<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes"?>
<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Wed, 29 Apr 2026 15:38:04 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[ஏசி இல்லாமலேயே ஜில்லுனு தூங்கலாம்.! கோடைக்காலத்திற்கு ஏற்ற இந்த 5 சிறந்த பாய் வகைகளை டிரை பண்ணுங்க.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/sweat-absorbing-sleeping-mats-for-summe-best-mats-for-summer-that-keep-your-body-cool-and-prevent-heat-explained-vkb8esg</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/sweat-absorbing-sleeping-mats-for-summe-best-mats-for-summer-that-keep-your-body-cool-and-prevent-heat-explained-vkb8esg</guid>
            <pubDate>Wed, 29 Apr 2026 15:34:41 +0530</pubDate>
            <description><![CDATA[Sweat Absorbing Sleeping Mats for Summer : வெயில் காலத்தில் தரையில் படுப்பது உடல் சூட்டை அதிகப்படுத்தக்கூடும். கோடை காலத்திற்கு ஏற்ற, உடலை குளுமையாக்கும் ஐந்து பாய் வகைகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kqcacjb2f6hwv3an5awg2t55,imgname-sweat-absorbing-sleeping-mats-for-summer-1777456269666.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Sweat Absorbing Sleeping Mats for Summer : வெயில் காலத்தில் தரையில் படுப்பது உடல் சூட்டை அதிகப்படுத்தக்கூடும். கோடை காலத்திற்கு ஏற்ற, உடலை குளுமையாக்கும் ஐந்து பாய் வகைகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. திருச்சி, மதுரை, வேலூர், சென்னை, திருவள்ளூர் போன்ற நகரங்களில் ஒவ்வொரு நாளும் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகி வருகிறது. இந்த நிலையில் பலரும் உடலை குளுமையாக்க பல வழிகளை தேடுகின்றனர்.&amp;nbsp;புழுக்கம் அதிகரிப்பதால் இரவு உறக்கம் வராமல் பலரும் தவித்து வருகின்றனர். உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியான உறக்கத்தைப் பெற இயற்கையான பாய்கள் சிறந்த தேர்வாகும். செயற்கை இழையாலான (பிளாஸ்டிக்) பாய்களை தவிர்த்து பாரம்பரியமான இந்த பாய்களை பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு நல்லது. கோடைக்கு ஏற்ற ஐந்து முக்கிய பாய் வகைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழகத்தில் மிகப் பரவலாக பயன்படுத்தப்படும் பாய் வகைகளில் கோரைப்பாயும் ஒன்று. ஆற்றங்கரைகளில் வளரும் கோரைப் புற்களைக் கொண்டு இந்த பாய்கள் செய்யப்படுகின்றன. இந்த பாய்களுக்கு உடல் வெப்பத்தை உறிஞ்சும் தன்மை உண்டு. இரத்த ஓட்டத்தை சீராக்கி, ஆழ்ந்த உறக்கத்திற்கு வழிவகுக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த வகை பாயை பயன்படுத்தலாம். குறிப்பாக பத்தமடை கோரைப் பாய்கள் உலகப் புகழ்பெற்றவையாக விளங்குகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தென்னை இலைகளின் நாரைக் கொண்டு உருவாக்கப்படும் பாய்கள் தென்னம் பாய்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த பாய்கள் உடல் சூட்டை உறிஞ்சி, உடலுக்கு குளிர்ச்சி தரும் தன்மை கொண்டது. முதுகு வலி உள்ளவர்களுக்கும் இந்த வகை பாய்கள் சிறந்த தீர்வாக அமைகிறது. இதன் மென்மையான தன்மை கோடைகால இரவுகளுக்கு இதமான தூக்கத்தை தரவல்லது. மிகவும் லேசானது மற்றும் எளிதில் மடிக்கக் கூடியது. இந்த வகை பாய்களை பயன்படுத்தும் பொழுது சரும நோய்கள் வராமல் தடுக்கவும் உதவும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஈச்ச மரத்தின் இலைகளைக் கொண்டு நேர்த்தியாக ஈச்சம் பாய்கள் பின்னப்படுகின்றன. இன்றும் கிராமப்புறங்களில் இந்த வகை பயன்பாட்டில் உள்ளன. இந்த பாய்கள் இயற்கையிலேயே அதிக குளிர்ச்சி தரும் தன்மை கொண்டது. கோடையில் தரையில் இருந்து எழும் வெப்பம், உடலைத் தாக்காமல் இது சிறந்த அரணாக செயல்படுகிறது. ஈச்ச இலைகளுக்கு இயல்பிலேயே வெப்பத்தை எதிர்க்கும் குணம் உண்டு. இது உடல் சூட்டை சம நிலையில் வைக்க உதவுகிறது. நீண்ட காலம் உழைக்கக் கூடியது. முதுகு வலி இருப்பவர்கள் ஈச்சம் பாயில் தடுப்பது நல்ல பலன்களைத் தரும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிறு சிறு மூங்கில் குச்சிகளை மெல்லிய இலைகளாக சீவி, அவைகளை ஒன்றிணைத்து மூங்கில் பாய்கள் உருவாக்கப்படுகின்றன. மூங்கில் இயற்கையிலேயே வெப்பத்தை கடத்தாத ஒரு பொருளாகும். தரை வெப்பமாக இருந்தாலும் மூங்கில் பாய் குளிர்ச்சியாகவே இருக்கும். நவீன வீடுகளின் தரையில் விரிப்பதற்கும் இது மிகவும் வசதியானது. இதை எளிதாக சுருட்டியும் எடுத்துச் செல்லலாம். மூங்கில் பாய்களுக்கு காற்றோட்டத்தை அனுமதிக்கும் தன்மை உண்டு. இதனால் படுத்து உறங்கும் பொழுது முதுகில் வியர்வை தேங்காது. இவற்றை எளிதில் சுத்தம் செய்யலாம். நீண்ட காலம் உழைக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தாழம்பூ செடியின் இலைகளில் இருந்து முட்களை நீக்கி காய வைத்து பாய்கள் செய்யப்படுகின்றன. இந்த பாய்களுக்கு தனித்துவமான நறுமணம் உண்டு. இது மனதிற்கு அமைதியை தருவதுடன் கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது. உடல் சூட்டினால் ஏற்படும் வியர்க்குரு மற்றும் தோல் நோய்களை தடுக்கும் ஆற்றல் இந்த தாழம்பூ பாய்களுக்கு உண்டு. மருத்துவ குணம் கொண்ட இந்தப் பாய்களில் இருந்து வெளியாகும் நறுமணம் மனதிற்கு புத்துணர்ச்சியையும், ஆழ்ந்த உறக்கத்தையும், அபாரமான குளிர்ச்சியையும் தரும். கோடையில் ஏற்படும் அதிகப்படியான வியர்வையை உறிஞ்சி, சரும நோய்களிலிருந்தும் நம்மை பாதுகாக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வெட்டிவேர் என்பது மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு வேர் வகையாகும். இதை கொண்டு தயாரிக்கப்படும் பாய்கள் கோடைக்கு வரப்பிரசாதமாக அமைகின்றன. இதில் உறங்கும் பொழுது ஒருவித நறுமணம் வீசும். இந்த பாயின் மீது லேசாக தண்ணீர் தெளித்து ஜன்னல்கள் மற்றும் கதவுகளில் திரைச்சீலைகள் போல் பயன்படுத்தினால் ஏசி இல்லாமலேயே வீட்டிற்கு நீண்ட நேரம் குளிர்ச்சியைத் தரும். மேலும் இந்த பாய்களில் படுத்து உறங்குவது மன அழுத்தத்தை குறைத்து, ஆழ்ந்த உறக்கத்தையும் தரும். வெட்டிவேர் சிறந்த கிருமி நாசினியாகவும் செயல்படும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[life-style]]></category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/sweat-absorbing-sleeping-mats-for-summe-best-mats-for-summer-that-keep-your-body-cool-and-prevent-heat-explained-vkb8esg"/>
        </item>
        <item>
            <title><![CDATA[டாப் மாடல் எதுக்கு? இந்த 5 கார்களின் பேஸ் மாடலிலேயே சகல வசதியும் இருக்கு..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/auto/top-5-value-for-money-base-model-suv-in-india-f9socc9</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/auto/top-5-value-for-money-base-model-suv-in-india-f9socc9</guid>
            <pubDate>Wed, 29 Apr 2026 15:31:55 +0530</pubDate>
            <description><![CDATA[இந்தியாவில் பட்ஜெட் SUV கார்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இப்போது கார் நிறுவனங்கள் பேஸ் மாடல்களிலேயே நிறைய வசதிகளைக் கொடுப்பதால், டாப் வேரியன்ட்டுக்கு அதிகம் செலவு செய்ய வேண்டியதில்லை.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kat89axjecqcp78wcf4fk4q9,imgname-mahindra-be-6-electric-origin-suv--1763965184946.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;இந்தியாவில் பட்ஜெட் SUV கார்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இப்போது கார் நிறுவனங்கள் பேஸ் மாடல்களிலேயே நிறைய வசதிகளைக் கொடுப்பதால், டாப் வேரியன்ட்டுக்கு அதிகம் செலவு செய்ய வேண்டியதில்லை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவில் SUV கார்களுக்கான டிமாண்ட் நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. எல்லோருமே தங்கள் பட்ஜெட்டுக்குள், பார்க்க கம்பீரமாகவும், வசதிகள் நிறைந்ததாகவும் இருக்கும் ஒரு SUV காரை வாங்க விரும்புகிறார்கள். முன்பெல்லாம் ஒரு காரின் பேஸ் மாடல் என்றால், அது சும்மா பெயருக்கு மட்டும்தான் இருக்கும், அதில் பெரிதாக எந்த வசதிகளும் இருக்காது என்று பலரும் நினைத்தார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;ஆனால், இப்போது காலம் மாறிவிட்டது. கார் நிறுவனங்கள் இப்போது தங்கள் பேஸ் மாடல்களிலேயே பல அசத்தலான வசதிகளைக் கொடுக்கின்றன. இதனால், அதிக பணம் கொடுத்து டாப் வேரியன்ட் வாங்க வேண்டிய அவசியமே இல்லாமல் போகிறது. நீங்களும் ஒரு புதிய SUV வாங்க திட்டமிட்டிருந்து, பட்ஜெட் குறைவாக இருந்தால், இந்த ஐந்து SUV-க்கள் சிறந்த தேர்வாக இருக்கலாம். இவற்றின் பேஸ் வேரியன்ட்களே முழுமையான வசதிகளுடன் வருகின்றன. அந்த கார்களைப் பற்றி இங்கே விரிவாகப் பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரெனால்ட் டஸ்டர் நீண்ட காலமாக இந்திய மார்க்கெட்டில் ஒரு நம்பிக்கையான SUV-யாக இருந்து வருகிறது. இதன் பேஸ் வேரியன்ட்டே ஒரு சிறந்த பேக்கேஜாக இருக்கிறது. இதில் LED லைட்டுகள், 17-இன்ச் ஸ்டீல் வீல்கள், 7-இன்ச் TFT டிஸ்ப்ளே, மற்றும் நான்கு பவர் விண்டோக்கள் போன்ற வசதிகள் உள்ளன. இதன் ஆரம்ப விலை ₹10.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்).&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஹூண்டாய் வென்யூ காரின் பேஸ் வேரியன்ட்டிலேயே ஏராளமான வசதிகள் உள்ளன. 10.25-இன்ச் டிஜிட்டல் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, மல்டி-ஃபங்ஷன் ஸ்டீயரிங் வீல், நான்கு பவர் விண்டோக்கள், முன் மற்றும் பின் ஸ்பீக்கர்கள், மற்றும் ரியர் ஏசி வென்ட்கள் ஆகியவை இதில் அடங்கும். இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ₹7.99 லட்சம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஸ்கோடா குஷாக் காரின் பேஸ் வேரியன்ட்டே பார்க்க மிகவும் பிரீமியமாகத் தெரிகிறது. ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், சன்ரூஃப், அலாய் வீல்கள், ரியர் வைப்பர் மற்றும் டீஃபாகர், ஆறு ஏர்பேக்குகள், 8-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மற்றும் மழை வந்தால் தானாக இயங்கும் வைப்பர்கள் (rain-sensing wipers) போன்ற வசதிகள் இதில் உள்ளன. இதன் ஆரம்ப விலை ₹10.69 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்).&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கியா செல்டோஸ் அதன் செக்மென்ட்டிலேயே அதிக வசதிகளைக் கொடுப்பதற்குப் பெயர் போனது. அதன் பேஸ் வேரியன்ட்டும் நம்மை ஏமாற்றவில்லை. 10.25-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 12-இன்ச் டிஜிட்டல் கிளஸ்டர், வயர்லெஸ் கனெக்டிவிட்டி, க்ரூஸ் கண்ட்ரோல், பவர் விண்டோக்கள், மற்றும் பவர் ORVM-கள் போன்ற வசதிகள் இதில் உள்ளன. இதன் விலை ₹10.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்குகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரின் பேஸ் வேரியன்ட்டும் மிகவும் அசத்தலாக இருக்கிறது. LED லைட்டுகள், அலாய் வீல்கள், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், ஆறு ஏர்பேக்குகள், 8-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சன்ரூஃப், மற்றும் மழை வந்தால் தானாக இயங்கும் வைப்பர்கள் ஆகியவை இதன் சிறப்பம்சங்கள். இதன் விலை ₹10.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்குகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[auto]]></category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/auto/top-5-value-for-money-base-model-suv-in-india-f9socc9"/>
        </item>
        <item>
            <title><![CDATA[12% நியாசினமைடு சீரம் (Niacinamide Serum) ஆரம்பநிலையில் இருப்பவர்களுக்குப் பாதுகாப்பானதா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/life-style/is-12percentage-niacinamide-serum-safe-for-beginners-articleshow-i3eg8fn</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/life-style/is-12percentage-niacinamide-serum-safe-for-beginners-articleshow-i3eg8fn</guid>
            <pubDate>Wed, 29 Apr 2026 14:50:58 +0530</pubDate>
            <description><![CDATA[12% நியாசினமைடு சீரம் ஆரம்பநிலையாளர்களுக்குப் பாதுகாப்பானதா என்ற கேள்வியை இந்த கட்டுரை ஆராய்கிறது. அதிக செறிவு எரிச்சலை ஏற்படுத்தக்கூடும் என்றாலும், 'Double Encapsulation' போன்ற நவீன தொழில்நுட்பங்கள் அதை மெதுவாக சருமத்தில் விடுவித்து, எண்ணெய் கட்டுப்பாடு மற்றும் துளைகளைச் சுருக்குதல் போன்ற நன்மைகளை பாதுகாப்பாக வழங்குகின்றன.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kqc7qrv18cmt1mmkj4thnzq9,imgname-picture1-1777453491041.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;h2&gt;12% நியாசினமைடு சீரம் (Niacinamide Serum) ஆரம்பநிலையில் இருப்பவர்களுக்குப் பாதுகாப்பானதா?&lt;/h2&gt;&lt;p&gt;சரும பராமரிப்பு டிரெண்டுகளை நீங்கள் கவனிப்பவர் என்றால், நியாசினமைடு பற்றிய பல நேர்மறையான விமர்சனங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இது சரும பராமரிப்பு உலகின் &quot;அமைதிப்படை&quot; என்று அழைக்கப்படுகிறது. சிவந்த தடிப்புகளைக் குறைக்கவும், சருமத் துளைகளை மறைக்கவும் மற்றும் எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தவும் இது பெயர் பெற்றது. இருப்பினும், நிறுவனங்கள் அதிக செறிவூட்டப்பட்ட தயாரிப்புகளை&lt;/p&gt;&lt;p&gt;வழங்கப் போட்டியிடும் நிலையில், ஒரு சந்தேகம் எழுகிறது: 12% வீரியம் கொண்ட Niacinamide face serum பாதுகாப்பானதா? குறிப்பாக நீங்கள்இப்போதுதான் இதைப் பயன்படுத்தத் தொடங்குகிறீர்கள் என்றால் இது ஏற்றதா?இதனைப் பயன்படுத்தத் தொடங்கும் முன், செறிவூட்டல் (Concentration) எவ்வாறு niacinamide serum benefits-களைப் பாதிக்கிறது என்பதையும், சருமத்தில் எரிச்சல் ஏற்படாமல் இதனை எப்படி அறிமுகப்படுத்துவது என்பதையும் புரிந்துகொள்வது அவசியம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;நியாசினமைடு என்றால் என்ன?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;நயாசினமைடு என்பது வைட்டமின் B3 இன் ஒரு வடிவமாகும். சில கடுமையான அமிலங்களுடன் மாறாக, இது நீரில் கரையக்கூடிய வைட்டமின் ஆகும், இது உங்கள் தோலில் இயல்பான பொருட்களுடன் இணைந்து தோல் உருமாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது. நயாசினமைடு சீரத்தின் முக்கிய பயன்பாடுகள் தோல் தடையை வலுப்படுத்துவது முதல் பெரிய துளைகள் மற்றும் மங்கலான தோற்றத்தை குறைப்பது வரை பரவலாக உள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;பலருக்கு, இது சிறந்த நயாசினமைடு சீரம் தேர்வாகும், ஏனெனில் இது வைட்டமின் C மற்றும் ரெட்டினால் போன்ற பிற செயலில் செயல்படும் கூறுகளுடன் பொதுவாக பொருந்தக்கூடியது. இதை niacinamide moisturizer&amp;nbsp; உடன் சேர்த்து பயன்படுத்துவது ஈரப்பதத்தை அதிகரிக்கவும், உணர்வுயர்ந்த தோலை அமைதியாக்கவும் உதவுகிறது. 2% முதல் 5% வரை இருந்தால் பெரும்பாலான தோல் வகைகளுக்கான மருத்துவமனையில் சான்றளிக்கப்பட்ட &ldquo;சரியான அளவு&rdquo; ஆகும், ஆனால் 12% கவனத்துடன் செய்யப்பட்ட சூடான சீரம், நிலையான எண்ணெய் மற்றும் ஆழமான தடிமனான கம்பளம் போன்ற குறிப்பிட்ட, கடுமையான பிரச்சனைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;12% &lt;/strong&gt;&lt;strong&gt;நியாசினமைடு சீரம் &lt;/strong&gt;&lt;strong&gt;ஆரம்பநிலையாளர்களுக்குப் பாதுகாப்பானதா?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;சுருக்கமான பதில்: ஆம், ஆனால் அந்த தயாரிப்பு மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்க வேண்டும். நியாசினமைடு மிகவும் மென்மையானது என்றாலும், சாதாரண 12% செறிவு சற்று வீரியமாக இருக்கும். ஒரு முழுமையான தொடக்கநிலையாளருக்கு, நேரடியாக அதிக சதவீதத்தைப் பயன்படுத்துவது சில நேரங்களில் தற்காலிக சிவத்தல் அல்லது நமைச்சலை ஏற்படுத்தலாம். இருப்பினும், is niacinamide serum safe என்ற கேள்விக்கான பதில் அந்த தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பத்தைப் பொறுத்தது.&lt;/p&gt;&lt;p&gt;தற்போதுள்ள நவீன தயாரிப்புகள் 'Double Encapsulation Technology'-யைப் பயன்படுத்துகின்றன. இது நியாசினமைடை இரண்டு பாதுகாப்பு அடுக்குகளால் மூடுகிறது. இந்த முறை ஆக்டிவ் பொருட்களைச் சருமத்தின் மேற்பரப்பில் தேங்கவிடாமல், ஆழமாக ஊடுருவச் செய்கிறது. இது மெதுவாகச் சருமத்திற்குள் விடுவிக்கப்படுவதால் (Slow release), எரிச்சல் ஏற்படாமல் தடுக்கிறது. இதனால் 12% செறிவு கொண்ட சீரம் முதன்முறை பயன்படுத்துபவர்களுக்கும் பாதுகாப்பானதாக அமைகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சருமத்திற்கான நியாசினமைடு சீரமின் நன்மைகள் (Benefits of&lt;/strong&gt;&lt;strong&gt; Niacinamide Serum&lt;/strong&gt;&lt;strong&gt; for Skin)&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இது ஏன் ஒரு &quot;அதிசயப் பொருளாக&quot; கருதப்படுகிறது? சருமத்திற்கான சில முக்கியமான niacinamide serum benefits for skin இதோ:&lt;/p&gt;&lt;p&gt;● எண்ணெய் மற்றும் செபம் (sebum) கட்டுப்பாடு: இது செபாசியஸ் சுரப்பிகளை ஒழுங்குபடுத்துகிறது, இதனால் முகத்தின் T-zone பகுதியில் வழியும் எண்ணெய் குறைகிறது.&lt;/p&gt;&lt;p&gt;● சருமத் துளைகளைச் சுருக்குதல் (Pore Minimization): இது சருமத் துளைகளை இறுக்கி, சருமத்தை மென்மையாகவும் சீராகவும் காட்ட உதவுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;● பாதுகாப்பு அடுக்கை வலுப்படுத்துதல்: சருமத்தில் ஈரப்பதத்தைத் தக்கவைக்கவும், மாசுகளைத் தடுக்கவும் தேவையான செராமைடுகளை (Ceramides) இது அதிகரிக்கச் செய்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;● முகப்பரு தழும்புகளைக் குறைத்தல்: இது கரும்புள்ளிகள் மற்றும்தழும்புகளைக் குறைத்து சரும நிறத்தைச் சீராக்க உதவுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;● சிவத்தல் மற்றும் வீக்கத்தைத் தணித்தல்: இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் முகப்பருவினால் ஏற்படும் எரிச்சலைக் குறைக்கின்றன. நியாசினமைடு சீரமை எப்படிப் பயன்படுத்துவது:&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஒரு வழிகாட்டி (How to use &lt;/strong&gt;&lt;strong&gt;niacinamide serum&lt;/strong&gt;&lt;strong&gt;)&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;எரிச்சலைத் தவிர்க்கவும், முழுமையான பலன்களைப் பெறவும் இந்தமுறையைப் பின்பற்றுங்கள்:&lt;/p&gt;&lt;p&gt;1. பேட்ச் டெஸ்ட் (Patch Test): தாடைப் பகுதியில் சிறிதளவு தடவி 24&lt;/p&gt;&lt;p&gt;மணிநேரம் காத்திருக்கவும். எரிச்சல் இல்லையெனில் பயன்படுத்தத் தொடங்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;2. சுத்தம் செய்தல்: முகத்தைச் சுத்தம் செய்து, லேசான ஈரப்பதத்துடன் இருக்கும்போது தடவவும். ஈரமான சருமம் Serum-ஐ நன்றாக உறிஞ்சும்.&lt;/p&gt;&lt;p&gt;3. குறைந்த அளவு: 2-3 துளிகள் மட்டும் எடுத்துச் சருமத்தில் மென்மையாகத் தட்டவும் (Pat).&lt;/p&gt;&lt;p&gt;4. ஈரப்பதமூட்டுதல் (Moisturize): ஈரப்பதத்தைத் தக்கவைக்க இதன் மேல் ஒரு மாய்ஸ்சுரைசரைத் தடவவும். சருமப் பராமரிப்பில் எப்போது இதைப் பயன்படுத்த வேண்டும்? (When to use niacinamide in routine?) நியாசினமைடை காலையிலும் இரவிலும் பயன்படுத்தலாம். காலையில் பயன்படுத்தும்போது இது சூரியக் கதிர்களுக்கு எதிராக ஒரு கேடயமாகச் (Shield) செயல்படும். இரவில் சருமத்தைச் சீரமைக்க (Repair) உதவும்.&lt;/p&gt;&lt;p&gt;12% நியாசினமைடு சீரம் பிடிவாதமான துளைகள் மற்றும் சருமப் பிரச்சனைகளுக்கு விரைவான முடிவுகளைத் தந்தாலும், சீரான பயன்பாடே (Consistency) சிறந்த சருமத்திற்கு ரகசியம். முதலில் ஒருநாள் விட்டு ஒருநாள் எனத் தொடங்கி, பிறகு தினமும் இரண்டு முறை என மாற்றிக்கொள்ளலாம். மெதுவாகச் சருமத்திற்குள் வேலை செய்யும் தொழில்நுட்பம் கொண்ட தயாரிப்பைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், நீங்கள் கவலைப்படாமல் முழுப் பயன்களையும் பெறலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[life-style]]></category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/life-style/is-12percentage-niacinamide-serum-safe-for-beginners-articleshow-i3eg8fn"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Narasimha Jayanti 2026 நாளை நரசிம்ம ஜெயந்தி 2026: தீமைகளை அழித்து வெற்றியைத் தரும் அற்புத வழிபாடு]]></title>
            <link>https://tamil.asianetnews.com/spiritual/narasimha-jayanti-2026-fasting-rules-worship-method-dhaan-and-mantras-to-chant-articleshow-n1awmg2</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/spiritual/narasimha-jayanti-2026-fasting-rules-worship-method-dhaan-and-mantras-to-chant-articleshow-n1awmg2</guid>
            <pubDate>Wed, 29 Apr 2026 15:20:34 +0530</pubDate>
            <description><![CDATA[மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் மிகவும் உக்கிரமான அவதாரமாக கருதப்படுவது நரசிம்ம அவதாரம். ஆனால் கூப்பிட்ட உடன் உடனடியாக ஓடி வந்து அருள் செய்யக் கூடியவரும் நரசிம்மர் தான். நரசிம்மர் அவதரித்த தினத்தை நரசிம்ம ஜெயந்தியாக ஆண்டுதோறும் கொண்டாடுகிறோம். இந்த ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி வியாழக்கிழமை நரசிம்ம ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kqc7m7cdamdsn9kry5hvv8fw,imgname-narasimha-jayanti-2026-1777453374861.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களிலேயே மிகவும் தனித்துவமானது நரசிம்ம அவதாரம். மற்ற அவதாரங்கள் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக நீண்ட காலம் திட்டமிடப்பட்டவை. ஆனால், நரசிம்ம அவதாரம் என்பது தன் பக்தன் பிரகலாதனின் வாக்கை மெய்ப்பிக்க, ஒரு நொடிப்பொழுதில் தூணிலிருந்து தோன்றிய அதிரடி அவதாரம். சித்திரை மாதம் வளர்பிறை சதுர்த்தசி திதியில் வரும் இந்த நரசிம்ம ஜெயந்தி, நம் வாழ்வில் தீர்க்க முடியாத சிக்கல்களைத் தீர்க்கும் ஒரு உன்னத நாளாகும்.&lt;/p&gt;&lt;p&gt;நரசிம்ம ஜெயந்தி வழிபாட்டு முறை:&lt;/p&gt;&lt;p&gt;- நரசிம்மர் தூணிலிருந்து வெளிப்பட்டது அந்தி சாயும் பொழுது (மாலை 4.30 மணி முதல் 7 மணி வரை) என்பதால், நரசிம்ம ஜெயந்தி வழிபாட்டை மாலையில் தான் செய்ய வேண்டும். அன்று அதிகாலையிலேயே நீராடி, வீட்டைத் தூய்மை செய்து நரசிம்மர் திருவுருவப் படத்திற்கு மணமுள்ள மலர்களைச் சாற்ற வேண்டும். - பானக நிவேதனம்: நரசிம்மருக்கு மிகவும் பிடித்தது பானகம். சுக்கு, வெல்லம், ஏலக்காய் சேர்த்த பானகம் அவரது கோபத்தைத் தணிப்பதாக ஐதீகம். இதனுடன் காய்ச்சாத குளிர்ந்த பால் மற்றும் தயிர் சாதம் நிவேதனம் செய்வது விசேஷம். - மலர் வழிபாடு: லக்ஷ்மி நரசிம்மரை வழிபடும் போது துளசி, சிவப்புத் தாமரை மலர்களையும், செவ்வரளிப் பூக்களையும் சமர்ப்பிப்பது அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அள்ளித் தரும்.&lt;/p&gt;&lt;p&gt;சொல்ல வேண்டிய சக்திவாய்ந்த மந்திரங்கள் :&lt;/p&gt;&lt;p&gt;&lt;img&gt;&lt;/p&gt;&lt;p&gt;பலரும் நரசிம்மரின் உக்கிரமான மந்திரங்களைச் சொல்ல அஞ்சுவார்கள். ஆனால், எளிய பக்தர்களுக்கு அவர் ஒரு தாயைப் போன்றவர். &quot;மரண பயம்&quot; நீங்கவும், கடன் தொல்லைகள் அகலவும், எதிரிகள் தொல்லை, பயம், நோய் தீர கீழே உள்ள மந்திரம் மிகவும் விசேஷமானது:&lt;/p&gt;&lt;p&gt;&quot;உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம் ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யு ம்ருத்யும் நமாம்யஹம்&quot;&lt;/p&gt;&lt;p&gt;&quot;நரசிம்ம கவசம்&quot; அல்லது நரசிம்ம மந்திரத்தை 108 முறை உச்சரிப்பது சத்ரு (எதிரி) பயத்தை அறவே நீக்கும். உக்கிர நரசிம்மரை விட, லக்ஷ்மி தேவி இடது மடியில் அமர்ந்திருக்கும் 'மாலோல நரசிம்மரை' தியானிப்பது இல்லறத்தில் அமைதியைத் தரும்.&lt;/p&gt;&lt;p&gt;தானங்களின் பலன்கள்:&lt;/p&gt;&lt;p&gt;நரசிம்ம ஜெயந்தி அன்று அன்னதானம் செய்வது சிறப்பு என்றாலும், அன்று &quot;தண்ணீர் பந்தல்&quot; அமைப்பது அல்லது கோடை காலத்திற்குத் தேவையான விசிறி, குடை, செருப்பு போன்றவற்றைத் தானம் செய்வது நரசிம்மருக்குப் ப்ரீதியானது. மேலும், பலரும் அறியாத ஒரு தகவல் என்னவென்றால், நரசிம்ம ஜெயந்தி அன்று ஆதரவற்ற முதியவர்களுக்கு ஒரு வேளை உணவும், வஸ்திரமும் (துணி) தானம் செய்து, அவர்களது ஆசியைப் பெற்றால், உங்கள் ஜாதகத்தில் உள்ள செவ்வாய் தோஷம் மற்றும் பித்ரு தோஷங்களின் தாக்கம் பெருமளவு குறையும்.&lt;/p&gt;&lt;p&gt;தவிர்க்க வேண்டியவை :&lt;/p&gt;&lt;p&gt;- பகல் உறக்கம்: அன்று பகல் முழுதும் விரதம் இருப்பது நல்லது. இயலாதவர்கள் பால், பழம் உட்கொள்ளலாம். ஆனால், பகலில் தூங்குவதைத் தவிர்க்க வேண்டும். - கோபம் மற்றும் வீண் வாக்குவாதம்: நரசிம்மர் கோபத்தின் வெளிப்பாடாகத் தோன்றினாலும், அவரை வழிபடும் நாளில் நாம் யாரிடமும் கோபப்படக் கூடாது. முக்கியமாக யாரையும் இகழ்ந்து பேசக்கூடாது. - புளியோதரை தவிர்த்தல்: பெருமாளுக்குப் பிடித்தமான புளியோதரை அன்று வேண்டாம். மாறாக இனிப்புப் பொங்கல் அல்லது தயிர் சாதம் மட்டுமே நிவேதனமாகப் படைக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;யாரும் அறியாத ரகசிய வழிபாடு :&lt;/p&gt;&lt;p&gt;&lt;img&gt;&lt;/p&gt;&lt;p&gt;நரசிம்ம ஜெயந்தி அன்று மாலை வேளையில், உங்கள் வீட்டின் நிலை வாசலில் நெய் விளக்கேற்றி, ஒரு தூணிற்கு (அல்லது சுவருக்கு) சந்தனம், குங்குமம் இட்டு, நரசிம்மர் அங்கு எழுந்தருளியிருப்பதாகக் கருதி வணங்குங்கள். நரசிம்மர் எங்கும் நிறைந்திருப்பவர் என்பதால், அந்தத் தூணிலேயே அவர் ஆசி வழங்கி உங்கள் வீட்டிற்குள் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களை விரட்டி அடிப்பார். &quot;நாளை என்பது நரசிம்மனிடம் இல்லை&quot; என்பார்கள். அதாவது நீங்கள் இன்று ஒரு வேண்டுதலை வைத்தால், அதைத் தள்ளிப்போடாமல் உடனடியாக நிறைவேற்றிக் கொடுக்கும் கருணை அவதாரமே நரசிம்மர். இந்த நரசிம்ம ஜெயந்தியில் அவரைச் சரணடைந்து சகல துன்பங்களில் இருந்தும் விடுதலை பெறுவோம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[spiritual]]></category>
            <dc:creator>Priya Velan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/spiritual/narasimha-jayanti-2026-fasting-rules-worship-method-dhaan-and-mantras-to-chant-articleshow-n1awmg2"/>
        </item>
        <item>
            <title><![CDATA[தமிழகத்தில் தொங்கு சட்டசபை வருமா? வந்தால் யார் ஆட்சி அமைப்பார்?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/tamil-nadu-see-a-hung-assembly-2026-who-will-form-government-d35gra2</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/tamil-nadu-see-a-hung-assembly-2026-who-will-form-government-d35gra2</guid>
            <pubDate>Wed, 29 Apr 2026 15:05:43 +0530</pubDate>
            <description><![CDATA[தமிழக சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் தொங்கு சட்டசபை அமையும். 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், ஆளுநர் பெரும்பான்மையை நிரூபிக்க அழைப்பு விடுப்பார், அப்போது சிறிய கட்சிகள் கிங் மேக்கராக மாறி பேரம் பேசும்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01khe9erf6k9aqepn25t10espm,imgname-stalin-vijay-eps-1771079950820.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[தமிழக சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் தொங்கு சட்டசபை அமையும். 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், ஆளுநர் பெரும்பான்மையை நிரூபிக்க அழைப்பு விடுப்பார், அப்போது சிறிய கட்சிகள் கிங் மேக்கராக மாறி பேரம் பேசும்.&lt;img&gt;&lt;p&gt;முன் எப்போதும் இல்லாத வகையில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 23ம் தேதி அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இதில் பதிவான வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாக உள்ளன. இந்நிலையில் தமிழக வரலாற்றி இதுவரை இல்லாத வகையில் ஓட்டு சதவீதம் அதிகரித்துள்ள நிலையில் ஆளும் திமுகவும், எதிர்கட்சியான அதிகமுகவும் ஒரு வித பீதியுடன் இருந்து வருகின்றனர். இதற்கு காரணம் விஜய்யின் அரசியல் வருகை தான். சுமார் 12.5 லட்சம் புதிய வாக்காளர்கள் மற்றும் இளைஞர்களின் வாக்குகள் எங்கே சென்றுள்ளன என்பதுதான் இந்த தேர்தலில் புரியாத புதிராக இதுவரை இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் தொங்கு சட்டசபை அமைய அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அப்படி தொங்கு சட்டசபை என்றால் என்ன? அப்படி அமைக்கும் பட்சத்தில் என்ன நடக்கும்? என்பதை பார்க்கலாம். தமிழக சட்டமன்றத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க குறைந்தது 118 இடங்கள் வேண்டும். இதை தான் மெஜிக் நெம்பர் என்று கூறுவார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த தேர்தல் முடிவுகளில் எந்தவொரு தனிப்பட்ட கட்சிக்கோ அல்லது கூட்டணிக்கோ 118 இடங்கள் கிடைக்கவில்லை என்றால், அந்த நிலையைத்தான் தொங்கு சட்டசபை என்று கூறுவார்கள். உதாரணமாக A கட்சி அல்லது கூட்டணி 100 இடங்களிலும், B கூட்டணி கட்சி மற்றும் கூட்டணி 100 தொகுதிகள் வெற்றி பெறுவதாக வைத்துக்கொள்வோம். C கட்சி 34 தொகுதிகளில் வெற்றி பெறுவதாக வைத்துக்கொள்வோம். இதில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதுதான் தொங்கு சட்டசபை கூறுகிறார்கள். அப்படி தொங்கு சட்டசபை அமைக்கும் பட்சத்தில் முழு அதிகாரமும் ஆளுரின் கைக்கு செல்லும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதாவது பெரும்பான்மை இல்லாத நிலையில் யாரை முதலில் ஆட்சி அமைக்க அழைப்பது என்ற தனிப்பட்ட அதிகாரம் ஆளுநருக்கு உண்டு. ஆளுநர் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுப்பார். சட்டப்பேரவையில் எனக்கு மெஜாரிட்டி இருப்பதை A அல்லது B நிரூபிக்க வேண்டும். அந்த நேரத்தில் C யாருடன் செல்கிறாரோ கிங் மேக்கராக உருவெடுப்பார்கள். இவர்கள் தங்களது ஆதரவை அளிப்பதற்காக, துணை முதல்வர் பதவி, முக்கிய அமைச்சரவை இலாக்காக்கள் அல்லது சில சலுகைகளை பேரம் பேசுவார்கள். இந்தியாவில் பல மாநிலங்களில் இது போன்று நடந்துள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் இது போன்று நடந்துள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[tamilnadu]]></category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/tamil-nadu-see-a-hung-assembly-2026-who-will-form-government-d35gra2"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Atal Pension Yojana: தினமும் ரூ.10 சேமித்தால் போதும்... மாசம் ரூ.5000 பென்ஷன், ரூ.8 லட்சம் கையில்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/atal-pension-yojana-guide-how-to-get-monthly-pension-and-lump-sum-pwc65yw</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/atal-pension-yojana-guide-how-to-get-monthly-pension-and-lump-sum-pwc65yw</guid>
            <pubDate>Wed, 29 Apr 2026 15:03:49 +0530</pubDate>
            <description><![CDATA[அரசுப் பணிகளில் பணிபுரிபவர்கள் ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியம் பெறுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும், மத்திய அரசு தனியார் ஊழியர்கள் மற்றும் அமைப்புசாரா துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்காக அடல் ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kqbqtbhw76be93mg6xmb5nxa,imgname-atal-pension-yojana--2--1777436798524.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;அரசுப் பணிகளில் பணிபுரிபவர்கள் ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியம் பெறுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும், மத்திய அரசு தனியார் ஊழியர்கள் மற்றும் அமைப்புசாரா துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்காக அடல் ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அமைப்புசாரா துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு முதுமைக் காலத்தில் நிதிப் பாதுகாப்பை வழங்கும் நோக்கில், மத்திய அரசு அடல் ஓய்வூதியத் திட்டத்தை (APY) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் 2015-ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது. இத்திட்டம் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் மேற்பார்வையின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் சேருபவர்கள், 60 வயதை நிறைவு செய்த பிறகு ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான ஓய்வூதியத்தைப் பெறும் வாய்ப்பைப் பெறுவார்கள். இது குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கான ஒரு உத்தரவாதத் திட்டம் என்று கூறலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தத் திட்டத்தில் சேர, வயது 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் வங்கி அல்லது தபால் நிலையத்தில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பது கட்டாயமாகும். ஆதார், கைபேசி எண் மற்றும் பிற கேஒய்சி (KYC) ஆவணங்கள் தேவைப்படும். ஏற்கனவே வருமான வரி வரம்பில் உள்ளவர்கள் அல்லது பிற ஓய்வூதியத் திட்டங்களில் உள்ளவர்கள் இந்தத் திட்டத்திற்குத் தகுதி பெற மாட்டார்கள். எனவே, இந்தத் திட்டம் அமைப்புசாரா துறையில் உள்ளவர்களை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தத் திட்டத்தில் செலுத்த வேண்டிய தொகை வயதைப் பொறுத்து மாறுபடும். நீங்கள் இளம் வயதில் சேர்ந்தால், ஒரு சிறிய தொகையுடன் தொடங்கலாம், ஆனால் தாமதமாகச் சேர்ந்தால், நீங்கள் அதிகமாகச் செலுத்த வேண்டியிருக்கும். உதாரணமாக, 18 வயதில் சேரும் ஒருவர் மாதத்திற்கு சுமார் ரூ. 42 முதல் ரூ. 210 வரை செலுத்த வேண்டும். மறுபுறம், நீங்கள் 40 வயதில் சேர்ந்தால், மாதத்திற்கு ரூ. 1,454 வரை செலுத்த வேண்டியிருக்கும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஓய்வூதியத் தொகையின் அடிப்படையில் செலுத்த வேண்டிய தொகைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. உதாரணமாக, உங்களுக்கு 23 வயதாக இருந்து, மாதத்திற்கு ரூ. 300 செலுத்தினால், உங்களுக்கு மாதத்திற்கு ரூ. 5,000 ஓய்வூதியம் கிடைக்கும். அதாவது, நீங்கள் ஒரு நாளைக்கு ரூ. 10 செலுத்த வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;60 வயதை நிறைவு செய்த பிறகு இந்தத் திட்டத்தில் சேருபவர்களுக்கு, மாதம் ரூ. 1,000 முதல் ரூ. 5,000 வரை நிலையான ஓய்வூதியம் வழங்கப்படும். நீங்கள் செலுத்தும் தொகையும் ஓய்வூதியத்திற்கு ஏற்பவே இருக்கும். இந்தத் திட்டத்தின் சிறப்பு அம்சங்களில் ஒன்று, குடும்ப உறுப்பினர் இறந்த பிறகும் குடும்பம் பாதுகாக்கப்படும். முதலில் வாழ்க்கைத் துணைக்கு அதே ஓய்வூதியம் வழங்கப்படும். அவர்கள் இருவரும் இல்லாத பட்சத்தில், முழுத் தொகையும் நாமினிக்கு வழங்கப்படும். உதாரணமாக, நீங்கள் ரூ. 5,000 ஓய்வூதியத்தைத் தேர்வுசெய்தால், உங்களுக்கு சுமார் ரூ. 8.5 லட்சம் தொகை கிடைக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தத் திட்டத்தில் இணைவது மிகவும் எளிது. நாட்டில் உள்ள அனைத்து முக்கிய வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் மூலமாகவும் நீங்கள் விண்ணப்பிக்கலாம். வங்கிச் செயலி அல்லது அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாகவும் நீங்கள் ஆன்லைனில் பதிவு செய்யலாம். இந்தத் திட்டத்தில் தானியங்கிப் பற்று வசதி உள்ளது. அதாவது, ஒவ்வொரு மாதமும் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து தானாகவே பணம் எடுக்கப்படும். இருப்பினும், கணக்கில் போதுமான இருப்பு இல்லையென்றால், ஒரு சிறிய அபராதம் விதிக்கப்படும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பணம் செலுத்தப்படாவிட்டால், கணக்கு இடைநிறுத்தப்படும், செயலிழக்கச் செய்யப்படும் அல்லது மூடப்படும். தேவைப்பட்டால், பாதியிலேயே திட்டத்திலிருந்து வெளியேறும் வாய்ப்பும் உள்ளது, ஆனால் சில நிபந்தனைகள் பொருந்தும். இந்த வகையில், அடல் பென்ஷன் யோஜனா என்பது சிறிய தொகையுடன் தொடங்கி, எதிர்காலத்தில் ஒரு நிலையான வருமானத்தை வழங்குவதற்கான ஒரு நல்ல திட்டமாகும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[business]]></category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/atal-pension-yojana-guide-how-to-get-monthly-pension-and-lump-sum-pwc65yw"/>
        </item>
        <item>
            <title><![CDATA[சீரடி வந்திறங்கிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்! | TVK Chief Vijay at Shirdi Airport]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/tvk-chief-vijay-lands-in-shirdi-for-spiritual-seeking-videoshow-2wec4l8</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/tvk-chief-vijay-lands-in-shirdi-for-spiritual-seeking-videoshow-2wec4l8</guid>
            <pubDate>Wed, 29 Apr 2026 15:02:32 +0530</pubDate>
            <description><![CDATA[]]></description>
            <media:content url="https://geo.dailymotion.com/player/x1tbu.html?video=xa7fqw2" medium="video" height="768" width="1024"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் (TVK Chief Vijay) அவர்கள் இன்று மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகரில் (Ahilyanagar) உள்ள சீரடி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சீரடி சாய்பாபா கோயிலில் தரிசனம் மேற்கொள்வதற்காக அவர் வருகை தந்துள்ளதாகத் தெரிகிறது. இது குறித்த கூடுதல் விவரங்களை இந்த வீடியோவில் காணலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[tamilnadu]]></category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/tvk-chief-vijay-lands-in-shirdi-for-spiritual-seeking-videoshow-2wec4l8"/>
        </item>
        <item>
            <title><![CDATA[pradosh vrat புதன்கிழமை வரும் 'புத-பிரதோஷத்தின்' அபூர்வ ரகசியங்களும் வழிபாட்டு பலன்களும்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/spiritual/budha-pradosh-vrat-2026-april-significance-worship-method-and-puja-benefits-articleshow-ok3b9qc</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/spiritual/budha-pradosh-vrat-2026-april-significance-worship-method-and-puja-benefits-articleshow-ok3b9qc</guid>
            <pubDate>Wed, 29 Apr 2026 14:28:22 +0530</pubDate>
            <description><![CDATA[சிவபெருமான் ஆலகால விஷத்தை குடித்து, உலகத்தை காத்த நேரமே பிரதோஷ காலமாக கருதப்படுகிறது. தன்னை வழிபட்ட தேவர்கள் உள்ளிட்டோருக்கு வேண்டிய வரங்களை சிவபெருமான் அழித்து, நந்தியின் கொம்புகளுக்கு இடையே ஆனந்த தாண்டவம் ஆடிக் காட்டிய காலம் என்பதால் நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேற பிரதோஷ காலத்தில் சிவ வழிபாடு செய்வதும் சிவ பூஜையில் கலந்து கொள்வதும் சிறப்பானது]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kqc79kkbh4gsm2pqgx6k5cqp,imgname-budha-pradosh-vrat-2026--1--1777453026923.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சிவபெருமானுக்கு உகந்த எட்டு வகையான விரதங்களில் 'பிரதோஷம்' மிக முக்கியமானது. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை என இருமுறை திரயோதசி திதியில் மாலை நேரத்தில் வரும் இந்த வழிபாட்டை, &quot;நித்ய பிரதோஷம், பட்ச பிரதோஷம், மகா பிரதோஷம்&quot; எனப் பல வகைகளில் பிரிப்பார்கள். தினமும் மாலை 04.30 மணி முதல் 6 மணி வரையிலான நேரத்தை பிரதோஷ வேளை என்றும், நித்ய பிரதோஷம் என்றும் சொல்லுவார்கள். சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்தி உலகைக் காத்த நேரமே பிரதோஷ காலம்.திங்கட்கிழமையில் வரும் சோமவார பிரதோஷம் மற்றும் சனிக்கிழமையில் வரும் சனி மகா பிரதோஷத்தை போல் ஒவ்வொரு கிழளையிலும் வரும் பிரதோஷத்திற்கு ஒரு தனிச்சிறப்பும், பலன்களும் உண்டு. அப்படி புதன்கிழமையில் வரும் பிரதோஷத்திற்கு என்ன சிறப்பு என தெரிந்து கொள்ளலாம்.&lt;/p&gt;&lt;p&gt;புத-பிரதோஷத்தின் தனித்துவமான சிறப்பு :&lt;/p&gt;&lt;p&gt;நவகிரகங்களில் 'புதன் பகவான்' கல்வி, அறிவு, வியாபாரம் மற்றும் பேச்சாற்றலுக்கு அதிபதி. ஜோதிட ரீதியாக புதன்கிழமை அன்று சிவனை வழிபடுவது ஒருவரின் ஜாதகத்தில் இருக்கும் 'புதன் தோஷத்தை' நீக்கும் வல்லமை கொண்டது. பலரும் அறியாத தகவல் என்னவென்றால், பிரதோஷ வேளையில் நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையில் சிவன் திருநடனம் ஆடும்போது, அங்கேயே திருமாலும் (புதனின் அதிதேவதை) உடன் இருந்து தாளம் இசைப்பதாக புராணங்கள் கூறுகின்றன. எனவே, புதன்கிழமை பிரதோஷத்தை வழிபடுபவர்களுக்கு சிவனின் அருளோடு விஷ்ணுவின் ஆசியும் ஒருசேர கிடைக்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;வழிபாட்டு முறைகள்:&lt;/p&gt;&lt;p&gt;&lt;img&gt;&lt;/p&gt;&lt;p&gt;- பிரதோஷ நேரத்தில் குளித்துவிட்டு, திருநீறு அணிந்து கோவிலுக்குச் செல்வது சிறப்பு. - சிவனை தரிசிப்பதற்கு முன்னால் நந்தியம் பெருமானின் அனுமதி பெற வேண்டும். &quot;ஓம் நந்திகேஸ்வராய நமஹ&quot; என்று கூறி, நந்தியின் கொம்புகளுக்கு இடையில் சிவதரிசனம் காண்பது கோடி புண்ணியம் தரும். - புதன்கிழமை பிரதோஷத்திற்கு 'பச்சை கற்பூரம்' அல்லது 'பன்னீர்' வாங்கித் தருவது சிறந்தது. இது புத பகவானின் ஆதிக்கத்தை வலுப்படுத்தி, மனக்குழப்பத்தை நீக்கி தெளிவான சிந்தனையைத் தரும். - இந்த நாளில் &quot;ஓம் நம சிவாய&quot; என்ற பஞ்சாட்சர மந்திரத்தை எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை சொல்வது சிறப்பு. - சிவன் மற்றும் நந்திக்கு உரிய அபிஷேகம் மற்றும் பூஜை பொருட்களை வாங்கிக் கொடுப்பதால் நம்முடைய பாவங்கள் தீரும் என நம்பப்படுகிறது. - சிவனுக்கு பிரதோஷ வேளையில் வில்வத்தால் அர்ச்சனை செய்து வழிபடுவதும், நந்திக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுவதும் சிறப்பு. - சிவபெருமானுக்கு பிரதோஷத்தன்று கரும்புச்சாறு கொண்டு அபிஷேகம் செய்வது கர்மவினைகளை குறைத்து, முக்தியை தரும் என்பது நம்பிக்கை. - பிரதோஷம் அன்று சிவபெருமானை வழிபடுவதுடன், நரசிம்ம பெருமாளையும் வழிபடுவதால் வாழ்க்கையில் எப்படிப்பட்ட துன்பத்தில் இருந்தும் விடுபட முடியும்.&lt;/p&gt;&lt;p&gt;செய்ய வேண்டிய 'ரகசிய' தானங்கள் :&lt;/p&gt;&lt;p&gt;இந்த நாளில் சிவனுக்கு வில்வ இலைகளையும், நந்திக்கு அருகம்புல்லையும் சமர்ப்பிப்பது வழக்கம். ஆனால், கூடுதல் பலன்களைப் பெற பச்சைப்பயறு தானம் சிறந்தது. புதனுக்கு உகந்த தானியம் பச்சைப்பயறு. இதனை வேக வைத்து பசுமாட்டிற்கு வழங்கினால், தடைப்பட்டுக் கொண்டிருக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றியில் முடியும்.&lt;/p&gt;&lt;p&gt;கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் பிரதோஷ வேளையில் கோவிலில் உள்ள தீபத்தில் 'இலவம் பஞ்சு' திரி போட்டு, சுத்தமான பசு நெய் ஊற்றி விளக்கேற்றினால் கடன் சுமை குறையும் என்பது நம்பிக்கை. புத-பிரதோஷத்தில் விரதம் இருந்து வழிபட்டால் மாணவர்களுக்குக் கல்வியில் மந்த நிலை நீங்கி, ஞாபக சக்தி பெருகும். வியாபாரத்தில் நஷ்டத்தைச் சந்திப்பவர்கள் மீண்டும் எழுச்சி பெறுவார்கள். ஜாதகத்தில் புதன் பலவீனமாக இருப்பவர்களுக்கு பேச்சில் தடுமாற்றம் நீங்கி, சமயோசித புத்தி கூடும்.&lt;/p&gt;&lt;p&gt;வாழ்க்கையில் எவ்வளவு பெரிய கஷ்டங்கள் இருந்தாலும், பிரதோஷ காலத்தில் ஒரு நிமிடம் சிவனை நினைத்து தியானம் செய்வது மனதிற்கு அமைதியைத் தரும். &quot;சிவ சிவ&quot; என்று உச்சரித்து, இந்த புத-பிரதோஷத்தை மனதார வழிபடுங்கள்; அறிவுத்திறனும், செல்வ வளமும் தேடி வரும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[spiritual]]></category>
            <dc:creator>Priya Velan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/spiritual/budha-pradosh-vrat-2026-april-significance-worship-method-and-puja-benefits-articleshow-ok3b9qc"/>
        </item>
        <item>
            <title><![CDATA[PF Claim Rejection : பிஎஃப் பணம் ரிஜெக்ட் ஆகுதா? இந்த சின்ன தப்பை 2 நிமிஷத்துல சரி பண்ணுங்க.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/how-to-change-kyc-details-in-uan-portal-easy-steps-to-fix-pf-claim-rejection-due-to-kyc-mismatch-g8gb6nt</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/how-to-change-kyc-details-in-uan-portal-easy-steps-to-fix-pf-claim-rejection-due-to-kyc-mismatch-g8gb6nt</guid>
            <pubDate>Wed, 29 Apr 2026 14:26:51 +0530</pubDate>
            <description><![CDATA[How to Change KYC Details in UAN Portal : பிஎஃப் பணத்தை எடுக்கும்போது உங்கள் விண்ணப்பம் அடிக்கடி நிராகரிக்கப்படுகிறதா? கவலை வேண்டாம். இந்த பிரச்சனைக்கு EPFO தீர்வை வழங்கியுள்ளது. வீட்டில் இருந்தபடியே எப்படி சரி செய்வது என்று இங்கே பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k1dkk649a5a0s21aacap48qx,imgname-pf-uses-1753877158025.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;How to Change KYC Details in UAN Portal : பிஎஃப் பணத்தை எடுக்கும்போது உங்கள் விண்ணப்பம் அடிக்கடி நிராகரிக்கப்படுகிறதா? கவலை வேண்டாம். இந்த பிரச்சனைக்கு EPFO தீர்வை வழங்கியுள்ளது. வீட்டில் இருந்தபடியே எப்படி சரி செய்வது என்று இங்கே பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;பெரும்பாலும் பிஎஃப் கிளைம் ரிஜெக்ட் ஆவதற்கு ஒரே ஒரு முக்கிய காரணம் தான் இருக்கிறது. அது, டேட்டா பொருந்தாமல் இருப்பது (Data Mismatch). அதாவது, உங்கள் பிஎஃப் கணக்கு பதிவில் உள்ள பெயர், பிறந்த தேதி அல்லது பாலினம் போன்ற தகவல்கள், உங்கள் ஆதார் கார்டில் உள்ள தகவல்களுடன் பொருந்தாமல் இருப்பதுதான். இப்போது EPFO உங்கள் விவரங்களை நேரடியாக ஆதார் டேட்டாவுடன் சரிபார்ப்பதால், ஒரு சிறிய எழுத்துப்பிழை கூட உங்கள் கிளைமை நிராகரிக்கச் செய்துவிடும். ஆனால், இதை சரிசெய்ய இனி நீங்கள் அலுவலகங்களுக்கு அலையத் தேவையில்லை.&lt;img&gt;முன்பெல்லாம் பிஎஃப் கணக்கில் ஒரு சின்ன தவற்றைத் திருத்த பல மாதங்கள் அலுவலகங்களுக்கு நடையாய் நடக்க வேண்டியிருந்தது. ஆனால், இப்போது எல்லாமே டிஜிட்டல் மயமாகிவிட்டது. இந்த புதிய ஆன்லைன் சிஸ்டத்தின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், நீங்கள் உங்கள் விவரங்களை அப்டேட் செய்தவுடன், சிஸ்டம் அதை நேரடியாக ஆதார் (UIDAI) டேட்டாபேஸுடன் சரிபார்க்கிறது. இதனால் மோசடிக்கு வாய்ப்பு இல்லாமல் போவதோடு, உங்கள் வேலையும் பல மடங்கு வேகமாக முடிகிறது.&lt;img&gt;&lt;p&gt;உங்கள் விவரங்களை வீட்டில் இருந்தபடியே சரிசெய்ய இந்த 5 ஸ்டெப்ஸை ஃபாலோ பண்ணுங்க:&amp;nbsp;&lt;/p&gt;&lt;ol&gt; &lt;li&gt;முதலில், EPFO-வின் UAN போர்ட்டலுக்குச் சென்று உங்கள் பாஸ்வேர்டுடன் லாகின் செய்யுங்கள்.&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;மேலே உள்ள மெனுவில் 'Manage' என்பதைக் கிளிக் செய்து, 'Modify Basic Details' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;இப்போது திறக்கும் பக்கத்தில், உங்கள் ஆதார் கார்டில் உள்ளபடியே தகவல்களை உள்ளிடவும். பெயர், பிறந்த தேதி மற்றும் பாலினம் ஆகியவற்றை ஆதார் கார்டில் இருப்பது போலவே டைப் செய்யவும்.&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;விவரங்களை நிரப்பிய பிறகு 'Update' பட்டனை அழுத்தவும். இப்போது உங்கள் கோரிக்கை, ஒப்புதலுக்காக உங்கள் நிறுவனத்திற்கு (Employer) அனுப்பப்படும்.&amp;nbsp;&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;p&gt;உங்கள் நிறுவனத்தின் HR அல்லது மேலதிகாரியிடம் இந்த ஆன்லைன் கோரிக்கை பற்றி தெரிவியுங்கள். அவர்கள் ஒப்புதல் அளித்தவுடன், உங்கள் விவரங்கள் அப்டேட் ஆகிவிடும்.&lt;/p&gt;&lt;img&gt;இந்த அப்டேட்டின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், உங்கள் வங்கி கணக்கு எண் அல்லது IFSC கோடை மாற்ற, உங்கள் நிறுவனத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கத் தேவையில்லை. வங்கி விவரங்களை நீங்களே நேரடியாக அப்டேட் செய்யலாம். இது பிஎஃப் பணம் எடுக்கும் செயல்முறையை இன்னும் எளிதாக்குகிறது.&lt;img&gt;&lt;p&gt;சில முக்கியமான விஷயங்களை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்:&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;உங்கள் ஆதார் கார்டு, உங்கள் PAN கார்டுடன் எப்போதும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;வங்கி விவரங்களை உள்ளிடும்போது, பாஸ்புக்கைப் பார்த்து சரியான IFSC கோடை நிரப்பவும்.&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;முழுமையான KYC இல்லாமல், EPFO ஒரு ரூபாய் கூட எடுக்க உங்களை அனுமதிக்காது. எனவே, இன்றே உங்கள் KYC-ஐ முடித்துவிடுங்கள்.&lt;/li&gt;&lt;/ul&gt;]]></content:encoded>
            <category><![CDATA[business]]></category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/how-to-change-kyc-details-in-uan-portal-easy-steps-to-fix-pf-claim-rejection-due-to-kyc-mismatch-g8gb6nt"/>
        </item>
        <item>
            <title><![CDATA[தனுசு ராசியின் பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணம், தொழில் மற்றும் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்? முழுமையான பலன்கள்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/dhanusu-rasi-pooradam-nakshatra-secrets-palan-and-pariharam-in-tamil-astrology-zpb94xk</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/dhanusu-rasi-pooradam-nakshatra-secrets-palan-and-pariharam-in-tamil-astrology-zpb94xk</guid>
            <pubDate>Wed, 29 Apr 2026 14:10:00 +0530</pubDate>
            <description><![CDATA[பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் "வெற்றியின் வேட்கை கொண்டவர்கள்". விடாமுயற்சி ஒன்றையே மூலதனமாகக் கொண்டு வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவார்கள்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kj4c6c1wqqzrfhcbpp3ys8s8,imgname-visha-yoga-with-the-combination-of-saturn-moon-people-of-these-zodiac-signs-should-be-careful-1771821019196.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் &quot;வெற்றியின் வேட்கை கொண்டவர்கள்&quot;. விடாமுயற்சி ஒன்றையே மூலதனமாகக் கொண்டு வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பூராடம் நட்சத்திரம் என்பது தனுசு ராசியில் அமைந்த, சுக்கிரனை நட்சத்திர அதிபதியாகவும் குருவை ராசி அதிபதியாகவும் கொண்ட ஒரு வலிமையான நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இயல்பாகவே &quot;வெல்ல முடியாதவர்கள்&quot;. இதன் அதிதேவதை 'அபஸ்' எனப்படும் நீர் தேவதை என்பதால், ஓடும் நீரைப் போலவே இவர்களது வேகமும் விடாமுயற்சியும் யாராலும் தடுக்க முடியாத ஒன்றாக இருக்கும். இந்த நட்சத்திரத்தின் குறியீடு 'முறம்'. முறம் எப்படி தேவையற்ற தூசிகளை நீக்கிவிட்டு சுத்தமான தானியத்தைத் தருகிறதோ, அதேபோல இவர்களும் வாழ்க்கையில் எது தேவை, எது தேவையற்றது என்பதைப் பகுத்தறிந்து செயல்படுவதில் வல்லவர்கள். யாரிடம் பழகினாலும் அவர்களின் உள்நோக்கத்தை மிக எளிதாகக் கண்டறிந்து விடுவார்கள். இவர்களை அவ்வளவு எளிதில் யாரும் ஏமாற்ற முடியாது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜோதிட ரீதியாக, இவர்கள் அதிக தன்னம்பிக்கை கொண்டவர்கள். &quot;பூராடம் நூலாடம்&quot; என்ற வாக்கிற்கேற்ப, ஒரு கலையையோ அல்லது தொழிலையோ கையில் எடுத்தால் அதில் நுணுக்கமாகத் தேர்ச்சி பெற்று 'நூல் பிடித்தார் போல' மிகச் சரியாகச் செய்து முடிப்பார்கள். இவர்களது பேச்சில் ஒரு வசீகரம் இருக்கும், அதே சமயம் ஒரு அதிகாரமும் இருக்கும். எதற்கும் வளைந்து கொடுக்காத நேர்மை இவர்களது குணம். சுக்கிரனின் அம்சம் இருப்பதால் ஆடம்பரமான மற்றும் தரமான பொருட்களை விரும்புவார்கள். எதையும் அழகாகவும் நேர்த்தியாகவும் செய்ய வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பார்கள். குருவின் ஆதிக்கம் உள்ள ராசியில் பிறந்துள்ளதால், இவர்களுக்கு மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்கும் திறன் இயல்பிலேயே உண்டு.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சமூகத்தில் இவர்களுக்கு எப்போதும் ஒரு தனி மரியாதையும் அந்தஸ்தும் இருக்கும். தோல்விகளைக் கண்டு இவர்கள் ஒருபோதும் துவண்டுவிட மாட்டார்கள்; மாறாக, ஒவ்வொரு தோல்வியிலிருந்தும் ஒரு பாடத்தைக் கற்றுக்கொண்டு இன்னும் பலமாக எழுவார்கள். இவர்களது மன உறுதி என்பது இமயமலை போன்றது. யாருக்காகவும் தனது சுயமரியாதையை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். இவர்களுக்குத் தீங்கு செய்பவர்களைக் கூடத் தனது வெற்றியின் மூலம் பதிலடி கொடுப்பார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வாழ்க்கையின் தொடக்கத்தில் சில போராட்டங்களைச் சந்தித்தாலும், தனது சொந்த உழைப்பால் முன்னேறிப் புகழின் உச்சிக்குச் செல்வார்கள். குறிப்பாக, நீர் தொடர்பான தொழில்கள், நிர்வாகப் பணிகள் மற்றும் கலைத்துறையில் இவர்களுக்குப் பெரும் வெற்றி கிட்டும். இவர்களது வாழ்க்கைத் துணை மற்றும் நண்பர்களிடம் மிகுந்த அன்பு பாராட்டுவார்கள். ஆனால் அதே சமயம் அவர்கள் மீது ஒரு ஆதிக்கமும் செலுத்துவார்கள். சுருக்கமாகச் சொன்னால், பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குருவின் ஞானமும், சுக்கிரனின் சாதுர்யமும், முறத்தைப் போன்ற தெளிவான புத்தியும் கொண்ட தோற்கடிக்க முடியாதவர்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பூராடம் நட்சத்திரம் சுக்கிரனின் ஆதிக்கம் கொண்டது மற்றும் இதன் அதிதேவதை நீர் (வருண பகவான்) ஆகும். சுக்கிரனின் அருளைப் பெற வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமிக்கு நெய் தீபமேற்றி, &quot;லட்சுமி அஷ்டோத்திரம்&quot; வாசிப்பது மிகுந்த பலன் தரும். ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கும் ரங்கநாதரை வழிபடுவது இந்த நட்சத்திரக்காரர்களுக்கு வாழ்வில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும். நீர் நிலைகளை வணங்குவதும், நீர் தாகம் தீர்ப்பதும் இவர்களுக்கு மிகப்பெரிய புண்ணியத்தைத் தரும். திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில், பஞ்சபூத தலங்களில் நீர் தலம் ஆகும். பூராடம் நட்சத்திரத்தின் அதிதேவதை நீர் என்பதால், இக்கோவிலுக்குச் சென்று வழிபடுவது இவர்களது கர்ம வினைகளைப் போக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கும்பகோணம் அருகே உள்ள கஞ்சனூர் சுக்ரபுரிக்குச் சென்று சுக்கிர பகவானுக்கு வெள்ளை நிற மலர்களால் அர்ச்சனை செய்வது நல்லது. வெள்ளிக்கிழமைகளில் வெள்ளை நிற ஆடைகளை அணிவது அல்லது வெள்ளை நிறக் கைக்குட்டை வைத்துக் கொள்வது சுக்கிரனின் நேர்மறை ஆற்றலை ஈர்க்கும். ஏழைப் பெண்களுக்குச் சுமங்கலிப் பொருட்கள் (மஞ்சள், குங்குமம், வளையல்) தானம் செய்வது திருமணத் தடைகளை நீக்கும். மேலும், மொச்சைப் பயறு தானம் செய்வது மிகவும் சிறப்பு. வெள்ளைத் தாமரை அல்லது மல்லிகைப் பூக்களால் இறைவனை வழிபடுவது சிறந்தது&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[astrology]]></category>
