<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes"?>
<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Thu, 09 Apr 2026 12:45:49 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[பிறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி? என்னென்ன ஆவணங்கள் தேவை? இதோ முழு விவரம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/how-to-get-a-birth-certificate-required-documents-checklist-wguwdgv</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/how-to-get-a-birth-certificate-required-documents-checklist-wguwdgv</guid>
            <pubDate>Thu, 09 Apr 2026 12:45:47 +0530</pubDate>
            <description><![CDATA[ஒரு குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் பள்ளி சேர்க்கை முதல் பாஸ்போர்ட் வரை அவசியமான ஆவணமாகும். பிறந்து 21 நாட்களுக்குள் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k1qfa1xaq9g55ezt5jnzxvfa,imgname-tamil-news--55--1754208208810.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஒரு குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் பள்ளி சேர்க்கை முதல் பாஸ்போர்ட் வரை அவசியமான ஆவணமாகும். பிறந்து 21 நாட்களுக்குள் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தற்போதை காலக்கட்டத்தில் ஒரு குழந்தை பிறந்த பிறகு, பிறப்புச் சான்றிதழைப் பெறுவது ரொம்ப அவசியமாகிறது. ஏனெனில் இது பள்ளி சேர்க்கை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் விண்ணப்பம் அயல்நாட்டில் குடியுரிமை பெற பிறப்பு சான்றிதழ் இன்றியமையாத ஆவணமாக உள்ளது. பிறப்பு அரசு மருத்துவமனையில் நடந்தால், அதிகாரிகள் வழக்கமாக இந்த செயல்முறையைத் தொடங்குவார்கள். இருப்பினும், உங்கள் குழந்தை ஒரு தனியார் மருத்துவமனையில் பிறந்தால் பெற்றோர்கள் தாங்களாகவே விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் போர்டல் மூலமாகவோ அல்லது உள்ளூர் நகராட்சி அலுவலகங்களுக்குச் செல்வதன் மூலமாகவோ. இந்திய சட்டத்தின்படி, பிறப்பு பிறந்த 21 நாட்களுக்குள் பதிவு செய்யப்பட வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒவ்வொரு இந்திய மாநிலமும் பிறப்புகளை ஆன்லைனில் பதிவு செய்ய ஒரு குறிப்பிட்ட அரசு போர்ட்டலை வழங்குகிறது. தொடங்குவதற்கு, நீங்கள் உங்கள் அந்தந்த மாநில அல்லது நகராட்சி வலைத்தளத்தைப் பார்வையிட வேண்டும். படிவம் நிரப்பப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டவுடன், டிஜிட்டல் சான்றிதழ் செயலாக்கப்பட்டு பதிவிறக்கம் அல்லது விநியோகத்திற்காக கிடைக்க பொதுவாக 7 முதல் 8 வேலை நாட்களாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது, சில ஆவணங்கள் பதிவேற்றப்பட வேண்டும். இதில் மருத்துவமனையில் வழங்கப்பட்ட பிறப்பு பதிவு (பிறப்புச் சான்று), பெற்றோரின் ஆதார் அட்டைகள் மற்றும் பெற்றோரின் திருமணச் சான்றிதழ் ஆகியவை அடங்கும். ஸ்கேன் செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களும் தெளிவாகவும் படிக்கக்கூடியதாகவும் இருப்பதை உறுதிசெய்யவும். கைமுறையாகச் செயல்முறை செய்ய வேண்டிய அவசியத்தைத் தவிர்க்க 21 நாட்களுக்குள் பிறப்பைப் பதிவு செய்வது முக்கியம். தாமதங்களுக்கு கூடுதல் சரிபார்ப்பு அல்லது உயர் அதிகாரிகளிடமிருந்து ஒப்புதல் தேவைப்படலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆன்லைன் சேவைகளைப் பயன்படுத்த விரும்பாதவர்கள் அல்லது 21 நாள் கால அவகாசத்தைத் தவறவிடுபவர்கள் ஆஃப்லைன் வழியைத் தேர்வு செய்யலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், பிறப்பு பதிவு படிவத்தைப் பெற பெற்றோர்கள் தங்கள் உள்ளூர் நகராட்சி அலுவலகம், கார்ப்பரேஷன் அல்லது கிராம பஞ்சாயத்துக்கு செல்ல வேண்டும். தேவையான அனைத்து விவரங்களையும் நிரப்பிய பிறகு, துணை ஆவணங்களின் நகல்களை இணைத்து, படிவத்தை உள்ளூர் பதிவாளரிடம் சமர்ப்பிக்கவும். சான்றிதழ் பொதுவாக ஒரு வாரத்திற்குள் வழங்கப்படும், சரிபார்ப்புக்கு உட்பட்டது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விண்ணப்பத்தின் போது வழங்கப்படும் தகவல்கள் மருத்துவமனை பதிவுகளுடன் சரியாக பொருந்த வேண்டும். 21 நாட்களுக்குள் விண்ணப்பிப்பது நடைமுறையை எளிதாக்குகிறது. ஆன்லைனாக இருந்தாலும் சரி அல்லது ஆஃப்லைனாக இருந்தாலும் சரி, உங்கள் ஆவணங்களை முன்கூட்டியே தயாராக வைத்திருப்பது செயல்முறையை விரைவுபடுத்த உதவுகிறது. இந்த பிறப்பு பதிவு உங்கள் குழந்தையின் வாழ்நாள் முழுவதும் பல சேவைகளுக்கு ஒரு அடித்தளமாக செயல்படும், எனவே அதை கவனமாகக் கையாளவும், சரியான நேரத்தில் பதிவை உறுதி செய்யவும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பிறப்பு சான்றிதழ் இணைதளம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;பிறப்பு சான்றிதழ் பெற, தமிழ்நாடு அரசின் https://www.crstn.org/birth_death_tn/ என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும். அதில் பிறப்புச் சான்றிதழ் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[tamilnadu]]></category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/how-to-get-a-birth-certificate-required-documents-checklist-wguwdgv"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஆர்.டி.ஓ, டிரைவிங் லைசன்ஸ் தேவையில்லை.. பெண்கள் ஈஸியாக ஓட்ட டாப் 5 ஸ்கூட்டர்கள்.. முழு லிஸ்ட்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/auto/top-5-best-no-license-electric-scooters-for-women-in-india-2026-price-and-features-8wvynm0</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/auto/top-5-best-no-license-electric-scooters-for-women-in-india-2026-price-and-features-8wvynm0</guid>
            <pubDate>Thu, 09 Apr 2026 12:44:35 +0530</pubDate>
            <description><![CDATA[No-License Electric Scooters for Women : பெண்கள் ஈஸியாக ஓட்டும் வகையிலான ஆர்.டி.ஓ, டிரைவிங் லைசன்ஸ் தேவையில்லாத டாப் 5 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01knrh40mpek6hw1s4tzw5tqs6,imgname-scooters-women-1775718498966.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;No-License Electric Scooters for Women : பெண்கள் ஈஸியாக ஓட்டும் வகையிலான ஆர்.டி.ஓ, டிரைவிங் லைசன்ஸ் தேவையில்லாத டாப் 5 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்றைய காலகட்டத்தில் செலவுகளை சமாளிக்க கணவன் மட்டுமின்றி மனைவியும் வேலைக்கு செல்ல வேண்டியது அவசியம் ஆகிறது. வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு ஸ்கூட்டர்கள் மிகவும் கை கொடுத்து உதவுகின்றன. ஆனால் டிரைவிங் லைசன்ஸ் எடுப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் மற்றும் ஆர்டிஓ அலுவலகங்களால் பலரும் ஸ்கூட்டர்கள் வாங்க தயங்குகிறார்கள். ஆனால் இந்தியாவில் டிரைவிங் லைசன்ஸ் இல்லாமலேயே ஓட்டும் ஸ்கூட்டர்கள் உள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா?&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பெண்களுக்கு ஏற்ற டாப் 5 ஸ்கூட்டர்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;குறிப்பாக பெண்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் டிரைவிங் லைசன்ஸ் தேவை இல்லாத டாப் 5 ஸ்கூட்டர்கள் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம். மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்தின்படி 250 வாட்ஸ் குறைவான மின் திறன் கொண்ட ஸ்கூட்டர் மற்றும் அதிகபட்சமாக மணிக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய எலக்ட்ரிக் சூட்டர்களுக்கு டிரைவிங் லைசன்ஸ் கட்டாயம் இல்லை. இவற்றை ஓட்ட வயது வரம்பும் கிடையாது என சொல்லப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அந்த வகையில் முதலாவது ஓலா கிக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சொல்லலாம். நிறுவனத்தின் தரமான பெயருக்கான இந்த ஸ்கூட்டர் குறைந்த தூர பயணங்களுக்கு மிகவும் ஏற்றது. நீங்கள் ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 112 கிலோமீட்டர் வரை எந்த தடையும் இல்லாமல் பயணிக்கலாம். மற்ற ஸ்கூட்டர்களுக்கு இணையாக இதில் பல்வேறு வசதிகள் உள்ளன. இதன் குறைந்த எடை பெண்கள் சுலபமாக ஓட்ட உதவுகிறது. இந்த ஸ்கூட்டரின் விலை ரூ.39,999&zwj;-ல் இருந்து தொடங்குகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவில் நம்பகமான உறுதியான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தேடுபவர்களுக்கு ஹீரோ எலக்ட்ரிக் ஃபிளாஷ் எல்.எக்ஸ் ஒரு சிறந்த தேர்வாகும். இந்த ஸ்கூட்டரில் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் மற்றும் எல்இடி லைட் மோட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கொட்டி கிடைக்கின்றன. இந்த வண்டியின் பராமரிப்பு செலவு மிக குறைவு. பெண்களுக்கு கையாள மிக எளிதான ஸ்கூட்டர் ஆகும். இதன் விலை ரூ.64,000 ஆகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒகினாவா R30ஸ்கூட்டர் ஸ்டைலான தோற்றம் மற்றும் உறுதியான கட்டுமானத்துக்கு பெயர் பெற்றது. இதில் ரீசார்ஜ் செய்யக்கூடிய லித்தியம் அயன் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரின் சிறப்பம்சமே இதன் தரமான பிரேக்கிங் சிஸ்டம் தான். பெண்களுக்கு அதிக பாதுகாப்பு தரும் ஸ்கூட்டரில் ஒன்றாக இது உள்ளது. இந்த மாடலின் விலை ரூ.61,998 ல் இருந்து தொடங்குகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இது ஒரு காம்பாக்ட் ஸ்கூட்டர் ஆகும். கூட்ட நெரிசலில் எந்தவித சிரமமும் இன்றி செல்ல இந்த ஸ்கூட்டர் உதவுகிறது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் பேட்டரியை கழட்டி வீட்டிலேயே நீங்கள் சார்ஜ் செய்து கொள்ளலாம். ஓட்டுவதற்கு சைக்கிள் போக மிக எளிதாக உள்ளதால் பெண்கள் ஒட்டுவதற்கு மிகவும் பொருத்தமான ஸ்கூட்டராக இது இருக்கும். யூலு வின் மாடலின் விலை ரூ.60,000 ஆகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கெய்னடிக் நிறுவனத்தின் நவீன மின்சார ஸ்கூட்டராக உள்ள இந்த மாடலில் ரிமோட் லாக் மற்றும் ஆன்டி-தெஃப்ட் அலாரம் போன்ற பாதுகாப்பு வசதிகள் நிறைந்துள்ளன. அதிக லக்கேஜ் வைக்கும் வசதி கொண்டுள்ளதால் கடைகளுக்கு பொருட்களை எடுத்துச் செல்லவும் இந்த ஸ்கூட்டரை பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் விலை ரூ.79,999 ஆகும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பெண்களுக்கு இந்த ஸ்கூட்டர்கள் ஏன் ஏற்றது?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;மேற்கண்ட இந்த ஸ்கூட்டர்களில் பெட்ரோல் தேவையில்லை. ஆகவே ஆயில் மசாஜ், சர்வீஸ் செய்வது போன்ற வேலைகள் இல்லை என்பதால் பெண்களுக்கு தொந்தரவு இல்லை. இதன் வேகமும் குறைவாக இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் மிகவும் குறைவாக உள்ளது. மிக முக்கியமாக பெட்ரோல் செலவு இல்லவே இல்லை. ஒரு முறை சார்ஜ் செய்ய வெறும் இரண்டு முதல் மூன்று யூனிட் மின்சாரம் மட்டுமே செலவாகும் என்பதால் இந்த ஸ்கூட்டர்கள் பெண்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[auto]]></category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/auto/top-5-best-no-license-electric-scooters-for-women-in-india-2026-price-and-features-8wvynm0"/>
        </item>
        <item>
            <title><![CDATA[விரைவில் அரங்கேறும் மித்ரா- மகேஷ் திருமணம்? அன்புவின் மாஸ் சபதத்தால் அதிர்ச்சியில் குடும்பத்தினர்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/singappenne-serial-promo-april-9-says-mithra-plans-to-marry-mahesh-in-tamil-television-esncvyv</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/singappenne-serial-promo-april-9-says-mithra-plans-to-marry-mahesh-in-tamil-television-esncvyv</guid>
            <pubDate>Thu, 09 Apr 2026 11:08:21 +0530</pubDate>
            <description><![CDATA[மருத்துவமனையிலிருந்து ஆனந்தி டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு அழைத்து செய்யப்பட்ட நிலையில் அன்புவின் அம்மா தனது ரியாக்‌ஷனை வெளிப்படுத்தினார். இதே போன்று மகேஷ் ஆனந்தியின் வயிற்றில் வளரும் குழந்தையை பற்றி கனவு காண்கிறார்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01knrb2pqv01dytd1dc5t13qjb,imgname-anandhi-at-home-1775712164603.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;மருத்துவமனையிலிருந்து ஆனந்தி டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு அழைத்து செய்யப்பட்ட நிலையில் அன்புவின் அம்மா தனது ரியாக்&zwnj;ஷனை வெளிப்படுத்தினார். இதே போன்று மகேஷ் ஆனந்தியின் வயிற்றில் வளரும் குழந்தையை பற்றி கனவு காண்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சன் டிவியின் பிரபலத் தொடரான 'சிங்கப்பெண்ணே' வின் இன்றைய (ஏப்ரல் 9) தேதி எபிசோடிற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அன்பு, ஆனந்தி மீதான தனது அக்கறையை மிகவும் தீவிரமாக வெளிப்படுத்தும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளன. முன்னதாக ஆனந்தியின் இந்த நிலைக்கு யார் காரணம் என்று அன்புவின் அம்மா லட்சுமி மற்றும் துளசியிடம் போலீசார் விசாரனை மேற்கொள்ள, அதற்கு ஆனந்தியோ தானாக மளிகை பொருட்களை எடுத்து அலமாரியில் வைக்கும் போது கீழே விழுந்து விட்டதாக அன்புவிடம் கூறினார்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதைத் தொடர்ந்து அன்புவும் போலீசிடம் அப்படியே சொல்லவே, அவர்களும் துளசி மற்றும் லட்சுமியிடம் மேற்கொண்ட விசாரணையை பாதியிலேயே விட்டு விட்டு அங்கிருந்த் புறப்பட்டுச் சென்றனர். இதைத் தொடர்ந்து மருத்துவமனையிலிருந்து ஆனந்தி டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார். குறிப்பாக, தனது மனைவியைப் பார்த்துக் கொள்ள வேண்டியது தனது பொறுப்பு என்றும், அதைப் பற்றி யாரிடமும் விளக்கம் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் ஆவேசமாகப் பேசுகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அன்புவின் அதீத பாசமும் அங்கிருப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மேலும் மகேஷ், ஆனந்தி வயிற்றில் வளரும் குழந்தையை தன குழந்தை போல் உணர ஆரம்பித்துவிட்டார். இதை மித்ராவிடம் சொன்ன நிலையில் அவருக்கு பயம் ஏற்படுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தங்கள் திருமணத்தை நடத்தி முடிப்பதே நல்லது என்ற முடிவிற்கு மித்ரா வருகிறார். வீட்டுப் பெரியவர்களிடம் இது குறித்து சொல்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இது ஆனந்தியின் எதிர்காலத்தை நோக்கிய ஒரு முக்கியத் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. மறுபக்கம் நடந்த அனைத்தையும் தெரிந்து கொண்டு ஆனந்தியின் அக்கா கோகிலா தங்கையை நலம் விசாரிக்கிறார். மேலும் கர்ப்பமாக இருக்கும் போது எதற்காக இது போன்ற கஷ்டமான வேலைகளை செய்ய வேண்டும் என்று கடுமையாக திட்டினார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தொடர்ந்து போராட்டங்களையும் சவால்களையும் சந்தித்து வரும் ஆனந்திக்கு, அன்புவின் ஆதரவு ஒரு பலமாக இருந்தாலும், இவர்களை சுற்றி நடக்கும் விஷயத்திற்கு எல்லை இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. ஆனந்தியின் தைரியத்தையும், அதே சமயம் குடும்ப உறவுகளுக்குள் நடக்கும் போராட்டங்களையும் மையமாகக் கொண்ட இந்தத் தொடரின் அடுத்த எபிசோட், ரசிகர்களுக்கு ஒரு விறுவிறுப்பான அனுபவத்தைத் தரும் என்பதில் சந்தேகமில்லை.&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[television]]></category>
