<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes"?>
<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Fri, 12 Jun 2026 13:15:09 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss/agriculture" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[Training: காய்கறி, பழங்கள் ஏற்றுமதி மூலம் லட்சங்களில் வருமானம்.! அரசு வழங்கும் ஏற்றுமதி, இறக்குமதி பயிற்சி.! தேதிய மறந்துடாதீங்க.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/career/government-provided-export-import-training-opportunity-0o0cgl4</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/career/government-provided-export-import-training-opportunity-0o0cgl4</guid>
            <pubDate>Wed, 31 Dec 2025 08:47:26 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்கள் மற்றும் விவசாயிகளுக்காக குறைந்த கட்டணத்தில் ஏற்றுமதி-இறக்குமதி பயிற்சி வழங்குகிறது.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kdcf4dd9dwy6nygp84sv5czn,imgname-b0623c85-fcba-430e-a36e-cddd398b6a76-1766723827113.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்கள் மற்றும் விவசாயிகளுக்காக குறைந்த கட்டணத்தில் ஏற்றுமதி-இறக்குமதி பயிற்சி வழங்குகிறது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சொந்தமாகத் தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்களுக்கும், விவசாயிகளுக்கும் இது ஒரு அட்டகாசமான செய்தியாகும். தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மற்றும் மத்திய அரசின் MSME துறை ஆகியவை இணைந்து வழங்கும் பயிற்சிகள் மிகவும் நம்பகமானவை. தனியார் நிறுவனங்களில் லட்சக்கணக்கில் செலவாகும் தகவல்களை, அரசு அங்கீகாரத்துடன் மிகக்குறைந்த செலவில் கற்றுக்கொள்ள இது ஒரு செம்ம வாய்ப்பு என்றால் இது மிகையல்ல.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உலகச் சந்தையை உங்கள் கைக்குள் கொண்டுவர இந்த 3 முதல் 5 நாட்கள் கொண்ட தீவிர பயிற்சி வகுப்புகள் உதவுகின்றன. சென்னையில் உள்ள ஈக்காட்டுத்தாங்கல் அலுவலகத்தில் மாதந்தோறும் இப்பயிற்சி நடைபெறுகிறது. வரும் ஜனவரி முதல் வாரத்தில் (ஜனவரி 5-7) அல்லது ஜனவரி இறுதி வாரத்தில் இந்தப் பயிற்சி உத்தேசமாக திட்டமிடப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் உலகளாவிய வர்த்தகத்தை புரிந்துகொள்ள இது ஒரு ஜாக்பாட் வாய்ப்பாகும். இதனை விவசாயிகளும், இளைஞர்களும் கற்றுகொண்டால் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தத் தொழில்முறைப் பயிற்சியில் ஏற்றுமதித் தொழிலுக்குத் தேவையான அனைத்து நுணுக்கங்களும் ஏ டூ இசட் கற்றுத்தரப்படுகின்றன:&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;IEC கோடு (Import Export Code)&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;உங்கள் தொழிலுக்கான ஏற்றுமதி-இறக்குமதி உரிமம் பெறுவது எப்படி?&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சரக்கு கையாளுதல்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;கப்பல் மற்றும் விமானம் மூலம் பொருட்களை உலக நாடுகளுக்கு அனுப்பும் நடைமுறைகள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;வங்கி மற்றும் ஆவணங்கள்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;சர்வதேசப் பணப்பரிமாற்றம், வங்கி நடைமுறைகள் மற்றும் தேவையான ஆவணங்களைத் தயாரித்தல்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;அரசு மானியங்கள்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் சலுகைகள் மற்றும் மானியங்களைப் பெறுவது எப்படி? உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் உங்களுக்கு கற்றுத்தரப்படுகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அரசு நடத்தும் பயிற்சி என்பதால், கட்டணம் மிகவும் நியாயமானதாகவே இருக்கும். பொதுவாக, இத்தகைய 3 நாள் பயிற்சிகளுக்கு ₹3,000 முதல் ₹5,000 வரை கட்டணம் வசூலிக்கப்படும் (உணவு மற்றும் பயிற்சி கையேடுகள் உட்பட). இதில் பெண்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு அரசு விதிகளின்படி சிறப்புச் சலுகைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. தற்போதைய துல்லியமான கட்டண விபரத்தை இணையதளத்தில் சரிபார்த்துக்கொள்ளலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த அட்டகாசமான பயிற்சியில் சேர விரும்புவோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;இணையதளம்: www.editn.in&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;அலுவலக முகவரி&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;EDII-TN, சிட்கோ தொழிற்பேட்டை, பார்த்தசாரதி கோயில் தெரு, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை - 600032.&lt;/p&gt;&lt;p&gt;தொலைபேசி: 044-22252081 / 22252082&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;காய்கறி மற்றும் பழங்கள் ஏற்றுமதித் துறையில் கால்பதிக்கத் துடிக்கும் ஒவ்வொரு தொழில்முனைவோருக்கும் இது ஒரு செம்ம தொடக்கமாகும். முறையான பயிற்சியும், அரசு சான்றிதழும் உங்கள் தொழிலுக்குப் பெரும் பலத்தைச் சேர்க்கும். இந்த ஜாக்பாட் வாய்ப்பைப் பயன்படுத்தி, தமிழகத்தின் விளைபொருட்களை உலக மேடைக்குக் கொண்டு செல்ல இப்போதே தயாராகுங்கள்! தேதிய மறந்துடாதீங்க!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>agriculture</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/career/government-provided-export-import-training-opportunity-0o0cgl4"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Kitchen Garden: மளிகை செலவு இனி பாதிதான்! கோடையில் இந்த 10 காய்களை ஈஸியா வளர்க்கலாம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/kitchen-garden-cut-your-grocery-bills-in-half-easily-grow-these-10-vegetables-this-summer-37dobw6</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/kitchen-garden-cut-your-grocery-bills-in-half-easily-grow-these-10-vegetables-this-summer-37dobw6</guid>
            <pubDate>Mon, 20 Apr 2026 12:44:50 +0530</pubDate>
            <description><![CDATA[கோடை காலத்தில் வீட்டில் தோட்டம் போட இது ஒரு சூப்பரான நேரம். குறைஞ்ச பராமரிப்பிலேயே வேகமாக வளர்ந்து, தினமும் சமையலுக்குப் பயன்படும் 10 காய்கறிகளைப் பற்றி இங்கே பார்க்கலாம். இவற்றை வளர்த்தால், அடிக்கடி கடைக்குப் போக வேண்டிய அவசியமே இருக்காது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01knp5qyfk6xb2w7gwz16b20nh,imgname-vegitable-garden-ideas-1775639460336.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[கோடை காலத்தில் வீட்டில் தோட்டம் போட இது ஒரு சூப்பரான நேரம். குறைஞ்ச பராமரிப்பிலேயே வேகமாக வளர்ந்து, தினமும் சமையலுக்குப் பயன்படும் 10 காய்கறிகளைப் பற்றி இங்கே பார்க்கலாம். இவற்றை வளர்த்தால், அடிக்கடி கடைக்குப் போக வேண்டிய அவசியமே இருக்காது.&lt;img&gt;வீட்டில் காய்கறி தோட்டம் அமைக்க கோடைக்காலம் ஒரு சரியான சீசன். இந்த நேரத்தில் சூரிய வெப்பம் காய்கறிகளின் வளர்ச்சியை வேகப்படுத்தும். சரியான தண்ணீர் மேலாண்மை செய்தால், வாரக்கணக்கில் ஃப்ரெஷ் காய்கறிகளை நீங்களே அறுவடை செய்யலாம். வீட்டுத் தோட்டம் என்றால் பெரிய இடம் வேண்டும் என்று நினைக்காதீர்கள். பால்கனி, மொட்டை மாடி, ஏன் சின்ன சின்ன தொட்டிகளில் கூட இந்த காய்கறிகளை ரொம்ப சுலபமாக வளர்க்க முடியும். குறைவான பராமரிப்பில், வேகமாக வளரும் 10 காய்கறிகளைப் பற்றி இங்கே பார்க்கலாம். இதனால் அடிக்கடி கடைக்குப் போகும் வேலையும் மிச்சமாகும்.&lt;img&gt;சுரைக்காய் (Bottle Gourd) அதிவேகமாக வளரும் கொடி: சுரைக்காய் கோடை காலத்தில் ரொம்ப வேகமாக வளரும். நல்ல வெயிலும், தினசரி தண்ணீரும் கிடைத்தால் 45-55 நாட்களில் செடி தயாராகிவிடும். இது செங்குத்தாக வளர்வதால், குறைந்த இடத்தையே எடுத்துக்கொள்ளும். ஒரு கொடியிலிருந்து பல வாரங்களுக்கு காய் பறிக்கலாம். டிண்டா (Tinda) சமையலுக்கு சிறந்த காய்: டிண்டா செடியும் கோடை வெப்பத்தில் வேகமாக வளரும். மிதமான மதிய நேர வெயிலில் இது நன்றாக வளரும். சீக்கிரமே அறுவடைக்கு வந்து, தொடர்ந்து காய்களைக் கொடுக்கும்.&lt;img&gt;தக்காளி (Tomato) ஒவ்வொரு கிச்சனின் ஹீரோ: கோடை காலத்தில் தக்காளி செடிக்கு கொஞ்சம் கவனிப்பு கொடுத்தால் போதும், நல்ல விளைச்சல் தரும். இதை 12&ndash;14 இன்ச் தொட்டியில் வளர்க்கலாம். கோடை வெயிலும், சரியான தண்ணீரும் இருந்தால் அமோகமாக வளரும். வெண்டைக்காய் (Okra) குறைந்த பராமரிப்பு, அதிக விளைச்சல்: வீட்டுத் தோட்டத்தில் வெண்டைக்காய் வளர்ப்பது ரொம்ப சுலபம். தொட்டிகளில்கூட நன்றாக காய்க்கும். கோடை வெயில் இதை இன்னும் பசுமையாக்கும்.&lt;img&gt;பச்சை மிளகாய் செடிக்கு நல்ல வெயில் தேவை. குறைந்த இடத்திலும் இது நன்றாக வளரும். 8&ndash;10 இன்ச் தொட்டியே போதுமானது. நட்ட 25&ndash;30 நாட்களில் பச்சை மிளகாய் கிடைக்கத் தொடங்கும்.&lt;img&gt;கத்திரிக்காய் செடி சூடான, வெயில் படும் இடத்தில் மிக வேகமாக வளரும். ஒவ்வொரு 7&ndash;10 நாட்களுக்கும் காய்களைப் பறிக்கலாம். இதன் வேர்கள் பரவுவதற்கு ஏதுவாக, பெரிய தொட்டியில் நட வேண்டும்.&lt;img&gt;வெள்ளரிக்காய் (Cucumber) கோடையின் சூப்பர் ஃபுட்: வெள்ளரிக்காய் கொடி கோடை காலத்தில் வேகமாகப் படரும். இது ஒரு கொடி வகை என்பதால், பந்தல் அல்லது கயிறு கட்டி விடலாம். தினமும் தண்ணீர் பாய்ச்சினால், 40&ndash;45 நாட்களில் மொறுமொறுப்பான வெள்ளரிக்காய் கிடைக்கும். பாகற்காய் (Bitter Gourd) ஆரோக்கியம் தரும் அதிவேக வளர்ச்சி: பாகற்காய் கொடியும் கோடை வெயிலில் வேகமாகப் படரும். பால்கனியில் செங்குத்தாக வளர்க்கலாம். நட்ட 35&ndash;40 நாட்களில் முதல் அறுவடை செய்யலாம். ஆரோக்கியத்தில் அக்கறை உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வு.&lt;img&gt;அவரைக்காய் (Beans) வேகமாக வளரும் காய்: கோடை காலத்தில் அவரைக்காய் கொடி 10&ndash;12 நாட்களிலேயே வேகமாக வளரத் தொடங்கிவிடும். குறைந்த தண்ணீரில் கூட வளரும் தன்மை கொண்டது. சீக்கிரமாகவும், தொடர்ந்தும் காய் கொடுக்கும். பாலக்கீரை (Palak) சீக்கிரம் வளரும் கீரை வகை: உங்களுக்கு கீரை வகைகள் பிடிக்குமானால், பாலக்கீரை வளர்க்கலாம். 20&ndash;25 நாட்களில் அறுவடைக்குத் தயாராகிவிடும். வெயில் மற்றும் நிழல் என இரண்டிலும் வளரும். தொட்டி அல்லது தட்டுகளில் கூட இதை வளர்க்கலாம்.]]></content:encoded>
            <category>agriculture</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/kitchen-garden-cut-your-grocery-bills-in-half-easily-grow-these-10-vegetables-this-summer-37dobw6"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Cashew Farming: கோடிகளில் வருமானம் தரும் முந்திரி விவசாயம்.! முந்திரி சாகுபடி செய்யவது எப்படி? எளிய வழிமுறை இதோ.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/agriculture/cashew-farming-business-high-demand-export-opportunities-profits-and-benefits-for-farmers-explained-8i1maf9</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/agriculture/cashew-farming-business-high-demand-export-opportunities-profits-and-benefits-for-farmers-explained-8i1maf9</guid>
            <pubDate>Fri, 12 Jun 2026 13:15:07 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Cashew Farming: உலகம் முழுவதும் முந்திரிக்கு அதிக டிமாண்ட் உள்ளது. நல்ல விலை, ஏற்றுமதி வாய்ப்பு, உடல்நலப் பலன்கள் என பல காரணங்களால், இது விவசாயிகளுக்கு லாபகரமான ஒரு பயிராக மாறியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktxcggdqqfh1cvdk63zj8af5,imgname-cashew-farming-1781250146743.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Cashew Farming: உலகம் முழுவதும் முந்திரிக்கு அதிக டிமாண்ட் உள்ளது. நல்ல விலை, ஏற்றுமதி வாய்ப்பு, உடல்நலப் பலன்கள் என பல காரணங்களால், இது விவசாயிகளுக்கு லாபகரமான ஒரு பயிராக மாறியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முந்திரியின் பூர்வீகம் தென் அமெரிக்காவில் உள்ள பிரேசில் ஆகும். பல நூற்றாண்டுகளுக்கு முன், போர்ச்சுகீசிய வியாபாரிகள் இதை இந்தியாவுக்கு கொண்டு வந்தனர். ஆரம்பத்தில் கடற்கரையோர மண் அரிப்பைத் தடுக்கவே இந்தச் செடிகளை நட்டார்கள். ஆனால், உலகளவில் டிமாண்ட் அதிகமானதால், இது ஒரு மதிப்புமிக்க வணிகப் பயிராக மாறியது. காபி, தேயிலைக்குப் பிறகு, அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் முக்கிய விவசாயப் பொருட்களில் முந்திரியும் ஒன்று. உள்நாட்டு சந்தையிலும் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முந்திரி மரங்கள் வெப்பமண்டல காலநிலையை விரும்பும். ஆண்டுக்கு 1000 முதல் 2000 மி.மீ. மழைப்பொழிவு உள்ள பகுதிகள் இந்த பயிருக்கு ஏற்றவை. 20 முதல் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருந்தால் நல்ல விளைச்சல் கிடைக்கும். செம்மண், மணல், கடலோர மண் என அதிக வளம் இல்லாத நிலத்திலும் இது நன்றாக வளரும். ஆனால், வயலில் தண்ணீர் தேங்கக் கூடாது. செடிகளை 7 முதல் 8 மீட்டர் இடைவெளியில் நட வேண்டும். நட்ட முதல் 3-4 ஆண்டுகள் பராமரிப்பு முக்கியம். அதன்பிறகு, 30 முதல் 40 ஆண்டுகள் வரை வருமானம் கொடுக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முந்திரி சாகுபடி செய்ய பெரிய விவசாய அனுபவம் தேவையில்லை. சரியான பயிற்சி, தரமான செடிகள் இருந்தால் போதும். ஆந்திரா, ஒடிசா, மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, கோவா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் முந்திரி முக்கியமாகப் பயிரிடப்படுகிறது. சமீபத்தில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநில விவசாயிகளும் இதில் ஆர்வம் காட்டுகின்றனர். இந்தத் தொழில் கிராமப்புற வேலைவாய்ப்புக்கும் உதவுகிறது. குறிப்பாக, பதப்படுத்தும் ஆலைகளில் லட்சக்கணக்கான பெண்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மற்ற பயிர்களைப் போலவே, முந்திரி சாகுபடியிலும் சில சவால்கள் உள்ளன. தண்டு துளைப்பான், பூக்களைத் தாக்கும் பூச்சிகள், பழங்களை அழிக்கும் புழுக்கள் போன்றவை பாதிப்பை ஏற்படுத்தும். சரியான நேரத்தில் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தினால் இழப்பைக் குறைக்கலாம். சில சமயங்களில் பூஞ்சை நோய்களும் பயிரைத் தாக்கும். வேளாண்மைத் துறையின் ஆலோசனைகளைப் பின்பற்றி, சரியான நேரத்தில் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சொட்டுநீர்ப் பாசனம் இருந்தால் இன்னும் நல்ல பலன் கிடைக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முந்திரி சாகுபடியை ஒரு 'நீண்ட கால முதலீடு' என விவசாயிகள் கருதுகின்றனர். ஆரம்பத்தில் பொறுமை தேவைப்பட்டாலும், பிறகு நல்ல வருமானம் கிடைக்கும். சந்தையில் முந்திரி விலை நிலையாக இருப்பதால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது. உடல்நலம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவதால், உலர் பழங்களின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. எனவே, எதிர்காலத்திலும் இந்த பயிருக்கான தேவை குறைய வாய்ப்பில்லை. சரியான ரகங்களைத் தேர்ந்தெடுத்து, அறிவியல் முறையில் சாகுபடி செய்தால், முந்திரி தோட்டம் ஒரு நிரந்தர வருமானம் தரும் தங்கப் பயிராக மாறும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பொறுப்பு துறப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அடிப்படை புரிதலுக்காக மட்டுமே. இந்தத் தொழிலைத் தொடங்கும் முன், அனுபவம் வாய்ந்தவர்களிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.&lt;/strong&gt;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>agriculture</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/agriculture/cashew-farming-business-high-demand-export-opportunities-profits-and-benefits-for-farmers-explained-8i1maf9"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Agriculture: ஏக்கருக்கு ரூ.1.50 லட்சம் லாபம்.! டிராகன் பழ சாகுபடியில் கோடீஸ்வரராகும் வாய்ப்பு.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/agriculture/agriculture-earn-rs150-lakh-profit-per-acre-through-dragon-fruit-farming-9ffnqmh</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/agriculture/agriculture-earn-rs150-lakh-profit-per-acre-through-dragon-fruit-farming-9ffnqmh</guid>
