<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes"?>
<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Mon, 08 Jun 2026 15:51:04 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[ac or air cooler: உங்கள் வீட்டின் அளவிற்கு ஏற்ற ஏசி அல்லது ஏர்கூலரை தேர்வு செய்வது எப்படி?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/how-to-choose-ac-or-air-cooler-for-room-size-tamil-f2wmeak</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/how-to-choose-ac-or-air-cooler-for-room-size-tamil-f2wmeak</guid>
            <pubDate>Mon, 08 Jun 2026 15:51:02 +0530</pubDate>
            <description><![CDATA[கோடை காலத்தில் ஏசி அல்லது ஏர்கூலர் வாங்குவதில் பலருக்கும் குழப்பம் வரும். ஆனால், பிறர் சொல்வதைக் கேட்டு அவசரமாக வாங்கினால், அதிகப்படியான மின்சாரக் கட்டணம் உங்கள் பணத்தை வீணடித்துவிடும் என்பதால் சிந்தித்துத் தேர்ந்தெடுப்பது அவசியம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktkbrjct60k127nyhyqc8c37,imgname-ac-or-air-cooler--1--1780913818009.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கோடை காலத்தில் ஏசி அல்லது ஏர்கூலர் வாங்குவதில் பலருக்கும் குழப்பம் வரும். ஆனால், பிறர் சொல்வதைக் கேட்டு அவசரமாக வாங்கினால், அதிகப்படியான மின்சாரக் கட்டணம் உங்கள் பணத்தை வீணடித்துவிடும் என்பதால் சிந்தித்துத் தேர்ந்தெடுப்பது அவசியம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உங்க பெட்ரூம் அல்லது படிக்கும் அறை 10x10 (100 Sq.Ft) அளவில் சிறியதாக இருந்தால், அதுதான் மேட்ச் பாக்ஸ் சைஸ். இதற்கு 0.8 டன் முதல் 1 டன் வரையிலான ஏசி போதும். கூலர் வாங்குவதானால் 20 முதல் 30 லிட்டர் கொள்ளளவு கொண்ட 'பர்சனல் கூலர்' (Personal Cooler) கச்சிதமாக இருக்கும்.சிறிய அறைக்கு அதிக டன் ஏசி வாங்கினால், ரூம் சீக்கிரம் குளிர்ந்து ஏசி அடிக்கடி ஆஃப் ஆகும். இதனால் கரண்ட் பில் எக்கச்சக்கமாக எகிறும்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நடுத்தர அளவுள்ள லிவிங் ரூம் அல்லது பெரிய மாஸ்டர் பெட்ரூம் (உத்தேசமாக 150 சதுர அடி) வைத்திருப்பவர்களுக்கான சாய்ஸ் இது. இதற்கு 1.5 டன் ஏசி தான் கரெக்ட். கூலர் பிரியராக இருந்தால், 40 முதல் 50 லிட்டர் கொள்ளளவு கொண்ட 'டவர் கூலர்' (Tower Cooler) வாங்கலாம். இது இடத்தை அடைக்காமல் மூலையில் கச்சிதமாக உட்காரும். உங்கள் வீட்டு ஹால் மேற்கு திசையை நோக்கி இருந்தாலோ, அல்லது வெயில் நேரடியாக அடித்தாலோ கண்ணை மூடிக்கொண்டு 1.5 டன் இன்வெர்ட்டர் ஏசி (Inverter AC) எடுப்பது தான் புத்திசாலித்தனம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கூட்டுக் குடும்பமாக பெரிய ஹாலில் வசிப்பவர்கள் அல்லது ஓப்பன் கிச்சன் வசதி கொண்ட வீடுகளுக்கு தாராளமாக 2 டன் ஏசி தேவைப்படும். ஏர்கூலர் என்றால் 60 முதல் 90 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெரிய 'டெசர்ட் கூலர்' (Desert Cooler) வாங்க வேண்டும். டெசர்ட் கூலர்கள் பெரிய அறையை நொடியில் குளிர்விக்கும், ஆனால் அதற்கு வீட்டின் ஜன்னல் கதவுகள் திறந்து இருக்க வேண்டும் (Cross Ventilation). இல்லையென்றால் அறைக்குள் புழுக்கம் அதிகமாகிவிடும்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பலரும் செய்யும் மிகப்பெரிய தவறு ரூம் சைஸை மட்டும் பார்ப்பது தான். உங்கள் வீடு மொட்டை மாடிக்கு கீழே (Top Floor) இருந்தால் இந்த விதியை மறக்காதீங்க. மொட்டை மாடி வெயில் நேரடியாக கூரையில் இறங்குவதால், வழக்கமான கணக்கை விட 0.5 டன் முதல் 1 டன் வரை கூடுதலாக உள்ள ஏசியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 100 சதுர அடி அறைக்கு 1 டன் போதும் என்றாலும், மாடி வீட்டுக்கு 1.5 டன் வாங்கினால் தான் ரூம் குளிரும், ஏசியும் வீணாகாமல் உழைக்கும்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரூமில் எத்தனை பேர் இருக்கீங்க, எவ்வளவு ஜன்னல் இருக்கு என்பதும் முக்கியம். ஒரு அறையில் தொடர்ந்து 3 பேருக்கு மேல் இருக்கிறீர்கள் என்றாலோ, அல்லது பெரிய கண்ணாடி ஜன்னல்கள் வழியாக வெயில் உள்ளே வந்தாலோ ஏசியின் லோடைக் கூட்ட வேண்டும். பெரிய ஜன்னல்கள் இருந்தால் ஏசி வாங்கும் முன் தடிமனான 'தெர்மல் கர்ட்டன்ஸ்' (Thermal Curtains) போடுங்கள். இது ஏசியின் டன் அளவைக் குறைக்க உதவி, பணத்தை மிச்சமாக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;காசு இருக்கேன்னு ஏசி வாங்கக் கூடாது, பராமரிக்கும் வசதி இருக்கான்னு பார்த்து தான் வாங்கணும். ஏர்கூலர் வாங்க சில ஆயிரங்கள் போதும், சாதாரண தண்ணீரே போதும். ஆனால், ஏசி வாங்க பல்லாயிரங்கள் செலவாவதுடன், வருடத்திற்கு இரண்டு முறை சர்வீஸ் செய்ய வேண்டும். உங்கள் ஊரில் காற்றில் ஈரப்பதம் (Humidity) அதிகம் உள்ள கடற்கரை பகுதியா? ஏசி மட்டுமே வேலை செய்யும் (கூலர் செட் ஆகாது). வறண்ட வெயில் அடிக்கும் பகுதியா? ஏர்கூலர் செம்ம பட்ஜெட் ப்ரெண்ட்லி சாய்ஸ்!&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[life-style]]></category>
            <dc:creator>Priya Velan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/how-to-choose-ac-or-air-cooler-for-room-size-tamil-f2wmeak"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Astrology : சுக்கிரன் - சனி சதங்க யோகத்தால் கொட்டப்போகும் பணம்... இந்த 6 ராசிக்காரங்களுக்கு பம்பர் ஜாக்பாட்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/venus-saturn-shatank-yog-2026-brings-fortune-for-these-6-zodiac-signs-g5d6t1p</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/venus-saturn-shatank-yog-2026-brings-fortune-for-these-6-zodiac-signs-g5d6t1p</guid>
            <pubDate>Mon, 08 Jun 2026 15:47:31 +0530</pubDate>
            <description><![CDATA[Shatank Yog 2026 : ஜோதிடத்தில், செல்வத்தை அள்ளித்தரும் சுக்கிரனும், நீதி தேவன் சனியும் சேர்ந்து சதங்க யோகத்தை உருவாக்கியுள்ளனர். இந்த யோகத்தால் 2026-ல் 6 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப் போகிறது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kqm1wh8ccph5j33y5aqkdz1g,imgname-astrology-1777715791116.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Shatank Yog 2026 : ஜோதிடத்தில், செல்வத்தை அள்ளித்தரும் சுக்கிரனும், நீதி தேவன் சனியும் சேர்ந்து சதங்க யோகத்தை உருவாக்கியுள்ளனர். இந்த யோகத்தால் 2026-ல் 6 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப் போகிறது.&lt;/p&gt;&lt;img&gt;ஜூன் 7, 2026 காலை 11:23 மணிக்கு, சுக்கிரனுக்கும் சனிக்கும் இடையே சதங்க யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகம் சுமார் ஒரு மாதத்திற்கு நீடிக்கும். இந்த நேரத்தில், சுக்கிரன் ரிஷபத்தில் இருந்து ஜூன் 8 அன்று கடக ராசிக்குள் நுழைவார். சனி மீன ராசியில் இருப்பார். சுக்கிரன் மகிழ்ச்சி, செல்வம், காதல், ஆடம்பரத்திற்கு அதிபதி. சனி பகவான் கர்மம், ஒழுக்கம், மற்றும் நிரந்தர வெற்றிக்கு காரணமானவர்.&lt;img&gt;சுக்கிரன் உங்கள் ராசி அதிபதி என்பதால், இந்த நேரத்தில் அவர் வலுவான நிலையில் இருப்பார். சதங்க யோகத்தின் தாக்கத்தால், உங்கள் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படலாம். வேலை பார்ப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் கிடைக்கும். அதே சமயம், தொழில் செய்பவர்களுக்கு லாபம் ஈட்ட புதிய வாய்ப்புகள் உருவாகும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் வசதியும் அதிகரிக்கும்.&lt;img&gt;&lt;p&gt;ஜூன் 8-ம் தேதி சுக்கிரன் உங்கள் ராசியான கடகத்திற்குள் நுழைகிறார். இது சதங்க யோகத்தின் நேர்மறையான தாக்கத்தை இன்னும் அதிகரிக்கும். உங்கள் கரியரில் புதிய வாய்ப்புகள் உருவாகலாம். வேலை மாற நினைப்பவர்கள் அல்லது புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். குடும்பத்தின் ஆதரவு முழுமையாக இருக்கும், நிதி நிலை வலுப்பெறும். இந்த நேரத்தில் முக்கியமான வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும்.&lt;/p&gt;&lt;img&gt;சுக்கிரன் மற்றும் சனியின் இந்த யோகம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும். கரியரில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும், அதனால் தடைபட்ட வேலைகள் மீண்டும் தொடங்கும். வியாபாரத்தில் புதிய திட்டங்கள் வெற்றி பெறும். மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் நபர்கள் நல்ல முடிவுகளைப் பெறலாம்.&lt;img&gt;இந்த யோகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் நிதி விஷயங்களில் சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் விரிவாக்கம் செய்ய நல்ல வாய்ப்புகள் அமையும். முதலீட்டு விஷயங்களில் நல்ல பலன்களைப் பெறலாம். அதிர்ஷ்டத்தின் துணையுடன், பல கடினமான வேலைகளைக் கூட எளிதாக முடிப்பீர்கள். திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைக் காணலாம்.&lt;img&gt;சனி உங்கள் ராசியின் அதிபதி கிரகம். அதனால் இந்த யோகத்தின் தாக்கம் உங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். நீண்ட நாள் முயற்சிகள் இப்போது பலனளிக்கும். வருமானம் அதிகரிப்பதற்கான அறிகுறிகள் தென்படும். சொத்து அல்லது வாகனம் வாங்குவது தொடர்பான நல்ல செய்திகள் வரலாம். உங்கள் கரியர் நிலை வலுப்பெறும்.&lt;img&gt;சனி மீன ராசியில் சஞ்சரிப்பதால், சதங்க யோகத்தின் தாக்கம் இந்த ராசிக்கு சாதகமாக இருக்கும். சில காலமாக வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். கரியரில் மெதுவாக ஆனால் நிரந்தரமான வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. நிதி நிலைமை வலுவாக இருக்கும், புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். மனரீதியாகவும் நீங்கள் முன்பை விட சிறப்பாக உணர்வீர்கள்.]]></content:encoded>
            <category><![CDATA[astrology]]></category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/venus-saturn-shatank-yog-2026-brings-fortune-for-these-6-zodiac-signs-g5d6t1p"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Business: மாதம் அசால்டா சம்பாதிக்கலாம் ரூ. 60 ஆயிரம்.! இந்த டாப் 5 தொழில்களை தொடங்குனா போதும்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/earn-rs-60000-a-month-easily-start-these-top-5-businesses-today-51h5puq</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/earn-rs-60000-a-month-easily-start-these-top-5-businesses-today-51h5puq</guid>
            <pubDate>Mon, 08 Jun 2026 15:39:06 +0530</pubDate>
            <description><![CDATA[இக்கட்டுரை, குறைந்த முதலீட்டில் மாதம் ரூ. 60,000 வரை லாபம் ஈட்டக்கூடிய ஐந்து சிறந்த சுயதொழில் வாய்ப்புகளை விவரிக்கிறது. ஐந்து தொழில்கள் மூலம் நிலையான வருமானம் பெறுவதற்கான வழிகளை இது ஆராய்கிறது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktk964zkqszcch93ynz48ma6,imgname-gemini-generated-image-bea8e8bea8e8bea8--1--1780911117298.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;இக்கட்டுரை, குறைந்த முதலீட்டில் மாதம் ரூ. 60,000 வரை லாபம் ஈட்டக்கூடிய ஐந்து சிறந்த சுயதொழில் வாய்ப்புகளை விவரிக்கிறது. ஐந்து தொழில்கள் மூலம் நிலையான வருமானம் பெறுவதற்கான வழிகளை இது ஆராய்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்றைய காலகட்டத்தில், ஒரு நிலையான வருமானத்தைப் பெறுவதற்குக் காலையில் ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணி வரை வேலை செய்யும் வழக்கமான அலுவலகப் பணிகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய அவசியமில்லை. நுகர்வோரின் அன்றாடப் பழக்கவழக்கங்கள் மற்றும் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியால், சுயதொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் நம் கைக்கு எட்டும் தூரத்தில் உள்ளன.மிகக் குறைந்த ஆரம்ப முதலீட்டுடன், புதிய உத்திகளைக் கையாள்வதன் மூலம் மாதம் அசால்ட்டாக ரூ. 60,000 வரை லாபம் ஈட்டக்கூடிய சூழல் நிலவுகிறது. அவ்வாறு அதிக தேவையுடன் இருக்கும் டாப் 5 சிறு தொழில்களைப் பற்றி இக்கட்டுரையில் விரிவாகக் காண்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தினரின் வருமான உயர்வு மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக, கார் பராமரிப்புத் துறை அதிவேகமாக வளர்ந்து வருகிறது. பிஸியான வாழ்க்கைச் சூழலில், வாகன உரிமையாளர்களுக்குத் தங்கள் கார்களைச் சுத்தம் செய்ய நேரமிருப்பதில்லை. இந்தச் சூழலை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, வாடிக்கையாளர்களின் இருப்பிடத்திற்கே நேரடியாகச் சென்று கார் வாஷ் செய்து தரும் 'டோர்ஸ்டெப்' (Doorstep) சேவையைத் தொடங்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;சுற்றுச்சூழல் நட்பு (Eco-friendly) வாட்டர்லெஸ் க்ளீனிங் முறைகள் மற்றும் மாதாந்திர சந்தா திட்டங்களை (Monthly Subscriptions) அறிமுகப்படுத்துவதன் மூலம், நகர்ப்புறங்களில் வாடிக்கையாளர்களை எளிதில் ஈர்க்க முடியும். இதற்கு அதிக தொழில்நுட்பக் கருவிகளோ அல்லது பெரிய கடைகளோ தேவையில்லை என்பதால், மிகக் குறைந்த முதலீட்டிலேயே மாதம் ரூ. 60,000 வருமானத்தை எளிதாக எட்ட முடியும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தற்போது சிறிய கடைகள் முதல் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை அனைத்தும் தங்களின் வணிகத்தை ஆன்லைனுக்கு மாற்றி வருகின்றன. இதனால், கூகுள் மற்றும் மெட்டா விளம்பரங்கள், சமூக ஊடக மேலாண்மை (Social Media Marketing) மற்றும் எஸ்சிஓ (SEO) போன்ற சேவைகளுக்கான தேவை சந்தையில் உச்சத்தில் உள்ளது. இத்திறன்களை ஆன்லைன் மூலமாகவே மிக எளிதாகக் கற்றுக்கொண்டு, ஒரு மடிக்கணினி மற்றும் இணைய வசதியுடன் வீட்டில் இருந்தபடியே இத்தொழிலைத் தொடங்கலாம். உள்ளூர் வணிகங்கள் மற்றும் வளர்ந்து வரும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்குத் தேவையான விளம்பர உத்திகளை வகுத்துக் கொடுப்பதன் மூலம், ஆண்டு முழுவதும் நிலையான வருமானத்தைப் பெறலாம். சில குறிப்பிட்ட வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொண்டாலே, மாதம் 60 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் அசால்ட்டாகச் சம்பாதிக்க முடியும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிசினஸ் பொருட்களை மொத்தமாக வாங்கி, அதைச் சேமித்து வைத்து (Inventory), பேக் செய்து வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் தலைவலியே இல்லாத ஒரு நவீன மின்-வணிக முறைதான் 'டிராப் ஷிப்பிங்'. இத்தொழிலில் ட்ரெண்டிங் ஆடைகள், எலக்ட்ரானிக் கேஜெட்டுகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை விற்கும் சப்ளையர்களுடன் நாம் கைகோர்க்க வேண்டும். சமூக ஊடகங்கள் அல்லது எளிய ஆன்லைன் ஸ்டோர் மூலம் நமக்கு வரும் ஆர்டர்களை சப்ளையருக்கு அனுப்பினால் போதும்; அவர்களே பேக்கிங் முதல் டெலிவரி வரை அனைத்தையும் நேரடியாகக் கவனித்துக் கொள்வார்கள். குறைந்த முதலீடு மற்றும் பூஜ்ஜிய சரக்கு இருப்பு (Zero Inventory) போன்ற நன்மைகளால், இடைத்தரகர் கமிஷன் மூலமாகவே மிகக் குறுகிய காலத்தில் இலக்கு நிர்ணயித்த வருவாயை இதில் ஈட்ட முடியும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்றைய காலகட்டத்தில், குறிப்பாக இளைஞர்களிடையே (Millennials &amp;amp; Gen-Z) ஆரோக்கியம் மற்றும் ரசாயனமற்ற உணவுகள் குறித்த விழிப்புணர்வு பெருமளவில் அதிகரித்துள்ளது. இதனால் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களுக்கு சந்தையில் எப்போதுமே பற்றாக்குறை நிலவுகிறது. உங்களிடம் இருக்கும் சிறிய நிலத்திலோ அல்லது மொட்டை மாடித் தோட்டத்திலோ இயற்கை விவசாய முறைகளைப் பின்பற்றிப் பயிர் செய்யலாம். விளைவித்த பொருட்களை இடைத்தரகர்கள் இன்றி, அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளுக்கு நேரடியாகவோ அல்லது ஆன்லைன் ஆர்டர்கள் மூலமாகவோ விநியோகம் செய்யலாம். அரசின் மானியங்கள் மற்றும் கரிமப் பொருட்களுக்கான அதிக விலை மதிப்பு காரணமாக, இத்தொழிலில் மிக உன்னதமான லாபத்தைப் பார்க்க முடியும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பெரிய பிராண்டுகள் மட்டுமே ஆன்லைனில் விற்க முடியும் என்ற நிலை மாறி, இன்று யார் வேண்டுமானாலும் தங்களின் பிரத்யேகத் தயாரிப்புகளை நாடு முழுவதும் விற்க முடியும். கைவினைப் பொருட்கள், வீட்டில் தயாரித்த உணவுகள், அல்லது பிரத்யேக உடைகளை விற்க 'Shopify' மற்றும் அரசின் 'ONDC' போன்ற தளங்கள் பெரிதும் உதவுகின்றன. மொபைல் வழி ஷாப்பிங் நுகர்வோரிடம் அதிகரித்துள்ளதால், சமூக ஊடகப் பக்கங்கள் மூலமாகவே நம் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தி வாடிக்கையாளர்களைச் சென்றடையலாம். குறைந்த அமைப்புக் கட்டணத்தில் (Low Setup Cost) தொடங்கப்படும் இந்த ஆன்லைன் வணிகம், முறையான வாடிக்கையாளர் சேவையின் மூலம் மாதம் ரூ. 60,000-க்கும் மேல் லாபம் தரும் ஒரு சிறந்த சுயதொழிலாக மாறும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வணிகச் சந்தையானது புதிய தொழில்முனைவோருக்கு மிகவும் சாதகமாக உள்ளது. பெரிய அளவில் முதலீடு செய்யப் பணம் இல்லை என்ற கவலை இனித் தேவையில்லை; அதற்குப் பதிலாகச் சந்தையின் தேவையையும், நுகர்வோரின் மனநிலையையும் சரியாகப் புரிந்துகொண்டால் போதும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள டாப் 5 தொழில்களில், உங்களின் ஆர்வத்திற்கும் திறமைக்கும் ஏற்ற ஒரு துறையைத் தேர்ந்தெடுத்து, முறையான திட்டமிடலுடன் களமிறங்கினால், நீங்களும் மாதம் ரூ. 60,000-க்கும் மேல் அசால்ட்டாகச் சம்பாதித்து, ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக வலம் வரலாம்!&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[business]]></category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/earn-rs-60000-a-month-easily-start-these-top-5-businesses-today-51h5puq"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Cashew: ஒரு கிலோ முந்திரி வெறும் 50 ரூபாய் தான்.! இந்த கிராமத்துக்கு போனா மூட்டை மூட்டையா வாங்கலாம்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/village-in-india-where-cashew-nuts-are-sold-at-surprisingly-low-prices-a-kilo-of-cashew-nuts-costs-just-50-rupees-2yeith1</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/village-in-india-where-cashew-nuts-are-sold-at-surprisingly-low-prices-a-kilo-of-cashew-nuts-costs-just-50-rupees-2yeith1</guid>
            <pubDate>Mon, 08 Jun 2026 15:36:20 +0530</pubDate>
            <description><![CDATA[Cashews for 50 Rupees Per Kg: இந்தியாவுல ஒரு கிராமத்துல ரொம்ப மலிவான விலைக்கு முந்திரி விற்பனை செய்றாங்க. உங்க கையில 100 ரூபாய் இருந்தா போதும், ஒரு பை நிறைய முந்திரி வாங்கிட்டு வரலாம். அந்த கிராமம் எங்க இருக்குனு தெரிஞ்சுக்கோங்க.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktkajjh1rs8p28x46z7q1w1c,imgname-cashew-price-in-nala-village-jharkhand-1780912572961.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Cashews for 50 Rupees Per Kg: இந்தியாவுல ஒரு கிராமத்துல ரொம்ப மலிவான விலைக்கு முந்திரி விற்பனை செய்றாங்க. உங்க கையில 100 ரூபாய் இருந்தா போதும், ஒரு பை நிறைய முந்திரி வாங்கிட்டு வரலாம். அந்த கிராமம் எங்க இருக்குனு தெரிஞ்சுக்கோங்க.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முந்திரி பருப்பு நெனச்சாலே வாயில் எச்சில் ஊறும். ஆனா கிலோ ரூ.800 முதல் ரூ.1000 வரை விற்கிறதால பலரும் வாங்க யோசிக்கிறாங்க. ஆனா, ஜார்கண்ட்ல இருக்க ஒரு கிராமத்துல கிலோ 30 ரூபாய்க்கு கூட முந்திரி வாங்கலாம். ஜம்தாரா மாவட்டத்துல இருந்து 4 கி.மீ. தூரத்துல இருக்குற நாலா கிராமம்தான் அது. இதை 'ஜார்க்கண்டின் முந்திரி நகரம்'னே சொல்றாங்க.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்: &amp;nbsp;&lt;/strong&gt;Kadak Chai: டீ கடை சுவையில் Strong Tea.! டீ போடும்போது கடைசியா இந்த இலையை போடுங்க.! செம டேஸ்ட்டா இருக்கும்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நாலா கிராமத்துல, காய்கறிகளோட சேர்த்து முந்திரியையும் ரோட்டுல வெச்சு விக்கிறாங்க. சொல்லப்போனா, சில காய்கறிகளை விட முந்திரி விலை இங்கே கம்மி. காரணம், இந்த ஊர்ல சுமார் 50 ஏக்கர் பரப்புல முந்திரி விவசாயம் நடக்குது. ஆனா, இதை வெளியூருக்கு கொண்டுபோய் விற்க வசதி இல்லாததால, வர்றவங்ககிட்டயே மலிவா விற்றுவிடுகிறார்கள். இவர்களிடம் மலிவாக வாங்கும் வியாபாரிகள், 10 மடங்கு அதிக விலைக்கு வெளியே விற்கிறார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்:&amp;nbsp;&lt;/strong&gt; Lower Berth: ரயிலில் 'லோயர் பெர்த்' வேண்டுமா? இந்த ரகசிய ட்ரிக்கை பின்பற்றுங்கள்.! கண்டிப்பா கீழ் இருக்கை கிடைக்கும்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;2010-க்கு முன்னாடி, இந்த கிராம மக்களுக்கு என்ன பயிர் பண்றதுனே தெரியாம இருந்துச்சு. அப்போதான், வனத்துறை அதிகாரிகள் இந்த பகுதியோட தட்பவெப்பமும், மண்ணும் முந்திரி விவசாயத்துக்கு ஏத்ததுனு கண்டுபிடிச்சாங்க. விவசாயிகளுக்கு பயிற்சியும் கொடுத்தாங்க. அதுல இருந்து பெரிய அளவுல முந்திரி சாகுபடி செய்றாங்க. ஆனா, விளைஞ்ச முந்திரியை பதப்படுத்தவோ, சந்தைப்படுத்தவோ வசதி இல்லாததால, உண்மையான விலையில கால் பங்கு விலைக்கு ரோட்டோரத்துல விக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்காங்க.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்:&amp;nbsp;&lt;/strong&gt; Rocket Stove: சிலிண்டர் விலை உயர்ந்தாலும் கவலை இல்லை.! 10 செங்கல் வச்சு சூப்பர் அடுப்பு செய்யலாம்.! 24 மணி நேரமும் சமைக்கலாம்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;2010-ல் ஜம்தாரா மாவட்ட துணை ஆணையரா இருந்த ஐஏஎஸ் அதிகாரி கிருபானந்த் ஜா தான், இந்த கிராமத்தின் மண் மற்றும் தட்பவெப்ப நிலையை ஆராய்ந்து முந்திரி சாகுபடிக்கு முன் முயற்சிகளை எடுத்தார். விவசாய விஞ்ஞானிகளுடன் ஆலோசித்து இதை சாத்தியமாக்கினார். ஆனாலும், விவசாயிகளுக்கு இதனால பெரிய லாபம் கிடைக்கல.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்:&amp;nbsp;&lt;/strong&gt; Bay Leaf Benefits: சாதம் வடிக்கும்போது ஒரு பிரியாணி இலை.! இவ்வளவு மருத்துவ நன்மைகள் கிடைக்குமா?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதற்கு காரணம், முந்திரியை பதப்படுத்தும் ஆலை (processing plant) இங்கே இல்லை. அப்படி ஒரு ஆலை இருந்தா, இங்கிருந்தே ஏற்றுமதி செய்யலாம், உள்ளூர்ல வேலைவாய்ப்பும் பெருகும். ஆனா, இதை யாரும் கண்டுக்காததால, விவசாயிகள் காய்கறிகளோட சேர்த்து முந்திரியையும் ரோட்டுல வெச்சு வித்துட்டு இருக்காங்க. உங்க நண்பர்கள் யாராச்சும் ஜார்க்கண்ட் ல இருந்தா 100 ரூபாய்க்கு முந்திரி வாங்கிட்டு வர சொல்லுங்க. ஒரு வருஷம் முழுவதும் வச்சி சாப்பிடலாம்.&amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[life-style]]></category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/village-in-india-where-cashew-nuts-are-sold-at-surprisingly-low-prices-a-kilo-of-cashew-nuts-costs-just-50-rupees-2yeith1"/>
        </item>
        <item>
            <title><![CDATA[எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி பள்ளிகளில் ஆய்வு செய்வேன் -  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/education-minister-to-conduct-surprise-school-inspections-videoshow-a2kozgz</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/education-minister-to-conduct-surprise-school-inspections-videoshow-a2kozgz</guid>
            <pubDate>Mon, 08 Jun 2026 15:00:32 +0530</pubDate>
            <description><![CDATA[]]></description>
            <media:content url="https://www.youtube.com/embed/Gf1QYwi3wEs" medium="video" height="350" width="560"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் எப்போது வேண்டுமானாலும், எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி நான் திடீர் ஆய்வு மேற்கொள்வேன் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[tamilnadu]]></category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/education-minister-to-conduct-surprise-school-inspections-videoshow-a2kozgz"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Praggnanandhaa meets CM Vijay : CM விஜய்யுடன் செஸ் விளையாடிய பிரக்ஞானந்தா : மாஸ் கிளப்பிய தளபதி! -  வீடியோ உள்ளே]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/sports/praggnanandhaa-plays-chess-with-cm-vijay-478e9bn</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/sports/praggnanandhaa-plays-chess-with-cm-vijay-478e9bn</guid>
            <pubDate>Mon, 08 Jun 2026 15:00:26 +0530</pubDate>
            <description><![CDATA[Praggnanandhaa meets CM Vijay : நார்வே செஸ் தொடரில் வரலாற்றுச் சாதனை படைத்த இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவை, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் நேரில் அழைத்து கௌரவித்ததுடன், அவருக்கு ரூ. 50 லட்சம் பரிசுத்தொகையையும் வழங்கிப் பாராட்டினார்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktk8as9h6sb3a4pz3azj2sn7,imgname-chatgpt-image-jun-8--2026--02-46-00-pm-1780910220592.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Praggnanandhaa meets CM Vijay : நார்வே செஸ் தொடரில் வரலாற்றுச் சாதனை படைத்த இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவை, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் நேரில் அழைத்து கௌரவித்ததுடன், அவருக்கு ரூ. 50 லட்சம் பரிசுத்தொகையையும் வழங்கிப் பாராட்டினார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கடந்த ஜூன் 6-ம் தேதி நார்வேயின் ஓஸ்லோவில் நடைபெற்ற புகழ்பெற்ற &lsquo;நார்வே செஸ்&rsquo; தொடரில், 20 வயதான பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று புதிய வரலாறு படைத்தார். இந்தத் தொடரில் தொடக்கத்தில் சில பின்னடைவுகளைச் சந்தித்தாலும், உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் உள்ளிட்ட முன்னணி வீரர்களை வீழ்த்தி, அவர் அசத்தலாகத் திரும்பி வந்து இந்த வெற்றியைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;&lt;p&gt;இதையும் படிங்க : இரண்டாவது முறையாக டெல்லி செல்லும் CM Vijay! : நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பு!&lt;/p&gt;&lt;p&gt;இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்ற பிரக்ஞானந்தாவை அழைத்து பாராட்டிய முதலமைச்சர் விஜய், தமிழக அரசு சார்பில் ரூ. 50 லட்சம் பரிசுத்தொகையையும் வழங்கினார். இந்நிகழ்வில் பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் பிரக்ஞானந்தாவின் தாயார் நாகலட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த சந்திப்பின் போது, எதிர்பாராத விதமாக முதலமைச்சர் விஜய், பிரக்ஞானந்தாவை ஒரு நட்பு ரீதியான செஸ் போட்டிக்கு அழைத்தார். எவரும் எதிர்பாராத இந்தச் சம்பவம் அங்கிருந்தவர்களை உற்சாகப்படுத்தியது. இருவரும் அமர்ந்து சதுரங்கப் பலகையில் வேகமாகவும், அதே சமயம் தீவிரமாகவும் நகர்த்தல்களை மேற்கொண்டனர்.&lt;/p&gt;&lt;p&gt;#WATCH | Chennai | Tamil Nadu CM Vijay meets Indian Grandmaster R Praggnanandhaa and awards him Rs 50 lakh on behalf of the Sports Development Authority of Tamil Nadu after the chess player won the Norway Chess 2026 title.(Source: TNDIPR) pic.twitter.com/Lf4dNgYrEX&lt;/p&gt;&lt;p&gt;&mdash; ANI (@ANI) June 8, 2026&lt;/p&gt;&lt;p&gt;இந்த போட்டியில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றாலும், முதலமைச்சரின் சதுரங்கத் திறமை அவருக்கு ஆச்சரியத்தை அளித்தது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரக்ஞானந்தா, &quot;முதலமைச்சர் இவ்வளவு நன்றாக சதுரங்கம் விளையாடுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவருடன் விளையாடியது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அவரது நகர்த்தல்கள் மிகவும் நுணுக்கமாகவும், கவனமாகவும் இருந்தன,&quot; என்று தனது வியப்பை வெளிப்படுத்தினார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தச் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும், சதுரங்கம் விளையாடும் காணொளியும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன. விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்துவதில் முதலமைச்சர் காட்டும் ஆர்வம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;Exclusive:-CM Vijay played chess with me. I thought it would be easy to win, but his moves were very calculated and tough . In the end, I managed to win- Says Praggnanandhaa ♟️pic.twitter.com/lpHyCaPOUl&lt;/p&gt;&lt;p&gt;&mdash; TD....❥ (@MiniiGirl__) June 8, 2026&lt;/p&gt;&lt;p&gt;இந்தத் தருணம் தமிழக விளையாட்டு வரலாற்றில் ஒரு மறக்க முடியாத நிகழ்வாகப் பதிவாகியுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[sports]]></category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/sports/praggnanandhaa-plays-chess-with-cm-vijay-478e9bn"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Health Tips: உடலை எப்போதும் சுறுசுறுப்பாக வைக்கும் 5 ஆரோக்கிய உணவுகள்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/health/5-healthy-instant-energy-boosting-foods-tamil-gmr5mbo</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/health/5-healthy-instant-energy-boosting-foods-tamil-gmr5mbo</guid>
