<?xml version="1.0" encoding="UTF-8" standalone="yes"?>
<rss xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" version="2.0">
    <channel>
        <title>Asianet News Tamil</title>
        <link>https://tamil.asianetnews.com</link>
        <description><![CDATA[Asianet News Tamil is a leading Tamil Daily News Portal delivers Tamil Nadu News, India News, Tamil Local News, Tamil Cinema News, Technology News, Business News and Tamil Breaking News]]></description>
        <image>
            <url>https://static-assets.asianetnews.com/images/ogimages/OG_Tamil.jpg</url>
            <width>143</width>
            <height>100</height>
            <link>https://tamil.asianetnews.com</link>
            <title>Asianet News Tamil</title>
        </image>
        <lastBuildDate>Sat, 18 Jul 2026 15:25:00 +0530</lastBuildDate>
        <atom:link href="https://tamil.asianetnews.com/rss" rel="self" type="application/rss+xml"/>
        <item>
            <title><![CDATA[Airtel : சீப் அண்ட் பெஸ்ட் பிளானை சைலண்டாக ஸ்டாப் பண்ணிய ஏர்டெல்... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்...!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/technology/technology-mobile/airtel-quietly-discontinues-popular-549-postpaid-plan-pushing-users-to-costlier-options-d8akvd8</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/technology/technology-mobile/airtel-quietly-discontinues-popular-549-postpaid-plan-pushing-users-to-costlier-options-d8akvd8</guid>
            <pubDate>Sat, 18 Jul 2026 15:17:52 +0530</pubDate>
            <description><![CDATA[Airtel Discontinues Popular Plan : இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான பாரதி ஏர்டெல், தனது பிரபலமான மற்றும் குறைந்த விலையிலான தனிநபர் போஸ்ட்பெய்ட் பிளானை நிறுத்திவிட்டது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jynpnb6xg5hvz6vyf3806xz0,imgname-airtel-recharge-plan-1750927584475.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Airtel Discontinues Popular Plan : இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான பாரதி ஏர்டெல், தனது பிரபலமான மற்றும் குறைந்த விலையிலான தனிநபர் போஸ்ட்பெய்ட் பிளானை நிறுத்திவிட்டது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நீங்க ஏர்டெல் போஸ்ட்பெய்ட் (Airtel Postpaid) யூஸரா? அப்போ உங்களுக்கு ஒரு ஷாக்கிங் நியூஸ் இருக்கு. இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான பாரதி ஏர்டெல், பலரும் விரும்பிப் பயன்படுத்திய ரூ.549 தனிநபர் போஸ்ட்பெய்ட் பிளானை சத்தமில்லாமல் நிறுத்திவிட்டது. 2026-ல் வரவிருக்கும் கட்டண உயர்வின் ஒரு பகுதியாக இந்த முடிவை கம்பெனி எடுத்துள்ளது. இதனால், சாதாரண வாடிக்கையாளர்களின் மாதாந்திர செலவு இன்னும் அதிகமாகப் போகிறது. விலைகூடிய பிளானை தேர்வு செய்யும் நிலை ஏற்பட்டிருக்கு.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தனிநபர் யூஸர்கள் மத்தியில் இந்த பிளான் ரொம்பவே ஃபேமஸாக இருந்தது. இதில் அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி (STD) கால்கள், தினமும் 100 எஸ்எம்எஸ் (SMS), மாதத்திற்கு 40 GB டேட்டா மற்றும் பயன்படுத்தாத டேட்டாவை அடுத்த மாதத்திற்கு கொண்டு செல்லும் டேட்டா ரோல்ஓவர் வசதியும் இருந்தது. இதுமட்டுமில்லாமல், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Xstream Play) மற்றும் விங்க் மியூசிக் (Wynk Music) போன்றவற்றுக்கு இலவச சந்தாவும் கிடைத்தது. இப்போது இந்த பிளான் நிறுத்தப்பட்டதால், வாடிக்கையாளர்கள் வேறு வழியில்லாமல் அதிக விலை கொண்ட பிளான்களுக்கு மாற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரூ.549 பிளான் இப்போது இல்லாததால், புதிய வாடிக்கையாளர்களுக்கு இரண்டு முக்கிய ஆப்ஷன்கள் மட்டுமே உள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;ரூ.449 பிளான்: இதுதான் இப்போது இருக்கும் ஆரம்பகட்ட (entry-level) தனிநபர் பிளான்.&lt;/p&gt;&lt;p&gt;ரூ.699 பிளான்: உங்களுக்கு ரூ.549 பிளானை விட அதிக பலன்கள் வேண்டுமென்றால், நேரடியாக ரூ.699 ஃபேமிலி பிளானுக்குத்தான் போக வேண்டும். அதாவது, நடுத்தர வர்க்க வாடிக்கையாளர்கள் இனி ஒவ்வொரு மாதமும் கூடுதலாக 150 ரூபாய் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;டெலிகாம் நிபுணர்கள் சொல்றபடி, இந்த மாற்றத்திற்குப் பின்னால் ஒரு முக்கிய இலக்கு இருக்கிறது. அதுதான் ARPU (Average Revenue Per User), அதாவது ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து கிடைக்கும் சராசரி வருமானத்தை அதிகரிப்பது. ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் நாடு முழுவதும் 5G உள்கட்டமைப்புக்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன. இந்த செலவை ஈடுகட்ட, குறைந்த விலை பிளான்களை நீக்கிவிட்டு, வாடிக்கையாளர்களை அதிக விலை கொண்ட பிளான்களுக்கு மாற வைக்கிறார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஃபேமிலி பிளான்களுக்கு முக்கியத்துவம்..&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;வாடிக்கையாளர்கள் தனிநபர் பிளான்களை விட, அதிக விலை கொண்ட ஃபேமிலி பிளான்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என கம்பெனிகள் அழுத்தம் கொடுக்கின்றன. நீங்க ஏற்கெனவே ரூ.549 பிளான் பயன்படுத்தினால், உங்களின் அடுத்த பில்லிங் சைக்கிளில் இருந்து புதிய பிளானுக்கு மாற வேண்டியிருக்கும். இல்லையென்றால், போஸ்ட்பெய்டில் இருந்து ப்ரீபெய்டுக்கு (Prepaid) மாறுவது மட்டுமே பணத்தை மிச்சப்படுத்த இருக்கும் ஒரே வழி. மொத்தத்தில், இந்த டெலிகாம் கட்டண உயர்வு சாமானிய மக்களின் மாதாந்திர பட்ஜெட்டில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது மட்டும் உண்மை. அந்த பிளானை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பதே வாடிக்கையாளர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[technology/technology-mobile]]></category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/technology/technology-mobile/airtel-quietly-discontinues-popular-549-postpaid-plan-pushing-users-to-costlier-options-d8akvd8"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Heart Health: நெஞ்சுவலி மட்டும்தான் ஹார்ட் அட்டாக்கா? உஷார்.. நாம் நம்பும் 5 ஆபத்தான பொய்கள்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/health/5-dangerous-myths-about-heart-attack-you-regret-believing-8kl32h8</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/health/5-dangerous-myths-about-heart-attack-you-regret-believing-8kl32h8</guid>
            <pubDate>Sat, 18 Jul 2026 15:08:21 +0530</pubDate>
            <description><![CDATA[Heart Health: நெஞ்சுவலி மட்டும்தான் மாரடைப்பின் அறிகுறியா? இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் இதய நோய் பாதிப்பு ஏற்படுமா? இதய ஆரோக்கியம் குறித்து நாம் நம்பும் 5 ஆபத்தான பொய்களையும், அதன் பின்னணியில் உள்ள மருத்துவ உண்மைகளையும் பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01krn38cqenq5d0brk8e4tz45p,imgname-whatsapp-image-2026-05-15-at-11.23.52-am-1778824524525.jpeg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Heart Health: நெஞ்சுவலி மட்டும்தான் மாரடைப்பின் அறிகுறியா? இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் இதய நோய் பாதிப்பு ஏற்படுமா? இதய ஆரோக்கியம் குறித்து நாம் நம்பும் 5 ஆபத்தான பொய்களையும், அதன் பின்னணியில் உள்ள மருத்துவ உண்மைகளையும் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மருத்துவத் துறை எவ்வளவுதான் முன்னேறினாலும், இன்று நம்முடைய பெரிய வில்லன் இதய நோய்கள்தான். போதுமான மருத்துவ வசதிகளோ, மருத்துவர்களோ இல்லாததால் இது நடக்கவில்லை. இதய நோய்களைப் பற்றி சமூகத்தில் இருக்கும் சில தவறான நம்பிக்கைகளால், சரியான நேரத்தில் மக்கள் சிகிச்சை பெறத் தயங்குவதுதான் முக்கிய காரணம். இதய ஆரோக்கியம் சம்பந்தமாக நாம் தவிர்க்க வேண்டிய சில கட்டுக்கதைகளைப் பார்ப்போம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;நெஞ்சுவலி இல்லை என்றால் இதயம் பாதுகாப்பாக இருக்கிறதா?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இது மிகவும் ஆபத்தான ஒரு தவறான கணக்கு. மாரடைப்பு என்றால் பயங்கரமாக நெஞ்சு வலிக்கும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் பல ஆண்டுகளாக எந்த அறிகுறியும் காட்டாமல், மறைமுகமாக (சைலன்ட்டாக) வளரக்கூடியதுதான் பல இதய நோய்கள். உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், அதிக கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சினைகள் எந்த அறிகுறியும் இல்லாமலேயே ரத்தக் குழாய்களைச் சேதப்படுத்தலாம்.&lt;/p&gt;&lt;p&gt;சிலருக்கு லேசான நெஞ்செரிச்சல், மூச்சுத்திணறல், அதிகமாக வேர்ப்பது, கடுமையான சோர்வு, தலைசுற்றல், அல்லது தாடை, கழுத்து, தோள்பட்டை, முதுகுப் பகுதிகளில் வலி மட்டும்தான் அறிகுறியாக இருக்கலாம். பெண்கள், வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகளிடம் இந்த மாதிரியான அறிகுறிகள்தான் அதிகமாகக் காணப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதய நோய் ஆண்களை மட்டும் பாதிக்கிற ஒரு நோய் இல்லை. பெண்களின் இறப்புக்கு இது ஒரு முக்கியமான காரணமாக இருக்கிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, பல பெண்கள் தங்களுக்கு ஏற்படும் அறிகுறிகளை வெறும் வாயுத் தொல்லை (கேஸ் ட்ரபிள்), சோர்வு, அல்லது மன அழுத்தம் என்று கூறித் தட்டிக்கழித்துவிடுகிறார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;ஆண்களிடம் இருந்து பெண்களுக்கான அறிகுறிகள் வித்தியாசமாக இருக்கலாம். கடுமையான நெஞ்சுவலிக்குப் பதிலாக, பயங்கரமான சோர்வு, மூச்சுத்திணறல், குமட்டல், முதுகு வலி போன்றவை அவர்களிடம் தெரியலாம். மாதவிடாய் நிற்பதற்கு முன்னால், பெண்மைக்குரிய ஹார்மோன்கள் இதயத்திற்கு ஓரளவிற்குப் பாதுகாப்பு கொடுக்கும். ஆனால், அதற்குப் பிறகு ஹார்மோன் அளவு குறைவதால், பெண்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு மிக வேகமாக அதிகரிக்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;வயதானவர்களுக்கு மட்டும்தான் இதய நோய் வருமா?