            <dc:creator>Rsiva kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/dhanusu-rasi-pooradam-nakshatra-secrets-palan-and-pariharam-in-tamil-astrology-zpb94xk"/>
        </item>
        <item>
            <title><![CDATA['விசில் புரட்சி' மூலம் ஆட்சியைப் பிடிப்போம் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் | Sengottaiyan Speech]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/sengottaiyan-vows-victory-with-the-whistle-revolution-videoshow-gbticne</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/sengottaiyan-vows-victory-with-the-whistle-revolution-videoshow-gbticne</guid>
            <pubDate>Wed, 29 Apr 2026 14:02:53 +0530</pubDate>
            <description><![CDATA[]]></description>
            <media:content url="https://geo.dailymotion.com/player/x1tbu.html?video=xa7fgru" medium="video" height="768" width="1024"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகி செங்கோட்டையன், தமிழகத்தின் எதிர்காலத்திற்கு விஜய்யின் தொலைநோக்குப்பார்வை கொண்ட தலைமை மிக அவசியம் என தெரிவித்தார். கட்சியின் அடையாளமாகத் திகழும் &quot;விசில் புரட்சி&quot; மக்களிடையே மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்றும் வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்றும் கூறினார். பசுமை, எரிபொருள், இன மற்றும் சமதர்மப் புரட்சிகளை முன்னெடுத்துச் செல்லும் என்றும் உறுதிபடத் தெரிவித்த செங்கோட்டையன் தற்போதைய அரசியல் சவால்களை முறியடித்து, எதிர்க்கட்சிகளுக்கு எவ்வித வாய்ப்பும் தராமல் தவெக மிகப்பெரிய தேர்தல் வெற்றியைப் பதிவு செய்யும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[tamilnadu]]></category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/sengottaiyan-vows-victory-with-the-whistle-revolution-videoshow-gbticne"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Riyan Parag | டிரெஸ்ஸிங் ரூமில் இ-சிகரெட்... வீடியோவால் சிக்கிய ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/sports/riyan-parag-s-e-cigarette-video-sparks-controversy-videoshow-le2ss9d</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/sports/riyan-parag-s-e-cigarette-video-sparks-controversy-videoshow-le2ss9d</guid>
            <pubDate>Wed, 29 Apr 2026 14:02:36 +0530</pubDate>
            <description><![CDATA[]]></description>
            <media:content url="https://geo.dailymotion.com/player/x1tbu.html?video=xa7fgry" medium="video" height="768" width="1024"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Riyan Parag e-cigarette controversy : சண்டிகர்: ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் ஒரு பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். டிரெஸ்ஸிங் ரூமில் அமர்ந்து அவர் இ-சிகரெட் (Vaping) பிடித்த காட்சிகள் வெளியாகி, பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை முல்லன்பூரில் உள்ள மகாராஜா யதவீந்திர சிங் ஸ்டேடியத்தில் இந்தச் சம்பவம் நடந்தது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[sports]]></category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/sports/riyan-parag-s-e-cigarette-video-sparks-controversy-videoshow-le2ss9d"/>
        </item>
        <item>
            <title><![CDATA[உஷார்.! வெப்ப அலை எச்சரிக்கை.. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் முன் இந்த விஷயங்கள் கவனிங்க]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/sending-kids-to-school-in-heatwave-avoid-these-mistakes-pzh8p0d</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/sending-kids-to-school-in-heatwave-avoid-these-mistakes-pzh8p0d</guid>
            <pubDate>Wed, 29 Apr 2026 13:38:43 +0530</pubDate>
            <description><![CDATA[இந்தியாவில் வெப்ப அலை தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், குழந்தைகள் 'ஹீட் ஸ்ட்ரோக்' போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகும் அபாயம் உள்ளது. பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் அவர்களை பாதுகாக்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kqc47mrj1ah471rh7480wt3r,imgname-tamil-news---2026-04-29t133228.524-1777449816850.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;இந்தியாவில் வெப்ப அலை தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், குழந்தைகள் 'ஹீட் ஸ்ட்ரோக்' போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகும் அபாயம் உள்ளது. பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் அவர்களை பாதுகாக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவின் பல பகுதிகளில் வெப்ப அலை தாக்கம் தீவிரமாக அதிகரித்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட எச்சரிக்கைகளின்படி, அடுத்த நாட்களிலும் வெப்பநிலை மேலும் உயரும் வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் பள்ளிகள் காட்டப்படுவதால், குழந்தைகள் வெயிலில் பள்ளி செல்வது பெற்றோருக்கு கூடுதல் கவலை அளிக்கிறது. குழந்தைகளின் உடல் எதிர்ப்பு குறைவாக இருப்பதால், வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகள் அவர்களை விரைவாக தாக்கும் அபாயம் உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வெப்ப அலை நேரங்களில் 40 டிகிரி செல்சியஸைத் தாண்டும் வெப்பநிலை மற்றும் சூடான காற்று வீசும் பகுதிகளில் 'ஹீட் ஸ்ட்ரோக்' அபாயம் அதிகமாகும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதன் அறிகுறிகளாக வாந்தி, வயிற்றுப்போக்கு, தலைவலி, மயக்கம் போன்றவை காணப்படும். குறிப்பாக குழந்தைகள் அதிகமாக விளையாடும் போது வியர்வை அதிகரிப்பதால் உடலில் நீர் குறைவது வேகமாக நடக்கிறது. சரியான நீர்ச்சத்து பராமரிப்பு இல்லாவிட்டால், மருத்துவமனையில் அனுமதி பெறும் நிலையும் உருவாகலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த சூழலில், குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் முன் பெற்றோர் சில முக்கிய முன்னெச்சரிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும். காலையிலேயே குழந்தைகள் வெறும் வயிற்றில் வெளியே செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். போதுமான அளவு தண்ணீர் குடித்து செல்லவும், பள்ளிக்குச் செல்லும் போது தண்ணீர் பாட்டிலை அவசியம் எடுத்துச் செல்லவும் பழக்கப்படுத்தப்பட வேண்டும். தாகம் வந்த பிறகல்ல, இடையிடையே சிறு அளவில் தண்ணீர் குடிக்கச் சொல்வது மிகவும் அவசியம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வெப்பத்தைக் கட்டுப்படுத்த உடலுக்குத் தேவையான உப்புச் சத்து மற்றும் தாதுக்கள் ORS, எலுமிச்சை நீர், மோர் போன்ற பானங்களை தினசரி கொடுப்பது நல்லது. குழந்தைகளுக்கு இலகுவான, குளிர்ச்சி தரும் உணவுகள் வழங்கப்பட வேண்டும். வெள்ளரி, தர்பூசணி, தயிர், புதினா போன்ற உணவுகள் உடலை குளிர்விக்க உதவும். அதே நேரத்தில் ஜங்க் உணவுகள், எண்ணெய் அதிகமான பொரியல் வகைகள் போன்றவற்றை தவிர்ப்பது அவசியம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேலும், குழந்தைகள் அணியும் உடை பற்றியும் கவனம் செலுத்த வேண்டும். இலகுவான, வெளிர் நிறமான பருத்தி உடைகள் வெப்பத்தை குறைக்க உதவும். நேரடி வெயிலில் செல்லும் போது குடை, தொப்பி அல்லது துணி கொண்டு தலை பாதுகாக்க வேண்டும். குறிப்பாக மதியம் 12 மணி முதல் 4 மணி வரை அதிக வெயிலில் வெளியில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்துவது முக்கியம். சிறிய முன்னெச்சரிக்கைகள் கூட குழந்தைகளை வெப்ப அலை அபாயத்திலிருந்து பாதுகாக்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[life-style]]></category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/sending-kids-to-school-in-heatwave-avoid-these-mistakes-pzh8p0d"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Divorce : இரண்டு மனைவிகளையும் விவாகரத்து செய்தது ஏன்? பல வருடங்களுக்குப் பின்னர், பகிரங்கமாக போட்டு உடைத்த பிரபல நடிகர்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/aamir-khan-divorce-reason-aamir-khan-opens-up-about-his-divorce-reasons-after-many-years-explained-igrg1lw</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/aamir-khan-divorce-reason-aamir-khan-opens-up-about-his-divorce-reasons-after-many-years-explained-igrg1lw</guid>
            <pubDate>Wed, 29 Apr 2026 13:21:49 +0530</pubDate>
            <description><![CDATA[Aamir Khan Divorce Reason : பாலிவுட் நடிகர் அமீர்கான் தனது விவாகரத்து முடிவுகள் குறித்து நீண்ட வருடங்களுக்குப் பிறகு மனம் திறந்து பேசியுள்ளார். அவரது திருமண முறிவுக்கான காரணங்கள் குறித்து அவர் கூறிய கருத்துக்களை பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kqc3bqq5c5crgctatx5sg92g,imgname-aamir-khan-divorce-reason-1777448902373.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Aamir Khan Divorce Reason : பாலிவுட் நடிகர் அமீர்கான் தனது விவாகரத்து முடிவுகள் குறித்து நீண்ட வருடங்களுக்குப் பிறகு மனம் திறந்து பேசியுள்ளார். அவரது திருமண முறிவுக்கான காரணங்கள் குறித்து அவர் கூறிய கருத்துக்களை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பாலிவுட் துறையில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அமீர்கான். இவர் தனது 21வது வயதில் ரீனா தாத்தாவை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு அமீர்கானின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பெற்றோரின் எதிர்ப்பை மீறி 1986 ஆம் ஆண்டு ரீனா தத்தாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜூனைத் என்கிற மகனும், ஐரா என்கிற மகளும் உள்ளன. சுமார் 16 ஆண்டுகள் நீடித்த இந்த திருமண பந்தம் 2002 ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதன் பின்னர் மூன்று ஆண்டுகள் கழித்து &lsquo;லகான்&rsquo; படத்தில் அவர் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த படத்தின் உதவி இயக்குனராக இருந்த கிரண் ராவை காதலித்தார். 2005 ஆம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு ஆசாத் என்கிற மகனும் உள்ளனர். முதல் திருமணம் போலவே 16 ஆண்டுகள் நீடித்த இந்த திருமண பந்தம் 2021 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. கிரண் ராவுடன் விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட பொழுது ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கிரண் ராவை விவாகரத்து செய்த போது, &ldquo;நாங்கள் கணவன் மனைவியாக இல்லாவிட்டாலும் ஒருவருக்கொருவர் குடும்பமாகவும் மகனுக்கு பெற்றோராக இருப்போம்&rdquo; என்றும் அறிக்கை வெளியிட்டனர். மேலும் கிரண் ராவ் அளித்த பேட்டியில், &ldquo;தங்களுக்குள் எந்த பெரிய சண்டையோ அல்லது துரோகமோ கிடையாது, இந்த காதல் உறவு மாறி நட்பு ரீதியான உறவாக மாறிவிட்டது. பிரிந்து வாழ்வதே சிறந்தது என்ற ஒருமித்த கருத்துடன் இந்த முடிவை எடுத்தோம்&rdquo; என கிரண் ராவ் கூறினார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ரீனா தத்தா மற்றும் கிரண் ராவ் இருவரிடமிருந்து ஏன் பிரிந்தேன் என அமீர்கான் விளக்கியுள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் இருவருடனும் உறவு சரியாக அமையவில்லை என்றும் குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க முடியாதது தான் காரணம் என்று தன் தவறையும் ஒப்புக்கொண்ட 21 வயதில் ரீனா தாத்தாவை காதலித்த பொழுது தனக்கு அவ்வளவு முதிர்ச்சி இல்லை என்றும், சிறிய வயதில் திருமணம் செய்ததால் போதிய பக்குவம் இல்லை என்றும், அந்த சமயத்தில் வேலை வேலை என்று ஓடிக்கொண்டிருந்ததால் குடும்பத்திற்கு முக்கியத்துவம் அளிக்க முடியாததும் பிரிவுக்கு முக்கிய காரணம் என்று அவர் கூறியுள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வேலைப்பளு காரணமாக தனது மூத்த மனைவியின் குழந்தைகளான ஜூனைத் மற்றும் ஐராவுடன் நேரம் செலவிட முடியாமல் போனது குறித்து இன்று வரை வருத்தப்படுவதாக அமீர்கான் கூறினார். இதற்கு தானே முழு காரணம் என்று அவர் தன்னை குற்றம் சாட்டியுள்ளார். &ldquo;தவறை ஒப்புக்கொள்வதால் யாரும் குறைந்து போட மாட்டார்கள், நானும் என் தவறை ஒப்புக்கொண்டேன். தற்போது அந்த தவறை சரி செய்ய தொடங்கி இருக்கிறேன். குடும்பத்தினருடன் முடிந்தவரை அதிகம் நேரம் செலவிட முயற்சிக்கிறேன் என்று கூறியுள்ளார். முதல் மனைவியுடன் விவாகரத்துக்குப் பிறகு இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தனர். ரீனாவின் தந்தை இறந்தபோதும், சமீபத்தில் மகள் ஐராவின் திருமணத்தின் போதும் அமீர்கான் முன்னின்று அனைத்தையும் கவனித்துக் கொண்டார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இரு மனைவிகளை பிரிந்தாலும் தனது இரண்டு முன்னாள் மனதில் உடனும் அமீர்கான் நெருக்கம் காட்டி வருகிறார். சமீபத்திய விழாக்களில் ரீனா ரித்தா மற்றும் கிரண் ஆகிய இருவருடனும் அவர் ஒரு ஒன்றாக கலந்து கொண்டு ஒரு பெரிய குடும்பமாக வாழ்ந்து வருவதை காட்டினார். தற்போது தனது மகன் ஜூனைத் கான் அறிமுகமாகும் படத்தின் தயாரிப்பு பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். 61 வயதாகும் அவர் தற்போது கௌரி ஸ்பார்ட் என்பவர் உடன் நெருக்கமாக இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 2022 மார்ச்சில் நடந்த அமீர் கானின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கௌரி ஸ்பார்ட் கலந்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகின. இருப்பினும் இதுகுறித்து அமீர்கான் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[cinema]]></category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/aamir-khan-divorce-reason-aamir-khan-opens-up-about-his-divorce-reasons-after-many-years-explained-igrg1lw"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Nellai Top 10 Place: ஊட்டி, கொடைக்கானலை விட்டு தள்ளுங்க.. கோடை வெயிலில் நெல்லையில் பார்க்க வேண்டிய  சூப்பரான 10 இடங்கள்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-thirunelveli/top-10-awesome-places-to-visit-in-nellai-during-the-summer-heat-xg0z9a7</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-thirunelveli/top-10-awesome-places-to-visit-in-nellai-during-the-summer-heat-xg0z9a7</guid>
            <pubDate>Wed, 29 Apr 2026 13:19:01 +0530</pubDate>
            <description><![CDATA[திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணி, நெல்லையப்பர் கோவில் என்பதை தாண்டி, மனதை மயக்கும் பல சுற்றுலா தளங்களைக் கொண்டுள்ளது. கோடை வெயிலில் இருந்து தப்பிக்க, பாபநாசம், களக்காடு, அகஸ்தியர் அருவி குளுமையான 10 இடங்களை இந்த கட்டுரை பட்டியலிடுகிறது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k9d48pjn8ccnzhyntf9mqmd1,imgname-tirunelveli-3-1762451020373.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணி, நெல்லையப்பர் கோவில் என்பதை தாண்டி, மனதை மயக்கும் பல சுற்றுலா தளங்களைக் கொண்டுள்ளது. கோடை வெயிலில் இருந்து தப்பிக்க, பாபநாசம், களக்காடு, அகஸ்தியர் அருவி குளுமையான 10 இடங்களை இந்த கட்டுரை பட்டியலிடுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;திருநெல்வேலி என்றாலே நம் நினைவுக்கு வருவது தாமிரபரணி ஆறும், நெல்லையப்பர் கோவிலும் இருட்டுக்கடை அல்வாவும் தான். அதுமட்டுமல்ல குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களையும் ஒருங்கே கொண்டு சிறப்பு பெற்ற திருநெல்வேலி மாவட்டத்தில் மனதை மயக்கும் முக்கிய சுற்றுலா தளங்கள். இந்நிலையில் கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் குளு குளுவென இருக்க திருநெல்வேலியில் கட்டாயம் பார்க்க வேண்டிய 10 சுற்றுலா தலங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;திருநெல்வேலி மாவட்டத்தின் மிக முக்கியமான அடையாளங்களில் ஒன்று பாபநாசம் அணை. இயற்கை எழில் கொஞ்சும் பொதிகை மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த அணை, தென் தமிழகத்தின் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் உயிர்நாடியாக விளங்குகிறது. அதுமட்டுமல்லாமல் 108 சிவத்தலங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த பழமையான கோவில், அணையின் நுழைவாயிலில் அமைந்துள்ளது. கோடை வெயிலில் குடும்பத்துடன் சென்று குளிக்க ஏற்ற இடம் பாபநாசம். இங்குள்ள ஆற்றில் நீராடினால் அனைத்து பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நெல்லையில் நீங்கள் தேடும் அந்த 'குளு குளு' அனுபவத்திற்கு மிகச்சிறந்த இடம் களக்காடு தலையணை. மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த இடம், ஒரு இயற்கை நீச்சல் குளம் போன்றது. மலை உச்சியிலிருந்து ஓடி வரும் 'பச்சையாறு' சமவெளிக்கு வரும் இடத்தில், ஒரு தடுப்பணை போலக் கட்டப்பட்டுள்ளது. இது ஆற்றின் 'தலைப்பகுதி' போன்ற அமைப்பில் உள்ளதால் இதற்கு தலையணை என்று பெயர் வந்தது. இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குளித்து மகிழ்கிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் (KMTR), தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய புலிகள் காப்பகமாகும். இது &quot;யுனெஸ்கோ&quot; (UNESCO) அமைப்பால் உலக பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இங்கு புலி, சிறுத்தை, யானை, கரடி மற்றும் பல்வேறு வகையான குரங்குகள், மான்களும், அரிய வகை மரங்களும், மூலிகை செடிகளும் மற்றும் அடர்ந்த பசுமை மாறா காடுகள் உள்ளன. தாமிரபரணி, மணிமுத்தாறு, பச்சையாறு உட்பட 14 நதிகள் இங்கிருந்துதான் உற்பத்தியாகின்றன. இதனால் இது நதிகளின் சரணாலயம் என்றும் அழைக்கப்படுகிறது. காப்பகத்திற்குள் நுழைய அம்பாசமுத்திரம் அல்லது களக்காட்டில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நெல்லை மாவட்டத்தின் ஆன்மீக மற்றும் இயற்கை பொக்கிஷங்களில் ஒன்று அகஸ்தியர் அருவி. பாபநாசம் அணைக்கு மிக அருகிலேயே அமைந்துள்ளது. இந்த அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். மற்ற அருவிகள் கோடையில் காய்ந்துவிடும், , ஆனால் அகஸ்தியர் அருவியில் எப்போதும் நீர் வரத்து இருக்கும். பெண்கள் மற்றும் ஆண்களுக்குத் தனித்தனியாக நீராடும் வசதிகள் இங்கு உள்ளன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நீங்கள் குடும்பத்துடன் சென்றாலும் நண்பர்களுடன் சென்றாலும் உங்கள் மனதுக்கு நிச்சயம் மணிமுத்தாறு அணை மகிழ்ச்சியளிக்கும். பொதிகை மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள மணிமுத்தாறு அணை தாமிரபரணி ஆற்றின் முதன்மையான நீர்நிலை ஆகும். மணிமுத்தாறு அணைக்கு அருகில் மணிமுத்தாறு அருவி உள்ளது. இங்கு நல்ல நீர்வரத்து இருக்கும். சுற்றியும் மலைகள் மற்றும் காடுகள் சூழ்ந்துள்ள இந்த அணை காணும் கண்களுக்கு விருந்தாக இருக்கும். மணிமுத்தாறு அணைக்கு அருகில் ஒரு பூங்காவும் உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள மற்றுமொரு சொர்க்கம் திருக்குறுங்குடி நம்பியாறு. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்குறுங்குடி அழகிய நம்பி கோவிலுக்குப் பின்னால் ஓடும் இந்த ஆறு, ஆன்மீகமும் இயற்கையும் சங்கமிக்கும் ஒரு இடமாகும். வனவிலங்குகள் அதிகம் நடமாடும் பகுதி என்பதால் குறிப்பிட்ட தூரம் மட்டுமே குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;மாஞ்சோலை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;நெல்லை மாவட்டத்தின் 'ஊட்டி'. கடல் மட்டத்திலிருந்து 1162 மீட்டர் உயரத்தில் உள்ள இங்கு பசுமையான தேயிலைத் தோட்டங்கள் மற்றும் இதமான குளிர் எப்போதும் இருக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;காரையார் அணை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;பாபநாசம் மேல் அணைக்குச் சென்றால், அங்கு படகு சவாரி செய்து கொண்டே குளிர்ந்த காற்றை அனுபவிக்கலாம். இங்குள்ள வாணதீர்த்தம் அருவி உங்களை மெய்சிலிர்க்க வைக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;குதிரைவெட்டி&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;மாஞ்சோலைக்கு மேலே அமைந்துள்ள இந்த இடம், இன்னும் அதிக குளிரைக் கொண்டது. இங்கிருந்து பார்த்தால் மணிமுத்தாறு மற்றும் பாபநாசம் அணைகளின் முழு அழகையும் மேகங்களுக்கு நடுவே ரசிக்கலாம். இந்த இடங்களுக்குச் செல்ல வனத்துறையிடம் முன் அனுமதி பெறுவது கட்டாயம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஊத்து&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;மாஞ்சோலை மலைப்பாதையில் உள்ள மற்றொரு குளுமையான இடம். இங்கு விளையும் ஏலக்காய் மற்றும் தேயிலைத் தோட்டங்கள் அந்த இடத்தையே நறுமணத்துடனும் குளிர்ச்சியுடனும் வைத்திருக்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[tamilnadu-thirunelveli]]></category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-thirunelveli/top-10-awesome-places-to-visit-in-nellai-during-the-summer-heat-xg0z9a7"/>
        </item>
        <item>
            <title><![CDATA[கோடையில் முள்ளங்கி சாப்பிடுவதால் கிடைக்கும்அற்புதமான ஆரோக்கிய நன்மைகள்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/webstories/health-food/amazing-health-benefits-of-eating-radish-during-summer-ftw369c</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/webstories/health-food/amazing-health-benefits-of-eating-radish-during-summer-ftw369c</guid>
            <pubDate>Wed, 29 Apr 2026 13:15:54 +0530</pubDate>
            <description><![CDATA[கோடை வெப்பத்தைத் தணிக்க முள்ளங்கி மிகச்சிறந்த உணவு. சாதாரணமானதாகத் தோன்றினாலும், இதில் நீர்ச்சத்தும் ஆரோக்கிய நன்மைகளும் அதிகம். கோடையில் நம் உடலை குளிர்ச்சியாகவும், புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்க முள்ளங்கி எவ்வாறு உதவுகிறது எனப் பார்ப்போம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kqc2rbj17hq6bv0gbbx3fa40,imgname-radish--1--1777448267329.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <category><![CDATA[health-food]]></category>
            <dc:creator>Priya Velan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/webstories/health-food/amazing-health-benefits-of-eating-radish-during-summer-ftw369c"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Exit Poll 2026 : யார் முன்னிலை? இன்று மாலை 6.30க்கு பதில் சொல்லும் எக்சிட் போல்ஸ்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/exit-poll-2026-revealing-the-early-lead-and-key-trends-videoshow-xpm3otn</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/exit-poll-2026-revealing-the-early-lead-and-key-trends-videoshow-xpm3otn</guid>
            <pubDate>Wed, 29 Apr 2026 13:02:41 +0530</pubDate>
            <description><![CDATA[]]></description>
            <media:content url="https://geo.dailymotion.com/player/x1tbu.html?video=xa7f51a" medium="video" height="768" width="1024"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், ஒட்டுமொத்த தமிழகமும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் எக்சிட் போல் (Exit Poll) முடிவுகள் இன்று வெளியாகின்றன! திமுக, அதிமுக, மற்றும் முதல்முறையாக களம் கண்டுள்ள விஜய்யின் தவெக ஆகிய கட்சிகளில் யாருக்கு மக்களின் ஆதரவு அதிகம்? இன்று மாலை 6:30 மணி அளவில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளைத் தொகுத்து வழங்குகிறோம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[tamilnadu]]></category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/exit-poll-2026-revealing-the-early-lead-and-key-trends-videoshow-xpm3otn"/>
        </item>
        <item>
            <title><![CDATA[மீண்டும் மீண்டுமா... மறுபடியும் வெயிட்டிங் லிஸ்டில் போடப்பட்ட டாக்ஸிக் - காரணம் என்ன?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/yash-highly-anticipated-film-toxic-postponed-for-global-release-v2gm0aa</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/yash-highly-anticipated-film-toxic-postponed-for-global-release-v2gm0aa</guid>
            <pubDate>Wed, 29 Apr 2026 13:01:39 +0530</pubDate>
            <description><![CDATA[யஷ்ஷின் 'டாக்ஸிக்' படம் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக ஒரு அதிர்ச்சி அப்டேட் வெளியாகியுள்ளது. ஜூன் 4-ம் தேதி படம் ரிலீஸ் ஆகாது என தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kj4mda6jxdb9kve38sfxrz32,imgname-fotojet--82--1771829635282.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;யஷ்ஷின் 'டாக்ஸிக்' படம் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக ஒரு அதிர்ச்சி அப்டேட் வெளியாகியுள்ளது. ஜூன் 4-ம் தேதி படம் ரிலீஸ் ஆகாது என தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;யஷ்ஷின் 'டாக்ஸிக்' படத்துக்காக ரசிகர்கள் எல்லோரும் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. இந்த நிலையில், ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 4-ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த 'டாக்ஸிக்' படம், மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. படக்குழுவினருடன் சேர்ந்து யஷ்ஷும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், படம் ஜூன் 4-ம் தேதி ரிலீஸ் ஆகாது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த செய்தியால் யஷ் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;யஷ்ஷின் 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்' படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். முதலில் இந்தப் படம் மார்ச் 19-ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது, ஆனால் கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்டது. பிறகு, ஜூன் 4-ம் தேதி புதிய ரிலீஸ் தேதியாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது 'டாக்ஸிக்' படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து யஷ் மற்றும் படக்குழுவினர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அந்த அறிக்கையில், 'படம் முழுமையாக தயாராகிவிட்டது. ஆனால், இதை உலக அளவில் ரிலீஸ் செய்ய சரியான தேதிக்காக காத்திருக்கிறோம். சினிமாக்கான் நிகழ்ச்சியில் படத்துக்கு கிடைத்த வரவேற்பு, இதை உலக அளவில் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எங்கள் நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது' என்று தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர். உலகளாவிய விநியோகம் மற்றும் ஒப்பந்தங்களை இறுதி செய்து வருவதாகவும், விரைவில் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் படம் வெளியிடப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். யஷ் தனது பதிவில், 'சில படங்களை நாம் உருவாக்குகிறோம். சில படங்கள், நாம் ஏன் சினிமா மீது காதல் கொண்டோம் என்பதை நமக்கு நினைவூட்டும். 'டாக்ஸிக்' பயணம் அப்படியொரு அனுபவம். சமீபத்தில் சினிமாக்கான் நிகழ்ச்சியில் படத்தை திரையிட்டபோது கிடைத்த வரவேற்பு, எங்கள் படத்தை உலகளவில் வெளியிட வேண்டும் என்று எங்களை நம்ப வைத்துள்ளது' என்று குறிப்பிட்டுள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;யஷ் கூறுகையில், 'டாக்ஸிக்' படம் முடிந்துவிட்டது, ஆனால் உலகளவில் வெளியிட எங்களுக்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் தேவை. அதனால், ஜூன் 4-ம் தேதி படம் ரிலீஸ் ஆகாது. புதிய ரிலீஸ் தேதியை விரைவில் அறிவிப்போம்' என்று கூறியுள்ளார். இது ஒரு பீரியட் ஆக்&zwnj;ஷன்-த்ரில்லர் படம். இதை கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார். இந்த படத்தை வெங்கட் கே. நாராயணன் மற்றும் யஷ் ஆகியோர் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் பேனர்களின் கீழ் தயாரித்துள்ளனர். இந்தப் படத்தில் யஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அவருடன் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த், அக்ஷய் ஓபராய், டேரல் டிசில்வா சால்வா, சுதேவ் நாயர், கைல் பால், பீட்ரிஸ் டௌஃபென்பேக், சுர்ஜித் கோபிநாத், அமித் திவாரி, பெனடிக்ட் காரெட், டெடியானா கெய்தர் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சுமார் 800 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாகியுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[cinema]]></category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/yash-highly-anticipated-film-toxic-postponed-for-global-release-v2gm0aa"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Summer Foods: கோடை கால வயிறு மந்தம்.! செரிமானத்தை சீராக்கும் 5 அற்புத உணவுகள்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/summer-digestion-feeling-bloated-here-are-5-superfoods-to-fix-your-digestion-facqfou</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/summer-digestion-feeling-bloated-here-are-5-superfoods-to-fix-your-digestion-facqfou</guid>
            <pubDate>Wed, 29 Apr 2026 12:41:25 +0530</pubDate>
            <description><![CDATA[கோடை வெப்பத்தால் ஏற்படும் செரிமான பிரச்சனைகளைச் சரிசெய்ய 5 எளிய உணவுகள் உதவுகின்றன. இந்த உணவுகள் வயிற்றைக் குளிர்வித்து, ஜீரண சக்தியை மேம்படுத்துவதோடு, காரமான உணவுகளைத் தவிர்ப்பது போன்ற கூடுதல் ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kqbzvve4v4ypksjyfce6j968,imgname-gemini-generated-image-flfe3hflfe3hflfe--2--1777445236164.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கோடை வெப்பத்தால் ஏற்படும் செரிமான பிரச்சனைகளைச் சரிசெய்ய 5 எளிய உணவுகள் உதவுகின்றன. இந்த உணவுகள் வயிற்றைக் குளிர்வித்து, ஜீரண சக்தியை மேம்படுத்துவதோடு, காரமான உணவுகளைத் தவிர்ப்பது போன்ற கூடுதல் ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழகத்தில் கோடை வெயில் சதமடித்து வரும் நிலையில், உடல் சூடு மட்டும் தகிப்பதில்லை; நமது செரிமான மண்டலமும் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகிறது. வெளியில் சென்றுவிட்டு வந்தாலே பசி எடுக்காமல் இருப்பது, வயிறு பாரமாக இருப்பது அல்லது சாப்பிட்ட உணவு ஜீரணமாகாமல் நெஞ்செரிச்சலை உண்டாக்குவது போன்ற பிரச்சனைகளை நாம் எதிர்கொள்கிறோம்.&lt;/p&gt;&lt;p&gt;வெப்பம் அதிகரிக்கும் போது, உடல் தன்னைத் தற்காத்துக்கொள்ள ரத்த ஓட்டத்தைச் சருமத்தை நோக்கித் திருப்புவதால், செரிமான மண்டலம் சற்று மந்தமடைகிறது. இந்தத் தருணத்தில் மருந்துகளைத் தேடி ஓடுவதை விட, நமது சமையலறையில் உள்ள 5 அற்புத உணவுகள் மூலம் வயிற்றை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வர முடியும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வெயில் காலத்திற்கு மோரை விடச் சிறந்த மருந்து வேறொன்றுமில்லை. இதில் உள்ள புரோபயாடிக்குகள் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களைச் செழிக்கச் செய்கின்றன. இது உணவை விரைவாகச் செரிப்பதோடு, வயிற்றில் ஏற்படும் அமிலத்தன்மையைக் (Acidity) குறைத்து உடனடி குளிர்ச்சியைத் தருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;செரிமானம் சீராக நடைபெற உடலில் போதிய நீர்ச்சத்து இருக்க வேண்டும். 95% நீர்ச்சத்து கொண்ட வெள்ளரிக்காய், உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி ஜீரணப் பாதையைச் சுத்தப்படுத்துகிறது. இது வயிறு உப்பசத்தைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;புதினா இலைகள் செரிமான நொதிகளைத் தூண்டும் ஆற்றல் கொண்டவை. கோடையில் ஏற்படும் குமட்டல் மற்றும் வயிறு மந்தத்தை நீக்க, புதினா துவையலாகவோ அல்லது எலுமிச்சை சாற்றில் சேர்த்தோ பருகலாம். இது ஜீரண உறுப்புகளுக்கு ஒருவித இதமான குளிர்ச்சியைத் தருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இளநீர் வெறும் தாகத்தைத் தணிக்கும் பானம் மட்டுமல்ல, அது ஒரு சிறந்த செரிமான ஊக்கி. இதில் உள்ள எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் பொட்டாசியம், வெயிலால் ஏற்படும் வயிற்றுப் புண்களை ஆற்றவும், செரிமானக் கோளாறுகளால் ஏற்படும் உடல் சோர்வை நீக்கவும் உதவுகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தர்பூசணியில் உள்ள அதிகப்படியான நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கின்றன. இது குடல் இயக்கத்தைச் சீராக்கி, கோடை காலத்தில் ஏற்படும் வயிறு சார்ந்த அசௌகரியங்களை அடியோடு நீக்குகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;காரமான உணவுகளைத் தவிர்க்கவும்:&lt;/strong&gt; மிளகாய் மற்றும் மசாலா நிறைந்த உணவுகள் உடல் சூட்டை அதிகரித்து செரிமானத்தை இன்னும் கடினமாக்கும்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;ஐஸ் வாட்டரைத் தவிர்க்கவும்: &lt;/strong&gt;மிகவும் குளிர்ந்த நீர் ஜீரண சக்தியைப் பாதிக்கும். அதற்குப் பதிலாக மண்பானைத் தண்ணீரைப் பயன்படுத்துவது உடலுக்குச் சிறந்தது.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;சிறிய இடைவெளியில் உணவருந்துங்கள்: &lt;/strong&gt;ஒரே அடியாக அதிக உணவை உண்பதை விட, அவ்வப்போது சிறிய அளவில் எளிதில் செரிமானமாகும் உணவுகளை உட்கொள்ளுங்கள்.&lt;/li&gt; &lt;li&gt;இந்த 5 உணவுகளை உங்கள் அன்றாட டயட்டில் சேர்த்துக்கொள்வதன் மூலம், தகிக்கும் கோடையிலும் உங்கள் வயிறு 'குளிர்ச்சியாகவும்' ஆரோக்கியமாகவும் இருக்கும்!&lt;/li&gt;&lt;/ul&gt;]]></content:encoded>
            <category><![CDATA[life-style]]></category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/summer-digestion-feeling-bloated-here-are-5-superfoods-to-fix-your-digestion-facqfou"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Kara First Review : வந்தாச்சு ‘கர’ முதல் விமர்சனம்! தனுஷ் கரசாமியாக கலக்கினாரா? சொதப்பினாரா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/review/vignesh-raja-directional-dhanush-starrer-kara-movie-first-review-1r0o35v</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/review/vignesh-raja-directional-dhanush-starrer-kara-movie-first-review-1r0o35v</guid>
            <pubDate>Wed, 29 Apr 2026 12:31:03 +0530</pubDate>
            <description><![CDATA[தனுஷ் நடிப்பில் இந்த வாரம் வியாழக்கிழமை வெளியாகவிருக்கும் திரைப்படம் 'கர'. இந்தப் படத்தின் முதல் விமர்சனம் வெளியாகி, படத்தின் ஹைலைட்ஸ் என்ன என்பது குறித்த தகவல்கள் வந்துள்ளன.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kqbwbhd9rg3mavwn2572cncn,imgname-kara-movie-5-1777441555881.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தனுஷ் நடிப்பில் இந்த வாரம் வியாழக்கிழமை வெளியாகவிருக்கும் திரைப்படம் 'கர'. இந்தப் படத்தின் முதல் விமர்சனம் வெளியாகி, படத்தின் ஹைலைட்ஸ் என்ன என்பது குறித்த தகவல்கள் வந்துள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தனுஷ் கடைசியாக 'இட்லி கடை' படத்தில் நடித்திருந்தார். அப்படம் பெரியளவில் ஹிட் அடிக்காவிட்டாலும் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. இப்போது 'கர' படத்தில் மமிதா பைஜுவுடன் ஜோடியாக நடித்துள்ளார். விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள இந்தப் படத்தை, வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே. கணேஷ் தயாரித்துள்ளார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், ஜெயராம் என பல அனுபவம் வாய்ந்த நடிகர்களும் நடித்திருக்கிறார்கள். கர திரைப்படம் ஏப்ரல் 30-ம் தேதி வெளியாகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;படம் சென்சார் செய்யப்பட்டு 'யு/ஏ' சான்றிதழ் பெற்றுள்ளது. படத்தின் நீளம் 2 மணிநேரம் 41 நிமிடங்கள். ஒரு சாதாரண மனிதன் அசாதாரணமான சூழ்நிலையில் சிக்கிக்கொண்டால், அதிலிருந்து எப்படி வெளியே வந்தான் என்பதுதான் கதை என்று தனுஷ் கூறியுள்ளார். தனுஷ், கரசாமி என்ற திருடன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கிராமத்தில் நடக்கும் இந்தக் கதையில், திருட்டை விட்டுவிட்டு வரும் அவர், சில கரணங்களால் மீண்டும் வங்கிக் கொள்ளையில் ஈடுபடுகிறார். 1991ம் ஆண்டு எரிபொருள் பற்றாக்குறை காலத்தில், தன் வாழ்க்கைக்கும் பாவத்துக்கும் இடையில் சிக்கிக்கொண்ட ஒருவரின் கதை இது என்று படக்குழு கூறுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இப்படத்தின் மூலம் இயக்குநர் விக்னேஷ் ராஜாவின் பெயர் நீண்ட காலத்திற்குப் பேசப்படும் என தனுஷ் தெரிவித்துள்ளார். இது ஒரு 'ஸ்லோ-பர்ன் த்ரில்லர்' என்றும், ஆக்&zwnj;ஷன் பட்டையைக் கிளப்பும் என்றும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் கூறியுள்ளார். 90-ஸ் பின்னணியில் படம் விறுவிறுப்பாக இருக்கும் என போலீஸ் அதிகரியாக நடித்துள்ள சூரஜ் வெஞ்சரமூடு தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;இது உணர்வுபூர்வமாக கனெக்ட் ஆகும் படம் என ஹீரோயின் மமிதா பைஜு கூறியுள்ளார். தனுஷின் மனைவியாக வரும் அவரைச் சுற்றிதான் கதை நகர்கிறதாம். இது ஒரு ஹாலிவுட் பாணியிலான கிராமத்து ஹீஸ்ட் த்ரில்லர் என இயக்குநர் கூறுகிறார். ஆனால், படத்திற்கு எதிர்பார்த்த ஹைப் வரவில்லை. புரமோஷன் பலவீனமாக உள்ளது. படம் மெதுவாக நகரும் என்பதும் ஒரு மைனஸாக இருக்கலாம். ஆனால், கதை வலுவாக இருக்கும் என்கிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கர திரைப்படம் ரிலீஸ் ஆக இன்னும் ஒரு நாள் மட்டுமே இருந்தாலும் அதற்கான டிக்கெட் முன்பதிவு மிகவும் மந்தமாகவே உள்ளது. இதனால் இப்படத்திற்கு ஓப்பனிங் மிகப்பெரிய அளவில் இருக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. இப்படத்தின் ரிலீஸ் பின்னர் பாசிடிவ் ரெஸ்பான்ஸ் கிடைத்தால் மட்டுமே ஹிட் அடிக்கும் சூழல் உருவாகி உள்ளது. இந்த ஆண்டு இதுவரை ஒரு தமிழ் படம் கூட 100 கோடி வசூலை எட்டவில்லை. இந்த சாதனையை எட்டிப் பிடிக்கும் முதல் தமிழ் படமாக கர இருக்குமா என்கிற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கர திரைப்படத்திற்காக நடிகர் தனுஷ் 50 கோடி சம்பளம் வாங்கி உள்ளார். அவரது கெரியரில் அதிக சம்பளம் வாங்கிய படம் இதுவாகும். இதுதவிர வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் மேலும் இரண்டு படங்களிலும் நடிக்க கமிட்டாகி உள்ளார் தனுஷ். அதில் ஒரு படம் வெற்றிமாறனின் வட சென்னை 2 என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[review]]></category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/review/vignesh-raja-directional-dhanush-starrer-kara-movie-first-review-1r0o35v"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Dining Room Lighting: டைனிங் ரூமை ஹோட்டல் மாதிரி லக்ஸரியாக மாற்ற சூப்பர் ஐடியாஸ்! லேட்டஸ்ட் டிசைன்கள்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/super-ideas-to-transform-your-dining-room-into-a-luxurious-hotel-style-space-9gv9a1p</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/super-ideas-to-transform-your-dining-room-into-a-luxurious-hotel-style-space-9gv9a1p</guid>
            <pubDate>Wed, 29 Apr 2026 12:19:31 +0530</pubDate>
            <description><![CDATA[Dining Room Lighting: டைனிங் ரூமை ஒரு லக்ஸரி மற்றும் கிளாஸியான இடமாக மாற்ற வேண்டுமா? ஜூமர், பென்டன்ட் லைட்ஸ், LED ஸ்ட்ரிப் மற்றும் வால் ஸ்கான்ஸ் போன்ற லேட்டஸ்ட் லைட்டிங் டிசைன்களை பயன்படுத்துங்கள்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kqbzgmmbf9s9sv6xm7cgcr49,imgname-lighting-1777444868747.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Dining Room Lighting: டைனிங் ரூமை ஒரு லக்ஸரி மற்றும் கிளாஸியான இடமாக மாற்ற வேண்டுமா? ஜூமர், பென்டன்ட் லைட்ஸ், LED ஸ்ட்ரிப் மற்றும் வால் ஸ்கான்ஸ் போன்ற லேட்டஸ்ட் லைட்டிங் டிசைன்களை பயன்படுத்துங்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;டைனிங் ரூம் என்பது வெறும் சாப்பிடுவதற்கான இடம் மட்டுமல்ல. குடும்பத்தினர் மற்றும் விருந்தினர்களுடன் நாம் குவாலிட்டி டைம் செலவிடும் ஒரு ஸ்பெஷலான இடம். அதனால், இங்கு சரியான லைட்டிங்கைத் தேர்ந்தெடுப்பது முழு சூழலையும் மாற்றிவிடும். நல்ல லைட்டிங் உங்கள் டைனிங் ஏரியாவை பிரகாசமாக காட்டுவதோடு, ஒரு கம்பீரமான மற்றும் லக்ஸரி தோற்றத்தையும் கொடுக்கும். இப்போதெல்லாம் மக்கள் சிம்பிளான டியூப்லைட் அல்லது பல்புகளுக்குப் பதிலாக, ஸ்டைலான மற்றும் டிசைனர் லைட்டிங் ஆப்ஷன்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். நீங்களும் உங்கள் டைனிங் ரூமுக்கு ஒரு லக்ஸரி லுக் கொடுக்க விரும்பினால், இந்த லேட்டஸ்ட் லைட்டிங் டிசைன் ஐடியாக்கள் உங்களுக்கு நிச்சயம் உதவும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நீங்கள் ஒரு கிளாஸியான மற்றும் மாடர்ன் லுக்கை விரும்பினால், பென்டன்ட் லைட்ஸ் (Pendant Lights) ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இவை வெவ்வேறு வடிவங்கள் அளவுகள் மற்றும் வண்ணங்களில் கிடைக்கின்றன. உங்கள் வீட்டின் இன்டீரியருக்கு ஏற்றவாறு நீங்கள் இதைத் தேர்ந்தெடுக்கலாம். ஒரே வரிசையில் 2-3 பென்டன்ட் லைட்களைப் பொருத்துவதன் மூலம் டைனிங் ஸ்பேஸை மிகவும் ஸ்டைலாக மாற்ற முடியும். குறிப்பாக, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான டைனிங் ஏரியாக்களுக்கு இது மிகவும் பொருத்தமாக இருக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;டைனிங் ரூமில் ஜூமர் (Chandelier) மாட்டுவது எப்போதுமே ஆடம்பரத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. இப்போதைய ட்ரெண்டில் இருக்கும் மாடர்ன் மற்றும் மினிமலிஸ்ட் ஜூமர்கள், அதிக பகட்டாக இல்லாமல் ஒரு ராயல் ஃபீலைக் கொடுக்கும். கிரிஸ்டல் ஜூமர் அல்லது கோல்டன் ஃபினிஷ் கொண்ட டிசைன்கள் உங்கள் டைனிங் ஏரியாவை ஒரு ஸ்டார் ஹோட்டல் போல மாற்றும். இதை எப்போதும் டைனிங் டேபிளுக்கு நேராக மேலே பொருத்தினால், முழு கவனமும் அதன் மீது இருக்கும்.&lt;img&gt;இப்போதெல்லாம் LED ஸ்ட்ரிப் லைட்கள், குறிப்பாக மாடர்ன் வீட்டு அலங்காரத்தில் மிகவும் பிரபலமாக உள்ளன. இவற்றை ஃபால்ஸ் சீலிங், கேபினட்கள் அல்லது டைனிங் டேபிளுக்கு அடியில் பொருத்தி, ஒரு ஸ்டைலான மற்றும் மறைமுகமான ஒளியைக் கொடுக்கலாம். இந்த லைட்கள் குறைந்த மின்சாரத்தில் அதிகப் பலனைத் தருகின்றன. மேலும், அறைக்கு ஒரு நவீன மற்றும் ஹை-எண்ட் தோற்றத்தைக் கொடுக்கின்றன.&lt;img&gt;&lt;p&gt;டைனிங் ரூமில் டிம்மர் லைட்டிங் (Dimmer Lighting) இருப்பது ஒரு ஸ்மார்ட்டான மற்றும் லக்ஸரி அம்சமாகக் கருதப்படுகிறது. இதன் மூலம் உங்கள் தேவைக்கேற்ப வெளிச்சத்தின் பிரகாசத்தைக் கூட்டவோ குறைக்கவோ முடியும். ஒரு ரொமாண்டிக் டின்னராக இருந்தாலும் சரி, அல்லது குடும்ப விழாவாக இருந்தாலும் சரி, டிம்மர் லைட்கள் ஒவ்வொரு மனநிலைக்கும் ஏற்ற சரியான சூழலை உருவாக்க உதவுகின்றன.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வால் ஸ்கான்ஸ் (Wall Sconces) என்பது சுவரில் பொருத்தப்படும் லைட்கள். இது டைனிங் ரூமில் மென்மையான மற்றும் இதமான வெளிச்சத்தைக் கொடுக்கும். இது வெளிச்சத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், ஒரு டெக்கரேட்டிவ் பொருளாகவும் செயல்படுகிறது. உங்களுக்கு அதிக பிரகாசமான வெளிச்சம் தேவையில்லை என்றால், வால் ஸ்கான்ஸ் மூலம் ஒரு இதமான சூழலை உருவாக்கலாம். இது அறையை மிகவும் வசதியானதாக மாற்றும்.&amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[life-style]]></category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/super-ideas-to-transform-your-dining-room-into-a-luxurious-hotel-style-space-9gv9a1p"/>
        </item>
        <item>
            <title><![CDATA[நல்ல சேதிக்காக நாகூர் செல்லும் தளபதி.! வேளாங்கண்ணியில் வெற்றியை சம்ர்ப்பிக்கும் விஜய்.! நவக்கிரக கோயில்களுக்கும் ரகசிய விசிட்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/vijays-next-plan-nagore-velankanni-visits-spark-buzz-r6gwtgv</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/vijays-next-plan-nagore-velankanni-visits-spark-buzz-r6gwtgv</guid>
            <pubDate>Wed, 29 Apr 2026 12:16:52 +0530</pubDate>
            <description><![CDATA[தேர்தல் முடிவுகளுக்கு முன்னதாக, நடிகர் விஜய் திருச்செந்தூர் மற்றும் சீரடிக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டுள்ளார். திருச்செந்தூரில் 'சத்ரு சம்ஹார பூஜை' நடத்தியது அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kqbzewf8mezbzwr0k4hhxd6z,imgname-tamil-news---2026-04-29t120926.973-1777444811238.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தேர்தல் முடிவுகளுக்கு முன்னதாக, நடிகர் விஜய் திருச்செந்தூர் மற்றும் சீரடிக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டுள்ளார். திருச்செந்தூரில் 'சத்ரு சம்ஹார பூஜை' நடத்தியது அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழக அரசியல் சூழல் சூடுபிடித்துள்ள இந்த நேரத்தில், விஜய் மேற்கொண்டு வரும் ஆன்மிக பயணம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. திருச்செந்தூரில் தரிசனம் செய்ததை தொடர்ந்து, இன்று அவர் சீரடி சாய்பாபா கோவில் நோக்கி பயணம் மேற்கொள்கிறார். மே 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், இந்த பயணம் அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெறுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நேற்று திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்ற விஜய், அதிகாலை விஸ்வரூப தரிசனத்தில் பங்கேற்று சிறப்பு பூஜைகள் செய்தார். குறிப்பாக &ldquo;சத்திரு சம்ஹார பூஜை&rdquo; நடத்தப்பட்டது கவனிக்கத்தக்கது. இந்த பூஜை தடைகள் நீங்கவும், வெற்றியை அடையவும் உதவும் என்ற நம்பிக்கை உள்ளது. தேர்தல் முடிவுகளுக்கு முன்பாக இந்த வழிபாடு செய்தது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழக வெற்றிக் கழகத் தலைவர் என்ற வகையில், திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற வலுவான கட்சிகளுக்கு எதிராக விஜய் இந்தத் தேர்தலில் போட்டியிட்டுள்ளார். இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் ஆதரவு இருப்பதாக கூறப்பட்டாலும், அது வாக்குகளாக மாறுமா என்பது இன்னும் எதிர்பார்ப்பிலேயே உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சீரடி தரிசனத்திற்குப் பிறகு, நாகூர் தர்கா மற்றும் வேளாங்கண்ணி தேவாலயம் ஆகிய இடங்களுக்கும் விஜய் செல்ல வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. பல மத தலங்களை ஒரே பயணத்தில் இணைப்பது, சமூக ஒற்றுமையை வெளிப்படுத்தும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி நவக்கிரக தலங்களுக்கும் செல்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மொத்தத்தில், தேர்தல் முடிவுகளுக்கு முன் விஜய் மேற்கொள்ளும் இந்த ஆன்மிக பயணம் அரசியல் அர்த்தம் கொண்டதாகவே பார்க்கப்படுகிறது. இது தனிப்பட்ட நம்பிக்கையா அல்லது திட்டமிட்ட அரசியல் நகர்வா என்ற விவாதம் தொடர்ந்து வருகிறது. மே 4க்குப் பிறகு அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பது அனைவரும் கவனிக்கும் முக்கிய அம்சமாக உள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[tamilnadu]]></category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/vijays-next-plan-nagore-velankanni-visits-spark-buzz-r6gwtgv"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Chitra Pournami 2026 : ராகுவின் நட்சத்திரத்தில் சந்திரன்.! சித்ரா பௌர்ணமியில் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட், பண மழை.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/chitra-pournami-2026-moon-transit-in-swati-nakshatra-career-wealth-boost-for-4-zodiac-signs-astrological-predictions-91tg0r7</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/chitra-pournami-2026-moon-transit-in-swati-nakshatra-career-wealth-boost-for-4-zodiac-signs-astrological-predictions-91tg0r7</guid>
            <pubDate>Wed, 29 Apr 2026 11:57:55 +0530</pubDate>
            <description><![CDATA[Moon Transit in Swati Nakshatra : சித்ரா பௌர்ணமி அன்று சுவாதி நட்சத்திரத்திற்கு சந்திரன் பெயர்ச்சி அடைகிறார். இதனால் 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகிறது. எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகிறது என்று பார்ப்போம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kqbybazzaxwrnczgtxq6dded,imgname-moon-in-swati-nakshatra-1777443646463.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Moon Transit in Swati Nakshatra : சித்ரா பௌர்ணமி அன்று சுவாதி நட்சத்திரத்திற்கு சந்திரன் பெயர்ச்சி அடைகிறார். இதனால் 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகிறது. எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகிறது என்று பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;2026, மே 1, வெள்ளிக்கிழமை அதிகாலை 2:16 மணிக்கு, சந்திரன் ராகு ஆளும் சுவாதி நட்சத்திரத்திற்குள் நுழைகிறார். மே 2 வரை இந்த நட்சத்திரத்தில் பயணம் செய்வார். பௌர்ணமி அன்று நடக்கும் இந்த சந்திரனின் பெயர்ச்சி, நான்கு ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையப்போகிறது. இந்த நட்சத்திர மாற்றம் மனதிற்குள் ஒருவித நிலைத்தன்மையைக் கொண்டு வரும். வேலையில் பதவி உயர்வு, பண வரவு எனப் பல நன்மைகள் நடக்கலாம்.&lt;img&gt;&lt;p&gt;சித்ரா பௌர்ணமியில் நடக்கும் இந்த சந்திர பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் சுபமாக இருக்கும். பண வரவுக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது, மனமும் அமைதியாக இருக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவீர்கள். இந்த சில மணி நேரங்களில், நீங்கள் எடுக்கும் முக்கிய தொழில் முடிவுகள் பெரிய வெற்றியைத் தேடித் தரும்.&lt;/p&gt;&lt;img&gt;கடக ராசிக்காரர்களுக்கு சந்திரனின் இந்த நட்சத்திர மாற்றம் நல்ல பலன்களைக் கொடுக்கும். தடைபட்டிருந்த திட்டங்கள் மீண்டும் வேகம் எடுக்கும். அரசு சார்ந்த விஷயங்களில் இருந்த சிக்கல்கள் நீங்கும். நீதிமன்ற வழக்குகளில் நிம்மதி கிடைக்கும். தாயாரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். குடும்ப சண்டைகள் தீரும். வேலையில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.&lt;img&gt;இந்த சந்திர பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல செய்திகளைக் கொண்டு வரும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணம் சம்பாதிக்க பல புதிய வழிகள் திறக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி வரும். குடும்பத்தினர் உங்கள் பேச்சைக் கேட்பார்கள். காதல் உறவுகள் வலுப்பெறும்.&lt;img&gt;&lt;p&gt;சித்ரா பௌர்ணமி நாளில் ராகுவின் நட்சத்திரத்திற்கு சந்திரன் செல்வதால், கும்ப ராசிக்காரர்களுக்கு சாதகமான நேரம் தொடங்குகிறது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வெளிநாடு செல்ல இருந்த தடைகள் விலகும். குடும்ப உறவுகளில் நீடித்து வந்த சண்டைகள் முடிவுக்கு வரும். மன அமைதி கிடைக்கும். பண வரவுக்கான வாய்ப்புகளும் உள்ளன.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[astrology]]></category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/chitra-pournami-2026-moon-transit-in-swati-nakshatra-career-wealth-boost-for-4-zodiac-signs-astrological-predictions-91tg0r7"/>
        </item>
        <item>