            <dc:creator>Rsiva kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/singappenne-serial-promo-april-9-says-mithra-plans-to-marry-mahesh-in-tamil-television-esncvyv"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஸ்மிருதி மந்தனா - பலாஷ் முச்சால் ஜோடிக்கு விரைவில் திருமணமா? காட்டுத்தீ போல் பரவும் வீடியோ]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/sports/smriti-mandhana-and-palash-muchhal-gearing-fot-wedding-soon-family-meeting-video-viral-tzbf20h</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/sports/smriti-mandhana-and-palash-muchhal-gearing-fot-wedding-soon-family-meeting-video-viral-tzbf20h</guid>
            <pubDate>Thu, 09 Apr 2026 12:34:46 +0530</pubDate>
            <description><![CDATA[கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, இசையமைப்பாளர் பலாஷ் முச்சால் ஜோடிக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. அதன் பின்னணியை பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kfqge8jwvhfvaj29wpjnfkt9,imgname-befunky-collage-1769241780828.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, இசையமைப்பாளர் பலாஷ் முச்சால் ஜோடிக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. அதன் பின்னணியை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திரமாக திகழும் ஸ்மிருதி மந்தனா, மகாராஷ்டிராவை சேர்ந்தவர். சமீபத்தில் நடைபெற்ற மகளிர் உலகக்கோப்பையில் இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்கு வகித்தார். தனிப்பட்ட வாழ்க்கையில், இந்தி இசையமைப்பாளர் பலாஷ் முச்சல் உடன் நீண்டநாளாக காதலில் இருந்த ஸ்மிருதி, அண்மையில் அவருடன் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் கடந்த ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி நடைபெற இருந்தது.&lt;/p&gt;&lt;p&gt;இதனிடையே, கல்யாணத்துக்கு சில தினங்கள் முன்னர் ஸ்மிருதி மந்தனாவின் தந்தை ஸ்ரீநிவாஸ் மந்தனாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சாங்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசரமாக அனுமதிக்கப்பட்டார். இந்த எதிர்பாராத சூழ்நிலையால் நவம்பர் 23ந் தேதி நடைபெறவிருந்த திருமணத்தை ஸ்மிருதி மந்தனா ரத்து செய்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஸ்மிருதி மந்தனாவுடனான திருமணம் நின்ற பிறகு, பலாஷ் முச்சால் ஒரு நடன இயக்குநருடன் தொடர்பில் இருந்ததாக வதந்திகள் பரவின. இதனால் அவர் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானார். திருமணம் ரத்து செய்யப்பட்டதை அறிவித்த பிறகு, தவறான வதந்திகளைப் பரப்புபவர்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார். 'ஆதாரமற்ற வதந்திகளின் அடிப்படையில் யாரையும் மதிப்பிடும் முன் நாம் சிந்திக்க வேண்டும். அவதூறு பரப்புவோர் மீது என் குழு சட்ட நடவடிக்கை எடுக்கும். இந்த கடினமான நேரத்தில் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி' என்று அவர் கூறி இருந்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதனிடையே ஸ்மிருதி மந்தனாவின் தந்தை பலாஷ் முச்சாலின் சகோதரி பாலக் முச்சாலை ஒரு ரெஸ்டாரண்டில் சந்தித்து பேசிய வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகின. அந்த வீடியோவில் பாலக், ஸ்மிருதி தந்தை காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறார். இதைப்பார்த்த நெட்டிசன்கள். ஸ்மிருதிக்கும், பலாஷுக்கு மீண்டும் திருமணம் நடைபெற இருக்கிறதா என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒரு சிலரோ இது பழைய வீடியோவாக இருக்கும் என கூறி வருகின்றனர். இந்த வீடியோ பற்றி இருதரப்பினரும் இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;View this post on Instagram&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&lt;p&gt;A post shared by Bollywood pap king (@bollywoodpapking)&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முன்னதாக அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்ட பலாஷ் முச்சால், ரத்து செய்யப்பட்ட இந்தத் திருமணத்தை தனது வாழ்க்கையின் மிகவும் சவாலான கட்டம் என்று விவரித்தார். இந்த உறவிலிருந்து விலகும் தனது முடிவை அவர் உறுதிப்படுத்தினார். 'உண்மையை சரிபார்க்காமல், வதந்திகளின் அடிப்படையில் மற்றவர்களை மதிப்பிடுவதை' மக்கள் நிறுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். 'இந்த உறவிலிருந்து நான் விலகுகிறேன். இது என் வாழ்வின் கடினமான கட்டம். இதை நான் கண்ணியத்துடன் எதிர்கொள்வேன்' என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பல யூகங்களுக்கு மத்தியில், இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, பலாஷ் முச்சாலுடனான தனது திருமணம் குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன் மௌனம் கலைத்தார். தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், திருமணம் ரத்து செய்யப்பட்டதை அவர் உறுதிப்படுத்தினார். இந்த நேரத்தில் தங்கள் இரு குடும்பங்களின் தனிப்பட்ட உரிமையை மதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். 'என் வாழ்க்கை பற்றி பல யூகங்கள் வந்தன. பலாஷுடனான என் திருமணம் ரத்து செய்யப்பட்டது. இந்த விஷயத்தை இத்துடன் முடிக்க விரும்புகிறேன். என் கவனம் எப்போதும் நாட்டுக்காக விளையாடுவதில்தான் இருக்கும்' என்று மந்தனா கூறி இருந்தார். முச்சால் ஏமாற்றியதாக வரும் குற்றச்சாட்டுகளை அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[sports]]></category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/sports/smriti-mandhana-and-palash-muchhal-gearing-fot-wedding-soon-family-meeting-video-viral-tzbf20h"/>
        </item>
        <item>
            <title><![CDATA[பார்க்கவே செம மாஸா இருக்கே..! இந்தியாவின் முதல் டிரைவர் இல்லா பாட் டாக்ஸி..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/india/no-driver-no-traffic-indias-first-driverless-pod-taxi-is-pure-magic-ooa0lfp</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/india/no-driver-no-traffic-indias-first-driverless-pod-taxi-is-pure-magic-ooa0lfp</guid>
            <pubDate>Thu, 09 Apr 2026 12:28:35 +0530</pubDate>
            <description><![CDATA[இந்தியா தனது முதல் ஓட்டுநர் இல்லாத பாட் டாக்ஸி சேவையை விரைவில் தொடங்க உள்ளது. செவ்வாயன்று, மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இந்த பாட் டாக்ஸி திட்டத்திற்கான அடிக்கல் நாட்டினார்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01knrbez3zzyzra5rwzypm115h,imgname-gemini-generated-image-adzc3hadzc3hadzc-1775712566399.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;இந்தியா தனது முதல் ஓட்டுநர் இல்லாத பாட் டாக்ஸி சேவையை விரைவில் தொடங்க உள்ளது. செவ்வாயன்று, மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இந்த பாட் டாக்ஸி திட்டத்திற்கான அடிக்கல் நாட்டினார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், ஓட்டுநர் இல்லாத பாட் டாக்ஸி திட்டத்திற்கான *பூமி பூஜை* (அடிக்கல் நாட்டு விழா) நிகழ்ச்சியை செவ்வாய்க்கிழமை நடத்தினார். இந்தத் திட்டம் உண்மையிலேயே தனித்துவமானது. மும்பையில் தொடங்கப்படும் இந்த பாட் டாக்ஸி சேவை, ஒரு தானியங்கி விரைவுப் போக்குவரத்து அமைப்பாகும். இது குர்லா மற்றும் பிகேசி (பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ்) ஆகியவற்றை இணைப்பதற்காக உருவாக்கப்பட்டு வருகிறது.&lt;/p&gt;&lt;p&gt;இந்தத் திட்டம் நிறைவடைந்தவுடன், தினசரிப் பயணிகள் மேம்பட்ட இணைப்பு வசதியால் பயனடைவார்கள். மகாராஷ்டிர துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் சுனேத்ரா பவார் ஆகியோரும் *பூமி பூஜை* விழாவில் கலந்துகொண்டனர். இந்தத் திட்டத்திற்கான அனைத்துத் தேவையான அனுமதிகளும் ஏற்கனவே பெறப்பட்டுவிட்டதாக முதலமைச்சர் ஃபட்னாவிஸ் தெரிவித்தார்.&lt;/p&gt;&lt;p&gt;மும்பை பெருநகர மண்டல மேம்பாட்டு ஆணையம் (MMRDA), குர்லா மற்றும் பாந்த்ரா குர்லா வளாகத்திற்கு இடையே இந்தத் திட்டத்தை உருவாக்கி வருகிறது. பாந்த்ரா குர்லா வளாகம் (BKC) மும்பையின் ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் முக்கிய வர்த்தக மையமாகும். இங்கு பன்னாட்டு நிறுவனங்கள், வங்கிகள், தேசிய பங்குச் சந்தை, ஹோட்டல்கள் மற்றும் பாரத் வைரச் சந்தை ஆகியவை அமைந்துள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;8.85 கிலோமீட்டர் நீளமுள்ள இந்தத் திட்டம், பல கட்டங்களாக உருவாக்கப்படும். இந்த வழித்தடத்தில், சுமார் 200 மீட்டர் இடைவெளியில் மொத்தம் 22 குளிரூட்டப்பட்ட நிலையங்கள் கட்டப்படும். தொடக்கத்தில், பாந்த்ரா (கிழக்கு) மற்றும் குர்லாவிற்கு இடையேயான 3.36 கிலோமீட்டர் நீளப் பகுதி இதில் அடங்கும்.&lt;/p&gt;&lt;p&gt;இந்த அமைப்பு எல்.பி.எஸ் மார்க், கலாநகர் மற்றும் பி.கே.சி போன்ற முக்கிய பகுதிகளை இணைக்கும். மேலும், இது பாந்த்ரா மற்றும் குர்லா ரயில் நிலையங்களுக்கு இடையேயான இணைப்பை மேம்படுத்தும். ஓட்டுநர் இல்லாத, செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான இந்த பாட்கள் பேட்டரியால் இயக்கப்படும் மற்றும் ஒரு நிலையான தண்டவாளத்தில் செல்லும். ஒவ்வொரு பாட்டிலும் அதிகபட்சமாக ஆறு பேர் அமரும் வசதி இருக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த பாட் டாக்சிகள் மணிக்கு அதிகபட்சமாக 40 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கும். இந்த பாட்கள் ஒவ்வொரு 15 வினாடி இடைவெளியில் வந்து சேரும், மேலும் பயணிகள் தேர்ந்தெடுக்கும் நிலையங்களில் மட்டுமே நிற்கும். இது பயணத்தை வேகமாகவும் வசதியாகவும் மாற்றும். இந்தத் திட்டம் பொது-தனியார் கூட்டாண்மை (PPP) மாதிரியின் கீழ் உருவாக்கப்படும்.&lt;/p&gt;&lt;p&gt;இந்த அமைப்பை இயக்குவதற்காக, பாந்த்ரா கிழக்கில் உள்ள ஒரு RLDA மனையில் ஒரு பணிமனையும் கட்டப்படும். அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த பாட் டாக்சி அமைப்பு போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உதவும். 2031-ஆம் ஆண்டுக்குள் தினமும் 109,000-க்கும் மேற்பட்ட பயணிகள் இதைப் பயன்படுத்துவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[india]]></category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/india/no-driver-no-traffic-indias-first-driverless-pod-taxi-is-pure-magic-ooa0lfp"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Onion Alternatives: வெங்காயம் இல்லையா? கவலை வேண்டாம்! திக்கான கிரேவி செய்ய சூப்பர் டிப்ஸ்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/health-food/onion-alternatives-no-onions-no-worries-7-super-tips-to-make-thick-rich-gravies-for-chicken-mutton-paneer-m4r7s0r</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/health-food/onion-alternatives-no-onions-no-worries-7-super-tips-to-make-thick-rich-gravies-for-chicken-mutton-paneer-m4r7s0r</guid>
            <pubDate>Thu, 09 Apr 2026 12:04:05 +0530</pubDate>
            <description><![CDATA[இந்திய சமையலில் வெங்காயம் இல்லாமல் எந்த குழம்பும், சாலடும் முழுமையடையாது. திடீரென வீட்டில் வெங்காயம் தீர்ந்துவிட்டால் என்ன செய்வது? சிக்கன், மட்டன், பன்னீர் போன்றவற்றுக்கு வெங்காயம் இல்லாமலேயே திக்கான, சுவையான கிரேவி செய்ய மாற்று வழிகள் இதோ.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01fsxv5zv9nwdsaady0k9yppcf,imgname-alternative-of-onion-in-gravy--1-.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;இந்திய சமையலில் வெங்காயம் இல்லாமல் எந்த குழம்பும், சாலடும் முழுமையடையாது. திடீரென வீட்டில் வெங்காயம் தீர்ந்துவிட்டால் என்ன செய்வது? சிக்கன், மட்டன், பன்னீர் போன்றவற்றுக்கு வெங்காயம் இல்லாமலேயே திக்கான, சுவையான கிரேவி செய்ய மாற்று வழிகள் இதோ.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வெங்காயம் இல்லாத சமையலில் கிரேவிக்கு திக்கான தன்மையும் ருசியும் தர சிறந்த மாற்று வேர்க்கடலை, முந்திரி, பாதாம் போன்ற பருப்புகள் ஆகும். இவற்றை வெந்நீரில் 10&ndash;15 நிமிடங்கள் ஊறவைத்து, மென்மையாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளலாம். பின்னர் இந்த பேஸ்ட்டை சிக்கன், மட்டன், பன்னீர் போன்ற எந்த கிரேவியிலும் சேர்த்தால், அது நல்ல க்ரீமியான கட்டுத்தன்மையையும் ரிச் டேஸ்டையும் வழங்கும். மேலும், இந்த முறையில் கிரேவி சுவை கூடுவதுடன், உடலுக்கும் தேவையான நல்ல கொழுப்பு மற்றும் சத்துக்கள் கிடைக்கும். வெங்காயம் இல்லாத சமையலுக்கும் இது ஒரு அருமையான சுலபமான தீர்வாக இருக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;காலிஃபிளவர் வெறும் பொரியல் அல்லது பரோட்டாவுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுவது அல்ல; இது வெங்காயத்திற்கு ஒரு சிறந்த மாற்றாகவும் பயன்படும். காலிஃபிளவர் பூக்களை சிறிய துண்டுகளாக நறுக்கி, தண்ணீரில் நன்றாக வேகவைக்க வேண்டும். பின்னர் அது ஆறியதும் மிக்ஸியில் போட்டு மிருதுவான பேஸ்டாக அரைத்துக் கொள்ளலாம். இந்த பேஸ்ட்டை கிரேவிகளில் சேர்த்தால், அது நல்ல கட்டுத்தன்மையையும் சுவையையும் வழங்கும். குறிப்பாக வெங்காயம் இல்லாத சமையலில், காலிஃபிளவர் பேஸ்ட் ஒரு நல்ல மாற்றாக இருந்து, கிரேவியை சுவையாகவும் சத்தானதாகவும் மாற்றும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;காலிஃபிளவரைப் போலவே சுரைக்காய் மற்றும் பூசணிக்காயும் வெங்காயத்திற்கு மாற்றாக கிரேவிகளில் பயன்படுத்தப்படலாம். இவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கி, தண்ணீரில் நன்றாக வேகவைத்து மென்மையாக ஆக்க வேண்டும். பின்னர் அவை ஆறியதும் மிக்ஸியில் அரைத்து மிருதுவான பேஸ்டாக தயாரிக்கலாம். இந்த பேஸ்ட்டை கிரேவியில் சேர்த்தால், அது இயற்கையான திக்கான தன்மையையும் மென்மையான சுவையையும் தரும். மேலும், சுரைக்காய் மற்றும் பூசணிக்காய் இரண்டும் உடலுக்கு தேவையான சத்துக்களை வழங்கி, செரிமானத்திற்கும் உதவுகின்றன. அதனால் ஆரோக்கியமான சமையலுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குளிர்காலத்தில் மார்க்கெட்டில் அதிகமாக கிடைக்கும் டர்னிப், ஊறுகாய் மற்றும் சாலடுக்கு மட்டுமல்லாமல் கிரேவிகளுக்கும் சிறந்ததாக பயன்படுகிறது. டர்னிப் மற்றும் இஞ்சியை நன்றாக கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் வேகவைக்க வேண்டும். அவை மென்மையாக வெந்ததும் ஆறவைத்து, மிக்ஸியில் அரைத்து மிருதுவான பேஸ்டாக தயாரிக்கலாம். இந்த பேஸ்ட்டை கிரேவியில் சேர்த்தால், தனித்துவமான சுவையையும் நல்ல கட்டுத்தன்மையையும் வழங்கும். குறிப்பாக வெங்காயம் இல்லாத சமையலில், டர்னிப் ஒரு ஆரோக்கியமான மாற்றாக இருந்து, உணவின் சுவையையும் ஊட்டச்சத்தையும் அதிகரிக்க உதவும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வீட்டில் வெங்காயம் இல்லாதபோது, தக்காளி ப்யூரி மற்றும் நன்றாக அடித்த தயிர் ஒரு சிறந்த மாற்றாக பயன்படும். முதலில் தக்காளியை நன்றாக அரைத்து ப்யூரி தயாரித்து, அதை நன்கு கொதிக்க விட வேண்டும். பின்னர் கடைசியாக மென்மையாக அடித்த தயிரை சேர்த்து கலந்து கொள்ளலாம். இது கிரேவிக்கு இயற்கையான திக்கான தன்மையையும் லேசான புளிப்புச் சுவையையும் வழங்கும். மேலும், இந்த சேர்க்கை உணவின் சுவையை உயர்த்துவதோடு, செரிமானத்திற்கும் உதவுகிறது. வெங்காயம் இல்லாத சமையலிலும் இந்த முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கிரேவியை திக்காக்க பிரெட்டும் ஒரு எளிய மற்றும் பயனுள்ள தேர்வாகும். முதலில் பிரெட்டை லேசாக டோஸ்ட் செய்து, குருமையாக மாற்ற வேண்டும். பின்னர் அதை சிறிது நொறுக்கி அல்லது மிக்ஸியில் பொடியாக அரைத்து கொள்ளலாம். இந்த பிரெட் தூளை கிரேவியில் சேர்த்தால், அது விரைவாக கெட்டியான தன்மையை கொடுக்கும். மேலும், இது கிரேவியின் சுவையையும் மென்மையாக மேம்படுத்தும். வெங்காயம் அல்லது பிற திக்காக்கும் பொருட்கள் இல்லாதபோது, பிரெட் ஒரு சுலபமான மாற்றாக இருந்து, சமையலை எளிதாக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்றைய காலத்தில் மார்க்கெட்டில் வெங்காயப் பவுடர் எளிதாக கிடைக்கிறது. இதை வாங்கி வீட்டில் நீண்ட நாட்கள் சேமித்து வைத்திருக்கலாம். அவசரமான சமயங்களில் வெங்காயம் இல்லாதபோது, இந்த பவுடர் ஒரு சிறந்த மாற்றாக பயன்படும். கிரேவி அல்லது கறிகளில் 1 முதல் 2 டீஸ்பூன் வெங்காயப் பவுடரை சேர்த்தால், வெங்காயத்தின் மணமும் சுவையும் கிடைக்கும். இது சமையலை விரைவாகவும் எளிமையாகவும் மாற்றுகிறது. குறிப்பாக வேலைப்பளு அதிகமான நேரங்களில், வெங்காயப் பவுடர் மிகவும் உதவிகரமான ஒரு சுலப தீர்வாக இருக்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[health-food]]></category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/health-food/onion-alternatives-no-onions-no-worries-7-super-tips-to-make-thick-rich-gravies-for-chicken-mutton-paneer-m4r7s0r"/>