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;60 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டும்தான் இதய நோய் வரும் என்று சொல்வது முற்றிலும் பொய். இன்று 30, 40 வயது இளைஞர்களுக்குக்கூட மாரடைப்பு சாதாரணமாக வருகிறது. புகைப்பிடித்தல், உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது, உடல் பருமன், தவறான உணவுப் பழக்கம், கட்டுப்பாடில்லாத சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கடுமையான மன அழுத்தம், பரம்பரை காரணங்கள் இவை எல்லாம்தான் இளைஞர்களுக்கு இதய நோய் வரக் காரணம். நாம் இன்னும் இளமையாகத்தானே இருக்கிறோம் என்று நினைத்துக்கொண்டு, பலரும் ஆரம்பக்கட்ட அறிகுறிகளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துவது நல்லதுதான், ஆனால் அது மட்டுமே இதய நோய் வரும் அபாயத்தை முழுமையாக நீக்கிவிடாது. பல காரணிகள் ஒன்றாகச் சேரும்போதுதான் இதய நோய் வருகிறது. உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புகைப்பிடித்தல், உடல் பருமன், நாள்பட்ட சிறுநீரக நோய், உடற்பயிற்சி இல்லாமை, பரம்பரை எனப் பல விஷயங்கள் இதற்குப் பின்னணியில் இருக்கலாம். கொலஸ்ட்ரால் சாதாரணமாக (நார்மலாக) இருப்பவர்களுக்குக்கூட மற்ற காரணங்களால் மாரடைப்பு வரலாம். எனவே, கொலஸ்ட்ராலை மட்டும் பார்க்காமல், இதயத்தின் முழுமையான ஆரோக்கியத்தையும் பரிசோதிப்பதுதான் முக்கியம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதய நோய் வந்துவிட்டது என்றால், மறுபடியும் மாரடைப்பு வந்துவிடுமோ என்று பயந்து கொண்டு, பலரும் உடற்பயிற்சி, வேலைகள் என எதையும் செய்யாமல் ஒதுங்கிவிடுகிறார்கள். ஆனால் இது முற்றிலும் தவறு. மருத்துவரின் ஆலோசனைப்படி, சரியான அளவில் உடற்பயிற்சி செய்வது இதயத் தசைகளை வலுப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தவும் உதவும். இது மன ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மன அழுத்தத்தையும் குறைக்கும். உடற்பயிற்சியை முழுமையாகத் தவிர்ப்பதற்குப் பதிலாக, உங்கள் உடலுக்கு ஏற்ற பயிற்சிகளை மருத்துவரிடம் கேட்டுப் பழகிக்கொள்வதுதான் சரி.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதை கவனத்தில் கொள்ளுங்கள்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இதய நோய் ஒரே நாளில் வருவது இல்லை. பல வருடத் தவறான வாழ்க்கை முறையின் விளைவுதான் இது. இதயத்திற்கு நிரந்தர பாதிப்பு ஏற்படுவதற்கு முன்னாடியே, சரியான பரிசோதனைகள் மூலமாக நோயைக் கண்டுபிடித்தால், பெரும்பாலான இதய நோய்களைத் தடுக்க முடியும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[health]]></category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/health/5-dangerous-myths-about-heart-attack-you-regret-believing-8kl32h8"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Numerology Love Life: பாசத்துல இவங்கள மிஞ்ச ஆள் இல்ல! ஆனா ஈகோன்னு வந்தா சாரி கேட்க மாட்டாங்க! 'ராடிக்ஸ் 1' காதலர்கள் இப்படித்தான்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/this-is-how-radix-1-lovers-really-are-q55uu3u</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/this-is-how-radix-1-lovers-really-are-q55uu3u</guid>
            <pubDate>Sat, 18 Jul 2026 14:50:53 +0530</pubDate>
            <description><![CDATA[Risky Partners: நவக்கிரகங்களின் ராஜாவான சூரியன் இந்த எண்ணிற்கு அதிபதி என்பதால், இவர்களிடம் இயற்கையிலேயே கம்பீரமும், தலைமைப் பண்பும், அசைக்க முடியாத தன்னம்பிக்கையும் நிறைந்திருக்கும்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kvt7y6q982m74bh3f7zmg309,imgname-birth-dates-numerology-1782218431209.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Risky Partners: நவக்கிரகங்களின் ராஜாவான சூரியன் இந்த எண்ணிற்கு அதிபதி என்பதால், இவர்களிடம் இயற்கையிலேயே கம்பீரமும், தலைமைப் பண்பும், அசைக்க முடியாத தன்னம்பிக்கையும் நிறைந்திருக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எண் கணித சாஸ்திரத்தின்படி, எந்தவொரு மாதத்திலும் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் ராடிக்ஸ் (கூட்டு எண்) 1 ஆகும். நவக்கிரகங்களின் ராஜாவான சூரியன் இந்த எண்ணிற்கு அதிபதி என்பதால், இவர்களிடம் இயற்கையிலேயே கம்பீரமும், தலைமைப் பண்பும், அசைக்க முடியாத தன்னம்பிக்கையும் நிறைந்திருக்கும். காதலில் இவர்களது பிடிவாதம் மற்றும் ஆழமான பாசம் எப்படிப்பட்டது என்பதைப் பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சூரியனின் ஆதிக்கம் இருப்பதால், காதலில் எப்போதுமே தங்களது வார்த்தைக்கும் முடிவுக்கும் தான் அதிக முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என்று ராடிக்ஸ் 1 காரர்கள் விரும்புவார்கள். பார்ட்னரின் தனிப்பட்ட முடிவுகளில் கூட இவர்களின் தலையீடு சற்று அதிகமாக இருக்கும். இவர்களின் இந்த அதீத அக்கறை, சில நேரங்களில் பார்ட்னருக்கு தங்களை 'டாமினேட்' செய்வது போன்ற உணர்வை ஏற்படுத்திவிடும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இவர்களுக்கு சுயமரியாதை (Self-respect) என்பது உயிரை விட மேலானது. இதனால் காதல் என்று வந்துவிட்டாலும் இவர்களது ஈகோ தடையாக நிற்கும். காதலர்களுக்கிடையே சண்டை வந்தால், இவர்கள் எவ்வளவு தப்பு செய்திருந்தாலும் முதல்ல இறங்கி வந்து மன்னிப்பு கேட்கவே மாட்டார்கள். பார்ட்னர் தான் முதலில் வந்து 'சாரி' கேட்க வேண்டும் என்று பிடிவாதமாக காத்துக்கொண்டிருப்பார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இவர்கள் காதலில் 100% உண்மையாக இருப்பார்கள். ஆனால், அதே சமயம் தங்களது பார்ட்னரும் அழகிலும், அறிவிலும், செயலிலும் 'பெஸ்ட்' ஆக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இந்த எதிர்பார்ப்பு கொஞ்சம் கூடும்போது, காதல் உறவில் சிறு சிறு விரிசல்கள் வரத் தொடங்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இவர்களிடம் சில கடினமான குணங்கள் இருந்தாலும், இவர்களைப் போல உண்மையான காதலர்களைப் பார்ப்பது அரிது. ஒருவரை மனதார நேசித்துவிட்டால், அவருக்காக எந்த எல்லைக்குச் செல்லவும் இவர்கள் தயங்க மாட்டார்கள். துரோகம் என்ற வார்த்தைக்கே இவர்களது காதல் அகராதியில் இடமில்லை. அந்தளவிற்குப் பார்ட்னரை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்வார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இவர்களது ஈகோவை நேரடியாகக் காயப்படுத்துவது போல ஒருபோதும் பேசாதீர்கள். கோபத்தைக் குறைத்து, அன்பாகவும், மரியாதையாகவும், புரியும்படியும் எடுத்துச் சொன்னால், தங்களது பிடிவாதத்தைத் தளர்த்திக் கொண்டு உங்கள் பேச்சை அப்படியே கேட்பார்கள்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[astrology]]></category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/this-is-how-radix-1-lovers-really-are-q55uu3u"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Egg Price Hike: முட்டை விலை வரலாறு காணாத உச்சம்! சிக்கன் விலையும் ஓவர்! இல்லத்தரசிகள் ஷாக்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/egg-price-soar-to-record-highs-in-tamil-nadu-chicken-prices-follow-suit-ryre21u</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/egg-price-soar-to-record-highs-in-tamil-nadu-chicken-prices-follow-suit-ryre21u</guid>
            <pubDate>Sat, 18 Jul 2026 14:41:39 +0530</pubDate>
            <description><![CDATA[Egg Price Hike: நாடு முழுவதும் முட்டை விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. முட்டை விலை உயர்வுக்கு காரணம் என்ன? தமிழகத்தில் முட்டை விலை என்ன? என்பது குறித்து பார்ப்போம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kajdf2rk7nft41xe5pkavrgd,imgname-dd1375ff-bd01-497a-acb9-5b769f028fb3--1--1763702180627.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Egg Price Hike: நாடு முழுவதும் முட்டை விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. முட்டை விலை உயர்வுக்கு காரணம் என்ன? தமிழகத்தில் முட்டை விலை என்ன? என்பது குறித்து பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முட்டை பிரியரா நீங்க? அப்போ இந்த செய்தி உங்களுக்குத்தான். நாடு முழுவதும் முட்டை விலை ஏறிக்கொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டின் பல இடங்களில் சில்லறை விற்பனையில் ஒரு முட்டை 8.50 முதல் 9 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கோழித் தீவன விலை உயர்வுதான் முக்கிய காரணம் என கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கூறுகின்றனர். இருப்பினும், வரும் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் விலை சற்று குறையலாம் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;தீவன விலை உயர்வு மற்றும் சர்வதேசப் பதற்றம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;கோழித் தீவனத்தில் பயன்படுத்தப்படும் மக்காச்சோளம், சோயாபீன்ஸ் மற்றும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றம் இறக்குமதி மற்றும் விநியோகத்தைப் பாதித்துள்ளதே இதற்குக் காரணம் என கோழிப்பண்ணை நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (NECC) மற்றும் தமிழ்நாட்டின் முக்கிய முட்டை உற்பத்தி மையமான நாமக்கல் தகவல்படி, முட்டையின் பண்ணை விலை ஒரே மாதத்தில் 15% மற்றும் கடந்த ஆண்டை விட 40% அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பண்ணைக் கொள்முதல் விலையின்படி (நாமக்கல் மண்டலம்) ஒரு முட்டையின் விலை ரூ.6.80 ஆகும். சென்னை மற்றும் வெளிச்சந்தையின் ஒரு முட்டையின் விலை ரூ.7.50 முதல் ரூ.8.50 வரை விற்பனை செய்யப்படுகிறது. மார்ச் மாதம் முதல் கோழித் தீவனப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக பண்ணையாளர்கள் கூறுகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;தமிழகத்தில் பிராய்லர் கோழிக்கான தேவையும் அதிகமாக உள்ள நிலையில், தீவன விலை உயர்வு கறிக்கோழி விலையையும் பாதித்துள்ளது. சில்லறை விலையில் கறிக்கோழி (Skinless) ஒரு கிலோ 250 முதல் 260 ரூபாய் வரை விற்கப்படுகிறது. சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு, இதே காலக்கட்டத்தோடு ஒப்பிடும்போது முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை நடப்பு ஆண்டில் பெருமளவு உயர்ந்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கோழித் தீவனத்தில் சுமார் 55% மக்காச்சோளம் தான். மார்ச் மாதத்திலிருந்து இதன் விலை 35% க்கும் மேல் அதிகரித்துள்ளது. தீவனத்தில் 22% பயன்படுத்தப்படும் சோயாபீன்ஸின் விலை 64% க்கும் மேல் உயர்ந்துள்ளது. மேலும், தீவனத்தில் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய அமினோ அமிலங்களின் விலை மார்ச் மாதத்திலிருந்து மூன்றரை மடங்கு அதிகரித்துள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;மக்காச்சோளத்தின் தேவை கோழிப்பண்ணை துறைக்கு மட்டுமல்ல, எத்தனால் (Ethanol) தயாரிக்கும் நிறுவனங்களும் அதிக அளவில் மக்காச்சோளத்தை வாங்குவதால், சந்தையில் இதன் விலை உயர்கிறது. இதற்கிடையில், கடந்த ஒரு வருடமாக நிலவும் ஒழுங்கற்ற பருவமழை, விவசாயிகள் மற்றும் தொழில் துறையினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது காரிஃப் மற்றும் ரபி பயிர்களின் உற்பத்தியைப் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;கடந்த ஆண்டு சோயாபீன்ஸ் உற்பத்தி குறைவாக இருந்ததும் விலை உயர்வுக்கு மற்றொரு காரணம். தொழில் துறை தகவல்களின்படி, கடந்த ஆண்டு இந்தியாவில் சோயாபீன்ஸ் உற்பத்தி சுமார் 20% குறைவாக இருந்தது. இந்த ஆண்டு பருவமழை பலவீனமாக இருந்தால், உற்பத்தி மேலும் குறைந்து, விலை இன்னும் உயரக்கூடும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை நீடித்த கடுமையான வெப்ப அலை, முட்டைகளை மட்டுமல்ல, கோழிகளையும் பாதித்துள்ளது. அதிக வெப்பத்தால் பிராய்லர் கோழிகளின் உற்பத்தி குறைந்ததால், சந்தையில் கோழி இறைச்சி விலை உயர்ந்துள்ளது. பல நகரங்களில் கோழி இறைச்சியின் சில்லறை விலை கிலோவுக்கு 250 முதல் 260 ரூபாய் வரை எட்டியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;விலை எப்போது குறையும்?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;வரும் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்து முட்டை விலை சற்று குறையும் என கோழிப்பண்ணை உரிமையாளர்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழ்நாட்டில் ஆடி மாதம் தொடங்க உள்ளதாலும், வட மாநிலங்களில் ஸ்ராவண மாதம் தொடங்குவதாலும் ஆன்மீகக் காரணங்களுக்காகப் பலரும் முட்டை மற்றும் இறைச்சி சாப்பிடுவதைக் குறைப்பார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;இதனால் சந்தையில் தேவை (Demand) குறைந்து, விலையும் குறைய வாய்ப்புள்ளது. ஆனால், பருவமழை சரியாக இல்லாவிட்டால், தீவன விலை குறையாது என்பதால் முட்டை விலை குறைவதும் கடினம் தான் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[tamilnadu]]></category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/egg-price-soar-to-record-highs-in-tamil-nadu-chicken-prices-follow-suit-ryre21u"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Morning Water: காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் தொப்பை வருமா? உண்மை என்ன?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/can-morning-water-make-your-belly-fat-experts-reveal-the-facts-y3q5pmg</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/can-morning-water-make-your-belly-fat-experts-reveal-the-facts-y3q5pmg</guid>