            <pubDate>Mon, 08 Jun 2026 14:53:02 +0530</pubDate>
            <description><![CDATA[அடிக்கடி சோர்வாகவும் எனர்ஜி இல்லாமலும் உணர்கிறீர்களா? டீ, காபி தரும் தற்காலிக சுறுசுறுப்பை விட, நாள் முழுவதும் உங்களை எனர்ஜியோடு வைத்திருக்க உதவும் ஆரோக்கியமான உணவுகளின் பட்டியல் இதோ. சோர்வை நீக்கி எப்போதும் சுறுசுறுப்பாக இயங்குங்கள்!]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktk8ewyb5js5pq059wt1esns,imgname-healthy-instant-energy-boosting-foods--1--1780910355403.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;அடிக்கடி சோர்வாகவும் எனர்ஜி இல்லாமலும் உணர்கிறீர்களா? டீ, காபி தரும் தற்காலிக சுறுசுறுப்பை விட, நாள் முழுவதும் உங்களை எனர்ஜியோடு வைத்திருக்க உதவும் ஆரோக்கியமான உணவுகளின் பட்டியல் இதோ. சோர்வை நீக்கி எப்போதும் சுறுசுறுப்பாக இயங்குங்கள்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சியா விதைகள் (Chia seeds) உடலுக்கு மெதுவான, நிலையான ஆற்றலைத் தரும். காலையில் ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் சியா விதைகளை ஊற வைத்து, அதில் கொஞ்சம் எலுமிச்சை சாறு கலந்து குடியுங்கள். சியா விதைகளில் உள்ள ஒமேகா-3 மற்றும் நார்ச்சத்து, ரத்தத்தில் சர்க்கரை அளவு சட்டென உயராமலும் குறையாமலும் பார்த்துக் கொள்ளும். இதனால் நாள் முழுக்க சோர்வே வராது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&quot;இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்குக் கொள்ளு&quot; பழமொழி கேள்விப்பட்டிருப்பீங்க. ஆனா, கொள்ளு குதிரை வேகத்தில் நம்மை ஓட வைக்கும் எனர்ஜி பூஸ்டர். வாரத்தில் இரண்டு நாள் முளைகட்டிய கொள்ளுவை லேசாக அவித்து சுண்டலாகச் சாப்பிடுங்கள். இதில் இருக்கும் இரும்புச்சத்தும் புரதமும் உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரித்து, தசைகளுக்கு அசுர வேக சுறுசுறுப்பைத் தரும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மாலை நேரத்தில் வடை, பஜ்ஜி சாப்பிட்டு உடம்பை மந்தமாக்குவதற்குப் பதிலாக பூசணி விதைகளை ட்ரை பண்ணுங்க. வறுத்த பூசணி விதைகளை உங்கள் பாக்கெட்டில் எப்போதும் வைத்திருங்கள். பசிக்கும் போது ஒரு கைப்பிடி சாப்பிடுங்கள். இதில் அதிகப்படியான மெக்னீசியம் உள்ளது. உடலில் மெக்னீசியம் குறைந்தால் தான் பயங்கர சோர்வு ஏற்படும். இதைச் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே மூளை சுறுசுறுப்பாகிவிடும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வெயிலோ, வேலையோ... உடல் டயர்ட் ஆகும் போது பாக்கெட் ஜூஸ் குடிக்காதீங்க. இயற்கையான இந்த காம்போவை ட்ரை பண்ணுங்க. இளநீரில் 4 புதினா இலைகளை நசுக்கிப் போட்டு, ஒரு சிட்டிகை கல் உப்பு சேர்த்து குடியுங்கள். இளநீரில் உள்ள பொட்டாசியம் உடலின் எலக்ட்ரோலைட் அளவைச் சீராக்கும், புதினா இலைகளின் வாசனை மூளையை உடனடியாக அலர்ட் ஆக்கும். இன்ஸ்டன்ட் எனர்ஜி கேரண்டி!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சுறுசுறுப்பாக இருக்க ஸ்வீட் சாப்பிடக் கூடாது, ஆனா கசப்பான சாக்லேட் சாப்பிடலாம்! 70% மேல் உள்ள டார்க் சாக்லேட் ஒரு துண்டுடன், 4 பாதாம் பருப்பைச் சேர்த்து மென்று சாப்பிடுங்கள். டார்க் சாக்லேட்டில் உள்ள 'தியோப்ரோமைன்' (Theobromine) என்ற சத்து காபியை விட ஆபத்தில்லாத, நீடித்த சுறுசுறுப்பைத் தரும். பாதாம் பருப்பு அதற்குத் தேவையான நல்ல கொழுப்பை உடலுக்குக் கொடுக்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[health]]></category>
            <dc:creator>Priya Velan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/health/5-healthy-instant-energy-boosting-foods-tamil-gmr5mbo"/>
        </item>
        <item>
            <title><![CDATA[LPG Subsidy: ரூ.1,600 மதிப்புள்ள எல்பிஜி சிலிண்டர் வெறும் ரூ.642க்கு! மாபெரும் சலுகை]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/domestic-lpg-cylinder-cost-rs1600-consumers-pay-rs642-q9uuuwk</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/domestic-lpg-cylinder-cost-rs1600-consumers-pay-rs642-q9uuuwk</guid>
            <pubDate>Mon, 08 Jun 2026 14:29:21 +0530</pubDate>
            <description><![CDATA[LPG Subsidy: மேற்கு ஆசிய பதற்றம், ஹார்முஸ் நீரிணை பிரச்சினை போன்ற சவால்கள் இருந்தபோதிலும் இந்தியாவில் எல்பிஜி விநியோகம் பாதிக்கப்படவில்லை. அதேசமயம் பல நாடுகளை விட இந்தியாவில் சிலிண்டர் விலை குறைவாகவே உள்ளது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01knrrbena9y7ybbbhya0j75e1,imgname-india-lpg-supply-shortage-black-market-prices-delays-2026-strict-regulations-1-1775726082730.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;LPG Subsidy: மேற்கு ஆசிய பதற்றம், ஹார்முஸ் நீரிணை பிரச்சினை போன்ற சவால்கள் இருந்தபோதிலும் இந்தியாவில் எல்பிஜி விநியோகம் பாதிக்கப்படவில்லை. அதேசமயம் பல நாடுகளை விட இந்தியாவில் சிலிண்டர் விலை குறைவாகவே உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உலகளவில் எல்பிஜி விலை கடந்த நான்கு மாதங்களில் வேகமாக உயர்ந்துள்ளது. சர்வதேச அளவில் எல்பிஜி விலைக்கான முக்கிய அளவுகோலாகக் கருதப்படும் சவுதி ஒப்பந்த விலை (சவூதி ஒப்பந்த விலை) பிப்ரவரி மாதத்தில் டன்னுக்கு 542.5 டாலராக இருந்தது. தற்போது அது 790 டாலராக உயர்ந்துள்ளது. இது சுமார் 46 சதவீத உயர்வாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சர்வதேச சந்தை விலை உயர்ந்தாலும், இந்தியாவில் வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலையை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. தற்போது 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு எல்பிஜி சிலிண்டரின் விநியோகச் செலவு ரூ.1,600-ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், டெல்லியில் பொதுமக்கள் அதை ரூ.942க்கு வாங்குகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிரதமர் உஜ்வாலா திட்டத்தின் கீழ் உள்ள குடும்பங்களுக்கு நிலைமை இன்று சாதகமாக உள்ளது. நேரடி வங்கி பரிமாற்றம் (DBT) மூலம் வழங்கப்படும் ரூ.300 மானியத்தால், முதல் நான்கு ரீஃபில்களுக்கு சிலிண்டர் விலை வெறும் ரூ.642 ஆக குறைகிறது. இதன் மூலம் 10.58 கோடி குடும்பங்கள் தொடர்ந்து பயன் பெற்று வருகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எல்பிஜி விலை ஒப்பீட்டில் இந்தியா இன்னும் பல நாடுகளை விட குறைந்த கட்டணத்தில் உள்ளது. பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், இலங்கை போன்ற அண்டை நாடுகளிலும், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற முன்னேறிய நாடுகளிலும் எல்பிஜி விலை இந்தியாவை விட அதிகமாக உள்ளது. இதனால் இந்திய நுகர்வோருக்கு கூடுதல் நிதி நிம்மதி கிடைக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேற்கு ஆசிய பதற்றம் மற்றும் ஹார்முஸ் நீரிணை தொடர்பான சவால்கள் இருந்தபோதிலும், நாட்டில் எல்பிஜி விநியோகம் சீராக நடைபெற்று வருகிறது. உள்நாட்டு உற்பத்தியும் அதிகரித்துள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது. எனவே தற்போது எந்த மாநிலத்திலும் எல்பிஜி தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[business]]></category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/domestic-lpg-cylinder-cost-rs1600-consumers-pay-rs642-q9uuuwk"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Maruti Suzuki Cars: நச்சுனு 4 புதிய மாடல் கார்களை களத்தில் இறக்கும் மாருதி சுஸுகி..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/auto/maruti-suzuki-prepares-four-new-car-launches-including-brezza-facelift-and-7-seater-suv-05vo4q6</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/auto/maruti-suzuki-prepares-four-new-car-launches-including-brezza-facelift-and-7-seater-suv-05vo4q6</guid>
            <pubDate>Mon, 08 Jun 2026 14:25:22 +0530</pubDate>
            <description><![CDATA[Upcoming Maruti Suzuki Cars : இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, அடுத்தடுத்து பல புதிய மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளது. அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktk6cj0d7dybac4rnkgxyaak,imgname-maruti-1780908181517.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Upcoming Maruti Suzuki Cars : இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, அடுத்தடுத்து பல புதிய மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளது. அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனம் மாருதி சுஸுகி. பலதரப்பட்ட வாடிக்கையாளர்களுக்காக, பல்வேறு செக்மென்ட்களில் கார்களை விற்பனை செய்து வருகிறது. மற்ற பிராண்டுகளைப் போலவே, மாருதி நிறுவனமும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தனது மாடல்களை அப்டேட் செய்வதும், புதிய மாடல்களை அறிமுகம் செய்வதும் வழக்கம். சமீபத்தில்கூட, ஃப்ளெக்ஸ்-ஃப்யூயலில் இயங்கும் வேகன்-ஆர் காரை மாருதி அறிமுகப்படுத்தியது. அந்த வரிசையில், எதிர்காலத்தில் இன்னும் பல புதிய கார்களை அறிமுகப்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அவை என்னென்ன கார்கள் என்று விரிவாகப் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, அதன் செக்மென்டில் மிகவும் பிரபலமான எஸ்யூவி-களில் ஒன்று. இந்த காருக்கு விரைவில் ஒரு ஃபேஸ்லிஃப்ட் அப்டேட் கிடைக்க உள்ளது. கடந்த சில மாதங்களாக, இந்த புதிய மாடல் சோதனை செய்யப்படும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. மீடியா ரிப்போர்ட்களின்படி, வரும் மாதங்களில் மாருதி சுஸுகி இந்த அப்டேட் செய்யப்பட்ட எஸ்யூவி-யை அறிமுகப்படுத்தும்.&lt;/p&gt;&lt;p&gt;காரின் வெளித்தோற்றத்தில் பெரிய மாற்றங்கள் இருக்காது என்று தெரிகிறது. ஆனால், புதிய பம்பர்கள், மாற்றியமைக்கப்பட்ட ஃபாக் லேம்ப் ஹவுசிங் மற்றும் புதிய அலாய் வீல்கள் போன்றவற்றை மாருதி சுஸுகி சேர்க்கக்கூடும். காரின் உள்ளே, பெரிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புதிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வென்டிலேட்டட் சீட்கள், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ஆம்பியன்ட் லைட்டிங் என பல புதிய அம்சங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதில் மிகப்பெரிய மாற்றமாக இன்ஜின் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் உள்ளது. சிஎன்ஜி ஆப்ஷனும் கிடைக்கிறது. ஆனால், புதிய மாடலில் ஃபிராங்க்ஸ் காரில் உள்ள 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படலாம். இந்த சிறிய இன்ஜின் மூலம், எஸ்யூவி-க்கான ஜிஎஸ்டி வரி 40 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறையும். மேலும், 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் இடத்தைச் சேமிக்கும் அண்டர்பாடி சிஎன்ஜி டேங்க் போன்றவையும் இதில் இடம்பெறலாம். தற்போதைய பிரெஸ்ஸாவின் விலை ரூ.8.25 லட்சம் முதல் ரூ.13.01 லட்சம் வரை உள்ளது. ஆனால், ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை சற்று அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அறிமுகம் செய்யப்பட்டது முதல், மாருதி சுஸுகியின் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக ஃபிராங்க்ஸ் உள்ளது. இந்த கிராஸ்ஓவர் காருக்கு ஒரு பெரிய அப்டேட்டை மாருதி இப்போது தயார் செய்து வருகிறது. சமீபத்தில் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்ட மாடல்களைப் பார்க்கும்போது, இதன் முன்பக்க மற்றும் பின்பக்க பம்பர்கள், எல்இடி ஹெட்லைட்கள், டெயில் லைட்கள் மற்றும் அலாய் வீல்கள் என அனைத்தும் புதிதாக வடிவமைக்கப்பட்டிருக்கும் எனத் தெரிகிறது.&lt;/p&gt;&lt;p&gt;கேபினில் வென்டிலேட்டட் சீட்கள், பெரிய டச்ஸ்கிரீன் மற்றும் லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்ஸ் (ADAS) ஆகியவை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் மிகப்பெரிய மாற்றம், புதிய மற்றும் அதிக சக்திவாய்ந்த ஹைப்ரிட் இன்ஜின்தான். இந்த அமைப்பில், 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஒரு ஜெனரேட்டராக மட்டுமே செயல்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கிராண்ட் விட்டாரா காரையும் புதுப்பிக்க மாருதி திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு பண்டிகைக் காலத்தில் இந்த புதிய மாடல் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஸ்யூவி-யில் புதிய முன்பக்க கிரில், புதிய பம்பர்கள், அப்டேட் செய்யப்பட்ட எல்இடி லைட்டிங் மற்றும் புதிய 17 இன்ச் அலாய் வீல்கள் ஆகியவை இடம்பெறும்.&lt;/p&gt;&lt;p&gt;உட்புறத்தில், பெரிய 10.1 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங் உள்ளிட்ட லெவல் 2 ADAS பாதுகாப்பு தொழில்நுட்பம் ஆகியவை இதில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஜினைப் பொறுத்தவரை, தற்போதைய 1.5 லிட்டர் மைல்டு-ஹைப்ரிட், ஸ்ட்ராங்-ஹைப்ரிட் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷன்களே தொடரும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கிராண்ட் விட்டாராவை அடிப்படையாகக் கொண்டு, ஒரு புதிய ஃபிளாக்ஷிப் 7-சீட்டர் எஸ்யூவி-யையும் மாருதி சுஸுகி உருவாக்கி வருகிறது. Y17 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படும் இந்த பெரிய எஸ்யூவி, ஏற்கனவே சோதனை ஓட்டத்தில் காணப்பட்டுள்ளது. பனோரமிக் சன்ரூஃப், வென்டிலேட்டட் சீட்கள், வயர்லெஸ் சார்ஜர், 360 டிகிரி கேமரா, ஹெட்-அப் டிஸ்ப்ளே, ஸ்டாண்டர்டாக ஆறு ஏர்பேக்குகள் மற்றும் லெவல் 2 ADAS போன்ற பிரீமியம் அம்சங்கள் இதில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டாண்டர்டு கிராண்ட் விட்டாராவில் உள்ள அதே மைல்டு-ஹைப்ரிட் மற்றும் ஸ்ட்ராங்-ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின்களுடன் இந்த எஸ்யூவி வரும். இந்த ஆண்டு பண்டிகைக் காலத்தில் இதுவும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[auto]]></category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/auto/maruti-suzuki-prepares-four-new-car-launches-including-brezza-facelift-and-7-seater-suv-05vo4q6"/>
        </item>
        <item>
            <title><![CDATA[CM Vijay: வாவ்.! பாட்ஷா பட ஸ்டைலில் கெத்தாக அமர்ந்த முதல்வர் விஜய்.! மர நாற்காலி டூ அதி நவீன சொகுசு குஷன் சேர்.! இணையத்தில் வரலாகும் புகைப்படங்கள்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/politics/cm-vijay-stuns-in-baashha-style-pose-from-wooden-chair-to-ultra-luxury-cushioned-seat-photos-go-viral-2g97gsv</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/politics/cm-vijay-stuns-in-baashha-style-pose-from-wooden-chair-to-ultra-luxury-cushioned-seat-photos-go-viral-2g97gsv</guid>
            <pubDate>Mon, 08 Jun 2026 14:21:31 +0530</pubDate>
            <description><![CDATA[ஆரம்பத்தில் எளிமையான மர நாற்காலியைப் பயன்படுத்தி வந்த முதல்வர் விஜய், அதுகுறித்த சர்ச்சைகளுக்குப் பிறகு தற்போது 'பாட்ஷா' ஸ்டைல் அதிநவீன சொகுசு சேருக்கு மாறியுள்ளார். இதற்கான காரணம் குறித்த தகவல்களும் இணையத்தில் பரவி வருகிறது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktk652txf58472216cqejsyb,imgname-chatgpt-image-jun-8--2026--02-07-27-pm--1--1780907936604.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஆரம்பத்தில் எளிமையான மர நாற்காலியைப் பயன்படுத்தி வந்த முதல்வர் விஜய், அதுகுறித்த சர்ச்சைகளுக்குப் பிறகு தற்போது 'பாட்ஷா' ஸ்டைல் அதிநவீன சொகுசு சேருக்கு மாறியுள்ளார். இதற்கான காரணம் குறித்த தகவல்களும் இணையத்தில் பரவி வருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதலே மக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறார் த.வெ.க தலைவர் விஜய். கடந்த 10-ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்று, சட்டசபையில் தன் பெரும்பான்மையையும் நிரூபித்த அவர், தற்போது பம்பரமாகச் சுழன்று மக்கள் பணியாற்றி வருகிறார்.&lt;/p&gt;&lt;p&gt;காலை 9:30 அல்லது 10:00 மணிக்கெல்லாம் தலைமைச் செயலகம் வந்துவிடும் அவர், மாலை 4:00 மணி வரை அங்கேயே தங்கி துறை சார்ந்த அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனைகளை மேற்கொள்கிறார். மதிய உணவிற்காகக் கூட வீட்டிற்குச் செல்லாமல், கொண்டு வரும் உணவை அங்கேயே முடித்துவிட்டு உடனே அடுத்த பணிகளுக்குத் தயாராகி விடுகிறார். இவரின் இந்த நேரக் கட்டுப்பாடும் எளிமையான அணுகுமுறையும் பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விஜய் முதல்வராகப் பொறுப்பேற்றது முதல், தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையில் ஒரு சாதாரண மர நாற்காலியில்தான் அமர்ந்து கோப்புகளில் கையெழுத்திட்டு வந்தார். கடந்த 2-ஆம் தேதி தென்னிந்தியப் பிராந்தியங்களுக்கான ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் வி. ஸ்ரீஹரி, முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்துப் பேசினார்.&lt;/p&gt;&lt;p&gt;அப்போது அரசு வெளியிட்ட புகைப்படத்தில், ராணுவத் தளபதிக்கு இணையாக முதல்வர் விஜய் அந்த மர நாற்காலியில் அமர்ந்திருந்த காட்சி வெளியானது. &quot;முதலமைச்சர் அறைக்கு இந்த நாற்காலி பொருத்தமானதா?&quot; என அரசியல் வட்டாரங்களில் இது விவாதப் பொருளாகவும், சில விமர்சனங்களுக்கும் ஆளானது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில், &amp;nbsp;தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி எஸ். மணிகுமார், முதல்வர் விஜய்யை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு தொடர்பாக அரசு வெளியிட்ட புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் அரசியல் நோக்கர்கள் அப்படியே ஆடிப்போயுள்ளனர்!&lt;/p&gt;&lt;p&gt;விஜய்யின் அறையில் இருந்த அந்தப் பழைய மர நாற்காலி மாற்றப்பட்டு, அதற்குப் பதிலாகப் பார்ப்பதற்கே பிரம்மாண்டமாக, 'பாட்ஷா' பட ரஜினி ஸ்டைலில் செம கெத்தாக வடிவமைக்கப்பட்ட அதிநவீன சொகுசு குஷன் சேர் அங்கு இடம் பிடித்துள்ளது. அதில் முதல்வர் விஜய் அமர்ந்திருக்கும் லுக் சமூக வலைதளங்களில் மரண மாஸாக வைரலாகி வருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தினமும் 6 மணி நேரத்திற்கும் மேலாக ஒரே இடத்தில் உட்கார்ந்து தொடர்ந்து முதல்வர் விஜய் கோப்புகளைப் பரிசீலித்து வருகிறார். இதனால் அவருக்கு லேசான முதுகு வலி (Back pain) ஏற்பட்டதாம். நீண்ட நேரம் அமர்ந்து பணியாற்ற ஏதுவாக, மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில், முதுகுக்கு நல்ல பிடிமானம் தரும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த அதிநவீன குஷன் சேர் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.&lt;/p&gt;&lt;p&gt;எளிமை ஒரு பக்கம் இருந்தாலும், தமிழ்நாட்டின் முதலமைச்சர் அமரும் நாற்காலி &quot;கெத்தாக&quot; இருக்க வேண்டும் என்று விரும்பிய அவரது தொண்டர்களுக்கு, இந்த புதிய 'சொகுசு குஷன் சேர்' படம் பெரும் குஷியைக் கொடுத்துள்ளது!&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[politics]]></category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/politics/cm-vijay-stuns-in-baashha-style-pose-from-wooden-chair-to-ultra-luxury-cushioned-seat-photos-go-viral-2g97gsv"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Venus Transit 2026: இன்று சுக்கிர பெயர்ச்சி.! 5 ராசிகளுக்கு தொடங்கும் சுக்கிர திசை.! வீடு, கார், பங்களாவுடன் வசதியாக வாழப்போறீங்க.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/shukra-gochar-venus-transit-2026-into-cancer-on-june-8-brings-massive-wealth-and-positive-changes-for-5-zodiac-signs-rghc8hu</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/shukra-gochar-venus-transit-2026-into-cancer-on-june-8-brings-massive-wealth-and-positive-changes-for-5-zodiac-signs-rghc8hu</guid>
            <pubDate>Mon, 08 Jun 2026 14:11:54 +0530</pubDate>
            <description><![CDATA[Venus Transit 2026 in Cancer: ஜூன் 8, 2026 சுக்கிர பகவான் மிதுன ராசியில் இருந்து விலகி கடக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். சுக்கிரப் பெயர்ச்சியால் 5 ராசிக்காரர்கள் அதிகபட்ச நன்மைகளைப் பெற உள்ளனர். அந்த ராசிகள் குறித்து இங்கு காணலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktk5vrjmkkgagc3wdwnwdmje,imgname-shukra-gochar-2026-1780907631188.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Venus Transit 2026 in Cancer: ஜூன் 8, 2026 சுக்கிர பகவான் மிதுன ராசியில் இருந்து விலகி கடக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். சுக்கிரப் பெயர்ச்சியால் 5 ராசிக்காரர்கள் அதிகபட்ச நன்மைகளைப் பெற உள்ளனர். அந்த ராசிகள் குறித்து இங்கு காணலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜோதிட சாஸ்திரத்தில் சுக்கிரன் சுப கிரகமாக கருதப்படுகிறார். செல்வம், ஆடம்பரம், காதல், அழகு, மற்றும் வாழ்க்கையின் எல்லா வசதிகளும் சுக்கிரனின் அருளால் தான் நமக்கு கிடைக்கிறது. வரும் ஜூன் 8, 2026 அன்று, சுக்கிரன் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இந்த ராசி மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களைத் தரும். எந்த 4 ராசிகளுக்கு இந்த சுக்கிர பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப்போகிறது என்று இங்கு காணலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்: &amp;nbsp;&lt;/strong&gt;Numerology: இந்த தேதியில பிறந்தவங்களுக்கு காசு பணம் நிறைய இருக்கும், ஆனா மன நிம்மதி சுத்தமா இருக்காது.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சுக்கிரன் உங்கள் ராசிக்குள்ளேயே (முதல் வீட்டில்) நுழைவதால், இந்த காலகட்டம் உங்களுக்கு மிகப்பொன்னான காலமாக அமையும். உங்கள் தோற்றத்தில் பொலிவு கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். மற்றவர்களை ஈர்க்கும் காந்த சக்தி உங்களுக்குள் உருவாகும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். கணவன்-மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். தொழில் வாழ்க்கையில் புதிய வாய்ப்புகள் உருவாகும். வேலையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்:&amp;nbsp;&lt;/strong&gt; Kaal Sarp Yog: ராகு கேதுவுக்கு இடையில் சிக்கும் கிரகங்கள்.! உருவாகும் கால சர்ப்ப யோகம்.! எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உங்கள் ராசிக்கு 11-ம் வீடான லாப ஸ்தானத்திற்கு சுக்கிரன் பெயர்ச்சியாவதால், தொட்டதெல்லாம் பொன்னாகும் காலம் இது. உபரி வருமானத்திற்கான வழிகள் பிறக்கும். புதிய முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டு வியாபாரத்தில் இருந்த சுணக்கம் நீங்கும். ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் வருமானம் வரக்கூடும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த கடன் தொகைகள் கைக்கு வந்து சேரும். நண்பர்கள் மற்றும் மூத்த உடன்பிறப்புகளால் ஆதாயம் உண்டாகும். சமுதாயத்தில் அந்தஸ்து உயரும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்: &amp;nbsp;&lt;/strong&gt;Mangal Gochar 2026: செவ்வாய் பெயர்ச்சி 2026.! இந்த 5 ராசிகளுக்கு ஆபத்து.! பணம், பதவிக்கு சிக்கல்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உங்கள் ராசி நாதனான சுக்கிரன் 10-ம் வீடான கர்ம ஸ்தானத்திற்கு செல்வதால், உத்தியோகம் மற்றும் தொழிலில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வேலை தொடர்பாக வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் உருவாகும்.ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு அதிகம். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். சுயதொழில் செய்பவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்து, தொழில் அடுத்த கட்டத்திற்கு நகரும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்: &amp;nbsp;&lt;/strong&gt;Weekly Horoscope: அடுத்த 7 நாட்கள்.! 3 ராஜயோகத்தால் இந்த 5 ராசிகளுக்கு பண மழை கொட்டப்போகுது.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உங்கள் ராசிக்கு 7-ம் வீடான சப்தம ஸ்தானத்திற்கு சுக்கிரன் வருகிறார். இது உறவுகளுக்கும் கூட்டாண்மைக்கும் மிகச் சிறந்த பலன்களைத் தரும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமைந்து சுபகாரியங்கள் தடையின்றி நடக்கும். திருமணம், வளைகாப்பு, காதுகுத்து, கிரக பிரவேசம் ஆகியவற்றில் ஏற்பட்ட தடைகள் அகலும். கணவன்/மனைவி வழியில் ஆதாயமும், மகிழ்ச்சியும் உண்டாகும். இருவருக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய தொழில் கூட்டாளிகள் அமைவார்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்: &amp;nbsp;&lt;/strong&gt;Baba Vanga Predictions: பாபா வங்காவின் கணிப்பு - ஜூன் 2வது வாரம் இந்த ராசிகளுக்கு ஜாக்பாட்.! அதிர்ஷ்டத்தை அள்ளும் 5 ராசிகள் யார்?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சுக்கிரன் உங்கள் ராசிக்கு 5-ம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சியாவதால், மன மகிழ்ச்சியும் நிம்மதியும் தேடி வரும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியத்திற்காகக் காத்திருந்த தம்பதியினருக்கு நல்ல செய்தி தேடி வரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். மாணவர்கள் படிப்பில் சிறப்பான தேர்ச்சி பெறுவார்கள். கலை, இலக்கியம், வடிவமைப்பு போன்ற துறைகளில் இருப்பவர்களுக்குப் புதிய வாய்ப்புகளும், புகழும் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் வரலாம். ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்வீர்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பொறுப்புத் துறப்பு (Disclaimer)&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் ஜோதிடர்களின் கணிப்புகளை அடிப்படையாகக் கொண்டவை. இந்தத் தகவல்களை வாசகர்களுக்கு கொண்டு சேர்ப்பது மட்டுமே எங்கள் நோக்கம். பயனர்கள் இதை ஒரு தகவலாக மட்டுமே கருத வேண்டும்.&lt;/strong&gt;&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[astrology]]></category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/shukra-gochar-venus-transit-2026-into-cancer-on-june-8-brings-massive-wealth-and-positive-changes-for-5-zodiac-signs-rghc8hu"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Astrology: 100 ஆண்டு அபூர்வ நிகழ்வு: ஜூன் 11 முதல் இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்! தொட்டதெல்லாம் பொன்னாகும்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/astrology-rare-budhan-shukran-peyarchi-2026-lucky-zodiac-signs-c7gqgee</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/astrology-rare-budhan-shukran-peyarchi-2026-lucky-zodiac-signs-c7gqgee</guid>