        </item>
        <item>
            <title><![CDATA[பால் கம்மியா இருந்தாலும்.. டேஸ்ட்டான டீ போட ஒரு சீக்ரெட் இருக்கு!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/webstories/health-food/secret-trick-to-make-thick-tea-with-less-milk-try-this-today-fagk7au</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/webstories/health-food/secret-trick-to-make-thick-tea-with-less-milk-try-this-today-fagk7au</guid>
            <pubDate>Thu, 09 Apr 2026 11:38:21 +0530</pubDate>
            <description><![CDATA[வீட்ல பால் குறைவா இருக்கா? இல்ல ரொம்ப தண்ணியா இருக்கா? இந்த நேரத்துல விருந்தாளிங்க வந்தா டீ நல்லா இருக்காதேன்னு கவலையா? கவலைப்படாதீங்க, கெட்டியான டீ போட ஒரு பாட்டி காலத்து சீக்ரெட் டிப்ஸ் இருக்கு.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01knp5cvt84a2aqm7gtmmqwvgw,imgname-untitled-design--79--1775639097160.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <category><![CDATA[health-food]]></category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/webstories/health-food/secret-trick-to-make-thick-tea-with-less-milk-try-this-today-fagk7au"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பள்ளிக்கல்வித்துறை.. இவர்களுக்கு மே மாதம் சம்பளம் கிடையாது!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/retired-teachers-will-not-receive-salary-for-the-month-of-may-y2ml3if</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/retired-teachers-will-not-receive-salary-for-the-month-of-may-y2ml3if</guid>
            <pubDate>Thu, 09 Apr 2026 11:19:23 +0530</pubDate>
            <description><![CDATA[தமிழகத்தில் கல்வி ஆண்டு நடுவே ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு, மாணவர்களின் நலன் கருதி மே மாதம் வரை வழங்கப்படும் பணி நீட்டிப்பு மற்றும் ஊதியம் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jacmd4ecv6c92mwtd32em64h,imgname-school-teacher.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழகத்தில் கல்வி ஆண்டு நடுவே ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு, மாணவர்களின் நலன் கருதி மே மாதம் வரை வழங்கப்படும் பணி நீட்டிப்பு மற்றும் ஊதியம் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்தையும் சேர்த்து மொத்தம் சுமார் 5.5 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் சுமார் 3.12 லட்சம் முதல் 4.5 லட்சம் ஆசிரியர்கள் (இதில் நிரந்தர ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் மற்றும் தொகுப்பூதிய ஆசிரியர்கள் அடங்குவர்). தனியார் பள்ளிகளில் சுமார் 1 லட்சம் முதல் 1.5 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆசிரியர்களின் எண்ணிக்கையில் அவ்வப்போது ஏற்படும் ஓய்வு மற்றும் புதிய நியமனங்கள் (TRB மூலம்) காரணமாக இந்த எண்ணிக்கையில் சிறிய மாற்றங்கள் இருக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில் அரசு பணியில் வேலை பார்த்து ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதனை ஆண்டுகளான ஆசிரியர்களுக்கு கிடைத்திருந்த மே மாதம் ஊதியம் இனிமேல் கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது புதிதாக வந்த உத்தரவு அல்ல மூன்று ஆண்டு தாமதத்துக்கு பின் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பொதுவாக கல்வி ஆண்டு நடுவில் ஒரு ஆசிரியர் ஓய்வு பெறுகிறார் என்றால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்ட கூடாது என்பதற்காக அந்த ஆண்டு முடியும் வரை அதாவது மே மாதம் முடியும் வரை பதவி நீட்டிப்பு கொடுப்பது வழக்கம். இதற்கான சம்பளமும் கிடைக்கும். ஆனால் அரசுக்கு பார்த்தால் கூடுதலாக நிதி இழப்பு ஏற்படுகிறது என்று பள்ளிக்கல்வித்துறையின் தனிக்கை பிரிவு ஒரு அறிக்கையை கொடுத்துள்ளது. அதன்படி பணி ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு, மே மாதம் நீட்டிப்பு வழங்க வேண்டாமென பரிந்துரைக்கப்பட்டது. இதில், பணி ஓய்வு பெறுவோர், அக்கல்வியாண்டில் தேர்வுப்பணிகள் முடிந்ததும் ஆசிரியர்களுக்கு பணி ஓய்வு கொடுத்து விட வேண்டும் என்று 2022ம் ஆண்டு ஜூன் 28ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த அரசாணை வெளியான பிறகு, பள்ளிக்கல்வித் துறை இயக்குனரகத்தில் இருந்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, அலுவலர்களுக்கு, பிரத்யேக செயல்முறைகள் அனுப்பப்படவில்லை. இதனால், கடந்த மூன்று ஆண்டுகளாக, மே மாத ஊதியத்துடன் தான், மாநிலம் முழுக்க ஆசிரியர்கள் பணி நிறைவு பெறுகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதுகுறித்து, கல்வியாளர்கள் சிலர், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், 2025, ஜூன் 13ம் தேதி, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, மே மாதம் பணி நீட்டிப்பு செய்ய வேண்டாமென, செயல்முறை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. நிதியிழப்பை தவிர்க்க கொண்டு வந்த அரசாணை விதிமுறைகளை செயல்படுத்த, மூன்று ஆண்டுகள் கால தாமதமாகியுள்ளது. பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பனிடம் கேட்டபோது அரசாணையை அமல்படுத்துவதில், ஆசிரியர்களுக்கு நிலவிய சந்தேகங்கள் அடிப்படையில், அரசிடம் விளக்கம் பெற சமர்ப்பிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், 30.5.2025ல் விளக்கம் பெறப்பட்டதால், செயல்முறைகள் சி.இ.ஓ.,க்களுக்கு அனுப்பப்பட்டன என்றார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[tamilnadu]]></category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/retired-teachers-will-not-receive-salary-for-the-month-of-may-y2ml3if"/>
        </item>
        <item>
            <title><![CDATA[சொந்த நட்சத்திரமான புனர்பூச நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாகும் குரு பகவான்.! டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள்.! உங்க ராசி இருக்கா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/guru-peyarchi-2026-in-punarpoosam-nakshatra-jupiter-transit-to-punarpoosam-brings-benefits-to-zodiac-signs-explained-ghz46gm</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/guru-peyarchi-2026-in-punarpoosam-nakshatra-jupiter-transit-to-punarpoosam-brings-benefits-to-zodiac-signs-explained-ghz46gm</guid>
            <pubDate>Thu, 09 Apr 2026 11:14:49 +0530</pubDate>
            <description><![CDATA[Guru Peyarchi 2026 in Punarpoosam Nakshatra : குரு பகவான் இன்னும் சில தினங்களில் தனது சொந்த நட்சத்திரமான புனர்பூச நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாக இருக்கிறார். இதன் காரணமாக பலன் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01knrc2g4ee183p7046hvcch1p,imgname-guru-peyarchi-2026-in-punarpoosam-nakshatra--1775713206414.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Guru Peyarchi 2026 in Punarpoosam Nakshatra : குரு பகவான் இன்னும் சில தினங்களில் தனது சொந்த நட்சத்திரமான புனர்பூச நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாக இருக்கிறார். இதன் காரணமாக பலன் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜோதிடத்தில் குரு பகவான் சக்தி வாய்ந்த கிரகமாக அறியப்படுகிறார். இவர் தனது ராசி மற்றும் நட்சத்திரத்தை அடிக்கடி மாற்றுகிறார். அந்த வகையில் ஏப்ரல் 20 ஆம் தேதி மாலை 4:43 மணிக்கு அவர் புனர்பூச நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாகிறார். இந்த நட்சத்திரம் குரு பகவானின் சொந்த நட்சத்திரமாகும். எனவே இந்த காலகட்டத்தில் அவர் தனது முழு பலன்களை முழுமையாக வெளிப்படுத்துவார். இது 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிரொலித்தாலும், நான்கு ராசிக்காரர்கள் அதிகபட்ச பலன்களை அனுபவிக்க உள்ளனர். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குரு பகவானின் நட்சத்திர மாற்றமானது மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். கடந்த காலத்தில் சந்தித்து வந்த பொருளாதாரப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். குரு பகவான் நிலையில் ஏற்படும் மாற்றம் புதிய சொத்துக்கள், புதிய வீடு, வாகனங்கள் வாங்கும் வாய்ப்புகளை உருவாக்கும். பணியில் இருப்பவர்களுக்கு இந்த காலகட்டம் சிறப்பாக இருக்கும். குறைந்த ஊதியத்தில் வேலை பார்த்து வருபவர்களுக்கு, நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். நிதி ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். கடன் பிரச்சினைகள் குறையும். வங்கி இருப்பு அதிகரிக்கும். ஒட்டுமொத்தமாக ஏப்ரல் மாதம் தொடங்கி அடுத்த சில மாதங்கள் அதிர்ஷ்டகரமானதாக இருக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மிதுன ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் நட்சத்திரப் பெயர்ச்சி உங்களை வளர்ச்சியை நோக்கி அழைத்துச் செல்லும். புதிய வழிகள் திறக்கும். தடைபட்டு நின்ற வேலைகள் மீண்டும் வேகம் எடுக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வுகள் கிடைக்கலாம். வியாபாரம் செய்து வருபவர்களுக்கு கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும். தொழில் புதிய உச்சத்தை அடையும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். நீதிமன்றத்தை நாடியவர்களுக்கு வழக்குகள் சாதகமாக வரும். எதிரிகளாக இருந்தவர்கள் நண்பர்களாக மாறுவார்கள். குடும்பம், வாழ்க்கை, வேலை, ஆரோக்கியம் என அனைத்தும் சாதகமாக மாறும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குரு பகவானின் இந்த மாற்றம் துலாம் ராசிக்காரர்களுக்கு சாதகமான நன்மைகளைத் தரும். வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சனைகள் ஒவ்வொன்றாக முடிவுக்கு வரத் துவங்கும். கிடப்பில் இருந்த வேலைகளை முடிக்க சரியான வாய்ப்புகள் கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரமான பொருட்களை வாங்க முடியும். வாழ்க்கையில் மகிழ்ச்சியும், செழிப்பும் அதிகரிக்கும். திருமணமாகாதவர்கள் பொருத்தமான துணையை கண்டறிவீர்கள். கடந்த கால முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். மீள முடியாமல் இருந்து வந்த பிரச்சனைகளில் இருந்து மீண்டு வரும் காலம் நெருங்கியுள்ளது. உங்களது உழைப்பால் சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தனுசு ராசியின் அதிபதியான குரு பகவானின் இந்த பெயர்ச்சியானது, தனுசு ராசிக்காரர்களுக்கு புதிய வாய்ப்புகளை கொண்டு வரும். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் பலன் கிடைக்கும் காலம் நெருங்கி உள்ளது. சொத்து பிரச்சனைகள், கடன் பிரச்சனைகள் என அனைத்திலிருந்தும் நிவாரணம் பெறுவீர்கள். பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். இந்த காலகட்டத்தில் பெரிய உடல்நல பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது. புதிதாக தொழில் தொடங்கும் வாய்ப்புகளும் கிடைக்கும். நீண்ட காலமாக வாட்டி வதைத்து வந்த உடல்நலக் கோளாறுகள் சரியாகும். புதிய ஆற்றல் பிறக்கும். தன்னம்பிக்கையும், உற்சாகமும் அதிகரிக்கும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் துணை நிற்கும்.(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[astrology]]></category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/guru-peyarchi-2026-in-punarpoosam-nakshatra-jupiter-transit-to-punarpoosam-brings-benefits-to-zodiac-signs-explained-ghz46gm"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Kitchen Tips: பழைய சோறு இருக்கா? இனி தூக்கிப் போடாதீங்க... பஞ்சு மாதிரி இட்லி ரெடி! கையேந்தி பவன் ஸ்டைல் சீக்ரெட் டிப்ஸ்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/kitchen-tips-leftover-rice-idli-donot-waste-rice-make-super-soft-fluffy-idlis-p8vixgc</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/kitchen-tips-leftover-rice-idli-donot-waste-rice-make-super-soft-fluffy-idlis-p8vixgc</guid>
            <pubDate>Thu, 09 Apr 2026 10:49:23 +0530</pubDate>