            <title><![CDATA[கீட்டோ டயட்டின் 5 நன்மைகள்: ஆரோக்கியமான வாழ்விற்கான எளிய வழிமுறை!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/webstories/health-food/5-health-benefits-of-keto-diet-your-guide-to-a-healthier-life-wi4ftnt</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/webstories/health-food/5-health-benefits-of-keto-diet-your-guide-to-a-healthier-life-wi4ftnt</guid>
            <pubDate>Wed, 29 Apr 2026 11:50:53 +0530</pubDate>
            <description><![CDATA[இன்றைய பரபரப்பான சூழலில் ஆரோக்கியத்திற்கு உணவுமுறை மிக அவசியம். இதில் 'கீட்டோ டயட்' (குறைந்த மாவுச்சத்து உணவு) தற்போது மிகவும் பிரபலமாக உள்ளது. இந்த உணவுமுறையினால் கிடைக்கும் சில முக்கிய நன்மைகளை இங்கே காண்போம்:]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kqbxw6dsg8cfd3rme9y0tw22,imgname-keto-diet--1--1777443150265.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <category><![CDATA[health-food]]></category>
            <dc:creator>Priya Velan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/webstories/health-food/5-health-benefits-of-keto-diet-your-guide-to-a-healthier-life-wi4ftnt"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Riyan Parag: டிரெஸ்ஸிங் ரூமில் இ-சிகரெட்... வீடியோவால் சிக்கிய ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/sports/riyan-parag-vaping-video-from-dressing-room-sparks-controversy-articleshow-otazn1b</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/sports/riyan-parag-vaping-video-from-dressing-room-sparks-controversy-articleshow-otazn1b</guid>
            <pubDate>Wed, 29 Apr 2026 11:33:46 +0530</pubDate>
            <description><![CDATA[பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின்போது, அவுட் ஆகி டிரெஸ்ஸிங் ரூம் திரும்பிய ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரியான் பராக், இ-சிகரெட் பயன்படுத்தும் காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kqaw02fqb9tdffta7m79901b,imgname-riyan-parag--1777407625719.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;Riyan Parag e-cigarette controversy : &lt;/strong&gt;சண்டிகர்: ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் ஒரு பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். டிரெஸ்ஸிங் ரூமில் அமர்ந்து அவர் இ-சிகரெட் (Vaping) பிடித்த காட்சிகள் வெளியாகி, பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை முல்லன்பூரில் உள்ள மகாராஜா யதவீந்திர சிங் ஸ்டேடியத்தில் இந்தச் சம்பவம் நடந்தது.&lt;/p&gt;&lt;p&gt;ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, போட்டியின் 16-வது ஓவரில் தான் இந்த சம்பவம் நடந்தது. அப்போது பிராட்காஸ்ட் கேமரா டிரெஸ்ஸிங் ரூம் பக்கம் திரும்பியது. அந்த நேரத்தில், ரியான் பராக் இ-சிகரெட் பயன்படுத்தியது தெளிவாகப் பதிவானது. போட்டியில் முக்கியமான நேரத்தில், 16 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து பராக் அவுட் ஆனார். அவர் டிரெஸ்ஸிங் ரூம் திரும்பிய சில நிமிடங்களிலேயே இது நடந்துள்ளது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் உடனடியாக வைரலாகின. ஒரு கேப்டனாக, 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி போன்றவர்களுக்கு இவர் என்ன முன்மாதிரியாக இருக்கிறார் என்று ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;img&gt;&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;சர்ச்சையில் சிக்கிய ரியான் பராக்&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;ஐபிஎல் தொடரில் வேப்பிங் செய்வது பற்றி குறிப்பிட்ட விதிகள் எதுவும் இல்லை. ஆனாலும், ஸ்டேடியம் மற்றும் டிரெஸ்ஸிங் ரூமில் புகையிலை அல்லது அது தொடர்பான பொருட்களைப் பயன்படுத்துவது பிசிசிஐ-யின் சுகாதார மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு எதிரானது. சமீபத்தில், இதே தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மேலாளர் ரோமி பிந்தர், மொபைல் போன் பயன்படுத்தியதற்காக ₹1 லட்சம் அபராதம் செலுத்தினார். அதேபோன்ற ஒழுங்கு நடவடிக்கை கேப்டன் பராக் மீதும் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;What&rsquo;s happening in the ipl ?#PBKS#RR@IPL @BCCI&amp;nbsp;Riyan parag is using vape  pic.twitter.com/xVXhb0LKZW&lt;/p&gt;&lt;p&gt;&mdash; Vansh Goyal (@vanshgoyal0674) April 28, 2026&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாறியதால், 24 வயதான ரியான் பராக் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால், இந்த சீசனில் பேட்டிங்கில் அவரால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. இந்த போட்டிக்கு முன்பு வரை, 7 இன்னிங்ஸ்களில் வெறும் 81 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். மோசமான ஃபார்மில் தவித்துவரும் நிலையில், இந்த ஒழுங்கீன சர்ச்சை அவருக்கு மேலும் ஒரு பின்னடைவாக அமைந்துள்ளது. இந்த சர்ச்சைகளுக்கு மத்தியிலும், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது. பராக் அவுட் ஆன பிறகு, கடைசி ஓவர்களில் டொனோவன் ஃபெரேரா (52*), சுபம் துபே (31) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் ராயல்ஸ் அணிக்கு வெற்றி கிடைத்தது. இந்த வெற்றியின் மூலம், புள்ளிப் பட்டியலில் ராஜஸ்தான் அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[sports]]></category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/sports/riyan-parag-vaping-video-from-dressing-room-sparks-controversy-articleshow-otazn1b"/>
        </item>
        <item>
            <title><![CDATA[மேஷத்தில் இணையும் 5 சுப கிரகங்கள்.! கோடீஸ்வரனாக மாறப்போகும் 4 ராசிகள்.! பொன், பொருள், சொத்துக்கள் குவியப் போகுது.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/panchgrahi-yog-2026-in-aries-5-planet-conjunction-brings-major-life-changes-financial-boost-for-4-zodiac-signs-explained-gzaoti6</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/panchgrahi-yog-2026-in-aries-5-planet-conjunction-brings-major-life-changes-financial-boost-for-4-zodiac-signs-explained-gzaoti6</guid>
            <pubDate>Wed, 29 Apr 2026 11:31:26 +0530</pubDate>
            <description><![CDATA[Panchagrahi Yog Lucky Zodiac Signs : மேஷ ராசியில் 5 கிரகங்கள் இணைவதால் பஞ்சகிரக யோகம் உருவாக இருக்கிறது. இதன் காரணமாக நான்கு ராசிகளின் தலைவிதி மாறப் போகிறது. அது குறித்து இந்த விரிவாகப் பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kqbx40wym1jvgdyfdprz4p9g,imgname-panchagrahi-yog-lucky-zodiac-signs--1--1777442358174.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Panchagrahi Yog Lucky Zodiac Signs : மேஷ ராசியில் 5 கிரகங்கள் இணைவதால் பஞ்சகிரக யோகம் உருவாக இருக்கிறது. இதன் காரணமாக நான்கு ராசிகளின் தலைவிதி மாறப் போகிறது. அது குறித்து இந்த விரிவாகப் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வேத ஜோதிடத்தில் கிரகங்களின் பெயர்ச்சி என்பது ஒரு தொடர் நிகழ்வு. கிரகங்கள் ஒரு ராசியில் ஒன்றாக சேரும் பொழுது சக்தி வாய்ந்த யோகங்கள் உருவாகின்றன. அந்த வகையில் மே 2026 மேஷ ராசியில் 5 கிரகங்கள் ஒன்றாக இணைய உள்ளன. சூரியன், சந்திரன், புதன், செவ்வாய் மற்றும் சுக்கிரன் ஆகிய ஐந்து கிரகங்கள் ஒரே ராசியில் சங்கமிக்கும் பொழுது பஞ்சகிரக யோகம் உருவாகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கிரகங்களின் ராஜாவான சூரியன், கிரகங்களின் தளபதியான செவ்வாய் இளவரசன் புதன், சுகபோகங்களுக்கு அதிபதியான சுக்கிரன் மற்றும் சந்திரன் என ஐவரும் ஒரே ராசியில் இணைவது என்பது சக்தி வாய்ந்ததாகவும், மிகப்பெரிய ஆற்றலை பிரபஞ்சத்தில் ஏற்படுத்தும் நிகழ்வாகவும் பார்க்கப்படுகிறது. மேஷம் என்பது ராசி சக்கரத்தின் முதல் ராசியாகவும் நெருப்பு ராசியாகவும் விளங்குகிறது. இங்கு கிரகங்கள் இணைவதன் மூலம் நான்கு ராசிக்காரர்கள் அதிகபட்ச பலன்களை பெற உள்ளனர். அது குறித்து இங்கு காணலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேஷ ராசியின் முதல் வீட்டில் இந்த ஐந்து கிரகங்களும் அமர இருப்பதால் மேஷ ராசிக்காரர்கள் அளவில்லாத நன்மைகளைப் பெற இருக்கின்றனர். 5 கிரகங்களின் நற்பலன்களும் ஒரே புள்ளியில் குவிவதால் மேஷ ராசிக்காரர்களுக்கு எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். தொட்டது அனைத்தும் துலங்கும். புதிய முயற்சிகள் வெற்றி தரும்.&amp;nbsp;பெற்றோர்களின் ஆதரவோடு பிரச்சனைகளை பேசி சரி செய்வீர்கள். பொன், பொருள் சேரும். பூமி வாங்கும் யோகம் உண்டு. வேலையில் மாற்றம் ஏற்படும். உடன் பிறந்தவர்களுடன் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். மன உளைச்சல் நீங்கி, நிம்மதி கிடைக்கும். குழந்தைகளின் கல்வி வேலை வாய்ப்பு என அனைத்திலும் நல்ல செய்தி கிடைக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த குறைபாடுகள் அகலும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மிதுன ராசியின் 11வது வீடான லாப ஸ்தானத்தில் பஞ்சகிரக யோகம் அமைகிறது. இதன் காரணமாக மிதுன ராசிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியான பொற்காலம் தொடங்கும். தொழில் செய்து வருபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புதிதாக தொழில் தொடங்குவீர்கள் பழைய தொழிலை விரிவுபடுத்தி புதிய கிளைகளை தொடங்குவீர்கள்.&amp;nbsp;கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழும், பெருமையும் சேரும். இழந்த அனைத்தையும் மீட்டெடுக்கும் யோகம் உண்டாகும். எத்தனை இடையூறுகள் வந்தாலும் அதை சமாளிக்கும் துணிச்சலும், ஆற்றலும் பிறக்கும். புதிய ஒப்பந்தங்கள் கைக்கு கிடைக்கும். முக்கிய முடிவுகள் லாபம் தரும். மூத்த சகோதரர்கள் வழியில் லாபம் உண்டாகும். ஆரோக்கியம் முன்னேற்றத்தை அடையும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிம்ம ராசியின் ஒன்பதாவது வீடான பாக்கிய ஸ்தானத்தில் 5 கிரகங்களின் சேர்க்கை நடைபெற்று பஞ்சகிரக யோகம் அமைய இருக்கிறது. இதன் காரணமாக அதிர்ஷ்டம் பெருகும். தந்தை வழி சொத்துக்கள் கிடைக்கும். வெளிநாடு செல்ல வாய்ப்புகள் தேடி வரும். உயர்கல்வி கற்க விரும்புவர்களின் கனவு நனவாகும். தான தர்மம் செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும். கௌரவமான பதவிகள் கிடைக்கும்.&amp;nbsp;அதிகாரமிக்க அரசு பதவிகள், அரசியல் செல்வாக்கு கிடைக்க வாய்ப்புகள் உண்டு. உங்களை கெடுக்க நினைத்த எதிரிகள் வீழ்ந்து போவார்கள். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான வழக்குகளில் வெற்றி கிடைக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் விரைவில் நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். பொன், பொருள், நகை, ஆடை, ஆபரணங்கள் என அனைத்தும் கிடைக்கும் காலம் நெருங்கி உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தனுசு ராசிக்காரர்களுக்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பஞ்சகிரக யோகம் உருவாகிறது. ஐந்தாம் வீட்டில் ஐந்து கிரகங்களும் அமர்வது சுபமாக கருதப்படுகிறது. இதன் காரணமாக தடைபட்டு நின்றிருந்த சுப காரியங்கள் வேகம் எடுக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். திருமண பேச்சு வார்த்தைகளில் முன்னேற்றம் காணப்படும். பழைய முதலீடுகளில் இருந்து பெரிய லாபத்தை எதிர்பார்க்கலாம்.&amp;nbsp;முடிக்க முடியாது என்று நினைத்த காரியங்களை கூட முடித்துக் காட்டுவீர்கள். தெய்வ அனுக்கிரகம் கிடைக்கும். எதிரிகள் நண்பர்களாக மாறுவார்கள். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் குறைந்து நிம்மதி கிடைக்கும். பழைய கடன்களை முடித்துக் காட்டுவீர்கள். வியாபாரத்தில் உயர்ந்த நிலையை அடைவீர்கள். நாள்பட்ட வியாதிகள் மறைந்து, ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[astrology]]></category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/panchgrahi-yog-2026-in-aries-5-planet-conjunction-brings-major-life-changes-financial-boost-for-4-zodiac-signs-explained-gzaoti6"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Exit Poll 2026 : யார் முன்னிலை? இன்று மாலை 6.30க்கு பதில் சொல்லும் எக்சிட் போல்ஸ்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/exit-poll-results-india-2026-state-election-prediction-d6zi4fu</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/exit-poll-results-india-2026-state-election-prediction-d6zi4fu</guid>
            <pubDate>Wed, 29 Apr 2026 11:29:05 +0530</pubDate>
            <description><![CDATA[தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நிறைவடைந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் தடை இன்றுடன் முடிவடைகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று மாலை வெளியாக உள்ளன.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kpzfd5yvbxybbtgp2bynmnfj,imgname-tamil-news--97--1777025325019.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நிறைவடைந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் தடை இன்றுடன் முடிவடைகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று மாலை வெளியாக உள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய மூன்று மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் ஏப்ரல் 9ஆம் தேதி ஒரே கட்டமாக அமைதியாக நிறைவடைந்தன. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்றது. ஒரே நாளில் முழு மாநிலமும் வாக்களித்த இந்தத் தேர்தல், அரசியல் கட்சிகளின் வலுவான பிரச்சாரத்துடன் அதிக கவனத்தை ஈர்த்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதேநேரத்தில், மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது. அதில் 152 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நிறைவடைந்தது. 142 தொகுதிகளுக்கான இரண்டாம் மற்றும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 29) நடைபெறுகிறது. இதன் மூலம் ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் செயல்முறை முழுமையாக நிறைவடைகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முதற்கட்ட வாக்குப்பதிவில் 91 சதவீதத்தை தாண்டிய வாக்காளர் பங்கேற்பு பதிவாகியுள்ளது. அதனால் இரண்டாம் கட்டத்திலும் அதிக வாக்குப்பதிவு நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தேர்தல் முடிவுகள் மே 4ஆம் தேதி வெளியிடப்பட உள்ள நிலையில், அரசியல் வட்டாரங்களில் உள்ள கணிப்புகள் குறித்து ஆர்வம் அதிகரித்து வருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த சூழலில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் (Exit Polls) குறித்து இந்தியத் தேர்தல் ஆணையத்தின் முக்கிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அனைத்து மாநிலங்களிலும் வாக்குப்பதிவு முழுமையாக முடிந்த பிறகே இந்த கணிப்புகள் வெளியிடப்பட வேண்டும் என்று தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, இன்று மாலை 6.30 மணிக்கு பிறகு எக்சிட் போல் வெளியாகும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தவுடன் கருத்துக்கணிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், தேர்தல் ஆணையத்தின் இந்தக் கட்டுப்பாடுகள் காரணமாக அவை தாமதமானது. ஏப்ரல் 9ஆம் தேதி காலை 7 மணி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி மாலை 6.30 மணி வரை எக்சிட் பதிவுகளை வெளியிடத் தடை விதிக்கப்பட்டது. இப்போது அந்தக் கட்டுப்பாடு நீங்கியுள்ளதால், இன்று மாலை வெளியாகும் கணிப்புகள் அரசியல் நிலவரத்தை எப்படிப் பிரதிபலிக்கும் என்பது கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[tamilnadu]]></category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/exit-poll-results-india-2026-state-election-prediction-d6zi4fu"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Senior Citizen FD: SBI, PNB, HDFC... எந்த பேங்க்ல அதிக வட்டி? சீனியர் சிட்டிசன்ஸ் கவனிக்க..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/best-fd-rates-for-senior-citizens-in-2026-sbi-pnb-hdfc-comparison-xsmggbx</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/best-fd-rates-for-senior-citizens-in-2026-sbi-pnb-hdfc-comparison-xsmggbx</guid>
            <pubDate>Wed, 29 Apr 2026 11:27:31 +0530</pubDate>
            <description><![CDATA[உங்கள் பெற்றோரின் அல்லது உங்களுடைய ஓய்வூதிய பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க விரும்பினால், FD ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். குறிப்பாக, பொதுமக்களை விட வங்கிகளால் 0.50% அதிக வட்டி விகிதங்கள் வழங்கப்படும் மூத்த குடிமக்களுக்கு இது மிகவும் பொருந்தும்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kqa2qdmjq6mn68yzecmakhs0,imgname-best-fd-for-senior-citizens-1777381127826.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;உங்கள் பெற்றோரின் அல்லது உங்களுடைய ஓய்வூதிய பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க விரும்பினால், FD ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். குறிப்பாக, பொதுமக்களை விட வங்கிகளால் 0.50% அதிக வட்டி விகிதங்கள் வழங்கப்படும் மூத்த குடிமக்களுக்கு இது மிகவும் பொருந்தும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;h3&gt;&lt;strong&gt;பிஎன்பி, கனரா மற்றும் யூனியன் வங்கி&lt;/strong&gt;&lt;/h3&gt;&lt;p&gt;இந்த வங்கிகள் தற்போது மூத்த குடிமக்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்குகின்றன. நீங்கள் 444 அல்லது 555 நாட்கள் போன்ற ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நிலையான வைப்புத்தொகை (FD) எடுத்தால், 7.10% வரை வட்டி பெறலாம்.&lt;/p&gt;&lt;h3&gt;&lt;strong&gt;எஸ்பிஐ மற்றும் பேங்க் ஆஃப் பரோடா&lt;/strong&gt;&lt;/h3&gt;&lt;p&gt;நாட்டின் மிகப்பெரிய வங்கிகளில், எஸ்பிஐ 5 முதல் 10 ஆண்டுகளில் 7.00% வருமானத்தையும், பேங்க் ஆஃப் பரோடா 5 முதல் 10 ஆண்டுகளில் 7.00% வருமானத்தையும் வழங்குகின்றன. நீண்ட கால நிலையான வருமானத்தை விரும்புவோருக்கு இவை மிகவும் பொருத்தமானவை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இண்டஸ்இண்ட் வங்கி: தற்போது, ​​இது மூத்த குடிமக்களின் 18 மாத நிலையான வைப்பு நிதிகளுக்கு 7.50% என்ற சிறந்த வட்டி விகிதத்தை வழங்குகிறது, இது தனியார் துறையில் வழங்கப்படும் மிக உயர்ந்த வட்டி விகிதங்களில் ஒன்றாகும்.&lt;/p&gt;&lt;p&gt;கோடக் மற்றும் ஆக்சிஸ் வங்கி: கோடக் மஹிந்திரா வங்கி 7.30% வட்டியையும், ஆக்சிஸ் வங்கி 7.20% வட்டியையும் நீண்ட காலக் கடனுக்கு வழங்குகின்றன.&lt;/p&gt;&lt;p&gt;HDFC மற்றும் ICICI வங்கி: மிகப்பெரிய தனியார் வங்கியான HDFC 7.00% வட்டியையும், ICICI 7.10% வட்டியையும் வழங்குகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நீங்கள் இடர் எடுப்பதில் அதிக ஆர்வம் இல்லாதவராகவும், அதிகபட்ச வருமானத்தைத் தேடுபவராகவும் இருந்தால், சிறு நிதி வங்கிகள் (SFBs) உங்கள் தேர்வாக இருக்கலாம். இங்கு 8.50% வரை வட்டி விகிதங்கள் கிடைக்கின்றன. ஈசாஃப் சிறு நிதி வங்கி, 501 நாள் நிலையான வைப்புநிதிகளுக்கு (FDs) இந்தச் சிறந்த சலுகையை வழங்குகிறது. சூர்யோதய் மற்றும் ஈக்விடாஸ் வங்கியும் 8%-க்கும் அதிகமான வருமானத்தை வழங்குகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உங்கள் பணம் முழுவதையும் ஒரே வங்கியிலோ அல்லது நிலையான வைப்புத்தொகையிலோ முதலீடு செய்வதற்கு நிபுணர்கள் அறிவுறுத்துவதில்லை. அதற்குப் பதிலாக, படிநிலை அணுகுமுறையைக் கையாளுங்கள். உதாரணமாக, உங்களிடம் ₹9 லட்சம் இருந்தால், தலா ₹3 லட்சம் மதிப்புள்ள மூன்று நிலையான வைப்புத்தொகைகளைத் (ஓராண்டு, ஈராண்டு மற்றும் மூன்றாண்டுகளுக்கு) தொடங்குங்கள். இதன் நன்மை என்னவென்றால், ஒவ்வொரு ஆண்டும் ஒரு நிலையான வைப்புத்தொகை முதிர்வடையும், இதனால் உங்களுக்குத் தேவைப்படும் போதெல்லாம் நிதியை அணுக முடியும். மேலும், வட்டி விகிதங்கள் உயர்ந்தால், புதிய நிலையான வைப்புத்தொகைகளில் உங்களால் அதிக வருமானத்தைப் பெற முடியும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மூத்த குடிமக்களுக்கு மிக முக்கியமான படிவம் 15H ஆகும். உங்கள் மொத்த ஆண்டு வருமானத்திற்கு வரி விதிக்கப்படாவிட்டால், இந்தப் படிவத்தை உங்கள் வங்கியில் சமர்ப்பிக்கவும். இது, உங்கள் வட்டி வருமானத்திலிருந்து வங்கி TDS பிடித்தம் செய்வதைத் தடுத்து, உங்கள் முழுத் தொகையையும் நீங்கள் பெறுவதை உறுதி செய்யும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பொறுப்புத் துறப்பு: &lt;/strong&gt;இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் கல்வி மற்றும் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. நிலையான வைப்புத்தொகை (FD) வட்டி விகிதங்கள் வங்கிகளால் அவ்வப்போது மாற்றத்திற்கு உட்பட்டவை மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) பணவியல் கொள்கையைச் சார்ந்துள்ளன. எந்தவொரு வங்கியிலோ அல்லது திட்டத்திலோ முதலீடு செய்வதற்கு முன், தற்போதைய விகிதங்களை உறுதிப்படுத்த சம்பந்தப்பட்ட வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும் மற்றும் உங்கள் நிதி ஆலோசகரை அணுகவும். சிறு நிதி வங்கிகளில் முதலீடு செய்வதற்கு முன், அவற்றின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கவனமாகப் படிக்கவும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[business]]></category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/best-fd-rates-for-senior-citizens-in-2026-sbi-pnb-hdfc-comparison-xsmggbx"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Goa Trip: முதல்முறை கோவா போறீங்களா? அப்போ இந்த 8 விஷயங்களை நோட் பண்ணிக்கோங்க!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/life-style/first-time-in-goa-here-are-8-things-you-must-note-down-articleshow-kayu9df</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/life-style/first-time-in-goa-here-are-8-things-you-must-note-down-articleshow-kayu9df</guid>
            <pubDate>Wed, 29 Apr 2026 09:56:05 +0530</pubDate>
            <description><![CDATA[விடுமுறைக்கு குடும்பத்தோட கோவால இருக்க பிளான் பண்ணிருக்கீங்களா? அப்போ அங்க என்னலாம் பண்ணலாம், எங்கெல்லாம் ஜாலியா சுத்திப் பார்க்கலாம்னு நாங்க உங்களுக்கு ஒரு சூப்பர் லிஸ்ட் தரோம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kqbqr8nk1gkr05fb81vzy5eg,imgname-gemini-generated-image-6u78vi6u78vi6u78--1--1777436730035.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Summer Camp In Goa: கோடைகாலத்தில் கூட கோவா திருவிழா கோலம்தான் பூண்டிருக்கும். நிறைய பேரோட மோஸ்ட் ஃபேவரைட் டெஸ்டினேஷன் இதுதான். வெளிநாட்டுல இருந்து கூட நிறைய டூரிஸ்ட்ஸ் இங்க வருவாங்க. ஆனா, வருஷத்தோட கடைசி மாசத்துலையும் கோடை விடுமுறை காலத்திலேயேும் இங்க தங்குறதுக்கும், சாப்பிடுறதுக்கும் செலவு கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். ஏன்னா, அந்த அளவுக்கு கூட்டம் இருக்கும்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;h2&gt;நைட்ல இந்த பீச்களுக்கு போங்க&lt;/h2&gt;&lt;p&gt;புத்தாண்டு இரவு கொண்டாட்டங்களுக்கு நீங்க Baga, Calangute, Anjuna, Vagator பீச்களுக்குப் போகலாம். இங்க லைவ் DJ, பட்டாசு வெடி, மிட்நைட் கவுண்ட்டவுன்னு செமயா இருக்கும். ஆனா ஒன்னு, எந்த பார் இல்ல ரெஸ்டாரன்ட் போனாலும் முன்னாடியே புக் பண்ணிடுங்க. ஏன்னா, கூட்டம் அள்ளும். அதேபோல் இந்த கடற்கரைகள் கோடைகாலத்திலும் களைகட்டும் என்பதால் முன்கூட்டியே புங்கிங் செய்ய வேண்டியது அவசியம்.&lt;/p&gt;&lt;h2&gt;சூரிய உதயம், அஸ்தமனம் பார்க்க சூப்பர் இடங்கள்&lt;/h2&gt;&lt;p&gt;காலையில சூரிய உதயத்தைப் பார்க்க Morjim, Ashwem, Mandrem பீச்களுக்குப் போகலாம். இந்த இடங்கள் ரொம்ப அமைதியா, அழகா இருக்கும். சாயங்காலம் சூரியன் மறையுறதையும், மியூசிக் வைபையும் என்ஜாய் பண்ண Arjuna, Vagator பீச்கள் சரியான சாய்ஸ். போட்டோ, ரீல்ஸ் எடுக்க இதுதான் பெஸ்ட் டைம்.&lt;/p&gt;&lt;h2&gt;வாட்டர் ஸ்போர்ட்ஸ் பண்ணாம எப்படி?&lt;/h2&gt;&lt;p&gt;ஒரு நாள் முழுக்க வாட்டர் ஸ்போர்ட்ஸ்க்கு ஒதுக்குங்க. Parasailing, Jet Ski, Banana Ride, Scuba Divingனு நிறைய ஆப்ஷன்ஸ் இருக்கு. Baga, Candolim பீச்கள்ல வாட்டர் ஸ்போர்ட்ஸ்க்கு நல்ல வசதிகள் இருக்கு. ஒரு முக்கியமான விஷயம், நியூ இயர் டைம்ங்கிறதால ரேட் கொஞ்சம் அதிகமா இருக்கும். பேரம் பேசி குறைக்க ட்ரை பண்ணுங்க.&lt;/p&gt;&lt;h2&gt;கோவா சாப்பாடு, கஃபே விசிட்!&lt;/h2&gt;&lt;p&gt;கோவா ட்ரிப் போயிட்டு அங்க உள்ள ஸ்பெஷல் சாப்பாட்டையும், கஃபேக்களையும் மிஸ் பண்ணா எப்படி? ஃபிஷ் கறி ரைஸ், பிரான் பால்சாவ், பெபிங்கா போன்ற பாரம்பரிய கோவா உணவுகளை கண்டிப்பா ட்ரை பண்ணுங்க. Curlies, Thalassa, Gunpowder, Baba Au Rhum போன்ற பிரபலமான கஃபேக்கள், அதோட சாப்பாடு, மியூசிக், கொண்டாட்டமான சூழலுக்கு பெயர் போனவை. நியூ இயருக்காக இங்க ஸ்பெஷல் மெனுவும் இருக்கும்.&lt;/p&gt;&lt;h2&gt;சர்ச், பாரம்பரிய இடங்களையும் ஒரு ரவுண்ட் அடிங்க&lt;/h2&gt;&lt;p&gt;கோவால இருக்குற சர்ச், பாரம்பரிய இடங்களுக்குப் போறது ஒரு தனி அனுபவத்தைக் கொடுக்கும். ஓல்ட் கோவால இருக்குற Basilica of Bom Jesus சர்ச்ல கிறிஸ்துமஸ், நியூ இயர் கொண்டாட்டங்கள், அலங்காரங்கள்னு ரொம்ப அழகா இருக்கும். அதேபோல, Fontainhas (லேட்டின் குவார்ட்டர்) பகுதியோட கலர்ஃபுல் தெருக்கள், பழைய வீடுகள் எல்லாம் கோவாவோட பாரம்பரியத்தைக் காட்டும்.&lt;/p&gt;&lt;h2&gt;நைட் மார்க்கெட், ஸ்ட்ரீட் ஷாப்பிங்&lt;/h2&gt;&lt;p&gt;கோவாவோட நைட் மார்க்கெட், ஸ்ட்ரீட் ஷாப்பிங் செமயா இருக்கும். Anjuna Flea Market, Arpora Night Market ரெண்டும் ரொம்ப பாப்புலர். இங்க போஹோ ஸ்டைல் உடைகள், கையால் செய்யப்பட்ட நகைகள், வித்தியாசமான நினைவுப் பொருட்கள்னு நிறைய வாங்கலாம். கூடவே லைவ் மியூசிக், ஃபுட் ஸ்டால்ஸ்னு கொண்டாட்டமா இருக்கும்.&lt;/p&gt;&lt;h2&gt;அமைதியான கோவாவை ரசிக்க...&lt;/h2&gt;&lt;p&gt;கூட்ட நெரிசல் வேணாம், அமைதியா கொண்டாடணும்னு நினைச்சீங்கன்னா, சவுத் கோவாதான் பெஸ்ட் ஆப்ஷன். Colva, Benaulim, Palolem போன்ற பீச்கள் அமைதியான சூழலுக்கும், இயற்கை அழகுக்கும் பெயர் போனவை. இங்க யோகா, ஸ்பா, பீச் ஷேக் டைனிங்னு ரிலாக்ஸா நியூ இயரைக் கொண்டாடலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[life-style]]></category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/life-style/first-time-in-goa-here-are-8-things-you-must-note-down-articleshow-kayu9df"/>
        </item>
        <item>
            <title><![CDATA[அடேங்கப்பா இத்தனை லட்சம் EV ஸ்கூட்டர் விற்பனையா? ஏத்தர் படைத்த அடிபொலி சாதனை]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/auto/ather-energy-surpasses-600000-electric-scooter-sales-milestone-q52b1rz</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/auto/ather-energy-surpasses-600000-electric-scooter-sales-milestone-q52b1rz</guid>
            <pubDate>Wed, 29 Apr 2026 11:02:39 +0530</pubDate>
            <description><![CDATA[இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனமான ஏத்தர் எனர்ஜி, சமீபத்திய ஆண்டுகளில் அபார வளர்ச்சியடைந்து, நாட்டின் டாப் 3 எலக்ட்ரிக் டூ-வீலர் நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01keh088k8cwnbjfak961mtpw0,imgname-tamil-news---2026-01-09t143803.373-1767949738599.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனமான ஏத்தர் எனர்ஜி, சமீபத்திய ஆண்டுகளில் அபார வளர்ச்சியடைந்து, நாட்டின் டாப் 3 எலக்ட்ரிக் டூ-வீலர் நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் டூ-வீலர் நிறுவனமான ஏத்தர் எனர்ஜி, ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. அரசு தரவு தளமான 'வாஹன்' போர்ட்டலின்படி, ஏத்தர் இதுவரை மொத்தம் 6,04,997 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இந்த பிரம்மாண்ட விற்பனை மூலம், இந்தியாவின் எலக்ட்ரிக் டூ-வீலர் பிரிவில் முதல் மூன்று இடங்களுக்குள் ஏத்தர் நிறுவனம் நுழைந்துள்ளது. 2018 முதல் 2021 வரை, குறிப்பாக 2020-21 காலகட்டத்தில், ஏத்தர் எனர்ஜியின் ஆரம்பக்கட்ட விற்பனை மெதுவாகவே இருந்தது. கோவிட்-19 பெருந்தொற்று, தேவையை வெகுவாக பாதித்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;2022-ல் நிறுவனத்தின் வளர்ச்சி வேகம் பிடித்தது. அந்த ஆண்டில் 51,811 யூனிட்களை விற்றது. 2023-ல், 1,26,000 யூனிட்களை விற்று பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியது. 2025-ல் 2,01,129 யூனிட்களை விற்று, ஆண்டுக்கு 59% வளர்ச்சியைப் பதிவு செய்தது. 2026 ஜனவரி 1 முதல் ஏப்ரல் 22 வரை, 99,159 யூனிட்களை விற்றுள்ளது. இது ஸ்கூட்டருக்கான வலுவான தேவையைக் காட்டுகிறது. ஏத்தரின் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர் 'ரிஸ்டா' மாடல்தான். நிறுவனத்தின் மொத்த விற்பனையில் சுமார் 70-75% இந்த ஸ்கூட்டரின் பங்களிப்பாகும். டிவிஎஸ் ஐக்யூப், பஜாஜ் சேத்தக் போன்ற மாடல்களுடன் போட்டியிடவே ரிஸ்டா பிரத்யேகமாக அறிமுகம் செய்யப்பட்டது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஏத்தர் ஸ்கூட்டரின் மிகப்பெரிய சிறப்பம்சம் அதன் 'பேட்டரி-ஆஸ்-எ-சர்வீஸ்' (BaaS) மாடல். இது வாடிக்கையாளர்கள் குறைந்த விலையில் ஸ்கூட்டரை வாங்க உதவுகிறது. இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ₹1.16 லட்சம். ஆனால் BaaS மாடலில், இதன் விலை சுமார் ₹76,000 ஆகக் குறைகிறது. ஏத்தர் எனர்ஜி தனது உற்பத்தித் திறனை வேகமாக விரிவுபடுத்தி வருகிறது. ஆண்டுக்கு 4,20,000 யூனிட்கள் என்ற தற்போதைய திறனை 14,20,000 யூனிட்களாக உயர்த்த நிறுவனம் இலக்கு வைத்துள்ளது. ஸ்கூட்டர் அசெம்பிளி மற்றும் பேட்டரி உற்பத்தி நடைபெறும் ஓசூரில் நிறுவனத்திற்கு இரண்டு ஆலைகள் உள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேலும், சத்ரபதி சம்பாஜிநகரில் மூன்றாவது ஆலையை ஏத்தர் அமைத்து வருகிறது. இதன் முதல் கட்டம் 2026-ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் தனது எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்களை ஏத்தர் வேகமாக விரிவுபடுத்தி வருகிறது. தற்போது நிறுவனத்திற்கு 700-க்கும் மேற்பட்ட டச்பாயிண்ட்கள் உள்ளன. 2026-ல் மட்டும், நிறுவனம் தனது நெட்வொர்க்கை 277-ல் இருந்து சுமார் 500 டச்பாயிண்ட்களாக விரிவுபடுத்தியுள்ளது. வரும் ஆண்டுகளில் இந்தியா முழுவதும் தனது இருப்பை வலுப்படுத்த ஏத்தர் தயாராகி வருகிறது என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[auto]]></category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/auto/ather-energy-surpasses-600000-electric-scooter-sales-milestone-q52b1rz"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Chennai : சென்னைையே மாறப்போகுது.! பேருந்து – ரயில் கனெக்டிவிட்டி ரெடி.. இதை கவனிச்சீங்களா!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-chennai/kilambakkam-skywalk-bus-rail-connection-may-opening-ncfszxk</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-chennai/kilambakkam-skywalk-bus-rail-connection-may-opening-ncfszxk</guid>
            <pubDate>Wed, 29 Apr 2026 10:46:57 +0530</pubDate>
            <description><![CDATA[கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முதல் ரயில் நிலையம் வரை பாதுகாப்பாக செல்ல ஒரு ஸ்கைவாக் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் இறுதிப் பகுதி நிறுவலுக்காக போக்குவரத்து காவல்துறை அனுமதிக்கு காத்திருக்கிறது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kqbt9zq68h3h7zb0qfnvpra4,imgname-tamil-news---2026-04-29t103847.653-1777439407846.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முதல் ரயில் நிலையம் வரை பாதுகாப்பாக செல்ல ஒரு ஸ்கைவாக் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் இறுதிப் பகுதி நிறுவலுக்காக போக்குவரத்து காவல்துறை அனுமதிக்கு காத்திருக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சென்னையின் முக்கிய நெரிசல் சாலைகளில் ஒன்றான ஜிஎஸ்டி சாலையில், கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் மற்றும் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் இடையே அமைக்கப்படும் ஸ்கைவாக் மே மாதத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். பல முறை காலக்கெடு தள்ளிப்போன இந்த திட்டம், தினமும் வேகமாகச் செல்லும் வாகனங்களைக் கடந்து பயணிகள் சாலையைக் கடந்து செல்ல வேண்டிய அவல நிலையை உருவாக்கியது.&lt;/p&gt;&lt;p&gt;275 மீட்டர் நீளமுள்ள இந்த ஸ்கைவாக் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இருப்பினும், சாலையை கடக்கும் இரண்டாவது பகுதியை நிறுத்த போக்குவரத்து போலீசாரின் அனுமதி இன்னும் கிடைக்காமல் உள்ளது. அதிகாரிகள் கூறியது, இந்த பகுதியை ஒரே ஒரு நாள் போதுமானதாக இருந்தாலும், அன்றைய தினம் வாகனங்கள் மாற்றுப்பாதைக்கு திருப்பப்பட வேண்டும் என்பதால், மே 4-ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;முன்னதாக இந்த திட்டத்தை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும் முன் திறக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ஏற்கனவே அமைக்கப்பட்ட பகுதியின் நிலைத்தன்மையில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து ஐஐடி மெட்ராஸ் முன்வைத்த கருத்துகளால் கூடுதல் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது இரண்டாவது பகுதி முழுமையாக தயார் நிலையில் உள்ளது. அனுமதி கிடைத்தது, இரவு நேரத்தில் அதை நிறுவி 12 மணி நேர கண்காணிப்பிற்கு பிறகு பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;2023 டிசம்பரில் திறக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வந்தபின்னரும், பல்வேறு போக்குவரத்து வசதிகளுடன் இணைப்பு குறைவாக இருந்தது. இதனால் தெற்கு மாவட்டங்களுக்கு பயணம் செய்பவர்கள் சிரமங்களை எதிர்கொண்டனர். இதை சரிசெய்ய மாநில அரசு மற்றும் தெற்கு ரயில்வே இணைந்து கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் ரயில் நிலையத்தையும், அதை இணைக்கும் ஸ்கைவாக் திட்டத்தையும் முன்னெடுத்தன.&lt;/p&gt;&lt;p&gt;இந்த ஸ்கைவாக் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்த பிறகு, பயணிகள் பேருந்து நிலையத்திலிருந்து ரயில் நிலையம் வரை பாதுகாப்பாக நடந்து செல்ல முடியும். எனினும், ரயில் தடத்தை கடக்கும் மேம்பாலம் மற்றும் மேடைகளுக்கான படிக்கட்டுப் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. அதனால், நேரடி ரயில் சேவைகள் துவங்குவதற்கு சிறிது காலம் ஆகும் என ரயில்வே அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[tamilnadu-chennai]]></category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-chennai/kilambakkam-skywalk-bus-rail-connection-may-opening-ncfszxk"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Goa Budget Trip: குறைந்த பட்ஜெட்டில் கோவா பயணம்.. எப்படி திட்டமிடுவது..? எங்கு செல்வது..?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/affordable-goa-the-ultimate-budget-friendly-travel-guide-uhmlllm</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/affordable-goa-the-ultimate-budget-friendly-travel-guide-uhmlllm</guid>
            <pubDate>Wed, 29 Apr 2026 10:45:17 +0530</pubDate>
            <description><![CDATA[கையிருப்பில் குறைந்த பணம் இருந்தாலும் கவலையின்றி கோவாவை ஒரு கை பார்க்கலாம்; பட்ஜெட் பயணிகளுக்கான பிரத்யேக இடங்கள் மற்றும் ரகசிய டிப்ஸ் இதோ உங்கள் பார்வைக்கு.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kqbt6ca0asv9agne1hqv0kja,imgname-gemini-generated-image-22rgc622rgc622rg-1777439289664.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கையிருப்பில் குறைந்த பணம் இருந்தாலும் கவலையின்றி கோவாவை ஒரு கை பார்க்கலாம்; பட்ஜெட் பயணிகளுக்கான பிரத்யேக இடங்கள் மற்றும் ரகசிய டிப்ஸ் இதோ உங்கள் பார்வைக்கு.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கோவா என்றாலே பலருக்கும் விலையுயர்ந்த உல்லாசப் பயணம் தான் நினைவுக்கு வரும். ஆனால், திட்டமிட்டுச் சென்றால் மிகக் குறைந்த செலவில் கோவாவின் அழகை முழுமையாக ரசிக்க முடியும். பட்ஜெட் பயணிகளுக்கான சில முக்கிய இடங்கள் மற்றும் தகவல்கள் இதோ:&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;அமைதியான மற்றும் இலவச கடற்கரைகள்&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;கோவாவில் பெரும்பாலான கடற்கரைகளுக்கு நுழைவுக் கட்டணம் கிடையாது.&lt;/p&gt;&lt;p&gt;அரம்போல் (Arambol): வடக்கு கோவாவில் உள்ள இந்த கடற்கரை பட்ஜெட் பயணிகளுக்கு சொர்க்கம் போன்றது. இங்கு மாலையில் நடக்கும் 'டிரம் சர்க்கிள்' (Drum Circle) இசை நிகழ்வுகளை இலவசமாக ரசிக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;பலோலெம் (Palolem): தெற்கு கோவாவில் உள்ள இந்த பிறை வடிவ கடற்கரை மிகவும் அமைதியானது. இங்கு தங்குமிடங்கள் மற்ற இடங்களை விட சற்று விலை குறைவாகக் கிடைக்க வாய்ப்புள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;கெலகூட் மற்றும் பாகா (Calangute &amp;amp; Baga): இவை கூட்ட நெரிசல் மிகுந்தவை என்றாலும், இங்கு பட்ஜெட் உணவகங்கள் மற்றும் தங்குமிடங்கள் அதிகம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கோவாவின் கோட்டைகள் அரபிக்கடலின் அழகைக் காணச் சிறந்த இடங்கள்.&lt;/p&gt;&lt;p&gt;அகுவாடா கோட்டை (Aguada Fort): இது ஒரு போர்ச்சுகீசிய காலத்துக் கோட்டை. இங்கிருந்து கடல் மற்றும் கலங்கரை விளக்கத்தின் அழகை ரசிக்கலாம். இதற்கு நுழைவுக் கட்டணம் மிகக் குறைவு அல்லது சில பகுதிகளுக்குக் கிடையாது.&lt;/p&gt;&lt;p&gt;சப்போரா கோட்டை (Chapora Fort): 'தில் சாஹ்தா ஹை' திரைப்படத்திற்குப் பிறகு புகழ்பெற்ற இந்த கோட்டை, வாகேட்டர் கடற்கரையின் முழு தோற்றத்தையும் காணச் சிறந்த இடம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பழைய கோவா (Old Goa) பகுதியில் உள்ள யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற தேவாலயங்களை இலவசமாகவே சுற்றிப் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;பசிலிக்கா ஆஃப் பாம் ஜீசஸ் (Basilica of Bom Jesus): புனித பிரான்சிஸ் சேவியரின் உடல் வைக்கப்பட்டுள்ள இந்த தேவாலயம் கட்டிடக்கலைக்குச் சான்று.&lt;/p&gt;&lt;p&gt;பனாஜி சர்ச்: பனாஜியின் மையப்பகுதியில் உள்ள வெள்ளை நிற தேவாலயம் (Our Lady of the Immaculate Conception Church) புகைப்படங்கள் எடுக்க மிகச்சிறந்த இடம்.&lt;/p&gt;&lt;p&gt;ஃபோன்டைன்ஹாஸ் (Fontainhas): இது பனாஜியில் உள்ள லத்தீன் குடியிருப்பு பகுதி. இங்குள்ள வண்ணமயமான வீடுகளுக்கு இடையே நடப்பதே ஒரு தனி அனுபவம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;போக்குவரத்து: கோவாவில் டாக்ஸி கட்டணம் அதிகம். எனவே, நாளொன்றுக்கு ₹300 முதல் ₹500 வரை வாடகைக்குக் கிடைக்கும் ஸ்கூட்டர்களை (Rent a Bike) பயன்படுத்துவது பணத்தைச் சேமிக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;உணவு: பெரிய ரிசார்ட்டுகளைத் தவிர்த்து, கடற்கரை ஓரம் உள்ள சிறிய கடைகள் (Shacks) மற்றும் உள்ளூர் ஹோட்டல்களில் கோவன் மீன் குழம்பு மற்றும் சாதம் (Goan Fish Thali) சாப்பிடுவது சுவையாகவும் மலிவாகவும் இருக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;தங்குமிடம்: ஹோட்டல்களுக்குப் பதில் ஹாஸ்டல்கள் (Hostels) அல்லது ஹோம்ஸ்டேக்களைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது.&lt;/p&gt;&lt;p&gt;பயண நேரம்: நவம்பர் முதல் பிப்ரவரி வரை சீசன் என்பதால் செலவு அதிகமாகும். ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான மழைக்காலத்தில் சென்றால் தங்குமிடங்கள் பாதி விலையில் கிடைக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;குறிப்பு: கோவாவில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல ஆறுகளைக் கடக்க அரசு இயக்கும் ஃபெர்ரி (Ferry) படகுகளைப் பயன்படுத்தலாம். பாதசாரிகளுக்கு இது முற்றிலும் இலவசம் அல்லது மிகக் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[life-style]]></category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/affordable-goa-the-ultimate-budget-friendly-travel-guide-uhmlllm"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Andaman Travel: "அந்த மானை" பாருங்கள் அழகு.! சொர்க்கத்தில் ஒரு ட்ரிப்! உடனே கிளம்புங்க.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/explore-andaman-a-complete-guide-to-beaches-history-and-adventure-3q7z461</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/explore-andaman-a-complete-guide-to-beaches-history-and-adventure-3q7z461</guid>
            <pubDate>Wed, 29 Apr 2026 10:30:20 +0530</pubDate>
            <description><![CDATA[அந்தமான் - நிக்கோபார் தீவுகள் ஒரு சொர்க்கம். தூய்மையான கடற்கரைகள், கண்ணாடி மாதிரி தெளிவான நீர், த்ரில்லான அட்வென்ச்சர்ஸ், செழிப்பான வரலாறுன்னு எல்லாமே இருக்கு. இயற்கை, சாகசம் வரலாறுன்னு எல்லாத்தையும் விரும்பறவங்களுக்கு இது ஒரு பெர்ஃபெக்ட் ஸ்பாட்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kpzp3sherpecsr5v2x9gvb19,imgname-budget-irctc-andaman-tour-1777032357422.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;அந்தமான் - நிக்கோபார் தீவுகள் ஒரு சொர்க்கம். தூய்மையான கடற்கரைகள், கண்ணாடி மாதிரி தெளிவான நீர், த்ரில்லான அட்வென்ச்சர்ஸ், செழிப்பான வரலாறுன்னு எல்லாமே இருக்கு. இயற்கை, சாகசம் &amp;nbsp;வரலாறுன்னு எல்லாத்தையும் விரும்பறவங்களுக்கு இது ஒரு பெர்ஃபெக்ட் ஸ்பாட்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வங்காள விரிகுடாவின் ஜொலிக்கும் நீரில், இந்தியாவின் மிக வசீகரமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் மிளிர்கின்றன.&lt;/p&gt;&lt;p&gt;இங்குள்ள தூய்மையான வெள்ளை மணல் கடற்கரைகள், தெளிவான டர்க்கைஸ் நிற நீர், அடர்ந்த மழைக்காடுகள், துடிப்பான கடல் உயிரினங்கள் என அனைத்தும் இயற்கையின் அழகை அப்படியே நமக்குக் காட்டுகின்றன.&lt;/p&gt;&lt;p&gt;வரலாறு, சாகசம், ஓய்வு என அனைத்தையும் தேடும் பயணிகளுக்கு இது ஒரு மறக்க முடியாத அனுபவத்தைத் தரும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;பண்டைய காலம்:&lt;/strong&gt; அந்தமானீஸ், நிக்கோபாரீஸ் போன்ற பழங்குடியினர் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இங்கு வாழ்கின்றனர். 11ஆம் நூற்றாண்டில் சோழப் பேரரசு இந்தத் தீவுகளை கடற்படைத் தளமாகப் பயன்படுத்தியது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;காலனித்துவ காலம்:&lt;/strong&gt; 1789-ல் ஆங்கிலேயர்கள் ஒரு குடியேற்றத்தை நிறுவி, 1858-ல் இந்தத் தீவுகளைத் தண்டனைக் காலனியாக மாற்றினர். செல்லுலார் ஜெயில் 1906-ல் கட்டி முடிக்கப்பட்டது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இரண்டாம் உலகப் போர்:&lt;/strong&gt; 1943-ல் ஜப்பான் இந்தத் தீவுகளைக் கைப்பற்றி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்திடம் ஒப்படைத்தது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சுதந்திரத்திற்குப் பிறகு:&lt;/strong&gt; 1947-ல் இந்தத் தீவுகள் இந்தியாவுடன் இணைக்கப்பட்டு, 1956-ல் யூனியன் பிரதேசமாக ஆனது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இன்று:&lt;/strong&gt; இந்த யூனியன் பிரதேசம் 572 தீவுகளைக் கொண்டுள்ளது. சுற்றுலா மற்றும் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இது விளங்குகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;போர்ட் பிளேயர்:&lt;/strong&gt; இது தீவுகளின் தலைநகரம் மற்றும் நுழைவாயில். செல்லுலார் ஜெயில், சமுத்ரிகா மரைன் மியூசியம், உள்ளூர் சந்தைகள் இங்குள்ள முக்கிய இடங்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஹேவ்லாக் தீவு (ஸ்வராஜ் த்வீப்):&lt;/strong&gt; இதன் கடற்கரைகள் மிகவும் பிரபலமானவை: ராதாநகர் பீச் (சூரிய அஸ்தமனத்திற்குப் பெயர் பெற்றது), எலிஃபன்ட் பீச் (நீர் விளையாட்டுகளுக்கு), மற்றும் காலாபதர் பீச் (கருப்புப் பாறைகள் மற்றும் தெளிந்த நீருக்கு).&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;நீல் தீவு (ஷஹீத் த்வீப்):&lt;/strong&gt; பரத்பூர் பீச் (நீர் விளையாட்டுகள்), லக்ஷ்மண்பூர் பீச் (தாழ்வான அலையின் போது தெரியும் இயற்கை பாலம்), மற்றும் சீதாபூர் பீச் (சூரிய உதயத்தைக் காண சிறந்த இடம்) போன்ற அமைதியான கடற்கரைகளுக்குப் பெயர் பெற்றது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ராஸ் தீவு:&lt;/strong&gt; ஒரு காலத்தில் பிரிட்டிஷ் நிர்வாகத் தலைமையகமாக இருந்தது. இப்போது அழகிய நிலப்பரப்புகளுக்கு மத்தியில் இடிபாடுகளைக் கொண்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;நார்த் பே தீவு:&lt;/strong&gt; ஸ்நோர்கெல்லிங், ஸ்கூபா டைவிங் மற்றும் பவளப்பாறைகளைப் பார்ப்பதற்கு ஏற்றது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பரதாங் தீவு:&lt;/strong&gt; சுண்ணாம்பு குகைகள் மற்றும் அடர்ந்த சதுப்புநிலக் காடுகளுக்குப் பிரபலமானது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சிடியா தபு (பறவைகள் தீவு):&lt;/strong&gt; அடர்ந்த காடுகள், ஒரு மினி மிருகக்காட்சிசாலை மற்றும் மூச்சடைக்க வைக்கும் சூரிய அஸ்தமனங்களுக்குப் பெயர் பெற்றது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஸ்கூபா டைவிங் மற்றும் ஸ்நோர்கெல்லிங்:&lt;/strong&gt; ஹேவ்லாக், நார்த் பே மற்றும் நீல் தீவுகளைச் சுற்றியுள்ள பவளப்பாறைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களைக் கண்டு ரசிக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;நீர் விளையாட்டுகள்:&lt;/strong&gt; எலிஃபன்ட் பீச் மற்றும் பரத்பூர் பீச் போன்ற பிரபலமான கடற்கரைகளில் சீ வாக்கிங், கயாக்கிங், ஜெட் ஸ்கீயிங் மற்றும் பாராசெயிலிங் போன்றவற்றைச் செய்யலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பீச் ஹாப்பிங்:&lt;/strong&gt; ராதாநகர், காலாபதர், லக்ஷ்மண்பூர் மற்றும் சீதாபூர் போன்ற கடற்கரைகளில் ஓய்வெடுக்கலாம் அல்லது நீண்ட நடைப்பயிற்சி செய்யலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;தீவுச் சுற்றுப்பயணம்:&lt;/strong&gt; ராஸ் தீவில் உள்ள காலனித்துவ கால இடிபாடுகள், பரதாங் தீவில் உள்ள சுண்ணாம்பு குகைகள் மற்றும் சதுப்புநிலக் காடுகளைப் பார்வையிடலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;வரலாற்றுச் சுற்றுப்பயணம்:&lt;/strong&gt; போர்ட் பிளேயரில் உள்ள செல்லுலார் ஜெயிலுக்குச் சென்று, ஒளி மற்றும் ஒலி காட்சியைக் கண்டு இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி அறியலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;மலையேற்றம் மற்றும் இயற்கை நடை:&lt;/strong&gt; மவுண்ட் ஹாரியட் தேசியப் பூங்கா உட்பட, தீவுகள் முழுவதும் உள்ள வெப்பமண்டல காடுகள் மற்றும் சதுப்புநிலப் பாதைகளில் மலையேற்றம் செய்யலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம்:&lt;/strong&gt; ராதாநகர் பீச், சீதாபூர் பீச் மற்றும் சிடியா தபுவில் அற்புதமான காட்சிகளைக் கண்டு ரசிக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;அக்டோபர் முதல் மே வரை:&lt;/strong&gt; சுற்றிப் பார்ப்பதற்கும், நீர் விளையாட்டுகள் மற்றும் கடற்கரைச் செயல்பாடுகளுக்கும் இது சிறந்த நேரம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதமான வானிலை:&lt;/strong&gt; தெளிவான வானம், மிதமான வெப்பநிலை மற்றும் குறைந்த மழைப்பொழிவு இருக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஜூன் முதல் செப்டம்பர் வரை:&lt;/strong&gt; இது பருவமழைக்காலம். கனமழை மற்றும் சீற்றமான கடல் காணப்படும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;குறைந்த செயல்பாடுகள்:&lt;/strong&gt; பருவமழை காலத்தில் பயணம், மலையேற்றம் மற்றும் நீர் விளையாட்டுகள் சவாலாக இருக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பீக் சீசன்:&lt;/strong&gt; நவம்பர் முதல் பிப்ரவரி வரை இதமான வானிலை காரணமாக சுற்றுலாப் பயணிகளால் மிகவும் விரும்பப்படும் நேரம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;தீவுகளுக்கு இடையேயான பயணம்:&lt;/strong&gt; முக்கியமாக படகுகள் மூலமே பயணம் செய்ய முடியும். அரசு மற்றும் தனியார் படகு சேவைகள் உள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;உள்ளூர் போக்குவரத்து:&lt;/strong&gt; தீவுகளுக்குள் சுற்றிப் பார்க்க டாக்சிகள், ஆட்டோ ரிக்&zwnj;ஷாக்கள் மற்றும் வாடகை இருசக்கர வாகனங்கள் பரவலாகக் கிடைக்கின்றன.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;விமான இணைப்பு:&lt;/strong&gt; போர்ட் பிளேயர், இந்தியாவின் முக்கிய நகரங்களுடன் விமானம் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பயணக் குறிப்புகள்:&lt;/strong&gt; படகு அட்டவணைகள் வானிலையைப் பொறுத்து மாறக்கூடும், குறிப்பாகப் பருவமழை காலத்தில்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சௌகரியம்:&lt;/strong&gt; ஹேவ்லாக் மற்றும் நீல் போன்ற தீவுகளை உங்கள் விருப்பப்படி சுற்றிப் பார்க்க ஸ்கூட்டர்கள் அல்லது பைக்குகளை வாடகைக்கு எடுப்பது சிறந்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;பட்ஜெட்:&lt;/strong&gt; போர்ட் பிளேயர் மற்றும் பிற தீவுகளில் விருந்தினர் இல்லங்கள் மற்றும் அரசு தங்கும் விடுதிகள் உள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;நடுத்தர பட்ஜெட்:&lt;/strong&gt; குடும்பங்கள் மற்றும் தனியாகப் பயணம் செய்பவர்களுக்கு வசதியான ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்டுகள் உள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சொகுசு ரிசார்ட்டுகள்:&lt;/strong&gt; ஹேவ்லாக் மற்றும் நீல் தீவுகளில் உள்ள கடற்கரையோர ரிசார்ட்டுகள் பிரீமியம் வசதிகள் மற்றும் அழகிய காட்சிகளை வழங்குகின்றன.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சுற்றுச்சூழல் ரிசார்ட்டுகள்:&lt;/strong&gt; ஹேவ்லாக் மற்றும் நீல் தீவுகளில் இயற்கையோடு இயைந்த தங்குமிடங்கள் பிரபலமாக உள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;போர்ட் பிளேயர் தங்குமிடங்கள்:&lt;/strong&gt; அனைத்து பட்ஜெட்டுகளுக்கும் ஏற்ற பலவிதமான ஹோட்டல்கள் உள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;குறிப்பு:&lt;/strong&gt; பீக் சீசனில் (நவம்பர் முதல் பிப்ரவரி வரை) சிறந்த தங்குமிடங்களைப் பெற முன்கூட்டியே முன்பதிவு செய்வது நல்லது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;கடல் உணவு ஸ்பெஷல்:&lt;/strong&gt; ஃப்ரெஷ்ஷான மீன், இறால், நண்டு மற்றும் லாப்ஸ்டர் போன்றவற்றை உள்ளூர், இந்திய மற்றும் கான்டினென்டல் ஸ்டைலில் சாப்பிடலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;தேங்காய் சார்ந்த கறிகள்:&lt;/strong&gt; இது அந்தமான் உணவின் ஒரு அடையாளம். பெரும்பாலும் சாதம் அல்லது கடல் உணவுகளுடன் பரிமாறப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;கிரில் மற்றும் வறுத்த கடல் உணவுகள்:&lt;/strong&gt; கடற்கரையோர உணவகங்கள் மற்றும் ரிசார்ட்டுகளில் இது மிகவும் பிரபலம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;உள்ளூர் மற்றும் சர்வதேச உணவு:&lt;/strong&gt; அனைத்து சுவைகளுக்கும் ஏற்றவாறு தென்னிந்திய, வட இந்திய மற்றும் கான்டினென்டல் உணவுகளை வழங்கும் கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் உள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;கட்டாயம் முயற்சிக்க வேண்டியவை:&lt;/strong&gt; மீன் கறி, நண்டு மசாலா, தேங்காய் இறால் கறி மற்றும் கடல் உணவு தாலி.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இயற்கை ஆர்வலர்களுக்கு அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஒரு சொர்க்கம். தெளிவான நீர், வெள்ளை மணல் கடற்கரைகள், பசுமையான காடுகள் மற்றும் துடிப்பான பவளப்பாறைகளுடன், இந்தத் தீவுகள் இந்தியாவின் மிகத் தூய்மையான இயற்கை நிலப்பரப்புகளில் சிலவற்றைக் கொண்டுள்ளன. கடற்கரையில் ஓய்வெடுப்பதாக இருந்தாலும் சரி, மறைந்திருக்கும் இடங்களை ஆராய்வதாக இருந்தாலும் சரி, இங்குள்ள காட்சிகள் மறக்க முடியாதவை.&lt;/p&gt;&lt;p&gt;சாகசப் பிரியர்களுக்கு, இந்தத் தீவுகள் பலவிதமான செயல்பாடுகளை வழங்குகின்றன. பவளப்பாறைகள் நிறைந்த நீரில் ஸ்கூபா டைவிங் மற்றும் ஸ்நோர்கெல்லிங் செய்வதில் இருந்து, வெப்பமண்டல காடுகளில் மலையேற்றம் செய்வது மற்றும் பல்வேறு நீர் விளையாட்டுகளை ரசிப்பது வரை, உங்கள் பயணத்தில் த்ரில்லைக் கூட்ட பல வழிகள் உள்ளன.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[life-style]]></category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/explore-andaman-a-complete-guide-to-beaches-history-and-adventure-3q7z461"/>
        </item>
        <item>
            <title><![CDATA[மதுர குலுங்க குலுங்க படையெடுத்து வந்த பக்தர்கள்... களைகட்டிய சித்திரை திருவிழா தேரோட்டம்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/madurai-chithirai-festival-car-procession-draws-massive-crowds-of-devotees-articleshow-muh8pi8</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/madurai-chithirai-festival-car-procession-draws-massive-crowds-of-devotees-articleshow-muh8pi8</guid>