            <pubDate>Mon, 08 Jun 2026 14:08:04 +0530</pubDate>
            <description><![CDATA[Astrology: ஜோதிடசாஸ்திரத்தின்படி ஜூன் 11 அன்று ஒரு அரிய கிரகப் பெயர்ச்சி நிகழவுள்ளது. இதனால் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை பொழிய போகுது. இவை என்னென்ன ராசிகள்? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktk5traz3f01eas8vkxfzy14,imgname-astrology-1780907598175.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Astrology: ஜோதிடசாஸ்திரத்தின்படி ஜூன் 11 அன்று ஒரு அரிய கிரகப் பெயர்ச்சி நிகழவுள்ளது. இதனால் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை பொழிய போகுது. இவை என்னென்ன ராசிகள்? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இடமாற்றம் மனித வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்த வகையில், வரும் ஜூன் 11 அன்று ஜோதிட உலகமே வியக்கும் வகையிலான ஒரு அரிய கிரகப் பெயர்ச்சி நிகழவுள்ளது. கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்குப் பிறகு, கிரகங்களின் இளவரசனான புதனும், அசுர குருவான சுக்கிரனும் ஒரே நாளில், ஒரே நட்சத்திரத்தில் தங்களின் பயணத்தைத் தொடங்குகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;இந்த அபூர்வ இணைவானது 12 ராசிகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தினாலும், குறிப்பிட்ட 3 ராசியினருக்குப் பொற்காலத்தைத் தரவுள்ளது. அந்த அதிர்ஷ்டக் காற்றை சுவாசிக்கப் போகும் ராசிகள் மற்றும் அவர்களுக்கான எளிய பரிகாரங்கள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரிஷப ராசியினருக்கு இந்த இரட்டை கிரகங்களின் நட்சத்திர மாற்றம் பொன்னான வாய்ப்புகளை அள்ளித் தரப்போகிறது. நீண்ட நாட்களாக தள்ளிப்போன ஆசைகளும், கனவுகளும் இந்த காலகட்டத்தில் நிறைவேறும். உத்தியோகத்தில் எதிர்பாராத பதவி உயர்வும், தொழிலில் நல்ல லாபமும் கிடைக்கும். குடும்பத்தில் நிலவி வந்த மனக்கசப்புகள் நீங்கி, தம்பதியரிடையே ஒற்றுமை பலப்படும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கைகூடும். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பரிகாரம்&lt;/strong&gt;: வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி தேவிக்கு நெய் தீபமேற்றி, மல்லிகைப்பூ சாற்றி வழிபடுவது அதிர்ஷ்டத்தை இரட்டிப்பாக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;புதன் - சுக்கிரன் கூட்டணியால் சிம்ம ராசிக்காரர்களின் வாழ்வில் புதிய அத்தியாயம் தொடங்கவுள்ளது. புதிய தொழில் அல்லது வியாபாரம் தொடங்க நினைப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த காலகட்டம். உங்களின் சாதுரியமான பேச்சாற்றலால் முடங்கிக் கிடந்த காரியங்களைச் செவ்வனே செய்து முடிப்பீர்கள். மன உளைச்சல்கள் நீங்கி, நிம்மதியும் தைரியமும் பிறக்கும். சொத்து சேர்க்கைக்கான முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். துணையின் முழு ஆதரவும் உங்களுக்குப் பக்கபலமாக இருக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பரிகாரம்: &lt;/strong&gt;புதன்கிழமைகளில் விநாயக பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி, வழிபாடுகள் செய்து வர தடைகள் யாவும் விலகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;துலாம் ராசிக்கு இந்த நட்சத்திரப் பெயர்ச்சி திருப்புமுனையாக அமையப் போகிறது. மாணவர்களுக்குக் கல்வியில் நல்ல முன்னேற்றமும், போட்டித் தேர்வுகளில் வெற்றியும் கிடைக்கும். வெளிநாடு அல்லது வெளியூர் சென்று பணிபுரியும் கனவு நனவாகும் வாய்ப்புகள் தேடி வரும். வேலைகளில் இதுவரை இருந்து வந்த முட்டுக் கட்டைகள் மற்றும் எதிர்ப்புகள் சுக்குநூறாக உடையும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்து மகிழ்ச்சி பெருகும். உங்களின் சொல்லிற்குச் சமூகத்தில் தனி மரியாதை கிடைக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பரிகாரம்: &lt;/strong&gt;தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதும், ஏழை எளியோர்க்கு பச்சரிசி அல்லது இனிப்பு பண்டங்களை தானமாக வழங்குவதும் நற்பலன்களைத் தரும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பொறுப்பு துறப்பு: &lt;/strong&gt;இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், மத நூல்கள், நிபுணர்கள் மற்றும் ஜோதிடர்களிடமிருந்து பெறப்பட்டவை. இந்தத் தகவல்களை உங்களிடம் கொண்டு சேர்ப்பது மட்டுமே எங்கள் நோக்கம். வாசகர்கள் இந்தத் தகவல்களை ஒரு வழிகாட்டுதலாக மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் வரும் கருத்துகளுக்கு ஏசியாநெட் நிறுவனம் பொறுப்பேற்காது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[astrology]]></category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/astrology-rare-budhan-shukran-peyarchi-2026-lucky-zodiac-signs-c7gqgee"/>
        </item>
        <item>
            <title><![CDATA[கிச்சன் பிசுபிசுப்புக்களை ஈஸியாக சுத்தம் செய்ய 6 சூப்பர் வழிகள்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/how-to-remove-kitchen-oil-sticky-stains-0c8towa</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/how-to-remove-kitchen-oil-sticky-stains-0c8towa</guid>
            <pubDate>Mon, 08 Jun 2026 14:04:27 +0530</pubDate>
            <description><![CDATA[கிச்சனில் சமைக்கும் போது ஏற்படும் எண்ணெய் பிசுபிசுப்பு மற்றும் கறை படிந்த சுவர்கள், கேபினெட்டுகளை சுத்தம் செய்வது ஒரு பெரிய போராட்டமே. இதோ, உங்கள் கிச்சனை நிமிடங்களில் பளிச்சென்று மாற்ற 6 அட்டகாசமான மற்றும் முற்றிலும் புதிய டிப்ஸ்!]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktk5nn4pt1aq75px0adw6vph,imgname-remove-kitchen-oil-sticky-stains--1--1780907431062.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கிச்சனில் சமைக்கும் போது ஏற்படும் எண்ணெய் பிசுபிசுப்பு மற்றும் கறை படிந்த சுவர்கள், கேபினெட்டுகளை சுத்தம் செய்வது ஒரு பெரிய போராட்டமே. இதோ, உங்கள் கிச்சனை நிமிடங்களில் பளிச்சென்று மாற்ற 6 அட்டகாசமான மற்றும் முற்றிலும் புதிய டிப்ஸ்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சமையலுக்குப் பயன்படுத்திய பின் தூக்கி எறியும் உருளைக்கிழங்கு தோலில் வியக்கத்தக்க சுத்தம் செய்யும் குணம் உள்ளது. உருளைக்கிழங்கு தோலின் உள்பகுதியை (ஈரப்பதம் உள்ள பகுதி) பிசுபிசுப்பான டைல்ஸ் மற்றும் பர்னிச்சர்கள் மீது நன்றாகத் தேய்க்கவும். இதில் உள்ள இயற்கையான மாவுச்சத்து (Starch) கடினமான எண்ணெய் பசையை அப்படியே ஈர்த்துவிடும். பிறகு ஒரு காய்ந்த துணியால் துடைத்தால் கிச்சன் பளிச்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சுவர்களில் அல்லது சிம்னிக்கு அருகில் கொடூரமாக ஒட்டியிருக்கும் எண்ணெய் பிசுபிசுப்பை நீக்க சாக்பீஸ் உதவும். வெள்ளை நிற சாக்பீஸை நன்றாகப் பொடி செய்து, பிசுபிசுப்பு உள்ள இடங்களில் தூவி விடுங்கள். அல்லது சாக்பீஸை அப்படியே அந்த இடத்தில் தேய்த்து 10 நிமிடங்கள் விடவும். சாக்பீஸ் தூள் அனைத்து எண்ணெய் பசையையும் உறிஞ்சிக் கொள்ளும். அதன் பிறகு ஒரு பிரஷ்ஷால் தட்டிவிட்டால் கறை காணாமல் போய்விடும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;டீ குடித்த பிறகு மிஞ்சும் டீத்தூளை மீண்டும் கொதிக்க வைத்து, அந்தத் தண்ணீரை ஆறவிடவும். இந்த குளிர்ந்த டீத்தண்ணீரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, கிச்சன் கண்ணாடி மற்றும் மர கேபினெட்டுகளில் ஸ்ப்ரே செய்யவும். டீயில் உள்ள 'டேன்னின்' (Tannin) என்ற அமிலம், மர சாமான்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுத்தாமல், அதன் மேல் உள்ள பிசுபிசுப்பை உடைத்து, புதியது போன்ற பளபளப்பைத் தரும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பழைய எண்ணெய் கறைகளை நீக்க கெமிக்கல் லிக்விட்களுக்குப் பதிலாக இதை ட்ரை பண்ணுங்க. கடலை மாவுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் கலந்து கெட்டியான பேஸ்ட் ஆக்குங்கள். இதை பிசுபிசுப்பான கேஸ் ஸ்டவ் அல்லது கவுண்டர்டாப்பில் தடவி 5 நிமிடம் ஊற வைக்கவும். கடலை மாவு எண்ணெய்யை உறிஞ்சும், எலுமிச்சை கறையை நீக்கும். லேசாகத் தேய்த்துக் கழுவினால் கிச்சன் நறுமணத்துடன் மின்னும்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;டைல்ஸ் இடுக்குகளில் கருப்பாக ஒட்டியிருக்கும் பிசுபிசுப்பை தேய்க்காமல் எடுக்க எளிய வழி. ஒரு சிறிய துணியை சுடுதண்ணீரில் நனைத்து பிழிந்து கொள்ளவும். அதன் மேல் பேக்கிங் சோடாவைத் தூவி, பிசுபிசுப்பான டைல்ஸ் மீது அப்படியே 'ஒத்தடம்' கொடுப்பது போல் 2 நிமிடங்கள் அழுத்திப் பிடிக்கவும். வெப்பமும் சோடா உப்பும் சேர்ந்து அந்தப் பிசுபிசுப்பை இளகச் செய்துவிடும். அதன் பின் அதே துணியால் எளிதாகத் துடைத்துவிடலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சுத்தம் செய்த பிறகு மீண்டும் பிசுபிசுப்பு அண்டாமல் இருக்க ஒரு சூப்பர் ஐடியா. தேங்காய் எண்ணெயில் கொஞ்சம் கற்பூரத்தை நொறுக்கிப் போட்டு கரைய விடுங்கள். இந்த எண்ணெயை ஒரு துணியில் நனைத்து, சுத்தமாக்கப்பட்ட கிச்சன் சுவர்களில் லேசாகத் தடவி விடுங்கள். இது ஒரு பாதுகாப்பு வளையத்தை (Shield) உருவாக்கி, அடுத்த முறை சமைக்கும் போது எண்ணெய் சுவர்களில் ஒட்டாமல் தடுக்கும். மேலும் கிச்சன் எப்போதும் தெய்வீக வாசனையுடன் இருக்கும்; பூச்சிகளும் வராது!&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[life-style]]></category>
            <dc:creator>Priya Velan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/how-to-remove-kitchen-oil-sticky-stains-0c8towa"/>
        </item>
        <item>
            <title><![CDATA[இனி புரோக்கர் இல்லை, க்யூ இல்லை! வீட்டில் இருந்தே செய்யலாம் பத்திரப்பதிவு.! எப்படி தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/business/how-to-register-your-property-online-from-home-videoshow-gwi55vi</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/business/how-to-register-your-property-online-from-home-videoshow-gwi55vi</guid>
            <pubDate>Mon, 08 Jun 2026 14:00:31 +0530</pubDate>
            <description><![CDATA[]]></description>
            <media:content url="https://www.youtube.com/embed/O-lfApp_zbU" medium="video" height="350" width="560"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையிலான TVK அரசு, STAR 3.0 என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சொத்துப் பதிவு, திருமணப் பதிவு உள்ளிட்ட 18 முக்கிய சேவைகளை முழுமையாக ஆன்லைனில், வீட்டில் இருந்தபடியே மேற்கொள்ளலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[business]]></category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/business/how-to-register-your-property-online-from-home-videoshow-gwi55vi"/>
        </item>
        <item>
            <title><![CDATA[CM விஜய்யுடன் செஸ் விளையாடிய பிரக்ஞானந்தா : மாஸ் கிளப்பிய தளபதி!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/praggnanandhaa-plays-chess-with-thalapathy-vijay-videoshow-y9u6iy4</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/praggnanandhaa-plays-chess-with-thalapathy-vijay-videoshow-y9u6iy4</guid>
            <pubDate>Mon, 08 Jun 2026 14:00:28 +0530</pubDate>
            <description><![CDATA[]]></description>
            <media:content url="https://www.youtube.com/embed/ifEjJm3S7n8" medium="video" height="350" width="560"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சந்திப்பின் சுவாரசியமாக, முதல்வர் விஜய் திடீரென அதிகாரிகளை செஸ் போர்டு எடுத்து வரச் சொல்லி பிரக்ஞானந்தாவுடன் ஒரு நட்பு ரீதியிலான செஸ் ஆட்டத்தை விளையாடினார். முதல்வர் விஜயின் இந்த செஸ் விளையாடும் திறமையை தான் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் மிகவும் சிறப்பாக விளையாடினார் என்றும் பிரக்ஞானந்தா வியப்புடன் பகிர்ந்துள்ளார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[tamilnadu]]></category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/praggnanandhaa-plays-chess-with-thalapathy-vijay-videoshow-y9u6iy4"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Suryakumar Yadav: மும்பை இந்தியன்ஸை விட்டு வௌியேறும் சூர்யகுமார் யாதவ்..? இன்ஸ்டாவில் அதிரடி!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/suryakumar-yadav-sparks-exit-rumors-after-unfollowing-mumbai-indians-on-instagram-glemhui</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/suryakumar-yadav-sparks-exit-rumors-after-unfollowing-mumbai-indians-on-instagram-glemhui</guid>
            <pubDate>Mon, 08 Jun 2026 13:57:09 +0530</pubDate>
            <description><![CDATA[மும்பை இந்தியன்ஸ் அணியின் துணை கேப்டன் சூர்யகுமார் யாதவ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து மும்பை அணியை அன்ஃபாலோ செய்து, பழைய போஸ்ட்களை நீக்கியுள்ளார். இதனால் அவர் அணியை விட்டு விலகப் போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. என்னதான் நடக்கிறது?]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kpqfd90v88445jyt5zzw84r5,imgname-mumbai-indians-1776756892699.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;மும்பை இந்தியன்ஸ் அணியின் துணை கேப்டன் சூர்யகுமார் யாதவ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து மும்பை அணியை அன்ஃபாலோ செய்து, பழைய போஸ்ட்களை நீக்கியுள்ளார். இதனால் அவர் அணியை விட்டு விலகப் போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. என்னதான் நடக்கிறது?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்திய அணியின் நட்சத்திர மட்டையாளரான சூர்யகுமார் யாதவ் சமீப காலமாக சிறப்பாக விளையாடவில்லை. அவர் 2026 டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணியை வழிநடத்திச் சென்றபோதிலும், அதைத் தொடர்ந்து நடந்த 2026 ஐபிஎல் தொடரில் அவரது மோசமான ஆட்டம், அவரது கிரிக்கெட் வாழ்க்கையைப் பாதித்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;சமீபத்தில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணங்களுக்கான இந்திய அணியைத் தேர்வு செய்த பிசிசிஐ, சூர்யாவை அணியிலிருந்து நீக்கியது மட்டுமல்லாமல், அவரை டி20 கேப்டன் பதவியிலிருந்தும் நீக்கியது. அவருக்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்திய அணியில் தனது இடத்தை இழந்ததால் சூர்யாவின் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சூர்யகுமார் யாதவ் மும்பை இந்தியன்ஸ் அணியின் துணை கேப்டன் என அறியப்படுகிறார். இருப்பினும், திங்களன்று சூர்யகுமார் யாதவ் இன்ஸ்டாகிராமில் செய்த சில மாற்றங்கள் கிரிக்கெட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சூர்யகுமார் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணியைப் பின்தொடர்வதை நிறுத்தியுள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;மேலும், அவர் மும்பை ஜெர்சியுடன் இருந்த தனது முந்தைய புகைப்படங்கள் மற்றும் அணி தொடர்பான பதிவுகள் அனைத்தையும் நீக்கிவிட்டார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பயோவிலிருந்து 'மும்பை இந்தியன்ஸ்' என்ற பெயரையும் நீக்கினார். இதனால், சூர்யாவுக்கும் மும்பை அணிக்கும் இடையே ஏதோ பிளவு ஏற்பட்டுள்ளதாகவும், அவர் அடுத்த சீசனுக்குள் அணியை விட்டு வெளியேறிவிடுவார் என்றும் யூகங்கள் எழுந்தன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஐபிஎல் 2026 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சூர்யகுமார் யாதவ் 13 போட்டிகளில் விளையாடி 270 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரது சராசரி வெறும் 20.77 ஆக இருந்தது. இந்த சீசனில் மும்பை அணி படுதோல்வி அடைந்தது. விளையாடிய 14 போட்டிகளில், அவர்கள் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 10 போட்டிகளில் தோல்வியடைந்தனர். புள்ளி அட்டவணையில் 9வது இடத்தைப் பிடித்து, தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.&lt;/p&gt;&lt;p&gt;ஹர்திக் பாண்டியா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தபோது, ​​சூர்யா மூன்று போட்டிகளுக்கு அணிக்குத் தலைமை தாங்கினார். இவ்வளவு முக்கிய வீரர் ஒருவர் தற்போது அணியில் இருந்து விலகியிருப்பது மும்பை ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சூர்யகுமார் யாதவ் மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து விலகினால், அவர் தனது பழைய அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியில் சேரக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கேகேஆர் அணி தற்போது ஒரு சிறந்த இந்திய பேட்ஸ்மேனையும் கேப்டனையும் தேடி வருகிறது. சூர்யகுமார் இதற்கு முன்பு கேகேஆர் அணிக்காக 60 போட்டிகளில் விளையாடி 684 ரன்கள் எடுத்துள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;மறுபுறம், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியும் சூர்யா போன்ற அனுபவமிக்க வீரரை ஒப்பந்தம் செய்ய ஆர்வம் காட்ட வாய்ப்புள்ளது. 2026 ஏலத்தில் மும்பை அணி அவரை ரூ. 16.25 கோடிக்கு தக்கவைத்துக் கொண்டது, ஆனால் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டால், அணி மாற்றம் உறுதியாகத் தெரிகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முன்னதாக, ஹர்திக் பாண்டியா ஐபிஎல் 2026 சீசனின் நடுவில் மும்பை இந்தியன்ஸை அன்ஃபாலோ செய்துவிட்டு, இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் அவர்களைப் பின்தொடர்ந்தார். ஆனால், சூர்யகுமார் யாதவும் அந்தப் பதிவுகளை நீக்கியதால், இது வெறும் தவறு மட்டுமல்ல என்று நெட்டிசன்கள் நம்புகிறார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;சூர்யா தற்போது மும்பை டி20 லீக்கில் டிரம்ப் நைட்ஸ் அணியை வழிநடத்தி வருகிறார். அங்கும், தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோல்வியடைந்த அவரது அணி, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. மொத்தத்தில், சூர்யா தற்போது ஒரு கடினமான காலகட்டத்தை கடந்து கொண்டிருக்கிறார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[sports-cricket]]></category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/suryakumar-yadav-sparks-exit-rumors-after-unfollowing-mumbai-indians-on-instagram-glemhui"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Amma Unavagam: அம்மா உணவகத்தின் தினசரி வருமானம் எவ்ளோ தெரியுமா?! ஆகும் செலவை சொன்னா நம்பிதான் ஆகனும்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/do-you-know-amma-unavagam-daily-income-the-operating-cost-will-leave-you-surprised-pzy5mgk</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/do-you-know-amma-unavagam-daily-income-the-operating-cost-will-leave-you-surprised-pzy5mgk</guid>
            <pubDate>Mon, 08 Jun 2026 13:32:32 +0530</pubDate>
            <description><![CDATA[ஏழை, எளிய மக்களின் பசிப்பிணியைப் போக்கத் தொடங்கப்பட்ட அம்மா உணவகம், மலிவு விலையில் தரமான உணவை வழங்கும் உன்னதத் திட்டமாகும். லாப நோக்கமின்றி, மனிதநேய அடிப்படையில் கோடிக்கணக்கான மக்களின் அன்றாட உணவுத் தேவையை இது பூர்த்தி செய்கிறது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktk334j06dzqnhbpzmgb7s92,imgname-chatgpt-image-jun-8--2026--01-07-36-pm--1--1780904727104.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஏழை, எளிய மக்களின் பசிப்பிணியைப் போக்கத் தொடங்கப்பட்ட அம்மா உணவகம், மலிவு விலையில் தரமான உணவை வழங்கும் உன்னதத் திட்டமாகும். லாப நோக்கமின்றி, மனிதநேய அடிப்படையில் கோடிக்கணக்கான மக்களின் அன்றாட உணவுத் தேவையை இது பூர்த்தி செய்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;அம்மா உணவகத்தின் தினசரி வருமானம் மற்றும் செலவுகள்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களால் கடந்த 2013-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட 'அம்மா உணவகம்', தமிழகத்தில் குறைந்த விலையில் தரமான உணவை வழங்கும் மக்கள் நலத் திட்டங்களில் மிக முக்கியமானதாகத் திகழ்கிறது. இந்தத் திட்டம் தினக்கூலி தொழிலாளர்கள், முதியவர்கள், ஆதரவற்றோர் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்து வருகிறது. இன்று வரை பல லட்சம் மக்கள் அம்மா உணவகங்களை நம்பி தங்களின் அன்றாட உணவுத் தேவையைப் பூர்த்தி செய்து வருகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;இங்கு ஒரு இட்லி வெறும் ரூ.1, சாம்பார் சாதம் ரூ.5, எலுமிச்சை சாதம் ரூ.5, தயிர் சாதம் ரூ.3, சப்பாத்தி இரண்டு ரூ.3 என்ற விலைக்கு வழங்கப்படுகிறது. இந்த விலையைப் பார்த்தாலே உணவகத்திற்கு நல்ல வருமானம் கிடைக்கிறதா என்ற கேள்வி பலருக்கும் எழுகிறது. இவ்வளவு மலிவான விலையில் உணவளிக்கும் இந்த உணவகங்களின் தினசரி வருமானம் மற்றும் அதன் பின்னணியில் இருக்கும் செலவுகள் ஆச்சரியமளிக்கக் கூடியவை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உண்மையில் அம்மா உணவகங்கள் லாப நோக்கத்திற்காகச் செயல்படுவதில்லை. சமூக நலத் திட்டமாகவே இவை இயக்கப்படுகின்றன. ஒரு நாளில் ஒரு அம்மா உணவகத்தில் ஆயிரக்கணக்கானோர் உணவருந்தினாலும், வசூலாகும் தொகை மிகக் குறைவாகவே இருக்கும். பொதுவாக, சென்னையில் உள்ள ஒரு சராசரி அம்மா உணவகத்திற்கு தினசரி வருமனமாக ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை கிடைக்கிறது. சில பெரிய மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள உணவகங்களில் இந்த வருமானம் ரூ.8,000 முதல் ரூ.10,000 வரை கூட உயரலாம். உதாரணமாக, 1,000 பேர் சராசரியாக ரூ.10 மதிப்புள்ள உணவை வாங்கினாலும், தினசரி வருமானம் சுமார் ரூ.10,000 மட்டுமே இருக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வருமானம் ஆயிரங்களில் இருக்கும் போது, இதற்கான தினசரி செலவுகள் பல மடங்கு அதிகமாகும். அரிசி, பருப்பு, காய்கறிகள், மசாலா பொருட்கள், எரிவாயு (Gas), மின்சாரம், குடிநீர், பராமரிப்பு செலவுகள் மற்றும் பணியாளர்களின் ஊதியம் ஆகியவை சேர்த்து தினசரி செலவு கணிசமான அளவில் உயர்கிறது. ஒவ்வொரு உணவகத்திலும் மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த 10 முதல் 12 பெண்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு வழங்கப்படும் தினசரி ஊதியமே, அந்த உணவகத்தின் மொத்த வருமானத்தை விடப் பல மடங்கு அதிகம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கணக்குப் போட்டுப் பார்த்தால், ஒரு ரூபாய் இட்லியைத் தயாரிக்க அரசுக்குத் தோராயமாக ₹5 முதல் ₹7 வரை செலவாகிறது. இதனால் அம்மா உணவகங்கள் நேரடி லாபம் ஈட்டுவதில்லை. பல ஆண்டுகளாக இத்திட்டம் அரசின் மானிய உதவியுடன் செயல்பட்டு வருகிறது. சில மதிப்பீடுகளின்படி, அம்மா உணவகங்கள் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய் மானியத்துடன் இயங்குகின்றன. இதன் காரணமாக, சென்னை மாநகராட்சி மற்றும் பிற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆண்டுதோறும் நிதிப் பற்றாக்குறை ஏற்படுகிறது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இருப்பினும், இந்தத் திட்டத்தின் வெற்றி வருமானத்தில் இல்லை; மக்களின் பசியைப் போக்குவதில்தான் உள்ளது. சமீபத்திய தகவல்களின்படி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் அம்மா உணவகங்களில் உணவருந்துவோரின் எண்ணிக்கை 1.5 லட்சத்தைக் கடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது மக்கள் மத்தியில் இந்தத் திட்டத்திற்கு இருக்கும் பிரம்மாண்ட வரவேற்பைக் காட்டுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வியாபார நோக்கில் பார்த்தால் அம்மா உணவகம் என்பது ஒரு நஷ்டமடையும் நிறுவனம். ஆனால், அரசாங்கத்தின் நோக்கம் லாபம் ஈட்டுவது அல்ல. அதனால் அம்மா உணவகத்தின் தினசரி வருமானத்தை மட்டும் பார்த்து அதன் செயல்பாட்டை மதிப்பிட முடியாது. குறைந்த விலையில் சத்தான உணவை வழங்கி, ஏழை மற்றும் எளிய மக்களின் பசியைப் போக்கும் சமூகப் பொறுப்பை நிறைவேற்றுவதுதான் அதன் உண்மையான சாதனை. வருமானத்தை விட மனிதநேயமே அம்மா உணவகத்தின் மிகப்பெரிய பலமாக உள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[business]]></category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/do-you-know-amma-unavagam-daily-income-the-operating-cost-will-leave-you-surprised-pzy5mgk"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Samantha : ஹேட்டர்ஸ்-க்கு சமந்தா கொடுத்த 'ஸ்வீட்' பதிலடி... சாய் பல்லவி பற்றி சொன்ன டாப் சீக்ரெட்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/samantha-ruth-prabhu-on-haters-and-how-she-replace-sai-pallavi-in-maa-inti-bangaaram-1uq2h1l</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/samantha-ruth-prabhu-on-haters-and-how-she-replace-sai-pallavi-in-maa-inti-bangaaram-1uq2h1l</guid>
            <pubDate>Mon, 08 Jun 2026 13:22:56 +0530</pubDate>
