தில் மிகப்பெரிய அந்தஸ்தையும், கோடிக்கணக்கான சொத்துக்களையும் பெற்று கோடீஸ்வரராக வலம் வருவார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;துலாம் ராசியில் நவகிரகங்களின் தலைவனான சூரியன் நீசமடைவார். சூரியன் நீசம் பெற்ற ஜாதகர்கள் பல அவமானங்களையும், தடைகளையும் சந்திக்க நேரிடும். ஆனால், சுக்கிரனின் பலத்தாலோ அல்லது செவ்வாயின் பார்வையாலோ இந்த நீசம் பங்கமடையும் போது, இவர்களின் வாழ்க்கை தரம் உலகமே வியக்கும் படி மாறும். குறிப்பாக, அரசாங்க ஒப்பந்தங்கள் (Contracts) மூலம் இவர்களுக்குப் பல கோடி ரூபாய் லாபம் தேடி வரும். அரசியல் மற்றும் உயர் பதவிகளில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகளும், சமுதாயத்தில் மிகப்பெரிய செல்வாக்கும் திடீரெனக் கிடைக்கும். இழந்த பெருமைகள் அனைத்தையும் ஒரே நாளில் மீட்டெடுப்பார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மகர ராசியில் சுப கிரகமான குரு பகவான் நீசமடைவார். இதனால் இவர்களுக்குப் பணத்தட்டுப்பாடும், மன உளைச்சலும் அதிகமாக இருந்திருக்கலாம். ஆனால், மகர ராசியின் அதிபதியான சனியின் ஆட்சி பலத்தால் குருவின் நீசத்தன்மை பங்கமாகி, வலுவான நீசபங்கு ராஜயோகத்தை உருவாக்குகிறது. இந்த அமைப்பால், இவர்களை வாட்டி வதைத்த கடன் தொல்லைகள் அனைத்தும் மாயமாய் மறையும் வழிகள் பிறக்கும். கூட்டுத்தொழிலில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்டு, பெரிய முதலீடுகள் இன்றி பெரும் லாபத்தைச் சம்பாதிப்பார்கள். ஏழரைச் சனியின் தாக்கங்களையும் மீறி, இவர்களைப் பில்லியனராக மாற்றும் வல்லமை இந்த யோகத்திற்கு உண்டு.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&quot;கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்&quot; என்ற ஜோதிட பழமொழிக்கு மிகச்சிறந்த உதாரணம் இந்த நீசபங்கு ராஜயோகம் ஆகும். இந்த யோகம் செயல்படத் தொடங்கும்போது, மனித உழைப்பிற்கு அப்பாற்பட்ட சில தெய்வீக சக்திகள் இவர்களுக்குப் பின்னால் நின்று இயக்கும். முடங்கிக் கிடந்த காரியங்கள் யாவும் ஒரே நாளில் சாதகமாக மாறும். இந்த யோகத்தின் முழுமையான சுப பலன்களைப் பெற, ஜாதகர்கள் தங்களின் குலதெய்வ வழிபாட்டையும், ஏழை எளியோருக்கான தான தருமங்களையும் தொடர்ந்து செய்து வர வேண்டும். கிரகங்களின் எதிர்மறை ஆற்றல் மறைந்து நேர்மறை ஆற்றல் பெருகும் போது, மேலே குறிப்பிட்டுள்ள ராசியினர் தங்களின் கடின உழைப்பால் ஓவர் நைட்டில் கோடீஸ்வர வாழ்க்கையை அடைவது திண்ணம். உங்களுக்கான காலம் கனிந்துவிட்டது, துணிந்து முன்னேறுங்கள்!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>astrology</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/nechabanga-rajayogam-these-zodiac-signs-will-become-millionaires-overnight-d3o11f3"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Today Rasi Palan: குருவின் அருளால் 3 ராசிக்காரங்களுக்கு பண மழை! உங்க ராசி இருக்கா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/today-rasi-palan-july-2-2026-guru-blessings-6ihxfgy</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/today-rasi-palan-july-2-2026-guru-blessings-6ihxfgy</guid>
            <pubDate>Thu, 02 Jul 2026 06:01:16 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Today Rasi Palan: ஜூலை 2 ஆம் தேதி வியாழக்கிழமை இன்று மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான தனித்தனி பலன்கள் மற்றும் பரிகாரங்களை இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwf6hk7pkmvpw6evcnmp88p7,imgname-today-rasi-palan-1782921612534.