            <description><![CDATA[பொதுவாக வீடுகளில் மீந்து போகும் பழைய சாதத்தை என்ன செய்வது என்று தெரியாமல் பலரும் வீணாகக் கொட்டி விடுகிறோம். ஆனால், அந்த பழைய சாதத்தைக் கொண்டு கடைகளில் கிடைப்பது போன்ற மென்மையான, 'பஞ்சு' இட்லிகளை மிக எளிதாகத் தயாரிக்க முடியும்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01fn09vsgamyjtx83nmnbaa0kr,imgname-instant-idli-with-leftover-rice--1-.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;பொதுவாக வீடுகளில் மீந்து போகும் பழைய சாதத்தை என்ன செய்வது என்று தெரியாமல் பலரும் வீணாகக் கொட்டி விடுகிறோம். ஆனால், அந்த பழைய சாதத்தைக் கொண்டு கடைகளில் கிடைப்பது போன்ற மென்மையான, 'பஞ்சு' இட்லிகளை மிக எளிதாகத் தயாரிக்க முடியும்.&lt;/p&gt;&lt;img&gt;தென்னிந்திய உணவான இட்லியை எல்லோருக்கும் பிடிக்கும். இது சுவையானது, சீக்கிரம் ஜீரணமாகும், உடலுக்கும் நல்லது. ஆனால், வழக்கமாக இட்லி செய்ய அரிசி, பருப்பை மணிக்கணக்கில் ஊறவைத்து, அரைத்து, புளிக்க வைக்க வேண்டும். இது பெரிய வேலை. ஆனால், இனிமேல் இரவு மிஞ்சிய சோற்றை வைத்தே பஞ்சு போன்ற சாஃப்ட் இட்லியை உடனே செய்யலாம்.&lt;img&gt;&lt;p&gt;பழைய சோற்றை பயன்படுத்தி மென்மையான இட்லி செய்யலாம். முதலில், மீதமுள்ள சோற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்க்கவும். அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். மாவு மிக அதிகமாக நீர்த்துப் போகக் கூடாது; அதே நேரத்தில் மிகவும் கெட்டியாகவும் இருக்கக் கூடாது. மிதமான பதத்தில் இருக்கும் வகையில் கவனிக்கவும். இப்படிச் தயாரிக்கப்பட்ட மாவு இட்லி மென்மையாகவும் பஞ்சு போலவும் வர உதவும். மேலும், சுவையும் தனித்துவமாக இருக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அரைத்த மாவை ஒரு பெரிய பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளுங்கள். அதன்பின், அதில் ரவை சேர்த்து, தேவையான அளவு உப்பையும் கலந்து விடுங்கள். பிறகு சிறிதளவு தயிரை சேர்த்து, மாவிற்கு மென்மையான புளிப்பு சுவை கிடைக்கச் செய்யுங்கள். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, எல்லா பொருட்களும் ஒன்றாக நன்றாக கலக்கும் வரை கிளறவும். மாவு மிகவும் கெட்டியாகவோ அல்லது நீர்த்ததாகவோ இல்லாமல், இட்லிக்கேற்ற மிதமான பதத்தில் இருக்க வேண்டும். இப்படிச் சீராக கலந்த மாவு இட்லி சுவையையும் மென்மையையும் அதிகரிக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தயாராக உள்ள இட்லி மாவை முதலில் நன்றாக அடித்து கலக்க வேண்டும். இதனால் அதிலுள்ள அனைத்து பொருட்களும் ஒன்றோடு ஒன்று சரியாக கலந்து, மாவு சீரான பதத்தை பெறும். கலக்கும் போது மாவில் கட்டிகள் இல்லாதபடி கவனிக்கவும். மாவு அதிகமாக கெட்டியாக இருந்தால், சிறிதளவு தண்ணீர் சேர்த்து மீண்டும் நன்றாக கலக்குங்கள். அதே நேரத்தில், மாவு மிக நீர்த்ததாக மாறாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். இறுதியாக, இட்லி செய்வதற்கு ஏற்ற மிதமான மற்றும் மென்மையான பதத்தில் மாவை தயாராக்கி வைத்தால், இட்லி நன்றாக பொங்கியும் பஞ்சு போலவும் வரும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முதலில் இட்லி தட்டுகளை எடுத்து, ஒவ்வொரு குழியிலும் சிறிதளவு எண்ணெய் தடவி தயாராக வைத்துக் கொள்ளுங்கள். இதனால் இட்லி ஒட்டாமல் எளிதாக எடுக்க முடியும். அடுத்ததாக, இட்லி பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, அதை நன்றாகக் கொதிக்க விடுங்கள். மாவை தட்டுகளில் ஊற்றுவதற்கு முன்பு, அதில் சிறிதளவு ஈனோ சேர்த்து மெதுவாகக் கலக்க வேண்டும். இதனால் இட்லி மென்மையாகவும் பொங்கியும் வரும். ஈனோ சேர்த்த பிறகு அதிகமாக கலக்காமல், உடனே மாவை தட்டுகளில் ஊற்றி வேகவைக்க தயாராக வைத்துக்கொள்ளுங்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இப்போது தயாராக வைத்துள்ள இட்லி மாவை எண்ணெய் தடவிய தட்டுகளில் சமமாக ஊற்றுங்கள். பிறகு, அந்த தட்டுகளை முன்கூட்டியே சூடான இட்லி பாத்திரத்தில் வைத்து, மூடியை நன்றாக மூடுங்கள். மிதமான தீயில் சுமார் பத்து நிமிடங்கள் ஆவியில் வேக விட வேண்டும். இட்லி நன்றாக வெந்ததைக் கண்டறிய, ஒரு குச்சியை குத்திப் பார்த்தால் அது சுத்தமாக வர வேண்டும். வெந்ததும், அடுப்பை அணைத்து, சிறிது நேரம் ஆறிய பிறகு இட்லிகளை மெதுவாக எடுத்து பரிமாறலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பத்து நிமிடங்கள் ஆவியில் நன்றாக வேகிய பிறகு, அடுப்பை அணைத்து விடுங்கள். இட்லி உடனே எடுக்காமல், சற்று நேரம் ஆற விடுவது முக்கியம். பின்னர், ஒரு ஸ்பூன் அல்லது கரண்டி உதவியுடன் மெதுவாக தட்டிலிருந்து இட்லிகளை எடுத்து விடுங்கள். இப்போது, பழைய சோற்றைப் பயன்படுத்தி செய்த மென்மையான, பஞ்சு போன்ற இட்லி தயார். இந்த இட்லிகளை சூடாக சட்னி, சாம்பாருடன் சேர்த்து பரிமாறலாம். இல்லையெனில், சிறிது எண்ணெயில் வறுத்தும் சுவையாக சாப்பிடலாம். இது எளிதானதும், சுவையானதும், வீணாகும் உணவை பயனுள்ளதாக மாற்றும் சிறந்த முறையாகும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[life-style]]></category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/kitchen-tips-leftover-rice-idli-donot-waste-rice-make-super-soft-fluffy-idlis-p8vixgc"/>
        </item>
        <item>
            <title><![CDATA[நடிகை மீனாவின் மாஸ்டர் மைண்ட்... 10 கோடிக்கு வாங்கிய வீட்டை 100 கோடிக்கு விற்று அசத்தல்...!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/meena-smart-investment-pays-off-actress-sells-luxury-bungalow-for-100-crores-gtqrwn1</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/meena-smart-investment-pays-off-actress-sells-luxury-bungalow-for-100-crores-gtqrwn1</guid>
            <pubDate>Thu, 09 Apr 2026 10:38:46 +0530</pubDate>
            <description><![CDATA[தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த மீனா, தான் 20 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய வீட்டை 100 கோடிக்கு விற்பனை செய்துள்ளாராம். அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j0nv7tgcgxcqqgzs9jm7dg4b,imgname-000-2--1-.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த மீனா, தான் 20 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய வீட்டை 100 கோடிக்கு விற்பனை செய்துள்ளாராம். அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ் திரையுலகில் தனது இயல்பான அழகும், திறமையான நடிப்பும் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் மீனா. 1980&ndash;90களில் இருந்து இன்று வரை, ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார், அஜித் குமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். தற்போது கூட தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார். இவர் மோகன்லால் ஜோடியாக மலையாளத்தில் நடித்த த்ரிஷ்யம் 3 திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இப்படத்தை ஜீத்து ஜோசப் இயக்கி இருக்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில், நடிகை மீனாவின் வணிக நுண்ணறிவை வெளிப்படுத்தும் ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு, பெரிய ரிஸ்க்கை ஏற்று அவர் எடுத்த ஒரு முடிவு இன்று அவருக்கு அபாரமான லாபத்தை கொடுத்துள்ளது. அந்த காலகட்டத்தில், மிகப்பெரிய தொகையாக கருதப்பட்ட 10 கோடி ரூபாய் கடனை வங்கியில் இருந்து பெற்று, தமிழ்நாட்டில் ஒரு பிரமாண்டமான பாரம்பரிய பங்களா வீட்டை கட்டினார் மீனா. பொதுவாக பலர் ஆடம்பர பொருட்களில் முதலீடு செய்யும் நிலையில், அவர் நிலையான சொத்து முதலீட்டை தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பாரம்பரிய கட்டிடக்கலையை பிரதிபலிக்கும் அந்த வீடு, செதுக்கப்பட்ட மரத் தூண்கள், விசாலமான நடுமுற்றம் மற்றும் அரண்மனை பாணி வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. இன்றைய நவீன கட்டிடங்களின் நடுவில் இப்படிப்பட்ட பழமையான கலை நயத்துடன் கூடிய வீடுகள் அரிதாகிவிட்டதால், இந்த பங்களாவுக்கு தனி மதிப்பு உருவானது. இதன் அழகில் கவரப்பட்ட வெளிநாட்டு தம்பதியினர், குறிப்பாக அமெரிக்காவை சேர்ந்தவர்கள், இந்த வீட்டை உயர்ந்த விலையில் வாங்க ஆர்வம் காட்டினர். இறுதியில், அந்த வீடு சுமார் 100 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒரு காலத்தில் கடன் சுமையாக இருந்த முதலீடு, இன்று பல மடங்கு லாபத்தை ஈட்டித் தந்துள்ளது. இதன் மூலம், நடிகை மீனா ஒரு திறமையான முதலீட்டாளர் என்றும், பணத்தின் மதிப்பை நன்கு அறிந்தவர் என்றும் பலரும் பாராட்டி வருகின்றனர். 10 கோடி ரூபாய்க்கு கட்டிய வீட்டை 100 கோடிக்கு விற்பனை செய்துள்ள மீனாவுக்கு நைனிகா என்கிற மகளும் இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகை மீனாவின் கணவர் சாகர் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். அவரின் மறைவு மீனாவுக்கு மிகப்பெரிய இழப்பாக இருந்தது. இருப்பினும் படிப்படியாக அதில் இருந்து மீண்டு வந்து தன்னுடைய மகளை நன்கு வளர்த்து வருகிறார். மீனாவின் மகள் நைனிகா, தெறி படத்தில் நடிகர் விஜய்யின் மகளாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[cinema]]></category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/meena-smart-investment-pays-off-actress-sells-luxury-bungalow-for-100-crores-gtqrwn1"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Investment: தினமும் ரூ.300 சேமித்தால் போதும்.! அசால்டா ரூ.15 லட்சம் கிடைக்கும்.! இதுதான் ஸ்மார்ட்டான திட்டமிடல்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/just-saving-rs-300-a-day-is-enough-you-can-easily-get-rs15-lakhs-this-is-what-smart-planning-looks-like-6t1gbnw</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/just-saving-rs-300-a-day-is-enough-you-can-easily-get-rs15-lakhs-this-is-what-smart-planning-looks-like-6t1gbnw</guid>
            <pubDate>Thu, 09 Apr 2026 10:14:58 +0530</pubDate>
            <description><![CDATA[தபால் நிலையத் தொடர் வைப்பு நிதி (RD) திட்டத்தில் தினமும் சிறிய தொகையைச் சேமிப்பதன் மூலம் லட்சங்களில் நிதிப் பாதுகாப்பை உருவாக்கலாம். அரசு உத்தரவாதத்துடன் 6.7% வட்டி வழங்கும் இத்திட்டம், 10 ஆண்டுகளில் ரூ.15 லட்சம் வரை வருமானம் ஈட்ட உதவுகிறது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kgsb43rd9xa1aqx01knck063,imgname-savings-1770377056013.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தபால் நிலையத் தொடர் வைப்பு நிதி (RD) திட்டத்தில் தினமும் சிறிய தொகையைச் சேமிப்பதன் மூலம் லட்சங்களில் நிதிப் பாதுகாப்பை உருவாக்கலாம். அரசு உத்தரவாதத்துடன் 6.7% வட்டி வழங்கும் இத்திட்டம், 10 ஆண்டுகளில் ரூ.15 லட்சம் வரை வருமானம் ஈட்ட உதவுகிறது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்றைய வேகமான உலகில் பணம் சம்பாதிப்பதை விட, ஈட்டிய பணத்தைச் சரியான வழியில் சேமித்து வளர்ப்பதே உண்மையான சாமர்த்தியம். பலரும் பெரிய தொகையைச் சேமிக்க வேண்டும் என்று நினைப்பார்கள், ஆனால் நடைமுறையில் அது சாத்தியமாவதில்லை. இதற்குத் தீர்வு, சிறுகச் சிறுகச் சேமிக்கும் &quot;தபால் நிலையத் தொடர் வைப்பு நிதி&quot; (Post Office Recurring Deposit) திட்டமாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நாம் அன்றாடம் செய்யும் தேவையற்றச் செலவுகளில் சிறிய கட்டுப்பாட்டைக் கொண்டு வந்தால் போதும். தினமும் வெறும் ரூ.300 ஒதுக்கினால், ஒரு மாதத்திற்கு அது ரூ.9,000 ஆக மாறுகிறது. இந்த எளிய முதலீடு உங்களை ஒரு கோடீஸ்வரராக மாற்றாவிட்டாலும், உங்கள் எதிர்காலத் தேவைகளுக்குப் பெரிய நிதிப் பாதுகாப்பை (Financial Cushion) வழங்கும் என்பதில் சந்தேகமில்லை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தத் திட்டத்தில் தொடர்ந்து 10 ஆண்டுகள் முதலீடு செய்வதன் மூலம் கிடைக்கும் பலன்கள் ஆச்சரியமானவை:&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;மாதாந்திர முதலீடு: ரூ.9,000&lt;/li&gt; &lt;li&gt;முதலீட்டுக் காலம்: 10 ஆண்டுகள் (120 மாதங்கள்)&lt;/li&gt; &lt;li&gt;உங்கள் மொத்த முதலீடு: ரூ.10,80,000&lt;/li&gt; &lt;li&gt;வட்டி வருமானம் மட்டும்: சுமார் ரூ.4,40,000&lt;/li&gt; &lt;li&gt;முதிர்வுத் தொகை (Maturity): ஏறத்தாழ ரூ.15,20,000&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;தற்போதைய நிலவரப்படி, மத்திய அரசு இத்திட்டத்திற்கு சுமார் 6.7% வட்டி விகிதத்தை வழங்குகிறது. பங்குச் சந்தை போன்ற முதலீடுகளில் ரிஸ்க் அதிகம், ஆனால் தபால் நிலையச் சேமிப்பு என்பது அரசு உத்தரவாதம் கொண்டது. எனவே, உங்கள் பணம் 100% பாதுகாப்பானது என்பதோடு உறுதியான லாபத்தையும் அளிக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;ol&gt; &lt;li&gt;குறைந்தபட்சத் தொடக்கம்: இத்திட்டத்தை வெறும் ரூ.100 முதலே தொடங்க முடியும். 18 வயது பூர்த்தியடைந்த எவரும் அருகில் உள்ள தபால் நிலையத்தில் இந்தக் கணக்கைத் தொடங்கலாம்.&lt;/li&gt; &lt;li&gt;கால நீட்டிப்பு: இத்திட்டத்தின் அடிப்படைக் காலம் 5 ஆண்டுகள். ஆனால், முதிர்வுக்குப் பிறகு மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்துக் கொள்ளலாம். இவ்வாறு நீட்டிக்கும் போது &quot;கூட்டு வட்டி&quot; (Compound Interest) பலன்களால் உங்கள் பணம் வேகமாக வளரும்.&lt;/li&gt; &lt;li&gt;கடன் வசதி: கணக்கைத் தொடங்கி ஒரு வருடம் முடிந்த பிறகு, உங்கள் சேமிப்புத் தொகையில் 50% வரை கடனாகப் பெற்றுக் கொள்ளலாம். அவசரத் தேவைகளுக்கு இது மிகச்சிறந்த வாய்ப்பாகும்.&lt;/li&gt; &lt;li&gt;முன்கூட்டியே முடித்தல்: தவிர்க்க முடியாத காரணங்களால் கணக்கை மூட வேண்டியிருந்தால், 3 ஆண்டுகளுக்குப் பிறகு கணக்கை முடித்துக் கொள்ளும் வசதியும் உள்ளது.&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;img&gt;&lt;p&gt;நிதி சுதந்திரம் என்பது ஒரே நாளில் கிடைப்பதல்ல; அது தொடர்ச்சியான சேமிப்புப் பழக்கத்தால் உருவாவது. தினமும் ரூ.300 போன்ற சிறிய தொகையைச் சேமிப்பதன் மூலம், உங்களின் எதிர்காலப் பொருளாதாரத் தேவைகளை எவ்விதச் சிரமமுமின்றிப் பூர்த்தி செய்யலாம். பாதுகாப்பான, ரிஸ்க் இல்லாத மற்றும் லாபகரமான முதலீட்டைத் தேடுபவர்களுக்குத் தபால் நிலைய RD திட்டம் ஒரு வரப்பிரசாதம். இன்றே உங்கள் சேமிப்பைத் தொடங்குங்கள், உங்கள் எதிர்காலத்தை வளமாக்குங்கள்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சேமிப்பு என்பது வெறும் பணத்தைச் சேர்த்து வைப்பது மட்டுமல்ல, அது நம் எதிர்காலத்திற்கான ஒரு பாதுகாப்பு அரண். &quot;சிறு துளி பெரு வெள்ளம்&quot; என்ற முதுமொழிக்கேற்ப, நாம் இன்று செய்யும் மிகச்சிறிய முதலீடு, பின்னாளில் ஒரு பெரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து நம்மைக் காக்கும் கருவியாக மாறும். முறையான திட்டமிடலும், சேமிப்பில் தொடர்ச்சியான ஒழுக்கமும் இருந்தால், எளிய வருமானம் ஈட்டுபவர்களும் நிதி சுதந்திரத்தை (Financial Freedom) அடைய முடியும். எனவே, வரவுக்குள் செலவு செய்யும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டு, பாதுகாப்பான திட்டங்களில் முதலீடு செய்வதே ஒரு புத்திசாலித்தனமான அணுகுமுறையாகும். இன்றைய சேமிப்பே நாளைய நிம்மதியான வாழ்விற்கு அச்சாணி என்பதை உணர்ந்து செயல்படுவோம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[business]]></category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/just-saving-rs-300-a-day-is-enough-you-can-easily-get-rs15-lakhs-this-is-what-smart-planning-looks-like-6t1gbnw"/>
        </item>
        <item>
            <title><![CDATA[சி்ந்தாமணி vs மீனா : யாருக்கு ஆதரவு அதிகம்? அதிர வைக்கும் சர்வே முடிவு - சிறகடிக்க ஆசை அப்டேட்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/chinthamani-vs-meena-election-survey-in-siragadikka-aasai-serial-today-974th-episode-mf1bdmc</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/chinthamani-vs-meena-election-survey-in-siragadikka-aasai-serial-today-974th-episode-mf1bdmc</guid>