            <pubDate>Thu, 01 Jan 2026 12:04:05 +0530</pubDate>
            <description><![CDATA[டிராகன் ஃப்ரூட் சாகுபடி, குறைந்த நீரில் அதிக லாபம் தரும் ஒரு சிறந்த விவசாய முறையாகும். ஒருமுறை முதலீடு செய்தால், 30 ஆண்டுகள் வரை தொடர்ந்து வருமானம் ஈட்டலாம், மேலும் ஏற்றுமதி மூலம் கிலோவுக்கு ₹500 வரை சம்பாதிக்க முடியும்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kdw26776b2dv9rexbs5gcqp9,imgname-image--15---1--1767247125734.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[டிராகன் ஃப்ரூட் சாகுபடி, குறைந்த நீரில் அதிக லாபம் தரும் ஒரு சிறந்த விவசாய முறையாகும். ஒருமுறை முதலீடு செய்தால், 30 ஆண்டுகள் வரை தொடர்ந்து வருமானம் ஈட்டலாம், மேலும் ஏற்றுமதி மூலம் கிலோவுக்கு ₹500 வரை சம்பாதிக்க முடியும்.&lt;img&gt;&lt;p&gt;தமிழக விவசாயத்தில் பாரம்பரியப் பயிர்களுக்கு மாற்றாக, குறைந்த தண்ணீரில் அதிக லாபம் தரும் பயிர்களை நோக்கி விவசாயிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், 'கள்ளிக்குடும்பத்தைச்' சேர்ந்த டிராகன் ஃப்ரூட் சாகுபடி இன்று விவசாயிகளின் அட்சயபாத்திரமாக மாறி வருகிறது. ஒருமுறை முதலீடு செய்தால் அடுத்த 30 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து வருமானம் தரக்கூடிய இந்தப் பயிர், வறண்ட நிலங்களையும் பொன் விளையும் பூமியாக மாற்றும் வல்லமை கொண்டது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒரு ஏக்கர் பரப்பளவில் டிராகன் ஃப்ரூட் சாகுபடி செய்யத் தொடக்கத்தில் 3 லட்சம் முதல் 3.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு தேவைப்படுகிறது. இதில் நிலத்தை உழுதல், கான்கிரீட் தூண்கள் அமைத்தல், சொட்டுநீர்ப் பாசனம் மற்றும் தரமான நாற்றுகள் வாங்குதல் ஆகியவை அடங்கும். சமவெளிப் பகுதிகளிலும், குறைந்த நீர் வசதி கொண்ட இடங்களிலும் இது சிறப்பாக வளரும். ஒரு ஏக்கரில் சுமார் 450 முதல் 500 தூண்கள் வரை நடவு செய்யலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;7 அடி உயரமுள்ள கான்கிரீட் தூண்களை நட்டு, அதன் உச்சியில் செடிகள் படர்வதற்காக வட்ட வடிவ வளையங்களை அமைக்க வேண்டும். ஒரு தூணைச் சுற்றி நான்கு நாற்றுகள் வீதம் நடவு செய்ய வேண்டும். ரசாயன உரங்களை விட இயற்கை உரங்களான எரு, பஞ்சகவ்யா மற்றும் ஜீவாமிர்தம் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது பழங்கள் அதிக இனிப்புச் சுவையுடன் வளர்கின்றன. தண்டுப் பகுதியில் வளரும் தேவையற்ற கிளைகளை அவ்வப்போது கவாத்து (Pruning) செய்வது அதிக மகசூலுக்கு வழிவகுக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மகசூல் மற்றும் விற்பனை வாய்ப்பு நடவு செய்த 18 மாதங்களில் இருந்து பலன் கிடைக்கத் தொடங்கும். ஆண்டுதோறும் ஜூன் முதல் நவம்பர் வரையிலான காலங்களில் அறுவடை நடைபெறும். முறையாகப் பராமரித்தால், ஒரு தூணில் இருந்து ஆண்டுக்கு 10 முதல் 20 கிலோ வரை பழங்களைப் பெற முடியும். சந்தையில் இந்தப் பழங்களுக்கு எப்போதும் மவுசு உண்டு. இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக விற்பனை செய்யும் போது, ஒரு கிலோவுக்கு 150 ரூபாய் வரை லாபம் ஈட்ட முடியும். இது தவிர, முதிர்ந்த கிளைகளைக் கொண்டு நாற்றுகள் தயாரித்து விற்பனை செய்வதன் மூலம் கூடுதல் வருமானமும் பெறலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குறைந்த வேலையாட்கள், நோய்த் தாக்குதல் குறைவு மற்றும் சந்தையில் நிலையான விலை என டிராகன் ஃப்ரூட் சாகுபடி ஒரு வெற்றிகரமான வணிகமாக உருவெடுத்துள்ளது. புதுமையான தொழில்நுட்பங்களையும், இயற்கை விவசாய முறைகளையும் கையாளும் விவசாயிகளுக்கு இந்தப் பயிர் ஒரு நிலையான பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்கிறது. தொலைநோக்குப் பார்வையுடன் இச்சாகுபடியில் இறங்கினால், நிச்சயம் விவசாயத்தில் பெரும் சாதனை படைக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நடவு செய்த 18 மாதங்களில் இருந்து பலன் கிடைக்கத் தொடங்கும். ஜூன் முதல் நவம்பர் வரையிலான காலங்களில் அறுவடை நடைபெறும். முறையாகப் பராமரித்தால், ஒரு தூணில் இருந்து ஆண்டுக்கு 10 முதல் 20 கிலோ வரை பழங்களைப் பெற முடியும். உள்நாட்டுச் சந்தையில் ஒரு கிலோவுக்கு 150 ரூபாய் வரை லாபம் ஈட்ட முடியும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஐக்கிய அரபு அமீரகம், பிரிட்டன், நெதர்லாந்து போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் போது கூடுதல் விலை கிடைக்கிறது. ஏற்றுமதிக்கு 'A-Grade' தரமுள்ள, சீரான வடிவம் கொண்ட பழங்கள் பயன்படுத்தப்படுகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;APEDA போன்ற அரசு அமைப்புகளின் வழிகாட்டுதலோடு ஏற்றுமதி செய்யும்போது, ஒரு கிலோவுக்கு 500 ரூபாய் வரை வருமானம் ஈட்ட வாய்ப்புள்ளது. இது தவிர, முதிர்ந்த கிளைகளைக் கொண்டு நாற்றுகள் தயாரித்து விற்பனை செய்வதன் மூலம் உபரி வருமானமும் பெறலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குறைந்த வேலையாட்கள், நோய்த் தாக்குதல் குறைவு மற்றும் உலகளாவிய சந்தை வாய்ப்பு என டிராகன் ஃப்ரூட் சாகுபடி ஒரு வெற்றிகரமான வணிகமாக உருவெடுத்துள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;புதுமையான தொழில்நுட்பங்களையும், இயற்கை விவசாய முறைகளையும் கையாளும் விவசாயிகளுக்கு இந்தப் பயிர் ஒரு நிலையான பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்கிறது. தொலைநோக்குப் பார்வையுடன் இச்சாகுபடியில் இறங்கினால், நிச்சயம் விவசாயத்தில் பெரும் லாபம் ஈட்டி சாதனை படைக்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>agriculture</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/agriculture/agriculture-earn-rs150-lakh-profit-per-acre-through-dragon-fruit-farming-9ffnqmh"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Agriculture: அசால்ட்டா மாதம் ரூ.50,000 கிடைக்கும்.! லாபத்தை அள்ளித்தரும் சிப்பிக்காளான்.! பழைய தொழிலில் புதிய வழி இருக்கு தெரிஞ்சுக்கோங்க.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/earn-rs-50000-a-month-effortlessly-oyster-mushroom-farming-big-profits-ex8biiu</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/earn-rs-50000-a-month-effortlessly-oyster-mushroom-farming-big-profits-ex8biiu</guid>
            <pubDate>Fri, 02 Jan 2026 12:14:23 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;சிப்பிக்காளான் வளர்ப்பு என்பது குறைந்த முதலீட்டில் மாதம் ரூ.50,000 வரை லாபம் ஈட்டக்கூடிய ஒரு சிறந்த சுயதொழில் ஆகும். நவீன தொழில்நுட்பங்கள், அரசின் மானிய உதவி மற்றும் மதிப்புக்கூட்டல் பொருட்கள் மூலம் இந்தத் தொழிலில் எளிதாக வெற்றி பெறலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kdynwvxdgfdn0jdz01zpxwvv,imgname-7fda882f-b965-4864-8dbe-e3d40cc95745--1--1767334899629.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சிப்பிக்காளான் வளர்ப்பு என்பது குறைந்த முதலீட்டில் மாதம் ரூ.50,000 வரை லாபம் ஈட்டக்கூடிய ஒரு சிறந்த சுயதொழில் ஆகும். நவீன தொழில்நுட்பங்கள், அரசின் மானிய உதவி மற்றும் மதிப்புக்கூட்டல் பொருட்கள் மூலம் இந்தத் தொழிலில் எளிதாக வெற்றி பெறலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்றைய காலகட்டத்தில் ஒரு வேலையை நம்பி இருப்பதை விட, கைநிறைய வருமானம் தரும் சுயதொழில் செய்வதுதான் புத்திசாலித்தனம். அந்த வகையில், மிகக் குறைந்த முதலீட்டில், மிகக் குறைந்த இடத்தில், &amp;nbsp;அசால்ட்டாக மாதம் 50,000 ரூபாய் வரை லாபம் தரும் தொழிலாக உருவெடுத்துள்ளது சிப்பிக்காளான் வளர்ப்பு. பழைய தொழில் என்றாலும், இப்போதுள்ள நவீன தொழில்நுட்பங்களைச் சேர்த்தால் இதில் கொட்டிக்கிடக்கும் லாபம் ஏராளம்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிப்பிக்காளான் வளர்ப்பிற்குப் பெரிய நிலமோ, பலமான கட்டிடமோ தேவையில்லை. உங்கள் வீட்டின் ஒரு ஓரத்தில் 10-க்கு 10 அடி உள்ள ஒரு சிறிய குடில் இருந்தால் போதும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;நவீன முறை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;பழைய முறையில் வைக்கோலை வேகவைக்கப் பெரும் சிரமப்பட்டனர். ஆனால் இப்போது 'ஸ்பான்' &amp;nbsp;எனப்படும் தரமான காளான் வித்துக்கள் மற்றும் நவீன கிருமி நீக்க முறைகள் வந்துவிட்டன.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பராமரிப்பு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;பாலித்தீன் பைகளில் வைக்கோலை அடுக்கி, இடையில் காளான் வித்துக்களைத் தூவி கட்டித் தொங்கவிட்டால் போதும். தினமும் ஒரு மணிநேரம் தண்ணீர் தெளிக்கும் பராமரிப்பு மட்டுமே இதற்குத் தேவை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முதலீட்டிற்குப் பணம் இல்லையே என கவலைப்படத் தேவையில்லை. தமிழக அரசின் தோட்டக்கலைத் துறை காளான் வளர்ப்பை ஊக்குவிக்கப் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. சிறிய அளவிலான காளான் குடில் அமைக்க 40% முதல் 50% வரை அரசு மானியம் வழங்கப்படுகிறது. காளான் வித்து உற்பத்தி நிலையம் அமைக்க விரும்புவோருக்குச் சுமார் 1 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை நிதி உதவி மற்றும் மானியங்கள் கிடைக்கின்றன. வேளாண்மைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் மாவட்ட அறிவியல் நிலையங்கள் மூலம் குறைந்த கட்டணத்தில் முறையான பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மாதம் ரூ.50,000 எப்படி? இங்கேதான் சூட்சுமம் இருக்கிறது. ஒரு காளான் படுக்கை தயாரிக்க வெறும் ரூ.50 முதல் ரூ.60 மட்டுமே செலவாகும். ஆனால் ஒரு படுக்கையில் இருந்து குறைந்தது 1 முதல் 1.5 கிலோ காளான் கிடைக்கும்.நீங்கள் ஒரு நாளைக்கு 15 முதல் 20 படுக்கைகள் தயார் செய்து, சுழற்சி முறையில் பராமரித்தால், மாதம் 400 - 500 படுக்கைகளை நிர்வகிக்கலாம். ஒரு கிலோ காளான் சந்தையில் ரூ.200 முதல் ரூ.250 வரை விற்கப்படுகிறது. அனைத்துச் செலவுகளும் போக ஒரு படுக்கைக்கு ₹120 லாபம் என்று கணக்கிட்டாலும், 400 படுக்கைகள் மூலம் மாதம் ரூ.48,000 முதல் ரூ.50,000 வரை சுலபமாக வருமானம் ஈட்டலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உள்ளூர் உணவகங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளே உங்களின் பெரிய சந்தை. அதுமட்டுமின்றி, விற்காத காளான்களை வீணாக்காமல் அவற்றை உலர வைத்து காளான் பொடி, சூப் மிக்ஸ் அல்லது காளான் ஊறுகாய் என மதிப்புக்கூட்டி விற்றால் லாபத்தை இன்னும் இரட்டிப்பாக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;காளான் ஊறுகாய் (Mushroom Pickle)&lt;/p&gt;&lt;p&gt;காளான்களைச் சிறிய துண்டுகளாக நறுக்கி, எண்ணெயில் வதக்கி, மசாலாக்கள் சேர்த்துத் தயாரிக்கப்படுகிறது. இது பல மாதங்கள் கெடாமல் இருக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;காளான் பொடி (Mushroom Powder)&lt;/p&gt;&lt;p&gt;அறுவடை செய்த காளான்களை நன்றாக உலர்த்தி, அரைத்துப் பொடியாக்குவது. இதைச் சூப், குழம்பு அல்லது சத்துமாவு தயாரிக்கப் பயன்படுத்தலாம்.&lt;/p&gt;&lt;p&gt;காளான் சூப் மிக்ஸ் (Instant Soup Mix)&lt;/p&gt;&lt;p&gt;காளான் பொடியுடன் மக்காச்சோள மாவு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து இன்ஸ்டண்ட் சூப் மிக்ஸாக விற்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;காளான் அப்பளம்/வடகம்&lt;/p&gt;&lt;p&gt;காளான் விழுதை அப்பளம் அல்லது வடகம் தயாரிக்கும்போது சேர்த்துச் செய்யலாம். ஆரோக்கியமான தின்பண்டமாக இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சூப்பர் மார்க்கெட்டுகள், இயற்கை அங்காடிகள் (Organic Stores) மற்றும் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களில் உங்கள் பொருட்களை வைக்கலாம். Amazon, Flipkart போன்ற தளங்கள் அல்லது சொந்தமாகச் சமூக வலைதளப் பக்கங்கள் (Instagram/Facebook) தொடங்கி விற்பனை செய்யலாம். பெரிய உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களுக்குச் 'சூப் மிக்ஸ்' மற்றும் 'காளான் பொடி'யைத் மொத்தமாக (Bulk) வழங்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;வருமானம் எவ்வளவு கிடைக்கும்?&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;சாதாரணமாக ஒரு கிலோ காளானை ரூ.200-க்கு விற்கிறீர்கள் எனில், ஒரு கிலோ காளானை ஊறுகாயாக மாற்றினால், அதன் மூலம் சுமார் ரூ.500 முதல் ரூ.700 வரை வருவாய் ஈட்டலாம். சர்வதேசச் சந்தையில் உலர்ந்த காளான் பொடியின் விலை கிலோ ரூ.1,500 முதல் ரூ.3,000 வரை தரத்தை பொறுத்து விற்பனையாகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மதிப்புக்கூட்டுப் பொருட்கள் மூலம் நஷ்டமே இல்லாமல் தொழிலை நடத்தலாம். அறுவடை செய்யும் அன்றே காளான் விற்கவில்லை என்றாலும், கவலைப்படாமல் அதை உலர்த்தி மதிப்புக்கூட்டுப் பொருளாக மாற்றினால் லாபம் நிச்சயம் உங்கள் கையில்!.&lt;/p&gt;&lt;p&gt;&quot;பழைய தொழில்தான்... ஆனால் லாபம் தரும் புதிய வழி இதில் உள்ளது!&quot; முறையான பயிற்சி, அரசின் மானியம் மற்றும் சந்தைப்படுத்தும் நுணுக்கம் தெரிந்தால், சிப்பிக்காளான் வளர்ப்பு என்பது ஒரு பொன் முட்டையிடும் வாத்துதான். இன்றே உங்கள் பகுதியில் உள்ள தோட்டக்கலைத் துறை அலுவலகத்தை அணுகி, இந்த லாபகரமான பயணத்தைத் தொடங்குங்கள்!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>agriculture</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/earn-rs-50000-a-month-effortlessly-oyster-mushroom-farming-big-profits-ex8biiu"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Agriculture: ஏக்கருக்கு ரூ.10 லட்சம் லாபம்.! சமவெளி, வறட்சி பகுதிகளிலும் செய்யலாம் அவக்கோடா சாகுபடி.! இது தெரியாம போச்சே.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/agriculture/rs-10-lakh-profit-per-acre-avocado-farming-possible-in-plains-drought-areas-f467sbg</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/agriculture/rs-10-lakh-profit-per-acre-avocado-farming-possible-in-plains-drought-areas-f467sbg</guid>
