<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes"?>
<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Thu, 27 Aug 2026 17:45:00 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[Toxic OTT Release : டாக்ஸிக் ஓடிடி ரிலீஸ் எப்போது? யஷ் படத்தை 235 கோடிக்கு வாங்கிய டிஜிட்டல் தளம் எது?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/yash-movie-toxic-ott-release-date-and-platform-details-leaked-vh3mf3g</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/yash-movie-toxic-ott-release-date-and-platform-details-leaked-vh3mf3g</guid>
            <pubDate>Thu, 27 Aug 2026 17:11:22 +0530</pubDate>
            <description><![CDATA[Toxic OTT Release Date : கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ், நயன்தாரா, கியாரா அத்வானி நடிப்பில் ரிலீஸ் ஆன டாக்ஸிக் திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவல் கசிந்துள்ளது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kekh9tsse7wa79df3stmev0v,imgname-toxic--1--1768034724665.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Toxic OTT Release Date : கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ், நயன்தாரா, கியாரா அத்வானி நடிப்பில் ரிலீஸ் ஆன டாக்ஸிக் திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவல் கசிந்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ராக்கிங் ஸ்டார் யஷ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த &lsquo;டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்&rsquo; திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருகிறது. கீத்து மோகன்தாஸ் இயக்கியுள்ள இந்த கேங்ஸ்டர் டிராமாவில் யஷ்ஷுடன் நயன்தாரா, கியாரா அத்வானி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு வெளியீட்டுக்கு முன்பே அதிகமாக இருந்தது. படம் வெளியான முதல் நாளிலேயே இந்திய அளவில் ரூ.101.10 கோடி நிகர வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Toxic Review : யாஷின் ஆக்&zwnj;ஷன் விருந்து டேஸ்டா? வேஸ்டா? டாக்ஸிக் முழு விமர்சனம் இதோ&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தற்போதைய நிலவரப்படி, &lsquo;டாக்ஸிக்&rsquo; படத்தின் அதிகாரப்பூர்வ ஓடிடி வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. பொதுவாக பெரிய படங்கள் திரையரங்கு வெளியீட்டுக்குப் பிறகு குறிப்பிட்ட கால இடைவெளியில் டிஜிட்டல் தளங்களில் வெளியாகும். அந்த அடிப்படையில், இப்படமும் சுமார் 4 முதல் 8 வாரங்களுக்குப் பிறகு ஓடிடி-யில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.&lt;/p&gt;&lt;p&gt;அதன்படி, அனைத்தும் திட்டமிட்டபடி சென்றால் 2026 செப்டம்பர் மாத இறுதி அல்லது அக்டோபர் மாதம் தசரா பண்டிகை விடுமுறையில் இப்படத்தின் டிஜிட்டல் வெளியீடு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்ல. ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனமோ அல்லது சம்பந்தப்பட்ட ஓடிடி தளமோ உறுதி செய்ய வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lsquo;டாக்ஸிக்&rsquo; படத்தின் டிஜிட்டல் உரிமை தொடர்பாக ஜீ5 நிறுவனத்தின் பெயர் தொடர்ந்து அடிபட்டு வருகிறது. வெளியாகியுள்ள தகவல்களின்படி, படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமைகள் ஜீ5 வசம் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், திரையரங்கு ஓட்டம் நிறைவடைந்த பிறகு யஷ்ஷின் &lsquo;டாக்ஸிக்&rsquo; ஜீ5 தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால், இந்த தகவலை ஜீ5 நிறுவனமோ அல்லது படத்தின் தயாரிப்பாளர்களோ இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதற்கிடையே, &lsquo;டாக்ஸிக்&rsquo; படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமைகள் மிகப்பெரிய தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது. பிலிமிபீட் வெளியிட்ட தகவலின்படி, அனைத்து மொழிகளுக்குமான டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமைகள் சுமார் ரூ.235 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால், இந்திய சினிமாவில் குறிப்பிடத்தக்க அளவிலான பிரம்மாண்ட உரிமை ஒப்பந்தங்களில் ஒன்றாக இது அமையக்கூடும். ஆனால், ரூ.235 கோடி தொடர்பான தகவலையும் தயாரிப்பு தரப்போ அல்லது ஜீ5 நிறுவனமோ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. எனவே, இந்தத் தொகையை உறுதிப்படுத்தப்பட்ட தகவலாக எடுத்துக்கொள்ள முடியாது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஓடிடி ரிலீஸ் குறித்த எதிர்பார்ப்பு ஒருபுறம் இருக்க, &lsquo;டாக்ஸிக்&rsquo; படத்திற்கு திரையரங்குகளில் வலுவான தொடக்கம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. முதல் நாளில் மட்டும் இந்தியாவில் ரூ.101.10 கோடி நிகர வசூல் செய்ததாக வெளியான தகவல்கள் ஒருபுறம் இருந்தாலும் இதற்கு கிடைத்து வரும் நெகடிவ் விமர்சனங்களால், இப்படம் 250 கோடியாவது வசூலிக்குமா என்பதே கேள்விக் குறியாக உள்ளது. தற்போது படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதால், டிஜிட்டல் வெளியீட்டுக்காக யஷ் ரசிகர்கள் இன்னும் சில வாரங்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[cinema]]></category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/yash-movie-toxic-ott-release-date-and-platform-details-leaked-vh3mf3g"/>
        </item>
        <item>
            <title><![CDATA[#சட்டப்பேரவையில் ஆதவ் அர்ஜுனா பேசினாலே சண்டைத்தான் வருகிறது ! பிரேமலதா விஜயகாந்த் பேட்டி]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/adhav-arjuna-s-speeches-spark-conflict-says-premalatha-videoshow-6dcabwg</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/adhav-arjuna-s-speeches-spark-conflict-says-premalatha-videoshow-6dcabwg</guid>
            <pubDate>Thu, 27 Aug 2026 17:03:06 +0530</pubDate>
            <description><![CDATA[]]></description>
            <media:content url="https://geo.dailymotion.com/player/x1tbu.html?video=xb19ipe" medium="video" height="768" width="1024"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்ற பின், பேரவை வளாகத்திற்கு வெளியே தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது மாநிலத்தின் முக்கியப் பிரச்சினைகள், சட்டமன்ற விவாதங்கள் மற்றும் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்து அவர் தனது கருத்துக்களை ஊடகங்களுடன் பகிர்ந்து கொண்டார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[tamilnadu]]></category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/adhav-arjuna-s-speeches-spark-conflict-says-premalatha-videoshow-6dcabwg"/>
        </item>
        <item>
            <title><![CDATA[உடனடி நடவடிக்கை தேவை!" – நேபாள வெள்ளத்தில் தவிக்கும் தமிழர்கள்: முதலமைச்சர் ஜோசப் விஜய் அவசர ஆய்வு!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/cm-vijay-s-urgent-review-for-tamils-in-nepal-floods-videoshow-ny7y5qt</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/cm-vijay-s-urgent-review-for-tamils-in-nepal-floods-videoshow-ny7y5qt</guid>
            <pubDate>Thu, 27 Aug 2026 17:02:48 +0530</pubDate>
            <description><![CDATA[]]></description>
            <media:content url="https://geo.dailymotion.com/player/x1tbu.html?video=xb19imm" medium="video" height="768" width="1024"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;நேபாளத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கால் அங்கு சிக்கித் தவிக்கும் தமிழ்நாடு சேர்ந்த மக்களின் தற்போதைய நிலைமை குறித்து, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அதிகாரிகளுடன் விரிவான ஆய்வு மேற்கொண்டார். பாதிக்கப்பட்ட தமிழர்களைப் பாதுகாப்பாக மீட்கவும், தேவையான அவசர உதவிகளை வழங்கவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[tamilnadu]]></category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/cm-vijay-s-urgent-review-for-tamils-in-nepal-floods-videoshow-ny7y5qt"/>
        </item>
        <item>
            <title><![CDATA[CM Vijay order: நேபாள பெரு வெள்ளம்..டெல்லி செல்லும் 4 தமிழக அமைச்சர்கள்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-chennai/tn-cm-vijay-order-4-minister-team-travel-to-delhi-for-rescue-tamil-people-fq0wqgd</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-chennai/tn-cm-vijay-order-4-minister-team-travel-to-delhi-for-rescue-tamil-people-fq0wqgd</guid>
            <pubDate>Thu, 27 Aug 2026 16:56:07 +0530</pubDate>
            <description><![CDATA[4 minister travel to delhi : நேபாள நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்கும் நடவடிக்கையாக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், தென்னரசு மற்றும் வினோத் ஆகிய 4 பேர் டெல்லி செல்ல உள்ளனர்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m11ere76xars5w433q69hy34,imgname-cm-vijay-1787829172454.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;4 minister travel to delhi : &lt;/strong&gt;நேபாள நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்கும் நடவடிக்கையாக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், தென்னரசு மற்றும் வினோத் ஆகிய 4 பேர் டெல்லி செல்ல உள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போடோ கோசி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி ஏராமானோர் மாயமானதுடன், 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் நாட்டையே அதிக்குள்ளாகியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;இதில் கைலாஷ் யாத்திரைக்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த 103 பேர் இரண்டு குழுக்களாக நேபாளத்திற்குச் சென்றுள்ளனர். அவர்களில் சிலர் வெள்ளப்பெருக்கால் சிக்கியுள்ளதாகவும், அவர்களை தொடர்புகொள்ள முடியாத நிலை உள்ளதாக தகவல்கள் கிடைத்தன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதையடுத்து, அங்கு சிக்கியுள்ள தமிழர்களுக்கும், தமிழகத்தில் உள்ள அவர்களது குடும்பத்தினருக்கும் இடையே அவசர தொடர்பை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு அவசர தொலைபேசி எண்களை அறிவித்தது. மேலும், பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் மத்திய அரசின் உதவியுடன் மேற்கொண்டு வருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்நிலையில், வெள்ளப்பெருக்கில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்டு வருவது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் அவசர ஆலோசனை மேற்கொண்டார். இதில், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், தென்னரசு உட்பட அயலக்கத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;டெல்லி செல்லும் 4 அமைச்சர்கள்!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்த கூட்டத்தில், தமிழர்களை மீட்கும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தி, நேபாள நாட்டிற்கு நேரில் சென்று மீட்புப் பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அங்கு சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்கும் நடவடிக்கையாக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், தென்னரசு மற்றும் வினோத் ஆகிய 4 பேர் டெல்லி செல்ல உள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அமைச்சர்கள் டெல்லி சென்று மீட்புப் பணிகள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதுடன், மீட்கப்பட்டுள்ள 20 தமிழர்களை உடனடியாக தாயகம் அழைத்து வருவதற்கும், அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்கிடவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;அதேபோல், ஐஏஎஸ் ஆஷிஷ் குமார் தலைமையிலான குழுவினர் நேபாள நாட்டிற்கு நேரில் சென்று மீட்புப்பணிகளை கண்காணிக்கவும் முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[tamilnadu-chennai]]></category>
            <dc:creator>Vishnupriya</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-chennai/tn-cm-vijay-order-4-minister-team-travel-to-delhi-for-rescue-tamil-people-fq0wqgd"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Healthy Cortisol: பெண்களில் கார்டிசோல் ஹார்மோனை சீராக வைத்திருக்க உதவும் உணவு, தூக்கம், உடற்பயிற்சி பழக்கங்கள்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/health/healthy-cortisol-regulation-in-women-foods-sleep-and-exercise-habits-that-may-help-3v320gb</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/health/healthy-cortisol-regulation-in-women-foods-sleep-and-exercise-habits-that-may-help-3v320gb</guid>
            <pubDate>Thu, 27 Aug 2026 16:55:05 +0530</pubDate>
            <description><![CDATA[பெண்களின் உடல் மற்றும் மனநலத்தில் கார்டிசோல் ஹார்மோனின் சமநிலை முக்கியப் பங்கு வகிக்கிறது. சரியான உணவு, போதுமான தூக்கம், அளவான உடற்பயிற்சி மற்றும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் பழக்கங்கள் கார்டிசோல் சீராக இயங்க உதவக்கூடும்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m11f66zbsgkszjvdtd6ppr4m,imgname-women-health--1--1787829623787.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;பெண்களின் உடல் மற்றும் மனநலத்தில் கார்டிசோல் ஹார்மோனின் சமநிலை முக்கியப் பங்கு வகிக்கிறது. சரியான உணவு, போதுமான தூக்கம், அளவான உடற்பயிற்சி மற்றும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் பழக்கங்கள் கார்டிசோல் சீராக இயங்க உதவக்கூடும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கார்டிசோல் என்பது உடலின் மன அழுத்தத்துக்கு ஏற்ப செயல்படும் முக்கியமான ஹார்மோன்களில் ஒன்று. இது உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குவது, ரத்தச் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல உடல் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதில் பங்கு வகிக்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;கார்டிசோல் என்பது முழுமையாக தவிர்க்க வேண்டிய ஹார்மோன் அல்ல. சரியான நேரத்தில் சரியான அளவில் இருப்பதே முக்கியம். நீண்டகால மன அழுத்தம், ஒழுங்கற்ற வாழ்க்கை முறை, போதிய தூக்கமின்மை போன்றவை ஹார்மோன் சமநிலையை பாதிக்கக்கூடும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சீரான உணவுமுறை உடலின் ஒட்டுமொத்த செயல்பாட்டுக்கு ஆதரவாக இருக்கும். காய்கறிகள், பழங்கள், முழுத்தானியங்கள், பருப்பு வகைகள், முட்டை, மீன், கொட்டைகள் மற்றும் விதைகள் போன்ற சத்தான உணவுகளை அளவோடு சேர்த்துக்கொள்ளலாம்.&lt;/p&gt;&lt;p&gt;அதிக சர்க்கரை மற்றும் அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதை குறைப்பதும் நல்ல பழக்கமாகும். உணவை நீண்ட நேரம் தவிர்ப்பதை விட, தனிநபரின் தேவைக்கு ஏற்ப சீரான இடைவெளியில் சத்தான உணவை எடுத்துக்கொள்வது உதவியாக இருக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உடல் ஓய்வெடுக்கும் நேரத்தில் பல்வேறு ஹார்மோன் செயல்பாடுகள் ஒழுங்குபடுத்தப்படுகின்றன. தொடர்ந்து குறைவான தூக்கம் அல்லது தூக்க நேரத்தில் அதிக மாற்றம் இருப்பது உடலின் மன அழுத்தப் பதில்களை பாதிக்கக்கூடும்.&lt;/p&gt;&lt;p&gt;எனவே தினமும் ஒரே நேரத்தில் தூங்கச் செல்வது, ஒரே நேரத்தில் எழுவது போன்ற தூக்கப் பழக்கத்தை உருவாக்குவது பயனுள்ளதாக இருக்கும். தூங்குவதற்கு முன்பு மொபைல் மற்றும் பிற திரை சாதனங்களின் பயன்பாட்டைக் குறைப்பதும் நல்ல தூக்கத்திற்கு உதவலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வழக்கமான உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்துடன் மனநலத்திற்கும் பலன் தரக்கூடியது. நடைப்பயிற்சி, யோகா, நீச்சல், சைக்கிளிங் அல்லது தசை வலிமையை மேம்படுத்தும் பயிற்சிகள் போன்றவற்றை தனிநபரின் உடல்நிலை மற்றும் உடற்பயிற்சி திறனுக்கு ஏற்ப தேர்வு செய்யலாம்.&lt;/p&gt;&lt;p&gt;ஆனால் உடலுக்கு போதுமான ஓய்வு இல்லாமல் மிக அதிகமாகவும் தொடர்ந்து கடுமையாகவும் உடற்பயிற்சி செய்வது தேவையற்ற உடல் அழுத்தத்தை ஏற்படுத்தலாம். எனவே உடற்பயிற்சிக்கும் ஓய்வுக்கும் இடையில் சமநிலையைப் பேணுவது அவசியம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வேலை, குடும்பப் பொறுப்புகள், தூக்கமின்மை மற்றும் அன்றாட வாழ்க்கையின் பல்வேறு சவால்கள் மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். இதை முழுமையாக தவிர்ப்பது சாத்தியமில்லை என்றாலும், அதை நிர்வகிக்கும் பழக்கங்களை உருவாக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;ஆழ்ந்த சுவாசப் பயிற்சி, தியானம், யோகா, இயற்கையில் நடைப்பயிற்சி, பிடித்தமான பொழுதுபோக்குகளில் ஈடுபடுதல் மற்றும் போதுமான ஓய்வு போன்றவை மனதை அமைதிப்படுத்த உதவும். தொடர்ந்து மன அழுத்தம் இருப்பதாக உணர்ந்தால், நம்பகமான நபரிடம் பேசுவதும் தேவையான உதவியைப் பெறுவதும் முக்கியம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கார்டிசோல் சமநிலையை ஒரு குறிப்பிட்ட உணவு அல்லது ஒரே ஒரு உடற்பயிற்சியின் மூலம் மட்டுமே பராமரிக்க முடியாது. உணவு, தூக்கம், உடற்பயிற்சி, ஓய்வு மற்றும் மன அழுத்த மேலாண்மை ஆகிய அனைத்தும் இணைந்த வாழ்க்கை முறையே முக்கியம்.&lt;/p&gt;&lt;p&gt;உடலில் நீண்டகாலமாக ஏற்படும் மாற்றங்கள், தொடர்ந்து சோர்வு, தூக்கக் கோளாறு அல்லது பிற கவலைக்குரிய அறிகுறிகள் இருந்தால், தாமாகவே ஹார்மோன் பிரச்சினை என்று முடிவு செய்யாமல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.&lt;/p&gt;&lt;p&gt;குறிப்பு: கார்டிசோல் அளவை கட்டுப்படுத்துவதற்காக கடுமையான உணவுக் கட்டுப்பாடுகள் அல்லது தீவிர உடற்பயிற்சிகளை மேற்கொள்ளாமல், தனிநபரின் உடல்நிலை மற்றும் தேவைக்கு ஏற்ற வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது சிறந்தது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[health]]></category>
            <dc:creator>Priya Velan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/health/healthy-cortisol-regulation-in-women-foods-sleep-and-exercise-habits-that-may-help-3v320gb"/>
        </item>
        <item>
            <title><![CDATA[TVS Jupiter: புதிய டூயல்-டோன் நிறங்களில் அறிமுகம்! விலை 90,000 ரூபாய்க்கும் குறைவு!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/auto/tvs-jupiter-zx-launched-in-new-dual-tone-colours-under-90000-articleshow-dkcddgi</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/auto/tvs-jupiter-zx-launched-in-new-dual-tone-colours-under-90000-articleshow-dkcddgi</guid>
            <pubDate>Thu, 27 Aug 2026 16:52:55 +0530</pubDate>
            <description><![CDATA[டிவிஎஸ் நிறுவனம் தனது பிரபலமான ஜூபிடர் ஸ்கூட்டரின் ZX வேரியன்டில் இரண்டு புதிய டூயல்-டோன் வண்ணங்களை அறிமுகம் செய்துள்ளது. ஸ்பெக்ட்ரல் ப்ளூ மற்றும் ஸ்பெக்ட்ரல் காப்பர் ஆகிய நிறங்களில் கிடைக்கும் இந்த ஸ்கூட்டரின் விலை 90,000 ரூபாய்க்கும் குறைவாக உள்ளது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kshwxcnp43kzmk7ntvk1v525,imgname-tamil-news--51--1779790951094.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், தனது அதிகம் விற்பனையாகும் ஜூபிடர் ஸ்கூட்டர் மாடலில் புதிய 'டூயல்-டோன் ஸ்பெக்ட்ரல்' ரேஞ்சை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. இதன் ZX வேரியன்டில், ஸ்பெக்ட்ரல் ப்ளூ மற்றும் ஸ்பெக்ட்ரல் காப்பர் என இரண்டு புதிய இரட்டை வண்ணத் தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த புதிய மாடலின் விலை 90,000 ரூபாய்க்கும் குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;&lt;p&gt;இந்த புதிய வண்ணங்கள், ஸ்கூட்டருக்கு ஒரு பிரீமியம் மற்றும் நவீன தோற்றத்தை அளிக்கும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பண்டிகைக் காலத்தை நெருங்கும் வேளையில், சந்தையில் போட்டியைச் சமாளிக்கவும், வாடிக்கையாளர்களுக்குப் புதிய தேர்வுகளை வழங்கவும் இந்த அப்டேட் செய்யப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;h2&gt;இன்ஜின் மற்றும் வசதிகளில் மாற்றமில்லை!&lt;/h2&gt;&lt;p&gt;புதிய நிறங்கள் சேர்க்கப்பட்டதைத் தவிர, ஸ்கூட்டரின் மெக்கானிக்கல் அம்சங்களில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. ஏற்கெனவே இருக்கும் அதே 110சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின்தான் இதிலும் தொடர்கிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 7.7 bhp பவரையும், 8.8 Nm டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.&lt;/p&gt;&lt;p&gt;வசதிகளைப் பொறுத்தவரை, டிவிஎஸ் ஜூபிடர் ZX வேரியன்ட் பல நவீன அம்சங்களைக் கொண்டுள்ளது. இதில் பிரகாசமான எல்இடி ஹெட்லேம்ப், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 2 லிட்டர் கொள்ளளவு கொண்ட க்ளோவ் பாக்ஸ் ஆகியவை அடங்கும். இது அன்றாடப் பயன்பாட்டிற்கு மிகவும் வசதியாக இருக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;மேலும், பயணத்தின்போது மொபைல் போன்களை சார்ஜ் செய்துகொள்ள வசதியாக யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வழங்கப்பட்டுள்ளது. பொருட்களை வைத்துக்கொள்ள 21 லிட்டர் அண்டர்-சீட் ஸ்டோரேஜ் வசதியும் இதில் உள்ளது. ஆக, தோற்றத்தில் மட்டுமே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது; மற்றபடி இது நமக்கு ஏற்கனவே பரிச்சயமான அதே ஜூபிடர்தான்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[auto]]></category>
            <dc:creator>Asianet News</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/auto/tvs-jupiter-zx-launched-in-new-dual-tone-colours-under-90000-articleshow-dkcddgi"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Raksha Bandhan 2026: மலர்ந்தும் மலராத பாதி மலர் போல.! ரக்ஷா பந்தன் நாளில்  ராக்கி கட்ட நல்ல நேரம் எது?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/raksha-bandhan-2026-date-auspicious-timings-and-rituals-0bz4ktb</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/raksha-bandhan-2026-date-auspicious-timings-and-rituals-0bz4ktb</guid>
            <pubDate>Thu, 27 Aug 2026 16:18:50 +0530</pubDate>
            <description><![CDATA[ரக்ஷா பந்தன் 2026 ஆகஸ்ட் 28 அன்று வருகிறது. இந்த பாரம்பரிய விழாவைக் கொண்டாடும் முன், ராக்கி கட்டும் முகூர்த்தம், பௌர்ணமி திதி, பத்ரா காலம் மற்றும் முக்கிய நகரங்கள் வாரியான நேரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0ytbc3y8vpydm7sam4vw7jg,imgname-happy-raksha-bandhan-1787740663934.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ரக்ஷா பந்தன் 2026 ஆகஸ்ட் 28 அன்று வருகிறது. இந்த பாரம்பரிய விழாவைக் கொண்டாடும் முன், ராக்கி கட்டும் முகூர்த்தம், பௌர்ணமி திதி, பத்ரா காலம் மற்றும் முக்கிய நகரங்கள் வாரியான நேரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.&lt;/p&gt;&lt;img&gt;2026-ல் ரக்ஷா பந்தன் ஆகஸ்ட் 28 அன்று கொண்டாடப்படுகிறது. பௌர்ணமி திதி ஆகஸ்ட் 27 காலை 9:08 மணிக்கு தொடங்கி, ஆகஸ்ட் 28 காலை 9:48 மணிக்கு முடிவடைகிறது.&lt;img&gt;புது டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை போன்ற முக்கிய நகரங்களில் ராக்கி கட்டுவதற்கான சரியான நேரத்தை தெரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு நகரத்திற்கும் சூரிய உதய நேரத்தைப் பொறுத்து நேரம் மாறுபடும்.&lt;img&gt;&lt;p&gt;இந்த ஆண்டு பத்ரா காலம் ஆகஸ்ட் 28-ஆம் தேதி சூரிய உதயத்திற்கு முன்பே நிறைவடைந்துவிடுகிறது. எனவே, ராக்கி கட்டும் நேரத்தில் பத்ரா காலம் இருக்காது. இதனால் சகோதரிகள் எந்தவித தடையும் இன்றி தங்கள் சகோதரர்களுக்கு ராக்கி கட்டலாம். பாரம்பரிய சடங்குகளை மகிழ்ச்சியுடன் மேற்கொண்டு, சகோதரர்களின் நலன் மற்றும் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்தனை செய்யலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;காலை முகூர்த்த நேரத்தை தவறவிட்டவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ராக்கி கட்டுவதற்கு அபராஹ்ணம் எனப்படும் பிற்பகல் நேரத்தையும் பயன்படுத்தலாம். இந்த நேரம் ராக்கி கட்டுவதற்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் மணிக்கட்டில் ராக்கி கட்டி, அவர்களின் நலன், மகிழ்ச்சி மற்றும் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்தனை செய்யலாம். அதன்பின் சகோதரர்கள் தங்கள் சகோதரிகளுக்கு பரிசுகள் அல்லது இனிப்புகளை வழங்கி அன்பை வெளிப்படுத்தலாம். இருப்பினும், ராக்கி கட்டுவதற்கான சரியான முகூர்த்த நேரம் பகுதி மற்றும் பஞ்சாங்க கணக்கீட்டைப் பொறுத்து மாறுபடலாம். எனவே, உங்கள் பகுதியில் நடைமுறையில் உள்ள உள்ளூர் பஞ்சாங்கத்தை சரிபார்த்து, அதில் குறிப்பிடப்பட்டுள்ள அபராஹ்ண நேரத்திற்கேற்ப ராக்கி கட்டும் சடங்கை மேற்கொள்வது சிறந்தது. இதனால் பாரம்பரிய முறையில் பண்டிகையை சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாட முடியும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ராக்கி பண்டிகை சகோதர-சகோதரிகளின் பாசத்தை வெளிப்படுத்தும் பாரம்பரிய இந்திய விழாவாகும். இந்நாளில் சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் மணிக்கட்டில் ராக்கி கட்டி, அவர்களின் நலன் மற்றும் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்திக்கின்றனர். சகோதரர்கள் அன்பையும் பாதுகாப்பையும் உறுதியளித்து, சகோதரிகளுக்கு இனிப்புகள் மற்றும் பரிசுகளை வழங்கி மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[life-style]]></category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/raksha-bandhan-2026-date-auspicious-timings-and-rituals-0bz4ktb"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Homemade Face Masks: பளபளப்பான இளமைத் தோற்ற சருமத்திற்கு வீட்டிலேயே செய்யக்கூடிய 5 இயற்கை ஃபேஸ் மாஸ்க்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/health-beauty/5-easy-homemade-face-masks-for-glowing-youthful-skin-using-kitchen-ingredients-lau9r1w</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/health-beauty/5-easy-homemade-face-masks-for-glowing-youthful-skin-using-kitchen-ingredients-lau9r1w</guid>
            <pubDate>Thu, 27 Aug 2026 16:10:25 +0530</pubDate>
            <description><![CDATA[சருமம் இயற்கையாகப் பொலிவுடன் இருக்க விலையுயர்ந்த அழகு சாதனங்கள் மட்டுமே அவசியமில்லை. தேன், தயிர், ஓட்ஸ், மஞ்சள், அலோவேரா போன்ற எளிய பொருட்களை சரியான முறையில் பயன்படுத்தி வீட்டிலேயே ஃபேஸ் மாஸ்க் தயாரிக்கலாம். இவை சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கும்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m11cksms8f80b9wrebk1bcm6,imgname-homemade-face-masks--1--1787826923161.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சருமம் இயற்கையாகப் பொலிவுடன் இருக்க விலையுயர்ந்த அழகு சாதனங்கள் மட்டுமே அவசியமில்லை. தேன், தயிர், ஓட்ஸ், மஞ்சள், அலோவேரா போன்ற எளிய பொருட்களை சரியான முறையில் பயன்படுத்தி வீட்டிலேயே ஃபேஸ் மாஸ்க் தயாரிக்கலாம். இவை சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தில் தேங்கியுள்ள இறந்த செல்களை மென்மையாக அகற்ற உதவக்கூடும். தேன் சருமத்தில் ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதவும் தன்மை கொண்டது. எனவே, தயிருடன் சிறிதளவு தேனை கலந்து முகத்தில் மென்மையாகப் பூசி சில நிமிடங்களுக்குப் பிறகு கழுவலாம். இது சருமத்தை மென்மையாகவும் புத்துணர்ச்சியாகவும் உணரச் செய்யக்கூடும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வறண்ட அல்லது சோர்வாகத் தோன்றும் சருமத்திற்கு ஓட்ஸ் பயன்படுத்தப்படும் வீட்டு மாஸ்க் ஒரு மென்மையான தேர்வாக இருக்கலாம். ஓட்ஸ் சருமத்தை அமைதிப்படுத்த உதவும் தன்மை கொண்டதாகக் குறிப்பிடப்படுகிறது. இதனுடன் தேனைச் சேர்ப்பது சருமத்திற்கு கூடுதல் ஈரப்பதத்தை வழங்க உதவலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மஞ்சள் பாரம்பரியமாக சருமப் பராமரிப்பில் பயன்படுத்தப்படும் ஒரு பொருள். இதனுடன் தயிரைச் சேர்த்து மென்மையான கலவையாகத் தயாரிக்கலாம். மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதாகவும், தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் மென்மையான எக்ஸ்ஃபோலியேஷனுக்கு உதவக்கூடும் என்றும் கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சருமத்தில் வறட்சி அல்லது சிவத்தல் போன்ற உணர்வு இருக்கும்போது அலோவேரா அடிப்படையிலான மாஸ்க் குளிர்ச்சியான மற்றும் ஈரப்பதமான உணர்வைத் தரலாம். புதிய அலோவேரா ஜெல்லுடன் சிறிதளவு ரோஸ் வாட்டர் கலந்து பயன்படுத்தலாம். குறிப்பாக சென்சிட்டிவ் சருமம் உள்ளவர்கள் புதிய பொருளை முழு முகத்திலும் பயன்படுத்துவதற்கு முன் சிறிய பகுதியில் பரிசோதிப்பது நல்லது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வெள்ளரிக்காய் மற்றும் அலோவேரா சேர்க்கை சருமத்திற்கு குளிர்ச்சியையும் ஈரப்பதத்தையும் அளிக்கும் எளிய வீட்டு மாஸ்காக இருக்கலாம். வெள்ளரிக்காயை அரைத்து அதனுடன் புதிய அலோவேரா ஜெல்லை கலந்து முகத்தில் சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் வைத்திருந்து கழுவலாம். வெப்பமான நாட்களில் சோர்வடைந்த சருமத்திற்கு இது புத்துணர்ச்சியான உணர்வைத் தரக்கூடும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இயற்கையான பொருட்கள் என்றாலே அனைவரின் சருமத்திற்கும் ஒரே மாதிரி பொருந்தும் என்று கூற முடியாது. எனவே, புதிய ஃபேஸ் மாஸ்கை முதன்முறையாகப் பயன்படுத்தும்போது முதலில் சிறிய பகுதியில் பேட்ச் டெஸ்ட் செய்வது பாதுகாப்பானது. அரிப்பு, எரிச்சல் அல்லது சிவத்தல் ஏற்பட்டால் உடனடியாகக் கழுவி பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;மேலும், வீட்டில் தயாரிக்கும் மாஸ்க்களை நீண்ட நேரம் முகத்தில் வைத்திருப்பதைத் தவிர்த்து, பயன்படுத்திய பிறகு சருமத்திற்கு ஏற்ற மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தலாம். சன்ஸ்கிரீன், போதிய தண்ணீர், சமச்சீர் உணவு மற்றும் வழக்கமான சருமப் பராமரிப்பு ஆகியவையும் ஆரோக்கியமான சருமத்திற்கு முக்கியமானவை.&lt;/p&gt;&lt;p&gt;குறிப்பு: இந்தக் குறிப்புகள் பொதுவான சருமப் பராமரிப்பு தகவல்களுக்காக மட்டுமே. முகப்பரு, கடுமையான அலர்ஜி அல்லது நீடித்த சருமப் பிரச்சினைகள் இருந்தால் தோல் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[health-beauty]]></category>
            <dc:creator>Priya Velan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/health-beauty/5-easy-homemade-face-masks-for-glowing-youthful-skin-using-kitchen-ingredients-lau9r1w"/>
        </item>
        <item>
            <title><![CDATA[OTT Must Watch Movie : திடுக்கிட வைக்கும் திருப்பங்களுடன் ஒரு சூப்பர் க்ரைம் த்ரில்லர் - ஓடிடியில் செம ஒர்த்தான படம்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/this-malayalam-crime-thriller-is-full-of-twists-must-watch-movie-on-ott-nxgie45</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/this-malayalam-crime-thriller-is-full-of-twists-must-watch-movie-on-ott-nxgie45</guid>
            <pubDate>Thu, 27 Aug 2026 16:09:39 +0530</pubDate>
            <description><![CDATA[Malayalam Crime Thriller : மலையாள சினிமாவில் கடந்த 2020ம் ஆண்டு ரிலீஸ் ஆன க்ரைம் த்ரில்லர் படம் ஒன்று ஆறு ஆண்டுகள் கடந்தும் ஓடிடியில் சக்கைப்போடு போட்டு வருகிறது. அதைப்பற்றி பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m11cqp9snc64kv6g28bm3njw,imgname-ott--1--1787827050809.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Malayalam Crime Thriller : மலையாள சினிமாவில் கடந்த 2020ம் ஆண்டு ரிலீஸ் ஆன க்ரைம் த்ரில்லர் படம் ஒன்று ஆறு ஆண்டுகள் கடந்தும் ஓடிடியில் சக்கைப்போடு போட்டு வருகிறது. அதைப்பற்றி பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மலையாள சினிமாவுக்கு ஓடிடி தளங்களில் கிடைத்து வரும் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வித்தியாசமான கதைக்களம் மற்றும் அழுத்தமான திரைக்கதையுடன் வெளியாகும் மலையாள திரைப்படங்களுக்கு தமிழ் மொழி ரசிகர்கள் மத்தியிலும் தனி வரவேற்பு உள்ளது. இதன் காரணமாக பல மலையாள படங்கள் தமிழ் மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன.&lt;/p&gt;&lt;p&gt;அந்த வரிசையில் தற்போது கவனம் பெற்றுள்ள ஒரு திரைப்படம் 'இனி உதரம்' (Ini Utharam). சஸ்பென்ஸ் மற்றும் விசாரணையை மையமாகக் கொண்ட க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் மலையாளப் பதிப்பு திரையரங்குகளில் வெளியான நிலையில், தமிழ் வெர்ஷன் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. படம் தொடங்கியது முதல் இறுதி வரை பல்வேறு திருப்பங்களுடன் நகர்வதால், க்ரைம் த்ரில்லர் ரசிகர்களுக்கு இது அடிபொலி சாய்ஸ் ஆக இருக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;OTT Thriller Movies : ஓடிடியில் டஜன் கணக்கான ட்விஸ்டுகள் நிறைந்த டாப் 5 சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்கள்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கதைப்படி, ஜானகி என்ற மருத்துவர் இருக்கிறார். ஒரு நாள் காவல் நிலையத்திற்குச் செல்லும் அவர், தான் ஒருவரைக் கொலை செய்துவிட்டதாக அதிர்ச்சிகரமான தகவலை தெரிவிக்கிறார். ஆனால், அவரது பேச்சை காவல்துறையினர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஊடகங்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது, ஜானகிக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;ஆனால் ஜானகி தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். தான் கொன்றதாகக் கூறப்படும் நபர்களின் உடல்கள் புதைக்கப்பட்டிருக்கும் இடத்தை தன்னால் காட்ட முடியும் என்கிறார். இதையடுத்து அவர் காவல்துறையினர் மற்றும் ஊடகத்தினரை அழைத்துக்கொண்டு காட்டுப் பகுதிக்கு செல்கிறார். இந்த தகவல் பரவியதால் ஏராளமான கிராம மக்களும் அந்த இடத்தில் திரள்கின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;அங்கு தோண்டிப் பார்க்கும்போது இரண்டு சடலங்கள் கிடைக்கின்றன. இதனால் வழக்கு திடீரென தீவிரமடைகிறது. ஆனால், அடுத்ததாக ஜானகி கூறும் தகவல் விசாரணையின் போக்கையே மாற்றுகிறது. அந்த இருவரையும் தான் கொலை செய்யவில்லை என்றும், ஒரு காவல்துறை அதிகாரிதான் அவர்களைக் கொன்றதாகவும் அவர் குற்றம்சாட்டுகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தனது குற்றச்சாட்டுக்கு ஆதாரங்களையும் ஜானகி முன்வைக்கிறார். இதனால் விவகாரம் மேலதிகாரிகளின் கவனத்திற்குச் செல்கிறது. காவல் கண்காணிப்பாளர் நேரடியாக தலையிட்டு விசாரணையை முன்னெடுக்கிறார். விசாரணை தீவிரமடையும்போது, இந்தக் கொலை வழக்கின் பின்னணியில் ஒரு அமைச்சருக்கும் தொடர்பு இருப்பது தெரியவருகிறது.&lt;/p&gt;&lt;p&gt;அப்படியானால் கொலை செய்யப்பட்ட அந்த இருவர் யார்? அவர்களுக்கும் ஜானகிக்கும் என்ன தொடர்பு? ஜானகி கூறுவது உண்மையா? காவல்துறை அதிகாரி மீதான குற்றச்சாட்டு உண்மையா? அரசியல் புள்ளி ஒருவருக்கு இதில் என்ன பங்கு? இறுதியில் உண்மையான குற்றவாளிகள் எப்படி கண்டுபிடிக்கப்படுகிறார்கள்? என அடுத்தடுத்து எழும் கேள்விகளுக்கான பதில்கள்தான் படத்தின் மீதிக்கதை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;'சூரரைப் போற்று' படத்தின் மூலம் தேசிய அளவில் கவனம் பெற்ற நடிகை அபர்ணா பாலமுரளி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சுதீஷ் ராமச்சந்திரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கலாபவன் ஷாஜோன், ஹரிஷ் உத்தமன், சித்திக், சந்துநாத் ஜி. நாயர், ஜாபர் இடுக்கி, சித்தார்த் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.&lt;/p&gt;&lt;p&gt;படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். 'குஷி', 'ஹாய் நன்னா' உள்ளிட்ட படங்களில் தனது மெலோடியான இசையால் ரசிகர்களை கவர்ந்த இவர், இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;'இனி உதரம்' படம் பிரபல ஓடிடி தளமான ஜீ5-ல் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு வருகிறது. சஸ்பென்ஸ், போலீஸ் விசாரணை, அரசியல் பின்னணி மற்றும் அடுத்தடுத்து வரும் எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட படங்களை விரும்புபவர்கள் இந்த மலையாள க்ரைம் த்ரில்லரை தங்களது ஓடிடி வாட்ச் லிஸ்ட்டில் சேர்த்துக்கொள்ளலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[cinema]]></category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/this-malayalam-crime-thriller-is-full-of-twists-must-watch-movie-on-ott-nxgie45"/>
        </item>
        <item>
            <title><![CDATA[கணவன் எவ்வளவு கெத்தாக இருந்தாலும் இவர்களிடம் செல்லாது..! கணவனை ஒரு கை பார்க்கும் பெண் ராசிகள்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/women-zodiac-signs-who-rule-their-husbands-these-wives-are-not-to-be-messed-with-tsgzpiu</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/women-zodiac-signs-who-rule-their-husbands-these-wives-are-not-to-be-messed-with-tsgzpiu</guid>
            <pubDate>Thu, 27 Aug 2026 15:26:37 +0530</pubDate>
            <description><![CDATA[திருமண வாழ்க்கையில் தவறு நடந்தால் அமைதியாக இருக்காமல், கணவனையே நேருக்கு நேர் கேள்வி கேட்டு திணற வைக்கும் குணம் சில பெண் ராசிகளுக்கு இருக்கிறதாம். வீட்டில் அதிரடி காட்டும் அந்த பெண் ராசிகள் யார்? ஜோதிடம் சொல்லும் சுவாரசிய தகவலை தெரிந்துகொள்ளுங்கள்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m118cpes79tephtpbrvmwnsg,imgname-wife-zodiac-signs-1787822496215.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;திருமண வாழ்க்கையில் தவறு நடந்தால் அமைதியாக இருக்காமல், கணவனையே நேருக்கு நேர் கேள்வி கேட்டு திணற வைக்கும் குணம் சில பெண் ராசிகளுக்கு இருக்கிறதாம். வீட்டில் அதிரடி காட்டும் அந்த பெண் ராசிகள் யார்? ஜோதிடம் சொல்லும் சுவாரசிய தகவலை தெரிந்துகொள்ளுங்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;திருமண வாழ்க்கையில் கணவன்-மனைவி உறவு என்பது அன்பு, புரிதல், விட்டுக்கொடுத்தல் ஆகியவற்றின் கலவையாகும். ஆனால் சில பெண்கள் தங்களது தைரியம், நேர்மையான பேச்சு மற்றும் ஆதிக்கமான குணத்தால் வீட்டில் நடக்கும் விஷயங்களில் தங்களது கருத்தை அழுத்தமாக பதிவு செய்வார்களாம்.&lt;/p&gt;&lt;p&gt;ஜோதிட நம்பிக்கைகளின்படி, சில ராசிப் பெண்கள் தவறு நடந்தால் அமைதியாக இருக்காமல் கணவனையே நேருக்கு நேர் கேள்வி கேட்பவர்கள் என்று கூறப்படுகிறது. அப்படி தைரியமாகவும், அதிரடியாகவும் பேசும் பெண் ராசிகள் யார் என்பதை சுவாரசியமாக பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேஷ ராசிப் பெண்கள் பொதுவாக மிகவும் தைரியமானவர்களாகவும், வேகமாக முடிவு எடுப்பவர்களாகவும் கருதப்படுகிறார்கள். இவர்களிடம் ஒரு விஷயத்தை மறைப்பது அவ்வளவு எளிதல்ல.&lt;/p&gt;&lt;p&gt;கணவன் ஏதாவது தவறு செய்துவிட்டால், அதை மனதில் வைத்துக்கொண்டு அமைதியாக இருப்பதை விட உடனடியாகக் கேள்வி கேட்பார்களாம். &ldquo;தவறு செய்தது தவறுதான்; அதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்!&rdquo; என்ற அணுகுமுறை இவர்களிடம் அதிகமாக இருக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;சில நேரங்களில் இவர்களின் கோபம் வேகமாக வெளிப்பட்டாலும், அதே வேகத்தில் சமாதானமாகிவிடும் குணமும் இருக்கலாம். வீட்டில் ஒரு பிரச்சினை வந்தால் முதலில் களத்தில் இறங்கி தீர்வு காண்பவர்களாகவும் இருப்பார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிம்ம ராசிப் பெண்கள் தன்னம்பிக்கை மற்றும் தலைமைத்துவ குணம் கொண்டவர்களாக ஜோதிடத்தில் பார்க்கப்படுகிறார்கள். தங்களை யாரும் அலட்சியப்படுத்துவதை இவர்களால் எளிதில் ஏற்றுக்கொள்ள முடியாது.&lt;/p&gt;&lt;p&gt;கணவன் தங்களது கருத்துக்கு மதிப்பு அளிக்கவில்லை என்றால், அதை அமைதியாக விட்டுவிட மாட்டார்களாம். தங்களுக்குரிய மரியாதையைப் பெறும் வரை வாதாடும் குணம் இவர்களிடம் இருக்கக்கூடும்.&lt;/p&gt;&lt;p&gt;குடும்ப விஷயங்களில் முக்கிய முடிவுகளை எடுக்கும்போது இவர்களின் கருத்து முக்கியமானதாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அதனால், பல வீடுகளில் சிம்ம ராசிப் பெண் இருந்தால், &ldquo;வீட்டின் பாஸ் யார்?&rdquo; என்ற கேள்விக்கு அனைவருக்கும் பதில் தெரிந்திருக்கும் என சுவாரசியமாக கூறப்படுகிறது!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விருச்சிக ராசிப் பெண்கள் வெளியே அமைதியாகத் தோன்றினாலும், உள்ளுக்குள் மிகவும் தீவிரமான உணர்வுகளைக் கொண்டிருப்பார்களாம். இவர்களை சாதாரணமாக எடுத்துக்கொள்வது தவறு என ஜோதிட நம்பிக்கைகள் கூறுகின்றன.&lt;/p&gt;&lt;p&gt;கணவன் மீண்டும் மீண்டும் ஒரே தவறைச் செய்தால், ஒரு கட்டத்தில் இவர்களின் பொறுமை உடைந்து கடுமையாகக் கேள்வி கேட்கும் சூழல் ஏற்படலாம். குறிப்பாக நம்பிக்கை மற்றும் நேர்மை விஷயங்களில் எந்த சமரசத்தையும் எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;ஒருமுறை கோபம் வந்துவிட்டால், பழைய விஷயங்களையும் நினைவுபடுத்தி கணவனை திணற வைப்பார்களாம்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தனுசு ராசிப் பெண்கள் மனதில் இருப்பதை வெளிப்படையாகப் பேசும் குணம் கொண்டவர்களாகக் கருதப்படுகிறார்கள். சுற்றி வளைத்து பேசுவதற்குப் பதிலாக நேரடியாக விஷயத்திற்கு வருவது இவர்களின் பாணி.&lt;/p&gt;&lt;p&gt;கணவன் தவறு செய்தால், &ldquo;சரி, பரவாயில்லை&rdquo; என்று மறைத்து வைப்பதற்குப் பதிலாக, என்ன தவறு என்பதை பட்டியலிட்டே பேசுவார்களாம்! இவர்களின் நேர்மையான பேச்சு சில நேரங்களில் கணவனை அதிர்ச்சியடையச் செய்யலாம்.&lt;/p&gt;&lt;p&gt;ஆனால் இவர்களிடம் நீண்ட நேரம் கோபம் வைத்திருக்கும் குணம் குறைவாக இருக்கலாம். பிரச்சினையை வெளிப்படையாகப் பேசி முடித்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கும் குணமும் இவர்களுக்கு இருக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மகர ராசிப் பெண்கள் வெளிப்படையாக அதிகமாகக் கோபப்படாமல் இருக்கலாம். ஆனால் குடும்பம், செலவு, எதிர்காலம் போன்ற விஷயங்களில் மிகவும் திட்டமிட்டு செயல்படுவார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;கணவன் பொறுப்பில்லாமல் நடந்துகொண்டால், உடனடியாகக் கண்டிப்பார்களாம். இவர்களின் அணுகுமுறை சத்தம் போட்டு சண்டையிடுவது அல்ல; மாறாக தர்க்கத்துடன் பேசிச் சரியான பதிலை வாங்குவது என்று கூறலாம்.&lt;/p&gt;&lt;p&gt;வீட்டின் பொருளாதார திட்டம் முதல் குழந்தைகளின் எதிர்காலம் வரை பல விஷயங்களில் இவர்களின் கட்டுப்பாடு அதிகமாக இருக்கக்கூடும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒரு பெண் தைரியமாகப் பேசுவதற்கும், தனது உரிமையை நிலைநாட்டுவதற்கும் அவரது ராசி மட்டும் காரணம் என்று கூற முடியாது. குடும்பச் சூழல், வாழ்க்கை அனுபவம், தனிப்பட்ட குணம் மற்றும் இருவருக்குமான புரிதல் ஆகியவை திருமண வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றன.&lt;/p&gt;&lt;p&gt;கணவனை &ldquo;வெளுத்து வாங்குவது&rdquo; என்பதை விட, தவறு நடந்தால் தைரியமாகக் கேள்வி கேட்பதும், தனது கருத்தை தெளிவாகச் சொல்வதும் ஒரு உறவில் முக்கியமான பண்பாகும். அதே நேரத்தில் கணவன்-மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் மரியாதை அளித்து பேசினால் மட்டுமே உறவு மகிழ்ச்சியாக நீடிக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;முடிவாக...&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;மேஷம், சிம்மம், விருச்சிகம், தனுசு மற்றும் மகரம் ராசிப் பெண்கள் தங்களது கருத்தை அழுத்தமாக வெளிப்படுத்தும் குணம் கொண்டவர்களாக ஜோதிட நம்பிக்கைகளில் குறிப்பிடப்படுகிறார்கள். ஆனால் வீட்டில் யார் பாஸ் என்பதை விட, இருவரும் இணைந்து வாழ்க்கையை எப்படி அழகாக நடத்துகிறார்கள் என்பதே உண்மையான வெற்றி!&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;குறிப்பு: &lt;/strong&gt;இது பாரம்பரிய ஜோதிட நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட பொழுதுபோக்கு தகவல் மட்டுமே. ஒருவரின் உண்மையான குணம் ராசியை மட்டும் சார்ந்ததல்ல.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[astrology]]></category>
            <dc:creator>Asianet News</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/women-zodiac-signs-who-rule-their-husbands-these-wives-are-not-to-be-messed-with-tsgzpiu"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Vinayagar Chaturthi 2026 : விநாயகர் சதுர்த்திக்கு பின் இந்த 4 ராசிகளின் லெவலே வேற! விநாயகர் அருளும் கோடீஸ்வர யோகம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/vinayagar-chaturthi-2026-wealth-and-success-for-4-zodiac-signs-sr7hhdu</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/vinayagar-chaturthi-2026-wealth-and-success-for-4-zodiac-signs-sr7hhdu</guid>
            <pubDate>Thu, 27 Aug 2026 15:21:15 +0530</pubDate>
            <description><![CDATA[Vinayagar Chaturthi 2026 : 2026 செப்டம்பர் 14 விநாயகர் சதுர்த்தியன்று, கிரகங்களின் அரிய சஞ்சாரத்தால் 4 குறிப்பிட்ட ராசிகளுக்கு தடைகள் நீங்கி, நினைத்து பார்க்க முடியாத அசுர வளர்ச்சி காத்திருக்கிறது!]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m119ftt5fdbzg96dhn6jdhtx,imgname-vinayagar-chaturthi-2026-wealth-and-success-for-4-zodiac-signs-1787823647557.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Vinayagar Chaturthi 2026 : 2026 செப்டம்பர் 14 விநாயகர் சதுர்த்தியன்று, கிரகங்களின் அரிய சஞ்சாரத்தால் 4 குறிப்பிட்ட ராசிகளுக்கு தடைகள் நீங்கி, நினைத்து பார்க்க முடியாத அசுர வளர்ச்சி காத்திருக்கிறது!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜோதிடவியலில், விநாயகப் பெருமான் கேது கிரகத்தின் அதிபதியாகவும், புத்தி கூர்மை மற்றும் அறிவிற்குக் காரகனாகவும் கருதப்படுகிறார். இந்தக் காலகட்டத்தில் கன்னி ராசியில் புதன் உச்சம் பெற்றுள்ளதால், அறிவு, பேச்சுத் திறமை மற்றும் வியாபாரத்தில் உச்சக்கட்ட பலன்கள் கிடைக்கின்றன.&lt;/p&gt;&lt;p&gt;விநாயகர் சதுர்த்தி நன்னாளில் விநாயகரை மனதார வழிபடுவதால் ஏற்படும் ஆன்மிகப் பலன்கள்:&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;தடைகள் விலகும் சக்தி: &lt;/strong&gt;எந்த ஒரு புதிய காரியத்தைத் தொடங்கும் முன்பும் தடைகளை நீக்கும் முதற்கடவுளான விநாயகரை வணங்குவது, உங்களின் தொழில் மற்றும் உத்தியோகத்தில் உள்ள அனைத்து முட்டுக்கட்டைகளையும் தகர்க்கும்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;புத்தி கூர்மை மற்றும் தெளிவு:&lt;/strong&gt; விநாயகரின் துதிக்கையில் உள்ள கொழுக்கட்டை மற்றும் மோதகம் போன்ற ஆன்மிகக் குறியீடுகள், ஆன்மாவின் நிறைவையும், செய்யும் தொழிலில் கிடைக்கும் பரிபூரண லாபத்தையும் குறிக்கின்றன. இக்காலகட்டத்தில் விநாயகரின் வழிபாடு மனதை ஒருமுகப்படுத்திச் சரியான முடிவுகளை எடுக்கத் தூண்டுகிறது.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;அந்த வகையில், வேற லெவலுக்கு மாறும் அந்த 4 ராசிகள் எவை என காண்போம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Meat Storage : சிக்கன், மட்டனை ஃபிரிட்ஜில் எப்படி நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் வைப்பது?&lt;/p&gt;&lt;img&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;விநாயகரின் அருள்: &lt;/strong&gt;சிம்ம ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலகட்டத்தில் வரும் இந்த விநாயகர் சதுர்த்தி, உங்களுக்கு ராஜயோகத்தைத் தரப் போகிறது.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;தொழில் மற்றும் பொருளாதாரம்: &lt;/strong&gt;இதுவரை தடுத்து நிறுத்தப்பட்டிருந்த உங்களின் முக்கியத் திட்டங்கள் அனைத்தும் விநாயகரின் அருளால் மீண்டும் வேகம்மெடுக்கும். கைக்கு வராமல் இருந்த பணம் வெற்றிகரமாக வந்து சேரும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Toothpaste Trick : டூத்பேஸ்ட் வச்சு பல்லி, கரப்பான் பூச்சிகளை விரட்டுறது எப்படி?&lt;/p&gt;&lt;img&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;விநாயகரின் அருள்:&lt;/strong&gt; கன்னி ராசியில் புதன் உச்சத்தில் இருக்கும் வேளையில் விநாயகர் சதுர்த்தி வருவதால், புத்தி கூர்மை பன்மடங்கு அதிகரிக்கும்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;தொழில் மற்றும் கல்வி: &lt;/strong&gt;மாணவர்களுக்கும், வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கும் இமாலய வெற்றி காத்திருக்கிறது. புதிய தொழில் ஒப்பந்தங்கள் மூலம் எதிர்பாராத லாபத்தைப் பெறுவீர்கள்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Calcium : பாலை விட அதிக கால்சியம் சத்து உள்ள 8 சூப்பர் உணவுகள்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;விநாயகரின் அருள்:&lt;/strong&gt; விருச்சிக ராசிக்காரர்களுக்கு விக்னங்கள் யாவும் தீரும் காலம் இது. நீண்ட நாட்களாகத் தொல்லை தந்துவந்த கடன்கள் மற்றும் எதிர்ப்புகள் விலகும்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;பொருளாதார வளம்: &lt;/strong&gt;குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுப நிகழ்ச்சிகளும் கைகூடும். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் பிரகாசமாக உள்ளது.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Family Series : குடும்பத்தோடு பார்த்து ரசிக்க வேண்டிய 5 அழகான வெப் சீரிஸ்கள்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;விநாயகரின் அருள்: &lt;/strong&gt;சனியின் ஆதிக்கம் பெற்ற மகர ராசிக்கு விநாயகர் சதுர்த்தி நன்னாளில் அனைத்து சங்கடங்களும் நீங்கி மாபெரும் திருப்புமுனை உண்டாகும்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;உத்தியோகம் மற்றும் லாபம்: &lt;/strong&gt;உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். கூட்டுத் தொழிலில் எதிர்பார்த்ததை விட அதிகமான தனலாபம் பெருகும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;&lt;strong&gt;பொறுப்புத் துறப்பு : &lt;/strong&gt;இக்கட்டுரை பொதுவான ஜோதிடக் கணிப்புகள் மற்றும் ஆன்மிக நம்பிக்கைகளின் அடிப்படையில் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட ஜாதக அமைப்பைப் பொறுத்து பலன்கள் மாறுபடலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Lost Luggage : ரயிலில் பை தொலைந்துபோனால் உடனே இதைச் செய்யுங்கள்!&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[astrology]]></category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/vinayagar-chaturthi-2026-wealth-and-success-for-4-zodiac-signs-sr7hhdu"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Eating curd at night: இரவில் தயிர் சாப்பிடலாமா? மருத்துவர்கள் சொல்வது என்ன?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/health/can-you-eat-curd-at-night-health-benefits-side-effects-qdanxge</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/health/can-you-eat-curd-at-night-health-benefits-side-effects-qdanxge</guid>
            <pubDate>Thu, 27 Aug 2026 15:20:15 +0530</pubDate>
            <description><![CDATA[curd at night: இரவில் தயிர் சாப்பிட்டால் சளி பிடிக்கும், செரிமானம் பாதிக்கும் என்பது நீண்ட காலமாக நிலவும் நம்பிக்கை. ஆனால் இதற்கு அறிவியல் ஆதாரம் உள்ளதா? இரவில் தயிர் சாப்பிடுவது உண்மையில் உடலுக்கு கேடா? என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kq7a19xhmen8hk8mxwxv6raz,imgname-curd-rice-1777288128433.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;curd at night: &lt;/strong&gt;இரவில் தயிர் சாப்பிட்டால் சளி பிடிக்கும், செரிமானம் பாதிக்கும் என்பது நீண்ட காலமாக நிலவும் நம்பிக்கை. ஆனால் இதற்கு அறிவியல் ஆதாரம் உள்ளதா? இரவில் தயிர் சாப்பிடுவது உண்மையில் உடலுக்கு கேடா? என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் தயிருக்கும் முக்கிய இடம் உண்டு. அன்றாட உணவு முதல் கோயில் பிரசாதம், குடும்ப விருந்துகள் வரை தயிர் சாதம் தவறாமல் இடம்பெறுகிறது. ஆனால், இரவில் தயிர் சாப்பிடலாமா? சளி, இருமல் ஏற்படுமா? என்ற கேள்வி பலருக்கும் உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உண்மையில், ஆரோக்கியமான ஒருவர் இரவில் தயிர் சாப்பிடக்கூடாது என்று பொதுவான மருத்துவ விதி எதுவும் இல்லை. தயிரில் புரதம், கால்சியம் உள்ளிட்ட ஏராளமான ஊட்டச்சத்துகள் உள்ளது. இவ்வகை உணவுகள் குடல் ஆரோக்கியத்திற்கு உதவக்கூடும் என்றும் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இரவில் தயிர் சாப்பிட்டால் கட்டாயம் சளி அல்லது இருமல் பிடிக்கும் என்பதற்கும் வலுவான மருத்துவ ஆதாரம் இல்லை. முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவெற்றால், தயிர் மட்டுமல்ல, எந்த உணவாக இருந்தாலும் தூங்குவதற்கு 2&ndash;3 மணி நேரத்திற்கு முன்பே சாப்பிடுவது நல்லது என மருத்துவ வழிகாட்டுதல்கள் கூறுகின்றன. குறிப்பாக நெஞ்செரிச்சல் அல்லது அசிட் ரிஃப்ளக்ஸ் பிரச்சினை உள்ளவர்கள் இதை பின்பற்றுவது நல்லது.&lt;/p&gt;&lt;p&gt;நாம் சாப்பிட்ட உடனே தூங்கச் சென்றால் அஜீரணம், வயிற்று உப்புசம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். மேலும், பால் பொருள்களால் வயிற்றுப் பிரச்சனை ஏற்படும் நபர்கள் தயிரை உணவில் எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துக்கின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இரவில் தயிர் சாப்பிடவே கூடாது என்று எந்த மருத்துவ விதியும் இல்லை. குறிப்பாக தூங்குவதற்கு முன் வயிறு நிறைய சாப்பிடுவதைத் தவிர்த்து, உணவுக்கும் உறக்கத்துக்கும் சிறிது இடைவெளி வைப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[health]]></category>
            <dc:creator>Vishnupriya</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/health/can-you-eat-curd-at-night-health-benefits-side-effects-qdanxge"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Sivakarthikeyan : ஆர்த்திக்கு முத்தத்தை பரிசாக கொடுத்த சிவகார்த்திகேயன் - வைரலாகும் வெட்டிங் டே கிளிக்ஸ்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/sivakarthikeyan-and-his-wife-aarthy-celebrate-16th-wedding-anniversary-photos-viral-3zrv1x4</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/sivakarthikeyan-and-his-wife-aarthy-celebrate-16th-wedding-anniversary-photos-viral-3zrv1x4</guid>
            <pubDate>Thu, 27 Aug 2026 15:02:31 +0530</pubDate>
            <description><![CDATA[Sivakarthikeyan - Aarthy Wedding Anniversary : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயனின் திருமண நாள் கொண்டாட்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m118nph19yycxbsj8wvcsx92,imgname-sivakarthikeyan-1787822791201.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Sivakarthikeyan - Aarthy Wedding Anniversary : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயனின் திருமண நாள் கொண்டாட்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிவகார்த்திகேயனும் ஆர்த்தியும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். உறவினர் வட்டாரத்தில் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் நெருக்கமான நட்பாகவும், பின்னர் காதலாகவும் மாறியுள்ளது. இருவரின் காதலுக்கும் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து திருமணம் நடைபெற்றது. திரையுலகில் படிப்படியாக முன்னேறி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் வளர்ந்துள்ள நிலையில், இந்தப் பயணத்தில் தனது குடும்பத்தின் ஆதரவு மிகப்பெரிய பலமாக இருந்ததாக அவர் பல சந்தர்ப்பங்களில் தெரிவித்துள்ளார். தற்போது இந்தத் தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;மகன்களோடு முதன்முறையாக ஃபாரின் ட்ரிப் சென்ற சிவகார்த்திகேயன் - வைரலாகும் வெகேஷன் போட்டோஸ்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;படப்பிடிப்பு மற்றும் சினிமா பணிகளுக்கு இடையே கிடைக்கும் நேரத்தை குடும்பத்தினருடன் செலவிடுவதையும் சிவகார்த்திகேயன் முக்கியமாகக் கருதுகிறார். குடும்பத்துடன் இருக்கும் சில அழகான தருணங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்வதும் உண்டு. பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையைச் சுற்றி அவ்வப்போது பல்வேறு தகவல்கள் மற்றும் வதந்திகள் பரவுவது வழக்கம். ஆனால், சிவகார்த்திகேயன் - ஆர்த்தி இருவரும் இதுபோன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தங்களது குடும்ப வாழ்க்கையை அமைதியாக முன்னெடுத்து வருகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;தனுஷால் தொடங்கிய பயணம்.! விருது விழாவில் எமோஷ்னல் ஆன சிவகார்த்திகேயன்.!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிவகார்த்திகேயனின் வெற்றிப் பயணத்தில் ஆர்த்தியின் பங்களிப்பும் ஆதரவும் முக்கியமானது. ஆர்த்தி இன்ஸ்டாவில் ஆக்டிவ் ஆக இல்லாவிட்டாலும், அவர் அதில் புகைப்படங்களை பதிவிடும்போதெல்லாம் அது டிரெண்டாகிவிடும். அந்தவகையில், இன்று சிவகார்த்திகேயனும், ஆர்த்தியும் தங்களது 16வது திருமண நாளை கொண்டாடுகிறார்கள். அதற்காக இருவரும் மாறி மாறி முத்தமிட்டு தங்கள் அன்பை பகிர்ந்துகொண்டபோது எடுத்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஆர்த்தி, அந்த புகைப்படங்கள் தற்போது செம வைரலாகி வருகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;மகன்களுக்கு மொட்டை போட்டு திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்த சிவகார்த்திகேயன்...!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதற்கிடையே, சிவகார்த்திகேயன் தனது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடிப்பில் உருவாகி வரும் 'சேயோன்' திரைப்படத்தை 'தாய் கிழவி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சிவகுமார் முருகேசன் இயக்குகிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. கிராமத்து பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.&lt;/p&gt;&lt;p&gt;'அமரன்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் என்பதால், 'சேயோன்' படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஏற்கனவே அதிகரித்துள்ளது. புதிய கதைக்களம் மற்றும் கிராமத்து பின்னணியில் சிவகார்த்திகேயனை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;எனக்கு மூளை ரொம்பவே கம்மி தான்; போன கூட யூஸ் பண்ண தெரியாது: வெகுளியா பேசிய டான் சிவகார்த்திகேயன்!&lt;/strong&gt;&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[cinema]]></category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/sivakarthikeyan-and-his-wife-aarthy-celebrate-16th-wedding-anniversary-photos-viral-3zrv1x4"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Meat Storage : சிக்கன், மட்டனை ஃபிரிட்ஜில் எப்படி நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் வைப்பது?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/webstories/health-food/how-to-store-chicken-and-mutton-in-the-fridge-for-longer-9gpvne0</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/webstories/health-food/how-to-store-chicken-and-mutton-in-the-fridge-for-longer-9gpvne0</guid>
            <pubDate>Thu, 27 Aug 2026 14:43:49 +0530</pubDate>
            <description><![CDATA[Meat Storage : நாமும் சில நேரம் 2-3 கிலோ கறி வாங்கி ஃபிரிட்ஜில் வைப்போம். ஆனால், பச்சை இறைச்சியில் பாக்டீரியா வேகமாக வளரும் என்பதால், அதைச் சரியான முறையில் சேமிப்பது மிகவும் அவசியமாகும்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m117xg3exehs3wqkjv2ht3mc,imgname-how-to-store-chicken-and-mutton-in-the-fridge-for-longer-1787821998190.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <category><![CDATA[health-food]]></category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/webstories/health-food/how-to-store-chicken-and-mutton-in-the-fridge-for-longer-9gpvne0"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Toothpaste Trick : டூத்பேஸ்ட் வச்சு பல்லி, கரப்பான் பூச்சிகளை விரட்டுறது எப்படி?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/webstories/life-style/how-to-repel-lizards-and-cockroaches-using-toothpaste-p11doqz</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/webstories/life-style/how-to-repel-lizards-and-cockroaches-using-toothpaste-p11doqz</guid>
            <pubDate>Thu, 27 Aug 2026 14:30:43 +0530</pubDate>
            <description><![CDATA[Toothpaste Trick : வீட்டுல பல்லி, கரப்பான் பூச்சி தொல்லையா? வெங்காயம் மற்றும் டூத்பேஸ்ட் வச்சு ரொம்ப சிம்பிளா இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்! எப்படினு தெரிஞ்சுக்க ட்ரை பண்ணுங்க.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m1175yjq5q0rdeba9kt29vf0,imgname-how-to-repel-lizards-and-cockroaches-using-toothpaste-1787821226583.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <category><![CDATA[life-style]]></category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/webstories/life-style/how-to-repel-lizards-and-cockroaches-using-toothpaste-p11doqz"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Collagen Foods: இளமை மாறாத சருமத்திற்கு... இந்த 6 உணவுகள் போதும்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/webstories/health-food/boost-collagen-naturally-with-these-six-superfoods-cn3zf0p</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/webstories/health-food/boost-collagen-naturally-with-these-six-superfoods-cn3zf0p</guid>
            <pubDate>Thu, 27 Aug 2026 14:10:09 +0530</pubDate>
            <description><![CDATA[Collagen Foods: சருமம் இளமையாகவும், நெகிழ்வாகவும் இருக்கவும், மூட்டுகளின் ஆரோக்கியத்திற்கும் கொலாஜன் என்ற புரதம் மிகவும் அவசியம். இதை இயற்கையாக அதிகரிக்க, இந்த உணவுகளை உங்கள் டயட்டில் சேர்த்துக்கொள்ளுங்கள்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j3d0qp55szjkmag1ph45x8bg,imgname-fotojet.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <category><![CDATA[health-food]]></category>
            <dc:creator>Rayar A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/webstories/health-food/boost-collagen-naturally-with-these-six-superfoods-cn3zf0p"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Calcium : பாலை விட அதிக கால்சியம் சத்து உள்ள 8 சூப்பர் உணவுகள்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/webstories/health-food/8-foods-with-more-calcium-than-milk-liavykx</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/webstories/health-food/8-foods-with-more-calcium-than-milk-liavykx</guid>
            <pubDate>Thu, 27 Aug 2026 14:02:14 +0530</pubDate>
            <description><![CDATA[Calcium : கால்சியம் சத்து என்றாலே எல்லோருக்கும் பால் தான் நினைவுக்கு வரும். ஆனால், பாலை விட அதிக கால்சியம் சத்துக்களைக் கொண்ட சில உணவுகளும் இருக்கின்றன. இந்த உணவுகளில் கால்சியம் சத்து மட்டுமின்றி, வேறு பல ஆரோக்கிய நன்மைகளும் நிறைந்துள்ளன.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jyjxka4zdv2aaqjsqnr26n4d,imgname-spinach-1--1--1750834194591.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <category><![CDATA[health-food]]></category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/webstories/health-food/8-foods-with-more-calcium-than-milk-liavykx"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Ranabaali : ஜெயிலர் 2 வசூலுக்கு வேட்டு வைக்க வரும் ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா ஜோடியின் ‘ரணபலி’..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/ranabaali-new-release-date-vijay-deverakonda-rashmika-movie-ready-to-clash-with-jailer-2-uucz8g3</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/ranabaali-new-release-date-vijay-deverakonda-rashmika-movie-ready-to-clash-with-jailer-2-uucz8g3</guid>
            <pubDate>Thu, 27 Aug 2026 14:01:14 +0530</pubDate>
            <description><![CDATA[Ranabaali vs Jailer 2 : விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் திருமணத்திற்குப் பிறகு மீண்டும் ஜோடி சேர்ந்துள்ள 'ரணபலி' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் ஜெயிலர் 2-வுக்கு போட்டியாக ரிலீஸ் ஆக உள்ளது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m114hg80nemgqz6ecsrh0qmj,imgname-ranabaali-1787818459392.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Ranabaali vs Jailer 2 : விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் திருமணத்திற்குப் பிறகு மீண்டும் ஜோடி சேர்ந்துள்ள 'ரணபலி' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் ஜெயிலர் 2-வுக்கு போட்டியாக ரிலீஸ் ஆக உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விஜய் தேவரகொண்டாவும், நேஷனல் க்ரஷ் ராஷ்மிகா மந்தனாவும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஜோடியாக நடித்துள்ள படம் 'ரணபலி'. 'டியர் காம்ரேட்' படத்திற்குப் பிறகு இவர்கள் ஜோடி சேரும் படம் இது. திருமணத்திற்குப் பிறகு இவர்கள் சேர்ந்து நடிக்கும் முதல் படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. ராகுல் சங்க்ரித்யன் இயக்கும் இந்தப் படம், செப்டம்பர் 5-ம் தேதி வெளியாக இருந்தது, ஆனால் இப்போது ரிலீஸ் தேதி திடீரென தள்ளிவைக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இந்தியன் 3 தான் ரணபலியா? விஜய் தேவரகொண்டா படத்திற்கு வந்த புது சிக்கல்...!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;'ரணபலி' படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. தசரா பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 16-ம் தேதி படத்தை ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர். தசராவுக்கு தொடர் விடுமுறை நாட்கள் வருவது படத்திற்கு சாதகமாக அமையும். படம் ஹிட்டானால், அது விஜய் தேவரகொண்டாவுக்கு உண்மையான பண்டிகையாக இருக்கும். இந்த அறிவிப்புடன் வெளியான புதிய போஸ்டரில், விஜய் தேவரகொண்டா பெரிய அரிவாளுடன் ஆக்ரோஷமாக காட்சியளிக்கிறார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Jailer 2 : மொழி சர்ச்சையில் சிக்கிய அல்ல பொலெலோ பாடல்... பதறிப்போய் விளக்கம் கொடுத்த அருண்ராஜா காமராஜ்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இப்படம் ரிலீஸ் ஆகும் அதே நாளில் தான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 திரைப்படம் திரைக்கு வர உள்ளது. ரணபலியை போல் ஜெயிலர் 2 படமும் பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ளது. ரணபலிக்கு பான் இந்தியா அளவில் எதிர்பார்ப்பு உள்ளதால், அப்படத்தின் வெளியீட்டால், ஜெயிலர் 2 படத்தின் வசூல், தெலுங்கு மாநிலங்கள் மற்றும் வடமாநிலங்களில் பாதிக்கும் சூழல் உருவாகி உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஏன் ஜெயிலர் 2 முதல் பாகத்தை விட பெஸ்ட்? முத்துவேல் பாண்டியனின் விஸ்வரூபமும், இறங்கி அடிக்கும் நெல்சனும்!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;19-ம் நூற்றாண்டு பின்னணியில், 1854 முதல் 1878 வரையிலான காலகட்டத்தில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் ஒரு பிரம்மாண்டமான பான்-இந்தியா படைப்பாக உருவாகிறது. குறிப்பாக 1878-ல் நடந்த ஒரு கதையை இதில் காட்டப் போகிறார்கள். அந்த நேரத்தில், பிரிட்டிஷார் இந்தியர்களை எப்படி சித்ரவதை செய்தார்கள், உணவு கூட இல்லாமல் எப்படி சுரண்டினார்கள் என்பதைப் படத்தில் காட்டியுள்ளனர். சுதந்திரப் போராட்டத்திற்கு முந்தைய இருண்ட ரகசியங்களை இயக்குநர் ராகுல் இதில் வெளிக்கொணர முயற்சிக்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அந்த காலகட்டத்தில், பிரிட்டிஷார் இந்தியாவிலிருந்து சுமார் 45 டிரில்லியன் டாலர்களை கொள்ளையடித்ததாகக் கூறப்படுகிறது. ஹிட்லரை விட மோசமான சர்வாதிகாரம் நடந்ததாகவும், வெறும் 40 ஆண்டுகளில் கோடிக்கணக்கான மக்கள் பசியால் இறந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த அநீதிக்கு எதிராக 'ரணபலி' நடத்தும் போராட்டமே படத்தின் கதை. இதில் விஜய் 'ரணபலி'யாகவும், ராஷ்மிகா 'ஜெயம்மா'வாகவும் நடிக்கின்றனர். வெளியான டைட்டில் கிளிம்ப்ஸில், விஜய் குதிரையில் வந்து ஒரு பிரிட்டிஷ் அதிகாரியை ரயில் தண்டவாளத்தில் இழுத்துச் செல்லும் காட்சி மிரட்டலாக இருந்தது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[cinema]]></category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/ranabaali-new-release-date-vijay-deverakonda-rashmika-movie-ready-to-clash-with-jailer-2-uucz8g3"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Gas Lighter: கேஸ் லைட்டர் வேலை செய்யலையா? தூக்கி எறியாதீங்க... ஃபர்ஸ்ட் இதை செக் பண்ணுங்க!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/gas-lighter-not-working-easy-repair-tips-and-buying-guide-gkigkx6</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/gas-lighter-not-working-easy-repair-tips-and-buying-guide-gkigkx6</guid>
            <pubDate>Thu, 27 Aug 2026 13:58:54 +0530</pubDate>