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Today Rasi Palan: ஜூலை 2 ஆம் தேதி வியாழக்கிழமை இன்று மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான தனித்தனி பலன்கள் மற்றும் பரிகாரங்களை இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;2026 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி, வியாழக்கிழமை அன்று தமிழ் மாத கணக்குப்படி ஆனி மாதம் 18 ஆம் நாள் நிகழ்கிறது. திதி அடிப்படையில் இன்று தேய்பிறை துவிதியை திதியும், நட்சத்திர அடிப்படையில் உத்திராடம் நட்சத்திரமும் அமைகின்றன.&lt;/p&gt;&lt;p&gt;இன்றைய நாள் தேவகுருவான பிரகஸ்பதிக்குரிய (வியாழக்கிழமை) உன்னதமான நாள் என்பதால், குருவின் பரிபூரண அருளைப் பெறவும், உத்திராடம் நட்சத்திரத்தின் அதிபதியான சூரியனின் ஆதிக்கத்தால் அரசு வழி காரியங்களில் வெற்றி பெறவும் உகந்த நாளாகும். இன்று புதிய முதலீடுகள் செய்வதற்கும், ஆன்மீக வழிபாடுகளுக்கும் மிகவும் ஏற்ற அற்புதமான நாளாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்று உங்களுக்குப் புதிய வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் தேங்கிக் கிடந்த வேலைகளைச் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;பரிகாரம்: முருகப்பெருமானுக்கு செவ்வரளி மலர் சாற்றி வழிபட நன்மைகள் பெருகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தேவையற்ற வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது அமைதி தரும். குடும்பத்தில் சில சலசலப்புகள் தோன்றி மறையும் என்பதால் பேச்சில் நிதானம் தேவை. தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பரிகாரம்:&lt;/strong&gt; மகாலட்சுமி தாயாருக்கு நெய் தீபமேற்றி வழிபட பணத்தட்டுப்பாடு நீங்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் நாள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பரிகாரம்: &lt;/strong&gt;பெருமாள் கோவிலில் துளசி தீர்த்தம் பெற்று அருந்த தடைகள் விலகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்று மிகுந்த சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். கணவன்-மனைவி இடையே அன்யோன்யம் மற்றும் ஒற்றுமை பலப்படும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பரிகாரம்: &lt;/strong&gt;விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் சாற்றி வழிபட காரிய வெற்றி உண்டாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தந்தை அல்லது தந்தை வழி உறவுகளால் ஆதாயமும், மகிழ்ச்சியும் உண்டு. வெளியூர் பயணங்களின் போது சற்றே நிதானம் தேவை.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பரிகாரம்: &lt;/strong&gt;சூரிய பகவானுக்கு காலையில் நீர்க்கடனு செலுத்தி வழிபட உத்தியோக உயர்வு கிடைக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்ளுங்கள். பிறருக்குப் பெரிய தொகையைக் கடனாகக் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பரிகாரம்:&lt;/strong&gt; இஷ்ட தெய்வ வழிபாடும், ஸ்ரீ ராகவேந்திரர் வழிபாடும் மனஅமைதியைத் தரும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;துணையின் அன்பும் ஆதரவும் மனதிற்குப் பெரும் மகிழ்ச்சியைத் தரும். கூட்டுத் தொழிலில் நல்ல முன்னேற்றமும், எதிர்பார்த்த லாபமும் இருக்கும். புதிய மனிதர்களின் நட்பு உண்டாகும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பரிகாரம்:&lt;/strong&gt; சிவபெருமானுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபட நன்மைகள் உண்டாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உங்களைச் சுற்றியிருந்த எதிர்ப்புகள் யாவும் விலகும். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த வழக்குகளில் சாதகமான சூழல் உருவாகும். கடன் சுமைகள் குறையத் தொடங்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பரிகாரம்:&lt;/strong&gt; துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றி வழிபட பயங்கள் நீங்கி தைரியம் கூடும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிள்ளைகளின் கல்வி மற்றும் முன்னேற்றத்தால் பெருமை சேரும். பூர்வீக சொத்து விவகாரங்களில் சுமுகமான முடிவு கிடைக்கும். கலைத்துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் கதவைத் தட்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பரிகாரம்:&lt;/strong&gt; குரு பகவானுக்கு முல்லை மலர் சாற்றி, கொண்டைக்கடலை மாலை அணிவித்து வழிபடவும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தாய்வழி உறவினர்களுடன் சிறிய கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வாகனப் பயணங்களின் போது கூடுதல் எச்சரிக்கை தேவை. புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் கைகூடி வரும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பரிகாரம்:&lt;/strong&gt; ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு சாற்றி வழிபட நன்மைகள் கூடும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். இளைய சகோதர, சகோதரி வழியில் சுபமான அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த நல்ல செய்திகள் உங்களைத் தேடி வரும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பரிகாரம்: &lt;/strong&gt;சனிக்கிழமை அல்லது இன்றைய நாளில் காக்கைக்கு அன்னமிடுவது தோஷங்களைப் போக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தன வரவு திருப்திகரமாக இருக்கும் என்பதால் சேமிப்பு உயரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் பற்றிய பேச்சுகள் தொடங்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பரிகாரம்: &lt;/strong&gt;தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற மலர்கள் சாற்றி, நெய் தீபமேற்றி வழிபட சகல யோகங்களும் உண்டாகும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இன்றைய பொதுவான சிறப்புப் பரிகாரம்:&lt;/strong&gt; இன்றைய வியாழக்கிழமை நாளில், அருகில் உள்ள ஆலயத்திற்குச் சென்று குரு பகவானையோ அல்லது தட்சிணாமூர்த்தியையோ தரிசித்து, பசு மாட்டிற்கு உளுந்து வடை அல்லது வாழைப்பழங்கள் வழங்குவது சகல தோஷங்களையும் நீக்கி, வாழ்வில் மங்களங்களைத் தரும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>astrology</category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/today-rasi-palan-july-2-2026-guru-blessings-6ihxfgy"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Evil Eye: பக்கத்துவீட்டு கண்ணு எப்பொழுதும் உங்க வீட்டு மேலயே இருக்கா..? இதை செய்ங்க திருஷ்டியே படாது]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/protect-your-home-from-the-evil-eye-10-traditional-tips-to-keep-negative-energy-away-wsvc05t</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/protect-your-home-from-the-evil-eye-10-traditional-tips-to-keep-negative-energy-away-wsvc05t</guid>
            <pubDate>Wed, 01 Jul 2026 22:02:57 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Evil Eye Protection: பக்கத்து வீட்டுக்காரர்களின் கண் திருஷ்டி குறித்து பலருக்கும் நம்பிக்கை உள்ளது. அறிவியல் ஆதாரம் இல்லாவிட்டாலும், சில பாரம்பரிய வழிமுறைகள் மனநிம்மதியையும் நேர்மறை சூழலையும் உருவாக்க உதவும் என நம்பப்படுகிறது.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwf6zb6xwdy2ntbvq13rng3d,imgname-evil-eye-1782922063068.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Evil Eye Protection: பக்கத்து வீட்டுக்காரர்களின் கண் திருஷ்டி குறித்து பலருக்கும் நம்பிக்கை உள்ளது. அறிவியல் ஆதாரம் இல்லாவிட்டாலும், சில பாரம்பரிய வழிமுறைகள் மனநிம்மதியையும் நேர்மறை சூழலையும் உருவாக்க உதவும் என நம்பப்படுகிறது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&quot;நல்லா இருந்தா கண் பட்டுரும்!