            <pubDate>Mon, 05 Jan 2026 09:38:13 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;அவக்கோடா பழத்தை மலைப்பகுதிகளில் மட்டுமல்லாமல், தமிழகத்தின் சமவெளிப் பகுதிகளிலும் வெற்றிகரமாக சாகுபடி செய்ய முடியும். முறையான சாகுபடி முறைகள், அரசு வழங்கும் மானியங்கள் குறித்து இந்த கட்டுரை விரிவாக வழிகாட்டுகிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ke63ydt7nxrhx9msekpn1hmy,imgname-65fa5986-d121-4af4-92f8-81141f536340--1--1767584511815.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;அவக்கோடா பழத்தை மலைப்பகுதிகளில் மட்டுமல்லாமல், தமிழகத்தின் சமவெளிப் பகுதிகளிலும் வெற்றிகரமாக சாகுபடி செய்ய முடியும். முறையான சாகுபடி முறைகள், அரசு வழங்கும் மானியங்கள் குறித்து இந்த கட்டுரை விரிவாக வழிகாட்டுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பொதுவாக அவக்கோடா அல்லது வெண்ணெய் பழம் என்றாலே கொடைக்கானல், ஊட்டி போன்ற மலைப்பிரதேசங்களில் மட்டுமே விளையக்கூடிய ஒரு பழம் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், மகாராஷ்டிராவின் வறட்சியான பீட் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி, முறையான தொழில்நுட்பத்தைக் கையாண்டு இந்த பயிரின் மூலம் ஆண்டுக்கு ஏக்கருக்கு 10 லட்சம் ரூபாய் வரை லாபம் ஈட்டி சாதனை படைத்துள்ளார். வறண்ட நிலத்திலும், சமவெளிப் பகுதிகளிலும் அவக்கோடா சாகுபடி சாத்தியம் என்பதை இந்த வெற்றி நிரூபித்துள்ளது. அதேபோல் தமிழக விவசாயிகளும் அதே சாதனையை படைத்து வருகின்றனர். அரசு மானியம் வழங்கி தமிழக விவசாயிகளை வழிநடத்துகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அவக்கோடா சாகுபடி குறித்த விழிப்புணர்வு தற்போது அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் திருப்பூர் போன்ற சமவெளிப் பகுதிகளிலும் இதற்கான கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் போன்ற வெப்பமான பகுதிகளிலும் விவசாயிகள் தற்போது அவக்கோடாவைப் பயிரிட்டு அதிக மகசூல் பெற்று வருகின்றனர். முறையான ஒட்டு ரகக் கன்றுகள் மற்றும் சொட்டுநீர்ப் பாசன முறையைப் பயன்படுத்தினால், வறட்சிப் பகுதிகளிலும் இந்தப் பயிர் செழித்து வளரும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சமவெளிப் பகுதிகளில் அவக்கோடா பயிரிட விரும்புவோர் சில முக்கிய விஷயங்களைக் கவனிக்க வேண்டும்:&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ரகங்கள் தேர்வு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;வெப்பத்தைத் தாங்கி வளரக்கூடிய 'ஹாஸ்' (Hass) அல்லது சமவெளிக்கு ஏற்ற ஒட்டு ரகங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;நடவு முறை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;20-க்கு 20 அடி இடைவெளியில் குழிகளை எடுத்து, இயற்கை உரமிட்டு கன்றுகளை நட வேண்டும். ஜூன் முதல் டிசம்பர் வரையிலான காலம் நடவுக்கு ஏற்றது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;நீர் மேலாண்மை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;அவக்கோடாவுக்கு அதிக நீர் தேவையில்லை, ஆனால் ஈரப்பதம் தொடர்ந்து இருக்க வேண்டும். சொட்டுநீர்ப் பாசனம் இதற்கு மிகச்சிறந்தது. இது வறட்சி காலங்களிலும் செடியைக் காக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;நிழல் மற்றும் பராமரிப்பு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;செடி வளரும் ஆரம்பக் கட்டத்தில் (முதல் 2 ஆண்டுகள்) கடும் வெயிலில் இருந்து காக்க நிழல் வலைகள் அல்லது ஊடுபயிர்களைப் பயன்படுத்தலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அவக்கோடா பழங்கள் தற்போது சூப்பர் ஃபுட் என்று அழைக்கப்படுகின்றன. இதில் உள்ள ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் சத்துக்கள் காரணமாக, நகரங்களில் இதற்கான மவுசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஐஸ்கிரீம், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மருத்துவத் துறையில் இதன் தேவை அதிகம். ஒருமுறை நட்டு பராமரித்தால், சுமார் 40 முதல் 50 ஆண்டுகள் வரை தொடர்ந்து பலன் தரும் என்பது இதன் கூடுதல் சிறப்பு.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அவக்கோடா சாகுபடியை ஊக்கப்படுத்த தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத் துறை பல்வேறு மானியத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது:தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் மற்றும் மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டங்களின் கீழ், அவக்கோடா மற்றும் டிராகன் பழ சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ. 38,400 வரை மானியம் வழங்கப்படுகிறது.இந்த மானியத் தொகையில் 60 சதவீதத்தை மத்திய அரசும், மீதமுள்ள 40 சதவீதத்தை மாநில அரசும் வழங்குகின்றன.பொதுவாக தோட்டக்கலை பயிர்களில் தரமான நடவுப் பொருட்கள் மற்றும் இடுபொருட்களைப் பெற்று சாகுபடிப் பரப்பை அதிகரிக்க ஆகும் மொத்த செலவில் அரசு 40% மானியம் வழங்குகிறது. இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்த ஹெக்டேருக்கு ரூ. 4,000 வரை ஊக்கத்தொகை மற்றும் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை போன்ற சலுகைகளும் வழங்கப்படுகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மானியம் பெற விரும்பும் விவசாயிகள் பின்வரும் ஆவணங்களுடன் தங்கள் வட்டாரத்திலுள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம்:&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;கணினி பட்டா மற்றும் அடங்கல்.&lt;/li&gt; &lt;li&gt;குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை நகல்.&lt;/li&gt; &lt;li&gt;சிறு/குறு விவசாயி சான்றிதழ்.&lt;/li&gt; &lt;li&gt;வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;சந்தையில் ஒரு கிலோ அவக்கோடா ரூ. 300 முதல் 400 வரை விற்பனையாவதால், குறைந்த பராமரிப்பில் அதிக லாபம் ஈட்ட விரும்பும் சமவெளிப் பகுதி விவசாயிகளுக்கு இது ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாகும். இது குறித்த கூடுதல் விவரங்களுக்குத் தமிழ்நாடு தோட்டக்கலைத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜூன் - ஜூலை அல்லது செப்டம்பர் - அக்டோபர் மாதங்கள் நடவுக்கு மிகவும் ஏற்றவை. சமவெளிப் பகுதிகளில் 20 அடிக்கு 20 அடி (6m x 6m) இடைவெளியில் குழிகள் எடுக்க வேண்டும். 2x2x2 அடி அளவில் குழி எடுத்து, அதில் மட்கிய தொழு உரம், வேப்பம் புண்ணாக்கு மற்றும் மேல் மண் இட்டு நிரப்ப வேண்டும். கன்றுகள் நட்ட முதல் இரண்டு ஆண்டுகளுக்கு சீரான ஈரப்பதம் அவசியம். சொட்டுநீர்ப் பாசனம் மூலம் நீர் பாய்ச்சுவது வறட்சியைத் தாங்கி வளர உதவும். மரத்தின் கிளைகளைச் சீராக வெட்டிவிடுவதன் மூலம் சூரிய ஒளி எல்லா இடங்களிலும் பட்டு அதிக மகசூல் கிடைக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தரமான ஒட்டு ரகக் கன்றுகளைத் தேர்வு செய்வது மிக முக்கியம். பின்வரும் இடங்களில் கன்றுகளைப் பெறலாம்:குறிப்பாக நீலகிரி மாவட்டம் (பர்லியார், கல்லார் அரசு பண்ணைகள்) மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் உள்ள அரசு பண்ணைகளில் சமவெளிக்கு ஏற்ற ரகங்கள் கிடைக்கின்றன.தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) மற்றும் பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரிகளில் தகவல் பெறலாம்.பெங்களூரு, ஹோசூர் மற்றும் ஆந்திரப் பகுதிகளில் உள்ள சில அங்கீகாரம் பெற்ற நர்சரிகளில் 'ஹாஸ்' (Hass) போன்ற உலகத்தரம் வாய்ந்த ரகங்கள் கிடைக்கின்றன.&lt;/p&gt;&lt;p&gt;விற்பனை வாய்ப்புகள்&lt;/p&gt;&lt;p&gt;அவக்கோடா பழங்களுக்கு உள்நாட்டில் மிக அதிக தேவை உள்ளது.சென்னை, பெங்களூரு, மும்பை போன்ற நகரங்களில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் உயர்தரப் பழ அங்காடிகளில் (Gourmet Stores) ஒரு கிலோ ரூ.300 முதல் ரூ.500 வரை விற்கப்படுகிறது.ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனங்கள், ஜூஸ் கடைகள் மற்றும் இயற்கை அழகுசாதனப் பொருட்கள் தயாரிப்பாளர்கள் நேரடியாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்கின்றனர்.உழவன் செயலி' அல்லது ஆன்லைன் ஆர்கானிக் ஸ்டோர்ஸ் மூலம் விவசாயிகள் இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக விற்பனை செய்து கூடுதல் லாபம் ஈட்டலாம்.அவக்கோடா ஒரு உலகளாவிய பணப்பயிர் என்பதால் ஏற்றுமதிக்கு அபரிமிதமான வாய்ப்புகள் உள்ளன:ஐக்கிய அரபு அமீரகம் (UAE), சவுதி அரேபியா, கத்தார் போன்ற வளைகுடா நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து அவக்கோடா ஏற்றுமதி செய்யப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஏற்றுமதி தரம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;ஏற்றுமதிக்கு 'Hass' ரகம் உலகளவில் முதலிடத்தில் உள்ளது. பழங்கள் சீரான அளவில், காய்கள் இல்லாத மற்றும் பூச்சித் தாக்குதல் இல்லாத நிலையில் இருக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;APEDA உதவி&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்திய வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) மூலம் ஏற்றுமதி தொடர்பான வழிகாட்டுதல்களையும், பயிற்சிகளையும் விவசாயிகள் பெறலாம்.&lt;/p&gt;&lt;p&gt;அவக்கோடா சாகுபடியானது &quot;குறைந்த தண்ணீர் - அதிக லாபம்&quot; என்ற தாரக மந்திரத்திற்கு ஏற்ப அமைந்திருக்கிறது. தமிழக அரசு வழங்கும் ஏக்கருக்கு ரூ.38,400 மானியத்தைப் பயன்படுத்தி, முறையான ரகங்களைத் தேர்வு செய்து பயிரிட்டால், சமவெளிப் பகுதி விவசாயிகளும் சர்வதேச சந்தையில் தடம் பதிக்க முடியும்.&amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category>agriculture</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/agriculture/rs-10-lakh-profit-per-acre-avocado-farming-possible-in-plains-drought-areas-f467sbg"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Farmers Alert: விவசாயிகளுக்கு அலர்ட்..! மழை பெய்யும் முன் இதை செய்தால் மண் வளம் பல மடங்கு அதிகரிக்கும்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/agriculture/before-the-monsoon-arrives-farmers-should-not-ignore-this-hybzlq0</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/agriculture/before-the-monsoon-arrives-farmers-should-not-ignore-this-hybzlq0</guid>
            <pubDate>Fri, 05 Jun 2026 13:31:26 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Farmers Alert: அதிகப்படியான ரசாயன உர பயன்பாட்டால் பலவீனமடைந்துள்ள நிலங்களை மீண்டும் உயிர்ப்பிக்க எளிய வழிகள் உள்ளன. மழைக்காலம் தொடங்குவதற்கு முன் அவற்றை பின்பற்றினால் என்ன பலன் கிடைக்கும்? என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktb4sgz3q6r96e0ba4j457j0,imgname-tamil-news---2026-06-05t111023.967-1780638073826.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Farmers Alert: அதிகப்படியான ரசாயன உர பயன்பாட்டால் பலவீனமடைந்துள்ள நிலங்களை மீண்டும் உயிர்ப்பிக்க எளிய வழிகள் உள்ளன. மழைக்காலம் தொடங்குவதற்கு முன் அவற்றை பின்பற்றினால் என்ன பலன் கிடைக்கும்? என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பருவ மழையை எதிர்பார்த்து விவசாயிகள் சாகுபடி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் விதைப்பு மற்றும் உரமிடுதல் மட்டுமே அதிக விளைச்சலுக்கு போதுமானதல்ல என விவசாய நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். நல்ல விளைச்சலின் அடித்தளம் மண் வளம்தான். அதனால் மழை தொடங்குவதற்கு முன்பே நிலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;கடந்த சில தசாப்தங்களில் இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதன் விளைவாக மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் குறைந்து, இயற்கை வளம் பாதிக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் பயிர்கள் நோய் தாக்குதலுக்கு எளிதில் உள்ளாகுவதோடு, விளைச்சல் திறனும் குறைந்து வருகிறது. எனவே மண்ணை மீண்டும் உயிர்ப்பிக்கும் இயற்கை முறைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;ul&gt; &lt;li&gt;கால்நடை சாண உரம் மற்றும் மண்புழு உரத்தை பயன்படுத்துதல்&lt;/li&gt; &lt;li&gt;பசுந்தாள் உரப் பயிர்களை பூக்கும் முன் மண்ணில் கலத்தல்&lt;/li&gt; &lt;li&gt;ஜீவாமிர்தம் மற்றும் கன ஜீவாமிர்தம் போன்ற இயற்கை உரங்களை பயன்படுத்துதல்&lt;/li&gt; &lt;li&gt;களைகளை உரமாக மாற்றி நிலத்தில் சேர்த்தல்&lt;/li&gt; &lt;li&gt;மண்ணில் நுண்ணுயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கும் முறைகளை பின்பற்றுதல்&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;பயிர் சுழற்சி ஏன் முக்கியம்?&lt;/p&gt;&lt;p&gt;ஒரே பயிரை தொடர்ந்து பயிரிடுவது மண்ணின் ஊட்டச்சத்து சமநிலையை பாதிக்கலாம். அதற்கு பதிலாக நிலக்கடலை, பயறு வகைகள், காய்கறி பயிர்கள் போன்றவற்றை மாறி மாறி சாகுபடி செய்வது மண்ணின் வளத்தை பாதுகாக்க உதவும். இது பூச்சி மற்றும் நோய் தாக்குதலையும் குறைக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விவசாய நிபுணர்களின் கருத்துப்படி, மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே மண் வளத்தை மேம்படுத்தும் பணிகளை மேற்கொண்டால், விளைச்சல் தரமும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இயற்கை முறைகளை அதிகம் பின்பற்றுவது, நீண்ட காலத்திற்கு நிலத்தின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>agriculture</category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/agriculture/before-the-monsoon-arrives-farmers-should-not-ignore-this-hybzlq0"/>