            <description><![CDATA[Gas Lighter: கேஸ் லைட்டர் வேலை செய்யவில்லையா? உடனே தூக்கி எறியாமல் சுத்தம் செய்து பாருங்கள். புதிய லைட்டர் வாங்குவதற்கான டிப்ஸ் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m114a4p4npa13chfts4r6f6x,imgname-gas-lighter-1787818218180.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Gas Lighter: கேஸ் லைட்டர் வேலை செய்யவில்லையா? உடனே தூக்கி எறியாமல் சுத்தம் செய்து பாருங்கள். புதிய லைட்டர் வாங்குவதற்கான டிப்ஸ் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சமையலறையில் நாம் தினமும் பயன்படுத்தும் முக்கியமான பொருட்களுள் கேஸ் லைட்டரும் ஒன்று. அதன் பட்டனை அழுத்த ஸ்பார்க் ஏற்பட்டு அடுப்பு பற்றிக்கொள்ளும். இது நமக்கு மிகவும் சாதாரண ஒரு விஷயமாகத் தோன்றலாம். ஆனால், சில சமயங்களில் எத்தனை முறை தட்டினாலும் ஸ்பார்க் வராது அல்லது பட்டன் சரியாக வேலை செய்யாது. அத்தகைய நேரத்தில் லைட்டர் வீணாகிவிட்டது என்று கருதி, உடனே புதிய லைட்டர் வாங்கிவிடுவோம்.&lt;/p&gt;&lt;p&gt;ஆனால், சிறிய அளவிலான அழுக்கு, எண்ணெய் பிசுக்கு அல்லது ஈரப்பதம் இருந்தாலும் கூட இத்தகைய பிரச்சனைகள் வரக்கூடும். கேஸ் கசிவு மற்றும் சேதம்: கேஸ் லைட்டரிலிருந்து கேஸ் வாசனை வந்தாலோ, லீக் ஆவது போல் தெரிந்தாலோ அல்லது லைட்டரின் உடல் பகுதி சேதமடைந்திருந்தாலோ, அதனை நீங்களே சரிசெய்ய முயற்சிப்பது மிகவும் ஆபத்தானது.&lt;/p&gt;&lt;p&gt;கார்பன் மற்றும் தூசி: லைட்டரில் ஸ்பார்க் வரும் பின் மீது கார்பன், எண்ணெய், புகை அல்லது தூசி படிந்திருந்தால் ஸ்பார்க் வருவதில் சிக்கல் ஏற்படலாம். எனவே, புதிய லைட்டர் வாங்குவதற்கு முன்பாகக் கீழே குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களைச் சரிபார்த்துப் பாருங்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;1. ஸ்பார்க் வரும் பின்னைச் சுத்தம் செய்யுங்கள்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;முதலில், ஸ்பார்க் வரும் பின் பகுதியில் கருப்பாக அழுக்கோ அல்லது கார்பனோ படிந்துள்ளதா என்று பாருங்கள். லைட்டரை அடுப்பிலிருந்து தள்ளி வைத்து, அது நன்றாகச் சூடு ஆறின பிறகு, ஒரு காய்ந்த துணி அல்லது மென்மையான பிரஷ் கொண்டு மெதுவாகச் சுத்தம் செய்யுங்கள். கூர்மையான உலோகப் பொருட்களைக் கொண்டு வேகமாகச் சுரண்ட வேண்டாம்; அவ்வாறு செய்தால் ஸ்பார்க் இயங்குதளம் சேதமடைய வாய்ப்புள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;2. லைட்டர் பட்டனைச் சரிபார்க்கவும்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;பட்டன் மிகவும் இறுக்கமாக இருந்தாலோ அல்லது அழுத்திய பிறகு மேலே வரவில்லை என்றாலோ, அதில் தூசி அல்லது ஈரப்பதம் சேர்ந்திருக்கலாம். பட்டனை அதிக அழுத்தம் கொடுத்து அழுத்தாமல், வெளிப்பகுதியை மட்டும் சுத்தப்படுத்திப் பாருங்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;3. லைட்டரில் ஈரப்பதம் உள்ளதா?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;சமையலறையில் ஏற்படும் நீராவி, தண்ணீர் துளிகள் அல்லது எண்ணெய் பிசுக்கினால் லைட்டரில் ஈரப்பதம் சேரக்கூடும். ஒருவேளை ஈரமாக இருந்தால், அதனை நன்கு காற்றோட்டமான இடத்தில் வைத்து இயற்கையாக உலர விடுங்கள். அவசரமாக உலர வைக்க ஹேர் டிரையர் அல்லது அடுப்பின் சூடு போன்றவற்றை உபயோகிக்க வேண்டாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;4. கீழே விழுந்து சேதமடைந்துள்ளதா?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;லைட்டர் கீழே விழுந்தால், ஸ்பார்க் வரும் பகுதி சேதமடையலாம் அல்லது உள்ளிருக்கும் பாகங்கள் தளர்வடையக் கூடும். வெளிப்புறத்தில் விரிசல் அல்லது உடைந்தது போல் தெரிந்தால், அதனைப் பயன்படுத்தாமல் புதியது வாங்குவதே பாதுகாப்பானது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எல்லா கேஸ் லைட்டர்களின் அமைப்பும் ஒரே மாதிரியாக இருக்காது. சில மாடல்களில் ஃப்ளின்ட் போன்ற பாகங்கள் இருக்கும். அதனை எவ்வாறு மாற்ற வேண்டும் என்ற தயாரிப்பாளரின் குறிப்புகள் தெரியாமல், லைட்டரைப் பிரித்து பழுதுபார்க்க முயற்சி செய்யாதீர்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;6. கேஸ் வாசனை வந்தால் எச்சரிக்கை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;லைட்டரிலிருந்து கேஸ் வாசனை வந்தாலோ அல்லது எரிபொருள் பகுதி சேதமடைந்தது போல் தெரிந்தாலோ, உடனே அதனைப் பயன்படுத்துவதை நிறுத்துங்கள். நெருப்பு மற்றும் கேஸ் ஸ்டவ் இல்லாத பாதுகாப்பான இடத்தில் அதனை அப்புறப்படுத்துங்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;புதிய லைட்டர் வாங்குவதற்கு முன் இதை கவனிங்க&zwnj;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;லைட்டரில் ஸ்பார்க் மிகவும் குறைவாக வந்தால், முதலில் அழுக்கு, ஈரப்பதம், பட்டனின் நிலை மற்றும் வெளிப்புற சேதங்களைச் சரிபாருங்கள். வெறும் அழுக்கு மட்டுமே பிரச்சனை என்றால், சுத்தம் செய்தாலே சரியாகிவிடும்.&lt;/p&gt;&lt;p&gt;ஆனால், லைட்டரில் விரிசல் இருந்தால், அதிகமாகத் துருப்பிடித்திருந்தால் அல்லது கேஸ் கசிவு ஏற்பட்டால், அதனைப் பழுதுபார்ப்பதை விடப் புதிய லைட்டர் வாங்குவதே புத்திசாலித்தனம்&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[life-style]]></category>
            <dc:creator>Rayar A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/gas-lighter-not-working-easy-repair-tips-and-buying-guide-gkigkx6"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Sugar Price : சர்க்கரை வாங்குறதுக்கும் கட்டுப்பாடா? இனி சர்க்கரை இல்லாமல் வாழப் பழகணும் போல!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/india/sugar-price-rises-is-sugar-becoming-expensive-9c2vvw8</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/india/sugar-price-rises-is-sugar-becoming-expensive-9c2vvw8</guid>
            <pubDate>Thu, 27 Aug 2026 13:47:51 +0530</pubDate>
            <description><![CDATA[Sugar Price : சர்க்கரை விலை உயர்ந்து வரும் நிலையில் ஸெப்டோ, ப்ளிங்கிட், இன்ஸ்டாமார்ட் உள்ளிட்ட சில ஆன்லைன் தளங்களில் சர்க்கரை வாங்குவதற்கும் அளவு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பின்னால் என்ன காரணம்? உண்மையிலேயே சர்க்கரை தட்டுப்பாடா?]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m114akxpyxa3nt9nzvp6baha,imgname-sugar-price-rises-is-sugar-becoming-expensive-1787818233782.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Sugar Price : சர்க்கரை விலை உயர்ந்து வரும் நிலையில் ஸெப்டோ, ப்ளிங்கிட், இன்ஸ்டாமார்ட் உள்ளிட்ட சில ஆன்லைன் தளங்களில் சர்க்கரை வாங்குவதற்கும் அளவு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பின்னால் என்ன காரணம்? உண்மையிலேயே சர்க்கரை தட்டுப்பாடா?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;காய்கறி, பால், மளிகைப் பொருட்கள் என வீட்டுக்குத் தேவையான எல்லாவற்றையும் சில நிமிடங்களில் வீட்டுக்கே கொண்டு வந்து கொடுக்கும் உடனடி மளிகைப் பொருள் விநியோக செயலிகளில் இப்போது சர்க்கரையை மட்டும் தேவையான அளவு வாங்க முடியாத நிலை சில இடங்களில் ஏற்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;ஸெப்டோ, ப்ளிங்கிட், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் உள்ளிட்ட தளங்களில் குறிப்பிட்ட சர்க்கரைப் பொருட்களுக்கு எத்தனை பொட்டலங்கள் வாங்கலாம் என்பதற்கு வரம்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த வரம்பு எந்தப் பொருளை வாங்குகிறோம், எந்தத் தளத்தைப் பயன்படுத்துகிறோம், எந்தப் பகுதியில் இருக்கிறோம் என்பதைப் பொறுத்து மாறுபடுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;இதனால், &ldquo;சர்க்கரை வாங்குவதற்கே இப்படி ஒரு கட்டுப்பாடா?&rdquo; என்ற கேள்வி இப்போது பலருக்கும் எழுந்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;I Nobody OTT : ஒரு வங்கிக் கொள்ளை.. ஒரே இரவில் குற்றவாளியான சாதாரண மனிதன்! மிரட்டலான த்ரில்லர்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தக் கட்டுப்பாடு எல்லா சர்க்கரைப் பொருட்களுக்கும் ஒரே மாதிரி இல்லை. உதாரணமாக, சில ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் பட்டியல்களில் 1 கிலோ சர்க்கரைப் பொட்டலங்களை குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மட்டுமே ஆர்டர் செய்ய முடிகிறது.&lt;/p&gt;&lt;p&gt;ப்ளிங்கிட் செயலியில் சில பொருட்களுக்கு 2 கிலோ அல்லது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பொட்டலங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. ஸெப்டோவிலும் சில சர்க்கரைப் பொருட்களுக்கு வாங்கும் அளவுக்கு வரம்பு காட்டப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;நேரடியாகக் கடைகளுக்குச் சென்றாலும் சில இடங்களில் இதே நிலைதான். டிமார்ட், ரிலையன்ஸ் போன்ற பெரிய விற்பனைக் கடைகளில் சில கிளைகளில் ஒரு வாடிக்கையாளருக்கு சுமார் 2 முதல் 3 கிலோ வரை மட்டுமே வாங்க அனுமதிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;அதாவது, இது &ldquo;சர்க்கரை விற்கக்கூடாது&rdquo; என்ற தடை இல்லை; ஒரே நேரத்தில் அதிகமாக வாங்குவதற்கான கட்டுப்பாடு.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Family Series : குடும்பத்தோடு பார்த்து ரசிக்க வேண்டிய 5 அழகான வெப் சீரிஸ்கள்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதற்கு ஒரே ஒரு காரணம் கிடையாது. எதிர்பார்த்த அளவுக்கு சர்க்கரை உற்பத்தி இல்லாதது, பண்டிகைக் காலத்தில் அதிகரிக்கும் தேவை, கரும்புப் பயிரை பாதித்த நோய்கள் மற்றும் அதிக மழையால் ஏற்பட்ட நீர்த்தேக்கம், சர்வதேச அளவில் சர்க்கரை விநியோகத்தில் ஏற்பட்ட இறுக்கம் ஆகியவை விலை உயர்வுக்கு காரணங்களாகக் கூறப்படுகின்றன.&lt;/p&gt;&lt;p&gt;மேலும், ஊகத்தின் அடிப்படையில் அதிகமாக வாங்குவதும், சர்க்கரையைப் பதுக்கி வைப்பதும் விலை உயர்வுக்கு காரணமாக இருக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;இதனால், பண்டிகைக் காலத்துக்கு முன்பே மக்கள் அதிக அளவில் சர்க்கரையை வாங்கி வைத்துக்கொள்ளத் தொடங்கினால், சந்தையில் தற்காலிக அழுத்தம் மேலும் அதிகரிக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;சமீபத்திய அரசு தரவின்படி, ஆகஸ்ட் 26 அன்று இந்தியாவின் சராசரி சில்லறை சர்க்கரை விலை கிலோ ரூ.65.05 ஆக உயர்ந்தது. அதற்கு முந்தைய நாள் இது ரூ.63.97 ஆக இருந்தது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Lost Luggage : ரயிலில் பை தொலைந்துபோனால் உடனே இதைச் செய்யுங்கள்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதுதான் இப்போது தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயம்.&lt;/p&gt;&lt;p&gt;இந்தியாவில் சர்க்கரையே இல்லை என்ற நிலை தற்போது இல்லை. பண்டிகைக் காலத்தில் அதிகரிக்கும் தேவையைச் சமாளிக்க போதுமான சர்க்கரை கையிருப்பு இருப்பதாகவும், தற்போதைய விலை ஏற்றத்தில் ஊகத்தின் அடிப்படையிலான அதிகப்படியான கொள்முதல் முக்கியப் பங்கு வகிப்பதாகவும் சர்க்கரைத் துறை சார்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;&lt;p&gt;அதே நேரத்தில், சந்தையில் திடீரென அதிகமாக வாங்கிக் குவிப்பதைக் கட்டுப்படுத்துவதற்காக சில ஆன்லைன் விநியோகத் தளங்களும் கடைகளும் வாங்கும் அளவுக்கு வரம்புகளை வைத்திருக்கின்றன.&lt;/p&gt;&lt;p&gt;எனவே, &ldquo;சர்க்கரை தட்டுப்பாடு வந்துவிட்டது; உடனே வாங்கி வீட்டில் பதுக்கி வையுங்கள்&rdquo; என்ற முடிவுக்கு வருவது சரியல்ல.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Hindu Wedding : தாலிக்கு 3 முடிச்சு போடுறது ஏன்? இதுக்கு பின்னாடி இவ்ளோ அர்த்தம் இருக்கா?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சர்க்கரை விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு ஏற்கனவே பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 10 லட்சம் டன் மூலச் சர்க்கரையை வரியில்லாமல் இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;மேலும், சர்க்கரை விற்பனையாளர்களுக்கு 400 டன் கையிருப்பு வரம்பு விதிக்கப்பட்டுள்ளது. பதுக்கலைத் தடுக்க சர்க்கரை ஆலைகளில் உள்ள கையிருப்புகளைச் சரிபார்க்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.&lt;/p&gt;&lt;p&gt;இதுமட்டுமின்றி, சுமார் 3 முதல் 3.5 லட்சம் டன் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை ஏற்கனவே இந்திய சுத்திகரிப்பாளர்களிடம் இருப்பதாகவும், அதை உள்நாட்டு சந்தைக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;இதனால் சந்தையில் சர்க்கரை கிடைப்பது அதிகரித்து, விலை அழுத்தம் குறைய வாய்ப்புள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;அதனால் இப்போதைக்கு &ldquo;சர்க்கரை இல்லாமல் வாழப் பழகணும்!&rdquo; என்ற அளவுக்கு நிலைமை இல்லை. ஆனால் பண்டிகைக் காலத்தில் விலையும், கிடைக்கும் அளவும் எப்படி மாறுகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டிய சூழல் இருக்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Nepal Flood : வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்.. கடைசி நேரத்தில் கைகொடுத்த மாமரக் கிளை!&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[india]]></category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/india/sugar-price-rises-is-sugar-becoming-expensive-9c2vvw8"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Morning Habits: காலை உணவுக்கு முன்பே ரத்தச் சர்க்கரையை அதிகரிக்கச் செய்யும் 5 காலை நேர தவறுகள்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/health/5-morning-habits-that-may-spike-blood-sugar-before-breakfast-f5glc0w</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/health/5-morning-habits-that-may-spike-blood-sugar-before-breakfast-f5glc0w</guid>
            <pubDate>Thu, 27 Aug 2026 13:46:46 +0530</pubDate>
            <description><![CDATA[காலை எழுந்தவுடன் நாம் செய்யும் சில பழக்கங்கள் ரத்தச் சர்க்கரை அளவில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். சர்க்கரை சேர்த்த பானங்கள், உடற்பயிற்சி இல்லாமை, தவறான காலை உணவு போதிய தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம் போன்றவற்றை தவிர்ப்பது உடல்நலத்திற்கு உதவியாக இருக்கும்]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m114710cgrxgrxkpfc0rhs67,imgname-raise-your-blood-sugar-before-breakfast--1--1787818116108.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;காலை எழுந்தவுடன் நாம் செய்யும் சில பழக்கங்கள் ரத்தச் சர்க்கரை அளவில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். சர்க்கரை சேர்த்த பானங்கள், உடற்பயிற்சி இல்லாமை, தவறான காலை உணவு போதிய தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம் போன்றவற்றை தவிர்ப்பது உடல்நலத்திற்கு உதவியாக இருக்கும்&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;காலை எழுந்தவுடன் அதிக சர்க்கரை சேர்த்த தேநீர் அல்லது காபி குடிப்பது சிலருக்கு ரத்தச் சர்க்கரை வேகமாக உயர வழிவகுக்கலாம். குறிப்பாக வெறும் வயிற்றில் அதிக இனிப்பு கொண்ட பானங்களை தொடர்ந்து அருந்துவது நல்ல பழக்கமாக இருக்காது.&lt;/p&gt;&lt;p&gt;தேநீர் அல்லது காபியில் சர்க்கரையின் அளவைக் குறைத்து, தனிப்பட்ட உடல்நிலைக்கு ஏற்ற மாற்றுகளைத் தேர்வு செய்வது சிறந்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நீண்ட நேர தூக்கத்திற்குப் பிறகு உடல் அசைவின்றி இருப்பது வழக்கமானதாக இருந்தாலும், எழுந்ததும் சிறிது நேரம் நடப்பது அல்லது லேசான உடற்பயிற்சி செய்வது உடலைச் சுறுசுறுப்பாக்க உதவும்.&lt;/p&gt;&lt;p&gt;காலை நேரத்தில் சில நிமிடங்கள் நடைப்பயிற்சி, stretching போன்ற எளிய இயக்கங்களைச் சேர்ப்பது தினசரி செயல்பாட்டை தொடங்குவதற்கு உதவியாக இருக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;காலை உணவைத் தேர்வு செய்வதும் முக்கியமானது. அதிக சர்க்கரை, சுத்திகரிக்கப்பட்ட மாவு அல்லது இனிப்பு உணவுகளை மட்டும் கொண்ட காலை உணவு ரத்தச் சர்க்கரையில் விரைவான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.&lt;/p&gt;&lt;p&gt;அதற்கு பதிலாக நார்ச்சத்து, புரதம் மற்றும் ஊட்டச்சத்துகள் உள்ள சமநிலையான உணவைத் தேர்வு செய்வது நல்ல அணுகுமுறையாகும். காய்கறிகள், முழு தானியங்கள், பருப்பு வகைகள் போன்றவற்றை தேவைக்கேற்ப உணவில் சேர்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தூக்கத்தின் தரமும் ரத்தச் சர்க்கரை கட்டுப்பாட்டுடன் தொடர்புடையதாக இருக்கலாம். இரவில் தொடர்ந்து குறைவாகத் தூங்குவது அல்லது தூக்க நேரம் முறையாக இல்லாமல் இருப்பது உடலின் இயல்பான செயல்பாடுகளை பாதிக்கக்கூடும்.&lt;/p&gt;&lt;p&gt;எனவே, தினமும் சீரான நேரத்தில் தூங்கச் சென்று போதுமான ஓய்வைப் பெறுவது காலை நேர ஆரோக்கியத்திற்கும் முக்கியம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;காலை எழுந்தவுடன் வேலை, குடும்பப் பொறுப்புகள் அல்லது பிற காரணங்களால் அதிக மன அழுத்தத்தை உணர்வதும் உடலில் சில ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்தலாம். இதனால் சிலரிடம் ரத்தச் சர்க்கரை அளவில் தாக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;எழுந்தவுடன் சில நிமிடங்கள் அமைதியாக இருப்பது, ஆழ்ந்த சுவாசப் பயிற்சி செய்வது அல்லது சிறிய நடைப்பயிற்சி மேற்கொள்வது மனதை அமைதிப்படுத்த உதவலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[health]]></category>
            <dc:creator>Priya Velan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/health/5-morning-habits-that-may-spike-blood-sugar-before-breakfast-f5glc0w"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Malavya Raj Yoga : சுக்கிரன் பெயர்ச்சி + மாளவ்ய ராஜ யோகம் தரும் அடிபொலி பலன்களை அனுபவிக்கப்போகும் 7 ராசிகள்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/venus-transit-and-malavya-raj-yoga-makes-these-7-zodiac-signs-enter-a-golden-phase-in-september-tsmmqsz</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/venus-transit-and-malavya-raj-yoga-makes-these-7-zodiac-signs-enter-a-golden-phase-in-september-tsmmqsz</guid>
            <pubDate>Thu, 27 Aug 2026 13:18:35 +0530</pubDate>
            <description><![CDATA[Venus Transit : செப்டம்பர் மாதம் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளன. செப்டம்பர் 2 ஆம் தேதி, சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாம் ராசியில் பிரவேசிப்பார். இது மாளவ்ய ராஜ யோகத்தை உருவாக்கும்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m112dwv6hvzjq43yx95sjkrh,imgname-astrology--21--1787816244070.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Venus Transit : செப்டம்பர் மாதம் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளன. செப்டம்பர் 2 ஆம் தேதி, சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாம் ராசியில் பிரவேசிப்பார். இது மாளவ்ய ராஜ யோகத்தை உருவாக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜோதிடத்தில் சுக்கிரன் என்பது செல்வம், வசதி, காதல், கலை, ஆடம்பரம், புகழ், மகிழ்ச்சி மற்றும் வாழ்க்கையின் வளத்தை குறிக்கும் முக்கிய கிரகமாகக் கருதப்படுகிறது. சுக்கிரன் தனது சொந்த ராசி, உச்ச ராசி அல்லது மூலத்திரிகோண ராசியின் கேந்திர ஸ்தானத்தில் அமரும்போது மாளவ்ய ராஜ யோகம் உருவாகும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;அந்த வகையில், 2026 செப்டம்பர் மாதம் சுக்கிரனின் பெயர்ச்சி முக்கியத்துவம் பெறுகிறது. செப்டம்பர் 2-ம் தேதி மதியம் 1.44 மணியளவில் சுக்கிரன் துலாம் ராசிக்குள் நுழைகிறார். துலாம் சுக்கிரனின் சொந்த ராசி என்பதால், இந்தப் பெயர்ச்சியால் மாளவ்ய ராஜ யோகம் உருவாகும் எனக் கூறப்படுகிறது. சுக்கிரன் நவம்பர் 6-ம் தேதி வரை துலாம் ராசியில் பயணிக்க உள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் ஒரே மாதிரியாக இருக்காது. குறிப்பாக கீழே குறிப்பிடப்படும் 7 ராசியினருக்கு பணவரவு, தொழில், வியாபாரம், உறவுகள் மற்றும் வாழ்க்கை வசதிகளில் சாதகமான மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Astrology: கோசார கிரகப் பெயர்ச்சி 2026.! வண்டி, வாகனம், பங்களா வாங்கும் யோகம் எந்தெந்த நட்சத்திரங்களுக்கு?!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சுக்கிரனின் இந்தப் பெயர்ச்சி கடக ராசியினருக்கு பொருளாதார ரீதியாக நல்ல திருப்பத்தை ஏற்படுத்தக்கூடும். வருமானத்தை அதிகரிக்க புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். ஏற்கனவே செய்த முதலீடுகள் மூலம் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதற்கான சூழலும் உருவாகலாம்.&lt;/p&gt;&lt;p&gt;வேலை செய்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் அல்லது முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் வரலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள், வாடிக்கையாளர்கள் அல்லது லாபகரமான வாய்ப்புகள் கிடைக்கலாம். இதன் மூலம் சேமிப்பு மற்றும் சொத்து தொடர்பான நிலையும் வலுப்பெற வாய்ப்புள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;துலாம் ராசியின் அதிபதியே சுக்கிரன் என்பதால், இந்தப் பெயர்ச்சி துலாம் ராசியினருக்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. மாளவ்ய ராஜ யோகத்தின் தாக்கத்தால் வாழ்க்கையில் முன்னேற்றம், கௌரவம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;வியாபாரத்தில் இருப்பவர்கள் புதிய தொடர்புகளை உருவாக்கி அதன் மூலம் பயன் பெறலாம். பணம் தொடர்பான திட்டங்கள் சாதகமாக அமையலாம். பணியிடத்தில் உங்களின் திறமைக்கு அங்கீகாரம் கிடைப்பதோடு, சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகளின் பாராட்டும் கிடைக்க வாய்ப்புள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணம் அல்லது வரவேண்டிய தொகை கிடைப்பதற்கான வாய்ப்புகளும் உருவாகலாம். இதனால் தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் கூடும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிம்ம ராசியினருக்கு சுக்கிரனின் பெயர்ச்சி நிதி மற்றும் தொழில் சார்ந்த விஷயங்களில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தலாம். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புகள் கிடைக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய திட்டங்கள், வாடிக்கையாளர்கள் அல்லது முக்கியமான ஒப்பந்தங்கள் மூலம் லாபம் கிடைக்கலாம். கடந்த காலத்தில் ஏற்பட்ட பண இழப்புகளை சரிசெய்வதற்கான வாய்ப்பும் உருவாகலாம்.&lt;/p&gt;&lt;p&gt;மேலும் சமூகத்தில் உங்கள் மதிப்பு, புகழ் மற்றும் கௌரவம் அதிகரிக்கக்கூடும். வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் வசதிகளுக்காக செலவு செய்யும் சூழலும் உருவாகலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மாளவ்ய ராஜ யோகம் கும்ப ராசியினரின் பொருளாதார நிலைக்கு சாதகமாக அமையலாம். வருமானத்தில் உயர்வு ஏற்படுவதோடு, தொழிலில் புதிய வளர்ச்சி வாய்ப்புகளும் கிடைக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் மற்றும் கூட்டாண்மை வாய்ப்புகள் கிடைக்கக்கூடும். சரியான நபர்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் எதிர்பார்த்ததை விட அதிக பலனைப் பெறலாம்.&lt;/p&gt;&lt;p&gt;முதலீடு தொடர்பான விஷயங்களிலும் சாதகமான சூழல் உருவாகலாம். இருப்பினும் பெரிய தொகையை முதலீடு செய்வதற்கு முன் அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேஷ ராசியினருக்கு சுக்கிரனின் பெயர்ச்சி தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றத்தைத் தரக்கூடியதாக இருக்கலாம். குறிப்பாக கூட்டாண்மை மூலம் செய்யப்படும் பணிகளில் நல்ல பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;தொழிலை விரிவுபடுத்த நினைப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். எதிர்பாராத வகையில் பணவரவு அல்லது லாபம் கிடைக்கும் சூழலும் உருவாகக்கூடும்.&lt;/p&gt;&lt;p&gt;திருமண வயதில் இருக்கும் மேஷ ராசியினருக்கு நல்ல வரன் அமையும் வாய்ப்பு அதிகரிக்கலாம். ஏற்கனவே திருமணமானவர்களுக்கு துணையுடனான புரிதலும் நெருக்கமும் மேம்பட வாய்ப்புள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கன்னி ராசியினருக்கு மாளவ்ய ராஜ யோகம் நிதி ரீதியாக பல்வேறு வாய்ப்புகளைத் திறக்கக்கூடும். பணவரவு அதிகரிப்பதற்கான புதிய வழிகள் உருவாகலாம். இதனால் பொருளாதார நிலை முன்பை விட மேம்பட வாய்ப்புள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்யும் சூழல் உருவாகலாம். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம். ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்கு பதவி அல்லது பொறுப்பு உயர்வு தொடர்பான நல்ல செய்திகள் கிடைக்கக்கூடும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மகர ராசியினருக்கும் சுக்கிரனின் இந்தப் பெயர்ச்சி பல வகைகளில் சாதகமாக அமையலாம். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைப்பதோடு, உங்கள் திறமைக்கான அங்கீகாரமும் கிடைக்க வாய்ப்புள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;மேலதிகாரிகளின் ஆதரவு கிடைப்பதால் முக்கியமான பணிகளை எளிதாக முடிக்க முடியும். தொழில் சார்ந்த புதிய வாய்ப்புகள் தேடி வரலாம். வேலை மாற்றத்தை எதிர்பார்ப்பவர்களுக்கும் நல்ல வாய்ப்பு கிடைக்கக்கூடும்.&lt;/p&gt;&lt;p&gt;மேலும், எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு நல்ல செய்தி இந்தக் காலகட்டத்தில் கிடைப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. சுக்கிரனின் அருளால் மகரம் ராசியினரின் வாழ்க்கையில் வசதி, நம்பிக்கை மற்றும் முன்னேற்றம் அதிகரிக்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[astrology]]></category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/venus-transit-and-malavya-raj-yoga-makes-these-7-zodiac-signs-enter-a-golden-phase-in-september-tsmmqsz"/>
        </item>
        <item>
            <title><![CDATA[FD vs SIP: 2026-ல் உங்கள் பணத்தை எங்கே போட்டால் அதிக லாபம்?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/fixed-deposit-vs-systematic-plan-2026-best-investment-plan-4i29yrz</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/fixed-deposit-vs-systematic-plan-2026-best-investment-plan-4i29yrz</guid>
            <pubDate>Thu, 27 Aug 2026 13:16:35 +0530</pubDate>
            <description><![CDATA[FD vs SIP: பணம் முதலீடு செய்ய நினைப்பவர்களுடைய முக்கிய கேள்வியே FD போடலாமா? இல்ல SIP தொடங்கலாமா? என்பதுதான். இதற்கு முதலீட்டு காலம், வருமானத் தேவைகள் மற்றும் ரிஸ்க் எடுக்கத் தயாரா ? என்பதுதான் சரியான தேர்வை நிர்ணயிக்கும்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m111dd8v6krqyed1f1c7qvgg,imgname-fd-1787815179546.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;FD vs SIP:&lt;/strong&gt; பணம் முதலீடு செய்ய நினைப்பவர்களுடைய முக்கிய கேள்வியே FD போடலாமா? இல்ல SIP தொடங்கலாமா? என்பதுதான். இதற்கு முதலீட்டு காலம், வருமானத் தேவைகள் மற்றும் ரிஸ்க் எடுக்கத் தயாரா ? என்பதுதான் சரியான தேர்வை நிர்ணயிக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;FD (Fixed Deposit): &lt;/strong&gt;உங்களிடம் இருக்கும் தொகையை வங்கியில் குறிப்பிட்ட காலத்திற்கு முதலீடு செய்வது. இதில் முக்கியமான விஷயம், எவ்வளவு வட்டி கிடைக்கும் என்பது உங்களுக்கு முன்கூட்டியே தெரியும். அதாவது அந்த காலத்திற்கான வட்டி விகிதம் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டிருக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;SIP (Systematic Investment Plan):&lt;/strong&gt; SIP என்பது மியூச்சுவல் ஃபண்டில் (Mutual Fund) ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை தொடர்ந்து முதலீடு செய்யும் முறை. SIP-யில் கிடைக்கும் வருமானம் உறுதியானது அல்ல. அது முதலீடு செய்யப்படும் மியூச்சுவல் ஃபண்டின் செயல்பாட்டைப் பொறுத்து மாறுபடும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;FD: &lt;/strong&gt;முதலீடு செய்யும் போது வட்டி விகிதம் தெரியும். சமீபத்தில் RBI வெளியிட்ட தரவுகளின்படி, 2026 ஜூலை இறுதியில் ஒரு ஆண்டுக்கு மேற்பட்ட டெர்ம் டெபாசிட்களின் வட்டி விகிதம் சுமார் 6.00% முதல் 6.75% வரை இருந்தது. ஆனால் வட்டி விகிதத்தை ஒவ்வொரு வங்கியும் நிர்ணயிக்கிறது. எனவே வங்கி மற்றும் கால அவகாசத்தைப் பொறுத்து இது மாறுபடும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;SIP: &lt;/strong&gt;இதில் நிரந்தர வட்டி கிடையாது. நீங்கள் தேர்வு செய்யும் மியூச்சுவல் ஃபண்டின் NAV (Net Asset Value) மற்றும் முதலீடுகளின் செயல்திறனைப் பொறுத்து லாபமும், நஷ்டமும் ஏற்படும். இதில் கடந்த காலத்தில் பெற்ற வருமானம் எதிர்கால வருமானத்திற்கான உத்தரவாதம் அல்ல என்று SEBI விதிமுறைகளும் தெளிவுபடுத்துகின்றது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;FD:&lt;/strong&gt; FD குறைந்த ரிஸ்க் முதலீடு. தகுதியான வங்கிகளில் DICGC மூலம், அசல் + வட்டி சேர்த்து ரூபாய் 5 லட்சம் வரை காப்பீடு உள்ளது. 5 லட்சத்துக்கு மேல் உள்ள தொகைக்கு DICGC-யின் இதே காப்பீட்டு பாதுகாப்பு கிடையாது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;SIP:&lt;/strong&gt; SIP-யில் வருமானம் உத்தரவாதம் இல்லை. சந்தை நிலவரத்தைப் பொறுத்து லாபம் அல்லது நஷ்டம் ஏற்படலாம்.சில சமயங்களில் முதலீடு செய்த பணத்தில் ஒரு பகுதி அல்லது முழுத் தொகையையும் இழக்கும் அபாயமும் உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;ol&gt; &lt;li&gt;ஓய்வு பெற்றவர்கள் அல்லது 1&ndash;3 ஆண்டுகளில் பணம் தேவைப்படுபவர்கள்.&lt;/li&gt; &lt;li&gt;சந்தை ஏற்ற, இறக்கத்தை சமாளிக்க விருப்பமில்லாதவர்கள்.&lt;/li&gt; &lt;li&gt;குறைந்த ரிஸ்க் எடுக்க விரும்புபவர்கள்.&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;img&gt;&lt;ol&gt; &lt;li&gt;5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் முதலீடு செய்யத் தயாராக இருப்பவர்கள்.&lt;/li&gt; &lt;li&gt;மாதந்தோறும் சிறிய தொகையிலிருந்து முதலீடு செய்ய விரும்புபவர்கள்.&lt;/li&gt; &lt;li&gt;சந்தை ஏற்ற, இறக்கத்தை ஏற்கத் தயாராக இருப்பவர்கள்.&lt;/li&gt; &lt;li&gt;மியூச்சுவல் ஃபண்டின் ரிஸ்க் அளவைப் புரிந்துகொண்டு முதலீடு செய்பவர்கள்.&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;img&gt;&lt;p&gt;FD அல்லது SIP &ndash; இதில் ஒன்று மட்டுமே சிறந்தது என்று கூற முடியாது. பாதுகாப்பு மற்றும் உறுதியான வருமானத்திற்கு FD ஐயும், நீண்டகால முதலீட்டிற்கு SIP பொருத்தமாக இருக்கலாம். உங்களுக்கு பணம் எப்போது தேவை, முதலீட்டின் இலக்கு என்ன என்பதை பொறுத்து 2026-ல் FD அல்லது SIP-யா என்று சரியான ஒன்றை தேர்வு செய்யுங்கள்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[business]]></category>
            <dc:creator>Vishnupriya</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/fixed-deposit-vs-systematic-plan-2026-best-investment-plan-4i29yrz"/>
        </item>
        <item>
            <title><![CDATA[I Nobody OTT : ஒரு வங்கிக் கொள்ளை.. ஒரே இரவில் குற்றவாளியான சாதாரண மனிதன்! மிரட்டலான த்ரில்லர்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/i-nobody-ott-review-bank-robbery-turns-ordinary-man-into-criminal-r40b5xg</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/i-nobody-ott-review-bank-robbery-turns-ordinary-man-into-criminal-r40b5xg</guid>
            <pubDate>Thu, 27 Aug 2026 13:15:07 +0530</pubDate>
            <description><![CDATA[I Nobody : ஒரு சாதாரண அரசு ஊழியர் எதிர்பாராத விதமாக வங்கிக் கொள்ளை வழக்கில் சிக்குகிறார். போலீஸ், மீடியா, சமூகத்தின் சந்தேகம் என நாலாபுறமும் நெருக்கடி வர, குடும்பத்தைக் காப்பாற்ற அவர் என்ன செய்கிறார் என்பதுதான் இந்த வித்தியாசமான த்ரில்லரின் மையம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kx4wc0trvv1n3g4tg46zg2j4,imgname-i-nobody-movie-5-1783649141592.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;I Nobody : ஒரு சாதாரண அரசு ஊழியர் எதிர்பாராத விதமாக வங்கிக் கொள்ளை வழக்கில் சிக்குகிறார். போலீஸ், மீடியா, சமூகத்தின் சந்தேகம் என நாலாபுறமும் நெருக்கடி வர, குடும்பத்தைக் காப்பாற்ற அவர் என்ன செய்கிறார் என்பதுதான் இந்த வித்தியாசமான த்ரில்லரின் மையம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ராஜீவன் ஒரு சாதாரண அரசு ஊழியர். மனைவி, குழந்தைகள் என பெரிய ஆசைகள் இல்லாமல் தனது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் ஒரு மிடில் கிளாஸ் மனிதர். ஆனால், எதிர்பாராத ஒரு சம்பவம் அவரது வாழ்க்கையையே புரட்டிப் போடுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;ஒரு வங்கிக் கொள்ளை சம்பவத்தில் எதிர்பாராத விதமாக சிக்கிக் கொள்ளும் ராஜீவன், அந்தச் சம்பவத்துக்குப் பிறகு போலீசாரின் சந்தேகப் பார்வைக்குள் வருகிறார். அங்கிருந்து கதை சாதாரண வங்கிக் கொள்ளை கதையாக இல்லாமல், &ldquo;ஒரு சாதாரண மனிதனை இந்தச் சமூகம் எவ்வளவு எளிதாக குற்றவாளியாக்கிவிடுகிறது?&rdquo; என்ற கேள்வியை நோக்கி நகர்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Nepal Flood : வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்.. கடைசி நேரத்தில் கைகொடுத்த மாமரக் கிளை!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தப் படத்தின் சுவாரஸ்யமே இங்குதான் தொடங்குகிறது. கொள்ளையைப் பார்த்தவன் என்ற காரணத்தால் ராஜீவன் போலீசின் கவனத்துக்கு வருகிறார். ஆனால், விசாரணை முன்னேற முன்னேற அவர் உண்மையிலேயே ஒரு அப்பாவியா? அல்லது இந்தக் கதையில் இன்னும் ஏதாவது இருக்கிறதா? என்ற சந்தேகம் பார்வையாளர்களுக்கும் ஏற்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;இயக்குநர் நிசாம் பஷீர், கொள்ளை எப்படி நடந்தது என்பதை மட்டும் சொல்லாமல், அந்தச் சம்பவத்துக்குப் பிறகு ராஜீவனின் மனநிலை எப்படி மாறுகிறது என்பதிலும் கவனம் செலுத்துகிறார். முதல் பாதியில் நான்-லீனியர் கதை சொல்லல் உத்தி பயன்படுத்தி, தகவல்களை கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்துவது ஆர்வத்தை தூண்டும் பாணியில் இருக்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Family Series : குடும்பத்தோடு பார்த்து ரசிக்க வேண்டிய 5 அழகான வெப் சீரிஸ்கள்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ராஜீவனின் பிரச்சனை போலீஸ் விசாரணையுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. ஒரு கட்டத்தில் மீடியா விசாரணை, பொதுமக்களின் பார்வை, அரசியல் தலையீடு என பல விஷயங்கள் அவரது வாழ்க்கைக்குள் நுழைகின்றன.&lt;/p&gt;&lt;p&gt;அதிலும், இந்தப் படம் சொல்ல முயற்சிக்கும் முக்கியமான விஷயம் &mdash; சமூகத்தில் அதிகாரம் உள்ளவர்கள் ஒரு பக்கம் இருக்க, சாதாரண மனிதன் தனது தரப்பை நிரூபிக்கவே போராட வேண்டிய நிலை உருவாகிறது என்பதுதான். இதனால் ஒரு வங்கிக் கொள்ளை த்ரில்லர் மெதுவாக சமூக விமர்சனமாகவும் மாறுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Lost Luggage : ரயிலில் பை தொலைந்துபோனால் உடனே இதைச் செய்யுங்கள்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தப் படத்தில் ப்ரித்விராஜ், வழக்கமான ஹீரோ இமேஜை விட்டு விலகி, யாருடைய கவனத்திலும் படாத ஒரு சாதாரண மனிதராக நடிக்க முயன்றிருக்கிறார். எழுத்தாளர் சமீர் அப்துல், ப்ரித்விராஜின் ஸ்டார் இமேஜை மறந்து இந்தக் கதாபாத்திரத்தில் அவரைப் பொருத்துவது ஒரு சவாலாக இருந்ததாகக் கூறியுள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;பார்வதியும் வெறும் கதாநாயகியாக வந்து போகாமல், ராஜீவனின் மனைவி மீரா என்ற கதாபாத்திரத்தில் முக்கியமான இடத்தைப் பிடிக்கிறார். ராஜீவனின் செயல்கள் குடும்பத்தையும் குழந்தைகளையும் பாதிக்கும்போது, அவரை எதிர்த்து கேள்வி கேட்கும் அளவுக்கு மீராவுக்கும் தனித்த குரல் கொடுக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Hindu Wedding : தாலிக்கு 3 முடிச்சு போடுறது ஏன்? இதுக்கு பின்னாடி இவ்ளோ அர்த்தம் இருக்கா?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;I, Nobody ஜூலை 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், தற்போது ஜியோ ஹாட்ஸ்டாரில் ரிலீசாகியுள்ளது. அதனால் திரையரங்கில் தவறவிட்டவர்கள் இப்போது வீட்டிலிருந்தே இந்த மலையாள த்ரில்லரை முயற்சி செய்யலாம்.&lt;/p&gt;&lt;p&gt;இந்தப் படத்துக்கு திரையரங்க வெளியீட்டின்போது கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. குறிப்பாக முதல் பாதியின் விறுவிறுப்பு, சண்டைக் காட்சிகள், கேமரா, இசை மற்றும் ப்ரித்விராஜ்&ndash;பார்வதி நடிப்பு ஆகியவை பாராட்டப்பட்டன. அதே நேரத்தில், இரண்டாம் பாதியில் வேகம் குறைவதாகவும், சில சமூக அரசியல் கருத்துகள் அதிகமாக நீளுவதாகவும் விமர்சனங்கள் வந்தன.&lt;/p&gt;&lt;p&gt;ஆனால் மலையாள மிஸ்ட்ரி-த்ரில்லர், மரபான கதை சொல்லல் போன்றவற்றை விரும்புபவர்களுக்கு OTT-ல் ஒரு வாய்ப்பு கொடுக்கக்கூடிய படம் இது. குறிப்பாக கதையின் மையக் கேள்வி &mdash; &ldquo;ஒரு சாதாரண மனிதனை எல்லோரும் குற்றவாளி என்று நம்பத் தொடங்கினால், அவன் எப்படி தன்னை நிரூபிப்பான்?&rdquo; &mdash; தான் இந்தப் படத்தை சுவாரஸ்யமாக்குகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Mystery Movies : யாரும் அதிகம் பேசாத இந்த 5 படங்களின் மர்மம் கடைசி வரை விடாது!&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[cinema]]></category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/i-nobody-ott-review-bank-robbery-turns-ordinary-man-into-criminal-r40b5xg"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Gold Price : தங்கம் விலை திடீர் சரிவு! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/gold-price-falls-how-much-is-one-sovereign-4hyggvl</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/gold-price-falls-how-much-is-one-sovereign-4hyggvl</guid>
            <pubDate>Thu, 27 Aug 2026 12:51:36 +0530</pubDate>
            <description><![CDATA[Gold Price : நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு இன்று சற்று நிம்மதி! சென்னையில் 22 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.70 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,19,520 ஆக விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01krwtqcvx79vd7m3h1gwb4cee,imgname-chatgpt-image-may-18--2026--11-28-53-am-1779084014461.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Gold Price : நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு இன்று சற்று நிம்மதி! சென்னையில் 22 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.70 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,19,520 ஆக விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தங்கம் வாங்கலாம் என்று காத்திருப்பவர்களுக்கு இன்று ஒரு சின்ன நிம்மதி செய்தி! சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;ஆகஸ்ட் 27-ம் தேதி, ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.14,940 ஆக உள்ளது. ஒரு சவரன் (8 கிராம்) தங்கத்தின் விலை ரூ.1,19,520 ஆக விற்பனையாகிறது. நேற்று ஒரு கிராம் ரூ.15,010 ஆகவும், ஒரு சவரன் ரூ.1,20,080 ஆகவும் இருந்தது. அதாவது, ஒரே நாளில் ஒரு கிராமுக்கு ரூ.70, ஒரு சவரனுக்கு ரூ.560 குறைந்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Nepal Flood : வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்.. கடைசி நேரத்தில் கைகொடுத்த மாமரக் கிளை!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நேற்று ரூ.1,20,080-க்கு விற்பனையான ஒரு சவரன் 22 காரட் தங்கம், இன்று ரூ.1,19,520 ஆக குறைந்துள்ளது. நகை வாங்குபவர்களுக்கு இந்த ரூ.560 குறைவு சிறியதாகத் தெரிந்தாலும், அதிக எடையில் நகை வாங்கும்போது வித்தியாசம் அதிகரிக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;உதாரணமாக, 2 சவரன் வாங்கினால் தங்கத்தின் அடிப்படை விலையில் மட்டும் ரூ.1,120 வித்தியாசம் இருக்கும். ஆனால் நகைக்கடையில் செலுத்தும் இறுதி தொகை தங்கத்தின் விலை மட்டும் அல்ல; செய்கூலி, GST உள்ளிட்ட பிற கட்டணங்களும் சேரும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Nepal Flood : வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைகள்.. உயிரை காப்பாற்ற நடந்த நெஞ்சை பதற வைக்கும் மீட்பு!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தங்கம் விலை குறைந்தாலும், சென்னையில் வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை.&lt;/p&gt;&lt;p&gt;ஒரு கிராம் வெள்ளி ரூ.265-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,65,000-க்கும் விற்பனையாகிறது. ஆகஸ்ட் 26-ம் தேதியும் இதே விலையில்தான் வெள்ளி விற்பனையானது.&lt;/p&gt;&lt;p&gt;அதனால் இன்று தங்கம் வாங்க நினைப்பவர்களுக்கு விலை குறைந்திருப்பது சாதகமான செய்தியாக இருந்தாலும், வெள்ளி வாங்க நினைப்பவர்களுக்கு நேற்றைய விலையே இன்றும் தொடர்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Family Series : குடும்பத்தோடு பார்த்து ரசிக்க வேண்டிய 5 அழகான வெப் சீரிஸ்கள்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒரு நாள் விலை குறைந்துவிட்டதால் தங்கம் மலிவாகிவிட்டது என்று நினைத்துவிடக்கூடாது. கடந்த ஆண்டு இதே ஆகஸ்ட் 27-ம் தேதி சென்னையில் ஒரு சவரன் 22 காரட் தங்கம் ரூ.75,120 ஆக இருந்தது. இன்று அது ரூ.1,19,520 ஆக உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;அதாவது, ஓராண்டில் ஒரு சவரனுக்கு ரூ.45,400, சுமார் 59.10% உயர்வு ஏற்பட்டுள்ளது. எனவே இன்றைய ரூ.560 சரிவு, கடந்த ஓராண்டில் ஏற்பட்ட மிகப்பெரிய விலை உயர்வுடன் ஒப்பிடும்போது ஒரு சிறிய தினசரி மாற்றம்தான்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Lost Luggage : ரயிலில் பை தொலைந்துபோனால் உடனே இதைச் செய்யுங்கள்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்று சென்னையில் தங்கத்தின் விலை குறைந்திருப்பது நகை வாங்குபவர்களுக்கு ஓரளவு சாதகமான செய்திதான். ஆனால் &ldquo;இன்றே வாங்கினால் பெரிய லாபம்&rdquo; என்று முடிவு செய்வது சரியல்ல. தங்கத்தின் விலை தினமும் சர்வதேச சந்தை, ரூபாய் மதிப்பு, வட்டி விகித எதிர்பார்ப்புகள் மற்றும் முதலீட்டாளர்களின் தேவை உள்ளிட்ட பல காரணிகளால் மாறக்கூடும்.&lt;/p&gt;&lt;p&gt;மேலும், இன்று காலை MCX-ல் தங்க futures விலை உயர்ந்திருந்தது. அதனால் சர்வதேச/MCX சந்தை நகர்வும், சென்னையின் நகைக்கடை retail rate-ம் ஒரே மாதிரியாக இருக்க வேண்டிய அவசியமில்லை.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Train Ticket : தட்கல் டிக்கெட் கிடைக்கலையா? கடைசி நேரத்துல கன்ஃபார்ம் டிக்கெட் வாங்க இந்த ட்ரிக் ஃபாலோ பண்ணுங்க!&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[business]]></category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/gold-price-falls-how-much-is-one-sovereign-4hyggvl"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Zodiac Sign Gods உங்க ராசிக்கு எந்த தெய்வத்தோட அருள் அதிகமாக இருக்கும் தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/zodiac-signs-deity-worship-guide-as-per-astrology-in-tamil-lolveh8</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/zodiac-signs-deity-worship-guide-as-per-astrology-in-tamil-lolveh8</guid>
            <pubDate>Thu, 27 Aug 2026 12:30:59 +0530</pubDate>
            <description><![CDATA[ஜாதகத்தில் ஆட்சி பெற்ற கிரகத்திற்குரிய அதிபதி தெய்வத்தின் அருள் எப்போதும் உங்களுக்கு உண்டு. நீங்கள் வணங்காவிட்டாலும் அத்தெய்வம் உங்களை வழிநடத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. உங்கள் ஆட்சிக் கிரக தெய்வம் எது என அறிந்து அருள் பெறுங்கள்!]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m10xb4zk3p1zydpabb2mmdnc,imgname-zodiac-wheel-1787810911219.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஜாதகத்தில் ஆட்சி பெற்ற கிரகத்திற்குரிய அதிபதி தெய்வத்தின் அருள் எப்போதும் உங்களுக்கு உண்டு. நீங்கள் வணங்காவிட்டாலும் அத்தெய்வம் உங்களை வழிநடத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. உங்கள் ஆட்சிக் கிரக தெய்வம் எது என அறிந்து அருள் பெறுங்கள்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வாழ்க்கையில் தடைகள் நீங்கி, எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெற ஒவ்வொரு ராசியினருக்கும் ஏற்ற உபாசனைத் தெய்வ வழிபாடு மிகவும் இன்றியமையாதது. ஜோதிட சாஸ்திரப்படி பன்னிரண்டு ராசிகளுக்கும் குறிப்பிட்ட கிரக அதிபதிகளும், அந்த கிரகங்களின் ஆற்றலை வழிநடத்தும் அதிதேவதைகளும் உள்ளனர். உங்கள் பிறந்த ராசிக்கேற்ற தெய்வத்தை உணர்ந்து வழிபடும் போது, வாழ்க்கையில் சுபிட்சமும் மன அமைதியும் தானாகவே தேடிவரும். 12 ராசியினரும் வழிபட வேண்டிய பிரத்யேக தெய்வங்களின் விவரங்கள் இதோ...&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;செவ்வாயின் ஆதிக்கம் கொண்ட மேஷ ராசியினருக்கு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி (முருகன்) அதிதேவதையாவார். செவ்வாய்க்கிழமைகளில் செவ்வரளி மலர் சாற்றி முருகனை வழிபடத் தடைகள் விலகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சுக்கிரனின் ஆதிக்கம் பெற்ற இவர்கள் ஸ்ரீ மகாலட்சுமியை வழிபட வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் நெய் தீபமேற்றி தாமரை மலரால் அர்ச்சிப்பது சிறப்பான பலன்களைத் தரும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;புதனின் ஆதிக்கம் கொண்ட மிதுன ராசியினருக்கு ஸ்ரீ மகாவிஷ்ணு அருள் பாலிக்கிறார். சனிக்கிழமைகளில் துளசி மாலை சாற்றி விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது அறிவையும் தெளிவையும் தரும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சந்திரனின் ஆதிக்கம் பெற்ற கடக ராசியினர் ஸ்ரீ பார்வதி தேவியை வழிபட வேண்டும். திங்கட்கிழமைகளில் அம்பிகைக்குப் பால் அபிஷேகம் செய்து வழிபட மன அமைதி கிடைக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சூரியனின் ஆதிக்கம் கொண்ட சிம்ம ராசியினரின் அதிதேவதை ஸ்ரீ சிவனாராவார். ஞாயிற்றுக்கிழமைகளில் வில்வ இலை கொண்டு சிவபெருமானை வழிபடுவது தலைமைப் பண்பையும் வெற்றியையும் தரும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;புதனின் ஆதிக்கம் கொண்ட கன்னி ராசியினருக்கு ஸ்ரீ ஹயக்ரீவர் மற்றும் பெருமாள் அருள் பரிபூரணமாக உண்டு. புதன்கிழமைகளில் ஏலக்காய் மாலை சாற்றி வழிபடக் கல்வி மற்றும் தொழிலில் வளர்ச்சி கூடும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சுக்கிரனின் ஆதிக்கம் பெற்ற துலாம் ராசியினர் ஸ்ரீ துர்க்கை அம்மனை வழிபட வேண்டும். ராகு காலத்தில் துர்க்கைக்கு எலுமிச்சை தீபமேற்றி வழிபடச் சங்கடங்கள் யாவும் தீரும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;செவ்வாயின் ஆதிக்கம் கொண்ட விருச்சிக ராசியினருக்கு ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி அதிதெய்வமாவார். பிரதோஷ வேளையில் நரசிம்மரை வழிபட எதிர்ப்புகளும் பயமும் விலகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குருவின் ஆதிக்கம் பெற்ற தனுசு ராசியினர் ஸ்ரீ தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும். வியாழக்கிழமைகளில் கொண்டைக்கடலை மாலை சாற்றி, மஞ்சள் நிற மலர்களால் வழிபடுவது சுப பலன்களைத் தரும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சனியின் ஆதிக்கம் கொண்ட மகர ராசியினருக்கு ஸ்ரீ ஆஞ்சநேயர் வழிபாடும் ஸ்ரீ சாஸ்தா (அய்யன்) வழிபாடும் மிகுந்த பலன் தரும். சனிக்கிழமைகளில் வெண்ணெய் காப்பு சாற்றி வழிபட ஆரோக்கியம் மேம்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சனியின் ஆதிக்கம் பெற்ற கும்ப ராசியினர் ஸ்ரீ பைரவரை வழிபட வேண்டும். தேய்பிறை அஷ்டமி நாளில் வடைமாலை சாற்றி பைரவரை வழிபடத் கடன்கள் மற்றும் தடைகள் நீங்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குருவின் ஆதிக்கம் கொண்ட மீன ராசியினருக்கு ஸ்ரீ ஆதிநாராயணன் மற்றும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி அருள் மிதமிஞ்சி இருக்கும். வியாழக்கிழமைகளில் துளசி அர்ச்சனை செய்வது வாழ்வில் சகல ஐஸ்வர்யங்களையும் தரும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குலதெய்வ வழிபாடு: உங்கள் ராசிக்கான அதிதேவதையை வழிபடுவதற்கு முன்பாக, மாதம் ஒருமுறை அல்லது விசேஷ நாட்களில் குலதெய்வ வழிபாட்டைத் தவறாமல் செய்வது அனைத்து தெய்வங்களின் அருளையும் தடையின்றிப் பெற்றுத் தரும்.&lt;/p&gt;&lt;p&gt;கிழமை மற்றும் ஹோரை: உங்கள் ராசி அதிபதிக்குரிய கிழமைகளில், அந்தந்த கிரக ஹோரையில் இறைவனை வணங்குவது வழிபாட்டின் பலனை இரட்டிப்பாக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;எளிய தானம்: அதிதேவதை வழிபாட்டிற்குப் பிறகு, உங்கள் ராசிக்குரிய தானியங்களை எளியோருக்குத் தானமாக வழங்குவது கிரக தோஷ நிவர்த்திக்கு மிகச் சிறந்த வழியாகும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[astrology]]></category>
            <dc:creator>Priya Velan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/zodiac-signs-deity-worship-guide-as-per-astrology-in-tamil-lolveh8"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Nepal Flood : வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்.. கடைசி நேரத்தில் கைகொடுத்த மாமரக் கிளை!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/world/man-swept-away-in-nepal-flood-saved-by-mango-tree-branch-e9t8s6k</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/world/man-swept-away-in-nepal-flood-saved-by-mango-tree-branch-e9t8s6k</guid>
            <pubDate>Thu, 27 Aug 2026 12:30:04 +0530</pubDate>
            <description><![CDATA[Nepal Flood : நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 24 வயது தொழிலாளி பிபேக் குமால், மாமரத்தில் சிக்கியதால் உயிர் தப்பினார். பின்னர் போலீசார் அவரை பத்திரமாக மீட்டனர்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m10z88jms8pbmkw3nq4kbprc,imgname-man-swept-away-in-nepal-flood-saved-by-mango-tree-branch-1787812913748.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Nepal Flood : நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 24 வயது தொழிலாளி பிபேக் குமால், மாமரத்தில் சிக்கியதால் உயிர் தப்பினார். பின்னர் போலீசார் அவரை பத்திரமாக மீட்டனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நேபாளத்தின் இமயமலைப் பகுதியில் ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட திடீர் வெள்ளம், பல பகுதிகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. தண்ணீர், சேறு மற்றும் பாறைகள் கலந்த வெள்ளப்பெருக்கு மிக வேகமாக வந்ததால், பலருக்கும் தப்பிச் செல்லக்கூட நேரம் கிடைக்கவில்லை.&lt;/p&gt;&lt;p&gt;இந்த நிலையில், பிதூர் பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்த 24 வயது நேபாள தொழிலாளி பிபேக் குமால், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிருக்கு போராடிய சம்பவம் தற்போது கவனம் பெற்றுள்ளது. கடைசி நேரத்தில் அவருக்கு கைகொடுத்தது ஒரு மாமரக் கிளை!&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Nepal Flood : வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைகள்.. உயிரை காப்பாற்ற நடந்த நெஞ்சை பதற வைக்கும் மீட்பு!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிபேக் குமால், புதிதாக கட்டப்பட்டு வந்த ஒரு வீட்டுக்கு வெளியே கழிப்பறைக்கான குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். சுமார் 1.5 மீட்டர் ஆழமுள்ள அந்தக் குழியில் அவர் வேலை செய்துகொண்டிருந்தபோது, மேலே இருந்த சக தொழிலாளர்கள் திடீரென சத்தம் கேட்டு அவரை வெளியே வந்து ஓடுமாறு எச்சரித்தனர்.&lt;/p&gt;&lt;p&gt;அவர் குழியில் இருந்து வெளியேறி ஓடத் தொடங்கிய சில நொடிகளில், தண்ணீர், சேறு மற்றும் பாறைகள் கலந்த மிகப்பெரிய வெள்ளம் அவரை அடித்துச் சென்றது. அந்த வெள்ளத்தின் வேகம், அருகிலிருந்த வீடுகள் மற்றும் பொருட்களையும் அடித்துச் செல்லும் அளவுக்கு இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;Devastating flash flood hits Nepal&rsquo;s Rasuwa district Lives lost. Hundreds still missing including Indian tourists and Kailash pilgrims.Bridges and roads washed away. Rescue teams working through the day.May Mahadev protect everyone. #Nepal pic.twitter.com/7PlVpr2zNo&lt;/p&gt;&lt;p&gt;&mdash; SUNITA (@SaffronSunita) August 26, 2026&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Family Series : குடும்பத்தோடு பார்த்து ரசிக்க வேண்டிய 5 அழகான வெப் சீரிஸ்கள்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பிபேக், சேறும் சகதியும் கலந்த நீரில் சிக்கித் தவித்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு மாமரத்தில் சிக்கிக்கொண்டார்.&lt;/p&gt;&lt;p&gt;அந்த மரத்தைப் பிடித்துக்கொண்டு அவர் உயிருடன் இருந்தார். வெள்ளம் அடித்துச் செல்லும் போது, தான் வேலை செய்துகொண்டிருந்த வீடும் தன் கண் முன்னே காணாமல் போனதை அவர் பார்த்ததாக தெரிவித்துள்ளார். அந்த மாமரம் இல்லாமல் இருந்திருந்தால் தான் உயிர் பிழைத்திருக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Lost Luggage : ரயிலில் பை தொலைந்துபோனால் உடனே இதைச் செய்யுங்கள்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வெள்ள நீரின் வேகம் குறையும் வரை பிபேக் மாமரத்தில் சிக்கியபடியே இருந்தார். பின்னர் மீட்புக் குழுவினர் அவரை கண்டுபிடித்து பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்தனர்.&lt;/p&gt;&lt;p&gt;இந்த வெள்ளத்தில் அவரது வலது காலில் காயம் ஏற்பட்டது. பின்னர் அவர் காத்மாண்டுவில் உள்ள தேசிய அதிர்ச்சி சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்றார். அங்கு இருந்தபடியே, அந்தக் கொடூரமான வெள்ளத்திலிருந்து எப்படி உயிர் தப்பினார் என்பதை அவர் விவரித்தார்.&lt;/p&gt;&lt;p&gt;A massive wave nearly swept away dozens in Nepal.Per Reuters, ~1,500 are missing (800+ foreigners) and 165+ are dead.The flood was triggered by a glacier collapse causing a mudslide. https://t.co/2o4Mk7tvcw pic.twitter.com/yG9cEmBdHe&lt;/p&gt;&lt;p&gt;&mdash; Chay Bowes (@BowesChay) August 27, 2026&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Train Ticket : தட்கல் டிக்கெட் கிடைக்கலையா? கடைசி நேரத்துல கன்ஃபார்ம் டிக்கெட் வாங்க இந்த ட்ரிக் ஃபாலோ பண்ணுங்க!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிபேக் உயிர் தப்பிய சம்பவம் நம்ப முடியாததாக இருந்தாலும், அவர் சிக்கிய அதே வெள்ளம் நேபாளத்தின் பல பகுதிகளில் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய தகவல்களின்படி, 165-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 1,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.&lt;/p&gt;&lt;p&gt;மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பல இடங்களில் சாலைகள், பாலங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதால் மீட்புப் பணிகளும் சவாலாகியுள்ளன. இந்தப் பேரழிவுக்கு மத்தியில், ஒரு மாமரக் கிளையைப் பிடித்தபடி உயிர் தப்பிய பிபேக் குமாலின் கதை நம்பிக்கையளிக்கும் ஒரு சம்பவமாக மாறியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Hindu Wedding : தாலிக்கு 3 முடிச்சு போடுறது ஏன்? இதுக்கு பின்னாடி இவ்ளோ அர்த்தம் இருக்கா?&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[world]]></category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/world/man-swept-away-in-nepal-flood-saved-by-mango-tree-branch-e9t8s6k"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Gold: தங்க நகைகளை எங்கு அடகு வைக்கலாம் தெரியுமா?! குறைந்த வட்டி என ஏமாறாமல் இருக்க என்ன வழி?!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/gold-loan-where-should-you-pledge-your-jewellery-how-to-avoid-getting-tricked-by-low-interest-offers-30yoaph</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/gold-loan-where-should-you-pledge-your-jewellery-how-to-avoid-getting-tricked-by-low-interest-offers-30yoaph</guid>
            <pubDate>Thu, 27 Aug 2026 11:56:03 +0530</pubDate>
            <description><![CDATA[நகைகளை அடகு வைக்கும்போது குறைந்த வட்டி என்று சொல்லப்படும் வார்த்தையை மட்டும் நம்பாதீர்கள்! வங்கியா, அடகு கடையா, NBFC-யா? எங்கு நகைகளை அடகு வைத்தால் பாதுகாப்பு அதிகம்? மறைக்கப்படும் முக்கிய விஷயங்கள் என்ன? முழு தகவலை தெரிந்துகொள்ளுங்கள்!]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m10xkn09zzzwv4h4fqtmgcjv,imgname-chatgpt-image-aug-27--2026--11-40-07-am--2--1787811189769.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;நகைகளை அடகு வைக்கும்போது குறைந்த வட்டி என்று சொல்லப்படும் வார்த்தையை மட்டும் நம்பாதீர்கள்! வங்கியா, அடகு கடையா, NBFC-யா? எங்கு நகைகளை அடகு வைத்தால் பாதுகாப்பு அதிகம்? மறைக்கப்படும் முக்கிய விஷயங்கள் என்ன? முழு தகவலை தெரிந்துகொள்ளுங்கள்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குடும்பத்தில் திடீரென மருத்துவச் செலவு, கல்விக் கட்டணம், வீட்டு அவசரச் செலவு அல்லது சிறு தொழிலுக்கான முதலீடு என பணம் தேவைப்படும்போது, பல நடுத்தர மற்றும் அடித்தட்டு குடும்பங்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது தங்க நகைக் கடன்தான். நகையை விற்பனை செய்யாமல் பணத்தைப் பெற முடியும் என்பதால் இது அவசர காலத்தில் பயனுள்ள நிதி வசதியாக இருக்கிறது. ஆனால், &ldquo;குறைந்த வட்டி&rdquo;, &ldquo;உடனடி பணம்&rdquo;, &ldquo;எந்த ஆவணமும் தேவையில்லை&rdquo; போன்ற விளம்பரங்களை மட்டும் நம்பி நகைகளை அடகு வைப்பது பின்னர் கூடுதல் செலவுக்கு வழிவகுக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முதலில் நகைக் கடன் வழங்கும் நிறுவனத்தின் நம்பகத்தன்மை மற்றும் ஒழுங்குமுறை நிலையை பார்க்க வேண்டும். வங்கிகள், RBI-யால் ஒழுங்குபடுத்தப்படும் NBFC-கள் மற்றும் தகுதியான கூட்டுறவு வங்கிகள் போன்ற நிறுவனங்களில் விதிமுறைகள், ஆவணங்கள், நகை மதிப்பீடு, கடன் ஒப்பந்தம் போன்றவை முறையாக இருக்க வேண்டும். ஒரே இடத்தில் மட்டும் விசாரிக்காமல் குறைந்தது 3 நிறுவனங்களிடம் ஒரே நகைக்கு எவ்வளவு கடன், வட்டி, செயலாக்கக் கட்டணம், பிற கட்டணங்கள் என எழுத்துப்பூர்வமாக கேட்டு ஒப்பிடுவது நல்லது.&lt;/p&gt;&lt;p&gt;முக்கியமாக, வட்டி விகிதம் மட்டும் பார்த்து முடிவு செய்யக்கூடாது. சில இடங்களில் குறைந்த வட்டி என்று கூறிவிட்டு செயலாக்கக் கட்டணம், மதிப்பீட்டுக் கட்டணம், ஆவணக் கட்டணம், தாமதக் கட்டணம் போன்றவற்றால் மொத்தச் செலவு அதிகமாக இருக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒரு நிறுவனம் ஆண்டுக்கு குறைந்த வட்டி என்று சொன்னால், அது எந்த வகையில் கணக்கிடப்படுகிறது என்பதை கேளுங்கள். மாத வட்டி, ஆண்டு வட்டி, எளிய வட்டி, குறைந்த காலத்திற்கான சிறப்பு வட்டி, தாமதமானால் மாறும் வட்டி என விதிமுறைகள் மாறக்கூடும். அதனால், &ldquo;எனக்கு கையில் கிடைக்கும் தொகை எவ்வளவு? மொத்தமாக திருப்பிச் செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு?&rdquo; என்பதுதான் முக்கியமான கேள்வி. மேலும், நகையின் முழு சந்தை மதிப்புக்கும் கடன் தொகைக்கும் வித்தியாசம் இருக்கும். RBI விதிகளின்படி தங்கத்தின் மதிப்பை நிர்ணயிப்பதற்கான முறைகள் மற்றும் Loan-to-Value (LTV) தொடர்பான கட்டுப்பாடுகள் உள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நகையை அடகு வைக்கும் முன், நகையின் எடை, தூய்மை, கல் எடை, நிகர தங்க எடை ஆகியவை சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். நகையில் கற்கள் இருந்தால், அந்தக் கற்களின் மதிப்பு கடன் கணக்கில் எப்படி எடுத்துக்கொள்ளப்படுகிறது என்பதையும் கேட்க வேண்டும். குறிப்பாக, ரசீதில் நகையின் விவரங்கள் தெளிவாக இருக்க வேண்டும். சில RBI வழிகாட்டுதல்களில் நகையின் தூய்மை மற்றும் எடை போன்ற விவரங்களை முறையாக பதிவு செய்வதற்கான நடைமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நகைக் கடன் கிடைத்தவுடன் முழுப் பணத்தையும் தேவையில்லாத செலவுகளுக்கு பயன்படுத்துவது ஆபத்தானது. நகை அடகு என்பது முதலீடு அல்ல; நகையை பிணையாக வைத்து பெறப்படும் கடன் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வீட்டு அத்தியாவசிய செலவு அல்லது வருமானத்தை உருவாக்கும் சிறு தொழில் போன்ற பயனுள்ள தேவைக்காக கடன் வாங்கினால், திருப்பிச் செலுத்தும் திட்டத்தை முன்கூட்டியே உருவாக்குவது அவசியம். குறிப்பாக ஒரு கடனை அடைக்க மற்றொரு அதிக வட்டி கடனை வாங்கும் நிலைக்கு செல்லாமல் இருப்பது மிகவும் முக்கியம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கடனை சரியான காலத்தில் திருப்பிச் செலுத்தாதபோது, நிறுவனத்தின் விதிமுறைகளின்படி நகை ஏலத்திற்கு செல்லக்கூடிய நிலை ஏற்படலாம். எனவே, கடன் ஒப்பந்தத்தில் உள்ள ஏல நடைமுறை, முன் அறிவிப்பு, கால அவகாசம் மற்றும் பிற விதிமுறைகளை நகை அடகு வைக்கும் முன்பே படிக்க வேண்டும். RBI-யின் வழிகாட்டுதல்கள் தங்க நகைக் கடனில் வெளிப்படையான மதிப்பீடு மற்றும், தவறினால், முறையான ஏல நடைமுறைக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கடன் முழுமையாக முடிக்கப்பட்ட பிறகு, நகையைப் பெற்றுக்கொள்ளும் முன் அதன் எடை, எண்ணிக்கை, வடிவம் மற்றும் அடகு ரசீதுடன் உள்ள விவரங்களை ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும். ரசீது மற்றும் கடன் முடித்ததற்கான ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருப்பதும் அவசியம்.&lt;/p&gt;&lt;p&gt;ஒரு நிறுவனத்திடம் சேவை தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டால் முதலில் அந்த நிறுவனத்தின் குறைதீர் அமைப்பை அணுகலாம். RBI-யால் ஒழுங்குபடுத்தப்படும் நிறுவனங்களுக்கு தொடர்புடைய புகார்களில் RBI Integrated Ombudsman Scheme ஒரு குறைதீர் வழியாக உள்ளது. 2026 ஜூலை 1 முதல் புதிய RBI Integrated Ombudsman Scheme அமலுக்கு வந்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;ul&gt; &lt;li&gt;முதலாவது: குறைந்த வட்டி என்ற வார்த்தையை மட்டும் நம்பாதீர்கள். இரண்டாவது: மொத்தமாக திருப்பிச் செலுத்த வேண்டிய தொகையை எழுத்துப்பூர்வமாக கேளுங்கள்.&lt;/li&gt; &lt;li&gt;மூன்றாவது: நகையின் எடை மற்றும் தூய்மை ரசீதில் சரியாக உள்ளதா பாருங்கள்.&lt;/li&gt; &lt;li&gt;நான்காவது: ஏல விதிமுறைகளை கடன் வாங்கும் முன்பே படியுங்கள். ஐந்தாவது: உங்கள் மாத வருமானத்தில் சுமையாகாத அளவிலேயே கடன் தொகையைத் தேர்வு செய்யுங்கள்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;நகை என்பது பல குடும்பங்களின் பல வருட சேமிப்பு. அவசரத் தேவைக்காக அதை அடகு வைக்கும் போது வேகமாக முடிவெடுப்பதைவிட, வட்டி மட்டுமல்லாமல் அனைத்து கட்டணங்களையும், கடன் காலத்தையும், நகை மீட்பு மற்றும் ஏல விதிமுறைகளையும் ஒப்பிட்டு முடிவு செய்வதே பாதுகாப்பான நிதி நடைமுறையாகும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[business]]></category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/gold-loan-where-should-you-pledge-your-jewellery-how-to-avoid-getting-tricked-by-low-interest-offers-30yoaph"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Earrings: 3 கிராமில் அட்டகாசமான லைட் வெயிட் தங்க‌ கம்மல் டிசைன்ஸ்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/webstories/life-style/lightweight-gold-earring-designs-under-3-grams-y6tz0ai</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/webstories/life-style/lightweight-gold-earring-designs-under-3-grams-y6tz0ai</guid>
            <pubDate>Thu, 27 Aug 2026 11:53:56 +0530</pubDate>
            <description><![CDATA[Earrings: வழக்கமான கம்மல் போட்டு போர் அடிக்குதா? அப்போ, இந்த முறை வித்தியாசமா டிரை பண்ணுங்க. இது நமக்கு லைட் வெயிட்ல சுலபமா கிடைக்கும். 3 கிராமுக்குக் குறைவாக கிடைக்கிற சில லைட் வெயிட் கம்மல் டிசைன்ஸை இந்த வெப்ஸ்டோரிஸில் பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m10qt5gpx27awdfwch7sjah3,imgname-whatsapp-image-2026-08-27-at-9.52.51-am-1787805111830.jpeg" type="image/jpeg" height="390" width="690"/>
            <category><![CDATA[life-style]]></category>
            <dc:creator>Rayar A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/webstories/life-style/lightweight-gold-earring-designs-under-3-grams-y6tz0ai"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Nepal Flood : வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைகள்.. உயிரை காப்பாற்ற நடந்த நெஞ்சை பதற வைக்கும் மீட்பு!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/india/elephants-swept-away-in-nepal-floods-dramatic-rescue-sf6kv4n</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/india/elephants-swept-away-in-nepal-floods-dramatic-rescue-sf6kv4n</guid>
            <pubDate>Thu, 27 Aug 2026 11:52:37 +0530</pubDate>
            <description><![CDATA[Nepal Flood : நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், வெள்ள நீரில் சிக்கிய 5 யானைகள் உத்தரப் பிரதேசத்தின் பஹ்ரைச் பகுதியில் உயிருக்கு போராடின. வனத்துறையினர் விரைந்து செயல்பட்டு அவற்றை மீட்டனர்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m10xy80qgsr3yx46zhkrepvf,imgname-elephants-swept-away-in-nepal-floods-dramatic-rescue-1787811536918.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Nepal Flood : நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், வெள்ள நீரில் சிக்கிய 5 யானைகள் உத்தரப் பிரதேசத்தின் பஹ்ரைச் பகுதியில் உயிருக்கு போராடின. வனத்துறையினர் விரைந்து செயல்பட்டு அவற்றை மீட்டனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நேபாளம்-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ளம், மனிதர்களை மட்டுமின்றி அப்பகுதியில் வாழும் வனவிலங்குகளையும் கடுமையாக பாதித்துள்ளது. ஆகஸ்ட் 26-ம் தேதி ஏற்பட்ட இந்தப் பேரழிவில் சேறும், சகதியும் கலந்த வெள்ளம் பல பகுதிகளைச் சூழ்ந்தது. 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், நூற்றுக்கணக்கானோர் மாயமாகியுள்ளனர்.&lt;/p&gt;&lt;p&gt;இந்த நிலையில், நேபாளத்திலிருந்து பெருக்கெடுத்து வந்த வெள்ள நீரில் 5 யானைகள் அடித்துச் செல்லப்பட்டு உத்தரப் பிரதேசத்தின் பஹ்ரைச் பகுதியில் சிக்கிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவை நீரின் வேகத்தை எதிர்த்து தங்களது தலையை மட்டும் தண்ணீருக்கு மேலே வைத்துக்கொண்டு உயிருக்கு போராடிய காட்சிகள் வெளியாகின.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Family Series : குடும்பத்தோடு பார்த்து ரசிக்க வேண்டிய 5 அழகான வெப் சீரிஸ்கள்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவின் தாக்கம் அண்டை மாநிலங்களான உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாரிலும் உணரப்பட்டது. குறிப்பாக நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்குள் வரும் ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்ததால் அதிகாரிகள் உஷார் நிலையில் இருந்தனர்.&lt;/p&gt;&lt;p&gt;பஹ்ரைச் பகுதியில், நேபாளத்தில் இருந்து பெருக்கெடுத்து வந்த வெள்ள நீர் கர்னாலி ஆறு என்றும் அழைக்கப்படும் காக்ரா ஆற்றில் நுழைந்தது. அப்போது அதன் வேகமான நீரோட்டத்தில் யானைகள் அடித்துச் செல்லப்பட்டு, கைலாஷ்புரி தடுப்பணை அருகே சிக்கியதாக தகவல்கள் வெளியாகின.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Lost Luggage : ரயிலில் பை தொலைந்துபோனால் உடனே இதைச் செய்யுங்கள்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வெள்ள நீரில் சிக்கிய யானைகளால் அந்த வேகமான நீரோட்டத்தை எதிர்த்து கரைக்கு வர முடியவில்லை. வெளியான வீடியோவில், அவை நீருக்குள் சிக்கி தங்களது தலையை மட்டும் தண்ணீருக்கு மேலே வைத்துக்கொண்டு உயிர் பிழைக்க போராடுவது தெரிந்தது.&lt;/p&gt;&lt;p&gt;Unos elefantes sobrevivieron la inundacion de nepal y llegaron flotando hasta la represa del r&iacute;o karnali (la india) pic.twitter.com/Ek0vEjbGER&lt;/p&gt;&lt;p&gt;&mdash; ElBuni (@therealbuni) August 26, 2026&lt;/p&gt;&lt;p&gt;இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியதுடன், வனவிலங்குகளின் நிலை குறித்தும் பலர் கவலை தெரிவித்தனர். இயற்கைப் பேரிடர் ஏற்படும் போது மனிதர்கள் மட்டுமின்றி, வனவிலங்குகளும் அதன் நேரடி பாதிப்பை எதிர்கொள்கின்றன என்பதற்கு இந்த சம்பவம் மற்றொரு உதாரணமாக அமைந்தது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Train Ticket : தட்கல் டிக்கெட் கிடைக்கலையா? கடைசி நேரத்துல கன்ஃபார்ம் டிக்கெட் வாங்க இந்த ட்ரிக் ஃபாலோ பண்ணுங்க!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;யானைகள் ஆற்றின் வேகமான நீரோட்டத்தில் சிக்கிய தகவல் கிடைத்ததும், உத்தரப் பிரதேச வனத்துறை மற்றும் மீட்புக் குழுவினர் அவற்றை பாதுகாப்பாக மீட்கும் பணியில் இறங்கினர். ஆரம்பத்தில் 4 முதல் 5 யானைகள் தண்ணீரில் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகின.&lt;/p&gt;&lt;p&gt;நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் மீட்புப் பணியும் சவாலானதாக இருந்தது. இருப்பினும், அதிகாரிகள் ஒருங்கிணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் 5 யானைகளும் இறுதியில் பத்திரமாக மீட்கப்பட்டன.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Hindu Wedding : தாலிக்கு 3 முடிச்சு போடுறது ஏன்? இதுக்கு பின்னாடி இவ்ளோ அர்த்தம் இருக்கா?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆற்றின் கொந்தளிப்பான நீரோட்டத்தில் சிக்கியிருந்த 5 யானைகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்ட சம்பவம், அந்தப் பேரழிவில் கிடைத்த ஒரு நிம்மதியான செய்தியாக அமைந்தது. ஆரம்பத்தில் அவற்றின் நிலை குறித்து கவலை ஏற்பட்ட நிலையில், மீட்புக் குழுவினரின் துரித நடவடிக்கை அவற்றின் உயிரைக் காப்பாற்றியது.&lt;/p&gt;&lt;p&gt;இந்த சம்பவம், இயற்கைப் பேரிடர்களின்போது மனிதர்களுடன் வனவிலங்குகளையும் பாதுகாப்பதற்கான மீட்பு நடவடிக்கைகள் எவ்வளவு முக்கியம் என்பதை நினைவூட்டுகிறது. நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு தொடர்ந்து மீட்புப் பணிகளைத் தேவைப்படுத்தி வரும் நிலையில், இந்தியாவின் எல்லையோரப் பகுதிகளிலும் அதிகாரிகள் நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;White Clothes : வெள்ளைத் துணிகளை எப்பயும் பளிச்சுன்னு வச்சுக்க 6 சூப்பர் டிப்ஸ்!&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[india]]></category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/india/elephants-swept-away-in-nepal-floods-dramatic-rescue-sf6kv4n"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Nepal Flood: பனிமலை சரிந்து ஏரி உடைந்ததா? நேபாள பெரு வெள்ளத்துக்கு காரணம் என்ன? அதிர்ச்சி தகவல்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/world/nepal-flash-flood-bhotekoshi-cause-sgctcwx</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/world/nepal-flash-flood-bhotekoshi-cause-sgctcwx</guid>
            <pubDate>Thu, 27 Aug 2026 11:39:01 +0530</pubDate>