            <pubDate>Thu, 09 Apr 2026 09:48:49 +0530</pubDate>
            <description><![CDATA[சிறகடிக்க ஆசை சீரியலில் சிந்தாமணியும் மீனாவும் பூ வியாபாரிகள் சங்க தேர்தலில் போட்டியிடும் நிலையில், தேர்தலுக்கு முன் சர்வே முடிவுகள் வெளியாகி உள்ளன. அதைப்பற்றி பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01knr792qj5rewbr2ge4mj3r3y,imgname-siragadikka-aasai---2026-04-09t094348.107-1775708179186.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சிறகடிக்க ஆசை சீரியலில் சிந்தாமணியும் மீனாவும் பூ வியாபாரிகள் சங்க தேர்தலில் போட்டியிடும் நிலையில், தேர்தலுக்கு முன் சர்வே முடிவுகள் வெளியாகி உள்ளன. அதைப்பற்றி பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிறகடிக்க ஆசை சீரியலில் சிந்தாமணியை எதிர்த்து மீனா தேர்தலில் போட்டியிடுகிறார். அவரை போட்டியிட விடாமல் தடுக்க சதி செய்த சிந்தாமணி, ஆள் வைத்து மீனாவை கத்தியால் குத்தி உள்ளார். இதற்கு பயந்து மீனா நாமினேஷனை வாபஸ் வாங்க போவதாக சொல்ல, முத்து அவருக்கு புத்திமதி சொல்லி தேர்தலில் போட்டியிட வைத்துள்ளார். மறுபுறம் விஜயா மீனாவின் வளர்ச்சி பிடிக்காமல், அவருக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்களை எல்லாம் கிழித்து வர, மீனாவின் தோழிகள் அவரை பிடித்து அடித்துள்ளனர். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விஜயா தர்ம அடி வாங்கிவிட்டு வலி தாங்க முடியாமல், பெட்டில் படுத்துக்கொண்டு, அச்சச்சோ... அம்மம்மா முதுகு வலிக்குதேனு புலம்பிக் கொண்டிருக்கிறார். அங்கு வரும் அண்ணாமலை என்னாச்சு என கேட்க, உண்மையை சொல்லமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் முத்து, வேண்டுமென்றே விஜயாவை வெறுப்பேற்றும் விதமாக பேசிக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்ல, அம்மா மாதிரி வயசான ஒரு பொம்பள, முக்காடு போட்டுக்கிட்டு, மீனாவின் போஸ்டரை எல்லாம் கிழிச்சிட்டு இருந்துச்சு. அதை மீனாவின் தோழிகள் பார்த்து அந்த பொம்பளைக்கு தர்ம அடி கொடுத்திருக்காங்க. அந்த பொம்பள தான் யாருன்னு தெரியல என சொல்கிறார் முத்து.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முத்து சொன்னதையெல்லாம் கேட்ட அண்ணாமலை, விஜயா தான் இதுமாதிரி சில்றத்தனமான வேலையை செய்திருக்கிறார் என்பதை புரிந்துகொள்கிறார். பின்னர் விஜயாவிடம் அட்வைஸ் பண்ணுகிறார். ஆனால் விஜயா அதையெல்லாம் காதுகொடுத்து கேட்பதாக இல்லை. மறுபுறம் ஸ்ருதியும் ஸ்வேதாவும் பூக்கடை வைத்திருப்பவர்களை எல்லாம் நேரில் சந்தித்து இந்த தேர்தலில் யாருக்கு வாக்களிப்பீர்கள் என சர்வே எடுக்கிறார்கள். எல்லாரிடமும் சர்வே எடுத்து பார்க்கும் போது சிந்தாமணிக்கு 65 சதவீதமும், மீனாவுக்கு 35 சதவீதமும் வாக்குகள் கிடைத்திருக்கின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிந்தாமணி தான் தேர்தலில் லீடிங்கில் இருக்கிறார் என்பதை அறிந்ததும் அதனை முத்துவிடம் சொல்கிறார்கள். மீனா மட்டும் இந்த எலெக்&zwnj;ஷன்ல ஜெயிக்கலேனா அவ அப்செட் ஆகிடுவா, எப்படியாச்சும் அவளை ஜெயிக்க வைக்கணும் என இறங்கி வேலை செய்ய ஆரம்பிக்கிறார்கள். ஒவ்வொரு பூக்கடைக்கும் சென்று அங்குள்ள உறுப்பினர்களை சந்தித்து, மீனா இந்த எலெக்&zwnj;ஷனில் ஜெயித்தால் என்னவெல்லாம் செய்வார் என்பதை எடுத்துச் சொல்லி ஒவ்வொரு கடையாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள். அதன்பின் ஸ்ருதியும், ஸ்வேதாவும் மீனாவிடம் வாக்கு கேட்கும்படி பேச வைத்து வீட்டியோ எடுத்து சோசியல் மீடியாவில் போடுகிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வீட்டுக்குள்ளேயே இருந்தால் சரிப்பட்டு வராது என முடிவெடுத்த மீனா, காயத்தோடு, சாலையில் இறங்கி வாக்கு சேகரிப்பில் இறங்குகிறார். சிந்தாமணியின் ஆட்கள் தான் மீனாவை கத்தியால் குத்திவிட்டார்கள் என்று சொல்லி, முத்து ஒருபக்கம் போஸ்டர் அடித்து ஒட்டுகிறார். மீனா வாக்கு கேட்டு செல்லும் இடமெல்லாம், எல்லாருமே உனக்கு தான் வாக்களிப்போம் என சொல்கிறார்கள். இதனால் இந்த தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது. இந்த தேர்தலில் சிந்தாமணியை தோற்கடித்து மீனா தலைவி ஆவாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[television]]></category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/chinthamani-vs-meena-election-survey-in-siragadikka-aasai-serial-today-974th-episode-mf1bdmc"/>
        </item>
        <item>
            <title><![CDATA[சினிமாவை மிஞ்சும் த்ரிலிங்.. லாட்ஜில் மால​தி​யுடன் தங்கியிருந்த யூடியூபர் சவுக்கு சங்கர் கைதானது எப்படி? பரபரப்பு தகவல்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/how-was-youtuber-savukku-shankar-arrested-sensational-details-4h35u1l</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/how-was-youtuber-savukku-shankar-arrested-sensational-details-4h35u1l</guid>
            <pubDate>Thu, 09 Apr 2026 09:24:24 +0530</pubDate>
            <description><![CDATA[ஜாமீன் நிபந்தனைகளை மீறி தலைமறைவாக இருந்த யூடியூபர் சவுக்கு சங்கரை, சென்னை தனிப்படை போலீசார் ஆந்திராவில் கைது செய்தனர். சித்தூரில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருந்த அவரை, அவரது தோழியுடன் போலீசார் கைது செய்தனர்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01knr5rtpmxtrrerm289cfjf8g,imgname-savukku-shankar-2-1775706598100.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[ஜாமீன் நிபந்தனைகளை மீறி தலைமறைவாக இருந்த யூடியூபர் சவுக்கு சங்கரை, சென்னை தனிப்படை போலீசார் ஆந்திராவில் கைது செய்தனர். சித்தூரில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருந்த அவரை, அவரது தோழியுடன் போலீசார் கைது செய்தனர்.&lt;img&gt;&lt;p&gt;பிரபல யூடியூபரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் சினிமா தயாரிப்பாளரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் ஆதம்பாக்கம் மற்றும் சைதாப்பேட்டை போலீசாரால் கடந்த டிசம்பர் மாதம் 13ம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்றம் உத்தரவுப்படி 14 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, சவுக்கு சங்கருக்கு உடல்நிலையை காரணம் காட்டி ஜாமீனில் விடுவிக்கக் கோரி, அவரது தாய் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சவுக்கு சங்கருக்கு மார்ச் 25 வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்நிலையில் மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் பெற்ற சவுக்கு சங்கர் ஜாமீன் நிபந்தனைகளை மீறி வீடியோக்களை பதிவிடுவதாகவும், விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. ஆகையால் அவரது ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதுதொடர்பான விசாரணை நீதிபதி பி.வேல்முருகன், ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சவுக்கு சங்கர் ஜாமீன் நிபந்தனைகளை மீறியதாக தெரியவந்தால் அவரை கைது செய்யலாம் என்று உத்தரவிட்டது. இதற்கிடையே, கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி சவுக்கு சங்கர் தாயார் மருத்துவ சிகிச்சை மற்றும் ஜாமீன் கேட்டு தொடர்ந்த மனு தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சவுக்கு சங்கர் இடைக்கால ஜாமீன் முடிவதால், அவர் சரணடைய வேண்டும் எனவும் இல்லையென்றால் அவர் மீது போலீசார் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மார்ச் 25ம் தேதிக்கு பிறகு நீதி​மன்​றத்​தில் சரணடைய வேண்​டிய சவுக்கு சங்​கர் தலைமறை​வாக இருந்து வந்தார். அதே நேரத்தில் யூடியூப்பில் வீடியோக்களை தொடர்ந்து சவுக்கு சங்கர் பதிவிட்டு வந்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்​நிலை​யில் தன் மீதான 2 வழக்​கு​களை​யும் சிபிஐ விசா​ரணைக்கு மாற்​றக்​கோரி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் சவுக்கு சங்​கர் மனு தாக்​கல் செய்​திருந்​தார். இந்த மனு மீதான விசா​ரணை நீதிபதி நிர்​மல்​கு​மார் முன்​பாக நேற்று முன்​தினம் விசாரணைக்கு நடந்​தது. அப்​போது அரசு தரப்​பில் ஆஜரான கூடு​தல் குற்​ற​வியல் வழக்​கறிஞர் சவுக்கு சங்​கர் தொடர்ந்து தலைமறை​வாக இருந்து வரு​வ​தால் அவரை தலைமறைவு குற்​ற​வாளி​யாக அறி​வித்து சென்னை போலீ​சார் தேடி வரு​வ​தாக தெரிவித்​தார். மேலும் சிபிஐ விசா​ரணை கோரும் 2 வழக்​கு​களி​லும் ஏற்​கெனவே விசா​ரணை முடிக்​கப்​பட்டு குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்​யப்​பட்​டு​விட்​ட​தாக​வும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ழக்கு விசா​ரணையை வரும் ஏப்​ரல் 27ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இது ஒரு​புறம் இருக்க தலைமறை​வான சவுக்கு சங்​கரை தனிப்​படை அமைத்து சென்னை போலீ​சார் தீவிரமாக தேடி வந்​தனர். இந்​நிலை​யில், சவுக்கு சங்கர் ஆந்திரா மாநிலம் சித்தூரில் உள்ள ஒரு லாட்ஜ் ஒன்றில் தங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்​து, ஆந்திரா விரைந்த சென்னை போலீ​சார் சவுக்கு சங்​கரை கைது செய்​தனர். அவருடன் தங்​கி​யிருந்த அவரது தோழி மால​தி​யும் கைது செய்​யப்​பட்​டார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[tamilnadu]]></category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/how-was-youtuber-savukku-shankar-arrested-sensational-details-4h35u1l"/>
        </item>
        <item>
            <title><![CDATA[மீண்டும் சீனுக்கு வந்த ஜீவானந்தம்... பேரைக் கேட்டதும் ஷாக் ஆன ஈஸ்வரி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/jeevanantham-reentry-in-eshwari-life-ethirneechal-thodargiradhu-serial-today-462nd-episode-5tpzo2w</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/jeevanantham-reentry-in-eshwari-life-ethirneechal-thodargiradhu-serial-today-462nd-episode-5tpzo2w</guid>
            <pubDate>Thu, 09 Apr 2026 08:45:24 +0530</pubDate>
            <description><![CDATA[எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஈஸ்வரிக்கு பழசை எல்லாம் ஒவ்வொன்றாக ஞாபகப்படுத்தி வரும் ஜனனி, ஜீவானந்தம் பற்றி அவரிடம் கேட்டுள்ளார். அதன்பின் என்ன ஆச்சு என்பதை பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01knr3mj5fkbz1qsratwmz8r0c,imgname-ethirneechal-thodargiradhu---2026-04-09t083722.431-1775704361135.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஈஸ்வரிக்கு பழசை எல்லாம் ஒவ்வொன்றாக ஞாபகப்படுத்தி வரும் ஜனனி, ஜீவானந்தம் பற்றி அவரிடம் கேட்டுள்ளார். அதன்பின் என்ன ஆச்சு என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஈஸ்வரிக்கு மெமரி லாஸ் ஆனதால், தன் மகன் தர்ஷனுக்கு திருமணம் ஆனது கூட தெரியாமல் இருந்தார். இதனிடையே சில நாட்களுக்கு முன் பார்கவி உடன் தர்ஷன் சண்டைபோட்டதை பார்த்து சந்தேகப்பட்ட ஈஸ்வரி, அவர்கள் இருவருக்கும் இடையே என்ன இருக்கு என விசாரணையில் இறங்கினார். அப்போது தான் தர்ஷனும், பார்கவியும் கணவன், மனைவி என்கிற உண்மை ஈஸ்வரிக்கு தெரியவந்தது. அவர்களின் திருமண உறவுக்கு அறிவுக்கரசி முட்டுக்கட்டையாக இருப்பதை அறிந்த ஈஸ்வரி, அவரை வீட்டை விட்டே துரத்திவிட்டுள்ளார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அறிவுக்கரசி வீட்டில் இருந்தால், தான் ஈஸ்வரியை அடித்து கோமா நிலைக்கு தள்ளிய விஷயத்தை உளறிவிடுவாள் என்கிற பயத்தில் ஆதி குணசேகரனும் நேக்காக பிளான் போட்டு தன் தம்பி கதிரிடம் சொல்லி அவரை உடனடியாக வீட்டை விட்டு வெளியே துரத்திவிட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அறிவுக்கரசி, இத்தனை நாள் இந்த கதிருக்காக தான் இந்த வீட்டில் இருந்தேன். இன்னைக்கு அவனே என்னைய துரத்திட்டான்ல, உங்க மொத்த குடும்பத்தையும் அழிக்காம விடமாட்டேன் என்று சாபம் விட்டுள்ளார். இதனால் குணசேகரன் ஃபேமிலியே மிகப்பெரிய ஆபத்தில் சிக்கி உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வீட்டில் நடக்கும் கூத்தையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் ஜனனி, ரேணுகா மற்றும் நந்தினியை தனியாக அழைத்து பேசுகிறார். அப்போது நீங்க ரெண்டு பேருமே பழைய நிலைமைக்கு வந்துட்டீங்களானு எனக்கு பயமா இருக்கு என சொல்கிறார். அதைக்கேட்ட நந்தினி, அப்படியெல்லாம் இல்ல ஜனனி என சொல்கிறார். ஈஸ்வரி அக்கா எல்லாத்தையும் மறந்துட்டாங்க என்பதற்காக நாமளும் எல்லாத்தையும் மறந்துவிடலாமா. இவங்க செஞ்ச துரோகத்தை எல்லாம் அப்படியே விட்டுவிட முடியுமா, இவங்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்காம விடக்கூடாதுக்கா என்று ஆக்ரோஷமாக பேசுகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பின்னர் ஈஸ்வரி இவர்களை கிச்சனுக்குள் அழைத்து பேசுகிறார். இந்த மாற்றம் நல்லா தான் இருக்கு. சில முக்கியமான விஷயங்களை இரண்டு நாட்கள் கழித்து நானே சொல்கிறேன் என கூறுகிறார். அப்போது அவரிடம் பேசும் ஜனனி, உங்களுக்கு நடந்த சின்ன சின்ன விஷயம் எல்லாமே மறந்துபோச்சா என கேட்கிறார். அதற்கு ஈஸ்வரி ஆமாம் என சொல்ல, உடனே ஜனனி, ஜீவானந்தம் சாரை ஞாபகம் இருக்கா? இல்லை மறந்திருச்சா? என கேட்கிறார். ஜீவானந்தம் பெயரைக் கேட்டதும் ஈஸ்வரி பேரதிர்ச்சி அடைகிறார். அவர் தனக்கு செய்த உதவிகளை எல்லாம் ஈஸ்வரி மறந்திருக்க வாய்ப்பு இருக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜீவானந்தம் ஈஸ்வரியின் முன்னாள் காதலன், அவர்கள் காதலிப்பது தெரிந்து தான் ஈஸ்வரியின் தந்தை அவரை குணசேகரனுக்கு கல்யாணம் செய்து வைத்தார். ஜீவானந்தம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஈஸ்வரிக்கு உதவி செய்திருந்தார். அப்போது ஆதி குணசேகரனின் ஆட்கள் ஜீவானந்தத்தின் மனைவியை சுட்டுக் கொன்றுவிட்டனர். தர்ஷனுக்கும் பார்கவிக்கும் திருமணம் செய்து வைத்ததே ஜீவானந்தம் தான். இந்த விஷயங்கள் எல்லாம் ஈஸ்வரிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதையெல்லாம் ஜனனி மீண்டும் சொல்வாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[television]]></category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/jeevanantham-reentry-in-eshwari-life-ethirneechal-thodargiradhu-serial-today-462nd-episode-5tpzo2w"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Toll Plaza Rules: நீங்க தலைகீழ நின்னாலும் காசு வாங்க மாட்டாங்க.! 10ம் தேதி முதல் அமலாகும் புதிய விதி]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/india/new-toll-plaza-rules-from-april-10-no-cash-payments-upi-users-face-penalty-afmt414</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/india/new-toll-plaza-rules-from-april-10-no-cash-payments-upi-users-face-penalty-afmt414</guid>
            <pubDate>Wed, 08 Apr 2026 21:35:20 +0530</pubDate>