&quot; &ndash; இந்த வார்த்தையை நம் வீட்டில் பெரியவர்கள் அடிக்கடி சொல்லக் கேட்டிருப்போம். புதிய வீடு, புதிய கார், தொழில் முன்னேற்றம், குழந்தைகளின் வெற்றி அல்லது குடும்ப மகிழ்ச்சி போன்ற நல்ல விஷயங்கள் நடந்தால், சிலர் அதற்கு பிறர் கண் திருஷ்டி காரணமாக பாதிப்பு ஏற்படலாம் என்று நம்புகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;அறிவியல் ரீதியாக &quot;கண் திருஷ்டி&quot; இருப்பது நிரூபிக்கப்படவில்லை. இருப்பினும், இது பல கலாச்சாரங்களில் காணப்படும் பாரம்பரிய நம்பிக்கையாக இருந்து வருகிறது. அதே நேரத்தில், மன அமைதியையும், நேர்மறை சிந்தனையையும் வளர்க்கும் சில பழக்கவழக்கங்கள் பலருக்கு நம்பிக்கையையும் தன்னம்பிக்கையையும் தருகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நீங்கள் அடைந்த வெற்றி, வருமானம், விலை உயர்ந்த பொருட்கள் அல்லது குடும்ப சாதனைகள் போன்றவற்றை தேவையில்லாமல் அனைவரிடமும் பகிர்வதைத் தவிர்ப்பது நல்லது. இது பொறாமை, தேவையற்ற ஒப்பீடு மற்றும் எதிர்மறை கருத்துகளை குறைக்க உதவும்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;வீட்டை சுத்தமாகவும், ஒழுங்காகவும் வைத்திருங்கள்&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;வீடு சுத்தமாகவும், காற்றோட்டமாகவும், வெளிச்சமாகவும் இருந்தால் மனநிலையும் புத்துணர்ச்சியாக இருக்கும். பாரம்பரிய நம்பிக்கைகளின்படி, சுத்தமான வீடு நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் என்று கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;காலை அல்லது மாலை நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி இறை வழிபாடு செய்வது பல குடும்பங்களில் வழக்கமாக உள்ளது. இது மன அமைதியையும் குடும்ப ஒற்றுமையையும் அதிகரிக்க உதவும் என்று நம்பப்படுகிறது.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;உப்பு கலந்த நீரால் துடைப்பது&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;சிலர் வாரத்திற்கு ஒரு முறை தரையை சிறிதளவு கல் உப்பு கலந்த நீரால் துடைப்பார்கள். இது வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் குறையும் என்ற பாரம்பரிய நம்பிக்கையின் ஒரு பகுதியாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எலுமிச்சை மற்றும் பச்சை மிளகாய் கட்டி வாசலில் தொங்கவிடுவது இந்தியாவின் பல பகுதிகளில் காணப்படும் பழக்கம். இதற்கு அறிவியல் ஆதாரம் இல்லை என்றாலும், பலர் இதை ஒரு பாரம்பரிய பாதுகாப்புச் சின்னமாகக் கருதுகின்றனர்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;பிறர் என்ன நினைப்பார்கள் என்ற கவலையை விட, உங்கள் இலக்கில் கவனம் செலுத்துங்கள். நேர்மறை சிந்தனை, தன்னம்பிக்கை மற்றும் மன உறுதி இருந்தால் தேவையற்ற அச்சங்கள் குறையும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அடுத்தவர் வாழ்க்கையைப் பார்த்து உங்களையும், உங்கள் வாழ்க்கையைப் பார்த்து மற்றவர்களும் ஒப்பிடும் சூழல் உருவாகாமல் இருப்பது நல்லது. இது உறவுகளையும் மனநிலையையும் பாதுகாக்கும்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;குடும்பத்தில் நல்ல சூழலை உருவாக்குங்கள்&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;ஒன்றாக உணவருந்துதல், உரையாடுதல், சிரித்துப் பேசுதல் போன்ற பழக்கங்கள் குடும்பத்தில் நேர்மறை சூழலை உருவாக்கும். இதுவே மன அழுத்தத்தை குறைத்து மகிழ்ச்சியை அதிகரிக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உங்கள் மத நம்பிக்கைக்கு ஏற்ப பிரார்த்தனை, தியானம் அல்லது ஆன்மிகப் பயிற்சிகளில் ஈடுபடலாம். இது மனதிற்கு அமைதியையும் நம்பிக்கையையும் அளிக்கும்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;எதிர்மறை கருத்துகளை மனதில் ஏற்றுக் கொள்ளாதீர்கள்&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;சிலர் கூறும் விமர்சனங்கள் அல்லது பொறாமையான வார்த்தைகளை மனதில் வைத்துக்கொள்ளாமல், உங்கள் வளர்ச்சியில் கவனம் செலுத்துங்கள். மன வலிமையே மிகப்பெரிய பாதுகாப்பு.