            <description><![CDATA[Nepal Flood: கடும் பேரழிவை ஏற்படுத்திய நேபாள பெரு வெள்ளம் பனிமலை சரிந்து உடைந்ததால் ஏற்பட்டதா? நிலநடுக்கம் காரணமாக இந்த பேரழிவு ஏற்பட்டதா? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m10vc8tqe2yjhay2qddn5322,imgname-nepal-flood-aerial-video-bhote-koshi-trishuli-glacial-flood-india-alert--2--1787808850774.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Nepal Flood: கடும் பேரழிவை ஏற்படுத்திய நேபாள பெரு வெள்ளம் பனிமலை சரிந்து உடைந்ததால் ஏற்பட்டதா? நிலநடுக்கம் காரணமாக இந்த பேரழிவு ஏற்பட்டதா? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போட்டேகோசி ஆற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோர வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 162 பேர் பலியாகியுள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். குறிப்பாக தமிழர்கள் உள்பட 105 இந்தியர்கள் மாயமாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;இந்த திடீர் வெள்ளத்திற்கு, பனிப்பாறை சரிவும், அதனால் தற்காலிகமாக உருவான ஏரி உடைந்ததும்தான் காரணமாக இருக்கலாம் என்று நேபாளத்தின் நீர்வளம் மற்றும் வானிலை ஆய்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காத்மாண்டு போஸ்ட் பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நேபாளத்தின் தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் இதுகுறித்து ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. 'பிளானட் லேப்ஸ் (Planet Labs) நிறுவனத்தின் செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்ததில், நேபாள-சீனா ரசுவாகாதி எல்லைச் சாவடியிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் வடகிழக்கில், நேபாள-சீனா எல்லையில் ஒரு பனிப்பாறையும் பாறைகளும் சரிந்து விழுந்திருப்பது தெரியவந்துள்ளது. இதன் காரணமாகவே லெண்டே ஆற்றில் குப்பைகள் கலந்த வெள்ளம் ஏற்பட்டுள்ளது' என்று அந்த ஆணையம் கூறியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;சீன அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட செயற்கைக்கோள் படங்கள், மிட்டேரி பாலத்திலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் ஆற்றில் அடைப்பு ஏற்பட்டதைக் காட்டுகின்றன. இந்த அடைப்பால் ஒரு தற்காலிக ஏரி உருவாகி, பின்னர் அது திடீரென உடைந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதுகுறித்து நீர்வளத்துறையின் வெள்ள முன்னறிவிப்புப் பிரிவின் தலைவர் பினோத் பரஜூலி பேசும்போது, &quot;சீன அதிகாரிகள் அனுப்பிய படங்களைப் பார்த்தோம். வெள்ளத்திற்கு முன்னும் பின்னும் எடுக்கப்பட்ட படங்கள் அவை. அதில் ஒரு பனிச்சரிவும் நிலச்சரிவும் தெளிவாகத் தெரிகிறது. பனிக்கட்டிகளும் குப்பைகளும் சேர்ந்து ஒரு ஏரியை உருவாக்கி, அது உடைந்துள்ளது. ஒரு அணை போலவே உருவாகியிருக்கிறது&quot; என்றார்.&lt;/p&gt;&lt;p&gt;&quot;வெறும் தண்ணீர் மட்டும் வந்திருந்தால் இவ்வளவு பெரிய சேதம் ஏற்பட்டிருக்காது. ஆனால், தண்ணீருடன் பாறைகளும் சகதியும் கலந்து வந்ததால், வெள்ளத்தின் சீற்றம் பல மடங்கு அதிகரித்துவிட்டது&quot; என்றும் பரஜூலி விளக்கினார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த முதற்கட்ட மதிப்பீட்டின்படி, லெண்டே ஆற்றில் பனிச்சரிவு ஏற்பட்டு அடைப்பு உண்டானது உறுதியாகியுள்ளது. ஆனாலும், பனிப்பாறை ஏரி உடைப்பும் (glacial lake outburst) இதனுடன் சேர்ந்து நடந்ததா என்பதை அதிகாரிகள் இன்னும் முழுமையாக உறுதிப்படுத்தவில்லை.&lt;/p&gt;&lt;p&gt;காத்மாண்டு பல்கலைக்கழகத்தின் காலநிலை ஆய்வாளரும் பேராசிரியருமான ரிஜன் பக்த கயஸ்தா, &quot;நேபாளப் பக்கத்திலிருந்து ஏற்பட்ட ஒரு பனிச்சரிவு, லெண்டே ஆற்றை மறித்ததாகத் தெரிகிறது. அதே நேரத்தில், திபெத்தியப் பகுதியில் ஒரு நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளது&quot; என்று கூறியுள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின்படி, கோசைன்குண்டாவிலிருந்து சுமார் 47 கிலோமீட்டர் வடக்கே, திபெத்தியப் பகுதியில் காலை 8:37 மணிக்கு ரிக்டர் அளவில் 4.4 ஆக ஒரு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை 8-ம் தேதியும் போட்டேகோசி ஆற்றில் இதேபோன்ற ஒரு திடீர் வெள்ளம் ஏற்பட்டது. அப்போது, பனிப்பாறை ஏரி உடைந்ததே வெள்ளத்திற்குக் காரணம் என நீர்வளம் மற்றும் வானிலை ஆய்வுத் துறை உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் சாந்தி மஹத், &quot;பனிச்சரிவால் ஆறு மறிக்கப்பட்டதாக எங்களுக்கும் முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது. சீனாவில் உள்ள வட்டாரங்கள் மூலம் சர்வதேச ஒருங்கிணைந்த மலை மேம்பாட்டு மையத்திற்கு (ICIMOD) இந்தத் தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் எங்களுடன் பகிர்ந்துள்ளார்கள். இது ஆரம்பக்கட்ட மதிப்பீடுதான். இப்போதைக்கு எங்கள் முழு கவனமும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில்தான் இருக்கிறது. வெள்ளத்திற்கான உண்மையான காரணம் படிப்படியாகத் தெரியவரும்&quot; என்றார்.&lt;/p&gt;&lt;p&gt;ரசுவா பகுதியில் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் கனமழை எதுவும் பெய்யவில்லை என நீர்வளத் துறை தெரிவித்துள்ளது. இது, பனிச்சரிவு காரணமாகவே வெள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[world]]></category>
            <dc:creator>Rayar A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/world/nepal-flash-flood-bhotekoshi-cause-sgctcwx"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Love Marriage Zodiac Signs கல்யாணம் பண்ணினால்... லவ் மேரேஜ் தான் பண்ணுவேன் என பிடிவாதமாக இருக்கும் ராசிகள்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/zodiac-signs-adamant-about-love-marriage-as-per-astrology-in-tamil-30dtkmm</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/zodiac-signs-adamant-about-love-marriage-as-per-astrology-in-tamil-30dtkmm</guid>
            <pubDate>Thu, 27 Aug 2026 11:29:40 +0530</pubDate>
            <description><![CDATA[மனதிற்குப் பிடித்தவரையே கரம்பிடிப்பதில் உறுதியாக இருக்கும் ராசிகள்! பெற்றோர்கள் பார்க்கும் வரனாக இருந்தாலும், தானாகவே தேர்ந்தெடுத்து காதலித்து மட்டுமே திருமணம் செய்வோம் என்பதில் சில ராசிக்காரர்கள் மிகத் தெளிவாக இருப்பார்கள். அதற்கான காரணங்கள் இதோ!]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m10wbxcbffpgvvdvyskaszbt,imgname-chatgpt-image-aug-27--2026--11-17-01-am-1787809887627.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;மனதிற்குப் பிடித்தவரையே கரம்பிடிப்பதில் உறுதியாக இருக்கும் ராசிகள்! பெற்றோர்கள் பார்க்கும் வரனாக இருந்தாலும், தானாகவே தேர்ந்தெடுத்து காதலித்து மட்டுமே திருமணம் செய்வோம் என்பதில் சில ராசிக்காரர்கள் மிகத் தெளிவாக இருப்பார்கள். அதற்கான காரணங்கள் இதோ!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் ஒவ்வொரு ராசியினருக்கும் ஒவ்வொரு விதமான மனநிலை இருக்கும். ஆனால், ஜோதிட சாஸ்திரப்படி சில குறிப்பிட்ட ராசியினருக்குத் தங்களின் காதல் வாழ்க்கை மற்றும் சுய விருப்பத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையும் பிடிவாதமும் இருக்கும். &quot;திருமணம் என்று ஒன்று நடந்தால் அது காதலித்தவரோடு மட்டுமே! அப்படி இல்லையென்றால் வாழ்க்கை முழுவதும் திருமணமே செய்யாமல் சன்னியாசியாக வாழ்வேன்&quot; என்று உறுதியாக நிற்கும் அந்தப் பிரத்யேக ராசிகள் எவை என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.இதில் உங்கள் ராசியும் இருக்கிறதா அல்லது உங்கள் துணையின் ராசியும் இருக்கிறதா என செக் செய்து கொள்ளுங்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;செவ்வாயின் ஆதிக்கம் கொண்ட மேஷ ராசியினர் தங்களின் உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் தருபவர்கள். தான் விரும்பியவரை அடைய எந்த எல்லையையும் கடக்கத் தயங்காத இவர்கள், பெற்றோர் மற்றும் சமூகத்தின் எதிர்ப்புகளையும் தாண்டி காதல் திருமணமே செய்வார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;புதனின் ஆதிக்கம் பெற்ற மிதுன ராசியினருக்குக் கருத்துச் சுதந்திரமும் மனமொத்த நட்பும் மிக முக்கியம். தங்களை முழுமையாகப் புரிந்து கொண்ட ஒருவரைத் தவிர அந்நிய நபரைத் துணையாக ஏற்பதை இவர்கள் எளிதில் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சூரியனின் ஆதிக்கம் கொண்ட சிம்ம ராசியினர் தங்களின் முடிவுகளில் மிகுந்த சுயகௌரவமும் உறுதியும் கொண்டவர்கள். காதலித்துவிட்டால், அந்த உறவைக் காப்பாற்றித் திருமணத்தில் முடிப்பதை ஒரு லட்சியமாகவே கருதிச் செயல்படுவார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சுக்கிரனின் ஆதிக்கம் பெற்ற துலாம் ராசியினர் இயல்பாகவே காதல் மனப்பான்மை கொண்டவர்கள். வாழ்க்கையில் அழகான காதலை அனுபவித்து, அந்த அன்பான துணையையே கரம்பிடிக்க வேண்டும் என்பதில் இவர்கள் மிகத் தெளிவாக இருப்பார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சனியின் ஆதிக்கம் கொண்ட கும்ப ராசியினர் பாரம்பரியமான ஏற்பாட்டுத் திருமணங்களை விடத் தங்களின் சுய தேர்வுக்கு முன்னுரிமை அளிப்பவர்கள். சுதந்திர சிந்தனை கொண்ட இவர்கள், தங்களுக்குப் பிடித்தவரைத் தாமே கண்டறிந்து மணம் முடிப்பதையே விரும்புவார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;5 மற்றும் 9-ஆம் இடங்களின் தாக்கம்: ஜாதகத்தில் 5-ஆம் இடம் (காதல் ஸ்தானம்) மற்றும் 9-ஆம் இடம் (பாக்கிய ஸ்தானம்) ஆகியவற்றின் அதிபதிகள் சுக்கிரன் அல்லது செவ்வாயுடன் தொடர்பு கொள்ளும் போது காதல் திருமணம் அமைவது தவிர்க்க முடியாததாகிறது.&lt;/p&gt;&lt;p&gt;சுக்கிரனின் ஆதிக்கம்: ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருக்கும் பட்சத்தில், அவர்கள் உணர்ச்சிப்பூர்வமான பிணைப்பிற்கு மட்டுமே முதலிடம் தருவார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;மனதை மாற்றும் வழிமுறை: இந்த ராசியினரின் பிடிவாதத்தைக் கோபத்தால் மாற்ற முடியாது; மாறாக, அவர்களின் விருப்பத்தைப் புரிந்து கொண்டு உரையாடுவதே சாதகமான தீர்வைத் தரும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[astrology]]></category>
            <dc:creator>Priya Velan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/zodiac-signs-adamant-about-love-marriage-as-per-astrology-in-tamil-30dtkmm"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Family Series : குடும்பத்தோடு பார்த்து ரசிக்க வேண்டிய 5 அழகான வெப் சீரிஸ்கள்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/5-family-friendly-web-series-to-watch-with-your-family-tb48109</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/5-family-friendly-web-series-to-watch-with-your-family-tb48109</guid>
            <pubDate>Thu, 27 Aug 2026 11:21:41 +0530</pubDate>
            <description><![CDATA[Family Series : குடும்ப உறவுகள், குழந்தைப் பருவ நினைவுகள், பெற்றோர்-பிள்ளைகளின் பாசம் என குடும்பத்தோடு சேர்ந்து ரசிக்கக்கூடிய 5 அழகான வெப் சீரிஸ்கள் இவை. குறிப்பாக வீக்கெண்டில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பார்க்க ஏற்றவை!]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m10w0fcs0g6r9s0dj8rhw20g,imgname-5-family-friendly-web-series-to-watch-with-your-family-1787809512857.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Family Series : குடும்ப உறவுகள், குழந்தைப் பருவ நினைவுகள், பெற்றோர்-பிள்ளைகளின் பாசம் என குடும்பத்தோடு சேர்ந்து ரசிக்கக்கூடிய 5 அழகான வெப் சீரிஸ்கள் இவை. குறிப்பாக வீக்கெண்டில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பார்க்க ஏற்றவை!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்தின் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சின்னச் சின்ன சம்பவங்களைத்தான் குல்லக் அழகான கதைகளாக மாற்றுகிறது. அப்பா, அம்மா, இரண்டு மகன்கள் என மிஸ்ரா குடும்பத்தினரின் சண்டை, பாசம், ஆசை, ஏமாற்றம் என எல்லாமே நம்முடைய வீட்டில் நடப்பதைப் போலவே இருக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;பெரிய திருப்பங்களோ, பிரம்மாண்டமான கதைக்களமோ இல்லாமல் &ldquo;நம்ம வீட்டுக் கதைதானே!&rdquo; என்று சொல்ல வைக்கும் இயல்பான தருணங்கள்தான் இதன் பலம். சிரிக்கவும், சில இடங்களில் நெகிழவும் வைக்கும் இந்த சீரிஸை குடும்பத்தோடு பார்க்கலாம். இதன் தமிழ் ஆடியோவும் கிடைக்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Lost Luggage : ரயிலில் பை தொலைந்துபோனால் உடனே இதைச் செய்யுங்கள்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;90-களின் குழந்தைப் பருவத்துக்கு நம்மை அழைத்துச் செல்லும் அழகான ஃபேமிலி டிராமா இது. பள்ளி, நண்பர்கள், அண்ணன்-தங்கை சண்டை, பெற்றோரின் கண்டிப்பு, சிறு வயது ஆசைகள் என அந்தக் காலத்து குடும்ப வாழ்க்கையின் பல நினைவுகளை இந்த சீரிஸ் மீண்டும் கொண்டு வருகிறது.&lt;/p&gt;&lt;p&gt;குழந்தைகளின் பார்வையில் சொல்லப்பட்டாலும், பெரியவர்கள் பார்க்கும்போது தங்களுடைய குழந்தைப் பருவத்தையே நினைவுபடுத்தும் வகையில் கதை அமைந்திருக்கும். சிரிப்பு, குடும்பப் பாசம், நாஸ்டால்ஜியா என வீக்கெண்டில் குடும்பத்தோடு பார்க்க ஏற்ற ஃபீல் குட் சீரிஸ் இது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Train Ticket : தட்கல் டிக்கெட் கிடைக்கலையா? கடைசி நேரத்துல கன்ஃபார்ம் டிக்கெட் வாங்க இந்த ட்ரிக் ஃபாலோ பண்ணுங்க!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&ldquo;சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும்&rdquo; என்ற நடுத்தரக் குடும்பத்தின் கனவை மையமாகக் கொண்ட கதை ஹோம் சாந்தி. ஓய்வுபெறப் போகும் அம்மா, குடும்பத்துடன் சேர்ந்து கனவு வீட்டைக் கட்டத் தொடங்குகிறார். ஆனால் வீடு கட்டுவது நினைத்த அளவுக்கு எளிதாக இருப்பதில்லை.&lt;/p&gt;&lt;p&gt;வீட்டு பட்ஜெட், குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்கள், கட்டுமானப் பிரச்சனைகள் என நம்மில் பலரும் எதிர்கொள்ளக்கூடிய விஷயங்களை நகைச்சுவையுடன் சொல்கிறது. வீடு என்பது வெறும் கட்டிடம் இல்லை; அதில் வாழும் குடும்பம்தான் அதன் உண்மையான அர்த்தம் என்பதை அழகாக உணர்த்தும் சீரிஸ். தமிழ் ஆடியோவும் உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Hindu Wedding : தாலிக்கு 3 முடிச்சு போடுறது ஏன்? இதுக்கு பின்னாடி இவ்ளோ அர்த்தம் இருக்கா?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வேலை இழந்த பிறகு சொந்த ஊருக்கும் பெற்றோரிடமும் திரும்பும் இளைஞனை மையமாகக் கொண்ட கதை கர் வாப்ஸி. வாழ்க்கையில் வெற்றி என்றால் என்ன, சொந்த வீடு மற்றும் குடும்பம் நமக்கு எவ்வளவு முக்கியம் என்பதைப் பற்றி சிந்திக்க வைக்கும் கதைக்களம்.&lt;/p&gt;&lt;p&gt;வேலை, எதிர்காலம், திருமணம், பெற்றோரின் எதிர்பார்ப்புகள் என இன்றைய இளைஞர்களின் வாழ்க்கையில் இருக்கும் பல விஷயங்களை இயல்பாக அணுகுகிறது. &ldquo;வெளியில் தேடும் வெற்றி, நம்மைச் சுற்றியிருப்பவர்களின் அன்பைவிட முக்கியமா?&rdquo; என்ற கேள்வியையும் எழுப்பும் அழகான ஃபேமிலி டிராமா . தமிழ் ஆடியோவும் கிடைக்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Budhan Uccha Peyarchi : புதன் உச்ச பெயர்ச்சியில் உருவாகும் ஐயப்பன் அருள்! அசுர வளர்ச்சி பெறும் 4 ராசிகள்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இணையமும் மொபைல் போன்களும் இல்லாத காலத்தில் ஒரு சிறுவனின் கற்பனை, குறும்பு, சாகசம் மற்றும் குழந்தைப் பருவ உலகத்தை அழகாகப் பதிவு செய்யும் சீரிஸ் இது. தென்னிந்தியாவின் ஒரு சிறிய நகரப் பின்னணியில், குடும்பத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று நினைக்கும் சிறுவனின் பார்வையில் கதை நகர்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;குழந்தைகளின் உலகத்தை மையமாகக் கொண்டிருந்தாலும், பெரியவர்கள் பார்க்கும்போது தங்களுடைய சொந்த childhood memories-ஐ நினைவுபடுத்தும் பல தருணங்கள் இருக்கும். குறிப்பாக பெற்றோர்கள் குழந்தைகளுடன் சேர்ந்து பார்க்கும்போது, குழந்தைப் பருவம் எப்படி இருந்தது என்பதைப் பற்றி பேச வைக்கும் ஒரு அழகான நாஸ்டால்ஜியா சீரிஸ்.&lt;/p&gt;&lt;h3&gt;&lt;strong&gt;இந்த 5 சீரிஸ்களிலும் என்ன ஸ்பெஷல்?&lt;/strong&gt;&lt;/h3&gt;&lt;p&gt;இந்தப் பட்டியலில் இருக்கும் சீரிஸ்கள் அனைத்துமே பெரிய ஆக்ஷன், வன்முறை அல்லது பரபரப்பான திருப்பங்களை நம்பி உருவாக்கப்பட்டவை அல்ல. குடும்பம், பாசம், குழந்தைப் பருவம், வாழ்க்கையின் சின்னச் சின்ன சந்தோஷங்கள் ஆகியவற்றைத்தான் மையமாகக் கொண்டிருக்கின்றன.&lt;/p&gt;&lt;p&gt;அதனால், இந்த வீக்கெண்டில் தனியாக OTT-யில் ஏதாவது பார்ப்பதற்குப் பதிலாக, குடும்பத்தோடு ஒன்றாக அமர்ந்து ஒரு நல்ல சீரிஸை பார்க்க வேண்டும் என்று நினைத்தால், இந்த 5 படைப்புகளையும் உங்கள் வாட்ச் லிஸ்டில் சேர்த்துக்கொள்ளலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Family Time : இந்த 5 படங்களை இன்னும் பார்க்கலையா? குடும்பத்துடன் சேர்ந்து பார்க்க செம சாய்ஸ்!&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[cinema]]></category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/5-family-friendly-web-series-to-watch-with-your-family-tb48109"/>
        </item>
        <item>
            <title><![CDATA[RBI New FD Rules: அக்டோபர் 1 முதல் FD விதிகளில் மாற்றம்.. RBI அதிகாரப்பூர்வ தகவல்கள்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/reserve-bank-of-india-new-fd-rules-from-october-1-2026-1szpypq</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/reserve-bank-of-india-new-fd-rules-from-october-1-2026-1szpypq</guid>
            <pubDate>Thu, 27 Aug 2026 11:04:26 +0530</pubDate>
            <description><![CDATA[FD rules: அக்டோபர் 1, 2026 முதல் FD மற்றும் வங்கி டெபாசிட் விதிகளில் மாற்றம். ஒரே தொகைக்கு ஒரே வட்டி, Bulk Deposit வட்டி வெளியீடு உள்ளிட்ட RBI புதிய விதிகளை தெரிந்துகொள்ளுங்கள்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m10tqq5jra9y189fgsw03s6m,imgname-rbi-s-new-fd-rules-1787808177330.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;FD rules:&lt;/strong&gt; அக்டோபர் 1, 2026 முதல் FD மற்றும் வங்கி டெபாசிட் விதிகளில் மாற்றம். ஒரே தொகைக்கு ஒரே வட்டி, Bulk Deposit வட்டி வெளியீடு உள்ளிட்ட RBI புதிய விதிகளை தெரிந்துகொள்ளுங்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்திய ரிசர்வ் வங்கி (RBI), வங்கிகளில் டெபாசிட் மற்றும் குறிப்பாக நிலையான வைப்பு நிதி - Fixed Deposit (FD) வட்டி விகிதங்களை வெளியிடுதல் மற்றும் நிர்ணயித்தல் தொடர்பான விதிகளில் புதிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இவை வருகிற அக்டோபர் 1, 2026 முதல் அமலுக்கு வருவுள்ளதாக RBI அதிகாபூர்மாக தெரிவித்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வங்கிகள் தங்கள் அனைத்து கிளைகளிலும் ஒரே தேதியில், ஒரே வகையான FD-யில் பெறப்படும் வைப்புத்தொகைகளுக்கு ஒரே மாதிரியான வட்டி விகிதத்தை வழங்க வேண்டும். கிளைக்கு கிளை வட்டி விகிதங்களில் இனி மாறுபாடு இருக்காது என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதன் மூலம் வங்கிகளின் FD வட்டி நிர்ணயத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் சமமான நடைமுறையை உறுதி செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வங்கிகள் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களை தங்களது இணையதளத்தில் முன்கூட்டியே வெளியிட வேண்டும். அறிவிக்கப்பட்ட வட்டி அட்டவணைக்கு ஏற்ப வட்டி வழங்கப்பட வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மொத்த வைப்புத்தொகைக்கான (Bulk Deposit) வட்டி விகிதங்களை ஒவ்வொரு வேலை நாட்களிலும் காலை 10 மணிக்கு வங்கியின் இணையதளத்தில் வெளியிட வேண்டும். தொழில்நுட்ப காரணங்களுக்காக 10 நிமிட சலுகை நேரத்துடன் காலை 10.10 மணிக்குள் வெளியிடப்பட வேண்டும். ரூபாய் 3 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட தொகை Bulk Deposit என வகைப்படுத்தப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;Commercial Banks மற்றும் Small Finance Banks போன்ற நிறுவனங்களுக்கு, LCR (Liquidity Coverage Ratio) கட்டமைப்பின் கீழ் பொருந்தும் run-off rate உள்ளிட்ட காரணிகளை கருத்தில் கொண்டு, Bulk Deposit-களுக்கு வேறுபட்ட வட்டி விகிதங்களை வழங்க வங்கிகளுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. இனி FD செய்வதற்கு முன்பு, வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட வட்டி விகிதங்களை சரிபார்த்து ஒப்பிடுவது மேலும் எளிதாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த புதிய விதிகளின் முக்கிய நோக்கம் வெளிப்படைத்தன்மை. ஒரே மாதிரியான டெபாசிட்டுகளுக்கு ஒரே வட்டி நடைமுறை மற்றும் Bulk Deposit வட்டி நிர்ணயத்தில் வங்கிகளுக்கு கூடுதல் நெகிழ்வுத்தன்மை வழங்குவதாகும். சாதாரண ரீடெயில் FD முதலீட்டாளர்களுக்கு உடனடியாக வட்டி உயர்வு அல்லது குறைவு கட்டாயம் இல்லை.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[business]]></category>
            <dc:creator>Vishnupriya</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/reserve-bank-of-india-new-fd-rules-from-october-1-2026-1szpypq"/>
        </item>
        <item>
            <title><![CDATA[iPhone 18 Pro: ஆப்பிளின் அடுத்த சர்ப்ரைஸ்! புதிய ஃபோல்டபிள் போன் அறிமுகம்! எப்போ தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/technology/apple-announces-iphone-18-pro-and-foldable-iphone-launch-on-september-9-6nkcu5c</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/technology/apple-announces-iphone-18-pro-and-foldable-iphone-launch-on-september-9-6nkcu5c</guid>
            <pubDate>Thu, 27 Aug 2026 10:55:18 +0530</pubDate>
            <description><![CDATA[ஆப்பிள் இறுதியாக தனது அடுத்த முதன்மை ஐபோனை அறிமுகப்படுத்தும் தேதியை உறுதி செய்துள்ளது. வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி ஆப்பிளின் பெரிய நிகழ்வு நடைபெறும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிகழ்வின் தீம் "சர்ப்ரைஸ் அண்ட் ஷைன்" (Surprise and Shine)ஆகும்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kzxbvjz1d946fdcavxbj2y95,imgname-whatsapp-image-2026-08-13-at-2.56.17-pm--1--1786618170337.jpeg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஆப்பிள் இறுதியாக தனது அடுத்த முதன்மை ஐபோனை அறிமுகப்படுத்தும் தேதியை உறுதி செய்துள்ளது. வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி ஆப்பிளின் பெரிய நிகழ்வு நடைபெறும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிகழ்வின் தீம் &quot;சர்ப்ரைஸ் அண்ட் ஷைன்&quot; (Surprise and Shine)ஆகும்.&lt;/p&gt;&lt;img&gt;செப்டம்பர் 9 அன்று கலிபோர்னியாவின் ஆப்பிள் பார்க்கில் நடைபெறவிருக்கும் இந்த பிரம்மாண்ட நிகழ்வில், ஆப்பிள் தனது புதிய ஐபோன் 18 ப்ரோ மற்றும் முதல் ஃபோல்டபிள் போனை அறிமுகம் செய்ய உள்ளது.&lt;img&gt;ஐபோன் 18 ப்ரோ மாடல்கள் புதிய A20 ப்ரோ சிப், மேம்படுத்தப்பட்ட கேமரா மற்றும் சிறிய டைனமிக் ஐலேண்ட் உடன் வரலாம். டார்க் செர்ரி போன்ற புதிய நிறத்திலும் எதிர்பார்க்கப்படுகிறது.&lt;img&gt;புத்தகத்தைப் போல மடிக்கும் வடிவமைப்பு, 7.8 இன்ச் உட்புற திரை மற்றும் டைட்டானியம் ஃபிரேம் உடன் ஆப்பிளின் முதல் ஃபோல்டபிள் போன் 'ஐபோன் அல்ட்ரா' என்ற பெயரில் வரலாம்.&lt;img&gt;இந்த நிகழ்வில் மேம்படுத்தப்பட்ட பிராசஸர் மற்றும் பேட்டரி ஆயுளுடன் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 12 மற்றும் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் கொண்ட ஏர்பாட்ஸ் 5 அறிமுகப்படுத்தப்படலாம்.&lt;img&gt;இந்த வெளியீட்டு நிகழ்வு, ஆப்பிளின் தலைமைப் பொறுப்பில் ஏற்படும் முக்கிய மாற்றத்திற்குப் பிறகு நடைபெறுகிறது. டிம் குக் செயல் தலைவராகவும், ஜான் டெர்னஸ் சிஇஓ ஆகவும் பொறுப்பேற்கின்றனர்.]]></content:encoded>
            <category><![CDATA[technology]]></category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/technology/apple-announces-iphone-18-pro-and-foldable-iphone-launch-on-september-9-6nkcu5c"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Vastu Tips: இந்த இடத்தில் உப்பை வைக்காதீங்க.. வாஸ்து சொல்வது என்ன?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/webstories/astrology/vastu-shastra-tips-why-you-should-not-keep-salt-in-the-bathroom-skd77o1</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/webstories/astrology/vastu-shastra-tips-why-you-should-not-keep-salt-in-the-bathroom-skd77o1</guid>
            <pubDate>Thu, 27 Aug 2026 10:29:37 +0530</pubDate>
            <description><![CDATA[வீட்டில் அல்லது பாத்ரூமில் உள்ள நெகட்டிவ் எனர்ஜியை விரட்ட பலரும் உப்பைப் பயன்படுத்துகிறார்கள். கண் திருஷ்டி மற்றும் எதிர்மறை ஆற்றல்களை ஈர்க்கும் சக்தி உப்புக்கு இருப்பதாக ஒரு நம்பிக்கை உள்ளது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ksffhzne9bfj22h5grc7zx13,imgname-2-1779709836974.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <category><![CDATA[astrology]]></category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/webstories/astrology/vastu-shastra-tips-why-you-should-not-keep-salt-in-the-bathroom-skd77o1"/>
        </item>
        <item>
            <title><![CDATA[புதினா, கொத்தமல்லி அழுகாமல் இருக்க இந்த ஒரு பாக்ஸ் போதும்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/webstories/life-style/how-to-keep-coriander-and-mint-fresh-for-a-week-mlkbbuh</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/webstories/life-style/how-to-keep-coriander-and-mint-fresh-for-a-week-mlkbbuh</guid>
            <pubDate>Thu, 27 Aug 2026 10:29:30 +0530</pubDate>
            <description><![CDATA[Kitchen Hacks: கொத்தமல்லி, புதினா வாங்கிட்டு வந்த ரெண்டே நாள்ல வாடிப்போறது சகஜம். ஆனா, ஒரு வாரம் வரைக்கும் கீரைகள் ஃபிரெஷ்ஷா இருக்க ஒரு சூப்பர் டிப்ஸ் இருக்கு. இந்த முறையை ஃபாலோ பண்ணிப் பாருங்க!]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01knemb3s3cbnvgb90wegsj55x,imgname-untitled-design--67--1775386332963.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <category><![CDATA[life-style]]></category>
            <dc:creator>Rayar A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/webstories/life-style/how-to-keep-coriander-and-mint-fresh-for-a-week-mlkbbuh"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Post Office Schemes: வரி இல்லாமல் லாபம் தரும் போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள்.. முழு லிஸ்ட் இதோ!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/tax-free-post-office-schemes-3aohigs</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/tax-free-post-office-schemes-3aohigs</guid>
            <pubDate>Thu, 27 Aug 2026 10:18:18 +0530</pubDate>
            <description><![CDATA[Tax-Free Post Office Schemes: வரி இல்லாமல் லாபம் தரும் போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் குறித்தும் உங்களுக்கு எந்த திட்டம் சிறந்ததாக இருக்கும்? என்பது குறித்தும் இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktgwbye0agrk2gw399bhx03w,imgname-post-office-mis-1780830566848.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Tax-Free Post Office Schemes: வரி இல்லாமல் லாபம் தரும் போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் குறித்தும் உங்களுக்கு எந்த திட்டம் சிறந்ததாக இருக்கும்? என்பது குறித்தும் இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;போஸ்ட் ஆபிஸ் சேமிப்புத் திட்டங்கள் என்றாலே பாதுகாப்பானது என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது. காரணம், மத்திய அரசின் நேரடி உத்தரவாதம். ஆனால், வரிச் சலுகைகளைப் பொறுத்தவரை ஒவ்வொரு திட்டமும் ஒவ்வொருவிதம். முதலீடு, வட்டி, முதிர்வுத் தொகை என மூன்று நிலைகளிலும் வரி விலக்கு (EEE) அளிக்கும் திட்டங்கள் எவை, பகுதி சலுகை தரும் திட்டங்கள் எவை என்பதைத் தெரிந்துகொண்டால், உங்கள் பணமும் சேமிப்பாகும், வரியும் மிச்சமாகும்.&lt;/p&gt;&lt;p&gt;வரிச் சேமிப்புதான் உங்கள் முக்கிய நோக்கம் என்றால், அஞ்சலகத்தில் இந்த இரண்டு திட்டங்கள்தான் சிறந்த தேர்வுகள். முதலீடு, வட்டி, முதிர்வுத் தொகை என மூன்று கட்டங்களிலும் முழுமையான வரி விலக்கு அளிப்பதால், இவை முதலீட்டாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) திட்டம், சிறு சேமிப்புத் திட்டங்களிலேயே மிக அதிகபட்சமாக 8.2% வட்டியை வழங்குகிறது. இதில் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை செய்யும் முதலீட்டிற்கு பழைய வரி விதிப்பு முறையின் கீழ், பிரிவு 80C-ன் படி வரி விலக்கு உண்டு. 21 வருட முதிர்வுக்குப் பின் கிடைக்கும் தொகைக்கும் வரி கிடையாது என்பது இதன் சிறப்பம்சம்.&lt;/p&gt;&lt;p&gt;பொது வருங்கால வைப்பு நிதி (PPF) நீண்ட கால சேமிப்புக்கு ஒரு சிறந்த தேர்வாகும். 15 வருட கால அவகாசம் கொண்ட இத்திட்டம், தற்போது 7.1% வட்டி வழங்குகிறது. இதிலும் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரையிலான முதலீட்டிற்கு 80C பிரிவின் கீழ் வரி விலக்கு பெறலாம். சுகன்யா திட்டத்தைப் போலவே, இதிலும் முதலீடு முதல் முதிர்வு வரை வரி செலுத்தத் தேவையில்லை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சில திட்டங்கள் முதலீட்டுக்கு மட்டும் வரி விலக்கு அளிக்கின்றன, ஆனால் வட்டி வருமானத்திற்கு வரி விதிக்கப்படலாம். தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC) 7.7% வட்டி விகிதத்துடன் 5 வருட லாக்-இன் காலத்தைக் கொண்டுள்ளது. இதில் செய்யும் முதலீட்டுக்கு 80C வரி விலக்கு உண்டு. இதில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், முதல் நான்கு ஆண்டுகளுக்குக் கிடைக்கும் வட்டியை மறுமுதலீடாகக் கருதி, அதற்கும் 80C பிரிவின் கீழ் வரி விலக்கு கோரலாம். ஆனால், ஐந்தாம் ஆண்டு வட்டிக்கு வரி செலுத்த வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;5 ஆண்டு அஞ்சலக டைம் டெபாசிட் திட்டத்தில் முதலீட்டுக்கு மட்டும் 80C வரி விலக்கு கிடைக்கும். ஆனால், இதில் கிடைக்கும் வட்டிக்கு உங்கள் வருமான வரி வரம்புக்கு ஏற்ப வரி செலுத்த வேண்டும். மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்திலும் (SCSS) இதேபோல முதலீட்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு இருந்தாலும், வட்டி வருமானம் முழுமையாக வரிக்கு உட்பட்டது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS) மற்றும் கிசான் விகாஸ் பத்ரா (KVP) ஆகியவை முறையே நிலையான மாத வருமானம் மற்றும் பணத்தை இரட்டிப்பாக்க உதவுகின்றன. ஆனால், இவற்றின் முதலீட்டுக்கு 80C வரி விலக்கு கிடையாது. மேலும், இவற்றின் மூலம் கிடைக்கும் வட்டி வருமானத்திற்கும் வரி செலுத்த வேண்டும். எனவே, வரி சேமிப்பு உங்கள் நோக்கமாக இருந்தால், இந்தத் திட்டங்கள் சிறந்த தேர்வுகள் அல்ல என்பது தெளிவாகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[business]]></category>
            <dc:creator>Rayar A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/tax-free-post-office-schemes-3aohigs"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Onion Prices: ரயில் முழுவதும் வெங்காய மூட்டைகள்.! ஓடியாங்க ஓடியாங்க பை பையா அள்ளிக்கிட்டு போகலாம்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/onion-prices-onion-laden-trains-on-the-move-central-government-takes-big-action-to-control-prices-2o45omq</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/onion-prices-onion-laden-trains-on-the-move-central-government-takes-big-action-to-control-prices-2o45omq</guid>
            <pubDate>Thu, 27 Aug 2026 10:14:21 +0530</pubDate>
            <description><![CDATA[ரயில் முழுவதும் வெங்காய மூட்டைகள்.! விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை என்ன? தமிழக மக்களுக்கு கிடைக்கப்போகும் நிவாரணம் என்ன? முழு விவரம் இதோ.!]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m10qqaj3jbch0j6brmd4q9mq,imgname-chatgpt-image-aug-27--2026--09-55-52-am--1--1787805018690.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ரயில் முழுவதும் வெங்காய மூட்டைகள்.! விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை என்ன? தமிழக மக்களுக்கு கிடைக்கப்போகும் நிவாரணம் என்ன? முழு விவரம் இதோ.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வெங்காயத்தின் விலை வரும் நாட்களில் மேலும் அதிகரிக்குமோ என்ற கவலை பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள நிலையில், விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக, சேமித்து வைக்கப்பட்டுள்ள வெங்காயத்தை தேவை அதிகமாக இருக்கும் பகுதிகளுக்கு அனுப்பி விற்பனை செய்வதுடன், ரயில் மற்றும் சாலை போக்குவரத்து மூலமாகவும் வெங்காயத்தை விரைவாக நுகர்வு மையங்களுக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;2026-27ஆம் ஆண்டில் வெங்காயத்தின் விலை அதிகமாக உயராமல் இருக்க, விலை நிலைப்படுத்தல் நிதியின் கீழ் ரபி பருவ வெங்காயத்தை கொள்முதல் செய்து இருப்பில் வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மொத்தம் 2 லட்சம் டன் ரபி வெங்காயத்தை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இதுவரை சுமார் 1.21 லட்சம் டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெங்காயம் தேவையான நேரத்தில் சந்தைக்கு கொண்டு வரப்படுவதால், திடீரென ஏற்படும் தட்டுப்பாட்டை சமாளிக்கவும், விலை உயர்வை கட்டுப்படுத்தவும் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பொதுமக்களுக்கு ஓரளவு நிவாரணம் அளிக்கும் வகையில், இடையக இருப்பில் உள்ள வெங்காயத்தை கிலோ ரூ.35 என்ற விலையில் விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக கூட்டுறவு அமைப்புகளின் சில்லறை விற்பனை நிலையங்கள் மட்டுமின்றி, நடமாடும் விற்பனை வாகனங்களும் பயன்படுத்தப்பட உள்ளன. NCCF மற்றும் NAFED போன்ற அமைப்புகள் மூலம் பல்வேறு நகரங்களில் வெங்காய விற்பனை மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் சந்தை விலையை விட குறைந்த விலையில் பொதுமக்களுக்கு வெங்காயம் கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வெங்காயத்தை உற்பத்தி செய்யும் பகுதிகளில் இருந்து அதிக தேவை உள்ள நகரங்களுக்கு விரைவாக கொண்டு செல்வதற்காக &lsquo;கந்தா எக்ஸ்பிரஸ்&rsquo; என்ற சிறப்பு ரயில் போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2025-26ஆம் ஆண்டில் மட்டும் 86 ரயில் தடங்களில் சுமார் 88,000 டன் வெங்காயம் 16 நகரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டிலும் நாசிக்கில் இருந்து டெல்லிக்கு முதல் &lsquo;கந்தா எக்ஸ்பிரஸ்&rsquo; புறப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;அதாவது, வெங்காயம் விளையும் பகுதிகளில் மூட்டைகள் மூட்டைகளாக ஏற்றப்பட்டு, விலை அதிகமாக இருக்கும் நுகர்வு மையங்களுக்கு விரைவாக கொண்டு செல்லப்படுகிறது. இதன் மூலம் இடைத்தரகர்கள் மற்றும் நீண்ட தூர போக்குவரத்து காரணமாக ஏற்படும் கூடுதல் செலவுகளை குறைக்கவும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வெங்காய விநியோகத்தில் சென்னை உள்ளிட்ட முக்கிய நுகர்வு மையங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன. ரயில் மட்டுமின்றி சாலை வழியாகவும் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு வெங்காயம் அனுப்பப்பட்டு வருகிறது. சென்னை கோயம்பேடு சந்தையை பொறுத்தவரை, வெங்காயத்தின் விலை தற்போது கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் மத்திய அரசின் இருப்பில் இருந்து குறைந்த விலையில் வெங்காயம் சந்தைக்கு வந்தால், தமிழகத்திலும் விலை கட்டுக்குள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழகத்தில் ஆவணி மாதம் தொடங்கியுள்ள நிலையில், பல இடங்களில் திருமணங்கள் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற காலங்களில் காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான தேவை இயல்பாகவே அதிகரிக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;குறிப்பாக திருமண சமையலில் வெங்காயம் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால், தேவை அதிகரித்தால் சந்தை விலையிலும் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக வரும் நாட்களில் வெங்காயத்தின் விலை எப்படி இருக்கும் என்பது பொதுமக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதுபோன்ற தேவை அதிகரிக்கும் காலத்தை கருத்தில் கொண்டே மத்திய அரசு இருப்பில் உள்ள வெங்காயத்தை படிப்படியாக சந்தைக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதற்கிடையில், 2026 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் சுமார் 3.82 லட்சம் டன் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலேசியா, இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் நேபாளம் உள்ளிட்ட நாடுகள் முக்கிய ஏற்றுமதி சந்தைகளாக உள்ளன. உள்நாட்டு தேவையை கருத்தில் கொண்டு இருப்பு மற்றும் விநியோகத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நாடு முழுவதும் அத்தியாவசியப் பொருட்களின் விலையை மத்திய நுகர்வோர் விவகாரத் துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. 579 மையங்களில் 41 அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்பான தகவல்கள் தினசரி சேகரிக்கப்படுகின்றன. ஆகஸ்ட் 26ஆம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் வெங்காயத்தின் சராசரி சில்லறை விலை கிலோ ரூ.37.87 ஆக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விலையில் தொடர்ந்து மாற்றம் ஏற்படுகிறதா என்பதும், எந்தெந்த பகுதிகளில் அதிக தேவை உள்ளது என்பதும் கண்காணிக்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சென்னை கோயம்பேடு உள்ளிட்ட சந்தைகளில் விலை உயர்ந்தாலும், மத்திய அரசின் இருப்பில் இருந்து வெங்காயம் குறைந்த விலையில் விற்பனைக்கு வந்தால், மொத்த சந்தை விலையிலும் தாக்கம் ஏற்படலாம். இருப்பினும், அரசு விற்பனை நிலையங்கள் மற்றும் நடமாடும் வாகனங்களில் வெங்காயம் கிடைக்கும் இடங்கள் பகுதிக்கு பகுதி மாறுபடலாம். எனவே, விலை உயர்வை பார்த்து பொதுமக்கள் தேவைக்கு அதிகமாக வெங்காயத்தை வாங்கி பதுக்கி வைப்பதை தவிர்ப்பது நல்லது. அன்றாட தேவைக்கேற்ப வாங்குவது குடும்ப செலவையும் கட்டுப்படுத்த உதவும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வெங்காய உற்பத்தி, இருப்பு, போக்குவரத்து, ஏற்றுமதி மற்றும் உள்ளூர் தேவை ஆகிய பல காரணிகளின் அடிப்படையில்தான் அடுத்தடுத்த நாட்களில் விலை நிர்ணயமாகும். குறிப்பாக ஆவணி திருமண சீசனில் தேவை அதிகரித்தாலும், அரசு இருப்பில் இருந்து வெங்காயத்தை சந்தைக்கு கொண்டு வருவதால் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரயிலில் மூட்டை மூட்டையாக வெங்காயம்... சாலையிலும் சரக்கு வாகனங்களில் வெங்காய விநியோகம்... அதுவும் பொதுமக்களுக்கு கிலோ ரூ.35க்கு விற்பனை செய்யும் திட்டம்! என்ற மத்திய அரசின் நடவடிக்கை, வெங்காய விலை உயர்வால் கவலைப்படும் தமிழக மக்கள் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள நுகர்வோருக்கு நிச்சயம் கவனிக்க வேண்டிய செய்தியாக உள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[business]]></category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/onion-prices-onion-laden-trains-on-the-move-central-government-takes-big-action-to-control-prices-2o45omq"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Toxic Box Office: முதல் நாள் வசூல் ரூ.125 கோடியா? தெறிக்கவிடும் யாஷ்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/yash-starrer-toxic-movie-first-day-box-office-collection-crosses-125-crore-worldwide-miel551</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/yash-starrer-toxic-movie-first-day-box-office-collection-crosses-125-crore-worldwide-miel551</guid>
            <pubDate>Thu, 27 Aug 2026 09:06:05 +0530</pubDate>
            <description><![CDATA[யாஷ் நடித்துள்ள ‘டாக்ஸிக்’ படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும், பாக்ஸ் ஆபிஸில் பிரம்மாண்ட ஓப்பனிங் கிடைத்துள்ளது. வெளியான முதல் நாளிலேயே உலகளவில் இந்தப் படம் ₹125 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0yrna3tqmdpq7frfhagb2cn,imgname-toxic-movie-review-1787738892410.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[யாஷ் நடித்துள்ள &lsquo;டாக்ஸிக்&rsquo; படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும், பாக்ஸ் ஆபிஸில் பிரம்மாண்ட ஓப்பனிங் கிடைத்துள்ளது. வெளியான முதல் நாளிலேயே உலகளவில் இந்தப் படம் ₹125 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.&lt;img&gt;யாஷ் நடிச்ச 'டாக்ஸிக்' படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும், முதல் நாள் வசூலில் எந்த பாதிப்பும் இல்லை. உலக அளவில் படம் ₹125 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கலாம் என கணிக்கப்படுகிறது.&lt;img&gt;இந்தியாவில் மட்டும் படம் ₹90 கோடியில் இருந்து ₹95 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. பிரீமியர் ஷோ, செலிபிரிட்டி ஷோ எதுவும் இல்லாமல், ஆறு மொழிகளில் ரிலீஸ் ஆகி, பெரும்பாலான ஃபேன் ஷோக்கள் ஹவுஸ்ஃபுல் ஆகின.&lt;img&gt;&lt;p&gt;கன்னடத்தில் முதல் நாள் ₹20 கோடிக்கு அதிகமாகவும், ஹிந்தியில் ₹50 கோடிக்கு அதிகமாகவும் வசூல் ஆகியுள்ளது. தெலுங்கில் ₹11 கோடி வசூல் பதிவாகியுள்ளது. இதற்கு முன் 'KGF 2' படம் இதேபோல வசூலில் சாதனை படைத்தது.&lt;/p&gt;&lt;p&gt;சிம்பு அரசியலில் குதிக்கிறாரா? அவரே சொன்ன அந்த ரகசியத்தை இப்போ தெரிஞ்சுக்கோங்க.!https://tamil.asianetnews.com/gallery/cinema/str-on-cm-vijay-my-brother-is-doing-well-let-him-serve-the-people-says-silambarasan-d4xq3r8&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;'KGF 2' படத்திற்குப் பிறகு, யாஷின் படமே மீண்டும் ஒரு பெரிய சாதனையை படைக்கிறது. இந்திய சினிமாவில், இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான 'துரந்தர் 2' திரைப்படம், முதல் நாளில் ₹146 கோடி வசூலித்து முதலிடத்தில் உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;இந்த சினிமா செய்தியும் படித்தால் சுவாரஸ்யமாக இருக்கும் https://tamil.asianetnews.com/gallery/cinema/ilaiyaraaja-30-minute-musical-magic-all-songs-became-super-hits-which-movie-ndl3ymw&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முதல் நாள் வசூலில் 'டாக்ஸிக்' இரண்டாவது இடத்தில் உள்ளது. 4 வருடங்களுக்குப் பிறகு வந்துள்ள யாஷ் படத்தை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். ஆனாலும், படத்திற்கு பொதுவாக கலவையான விமர்சனங்களே வந்துள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;இதையும் படித்து பாருங்களேன.! https://tamil.asianetnews.com/gallery/cinema/yash-toxic-movie-first-review-positive-hype-and-negative-reports-857qn9n&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[cinema]]></category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/yash-starrer-toxic-movie-first-day-box-office-collection-crosses-125-crore-worldwide-miel551"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Kitchen Hacks: பூரி அதிக எண்ணெய் குடிக்கிறதா? சப்பாத்தி மாவு கருத்துப் போகுதா? இதோ சிம்பிள் டிப்ஸ்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/simple-kitchen-tricks-to-make-perfect-pooris-and-store-dough-fregyug</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/simple-kitchen-tricks-to-make-perfect-pooris-and-store-dough-fregyug</guid>
            <pubDate>Thu, 27 Aug 2026 08:44:42 +0530</pubDate>
            <description><![CDATA[சமையலறையில் நாம் தினமும் சந்திக்கும் சில பொதுவான பிரச்சனைகளுக்கு எளிய தீர்வுகள் உள்ளன. பூரி அதிகம் எண்ணெய் குடிக்காமல் இருக்கவும், மீதமான சப்பாத்தி மாவு கருத்துப் போகாமல் தடுக்கவும் சில சூப்பர் டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m10kc3vfsnz903vgeqdcw3xj,imgname-chatgpt-image-aug-27--2026--08-43-05-am--1--1787800457069.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[சமையலறையில் நாம் தினமும் சந்திக்கும் சில பொதுவான பிரச்சனைகளுக்கு எளிய தீர்வுகள் உள்ளன. பூரி அதிகம் எண்ணெய் குடிக்காமல் இருக்கவும், மீதமான சப்பாத்தி மாவு கருத்துப் போகாமல் தடுக்கவும் சில சூப்பர் டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம்.&lt;img&gt;சமையலறையில் பெண்களுக்கு தினமும் ஏதாவது ஒரு சவால் காத்துக்கொண்டே இருக்கும். ஆனால், எல்லாப் பிரச்சனைக்கும் ஒரு தீர்வு உண்டு. உப்பு, காரம் கூடினால் என்ன செய்வது, பூச்சி பிடிக்காமல் பொருட்களை எப்படிப் பாதுகாப்பது போன்ற டிப்ஸ் தெரிந்தால், சமையல் வேலை சுலபமாகிவிடும்.&lt;img&gt;நிறைய பேர் பூரி செய்வதற்கே பயப்படுவார்கள். காரணம், அது அதிக எண்ணெய் குடிக்கும் என்பதுதான். பூரியிலிருந்து வழியும் எண்ணெயைப் பார்த்தே, 'இந்த வம்பே வேண்டாம்' என ஒதுங்குபவர்களும் உண்டு.&lt;img&gt;ஆனால், ஒரு சின்ன டிப்ஸை ஃபாலோ செய்தால், பூரி துளிக்கூட எண்ணெய் குடிக்காது. தொட்டுப் பார்த்தால் கூட கையில் எண்ணெய் ஒட்டாது. அந்தளவுக்கு சூப்பராக வரும்.&lt;img&gt;பூரிக்கு மாவு பிசைந்து, உருட்டிய பிறகு, அதை ஒரு 10 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுங்கள். அதன் பிறகு எண்ணெயில் பொரித்தால், பூரி அதிகம் எண்ணெய் குடிக்காது, எண்ணெயும் வழியாது.&lt;img&gt;சப்பாத்தி அல்லது பூரிக்கு பிசைந்த மாவு மீந்துவிட்டால், அடுத்த நாள் அது கருத்துப் போவதைப் பார்த்திருப்பீர்கள். இதைத் தவிர்க்க, மீதமான மாவின் மேல் சிறிது நெய் தடவி, காற்றுப் புகாத டப்பாவில் வைத்து ஃப்ரிட்ஜில் வைத்தால், அடுத்த நாளும் ஃபிரெஷ்ஷாக இருக்கும்.]]></content:encoded>
            <category><![CDATA[life-style]]></category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/simple-kitchen-tricks-to-make-perfect-pooris-and-store-dough-fregyug"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Financial Rules: செப்டம்பர் 1 முதல் மாறும் விதிகள்: உங்கள் பணப் பரிவர்த்தனைகளில் என்னென்ன மாற்றங்கள்?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/september-2026-financial-changes-india-lpg-ekyc-fd-rules-and-travel-updates-kdv6lz5</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/september-2026-financial-changes-india-lpg-ekyc-fd-rules-and-travel-updates-kdv6lz5</guid>
            <pubDate>Thu, 27 Aug 2026 08:21:39 +0530</pubDate>
            <description><![CDATA[செப்டம்பர் 1 முதல் வங்கி, எல்பிஜி கேஸ், மற்றும் சர்வதேச பயணம் தொடர்பான பல புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. இந்த மாற்றங்கள் சாமானிய மக்களின் அன்றாட செலவுகள் மற்றும் சேமிப்பில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m10j1vgeykk0cvjhdedwdfb1,imgname-chatgpt-image-aug-27--2026--08-20-01-am--1--1787799072270.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[செப்டம்பர் 1 முதல் வங்கி, எல்பிஜி கேஸ், மற்றும் சர்வதேச பயணம் தொடர்பான பல புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. இந்த மாற்றங்கள் சாமானிய மக்களின் அன்றாட செலவுகள் மற்றும் சேமிப்பில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.&lt;img&gt;செப்டம்பர் 1 முதல், சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கை, சேமிப்பு, செலவுகளை நேரடியாகப் பாதிக்கும் பல முக்கிய மாற்றங்கள் வரப்போகின்றன. வங்கி, எல்பிஜி கேஸ் சிலிண்டர், வருமான வரி, சர்வதேச பயணம் என பல விதிகளும் மாறுகின்றன. இதில் சில மாற்றங்கள் மக்களுக்கு நிம்மதி தரும், சில உங்கள் பாக்கெட்டுக்கு பாரமாக இருக்கலாம்.&lt;img&gt;வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட்கள் தொடர்பாக சில முக்கிய மாற்றங்களைக் கொண்டு வருகின்றன. புதிய வழிகாட்டுதல்களின்படி, ரூ. 3 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட பெரிய டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களை வங்கிகள் தினமும் காலை 10:10 மணிக்குள் தங்கள் இணையதளங்களில் வெளியிட வேண்டும். இது சிறிய ஃபிக்ஸட் டெபாசிட்களைப் பாதிக்காது.&lt;img&gt;செப்டம்பர் 1 முதல், இந்தியாவிலிருந்து வெளிநாடு செல்லும் விமானப் பயணிகள் இனி இமிக்ரேஷன் கவுன்ட்டர்களில் போர்டிங் பாஸ்களில் ஸ்டாம்ப் குத்தத் தேவையில்லை. குடிவரவுப் பணியகம் (Bureau of Immigration) இந்த முடிவை எடுத்துள்ளது. பயணிகள் தங்கள் மொபைல் போனில் எலக்ட்ரானிக் போர்டிங் பாஸைக் காட்டினால் போதும். இதனால் பயணிகளின் நேரம் மிச்சமாகும்.&lt;img&gt;சமையல் எரிவாயு பயன்படுத்தும் குடும்பங்களுக்கு இது ஒரு முக்கியத் தகவல். எல்பிஜி இணைப்புக்கான இ-கேஒய்சி-யை முடிக்க ஆகஸ்ட் 31 கடைசித் தேதியாகும். செப்டம்பர் 1 முதல் இ-கேஒய்சி செய்ய முடியாது. ஆதார் பயோமெட்ரிக் அடிப்படையிலான இந்த செயல்முறை கட்டாயமாகும். இதை முடிக்கவில்லை என்றால், மானிய விலையில் சிலிண்டர் கிடைக்காமல் போகலாம்.&lt;img&gt;மேலே குறிப்பிட்ட மாற்றங்களுடன், செப்டம்பர் 1 அன்று எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை, விமான எரிபொருள் விலை, வங்கி எஃப்டி வட்டி விகிதங்கள் மற்றும் ஏடிஎம் பயன்பாட்டுக் கட்டணங்கள் மாற வாய்ப்புள்ளது. இவை அனைத்தும் சாமானிய மக்களின் மாதாந்திர பட்ஜெட்டைப் பாதிக்கும் என்பதால், புதிய விதிகளைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியம்.]]></content:encoded>
            <category><![CDATA[business]]></category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/september-2026-financial-changes-india-lpg-ekyc-fd-rules-and-travel-updates-kdv6lz5"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Shakeela: கோடிகளை ஏமாற்றிய சொந்த அக்கா... ஷகீலா பகிர்ந்த அதிர்ச்சி உண்மைகள்.. பரபரப்பு பேட்டி!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/shakeela-shocking-interview-denied-crores-by-her-own-sister-wzzycfm</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/shakeela-shocking-interview-denied-crores-by-her-own-sister-wzzycfm</guid>
            <pubDate>Thu, 27 Aug 2026 08:14:50 +0530</pubDate>
            <description><![CDATA[Shakeela: தென்னிந்திய சினிமாவில் அசைக்க முடியாத நடிகையாக வலம் வந்த ஷகீலா தன்னுடைய சொந்த அக்காவே தன்னிடம் பல கோடிகள் ஏமாற்றியதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார். ஷகீலாவின் பேட்டி குறித்து விரிவாக பார்ப்போம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kdjfbqjq40c53nafqbeh1kj8,imgname-whatsapp-image-2025-12-28-at-5.44.14-pm-1766925393495.jpeg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Shakeela: தென்னிந்திய சினிமாவில் அசைக்க முடியாத நடிகையாக வலம் வந்த ஷகீலா தன்னுடைய சொந்த அக்காவே தன்னிடம் பல கோடிகள் ஏமாற்றியதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார். ஷகீலாவின் பேட்டி குறித்து விரிவாக பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக வலம் வந்த நடிகை ஷகீலா, தான் சம்பாதித்த கோடிக்கணக்கான பணத்தை தன் சொந்த மூத்த சகோதரியே ஏமாற்றிவிட்டதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் வேதனையுடன் தெரிவித்துள்ளார். தற்போது அவரிடம் கொடுப்பதற்கு தன்னிடம் பணம் இல்லை என்பதால், அவர் திரும்பி வரக்கூடாது என்று பிரார்த்திப்பதாகவும் ஷகீலா கூறியுள்ளார். இந்த வெளிப்படையான பேட்டி, திரையுலகில் மீண்டும் ஒருமுறை சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;2000-களின் தொடக்கத்தில், மலையாளத் திரையுலகம் தொடர் சரிவுகளைச் சந்தித்துக்கொண்டிருந்த நேரம். அப்போது, மென்மையான ஆபாசப் படங்களின் மூலம் மிகப்பெரிய நட்சத்திரமாக உருவெடுத்தார் ஷகீலா. மோகன்லால், மம்மூட்டிக்கு இணையாக திரையரங்குகளுக்கு கூட்டத்தை வரவழைக்கும் சக்தியாக அவர் திகழ்ந்தது மறுக்க முடியாத உண்மை.&lt;/p&gt;&lt;p&gt;அவர் நடித்த 'கின்னரத்தும்பிகள்' (2000) திரைப்படம் வெறும் 12 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, சுமார் 4 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த வெற்றி, மலையாள சினிமாவில் 'ஷகீலா தரம்ங்கம்' (ஷகீலா அலை) என்ற ஒரு புதிய ட்ரெண்டை உருவாக்கியது. தனது உச்சக்கட்ட காலத்தில் சுமார் 4 கோடி ரூபாய் வரை சம்பாதித்ததாக ஷகீலா குறிப்பிடுகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அப்படி சம்பாதித்த பணம் எல்லாம் எங்கே போனது என்ற கேள்விக்கு, &quot;என் மூத்த சகோதரியிடம் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது, அவர் மகிழ்ச்சியாக செட்டிலாகிவிட்டார்&quot; என்று கிண்டலுடன் பதிலளித்தார் ஷகீலா. உங்களை அதிகம் ஏமாற்றியது யார் என்று கேட்டபோது, &quot;என் மூத்த சகோதரிதான்&quot; எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். ஆரம்பத்தில் அவர் தன்னை வந்து பார்க்கவில்லையே என வருத்தப்பட்டதாகவும், ஆனால் இப்போது அவரிடம் கொடுக்க தன்னிடம் பணம் இல்லாததால் அவர் வராமல் இருப்பதே நல்லது என நினைப்பதாகவும் அவர் கூறியது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.&lt;/p&gt;&lt;p&gt;பல ஆண்டுகளுக்கு முன் எழுதிய தனது சுயசரிதையில், &quot;நான் குற்றவாளி அல்ல; ஆனால் வருத்தமாக இருக்கிறது&quot; என்று ஷகீலா குறிப்பிட்டிருந்தார். அந்த வருத்தத்திற்குக் காரணம், தன்னைச் சுற்றியிருந்தவர்கள் தன்னை நேசிக்காமல், தனது பணத்தை மட்டுமே விரும்பியதுதான் என்பதை இந்தப் பேட்டியின் மூலம் அவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;திரையுலகம் தன்னை பயன்படுத்திக்கொண்டதாக கூறப்படுவதை ஷகீலா மறுக்கிறார். &quot;நான் செய்த வேலைக்கு எனக்கு நல்ல சம்பளம் கிடைத்தது, அதனால் அவர்கள் என்னை பயன்படுத்தவில்லை&quot; என்று அவர் கூறுகிறார். கேரளாவின் முன்னணி நட்சத்திரங்கள் தனது வளர்ச்சியைத் தடுத்ததாகக் கூறப்படுவதையும் அவர் நம்பவில்லை.&lt;/p&gt;&lt;p&gt;&quot;அவர்களுக்கு முன்னால் நான் ஒரு சிறிய புல்லைப் போன்றவள். அவர்கள் பெரிய மனிதர்கள், பெரிய மனம் கொண்டவர்கள், அப்படியெல்லாம் செய்ய மாட்டார்கள்&quot; என்று அவர் குறிப்பிடுகிறார். தனது உச்சக்கட்ட காலம் என்பது ஒரு அலை போன்றது என்றும், அது ஒருநாள் முடிவுக்கு வரும் என்பது தனக்கு முன்பே தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;மீண்டும் பிறந்தால் ஐபிஎஸ் அதிகாரிதான்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;தான் நடித்த படங்களுக்காகத் தான் ஒருபோதும் வருத்தப்படவில்லை என்று கூறும் ஷகீலா, &quot;அதனால்தானே 26 ஆண்டுகளுக்குப் பிறகும் நீங்கள் என்னை நேர்காணல் செய்கிறீர்கள்? என்று கேட்கிறார். இருப்பினும், வாழ்க்கையை மீண்டும் வாழ ஒரு வாய்ப்பு கிடைத்தால், இதே தொழிலைத் தேர்ந்தெடுக்க மாட்டேன் என்கிறார்.&lt;/p&gt;&lt;p&gt;மாறாக, சிறுவயதில் இருந்தே நன்றாகப் படித்து ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்பதே தனது விருப்பமாக இருந்திருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். பள்ளிக்காலத்தில் ஆசிரியர்கள் அடித்ததால் படிப்பை வெறுத்ததாகவும், ஆனால் இப்போது தனது நினைவாற்றல் சிறப்பாக இருப்பதால் எதையும் எளிதாகக் கற்றுக்கொள்ள முடியும் என்றும் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[cinema]]></category>
            <dc:creator>Rayar A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/shakeela-shocking-interview-denied-crores-by-her-own-sister-wzzycfm"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Nepal Flood: கைலாஷ் பாதை துண்டிப்பு, 105 இந்தியர்கள் மாயம்! ரசுவா துயரம் பற்றி முழு விவரம்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/world/nepal-flash-flood-indians-among-missing-kailash-mansarovar-travellers-in-nepal-tourism-board-list-amid-rasuwa-floods-9k9m85k</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/world/nepal-flash-flood-indians-among-missing-kailash-mansarovar-travellers-in-nepal-tourism-board-list-amid-rasuwa-floods-9k9m85k</guid>
            <pubDate>Thu, 27 Aug 2026 07:32:45 +0530</pubDate>
            <description><![CDATA[நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தால் 384 பயணிகளுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 291 வெளிநாட்டினர் மற்றும் 93 நேபாளிகள் அடங்குவர். இந்த பேரழிவால் திபெத் எல்லையோர சாலைகள் மற்றும் உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m10fpxrjtg9bacahm5hfrcxc,imgname-chatgpt-image-aug-27--2026--07-38-37-am--1--1787796616978.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தால் 384 பயணிகளுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 291 வெளிநாட்டினர் மற்றும் 93 நேபாளிகள் அடங்குவர். இந்த பேரழிவால் திபெத் எல்லையோர சாலைகள் மற்றும் உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நேபாளத்தின் இமயமலைப் பகுதியான ரசுவா மாவட்டத்தில் ஒரு பயங்கர திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இது திபெத் எல்லையருகே உள்ள முக்கிய சாலையைத் துண்டித்துள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான பயணிகளுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு, பெரிய தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;நேபாள சுற்றுலா வாரியம் (NTB) வெளியிட்ட முதற்கட்ட தகவல்படி, புதன்கிழமை காலை ஏற்பட்ட வெள்ளத்திற்குப் பிறகு 384 பயணிகளைக் காணவில்லை அல்லது தொடர்புகொள்ள முடியவில்லை. இந்த குழுவில் 291 வெளிநாட்டினரும், 93 நேபாள குடிமக்களும் உள்ளனர். வெளிநாட்டுப் பயணிகளில், 105 இந்தியர்களும், 37 வெளிநாடு வாழ் இந்தியர்களும் (NRIs) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.&lt;/p&gt;&lt;p&gt;இந்த புள்ளிவிவரங்கள் இன்னும் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. காணவில்லை அல்லது தொடர்பில் இல்லை என்று பட்டியலிடப்பட்ட 384 பேரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக அர்த்தம் இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;இந்த பேரழிவு, கைலாஷ் மலை மற்றும் மானசரோவர் ஏரிக்குச் செல்லும் யாத்ரீகர்களுக்கான முக்கிய வழித்தடமான திபெத் எல்லை நோக்கிய பயணத்தையும் பாதித்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ரசுவாவில் என்ன நடந்தது?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;புதன்கிழமை காலை திபெத் பக்கத்திலிருந்து நேபாளத்திற்குள் நுழைந்த இந்த திடீர் வெள்ளம், ரசுவாவில் உள்ள போட்டே கோஷி ஆற்று அமைப்பில் பாய்ந்தது.&lt;/p&gt;&lt;p&gt;திமூர் மற்றும் சியாப்ருபெசி பகுதிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டன. வெள்ளம் சாலைகள், பாலங்கள், வாகனங்கள், சந்தைப் பகுதிகள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளை அடித்துச் சென்றது அல்லது சேதப்படுத்தியது. இந்த வெள்ள நீர் மற்ற ஆறுகளுடன் கலந்ததால், கீழ்நிலை மாவட்டங்களிலும் இதன் தாக்கம் உணரப்பட்டது.&lt;/p&gt;&lt;p&gt;வெள்ளத்திற்கான சரியான காரணம் முதலில் தெளிவாகத் தெரியவில்லை. அப்பகுதியில் மழையே பெய்யவில்லை என்று உள்ளூர் அதிகாரிகள் கூறியதால், இமயமலைப் பகுதியில் என்ன நடந்தது என்பது குறித்த கவலைகள் அதிகரித்தன.&lt;/p&gt;&lt;p&gt;பின்னர் வந்த தகவல்கள், பனி மற்றும் பாறை சரிவு இந்த திடீர் வெள்ளப்பெருக்கைத் தூண்டியிருக்கலாம் என்று கூறின. இருப்பினும், அதிகாரிகள் இந்த நிகழ்வுகளின் வரிசையையும், பேரழிவின் முழு அளவையும் தொடர்ந்து மதிப்பிட்டு வருகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நேபாள சுற்றுலா வாரியத்தின் முதற்கட்ட ஏஜென்சி வாரியான பதிவு, உடனடியாகத் தொடர்புகொள்ள முடியாத பயணிகளின் தெளிவான அதிகாரப்பூர்வ சித்திரத்தை வழங்குகிறது.&lt;/p&gt;&lt;p&gt;இந்த பட்டியலின்படி, Trekkers Society நிறுவனத்தின் 92 பயணிகள், Samrat Tours &amp;amp; Travels நிறுவனத்தின் 71 பயணிகள், Leaf Holiday-யின் 55 பயணிகள், Himalayan Glacier-இன் 52 பயணிகள், Kailash Journey-யின் 31 பயணிகள், Fishtail Tours &amp;amp; Travels-இன் 27 பயணிகள், Alpine Eco Trek-இன் 20 பயணிகள், Kathmandu Holiday Tours &amp;amp; Travels-இன் 17 பயணிகள், Richa Tours-இன் 12 பயணிகள், மற்றும் Explore Vacation-இன் 7 பயணிகள் ஆகியோரைத் தொடர்புகொள்ள முடியவில்லை.&lt;/p&gt;&lt;p&gt;நேபாள சுற்றுலா வாரியம் பதிவேற்றியுள்ள அறிவிப்பில், இந்தத் தகவல் முதற்கட்டமானது என்றும், பயண முகமைகள், வழிகாட்டிகள், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுடன் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;எனவே, இந்தப் பட்டியலை உறுதிப்படுத்தப்பட்ட உயிரிழப்புப் பட்டியலாகக் கருதக்கூடாது.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;105 இந்தியர்கள் மற்றும் 37 வெளிநாடு வாழ் இந்தியர்கள் அடையாளம்&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;சுற்றுலா வாரியத்தின் ஏஜென்சி வாரியான தகவலின்படி, Samrat Tours &amp;amp; Travels மூலம் 59 இந்தியர்களும், Leaf Holiday மூலம் 46 இந்தியர்களும் பயணம் செய்துள்ளனர். மொத்தமாக, இது 105 இந்தியர்கள் ஆகிறது.&lt;/p&gt;&lt;p&gt;இந்த முதற்கட்ட பதிவில், Himalayan Glacier நிறுவனத்துடன் தொடர்புடைய 37 வெளிநாடு வாழ் இந்தியர்களும் (NRIs) உள்ளனர். பட்டியலில் உள்ள மற்ற வெளிநாட்டுப் பயணிகளில் பலர் அமெரிக்கா, மலேசியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சிலரின் குடியுரிமை இன்னும் சரிபார்க்கப்பட்டு வருகிறது.&lt;/p&gt;&lt;p&gt;எண்ணிக்கைகளைப் பற்றிச் சொல்லும்போது, இந்தியக் குடிமக்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இடையிலான வேறுபாடு முக்கியமானது. சுற்றுலா வாரியத்தின் முதற்கட்ட தரவு 105 இந்தியக் குடிமக்களை அடையாளம் கண்டு, 37 வெளிநாடு வாழ் இந்தியர்களைத் தனியாகப் பட்டியலிடுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரசுவா மாவட்டம், நேபாள-சீன எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இது திபெத்தை நோக்கிய ஒரு முக்கிய பயண வழித்தடத்தின் ஒரு பகுதியாகும்.&lt;/p&gt;&lt;p&gt;சாலைகள் மற்றும் உள்கட்டமைப்புகளின் திடீர் அழிவு, கைலாஷ் மானசரோவர் யாத்திரை பாதையுடன் தொடர்புடைய பயணங்கள் உட்பட, இப்பகுதி வழியாகச் செல்லும் பயணிகளைப் பாதித்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;பேரழிவின் காரணமாக கிட்டத்தட்ட 400 யாத்ரீகர்கள் சிக்கியிருக்கலாம் அல்லது துண்டிக்கப்பட்டிருக்கலாம் என்று முந்தைய அறிக்கைகள் தெரிவித்தன. இருப்பினும், நேபாள சுற்றுலா வாரியத்தின் அதிகாரப்பூர்வ முதற்கட்ட பட்டியல், பரந்த அளவில் 384 பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளைக் குறிப்பிடுகிறது. அவர்களின் இருப்பிடம் மற்றும் பாதுகாப்பு இன்னும் சரிபார்க்கப்பட்டு வருகிறது.&lt;/p&gt;&lt;p&gt;தகவல் தொடர்பு துண்டிப்பு மற்றும் சேதமடைந்த சாலைகள், பாதிக்கப்பட்ட பிராந்தியத்தில் உள்ள அனைவருடனும் அதிகாரிகள் மற்றும் பயண ஏற்பாட்டாளர்கள் விரைவாகத் தொடர்பை ஏற்படுத்துவதை கடினமாக்கியுள்ளன.&lt;/p&gt;&lt;h3&gt;&lt;strong&gt;மீட்புக் குழுக்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் குவிப்பு&lt;/strong&gt;&lt;/h3&gt;&lt;p&gt;நேபாளம், ராணுவம், காவல்துறை மற்றும் பிற அவசரகாலப் பணியாளர்களைத் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காகத் திரட்டியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;இந்த கடினமான இமயமலைப் பகுதியில் மீட்புப் பணிகளுக்கு உதவுவதற்காக ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், சேதமடைந்த உள்கட்டமைப்பு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலவும் சூழல் காரணமாக மீட்புப் பணிகள் சிக்கலாகியுள்ளன. கீழ்நிலை நதி அமைப்புகளின் கரையோர சமூகங்களை விழிப்புடன் இருக்குமாறும், தேவைப்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.&lt;/p&gt;&lt;p&gt;சமீபத்திய அறிக்கைகளின்படி, குறைந்தது எட்டு இறப்புகள் பதிவாகியுள்ளன. காணாமல் போனவர்களின் எண்ணிக்கை மற்றும் அழிவின் முழு பரிமாணம் இன்னும் மதிப்பிடப்பட்டு வருகிறது.&lt;/p&gt;&lt;p&gt;நிலைமை வேகமாக மாறிவருவதால், தகவல் தொடர்பு மீட்டெடுக்கப்பட்டு, மீட்புக் குழுக்கள் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களைச் சென்றடையும்போது, உயிரிழப்பு மற்றும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை திருத்தப்படலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த பேரழிவு இந்தியாவிலும் கவலைகளை எழுப்பியுள்ளது. ஏனெனில், பாதிக்கப்பட்ட நதி அமைப்பு பரந்த கண்டக் படுகையுடன் இணைக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;நேபாளத்தில் உள்ள கண்டக் ஆற்றின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதியில் திடீரென நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால், சிறப்பு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாக பீகார் பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;பீகார் முதல்வர் சாம்ராட் சவுத்ரி X தளத்தில், &quot;நேபாளத்தின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளச் சூழலைக் கருத்தில் கொண்டு, உயர் மட்ட ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. சம்பந்தப்பட்ட மாவட்டங்கள் முழு எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன&quot; என்று பதிவிட்டுள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;&quot;மேற்கு சம்பாரண், கிழக்கு சம்பாரண், கோபால்கஞ்ச், சரண், முசாபர்பூர் மற்றும் வைஷாலி உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களில் கரைகளை இரவு பகலாக கண்காணித்தல், இரவு நேர ரோந்து மற்றும் தேவையான தயாரிப்புகளை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டது. NDRF மற்றும் SDRF குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன&quot; என்றும் அவர் கூறினார்.&lt;/p&gt;&lt;p&gt;இதற்கிடையில், தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) குறைந்தது 10 குழுக்கள் ஏற்கனவே பீகாரில் நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர். நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து அவர்கள் உஷார் நிலையில் உள்ளனர். மேலும் இரண்டு கூடுதல் குழுக்களுக்கான கோரிக்கை வந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.&lt;/p&gt;&lt;p&gt;தலைமைச் செயலாளர் பிரத்யய அமிர்த் தலைமையில், மாவட்ட அதிகாரிகள் மற்றும் மூத்த காவல்துறை அதிகாரிகளுடன் உயர் மட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மீட்பு மற்றும் நிவாரணத்திற்கான ஏற்பாடுகள் மதிப்பாய்வு செய்யப்பட்டதாகவும், கரைகள் மற்றும் பிற முக்கிய உள்கட்டமைப்புகளைக் கண்காணிக்க நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.&lt;/p&gt;&lt;p&gt;கிடைக்கும் நீரோட்டத்தை பாதுகாப்பாக நிர்வகிக்க உதவும் வகையில், கண்டக் அணை மற்றும் அதனுடன் தொடர்புடைய கால்வாய்களின் மதகுகள் வழியாக தண்ணீரை வெளியேற்றவும் நீர்வளத் துறை உத்தரவிட்டது.&lt;/p&gt;&lt;p&gt;பீகார் அதிகாரிகள் பீதியடையத் தேவையில்லை என்று வலியுறுத்தியுள்ளனர். ஆனால், பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் அதிகாரிகள் தயாராக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.&lt;/p&gt;&lt;p&gt;ஆகஸ்ட் 26 ஆம் தேதிக்கான மாநிலத்தின் அதிகாரப்பூர்வ வெள்ளக் கண்காணிப்புத் தரவுகளின்படி, கண்டக் ஆறு டுமாரியாகாட்டில் அபாய அளவைத் தாண்டியும், பல கண்காணிப்பு நிலையங்களில் எச்சரிக்கை அளவைத் தாண்டியும் பாய்ந்தது. இதுவே, அதிகாரிகள் ஏன் நதி அமைப்பை உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அடையாளம் காணும் பணி தொடர்வதால், பயணிகளும் அவர்களது குடும்பத்தினரும் பீதியடைய வேண்டாம் என்றும், சரிபார்க்கப்பட்ட தகவல்களை மட்டுமே நம்புமாறும் நேபாள சுற்றுலா வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;அவசர உதவி தேவைப்படுபவர்கள், நேபாளத்தின் கட்டணமில்லா அவசர எண் 1234, ஹாட்லைன் 1144, அல்லது சுற்றுலா காவல்துறை எண் 9851289445-ஐத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அருகிலுள்ள காவல்துறை அல்லது பாதுகாப்பு ஆணையம், உள்ளூர் நிர்வாகம், பயண நிறுவனம், வழிகாட்டி அல்லது டூர் ஆபரேட்டரைத் தொடர்பு கொள்ளுமாறும் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகமும், நாட்டில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் குறித்த தகவல் மற்றும் உதவிக்காக அவசர எண்களை வெளியிட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தொடர்பில் இல்லாதவர்களைக் கண்டுபிடிப்பது, தகவல் தொடர்பை மீட்டெடுப்பது மற்றும் பாதிக்கப்பட்ட இமயமலைப் பகுதி முழுவதும் சேதத்தை மதிப்பிடுவது ஆகியவை உடனடி முன்னுரிமையாக உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;நேபாள சுற்றுலா வாரியத்தால் பட்டியலிடப்பட்ட 384 பயணிகளின் குடும்பங்களுக்கு, இந்தத் தரவு முதற்கட்டமானது என்பது, அவசரப்பட்டு முடிவுகளுக்கு வர வேண்டாம் என்பதற்கான ஒரு முக்கிய காரணமாகும். அதிகாரிகள் இன்னும் பயண முகமைகள், வழிகாட்டிகள், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களுடன் பெயர்களை சரிபார்த்து வருகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;உறுதிப்படுத்தப்பட்ட முழுமையான சித்திரம் இன்னும் வெளிவரவில்லை. நேபாள-திபெத் எல்லையில் ஒரு சக்திவாய்ந்த திடீர் வெள்ளம் பெரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது, ஒரு முக்கியமான பயண வழித்தடத்தை சீர்குலைத்துள்ளது, மேலும் பிராந்தியத்தின் மிகப்பெரிய மீட்புப் பணிகளில் ஒன்று நடைபெற்று வரும் நிலையில், நூற்றுக்கணக்கான பயணிகளை தற்காலிகமாக தொடர்பில்லாமல் ஆக்கியுள்ளது என்பது மட்டும் தெளிவாகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[world]]></category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/world/nepal-flash-flood-indians-among-missing-kailash-mansarovar-travellers-in-nepal-tourism-board-list-amid-rasuwa-floods-9k9m85k"/>
        </item>
        <item>
            <title><![CDATA[முடி கொட்டுதா? ஷாம்பூவை மாத்துறதுக்கு முன்னாடி உங்க வீட்டுக் குழாய் தண்ணீரை செக் பண்ணுங்க!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/hair-fall-issues-test-your-tap-water-before-changing-your-shampoo-41m77ry</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/hair-fall-issues-test-your-tap-water-before-changing-your-shampoo-41m77ry</guid>
            <pubDate>Thu, 27 Aug 2026 07:04:48 +0530</pubDate>