            <description><![CDATA[ஏப்ரல் 10 முதல் தேசிய நெடுஞ்சாலை டோல்கேட்களில் ரொக்கப் பரிவர்த்தனை முழுமையாக நிறுத்தப்படுகிறது. NHAI-யின் புதிய விதிகளின்படி, சரியான FASTag இல்லாத வாகன ஓட்டிகள் UPI மூலம் பணம் செலுத்தினால் 25% கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kc3m51eepes8jb87cw0xmhav,imgname-up-crime-toll-plaza-manager-accused-of-misusing-cctv-to-film-commuters-and-extort-money-1765353358798.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[ஏப்ரல் 10 முதல் தேசிய நெடுஞ்சாலை டோல்கேட்களில் ரொக்கப் பரிவர்த்தனை முழுமையாக நிறுத்தப்படுகிறது. NHAI-யின் புதிய விதிகளின்படி, சரியான FASTag இல்லாத வாகன ஓட்டிகள் UPI மூலம் பணம் செலுத்தினால் 25% கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.&lt;img&gt;&lt;p&gt;சுங்கச்சாவடி புதிய விதிகள்: நீங்கள் வரும் காலத்தில் நெடுஞ்சாலைகளில் பயணிக்கத் திட்டமிட்டிருந்தால், இந்தச் செய்தி உங்களுக்கு மிகவும் முக்கியமானது. அடுத்த 48 மணி நேரத்தில், நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் பெரிய மாற்றங்கள் செய்யப்படவுள்ளன, மேலும் ஒரு சிறிய தவறு கூட உங்களுக்குப் பெரும் பண இழப்பை ஏற்படுத்தக்கூடும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) எடுத்த முடிவின்படி, ஏப்ரல் 10 முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் ரொக்கப் பணம் ஏற்றுக்கொள்ளப்படாது. இது தொடர்பாக சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இனி அனைத்துப் பரிவர்த்தனைகளும் முழுமையாக டிஜிட்டல் மற்றும் மின்னணு முறையில் மட்டுமே செய்யப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;FASTag இல்லை என்றால் UPI மூலம் பணம் செலுத்தலாம் என பலர் நினைக்கிறார்கள், ஆனால் இங்கதான் ஒரு சிக்கல் இருக்கிறது. புதிய விதிகளின்படி, சரியான FASTag இல்லாதவர்களுக்கு UPI மூலம் பணம் செலுத்தும் வசதி வழங்கப்படும். ஆனால், அவர்கள் சாதாரண டோல் கட்டணத்தை விட 1.25 மடங்கு (25% அதிகம்) கட்டணம் செலுத்த வேண்டும். அதாவது, உங்கள் டோல் கட்டணம் 100 ரூபாய் என்றால், நீங்கள் 125 ரூபாய் செலுத்த நேரிடும். நீண்ட தூர பயணங்களில் இந்த 25% கூடுதல் கட்டணம் உங்கள் பாக்கெட்டில் பெரிய சுமையை ஏற்படுத்தும்.&lt;img&gt;போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு: ரொக்கப் பரிவர்த்தனைகளால் டோல்கேட்களில் நீண்ட வாகன வரிசைகள் ஏற்படுகின்றன. டிஜிட்டல் பேமெண்ட் இந்த நேரத்தை மிச்சப்படுத்தும். எரிபொருள் சேமிப்பு: வாகனங்கள் நிற்கத் தேவையில்லாததால், எரிபொருள் பயன்பாடு குறையும், சுற்றுச்சூழல் மாசும் குறையும். வெளிப்படைத்தன்மை: அனைத்து பரிவர்த்தனைகளும் ஆன்லைனில் நடப்பதால், கணக்கு வழக்குகளில் வெளிப்படைத்தன்மை இருக்கும்.&lt;img&gt;உங்கள் பயணம் சிக்கலின்றி, மலிவாக இருக்க வேண்டுமென்றால், இன்றே உங்கள் வாகனத்தின் FASTag-ஐ சரிபார்க்கவும். அது ஆக்டிவாக இருப்பதை உறுதிசெய்து, அதில் போதுமான பேலன்ஸ் வைக்கவும். உங்களிடம் FASTag இல்லை என்றால், ஏப்ரல் 10-க்கு முன் அதை வாங்கிப் பொருத்துங்கள். இல்லையென்றால், ஒவ்வொரு டோல்கேட்டிலும் நீங்கள் கூடுதல் பணம் செலுத்த வேண்டியிருக்கும்.]]></content:encoded>
            <category><![CDATA[india]]></category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/india/new-toll-plaza-rules-from-april-10-no-cash-payments-upi-users-face-penalty-afmt414"/>
        </item>
        <item>
            <title><![CDATA[IPL 2026: கடைசி ஓவர் த்ரில்... 106 மீட்டர் சிக்ஸர் அடித்தும் மில்லரால் காப்பாற்ற முடியாத டெல்லி!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/sports-cricket/gujarat-titans-beat-delhi-capitals-by-1-run-in-ipl-last-over-thriller-articleshow-x3g3lha</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/sports-cricket/gujarat-titans-beat-delhi-capitals-by-1-run-in-ipl-last-over-thriller-articleshow-x3g3lha</guid>
            <pubDate>Thu, 09 Apr 2026 08:16:24 +0530</pubDate>
            <description><![CDATA[IPL 2026 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 211 ரன்கள் என்ற இலக்கை துரத்திய டெல்லி, கடைசி பந்து வரை போராடி தோல்வியடைந்தது. கே.எல். ராகுல் (92) மற்றும் டேவிட் மில்லர் (41) ஆகியோரின் சிறப்பான ஆட்டம் வீணானது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01knq668btr8qde5f96bd9b2rr,imgname-dc-vs-gt-last-over-match-1775673483642.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;DC vs GT Last over:&lt;/strong&gt; IPL 2026 தொடரின் இதுவரை இல்லாத மிக த்ரில்லான போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணி வெறும் 1 ரன் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. புது டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியில், டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி, சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோரின் சிறப்பான அரைசதங்களால் 20 ஓவர்களில் 210 ரன்கள் என்ற பெரிய ஸ்கோரை எட்டியது.&lt;/p&gt;&lt;h2&gt;டெல்லி கேப்பிட்டல்ஸின் அதிரடி தொடக்கம்&lt;/h2&gt;&lt;p&gt;211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு தொடக்கம் சூப்பராக இருந்தது. பதும் நிசங்கா மற்றும் கே.எல். ராகுல் அதிரடியாக ஆடி, முதல் விக்கெட்டுக்கு 76 ரன்கள் சேர்த்தனர். 9-வது ஓவரில் பதும் நிசங்கா 41 ரன்களில் அவுட் ஆனார். ஆனால், ராகுல் தொடர்ந்து அதிரடி காட்டினார். 10-வது ஓவரில் நிதிஷ் ராணா அவுட் ஆனார். அடுத்த பந்திலேயே ரஷீத் கான், சமீர் ரிஸ்வியை டக் அவுட் ஆக்கி அதிர்ச்சி கொடுத்தார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தாலும், கே.எல். ராகுல் ஒரு முனையில் நிலைத்து நின்று அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். 52 பந்துகளில் 11 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 92 ரன்கள் குவித்தார். ஆனால், 17-வது ஓவரில் முகமது சிராஜ் பந்துவீச்சில் அவர் ஆட்டமிழந்தது ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. ராகுல் அவுட் ஆனதும் டெல்லி அணிக்கு அழுத்தம் அதிகரித்தது. ஆனாலும், டேவிட் மில்லர் 20 பந்துகளில் 41 ரன்கள் அடித்து நம்பிக்கை கொடுத்தார். கடைசி ஓவர் வரை போட்டியை கொண்டு சென்றும், டெல்லி அணியால் வெற்றி பெற முடியவில்லை.&lt;/p&gt;&lt;h2&gt;கடைசி ஓவர் த்ரில்: 6 பந்துகளில் 13 ரன்கள் தேவை&lt;/h2&gt;&lt;p&gt;கடைசி ஓவரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் வெற்றிக்கு 6 பந்துகளில் 13 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், டெல்லி 1 ரன்னில் தோற்றது.&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;முதல் பந்து - பிரசித் கிருஷ்ணா வீசிய முதல் பந்தை விப்ரஜ் நிகம் பவுண்டரிக்கு விரட்டினார்.&lt;/li&gt; &lt;li&gt;இரண்டாவது பந்து - விப்ரஜ் நிகம் தூக்கி அடித்த பந்தை, சுப்மன் கில் கேட்ச் பிடித்து அவரை அவுட் ஆக்கினார்.&lt;/li&gt; &lt;li&gt;மூன்றாவது பந்து - குல்தீப் யாதவ் ஒரு ரன் எடுத்து, ஸ்டிரைக்கை டேவிட் மில்லரிடம் கொடுத்தார்.&lt;/li&gt; &lt;li&gt;நான்காவது பந்து - பிரசித் கிருஷ்ணா வீசிய நான்காவது பந்தை, மில்லர் நின்ற இடத்திலிருந்தே 106 மீட்டர் தூரத்திற்கு இமாலய சிக்ஸர் அடித்தார்.&lt;/li&gt; &lt;li&gt;ஐந்தாவது பந்து - 5-வது பந்தை மில்லர் அடித்தார். ஒரு ரன் ஓடக்கூடிய வாய்ப்பு இருந்தும், அவர் மறுத்துவிட்டார். இதனால், போட்டியை சமன் செய்யும் வாய்ப்பை டெல்லி இழந்தது.&lt;/li&gt; &lt;li&gt;கடைசி பந்து - கடைசி பந்தை மில்லர் அடிக்கத் தவற, அது கீப்பர் ஜோஸ் பட்லர் கைக்குச் சென்றது. இருவரும் ரன் ஓட முயற்சித்தனர், ஆனால் குல்தீப் யாதவ் நான்-ஸ்ட்ரைக்கர் முனையில் ரன் அவுட் ஆனார். இந்த பந்தை வைடு என அறிவிக்கக் கோரி மில்லர் ரிவ்யூ கேட்டார், ஆனால் அம்பயர் அதை சரியான பந்து என அறிவித்தார். இதனால், பரபரப்பான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 1 ரன்னில் தோல்வியடைந்தது.&lt;/li&gt;&lt;/ul&gt;]]></content:encoded>
            <category><![CDATA[sports-cricket]]></category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/sports-cricket/gujarat-titans-beat-delhi-capitals-by-1-run-in-ipl-last-over-thriller-articleshow-x3g3lha"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Puducherry Elections: புதுச்சேரியில் இன்று வாக்குப்பதிவு! NDA, INDIA, தவெக இடையே மும்முனைப் போட்டி!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/india/puducherry-assembly-elections-2024-triangular-contest-heats-up-for-30-seats-articleshow-0ggd2b7</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/india/puducherry-assembly-elections-2024-triangular-contest-heats-up-for-30-seats-articleshow-0ggd2b7</guid>
            <pubDate>Thu, 09 Apr 2026 07:15:33 +0530</pubDate>
            <description><![CDATA[புதுச்சேரியில் 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. 10 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். NDA, INDIA கூட்டணி மற்றும் நடிகர் விஜய்யின் தவெக இடையே மும்முனைப் போட்டி நிலவுவதால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. 1,099 வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-external,imgname-image-542ad1eb-4fc9-4628-a1e0-d441640b3a74.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. இந்தத் தேர்தலில் மொத்தம் 10,14,070 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 5,39,125 பேர் பெண்கள், 4,74,788 பேர் ஆண்கள், 157 பேர் மூன்றாம் பாலினத்தவர். மேலும், 18-19 வயதுக்குட்பட்ட முதல்முறை வாக்காளர்கள் 24,156 பேரும், 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 6,034 பேரும் இந்தத் தேர்தலில் வாக்களிக்கின்றனர்.&lt;/p&gt;&lt;h2&gt;வாக்குப்பதிவு ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள்&lt;/h2&gt;&lt;p&gt;தேர்தல் ஏற்பாடுகள் குறித்து புதுச்சேரி தலைமைத் தேர்தல் அதிகாரி பி. ஜவஹர் ANI செய்தி நிறுவனத்திடம் பேசினார். அவர் கூறும்போது, &quot;மொத்தம் உள்ள 1,099 வாக்குச்சாவடிகளிலும் தேர்தல் ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டுள்ளன. 110 செக்டார் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவற்றில் 209 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டு, அங்கு மத்திய ஆயுதப்படை போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் விதிமீறல்களைக் கண்காணிக்க ட்ரோன்கள், பறக்கும் படைகள் மற்றும் உதவி எண்கள் பயன்படுத்தப்படுகின்றன&quot; என்றார்.&lt;/p&gt;&lt;p&gt;&quot;தேர்தல் நடத்தை விதிகள் கடந்த 48 மணி நேரமாக கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளன. பிரச்சாரம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது, மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. வாக்காளர்களுக்குப் பணம் அல்லது பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. புதுச்சேரியிலிருந்து தொலைவில் உள்ள மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் 4K தரத்தில் நேரலையாகக் கண்காணிக்கப்படுகிறது,&quot; என்றும் அவர் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;&lt;h2&gt;அரசியல் களம் மற்றும் முக்கிய கூட்டணிகள்&lt;/h2&gt;&lt;p&gt;புதுச்சேரி தேர்தல் களத்தில் ஆளும் NDA கூட்டணி, INDIA கூட்டணி மற்றும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (தவெக) இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. முதலமைச்சர் என். ரங்கசாமி தலைமையிலான அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் (AINRC) 16 தொகுதிகளிலும், பாஜக 10 தொகுதிகளிலும், அதிமுக மற்றும் LJK தலா இரண்டு தொகுதிகளிலும் NDA கூட்டணியில் போட்டியிடுகின்றன. INDIA கூட்டணியில் காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், திமுக 14 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி (VCK), புதுச்சேரியில் மூன்று தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுகிறது.&lt;/p&gt;&lt;h2&gt;அனல் பறந்த தேர்தல் பிரச்சாரம்&lt;/h2&gt;&lt;p&gt;பிரச்சாரத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ்-திமுக கூட்டணியை கடுமையாகத் தாக்கிப் பேசினார். &quot;அவர்கள் வாரிசு அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களே தவிர, மக்கள் நலனில் அக்கறை காட்டுவதில்லை&quot; என்று அவர் குற்றம் சாட்டினார்.&lt;/p&gt;&lt;p&gt;மறுபுறம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, &quot;புதுச்சேரி அரசை டெல்லியிலிருந்து திணிக்கிறார்கள். இது மக்கள் விருப்பத்தைப் பிரதிபலிக்கவில்லை&quot; என்று கூறினார். மேலும், புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க பாஜக தவறிவிட்டதாகவும், ஊழலை வளர்ப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.&lt;/p&gt;&lt;p&gt;இதற்கிடையே, தவெக தலைவர் விஜய், &quot;AINRC-பாஜக கூட்டணி சோர்வடைந்துவிட்டது, திமுக-காங்கிரஸ் கூட்டணி குழப்பத்தில் உள்ளது. இந்த இரண்டு கூட்டணிகளுக்கும் வாக்களிப்பது வீண்&quot; என்று விமர்சித்தார். புதுச்சேரிக்கு நல்லாட்சி தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.&lt;/p&gt;&lt;h2&gt;கடந்த தேர்தல் முடிவுகள்&lt;/h2&gt;&lt;p&gt;2021 சட்டமன்றத் தேர்தலில், AINRC 10 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. திமுக மற்றும் பாஜக தலா ஆறு இடங்களையும், காங்கிரஸ் ஆறு இடங்களையும் வென்றன. அப்போது 84.8% வாக்குகள் பதிவாகின. 2016 தேர்தலில், காங்கிரஸ் 15 இடங்களைப் பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. AINRC எட்டு இடங்களையும், அதிமுக நான்கு இடங்களையும், திமுக இரண்டு இடங்களையும் வென்றன. அப்போது வாக்குப்பதிவு 83.6% ஆக இருந்தது.&lt;/p&gt;&lt;h2&gt;வாக்கு எண்ணிக்கை மற்றும் சட்டமன்றத்தின் பதவிக்காலம்&lt;/h2&gt;&lt;p&gt;தற்போதைய 30 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தின் பதவிக்காலம் ஜூன் 15-ம் தேதியுடன் முடிவடைகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[india]]></category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/india/puducherry-assembly-elections-2024-triangular-contest-heats-up-for-30-seats-articleshow-0ggd2b7"/>
        </item>
        <item>
            <title><![CDATA[மேஷம் முதல் மீனம் வரை: ஏப்ரல் 9-ல் இந்த ராசிகளுக்கு ராஜயோகம்.! பணவரவு யாருக்கு? துல்லியமான பலன்கள் இதோ.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/april-9-today-rasi-palan-in-tamil-indraya-rasi-palan-for-all-12-zodiac-signs-in-tamil-asianet-tamil-q09qq87</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/april-9-today-rasi-palan-in-tamil-indraya-rasi-palan-for-all-12-zodiac-signs-in-tamil-asianet-tamil-q09qq87</guid>
            <pubDate>Thu, 09 Apr 2026 06:00:17 +0530</pubDate>