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதுவரை கண் திருஷ்டி மனிதர்களுக்கு நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உறுதிப்படுத்தும் வலுவான அறிவியல் ஆதாரங்கள் இல்லை. ஆனால், இந்த நம்பிக்கை பல சமூகங்களில் கலாச்சார பாரம்பரியமாக இருந்து வருகிறது. எனவே, இதுபோன்ற பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பது ஒருவருக்கு மன நிம்மதியையும் நம்பிக்கையையும் அளித்தால், அது அவர்களின் தனிப்பட்ட நம்பிக்கையாக மதிக்கப்படலாம்.&lt;/p&gt;&lt;p&gt;பக்கத்து வீட்டுக்காரர்களின் கண் திருஷ்டியைப் பற்றி கவலைப்படுவதை விட, உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும், தன்னம்பிக்கையுடனும் வாழ்வதே மிக முக்கியம். பாரம்பரிய நம்பிக்கைகளை மதிப்பதோடு, நடைமுறை சிந்தனை, நல்ல பழக்கவழக்கங்கள் மற்றும் நேர்மறை மனநிலையை இணைத்துக் கொண்டால், வாழ்க்கையில் அதிக நிம்மதியையும் வெற்றியையும் அனுபவிக்க முடியும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>astrology</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/protect-your-home-from-the-evil-eye-10-traditional-tips-to-keep-negative-energy-away-wsvc05t"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Water Heater: உயிருக்கே ஆபத்தாகும் வாட்டர் ஹீட்டர் ராடு! குளிக்கும் போது நீங்கள் செய்யும் அந்த 6 தவறுகள்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/shocking-danger-6-fatal-mistakes-to-avoid-when-using-a-water-heater-immersion-rod-b0tbi6r</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/shocking-danger-6-fatal-mistakes-to-avoid-when-using-a-water-heater-immersion-rod-b0tbi6r</guid>
            <pubDate>Wed, 01 Jul 2026 19:36:21 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Water Heater Rod Safety Tips: அதிக விலை கொடுத்து கீசரோ அல்லது சோலார் ஹீட்டரோ வாங்க முடியாத நடுத்தர மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். ஆனால், மலிவான விலையில் கிடைக்கும் இந்த ஹீட்டர் ராடுகளைப் பயன்படுத்தும் போது கொஞ்சம் கவனம் தேவை.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jfqc7dgnkcdsg071c8rgnmqf,imgname-water-heater-3.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Water Heater Rod Safety Tips: அதிக விலை கொடுத்து கீசரோ அல்லது சோலார் ஹீட்டரோ வாங்க முடியாத நடுத்தர மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். ஆனால், மலிவான விலையில் கிடைக்கும் இந்த ஹீட்டர் ராடுகளைப் பயன்படுத்தும் போது கொஞ்சம் கவனம் தேவை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நம் முன்னோர்கள் விறகடுப்பில் தண்ணீர் கொதிக்க வைத்த காலம் போய், இன்று அவசர உலகத்தில் கேஸ் அடுப்பில் தண்ணீர் வைக்கிறோம். ஆனால், விர்ரென்று ஏறும் சிலிண்டர் விலையால், தினமும் கேஸில் தண்ணீர் வைத்தால் ஒரே வாரத்தில் சிலிண்டர் காலியாகிவிடும். இதற்கு பட்ஜெட் ஃபிரெண்ட்லி தீர்வாக வந்ததுதான் 'எலக்ட்ரிக் வாட்டர் ஹீட்டர் ராடுகள்'. அதிக விலை கொடுத்து கீசரோ அல்லது சோலார் ஹீட்டரோ வாங்க முடியாத நடுத்தர மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். ஆனால், மலிவான விலையில் கிடைக்கும் இந்த ஹீட்டர் ராடுகளைப் பயன்படுத்தும் போது கொஞ்சம் கவனம் தேவை. கொஞ்சம் அசந்தாலும் அது உயிருக்கே ஆபத்தாய் முடிந்துவிடும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;பாத்ரூமிற்குள் நோ என்ட்ரி&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;வாட்டர் ஹீட்டர் ராடை ஒருபோதும் குளியலறையிலோ அல்லது ஈரப்பதம் உள்ள இடங்களிலோ வைத்துப் பயன்படுத்தக் கூடாது. பாத்ரூம் எப்போதும் ஈரமாக இருக்கும் என்பதால், சுவிட்ச் போடும்போதோ அல்லது எடுக்கும்போதோ மின்சாரம் பாய்ந்து பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;தண்ணீர் அளவு முக்கியம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஹீட்டர் ராடைத் தண்ணீரில் போடும்போது, அதன் மெட்டல் கம்பிப் பகுதி முழுவதும் தண்ணீரில் மூழ்கி இருக்க வேண்டும். தண்ணீர் குறைவாக இருந்தால் ராடு பழுதடைவதோடு, விபத்துக்கும் வழிவகுக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Mutton Vs Sheep: மட்டன் பிரியர்களே? ஆடு Vs செம்மறி ஆட்டிறைச்சியில் எது பெஸ்ட்?