            <description><![CDATA[Hair Fall: முடி கொட்டுவதற்கு சில ஷாம்பூ மட்டும் காரணமல்ல. கடின நீர் பயன்பாட்டால் முடி வறண்டு உடைவது அதிகரிக்கும். இது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0zctzyrfh6880e2fhx6v86h,imgname-hair-fall-1787760050136.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Hair Fall: முடி கொட்டுவதற்கு சில ஷாம்பூ மட்டும் காரணமல்ல. கடின நீர் பயன்பாட்டால் முடி வறண்டு உடைவது அதிகரிக்கும். இது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதிகமாக முடி கொட்டுகிறதா? பலரும் செய்யும் முதல் வேலை, பயன்படுத்தும் ஷாம்பூவை மாற்றுவதுதான். ஆனால், பிரச்சினை நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பூவில் இல்லாமல், உங்கள் வீட்டுக் குழாயில் வரும் தண்ணீரில்கூட இருக்கலாம். ஆம், 'கடின நீர்' (Hard Water) என்று சொல்லப்படும் அதிக கனிமங்கள் கலந்த தண்ணீர், உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தை வெகுவாகப் பாதிக்கக்கூடும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;கடின நீர் முடிக்கு என்ன செய்யும்?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;தண்ணீரில் கால்சியம், மெக்னீசியம் போன்ற கனிமங்களின் அளவு அதிகமாக இருக்கும்போது அது கடின நீர் எனப்படுகிறது. இந்தத் தண்ணீரைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது, இந்தக் கனிமங்கள் உங்கள் தலைமுடியிலும் உச்சந்தலையிலும் ஒரு படலம்போலப் படியத் தொடங்கும்.&lt;/p&gt;&lt;p&gt;இதனால், முடியின் இயற்கையான ஈரப்பதம் குறைந்து, வறண்டு, கரடுமுரடாகிவிடும். இதன் விளைவாக, முடி எளிதில் உடையும் தன்மைக்கு ஆளாவதால், முடி உதிர்வு அதிகரிப்பது போலத் தோன்றும். ஏற்கெனவே வறண்ட அல்லது சேதமடைந்த முடி கொண்டவர்களுக்கு இதன் பாதிப்பு இன்னும் அதிகமாகவே இருக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முதற்கட்டமாக, உங்கள் ஷாம்பூ தேர்வில் கவனம் செலுத்தலாம். வாரத்திற்கு ஒருமுறை 'கிளாரிஃபையிங் ஷாம்பூ' (Clarifying Shampoo) பயன்படுத்தி, தலையில் படிந்துள்ள கனிமப் படிவுகளை அகற்றலாம். கடின நீருக்கென்றே பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட 'கிலேட்டிங் ஷாம்பூ' வகைகளும் உள்ளன; இவை கனிமங்களை நீக்கப் பெரிதும் உதவும்.&lt;/p&gt;&lt;p&gt;தலைக்குக் குளித்த பிறகு, கண்டிஷனர் பயன்படுத்துவதை ஒருபோதும் தவிர்க்காதீர்கள். இது முடியின் ஈரப்பதத்தைப் பாதுகாக்க உதவும். வாரத்திற்கு ஒருமுறை ஆழமான ஈரப்பதமூட்டும் ஹேர் மாஸ்க் பயன்படுத்துவது, கடின நீரால் ஏற்படும் வறட்சியைச் சரிசெய்யும்.&lt;/p&gt;&lt;p&gt;முழுவதுமாக தண்ணீரை மாற்ற முடியாதவர்கள், குளித்து முடித்ததும் கடைசியாக வடிகட்டிய நீரில் தலையை அலசுவது நல்ல பலனைத் தரும். மேலும், அதிக சூடான நீரில் குளிப்பதைத் தவிர்த்து, மிதமான வெந்நீரைப் பயன்படுத்துவது முடியின் இயற்கையான எண்ணெய்ப் பசையைப் பாதுகாக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கடின நீர் உங்கள் முடியின் தன்மையைப் பாதித்து, முடி உடைதலை அதிகரிக்கலாம் என்பது உண்மைதான். ஆனால், அதிகப்படியான முடி உதிர்வுக்கு இது மட்டுமே காரணமாக இருக்காது. ஊட்டச்சத்துக் குறைபாடு, ஹார்மோன் மாற்றங்கள், மன அழுத்தம் அல்லது மரபியல் காரணங்களாலும் முடி கொட்டலாம்.&lt;/p&gt;&lt;p&gt;வீட்டு வைத்தியமாகச் சொல்லப்படும் வினிகர் அலசல் போன்றவற்றை நம்பி முயற்சிக்கும் முன் கவனம் தேவை, ஏனெனில் அது நிரூபிக்கப்பட்ட தீர்வு அல்ல என்பதுதான் நிதர்சனம். அது உச்சந்தலையில் எரிச்சலையும் ஏற்படுத்தக்கூடும்.&lt;/p&gt;&lt;p&gt;எனவே, உங்கள் பகுதியில் உள்ள நீரின் தன்மையை முதலில் பரிசோதித்துப் பாருங்கள். அதன் பிறகும் முடி உதிர்வு கட்டுப்படவில்லை என்றால், தாமதிக்காமல் ஒரு தோல் மற்றும் முடி நிபுணரை அணுகி சரியான காரணத்தைக் கண்டறிவது அவசியம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[life-style]]></category>
            <dc:creator>Rayar A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/hair-fall-issues-test-your-tap-water-before-changing-your-shampoo-41m77ry"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Astrology: கோசார கிரகப் பெயர்ச்சி 2026.! வண்டி, வாகனம், பங்களா வாங்கும் யோகம் எந்தெந்த நட்சத்திரங்களுக்கு?!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/2026-horoscope-astrology-for-12-zodiac-sings-and-vehicle-car-luxury-home-buying-luck-for-these-zodiac-stars-bs381tn</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/2026-horoscope-astrology-for-12-zodiac-sings-and-vehicle-car-luxury-home-buying-luck-for-these-zodiac-stars-bs381tn</guid>
            <pubDate>Thu, 27 Aug 2026 06:48:56 +0530</pubDate>
            <description><![CDATA[கோசார கிரகப் பெயர்ச்சி 2026-ல் வண்டி, கார், புதிய வாகனம், வீடு, நிலம், பங்களா வாங்கும் யோகம் யாருக்கு கைகூடும்? குரு, சனி, சுக்கிரன் உள்ளிட்ட கிரகங்களின் கோசார பலன்கள் மற்றும் சொத்து சேர்க்கைக்கான ஜோதிட பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m10cqbgrczbv9tkkqmaz3m7s,imgname-chatgpt-image-aug-27--2026--06-33-32-am--2--1787793485335.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கோசார கிரகப் பெயர்ச்சி 2026-ல் வண்டி, கார், புதிய வாகனம், வீடு, நிலம், பங்களா வாங்கும் யோகம் யாருக்கு கைகூடும்? குரு, சனி, சுக்கிரன் உள்ளிட்ட கிரகங்களின் கோசார பலன்கள் மற்றும் சொத்து சேர்க்கைக்கான ஜோதிட பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;2026-ம் ஆண்டு கோசார கிரக நிலைகளில் பல முக்கியமான மாற்றங்கள் நிகழ்கின்றன. குறிப்பாக குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெறுவது, சனி பகவான் மீன ராசியில் சஞ்சரிப்பது, ராகு-கேது பெயர்ச்சிகள் போன்றவை ஜாதகத்தில் முக்கியமான பாவங்களைத் தூண்டக்கூடியதாக ஜோதிட ரீதியாக பார்க்கப்படுகின்றன. 2026 ஜூன் 2 முதல் குரு கடகத்தில் உச்ச நிலையில் சஞ்சரிக்கிறார்; அக்டோபர் 31 அன்று சிம்மத்திற்குச் செல்கிறார். சனி ஆண்டு முழுவதும் மீனத்தில் சஞ்சரிக்கிறார்.&lt;/p&gt;&lt;p&gt;வாகனம், வீடு, நிலம், பங்களா போன்ற அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்குவதற்கு ஜோதிடத்தில் 4-ம் பாவம், 4-ம் பாவ அதிபதி, சுக்கிரன், செவ்வாய், சந்திரன் மற்றும் குருவின் கோசாரம் முக்கியமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக 4-ம் பாவம் வாகனம், வீடு, நிலம், சுகவாழ்வு ஆகியவற்றைக் குறிக்கிறது. அதனுடன் தன பாவமான 2-ம் பாவம், லாப பாவமான 11-ம் பாவம் ஆகியவை வலுப்பெற்றால் சொத்து சேர்க்கைக்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்று ஜோதிடப் பார்வையில் கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 2026-ல் பொருளாதார ரீதியாக முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உருவாகலாம். சந்திரனின் ஆதிக்கம் கொண்ட இந்த நட்சத்திரம் சுகபோக வாழ்க்கை, வசதி, அழகு மற்றும் பொருள் சேர்க்கையுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. குருவின் சாதகமான கோசாரம் குடும்பத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்தி, நீண்ட நாட்களாக திட்டமிட்டிருந்த கார், இருசக்கர வாகனம் அல்லது சொந்த வீடு வாங்கும் எண்ணத்திற்கு சாதகமான சூழலை உருவாக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பூசம் நட்சத்திரத்திற்கு 2026-ம் ஆண்டின் குரு கோசாரம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. குரு பகவான் கடகத்தில் உச்சம் பெறும் காலகட்டம் என்பதால், குடும்பம், வீடு, சொத்து மற்றும் வாழ்க்கை வசதிகள் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் கிடைக்கலாம். குறிப்பாக ஜாதகத்தில் 4-ம் பாவம் வலுவாக இருந்து தசா-புக்தியும் சாதகமாக இருந்தால் புதிய வீடு வாங்குதல், வீட்டை விரிவுபடுத்துதல் அல்லது வாகனம் வாங்குதல் போன்ற யோகங்கள் கைகூடலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 2026-ல் நிதி திட்டமிடல் மூலம் சொத்து சேர்க்கும் வாய்ப்பு உருவாகலாம். குருவின் பார்வை மற்றும் சனியின் கட்டுப்படுத்தும் தன்மை இணைந்து செயல்படும்போது, அவசரமாக முடிவெடுப்பதை விட திட்டமிட்டு முதலீடு செய்வதற்கான சூழல் ஏற்படும். கார், புதிய வாகனம், வீட்டுமனை அல்லது சொந்த வீடு வாங்குவதற்கான முயற்சிகள் படிப்படியாக நிறைவேறலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சனி பகவான் மீன ராசியில் சஞ்சரிப்பது உத்திரட்டாதி நட்சத்திரத்தினருக்கு பொறுமையையும் நீண்டகால திட்டமிடலையும் வலியுறுத்தும் காலமாக இருக்கலாம். சனி பொதுவாக தாமதத்தைக் கொடுத்தாலும் நிலையான பலன்களை வழங்கக்கூடிய கிரகமாக ஜோதிடத்தில் பார்க்கப்படுகிறது. எனவே உடனடி லாபத்தை எதிர்பார்ப்பதைவிட, நீண்டகால சேமிப்பு மற்றும் கடன் திட்டமிடல் மூலம் வீடு, நிலம் அல்லது வாகனம் வாங்கும் யோகம் உருவாகலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 2026-ல் குடும்ப நலன் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை மீது கவனம் அதிகரிக்கலாம். ஜாதகத்தில் 2-ம் பாவம், 4-ம் பாவம் மற்றும் 11-ம் பாவம் வலுப்பெற்றிருந்தால் சொத்து சேர்க்கைக்கான வாய்ப்புகள் அதிகரிக்கலாம். குறிப்பாக குடும்பத்தினருடன் ஆலோசித்து புதிய கார், வீட்டு உபயோக வாகனம் அல்லது சொந்த வீடு வாங்கும் முயற்சி வெற்றியடையக்கூடும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வாகன யோகத்தைப் பார்க்கும்போது சுக்கிரன் மிகவும் முக்கியமான கிரகமாக கருதப்படுகிறார். சுக்கிரன் ஆடம்பரம், வாகனம், வசதி, அழகு, சொகுசு வாழ்க்கை ஆகியவற்றின் காரகன். அதே நேரத்தில் குரு தனம், விருத்தி, விரிவாக்கம் மற்றும் குடும்ப வளத்தைக் குறிக்கிறார். எனவே குரு மற்றும் சுக்கிரன் சாதகமாக இருக்கும் காலகட்டத்தில் வாகனம் அல்லது வீடு வாங்கும் முயற்சிகளுக்கு ஜோதிட ரீதியாக நல்ல ஆதரவு இருப்பதாகக் கருதலாம்.&lt;/p&gt;&lt;p&gt;2026 ஆகஸ்ட் 19 முதல் குரு ஆயில்யம் (ஆஷ்லேஷா) நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார்; அக்டோபர் 31 அன்று சிம்ம ராசிக்குச் செல்கிறார். இதனால் ஆகஸ்ட் முதல் அக்டோபர் இறுதி வரையிலான காலம் பலருக்கும் முக்கியமான முடிவுகள் மற்றும் சொத்து தொடர்பான திட்டங்களை மறுபரிசீலனை செய்யும் காலமாக அமையலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நட்சத்திரத்தை மட்டும் வைத்து வாகனம் அல்லது பங்களா வாங்கும் யோகம் இருப்பதாக உறுதியாகக் கூற முடியாது. லக்னம், லக்னாதிபதி, 4-ம் பாவம், 4-ம் பாவ அதிபதி, 2-ம் பாவம், 11-ம் பாவம், சுக்கிரன், குரு, செவ்வாய், நடப்பு தசா-புக்தி மற்றும் கோசார பலன்கள் ஆகிய அனைத்தையும் இணைத்துப் பார்த்தால்தான் தனிப்பட்ட பலனை கணிக்க முடியும்.&lt;/p&gt;&lt;p&gt;அதனால் 2026-ல் மேலே குறிப்பிடப்பட்ட நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சொத்து அல்லது வாகனம் வாங்கும் முயற்சிகளில் சாதகமான காலகட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இருப்பினும் இது ஜோதிட நம்பிக்கையின் அடிப்படையிலான பொதுப்பலன் மட்டுமே; தனிப்பட்ட ஜாதக அமைப்பின்படி பலன்கள் மாறுபடலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[astrology]]></category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/2026-horoscope-astrology-for-12-zodiac-sings-and-vehicle-car-luxury-home-buying-luck-for-these-zodiac-stars-bs381tn"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Horoscope: வியாழக்கிழமை ராசிபலன்: தொட்டதெல்லாம் துலங்கும் யோகம் யாருக்கு? முழுமையான பலன்கள்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/thursday-horoscope-aug-27-2026-daily-rasipalan-sh08c48</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/thursday-horoscope-aug-27-2026-daily-rasipalan-sh08c48</guid>
            <pubDate>Thu, 27 Aug 2026 06:03:56 +0530</pubDate>
            <description><![CDATA[Horoscope: ஆகஸ்ட் 27 ஆம் தேதி வியாழக்கிழமையான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் விரிவான பலன்களை இந்த செய்தியில் பார்ப்போம். எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்? எந்த ராசிகளுக்கு துரதிருஷ்டம்? என பார்ப்போம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0zbc7w30dt629ac0566t0bh,imgname-horoscope-1787758518147.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Horoscope: ஆகஸ்ட் 27 ஆம் தேதி வியாழக்கிழமையான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் விரிவான பலன்களை இந்த செய்தியில் பார்ப்போம். எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்? எந்த ராசிகளுக்கு துரதிருஷ்டம்? என பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;27.08.2026 வியாழக்கிழமையான இன்று பஞ்சாங்கப்படி வளர்பிறை சதுர்தசி திதி மற்றும் அவிட்டம் நட்சத்திரம் இணைந்த சுபயோக தினமாகும். இன்றைய நாளில் வரதராஜ பெருமாள் வழிபாடு மற்றும் சிவன் ஆலய தரிசனம் செய்வது வாழ்வில் வளம் மற்றும் மன அமைதியைத் தரும். இன்றைய நன்னாளில் மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிகளுக்கான பலன்களை பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முடிவுகளை எடுப்பதை இன்று தள்ளிப்போடுவது நல்லது. உத்தியோகத்தில் பணிச்சுமை சற்றே அதிகமாக இருக்கும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்வது மன அமைதியைத் தரும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எதிலும் அனுகூலமான மற்றும் மகிழ்ச்சியான சூழல் நிலவும். தொட்ட காரியங்கள் யாவும் தடையின்றி வெற்றி பெறும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டும், புதிய பொறுப்புகளும் கிடைக்க வாய்ப்புள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முயற்சிகளில் சிறு தடையோ அல்லது தாமதமோ வரக்கூடும். எனவே, அவசரப்பட்டு எந்தவொரு வாக்குறுதியும் தர வேண்டாம். பணப் பரிவர்த்தனைகளில் எச்சரிக்கை தேவை. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும், வெளியூர் பயணங்களைத் தவிர்ப்பதும் நல்லது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தொட்டதெல்லாம் துலங்கும் அதிர்ஷ்டகரமான நாள். பணவரவு திருப்திகரமாக இருக்கும் என்பதால் மன மகிழ்ச்சி அதிகரிக்கும். பழைய கடன்கள் தீர வாய்ப்புகள் அமையும். குடும்பத்துடன் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்று மகிழ்வீர்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;புதிய முயற்சிகளுக்கு சிறப்பான ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த புதிய வாய்ப்புகளும் லாபமும் வந்து சேரும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் சுபச்செலவுகள் வரக்கூடும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தேவையற்ற சிந்தனைகளையும் மனக்குழப்பங்களையும் தவிர்க்க வேண்டியது அவசியம். ஆரோக்கியத்தில் சிறு அசதி தோன்றலாம். நிதி சார்ந்த விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. இறை வழிபாடும் தியானமும் மன அமைதி அளிக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சுபமான மற்றும் மேன்மையான நாள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். நீண்ட நாட்களாக தடைப்பட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்ய சாதகமான காலம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிட்டும். அலுவலகத்தில் சவாலான வேலைகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். பொருளாதார நிலை கணிசமாக உயரும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் நல்ல செய்தி வந்து சேரும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆன்மீக உணர்வுகளும் எண்ணங்களும் மேலோங்கும். புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் வேலைப்பளு குறையும். பணவரவு மிதமாக இருந்தாலும் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எதிலும் கூடுதல் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாள். தேவையில்லாத வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். வாகனம் ஓட்டும்போது அதிக கவனம் தேவை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எதிர்ப்புகளையும் சவால்களையும் தாண்டி வெற்றி நடை போடுவீர்கள். கணவன்-மனைவி இடையே அன்பும் புரிதலும் அதிகரிக்கும். கூட்டு வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய நண்பர்களின் அறிமுகம் சாதகமாக அமையும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தொட்ட காரியங்கள் யாவும் தடையின்றி நிறைவேறும் இனிய நாள். உத்தியோகத்தில் நிலவி வந்த குழப்பங்கள் விலகும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் வரும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[astrology]]></category>
            <dc:creator>Rayar A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/thursday-horoscope-aug-27-2026-daily-rasipalan-sh08c48"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Cut Sugar: உணவில் சர்க்கரையை குறைக்க வேண்டுமா? இதோ சில ஸ்மார்ட் டிப்ஸ்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/webstories/health/smart-tips-to-cut-sugar-from-your-diet-for-a-healthier-lifestyle-2hnz4su</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/webstories/health/smart-tips-to-cut-sugar-from-your-diet-for-a-healthier-lifestyle-2hnz4su</guid>
            <pubDate>Wed, 26 Aug 2026 22:09:23 +0530</pubDate>
            <description><![CDATA[சர்க்கரையை உணவில் இருந்து முழுமையாக நீக்கி, உங்கள் உணவுப் பழக்கத்தை மாற்ற விரும்புகிறீர்களா? அப்படியானால், இந்த விஷயங்களைக் கண்டிப்பாக கவனத்தில் கொள்ளுங்கள்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0hbkv92pys4673jbmh3xfzp,imgname-sugar-1787289005325.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <category><![CDATA[health]]></category>
            <dc:creator>Asianet News</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/webstories/health/smart-tips-to-cut-sugar-from-your-diet-for-a-healthier-lifestyle-2hnz4su"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Tulsi Benefits: வீட்டில் வளர்க்கும் துளசியை இப்படி எல்லாம் பயன்படுத்தலாமா? 5 சூப்பர் டிப்ஸ்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/five-practical-ways-to-use-home-grown-tulsi-for-health-and-wellness-agqwup6</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/five-practical-ways-to-use-home-grown-tulsi-for-health-and-wellness-agqwup6</guid>
            <pubDate>Wed, 26 Aug 2026 22:04:07 +0530</pubDate>
            <description><![CDATA[ஆயுர்வேதத்தில் 'மூலிகைகளின் ராணி' எனப் போற்றப்படும் துளசி, மருத்துவ மற்றும் சுய-பராமரிப்புக்கு பல நன்மைகளைத் தருகிறது. வீட்டில் வளர்க்கும் இந்த சக்திவாய்ந்த செடியை உங்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்த 5 சூப்பர் வழிகளை இங்கே பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kzdn2jh8btkq6zh4r8hxeqfm,imgname-money-plant-and-tulsi-vastu-rules-1786090965544.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[ஆயுர்வேதத்தில் 'மூலிகைகளின் ராணி' எனப் போற்றப்படும் துளசி, மருத்துவ மற்றும் சுய-பராமரிப்புக்கு பல நன்மைகளைத் தருகிறது. வீட்டில் வளர்க்கும் இந்த சக்திவாய்ந்த செடியை உங்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்த 5 சூப்பர் வழிகளை இங்கே பார்க்கலாம்.&lt;img&gt;&lt;p&gt;உங்கள் வீட்டுத் தோட்டத்திலேயே வளர்க்கப்படும், 'மூலிகைகளின் ராணி' என்று அழைக்கப்படும் துளசி, உண்மையிலேயே ஒரு பொக்கிஷம். ஆயுர்வேதத்தில் போற்றப்படும் இந்த புனிதத் தாவரம், ஏராளமான மருத்துவ மற்றும் சுயப் பராமரிப்புப் பலன்களை வழங்குகிறது. இதை நாம் நமது அன்றாட வாழ்வில் எளிதாக இணைத்துக்கொண்டு, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்திக்கொள்ளலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;துளசி தேநீர் தயாரிப்பது, பலன்களைப் பெறுவதற்கான மிகவும் எளிமையான மற்றும் பிரபலமான முறைகளில் ஒன்றாகும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொதிக்கும் நீரில் புதிய அல்லது உலர்ந்த துளசி இலைகளைச் சேர்ப்பதுதான். அவற்றை ஊற விடவும். இதன் விளைவாகக் கிடைக்கும் கஷாயம் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தினமும் 3-5 இலைகள் &ndash; அவ்வளவுதான் தேவை. புதிய துளசி இலைகளை, குறிப்பாக வெறும் வயிற்றில் சாப்பிடுவது ஒரு தொன்மையான ஆயுர்வேதப் பழக்கமாகும். இந்த எளிய செயல் உங்கள் இரத்தத்தைச் சுத்திகரித்து, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சக்திவாய்ந்த கலவை வேண்டுமா? நெய் அல்லது தேனுடன் துளசி இலைகளைச் சேர்த்து ஊறவைக்கவும். இந்தச் செயல்முறை அவற்றின் மருத்துவ குணங்களைச் செறிவூட்டி, ஒரு வலிமையான கலவையை உருவாக்குகிறது. நீங்கள் இதை நேரடியாக உட்கொள்ளலாம் அல்லது ஒரு சேர்க்கைப் பொருளாகப் பயன்படுத்தலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அடாப்டோஜென் &ndash; இது ஒரு சக்திவாய்ந்த சொல். துளசி அந்தப் பட்டத்திற்குத் தகுதியானது. உடல், வேதியியல், வளர்சிதை மாற்றம் மற்றும் உளவியல் சார்ந்த அனைத்து வகையான அழுத்தங்களுக்கும் உங்கள் உடல் தன்னைத் தகவமைத்துக் கொள்ள இது உதவுகிறது. அதனால்தான் இது நவீன வாழ்க்கைக்கு மிகவும் மதிப்புமிக்கதாக இருக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதை உட்கொள்வதோடு நின்றுவிடாதீர்கள்; உங்கள் சருமத்திலும் பூசுங்கள்! துளசி உங்கள் சருமத்திற்கும் கூந்தலுக்கும் அற்புதமான சுயப் பராமரிப்புப் பலன்களை வழங்குகிறது. அதன் பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்றத் தடுப்புப் பண்புகள், பலவிதமான மேற்பூச்சுப் பயன்பாடுகளுக்கு இதை மிகவும் பொருத்தமானதாக ஆக்குகின்றன.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[life-style]]></category>
            <dc:creator>Asianet News</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/five-practical-ways-to-use-home-grown-tulsi-for-health-and-wellness-agqwup6"/>
        </item>
        <item>
            <title><![CDATA[IND vs SL: 5-வது நாள் ஆட்டம் த்ரில்... 16 ரன்கள் முன்னிலை பெற்ற இலங்கை.. ஆதிக்கம் செலுத்தும் இந்தியா]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/india-vs-sri-lanka-colombo-test-nears-thrilling-final-day-finish-bb16sg1</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/india-vs-sri-lanka-colombo-test-nears-thrilling-final-day-finish-bb16sg1</guid>
            <pubDate>Wed, 26 Aug 2026 21:55:10 +0530</pubDate>
            <description><![CDATA[கொழும்பு டெஸ்டில் இந்தியா-இலங்கை அணிகள் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில், இலங்கை அணி 229/6 ரன்கள் எடுத்து 16 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் 5-ம் நாள் ஆட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0ypz00mytg1s0hhy0fvcf5n,imgname-ind-vs-sl-2nd-test-day-4--3--1787737112596.gif" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[கொழும்பு டெஸ்டில் இந்தியா-இலங்கை அணிகள் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில், இலங்கை அணி 229/6 ரன்கள் எடுத்து 16 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் 5-ம் நாள் ஆட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;img&gt;&lt;p&gt;கொழும்பில் உள்ள சிங்கள விளையாட்டு மன்ற மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முழுமையான ஆதிக்கத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்தியா தனது முதல் இன்னிங்ஸை 503/9 என்ற நிலையில் டிக்ளேர் செய்தது. நான்காம் நாள் காலையில், இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் இலங்கையை 290 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது. இலங்கை ஆட்டக்காரர் சோனல் தினுஷ் 162 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 103 ரன்கள் எடுத்தார். இந்திய பந்துவீச்சாளர்களில், மானவ் சுதார் 3 விக்கெட்டுகளையும், பரிதின் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இலங்கையை காயப்படுத்தினர். இதன் மூலம், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 213 ரன்கள் முன்னிலை பெற்றதுடன், கேப்டன் ஷுப்மன் கில் இலங்கைக்கு ஃபாலோ-ஆன் விதித்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஃபாலோ-ஆன் முறையில் தங்களது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணி, தொடக்கத்திலேயே அதிர்ச்சிக்குள்ளானது. தொடக்க ஆட்டக்காரர் லஹிரு உடாரா, முகமது சிராஜின் பந்துவீச்சில் வெறும் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர், கமில் மிஷாரா (32) ரவீந்திர ஜடேஜாவின் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டார். இருப்பினும், பசிந்து சூரியபண்டாராவும் கமிந்து மெண்டிஸும் இணைந்து இன்னிங்ஸை மேம்படுத்தினர். பசிந்து சூரியபண்டாரா 92 ரன்கள் எடுத்து ஒரு சிறப்பான இன்னிங்ஸை ஆடினார். கமிந்து மெண்டிஸ் 55 ரன்கள் எடுத்து அவருக்கு நல்ல ஆதரவை அளித்தார். இருவரும் இணைந்து ஆட்டத்தை டிரா நோக்கி கொண்டு செல்வது போல் தோன்றியது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இலங்கை இந்தியாவின் முன்னிலையை நெருங்கிய நிலையில், இந்திய பந்துவீச்சாளர்கள் ஆட்டத்தின் போக்கையே மாற்றினர். கேப்டன் ஷுப்மன் கில், பரிதி கிருஷ்ணாவின் பந்துவீச்சில் கமிண்டு மெண்டிஸின் கேட்சைப் பிடித்து ஸ்கொயர் லெக் திசையில் ஓடினார். பின்னர் மானவ் சுதார் தாக்கினார். இலங்கை கேப்டன் தனஞ்சய டி சில்வா (17) சுதாரால் ஆட்டமிழக்கச் செய்யப்பட்டார். சதத்தை நெருங்கியிருந்த பசிந்து சூரியபண்டாராவையும் (92) அவர் ஆட்டமிழக்கச் செய்து, இலங்கைக்கு ஈடுசெய்ய முடியாத அடியைக் கொடுத்தார். இலங்கை வெறும் 10 ரன்கள் வித்தியாசத்தில் 3 முக்கியமான விக்கெட்டுகளை இழந்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;72.4 ஓவர்கள் கொண்ட இரண்டாவது இன்னிங்ஸின் முடிவில் மழை பெய்யத் தொடங்கியது. ஆடுகளத்தில் மூடிகள் போடப்பட்டதால் நடுவர்கள் ஆட்டத்தை நிறுத்தினர். அதன்பிறகு, மழை தீவிரமடைந்ததால், நான்காம் நாள் ஆட்டம் கைவிடப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆட்டத்தின் முடிவில், இலங்கை 6 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்திருந்தது. கேஷரா நுவந்தா (3) மற்றும் சோனல் திண்ட்சா (7) ஆகியோர் களத்தில் இருந்தனர். தற்போது இலங்கை, இந்தியாவை விட 16 ரன்கள் என்ற சொற்ப வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது. இந்திய பந்துவீச்சாளர்களில், மானவ் சுதார் 2 விக்கெட்டுகளையும், சரன்ஷ் ஜெயின், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ் மற்றும் பரிதி கிருஷ்ணா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நான்காம் நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 16 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றிருந்தது. இந்தியா வெற்றி பெற வேண்டுமானால், ஐந்தாம் நாளில் மீதமுள்ள 4 விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்த வேண்டும். அதன் பிறகு, இந்த சிறிய இலக்கை விரட்டிப் பிடிப்பதற்கு இந்தியாவிற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். இலங்கை துடுப்பாட்ட வீரர்களில், கடந்த இன்னிங்ஸ் சதத்தின் நாயகனான சோனல் திண்ட்சா இன்னும் களத்தில் இருக்கிறார். ஐந்தாம் நாளில் வானிலை ஒத்துழைத்தால், இந்தப் போட்டியின் முடிவு உறுதியாகத் தெரிகிறது. இந்தியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[sports-cricket]]></category>
            <dc:creator>Asianet News</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/india-vs-sri-lanka-colombo-test-nears-thrilling-final-day-finish-bb16sg1"/>
        </item>
        <item>
            <title><![CDATA[இரவில் ஜம்முனு தூங்கணுமா? இந்த 7 உணவுகளை மிஸ் பண்ணாம சாப்பிடுங்க!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/webstories/health-food/seven-foods-that-help-you-get-a-good-sleep-at-night-tc5533c</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/webstories/health-food/seven-foods-that-help-you-get-a-good-sleep-at-night-tc5533c</guid>
            <pubDate>Wed, 26 Aug 2026 21:55:06 +0530</pubDate>
            <description><![CDATA[நல்ல தூக்கத்தைப் பெற உதவும் 7 உணவுகள் என்னென்ன என்பதை இங்கே பார்க்கலாம். உங்கள் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த இந்த உணவுகள் உதவும்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0ye19xdvkh7swykwjrg3m1t,imgname-sleepover-job-1787727751085.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <category><![CDATA[health-food]]></category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/webstories/health-food/seven-foods-that-help-you-get-a-good-sleep-at-night-tc5533c"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ICC Rankings: நம்பர் 1 இடத்துக்கு டாடா காட்டிய பும்ரா... ஆஸி. வீரர் செஞ்ச மாஸ் சம்பவம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/mitchell-starc-dethrones-jasprit-bumrah-to-become-new-icc-test-no-1-bowler-nki1osv</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/mitchell-starc-dethrones-jasprit-bumrah-to-become-new-icc-test-no-1-bowler-nki1osv</guid>
            <pubDate>Wed, 26 Aug 2026 21:14:33 +0530</pubDate>
            <description><![CDATA[ஐசிசி டெஸ்ட் பவுலிங் தரவரிசையில் திடீர் மாற்றம். நம்பர் 1 இடத்தில் இருந்த ஜஸ்பிரித் பும்ரா பின்னுக்குத் தள்ளப்பட்டார். வங்கதேசத்துக்கு எதிராக மிரட்டிய ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் புதிய நம்பர் 1 பவுலராகியுள்ளார்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kbpmj5ntwv7mz0d44efea6pk,imgname-mitchell-starc-and-jasprit-bumrah-1764917581498.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[ஐசிசி டெஸ்ட் பவுலிங் தரவரிசையில் திடீர் மாற்றம். நம்பர் 1 இடத்தில் இருந்த ஜஸ்பிரித் பும்ரா பின்னுக்குத் தள்ளப்பட்டார். வங்கதேசத்துக்கு எதிராக மிரட்டிய ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் புதிய நம்பர் 1 பவுலராகியுள்ளார்.&lt;img&gt;&lt;p&gt;இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்குப் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் பும்ராவுக்கு இது ஒரு பெரிய பின்னடைவாகும். நீண்ட காலமாக ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் முதலிடத்தில் இருந்த பும்ரா, தனது முதலிடத்தை இழந்துள்ளார். ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், தனது சிறப்பான ஆட்டத்தால் பும்ராவை முந்தி, தனது கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் முறையாக உலகின் நம்பர் 1 டெஸ்ட் பந்துவீச்சாளராக ஆகியுள்ளார். புதன்கிழமை ஐசிசியால் வெளியிடப்பட்ட சமீபத்திய தரவரிசையில் இந்த மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;காயம் காரணமாக பும்ரா இலங்கைக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவில்லை. மறுபுறம், வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மிட்செல் ஸ்டார்க் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மெக்கேயில் நடைபெற்ற அந்தப் போட்டியில் ஸ்டார்க் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியாவிற்கு மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்தார். இதன் மூலம், ஸ்டார்க் 872 புள்ளிகளுடன் பும்ராவை முந்தி முதலிடத்திற்கு முன்னேறினார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மிட்செல் ஸ்டார்க் தனது 15 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் முதன்முறையாக முதலிடத்தை எட்டியுள்ளார். வங்கதேசத்திற்கு எதிரான முதல் இன்னிங்ஸில் 12 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 39 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றினார். மேலும், ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளையும் அவர் வென்றார்.&lt;/p&gt;&lt;p&gt;பும்ரா தற்போது 862 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்குச் சரிந்துள்ளார், அதே நேரத்தில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மாட் ஹென்றி 861 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் 841 புள்ளிகளுடன் ஒரு இடம் முன்னேறி நான்காம் இடத்திற்கு வந்துள்ளார், அதே நேரத்தில் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் மார்கோ ஜான்சென் 825 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் இரண்டு இடங்கள் முன்னேறி முதல் 10 இடங்களுக்குள் நுழைந்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிப்ரவரி 2024 முதல் பும்ரா டெஸ்ட் போட்டிகளில் நம்பர் 1 பந்துவீச்சாளராக இருந்து வருகிறார். சமீபத்திய தரவரிசையில் இரண்டு புள்ளிகள் சரிந்து இரண்டாம் இடத்திற்கு வந்தபோதிலும், பும்ரா ஒரு அரிய சாதனையைத் தன்வசம் வைத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 697 நாட்கள் நம்பர் 1 இடத்தைத் தக்கவைத்துக் கொண்ட இந்திய பந்துவீச்சாளர் என்ற வரலாற்றுச் சாதனையை பும்ரா படைத்துள்ளார். உலகில் அதிக நாட்கள் முதலிடத்தில் இருந்த பந்துவீச்சாளர்கள் பட்டியலில் அவர் 14-வது இடத்தில் உள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;மற்ற பந்துவீச்சாளர்களில், பாகிஸ்தானுக்கு எதிராக 8 விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் அலி ராபின்சன் 15 இடங்கள் முன்னேறி 11-வது இடத்தையும், ஜோஷ் டோங் 16 இடங்கள் முன்னேறி 17-வது இடத்தையும் பிடித்துள்ளனர். இலங்கை பந்துவீச்சாளர்களான அசிதா பெர்னாண்டோ மற்றும் பிரபாத் ஜெயசூரியா தலா ஐந்து இடங்கள் முன்னேறி முறையே 15-வது மற்றும் 16-வது இடங்களைப் பிடித்துள்ளனர். காலி டெஸ்டில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய இளம் இந்திய பந்துவீச்சாளர் மானவ் சுதார், 28 இடங்கள் முன்னேறி 48-வது இடத்தைப் பிடித்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இங்கிலாந்தின் அதிரடி பேட்ஸ்மேனான ஹாரி புரூக், பேட்டிங் தரவரிசையில் தனது முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். ஜோ ரூட் இரண்டாம் இடத்திலும், ஆஸ்திரேலிய ஜோடியான ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் முறையே மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களிலும் நீடிக்கின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அதிரடியாக அரைசதம் அடித்த இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த், ஆறு இடங்கள் முன்னேறி மீண்டும் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்துள்ளார். பந்த் தற்போது ஏழாவது இடத்தில் உள்ளார். காலி டெஸ்ட் போட்டியில் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் முதல் 10 இடங்களிலிருந்து வெளியேறியுள்ளனர். ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கிரீன் (21வது இடம்) மற்றும் கே.எல். ராகுல் (30வது இடம்) ஆகியோரும் தங்களது தரவரிசையை மேம்படுத்தியுள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் ஆல்-ரவுண்டர்கள் பட்டியலில் தனது முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார். இந்தப் பிரிவில் எந்த மாற்றமும் இல்லாததால், ஜடேஜா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். பேட் கம்மின்ஸ் ஏழாவது இடத்திற்கும், கிரீன் 17வது இடத்திற்கும், ராபின்சன் 23வது இடத்திற்கும் முன்னேறியுள்ளனர். தற்போதைய இலங்கைத் தொடரில் இந்தியா ஒரு நல்ல தொடக்கத்தை அளித்திருந்தாலும், பும்ரா தனது முதலிடத்தை இழந்தது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஓரளவு ஏமாற்றத்தை அளித்துள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[sports-cricket]]></category>
            <dc:creator>Asianet News</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/mitchell-starc-dethrones-jasprit-bumrah-to-become-new-icc-test-no-1-bowler-nki1osv"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Free Scooty for College Students: கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி..! அரசு அதிரடி அறிவிப்பு..]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/india/free-scooty-for-college-girls-government-announces-free-scooters-for-students-df1o90g</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/india/free-scooty-for-college-girls-government-announces-free-scooters-for-students-df1o90g</guid>
            <pubDate>Wed, 26 Aug 2026 21:08:07 +0530</pubDate>
            <description><![CDATA[உபி அரசு ராணி லட்சுமிபாய் ஸ்கூட்டி திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், கல்லூரிகளில் உள்ள முதல் 5 சதவீத மாணவிகளுக்கு ஸ்கூட்டிகள் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0z8rpx7145653sw0p3r94by,imgname-free-scooty-1787755781031.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;உபி அரசு ராணி லட்சுமிபாய் ஸ்கூட்டி திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், கல்லூரிகளில் உள்ள முதல் 5 சதவீத மாணவிகளுக்கு ஸ்கூட்டிகள் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உத்தரப் பிரதேச அரசு ராணி லட்சுமிபாய் ஸ்கூட்டி திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள முதல் 5 சதவீத மாணவிகளுக்கு ஸ்கூட்டிகள் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;உத்தரப் பிரதேசத்தில் சிறந்த மாணவிகளுக்கு ஸ்கூட்டர்களை வழங்கும் திட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ராணி லட்சுமிபாய் ஸ்கூட்டி திட்டத்தின் கீழ், அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள முதல் 5 சதவீத மாணவிகளுக்கு ஸ்கூட்டர்கள் வழங்கப்படும்.&lt;/p&gt;&lt;p&gt;இந்தத் திட்டத்திற்காக அரசு ₹400 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. சுமார் 50,000 மாணவிகள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள முதல் 5 சதவீத மாணவிகள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைவார்கள். அதாவது, சிறந்த மாணவிகள் அவர்களின் கல்வி செயல்திறனின் அடிப்படையில் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள். இந்தத் திட்டத்தின் கீழ் ஸ்கூட்டருடன் 4 லிட்டர் பெட்ரோலும் வழங்கப்படும். ஸ்கூட்டர் தொகுப்பில் பதிவுக் கட்டணம், விரிவான வாகனக் காப்பீடு, ஐஎஸ்ஐ முத்திரையிடப்பட்ட ஹெல்மெட் மற்றும் தேவையான உபகரணங்களும் அடங்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ராணி லட்சுமிபாய் ஸ்கூட்டி திட்டத்திற்காக உத்தரப் பிரதேச அரசு ₹400 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. 2026-27 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை ஆவணத்தில், திறமையான மாணவிகளுக்கு ஸ்கூட்டிகள் வழங்குவதற்காக ₹400 கோடி ஒதுக்கீடும் சேர்க்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;சுமார் 50,000 மாணவிகள் பயனடைவார்கள்&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;அரசின் அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 50,000 மாணவிகள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாணவிகளை உயர்கல்வியைத் தொடர ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். குறிப்பாக கிராமப்புறங்களில், தூரம் காரணமாக மாணவிகள் படிப்பை பாதியில் நிறுத்தும் பிரச்சனை இருப்பதால், இது முக்கியமானதாகக் கருதப்படுகிறது.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;இத்திட்டம் எப்போது செயல்படுத்தப்படும்?&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;ராணி லட்சுமிபாய் ஸ்கூட்டி திட்டத்தை 2025-26 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்த உத்தரப் பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. ஜூலை 2026-ல் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இத்திட்டம், பொது மாணவர்களுடன், தியாகி குடும்பங்களைச் சேர்ந்த தகுதிவாய்ந்த மாணவர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் ஆதரவற்ற மாணவர்களையும் உள்ளடக்கியது. இந்த சிறப்புப் பிரிவுகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட தகுதி மதிப்பெண்ணை விட 10 சதவீதம் குறைவாகப் பெறும் மாணவர்களையும் இதில் சேர்க்க ஒரு வழிமுறை உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;இத்திட்டத்தின் மூலம் பயனடைய, மாணவர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். மேலும், அவரது குடும்பத்தின் ஆண்டு வருமானம் ₹12 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். CGPA அடிப்படையிலான படிப்புகளுக்கு, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்தின் விதிமுறைகளின்படி, பட்டப்படிப்பில் பெற்ற CGPA-ஐ அடிப்படையாகக் கொண்டு தகுதி நிர்ணயிக்கப்படும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;முழுமையான விண்ணப்பம் மற்றும் தேர்வு செயல்முறை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;மாணவர்களைத் தேர்ந்தெடுத்து ஒதுக்கீடு செய்யும் செயல்முறை முற்றிலும் வெளிப்படையாக வைக்கப்பட்டுள்ளது&hellip;&lt;/p&gt;&lt;p&gt;பல்கலைக்கழகத்தால் பட்டியல் தயாரித்தல்: சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகம், அதன் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் மற்றும் பதிவாளரால் கையொப்பமிடப்பட்ட தகுதியான மாணவர்களின் பட்டியலைத் தயாரித்து, அதை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[india]]></category>
            <dc:creator>Asianet News</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/india/free-scooty-for-college-girls-government-announces-free-scooters-for-students-df1o90g"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Karthigai Deepam : பிறந்தநாள் கேக்கால் மாறிய கதை... சாமுண்டீஸ்வரியை சமாளித்த சுவாதி!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/will-chamundeeswari-become-suspicious-another-dramatic-turn-in-karthigai-deepam-serial-ciiwtzg</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/will-chamundeeswari-become-suspicious-another-dramatic-turn-in-karthigai-deepam-serial-ciiwtzg</guid>
            <pubDate>Wed, 26 Aug 2026 20:40:45 +0530</pubDate>
            <description><![CDATA[Karthigai Deepam Serial Twist : கார்த்திகை தீபம் சீரியலில் சாமுண்டீஸ்வரியை பொய் சொல்லி சமாளித்துள்ளார் சுவாதி. இதன்பின் தரமான ட்விஸ்ட் காத்திருக்கிறது. அதைப்பற்றி பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0z977dp1ty6r6spef776vdp,imgname-karthigai-deepam--3--1787756256694.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Karthigai Deepam Serial Twist : கார்த்திகை தீபம் சீரியலில் சாமுண்டீஸ்வரியை பொய் சொல்லி சமாளித்துள்ளார் சுவாதி. இதன்பின் தரமான ட்விஸ்ட் காத்திருக்கிறது. அதைப்பற்றி பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர் &lsquo;கார்த்திகை தீபம்&rsquo;. முந்தைய எபிசோடில் ரேவதிக்கு வாழ்த்து தெரிவிக்க குடும்பத்தினர் அனைவரும் ஒன்று கூடிய நிலையில், அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறப்பட்ட தகவல் உண்மையில்லை என்பது தெரியவந்தது. இதனால் கதையில் அடுத்தடுத்து பரபரப்பான திருப்பங்கள் உருவாகியுள்ளன. நெக்ஸ்ட் எபிசோடில், வீட்டில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது, பாட்டி அங்கு வந்திருப்பவர்களை சாப்பிட்டுவிட்டுச் செல்லுமாறு கூறுகிறார். இதையடுத்து அனைவருக்கும் விருந்து ஏற்பாடு செய்யப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;karthigai Deepam : கார்த்திக் மீது பொய் வழக்கு... சாமுண்டீஸ்வரியிடம் நேருக்கு நேர் மோதிய ரேவதி!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதற்கிடையே, சாமுண்டீஸ்வரியின் வீட்டில் யாரும் இல்லாததையும், அங்குள்ள அனைத்து குழாய்களும் திறந்து கிடப்பதையும் சந்திரகலா கவனிக்கிறார். இதைப் பற்றி சாமுண்டீஸ்வரியிடம் தெரிவிக்கும் அவர், &ldquo;எல்லாரும் அங்கேதான் இருப்பார்கள், நாம் அங்கே போகலாம்&rdquo; என அழைக்கிறார். ஆனால், சாமுண்டீஸ்வரி அதற்கு சம்மதிக்காமல், &ldquo;நான் ஏன் அங்கே வர வேண்டும்? எல்லாரையும் இங்கே வரச் சொல்லுங்கள்&rdquo; என கோபமாக கூறுகிறார். மறுபுறம், பாட்டி ஏற்பாடு செய்த விருந்தை குடும்பத்தினர் அனைவரும் சந்தோஷமாக சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Karthigai Deepam : போராட்டத்தை ஒடுக்க முயன்று பல்பு வாங்கிய சாமுண்டீஸ்வரி.. மீடியாவிடம் உண்மையை சொன்ன ரேவதி!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அந்த நேரத்தில் கேக் ஒன்று வீட்டிற்கு வருகிறது. அது சுவாதியின் பிறந்தநாளை முன்னிட்டு கார்த்திக் மற்றும் ரேவதி ஏற்பாடு செய்த சர்ப்ரைஸ் என்பது தெரிய வருகிறது. சுவாதி கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய பிறகு, அனைவரையும் உடனடியாக வீட்டிற்கு புறப்படுமாறு ராஜராஜன் அறிவுறுத்துகிறார். வீட்டில் யாரும் இல்லாத விஷயம் சாமுண்டீஸ்வரிக்கு தெரியவந்தால் மிகப்பெரிய பிரச்சனை ஏற்படும் என அவர் எச்சரிக்கிறார். இதையடுத்து அனைவரும் வீட்டிற்கு திரும்புகின்றனர். அங்கு சாமுண்டீஸ்வரி தனது கோபத்தை வெளிப்படுத்துகிறார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Karthigai Deepam : ரேவதியின் அதிரடி முடிவால் ஆடிப்போன குடும்பம்... கார்த்திக்காக காத்திருக்கும் புதிய சிக்கல்!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அப்போது சுவாதி, இன்று தனது பிறந்தநாள் என்பதையும், அதை சாமுண்டீஸ்வரி மறந்துவிட்டதால்தான் அனைவரும் ஒன்றாக வெளியே சென்றதாகவும் கூறி நிலைமையை சமாளிக்கிறார். சுவாதியின் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ளும் சாமுண்டீஸ்வரியும் இறுதியில் அமைதியாகிறார். இதனால் தற்போது ஏற்பட்ட பிரச்சனை தற்காலிகமாக முடிவுக்கு வருகிறது. ஆனால், வீட்டில் நடந்த இந்த விஷயங்கள் சாமுண்டீஸ்வரிக்கு எப்போது தெரியவரும்? அடுத்ததாக என்ன பிரச்சனை வெடிக்கப் போகிறது? என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Karthigai Deepam : வீட்டை அடித்து நொறுக்கிய சாமுண்டீஸ்வரி... பரமேஸ்வரி பாட்டி வீட்டில் கார்த்திக் - ரேவதிக்கு நடந்தது என்ன?&lt;/strong&gt;&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[television]]></category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/will-chamundeeswari-become-suspicious-another-dramatic-turn-in-karthigai-deepam-serial-ciiwtzg"/>
        </item>
        <item>
            <title><![CDATA[OTT Thriller Movies : ஓடிடியில் டஜன் கணக்கான ட்விஸ்டுகள் நிறைந்த டாப் 5 சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்கள்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/looking-for-non-stop-thrills-watch-these-5-malayalam-movies-on-ott-7g0mx2q</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/looking-for-non-stop-thrills-watch-these-5-malayalam-movies-on-ott-7g0mx2q</guid>
            <pubDate>Wed, 26 Aug 2026 20:01:04 +0530</pubDate>
            <description><![CDATA[Malayalam Thriller Movies : ஒரு சின்ன கதையை வெச்சுக்கிட்டு, பிரமாதமான படம் பண்றதுல மலையாள சினிமா இயக்குநர்கள் கில்லாடிகள். அவர்கள் கொடுத்த டாப் 5 த்ரில்லர் படங்கள் பற்றி பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0ya05r0yebj228kpk1bsevg,imgname-malayalam-1787723519744.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Malayalam Thriller Movies : ஒரு சின்ன கதையை வெச்சுக்கிட்டு, பிரமாதமான படம் பண்றதுல மலையாள சினிமா இயக்குநர்கள் கில்லாடிகள். அவர்கள் கொடுத்த டாப் 5 த்ரில்லர் படங்கள் பற்றி பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிம்பிளான கதைக்களத்தை வைத்துக்கொண்டு, அதை விறுவிறுப்பான திரைக்கதையாக மாற்றுவதில் மலையாள சினிமாவுக்கு தனி இடம் உண்டு. குறிப்பாக க்ரைம், மர்மம் மற்றும் சஸ்பென்ஸ் வகை திரைப்படங்களில் மலையாள இயக்குநர்கள் தொடர்ந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகின்றனர். வழக்கமான கமர்ஷியல் படங்களைத் தாண்டி, ஆரம்பம் முதல் இறுதி வரை பரபரப்புடன் நகரும் திரைப்படங்களை பார்க்க விரும்புபவர்களுக்கு சில மலையாள த்ரில்லர் படங்கள் சிறந்த தேர்வாக இருக்கின்றன. அந்த வகையில், ஓடிடியில் மிஸ் பண்ணாம பார்க்கக்கூடிய 5 மலையாள த்ரில்லர் படங்கள் பற்றி பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;OTT Must Watch Movie : திடுக்கிட வைக்கும் திருப்பங்களுடன் ஒரு சூப்பர் க்ரைம் த்ரில்லர் - ஓடிடியில் செம ஒர்த்தான படம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;க்ரைம் மற்றும் மர்மத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள &lsquo;அஞ்சாம் பத்திரா&rsquo;, தொடக்கம் முதல் இறுதி வரை பார்வையாளர்களின் ஆர்வத்தை தக்க வைக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர். விசாரணை, கொலை மர்மம் என கதை அடுத்தடுத்த திருப்பங்களுடன் நகர்வதால், க்ரைம் த்ரில்லர் ரசிகர்களுக்கு இது நல்ல தேர்வாக இருக்கும். இந்த திரைப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் பார்க்கலாம். மலையாளம் மட்டுமின்றி இந்தி மொழியிலும் இப்படம் கிடைக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பெயரே வித்தியாசமாக இருக்கும் &lsquo;கொரோனா பேப்பர்ஸ்&rsquo;, கதையின் வேகத்தால் கவனம் ஈர்க்கும் த்ரில்லர் திரைப்படமாகும். படம் தொடங்கிய பிறகு அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து நீடிக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. கதையில் வரும் சம்பவங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து செல்லும் விதம், படத்தை இறுதிவரை பார்க்கத் தூண்டும். வார இறுதியில் ஒரு பரபரப்பான திரைப்படத்தை பார்க்க விரும்புபவர்கள் இந்தப் படத்தை தேர்வு செய்யலாம். ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் இப்படம் கிடைக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒரு அலுவலகத்தை பின்னணியாகக் கொண்டு நடைபெறும் கொலை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் &lsquo;கோலம்&rsquo;. கொலையின் பின்னணி என்ன, அதை செய்தது யார், சம்பவம் எப்படி அரங்கேறியது என அடுத்தடுத்து எழும் கேள்விகளே படத்தின் முக்கிய சுவாரஸ்யமாக அமைகின்றன. வழக்கமான க்ரைம் கதைகளிலிருந்து மாறுபட்ட அணுகுமுறையுடன் செல்லும் இப்படம், இறுதிவரை மர்மத்தை தக்கவைத்துக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதையும் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;டெக்னாலஜி மற்றும் சைபர் க்ரைம் பின்னணியில் பரபரப்பாக நகரும் திரைப்படம் &lsquo;ஆபரேஷன் ஜாவா&rsquo;. ஒவ்வொரு சம்பவத்துக்கும் பின்னால் இருக்கும் உண்மை என்ன என்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வத்தை படம் தொடர்ந்து ஏற்படுத்தும். திரைக்கதையில் அடுத்தடுத்து வரும் திருப்பங்களால், படம் பார்க்கும் ரசிகர்களுக்கு தொடர்ந்து டென்ஷன் இருக்கும். த்ரில்லர் விரும்புபவர்களுக்கு இது ஒரு சுவாரஸ்யமான தேர்வாக அமையும். ஜீ5 ஓடிடி தளத்தில் இப்படத்தை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;2023-ம் ஆண்டு வெளியான &lsquo;புலிமடா&rsquo; திரைப்படத்தில் ஜோஜு ஜார்ஜ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒரு சிவில் போலீஸ் அதிகாரியைச் சுற்றி நடைபெறும் சம்பவங்களை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. வழக்கமான த்ரில்லர் படங்களைப் போல வேகமாக மட்டுமே செல்லாமல், கதாபாத்திரங்களின் மனநிலை மற்றும் சம்பவங்களின் பின்னணியையும் படத்தின் முக்கிய அம்சமாக கொண்டு செல்கிறது. வித்தியாசமான திரில்லர் அனுபவத்தை விரும்புபவர்கள் இந்தப் படத்தையும் தங்கள் லிஸ்ட்டில் சேர்த்துக்கொள்ளலாம். நெட்பிளிக்ஸில் தளத்தில் &lsquo;புலிமடா&rsquo; கிடைக்கிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[cinema]]></category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/looking-for-non-stop-thrills-watch-these-5-malayalam-movies-on-ott-7g0mx2q"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Toxic : டாக்ஸிக் பட இயக்குநர் கீது மோகன் தாஸை ட்ரோல்களால் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - காரணம் என்ன?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/yash-movie-toxic-disappoints-fans-director-geetu-mohandas-trolled-krbs85b</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/yash-movie-toxic-disappoints-fans-director-geetu-mohandas-trolled-krbs85b</guid>
            <pubDate>Wed, 26 Aug 2026 19:11:38 +0530</pubDate>
            <description><![CDATA[Fans Trolled Toxic Director Geetu Mohandas : ராக்கிங் ஸ்டார் யாஷின் 'டாக்ஸிக்' படத்துக்கு முதல் ஷோவில் இருந்தே கலவையான விமர்சனங்கள் வரத் தொடங்கியுள்ளன. இதனால், இயக்குநர் கீது மோகன் தாஸ் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0vva8ascc9y4r9ywdzwbz8m,imgname-geetu-mohandas-about-yash--1--1787641012569.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Fans Trolled Toxic Director Geetu Mohandas : ராக்கிங் ஸ்டார் யாஷின் 'டாக்ஸிக்' படத்துக்கு முதல் ஷோவில் இருந்தே கலவையான விமர்சனங்கள் வரத் தொடங்கியுள்ளன. இதனால், இயக்குநர் கீது மோகன் தாஸ் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ராக்கிங் ஸ்டார் யாஷ் நடித்த 'டாக்ஸிக்' படம் திரைக்கு வந்துள்ளது. KGF போன்ற ஒரு பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு யாஷ் நடித்த படம் என்பதால், எதிர்பார்ப்புகள் விண்ணை முட்டின. ஆரம்பத்தில் பெரிய எதிர்பார்ப்பு இல்லை என்றாலும், டீசர் மற்றும் ட்ரெய்லர் வந்த பிறகு, படம் வேற லெவலில் இருக்கும் என ரசிகர்கள் நம்பினர். ட்ரெய்லரைப் பார்த்த பலரும், யாஷ் இன்னொரு பான்-இந்தியா ஹிட் கொடுக்கப் போகிறார் என்று உறுதியாக நம்பினார்கள். இந்தப் படத்தை கீது மோகன் தாஸ் இயக்கியுள்ளார். ஒரு இயக்குநராக அவருக்கு பெரிய அனுபவம் இல்லை. இதனால்தான் ஆரம்பத்தில் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு இல்லை.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Toxic Review : யாஷின் ஆக்&zwnj;ஷன் விருந்து டேஸ்டா? வேஸ்டா? டாக்ஸிக் முழு விமர்சனம் இதோ&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆனாலும், ட்ரெய்லரின் விஷுவல்ஸைப் பார்த்துவிட்டு, இந்த இயக்குநர் நிச்சயம் சாதிப்பார் என பலரும் நினைத்தனர். ஆனால், படம் வெளியான முதல் ஷோவில் இருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் தவிடுபொடியாகின. கதையில் வலு இல்லாமல், யாஷ் மற்றும் படக்குழுவினர் வெறும் பில்டப் மட்டுமே செய்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;முதல் காட்சியில் இருந்தே 'டாக்ஸிக்' படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வரத் தொடங்கின. படம் முழுக்க யாஷின் ஸ்டைலான நடிப்பு மற்றும் பிரம்மாண்டமான காட்சிகள் மட்டுமே சிறப்பாக இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர். கதையும், திரைக்கதையும் சுத்தமாக எடுபடவில்லை என விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால், இயக்குநர் கீது மோகன் தாஸை ட்ரோல் செய்து சோஷியல் மீடியாவில் மீம்கள் வைரலாகி வருகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த கீது மோகன் தாஸ் கேரளாவைச் சேர்ந்தவர். இவர் தென்னிந்தியாவில் குழந்தை நட்சத்திரமாகத் தனது கேரியரைத் தொடங்கினார். பிறகு, ஹீரோயினாகவும் நடித்துள்ளார். கோலிவுட்டிலும் அவருக்கு ஒரு தொடர்பு உண்டு. மாதவன் ஹீரோவாக நடித்த 'நள தமயந்தி' என்ற தமிழ் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதையடுத்து 'லையர்ஸ் டைஸ்', 'மூத்தோன்' போன்ற படங்களை இயக்கி திறமையை நிரூபித்தார். இரண்டு படங்களின் அனுபவத்திலேயே, யாஷுடன் ஒரு பான்-இந்தியா படம் இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ஆனால், இந்த பொன்னான வாய்ப்பை அவர் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றே கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;'டாக்ஸிக்' படத்தின் ப்ரீ-ரிலீஸ் விழாவில் பேசிய தயாரிப்பாளர் தில் ராஜு, 'KGF போன்ற ஒரு படத்துக்குப் பிறகு, யாஷ் ஏன் ஒரு புதிய இயக்குநருடன் படம் பண்ணுகிறார், அவருக்கு என்ன பைத்தியமா?' என்று ஆரம்பத்தில் நான் நினைத்தேன்' எனக் கூறியிருந்தார். இப்போது, தில் ராஜு மனதில் நினைத்த வார்த்தைகளே உண்மையாகிவிட்டன. 'டாக்ஸிக்' படத்தின் மூலம் யாஷ் ஒரு தவறான முடிவை எடுத்துவிட்டார் என ரசிகர்கள் கருதுகின்றனர். தெலுங்கில் 'டாக்ஸிக்' படத்தை தில் ராஜுதான் பெரிய விலைக்கு வாங்கி வெளியிட்டுள்ளார். யாஷின் புகழ் இந்தப் படத்தை எந்த அளவுக்குக் காப்பாற்றும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[cinema]]></category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/yash-movie-toxic-disappoints-fans-director-geetu-mohandas-trolled-krbs85b"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Trending Jewellery designs : ஓணம் டிரெண்டிங்  ஜுவல்லரி கலெக்‌ஷன்..உங்க பேவரட் எது?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style-fashion/trending-jewellery-designs-in-onam-celebration-ekawecx</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style-fashion/trending-jewellery-designs-in-onam-celebration-ekawecx</guid>
            <pubDate>Wed, 26 Aug 2026 18:33:58 +0530</pubDate>
            <description><![CDATA[Jewellery designs: ஓணம் பண்டிகயை கொண்டாடிய பிரபலங்கள் தங்கள் லுக்கை மேலும் அழகாக்க பல்வேறு டிரெண்டிங் ஜுவல்லரிகளை அணிந்திருந்தனர். இந்த டிசைன்கள் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது. அந்த நகை டிசைன்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0z2n66r26ddcc1wne6r73ay,imgname-actress-sujitha-1787749374168.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;Jewellery designs: &lt;/strong&gt;ஓணம் பண்டிகயை கொண்டாடிய பிரபலங்கள் தங்கள் லுக்கை மேலும் அழகாக்க பல்வேறு டிரெண்டிங் ஜுவல்லரிகளை அணிந்திருந்தனர். இந்த டிசைன்கள் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது. அந்த நகை டிசைன்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நடிகை அபிராமி அணிந்திருக்கும் பச்சை நிற எமரால்டு சோக்கர் பாரம்பரியமும் நவீனமும் கலந்த அழகான மாடலாக உள்ளது. சோக்கரில் வட்ட வடிவிலான பச்சை எமரால்டு கற்கள் ஒன்றன்பின் ஒன்றாக நேர்த்தியாக பதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கல்லுக்கும் நடுவே இடம்பெற்றுள்ள சிறிய தங்க மணிகள், நகையின் டிசைனுக்கு கூடுதல் அழகையும் நுட்பமான தோற்றத்தையும் வழங்குகின்றன.&lt;/p&gt;&lt;p&gt;இதனுடன் அணிந்திருக்கும் பச்சை கல் பதித்த ஜிமிக்கியும் கவனம் ஈர்க்கும் வகையில் உள்ளது. கீழ்பகுதியில் குடை வடிவில் தொங்கும் பாரம்பரிய வேலைப்பாடும், அதைச் சுற்றி இடம்பெற்றுள்ள சிறிய தங்க மணிகளும் ஜிமிக்கிக்கு அழகான ஹைலைட்டை கொடுக்கின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பாரம்பரிய தென்னிந்திய நகை அலங்காரத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த செயின் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறிய தங்கக் காசுகள் ஒன்றோடொன்று இணைந்திருப்பது இதன் சிறப்பம்சமாகும். செயினின் மையத்தில் இடம்பெற்றுள்ள வட்ட வடிவ லட்சுமி பெண்டன்ட், நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கம்பீரமான தோற்றத்தை அளிக்கிறது. காதுகளில் அணிந்திருக்கும் ஜிமிக்கி, பாரம்பரிய கோயில் நகை பாணியை நினைவூட்டுவதுடன், ஒட்டுமொத்த தோற்றத்திற்கும் அழகையும் நேர்த்தியையும் சேர்க்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கழுத்தை ஒட்டி அணியும் தங்க சோக்கர் பல அடுக்கு நுணுக்கமான சங்கிலி வடிவில் அமைந்துள்ளது. நடுவில் மலர் வடிவ அலங்காரத்தில் ரூபி நிற சிவப்பு கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. சோக்கரின் மையத்தில் வட்ட வடிவ பெண்டன்ட் இடம்பெற்றுள்ளது. அதில் பல சிறிய சிவப்பு/மெரூன் கற்கள் வட்டமாக பதிக்கப்பட்டிருப்பது தனித்துவமான தோற்றத்தைத் தருகிறது.&lt;/p&gt;&lt;p&gt;சோக்கருக்கு கீழே நீளமான தங்கச் செயினில் மெரூன் ரூபி சிவப்பு கற்கள் மற்றும் முத்து வெள்ளை நிறம் இணைந்திருப்பது நகைக்கு செழுமையான தோற்றத்தை அளிக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மெல்லிய தங்கச் செயின் அடுக்குகளுடன் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சோக்கர் மாடல், பாரம்பரியத்தையும் நேர்த்தியையும் ஒருங்கே வெளிப்படுத்துகிறது. சோக்கரின் கீழ்பகுதியில் இடம்பெற்றுள்ள சிறிய தங்க மணிகள், நகைக்கு கூடுதல் அழகையும் நுணுக்கமான வேலைப்பாடையும் சேர்க்கின்றன.&lt;/p&gt;&lt;p&gt;சோக்கரில் பதிக்கப்பட்டுள்ள ஆழமான எமரால்டு பச்சை நிறக் கற்கள், தங்கத்தின் மஞ்சள் நிறத்துடன் அழகான கான்ட்ராஸ்ட்டை உருவாக்குகின்றன. காதுகளில் அணிந்திருக்கும் சிறிய அளவிலான தங்க ஜிமிக்கி, எளிமையான கோயில் நகை பாணியை பிரதிபலிக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கழுத்தை ஒட்டி அணிந்துள்ள இந்த சோக்கர், பல அடுக்குகளில் சிறிய தங்க மணிகள் மற்றும் கற்கள் பதிக்கப்பட்ட நுணுக்கமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. தங்க நிறத்துடன் சிவப்பு, பச்சை கற்கள் இணைந்திருப்பது நகைக்கு பாரம்பரியமும் கண்ணைக் கவரும் அழகும் சேர்க்கிறது. குறிப்பாக, சிவப்பு கற்கள் தங்க நிறத்துடன் அழகான கான்ட்ராஸ்ட்டை உருவாக்குகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பல அடுக்குகளில் அமைந்த இந்த பாரம்பரிய நெக்லஸில் வெள்ளை முத்து, ரூபி சிவப்பு மற்றும் எமரால்டு பச்சை கற்கள் அழகாக இணைக்கப்பட்டுள்ளன. கீழ்பகுதியில் தொங்கும் பச்சை கற்கள், நகைக்கு தனித்துவமான மற்றும் ரிச்சான தோற்றத்தை வழங்குகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கழுத்தில் பல அடுக்குகளைக் கொண்ட அழகிய தங்கக் காசுமாலை நெக்லஸ். நெக்லஸில் சிறிய வட்ட வடிவ மணிகள், கற்கள் மற்றும் நுணுக்கமான தங்க வேலைப்பாடுகள் உள்ளன&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நெக்லஸில் பிங்க் மற்றும் வெள்ளை நிற கற்கள் மற்றும் முத்துக்கள் பதிக்கப்பட்டுள்ளன. நெக்லஸிற்கு ஏற்றவாறு, பிங்க் மற்றும் வெள்ளை நிற கற்கள் பதிக்கப்பட்ட தங்கக் காதணிகள் அணிந்துள்ளது கூடுதல் அழகைன் அளிக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தங்கக் காசு மாலையில் சிறிய, வட்ட வடிவ தங்கக் காசுகள் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு காசுக்கும் நடுவில் ஒரு சிறிய சிவப்பு நிறக் கல் பதிக்கப்பட்டுள்ளது. மாலைக்குக் கீழே தட்டையான, வட்ட வடிவத் தங்கக் காசுகள் தொங்குகின்றன.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[life-style-fashion]]></category>
            <dc:creator>Vishnupriya</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style-fashion/trending-jewellery-designs-in-onam-celebration-ekawecx"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Fridge Cooling Problem: ஃப்ரிட்ஜ் கூலிங் குறையுதா? இந்த சின்ன தப்புதான் காரணம் – உடனே சரி பண்ணுங்க!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/technology/refrigerator-not-cooling-properly-these-small-mistakes-could-be-the-real-reason-pkf1v0v</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/technology/refrigerator-not-cooling-properly-these-small-mistakes-could-be-the-real-reason-pkf1v0v</guid>
            <pubDate>Wed, 26 Aug 2026 18:30:47 +0530</pubDate>
            <description><![CDATA[Fridge Not Cooling: ஃப்ரிட்ஜ் சரியாகக் குளிரவில்லை என்றால் உடனே கேஸ் குறைந்துவிட்டதாக நினைக்க வேண்டாம்! நாம் தினமும் செய்யும் சில சின்னச் சின்ன தவறுகளே கூலிங் குறைவதற்குக் காரணமாக இருக்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ky76kwva9f7dmv2hhejjyxsq,imgname-chatgpt-image-jul-23--2026--03-25-57-pm-1784800736106.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Fridge Not Cooling: ஃப்ரிட்ஜ் சரியாகக் குளிரவில்லை என்றால் உடனே கேஸ் குறைந்துவிட்டதாக நினைக்க வேண்டாம்! நாம் தினமும் செய்யும் சில சின்னச் சின்ன தவறுகளே கூலிங் குறைவதற்குக் காரணமாக இருக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஃப்ரிட்ஜ் சரியாகக் குளிரவில்லை என்றால் உடனே &ldquo;கேஸ் குறைந்துவிட்டது&rdquo; என்று நினைப்பது வழக்கம். ஆனால் பல நேரங்களில் பெரிய பழுது எதுவும் இல்லாமலேயே, நாம் அன்றாடம் செய்யும் சில சிறிய தவறுகளால் குளிரூட்டும் திறன் குறையலாம். குறிப்பாக ஃப்ரிட்ஜை அதிகமாக நிரப்புவது, கதவை அடிக்கடி திறப்பது, சூடான உணவை உடனே உள்ளே வைப்பது போன்றவை முக்கிய காரணங்களாக இருக்கலாம்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;1. ஃப்ரிட்ஜை அளவுக்கு அதிகமாக நிரப்பாதீங்க&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;ஃப்ரிட்ஜுக்குள் குளிர்ந்த காற்று சீராகச் சுற்ற வேண்டும். பொருட்களை மிகவும் நெருக்கமாக அடுக்கி வைத்தால் காற்றோட்டம் தடைபட்டு, சில பகுதிகள் மட்டும் குளிரவும் மற்ற பகுதிகள் போதுமான அளவு குளிராமல் இருக்கவும் வாய்ப்பு உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;டிப்ஸ்: &lt;/strong&gt;உணவுப் பொருட்களுக்கு இடையில் சிறிய இடைவெளி விட்டு அடுக்குங்கள்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;2. கதவை அடிக்கடி திறப்பது பெரிய காரணம்&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;&ldquo;என்ன இருக்கிறது?&rdquo; என்று அடிக்கடி ஃப்ரிட்ஜைத் திறந்து பார்ப்பது உள்ளே இருக்கும் குளிர்ந்த காற்றை வெளியேற்றுகிறது. ஒவ்வொரு முறையும் புதிய காற்றை குளிர்விக்க ஃப்ரிட்ஜ் கூடுதல் வேலை செய்ய வேண்டியிருக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;டிப்ஸ்: &lt;/strong&gt;தேவையான பொருட்களை முன்கூட்டியே முடிவு செய்து, கதவை நீண்ட நேரம் திறந்து வைக்காமல் மூடுங்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அடுப்பிலிருந்து இறக்கிய சூடான உணவை நேரடியாக ஃப்ரிட்ஜுக்குள் வைத்தால், உள்ளே வெப்பநிலை அதிகரிக்கும். இதனால் குளிரூட்டும் அமைப்புக்கு கூடுதல் சுமை ஏற்படலாம்.&lt;/p&gt;&lt;p&gt;உணவு ஆவி வெளியேறி, பாதுகாப்பான அளவுக்கு வெப்பம் குறைந்த பிறகு, மூடி வைத்து ஃப்ரிட்ஜில் வைப்பது நல்ல நடைமுறை.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;4. கதவு ரப்பர் சீலைச் சரிபாருங்கள்&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;ஃப்ரிட்ஜ் கதவைச் சுற்றியுள்ள ரப்பர் சீல் சரியாக ஒட்டாமல் இருந்தால் குளிர்ந்த காற்று வெளியேறி, வெளிப்புறக் காற்று உள்ளே புகலாம்.&lt;/p&gt;&lt;p&gt;எளிய சோதனை: கதவு சீலுக்கு இடையில் ஒரு காகிதத்தை வைத்து கதவை மூடிப் பாருங்கள். காகிதம் மிகவும் எளிதாக வெளியே வந்தால், சீல் சரியாகப் பிடிக்கிறதா என்பதைச் சரிபார்க்க வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஃப்ரிட்ஜின் பின்புறம் வெப்பத்தை வெளியேற்றுவதற்கான அமைப்புகள் உள்ளன. அதைச் சுற்றி போதுமான காற்றோட்டம் இல்லாவிட்டால் வெப்பம் வெளியேறுவது பாதிக்கப்படலாம்.&lt;/p&gt;&lt;p&gt;அதனால் உற்பத்தியாளர் பரிந்துரைக்கும் அளவுக்கு சுற்றிலும் இடைவெளி இருப்பதை உறுதி செய்யுங்கள்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;6. வெப்பநிலை அமைப்பைச் சரிபாருங்கள்&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;தெரியாமல் வெப்பநிலை அமைப்பு மாற்றப்பட்டிருந்தாலும் குளிரூட்டல் குறைந்தது போலத் தோன்றலாம். குறிப்பாக புதிய ஃப்ரிட்ஜ்களில் வெவ்வேறு முறைகள் இருப்பதால், தற்போதைய அமைப்பு சரியாக உள்ளதா என்பதைப் பாருங்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பல காலமாக சுத்தம் செய்யாமல் விட்டால் பின்புறத்தில் உள்ள வெப்பத்தை வெளியேற்றும் பகுதிகளில் தூசி படியலாம். இதனால் செயல்திறன் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;மின்சாரத்தை துண்டித்த பிறகு, உற்பத்தியாளர் வழிமுறைகளுக்கு ஏற்ப வெளிப்புறப் பகுதிகளை சுத்தம் செய்யலாம்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;8. பனிக்கட்டி அதிகமாக படிந்திருந்தால் கவனியுங்கள்&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;ஃப்ரீசர் பகுதியில் அளவுக்கு அதிகமாக பனிக்கட்டி படிந்திருந்தால் காற்றோட்டம் பாதிக்கப்படலாம். ஆனால் கத்தி போன்ற கூர்மையான பொருட்களால் பனியை உடைக்க முயற்சி செய்யாதீர்கள்; உள்ளே இருக்கும் குழாய்கள் சேதமடையலாம்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;அப்படியும் கூலிங் குறைந்தால்?&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;மேலே உள்ள விஷயங்களைச் சரிபார்த்த பிறகும் ஃப்ரிட்ஜ் குளிரவில்லை என்றால், பிரச்சினை விசிறி, வெப்பநிலை கட்டுப்பாட்டு அமைப்பு, கதவு சீல், கம்பிரசர் அல்லது குளிரூட்டும் அமைப்பு தொடர்பானதாக இருக்கலாம். அப்போது நீங்களே பழுது பார்க்க முயற்சிப்பதைவிட தகுதியான தொழில்நுட்ப நிபுணரை அழைப்பது பாதுகாப்பானது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;முக்கியமாக:&lt;/strong&gt; ஃப்ரிட்ஜ் கூலிங் குறைந்தாலே &ldquo;கேஸ் நிரப்ப வேண்டும்&rdquo; என்று முடிவு செய்ய வேண்டாம். முதலில் கதவு சீல், காற்றோட்டம், அதிகப்படியான பொருட்கள், வெப்பநிலை அமைப்பு போன்ற அடிப்படை விஷயங்களைச் சரிபார்ப்பதே சரியான அணுகுமுறை.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[technology]]></category>
            <dc:creator>Asianet News</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/technology/refrigerator-not-cooling-properly-these-small-mistakes-could-be-the-real-reason-pkf1v0v"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Vaali : வாலிக்கு கவிஞர் கண்ணதாசன் விஸ்கியை கிஃப்டாக கொடுக்க தூண்டிய பாடல் பற்றி தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/kannadasan-called-vaali-to-praise-his-song-and-then-sent-him-a-whisky-gift-cqieqgg</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/kannadasan-called-vaali-to-praise-his-song-and-then-sent-him-a-whisky-gift-cqieqgg</guid>
            <pubDate>Wed, 26 Aug 2026 18:20:04 +0530</pubDate>
            <description><![CDATA[Kannadasan Gifted Whiskey to Vaali : கவிஞர் வாலி எழுதிய பாடலை கேட்டு இம்பிரஸ் ஆன கண்ணதாசன் அவருக்கு விஸ்கியை பரிசாக கொடுத்துள்ளார். அது எந்த பாடல் என்பதை பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0z1qeq00dvsmc06abz3pn0y,imgname-vaali-1787748399839.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Kannadasan Gifted Whiskey to Vaali : கவிஞர் வாலி எழுதிய பாடலை கேட்டு இம்பிரஸ் ஆன கண்ணதாசன் அவருக்கு விஸ்கியை பரிசாக கொடுத்துள்ளார். அது எந்த பாடல் என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ் சினிமாவில் 1960களில் வெளியான பல திரைப்படங்கள் இன்றளவும் ரசிகர்களின் நினைவில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளன. அந்த வரிசையில் குறிப்பிடத்தக்க திரைப்படமாக அமைந்தது &lsquo;கண்மலர்&rsquo;. 1968-ம் ஆண்டு வெளியான இப்படத்தில் ஜெமினி கணேசன், சரோஜா தேவி, செளகார் ஜானகி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். படத்திற்கு கே.வி. மகாதேவன் இசையமைத்திருந்தார்.&lt;/p&gt;&lt;p&gt;&lsquo;கண்மலர்&rsquo; படத்தின் கதை கோவிலைச் சுற்றி நகர்கிறது. கோவிலில் ஓதுவாராக இருக்கும் கதாபாத்திரத்தில் வி. நாகய்யா நடித்திருந்தார். அவரது மகளாக சரோஜா தேவி நடித்திருந்தார்.&lt;/p&gt;&lt;p&gt;Vaali Song: பாடல் வரியை கேட்டு நடிக்க மறுத்த ஹீரோயின் - லெஃப்ட் ஹாண்டில் டீல் செய்த வாலி!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கோவிலுக்கு பூமாலைகள் கட்டி கொடுக்கும் பணியை செய்து வரும் அவர், ஜெமினி கணேசன் கதாபாத்திரத்தின் மீது காதல் கொள்கிறார். ஆனால் இவர்களது காதல் திருமணத்தை நோக்கி செல்லும் நேரத்தில் எதிர்பாராத பல திருப்பங்கள் ஏற்படுகின்றன. இதில் சரோஜா தேவியின் பார்வையும் பறிபோகிறது. தனக்கு மிகவும் நெருக்கமான தோழியின் வாழ்க்கை பாதிக்கப்படுவதை பார்த்த செளகார் ஜானகி, தன்னுடைய கண்களை அவருக்கு தானமாக வழங்கும் முடிவை எடுக்கிறார். கதையின் முக்கிய திருப்பமாக அமைந்த இந்த சம்பவத்தின் மூலம் கண்தானம் மற்றும் கண்மாற்று அறுவை சிகிச்சை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாகவும் இது அமைந்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lsquo;கண்மலர்&rsquo; திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களுக்கு வாலி மற்றும் கண்ணதாசன் இருவரும் பாடல்கள் எழுதியிருந்தனர். அதில் வாலி எழுதிய &lsquo;ஓதுவார் உன் பெயர் ஓதுவார்&rsquo; என்ற பாடல் கண்ணதாசனை வெகுவாக கவர்ந்ததாக கூறப்படுகிறது. ஒருமுறை அந்தப் பாடலை கேட்ட கண்ணதாசன், &ldquo;இவ்வளவு சிறப்பாக நான் எப்போது எழுதினேன்?&rdquo; என்று தனது உதவியாளரிடம் கேட்டாராம். அதற்கு அவர், அந்தப் பாடலை எழுதியது வாலி என சொன்னதும் கண்ணதாசன் ஆச்சரியமடைந்தாராம்.&lt;/p&gt;&lt;p&gt;வாலியின் வரிகளை கேட்டதும் இம்பிரஸ் ஆன கண்ணதாசன், அதில் இடம்பெற்றிருந்த சில வரிகளை மிகவும் பாராட்டினாராம். அந்த வரிகள் தேவாரப் பாடல் வரிகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை என முதலில் நினைத்த கண்ணதாசன், பின்னர் அவை வாலியின் சொந்த கற்பனை என்பதை அறிந்ததும் மெய்சிலிர்த்துப் போனாராம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வாலியின் திறமையை பார்த்து வியந்த கண்ணதாசன், உடனடியாக அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு பாராட்டினாராம். பாடல் வரிகள் தன்னை எந்த அளவுக்கு கவர்ந்தன என்பதை தெரிவித்ததுடன், வாலியை மனதார வாழ்த்தியிருக்கிறார். அதோடு நிற்காமல், வாலிக்காக ஒரு பரிசையும் அனுப்பியதாக கூறப்படுகிறது. கண்ணதாசன் தனது கார் ஓட்டுநரிடம் அந்தப் பரிசை வாலியிடம் கொண்டு சேர்க்கச் சொல்லியிருக்கிறார்.&lt;/p&gt;&lt;p&gt;வாலிக்கு விஸ்கி பிடிக்கும் என்பதை அறிந்திருந்த கண்ணதாசன், அவர் விரும்பிய விஸ்கி பாட்டிலை பரிசாக அனுப்பினாராம். தன்னுடைய பாடல் வரிகளைப் பாராட்டியதுடன், சக கவிஞரின் திறமையை மனதார கொண்டாடிய கண்ணதாசனின் இந்த செயல் வாலியை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்திருக்கிறது. போட்டி நிறைந்த திரையுலகிலும், ஒரு கவிஞரின் திறமையை மற்றொரு கவிஞர் பொறாமையின்றி பாராட்டிய இந்த சம்பவம், கண்ணதாசன்&ndash;வாலி நட்பின் அழகான நினைவுகளில் ஒன்றாக இன்றும் பேசப்படுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[cinema]]></category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/kannadasan-called-vaali-to-praise-his-song-and-then-sent-him-a-whisky-gift-cqieqgg"/>