            <description><![CDATA[Samantha replace Sai Pallavi : நடிகை சமந்தா ரூத் பிரபு, தனது தயாரிப்பில் உருவாகும் 'மா இன்டி பங்காரம்' படத்திற்கு முதலில் நடிகை சாய் பல்லவி தான் தேர்வாகியிருந்தார் என்ற சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01km7j5rwj9mz81tms3dqev2a9,imgname-samantha-ruth-prabhu-1774075437970.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Samantha replace Sai Pallavi : நடிகை சமந்தா ரூத் பிரபு, தனது தயாரிப்பில் உருவாகும் 'மா இன்டி பங்காரம்' படத்திற்கு முதலில் நடிகை சாய் பல்லவி தான் தேர்வாகியிருந்தார் என்ற சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தென்னிந்திய சினிமாவின் 'குயின்' சமந்தா ரூத் பிரபு, அடுத்ததாக 'மா இன்டி பங்காரம்' படம் மூலம் மீண்டும் திரையில் கலக்க தயாராகி வருகிறார். சமீபகாலமாக சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, ரசிகர்களுடன் நடத்திய கேள்வி-பதில் செஷனில் பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, தன்னை வெறுப்பவர்கள் (ஹேட்டர்ஸ்) பற்றி அவர் கொடுத்த ஒரு பதில் இப்போது சோஷியல் மீடியாவில் செம வைரலாகி வருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ரசிகர்களின் கேள்விகளுக்கு சமந்தா பதிலளித்துக் கொண்டிருந்தார். அப்போது ரசிகர் ஒருவர், &quot;உங்களை வெறுப்பவர்களை ஒரே வார்த்தையில் எப்படி விவரிப்பீர்கள்?&quot; என்று கேட்டிருந்தார். இதற்கு சமந்தா கோபமாகவோ அல்லது சீரியஸாகவோ பதில் சொல்லாமல், ஒரு சின்ன புன்னகையுடன் ரொம்பவே ஜாலியாக பதிலளித்தார். &quot;ஹேட்டர்ஸ்-ஆ? யாருடைய ஹேட்டர்ஸ்? எனக்கெல்லாம் ஹேட்டர்ஸ் இருக்காங்களா என்ன?&quot; என்று ஜாலியாக அவர் திருப்பிக் கேட்டார். எந்த ஒரு நெகட்டிவிட்டியையும் கண்டுகொள்ளாமல் சமந்தா கொடுத்த இந்த பாசிட்டிவான பதில், ரசிகர்களின் மனதை வென்றுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதே உரையாடலில் சமந்தா ஒரு பெரிய சீக்ரெட்டையும் உடைத்துள்ளார். 'மா இன்டி பங்காரம்' படத்தின் கதாநாயகி தேர்விற்கு படக்குழு முதலில் நடிகை சாய் பல்லவியை தான் அணுகியதாம். ஆனால், சாய் பல்லவியின் டேட்ஸ் பிரச்சினை காரணமாக, அந்த வாய்ப்பு கடைசியாக சமந்தாவுக்கு வந்துள்ளது. இதுபற்றி பேசிய சமந்தா, &quot;நான் இந்தப் படத்தை தேர்ந்தெடுக்கவில்லை, இந்தப் படம் தான் என்னைத் தேர்ந்தெடுத்தது&quot; என்று எமோஷனலாகக் கூறினார். மேலும், தனது கேரக்டருக்கு ஏற்றவாறு படத்தின் கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். சாய் பல்லவியைப் பாராட்டிய சமந்தா, எதிர்காலத்தில் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் விருப்பம் தெரிவித்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தப் படத்தில் சமந்தா ஒரு சாதாரண குடும்பத் தலைவியாக வருவது மட்டுமல்லாமல், அநீதிக்கு எதிராகப் போராடும் ஒரு வலிமையான ஃபைட்டராகவும் மிரட்டப் போகிறார். இது ஒரு காமெடி கலந்த ஆக்&zwnj;ஷன் டிராமாவாக இருக்கும் என்றும், சமந்தாவின் கேரக்டருக்கு பல பரிமாணங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;முன்னதாக சமந்தா நடிப்பில் சூப்பர் ஹிட்டான 'ஓ பேபி' படத்தை இயக்கிய நந்தினி ரெட்டி தான் இந்தப் படத்தையும் இயக்குகிறார். ஒரு ஸ்பெஷல் விஷயம் என்னவென்றால், கன்னடாவின் பிரபல நடிகர் திகாந்த் மன்சாலே இந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் குல்ஷன் தேவையா, கௌதமி தடிமல்லா, ஸ்ரீமுகி மற்றும் மஞ்சுஷா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சமந்தாவே இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளராகவும் இருக்கிறார். ராஜ் நிடிமோரு மற்றும் ஹிமான்க் ரெட்டி ஆகியோருடன் இணைந்து தனது சொந்த பேனரில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இந்தப் படம், 2026 ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், சமந்தாவின் இந்த 'கம் பேக்' படமும், அவரது சுவாரஸ்யமான பதில்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[cinema]]></category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/samantha-ruth-prabhu-on-haters-and-how-she-replace-sai-pallavi-in-maa-inti-bangaaram-1uq2h1l"/>
        </item>
        <item>
            <title><![CDATA["இவங்க தான் பெரியாரிஸ்ட்டா?" DMK-வை கிழித்து தொங்கவிட்ட TVK அமைச்சர் ரமேஷ் குமார்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/tvk-minister-questions-dmk-s-periyarist-credentials-videoshow-iag46n1</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/tvk-minister-questions-dmk-s-periyarist-credentials-videoshow-iag46n1</guid>
            <pubDate>Mon, 08 Jun 2026 13:02:57 +0530</pubDate>
            <description><![CDATA[]]></description>
            <media:content url="https://geo.dailymotion.com/player/x1tbu.html?video=xadxpxa" medium="video" height="768" width="1024"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;திமுக தலைவர்களின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், &quot;சாதியை சொல்லி கூப்பிடுகிற இவர்கள் தான் பெரியாரிஸ்ட்டுகளா?&quot; என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி திமுக-வை கடுமையாக சாடியுள்ளார் அமைச்சர் ரமேஷ். மேலும் வரவிருக்கும் தேர்தலில் அனைத்து இடங்களிலும் தவெக (TVK) தான் வெற்றி பெறும் என்றும், மக்கள் தங்களுக்குத்தான் அதிகாரத்தைக் கொடுத்துள்ளனர் என்றும் அவர் ஆவேசமாகப் பேசியுள்ளார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[tamilnadu]]></category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/tvk-minister-questions-dmk-s-periyarist-credentials-videoshow-iag46n1"/>
        </item>
        <item>
            <title><![CDATA[INDIA Alliance: உடைகிறதா இண்டியா கூட்டணி? ராகுல் காந்தியை விமர்சித்து டெல்லி முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/politics/rahul-gandhi-targeted-by-posters-with-allies-quotes-before-india-alliance-meeting-ve9h4el</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/politics/rahul-gandhi-targeted-by-posters-with-allies-quotes-before-india-alliance-meeting-ve9h4el</guid>
            <pubDate>Mon, 08 Jun 2026 12:46:38 +0530</pubDate>
            <description><![CDATA[INDIA Alliance Meeting: 'இண்டியா' கூட்டணிக் கூட்டம் நடப்பதற்கு முன்பாக, புது டெல்லியில் ராகுல் காந்திக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதில் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பழைய விமர்சனங்களே இடம்பெற்றுள்ளது, பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktk17czh4tkxpsjx9c0108e8,imgname-india-alliance-meeting-rahul-gandhi-posters-1780902769649.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;INDIA Alliance Meeting: 'இண்டியா' கூட்டணிக் கூட்டம் நடப்பதற்கு முன்பாக, புது டெல்லியில் ராகுல் காந்திக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதில் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பழைய விமர்சனங்களே இடம்பெற்றுள்ளது, பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்று இண்டியா கூட்டணியின் கூட்டம் டெல்லியில் நடைபெற்று வரும் நிலையில், ராகுல் காந்திக்கு எதிராக டெல்லி முழுவதும் போஸ்டர்கள் ஓட்டப்பட்டுள்ளன. இதனால் இண்டியா கூட்டணி உடைகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;புது டெல்லியில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களில், என்சிபி (எஸ்சிபி) தலைவர் சரத் பவார், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, திமுக தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸுக்கு எதிராக முன்பு தெரிவித்த கருத்துகள் இடம்பெற்றுள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த போஸ்டர்களில் சரத் பவார், மம்தா பானர்ஜி, உதயநிதி ஸ்டாலின், அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் பற்றி முன்பு கூறிய காட்டமான விமர்சனங்கள் மீண்டும் விமர்சிக்கக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;'இண்டியா' கூட்டணியில் விரிசல்கள் தெளிவாகத் தெரியும் நேரத்தில் இந்த போஸ்டர் சர்ச்சை வெடித்துள்ளது. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்துடன் (TVK) காங்கிரஸ் கைகோர்த்ததால், திமுக இந்த கூட்டத்தில் பங்கேற்காது என அறிவித்துள்ளது. இது திமுக-காங்கிரஸ் உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;திமுக தலைவர் டிகேஎஸ் இளங்கோவன், காங்கிரஸ் ஒரு &quot;நம்பிக்கையற்ற கட்சி&quot; என்று கடுமையாக விமர்சித்துள்ளார். காங்கிரஸால்தான் மற்ற கட்சிகளும் 'இண்டியா' கூட்டணியை விட்டு வெளியேறப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ், இந்தக் கூட்டத்தில் 23 அரசியல் கட்சிகள் பங்கேற்கும் என்று தெரிவித்துள்ளார். தேசிய தலைநகரில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் இந்தக் கூட்டம் நடைபெறும். எதிர்க்கட்சிகள் &quot;ஒற்றுமையாக&quot; இருப்பதாக அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.&lt;img&gt;மம்தா பானர்ஜி இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஒரு நாள் முன்னதாகவே கொல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு வந்துவிட்டார். சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே காணொளி வாயிலாக கூட்டத்தில் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;img&gt;டெல்லி சாலைகளில் காங்கிரஸுக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களை யார் தயாரித்து ஒட்டினார்கள் என்பது பற்றிய எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இது அரசியல் வட்டாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.]]></content:encoded>
            <category><![CDATA[politics]]></category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/politics/rahul-gandhi-targeted-by-posters-with-allies-quotes-before-india-alliance-meeting-ve9h4el"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Sabarimalai: சபரிமலை ஐயப்பா சேவா சமாஜத்திற்கு தலைவரான தமிழர்.! யார் இந்த கராத்தே முருகன் தெரியுமா?!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/india/sabarimala-ayyappa-seva-samajam-gets-a-tamilian-president-who-is-karate-murugan-soo67qh</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/india/sabarimala-ayyappa-seva-samajam-gets-a-tamilian-president-who-is-karate-murugan-soo67qh</guid>
            <pubDate>Mon, 08 Jun 2026 12:49:00 +0530</pubDate>
            <description><![CDATA[சபரிமலை அய்யப்பா சேவா சமாஜத்தின் புதிய தேசியத் தலைவராகத் தமிழர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அகில இந்திய அளவில் செயல்படும் இந்த அமைப்பின் உயரிய பதவிக்குத் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் முதன்முறையாக நியமிக்கப்பட்டுள்ளார்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kanrsvhbb1g6aseb4x49e7rp,imgname-fotojet---2025-11-22t180143.017-1763814731306.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சபரிமலை அய்யப்பா சேவா சமாஜத்தின் புதிய தேசியத் தலைவராகத் தமிழர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அகில இந்திய அளவில் செயல்படும் இந்த அமைப்பின் உயரிய பதவிக்குத் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் முதன்முறையாக நியமிக்கப்பட்டுள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் அய்யப்பனின் புகழையும், இந்து சமய அறப்பணிகளையும் பரப்பி வரும் மிக முக்கிய அமைப்பாக சபரிமலை அய்யப்பா சேவா சமாஜம் (Sabarimala Ayyappa Seva Samajam - SASS) திகழ்கிறது. ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் (RSS) முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஆன்மிகப் பெரியோர்களை உள்ளடக்கிய இந்த அகில இந்திய அமைப்பின் புதிய தேசியத் தலைவராகத் தமிழரான &lsquo;கராத்தே முருகன்&rsquo; ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;அகில இந்திய அளவில் செயல்படும் இந்த அமைப்பின் உயரிய பதவிக்கு இதுவரை பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆன்மிகப் பிரமுகர்கள் தலைமை தாங்கி வந்த நிலையில், தற்போது முதன்முறையாக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் விஷயமாகப் பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;ul&gt; &lt;li&gt;பூர்வீகம்: கராத்தே முருகனின் சொந்த ஊர் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டம் ஆகும்.&lt;/li&gt; &lt;li&gt;தற்போதைய இருப்பிடம்: தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும், இவர் தற்போது தொழில் மற்றும் பணிகள் நிமித்தமாக மகாராஷ்டிர மாநிலத்தில் வசித்து வருகிறார்.&lt;/li&gt; &lt;li&gt;அடையாளம்: தற்காப்புக் கலையான கராத்தேயில் உள்ள ஈடுபாடு மற்றும் திறமை காரணமாகவே இவர் &lsquo;கராத்தே முருகன்&rsquo; என்று ஆன்மிக மற்றும் சமூக வட்டாரங்களில் பரவலாக அழைக்கப்படுகிறார்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;img&gt;&lt;p&gt;கடந்த ஓராண்டாக சபரிமலை அய்யப்பா சேவா சமாஜத்தின் செயல்தலைவராக (Working President) முருகன் தீவிரமாகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், அமைப்பின் முன்னாள் தேசியத் தலைவராக இருந்த எஸ்.ஜே.ஆர். குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.&lt;/p&gt;&lt;p&gt;இதையடுத்து, புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் சிறப்புச் செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டது. இக்கூட்டத்தில், அமைப்பின் அறங்காவலரும், அன்னதானக் குழுவின் தலைவருமான சேகர், புதிய தேசியத் தலைவர் பதவிக்கு கராத்தே முருகனின் பெயரைப் பரிந்துரைத்தார். இந்தத் தீர்மானத்தை செயற்குழுவில் இருந்த அனைத்து மாநில நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏகமனதாக ஏற்றுக்கொண்டதை அடுத்து, அவர் தலைவராக முறைப்படி அறிவிக்கப்பட்டார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கராத்தே முருகன் நீண்ட பல ஆண்டுகளாக ஆன்மிகம், சமுதாயப் பணி மற்றும் அரசியல் தளங்களில் தீவிரமாக இயங்கி வருபவர் ஆவார்.&lt;/p&gt;&lt;p&gt;மண்டலப் பணிகள்: மகாராஷ்டிராவில் வசித்து வந்தாலும், மேற்கு மற்றும் தென்னிந்திய மாநிலங்களில் அய்யப்ப சேவா சமாஜத்தின் கிளைகளை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றினார்.&lt;/p&gt;&lt;p&gt;அன்னதானம் மற்றும் தொண்டு: சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்களுக்குத் தேவையான தங்குமிடம், மருத்துவ உதவி மற்றும் அன்னதானப் பணிகளை ஒருங்கிணைப்பதில் தொடர்ந்து முன்னின்று உழைத்துள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;செயல்தலைவர் பதவி: கடந்த ஒரு வருடம் செயல்தலைவராக இருந்து, நிர்வாகப் ரீதியாகப் பல்வேறு சீர்திருத்தங்களையும், வெளிநாடுகளில் அமைப்பின் விரிவாக்கப் பணிகளையும் மேற்கொண்டார். இந்த அர்ப்பணிப்பே தற்போது அவரை தேசியத் தலைவர் என்ற உச்ச பதவியில் அமர வைத்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சபரிமலை ஐயப்பன் கோயில் கேரளாவுக்குள் அமைந்திருந்தாலும், அதற்குத் தமிழ்நாட்டில் தான் மிக அதிக அளவிலான பக்தர்கள் உள்ளனர். அய்யப்பா சேவா சமாஜத்தின் கிளைகள் நாடு முழுவதும் பரவியிருந்தாலும், ஒரு தமிழருக்கு இந்தத் தேசியத் தலைமைப் பதவி வழங்கப்பட்டிருப்பது, தமிழக பக்தர்களின் ஆன்மிகப் பங்களிப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாகக் கருதப்படுகிறது. கராத்தே முருகனின் தலைமையில் இந்த அமைப்பு மேலும் பல உலக நாடுகளுக்குத் தன் ஆன்மிகச் சேவையை விரிவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[india]]></category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/india/sabarimala-ayyappa-seva-samajam-gets-a-tamilian-president-who-is-karate-murugan-soo67qh"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Name Astrology: உங்க பெயரில் 4, 5 அல்லது 6 எழுத்துகளா? யாருக்கு பணம், காதல், வெற்றி அதிகம் தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/how-the-number-of-letters-in-your-name-predicts-your-luck-and-success-cggyl78</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/how-the-number-of-letters-in-your-name-predicts-your-luck-and-success-cggyl78</guid>
            <pubDate>Mon, 08 Jun 2026 12:44:41 +0530</pubDate>
            <description><![CDATA[ஒரு பெயரில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை உங்கள் விதியைத் தீர்மானிக்க முடியுமா? உங்கள் பெயரிலுள்ள எழுத்துக்கள் செல்வம், காதல் மற்றும் வெற்றி பற்றி என்ன வெளிப்படுத்துகின்றன? 4, 5, 6 எழுத்துக்களைக் கொண்ட எந்தப் பெயர் அதிர்ஷ்டமானவையாகக் கருதப்படுகின்றன?]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktjyy5jyr28y6a10w60j1gtm,imgname-name-astrology-1780900370014.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஒரு பெயரில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை உங்கள் விதியைத் தீர்மானிக்க முடியுமா? உங்கள் பெயரிலுள்ள எழுத்துக்கள் செல்வம், காதல் மற்றும் வெற்றி பற்றி என்ன வெளிப்படுத்துகின்றன? 4, 5, 6 எழுத்துக்களைக் கொண்ட எந்தப் பெயர் அதிர்ஷ்டமானவையாகக் கருதப்படுகின்றன?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பெயர் ஜோதிடத்தில், ஒரு பெயரின் முதல் எழுத்து மட்டுமல்ல, அந்தப் பெயரில் உள்ள மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கையும் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஒரு பெயரில் உள்ள மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை, ஒரு நபரின் குணம், தொழில், செல்வம் மற்றும் உறவுகளைப் பாதிக்கும் என்று நம்பப்படுகிறது. ஒரு பெயரில் உள்ள மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை, ஒரு நபரின் வாழ்க்கையைப் பற்றிய பல ரகசியங்களையும் வெளிப்படுத்தக்கூடும். உங்கள் பெயரில் நான்கு, ஐந்து அல்லது ஆறு எழுத்துக்கள் இருந்தால், அவற்றில் எது மிகவும் அதிர்ஷ்டமானது என்பதைக் கண்டறியுங்கள்&hellip;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பெயர் ஜோதிடத்தின்படி, முருகன், செந்தில், செல்வம் மற்றும் சிவகுரு போன்ற நான்கு எழுத்துப் பெயர்களைக் கொண்டவர்கள் ஒழுக்கமானவர்களாகவும் கடின உழைப்பாளிகளாகவும் இருப்பார்கள். அவர்கள் வாழ்க்கையில் வெற்றிக்கு குறுக்கு வழிகளை ஒருபோதும் நாடுவதில்லை; மாறாக, கடின உழைப்பையே நம்பியிருக்கிறார்கள். அது பணமாக இருந்தாலும் சரி, காதலாக இருந்தாலும் சரி, அவர்கள் படிப்படியாக வெற்றியை அடைகிறார்கள், ஆனால் அவர்களின் வெற்றி நிரந்தரமானது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கிருத்திகா, தமிழரசி போன்ற ஐந்து எழுத்துப் பெயர்களைக் கொண்டவர்கள் புத்திசாலிகளாகவும், சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளும் திறனுடையவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் தொழில் மற்றும் வியாபாரம் ஆகிய இரண்டிலும் சிறப்பாகச் செயல்படுவார்கள். பணம் சம்பாதிப்பதற்கு அவர்களுக்குப் பல வாய்ப்புகள் கிடைக்கும், அவற்றை அவர்கள் பற்றிக்கொள்வார்கள். அவர்களுக்கு ஒரு நல்ல காதல் வாழ்க்கையும் உண்டு. பெயர் ஜோதிடத்தில், ஐந்து எழுத்துப் பெயர்கள் மிகவும் மங்களகரமானவையாகக் கருதப்படுகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ்மலர், கதிர்வேல், அறிவழகன் போன்ற ஆறு எழுத்துப் பெயர்களைக் கொண்டவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாகக் கருதப்படுகிறார்கள். அவர்கள் இளம் வயதிலேயே பெரும் வெற்றியை அடைகிறார்கள். ஏழ்மையான குடும்பங்களில் பிறந்தாலும், பணம், காதல் மற்றும் தொழில் விஷயங்களில் அவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். அவர்களின் குணம் மற்றவர்களைப் பாதித்து, அவர்களின் வெற்றிப் பாதையை எளிதாக்குகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[astrology]]></category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/how-the-number-of-letters-in-your-name-predicts-your-luck-and-success-cggyl78"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Swasika : கணவரைப் பற்றி உல்டா பேச்சு... கருப்பு பட நடிகையை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/swasika-vijay-faces-backlash-for-contradictory-statements-on-marriage-in-tamil-and-malayalam-interviews-va13fp3</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/swasika-vijay-faces-backlash-for-contradictory-statements-on-marriage-in-tamil-and-malayalam-interviews-va13fp3</guid>
            <pubDate>Mon, 08 Jun 2026 12:39:16 +0530</pubDate>
            <description><![CDATA[Swasika Vijay Faces Backlash : தன் கணவரைச் சார்ந்து வாழ்வதுதான் தனக்கு பிடிக்கும் என்றும், அவருக்காக சமைப்பது, பணத்துக்காக அவரை நம்பியிருப்பது போன்ற விஷயங்கள் தனது 'ஃபேன்டஸி' என்றும் நடிகை ஸ்வாசிகா விஜய் கூறியுள்ளார்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktk0zf2025nnfzz4a6zhj3zd,imgname-swasika-1780902509632.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Swasika Vijay Faces Backlash : தன் கணவரைச் சார்ந்து வாழ்வதுதான் தனக்கு பிடிக்கும் என்றும், அவருக்காக சமைப்பது, பணத்துக்காக அவரை நம்பியிருப்பது போன்ற விஷயங்கள் தனது 'ஃபேன்டஸி' என்றும் நடிகை ஸ்வாசிகா விஜய் கூறியுள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;டிவி சீரியல்கள் மூலம் மீடியாவுக்குள் நுழைந்து, பிறகு சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை ஸ்வாசிகா. மலையாளத்தில் பல முக்கிய கேரக்டர் ரோல்களில் நடித்து கைதட்டல் வாங்கிய இவர், தற்போது தமிழ் சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் இவருக்கு திருமணம் நடந்தது. அப்போது, தினமும் காலையில் கணவரின் காலில் விழுந்து வணங்குவதாக ஸ்வாசிகா சொன்னது மலையாளத்தில் பெரும் ட்ரோல்களுக்கு வழிவகுத்தது. இந்நிலையில், இப்போது ஒரு தமிழ் பேட்டியில் கணவர் குறித்து அவர் பேசியிருப்பது மீண்டும் கவனம் ஈர்த்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&quot;மலையாள இன்டர்வியூக்களில் இதையெல்லாம் சொல்லி நான் நிறைய ட்ரோல்களை வாங்கியிருக்கேன். தமிழ்ல இதுவரைக்கும் அப்படி எதுவும் வரல. இங்கேயும் சொல்லி ட்ரோல் வாங்கலாம்னு இருக்கேன். நான் வீட்ல இருந்தா, என் கணவருக்கு நானே சமைச்சுக் கொடுத்து, அந்தப் பாத்திரத்தையெல்லாம் கழுவி வெச்சுட்டு, அதுக்கப்புறம் சாப்பிடறது எனக்கு ரொம்பப் பிடிக்கும். இது ஏதோ பெரிய விஷயம்னு நான் சொல்லல. ஆனா, அப்படிச் செய்யறது எனக்குப் பிடிக்கும். என்கிட்ட பேங்க் பேலன்ஸ் எல்லாம் இருக்கு. ஆனாலும், என் போன் பில் கட்டச் சொல்லி கணவர்கிட்டதான் சொல்வேன்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எனக்குப் பணம் வேணும்னாலும் அவர்கிட்டதான் கேட்பேன். என்கிட்ட காசு இருந்தாலும், அனுப்பச் சொல்லுவேன். ஒருவேளை இதெல்லாம் என் ஃபேன்டஸியா இருக்கலாம். ஆனா எனக்கு இது பிடிச்சிருக்கு. நான் செய்யற மாதிரி எல்லாரும் வாழ்க்கையில செய்யணும்னு நான் சொல்ல மாட்டேன். அதுக்கு அவசியமும் இல்லை. ஆனா, அப்படி இருக்கிறது எனக்குப் பிடிக்கும். அதுக்கு காரணம் என்னன்னு எனக்குத் தெரியல. ஆனா பிடிச்சிருக்கு.&quot;&lt;/p&gt;&lt;p&gt;&quot;இந்த Gen Z டேர்ம், அவங்களோட ரிலேஷன்ஷிப்ல இருக்கிற 'சிச்சுவேஷன்ஷிப்' என்னன்னு எனக்குத் தெரியாது. அதைப் பத்தி நான் யோசிக்கிறதும் இல்லை. என் கரியரை நான் எப்படி கவனமா கொண்டு போறேனோ, அதே மாதிரிதான் குடும்ப வாழ்க்கையையும் கொண்டு போறேன். 9 வயசுல சம்பாதிக்க ஆரம்பிச்சேன். எல்லாமே எனக்காக நானேதான் செஞ்சேன். இப்போ அது போர் அடிக்குது. எனக்கு ஏதாவது வேணும்னா கணவர்கிட்டதான் சொல்வேன். கணவரைச் சார்ந்து இருக்கிறது எனக்கு சந்தோஷமா இருக்கு. அந்த ஃபேன்டஸியை நான் என்ஜாய் பண்றேன்,&quot; என்று ஸ்வாசிகா கூறியுள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த வீடியோ வெளியான பிறகு, பலரும் கமென்ட் செய்து வந்தனர். தமிழ்நாட்டு ரசிகர்கள், &quot;இதுல ட்ரோல் பண்ண என்ன இருக்கு? நிறைய பெண்களுக்கு இதெல்லாம் பிடிக்கும்,&quot; என்று ஆதரவாகக் கருத்து தெரிவித்தனர். ஆனால், இதைப் பார்த்த மலையாள ரசிகர்கள், &quot;மலையாளப் பேட்டியில அவங்க இப்படிச் சொல்லவே இல்லையே. அதனாலதான் அவங்களை எல்லாரும் ட்ரோல் செஞ்சாங்க. அது தெரிஞ்சதால இப்போ கதையை மாத்தி இப்படிப் பேசுறாங்க&quot;, &quot;அப்போ சொன்னது இது இல்லையே&quot; என்று கமென்ட் செய்து வருகின்றனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[cinema]]></category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/swasika-vijay-faces-backlash-for-contradictory-statements-on-marriage-in-tamil-and-malayalam-interviews-va13fp3"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Lower Berth: ரயிலில் 'லோயர் பெர்த்' வேண்டுமா? இந்த ரகசிய ட்ரிக்கை பின்பற்றுங்கள்.! கண்டிப்பா கீழ் இருக்கை கிடைக்கும்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/how-to-get-lower-berth-in-train-irctc-secret-trick-to-improve-your-chances-of-getting-a-lower-berth-during-train-travel-8d0f3t1</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/how-to-get-lower-berth-in-train-irctc-secret-trick-to-improve-your-chances-of-getting-a-lower-berth-during-train-travel-8d0f3t1</guid>
            <pubDate>Mon, 08 Jun 2026 12:24:14 +0530</pubDate>