        </item>
        <item>
            <title><![CDATA[PM Kisan திட்டத்தில் விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ் கிப்ட்.. பட்ஜெட்க்கு பின்னர் உயரப்போகும் தொகை..?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/agriculture/this-time-the-budget-amount-for-pm-kisan-yojana-will-increase-iywg5tl</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/agriculture/this-time-the-budget-amount-for-pm-kisan-yojana-will-increase-iywg5tl</guid>
            <pubDate>Fri, 09 Jan 2026 14:43:34 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;பிரதம மந்திரி கிசான் யோஜனா: பிப்ரவரி 1, 2026 அன்று வெளியிடப்படும் பட்ஜெட்டில் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனாவுக்கு ஒதுக்கப்பட்டும் தொகையை அரசாங்கம் அதிகரிக்குமா? கடந்த ஆண்டு பட்ஜெட்டில் இந்தத் திட்டத்திற்கு ₹63,500 கோடி ஒதுக்கப்பட்டது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k1kjjwj1j2nh9bt0gtw1ay53,imgname-pm-kisan-1754077426241.jpeg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;பிரதம மந்திரி கிசான் யோஜனா: பிப்ரவரி 1, 2026 அன்று வெளியிடப்படும் பட்ஜெட்டில் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனாவுக்கு ஒதுக்கப்பட்டும் தொகையை அரசாங்கம் அதிகரிக்குமா? கடந்த ஆண்டு பட்ஜெட்டில் இந்தத் திட்டத்திற்கு ₹63,500 கோடி ஒதுக்கப்பட்டது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனாவின் 22வது தவணைக்காக விவசாயிகள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். பட்ஜெட்டுக்குப் பிறகு அடுத்த தவணை விவசாயிகளின் கணக்குகளில் செலுத்தப்படும் என்று நம்பப்படுகிறது. இந்த முறை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1, 2026 ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட்டை தாக்கல் செய்வார். இப்போது கேள்வி என்னவென்றால்: பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனாவின் கீழ் வழங்கப்படும் தொகையை அரசாங்கம் இந்த முறை அதிகரிக்குமா?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கடந்த இரண்டு தொடர்ச்சியான பட்ஜெட்டுகளில், பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனாவிற்கு அரசு ரூ.63,500 கோடியை ஒதுக்கியுள்ளது. இதன் பொருள் இந்தத் திட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகளாக தொகை அதிகரிக்கப்படவில்லை. இப்போது, அரசு இந்தத் தொகையை அதிகரிக்கக்கூடும் என்ற நம்பிக்கை உள்ளது. அரசாங்கம் திட்டத்தின் பட்ஜெட்டை அதிகரித்தால், விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஆண்டுத் தொகையான ரூ.6,000 அதிகரிக்கக்கூடும். இந்த முறை அரசு இந்தத் தொகையை அதிகரிக்கக்கூடும் என்ற பேச்சுகள் உள்ளன. இருப்பினும், அரசாங்கத்தால் அத்தகைய எந்த அறிகுறியும் வழங்கப்படவில்லை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மத்திய அரசு விவசாயிகளின் கணக்குகளில் தலா ரூ.2,000 தவணைகளை வருடத்திற்கு மூன்று முறை வெளியிடுகிறது. இந்த முறை இந்தத் தொகை அதிகரிக்கப்படுமா என்பது பிப்ரவரி 1, 2026 அன்று அறியப்படும். இருப்பினும், விவசாயிகள் 22வது தவணைக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளி விவசாயிகளின் பட்டியலில் நீங்கள் சேர்க்கப்பட்டிருந்தால், 22வது தவணையை உங்கள் கணக்கில் எளிதாக வரவு வைக்க முன்கூட்டியே சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;1. நீங்கள் ஏதேனும் நன்மைகளைப் பெற விரும்பினால், முதலில் e-KYC செயல்முறையை முடிக்கவும். இந்த செயல்முறையை முடிக்காத விவசாயிகளுக்கு நன்மைத் தொகை கிடைக்காது.&lt;/p&gt;&lt;p&gt;2. அரசாங்கம் நில சரிபார்ப்பையும் கட்டாயமாக்கியுள்ளது. உங்கள் நில சரிபார்ப்பை இன்னும் முடிக்கவில்லை என்றால், தயவுசெய்து அவ்வாறு செய்யுங்கள். 3. விவசாயிகள் ஒரு விவசாயி ஐடியை வைத்திருக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;22வது தவணை வெளியிடப்படுவதற்கு முன்பு விவசாயிகள் பயனாளிகள் பட்டியலில் தங்கள் பெயர்களைச் சரிபார்க்க வேண்டும். அவர்களின் பெயர் விடுபட்டிருந்தால், அவர்கள் உடனடியாக e-KYC மற்றும் நில சரிபார்ப்பு நடைமுறைகளை முடிக்க வேண்டும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>agriculture</category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/agriculture/this-time-the-budget-amount-for-pm-kisan-yojana-will-increase-iywg5tl"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Agriculture: ஒரு வாழைத்தாரில் 300 காய்களா?! விவசாயிகளை கோடீஸ்வரனாக்கும் வாழை ரகங்கள்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/agriculture/300-bananas-on-a-single-bunch-varieties-that-can-make-farmers-millionaires-ngz5i38</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/agriculture/300-bananas-on-a-single-bunch-varieties-that-can-make-farmers-millionaires-ngz5i38</guid>
            <pubDate>Sat, 03 Jan 2026 12:52:03 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;வாழைச் சாகுபடியில் அதிக லாபம் ஈட்ட, சரியான ரகத் தேர்வு அவசியம். பாரம்பரிய கற்பூரவல்லி ரகத்தின் நன்மைகளையும், திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம் வெளியிட்ட நவீன ரகமான காவேரி உதயம் வழங்கும் அபரிமிதமான மகசூலையும் (40% கூடுதல்) இக்கட்டுரை விவரிக்கிறது.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ke0xha8y4vkxswbqxy5njgg8,imgname-e6f8dc8a-3a15-4bac-ab5b-b5ebf933f3ed--1--1767410018590.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;வாழைச் சாகுபடியில் அதிக லாபம் ஈட்ட, சரியான ரகத் தேர்வு அவசியம். பாரம்பரிய கற்பூரவல்லி ரகத்தின் நன்மைகளையும், திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம் வெளியிட்ட நவீன ரகமான காவேரி உதயம் வழங்கும் அபரிமிதமான மகசூலையும் (40% கூடுதல்) இக்கட்டுரை விவரிக்கிறது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழக விவசாயத்தில் வாழை ஒரு முக்கியப் பணப்பயிராக இருந்து வருகிறது. ஆனால், பல நேரங்களில் சந்தை விலை வீழ்ச்சி மற்றும் நோய்த் தாக்குதலால் விவசாயிகள் நஷ்டத்தைச் சந்திக்கின்றனர். இதற்குத் தீர்வாக, குறைந்த பராமரிப்பில் அதிக மகசூல் தரக்கூடிய ரகங்களைத் தேர்ந்தெடுப்பது அவசியம்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;வாழைச் சாகுபடியில் அதிக லாபம் ஈட்ட விரும்புவோருக்கு ரகத் தேர்வே மிக முக்கியமான ஒன்று. பாரம்பரிய ரகங்களின் பலன்களையும், நவீன ரகங்களின் அபரிமிதமான மகசூலையும் சரியாகப் பயன்படுத்தினால் விவசாயிகள் பெரும் வருமானம் ஈட்ட முடியும்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;அந்த வகையில், பாரம்பரிய ரகமான கற்பூரவல்லி மற்றும் நவீன ரகமான காவேரி உதயம் ஆகியவை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் ரகங்களாகப் பார்க்கப்படுகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வறட்சி மற்றும் மோசமான மண் தன்மையைத் தாங்கி வளரக்கூடிய ரகங்களில் கற்பூரவல்லி முதன்மையானது. மண் மற்றும் காலநிலை: களர் மற்றும் உவர் மண் வகைகளிலும், தண்ணீர் தட்டுப்பாடு உள்ள வறட்சியான பகுதிகளிலும் இந்த ரகம் சிறப்பாக வளரும்.இதன் மரங்கள் மிகவும் தடித்தும், உயரமாக வளரும் தன்மை கொண்டவை. இதனால் பலத்த காற்றைத் தாங்கும் ஓரளவு திறன் இதற்கு உண்டு.காய்கள் பழுத்தாலும் காம்பிலிருந்து உதிராது. தோலில் ஒருவித சாம்பல் பூச்சு காணப்படும். இது பழத்தின் சுவையை அதிகரிப்பதோடு, தோல் கெட்டியாக இருப்பதால் பாதுகாப்பாகவும் இருக்கும்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;14 முதல் 16 மாத காலப் பயிரான இதில், ஒரு தாரில் 10 முதல் 12 சீப்புகள் வரை இருக்கும். ஒரு தாரில் சராசரியாக 180 முதல் 200 காய்கள் வரை கிடைக்கும். 25 முதல் 28 கிலோ எடை வரை தேறும். கற்பூரவல்லியில் 'பனாமா வாடல் நோய்' ஒரு பெரிய சவாலாக இருக்கலாம். எனவே, நோய் தாக்காத ஆரோக்கியமான மரங்களிலிருந்து பக்கக் கன்றுகளைத் தேர்வு செய்வது மிக முக்கியம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையம் (NRCB) மூலம் வெளியிடப்பட்ட 'காவேரி உதயம்' ரகம், தற்போதைய வாழைச் சாகுபடியில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஏன் இந்த ரகம் ஸ்பெஷல்? அபரிமிதமான மகசூல்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;கற்பூரவல்லியை விட 40 சதவீதம் கூடுதல் மகசூல் தரக்கூடியது. ஒரு தாரில் 17 முதல் 19 சீப்புகள் இருக்கும். ஒரு தாரில் ஆச்சரியப்படும் வகையில் 300 முதல் 310 காய்கள் வரை இருக்கும். இதன் ஒரு தார் சராசரியாக 40 கிலோ இருக்கும். மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் விவசாயிகள் 60 கிலோ வரை கூட மகசூல் எடுக்கிறார்கள். வாழை விவசாயிகளை அச்சுறுத்தும் 'முடிக்கொத்து நோய்' (Bunchy Top) மற்றும் 'வாடல் நோய்களை' தாங்கி வளரும் திறன் கொண்டது. பழங்கள் பழுத்த பின்பும் சுமார் 7 நாட்கள் வரை கெடாமல், கவர்ச்சிகரமான மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதனால் வியாபாரிகள் இதனை விரும்பி வாங்குவார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வாழையை அப்படியே விற்பனை செய்வதை விட, மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றினால் &lt;strong&gt;லாபத்தை இரண்டு மடங்காக்கலாம்.&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஜூஸ் மற்றும் ஜாம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;காவேரி உதயம் மற்றும் கற்பூரவல்லி ரகங்கள் அதிக சதைப்பற்று கொண்டவை என்பதால் ஜூஸ் மற்றும் ஜாம் தயாரிக்க உகந்தவை.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;உலர் பழங்கள் (Dry Figs)&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ள உலர் வாழைப் பழங்கள் தயாரிக்க இந்த ரகங்கள் ஏற்றவை.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இலை பயன்பாடு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;கற்பூரவல்லி ரகம் அதன் அகலமான மற்றும் தரமான இலைகளுக்காகவும் பயிரிடப்படுகிறது, இது விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் தருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;திசு வளர்ப்புகன்றுகள் அல்லது நோய் தாக்காத தரமான கன்றுகளைத் தேர்வு செய்ய வேண்டும். இந்த ரகங்கள் இயற்கை முறை சாகுபடிக்கு மிகவும் ஒத்துழைக்கின்றன. மண்புழு உரம் மற்றும் பஞ்சகவ்யா பயன்பாடு விளைச்சலை அதிகரிக்கும். காவேரி உதயம் ரகம் மறுதாம்பு சாகுபடியிலும் முதன்மை மகசூலுக்கு இணையான விளைச்சலைத் தரும் திறன் கொண்டது. இதனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் சாகுபடி செலவு குறையும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த உயர் விளைச்சல் ரகங்களைப் பயிரிட விரும்பும் விவசாயிகள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகள் தேவைப்படுவோர் கீழ்க்கண்ட முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்:&lt;/p&gt;&lt;p&gt;தேசிய வாழை ஆராய்ச்சி மையம் (NRCB), தோகைமலை சாலை, தாயனூர், திருச்சி - 620102.தொலைபேசி: 0431 - 2618125, செல்போன்: 98652 61886&lt;/p&gt;&lt;p&gt;விவசாயிகள் பாரம்பரிய அறிவோடும், நவீன ஆராய்ச்சி ரகங்களோடும் கைகோர்க்கும்போது விவசாயம் லாபகரமான தொழிலாக மாறும். 300 காய்கள் கொண்ட ஒரு வாழைத்தார் என்பது கனவல்ல, சரியான ரகத்தைத் தேர்ந்தெடுத்தால் அது ஒவ்வொரு விவசாயியின் தோட்டத்திலும் சாத்தியமே!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>agriculture</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/agriculture/300-bananas-on-a-single-bunch-varieties-that-can-make-farmers-millionaires-ngz5i38"/>
        </item>
        <item>
            <title><![CDATA[இனி கழுதை வளர்த்தே கோடீஸ்வரராகலாம்.! ரூ.50 லட்சம் வரை மானியம்.! எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம் இதோ.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/donkey-farming-subsidy-india-2026-in-tamil-50-lakh-subsidy-for-starting-donkey-farming-business-explained-ocekdzu</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/donkey-farming-subsidy-india-2026-in-tamil-50-lakh-subsidy-for-starting-donkey-farming-business-explained-ocekdzu</guid>