            <pubDate>Sat, 18 Jul 2026 14:32:10 +0530</pubDate>
            <description><![CDATA[Morning Water: காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லதா, அல்லது அதனால் தொப்பை அதிகரிக்குமா என்ற சந்தேகம் பலரிடம் உள்ளது. இதனைப் பற்றி மருத்துவ நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxt00aw02khrrsxbmnwwdsrr,imgname-morning-water-1784357596031.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Morning Water: காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லதா, அல்லது அதனால் தொப்பை அதிகரிக்குமா என்ற சந்தேகம் பலரிடம் உள்ளது. இதனைப் பற்றி மருத்துவ நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடித்தால் வயிறு பெரிதாகிவிடும் அல்லது தொப்பை அதிகரிக்கும் என்ற கருத்து சிலரிடம் பரவலாக உள்ளது. ஆனால், இதை உறுதிப்படுத்தும் அறிவியல் ஆதாரங்கள் தற்போது இல்லை. மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களின் விளக்கங்களின்படி, தண்ணீர் அருந்துவது மட்டுமே உடலில் கொழுப்பை சேர்க்கவோ அல்லது தொப்பையை உருவாக்கவோ காரணமாகாது. எனவே, காலையில் தண்ணீர் குடிப்பதால் தொப்பை வரும் என்ற நம்பிக்கை அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படாது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குடித்த பிறகு அது உடலால் விரைவாக உறிஞ்சப்பட்டு பல்வேறு உடல் செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. உணவைப் போல தண்ணீருக்கு நீண்ட செரிமான செயல்முறை தேவையில்லை. அதனால், அது வயிற்றில் நீண்ட நேரம் தங்கி கொழுப்பாக மாறும் என்ற கருத்துக்கு எந்த ஆதாரமும் இல்லை. மாறாக, உடலில் போதுமான நீர்ச்சத்தை பராமரிக்க தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உடலின் இயல்பான செயல்பாடுகளை சீராக வைத்திருக்க உதவுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;காலையில் தண்ணீர் குடிக்கும் பழக்கம் சில ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கக்கூடும். உடலின் நீர்ச்சத்தை சமநிலைப்படுத்துதல், மலச்சிக்கலைக் குறைக்க உதவுதல் மற்றும் உடலின் இயல்பான வளர்சிதை மாற்ற செயல்பாடுகளுக்கு ஆதரவாக இருப்பது போன்ற பலன்கள் கிடைக்கலாம். சிலர் வெதுவெதுப்பான தண்ணீரை விரும்பி குடிப்பார்கள். அது குடிக்க வசதியாக இருக்கலாம். இருப்பினும், வெதுவெதுப்பான தண்ணீர் சாதாரண தண்ணீரைவிட உடலை &quot;டிடாக்ஸ்&quot; செய்யும் எந்த கூற்றுக்கு உறுதியான அறிவியல் ஆதாரம் இல்லை. குறிப்பாக, தினசரி தேவைக்கேற்ப போதுமான அளவு தண்ணீர் அருந்துவதே.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உண்மையில், தொப்பை அதிகரிப்பதற்கு பல்வேறு வாழ்க்கை முறை காரணிகளே முக்கிய பங்காகின்றன. தேவைக்கு அதிகமாக கலோரி உட்கொள்வது, அடிக்கடி அதிக அளவில் உணவு சாப்பிடுவது, சர்க்கரை கலந்த பானங்கள் மற்றும் மதுபானங்களை அதிகம் அருந்துவது, உடற்பயிற்சி இல்லாமை, போதிய தூக்கமின்மை, நீடித்த மன அழுத்தம், மரபியல் மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் போன்றவை வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேர்வதற்கான முக்கிய காரணிகளாகக் கருதப்படுகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உடல் எடையையும், வயிற்றுக் கொழுப்பையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புபவர்கள் சமநிலையான உணவுமுறையைப் பின்பற்ற வேண்டும். தினசரி உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குதல், போதுமான அளவு தண்ணீர் அருந்துதல், பதப்படுத்தப்பட்ட மற்றும் அதிக சர்க்கரை கொண்ட உணவுகளை குறைத்தல், தரமான தூக்கத்தை உறுதிப்படுத்துதல் போன்ற ஆரோக்கியமான பழக்கங்கள் நீண்டகால நன்மைகளை அளிக்கும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையே உடல் எடையைக் கட்டுப்படுத்துவதற்கான முக்கிய வழி என்பதை மறக்கக்கூடாது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[life-style]]></category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/can-morning-water-make-your-belly-fat-experts-reveal-the-facts-y3q5pmg"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Hernia Symptoms: ஹெர்னியா என்றால் என்ன? அதன் முதல் அறிகுறிகள் எப்படி இருக்கும்?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style-fashion/what-is-a-hernia-do-you-know-its-very-first-symptoms-kummmzy</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style-fashion/what-is-a-hernia-do-you-know-its-very-first-symptoms-kummmzy</guid>
            <pubDate>Sat, 18 Jul 2026 14:12:28 +0530</pubDate>
            <description><![CDATA[Hernia: ஹெர்னியா ஆண்களுக்கு அதிகமாக வரக்கூடியது. அடிவயிற்றின் தசை பலவீனமடைந்து, குடல் பகுதி விதைப்பை (Scrotum) அல்லது தொடை இடுக்கு பகுதிக்கு இறங்குவது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kfmr9anzcwx813p3pcra8kfj,imgname-hernia-pain-1769149344447.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Hernia: ஹெர்னியா ஆண்களுக்கு அதிகமாக வரக்கூடியது. அடிவயிற்றின் தசை பலவீனமடைந்து, குடல் பகுதி விதைப்பை (Scrotum) அல்லது தொடை இடுக்கு பகுதிக்கு இறங்குவது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஹெர்னியா என்பது தமிழில் பொதுவாக 'குடலிறக்கம்' என்று அழைக்கப்படுகிறது. நமது உடலின் உட்புற உறுப்பு அல்லது குடல் பகுதி, அதைத் தாங்கிப் பிடிக்கும் தசைச் சுவரில் ஏற்படும் பலவீனமான துளை வழியாக வெளியே பிதுக்கிக் கொண்டு வருவதையே குடலிறக்கம் என்கிறோம். இது ஆண்களுக்கு அதிகமாக வரக்கூடியது. இதன் அறிகுறிகள் என்னவென்றால் பளு தூக்கும்போதும், இருமும்போதும், கடினமான வேலைகள் செய்யும்போதும் ஹெர்னியா இருக்கிற இடத்தில் வலியும் வீக்கமும் ஏற்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வயிற்றில் தசை பலவீனமாக இருக்கும் இடத்தில் ஒரு கட்டி மாதிரி இது தெரியும். ஆரம்பத்தில் வலி இருக்காது, ஆனால் போகப்போக வலி அதிகமாகும். படுக்கும்போதோ அல்லது கையால் லேசாக அழுத்தினாலோ இந்த கட்டி உள்ளே போய்விடும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பொதுவாக அடிவயிற்றில் வருவதுதான் சகஜமான ஹெர்னியா. அடிவயிற்று தசையும் தொடைப் பகுதியும் சேரும் இடத்தில் இது உருவாகும். வயது, பரம்பரை தசை பலவீனம், அதிக உடலுழைப்பு, புகைப்பிடித்தல் போன்றவை காரணமாக இருக்கலாம். வயிற்றுத் தசைகள் பலவீனமாக இருப்பதும், அடிவயிற்றில் அழுத்தம் அதிகரிப்பதும் கூட ஒரு காரணம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வாந்தி, மலச்சிக்கல், அடிவயிற்றில் வீக்கத்தோடு கடுமையான வலியும் ஏற்படலாம். ஆனால், முதல் அறிகுறியே அந்த கட்டி மாதிரி வருவதுதான். உடம்பில் ஒரு பகுதி வீங்கி நிற்பது, படுக்கும்போது அல்லது அழுத்தும் போது அந்த வீக்கம் உள்ளே போவது போல உணர்வது, இவையெல்லாம் ஹெர்னியா அறிகுறிகள்தான்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மருத்துவர் நேரடியாக பரிசோதனை செய்தே ஹெர்னியாவைக் கண்டுபிடித்துவிடுவார். சில சமயம், அல்ட்ராசோனோகிராபி அல்லது சிடி ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் தேவைப்படலாம். ஹெர்னியாவுக்கான காரணத்தைக் கண்டறிவதும் ரொம்ப முக்கியம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேலே சொன்ன அறிகுறிகள் ஏதாவது தெரிந்தால், நீங்களாக எதையும் முடிவு செய்யாமல் உடனடியாக மருத்துவரைப் பாருங்கள். பரிசோதனைக்கு அப்புறம் மட்டும்தான் நோயை உறுதி செய்ய வேண்டும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[life-style-fashion]]></category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style-fashion/what-is-a-hernia-do-you-know-its-very-first-symptoms-kummmzy"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Car Mileage Tips: காரில் இதை மட்டும் செய்யுங்க.. மைலேஜ் பிச்சுக்கும்.. பெட்ரோல் செலவு கவலையே இல்ல!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/auto/how-to-increase-car-mileage-discover-the-sweet-spot-speed-for-your-car-xh31k3m</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/auto/how-to-increase-car-mileage-discover-the-sweet-spot-speed-for-your-car-xh31k3m</guid>
            <pubDate>Sat, 18 Jul 2026 14:04:29 +0530</pubDate>