        </item>
        <item>
            <title><![CDATA[CIBIL ஸ்கோருக்கு வந்தது புது ரூல்ஸ்! இனி உங்கள் கடன் கணக்கு இவ்வளவு சீக்கிரம் அப்டேட் ஆகுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/credit-score-gets-a-major-update-your-loan-and-emi-records-will-now-reflect-faster-vmsz4co</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/credit-score-gets-a-major-update-your-loan-and-emi-records-will-now-reflect-faster-vmsz4co</guid>
            <pubDate>Wed, 26 Aug 2026 17:36:27 +0530</pubDate>
            <description><![CDATA[கிரெடிட் ஸ்கோர் தொடர்பான புதிய விதிமுறையால், உங்கள் கடன் கணக்கில் ஏற்படும் மாற்றங்கள் இனி முன்பைவிட வேகமாகப் பதிவாகும். EMI சரியாக செலுத்தினாலும் சரி, தவறினாலும் சரி… அதன் தாக்கம் கிரெடிட் அறிக்கையில் விரைவாகவே தெரிய வாய்ப்புள்ளது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxmszzse5ey567evz4sjxx3m,imgname-cibil-score-1784183521070.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கிரெடிட் ஸ்கோர் தொடர்பான புதிய விதிமுறையால், உங்கள் கடன் கணக்கில் ஏற்படும் மாற்றங்கள் இனி முன்பைவிட வேகமாகப் பதிவாகும். EMI சரியாக செலுத்தினாலும் சரி, தவறினாலும் சரி&hellip; அதன் தாக்கம் கிரெடிட் அறிக்கையில் விரைவாகவே தெரிய வாய்ப்புள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கிரெடிட் ஸ்கோர் இதுவரை பலருக்கும் ஒரு பிரச்சினை இருந்தது. கடன் அல்லது கிரெடிட் கார்டு தொடர்பான மாற்றம் செய்த உடனே அது கிரெடிட் அறிக்கையில் தெரியாது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தகவல்களை கிரெடிட் தகவல் நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் அனுப்பியதால், சில நேரங்களில் மாற்றங்கள் அறிக்கையில் தோன்றுவதற்கு பல நாட்கள் அல்லது வாரங்கள் ஆகும்.&lt;/p&gt;&lt;p&gt;இந்த நிலையை மாற்றும் வகையில், ரிசர்வ் வங்கி (RBI) கிரெடிட் தகவல் அறிக்கையை அடிக்கடி புதுப்பிக்கும் நடைமுறையை கொண்டு வந்துள்ளது. 2026 ஜூலை 1 முதல் வங்கிகள் மற்றும் பிற கடன் நிறுவனங்கள் கடன் தகவல்களை மாதத்தின் 9, 16, 23 மற்றும் கடைசி நாளில் கிரெடிட் தகவல் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உதாரணமாக, நீங்கள் ஒரு கிரெடிட் கார்டு நிலுவையை முழுமையாக செலுத்துகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.&lt;/p&gt;&lt;p&gt;முந்தைய முறையில், அந்த பணம் செலுத்திய தகவல் கிரெடிட் அறிக்கையில் பிரதிபலிக்க தாமதமாகலாம். ஆனால் புதிய முறையில் தகவல் அடிக்கடி அனுப்பப்படுவதால், நிலுவை குறைந்தது அல்லது கடன் கணக்கு முடிக்கப்பட்டது போன்ற நல்ல மாற்றங்கள் விரைவாக பதிவாகும் வாய்ப்பு உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;அதேபோல், நீங்கள் புதிய கடன் பெற்றிருந்தாலும், கிரெடிட் கார்டில் அதிகமாக செலவு செய்திருந்தாலும் அல்லது EMI செலுத்தாமல் இருந்தாலும் அந்த தகவலும் முன்பைவிட விரைவாக கடன் வழங்குநர்களுக்கு தெரியக்கூடும்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;நல்ல கிரெடிட் ஸ்கோர் இருந்தால் பெரிய பலன்&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;கிரெடிட் ஸ்கோர் என்பது நீங்கள் கடனை எவ்வாறு கையாள்கிறீர்கள் என்பதை வங்கிகள் மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தும் முக்கியமான தகவல்களில் ஒன்று.&lt;/p&gt;&lt;p&gt;பொதுவாக:&lt;/p&gt;&lt;p&gt;&bull; சரியான நேரத்தில் EMI செலுத்துதல்&lt;/p&gt;&lt;p&gt;&bull; கிரெடிட் கார்டு கட்டணத்தை தவறாமல் செலுத்துதல்&lt;/p&gt;&lt;p&gt;&bull; அதிகப்படியான கடனைத் தவிர்த்தல்&lt;/p&gt;&lt;p&gt;&bull; கிரெடிட் கார்டு பயன்பாட்டை கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்&lt;/p&gt;&lt;p&gt;&bull; தேவையற்ற பல கடன் விண்ணப்பங்களைத் தவிர்த்தல்&lt;/p&gt;&lt;p&gt;போன்றவை உங்கள் கடன் சுயவிவரத்திற்கு சாதகமாக இருக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;புதிய முறையில் இதுபோன்ற நல்ல நிதி நடவடிக்கைகள் முன்பைவிட விரைவாகப் பிரதிபலிக்க வாய்ப்பு உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த மாற்றம் நல்ல விஷயங்களை மட்டும் வேகமாகக் காட்டும் என்று நினைக்கக்கூடாது.&lt;/p&gt;&lt;p&gt;நீங்கள் EMI-யை தவறவிட்டால், கிரெடிட் கார்டு கட்டணத்தை தாமதப்படுத்தினால் அல்லது அதிக அளவில் கடன் பெற்றால், அந்த எதிர்மறையான தகவல்களும் முன்பைவிட விரைவாக கிரெடிட் அறிக்கையில் தோன்றலாம். குறிப்பாக அடிக்கடி கடன் பெறுபவர்கள், டிஜிட்டல் கடன்கள் அல்லது பல கிரெடிட் வரிகளைப் பயன்படுத்துபவர்கள் இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&ldquo;வாரத்திற்கு ஒருமுறை&rdquo;&lt;/strong&gt; என்றால் ஸ்கோர் ஒவ்வொரு 7 நாட்களுக்கும் கட்டாயம் மாறுமா?&lt;/p&gt;&lt;p&gt;அப்படியில்லை.&lt;/p&gt;&lt;p&gt;வாராந்திர அறிக்கை சமர்ப்பிப்பு என்பது உங்கள் கிரெடிட் ஸ்கோர் ஒவ்வொரு வாரமும் நிச்சயமாக மாறும் என்று அர்த்தமல்ல. வங்கி தகவலை எப்போது அனுப்புகிறது, கிரெடிட் தகவல் நிறுவனம் அதை எப்போது செயலாக்குகிறது, உங்கள் கணக்கில் உண்மையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதையும் பொறுத்தே ஸ்கோர் புதுப்பிக்கப்படும்.&lt;/p&gt;&lt;p&gt;சில நிபுணர்களின் மதிப்பீட்டின்படி, புதிய தகவல் கிரெடிட் அமைப்பில் பிரதிபலிக்க சுமார் 10&ndash;12 நாட்கள் ஆகலாம்; எனவே இது &ldquo;உடனடி&rdquo; அல்லது &ldquo;நொடிக்கு நொடி&rdquo; புதுப்பிப்பு என்று புரிந்துகொள்ளக்கூடாது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நீங்கள் வீடு, கார், தனிநபர் கடன் அல்லது புதிய கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கப் போகிறீர்கள் என்றால், உங்கள் தற்போதைய கடன் நிலைமை முன்பைவிட புதிய தகவல்களுடன் கடன் வழங்குநர்களுக்கு கிடைக்கக்கூடும்.&lt;/p&gt;&lt;p&gt;உதாரணமாக, பழைய கடனை நீங்கள் சமீபத்தில் முடித்திருந்தால், அந்த தகவல் நீண்ட நாட்கள் தாமதமாகாமல் அறிக்கையில் பிரதிபலிக்கலாம். இதனால் கடன் வழங்குநர் உங்கள் உண்மையான கடன் நிலையை விரைவாக பார்க்க முடியும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பழைய நடைமுறை: கடன் தகவல்கள் புதுப்பிக்க அதிக இடைவெளி &rarr; தகவல் தாமதமாக பிரதிபலிக்கும் வாய்ப்பு.&lt;/p&gt;&lt;p&gt;புதிய நடைமுறை: மாதத்தில் பல முறை தகவல் சமர்ப்பிப்பு &rarr; கிரெடிட் சுயவிவரம் விரைவாக புதுப்பிக்கப்படும் வாய்ப்பு.&lt;/p&gt;&lt;p&gt;இதன் நோக்கம், கடன் வழங்குநர்களிடம் புதிய மற்றும் துல்லியமான கடன் தகவல்கள் கிடைப்பதை உறுதி செய்வதும், கடன் அமைப்பை மேலும் வெளிப்படையாகவும் திறமையாகவும் மாற்றுவதுமாகும்.&lt;/p&gt;&lt;p&gt;எனவே இனிமேல் &ldquo;கடன் கட்டிவிட்டேன்... கிரெடிட் ஸ்கோர் எப்போது மாறும்?&rdquo; என்று பல வாரங்கள் காத்திருக்க வேண்டிய நிலை குறையலாம். அதே நேரத்தில், ஒரு EMI தவறினாலும் அதன் தாக்கம் முன்பைவிட விரைவாகத் தெரியக்கூடும் என்பதால், கடன் மற்றும் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் இன்னும் அதிக கவனமாக இருக்க வேண்டும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[business]]></category>
            <dc:creator>Asianet News</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/credit-score-gets-a-major-update-your-loan-and-emi-records-will-now-reflect-faster-vmsz4co"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Biggest Flop movie : பட்ஜெட் 45 கோடி... வசூல் வெறும் 60 ஆயிரம்; இந்தியாவின் மிகப்பெரிய பிளாப் படம் பற்றி தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/one-of-indian-cinemas-biggest-flop-movie-its-budget-45-crore-but-it-collects-60000-63id6gp</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/one-of-indian-cinemas-biggest-flop-movie-its-budget-45-crore-but-it-collects-60000-63id6gp</guid>
            <pubDate>Wed, 26 Aug 2026 17:26:49 +0530</pubDate>
            <description><![CDATA[Disaster Indian Movie in Box Office : இந்திய சினிமாவில் மிகப்பெரிய தோல்விப் படம் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம். அந்த படம் 45 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டாலும் அதற்கு 60 ஆயிரம் மட்டுமே வசூல் கிடைத்தது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0yypvtfvtp5vrd9svp110pq,imgname-the-lady-killer-1787745234767.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Disaster Indian Movie in Box Office : இந்திய சினிமாவில் மிகப்பெரிய தோல்விப் படம் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம். அந்த படம் 45 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டாலும் அதற்கு 60 ஆயிரம் மட்டுமே வசூல் கிடைத்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சினிமாவில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் திரைப்படங்களை உருவாக்கி, அதன் மூலம் மிகப்பெரிய வசூலை ஈட்டுவது தயாரிப்பாளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும். ஆனால், சில நேரங்களில் முன்னணி நடிகர்கள் நடித்திருந்தாலும், கோடிக்கணக்கில் பணம் செலவிடப்பட்டிருந்தாலும், ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அந்தப் படங்கள் படுதோல்வியை சந்திப்பதுண்டு. அந்த வகையில், பாலிவுட்டில் வெளியான ஒரு பிரம்மாண்ட பட்ஜெட் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியை சந்தித்து டிசாஸ்டர் படம் என்கிற மோசமான சாதனையை படைத்திருந்தது.&lt;/p&gt;&lt;p&gt;அந்த படத்தின் பெயர் &lsquo;தி லேடி கில்லர்&rsquo;. சுமார் ரூ.45 கோடி பட்ஜெட்டில் உருவான அப்படம், திரையரங்குகளில் மொத்தமாக வெறும் ரூ.60 ஆயிரம் மட்டுமே வசூலித்ததாக கூறப்படுகிறது. 2023-ம் ஆண்டு வெளியான &lsquo;தி லேடி கில்லர்&rsquo; திரைப்படத்தை அஜய் பஹால் இயக்கியிருந்தார். அர்ஜுன் கபூர் மற்றும் பூமி பெட்னேகர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த இந்த கிரைம் த்ரில்லர் படத்தை டி-சீரிஸ் நிறுவனம் தயாரித்தது. பெரிய தயாரிப்பு நிறுவனம், பிரபல நடிகர்கள் மற்றும் கணிசமான பட்ஜெட் என படத்திற்கு ஆரம்பத்திலேயே எதிர்பார்ப்புக்கான காரணங்கள் இருந்தன. ஆனால், படம் வெளியான பிறகு நிலைமை முற்றிலும் மாறியது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Toxic Review : யாஷின் ஆக்&zwnj;ஷன் விருந்து டேஸ்டா? வேஸ்டா? டாக்ஸிக் முழு விமர்சனம் இதோ&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lsquo;தி லேடி கில்லர்&rsquo; படத்திற்கு திரையரங்குகளில் கிடைத்த வரவேற்பு மிகவும் மோசமாக இருந்ததாக பாக்ஸ் ஆபிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் முதல் நாளில் வெறும் 293 டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனையானதாக கூறப்படுகிறது. இதன் மூலம் முதல் நாள் வசூல் சுமார் ரூ.38 ஆயிரம் என்ற அளவில் பதிவானது. தொடர்ந்து திரையரங்குகளில் படத்தின் வசூல் பெரிய அளவில் உயரவில்லை. இறுதியில், அதன் ஒட்டுமொத்த திரையரங்கு வசூல் சுமார் ரூ.60 ஆயிரம் என்ற அளவில் மட்டுமே இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.&lt;/p&gt;&lt;p&gt;ரூ.45 கோடி பட்ஜெட்டுடன் ஒப்பிடும்போது இந்த வசூல் மிகவும் குறைவானது. தயாரிப்புச் செலவுடன் மட்டுமல்லாமல், படத்தின் அச்சு மற்றும் விளம்பரச் செலவுகளைக் கூட திரையரங்கு வசூல் மூலம் ஈடுகட்ட முடியாத சூழல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;படத்தின் கதைக்களம் ரசிகர்களை கவரவில்லை என்பதுடன், வெளியீட்டுக்கு முன்பான ப்ரமோஷன் பணிகளும் போதுமான அளவில் மேற்கொள்ளப்படவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. இதனால் படம் வெளியாகியதே பல சினிமா ரசிகர்களுக்கு தெரியாத நிலை ஏற்பட்டதாக கூறப்பட்டது. திரையரங்குகளில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததால், படத்தை டிஜிட்டல் தளத்தில் வெளியிட தயாரிப்பு தரப்பு முயற்சி செய்ததாக தகவல்கள் வெளியாகின.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lsquo;தி லேடி கில்லர்&rsquo; படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பெற்றிருந்ததாக முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால் பின்னர் அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மற்ற முன்னணி ஓடிடி தளங்களும் படத்தை வாங்க முன்வராத நிலையில், தயாரிப்பாளர்களுக்கு மாற்று வழியைத் தேடும் சூழல் ஏற்பட்டது. இறுதியில், திரைப்படத்தை யூடியூப்பில் இலவசமாக வெளியிடும் முடிவு எடுக்கப்பட்டதாம். கோடிக்கணக்கில் செலவு செய்யப்பட்ட ஒரு திரைப்படம் திரையரங்குகளில் சில ஆயிரம் ரூபாய்களையே வசூலித்த சம்பவம், இந்திய சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் தோல்விகளின் மிகப்பெரிய உதாரணங்களில் ஒன்றாக &lsquo;தி லேடி கில்லர்&rsquo; படத்தை மாற்றியுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[cinema]]></category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/one-of-indian-cinemas-biggest-flop-movie-its-budget-45-crore-but-it-collects-60000-63id6gp"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Raksha Bandhan Wishes: ஒரு ராக்கி..ஆயிரம் பாசம்! இதயத்தை நெகிழ வைக்கும் ரக்‌ஷா  பந்தன் வாழ்த்துகள்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/raksha-bandhan-2026-tamil-wishes-for-brother-and-sister-1a6idfd</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/raksha-bandhan-2026-tamil-wishes-for-brother-and-sister-1a6idfd</guid>
            <pubDate>Wed, 26 Aug 2026 16:30:58 +0530</pubDate>
            <description><![CDATA[Raksha Bandhan 2026: ரக்‌ஷா பந்தன் நாளில் அன்புக்குரிய அண்ணன், தம்பி, அக்கா, தங்கையுடன் பகிர்ந்து கொள்ள மனதைத் தொடும் இதயப்பூர்வமான ரக்‌ஷா பந்தன் வாழ்த்துகளை இந்தத் தொகுப்பில் காணலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0yvkfk515hd2q4eb1hyp5qm,imgname-raksha-bandhan-wishes-1787741978213.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;Raksha Bandhan 2026: ரக்&zwnj;ஷா பந்தன் நாளில் அன்புக்குரிய அண்ணன், தம்பி, அக்கா, தங்கையுடன் பகிர்ந்து கொள்ள மனதைத் தொடும் இதயப்பூர்வமான ரக்&zwnj;ஷா பந்தன் வாழ்த்துகளை இந்தத் தொகுப்பில் காணலாம்.&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரக்&zwnj;ஷா பந்தன் என்பது சகோதரர்&ndash; சகோதரியின் அன்பு, பாசம் மற்றும் பாதுகாப்பு உணர்வை கொண்டாடும் முக்கியமான பண்டிகையாகும். இந்த நாளில் சகோதரி, சகோதரரின் கையில் ராக்கி கட்டி நல்வாழ்த்துகள் தெரிவிப்பது வழக்கம். ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் பௌர்ணமி நாளில் ரக்&zwnj;ஷா பந்தன் சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு ரக்&zwnj;ஷா பந்தன் நாளை மறுநாள் ஆகஸ்ட் 28 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த நன்நாளில் அதிகாலையிலேயே வீட்டில் பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்படும். பின்னர் சகோதரி தனது சகோதரரின் நெற்றியில் சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து, ஆரத்தி எடுத்து, அவரது கையில் மணிக்கட்டு பகுதியில் ராக்கி கயிறை கட்டுவார். இந்த நேரத்தில் தனது சகோதரன் நல்ல உடல் நலம், நீண்ட ஆயுள், மகிழ்ச்சி மற்றும் வளமான வாழ்க்கையை வாழ வேண்டும் என சகோதரிகள் பிரார்த்தனை செய்வது வழக்கம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ராக்கி கட்டிய பிறகு, சகோதரர் தனது சகோதரிக்கு பரிசு வழங்குவார். பின்னர் இருவரும் இனிப்புகளை பரிமாறி வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;ul&gt; &lt;li&gt;நீ எப்போதும் என் பாதுகாவலனாகவும், சிறந்த நண்பனாகவும், என் வாழ்க்கையின் நம்பிக்கையான துணையாகவும் இருக்கிறாய். இந்த அழகான ராக்கி பந்தம் என்றும் வலுப்பெறட்டும். என் அன்புச் சகோதரனுக்கு இனிய ரக்&zwnj;ஷா பந்தன் வாழ்த்துகள்!&lt;/li&gt; &lt;li&gt;நாம் எவ்வளவு வளர்ந்தாலும், வாழ்க்கை நம்மை எங்கு அழைத்துச் சென்றாலும், நம் சகோதரப் பாசம் மட்டும் என்றும் மாறாது. நம் உறவு வாழ்நாள் முழுவதும் இப்படியே தொடரட்டும். இனிய ரக்&zwnj;ஷா பந்தன் வாழ்த்துகள்!&lt;/li&gt; &lt;li&gt;ஒரு கொடியில் மலரும் இரு மலர்களைப் போன்றது அண்ணன்&ndash;தங்கை உறவு. எத்தனை தூரங்கள் வந்தாலும் இந்த பாசப் பந்தத்தை யாராலும் பிரிக்க முடியாது. என் அன்புச் சகோதரனுக்கு இனிய ரக்&zwnj;ஷா பந்தன் நல்வாழ்த்துகள்!&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;img&gt;&lt;ul&gt; &lt;li&gt;என் குழந்தைப் பருவத்தை சிரிப்பாலும், மகிழ்ச்சியாலும், மறக்க முடியாத நினைவுகளாலும் அழகாக்கியதற்கு நன்றி. என் வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் துணையாக இருந்த என் பிரியமான சகோதரனுக்கு இனிய ரக்&zwnj;ஷா பந்தன் வாழ்த்துகள்!&lt;/li&gt; &lt;li&gt;என்னுடன் பிறந்ததாலேயே என் குழந்தைப் பருவ நினைவுகள் இன்னும் விலைமதிப்பற்றதாகிவிட்டன. என்னை மட்டுமல்ல, என் கனவுகளையும் பாதுகாத்து, நான் முன்னேற ஊக்கமளித்த உனக்கு மனமார்ந்த நன்றி!&lt;/li&gt; &lt;li&gt;தூரம் நம்மைப் பிரித்தாலும், நம் இதயங்களை ஒருபோதும் பிரிக்க முடியாது. எங்கு இருந்தாலும் நம் பாசம் என்றும் மாறாமல் தொடரட்டும். இனிய ரக்&zwnj;ஷா பந்தன் வாழ்த்துகள்!&lt;/li&gt; &lt;li&gt;சகோதரனாக மட்டுமல்லாமல், என் சிறந்த நண்பனாகவும் நீ எனக்குக் கிடைத்தது என் வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியம். என் ஒவ்வொரு சந்தோஷத்திலும், கஷ்டத்திலும் துணையாக இருக்கும் உனக்கு இனிய ரக்&zwnj;ஷா பந்தன் நல்வாழ்த்துகள்!&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;img&gt;&lt;ul&gt; &lt;li&gt;வாழ்க்கை என்னை எங்கு அழைத்துச் சென்றாலும், உன் அன்பும் ஆதரவும் எனக்கு எப்போதும் பாதுகாப்பான புகலிடமாக இருக்கும். என் அன்புச் சகோதரனுக்கு இனிய ரக்&zwnj;ஷா பந்தன் வாழ்த்துகள்!&lt;/li&gt; &lt;li&gt;உன்னைப் போன்ற வலிமையான, அக்கறையுள்ள, அன்பான சகோதரன் எனக்குக் கிடைத்திருப்பது என் அதிர்ஷ்டம். என் வாழ்க்கையில் நீ இருப்பதே எனக்குக் கிடைத்த மிக அழகான பரிசு!&lt;/li&gt; &lt;li&gt;என் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியால் பிரகாசமாக்கும் என் அன்புக் காவலனுக்கு இனிய ரக்&zwnj;ஷா பந்தன் வாழ்த்துகள்.&lt;/li&gt; &lt;li&gt;உன் அன்பும் பாசமும் என்றும் என்னுடன் இருக்கட்டும். இந்த ரக்&zwnj;ஷா பந்தன் உன் வாழ்க்கையில் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, செழிப்பு, வெற்றி என அனைத்தையும் கொண்டு வரட்டும். எப்போதும் என் மீது நம்பிக்கை வைத்து, என்னை ஊக்குவித்து, பாதுகாத்ததற்கு நன்றி. இனிய ரக்&zwnj;ஷா பந்தன் வாழ்த்துகள்.&lt;/li&gt; &lt;li&gt;ராக்கி என்பது ஒரு நூல் கட்டும் உறவு அல்ல... வாழ்நாள் முழுவதும் இதயங்களை இணைக்கும் பாசப் பந்தம். என் அன்புச் சகோதரனுக்கு இனிய ரக்&zwnj;ஷாபந்தன் நல்வாழ்த்துகள்.&lt;/li&gt;&lt;/ul&gt;]]></content:encoded>
            <category><![CDATA[life-style]]></category>
            <dc:creator>Vishnupriya</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/raksha-bandhan-2026-tamil-wishes-for-brother-and-sister-1a6idfd"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Magudam OTT Release : தியேட்டரில் வாஷ் அவுட் ஆன விஷாலின் மகுடம்.... ஓடிடியில் எப்போ ரிலீஸ் ஆகிறது?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/actor-vishal-directional-magudam-movie-ott-release-date-18oeyi7</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/actor-vishal-directional-magudam-movie-ott-release-date-18oeyi7</guid>
            <pubDate>Wed, 26 Aug 2026 16:25:37 +0530</pubDate>
            <description><![CDATA[Magudam Movie OTT Release Date : விஷால் முதன்முறையாக இயக்கி, ஹீரோவாக நடித்த மகுடம் திரைப்படம் எப்போது ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kzz37hj6hkj0gn73tj53gy5x,imgname-magudam-vishal-1786676233798.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Magudam Movie OTT Release Date : விஷால் முதன்முறையாக இயக்கி, ஹீரோவாக நடித்த மகுடம் திரைப்படம் எப்போது ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ் சினிமாவில் ஆக்&zwnj;ஷன் ஹீரோவாக தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர் விஷால். &lsquo;திமிரு&rsquo;, &lsquo;சண்டக்கோழி&rsquo;, &lsquo;துப்பறிவாளன்&rsquo;, &lsquo;இரும்புத்திரை&rsquo; என பல படங்கள் மூலம் ஆக்&zwnj;ஷன் மற்றும் கமர்ஷியல் கதைகளில் தனக்கென ஒரு இடத்தை அவர் பிடித்துள்ளார். இந்த நிலையில், நடிப்புடன் சேர்த்து முதல் முறையாக இயக்குநர் பொறுப்பையும் ஏற்று விஷால் உருவாக்கிய திரைப்படம் &lsquo;மகுடம்&rsquo;. படம் அறிவிக்கப்பட்டது முதலே விஷாலின் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்து வந்தது. குறிப்பாக இப்படத்தில் அவர் இரட்டை வேடங்களில் நடித்திருப்பது கூடுதல் கவனத்தை ஏற்படுத்தியது.&lt;/p&gt;&lt;p&gt;கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான &lsquo;மகுடம்&rsquo; படத்தில் விஷாலுடன் அஞ்சலி, துஷாரா விஜயன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வெளியான பிறகு &lsquo;மகுடம்&rsquo; திரைப்படத்திற்கு எதிர்பார்த்த அளவிலான வரவேற்பு கிடைக்கவில்லை. குறிப்பாக படத்தின் நீளம், பல்வேறு காலகட்டங்களில் பயணிக்கும் கதை மற்றும் சில இடங்களில் மெதுவாக நகரும் திரைக்கதை ஆகியவை விமர்சனங்களுக்கு உள்ளாகின. சுமார் 3 மணி நேரம் 5 நிமிடங்கள் ஓடும் இப்படத்தின் கதையை இன்னும் சுருக்கமாகவும் வேகமாகவும் சொல்லியிருக்கலாம் என்பது ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் கருத்தாக இருந்தது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Magudam Review : இயக்குநராக ஜெயித்தாரா விஷால்? மகுடம் ட்விட்டர் விமர்சனம் இதோ&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;படத்தின் மீதான எதிர்பார்ப்புடன் ஒப்பிடும்போது, &lsquo;மகுடம்&rsquo; திரைப்படத்தின் ஓப்பனிங் வசூல் குறைவாகவே இருந்ததாக பாக்ஸ் ஆபிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் நாளில் இந்தியாவில் சுமார் ரூ.60 லட்சம் வசூல் மட்டுமே கிடைத்ததாம். அடுத்தடுத்த நாட்களிலும் வசூலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படாததால், வெளியான ஒரே வாரத்தில் இப்படத்திற்கான தியேட்டர்களின் எண்ணிக்கை மளமளவென குறைக்கப்பட்டது.&lt;/p&gt;&lt;p&gt;இணையத்தில் வெளியாகியுள்ள சில பாக்ஸ் ஆபிஸ் கணிப்புகளின்படி, இரண்டு வார திரையரங்கு ஓட்டத்தின் முடிவில் &lsquo;மகுடம்&rsquo; படத்தின் உலகளாவிய வசூல் சுமார் ரூ.3 கோடி என்ற அளவில் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் தயாரிப்பு நிறுவனம் இதுவரை படத்தின் இறுதி வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விஷால் தொடர்ந்து ஆக்&zwnj;ஷன் படங்களில் நடித்து வருவதால், அவரது திரைப்படங்களுக்கு குறிப்பிட்ட அளவில் ரசிகர்களிடையே ஓப்பனிங் கிடைப்பது வழக்கம். அந்த வகையில் &lsquo;மகுடம்&rsquo; படத்திற்கு ஏற்பட்ட குறைவான திரையரங்கு வரவேற்பு அவரது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;அதிலும், விஷால் முதன்முறையாக இயக்குநராக அறிமுகமான திரைப்படம் என்பதால், இப்படத்தின் ரிசல்ட் அவர்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கவில்லை.&lt;/p&gt;&lt;p&gt;முதல் படத்திலேயே வித்தியாசமான கதைக்களத்தை கையாள முயன்றிருந்த விஷால், அந்த கதையை இன்னும் நேர்த்தியான திரைக்கதையுடன் அணுகியிருந்தால் படத்தின் தாக்கம் அதிகமாக இருந்திருக்கும் என்பதே பல விமர்சகர்களின் கருத்தாக இருந்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதற்கிடையில் &lsquo;மகுடம்&rsquo; படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பான தகவலும் இணையத்தில் பரவி வருகிறது. அதன்படி, இத்திரைப்படம் செப்டம்பர் 11-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என கூறப்படுகிறது. ஜீ5 தளத்தில் படம் வெளியாகலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ஓடிடி வெளியீட்டு தேதி குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. எனவே, விஷால் ரசிகர்கள் தயாரிப்பு தரப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர். விரைவில் இதுகுறித்த அப்டேட் வெளியாகலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[cinema]]></category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/actor-vishal-directional-magudam-movie-ott-release-date-18oeyi7"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Puja Mistakes: பூஜை விளக்கில் ஊதுபத்தி ஏற்றுகிறீர்களா? இந்த ஒரு தவறால் வீட்டில் தரித்திரம் வரும்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/spiritual/why-lighting-agarbatti-from-puja-lamp-is-considered-inauspicious-zpchwcf</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/spiritual/why-lighting-agarbatti-from-puja-lamp-is-considered-inauspicious-zpchwcf</guid>
            <pubDate>Wed, 26 Aug 2026 16:12:54 +0530</pubDate>
            <description><![CDATA[சாஸ்திரங்களின்படி, பூஜை செய்யும் போது எரியும் விளக்கில் ஊதுபத்தி ஏற்றுவது பெரும் பாவமாகும். அது வீட்டில் வறுமையை உண்டாக்கி, நேர்மறை ஆற்றலைக் குறைக்கிறது. இந்தக் கட்டுரை இதற்கான காரணங்களையும், பூஜைக்கான சரியான விதிகளையும் விளக்குகிறது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0yfth3a96ftpftvsq61cfva,imgname-lighting-agarbatti--5--1787729626218.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சாஸ்திரங்களின்படி, பூஜை செய்யும் போது எரியும் விளக்கில் ஊதுபத்தி ஏற்றுவது பெரும் பாவமாகும். அது வீட்டில் வறுமையை உண்டாக்கி, நேர்மறை ஆற்றலைக் குறைக்கிறது. இந்தக் கட்டுரை இதற்கான காரணங்களையும், பூஜைக்கான சரியான விதிகளையும் விளக்குகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சனாதன இந்து மதத்தில், தினசரி வழிபாடுகளுக்கும் காணிக்கைகளுக்கும் மிகவும் புனிதமான இடம் உண்டு. ஒவ்வொரு வீட்டிலும் காலையிலும் மாலையிலும் கடவுளுக்கு முன்பாக விளக்கேற்றி, தூபம் மற்றும் விளக்குகளுடன் வழிபடுவது ஒரு பாரம்பரியமாகும். வேதங்களின்படி, கடவுளுக்கு முன்பாக ஏற்றப்படும் விளக்கின் ஒளி உண்மையில் 'அக்னி தேவனின்' வடிவமாகும், மேலும் அது மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையே ஒரு இணைப்பாகச் செயல்படுகிறது. இருப்பினும், வழிபாடு செய்யும்போது பெரும்பாலான மக்கள் செய்யும் ஒரு பொதுவான மற்றும் பெரிய தவறு, எரியும் விளக்கிலிருந்து தூபம் அல்லது ஊதுபத்திகளை ஏற்றுவதாகும்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சாஸ்திரங்கள் மற்றும் ஜோதிடத்தின்படி, எரியும் விளக்கில் இருந்து சாம்பிராணி அல்லது ஊதுபத்திகளை ஏற்றுவது மிகவும் அசுபமானதாகவும் பெரும் பாவமாகவும் கருதப்படுகிறது. அப்படியென்றால், இதனால் ஏற்படக்கூடிய இழப்புகள் என்ன? அதற்கான விதிகள் என்ன? இதோ முழுமையான விளக்கம்.&lt;/p&gt;&lt;p&gt;ஒரு விளக்கைக் கொண்டு ஊதுபத்தியை ஏற்றினால் ஏற்படும் இழப்புகள் என்ன?&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;1. குடும்பத்தைச் சூழ்ந்துள்ள கொடிய வறுமை:&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;சாஸ்திரங்களின்படி, வழிபாட்டிற்காக ஏற்றப்படும் விளக்கு தெய்வீக ஒளியின் சின்னமாகும். அந்தப் புனிதமான சுடரைக் கொண்டு மற்ற பொருட்களை எரிப்பது அல்லது பற்ற வைப்பது வீட்டில் 'பர்கத்' (செழிப்பு) ஏற்படுவதைத் தடுக்கும். தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும், கடன் வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது, மேலும் இது லட்சுமி தேவியின் அதிருப்திக்கும் வழிவகுக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒரு விளக்கு வீட்டிலிருந்து எதிர்மறை ஆற்றலை அகற்றி, நேர்மறை ஆற்றலை நிரப்புகிறது. இருப்பினும், அதே விளக்கில் இருந்து சாம்பிராணி ஏற்றப்படும்போது, ​​அந்த ஒளியின் புனிதம் குலைந்து, வீட்டில் எதிர்மறை அலைகள் அதிகரிக்கும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பல புராணக்கதைகள் மற்றும் ஆன்மீகப் போதகர்களின் கூற்றுப்படி, வழிபாட்டில் ஊதுபத்திகளை எரிப்பதை விட இயற்கை தூபத்தை (தூபம்) எரிப்பதே சிறந்தது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;மூங்கில் தோஷம்: &lt;/strong&gt;பெரும்பாலான ஊதுபத்திகளில் ஒரு மூங்கில் குச்சி இருக்கும். இந்து பாரம்பரியத்தில், சிரார்த்தம் அல்லது இறுதிச் சடங்குகளின் போது மட்டுமே மூங்கில் எரிக்கப்படுகிறது. தினசரி வழிபாட்டின் போது மூங்கிலை எரிப்பது குடும்பத்தின் வளர்ச்சியைத் தடுப்பதாகவும், பித்ரு தோஷத்தை ஏற்படுத்துவதாகவும் நம்பப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;அறிவியல் காரணம்: &lt;/strong&gt;இரசாயனங்கள் சேர்த்து மூங்கிலை எரிப்பதால் வெளிவரும் புகை உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிப்பதுடன், சுற்றுச்சூழலுக்கும் நல்லதல்ல. எனவே, தூய பொருட்களால் செய்யப்பட்ட ஊதுபத்திகளைப் பயன்படுத்துவதே சிறந்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தெய்வத்தின் விளக்கை ஏற்றுவதற்கு எப்போதும் சுத்தமான பசு நெய் அல்லது நல்லெண்ணெயைப் பயன்படுத்துங்கள் (சனி-பைரவ பூஜைக்கு வெற்றிலை/கடுகு எண்ணெய்).&lt;/p&gt;&lt;p&gt;ஊதுபத்தியை ஏற்றுவதற்குத் தனியான தீக்குச்சி அல்லது கற்பூரத்தைப் பயன்படுத்துங்கள். அதை ஒருபோதும் பிரதான விளக்குச் சுடரில் ஏற்றாதீர்கள்.&lt;/p&gt;&lt;p&gt;வாஸ்து சாஸ்திரத்தின்படி, எப்போதும் வடகிழக்கு, கிழக்கு அல்லது வடக்கு திசையை நோக்கி விளக்கை ஏற்றுவது சிறந்தது.&lt;/p&gt;&lt;p&gt;( &lt;strong&gt;குறிப்பு: &lt;/strong&gt;இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் மத நம்பிக்கைகள், ஜோதிடம் மற்றும் நாட்டுப்புறக் கதைகளை அடிப்படையாகக் கொண்டவை. நம்பிக்கை என்பது தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது.)&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[spiritual]]></category>
            <dc:creator>Asianet News</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/spiritual/why-lighting-agarbatti-from-puja-lamp-is-considered-inauspicious-zpchwcf"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Samasaptaga Yoga : செப்டம்பரில் உருவாகும் சமசப்தக யோகம்... ஒரு மாதத்திற்கு அடிமேல் அடிவாங்கப்போகும் 5 ராசிகள்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/samasaptaga-yoga-may-turn-things-upside-down-for-these-5-zodiac-signs-qowsx1w</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/samasaptaga-yoga-may-turn-things-upside-down-for-these-5-zodiac-signs-qowsx1w</guid>
            <pubDate>Wed, 26 Aug 2026 15:28:56 +0530</pubDate>
            <description><![CDATA[September Astrology : சனி மற்றும் சூரியனின் நிலை சமசப்தக யோகத்தை உருவாக்கும். இந்த யோகம் சில ராசிகளுக்கு நிதிப் பிரச்சனைகளையும் சவால்களையும் உருவாக்கும்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0yqxvw5pehgx3aqhe3y65t8,imgname-astrology--20--1787738124165.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;September Astrology : சனி மற்றும் சூரியனின் நிலை சமசப்தக யோகத்தை உருவாக்கும். இந்த யோகம் சில ராசிகளுக்கு நிதிப் பிரச்சனைகளையும் சவால்களையும் உருவாக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜோதிடத்தில் சூரியனும் சனியும் ஒன்றுக்கொன்று எதிர்மறையான தன்மை கொண்ட கிரகங்களாகக் கருதப்படுகின்றன. இவ்விரு கிரகங்களும் ஒருவருக்கொருவர் எதிரெதிர் நிலையில், அதாவது 180 டிகிரி கோணத்தில் அமையும் போது சமசப்தக யோகம் உருவாகிறது. இந்த கிரக அமைப்பு அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றாலும், குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஜோதிடக் கணிப்புகள் கூறுகின்றன.&lt;/p&gt;&lt;p&gt;வரும் செப்டம்பர் 17-ம் தேதி காலை 7:58 மணிக்கு சூரியன் கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அதே நேரத்தில் சனி மீன ராசியில் இருப்பதால், சூரியனுக்கு நேர் எதிரான நிலையில் சனி அமைகிறது. இதன் காரணமாக சமசப்தக யோகம் உருவாகும் எனக் கூறப்படுகிறது. பின்னர் அக்டோபர் 19-ம் தேதி சூரியன் துலாம் ராசிக்கு நகரும் வரை இந்த தாக்கம் தொடரும் என ஜோதிடர்கள் கருதுகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;இந்த காலகட்டத்தில் சில ராசியினர் பணம், வேலை, குடும்பம், உறவுகள் மற்றும் உடல்நலம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. அந்த ராசிகள் குறித்து பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;Mahalakshmi Raj Yoga : செப்டம்பரில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்... அதிர்ஷ்டத்தின் உச்சிக்கே செல்லப்போகும் 5 ராசிகள்...!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சமசப்தக யோகத்தின் தாக்கத்தால் கும்ப ராசியினருக்கு பல்வேறு தடைகள் உருவாகலாம். வருமானத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுவதுடன், எதிர்பாராத செலவுகளும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தொழில் அல்லது பணியிடத்தில் கூடுதல் முயற்சி மேற்கொண்டால்தான் எதிர்பார்த்த பலனைப் பெற முடியும்.&lt;/p&gt;&lt;p&gt;குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பணம் தொடர்பான முடிவுகளில் அவசரப்படாமல் இருப்பது அவசியம். உடல்நலத்திலும் அலட்சியம் காட்டக்கூடாது. எந்த முக்கியமான முடிவையும் எடுப்பதற்கு முன் அதன் சாதக, பாதகங்களை நன்கு ஆராய்வது நல்லது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேஷ ராசியினருக்கு இந்த காலகட்டத்தில் தேவையற்ற செலவுகள் அதிகரிக்கக்கூடும். பணியிடத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் அல்லது வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. வேலைப்பளு அதிகரிப்பதால் மன அழுத்தமும் உருவாகலாம்.&lt;/p&gt;&lt;p&gt;நிதி விஷயங்களில் கவனமாக செயல்படுவது அவசியம். எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடிய சூழல் இருப்பதால், சேமிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் படிப்பில் கவனச்சிதறல் ஏற்படாமல் கூடுதல் முயற்சி செய்ய வேண்டும். எந்த சவாலாக இருந்தாலும் மனம் தளராமல் எதிர்கொள்வது முக்கியம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த யோக காலத்தில் செய்யும் காரியங்களில் தாமதம் மற்றும் தடைகள் ஏற்படக்கூடும். எதிர்பார்த்த விஷயங்கள் உடனடியாக நிறைவேறாமல் போகலாம். இதனால் மன அழுத்தமும் பதற்றமும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பாமல் கடின உழைப்பில் கவனம் செலுத்த வேண்டும். நண்பர்களுடன் தேவையற்ற கருத்து மோதல்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது நல்லது. காதல் மற்றும் திருமண உறவுகளிலும் சிறிய பிரச்சனைகள் பெரிதாகாமல் பொறுமையுடன் அணுகுவது அவசியம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மீன ராசியினருக்கு சூரியன்-சனி எதிரெதிர் நிலை சற்று சவாலானதாக இருக்கலாம். குடும்பத்தினர் அல்லது நண்பர்களிடம் இருந்து எதிர்பார்த்த ஆதரவு கிடைக்காத சூழல் ஏற்படலாம். இதனால் தன்னம்பிக்கை குறையும் நிலையும் உருவாகலாம்.&lt;/p&gt;&lt;p&gt;தொழிலில் கூடுதல் உழைப்பு தேவைப்படலாம். எதிரிகளின் செயல்பாடுகளால் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக பணம் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களில் அலட்சியம் கூடாது. இந்த காலத்தில் அவசர முடிவுகள் மற்றும் தேவையற்ற ரிஸ்க் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சூரியன் கன்னி ராசிக்குள் நுழையும் நிலையில், இந்த ராசியினருக்கு சமசப்தக யோகத்தின் தாக்கம் நேரடியாக உணரப்படலாம். பயணங்களின்போது உடமைகள் மற்றும் முக்கிய ஆவணங்களை பத்திரமாக வைத்துக்கொள்வது அவசியம்.&lt;/p&gt;&lt;p&gt;குடும்பத்தில் சிறிய விஷயங்களுக்குக் கூட வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொறுமையுடன் செயல்பட வேண்டும். பணியில் கவனம் செலுத்துவதில் சிரமம் ஏற்படலாம். உடல்நலத்திலும் கூடுதல் அக்கறை தேவை. குறிப்பாக வாகனம் ஓட்டும்போது அவசரத்தைத் தவிர்த்து பாதுகாப்பாக பயணிப்பது நல்லது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[astrology]]></category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/samasaptaga-yoga-may-turn-things-upside-down-for-these-5-zodiac-signs-qowsx1w"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Peacock: இந்த 4 இடங்களில் மயிலிறகை வைத்தால் போதும், அதிர்ஷ்டம் வரும்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/webstories/spiritual/peacock-feather-vastu-tips-where-to-place-peacock-feathers-in-your-home-izzk4z3</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/webstories/spiritual/peacock-feather-vastu-tips-where-to-place-peacock-feathers-in-your-home-izzk4z3</guid>
            <pubDate>Wed, 26 Aug 2026 15:28:15 +0530</pubDate>
            <description><![CDATA[Peacock Feather Vastu: வாஸ்து சாஸ்திரப்படி, வீட்டில் இந்த 4 இடங்களில் மயிலிறகை வைத்தால், உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பு பெருகுவதில் சந்தேகமே இல்லை.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwpss2crdgbybc0pvfhmgbg9,imgname-peacock-feather-1783176661399.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <category><![CDATA[spiritual]]></category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/webstories/spiritual/peacock-feather-vastu-tips-where-to-place-peacock-feathers-in-your-home-izzk4z3"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Skincare Tips : இந்த ரகசியம் தெரிஞ்சா மேக்கப்பே தேவையில்லை! நைட்ல இதெல்லாம் பண்ணுங்க போதும்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/webstories/health-beauty/night-skincare-tips-to-look-good-without-makeup-oyg1l2g</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/webstories/health-beauty/night-skincare-tips-to-look-good-without-makeup-oyg1l2g</guid>
            <pubDate>Wed, 26 Aug 2026 15:25:54 +0530</pubDate>
            <description><![CDATA[Skincare Tips : தினமும் இரவு தூங்குமுன் இந்த எளிய முறைகளைப் பின்பற்றினால் போதும், உங்கள் முகம் இயற்கையாகவே பளபளக்கும். இனி மேக்கப் போட வேண்டிய அவசியமே இருக்காது!]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kghh7qe5wm9jjbm9wtk3ht7f,imgname-liquid-tint-blush-for-fair-skin-3-1770115030469.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <category><![CDATA[health-beauty]]></category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/webstories/health-beauty/night-skincare-tips-to-look-good-without-makeup-oyg1l2g"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Peanuts Benefits : தினமும் வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் 7 ஆச்சரிய நன்மைகள்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/webstories/health-food/7-surprising-benefits-of-eating-peanuts-every-day-12811yw</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/webstories/health-food/7-surprising-benefits-of-eating-peanuts-every-day-12811yw</guid>
            <pubDate>Wed, 26 Aug 2026 15:15:27 +0530</pubDate>
            <description><![CDATA[Peanuts Benefits : வேர்க்கடலை சுவையான ஸ்நாக்ஸ் மட்டுமல்ல, புரோட்டீன், நார்ச்சத்து, நல்ல கொழுப்புகள் நிறைந்த சத்தான உணவு. அளவோடு சாப்பிட்டால் பல ஆரோக்கிய நன்மைகளைத் தரும்!]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kkp2hx9ftgakqfgvbck1by68,imgname-iran-israel-war--3--1773488633135.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <category><![CDATA[health-food]]></category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/webstories/health-food/7-surprising-benefits-of-eating-peanuts-every-day-12811yw"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Bangle Designs : உங்கள் கைகளின் அழகை ரெட்டிப்பாக்கும் வளையல்கள்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/webstories/life-style-fashion/stylish-bangle-designs-to-enhance-your-look-g35wmyu</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/webstories/life-style-fashion/stylish-bangle-designs-to-enhance-your-look-g35wmyu</guid>
            <pubDate>Wed, 26 Aug 2026 15:06:56 +0530</pubDate>
            <description><![CDATA[Bangle Designs : தினசரி மற்றும் விசேஷங்களுக்கு ஏற்ற, ஸ்டைலான மற்றும் நேர்த்தியான வளையல்கள் இங்கே! உங்கள் கைகளுக்கு அழகு சேர்க்க ஒருமுறை பார்ருங்கள்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kr3jgrtj560dq6x5k9kf5mkz,imgname-candy-bangles-for-18-plus-girls-1778236547922.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <category><![CDATA[life-style-fashion]]></category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/webstories/life-style-fashion/stylish-bangle-designs-to-enhance-your-look-g35wmyu"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Lost Luggage : ரயிலில் பை தொலைந்துபோனால் உடனே இதைச் செய்யுங்கள்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/what-to-do-if-you-lose-your-luggage-on-a-train-r98h2o5</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/what-to-do-if-you-lose-your-luggage-on-a-train-r98h2o5</guid>
            <pubDate>Wed, 26 Aug 2026 14:55:06 +0530</pubDate>
            <description><![CDATA[ரயில் பயணத்தில் பை தொலைந்தால் பதற வேண்டாம்! உடனே TTE அல்லது ரயில்வே காவல்துறையிடம் (RPF) புகார் அளித்து, FIR பதிவு செய்யுங்கள். மேலும், 139 என்ற எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0ynwt0q32tdgbjcbx1pdt45,imgname-what-to-do-if-you-lose-your-luggage-on-a-train-1787735992343.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ரயில் பயணத்தில் பை தொலைந்தால் பதற வேண்டாம்! உடனே TTE அல்லது ரயில்வே காவல்துறையிடம் (RPF) புகார் அளித்து, FIR பதிவு செய்யுங்கள். மேலும், 139 என்ற எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரயிலில் உங்கள் பை தொலைந்துவிட்டதை அறிந்ததும் பதற்றமடையாமல், உடனடியாக அங்கிருக்கும் TTE, கார்டு அல்லது இதர ரயில்வே ஊழியர்களைத் தொடர்பு கொண்டு தெரிவிக்கவும். நீங்கள் ஏறிய மற்றும் இறங்கும் இடங்கள், பயணத் தேதி, ரயில் எண், உங்கள் பை இருந்த இருக்கை மற்றும் பெட்டியின் விவரம் போன்றவற்றை அவர்களிடம் வழங்க வேண்டும். இந்தத் தகவல்கள் பை ரயிலிலேயே உள்ளதா அல்லது திருடப்பட்டுள்ளதா என்பதை ரயில்வே அதிகாரிகளுக்குக் கண்டறிய உதவும். தற்போதைய புகார்களுக்காக Rail Madad Seva என்ற வசதி பயன்பாட்டில் உள்ளது. அதுமட்டுமின்றி, பயணத்தின்போது எவ்வித உதவி தேவைப்பட்டாலும் 139 என்ற உதவி எண்களை அழைத்து உதவிகளைப் பெறலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Train Ticket : தட்கல் டிக்கெட் கிடைக்கலையா? கடைசி நேரத்துல கன்ஃபார்ம் டிக்கெட் வாங்க இந்த ட்ரிக் ஃபாலோ பண்ணுங்க!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உங்கள் பை திருடு போயிருக்கலாம் என சந்தேகம் இருந்தால், உடனடியாக ரயில்வே போலீஸ் அல்லது RPF ஊழியர்களுக்குத் தகவல் கொடுங்கள். தொலைந்த பொருட்கள் குறித்து 'ரயில் madad' செயலியில் புகார் அளிக்கலாம் என ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர். 139 என்ற எண்ணுக்கு அழைத்தும் நீங்கள் உதவியைப் பெறலாம். புகார் செய்யும்போது உங்கள் மொபைல் எண், ரயில் எண், PNR எண், கோச் மற்றும் சீட் எண், பயண விவரங்கள், பையின் நிறம், அளவு, அடையாளங்கள் மற்றும் உள்ளே இருந்த பொருட்கள் போன்ற விவரங்களைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். 'ரயில் madad'-ல் புகார் பதிவு செய்யும்போது, தேவைப்பட்டால் புகைப்படங்கள் அல்லது பிற ஆதாரங்களையும் நீங்கள் அப்லோட் செய்யலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Hindu Wedding : தாலிக்கு 3 முடிச்சு போடுறது ஏன்? இதுக்கு பின்னாடி இவ்ளோ அர்த்தம் இருக்கா?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பை தொலைந்தவுடன் தாமதிக்காமல் புகார் செய்வது மிகவும் முக்கியம். தாமதம் செய்தால், பை எங்கே இருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பது கடினமாகிவிடும். நீங்கள் தகவல் கொடுத்ததும், ரயில்வே ஊழியர்கள் சம்பந்தப்பட்ட ஸ்டேஷன், RPF அல்லது பிற அதிகாரிகளுக்குத் தகவல் கொடுப்பார்கள். திருட்டு நடந்திருந்தால், FIR பதிவு செய்ய RPF ஊழியர்கள் உங்களுக்கு உதவுவார்கள். ரயில்வேயில் 'Lost and Found' சேவையும் உள்ளது. எனவே, பை தொலைந்ததும் 'இனி கிடைக்காது' என்று நினைக்காமல் அதிகாரிகளிடம் தெரிவியுங்கள். எதிர்காலத்தில் இதுபோல நடக்காமல் இருக்க, உங்கள் பையில் பெயர், மொபைல் எண் எழுதிய டேக் ஒன்றை மாட்டி வைப்பது நல்லது. விலை உயர்ந்த பொருட்கள், பணம், முக்கிய ஆவணங்களை எப்போதும் உங்களுடனேயே பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Budhan Uccha Peyarchi : புதன் உச்ச பெயர்ச்சியில் உருவாகும் ஐயப்பன் அருள்! அசுர வளர்ச்சி பெறும் 4 ராசிகள்!&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[life-style]]></category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/what-to-do-if-you-lose-your-luggage-on-a-train-r98h2o5"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Toxic : ஜனநாயகன் ரெக்கார்டு காலி! பாக்ஸ் ஆபிஸில் 'டாக்ஸிக்' சுனாமி! முதல் நாள் எவ்வளவு வசூலிக்கும்?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/yash-toxic-movie-day-1-box-office-collection-estimates-over-rs-100-crores-m7w054h</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/yash-toxic-movie-day-1-box-office-collection-estimates-over-rs-100-crores-m7w054h</guid>
            <pubDate>Wed, 26 Aug 2026 14:50:38 +0530</pubDate>
            <description><![CDATA[Toxic Box Office : யாஷ் நடித்துள்ள 'டாக்ஸிக்' படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரத்தை பொறுத்தவரை, அட்வான்ஸ் புக்கிங்கில் ரூ.64 கோடி வசூலித்துள்ளதால், உலகளவில் ரூ.100 கோடி கிளப்பில் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0sw7bcy6yw8y99g2anzyh34,imgname-toxic-and-jan-janadan-1787574857117.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Toxic Box Office : யாஷ் நடித்துள்ள 'டாக்ஸிக்' படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரத்தை பொறுத்தவரை, அட்வான்ஸ் புக்கிங்கில் ரூ.64 கோடி வசூலித்துள்ளதால், உலகளவில் ரூ.100 கோடி கிளப்பில் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் ரசிகர்கள் நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்திருந்த &lsquo;டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்&rsquo; திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த கேங்ஸ்டர் ஆக்&zwnj;ஷன் படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.&lt;/p&gt;&lt;p&gt;படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்ததால், அதிகாலை முதலே பல்வேறு இடங்களில் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன. ரசிகர்கள் திரையரங்குகளை நோக்கி படையெடுத்த நிலையில், பல பகுதிகளில் கொண்டாட்டங்கள் களைகட்டின. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள &lsquo;டாக்ஸிக்&rsquo;, இந்திய சினிமாவின் பிரம்மாண்டமான தயாரிப்புகளில் ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Toxic Review : யாஷின் ஆக்&zwnj;ஷன் விருந்து டேஸ்டா? வேஸ்டா? டாக்ஸிக் முழு விமர்சனம் இதோ&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்களை கண்காணிக்கும் சாக்னில்க் தகவல்படி, &lsquo;டாக்ஸிக்&rsquo; படத்திற்கு இந்திய அளவில் வெளியீட்டுக்கு முன்பான முன்பதிவிலேயே சுமார் ரூ.64.85 கோடி கிராஸ் வசூல் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அதேபோல் புக் மை ஷோ தளத்தில் மட்டும் 7 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முன்பதிவு வேகம், &lsquo;ஜவான்&rsquo;, &lsquo;கல்கி 2898 ஏடி&rsquo; உள்ளிட்ட முன்னணி படங்களின் சாதனைகளுடன் ஒப்பிடப்படும் அளவுக்கு சென்றுள்ளது. இதனால் முதல் நாள் வசூல் குறித்த எதிர்பார்ப்பும் மேலும் அதிகரித்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கர்நாடகாவில் &lsquo;டாக்ஸிக்&rsquo; படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. மாநிலத்தின் பெரும்பாலான திரையரங்குகளில் படம் திரையிடப்படுவதுடன், நீண்ட நாட்களாக மூடப்பட்டிருந்த சில திரையரங்குகளும் இப்படத்தின் வெளியீட்டால் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தி பேசும் வட இந்திய சந்தையிலும் படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு முதல் நாளில் மட்டும் ரூ.30 முதல் ரூ.40 கோடி வரை வசூல் கிடைக்க வாய்ப்புள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் கணிப்புகள் தெரிவிக்கின்றன.&lt;/p&gt;&lt;p&gt;ஆந்திரா மற்றும் தெலங்கானா பகுதிகளிலும் &lsquo;டாக்ஸிக்&rsquo; படத்தின் முன்பதிவு வேகம் கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக &lsquo;கே.ஜி.எஃப் 2&rsquo; படத்தின் அட்வான்ஸ் புக்கிங் சாதனையை இப்படம் கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;வெளிநாட்டு சந்தையிலும் யாஷ்ஷின் படத்திற்கு வரவேற்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக இங்கிலாந்தில் மட்டும் 400-க்கும் அதிகமான திரைகளில் படம் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு கன்னட திரைப்படம் இத்தனை அதிகமான திரைகளில் வெளியாகியிருப்பது இதுவே முதல்முறை என்ற பெருமையையும் &lsquo;டாக்ஸிக்&rsquo; பெற்றுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முன்பதிவு நிலவரம், திரையரங்கு எண்ணிக்கை மற்றும் ரசிகர்களின் வரவேற்பை கணக்கில் எடுத்துக்கொண்டால், &lsquo;டாக்ஸிக்&rsquo; திரைப்படம் உலகளவில் முதல் நாளில் ரூ.100 கோடி முதல் ரூ.120 கோடி வரை வசூல் செய்யக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. டாக்ஸிக் படத்தை தயாரித்த கேவிஎன் நிறுவனம் கடைசியாக தயாரித்திருந்த விஜய்யின் ஜனநாயகன் படம் முதல் நாள் 80 கோடி வசூலித்து இருந்தது. அந்த சாதனையை டாக்ஸிக் முறியடிக்கும் என கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள மல்லா ரெட்டி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய யாஷ், &lsquo;டாக்ஸிக்&rsquo; வழக்கமான கேங்ஸ்டர் படமாக இருக்காது என குறிப்பிட்டிருந்தார். படம் தைரியமான மற்றும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டிருப்பதாகவும், மனிதர்களின் மனநிலை, உறவுகளில் இருக்கும் இருண்ட பகுதிகள் மற்றும் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சிக்கல்களை மையமாகக் கொண்டு கதை நகரும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.&lt;/p&gt;&lt;p&gt;கன்னட சினிமாவில் இருந்து &lsquo;கே.ஜி.எஃப்&rsquo; படங்களின் மூலம் இந்திய அளவில் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய யாஷ், தற்போது &lsquo;டாக்ஸிக்&rsquo; மூலம் அந்த எல்லையை மேலும் விரிவுபடுத்தியுள்ளார். கன்னடம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் சர்வதேச சந்தைகளிலும் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு, யாஷ்ஷின் பான்-இந்தியன் மார்க்கெட்டை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[cinema]]></category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/yash-toxic-movie-day-1-box-office-collection-estimates-over-rs-100-crores-m7w054h"/>
        </item>
        <item>
            <title><![CDATA[சந்திர கிரகணத்தில் சனி வக்ரம்..! 50 ஆண்டுக்கு பிறகு அரிய மாற்றம் – உச்சத்திற்கு செல்லும் 3 ராசிகள்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/rare-saturn-retrograde-during-lunar-eclipse-after-decades-these-3-zodiac-signs-are-set-for-major-luck-3wumx9k</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/rare-saturn-retrograde-during-lunar-eclipse-after-decades-these-3-zodiac-signs-are-set-for-major-luck-3wumx9k</guid>
            <pubDate>Wed, 26 Aug 2026 14:47:47 +0530</pubDate>
            <description><![CDATA[பல ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் அரிய கிரக அமைப்பு சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தப் போகிறதாம். சந்திர கிரகண காலத்தில் சனி வக்ரமாவதால், இந்த 3 ராசிகளுக்கு பணம், பதவி, தொழில் என அதிர்ஷ்டம் உச்சத்தைத் தொடப் போகிறதாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0yn0jv0c129rfhd2v43ncgx,imgname-astrology--50--1787735067488.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;பல ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் அரிய கிரக அமைப்பு சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தப் போகிறதாம். சந்திர கிரகண காலத்தில் சனி வக்ரமாவதால், இந்த 3 ராசிகளுக்கு பணம், பதவி, தொழில் என அதிர்ஷ்டம் உச்சத்தைத் தொடப் போகிறதாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வானில் நிகழும் கிரக மாற்றங்கள் மனித வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது ஜோதிட நம்பிக்கை. அந்த வகையில், 2026-ம் ஆண்டின் கிரகண காலம் மற்றும் சனியின் வக்ரப் பயணம் பல ராசிக்காரர்களின் வாழ்க்கையில் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும் காலமாக ஜோதிடர்கள் கருதுகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;2026-ம் ஆண்டில் சனி ஜூலை 27-ம் தேதி வக்ர நிலையில் சென்று, டிசம்பர் 11-ம் தேதி மீண்டும் நேர்கதிக்கு திரும்புகிறது. இதற்கிடையில் ஆகஸ்ட் 28-ம் தேதி பகுதி சந்திர கிரகணம் நிகழ்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;சனி என்பது கர்மா, பொறுப்பு, தொழில், பதவி, ஒழுக்கம், நீண்டகால முயற்சி ஆகியவற்றுடன் தொடர்புடைய கிரகமாக ஜோதிடத்தில் பார்க்கப்படுகிறது. சனி வக்ரம் பெறும் காலம், ஏற்கனவே தொடங்கிய பணிகளை மறுபரிசீலனை செய்து, பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் காலமாகவும் கருதப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சனி உண்மையில் தனது சுற்றுப்பாதையில் பின்னோக்கி நகர்வதில்லை. பூமியில் இருந்து பார்க்கும்போது சனி பின்னோக்கி நகர்வது போன்ற தோற்றம் ஏற்படுவதையே &ldquo;வக்ர இயக்கம்&rdquo; என்கிறோம்.&lt;/p&gt;&lt;p&gt;ஜோதிடத்தில், சனி வக்ரம் பெறும் காலத்தில் சிலருக்கு தாமதங்கள், பொறுப்புகள் அதிகரிப்பு, பழைய பிரச்சினைகள் மீண்டும் வருதல் போன்ற அனுபவங்கள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதே நேரத்தில், நீண்ட காலமாக முயற்சி செய்தவர்களுக்கு தாமதமான பலன்கள் கிடைக்கும் வாய்ப்பும் இருப்பதாக ஜோதிட நம்பிக்கை கூறுகிறது.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;சந்திர கிரகணம் ஏன் முக்கியம்?&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;சந்திர கிரகணம் என்பது சூரியன், பூமி, சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது பூமியின் நிழல் சந்திரனின் மீது விழும் வானியல் நிகழ்வு. 2026-ல் ஆகஸ்ட் 28-ம் தேதி பகுதி சந்திர கிரகணம் நிகழ்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;இந்த கிரகண காலத்துடன் சனி வக்ர இயக்கமும் இணைந்து வருவதால், ஜோதிட ரீதியாக இது சில ராசிகளுக்கு பழைய தடைகளை உடைத்து புதிய வாய்ப்புகளை உருவாக்கும் காலமாக பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;h3&gt;&lt;strong&gt;1. மேஷம்&lt;/strong&gt;&lt;/h3&gt;&lt;p&gt;சனி வக்ரம் மேஷ ராசிக்காரர்களுக்கு சவால்களுடன் கூடிய வளர்ச்சியைத் தரும் காலமாக இருக்கலாம். இதுவரை தாமதமாகிக் கொண்டிருந்த தொழில் அல்லது வேலை தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;பதவி உயர்வு எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்கள் நல்ல செய்தியைப் பெறலாம். புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். தொழில் செய்பவர்களுக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த ஒப்பந்தங்கள் அல்லது பணிகள் மீண்டும் வேகமெடுக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;பண விஷயத்தில் அவசர முடிவுகளைத் தவிர்த்து, திட்டமிட்டு செயல்பட்டால் சேமிப்பு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் தொழில் மற்றும் பொருளாதார ரீதியாக முக்கியமானதாக அமையலாம்.&lt;/p&gt;&lt;p&gt;நீண்ட நாட்களாக முயற்சி செய்து வந்த ஒரு விஷயம் எதிர்பாராத விதமாக கைகூடும் வாய்ப்பு இருப்பதாக ஜோதிடம் கூறுகிறது. வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;தொழில் செய்பவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள், புதிய ஒப்பந்தங்கள் அல்லது வருமானத்தை அதிகரிக்கும் வாய்ப்புகள் உருவாகலாம்.&lt;/p&gt;&lt;p&gt;மேலும், இதுவரை வீண் செலவாகச் சென்ற பணத்தை கட்டுப்படுத்தி, நிதி நிலையை சீரமைக்கும் வாய்ப்பும் கிடைக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தனுசு ராசிக்காரர்களுக்கு சனி வக்ர காலம் வாழ்க்கையில் முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தக்கூடிய காலமாக இருக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;வேலை, தொழில் அல்லது குடும்ப காரணங்களால் நீண்ட நாட்களாக இருந்த மன அழுத்தம் படிப்படியாக குறையலாம். எதிர்பாராத இடத்திலிருந்து உதவி கிடைக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;புதிய வேலை வாய்ப்பு, தொழில் விரிவாக்கம், வருமான உயர்வு போன்ற விஷயங்களில் நல்ல முன்னேற்றம் கிடைக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;குறிப்பாக, கடந்த காலத்தில் செய்த கடின உழைப்புக்கான பலன் தற்போது கிடைக்கத் தொடங்கலாம் என்பது ஜோதிட நம்பிக்கை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சனி உடனடியாக பலன் கொடுக்கும் கிரகமாக ஜோதிடத்தில் பார்க்கப்படுவதில்லை. ஆனால் ஒருவரின் உழைப்பு, பொறுமை, ஒழுக்கம் ஆகியவற்றுக்கு காலம் கடந்து பலன் தருவதாக கருதப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;அதனால் இந்த காலத்தில் திடீர் பணவரவை மட்டுமே எதிர்பார்ப்பதைவிட, நீண்டகால முதலீடு, சேமிப்பு, கடன் கட்டுப்பாடு மற்றும் தொழில் வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்துவது நல்லது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சனி வக்ர காலத்தில் அனைத்து ராசிகளுக்கும் ஒரே மாதிரியான பலன் கிடைக்கும் என்று கூற முடியாது. ஒருவருடைய பிறந்த தேதி, நேரம், இடம், லக்னம், சந்திர ராசி, தசா-புக்தி மற்றும் தனிப்பட்ட ஜாதக அமைப்பைப் பொறுத்து பலன்கள் மாறுபடும்.&lt;/p&gt;&lt;p&gt;எனவே மேஷம், சிம்மம், தனுசு ராசிக்காரர்கள் அனைவரும் கோடீஸ்வரர்களாகிவிடுவார்கள் என்ற பொருளில் இதைப் பார்க்கக்கூடாது. மாறாக, ஜோதிட நம்பிக்கையின்படி இந்த ராசிகளுக்கு முயற்சிகளுக்கு பலன் கிடைக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கலாம் என்பதே சரியான அணுகுமுறை.&lt;/p&gt;&lt;p&gt;மொத்தத்தில், சனி வக்ரமும் கிரகண காலமும் இணையும் இந்த காலகட்டம் பலருக்கும் பழைய விஷயங்களை முடித்து வைத்து புதிய பாதையைத் தேர்வு செய்யும் நேரமாக அமையலாம். குறிப்பாக மேஷம், சிம்மம் மற்றும் தனுசு ராசிக்காரர்கள் தொழில், பணம் மற்றும் வாழ்க்கை முன்னேற்றத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டால் நல்ல மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;குறிப்பு: &lt;/strong&gt;மேலே கூறப்பட்டவை ஜோதிட நம்பிக்கைகளின் அடிப்படையிலான பொதுப் பலன்கள் மட்டுமே; அறிவியல் ரீதியாக கிரக நிலைகள் மனிதர்களின் தனிப்பட்ட அதிர்ஷ்டத்தை நிர்ணயிக்கும் என்பது நிரூபிக்கப்படவில்லை.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[astrology]]></category>
            <dc:creator>Asianet News</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/rare-saturn-retrograde-during-lunar-eclipse-after-decades-these-3-zodiac-signs-are-set-for-major-luck-3wumx9k"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Aavani Avittam 2026: நாளை ஆவணி அவிட்டம்.. பூணூல் மாற்ற உகந்த நேரம் என்ன?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/spiritual/aavani-avittam-2026-auspicious-time-to-change-sacred-thread-on-august-27-articleshow-urin0aw</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/spiritual/aavani-avittam-2026-auspicious-time-to-change-sacred-thread-on-august-27-articleshow-urin0aw</guid>
            <pubDate>Wed, 26 Aug 2026 14:26:37 +0530</pubDate>
            <description><![CDATA[ஆவணி அவிட்டம் என்பது வேதம் பயிலும் ஆண்கள் பழைய பூணூலை மாற்றி புதிய பூணூல் அணியும் ஒரு முக்கிய ஆன்மிக நிகழ்வாகும், இது உபாகர்மம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வு, வேதங்களை போதித்த முனிவர்களுக்கு நன்றி செலுத்துவதையும், ஆன்மிக ஒழுக்கத்தை புதுப்பித்துக் கொள்வதையும் நோக்கமாகக் கொண்டது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0ym32v62r9mv331y4z8ydt7,imgname-chatgpt-image-aug-26--2026--02-16-57-pm--1--1787734100838.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஆவணி மாதத்தில் வரும் முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளில் ஒன்றாக ஆவணி அவிட்டம் கருதப்படுகிறது. வேதம், ஆன்மிகம் மற்றும் பாரம்பரியத்துடன் தொடர்புடைய இந்த நாளில், குறிப்பாக வேதம் பயிலும் ஆண்கள் மற்றும் பிராமண சமூகத்தினர் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டு, பழைய பூணூலை அகற்றி புதிய பூணூல் அணியும் சடங்கை கடைப்பிடிக்கின்றனர். இந்த நிகழ்வு உபாகர்மம் என்றும் அழைக்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஆவணி அவிட்டம் என்றால் என்ன?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;தமிழ் மாதங்களில் ஐந்தாவது மாதமான ஆவணி, பல்வேறு சுப நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. சூரியன் சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் காலத்துடன் தொடர்புடைய இந்த மாதத்தில் பல்வேறு ஆன்மிக நிகழ்வுகள் நடைபெறுகின்றன. அதில் ஆவணி அவிட்டம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த நாளில் வேதங்களை போதித்த முனிவர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் ரிஷி தர்ப்பணம் உள்ளிட்ட சடங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், வேதக் கல்வியை புதிதாகத் தொடங்குவதற்கான நாளாகவும் உபாகர்மம் பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;h2&gt;ஏன் பூணூல் மாற்றப்படுகிறது?&lt;/h2&gt;&lt;p&gt;ஆவணி அவிட்டத்தின் முக்கிய சடங்குகளில் ஒன்றுதான் பூணூல் மாற்றுதல். பழைய பூணூலை அகற்றி, மந்திரங்களை உச்சரித்து புதிய பூணூல் அணிவது வழக்கமாக உள்ளது. பூணூல் மாற்றுவது என்பது வெறும் பாரம்பரிய சடங்கு மட்டுமல்ல; ஆன்மிக ஒழுக்கம், வேதப் பயிற்சி மற்றும் கடமைகளை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ளும் அடையாளமாகவும் கருதப்படுகிறது. இந்த நாளில் தங்களுடைய தவறுகளுக்கு மனதளவில் வருந்தி, நல்ல எண்ணங்களுடனும் ஒழுக்கத்துடனும் வாழ்க்கையை தொடர வேண்டும் என்ற உறுதியை எடுத்துக்கொள்வதும் வழக்கமாக உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஆவணி அவிட்டம் 2026 எப்போது?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;2026ஆம் ஆண்டு ஆவணி அவிட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி, வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலையில் எழுந்து புனித நீராடி, வழிபாடுகளை மேற்கொண்டு, குடும்ப வழக்கப்படி பூணூல் மாற்றும் சடங்கு நடைபெறும். ஒவ்வொரு குடும்பம் மற்றும் வேத சம்பிரதாயத்தைப் பொறுத்து சடங்கு முறைகளில் சிறிய வேறுபாடுகள் இருக்கலாம். எனவே, குடும்ப வழக்கம் அல்லது தங்கள் ஆசாரியரின் வழிகாட்டுதலைப் பின்பற்றுவது சிறந்ததாகும்.&lt;/p&gt;&lt;h2&gt;பூணூல் மாற்ற உகந்த நேரம்&lt;/h2&gt;&lt;p&gt;2026 ஆகஸ்ட் 27ஆம் தேதி காலை 9:05 மணி முதல் 10:38 மணி வரை பூணூல் மாற்றுவதற்கு உகந்த நேரமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் பூணூல் மாற்றும் சடங்கை மேற்கொள்ளலாம் என ஆன்மிக காலக்கணிதத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நாளில் காலை 6:01 மணி முதல் 7:33 மணி வரை யமகண்ட காலம் என்றும், பிற்பகல் 1:42 மணி முதல் 3:15 மணி வரை ராகு காலம் என்றும் குறிப்பிடப்படுகிறது. எனவே, முக்கியமான சுப சடங்குகளை மேற்கொள்ளும்போது இந்த காலங்களைத் தவிர்ப்பது வழக்கமாக உள்ளது.&lt;/p&gt;&lt;h3&gt;ஆவணி அவிட்டத்தின் ஆன்மிக முக்கியத்துவம்&lt;/h3&gt;&lt;p&gt;ஆவணி அவிட்டம் வேத அறிவுக்கும் அதை தலைமுறைகளுக்கு வழங்கிய முனிவர்களுக்கும் மரியாதை செலுத்தும் நாளாக பார்க்கப்படுகிறது. இந்த நாளில் வேத மந்திரங்கள், காயத்ரி மந்திரம் உள்ளிட்ட புனித மந்திரங்களை உச்சரித்து வழிபடுவது வழக்கம்.&lt;/p&gt;&lt;p&gt;மேலும், ஹயக்ரீவ ஜெயந்தியுடனும் இந்த நாள் தொடர்புபடுத்தப்படுகிறது. விஷ்ணுவின் ஹயக்ரீவ அவதாரம் வேதங்களை மீட்டெடுத்து உலகிற்கு வழங்கியதாக புராணங்களில் கூறப்படுகிறது. இதனால் கல்வி, வேத அறிவு மற்றும் ஞானத்துடன் தொடர்புடைய ஆன்மிக முக்கியத்துவமும் இந்த நாளுக்கு இருப்பதாக நம்பப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;எப்படி கடைப்பிடிக்க வேண்டும்?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஆவணி அவிட்டம் அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, சுத்தமான உடை அணிந்து, குடும்ப வழக்கப்படி பூஜை மற்றும் சடங்குகளை மேற்கொள்வது வழக்கம். பின்னர் ரிஷி தர்ப்பணம், வேத மந்திர பாராயணம் மற்றும் பூணூல் மாற்றுதல் போன்ற நிகழ்வுகள் நடைபெறும்.&lt;/p&gt;&lt;p&gt;பூணூல் மாற்றும் நேரம் உள்ளிட்ட சடங்குகளுக்கு உள்ளூர் பஞ்சாங்கம் மற்றும் குடும்ப சம்பிரதாயத்தை கருத்தில் கொள்வது முக்கியம். ஏனெனில் இடம், பின்பற்றப்படும் வேத சம்பிரதாயம் மற்றும் பஞ்சாங்க கணக்கீடு ஆகியவற்றைப் பொறுத்து நேரங்களில் மாற்றம் இருக்கக்கூடும்.&lt;/p&gt;&lt;p&gt;குறிப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள நேரங்கள் பொதுவாக வெளியிடப்பட்ட பஞ்சாங்கத் தகவல்களின் அடிப்படையிலானவை. உங்கள் குடும்ப வழக்கம் அல்லது உள்ளூர் பஞ்சாங்கத்தில் வேறுபாடு இருந்தால் அதையே முன்னுரிமையாக எடுத்துக்கொள்வது நல்லது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[spiritual]]></category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/spiritual/aavani-avittam-2026-auspicious-time-to-change-sacred-thread-on-august-27-articleshow-urin0aw"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Shortest Train Journey: 7 நிமிஷத்துல ஸ்டேஷன்! இந்தியாவின் குட்டியான ரயில் பயணம் இதுதான்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/india/shortest-train-journey-in-india-3-km-route-takes-just-7-minutes-9l39gok</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/india/shortest-train-journey-in-india-3-km-route-takes-just-7-minutes-9l39gok</guid>
            <pubDate>Wed, 26 Aug 2026 14:22:59 +0530</pubDate>
            <description><![CDATA[Shortest Train Journey: பயணங்கள்தான் முதலில் நினைவுக்கு வரும். ஆனால், நாட்டின் மிகப்பெரிய ரயில் வலையமைப்பில் சில நிமிடங்களில் முடிந்துவிடும் ஒரு வித்தியாசமான பயணமும் இருக்கிறது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0y9jhabqnq45edrdywazetm,imgname-shortest-train-journey-1787723072842.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Shortest Train Journey: பயணங்கள்தான் முதலில் நினைவுக்கு வரும். ஆனால், நாட்டின் மிகப்பெரிய ரயில் வலையமைப்பில் சில நிமிடங்களில் முடிந்துவிடும் ஒரு வித்தியாசமான பயணமும் இருக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்திய ரயில்வே நெட்வொர்க் 69,181 கி.மீ. நீளமுடையது. ஒருபுறம் விவேக் எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்கள் 80-85 மணி நேரம் பயணிக்கின்றன. மறுபுறம், 7 நிமிடங்களில் பயணத்தை முடிக்கும் ரயிலும் உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நாக்பூர் ஜங்ஷனில் இருந்து அஜ்னி வரையிலான 3 கி.மீ தூரத்தை ரயில்கள் 7-9 நிமிடங்களில் கடக்கின்றன. பயணிகள் ரயிலில் ஏறி அமர்வதற்குள் இறங்க வேண்டிய இடம் வந்துவிடும். நாக்பூர் ஒரு முக்கிய நகரம் என்பதால், வேலை, படிப்பு, வியாபாரம் எனப் பலரும் இந்த வழித்தடத்தைப் பயன்படுத்துகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதனால், இந்த 3 கி.மீ பயணத்திற்கு எப்போதும் கூட்டம் அதிகம். இந்த 3 கி.மீ பயணத்திற்கு கோச் வகையைப் பொறுத்து டிக்கெட் விலை மாறுபடும். சாதாரண பெட்டிக்கு ரூ.60 முதல் ஏசி ஃபர்ஸ்ட் கிளாஸுக்கு ரூ.1,270 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குறுகிய பயணத்திற்கு இவ்வளவு கட்டணமா என ஆச்சரியமாக இருந்தாலும், நேரத்தை மிச்சப்படுத்த மக்கள் இந்த ரயில்களையே விரும்புகின்றனர். இதனால் டிக்கெட்டுகளுக்கு எப்போதும் அதிக டிமாண்ட் உள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[india]]></category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/india/shortest-train-journey-in-india-3-km-route-takes-just-7-minutes-9l39gok"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Inca Mummy: 500 ஆண்டுகளாக பனிக்குள் பாதுகாக்கப்பட்ட இன்கா சிறுமி.. அதிர வைக்கும் பின்னணி!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/world/inca-ice-maiden-how-a-500-year-old-mummy-was-preserved-in-the-andes-articleshow-5nmg9gh</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/world/inca-ice-maiden-how-a-500-year-old-mummy-was-preserved-in-the-andes-articleshow-5nmg9gh</guid>