            <pubDate>Mon, 09 Mar 2026 14:44:47 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;Donkey farming subsidy India 2026 in Tamil : கழுதை பண்ணை அமைக்கும் தொழிலுக்கு மத்திய அரசு ரூ.50 லட்சம் மானியமாக வழங்குகிறது. அந்த திட்டம் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kk8xxq4bm17rz87b3tks94aj,imgname-donkey-farming-subsidy-india-2026-in-tamil-1773047569547.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Donkey farming subsidy India 2026 in Tamil : கழுதை பண்ணை அமைக்கும் தொழிலுக்கு மத்திய அரசு ரூ.50 லட்சம் மானியமாக வழங்குகிறது. அந்த திட்டம் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நம் ஊர்களில் &ldquo;நீ எல்லாம் கழுதை மேய்ப்பதற்கு தான் லாயக்கு&rdquo; என திட்டுவது வழக்கம். ஆனால் இப்போது கழுதை மேய்ப்பது சிறந்த தொழிலாக மாறி இருக்கிறது. மத்திய அரசு இந்த தொழிலுக்காக ரூ.50 லட்சம் வரை மானியம் அளிக்கிறது. அதை எப்படி பெறுவது? அதற்கான தகுதிகள் என் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;தேசிய கால்நடை வளர்ப்பு திட்டத்தின் கீழ் கால்நடை தொழில்களை தொடங்குவதற்கு நிதி உதவி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அழிந்து வரும் நாட்டு இன கழுதைகளை பாதுகாக்கவும், கிராமப்புறங்களில் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கவும் 50% மானியம் (அதிகபட்சம் ரூ.50 லட்சம்) வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தத் திட்டத்தின் நோக்கம் இந்தியாவில் வேகமாக குறைந்து வரும் கழுதைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தான். இந்தியாவில் கழுதைகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. அதை தடுக்கும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2019 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கழுதைகளின் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் சுமார் 1.23 லட்சம் கழுதைகள் மட்டுமே உள்ளன. இது 2012 ஆம் ஆண்டு ஒப்பிடும் பொழுது சுமார் 60% குறைவாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நாட்டு கழுதை இனங்களை பாதுகாக்கவும், கால்நடை வளர்ப்பை லாபகரமான தொழிலாக மாற்றுவதற்காகவும் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. கழுதை பாலுக்கு சர்வதேச சந்தையில் அதிக கிராக்கி இருப்பது மற்றும் இனப்பெருக்க விற்பனை மூலம் வருமானத்தை உயர்த்துவது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.&amp;nbsp;திட்டத்திற்கான மொத்த செலவில் 50% மூலதன மானியம் வழங்கப்படும். ஒரு யூனிட்டுக்கு அதிகபட்சமாக ரூ.50 லட்சம் வரை மானியம் கிடைக்கும். மானியம் இரண்டு தவணைகளாக வழங்கப்படும். முதல் தவணை வங்கியானது கடனை அங்கீகரித்த பின்னரும், இரண்டாம் தவணை பண்ணை பணிகள் முடிந்து ஆய்வு செய்யப்பட்ட பின்னரும் வழங்கப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கழுதை பண்ணை அமைக்கும் ஆர்வம் இருப்பவர்கள் குறைந்தது 50 நாட்டு இனத்தைச் சேர்ந்த பெண் கழுதைகள் மற்றும் ஐந்து ஆண் கழுதைகளை வைத்திருக்க வேண்டும். இந்த மானியம் நாட்டு இன கழுதைகளை வளர்ப்பதற்கு மட்டுமே பொருந்தும். கால்நடை வளர்ப்பு தொடர்பான பயிற்சி அல்லது அனுபவம் இருப்பது கூடுதல் தகுதியாக கருதப்படும். தனிநபர்கள், சுய உதவிக் குழுக்கள், உழவர் உற்பத்தியாளர், அமைப்புகள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டு பொறுப்பு குழுக்கள் ஆகியவற்றின் மூலம் விண்ணப்பிக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதற்கு விண்ணப்பிக்க விரிவான திட்ட அறிக்கை, விண்ணப்பதாரரின் ஆதார் கார்டு, பான் கார்டு, புகைப்படம், நில ஆவணங்கள் (சொந்த நிலம் அல்லது குத்தகை ஒப்பந்தம்) வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் ஆறு மாத வங்கி அறிக்கை ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். இந்த திட்டம் முற்றிலும் டிஜிட்டல் முறையில் செயல்படுத்தப்படுகிறது. தகுதி உள்ளவர்கள் மத்திய அரசின் https://nlm.udyamimitra.in/ இணையதளத்தின் வாயிலாக ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கழுதை பால் அழகு சாதனப் பொருட்கள் மற்றும் மருத்துவ குணங்களுக்காக லிட்டர் ஒன்றுக்கு பல்லாயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது ஒரு சிறந்த எதிர்கால தொழிலாகவும் பார்க்கப்படுகிறது. நீங்கள் ஒரு தரிசு நிலம் வைத்திருக்கும் பட்சத்தில் அதில் கால்நடை வளர்ப்பில் ஈடுபடலாம் என்று விரும்புபவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம். கழுதைப் பால் உள்ளிட்டவற்றை ஆன்லைன் மூலம் விற்பனை செய்து ஆயிரக்கணக்கில் வருமானம் பார்க்க முடியும். எனவே ஆர்வமுள்ள இளைஞர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>agriculture</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/donkey-farming-subsidy-india-2026-in-tamil-50-lakh-subsidy-for-starting-donkey-farming-business-explained-ocekdzu"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Agriculture: சீமான் சொல்ற மாதிரி மாடு மேய்க்குறது இனி 'ஹைடெக்' வேலை! அசத்தும் டிஜிட்டல் தொழில்நுட்பம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/agriculture-cattle-grazing-job-it-is-becoming-a-high-tech-profession-q8u293b</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/agriculture-cattle-grazing-job-it-is-becoming-a-high-tech-profession-q8u293b</guid>
            <pubDate>Tue, 30 Dec 2025 11:38:04 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;சென்னையில் அறிமுகமான 'டிஜிட்டல் ஸ்டிக்' மாடு மேய்க்கும் தொழிலில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இது கால்நடை மேலாண்மையை எளிதாக்கி, மேய்ச்சல் தொழிலை ஒரு 'ஹைடெக்' தொழிலாக மாற்றுகிறது.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k2c2z6sp1tgf0j1qkrvm2d2b,imgname-cow-1754899913525.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சென்னையில் அறிமுகமான 'டிஜிட்டல் ஸ்டிக்' மாடு மேய்க்கும் தொழிலில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இது கால்நடை மேலாண்மையை எளிதாக்கி, மேய்ச்சல் தொழிலை ஒரு 'ஹைடெக்' தொழிலாக மாற்றுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;என் இனத்து சொந்தங்களே... மாடு மேய்க்கிறதுங்கிறது கேவலமான வேலை கிடையாது, அது தான் இந்த மண்ணோட ஆதித் தொழில், அறம் சார்ந்த தொழில்!&quot; என்று நாம் அடிக்கடி மேடைகளில் கேட்டிருப்போம். ஆனால், இன்று அந்தத் தொழில் உலகமே வியக்கும் அளவுக்கு 'ஹைடெக்' ஆக மாறிவிட்டது. சென்னையில் சமீபத்தில் நடந்த 'மேய்ச்சலிய மாநாட்டில்' அறிமுகமான ஒரு கருவி, ஒட்டுமொத்த கால்நடை வளர்ப்பாளர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதுதான் 'டிஜிட்டல் ஸ்டிக்' (Digital Stick).&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இனி மாடு மேய்க்கும் கீதாரிகள் கையில் வைத்திருக்கும் கம்பு வெறும் மரக்கம்பு அல்ல; அது ஒரு தகவல் களஞ்சியம். போன்பிளாக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த டிஜிட்டல் கம்பில் என்னென்ன சிறப்புகள் இருக்கு தெரியுமா?&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஜி.பி.எஸ் (GPS) வசதி&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;அடர்ந்த காட்டுக்குள்ளயோ அல்லது மலையோரத்திலயோ உங்க மாடு எங்க மேயுது, மேய்ப்பவர் எங்க இருக்கிறார் என்பதை செல்போன் மூலமே துல்லியமாகப் பார்த்துவிடலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;நீண்ட நேர பேட்டரி&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஒருமுறை சார்ஜ் போட்டா போதும், 30 மணி நேரத்துக்கு மேல வேலை செய்யும். கரண்ட் இல்லாத இடத்துலயும் பயமில்லாம பயன்படுத்தலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;மேய்ச்சல் டேட்டா&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;அந்தப் பாதையில் எந்த வகை புல் இருக்கு? எத்தனை கிடைகள் இருக்கு? எவ்வளவு தூரம் மாடுகள் நடந்து போயிருக்கு? என அத்தனை விவரங்களையும் இந்த டிஜிட்டல் கம்பு சேகரிச்சு கொடுத்துடும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&amp;nbsp;'மாடு' நாம் ஏதோ மாடு மேய்ப்பதை சாதாரண விஷயமாக நினைக்கிறோம். ஆனால், ஒரு மாடு 5 கிலோ பசுந்தீவனத்தை சாப்பிடும்போது, சுமார் 15 கிலோ கார்பன்-டை-ஆக்சைடை அது உறிஞ்சுகிறது. புவி வெப்பமயமாதலைத் தடுக்கும் மிகப் பெரிய 'இயற்கை மிஷின்' நமது கால்நடைகள் தான். 2050-ல் பால் மற்றும் இறைச்சியின் தேவை இரண்டு மடங்கு அதிகமாகப்போகிறது. அதைச் சமாளிக்க வேண்டுமானால், மேய்ச்சல் முறையிலான கால்நடை வளர்ப்புதான் ஒரே தீர்வு. அதற்காகவே, 2026-ம் ஆண்டைச் சர்வதேச மேய்ச்சல் நிலங்கள் ஆண்டாக ஐநா அறிவித்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழகத்தில் உள்ள 50 லட்சம் கால்நடைகளுக்கும், அவற்றின் மேய்ச்சல் நிலங்களுக்கும் டிஜிட்டல் வரைபடம் உருவாக்கப்பட வேண்டும் என்பதுதான் இப்போதைய கோரிக்கை. &quot;ஆடு மாடு மேய்க்கிறது படிப்பு இல்லாதவனுக்குன்னு நினைச்ச காலம் போச்சு. இனி தொழில்நுட்பம் தெரிஞ்சவன்தான் மேய்ச்சல் தொழிலையே ராஜாவா செய்யப்போறான்&quot; என்கிற உண்மையை இந்த டிஜிட்டல் ஸ்டிக் நிரூபித்துள்ளது. பாரம்பரியத்தையும் தொழில்நுட்பத்தையும் இணைத்து, நம் மண்ணின் கால்நடைச் செல்வங்களைப் பாதுகாப்போம்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தற்போது இந்தக் கருவி ஒரு முன்னோடித் திட்டமாக (Pilot Project) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சந்தையில் இன்னும் இதன் விற்பனை விலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், விவசாயிகளுக்கான கூட்டுறவு சங்கங்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் (FPO) மூலம் மானிய விலையில் அல்லது குறைந்த விலையில் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இது தனிப்பட்ட லாப நோக்கத்தை விட, கால்நடைத் தரவுகளைச் சேகரிக்கும் அரசின் திட்டங்களுக்கு உதவுவதால், விவசாயிகளுக்கு எட்டும் விலையிலேயே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நிச்சயமாக! இது கிராமத்து விவசாயிகளின் பயன்பாட்டைக் கருத்தில் கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளது. கீதாரிகள் வழக்கம் போல வைத்திருக்கும் மேய்ச்சல் கம்பின் கைப்பிடியிலேயே இந்தக் கருவி பொருத்தப்பட்டிருக்கும். இயக்கம்: இதில் சிக்கலான பட்டன்கள் கிடையாது. ஒருமுறை 'ஆன்' (On) செய்துவிட்டால், அது தானாகவே ஜி.பி.எஸ் மூலம் வேலை செய்யத் தொடங்கும். சில மாடல்களில் இரவு நேரத்தில் பாதை தெரிய மின்விளக்கு (Light) மற்றும் ஆபத்து காலத்தில் உதவும் அதிர்வு வசதிகளும் இருப்பதால், வயதான விவசாயிகளுக்கும் இது எளிதாக இருக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தற்போது இது தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS) மற்றும் தொழுவம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் ஆகியவற்றின் நேரடி மேற்பார்வையில் உள்ளது.இதைத் தெரிந்துகொள்ள ஆர்வமுள்ள விவசாயிகள் சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியையோ அல்லது உங்கள் மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்களையோ (VUPRC) அணுகி மேலதிக விவரங்களைக் கேட்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;சார்ஜிங்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;செல்போன் சார்ஜர் மூலமாகவே சார்ஜ் செய்துகொள்ளலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;நீடித்து உழைக்கும்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;மேய்ச்சலுக்குச் செல்லும்போது மழையிலோ அல்லது வெயிலிலோ இந்தக் கருவி பாதிக்கப்படாதவாறு 'வாட்டர் புரூஃப்' (Waterproof) தன்மையுடன் தயாரிக்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தொழில்நுட்பம் என்பது கோட் சூட் போட்டவர்களுக்கு மட்டுமல்ல, கோவணம் கட்டிய விவசாயிக்கும் சொந்தமானது என்பதை இந்த முயற்சி நிரூபித்துள்ளது. பாரம்பரிய அறிவும், டிஜிட்டல் கருவிகளும் இணையும்போது, நமது கால்நடைச் செல்வம் பெருகும்; நம் மண்ணின் வளம் காக்கப்படும். மாடு வளர்ப்போம்... மண்ணைக் காப்போம்... தொழில்நுட்பத்தால் உயர்வோம்!&lt;/p&gt;]]></content:encoded>
            <category>agriculture</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/agriculture-cattle-grazing-job-it-is-becoming-a-high-tech-profession-q8u293b"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Succulent Plants: உங்க வீட்டுக்கு ஒரு Luxury Villa லுக் வேண்டுமா? இந்த 5 செடிகளை வையுங்க!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/succulent-plants-want-your-home-to-look-like-a-luxury-villa-add-these-5-plants-qm50fkg</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/succulent-plants-want-your-home-to-look-like-a-luxury-villa-add-these-5-plants-qm50fkg</guid>
            <pubDate>Fri, 10 Apr 2026 10:40:38 +0530</pubDate>
            <description><![CDATA[சின்ன சின்ன தொட்டிகளில் வளர்க்கப்படும் சக்குலன்ட் செடிகள், வீட்டுக்கு ஒரு மாடர்ன் மற்றும் லக்ஸரி லுக்கைக் கொடுக்கும். குறைவான பராமரிப்பில் வீட்டை அழகாக்க எச்சிவேரியா முதல் ஜேட் பிளான்ட் வரை இந்த 5 செடிகள் ஒரு பெஸ்ட் சாய்ஸ்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kgenhe81nvqnc8zhbs91amwe,imgname--small-succulent-plants-1770018879745.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[சின்ன சின்ன தொட்டிகளில் வளர்க்கப்படும் சக்குலன்ட் செடிகள், வீட்டுக்கு ஒரு மாடர்ன் மற்றும் லக்ஸரி லுக்கைக் கொடுக்கும். குறைவான பராமரிப்பில் வீட்டை அழகாக்க எச்சிவேரியா முதல் ஜேட் பிளான்ட் வரை இந்த 5 செடிகள் ஒரு பெஸ்ட் சாய்ஸ்.&lt;img&gt;இப்போதைய மாடர்ன் வீட்டு அலங்காரத்தில் சக்குலன்ட் செடிகள் ரொம்பவே பிரபலம். குறைவான இடம், குறைவான தண்ணீர், குறைவான பராமரிப்பு போதும். இந்த செடிகள் வீட்டுக்கு ஒரு லக்ஸரி மற்றும் கிளீன் லுக்கைக் கொடுக்கும். சின்ன சைஸ், வித்தியாசமான வடிவம் காரணமா இதை சைடு டேபிள், வொர்க் டெஸ்க், பால்கனி, கிச்சன் ஷெல்ஃப் அல்லது பெட்ரூம் கார்னர் என எங்கே வேண்டுமானாலும் வைக்கலாம். பெரிய மெனக்கெடல் இல்லாமல் உங்கள் வீட்டை ஸ்டைலாக மாற்ற இந்த 5 சக்குலன்ட் செடிகள் ஒரு சூப்பர் சாய்ஸ்.&lt;img&gt;&lt;p&gt;இந்த செடியின் இலைகள் பார்க்க ரோஜாப்பூ இதழ்கள் மாதிரி வட்டமாக அழகாக இருக்கும். இதை ஒரு சின்ன செராமிக் அல்லது வெள்ளை தொட்டியில் வைக்கும்போது ரொம்பவே எலிகன்டாகத் தெரியும். லிவிங் ரூம் அல்லது சென்டர் டேபிளில் வைத்தால், வீட்டுக்கு இன்ஸ்டன்டாக ஒரு பிரீமியம் ஃபீல் கிடைக்கும். குறைவான தண்ணீரும், லேசான வெயிலும் இதற்குப் போதும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உங்கள் வீட்டில் நேரடி சூரிய வெளிச்சம் வராதா? அப்போ ஹாவோர்த்தியா ஒரு பெஸ்ட் ஆப்ஷன். இதன் தடிமனான, கோடுகள் போட்ட இலைகள் ஒரு மாடர்ன் லுக்கைக் கொடுக்கும். பெட்ரூம், ஆபீஸ் டெஸ்க், புக் ஷெல்ஃப் போன்ற இடங்களில் வைக்க இது ஒரு சரியான சக்குலன்ட் செடி.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜேட் செடியை அதிர்ஷ்டம் மற்றும் பாசிட்டிவ் எனர்ஜியின் அடையாளமாகக் கருதுகிறார்கள். சின்ன தொட்டியில் வைக்கும்போது இது பார்க்க அழகாக இருப்பது மட்டுமல்லாமல், வாஸ்துப்படியும் நல்லது என்று சொல்லப்படுகிறது. பால்கனி, ஜன்னல் அல்லது வீட்டு நுழைவாயிலை அலங்கரிக்க இது பெஸ்ட்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த செடியின் இலைகளில் வெள்ளை நிற கோடுகள் இருக்கும், இதுவே இதை ரொம்ப தனித்துவமாகக் காட்டுகிறது. இது ரொம்ப மெதுவாக வளரக்கூடிய செடி, அதனால் அதிக பராமரிப்பும் தேவையில்லை. ஒரு சின்ன கருப்பு அல்லது கிரே நிற தொட்டியில் வைத்தால், செம லக்ஸரி லுக்கில் இருக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இது ஒரு தொங்கும் வகை சக்குலன்ட். பார்க்க சின்ன சின்ன முத்துக்களைக் கோர்த்த மாலை மாதிரி இருக்கும். இதை ஒரு சின்ன தொங்கும் தொட்டியில் வைத்து பால்கனி, கிச்சன் அல்லது ஜன்னல் ஓரத்தில் அலங்கரிக்கலாம். இது எந்த ஒரு மூலையையும் டிரெண்டியாகவும், இன்ஸ்டாகிராமில் போஸ்ட் பண்ணும் அளவிற்கும் அழகாக மாற்றிவிடும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>agriculture</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/succulent-plants-want-your-home-to-look-like-a-luxury-villa-add-these-5-plants-qm50fkg"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Agriculture: ஏக்கருக்கு ரூ. 5 லட்சம் வருமானம்.!விவசாயிகளின் வாழ்வை மாற்றும் பாமாயில் சாகுபடி.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/agriculture/oil-palm-cultivation-that-is-transforming-farmer-rs-5-lakh-income-per-acre-qnfnipv</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/agriculture/oil-palm-cultivation-that-is-transforming-farmer-rs-5-lakh-income-per-acre-qnfnipv</guid>