            <description><![CDATA[உங்கள் காரில் அதிக மைலேஜ் பெற சிறந்த வேகம் எது? உங்கள் பெட்ரோல், டீசல் செலவை பாதியாக குறைக்க உதவும் ரகசிய 'Sweet Spot' வேகம் மற்றும் கார் மைலேஜ் டிப்ஸ் குறித்து பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxt5d9xr0zkh63k67h8qcz23,imgname-car-mileage-tips-1784363263928.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;உங்கள் காரில் அதிக மைலேஜ் பெற சிறந்த வேகம் எது? உங்கள் பெட்ரோல், டீசல் செலவை பாதியாக குறைக்க உதவும் ரகசிய 'Sweet Spot' வேகம் மற்றும் கார் மைலேஜ் டிப்ஸ் குறித்து பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் இன்றைய சூழலில், கார் வைத்திருக்கும் பலருக்கும் இருக்கும் பொதுவான கவலை அதன் மைலேஜ் தான். நாம் வாங்கிய காரில் நிறுவனம் சொன்ன மைலேஜ் கிடைக்கவில்லையே என்பது பலரின் ஆதங்கமாக இருக்கிறது. ஆனால், காரின் மைலேஜ் என்பது இன்ஜினைத் தாண்டி, நாம் ஓட்டும் விதத்திலும், குறிப்பாக வேகத்திலும்தான் பெரிதும் அடங்கியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;அதிக வேகத்தில் பறந்தால் சீக்கிரம் சென்றுவிடலாம். ஆனால் பாக்கெட்டில் இருந்து அதிக பணம் கரையும். அதே சமயம், மிக மெதுவாக ஆமை வேகத்தில் சென்றாலும் எரிபொருள் வீணாகும். அப்படியானால், அதிகபட்ச மைலேஜை பெற சரியான வேகம் என்று ஒன்று இருக்கிறதா? நிச்சயமாக இருக்கிறது, அதைத்தான் 'ஸ்வீட் ஸ்பாட்' என்கிறார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க:&lt;/strong&gt; செடான் கார்களில் ஏன் 'ரியர் வைப்பர்' இல்லை? காசு மிச்சப்படுத்தவா? பின்னாடி சயின்ஸ் இருக்கு!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒவ்வொரு காரின் இன்ஜினும் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் இயங்கும்போதுதான் மிகத் திறமையாகவும், குறைந்த எரிபொருளை பயன்படுத்தியும் இயங்கும். பொதுவாக, மணிக்கு 70 முதல் 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்போது பெரும்பாலான கார்கள் சிறந்த மைலேஜை தருவதாக கூறப்படுகிறது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;ஆனால், இது எல்லா கார்களுக்கும் பொருந்தும் என்று சொல்லிவிட முடியாது. உங்கள் காரின் இன்ஜின் வகை (பெட்ரோல், டீசல்), அதன் கியர்பாக்ஸ் அமைப்பு மற்றும் காரின் ஒட்டுமொத்த எடை ஆகியவற்றைப் பொறுத்து இந்த 'ஸ்வீட் ஸ்பாட்' வேகம் மாறுபடும்.&lt;/p&gt;&lt;p&gt;உதாரணமாக, ஒரு சிறிய ஹேட்ச்பேக் காரின் உகந்த வேகம், ஒரு பெரிய எஸ்யூவி காரின் உகந்த வேகத்திலிருந்து நிச்சயம் வேறுபடும். விஷயம் சிம்பிள் தான், உங்கள் காரின் இன்ஜினுக்கு எப்போது குறைவான அழுத்தம் ஏற்படுகிறதோ, அப்போதுதான் அது குறைவான எரிபொருளைக் குடிக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க: &lt;/strong&gt;பைக் கழுவும்போது இந்த தவறு மட்டும் செய்யாதீங்க! ஆயுளைக் குறைக்கும் எச்சரிக்கை!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சரியான RPM-இல் கியர் மாற்றுவது: இன்ஜின் அதிக அழுத்தமின்றி இயங்குவதற்கு RPM (Revolutions Per Minute) முக்கிய பங்கு வகிக்கிறது. பெட்ரோல் கார்களில் 1,500 முதல் 2,000 RPM-க்குள்ளும், டீசல் கார்களில் 2,000 RPM-க்குள்ளும் அடுத்த கியருக்கு மாறுவது மைலேஜை கணிசமாக உயர்த்தும்.&lt;/p&gt;&lt;p&gt;டாப் கியர் (Top Gear) பயன்பாடு: குறைந்த வேகத்தில் டாப் கியரில் செல்வதோ (Lugged Engine) அல்லது அதிக வேகத்தில் லோ கியரில் செல்வதோ மைலேஜை கடுமையாகப் பாதிக்கும். 70-90 கி.மீ வேகத்தில் செல்லும்போது கார் டாப் கியரில் (5 அல்லது 6வது கியர்) இருப்பது அவசியம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உங்கள் காரின் சரியான 'ஸ்வீட் ஸ்பாட்' வேகத்தைக் கண்டறிவது ஒன்றும் ராக்கெட் அறிவியல் இல்லை. இன்றைய நவீன கார்களில் 'ரியல்-டைம் மைலேஜ் இன்டிகேட்டர்' என்ற வசதி உள்ளது. நீங்கள் வாகனம் ஓட்டும்போது, அந்தந்த நொடியில் உங்கள் கார் எவ்வளவு மைலேஜ் தருகிறது என்பதை இது திரையில் காட்டும். அடுத்த முறை நெடுஞ்சாலையில் செல்லும்போது, இந்த இன்டிகேட்டரை கவனியுங்கள். எந்த கியரில், எந்த வேகத்தில் செல்லும்போது மைலேஜ் எண் அதிகமாகக் காட்டுகிறதோ, அதுவே உங்கள் காரின் 'ஸ்வீட் ஸ்பாட்'.&lt;/p&gt;&lt;p&gt;சீரான வேகத்தில், திடீர் பிரேக் மற்றும் ஆக்ஸலரேஷனைத் தவிர்த்து ஓட்டும்போது, எரிபொருள் சிக்கனம் தானாகவே மேம்படுவதை நீங்கள் உணர முடியும். &amp;nbsp;எனவே, அடுத்த முறை காரை எடுக்கும்போது வேகத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல், சரியான வேகத்தை கருத்தில் கொள்ளுங்கள். இது உங்கள் பயண நேரத்தை பெரிய அளவில் பாதிக்காது, ஆனால் உங்கள் மாத எரிபொருள் செலவில் நிச்சயம் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[auto]]></category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/auto/how-to-increase-car-mileage-discover-the-sweet-spot-speed-for-your-car-xh31k3m"/>
        </item>
        <item>
            <title><![CDATA[OTT : காதலும்... துரோகமும்; ஓடிடியில் சக்கைப்போடு போடும் மலையாள த்ரில்லர் படம் - கதை என்ன தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/this-malayalam-thriller-is-packed-with-love-and-betrayal-udal-a-must-watch-psychological-thriller-on-ott-athq0id</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/this-malayalam-thriller-is-packed-with-love-and-betrayal-udal-a-must-watch-psychological-thriller-on-ott-athq0id</guid>
            <pubDate>Sat, 18 Jul 2026 14:00:05 +0530</pubDate>
            <description><![CDATA[OTT Must Watch Movie : ஓடிடியில் வெளியாகும் பல்வேறு திரைப்படங்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்து வருகின்றன. அப்படி மலையாளத்தில் வெளிவந்த ஒரு த்ரில்லர் படத்தை பற்றி தான் பார்க்க உள்ளோம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxt56d7jx0ydm23krswbvhgq,imgname-ott--1--1784363037938.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;OTT Must Watch Movie : ஓடிடியில் வெளியாகும் பல்வேறு திரைப்படங்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்து வருகின்றன. அப்படி மலையாளத்தில் வெளிவந்த ஒரு த்ரில்லர் படத்தை பற்றி தான் பார்க்க உள்ளோம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஓடிடி தளங்களின் வருகைக்குப் பிறகு, மொழி எல்லைகளைத் தாண்டி திரைப்படங்களை ரசிக்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, மலையாள சினிமாவில் வெளியாகும் த்ரில்லர் மற்றும் சஸ்பென்ஸ் கதைக்களம் கொண்ட படங்களுக்கு தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில், காதல், துரோகம், குற்றம் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒரு மலையாள திரைப்படம் தற்போது ஓடிடியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. தமிழிலும் டப் செய்யப்பட்டு பார்க்கக் கிடைக்கும் இந்த படம், ஆரம்பம் முதல் இறுதி வரை பரபரப்பை குறைக்காமல் நகர்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தப் படத்தின் மையக் கதாபாத்திரங்கள் ஷைனி மற்றும் ரெஜி என்ற தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார். குடும்பத்தின் பொருளாதார தேவைக்காக ரெஜி நகரத்தில் வேலை செய்து, மாதந்தோறும் வீட்டிற்கு பணம் அனுப்புகிறார். இதற்கிடையில், ஷைனி தனது மகன் மற்றும் வயதான மாமியார், மாமனாருடன் கிராமத்தில் வசித்து வருகிறார். மாமியாரின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அவரை கவனித்துக்கொள்ளும் பொறுப்பு ஷைனிக்கு வருகிறது. வெளியில் பார்க்கும்போது அமைதியான குடும்பமாகத் தோன்றினாலும், ஷைனியின் வாழ்க்கையில் மறைக்கப்பட்ட ஒரு ரகசியம் இருக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில், தனது பழைய நண்பரான கிரணுடன் ஷைனி நெருக்கமான உறவில் ஈடுபடுகிறார். இந்த உறவு மாமியார் மற்றும் மாமனாருக்கு தெரியவர, அவர்கள் அதை எதிர்க்கிறார்கள். இதனால் குடும்பத்தில் பதற்றம் அதிகரிக்கிறது. இதையடுத்து, தங்களது உறவுக்கு தடையாக இருப்பவர்களை அகற்ற வேண்டும் என்ற எண்ணத்தில், ஷைனியும் கிரணும் ஒரு அதிர்ச்சி தரும் முடிவை எடுக்கிறார்கள். ஆனால் அவர்களின் திட்டம் எதிர்பாராத விதமாக திருப்பம் பெறுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;ஒரு கட்டத்தில், இருவரின் சதித் திட்டத்தையும் மாமனார் அறிந்துகொள்கிறார். அதன்பிறகு நிகழும் சம்பவங்கள் கதையை முழுமையாக மாற்றி விடுகின்றன. ஷைனியும் கிரணும் தங்களது திட்டத்தில் வெற்றி பெற்றார்களா? உண்மை இறுதியில் யாருக்கு சாதகமாக அமைந்தது? என்பதற்கான பதிலை படம் பார்க்கும்போதுதான் தெரியும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நம்ம எல்லாருமே நாகரிகமானவங்க கிடையாது. நமக்குள்ள ஆசைகள், கோபங்கள், வன்மங்கள்னு பல விஷயங்களை அடக்கி வெச்சிருக்கோம். அதுதான் நம்மளோட உண்மையான 'உடல்'. அந்த மிருக குணம் எப்போ வேணும்னாலும் வெளிய வரலாம். அப்படி ஒரு சூழல் வந்தா என்ன ஆகும்? இந்த கேள்வியைத்தான் ரதீஷ் ரகுநந்தன் இயக்கிய 'உடல்' படம் நம்ம முன்னாடி வைக்குது. மனித மனசோட ஆழத்துக்கும், உணர்ச்சிகளோட உச்சத்துக்கும் நம்மள கூட்டிட்டுப் போற ஒரு மிரட்டலான அனுபவம் இந்தப் படம். இந்த படத்தில் துர்கா கிருஷ்ணா, தயான் ஸ்ரீனிவாசன், இந்திரன்ஸ், ஜூடே ஆண்டனி ஜோசப் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிச்சிருக்கு. இப்படத்தை ரதீஷ் ரகுநந்தன் இயக்கி இருக்கிறார். கோகுலம் கோபாலன் இப்படத்தை தயாரித்துள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;'உடல்' திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளங்களில் ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது. குடும்ப உறவுகள், துரோகம், சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் அம்சங்கள் நிறைந்த படங்களை விரும்புபவர்கள் இந்தப் படத்தை ஒரு முறை கண்டிப்பாக பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[cinema]]></category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/this-malayalam-thriller-is-packed-with-love-and-betrayal-udal-a-must-watch-psychological-thriller-on-ott-athq0id"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Fun Facts: கம்ப்யூட்டர் மவுஸில் ஏன் சிவப்பு விளக்கு எரிகிறது? இது வெறும் டிசைன் இல்ல.! செம்ம இன்ஜினியரிங் ட்ரிக்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/technology/fun-facts-why-do-computer-mouse-have-red-lights-the-science-and-engineering-trick-behind-optical-mouse-sensors-explained-r2w6fy1</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/technology/fun-facts-why-do-computer-mouse-have-red-lights-the-science-and-engineering-trick-behind-optical-mouse-sensors-explained-r2w6fy1</guid>
            <pubDate>Sat, 18 Jul 2026 13:49:44 +0530</pubDate>
            <description><![CDATA[Why do Computer Mouse have Red Lights: கம்ப்யூட்டர் மவுஸின் (Mouse) கீழ் ஏன் எப்போதும் சிவப்பு விளக்குகள் பயன்படுத்தப்படுகிறது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அதன் பின்னால் உள்ள காரணத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxt43h9ch9e03s5ay5h7e7r8,imgname-why-do-computer-mouse-have-red-lights-1784361895212.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Why do Computer Mouse have Red Lights: கம்ப்யூட்டர் மவுஸின் (Mouse) கீழ் ஏன் எப்போதும் சிவப்பு விளக்குகள் பயன்படுத்தப்படுகிறது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அதன் பின்னால் உள்ள காரணத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நாம் அன்றாடம் பயன்படுத்தும் கணினி அல்லது மடிக்கணினிகளில் பயன்படுத்தப்படும் மவுஸின் அடிப்பகுதியில் எப்போதும் சிகப்பு நிற விளக்குகளே எரிகின்றன. எத்தனையோ வண்ணங்கள் இருந்தாலும் ஏன் சிவப்பு நிறம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து என்றாவது யோசித்திருக்கிறீர்களா? இதற்குப் பின்னால் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார காரணங்கள் உள்ளன. அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் - &amp;nbsp;&lt;/strong&gt;Interesting Facts: Thanks vs Thank You ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்? எப்போ எதை யூஸ் பண்ணனும்?