            <description><![CDATA[April 9 Today Rasi Palan in Tamil : ஏப்ரல் 9, வியாழக்கிழமை அன்று 3 சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகின்றன. இதன் தாக்கத்தால் எந்த ராசிக்கு இன்றைய நாள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01knpv5bq02qm1dyfyaygy03hn,imgname-april-9-today-rasi-palan-in-tamil-1775661919968.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;April 9 Today Rasi Palan in Tamil : ஏப்ரல் 9, வியாழக்கிழமை அன்று 3 சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகின்றன. இதன் தாக்கத்தால் எந்த ராசிக்கு இன்றைய நாள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேஷ ராசிக்காரர்களுக்கு தடைபட்ட வேலைகள் மீண்டும் தொடங்கும். அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பழக வேண்டாம். மற்றவர்களின் வேலைகளால் உங்கள் நேரம் வீணாகலாம். நண்பர்களுடன் நல்ல நேரம் செலவிடுவீர்கள். மாலையில் உங்கள் துணையுடன் ரொமான்டிக் டின்னருக்கு செல்ல வாய்ப்புள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரிஷப ராசிக்காரர்கள் பெரிய சர்ச்சையில் சிக்க வாய்ப்புள்ளது. உங்கள் ஆலோசனையை மற்றவர்கள் விரும்ப மாட்டார்கள், அதனால் அமைதியாக இருப்பது நல்லது. பெண்கள் சமையலறையில் எலக்ட்ரானிக் பொருட்களை கவனமாக பயன்படுத்தவும். உடல்நலத்தில் சிறப்பு கவனம் தேவை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மிதுன ராசிக்காரர்களுக்கு அரசியலில் பெரிய பதவி கிடைக்கலாம். மன அழுத்தம் இருந்தாலும், வேலையில் சிறப்பாக செயல்படுவீர்கள். காதல் உறவுகள் முன்பை விட இனிமையாக மாறும். பணியிடத்தில் நிபுணர்களின் வழிகாட்டுதல் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கடக ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் மிகவும் பிஸியாக இருப்பார்கள். பூர்வீக சொத்து தொடர்பான விஷயங்கள் சிக்கலாகலாம். மாணவர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள், விரும்பிய வெற்றியைப் பெறுவார்கள். இன்று யாரிடமும் கடன் வாங்க வேண்டாம். வேலையில் பணிச்சுமை அதிகமாக இருக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிம்ம ராசிக்காரர்களுக்கு தங்கள் துணையிடமிருந்து பரிசு கிடைக்கலாம். முக்கியமான வேலைகளை நண்பர்களை நம்பி ஒப்படைக்காமல், நீங்களே செய்யுங்கள். உங்கள் உடல்நலனில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். நேரத்திற்கு உணவு உண்ண வேண்டும். காதலர்களுக்கு நேரம் சாதகமாக உள்ளது. குழந்தை பாக்கியம் கிடைக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கன்னி ராசிக்காரர்கள் இன்று கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம். மாணவர்கள் தங்கள் இலக்கில் கவனக்குறைவாக இருக்கலாம். மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் திருப்தி அடைவீர்கள். உறவினர்களுடன் ஒரு விஷயத்தில் தகராறு ஏற்பட வாய்ப்புள்ளது. தாய்மாமன் தரப்பிலிருந்து ஆதரவு கிடைக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;துலாம் ராசிக்காரர்களின் வீட்டில் இன்று மகிழ்ச்சியான சூழல் நிலவும். மதியத்திற்குப் பிறகு ஒரு நல்ல செய்தியும் இவர்களுக்குக் கிடைக்கலாம். இது உங்கள் தன்னம்பிக்கையை கணிசமாக அதிகரிக்கும். இன்று எந்த வேலையையும் சம்பிரதாயத்திற்காக செய்யாதீர்கள். அனைவரின் ஒத்துழைப்புடன் தடைபட்ட வேலைகள் முடியும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விருச்சிக ராசிக்காரர்கள் எதிர்காலத்திற்கான புதிய திட்டங்களைத் தீட்டலாம். இவர்கள் தங்கள் பொறுப்பை நிறைவேற்றுவதில் வெற்றி பெறுவார்கள். இவர்களின் எதிரிகளால் நினைத்தாலும் எதுவும் செய்ய முடியாது. மற்றவர்களின் பேச்சைக் கேட்டு எந்த வேலையையும் செய்யாதீர்கள். இன்று செல்வாக்கு மிக்கவர்களை நீங்கள் சந்திக்க நேரிடலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தனுசு ராசிக்காரர்களுக்கு அனுபவமுள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். உங்கள் சமூக அந்தஸ்து வேகமாக உயரும். மன அழுத்தம் இருந்தபோதிலும், உங்கள் எல்லா வேலைகளையும் சரியான நேரத்தில் செய்து முடிப்பீர்கள். மாமியார் வீட்டில் இருந்து பண வரவு இருக்கும். உடல்நிலை முன்பை விட நன்றாக இருக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மகர ராசிக்காரர்கள் உணவு விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், இல்லையெனில் வயிற்று நோய்கள் தொந்தரவு செய்யும். ஒரே வேலையை மீண்டும் மீண்டும் செய்வதால் உங்களுக்கு சோம்பல் ஏற்படலாம். பெண்கள் தங்கள் பாதுகாப்பில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். முக்கியமான வேலைகளை இன்று செய்ய வேண்டாம், நாளைக்கு தள்ளிப் போடவும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கும்ப ராசிக்காரர்களுக்கு சர்ச்சைக்குரிய விஷயங்களில் வெற்றி கிடைக்கும். உங்கள் செலவுகளைக் குறைக்க வேண்டும், இல்லையெனில் பட்ஜெட் பாதிக்கப்படலாம். இன்று நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். அரசியலில் தொடர்புடையவர்களுக்கு இன்று பெரிய வெற்றி கிடைக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்று நீங்கள் ஒரு முக்கியமான வேலைக்காக பயணம் செல்ல வேண்டியிருக்கும். தடைபட்ட வேலைகள் சரியான நேரத்தில் முடிவதால் நிம்மதி அடைவீர்கள். உங்கள் வேலையையும் திறமையையும் மக்கள் பாராட்டுவார்கள். வேலை மற்றும் வியாபார நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும். நண்பர்களுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள்.&lt;/p&gt;&lt;p&gt;(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[astrology]]></category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/april-9-today-rasi-palan-in-tamil-indraya-rasi-palan-for-all-12-zodiac-signs-in-tamil-asianet-tamil-q09qq87"/>
        </item>
        <item>
            <title><![CDATA[அதிகார போதையில் திளைக்கும் போலீஸ்.. சாத்தான்குளம் தீர்ப்பை ஒருபொருட்டாகவே மதிக்கவில்லை.. வேல்முருகன்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/police-reveling-in-the-intoxication-of-power-velmurugan-articleshow-plico2f</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/police-reveling-in-the-intoxication-of-power-velmurugan-articleshow-plico2f</guid>
            <pubDate>Wed, 08 Apr 2026 22:06:15 +0530</pubDate>
            <description><![CDATA[தென்காசி ஆலங்குளம் அருகே கள் விற்பதாக கிடைத்த தகவலின் பேரில், மணிகண்டன் என்ற பனை ஏறும் தொழிலாளியை உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா துப்பாக்கியால் சுட்டார். இச்சம்பவம் கிராம மக்கள் மத்தியில் பெரும் போராட்டத்தை தூண்டியது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k0ayk817099v3devxtgv69m5,imgname-vel-1752714289190.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கள்ளச்சாராயமும், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் எங்கும் நிறைந்திருப்பதை தடுக்க இயலாத காவல்துறை பனையேறுபவர்களிடம் வீரத்தை காட்டியுள்ளனர் என தமிழக வாழ்வரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;அதில், தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் கிராமத்தில் வசிக்கும் மணிகண்டன் விவசாயத்துடன்யேறும் தொழிலும் செய்து வருகிறார். இதற்கிடையில் ஆலங்குளம் போலீசாருக்கு மருதம்புத்தூர் பகுதியில் கள் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து உதவி ஆய்வாளர் இசக்கிராஜா, காவலர்கள் மணிராஜ், கார்த்திக் ஆகியோருடன் அப்பகுதிக்கு சென்றுள்ளார். அங்குள்ள ஒரு பனை மரத்தில் பதநீர் எடுப்பதற்காக கணையம் வைத்துள்ளதை இசக்கி ராஜா அறிந்தார். உடனே மரத்தின் உரிமையாளரான மணிகண்டன் மற்றும் அவரின் தந்தை பெருமாள் சேட்டையும் அழைத்துக் கொண்டு பனைமரம் இருக்கும் பகுதிக்கு சென்றபோது, மணிகண்டனின் சகோதரரான சிவன் பொன்ராஜ் குளிக்க சென்றார்.&lt;/p&gt;&lt;p&gt;காவல்துறையினர் மணிகண்டனையும், பெருமாள் சேட்டுவிடம் விசாரணை நடத்துவது குறித்து சிவன் பொன்ராஜ் என்னவென்று விசாரித்தார். . அப்போது உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா சாதியை குறிப்பிட்டு ஆபாசமாக பேசியபடி மணிகண்டனை பனை மரத்தின் மீது ஏறி பானையை எடுக்க வற்புருத்தியுள்ளார். இதற்கிடையே காவல்துறையினருக்கும், மணிகண்டன் உறவினர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த இசக்கி ராஜா துப்பாக்கியால் மணிகண்டனை சுட்டுள்ளார். நான்கு முறை சுட்டதில் இரண்டு தோட்டாக்கள் மணிகண்டன் காலில் பட்டு படுகாயம் அடைந்துள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;இதனை கண்ட அங்கிருந்த காவல்துறையினர் மற்றும் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா ஆகியோர் மணிகண்டனை சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனை அறிந்த் மணிகண்டனின் உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் நேற்று இரவு ஆலங்குளம் முக்கூடல் சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விவசாயி மீது துப்பாக்கி சூடு நடத்திய உதவி ஆய்வாளர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என காவல் துணை கண்காணிப் பாளரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.&lt;/p&gt;&lt;p&gt;காவல்துறையினர் ஆர்பாட்டம் செய்தவர்களின் வேண்டுகோளை புறம்தள்ளியதால் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மணிகண்டனுக்கு நீதிவழங்க கோரி பொதுமக்களுடன் நள்ளிரவுவரை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின்னர் விழித்துக்கொண்ட தென்காசி வருவாய் கோட்டாட்சியர் வைஷ்ணவி பால் விசாரணை மேற்கொண்டு, ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா, மற்றும் காவலர்கள் மணிராஜ், கார்த்திக் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.&lt;/p&gt;&lt;p&gt;கள் இறக்குவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரிக்க சென்ற காவல்துறையினர் திடீரென துப்பாக்கியால் நான்கு முறை சுட்டதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. அதிகார போதையில் திளைக்கும் காவல்துறையினர் சாத்தான் குளம் தீர்ப்பை ஒருபொருட்டாகவே மதிக்கவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது. கள்ளச்சாராயமும், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் எங்கும் நிறைந்திருப்பதை தடுக்க இயலாத காவல்துறை பனையேறுபவர்களிடம் வீரத்தை காட்டியுள்ளனர். அப்படியே வாதத்திற்கு கள் விற்பனை செய்வதாக வைத்துக்கொள்வோம். அதற்கு துப்பாக்கியால் சுடுவீர்களா? எளியோரிடம் காட்டுவது வீரமல்ல. இதில் சம்மந்தப்பட்ட காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்தது மட்டும் போதாது. துறைரீதியாக நடவடிக்கை எடுத்து பணி நீக்கம் செய்யவேண்டும் என தெரிவித்துக்கொள்கிறேன்&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[tamilnadu]]></category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/police-reveling-in-the-intoxication-of-power-velmurugan-articleshow-plico2f"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Weight Loss: தேன் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? பலரும் அறியாத உண்மை!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/webstories/health-fitness/does-honey-help-in-weight-loss-truth-and-benefits-in-tamil-bab6zgy</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/webstories/health-fitness/does-honey-help-in-weight-loss-truth-and-benefits-in-tamil-bab6zgy</guid>
            <pubDate>Wed, 08 Apr 2026 21:45:58 +0530</pubDate>
            <description><![CDATA[Honey Help in Weight Loss : தேன் இனிப்பானது என்பதால் நம்மில் பலருக்கும் அது பிடிக்கும். சர்க்கரைக்கு ஒரு நல்ல மாற்றாகவும் தேன் கருதப்படுகிறது. பலர் இதை டீ, பிரெட் டோஸ்ட் போன்றவற்றில் சேர்த்து சாப்பிடுகிறார்கள்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kn3tpv2km0gs3t4qgcm3mwf6,imgname-honey-1775023909971.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <category><![CDATA[health-fitness]]></category>
            <dc:creator>Rsiva kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/webstories/health-fitness/does-honey-help-in-weight-loss-truth-and-benefits-in-tamil-bab6zgy"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Hair Growth: முடி கொட்டுதா? அடர்த்தியான கூந்தலுக்கு உதவும் 11 சூப்பர் உணவுகள்! இன்றே டயட்டில் சேர்த்திடுங்க!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style-fashion/top-11-super-foods-for-thick-hair-growth-and-hair-fall-control-tamil-lifestyle-q9wwaa5</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style-fashion/top-11-super-foods-for-thick-hair-growth-and-hair-fall-control-tamil-lifestyle-q9wwaa5</guid>
            <pubDate>Wed, 08 Apr 2026 21:27:06 +0530</pubDate>
            <description><![CDATA[Top 11 super Foods For Thick Hair Growth : முடி வளர்ச்சியைத் தூண்டி, தலையின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். பளபளப்பான, ஆரோக்கியமான கூந்தலைப் பெற உதவும் 11 உணவுகள் இங்கே.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jvv696v8b1anhrvq0pcrcaz8,imgname-hair-model--1--1747890510696.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;Top 11 super Foods For Thick Hair Growth : &lt;/strong&gt;முடி வளர்ச்சியைத் தூண்டி, தலையின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். பளபளப்பான, ஆரோக்கியமான கூந்தலைப் பெற உதவும் 11 உணவுகள் இங்கே.&lt;/p&gt;&lt;img&gt;பாலக்கீரையில் இரும்புச்சத்து, ஃபோலேட் மற்றும் வைட்டமின்கள் அதிகம். இது முடி வேர்களுக்கு ஆக்சிஜன் விநியோகத்தை மேம்படுத்தி, முடியை வலுவாக்குகிறது.&lt;img&gt;முட்டையில் புரோட்டீன் மற்றும் பயோட்டின் நிறைந்துள்ளது. இந்த இரண்டு சத்துக்களும் முடி வளர்ச்சிக்கு அவசியம். இவை முடியை வலுவாக்கி, உடைவதைக் குறைக்கின்றன.&lt;img&gt;சால்மன் மீனில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், தலையை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும். இந்த நல்ல கொழுப்புகள் முடி பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவுகின்றன.&lt;img&gt;பாதாம், வால்நட், ஆளி விதைகள் போன்றவை ஜிங்க் மற்றும் நல்ல கொழுப்புகளை வழங்குகின்றன. இந்த சத்துக்கள் முடி உதிர்வைக் குறைத்து, முடியை வலுவாக்க உதவுகின்றன.&lt;img&gt;பருப்பு வகைகளில் தாவர அடிப்படையிலான புரோட்டீன் மற்றும் இரும்புச்சத்து அதிகம். இவை புதிய முடி செல்கள் வளர உதவுவதோடு, வேர்களையும் இயற்கையாக வலுப்படுத்துகின்றன.&lt;img&gt;கிரேக்க யோகர்ட்டில் புரோட்டீன் மற்றும் வைட்டமின் B5 நிறைந்துள்ளது. இது முடி வளர்ச்சியை ஆதரித்து, தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.&lt;img&gt;சர்க்கரைவள்ளிக் கிழங்கில் உள்ள பீட்டா கரோட்டின், வைட்டமின் A-ஆக மாறும். இது தலையில் எண்ணெய் பசையை சீராக வைத்து, வறட்சியைத் தடுக்கிறது.&lt;img&gt;அவகேடோவில் நல்ல கொழுப்புகள் மற்றும் வைட்டமின் E நிறைந்துள்ளது. இவை முடியை சேதத்திலிருந்து பாதுகாத்து, பளபளப்பை மேம்படுத்துகின்றன.&lt;img&gt;பெர்ரி பழங்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் C அதிகம். இவை கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து, முடி வேர்களைப் பாதுகாக்கின்றன.&lt;img&gt;ஓட்ஸில் இரும்பு, ஜிங்க் மற்றும் பி வைட்டமின்கள் உள்ளன. இவை முடியை வலுப்படுத்தி, முடி மெலிந்து போவதைக் குறைக்க உதவுகின்றன.&lt;img&gt;சிக்கன், முடி வளர்ச்சிக்குத் தேவையான லீன் புரோட்டீனின் சிறந்த மூலம். இது வலுவான முடிக்குத் தேவையான அமினோ அமிலங்களை வழங்குகிறது.]]></content:encoded>