            <pubDate>Tue, 06 Jan 2026 13:53:44 +0530</pubDate>
            <description><![CDATA[எண்ணெய் பனை சாகுபடி, குறைந்த பராமரிப்பில் 30 ஆண்டுகள் வரை நிலையான வருமானம் தரும் ஒரு சிறந்த முதலீடாகும். அரசு மானியங்கள், சொட்டுநீர் பாசன வசதி மற்றும் நிறுவனங்களின் நேரடிக் கொள்முதல் ஆகியவற்றால், இது விவசாயிகளுக்கு லாபகரமான தேர்வாக விளங்குகிறது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ke94mhebrfkmer9ngjhm40ym,imgname-1d33b0e8-f4e1-49c4-a3f5-e2eabd370d40--1---1--1767685899723.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[எண்ணெய் பனை சாகுபடி, குறைந்த பராமரிப்பில் 30 ஆண்டுகள் வரை நிலையான வருமானம் தரும் ஒரு சிறந்த முதலீடாகும். அரசு மானியங்கள், சொட்டுநீர் பாசன வசதி மற்றும் நிறுவனங்களின் நேரடிக் கொள்முதல் ஆகியவற்றால், இது விவசாயிகளுக்கு லாபகரமான தேர்வாக விளங்குகிறது.&lt;img&gt;&lt;p&gt;பாமாயில் சாகுபடி என்பது இன்று விவசாயிகளுக்கு ஒரு நிரந்தர வைப்பு நிதி போன்றது. குறைந்த பராமரிப்பு, நிலையான சந்தை மற்றும் நீண்ட கால வருவாய் எனப் பல சிறப்பம்சங்களைக் கொண்ட இந்தச் சாகுபடி குறித்து விரிவாகக் காண்போம். தமிழகத்தில் தென்னைக்கு மாற்றாகவும், குறைந்த பராமரிப்பில் அதிக லாபம் தரும் பயிராகவும் பாமாயில் (எண்ணெய் பனை) சாகுபடி உருவெடுத்துள்ளது. ஒருமுறை முதலீடு செய்தால் சுமார் 25 முதல் 30 ஆண்டுகள் வரை நிலையான வருமானத்தை இது உறுதி செய்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பாமாயில் சாகுபடியைத் தொடங்க விரும்புவோர் தரமான கன்றுகளைத் தேர்வு செய்வது அவசியம். ஏக்கருக்கு சுமார் 56 முதல் 60 கன்றுகள் வரை நடவு செய்யப்படுகின்றன. ஆரம்பக்கட்ட முதலீடாக நிலத்தைத் தயார் செய்தல், கன்றுகள் வாங்குதல், குழிகள் எடுத்தல் மற்றும் நடவு செய்தல் ஆகியவற்றுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை செலவாகும். பொதுவாக 15 மாத வயதுடைய கன்றுகளை நடுவதே சிறந்தது. சொட்டுநீர் பாசனம் அமைப்பது மிக முக்கியமானது, ஏனெனில் எண்ணெய் பனைக்கு சீரான நீர் வசதி தேவைப்படும். முதல் 4 ஆண்டுகளுக்கு ஊடுபயிர்கள் செய்வதன் மூலம் ஆரம்பக்கட்ட முதலீட்டுச் செலவை விவசாயிகள் எளிதாக ஈடுகட்ட முடியும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விவசாயிகளின் சுமையைக் குறைக்கத் தமிழக அரசு மற்றும் மத்திய அரசு பல்வேறு மானியங்களை வழங்குகின்றன. தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் எண்ணெய் பனை சாகுபடிக்குத் தனி முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கன்றுகள் வாங்குவதற்கு மானியம் வழங்கப்படுவதுடன், முதல் நான்கு ஆண்டுகளுக்குத் தோட்டத்தைப் பராமரிக்க ஹெக்டேருக்கு ஒரு குறிப்பிட்ட தொகை பராமரிப்பு மானியமாகவும் வழங்கப்படுகிறது. மேலும், 100% மானியத்தில் சொட்டுநீர் பாசனக் கருவிகள் மற்றும் உரங்கள் உள்ளிட்ட இடுபொருட்களும் மானிய விலையில் கிடைக்கின்றன. இது விவசாயிகளின் கைக்காசு முதலீட்டைப் பெருமளவு குறைக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பாமாயில் மரங்கள் நட்ட 4 முதல் 5 ஆண்டுகளில் பலன் தரத் தொடங்கும். ஆரம்பத்தில் குறைந்த மகசூல் கிடைத்தாலும், 8 ஆண்டுகளுக்குப் பிறகு மகசூல் உச்சத்தை அடையும். ஒரு ஏக்கரில் ஆண்டுக்குச் சராசரியாக 10 முதல் 12 டன் வரை பழக்குலைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. சந்தை விலையைப் பொறுத்து, ஒரு டன் பாமாயில் பழங்கள் நல்ல விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. சரியாகப் பராமரிக்கப்படும் ஒரு தோட்டத்தில் அனைத்துச் செலவுகளும் போக ஏக்கருக்குப் பல லட்சங்கள் வரை லாபம் ஈட்ட முடியும். ஒருமுறை நட்டால் சுமார் 30 ஆண்டுகள் வரை வருமானம் கிடைப்பதால், இது ஒரு தலைமுறைக்கான வாழ்வாதாரமாக அமைகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பாமாயில் சாகுபடியில் உள்ள மிகப்பெரிய சாதகம் அதன் விற்பனை முறைதான். இதற்காக விவசாயிகள் சந்தைக்கோ அல்லது தரகர்களிடமோ செல்ல வேண்டிய அவசியமில்லை. அரசுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட தனியார் எண்ணெய் ஆலை நிறுவனங்கள், விவசாயிகளின் தோட்டத்திற்கே வந்து பழங்களை நேரடியாகக் கொள்முதல் செய்து கொள்கின்றன. கம்பெனிகளே அறுவடை செய்து எடுத்துச் செல்லும் வசதியும் சில இடங்களில் உள்ளது. இதற்கான பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கித் கணக்கில் செலுத்தப்படுவதால், விற்பனை குறித்த எந்தச் சிக்கலும் இதில் இருப்பதில்லை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியா தனது சமையல் எண்ணெய் தேவையின் பெரும் பகுதியை மலேசியா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது. இதற்காகப் பல ஆயிரம் கோடி அந்நியச் செலாவணி செலவிடப்படுகிறது. உள்நாட்டுப் பாமாயில் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் இந்த இறக்குமதியைக் குறைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. எனவே, உள்நாட்டில் விளையும் பாமாயிலுக்கு எப்போதும் தட்டுப்பாடற்ற தேவை இருக்கிறது. எதிர்காலத்தில் உலக சந்தையில் எண்ணெய் தேவை அதிகரிப்பதால், இது ஒரு சிறந்த ஏற்றுமதி வாய்ப்புள்ள பயிராகவும் பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பாமாயில் சாகுபடிக்கு வடிகால் வசதியுள்ள செம்மண் அல்லது வண்டல் மண் மிகவும் ஏற்றது. மண்ணின் pH அளவு 6.5 முதல் 7.5 வரை இருப்பது சிறந்தது. அதிக காற்றழுத்தம் மற்றும் சீரான வெப்பம் உள்ள பகுதிகளில் இதன் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். குறிப்பாக, ஆண்டு முழுவதும் 20&deg;C முதல் 33&deg;C வரை வெப்பநிலை நிலவும் பகுதிகளில் அதிக மகசூல் கிடைக்கும். நிலத்தைத் தயார் செய்யும்போதே போதுமான அளவு இயற்கை உரங்களை இடுவது மரங்களின் ஆரம்பகால வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எண்ணெய் பனைக்கு நீர் மிக அவசியமான ஒன்று. ஒரு முதிர்ந்த மரத்திற்குத் தினமும் சராசரியாக 150 முதல் 200 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். எனவே, தண்ணீரைச் சிக்கனமாகவும் நேரடியாக வேர்ப்பகுதிக்கும் கொண்டு செல்ல சொட்டுநீர் பாசன முறை (Drip Irrigation) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசு இதற்காக 100% மானியம் வழங்குவதுடன், மின்சார மோட்டார் மற்றும் நீர் சேமிப்பு அமைப்புகளுக்கும் சில நேரங்களில் சலுகைகளை வழங்குகிறது. சரியான நீர் மேலாண்மை இருந்தால் மட்டுமே பழக்குலைகளின் எடையை அதிகரிக்க முடியும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விவசாயிகளுக்குப் பாதுகாப்பை உறுதி செய்ய, அரசு பல தனியார் நிறுவனங்களை மண்டல வாரியாகப் பிரித்து ஒதுக்கியுள்ளது. உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில் விளையும் பாமாயிலை அந்த மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிறுவனமே கொள்முதல் செய்ய வேண்டும். இதனால் விலை குறைவு அல்லது வாங்குவதற்கு ஆள் இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லை. அறுவடை செய்த 24 மணி நேரத்திற்குள் பழங்கள் ஆலைக்குச் சென்றாக வேண்டும் என்பதால், நிறுவனங்களே போக்குவரத்து வசதிகளையும் சில சமயம் செய்து தருகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உலகிலேயே பாமாயிலை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. நாம் ஆண்டுதோறும் சுமார் 9 மில்லியன் டன் பாமாயிலை இறக்குமதி செய்கிறோம். உள்நாட்டு உற்பத்தியானது நமது தேவையில் வெறும் 2% முதல் 3% மட்டுமே. இந்த இடைவெளியை நிரப்ப அரசு தேசிய அளவில் NMEO-OP (National Mission on Edible Oils - Oil Palm) என்ற திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பதுடன், எதிர்காலத்தில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் மூலம் ஏற்றுமதி வாய்ப்புகளும் பிரகாசமாக உள்ளன.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>agriculture</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/agriculture/oil-palm-cultivation-that-is-transforming-farmer-rs-5-lakh-income-per-acre-qnfnipv"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Vegetable: நிலமே தேவையில்லை.! காய்கறி சாகுபடியில் கல்லா கட்டலாம் வாங்க.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/vegetable-no-land-needed-earn-big-profits-with-vegetable-farming-qxow7wk</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/vegetable-no-land-needed-earn-big-profits-with-vegetable-farming-qxow7wk</guid>
            <pubDate>Fri, 13 Mar 2026 15:53:03 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;உங்கள் சிறிய பால்கனியை சமையலறை தோட்டமாக மாற்றுவது சாத்தியமே. தொட்டிகளில் எளிதாக வளரக்கூடிய, குறைந்த பராமரிப்பு மற்றும் மிதமான வெயிலில் செழிக்கும் 7 காய்கறிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. பச்சை மிளகாய், பாலக்கீரை போன்றவை இதில் அடங்கும்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kecq7a7fdrx452x0e2wpqp6n,imgname-vegetable-4--1--1767806052591.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;உங்கள் சிறிய பால்கனியை சமையலறை தோட்டமாக மாற்றுவது சாத்தியமே. தொட்டிகளில் எளிதாக வளரக்கூடிய, குறைந்த பராமரிப்பு மற்றும் மிதமான வெயிலில் செழிக்கும் 7 காய்கறிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. பச்சை மிளகாய், பாலக்கீரை போன்றவை இதில் அடங்கும்.&lt;/p&gt;&lt;img&gt;சரியான செடிகளைத் தேர்ந்தெடுத்தால், உங்கள் சிறிய பால்கனியை ஒரு அழகான மினி கிச்சன் கார்டனாக மாற்றலாம். தொட்டிகளில் எளிதாக வளரக்கூடிய, அதிகப் பராமரிப்பு தேவைப்படாத, குறைந்த வெயிலிலும் நன்றாக வளரும் 7 காய்கறிகளைப் பற்றி இங்கே பார்ப்போம்.&lt;img&gt;பச்சை மிளகாய் செடி, பால்கனி தோட்டக்கலைக்கு மிகவும் ஏற்றது. இது நடுத்தர அளவு தொட்டியில் எளிதாக வளரும். பால்கனியில் வெயில் வந்தால், இதை நிச்சயம் நடவு செய்யுங்கள். இது செங்குத்தாக வளர்வதால், அதிக இடத்தை எடுத்துக்கொள்ளாது.&lt;img&gt;பாலக்கீரை வேகமாக வளரும் ஒரு கீரை வகையாகும். இது தொட்டிகளிலும், ஆழம் குறைந்த பாத்திரங்களிலும் எளிதாக வளரும். இதற்கு ஆழமான மண் தேவையில்லை, மிதமான வெயிலிலும் நன்றாக வளரும். அவ்வப்போது இலைகளைப் பறித்துக்கொண்டே இருக்கலாம், இது நீண்ட நாட்களுக்குப் பலன் தரும்.&lt;img&gt;செர்ரி தக்காளி, சிறிய இடத்தில் வளர்ப்பதற்கு மிகவும் எளிதான காய்கறிகளில் ஒன்றாகும். இது தொட்டிகளில் நன்றாக வளரும். பால்கனியின் வெயில் படும் மூலையில் இதை எளிதாக வளர்க்கலாம். செடி மேலே ஏறி வளர ஒரு சிறிய குச்சியை நட்டு வைத்தால், இடம் மிச்சமாகும். சரியான நீரும் உரமும் கிடைத்தால், கொத்து கொத்தாக தக்காளி காய்க்கும்.&lt;img&gt;லெட்யூஸ், சிறிய இடத்திலும் ஆழமற்ற கொள்கலன்களிலும் நன்றாக வளரக்கூடிய ஒரு காய்கறி. இது குளிர்ச்சியான காலநிலையையும், மிதமான வெயிலையும் விரும்பும். இதன் இலைகள் விரைவாகப் பறிக்கும் நிலைக்கு வந்துவிடும். இலைகளைப் பறிக்கப் பறிக்க, புதிய இலைகள் வளர்ந்துகொண்டே இருக்கும்.&lt;img&gt;புதினா, வலுவான மற்றும் எளிதில் வளரக்கூடிய ஒரு செடியாகும். இது சிறிய தொட்டியில் கூட வேகமாகப் பரவி, வெயில் அல்லது மிதமான நிழல் என இரண்டிலும் வளரும். அவ்வப்போது இலைகளைப் பறிப்பது செடியை மேலும் அடர்த்தியாக வளரச் செய்யும். புதினா சமையலுக்குப் பயன்படுவதோடு, பால்கனியையும் பசுமையாக வைத்திருக்கும். இதை மறுசுழற்சி செய்யப்பட்ட கொள்கலன்களில் கூட வளர்க்கலாம்.&lt;img&gt;&lt;p&gt;ஸ்பிரிங் ஆனியன் (வெங்காயத்தாள்) பால்கனிக்கு ஒரு சரியான தேர்வாகும். ஏனெனில் இது மேல்நோக்கி வளர்வதால், மிகக் குறைந்த இடத்தையே எடுத்துக்கொள்ளும். இதை மெல்லிய கொள்கலன்களில் அல்லது பழைய பாட்டில்களில் கூட வளர்க்கலாம். சிறிதளவு வெயிலும், சீரான இடைவெளியில் தண்ணீரும் இருந்தால் போதும். அவ்வப்போது அறுவடை செய்து, புதிய இலைகள் வளர வாய்ப்பளிக்க வேண்டும்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முள்ளங்கி, மிக வேகமாக வளரும் காய்கறிகளில் ஒன்றாகும். இதைத் தளர்வான மண் உள்ள தொட்டியில் நட்டால், சில வாரங்களிலேயே தயாராகிவிடும். குறைந்த வெயில் மற்றும் குறைந்த பராமரிப்பிலும் இது நன்றாக வளரும். எனவே, பால்கனி தோட்டம் தொடங்குபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>agriculture</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/vegetable-no-land-needed-earn-big-profits-with-vegetable-farming-qxow7wk"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Uzhavar App Update: விவசாயிகளுக்கு குட்நியூஸ்! வேளாண் இயந்திரங்கள் எளிதில் வாடகைக்கு பெறலாம்! எப்படி தெரியுமா?1]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/agriculture/uzhavar-app-update-good-news-for-farmers-rent-agricultural-machinery-easily-with-e-vaadagai-2-point-0-ucb53t6</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/agriculture/uzhavar-app-update-good-news-for-farmers-rent-agricultural-machinery-easily-with-e-vaadagai-2-point-0-ucb53t6</guid>