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பழைய மவுஸ்கள் அதாவது 1990-களுக்கு முன்பு வரை மவுஸ்களின் அடிப்பகுதியில் எல்இடி விளக்குகள் எதுவும் இருக்காது. ஒரு கனமான ரப்பர் அல்லது உலோக பந்துகள் மட்டுமே பயன்படுத்தப்படும். மவுஸை நகர்த்தும்பொழுது அந்த பந்து சுழலும். அதன் அடிப்படையில் திரையில் கர்சர் நகரும். இந்த மவுஸ்கள் அனைத்து பரப்புகளிலும் சரியாக வேலை செய்யாது. சில சமயம் பந்து சுழலாமல் சிக்கிக்கொண்டால் மவுஸ் ஒழுங்காக வேலை செய்யாது. தூசி படிந்தால் பந்து சுழல்வதில் சிக்கல் ஏற்படும். இந்த குறைபாடுகளை போக்க பந்துகளுக்கு பதிலாக எல்இடி விளக்குகள் மற்றும் சென்சார் ஆப்டிகல் மவுஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டன.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் - &amp;nbsp;&lt;/strong&gt;Lawyer vs Advocate: லாயர், அட்வகேட் ரெண்டும் ஒன்னு கிடையாது.! அட, இவ்வளவு வித்தியாசம் இருக்கா.? 99% பேருக்கு தெரியாத ரகசியம்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆப்டிகல் மவுஸ்கள் சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்ட போது மற்ற வண்ணங்களை காட்டிலும் சிகப்பு நிறமானது தொழில்நுட்பம் பழமையானதாகவும், விலை மலிவானதாகவும் இருந்தது. மவுஸ்களின் உற்பத்திச் செலவைக் குறைக்கும் பொருட்டு இது சிறந்த தேர்வாக அமைந்தது. மவுஸின் கீழ் இருக்கும் சிறிய எல்இடி விளக்கோடு மிகச் சிறிய கேமராவும் பொருத்தப்பட்டிருக்கும். இந்த சிவப்பு விளக்கு தரை பரப்பின் மீது பட்டுப் பிரதிபலிக்கும் பொழுது அங்கு இருக்கும் குட்டி கேமரா ஒரு நொடிக்கு ஆயிரக்கணக்கான புகைப்படங்களை எடுக்கிறது. அந்த புகைப்படங்களில் ஏற்படும் மாற்றங்களை மவுஸிற்குள் இருக்கும் குட்டி பிராஸசர் கணக்கிடுகிறது. அதை வைத்தே கம்ப்யூட்டர் திரையில் கர்சர் நகர்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் - &amp;nbsp;&lt;/strong&gt;Mukesh Ambani House: அம்பானி வீட்ல வேலை வேணுமா? அரசு வேலையை விட கடினமாம்.! என்ன தகுதிகள் இருக்கணும்னு தெரிஞ்சிக்கோங்க.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அறிவியல் ரீதியாக பார்க்கும் பொழுது மற்ற வண்ணங்களை விட சிகப்பு நிற ஒளியை உமிழ குறைந்த மின்னழுத்தம் போதுமானது. இதனால் கணினி அல்லது மடிக்கணினியின் மின் நுகர்வும் குறைகிறது. குறிப்பாக பேட்டரி மூலம் இயங்கும் வயர்லெஸ் மவுஸ்களில் சார்ஜ் நீண்ட நேரம் நீடிக்கவும் சிவப்பு விளக்கு பெருமளவில் உதவுகிறது. மவுஸில் உள்ள ஆப்டிகல் சென்சார்கள் சிகப்பு நிற வெளிச்சத்தை எளிதாகவும் துல்லியமாகவும் கண்டறியும் திறன் கொண்டவையாகவும் அதிக வெளிச்சம் தருவதாகவும் இருந்தது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் - &amp;nbsp;&lt;/strong&gt;Water Bottle: வாட்டர் பாட்டில் மூடி ஏன் வெவ்வேற கலர்ல இருக்குனு யோசிச்சிருக்கீங்களா? இதுக்கு பின்னாடி பெரிய சயின்ஸ் இருக்கு.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இப்போது வரும் நவீன மவுஸ்களில் சிகப்பு விளக்கிற்குப் பதிலாக லேசர் அல்லது ப்ளூ ட்ராக் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறார்கள். இது கண்ணாடியின் மேல் கூட துல்லியமாக வேலை செய்யும். ஆனால் பட்ஜெட் விலையில் கிடைக்கும் மவுஸ்களில் இன்றும் சிகப்பு விளக்கே முதன்மையாக பயன்படுத்தப்படுகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[technology]]></category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/technology/fun-facts-why-do-computer-mouse-have-red-lights-the-science-and-engineering-trick-behind-optical-mouse-sensors-explained-r2w6fy1"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Sameera Reddy: 'ஹீரோ குள்ளமா இருந்தா அது அவர் பிரச்சனை, என் தப்பில்லை'.. புயலைக் கிளப்பிய சமீரா ரெட்டி - யாரை சொல்கிறார்?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/sameera-reddy-recalls-facing-discrimination-for-her-height-and-skin-tone-x3g8f0n</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/sameera-reddy-recalls-facing-discrimination-for-her-height-and-skin-tone-x3g8f0n</guid>
            <pubDate>Sat, 18 Jul 2026 13:20:46 +0530</pubDate>
            <description><![CDATA[Sameera Reddy : தமிழில் வேட்டை, வெடி, வாரணம் ஆயிரம் போன்ற படங்களில் நடித்து பேமஸ் ஆன நடிகை சமீரா ரெட்டி, சினிமாவில் தான் எதிர்கொண்ட சவால்கள் பற்றி ஓப்பனாக பேசி இருக்கிறார்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxt36jjb62wetk58s8ywbz7j,imgname-sameera-reddy-1784360946251.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Sameera Reddy : தமிழில் வேட்டை, வெடி, வாரணம் ஆயிரம் போன்ற படங்களில் நடித்து பேமஸ் ஆன நடிகை சமீரா ரெட்டி, சினிமாவில் தான் எதிர்கொண்ட சவால்கள் பற்றி ஓப்பனாக பேசி இருக்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சினிமா உலகின் கருப்புப் பக்கம்: வெள்ளை நிறத்துக்காக முகத்தில் நாலு லேயர் பெயின்ட்! சமீரா ரெட்டி பகிர்ந்த அதிர்ச்சி உண்மைகள். சினிமா உலகம்னா கலர், வெளிச்சம், கிளாமர்னு எல்லாம் இருக்கும். ஸ்க்ரீன்ல மின்னுற நடிகைகளைப் பார்த்து, 'என்ன ஒரு அழகான வாழ்க்கை இவங்களுக்கு'னு நாம நினைப்போம். ஆனா, இந்த அழகான முகங்களுக்குப் பின்னாடி எவ்வளவு வலி, அவமானம், தாழ்வு மனப்பான்மை ஒளிஞ்சிருக்குனு யாருக்கும் தெரியாது. பல வருஷமா சினிமாவுல ஜெயிச்ச நடிகை சமீரா ரெட்டி, சமீபத்துல தன் கேரியர் ஆரம்பத்துல நடந்த மோசமான அனுபவங்களைப் பத்தி பேசியிருக்காங்க. அவங்க சொல்றதைக் கேட்டா, இந்த கிளாமர் உலகம் எவ்வளவு கொடூரமானதுனு புரியும்.&lt;/p&gt;&lt;img&gt;2002-ல் 'மைனே தில் துஜ்கோ தியா' படம் மூலமா சமீரா பாலிவுட்ல என்ட்ரி கொடுத்தப்போ, அவங்க சந்திச்ச முதல் சவால் அவங்களோட இயற்கையான நிறம்! சமீரா கொஞ்சம் மாநிறம் (Dusky skin tone). ஆனா, அப்போதைய சினிமாவுக்கு தேவைப்பட்டது 'பால் போன்ற வெள்ளை' நிறம். சமீரா சொல்றாங்க, 'தினமும் ஷூட்டிங்குக்கு முன்னாடி என் முகத்துல மூணுல இருந்து நாலு லேயர் வெள்ளை மேக்கப் போடுவாங்க. அது ரொம்ப செயற்கையா இருக்கும், சில சமயம் என் முகம் சாம்பல் நிறத்துல மாறிடும். முகத்தோட நிறத்துக்கு மேட்ச் பண்ண என் உடம்பு முழுசும் ஸ்பெஷல் பெயின்ட் அடிப்பாங்க!' ஒரு நடிகையோட திறமையை விட அவங்க தோல் நிறம் தான் அங்க முக்கியமா இருந்துருக்கு.&lt;img&gt;நிறம் மட்டுமில்ல, பாடி ஷேமிங்கும் சமீராவுக்கு பெரிய பிரச்சனையா இருந்துச்சு. 20 வயசுல, அவங்களால கண்ணாடியில தன்னையே ஏத்துக்க முடியல. 'மக்கள் என்னைக் குண்டுனு சொன்னாங்க, என் கண்கள் அழகா இல்லைனு சொன்னாங்க. இதனால நான் எப்பவும் செயற்கையான விஷயங்களைத்தான் நம்பியிருந்தேன். நான் பேடட் ப்ரா, ஹிப் பேட்ஸ் எல்லாம் போட்டேன். கண் கலரை மாத்த கான்டாக்ட் லென்ஸ் யூஸ் பண்ணேன். நான் நானா இருக்க அவங்க விடவே இல்லை'னு தன்னோட வலியைப் பகிர்ந்திருக்காங்க.&lt;img&gt;&lt;p&gt;சமீராவோட இன்னொரு பெரிய பிரச்சனை அவரோட 'ஹைட்'. பாலிவுட், டோலிவுட், கோலிவுட்னு பல ஹீரோக்களை விட சமீரா உயரமா இருந்தாங்க. 'என் ஹீரோ குள்ளமா இருந்ததால, நான் எப்பவும் குனிஞ்சே நடக்கணும். என் உயரத்தை மறைக்க ரொம்ப சர்க்கஸ் பண்ண வேண்டியிருந்தது'னு சமீரா சொல்லியிருக்காங்க. இதைக் கேட்டதும் நெட்டிசன்கள், டோலிவுட் யங் டைகர் என்.டி.ஆர்-ஐ (NTR) கை காட்டுறாங்க. சமீரா, என்.டி.ஆர் கூட 'அஷோக்', 'நரசிம்முடு' படங்கள்ல நடிச்சிருந்தாங்க. அப்போ என்.டி.ஆர்-ஐ விட சமீரா உயரமா தெரிவாங்க. அதனால, சமீரா சொன்ன இந்த 'ஷார்ட் ஹீரோ' கமென்ட் நேரடியா என்.டி.ஆர்-க்கு தான் போயிருக்குனு சோஷியல் மீடியாவுல விவாதம் ஆரம்பிச்சிருக்கு.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒரு சிலரோ அவர் சூர்யாவை தான் குறிப்பிடுவதாக சொல்கிறார்கள். அவர் சூர்யாவுக்கு ஜோடியாக வாரணம் ஆயிரம் படத்தில் நடித்திருந்தார். இதெல்லாம் நெட்டிசன்களின் கணிப்பு தான் ஆனால் அவர் எந்த ஹீரோவையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. அப்போ கிடைச்ச அவமானங்களும், விமர்சனங்களும் சமீராவுக்குள்ள ஒரு மாற்றத்தை கொண்டு வந்துச்சு. 'நான் 40 வயசைத் தொட்ட பிறகுதான், என்னை நான் முழுசா ஏத்துக்க கத்துக்கிட்டேன். ஹீரோ குள்ளமா இருந்தா அது அவரோட பிரச்சனை, என்னோடது இல்லைங்கிற உண்மை எனக்கு லேட்டாதான் புரிஞ்சது'னு இப்போ அவங்க சிரிச்சுக்கிட்டே சொல்றாங்க.&lt;/p&gt;&lt;img&gt;இன்னைக்கு சமீரா ரெட்டி சோஷியல் மீடியாவுல 'பாடி பாசிட்டிவிட்டி' பத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திட்டு வராங்க. தன்னோட நரை முடி, சுருக்கங்கள் விழுந்த சருமம், இயற்கையான உடல் நிறம் எல்லாத்தையும் பெருமையா காட்டி, 'நான் எப்படி இருக்கேனோ அப்படியே அழகு'னு சொல்றாங்க. சமீராவுடைய இந்த பயணம் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு இன்ஸ்பிரேஷன்.]]></content:encoded>
            <category><![CDATA[cinema]]></category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/sameera-reddy-recalls-facing-discrimination-for-her-height-and-skin-tone-x3g8f0n"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Gut Health: செரிமானம் சீராக வேண்டுமா? குடலுக்கு நல்ல 7 காய்கறிகள் இதோ]]></title>
            <link>https://tamil.asianetnews.com/webstories/life-style/top-7-vegetables-that-support-gut-health-w2m9qrz</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/webstories/life-style/top-7-vegetables-that-support-gut-health-w2m9qrz</guid>
            <pubDate>Sat, 18 Jul 2026 12:56:25 +0530</pubDate>
            <description><![CDATA[நல்ல ஆரோக்கியம் வேணும்னா, நம்ம வாழ்க்கை முறையில சில மாற்றங்களை கொண்டு வரணும். குடல் ஆரோக்கியத்தை சூப்பரா வெச்சுக்க கண்டிப்பா சாப்பிட வேண்டிய காய்கறிகள் என்னென்னனு பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kkx42zcdeq7f28qykvqn7s78,imgname-mixcollage-17-mar-2026-10-53-am-3023-1773725121933.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;நல்ல ஆரோக்கியம் வேணும்னா, நம்ம வாழ்க்கை முறையில சில மாற்றங்களை கொண்டு வரணும். குடல் ஆரோக்கியத்தை சூப்பரா வெச்சுக்க கண்டிப்பா சாப்பிட வேண்டிய காய்கறிகள் என்னென்னனு பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[life-style]]></category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/webstories/life-style/top-7-vegetables-that-support-gut-health-w2m9qrz"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Interesting Facts: Thanks vs Thank You ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்? எப்போ எதை யூஸ் பண்ணனும்?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/interesting-facts-difference-between-thanks-and-thank-you-when-to-use-each-correctly-in-everyday-english-2gfzhd9</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/interesting-facts-difference-between-thanks-and-thank-you-when-to-use-each-correctly-in-everyday-english-2gfzhd9</guid>
            <pubDate>Sat, 18 Jul 2026 12:27:15 +0530</pubDate>