            <description><![CDATA[How to Get Lower Berth in Train: ரயில் பயணத்தின் பொழுது பலரும் லோயர் பெர்த் (கீழ் அடுக்கு) படுக்கைகளை விரும்புகின்றனர். கீழடுக்கு படுக்கைகள் கிடைப்பதற்கு ஐஆர்சிடிசி சொல்லும் ரகசிய ட்ரிக்கை இந்த பதிவில் பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktk0211d4pegnqdqygj4bt8b,imgname-how-to-get-lower-berth-in-train-1780901545005.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;How to Get Lower Berth in Train: ரயில் பயணத்தின் பொழுது பலரும் லோயர் பெர்த் (கீழ் அடுக்கு) படுக்கைகளை விரும்புகின்றனர். கீழடுக்கு படுக்கைகள் கிடைப்பதற்கு ஐஆர்சிடிசி சொல்லும் ரகசிய ட்ரிக்கை இந்த பதிவில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவைப் பொறுத்தவரை பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். கழிவறை வசதிகள் மற்றும் நீண்ட தூர பயணங்களுக்கு ஏதுவாக இருப்பதால் ரயில் பயணங்கள் பெரும்பாலான மக்களால் விரும்பப்படுகிறது. ஆனால் ரயில் டிக்கெட் முன்பதிவும்போது பலருக்கும் மேலடுக்கு இருக்கைகள் ஒதுக்கப்படுகின்றன. இது வயதானவர்கள், முதியவர்கள், பெண்கள் ஆகியோருக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது. மேலெடுக்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டவர்கள், ஒவ்வொரு முறையும் பயணத்தின் பொழுது கீழடுக்கு இருக்கை இருப்பவர்களிடம் இருக்கையை மாற்றித் தருமாறு கெஞ்ச வேண்டிய சூழலும் ஏற்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்:&amp;nbsp;&lt;/strong&gt; IRCTC : ஸ்லீப்பர் டிக்கெட்டில் ஏசி கோச்சில் பயணம் செய்ய வேண்டுமா? புக்கிங் போது இந்த ஒரு ஆப்ஷனை மட்டும் கிளிக் செய்யுங்க.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆனால் ரயில் டிக்கெட் முன்பதிவின்போது சில எளிய வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் கீழடுக்கு இருக்கையை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. அது குறித்து இந்த பதிவில் விரிவாகக் காணலாம். ரயிலில் இருக்கைகள் ஒதுக்கப்படுவது தானியங்கி கணினி மென்பொருள் மூலம் நடைபெறுகிறது. இதில் மனிதர்களின் தலையீடு எதுவும் இல்லை. ரயில் ஓடும் போது அதன் சமநிலையைப் பேணுவதற்காக மென்பொருள் முதலில் நடு இருக்கைகளை ஒதுக்குகிறது. இறுதியாகவே கீழடுக்கு மற்றும் மேல் இருக்கைகளை ஒதுக்கும். அதன் பின்னர் பக்கவாட்டு இருக்கைகள் ஒதுக்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்: &amp;nbsp;&lt;/strong&gt;Irctc Rules: ரயிலை தவறவிட்டால் அதே டிக்கெட்டில் வேறு ரயிலில் பயணிக்கலாமா? ரீஃபண்ட் கிடைக்குமா?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முதியவர்கள் மற்றும் பெண்களுக்கு கீழடுக்கு இருக்கைகள் ஒதுக்குவதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆனால் அதற்கு நாம் டிக்கெட் முன்பதிவின்போது சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். டிக்கெட் முன்பதிவு செய்யும் பொழுது &lsquo;ரிசர்வேஷன் சாய்ஸ்&rsquo; (Reservation Choice) என்கிற பகுதியில் Book Only if Lower Berth Allotted (கீழிருக்கை ஒதுக்கப்பட்டால் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்யவும்) என்கிற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு தேர்வு செய்வதன் மூலம் கணினியில் கீழடுக்கு இருக்கை காலியாக இருந்தால் மட்டுமே உங்கள் டிக்கெட் உறுதியாகும். ஒருவேளை கீழடுக்கு இருக்கை இல்லையென்றால், டிக்கெட் பதிவாகாது. இதன் மூலம் டிக்கெட் எடுத்த பிறகு மேலடுக்கு கிடைத்து விட்டதே என்று வருத்தப்படுவதை தவிர்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்:&amp;nbsp;&lt;/strong&gt; Train: ரயிலில் உங்கள் உடைமைகளை தவறவிட்டால் என்ன செய்ய வேண்டும்? திரும்ப பெறுவது எப்படி? வழிமுறைகள் இதோ.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குடும்பத்தில் உள்ள முதியவர்களுக்கு டிக்கெட் எடுக்கும் பொழுது எப்போதும் &lsquo;சீனியர் சிட்டிசன்&rsquo; கோட்டாவை பயன்படுத்த வேண்டும். இந்த கோட்டாவை பயன்படுத்தி முன்பதிவு செய்யும் பொழுது பலருக்கும் கீழடுக்கு இருக்கைகள் ஒதுக்கப்படுகிறது. முன்பதிவு செய்த பின்னர் மேலடுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டு விட்டால் வருத்தப்படத் தேவையில்லை. பயணிகள் முதியவர்களாகவோ அல்லது மாற்றுத் திறனாளியாகவோ இருந்தால் ரயிலில் உள்ள TTE-யை அணுகலாம். அவர் கீழடுக்கு இருக்கைகள் காலியாக இருந்தாலோ அல்லது வேறு யாராவது தனது இருக்கையை மாற்றிக் கொள்ள முன் வந்தாலோ அதை உங்களுக்கு ஒதுக்கித் தர TTE-க்கு அதிகாரம் உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்:&amp;nbsp;&lt;/strong&gt; Train Speed : இரவில் ரயில் ஏன் ஸ்பீடாக போகுது தெரியுமா? ராத்திரியில மட்டும் வேகம் அதிகரிக்க காரணம் என்ன? பின்னணியில் உள்ள சுவாரஸ்யமான ரகசியங்கள்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சுருக்கமாகச் சொன்னால் முன்பதிவு செய்வதற்கு முன்னரே சீனியர் சிட்டிசன் கோட்டாவை பயன்படுத்தி உள்நுழைந்து முன் பதிவு செய்யவேண்டும். அல்லது முன்பதிவு செய்யும் பொழுது Berth Preference என்பதில் லோயர் பெர்த் ஆப்ஷனை தேர்ந்தெடுக்கலாம். இந்த சிறிய மாற்றங்களை செய்வதன் மூலம் உங்கள் நீண்ட தூர பயணம் மிகவும் வசதியானதாகவும், மகிழ்ச்சிகரமானதாகவும் அமையும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[business]]></category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/how-to-get-lower-berth-in-train-irctc-secret-trick-to-improve-your-chances-of-getting-a-lower-berth-during-train-travel-8d0f3t1"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Chennai Power Cut : சென்னையில் நாளை மின்தடை: எந்தெந்த பகுதிகளில் பாதிப்பு? - முழு விவரம்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-chennai/chennai-power-cut-tomorrow-check-the-areas-affected-and-full-details-here-4kskir4</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-chennai/chennai-power-cut-tomorrow-check-the-areas-affected-and-full-details-here-4kskir4</guid>
            <pubDate>Mon, 08 Jun 2026 12:00:11 +0530</pubDate>
            <description><![CDATA[Chennai Power Cut : தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை (09.06.2026) சென்னையில் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படவுள்ளது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktjyen6x1qg5dr4k9k9ysxj2,imgname-chatgpt-image-jun-8--2026--11-53-38-am-1780899861725.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Chennai Power Cut : தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை (09.06.2026) சென்னையில் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படவுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;காலை 09:00 மணி முதல் மதியம் 02:00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். பராமரிப்புப் பணிகள் முன்னதாகவே நிறைவடைந்தால், மதியத்திற்கு முன்பே மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என்று மின் வாரியம் தெரிவித்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;கோவூர்: &lt;/strong&gt;மூகாம்பிகை நகர், குன்றத்தூர் பிரதான சாலை, ராம் நகர், குமரன் நகர், பெரியபனிச்சேரி, தண்டலம் பிரதான சாலை, பாபு கார்டன், இரண்டாம்கட்டளை, சிக்கராயபுரம் மற்றும் கொள்ளச்சேரி.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;பல்லாவரம்: &lt;/strong&gt;கணபதிபுரம், விஸ்வகர்மா நகர், நாயுடு ஷாப் சாலை, ஸ்கைபார்க் சர்ச் சாலை, டிவிஎஸ் ஃபிளாட்ஸ், அக்னி ஃபிளாட்ஸ், பஞ்சாயத்து காலனி, சுகுணா காலனி மற்றும் நடேசன் நகர்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;காரம்பாக்கம்: &lt;/strong&gt;வானகரம், பி.எச். சாலை, சிவபூதம், ராஜீவ் நகர், கந்தமாபுரம், வானகரம் சர்வீஸ் சாலை, செட்டியார் அகரம், ஐ.சி.எல்., நூம்பல், அக்னி ஃபேரி லேண்ட், மூர்த்தி நகர், லட்சுமி நகர், இந்திரா நகர், போரூர் கார்டன் (பேஸ் 1 மற்றும் 2), ராமசாமி நகர், ஆண்டாள் நகர், சேக்மணியம், மெட்ரோ நகர், மகரிஷி டீச்சர்ஸ் காலனி, சமயபுரம், காவேரி நகர், பாரதி சாலை, தர்மராஜா நகர், அருணாச்சலம் நகர், மோதி நகர் மற்றும் வெங்கடேஸ்வரா நகர்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;திருவேற்காடு: &lt;/strong&gt;வேலப்பன்சாவடி, மாதர்வேடு, பெருமாள் கோயில் தெரு, பத்மாவதி நகர் மற்றும் கூட்டுறவு நகர்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், இந்த மின்தடை அறிவிப்பைக் கருத்தில் கொண்டு தங்களின் அன்றாடப் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[tamilnadu-chennai]]></category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-chennai/chennai-power-cut-tomorrow-check-the-areas-affected-and-full-details-here-4kskir4"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Parimala and Co vs Blast Box Office : பரிமளா அண்ட் கோ-வை விட டபுள் மடங்கு வசூல் அள்ளிய பிளாஸ்ட்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/blast-movie-beat-parimala-and-co-in-box-office-collection-8ql6frf</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/blast-movie-beat-parimala-and-co-in-box-office-collection-8ql6frf</guid>
            <pubDate>Mon, 08 Jun 2026 11:50:52 +0530</pubDate>
            <description><![CDATA[Blast and Parimala And Co Box Office : அர்ஜுன் நடித்த பிளாஸ்ட் திரைப்படம், பாண்டிராஜ் இயக்கிய பரிமளா அண்ட் கோ படத்தைவிட டபுள் மடங்கு வசூலை வாரிசுருட்டி சாதனை படைத்துள்ளது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktjy4as8892rxzdcpwh3gt5r,imgname-blast-1780899523368.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Blast and Parimala And Co Box Office : அர்ஜுன் நடித்த பிளாஸ்ட் திரைப்படம், பாண்டிராஜ் இயக்கிய பரிமளா அண்ட் கோ படத்தைவிட டபுள் மடங்கு வசூலை வாரிசுருட்டி சாதனை படைத்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பாண்டிராஜ் இயக்கிய பரிமளா அண்ட் கோ திரைப்படம் திரையரங்குகளில் கடந்த ஜூன் 5-ந் தேதி ரிலீஸ் ஆனது. அப்படத்தில் ஜெயராம், ஊர்வசி, சாண்டி மாஸ்டர், சஞ்சனா, சிங்கம்புலி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. பரிமளா அண்ட் கோ திரைப்படத்திற்கு போட்டியாக வேறு எந்த பெரிய படமும் ரிலீஸ் ஆகாததால், இப்படம் பாக்ஸ் ஆபிஸில் சம்பவம் பண்ணும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருவதால் வசூலிலும் பெரியளவில் சோபிக்கவில்லை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பரிமளா அண்ட் கோ திரைப்படம் ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியாவில் மட்டும் ரூ.2.23 கோடி வசூலை வாரிக்குவித்து உள்ளது. இதன்மூலம் தற்போது 3 நாட்கள் முடிவில் ஒட்டுமொத்தமாக 6.70 கோடி வசூலித்துள்ளது. இப்படம் வார நாட்களிலும் அதன் வசூல் வேட்டையை தொடருமா என்பது புரியாத புதிராக உள்ளது. பரிமளா அண்ட் கோ திரைப்படத்தைவிட நேற்று அதிக வசூலை வாரிக்குவித்த படம் பிளாஸ்ட். அர்ஜுன் ஹீரோவாக நடித்த இப்படம் ரிலீஸ் ஆகி இரண்டு வாரங்களை கடந்து திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு வருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிளாஸ்ட் திரைப்படம் நேற்று மட்டும் இந்தியாவில் ரூ.4.35 கோடி வசூலை வாரிக்குவித்து உள்ளது. இதில் அப்படத்தின் தமிழ் பதிப்பு மட்டும் ரூ.3.92 கோடி வசூலித்துள்ளது. அதன் தெலுங்கு வெர்ஷன் ரூ.43 லட்சம் வசூலித்திருக்கிறது. அப்படம் இதுவரை உலகளவில் ரூ.52.80 கோடி வசூலித்துள்ளது. நடிகர் அர்ஜுனின் கெரியரில் மிகப்பெரிய கம்பேக் படமாக இது அமைந்துள்ளது. அவர் ஹீரோவாக நடித்த படம் ஹிட்டாகி கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அதனால் இந்த பிளாஸ்ட் படம் அவரின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிளாஸ்ட் திரைப்படத்தை சுபாஷ் கே ராஜ் இயக்கி உள்ளார். அப்படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை அபிராமி நடித்துள்ளார். இவர்கள் இருவரும் கணவன், மனைவியாக நடித்துள்ள இப்படத்தில் அவர்களின் மகளாக நடிகை ப்ரீத்தி முகுந்தன் நடித்திருக்கிறார். இப்படத்திற்கு கேஜிஎஃப் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்து உள்ளார். அதிரடி ஆக்&zwnj;ஷன் படமாக வந்துள்ள இதற்கு ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[cinema]]></category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/blast-movie-beat-parimala-and-co-in-box-office-collection-8ql6frf"/>
        </item>
        <item>
            <title><![CDATA[TET Exam: ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்.. டெட் தேர்வு தேவையில்லை.. தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/career/good-news-for-teachers-no-need-for-tet-exam-tamil-nadu-government-issues-major-order-fapsvge</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/career/good-news-for-teachers-no-need-for-tet-exam-tamil-nadu-government-issues-major-order-fapsvge</guid>
            <pubDate>Mon, 08 Jun 2026 11:25:08 +0530</pubDate>
            <description><![CDATA[தமிழக அரசின் புதிய அரசிதழ் அறிவிப்பு ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி, உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுகளுக்கு டெட் தேர்வு கட்டாயமில்லை என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktjvmmgzg0abqcfhseb93p1e,imgname-chatgpt-image-jun-8--2026--11-03-38-am--1--1780896911902.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழக அரசின் புதிய அரசிதழ் அறிவிப்பு ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி, உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுகளுக்கு டெட் தேர்வு கட்டாயமில்லை என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய அரசிதழ் அறிவிப்பு, பதவி உயர்வுக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கு சேர விரும்புபவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) கட்டாயமாக உள்ளது. இந்த தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்தி வருகிறது. 1 முதல் 5-ம் வகுப்பு வரை கற்பிக்க விரும்புவோருக்கு தாள்-1 மற்றும் 6 முதல் 8-ம் வகுப்பு வரை கற்பிக்க விரும்புவோருக்கு தாள்-2 என இரண்டு பிரிவுகளாக இந்த தேர்வு நடத்தப்படுகிறது. ஆசிரியர் பணியில் நியமனம் பெறுவதற்கான முக்கிய தகுதிகளில் ஒன்றாக டெட் தேர்வு கருதப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கடந்த ஆண்டு டெட் தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியது. அதன்படி, ஆசிரியர் பணியில் தொடரவும், பதவி உயர்வு பெறவும் டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம் என கூறப்பட்டது.&lt;/p&gt;&lt;p&gt;மேலும், இரண்டு ஆண்டுகளுக்குள் டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் விருப்ப ஓய்வு பெறலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. இதனால் மாநிலம் முழுவதும் பல ஆசிரியர்கள் கவலை அடைந்தனர்.&lt;/p&gt;&lt;p&gt;அதே நேரத்தில், ஓய்வு பெற இன்னும் 5 ஆண்டுகள் மட்டுமே உள்ள ஆசிரியர்களுக்கு டெட் தேர்வில் இருந்து விலக்கு வழங்கப்பட்டது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உச்ச நீதிமன்ற உத்தரவின் காரணமாக சுமார் 1.75 லட்சம் ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறப்பு டெட் தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. முதல் கட்ட சிறப்பு டெட் தேர்வு ஜூலை 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த சூழ்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய அரசிதழ் ஆசிரியர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அரசிதழில் இடம்பெற்றுள்ள தகவலின்படி, உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் (High School Headmaster) பதவி உயர்வுக்கும், முதுகலை ஆசிரியர் (PG Assistant) பதவி உயர்வுக்கும் டெட் தேர்வு அவசியம் என எந்தக் குறிப்பும் இடம்பெறவில்லை. இதனால் இந்த இரண்டு பதவி உயர்வுகளுக்கும் டெட் தேர்வு கட்டாயமில்லை என்ற விளக்கம் ஆசிரியர் வட்டாரங்களில் உருவாகியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதே நேரத்தில், PSHM, MSHM மற்றும் பட்டதாரி ஆசிரியர் (Graduate Teacher) பதவி உயர்வுகளுக்கு டெட் தேர்ச்சி அவசியம் என அரசிதழில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அனைத்து பதவி உயர்வுகளுக்கும் ஒரே விதிமுறை இல்லை என்பது தற்போது தெளிவாகியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;மேலும் ஒரு முக்கிய அறிவிப்பு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;பள்ளிக்கல்வித்துறையில் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும் போது, 18 சதவீத இடங்கள் தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் தகுதியான பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நீண்ட காலமாக பதவி உயர்வுக்காக காத்திருந்த பல ஆசிரியர்களுக்கு இந்த அறிவிப்பு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வை எதிர்நோக்கியிருந்த ஆசிரியர்கள் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளனர். தமிழக அரசின் இந்த புதிய உத்தரவு, டெட் தேர்வு தொடர்பான குழப்பங்களுக்கு ஓரளவு தீர்வு அளித்துள்ளதுடன், ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் பதவி உயர்வு பாதையை எளிதாக்கும் நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[career]]></category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/career/good-news-for-teachers-no-need-for-tet-exam-tamil-nadu-government-issues-major-order-fapsvge"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Karuppu OTT Release : இந்த வாரம் ஓடிடியில் ரிலீசாகும் கருப்பு! வேற என்னென்ன படங்கள் ரிலீஸ்?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/karuppu-ott-release-this-week-when-and-where-to-watch-plus-other-new-ott-releases-8vgi4k0</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/karuppu-ott-release-this-week-when-and-where-to-watch-plus-other-new-ott-releases-8vgi4k0</guid>
            <pubDate>Mon, 08 Jun 2026 11:13:36 +0530</pubDate>
            <description><![CDATA[Karuppu OTT Release : ஜூன் 2-வது வாரத்தில், ஓடிடி தளங்களில் வரிசையாக கருப்பு உள்ளிட்ட புதிய படங்கள் மற்றும் தொடர்கள் வெளியாக உள்ளன. விறுவிறுப்பான திரில்லர்கள் முதல் குடும்பங்கள் கொண்டாடும் ரியாலிட்டி ஷோக்கள் வரை என்னென்ன வெளியாகின்றன என பார்ப்போம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktjvpfvj0756gmxhengcxmw8,imgname-karuppu-ott-1780896972658.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Karuppu OTT Release : ஜூன் 2-வது வாரத்தில், ஓடிடி தளங்களில் வரிசையாக கருப்பு உள்ளிட்ட புதிய படங்கள் மற்றும் தொடர்கள் வெளியாக உள்ளன. விறுவிறுப்பான திரில்லர்கள் முதல் குடும்பங்கள் கொண்டாடும் ரியாலிட்டி ஷோக்கள் வரை என்னென்ன வெளியாகின்றன என பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சூர்யா நடிப்பில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான அதிரடிப் படமான 'கருப்பு', தியேட்டர்களில் பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இப்போது ஓடிடிக்கு வரத் தயாராகிவிட்டது. வரும் ஜூன் 12-ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகும் எனத் தெரிகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அக்&zwnj;ஷய் குமார் மற்றும் இயக்குநர் பிரியதர்ஷன் கூட்டணியில் உருவாகியுள்ள திகில் கலந்த நகைச்சுவைப் படம் 'பூத் பங்களா'. தபு, வாமிகா கபி மற்றும் பரேஷ் ராவல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம், ஜூன் 12-ம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;1970-களின் பின்னணியில் உருவாகியுள்ள கிரைம் திரில்லர் தொடர் 'ராக்'. காணாமல் போனவர்கள் பற்றிய விசாரணையில் தொடங்கும் கதை, ஒரு மிகப்பெரிய குற்றச் சதியை நோக்கி நகர்வதுதான் இதன் மையக்கரு. சோனாலி பிந்த்ரே, அலி ஃபசல் நடிக்கும் இத்தொடர் ஜூன் 12-ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நடிகை ஷில்பா ஷெட்டி குந்த்ரா தொகுத்து வழங்கும் இந்த ரியாலிட்டி ஷோ, ஜூன் 12-ம் தேதி ஜீ5 தளத்தில் வெளியாகிறது. இதில் பிரபலங்கள் மற்றும் அவர்களின் அம்மாக்கள் கலந்துகொண்டு சமையல் போட்டிகள் மற்றும் சுவாரஸ்யமான உரையாடல்களில் ஈடுபடுகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;எவ்ரி இயர் ஆஃப்டர் (Every Year After):&lt;/strong&gt; காதல் மற்றும் நட்பைப் போற்றும் இந்தத் தொடர் ஜூன் 10-ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;திரிடம் (Dridam): &lt;/strong&gt;ஜீத்து ஜோசப் தயாரிப்பில் உருவாகியுள்ள மலையாள திரில்லர் படம், ஜூன் 12-ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;தார்கடா (Taarkata): &lt;/strong&gt;பழிவாங்கும் படலமும், த்ரில்லர் அம்சங்களும் கலந்த வங்காளத் தொடர் ஜூன் 12 அன்று ஜீ5 தளத்தில் ஒளிபரப்பாகிறது.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;செல்டர் (Shelter):&lt;/strong&gt; ஜேசன் ஸ்டாதம் நடித்துள்ள சர்வைவல் திரில்லர் படம் ஜூன் 12 அன்று ஓடிடியில் வருகிறது.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;ஸ்வீட் மேக்னோலியாஸ் சீசன் 5 (Sweet Magnolias Season 5): &lt;/strong&gt;ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தத் தொடரின் புதிய சீசன் நெட்ஃபிளிக்ஸில் இந்த வாரம் வெளியாகிறது.&lt;/li&gt;&lt;/ul&gt;]]></content:encoded>
            <category><![CDATA[cinema]]></category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/karuppu-ott-release-this-week-when-and-where-to-watch-plus-other-new-ott-releases-8vgi4k0"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Baba Vanga Predictions: பாபா வங்காவின் கணிப்பு - ஜூன் 2வது வாரம் இந்த ராசிகளுக்கு ஜாக்பாட்.! அதிர்ஷ்டத்தை அள்ளும் 5 ராசிகள் யார்?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/baba-vanga-predictions-2026-june-second-week-may-bring-a-major-turning-point-and-jackpot-luck-for-5-zodiac-signs-qct1vyo</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/baba-vanga-predictions-2026-june-second-week-may-bring-a-major-turning-point-and-jackpot-luck-for-5-zodiac-signs-qct1vyo</guid>
            <pubDate>Mon, 08 Jun 2026 10:58:16 +0530</pubDate>
            <description><![CDATA[Baba Vanga Predictions 2026: பாபா வங்கா கணிப்பின்படி, ஜூன் 8 முதல் 14, 2026 வரையிலான வாரம் சில ராசிக்காரர்களுக்கு ஒரு பெரிய திருப்புமுனையாக அமையப்போகிறது. மிதுனம், கடகம் உள்ளிட்ட சில ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kp04kc9g3vcjpfv11c8k9576,imgname-baba-vanga-prediction-1775973806384.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Baba Vanga Predictions 2026: பாபா வங்கா கணிப்பின்படி, ஜூன் 8 முதல் 14, 2026 வரையிலான வாரம் சில ராசிக்காரர்களுக்கு ஒரு பெரிய திருப்புமுனையாக அமையப்போகிறது. மிதுனம், கடகம் உள்ளிட்ட சில ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பாபா வங்கா கணிப்புப்படி, ஜூன் 8 முதல் 14 வரை மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான வாரமாக இருக்கப்போகிறது. பல நாட்களாக நின்று போன வேலைகள் எல்லாம் ஒவ்வொன்றாக முடியத் தொடங்கும். உங்கள் வாழ்க்கையையே மாற்றப்போகும் ஒரு வழிகாட்டி வருவார். தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கு சக ஊழியர்கள், மேலதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். குறைந்த ஊதியத்தில் வேலை செய்து வருபவர்களுக்கு பன்னாட்டு நிறுவனத்திற்கு வேலை மாறும் வாய்ப்புகளும் உருவாகும். தொழில், வியாபாரத்தில் அதிக லாபம் உண்டாகும். கொடுத்த கடன், திரும்ப கைக்கு வரும். நிதிநிலை வலுப்பெறுவதால், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்: &amp;nbsp;&lt;/strong&gt;Weekly Horoscope: அடுத்த 7 நாட்கள்.! 3 ராஜயோகத்தால் இந்த 5 ராசிகளுக்கு பண மழை கொட்டப்போகுது.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பாபா வங்கா கூற்றுபடி, ஜூன் 8 முதல் 14 வரை கடக ராசிக்காரர்கள் குடும்ப வாழ்க்கையில் சந்தோஷத்தையும், திருப்தியையும் அனுபவிப்பார்கள். இந்த வாரம் பணவரவு அற்புதமாக இருக்கும். வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்ல வாய்ப்புகள் உண்டு. முதலீடுகள் மூலமாக திடீர் பண லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு இது நல்ல நேரம். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் ஒரு நல்ல செய்தியைப் பெறுவீர்கள். திருமணத்திற்காக வரன் தேடி வருபவர்களுக்கு சுப தகவல் காதுக்கு வரும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்: &amp;nbsp;&lt;/strong&gt;Today Rasi Palan: இன்று சுக்கிரன் பெயர்ச்சி.! கடக ராசியில் கஜலக்ஷ்மி ராஜயோகம்.! 12 ராசிகளுக்குமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிம்ம ராசிக்காரங்களுக்கு ஜூன் 8 முதல் 14 வரையிலான காலம் மிகவும் சாதகமாக இருக்கும் என பாபா வங்கா கணித்துள்ளார். உங்கள் கடின உழைப்புக்கான நாட்கள் முடிவுக்கு வருகிறது. அதிர்ஷ்டம் உங்களுக்கு முழு ஆதரவை வழங்கும். பணம் சம்பந்தமான வேலைகள் சரியான நேரத்தில் முடியும். நிதிப் பிரச்சினைகளில் இருந்து பெரிய நிவாரணம் கிடைக்கும். உங்களின் பேச்சுத் திறமை அதிகரிக்கும். பல மாதமாக நீங்கள் காத்துக்கொண்டிருந்த இருந்த ஒரு வாய்ப்பு தேடி வரும். பெற்றோர், குழந்தைகளின் உடல்நலம் மேம்படும். ஒரு கௌரவமான பதவியும் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்: &amp;nbsp;&lt;/strong&gt;Mangal Gochar 2026: செவ்வாய் பெயர்ச்சி 2026.! இந்த 5 ராசிகளுக்கு ஆபத்து.! பணம், பதவிக்கு சிக்கல்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பாபா வங்கா கணிப்புப்படி, துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமும், செழிப்பும் நிறைந்ததாக இருக்கும். உறவுகள் மற்றும் தொழிலில் இனிமையான அனுபவங்கள் கிடைக்கும். துலாம் ராசியினர் தங்கள் செல்வத்தைக் பெருக்க புது வழிகளைக் கண்டுபிடிப்பீர்கள். பழைய கடன்கள் வசூலாகும். திருமண வாழ்க்கையில இனிமை கூடும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல புரிதல் இருக்கும். இந்த வாரம் முழுவதும் சந்தோஷம் இரட்டிப்பாகும். வருமானத்தில் பெரிய உயர்வு இருக்கும். வேலையில் மாற்றம் வரலாம். புது வாய்ப்புகள் தேடி வரும். மன அமைதி கிடைக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்:&amp;nbsp;&lt;/strong&gt; Kaal Sarp Yog: ராகு கேதுவுக்கு இடையில் சிக்கும் கிரகங்கள்.! உருவாகும் கால சர்ப்ப யோகம்.! எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கும்ப ராசிக்காரர்களுக்கு ஜூன் 8 முதல் 14 வரையிலான வாரம், பெரிய சந்தோஷத்தைக் கொடுக்கும் என பாபா வங்கா கணித்துள்ளார். இந்த வாரம், தொழில் வாழ்க்கையில் புது முன்னேற்றங்கள் நடக்கும். புது வாய்ப்புகள் கிடைக்கும். நின்று போன வேலைகள் எல்லாம் வேகமாக முடியும். கவலைகள் அனைத்தும் தீரும். நிதி மற்றும் உடல்நலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும். சட்டப் பிரச்சினைகளில் சிக்கியிருப்பவர்களுக்கு, நல்ல தீர்வு கிடைக்கும். நண்பர்களும், வாழ்க்கைத் துணையும் உங்களுக்கு உதவியாகவும், ஆதரவாகவும் இருப்பார்கள்.&lt;strong&gt;இதையும் படியுங்கள்: &amp;nbsp;&lt;/strong&gt;Numerology: இந்த தேதியில பிறந்தவங்களுக்கு காசு பணம் நிறைய இருக்கும், ஆனா மன நிம்மதி சுத்தமா இருக்காது.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[astrology]]></category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/baba-vanga-predictions-2026-june-second-week-may-bring-a-major-turning-point-and-jackpot-luck-for-5-zodiac-signs-qct1vyo"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Tata EV Discount: இதை விட நல்ல சான்ஸ் கிடைக்காது! 5 கார்களுக்கு ₹3.35 லட்சம் வரை தள்ளுபடி!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/auto/tata-ev-discounts-june-2026-save-up-to-3-35-lakh-on-curvv-nexon-punch-mqw7s4u</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/auto/tata-ev-discounts-june-2026-save-up-to-3-35-lakh-on-curvv-nexon-punch-mqw7s4u</guid>