            <pubDate>Wed, 29 Apr 2026 10:22:47 +0530</pubDate>
            <description><![CDATA[மதுரை சித்திரைத் திருவிழாவின் 11ஆம் நாளான இன்று, பிரம்மாண்ட தேரோட்டம் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். மீனாட்சி அம்மன் வேடமணிந்து வந்த பக்தர்கள் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kqbs4qcxmmcwmxqg9r3xtc54,imgname-ma-1777438186909.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;Madurai Chithirai Festival : &lt;/strong&gt;மதுரையில் சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. இதன் 11ஆம் நாளான புதன்கிழமை, பிரம்மாண்டமான தேரோட்டம் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதுபற்றி பேசிய கிருபா என்ற பக்தர், &quot;மதுரையில் சித்திரைத் திருவிழா ரொம்ப பிரம்மாண்டமா நடக்குது. இன்னைக்கு 11-வது நாள் தேரோட்டம். வெளியூர்ல இருந்து ஏகப்பட்ட பேர் வந்திருக்காங்க. சொல்லப்போனா, மதுரை நகரமே இங்க திரண்டு வந்த மாதிரி இருக்கு. நான் சின்ன வயசுல இருந்தே இந்த திருவிழாவுக்கு வந்துட்டு இருக்கேன். போன வருஷத்தை விட இந்த வருஷம் நிறைய பேர் மீனாட்சி அம்மன் வேஷம் போட்டு வந்திருக்காங்க. இதைப் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு&quot; என்றார்.&lt;/p&gt;&lt;p&gt;உத்யா ஸ்ரீ என்ற இன்னொரு பக்தர், &quot;நேத்து ராத்திரி மீனாட்சி அம்மனைப் பார்க்கணும்னு ஆசைப்பட்டேன், ஆனா முடியல. அதனால இன்னைக்கு தேரோட்டத்துல அம்மனைப் பார்க்க வந்தேன். அம்மன் ரொம்ப அழகா இருக்காங்க. நானும் அம்மன் மாதிரி வேஷம் போடணும்னு ஆசைப்பட்டேன், அதனால மீனாட்சி அம்மன் வேஷம் போட்டு வந்திருக்கேன். இந்த உடையில இருக்கிறது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இன்னைக்கு இந்த திருவிழாவுல கலந்துகிட்டது ரொம்ப மகிழ்ச்சி&quot; என்று கூறினார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;img&gt;&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;மதுரையில் களைகட்டிய தேரோட்டம்&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;முன்னதாக, கடந்த மார்ச் மாதம், தேவாரப் பாடல் பெற்ற 274 ஸ்தலங்களில் 67-வது ஸ்தலமான உய்யக்கொண்டான் திருமலை உஜ்ஜீவநாதர் கோயிலிலும் பிரம்மாண்ட தேரோட்டம் நடைபெற்றது. மார்க்கண்டேயருக்கு சிவபெருமான் மீண்டும் வாழ்வளித்த தலமாக இது கருதப்படுகிறது. மேலும், அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் பாடப்பெற்ற சிறப்புமிக்க கோயில் இதுவாகும். இந்தக் கோயிலில் பிரம்மோற்சவ விழா மார்ச் 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சிறப்பு பூஜைகளும், சுவாமி புறப்பாடும் நடைபெற்றன.&lt;/p&gt;&lt;p&gt;தேரோட்டத்தின்போது, அஞ்சனாட்சி மற்றும் பாலாம்பிகையுடன் உஜ்ஜீவநாதர் எழுந்தருளினார். அர்ச்சகர் ஆரத்தி காட்டிய பிறகு, பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது, பாரம்பரிய கயிலாய வாத்தியங்கள் முழங்க, பெண்கள் கோலாட்டம் ஆடினர்.&lt;/p&gt;&lt;p&gt;தமிழ்நாட்டின் மிக முக்கியமான மத மற்றும் கலாச்சார விழாக்களில் சித்திரைத் திருவிழாவும் ஒன்று. பக்தி, பாரம்பரியம் மற்றும் மக்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தும் இந்த தனித்துவமான விழாவைக் காண ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் கூடுகின்றனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[tamilnadu]]></category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/madurai-chithirai-festival-car-procession-draws-massive-crowds-of-devotees-articleshow-muh8pi8"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Gold Rate Today: தங்கம் விலை திடீர் வீழ்ச்சி.! நகைப்பிரியர்களுக்கு அடித்தது லக்கி ஜாக்பாட்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/gold-rate-today-april-29-in-chennai-and-tamil-nadu-h4euryq</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/gold-rate-today-april-29-in-chennai-and-tamil-nadu-h4euryq</guid>
            <pubDate>Wed, 29 Apr 2026 10:12:51 +0530</pubDate>
            <description><![CDATA[சர்வதேச சந்தை மாற்றங்களால் தங்கம் விலை இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,200 சரிந்து ரூ.1,11,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை வீழ்ச்சி தங்கம் வாங்கக் காத்திருப்போருக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kc5sy5vkbvpmaxek7rqtv72r,imgname-ae0d5264-9433-438d-a1c1-ef5eb5de3f1c-1765426534259.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சர்வதேச சந்தை மாற்றங்களால் தங்கம் விலை இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,200 சரிந்து ரூ.1,11,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை வீழ்ச்சி தங்கம் வாங்கக் காத்திருப்போருக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்காக தங்கம் வாங்கக் காத்திருப்பவர்களுக்கு இன்று ஒரு கொண்டாட்டமான செய்தி வெளியாகியுள்ளது. கடந்த சில வாரங்களாகவே ஒரு சவரன் தங்கம் ரூ. 1 லட்சத்தைத் தாண்டி விற்பனை செய்யப்பட்டு வந்தது, நடுத்தர வர்க்கத்தினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், தற்போது சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்களால், தங்கம் விலை மீண்டும் 'அதளபாதாளத்தை' நோக்கிச் செல்லத் தொடங்கியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்று (ஏப்ரல் 29, 2026) காலை நிலவரப்படி, தங்கம் விலை கடந்த சில நாட்களில் இல்லாத அளவிற்கு பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;22 காரட் ஆபரணத் தங்கம்: &lt;/strong&gt;கிராமுக்கு ரூ.150 குறைந்து, ரூ.13,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சவரன் விலை: &lt;/strong&gt;சவரனுக்கு ரூ.1,200 அதிரடியாகக் குறைந்து, ஒரு சவரன் ரூ.1,11,600-க்கு விற்பனையாகிறது.&lt;/p&gt;&lt;p&gt;நேற்று ஒரு சவரன் ரூ.1,12,800-க்கு விற்பனையான நிலையில், இன்று ஒரே நாளில் ரூ.1,200 குறைந்திருப்பது நகைப்பிரியர்களுக்குக் கிடைத்த ஒரு 'லக்கி ஜாக்பாட்' என்றே கூறலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முதலீட்டாளர்கள் அதிகம் விரும்பும் 18 காரட் தங்கத்தின் விலையும் இன்று கணிசமாகக் குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.125 குறைந்து ரூ.11,635-க்கும், சவரனுக்கு ரூ.1,000 சரிந்து ரூ.93,080-க்கும் விற்பனையாகிறது.&lt;/p&gt;&lt;p&gt;அதேநேரம், வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் காணப்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.265-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,65,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சர்வதேச அளவில் நிலவி வந்த போர்ச் சூழல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளில் ஏற்பட்டுள்ள சிறு தளர்வுகள் காரணமாக, முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதான முதலீடுகளை விடுத்து மற்ற துறைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். இதன் எதிரொலியே இந்திய சந்தையில் தங்கம் விலை குறைய முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;நிபுணர்களின் ஆலோசனை: &lt;/strong&gt;தங்கம் விலை எப்போது வேண்டுமானாலும் மீண்டும் உயர வாய்ப்புள்ளதால், நகை வாங்கத் திட்டமிட்டுள்ளவர்கள் இந்த விலைக் குறைவைப் பயன்படுத்தி இப்போதே முன்பதிவு செய்தோ அல்லது நேரிலோ தங்கம் வாங்குவது லாபகரமாக இருக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;தொடர்ந்து இரண்டு நாட்களாக தங்கம் விலை சரிந்து வருவது, இல்லத்தரசிகள் மற்றும் நடுத்தர குடும்பத்தினர் மத்தியில் பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. அலைமோதும் கூட்டத்தால் நகைக்கடைகள் இன்று களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[business]]></category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/gold-rate-today-april-29-in-chennai-and-tamil-nadu-h4euryq"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஆகம விதிகளை மீறி திருச்செந்தூர் கோவிலுக்குள் சென்றாரா விஜய்? வெடித்த புது சர்ச்சை]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/did-vijay-violate-agama-rules-new-controversy-arises-over-his-tiruchendur-temple-visit-twh6n8b</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/did-vijay-violate-agama-rules-new-controversy-arises-over-his-tiruchendur-temple-visit-twh6n8b</guid>
            <pubDate>Wed, 29 Apr 2026 09:42:02 +0530</pubDate>
            <description><![CDATA[தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஆகம விதிகளை மீறி திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளதாக சர்ச்சை வெடித்துள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kqbptjdgwq2xaaecfbtewehp,imgname-vijay--5--1777435756976.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஆகம விதிகளை மீறி திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளதாக சர்ச்சை வெடித்துள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி, இந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார். இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், வருகிற மே 4ந் தேதி தேர்தல் முடிவுகள் வெளிவர உள்ளன. இதனிடையே நடிகர் விஜய் கடந்த ஏப்ரல் 27-ந் தேதி நள்ளிரவு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரைக்கு வந்து. அங்கிருந்து காரில் திருச்செந்தூர் கோவிலுக்கு கிளம்பி சென்றார். விஜய்க்கு வழிநெடுகிலும் ரசிகர்களும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதையடுத்து நள்ளிரவில் திருச்செந்தூர் சென்ற விஜய், அங்கு அதிகாலை நடைபெற்ற விஷ்வரூப பூஜையில் கலந்துகொண்டு, கடவுளை தரிசித்தார். விஜய்க்கு கோவில் நிர்வாகம் சார்பில், வேல் பரிசாக வழங்கப்பட்டது. அந்த வேலோடு கோவில் அருகே உள்ள கடற்கரைக்கு சென்று வந்தார். பின்னர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். விஜய்யின் வருகையால் திருச்செந்தூர் ஸ்தம்பித்துப் போனது. அதிகாலையில் அதிகளவிலான பக்தர்கள் கோவிலில் கூடி இருந்தனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கிறிஸ்துவரான விஜய், விதிகளை மீறி திருச்செந்தூர் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளார் என பல வலதுசாரி ஆதரவாளர்கள் விமர்சித்து வருகின்றனர். உண்மையில் விஜய் செய்தது விதிமீறலா என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ்நாடு கோவில் நுழைவு அங்கீகார சட்டம் 1947-ன் படி, இந்துக்கள் அல்லாதவர்கள் கோவிலுக்குள் நுழைய அனுமதி இல்லை. 2024-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம், ஆகம கோவில்களில் இந்துக்கள் அல்லாதவர்கள், கோவிலின் வெளிப்புர பகுதிகளை பார்வையிடவும், கொடிமரம் வரை மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் எனவும், தீர்ப்பு வழங்கி உள்ளது. அதன்படி பார்த்தால் திருச்செந்தூர் முருகன் கோவில், ஆகம விதிப்படி அமைக்கப்பட்ட ஒரு கோவிலாகும். ஆனால் மாற்று மதத்தினராக இருந்தாலும் தெய்வத்தின் மீது நம்பிக்கை உள்ளதாகவும், இந்து மத வழிமுறைகளை பின்பற்றுவதாகவும் எழுத்துப் பூர்வமாக தெரிவித்தால், அவர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதனைப் பின்பற்றி நடிகர் விஜய், எழுத்துப்பூர்வமாக சம்மதம் தெரிவித்த பின்னரே, அவருக்கு திருச்செந்தூர் கோவிலில் வரவேற்பு அளிக்கப்பட்டதாக கூறும் அவரின் ஆதரவாளர்கள். விஜய் கோவிலுக்குள் செல்லும் முன் கையெழுத்திடும் புகைப்படங்களையும் வெளியிட்டு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். இதன்மூலம் விஜய் ஆகம விதிகளை மீறி கோவிலுக்குள் சென்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள் தவெக-வின் விர்ச்சுவல் வாரியர்ஸ்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[cinema]]></category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/did-vijay-violate-agama-rules-new-controversy-arises-over-his-tiruchendur-temple-visit-twh6n8b"/>
        </item>
        <item>
            <title><![CDATA[நவீன தோற்றத்திற்கு ஏற்ற 7 அசத்தலான அக்ரிலிக் வளையல் வடிவமைப்புகள்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/webstories/life-style-fashion/7-latest-acrylic-bangle-designs-for-a-modern-and-trendy-look-kkgxcfc</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/webstories/life-style-fashion/7-latest-acrylic-bangle-designs-for-a-modern-and-trendy-look-kkgxcfc</guid>
            <pubDate>Wed, 29 Apr 2026 09:23:44 +0530</pubDate>
            <description><![CDATA[இன்றைய பெண்கள் உடைக்கு இணையாக ஆபரணங்களுக்கும் முக்கியத்துவம் தருகின்றனர். அந்த வகையில், நவீன பேஷனில் 'அக்ரிலிக் வளையல்கள்' மிகவும் பிரபலம். இவை எடை குறைந்தவை; அத்துடன் அனைத்து வகை ஆடைகளுக்கும் ஏற்ற வண்ணங்களில் கிடைப்பதால் பலரின் தேர்வாக உள்ளது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kqbn2jjnam24z7qw86xpqppz,imgname-acrylic-bangle--1--1777433922133.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <category><![CDATA[life-style-fashion]]></category>
            <dc:creator>Priya Velan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/webstories/life-style-fashion/7-latest-acrylic-bangle-designs-for-a-modern-and-trendy-look-kkgxcfc"/>
        </item>
        <item>
            <title><![CDATA[தடைகளைத் தகர்த்து முன்னேறும் கும்ப ராசி: மே மாதத்தில் காத்திருக்கும் அதிரடி மாற்றங்கள்..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/aquarius-may-2026-navigating-challenges-with-resilience-and-grace-t8k4sne</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/aquarius-may-2026-navigating-challenges-with-resilience-and-grace-t8k4sne</guid>
            <pubDate>Wed, 29 Apr 2026 09:00:58 +0530</pubDate>
            <description><![CDATA[ஜென்ம சனியின் நெருக்கடிகளைத் கடந்து, குருவின் அருளால் வெற்றி கனியை சுவைக்க தயாராகும் கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மே மாதம் ஒரு திருப்புமுனையாக அமையப்போகிறது.! பொறுமையும் நிதானமும் உங்கள் ஆயுதமானால், மே மாதத்தின் சவால்கள் அனைத்தும் சாதனைகளாக மாறும்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kqbm0c00syyv8xzmkzatrrdw,imgname-gemini-generated-image-hn5rtwhn5rtwhn5r-1777432801280.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஜென்ம சனியின் நெருக்கடிகளைத் கடந்து, குருவின் அருளால் வெற்றி கனியை சுவைக்க தயாராகும் கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மே மாதம் ஒரு திருப்புமுனையாக அமையப்போகிறது.! பொறுமையும் நிதானமும் உங்கள் ஆயுதமானால், மே மாதத்தின் சவால்கள் அனைத்தும் சாதனைகளாக மாறும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கும்ப ராசிக்காரர்களுக்கு (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) இந்த 2026 மே மாதம், உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரமும், அதே சமயம் சில சவால்களையும் எதிர்கொள்ளும் மாதமாக அமையப்போகிறது. உங்கள் ராசிநாதன் சனி பகவான் உங்கள் ராசியிலேயே சஞ்சரிப்பதால், பொறுப்புகள் கூடினாலும் தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;தொழில் மற்றும் உத்தியோகம்&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு இந்த மாதம் புதிய வாய்ப்புகள் கதவைத் தட்டும். ஆனால், நீங்கள் எதிர்பார்த்த அதே சம்பளம் அல்லது அதே பதவி கிடைப்பதில் சிறு தாமதம் ஏற்படலாம்.&lt;/p&gt;&lt;p&gt;பணியில் உள்ளவர்கள்: அலுவலகத்தில் உங்கள் மீதான வேலைப்பளு அதிகரிக்கும். குறிப்பாக மே மாதத்தின் இரண்டாவது பாதியில் மேலதிகாரிகளுடன் பேசும்போது நிதானம் தேவை. உங்கள் திறமையை நிரூபிக்க கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;தொழில் முனைவோர்: புதிய கிளைகள் தொடங்குவது அல்லது பெரிய முதலீடுகளைச் செய்வது போன்ற முடிவுகளை மாத இறுதியில் எடுப்பது நல்லது. கூட்டாளிகளுடன் (Partners) வெளிப்படையான பேச்சுவார்த்தை அவசியம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பணவரவு திருப்திகரமாக இருந்தாலும், சுபச் செலவுகள் வரிசைகட்டும்.&lt;/p&gt;&lt;p&gt;வரவு: பழைய கடன்கள் வசூலாவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் கிடைக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;செலவு: வீடு பராமரிப்பு, வண்டி வாகன பழுது பார்த்தல் அல்லது மருத்துவச் செலவுகள் என திடீர் செலவுகள் வரக்கூடும்.&lt;/p&gt;&lt;p&gt;முதலீடு: பங்குச்சந்தை அல்லது தங்கம் போன்றவற்றில் முதலீடு செய்யும் முன் நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது நலம்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;குடும்பம் மற்றும் உறவுகள்&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;குடும்ப வாழ்வில் கலவையான பலன்களே கிடைக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;தொடர்புகள்: கணவன்-மனைவி இடையே சிறு சிறு வாக்குவாதங்கள் வரலாம். ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு விட்டுக் கொடுத்துச் செல்வது குடும்ப அமைதியைக் காக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;குழந்தைகள்: பிள்ளைகளின் கல்வியில் முன்னேற்றம் காணப்படும். அவர்களின் உயர்கல்வி தொடர்பாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.&lt;/p&gt;&lt;p&gt;சுப நிகழ்ச்சிகள்: வீட்டில் தடைப்பட்டிருந்த சுப காரியங்கள் மீண்டும் தொடங்க சாதகமான சூழல் நிலவுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&quot;ஜென்ம சனி&quot; நடப்பதால் ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்டக்கூடாது.&lt;/p&gt;&lt;p&gt;உடல் நலம்: கால் வலி, மூட்டு வலி அல்லது நரம்பு சம்பந்தப்பட்ட உபாதைகள் வந்து நீங்கும்.&lt;/p&gt;&lt;p&gt;உணவு முறை: நேரத்திற்கு உண்பதும், போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும் அவசியம். உஷ்ண சம்பந்தமான நோய்கள் வராமல் காக்க குளிர்ச்சியான உணவுகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள்.&lt;/p&gt;&lt;p&gt;மன நலம்: வேலைப்பளுவால் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்க தியானம் மற்றும் யோகா செய்வது சிறந்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டிய மாதம் இது. தேவையற்ற பொழுதுபோக்குகள் உங்கள் கவனத்தைச் சிதறடிக்கலாம். திட்டமிட்டுப் படித்தால் மட்டுமே தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். குறிப்பாக உயர்கல்வி பயிலும் மாணவர்கள் தங்கள் ஆராய்ச்சிப் பணிகளில் முன்னேற்றம் காண்பார்கள்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;சிறப்பு பலன்கள் &amp;amp; எச்சரிக்கைகள்&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;பயணம்: வெளிநாட்டுப் பயணங்களுக்காகக் காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வரும். எனினும், சாலைப் பயணங்களின் போது வேகம் தவிர்ப்பது நல்லது.&lt;/p&gt;&lt;p&gt;பெண்கள்: குடும்பப் பொறுப்புகளைச் சிறப்பாகக் கையாளுவீர்கள். வேலைக்குச் செல்லும் பெண்களுக்குப் பதவி உயர்வுக்கான அறிகுறிகள் தென்படும்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;வழிபாட்டு முறைகள்&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;சனிக்கிழமை: சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி &quot;காகத்திற்கு&quot; சாதம் வைப்பது தடைகளை நீக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;வியாழக்கிழமை: குரு பகவானை வணங்கி மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்வது பொருளாதார மேன்மையை தரும்.&lt;/p&gt;&lt;p&gt;அனுமன் வழிபாடு: சனியின் ஆதிக்கத்தைக் குறைக்க அனுமன் சாலிசா பாராயணம் செய்வது மன வலிமையைக் கொடுக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;சுருக்கமாக: இந்த மே மாதம் கும்ப ராசிக்காரர்களுக்கு &quot;நிதானம்&quot; மற்றும் &quot;உழைப்பு&quot; ஆகிய இரண்டையும் மூலதனமாகக் கொண்டு செயல்பட வேண்டிய காலம். கடின உழைப்புக்குக் கண்டிப்பாகப் பலன் உண்டு!&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[astrology]]></category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/aquarius-may-2026-navigating-challenges-with-resilience-and-grace-t8k4sne"/>
        </item>
        <item>
            <title><![CDATA[40 வயதுக்கு பிறகு குபேரனாக மாறும் 3 ராசிகள்.. ஜோதிடர்கள் கணிப்பு.. முழு லிஸ்ட் உள்ளே!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/astrology-luck-after-40-career-wealth-boost-for-these-signs-lgdumg4</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/astrology-luck-after-40-career-wealth-boost-for-these-signs-lgdumg4</guid>
            <pubDate>Wed, 29 Apr 2026 08:56:58 +0530</pubDate>
            <description><![CDATA[பலர் 40 வயதுக்குப் பிறகு வாழ்க்கை முடிந்துவிட்டதாகக் கருதினாலும், ஜோதிடத்தின்படி இது ஒரு மறுபிறப்புக் காலமாகும். சிலருக்கு குரு, சனி போன்ற கிரகங்களின் சாதகமான நிலையால் அதிர்ஷ்டம், செல்வம், உயர்ந்த பதவி ஆகியவை கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kqbm11gse5p7f2vd08w87ze1,imgname-tamil-news---2026-04-29t084958.391-1777432823321.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;பலர் 40 வயதுக்குப் பிறகு வாழ்க்கை முடிந்துவிட்டதாகக் கருதினாலும், ஜோதிடத்தின்படி இது ஒரு மறுபிறப்புக் காலமாகும். சிலருக்கு குரு, சனி போன்ற கிரகங்களின் சாதகமான நிலையால் அதிர்ஷ்டம், செல்வம், உயர்ந்த பதவி ஆகியவை கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;40 வயதுக்குப் பிறகு வாழ்க்கை முடிந்து விட்டதாக பலர் எண்ணுவது வழக்கம். ஆனால் ஜோதிடக் கணிப்புகளின் பார்வையில், இது ஒரு &ldquo;மறுபிறப்பு&rdquo; காலமாகவும் அமையலாம். குறிப்பாக குரு, சனி, ராகு போன்ற கிரகங்களின் சாதகமான நிலைமைகள் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், செல்வம், உயர்ந்த பதவி போன்ற பலன்களை அளிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. அனுபவமும், மனநிலையின் தெளிவும் சேரும் இந்த கட்டத்தில், வாழ்க்கை புதிய திசையில் நகரும் வாய்ப்பு அதிகம் என ஜோதிடம் சுட்டிக்காட்டுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வாழ்க்கையில் 40 வயதுக்குப் பிறகு வாய்ப்புகள் குறையும் என்ற எண்ணம் பொதுவாக இருந்தாலும், ஜோதிடம் அதை ஒரு திருப்புமுனையாகவே பார்க்கிறது. இந்த வயதுக்குப் பிறகு சில ராசிக்காரர்களுக்கு தொழில், மரியாதை, பொருளாதார நிலை போன்ற துறைகளில் முன்னேற்ற வாய்ப்புகள் அதிகரிக்கலாம். இதன் பின்னணியில் கிரக நிலை மாற்றங்களும், உருவாகும் யோகங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிம்ம ராசிக்காரர்களுக்கு 40க்கு பிறகு தலைமைத்துவ வாய்ப்புகள் அதிகரிக்கும் காலமாக கருதப்படுகிறது. குருவின் ஆதரவால் பதவி உயர்வு, முக்கிய பொறுப்புகள் அல்லது சமூக மரியாதை கிடைக்கும் சூழ்நிலை உருவாகலாம். தன்னம்பிக்கை, தீர்மான திறன் போன்ற குணங்கள் மேலும் வலுப்பெற்று, புதிய தொழில் முயற்சிகளிலும் முன்னேற வழி கிடைக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மகர ராசிக்காரர்கள் சனியின் ஆட்சியில் இருப்பதால், கட்டுப்பாடு மற்றும் கடின உழைப்பு இவர்களின் பலம். 40 வயதிற்குப் பிறகு இவர்களின் தொழில் நிலை உயர்ந்து, பொருளாதார முன்னேற்றம் காணப்படுவதாகத் தெரிகிறது. அரசு துறை, வங்கி, பெரிய நிறுவனங்கள் அல்லது வாய்ப்புகள் போன்ற துறைகளில் முன்னேற்றம் கிடைக்கும் சாத்தியம் உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மீன ராசிக்காரர்களுக்கு இந்த கட்டம் ஆன்மீக வளர்ச்சியும், சமூக மரியாதையும் அதிகரிக்கும். கல்வி, சேவை, ஆன்மீகம் போன்ற துறைகளில் இவர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகலாம். எனினும், எந்த மாற்றத்தையும் முழுமையாக நம்புவதற்கு முன், தனிப்பட்ட முயற்சி, திட்டமிடல், நிதானமான முடிவுகள் ஆகியவை முக்கியம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். (குறிப்பு: இந்த தகவல்கள் ஜோதிட நம்பிக்கைகள் அடிப்படையிலானவை மட்டுமே.)&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[astrology]]></category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/astrology-luck-after-40-career-wealth-boost-for-these-signs-lgdumg4"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Michael Movie Box Office: ரூ. 5,000 கோடியை நோக்கி பாயும் 'மைக்கல்'.! 4 நாட்களிலேயே மிரட்டும் வசூல் விவரம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/michael-movie-mj-biopic-eyes-rs-5000-crore-mark-staggering-4-day-box-office-report-k542gop</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/michael-movie-mj-biopic-eyes-rs-5000-crore-mark-staggering-4-day-box-office-report-k542gop</guid>
            <pubDate>Wed, 29 Apr 2026 08:55:12 +0530</pubDate>
            <description><![CDATA['மைக்கல்', வெளியான முதல் 4 நாட்களிலேயே ரூ. 2,200 கோடி வசூலித்து இமாலய சாதனை படைத்துள்ளது. மைக்கல் ஜாக்சனின் அண்ணன் மகனான ஜாபர் ஜாக்சனின் தத்ரூபமான நடிப்பு மற்றும் ஆண்ட்வான் ஃபுகுவாவின் இயக்கம் ஆகியவை படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kgmch2rrx70mysh7wx3ewzve,imgname-0d01eaef-8447-460e-aa47-46a27dd6c854--2--1770210757400.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;&amp;nbsp;'மைக்கல்', வெளியான முதல் 4 நாட்களிலேயே ரூ. 2,200 கோடி வசூலித்து இமாலய சாதனை படைத்துள்ளது. மைக்கல் ஜாக்சனின் அண்ணன் மகனான ஜாபர் ஜாக்சனின் தத்ரூபமான நடிப்பு மற்றும் ஆண்ட்வான் ஃபுகுவாவின் இயக்கம் ஆகியவை படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;திரைையுலகில் அவ்வப்போது சில திரைப்படங்கள் வெளியாகி, வசூலிலும் சரி, மக்கள் மனதை வெல்வதிலும் சரி புதிய மைல்கற்களை உருவாக்கும். அந்த வகையில், இசை உலகின் ஜாம்பவான் மைக்கல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள 'மைக்கல்' (Michael) திரைப்படம் தற்போது உலக சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. ஜாபர் ஜாக்சன் நடிப்பில் உருவான இத்திரைப்படம், வெளியான சில நாட்களிலேயே பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளைத் தகர்த்து எறிந்து வருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கடந்த ஏப்ரல் 24 அன்று உலகம் முழுவதும் வெளியான இத்திரைப்படம், ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் திரையரங்குகளில் நுழைந்தது. முதல் காட்சியிலிருந்தே நேர்மறையான விமர்சனங்கள் குவியத் தொடங்கின. இதன் விளைவாக:&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;உலகளாவிய சாதனை: படம் வெளியான முதல் 4 நாட்களிலேயே உலகம் முழுவதும் சுமார் ரூ. 2,200 கோடி (சுமார் $260 Million) வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ளது.&lt;/li&gt; &lt;li&gt;பயோபிக் சாதனை: ஒரு இசை கலைஞரின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் இவ்வளவு குறுகிய காலத்தில் இமாலய வசூலை எட்டியது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.&lt;/li&gt; &lt;li&gt;இந்தியாவில் தாக்கம்: ஹாலிவுட் படங்களுக்கு இந்தியாவில் எப்போதும் மவுசு உண்டு. அந்த வகையில் மைக்கல் ஜாக்சனின் ரசிகர்கள் இந்தியாவில் அதிகம் என்பதால், இங்கும் முதல் 4 நாட்களில் சுமார் ரூ. 20 கோடிக்கும் அதிகமான வசூலை இப்படம் ஈட்டியுள்ளது.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த இமாலய வெற்றிக்கு மிக முக்கியமான காரணம், மைக்கல் ஜாக்சனாக நடித்திருக்கும் ஜாபர் ஜாக்சன். இவர் மைக்கல் ஜாக்சனின் சகோதரர் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஜாக்சனின் தனித்துவமான நடனம், மேடை மேனரிசம் மற்றும் அவரது மெல்லிய குரல் ஆகியவற்றை அப்படியே திரையில் பிரதிபலித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;மேலும், ஜாக்சன் தனது வாழ்க்கையில் சந்தித்த போராட்டங்கள், இனவெறிக்கு எதிரான அவரது நிலைப்பாடு மற்றும் இசைத் துறையில் அவர் சந்தித்த ஏற்ற இறக்கங்கள் என அனைத்தையும் இயக்குநர் ஆண்ட்வான் ஃபுகுவா (Antoine Fuqua) மிக நேர்த்தியாகவும் உணர்ச்சிகரமாகவும் படமாக்கியுள்ளார். இதுவே ரசிகர்களை மீண்டும் மீண்டும் திரையரங்கிற்கு வரவழைக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தற்போது உலகம் முழுவதும் 'மைக்கல் ஜாக்சன் மேனியா' மீண்டும் தொடங்கியுள்ளது. திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு வரும் வாரங்களுக்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சினிமா வர்த்தக வல்லுநர்களின் கணிப்புப்படி, இத்திரைப்படம் வரும் நாட்களில் ரூ. 5,000 கோடி முதல் ரூ. 7,000 கோடி வரையிலான மொத்த வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மைக்கல்' திரைப்படம் வெறும் வசூல் சாதனைக்கானது மட்டுமல்ல; இசை உலகின் மன்னனுக்கு உலக சினிமா செலுத்திய மாபெரும் மரியாதையாகக் கருதப்படுகிறது. முந்தைய பயோபிக் படங்களான 'போஹிமியன் ராப்சோடி' போன்ற படங்களின் சாதனைகளை இது விரைவில் முறியடிக்கும் என்பதில் ஐயமில்லை. மைக்கல் ஜாக்சனின் மேஜிக் இன்னும் ஓயவில்லை என்பதை இந்த 4 நாள் வசூல் உலகிற்கு உணர்த்தியுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[cinema]]></category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/michael-movie-mj-biopic-eyes-rs-5000-crore-mark-staggering-4-day-box-office-report-k542gop"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஜனனி போட்ட பிளான் எல்லாம் வேஸ்ட்... அந்தர் பல்டி அடித்த விசாலாட்சி - எதிர்நீச்சல் தொடர்கிறது ட்விஸ்ட்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/visalatchi-support-to-withdraw-case-against-ags-in-ethirneechal-thodargiradhu-serial-today-481st-episode-p5fozg4</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/visalatchi-support-to-withdraw-case-against-ags-in-ethirneechal-thodargiradhu-serial-today-481st-episode-p5fozg4</guid>
            <pubDate>Wed, 29 Apr 2026 08:54:22 +0530</pubDate>
            <description><![CDATA[எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் அவருக்கு எதிரான வழக்கை வாபஸ் வாங்கும் முடிவுக்கு வந்துள்ளார் விசாலாட்சி. அதைப்பற்றி பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kqbm45crnfbdxh0nta82hjp2,imgname-ethirneechal-thodargiradhu--8--1777432925592.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் அவருக்கு எதிரான வழக்கை வாபஸ் வாங்கும் முடிவுக்கு வந்துள்ளார் விசாலாட்சி. அதைப்பற்றி பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன் தனக்கு பிரஷர் அதிகமானதால் மயக்கம் போட்டு விழுந்தார். இதையடுத்து அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்த அவரது தம்பிகள் வீட்டில் வந்து யாருமே அவரை பார்க்க வரக்கூடாது என்றும், உங்களால் தான் என்னுடைய அண்ணன் இந்த நிலைமையில் இருக்கிறார் என சொல்கிறார். அவர் இன்னும் எத்தனை நாள் உயிரோடு இருப்பார் என சொல்லமுடியாது என்று டாக்டர் கூறிவிட்டதாக கதிர் சொன்னதும் அதைக்கேட்ட விசாலாட்சி பதறிப்போகிறார். தன் அண்ணனுக்கு மட்டும் ஏதாவது ஆச்சுன்னா உங்க யாரையும் சும்மா விடமாட்டேன் என்று மிரட்டுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆஸ்பத்திரிக்கு சென்றதும் அங்கு டாக்டர், ஆதி குணசேகரனை பரிசோதித்துவிட்டு, அவருக்கு பிரஷர் அதிகமானதால் தான் இப்படி ஆனதாகவும், அவரை இனி எப்போ வேண்டுமானாலும் வீட்டுக்கு அழைத்து செல்லலாம் என்றும் கூறுகிறார். ஆனால் அவரிடம் பேசும் ஆடிட்டர், இன்னும் கொஞ்ச நாளைக்கு அவர் இங்கேயே ஐசியூவில் இருக்கட்டும் என சொல்வதோடு, எங்கள் வீட்டில் இருந்து பெண்கள் யார் வந்து கேட்டாலும் அண்ணன் சீரியஸாக இருப்பதாக சொல்லுமாறு டாக்டரிடம் சொல்ல அவரும் ஓகே சொல்லிவிடுகிறார். இதன்மூலம் ஆதி குணசேகரன் சீரியஸாக இருப்பது போல் காட்டி, அவர் மீது போடப்பட்டுள்ள கேஸை எல்லாம் வாபஸ் வாங்க வைக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதையடுத்து வீட்டுக்கு போகும் கதிர் மற்றும் ஞானம், அனைவரிடம் கெஞ்சி கேட்கிறார்கள். இனியாவது அந்த மனுஷனை நிம்மதியா இருக்க விடுங்க என கதிர் கேட்கிறார். அப்போது குறுக்கிட்டு பேசும் ஜனனி, டாக்டரே பொண்டாட்டி, பிள்ளைங்க எல்லாம் போய் பாக்கலாம்னு சொல்றாரு, நீங்க என்னமோ யாருமே பார்க்க கூடாது, தொந்தரவு பண்ணக் கூடாதுனு பேசுறீங்க என கேட்க, அதைக்கேட்டதும் கடுப்பாகிறார் கதிர். வழக்கம்போல் ஜனனியை பார்த்து நீ வாய மூடு டி, உன்னால தான் என்னோட அண்ணன் சாகக் கிடக்கிறார் என்று தன்னுடைய டிராமாவை ஸ்டார்ட் பண்ணுகிறார். அப்போது அருகில் இருந்த விசாலாட்சி ஜனனியை தடுத்து நிறுத்துகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அப்போது பேசும் ஞானம், ஜனனி, ரேணுகா, நந்தினி ஆகியோரிடம் நீங்க மூணு பேரும் கையெழுத்து போட்டு கொடுத்தீங்கனா எல்லாம் சரியாகிடும் என சொல்கிறார். அவர் கையெழுத்து கேட்டதும் அதில் ஏதோ உள்குத்து இருக்கிறது என்று சந்தேகப்படுகிறார் ஜனனி. உடனே அருகில் இருந்த விசாலாட்சி, தாய் பாசத்தால் அந்தர் பல்டி அடிக்கிறார். அனைவரையும் கையெழுத்து போட்டு கொடுக்க சொல்கிறார். அவரிடம் இப்படி மாத்தி மாத்தி பேசாத அம்மா என சொல்கிறார் சக்தி. போதும்யா உடனே அம்மா மாரிட்டியானு கேட்காத, அவன் உசுரு முக்கியம் என சொல்ல, ஜனனி ஷாக் ஆகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதையடுத்து என்ன நடக்கப்போகிறது. ஜனனி பேச்சைக் கேட்காமல் மனம் மாறும் நிலையில் இருக்கும் ஈஸ்வரி, வழக்கை வாபஸ் வாங்க சம்மதிப்பாரா? நந்தினியும், ரேணுகாவும், அவர்கள் பேச்சை கேட்டு வாபஸ் வாங்க சம்மதித்து கையெழுத்து போடுவார்களா? ஜனனியின் போராட்டம் தொடருமா? என்கிற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இனி வரும் எபிசோடுகளில் விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[television]]></category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/visalatchi-support-to-withdraw-case-against-ags-in-ethirneechal-thodargiradhu-serial-today-481st-episode-p5fozg4"/>
        </item>
        <item>
            <title><![CDATA[கொளுத்தும் கோடை வெயில்! தமிழகம் முழுவதும் மீண்டும் இன்று முதல் மின்தடை! எந்தெந்த பகுதிகளில் எத்தனை மணிநேரம்?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/summer-heat-announcement-of-power-cut-again-from-today-across-tamil-nadu-55scgxz</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/summer-heat-announcement-of-power-cut-again-from-today-across-tamil-nadu-55scgxz</guid>
            <pubDate>Wed, 29 Apr 2026 08:26:46 +0530</pubDate>
            <description><![CDATA[தமிழகத்தில் தேர்வுகள் மற்றும் தேர்தல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. இதன் காரணமாக, இன்று சென்னை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jyqej3sz9cwca3avgw61kjtw,imgname-power-cut-1-1750986198847.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழகத்தில் தேர்வுகள் மற்றும் தேர்தல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. இதன் காரணமாக, இன்று சென்னை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழகத்தில் மழை மற்றும் குளிர் காலம் முடிந்து கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. 10க்கும் மேற்பட்ட இடங்களில் வெயில் சதம் அடித்து வருகிறது. இதனால் வீட்டில் எந்நேரமும் ஃபேன் மற்றும் ஏசி இல்லாமல் இருப்பதில்லை. இதன் காரணமாக மின்தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து உச்சம் பெற்று வருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில் தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அரசு, அரசு உதவி பெற்ற பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டுத்தேர்வு நடத்தப்பட்டதை அடுத்து இரண்டு மாதங்களுக்கு இனி மின்தடை இருக்கக்கூடாது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TNPDCL) முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருந்தது. மேலும் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் காரணமாக மின்தடையும் இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக இன்று முதல் எந்தெந்த பகுதிகளில் மின்தடை என்பதை பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வெள்ளனூர், கொள்ளுமேடு, மகளிர் ஐ.இ., போத்தூர், லட்சுமிபுரம், பம்மத்துக்குளம், கோனிமேடு, ஈஸ்வரன் நகர், எல்லம்மன்பேட்டை, டி.எச்.ரோடு, எடப்பாளையம் ரோடு, கன்னடபாளையம், காட்டூர், அரிக்கம்பேடு, காந்தி நகர் ஆகிய இடங்களில் காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நரிகானாபுரம், பேரிகை, அதிமுக, செட்டிப்பள்ளி, நரசப்பள்ளி, பன்னப்பள்ளி, சிகனப்பள்ளி, நெரிகம், கெஜாலங்கோட்டை, தண்ணீர்குண்டலப்பள்ளி, எழுவப்பள்ளி, கே.என்.தொட்டி, பி.எஸ்.திம்மசந்திரம், சூளகிரி டவுன், உலகம், மதராசனப்பள்ளி, ஏனுசோனை, சின்னார், சாமல்பள்ளம், பீர்பள்ளி, பிக்கனப்பள்ளி, கலிங்கவரம், எளியதேரடி, கமந்தொட்டி, கோனேரிப்பள்ளி, பாதகோட்டை, சின்னகொத்தூர், கங்கோஜிகொத்தூர், பாதிமடுகு, நல்லூர், தீர்த்தம், மணவாரனப்பள்ளி, நாச்சிக்குப்பம், செம்பரசனஹள்ளி, பஸ்தலப்பள்ளி, எர்ரஹண்டஹள்ளி, பெத்தேப்பள்ளி, சென்னப்பள்ளி, பாகலூர், ஜீமங்கலம், உலியாளம், நல்லூர், பெலத்தூர், தின்னப்பள்ளி, சூடபுரம், அலசப்பள்ளி, பி.முத்துகானப்பள்ளி, தேவீரப்பள்ளி, சத்தியமங்கலம், தும்மனப்பள்ளி, படுதேப்பள்ளி, பலவனப்பள்ளி, முதலி, முதுகுருக்கி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 10 மணி முதல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[tamilnadu]]></category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/summer-heat-announcement-of-power-cut-again-from-today-across-tamil-nadu-55scgxz"/>
        </item>
        <item>
            <title><![CDATA[சுக்கிர பெயர்ச்சி 2026: மே 8 முதல் இந்த 3 ராசிகளுக்கு 'குபேர யோகம்'.. ஜாக்பாட் அடிக்கப்போகுது!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/venus-transit-2026-may-8-three-zodiac-signs-kubera-yoga-jackpot-luck-mvr1vso</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/venus-transit-2026-may-8-three-zodiac-signs-kubera-yoga-jackpot-luck-mvr1vso</guid>
            <pubDate>Wed, 29 Apr 2026 07:39:50 +0530</pubDate>
            <description><![CDATA[ஜோதிட சாஸ்திரத்தில் அதிபதியாக விளங்குபவர் சுக்கிர பகவான். மே 08 அன்று சுக்கிர பகவான் மிருகசீரிஷ நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். இந்த நட்சத்திர மாற்றத்தால் மூன்று ராசிக்காரர்களுக்கு ராஜபோக வாழ்க்கை ஆரம்பமாக போகிறது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kk3qrvstjje6yy66fbgyf3wc,imgname-shukra-peyarchi-2026-in-mesha-rasi-1772873346874.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஜோதிட சாஸ்திரத்தில் அதிபதியாக விளங்குபவர் சுக்கிர பகவான். மே 08 அன்று சுக்கிர பகவான் மிருகசீரிஷ நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். இந்த நட்சத்திர மாற்றத்தால் மூன்று ராசிக்காரர்களுக்கு ராஜபோக வாழ்க்கை ஆரம்பமாக போகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜோதிட சாஸ்திரத்தில் ஆடம்பரம், செல்வம், காதல் மற்றும் மகிழ்ச்சிக்கு அதிபதியாக விளங்குபவர் சுக்கிர பகவான். ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருந்தால், அவர்களுக்கு ராஜபோக வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை. தற்போது சுக்கிர பகவான் வரும் மே 08 அன்று மிருகசீரிஷ நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி ஆக உள்ளார். இந்த நட்சத்திர மாற்றமானது அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப் போகிறது. அவை எந்தெந்த ராசிகளுக்கு எந்த மாதிரியான அதிஷ்டத்தை கொடுக்கப்போகிறது என்பதை பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி ஒரு புதிய விடியலைத் தரும். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த காரியங்கள் அனைத்தும் இனி சுலபமாக முடியும். தன்னம்பிக்கை அதிகரிப்பதோடு, குடும்பத்தில் நிலவிய கசப்புகள் நீங்கி, பிரிந்திருந்த உறவுகள் மீண்டும் இணைவார்கள். புதிய வீடு, நிலம் வாங்குவதற்கு இதுவே பொற்காலம். திருமணமாகாத இளைஞர்களுக்குத் தகுந்த வாழ்க்கைத் துணை அமையும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு இது 'பதவி உயர்வு' காலம். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கும். தொழிலதிபர்கள் தங்கள் வியாபாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வார்கள். உங்களின் முடிவெடுக்கும் திறன் மற்றும் படைப்பாற்றல் அதிகரிக்கும். கடினமான சவால்களைக் கூட மிக எளிதாகக் கையாண்டு வெற்றி பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். வீட்டில் மங்கலச் செய்திகள் தட்டும், மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;துலாம் ராசியினருக்கு இந்தப் பெயர்ச்சி நிதி நிலையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். பல வழிகளில் இருந்து பணப்புழக்கம் அதிகரிக்கும். வங்கியில் சேமிப்பு உயரும். சமூகத்தில் உங்களின் அந்தஸ்து உயரும். உங்கள் பேச்சாற்றல் மற்றவர்களைக் கவரும் வகையில் அமைவதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் லாபத்தில் முடியும். மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்வுக்குத் தயாராகுபவர்களுக்கு இது மிகவும் சாதகமான காலம். உங்களின் கடின உழைப்பிற்கு ஏற்ற முழுப் பலனும் கிடைக்கும் என்பது மகிழ்ச்சியான விஷயமாகும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[astrology]]></category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/venus-transit-2026-may-8-three-zodiac-signs-kubera-yoga-jackpot-luck-mvr1vso"/>
        </item>
        <item>
            <title><![CDATA[தீராத கடனும் தீரும் பிரதோஷ வழிபாடு..! இன்று இந்த ஒரு வழிபாடு உங்கள் மொத்த கஷ்டத்தையும் போக்கும்..]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/spiritual/financial-freedom-and-mental-peace-unlock-blessings-this-pradosham-evening-wo7giwu</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/spiritual/financial-freedom-and-mental-peace-unlock-blessings-this-pradosham-evening-wo7giwu</guid>
            <pubDate>Wed, 29 Apr 2026 07:31:19 +0530</pubDate>
            <description><![CDATA[வாழ்க்கையின் கடன் சுமைகளையும் மன அழுத்தங்களையும் நீக்கி, நிம்மதி பெற வைக்கும் சக்திவாய்ந்த பிரதோஷ வழிபாடு இன்று நடைபெறுகிறது; நந்தியம்பெருமானின் அருளோடு சிவபெருமானைத் தரிசித்து இழந்த வளங்களை மீட்கும் வழிகளை இங்கே காண்போம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kqbexa29wf5ckh681naethxv,imgname-gemini-generated-image-qx2uliqx2uliqx2u-1777427458121.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;வாழ்க்கையின் கடன் சுமைகளையும் மன அழுத்தங்களையும் நீக்கி, நிம்மதி பெற வைக்கும் சக்திவாய்ந்த பிரதோஷ வழிபாடு இன்று நடைபெறுகிறது; நந்தியம்பெருமானின் அருளோடு சிவபெருமானைத் தரிசித்து இழந்த வளங்களை மீட்கும் வழிகளை இங்கே காண்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிரதோஷ காலம் என்பது சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நேரமாகும். &quot;பிரதோஷம்&quot; என்றால் &quot;தோஷங்களை நீக்குவது&quot; என்று பொருள். குறிப்பாக கடன் தொல்லைகள், மனக்கவலைகள் மற்றும் தீராத நோய்களால் அவதிப்படுபவர்களுக்குப் பிரதோஷ வழிபாடு ஒரு மிகச்சிறந்த மருந்தாக அமைகிறது.&lt;/p&gt;&lt;p&gt;இன்று பிரதோஷ தினத்தை முன்னிட்டு, மாலை வேளையில் நந்தியம் பெருமானையும் சிவனையும் எப்படி வழிபட வேண்டும் மற்றும் அதன் பலன்கள் என்ன என்பதை விரிவாகக் காண்போம்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;பிரதோஷ காலத்தின் மகிமை&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;நித்ய பிரதோஷம், பட்சப் பிரதோஷம், மாதப் பிரதோஷம் எனப் பல வகைகள் இருந்தாலும், மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான நேரமே பிரதோஷ காலம் என்று அழைக்கப்படுகிறது. பாற்கடலைக் கடைந்தபோது வெளிவந்த ஆலகால விஷத்தை உண்டு, உலகைக் காத்த சிவபெருமான், நந்தியின் கொம்புகளுக்கு இடையே நடனமாடிய நேரமே இதுவாகும். எனவே, இந்த நேரத்தில் இறைவனை வழிபடுவது கோடி புண்ணியங்களைத் தரும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிவபெருமானின் வாகனமாகவும், அவருடைய முதன்மைப் பக்தராகவும் விளங்குபவர் நந்தியம் பெருமான். பிரதோஷ வேளையில் நந்திக்குச் செய்யப்படும் அபிஷேகங்களும் வழிபாடுகளும் மிக முக்கியமானவை.&lt;/p&gt;&lt;p&gt;அபிஷேகம்: நந்திக்கு அரிசி மாவு, திருமஞ்சனம், பால், தயிர், இளநீர் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்வது விசேஷம்.&lt;/p&gt;&lt;p&gt;அருகம்புல் மாலை: நந்திக்கு அருகம்புல் மாலை அணிவிப்பதன் மூலம் நம்முடைய கர்ம வினைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.&lt;/p&gt;&lt;p&gt;செவிகளில் வேண்டுதல்: நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையில் சிவபெருமானைத் தரிசனம் செய்துவிட்டு, நமது கோரிக்கைகளை நந்தியின் செவிகளில் மெதுவாகக் கூறினால், அவர் அதை நேரடியாக ஈசனிடம் கொண்டு சேர்ப்பார் என்பது ஐதீகம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பொருளாதார ரீதியாகப் பின் தங்கியிருப்பவர்கள் மற்றும் கடன் சுமையால் தூக்கம் இழந்தவர்கள் பிரதோஷத்தன்று பின்வரும் முறையைப் பின்பற்றலாம்:&lt;/p&gt;&lt;p&gt;பஞ்சாமிர்தம் வழங்குதல்: அபிஷேகத்திற்குத் தேவையான பொருட்களைக் கோயிலுக்குத் தானமாக வழங்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;தீப வழிபாடு: மாலையில் சிவ சன்னதியில் நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;ருண விமோசன லிங்க வழிபாடு: முடிந்தால் &quot;ருண விமோசன&quot; மந்திரங்களை உச்சரிப்பது கடன் தொல்லைகளை விரைவாகக் குறைக்கும்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;மனக்கவலைகள் மறைய...&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;இன்றைய வேகமான உலகில் மன அழுத்தம் மற்றும் கவலைகள் அனைவருக்கும் பொதுவானதாகிவிட்டது. பிரதோஷ வழிபாடு மனதிற்கு அமைதியைத் தரும் ஒரு அற்புதமான தியானமாகும்.&lt;/p&gt;&lt;p&gt;சிவன் கோவில் உலா: பிரதோஷத்தன்று கோயிலைச் சுற்றி வரும்போது &quot;சோமசூக்தப் பிரதட்சணம்&quot; செய்வது வழக்கம். இது மனக்குழப்பங்களைத் தீர்த்து, தெளிவான சிந்தனையை வழங்கும்.&lt;/p&gt;&lt;p&gt;ஓம் நமசிவாய: இந்த மூல மந்திரத்தை 108 முறை உச்சரிப்பது மனதை ஒருநிலைப்படுத்தும்.&lt;/p&gt;&lt;p&gt;வில்வ அர்ச்சனை: சிவபெருமானுக்குப் பிரியமான வில்வ இலைகளால் அர்ச்சனை செய்வதன் மூலம் மன பாரம் குறைந்து, வாழ்வில் மகிழ்ச்சி பெருகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&quot;பிரதோஷ காலத்தில் செய்யப்படும் வழிபாடு, ஒரு வருடம் முழுவதும் சிவனை வழிபட்டதற்கு இணையான பலனைத் தரும்.&quot;&lt;/p&gt;&lt;p&gt;உணவு: பிரதோஷத்தன்று மதியம் உணவைத் தவிர்த்து, மாலை வழிபாடு முடிந்த பின் பிரசாதம் உட்கொள்வது சிறந்தது.&lt;/p&gt;&lt;p&gt;தானம்: வசதி உள்ளவர்கள் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் அல்லது வஸ்திர தானம் செய்வது வழிபாட்டின் பலனை இரட்டிப்பாக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;பிரதோஷ வேளையில் சிவாலயம் சென்று, நந்தியின் கொம்புகளுக்கு இடையில் ஈசனைக் காண்பது நம் வாழ்வின் இருளை நீக்கி ஒளியேற்றும். நம்பிக்கையுடனும் பக்தியுடனும் இன்று மாலை நந்தியையும் சிவனையும் வணங்குவோம். கடன் தொல்லைகள் நீங்கி, மன நிம்மதியுடன் கூடிய வளமான வாழ்வைப் பெறுவோம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[spiritual]]></category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/spiritual/financial-freedom-and-mental-peace-unlock-blessings-this-pradosham-evening-wo7giwu"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ரிஷப ராசி மே மாத பலன்கள் 2026: ரிஷபத்திற்கு லாபமா? நஷ்டமா? - கிரக நிலைகள் சொல்லும் திடுக்கிடும் ரகசியங்கள்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/taurus-rishaba-rasi-monthly-horoscope-may-2026-detailed-predictions-palan-and-pariharam-wv5159x</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/taurus-rishaba-rasi-monthly-horoscope-may-2026-detailed-predictions-palan-and-pariharam-wv5159x</guid>
            <pubDate>Wed, 29 Apr 2026 07:00:50 +0530</pubDate>
            <description><![CDATA[Rishaba Rasi Monthly Horoscope May 2026 Predictions : 2026 மே மாதத்தில் ரிஷப ராசியினரின் ஜாதகக் கட்டத்தில் நிகழும் மாற்றங்கள் லாபத்தைத் தருமா அல்லது எச்சரிக்கையாக இருக்க வேண்டுமா? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k096xa598yanx79ztdqyyvcz,imgname-budh-vakri-2025-18-july-impact-on-zodiac-signs-1752655898793.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;Rishaba Rasi Monthly Horoscope May 2026 Predictions : &lt;/strong&gt;2026 மே மாதத்தில் ரிஷப ராசியினரின் ஜாதகக் கட்டத்தில் நிகழும் மாற்றங்கள் லாபத்தைத் தருமா அல்லது எச்சரிக்கையாக இருக்க வேண்டுமா? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;2026-ஆம் ஆண்டு மே மாதம் ரிஷப ராசி நேயர்களுக்கு ஒரு சவாலான அதேசமயம் சாதகமான திருப்பங்கள் நிறைந்த மாதமாக அமையப்போகிறது. உங்கள் ராசிநாதன் சுக்கிரன் மற்றும் அறிவுக்கு அதிபதியான புதன் ஆகியோரின் சஞ்சாரம், உங்கள் பொருளாதார நிலையில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது. கிரகங்களின் இந்த ஆட்டம் உங்கள் வாழ்வில் என்னென்ன ரகசியங்களை ஒளித்து வைத்துள்ளது என்பதை விரிவாகப் பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மே மாதத் தொடக்கத்தில், புதன் மேஷ ராசியில் சஞ்சரிப்பது உங்கள் ராசிக்கு 12-ம் இடமான விரய ஸ்தானத்தைப் பாதிக்கிறது. இதனால் தேவையற்ற மருத்துவச் செலவுகள் அல்லது எதிர்பாராத பயணச் செலவுகள் ஏற்படலாம். வேலையில் இருப்பவர்களுக்குப் பணிச்சுமை அதிகரிக்கக்கூடும். எனினும், மாதத்தின் இரண்டாம் பாதியில் சூரியன் மற்றும் புதனின் நகர்வுகள் தொழிலில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். கூட்டு வியாபாரம் செய்பவர்கள் ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மே மாதத்தில் செவ்வாயின் பார்வை உங்கள் குடும்ப ஸ்தானத்தில் விழுவதால், சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக வாழ்க்கைத் துணையுடன் பேசும்போது நிதானம் தேவை. பேச்சில் கனிவைக் கடைப்பிடிப்பது உறவுகளில் விரிசல் ஏற்படாமல் தடுக்கும். சுப காரியங்களுக்கான பேச்சுவார்த்தைகள் மாத இறுதியில் சாதகமாக முடியும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;புதன் பெயர்ச்சியின் தாக்கத்தால் நரம்பு சம்பந்தமான உபாதைகள் அல்லது தூக்கமின்மைப் பிரச்னைகள் ஏற்படலாம். பழைய நோய்கள் மீண்டும் தலைதூக்க வாய்ப்புள்ளதால், உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். தியானம் மற்றும் யோகா செய்வது மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இந்த வார ராசி பலன் (ஏப்ரல் 26 - மே 2): மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள் மற்றும் எளிய பரிகாரங்கள்!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த புதன் பெயர்ச்சியின் தாக்கத்தால் ரிஷப ராசியினருக்கு ஆரோக்கியத்தில் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. நரம்பு மண்டலம் தொடர்பான சிறு உபாதைகள் அல்லது நள்ளிரவில் சரியாகத் தூக்கம் வராமல் தவிக்கும் தூக்கமின்மை பிரச்சினைகள் எட்டிப்பார்க்கலாம். ஏற்கனவே குணமானதாக நினைத்த பழைய நோய்கள் மீண்டும் தலைதூக்கி ஒரு வழி செய்யக்கூடும். எனவே, நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தகுந்த மருத்துவ ஆலோசனையைப் பெறுவது நல்லது. செரிமான மண்டலம் பலவீனமடைய வாய்ப்புள்ளதால், எண்ணெய் பலகாரங்களைத் தவிர்த்து எளிதில் செரிமானமாகும் உணவுகளை உட்கொள்வது அவசியம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தேவையற்ற சிந்தனைகளால் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்க தினமும் குறைந்தபட்சம் 15 நிமிடம் தியானம் அல்லது எளிய யோகாசனங்கள் செய்வது உங்களை உற்சாகமாக வைத்திருக்க உதவும். மாதத்தின் முற்பகுதியில் மனக்குழப்பம் அல்லது கவனச்சிதறல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் படித்த விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்வதில் சிறு சிரமங்கள் வரலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Guru Peyarchi 2026: ரிஷப ராசிக்கு ஜாக்பாட்! 3-ல் அமரும் உச்ச குருவால் குவியப்போகும் செல்வம்.. அதிர்ஷ்ட பலன்கள் இதோ!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்று எதை படிக்க வேண்டும்?&quot; என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு ஒரு அட்டவணையைப் பின்பற்றுவது உங்கள் சுமையை பாதியாகக் குறைக்கும். மே 15-ஆம் தேதிக்குப் பிறகு வித்யாகாரகன் புதனின் நிலையில் நல்ல மாற்றம் உண்டாவதால், அதுவரை இருந்த மந்தநிலை மாறும். தடைபட்டுக் கொண்டிருந்த கல்வி தொடர்பான விஷயங்கள் வேகம் எடுக்கும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு மாதத்தின் இரண்டாம் பாதியில் நல்ல செய்திகள் தேடி வரும். குறிப்பாகத் தொழில்நுட்பம் மற்றும் கணிதத் துறையில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;புதன்கிழமைகளில் வித்யாகாரகனான ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை சாற்றி வழிபடவும். ஏழை மாணவர்களுக்குப் பேனா, பென்சில் அல்லது புத்தகங்களை வாங்கித் தருவது புதனின் தோஷத்தைப் போக்கும். தினமும் காலையில் விஷ்ணு சகஸ்ரநாமம் கேட்பது நரம்புத் தளர்ச்சி மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கும். புதன்கிழமை அன்று ஊறவைத்த பச்சைப்பயறை பசுவிற்கு வழங்குவது ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றத்தைத் தரும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் 7 மணி வரை மகாலட்சுமிக்கு நெய் தீபம் ஏற்றி 'கனகதாரா ஸ்தோத்திரம்' வாசிக்கவும். மொச்சைப்பயறை வேகவைத்து வெள்ளிக்கிழமைகளில் தானம் செய்வது செல்வம் சேர உதவும். மாதத்திற்கு ஒருமுறை குலதெய்வக் கோவிலுக்குச் செல்வது அல்லது வீட்டிலேயே குலதெய்வத்தை நினைத்து விளக்கேற்றுவது அனைத்துத் தடைகளையும் தகர்க்கும். கோமாதாவிற்கு அகத்திக்கீரை அல்லது வாழைப்பழம் வழங்குவது கோடி புண்ணியங்களைத் தரும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;மேஷம் முதல் மீனம் வரை; 12 ராசிகளுக்கான மே மாத ஷார்ட் அண்ட் ஸ்வீட் பலன்கள் அண்ட் பரிகாரங்கள்!&lt;/strong&gt;&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[astrology]]></category>