            <description><![CDATA[Interesting Facts: நாம தினமும் பயன்படுத்துற வார்த்தைகள்ல 'Thanks'ம் ஒண்ணு. ஆனா 'Thanks', 'Thank you'னு ரெண்டுமே சொல்வோம். ரெண்டுக்கும் ஒரே அர்த்தம்னாலும், பயன்படுத்துற இடங்கள் வேற. அது என்னன்னு இப்போ பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxt0350r1bagjs33mjdbjsqp,imgname-interesting-facts---thanks-vs-thank-you-1784357688344.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Interesting Facts: நாம தினமும் பயன்படுத்துற வார்த்தைகள்ல 'Thanks'ம் ஒண்ணு. ஆனா 'Thanks', 'Thank you'னு ரெண்டுமே சொல்வோம். ரெண்டுக்கும் ஒரே அர்த்தம்னாலும், பயன்படுத்துற இடங்கள் வேற. அது என்னன்னு இப்போ பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒருத்தர் நமக்கு உதவி செஞ்சா நன்றி சொல்ல 'Thanks' அல்லது 'Thank you' பயன்படுத்துவோம். ஆனா, 'Thanks' என்பது நண்பர்கள், குடும்பத்தினர்னு நெருக்கமானவங்ககிட்ட பேசும்போது பயன்படுத்துற முறை (informal). 'Thank you' என்பது பெரியவங்க, வேலை பார்க்கும் இடம், தெரியாதவங்ககிட்ட மரியாதையா பேசும்போது பயன்படுத்துற முறை (formal).&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் - &amp;nbsp;&lt;/strong&gt;Lawyer vs Advocate: லாயர், அட்வகேட் ரெண்டும் ஒன்னு கிடையாது.! அட, இவ்வளவு வித்தியாசம் இருக்கா.? 99% பேருக்கு தெரியாத ரகசியம்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நண்பர்கள் அல்லது நெருக்கமானவங்ககிட்ட பேசும்போது 'Thanks' சொல்றது இயல்பு. அது கொஞ்சம் கேஷுவலா இருக்கும். ஆனா, டீச்சர், பாஸ், வாடிக்கையாளர்கள் அல்லது பெரியவங்ககிட்ட பேசும்போது 'Thank you' சொல்றதுதான் சரி. அது அவங்களுக்கு நாம கொடுக்கிற மரியாதையை காட்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் -&amp;nbsp;&lt;/strong&gt; Numerology: இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ஒழுக்கமாகவும், சுய கட்டுப்பாடோட இருப்பாங்களாம்.! நீங்க பிறந்த தேதி இருக்கா?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;'Thanks' வார்த்தையை 'Thanks a lot', 'Many thanks', 'Thanks buddy' போன்ற சொற்றொடர்களில் அதிகமா பயன்படுத்துவாங்க. ஆனா 'Thank you' என்பதை 'Thank you very much', 'Thank you so much', 'Thank you for your support' போன்ற முறையான (official) உரையாடல்களில் பயன்படுத்துவாங்க.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் - &amp;nbsp;&lt;/strong&gt;Interesting Facts: உலகத்திலேயே ஒரு எறும்பு கூட இல்லாத இடம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒரு நண்பருக்கு இ-மெயில் அனுப்பும்போது 'Thanks for sharing'னு எழுதினா போதும். ஆனா, ஒரு புரொஃபஷனல் மெயில்ல 'Thank you for your response'னு எழுதுறதுதான் முறை. எழுத்துலயும் 'Thanks' கேஷுவலாகவும், 'Thank you' புரொஃபஷனலாகவும் பயன்படுது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் -&amp;nbsp;&lt;/strong&gt; Mukesh Ambani House: அம்பானி வீட்ல வேலை வேணுமா? அரசு வேலையை விட கடினமாம்.! என்ன தகுதிகள் இருக்கணும்னு தெரிஞ்சிக்கோங்க.!&lt;/p&gt;&lt;img&gt;'Thanks' சொல்றது ஒரு சின்ன உதவிக்கு காட்டுற உடனடி நன்றி (quick gratitude). உதாரணமா, யாராவது கதவ திறந்துவிட்டா சொல்றது. ஆனா 'Thank you' சொல்றது, ஒருத்தர் நமக்காக அவங்க நேரத்தையும் உழைப்பையும் செலவு செஞ்சதுக்கு காட்டுற ஆழமான நன்றி (deep gratitude).]]></content:encoded>
            <category><![CDATA[life-style]]></category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/interesting-facts-difference-between-thanks-and-thank-you-when-to-use-each-correctly-in-everyday-english-2gfzhd9"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Arulvaan vs Anbe Diana Box Office : அருள்வான் vs அன்பே டயானா... பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூலை வாரிசுருட்டியது யார்?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/arulvaan-vs-anbe-diana-day-1-box-office-report-who-wins-the-race-0nff2vd</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/arulvaan-vs-anbe-diana-day-1-box-office-report-who-wins-the-race-0nff2vd</guid>
            <pubDate>Sat, 18 Jul 2026 12:24:27 +0530</pubDate>
            <description><![CDATA[Arulvaan vs Anbe Diana Day 1 Box Office Collection : அருள்வான் படத்துக்கு போட்டியாக அன்பே டயானா படம் நேற்று ரிலீஸ் ஆன நிலையில், அதன் பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxszygbng08yfgndnw86bjx4,imgname-arulvaan-vs-anbe-diana-1784357536116.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Arulvaan vs Anbe Diana Day 1 Box Office Collection : அருள்வான் படத்துக்கு போட்டியாக அன்பே டயானா படம் நேற்று ரிலீஸ் ஆன நிலையில், அதன் பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ் சினிமாவில் 'ஜமா' படத்தின் மூலம் கவனம் பெற்ற பாரி இளவழகன், தனது அடுத்த முயற்சியாக இயக்கியும் நடித்தும் உருவாக்கியுள்ள படம் 'அன்பே டயானா'. திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முன்பாக படக்குழு பல்வேறு நகரங்களில் தீவிர விளம்பரப் பணிகளில் ஈடுபட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க முயன்றது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்த போதிலும், படம் வெளியான முதல் நாளில் எதிர்பார்த்த அளவிலான வசூல் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. திரையரங்குகளில் பார்வையாளர்களின் வருகை குறைவாக இருந்ததோடு, வசூலும் கம்மியாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கலப்புத் திருமணத்தை மையமாகக் கொண்டு, நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம், படம் பார்த்த ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல கருத்துகளைப் பெற்று வருகிறது. நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் சமூக வலைதளங்களில் படத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். சுமார் ரூ.5 கோடி செலவில் உருவாகியுள்ளதாக கூறப்படும் 'அன்பே டயானா', முதல் நாளில் இந்திய பாக்ஸ் ஆபீஸில் சுமார் ரூ.30 லட்சம் மட்டுமே வசூலித்துள்ளதாக சாக்னில்க் தளத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த குறைந்த வசூலுக்கு, கடந்த வாரம் வெளியான பல படங்களின் போட்டி முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. கட்டா குஸ்தி 2, இதயம் முரளி மற்றும் கிறிஸ்டோபர் நோலனின் தி ஒடிஸி போன்ற படங்கள் அதிக திரைகளில் வெளியானதால், 'அன்பே டயானா' குறைந்த எண்ணிக்கையிலான திரைகளையே பெற்றதாக கூறப்படுகிறது. இதனால் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வசூல் அதிகரிப்பதே படத்தின் அடுத்தகட்ட பயணத்திற்கு முக்கியமாக இருக்கும் என திரையுலக வட்டாரங்கள் கருதுகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதற்கிடையில், நடிகர் அருள்நிதி நடித்துள்ள 'அருள்வான்' திரைப்படமும் ஜூலை 17 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 'தேன்' திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், ஆரவ், ரம்யா பாண்டியன், பேபி கிருத்திகா, காளி வெங்கட், ஜான் விஜய் மற்றும் VTV கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையை ஜி.வி.பிரகாஷ் குமார் அமைத்துள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;வெளியான முதல் நாளிலேயே இந்தப் படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து பாசிடிவ் ரெஸ்பான்ஸ் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, 'அருள்வான்' திரைப்படம் உலகளவில் முதல் நாளில் சுமார் ரூ.44 லட்சம் வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டு படங்களும் நல்ல விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக வார இறுதி நாட்களின் செயல்பாடே அவற்றின் அடுத்தகட்ட வெற்றியை தீர்மானிக்கும் என திரையுலக நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர். அதனால் பொறுத்திருந்து பார்க்கலாம்&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[cinema]]></category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/arulvaan-vs-anbe-diana-day-1-box-office-report-who-wins-the-race-0nff2vd"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Carrot Benefits: இந்த ஒரு காய்கறி உங்கள் ஆரோக்கியத்தை மாற்றலாம்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/webstories/life-style/why-carrots-are-good-for-your-health-i40cwih</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/webstories/life-style/why-carrots-are-good-for-your-health-i40cwih</guid>
            <pubDate>Sat, 18 Jul 2026 12:03:26 +0530</pubDate>
            <description><![CDATA[கேரட்டை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் 7 முக்கிய ஆரோக்கிய நன்மைகள் குறித்து இங்கே காணலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kq6r1bnk66h47r5v2545b5hs,imgname-carrot--1--1777269255859.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கேரட்டை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் 7 முக்கிய ஆரோக்கிய நன்மைகள் குறித்து இங்கே காணலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[life-style]]></category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/webstories/life-style/why-carrots-are-good-for-your-health-i40cwih"/>
        </item>
        <item>
            <title><![CDATA[UPSC Scholarship: மாணவர்களுக்கு ஜாக்பாட்! மாதம் ரூ.7,500 உதவித்தொகை.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/jackpot-for-students-get-rs-7500-monthly-stipend-are-you-eligible-gd1cn11</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/jackpot-for-students-get-rs-7500-monthly-stipend-are-you-eligible-gd1cn11</guid>
            <pubDate>Sat, 18 Jul 2026 11:59:41 +0530</pubDate>