            <pubDate>Mon, 08 Jun 2026 10:40:08 +0530</pubDate>
            <description><![CDATA[புதிய எலக்ட்ரிக் கார் வாங்க நினைப்பவர்களுக்கு இது பொன்னான வாய்ப்பு! டாடா மோட்டார்ஸ் தனது 5 பிரபல EV மாடல்களுக்கு ₹3.35 லட்சம் வரை அதிரடி தள்ளுபடியை அறிவித்து வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktjsrdtnez3w9cfnj97b7x00,imgname-tata-motors-1780894938965.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;புதிய எலக்ட்ரிக் கார் வாங்க நினைப்பவர்களுக்கு இது பொன்னான வாய்ப்பு! டாடா மோட்டார்ஸ் தனது 5 பிரபல EV மாடல்களுக்கு ₹3.35 லட்சம் வரை அதிரடி தள்ளுபடியை அறிவித்து வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பெட்ரோல் மற்றும் டீசலின் தினசரி விலை உயர்வால் நீங்களும் சலிப்படைந்து, ஒரு புதிய மின்சார காரை (EV) வாங்க நினைத்துக் கொண்டிருந்தால், உங்களுக்கு ஒரு நற்செய்தி. இந்தியாவின் மிகவும் நம்பகமான கார் நிறுவனமான டாடா மோட்டார்ஸ், இந்த மாதம் அதாவது ஜூன் 2026-ல், தனது வாகனங்களுக்கு மிகப்பெரிய தள்ளுபடிகளை வழங்குகிறது. தனது கையிருப்பைத் தீர்ப்பதற்காக, இந்நிறுவனம் தனது பெரிய மற்றும் சிறிய 5 மின்சார கார்கள் அனைத்திற்கும் தள்ளுபடிகளை வழங்கியுள்ளது. இந்த அற்புதமான சலுகையின் கீழ், நீங்கள் ₹3.35 லட்சம் வரை சேமிக்கலாம். எந்த டாடா வாகனத்தில் உங்களுக்கு எவ்வளவு பெரிய தள்ளுபடி கிடைக்கிறது என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த முறை, டாடா கர்வ் EV-க்கு மிகப்பெரிய சலுகை வழங்கப்படுகிறது. இந்த எலக்ட்ரிக் SUV கூபே காருக்கு நிறுவனம் மொத்தம் ₹3.35 லட்சம் வரையிலான சலுகையை வழங்குகிறது. இதன் மூலம், இந்த மாடலை வாங்குவது குறித்து நீங்கள் பரிசீலித்தால், லட்சக்கணக்கான ரூபாயை சேமிக்க முடியும். இதில் ₹3 லட்சம் பசுமை போனஸ், மேலும் ₹30,000 எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி அல்லது ₹35,000 ஸ்கிராப்பேஜ் போனஸ் (உங்கள் பழைய வாகனத்தை ஸ்கிராப் செய்வதற்கு) ஆகியவை அடங்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவின் மிகவும் பிரபலமான எலக்ட்ரிக் எஸ்யூவி-களில் ஒன்றான நெக்ஸான் ஈவி-யிலும் வாடிக்கையாளர்கள் நல்ல சலுகைகளைப் பெற்று வருகின்றனர். இந்தக் காரை வாங்குவதன் மூலம் பல்வேறு போனஸ்கள் வழியாக ₹50,000 வரை பயனடையலாம். உங்களிடம் பழைய கார் இருந்து, அதை எக்ஸ்சேஞ்ச் செய்தால், இந்தச் சேமிப்பு மேலும் அதிகரிக்கலாம். முதல் முறையாக ஈவி வாங்க நினைப்பவர்களுக்கு, நெக்ஸான் ஈவி மிகவும் நம்பகமான தேர்வுகளில் ஒன்றாகத் திகழ்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நடுத்தரக் குடும்பங்களிடையே பிரபலமான மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஹேட்ச்பேக் காரான டியாகோ EV, ₹65,000 முதல் ₹1.45 லட்சம் வரையிலான தள்ளுபடிகளுடன் வழங்கப்படுகிறது. இதில் XT (லாங் ரேஞ்ச்) வேரியன்ட் மிகவும் பிரபலமானது; இது ₹1.45 லட்சம் நிலையான தள்ளுபடியையும், கூடுதலாக ₹50,000 சலுகையையும் வழங்குகிறது. மற்ற வேரியன்ட்களில் ₹1.25 லட்சம் வரையிலும், நடுத்தர மாடல்களில் ₹65,000 வரையிலும் சேமிப்பைப் பெறலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிப்ரவரியில் புதிய மாடல் அறிமுகமாவதற்கு முன்பு, பழைய கையிருப்பைத் தீர்க்கும் விதமாக, டாடா நிறுவனம் இந்த பிரபலமான மினி எஸ்யூவி-க்கு ₹95,000 முதல் ₹1.45 லட்சம் வரையிலான தள்ளுபடிகளை வழங்குகிறது. நீங்கள் உயர் ரக மாடலைத் தேர்ந்தெடுத்தால், ₹1.45 லட்சம் சேமிக்கலாம். நடுத்தர ரக மாடலுக்கு ₹1.25 லட்சம் தள்ளுபடி வழங்கப்படும். அடிப்படை மாடலிலேயே ₹95,000 என்ற கணிசமான சேமிப்பு கிடைக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உங்களிடம் அதிக பட்ஜெட் இருந்து, டாடா நிறுவனத்தின் மிகவும் பிரீமியம் எலக்ட்ரிக் எஸ்யூவியான ஹாரியர் EV-ஐ வாங்க விரும்பினால், ₹2.75 லட்சம் வரையிலான பலன்களை இது வழங்குகிறது. ஏற்கனவே உள்ள டாடா வாடிக்கையாளர்கள் ₹1 லட்சம் நேரடி லாயல்டி போனஸையும், கூடுதலாக ₹1 லட்சம் பலனையும் பெறுகிறார்கள். இந்த ஒப்பந்தத்தில் ₹50,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ₹75,000 ஸ்கிராப்பேஜ் போனஸ் ஆகியவையும் அடங்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[auto]]></category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/auto/tata-ev-discounts-june-2026-save-up-to-3-35-lakh-on-curvv-nexon-punch-mqw7s4u"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Numerology Tips: உங்கள் பிறந்த தேதியின்படி எந்த விரதம் இருந்தால் செல்வம் பெருகும்? தெரிந்து கொள்ளுங்கள்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/numerology-tips-the-best-vrat-for-wealth-and-prosperity-based-on-your-birth-date-l2kgwe6</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/numerology-tips-the-best-vrat-for-wealth-and-prosperity-based-on-your-birth-date-l2kgwe6</guid>
            <pubDate>Mon, 08 Jun 2026 10:25:54 +0530</pubDate>
            <description><![CDATA[Numerology Tips: ஜோதிடம் மற்றும் எண் கணித சாஸ்திரப்படி, ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு கிரகம் அதிபதியாக உள்ளது. உங்கள் பிறந்த தேதிக்கு ஏற்ப அந்தந்த கிரகங்களுக்கு உகந்த விரதங்களை மேற்கொள்வதன் மூலம், வாழ்வில் செல்வம் மற்றும் சுபிட்சம் பெருகும்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktjrzqw8j2ada3v9m0m96fyf,imgname-numerology-main-1780894130056.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Numerology Tips: ஜோதிடம் மற்றும் எண் கணித சாஸ்திரப்படி, ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு கிரகம் அதிபதியாக உள்ளது. உங்கள் பிறந்த தேதிக்கு ஏற்ப அந்தந்த கிரகங்களுக்கு உகந்த விரதங்களை மேற்கொள்வதன் மூலம், வாழ்வில் செல்வம் மற்றும் சுபிட்சம் பெருகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;1. எண் 1 (பிறந்த தேதிகள்: 1, 10, 19, 28)&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&bull; அதிபதி கிரகம்: சூரியன்&lt;/p&gt;&lt;p&gt;&bull; சிறப்பு விரதம்: ஏகாதசி விரதம்.&lt;/p&gt;&lt;p&gt;&bull; பலன்கள்: சூரியனின் ஆற்றலை அதிகரிக்கவும், கடந்த கால கர்ம வினைகளை நீக்கவும் ஒவ்வொரு மாதமும் வரும் ஏகாதசி விரதம் உங்களுக்கு மிகச் சிறந்தது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;2. எண் 2 (பிறந்த தேதிகள்: 2, 11, 20, 29)&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&bull; அதிபதி கிரகம்: சந்திரன்&lt;/p&gt;&lt;p&gt;&bull; சிறப்பு விரதம்: பௌர்ணமி மற்றும் திங்கட்கிழமை விரதம்.&lt;/p&gt;&lt;p&gt;&bull; பலன்கள்: உங்கள் உணர்ச்சிகளைச் சீராக வைத்துக்கொள்ளவும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் இந்த விரதங்கள் பெரிதும் உதவும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;3. எண் 3 (பிறந்த தேதிகள்: 3, 12, 21, 30)&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&bull; அதிபதி கிரகம்: குரு (வியாழன்)&lt;/p&gt;&lt;p&gt;&bull; சிறப்பு விரதம்: வியாழக்கிழமை விரதம் (விஷ்ணு வழிபாடு).&lt;/p&gt;&lt;p&gt;&bull; பலன்கள்: திருமணத் தடைகள் நீங்கவும், தகுதியான வாழ்க்கைத்துணை அமையவும் இந்த விரதம் மிகச்சிறந்த பலனைத் தரும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;4. எண் 4 (பிறந்த தேதிகள்: 4, 13, 22, 31)&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&bull; அதிபதி கிரகம்: ராகு&lt;/p&gt;&lt;p&gt;&bull; சிறப்பு விரதம்: காலஷ்டமி விரதம் (காலபைரவர் வழிபாடு).&lt;/p&gt;&lt;p&gt;&bull; பலன்கள்: தீய பழக்கங்கள் மற்றும் மனக்குழப்பங்கள் நீங்கவும், தெளிவான சிந்தனை பிறக்கவும் இந்த விரதம் உதவும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;5. எண் 5 (பிறந்த தேதிகள்: 5, 14, 23)&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&bull; அதிபதி கிரகம்: புதன்&lt;/p&gt;&lt;p&gt;&bull; சிறப்பு விரதம்: சதுர்த்தி விரதம் (விநாயகர் வழிபாடு).&lt;/p&gt;&lt;p&gt;&bull; பலன்கள்: வாழ்க்கையில் உள்ள தடைகள் நீங்கி, புதிய வாய்ப்புகள் தேடி வரும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;6. எண் 6 (பிறந்த தேதிகள்: 6, 15, 24)&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&bull; அதிபதி கிரகம்: சுக்கிரன்&lt;/p&gt;&lt;p&gt;&bull; சிறப்பு விரதம்: வைபவ லக்ஷ்மி விரதம் (வெள்ளிக்கிழமை).&lt;/p&gt;&lt;p&gt;&bull; பலன்கள்: பண வரவு அதிகரிக்கவும், வாழ்க்கையில் நிதி நிலைத்தன்மை (Financial Stability) உண்டாகவும் வெள்ளிக்கிழமை விரதம் அவசியம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;7. எண் 7 (பிறந்த தேதிகள்: 7, 16, 25)&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&bull; அதிபதி கிரகம்: கேது&lt;/p&gt;&lt;p&gt;&bull; சிறப்பு விரதம்: சங்கடஹர சதுர்த்தி.&lt;/p&gt;&lt;p&gt;&bull; பலன்கள்: வாழ்வில் சுபிட்சம் நிலைக்கவும், விநாயகரின் அருளைப் பெறவும் இந்த விரதம் உதவும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;8. எண் 8 (பிறந்த தேதிகள்: 8, 17, 26)&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&bull; அதிபதி கிரகம்: சனி&lt;/p&gt;&lt;p&gt;&bull; சிறப்பு விரதம்: துர்காஷ்டமி விரதம் (துர்கை அம்மன் வழிபாடு).&lt;/p&gt;&lt;p&gt;&bull; பலன்கள்: தைரியம் மற்றும் வலிமை அதிகரிக்கவும், எதிரிகளின் தொல்லை நீங்கவும் இந்த வழிபாடு சிறந்தது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;9. எண் 9 (பிறந்த தேதிகள்: 9, 18, 27)&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&bull; அதிபதி கிரகம்: செவ்வாய்&lt;/p&gt;&lt;p&gt;&bull; சிறப்பு விரதம்: செவ்வாய்க்கிழமை விரதம் (ஆஞ்சநேயர் வழிபாடு).&lt;/p&gt;&lt;p&gt;&bull; பலன்கள்: நல்ல ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் நேர்மறை எண்ணங்கள் பெருக இந்த விரதம் உதவும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;குறிப்பு: &lt;/strong&gt;விரதம் என்பது வெறும் பட்டினி கிடப்பது மட்டுமல்ல, இறைச் சிந்தனையோடு மேற்கொள்ளப்படும் ஒரு நற்செயல். நம்பிக்கையுடன் மேற்கொள்ளும் எந்த ஒரு விரதமும் உங்களை மேம்படுத்தும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[astrology]]></category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/numerology-tips-the-best-vrat-for-wealth-and-prosperity-based-on-your-birth-date-l2kgwe6"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Property Registration: இனி புரோக்கர் இல்லை, க்யூ இல்லை! வீட்டில் இருந்தே செய்யலாம் பத்திரப்பதிவு.! எப்படி தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/register-property-online-from-home-tamil-nadu-new-digital-registration-system-explained-gvg4kge</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/register-property-online-from-home-tamil-nadu-new-digital-registration-system-explained-gvg4kge</guid>
            <pubDate>Mon, 08 Jun 2026 10:17:32 +0530</pubDate>
            <description><![CDATA[தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையிலான TVK அரசு, STAR 3.0 என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சொத்துப் பதிவு, திருமணப் பதிவு உள்ளிட்ட 18 முக்கிய சேவைகளை முழுமையாக ஆன்லைனில், வீட்டில் இருந்தபடியே மேற்கொள்ளலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktjr2q2z0tqarcez2ec2dzgg,imgname-chatgpt-image-jun-8--2026--10-01-30-am--1--1780893178974.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையிலான TVK அரசு, STAR 3.0 என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சொத்துப் பதிவு, திருமணப் பதிவு உள்ளிட்ட 18 முக்கிய சேவைகளை முழுமையாக ஆன்லைனில், வீட்டில் இருந்தபடியே மேற்கொள்ளலாம்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான TVK அரசு, மக்களின் அன்றாடப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதமாக பதிவுத் துறையில் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் STAR 3.0 (Simplified and Transparent Registration 3.0) திட்டத்தை அறிமுகப்படுத்திய முதல்வர் விஜய், &ldquo;இனி புரோக்கர் இல்லை, க்யூ இல்லை! வீட்டில் இருந்தே பத்திரப்பதிவு&rdquo; என்ற முழக்கத்தை மக்களிடம் எதிரொலிக்கச் செய்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த புதிய திட்டத்தின் மூலம் சொத்துப் பதிவு, திருமணப் பதிவு உள்ளிட்ட 18 முக்கிய சேவைகள் முழுமையாக ஆன்லைன் மூலம் கிடைக்கும். tnreginet.gov.in போர்ட்டல் மற்றும் பாலிமர் ஆப் வழியாக வீட்டில் இருந்தபடியே பத்திரம் தயாரித்தல், பதிவு செய்தல், வில்லங்கச் சான்று தேடல், தானியங்கி ஆவண உருவாக்கம் போன்ற அனைத்து பணிகளையும் முடிக்கலாம். காகிதமில்லா (Paperless) மற்றும் நேரில் வருகையில்லா (Presenceless) முறை அமலுக்கு வந்துள்ளதால், பல நாட்கள் அலுவலகம் சுற்றும் அவலம் முற்றிலும் ஒழியும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பாரம்பரிய முறையில் சொத்து பதிவு செய்யும்போது ஏற்படும் புரோக்கர் கமிஷன், இடைத்தரகர்களின் தொந்தரவு, நீண்ட வரிசை, தாமதம் மற்றும் ஊழல் ஆகியவை இனி வரலாறாக மாறும். STAR 3.0 திட்டம் முழு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. உடனடி சான்றுகள், ரியல்-டைம் ஸ்டேட்டஸ் டிராக்கிங், ஆவணங்களின் டிஜிட்டல் சேமிப்பு ஆகியவை இதன் சிறப்பம்சங்கள். இதனால் சொத்து வாங்குபவர்கள், விற்பவர்கள், விவசாயிகள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பெரிதும் பயனடைவார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முதலமைச்சர் விஜய் இந்த அறிவிப்பின்போது, &ldquo;மக்களே இனி உங்கள் கையில்&rdquo; என்று உறுதியளித்தார். ஏற்கனவே 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்கள் பாதுகாப்பு படை, போதைப்பொருள் ஒழிப்பு உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்களை அறிவித்த TVK அரசு, இப்போது நிர்வாக சீர்திருத்தத்திலும் முன்னோடியாகத் திகழ்கிறது. பதிவுத் துறையில் இந்த டிஜிட்டல் புரட்சி தமிழ்நாட்டை நவீன நிர்வாகத்தின் முன்னுதாரணமாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், மக்களின் நேரம் மிச்சமாகும், பணம் மிச்சமாகும், மன அழுத்தம் குறையும். தமிழக அரசின் இந்த நடவடிக்கை இளைஞர்கள், தொழில் முனைவோர் மற்றும் சாதாரண மக்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமையும். மொத்தத்தில், முதல்வர் விஜய் கொண்டு வந்த STAR 3.0 திட்டம் தமிழ்நாட்டின் பதிவுத் துறையில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது. டிஜிட்டல் தமிழ்நாடு, வெளிப்படையான தமிழ்நாடு என்ற இலக்கை நோக்கி அரசு வேகமாக நகர்ந்து வருகிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்களேன், Govt Scheme: அரசு தரும் ரூ.4,000 உதவித்தொகை... முதலில் இந்த சான்றிதழை வாங்குங்கள்!&lt;/strong&gt;&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[business]]></category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/register-property-online-from-home-tamil-nadu-new-digital-registration-system-explained-gvg4kge"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Sukanya : வீரப்பன் பேட்டியால் ஏற்பட்ட சர்ச்சை... 30 ஆண்டுகளுக்கு பிறகு நடிகை சுகன்யாவுக்கு கிடைத்த நீதி]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/sukanya-wins-compensation-in-case-linked-to-controversial-veerappan-interview-8bomge8</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/sukanya-wins-compensation-in-case-linked-to-controversial-veerappan-interview-8bomge8</guid>
            <pubDate>Mon, 08 Jun 2026 10:17:05 +0530</pubDate>
            <description><![CDATA[Actress Sukanya’s Long Legal Fight Ends : சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி, நடிகை சுகன்யாவுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktjrnsfzw8m500wq0390d6py,imgname-sukanya--1--1780893804031.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Actress Sukanya&rsquo;s Long Legal Fight Ends : சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி, நடிகை சுகன்யாவுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;90களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் சுகன்யா. இயக்குநர் பாரதிராஜா இயக்கிய புது நெல்லு புது நாத்து திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான அவர், தனது இயல்பான நடிப்பு மற்றும் பரதநாட்டியப் பின்னணியால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அறிமுகப் படத்திற்குப் பிறகு சுகன்யாவின் திரைப்பயணம் வேகமெடுத்தது. விஜயகாந்த் ஜோடியாக சின்ன கவுண்டர், கமல்ஹாசனின் மகாநதி, சத்யராஜ் உடன் திருமதி பழனிச்சாமி, வால்டர் வெற்றிவேல் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்தார். குடும்பப் பெண் கதாபாத்திரங்கள் முதல் உணர்ச்சிகரமான வேடங்கள் வரை பல்வேறு கதாபாத்திரங்களில் தனது திறமையை நிரூபித்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குறிப்பாக இயக்குநர் ஷங்கரின் இந்தியன் திரைப்படத்தில் வயதான பெண்ணாக நடித்த அவரது தோற்றமும் மேக்கப்பும் பாராட்டுகளை பெற்றன. தொடர்ந்து பல படங்களில் நடித்துக்கொண்டிருந்த நிலையில், திருமணத்திற்குப் பிறகு வெளிநாட்டில் குடியேறிய சுகன்யா சில ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்றார். அதன் பின்னர் தனியாகவே வாழ்ந்து வரும் அவர், தற்போது ஒரு சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில், 1996ஆம் ஆண்டு சந்தனக் கடத்தல் குற்றவாளி வீரப்பனிடம் நடத்தப்பட்ட ஒரு பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் வெளியான பேட்டியில் சுகன்யா குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த பேட்டி தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பானதால் தனது நற்பெயருக்கு பாதிப்பு ஏற்பட்டதாக சுகன்யா பின்னர் நீதிமன்றத்தை நாடினார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அந்த நிகழ்வால் மனஉளைச்சலும், தொழில் வாய்ப்புகளிலும் பாதிப்பும் ஏற்பட்டதாக தெரிவித்த அவர், சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனத்திடம் நஷ்டஈடு கோரி வழக்கு தொடர்ந்தார். நீண்டகாலமாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த இந்த வழக்கில் தற்போது முக்கிய தீர்ப்பு வெளியாகியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி, நடிகை சுகன்யாவுக்கு ரூ.10 லட்சத்து 500 நஷ்டஈடு வழங்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. சுமார் மூன்று தசாப்தங்களுக்கு பிறகு கிடைத்த இந்த தீர்ப்பு, சுகன்யாவுக்கு சட்டரீதியான நியாயம் கிடைத்ததாக பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[cinema]]></category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/sukanya-wins-compensation-in-case-linked-to-controversial-veerappan-interview-8bomge8"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Weekly Horoscope: அடுத்த 7 நாட்கள்.! 3 ராஜயோகத்தால் இந்த 5 ராசிகளுக்கு பண மழை கொட்டப்போகுது.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/weekly-horoscope-3-powerful-rajayogas-including-gajalakshmi-dhana-gauri-yoga-bring-luck-wealth-success-to-5-zodiac-signs-hvg8uui</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/weekly-horoscope-3-powerful-rajayogas-including-gajalakshmi-dhana-gauri-yoga-bring-luck-wealth-success-to-5-zodiac-signs-hvg8uui</guid>
            <pubDate>Mon, 08 Jun 2026 09:50:30 +0530</pubDate>
            <description><![CDATA[Weekly Horoscope June 8 to June 14: ஜோதிடத்தின்படி, ஜூன் 8 முதல் 14, 2026 வரை அடுத்த 7 நாட்களுக்கு கஜலட்சுமி யோகம், தன யோகம், கௌரி யோகம் என 3 ராஜயோகங்கள் இணைவதால், 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகிறது. அதுகுறித்து இங்கு காணலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktjq6xts63dj3arhnfhnpkta,imgname-weekly-horoscope-june-8-to-june-14-1780892268377.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Weekly Horoscope June 8 to June 14: ஜோதிடத்தின்படி, ஜூன் 8 முதல் 14, 2026 வரை அடுத்த 7 நாட்களுக்கு கஜலட்சுமி யோகம், தன யோகம், கௌரி யோகம் என 3 ராஜயோகங்கள் இணைவதால், 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகிறது. அதுகுறித்து இங்கு காணலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மிதுன ராசிக்காரர்களுக்கு ஜூன் இரண்டாவது வாரம் வேலையில் வெற்றியையும், முன்னேற்றத்தையும் கொண்டு வரும். பண வரவு அபரிமிதமாக இருக்கும். இந்த வாரம் செய்யும் முதலீடுகள் லாபம் தரும். ஆனால் ரிஸ்க் நிறைந்த முதலீடுகளை செய்வதற்கு முன் நிபுணர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது. முக்கியமான விஷயத்தில் எந்த அவசர முடிவையும் எடுக்க வேண்டாம். இந்த வாரம் குடும்ப வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் குறித்த பேச்சு வார்த்தைகள் நடைபெறும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்:&amp;nbsp;&lt;/strong&gt; Today Rasi Palan: இன்று சுக்கிரன் பெயர்ச்சி.! கடக ராசியில் கஜலக்ஷ்மி ராஜயோகம்.! 12 ராசிகளுக்குமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிம்ம ராசிக்காரர்களுக்கு ஜூன் இரண்டாவது வாரம் பண விஷயத்தில் மிகவும் சாதகமான வாரமாக இருக்கும். திடீர் பண லாபம் கிடைக்க வாய்ப்பு அதிகம் உண்டு. பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீண்ட நாள் நோய் பிரச்சனைகளில் இருந்து மீண்டு வருவீர்கள். குடும்ப வாழ்க்கை முன்பை விட நன்றாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத்துணையிடம் இருந்து நிறைய அன்பு கிடைக்கும். குடும்பத்தகராறுகள் பேசி தீர்க்கப்பட்டு, ஒற்றுமை அதிகரிக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்: &amp;nbsp;&lt;/strong&gt;Kaal Sarp Yog: ராகு கேதுவுக்கு இடையில் சிக்கும் கிரகங்கள்.! உருவாகும் கால சர்ப்ப யோகம்.! எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கன்னி ராசிக்காரங்களுக்கு அடுத்த 7 நாட்கள் மிகவும் சுபமானதாக இருக்கும். பண வரவு அபரிமிதமாக இருக்கும். திடீர் பண லாபம் கிடைக்க நல்ல வாய்ப்புகள் உண்டு. இந்த வாரம் நீங்கள் மேற்கொள்ளும் எந்த பயணமும் உங்களுக்கு வெற்றியைத் தரும். வேலை செய்யும் இடத்தில் உங்களின் திறமைகள் அங்கீகரிக்கப்படும். சரியான நேரத்தில் வேலையை முடிப்பதால் உங்கள் மேலதிகாரிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். வாரத்தின் நடுவில் சிறு சிறு பிரச்சனைகள் எழக்கூடும். ஆனால் அவை அனைத்தும் வார இறுதியில் சரியாகிடும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்:&amp;nbsp;&lt;/strong&gt; Mangal Gochar 2026: செவ்வாய் பெயர்ச்சி 2026.! இந்த 5 ராசிகளுக்கு ஆபத்து.! பணம், பதவிக்கு சிக்கல்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வேலையில் நல்ல முன்னேற்றத்தைக் கொண்டு வரும். உங்கள் பெயரும், புகழும் அதிகரிக்கும். இந்த வாரம், மிகவும் திருப்தியாக உணர்வீர்கள். காதல் வாழ்க்கையிலும் முன்னேற்றம் இருக்கும். உங்கள் ஆரோக்கியத்திலும் சிறப்பு கவனம் செலுத்துவீர்கள். ஆரோக்கியம் மேம்படும். குழந்தைகள் சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் சந்தோஷமான அனுபவங்கள் கிடைக்கும். பிள்ளைகளின் திருமணத்திற்கு வரன் தேடிக் கொண்டிருக்கும் பெற்றொர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்:&amp;nbsp;&lt;/strong&gt; Numerology: இந்த தேதியில பிறந்தவங்களுக்கு காசு பணம் நிறைய இருக்கும், ஆனா மன நிம்மதி சுத்தமா இருக்காது.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மீன ராசிக்காரர்களுக்கு, ஜூன் இரண்டாவது வாரம் திடீர் வெற்றி கிடைக்கும். பண வரவைப் பொறுத்தவரை, இந்த வாரம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு, உங்கள் குடும்பத்தில் நிம்மதியை உணர்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஆதரவும் உங்களுக்கும் கிடைக்கும். பிள்ளைகள் மற்றும் உடன் பிறந்தவர்களுடன் உறவு சுமூகமாக இருக்கும். இந்த வாரம் உங்கள் ஆரோக்கியம் படிப்படியாக முன்னேறும். எந்த முடிவையும் எடுப்பதற்கு முன்பு உங்கள் மனம் சொல்வதைக் கேளுங்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பொறுப்பு துறப்பு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.&lt;/strong&gt;&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[astrology]]></category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/weekly-horoscope-3-powerful-rajayogas-including-gajalakshmi-dhana-gauri-yoga-bring-luck-wealth-success-to-5-zodiac-signs-hvg8uui"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Astrology: இனி நல்ல நேரம் ஸ்டார்ட்.! நீசபங்கு ராஜயோகத்தால் 4 ராசிகளுக்கு ஜாக்பாட்.! உங்க ராசி இருக்கா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/good-times-begin-now-4-zodiac-signs-hit-the-jackpot-with-neecha-bhanga-raja-yoga-is-yours-one-of-them-zdhwou5</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/good-times-begin-now-4-zodiac-signs-hit-the-jackpot-with-neecha-bhanga-raja-yoga-is-yours-one-of-them-zdhwou5</guid>
            <pubDate>Mon, 08 Jun 2026 09:35:28 +0530</pubDate>