            <pubDate>Thu, 11 Jun 2026 13:15:02 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தமிழக அரசு உழவர் செயலியில் இ-வாடகை 2.0 என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் தங்களுக்குத் தேவையான வேளாண் இயந்திரங்களை ஆன்லைனில் எளிதாக வாடகைக்கு எடுக்கலாம்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kttsbxr54mdtcry1bnkqq3ec,imgname-chatgpt-image-jun-11--2026--12-57-50-pm--1--1781162964741.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழக அரசு உழவர் செயலியில் இ-வாடகை 2.0 என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் தங்களுக்குத் தேவையான வேளாண் இயந்திரங்களை ஆன்லைனில் எளிதாக வாடகைக்கு எடுக்கலாம்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழக அரசு விவசாயிகளின் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், நவீன தொழில்நுட்ப வசதிகளை அனைவருக்கும் எளிதாக கொண்டு சேர்க்கவும் பல்வேறு டிஜிட்டல் சேவைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது உழவர் செயலியில் (Uzhavar App) இ-வாடகை 2.0 (e-Vaadagai 2.0) என்ற புதிய வசதி மேம்படுத்தப்பட்ட வடிவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய சேவை விவசாயிகளுக்கு பெரும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இ-வாடகை 2.0 என்பது விவசாயிகளுக்கு தேவையான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை இணையவழியில் தேடி, முன்பதிவு செய்து, வாடகைக்கு பெற உதவும் ஒரு சேவையாகும். டிராக்டர், ரோட்டாவேட்டர், விதைப்பு இயந்திரம், அறுவடை இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு வேளாண் கருவிகளை இந்த சேவையின் மூலம் எளிதாக கண்டறிய முடியும்.&lt;/p&gt;&lt;p&gt;இதுவரை பல விவசாயிகள் தேவையான நேரத்தில் இயந்திரங்கள் கிடைக்காமல் சிரமப்பட்டு வந்தனர். தற்போது இந்த புதிய வசதி மூலம் அருகிலுள்ள பகுதிகளில் கிடைக்கும் இயந்திரங்களை உடனடியாக கண்டறிந்து வாடகைக்கு பெற முடியும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த புதிய சேவை மூலம் விவசாயிகள் அதிக முதலீடு செய்யாமல் நவீன இயந்திரங்களை பயன்படுத்த முடியும். குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;குறைந்த செலவில் இயந்திர வசதி&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;விவசாயப் பணிகளை விரைவாக முடிக்க வாய்ப்பு&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;தொழிலாளர் பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;நேரம் மற்றும் செலவு மிச்சம் அதிக உற்பத்தித் திறன்&lt;/li&gt; &lt;li&gt;மேலும், ஒரு இயந்திரத்தை வாங்குவதற்கான பெரிய முதலீட்டை தவிர்த்து, தேவையான நேரத்தில் மட்டும் வாடகைக்கு பயன்படுத்தும் வசதியும் கிடைக்கிறது.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;img&gt;&lt;p&gt;விவசாய இயந்திரங்களை வைத்திருப்பவர்கள் தங்களது கருவிகளை இ-வாடகை 2.0 தளத்தில் பதிவு செய்யலாம். இதன் மூலம் அருகிலுள்ள விவசாயிகள் அவர்களை தொடர்புகொண்டு வாடகைக்கு பயன்படுத்த முடியும். இதனால், &amp;nbsp;கூடுதல் வருமானம் பெறலாம் இயந்திரங்கள் பயன்பாடின்றி நிற்கும் நிலை குறையும் கிராமப்புற பொருளாதாரம் வளர்ச்சி பெறும்&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முதலில் உழவர் செயலியை மொபைலில் பதிவிறக்கம் செய்து பதிவு செய்ய வேண்டும். பின்னர் இ-வாடகை 2.0 சேவைக்குள் சென்று தேவையான இயந்திரத்தை தேர்வு செய்து முன்பதிவு செய்யலாம். அதேபோல் இயந்திர உரிமையாளர்களும் தங்களது விவரங்களை பதிவு செய்து சேவையை பயன்படுத்தலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விவசாயத்தை நவீனமயமாக்கும் நோக்கில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள முக்கியமான முயற்சிகளில் ஒன்றாக இ-வாடகை 2.0 பார்க்கப்படுகிறது. இந்த சேவை மூலம் விவசாயிகளும், இயந்திர உரிமையாளர்களும் நேரடியாக இணைக்கப்படுவதால் இருதரப்பினருக்கும் பயன் கிடைக்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;விவசாயிகள் தொழில்நுட்ப வசதிகளை எளிதாக பயன்படுத்தி அதிக மகசூல் பெறவும், செலவுகளை குறைக்கவும் இந்த புதிய வசதி உதவும் என்று வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, உழவர் செயலியை பயன்படுத்தும் விவசாயிகள் இந்த புதிய சேவையை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>agriculture</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/agriculture/uzhavar-app-update-good-news-for-farmers-rent-agricultural-machinery-easily-with-e-vaadagai-2-point-0-ucb53t6"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Training: கோடிகளை ஈட்டலாம் ஈசியா.! பழங்களை இனி வீணாக்க வேண்டாம்! மதிப்பு கூட்டி லாபம் ஈட்டும் கலை இதோ.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/value-addition-training-for-jackfruit-and-mango-in-salem-v8m1xk3</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/value-addition-training-for-jackfruit-and-mango-in-salem-v8m1xk3</guid>
            <pubDate>Sat, 14 Mar 2026 13:00:47 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;மா மற்றும் பலாப்பழங்களை மதிப்பு கூட்டி லாபம் ஈட்டுவதற்கான ஒரு நாள் பயிற்சி முகாம் &amp;nbsp;சேலத்தில் நடைபெறுகிறது. அதில் ஏற்றுமதி தரம் வாய்ந்த பொருட்களைத் தயாரிப்பது, தொழில் தொடங்குவதற்கான அரசு உதவிகள் மற்றும் வங்கிக் கடன் பெறுவது குறித்து விளக்கப்படும்.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kkngy4yrkya3gmv07cbjdmms,imgname-b764e92f-5a32-44da-9143-0cc8c468ea39-1773470159830.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;மா மற்றும் பலாப்பழங்களை மதிப்பு கூட்டி லாபம் ஈட்டுவதற்கான ஒரு நாள் பயிற்சி முகாம் &amp;nbsp;சேலத்தில் நடைபெறுகிறது. அதில் ஏற்றுமதி தரம் வாய்ந்த பொருட்களைத் தயாரிப்பது, தொழில் தொடங்குவதற்கான அரசு உதவிகள் மற்றும் வங்கிக் கடன் பெறுவது குறித்து விளக்கப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழகத்தின் 'கனித் திருவிழா' என்று போற்றப்படும் மா மற்றும் பலாப்பழங்கள், சீசன் காலங்களில் அபரிமிதமாக விளைகின்றன. இருப்பினும், போதிய விழிப்புணர்வு மற்றும் பதப்படுத்தும் வசதிகள் இல்லாத காரணத்தால், பெருமளவு பழங்கள் வீணாவதோடு விவசாயிகளுக்குக் குறைந்த விலையே கிடைக்கிறது. இந்தச் சவாலை ஒரு லாபகரமான வாய்ப்பாக மாற்றும் நோக்கில், தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII) மற்றும் சேலம் மாவட்ட தொழில் மையம் இணைந்து ஒரு நாள் சிறப்புப் பயிற்சி முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பழங்களை அப்படியே விற்பனை செய்வதை விட, அவற்றை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றுவதன் மூலம் அதன் ஆயுட்காலத்தை அதிகரிப்பதோடு, சந்தையில் பல மடங்கு கூடுதல் விலைக்கு விற்க முடியும். வரும் மார்ச் 15, 2026 அன்று சேலத்தில் நடைபெறவுள்ள இந்தப் பயிற்சியில், நவீன உணவுப் பதப்படுத்தும் நுட்பங்கள் குறித்து விரிவாகக் கற்பிக்கப்படவுள்ளது. குறிப்பாக, மாம்பழக் கூழ் (Mango Pulp), ஜாம், ஜெல்லி, மாம்பழத் தோல் மிட்டாய்கள் (Fruit Leather) மற்றும் பலாவிலிருந்து சிப்ஸ், வற்றல், பலாப்பழப் பவுடர் போன்ற ஏற்றுமதி தரம் வாய்ந்த பொருட்களைத் தயாரிப்பது குறித்து நேரடி விளக்கங்கள் அளிக்கப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தப் பயிற்சி வெறும் தயாரிப்பு முறைகளோடு நின்றுவிடாமல், ஒரு சாமானிய நபர் எப்படித் தொழில்முனைவோராக மாறலாம் என்பதற்கான வழிகாட்டுதலையும் வழங்குகிறது. ஒரு சிறு தொழிலைத் தொடங்குவதற்குத் தேவையான உரிமங்கள் (FSSAI), இயந்திரங்கள் வாங்குவதற்கான மானியங்கள் மற்றும் வங்கிக் கடன் வசதிகள் குறித்து மாவட்ட தொழில் மைய அலுவலர்கள் ஆலோசனைகளை வழங்கவுள்ளனர். ₹1250/- என்ற குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும் இந்தப் பயிற்சி, சுயதொழில் தொடங்க விரும்பும் இளைஞர்களுக்கும், வருமானத்தை உயர்த்த நினைக்கும் விவசாயிகளுக்கும் ஒரு சிறந்த அடித்தளமாக அமையும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வேளாண் சார்ந்த தொழில்கள் எதிர்காலத்தில் மிகப்பெரிய பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டவை. சேலத்தின் அடையாளமான மாம்பழத்தையும், சத்துக்கள் நிறைந்த பலாப்பழத்தையும் கொண்டு உலகத்தரம் வாய்ந்த உணவுப் பொருட்களைத் தயாரிப்பதன் மூலம், உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும். ஆர்வமுள்ள நபர்கள் இந்த ஒரு நாள் பயிற்சியைப் பயன்படுத்தி, தங்களின் தொழில் கனவை நனவாக்கிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வேளாண்மை என்பது வெறும் சாகுபடியோடு நின்றுவிடாமல், அதனை ஒரு வணிகமாக (Agri-Business) மாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம். சேலத்தின் அடையாளங்களான மா மற்றும் பலாவிற்கு உலகளவில் மிகப்பெரிய சந்தை வாய்ப்பு உள்ளது. இத்தகைய மதிப்பு கூட்டல் பயிற்சிகள், ஒரு விவசாயியை வெறும் உற்பத்தியாளராகக் கருதாமல், அவரை ஒரு 'தொழில்முனைவோராக' (Entrepreneur) உருமாற்றுகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முறையான தொழில்நுட்பப் பயிற்சி, தரக்கட்டுப்பாட்டு நடைமுறைகள் மற்றும் அரசின் நிதி உதவி ஆகியவற்றைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டால், உள்ளூர் சந்தை மட்டுமின்றி சர்வதேசச் சந்தையிலும் நமது தயாரிப்புகளைக் கொண்டு செல்ல முடியும். எனவே, ஆர்வமுள்ள இளைஞர்களும், பெண்களும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்வதோடு, தமிழகத்தின் வேளாண் பொருளாதாரத்திற்கும் வலுசேர்க்க வேண்டும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>agriculture</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/value-addition-training-for-jackfruit-and-mango-in-salem-v8m1xk3"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Agriculture: தினமும் ரூ.5,000 சம்பாதிப்பது இவ்ளோ ஈசியா?! மைக்ரோ கிரீன்ஸ் சாகுபடியில் அசத்தலாம் வாங்க.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/is-earning-rs-5000-a-day-really-this-easy-lets-rock-with-microgreens-farming-vryqwti</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/is-earning-rs-5000-a-day-really-this-easy-lets-rock-with-microgreens-farming-vryqwti</guid>
            <pubDate>Thu, 01 Jan 2026 10:56:48 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;மைக்ரோ கிரீன்ஸ் சாகுபடி என்பது குறைந்த முதலீடு மற்றும் சிறிய இடத்தில் செய்யக்கூடிய லாபகரமான தொழில். விதைகள் முளைத்து முதல் இலைகள் வந்தவுடன் அறுவடை செய்யப்படும் இந்தச் செடிகள், அதிக சத்துக்கள் கொண்டிருப்பதால் சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.&amp;nbsp;&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kdvyefgdvxmb7mj8va77wffz,imgname-8abef442-2354-4e5b-8301-c7bc75ba6188-1767243202061.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;மைக்ரோ கிரீன்ஸ் சாகுபடி என்பது குறைந்த முதலீடு மற்றும் சிறிய இடத்தில் செய்யக்கூடிய லாபகரமான தொழில். விதைகள் முளைத்து முதல் இலைகள் வந்தவுடன் அறுவடை செய்யப்படும் இந்தச் செடிகள், அதிக சத்துக்கள் கொண்டிருப்பதால் சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விவசாயம் செய்ய நிலம் இல்லை, முதலீடு செய்யப் பணம் இல்லை என்று கவலைப்படுபவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது மைக்ரோ கிரீன்ஸ் சாகுபடி. வீட்டின் ஒரு மூலையில் தொடங்கி, லட்சங்களில் வருமானம் ஈட்டும் அளவுக்கு இதில் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மைக்ரோ கிரீன்ஸ் என்பது முளைக்கட்டிய தானியங்களுக்கும் (Sprouts), முதிர்ந்த கீரைக்கும் இடைப்பட்ட நிலை. அதாவது விதைகள் முளைத்து முதல் இரண்டு இலைகள் வந்தவுடன் அறுவடை செய்யப்படுபவை. இதில் வைட்டமின் C, E, K மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் செறிந்து காணப்படுகின்றன. இதய நோய், நீரிழிவு மற்றும் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க இவை உதவுவதால், ஆரோக்கிய விழிப்புணர்வு கொண்ட மக்களிடையே இதற்கு பெரும் வரவேற்பு உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தத் தொழிலின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்டே அதன் குறைந்த முதலீடுதான். ஒரு சிறிய அறையோ அல்லது உங்கள் வீட்டின் பால்கனியோ போதுமானது. மண்ணே இல்லாமல் 'கோகோ பீட்' (தேங்காய் நார் கழிவு) மூலமாகவே இதை வளர்க்கலாம். தரமான விதைகள், பிளாஸ்டிக் தட்டுகள் மற்றும் தண்ணீர் தெளிப்பான் ஆகியவற்றை வாங்க அதிகபட்சம் ரூ.5,000 மட்டுமே செலவாகும். மற்ற விவசாயத்தைப் போல இதற்கு பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முதலில் விதைகளை 6 முதல் 8 மணி நேரம் ஊறவைத்து, பின் டிரேக்களில் பரப்பப்பட்ட கோகோ பீட் மீது தூவ வேண்டும். ஆரம்ப 2-3 நாட்களுக்கு இருட்டில் வைப்பதன் மூலம் விதைகள் வேகமாக முளைக்கும். அதன் பிறகு லேசான வெளிச்சம் படும்படி வைத்தால் போதும். தண்ணீர் ஊற்றக்கூடாது, ஸ்பிரேயர் மூலம் தெளிக்க மட்டுமே வேண்டும். அதிகப்படியான தண்ணீர் தேங்கினால் வேர் அழுகல் ஏற்படும் என்பதால், வடிகால் வசதி கொண்ட தட்டுகளைப் பயன்படுத்துவது அவசியம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விதைத்த 7 முதல் 12 நாட்களில் செடிகள் 2-3 அங்குலம் வளர்ந்திருக்கும். அப்போது கூர்மையான கத்தரிக்கோல் கொண்டு வேருக்குச் சற்று மேலே தண்டுடன் சேர்த்து அறுவடை செய்ய வேண்டும். அறுவடை செய்தவுடன் அவற்றை ஈரப்பதம் இல்லாமல் உலர்த்தி, காற்றுப்புகாத வெளிப்படையான பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து விற்பனைக்கு அனுப்பலாம். பேக்கேஜிங்கில் உங்கள் பிராண்ட் பெயர் மற்றும் அறுவடை செய்த தேதியைக் குறிப்பிடுவது வாடிக்கையாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தினமும் ரூ.5,000 வருமானம் ஈட்ட சந்தைப்படுத்துதல் மிக முக்கியம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;நேரடி விற்பனை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு வாராந்திர சந்தா அடிப்படையில் வழங்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;உணவகங்கள்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;நவீன கஃபேக்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் அலங்காரத்திற்காகவும் சாலட்களுக்காகவும் அதிக விலைக்கு வாங்குகிறார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இயற்கை அங்காடிகள்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;உங்கள் ஊரிலுள்ள ஆர்கானிக் கடைகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சமூக வலைத்தளம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் மூலம் உங்கள் சாகுபடி முறையைப் பதிவிட்டு ஆர்டர்களைப் பெறலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒரு சிறிய 50 கிராம் முதல் 100 கிராம் வரையிலான மைக்ரோ கிரீன்ஸ் பாக்ஸ் சந்தையில் ரூ.60 முதல் ரூ.120 வரை விற்கப்படுகிறது. நீங்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 60 பாக்ஸ்கள் விற்பனை செய்தால் கூட, செலவுகள் போக நல்ல லாபம் கிடைக்கும். நீங்கள் பெரிய அளவில் சாகுபடி செய்து, தினசரி 100 முதல் 150 பேக்கெட்டுகளை சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு விநியோகம் செய்யும்போது, தினசரி ரூ.5,000 என்பது மிக எளிதான இலக்காக மாறிவிடும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>agriculture</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/is-earning-rs-5000-a-day-really-this-easy-lets-rock-with-microgreens-farming-vryqwti"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Coconut Shell Planters: தேங்காய் ஓடு இருந்தா போதும்.! செலவில்லாம பால்கனிய மினி கார்டனா மாத்துங்க!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/5-easy-hanging-plants-for-diy-coconut-shell-planters-x5213um</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/5-easy-hanging-plants-for-diy-coconut-shell-planters-x5213um</guid>