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;விரலை விட்டுப் பார்க்காதீங்க&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;தண்ணீர் சூடாகிவிட்டதா என்று பார்ப்பதற்காக, சுவிட்ச் ஆன்-இல் இருக்கும்போதோ அல்லது ஆஃப் செய்த உடனையோ தண்ணீருக்குள் விரலை விட்டுப் பார்க்கக் கூடாது. இது மிக ஆபத்தானது, உடனடியாக மின்சாரம் தாக்கக்கூடும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;உடனே ராடை வெளியே எடுக்கக் கூடாது&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;தண்ணீர் சூடானதும் சுவிட்சை ஆஃப் செய்துவிட்டு, குறைந்தது 10 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடுங்கள். ராடில் உள்ள வெப்பம் முழுமையாகக் குறைந்த பிறகுதான் அதைத் தண்ணீரில் இருந்து வெளியே எடுக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிளாஸ்டிக் வாளிகளில் ஹீட்டர் ராடைத் தொங்கவிட்டுப் பயன்படுத்தக் கூடாது. ஹீட்டரின் அதிகப்படியான வெப்பத்தால் பிளாஸ்டிக் உருகி, வாளி வெடிக்கும் அல்லது தீப்பிடிக்கும் அபாயம் அதிகம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இரும்பு வாலியும் வேண்டாம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;அதேபோல், இரும்பு வாளிகளையும் தவிர்க்க வேண்டும். இரும்பு எளிதில் மின்சாரத்தைக் கடத்தும் என்பதால், எதிர்பாராதவிதமாக ஷாக் அடிக்கலாம். இதற்குப் பதிலாக எஃகு , அலுமினியம் அல்லது பிரத்யேக வாட்டர் ஹீட்டர் ஸ்டாண்ட் கொண்ட உலோகப் பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>astrology</category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/shocking-danger-6-fatal-mistakes-to-avoid-when-using-a-water-heater-immersion-rod-b0tbi6r"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Mercury Transit: அடுத்த 39 நாட்கள் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்! பணம், பதவி தேடி வருமாம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/mercury-transit-2026-these-4-zodiac-signs-may-enjoy-39-days-of-luck-wealth-and-success-tadwh81</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/mercury-transit-2026-these-4-zodiac-signs-may-enjoy-39-days-of-luck-wealth-and-success-tadwh81</guid>
            <pubDate>Wed, 01 Jul 2026 19:24:59 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;புதன் பெயர்ச்சியால் அடுத்த 39 நாட்கள் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும் என ஜோதிடம் கூறுகிறது. குறிப்பாக ரிஷபம், சிம்மம், துலாம், மகரம் ராசிக்காரர்களுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் ஆகியவை கைகூடும் என கூறப்படுகிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kweyvzw05wapwnx0wk41akjj,imgname-mercury-transit-1782913564544.