            <pubDate>Wed, 26 Aug 2026 14:05:37 +0530</pubDate>
            <description><![CDATA[சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு இன்கா மதச் சடங்கிற்காக பலியிடப்பட்ட ஜுவானிடா என்ற சிறுமியின் உறைந்த உடல் பெருவில் கண்டுபிடிக்கப்பட்டது. சமீபத்தில், விஞ்ஞானிகள் CT ஸ்கேன் மற்றும் 3D தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவளது முகத்தை மறுவடிவமைத்துள்ளனர்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0wnxjv3z20ktq2z5szehwkt,imgname-500-year-old-inca-mummy-found-in-the-andes--1--1787668908899.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஜுவானிடா எனப்படும் இந்த இன்கா சிறுமியின் உறைந்த உடல் 1995-ல் பெருவின் ஆண்டிஸ் மலைத்தொடரில் உள்ள மவுண்ட் ஆம்படோவில் கண்டுபிடிக்கப்பட்டது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 6,318 மீட்டர் உயரத்தில் இந்தப் பகுதியில் கடுமையான குளிர் நிலவுவதால், உடல் இயற்கையாகவே உறைந்து பாதுகாக்கப்பட்டது. அருங்காட்சியகத்தின் தகவல்படி, இந்த உடல் தற்போது சிறப்பு குளிரூட்டப்பட்ட அறையில் பாதுகாக்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;அவள் யார்?&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஜுவானிடா சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு இன்கா காலத்தில் வாழ்ந்த இளம் பெண். ஆரம்பத்தில் அவளது வயது குறித்து பல்வேறு மதிப்பீடுகள் இருந்தாலும், பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் அவள் இளமைப் பருவத்தில், சுமார் 14 முதல் 15 வயதுக்குள் இருந்திருக்கலாம் எனக் காட்டின. அவள் இன்கா மதச் சடங்கான கபகோச்சா (Capacocha)-வுடன் தொடர்புடைய பலியாக இருந்ததாக தொல்பொருள் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆம்படோ மலையில் கிடைத்த உடலுடன் துணிகள், மண் பாண்டங்கள் மற்றும் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;கபகோச்சா சடங்கின் பின்னணி&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இன்கா பேரரசில் கபகோச்சா முக்கியமான மத மற்றும் அரசியல் சடங்குகளில் ஒன்றாக இருந்தது. இதில் குழந்தைகள் மற்றும் இளம் பெண்கள் பலியாகத் தேர்வு செய்யப்பட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மலைகள் இன்கா நம்பிக்கையில் புனிதமான இடங்களாகக் கருதப்பட்டதால், உயரமான மலை உச்சிகளில் இத்தகைய சடங்குகள் நடத்தப்பட்டன. ஜுவானிடாவின் உடலில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், அவளது இறுதிக் கால வாழ்க்கை மற்றும் சடங்கு தொடர்பான உணவுப் பழக்கங்கள் குறித்து புதிய தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;கோகா உள்ளிட்ட பொருட்களின் தடயங்கள்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஆய்வாளர்கள் மம்மியின் முடி மற்றும் நகங்களில் மேற்கொண்ட வேதியியல் பரிசோதனைகளில் கோகா இலைகளுடன் தொடர்புடைய வேதிப்பொருட்களின் தடயங்கள் கண்டறியப்பட்டன. இதன் மூலம் கபகோச்சா சடங்கிற்கு முன்பான காலத்தில் பலியானவர்களுக்கு கோகா உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டிருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இருப்பினும், &ldquo;அவளுக்கு குறிப்பிட்ட மதுபானம் கொடுத்து மயக்கி பலியிட்டனர்&rdquo; போன்ற ஒவ்வொரு விவரத்தையும் உறுதியான உண்மையாகக் கூறுவதற்குப் பதிலாக, ஆய்வுகள் காட்டும் ஆதாரங்களையும் உள்ளூர் விளக்கங்களையும் தனித்தனியாகப் பார்ப்பது முக்கியம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;500 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உருவான முகம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஜுவானிடாவின் முகத்தை அறிய விஞ்ஞானிகள் CT ஸ்கேன், டிஎன்ஏ ஆய்வு, மண்டை ஓட்டின் அளவீடுகள் மற்றும் பிற மனிதவியல் தகவல்களைப் பயன்படுத்தினர். ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த தடயவியல் கலைஞர் ஆஸ்கர் நில்சன், 3D முறையில் தயாரிக்கப்பட்ட மண்டை ஓட்டின் பிரதியை எடுத்து முகத்தை மறுவடிவமைத்தார். இந்தப் பணிக்கு சுமார் 10 வாரங்கள் தேவைப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முக மறுவடிவமைப்பு, ஒரு பழமையான மம்மியைப் பார்ப்பதைத் தாண்டி, 500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கை மற்றும் இன்கா நாகரிகத்தின் நம்பிக்கைகளைப் புரிந்துகொள்ள ஒரு புதிய வாய்ப்பை வழங்குகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[world]]></category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/world/inca-ice-maiden-how-a-500-year-old-mummy-was-preserved-in-the-andes-articleshow-5nmg9gh"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Train Ticket : தட்கல் டிக்கெட் கிடைக்கலையா? கடைசி நேரத்துல கன்ஃபார்ம் டிக்கெட் வாங்க இந்த ட்ரிக் ஃபாலோ பண்ணுங்க!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/irctc-trick-to-get-confirmed-train-tickets-after-chart-preparation-4sitzcr</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/irctc-trick-to-get-confirmed-train-tickets-after-chart-preparation-4sitzcr</guid>
            <pubDate>Wed, 26 Aug 2026 14:03:27 +0530</pubDate>
            <description><![CDATA[Train Ticket : தட்கல் கிடைக்கவில்லையா? கவலை வேண்டாம்! ரயில் புறப்பட 3-4 மணி நேரத்திற்கு முன் இறுதிப் பட்டியல் தயாரானதும், காலியான இடங்கள் பொதுப் பயணிகளுக்குக் கன்ஃபார்ம் டிக்கெட்டாக வழங்கப்படும்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0yjyd5ryn33v3ss0ygpwq00,imgname-irctc-trick-to-get-confirmed-train-tickets-after-chart-preparation-1787732898999.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Train Ticket : தட்கல் கிடைக்கவில்லையா? கவலை வேண்டாம்! ரயில் புறப்பட 3-4 மணி நேரத்திற்கு முன் இறுதிப் பட்டியல் தயாரானதும், காலியான இடங்கள் பொதுப் பயணிகளுக்குக் கன்ஃபார்ம் டிக்கெட்டாக வழங்கப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அவசர வேலையாக இருந்தாலும் சரி, ஜாலியாக டூர் செல்வதாக இருந்தாலும் சரி, நீண்ட தூரப் பயணங்களுக்கு ரயில் தான் நம்மில் பலரின் முதல் தேர்வு. ஆனால், இப்போதெல்லாம் ரயில் டிக்கெட் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது. பயணத்திற்கு 60 நாட்களுக்கு முன்பே புக்கிங் திறக்கப்பட்டாலும், சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிடுகின்றன.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Hindu Wedding : தாலிக்கு 3 முடிச்சு போடுறது ஏன்? இதுக்கு பின்னாடி இவ்ளோ அர்த்தம் இருக்கா?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சுற்றுலா செல்வதற்கு மட்டுமல்ல, அவசரத் தேவைகளுக்காகவும் பலர் ரயிலில் பயணிக்கின்றனர். அவர்கள் அனைவரும் தட்கல் டிக்கெட்டையே பெரிதும் நம்பியுள்ளனர். ஆனால், சமீபகாலமாக தட்கல் டிக்கெட்டுகளும் உடனடியாக 'ஆல் புக்' ஆகிவிடுகின்றன. இதுபோன்ற சமயங்களில், இந்த ட்ரிக்கை பின்பற்றினால் கடைசி நிமிடத்தில்கூட கன்ஃபார்ம் டிக்கெட் பெறலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Budhan Uccha Peyarchi : புதன் உச்ச பெயர்ச்சியில் உருவாகும் ஐயப்பன் அருள்! அசுர வளர்ச்சி பெறும் 4 ராசிகள்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தட்கல் கோட்டா முடிந்தால் பயண வாய்ப்பே முடிந்துவிட்டது என்று நினைக்க வேண்டாம். ரயில்வேயின் ஒரு சிறப்பு ஏற்பாட்டின் மூலம், இறுதிப் பட்டியல் (Chart) தயாரான பிறகும் நீங்கள் உறுதியான இருக்கையைப் பெறலாம். அது எப்படி என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். கடைசி நேரத்தில் கன்ஃபார்ம் டிக்கெட் பெறுவது எப்படி என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;சந்திரகிரகணம் 2026 : விஷ்ணுவின் பரிபூரண அருளால் டக்டக்குன்னு டாப்புக்கு போகும் 4 ராசிகள்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பொதுவாக, ரயில் கிளம்புவதற்கு 3-4 மணி நேரத்திற்கு முன்பு இறுதிப் பயணப் பட்டியல் தயாராகும். ஆனால், கடைசி நேரத்தில் உடல்நலக் குறைவு அல்லது அவசரத் தேவைகள் காரணமாகப் பலர் டிக்கெட்டுகளை ரத்து செய்வார்கள். சில சமயம், அரசு கோட்டா சீட்களும் காலியாக இருக்கும். இந்த சீட்களை எல்லாம் கடைசி நேரத்தில் பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் ஒதுக்கும். இனி டிக்கெட் புக் செய்யும்போது இந்த டிப்ஸை நினைவில் கொள்ளுங்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Acne : முகப்பரு ஏன் வருகிறது? தவிர்க்க என்ன சாப்பிடணும், என்ன செய்யக்கூடாது?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எனவே, தட்கல் டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் கவலை வேண்டாம். IRCTC செயலி அல்லது இணையத்தளத்தில் ஒரு கண் வைத்திருங்கள். ரயில் புறப்படுவதற்கு முன், 'Chart Vacancy' ஆப்ஷனை கிளிக் செய்து உங்கள் ரயில் எண்ணை உள்ளி்ட்டால், எத்தனை சீட்கள் காலியாக உள்ளன என்பது தெரியும். இதில் வெயிட்டிங் லிஸ்ட் கிடையாது, கிடைத்தால் அது கன்ஃபார்ம் டிக்கெட்தான்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Funeral Rituals : இறுதிச் சடங்குல மண்பானையை ஏன் உடைக்கிறாங்க? இதுக்குப் பின்னாடி இவ்வளவு அர்த்தமா?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த முழு செயல்முறையும் இருக்கைகள் கிடைப்பதைப் பொறுத்தது. எனவே, தட்கல் விண்டோ மூடப்பட்ட பிறகும் நம்பிக்கையை இழக்காமல், சார்ட் தயாரான பிறகு ஒருமுறை காலியான சீட் இருக்கிறதா என்று பாருங்கள். இந்த ட்ரிக்கை பின்பற்றினால், கடைசி நேரத்தில் உங்களுக்கு கன்ஃபார்ம் டிக்கெட் கிடைக்க நல்ல வாய்ப்பு உள்ளது. இனி டிக்கெட் கிடைக்கவில்லை என்று சோர்ந்து போகாதீர்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Green Chillies : வீட்டுத் தொட்டியில் பச்சை மிளகாய் வளர்க்க 6 ஈஸி டிப்ஸ்!&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[life-style]]></category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/irctc-trick-to-get-confirmed-train-tickets-after-chart-preparation-4sitzcr"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Mangalsutra Bracelets: தினமும் அணிய கருகுமணி பிரேஸ்லெட் New டிசைன்ஸ்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/webstories/life-style-fashion/lightweight-mangalsutra-bracelet-designs-for-daily-wear-zuupg6a</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/webstories/life-style-fashion/lightweight-mangalsutra-bracelet-designs-for-daily-wear-zuupg6a</guid>
            <pubDate>Wed, 26 Aug 2026 13:40:51 +0530</pubDate>
            <description><![CDATA[கழுத்தில் தாலி செயின் அல்லது கருகுமணி மாடல் போடுவது சிலருக்கு பிடிக்காது. அவர்கள் டிரெண்டியாக கையில் கருகுமணி பிரேஸ்லெட் அணியலாம். உங்கள் கைகளின் அழகை இன்னும் அதிகரிக்கும் சில பிரேஸ்லெட் டிசைன்களை இங்கே பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0ygdffs7q56yv3m3x1mqs4z,imgname-whatsapp-image-2026-08-26-at-1.11.39-pm-1787730247161.jpeg" type="image/jpeg" height="390" width="690"/>
            <category><![CDATA[life-style-fashion]]></category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/webstories/life-style-fashion/lightweight-mangalsutra-bracelet-designs-for-daily-wear-zuupg6a"/>
        </item>
        <item>
            <title><![CDATA[உத்தரவாதத் திட்டம் ஐந்து ஆண்டுகளில் வரிக்குப் பிறகு RD அல்லது டெப்ட் ஃபண்டை வெல்லுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/business/can-guaranteed-plan-beat-rd-or-debt-fund-after-tax-in-5-years-articleshow-d8mdytm</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/business/can-guaranteed-plan-beat-rd-or-debt-fund-after-tax-in-5-years-articleshow-d8mdytm</guid>
            <pubDate>Wed, 26 Aug 2026 13:32:52 +0530</pubDate>
            <description><![CDATA[ஐந்து ஆண்டு சேமிப்பிற்கு உத்தரவாதத் திட்டம், RD, டெப்ட் ஃபண்ட் எவை சிறந்தவை? 30% வரி வரம்பில் உள்ளவர்களுக்கு உத்தரவாதத் திட்டம் சற்று லாபகரமானது. குறைந்த வரி ஸ்லாப் மற்றும் பணத் தேவை இருப்பின் RD அல்லது டெப்ட் ஃபண்டே சிறந்தது. வரிக்குப் பிந்தைய வருமானத்தையே பார்க்க வேண்டும்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0ygcewcem797nf47xewx7hg,imgname-can-guaranteed-plan-beat-rd-or-debt-fund-after-tax-in-5-years-1787730213772.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;பிரியா தன் மகனின் பள்ளிச் சேர்க்கை வைப்புத்தொகைக்காகச் சேமித்து வருகிறார், அது ஐந்து ஆண்டுகளில் கட்ட வேண்டியது. மாதம் ₹10,000 தவறாமல் ஒதுக்க அவரால் முடியும், மேலும் அவரது லேப்டாப்பில் மூன்று வழிகள் திறந்திருக்கின்றன: 7% வட்டியில் ஒரு வங்கி ரெக்கரிங் டெபாசிட், அவரது ஆலோசகர் பரிந்துரைத்த ஒரு டெப்ட் மியூச்சுவல் ஃபண்ட், மற்றும் அவரது காப்பீட்டு முகவர் திரும்பத் திரும்பச் சொல்லும் ஒரு உத்தரவாத சேமிப்புத் திட்டம். ஒவ்வொரு வழியும் வெவ்வேறு தலைப்பு எண்ணைக் காட்டுகிறது, ஆனால் அந்த எண்களில் எதுவும் வரிக்குப் பிறகு அவர் உண்மையில் கையில் வைத்துக்கொள்ளப் போகும் தொகை அல்ல.&lt;/p&gt;&lt;p&gt;நீங்களும் இதே நிலையில் இருந்தால், விளம்பரப்படுத்தப்பட்ட வட்டி விகிதம் மட்டுமல்லாமல், வரிக்குப் பிறகான உண்மையான கணக்கு எப்படி இருக்கிறது என்பதை இங்கே பாருங்கள்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;உத்தரவாதத் திட்டம் ஐந்து ஆண்டுகளில் வரிக்குப் பிறகு RD அல்லது டெப்ட் ஃபண்டை வெல்லுமா?&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;பிரியா தன் மகனின் பள்ளிச் சேர்க்கை வைப்புத்தொகைக்காகச் சேமித்து வருகிறார், அது ஐந்து ஆண்டுகளில் கட்ட வேண்டியது. மாதம் ₹10,000 தவறாமல் ஒதுக்க அவரால் முடியும், மேலும் அவரது லேப்டாப்பில் மூன்று வழிகள் திறந்திருக்கின்றன: 7% வட்டியில் ஒரு வங்கி ரெக்கரிங் டெபாசிட், அவரது ஆலோசகர் பரிந்துரைத்த ஒரு டெப்ட் மியூச்சுவல் ஃபண்ட், மற்றும் அவரது காப்பீட்டு முகவர் திரும்பத் திரும்பச் சொல்லும் ஒரு உத்தரவாத சேமிப்புத் திட்டம். ஒவ்வொரு வழியும் வெவ்வேறு தலைப்பு எண்ணைக் காட்டுகிறது, ஆனால் அந்த எண்களில் எதுவும் வரிக்குப் பிறகு அவர் உண்மையில் கையில் வைத்துக்கொள்ளப் போகும் தொகை அல்ல.&lt;/p&gt;&lt;p&gt;நீங்களும் இதே நிலையில் இருந்தால், விளம்பரப்படுத்தப்பட்ட வட்டி விகிதம் மட்டுமல்லாமல், வரிக்குப் பிறகான உண்மையான கணக்கு எப்படி இருக்கிறது என்பதை இங்கே பாருங்கள்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;உத்தரவாதத் திட்டம் ஐந்து ஆண்டுகளில் வரிக்குப் பிறகு RD அல்லது டெப்ட் ஃபண்டை வெல்லுமா?&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;பிரியா தன் மகனின் பள்ளிச் சேர்க்கை வைப்புத்தொகைக்காகச் சேமித்து வருகிறார், அது ஐந்து ஆண்டுகளில் கட்ட வேண்டியது. மாதம் ₹10,000 தவறாமல் ஒதுக்க அவரால் முடியும், மேலும் அவரது லேப்டாப்பில் மூன்று வழிகள் திறந்திருக்கின்றன: 7% வட்டியில் ஒரு வங்கி ரெக்கரிங் டெபாசிட், அவரது ஆலோசகர் பரிந்துரைத்த ஒரு டெப்ட் மியூச்சுவல் ஃபண்ட், மற்றும் அவரது காப்பீட்டு முகவர் திரும்பத் திரும்பச் சொல்லும் ஒரு உத்தரவாத சேமிப்புத் திட்டம். ஒவ்வொரு வழியும் வெவ்வேறு தலைப்பு எண்ணைக் காட்டுகிறது, ஆனால் அந்த எண்களில் எதுவும் வரிக்குப் பிறகு அவர் உண்மையில் கையில் வைத்துக்கொள்ளப் போகும் தொகை அல்ல.&lt;/p&gt;&lt;p&gt;நீங்களும் இதே நிலையில் இருந்தால், விளம்பரப்படுத்தப்பட்ட வட்டி விகிதம் மட்டுமல்லாமல், வரிக்குப் பிறகான உண்மையான கணக்கு எப்படி இருக்கிறது என்பதை இங்கே பாருங்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;img&gt;&lt;/p&gt;&lt;p&gt;வரிக்கு முன் உத்தரவாதத் திட்டம் அதிக எண்ணைக் காட்டவில்லை என்பதைக் கவனியுங்கள். RD தான் காட்டுகிறது. பிரியாவின் கணக்கில் உண்மையில் வந்து சேரும் தொகையைப் பார்க்கும்போது வரிசையை மாற்றுவது வரி நடைமுறை தான்.&lt;/p&gt;&lt;p&gt;இந்த மதிப்பீடுகள் குறித்து உங்களுக்குக் குழப்பம் இருந்தால், கணக்கிடுவதற்கு ஒரு calculator-ஐ அல்லது காப்பீட்டு நிறுவனத்தின் இணையதளத்தைப் பயன்படுத்துங்கள்.&lt;/p&gt;&lt;p&gt;Get a Free Quote&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;அப்படியென்றால் உத்தரவாதத் திட்டம் உண்மையில் வெல்கிறதா?&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;30% வரி வரம்பில் இருப்பவருக்கு, ஆம் &mdash; ஆனால் ஒரு சிறிய அளவு வித்தியாசத்தில், பெரிய அளவில் அல்ல. இங்கே உத்தரவாதத் திட்டத்துக்கும் RD-க்கும் இடையிலான வித்தியாசம் ₹6 லட்ச அர்ப்பணிப்பில் ஐந்து ஆண்டுகளுக்குச் சுமார் ₹25,000 &mdash; இது முக்கியமானது தான், ஆனால் வாழ்க்கையை மாற்றக்கூடியது அல்ல. உண்மையான நன்மை வெற்றியின் அளவு அல்ல. உத்தரவாதத் திட்டத்தின் எண் முதல் நாளிலேயே பூட்டப்பட்டுவிடுகிறது, வட்டி விகித சுழற்சிகளுக்கோ ஃபண்ட் செயல்பாட்டுக்கோ ஏற்ப அது நகராது என்பதுதான். ஆனால் இங்கே RD மற்றும் டெப்ட் ஃபண்ட் எண்கள் இரண்டுமே 7% என்ற அனுமானத்தின் மீது கட்டப்பட்ட மதிப்பீடுகள், அது ஐந்து ஆண்டுகள் முழுவதும் நீடிக்காமல் போகலாம்.&lt;/p&gt;&lt;p&gt;நீங்கள் 20% வரம்பில் இருந்தால் இந்த இடைவெளி மேலும் குறுகுகிறது. 5% வரம்பில் இருந்தால், அல்லது வரியே கட்டவில்லை என்றால், RD அல்லது டெப்ட் ஃபண்ட் உத்தரவாதத் திட்டத்தை வெல்ல வாய்ப்பு அதிகம் &mdash; ஏனெனில் உத்தரவாதத் திட்டத்தைப் போட்டிக்குரியதாக ஆக்கியது அதன் மூல வட்டி விகிதம் அல்ல, வரி விலக்கு தான்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;What Should You Actually Weigh Before Picking One?&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;&lt;img&gt;&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;யார் RD அல்லது டெப்ட் ஃபண்டிலேயே தொடர வேண்டும்?&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;நீங்கள் 5% அல்லது 20% வரி வரம்பில் இருந்தால், அல்லது ஐந்து ஆண்டுகள் முடிவதற்கு முன் அவசரத் தேவைக்கு இந்தப் பணம் தேவைப்படலாம் என்று நினைத்தால், ஒரு RD அல்லது ஒரு குறுகிய கால டெப்ட் ஃபண்ட் உத்தரவாதத் திட்டம் தராத வெளியேறும் வழியைத் தருகிறது. உண்மையிலேயே நெகிழ்வான ஓர் இலக்குக்காக best saving schemes எனும் பரந்த வரிசையை நீங்கள் இன்னும் ஒப்பிட்டுக் கொண்டிருந்தால், உத்தரவாதத் திட்டத்தை இயல்பான தேர்வாக அல்லாமல், பல வழிகளில் ஒன்றாக மட்டுமே வைத்துக்கொள்ளுங்கள்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;இந்தக் குறிப்பிட்ட இலக்குக்கு யார் உத்தரவாதத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கக் கூடாது?&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;இந்த அர்ப்பணிப்பை நீங்கள் இடையில் உடைக்க வேண்டிய நிஜமான வாய்ப்பு இருந்தால் உத்தரவாதத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டாம். முதல் சில ஆண்டுகளில் இத்தகைய திட்டங்களைச் சரண்டர் செய்தால், நீங்கள் போட்ட பணத்தை விடக் கணிசமாகக் குறைவாகவே திரும்பக் கிடைக்கும். அதேபோல், உங்கள் அனைத்துப் பாலிசிகளிலும் சேர்ந்த மொத்தக் காப்பீட்டுப் பிரீமியம் ஆண்டுக்கு ₹5 லட்சத்தைத் தாண்டும் வாய்ப்பு இருந்தாலும் இதைத் தவிர்க்கவும், ஏனெனில் அது முதிர்வின்போதான வரி நடைமுறையை மாற்றிவிடும். உங்கள் முதன்மை இலக்கு உறுதித்தன்மை அல்ல, மாறாக அதிகபட்ச வருமானமே என்றாலும் தவிர்க்கவும் &mdash; ஏனெனில் ஈக்விட்டி சார்ந்த வழிகள் ஏற்ற இறக்கம் அதிகமானவை என்றாலும், ஐந்து ஆண்டு காலத்தில் இந்த மூன்றையும் வெல்லும் வாய்ப்பை வரலாற்று ரீதியாகக் கொண்டிருந்தன.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;அப்படியென்றால், நீங்கள் உண்மையில் என்ன செய்ய வேண்டும்?&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;முதலில் உங்கள் சொந்த வரி ஸ்லாப் என்ன, உங்கள் ஐந்து ஆண்டு காலக்கெடு எவ்வளவு உறுதியானது என்பதைக் கணக்கிடுங்கள். இரண்டுமே உறுதித்தன்மையையும் உயர்ந்த வரி வரம்பையும் நோக்கிச் சுட்டினால், ஒரு guaranteed plan calculator-ஐப் பயன்படுத்தி உங்கள் சரியான முதிர்வு இலக்குக்கு ஏற்ப calculate premium செய்யுங்கள். பிறகு அது தரும் எண்ணை, உங்கள் வங்கியிலிருந்து பெறும் நிஜமான RD விலைப்புள்ளியுடனும், லாபத்துக்கு ஸ்லாப் விகித வரி பிடிக்கப்படும் என்று வைத்துக்கொண்டு ஒரு நிஜமான டெப்ட் ஃபண்டின் அறிவிக்கப்பட்ட வருமானத்துடனும் ஒப்பிடுங்கள். அந்த நேர்மையான, வரிக்குப் பிந்தைய ஒப்பீட்டில் எந்த எண் தாக்குப்பிடிக்கிறதோ, அதுதான் உங்கள் மாதம் ₹10,000-ஐப் பெற வேண்டும் &mdash; முகப்புப் பக்கத்தில் மிகப் பெரிய எண்ணைக் காட்டுவது அல்ல.&lt;/p&gt;&lt;p&gt;&lt;img&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;img&gt;&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[business]]></category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/business/can-guaranteed-plan-beat-rd-or-debt-fund-after-tax-in-5-years-articleshow-d8mdytm"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Doorless Village: கதவும் இல்ல, பூட்டும் இல்ல! 300 வருஷ மர்ம ஆன இந்திய கிராமம் எங்க இருக்கு தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/india/shani-shingnapur-village-the-300-year-old-belief-behind-homes-without-locks-hwzgfpm</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/india/shani-shingnapur-village-the-300-year-old-belief-behind-homes-without-locks-hwzgfpm</guid>
            <pubDate>Wed, 26 Aug 2026 13:30:36 +0530</pubDate>
            <description><![CDATA[Doorless Village: ஒரு கிராமத்தில் பல வீடுகளுக்கு வழக்கமான கதவுகளே இல்லை என்றால் நம்ப முடிகிறதா? அங்குள்ள மக்கள் தங்கள் வீடுகளையும் பொருட்களையும் பாதுகாக்க பூட்டுகளை பயன்படுத்தாமல் வாழ்ந்து வருகிறார்கள்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ky1tjjq3px5ndej5k99573me,imgname-doorless-houses-india-1784620337891.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Doorless Village: ஒரு கிராமத்தில் பல வீடுகளுக்கு வழக்கமான கதவுகளே இல்லை என்றால் நம்ப முடிகிறதா? அங்குள்ள மக்கள் தங்கள் வீடுகளையும் பொருட்களையும் பாதுகாக்க பூட்டுகளை பயன்படுத்தாமல் வாழ்ந்து வருகிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மகாராஷ்டிராவின் அஹல்யாநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஷானி ஷிங்னாபூர், சனி பகவான் கோயிலுக்காகவும் தனித்துவமான வீட்டு அமைப்புக்காகவும் பிரபலமானது. இந்த கிராமத்தில் பாரம்பரியமாக பல வீடுகளுக்கு கதவுகள் இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. கடைகள் மற்றும் பிற கட்டிடங்களிலும் வழக்கமான பூட்டுகளை பயன்படுத்தாத பழக்கம் இருந்ததாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கு முக்கிய காரணமாக சனி பகவான் தங்களை திருட்டு மற்றும் தீமைகளில் இருந்து காப்பார் என்ற மக்களின் ஆழமான நம்பிக்கை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த நம்பிக்கைக்கு சுமார் 300 ஆண்டுகள் பழமையான உள்ளூர் புராணக்கதை ஒன்று காரணம். ஒரு காலத்தில் கனமழை மற்றும் வெள்ளத்துக்குப் பிறகு பனஸ்னாலா நதியில் ஒரு பெரிய கருங்கல் மிதந்து வந்ததாகக் கதை செல்கிறது. கிராம மக்கள் அந்தக் கல்லை குச்சியால் தொட்டபோது, ​​அதிலிருந்து ரத்தம் போன்ற திரவம் வெளியேறியதாக நம்பப்படுகிறது. பின்னர் அந்த இரவில் கிராமத் தலைவரின் கனவில் சனி பகவான் தோன்றி, அந்தக் கல் தனது சுயரூபம் என்று தெரிவித்ததாக உள்ளூர் மரபுக் கதை கூறுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;Dairy Farming: நல்லா பால் கறக்குற எருமையை வாங்குவது எப்படி? இந்த 5 டிப்ஸ் போதும் பாஸ்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அந்தக் கல்லை எந்தக் கூரையின் கீழும் வைக்காமல், திறந்த வானத்தின் கீழ் நிற்க வேண்டும் என்றும் சனி பகவான் அறிவுறுத்தியதாக உள்ளூர் நம்பிக்கை கூறுகிறது. இதன் அடிப்படையில்தான் சனி பகவானின் கல் வடிவம் திறந்த வெளியில் வழிபடுவதாக கூறப்படுகிறது. காலப்போக்கில், சனி பகவான் கிராமத்தை பாதுகாப்பார் என்ற நம்பிக்கை வலுவடைந்து, வீடுகளுக்கு கதவு மற்றும் பூட்டு தேவையில்லை என்ற பாரம்பரியத்துடன் இது இணைந்தது. இங்கு திருடுபவர்களுக்கு சனி பகவானின் தண்டனை கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த கிராமத்தில் திருத்தே நடக்காது என்பது மிகவும் பிரபலமானது என்றாலும், வரலாற்றில் நடந்த திருட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 2010-ல் ஒரு வாகனத்தில் இருந்து சுமார் ரூ.35,000 மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டதாகவும், 2011-ல் ரூ.70,000 மதிப்புள்ள தங்க நகைகள் தொடர்பான திருட்டு வழக்கு பதிவானதாகவும் கூறப்படுகிறது. இதனால், தெய்வீக பாதுகாப்பு குறித்த நம்பிக்கைக்கும் நடைமுறை பாதுகாப்பு தேவைக்கும் இடையே வேறுபாடு தெளிவாக உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த பாரம்பரியம் தனியார் வீடுகளுடன் மட்டும் நின்றுவிடவில்லை. இங்குள்ள வங்கி மற்றும் காவல் நிலையம் தொடர்பாக கதவுகள் இல்லாத அமைப்பு குறித்து செய்திகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக 2011-ல் UCO வங்கியின் கிளை &ldquo;பூட்டு இல்லாத வங்கி&rdquo; என்ற செய்தியால் கவனம் பெற்றது. ஆனால் பாதுகாப்பு முற்றிலும் இல்லாததாக அர்த்தமில்லை. கண்ணாடிக் கதவு மற்றும் மின்காந்த பூட்டுதல் அமைப்பு போன்ற பாதுகாப்பு வசதிகள் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, ஷனி ஷிங்னாபூரை வெறும் &quot;கதவு இல்லாத கிராமம்&quot; என்று பார்ப்பதைவிட, நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் நவீன பாதுகாப்பு ஆகியவை ஒன்றாகக் காணப்படும் இடமாகப் புரிந்துகொள்வது பொருத்தமானது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[india]]></category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/india/shani-shingnapur-village-the-300-year-old-belief-behind-homes-without-locks-hwzgfpm"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Eggs: முட்டையை 30 நாட்கள் வரை ஃப்ரெஷ்ஷாக வைப்பது எப்படி? Easy டிப்ஸ்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/webstories/life-style/how-to-store-eggs-for-30-days-without-refrigeration-simple-tips-mnwsfuw</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/webstories/life-style/how-to-store-eggs-for-30-days-without-refrigeration-simple-tips-mnwsfuw</guid>
            <pubDate>Wed, 26 Aug 2026 13:09:17 +0530</pubDate>
            <description><![CDATA[வீட்டில் முட்டைகளை ஒரு மாதம் வரை கெட்டுப் போகாமல் ஃப்ரெஷ்ஷாக வைத்திருக்க சில எளிய வழிகள் இங்கே உள்ளன. குறிப்பாக குளிர்காலத்தில் இந்த டிப்ஸ் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0yfctqj4f595d58bzahs4wy,imgname-chatgpt-image-aug-26--2026--12-53-56-pm--1--1787729177329.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <category><![CDATA[life-style]]></category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/webstories/life-style/how-to-store-eggs-for-30-days-without-refrigeration-simple-tips-mnwsfuw"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Banana leaf food serving order: வாழை இலையில் சாப்பிடுறீங்களா? உணவு பரிமாறும் சரியான வரிசை இதுதான்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/banana-leaf-food-serving-order-in-traditional-method-3n3gtxi</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/banana-leaf-food-serving-order-in-traditional-method-3n3gtxi</guid>
            <pubDate>Wed, 26 Aug 2026 13:15:26 +0530</pubDate>
            <description><![CDATA[Banana leaf eating method: வாழை இலையில் உணவு பரிமாறுவதற்கு பாரம்பரிய முறை உள்ளது. இலையை எப்படி வைக்க வேண்டும், அதில் உப்பு ஊறுகாய், பொரியல், சாதம், சாம்பார், ரசம், தயிர் உள்ளிட்டவற்றை எந்த வரிசையில் பரிமாற வேண்டும் என்பது குறித்து தெரிந்துகொள்ளலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0ygdyn733d5jgq7jgf0zfjt,imgname-banana-leaf-food-serving-order-1787730262695.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;Banana leaf eating method: &lt;/strong&gt;வாழை இலையில் உணவு பரிமாறுவதற்கு பாரம்பரிய முறை உள்ளது. இலையை எப்படி வைக்க வேண்டும், அதில் உப்பு ஊறுகாய், பொரியல், சாதம், சாம்பார், ரசம், தயிர் உள்ளிட்டவற்றை எந்த வரிசையில் பரிமாற வேண்டும் என்பது குறித்து தெரிந்துகொள்ளலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வாழை இலையில் உணவு பரிமாறுவது வெறும் பழக்கம் மட்டுமல்ல, அதற்கென பாரம்பரிய முறை உள்ளது. இலையின் எந்தப் பகுதியில் உப்பு, ஊறுகாய், பொரியல், கூட்டு போன்றவற்றை வைக்க வேண்டும், எந்த வரிசையில் பரிமாற வேண்டும் என பல விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது. அப்படி வாழையில் இலையில் பரிமாறும்போது உணவை எந்த வரிசையில் பரிமாற வேண்டும் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வாழை இலையின் நுனிப் பகுதி உணவு உண்ணும் நபரின் இடது புறத்திலும், அகலமான பகுதி வலது புறத்திலும் இருக்க வேண்டும். உணவு பரிமாறுவதற்கு முன்பாக இலையைச் சுத்தமான நீரில் கழுவிப் பயன்படுத்துவது வழக்கம். முதலில் இலையின் இடது மேல் பகுதியில் உப்பு வைக்க வேண்டும். அதற்கு அருகில் சிறிதளவு ஊறுகாய் பரிமாறலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதன்பின், இலையின் மேல் பகுதியில் துவையல், பச்சடி, பொரியல் மற்றும் கூட்டு வகைகள் இடமிருந்து வலது புறமாக வரிசையாக வைக்கப்படும்.தொடர்ந்து, அப்பளம், வடை, சிப்ஸ் போன்றவை இலையின் இடது ஓரத்தில் வைக்கலாம். இதற்கு அருகில் இனிப்பு வகைகள் வைக்கப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதனையடுத்து, இலையின் நடுப்பகுதியில் சாதம் பரிமாறப்பட்டு, முதலில் பருப்பு மற்றும் நெய் சேர்ப்பது வழக்கம். பின்னர் சாதத்துடன் சாம்பார் பரிமாறலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சாம்பாருக்குப் பிறகு வத்தக்குழம்பு பரிமாறப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தொடர்ந்து ரசம் சாதம் பரிமாறப்படுகிறது. சில இடங்களில் இனிப்பு வகைகள் உணவின் ஆரம்பத்திலேயே பரிமாறப்படும். வேறு சில இடங்களில் உணவின் இறுதியில் இனிப்பு வழங்கும் வழக்கமும் உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உணவின் இறுதியில் மோர் அல்லது தயிர் ஊற்றி சாப்பிடலாம். இந்தப் பரிமாறும் முறை குறிப்பிட்ட பகுதிகளுக்கு ஏற்ப மாறுபடலாம். சில இடங்களில் சாதத்துடன் முதலில் வத்தக்குழம்பு பரிமாறும் வழக்கமும் உள்ளது. இறுதியாக பாயாசம், பழம் மற்றும் வெற்றிலை-பாக்கு போன்றவை விருந்தின் வழக்கத்திற்கு ஏற்ப பரிமாறப்படும். சுப நிகழ்ச்சிகளில் உணவு உண்ட பிறகு, வாழை இலையின் மேல் பகுதியைக் கீழ்நோக்கி மடித்து மூடுவது வழக்கம். இது விருந்து நிறைவடைந்ததைக் குறிக்கும் பாரம்பரிய முறையாகக் கருதப்படுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[life-style]]></category>
            <dc:creator>Vishnupriya</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/banana-leaf-food-serving-order-in-traditional-method-3n3gtxi"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Hindu Wedding : தாலிக்கு 3 முடிச்சு போடுறது ஏன்? இதுக்கு பின்னாடி இவ்ளோ அர்த்தம் இருக்கா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/why-are-three-knots-tied-in-a-hindu-wedding-646gl7w</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/why-are-three-knots-tied-in-a-hindu-wedding-646gl7w</guid>
            <pubDate>Wed, 26 Aug 2026 12:47:00 +0530</pubDate>
            <description><![CDATA[Hindu Wedding : இந்து திருமணத்தில் மாங்கல்ய தாரணத்தின் போது மூன்று முடிச்சுகள் போடப்படுவது ஆன்மீக, சமூக, குடும்பப் பொறுப்புகளைக் குறிக்கிறது. அவை சிவன்-பார்வதி போன்ற தெய்வங்களின் அருளையும், தம்பதியரின் நீண்ட ஆயுளையும் ஒற்றுமையையும் வேண்டுகின்றன.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0yek0ybgf3cx5xk7kymr6st,imgname-why-are-three-knots-tied-in-a-hindu-wedding-1787728331723.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Hindu Wedding : இந்து திருமணத்தில் மாங்கல்ய தாரணத்தின் போது மூன்று முடிச்சுகள் போடப்படுவது ஆன்மீக, சமூக, குடும்பப் பொறுப்புகளைக் குறிக்கிறது. அவை சிவன்-பார்வதி போன்ற தெய்வங்களின் அருளையும், தம்பதியரின் நீண்ட ஆயுளையும் ஒற்றுமையையும் வேண்டுகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்து மதத் திருமணங்களில் பல சடங்குகள் இருந்தாலும், அவற்றுள் தாலி கட்டும் நிகழ்வே மிகவும் முதன்மையானதும் புனிதமானதும் ஆகும். வேத மந்திரங்கள் ஒலிக்க, மணமகன் மணமகளின் கழுத்தில் மங்கல நாணை அணிவித்து மூன்று முடிச்சுகள் இடும் வேளையில் அந்தத் தம்பதியர் இல்லற வாழ்க்கையில் காலடி எடுத்து வைக்கின்றனர். இந்த மூன்று முடிச்சுகள் என்பது வெறும் பாரம்பரியச் சடங்கு மட்டுமல்லாமல், அதனுள் ஆன்மீக, தார்மீக மற்றும் சமூகவியல் சார்ந்த ஆழமான தத்துவங்களும் உண்மைகளும் பொதிந்துள்ளன. அவற்றின் சிறப்புகளை விரிவாகக் கீழே காண்போம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Budhan Uccha Peyarchi : புதன் உச்ச பெயர்ச்சியில் உருவாகும் ஐயப்பன் அருள்! அசுர வளர்ச்சி பெறும் 4 ராசிகள்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்து முறைப்படி திருமணத்தின்போது தாலியில் இடப்படும் மூன்று முடிச்சுகளுக்குப் பின்னால் 'திரிகரண சுத்தி' என்னும் மிக ஆழமான ஆன்மீகத் தத்துவம் மறைந்துள்ளது. அதாவது, மனம், வாக்கு, செயல் என்னும் மூன்றின் ஒருங்கிணைப்பைக் குறிப்பதே இந்த மூன்று முடிச்சுகளாகும். அவற்றின் விளக்கங்களைக் கீழே காணலாம்:&lt;/p&gt;&lt;h3&gt;&lt;strong&gt;1. முதல் முடிச்சு (மனசு - மனம்) கருத்து: இது 'மனம்' சார்ந்த பந்தத்தைக் குறிக்கிறது.&lt;/strong&gt;&lt;/h3&gt;&lt;p&gt;&lt;strong&gt;விளக்கம்: &lt;/strong&gt;மணமகன் தன் மனதார மணமகளைத் தனது சரிபாதியாக ஏற்று, வாழ்நாள் முழுவதும் அவரிடம் அன்பாகவும் உரிய மரியாதையுடனும் நடந்துகொள்வேன் என்று மனப்பூர்வமாக உறுதிமொழி எடுப்பதே முதல் முடிச்சாகும். மணமகளும் தன் முழு மனதுடன் கணவனை ஏற்றுக்கொள்வதை இது உணர்த்துகிறது.&lt;/p&gt;&lt;h3&gt;&lt;strong&gt;2. இரண்டாவது முடிச்சு (வாக்கு - பேச்சு) கருத்து: இது 'வாக்கு' அல்லது சொல்லைக் காப்பாற்றும் தர்மத்தைக் குறிக்கிறது.&lt;/strong&gt;&lt;/h3&gt;&lt;p&gt;&lt;strong&gt;விளக்கம்:&lt;/strong&gt; வாழ்க்கைப் பயணத்தில் எத்தகைய இன்ப துன்பங்கள் வந்தாலும் ஒருவருக்கொருவர் துணையாக நிற்போம் என்றும், ஒருபோதும் கொடுத்த வாக்கை மீறாமல் உண்மையும் நேர்மையும் நிறைந்த பாதையில் வாழ்வோம் என்றும் தம்பதியினர் ஒருவருக்கொருவர் அளிக்கும் உறுதிமொழியாகும்.&lt;/p&gt;&lt;h3&gt;&lt;strong&gt;3. மூன்றாவது முடிச்சு (கர்மணா - செயல்) கருத்து: இது 'செயல்' வடிவமான தர்மத்தைக் குறிக்கிறது.&lt;/strong&gt;&lt;/h3&gt;&lt;p&gt;&lt;strong&gt;விளக்கம்: &lt;/strong&gt;அறவழியில் உழைத்து குடும்பத்தைக் காப்பற்றவும், சமூகத்திற்கு நற்பலன்களைச் சேர்க்கவும் மணமகன் செய்யும் தார்மீகப் பிரமாணத்தை இது குறிக்கிறது. அதற்கேற்ப மனைவியும் தன் பங்களிப்பைச் செய்து, தர்ம நெறிப்படி கணவனுடன் இணைந்து வாழ்வேன் என்பதை இந்த மூன்றாவது முடிச்சு உறுதிப்படுத்துகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;1 Gram Gold : 1 கிராம் தங்கத்தில் அசத்தல் கம்மல் டிசைன்ஸ்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மனித வாழ்வில் பின்பற்ற வேண்டிய முக்கிய புருஷார்த்தங்களாக தர்மம், அர்த்தம், காமம் ஆகிய மூன்றும் கூறப்படுகின்றன. இந்த மூன்றையும் தம்பதியினர் இருவரும் இணைந்து பகிர்ந்துகொண்டு, இறுதியில் மோட்சத்தை நோக்கிப் பயணிப்பதே திருமணத்தின் மூன்று முடிச்சுகளுக்குப் பின்னால் உள்ள மற்றொரு உள்ளார்ந்த அர்த்தமாகக் கருதப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;முதல் முடிச்சு &lsquo;தர்மத்தின்&rsquo; அடையாளம். கணவனும் மனைவியும் இணைந்து அறம் சார்ந்த வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.&lt;/p&gt;&lt;p&gt;இரண்டாவது முடிச்சு &lsquo;அர்த்தத்தின்&rsquo; அடையாளம். குடும்பத்தைச் சீராக நடத்துவதற்குத் தேவையான செல்வத்தையும், உழைப்பையும் இருவரும் இணைந்து பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதை இது தெரிவிக்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;மூன்றாவது முடிச்சு &lsquo;காமத்தின்&rsquo; அடையாளம். கணவனும் மனைவியும் மகிழ்ச்சியும் அன்பும் நிறைந்த இல்லற வாழ்க்கையை வாழ்ந்து, வம்சப் பெருக்கத்திற்குக் காரணமாக இருக்க வேண்டும் என்பதை இது நினைவூட்டுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;சந்திரகிரகணம் 2026 : விஷ்ணுவின் பரிபூரண அருளால் டக்டக்குன்னு டாப்புக்கு போகும் 4 ராசிகள்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மனிதனுக்கு ஸ்தூல, சூட்சும, காரண சரீரம் என மூன்று உடல்கள் இருப்பதாக தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன. திருமணம் என்பது இருவர் முழுமையாக ஒன்றிணைவது. எனவே, ஒவ்வொரு முடிச்சும் ஒவ்வொரு உடலுக்காகப் போடப்படுவதாக நம்பப்படுகிறது. கணவன்-மனைவி வாழ்நாள் முழுவதும் மூன்று உடல்களாலும் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்பதே இதன் தத்துவம். கழுத்தில் உள்ள மங்களசூத்திரம் ஒரு ஆபரணம் மட்டுமல்ல, அது கணவனின் ஆயுளாகப் பெண்கள் கருதுகின்றனர். அதனால்தான் பூஜைகள் மற்றும் விரதங்களின்போது பெண்கள் மங்களசூத்திரத்திற்கும் பொட்டு வைத்து வணங்குகிறார்கள். திருமணமான பெண் கழுத்தில் மங்களசூத்திரம் இல்லை என்றால், கணவர் இறந்துவிட்டார் என்று அர்த்தம். எனவே, ஃபேஷனுக்காக மங்களசூத்திரத்தைக் கழற்றக்கூடாது என்று கூறுவார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Rice : அரிசியில் வண்டு வராமல் இருக்க இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்து தர்மத்தில் &lsquo;மூன்று&rsquo; என்ற எண்ணுக்கு முக்கியத்துவம் உண்டு. மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரர் இந்த உலகை இயக்குவதாகவும், மூவுலகங்களான பூலோகம், பாதாளலோகம், தேவலோகம் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. இதேபோன்ற ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையில்தான், திருமணத்தில் மூன்று முடிச்சுகள் போட்டு, மணமக்கள் கடவுளைச் சாட்சியாக வைத்து ஒன்றிணைகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;சில சம்பிரதாயங்களின்படி, மணமகன் முதல் முடிச்சை மட்டும் போடுவார். மீதமுள்ள இரண்டு முடிச்சுகளையும் மணமகனின் சகோதரியான நாத்தனார் போடுவது சில பகுதிகளில் வழக்கமாக உள்ளது. புதிதாக அந்தக் குடும்பத்திற்குள் அடியெடுத்து வைக்கும் மணமகளை அன்புடன் வரவேற்பதையும், இனி அவருக்கு எப்போதும் துணையாக இருப்போம் என்ற உறுதியையும் வெளிப்படுத்தும் வகையில் இந்த முடிச்சுகள் போடப்படுகின்றன.&lt;/p&gt;&lt;p&gt;இவ்வாறு, இந்து சம்பிரதாயத்தில் மணமகளின் கழுத்தில் போடப்படும் ஒவ்வொரு முடிச்சிலும் தனித்துவமான பொறுப்பு, நம்பிக்கை மற்றும் பண்பாட்டு அர்த்தம் பொதிந்துள்ளது. இந்த மூன்று முடிச்சுகளின் பந்தம் இரண்டு உடல்களை மட்டுமல்லாமல், இரண்டு மனங்களையும், இரண்டு குடும்பங்களையும் வாழ்நாள் முழுவதும் ஒன்றிணைக்கும் புனிதமான உறவின் அடையாளமாகவும் திகழ்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Green Chillies : வீட்டுத் தொட்டியில் பச்சை மிளகாய் வளர்க்க 6 ஈஸி டிப்ஸ்!&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[life-style]]></category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/why-are-three-knots-tied-in-a-hindu-wedding-646gl7w"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Toxic Review : யாஷின் ஆக்‌ஷன் விருந்து டேஸ்டா? வேஸ்டா? டாக்ஸிக் முழு விமர்சனம் இதோ]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/review/yash-nayanthara-rukmini-vasanth-starrer-action-packed-film-toxic-full-movie-review-0np42ex</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/review/yash-nayanthara-rukmini-vasanth-starrer-action-packed-film-toxic-full-movie-review-0np42ex</guid>
            <pubDate>Wed, 26 Aug 2026 12:43:30 +0530</pubDate>
            <description><![CDATA[Toxic Movie Review : கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ், நயன்தாரா, ருக்மிணி வசந்த் நடிப்பில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ள டாக்ஸிக் திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0yebhz38k0ygcbv4mjtbb0s,imgname-toxic--1--1787728087011.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Toxic Movie Review : கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ், நயன்தாரா, ருக்மிணி வசந்த் நடிப்பில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ள டாக்ஸிக் திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கேஜிஎஃப் படங்கள் மூலம் பான் இந்தியா ஸ்டார் ஆக உயர்ந்தவர் யாஷ். இப்போது 'டாக்ஸிக்' என்கிற பான் வேர்ல்டு படம் மூலம் ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார். பெண் இயக்குநர் கீத்து மோகன்தாஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நயன்தாரா, ருக்மிணி வசந்த், கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, தாரா சுதாரியா என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. யாஷ் இதில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். கேவிஎன் புரொடக்&zwnj;ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைன்ட் கிரியேஷன்ஸ் சார்பில் வெங்கட் கே. நாராயணா மற்றும் யாஷ் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தின் பாடல்கள், டீசர், ட்ரெய்லர் என அனைத்தும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. 'ஏ' சான்றிதழ் பெற்றிருப்பதால், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இப்படத்தை பார்க்க முடியும். அதிகப்படியான வன்முறை மற்றும் ரொமான்ஸ் காட்சிகள் நிறைந்த இந்தத் திரைப்படம், இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ளது. படம் எப்படி இருக்கிறது? யாஷின் நடிப்பு எப்படி? என்பதை இந்த விமர்சனத்தில் விரிவாகப் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;Toxic Twitter Review: டாக்ஸிக் ட்விட்டர் விமர்சனம்: படம் எப்படி இருக்கு?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;1947-ல் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தாலும், கோவா போர்ச்சுகீசியர் ஆட்சியின் கீழ் இருக்கிறது. அங்கே மாஃபியா ராஜ்ஜியம் தான் நடக்கிறது. அதை சால்வடார் (டரெல் டி'சில்வா) என்ற டான் ஆண்டு வருகிறார். சிறுவயதில் இருந்தே அனாதையாக வளர்ந்த ராயா (யாஷ்), தன் அக்கா கங்காவுடன் (நயன்தாரா) இந்த நிழல் உலகத்திற்குள் நுழைகிறான். படிப்படியாக வளர்ந்து, சால்வடாருக்கு நெருக்கமாகிறான். சால்வடாரின் மகள் ரெபெக்கா (தாரா சுதாரியா) மீது ராயாவுக்கு காதல் வருகிறது. ரெபெக்காவும் ராயாவை விரும்ப, இருவரும் நெருக்கமாகிறார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;ஆனால், நடியா (கியாரா அத்வானி) என்ற சர்க்கஸ் டான்சரின் வருகையால் கதை மாறுகிறது. ராயா, நடியாவின் காதலில் விழுகிறான். இதனால், ரெபெக்காவுடனான திருமண நாளன்றே சால்வடாரை ராயா கொலை செய்கிறான். சால்வடாரின் காதலியான எலிசபெத் (ஹூமா குரேஷி) ராயாவை பழிவாங்கத் துடிக்கிறார். இதன் பிறகு என்ன ஆனது? நடியா ஏன் ராயாவை விட்டு விலகினாள்? ராயாவின் மகன் டிக்கெட் (யாஷ்) ஏன் தன் தந்தையை பழிவாங்க நினைக்கிறான்? மெலிசா (ருக்மிணி வசந்த்) பாத்திரம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒரு படத்துக்கு எவ்வளவு செலவு செய்தார்கள் என்பதை விட, அது ரசிகர்களுடன் எவ்வளவு கனெக்ட் ஆனது என்பதே முக்கியம். 'டாக்ஸிக்' இந்த விஷயத்தில் கொஞ்சம் தடுமாறுகிறது. படம் பார்க்க மிகவும் பிரம்மாண்டமாகவும், ஸ்டைலாகவும் இருக்கிறது. டெக்னிக்கலாகவும் மிரட்டுகிறது. ஆனால், கதை சொல்லும் விதத்தில் கவனம் சிதறியது போல் தெரிகிறது. 1947 கோவாவில் தொடங்கும் கதை, யாஷின் மாஸான என்ட்ரியுடன் ஆரம்பிக்கிறது. அடுத்தடுத்து ஆக்&zwnj;ஷன் காட்சிகள், ரொமான்ஸ் என படம் வேகமாக நகர்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;கியாரா அத்வானியின் வருகைக்குப் பிறகு கதைக்களம் மாறுகிறது. இடைவேளை வரை படம் விறுவிறுப்பாக சென்றாலும், இரண்டாம் பாதியில் கதை வேறு நாட்டிற்கு பயணிக்கிறது. அங்கே நடக்கும் சம்பவங்கள் சில சமயம் குழப்பத்தையும், சில சமயம் சலிப்பையும் தருகின்றன. கிளைமாக்ஸ் நீளமாக இருந்தாலும், அதில் வரும் ஒரு ட்விஸ்ட் கதையை மொத்தமாக மாற்றுகிறது. படம் முழுவதும் சிகரெட், மது, பெண்கள், ஆக்&zwnj;ஷன் என ஒரே டெம்ப்ளேட்டில் செல்வது ஒரு கட்டத்தில் சோர்வைத் தருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;ப்ளஸ்&lt;/strong&gt;: படத்தின் விஷுவல்ஸ், விஎஃப்எக்ஸ், மற்றும் தயாரிப்பு மதிப்பு மிகவும் சிறப்பாக உள்ளது. யாஷ் பேசும் சில வசனங்கள் சிரிக்க வைக்கின்றன. காதல் மற்றும் சென்டிமென்ட் காட்சிகள் மனதைத் தொடுகின்றன. ரவி బస్రూర్-இன் பின்னணி இசை மிரட்டல். யாஷின் நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;மைனஸ்&lt;/strong&gt;: கதை மற்றும் திரைக்கதையில் தெளிவில்லை. என்ன சொல்ல வருகிறார்கள் என்பதே புரியவில்லை. இதனால், ரசிகர்களால் படத்துடன் ஒன்ற முடியவில்லை. புகை, மது, ரொமான்ஸ் மற்றும் ஆக்&zwnj;ஷன் காட்சிகள் அளவுக்கு அதிகமாக இருப்பது ஓவர் டோஸ். படத்தின் நீளமும் ஒரு பெரிய குறை. கிளைமாக்ஸ் இழுவையாக இருந்தாலும், எமோஷனல் காட்சிகள் ஓரளவுக்கு ஆறுதல்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ராயாவாக யாஷ் நடிப்பில் உச்சம் தொட்டிருக்கிறார். துணிச்சலான இளைஞன், பாசமுள்ள தம்பி, காதலன், தந்தை என பல பரிமாணங்களில் தனது நடிப்பால் அசரடிக்கிறார். படத்திற்கே அவர்தான் முக்கிய ஹைலைட். நடியாவாக கியாரா அத்வானி தனது அழகான நடிப்பால் கவர்கிறார். கங்கா கேரக்டரில் நயன்தாரா நடிப்பு ஓகே ரகம் தான். எலிசபெத்தாக ஹூமா குரேஷி தனது பாத்திரத்தில் கச்சிதமாக நடித்துள்ளார். யாஷின் மனைவியாக வரும் ருக்மிணி வசந்த்தின் மெலிசா பாத்திரத்தில் தெளிவில்லை. ரெபெக்காவாக தாரா சுதாரியா கவர்ச்சியிலும், நடிப்பிலும் ஸ்கோர் செய்கிறார். மற்ற நடிகர்கள் தங்கள் பங்கை சிறப்பாக செய்துள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தொழில்நுட்ப ரீதியாக 'டாக்ஸிக்' ஒரு சாலிட் பேக்கேஜ். ராஜீவ் ரவியின் ஒளிப்பதிவு ஒவ்வொரு பிரேமையும் ரிச்-ஆக காட்டுகிறது. உஜ்வல் குல்கர்னியின் எடிட்டிங் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். படத்தின் நீளம் ஒரு பிரச்சனை. 'தாபாய்' பாடல் சூப்பர் ஹிட். ரவி பஸ்ரூர்-இன் பின்னணி இசை, ஆக்&zwnj;ஷன் காட்சிகளுக்கு உயிர் கொடுக்கிறது. தயாரிப்பாளர்கள் வெங்கட் கே. நாராயணா மற்றும் யாஷ், படத்திற்கு தாராளமாக செலவு செய்துள்ளனர். ஆனால், இயக்குநர் கீத்து மோகன்தாஸ், சிக்கலான ஒரு கதையை கையில் எடுத்து, அதை ரசிகர்களுக்கு புரியும்படி சொல்வதில் தடுமாறியுள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;பிரம்மாண்டமான ஆக்&zwnj;ஷன், ஸ்டைலான மேக்கிங், ரொமான்ஸ் ஆகியவற்றில் காட்டிய கவனத்தை, கதை மற்றும் திரைக்கதையில் வைத்திருந்தால் 'டாக்ஸிக்' ஒரு சிறந்த படமாக இருந்திருக்கும். ஒரு படமாக ஏமாற்றினாலும், நடிகராக யாஷ் ரசிகர்களை கவர்கிறார். விஷுவல் ட்ரீட்டுக்காக ஒருமுறை பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[review]]></category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/review/yash-nayanthara-rukmini-vasanth-starrer-action-packed-film-toxic-full-movie-review-0np42ex"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Mutton Kothu Kari Bonda: கெத்தான சுவையில் கொத்துக்கறி போண்டா.! குழந்தைகளுக்கான சத்தான ஸ்நாக்ஸ்.! ரொம்ப ரொம்ப ஈசிங்க.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/mutton-kothu-kari-bonda-crispy-delicious-nutritious-snack-for-kids-super-easy-to-make-8t5l89o</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/mutton-kothu-kari-bonda-crispy-delicious-nutritious-snack-for-kids-super-easy-to-make-8t5l89o</guid>
            <pubDate>Wed, 26 Aug 2026 12:29:02 +0530</pubDate>
            <description><![CDATA[மட்டன் கொத்துக்கறி போண்டாவை வீட்டிலேயே எளிமையாக செய்வது எப்படி? குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாகவும், மொறுமொறுப்பாகவும் தயாரிக்கக்கூடிய இந்த சத்தான ஸ்நாக்ஸ் ரெசிபியை தெரிந்து கொள்ளுங்கள்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0ycr7bt56qs1fetnb53dxj2,imgname-chatgpt-image-aug-26--2026--12-01-38-pm--1--1787726404984.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;மட்டன் கொத்துக்கறி போண்டாவை வீட்டிலேயே எளிமையாக செய்வது எப்படி? குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாகவும், மொறுமொறுப்பாகவும் தயாரிக்கக்கூடிய இந்த சத்தான ஸ்நாக்ஸ் ரெசிபியை தெரிந்து கொள்ளுங்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குழந்தைகளுக்கு தினமும் ஒரே மாதிரியான ஸ்நாக்ஸ் கொடுப்பது பல பெற்றோருக்கும் சவாலாக இருக்கும். கடைகளில் கிடைக்கும் எண்ணெய் அதிகம் நிறைந்த ஸ்நாக்ஸ்களுக்கு பதிலாக, வீட்டிலேயே சுவையாகவும், சத்தாகவும் ஒரு சிற்றுண்டியை தயாரித்து கொடுக்கலாம். அந்த வகையில் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் செய்யக்கூடியதுதான் கொத்துக்கறி போண்டா. மசாலா வாசனையுடன், வெளியில் மொறுமொறுப்பாகவும் உள்ளே மென்மையாகவும் இருக்கும் இந்த போண்டா, மாலை நேர ஸ்நாக்ஸாக மட்டுமல்லாமல், பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கும் சிறந்த தேர்வாக இருக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த கொத்துக்கறி போண்டாவை தயாரிக்க முதலில் தேவையான அளவு கொத்துக்கறியை நன்றாக சுத்தம் செய்து வேகவைக்க வேண்டும். குக்கரில் சிறிதளவு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொத்துக்கறியை வேகவைத்துக் கொள்ளலாம். வெந்ததும் அதில் இருக்கும் அதிகப்படியான நீரை வடித்து, கொத்துக்கறியை நன்றாக உதிர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள் சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் கொத்துக்கறியை சிறியதாக நறுக்கிக் கொள்வது நல்லது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அடுத்து ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், சீரகத்தூள், கரம் மசாலா போன்றவற்றை தேவையான அளவு சேர்க்கலாம். குழந்தைகளுக்காக தயாரிப்பதால் காரத்தை குறைவாக வைத்துக் கொள்வது நல்லது. பின்னர் வேகவைத்த கொத்துக்கறியை சேர்த்து மசாலாவுடன் நன்றாக கலந்து சில நிமிடங்கள் வதக்க வேண்டும். இறுதியாக கொத்தமல்லி இலை தூவி அடுப்பை அணைக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இப்போது போண்டாவுக்கான மாவை தயார் செய்ய வேண்டும். இதற்கு கடலை மாவுடன் சிறிதளவு அரிசி மாவு, உப்பு, மஞ்சள்தூள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியான பதத்தில் மாவை கலந்து கொள்ள வேண்டும். மாவு மிகவும் தளர்வாக இல்லாமல், கொத்துக்கறி உருண்டையை நன்றாகப் பிடிக்கும் அளவுக்கு இருக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வதக்கிய கொத்துக்கறியை சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு உருண்டையையும் கடலை மாவில் நன்றாக முக்கி எடுத்து, சூடான எண்ணெயில் போட்டு மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை பொரிக்க வேண்டும். அதிக தீயில் பொரித்தால் வெளிப்புறம் மட்டும் சீக்கிரம் சிவந்து, உள்ளே சரியாக வேகாமல் போகலாம். எனவே மிதமான தீயில் பொறுமையாக பொரிப்பதே சிறந்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பொன்னிறமாக வெந்ததும் போண்டாக்களை எண்ணெயில் இருந்து எடுத்து, டிஷ்யூ பேப்பரில் வைத்து அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சிக் கொள்ளலாம். சூடாக இருக்கும்போதே பரிமாறினால் அதன் மொறுமொறுப்பான சுவை குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதனுடன் புதினா சட்னி அல்லது தேங்காய் சட்னி கொடுத்தாலும் சுவையாக இருக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;கொத்துக்கறியில் புரதச்சத்து உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. இருப்பினும், இது எண்ணெயில் பொரிக்கப்படும் ஸ்நாக்ஸ் என்பதால் அளவோடு கொடுப்பது நல்லது. குழந்தைகளின் வயதுக்கு ஏற்ப மசாலா மற்றும் காரத்தின் அளவை மாற்றிக் கொள்ளலாம். நன்றாக வேகவைத்த இறைச்சியை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வீட்டில் கிடைக்கும் எளிய பொருட்களைக் கொண்டு சுவையாக தயாரிக்கக்கூடிய இந்த கொத்துக்கறி போண்டா, குழந்தைகளுக்கு வித்தியாசமான ஸ்நாக்ஸ் கொடுக்க நினைக்கும் பெற்றோருக்கு நல்ல ஐடியாவாக இருக்கும். மாலை நேரத்தில் குடும்பத்துடன் சூடான தேநீர் அல்லது குழந்தைகளுக்கான பானத்துடன் இந்த போண்டாவை பரிமாறினால், அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சுவையும் சத்தும் நிறைந்த இந்த ஈஸியான ரெசிபியை வீட்டிலேயே செய்து பார்த்து மகிழுங்கள்!&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[life-style]]></category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/mutton-kothu-kari-bonda-crispy-delicious-nutritious-snack-for-kids-super-easy-to-make-8t5l89o"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Budhan Uccha Peyarchi : புதன் உச்ச பெயர்ச்சியில் உருவாகும் ஐயப்பன் அருள்! அசுர வளர்ச்சி பெறும் 4 ராசிகள்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/budhan-uchcha-peyarchi-brings-success-to-4-zodiac-signs-ratdph7</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/budhan-uchcha-peyarchi-brings-success-to-4-zodiac-signs-ratdph7</guid>
            <pubDate>Wed, 26 Aug 2026 12:01:24 +0530</pubDate>
            <description><![CDATA[Budhan Uccha Peyarchi : செப்டம்பர் 7, 2026 அன்று புதனின் உன்னத பலனுடன் சபரிமலை ஸ்ரீ ஐயப்பனின் பரிபூரண அருள் மற்றும் குருவருள் இணைந்து, சில குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு அசுர வளர்ச்சியைத் தரப் போகிறது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0yc74yn4r8ks7m9det0mr2d,imgname-budhan-uchcha-peyarchi-brings-success-to-4-zodiac-signs-1787725845461.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Budhan Uccha Peyarchi : செப்டம்பர் 7, 2026 அன்று புதனின் உன்னத பலனுடன் சபரிமலை ஸ்ரீ ஐயப்பனின் பரிபூரண அருள் மற்றும் குருவருள் இணைந்து, சில குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு அசுர வளர்ச்சியைத் தரப் போகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வேத ஜோதிட சாஸ்திரத்தின்படி, கிரகங்களின் இளவரசனும் புத்தி கூர்மை, வியாபாரம், கல்வி மற்றும் பேச்சுத் திறமைக்குரிய காரகனுமான புதன் பகவான், தனது சொந்த வீடும் உச்ச வீடுமான கன்னி ராசிக்குப் பெயர்ச்சியாகி பலம் பெறுவது 'புதன் உச்ச பெயர்ச்சி' என்று அழைக்கப்படுகிறது. இக்காலகட்டத்தில் புதனின் பலத்தால் ஜோதிடத்தில் 'பத்ர ராஜயோகம்' உள்ளிட்ட மிகச் சிறப்பான சுப யோகங்கள் உருவாகின்றன.&lt;/p&gt;&lt;p&gt;இந்தச் சிறப்பான புதன் உச்சப் பெயர்ச்சிக் காலத்தில் சபரிமலை ஸ்ரீ ஐயப்பனின் அருள் பெருகுவதற்குக் ஆன்மிக ரீதியாகவும் ஜோதிட ரீதியாகவும் சில சிறப்புக் காரணங்கள் உள்ளன:&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;கடின உழைப்பும் ஒழுக்கமும்: &lt;/strong&gt;ஐயப்பன் என்பவன் தர்மம், நியாயம், கடுமையான உழைப்பு மற்றும் ஆன்மிக ஒழுக்கத்தின் தெய்வமாவார். புதன் பகவான் புத்தி கூர்மை, திட்டமிடல் மற்றும் நேர்மையான வர்த்தகத்தைக் குறிப்பவர். இவ்விரு ஆற்றல்களும் இணையும் போது மனிதர்களுக்கு நேர்மறை சிந்தனையும், கடின உழைப்புக்கான பலனும் உறுதியாகக் கிடைக்கும்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;குரு-புதன் அருள் இணைப்பு: &lt;/strong&gt;ஜோதிடக் கணக்கீடுகளின்படி அறிவு மற்றும் ஞானத்திற்குரிய கிரகச் சூழலில், சீரான மனவலிமையையும் மன உறுதியையும் தரக்கூடிய சாஸ்தா அல்லது ஐயப்பனின் வழிபாடு மனிதர்களின் குழப்பங்களைப் போக்கி சரியான முடிவுகளை எடுக்கத் தூண்டுகிறது.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;சந்திரகிரகணம் 2026 : விஷ்ணுவின் பரிபூரண அருளால் டக்டக்குன்னு டாப்புக்கு போகும் 4 ராசிகள்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;ஐயப்பனின் அருள் மற்றும் புதன் பலம்: &lt;/strong&gt;மிதுன ராசியின் அதிபதியான புதன் உச்சம் பெறுவதால், உங்களின் புத்தி கூர்மையும் சாதுரியமும் பன்மடங்கு பெருகும். ஐயப்பனின் அருளால் தடைகள் அனைத்தும் தவிடுபொடியாகும்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;தொழில் மற்றும் பொருளாதாரம்: &lt;/strong&gt;வியாபாரத்தில் நீங்கள் போடும் புதிய திட்டங்களும், வியூகங்களும் அபாரமான லாபத்தைத் தரும். கூட்டுத் தொழிலில் புதிய உச்சங்களைத் தொடுவீர்கள்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;பதவி உயர்வு: &lt;/strong&gt;உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வும், ஊதிய உயர்வும் தடையின்றி கிடைக்கும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Breakup : பிரேக்கப் வலியிலிருந்து எப்படி மீள்வது? உங்க EX-ஐ மறக்க எளிய வழிகள்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;ஐயப்பனின் அருள் மற்றும் புதன் பலம்:&lt;/strong&gt; கன்னி ராசியில் புதன் உச்சம் பெற்று அமர்வதால் 'பத்ர ராஜயோகம்' உருவாகிறது. ஐயப்பனின் திருவருளால் உங்களின் ஆளுமைத்திறனும் மன உறுதியும் பல மடங்கு அதிகரிக்கும்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;தொழில் மற்றும் கல்வி: &lt;/strong&gt;மாணவர்களுக்கும் ஆராய்ச்சித் துறையில் இருப்பவர்களுக்கும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்குச் சிறப்பான வெற்றிகள் தேடி வரும்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;பொருளாதார வளம்: &lt;/strong&gt;புதிய வருமான ஆதாரங்கள் பெருகும். பழைய கடன்களை முழுமையாக அடைத்துவிட்டு, சேமிப்பை உயர்த்தக்கூடிய அற்புதமான வாய்ப்புகள் கைகூடும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Rice : அரிசியில் வண்டு வராமல் இருக்க இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!&lt;/p&gt;&lt;img&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;ஐயப்பனின் அருள் மற்றும் புதன் பலம்:&lt;/strong&gt; விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்தப் புதன் பெயர்ச்சி தொழில் ரீதியான மிகப்பெரிய திருப்புமுனையைத் தரவுள்ளது. கடின உழைப்புக்குரிய ஐயப்பனின் அருள் இருப்பதால், நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் வெற்றியைத் தரும்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;தொழில் மற்றும் லாபம்:&lt;/strong&gt; வெளிநாட்டுத் தொடர்புகள் மூலம் பெரிய அளவிலான ஒப்பந்தங்களும் லாபமும் கிடைக்கும். புதிய சொத்துக்கள் மற்றும் வாகனம் வாங்கும் யோகம் பிரகாசமாக உள்ளது.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;குடும்ப வாழ்க்கை: &lt;/strong&gt;குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Green Chillies : வீட்டுத் தொட்டியில் பச்சை மிளகாய் வளர்க்க 6 ஈஸி டிப்ஸ்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;ஐயப்பனின் அருள் மற்றும் புதன் பலம்: &lt;/strong&gt;ரிஷப ராசியினருக்கு இந்தப் புதன் உச்சப் பெயர்ச்சி எதிர்பாராத திசையிலிருந்து பண வரவையும், பொக்கிஷச் சேர்க்கையையும் அள்ளித் தரப் போகிறது.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;பொருளாதார வளம்:&lt;/strong&gt; பங்குச் சந்தை மற்றும் நீண்ட கால முதலீடுகள் மூலம் மிகப்பெரிய லாபத்தைப் பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையின் மூலம் எதிர்பாராத உதவிகளும் மகிழ்ச்சியும் உண்டாகும்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;சமூக மதிப்பு:&lt;/strong&gt; உங்களின் சாதுரியமான பேச்சால் சமூகத்தில் உங்களின் மதிப்பும் மரியாதையும் உயரும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;&lt;strong&gt;பொறுப்புத் துறப்பு :&lt;/strong&gt; இக்கட்டுரை பொதுவான ஜோதிடக் கணிப்புகள் மற்றும் ஆன்மிக நம்பிக்கைகளின் அடிப்படையில் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட ஜாதக அமைப்பைப் பொறுத்து பலன்கள் மாறுபடலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;1 Gram Gold : 1 கிராம் தங்கத்தில் அசத்தல் கம்மல் டிசைன்ஸ்!&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[astrology]]></category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/budhan-uchcha-peyarchi-brings-success-to-4-zodiac-signs-ratdph7"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Baby Bonus: ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.55 லட்சம்.! குழந்தை பிறந்தால் பணமழை கொட்டும் நாடு எது தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/singapore-baby-bonus-rs-55-lakh-per-child-government-offers-massive-support-to-boost-birth-rate-rqmahgk</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/singapore-baby-bonus-rs-55-lakh-per-child-government-offers-massive-support-to-boost-birth-rate-rqmahgk</guid>
            <pubDate>Wed, 26 Aug 2026 11:38:27 +0530</pubDate>
            <description><![CDATA[குழந்தை பெத்துக்கிட்டா, ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.55 லட்சம் கொடுக்கும் நாடு எது தெரியுமா? குழந்தை பிறப்பு முதல் 17 வயது வரை பெற்றோருக்கு வழங்கப்படும் அரசு நிதியுதவி எதற்காக வழங்கப்படுகிறது என தெரிந்தால் துள்ளி குதிப்பீர்கள்.!]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0y9x0m0ss2hr1frswdxdw7p,imgname-chatgpt-image-aug-26--2026--11-18-37-am--1--1787723416191.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;குழந்தை பெத்துக்கிட்டா, ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.55 லட்சம் கொடுக்கும் நாடு எது தெரியுமா? குழந்தை பிறப்பு முதல் 17 வயது வரை பெற்றோருக்கு வழங்கப்படும் அரசு நிதியுதவி எதற்காக வழங்கப்படுகிறது என தெரிந்தால் துள்ளி குதிப்பீர்கள்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒரு குழந்தை பிறந்தால் போதும்... அரசு சார்பில் லட்சக்கணக்கில் பணம் கிடைக்கும் என்ற செய்தி கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறதா? அதுவும் குழந்தை பிறந்த உடனே மட்டும் அல்லாமல், அந்த குழந்தை 17 வயதை அடையும் வரை பல்வேறு வகைகளில் அரசின் உதவி தொடரும் என்றால் இன்னும் ஆச்சரியம்தான். உலகின் முன்னணி பொருளாதார நாடுகளில் ஒன்றான சிங்கப்பூர், குறைந்து வரும் குழந்தை பிறப்பு விகிதத்தை சமாளிக்க தற்போது இப்படியொரு மிகப்பெரிய குடும்ப ஆதரவு திட்டத்தை அறிவித்துள்ளது. ஒவ்வொரு சிங்கப்பூர் குடிமகன் குழந்தைக்கும் பிறப்பு முதல் 17 வயது வரை நேரடி அரசு ஆதரவு சுமார் S$70,000 வரை கிடைக்கும். இந்திய ரூபாய் மதிப்பில் இது சுமார் ரூ.47 லட்சம் அளவாகும்; சில செய்தி அறிக்கைகளில் இதன் அமெரிக்க டாலர் அடிப்படையில் ரூ.55 லட்சம் என கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிங்கப்பூரின் குழந்தை பிறப்பு விகிதம் வரலாறு காணாத அளவுக்கு சரிந்துவிட்டதே இதற்கான முக்கிய காரணம். அந்நாட்டின் குடியிருப்பாளர் மொத்த கருவுறுதல் விகிதம் 2024-ல் 0.97 ஆக இருந்த நிலையில், 2025-ல் வெறும் 0.87 ஆக குறைந்துள்ளது. ஒரு நாட்டின் மக்கள் தொகை நீண்டகாலத்தில் நிலையாக இருக்க பொதுவாக 2.1 என்ற அளவு தேவைப்படும் நிலையில், சிங்கப்பூரின் விகிதம் அதைவிட மிகவும் குறைவாக உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;இதனால் எதிர்காலத்தில் வேலை செய்யக்கூடிய இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து, முதியோர் மக்கள் தொகை அதிகரிக்கும் நிலை உருவாகலாம். மக்கள் தொகை குறைவது என்பது வெறும் குடும்பங்களின் பிரச்சினை மட்டுமல்ல; அது நாட்டின் பொருளாதாரம், தொழிலாளர் சந்தை, சமூகப் பாதுகாப்பு மற்றும் எதிர்கால வளர்ச்சி ஆகியவற்றுடனும் நேரடியாக தொடர்புடையது. அதனால்தான் குழந்தை வளர்ப்பதற்கான செலவை அரசு அதிகமாக ஏற்றுக்கொள்ளும் வகையில் புதிய திட்டத்தை சிங்கப்பூர் அறிவித்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;2026 ஆகஸ்ட் 23-ம் தேதி நடைபெற்ற National Day Rally உரையில் பிரதமர் லாரன்ஸ் வோங் புதிய SG Child Support Package திட்டத்தை அறிவித்தார். இதன்படி ஒவ்வொரு சிங்கப்பூர் குடிமகன் குழந்தைக்கும், பிறப்பு வரிசையைப் பொருட்படுத்தாமல், ஒரே அளவிலான ஆதரவு வழங்கப்படும். புதிய தொகுப்பில் S$10,000 Baby Gift, 1 முதல் 16 வயது வரை ஆண்டுக்கு S$2,000 வீதம் மொத்தம் S$32,000 Child Credits, S$5,000 Child Development Account ஆரம்ப மானியம், மேலும் S$5,000 வரை அரசு இணை நிதியுதவி மற்றும் 17 வயதில் S$10,000 Post-Secondary Education Account தொகை உள்ளிட்டவை இடம்பெறுகின்றன.&lt;/p&gt;&lt;p&gt;இதனுடன் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கான MediSave உதவி மற்றும் பள்ளிக் கல்விக் காலத்தில் வழங்கப்படும் Edusave தொகைகளையும் சேர்த்தால், பிறப்பு முதல் 17 வயது வரை ஒரு குழந்தைக்கு அரசின் நேரடி நிதி ஆதரவு சுமார் S$70,000 ஆக இருக்கும் என சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குழந்தை பெற்ற பிறகு வேலை மற்றும் குடும்பத்தை சமநிலைப்படுத்துவது பெற்றோருக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. இதையும் சிங்கப்பூர் அரசு கருத்தில் கொண்டுள்ளது. 12 வயது மற்றும் அதற்குக் குறைவான குழந்தைகள் உள்ள வேலை செய்யும் பெற்றோருக்கு Childcare Leave அதிகரிக்கப்பட உள்ளது. மேலும், குழந்தைகளை கவனிப்பதற்காக பெற்றோர் விடுப்பு எடுக்கும் காலத்திற்கான செலவை அரசு அதிகமாக ஏற்றுக்கொள்ளும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.&lt;/p&gt;&lt;p&gt;அதேபோல் அரசு ஆதரவு பெறும் childcare மற்றும் infant-care மையங்களில் கட்டணத்தை குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. குழந்தைகள் அதிகம் உள்ள குடும்பங்களுக்கு வீட்டு வசதியிலும் கூடுதல் ஆதரவு வழங்கப்பட உள்ளது. குறிப்பாக, குழந்தைகள் உள்ள முதல் முறையாக வீடு வாங்கும் குடும்பங்களுக்கு மானிய வீடுகளுக்கான விண்ணப்பத்தில் கூடுதல் வாய்ப்பு வழங்கும் நடவடிக்கையும் அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குழந்தை பிறப்பு விகிதத்தை உயர்த்துவதற்காக இவ்வளவு பெரிய தொகையை வழங்கும் சிங்கப்பூர் பொருளாதார ரீதியாகவும் வலுவான நாடாக உள்ளது. 2026-ம் ஆண்டின் முதல் பாதியில் அந்நாட்டின் பொருளாதாரம் 6.1 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. 2026 முழு ஆண்டிற்கான பொருளாதார வளர்ச்சி கணிப்பையும் சிங்கப்பூர் அரசு 4.5 முதல் 5.5 சதவீதமாக உயர்த்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான உலகளாவிய முதலீடுகள், தொழில்நுட்பத் துறை வளர்ச்சி மற்றும் ஏற்றுமதி தேவைகள் இதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு சந்தையும் ஒப்பீட்டளவில் வலுவாக உள்ளது. 2026 மார்ச் நிலவரப்படி ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் 2.0 சதவீதமாக இருந்தது. குடியிருப்பாளர்களுக்கான வேலையின்மை 2.9 சதவீதமாகவும், சிங்கப்பூர் குடிமக்களுக்கான வேலையின்மை 3.1 சதவீதமாகவும் இருந்ததாக அந்நாட்டு மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது, பொருளாதாரம் வளர்ந்து கொண்டிருந்தாலும், எதிர்காலத்தில் போதுமான உள்ளூர் தொழிலாளர் வளம் இருக்க வேண்டும் என்பதும் அரசின் முக்கிய கவலையாக உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிங்கப்பூர் ஒரு சிறிய நிலப்பரப்பைக் கொண்ட, உலக வர்த்தகம், நிதி, தொழில்நுட்பம், உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளை நம்பியிருக்கும் நாடாகும். இத்தகைய பொருளாதாரத்திற்கு திறமையான தொழிலாளர்கள் தொடர்ந்து தேவை. பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே சென்றால் எதிர்காலத்தில் இளம் தொழிலாளர் எண்ணிக்கை குறையலாம். அதே நேரத்தில் முதியோர் எண்ணிக்கை அதிகரித்தால் மருத்துவம், பராமரிப்பு மற்றும் சமூக நலத்திட்டங்களுக்கான செலவும் அதிகரிக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;இதனால்தான் சிங்கப்பூர் அரசு தற்போது &ldquo;குழந்தை பிறந்தால் ஒருமுறை பணம்&rdquo; என்ற அணுகுமுறையைத் தாண்டி, குழந்தை வளர்ந்து பெரியவராகும் வரை குடும்பத்துக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கும் முறைக்கு மாறியுள்ளது. புதிய திட்டத்தின் நிதியுதவி மட்டும் அல்லாமல், குழந்தை பராமரிப்பு, கல்வி, பெற்றோர் விடுப்பு, வீட்டு வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களையும் ஒருங்கிணைத்து குடும்பங்களை ஊக்குவிக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதுதான் தற்போது முக்கியமான கேள்வியாக உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக சிங்கப்பூர் அரசு Baby Bonus உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கி வந்தாலும், பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்துள்ளது. எனவே, பண உதவி மட்டும் போதுமா அல்லது வீட்டு வசதி, வேலை நேரம், childcare செலவு, கல்விச் செலவு, குடும்ப வாழ்க்கைக்கான நேரம் போன்ற பிரச்சினைகளுக்கும் ஒரே நேரத்தில் தீர்வு காண வேண்டுமா என்பது முக்கியமான விவாதமாக உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;இருப்பினும், குழந்தை வளர்ப்பின் பொருளாதாரச் சுமையை அரசு அதிகமாக பகிர்ந்து கொள்வது, குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் குடும்பங்களுக்கு நிச்சயமாக ஒரு ஆதரவாக அமையும். இந்த புதிய திட்டம் சிங்கப்பூரின் பிறப்பு விகிதத்தை மாற்றுமா என்பது வரும் ஆண்டுகளில் தெரியவரும். ஆனால் ஒரு விஷயம் மட்டும் தெளிவு: நாட்டின் எதிர்கால மக்கள் தொகையையும் பொருளாதாரத்தையும் பாதுகாக்க, குழந்தை பிறப்பை ஊக்குவிப்பது சிங்கப்பூர் அரசின் மிகப்பெரிய தேசிய முன்னுரிமைகளில் ஒன்றாக மாறியுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[business]]></category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/singapore-baby-bonus-rs-55-lakh-per-child-government-offers-massive-support-to-boost-birth-rate-rqmahgk"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Vasuki Snake: சிவன் கழுத்தில் பாம்பு ஏன் இருக்கு? சுவாரஸ்யமான புராணக் கதைகள்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/vasuki-snake-why-does-lord-shiva-wear-a-snake-around-his-neck-w8f7k8y</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/vasuki-snake-why-does-lord-shiva-wear-a-snake-around-his-neck-w8f7k8y</guid>
            <pubDate>Wed, 26 Aug 2026 11:24:55 +0530</pubDate>