            <dc:creator>Rsiva kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/taurus-rishaba-rasi-monthly-horoscope-may-2026-detailed-predictions-palan-and-pariharam-wv5159x"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Today Rasi Palan : ஏப்ரல் 29 - இன்று இந்த 6 ராசிகளுக்கு பணவரவு.! சொத்துக்கள் குவியும்.! 12 ராசிகளுக்குமான துல்லியமான பலன்கள்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/april-29-2026-today-rasi-palan-mesham-to-meenam-daily-horoscope-4-yogas-influence-all-zodiac-signs-from-aries-to-pisces-g7ry6ap</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/april-29-2026-today-rasi-palan-mesham-to-meenam-daily-horoscope-4-yogas-influence-all-zodiac-signs-from-aries-to-pisces-g7ry6ap</guid>
            <pubDate>Wed, 29 Apr 2026 06:00:51 +0530</pubDate>
            <description><![CDATA[April 29 2026 Today Rasi Palan Mesham to Meenam : ஏப்ரல் 29, புதன்கிழமை அன்று வியாகாத, ஹர்ஷண, பிரஜாபதி, சௌம்ய என 4 விதமான யோகங்கள் நாள் முழுவதும் இருக்கப்போகுது. இன்றைய நாள் எந்த ராசிக்கு எப்படி இருக்கப்போகுதுன்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.!]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01knphscf5vx0ad8a6vhe73cv9,imgname-atchaya-thiruthiyai-2026-rasi-palangal--1--1775652090341.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;April 29 2026 Today Rasi Palan Mesham to Meenam : ஏப்ரல் 29, புதன்கிழமை அன்று வியாகாத, ஹர்ஷண, பிரஜாபதி, சௌம்ய என 4 விதமான யோகங்கள் நாள் முழுவதும் இருக்கப்போகுது. இன்றைய நாள் எந்த ராசிக்கு எப்படி இருக்கப்போகுதுன்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.!&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேஷ ராசிக்காரங்க இன்னைக்கு யோசிச்சு முடிவெடுக்கணும், இல்லைனா பின்னாடி கஷ்டப்பட வேண்டியிருக்கும். வயிறு சம்பந்தமான நோய் வரலாம். இன்று யாருக்கும் கடன் கொடுக்காதீங்க, கொடுத்தா பணம் திரும்ப வராது. குழந்தைங்க சம்பந்தமான கவலைகள் இன்று நீங்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரிஷப ராசிக்காரங்களுக்கு வேலையில அதிகாரிகளோட ஆதரவு கிடைக்கும். பிசினஸ்ல ஒரு பெரிய டீல் முடியலாம். மாமியார் வீட்ல இருந்து பண உதவி கிடைக்க வாய்ப்பிருக்கு. வீடு அல்லது புது வண்டி வாங்க நினைச்சா, அதுல வெற்றி கிடைக்கும். தேவையில்லாம யார்கிட்டயும் சண்டை போடாதீங்க.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வேலை செய்யுற இடத்துல உங்களுக்கு எதிரா யாராவது சதி பண்ணலாம். குடும்பத்துல இருக்குற பெரியவங்களோட உதவியால பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீங்க. புது வேலை தேடிட்டு இருந்தா, அந்த ஆசை இந்த நேரத்துல நிறைவேறலாம். முதலீடு செய்யும்போது ரொம்ப கவனமா இருங்க.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கடக ராசிக்காரங்களுக்கு இன்று மதிப்பு, மரியாதை கூடும். நின்னு போன வேலைகள் வேகமெடுக்கும். கெரியர் சம்பந்தமா ஒரு நல்ல செய்தி வரலாம். குடும்பத்துக்கு புதுசா ஒருத்தர் வர்றதால சந்தோஷமான சூழல் நிலவும். வேலைக்கு போறவங்களுக்கும் நல்ல பலன்கள் கிடைக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்க வாய்ப்பிருக்கு. வெளிநாடு போகணும்னு ஆசைப்படுறவங்களுக்கு, அந்த ஆசை நிறைவேறலாம். அரசாங்க வேலையில இருக்கிறவங்களுக்கு அதிகாரிகளோட ஆதரவு கிடைக்கும். திருமண வாழ்க்கையும் சந்தோஷமா இருக்கும். ஆரோக்கியத்துல கவனம் செலுத்துங்க.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிசினஸ்ல ஒரு பெரிய டீல் முடிய வாய்ப்பிருக்கு. குடும்பத்தோட அதிக நேரம் செலவிட முடியாது. பணக்கஷ்டம் வரலாம். கண் சம்பந்தமான நோய் தொந்தரவு செய்யலாம். உங்க பர்சனல் விஷயத்தை யார்கிட்டயும் சொல்லாதீங்க, இல்லைனா நீங்களே பிரச்சனையில மாட்டிப்பீங்க.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நிலம், சொத்து சம்பந்தமான விஷயங்கள்ல வெற்றி கிடைக்க வாய்ப்பு இருக்கு. குடும்பத்துல ஒரு நல்ல காரியம் நடக்கலாம். மாணவர்களுக்கு இது சாதகமான நேரம். போட்டித் தேர்வுகள்ல வெற்றி கிடைக்கலாம். பெண்கள் இன்னைக்கு பணத்தை பார்த்து செலவு பண்ணுங்க.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விருச்சிக ராசிக்காரங்களுக்கு காதல் விஷயங்கள்ல வெற்றி கிடைக்கலாம். இப்போ செய்யுற நல்ல காரியங்களோட பலன் சீக்கிரமே கிடைக்கும். மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கு தயாராக இது சரியான நேரம். ஆபீஸ்ல உங்க வேலையால எல்லோரும் சந்தோஷமா இருப்பாங்க.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;திருமண வாழ்க்கையில இருக்குற சண்டைகள் தீரலாம். குழந்தைங்க சம்பந்தமா ஒரு நல்ல செய்தி இந்த நேரத்துல வரலாம். இந்த ராசிக்காரங்களுக்கு புது வேலை வாய்ப்புகள் வரலாம். முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கலாம். கல்யாணப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மகர ராசிக்காரங்களுக்கு சமூகத்துல மதிப்பு, மரியாதை கிடைக்கும். உடல்நலத்துல கவனமா இருங்க, சாப்பாட்டு விஷயத்துல கவனம் தேவை. அசையா சொத்து அல்லது வாகனம் வாங்க நினைச்சா, நேரம் சாதகமா இருக்கு. காதல் உறவுகள்ல வெற்றி கிடைக்கலாம். குடும்பத்துல ஒரு நல்ல நிகழ்ச்சி நடக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எதிரிகளால நினைச்சாலும் உங்களுக்கு ஒன்னும் பண்ண முடியாது. கோர்ட், கேஸ் விஷயங்கள்ல தீர்ப்பு உங்களுக்கு சாதகமா வர அறிகுறி இருக்கு. பிள்ளைகள் கிட்ட இருந்து ஒரு நல்ல செய்தி வரலாம். மத்தவங்க பேச்சைக் கேட்டு எந்த முடிவும் எடுக்காதீங்க, இல்லைனா வருத்தப்பட வேண்டியிருக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மீன ராசிக்காரங்க புதுசா ஒரு வேலையை ஆரம்பிக்கலாம். இவங்களோட வாழ்க்கையில சந்தோஷம் நிலைத்திருக்கும். தேவையில்லாத சண்டைகள்ல இருந்து தள்ளி இருக்கிறதுதான் நல்லது. வேலை, பிசினஸ் நிலைமை முன்னவிட ரொம்ப நல்லா இருக்கும். பிள்ளைகளால சந்தோஷம் கிடைக்கும். அப்பா-அம்மா உதவியோட நின்னு போன வேலைகள் முடியும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[astrology]]></category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/april-29-2026-today-rasi-palan-mesham-to-meenam-daily-horoscope-4-yogas-influence-all-zodiac-signs-from-aries-to-pisces-g7ry6ap"/>
        </item>
        <item>
            <title><![CDATA[மேஷ ராசி மே மாத பலன்கள் 2026: 100% திருப்புமுனையைத் தரும் அதிர்ஷ்ட மாதம்! இனி ஏறுமுகம்தான்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/aries-monthly-horoscope-may-2026-predictions-palan-pariharam-tamil-success-luck-u9x2nxm</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/aries-monthly-horoscope-may-2026-predictions-palan-pariharam-tamil-success-luck-u9x2nxm</guid>
            <pubDate>Wed, 29 Apr 2026 05:42:17 +0530</pubDate>
            <description><![CDATA[Aries May 2026 Horoscope Tamil: 2026 மே மாதத்தில் மேஷ ராசியினருக்கு 100% வெற்றி நிச்சயம்! ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரமும், குருவின் அருளும் உங்களுக்கு எப்படிப்பட்ட திருப்புமுனைகளைத் தரப்போகிறது? தொழில் மற்றும் நிதி ரீதியான முழுமையான ராசிபலன்கள் இதோ..]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kneq4xca6nhhryyt2pna0faj,imgname-mesha-rasi--7--1775389275530.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;Aries May 2026 Horoscope Tamil: &lt;/strong&gt;2026 மே மாதத்தில் மேஷ ராசியினருக்கு 100% வெற்றி நிச்சயம்! ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரமும், குருவின் அருளும் உங்களுக்கு எப்படிப்பட்ட திருப்புமுனைகளைத் தரப்போகிறது? தொழில் மற்றும் நிதி ரீதியான முழுமையான ராசிபலன்கள் இதோ..&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&quot;2026 மே மாதத்தில் மேஷ ராசியினருக்கு 100% வெற்றி நிச்சயம்! ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரமும், குருவின் அருளும் உங்களுக்கு எப்படிப்பட்ட திருப்புமுனைகளைத் தரப்போகிறது? தொழில் மற்றும் நிதி ரீதியான முழுமையான ராசிபலன்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;உச்ச குரு தரும் அதிர்ஷ்டம்; பண மழையில் நனையப்போகும் மேஷ ராசி! 2026 குரு பெயர்ச்சியால் காத்திருக்கும் ராஜயோகம்!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த மாதம் மேஷ ராசியினருக்குப் பல முக்கியமான மாற்றங்களையும், நீண்ட நாள் பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் தரும் மாதமாக அமையும். குறிப்பாக மே 1-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரையிலான காலகட்டம் மண், மனை மற்றும் சொத்து சார்ந்த சிக்கல்களைத் தீர்ப்பதற்கு மிகவும் சாதகமானது. பாதியில் நின்ற வீடு கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்கும், பாகப்பிரிவினை மற்றும் நிலம் தொடர்பான சட்டப் போராட்டங்களில் வெற்றி பெறுவதற்கும் இதுவே மிகச்சிறந்த நேரமாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பொருளாதார ரீதியாக, இந்த மாதம் மேஷ ராசியினருக்குப் பெரும் நிம்மதியைத் தரப்போகிறது. மே 17-ஆம் தேதிக்குள் பண நெருக்கடியால் ஏற்பட்ட மன அழுத்தம் குறையத் தொடங்கும். கடன்களை அடைப்பதற்கான வழிகள் பிறக்கும்; இருப்பினும், கிரகங்கள் வழிகாட்டினாலும் தனிப்பட்ட முயற்சியே வெற்றியைக் கொடுக்கும் என அறிவுறுத்தப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;மேஷம் முதல் மீனம் வரை; 12 ராசிகளுக்கான மே மாத ஷார்ட் அண்ட் ஸ்வீட் பலன்கள் அண்ட் பரிகாரங்கள்!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை, மே 12 முதல் 16 வரையிலான நான்கு நாட்கள் மிகவும் வலிமையானவை. இந்த நேரத்தில் 'சூரிய மங்கள யோகம்' மற்றும் 'புத ஆதித்ய யோகம்' ஏற்படுவதால், வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கும், புதிய வேலை தேடுபவர்களுக்கும் நல்ல செய்திகள் கிடைக்கும். திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கையைப் பொறுத்தவரை, இந்த மாதம் ஒரு திருப்புமுனையாக இருக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குரு பகவான் ஜூன் மாதம் பெயர்ச்சியாவதற்கு முன்பு, மே மாதத்தில் திருமணத் தடைகளை நீக்க முழுமையாக அருள் புரிவார். நீண்ட நாட்களாகத் தடைப்பட்டு வந்த திருமண முயற்சிகள் இந்த மாதம் கைகூடும். மேலும், மே 16-ஆம் தேதிக்குப் பிறகு குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு அதற்கான நல்வாய்ப்புகள் அமையும். ஒட்டுமொத்தமாக, மே மாதம் மேஷ ராசியினருக்கு 100% சாதகமான மாற்றங்களை உருவாக்கித் தரும் ஒரு மாதமாகத் திகழும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[astrology]]></category>
            <dc:creator>Rsiva kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/aries-monthly-horoscope-may-2026-predictions-palan-pariharam-tamil-success-luck-u9x2nxm"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Astrology: இந்த 3 ராசிகாரர்கள் எந்த பிஸ்னஸ் செய்தாலும் சக்சஸ்தான்! யோசிச்சு கிட்டே இருக்காம களத்துல குதிங்க பாஸ்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/these-3-zodiac-signs-succeed-in-any-business-jump-in-without-overthinking-boss-ztqolua</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/these-3-zodiac-signs-succeed-in-any-business-jump-in-without-overthinking-boss-ztqolua</guid>
            <pubDate>Wed, 29 Apr 2026 01:37:02 +0530</pubDate>
            <description><![CDATA[ஜோதிடத்தின்படி, மேஷம், சிம்மம், மற்றும் தனுசு ராசிக்காரர்கள் பிறவியிலேயே தொழில்முனைவோர் திறன்களைக் கொண்டுள்ளனர். தைரியம், தலைமைத்துவம், மற்றும் அதிர்ஷ்டம் போன்ற குணங்களால், இவர்கள் எந்தத் தொழிலைத் தொடங்கினாலும் அதில் எளிதில் வெற்றி காண்கிறார்கள்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kqata942q9mec1vb9dvxx2tx,imgname-gemini-generated-image-cym1efcym1efcym1--1--1777405863042.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஜோதிடத்தின்படி, மேஷம், சிம்மம், மற்றும் தனுசு ராசிக்காரர்கள் பிறவியிலேயே தொழில்முனைவோர் திறன்களைக் கொண்டுள்ளனர். தைரியம், தலைமைத்துவம், மற்றும் அதிர்ஷ்டம் போன்ற குணங்களால், இவர்கள் எந்தத் தொழிலைத் தொடங்கினாலும் அதில் எளிதில் வெற்றி காண்கிறார்கள்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜோதிடத்தில் சில ராசிகள் பிறவியிலேயே வெற்றியின் ரகசியத்தைத் தாங்கியிருக்கிறார்கள். அவர்கள் எந்தத் தொழிலைத் தொடங்கினாலும், அதில் வெற்றி பெறுவது இயல்புதான். ஏனென்றால், அவர்களின் ராசி சிற்றலட்சியம், கிரகங்களின் அருள் மற்றும் உள்ளார்ந்த திறன்கள் அவர்களை முன்னேற்றுகின்றன. இன்று நாம் பேசப்போவது மேஷம், சிம்மம் மற்றும் தனுசு ராசிகளைப் பற்றி. இந்த மூன்று ராசிகாரர்களும் பிஸ்னஸ் உலகில் 'நான் செய்வேன், சாதிப்பேன்' என்ற உணர்வுடன் இருப்பவர்கள். யோசனை வந்தவுடன் களத்தில் குதித்து, வெற்றியைத் பிடிப்பார்கள். விரிவாகப் பார்ப்போம்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேஷ ராசிக்காரர்கள் சூரியனின் ஆதிக்கத்தில் இருப்பவர்கள். அவர்களுக்கு தைரியம், வேகம், தலைமைத்துவம் ஆகியவை இயல்பானவை. எந்தப் பிஸ்னஸையும் தொடங்கினால், முதல் நாளிலிருந்தே லாபம் தொடங்கும். உதாரணமாக, ரியல் எஸ்டேட், ஆட்டோமொபைல் அல்லது ஃபாஸ்ட் ஃபுட் பிஸ்னஸ் அவர்களுக்கு ஏற்றது. ஏனென்றால், அவர்கள் ரிஸ்க் எடுக்கத் தயாராக இருப்பார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;ஒரு மேஷ ராசிகாரர் பிஸ்னஸ்மேன், சிறிய கடையிலிருந்து சர்வதேச கம்பெனியாக &amp;nbsp;உடனே உயரும் சூழல் உருவாகும். ஏனென்றால், மேஷராசிகாரர்களுக்கு யோசிக்காமல், வாய்ப்புகளைப் பிடிக்கும் அதிர்ஷ்டம் கிடைக்கும் . கிரக ரீதியாக, செவ்வாய் கிரகம் அவர்களுக்கு ஆற்றல் அளிக்கிறது. 2026ல் குரு பெயர்ச்சி அவர்களின் பிஸ்னஸை மேலும் உயர்த்தும். யோசிச்சு கிட்டே இல்லாம, களத்துல குதிங்க பாஸ்! இவர்கள் தோல்விக்கு அஞ்சாதவர்கள். எந்த சவாலும் வந்தால், அதை வாய்ப்பாக மாற்றுவார்கள். இதனால், அவர்களின் பிஸ்னஸ் எப்போதும் லாபகரமாக இருக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிம்ம ராசி சூரியனின் சொந்த இல்லம். இவர்கள் பிறந்தவுடன் தலைவர்கள். பிஸ்னஸில் எந்தத் துறையைப் பிடித்தாலும், ஊழியர்களை ஈர்த்து, வாடிக்கையாளர்களை கவர்ந்து வெற்றி பெறுவார்கள். ஜுவெலரி, சினிமா, ஹோட்டல் அல்லது ஃபேஷன் பிஸ்னஸ் இவர்களுக்கு சூப்பர் ஹிட்.&lt;/p&gt;&lt;p&gt;ஒரு சிம்ம ராசி தொழிலதிபர், சிறிய ஷாப்பிங் மால் தொடங்கினாலே அது பல பிரஞ்சுகளை ஏற்படுத்தும். ரகசியம்? அவர்களின் கரிஷ்மா! கிரகங்கள் சாதகமாக இருக்கும் போது, சனி மற்றும் குருவின் சேர்க்கை அவர்களுக்கு பெரிய லாபம் தரும். 2026ல் ராகு காலம் இவர்களைத் தடுக்காது, ஏனென்றால் அவர்கள் தைரியத்துடன் முன்னேறுவார்கள். யோசனை வந்தால், உடனே செயல்படுவாரகள்! இவர்கள் பணத்தை ஈர்க்கும் காந்தங்கள். அவர்களின் பிஸ்னஸ் எப்போதும் வளமானது, ஏனென்றால் அவர்கள் ராஜாக்கள் போல ஆட்சி செய்வார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தனுசு ராசிக்காரர்கள் குரு கிரகத்தால் ஆளப்படுபவர்கள். அவர்களுக்கு அதிர்ஷ்டம், ஞானம், விரிவாக்கம் ஆகியவை இயல்பு. ஏற்றுமதி, டூரிசம், கல்வி அல்லது ஸ்டாக் மார்க்கெட் பிஸ்னஸ் இவர்களுக்கு ஏற்றவை. எந்த ரிஸ்கும் இவர்களைத் தொடாது.&lt;/p&gt;&lt;p&gt;ஒரு தனுசு ராசி வியாபாரி, சிறிய டிராவல் ஏஜென்சியை உலகளாவிய நிறுவனமாக மாற்றும் வல்லமை கொண்டவர். ஏனென்றால், குருவின் அருளால் வாய்ப்புகள் தானாக வரும். 2026ல் சுக்கிரன் பெயர்ச்சி அவர்களின் லாபத்தை இரட்டிப்பாக்கும். இவர்கள் யோசித்து முடிக்கும் முன், பிஸ்னஸ் ஓடத் தொடங்கிவிடும். களத்துல குதிந்தால், வெற்றி உறுதி!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த ராசிகளுக்கு பொதுவானது தைரியம், அதிர்ஷ்டம் மற்றும் செயல்பாட்டுத்தன்மை. அவர்கள் யோசனைகளை செயலாக்குவதில் சாமர்த்தியம். 2026ல் கிரகங்கள் அனுகூலமாக இருப்பதால், புதிய பிஸ்னஸ் தொடங்க ஏற்ற காலம் இது. ஆனால், சிறு சிறு உபாயங்கள்: தினசரி கோவில் செல்லுங்கள், குரு மந்திரம் ஜபம் செய்யுங்கள். ரிஸ்க் எடுக்கும் போது, குடும்ப ஆலோசனை கேளுங்கள்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[astrology]]></category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/these-3-zodiac-signs-succeed-in-any-business-jump-in-without-overthinking-boss-ztqolua"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஆபிஸில் ஸ்டைலா லுக்கா இருக்கணுமா? இந்த 6 ஸ்லீவ்லெஸ் ஷர்ட்ஸ் ட்ரை பண்ணுங்க]]></title>
            <link>https://tamil.asianetnews.com/webstories/life-style-fashion/stylish-sleeveless-shirts-for-office-wear-fw1hhxg</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/webstories/life-style-fashion/stylish-sleeveless-shirts-for-office-wear-fw1hhxg</guid>
            <pubDate>Tue, 28 Apr 2026 23:07:45 +0530</pubDate>
            <description><![CDATA[வெயில் காலத்தில் ஆபிஸுக்கு கூலாகவும், ஸ்டைலாகவும் ஒரு லுக் வேண்டுமா? அப்படியானால், உங்கள் வார்ட்ரோபில் ஒயிட் காலர், ப்ளூ ஸ்லீவ்லெஸ், பிரிண்டட் மற்றும் பட்டன்-அப் ஷர்ட்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kpmmtz29tn904mktxnb3x1vx,imgname-women-sleevless-shirt-1776661920841.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <category><![CDATA[life-style-fashion]]></category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/webstories/life-style-fashion/stylish-sleeveless-shirts-for-office-wear-fw1hhxg"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Pressure Cooker: தப்பி தவறி கூட இந்த 5 தப்பை பண்ணிடாதீங்க! குக்கர் வெடிக்க இதுதான் காரணம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/these-5-mistakes-cause-the-cooker-to-explode-kspesi4</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/these-5-mistakes-cause-the-cooker-to-explode-kspesi4</guid>
            <pubDate>Tue, 28 Apr 2026 22:05:44 +0530</pubDate>
            <description><![CDATA[சமையலறையின் சூப்பர் ஹீரோவாக இருப்பது குக்கர். இன்றைய வேகமான வாழ்க்கையில், குக்கர் ஒரு அத்தியாவசிய சமையலறை பொருள். இது நேரத்தையும் எரிபொருளையும் மிச்சப்படுத்தினாலும், சின்ன சின்ன தவறு செய்யும் உயிர் பறிபோகும்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kjp8289qr85797dw2nq0qn1d,imgname-new-project---2026-03-02t083107.401-1772420669751.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சமையலறையின் சூப்பர் ஹீரோவாக இருப்பது குக்கர். இன்றைய வேகமான வாழ்க்கையில், குக்கர் ஒரு அத்தியாவசிய சமையலறை பொருள். இது நேரத்தையும் எரிபொருளையும் மிச்சப்படுத்தினாலும், சின்ன சின்ன தவறு செய்யும் உயிர் பறிபோகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்றைய பிஸியான லைஃப்ஸ்டைலில், பிரஷர் குக்கர் இல்லாத கிச்சனே இருக்க முடியாது. சமையல் நேரத்தைக் குறைத்தாலும், சின்ன கவனக்குறைவு பெரிய விபத்துக்கு வழிவகுக்கும். குக்கர் வெடிப்பதற்கான காரணங்களை ஆராய்ந்தால், நாம் செய்யும் சில பொதுவான தவறுகளே காரணம் என்பது புரியும். அந்த ஆபத்துகளிலிருந்து தப்பிக்க, நீங்கள் பின்பற்ற வேண்டிய 5 முக்கிய விஷயங்கள் என்ன என்பதை பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;நிறைய பேர் சாப்பாடு சீக்கிரம் வேக வேண்டும் என்பதற்காக, குக்கர் முழுவதும் உணவுப் பொருட்களை நிரப்பிவிடுவார்கள். ஆனால், குக்கரின் கொள்ளளவில் மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் ஒருபோதும் நிரப்பக் கூடாது. குறிப்பாக, பருப்பு மற்றும் அரிசி வேகும்போது பொங்கி வரும். எனவே, அவற்றை பாதி அளவு மட்டுமே நிரப்புவது பாதுகாப்பானது.&lt;img&gt;குக்கரில் தேவையான அளவு தண்ணீர் இல்லாமல் சமைப்பது மிகவும் ஆபத்தானது. தண்ணீர் இல்லை என்றால், குக்கரின் அடிப்பகுதி அதிக சூடாகி, 'சேஃப்டி வால்வ்' வெடிக்கக் காரணமாகிவிடும். எனவே, நீங்கள் சமைக்கும் பொருளுக்கு ஏற்ப சரியான அளவில் தண்ணீர் ஊற்ற வேண்டும்.&lt;img&gt;குக்கர் மூடியில் உள்ள ரப்பர் கேஸ்கட் தளர்வாகவோ அல்லது விரிசல் விட்டிருந்தாலோ, உடனடியாக அதை மாற்றிவிட வேண்டும். சரியில்லாத கேஸ்கட் பயன்படுத்தினால், நீராவி பக்கவாட்டில் கசிந்து, உள்ளே சரியான அழுத்தம் உருவாகாது. இது பெரிய ஆபத்தில் முடியலாம்.&lt;img&gt;&lt;p&gt;குக்கரில் உள்ள பிரஷர் முழுவதுமாக குறையும் முன், மூடியை அவசரமாக திறக்க முயற்சிக்காதீர்கள். சமையல் முடிந்த பிறகு மூடியைத் திறக்க வேண்டாம். விசில் எடுத்த பிறகும், உள்ளே சிறிதளவு நீராவி இருக்கலாம். அழுத்தம் முழுமையாகக் குறைந்ததை உறுதி செய்த பிறகே மூடியைத் திறக்க வேண்டும். இந்த ஐந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி, உங்கள் சமையலறையைப் பாதுகாப்பாக வைத்திருங்கள்.&lt;/p&gt;&lt;img&gt;குக்கர் மூடியின் மேல் இருக்கும் வென்ட் பைப்பை (விசிலுக்கு அடியில் உள்ள துவாரம்) எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதில் உணவுத் துகள்கள் சிக்கிக்கொண்டால், உள்ளே உருவாகும் நீராவி வெளியேற முடியாது. இதனால், உள்ளே அதிக அழுத்தம் ஏற்பட்டு குக்கர் வெடிக்கும் அபாயம் உள்ளது.]]></content:encoded>
            <category><![CDATA[life-style]]></category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/these-5-mistakes-cause-the-cooker-to-explode-kspesi4"/>
        </item>
        <item>
            <title><![CDATA[சித்ரா பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என்ன? பக்தர்களுக்கு சூப்பர் அறிவிப்பு வெளியானது!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-thiruvannamalai/chitra-pournami-girivalam-super-announcement-issued-by-the-transport-department-for-the-devotees-82b973x</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-thiruvannamalai/chitra-pournami-girivalam-super-announcement-issued-by-the-transport-department-for-the-devotees-82b973x</guid>
            <pubDate>Tue, 28 Apr 2026 20:50:02 +0530</pubDate>
            <description><![CDATA[திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமி கிரிவலத்திற்கான உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகம் சென்னை மற்றும் பிற முக்கிய நகரங்களிலிருந்து ஆயிரக்கணக்கான சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kb3yjww59yavktt4kzyc1eh4,imgname-tv-imresizer-1764290556805.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமி கிரிவலத்திற்கான உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகம் சென்னை மற்றும் பிற முக்கிய நகரங்களிலிருந்து ஆயிரக்கணக்கான சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;புகழ்பெற்ற கோவில்களில் ஒன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். இக்கோவில் நினைத்தாலே முக்தி தரக்கூடிய புண்ணிய தலமாக விளங்கக்கூடியது. அது மட்டுமல்லாமல் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும் விளங்குகிறது. இங்குள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பல்வேறு மாவட்டம், மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து செல்வது வழக்கம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும் நாளிலும், சித்ரா பௌர்ணமி அன்றும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையாரின் அருளை பெறுவார்கள். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான சித்ரா பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சித்ரா பௌர்ணமி வருகிற 30-ம் தேதி (வியாழக்கிழமை) இரவு 9.52 மணிக்கு தொடங்கி மறுநாள் மே 1-ம் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 11.08 மணிக்கு நிறைவடைகிறது. இந்நிலையில் கிரிவலம் வலம் வரும் பக்தர்களுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதில், ஏப்ரல் 30 இரவு 09.50 மணி முதல் மே 01 இரவு 11.07 மணி வரை (வெள்ளிகிழமை) சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 30 முதல் திருவண்ணாமலைக்கும் மே 02ம் தேதி வரை பல்வேறு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கும் கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து ஏப்ரல் 30 அன்று 548 பேருந்துகளும், மே 01 அன்று 565 பேருந்துகளும் மற்றும் 02 அன்று 35 பேருந்துகளும் சென்னை மாதவரத்திலிருந்து 30 அன்று 186 பேருந்துகளும் 01 அன்று 174 பேருந்துகளும் மற்றும் சென்னை அடையாரிலிருந்து 30 அன்று 55 பேருந்துகளும் 01 அன்று 50 பேருந்துகளும் தினசரி இயக்ககூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும் மற்றும் சென்னை கோயம்பேட்டிலிருந்தும் இயக்கப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆக, சென்னை மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு 30/04/2026 முதல் 02/05/206 வரை 11,823 பேருந்துகள் தினசரி இயக்ககூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும். அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் கொண்ட 40 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு மே 01 அன்று இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மதுரை, சேலம், கோயம்புத்தூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகக் பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேலும், முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[tamilnadu-thiruvannamalai]]></category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-thiruvannamalai/chitra-pournami-girivalam-super-announcement-issued-by-the-transport-department-for-the-devotees-82b973x"/>
        </item>
        <item>
            <title><![CDATA[BYD-யின் அதிரடி: 9 நிமிட சார்ஜிங்கில் 630 கிமீ கிமீ சீறிப்பாயும் புதிய எலக்ட்ரிக் கார்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/webstories/auto/byd-new-electric-car-offers-630-km-range-and-9-minute-flash-charging-cd1rrd7</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/webstories/auto/byd-new-electric-car-offers-630-km-range-and-9-minute-flash-charging-cd1rrd7</guid>
            <pubDate>Tue, 28 Apr 2026 20:44:32 +0530</pubDate>
            <description><![CDATA[சீனாவின் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான BYD, விரைவில் ஒரு புதிய மாடலை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த காரின் சிறப்பம்சங்கள் குறித்து பார்ப்போம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jrf3jwx2kevcs41yfdv5dc25,imgname-whatsapp-image-2025-04-10-at-11.04.55.jpeg" type="image/jpeg" height="390" width="690"/>
            <category><![CDATA[auto]]></category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/webstories/auto/byd-new-electric-car-offers-630-km-range-and-9-minute-flash-charging-cd1rrd7"/>
        </item>
        <item>
            <title><![CDATA[மீன் குழம்பை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து எத்தனை நாள் சாப்பிடலாம்? கெட்டுப்போகாம இருக்க சூப்பர் டிப்ஸ்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/health-food/fish-curry-storage-guide-how-to-keep-it-fresh-and-safe-ey41i0o</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/health-food/fish-curry-storage-guide-how-to-keep-it-fresh-and-safe-ey41i0o</guid>
            <pubDate>Tue, 28 Apr 2026 20:22:43 +0530</pubDate>
            <description><![CDATA[மீன் குழம்பு செய்து அடுத்த நாள் சாப்பிட்டால் டேஸ்ட் சூப்பராக இருக்கும். ஆனால் ஃப்ரிட்ஜ்ல வைத்த மீன் குழம்பை எத்தனை நாள் சாப்பிடலாம்? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01g6mt9zkbtazjd9052rpfk4he,imgname-maxresdefault-jpg.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;மீன் குழம்பு செய்து அடுத்த நாள் சாப்பிட்டால் டேஸ்ட் சூப்பராக இருக்கும். ஆனால் ஃப்ரிட்ஜ்ல வைத்த மீன் குழம்பை எத்தனை நாள் சாப்பிடலாம்? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எல்லா குழம்பையும் விட மீன் குழம்புக்கு ஒரு ஸ்பெஷல் குணம் உண்டு. இந்த குழம்பை உடனே சாப்பிடுவதை விட, ஒரு நாள் கழித்து சாப்பிட்டால் அதன் சுவையே தனிதான். இதனாலேயே, பலர் அதிகமாக குழம்பு செய்து ஃப்ரிட்ஜில் வைத்துவிடுவார்கள். ஆனால், அது எத்தனை நாட்கள் வரை பாதுகாப்பானது என்பது முக்கியம். மீன் குழம்பை (Fish Gravy) ஃப்ரிட்ஜில் எத்தனை நாட்கள் வைக்கலாம் என்பது குறித்து பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பொதுவாக, மீன் குழம்பை ஃப்ரிட்ஜில் 3-4 நாட்கள் வரை சேமித்து வைக்கலாம். அதற்கு மேல் வைத்தால், அதில் உள்ள புரோட்டீன்கள் சிதைந்து உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே, 4 நாட்களுக்குப் பிறகு அந்த குழம்பை சாப்பிடுவது நல்லதல்ல. ஒருவேளை நீங்கள் டீப் ஃபிரீசரில் வைத்தால், ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும், ஆனால் அதன் சுவை குறைந்துவிடும். மீன் குழம்பில் நாம் புளியை அதிகமாகப் பயன்படுத்துவதால், அது ஒரு நேச்சுரல் பிரிசர்வேட்டிவ் (Preservative) போல செயல்பட்டு, குழம்பு சீக்கிரம் கெட்டுப்போகாமல் பார்த்துக்கொள்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குழம்பு சூடாக இருக்கும்போதே ஃப்ரிட்ஜில் வைக்காதீர்கள். இது ஃப்ரிட்ஜின் உள் ஈரப்பதத்தை அதிகரித்து, மற்ற பொருட்களையும் கெட்டுப்போகச் செய்துவிடும். மீன் குழம்பை ஃப்ரிட்ஜில் வைப்பதாக இருந்தால், கண்ணாடி அல்லது நல்ல தரமான பிளாஸ்டிக் ஏர்-டைட் டப்பாக்களைப் பயன்படுத்துங்கள். இதனால், மீன் வாசனை மற்ற பொருட்களுக்குப் பரவாது. ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்த குழம்பை மொத்தமாக சூடுபடுத்த வேண்டாம். உங்களுக்கு எவ்வளவு தேவையோ, அதை மட்டும் தனியாக எடுத்து சூடுபடுத்துங்கள். முழு குழம்பையும் மீண்டும் மீண்டும் சூடுபடுத்தினால், அதிலுள்ள சத்துக்கள் அழிந்து, மீன் துண்டுகளும் உடைந்துவிடும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒருவேளை குழம்பின் மேல் வெள்ளைப் படலம் தெரிந்தாலோ, குழம்பு பிசுபிசுப்பாக மாறினாலோ அல்லது விசித்திரமான வாசனை வந்தாலோ அது கெட்டுவிட்டது என்று அர்த்தம். இதுபோன்ற உணவைச் சாப்பிட்டால் வாந்தி, பேதி போன்ற செரிமானப் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மீன் குழம்பு சுவைக்காக சேமித்து வைப்பது சரிதான், ஆனால் அது ஆரோக்கியத்தின் எல்லைக்குள் இருக்கட்டும். முடிந்தவரை 2-3 நாட்களிலேயே அதை காலி செய்வது சிறந்தது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[health-food]]></category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/health-food/fish-curry-storage-guide-how-to-keep-it-fresh-and-safe-ey41i0o"/>
        </item>
        <item>
            <title><![CDATA[கடகத்திற்கு காதல் ஜாக்பாட்! சோதனையின் உச்சகட்டத்தில் இருக்கும் சிம்மம்; கணவன் மனைவிக்கிடையில் பஞ்சாயத்து!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/may-2026-love-horoscope-tamil-unlucky-zodiac-signs-and-monthly-astrology-predictions-palan-and-pariharam-nv763bx</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/may-2026-love-horoscope-tamil-unlucky-zodiac-signs-and-monthly-astrology-predictions-palan-and-pariharam-nv763bx</guid>
            <pubDate>Tue, 28 Apr 2026 20:05:58 +0530</pubDate>
            <description><![CDATA[May 2026 Love Horoscope Tamil: மே 2026 மாதத்திற்கான காதல் ராசிபலன்கள் இதோ. இந்த மாதம் கடகம் உட்பட இரண்டு ராசிக்காரர்களுக்கு காதல் வாழ்க்கை களைகட்டும். ஆனால், மீனம் உட்பட நான்கு ராசிக்காரர்களுக்கு உறவில் சில சிக்கல்களும், பிரிவும் ஏற்பட வாய்ப்புள்ளது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j9pgmaqw0dcg0x5d4kbqnyc1,imgname-1---2024-10-08t220600.395.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;May 2026 Love Horoscope Tamil: &lt;/strong&gt;மே 2026 மாதத்திற்கான காதல் ராசிபலன்கள் இதோ. இந்த மாதம் கடகம் உட்பட இரண்டு ராசிக்காரர்களுக்கு காதல் வாழ்க்கை களைகட்டும். ஆனால், மீனம் உட்பட நான்கு ராசிக்காரர்களுக்கு உறவில் சில சிக்கல்களும், பிரிவும் ஏற்பட வாய்ப்புள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;2026 மே மாதம் கடக ராசியினருக்குக் காதலில் புதிய அத்தியாயம் தொடங்கப்போகிறது. அதே நேரத்தில், கிரக நிலைகளின் மாற்றத்தால் 4 ராசிகளுக்கு இந்த மாதம் சோதனைக் காலமாக அமையுள்ளது. அந்த ராசிகள் எவை? பாதிப்புகளைத் தவிர்க்க செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பது பற்றியும் பலன்கள் பற்றியும் விரிவாக பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;கடக ராசிக்காரர்கள் மே 2026-ல் அலுவலகத்தில் யாருடனாவது காதலில் விழலாம். நீங்கள் விரும்பும் நபரிடம் உங்கள் உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டால், காதல் ஆழமாகும். காதல் வாழ்க்கை உச்சத்தில் இருக்கும். ஆனால், திருமணமானவர்கள் தங்கள் வாழ்க்கைத்துணை மற்றும் மாமியார்-மாமனாருடன் சண்டையிட வாய்ப்புள்ளது.&lt;img&gt;&lt;p&gt;மே மாதத்தில் துலாம் ராசிக்காரர்கள் தங்கள் துணையுடன் ரொமான்ஸில் மிதப்பார்கள். திருமணமாகாதவர்களுக்கு லவ்வர் கிடைக்கலாம். இதே நேரத்தில், திருமணமானவர்கள் வாக்குவாதங்களுக்கு மத்தியில் நாட்களைக் கடத்துவார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;வழிபாடு: &lt;/strong&gt;வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமிக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவும். இது பொருளாதார வளர்ச்சியைத் தரும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விருச்சிக ராசிக்காரர்கள் மே மாதம் தங்கள் காதலைப் பற்றி குடும்பத்தினரிடம் சொல்லலாம். காதல் திருமணம் குறித்த பேச்சுவார்த்தை தொடர வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், ரொமான்டிக்காகவும் இருக்கும். ஆனால், உறவுகளில் நேர்மை மிக அவசியம். சிங்கிள்ஸ் புதிய நபர்களைச் சந்திக்கலாம், ஆனால் காதல் மலர சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;வழிபாடு: &lt;/strong&gt;சனிக்கிழமைகளில் ஹனுமனை (ஆஞ்சநேயர்) வழிபாடு செய்யவும். அவருக்கு வெண்ணெய் காப்பு அல்லது வெற்றிலை மாலை சாற்றுவது விசேஷம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ரிஷபம் முதல் துலாம் வரை: பிறப்பிலேயே ராஜயோகம் கொண்ட ராசிகள் இவைதான்! உங்கள் ராசி இதில் இருக்கா?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மே 2026 தனுசு ராசிக்காரர்களுக்கு ஒரு ரொமான்டிக்கான மாதம். தம்பதிகள் காதல் தருணங்களில் மகிழ்ச்சியைக் காண்பார்கள். உங்கள் துணை பற்றி ஏதேனும் தவறான புரிதல் இருந்தால், மற்றவர் பேச்சைக் கேட்காமல், உங்கள் மனதின் பேச்சைக் கேட்டு நேரடியாகப் பேசுங்கள். திருமணமானவர்கள் தங்கள் துணையுடன் குவாலிட்டி டைம் செலவிடுவார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;வழிபாடு: &lt;/strong&gt;வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற மலர்கள் சாற்றி, மஞ்சள் திரியில் தீபம் ஏற்றி வழிபட தம்பதியர் ஒற்றுமை மேலோங்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிங்கிளாக இருக்கும் மீன ராசிக்காரர்கள் மே 2026-ல் காதலிலிருந்து தள்ளியே இருப்பது நல்லது. ஏனெனில், இந்தக் காலகட்டம் உங்களுக்குச் சாதகமாக இல்லை. திருமணமானவர்களுக்கு காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். உங்கள் துணையுடன் ஒரு பயணத்தைத் திட்டமிடலாம். காதலிப்பவர்கள் திருமணம் குறித்தும் விவாதிக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;வழிபாடு: &lt;/strong&gt;சனிக்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்குச் சென்று துளசி அர்ச்சனை செய்வது சகல தோஷங்களையும் நீக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மே மாதம் சிம்ம ராசிக்காரர்களின் பொறுமையை சோதிக்கும். அது திருமண உறவாக இருந்தாலும் சரி, காதல் உறவாக இருந்தாலும் சரி. உங்கள் துணையுடன் வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்பு அதிகம். இதனால், மன அழுத்தத்தையும் நீங்கள் உணரலாம். உங்கள் துணையைப் புரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டியது அவசியம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;வழிபாடு: &lt;/strong&gt;தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்து, ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்வது உங்கள் புகழை மேலும் உயர்த்தும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மே மாதத்தில் மகர ராசி தம்பதிகள் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், தவறான புரிதல்கள் உங்கள் உறவுகளைப் பாதிக்கலாம். இது வாக்குவாதங்களுக்கும் வழிவகுக்கலாம். இருப்பினும், மாத இறுதிக்குள் எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;வழிபாடு: &lt;/strong&gt;சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடவும். இது காரியத் தடைகளை நீக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மே 2026-ல் கும்ப ராசிக்காரர்கள் தங்கள் துணையுடன் அற்ப விஷயங்களுக்காக வாக்குவாதம் செய்யலாம். இது உங்கள் திருமண வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்தி, குடும்பத்தின் மகிழ்ச்சி மற்றும் அமைதியைப் பாதிக்கக்கூடும். காதல் வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம், கவனமாக இருக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;வழிபாடு: &lt;/strong&gt;திங்கட்கிழமைகளில் சிவபெருமானுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்யவும். பிரதோஷ கால வழிபாட்டில் கலந்து கொள்வது மன அமைதியைத் தரும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Mercury Transit in Aries : ஏப்ரல் 30 முதல் 3 ராசிகளுக்கு கஷ்ட காலம்.! 15 நாட்களுக்கு ரொம்ப கவனம்.! தொழிலில் நஷ்டம் வரலாம்.! பரிகாரம் என்ன?&lt;/strong&gt;&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[astrology]]></category>
            <dc:creator>Rsiva kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/may-2026-love-horoscope-tamil-unlucky-zodiac-signs-and-monthly-astrology-predictions-palan-and-pariharam-nv763bx"/>
        </item>
        <item>
            <title><![CDATA[இந்தியாவின் டாப் கம்பெனிகள் 2026 |  LinkedIn வெளியிட்ட லிஸ்ட்.. எந்தெந்த நிறுவனங்கள் தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/business/linkedin-unveils-india-s-top-companies-for-2026-videoshow-stqbvf3</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/business/linkedin-unveils-india-s-top-companies-for-2026-videoshow-stqbvf3</guid>
            <pubDate>Tue, 28 Apr 2026 20:02:27 +0530</pubDate>
            <description><![CDATA[]]></description>
            <media:content url="https://geo.dailymotion.com/player/x1tbu.html?video=xa7bkly" medium="video" height="768" width="1024"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;LinkedIn 2026ஆம் ஆண்டிற்கான 'Top Companies' பட்டியலை வெளியிட்டுள்ளது. AI காலத்தில் தொழில்நுட்ப திறன்களுடன் மனித திறன்களும் சமமாக முக்கியம் என்பதை இந்த அறிக்கை வலியுறுத்துகிறது. 2026ஆம் ஆண்டிற்கான &lsquo;Top Companies&rsquo; பட்டியலை LinkedIn வெளியிட்டுள்ளது. இந்தியாவில் வேலை வாய்ப்புகள் வேகமாக மாறிக் கொண்டே இருக்கும் இந்த காலத்தில், நீண்டகால வளர்ச்சி, திறன் மேம்பாடு மற்றும் ஊழியர் நலனில் முதலீடு செய்யும் நிறுவனங்களே முன்னிலையில் உள்ளன. குறிப்பாக AI காலத்தில் தொழில்நுட்ப திறன்களுடன் மனித உறவு திறன்களும் சமமாக முக்கியம் என்பதை இந்த ரிப்போர்ட் வலியுறுத்துகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[business]]></category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/business/linkedin-unveils-india-s-top-companies-for-2026-videoshow-stqbvf3"/>
        </item>
        <item>
            <title><![CDATA[அமைச்சர் கே.என். நேரு வழக்கில் திடீர் திருப்பம்.. அதிர்ச்சி கொடுத்த சென்னை உயர்நீதிமன்றம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/k-n-nehru-case-high-court-delivers-a-major-twist-videoshow-fpty3g5</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/k-n-nehru-case-high-court-delivers-a-major-twist-videoshow-fpty3g5</guid>
            <pubDate>Tue, 28 Apr 2026 20:02:24 +0530</pubDate>
            <description><![CDATA[]]></description>
            <media:content url="https://geo.dailymotion.com/player/x1tbu.html?video=xa7bkm8" medium="video" height="768" width="1024"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;KN Nehru Case: அமைச்சர் கே.என்.நேரு மீது அமலாக்கத் துறை வழங்கிய தகவல்கள் வெறும் புகார் அல்ல. சோதனையின் அடிப்படையில் கிடைத்த ஆதாரங்கள் என்பதால் உடனடியாக வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டிருந்தது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட 2,538 பணியிடங்களுக்கு 25 லட்சம் ரூபாய் முதல் 35 லட்​சம் ரூபாய் வரை லஞ்​சப் பணம் வசூலிக்​கப்​பட்​டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை கடந்த 2025 அக்டோபர் 27-ம் தேதி கடிதம் ஒன்றை அனுப்​பியது. இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[tamilnadu]]></category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/k-n-nehru-case-high-court-delivers-a-major-twist-videoshow-fpty3g5"/>
        </item>
        <item>
            <title><![CDATA[4 நாள் தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா? 1500+ சிறப்பு பேருந்துகள்.. முழு விவரம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/tnstc-to-run-1500-special-buses-for-may-day-long-weekend-check-routes-dates-and-booking-details-here-g4deoei</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/tnstc-to-run-1500-special-buses-for-may-day-long-weekend-check-routes-dates-and-booking-details-here-g4deoei</guid>
            <pubDate>Tue, 28 Apr 2026 19:54:22 +0530</pubDate>
            <description><![CDATA[தமிழகத்தில் மே தினம் தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 1500+ சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இது குறித்த முழு பட்டியலை பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ke936q26qcz2npfkrvtyqn6q,imgname-setc-1767684398150.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழகத்தில் மே தினம் தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 1500+ சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இது குறித்த முழு பட்டியலை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழகத்தில் வார விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 30/04/2026 (வியாழக்கிழமை) 01/05/2026 (மே தினம் - வெள்ளிகிழமை) 02/05/2026 (சனிக்கிழமை), மற்றும் 03/05/2026 (ஞாயிற்றுக் கிழமை) தொடர் விடுமுறையை முன்னிட்டு 30/04/2026, 01/05/2026 மற்றும் 02/05/2026 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 30/04/2026 வியாழக்கிழமை அன்று 475 பேருந்துகளும், 01/05/2026 வெள்ளிக் கிழமை மற்றும் 02/05/2026 சனிக் கிழமை 315 பேருந்துகளும் சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 30/04/2026 அன்று 85 பேருந்துகளும், 01/05/2026 மற்றும் 02/05/2026 தலா 75 பேருந்துகளும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேலும் மாதாவரத்திலிருந்து 30/04/2026 முதல் 02/05/2026 வரை தலா 14 பேருந்துகளும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் 03/05/2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று 615 சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த வார இறுதியில் வியாழக்கிழமை அன்று 13,103 பயணிகளும் வெள்ளிக்கிழமை அன்று 3,950 பயணிகளும் சனிக்கிழமை அன்று 3,134 பயணிகளும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று 7,232 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம். இந்த சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[tamilnadu]]></category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/tnstc-to-run-1500-special-buses-for-may-day-long-weekend-check-routes-dates-and-booking-details-here-g4deoei"/>
        </item>
        <item>
            <title><![CDATA[மூன்று நாட்களை தொடர்ந்து.. அடுத்து இரண்டு நாட்கள் இழுத்து மூடப்படும் டாஸ்மாக் கடைகள்.. அதிர்ச்சியில் மதுப்பிரியர்கள்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/tasmac-two-days-holidays-important-announcement-l5sq0yq</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/tasmac-two-days-holidays-important-announcement-l5sq0yq</guid>
            <pubDate>Tue, 28 Apr 2026 19:34:38 +0530</pubDate>
            <description><![CDATA[TASMAC: தமிழகத்தில் ஆண்டுக்கு 8 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்நிலையில், மே 1ம் தேதி உழைப்பாளர் தினம் மற்றும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j0xk5msm6b1xrqzz8hzxcby7,imgname-asianet-news---2024-06-21t195810.038.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;TASMAC: தமிழகத்தில் ஆண்டுக்கு 8 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்நிலையில், மே 1ம் தேதி உழைப்பாளர் தினம் மற்றும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழகம் முழுவதும் 4800க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. தினமும் சுமார் 100 கோடிக்கு அளவுக்கும், தீபாவளி மற்றும் பொங்கல், புத்தாண்டு போன்ற பண்டிகை நாட்களில் பல நூறு கோடிக்கும் மது விற்பனையாகிறது. இந்த மதுபான கடைகளை அரசு எடுத்து நடத்தி வந்தாலும் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே விடுமுறை கிடைக்கின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதாவது ஆண்டுக்கு 8 நாட்கள் மட்டுமே விடுமுறை வழங்கப்படுகிறது. குறிப்பாக திருவள்ளூவர் தினம், குடியரசு தினம், மிலாது நபி, சுதந்திர தினம் போன்ற நாட்களில் மட்டும் விடுமுறை விடப்படுகிறது. அதாவது திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், வடலூர் ராமலிங்கர் நினைவு நாள், மகாவீர் ஜெயந்தி, தொழிலாளர் தினம், சுதந்திர தினம், மிலாது நபி, காந்தி ஜெயந்தி உள்ளிட்ட 8 நாட்களுக்கு மட்டுமே விடுமுறை கிடைக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதுமட்டுமல்லாமல் அந்தந்த மாவட்டங்களில் கோயில், மசூதி, தேவாலய திருவிழா நாட்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதேபோல் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 21, 22, 23 ஆகிய மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மே 1ம் தேதி உழைப்பாளர் தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: மே 01ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று மே தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003, விதி 12 மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981 விதி 25ll(a) ஆகியவைகளின் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் (FL1) மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், FL2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள் மூடப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேலும் FL3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் FL3(A)/FL3(AA) முதல் FL11 வரை உரிமம் கொண்ட மதுபான விற்பனையகங்கள் மற்றும் மதுபான கூடங்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு 01.05.2026 (வெள்ளிக்கிழமை) அன்று மே தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது. தவறினால் மதுபானம் நடவடிக்கை விற்பனை விதிகளின்படி கடுமையான எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதேபோல் தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி 234 தொகுதிகளில் பதிவான வாக்குகள் மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[tamilnadu]]></category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/tasmac-two-days-holidays-important-announcement-l5sq0yq"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Harbhajan Singh House: 7 கோடி ரூபாய் பங்களா! பிரம்மாண்ட தியேட்டர், கிரிக்கெட் ரூம்...ஹர்பஜன் சிங்கின் சொகுசு அரண்மனை இதோ!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/harbhajan-singh-luxury-house-7-crore-bungalow-interior-photos-in-tamil-go8q81b</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/harbhajan-singh-luxury-house-7-crore-bungalow-interior-photos-in-tamil-go8q81b</guid>
            <pubDate>Tue, 28 Apr 2026 19:28:25 +0530</pubDate>