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;புதன் பெயர்ச்சியால் அடுத்த 39 நாட்கள் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும் என ஜோதிடம் கூறுகிறது. குறிப்பாக ரிஷபம், சிம்மம், துலாம், மகரம் ராசிக்காரர்களுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் ஆகியவை கைகூடும் என கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜோதிடத்தில் புத்திசாலித்தனம், பேச்சுத் திறன், கல்வி, வணிகம், தகவல் தொடர்பு மற்றும் கணக்கீடு ஆகியவற்றின் காரக கிரகமாக கருதப்படுவது புதன். புதன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி செய்யும் போது அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் சில மாற்றங்கள் ஏற்படும் என்று ஜோதிட நம்பிக்கை கூறுகிறது. இந்த பெயர்ச்சியின் தாக்கம் சுமார் 39 நாட்கள் நீடிக்கும் என்று கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;புதன் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு பல புதிய வாய்ப்புகளை உருவாக்கும் காலமாக அமையலாம்.&lt;/p&gt;&lt;p&gt;நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வேலை வாய்ப்பு கிடைக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.&lt;/p&gt;&lt;p&gt;சொத்து தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த காலம் தன்னம்பிக்கையையும், முன்னேற்றத்தையும் அதிகரிக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;அலுவலகத்தில் பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;வருமானம் அதிகரிக்கக்கூடிய புதிய வாய்ப்புகள் அமையலாம்.&lt;/p&gt;&lt;p&gt;முதலீடுகளில் நல்ல பலன் கிடைக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும்.&lt;/p&gt;&lt;p&gt;புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;துலாம் ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் என்று ஜோதிடர்கள் கருதுகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;நிலுவையில் இருந்த பணம் கைக்கு வர வாய்ப்பு உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;வெளிநாட்டு தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படலாம்.&lt;/p&gt;&lt;p&gt;நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு அதிகரிக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மகர ராசிக்காரர்களுக்கு இந்த 39 நாட்கள் வளர்ச்சிக்கான சிறந்த காலமாக அமையலாம்.&lt;/p&gt;&lt;p&gt;பணவரவு அதிகரிக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;தொழிலில் இருந்த தடைகள் நீங்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;புதிய திட்டங்கள் வெற்றிகரமாக அமைய வாய்ப்பு உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;குடும்பத்தில் அமைதியும் ஒற்றுமையும் அதிகரிக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு மனநிம்மதி கிடைக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;புதன் கிரகத்தின் நல்ல பலன்களைப் பெற விரும்புபவர்கள்:&lt;/p&gt;&lt;p&gt;முக்கிய முடிவுகளை திட்டமிட்டு எடுக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;புதிய திறன்களைக் கற்றுக்கொள்வது நல்ல பலன் தரலாம்.&lt;/p&gt;&lt;p&gt;தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவது நன்மை தரும்.&lt;/p&gt;&lt;p&gt;ஆவணங்கள் மற்றும் நிதி தொடர்பான விஷயங்களில் கவனமாக செயல்படுவது சிறந்தது.&lt;/p&gt;&lt;p&gt;தெளிவான தகவல் பரிமாற்றம் மற்றும் பொறுமையான அணுகுமுறை வெற்றிக்கு உதவும்.&lt;/p&gt;&lt;p&gt;புதன் பெயர்ச்சி காரணமாக அடுத்த 39 நாட்கள் ரிஷபம், சிம்மம், துலாம் மற்றும் மகரம் ஆகிய ராசிக்காரர்களுக்கு பல நல்ல மாற்றங்களையும் முன்னேற்ற வாய்ப்புகளையும் வழங்கும் காலமாக ஜோதிடத்தில் கூறப்படுகிறது. இருப்பினும், ஒவ்வொருவரின் பிறந்த ஜாதகம், தசா-புத்தி மற்றும் கிரக நிலைகளைப் பொறுத்தே பலன்கள் மாறுபடும். எனவே இதை பொதுப் பலனாக மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>astrology</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/mercury-transit-2026-these-4-zodiac-signs-may-enjoy-39-days-of-luck-wealth-and-success-tadwh81"/>
        </item>
    </channel>
</rss>