            <pubDate>Sat, 14 Mar 2026 16:32:26 +0530</pubDate>
            <description><![CDATA[உங்க பால்கனிய ஒரு குட்டி கார்டனா மாத்த ஆசையா? கிச்சன்ல வீணா தூக்கிப் போடுற தேங்காய் ஓட்டை வெச்சு சூப்பரான தொங்கு செடிகளை வளர்க்கலாம். மணி பிளான்ட், ஸ்பைடர் பிளான்ட் மாதிரி 5 செடிகளை செலவே இல்லாம வளர்த்து, உங்க பால்கனிக்கு ஒரு மாடர்ன் லுக் கொடுங்க.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kkp030bvcggy216da8z9242f,imgname-5-easy-hanging-plants-for-diy-coconut-shell-planters-1773486047611.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[உங்க பால்கனிய ஒரு குட்டி கார்டனா மாத்த ஆசையா? கிச்சன்ல வீணா தூக்கிப் போடுற தேங்காய் ஓட்டை வெச்சு சூப்பரான தொங்கு செடிகளை வளர்க்கலாம். மணி பிளான்ட், ஸ்பைடர் பிளான்ட் மாதிரி 5 செடிகளை செலவே இல்லாம வளர்த்து, உங்க பால்கனிக்கு ஒரு மாடர்ன் லுக் கொடுங்க.&lt;img&gt;உங்க பால்கனி இல்லனா சின்ன இடத்த ஒரு அழகான மினி கார்டனா மாத்தணும்னு நெனச்சா, தேங்காய் ஓடு ஒரு சூப்பரான, காசே இல்லாத ஆப்ஷன். நாம கிச்சன்ல வேஸ்ட்னு தூக்கிப் போடுற தேங்காய் ஓட்டை, கொஞ்சம் கிரியேட்டிவா யோசிச்சு அழகான தொங்கும் செடித் தொட்டியா மாத்தலாம். இதுல சின்ன செடிகள் ஈஸியா வளரும், பால்கனிக்கும் ஒரு நேச்சுரல், டிரெண்டி லுக் கிடைக்கும். முக்கியமா, தேங்காய் ஓட்டுல தண்ணி தேங்காது, அதனால செடியோட வேர்கள் பாதுகாப்பா இருக்கும். அப்படி தேங்காய் ஓட்டுல வளர்க்கக்கூடிய 5 செடிகளைப் பத்திப் பார்க்கலாம்.&lt;img&gt;&lt;p&gt;மணி பிளான்ட் ரொம்ப ஈஸியா வளர்க்கக்கூடிய ஒரு பிரபலமான தொங்கும் செடி. குறைஞ்ச பராமரிப்புலயே வேகமா வளரும், தேங்காய் ஓட்டுல பார்க்க ரொம்ப அழகா இருக்கும். இதோட கொடி கீழ தொங்குறதால, பால்கனிக்கு ஒரு பசுமையான, ஃப்ரெஷ் லுக் கிடைக்கும். இதுக்கு மிதமான வெயிலும், குறைவான தண்ணீரும் போதும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஸ்பைடர் பிளான்ட் அதோட நீளமான, மெல்லிய இலைகளாலயும், தொங்குற கிளைகளாலயும் ஒரு பெர்ஃபெக்ட் ஹேங்கிங் பிளான்ட்னு சொல்லலாம். தேங்காய் ஓட்டுல இதை வைக்கும்போது இன்னும் அழகா தெரியும். இந்த செடி காற்றை சுத்தப்படுத்தவும் உதவுது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;போத்தோஸ் செடி பாக்க மணி பிளான்ட் மாதிரியே இருந்தாலும், இதோட இலைகளோட டிசைன் கொஞ்சம் வித்தியாசமா இருக்கும். இதை தேங்காய் ஓட்டுல வெச்சு பால்கனி கிரில்ல இல்லனா கொக்கியில மாட்டிவிடலாம். இந்த செடி வேகமா பரவி, குறைஞ்ச வெளிச்சத்துலயும் நல்லா வளரும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இங்கிலீஷ் ஐவி ஒரு கிளாசிக் தொங்கும் செடி. இதோட கொடிகள் கீழ அழகா தொங்கி, பாக்க ஒரு நேச்சுரல் செடி மாதிரி இருக்கும். இது உங்க பால்கனிக்கு ஒரு கார்டன் லுக்கைக் கொடுக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உங்களுக்கு பூ பூக்குற தொங்கும் செடி வேணும்னா, போர்டுலக்கா ஒரு நல்ல சாய்ஸ். இதோட கலர் கலரான பூக்கள் பால்கனியை ரொம்ப அழகா காட்டும். தேங்காய் ஓட்டுல இதோட வேர்கள் ஈஸியா பிடிச்சுக்கும், வெயில்ல நல்லா வளரும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>agriculture</category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/5-easy-hanging-plants-for-diy-coconut-shell-planters-x5213um"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Crop Loan: பயிர்க்கடன் தள்ளுபடி வந்தாச்சு..! யாருக்கு எவ்வளவு கிடைக்கும்? முழு லிஸ்ட் இதோ!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/crop-loan-waiver-announced-who-gets-how-much-benefit-full-eligibility-list-inside-y98guux</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/crop-loan-waiver-announced-who-gets-how-much-benefit-full-eligibility-list-inside-y98guux</guid>
            <pubDate>Tue, 26 May 2026 12:15:05 +0530</pubDate>
            <description><![CDATA[&lt;p&gt;தமிழ்நாடு அரசு, கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற சிறு மற்றும் குறு விவசாயிகளுக்காக புதிய பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தத் திட்டம் கடன் தொகை மற்றும் விவசாயிகளின் வகையைப் பொறுத்து தள்ளுபடி அளவை நிர்ணயித்துள்ளது தமிழக அரசு.&lt;/p&gt;]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kshg92dkcc12ntb912g53g49,imgname-chatgpt-image-may-26--2026--12-08-54-pm--1--1779777702322.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழ்நாடு அரசு, கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற சிறு மற்றும் குறு விவசாயிகளுக்காக புதிய பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தத் திட்டம் கடன் தொகை மற்றும் விவசாயிகளின் வகையைப் பொறுத்து தள்ளுபடி அளவை நிர்ணயித்துள்ளது தமிழக அரசு.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ்நாட்டில் விவசாயிகளை நிதிச்சுமையிலிருந்து காக்கும் நோக்கில் மாநில அரசு புதிய பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தை அறிவித்துள்ளது. கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு இந்தத் திட்டம் பெரிய நிவாரணமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக மழை பாதிப்பு, விளைச்சல் இழப்பு, உர விலை உயர்வு போன்ற காரணங்களால் சிரமத்தில் இருந்த விவசாயிகளுக்கு இந்த அறிவிப்பு ஓரளவு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தத் திட்டம் 1 மே 2025 முதல் 28 பிப்ரவரி 2026 வரை கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களுக்கு மட்டும் பொருந்தும் என்று அரசு தெரிவித்துள்ளது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது தனியார் வங்கிகளில் பெற்ற கடன்களுக்கு இந்த சலுகை கிடையாது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;குறு விவசாயிகளுக்கு எவ்வளவு தள்ளுபடி?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி குறு விவசாயிகளுக்கு கடன் தொகையை அடிப்படையாகக் கொண்டு தள்ளுபடி வழங்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;ரூ.50,000 வரை கடன் பெற்றிருந்தால் முழு தள்ளுபடி&lt;/li&gt; &lt;li&gt;ரூ.50,001 முதல் ரூ.60,000 வரை இருந்தால் ரூ.40,000 தள்ளுபடி&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;ரூ.60,001 முதல் ரூ.70,000 வரை இருந்தால் ரூ.30,000 தள்ளுபடி&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;ரூ.70,001 முதல் ரூ.80,000 வரை இருந்தால் ரூ.20,000 தள்ளுபடி&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;ரூ.80,001 முதல் ரூ.90,000 வரை இருந்தால் ரூ.10,000 தள்ளுபடி&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;ரூ.90,001 முதல் ரூ.1 லட்சம் வரை இருந்தால் ரூ.5,000 தள்ளுபடி வழங்கப்படும்&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;இதன் மூலம் சிறிய அளவில் விவசாயம் செய்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நேரடி பலன் பெறுவார்கள் என அரசு நம்புகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குறு விவசாயிகளுக்கு வழங்கப்படும் தள்ளுபடியின் 50 சதவீதம் மட்டுமே சிறு விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, குறு விவசாயிக்கு ரூ.40,000 தள்ளுபடி கிடைக்கும் இடத்தில் சிறு விவசாயிக்கு ரூ.20,000 மட்டுமே வழங்கப்படும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பெரு விவசாயிகளுக்கு என்ன கிடைக்கும்?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;பெரிய அளவில் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கும் குறைந்தபட்ச நிவாரணமாக ரூ.5,000 பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்படும். அவர்கள் பெற்ற கடன் தொகை எவ்வளவு இருந்தாலும் இந்த நிரந்தர தொகை மட்டுமே வழங்கப்படும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;எத்தனை விவசாயிகள் பயன் பெறுவார்கள்?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்தத் திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் சுமார் 14.22 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்று அரசு கணித்துள்ளது. இதற்காக மாநில அரசுக்கு ரூ.2,044 கோடிக்கும் அதிகமான செலவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;அரசு ஏன் இந்த முடிவை எடுத்தது?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்தத் தள்ளுபடி மூலம் விவசாயிகள் அடுத்த சாகுபடி பருவத்திற்காக புதிய கடன் பெற எளிதாகும் என்று அரசு கூறியுள்ளது. பழைய கடன் சுமை குறைந்தால், புதிய விதைப்பு மற்றும் பயிரிடுதலுக்கான முதலீட்டை விவசாயிகள் தைரியமாக செய்ய முடியும் என்பதே அரசின் கணிப்பு.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விவசாய சங்கங்களின் ஒரு பகுதி இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளது. &ldquo;நிதி சுமை இருந்தாலும் அரசு எடுத்திருக்கும் இந்த முயற்சி நல்ல தொடக்கம்&rdquo; என்று சில சங்க நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;&lt;p&gt;ஆனால் மற்றொரு தரப்பினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அனைத்து வேளாண் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை. குறிப்பாக கூட்டுறவு வங்கிகளில் மட்டும் சலுகை வழங்கப்பட்டிருப்பது சமநிலையற்ற முடிவு என சிலர் விமர்சித்துள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழகத்தில் கடந்த காலங்களிலும் பல அரசுகள் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவித்துள்ளன.&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;2006ல் கருணாநிதி தலைமையிலான அரசு சுமார் ரூ.7,000 கோடி பயிர்க்கடனை தள்ளுபடி செய்தது.&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;2016ல் ஜெயலலிதா தலைமையிலான அரசு ரூ.5,318 கோடி அளவிலான தள்ளுபடியை அறிவித்தது.&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;2021ல் எடப்பாடி பழனிசாமி அரசு ரூ.12,110 கோடி மதிப்பிலான பயிர்க்கடன் தள்ளுபடியை வெளியிட்டது.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;img&gt;&lt;p&gt;விவசாய நிபுணர்களின் கருத்துப்படி, குறுகிய காலத்தில் இந்தத் திட்டம் விவசாயிகளின் நிதிச் சுமையை குறைக்க உதவும். ஆனால் நீண்ட காலத்தில் விவசாய வருமானத்தை உயர்த்தும் திட்டங்கள், குறைந்த வட்டி கடன்கள், விளைபொருளுக்கு நியாயமான விலை போன்றவை இணைந்து செயல்பட்டால்தான் விவசாயிகள் முழுமையான நிம்மதி அடைவார்கள் என்று கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;தமிழக அரசின் இந்த புதிய பயிர்க்கடன் தள்ளுபடி திட்டம் விவசாயிகளுக்கு ஓரளவு நிவாரணத்தை வழங்கினாலும், எதிர்காலத்தில் இன்னும் விரிவான சலுகைகள் அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு கிராமப்புறங்களில் தொடர்ந்து நிலவுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category>agriculture</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/crop-loan-waiver-announced-who-gets-how-much-benefit-full-eligibility-list-inside-y98guux"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Gardening Tips: தோட்டத்துல இந்த காய்கறிகளை ஜோடியா நடுங்க... செடிகள் செழித்து வளரும்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/companion-planting-guide-for-a-healthy-vegetable-garden-yzlibhs</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/companion-planting-guide-for-a-healthy-vegetable-garden-yzlibhs</guid>
            <pubDate>Thu, 21 May 2026 10:12:27 +0530</pubDate>
            <description><![CDATA[சில காய்கறிகளை ஒண்ணா சேர்த்து நடும்போது, அது செடியோட வளர்ச்சியை அதிகப்படுத்தும், மண்ணோட வளத்தை கூட்டும், பூச்சிகளையும் விரட்டும். இந்த மாதிரி ஜோடியா செடிகளை நட்டா, உங்க வீட்டுத் தோட்டம் ஆரோக்கியமாவும், அதிக விளைச்சல் தர்ற மாதிரியும் மாறும்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ks2fax02rexy2qz6gf8r9dm6,imgname-1-1779273397250.jfif" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[சில காய்கறிகளை ஒண்ணா சேர்த்து நடும்போது, அது செடியோட வளர்ச்சியை அதிகப்படுத்தும், மண்ணோட வளத்தை கூட்டும், பூச்சிகளையும் விரட்டும். இந்த மாதிரி ஜோடியா செடிகளை நட்டா, உங்க வீட்டுத் தோட்டம் ஆரோக்கியமாவும், அதிக விளைச்சல் தர்ற மாதிரியும் மாறும்.&lt;img&gt;லெட்யூஸ் மாதிரியான கீரை வகைகளுக்கு, உயரமான செடிகள் பக்கத்துல இருந்து வர்ற நிழல் ரொம்ப நல்லது. வெயில் காலத்துல சீக்கிரம் வாடிப்போகாம இருக்க இந்த நிழல் உதவும்.&lt;img&gt;வெள்ளரி செடியை தாக்குற பூச்சிகளோட கவனத்தை முள்ளங்கி திசை திருப்பும். இதனால வெள்ளரி செடி பாதுகாப்பா வளரும். சீக்கிரம் வளர்றதால, தோட்டத்துல இடத்தையும் மிச்சப்படுத்தலாம்.&lt;img&gt;&lt;p&gt;இந்த பாரம்பரிய முறையில, ஒவ்வொரு செடியும் மத்த செடிக்கு உதவும். பீன்ஸ் கொடி ஏறுறதுக்கு சோளத்தட்டு சப்போர்ட்டா இருக்கும். கூடவே பூசணியை நட்டா, அது தரையில படர்ந்து, மண்ணோட ஈரப்பதத்தை வைக்கும், களைகளையும் தடுக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;கேரட் கிழங்கை சேதப்படுத்துற பூச்சிகளை வெங்காயம் விரட்டிவிடும். பதிலுக்கு, கேரட் செடி அதிக இடத்துக்காக போட்டி போடாம வளரும். அதனால சின்ன தோட்டத்துக்கு இது ஒரு நல்ல காம்பினேஷன்.&lt;img&gt;தக்காளி செடி பக்கத்துல துளசி செடியை நட்டா, சில பூச்சிகள் வராம அது தடுக்கும். இதனால தக்காளி செடியோட ஆரோக்கியமும், பழத்தோட சுவையும் நல்லா இருக்கும்னு சொல்றாங்க.]]></content:encoded>
            <category>agriculture</category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/companion-planting-guide-for-a-healthy-vegetable-garden-yzlibhs"/>
        </item>
    </channel>
</rss>