            <description><![CDATA[Vasuki Snake: சிவன் கழுத்தில் வாசுகி பாம்பு ஏன் இருக்கிறது? பாற்கடல் கடைதல், ஆலகால விஷம், கத்ருவின் சாபம் தொடர்பான புராணக் கதைகளை தெரிந்துகொள்ளுங்கள்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0wz7y5em4vx0f82cs7nvbtz,imgname-lord-shiva-1787678685356.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Vasuki Snake: சிவன் கழுத்தில் வாசுகி பாம்பு ஏன் இருக்கிறது? பாற்கடல் கடைதல், ஆலகால விஷம், கத்ருவின் சாபம் தொடர்பான புராணக் கதைகளை தெரிந்துகொள்ளுங்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிவன் என்றாலே திரிசூலம், நெற்றிக்கண், விபூதி போல, கழுத்தில் சுற்றியிருக்கும் நாகப்பாம்பும் நினைவுக்கு வரும். இந்து கடவுள்களில் சிவனின் தோற்றம் தனித்துவமானது. அந்தப் பாம்பின் பெயர் வாசுகி. வாசுகி எப்படி சிவன் கழுத்துக்கு வந்தது என்பதைப் பற்றி பல கதைகள் உள்ளன. தேவர்களும் அசுரர்களும் அமிர்தத்திற்காக பாற்கடலைக் கடைந்தனர். மந்தார மலையை மத்தாகவும், வாசுகி பாம்பை கயிறாகவும் பயன்படுத்தினர். அப்போது வெளிவந்த ஆலகால விஷத்தை சிவன் குடித்து, உலகைக் காப்பாற்றினார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அந்த விஷத்தின் வெப்பத்தைக் குறைக்கவே வாசுகியை கழுத்தில் அணிந்ததாக ஒரு கதை உண்டு. பாற்கடல் கடைந்தபோது ஏற்பட்ட காயங்களால் வருந்திய வாசுகி, சிவனை நோக்கி கடுந்தவம் புரிந்தார். எப்போதும் தன் அருகிலேயே இருக்கும் வரத்தை வேண்டினார். வாசுகியின் பக்திக்கு மகிழ்ந்த சிவன், அவரைத் தன் கழுத்திலேயே நிரந்தர ஆபரணமாக இருக்கும் பாக்கியத்தை அளித்தார்.&lt;/p&gt;&lt;p&gt;Today Horoscope: புதன்கிழமை ராசிபலன்: இந்த 4 ராசிக்கு பணம், வேலை, குடும்பத்தில் சாதகமான மாற்றங்கள் வருமா?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பாம்புகளின் தாயான கத்ரு, தன் மகன்கள் சர்ப்ப யாகத்தில் இறந்து போவார்கள் எனச் சபித்தார். இந்த சாபத்திலிருந்து தப்பிக்க, வாசுகி சிவனிடம் தஞ்சம் அடைந்தார். சிவன் அவரைத் தன் கழுத்தில் அணிந்து கொண்டதால், சாபம் வாசுகியை பாதிக்கவில்லை. பாம்பு தன் தோலை உரிப்பது மறுபிறப்பின் அடையாளம். சிவன் கழுத்தில் பாம்பு மூன்று முறை சுற்றியிருப்பது, இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்று காலங்களையும் சிவன் கட்டுப்படுத்துகிறார் என்பதைக் குறிக்கிறது. இது குண்டலினி சக்தியின் குறியீடாகவும் பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பாம்பு என்பது பயம், கோபம், மரணத்தின் சின்னம். கொடிய பாம்பை சிவன் தன் கழுத்தில் ஆபரணமாக அணிந்திருப்பது, அவர் தீய சக்திகளையும், பயத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. அனைத்து உயிர்களும் சமம் என்பதே இதன் தத்துவம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[astrology]]></category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/vasuki-snake-why-does-lord-shiva-wear-a-snake-around-his-neck-w8f7k8y"/>
        </item>
        <item>
            <title><![CDATA[AC Side Effects : 24 மணி நேரமும் ஏசி அறையா? உடலில் ஏற்படும் இந்த மாற்றங்கள் தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/health/air-conditioners-side-effects-of-body-health-7q32gun</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/health/air-conditioners-side-effects-of-body-health-7q32gun</guid>
            <pubDate>Wed, 26 Aug 2026 11:01:06 +0530</pubDate>
            <description><![CDATA[Side Effects of Air Conditioners: இன்றைய காலகட்டத்தில் அலுவலகம், வீடு, கார் என பெரும்பாலானோர் நாள் முழுவதும் ஏசி அறைகளிலேயே அதிக நேரம் செலவிடுகின்றனர். இவ்வாறு நீண்ட நேரம் ஏசியில் இருப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0y8kd33jsm3bmzd4en9r7k8,imgname-ac-room-effect-1787722052707.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;Side Effects of Air Conditioners: &lt;/strong&gt;இன்றைய காலகட்டத்தில் அலுவலகம், வீடு, கார் என பெரும்பாலானோர் நாள் முழுவதும் ஏசி அறைகளிலேயே அதிக நேரம் செலவிடுகின்றனர். இவ்வாறு நீண்ட நேரம் ஏசியில் இருப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நாள் முழுவதும் ஏசி அறையில் இருப்பது உடலுக்க குளிர்ச்சியாகவும், வசதியாகவும் இருக்கும். ஆனால் நீண்ட நேரம் ஏசியில் இருந்தால் தோல் வறட்சி, கண் எரிச்சல், மூக்கு மற்றும் தொண்டை வறண்டு போவது போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நீண்ட நேரம் ஏசி ரூமில் இருப்பதால், அறையின் ஈரப்பதம் குறைந்து தோல் வறட்சி, உதடு வெடிப்பு மற்றும் அரிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். அதேபோல், சிலருக்கு கண்களில் எரிச்சல், தொண்டை வலி, இருமல் போன்ற அறிகுறிகளும் தோன்றலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சுவாச மண்டலத்தில் பாதிப்பு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஆஸ்துமா அல்லது ஏற்கனவே நுரையீரல் தொடர்பான பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு குளிர்ந்த மற்றும் வறண்ட காற்று கூடுதல் அசௌகரியத்தை ஏற்படுத்தும். இதனால் சுவாசப் பிரச்சினைகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக நுரையீரல் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நாள் முழுவதும் ஏசி அறையில் இருப்பவர்களுக்கு &quot;சிக் பில்டிங் சிண்ட்ரோம்&quot; (Sick Building Syndrome) எனும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் அறிகுறியாக சிலருக்கு தலைவலி, சோர்வு மற்றும் குறிப்பிட்ட செயலில் கவனம் செலுத்துவதில் சிரமம் ஏற்படலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஏசியின் ஃபில்டர் சரியாக பராமரிக்கப்படாவிட்டால் தூசி காற்றில் பரவி சுவாசப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் வாய்ப்பும் உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;தடுப்பு வழிமுறைகள்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஏசி பயன்படுத்துவது உடல்நலத்திற்கு கேடு என்று சொல்ல முடியாது. ஆனால்,&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;உடலுக்கு ஏற்ற சரியான ஏசி வெப்பநிலையை வைத்திருக்க வேண்டும்.&lt;/li&gt; &lt;li&gt;ஏசி ஃபில்டர்களை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும்.&lt;/li&gt; &lt;li&gt;உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிப்பது.&lt;/li&gt; &lt;li&gt;ஒவ்வொரு 2 மணிநேரத்திற்கும் 10-15 நிமிடம் வெளியே சென்று வருவது போன்றவை இந்த பாதிப்புகளில் இருந்து தங்களை பாதுகாக்க உதவும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றது.&lt;/li&gt;&lt;/ul&gt;]]></content:encoded>
            <category><![CDATA[health]]></category>
            <dc:creator>Vishnupriya</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/health/air-conditioners-side-effects-of-body-health-7q32gun"/>
        </item>
        <item>
            <title><![CDATA[8th Pay Commission: முழு அட்டவணை வெளியீடு! எந்தெந்த நகரங்களில் மீட்டிங் நடக்குது தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/8th-pay-commission-meeting-schedule-2026-for-major-indian-cities-6xel46b</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/8th-pay-commission-meeting-schedule-2026-for-major-indian-cities-6xel46b</guid>
            <pubDate>Wed, 26 Aug 2026 10:36:55 +0530</pubDate>
            <description><![CDATA[8வது ஊதியக் குழு, 2026 செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் முக்கிய நகரங்களில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர் சங்கங்களுடன் புதிய கூட்டங்களை நடத்த உள்ளது. சம்பளக் கட்டமைப்பு தொடர்பான கோரிக்கைகளைப் பற்றி விவாதிப்பதே இந்தக் கூட்டங்களின் முக்கிய நோக்கம்]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kmpn1z856na37fk0c89v3qkc,imgname-8th-pay-commission-timeline-salary-hike-arrears-fitment-factor-central-government-employees-pension-update-india-1-1774581775621.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;8வது ஊதியக் குழு, 2026 செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் முக்கிய நகரங்களில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர் சங்கங்களுடன் புதிய கூட்டங்களை நடத்த உள்ளது. சம்பளக் கட்டமைப்பு தொடர்பான கோரிக்கைகளைப் பற்றி விவாதிப்பதே இந்தக் கூட்டங்களின் முக்கிய நோக்கம்&lt;/p&gt;&lt;img&gt;8வது ஊதியக் குழு, நாடு தழுவிய ஆலோசனை செயல்முறையின் ஒரு பகுதியாக, 2026 செப்டம்பரில் இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர் சங்கங்களுடன் புதிய கூட்டங்களை நடத்த உள்ளது.&lt;img&gt;உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான இந்த ஆணையம், மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் பல்வேறு சங்கங்களின் ஆலோசனைகளையும் கோரிக்கைகளையும் கேட்க உள்ளது. ஜெய்ப்பூர், சென்னை, புதுச்சேரி மற்றும் சண்டிகரில் இந்தக் கூட்டங்கள் நடைபெறும்.&lt;img&gt;ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்) - ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1, 2026 (திங்கள் &amp;amp; செவ்வாய்) சென்னை (தமிழ்நாடு) - செப்டம்பர் 7 மற்றும் 8, 2026 (திங்கள் &amp;amp; செவ்வாய்) புதுச்சேரி - செப்டம்பர் 9, 2026 சண்டிகர் - செப்டம்பர் 16 முதல் 18, 2026 பெங்களூரு - அக்டோபர் 7 மற்றும் 8, 2026 (சமீபத்திய அறிவிப்பு)&lt;img&gt;ரயில்வே ஊழியர்களின் பணிச்சூழல் குறித்த தகவல்களைச் சேகரிக்க, மும்பையில் உள்ள மத்திய ரயில்வே மண்டலத்தின் கீழ் வரும் ரயில்வே கோட்டங்களைப் பார்வையிடவும் இந்த ஆணையம் திட்டமிட்டுள்ளது.&lt;img&gt;ஜெய்ப்பூர், சென்னை மற்றும் புதுச்சேரி கூட்டங்களில் பங்கேற்பதற்கான விண்ணப்ப தேதி ஆகஸ்ட் 18, 2026 உடன் முடிவடைந்தது. சண்டிகரில் நடைபெறும் கூட்டங்களுக்குப் பிரதிநிதிகள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 25, 2026 ஆகும்.&lt;img&gt;சம்பளம், படிகள், ஓய்வூதியம் மற்றும் பிற பணி நிபந்தனைகள் குறித்த தங்கள் கருத்துக்களையும் கோரிக்கைகளையும் வெளிப்படுத்த ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர் சங்கங்களுக்கு இந்த கூட்டங்கள் ஒரு வாய்ப்பை வழங்கும்.&lt;img&gt;கூட்டங்களுக்கான அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி நிரல் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனாலும், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளக் கட்டமைப்பு, படிகள், குறைந்தபட்ச ஊதியம், ஃபிட்மென்ட் ஃபாக்டர் மற்றும் ஓய்வூதிய திருத்தம் போன்றவையே முக்கிய விவாதப் பொருளாக இருக்கும்.&lt;img&gt;8வது ஊதியக் குழுவின் கீழ் ஃபிட்மென்ட் ஃபாக்டரை 2.57-லிருந்து 3.83 ஆகவும், பின்னர் 4.0 ஆகவும் உயர்த்த வேண்டும் என ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இதில் அரசு எதை ஏற்கும் என மத்திய அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர்.]]></content:encoded>
            <category><![CDATA[business]]></category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/8th-pay-commission-meeting-schedule-2026-for-major-indian-cities-6xel46b"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Morning Pranayama: காலை எழுந்ததும் இதை மட்டும் செய்யுங்க.. டென்ஷன் குறைந்து கவனம் அதிகரிக்கும்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/morning-pranayama-benefits-stress-relief-focus-and-better-sleep-explained-hwk4fnx</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/morning-pranayama-benefits-stress-relief-focus-and-better-sleep-explained-hwk4fnx</guid>
            <pubDate>Wed, 26 Aug 2026 09:44:30 +0530</pubDate>
            <description><![CDATA[Morning Pranayama: காலை நேரத்தை எப்படி தொடங்குகிறோம் என்பது நாள் முழுவதும் நம்முடைய மனநிலையிலும் செயல்பாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். இதை செய்வதால் மன அழுத்தம், கவனம், மூச்சுப் பயிற்சி மற்றும் தூக்கம் எளிதாக கிடைக்கும்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0wtwvzcyphmrn7cs4pn0bf8,imgname-pranayama-1787674128364.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Morning Pranayama: காலை நேரத்தை எப்படி தொடங்குகிறோம் என்பது நாள் முழுவதும் நம்முடைய மனநிலையிலும் செயல்பாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். இதை செய்வதால் மன அழுத்தம், கவனம், மூச்சுப் பயிற்சி மற்றும் தூக்கம் எளிதாக கிடைக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிராணாயாமத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று மூச்சின் மீது கவனத்தை செலுத்துவதாகும். மெதுவாகவும் கட்டுப்பாட்டுடனும் மூச்சை உள்ளிழுத்து வெளியேற்றுவது மனதை அமைதிப்படுத்த உதவக்கூடும். மூச்சுப் பயிற்சிகள் உடலின் தளர்வு இயக்க ஊக்குவித்து மன அழுத்தத்தை குறைக்க உதவலாம் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால், காலை நேரத்தில் சில நிமிடங்கள் அமைதியாக மூச்சுப் பயிற்சி செய்வது நாள் தொடக்கத்தை நிதானமாக அமைக்க உதவும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;கவனம் மற்றும் மனநிலைக்கு உதவலாம்:&lt;/strong&gt; மூச்சில் கவனம் செலுத்தும் பயிற்சிகள் மனதை ஒருமுகப்படுத்தும் பழக்கத்தை வளர்க்க உதவும். மாணவர்கள் படிப்பதற்கு முன்பும், வேலை செய்பவர்கள் தங்களுடைய நாளைத் தொடங்குவதற்கு முன்பும் சில நிமிடங்கள் எளிய மூச்சுப் பயிற்சியை செய்யலாம். ஆனால் பிராணாயாமம் செய்தாலே நினைவாற்றல் அல்லது கவனம் கட்டாயமாக அதிகரிக்கும் என்று உறுதியாகக் கூற முடியாது. இது ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக மட்டுமே பார்க்கப்பட வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;Plastic Stool: நடுவில் ஏன் ஒரு ஓட்டை இருக்கு? இதுக்குப் பின்னாடி இவ்வளவு சயின்ஸ் இருக்கா!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிராணாயாமத்தில் மூச்சை மெதுவாக கட்டுப்படுத்தி இயக்கும் முறைகள் உள்ளன. இதனால் மூச்சு எடுக்கும் முறையைப் பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்கலாம். சில ஆய்வுகளில் யோகா மற்றும் மூச்சுப் பயிற்சிகள் நுரையீரல் செயல்பாட்டின் சில அளவுகளில் முன்னேற்றத்துடன் தொடர்புடையதாகக் காணப்பட்டுள்ளன. இருப்பினும், &ldquo;நுரையீரல் வலுவாகிவிடும்&rdquo; என்று பொதுவாகச் சொல்வதைவிட, முறையான பயிற்சியும் உடல்நிலைக்கு ஏற்ற அணுகுமுறையும் முக்கியம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;தூக்கத்துக்கும் உதவக்கூடும்: &lt;/strong&gt;இரவு நேரத்தில் மனதில் ஓடும் எண்ணங்கள் அல்லது அதிகமான மன அழுத்தம் சிலருடைய தூக்கத்தை பாதிக்கலாம். கட்டுப்படுத்தப்பட்ட மெதுவான மூச்சுப் பயிற்சி உடலையும் மனதையும் தளர்த்த உதவுவதால், தூக்கத்திற்கு முன் அமைதியான மனநிலையை உருவாக்கலாம். யோகா மற்றும் மூச்சுப் பயிற்சிகள் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தலாம் என்பதற்கான ஆய்வுகள் உள்ளன. இருப்பினும் தொடர்ந்து தூக்கப் பிரச்சினை இருந்தால், பிராணாயாமத்தை மட்டும் நம்பாமல் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிராணாயாமத்தில் ஆரம்பிப்பவர்கள் முதலில் எளிமையான, மெதுவான மூச்சுப் பயிற்சிகளைத் தேர்வு செய்யலாம். மூச்சை நீண்ட நேரம் அடக்குவது அல்லது வேகமாக மூச்சை இழுத்து வெளியேற்றுவது போன்ற கடினமான முறைகளை நிபுணர் வழிகாட்டுதல் இல்லாமல் செய்ய வேண்டாம். தலைசுற்றல், மூச்சுத்திணறல் அல்லது அசௌகரியம் ஏற்பட்டால் உடனடியாக நிறுத்த வேண்டும். குறிப்பாக இதயம் அல்லது நுரையீரல் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகள் இருப்பவர்கள் அல்லது தகுதியான யோகா நிபுணரிடம் ஆலோசனை பெற்ற பிறகு தொடங்குவது பாதுகாப்பானது. தினசரி வாழ்க்கையில் போதுமான தூக்கம், சத்தான உணவு மற்றும் உடற்பயிற்சியுடன் பிராணாயாமத்தையும் ஒரு ஆரோக்கியமான பழக்கமாக இணைக்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[life-style]]></category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/morning-pranayama-benefits-stress-relief-focus-and-better-sleep-explained-hwk4fnx"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Food Warning Labels: வெளிநாட்டு கம்பெனிகள் இந்தியாவில் தரம் குறைந்த பொருட்களை விற்கிறாங்களா? தெரிஞ்சுக்க வேண்டிய 5 விஷயங்கள்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/unhealthy-ingredients-in-indian-products-from-global-brands-9pxoggz</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/unhealthy-ingredients-in-indian-products-from-global-brands-9pxoggz</guid>
            <pubDate>Wed, 26 Aug 2026 09:37:22 +0530</pubDate>
            <description><![CDATA[Food Warning Labels: உலகின் மிகப்பெரிய உணவு நிறுவனங்கள், வெளிநாடுகளில் கடுமையான விதிகளைப் பின்பற்றும் நிலையில், இந்தியாவில் சுகாதார எச்சரிக்கை லேபிள்களை எதிர்க்கின்றன. இங்கு விற்கப்படும் பொருட்களில் தரம் குறைந்த மூலப்பொருட்கள் இருக்கிறதாம்.!]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0y3z1jgb01743bb9phta6q4,imgname-chatgpt-image-aug-26--2026--09-35-15-am--1--1787717191248.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Food Warning Labels: உலகின் மிகப்பெரிய உணவு நிறுவனங்கள், வெளிநாடுகளில் கடுமையான விதிகளைப் பின்பற்றும் நிலையில், இந்தியாவில் சுகாதார எச்சரிக்கை லேபிள்களை எதிர்க்கின்றன. இங்கு விற்கப்படும் பொருட்களில் தரம் குறைந்த மூலப்பொருட்கள் இருக்கிறதாம்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;லண்டனில் விற்கப்படும் ஃபேண்டாவுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் விற்கப்படும் அதே பிராண்ட் பானத்தில் சுமார் மூன்று மடங்கு அதிக சர்க்கரை இருப்பதாக ராய்ட்டர்ஸ் அறிக்கை கூறுகிறது. இந்திய ஃபேண்டாவில் செயற்கை நிறமியும் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிக சர்க்கரை உட்கொள்வது உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம் என்பதால், உணவுப் பொருட்களில் தெளிவான ஊட்டச்சத்து எச்சரிக்கைகள் தேவை என்ற கோரிக்கை வலுத்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கோகோ-கோலா, நெஸ்லே போன்ற உலகளாவிய நிறுவனங்கள் ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் தெளிவான ஊட்டச்சத்து மற்றும் &lsquo;டிராஃபிக் லைட்&rsquo; லேபிள்களைப் பயன்படுத்துகின்றன. ஆனால் இந்தியாவில் முன்பக்க எச்சரிக்கை லேபிள்களுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. இது இந்திய நுகர்வோருக்கு வெவ்வேறு தரநிலைகள் பின்பற்றப்படுகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சர்க்கரை, உப்பு, கொழுப்பு அதிகமுள்ள உணவுப் பொருட்களுக்கு சிவப்பு எச்சரிக்கை லேபிள்களை அறிமுகப்படுத்தும் முயற்சிக்கு உணவு நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவித்துள்ளது. குறிப்பாக, சந்தையில் உள்ள சுமார் 80% பொருட்கள் &lsquo;அதிக சர்க்கரை, உப்பு அல்லது கொழுப்பு&rsquo; என்ற எச்சரிக்கையைப் பெறும் என தொழில்துறை தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து FSSAI தனது அணுகுமுறையை மாற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியர்களின் உடல்நலனில் அரசு அக்கறை கொண்டுள்ளது என்பதை உலகுக்குக் காட்ட வேண்டும் என உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. உடல்நல ஆர்வலர்கள் தாக்கல் செய்த மனுவைத் தொடர்ந்து, அதிக சர்க்கரை, உப்பு, கொழுப்பு கொண்ட உணவுகளுக்கான முன்பக்க எச்சரிக்கை லேபிள்கள் குறித்து FSSAI-யின் நிலைப்பாட்டை நீதிமன்றம் கேள்விக்குட்படுத்தியது. நுகர்வோர் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் தெளிவான பேக்கேஜிங் தகவல்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேகி நூடுல்ஸின் இந்தியாவில் விற்கப்படும் அனைத்து வகைகளிலும் பாமாயில் பயன்படுத்தப்படுவதாகவும், பிரிட்டனில் பல வகைகளில் அதிக விலை கொண்ட சூரியகாந்தி எண்ணெய் பயன்படுத்தப்படுவதாகவும் ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்களில் எழுந்த விமர்சனங்களுக்கிடையே, நெஸ்லே இந்தியாவில் சர்க்கரை சேர்க்காத செரிலாக் வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 2024-ல் அறிமுகமான இந்த மாற்றம், நுகர்வோர் எதிர்பார்ப்புகள் நிறுவனங்களின் தயாரிப்பு மாற்றங்களைத் தூண்டுகிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[life-style]]></category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/unhealthy-ingredients-in-indian-products-from-global-brands-9pxoggz"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Brain Health: டைப் பண்றதா? கையால எழுதுறதா? எது உங்க மூளைக்கு நல்லது? ஷாக் ரிப்போர்ட்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/handwriting-vs-typing-which-boosts-brain-power-more-qi5veg9</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/handwriting-vs-typing-which-boosts-brain-power-more-qi5veg9</guid>
            <pubDate>Wed, 26 Aug 2026 09:03:18 +0530</pubDate>
            <description><![CDATA[நாள் முழுவதும் லேப்டாப்-மொபைலில் டைப் செய்துகொண்டே இருக்கிறோம், கையில் பேனாவைப் பிடிப்பதே இல்லை. ஆனால், இதனால் உங்கள் மூளைக்கு என்ன பாதிப்பு ஏற்படுகிறது தெரியுமா? சமீபத்திய ஆய்வு சொல்லும் ரகசியம் இதுதான்.!]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0ws9r09kppv8c6pmckdramr,imgname-gemini-generated-image-jgmw0djgmw0djgmw-1787672453129.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;நாள் முழுவதும் லேப்டாப்-மொபைலில் டைப் செய்துகொண்டே இருக்கிறோம், கையில் பேனாவைப் பிடிப்பதே இல்லை. ஆனால், இதனால் உங்கள் மூளைக்கு என்ன பாதிப்பு ஏற்படுகிறது தெரியுமா? சமீபத்திய ஆய்வு சொல்லும் ரகசியம் இதுதான்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆய்வுகளின்படி, கையால் எழுதுவது மூளையின் பல பகுதிகளை ஒரே நேரத்தில் செயல்படச் செய்கிறது. எழுத்துக்களை நினைவில் வைத்துப் பதிவு செய்வது, கை-கண் ஒருங்கிணைப்பு, சிந்தனை மற்றும் நினைவாற்றல் போன்ற திறன்கள் இதில் ஈடுபடுகின்றன. ஆனால், டைப்பிங் செய்யும்போது இத்தகைய மூளைச் செயல்பாடுகள் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கையால் எழுதப்பட்ட குறிப்புகள், தகவல்களை மூளையில் ஆழமாகப் பதியச் செய்வதால், டைப்பிங் செய்த குறிப்புகளைவிட நினைவில் வைத்துக்கொள்ளும் திறனை அதிகரிக்கக்கூடும். சில ஆய்வுகள், கையெழுத்து மூலம் கற்றுக்கொண்ட தகவல்கள் சுமார் 25&ndash;30% வரை அதிகமாக நினைவில் நிற்கலாம் எனக் குறிப்பிடுகின்றன. குறிப்பாக மாணவர்களுக்கு இது பயனுள்ள கற்றல் நுட்பமாக இருக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மெதுவாக கையால் எழுதுவது, நாம் சிந்திக்கும் கருத்துகளை தெளிவாக ஒழுங்குபடுத்த மூளைக்கு கூடுதல் நேரத்தை வழங்குகிறது. இதனால் புதிய யோசனைகள் உருவாகவும் படைப்பாற்றல் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. குறிப்பாக, தினசரி டைரி எழுதும் பழக்கம் மனதில் உள்ள எண்ணங்களை வெளிப்படுத்த உதவுவதுடன், மன அமைதியை ஏற்படுத்தி மன அழுத்தத்தையும் குறைக்கக்கூடிய பயனுள்ள பழக்கமாக கருதப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;டைப்பிங் செய்வது தகவல்களை வேகமாகச் செயலாக்கவும், ஒரே நேரத்தில் பல பணிகளை திறம்பட கையாளவும் உதவுகிறது. தொடர்ந்து டைப்பிங் செய்வதால் விரல்கள், கண்கள் மற்றும் மூளை இடையேயான ஒருங்கிணைப்பு மேம்படலாம். குறிப்பாக அலுவலகப் பணிகள் மற்றும் டிஜிட்டல் கற்றலில் இது பயனுள்ளதாக இருக்கும். எனவே, வேகமான செயலாக்கம், மல்டி டாஸ்கிங் மற்றும் ஒருங்கிணைப்புத் திறனை வளர்க்கும் ஒரு நல்ல மூளைப் பயிற்சியாக டைப்பிங் அமைகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும், அவற்றை நீண்ட காலம் நினைவில் வைத்திருக்கவும் கையால் எழுதும் பழக்கத்தைப் பின்பற்றுங்கள். அதே நேரத்தில், தொழில்முறை பணிகள், மின்னஞ்சல்கள் மற்றும் வேகமான குறிப்புகளைத் தயாரிக்க டைப்பிங்கைப் பயன்படுத்தலாம். எனவே, நிபுணர்களின் எளிய சூப்பர் ஃபார்முலா: கையால் எழுதி கற்றுக்கொள்ளுங்கள்; டைப் செய்து வேகமாக வேலை செய்யுங்கள்!&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[life-style]]></category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/handwriting-vs-typing-which-boosts-brain-power-more-qi5veg9"/>
        </item>
        <item>
            <title><![CDATA[செரிமானத்தை மேம்படுத்த உதவும் 8 எளிய வீட்டு பானங்கள்..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/webstories/health/detox-drinks-for-digestion-8-simple-homemade-beverages-to-try-v8uywfl</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/webstories/health/detox-drinks-for-digestion-8-simple-homemade-beverages-to-try-v8uywfl</guid>
            <pubDate>Wed, 26 Aug 2026 08:45:12 +0530</pubDate>
            <description><![CDATA[Detox Drinks: இந்த பானங்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும், மெட்டபாலிசத்தை மேம்படுத்தவும், வயிறு உப்புசத்தைக் குறைக்கவும் உதவுகின்றன. சிறந்த செரிமானத்திற்கு நீங்கள் வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய 8 எளிய டிடாக்ஸ் பானங்கள் இங்கே.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k2pckjr5bcd7mzdr99fjsed8,imgname-untitled-design--19--1755245562629.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <category><![CDATA[health]]></category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/webstories/health/detox-drinks-for-digestion-8-simple-homemade-beverages-to-try-v8uywfl"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Astrology: உங்களை எஜமானராக்கும் ‘சங்க நிதி யோகம்’..! இந்த 5 நட்சத்திரங்களின் தலையெழுத்தை மாற்றப்போகும் தனாகாரகன் சஞ்சாரம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/sanga-nidhi-yogam-jupiter-transit-to-transform-the-destiny-of-these-5-nakshatras-with-wealth-fortune-cfkeq22</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/sanga-nidhi-yogam-jupiter-transit-to-transform-the-destiny-of-these-5-nakshatras-with-wealth-fortune-cfkeq22</guid>
            <pubDate>Wed, 26 Aug 2026 08:29:39 +0530</pubDate>
            <description><![CDATA[‘சங்க நிதி யோகம்’ மூலம் அதிர்ஷ்டம் மாறப்போகும் 5 நட்சத்திரங்கள் யார்? தனாகாரகன் குரு பகவானின் சஞ்சாரத்தால் செல்வம், பணவரவு, தொழில் வளர்ச்சி, நகை மற்றும் சொத்து சேர்க்கை பெறப்போகும் ராசியினரின் ஜோதிட பலன்களை விரிவாக பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0xynzt2emc9m4wnvw2yepez,imgname-chatgpt-image-aug-26--2026--07-57-08-am--2--1787711651649.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;&lsquo;சங்க நிதி யோகம்&rsquo; மூலம் அதிர்ஷ்டம் மாறப்போகும் 5 நட்சத்திரங்கள் யார்? தனாகாரகன் குரு பகவானின் சஞ்சாரத்தால் செல்வம், பணவரவு, தொழில் வளர்ச்சி, நகை மற்றும் சொத்து சேர்க்கை பெறப்போகும் ராசியினரின் ஜோதிட பலன்களை விரிவாக பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வேத ஜோதிடத்தில் தனாகாரகன் என்று போற்றப்படும் குரு பகவான், செல்வம், பொருளாதாரம், தன வரவு, குடும்ப வளம், புத்திர பாக்கியம், கல்வி, ஞானம், பதவி, கௌரவம் உள்ளிட்ட பல்வேறு சுப பலன்களுக்கு முக்கிய காரக கிரகமாக விளங்குகிறார். குருவின் சஞ்சாரம் ஒருவருடைய ஜென்ம ராசி, நட்சத்திரம், லக்னம், சந்திர நிலை மற்றும் தசா-புக்தி ஆகியவற்றுடன் தொடர்புபடுத்திப் பார்க்கப்படும்போது அதன் பலன்கள் மேலும் முக்கியத்துவம் பெறுகின்றன.&lt;/p&gt;&lt;p&gt;குறிப்பாக, குரு ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலகட்டத்தில் அந்த நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்களுக்கு தன யோகம், லாப யோகம், ராஜயோகம், பாக்கிய விருத்தி, தொழில் முன்னேற்றம் போன்ற பலன்கள் உருவாகும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அதிலும் சில நட்சத்திரங்களுக்கு குருவின் ஆதிக்கம் கிடைக்கும் காலம் சங்க நிதி யோகம் போன்ற செல்வ வளத்தைக் குறிக்கும் ஜோதிட அமைப்புகளுக்கு சாதகமானதாக கருதப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;சங்க நிதி யோகம் என்பது செல்வம், வசதி, பொருள் சேர்க்கை, குடும்ப வளம் மற்றும் சமூக அந்தஸ்து ஆகியவற்றுடன் தொடர்புடையதாக ஜோதிடத்தில் விளக்கப்படுகிறது. ஒருவருடைய ஜாதகத்தில் 2-ம் பாவம், 5-ம் பாவம், 9-ம் பாவம், 11-ம் பாவம், அவற்றின் அதிபதிகள் மற்றும் குரு பகவானின் நிலை ஆகியவை வலுப்பெறும் போது தன வரவு மற்றும் செல்வச் சேர்க்கைக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரோகிணி நட்சத்திரத்திற்கு சந்திரன் அதிபதியாக உள்ளார். சந்திரன் மனம், செல்வாக்கு, பொதுமக்கள் தொடர்பு மற்றும் குடும்ப வளத்தை குறிக்கிறார். குருவின் சுப பார்வை அல்லது சஞ்சாரத் தொடர்பு ரோகிணி நட்சத்திரத்தினருக்கு கிடைக்கும் காலத்தில் தன லாபம், குடும்பத்தில் சுப நிகழ்வுகள், புதிய வருமான வாய்ப்புகள் போன்றவை உருவாகலாம். ஜாதகத்தில் 2-ம் மற்றும் 11-ம் பாவங்கள் வலுவாக இருந்தால் பணச் சேர்க்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;இந்த ஜோதிட கட்டுரையையும் படித்து பாருங்களேன் https://tamil.asianetnews.com/gallery/astrology/horoscope-predictions-for-all-12-zodiac-signs-aries-to-pisces-xuzwyv9&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;புனர்பூசம் நட்சத்திரத்தின் அதிபதி குரு பகவானே. எனவே குருவின் சஞ்சாரம் இந்த நட்சத்திரத்தினருக்கு விசேஷ முக்கியத்துவம் பெறுகிறது. குரு பலம், பாக்கிய பலம், தன பலம் ஆகியவை ஒருங்கிணையும் காலமாக இது அமையலாம். தொழிலில் விரிவாக்கம், புதிய பொறுப்புகள், பொருளாதார முன்னேற்றம், நீண்டகாலமாக எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைத்தல் போன்ற பலன்கள் ஏற்படலாம். குரு தசை அல்லது புக்தி நடப்பவர்களுக்கு இந்த பலன்கள் கூடுதல் வலிமையுடன் வெளிப்படலாம்.&lt;/p&gt;&lt;p&gt;இந்த ஜோதிட கட்டுரையையும் படித்து பாருங்களேன் https://tamil.asianetnews.com/gallery/astrology/venus-transit-2026-how-it-will-bring-fortune-to-four-zodiac-signs-us5c8mr&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விசாகம் நட்சத்திரத்திற்கும் குரு பகவானே அதிபதி. இந்த நட்சத்திரத்தினருக்கு குருவின் சஞ்சாரம் பாக்கிய ஸ்தானம் மற்றும் தன ஸ்தானம் தொடர்பான பலன்களைத் தூண்டக்கூடியதாக இருக்கலாம். தொழில் வளர்ச்சி, வருமான உயர்வு, புதிய முதலீட்டு வாய்ப்புகள், பதவி உயர்வு மற்றும் சமூக கௌரவம் போன்றவை கிடைக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக ஜாதகத்தில் 9-ம் பாவ அதிபதி வலுப்பெற்றிருந்தால் பாக்கிய விருத்தி அதிகரிக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;இந்த ஜோதிட கட்டுரையையும் படித்து பாருங்களேன் https://tamil.asianetnews.com/gallery/astrology/horoscope-predictions-for-all-12-zodiac-signs-in-awani-month-xrpfof6&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பூரட்டாதி நட்சத்திரத்திற்கும் குருவே அதிபதி. எனவே குரு பலம் இந்த நட்சத்திரத்தினருக்கு முக்கியமானதாகும். தன வரவு மட்டுமின்றி ஞானம், ஆன்மிகம், உயர்கல்வி, பதவி மற்றும் மரியாதை போன்றவற்றிலும் முன்னேற்றம் கிடைக்கலாம். 5-ம் பாவம் மற்றும் 9-ம் பாவம் வலுவாக இருந்தால் அறிவாற்றல் மூலம் வருமானம் பெறும் வாய்ப்புகளும் உருவாகலாம். நீண்டகால முதலீடுகள் மற்றும் தொழில் விரிவாக்கத்திலும் சாதகமான சூழல் அமையலாம்.&lt;/p&gt;&lt;p&gt;இந்த ஜோதிட கட்டுரையையும் படித்து பாருங்களேன் https://tamil.asianetnews.com/gallery/astrology/budhaditya-rajyoga-2026-significance-for-career-and-financial-success-9bi7dnp&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பூராடம் நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன். சுக்கிரன் செல்வம், ஆடம்பரம், வசதி, கலை, வாகனம், சொத்து மற்றும் பொருள் வளம் ஆகியவற்றின் காரகன். குருவின் சுபத் தொடர்பு சுக்கிர ஆதிக்கம் பெற்ற இந்த நட்சத்திரத்தினருக்கு பொருளாதார ரீதியாக முன்னேற்றத்தைத் தரக்கூடும். குறிப்பாக 2-ம் பாவம், 7-ம் பாவம் மற்றும் 11-ம் பாவங்கள் சாதகமாக இருந்தால் வியாபாரம், கூட்டுத்தொழில் மற்றும் புதிய வருமான வாய்ப்புகளில் லாபம் கிடைக்கலாம்.இந்த ஜோதிட கட்டுரையையும் படித்து பாருங்களேன் https://tamil.asianetnews.com/webstories/astrology/simple-vastu-tips-for-financial-stability-and-overcoming-obstacles-3ylg8n7&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒட்டுமொத்தமாக, குரு பகவானின் சஞ்சாரம் தன யோகம், பாக்கிய யோகம், லாப யோகம், ராஜயோகம் போன்ற சுப அமைப்புகளுக்கு தூண்டுதலாக அமையக்கூடும். குறிப்பாக மேற்கண்ட 5 நட்சத்திரத்தினருக்கு பொருளாதார முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கலாம். இருப்பினும் ஒரு நட்சத்திரத்தை மட்டும் வைத்து முழுமையான பலனைத் தீர்மானிக்க முடியாது. ஜென்ம ஜாதகத்தில் லக்னம், சந்திர ராசி, கிரக நிலைகள், குருவின் பலம், தசா-புக்தி, கோச்சார நிலை, 2-ம் மற்றும் 11-ம் பாவங்களின் வலிமை ஆகியவற்றையும் இணைத்துப் பார்த்தால்தான் தனிப்பட்ட ஜோதிட பலனை துல்லியமாக கணிக்க முடியும். இது பொதுவான ஜோதிடப் பார்வை மட்டுமே; தனிப்பட்ட ஜாதகப் பலன்கள் மாறுபடலாம்.&lt;/p&gt;&lt;p&gt;இந்த ஜோதிட கட்டுரையையும் படித்து பாருங்களேன் https://tamil.asianetnews.com/gallery/astrology/venus-blessings-5-zodiac-signs-set-to-gain-wealth-power-and-luxury-qnemwo7&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[astrology]]></category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/sanga-nidhi-yogam-jupiter-transit-to-transform-the-destiny-of-these-5-nakshatras-with-wealth-fortune-cfkeq22"/>
        </item>
        <item>
            <title><![CDATA[TVS iQube: 145 கி.மீ. ரேஞ்ச், டைப்-சி சார்ஜர்... டிவிஎஸ்ஸின் புதிய ஸ்பெஷல் எடிஷன்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/auto/tvs-iqube-millionr-edition-launched-145km-range-type-c-charger-and-new-features-fztaqh8</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/auto/tvs-iqube-millionr-edition-launched-145km-range-type-c-charger-and-new-features-fztaqh8</guid>
            <pubDate>Wed, 26 Aug 2026 08:18:36 +0530</pubDate>
            <description><![CDATA[TVS iQube: பிரபல எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனமான டிவிஎஸ், தனது ஐக்யூப் மாடலில் புதிய 'மில்லியன்ஆர்' ஸ்பெஷல் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. 10 லட்சம் வாடிக்கையாளர்களைப் பெற்றதைக் கொண்டாடும் விதமாக இந்த சிறப்புப் பதிப்பை நிறுவனம் வெளியிட்டுள்ளது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0wp4kbn74sbdnq1hn6b9xgf,imgname-tvs-1787669138805.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;TVS iQube: பிரபல எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனமான டிவிஎஸ், தனது ஐக்யூப் மாடலில் புதிய 'மில்லியன்ஆர்' ஸ்பெஷல் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. 10 லட்சம் வாடிக்கையாளர்களைப் பெற்றதைக் கொண்டாடும் விதமாக இந்த சிறப்புப் பதிப்பை நிறுவனம் வெளியிட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் 10 லட்சம் வாடிக்கையாளர்கள் என்ற முக்கிய மைல்கல்லை கடந்துள்ளது. இதைக் கொண்டாடும் வகையில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ஐக்யூப் மில்லியன்ஆர் ஸ்பெஷல் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. இது ஐக்யூப் 3.5 கிலோவாட் ஹவர் வேரியன்டை அடிப்படையில் கொண்டது. வழக்கமான ஐக்யூப் மாடலைவிட தனித்துவமான தோற்றம் மற்றும் கூடுதல் அன்றாட பயன்பாட்டு வசதிகளை வழங்குவதே இந்த ஸ்பெஷல் எடிஷனின் முக்கிய நோக்கமாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மில்லியன்ஆர் எடிஷனில் வடக்கு விளக்குகளால் ஈர்க்கப்பட்ட அரோரா கிரீன் டூயல் டோன் நிறம் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் பிரீமியம் சீட் அப்ஹோல்ஸ்ட்ரி, பிரத்யேகர் மில்லியன் ஆர் பேட்ஜிங் மற்றும் புதிய கிராஃபிக்ஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதனால் வழக்கமான ஐக்யூப் மாடல்களில் இருந்து இந்த ஸ்பெஷல் எடிஷன் தனித்து தெரிகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த ஸ்கூட்டரில் 3.5 கிலோவாட் ஹவர் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 145 கி.மீ. ஐடிசி ரெஞ்ச் கிடைக்கும் என்று டிவிஎஸ் தெரிவித்துள்ளது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 82 கி.மீ. ஆகும். மேலும், பேட்டரியை 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய சுமார் 4 மணி 30 நிமிடங்கள் ஆகும் என நிறுவனத்தின் தொழில்நுட்ப தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;MG Hector Tomahawk: 7 பேர் பயணிக்கலாம், 500+ கி.மீ. ரேஞ்ச்.. மஹிந்திராவுக்கு போட்டியாக களமிறங்கும் எம்ஜியின் புதிய கார்&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;புதிய மில்லியன் ஆர் எடிஷனில் அன்றாட பயன்பாட்டை எளிதாக்கும் வகையில் முன்பக்க யூட்டிலிட்டி ஸ்டோரேஜ் கம்பார்ட்மென்ட் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த ஸ்டோரேஜ் திறன் 32 லிட்டர்களில் இருந்து 35.5 லிட்டர் அதிகரித்துள்ளது. மொபைல் உள்ளிட்ட சாதனங்களை சார்ஜ் செய்ய யூஎஸ்பி டைப்-சி போர்ட்டும் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் 118-க்கும் மேற்பட்ட கனெக்டட் தொழில்நுட்ப வசதிகளும் இருப்பதாக டிவிஎஸ் கூறுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஐக்யூப் மில்லியன்ஆர் ஸ்பெஷல் எடிஷனின் விலை கர்நாடகாவில் ரூ.1.40 லட்சம் எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நகரம் மற்றும் கிடைக்கும் சலுகைகளைப் பொறுத்து இறுதி விலை மாறலாம். ஸ்கூட்டரில் ஐபி67 நீர் மற்றும் தூசி பாதுகாப்பு, டிஸ்க் பிரேக், விபத்து மற்றும் கீழே விழும் எச்சரிக்கை, திருட்டு தடுப்பு எச்சரிக்கை உள்ளிட்ட பாதுகாப்பு மற்றும் பயன்பாட்டு வசதிகளும் இடம்பெற்றுள்ளன. மொத்தத்தில், 10 லட்சம் வாடிக்கையாளர்கள் என்ற முக்கிய சாதனையை கொண்டாடும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஐக்யூப் மில்லியன்ஆர் ஸ்பெஷல் எடிஷனில் 145 கி.மீ. ரேஞ்ச், 35.5 லிட்டர் ஸ்டோரேஜ், டைப்-சி சார்ஜிங் மற்றும் புதிய டூயல் டோன் நிறம் ஆகியவை முக்கிய சிறப்பம்சங்களாக உள்ளன.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[auto]]></category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/auto/tvs-iqube-millionr-edition-launched-145km-range-type-c-charger-and-new-features-fztaqh8"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Toxic Twitter Review: டாக்ஸிக் ட்விட்டர் விமர்சனம்: படம் எப்படி இருக்கு?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/yash-toxic-movie-twitter-review-in-tamil-o6dosg9</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/yash-toxic-movie-twitter-review-in-tamil-o6dosg9</guid>
            <pubDate>Wed, 26 Aug 2026 07:12:57 +0530</pubDate>
            <description><![CDATA[Toxic Twitter Review: யாஷ் ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த ‘டாக்ஸிக்’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.டாக்ஸிக் படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0jnktx5b2bjc8p26cjethkn,imgname-hgj-1787333045157.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Toxic Twitter Review: யாஷ் ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த &lsquo;டாக்ஸிக்&rsquo; திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.டாக்ஸிக் படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உலகமெங்கும் இன்று திரையரங்குகளில் யாஷ் நடித்துள்ள டாக்ஸிக் வெளியாகியுள்ள நிலையில், ட்விட்டர் விமர்சனங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, டாக்ஸிக் திரைப்படம் தொடங்கியதிலிருந்து யாஷின் திரைத் தோற்றம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது. முதல் பாதியில் முக்கிய கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்தப்படுகின்றன. யாஷின் மாஸ் எண்ட்ரி காட்சிகள் ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தின. குறிப்பாக அவரது ஸ்டைலான தோற்றம் மற்றும் திரை இருப்பு படத்தின் முக்கிய பலங்களில் ஒன்றாக இருப்பதாக சமூக வலைதளங்களில் கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;படத்தின் முதல் பாதியில் இடம்பெறும் அதிரடி காட்சிகள் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆக்&zwnj;ஷன் காட்சிகளுக்கு இணையாக வரும் பின்னணி இசையும் படத்தின் பிரம்மாண்டமான உணர்வை. வண்ணமயமான பாடல் காட்சிகளும் படத்தின் மற்றொரு கவனத்தை ஈர்க்கும் அம்சமாக உள்ளன. இதனால் மாஸ் ஆக்ஷன் திரைப்படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு திரையரங்கு அனுபவம் சுவாரஸ்யமாக இருக்கலாம். என்று கூறுகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;Theatre and OTT Releases : டாக்ஸிக் vs ஹாய்... இந்த வாரம் தியேட்டர் &amp;amp; ஓடிடியில் செம ட்ரீட் வெயிட்டிங்&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;டாக்ஸிக் திரைப்படத்தின் நீளம் மூன்று மணி நேரத்துக்கும் அதிகமாக இருப்பதால், குறிப்பாக முதல் பாதியில் கதை சற்று மெதுவாக நகர்வதாக சில ரசிகர்கள் கருதுகின்றனர். கதாபாத்திரங்களை விரிவாக அறிமுகப்படுத்துவதற்கும், பின்னணியை சொல்வதற்கும் நேரம் எடுத்துக்கொள்வதாக தெரிகிறது. இருப்பினும், ஆக்ஷன் காட்சிகள் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களின் அறிமுகம் காரணமாக படம் தொடர்ந்து பார்வையாளர்களின் கவனத்தை தக்கவைக்க முயற்சிக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;படத்தில் யாஷ் மிகவும் ஸ்டைலான தோற்றத்தில் காணப்படுகிறார். ஆக்&zwnj;ஷன் மட்டுமின்றி கிளாமர் அம்சங்களும் படத்தில் முக்கிய இடம் பிடித்துள்ளன. இந்த படத்தில் நடித்துள்ள ஐந்து நடிகைகள் ஒவ்வொரு கதாபாத்திரமும் கதையில் பங்களிப்பை வழங்குவதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக யாஷ் மற்றும் கியாரா இடையேயான கெமிஸ்ட்ரி திரையரங்கில் நன்றாக வேலை செய்திருப்பதாக ரசிகர்களின் விமர்சனங்களில் இருந்து தெரிய வருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இடைவேளைக்குப் பிறகு கதை புதிய வேகத்தை எடுப்பதாக படத்தைப் பார்த்த ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். கதையின் அடுத்தடுத்த திருப்பங்கள் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கின்றன. ஒட்டுமொத்தமாக, யாஷின் ஸ்டைலான நடிப்பு, மாஸ் எண்ட்ரி, ஆக்ஷன் காட்சிகள் மற்றும் கியாராவுடனான கெமிஸ்ட்ரி ஆகியவை டாக்ஸிக் படத்தின் படத்தின் பாசிட்டிவ் அம்சங்களாக உள்ளது என்று கூறுகின்றனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[cinema]]></category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/yash-toxic-movie-twitter-review-in-tamil-o6dosg9"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Today Horoscope: புதன்கிழமை ராசிபலன்: இந்த 4 ராசிக்கு பணம், வேலை, குடும்பத்தில் சாதகமான மாற்றங்கள் வருமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/horoscope-today-4-zodiac-signs-may-experience-positive-changes-on-august-26-ug5bozn</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/horoscope-today-4-zodiac-signs-may-experience-positive-changes-on-august-26-ug5bozn</guid>
            <pubDate>Wed, 26 Aug 2026 06:39:32 +0530</pubDate>
            <description><![CDATA[Today Horoscope: இன்றைய ராசி பலன்கள் (26.08.2026), புதன்கிழமைக்கான முழுமையான ஜோதிட கணிப்புகளை இங்கே காணலாம். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jcd6t62hdq487g7tdbvw1069,imgname-horoscope-today.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Today Horoscope: இன்றைய ராசி பலன்கள் (26.08.2026), புதன்கிழமைக்கான முழுமையான ஜோதிட கணிப்புகளை இங்கே காணலாம். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்று ஆகஸ்ட் 26, 2026, புதன்கிழமை. தினசரி ராசிபலனைப் பார்ப்பவர்கள், இன்று தங்கள் ராசிக்கு எப்படி பலன்கள் அமையப் போகின்றன என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உறவினர்களிடமிருந்து கடன் நெருக்கடி அதிகரிக்கும். ஆன்மீக சேவைகளில் நீங்கள் பங்கேற்பீர்கள். வருமானத்தை விட செலவுகள் அதிகமாக இருக்கும். வியாபாரத்தில் சின்னச் சின்னப் பிரச்னைகளைத் தவிர்க்க முடியாது. உத்தியோகத்தில் திடீர் மாற்றங்கள் உண்டாகும். சொத்து வாங்குவது, விற்பதில் தடைகள் ஏற்படலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வியாபாரத்தில் நல்ல லாபம் பார்ப்பீர்கள். நெருங்கியவர்களிடமிருந்து முக்கியத் தகவல் ஒன்று வந்து சேரும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த தடைகள் விலகும். நீங்கள் தொடங்கிய காரியங்கள் சுமுகமாக முடியும். வீட்டிலும் வெளியிலும் சாதகமான சூழல் நிலவும்.&lt;/p&gt;&lt;p&gt;Mahalakshmi Raj Yoga : செப்டம்பரில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்... அதிர்ஷ்டத்தின் உச்சிக்கே செல்லப்போகும் 5 ராசிகள்...!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குடும்ப விஷயங்களில் உங்கள் எண்ணங்கள் நிலையாக இருக்காது. சகோதரர்களுடன் சொத்துப் பிரச்னைகள் எரிச்சலை உண்டாக்கும். கடன் நெருக்கடிகள் அதிகரிக்கும். திடீர் பயணங்கள் செல்ல நேரிடலாம். வியாபாரம், உத்தியோகம் ஆகியவை சுமாராகவே இருக்கும். நீங்கள் எடுத்த காரியங்கள் மெதுவாக நடக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வேலைகளை சரியான நேரத்தில் முடிப்பீர்கள். உங்கள் யோசனைகளை எல்லோரும் விரும்புவார்கள். நிலம் வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். தொழில், வியாபாரம் உற்சாகமாக நடக்கும். வேலை தேடும் முயற்சிகள் சாதகமாக இருக்கும். பழைய நினைவுகள் மனதில் வந்து போகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;புதிய உற்சாகத்துடன் சில காரியங்களில் வெற்றி காண்பீர்கள். தெய்வீக சேவைகளில் பங்கேற்பீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் கூடிவரும். வேலை இல்லாதவர்களின் நீண்ட நாள் காத்திருப்புக்கு நல்ல பலன் கிடைக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பணப் பற்றாக்குறையால் புதிய கடன்களை வாங்குவீர்கள். வியாபாரம் சுமாராகவே நடக்கும். வீட்டிலும் வெளியிலும் சூழல் சாதகமாக இருக்காது. பயணங்கள் தள்ளிப்போகும். நீங்கள் எடுத்த காரியங்களில் உழைப்பு அதிகமாகத் தேவைப்படும். உறவினர்களுடன் காரணமில்லாமல் கருத்து வேறுபாடுகள் வரலாம்.&lt;/p&gt;&lt;p&gt;சந்திரகிரகணம் 2026 : விஷ்ணுவின் பரிபூரண அருளால் டக்டக்குன்னு டாப்புக்கு போகும் 4 ராசிகள்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பணப் பரிவர்த்தனைகள் சற்று ஏமாற்றத்தை அளிக்கும். நீங்கள் தொடங்கிய காரியங்களில் தடைகளைத் தவிர்க்க முடியாது. நீண்ட தூரப் பயணங்களில் வாகனப் பிரச்னைகள் வரலாம். வியாபாரம் மந்தமாகவே இருக்கும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். கோயில்களுக்குச் சென்று வருவீர்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வியாபாரம் லாபப் பாதையில் செல்லும். உறவினர்கள், நண்பர்களுடன் இணக்கமாகப் பழகுவீர்கள். வேலைகளில் சில எரிச்சல்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். நீண்டகால கடன் தொல்லைகள் நீங்கும். நீண்ட தூரப் பயணங்கள் தள்ளிப்போகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நெருங்கியவர்களிடமிருந்து முக்கியத் தகவல் ஒன்று கிடைக்கும். நீங்கள் தொடங்கிய காரியங்களைச் சுமுகமாக முடிப்பீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவதில் இருந்த தடைகள் விலகும். உத்தியோகத்தில் சாதகமான சூழல் நிலவும். சொத்து வாங்கும் முயற்சிகள் பலிக்கும். திடீர் பண வரவு உண்டாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தெய்வீக சேவைகளில் பங்கேற்பீர்கள். நீங்கள் தொடங்கிய காரியங்களில் தடைகள் ஏற்படலாம். புதிய கடன்களை வாங்குவீர்கள். வியாபாரம், உத்தியோகத்தில் புதிய பிரச்னைகளைத் தவிர்க்க முடியாது. நெருங்கியவர்களுடன் சில விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். பயணங்களில் எதிர்பாராத மாற்றங்கள் இருக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உத்தியோகத்தில் மாற்றங்கள் இருக்கும். நிதிநிலைமை சற்று ஏமாற்றத்தை அளிக்கும். சிறிய உடல்நலப் பிரச்னைகள் தொந்தரவு தரும். வியாபாரத்தில் புதிய சிக்கல்கள் உருவாகும். புதிய கடன்களை வாங்குவீர்கள். தூரத்து உறவினர்களிடமிருந்து முக்கியத் தகவல் ஒன்று வந்து சேரும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நிதிநிலைமை திருப்திகரமாக இருக்கும். சொத்து வாங்கும் முயற்சிகள் நல்ல பலனைத் தரும். வியாபாரத்தை மேலும் விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். முக்கிய காரியங்கள் வெற்றிகரமாக முடியும். நெருங்கியவர்களிடமிருந்து எதிர்பாராத அழைப்புகள் வரும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[astrology]]></category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/horoscope-today-4-zodiac-signs-may-experience-positive-changes-on-august-26-ug5bozn"/>
        </item>
        <item>
            <title><![CDATA[DMK-ADMK-BJP : திமுக-அதிமுக-பாஜக கூட்டணி அமையப்போவதைச் சொல்லும் 5 முக்கிய அரசியல் அறிகுறிகள்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/dmk-admk-bjp-alliance-5-key-political-indicators-videoshow-cz79kdo</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/dmk-admk-bjp-alliance-5-key-political-indicators-videoshow-cz79kdo</guid>
            <pubDate>Wed, 26 Aug 2026 03:02:45 +0530</pubDate>
            <description><![CDATA[]]></description>
            <media:content url="https://geo.dailymotion.com/player/x1tbu.html?video=xb0q7sa" medium="video" height="768" width="1024"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;DMK-ADMK-BJP : 2026 தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியலில் பல எதிர்பாராத மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. திமுக-அதிமுக இடையேயான புதிய நகர்வுகள் முதல் திமுக-பாஜக குறித்த பேச்சுகள் வரை, 5 முக்கிய அரசியல் அறிகுறிகள் கவனம் பெறுகின்றன.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[tamilnadu]]></category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/dmk-admk-bjp-alliance-5-key-political-indicators-videoshow-cz79kdo"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Aloe Vera: கற்றாழை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் 6 நன்மைகள்! தெரிஞ்சிக்கோங்க]]></title>
            <link>https://tamil.asianetnews.com/webstories/health-beauty/six-amazing-health-benefits-of-drinking-aloe-vera-juice-tygp8zi</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/webstories/health-beauty/six-amazing-health-benefits-of-drinking-aloe-vera-juice-tygp8zi</guid>
            <pubDate>Tue, 25 Aug 2026 22:13:34 +0530</pubDate>
            <description><![CDATA[கற்றாழை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் ஆறு அற்புதமான ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kf33ba20xn3f5brpwtgtzrjk,imgname-alovera-3-1768556963904.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <category><![CDATA[health-beauty]]></category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/webstories/health-beauty/six-amazing-health-benefits-of-drinking-aloe-vera-juice-tygp8zi"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Sugar Diet: சாப்பாட்டுல சர்க்கரைய குறைக்கணுமா? இதோ சில ஸ்மார்ட் டிப்ஸ்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/webstories/health/smart-ways-to-reduce-sugar-in-your-daily-diet-073od8x</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/webstories/health/smart-ways-to-reduce-sugar-in-your-daily-diet-073od8x</guid>
            <pubDate>Tue, 25 Aug 2026 22:09:10 +0530</pubDate>
            <description><![CDATA[உங்க டயட்ல இருந்து சர்க்கரையை முழுசா நீக்கி, உணவுப் பழக்கத்தை மாத்தணும்னு நினைக்கிறீங்களா? அப்போ இந்த விஷயங்களை கண்டிப்பா ஃபாலோ பண்ணுங்க.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0hbkv92pys4673jbmh3xfzp,imgname-sugar-1787289005325.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <category><![CDATA[health]]></category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/webstories/health/smart-ways-to-reduce-sugar-in-your-daily-diet-073od8x"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Period Diet: பீரியட்ஸ் வலியை குறைக்கணுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்க போதும்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/webstories/health/best-foods-for-period-pain-and-cramp-relief-hmrxzh9</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/webstories/health/best-foods-for-period-pain-and-cramp-relief-hmrxzh9</guid>
            <pubDate>Tue, 25 Aug 2026 22:01:49 +0530</pubDate>
            <description><![CDATA[பீரியட்ஸ் டைம்ல பல பெண்களுக்கு வயிற்று வலி, சோர்வு, வயிறு உப்பசம் போன்ற பிரச்சனைகள் வரும். இந்த சமயத்துல சில உணவுகளை சரியா எடுத்துக்கிட்டா, இந்த பிரச்சனைகளில் இருந்து எளிதாக விடுபடலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kjq4aq1w6433wtnkf7ry4fa9,imgname-fotojet---2026-03-02t164807.539-1772450307132.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <category><![CDATA[health]]></category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/webstories/health/best-foods-for-period-pain-and-cramp-relief-hmrxzh9"/>
        </item>
        <item>
            <title><![CDATA[இந்த பொருட்களை உடனே வெளியே தூக்கி எறியுங்கள்.. அதிர்ஷ்டம் தேடி வரும்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/webstories/astrology/remove-these-6-items-from-home-for-good-luck-according-to-vastu-shastra-4ig7sg7</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/webstories/astrology/remove-these-6-items-from-home-for-good-luck-according-to-vastu-shastra-4ig7sg7</guid>
            <pubDate>Tue, 25 Aug 2026 21:58:09 +0530</pubDate>
            <description><![CDATA[வாழ்க்கையில் அதிர்ஷ்டம் வர வேண்டும் என எல்லோரும் விரும்புவார்கள். ஆனால், வாஸ்து சாஸ்திரப்படி, சில பொருட்களை வீட்டில் இருந்து நீக்கினால் தான் அதிர்ஷ்டம் வரும். அப்படி வீட்டில் இருந்து வெளியேற்ற வேண்டிய பொருட்கள் என்னென்ன என்று இங்கே பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kdaf1vsrhptmm0sg00b6wn25,imgname-vastu-tips-for-good-luck-07-1766656634680.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <category><![CDATA[astrology]]></category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/webstories/astrology/remove-these-6-items-from-home-for-good-luck-according-to-vastu-shastra-4ig7sg7"/>
        </item>
        <item>
            <title><![CDATA[LPG சிலிண்டர் வாடிக்கையாளர்களே உஷார்! ஆகஸ்ட் 31-க்குள் இதை செய்யாவிட்டால் விலை எகிறலாம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/india/lpg-e-kyc-deadline-extended-complete-this-by-august-31-or-you-may-have-to-pay-more-for-your-cylinder-5b5n6nr</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/india/lpg-e-kyc-deadline-extended-complete-this-by-august-31-or-you-may-have-to-pay-more-for-your-cylinder-5b5n6nr</guid>
            <pubDate>Tue, 25 Aug 2026 21:55:27 +0530</pubDate>
            <description><![CDATA[LPG சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 31-க்குள் e-KYC செய்யாவிட்டால், சிலிண்டர் முன்பதிவு மற்றும் வீட்டு விலையில் பெறுவதில் சிக்கல் ஏற்படலாம்..]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kzdayvk2ezfzzz80hz5d8pe8,imgname-lpg--1786080357986.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;LPG சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 31-க்குள் e-KYC செய்யாவிட்டால், சிலிண்டர் முன்பதிவு மற்றும் வீட்டு விலையில் பெறுவதில் சிக்கல் ஏற்படலாம்..&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வீட்டு உபயோகத்திற்கான LPG எரிவாயு இணைப்பு வைத்திருப்பவர்கள் ஆதார் அடிப்படையிலான e-KYC சரிபார்ப்பை மேற்கொள்ள கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. e-KYC செய்வதற்கான கடைசி தேதி தற்போது ஆகஸ்ட் 31, 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி கேஸ் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் கால அவகாசம் கிடைத்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;வீட்டு உபயோக LPG சிலிண்டர் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இது நிம்மதி அளிக்கும் செய்தியாக உள்ளது. இதுவரை தங்களது LPG இணைப்புக்கான ஆதார் அடிப்படையிலான e-KYC-யை முடிக்காதவர்கள், தற்போது அதை முடிக்க கூடுதல் அவகாசம் பெற்றுள்ளனர்.&lt;/p&gt;&lt;p&gt;மத்திய அரசு e-KYC செய்வதற்கான கடைசி தேதியை 2026 ஆகஸ்ட் 31 வரை நீட்டித்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;இதன் மூலம் இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி கேஸ் ஆகிய நிறுவனங்களின் வீட்டு உபயோக LPG வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள். முன்னதாக e-KYC-க்கான கடைசி தேதி ஆகஸ்ட் 16 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் ஆகஸ்ட் 23 வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது மீண்டும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆகஸ்ட் 31-க்குள் e-KYC செய்யவில்லை என்பதற்காக உடனடியாக LPG இணைப்பு ரத்து செய்யப்படும் என்று அர்த்தமில்லை. ஆனால், வீட்டு உபயோக விலையில் கிடைக்கும் LPG சிலிண்டரைப் பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;e-KYC நிலுவையில் இருந்தால், சிலிண்டர் முன்பதிவு மற்றும் விநியோகத்தில் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். சில சந்தர்ப்பங்களில், சரிபார்ப்பு நிறைவடையும் வரை வீட்டு உபயோக LPG-க்கான விலைச் சலுகை கிடைக்காமல், அதிக விலை செலுத்த வேண்டிய சூழலும் ஏற்படலாம்.&lt;/p&gt;&lt;p&gt;எனவே, கடைசி நாள் வரை காத்திருக்காமல் LPG வாடிக்கையாளர்கள் e-KYC பணியை விரைவாக முடித்துக்கொள்வது நல்லது.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;எதற்காக அரசு e-KYC செய்கிறது?&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;LPG இணைப்புகள் உண்மையான வாடிக்கையாளர்களின் பெயரில் மட்டுமே இருப்பதை உறுதி செய்வதே e-KYC நடைமுறையின் முக்கிய நோக்கமாகும்.&lt;/p&gt;&lt;p&gt;மேலும், வீட்டு உபயோகத்திற்காக குறைந்த விலையில் வழங்கப்படும் LPG சிலிண்டர்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும் அரசு இந்த சரிபார்ப்பை மேற்கொள்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;வீட்டு உபயோக LPG சிலிண்டர்கள் சட்டவிரோதமாக வணிகப் பயன்பாட்டிற்கு மாற்றப்படுவதையோ அல்லது மறுவிற்பனை செய்யப்படுவதையோ தடுப்பதும் இதன் நோக்கமாகும். வீட்டு உபயோக மற்றும் வணிக LPG சிலிண்டர்களுக்கு இடையே விலையில் குறிப்பிடத்தக்க வித்தியாசம் இருப்பதால், இந்த சரிபார்ப்பு நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இண்டேன் LPG இணைப்பு வைத்திருப்பவர்கள் வீட்டில் இருந்தபடியே தங்களது செல்போன் மூலம் e-KYC-யை முடிக்கலாம். இதற்கு IndianOil ONE செயலி மற்றும் Aadhaar FaceRD செயலி தேவைப்படும்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;வீட்டில் இருந்தபடியே e-KYC செய்வது எப்படி?&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;h3&gt;&lt;strong&gt;1. IndianOil ONE செயலியை பதிவிறக்கம் செய்யவும்&lt;/strong&gt;&lt;/h3&gt;&lt;p&gt;இண்டேன் வாடிக்கையாளர்கள் IndianOil ONE மற்றும் Aadhaar FaceRD செயலிகளைப் பயன்படுத்தி வீட்டில் இருந்தபடியே e-KYC-யை முடிக்கலாம். இந்த நடைமுறையில் ஆதார் அடிப்படையிலான முக அடையாளச் சரிபார்ப்பு மேற்கொள்ளப்படும்.&lt;/p&gt;&lt;p&gt;முதலில், உங்கள் LPG இணைப்புடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி IndianOil ONE செயலியில் பதிவு செய்ய வேண்டும்.&lt;/p&gt;&lt;h3&gt;&lt;strong&gt;2. 16 இலக்க LPG ID-யை உள்ளிடவும்&lt;/strong&gt;&lt;/h3&gt;&lt;p&gt;LPG கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி IndianOil ONE செயலியில் பதிவு செய்த பிறகு, உங்கள் 16 இலக்க LPG ID-யை உள்ளிட வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;இந்த எண்ணை LPG பண ரசீது அல்லது இணைப்பு தொடர்பான ஆவணத்தில் காணலாம்.&lt;/p&gt;&lt;h3&gt;&lt;strong&gt;3. &lsquo;My Profile&rsquo; பகுதிக்குச் செல்லவும்&lt;/strong&gt;&lt;/h3&gt;&lt;p&gt;செயலியில் உங்கள் வாடிக்கையாளர் விவரங்கள் தோன்றியதும், &lsquo;My Profile&rsquo; பகுதிக்குச் சென்று அதில் உள்ள &lsquo;Re-KYC&rsquo; என்ற விருப்பத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதன்பிறகு, e-KYC தொடர்பான வழிமுறைகள் மற்றும் முக்கிய தகவல்களைப் படித்து, அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும்.&lt;/p&gt;&lt;h3&gt;&lt;strong&gt;5. முக அடையாளச் சரிபார்ப்பை முடிக்கவும்&lt;/strong&gt;&lt;/h3&gt;&lt;p&gt;பின்னர் &lsquo;Face Authentication&rsquo; என்ற விருப்பத்தைத் தேர்வு செய்ய வேண்டும். ஆதார் அடிப்படையிலான முக அடையாளச் சரிபார்ப்பை முடிக்க Aadhaar FaceRD செயலி மூலம் அடுத்தகட்ட செயல்முறையை மேற்கொள்ள வேண்டும்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாவிட்டால் என்ன செய்வது?&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;ஆன்லைன் மூலம் e-KYC செய்வதில் சிரமம் உள்ள வாடிக்கையாளர்கள், தங்களுக்கு அருகிலுள்ள LPG விநியோகஸ்தரை அணுகி e-KYC-யை முடித்துக்கொள்ளலாம்.&lt;/p&gt;&lt;p&gt;மேலும், அடுத்த முறை LPG சிலிண்டர் விநியோகிக்க வரும்போது, சிலிண்டர் விநியோக ஊழியரிடம் e-KYC செய்வதற்கு உதவி கோரலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பாரத் கேஸ், ஹெச்பி கேஸ் வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்த e-KYC காலக்கெடு இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி கேஸ் ஆகிய நிறுவனங்களின் வீட்டு உபயோக LPG வாடிக்கையாளர்களுக்கும் தொடர்புடையது.&lt;/p&gt;&lt;p&gt;எனவே, பாரத் கேஸ் அல்லது ஹெச்பி கேஸ் இணைப்பு வைத்திருப்பவர்களும் ஆகஸ்ட் 31 என்ற காலக்கெடுவை அலட்சியப்படுத்தக் கூடாது.&lt;/p&gt;&lt;p&gt;உங்களிடம் வீட்டு உபயோக LPG இணைப்பு இருந்து, e-KYC இன்னும் நிறைவடையாமல் இருந்தால், 2026 ஆகஸ்ட் 31-க்குள் e-KYC-யை முடித்துவிடுங்கள். இதன் மூலம் வீட்டு உபயோக விலையில் LPG சிலிண்டரைப் பெறுதல், முன்பதிவு செய்தல் அல்லது விநியோகத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்களைத் தவிர்க்க முடியும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[india]]></category>
            <dc:creator>Asianet News</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/india/lpg-e-kyc-deadline-extended-complete-this-by-august-31-or-you-may-have-to-pay-more-for-your-cylinder-5b5n6nr"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Jio Recharge Plan: வெறும் ரூ.200க்கு 30GB டேட்டா., 15 ஓடிடி தளங்கள்..! மிரட்டும் ஜியோவின் அசத்தல் பிளான்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/jio-rs-200-plan-get-30gb-data-15-ott-platforms-jiotv-movie-ticket-discounts-ptpzg9y</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/jio-rs-200-plan-get-30gb-data-15-ott-platforms-jiotv-movie-ticket-discounts-ptpzg9y</guid>
            <pubDate>Tue, 25 Aug 2026 21:19:17 +0530</pubDate>
            <description><![CDATA[Jio 200 Recharge: குறைந்த கட்டணத்தில் அதிக டேட்டா மற்றும் பொழுதுபோக்கு வசதிகளை எதிர்பார்ப்பவர்களுக்கு ஜியோவின் ₹200 திட்டம் கவனம் ஈர்க்கும் தேர்வாக உள்ளது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0ws814wmbqv1kaa5wyewgt3,imgname-reliance-jio-1787672396955.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Jio 200 Recharge: குறைந்த கட்டணத்தில் அதிக டேட்டா மற்றும் பொழுதுபோக்கு வசதிகளை எதிர்பார்ப்பவர்களுக்கு ஜியோவின் ₹200 திட்டம் கவனம் ஈர்க்கும் தேர்வாக உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குறைந்த கட்டணத்தில் அதிக டேட்டா மற்றும் பொழுதுபோக்கு வசதிகளை வழங்கும் திட்டத்தைத் தேடுபவர்களுக்கு, ஜியோவின் ₹200 திட்டம் சிறந்த தேர்வாக இருக்கலாம். இந்தத் திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 28 நாட்கள். இந்த காலகட்டத்தில் மொத்தம் 30GB அதிவேக டேட்டாவைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.&lt;/p&gt;&lt;p&gt;மேலும், பல்வேறு ஓடிடி தளங்களுக்கான அணுகல், ஜியோ டிவி, சினிபோலிஸ் திரைப்பட டிக்கெட்டுகளுக்கான தள்ளுபடி மற்றும் 5ஜி இணைப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளும் இந்தத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. இந்தத் திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்களைப் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;₹200 மதிப்பிலான இந்தத் திட்டத்தில் மொத்தம் 30GB டேட்டா வழங்கப்படுகிறது. செல்லுபடியாகும் 28 நாட்களுக்குள், பயனர்கள் தங்களது தேவைக்கேற்ப இந்த டேட்டாவைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.&lt;/p&gt;&lt;p&gt;ஆனால், 30GB அதிவேக டேட்டா முழுவதும் பயன்படுத்தப்பட்டுவிட்டால், இணைய வேகம் 64Kbps ஆகக் குறைக்கப்படும். மேலும், இந்தத் திட்டத்தில் தனியாக வரம்பற்ற குரல் அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகளுக்கான சலுகை எதுவும் வழங்கப்படவில்லை. எனவே, டேட்டா மற்றும் பொழுதுபோக்கு வசதிகளை மட்டுமே முக்கியமாக எதிர்பார்க்கும் பயனர்களுக்கு இந்தத் திட்டம் ஏற்றதாக இருக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய சிறப்பம்சம் ஓடிடி வசதிகள்தான். இதன் மூலம் யூடியூப் பிரீமியம், பிரைம் வீடியோ மொபைல் பதிப்பு, ஜியோஹாட்ஸ்டார், சோனி லிவ், ஜீ5, லயன்ஸ்கேட் பிளே, டிஸ்கவரி+, சன் நெக்ஸ்ட், கஞ்சா லங்கா, ஈடிவி வின், சௌபால், ஹொய்சோயி, ஃபேன்கோட், டைம்ஸ் பிளே மற்றும் தரங் பிளஸ் உள்ளிட்ட 15 ஓடிடி தளங்களை அணுக முடியும்.&lt;/p&gt;&lt;p&gt;இதுமட்டுமின்றி, ஜியோ டிவி மூலம் 1,000-க்கும் மேற்பட்ட நேரலை தொலைக்காட்சி சேனல்களையும் பார்க்கலாம். ஜியோஸ்டார், சோனி, சன் டிவி, வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி மற்றும் ஈடிவி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் சேனல்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இருப்பினும், விளையாட்டு சேனல்கள் இந்தச் சலுகையில் சேர்க்கப்படவில்லை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பொழுதுபோக்கு சலுகைகள் இதோடு முடிந்துவிடவில்லை. இந்தத் திட்டத்தின் மூலம் சினிபோலிஸ் திரைப்பட டிக்கெட்டுகளுக்கு அதிகபட்சமாக ₹150 வரை தள்ளுபடியைப் பெறலாம்.&lt;/p&gt;&lt;p&gt;இந்தச் சலுகையைப் பெற குறைந்தபட்சம் ₹550 மதிப்பில் இரண்டு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும். மேலும், உணவு மற்றும் குளிர்பானங்களுக்கும் 10 சதவீத தள்ளுபடி கிடைக்கும். இருப்பினும், செவ்வாய்க்கிழமைகளில் இந்தச் சலுகை செல்லுபடியாகாது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தத் திட்டத்தில் ட்ரூ 5ஜி வசதியும் இடம்பெற்றுள்ளது. ஆனால், இந்தத் திட்டத்தின் மூலம் வரம்பற்ற 5ஜி டேட்டாவைப் பெற சில நிபந்தனைகள் உள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;பயனரிடம் ஒரு நாளைக்கு 1GB அல்லது 1.5GB டேட்டா வழங்கும் அடிப்படைத் திட்டம் செயலில் இருக்க வேண்டும். அதோடு, 5ஜி வசதியுள்ள ஸ்மார்ட்போன் மற்றும் ஜியோ ட்ரூ 5ஜி சேவை கிடைக்கும் பகுதி ஆகியவையும் அவசியம். இந்த நிபந்தனைகள் அனைத்தும் இருந்தால் மட்டுமே இந்தத் திட்டத்தின் மூலம் வரம்பற்ற 5ஜி டேட்டாவைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[business]]></category>
            <dc:creator>Asianet News</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/jio-rs-200-plan-get-30gb-data-15-ott-platforms-jiotv-movie-ticket-discounts-ptpzg9y"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Gwalior : கிஸ்ஸால் வந்த வினை... காதலி கொடுத்த 3400 முத்தத்தால் காதலனுக்கு போலீஸ் கொடுத்த நூதன தண்டனை]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/india/gwalior-man-fined-5500-rupees-after-girlfriend-covers-car-in-3400-lipstick-kisses-6iadlh4</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/india/gwalior-man-fined-5500-rupees-after-girlfriend-covers-car-in-3400-lipstick-kisses-6iadlh4</guid>
            <pubDate>Tue, 25 Aug 2026 21:02:16 +0530</pubDate>