            <description><![CDATA[ஜூன் 2026 இறுதியில் உருவாகும் நீசபங்கு ராஜயோகத்தால் 4 ராசிக்காரர்களின் வாழ்வில் அடுத்த 3 மாதங்களுக்கு பெரும் மாற்றங்கள் நிகழவுள்ளன. தொழில், பொருளாதாரம், குடும்ப வாழ்க்கை ஆகியவற்றில் எதிர்பாராத முன்னேற்றங்களையும், வெற்றிகளையும் அவர்கள் காண்பார்கள்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktjn13yc2yf8ps4f3de0zs6j,imgname-chatgpt-image-jun-8--2026--09-08-20-am--2---1--1780889980876.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஜூன் 2026 இறுதியில் உருவாகும் நீசபங்கு ராஜயோகத்தால் 4 ராசிக்காரர்களின் வாழ்வில் அடுத்த 3 மாதங்களுக்கு பெரும் மாற்றங்கள் நிகழவுள்ளன. தொழில், பொருளாதாரம், குடும்ப வாழ்க்கை ஆகியவற்றில் எதிர்பாராத முன்னேற்றங்களையும், வெற்றிகளையும் அவர்கள் காண்பார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜோதிடத்தில் பல யோகங்கள் இருந்தாலும், சில யோகங்கள் வாழ்க்கையை முழுமையாக மாற்றும் சக்தி கொண்டதாக கருதப்படுகின்றன. அவற்றில் மிகவும் முக்கியமானது நீசபங்கு ராஜயோகம். பொதுவாக ஒரு கிரகம் நீசமாக இருக்கும் போது அதன் பலம் குறையும். ஆனால் குறிப்பிட்ட கிரக அமைப்புகளால் அந்த நீசத் தன்மை நீங்கி, அதே கிரகம் அசாதாரணமான நற்பலன்களை வழங்கும். இதுவே நீசபங்கு ராஜயோகம் எனப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;2026 ஜூன் மாத இறுதியில் கிரகங்களின் முக்கியமான இடமாற்றங்களால் சில ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் வலுப்பெறுகிறது. குறிப்பாக அடுத்த மூன்று மாதங்கள் (ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர்) வரை இவர்களின் வாழ்க்கையில் அதிரடி மாற்றங்கள் நிகழக்கூடும் என ஜோதிடர்கள் கணிக்கின்றனர். நீண்ட காலமாக தடைபட்டிருந்த காரியங்கள் நிறைவேறுவது, பணவரவு அதிகரிப்பது, பதவி உயர்வு கிடைப்பது, குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகுவது போன்ற பல நல்ல விஷயங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் யார் என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த நீசபங்கு ராஜயோகம் மிகப்பெரிய திருப்புமுனையை உருவாக்கும் என்றால் அது மிகையல்ல. கடந்த சில மாதங்களாக இருந்த பொருளாதார அழுத்தங்கள் படிப்படியாக குறையத் தொடங்கும் என்றும் தொட்டது எல்லாம் துலங்கும் எனவும் ஜோதிடர்கள் கூறுகின்றனர். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும் என்பதால் அதனை கெட்டியாக பிடித்துக்கொண்டு முன்னேற்றம் அடைவது நல்லது. எதிர்பாராத இடங்களில் இருந்து பணவரவு கிடைக்கலாம் என்பதால் அதனை தொழில்களில் முதலீடு செய்து லாபத்தை அறுவடை செய்யலாம். அதேபோல் குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வந்து நிம்மதியும் சந்தோஷமும் உங்களை வந்தயைடையும்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;வேலை செய்பவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெறலாம். வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகளும் வெற்றியடையக்கூடும். இவையெல்லாம் ஜூனில் தொடங்கி படிப்படியாக அடுத்த 3 மாதங்களுக்கு தொடரும் என்கின்றனர் ஜோதிடர்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கடக ராசிக்காரர்களுக்கான அடுத்த மூன்று மாதங்கள் மிகவும் சாதகமாக இருக்கும். கடந்த கால தடைகள் விலகி, புதிய வாய்ப்புகள் முந்தி நின்று முன்னேற்ற பாதையைத் திறக்கும். கல்வி மற்றும் தொழில் முயற்சிகளில் வெற்றியை தரும். வெளிநாட்டு தொடர்புகள் அல்லது ஒப்பந்தங்கள் மூலம் கூடுதல் லாபம் கிடைக்கலாம். முதலீடு செய்து காத்திருந்தவர்களுக்கு நல்ல வருமானம் வர வாய்ப்பு உள்ளது. குடும்ப உறவுகள் வலுப்பெறுவதால் உங்களுக்கு மனச் சாந்தியும் ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தினரின் ஊக்கத்தால் முக்கிய முடிவுகளை எளிதில் எடுக்க முடியும்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;திருமண முயற்சிகளில் ஏற்பட்ட தடை நீங்கி கெட்டி மேளம் கொட்டுவதற்கு நாள் குறிப்பீர்கள். உடல்நலத்துக்கும் முக்கியம் கொடுத்து அன்றாட பழக்கங்களை அமைத்து கொள்வீர்கள் என்றால் சாதக பலன்கள் காணப்படும். இந்த காலப்பகுதியில் மனநலம் மற்றும் நிதி முன்னேற்றம் இரண்டுமே இணைந்து உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களுக்கு வழிவகுக்கும்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;கடக ராசிக்காரர்களுக்கு இந்த மூன்று மாதங்கள் மிகவும் சிறப்பான காலமாக இருக்கும். வாழ்க்கையில் இருந்த தடைகள் விலகி முன்னேற்ற பாதை திறக்கும். வெளிநாட்டு தொடர்புகள் மூலம் லாபம் கிடைக்கலாம். கல்வி மற்றும் தொழில் தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். முதலீடு செய்தவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு அதிகரிக்கும்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;துலாம் ராசிக்காரர்களுக்கு நீசபங்கு ராஜயோகம் எதிர்பாராத அதிர்ஷ்டத்தை வழங்கும். இந்த காலகட்டம் உங்களுக்கு பொருளாதார ரீதியாக மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பணப் பிரச்சனைகள் தீர்ந்து, வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். கூட்டுத் தொழிலில் இருந்த மோதல்கள் மற்றும் தடைகள் குறைந்து, இணக்கமான சூழல் உருவாகும்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;புதிய முயற்சிகளைத் தொடங்க இது சிறந்த நேரம். திட்டமிட்டு வைத்திருந்த திட்டங்களை செயல்படுத்தினால் வெற்றி உறுதி என்கின்றனர் ஜோதிடர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். அவர்களின் உதவியால் பல சிக்கல்கள் எளிதில் தீரும். சமூகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் கணிசமாக உயரும். மற்றவர்கள் உங்களை நம்பி ஆலோசனை கேட்கும் நிலை உருவாகும்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;கலை, ஊடகம், தகவல் தொழில்நுட்பம், வடிவமைப்பு போன்ற துறைகளில் ஈடுபட்டிருப்பவர்கள் சிறப்பான வாய்ப்புகளைப் பெறுவார்கள். புதிய திட்டங்கள், பதவி உயர்வு அல்லது வருமான வளர்ச்சி எதிர்பார்க்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். ஆரோக்கியத்திலும் முன்னேற்றம் தெரியும். இந்த நேரத்தை சரியாகப் பயன்படுத்தி, தைரியமாக முன்னேறுங்கள். வெற்றி உங்களைத் தேடி வரும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மகர ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் வாழ்க்கையை உயர்த்தும் சக்தி கொண்டதாக அமையும். நீண்ட நாட்களாக காத்திருந்த வெற்றிகள் இப்போது கைகூடும். தொழில் வளர்ச்சி வேகமடையும். புதிய பொறுப்புகள், உயர் பதவிகள் மற்றும் அதிகாரங்கள் உங்களைத் தேடி வரும்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;உழைப்புக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கும். பணவரவு பல வழிகளில் அதிகரிக்கும். எதிர்பாராத வருமான ஆதாரங்கள் உருவாகும். கடன் சுமைகள் குறைந்து பொருளாதார நிலை வலுப்பெறும். சொத்து தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவுகள், வழக்குகள் அல்லது ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடியும். எதிர்பாராத லாபங்கள் மற்றும் இனிய செய்திகள் உங்கள் மனதை மகிழ்ச்சியில் நிரப்பும்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் நிலவும். உறவுகள் இனிமையாகும். மனைவி/மனைவியின் ஆதரவும், பிள்ளைகளின் முன்னேற்றமும் உங்களுக்கு பெருமை சேர்க்கும். சமூகத்தில் மரியாதை உயரும். புதிய திட்டங்கள் மற்றும் முதலீடுகளுக்கு இது சிறந்த காலம். ஆரோக்கியம் சீராக இருக்கும். தடைகள் தகர்க்கப்பட்டு, வெற்றிப் பாதை தெளிவாகும். இந்த நேரத்தை சரியாகப் பயன்படுத்தி உயரங்களைத் தொடுங்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த காலகட்டத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வது முக்கியம். அவசர முடிவுகளை தவிர்த்து திட்டமிட்டு செயல்பட்டால் பெரிய முன்னேற்றத்தை அடையலாம். குரு மற்றும் சுக்கிரனுக்கான வழிபாடுகளை மேற்கொள்வது மேலும் நன்மைகளை அதிகரிக்கும் என ஜோதிட நம்பிக்கை கூறுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;ஜூன் மாத இறுதியில் தொடங்கி அடுத்த மூன்று மாதங்கள் வரை உருவாகும் நீசபங்கு ராஜயோகம், ரிஷபம், கடகம், துலாம், மகரம் ஆகிய 4 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை தொடங்கக்கூடும். தொழில், பணம், குடும்பம், சமூக அந்தஸ்து என பல துறைகளில் முன்னேற்றம் காணும் வாய்ப்பு இருப்பதால், இந்த காலத்தை புத்திசாலித்தனமாக பயன்படுத்திக் கொண்டால் வெற்றியின் உச்சத்தை அடைய முடியும். &quot;இனி நல்ல நேரம் ஸ்டார்ட்&quot; என்று சொல்லும் அளவுக்கு அதிர்ஷ்ட கதவுகள் திறக்கும் காலமாக இது அமையலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[astrology]]></category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/good-times-begin-now-4-zodiac-signs-hit-the-jackpot-with-neecha-bhanga-raja-yoga-is-yours-one-of-them-zdhwou5"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Ethirneechal Thodargiradhu : தர்ஷினி பற்றி கிடைத்த ஹிண்ட்... அருந்ததியுடன் ஆக்‌ஷனில் இறங்கிய ஜனனி]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/ethirneechal-thodargiradhu-serial-08-june-2026-episode-janani-got-hint-about-dharshini-from-arundhathi-c8z3hdu</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/ethirneechal-thodargiradhu-serial-08-june-2026-episode-janani-got-hint-about-dharshini-from-arundhathi-c8z3hdu</guid>
            <pubDate>Mon, 08 Jun 2026 09:35:14 +0530</pubDate>
            <description><![CDATA[Ethirneechal Thodargiradhu Serial Today Episode : எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் காணாமல் போன தர்ஷினி பற்றி ஜனனிக்கு மிகப்பெரிய ஹிண்ட் ஒன்று கிடைத்துள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktjp8re07ga5cqg525z4k85x,imgname-ethirneechal-thodargiradhu---2026-06-08t092836.871-1780891279808.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Ethirneechal Thodargiradhu Serial Today Episode : எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் காணாமல் போன தர்ஷினி பற்றி ஜனனிக்கு மிகப்பெரிய ஹிண்ட் ஒன்று கிடைத்துள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;எதிர்நீச்சல் தொடர்கிறது&lt;/strong&gt; சீரியலில் தர்ஷினி காணாமல் போன நிலையில், அவரை ஆதி குணசேகரன் ஒரு பக்கம் வலைவீசி தேடிவர, மறுபுறம் ஜனனி, தர்ஷினியை தேடி சிறுமலை காட்டுக்கு சென்றிருக்கிறார். அங்கு தான் தர்ஷினியின் தோழன் சுவாமிநாதன் சொந்த ஊர் சிறுமலை என்பதால், அவரைத் தேடி அங்கு சென்றுள்ளார் ஜனனி. அங்கு அருந்ததி என்கிற பெண் ஜனனியை பத்திரமாக அழைத்து சென்று தன்னுடைய வீட்டில் தங்க வைத்திருக்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Ethirneechal Thodargiradhu : ஆதாரத்துடன் ஆதி குணசேகரனை மிரட்டும் சக்தி... ஜனனிக்கு என்ன ஆச்சு?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜனனி சிறுமலையில் இருக்கும் தகவல் தெரிந்து அவரை அந்த மலை கிராமத்தை விட்டு வெளியேறுமாரு சொல்லி இரு நபர்கள் வந்து பிரச்சனை பண்ணுகிறார்கள். அப்போது ஜனனியை அங்கிருந்து அனுப்ப முடியாது என அருந்ததி சொல்லிக் கொண்டிருக்க, அந்த நபர்கள் தர தரவென ஜனனியை இழுத்துச் செல்கிறார்கள். அதைப் பார்த்து கோபமடைந்த அருந்ததி உடனே துப்பாக்கியை எடுத்து, அந்த இரு நபர்களையும் சுட்டுவிடுகிறார். அவர் சுட்டதில் அந்த இரு நபர்களும் சம்பவ இடத்திலேயே பலியாகிவிடுகிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதையடுத்து மறுதினம் அருந்ததியோடு சென்று அவரின் கதைகளை கேட்டு தெரிந்துகொள்கிறார் ஜனனி. அப்போது தான் தர்ஷினியை தேடி வந்திருப்பதாக சொல்லி தர்ஷினியின் புகைப்படத்தை காட்டுகிறார். அதைப்பார்த்த அருந்ததி, அந்த பொண்ணை நான் பாத்திருக்கேன் என கூறுகிறார். எப்போ என ஜனனி கேட்க, கடந்த சில தினங்களுக்கு முன் தான் சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது ஒரு கார் கவிழ்ந்து கிடந்தது. அந்த காரில் சில ஆண்களும், இந்த பெண்ணும் இருந்தனர் என கூறுகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அப்போது அந்த காரில் இருந்த பசங்களிடம் இந்த புள்ளைக்கு என்னாச்சு டா என கேட்டதாகவும், அதற்கு அவர்கள் அந்த பொண்ணு எங்க தங்கச்சி தான். அவளை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போறோம்னு சொன்னாங்க. சரி மயங்கி கிடக்குறா சீக்கிரம் கூட்டிட்டு போங்கனு சொல்லிட்டு நான் அங்கிருந்து கிளம்பி வந்துட்டேன் என கூறுகிறார். இதைக்கேட்டு ஷாக் ஆன ஜனனி, அந்த விபத்து நடந்த இடத்துக்கு தன்னை அழைத்து செல்லுமாறு கூறுகிறார். இதையடுத்து தர்ஷினியை தேடி அருந்ததி உடன் கிளம்பிச் செல்கிறார் ஜனனி.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மறுபுறம் ஈஸ்வரி வீட்டில் தர்ஷினியை நினைத்துக் கொண்டே சாப்பிடாமல் இருந்ததால் மயக்கம் போட்டு விழுந்து கிடக்க, அவரை ஆதி குணசேகரன் தண்ணீர் தெளித்து எழுப்பி அவரிடம் உனக்கு என்ன ஆச்சு என கேட்கிறார். எனக்கு என் பொண்ணு வீட்டுக்கு வந்து சேரணும் அதுவரைக்கும் எனக்கு நிம்மதியே இல்லை. நம்ம பொண்ணு வந்திரும் என சொல்லி அவரை ஆஸ்வாசப்படுத்துகிறார் குணசேகரன். ஜனனி தனக்கு கிடைத்துள்ள ஹிண்ட் மூலம் தர்ஷினியை ஆபத்தில் இருந்து மீட்பாரா? இல்லையா? என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[television]]></category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/ethirneechal-thodargiradhu-serial-08-june-2026-episode-janani-got-hint-about-dharshini-from-arundhathi-c8z3hdu"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Siragadikka Aasai : காதல் விவகாரத்தை போட்டுடைத்த சத்யா... ரேகாவின் தந்தை எடுத்த தடாலடி முடிவு]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-08-june-2026-episode-rekha-father-shocking-decision-in-sathya-love-issue-ihrouys</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-08-june-2026-episode-rekha-father-shocking-decision-in-sathya-love-issue-ihrouys</guid>
            <pubDate>Mon, 08 Jun 2026 08:32:57 +0530</pubDate>
            <description><![CDATA[Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் ரேகாவின் தந்தையை சந்தித்த சத்யா, தான் ரேகாவை காதலிக்கும் விஷயத்தை போட்டுடைத்துள்ளார். இதன்பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktjjrem091jftpskdq3d6ky9,imgname-siragadikka-aasai---2026-06-08t082751.561-1780887599744.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் ரேகாவின் தந்தையை சந்தித்த சத்யா, தான் ரேகாவை காதலிக்கும் விஷயத்தை போட்டுடைத்துள்ளார். இதன்பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;சிறகடிக்க ஆசை&lt;/strong&gt; சீரியலில் சிந்தாமணியின் மகள் ரேகாவும், மீனாவின் தம்பி சத்யாவும் காதலித்து வரும் விஷயம் அனைவரும் அறிந்ததே. இந்த விஷயம் சிந்தாமணிக்கும் அவருடைய கணவருக்கும் தெரிந்ததை அடுத்து, அவர்கள் ரேகாவை ஐதராபாத்துக்கு அனுப்பிவைத்துவிட்டனர். தற்போது ரேகா அங்கு ஹவுஸ் அரெஸ்ட் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், இந்த விவகாரத்தை மீனாவிடம் சொன்ன சத்யா, ரேகா இல்லேனா நானும் செத்துருவேன் என்று எமோஷனலாக பேசுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Siragadikka Aasai : சிந்தாமணியை வம்பிழுத்த மீனா... வீட்டை மீட்ட குஷியில் முத்து; வயித்தெரிச்சலில் மனோஜ்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மீனாவும், அவருடைய அம்மாவும், சத்யாவை பிரையின் வாஷ் பண்ண பார்க்கிறார்கள். ரேகாவை மறந்துவிடு, அவங்க ரொம்ப மோசமானவங்க, அவங்களுக்கும் நமக்கும் செட் ஆகாது என சொல்கிறார். அதற்கு சத்யா, இந்த விஷயத்தை மாமாவிடம் சொல்லவா என கேட்க, தயவு செஞ்சு உங்க மாமாகிட்ட மட்டும் சொல்லிடாத என ஸ்ட்ரிக்ட் ஆக சொல்லிவிடுகிறார் மீனா. ஆனால் அக்கா பேச்சை கேட்காத சத்யா, நேராக முத்துவிடம் சென்று விஷயத்தை சொல்லிவிடுகிறார். அதற்கு முத்து, நீ நேரடியாக சென்று அவங்க அப்பாகிட்ட பேசு என சொல்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரேகாவின் அப்பா என் மீது ரொம்ப மரியாதை வச்சிருக்கார், நான் எப்படி பேசுவேன், எனக்காக நீங்க வந்து பேசுறீங்களா மாமா என கேட்கிறார் சத்யா. அதற்கு முத்து, நான் உனக்கு துணைக்கு வேணா வர்றேன், ஆனா நான் பேசமாட்டேன், நீ தான் போய் பேசணும் என கூறுகிறார். இதையடுத்து சத்யா ரேகாவின் அப்பாவை சந்தித்து பேச செல்கிறார். அங்கு சென்று அவரிடம் எப்படி சொல்வது என தெரியாமல் தயங்கி நிற்கிறார் சத்யா. பின்னர் அவர் சத்யாவுக்கு தண்ணி கொடுத்து என்ன ஆச்சு என கேட்க, தான் ரேகாவை காதலிக்கும் விஷயத்தை சொல்லிவிடுகிறார் சத்யா.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதற்கு அவர் இப்படி திடீர்னு வந்து சொல்லுற எனக்கு கொஞ்சம் டைம் வேண்டும் என கேட்கிறார். ரேகா எனக்கு ஒரே பொண்ணு அதனால் அவளுடைய வாழ்க்கை பத்தி யோசிக்க எனக்கு டைம் கொடு என சொல்கிறார். அதற்கு சத்யாவும் ஓகே சொல்ல, பின்னர் முத்துவிடம் வந்து நடந்ததை கூறுகிறார். அவரும் உங்க ஓனர் நல்ல மனுஷன் டா நல்ல முடிவா தான் சொல்லுவாரு என சொல்லிவிட்டு கிளம்புகிறார். மறுபுறம் ரோகிணி ஒரு கார்பரேட் விழாவில், ஜோடியாக கலந்துகொள்ள மனோஜுக்கு போன் போட்டு வரச் சொல்ல, மனோஜும் அந்த விழாவுக்கு கிளம்புகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அந்த நேரம் பார்த்து விஜயா, மனோஜிடம் வந்து, தன்னுடைய தோழி ஒரு விழாவுக்கு அழைத்திருப்பதாகவும், அங்கு சென்றால் சிறந்த அம்மா, பையன் விருது நமக்கு கிடைக்கும், உடனே கிளம்பு என மனோஜை அழைக்க, அவர் என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியாமல் விஜயாவுடன் கிளம்பிச் செல்கிறார். பின்னர் தான் தெரிகிறது, ரோகிணி அழைத்த பார்ட்டிக்கு தான் விஜயாவும் வந்திருக்கிறார். அங்கு ரோகிணியை பார்த்ததும் விஜயாவுக்கு கோபம் உச்சிக்கு ஏறுகிறது. இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதன்பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[television]]></category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-08-june-2026-episode-rekha-father-shocking-decision-in-sathya-love-issue-ihrouys"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Best Mileage Bikes: 1 லி. பெட்ரோலில் 75 கி.மீ பயணம்.. பணத்தை மிச்சப்படுத்தும் டாப் 5 மைலேஜ் பைக்ஸ்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/auto/cut-your-fuel-bills-5-best-mileage-bikes-offering-up-to-75-kmpl-gfobgne</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/auto/cut-your-fuel-bills-5-best-mileage-bikes-offering-up-to-75-kmpl-gfobgne</guid>
            <pubDate>Mon, 08 Jun 2026 08:07:19 +0530</pubDate>
            <description><![CDATA[Top 5 Mileage Bikes: பெட்ரோல் விலை உயர்ந்து வரும் நிலையில், லிட்டருக்கு 70 முதல் 75 கி.மீ வரை மைலேஜ் வழங்கும் பைக்குகளுக்கு மக்களிடம் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. குறைந்த எரிபொருள் செலவில் அதிக தூரம் பயணிக்க உதவும் டாப் 5 மைலேஜ் பைக்குகள்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktjh0kgs4x6zvddeefvxzmq9,imgname-best-mileage-bikes-1780885769752.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Top 5 Mileage Bikes: பெட்ரோல் விலை உயர்ந்து வரும் நிலையில், லிட்டருக்கு 70 முதல் 75 கி.மீ வரை மைலேஜ் வழங்கும் பைக்குகளுக்கு மக்களிடம் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. குறைந்த எரிபொருள் செலவில் அதிக தூரம் பயணிக்க உதவும் டாப் 5 மைலேஜ் பைக்குகள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவில் பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், அதிக மைலேஜ் தரும் இருசக்கர வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தினசரி அலுவலகம், கல்லூரி மற்றும் நீண்ட தூர பயணங்களுக்கு பைக்கைப் பயன்படுத்துபவர்கள், குறைந்த எரிபொருள் செலவில் அதிக தூரம் செல்லக்கூடிய மாடல்களைத் தேர்வு செய்து வருகின்றனர். தற்போது சந்தையில் கிடைக்கும் சில கம்யூட்டர் பைக்குகள் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 70 முதல் 75 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்குவதாக நிறுவனம் தெரிவிக்கிறது. அவற்றில் சிறந்த 5 பைக்குகள் குறித்து பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பைக்குகளில் முக்கியமானது Hero Splendor Plus. 97.2cc எஞ்சின் கொண்ட இந்த பைக், எளிய பராமரிப்பு செலவு மற்றும் நீடித்த செயல்திறனுக்காக பிரபலமானது. நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த பைக் ஒரு லிட்டருக்கு சுமார் 70 முதல் 75 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்கக்கூடும். தினசரி பயன்பாட்டிற்கு மிகவும் ஏற்ற மாடலாக இது பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;Hero நிறுவனத்தின் மற்றொரு பிரபல மாடல் HF Deluxe. 97.2cc எஞ்சினுடன் வரும் இந்த பைக், i3S தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இதன் மூலம் தேவையற்ற நேரங்களில் எஞ்சின் தானாக நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்குவதால் எரிபொருள் சேமிக்கப்படுகிறது. சராசரியாக 70 கிலோமீட்டருக்கு மேல் மைலேஜ் வழங்கும் திறன் கொண்டதாக நிறுவனம் கூறுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மைலேஜ் பைக்குகள் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது Bajaj Platina. 102cc எஞ்சின் கொண்ட இந்த பைக், வசதியான சஸ்பென்ஷன் மற்றும் குறைந்த எரிபொருள் நுகர்வுக்காக அறியப்படுகிறது. நிறுவனம் தெரிவித்துள்ள ARAI சான்றளிக்கப்பட்ட தகவலின்படி, ஒரு லிட்டருக்கு சுமார் 70 கி.மீ.க்கும் மேல் மைலேஜ் வழங்குகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;TVS நிறுவனத்தின் Sport மாடல், குறைந்த விலையில் அதிக மைலேஜ் தேடுபவர்களுக்கு நல்ல தேர்வாக உள்ளது. 109.7cc எஞ்சினுடன் வரும் இந்த பைக், இலகுவான வடிவமைப்பால் எரிபொருள் சிக்கனத்தை அதிகரிக்கிறது. ARAI தரவுகளின்படி, இது சுமார் 70 கி.மீ.க்கும் அதிகமான மைலேஜ் வழங்கும் திறன் கொண்டது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சமீப காலத்தில் அறிமுகமான Honda Shine 100, 98.98cc எஞ்சினுடன் வருகிறது. ஹோண்டாவின் நம்பகத்தன்மை மற்றும் குறைந்த பராமரிப்பு செலவு ஆகியவை இந்த பைக்கின் பலமாக உள்ளன. நிறுவனத்தின் தகவல்படி, இது சிறந்த எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் கம்யூட்டர் பைக்குகளில் ஒன்றாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பைக் நிறுவனங்கள் குறிப்பிடும் மைலேஜ் பெரும்பாலும் ARAI சோதனை அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. ஆனால் நிஜ வாழ்க்கையில் சாலை நிலை, போக்குவரத்து நெரிசல், ஓட்டும் முறை, டயர் காற்றழுத்தம் மற்றும் பராமரிப்பு போன்ற காரணிகளால் மைலேஜ் மாறுபடலாம். எனவே ஒரு பைக் 75 கி.மீ. மைலேஜ் தரும் என்று கூறப்பட்டாலும், நடைமுறையில் அதைவிட சற்று குறைவாக இருக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;குறைந்த செலவில் அதிக தூரம் பயணிக்க விரும்புபவர்களுக்கு Hero Splendor Plus, Hero HF Deluxe, Bajaj Platina 100, TVS Sport மற்றும் Honda Shine 100 போன்ற மாடல்கள் சிறந்த தேர்வுகளாக உள்ளன. வாங்கும் முன் மைலேஜ் மட்டுமின்றி, பராமரிப்பு செலவு, சேவை மைய வசதி மற்றும் பயண வசதி போன்ற அம்சங்களையும் கவனத்தில் கொள்வது அவசியம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[auto]]></category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/auto/cut-your-fuel-bills-5-best-mileage-bikes-offering-up-to-75-kmpl-gfobgne"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Viral Food News: பிரியாணி போடும்போது வர்ற அந்த 'டங் டங்' சத்தம்... பின்னாடி இப்படி ஒரு மேட்டரா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/ever-wonder-why-biryani-shops-make-that-tang-tang-sound-here-is-the-surprising-reason-rxl9126</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/ever-wonder-why-biryani-shops-make-that-tang-tang-sound-here-is-the-surprising-reason-rxl9126</guid>
            <pubDate>Mon, 08 Jun 2026 07:34:27 +0530</pubDate>
            <description><![CDATA[Biryani Marketing Trick: பிரியாணி கடைகளில் பரிமாறும் போது கேட்கும் "டங்... டங்..." சத்தம் வெறும் சத்தம் அல்ல. வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்து, பசியைத் தூண்டும் ஒரு சுவாரசியமான வியாபார உத்தி என்பதே பலருக்கும் தெரியாத உண்மை!]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktjf7stbycpwnx76axjcg7ng,imgname-biryani-shop-secret--2--1780883908427.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Biryani Marketing Trick: பிரியாணி கடைகளில் பரிமாறும் போது கேட்கும் &quot;டங்... டங்...&quot; சத்தம் வெறும் சத்தம் அல்ல. வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்து, பசியைத் தூண்டும் ஒரு சுவாரசியமான வியாபார உத்தி என்பதே பலருக்கும் தெரியாத உண்மை!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிரியாணி கடைகளுக்கு சென்றிருப்பவர்கள் ஒரு விஷயத்தை நிச்சயம் கவனித்திருப்பார்கள். பெரிய அலுமினிய அல்லது செம்பு அண்டாவில் இருக்கும் பிரியாணியை கரண்டியால் கிளறி, தட்டில் பரிமாறும் போது &quot;டங்... டங்...&quot; என்று சத்தம் எழுப்புவார்கள். சில கடைகளில் இந்த சத்தம் திட்டமிட்டே உருவாக்கப்படுவதைப் போல கூட தோன்றும். இதற்கு பின்னால் உண்மையில் என்ன காரணம் இருக்கிறது?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உணவகத் துறையில், சத்தமும் ஒரு மார்க்கெட்டிங் கருவியாகவே பயன்படுத்தப்படுகிறது. பிரியாணி பரிமாறும் போது எழும் அந்த உலோகச் சத்தம், அருகில் இருக்கும் வாடிக்கையாளர்களின் கவனத்தை உடனடியாக ஈர்க்கும். &quot;இப்போது சூடான பிரியாணி பரிமாறப்படுகிறது&quot; என்ற உணர்வை அது ஏற்படுத்துகிறது.&lt;/p&gt;&lt;p&gt;பல உணவக உரிமையாளர்கள் கூறுவதுபோல், இந்த சத்தம் மற்ற வாடிக்கையாளர்களிடமும் பிரியாணி சாப்பிட வேண்டும் என்ற ஆசையை தூண்டுகிறது. உணவின் மணம் போலவே, இந்த ஒலியும் ஒரு மனவியல் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பெரிய அண்டாக்களில் பிரியாணி தயாரிக்கும் பழக்கம் முகலாய மற்றும் ஹைதராபாத் சமையல் மரபுகளிலிருந்து வந்ததாக கருதப்படுகிறது. அப்போது பெரிய உலோக பாத்திரங்களில் சமைக்கப்பட்ட பிரியாணியை ஆழத்திலிருந்து எடுக்கும்போது இயல்பாகவே சத்தம் எழுந்தது.&lt;/p&gt;&lt;p&gt;காலப்போக்கில், அந்த சத்தம் பிரியாணி கடைகளின் அடையாளமாக மாறிவிட்டது. இன்று பல இடங்களில் அது ஒரு &quot;ஸ்டைல்&quot; ஆகவே தொடர்கிறது.&lt;/p&gt;&lt;h3&gt;&lt;strong&gt;சூடான பிரியாணி தயாராக இருப்பதற்கான சிக்னல்&lt;/strong&gt;&lt;/h3&gt;&lt;p&gt;சில கடைகளில், புதிய பிரியாணி அண்டா திறக்கப்பட்டிருப்பதையோ அல்லது புதிய தொகுப்பு பரிமாறப்படுவதையோ பணியாளர்கள் ஒருவருக்கொருவர் தெரிவிக்க இந்த சத்தம் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு வகையான சமையலறை சிக்னலாகவும் செயல்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மனிதர்களின் மூளை, உணவு தொடர்பான ஒலி மற்றும் மணத்திற்கு விரைவாக பதிலளிக்கிறது. சிஸ்லிங் சவுண்ட், கிரில் சத்தம் அல்லது பிரியாணி அண்டாவின் உலோக ஒலி போன்றவை உணவின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கின்றன. இதனால் உணவு இன்னும் சுவையாக இருக்கும் என்ற மனநிலை உருவாகிறது.&lt;/p&gt;&lt;h3&gt;&lt;strong&gt;உண்மை என்ன?&lt;/strong&gt;&lt;/h3&gt;&lt;p&gt;பிரியாணி பரிமாறும்போது சத்தம் எழுப்புவது குறித்து எந்த அதிகாரப்பூர்வ விதிமுறையோ அல்லது கட்டாய காரணமோ இல்லை. ஆனால்:&lt;/p&gt;&lt;p&gt;வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்க&lt;/p&gt;&lt;p&gt;சூடான பிரியாணி தயாராக இருப்பதை உணர்த்த&lt;/p&gt;&lt;p&gt;பாரம்பரியத்தை தொடர&lt;/p&gt;&lt;p&gt;உணவின் மீதான ஆர்வத்தை அதிகரிக்க&lt;/p&gt;&lt;p&gt;என்ற காரணங்களால் பல பிரியாணி கடைகளில் இந்த நடைமுறை தொடர்ந்து வருகிறது.&lt;/p&gt;&lt;p&gt;அதனால் அடுத்த முறை பிரியாணி கடையில் &quot;டங்... டங்...&quot; என்ற சத்தம் கேட்டால், அது வெறும் சத்தம் மட்டுமல்ல; பல ஆண்டுகளாக உணவகங்கள் பயன்படுத்தி வரும் ஒரு சுவாரசியமான அனுபவ மார்க்கெட்டிங் உத்தி என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்!&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[life-style]]></category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/ever-wonder-why-biryani-shops-make-that-tang-tang-sound-here-is-the-surprising-reason-rxl9126"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Today Rasi Palan: இன்று சுக்கிரன் பெயர்ச்சி.! கடக ராசியில் கஜலக்ஷ்மி ராஜயோகம்.! 12 ராசிகளுக்குமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/today-rasi-palan-shukra-gochar-in-cancer-formed-gajalakshmi-rajayoga-astrology-predictions-for-all-12-zodiac-signs-k7mdzki</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/today-rasi-palan-shukra-gochar-in-cancer-formed-gajalakshmi-rajayoga-astrology-predictions-for-all-12-zodiac-signs-k7mdzki</guid>