            <description><![CDATA[Tamil Nadu Government: யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக புதிய ஊக்கத்தொகை திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் கீழ், மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படும் 1000 மாணவர்களுக்கு மாதம் ரூ.7500 வீதம் 10 மாதங்களுக்கு உதவித்தொகை.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxsws8nsr7h5p1fsqt2xd5xb,imgname-college--student-1784354218681.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Tamil Nadu Government: யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக புதிய ஊக்கத்தொகை திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் கீழ், மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படும் 1000 மாணவர்களுக்கு மாதம் ரூ.7500 வீதம் 10 மாதங்களுக்கு உதவித்தொகை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கல்விக்கு முக்கியத்தும் கொடுக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், மாணவர்கள் கல்வியை தொடர வேண்டும், உயர்கல்வியில் சேர்ந்து பயன் பெற வேண்டும் என பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத்தொகை வழங்குவது தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: யுபிஎஸ்சி குடிமைப் பணித் தேர்வு ஊக்கத்தொகைத் திட்டத்தின் படி யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு 2027க்கு தயாராகும் மாணவர்களுக்கான ஊக்கத்தொகை வழங்குவதற்கான மதிப்பீட்டுத் தேர்வு ஆகஸ்ட் 6ம் தேதியன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 1000 மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம் ரூ.7500 ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கடந்த ஆண்டைப் போலவே, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் கீழ் இயங்கி வரும் அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையங்களுக்கான சேர்க்கையும் (Admission), இந்த மதிப்பீட்டுத் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த மதிப்பீட்டுத் தேர்வை எழுதி ஊக்கத்தொகை மற்றும் அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையங்களுக்கான சேர்க்கை விரும்பும் ஆர்வமுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் https://www.skilldevelopment.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும். விரிவான அறிவிக்கையைப் படித்துப் பார்த்து 18.07.2026 அன்று முதல் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இத்தேர்வினை விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 3ம் தேதியாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;* அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: ஜூலை 18 &amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;* ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் தேதி: ஜூலை 18&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;*விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: ஆகஸ்ட் 03&lt;/p&gt;&lt;p&gt;*நுழைவுச் சீட்டு (Hall Ticket) வெளியீடு: ஆகஸ்ட் மூன்றாம் வாரம்&lt;/p&gt;&lt;p&gt;*தேர்வு நாள் மற்றும் நேரம்: செப்டம்பர் 06 (காலை 10.00 மணி முதல் மதியம் 12.00 வரை)&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[tamilnadu]]></category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/jackpot-for-students-get-rs-7500-monthly-stipend-are-you-eligible-gd1cn11"/>
        </item>
        <item>
            <title><![CDATA[shatank Yoga : சூரியன் - சனியால் ஏற்படும் சதாங்க யோகம்... ஒரு மாதத்திற்கு தொட்டதெல்லாம் ஹிட் அடிக்கப்போகும் 5 ராசிகள் என்னென்ன?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/shatank-yoga-2026-sun-and-saturn-bless-these-5-zodiac-signs-with-success-383q2dy</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/shatank-yoga-2026-sun-and-saturn-bless-these-5-zodiac-signs-with-success-383q2dy</guid>
            <pubDate>Sat, 18 Jul 2026 11:37:39 +0530</pubDate>
            <description><![CDATA[shatank Yoga Effects : கிரகங்களின் அரசனான சூரியனும், நீதிபதியான சனியும் ஒன்றுக்கொன்று 100 டிகிரி இடைவெளியில் சஞ்சரிப்பதால் சடாங்க யோகம் உருவாகிறது. இதனால் பலனடையும் ராசிகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxsx2yfas5eyh7k5dz21df24,imgname-astrology--20--1784354535913.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;shatank Yoga Effects : கிரகங்களின் அரசனான சூரியனும், நீதிபதியான சனியும் ஒன்றுக்கொன்று 100 டிகிரி இடைவெளியில் சஞ்சரிப்பதால் சடாங்க யோகம் உருவாகிறது. இதனால் பலனடையும் ராசிகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜோதிட சாஸ்திரத்தில் சூரியன் அதிகாரம், தன்னம்பிக்கை, தலைமைத்துவம், கௌரவம் மற்றும் அரசாங்கம் தொடர்பான அம்சங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய கிரகமாகக் கருதப்படுகிறார். மறுபுறம், சனி பகவான் கடின உழைப்பு, ஒழுக்கம், பொறுப்பு, கர்ம பலன் மற்றும் நீண்டகால வெற்றியை வழங்கும் கிரகமாக மதிக்கப்படுகிறார்.&lt;/p&gt;&lt;p&gt;தற்போது சூரியனும் சனியும் ஒருவருக்கொருவர் சுமார் 100 டிகிரி கோணத்தில் அமைந்துள்ளதால் சதாங்க யோகம் உருவாகி உள்ளதாக ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த காலத்தில் சூரியன் கடக ராசியிலும், சனி மீன ராசியிலும் சஞ்சரிப்பதால், இந்த யோகத்தின் தாக்கம் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடிக்கலாம் என கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;ஜோதிட நம்பிக்கையின்படி, இந்த யோகம் தலைமைத்துவத்தையும் கடின உழைப்பையும் இணைத்து வாழ்க்கையின் பல துறைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் சக்தி கொண்டதாக கருதப்படுகிறது. குறிப்பாக தொழில், கல்வி, பணவரவு மற்றும் சமூக மரியாதையில் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த சதாங்க யோகம் குடும்ப வாழ்க்கை மற்றும் சொத்து தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன்களை வழங்கக்கூடும். வீடு, நிலம் அல்லது வாகனம் வாங்கும் முயற்சிகள் முன்னேற்றம் காணலாம். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும்.&lt;/p&gt;&lt;p&gt;வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் அல்லது ரியல் எஸ்டேட், அரசு சேவைகள் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உருவாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தகவல்கள் சாதகமாக அமையக்கூடும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கடக ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் தன்னம்பிக்கையையும் தலைமைத்துவ திறமையையும் உயர்த்தும். அதிர்ஷ்டம் மெதுவாக உங்களை நோக்கி திரும்பும். கல்வி, மருத்துவம், வங்கி மற்றும் அரசு துறைகளில் பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் மற்றும் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் கிடைக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;கடின உழைப்பிற்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உயர்கல்வி மற்றும் வெளிநாட்டு வாய்ப்புகளும் சாதகமாக அமையலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிம்ம ராசிக்காரர்களுக்கு வெளிநாடு தொடர்பான முயற்சிகள் வெற்றி பெறும் காலமாக இது அமையலாம். சர்வதேச நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், ஆராய்ச்சி, மருத்துவம் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இருப்பவர்கள் புதிய முன்னேற்றங்களை காணக்கூடும்.&lt;/p&gt;&lt;p&gt;நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த திட்டங்கள் நிறைவேறும். நிதி திட்டங்கள் வெற்றிகரமாக அமையும் வாய்ப்பு உள்ளது. ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரித்து மன அமைதியும் கிடைக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த சதாங்க யோகம் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும். போட்டித் தேர்வுகள், உயர்கல்வி மற்றும் அரசு வேலைக்கு தயாராகுபவர்களுக்கு இது சாதகமான காலமாக இருக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கலாம். வெளிநாட்டு கல்வி அல்லது பணிவாய்ப்புகளும் உருவாகலாம். முக்கிய முடிவுகளை எடுக்கும் போது உங்கள் தீர்மானங்கள் வெற்றியை நோக்கி செல்லும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மீன ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் அறிவு, படைப்பாற்றல் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு நல்ல ஆதரவை வழங்கும். மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், ஆலோசகர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் துறையில் சிறந்த முன்னேற்றத்தை அடையலாம்.&lt;/p&gt;&lt;p&gt;குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் வரக்கூடும். குழந்தைகள் தொடர்பான விஷயங்களில் திருப்திகரமான பலன்கள் கிடைக்கும். தொழில் வாழ்க்கையில் புதிய உயரங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் அதிகரிக்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[astrology]]></category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/shatank-yoga-2026-sun-and-saturn-bless-these-5-zodiac-signs-with-success-383q2dy"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Cheapest Plan: இந்தியாவின் மலிவான போஸ்ட்பெய்ட் பிளான்.. வெறும் ரூ.199-க்கு இவ்வளவு வசதிகள் இருக்கா]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/technology/cheapest-bsnl-postpaid-plan-in-india-full-details-here-3u7rb8i</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/technology/cheapest-bsnl-postpaid-plan-in-india-full-details-here-3u7rb8i</guid>
            <pubDate>Sat, 18 Jul 2026 11:13:30 +0530</pubDate>
            <description><![CDATA[Cheapest Plan: மாதாந்திர போஸ்ட்பெய்ட் மொபைல் திட்டம் குறைந்த செலவில் பயன்படுத்த விரும்புபவர்களுக்கு பிஎஸ்என்எல் ஒரு கவர்ச்சிகரமான திட்டத்தை வழங்குகிறது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jcf2w1szcc6gjqw39qnmgmv7,imgname-tamil-news---2024-11-12t075135.876.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Cheapest Plan: மாதாந்திர போஸ்ட்பெய்ட் மொபைல் திட்டம் குறைந்த செலவில் பயன்படுத்த விரும்புபவர்களுக்கு பிஎஸ்என்எல் ஒரு கவர்ச்சிகரமான திட்டத்தை வழங்குகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், குறைந்த மாதக் கட்டணத்தில் போஸ்ட்பெய்ட் இணைப்பை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.199 திட்டம் வழங்கப்படுகிறது. தற்போது இந்தியாவில் மிகவும் குறைந்த விலை போஸ்ட்பெய்ட் திட்டங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் போஸ்ட்பெய்ட் திட்டங்கள் பொதுவாக அதிக விலையில் தொடங்கும் நிலையில், குறைந்த செலவில் அடிப்படை சேவைகளைப் பெற விரும்புபவர்களுக்கு இந்தத் திட்டம் மாற்றுத் தேர்வாக இருக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த ரூ.199 போஸ்ட்பெய்ட் திட்டத்தில் மாதந்தோறும் 25ஜிபி அதிவேக டேட்டா வழங்கப்படுகிறது. அதோடு, வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் அனுப்பும் வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது. மேலும், ஒரு மாதத்தில் பயன்படுத்தப்படாமல் ஒதுக்கப்பட்ட டேட்டாவை அடுத்த மாதத்திற்கு எடுத்துச் செல்லும் டேட்டா ரோல்ஓவர் வசதியும் வழங்கப்படுகிறது. இந்த அம்சத்தின் மூலம் அதிகபட்சமாக 75ஜிபி வரை டேட்டாவை சேமித்து பயன்படுத்த முடியும்.&lt;/p&gt;&lt;p&gt;அதிகம் பேர் வாங்குற ஸ்கூட்டர் இதுதான்.. ஜூன் மாதத்தில் இமாலய சாதனையை படைத்த மாடல் எது?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தத் திட்டம் கவனம் பெறுவதற்கான முக்கிய காரணம் அதன் விலையாகும். பல தனியார் நிறுவனங்களின் போஸ்ட்பெய்ட் திட்டங்கள் ரூ.400 அல்லது அதற்கு மேல் தொடங்கும் நிலையில், அதைவிட குறைந்த செலவில் போஸ்ட்பெய்ட் வசதியை பிஎஸ்என்எல் வழங்குகிறது. மாதாந்திர செலவைக் கட்டுப்படுத்த விரும்பும் பயனர்கள் மற்றும் அடிப்படை டேட்டா தேவையுள்ளவர்களுக்கு இந்தத் திட்டம் பொருத்தமானதாக இருக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த திட்டத்தில் வழங்கப்படும் 25ஜிபி அதிவேக டேட்டா முழுமையாக பயன்படுத்தப்பட்ட பிறகும் இணைய சேவையைத் தொடரலாம். இருப்பினும், அதன் பிறகு பயன்படுத்தும் டேட்டாவுக்கு 1 MB-க்கு 1 பைசா என்ற அடிப்படையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். மேலும், இந்த ரூ.199 திட்டம் தனிப்பட்ட பயனர்களுக்கான அடிப்படை போஸ்ட்பெய்ட் திட்டமாக உள்ளது, Family Add-on Connection வசதி இதில் இடம்பெறவில்லை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒப்பீட்டுக்காக பார்க்கும்போது, ஜியோவின் ரூ.199 திட்டம் ஒரு ப்ரீபெய்ட் திட்டமாகும். இதில் 18 நாட்கள் செல்லுபடியாகும் காலம், தினமும் 1.5ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள், தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ டிவி, ஜியோ ஏஆர் கிளவுட் போன்ற கூடுதல் சேவைகள் வழங்கப்படுகின்றன. எனவே, இரண்டு திட்டங்களின் விலை ஒரே மாதிரியாக இருந்தாலும், ஒன்று போஸ்ட்பெய்ட், மற்றொன்று ப்ரீபெய்ட் என்பதால், பில்லிங் முறை, பயன்பாட்டு விதிமுறைகள் மற்றும் செல்லுபடியாகும் காலம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இருப்பதை பயனர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;சனிக்கிழமை ராசிபலன்: பணம், வேலை, குடும்பம்.. இன்று எப்படி இருக்கும்?&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[technology]]></category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/technology/cheapest-bsnl-postpaid-plan-in-india-full-details-here-3u7rb8i"/>