            <description><![CDATA[Gwalior viral car : குவாலியர்ல ஒருத்தரோட காதலி, கார் முழுக்க 3,400 லிப்ஸ்டிக் முத்தங்களை வச்சு டெக்கரேட் பண்ணியிருக்காங்க. இந்த வீடியோ வைரல் ஆனதும், போலீஸ் அந்த கார் ஓனருக்கு ஃபைன் போட்டிருக்காங்க.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0vcnbtg2w8yprzq3vedj9qc,imgname-gwalior-kissing-car-3400-kisses-viral-video-55-lakh-views-traffic-fine-1787625647952.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Gwalior viral car : குவாலியர்ல ஒருத்தரோட காதலி, கார் முழுக்க 3,400 லிப்ஸ்டிக் முத்தங்களை வச்சு டெக்கரேட் பண்ணியிருக்காங்க. இந்த வீடியோ வைரல் ஆனதும், போலீஸ் அந்த கார் ஓனருக்கு ஃபைன் போட்டிருக்காங்க.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;காதலை வித்தியாசமா வெளிப்படுத்தப் போய், கடைசியில போலீஸ்ல ஃபைன் கட்டுன நிலைமை ஒரு இளைஞருக்கு ஏற்பட்டிருக்கு. மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர்ல, ஒரு இளம்பெண் தன்னோட காதலனோட கார் மேல சுமார் 3,400 லிப்ஸ்டிக் முத்த அடையாளங்களை பதிச்சிருக்காங்க. காரோட இந்த வினோதமான அலங்கார போட்டோஸ் சோஷியல் மீடியாவுல வைரல் ஆனதும், அது டிராஃபிக் போலீஸ் கண்ணுல பட்டுடுச்சு. கடைசியில, கார் ஓனருக்கு ரூ.5,500 அபராதம் விதிச்சு, கார் மேல இருந்த எல்லா லிப்ஸ்டிக் கறைகளையும் நீக்க வச்சிருக்காங்க.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குவாலியரைச் சேர்ந்த ஆதித்யா சிகர்வார் என்பவரோட காருக்குதான் அவரோட காதலி இந்த மாதிரி ஒரு விசித்திரமான 'மேக்ஓவர்' செஞ்சிருக்காங்க. ஆன்லைன்ல டிரெண்டான, காருக்கு லிப்ஸ்டிக் முத்தம் கொடுக்கிற வீடியோக்களைப் பார்த்து இம்ப்ரெஸ் ஆகிதான் இதை செஞ்சதா சொல்றாங்க. கிடைச்ச ரிப்போர்ட் படி, அந்தப் பெண் சுமார் நாலு மணி நேரம் எடுத்துக்கிட்டு, கார் மேல ஒவ்வொரு முத்தமா பதிச்சிருக்காங்க. காரோட டோர், பானெட், டிக்கி, பில்லர்னு கண்ணுல பட்ட எல்லா இடத்துலயும் லிப்ஸ்டிக் கறைதான். மொத்தம் 3,400 முத்த அடையாளங்கள் கார் மேல இருந்திருக்கு.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;காரோட இந்த வினோதமான போட்டோ சோஷியல் மீடியாவுல வைரல் ஆனதும், அது போலீசாரோட கவனத்தை ஈர்த்தது. வைரல் போட்டோவுல இருந்த நம்பர் பிளேட்டை வச்சு, டிராஃபிக் போலீஸ் கார் ஓனரை கண்டுபிடிச்சாங்க. அதுக்கப்புறம், குவாலியரோட தாட்டிபுர் (Thatipur) பகுதியில அந்த காரை மடக்கிப் பிடிச்சாங்க. காரோட உண்மையான டிசைனையும், வெளித்தோற்றத்தையும் மாத்துற மாதிரி இப்படி ஸ்டிக்கர் ஒட்டுறது மோட்டார் வாகனச் சட்டத்துக்கும், சாலைப் பாதுகாப்பு விதிமுறைகளுக்கும் எதிரானதுன்னு போலீஸ் தரப்புல சொல்லியிருக்காங்க.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வைரலாகி எல்லாரோட கவனத்தையும் ஈர்த்த இந்த காருக்கு கடைசியில ரூ.5,500 அபராதம் விதிக்கப்பட்டது. ஆனா, கதை அதோட முடியல. கார் மேல இருந்த ஆயிரக்கணக்கான லிப்ஸ்டிக் முத்த அடையாளங்களை முழுசா நீக்கச் சொல்லி போலீஸ் உத்தரவு போட்டாங்க. போலீஸ் மேற்பார்வையிலேயே காரை தண்ணி ஊத்தி கழுவி, ஒவ்வொரு லிப்ஸ்டிக் கறையையும் சுத்தம் செஞ்சதா சொல்றாங்க. இப்படி, சோஷியல் மீடியாவுல வைரல் ஆகணும்னு செஞ்ச மேக்ஓவர், கடைசியில போலீஸ் செஞ்ச 'கார் வாஷ்'ல முடிஞ்சிருக்கு.&lt;/p&gt;&lt;p&gt;முதல்ல பார்க்க இது ஒரு ஜாலியான சோஷியல் மீடியா டிரெண்ட் மாதிரி தெரிஞ்சாலும், பொதுச் சாலையில ஒரு வாகனத்தோட உண்மையான தோற்றத்தை மாத்துற மாதிரி செய்யுற அலங்காரங்கள் சட்ட சிக்கல்களைக் கொண்டு வரலாம். இந்தச் சம்பவம், வைரல் டிரெண்டுகளைப் பின்பற்றுறதுக்கு முன்னாடி, அதனால வர்ற சட்டப் பிரச்சினைகளைப் பற்றியும் யோசிக்கணும்ங்கிற ஒரு விவாதத்தை ஏற்படுத்தியிருக்கு. காதலைக் காட்ட 3,400 முத்தம்... வைரல் ஆனதும் ரூ.5,500 ஃபைன்! குவாலியரோட இந்த விசித்திர சம்பவம் இப்போ சோஷியல் மீடியாவுல பெரிய பேச்சா இருக்கு.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[india]]></category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/india/gwalior-man-fined-5500-rupees-after-girlfriend-covers-car-in-3400-lipstick-kisses-6iadlh4"/>
        </item>
        <item>
            <title><![CDATA[கார்லிக் சிக்கன் ரைஸ்...ரெஸ்டாரன்ட் சுவையில் வீட்டிலேயே ஈஸியாக செய்வது எப்படி?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/spicy-and-tasty-garlic-chicken-rice-recipe-in-tamil-47l519w</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/spicy-and-tasty-garlic-chicken-rice-recipe-in-tamil-47l519w</guid>
            <pubDate>Tue, 25 Aug 2026 20:30:23 +0530</pubDate>
            <description><![CDATA[உணவகங்களின் பிரத்யேக சுவையில் கார்லிக் சிக்கன் ரைஸ் வீடே மணக்க செய்ய சில எளிய சமையல் ரகசியங்கள் இதோ! இனி ஹோட்டல் செல்லாமல் குறைந்த செலவில் வீட்டிலேயே சுவையாகவும் சுலபமாகவும் செய்து குடும்பத்தினரை அசத்துங்கள்!]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0wj15fr4arj3d0aa6xwan20,imgname-garlic-chicken-rice-1787664831992.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;உணவகங்களின் பிரத்யேக சுவையில் கார்லிக் சிக்கன் ரைஸ் வீடே மணக்க செய்ய சில எளிய சமையல் ரகசியங்கள் இதோ! இனி ஹோட்டல் செல்லாமல் குறைந்த செலவில் வீட்டிலேயே சுவையாகவும் சுலபமாகவும் செய்து குடும்பத்தினரை அசத்துங்கள்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பூண்டின் நறுமணமும், மிருதுவான சிக்கனின் சுவையும் இணைந்த &lsquo;கார்லிக் சிக்கன் ரைஸ்&rsquo; நாவிற்குச் சிறந்த விருந்தளிக்கும் ஒரு உணவாகும். உணவகங்களில் மட்டுமே சாத்தியம் என்று நினைக்கும் இந்த உணவை, எவ்வித செயற்கை சுவையூட்டிகளும் சேர்க்காமல் வீட்டிலேயே மிகக் குறைந்த நேரத்தில் சமைக்க முடியும். விடுமுறை நாட்களில் குடும்பத்தினரை அசத்தவும், வெளியில் சாப்பிட்டால் ஆரோக்கிய பிரச்சனைகள் வந்து விடுமோ என்ற பயமும் இல்லாமல், அதிக செலவும் செய்யாமல் வீட்டிலேயே திருப்தியாக சாப்பிட்டு மகிழலாம். ஓட்டலுக்கு சென்று சாப்பிட வேண்டும் என அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு இதை ஒருமுறை செய்து கொடுங்கள். இனி அடிக்கடி வீட்டில் செய்ய சொல்லி கேட்பார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பாஸ்மதி அரிசி - 2 கப்,&lt;/p&gt;&lt;p&gt;எலும்பில்லாத கோழி இறைச்சி (Boneless Chicken) - 250 கிராம்.&lt;/p&gt;&lt;p&gt;நறுமணப் பொருட்கள்:&lt;/p&gt;&lt;p&gt;பொடியாக நறுக்கிய பூண்டு - 3 டேபிள் ஸ்பூன்,&lt;/p&gt;&lt;p&gt;ஸ்ப்ரிங் ஆனியன் (வெங்காயத் தாள்) - 1/2 கப்.&lt;/p&gt;&lt;p&gt;தாளிக்க &amp;amp; சுவையூட்ட:&lt;/p&gt;&lt;p&gt;வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்,&lt;/p&gt;&lt;p&gt;நல்லெண்ணெய் - 1 டேபிள்&lt;/p&gt;&lt;p&gt;ஸ்பூன், சோயா சாஸ் - 1 தேக்கரண்டி, க&lt;/p&gt;&lt;p&gt;றுப்பு மிளகுத்தூள் - 1.5 தேக்கரண்டி,&lt;/p&gt;&lt;p&gt;உப்பு - தேவைக்கேற்ப.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பாஸ்மதி அரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து, 90% பதத்திற்கு வேக வைத்து வடித்துக் கொள்ள வேண்டும். சாதம் முற்றிலும் ஆற வேண்டும்; சூடான சாதத்தைப் பயன்படுத்தினால் கிளறும் போது உடைந்துவிடும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிறிய துண்டுகளாக நறுக்கிய சிக்கனுடன் சிறிதளவு இஞ்சி-பூண்டு விழுது, அரை தேக்கரண்டி மிளகுத்தூள், ஒரு தேக்கரண்டி சோயா சாஸ் மற்றும் தேவையான உப்பு சேர்த்து 15 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். இது இறைச்சிக்கு நற்சுவையையும் மிருதுவான தன்மையையும் தரும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் பொடியாக நறுக்கிய பூண்டைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும். அதே எண்ணெயில் ஊறவைத்த சிக்கனைச் சேர்த்து மிதமான தீயில் 8-10 நிமிடங்கள் வேகவைத்து தனியாக எடுக்கவும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதே வாணலியில் மீதமுள்ள வெண்ணெயை உருக்கி, வடித்த ஆறவைத்த சாதத்தைச் சேர்க்க வேண்டும். அதனுடன் வேகவைத்த சிக்கன், பொன்னிறமாக வறுத்த பூண்டு, மிளகுத்தூள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து மிதமான தீயில் சாதம் உடையாமல் மெதுவாகக் கிளற வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அனைத்துப் பொருட்களும் ஒன்றுடன் ஒன்று கலந்ததும், நறுக்கிய ஸ்ப்ரிங் ஆனியன் தூவி அடுப்பை அணைத்தால் கமகமக்கும் நறுமணத்துடன் கூடிய கார்லிக் சிக்கன் ரைஸ் தயார்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பூண்டின் பதம்: பூண்டை வதக்கும் போது தீயைக் குறைவாக வைக்க வேண்டும். பூண்டு லேசாகக் கருகினாலும் சாதத்தின் சுவை முழுமையாகக் கசப்பாகிவிடும்.&lt;/p&gt;&lt;p&gt;உதிரியான சாதம்: சாதம் ஒன்றோடொன்று ஒட்டாமல் உதிரியாக வர, அரிசி வேகும் போதே சில துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;புகை வாசனை (Smoky Flavor): உணவக பாணி சுவை பெற, சமைத்து முடித்த பின் நடுவில் ஒரு சிறிய கிண்ணத்தில் சுட்ட கரியை வைத்து, அதன் மேல் சில துளிகள் நெய் ஊற்றி 2 நிமிடங்கள் மூடி வைக்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[life-style]]></category>
            <dc:creator>Priya Velan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/spicy-and-tasty-garlic-chicken-rice-recipe-in-tamil-47l519w"/>
        </item>
        <item>
            <title><![CDATA[திருமணத் தடையை நீக்குவதாகக் கூறி இளம் பெண்ணை ஏமாற்றிய ஜோதிடர்..! கோவையில் பரபரப்பு]]></title>
            <link>https://tamil.asianetnews.com/crime/young-woman-files-sexual-complaint-against-astrologer-in-coimbatore-articleshow-6risg32</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/crime/young-woman-files-sexual-complaint-against-astrologer-in-coimbatore-articleshow-6risg32</guid>
            <pubDate>Tue, 25 Aug 2026 20:29:58 +0530</pubDate>
            <description><![CDATA[திருமணத் தடையை நீக்குவதாகக் கூறி இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஜோதிடர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0sjz90yzdj772s713qyjpf6,imgname-gujarat-crime-four-booked-in-banaskantha-after-pregnant-woman-alleges-repeated-rape-blackmail-forced-conversion-1787565155358.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;திருப்பூரைச் சேர்ந்த 30 வயது இளம்பெண் ஒருவர் கோவையைச் சேர்ந்த ஜோதிடர் ஒருவர் மீது பரபரப்பு புகார் கடிதம் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் தனது திருமணத்திற்காக தன் பெற்றோர் நீண்ட காலமாக மாப்பிள்ளை பார்த்து வந்ததாகவும், ஆனால் மாப்பிள்ளை அமையவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் தனக்கு திருமணம் விரைவில் நடைபெற வேண்டுமென்ற நோக்கத்தில் பல பரிகாரங்கள் செய்து வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;திருமணத்திற்கு சரயான வரன் அமையாததால் பெற்றோரின் கஷ்டத்தைப் பார்த்து மிகவும் மனஉளைச்சலுக்கு ஆானேன். இதனைத் தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நண்பர் ஒருவர் மூலமாக கோவை நரசிம்மநாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள ஜோதிடர் ஒருவரை சந்தித்தேன். அவர் சில பரிகாரங்களைச் செய்தால் விரைவில் உனக்கு திருமணம் நடக்குமென கூறினார்.&lt;/p&gt;&lt;p&gt;பரிகாரம் என்ற பெயரில் பலமுறை அவர் என்னை நேரில் சந்தித்தார். பின்னர் ஒருகட்டத்தில் அவரே என்னை திருமணம் செய்துகொ்வதாக ஆசை வார்த்தைக் கூறி கட்டாயப்படுத்தி பலமுறை உல்லாசமாக இருந்தார். அவர் என்னை திருமணம் செய்துகொள்வார் என நம்பினேன். மேலும் கடன் பிரச்சினை இருப்பதாகக் கூறி நான் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த பணத்தைக் கேட்டதால் அதனை கொடுத்தேன். ஒருமுறை தனது உறவினர் விபத்தில் சிக்கிவிட்டதாகக் கூற ரூ.1.50 லட்சம் பெற்றுக்கொண்ட நிலையில் அதன்பின் என்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டார்.&lt;/p&gt;&lt;p&gt;இதனால் அதிர்ச்சியடைந்த நான் ஜோதிடர் தொடர்பாக விசாரித்தபோது அவருக்கு முன்னதாகவே திருமணமாகிவிட்டதாக சொன்னார்கள். இது தொடர்பாக அவரிடம் முறையிட்ட போது அவர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். ஜோதிடர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;மேலும் எனக்கு தகந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். என்னை நம்பவைத்து ஏமாற்றிய ஜோதிடர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மனுவில் குறிப்பிட்டு்ளார். ஜோதிடர் மீது இளம்பெண் அளித்த பாலியல் புகார் கோவையில் பெரும் பரபரப்பை உருவாக்கி உள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[crime]]></category>
            <dc:creator>Asianet News</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/crime/young-woman-files-sexual-complaint-against-astrologer-in-coimbatore-articleshow-6risg32"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Vijayakanth : கேப்டனின் நன்றிக்கடன்... விஜயகாந்த் ஒரு ரூபா கூட சம்பளம் வாங்காமல் நடித்த படம் பற்றி தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/vijayakanth-acted-without-taking-a-salary-for-vijay-film-8obe5sl</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/vijayakanth-acted-without-taking-a-salary-for-vijay-film-8obe5sl</guid>
            <pubDate>Tue, 25 Aug 2026 20:00:19 +0530</pubDate>
            <description><![CDATA[Vijayakanth Acted Without Salary : கேப்டன் விஜயகாந்த், சம்பளமே வாங்காமல் நடிகர் விஜய்க்காக ஒரு படத்தில் நடித்திருந்தாராம். அது எந்த படம் என்பதை இங்கே பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j5waes243n0jdcgqw65nnpcm,imgname-filmcompanion-2023-12-b0a2685b-99ce-46bb-8efe-c9580e202f04-captain-vijaykanth-.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Vijayakanth Acted Without Salary : கேப்டன் விஜயகாந்த், சம்பளமே வாங்காமல் நடிகர் விஜய்க்காக ஒரு படத்தில் நடித்திருந்தாராம். அது எந்த படம் என்பதை இங்கே பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமல்லாமல், அரசியல்வாதியாகவும், மனிதநேயமிக்க மனிதராகவும் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் மறைந்த நடிகர் விஜயகாந்த். 1979ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமான அவர், மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் பயணித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தார். மதுரையைச் சேர்ந்த விஜயகாந்த், சினிமா மீதான ஆர்வத்துடன் சென்னைக்கு வந்தபோது பல்வேறு சவால்களை எதிர்கொண்டார். ஆரம்பத்தில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்தாலும், பின்னர் அழுத்தமான கதைகளைத் தேர்வு செய்து ஹீரோவாக உயர்ந்தார். குறிப்பாக &lsquo;சட்டம் ஒரு இருட்டறை&rsquo; போன்ற படங்கள் அவரது திரைப்பயணத்தில் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தன.&lt;/p&gt;&lt;p&gt;ரத்தம் வழிய வழிய நடித்த 'புரட்சி கலைஞர்'.. படப்பிடிப்பு தளத்தில் உறைந்து போன யூனிட்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆக்ஷன் கதைகளில் மட்டுமே கவனம் செலுத்தாமல், குடும்ப உறவுகள் மற்றும் சென்டிமென்ட் கதைகளிலும் நடித்த விஜயகாந்த், அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் வரவேற்பைப் பெற்றார். அவரது படங்களில் சமூக அக்கறை, நேர்மை, துணிச்சல் போன்ற அம்சங்களும் தொடர்ந்து இடம்பெற்றன. சினிமாவில் கிடைத்த புகழை அரசியலிலும் பயன்படுத்திய விஜயகாந்த், தேமுதிக கட்சியைத் தொடங்கி தமிழக அரசியலில் தனக்கென ஒரு பாதையை உருவாக்கினார். தனது கருத்துகளை வெளிப்படையாகவும் தயக்கமின்றியும் பேசும் குணம் கொண்டிருந்த அவர், அரசியலிலும் தனது தனித்துவமான அணுகுமுறையால் கவனம் பெற்றார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தன்னுடைய அலுவலகத்துக்கு வரும் அனைவருக்கும் தலைவாழை இலை போட்டு உணவு பரிமாறி ஏழைகளின் பசியாற்றினார் விஜயகாந்த். மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் போலவே இவரும் ஏழை எளிய மக்களுக்கு நிறைய உதவிகள் செய்துள்ளதால் அவருக்கு &lsquo;கருப்பு எம்ஜிஆர்&rsquo; என்ற அடைமொழியும் கிடைத்தது. ரசிகர்கள் அவரை &lsquo;புரட்சிக் கலைஞர்&rsquo;, &lsquo;கேப்டன்&rsquo; உள்ளிட்ட பெயர்களால் அன்புடன் அழைத்தனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விஜயகாந்தின் திரைப்பயணத்தில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகருடன் இருந்த நட்பும் யாராலும் மறக்க முடியாதது. எஸ்.ஏ.சி இயக்கிய திரைப்படங்கள் மூலம் விஜயகாந்த் பல வெற்றிகளைப் பெற்றிருந்தார். 1993ஆம் ஆண்டு, தனது மகன் விஜய்யை ஹீரோவாக வைத்து &lsquo;செந்தூரப்பாண்டி&rsquo; திரைப்படத்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கினார். விஜய்யின் சினிமா வளர்ச்சிக்கு இந்தப் படம் முக்கியமானதாக அமைந்தது. அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த விஜயகாந்த், தனது வெற்றிப் பயணத்தில் பங்காற்றிய இயக்குநரின் மகனான விஜய்க்கு ஆதரவாக நின்றார்.&lt;/p&gt;&lt;p&gt;குறிப்பாக, அந்தப் படத்தில் விஜயகாந்த் சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்ததாக எஸ்.ஏ.சந்திரசேகர் பின்னர் பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார். இது விஜயகாந்தின் பெருந்தன்மையை வெளிப்படுத்தும் முக்கியமான சம்பவமாக பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;திரையில் ஹீரோவாகவும், அரசியலில் தலைவராகவும், வாழ்க்கையில் மனிதநேயமிக்க மனிதராகவும் விஜயகாந்த் விட்டுச் சென்ற தடம், அவரது மறைவுக்குப் பிறகும் ரசிகர்களின் நினைவுகளில் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[cinema]]></category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/vijayakanth-acted-without-taking-a-salary-for-vijay-film-8obe5sl"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஓணம் ஸ்பெஷல்: கேரளா ஸ்டைல் பைனாப்பிள் பச்சடி செய்வது எப்படி?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/onam-sadya-special-recipe-how-to-make-traditional-tasty-pineapple-pachadi-5k8nrru</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/onam-sadya-special-recipe-how-to-make-traditional-tasty-pineapple-pachadi-5k8nrru</guid>
            <pubDate>Tue, 25 Aug 2026 19:45:24 +0530</pubDate>
            <description><![CDATA[ஓணம் பண்டிகையின் சிறப்பான 64 வகை சத்யா விருந்தில் இடம்பெறும் சுவையான பைனாப்பிள் பச்சடி! இனிப்பும் புளிப்பும் நிறைந்த இந்த பாரம்பரிய கேரள உணவை வீடே மணக்க எளிதாக செய்வது எப்படி என்று இதில் விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0wgq8krg3vj2kgfefc8805v,imgname-onam-sadya--1--1787663458936.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஓணம் பண்டிகையின் சிறப்பான 64 வகை சத்யா விருந்தில் இடம்பெறும் சுவையான பைனாப்பிள் பச்சடி! இனிப்பும் புளிப்பும் நிறைந்த இந்த பாரம்பரிய கேரள உணவை வீடே மணக்க எளிதாக செய்வது எப்படி என்று இதில் விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கேரளாவின் பாரம்பரியக் பண்டிகையான &lsquo;ஓணம்&rsquo; பண்டிகைக் காலத்தில் பரிமாறப்படும் &lsquo;ஓணம் சத்யா&rsquo; (Onam Sadya) விருந்தில் பைனாப்பிள் பச்சடிக்கு எப்போதும் தனி இடமுண்டு. அன்னாசிப் பழத்தின் இயற்கையான இனிப்பும் புளிப்பும், தேங்காயின் நறுமணமும், தயிரின் குளிர்ச்சியும் ஒன்று சேரும் போது இதன் சுவை நாவிற்குத் தெவிட்டாத விருந்தளிக்கும். பண்டிகை நாட்கள் மட்டுமின்றி, வீட்டில் விசேஷ நிகழ்வுகளுக்கும் எளிய முறையில் இந்த பாரம்பரியப் பச்சடியைத் தயாரிக்க உதவும் விரிவான செய்முறை இதோ...&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நன்கு பழுத்த அன்னாசிப் பழத் துண்டுகள் - 1.5 கப்,&lt;/p&gt;&lt;p&gt;கெட்டித் தயிர் (அதிகப் புளிப்பில்லாதது) - 1 கப்,&lt;/p&gt;&lt;p&gt;பொடித்த வெல்லம் - 1.5 டேபிள் ஸ்பூன்.&lt;/p&gt;&lt;p&gt;அரைக்க வேண்டியவை:&lt;/p&gt;&lt;p&gt;துருவிய தேங்காய் - 1/2 கப்,&lt;/p&gt;&lt;p&gt;கடுகு - 1/2 தேக்கரண்டி,&lt;/p&gt;&lt;p&gt;பச்சை மிளகாய் - 2,&lt;/p&gt;&lt;p&gt;சீரகம் - 1/4 தேக்கரண்டி.&lt;/p&gt;&lt;p&gt;வேகவைக்க மற்றும் தாளிக்க:&lt;/p&gt;&lt;p&gt;மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி,&lt;/p&gt;&lt;p&gt;காஷ்மீரி மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி,&lt;/p&gt;&lt;p&gt;கடுகு - 1/2 தேக்கரண்டி,&lt;/p&gt;&lt;p&gt;காய்ந்த மிளகாய் - 2,&lt;/p&gt;&lt;p&gt;கறிவேப்பிலை - ஒரு கொத்து,&lt;/p&gt;&lt;p&gt;தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்,&lt;/p&gt;&lt;p&gt;உப்பு - தேவைக்கேற்ப.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நறுக்கிய அன்னாசித் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு, அதில் அரை டம்ளர் தண்ணீர், மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள், நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் தேவையான உப்பு சேர்த்து மிதமான தீயில் வேக வைக்கவும். பழம் நன்கு மென்மையாகி, தண்ணீர் சுண்டும் வரை 8-10 நிமிடங்கள் வேகவிட வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;துருவிய தேங்காயுடன் சீரகம் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து முதலில் மிக்ஸியில் நைஸாக அரைக்க வேண்டும். இறுதியாக அதில் அரை தேக்கரண்டி கடுகைச் சேர்த்து லேசாக ஒரு சுற்று சுற்றி (Crushed Pattern) தனியாக வைக்க வேண்டும். கடுகை அதிக நேரம் அரைத்தால் கசப்புத் தன்மை வந்துவிடும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வெந்த அன்னாசிப் பழத்துடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பச்சை வாசனை போகும் வரை 3-4 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும். கலவை கெட்டியானதும் பொடித்த வெல்லத்தைச் சேர்த்து, வெல்லம் கரைந்தவுடன் அடுப்பை அணைத்து விட வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சமைத்த கலவை முற்றிலும் சூடு ஆற வேண்டும். சூடான கலவையில் தயிரைச் சேர்த்தால் தயிர் திரிந்துவிடும். கலவை அறை வெப்பநிலைக்கு (Room temperature) வந்தவுடன், நன்கு கடைந்த கெட்டித் தயிரைச் சேர்த்து மெதுவாகக் கிளறி விட வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தாளிப்பு கரண்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, பச்சடியில் கொட்டிக் கலக்கினால் கமகமக்கும் கேரளா ஸ்டைல் பைனாப்பிள் பச்சடி தயார்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பழத் தேர்வு: மிக அதிகப் புளிப்பு இல்லாத, இனிப்புச் சுவை கொண்ட அன்னாசிப் பழத்தைத் தேர்ந்தெடுப்பது பச்சடியின் சுவையை மேலும் கூட்டும்.&lt;/p&gt;&lt;p&gt;திராட்சை சேர்க்கை: விருப்பப்பட்டால், அன்னாசிப் பழத்துடன் சிறிதளவு கருப்பு உலர் திராட்சையையும் (Raisins) சேர்த்து வேகவைத்துச் சமைக்கலாம். இது பச்சடிக்கு கூடுதல் சுவையையும் நறுமணத்தையும் தரும்.&lt;/p&gt;&lt;p&gt;எண்ணெய் தேர்வு: தாளிப்பதற்கு கண்டிப்பாக சுத்தமான தேங்காய் எண்ணெயையே பயன்படுத்த வேண்டும். அதுவே கேரளா சத்யாவின் அசல் மணத்தைக் கொடுக்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[life-style]]></category>
            <dc:creator>Priya Velan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/onam-sadya-special-recipe-how-to-make-traditional-tasty-pineapple-pachadi-5k8nrru"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Budget SUV: வெறும் ரூ.6 லட்சத்துக்குள் SUV கார்..! 6 Airbags - உடன் கலக்கும் Nissan Magnite!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/auto/nissan-magnite-indias-budget-suv-at-rs-5-68-lakh-with-6-airbags-205mm-ground-clearance-cng-option-rga5og7</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/auto/nissan-magnite-indias-budget-suv-at-rs-5-68-lakh-with-6-airbags-205mm-ground-clearance-cng-option-rga5og7</guid>
            <pubDate>Tue, 25 Aug 2026 19:14:07 +0530</pubDate>
            <description><![CDATA[SUV கார் வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தும், பட்ஜெட் தடையாக இருக்கிறதா? ₹5.68 லட்சத்தில் தொடங்கும் Nissan Magnite, குறைந்த விலையில் SUV அனுபவத்தை தேடுபவர்களுக்கு கவனம் ஈர்க்கும் தேர்வாக உள்ளது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kg7gz19p2yq299z7a6trt4g3,imgname-4-1769779201334.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;SUV கார் வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தும், பட்ஜெட் தடையாக இருக்கிறதா? ₹5.68 லட்சத்தில் தொடங்கும் Nissan Magnite, குறைந்த விலையில் SUV அனுபவத்தை தேடுபவர்களுக்கு கவனம் ஈர்க்கும் தேர்வாக உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&ldquo;இந்தியாவின் குறைந்த விலை சன்ரூஃப் எஸ்யூவி&hellip; 27 கி.மீ மைலேஜ்&hellip; ரூ.5.5 லட்சத்தில் தொடக்கம்!&rdquo; என்ற தகவல் சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. ஆனால் இதில் சில தகவல்கள் பழைய விலை அல்லது வேறு வகை எரிபொருள் பதிப்புகளுடன் கலந்து கூறப்படுகின்றன. தற்போதைய அதிகாரப்பூர்வ தகவல்படி, Nissan நிறுவனத்தின் மக்னைட் எஸ்யூவியின் ஆரம்ப விலை ரூ.5.68 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்).&lt;/p&gt;&lt;p&gt;புதிய நிசான் மக்னைட்டின் ஆரம்ப நிலை விசியா மாடல் ரூ.5.68 லட்சத்தில் தொடங்குகிறது. அடுத்தடுத்த வகைகளின் விலை ரூ.6.22 லட்சம், ரூ.6.83 லட்சம், ரூ.7.46 லட்சம் என செல்கிறது. உயர்நிலை டெக்னா+ வகை ரூ.8.72 லட்சம் வரை செல்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;இதனால், குறைந்த பட்ஜெட்டில் எஸ்யூவி வாங்க நினைப்பவர்களுக்கு மக்னைட் முக்கியமான தேர்வாக இருக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இங்கே ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டும். தற்போதைய அதிகாரப்பூர்வ மக்னைட் அம்சப் பட்டியலில் சன்ரூஃப் குறிப்பிடப்படவில்லை. எனவே &ldquo;ரூ.5.5 லட்சத்தில் சன்ரூஃப் கொண்ட மக்னைட்&rdquo; என்று பொதுவாகக் கூறுவது சரியான தகவல் அல்ல.&lt;/p&gt;&lt;p&gt;அதற்குப் பதிலாக, உயர்நிலை வகைகளில் 360 டிகிரி சுற்றுப்புறக் காட்சி கேமரா, முழு இலக்கக் கருவிப் பலகை, தொடுதிரை, தானியங்கி குளிர்சாதன வசதி, கம்பியில்லா இணைப்பு போன்ற பல பிரீமியம் அம்சங்கள் கிடைக்கின்றன.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;27 கி.மீ மைலேஜ் உண்மையா?&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;27 கி.மீ/லிட்டர் என்ற எண்ணை பெட்ரோல் மக்னைட்டின் பொதுவான மைலேஜாக எடுத்துக்கொள்ளக் கூடாது. மக்னைட்டில் 1.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என பல இயந்திரத் தேர்வுகள் உள்ளன. மேலும், தற்போது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் பொருத்தக்கூடிய சி.என்.ஜி தொகுப்பும் கிடைக்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;சி.என்.ஜி பதிப்பு அதிக எரிபொருள் சிக்கனத்தை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு சுவாரஸ்யமான தேர்வாக இருக்கிறது. இந்த சி.என்.ஜி தொகுப்பு 1.0 லிட்டர் இயற்கை எரிவாயு அல்லாத பெட்ரோல் எஞ்சின் கொண்ட மேனுவல் வகைக்கு பொருத்தப்படுகிறது; இதன் விலை தற்போது ரூ.85,999 என நிசான் குறிப்பிடுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மக்னைட்டின் மிகப்பெரிய பலம் அதன் விலை மற்றும் அம்சங்களின் சேர்க்கை.&lt;/p&gt;&lt;p&gt;உயர்நிலை வகைகளில்:&lt;/p&gt;&lt;p&gt;&bull; 22.86 செ.மீ தொடுதிரை&lt;/p&gt;&lt;p&gt;&bull; கம்பியில்லா ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே&lt;/p&gt;&lt;p&gt;&bull; முழு இலக்கக் கருவிப் பலகை&lt;/p&gt;&lt;p&gt;&bull; அழுத்திப் பொத்தான் மூலம் இயக்கம்&lt;/p&gt;&lt;p&gt;&bull; தானியங்கி குளிர்சாதனக் கட்டுப்பாடு&lt;/p&gt;&lt;p&gt;&bull; 360 டிகிரி சுற்றுப்புறக் காட்சி கண்காணிப்பு&lt;/p&gt;&lt;p&gt;&bull; கம்பியில்லா மின்னேற்ற வசதி&lt;/p&gt;&lt;p&gt;&bull; உயர்தர ஒலி அமைப்பு&lt;/p&gt;&lt;p&gt;&bull; பல வண்ண சுற்றுப்புற விளக்குகள்&lt;/p&gt;&lt;p&gt;போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;பாதுகாப்பிலும் கவனம்&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;மக்னைட்டின் மற்றொரு முக்கியமான பலம் பாதுகாப்பு. அனைத்து வகைகளிலும் 6 காற்றுப் பைகள் தரமாக வழங்கப்படுகின்றன. மேலும், மின்னணு நிலைத்தன்மைக் கட்டுப்பாடு, இழுவைக் கட்டுப்பாடு உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;நிசான் வெளியிட்ட தகவலின்படி, புதிய மக்னைட் குளோபல் என்கேப் பாதுகாப்புச் சோதனையில் 5 நட்சத்திர ஒட்டுமொத்த பயணிகள் பாதுகாப்பு மதிப்பீட்டை பெற்றுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மக்னைட்டின் வடிவமைப்பும் இதன் விற்பனை பலங்களில் ஒன்று. உயரமான தோற்றம், பெரிய முன்பக்க வடிவமைப்பு, கூரைத் தாங்கிகள் மற்றும் 16 அங்குல வைர வடிவ அலாய் சக்கரங்கள் ஆகியவை இதற்கு பெரிய எஸ்யூவி போன்ற தோற்றத்தை வழங்குகின்றன. இதன் தரை உயரம் 205 மி.மீ. ஆகும்.&lt;/p&gt;&lt;p&gt;மேலும், 5 பேர் அமரக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளதுடன், பின்புற இருக்கைகளை மடக்கும்போது பொருட்களை வைக்கும் இடத்தையும் அதிகரிக்க முடியும்.&lt;/p&gt;&lt;p&gt;விலை மட்டுமல்ல&hellip; உத்தரவாதமும் கவனம் பெறுகிறது&lt;/p&gt;&lt;p&gt;மக்னைட்டுக்கு தற்போது 10 ஆண்டுகள் அல்லது 2 லட்சம் கி.மீ. வரை உத்தரவாதம், மேலும் 3 ஆண்டுகள் சாலை உதவி வழங்கப்படுவதாக நிசான் தெரிவிக்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;முடிவாக&hellip;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;ரூ.5.5 லட்சத்தில் சன்ரூஃப் + 27 கி.மீ மைலேஜ் என்ற கூற்று தற்போதைய மக்னைட்டின் அதிகாரப்பூர்வ தகவலுடன் முழுமையாகப் பொருந்தவில்லை. ஆனால் ரூ.5.68 லட்சம் ஆரம்ப விலை, 6 காற்றுப் பைகள், பல பிரீமியம் வசதிகள், 205 மி.மீ தரை உயரம், டர்போ மற்றும் தானியங்கி இயக்கத் தேர்வுகள், சி.என்.ஜி வாய்ப்பு எனப் பார்த்தால், குறைந்த பட்ஜெட்டில் எஸ்யூவி தேடும் வாடிக்கையாளர்களுக்கு மக்னைட் இன்னும் கவனிக்க வேண்டிய காராகவே உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;தற்போதைய அதிகாரப்பூர்வ விலை: ரூ.5.68 லட்சம் முதல் (எக்ஸ்-ஷோரூம்).&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[auto]]></category>
            <dc:creator>Asianet News</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/auto/nissan-magnite-indias-budget-suv-at-rs-5-68-lakh-with-6-airbags-205mm-ground-clearance-cng-option-rga5og7"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Dairy Farming: நல்லா பால் கறக்குற எருமையை வாங்குவது எப்படி? இந்த 5 டிப்ஸ் போதும் பாஸ்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/dairy-farming-5-tips-to-choose-a-healthy-and-high-milk-yield-buffalo-nred2pe</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/dairy-farming-5-tips-to-choose-a-healthy-and-high-milk-yield-buffalo-nred2pe</guid>
            <pubDate>Tue, 25 Aug 2026 19:11:46 +0530</pubDate>
            <description><![CDATA[Dairy Farming: பால் பண்ணைக்கு எருமை வாங்கும்போது ஆரோக்கியம், மடி, கால்கள், வயது மற்றும் பால் உற்பத்தி பதிவுகளை எப்படி சரிபார்ப்பது? 5 முக்கிய டிப்ஸ் இதோ.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxw60kssgnssq4q9gp002gqv,imgname-indian-buffalo-sperm-to-nepal--6--1784431005497.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Dairy Farming: பால் பண்ணைக்கு எருமை வாங்கும்போது ஆரோக்கியம், மடி, கால்கள், வயது மற்றும் பால் உற்பத்தி பதிவுகளை எப்படி சரிபார்ப்பது? 5 முக்கிய டிப்ஸ் இதோ.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முதலில் எருமையின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பாருங்கள். ஒரு நல்ல பால் பண்ணை எருமை சுறுசுறுப்பாகவும் இயல்பாகவும் நடமாட வேண்டும். கண்கள் தெளிவாக இருக்கிறதா, மூக்கு மற்றும் தோலில் அசாதாரணமானதா, உணவு உட்கொள்ளும் விதம் இயல்பாக இருக்கிறதா போன்ற அறிகுறிகளை கவனிக்கலாம். ஆனால் மூக்கில் வியர்வை இருப்பது மட்டும் ஆரோக்கியமான அல்லது அதிக பால் தரும் எருமைக்கான உறுதியான அடையாளம் என்று கூற முடியாது. எருமையின் ஒட்டுமொத்த உடல்நிலையை கால்நடை மருத்துவரிடம் பரிசோதிப்பது மிகவும் பாதுகாப்பானது. அடுத்து மடியை கவனமாகச் சரிபார்க்க வேண்டும். பால் பண்ணைக்கு எருமையை வாங்கும்போது மடியின் அமைப்பு மிகவும் முக்கியமானது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மடியில் வீக்கம், காயம், கடினமான பகுதி அல்லது அசாதாரண மாற்றங்கள் உள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும். நான்கு காம்புகளும் இயல்பாக அமைந்துள்ளதா, பால் கறப்பதற்கு ஏற்ற நிலையில் உள்ளதா என்பதையும் கவனிக்கலாம். மடியின் ஆரோக்கியத்தை சரிபார்க்க கால்நடை மருத்துவரின் உதவி பெறுவது சிறந்தது. குறிப்பாக மாஸ்டைட்டிஸ் போன்ற மடி நோய்கள் உள்ளதா என்பதையும் பரிசோதிப்பது முக்கியம். எருமையின் கால்களையும் குளம்புகளையும் மறக்காமல் பாருங்கள். பால் பண்ணையில் வளர்க்கப்படும் கால்நடை நீண்ட காலம் நன்றாக நடமாட வேண்டியது அவசியம். குளம்புகளில் விரிசல், வீக்கம், காயம் அல்லது தொற்று இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எருமையை சிறிது தூரம் நடக்க வைத்து, அது இயல்பாக நடக்கிறதா, கால்களை இழுத்துச் செல்கிறதா அல்லது நொந்துகிறதா என்பதை கவனிக்கலாம். கால்களில் பிரச்சினை இருந்தால் உணவு உட்கொள்ளுதல், நடமாட்டம் மற்றும் ஒட்டுமொத்த உற்பத்தித் திறனிலும் பாதிப்பு. வயதையும் சரியாக தெரிந்துகொள்ளுங்கள். எருமையின் பற்களைப் பார்த்து வயதை தோராயமாக கணிக்கலாம். ஆனால் பற்களின் எண்ணிக்கையை மட்டும் வைத்து சரியான வயதை உறுதி செய்வது எப்போதும் சாத்தியமில்லை. எனவே விற்பனையாளரிடம் கால்நடை பிறப்பு அல்லது முந்தைய பராமரிப்பு பதிவுகள் இருந்தால் அவற்றைக் கேட்பது நல்லது. குறிப்பாக ஏற்கனவே கன்று ஈன்ற எருமையாக இருந்தால், இதற்கு முன்பு எத்தனை முறை கன்று ஈன்றுள்ளது, தற்போதைய பாலூட்டும் காலம் எத்தனை நாட்கள் ஆகிய விவரங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கடைசியாக, பால் உற்பத்தி பதிவுதான் மிகவும் முக்கியம். எருமையின் தோல் மென்மையாக இருப்பது அல்லது குறிப்பிட்ட உடல் அமைப்பு போன்ற வெளிப்புற அறிகுறிகளை மட்டும் வைத்து அதிக பால் தரும் கால்நடையை தேர்வு செய்வது சரியான அணுகுமுறை அல்ல. கடந்த கால பால் உற்பத்தி, தற்போதைய பால் அளவு, கன்று ஈன்ற வரலாறு, தீவன பழக்கம் மற்றும் இனப்பெருக்க விவரங்கள் போன்ற பதிவுகளை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். வாங்குவதற்கு முன் கால்நடை மருத்துவரிடம் முழுமையான உடல்நலப் பரிசோதனை செய்து, பால் பண்ணை அனுபவம் உள்ள நபரின் ஆலோசனையையும் பெறுவது நல்லது. இப்படி ஆரோக்கியம், மடி, கால்கள், வயது மற்றும் பால் உற்பத்தி வரலாறு ஆகியவற்றை ஒருங்கிணைத்து பார்த்தால்தான் பால் பண்ணைக்கு பொருத்தமான எருமையை தேர்வு செய்ய முடியும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[business]]></category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/dairy-farming-5-tips-to-choose-a-healthy-and-high-milk-yield-buffalo-nred2pe"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Budget Phones: வெறும் 1000 ரூபாய்க்கு சூப்பர் போன்கள்! UPI வசதியுடன் கூடிய டாப் 5 மாடல்கள் இதோ]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/technology/technology-mobile/cheap-and-best-mobile-phones-under-1000-with-upi-and-long-battery-life-vllf36a</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/technology/technology-mobile/cheap-and-best-mobile-phones-under-1000-with-upi-and-long-battery-life-vllf36a</guid>
            <pubDate>Tue, 25 Aug 2026 19:07:24 +0530</pubDate>
            <description><![CDATA[Cheap and Best Phones : வெறும் ரூ.1000 பட்ஜெட்டில் நல்ல பேட்டரி, FM ரேடியோ, UPI வசதியுடன் ஒரு கீபேட் போன் தேடுகிறீர்களா? மார்க்கெட்டில் கிடைக்கும் டாப் 5 ஃபீச்சர் போன்களின் லிஸ்ட் இதோ.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0wfx8sqdy2n4vpdagtkm39e,imgname-best-budget-mobiles--2--1787662607159.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Cheap and Best Phones : வெறும் ரூ.1000 பட்ஜெட்டில் நல்ல பேட்டரி, FM ரேடியோ, UPI வசதியுடன் ஒரு கீபேட் போன் தேடுகிறீர்களா? மார்க்கெட்டில் கிடைக்கும் டாப் 5 ஃபீச்சர் போன்களின் லிஸ்ட் இதோ.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஸ்மார்ட்போன் காலத்திலும் கீபேட் போன்களுக்கான மவுசு குறையவே இல்லை. பெரியவர்களுக்குப் பயன்படுத்த எளிதாக இருக்க வேண்டும், அல்லது செகண்டரி போனாகப் பயன்படுத்த வேண்டும் என நினைப்பவர்கள் இன்றும் ஃபீச்சர் போன்களைத்தான் விரும்புகிறார்கள். நீங்களும் ரூ.1000 பட்ஜெட்டில் ஒரு நல்ல ஃபீச்சர் போன் தேடுகிறீர்கள் என்றால், உங்களுக்காகவே நீண்ட பேட்டரி பேக்கப், FM ரேடியோ, டார்ச் லைட், ஏன் UPI வசதியுடன் வரும் 5 சிறந்த போன்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நோக்கியா பிராண்டின் தரம் பற்றி எல்லோருக்கும் தெரியும். பட்ஜெட் விலையில் ஒரு நம்பிக்கையான போன் வேண்டுமென்றால் இது ஒரு சூப்பர் சாய்ஸ். இதில் 1.77 இன்ச் QQVGA ஸ்கிரீன், S30+ இயங்குதளத்துடன் Unisoc 6531E பிராசஸர் இருக்கிறது. 800mAh பேட்டரி ஒருமுறை சார்ஜ் செய்தால் 18 நாட்கள் வரை ஸ்டேண்ட்பை டைம் கொடுக்கும். டூயல் சிம், வயர்லெஸ் FM ரேடியோ, 3.5mm ஹெட்போன் ஜாக், பிரகாசமான டார்ச் லைட் போன்ற வசதிகளும் இதில் உண்டு. இதன் விலை ரூ.999 மட்டுமே.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வெறும் கால் பேசுவதற்கும், அன்றாட அடிப்படை தேவைகளுக்கும் ஒரு சிம்பிளான போன் போதும் என நினைப்பவர்களுக்கு HMD 100 ஒரு நல்ல தேர்வு. இதில் 1.77 இன்ச் ஸ்கிரீன், 4MB ரேம், 4MB இன்டர்னல் மெமரி, மற்றும் 800mAh பேட்டரி பேக்கப் இருக்கிறது. டூயல் சிம் சப்போர்ட், பில்ட்-இன் FM ரேடியோ, LED டார்ச், 3.5mm ஆடியோ ஜாக் போன்ற வசதிகளும் இதில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த போனும் 999 ரூபாய்க்கு கிடைக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்திய நிறுவனமான லாவாவின் இந்த மொபைல், அதன் உறுதியான (Rugged) பாடி டிசைனுக்கு பெயர் பெற்றது. இதில் 1.8 இன்ச் கலர் டிஸ்ப்ளே (160&times;128 பிக்சல்), 4MB ரேம் மற்றும் 32GB வரை மெமரியை அதிகரித்துக்கொள்ளும் வசதி இருக்கிறது. 1000mAh திறன் கொண்ட பெரிய பேட்டரி, டூயல் சிம், வயர்லெஸ் FM, சக்திவாய்ந்த டார்ச் லைட் போன்ற அம்சங்களும் இதில் அடங்கும். இதன் விலை வெறும் ரூ.988 மட்டுமே.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பட்ஜெட் விலையில் வாய்ஸ் அசிஸ்டன்ட் மற்றும் டைப்-சி சார்ஜிங் போர்ட் வேண்டுமென நினைப்பவர்களுக்கு இது ஒரு சரியான போன். இதில் 1.8 இன்ச் ஸ்கிரீன், தெளிவான T9 கீபேட் இருக்கிறது. 1000mAh பேட்டரி மற்றும் முக்கியமாக USB Type-C சார்ஜிங் போர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது! இதன் சிறப்பு அம்சம் 'கிங் டாக்கர்' (King Talker) வாய்ஸ் அசிஸ்டன்ட் தான். இதன் மூலம் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் குரல் வழியே போனை இயக்கலாம். ஆட்டோ கால் ரெக்கார்டிங், ப்ளூடூத், வயர்லெஸ் FM, டார்ச் லைட்டுக்கு ஷார்ட்கட் பட்டன் போன்ற வசதிகளும் இதில் இருக்கிறது. இந்த போனின் விலை 949 ரூபாய்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வெறும் கீபேட் போன் மட்டும் இல்லாமல், இன்டர்நெட், லைவ் டிவி, UPI பேமெண்ட் வசதிகளும் வேண்டுமென நினைப்பவர்களுக்கு, இதுதான் இந்தியாவின் மலிவு விலை 4G போன். இதில் 4G கனெக்டிவிட்டி, Jio UPI (JioPay) மூலம் சுலபமாக பணம் அனுப்பும் வசதி, JioCinema (சினிமா), JioTV (லைவ் டிவி), JioChat போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் இருக்கின்றன. 1000mAh பேட்டரி, 128GB வரை மெமரி கார்டு சப்போர்ட் உண்டு. தமிழ் உட்பட 23 இந்திய மொழிகளை இந்த போன் சப்போர்ட் செய்வது இதன் சிறப்பு. இதன் விலை ரூ.899 மட்டுமே.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[technology/technology-mobile]]></category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/technology/technology-mobile/cheap-and-best-mobile-phones-under-1000-with-upi-and-long-battery-life-vllf36a"/>
        </item>
        <item>
            <title><![CDATA[weight loss: உடல் எடையை வேகமாக குறைக்க ‘கிராஷ் டயட்’ செய்கிறீர்களா? ஆற்றல், கவனம் குறைவதற்கு இதுவும் காரணமாக இருக்கலாம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/health/crash-diet-for-weight-loss-how-extreme-calorie-restriction-can-affect-energy-focus-and-health-3aws390</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/health/crash-diet-for-weight-loss-how-extreme-calorie-restriction-can-affect-energy-focus-and-health-3aws390</guid>
            <pubDate>Tue, 25 Aug 2026 19:00:05 +0530</pubDate>
            <description><![CDATA[உடல் எடையை விரைவாகக் குறைக்க கடுமையான கலோரி கட்டுப்பாட்டை பின்பற்றுவது சோர்வு, கவனக்குறைவு, மன மந்தநிலை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். நீடித்த எடை குறைப்புக்கு சமச்சீர் உணவு, உடற்பயிற்சி மற்றும் போதிய தூக்கம் முக்கியம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0wfcwqrqkps5tcrkhscsk49,imgname-crash-diet--1--1787662070520.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;உடல் எடையை விரைவாகக் குறைக்க கடுமையான கலோரி கட்டுப்பாட்டை பின்பற்றுவது சோர்வு, கவனக்குறைவு, மன மந்தநிலை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். நீடித்த எடை குறைப்புக்கு சமச்சீர் உணவு, உடற்பயிற்சி மற்றும் போதிய தூக்கம் முக்கியம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வழக்கமான உணவு அளவை மிகவும் குறைத்து, மிகக் குறைந்த கலோரி கொண்ட உணவு முறையைப் பின்பற்றுவது பொதுவாக &lsquo;கிராஷ் டயட்&rsquo; எனப்படுகிறது. சில கிராஷ் டயட் முறைகளில் தினசரி 800 கலோரிக்கும் குறைவான உணவு பரிந்துரைக்கப்படலாம். இத்தகைய கடுமையான கட்டுப்பாடு மருத்துவ கண்காணிப்பு இல்லாமல் மேற்கொள்ளப்படும்போது உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உடலின் அன்றாட செயல்பாடுகளுக்கு உணவில் இருந்து கிடைக்கும் கலோரி முக்கியமான ஆற்றல் ஆதாரமாக உள்ளது. உணவு அளவை திடீரெனக் குறைக்கும்போது உடலுக்குக் கிடைக்கும் எரிபொருள் குறைந்து சோர்வு மற்றும் ஆற்றல் இல்லாத உணர்வு ஏற்படலாம்.&lt;/p&gt;&lt;p&gt;மேலும், உடலில் சேமிக்கப்பட்டுள்ள கிளைகோஜன் அளவு குறைவதும் சோர்வை அதிகரிக்கக்கூடும். இதனால் வழக்கமான வேலைகளைச் செய்வதற்கே அதிக சிரமம் ஏற்படலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கிராஷ் டயட்டின் மற்றொரு கவலைக்குரிய விளைவு &lsquo;Brain Fog&rsquo; எனப்படும் மூளை மந்தநிலை. கடுமையான கலோரி கட்டுப்பாட்டால் மூளைக்குக் கிடைக்கும் குளுக்கோஸ் ஆதாரம் குறையும்போது கவனம் செலுத்துவதில் சிரமம் ஏற்படலாம்.&lt;/p&gt;&lt;p&gt;இதன் காரணமாக மறதி, ஒரு வேலையில் நீண்ட நேரம் கவனம் செலுத்த முடியாமை, சிந்திக்கும் வேகம் குறைதல் மற்றும் மனச் சோர்வு போன்ற அறிகுறிகள் தோன்றக்கூடும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உணவின் அளவை அதிகமாகக் குறைக்கும்போது உடலுக்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்கள் போதுமான அளவு கிடைக்காமல் போகலாம். குறிப்பாக இரும்புச்சத்து, வைட்டமின் B12, ஃபோலேட், மெக்னீசியம் மற்றும் புரதம் போன்றவை உடலின் இயல்பான செயல்பாடுகளுக்கும் மூளை ஆரோக்கியத்திற்கும் முக்கியமானவை.&lt;/p&gt;&lt;p&gt;எனவே, எடை குறைப்பில் கலோரியை மட்டும் கருத்தில் கொள்ளாமல், உணவின் ஊட்டச்சத்து மதிப்பையும் கவனிப்பது அவசியம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கலோரி அளவு மிகவும் குறைந்தால் உடல் அதை ஆற்றல் பற்றாக்குறையாகக் கருதி, கிடைக்கும் ஆற்றலைச் சேமிக்கும் வகையில் செயல்படத் தொடங்கலாம். இதனால் உடல் எதிர்பார்த்த அளவுக்கு கலோரிகளைச் செலவழிக்காமல் இருக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;கிராஷ் டயட்டை நீண்ட காலம் பின்பற்றுவது எடை மீண்டும் அதிகரிக்கும் &lsquo;யோ-யோ&rsquo; எடை மாற்றத்துக்கும் வழிவகுக்கலாம். தொடர்ந்து பசி, தலைச்சுற்றல், மனநிலை மாற்றம், தூக்கப் பிரச்சினை, தலைவலி, உடற்பயிற்சி திறன் குறைதல், முடி உதிர்தல் மற்றும் மலச்சிக்கல் போன்ற அறிகுறிகளும் ஏற்படலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வேகமாக எடையை குறைப்பதைவிட, நீண்ட காலம் தொடர்ந்து பின்பற்றக்கூடிய உணவுப் பழக்கங்களை உருவாக்குவது சிறந்த அணுகுமுறையாகக் கருதப்படுகிறது.&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;அளவான கலோரி குறைப்பை கடைப்பிடிக்கலாம்.&lt;/li&gt; &lt;li&gt;போதுமான புரதம் உள்ள உணவுகளைச் சேர்க்கலாம்.&lt;/li&gt; &lt;li&gt;நார்ச்சத்து நிறைந்த உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம்.&lt;/li&gt; &lt;li&gt;தசைகளை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகளைச் செய்யலாம்.&lt;/li&gt; &lt;li&gt;போதுமான தூக்கத்தை உறுதி செய்யலாம்.&lt;/li&gt; &lt;li&gt;தனிநபரின் உடல்நிலைக்கு ஏற்ற உணவுத் திட்டத்தை ஊட்டச்சத்து நிபுணர் அல்லது மருத்துவரின் ஆலோசனையுடன் தேர்வு செய்யலாம்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;உடல் எடையை விரைவாகக் குறைப்பதற்காக உணவை கடுமையாகக் கட்டுப்படுத்துவது ஆரம்பத்தில் பலன் தருவது போல தோன்றினாலும், ஆற்றல் குறைவு, கவனச்சிதறல், மனச் சோர்வு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, உடல் எடையை குறைக்கும் முயற்சியில் வேகத்தைவிட நிலைத்தன்மை மற்றும் ஊட்டச்சத்து சமநிலைக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவசியம். மருத்துவ காரணங்களுக்காக மிகக் குறைந்த கலோரி உணவு தேவைப்படும் சூழ்நிலைகளில் மட்டும் அது மருத்துவ கண்காணிப்புடன் மேற்கொள்ளப்பட வேண்டும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[health]]></category>
            <dc:creator>Priya Velan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/health/crash-diet-for-weight-loss-how-extreme-calorie-restriction-can-affect-energy-focus-and-health-3aws390"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Trending saree : சோஷியல் மீடியாவை கலக்கும் டாப் 10 புடவைகள்..உங்க ஃபேவரிட் எது?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style-fashion/top-10-sarees-trending-on-social-media-0xq1bhv</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style-fashion/top-10-sarees-trending-on-social-media-0xq1bhv</guid>
            <pubDate>Tue, 25 Aug 2026 18:48:42 +0530</pubDate>
            <description><![CDATA[Social media Trending saree: புடவைகள் சோஷியல் மீடியாவிலும் புதிய அவதாரம் எடுத்துள்ளது. நடிகைகள், இன்ஃப்ளூயன்சர்கள், ஃபேஷன் பிரியர்கள் அணியும் வித்தியாசமான புடவைகள் வைரலாகி வருகின்றன. அவ்வாறு ட்ரெண்டாகி வரும் டாப் 10 புடவைகளை இங்கே பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0wh4r4jmbeyqf4550tymqpb,imgname-trending-sarees-1787663900817.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;Social media Trending saree: &lt;/strong&gt;புடவைகள் சோஷியல் மீடியாவிலும் புதிய அவதாரம் எடுத்துள்ளது. நடிகைகள், இன்ஃப்ளூயன்சர்கள், ஃபேஷன் பிரியர்கள் அணியும் வித்தியாசமான புடவைகள் வைரலாகி வருகின்றன. அவ்வாறு ட்ரெண்டாகி வரும் டாப் 10 புடவைகளை இங்கே பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பச்சை மற்றும் நீல நிறங்களின் டூயல் டோனில் அமைந்த டிஷ்யூ புடவை, பாரம்பரியத்துடன் ஃபேஷனை இணைத்து பெண்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. டிஷ்யூ துணியின் மென்மையான பளபளப்பு, இந்த புடவைக்கு ரீமியம் தோற்றத்தை அளிக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சோசியல் மீடியாவில் பாரம்பரிய புடவை டிரெண்டில், செட்டிநாடு காட்டன் புடவைகள் தனித்துவமான நிறங்களாலும், எளிமையான தோற்றத்தாலும் பெண்களின் மனதை கவர்ந்துள்ளது. இந்த புடவைகள் பாரம்பரிய செட்டிநாடு நெசவின் அழகையும், நவீன ஃபேஷன் தோற்றத்தையும் தருவதால் மக்கள் இதை அதிகளவில் விரும்புகின்றனர். காபி பிரவுன் நிறம் மற்றும் கான்ட்ராஸ்ட் பார்டர்கள் இந்த புடவைக்கு தனித்துவமான கம்பீரத்தை வழங்குகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் திரிஷா அணிந்த புடவை, இன்றும் ரசிகர்களால் ரசிக்கப்படும் எவர்கிரீன் ஃபேஷன் லுக்காகவே பார்க்கப்படுகிறது. இப்படத்தில் ஜெஸ்ஸியாக திரிஷா அணிந்த மரூன்&ndash;பச்சை நிற புடவை பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, &lsquo;VTV திரிஷா புடவை&rsquo; என்ற பெயரில் பிரபலமாக உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நாராயண்பேட் புடவைகள் தெலங்கானா மாநிலத்தின் நாராயண்பேட் (Narayanpet) பகுதியில் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் கைத்தறி புடவைகளாகும். இந்த புடவையில் உள்ள கோடுகள் மற்றும் கட்டம் போன்ற டிசைன்கள் இந்த புடவைகளுக்கு கூடுதல் அழகை கொடுக்கிறது. மேலும் இந்த புடவையின் பார்டரில் வரும் யானை, மயில், கோயில் கோபுரங்கள் போன்ற வடிவங்களும், துணியின் தன்மையும் இந்த புடவையை வாங்குவதற்கு காரணமாக அமைகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரஸ்ட் ஆரஞ்சுடன் காபி பிரவுன் பார்டர் இணைந்து இந்த புடவையின் பாரம்பரிய அழகை வெளிப்படுத்துகிறது. திருமணம், நிச்சயதார்த்தம், குடும்ப விழாக்கள், பண்டிகை நாட்கள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு இந்த புடவை சிறப்பான தேர்வாக அமைந்துள்ளது. இந்த புடவையை பெண்கள் போட்டி போட்டு கொண்டு வாங்கி வருகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மென்மையான வெந்தயம் நிறத்துடன் கருப்பு நிற பார்டர் இணைந்த காஞ்சிபுரம் காட்டன் புடவை, எளிமையிலும் கம்பீரமான தோற்றத்தை வழங்குகிறது. இது உடுத்துவதற்கு எளிமையாக இருப்பதால் பெண்கள் இதனை விரும்பி வாங்கி வருகின்றனர். திருமணம், கோவில் நிகழ்ச்சிகளில் இந்த புடவையை கட்டினால் பாரம்பரியமான ஸ்டைலிஷ் லுக்கைப் பெறலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முதலமைச்சர் விஜய் பதவியேற்பு விழாவில் நடிகை திரிஷா கட்டியிருந்த நீல நிற புடவை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இதனையடுத்து இந்த புடவையை பெண்கள் போட்டி போட்டுக்கொண்டு ஆன்லைனில் வாங்கி வருகின்றனர். பல்வேறு துணி கடைகளிலும் இந்த புடவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மகேஸ்வரி காட்டன் புடவை மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள மகேஷ்வர் நகரில் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் மென்மையான கைத்தறி புடவையாகும். இந்த புடவைகள் லேசான எடை கொண்டதாகவும், உடுத்துவதற்கு எளிதாக உள்ளதால் பெண்கள் இவற்றை விரும்பி வாங்குகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மென்மையான வெங்காய நிறத்திற்கு கருப்பு பார்டர் கான்ட்ராஸ்டாக இருப்பது புடவையின் தோற்றத்தை மேலும் மெருகேற்றுகிறது. இந்த புடவையை பெண்கள் ஆன்லைனில் உனக்கு எனக்கு என்று போட்டி போட்டு வாங்குகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;காஞ்சிபுரம் கைத்தறி பட்டுப் புடவைகள் தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் தூய mulberry பட்டு மற்றும் தங்கம்-வெள்ளி ஜரியால் கைத்தறியால் நெசவு செய்யப்படும் புகழ்பெற்ற பாரம்பரிய உடையாகும். இந்த பச்சை நிற புடவை மற்றும் மெஜந்தா நிற பார்டர் பார்ப்பவர்களை கவரும் வகையில் உள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[life-style-fashion]]></category>
            <dc:creator>Vishnupriya</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style-fashion/top-10-sarees-trending-on-social-media-0xq1bhv"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ரஜினியுடன் மோதும் அஜித்; ஹாட்ரிக் ஹிட் அடிப்பாரா சூர்யா? அடுத்த 4 மாதத்தில் இத்தனை பிரம்மாண்ட படங்கள் ரிலீஸ் ஆகுதா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/rajinikanth-jailer-2-to-ajith-gladiators-here-the-upcoming-tamil-movies-list-from-september-to-december-bv269ho</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/rajinikanth-jailer-2-to-ajith-gladiators-here-the-upcoming-tamil-movies-list-from-september-to-december-bv269ho</guid>
            <pubDate>Tue, 25 Aug 2026 18:48:38 +0530</pubDate>
            <description><![CDATA[Upcoming Tamil Movies : தமிழ் சினிமாவில் அடுத்த 4 மாதங்களில் ரஜினி, அஜித், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. அது என்னென்ன படங்கள் என்பதை பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0wgvg1eerg1h5e2q5pvbhx4,imgname-upcoming-tamil-movies-1787663597614.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Upcoming Tamil Movies : தமிழ் சினிமாவில் அடுத்த 4 மாதங்களில் ரஜினி, அஜித், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. அது என்னென்ன படங்கள் என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ் சினிமாவில் செப்டம்பர் மாதம் ஏராளமான படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன. குறிப்பாக செப்டம்பர் முதல் வாரத்தில் ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் கயாடு லோகர் நடித்த இம்மார்டெல் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இதற்கு போட்டியாக துல்கர் சல்மான் நடித்த ஐ ஆம் கேம் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்திலும் கயாடு லோகர் தான் நாயகியாக நடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆகிறது.&lt;/p&gt;&lt;p&gt;இதற்கு அடுத்தபடியாக செப்டம்பர் இரண்டாம் வாரத்தில் சூரி நடித்த மண்டாடி, திரைப்படமும், கார்த்தி நடித்துள்ள சர்தார் 2 திரைப்படமும் போட்டிபோட்டு 10ந் தேதி ரிலீஸ் ஆகிறது. இதற்கு ஒரு நாள் கழித்து செப்டம்பர் 11ந் தேதி அருள்நிதியின் டிமாண்டி காலனி 3 திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;பின்னர் செப்டம்பர் மாதம் 25ந் தேதி கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய டோராத்தி படம் ரிலீஸ் ஆகிறது. அப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து உள்ளார். அதற்கு போட்டியாக ஹிப்ஹாப் ஆதி இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள மீசைய முறுக்கு 2 திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இதுதவிர நானி நடித்த பாரடைஸ் படம் செப்டம்பர் 24ந் தேதி திரைக்கு வர உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;Theatre and OTT Releases : டாக்ஸிக் vs ஹாய்... இந்த வாரம் தியேட்டர் &amp;amp; ஓடிடியில் செம ட்ரீட் வெயிட்டிங்&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அக்டோபர் மாதம் தொடக்கத்திலேயே விஜய் சேதுபதி மற்றும் ஜேசன் சஞ்சய்யின் படங்கள் ரிலீஸ் ஆகின்றன. அக்டோபர் 1ந் தேதி பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த பத்தா திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. இதையடுத்து அக்டோபர் 2ந் தேதி விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா திரைப்படம் திரைக்கு வருகிறது.&lt;/p&gt;&lt;p&gt;இதையடுத்து இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான ஜெயிலர் 2 அக்டோபர் 15ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ளார். இப்படத்துக்கு போட்டியாக தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ஓம் படம் ரிலீஸ் ஆக உள்ளது. அப்படம் அக்டோபர் 16ந் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;இதுதவிர நடிகர் அஜித் குமாரின் கிளாடியேட்டர்ஸ் என்கிற டாக்குமெண்ட்ரி படமும் அக்டோபரில் ரிலீஸ் ஆக உள்ளதாம். அதனை ஏ.எல்.விஜய் இயக்கி உள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நவம்பர் மாதம் தான் தீபாவளி பண்டிகை வருகிறது. இதனால் அம்மாதம் ஏராளமான புதுப்படங்கள் ரிலீஸ் ஆகும். தற்போது வரை சிம்பு நடிப்பில் உருவாகி வரும் அரசன் படம் தான் தீபாவளிக்கு திரைக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர சாய் பல்லவி மற்றும் யஷ் நடிப்பில் இந்தியில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இராமாயணம் திரைப்படத்தின் முதல் பாகம் இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;டிசம்பர் மாதம் தமிழ் சினிமாவை பொருத்தவரை சூர்யா நடித்து வரும் சூர்யா 47 திரைப்படம் தான் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த ஆண்டு கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த சூர்யா, அடுத்த படம் மூலம் ஹாட்ரிக் ஹிட் அடிக்க காத்திருக்கிறார். ஆவேஷம் படத்தின் இயக்குநர் ஜீத்து மாதவன் தான் அப்படத்தை இயக்கி உள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;இதுதவிர ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட பான் இந்தியா படமான கிங் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கிறார். ஜவான் படத்திற்கு பின்னர் ஷாருக்கானும், அனிருத்தும் இணைந்துள்ளதால் இப்படத்திற்கு கோலிவுட்டிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[cinema]]></category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/rajinikanth-jailer-2-to-ajith-gladiators-here-the-upcoming-tamil-movies-list-from-september-to-december-bv269ho"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Vaibhav Sooryavanshi: பவுலிங்கில் மிரட்டிய வைபவ்..! ஒரே ஓவரில் 2 விக்கெட் வீழ்த்தி அசத்தல்..]]></title>
            <link>https://tamil.asianetnews.com/sports-cricket/vaibhav-sooryavanshi-shines-with-ball-after-batting-failure-articleshow-7hahsgq</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/sports-cricket/vaibhav-sooryavanshi-shines-with-ball-after-batting-failure-articleshow-7hahsgq</guid>
            <pubDate>Tue, 25 Aug 2026 18:16:44 +0530</pubDate>
            <description><![CDATA[கிரிக்கெட் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு உள்ளான வீரர் வைபவ் சூர்யவன்ஷி, பேட்டிங்கில் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும், பந்துவீச்சில் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwze56ry6htsys5vpmy5p4rk,imgname-england-v-india--vaibhav-sooryavanshi-1783466466078.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் இளம் வீரராக அறிமுகமாகி, பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ள வைபவ் சூர்யவன்ஷி, சமீபத்திய போட்டி ஒன்றில் தனது ஆல்ரவுண்டர் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். பேட்டிங்கில் அவர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தாலும், பந்துவீச்சில் அவர் காட்டிய ஆதிக்கம் தற்போது பேசும்பொருளாகியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பேட்டிங் செய்ய களமிறங்கினார் வைபவ். ஆனால், அவரால் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை. வெறும் 6 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர், 2 பவுண்டரிகள் உட்பட 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.&lt;/p&gt;&lt;h2&gt;பேட்டிங் ஏமாற்றம், பவுலிங் ஆதிக்கம்!&lt;/h2&gt;&lt;p&gt;வைபவின் இந்த பேட்டிங் செயல்பாடு, அவர் மீதான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என்றே கூறலாம். அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்கியிருந்தாலும், அதனை ஒரு பெரிய ஸ்கோராக மாற்றத் தவறியது ஒரு பின்னடைவாகவே பார்க்கப்பட்டது. இதனால், போட்டியில் அவரது பங்களிப்பு முடிந்துவிட்டதாகவே பலரும் கருதினர்.&lt;/p&gt;&lt;p&gt;ஆனால், பந்துவீச வாய்ப்பு கிடைத்தபோது கதையே மாறியது. யாரும் எதிர்பாராத விதமாக, பந்துவீச்சில் தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தினார் வைபவ் சூர்யவன்ஷி. ஒரே ஓவரை வீசி, அதில் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி அணிக்கு திருப்புமுனையை ஏற்படுத்தினார். பேட்டிங்கில் விட்டதை பந்துவீச்சில் பிடித்து, தன்னை ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் என்பதை நிரூபித்துள்ளார்.&lt;/p&gt;&lt;h2&gt;ஆல்ரவுண்டராக அசத்தல்&lt;/h2&gt;&lt;p&gt;ஒரு வீரருக்கு ஒரு போட்டி எப்படி அமைய வேண்டும் என்பதற்கு வைபவின் இந்த ஆட்டம் ஒரு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது. பேட்டிங்கில் ஏற்பட்ட சரிவிலிருந்து மீண்டு, பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்டது அவரது மன உறுதியைக் காட்டுகிறது. இந்த இரட்டைத்திறன், வரும் காலங்களில் இந்திய கிரிக்கெட்டில் அவர் ஒரு முக்கிய சக்தியாக உருவெடுப்பதற்கான சாத்தியங்களை அதிகரித்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;ஒரே போட்டியில், பேட்டிங்கில் ஏமாற்றத்தையும், பந்துவீச்சில் உச்சகட்ட ஆதிக்கத்தையும் வெளிப்படுத்தியதன் மூலம், வைபவ் சூர்யவன்ஷி தனது பன்முகத்திறமையை அழுத்தமாக பதிவு செய்துள்ளார். இது வெறும் தொடக்கம்தான் என்பது போல, அவரது இந்த செயல்பாடு அமைந்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;LADIES &amp;amp; GENTLEMEN - MEET VAIBHAV SOORYAVANSHI, THE BOWLER.  pic.twitter.com/LSHlZtKvFW&lt;/p&gt;&lt;p&gt;&mdash; Mufaddal Vohra (@mufaddal_vohra) August 25, 2026&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[sports-cricket]]></category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/sports-cricket/vaibhav-sooryavanshi-shines-with-ball-after-batting-failure-articleshow-7hahsgq"/>
        </item>
        <item>
            <title><![CDATA[பிளாஸ்டிக், மரம் அல்லது ஸ்டீல்? சமையலுக்கு எந்த சாப்பிங் போர்டு பாதுகாப்பானது?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/plastic-wooden-or-steel-chopping-board-which-is-better-for-food-hygiene-and-health-yf3m3y9</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/plastic-wooden-or-steel-chopping-board-which-is-better-for-food-hygiene-and-health-yf3m3y9</guid>
            <pubDate>Tue, 25 Aug 2026 18:10:17 +0530</pubDate>
            <description><![CDATA[ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது மட்டுமல்லாமல், அதைத் தயாரிக்கும் சமையல் உபகரணங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். பிளாஸ்டிக், மரம், ஸ்டீல் சாப்பிங் போர்டுகளின் நன்மை, தீமைகளை அறிந்து சரியானதைத் தேர்வு செய்வது உணவு சுகாதாரத்திற்கு உதவும்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01m0wd4rwns93sek2br943m9g7,imgname-chopping-board--1--1787659707285.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது மட்டுமல்லாமல், அதைத் தயாரிக்கும் சமையல் உபகரணங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். பிளாஸ்டிக், மரம், ஸ்டீல் சாப்பிங் போர்டுகளின் நன்மை, தீமைகளை அறிந்து சரியானதைத் தேர்வு செய்வது உணவு சுகாதாரத்திற்கு உதவும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மரத்தால் செய்யப்பட்ட போர்டுகள் கத்தியின் கூர்மையை ஒப்பீட்டளவில் நன்றாகப் பாதுகாக்க உதவுகின்றன. சில மரங்களில் இயற்கையாகவே நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;அதே நேரத்தில், மரம் நீரை உறிஞ்சக்கூடிய தன்மை கொண்டதால் அதை முறையாகப் பராமரிப்பது அவசியம். நீண்ட நேரம் தண்ணீரில் ஊறவைத்தால் மரம் வளைந்து அல்லது விரிசல் ஏற்படக்கூடும். எனவே, மர சாப்பிங் போர்டை பயன்படுத்துபவர்கள் அதை நன்றாகக் கழுவி உலர்த்துவதுடன், தேவையான பராமரிப்பையும் செய்ய வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிளாஸ்டிக் போர்டுகள் எடை குறைவாகவும், விலை குறைவாகவும் இருப்பதால் பல வீடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், சில வகைகளை டிஷ்வாஷரில் எளிதாக சுத்தம் செய்யலாம்.&lt;/p&gt;&lt;p&gt;ஆனால் கத்தியால் தொடர்ந்து நறுக்கும்போது அதன் மேற்பரப்பில் ஆழமான கீறல்கள் உருவாகலாம். அந்த இடங்களில் அழுக்கு மற்றும் பாக்டீரியாக்கள் தங்கும் வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், பயன்படுத்தும் முறையைப் பொறுத்து நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் உணவில் கலக்கும் சாத்தியமும் உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஸ்டீல் போர்டுகள் துளைகள் இல்லாத மேற்பரப்பைக் கொண்டவை என்பதால், திரவத்தை உறிஞ்சுவது அல்லது வாசனையை தக்கவைத்துக் கொள்வது போன்ற பிரச்சினைகள் குறைவாக இருக்கும். மேலும், அவற்றை சுத்தம் செய்வதும் கிருமிநாசினி மூலம் சுகாதாரமாக வைத்திருப்பதும் எளிதாக இருக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;ஆனால் ஸ்டீல் மிகவும் கடினமான மேற்பரப்பைக் கொண்டிருப்பதால், கத்தியின் கூர்மை விரைவாகக் குறையக்கூடும். பயன்படுத்தும்போது அதிக சத்தமும் ஏற்படலாம். உணவு அல்லது கத்தி வழுக்குவதற்கான வாய்ப்பும் இருப்பதால் கவனமாகப் பயன்படுத்த வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சாப்பிங் போர்டில் ஆழமான கீறல்கள், விரிசல்கள் அல்லது சேதங்கள் ஏற்பட்டிருந்தால் அதை தொடர்ந்து பயன்படுத்துவது குறித்து மறுபரிசீலனை செய்வது நல்லது. குறிப்பாக ஒரே போர்டில் பல வகையான உணவுகளைத் தயாரிக்கும்போது குறுக்கு மாசுபாடு ஏற்படாமல் இருப்பதற்கான சுத்தம் மற்றும் பராமரிப்பில் கூடுதல் கவனம் தேவை.&lt;/p&gt;&lt;p&gt;ஆரோக்கியமான உணவைத் தேர்வு செய்வது மட்டுமின்றி, அந்த உணவு தயாரிக்கப்படும் மேற்பரப்பும் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பது முக்கியம். எனவே, உங்கள் சமையலறையில் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் சாப்பிங் போர்டின் நிலையை ஒருமுறை சரிபார்த்து, தேவையான நேரத்தில் அதை மாற்றுவது சிறந்த நடைமுறையாக இருக்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[life-style]]></category>
            <dc:creator>Priya Velan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/plastic-wooden-or-steel-chopping-board-which-is-better-for-food-hygiene-and-health-yf3m3y9"/>
        </item>
        <item>
            <title><![CDATA[தினமும் ஒரு ஸ்பூன் கருப்பு எள் போதும்.. இத்தனை நன்மைகள் கிடைக்குமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/webstories/life-style/black-sesame-benefits-why-you-should-add-sesame-seeds-to-your-diet-90o69kc</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/webstories/life-style/black-sesame-benefits-why-you-should-add-sesame-seeds-to-your-diet-90o69kc</guid>
            <pubDate>Tue, 25 Aug 2026 17:54:51 +0530</pubDate>
            <description><![CDATA[Black Sesame: கருப்பு எள்ளில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. தினமும் ஒரு ஸ்பூன் கருப்பு எள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கே பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jzwqz1r92cb9kcgp18sf677r,imgname-fotojet--9--1752237573897.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <category><![CDATA[life-style]]></category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/webstories/life-style/black-sesame-benefits-why-you-should-add-sesame-seeds-to-your-diet-90o69kc"/>
        </item>
        <item>
            <title><![CDATA[IBPS Clerk 2026: வங்கி கிளார்க் வேலைக்கு சூப்பர் வாய்ப்பு.. 11,403 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/career/ibps-clerk-2026-registration-extended-check-last-date-eligibility-and-exam-dates-fgthyso</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/career/ibps-clerk-2026-registration-extended-check-last-date-eligibility-and-exam-dates-fgthyso</guid>
            <pubDate>Tue, 25 Aug 2026 17:45:31 +0530</pubDate>
            <description><![CDATA[IBPS Clerk 2026: வங்கித் துறையில் வேலை தேடும் இளைஞர்களுக்கு முக்கியமான வாய்ப்பு இது. IBPS Clerk 2026, அதாவது Customer Service Associate (CSA) ஆட்சேர்ப்புக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தற்போது ஆகஸ்ட் 28, 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01krak004p3jspqpty3gxqvfwp,imgname-gemini-generated-image-gg7a8vgg7a8vgg7a-1778471927958.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;IBPS Clerk 2026: வங்கித் துறையில் வேலை தேடும் இளைஞர்களுக்கு முக்கியமான வாய்ப்பு இது. IBPS Clerk 2026, அதாவது Customer Service Associate (CSA) ஆட்சேர்ப்புக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தற்போது ஆகஸ்ட் 28, 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வங்கித் துறையில் வேலை தேடும் பட்டதாரிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஐபிபிஎஸ் கிளார்க் 2026 ஆட்சேர்ப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் சேவை இணை பணியாளர் என்ற பதவிக்கான பொதுத் தேர்வில் பங்கேற்க விரும்புபவர்கள் தற்போது ஆகஸ்ட் 28, 2026 வரை விண்ணப்பிக்கலாம். இந்த தேதிக்குள் புதிய விண்ணப்பப் பதிவு, ஏற்கனவே சமர்ப்பித்த விண்ணப்பத்தில் தேவையான திருத்தங்கள் மற்றும் விண்ணப்பக் கட்டணம் செலுத்துதல் ஆகியவற்றை முடிக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;சமர்ப்பித்த விண்ணப்பத்தை அச்சிட்டு வைத்துக்கொள்ள செப்டம்பர் 12 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பு சிஆர்பி சிஎஸ்ஏ-16 என்ற பொதுத் தேர்வு முறை நடைபெறுகிறது. கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, நாடு முழுவதும் 11,403 காலியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎஸ் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு தகவலில் 2026ஆம் ஆண்டுக்கான அறிவிப்பு, ஆகஸ்ட் 21ஆம் தேதி வெளியிடப்பட்ட திருத்த அறிவிப்பு இடம்பெற்றுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விண்ணப்பிக்கும் போது தங்கள் மாநிலம், வங்கி முன்னுரிமை மற்றும் பணியிடங்கள் தொடர்பான விவரங்களை விண்ணப்பதாரர்கள் கவனமாக சரிபார்க்க வேண்டும். குறிப்பாக, தாங்கள் விண்ணப்பிக்க விரும்பும் மாநிலத்துக்கான உள்ளூர் மொழி தொடர்பான விதிமுறைகளையும் தெரிந்துகொள்வது அவசியம். கல்வித் தகுதியைப் பொறுத்தவரை, பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;கணினி பயன்பாடு தொடர்பான அடிப்படை அறிவும் தேவையாக இருக்கலாம். மேலும் விண்ணப்பிக்கும் மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்துக்கான உள்ளூர் மொழியை அறிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் இருக்கலாம். வயது வரம்பு, இடஒதுக்கீடு மற்றும் வயது தளர்வு போன்றவை விண்ணப்பதாரர் பிரிவைப் பொறுத்து மாறுபடும். எனவே எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தங்களுக்கான விதிமுறைகளை சரிபார்ப்பது நல்லது.&lt;/p&gt;&lt;p&gt;Ola Scooter Offers: ரூ.90 ஆயிரத்தில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. இஎம்ஐ கம்மி! ஆஃபர்களை மிஸ் பண்ணாதீங்க&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தேர்வு முதற்கட்டத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு என இரண்டு கட்டங்களாக உள்ளது. அதிகாரப்பூர்வ தேர்வு அட்டவணையின்படி, முதற்கட்டத் தேர்வு அக்டோபர் 10 மற்றும் 11, 2026 ஆகிய தேதிகளில் நடைபெறும். இதில் முதன்மை தகுதி பெறுபவர்கள் அடுத்த கட்டமான தேர்வில் பங்கேற்கலாம். முதன்மைத் தேர்வு டிசம்பர் 27, 2026 அன்று நடைபெற உள்ளது. இதன் அடிப்படையில் இறுதி தேர்வு நடைமுறை மற்றும் பணியிட ஒதுக்கீடு நடைபெறும். தேர்வுக்கான பாடத்திட்டம், மதிப்பெண் முறை மற்றும் பிற விதிமுறைகளை விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சரிபார்ப்பது அவசியம்.&lt;/p&gt;&lt;p&gt;விண்ணப்பிக்க விரும்புவோர் ஐபிஎஸ் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சிஆர்பி சிஎஸ்ஏ-16 ஆட்சேர்ப்பு பகுதியைத் திறந்து புதிய பதிவு செய்ய வேண்டும். அதன் தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி மற்றும் தேவையான பிற தகவல்களை சரியாக உள்ளிட்டு, புகைப்படம் மற்றும் கையொப்பம் உள்ளிட்ட ஆவணங்களை பின்னர் வழிகாட்டுதலின்படி பதிவேற்ற வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தையும் ஆன்லைனில் செலுத்தி விண்ணப்பத்தை இறுதியாக சமர்ப்பிக்க வேண்டும். ஆகஸ்ட் 28, 2026க்குள் பதிவு மற்றும் கட்டணச் செலுத்துதல் இரண்டையும் முடிப்பது கட்டாயம். கடைசி நேரத்தில் இணையதள நெரிசல் போன்ற பிரச்சினைகளைத் தவிர்க்க, தகுதியுள்ளவர்கள் விண்ணப்பத்தை முன்கூட்டியே முடிப்பது பாதுகாப்பானது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[career]]></category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/career/ibps-clerk-2026-registration-extended-check-last-date-eligibility-and-exam-dates-fgthyso"/>
        </item>
    </channel>
</rss>