            <category><![CDATA[life-style-fashion]]></category>
            <dc:creator>Rsiva kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style-fashion/top-11-super-foods-for-thick-hair-growth-and-hair-fall-control-tamil-lifestyle-q9wwaa5"/>
        </item>
        <item>
            <title><![CDATA[விவசாயிகளுக்கு ஜாக்பாட்.. மலிவு விலையில் உரம்.. ரூ.4,317 கோடி கூடுதல் மானியம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/india/kharif-2026-govt-approves-rs-41534-cr-fertilizer-subsidy-for-farmers-3509ggc</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/india/kharif-2026-govt-approves-rs-41534-cr-fertilizer-subsidy-for-farmers-3509ggc</guid>
            <pubDate>Wed, 08 Apr 2026 20:28:53 +0530</pubDate>
            <description><![CDATA[Fertilizer Subsidy 2026: உர உற்பத்தியாளர்கள்/இறக்குமதியாளர்கள் மூலம், DAP உட்பட 28 வகையான P&K உரங்களை மானிய விலையில் விவசாயிகளுக்கு அரசு வழங்கி வருகிறது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01knpscsn6f5g8fkcpw03h565a,imgname-farmers-1775660066470.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Fertilizer Subsidy 2026: உர உற்பத்தியாளர்கள்/இறக்குமதியாளர்கள் மூலம், DAP உட்பட 28 வகையான P&amp;amp;K உரங்களை மானிய விலையில் விவசாயிகளுக்கு அரசு வழங்கி வருகிறது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நமது பாரத தேசத்துக்கே உணவளிப்பவர்கள் விவசாயிகள். நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தூணாக விளங்கி வரும் விவசாயிகளுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் முதல் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வரை என பல்வேறு திட்டங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.&lt;/p&gt;&lt;p&gt;இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2026-ஆம் ஆண்டு காரீஃப் பருவத்துக்காக (ஏப்ரல் 1, 2026 முதல் செப்டம்பர் 30, 2026 வரை) பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரங்களுக்கு ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியத்தை நிர்ணயம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த அமைச்சரவை முடிவுகள் குறித்துப் பேசிய மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், &quot;நமது 'அன்னதாதா'க்களான விவசாய சகோதரர்களுக்காக, ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியத் திட்டத்தின் கீழ், காரீஃப் பருவத்துக்கு ரூ.41,534 கோடி மதிப்பிலான முழுமையான மானியத் திட்டத்துக்கு இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது,&quot; என்றார்.&lt;/p&gt;&lt;p&gt;2026 காரீஃப் பருவத்துக்கான உத்தேச பட்ஜெட் தேவை சுமார் ரூ.41,533.81 கோடியாக இருக்கும். இது 2025 காரீஃப் பருவத்துக்கான பட்ஜெட்டை விட சுமார் ரூ.4,317 கோடி அதிகம். 2025-ல் இந்த மானியத்துக்காக ரூ.37,216.15 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த மானியத்தின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், விவசாயிகளுக்கு மானிய விலையில், கட்டுப்படியான மற்றும் நியாயமான விலையில் உரங்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சர்வதேச சந்தையில் உரங்கள் மற்றும் இடுபொருட்களின் விலை நிலவரங்களைக் கருத்தில் கொண்டு, P&amp;amp;K உரங்களுக்கான மானியம் முறைப்படுத்தப்பட்டுள்ளது இந்த திட்டத்தின் மற்றொரு பயனாகும். DAP மற்றும் NPKS உள்ளிட்ட P&amp;amp;K உரங்களுக்கான மானியம், 2026 காரீஃப் பருவத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட விகிதங்களின் அடிப்படையில் வழங்கப்படும். இதன் மூலம் விவசாயிகளுக்கு மலிவு விலையில் உரங்கள் தடையின்றி கிடைக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;விவசாயிகள் நலனில் பிரதமர் மோடியின் அர்ப்பணிப்பு பற்றி பேசிய வைஷ்ணவ், &quot;கொரோனா காலமாக இருந்தாலும் சரி, மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட பதற்றமாக இருந்தாலும் சரி, பிரதமர் நரேந்திர மோடி எப்போதும் விவசாயிகளுக்கு ஒரு பாதுகாப்பு கவசம் போல நிற்கிறார். சர்வதேச சந்தையில் உரங்களின் விலை எவ்வளவு ஏற்ற இறக்கமாக இருந்தாலும், அந்த பாதிப்பு ஒருபோதும் நமது விவசாயிகளைத் தாக்கக் கூடாது என்பதை அவர் உறுதி செய்துள்ளார்&quot; என்று குறிப்பிட்டார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உர உற்பத்தியாளர்கள்/இறக்குமதியாளர்கள் மூலம், DAP உட்பட 28 வகையான P&amp;amp;K உரங்களை மானிய விலையில் விவசாயிகளுக்கு அரசு வழங்கி வருகிறது. P&amp;amp;K உரங்களுக்கான மானியம், 01.04.2010 முதல் NBS திட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. விவசாயிகளுக்கு ஆதரவான தனது நிலைப்பாட்டின்படி, மலிவு விலையில் P&amp;amp;K உரங்கள் கிடைப்பதை உறுதி செய்வதில் அரசு உறுதியாக உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;யூரியா, DAP, MOP மற்றும் சல்பர் போன்ற உரங்கள் மற்றும் இடுபொருட்களின் சர்வதேச விலை நிலவரங்களைக் கருத்தில் கொண்டு, 2026 காரீஃப் பருவத்துக்கான P&amp;amp;K உரங்களுக்கான NBS விகிதங்களுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அறிவிக்கப்பட்ட விகிதங்களின்படி உர நிறுவனங்களுக்கு இந்த மானியம் வழங்கப்படும். இதன் மூலம் விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலையில் உரங்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[india]]></category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/india/kharif-2026-govt-approves-rs-41534-cr-fertilizer-subsidy-for-farmers-3509ggc"/>
        </item>
        <item>
            <title><![CDATA[TN Election 2026: ஒரே குடும்பம்.. ரூ.5,800 கோடி சொத்து - தமிழக தேர்தல் வரலாற்றில் புதிய சாதனையா? மலைக்க வைக்கும் பின்னணி!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/who-is-the-richest-candidate-in-2026-tn-assembly-election-leema-rose-asset-8s8lc50</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/who-is-the-richest-candidate-in-2026-tn-assembly-election-leema-rose-asset-8s8lc50</guid>
            <pubDate>Wed, 08 Apr 2026 20:25:46 +0530</pubDate>
            <description><![CDATA[Richest Candidate in Tamil Nadu Election 2026: சட்டமன்றத் தேர்தல் 2026-ல் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் சொத்து மதிப்பு ரூ.5,800 கோடியைத் தாண்டியுள்ளது. தேர்தல் வரலாற்றிலேயே ஒரு புதிய சாதனையா? என்பது குறித்து பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kjc1mc3vxjva4ftcqhfbxce1,imgname-leema-rose-2-1772078379131.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;Richest Candidate in Tamil Nadu Election 2026: &lt;/strong&gt;சட்டமன்றத் தேர்தல் 2026-ல் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் சொத்து மதிப்பு ரூ.5,800 கோடியைத் தாண்டியுள்ளது. தேர்தல் வரலாற்றிலேயே ஒரு புதிய சாதனையா? என்பது குறித்து பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நடந்துமுடிந்துவிட்டது. இதனிடையே வேட்பாளர்கள் சமர்ப்பித்த சொத்து விவரங்கள் பொது மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, இந்தப் பட்டியலில் அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் மார்ட்டின் தமிழகத்திலேயே மிக அதிக சொத்து மதிப்பு கொண்ட வேட்பாளராக உருவெடுத்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;லீமா ரோஸின் அசுர வளர்ச்சி லாட்டரி அதிபர் சாண்டியாகோ மார்ட்டினின் மனைவியான லீமா ரோஸ், திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். இவர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின் படி, இவரது தனிப்பட்ட சொத்து மதிப்பு ரூ.1,049.56 கோடி ஆகும். இதில் ரூ.139.62 கோடி அசையும் சொத்துக்களாகவும், ரூ.909.94 கோடி நிலம் மற்றும் கட்டிடங்கள் உள்ளிட்ட அசையாச் சொத்துக்களாகவும் உள்ளன. குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ.5,800 கோடியைத் தாண்டுவது குறிப்பிடத்தக்கது. 6-ம் வகுப்பு வரை மட்டுமே பயின்றுள்ள இவர், தனது பிரமாணப் பத்திரத்தில் தன்னிடம் 3 டிவிஎஸ் எக்ஸ்எல் மொபெட்கள் மட்டுமே இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பணக்கார வேட்பாளர்கள் பட்டியலில் லீமா ரோஸைத் தொடர்ந்து திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்துள்ள தமிழக வெற்றி கழக (TVK) தலைவர் விஜய் இரண்டாம் இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு ₹603 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மூன்றாம் இடத்தில் திமுக சார்பில் அண்ணா நகர் தொகுதியில் போட்டியிடும் கார்த்திக் மோகன் ரூ.209 கோடி சொத்துக்களுடன் உள்ளார். நான்காம் இடத்தில் லீமா ரோஸின் மருமகனும், தவெக வேட்பாளருமான (வில்லிவாக்கம்) ஆதவ் அர்ஜுனா ரூ.198 கோடி சொத்துக்களுடன் இடம்பிடித்துள்ளார். ஐந்தாம் இடத்தில் காங்கிரஸ் கட்சியின் ஊர்வசி அமிர்தராஜ் (ஸ்ரீவைகுண்டம்) ரூ.88 கோடி சொத்துக்களுடன் உள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தத் தரவுகளின்படி, முதல் ஐந்து இடங்களில் திமுக தரப்பிலிருந்து கார்த்திக் மோகன் மட்டுமே இடம் பெற்றுள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. அதேசமயம், லீமா ரோஸின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதுச்சேரியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார், அவரது சொத்து மதிப்பு ₹664 கோடியாக உள்ளது&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழகத் தேர்தல் களத்தில் எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை கோடீஸ்வரர்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்தச் சொத்து விவரங்கள் சமூக வலைதளங்களில் விவாதங்களை கிளப்பியுள்ளன. சாதாரண மக்களுக்கும், கோடீஸ்வர வேட்பாளர்களுக்கும் இடையிலான இந்த இடைவெளி ஜனநாயகத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மே 4-ம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகள் தீர்மானிக்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[tamilnadu]]></category>
            <dc:creator>Rsiva kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/who-is-the-richest-candidate-in-2026-tn-assembly-election-leema-rose-asset-8s8lc50"/>
        </item>
        <item>
            <title><![CDATA[விக்னேஷ் சிவனுக்கு ரகசியமாக அனிருத் செய்த உதவி! LIK விழா மேடையில் நெகிழ்ச்சியுடன் பேசிய இயக்குனர்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/vignesh-shivan-recalls-how-anirudh-helped-him-financially-during-crisis-in-tamil-auav514</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/vignesh-shivan-recalls-how-anirudh-helped-him-financially-during-crisis-in-tamil-auav514</guid>
            <pubDate>Wed, 08 Apr 2026 20:05:33 +0530</pubDate>
            <description><![CDATA[Anirudh's secret help to Vignesh Shivan : விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் LIK பட விழாவில், இசையமைப்பாளர் அனிருத் தனக்கு செய்த ரகசிய உதவி குறித்து விக்னேஷ் சிவன் மேடையிலேயே நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01knpqzdxv3dn5hd8vcx7v3g2g,imgname-nayanthara-and-vignesh-shivan-lik-movie-event-1775658579899.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;Anirudh's secret help to Vignesh Shivan : &lt;/strong&gt;விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் LIK பட விழாவில், இசையமைப்பாளர் அனிருத் தனக்கு செய்த ரகசிய உதவி குறித்து விக்னேஷ் சிவன் மேடையிலேயே நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சினிமா உலகம் என்பது வெற்றியும் தோல்வியும் ஒரு சேரப் பயணிக்கக்கூடியது. இங்கே வெற்றியில் பங்கெடுக்கப் பல உறவுகள் இருந்தாலும், தோல்வியின்போது தோள் கொடுக்கும் நட்பு அமைவது மிகப்பெரிய வரம். அப்படிப்பட்ட ஒரு ஆழமான நட்பின் சாட்சியாக, &quot;லவ் இன்சூரன்ஸ் கம்பெனி&quot; (LIK- Love Insurance Kompany) பட விழாவில் இயக்குநர் விக்னேஷ் சிவன் பகிர்ந்துகொண்ட தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விக்னேஷ் சிவன் மற்றும் அனிருத் ஆகிய இருவரும் 'நானும் ரவுடி தான்' படத்தின் காலத்திலிருந்தே மிக நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். &quot;லவ் இன்சூரன்ஸ் கம்பெனி&quot; பட விழாவில் பேசிய விக்னேஷ் சிவன், தனது வாழ்க்கையின் ஒரு இக்கட்டான காலகட்டத்தில், யாரிடமும் கேட்காமல் அனிருத் செய்த நிதி உதவி குறித்து உருக்கமாகப் பேசினார்.&lt;/p&gt;&lt;p&gt;&quot;ஒருமுறை நான் நிதி நெருக்கடியில் இருந்தபோது, யாரிடம் உதவி கேட்பது என்று தெரியாமல் தவித்தேன். ஆனால், நான் கேட்காமலேயே என் நிலையை உணர்ந்து அனிருத் எனக்குப் பெரும் தொகையைக் கொடுத்து உதவினார். அது வெறும் பணம் மட்டுமல்ல, ஒரு நண்பனாக அவர் என் மீது வைத்திருந்த நம்பிக்கை,&quot; என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அனிருத்தை வெறும் இசையமைப்பாளராக மட்டும் பார்க்காமல், தனது வாழ்வின் ஒரு அங்கமாகவே விக்னேஷ் சிவன் கருதுகிறார். &quot;கடவுள் எனக்குக் கொடுத்த மிகப்பெரிய பரிசு அனிருத். கடினமான காலங்களில் அவர் எனக்குப் பக்கபலமாக நின்றார். எங்கள் நட்பு வெறும் தொழில் சார்ந்தது அல்ல; அது அதற்கும் மேலானது,&quot; என அவர் மேடையில் கூறியபோது அரங்கம் கைதட்டல்களால் அதிர்ந்தது.&lt;/p&gt;&lt;p&gt;திரையுலகில் பல நேரங்களில் போட்டிகள் மற்றும் ஈகோக்கள் தலைதூக்கும் சூழலில், இவர்களின் இந்தத் தூய நட்பு பலருக்கும் ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளது. விக்னேஷ் சிவன் கண்கலங்கிய படி பேசிய இந்த வீடியோவை அனிருத் ரசிகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விக்னேஷ் சிவனின் முந்தைய படமான 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் வெற்றிக்குப் பிறகும், தற்போது அனிருத் இசையில் உருவாகி வரும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் மீதும் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் நடிக்கும் இப்படத்தின் பாடல்கள் அனிருத்தின் இசையில் மீண்டும் ஒரு மேஜிக்கை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[cinema]]></category>
            <dc:creator>Rsiva kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/vignesh-shivan-recalls-how-anirudh-helped-him-financially-during-crisis-in-tamil-auav514"/>
        </item>
    </channel>
</rss>