            <pubDate>Mon, 08 Jun 2026 06:00:48 +0530</pubDate>
            <description><![CDATA[Today Rasi Palan: ஜூன் 08, 2026 அன்று, செல்வம் மற்றும் ஆடம்பரத்தின் அதிபதியான சுக்கிர பகவான் மிதுன ராசியிலிருந்து விலகி, சந்திரனின் வீடான கடக ராசிக்குள் நுழைகிறார். அங்கு ஏற்கனவே அமர்ந்திருக்கும் சுபகிரகமான குரு பகவானுடன் சுக்கிரன் இணைகிறார்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kthn18mxtvrjzkrrwzcq6z6g,imgname-today-rasi-palan--8--1780856431261.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Today Rasi Palan: ஜூன் 08, 2026 அன்று, செல்வம் மற்றும் ஆடம்பரத்தின் அதிபதியான சுக்கிர பகவான் மிதுன ராசியிலிருந்து விலகி, சந்திரனின் வீடான கடக ராசிக்குள் நுழைகிறார். அங்கு ஏற்கனவே அமர்ந்திருக்கும் சுபகிரகமான குரு பகவானுடன் சுக்கிரன் இணைகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜூன் 08, 2026 அன்று, நவகிரகங்களில் செல்வம் மற்றும் ஆடம்பரத்தின் அதிபதியான சுக்கிர பகவான் மிதுன ராசியிலிருந்து விலகி, கடக ராசிக்குள் நுழைகிறார். அங்கு ஏற்கனவே அமர்ந்திருக்கும் சுபகிரகமான குரு பகவானுடன் சுக்கிரன் இணைகிறார். ஜோதிட சாஸ்திரத்தில் இந்த இரு பெரும் சுபகிரகங்களின் சேர்க்கை மிகவும் விசேஷமானது. குரு மற்றும் சுக்கிரன் இணைவதால் &quot;கஜலக்ஷ்மி ராஜயோகம்&quot; உருவாகிறது. இந்த அபூர்வ யோகத்தால் 12 ராசிகளுக்கும் கிடைக்கப்போகும் விரிவான பலன்கள் மற்றும் அதற்கான எளிய பரிகாரங்களை கீழே காண்போம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்: &lt;/strong&gt;Astrology by Date of Birth: உங்க பெயர் இந்த 4 எழுத்துல தொடங்குதா? அப்ப வெற்றி உங்க பக்கம்தான்.! சீக்கிரம் பணக்காரர் ஆகிடுவீங்க.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;ul&gt; &lt;li&gt;கஜலக்ஷ்மி ராஜயோகத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். மேலும் சுக ஸ்தானத்தில் குரு சுக்கிரன் நடைபெறுவதால் நீண்ட நாள் உடல்நலக் கோளாறுகள் நீங்கும். தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி மகிழ்ச்சி பெருகும். வசதி வாய்ப்புகள் கணிசமாக உயரும்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;பரிகாரம்:&lt;/strong&gt; மகாலக்ஷ்மி தாயாருக்கு மல்லிகைப்பூ சாற்றி நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்:&lt;/strong&gt; Numerology: இந்த தேதியில பிறந்தவங்களுக்கு காசு பணம் நிறைய இருக்கும், ஆனா மன நிம்மதி சுத்தமா இருக்காது.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;ul&gt; &lt;li&gt;உங்கள் ராசி நாதன் சுக்கிரன் என்பதால் உங்களின் தைரியமும், சுறுசுறுப்பும் அதிகரிக்கும். ரிஷப ராசிக்கு 3-ம் வீடான வீரிய மற்றும் சகோதர ஸ்தானத்தில் இந்த யோகம் அமைகிறது. எனவே இளைய சகோதர, சகோதரிகளால் நன்மை உண்டாகும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்குப் புகழும், பணவரவும் தேடி வரும்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;பரிகாரம்:&lt;/strong&gt; குரு பகவானுக்கு கொண்டைக்கடலை மாலை அணிவித்து அர்ச்சனை செய்யவும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்:&lt;/strong&gt; Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மேல காதல் உறவுகள் இருக்குமாம்.! இவங்ககிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;ul&gt; &lt;li&gt;மிதுன ராசிக்காரர்களுக்கு &lt;strong&gt;கஜலக்ஷ்மி ராஜயோகம்&lt;/strong&gt; பண மூட்டையை அள்ளித்தரப் போகிறது. மிதுன ராசியினரின் பொருளாதார நிலை இன்று முதல் &amp;nbsp;மிகவும் வலுவடையும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த கடன்கள் வசூலாகும். பேச்சால் காரியங்களை சாதிப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;பரிகாரம்:&lt;/strong&gt; பசு மாட்டிற்கு அகத்திக் கீரை அல்லது பழங்கள் கொடுத்து வரவும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்: &lt;/strong&gt;Kaal Sarp Yog: ராகு கேதுவுக்கு இடையில் சிக்கும் கிரகங்கள்.! உருவாகும் கால சர்ப்ப யோகம்.! எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;ul&gt; &lt;li&gt;உங்கள் ராசியிலேயே (1-ம் வீடு) குரு-சுக்கிர சேர்க்கை மற்றும் &lt;strong&gt;கஜலக்ஷ்மி ராஜயோகம்&lt;/strong&gt; உருவாகிறது. இந்த பெயர்ச்சியின் உச்சகட்ட பலனைப் பெறப்போவது நீங்கள்தான். உங்கள் முகத்தில் பொலிவும், ஆளுமையும் கூடும். சமுதாயத்தில் அந்தஸ்து உயரும். பிரிந்திருந்த தம்பதியர் ஒன்று சேர்வர். புதிய தொழில் முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;பரிகாரம்:&lt;/strong&gt; சுக்கிர பகவானுக்கு வெள்ளை மொச்சை நைவேத்தியம் செய்து வழிபடவும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்:&lt;/strong&gt; Mangal Gochar 2026: செவ்வாய் பெயர்ச்சி 2026.! இந்த 5 ராசிகளுக்கு ஆபத்து.! பணம், பதவிக்கு சிக்கல்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;ul&gt; &lt;li&gt;சிம்ம ராசியின் விரய ஸ்தானத்தில் &lt;strong&gt;கஜலக்ஷ்மி ராஜயோகம்&lt;/strong&gt; ஏற்படுகிறது. சுப விரயங்கள் அதிகரிக்கும். வீடு கட்டுவது, சுப காரியங்கள் நடத்துவது போன்ற நல்ல விஷயங்களுக்குப் பணம் செலவாகும். வெளிநாடு செல்ல முயன்றவர்களுக்கு விசா போன்ற அனுமதிகள் எளிதில் கிடைக்கும். ஆன்மீகப் பயணம் மேற்கொள்வீர்கள்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;பரிகாரம்: &lt;/strong&gt;சூரிய நமஸ்காரம் செய்து, ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் படித்து வரவும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்: &lt;/strong&gt;Shukra Gochar: சுக்கிரன் பெயர்ச்சி.! இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஒரு மாசம் கொண்டாட்டம் தான்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;ul&gt; &lt;li&gt;கன்னி ராசியின் லாப ஸ்தானத்தில் &lt;strong&gt;கஜலக்ஷ்மி ராஜயோகம்&lt;/strong&gt; நிகழ்கிறது. &amp;nbsp;எனவே தொட்டதெல்லாம் பொன்னாகும் காலம் இது. பல வழிகளில் இருந்தும் பணவரவு இருக்கும். மூத்த சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட இரட்டிப்பு லாபம் கிட்டும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;பரிகாரம்: &lt;/strong&gt;மகாவிஷ்ணுவுக்கு துளசி இலைகளால் அர்ச்சனை செய்து வணங்கி, நெய் தீபமிட்டு வரவும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்:&lt;/strong&gt; Trigrahi Yoga 2026: 12 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே ராசியில் அமரும் 3 சுப கிரகங்கள்.! 4 ராசிகளுக்கு ராஜயோகம்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;ul&gt; &lt;li&gt;உங்கள் ராசி நாதனான சுக்கிரன் பத்தில் (தொழில் ஸ்தானம்) அமர்வதால், உத்தியோகத்தில் பெரிய மாற்றம் உண்டாகும். கஜலக்ஷ்மி ராஜயோகத்தால் புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். அரசு வழியில் ஆதாயமும், பதவியுயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;பரிகாரம்: &lt;/strong&gt;ஏழைப் பெண்களுக்கு மங்களப் பொருட்களை (மஞ்சள், குங்குமம், வளையல்) தானமாக வழங்கவும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள்: &lt;/strong&gt;Numerology: உங்களுக்கு Love Marriage-ஆ? Arranged Marriage-ஆ? உங்கள் பெயரின் முதல் எழுத்தை வச்சே கண்டுபிடிக்கலாம்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;ul&gt; &lt;li&gt;விருச்சிக ராசிக்கு 9-ம் வீடான பாக்கிய ஸ்தானத்தில் இந்த யோகம் உருவாகிறது. அதிர்ஷ்டம் உங்கள் கதவைத் தட்டும் நேரம் இது. தந்தையின் உடல்நலம் சீராகும், அவரிடமிருந்து சொத்து சேர்க்கை உண்டாகலாம். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வரும். உயர்கல்வி கற்க நினைக்கும் மாணவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;பரிகாரம்:&lt;/strong&gt; சித்தர்கள் அல்லது ஆன்மீகப் பெரியோர்களின் ஜீவ சமாதிகளுக்குச் சென்று வணங்கி வரவும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;img&gt;&lt;ul&gt; &lt;li&gt;தனுசு ராசிக்கு 8-ம் வீடான ஆயுள் மற்றும் அஷ்டம ஸ்தானத்தில் இந்த &lt;strong&gt;கஜலக்ஷ்மி ராஜயோகம்&lt;/strong&gt; ஏற்படுகிறது. எட்டாம் இடம் மறைவு ஸ்தானம் என்றாலும், அங்கு இரு சுபகிரகங்கள் இணைவதால் &quot;விபரீத ராஜயோக&quot; பலன்கள் கிடைக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டம், இன்சூரன்ஸ் பணம் அல்லது உயில் மூலம் சொத்துக்கள் கிடைக்க வாய்ப்புண்டு. ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனம் தேவை.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;பரிகாரம்:&lt;/strong&gt; 'ஓம் நமோ நாராயணாய' என்னும் மந்திரத்தை 108 முறை ஜெபிக்கவும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;img&gt;&lt;ul&gt; &lt;li&gt;மகர ராசிக்கு 7-ம் வீடான களத்திர ஸ்தானத்தில்&lt;strong&gt; கஜலக்ஷ்மி ராஜயோகம்&lt;/strong&gt; நிகழ்கிறது. நீண்ட நாட்களாகத் தடைப்பட்டு வந்த திருமண வரன்கள் கைகூடும். கணவன்-மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கூட்டு வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்குப் பெரிய லாபமும், புதிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;பரிகாரம்: &lt;/strong&gt;காலையில் துளசி செடி முன் நெய் தீபம் ஏற்றி, வலம் வந்து வணங்கவும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;img&gt;&lt;ul&gt; &lt;li&gt;கும்ப ராசிக்கு 6-ம் வீடான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் &lt;strong&gt;கஜலக்ஷ்மி ராஜயோகம்&lt;/strong&gt; அமைகிறது. ஆறாம் இடத்தில் சுபகிரகங்கள் இணைவதால் உங்களின் நீண்ட நாள் கடன்கள் யாவும் அடைபடும். உங்களை எதிர்த்த எதிரிகள் தானாகவே பின்வாங்குவார்கள். தீராத நோய்களின் வீரியம் குறைந்து உடல்நலம் தேறும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;பரிகாரம்:&lt;/strong&gt; சிவபெருமானுக்கு இளநீர் அபிஷேகம் செய்து வழிபடுவது நலம் தரும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;img&gt;&lt;ul&gt; &lt;li&gt;உங்கள் ராசி நாதன் குரு பகவான் 5-ல் சுக்கிரனுடன் இணைவது அற்புத பலன்களைத் தரும். புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்குக் குலவிளக்காகக் குழந்தை பிறக்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்து விவகாரங்களில் சுமூக முடிவு ஏற்படும். கலை, இலக்கியத் துறையினருக்குப் பாராட்டுகள் குவியும்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;பரிகாரம்:&lt;/strong&gt; &amp;nbsp;நரசிம்மர் கோவிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து வழிபட்டு வரவும்.&amp;nbsp;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;&lt;strong&gt;(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)&lt;/strong&gt;&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[astrology]]></category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/today-rasi-palan-shukra-gochar-in-cancer-formed-gajalakshmi-rajayoga-astrology-predictions-for-all-12-zodiac-signs-k7mdzki"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Heavy Rain Warning: போட்டு தாக்கும் வெயிலுக்கு இடையே குட் நியூஸ்.. வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில்?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/heavy-rain-warning-which-districts-articleshow-8qb7tox</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/heavy-rain-warning-which-districts-articleshow-8qb7tox</guid>
            <pubDate>Sun, 07 Jun 2026 23:44:04 +0530</pubDate>
            <description><![CDATA[தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், வானிலை மையம் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. அதன்படி, நீலகிரி, திருப்பூர், தேனி உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஜூன் 11ம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kkdhfp2mn0qv7agvd5vkx59g,imgname-tamilnadu-rain-1773202298964.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் சதம் அடித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் அனல் காற்று வீசி வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் மழை குறித்து வானிலை மையம் முக்கிய அப்டேட் கொடுத்துள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;அதாவது தமிழகத்தில் நாளை ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம் மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழையும் பெய்யக்கூடும் என கணித்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஜூன் 10ம் தேதி&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஜூன் 11ம் தேதி&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, தேனி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி. மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;வெப்ப நிலை நிலவரம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இன்று முதல் ஜூன் 11 வரைதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியும் / சற்று அதிகமாகவும் இருக்கக்கூடும். அதேபோல் இன்று அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படலாம் என தெரிவித்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சென்னை வானிலை அப்டேட்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 39-40&deg; செல்சியஸை ஒட்டியும். குறைந்தபட்ச வெப்பநிலை 29-30&deg; செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[tamilnadu]]></category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/heavy-rain-warning-which-districts-articleshow-8qb7tox"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Snake Plant: வீட்டுக்குள் பாம்புக்கற்றாழை வளர்ப்பதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/webstories/life-style/are-there-so-many-benefits-to-growing-snake-plants-indoors-w4e47v1</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/webstories/life-style/are-there-so-many-benefits-to-growing-snake-plants-indoors-w4e47v1</guid>
            <pubDate>Sun, 07 Jun 2026 23:05:57 +0530</pubDate>
            <description><![CDATA[இன்டோர் செடிகளிலேயே மிகவும் சக்திவாய்ந்த மற்றும் பராமரிக்க எளிதான 'பாம்புக்கற்றாழை' செடியை நம் வீட்டிற்குள் வளர்ப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதை இங்கே பார்க்கலாம்:]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kp36fdaq46w3ajmy8y19vh1b,imgname-snake-plant-vastu-06-1776076436823.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <category><![CDATA[life-style]]></category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/webstories/life-style/are-there-so-many-benefits-to-growing-snake-plants-indoors-w4e47v1"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Railway Stations: ரயில்வே ஸ்டேஷன்ல எல்லாம் இருக்கு, ஆனா மெடிக்கல் ஷாப் மட்டும் ஏன் இல்ல?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/india/why-indian-railway-stations-lack-dedicated-medical-stores-lggq6v9</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/india/why-indian-railway-stations-lack-dedicated-medical-stores-lggq6v9</guid>
            <pubDate>Sun, 07 Jun 2026 22:42:18 +0530</pubDate>
            <description><![CDATA[ரயில்வே ஸ்டேஷன்கள்ல ஸ்நாக்ஸ் கடைகள்ல இருந்து புக் ஸ்டால் வரைக்கும் எல்லாம் இருக்கும். ஆனா, மெடிக்கல் ஷாப் மட்டும் கண்ணுல படாது. அப்போ திடீர்னு உடம்புக்கு முடியாம போனா என்ன பண்றதுன்னு ஒரு கேள்வி வரும்தானே?]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ksspt26eg973sqgb41h537kf,imgname-train-video-1780052986062.jpeg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[ரயில்வே ஸ்டேஷன்கள்ல ஸ்நாக்ஸ் கடைகள்ல இருந்து புக் ஸ்டால் வரைக்கும் எல்லாம் இருக்கும். ஆனா, மெடிக்கல் ஷாப் மட்டும் கண்ணுல படாது. அப்போ திடீர்னு உடம்புக்கு முடியாம போனா என்ன பண்றதுன்னு ஒரு கேள்வி வரும்தானே?&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவில், தினமும் கோடிக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். பயணிகளின் தேவைகளைக் கருத்தில் கொண்டு ரயில் நிலையங்கள் தொடர்ந்து நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன. இன்று, உணவு முதல் புத்தகங்கள், பத்திரிகைகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் வரை அனைத்தும் ரயில் நிலைய நடைமேடைகளில் எளிதாகக் கிடைக்கின்றன. ஆனால், பெரும்பாலான ரயில் நிலையங்களில் ஏன் தனியான மருந்துக் கடைகளோ அல்லது கெமிஸ்ட் கடைகளோ இல்லை என்று நீங்கள் எப்போதாவது யோசித்ததுண்டா? இதற்குப் பின்னால், ரயில்வேயின் ஒரு சிறப்பு விதியும் திட்டமும் உள்ளது, இது பற்றி மிகச் சிலருக்கே தெரியும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரயில் நிலையங்களில் மருந்துக் கடைகள் இருந்ததே இல்லை என்று பலர் நினைக்கலாம், ஆனால் அது உண்மையல்ல. முன்னதாக, சில நிலையங்களில் மருந்துக் கடைகளைத் தனியாகச் செயல்பட ரயில்வே அனுமதித்தது. மருத்துவர் வசதி இருந்த இடங்களில் எல்லாம், மருந்துக் கடைகளுக்கும் இடம் இருந்தது. இது தவிர, சில புத்தகக் கடைகளுக்கு உள்ளேயும் ஒரு சிறிய பகுதி ஒதுக்கப்பட்டிருந்தது, அங்கு பயணிகளுக்குத் தேவையான மருந்துகள் வழங்கப்பட்டன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;காலப்போக்கில், நடைமேடைகள் பல்வேறு வகையான கடைகளால் நெரிசலாகி வருவதை ரயில்வே உணர்ந்தது. புத்தகக் கடைகள், மருந்துக் கடைகள் மற்றும் பொது விற்பனைக் கடைகள் இருந்ததால் நடைமேடையில் நடமாடுவது கடினமாகி வந்தது. இதைக் கருத்தில் கொண்டு, ரயில்வே தனது கொள்கையை மாற்றி, புதிய மருந்துக் கடைகளைத் திறப்பதை நிறுத்தியது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பயணிகளின் வசதியை உறுதி செய்வதற்காக, ரயில்வே ஒரு புதிய மாதிரியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பல்நோக்கு அங்காடி (MPS) என்று அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பின் கீழ், ஒரே அங்காடியின் மூலம் பல வகையான தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டன. இப்போது, ​​இந்த அங்காடிகளில் புத்தகங்கள், பத்திரிகைகள், சிற்றுண்டிகள் மற்றும் அவற்றுடன் சில பொதுவான மருந்துகளும் விற்கப்படுகின்றன. இருப்பினும், மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் வழங்கக்கூடிய பொதுவான மருந்துகள் மட்டுமே இங்கு விற்கப்படுகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;பயணத்தின்போது திடீரென ஒரு பயணிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால், அதற்காக ரயில்வேயிடம் ஒரு சிறப்பு வசதி உள்ளது. TTE, கார்டு, மற்றும் ஸ்டேஷன் மாஸ்டர் போன்ற ரயில்வே ஊழியர்களுக்கு 'ஃபர்ஸ்ட் எய்டு' (முதலுதவி) பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இது தவிர, ஸ்டேஷன்களில் மெடிக்கல் பாக்ஸ் இருக்கும். தேவைப்பட்டால், உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்களைத் தொடர்பு கொள்வார்கள். இதனால்தான், மெடிக்கல் ஸ்டோர்கள் குறைவாக இருந்தாலும், ரயில்வே நிர்வாகம் பயணிகளின் சுகாதாரத் தேவைகளை முழுமையாகக் கவனித்துக் கொள்ள முயற்சிக்கிறது.]]></content:encoded>
            <category><![CDATA[india]]></category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/india/why-indian-railway-stations-lack-dedicated-medical-stores-lggq6v9"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Rishabh Pant: பன்ட் அடிச்ச சிக்ஸால் டிரோன் காலி? வைரல் வீடியோவின் உண்மை என்ன?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/rishabh-pant-drone-video-fact-check-ai-fake-goes-viral-vr8qfqb</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/rishabh-pant-drone-video-fact-check-ai-fake-goes-viral-vr8qfqb</guid>
            <pubDate>Sun, 07 Jun 2026 22:30:58 +0530</pubDate>
            <description><![CDATA[இந்தியா-ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியின் போது ரிஷப் பந்த் அடித்த ஷாட் காரணமாக ட்ரோன் ஒன்று விபத்துக்குள்ளானதாகக் கூறும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பந்தின் ஷாட் காரணமாகத்தான் ட்ரோன் விபத்துக்குள்ளானதா? உண்மையில் என்ன நடந்தது?]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kthaqdtknj65111fkmscbvf1,imgname-rishabh-pant--3--1780845623123.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;இந்தியா-ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியின் போது ரிஷப் பந்த் அடித்த ஷாட் காரணமாக ட்ரோன் ஒன்று விபத்துக்குள்ளானதாகக் கூறும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பந்தின் ஷாட் காரணமாகத்தான் ட்ரோன் விபத்துக்குள்ளானதா? உண்மையில் என்ன நடந்தது?&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முல்லன்பூரில் இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே நடைபெற்ற ஒரேயொரு டெஸ்ட் போட்டி சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அது போட்டியின் ஸ்கோரால் அல்ல. ஒரு விசித்திரமான வீடியோவால்தான். அந்த வீடியோவின் சாராம்சம் என்னவென்றால், போட்டியின் முதல் நாளில், இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் 28 ரன்கள் எடுத்திருந்தபோது, ​​அவர் அடித்த ஒரு பிரம்மாண்டமான ஷாட், காற்றில் பறந்துகொண்டிருந்த ட்ரோன் கேமராவில் பட்டு, அது கிட்டத்தட்ட தரையில் விழுந்துவிட்டது.&lt;/p&gt;&lt;p&gt;இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ்பாக்ஸில் இந்தக் காணொளியைப் பார்த்த இணையவாசிகள், &quot;பந்தின் சக்தியால் ட்ரோன் கூட அதிர்ந்துள்ளது&quot; என்று பலவிதமாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், உண்மையான விஷயம் என்னவென்றால்... இந்தக் காணொளியில் காணப்படும் அனைத்தும் உண்மையல்ல.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த வைரல் வீடியோவை நீங்கள் இன்னும் சற்று உன்னிப்பாகவும் தர்க்கரீதியாகவும் பார்த்தால், இது முற்றிலும் ஒரு போலியான வீடியோ என்பதை எளிதில் புரிந்துகொள்வீர்கள். இதில் உள்ள மிகப்பெரிய தவறு என்னவென்றால், இது ஒரு டெஸ்ட் போட்டி என்பதால், விதிகளின்படி சிவப்புப் பந்துதான் பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், இந்த வைரல் வீடியோவில், பந்துவீச்சாளர் பந்து வீச, பந்த் ஒரு வெள்ளைப் பந்தை அடிக்கிறார்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டுமே வெள்ளைப் பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன என்ற சிறிய தர்க்கத்தை அந்தப் போலி வீடியோவை உருவாக்கியவர்கள் தவறவிட்டுவிட்டனர். மேலும், அந்த வீடியோவில், பந்து ட்ரோனில் பட்டு கீழே விழுந்த பிறகு, ஒரு பந்து ஓரமாகச் செல்கிறது, அதே நேரத்தில், ட்ரோனின் உள்ளிருந்து திடீரென மற்றொரு பந்து தோன்றுகிறது. ஒரே இடத்தில் இரண்டு பந்துகள் தோன்றுவதால், இது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட ஒரு டீப் ஃபேக் வீடியோ என்பது தெளிவாகிறது.&lt;/p&gt;&lt;p&gt;Helicopter shot❌Drone shot PANTastic#INDvsAFG pic.twitter.com/cfXZJqhdlm&lt;/p&gt;&lt;p&gt;&mdash; Wanderer (@vkyash18oz) June 7, 2026&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வழக்கமாக, சர்வதேசப் போட்டிகளில், பிசிசிஐ கிரிக்கெட் பந்தின் அதிகபட்ச உயரத்தை விட மிக அதிக உயரத்தில் ஸ்பைடர் கேமராக்கள் அல்லது ட்ரோன் கேமராக்களை மைதானத்தின் மீது பறக்க வைக்கும். பந்த் தனது பாணியில் ஆக்ரோஷமான ஷாட்களை ஆடினார் என்பது உண்மைதான், ஆனால் அவற்றில் எதுவும் ட்ரோனைத் தாக்கவில்லை. உண்மையில், இந்தப் போட்டியில், பந்த் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களின் உதவியுடன் 121 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து ஒரு அற்புதமான இன்னிங்ஸை விளையாடினார். அவர் சதம் அடிக்கும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டாலும், எம்.எஸ். தோனி போன்ற ஜாம்பவான்களின் வரிசையில் இணைந்து புதிய சாதனைகளைப் படைத்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், எது உண்மை, எது பொய் என்பதை அறிவது கடினமாகிவிட்டது. சிலர் பார்வையாளர்களை ஈர்ப்பதற்காக, இதுபோன்ற போலியான உள்ளடக்கங்களை வேண்டுமென்றே உருவாக்கி வெளியிட்டு வருகின்றனர். சமூக ஊடகங்களில் தோன்றும் ஒவ்வொரு காணொளியையும் கண்மூடித்தனமாக நம்பாமல், உண்மைகளை இருமுறை சரிபார்க்குமாறு கிரிக்கெட் ரசிகர்கள் ஒருவருக்கொருவர் எச்சரித்து வருகின்றனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[sports-cricket]]></category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/rishabh-pant-drone-video-fact-check-ai-fake-goes-viral-vr8qfqb"/>
        </item>
        <item>
            <title><![CDATA[திருவள்ளுவர் சிலைக்கு காவி உடை ..! மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் அதிரடி போராட்டம் !]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/vaiko-leads-protest-on-thiruvalluvar-s-saffron-robe-videoshow-qxype06</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/vaiko-leads-protest-on-thiruvalluvar-s-saffron-robe-videoshow-qxype06</guid>
            <pubDate>Sun, 07 Jun 2026 22:03:37 +0530</pubDate>
            <description><![CDATA[]]></description>
            <media:content url="https://geo.dailymotion.com/player/x1tbu.html?video=xadtzea" medium="video" height="768" width="1024"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திருவள்ளுவர் சிலைக்கு காவி நிற உடை அணிவிக்கப்பட்ட விவகாரத்தில், தமிழக ஆளுநரின் செயலைக் கண்டித்து பிரம்மாண்ட கறுப்புக் கொடி போராட்டம் நடைபெற்றது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், ஆளுநருக்கு எதிராகவும், தமிழ் பண்பாட்டை சிதைக்கும் முயற்சிகளுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த வீடியோ தொகுப்பில் போராட்டத்தின் முக்கிய காட்சிகள் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் உரை (பகுதி-3) இடம் பெற்றுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[tamilnadu]]></category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/vaiko-leads-protest-on-thiruvalluvar-s-saffron-robe-videoshow-qxype06"/>
        </item>
    </channel>
</rss>