            <description><![CDATA[Harbhajan Singh Luxury House: இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், தனது மனைவி நடிகை கீதா பஸ்ரா, மற்றும் இரண்டு குழந்தைகள் ஆகியோருடன் ஜலந்தரில் வசித்து வருகிறார். பஞ்சாபில் உள்ள அவரது பிரம்மாண்ட வெள்ளை நிற பங்களாவின் உள்ளே ஒரு விசிட் போலாமா?]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kq7d2e6y52ngng6aqs1dp6xe,imgname-whatsapp-image-2026-04-27-at-5.28.12-pm--3--1777291311325.jpeg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Harbhajan Singh Luxury House: இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், தனது மனைவி நடிகை கீதா பஸ்ரா, மற்றும் இரண்டு குழந்தைகள் ஆகியோருடன் ஜலந்தரில் வசித்து வருகிறார். பஞ்சாபில் உள்ள அவரது பிரம்மாண்ட வெள்ளை நிற பங்களாவின் உள்ளே ஒரு விசிட் போலாமா?&lt;/p&gt;&lt;img&gt;இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங். இவரோட லெஜண்டரி ஸ்பின் பவுலிங்கையும், களத்தில் இவரோட ஆக்ரோஷத்தையும் யாராலும் மறக்க முடியாது. கிரிக்கெட்டுக்கு வெளியே, 'டர்பனேட்டர்' என்று அழைக்கப்படும் ஹர்பஜன், ஜலந்தரில் ஒரு பிரம்மாண்டமான சொகுசு பங்களாவில் வசிக்கிறார். இந்த வீடு, கிரிக்கெட்டில் அவர் பெற்ற வெற்றியையும், அதன் மீதான அவரது காதலையும் காட்டுகிறது. சுமார் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த பங்களா, வெறும் ஆடம்பரம் மட்டுமல்ல, வசதி மற்றும் பசுமையான நினைவுகளின் கலவையாக இருக்கிறது.&lt;img&gt;ஹர்பஜனின் பங்களா, முழுவதுமாக வெள்ளை நிறத்தில் நவீன டிசைனில் தனித்து தெரிகிறது. 2010-ல் கட்டப்பட்ட இந்த பல அடுக்கு மாளிகையில், இயற்கை வெளிச்சம் தாராளமாக உள்ளே வரும்படி டிசைன் செய்துள்ளனர். இதற்காக, தரை முதல் மேற்கூரை வரை பெரிய ஜன்னல்கள், விசாலமான அறைகள், வெள்ளை மற்றும் வெளிர் நிற இன்டீரியர்கள் என வடிவமைத்துள்ளனர். இதனால், வீடு முழுவதும் நல்ல காற்றோட்டமாகவும், அமைதியாகவும், ஆடம்பரமாக இல்லாமல் ரம்மியமாகவும் இருக்கிறது.&lt;img&gt;இந்த வீட்டின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று, பிரத்யேக ஹோம் தியேட்டர். இங்கே ஹர்பஜனும் அவரது குடும்பத்தினரும் ஒன்றாக அமர்ந்து திரைப்படங்கள் பார்ப்பார்கள். இந்த தியேட்டர், வீட்டிற்கு ஒரு பிரீமியம் லுக்கைக் கொடுப்பதோடு, குடும்பத்தினர் தங்களது தனிப்பட்ட நேரத்தில் வசதியான ஆடம்பரத்தை விரும்புவதையும் காட்டுகிறது. இந்த பங்களாவின் மிக ஈர்ப்பான பொழுதுபோக்கு இடங்களில் இதுவும் ஒன்று என கூறப்படுகிறது.&lt;img&gt;கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த வீட்ல ரொம்ப ஸ்பெஷலான இடம்னா, அது ஹர்பஜனின் கிரிக்கெட் நினைவுப் பொருட்கள் அறைதான். இது, அவருடைய புகழ்பெற்ற கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஒரு சமர்ப்பணம். இந்த அறையில், கையெழுத்திட்ட பேட்கள், கிரிக்கெட் பந்துகள், கோப்பைகள் மற்றும் விருதுகள், பிரேம் செய்யப்பட்ட புகைப்படங்கள், மறக்க முடியாத போட்டிகளின் நினைவுகள் என பல பொருட்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. பஞ்சாபின் ஒரு இளம் ஸ்பின்னராக இருந்து, இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானாக மாறிய அவரது பயணத்தை இந்த அறை ஒரு மியூசியம் போல காட்டுகிறது.&lt;img&gt;&lt;p&gt;இந்த பங்களாவில் அழகாக வடிவமைக்கப்பட்ட தோட்டம், செங்குத்து தோட்டங்கள், மற்றும் ஆடம்பரத்தை விட குடும்பத்தினர் ஒன்றாக நேரத்தை செலவிட வசதியான இடங்கள் உள்ளன. தனது வீடு வெறும் ஆடம்பரத்திற்காக கட்டப்பட்டது அல்ல, உணர்வுகள் மற்றும் குடும்பப் பிணைப்பை மையமாக வைத்து கட்டப்பட்டது என ஹர்பஜன் பலமுறை கூறியுள்ளார். ஒரு வீடு என்பது வாழ்ந்ததற்கான அடையாளமாகவும், தனிப்பட்டதாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை இந்த வீட்டின் வடிவமைப்பு பிரதிபலிக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஹர்பஜன் தற்போது தனது மனைவி, நடிகை கீதா பஸ்ரா மற்றும் குழந்தைகளுடன் இந்த வீட்டில் வசித்து வருகிறார். பஞ்சாபில் கிரிக்கெட் கனவுகளுடன் இருந்த ஒரு சிறுவனாக இருந்து, இந்தியாவின் புகழ்பெற்ற ஆஃப்-ஸ்பின்னர்களில் ஒருவராக உயர்ந்த அவரது பயணத்தின் சின்னமாக இந்த வீடு விளங்குகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;36 பந்துகளில் சதம் விளாசிய மும்பை வீரரை தட்டித்தூக்கும் சிஎஸ்கே.. அஸ்வின் பாராட்டிய ஆயுஷ் வர்தக் யார்?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஹர்பஜன் சிங்கின் 7 கோடி ரூபாய் ஜலந்தர் பங்களா, ஒரு சொகுசு கட்டிடம் மட்டுமல்ல. இது அவருடைய கிரிக்கெட் பயணம், குடும்ப வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியின் பிரதிபலிப்பு. பிரைவேட் தியேட்டர், கிரிக்கெட் ரூம், நேர்த்தியான இன்டீரியர் என இந்த வீடு, ஒரு பிரபலத்தின் ஆடம்பரத்தையும், நெகிழ்ச்சியான நினைவுகளையும் அழகாக இணைக்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;ரூ.100 கொடுத்தால் தான் செல்ஃபி.. சிறுவர்களிடம் கண்டிஷன் போட்ட வைபவ் சூர்யவன்ஷி: கடைசியில் ட்விஸ்ட்!&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[sports-cricket]]></category>
            <dc:creator>Rsiva kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/harbhajan-singh-luxury-house-7-crore-bungalow-interior-photos-in-tamil-go8q81b"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Car AC: சுட்டெரிக்கும் வெயில்.! கோடையில் உங்க கார் ஏசி கூலிங் கம்மியா இருக்கா? இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/car-ac-cooling-tips-in-tamil-5-simple-tips-to-improve-car-ac-performance-in-summer-and-save-fuel-explained-4y3atdy</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/car-ac-cooling-tips-in-tamil-5-simple-tips-to-improve-car-ac-performance-in-summer-and-save-fuel-explained-4y3atdy</guid>
            <pubDate>Tue, 28 Apr 2026 19:28:26 +0530</pubDate>
            <description><![CDATA[Car AC Cooling Tips in Tamil : கோடை காலத்தில் கார் ஏசியின் செயல்திறனை அதிகரிக்க உதவும் 5 எளிய டிப்ஸ் இங்கே உள்ளன. இந்த அனல் பறக்கும் வெயிலில் பயணம் செய்பவர்கள் இந்த டிப்ஸை ஃபாலோ செய்தால், பயணத்தை ஜில்லாக மாற்றுவதோடு, எரிபொருளையும் சேமிக்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kqa5wz8wmsew59q48n9ph821,imgname-car-ac-cooling-tips-in-tamil--1777384455452.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Car AC Cooling Tips in Tamil : கோடை காலத்தில் கார் ஏசியின் செயல்திறனை அதிகரிக்க உதவும் 5 எளிய டிப்ஸ் இங்கே உள்ளன. இந்த அனல் பறக்கும் வெயிலில் பயணம் செய்பவர்கள் இந்த டிப்ஸை ஃபாலோ செய்தால், பயணத்தை ஜில்லாக மாற்றுவதோடு, எரிபொருளையும் சேமிக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவில் வெயில் சுட்டெரிக்கிறது. தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் 45 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவாகிறது. இந்த மாதிரி நேரத்தில் பயணம் செய்வது பெரும் சிரமம். அதிலும் கார் ஏசி சரியாக வேலை செய்யவில்லை என்றால், பயணம் நரகமாகிவிடும். ஆனால், கார் பயணத்தின்போது பலர் சில எளிய விஷயங்களைக் கண்டுகொள்வதில்லை. இதனால் ஏசி கூலிங் குறைந்து, காரின் மீது கூடுதல் சுமை ஏற்படுகிறது. இந்த ஐந்து டிப்ஸை ஃபாலோ செய்தால், உங்கள் கார் ஏசியின் செயல்திறனை எளிதாக மேம்படுத்தலாம்.&lt;/p&gt;&lt;img&gt;காரை வெயிலில் பார்க் செய்யும்போது, உள்ளே சூடான காற்று நிரம்பிவிடும். இந்த மாதிரி நேரத்தில், காரை ஸ்டார்ட் செய்வதற்கு முன் ஒரு நிமிடம் கதவுகளையும் ஜன்னல்களையும் திறந்து வையுங்கள். இதனால் உள்ளே இருக்கும் சூடான காற்று வெளியேறிவிடும். பிறகு காரை ஸ்டார்ட் செய்து ஏசி போட்டால், கேபின் சீக்கிரமாக ஜில்லாகிவிடும்.&lt;img&gt;காரை ஸ்டார்ட் செய்தவுடனேயே ஏசியை ஆன் செய்து ஃபுல் கூலிங்கில் வைக்கக்கூடாது. முதலில் காரை சிறிது தூரம் ஓட்டுங்கள். கொஞ்ச தூரம் சென்ற பிறகு ஏசியை ஆன் செய்யுங்கள். ஏனென்றால், இன்ஜின் இயங்கும்போது ஏசி கம்ப்ரஸர் திறமையாக வேலை செய்து, கேபினை விரைவாக குளிர்விக்கும். சிஸ்டத்தில் ஓவர்லோட் ஆகாமல் இருக்க, மெதுவாக வெப்பநிலையைக் குறைத்து வாருங்கள்.&lt;img&gt;காரில் உள்ள ரீசர்குலேஷன் மோடை ஆன் செய்யுங்கள். இது வெளிப்பக்க சூடான காற்று உள்ளே வராமல், கேபினில் உள்ள காற்றையே மீண்டும் மீண்டும் குளிர்விக்கும். இதனால் கேபின் சீக்கிரமாக கூல் ஆகும். ஆனால், நீண்ட தூர பயணங்களில் இதைத் தொடர்ந்து பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் உள்ளே காற்றின் தரம் குறைய வாய்ப்புள்ளது. அவ்வப்போது வெளிக்காற்று உள்ளே வரும்படி ரீசர்குலேஷன் மோடை மாற்றி அமைக்க வேண்டும்.&lt;img&gt;இந்த கோடைக்காலத்தில் ஏசி சரியாக வேலை செய்வது ரொம்ப முக்கியம். இதற்காக, ஏர் ஃபில்டரை சுத்தமாக வைத்திருக்க வேண்டும், கேஸ் அளவை சரிபார்க்க வேண்டும், மற்றும் லீக் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். ரெகுலர் சர்வீஸ் செய்தால் ஏசியின் செயல்திறன் சிறப்பாக இருக்கும்.&lt;img&gt;முடிந்தவரை உங்கள் காரை நிழலான இடத்தில் பார்க் செய்யுங்கள். இது காருக்குள் இருக்கும் வெப்பநிலையைக் குறைக்க உதவும். அப்போது ஏசியின் மீது அதிக சுமை ஏற்படாது, குறைந்த நேரத்திலேயே கார் ஜில்லாகிவிடும். சுட்டெரிக்கும் வெயிலிலும் ஜாலியாகப் பயணிக்கலாம். இந்த சிம்பிள் டிப்ஸை ஃபாலோ செய்தால், கோடையில் உங்கள் கார் ஜில்லாக இருக்கும். மேலும், ஏசியை கவனமாகப் பயன்படுத்துவதால் எரிபொருள் மிச்சமாகும், பணமும் சேமிக்கப்படும், ஏசியின் ஆயுளும் அதிகரிக்கும்.]]></content:encoded>
            <category><![CDATA[life-style]]></category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/car-ac-cooling-tips-in-tamil-5-simple-tips-to-improve-car-ac-performance-in-summer-and-save-fuel-explained-4y3atdy"/>
        </item>
        <item>
            <title><![CDATA[இனி இந்த 5 விஷயங்களுக்கு ஆதார் செல்லாது.. UIDAI அதிரடி உத்தரவு.. கையில் இதை வச்சுக்கோங்க!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/uidai-update-aadhaar-not-valid-for-date-of-birth-proof-anymore-g2vdavy</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/uidai-update-aadhaar-not-valid-for-date-of-birth-proof-anymore-g2vdavy</guid>
            <pubDate>Tue, 28 Apr 2026 19:13:31 +0530</pubDate>
            <description><![CDATA[Aadhaar Card Update: இனிமேல் ஒரு முக்கியமான 5 விஷயங்களுக்கு ஆதார் கார்டு செல்லாது என்று UIDAI அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kqa53gm36c7qkg2ne0nk7ncm,imgname-aadhar-news-1777383621251.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Aadhaar Card Update: இனிமேல் ஒரு முக்கியமான 5 விஷயங்களுக்கு ஆதார் கார்டு செல்லாது என்று UIDAI அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவில் ஆதார் கார்டு ஒரு முக்கியமான ஆவணமாகும். வங்கிக் கணக்கு தொடங்குவதில் இருந்து மொபைல் சிம் கார்டு வாங்குவது வரை எல்லாத்துக்கும் ஆதார் தேவை. இதுமட்டுமின்றி ஹோட்டல்களில் அறை எடுத்து தங்குவது என அனைத்துக்கும் ஆதார் அவசியமாகிறது. ஆனால், இனிமேல் பிறந்த தேதிக்கான ஆதாரமாக (Date of Birth) இதை பயன்படுத்த முடியாது என UIDAI அதிரடியாக தெரிவித்துள்ளது. இந்த புதிய உத்தரவு பற்றி விரிவாக பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;அதாவது ஆதார் கார்டு எடுக்கும்போது, பலர் பிறந்த வருடத்தை மட்டுமே குறிப்பிடுகின்றனர். அப்படி செய்யும்போது, சிஸ்டம் தானாகவே அந்த வருடத்தின் ஜனவரி 1-ஆம் தேதியை பிறந்த தேதியாக எடுத்துக்கொள்கிறது. இந்த தகவல் பல சமயங்களில் தோராயமானது என்பதால், இதை 100% துல்லியமானது என கருத முடியாது. இதனால்தான், சரியான வயது அவசியமான அரசுப் பணிகள், பென்ஷன் போன்ற இடங்களில் இனி ஆதார் கார்டை ஏற்க மாட்டார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த மாற்றத்தால் எங்கெல்லாம் பாதிப்பு ஏற்படும் என்று பாருங்கள்: 1. வயதை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும் பென்ஷன் மற்றும் அரசு திட்டங்களுக்கு ஆதார் மட்டுமே இனிமேல் ஆதாரமாக போதாது. 2. புதிய வேலைக்கு சேரும்போது பிறந்த தேதியை சரிபார்க்க ஆதார் மட்டுமே போதாது. 3. பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும்போது, இனி பள்ளி சான்றிதழ் அல்லது பிறப்புச் சான்றிதழ் கட்டாயம் கொடுக்க வேண்டும். 4. இன்சூரன்ஸ் பாலிசியின் பிரீமியத்தை கணக்கிடவும் ஆதார் மட்டுமே போதாது. 5. நீதிமன்றம், உயில் போன்ற சட்டரீதியான ஆவணங்கள் தொடர்பான பணிகளிலும் ஆதார் மட்டுமே போதாது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேற்கண்ட இந்த 5 விஷயங்களுக்கு ஆதார் மட்டுமே செல்லாது என்றால் வேறு எதை ஆதாரமாக கொடுப்பது? என நீங்கள் கேட்கலாம். இனி பிறந்த தேதிக்கான ஆதாரமாக கீழ்க்கண்ட இந்த ஆவணங்களை நீங்கள் பயன்படுத்தலாம்: 1. பிறப்புச் சான்றிதழ் (Birth Certificaடெ) 2. உயர்நிலைப் பள்ளி மதிப்பெண் பட்டியல் அல்லது சான்றிதழ்&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;3. பாஸ்போர்ட் 4. பான் கார்டு நீங்கள் எங்காவது விண்ணப்பப் படிவம் நிரப்பும்போது, உங்கள் புகைப்படம் மற்றும் முகவரி அடையாளத்திற்கு மட்டும் ஆதாரை பயன்படுத்துங்கள். பிறந்த தேதி (DOB) கேட்கும் இடத்தில், உங்கள் 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அல்லது பிறப்புச் சான்றிதழை கையில் வைத்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் உங்கள் வேலை ஒரே முறையில் முடியும், தேவையில்லாமல் அலைய வேண்டியிருக்காது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[business]]></category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/uidai-update-aadhaar-not-valid-for-date-of-birth-proof-anymore-g2vdavy"/>
        </item>
        <item>
            <title><![CDATA[இனி பெட்ரோல் விலை உயர்வு பற்றி கவலை இல்லை.! அரபு நாடுகளுக்கு ஆப்பு வைத்த இந்தியா.! பெட்ரோலுக்கு புது மாற்று வந்தாச்சு.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/petrol-price-solution-india-e85-fuel-solution-to-reduce-oil-imports-and-control-petrol-diesel-prices-f1nmkyf</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/petrol-price-solution-india-e85-fuel-solution-to-reduce-oil-imports-and-control-petrol-diesel-prices-f1nmkyf</guid>
            <pubDate>Tue, 28 Apr 2026 18:56:34 +0530</pubDate>
            <description><![CDATA[Petrol Price Solution India : பெட்ரோல் விலை உயர்வு பற்றி கவலைப்படுகிறீர்களா? இனி அரபு நாடுகளைச் சார்ந்திருக்காமல், அரசு உள்நாட்டில் தயாரிக்கும் எரிபொருள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kpt041vh3qwx1jynbkqpadcg,imgname-e85-fuel-1776841525105.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Petrol Price Solution India : பெட்ரோல் விலை உயர்வு பற்றி கவலைப்படுகிறீர்களா? இனி அரபு நாடுகளைச் சார்ந்திருக்காமல், அரசு உள்நாட்டில் தயாரிக்கும் எரிபொருள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நடக்கும் மோதல், கச்சா எண்ணெய் விலையை ஒரு பேரலுக்கு 100 டாலருக்கும் மேல் கொண்டு சென்றுவிட்டது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், உலகம் முழுவதும் எரிபொருள் விலையில் அதன் தாக்கம் தெரிகிறது. இந்தியா தனது தேவைக்கு 90% எண்ணெயை வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்கிறது. இதனால், இங்கே பெட்ரோல்-டீசல் விலை உயரும் என்று பேச்சு எழுந்துள்ளது. ஆனால், இந்த பிரச்சனைக்கு இந்திய அரசு ஒரு உள்நாட்டுத் தீர்வைக் கண்டுபிடித்துள்ளது. அதன் பெயர் தான் E85. இதுகுறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இப்போது நீங்கள் உங்கள் வண்டியில் போடும் பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கப்படுகிறது. ஆனால், அரசு இப்போது கொண்டுவரத் தயாராகும் E85 எரிபொருளில், 85% எத்தனாலும், வெறும் 15% பெட்ரோலும் மட்டுமே இருக்கும். இதில் ஸ்பெஷல் என்னவென்றால், இந்த எத்தனால் அரபு நாடுகளில் இருந்து வராது. மாறாக, நம் நாட்டு விவசாயிகளின் வயல்களில் விளையும் கரும்பு, மக்காச்சோளம், ஏன் வீணாகிப்போன தானியங்களில் இருந்து கூட தயாரிக்கப்படும். அதாவது, இனி நாட்டின் பணம் வெளிநாடுகளுக்குப் போகாது, நம் விவசாயிகளுக்கே செல்லும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;E85 எரிபொருளை எல்லா வண்டிகளிலும் பயன்படுத்த முடியாது. இதற்கு ஃபிளெக்ஸ்-ஃபியூயல் இன்ஜின் கொண்ட வண்டிகள் தேவை. ஃபிளெக்ஸ்-ஃபியூயல் இன்ஜின் ஒரு ஸ்மார்ட் இன்ஜின். அதில் இருக்கும் ஸ்பெஷல் சென்சார்கள், டேங்கில் பெட்ரோல் அதிகமாக இருக்கிறதா அல்லது எத்தனால் அதிகமாக இருக்கிறதா என்பதைத் தானாகவே கண்டறிந்து, அதற்கேற்ப இன்ஜின் அமைப்பை மாற்றிக்கொள்ளும். டொயோட்டா, மாருதி, டிவிஎஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் ஏற்கெனவே இதுபோன்ற இன்ஜின் கொண்ட வாகனங்களை அறிமுகப்படுத்திவிட்டன. இப்போது அரசின் இறுதி ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எத்தனால், பெட்ரோலை விட சற்று குறைவான ஆற்றலைத்தான் கொடுக்கும். நிபுணர்களின் கருத்துப்படி, E85 எரிபொருளில் வண்டியை ஓட்டும்போது, உங்கள் மைலேஜ் 20% முதல் 30% வரை குறைய வாய்ப்புள்ளது. அப்படியானால், இதில் என்ன லாபம்? அரசு இந்த எரிபொருளின் விலையை பெட்ரோலை விட மிகவும் குறைவாக வைத்தால் மட்டுமே இது லாபகரமாக இருக்கும். உதாரணமாக, பெட்ரோல் விலை ₹100 ஆகவும், E85 விலை ₹60-70 ஆகவும் இருந்தால், மைலேஜ் குறைந்தாலும் ஒரு கிலோமீட்டருக்கான உங்கள் பயணச் செலவு குறையும். இந்த கணக்கீட்டின் அடிப்படையில்தான் அரசு செயல்பட்டு வருகிறது. இதன் மூலம், சாமானிய மக்களுக்கு விலைவாசி உயர்விலிருந்து நிவாரணம் கிடைக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பெட்ரோல் பங்குகளில் E85 எரிபொருளுக்காகத் தனி மெஷின்கள் நிறுவ வேண்டும். இவ்வளவு பெரிய நாட்டிற்குத் தேவையான அதிக அளவிலான எத்தனாலை உற்பத்தி செய்ய வேண்டும். ஃபிளெக்ஸ்-ஃபியூயல் வண்டிகளை மக்கள் வாங்குவதற்கு, அவற்றின் மீதான வரியைக் குறைக்க வேண்டும். இந்தக் கொள்கை அடுத்த 10-15 ஆண்டுகளுக்கு மாறாது என்று நிறுவனங்களுக்கு அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[business]]></category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/petrol-price-solution-india-e85-fuel-solution-to-reduce-oil-imports-and-control-petrol-diesel-prices-f1nmkyf"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Mercury Transit in Aries : ஏப்ரல் 30 முதல் 3 ராசிகளுக்கு கஷ்ட காலம்.! 15 நாட்களுக்கு ரொம்ப கவனம்.! தொழிலில் நஷ்டம் வரலாம்.! பரிகாரம் என்ன?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/mercury-transit-in-aries-2026-unlucky-for-taurus-cancer-pisces-budhan-peyarchi-in-mesha-rasi-brings-bad-luck-to-3-zodiac-oynd2gz</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/mercury-transit-in-aries-2026-unlucky-for-taurus-cancer-pisces-budhan-peyarchi-in-mesha-rasi-brings-bad-luck-to-3-zodiac-oynd2gz</guid>
            <pubDate>Tue, 28 Apr 2026 18:20:01 +0530</pubDate>
            <description><![CDATA[Mercury Transit in Aries 2026 : ஏப்ரல் 30, 2026 அன்று, புதன் கிரகம் மேஷ ராசிக்குள் பிரவேசிக்கிறார். அங்கு ஏற்கனவே இருக்கும் சூரியனுடன் புதன் இணைவதால், புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. ஆனால் இது சில ராசிகளுக்கு எதிர்மறை பலன்களை வழங்க இருக்கிறது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kqa1wzjqx6k4spmht940efwf,imgname-mercury-transit-in-aries-2026-1777380261462.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Mercury Transit in Aries 2026 : ஏப்ரல் 30, 2026 அன்று, புதன் கிரகம் மேஷ ராசிக்குள் பிரவேசிக்கிறார். அங்கு ஏற்கனவே இருக்கும் சூரியனுடன் புதன் இணைவதால், புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. ஆனால் இது சில ராசிகளுக்கு எதிர்மறை பலன்களை வழங்க இருக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கிரகங்களின் நகர்வில் ஏற்படும் மாற்றங்கள் நம் வாழ்க்கையில் பெரிய தாக்கங்களை ஏற்படுத்துகிறது. கிரகங்களின் இளவரசன் எனப்படும் புதன், ஏப்ரல் 30, 2026 அன்று காலை 6:55 மணிக்கு மேஷ ராசிக்குள் நுழைகிறார். அவர் மே 15, 2026 வரை அங்கேயே இருப்பார். ஏற்கனவே மேஷத்தில் இருக்கும் சூரியனுடன் புதன் இணைவதால், புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. இந்த ராஜ யோகம் ஆனது பல ராசிகளுக்கு நன்மைகளை வழங்கினாலும், சில ராசிகளுக்கு அசுப பலன்களை வழங்க உள்ளது. அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரிஷப ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி எதிர்மறையான பலன்களைக் கொடுக்கலாம். வரவிருக்கும் நாட்களில் உடல்நலப் பிரச்சனைகள் தீவிரமாகலாம். பழைய நோய்கள் மீண்டும் வர வாய்ப்புள்ளது. வேலையில் தடைகள், நஷ்டங்கள், தோல்விகள் ஏற்படலாம். மன அழுத்தம் அதிகரிப்பதால், சரியான முடிவெடுப்பது கடினமாகும். அவசரப்பட்டு எடுக்கும் எந்த முடிவும் பாதிப்பை ஏற்படுத்தலாம். பேச்சைக் கட்டுப்படுத்தாவிட்டால் உறவுகளில் விரிசல், வாக்குவாதங்கள், சட்டச் சிக்கல்கள் கூட ஏற்படலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கடக ராசிக்காரர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி சவாலான நேரத்தைக் காட்டுகிறது. அதிகரிக்கும் மன அமைதியின்மையும், மன அழுத்தமும் உங்கள் வேலையைப் பாதிக்கலாம். தொழிலில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது, இதனால் நீங்கள் பண நெருக்கடியை உணரலாம். எந்தவொரு முதலீடு அல்லது பணப் பரிவர்த்தனையிலும் காட்டும் சிறு கவனக்குறைவு கூட கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். அவசர முடிவுகள் ஆபத்தை விளைவிக்கும். மேலும், வாகனம் ஓட்டும்போது மிகவும் கவனமாக இருங்கள், சிறு கவனக்குறைவும் விபத்துக்கு வழிவகுக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மீன ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சியின் தாக்கம் சில கடினமான சூழல்களைக் கொண்டு வரலாம். நிதி விஷயங்களில் நிலையற்ற தன்மை இருக்கலாம், எனவே தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பது முக்கியம். இந்தக் காலகட்டத்தில் உங்கள் பேச்சு மிக முக்கியப் பங்கு வகிக்கும், ஏனெனில் ஒரு சிறிய தவறு கூட உறவுகளில் விரிசலை உண்டாக்கும். குடும்ப உறுப்பினர்கள் அல்லது நெருங்கியவர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். இதுபோன்ற சமயங்களில், நிலைமை மோசமாகாமல் இருக்க பொறுமையுடனும் புத்திசாலித்தனத்துடனும் செயல்படுங்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;புதன் பெயர்ச்சியால் ஏற்படும் அசுப விளைவுகளை குறைக்க கீழ்க்கண்ட சில வழிபாட்டு முறைகளை பின்பற்றலாம். புதன் கிரகத்தின் அதிபதியாக மகாவிஷ்ணு விளங்கி வருகிறார். எனவே புதன்கிழமை விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது அல்லது கேட்பது மிகச் சிறந்த பலன்களைத் தரும். மதுரை மீனாட்சி அம்மனை மனதார நினைத்து வழிபடுவது கல்வியிலும், வியாபாரத்திலும் உள்ள தடைகளை நீக்கும். நவகிரக சன்னதியில் புதனுக்கு பச்சை பட்டு உடுத்தி, வெண் காந்தள் மலர்களால் அர்ச்சனை செய்யலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;புதன்கிழமை அன்று ஏழை எளியவர்களுக்கு பச்சைப்பயிறு தானம் செய்வது புதனின் தோஷத்தை பெருமளவு குறைக்க உதவும். புதன்கிழமைகளில் பசு மாட்டிற்கு அகத்திக்கீரை அல்லது பச்சைப்புல் தருவது புண்ணியத்தைத் தரும். புதன்கிழமைகளில் பச்சை நிற காய்கறிகள் அல்லது கீரைகளை ஏழை எளியவர்களுக்கு தானம் செய்வது கிரக பலன்களை மேம்படுத்தும். ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுவது, நோட்டு புத்தகங்கள் வாங்கிக் கொடுப்பது புதன் பகவானின் தீய விளைவுகளை குறைக்கும் &quot;கஜத்வஜாய வித்மஹே சுக ஹஸ்தாய தீமஹி தன்னோ புத: ப்ரசோதயாத்&quot; என்ற காயத்ரி மந்திரங்களை 108 முறை ஜெபிப்பது நன்மை தரும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[astrology]]></category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/mercury-transit-in-aries-2026-unlucky-for-taurus-cancer-pisces-budhan-peyarchi-in-mesha-rasi-brings-bad-luck-to-3-zodiac-oynd2gz"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ரிஷபம் முதல் துலாம் வரை: பிறப்பிலேயே ராஜயோகம் கொண்ட ராசிகள் இவைதான்! உங்கள் ராசி இதில் இருக்கா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/from-taurus-to-libra-most-powerful-and-rich-zodiac-signs-in-tamil-astrology-z8r7879</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/from-taurus-to-libra-most-powerful-and-rich-zodiac-signs-in-tamil-astrology-z8r7879</guid>
            <pubDate>Tue, 28 Apr 2026 17:55:29 +0530</pubDate>
            <description><![CDATA[Rich Zodiac Signs in Tamil Astrology: ஜோதிட ரீதியாக ரிஷபம் முதல் துலாம் வரை உள்ள ராசிகளில், சிலருக்கு மட்டும் எப்போதுமே ராஜவாழ்க்கை அமைகிறது. இதற்குப் பின்னால் இருக்கும் கிரகங்களின் ரகசியம் என்ன? எந்த ராசிக்காரர்கள் ஆடம்பர வாழ்வில் திளைப்பார்கள்?]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kfarp0c6vr8vb751dc8dpdpc,imgname-1-1768814215558.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;Rich Zodiac Signs in Tamil Astrology: &lt;/strong&gt;ஜோதிட ரீதியாக ரிஷபம் முதல் துலாம் வரை உள்ள ராசிகளில், சிலருக்கு மட்டும் எப்போதுமே ராஜவாழ்க்கை அமைகிறது. இதற்குப் பின்னால் இருக்கும் கிரகங்களின் ரகசியம் என்ன? எந்த ராசிக்காரர்கள் ஆடம்பர வாழ்வில் திளைப்பார்கள்?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜோதிட ரீதியாக ரிஷபம் முதல் துலாம் வரை உள்ள ராசிகளில், சில ராசியினருக்கு மட்டும் எப்போதுமே ராஜவாழ்க்கை அமைகிறது. இதற்குப் பின்னால் இருக்கும் கிரகங்களின் ரகசியம் என்ன? எந்த ராசிக்காரர்கள் அதிகாரம் மற்றும் ஆடம்பர வாழ்வில் திளைப்பார்கள்? என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;கன்னி ராசிக்கு ராஜயோகம்! 2026 குரு பெயர்ச்சியால் பணமழை பொழியப்போகுது.. அதிர்ஷ்டம் அள்ளப்போகும் கன்னி ராசியினர் நீங்களா?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரிஷப ராசிக்காரர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இந்த ராசியின் அதிபதி சுக்கிரன் . சுக்கிரனின் ஆசீர்வாதத்தால், செல்வம், ஆடம்பரங்கள் மற்றும் பணத்திற்குப் பஞ்சம் இருக்காது. மேலும், இந்த ராசிக்காரர்களின் ஆளுமை கவர்ச்சிகரமானது. அவர்கள் பணம் சம்பாதிப்பது மட்டுமல்லாமல், ஆடம்பரமான வாழ்க்கையையும் வாழ்கிறார்கள். இந்த ராசிக்கு எப்போதும் விஷ்ணுவின் சிறப்பு ஆசீர்வாதங்கள் உண்டு. இதனால், அவர்கள் எந்த வலியாலும் பாதிக்கப்படுவதில்லை, மகிழ்ச்சி எப்போதும் அவர்களுடன் இருக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன் . இந்த ராசிக்காரர்கள் எப்போதும் நல்ல முடிவுகளை எடுப்பார்கள். மேலும், இந்த ராசிக்காரர்கள் மிகவும் புத்திசாலிகள். அவர்களால் எந்தப் பிரச்சனையையும் நன்றாகக் கையாள முடியும். எந்தச் சிரமமும் இல்லாமல் அதிலிருந்து அவர்களால் வெளியே வர முடியும். மேலும், அவர்கள் வியாபாரத்திலும் வேலையிலும் எப்போதும் பெரும் லாபம் பெறுவார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;துலாம் ராசி 2026 குரு பெயர்ச்சி பலன்: குருவின் பார்வை பட்டாச்சு.. இனி தொட்டதெல்லாம் பொன்னாகும்; பணமழை பொழியும்!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிம்ம ராசிக்காரர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவர்களிடம் பணத்திற்குப் பற்றாக்குறை இருக்காது. இந்த ராசிக்காரர்களுக்கு அதிக தன்னம்பிக்கையும் உண்டு. தலைமைப் பண்புகளும் அவர்களிடம் ஏராளமாக உள்ளன. அவர்கள் தங்கள் பொறுப்புகளைக் கவனமாக நிறைவேற்றுவார்கள். அவர்கள் கடினமாக உழைத்து நல்ல பலன்களைப் பெறுவார்கள். லட்சுமி தேவியின் அருளால், இந்த ராசிக்காரர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஸ்ரீ சூக்தத்தை தவறாமல் படித்தால், மேலும் மங்களகரமான பலன்களைப் பெறலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கடக ராசிக்காரர்கள் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவர்கள் எப்போதும் கடினமாக உழைப்பார்கள். அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அதிர்ஷ்டமும் அவர்களைத் தேடி வரும். நிதிப் பிரச்சனையும் இருக்காது. விஷ்ணுவின் அருளால், இந்த ராசிக்காரர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். பணத்திற்குப் பற்றாக்குறை இருக்காது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[astrology]]></category>
            <dc:creator>Rsiva kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/from-taurus-to-libra-most-powerful-and-rich-zodiac-signs-in-tamil-astrology-z8r7879"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ரூ.100 கொடுத்தால் தான் செல்ஃபி.. சிறுவர்களிடம் கண்டிஷன் போட்ட வைபவ் சூர்யவன்ஷி: கடைசியில் ட்விஸ்ட்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/vaibhav-suryavanshi-hilarious-100-rupee-selfie-prank-goes-viral-zeqn3pw</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/vaibhav-suryavanshi-hilarious-100-rupee-selfie-prank-goes-viral-zeqn3pw</guid>
            <pubDate>Tue, 28 Apr 2026 17:43:26 +0530</pubDate>
            <description><![CDATA[Vaibhav Suryavanshi: ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியின் இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி செல்ஃபி எடுக்க வந்த சிறுவர்களிடம் பணம் கேட்ட வீடியோ வைரலாகி வருகிறது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kq9xp8npgc40jcf2508k9f6w,imgname-vaibhav-suryavanshi-asks-money-for-selfie-1777375847094.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Vaibhav Suryavanshi: ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியின் இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி செல்ஃபி எடுக்க வந்த சிறுவர்களிடம் பணம் கேட்ட வீடியோ வைரலாகி வருகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் புயல் 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி, ஏர்போர்ட்டில் விமானத்திற்காகக் காத்திருந்தபோது, அவரிடம் செல்ஃபி கேட்க வந்த இரண்டு சிறுவர்களிடம், 'ஒரு செல்ஃபிக்கு 100 ரூபாய்' என்று ஜாலியாகக் கேட்ட சம்பவம் நடந்திருக்கிறது. இந்த வீடியோ இப்போது சோஷியல் மீடியாவில் செம வைரலாகி, வைபவ்வின் ஹியூமர் சென்ஸைப் பார்த்து ரசிகர்கள் அசந்து போயிருக்கிறார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;ராஜஸ்தான் ராயல்ஸ் அணியே இந்த வீடியோவை தங்களது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்திருக்கிறது. தன்னைவிட சில வயது மட்டுமே சிறியவர்களாக இருக்கும் அந்த இரண்டு சிறுவர்களிடம் வைபவ் சூர்யவன்ஷி ஜாலியாகப் பேசுவதை இந்த வீடியோவில் நீங்கள் பார்க்க முடியும். அதாவது அந்த வீடியோவில், ஏர்போர்ட்டில் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மற்ற வீரர்கள் அமர்ந்திருக்கிறார்கள். அப்போது அங்கு வரும் இரண்டு சிறுவர்கள், வைபவ் சூர்யவன்ஷியிடம் செல்ஃபி கேட்கிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதற்கு வைபவ், &quot;நான் யாருக்கும் இலவசமா செல்ஃபி கொடுக்கறது இல்ல. ஒரு செல்ஃபிக்கு 100 ரூபாய் வாங்குவேன். நீங்க 100 ரூபாய் கொடுத்தா, செல்ஃபி எடுத்துக்கலாம்&quot; என்று சீரியஸாகச் சொல்கிறார். இதைக் கேட்டதும் அந்த சிறுவர்கள் சில நொடிகள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு, பிறகு 200 ரூபாயை கையில் எடுத்து, &quot;எங்க ரெண்டு பேருக்கும் உங்ககூட செல்ஃபி வேணும்&quot; என்று பணத்தை வைபவ் சூர்யவன்ஷியிடம் கொடுக்க முயல்கிறார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;உடனே வைபவ், &quot;அடேய் தம்பி, சும்மா ஜோக் பண்ணேன்&quot; என்று சிரித்துக்கொண்டே, அந்த இரண்டு சிறுவர்களுடனும் செல்ஃபி எடுத்துக்கொண்டார். இந்த வீடியோ இப்போது பயங்கர வைரலாகி வருகிறது. வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், &quot;குழந்தைகள், தங்களது வயதை ஒத்த பையனிடம் செல்ஃபி கேட்கிறார்கள்&quot; என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வைபவ் சூர்யவன்ஷியின் கிரிக்கெட் சாதனையைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், சமீபத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், வெறும் 36 பந்துகளில் தனது இரண்டாவது ஐபிஎல் சதத்தை அடித்தார். இது ஐபிஎல் வரலாற்றில் 3வது அதிவேக சதம் ஆகும். சூர்யவன்ஷியின் இந்த பேட்டிங், எஸ்.ஆர்.ஹெச் கேப்டன் பாட் கம்மின்ஸின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&quot;அவர்தான் என்னோட புது ஃபேவரைட் பிளேயர்னு நினைக்கிறேன். பந்தை ரொம்ப பலமா அடிக்கிறார். அதைப் பார்க்கவே நன்றாக உள்ளது. ஒரு பவுலரா நீங்கள் சரியாக பந்து வீசவில்லை என்றால் அது ரொம்ப தூரம் போகும். சூர்யவன்ஷியோட ஆட்டம் ரொம்பவே பிரமாதமாக உள்ளது. அவரோட கரியருக்கு ஒரு நல்ல தொடக்கத்தைக் கொடுத்திருக்கார். ஆட்டத்தை அவரே முன்னெடுத்துச் செல்கிறார்&quot; என்று கம்மின்ஸ் பாராட்டியுள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;இந்த சீசனில் வைபவ் சூர்யவன்ஷி இதுவரை எட்டு போட்டிகளில் 44.63 சராசரியுடன், 234.87 ஸ்ட்ரைக் ரேட்டில் 357 ரன்கள் எடுத்துள்ளார். இந்த ஐபிஎல் தொடரில் அவர் 31 பவுண்டரிகள் மற்றும் 32 சிக்ஸர்களை விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[sports-cricket]]></category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/vaibhav-suryavanshi-hilarious-100-rupee-selfie-prank-goes-viral-zeqn3pw"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Nagamani : பாம்பின் தலையில் இருந்து விழுந்த கல்.! நாகமணியாக வழிபடும் மக்கள்.! உண்மையில் நாகமணி இருக்கிறதா? உண்மை என்ன?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/spiritual/nagamani-stone-real-or-myth-rumours-about-a-stone-falling-from-a-snake-head-nagamani-truth-and-scientific-explanation-mqdd3as</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/spiritual/nagamani-stone-real-or-myth-rumours-about-a-stone-falling-from-a-snake-head-nagamani-truth-and-scientific-explanation-mqdd3as</guid>
            <pubDate>Tue, 28 Apr 2026 17:30:05 +0530</pubDate>
            <description><![CDATA[Nagamani Stone Real or Myth : சமீபத்தில் பீகார் மாநிலத்தில் பாம்பின் தலையில் இருந்து ஒரு கல் விழுந்ததாகவும், அது நாகமணியாக இருக்கக்கூடும் என்று தகவல் பரவி வருகிறது. அதன் உண்மைத்தன்மை குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kq9z4qr56p45d01yhz7wwh9m,imgname-nagamani-stone-real-or-myth--1--1777377369860.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Nagamani Stone Real or Myth : சமீபத்தில் பீகார் மாநிலத்தில் பாம்பின் தலையில் இருந்து ஒரு கல் விழுந்ததாகவும், அது நாகமணியாக இருக்கக்கூடும் என்று தகவல் பரவி வருகிறது. அதன் உண்மைத்தன்மை குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள சாஹேப்கஞ்ச் என்கிற பகுதியில் பள்ளி ஒன்றில் சில தினங்களுக்கு முன்பு பாம்பு ஒன்று புகுந்துள்ளது. அந்த பாம்பை பிடிக்கச் சென்ற பொழுது, அதன் தலையில் இருந்து படிகம் போன்ற ஒரு பொருள் விழுந்ததாக கூறப்படுகிறது. அந்த பொருள் பிளாஸ்டிக் போல தோன்றினாலும், அப்பகுதி மக்கள் அதை நாகமணி என்று நம்புகின்றனர். இதன் காரணமாக அந்த நாகமணியை பார்க்கவும், அதை வழிபடவும் அந்த பகுதியில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதைத்தொடர்ந்து நாகமணி என்று ஒன்று உள்ளதா? இந்து புராணங்கள் இதிகாசங்களில் கூறப்பட்டுள்ளது என்ன? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்து மத மரபுகளில் நாகங்கள் முக்கிய தெய்வமாக வழிபடப்படுகிறது. நாகமணி குறித்த ஏராளமான குறிப்புகள் இந்து புராணங்கள், இதிகாசங்கள் மற்றும் பிற கதைகளில் காரணப்படுகின்றன. மகாபாரதம், கருட புராணம் போன்ற நூல்களில் நாகலோகம் பற்றியும், அங்கு நாகராஜாக்களின் தலைகளில் விலைமதிப்பற்ற ரத்தினங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நாகமணிகள் இரவில் பிரகாசமாக ஒளிரும் என்றும், அவற்றை வைத்திருப்பவர்களுக்கு அளவற்ற செல்வ செழிப்பும், ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும், எதிரிகளை வெல்லும் சக்தியும் கிடைக்கும் என நம்பப்படுகிறது. எனவே இந்த நாகமணிகளை எடுப்பதற்காக சிலர் நாகங்களை கொல்லும் செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்து மதத்தின் கூற்றுகளின் படி நாகங்கள் தாமாக வந்து சிலருக்கு நாகமணிகளை வழங்குமென்றும், சில சமயங்களில் கோபமடைந்த நாகங்கள் நாகமணிகளை தாமாக உமிழ்ந்து விடும் என்று கூறப்படுகிறது. ஆனால் அறிவியல் ரீதியாக பார்த்தால் பாம்புகளின் தலையில் ஜொலிக்கும் கல் போன்ற பொருள் இருப்பதற்காகவோ அல்லது நாகமணி இருப்பதற்காகவோ எந்தவித ஆதாரமும் இல்லை. உயிரியலாளர்கள், விஞ்ஞானிகள் ஊர்வன ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் நாகமணி குறித்த தகவல்களை முழுமையாக மறுக்கின்றனர். பாம்புக்கு தலையில் கல்போன்ற பொருளை சுமக்கும் அம்சமோ அல்லது கல்லை வெளியிடும் அம்சங்களோ இல்லை என விஞ்ஞானிகள் ஆணித்தரமாக கூறுகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மற்ற உயிரினங்களைப் போலவே பாம்புகளின் உடலும் செதில்கள், எலும்புகள், தசைகள் மற்றும் பிற உறுப்புகளைக் கொண்டவை. அவற்றின் தலைப்பகுதியில் ரத்தினங்கள் உருவாகும் வாய்ப்புகள் இல்லை என்று உயிரியலாளர்கள் கூறுகின்றனர். சில சமயங்களில் பாம்புகள் தங்கள் வாழ்விடங்களில் இருந்து பளபளப்பான கற்கள் அல்லது கண்ணாடி துண்டுகளை சுமந்து வந்திருக்கலாம், தவறுதலாக அவை கீழே விழும் பொழுது அதை நாகமணியாக கருதி இருக்கலாம் என்று கூறுகின்றனர். ஒளிரும் பண்புகளைக் கொண்ட சில தாதுக்கள் அல்லது பாறைகள் இரவில் வெளிச்சத்தை பிரதிபலிக்க கூடும். இது போன்ற இடங்களில் பதுங்கி இருக்கும் பாம்புகளில் தாதுக்கள் ஒட்டிக்கொண்டிருக்கும் பொழுது அது நாகமணி என்று தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நாகமணி குறித்து பல கட்டுக்கதைகள் நம் நாட்டில் நிலவுகின்றன. நாகமணி இருப்பதாக கூறி பல மோசடிகளும் நடைபெற்றிருக்கின்றன. ஒளிரும் தன்மையுள்ள, இரசாயனம் பூசப்பட்ட கற்கள் அல்லது செயற்கையான கற்களை நாகமணி என்று கூறி பலர் மக்களை ஏமாற்றி பணம் பறித்துள்ளனர். அறிவியலாளர்களின் கருத்துப்படி நாகமணி என்கிற ஒரு பொருள் உண்மையில் கிடையாது. பீகாரில் நடந்த சம்பவத்தைப் பொறுத்தவரை, அது பல வழிகளில் விளக்கப்படுகிறது. மக்கள் மத்தியில் பாம்புகள் குறித்து ஆழமாக வேரூன்றிய பயம் மற்றும் நாகமணி குறித்த நம்பிக்கை இதுபோன்ற சம்பவங்களை உண்மை என நம்ப வைக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பாம்பு அசைந்த பொழுது அதன் அருகில் இருந்த பளபளப்பான பொருள் தற்செயலாக கீழே விழுந்து இருக்கலாம். அது பாம்பு தலையிலிருந்து விழுவது போல தோன்றி இருக்கலாம் அல்லது மண்ணில் புதைந்த ஒரு சாதாரண கல் அல்லது கனிமம் பாம்பின் அசைவால் வெளிப்பட்டிருக்கலாம். சில சமயங்களில் பரபரப்பு அல்லது வைரலுக்காக இதுபோன்ற கட்டுக்கதைகள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது. இதை வைத்து மோசடி செய்யும் எண்ணமும் சிலருக்கு இருந்திருக்கலாம். ஆனால் அறிவியல் ரீதியாக நாகமணி ஒரு கற்பனையான விஷயம் என்று ஆராய்ச்சியாளர்கள் இதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பீகாரில் நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவம் மக்கள் மத்தியில் நிலவும் ஆழ்ந்த நம்பிக்கையின் வெளிப்பாடாகும். இது தற்செயலான நிகழ்வின் புரிதலாக இருக்கலாம். இது போன்ற அமானுஷ்ய நிகழ்வுகளை பகுத்தறிவு மற்றும் அறிவியல் மனப்பான்மையுடன் அணுக வேண்டியது அவசியம். எந்த ஒரு நம்பத்தகாத விஷயத்தையும் ஆராய்ந்து அதன் உண்மை நிலையை அறிந்து கொள்வது என்பது, தவறான தகவல்களை பரப்புவதை தடுப்பதற்கும், மோசடிகள் நிகழாமல் இருப்பதற்கும் உதவும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[spiritual]]></category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/spiritual/nagamani-stone-real-or-myth-rumours-about-a-stone-falling-from-a-snake-head-nagamani-truth-and-scientific-explanation-mqdd3as"/>
        </item>
        <item>
            <title><![CDATA[இவன ஏன் இந்திய அணியில் எடுக்கல... ஆர்சிபி பிளேயருக்காக வக்காலத்து வாங்கிய ஸ்ரீகாந்த்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/sports/krishnamachari-srikkanth-slams-selectors-for-ignoring-bhuvneshwar-kumar-695wsyv</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/sports/krishnamachari-srikkanth-slams-selectors-for-ignoring-bhuvneshwar-kumar-695wsyv</guid>
            <pubDate>Tue, 28 Apr 2026 17:13:11 +0530</pubDate>
            <description><![CDATA[ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்துவீசி வரும் ஆர்சிபி வீரரை இந்திய அணியில் இருந்து புறக்கணிப்பது ஏன் என முன்னாள் தேர்வுக்குழு தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kq728pkvzmvkzvem7ra918a9,imgname-dc-vs-rcb-1777279982202.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்துவீசி வரும் ஆர்சிபி வீரரை இந்திய அணியில் இருந்து புறக்கணிப்பது ஏன் என முன்னாள் தேர்வுக்குழு தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பெங்களூரு: ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக வெறும் 5 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, பர்ப்பிள் கேப் வென்ற வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரை ஏன் இந்திய அணிக்கு தேர்வு செய்யவில்லை என்று முன்னாள் தலைமை தேர்வாளர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;தன்னுடைய யூடியூப் சேனலில் பேசிய அவர், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான புவனேஷ்வரின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது என்று குறிப்பிட்டார். &quot;சீம், ஸ்விங்னு ரெண்டையும் வெச்சு பேட்ஸ்மேன்களை இன்னைக்கும் மிரட்ட புவனேஷ்வரால முடியும். இவ்வளவு நல்ல ஃபார்ம்ல இருக்குற ஒரு வீரர் இந்திய அணியில் இல்லை என்பதை நம்பவே முடியல.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தன்னோட முதல் ஸ்பெல்லிலேயே ஆட்டத்தை திசை திருப்பும் திறமை அவருக்கு இருக்கு. 2022 டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் ஒரு மோசமான ஸ்பெல் வீசியதுதான், அவர் இந்திய அணியிலிருந்து வெளியேறக் காரணமா அமைஞ்சது. ஆனா, அதுக்கப்புறமும் ஐபிஎல்ல தொடர்ச்சியா நல்லா பர்ஃபார்ம் பண்ணியும், செலக்டர்ஸ் அவரை கண்டுக்காம இருக்குறது ஆச்சரியமா இருக்கு,&quot; என்று ஸ்ரீகாந்த் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த சீசனில் புவனேஷ்வர் குமார் இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்ப்பிள் கேப் வைத்துள்ளார். அவருடைய பவுலிங் சராசரி 17-க்கும் குறைவாகவும், எகானமி ரேட் 7.61 ஆகவும் இருக்கிறது. புவனேஷ்வர் குமார் பவர்-பிளே மற்றும் டெத் ஓவர்களில் அபாரமாக பந்துவீசி, எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்து வருகிறார். குறிப்பாக, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக மூன்று ஓவர்கள் பந்துவீசி, வெறும் 5 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதே சமயம், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றிருந்தாலும், RCB அணியின் தேர்வு குறித்தும் ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார். அணியின் ஆல்-ரவுண்டர் ரொமாரியோ ஷெப்பர்டை பிளேயிங் XI-ல் வைத்திருப்பது குறித்து அவர் காட்டமாகப் பேசியுள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;&quot;RCB-யிடம் ஒரு நல்ல பவுலிங் லைன்-அப் இருக்கு. ஷெப்பர்ட் ஒரு 'லக்கி சார்ம்' மாதிரி இருக்கலாம். போன வருஷம் கப் ஜெயிச்சபோது அவர் டீம்ல இருந்தார், இப்பவும் டீம் ஜெயிக்குது. இந்த அதிர்ஷ்டத்தால மட்டும்தான் ஷெப்பர்ட் டீம்ல இருக்கார். அவருடைய பர்ஃபார்மன்ஸை பார்த்து இல்லை,&quot; என்று ஸ்ரீகாந்த் தெரிவித்தார். இந்த சீசனில் ஷெப்பர்ட் 14.50 என்ற மோசமான எகானமி ரேட்டில் பந்துவீசியுள்ளார். டெல்லிக்கு எதிரான போட்டியில் RCB பந்துவீச்சாளர்கள் ஆட்டத்தை கட்டுக்குள் வைத்திருந்தபோதும், ஷெப்பர்ட் மட்டும் இரண்டு ஓவர்களில் 21 ரன்களை விட்டுக்கொடுத்தார்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறிய RCB:&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, டெல்லி அணியை அவர்களின் சொந்த மண்ணிலேயே 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, தங்களுக்கு ஏற்பட்ட முந்தைய தோல்விக்கு பழிதீர்த்துள்ளது. இந்த வெற்றியின் மூலம், RCB அணி புள்ளிப்பட்டியலில் மீண்டும் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. தற்போது RCB அணி, விளையாடிய எட்டு போட்டிகளில் ஆறு வெற்றிகள் மற்றும் இரண்டு தோல்விகளுடன் 12 புள்ளிகளைப் பெற்றுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[sports]]></category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/sports/krishnamachari-srikkanth-slams-selectors-for-ignoring-bhuvneshwar-kumar-695wsyv"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ரயில் பயணத்தில் கிடைக்கும் 5 இலவச வசதிகள்.. மறக்காம நோட் பண்ணுங்க மக்களே.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/5-free-services-in-indian-railways-every-passenger-should-know-497gxur</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/5-free-services-in-indian-railways-every-passenger-should-know-497gxur</guid>
            <pubDate>Tue, 28 Apr 2026 17:04:05 +0530</pubDate>
            <description><![CDATA[ரயில் டிக்கெட் வாங்கினால் வெறும் பயணம் மட்டும்தான் கிடைக்கும் என்று நினைக்கிறீர்களா? உண்மையில், அதற்கு பின்னால் பலருக்கும் தெரியாத இலவச சலுகைகள் ஒளிந்திருக்கின்றன. அவை என்னென்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01hs5916hnj58e1eqn743s96r2,imgname-asianet-news--10-.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ரயில் டிக்கெட் வாங்கினால் வெறும் பயணம் மட்டும்தான் கிடைக்கும் என்று நினைக்கிறீர்களா? உண்மையில், அதற்கு பின்னால் பலருக்கும் தெரியாத இலவச சலுகைகள் ஒளிந்திருக்கின்றன. அவை என்னென்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவில் தினமும் கோடிக்கணக்கானோர் ரயில் பயணத்தைத் தேர்வு செய்கிறார்கள். குறைந்த செலவில், நீண்ட தூரத்தை சௌகரியமாக கடக்க முடிவதால் ரயில் என்பது பொதுமக்களின் முதன்மை தேர்வாக உள்ளது. ஆனால், ஒரு டிக்கெட் வாங்கிய பிறகு பயணிகளுக்கு கிடைக்கும் சில இலவச வசதிகள் பற்றி பலருக்கும் தெரியாது. இந்திய ரயில்வே வழங்கும் இந்த சலுகைகள், உங்கள் பயணத்தை இன்னும் எளிதாகவும் பாதுகாப்பாகவும் மாற்றுகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரயில் நிலையங்களில் கிடைக்கும் முக்கியமான வசதி &lsquo;வெயிட்டிங் ரூம்&rsquo;. ரயில் தாமதமாக இருந்தாலோ அல்லது நீங்கள் முன்கூட்டியே நிலையத்துக்கு வந்திருந்தாலோ, இங்கு சும்மா உட்கார்ந்து ஓய்வெடுக்கலாம். பல முக்கிய நிலையங்களில் ஈசி மற்றும் நோன்-ஏசி வசதியுடன் வெயிட்டிங் ஹால்கள் உள்ளன. இது பயணிகளுக்கு மிகவும் உதவிகரமானது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்றைய காலத்தில் இணையம் அத்தியாவசியமாகிவிட்டது. இதை கருத்தில் கொண்டு, பல ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வசதி வழங்கப்படுகிறது. இதன் மூலம், உங்கள் மொபைல் டேட்டாவை பயன்படுத்தாமல் ரயில் ஸ்டேட்டஸ் பார்க்கலாம், ஆன்லைன் வேலைகளை முடிக்கலாம். குறிப்பாக சிக்னல் பிரச்சனை இருக்கும் இடங்களில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஏசி கோச்சில் பயணம் செய்யும் பயணிகளுக்கு ரயில்வே சார்பில் படுக்கை, தலையணை, கம்பளி போன்றவை இலவசமாக வழங்கப்படுகின்றன. இதற்காக தனியாக கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. குறிப்பாக இரவு பயணங்கள், குளிர்காலம் அல்லது மழைக்காலத்தில் இந்த வசதிகள் பயணத்தை மிகவும் சௌகரியமாக மாற்றுகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பயணத்தின் போது உடல்நலக் குறைவு ஏற்பட்டால் கூட, ரயில்வே உதவிக்குத் தயாராக இருக்கும். அவசர நிலைகளில் மருத்துவ உதவி வழங்கப்படும். தேவையானால் அடுத்த நிலையத்தில் மருத்துவர் ஏற்பாடு செய்யப்படும். இதனால் பயணிகள் பாதுகாப்பாக இருப்பார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேலும், பயணத்தின் போது ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் டிடிஇ, கோச் அட்டெண்டண்ட் மற்றும் ரயில்வே ஹெல்ப்லைன் மூலம் உதவி பெறலாம். குறிப்பாக பெண்கள், முதியவர்கள், குழந்தைகளுக்கு இந்த சேவைகள் மிகவும் முக்கியமானவை. இந்த இலவச வசதிகளை தெரிந்து கொண்டு பயன்படுத்தினால், உங்கள் ரயில் பயணம் இன்னும் நிம்மதியாகவும் பாதுகாப்பாக இருக்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[business]]></category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/5-free-services-in-indian-railways-every-passenger-should-know-497gxur"/>
        </item>
        <item>
            <title><![CDATA[TVK Vijay | மீண்டும் தொடங்கும் விஜய் ஆட்டம்.! தளபதியின் தலைமையின் கீழ் மாறும் தமிழக அரசியல்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/tvk-vijay-s-next-move-shaping-tamil-nadu-politics-videoshow-a1bgb21</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/tvk-vijay-s-next-move-shaping-tamil-nadu-politics-videoshow-a1bgb21</guid>
            <pubDate>Tue, 28 Apr 2026 17:02:37 +0530</pubDate>
            <description><![CDATA[]]></description>
            <media:content url="https://geo.dailymotion.com/player/x1tbu.html?video=xa7as5g" medium="video" height="768" width="1024"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தவெக 100 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. இதனால், திமுக, அதிமுக கூட்டணிகளில் உள்ள கட்சிகள் விஜய்யுடன் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தி, தொங்கு சட்டமன்றம் ஏற்பட்டால் அவரை முதல்வராக்கத் திட்டமிடுவதாகத் தெரிகிறது. தமிழக அரசியல் களம் பல தசாப்தங்களாகத் திராவிடக் கட்சிகளின் கோட்டையாக இருந்து வருகிறது. அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற ஆளுமைகளுக்குப் பிறகு ஒரு பெரும் அரசியல் வெற்றிடத்தை நோக்கித் தமிழகம் நகர்ந்தபோது, அந்த இடத்தைப் பூர்த்தி செய்யப் போவது யார் என்ற கேள்வி எழுந்தது. தற்போது அந்த இடத்தைத் தனது &quot;தமிழக வெற்றிக் கழகம்&quot; (TVK) மூலம் நடிகர் விஜய் பிடிப்பார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. சமீபத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளும், அரசியல் நகர்வுகளும் தமிழகத்தின் பாரம்பரிய அதிகார மையங்களை ஆட்டம் காணச் செய்துள்ளன.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[tamilnadu]]></category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/tvk-vijay-s-next-move-shaping-tamil-nadu-politics-videoshow-a1bgb21"/>
        </item>
        <item>
            <title><![CDATA[அமைச்சர் கே.என். நேரு வழக்கில் திடீர் திருப்பம்.. அதிர்ச்சி கொடுத்த சென்னை உயர்நீதிமன்றம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/chennai-high-court-has-not-issued-any-order-to-file-a-case-against-minister-nehru-0wuv750</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/chennai-high-court-has-not-issued-any-order-to-file-a-case-against-minister-nehru-0wuv750</guid>
            <pubDate>Tue, 28 Apr 2026 17:01:50 +0530</pubDate>
            <description><![CDATA[KN Nehru Case: அமைச்சர் கே.என்.நேரு மீது அமலாக்கத் துறை வழங்கிய தகவல்கள் வெறும் புகார் அல்ல. சோதனையின் அடிப்படையில் கிடைத்த ஆதாரங்கள் என்பதால் உடனடியாக வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k069qy3v7km2e2e9shj1rc8b,imgname-kn-nehru-1752558205051.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;KN Nehru Case: அமைச்சர் கே.என்.நேரு மீது அமலாக்கத் துறை வழங்கிய தகவல்கள் வெறும் புகார் அல்ல. சோதனையின் அடிப்படையில் கிடைத்த ஆதாரங்கள் என்பதால் உடனடியாக வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட 2,538 பணியிடங்களுக்கு 25 லட்சம் ரூபாய் முதல் 35 லட்​சம் ரூபாய் வரை லஞ்​சப் பணம் வசூலிக்​கப்​பட்​டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை கடந்த 2025 அக்டோபர் 27-ம் தேதி கடிதம் ஒன்றை அனுப்​பியது. இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் இந்த கடிதத்தின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி அதிமுக எம்.பி. இன்பதுரை மற்றும் மதுரையைச் சேர்ந்த ஆதி​நா​ராயணன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அமலாக்கத் துறை வழங்கிய தகவல்கள் வெறும் புகார் அல்ல. அது சோதனையின் அடிப்படையில் கிடைத்த ஆதாரங்கள் என்பதால் உடனடியாக வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆனால் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் வழக்குப்பதிவு செய்யாத லஞ்ச ஒழிப்புத் துறைக்கு எதிராக அதிமுக எம்.பி. இன்பதுரை நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்தார். அதேபோல் அதிகாரிகள் நியமன முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசும், அமைச்சர் கே.என். நேரு தரப்பிலும் மறு ஆய்வு செய்யக்கோரி மனுக்கள் தாக்கல் செய்தனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த அனைத்து வழக்குகளும், தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கே.என்.நேரு தரப்பில், வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கும் முன் தனது தரப்பில் வாதங்களை முன் வைக்க வாய்ப்பளிக்கப்படவில்லை என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனகுறிப்பிட்டு உத்தரவில் கூறவில்லை. முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்யவே உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேலும், இந்த வழக்கில் விரிவான வாதங்கள் வைக்க வேண்டும் என்பதால், விசாரணையை கோடை விடுமுறைக்கு பின் ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். அதுவரை வழக்குப்பதிவு செய்ய பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் எனக் கோரப்பட்டது. இதையடுத்து, அரசு மற்றும் கே.என்.நேருவின் மறு ஆய்வு மனுக்களையும், இன்பதுரையின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் ஜூன் 4-வது வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[tamilnadu]]></category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/chennai-high-court-has-not-issued-any-order-to-file-a-case-against-minister-nehru-0wuv750"/>
        </item>
        <item>
            <title><![CDATA[chitra pournami girivalam சித்ரா பெளர்ணமி அன்று திருவண்ணாமலை கிரிவலம் செல்வதன் ஆன்மீக, அறிவியல் ரகசியங்கள்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/spiritual/chitra-pournami-2026-tiruvannamalai-girivalam-spiritual-and-scientific-significances-articleshow-e4gtcnw</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/spiritual/chitra-pournami-2026-tiruvannamalai-girivalam-spiritual-and-scientific-significances-articleshow-e4gtcnw</guid>
            <pubDate>Tue, 28 Apr 2026 16:43:10 +0530</pubDate>
            <description><![CDATA[திருவண்ணாமலை, நினைத்தாலே முக்தியை தரும் புண்ணிய தலம், பஞ்சபூத தலங்களில் அக்னி தலம், எத்தனையோ பழமையான சிவன் கோவில்கள் இருந்தாலும், திருவண்ணாமலையில் மலையை வலம் வரும் கிரிவல வழிபாடு முக்தியை தரும் என்பது நம்பிக்கை. சித்தர்களின் பூமியாகவும், ஆன்மீக பூமியாகவும் கருதப்படும் இங்கு சித்ரா பெளர்ணமி அன்று கிரிவலம் வருவதன் பலன்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kb3yjww59yavktt4kzyc1eh4,imgname-tv-imresizer-1764290556805.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;திருவண்ணாமலை என்றதுமே நம் நினைவுக்கு வருவது கோவிலின் பின்புறம் உள்ள உயரமான மலை, அதை சுற்றி வந்து வழிபடும் பக்தர்கள் தான். திருவண்ணாமலையில் மாதந்தோறும் பௌர்ணமி கிரிவலம் சென்றாலும், சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பௌர்ணமி அன்று மேற்கொள்ளப்படும் கிரிவலத்திற்கு ஒரு தனித்துவமான ஈர்ப்பு உண்டு. திருவண்ணாமலையில் வருடத்தின் 365 நாட்களும் எந்த நாளிலும், எந்த நேரத்திலும் கிரிவலம் சென்றாலும் அண்ணாமலையாரின் அருளும், அதற்கான பலனும் கிடைக்கும் என்றாலும் பெளர்ணமி அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். பெளர்ணமி கிரிவலம் பாவங்களை தீர்த்து, புண்ணியங்களை தரும் என சொல்லப்படுகிறது பலரும் அறிந்த ஆன்மீகப் பலன்களுக்கு அப்பால், மறைக்கப்பட்ட ரகசியங்கள் மற்றும் அறிவியல் உண்மைகளை உள்ளடக்கிய பல விஷயங்கள் இதில் மறைந்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;சித்ரா பெளர்ணமி கிரிவலம் ஆன்மீக ரகசியம் :&lt;/p&gt;&lt;p&gt;சித்ரா பௌர்ணமி அன்று சந்திரன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் வேளையில், அண்ணாமலையின் அதிர்வுகள் உச்சகட்டத்தை எட்டுகின்றன. பலரும் அறியாத ஒரு செய்தி என்னவென்றால், இந்த நாளில் கிரிவலம் வரும் போது நாம் வெறும் மலையைச் சுற்றி வரவில்லை; மாறாக 'சித்தர் மண்டலம்' எனப்படும் சூட்சுமப் பாதைக்குள் நுழைகிறோம்.&lt;/p&gt;&lt;p&gt;1. சித்ரகுப்தனின் கணக்கு மாறுதல்: சித்ரா பௌர்ணமி என்பது நம்முடைய பாவ-புண்ணிய கணக்குகளை எழுதும் சித்ரகுப்தனுக்குரிய நாள். அன்று கிரிவலம் வந்து அண்ணாமலையாரைத் தரிசித்தால், ஒருவருடைய கடுமையான கர்ம வினைகளில் கூட மாற்றங்கள் நிகழும் என்பது சித்தர்கள் வாக்கு.&lt;/p&gt;&lt;p&gt;2. நிழல் இல்லாத தரிசனம்: அன்று மலையைச் சுற்றும் போது மனதால் இறைவனை மட்டுமே நினைப்பவர்களுக்கு, அகங்காரம் எனும் 'நிழல்' மறையத் தொடங்கும். இது வெறும் குறியீடு மட்டுமல்ல, ஆன்மாவின் தூய்மையை உணர்த்தும் ஒரு நுட்பமான ஆன்மீக நிலை.&lt;/p&gt;&lt;p&gt;3. மறைக்கப்பட்ட அறிவியல் ரகசியங்கள் : அண்ணாமலை என்பது வெறும் கல் மற்றும் மண் சார்ந்த மலை அல்ல; இது ஒரு அணைந்த எரிமலை. இங்கு சிவபெருமானே ஜோதி வடிவமாக, மலையின் ரூபமாக வீற்றிருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள். சித்ரா பௌர்ணமி கோடைக் காலத்தின் தொடக்கத்தில் வருவதால், சூரியனின் வெப்பம் மலையில் உள்ள பாறைகளில் ஊடுருவி இருக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;4. அரிய வாயுக்களின் வெளிப்பாடு: பௌர்ணமி நிலவின் ஈர்ப்பு விசை காரணமாக, மலையின் இடுக்குகளில் உள்ள அரிய வகை மூலிகைகளிலிருந்து பிராண வாயுவும், லேசான அளவில் 'ரேடான்' (Radon) போன்ற வாயுக்களும் கசிகின்றன. இவை மனித உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டி, நுரையீரல் தொடர்பான குறைபாடுகளைச் சீர்செய்யும் 'இயற்கை ஏரோசல்' போலச் செயல்படுகின்றன.&lt;/p&gt;&lt;p&gt;5. மூளை அலைகளின் மாற்றம் : திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பல இடங்களில் காந்தப் புலங்கள் மாறுபடுகின்றன. சித்ரா பௌர்ணமி நிலவின் ஒளியில் இந்த காந்தப்புலங்கள் நம் மூளையில் உள்ள 'பீனியல் சுரப்பியை' ஊக்கப்படுத்துகின்றன. இதனால் மன அழுத்தம் குறைந்து, ஆழ்ந்த அமைதி கிடைக்கிறது. இது பலருக்குத் தெரியாத ஒரு நரம்பியல் உண்மை.&lt;/p&gt;&lt;p&gt;ஏன் இந்த நாளில் கிரிவலம் வர வேண்டும்?&lt;/p&gt;&lt;p&gt;&lt;img&gt;&lt;/p&gt;&lt;p&gt;மூலிகை குளியல்: கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்கங்களுக்கு அருகே வீசும் காற்று, அந்தந்த திசையில் வளரும் குறிப்பிட்ட மூலிகைகளின் வாசனையைச் சுமந்து வரும். சித்ரா பௌர்ணமி இரவில் வீசும் இந்தக் காற்று நம் தோலில் உள்ள துவாரங்கள் வழியாக உட்சென்று இரத்தத்தைச் சுத்திகரிக்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;கால சுழற்சி சீரமைப்பு: பெண்களின் ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் மனச்சோர்வு நீங்க சித்ரா பௌர்ணமி கிரிவலம் ஒரு சிறந்த மருந்தாகக் கருதப்படுகிறது. நிலவின் முழுமையான ஒளி உடலின் 'சர்க்காடியன் ரிதம்' எனும் உயிரியல் கடிகாரத்தைச் சீரமைக்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;அண்ணாமலையில் கிரிவலம் வருவது என்பது ஒரு உடற்பயிற்சியோ அல்லது சடங்கோ அல்ல; அது ஒரு 'உயிர்ப்பியல் மாற்றம்'. சித்ரா பௌர்ணமி அன்று அண்ணாமலையார் மலையாகவே அமர்ந்து நமக்கு அருள்பாலிக்கிறார். அன்று நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் நம்முடைய பழைய எதிர்மறை எண்ணங்களை அழித்து, புதிய ஆற்றலை நமக்குள் விதைக்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[spiritual]]></category>
            <dc:creator>Priya Velan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/spiritual/chitra-pournami-2026-tiruvannamalai-girivalam-spiritual-and-scientific-significances-articleshow-e4gtcnw"/>
        </item>
        <item>
            <title><![CDATA[தொழிலாளர்களுக்கு ஜாக்பாட்.. இனி 15 நிமிடம் கூடுதலா வேலை பார்த்தாலும் இரட்டை சம்பளம்..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/india/new-wage-code-double-pay-for-overtime-and-higher-pf-a-win-for-employees-h33l5dp</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/india/new-wage-code-double-pay-for-overtime-and-higher-pf-a-win-for-employees-h33l5dp</guid>
            <pubDate>Tue, 28 Apr 2026 16:24:58 +0530</pubDate>
            <description><![CDATA[புதிய ஊதியச் சட்டத்தின் கீழ் அடிப்படை சம்பளம் 50% உயர்த்தப்படுவதால் வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதிய பலன்கள் கணிசமாக அதிகரிக்கும். மேலும், நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு மேல் 15 நிமிடங்கள் பணிபுரிந்தாலும் அதற்கு இரட்டிப்பு ஊதியம் வழங்கப்பட வேண்டும்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kq9v8779acd0d1sxw21cm6br,imgname-gemini-generated-image-31pi8z31pi8z31pi-1777373289705.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;புதிய ஊதியச் சட்டத்தின் கீழ் அடிப்படை சம்பளம் 50% உயர்த்தப்படுவதால் வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதிய பலன்கள் கணிசமாக அதிகரிக்கும். மேலும், நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு மேல் 15 நிமிடங்கள் பணிபுரிந்தாலும் அதற்கு இரட்டிப்பு ஊதியம் வழங்கப்பட வேண்டும்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;புதிய ஊதியச் சட்டத்தின் கீழ், ஊழியர்களின் சம்பளம் மற்றும் கூடுதல் நேர வேலை விதிமுறைகள் தொடர்பாக குறிப்பிடத்தக்க மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இனி, நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு மேல் பணிபுரியும் ஊழியர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்கப்படும், மேலும் கூடுதலாக 15 நிமிடங்கள் வேலை செய்வது கூட கூடுதல் நேரமாகக் கருதப்படும். மொத்த ஊதியத்தில் அடிப்படைச் சம்பளம் குறைந்தபட்சம் 50% ஆக இருக்க வேண்டும் என்று கட்டாயமாக்கப்படுவது, வருங்கால வைப்பு நிதி (PF) மற்றும் பணிக்கொடைப் பங்களிப்புகளை அதிகரிக்க வழிவகுக்கும். இதன் மூலம் எதிர்காலத்தில் ஒரு கணிசமான ஓய்வூதிய நிதி உறுதி செய்யப்படும்; இருப்பினும், இது கையில் கிடைக்கும் சம்பளத்தில் ஒரு சிறிய குறைவை ஏற்படுத்தக்கூடும்.&lt;/p&gt;&lt;p&gt;ஏப்ரல் 1, 2026 அன்று நடைமுறைக்கு வந்த, புதுப்பிக்கப்பட்ட &lsquo;ஊதிய விதிமுறைகளின்&rsquo; அடிப்படையில், ஊழியர்களின் சம்பளம் மற்றும் கூடுதல் நேர வேலைக்கான விதிமுறைகள் தொடர்பாக குறிப்பிடத்தக்க மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இப்போது, தங்களின் திட்டமிடப்பட்ட வேலை நேரத்திற்கு அப்பால் பணிபுரியும் ஊழியர்கள், தங்களின் கூடுதல் நேர வேலைக்கு இரட்டிப்பு ஊதியம் பெறுவார்கள். இந்த முக்கிய சீர்திருத்தத்தின் நோக்கம், ஊதியம் தொடர்பான விதிமுறைகளில் ஒரு சீரான தன்மையைக் கொண்டுவருவது, வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவது மற்றும் அனைத்துத் துறைகளிலும் உள்ள ஊழியர்களின் உரிமைகளை வலுப்படுத்துவது ஆகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;புதிய விதிமுறைகளின்படி, வழக்கமான வேலை நேரத்திற்கு அப்பால் செய்யப்படும் எந்தவொரு வேலையையும் பதிவு செய்வது கட்டாயமாகும், மேலும் அத்தகைய வேலைக்கு வழக்கமான மணிநேர ஊதிய விகிதத்தை விட இருமடங்கு விகிதத்தில் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். நடைமுறையில், இதன் பொருள் என்னவென்றால், நீங்கள் செய்யும் ஒவ்வொரு மணிநேரக் கூடுதல் வேலைக்கும், இரண்டு மணிநேரச் சம்பளத்திற்குச் சமமான ஊதியம் பெறுவீர்கள். இந்த மாற்றம், குறிப்பாக நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டிய &lsquo;நீலக்காலர்&rsquo; ஊழியர்களுக்கு ஒரு பெரிய நிவாரணமாக அமைகிறது.&lt;/p&gt;&lt;p&gt;ஊதிய விதிமுறைகள் வாரத்திற்கு அதிகபட்சமாக 48 மணிநேரம் வேலை செய்வதற்கான வரம்பை நிர்ணயிக்கிறது. இந்த வரம்பிற்கு மேல் செய்யப்படும் எந்த வேலையும் &lsquo;கூடுதல் நேரம்&rsquo; என வகைப்படுத்தப்படும். நிறுவனங்களுக்குப் பணி நேரங்களைத் (இடைவேளைகள் உட்பட 12 மணிநேரம் வரை) தீர்மானிக்கும் நெகிழ்வுத்தன்மை வழங்கப்பட்டிருந்தாலும், வாராந்திர வரம்பான 48 மணிநேரம் எல்லாச் சூழ்நிலைகளிலும் கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தப் புதிய விதியின் மிக முக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்று, மிகைநேர ஊதியத்திற்கான 'சரிசெய்யும்' வழிமுறையாகும். இனி, சிறிய அளவிலான கூடுதல் வேலைகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். ஒரு ஊழியர் தனது பணிநேரம் முடிந்த பிறகு கூடுதலாக 15 முதல் 30 நிமிடங்கள் வரை வேலை செய்தால், அது 30 நிமிட மிகைநேர ஊதியமாகக் கருதப்படும். இதன் மூலம், பணிநேரம் முடிந்த பிறகும் தங்கி வேலை செய்யும் ஊழியர்கள், தங்களது கூடுதல் நேரத்திற்கு நியாயமான ஊதியத்தைப் பெறுவது உறுதி செய்யப்படுகிறது.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;ராஜினாமா அல்லது பணிநீக்கத்தின் போது பணம் எப்போது பெறப்படும்?&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;புதிய கட்டமைப்பின் கீழ், ஊதியக் கொடுப்பனவுகள் தொடர்பான விதிகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. ஒரு ஊழியர் தனது வேலையை ராஜினாமா செய்தாலோ அல்லது பணிநீக்கம் செய்யப்பட்டாலோ, நிறுவனம் நிலுவையில் உள்ள அனைத்துத் தொகைகளையும்&mdash;கூடுதல் நேர ஊதியம் உட்பட&mdash;முடிந்தவரை விரைவில் முழுமையாகச் செலுத்த வேண்டும். இந்த நடவடிக்கையின் நோக்கம், தகராறுகளைக் குறைப்பதும், நிதியை உரிய நேரத்தில் பெறுவதை உறுதி செய்வதும் ஆகும். மேலும், நிறுவனத்தின் பொறுப்புடைமையை மேம்படுத்துவதற்காக, நிறுவனங்கள் வேலை நேரங்களின் துல்லியமான பதிவுகளைப் பராமரிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கூடுதல் நேர ஊதியம் தொடர்பான சீர்திருத்தங்களுடன், சம்பளக் கட்டமைப்பு குறித்து தொழிலாளர் சட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய விதிமுறைகளின் கீழ், ஒரு ஊழியரின் அடிப்படைச் சம்பளம் அவரது மொத்த சம்பளத்தில் (CTC) குறைந்தபட்சம் 50% ஆக இருக்க வேண்டும். இந்த நடவடிக்கை வெளிப்படைத்தன்மையை சந்தேகமின்றி மேம்படுத்தும் அதே வேளையில், அடிப்படைச் சம்பளத்தில் ஏற்படும் அதிகரிப்பு, வருங்கால வைப்பு நிதி (PF) மற்றும் பணிக்கொடைக்கான உங்கள் சட்டப்பூர்வ பங்களிப்புகளிலும் அதற்கேற்ற உயர்வை ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக, உங்கள் கையில் கிடைக்கும்&mdash;அல்லது வீட்டிற்கு எடுத்துச் செல்லும்&mdash;சம்பளத்தில் ஒரு சிறிய குறைவு ஏற்படலாம்; இருப்பினும், இந்த மாற்றத்தின் ஒரு முக்கியப் பலன் என்னவென்றால், எதிர்காலத்தில் நீங்கள் ஒரு கணிசமான ஓய்வூதிய நிதியையும் சிறந்த ஓய்வூதியப் பலன்களையும் பெறுவீர்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த மாற்றத்தின் தாக்கம் பல்வேறு வகை ஊழியர்களிடையே மாறுபடும். இந்த விதியின் முதன்மைப் பயனாளிகள் நீலக்காலர் தொழிலாளர்களாக இருப்பார்கள், ஏனெனில் கூடுதல் நேர வேலை தொடர்பான விதிமுறைகள் இப்போது தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன, மேலும் கூடுதல் நேர வேலைக்கு இரட்டை ஊதியம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விதிகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டால், இந்தத் தொழிலாளர் பிரிவினர் தங்கள் மாத வருமானத்தில் கணிசமான அதிகரிப்பைக் காணக்கூடும்.&lt;/p&gt;&lt;p&gt;மறுபுறம், வெள்ளைக் காலர் ஊழியர்கள் இந்த மாற்றத்தால் குறைந்த அளவிலான பலன்களையே பெறுவார்கள், ஏனெனில் பெருநிறுவனத் துறையில் உள்ள பல பதவிகள் கூடுதல் நேர ஊதிய விதிமுறைகளின் கீழ் வராது. கூடுதல் நேரம் வேலை செய்வது அவர்களுக்கு அதிக வருமானத்தைத் தரும் என்று சொல்ல முடியாது; இருப்பினும், அதிகரித்த வருங்கால வைப்பு நிதிப் பிடித்தங்கள் நிச்சயமாக மேம்பட்ட ஓய்வூதியச் சேமிப்பிற்கு வழிவகுக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தொழிலாளர் சட்டங்கள் (தொழிலாளர் குறியீடுகள்) மாநில அளவில் செயல்படுத்தப்படுகின்றன என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தச் சட்டங்களுக்கான கட்டமைப்பை மத்திய அரசு வகுத்திருந்தாலும், தனிப்பட்ட மாநிலங்கள் இந்த விதிகளை எப்போது ஏற்றுக்கொண்டு அறிவிக்கின்றன என்பதைப் பொறுத்தே அவற்றின் உண்மையான அமலாக்கம் அமையும். இந்தச் செயல்பாட்டில் மாநிலங்கள் தொடர்ந்து தங்கள் பங்கை ஆற்றிவரும். இதில், காலாண்டு அடிப்படையில் மிகைநேரப் பணிக்கான வரம்புகளை நிர்ணயிப்பதும் அடங்கும்&mdash;பொதுவாக இது மூன்று மாத காலத்திற்குள் 125 முதல் 144 கூடுதல் மணிநேரங்கள் வரை இருக்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[india]]></category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/india/new-wage-code-double-pay-for-overtime-and-higher-pf-a-win-for-employees-h33l5dp"/>
        </item>
        <item>
            <title><![CDATA[velankanni church ஈஸ்டருக்குப் பின் கிறிஸ்தவர்கள் வேளாங்கண்ணி செல்வதன் ஆன்மீக ரகசியம்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/spiritual/velankanni-church-know-the-reason-for-chiristian-visit-velankanni-after-celebrating-easter-articleshow-72gni7g</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/spiritual/velankanni-church-know-the-reason-for-chiristian-visit-velankanni-after-celebrating-easter-articleshow-72gni7g</guid>
            <pubDate>Tue, 28 Apr 2026 16:05:15 +0530</pubDate>
            <description><![CDATA[ஈஸ்டர் பண்டிகைக்கு பிறகு ஏராளமான கிறிஸ்தவர்கள் வேளாங்கண்ணி தேவாலயத்திற்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். எதற்காக கிறிஸ்தவர்கள் இந்த ஆன்மீக பயணத்தை மேற்கொள்கிறார்கள்? இதற்கு பின்னால் இருக்கும் ஆன்மீக காரணம் என்ன என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k3qp6wgbwmjtcrsemvmej00s,imgname-velankanni--1-1756362928651.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சிலுவையில் அறையப்படும் இயேசு கிறிஸ்து, புனித வெள்ளி அன்று உயிர் துறந்து, பிறகு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் என சொல்லப்படுகிறது. இந்த நாளையே கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் திருநாளாக கொண்டாடுகிறார்கள். இந்த நாளை ஆன்மீக பயணத்தின் துவக்கமாக கிறிஸ்தவர்கள் கருதுகின்றனர். சிலுவை மரணத்தின் துயரத்தை வென்று, இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த அந்தத் தருணம், மனித குலத்திற்கு நம்பிக்கையை மீட்டெடுத்துக் கொடுத்தது. இந்த உயிர்ப்பின் மகிழ்ச்சியைத் தங்களுக்குள்ளும், தங்கள் குடும்பங்களிலும் நிலை நிறுத்திக் கொள்ளவே, ஈஸ்டருக்கு பிறகு ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் நாகப்பட்டினம் புனித ஆரோக்கிய மாதா திருத்தலத்தை நோக்கி (வேளாங்கண்ணி) செல்கின்றனர். இதன் பின்னணியில் இருக்கும் ஆன்மீக ரகசியங்களையும், சுவாரஸ்யமான காரணங்களையும் தெரிந்து கொள்ளலாம்.&lt;/p&gt;&lt;p&gt;ஈஸ்டருக்கு பின் கிறிஸ்தவர்கள் வேளாங்கண்ணி செல்வது ஏன்?&lt;/p&gt;&lt;p&gt;1. தாயின் மடியில் இளைப்பாறுதல் :&lt;/p&gt;&lt;p&gt;ஈஸ்டருக்கு முந்தைய 40 நாட்கள் 'தவக்காலம்' எனப்படும். இந்த நாட்களில் விசுவாசிகள் நோன்பு, ஜபம் மற்றும் பிரார்த்தனைகளில் ஈடுபட்டுத் தங்களைத் தூய்மைப்படுத்துகின்றனர். ஒரு நீண்ட ஆன்மீகப் போராட்டத்திற்குப் பிறகு, வெற்றி வீரனாக உயிர்த்தெழுந்த மகனை (இயேசுவை), அவரது தாயின் மடியில் அமர்ந்து தரிசிப்பது ஒரு முழுமையான நிறைவைத் தரும். இதன் காரணமாகவே கிறிஸ்தவர்கள் வேளாங்கண்ணி செல்கின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;2. 'பாஸ்கா' காலத்தின் நீட்சி :&lt;/p&gt;&lt;p&gt;கத்தோலிக்க திருச்சபையின் நாட்காட்டியின்படி, ஈஸ்டர் என்பது ஒரே ஒரு நாள் திருவிழா அல்ல. அது 50 நாட்கள் நீடிக்கும் 'பாஸ்கா காலம்'. இந்த 50 நாட்களும் மகிழ்ச்சியின் நாட்கள். பழைய காலத்தில், ஈஸ்டர் அன்று திருமுழுக்கு பெற்ற புதிய கிறிஸ்தவர்கள், தங்களின் வெண்ணிற ஆடையை அணிந்து கொண்டு புனித இடங்களுக்குத் திருப்பயணம் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அதன் நவீன வடிவமாகவே, ஈஸ்டர் கொண்டாட்டங்களுக்குப் பிறகு மக்கள் வேளாங்கண்ணிக்குச் சென்று நன்றிப் பலி செலுத்துகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;3. கடல் மட்டத்திலான ஆன்மீக அதிர்வுகள் :&lt;/p&gt;&lt;p&gt;&lt;img&gt;&lt;/p&gt;&lt;p&gt;வேளாங்கன்னி கடற்கரை ஓரம் அமைந்திருப்பதால், அங்குள்ள காற்றில் 'அயோடின்' மற்றும் உப்பின் வீரியம் அதிகம். உயிர்த்தெழுதல் என்பது புத்துயிரைக் குறிக்கிறது. தவக்காலத்தில் உடலையும் மனதையும் வருத்திய விசுவாசிகள், கடலோரப் பகுதியில் உள்ள இந்தத் திருத்தலத்திற்கு வரும் போது, இயற்கை ரீதியாகவும் அவர்களுக்கு ஒரு புத்துணர்வு கிடைக்கிறது. குறிப்பாக, ஈஸ்டருக்குப் பிறகு வரும் வசந்த காலக் காற்று, மாதாவின் அருளோடு சேர்ந்து மன அழுத்தத்தை நீக்குவதாகப் பக்தர்கள் நம்புகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;4. 'நன்றி நவில்தல்' காணிக்கை :&lt;/p&gt;&lt;p&gt;பலரும் அறியாத ஒரு விஷயம் என்னவென்றால், ஈஸ்டர் காலத்தில் கேட்கப்படும் பல வேண்டுதல்கள் நிறைவேறும் போது, மக்கள் தங்களின் முதல் நன்றியை ஆரோக்கிய அன்னைக்குச் செலுத்தவே அங்கு செல்கின்றனர். &quot;இயேசு உயிர்த்தெழுந்து விட்டார், இனி அன்னை மரியாளின் பரிந்துரை இன்னும் வலிமையானது&quot; என்ற ஆழமான விசுவாசம் கிராமப்புற மக்களிடையே இன்றும் வேரூன்றி இருக்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;வேளாங்கண்ணி மூன்று அற்புதங்களின் சங்கமம்:&lt;/p&gt;&lt;p&gt;இந்தத் தலம் உருவாவதற்கு மூன்று முக்கிய நிகழ்வுகள் காரணமாக அமைந்தன:&lt;/p&gt;&lt;p&gt;1. பால் கொடுத்த சிறுவன்: 16-ஆம் நூற்றாண்டில் மோர் விற்றுக்கொண்டிருந்த ஒரு சிறுவனிடம் அன்னை மரியா பால் கேட்ட நிகழ்வு. 2. முடவன் குணம் அடைந்தது: மோர் விற்கும் ஊனமுற்ற சிறுவன் அன்னையின் அருளால் நடக்கத் தொடங்கியது. 3. உயிர் பிழைத்த மாலுமிகள்: கடலில் புயலில் சிக்கிய போர்த்துகீசிய மாலுமிகள் கரை ஒதுங்கியது. அவர்கள் கொடுத்த வாக்குறுதியின்படிதான் இன்று நாம் காணும் கல் தேவாலயம் கட்டப்பட்டது.&lt;/p&gt;&lt;p&gt;கிழக்கின் லூர்து :&lt;/p&gt;&lt;p&gt;பிரான்ஸ் நாட்டில் உள்ள லூர்து நகருக்கு அடுத்தபடியாக, உலகிலேயே அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மிக முக்கியமான தலம் இதுதான். அதனால் தான் இது 'கிழக்கின் லூர்து' என்று உலகளவில் அழைக்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;இந்து மத வழிபாடுகள் :&lt;/p&gt;&lt;p&gt;வேளாங்கண்ணிக்கு வரும் பக்தர்கள் செய்யும் சில சடங்குகள் இந்து சமய வழிபாட்டு முறைகளை ஒத்திருக்கும். உதாரணமாக பக்தர்கள் மொட்டை போடுதல் மற்றும் முடி காணிக்கை செலுத்துவது. மாதாவுக்கு பட்டுச் சேலை அணிவித்தல் (உலகிலேயே அன்னை மரியா சேலை அணிந்திருப்பது இங்குதான் அதிகம் காணப்படுகிறது). மஞ்சள் கயிறு கட்டுதல் மற்றும் அங்கப்பிரதட்சணம் செய்வது போன்ற வழிபாட்டு முறைகள் இங்கு ஒரு தனித்துவமான கலாச்சாரமாக உள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[spiritual]]></category>
            <dc:creator>Priya Velan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/spiritual/velankanni-church-know-the-reason-for-chiristian-visit-velankanni-after-celebrating-easter-articleshow-72gni7g"/>
        </item>
        <item>
            <title><![CDATA[தர்பூசணியில் கலக்கப்படும் ரசாயனங்கள்...! கலப்பட தர்பூசணியை கண்டுபிடிப்பது எப்படி? ⚠️]]></title>
            <link>https://tamil.asianetnews.com/life-style/how-to-identify-chemical-adulteration-in-watermelon-videoshow-hgpqz6v</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/life-style/how-to-identify-chemical-adulteration-in-watermelon-videoshow-hgpqz6v</guid>
            <pubDate>Tue, 28 Apr 2026 16:02:46 +0530</pubDate>
            <description><![CDATA[]]></description>
            <media:content url="https://geo.dailymotion.com/player/x1tbu.html?video=xa7aki4" medium="video" height="768" width="1024"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தர்பூசணி உட்புறம் சிகப்பாகவும், அதிக இனிப்பாகவும் இருப்பதற்காக இரண்டு வேதியல் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. எரித்ரோசின் எனப்படும் சிகப்பு நிறச்சாயம் பழத்தின் உட்புறம் அடர் சிவப்பாக தெரிவதற்காக ஊசி மூலம் ஏற்றப்படுகிறது. பழத்தை சீக்கிரம் பழுக்க வைக்கவும், செயற்கையான இனிப்பை வழங்கவும் கார்பைடு மற்றும் சாக்ரின் பயன்படுத்தப்படுகின்றன. வீட்டிலேயே சில எளிய சோதனைகள் மூலம் தர்பூசணியில் கலப்படம் இருக்கிறதா? இல்லையா? என்பதை நம்மால் எளிதில் கண்டறிய முடியும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[life-style]]></category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/life-style/how-to-identify-chemical-adulteration-in-watermelon-videoshow-hgpqz6v"/>
        </item>
        <item>
            <title><![CDATA[திருச்செந்தூரில் விஜய் விஷ்வரூப தரிசனம்... வெற்றி வேல் உடன் வலம் வந்த தளபதி ! | TVK Vijay]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/tvk-s-vijay-a-historic-darshan-in-thiruchendur-videoshow-gzlh49g</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/tvk-s-vijay-a-historic-darshan-in-thiruchendur-videoshow-gzlh49g</guid>
            <pubDate>Tue, 28 Apr 2026 16:02:35 +0530</pubDate>
            <description><![CDATA[]]></description>
            <media:content url="https://geo.dailymotion.com/player/x1tbu.html?video=xa7akhk" medium="video" height="768" width="1024"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தேர்தல் பரப்புரை காரணமாக கடந்த சில வாரங்கள் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார். இதையடுத்து பிரச்சாரம் முடிந்து, தேர்தலும் நடைபெற்றது. கடந்த ஏப்ரல் 23-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு தமிழ்நாட்டில் ஆட்சியை பிடித்து முதல்வர் நாற்காலியில் அமரும் கனவோடு இருக்கிறார் விஜய். திராவிட கட்சிகளுக்கு விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று முதற்கட்ட கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்தன.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[tamilnadu]]></category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/tvk-s-vijay-a-historic-darshan-in-thiruchendur-videoshow-gzlh49g"/>
        </item>
        <item>
            <title><![CDATA[36 பந்துகளில் சதம் விளாசிய மும்பை வீரரை தட்டித்தூக்கும் சிஎஸ்கே.. அஸ்வின் பாராட்டிய ஆயுஷ் வர்தக் யார்?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/sports/csk-eyes-ayush-vartak-the-36-ball-centurion-from-mumbai-qdna5t6</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/sports/csk-eyes-ayush-vartak-the-36-ball-centurion-from-mumbai-qdna5t6</guid>
            <pubDate>Tue, 28 Apr 2026 16:02:28 +0530</pubDate>
            <description><![CDATA[குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் மோசமான தோல்வியைத் தழுவிய சிஎஸ்கே, தனது அடுத்த போட்டியில் பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் (MI) அணியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kq9t6ftah7epb65q7ns6knf2,imgname-ayush-vaithi-1777372184394.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் மோசமான தோல்வியைத் தழுவிய சிஎஸ்கே, தனது அடுத்த போட்டியில் பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் (MI) அணியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஐபிஎல் 2026 கிரிக்கெட் திருவிழா களைகட்டியுள்ள நிலையில், 5 முறை சாம்பியனான சிஎஸ்கே அணியின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே 3 வெற்றி மட்டுமே பெற்று 5 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. அந்த அணியின் அதிரடி வீரர் ஆயுஷ் மாத்ரே காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறி விட்டார். இதனால் சிஎஸ்கே தனது பேட்டிங் வரிசையை பலப்படுத்த அதிரடி மாற்றங்களைச் செய்து வருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அந்த வகையில், மும்பையைச் சேர்ந்த 21 வயதான இளம் ஆல்-ரவுண்டர் ஆயுஷ் வர்தக் (Ayush Vartak) தற்போது சிஎஸ்கே அணியின் பயிற்சி ஆட்டங்களில் (Trials) பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளார். ஆயுஷ் மாத்ரே போல் ஆயுஷ் வர்தக்கும் மிகச்சிறந்த அதிரடி வீரர். இவர் 2020-ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் ஜூனியர் அணிக்காக விளையாடிய போது, காங்கா லீக் தொடரில் வெறும் 36 பந்துகளில் சதம் விளாசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். 2025-ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையிலான 23 வயதுக்குட்பட்டோருக்கான (Under-23) ஒருநாள் தொடரில், 6 இன்னிங்ஸ்களில் 363 ரன்கள் குவித்தார். இதில் 26 சிக்ஸர்கள் அடங்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சிறந்த 23 வயதுக்குட்பட்ட வீரர்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;மும்பை கிரிக்கெட் சங்கத்தின் (MCA) 2024-ஆம் ஆண்டிற்கான 'சிறந்த 23 வயதுக்குட்பட்ட வீரர்' விருதையும் ஆயுஷ் வர்தக் வென்றுள்ளார். இவர் வெறும் அதிரடிக்காக மட்டுமின்றி மன உறுதிக்கும் பெயர் பெற்றவர். ஒருமுறை காலில் ரத்தம் சொட்டச் சொட்ட அவர் பேட்டிங் செய்தது அவரது அர்ப்பணிப்பைக் காட்டியது. ஆயுஷ் வர்தக்குக்கு சிஎஸ்கே அழைப்பு விடுத்ததற்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அஸ்வின், ''ஏலத்தில் விற்கப்படாத போதிலும், திறமையான வீரர்களைத் தேடிப் பிடிப்பதில் சிஎஸ்கே எப்போதும் கில்லாடி என்பதை இது நிரூபிக்கிறது'' என்று அவர் கூறியுள்ளார். ஆயுஷ் மாத்ரே தொடக்க வீரராக அறியப்பட்டாலும், வர்தக் மிடில் ஆர்டரில் வந்து ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர். குஜராத் அணிக்கு எதிரான தோல்விக்குப் பிறகு, சிஎஸ்கேவுக்கு இவரைப் போன்ற ஒரு &quot;Impact Player&quot; தேவைப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே மோதல்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஆயுஷ் வர்தக் ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளின் சோதனைகளிலும் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை சிஎஸ்கே அணியில் இவர் இடம் பெற்றால், அது அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய திருப்பமாக அமையும்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் மோசமான தோல்வியைத் தழுவிய சிஎஸ்கே, தனது அடுத்த போட்டியில் பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் (MI) அணியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது. இந்த போட்டியிலும் மும்பையை வீழ்த்தி சிஎஸ்கே வெற்றிப் பாதைக்கு திரும்புமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[sports]]></category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/sports/csk-eyes-ayush-vartak-the-36-ball-centurion-from-mumbai-qdna5t6"/>
        </item>
        <item>
            <title><![CDATA[68 வயதில் 7-ம் வகுப்பு தேர்வு எழுதிய சூர்யா பட தேசிய விருது நடிகர் யார் தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/do-you-know-which-68-years-national-award-winning-actor-wrote-the-7th-grade-exam-r9zr5u3</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/do-you-know-which-68-years-national-award-winning-actor-wrote-the-7th-grade-exam-r9zr5u3</guid>
            <pubDate>Tue, 28 Apr 2026 15:49:24 +0530</pubDate>
            <description><![CDATA[National Award winning actor: பிரபல தேசிய விருது நடிகர் இந்திரன்ஸ் தன்னுடைய 68 வயதில், 7-ஆம் வகுப்பு தேர்வு எழுதியதாகவும்... அதன் பின்னணியில் உள்ள காரணத்தையும் தெரிவித்துள்ளார்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k8ftnnxqcyfeffgspgty3qvc,imgname-aashan-indrans-1761467881399.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;National Award winning actor: பிரபல தேசிய விருது நடிகர் இந்திரன்ஸ் தன்னுடைய 68 வயதில், 7-ஆம் வகுப்பு தேர்வு எழுதியதாகவும்... அதன் பின்னணியில் உள்ள காரணத்தையும் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நாடகத் துறையிலும், மலையாள திரையுலகிலும் பிரபலமானவர் நடிகர் இந்திரன்ஸ். இவர் &ldquo;வயது என்றுமே, படிப்புக்கு தடையல்ல&rdquo; என்பதே தன்னுடைய செயலால் நிகழ்த்தி காட்டியுள்ளார். இவரது செயல் தற்போது... கேட்பவர்களை மட்டும் அல்ல, ரசிகர்களுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நடிகர் இந்திரன்ஸ் , 1981-ஆம் ஆண்டு மலையாள திரையுலகில் ஒரு ஒப்பனை கலைஞராக தனது பயணத்தை தொடங்கினார். ஆரம்ப காலங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கி... பின்னர் பல இயக்குநர்களின் கவனத்தை ஈர்த்து, முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். நகைச்சுவை மட்டுமல்லாமல், செண்டிமெண்ட் நிறைந்த கதாபாத்திரங்களிலும் சிறப்பாக நடித்து, திரையுலகில் தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை பதித்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;2021-ஆம் ஆண்டு 'ஹோம்' என்கிற மலையாள படத்தில் நடித்ததற்காக இந்திரன்ஸ் சிறந்த துணை நடிகருக்கான, தேசிய விருதை பெற்றார். இதேபோல், &lsquo;கேரளா கிரைம் ஃபைல்ஸ் 2&rsquo; வெப் தொடரில் இவரது நடிப்பு பார்வையாளர்களிடமிருந்து பெரும் பாராட்டை பெற்றது. இளம் இயக்குநர்களின் பல படங்களில் முதல் தேர்வாகவும் இந்திரன்ஸ் விளங்கியுள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்திரன்ஸின் இந்த வாழ்க்கை பயணம் பல போராட்டங்களை கொண்டது. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, வசதி இல்லாத காரணத்தால் பள்ளிப் படிப்பை சிறுவயதில் முற்றிலும் நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இவருடன் பிறந்தவர்கள் மொத்தம் 7 பேர். அதில் மூன்றாவது பையனாக இந்திரன்ஸ் பிறந்தார். பெற்றோரின் பொருளாதார குறைபாடுகளால் கல்வியை தொடர முடியாமல் போனது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளதாவது, &ldquo;நான் நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அப்போது யுனிஃபார்ம் வாங்குவதற்கு காசில்லை. அதனால் ஒரு ஆண்டுக்கும் பள்ளி செல்லவில்லை. பின்னர் புத்தகங்களை வாங்கவும் சாத்தியமாகவில்லை. பள்ளியில் யுனிஃபார்ம் கட்டாயம். வீட்டில் வறுமை காரணமாக பள்ளிப் படிப்பை நிறுத்தினேன்.&rdquo; என தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;படிப்பு மீது இருந்த ஆவர்வம் குறையாததால், இந்திரன்ஸ் தனது 68 வயதில் 7-ம் வகுப்பு தேர்வு எழுத திட்டமிட்டு, கேரள மாநில எழுத்தறிவு இயக்க ஆணையத்தின் வாயிலாக அந்த வாய்ப்பை பெற்றார். நடிகர் இந்திரன்ஸ், தேர்வை முடித்ததும் 10-ஆம் வகுப்பு தேர்வு எழுத திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் 10-ஆம் வகுப்பு எழுதுவதற்கு முன் 7-ம் வகுப்பு தேர்வை முடித்து சான்றிதழ் பெற வேண்டும் என்பதால், முதலில் 7-ம் வகுப்பு தேர்வை எழுதியுள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;இந்திரன்ஸ் எடுத்த இந்த முயற்சி, வயதானவர்களுக்கும், பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர்களுக்கும்... படிப்பிற்கு வயது தடை இல்லை என்கிற உத்வேகத்தை கொடுத்துள்ளது. இந்திரன்ஸ் விரைவில் சூர்யா நடிப்பில் - ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் ரிலீஸ் ஆக உள்ள, கருப்பு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[cinema]]></category>
            <dc:creator>Rsiva kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/do-you-know-which-68-years-national-award-winning-actor-wrote-the-7th-grade-exam-r9zr5u3"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Skin care: முகப்பருக்களை இயற்கையாக நீக்க 6 எளிய வீட்டு வைத்திய முறைகள்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/webstories/health-beauty/6-simple-home-remedies-to-get-rid-of-pimples-naturally-c4cukaw</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/webstories/health-beauty/6-simple-home-remedies-to-get-rid-of-pimples-naturally-c4cukaw</guid>
            <pubDate>Tue, 28 Apr 2026 15:37:18 +0530</pubDate>
            <description><![CDATA[முகத்தில் தோன்றும் பருக்கள் நமது அழகைக் கெடுப்பதோடு, மனக்கவலையையும் உண்டாக்குகின்றன. விலை உயர்ந்த ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, நம் வீட்டிலேயே இருக்கும் இயற்கையான பொருட்களைக் கொண்டு பருக்களை எளிதாகக் குணப்படுத்தலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kq9rda9s7rb61h4ats3hmm5y,imgname-pimples--1--1777370310969.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <category><![CDATA[health-beauty]]></category>
            <dc:creator>Priya Velan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/webstories/health-beauty/6-simple-home-remedies-to-get-rid-of-pimples-naturally-c4cukaw"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Top 5 Self Watering Planters: கோடை வெயிலிலும் செடிகள் வாடாது.. அசத்தலான 5 செல்ஃப் வாட்டரிங்' பிளான்டர் டிசைன்கள்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/top-5-summer-proof-self-watering-planter-designs-for-healthy-plants-7wgbbbp</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/top-5-summer-proof-self-watering-planter-designs-for-healthy-plants-7wgbbbp</guid>
            <pubDate>Tue, 28 Apr 2026 15:27:45 +0530</pubDate>
            <description><![CDATA[கோடை காலத்தில் செடிகளுக்கு தினமும் தண்ணீர் ஊற்றுவது கஷ்டமா? கவலையை விடுங்க. இதோ 5 சூப்பரான செல்ஃப் வாட்டரிங் பிளான்டர் டிசைன்கள். குறைவான உழைப்பில் செடிகளை நீண்ட நேரம் ஃப்ரெஷ்ஷாக வைத்திருக்க உதவும்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kntxm5qdzj98rbfesfgwy4pc,imgname-smart-plant-pots-1775798720237.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கோடை காலத்தில் செடிகளுக்கு தினமும் தண்ணீர் ஊற்றுவது கஷ்டமா? கவலையை விடுங்க. இதோ 5 சூப்பரான செல்ஃப் வாட்டரிங் பிளான்டர் டிசைன்கள். குறைவான உழைப்பில் செடிகளை நீண்ட நேரம் ஃப்ரெஷ்ஷாக வைத்திருக்க உதவும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கோடை காலம் வந்துவிட்டால் செடிகளைப் பராமரிப்பது சவாலான விஷயம் தான். குறிப்பாக, தினமும் தண்ணீர் ஊற்ற முடியாதவர்களுக்கு இது பெரும் தலைவலி. இந்த சூழலில், செல்ஃப் வாட்டரிங் பிளான்டர்கள் ஒரு சிறந்த தீர்வாக இருக்கின்றன. இந்த தொட்டிகளில் உள்ள ஒரு சிறப்பு என்னவென்றால் செடியின் தேவைக்கு ஏற்ப மெதுவாகத் தண்ணீரை வழங்கும். இதனால் செடிகள் வாடாது. உங்களுக்கும் அடிக்கடி தண்ணீர் ஊற்றும் கவலையும் இருக்காது. கிச்சன் கார்டன் அல்லது பால்கனி தோட்டம் வைத்திருப்பவர்களுக்கு இந்த டிசைன்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உங்களிடம் அதிக இடம் இல்லை என்றால், இந்த டிசைன் தான் பெஸ்ட். இதில், துணிப் பைகளுக்குள் தண்ணீர் தேக்கி வைக்கும் அமைப்பு இருக்கும். இது எடை குறைவானது, எடுத்துச் செல்ல எளிதானது மற்றும் குறைந்த இடத்தில் அதிக செடிகளை வளர்க்கப் பயன்படுகிறது. மொட்டை மாடி அல்லது பால்கனி தோட்டக்கலைக்கு இது ஒரு பிரபலமான தேர்வாகும்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இது மிகவும் எளிமையான மற்றும் செலவு குறைந்த டிசைன். இதில், தண்ணீர் தேக்க தொட்டிக்கும் மண்ணுக்கும் இடையில் ஒரு துணி அல்லது கயிறு (விக்) இணைக்கப்பட்டிருக்கும். இந்த விக், மெதுவாகத் தண்ணீரை உறிஞ்சி மண்ணுக்குக் கொண்டு சேர்க்கும். சிறிய செடிகள் மற்றும் மூலிகைகளுக்கு இந்த டிசைன் மிகவும் பொருத்தமானது. இதை நீங்களே வீட்டில் எளிதாக செய்யலாம் (DIY).&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த டிசைனில், தொட்டியின் அடிப்பகுதியில் ஒரு தண்ணீர் டேங்க் இருக்கும், மேலே மண் நிரப்பப்பட்டிருக்கும். செடியின் வேர்கள் தேவைப்படும்போது கீழே இருந்து தண்ணீரை உறிஞ்சிக் கொள்ளும். இதில் அதிகப்படியான தண்ணீர் தேங்கும் அபாயமும் குறைவு. தக்காளி, மிளகாய், கொத்தமல்லி போன்ற கிச்சன் கார்டன் செடிகளுக்கு இந்த டிசைன் மிகவும் ஏற்றதாக இருக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இது ஒரு நவீன டிசைன். இதில் தண்ணீர் அளவைக் காட்ட ஒரு இண்டிகேட்டர் பொருத்தப்பட்டிருக்கும். இதன் மூலம் எப்போது தண்ணீர் நிரப்ப வேண்டும் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம். இதில் உள்ள ஆட்டோமேட்டிக் வாட்டர் கண்ட்ரோல் சிஸ்டம், செடிகளுக்கு சரியான அளவில் தண்ணீரை வழங்குகிறது. மிகவும் பிஸியாக இருப்பவர்களுக்கு இந்த டிசைன் ஒரு வரம்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குறைந்த இடத்தில் அதிக செடிகளை வளர்க்க வெர்டிகல் பிளான்டர் மிகவும் பயனுள்ளது. இதில் ஒரு சென்ட்ரல் வாட்டரிங் சிஸ்டம் இருக்கும். இது மேலிருந்து கீழ் வரை அனைத்து செடிகளுக்கும் சமமாகத் தண்ணீரை விநியோகிக்கும். கோடை காலத்தில் இந்த டிசைன் செடிகளை நீண்ட நேரம் ஃப்ரெஷ்ஷாக வைத்திருக்க உதவுகிறது. இது வீட்டு சுவர்களையும் அழகாக்குகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[life-style]]></category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/top-5-summer-proof-self-watering-planter-designs-for-healthy-plants-7wgbbbp"/>
        </item>
        <item>
            <title><![CDATA[இந்தியாவின் டாப் கம்பெனிகள் 2026: LinkedIn வெளியிட்ட லிஸ்ட்.. எந்தெந்த நிறுவனங்கள் தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/linkedin-top-companies-2026-best-workplaces-in-india-revealed-gbm6vlm</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/linkedin-top-companies-2026-best-workplaces-in-india-revealed-gbm6vlm</guid>
            <pubDate>Tue, 28 Apr 2026 15:25:53 +0530</pubDate>
            <description><![CDATA[LinkedIn 2026ஆம் ஆண்டிற்கான 'Top Companies' பட்டியலை வெளியிட்டுள்ளது. AI காலத்தில் தொழில்நுட்ப திறன்களுடன் மனித திறன்களும் சமமாக முக்கியம் என்பதை இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kq9qj5989493y654snfcvdb5,imgname-tamil-news---2026-04-28t151233.190-1777369421095.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;LinkedIn 2026ஆம் ஆண்டிற்கான 'Top Companies' பட்டியலை வெளியிட்டுள்ளது. AI காலத்தில் தொழில்நுட்ப திறன்களுடன் மனித திறன்களும் சமமாக முக்கியம் என்பதை இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;2026ஆம் ஆண்டிற்கான &lsquo;Top Companies&rsquo; பட்டியலை LinkedIn வெளியிட்டுள்ளது. இந்தியாவில் வேலை வாய்ப்புகள் வேகமாக மாறிக் கொண்டே இருக்கும் இந்த காலத்தில், நீண்டகால வளர்ச்சி, திறன் மேம்பாடு மற்றும் ஊழியர் நலனில் முதலீடு செய்யும் நிறுவனங்களே முன்னிலையில் உள்ளன. குறிப்பாக AI காலத்தில் தொழில்நுட்ப திறன்களுடன் மனித உறவு திறன்களும் சமமாக முக்கியம் என்பதை இந்த ரிப்போர்ட் வலியுறுத்துகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த பட்டியலில் முதன்மையாகத் திகழ்வது இன்போசிஸ். தகவல் தொழில்நுட்ப சேவைகள், ஆலோசனைகள், சாப்ட்வேர் டெவலப்மென்ட் போன்ற துறைகளில் உலகளவில் தடம் பதித்த இந்த நிறுவனம், ஆட்டோமொபைல், ஹெல்த்கேர், ரீட்டெயில் போன்ற பல துறைகளுக்கு தீர்வுகளை வழங்குகிறது. மேலும் அக்சென்ச்சர், மேலாண்மை ஆலோசனை மற்றும் டெக்னாலஜி சேவைகள் முன்னணி நிறுவனமாக இருந்து, பல்வேறு துறைகளில் நிறுவனங்களின் செயல்திறன் மேம்படுத்த உதவுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;டெக் மற்றும் இ-காமர்ஸ் துறையில் அமேசான் தொடர்ந்து தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வருகிறது. AWS கிளவுட் சேவைகள், Prime Video போன்ற பல்வேறு சேவைகள் மூலம் இது உலகளாவிய அளவில் விரிவடைந்துள்ளது. நிதி துறையில் JPMorgan Chase முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. ரீட்டெயில் பேங்கிங் முதல் அசெட் மேனேஜ்மென்ட் வரை பல சேவைகளை வழங்கும் இந்த நிறுவனம், தொழில்முறை வளர்ச்சிக்கான வாய்ப்புகளையும் அதிகமாக வழங்குகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;என்டர்பிரைஸ் சாப்ட்வேர் துறையில் SAP முன்னணி நிறுவனமாக திகழ்கிறது. ERP மற்றும் கிளவுட் தீர்வுகள் மூலம் நிறுவனங்களின் நிதி, HR மற்றும் சப்ளை செயின் மேலாண்மையை எளிதாக்குகிறது. இதனுடன் IBM, ஹைப்ரிட் கிளவுட் மற்றும் AI துறைகளில் புதுமைகளை கொண்டு வந்து, IT மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நிதி சேவைகள் துறையில் Fidelity Investments மற்றும் Wells Fargo ஆகியவை ஊழியர்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தரும் நிறுவனங்களாக பட்டியலில் இடம்பிடித்துள்ளன. அதேசமயம் Alphabet Inc., AI, கிளவுட், தேடல் தொழில்நுட்பங்கள் முன்னணியில் இருந்து புதுமைகளை செயல்படுத்துகிறது. மேலும் EY, வரி, கணக்காய்வு மற்றும் ஆலோசனை சேவைகளில் முன்னணி இடத்தைப் பிடித்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மொத்தத்தில் பார்த்தால், இந்தப் பட்டியல் ஒரு முக்கியமான செய்தியை வெளிப்படுத்துகிறது. AI வளர்ச்சி அதிகரித்தாலும், மனித திறன்களின் மதிப்பு குறையவில்லை. கற்றல், மாற்றத்திற்கு தகுந்து கொள்ளுதல், குழுவாக வேலை செய்வது போன்ற திறன்களை வளர்த்துக்கொள்பவர்களுக்கு இந்த நிறுவனங்கள் சிறந்த வாய்ப்புகளை வழங்குகின்றன. எதிர்காலத்தில் வேலை தேடுபவர்களுக்கு இது ஒரு தெளிவான வழிகாட்டியாக இருக்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[business]]></category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/linkedin-top-companies-2026-best-workplaces-in-india-revealed-gbm6vlm"/>
        </item>
        <item>
            <title><![CDATA[நிறத்துக்காக தர்பூசணியில் போடப்படும் ஊசி.! விஷமாக மாறும் பழங்கள்? கலப்பட தர்பூசணியை வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/how-to-detect-adulterated-watermelons-at-home-or-chemically-injected-simple-tips-to-check-freshness-and-safety-explained-fgnw8y4</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/how-to-detect-adulterated-watermelons-at-home-or-chemically-injected-simple-tips-to-check-freshness-and-safety-explained-fgnw8y4</guid>
            <pubDate>Tue, 28 Apr 2026 15:18:08 +0530</pubDate>
            <description><![CDATA[How to Detect Adulterated Watermelons at Home : தர்பூசணி விற்பனை சூடு பிடித்திருக்கும் நிலையில் கலப்பட தர்பூசணிகளை எப்படி கண்டுபிடிக்கலாம் என்பது குறித்த எளிய வழிகளை இந்த பதிவில் பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kq9qg9dqjpctw18nxejh5q1n,imgname-how-to-detect-adulterated-watermelons-at-home-1-1777369359799.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;How to Detect Adulterated Watermelons at Home : தர்பூசணி விற்பனை சூடு பிடித்திருக்கும் நிலையில் கலப்பட தர்பூசணிகளை எப்படி கண்டுபிடிக்கலாம் என்பது குறித்த எளிய வழிகளை இந்த பதிவில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கோடைகாலம் தொடங்கி விட்டாலே தர்பூசணி விற்பனை சூடுபிடிக்கும். அதிக லாபத்திற்காக தர்பூசணிக்கு சாயம் ஏற்றுவது, இனிப்பு சுவையை அதிகரிக்க ஊசிகளை பயன்படுத்துவது என்று அதிர்ச்சி அளிக்கும் விஷயங்கள் நடந்து வருகிறது. மேலும் மும்பையில் தர்பூசணி சாப்பிட்ட ஒரு குடும்பமே பலியாகி உள்ள சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த பதிவில் கலப்பட தர்பூசணியை எப்படி கண்டறிவது? அதில் உள்ள ஆபத்துகள் என்ன? என்பது குறித்து விரிவான தகவல்களைப் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தர்பூசணி உட்புறம் சிகப்பாகவும், அதிக இனிப்பாகவும் இருப்பதற்காக இரண்டு வேதியல் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. எரித்ரோசின் எனப்படும் சிகப்பு நிறச்சாயம் பழத்தின் உட்புறம் அடர் சிவப்பாக தெரிவதற்காக ஊசி மூலம் ஏற்றப்படுகிறது. பழத்தை சீக்கிரம் பழுக்க வைக்கவும், செயற்கையான இனிப்பை வழங்கவும் கார்பைடு மற்றும் சாக்ரின் பயன்படுத்தப்படுகின்றன. வீட்டிலேயே சில எளிய சோதனைகள் மூலம் தர்பூசணியில் கலப்படம் இருக்கிறதா? இல்லையா? என்பதை நம்மால் எளிதில் கண்டறிய முடியும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தர்பூசணியை வெட்டிய பிறகு ஒரு சிறிய துண்டு பருத்தி பஞ்சு அல்லது வெள்ளை துணியை எடுத்து அதன் சிகப்பு பகுதியில் மென்மையாக தேய்க்கவும். கலப்படம் இருந்தால் துணியில் அடர் சிகப்பு நிறம் ஒட்டும். இயற்கையானதாக இருந்தால் லேசான இளஞ்சிவப்பு நிறம் அல்லது ஈரப்பதம் மட்டுமே வரும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்துக்கொண்டு அதில் ஒரு துண்டு தர்பூசணியை போடவும். கலப்பட தர்பூசணி என்றால் தண்ணீர் அது சிவப்பு நிறமாக மாறும். இயற்கையானதாக இருந்தால் தண்ணீர் நிறம் மாறாது அல்லது தாமதமாக லேசான மாற்றம் ஏற்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தர்பூசணியை வாங்கும் பொழுது அதன் மேற்புறத்தில் துளைகள் அல்லது ஊசி போட்ட தழும்புகள் தென்படுகிறதா என்று பாருங்கள். பழத்தைச் சுற்றி இருக்கும் தோல் பகுதிகளில் கரும்புள்ளிகள் அல்லது கசிவு இருந்தால் அது ஊசி போட்டதற்கான அடையாளமாக இருக்கலாம். இயற்கையான தர்பூசணி இனிப்பாக இருக்கும். ஆனால் நாக்கில் ஒரு வித கசப்புத்தன்மை அல்லது இரசாயன வாடை ஏற்பட்டால் சாப்பிடுவதை நிறுத்தி விடுங்கள். சாயம் ஏற்றப்பட்ட பழத்தில் செயற்கையான சுவை தட்டுப்படும். இது போன்ற கலப்பட தர்பூசணிகளை உடனடியாக தூக்கி எறிந்துவிடுங்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சாயங்கள் மற்றும் ரசாயனங்கள் கலந்த தர்பூசணிகளை நாம் சாப்பிடும் பொழுது அது உடனடியாக நமது ரத்தத்தில் கலந்து பின்வரும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி. உணவு நச்சுத்தன்மை. நீண்ட கால அடிப்படையில் சிறுநீரக பாதிப்புகள் மற்றும் கல்லீரல் சேதாரங்கள். குழந்தைகளுக்கு ஒவ்வாமை மற்றும் சுவாசக் கோளாறுகள். அரிதான நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படக்கூடும். உணவு பாதுகாப்புத்துறையின் அறிவுறுத்தலின்படி பழம் சாப்பிட்ட பிறகு உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. கலப்பட தர்பூசணிகள் விற்பது தெரியவந்தால் பாதுகாப்பு துறைக்கு தகவல் கொடுக்க வேண்டியது அவசியம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பழம் வாங்கும் பொழுது பழத்தின் அடிப்பகுதி மஞ்சள் நிறத்தில் இருக்கிறதா என்று பாருங்கள். இது பழம் கொடியில் தானாக பழுத்ததைக் குறிக்கும். மிகப் பளபளப்பாக இருக்கும் பழங்களை விட சராசரியான தோற்றம் கொண்ட பழங்களை தேர்ந்தெடுங்கள். பழத்தை வெட்டிய பிறகு பவுடர் போன்ற படிவம் தெரிந்தால் அதை தவிர்ப்பது நல்லது. தர்பூசணியை வெட்டும்போது, அது மிகவும் அடர் சிவப்பு நிறத்தில் இருந்தாலோ அல்லது எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியான நிறத்தில் இருந்தாலோ எச்சரிக்கையாக இருங்கள்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[life-style]]></category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/how-to-detect-adulterated-watermelons-at-home-or-chemically-injected-simple-tips-to-check-freshness-and-safety-explained-fgnw8y4"/>
        </item>
        <item>
            <title><![CDATA[டிப்டாப் உடையில் வாங்கிங்.! மாஸ் காட்டிய மு.க.ஸ்டாலின்  | MK Stalin Kodaikanal Visit]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/mk-stalin-s-impressive-morning-walk-in-kodaikanal-videoshow-6kprg8w</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/mk-stalin-s-impressive-morning-walk-in-kodaikanal-videoshow-6kprg8w</guid>
            <pubDate>Tue, 28 Apr 2026 15:02:40 +0530</pubDate>
            <description><![CDATA[]]></description>
            <media:content url="https://geo.dailymotion.com/player/x1tbu.html?video=xa7ac4o" medium="video" height="768" width="1024"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தற்போது கோடை விடுமுறைக்காக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வருகை தந்துள்ளார். இன்று காலை கொடைக்கானலின் இதமான காலநிலையில், வெள்ளைச் சட்டை மற்றும் ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்து மிகவும் ஸ்டைலாக சைக்கிள் ஓட்டி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[tamilnadu]]></category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/mk-stalin-s-impressive-morning-walk-in-kodaikanal-videoshow-6kprg8w"/>
        </item>
        <item>
            <title><![CDATA[TVS Jupiter: மார்க்கெட்டை கலக்கும் ஜூபிட்டர்; லட்சக்கணக்கில் விற்பனையாக இதுதான் காரணமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/auto/tvs-jupiter-sales-surge-past-9-million-units-in-india-articleshow-dz1eqwc</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/auto/tvs-jupiter-sales-surge-past-9-million-units-in-india-articleshow-dz1eqwc</guid>
            <pubDate>Tue, 28 Apr 2026 14:51:16 +0530</pubDate>
            <description><![CDATA[டிவிஎஸ் ஜூபிடர் 9 மில்லியன் யூனிட் விற்பனை மைல்கல்லைக் கடந்து, இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் இரண்டாவது ஸ்கூட்டராக உருவெடுத்துள்ளது. 2026 நிதியாண்டில் சாதனை விற்பனையை எட்டிய இந்த மாடல், அதன் 110சிசி மற்றும் 125சிசி ஆகிய இரண்டு வேரியண்டுகளிலும் உள்ள சிறந்த அம்சங்களுடன் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jngx57k6px8gt8n8rqm8txvw,imgname-jupiter-nn.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;நாட்டின் ஸ்கூட்டர் பிரிவில் , சில மாடல்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன. இந்த மாடல்களில் ஒன்றுதான் டிவிஎஸ் ஜூபிடர். நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் ஸ்கூட்டர் சந்தையில், இது இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் இரண்டாவது ஸ்கூட்டராக உருவெடுத்துள்ளது. உள்நாட்டு சந்தையில் இது ஒன்பது மில்லியன் யூனிட்கள் என்ற மொத்த விற்பனை மைல்கல்லைக் கடந்துள்ளது. செப்டம்பர் 16, 2013 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட ஜூபிடர் ஸ்கூட்டர், ஆரம்பத்தில் 110 சிசி மாடலாக அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர், இது 125 சிசி வகையிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 13 நிதியாண்டுகளில், சுமார் 1,54,000 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;2026 நிதியாண்டில், ஜூபிடர் நிறுவனம் இந்தியாவில் தனது மிக உயர்ந்த 12 மாத விற்பனையைப் பதிவு செய்துள்ளது. முந்தைய ஆண்டை விட 32 சதவீதம் அதிகரித்து 1,463,328 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இது 2025 நிதியாண்டில் விற்பனையான 1,107,285 யூனிட்களை விட 356,043 யூனிட்கள் அதிகமாகும். தொடர்ந்து இரண்டாவது நிதியாண்டாக 10 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. 2026 நிதியாண்டில் ஒரு நாளைக்கு 4,009 ஜூபிடர் ஸ்கூட்டர்கள் விற்பனையானதன் அடிப்படையில் இந்த ஈர்க்கக்கூடிய செயல்திறன் அமைந்துள்ளது. இது, TVS-இன் சாதனை ஸ்கூட்டர் விற்பனையில் ஜூபிடரின் பங்கை 2025 நிதியாண்டில் இருந்த 61 சதவீதத்திலிருந்து 64 சதவீதமாக உயர்த்தியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;2013 செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட 113சிசி ஜூபிடர், கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய மேம்படுத்தலைப் பெற்றுள்ளது. இதில் புதிய மைக்ரோ-ஹைப்ரிட் சிஸ்டம், இருக்கைக்கு அடியில் 33 லிட்டர் சேமிப்பு இடம் (இதில் இரண்டு ஹாஃப்-ஃபேஸ் ஹெல்மெட்களை வைக்கலாம்), மற்றும் உயர் ரக மாடல்களில் புளூடூத் வசதியுள்ள எல்சிடி டிஸ்ப்ளே ஆகியவை அடங்கும். இதன் இன்ஜின் 6500 ஆர்பிஎம்மில் 7.91 பிஎச்பி சக்தியையும், 5000 ஆர்பிஎம்மில் 9.8 என்எம் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது, இது ஜூபிடர் மணிக்கு 82 கி.மீ. என்ற உச்ச வேகத்தை அடைய உதவுகிறது. இது நகர்ப்புறத்தில் மணிக்கு 50.2 கி.மீ. மற்றும் நெடுஞ்சாலையில் மணிக்கு 56.4 கி.மீ. மைலேஜை வழங்குகிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 73,400 முதல் ரூ. 86,900 வரை உள்ளது. இது ஹோண்டா ஆக்டிவா, ஹீரோ டெஸ்டினி மற்றும் சுஸுகி ஆக்சஸ் ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;125cc பிரிவில் Ntorq ஸ்கூட்டரின் வெற்றியைத் தொடர்ந்து, அந்நிறுவனம் அக்டோபர் 2021-ல் ஜூபிடர் 125-ஐ அறிமுகப்படுத்தியது. இருக்கைக்கு அடியில் மிகப்பெரிய சேமிப்பு இடம், இந்தப் பிரிவிலேயே மிக நீளமான இருக்கை, நவீன ஆண்மைத் தோற்றம் மற்றும் அதிக எரிபொருள் சிக்கனம் போன்ற, இந்தத் துறையில் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட அம்சங்களைக் கொண்ட இது, அசல் 113cc மாடலுடன் சேர்ந்து, அந்த பிராண்டின் வளர்ச்சியில் ஒரு முக்கிய காரணியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் அக்டோபர் 2025-ல் அதன் மிகப்பெரிய மேம்படுத்தலைப் பெற்றது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 77,000 முதல் ரூ. 87,800 வரை உள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[auto]]></category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/auto/tvs-jupiter-sales-surge-past-9-million-units-in-india-articleshow-dz1eqwc"/>
        </item>
        <item>
            <title><![CDATA[TVK VIJAY: மீண்டும் தொடங்கும் விஜய் ஆட்டம்.! தளபதியின் தலைமையின் கீழ் மாறும் தமிழக அரசியல்.! திமுக, அதிமுகவை உதறித்தள்ள ரெடியாகும் தோழமைகள்.?!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/politics/tvk-vijay-tamil-nadu-politics-set-for-a-shift-under-thalapathy-leadership-alliances-gear-up-to-challenge-dmk-and-aiadmk-l1rndqm</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/politics/tvk-vijay-tamil-nadu-politics-set-for-a-shift-under-thalapathy-leadership-alliances-gear-up-to-challenge-dmk-and-aiadmk-l1rndqm</guid>
            <pubDate>Tue, 28 Apr 2026 14:51:07 +0530</pubDate>
            <description><![CDATA[தவெக 100 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. இதனால், திமுக, அதிமுக கூட்டணிகளில் உள்ள கட்சிகள் விஜய்யுடன் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தி, தொங்கு சட்டமன்றம் ஏற்பட்டால் அவரை முதல்வராக்கத் திட்டமிடுவதாகத் தெரிகிறது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kq9ge0dkvq5vxys98a63qt70,imgname-gemini-generated-image-g8w7d2g8w7d2g8w7--1--1777361945010.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தவெக 100 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. இதனால், திமுக, அதிமுக கூட்டணிகளில் உள்ள கட்சிகள் விஜய்யுடன் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தி, தொங்கு சட்டமன்றம் ஏற்பட்டால் அவரை முதல்வராக்கத் திட்டமிடுவதாகத் தெரிகிறது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழக அரசியல் களம் பல தசாப்தங்களாகத் திராவிடக் கட்சிகளின் கோட்டையாக இருந்து வருகிறது. அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற ஆளுமைகளுக்குப் பிறகு ஒரு பெரும் அரசியல் வெற்றிடத்தை நோக்கித் தமிழகம் நகர்ந்தபோது, அந்த இடத்தைப் பூர்த்தி செய்யப் போவது யார் என்ற கேள்வி எழுந்தது. தற்போது அந்த இடத்தைத் தனது &quot;தமிழக வெற்றிக் கழகம்&quot; (TVK) மூலம் நடிகர் விஜய் பிடிப்பார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. சமீபத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளும், அரசியல் நகர்வுகளும் தமிழகத்தின் பாரம்பரிய அதிகார மையங்களை ஆட்டம் காணச் செய்துள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சமீபத்திய அரசியல் ஆய்வுகள் மற்றும் கருத்துக்கணிப்புகளின்படி, தமிழக வெற்றிக் கழகம் 100 தொகுதிகளுக்கு அருகாமையில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரியவருகிறது. இது ஒரு புதிய கட்சிக்கு மிகப்பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் இதுவரை எந்தக் கட்சிக்கும் வாக்களிக்காத நடுநிலை வாக்காளர்களின் ஆதரவு விஜய்க்குச் சாதகமாகத் திரும்பியுள்ளது. விஜய்யின் வருகை, வெறும் ஒரு நடிகரின் வருகையாகப் பார்க்கப்படாமல், ஒரு மாற்றத்திற்கான அடையாளமாகப் பார்க்கப்படுவதே இந்த 100 தொகுதிகள் என்ற இலக்கை எட்ட மிக முக்கியக் காரணமாக உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் கூட்டணிகளிலும் உள்ள கட்சிகள் இப்போது விஜய்யின் பக்கம் பார்வையைத் திருப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக மற்றும் மதிமுக போன்ற கட்சிகள் நீண்டகாலமாகத் திமுக கூட்டணியில் இருந்தாலும், அதிகாரப் பகிர்வு மற்றும் ஆட்சி அதிகாரம் போன்றவற்றில் தங்களுக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்கவில்லை என்ற அதிருப்தியில் இருப்பதாகத் தெரிகிறது. ஒருவேளை விஜய் 100 இடங்களைப் பிடிக்கும் பட்சத்தில், திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக விஜய்யை முன்னிறுத்தி ஒரு புதிய கூட்டணியை அமைக்க இந்தக் கட்சிகள் ரகசியமாகத் திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழக அரசியலில் செல்வாக்கை இழந்திருப்பதாகக் கருதப்படும் அதிமுகவின் தோழமைக் கட்சிகள், அந்தக் கூட்டணியில் நீடிப்பதில் தயக்கம் காட்டுவதாகத் தெரிகிறது. அதே நேரத்தில், பாஜக, பாமக மற்றும் டிடிவி தினகரனின் அமமுக போன்றவை தமிழகத்தில் ஒரு வலுவான மாற்றத்தை விரும்புகின்றன. திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கில், இந்தக் கட்சிகள் விஜய்யுடன் ஒரு &quot;டீலுக்கு&quot; வரத் தயாராக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தமிழக அரசியலில் அதிமுகவை ஒரு ஓரத்தில் தள்ளிவிட்டு, விஜய்யை முதன்மைப் போட்டியாளராக மாற்றும் முயற்சியாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&quot;ஆட்சி அதிகாரத்தில் பங்கு&quot; என்ற கோரிக்கையை விஜய் வெளிப்படையாக முன்வைக்கவில்லை என்றாலும், கூட்டணிக் கட்சிகள் அவரை முதல்வராக்க ஆதரவளிக்க முன்வருவது ஒரு திருப்புமுனையாகும். குறிப்பாகத் திருமாவளவன், ஜான் பாண்டியன், கிருஷ்ணசாமி போன்ற தலைவர்களுடனான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும் பட்சத்தில், ஒரு புதிய சமூக நீதிக் கூட்டணி உருவாக வாய்ப்புள்ளது. திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே பெரும்பான்மையை இழக்கும் ஒரு &ldquo;தொங்கு சட்டமன்றம்&rdquo; உருவாகும்பட்சத்தில், விஜய்யின் கரங்களே ஓங்கி இருக்கும். அப்போது மற்ற கட்சிகளின் ஆதரவுடன் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழக அரசியலில் &quot;மாற்றம்&quot; என்பது எப்போதுமே திரையுலக பிம்பங்கள் மூலமாகவே நிகழ்ந்துள்ளது. எம்.ஜி.ஆருக்குப் பிறகு அந்த மகுடம் இப்போது விஜய்க்குப் பொருந்தும் சூழல் உருவாகியுள்ளது. 2026-ல் விஜய் நினைத்தது நடந்தால், அது ஐம்பது ஆண்டு காலத் திராவிட அரசியலின் போக்கை முற்றிலுமாக மாற்றியமைக்கும். தனது ரசிகர்களைத் தொண்டர்களாக மாற்றிய விஜய், இப்போது அவர்களை ஒரு பெரும் மக்கள் சக்தியாக மாற்றியுள்ளார். இந்தக் கட்டுரை குறிப்பிடுவது போல, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவும், மக்கள் செல்வாக்கும் ஒரு புள்ளியில் இணையும் போது, தமிழகத்தின் அடுத்த &quot;தளபதி&quot;யாக விஜய் கோட்டைக்குச் செல்வது உறுதி.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[politics]]></category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/politics/tvk-vijay-tamil-nadu-politics-set-for-a-shift-under-thalapathy-leadership-alliances-gear-up-to-challenge-dmk-and-aiadmk-l1rndqm"/>
        </item>
        <item>
            <title><![CDATA[meenakshi thirukalyanam 2026 மீனாட்சி திருக்கல்யாணத்தில் இந்த அம்மனை கவனிச்சீங்களா? யார் இந்த பிரியாவிடை?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/spiritual/meenakshi-thirukalyanam-2026-know-the-secret-about-piriyavidai-amman-in-madurai-meenakshi-temple-articleshow-w887w3h</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/spiritual/meenakshi-thirukalyanam-2026-know-the-secret-about-piriyavidai-amman-in-madurai-meenakshi-temple-articleshow-w887w3h</guid>
            <pubDate>Tue, 28 Apr 2026 14:35:22 +0530</pubDate>
            <description><![CDATA[மதுரை என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது மீனாட்சி அம்மன் தான். மீனாட்சி அம்மனையும், சொக்கநாதரையும் தான் பலருக்கும் தெரியும். ஆனால் பிரியாவிடை அம்மன் பற்றி பலருக்கும் தெரியாது. மீனாட்சி திருக்கல்யாணத்தின் போது மணமேடையில் சுந்தரேஸ்வரருக்கு இடது பாகத்தில் இருக்கும் அம்மன் யார் என பலருக்கும் சந்தேகம் இருக்கும்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kq6vwmsx4djatzzj4rbgrexa,imgname-meenakshi-sundareshwar-1777273295677.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;மதுரை சித்திரை திருவிழாவில் அனைவரும் எதிர்பார்க்கும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சி அம்மனின் தஇருக்கல்யாண வைபவம் ஏப்ரல் 28ம் தேதியான இன்று காலை நடந்து முடிந்துள்ளது. மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் என்று சொன்னாலும் சுந்தரேஸ்வரருக்கு அருகில் இரண்டு அம்மன்கள் இருப்பார்கள். அதாவது சுந்தரேஸ்வருக்கு பக்கத்தில் ஒரு அம்மனும், தனியாக ஒரு அம்மனும் இருப்பார்கள். மீனாட்சி திருக்கல்யாணமாக இருந்தாலும் சுந்தரேஸ்வரர் தனக்கு பக்கத்திலேயே இருக்கும் பிரியாவிடை அம்மனுக்கு தான் முதலில் திருமாங்கல்யம் அணிவிப்பார். அதற்கு பிறகு தனியாக இருக்கும் மீனாட்சி அம்மனுக்கு மாங்கல்யம் அணிவிப்பார்.&lt;/p&gt;&lt;p&gt;சுந்தரேஸ்வரருடன் இருக்கும் இந்த பிரியாவிடை அம்மன் பற்றி பலருக்கும் தெரியாது. வெறுமனே ஒரு சிலையாக அல்லாமல், மதுரையின் ஆன்மீக வாழ்வியலில் ஒரு அங்கமாக விளங்கும் இந்தப் பிரியாவிடை அம்மன் பற்றி இதுவரை பலரும் அறியாத சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கே தெரிந்து கொள்வோம்.&lt;/p&gt;&lt;p&gt;யார் இந்தப் பிரியாவிடை?&lt;/p&gt;&lt;p&gt;மதுரை மீனாட்சி சொக்கநாதர் கோவிலில், சுவாமி சன்னதிக்குச் சென்றால் அங்கே சொக்கநாதப் பெருமானுடன் எப்போதும் பிரியாமல் வீற்றிருக்கும் ஒரு தேவியைக் காணலாம். இவரே பிரியாவிடை அம்மன். பெயரிலேயே அதன் அர்த்தம் பொதிந்துள்ளது. &quot;பிரிவு + விடை&quot; - அதாவது இறைவனை விட்டு ஒருபோதும் பிரியாதவள் என்று பொருள். பொதுவாக அனைத்து சிவத்தலங்களிலும் உற்சவ மூர்த்தியாக சோமாஸ்கந்தர் (சிவன், உமை, முருகன்) இருப்பார். ஆனால் மதுரையில் மட்டும் இறைவனுடன் எப்போதும் இணைந்தே இருக்கும் இந்தப் பிரியாவிடை அம்மன் தனிச்சிறப்பு வாய்ந்தவர்.&lt;/p&gt;&lt;p&gt;இதுவரை அறியாத அரிய தகவல்கள் :&lt;/p&gt;&lt;p&gt;1. திருமணக் கோலத்தின் சாட்சி :&lt;/p&gt;&lt;p&gt;&lt;img&gt;&lt;/p&gt;&lt;p&gt;மதுரையில் மீனாட்சி - சொக்கநாதர் திருமணம் நடந்த பிறகு, அன்னை மீனாட்சி அரசியாக மதுரையை ஆளுகிறார். ஆனால், சொக்கநாதர் சிவகாமியாகவோ அல்லது பார்வதியாகவோ அல்லாமல், தன் இடப்பாகத்தில் பிரியாவிடை அம்மனைத் தாங்கி நிற்கிறார். இது இறைவனின் நித்திய கல்யாணக் கோலத்தைக் குறிக்கிறது. மீனாட்சி அரசியாக ஆட்சி செய்யும் போது, இல்லத்தரசியாக இறைவனுக்கு அருகிலேயே இருப்பவர் இந்தப் பிரியாவிடை அம்மன்.&lt;/p&gt;&lt;p&gt;2. கருவறையில் இருக்கும் ரகசியம் அம்மன்:&lt;/p&gt;&lt;p&gt;மதுரை கோவிலில் மூலவர் மீனாட்சி அம்மனுக்குத் தனிச் சன்னதி உண்டு. ஆனால், சொக்கநாதர் கருவறைக்குள்ளேயே சுவாமிக்கு இடப்பக்கத்தில் பிரியாவிடை அம்மன் சிறிய உருவமாக எழுந்தருளியிருப்பார்.&quot;அரசியாக அன்னை மீனாட்சி வெளிப்படையாக அருள்பாலிக்க, அந்தரங்கத் துணையாகவும், சக்தியாகவும் பிரியாவிடை அம்மன் இறைவனுடன் இரண்டறக் கலந்திருக்கிறார்&quot; என்பது ஐதீகம்.&lt;/p&gt;&lt;p&gt;3. திருவிழாக்களின் நாயகி :&lt;/p&gt;&lt;p&gt;மதுரை சித்திரைத் திருவிழா போன்ற பெரிய உற்சவங்களின் போது, சுவாமி புறப்படும் போது மீனாட்சி அம்மன் தனியாக ஒரு வாகனத்திலும், சொக்கநாதர் மற்றொரு வாகனத்தில் பிரியாவிடை அம்மனுடனும் வருவார்கள். சுவாமி எங்கு சென்றாலும் அவரை விட்டுப் பிரியாமல் நிழல் போலத் தொடர்வதால் தான் இவருக்கு இந்தப் பெயர் வந்தது.&lt;/p&gt;&lt;p&gt;4. வேறு எங்கும் காண முடியாத திருக்கோலம் :&lt;/p&gt;&lt;p&gt;பொதுவாக அனைத்து சிவன் கோவில்களிலும் சாமி தனி சன்னதியிலும், அம்பாள் தனி சன்னதியிலும் காட்சி தருவார்கள். அரிதாக சில ஆலயங்களில் அம்பாளும், சாமியும் ஒரே கருவறையில் காட்சி தருவார்கள். ஆனால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மட்டுமே மீனாட்சி தனி சன்னதியில் வீற்றிருக்க, அவளின் அம்சமாக பிரியாவிடை அம்மன் சொக்கநாதருடன் தனி சன்னதியிலும் காட்சி தருவதை காண முடியும். சாமி சன்னதியில் பிரியாவிடை அம்மன் உடன் இருப்பது பலருக்கு தெரியாத ரகசியம். ஆனால் மூலஸ்தானம், உற்சவம், வீதிஉலா என எந்த சமயத்தில் சொக்கநாதரை பிரியாமல் பிரியாவிடை அம்மன் கூடவே இருப்பாள். சக்தி இல்லாமல் சிவன் இல்லை என்ற ஆழ்ந்த ஆன்மீக தத்துவத்தை உணர்த்துவதே இந்த திருக்கோலத்தின் சிறப்பு அம்சமாகும்.&lt;/p&gt;&lt;p&gt;ஆன்மீகத் தத்துவம்:&lt;/p&gt;&lt;p&gt;&lt;img&gt;&lt;/p&gt;&lt;p&gt;பிரியாவிடை அம்மன் நமக்கு உணர்த்தும் தத்துவம் மிக அழகானது. கணவன் - மனைவி உறவில் ஒருவருக்கொருவர் துணையாக, பிரியாமல் இருக்க வேண்டும் என்பதையே இந்தப் பிம்பம் காட்டுகிறது. இறைவனை விட்டுப் பிரியாத உயிருக்கு என்றும் அழிவில்லை என்ற பூரண சரணாகதி தத்துவத்தையும் உணர்த்தக் கூடியவள் இந்த பிரியாவிடை அம்மன்.இறைவன் இயங்குவதற்கு ஆதாரமான சக்தியாகப் பிரியாவிடை அம்மன் விளங்குகிறார்.&lt;/p&gt;&lt;p&gt;இதை கவனிச்சிருக்கீங்களா?&lt;/p&gt;&lt;p&gt;மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் செல்லும் போது, சொக்கநாதர் சன்னதியில் தீபாராதனை காட்டப்படும் போது கவனமாகப் பாருங்கள். சுவாமியின் இடப்பக்கம் மிகச்சிறிய வடிவில் பிரியாவிடை அம்மன் காட்சி தருவாள். ஜொலிக்கும் அந்தப் பிரியாவிடை அம்மனை வணங்கினால்,குடும்பத்தில் ஒற்றுமை பெருகும் என்பது நம்பிக்கை. மதுரையில் மீனாட்சிக்கு இருக்கும் அதே முக்கியத்துவம், சுவாமியுடன் பிரியாமல் இருக்கும் இந்த அன்னைக்கும் உண்டு. மீனாட்சி திருக்கல்யாணத்தின் போது கூட முதலில் பிரியாவிடை அம்மனுக்கு தான் திருமாங்கல்யம் அணிவிக்கப்படும். அதற்கு பிறகு தான் கையில் கிளியுடன் தனியாக இருக்கும் மீனாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்படும். பிரிந்திருக்கும் தம்பதிகள் மீண்டும் இணையவும், குடும்பத்தில் சச்சரவுகள் நீங்கவும் பிரியாவிடை அம்மனை மனதார வேண்டிக் கொள்வது ஒரு சிறந்த ஆன்மீகப் பரிகாரமாகக் கருதப்படுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[spiritual]]></category>
            <dc:creator>Priya Velan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/spiritual/meenakshi-thirukalyanam-2026-know-the-secret-about-piriyavidai-amman-in-madurai-meenakshi-temple-articleshow-w887w3h"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Toyota Innova Hycross: இந்த காரை போட்டி போட்டு வாங்கும் இந்தியர்கள்.. 2 லட்சம் வாகனங்கள் விற்னை]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/auto/toyota-innova-hycross-hits-200000-sales-milestone-in-india-gkw202d</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/auto/toyota-innova-hycross-hits-200000-sales-milestone-in-india-gkw202d</guid>
            <pubDate>Tue, 28 Apr 2026 14:26:15 +0530</pubDate>
            <description><![CDATA[நவம்பர் 2022-ல் அறிமுகமான டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ், குறுகிய காலத்திலேயே 2 லட்சம் கார்கள் விற்பனையாகி இந்திய சந்தையில் ஒரு புயலைக் கிளப்பியுள்ளது. அப்படி என்ன ஸ்பெஷல் இந்த காரில்?]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jzyr7czzy7vk3hr0p0n82797,imgname-ti-1752304956415.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[நவம்பர் 2022-ல் அறிமுகமான டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ், குறுகிய காலத்திலேயே 2 லட்சம் கார்கள் விற்பனையாகி இந்திய சந்தையில் ஒரு புயலைக் கிளப்பியுள்ளது. அப்படி என்ன ஸ்பெஷல் இந்த காரில்?&lt;img&gt;&lt;p&gt;இந்திய வாகனத் துறையில் மிகவும் பிரபலமான மாடல்களில் ஒன்றான டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ், ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது. திங்களன்று டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் அறிவித்த விவரங்களின்படி, நம் நாட்டில் இந்த காரின் விற்பனை 2 லட்சம் யூனிட்கள் என்ற மைல்கல்லைத் தாண்டியுள்ளது. 2022 நவம்பரில் சந்தையில் அறிமுகமான இந்த கார், மிகக் குறுகிய காலத்தில் நுகர்வோரின் இதயங்களைக் கவர்ந்து இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;ஹைப்ரிட் தொழில்நுட்பத்தின் மீது இந்திய வாடிக்கையாளர்களிடையே அதிகரித்து வரும் ஆர்வத்திற்கு இந்த விற்பனையே சான்றாகும் என அந்நிறுவனம் நம்புகிறது. வழக்கமான பெட்ரோல் கார்களுடன் ஒப்பிடுகையில், ஹைக்ராஸ் மாடலின் சிறந்த மைலேஜ் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த அம்சங்கள் காரணமாக அதன் தேவை பெருமளவில் அதிகரித்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ், நிறுவனத்தின் மதிப்புமிக்க TNGA பிளாட்ஃபார்மில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது இரண்டு இன்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது. முதலாவது 2.0-லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆகும். இது 5-ஆம் தலைமுறை 'செல்ஃப்-சார்ஜிங் ஸ்ட்ராங் ஹைப்ரிட்' எலக்ட்ரிக் சிஸ்டத்துடன் வருகிறது. இந்த ஹைப்ரிட் பதிப்பு மொத்தமாக 186 PS சக்தியை உற்பத்தி செய்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;இந்த ஹைப்ரிட் அமைப்பின் சிறப்பு அம்சம் என்னவென்றால், நகரப் பயணங்களின் போது கார் சுமார் 60 சதவிகித நேரம் மின்சார பயன்முறையில் இயங்குகிறது. இது எரிபொருளைச் சேமிப்பது மட்டுமல்லாமல், ஒரு மென்மையான ஓட்டுநர் அனுபவத்தையும் வழங்குகிறது. வழக்கமான இன்ஜினை விரும்புவோருக்காக, 2.0-லிட்டர் பெட்ரோல் மாடலும் கிடைக்கிறது. இது 174 PS சக்தியை வழங்குகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தச் சாதனை குறித்துக் கருத்து தெரிவித்த டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் விற்பனைச் சேவைப் பிரிவு துணைத் தலைவர் ஷபரி மனோகர், &quot;2 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை எட்டியதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இது இன்னோவா பிராண்டின் மீது வாடிக்கையாளர்கள் வைத்துள்ள நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது. குறிப்பாக, தானாகவே சார்ஜ் செய்துகொள்ளும் ஹைப்ரிட் தொழில்நுட்பத்தை மக்கள் பெரிதும் பாராட்டுகிறார்கள்,&quot; என்றார்.&lt;/p&gt;&lt;p&gt;பாதுகாப்பின் விஷயத்திலும் இந்தக் கார் சிறந்து விளங்குகிறது. பாரத் NCAP மோதல் சோதனைகளில் இன்னோவா ஹைகிராஸ் 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது, இது குடும்பங்களுக்கு ஒரு பாதுகாப்பான தேர்வாக அமைகிறது. இந்தக் காரின் தற்போதைய விலைகள் ரூ. 19.53 லட்சத்தில் தொடங்கி ரூ. 32.95 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) செல்கின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்னோவா ஹைக்ராஸின் உட்புற கேபின் மிகவும் ஆடம்பரமானது. இரண்டாவது வரிசையில் உள்ள மின்சாரத்தால் இயங்கும் ஆட்டோமான் இருக்கைகள், பயணிகளுக்கு குளிரூட்டப்பட்ட வசதியை வழங்குகின்றன. இவற்றுடன், காற்றோட்ட வசதியுள்ள முன் இருக்கைகள், இரட்டை மண்டல காலநிலை கட்டுப்பாடு மற்றும் தானியங்கி டெயில்கேட் போன்ற அதிநவீன அம்சங்களும் இதில் உள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;வாகனம் ஓட்டுவதை எளிதாக்கவும், விபத்துகளைத் தடுக்கவும், இது டொயோட்டா சேஃப்டி சென்ஸ் எனப்படும் மேம்பட்ட ஓட்டுநர் உதவி அமைப்பையும் வழங்குகிறது. மேலும், ஹைப்ரிட் மாடல்களின் பேட்டரிக்கு நிறுவனம் வழங்கும் 8 ஆண்டு உத்தரவாதம் வாடிக்கையாளர் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[auto]]></category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/auto/toyota-innova-hycross-hits-200000-sales-milestone-in-india-gkw202d"/>
        </item>
        <item>
            <title><![CDATA[சமந்தா நடிப்பில் வெளியாகி பாக்ஸ் ஆபிசில் அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்கள் பற்றி தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/the-5-biggest-box-office-hits-of-samantha-ruth-prabhu-ak2uaxn</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/the-5-biggest-box-office-hits-of-samantha-ruth-prabhu-ak2uaxn</guid>
            <pubDate>Tue, 28 Apr 2026 14:21:25 +0530</pubDate>
            <description><![CDATA[Samantha Ruth Prabhu: நடிகை சமந்தா நடிப்பில் வெளியாகி அதிக வசூல் செய்த டாப் 5 திரைப்படங்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01knv3rb8gh49wtsdpa7hwmfn5,imgname-samantha-ruth-prabhu-1775805148432.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Samantha Ruth Prabhu: நடிகை சமந்தா நடிப்பில் வெளியாகி அதிக வசூல் செய்த டாப் 5 திரைப்படங்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில், தனக்கென தனி அடையாளம் பதித்தவர் நடிகை சமந்தா ரூத் பிரபு. இவரது வித்தியாசமான நடிப்பு மற்றும் திறமை போன்றவை இவரது முன்னணி இடத்திற்கு கொண்டுவந்தது. முன்னணி ஹீரோயினாக இருந்த போதே... தன்னுடைய கேரியரை பற்றி கவலைப்படாமல் திருமணம் செய்து கொண்ட சமந்தா, திருமணத்திற்கு பின்னரும் நடிப்புக்கு ஃபுல் ஸ்டாப் வைக்காமல், தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தினார். பின்னர் விவாகரத்து, மயோசிட்டிஸ் பிரச்சனை என பல சவால்களையும் கடந்து, தற்போது வரை நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியாகி அதிக வசூல் செய்த 5 படங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கடந்த 2021-ஆம் ஆண்டு, அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான இந்த படத்தை, இயக்குனர் சுகுமார் இயக்கி இருந்தார். ஹீரோயினாக ரஷ்மிகா மனிதனா நடித்திருந்தாலும், 'ஊ சொல்றியா மாமா' என்கிற ஒரே ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டதன் மூலம், ஒட்டு மொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். அல்லு அர்ஜுனுக்கு நிகராக சமந்தாவுக்கும் கட்டவுட் வைத்து சமந்தாவை கொண்டாடினார்கள் ரசிகர்கள். இந்த திரைப்படம் ரூபாய் 365 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கடந்த 2018-ஆம் ஆண்டு, தெலுங்கில் கிராமத்து பின்னணியில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற திரைப்படம் தான் ரங்கஸ்தலம். ராம் சரண் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில், சமந்தா ராமலட்சுமி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். குடும்பம், காதல் மற்றும் காமெடிய என தனித்துவமான கதைக்களத்தில் எடுக்கப்பட்டிருந்தது. சமந்தாவின் திரையுலக வாழ்க்கையில், இப்படம் முக்கிய படமாகவும் அமைந்தது. இந்த திரைப்படம் ரூபாய் 214 கோடி வசூலை ஈட்டியது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கடந்த 2016-ஆம் ஆண்டு தமிழில், இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் தான் தெறி. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மித்ரா என்கிற மருத்துவர் கதாபாத்திரத்தில் சமந்தா நடித்திருந்தார். ஆக்ஷன் என்டர்டெயின்மெண்ட் படமான தெறி சுமார் ரூபாய் 150&ndash;160 கோடி வரை வசூல் சாதனை செய்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;2018 -ஆம் ஆண்டு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில், மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் மகாநடி. இந்த படத்தில், ஹீரோயின் கீர்த்தி சுரேஷ் என்றாலும்... சமந்தாவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது திறமையான நடிப்பு பாராட்டுக்களை பெற்றது. மேலும் இந்த திரைப்படம், ரூபாய் 85 முதல் 90 கோடி வரை வசூல் சாதனை படைத்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சமந்தாவின் திரையுலக வாழ்க்கையின் தொடக்க புள்ளியாக அமைந்த திரைப்படம் என்றால் அது, தெலுங்கில் இவர் ஹீரோயினாக அறிமுமாகமான 'யே மாயா சேசவே ' திரைப்படம். 'விண்ணை தாண்டி வருவாயா' திரைப்படத்தின் தெலுங்கு வெர்ஷன் தான் இந்த படம். சிம்பு நடித்த ஹீரோ ரோலில் நாகா சைதன்யா நடிக்க, திரிஷா நடித்த வேடத்தில், சமந்தா நடித்திருந்தார். கெளதம் மேனன் இயக்கி இருந்த இந்த படம் ரூபாய் 30 முதல் 35 கோடி வரை வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[cinema]]></category>
            <dc:creator>Rsiva kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/the-5-biggest-box-office-hits-of-samantha-ruth-prabhu-ak2uaxn"/>
        </item>
        <item>
            <title><![CDATA[கோடையிலும் வற்றாத தமிழகத்தின் ஒரே அருவி.. திற்பரப்பு எப்படி செல்வது? அருகில் என்னென்ன பார்க்கலாம்?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/tamil-nadu-waterfalls-in-summer-2026-why-thirparappu-falls-is-the-only-choice-for-tourists-7wg978b</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/tamil-nadu-waterfalls-in-summer-2026-why-thirparappu-falls-is-the-only-choice-for-tourists-7wg978b</guid>
            <pubDate>Tue, 28 Apr 2026 14:17:23 +0530</pubDate>
            <description><![CDATA[Thirparappu Falls Tourism Guide 2026: தமிழகத்தின் மற்ற அருவிகள் வறண்ட நிலையில் கோடையிலும் ஆர்ப்பரிக்கும் திற்பரப்பு அருவிக்கு எப்படி செல்வது? அருகில் என்னென்ன இடங்கள் பார்க்கலாம்? என்பது குறித்து பார்ப்போம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kq9m0cbq64vccrqpr9b9zwth,imgname-thirparappu-waterfalls-in-summer-2026-1777365692791.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Thirparappu Falls Tourism Guide 2026: தமிழகத்தின் மற்ற அருவிகள் வறண்ட நிலையில் கோடையிலும் ஆர்ப்பரிக்கும் திற்பரப்பு அருவிக்கு எப்படி செல்வது? அருகில் என்னென்ன இடங்கள் பார்க்கலாம்? என்பது குறித்து பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. தலைநகர் சென்னை முதல் தென்கொடி முனையான கன்னியாகுமரி வரை பகலில் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு வெப்பம் வாட்டுகிறது. வெயிலில் இருந்து விடுதலை பெற மக்கள் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாசஸ்தலங்களை தேடி ஓடி வருகின்றனர். மேலும் அருவிகளில் குளித்து வெப்பத்தை தணிக்கலாம் என்று பார்த்தால் புகழ்பெற்ற குற்றால அருவி தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது. இது மட்டுமின்றி சுருளி அருவி, கும்பக்கரை என பிரசித்தி பெற்ற அருவிகள் அனைத்தும் தண்ணீருக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றன.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;கோடையிலும் வற்றாத ஒரே அருவி திற்பரப்பு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஆனால் என்னதான் வெயில் வாட்டினாலும் தமிழகத்தில் ஆண்டு முழுவதும் நீர் விழுந்து கொண்டே இருக்கும் ஒரு அருவி உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? அதுதான் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவி. இன்றைய (ஏப்ரல் 28) நிலவரப்படி திற்பரப்பு அருவியில் தண்ணீர் விழுந்து கொண்டே இருக்கிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வரும் மக்கள் திற்பரப்பு அருவியில் ஆனந்த குளியல் போட்டு வருகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழகத்தின் பிரதான அருவிகள் நீரின்றி வறண்டு போய் கிடக்க, திற்பரப்பு அருவியில் மட்டும் எப்படி தண்னீர் விழுகிறது? என நீங்கள் கேட்கலாம். மற்ற அருவிகள் மழையை மட்டும் நம்பி இருக்கும் நிலையில், திற்பரப்பு அருவி கோதையாற்றின் குறுக்கே அமைந்துள்ளது. இந்த அருவிக்கு மேலே ஒரு தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து பாசனத்திற்காகத் திறக்கப்படும் தண்ணீர் இந்த ஆற்றின் வழியாக வந்து தடுப்பணையில் சேர்வதால் கோடையிலும் திற்பரப்பு அருவியில் தண்ணீர் விழுந்து கொண்டே இருக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சுட்டெரிக்கும் கோடையில் சுமார் 50 அடி உயரத்தில் இருந்து விழும் அருவி தண்ணீரில் குளியல் போடுவது பேரானந்தமாக இருக்கும். கோடையிலும் மக்களை ஏமாற்றாத திற்பரப்பு அருவிக்கு எப்படி செல்வது? என்பது குறித்து பார்ப்போம். திற்பரப்பு அருவி நாகர்கோவிலில் இருந்து சுமார் 42 கி.மீ தொலைவிலும், தக்கலையில் இருந்து சுமார் 20 கிமீ தொலைவிலும் உள்ளது. சென்னை, திருச்சி, கோவை என தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் நாகர்கோவிலுக்கு பேருந்துகள், ரயில்கள் உள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;அரசு பேருந்துகள் உண்டா?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து திற்பரப்பு அருவிக்கு குறிப்பிட்ட இடைவேளையில் அரசு பேருந்துகள் உள்ளன. இல்லாவிடில் நாகர்கோவிலில் இருந்து மார்த்தாண்டம், திருவனந்தபுரம் செல்லும் பேருந்துகளில் தக்கலை சென்று அங்கு இருந்து டவுண் பஸ்களில் ஏறி திற்பரப்பு செல்லலாம். காரில் அல்லது பைக்கில் வருகிறீர்கள் என்றால் நாகர்கோவில் வராமலேயே ஆரல்வாய்மொழியில் இருந்து நேரடியாக திற்பரப்பு சென்று விட முடியும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;திற்பரப்பு அருவியில் குளியல் போட்டு விட்டு, சுடச்சுட பிரியாணி அல்லது புரோட்டவை ஒரு பிடி பிடித்து விட்டு, நீங்கள் அருகில் சுற்றிப்பார்க்க ஏராளாமான இடங்கள் உள்ளன. அவை என்னென்ன என்பது குறித்து பார்ப்போம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;மாத்தூர் தொட்டிப் பாலம்: &lt;/strong&gt;ஆசியாவிலேயே மிக உயரமான தொட்டிப் பாலமான இது திற்பரப்பு அருவியில் இருந்து வெறும் 11 கிமீ தூரத்திலேயே அமைந்துள்ளது. பறளி ஆற்றின் குறுக்கே சுமார் 115 அடி உயரத்தில் 28 தூண்களுடன் பிரம்மாண்டமாக இருக்கும் மாத்தூர் தொட்டிப் பாலம் பார்ப்பதற்கு மிகவும் பிரம்மிப்பாக இருக்கும். தொட்டிப் பாலத்தின் மேலே மக்கள் நடந்து சென்றால் கன்னியாகுமரியின் அடர்ந்த தென்னை மரக் காடுகளும், மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகும் உங்களை சுண்டியிழுக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பேச்சிப்பாறை அணை: &lt;/strong&gt;திற்பரப்பு அருவியில் இருந்து சுமார் 14 கிமீ தொலைவில் அமைந்துள்ள பேச்சிப்பாறை அணை அடந்த வனப்பகுதியில் அமைதியான சூழலை நாடுபவர்களுக்கு ஏற்றதாக இருக்கும். அணையின் அழகும், வானுயர உயர்ந்து நிற்கும் மரங்களின் அழகும் உங்களை கொள்ளை கொள்ளும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பத்மநாபபுரம் அரண்மனை: &lt;/strong&gt;திற்பரப்பு அருவியில் இருந்து சுமார் 20 கிமீ தொலைவில் பத்மநாபபுரம் அரண்மனை அமைந்துள்ளது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கலைநயம் மிக்க மர வேலைப்பாடுகள் கொண்ட இந்த பிரம்மாண்ட அரண்மனை உங்களை வியக்க வைக்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[tamilnadu]]></category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/tamil-nadu-waterfalls-in-summer-2026-why-thirparappu-falls-is-the-only-choice-for-tourists-7wg978b"/>
        </item>
        <item>
            <title><![CDATA[பிரதீப் இல்ல... ஒரே படத்தில் ஹீரோவாகவும், டைரக்டராகவும் ஜெயித்தவர் - யார் இந்த சுட்டிக் குழந்தை?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/youth-movie-director-ken-karunas-rare-unseen-childhood-photos-viral-yf2agfq</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/youth-movie-director-ken-karunas-rare-unseen-childhood-photos-viral-yf2agfq</guid>
            <pubDate>Tue, 28 Apr 2026 14:14:53 +0530</pubDate>
            <description><![CDATA[ஒரே படத்தில் ஹீரோவாக மட்டுமின்றி, இயக்குநராகவும் அறிமுகமாகி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த தமிழ் சினிமா ஸ்டாரின் குழந்தைப்பருவ புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த பிரபலம் பற்றி பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kq9m0py9h99nqhrxsxvjn8tq,imgname-ken-karunas--1--1777365703625.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஒரே படத்தில் ஹீரோவாக மட்டுமின்றி, இயக்குநராகவும் அறிமுகமாகி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த தமிழ் சினிமா ஸ்டாரின் குழந்தைப்பருவ புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த பிரபலம் பற்றி பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சினிமாவில் முதல் படத்தில் ஹீரோவாக அறிமுகமானாலும் இயக்குநராக அறிமுகமானாலும் சரி அதை எப்படியாவது ஹிட் படம் ஆக்கிவிட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பில் தான் புதுமுகங்கள் இருப்பார்கள். ஆனால் முதல் படத்திலேயே ஹீரோவாக நடித்தது மட்டுமின்றி அப்படத்தையும் இயக்கி, அதில் பிளாக்பஸ்டர் வெற்றியையும் ருசித்துள்ளார் ஒருவர். அவர் இயக்கி நடித்த படம், இந்த ஆண்டு அதிக வசூல் அள்ளிய படங்கள் பட்டியலில் டாப் 3-ல் உள்ளது. அந்த அளவுக்கு ஒரே படத்தில் ஓஹோனு ஃபேமஸ் ஆகிவிட்டார். அந்த பன்முகத்திறமை கொண்ட கலைஞனின் குழந்தைப்பருவ புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி வருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அந்த பிரபலம் வேறுயாருமில்லை கென் கருணாஸ் தான். நடிகர் கருணாஸின் மகனான இவர் கடந்த 2001-ம் ஆண்டு பிறந்தார். இவருடைய தந்தை சினிமாவில் காமெடியனாகவும் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்திருந்ததால், கென்னுக்கு சிறு வயதிலேயே சினிமாவில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. இவர் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ரகளபுரம் படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அப்படத்தில் நடிகர் கருணாஸுடன் இவர் செய்த காமெடி கலாட்டா மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது. இன்றளவும் அந்த நகைச்சுவை காட்சிகள் ஆதித்யா டிவியில் சக்கைப்போடு போட்டு வருகின்றன. இதன் பின்னர், கடந்த 2016ம் ஆண்டு குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட &lsquo;அழகு குட்டி செல்லம்&rsquo; என்கிற திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதன்பின்னர் கென் கருணாஸுக்கு ஒரு நடிகராக மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுத்தந்த படம் என்றால் அது அசுரன் தான். கடந்த 2019-ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் ரிலீஸ் ஆன இப்படத்தில் தனுஷின் மகனாக சிதம்பரம் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கென். அதில் அவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. குறிப்பாக அடிவாங்கும் காட்சிகளில் தன்னுடைய நடிப்பால் கண்களை குளமாக்கிவிட்டார் கென்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அசுரன் படத்தில் கென்னின் நடிப்பை பார்த்து வியந்துபோன தனுஷ், தன்னுடைய அடுத்த படமான வாத்தியிலும் அவரை ஒரு சிறிய ரோலில் நடிக்க வைத்தார். அப்போதே தனுஷின் படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்ற தொடங்கினார் கென். திருச்சிற்றம்பலம் படத்தில் அவர் உதவி இயக்குநராக பணியாற்றி இருந்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதையடுத்து வெற்றிமாறன் இயக்கிய விடுதலை பாகம் 2 திரைப்படத்திலும் நடித்தார். அதில் இவர் நடித்த ஆக்&zwnj;ஷன் காட்சிகள் செம மாஸ் ஆக இருந்தது. அந்த காட்சிகளில் தன் உயிரைக் கொடுத்து நடித்திருந்தார் கென். அப்படத்திற்கு பின்னர் தன்னுடைய முதல் படத்தை இயக்கும் பணியில் இறங்கினார். அப்படத்திற்கு யூத் என டைட்டில் வைத்து, தன்னுடைய நண்பர்கள் உடன் சேர்ந்து இயக்கி வந்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;யூத் திரைப்படம் இந்த ஆண்டு மார்ச் மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி சக்கை போடு போட்டது. அப்படம் தியேட்டரில் 82 கோடி வசூலை வாரிக்குவித்து இருந்தது. இதன்மூலம் இந்த ஆண்டு அதிக வசூல் அள்ளிய படங்களில் பட்டியலில் 3ம் இடத்தை பிடித்து அசத்தியது. இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோ மற்றும் இயக்குநராக அறிமுகமான முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியை ருசித்தவர் என்கிற பெருமையை பெற்றுள்ளார் கென்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[cinema]]></category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/youth-movie-director-ken-karunas-rare-unseen-childhood-photos-viral-yf2agfq"/>
        </item>
        <item>
            <title><![CDATA[பிரியாணி, தர்பூசணி சாப்பிட்டவர்கள்.. அதிகாலையில் 4 பேருக்கு நடந்த துயரம்.. அதிர்ச்சியில் போலீஸ்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/india/mumbai-family-death-biryani-food-poisoning-case-2ovve4g</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/india/mumbai-family-death-biryani-food-poisoning-case-2ovve4g</guid>
            <pubDate>Tue, 28 Apr 2026 14:01:11 +0530</pubDate>
            <description><![CDATA[மும்பையில் நடந்த இந்த சம்பவம் ஒரு குடும்ப விருந்தை திடீரென துயரமாக மாற்றியுள்ளது. சிகிச்சை அளித்தும் காப்பாற்ற முடியாத இந்த சம்பவம், போலீஸ் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kq9cz1zz8t5vgxz0cwq9g22f,imgname-tamil-news---2026-04-28t120757.647-1777358309374.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;மும்பையில் நடந்த இந்த சம்பவம் ஒரு குடும்ப விருந்தை திடீரென துயரமாக மாற்றியுள்ளது. சிகிச்சை அளித்தும் காப்பாற்ற முடியாத இந்த சம்பவம், போலீஸ் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மும்பையின் பைதுணி பகுதியில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் திடீரென உயிரிழந்தது மர்மத்தைக் கூட்டியுள்ளது. அப்துல்லா டோகாடியா, அவரது மனைவி நஷ்ரீன் மற்றும் அவர்களின் இரு மகள்கள் ஆயிஷா, ஜைனப் ஆகியோர் சனிக்கிழமை இரவு உறவினர்களை வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்தனர். அனைவரும் சேர்ந்து பிரியாணி சாப்பிட்டு மகிழ்ந்தனர். உறவினர்கள் இரவு 10.30 மணிக்கு வீட்டை விட்டு சென்றனர். ஆனால் அதற்குப் பிறகு நடந்தது ஒரு பயங்கரமான திருப்பமாக மாறியது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதிகாலை 1 மணியளவில், குடும்பத்தினர் மீண்டும் தர்பூசணி பழம் சாப்பிட்டதாக தகவல். சில மணி நேரங்களிலேயே, காலை 5 முதல் 6 மணிக்குள், நால்வருக்கும் திடீரென வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் தோன்றின. உடல் நிலை வேகமாக மோசமடைந்து, சோர்வும் மூச்சுத்திணறலும் அதிகரித்தது. அதே கட்டிடத்தில் வசிக்கும் ஒரு மருத்துவர் உடனடியாக உதவிக்குச் சென்றார். அவர் கூறுவதாவது, ஒருவர் துடிப்பு இழந்த நிலையில் இருந்ததாகவும், உடனடியாக CPR செய்தும் பலனளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அவசரமாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர்கள், பின்னர் மேம்பட்ட சிகிச்சைக்காக ஜேஜே மருத்துவமனை மாற்றப்பட்டது. ஆனால் மருத்துவர்களின் அனைத்து முயற்சிகளையும் மீறி, நால்வரும் உயிரிழந்தனர். இந்த திடீர் மரணம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. உணவு விஷப்புகை காரணமா, அல்லது வேறு ஏதேனும் விஷயம் உள்ளதா என்பது தற்போது விசாரணையில் உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜே.ஜே.மார்க் காவல் நிலைய போலீஸார் சந்தேக மரணம் தொடர்பாக பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். உணவு மாதிரிகள் மற்றும் உடல் உறுப்பு மாதிரிகள் பறிமுதல் செய்து நுண்ணறிவு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன. ஆரம்ப கட்டத்தில் உணவு விஷப்புகை என்ற சந்தேகம் இருந்தாலும், இறுதி காரணம் ஃபாரென்சிக் அறிக்கைக்குப் பிறகே உறுதியாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[india]]></category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/india/mumbai-family-death-biryani-food-poisoning-case-2ovve4g"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Fasting: இடைப்பட்ட கால விரதம்: உடல்நலத்தை மேம்படுத்த எளிய வழிகள்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/webstories/health-fitness/how-to-improve-your-wellness-with-easy-intermittent-fasting-n7q1h0u</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/webstories/health-fitness/how-to-improve-your-wellness-with-easy-intermittent-fasting-n7q1h0u</guid>
            <pubDate>Tue, 28 Apr 2026 13:35:52 +0530</pubDate>
            <description><![CDATA[இன்றைய பரபரப்பான சூழலில் உடல்நலத்தைப் பேணுவது கடினம். ஆனால், 'இடைப்பட்ட கால விரதம்' (Intermittent Fasting) என்பது நாம் எதை உண்கிறோம் என்பதை விட, எப்போது உண்கிறோம் என்பதில் கவனம் செலுத்தி நமது ஆரோக்கியத்தை எளிதாக மேம்படுத்த உதவுகிறது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kq9fqn9s7zkktbqzv8dbvbm9,imgname-intermittent-fasting--2--1777361212729.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <category><![CDATA[health-fitness]]></category>
            <dc:creator>Priya Velan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/webstories/health-fitness/how-to-improve-your-wellness-with-easy-intermittent-fasting-n7q1h0u"/>
        </item>
        <item>
            <title><![CDATA[சிலிண்டர் விலை உயர்வு தொடங்கி மே 1 முதல் எல்லாமே மாறப்போகுது.! மே 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள் என்ன? காட்டாயம் தெரிஞ்சிக்கோங்க.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/new-rules-from-may-1-2026-updates-in-banking-lpg-cylinder-price-hike-lpg-booking-epfo-and-finance-explained-70ahvy3</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/new-rules-from-may-1-2026-updates-in-banking-lpg-cylinder-price-hike-lpg-booking-epfo-and-finance-explained-70ahvy3</guid>
            <pubDate>Tue, 28 Apr 2026 13:21:40 +0530</pubDate>
            <description><![CDATA[New Rules from May 1 2026 : ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் இந்தியாவில் பல விதிமுறைகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அந்த வகையில் மே 1 முதல் அமலுக்கு வரும் புதிய மாற்றங்களை இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kq9h0wsarav1nnq431fk3xxf,imgname-new-rules-from-may-1-2026-1777362563882.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;New Rules from May 1 2026 : ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் இந்தியாவில் பல விதிமுறைகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அந்த வகையில் மே 1 முதல் அமலுக்கு வரும் புதிய மாற்றங்களை இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மே 1, 2026 முதல் எல்பிஜி சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் முதல் தேதி அன்று எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு விலையை மாற்றி அமைப்பது வழக்கம். மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக மே 1 முதல் வணிகம் மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலை உயர வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஏற்கனவே நகரங்களில் 25 நாட்களுக்கு ஒரு முறையும் கிராமப்புறங்களில் 45 நாட்களுக்கு ஒரு முறை தான் சிலிண்டர் புக்கிங் செய்ய முடியும் என்கிற விதி இருந்து வருகிறது. அதேபோல் சிலிண்டர் சப்ளையில் வெளிப்படை தன்மையை கொண்டு வர OTP அடிப்படையிலான டெலிவரி முறை 100% கட்டாயப்படுத்தப்பட உள்ளது. ஒரே முகவரியில் ஒன்றுக்கும் மேற்பட்ட கேஸ் இணைப்புகள் இருந்தால் அவற்றை இணைக்க அல்லது ஒன்றை ரத்து செய்ய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. போலி இணைப்புகளை கண்டறிந்து நீக்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உஜ்வாலா திட்டப் பயனாளிகள் மற்றும் மானியம் பெறுவோர் ஆதார் அடிப்படையில் செய்திருக்க வேண்டியது அவசியம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எஸ்பிஐ வங்கியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மே 1 முதல் முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளது. எஸ்பிஐ வங்கி இதற்கு முன்பாக வாடிக்கையாளர்களிடமிருந்து ரூ.500 வரை நிலுவைத் தொகைக்கு தாமத கட்டணம் வசூலிக்காமல் இருந்து வந்தது. ஆனால் இனி ரூ.100-க்கு மேல் ரூ.500 வரையிலான நிலுவைத் தொகைகளுக்கு ரூ.100 தாமதக் கட்டணம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது. ரூ.500 தொடங்கி ரூ.1,000 வரையிலான நிலுவைத் தொகைகளுக்கு தாமத கட்டணம் ரூ.500 ஆக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;நிலுவைத் தொகை ரூ.1000-ஐ தாண்டினால் தாமதக் கட்டணங்களில் எந்த மாற்றமும் இருக்காது என கூறியுள்ளது. கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதிக்குள் குறைந்தபட்ச நிலுவைத் தொகையை செலுத்தத் தவறினால் தாமதக் கட்டணம் விதிக்கப்படும் என்றும், தொடர்ச்சியாக இரண்டு பில்லிங் சுழற்சிகளுக்குள் இந்த குறைந்தபட்ச கட்டணத்தை செலுத்து தவறுபவர்களுக்கு மேலும் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;HDFC வங்கி தனது எஸ்எம்எஸ் சேவைகளுக்கான புதிய கட்டணங்களை மே ஒன்றாம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. வங்கி பரிவர்த்தனைகளின் பொழுது பாதுகாப்பு கருதி நம் மொபைல் எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. தற்போது ஒரு குறுஞ்செய்திக்கு 20 காசுகளுடன் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. ஆனால் மே 1 முதல் ஒரு எஸ்எம்எஸ்-க்கு 15 காசுகளாக குறைக்கப்பட உள்ளது. மாதத்திற்கு 100 எஸ்எம்எஸ் அலர்ட்டுகளை பெறுபவர்கள் இதுவரை 20 ரூபாயுடன் ஜிஎஸ்டியும் செலுத்தி வந்திருப்பீர்கள். ஆனால் இனிவரும் காலங்களில் அது 15 ரூபாயாக குறையும். அதே சமயம் மின்னஞ்சல் மூலம் பெறப்படும் அலர்ட்டுகளுக்கு கட்டணம் கிடையாது என்றும், அது முற்றிலும் இலவசமாக இருக்கும் என்றும் HDFC வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆன்லைன் விளையாட்டு தொடர்பான புதிய விதிமுறைகளை மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ளது. சூதாட்டம் இல்லாத சாதாரண விளையாட்டுகளுக்கு பதிவு அவசியம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இ-ஸ்போர்ட்ஸ் விளையாட்டுகளுக்கு கட்டாயப் பதிவு அவசியமாகும். இந்த விதிகள் கொண்டுவரப்பட்டதற்கான நோக்கம் அரசு தாமாகவோ அல்லது தேவைப்படும் இடங்களில் சில விளையாட்டுகளை கண்காணிக்க உதவும் என்று கூறப்பட்டுள்ளது. தொழில்நுட்பத் துறை செயலாளர் கிருஷ்ணன் கூறுகையில் இந்த புதிய விதிகள் ஆன்லைன் சூதாட்டத்தை முற்றிலும் தடை செய்ய உதவும் என்று தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தொழிலாளர் வருங்கால பைப்பு நிதி நிறுவனமான EPFO மே மாதம் முதல் புதிய நடைமுறைகளை அமல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது PF கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் PF பணத்தை எடுக்க ஆன்லைனில் விண்ணப்பித்து மாத கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த பணத்தை UPI அல்லது ஏடிஎம் மூலம் எடுக்கும் வசதி EPFO 3.O மூலம் கொண்டு வரப்படும் என்று சில வருடங்களுக்கு முன்பு மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த நடைமுறை வரும் மே மாதம் முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[business]]></category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/new-rules-from-may-1-2026-updates-in-banking-lpg-cylinder-price-hike-lpg-booking-epfo-and-finance-explained-70ahvy3"/>
        </item>
        <item>
            <title><![CDATA[மேயாத மான் படத்தில் ஹீரோ - ஹீரோயினாக முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/shocking-revelation-the-first-choices-for-hero-and-heroine-in-meyaadha-maan-0xyubtg</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/shocking-revelation-the-first-choices-for-hero-and-heroine-in-meyaadha-maan-0xyubtg</guid>
            <pubDate>Tue, 28 Apr 2026 13:11:19 +0530</pubDate>
            <description><![CDATA[Meyaadha Maan: 'மேயாத மான்' திரைப்படத்தில், ஹீரோ மற்றும் ஹீரோயினாக நடிக்க இருந்த நட்சத்திரங்கள் பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kq9g738j5hsenre6d72nkpv3,imgname-mixcollage-28-apr-2026-01-04-pm-9694-1777361718546.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Meyaadha Maan: 'மேயாத மான்' திரைப்படத்தில், ஹீரோ மற்றும் ஹீரோயினாக நடிக்க இருந்த நட்சத்திரங்கள் பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில், காதல், நட்பு கலந்த கலவையாக வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் தான் &ldquo;மேயாத மான்&rdquo;. 2017 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் எளிமையான கதைக்களத்தில், மிக குறைவான பட்ஜெட்டில் வெளியாகி இளம் ரசிகர்களின் மனதை கவர்ந்தது. ரத்னா குமார் இயக்குனராக அறிமுகமான இந்த படத்தை, கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வைபவ் ஹீரோவாக நடித்திருந்த நிலையில், பிரியா பவானி சங்கர் ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும் விவேக் பிரசன்னா, இந்துஜா ரவிச்சந்திரன், அருண் பிரசாத் மற்றும் அம்ருதா சீனிவாசன் போன்றோர் துணை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது. விது அய்யண்ணா ஒளிப்பதிவு செய்ய, ஷஃபிக் முஹம்மது அலி படத்தொகுப்பு செய்திருந்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த திரைப்படம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகி, வெற்றி பெற்றது. குறிப்பாக இந்துஜா மற்றும் விவேக்கின் நடிப்பு பாராட்டை பெற்றதோடு, பிரியா பவானி ஷங்கருக்கு சிறந்த அறிமுக படமாகவும் அமைந்தது. இப்படம் சில விருதுகளையும் வென்று குறித்து குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான்... இயக்குனர் ரத்னகுமார் 'மேயாத மான்' திரைப்படத்தில் நடிக்க இருந்த ஹீரோ ஹீரோயின் குறித்த தகவலை சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;'மேயாத மான்' திரைப்படத்தில் முதலில் நடிகர் ஜெய் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் தான் முதலில் கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார். இருவருக்குமே கதை மிகவும் பிடித்த போதிலும், எதிர்பாராத விதமாக படம் துவங்க இருந்த போது, பண மதிப்பிழப்பை அரசு அறிவித்துள்ளது. எனவே இந்த படம் நிறுத்தப்பட்டதாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிரச்சனை சீரான பின்னர் அவர்கள் இருவரின் கால்ஷீட் கிடைப்பதில் சிக்கல் ஏற்படவே, வைபவ் மற்றும் பிரியா பவானி ஷங்கர் ஆகியோரை வைத்து மேயாத மான் படம் எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[cinema]]></category>
            <dc:creator>Rsiva kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/shocking-revelation-the-first-choices-for-hero-and-heroine-in-meyaadha-maan-0xyubtg"/>
        </item>
    </channel>
</rss>