        </item>
        <item>
            <title><![CDATA[UPI-க்கு மீண்டும் கட்டணமா? டிஜிட்டல் பரிவர்த்தனையில் என்ன மாற்றம் வரப்போகிறது?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/business/is-upi-charging-a-fee-again-what-is-going-to-change-in-digital-transactions-articleshow-hdlf4fw</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/business/is-upi-charging-a-fee-again-what-is-going-to-change-in-digital-transactions-articleshow-hdlf4fw</guid>
            <pubDate>Sat, 18 Jul 2026 10:54:17 +0530</pubDate>
            <description><![CDATA[UPI பரிவர்த்தனைகளுக்கு மீண்டும் கட்டணம் விதிக்கப்படலாம் என்ற விவாதம் எழுந்துள்ளது. இந்த கட்டணம், MDR என அழைக்கப்பட்டு, பெரிய வணிக நிறுவனங்களிடம் மட்டுமே வசூலிக்கப்படலாம் என்றும், சாதாரண பயனாளர்கள் மற்றும் சிறு வணிகர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kx86pe4t5vwjjqpgnna9f9ya,imgname-biometric-upi-1783760631961.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;இந்தியாவில் பணப் பரிவர்த்தனை முறையை முற்றிலும் மாற்றியமைத்த தொழில்நுட்பங்களில் மிக முக்கியமானது UPI (Unified Payments Interface). சிறிய டீக்கடையிலிருந்து பெரிய ஷாப்பிங் மால் வரை இன்று அனைவரும் UPI-யை பயன்படுத்தி பணம் செலுத்துகின்றனர். சில நொடிகளில் பணம் அனுப்பவும் பெறவும் முடிவதால், கோடிக்கணக்கான மக்கள் தினசரி இந்த சேவையை நம்பி பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், UPI பரிவர்த்தனைகளுக்கு மீண்டும் கட்டணம் விதிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி இருப்பது பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் உண்மையில் என்ன விவாதம் நடைபெறுகிறது? யாருக்கு பாதிப்பு ஏற்படும்? இந்த கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;UPI என்றால் என்ன?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;UPI என்பது இந்திய தேசிய பணப் பரிவர்த்தனை கழகம் (NPCI) உருவாக்கிய டிஜிட்டல் கட்டண முறை. ஒரு வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு வங்கிக் கணக்கிற்கு சில நொடிகளில் பணத்தை மாற்றுவதற்கான எளிய மற்றும் பாதுகாப்பான வசதியாக இது செயல்படுகிறது. Google Pay, PhonePe, Paytm, BHIM உள்ளிட்ட பல செயலிகள் UPI தொழில்நுட்பத்தின் மூலமே இயங்குகின்றன. QR Code-ஐ ஸ்கேன் செய்து பணம் செலுத்துவது, மொபைல் எண்ணுக்கு பணம் அனுப்புவது, வங்கிக் கணக்கு விவரங்களை பகிராமல் பரிவர்த்தனை செய்வது போன்ற வசதிகள் இதன் மூலம் சாத்தியமாகியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;UPI ஏன் இவ்வளவு பிரபலமானது?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;UPI வெற்றிக்கு முக்கிய காரணம், இதைப் பயன்படுத்த பொதுமக்களிடம் எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாததே. கையில் பணம் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் குறைந்தது. வங்கிக்கு செல்லாமல் வீட்டிலிருந்தபடியே பணத்தை அனுப்பவும் பெறவும் முடிகிறது. கொரோனா காலத்திற்குப் பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனை வேகமாக அதிகரித்தது. சிறிய வணிகர்களும் கூட UPI QR Code வைத்து பணம் பெறும் நிலை உருவானது. இன்று இந்தியாவில் தினசரி கோடிக்கணக்கான UPI பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;MDR என்றால் என்ன?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;MDR (Merchant Discount Rate) என்பது வாடிக்கையாளர் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும்போது, அந்த பரிவர்த்தனையை செயல்படுத்தும் சேவைக்காக வணிகர் செலுத்தும் ஒரு சேவைக் கட்டணமாகும். 2019-ஆம் ஆண்டு முதல் UPI மற்றும் RuPay டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு **Zero MDR** நடைமுறை அமல்படுத்தப்பட்டது. இதனால் UPI மூலம் பணம் பெறும் வணிகர்களிடமிருந்தும், பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களிடமிருந்தும் கட்டணம் வசூலிக்கப்படவில்லை.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;மீண்டும் MDR ஏன் பேசப்படுகிறது?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;UPI பரிவர்த்தனைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், வங்கிகள் மற்றும் டிஜிட்டல் கட்டண சேவை நிறுவனங்கள் அதிக செலவுகளை சந்தித்து வருகின்றன. சர்வர்கள், இணைய பாதுகாப்பு, தொழில்நுட்ப மேம்பாடு, மோசடி தடுப்பு அமைப்புகள் போன்றவற்றை பராமரிக்க அதிக முதலீடு தேவைப்படுகிறது. ஆனால் Zero MDR நடைமுறையால் இந்த சேவையை வழங்கும் நிறுவனங்களுக்கு நேரடி வருவாய் கிடைப்பதில்லை. இதனால் பெரிய வணிக நிறுவனங்களிடம் மட்டுமே MDR வசூலிக்கலாமா என்பது குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&lt;/p&gt;&lt;h3&gt;பொதுமக்களுக்கு கட்டணம் வருமா?&lt;/h3&gt;&lt;p&gt;தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, சாதாரண UPI பயனாளர்களுக்கு எந்தக் கட்டணமும் விதிக்கப்பட வாய்ப்பு இல்லை. ஒரு நண்பருக்கு பணம் அனுப்புவது, குடும்ப உறுப்பினர்களுக்கு பணம் மாற்றுவது அல்லது சிறிய கடைகளில் UPI மூலம் பணம் செலுத்துவது போன்ற பரிவர்த்தனைகள் வழக்கம்போல இலவசமாகவே தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;h2&gt;பெரிய வணிகர்களுக்கு என்ன மாற்றம்?&lt;/h2&gt;&lt;p&gt;பல கோடி ரூபாய் மதிப்பிலான பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் பெரிய நிறுவனங்கள் மற்றும் பெரிய வர்த்தக நிறுவனங்களுக்கு மட்டுமே MDR விதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவ்வாறு கட்டணம் அமல்படுத்தப்பட்டால், அதை வணிக நிறுவனங்களே செலுத்த வேண்டியிருக்கும். இருப்பினும், சில நிறுவனங்கள் அந்தச் செலவை பொருட்களின் விலையில் மறைமுகமாக சேர்க்கும் சாத்தியமும் இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.&lt;/p&gt;&lt;h2&gt;சிறு வணிகர்களுக்கு பாதிப்பு இருக்குமா?&lt;/h2&gt;&lt;p&gt;சிறிய கடைகள், தெரு வியாபாரிகள், மளிகைக் கடைகள், சிறு தொழில் நிறுவனங்கள் போன்றவற்றுக்கு தற்போதைய Zero MDR சலுகை தொடர வாய்ப்புள்ளது என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிப்பதே அரசின் முக்கிய நோக்கமாக இருப்பதால், குறு மற்றும் சிறு வணிகர்களுக்கு கூடுதல் சுமை ஏற்படுத்தும் முடிவு எடுக்கப்பட வாய்ப்பு குறைவாகவே உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;வங்கிகளும் FinTech நிறுவனங்களும் என்ன கூறுகின்றன?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;UPI சேவையை இயக்கும் வங்கிகள் மற்றும் டிஜிட்டல் கட்டண நிறுவனங்கள், பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் சேவையை பராமரிக்கும் செலவும் அதிகரித்து வருவதாகக் கூறுகின்றன. அதனால், குறைந்தபட்ச வருவாய் கிடைக்கும் வகையில் பெரிய வணிகர்களுக்கு மட்டும் MDR விதிப்பது நீண்டகாலத்தில் UPI அமைப்பை மேலும் வலுப்படுத்தும் என சில தரப்புகள் கருத்து தெரிவித்து வருகின்றன.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;அரசின் அதிகாரப்பூர்வ நிலை என்ன?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இதுவரை UPI-க்கு மீண்டும் கட்டணம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. தற்போது நடைபெறுவது ஆலோசனை மட்டுமே. இறுதி முடிவு எடுக்கப்பட்ட பிறகே புதிய விதிமுறைகள் வெளியிடப்படும். எனவே சமூக வலைதளங்களில் வெளியாகும் தகவல்களை மட்டும் நம்பாமல், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பின்பற்றுவது அவசியம்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;UPI இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சியில் மிகப்பெரிய பங்காற்றி வருகிறது. தற்போது பேசப்படும் விவாதம் பொதுமக்களிடம் கட்டணம் வசூலிப்பது குறித்து அல்ல; பெரிய வணிகர்களுக்கான MDR நடைமுறையை மீண்டும் அறிமுகப்படுத்துவது தொடர்பானது. எனவே சாதாரண UPI பயனாளர்கள் உடனடியாக கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும், அரசின் இறுதி அறிவிப்பு வெளியாகும் வரை இந்த விவகாரத்தை கவனமாகக் கண்காணிப்பது நல்லது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[business]]></category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/business/is-upi-charging-a-fee-again-what-is-going-to-change-in-digital-transactions-articleshow-hdlf4fw"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Polymer Notes: கிழிபடாது.. நனையாது! இந்தியாவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்.. RBI புதிய அப்டேட்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/rbi-to-introduce-plastic-currency-notes-in-india-global-tenders-invited-for-polymer-sheets-6hei1o5</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/rbi-to-introduce-plastic-currency-notes-in-india-global-tenders-invited-for-polymer-sheets-6hei1o5</guid>
            <pubDate>Sat, 18 Jul 2026 10:40:51 +0530</pubDate>
            <description><![CDATA[Polymer Notes: இந்தியாவில் பிளாஸ்டிக் அல்லது பாலிமர் நோட்டுகளை அறிமுகம் செய்ய ஆர்பிஐ-யின் நோட்டு அச்சடிக்கும் நிறுவனம், உலகளாவிய நிறுவனங்களிடமிருந்து பாதுகாப்பான பாலிமர் தாள்களை வழங்குவதற்காக விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwkx2hk8kkph3nwh2czg8drv,imgname-indian-currency-pti-1783079454312.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Polymer Notes: இந்தியாவில் பிளாஸ்டிக் அல்லது பாலிமர் நோட்டுகளை அறிமுகம் செய்ய ஆர்பிஐ-யின் நோட்டு அச்சடிக்கும் நிறுவனம், உலகளாவிய நிறுவனங்களிடமிருந்து பாதுகாப்பான பாலிமர் தாள்களை வழங்குவதற்காக விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவில் பிளாஸ்டிக் கரன்சி தொடர்பான ஒரு பெரிய செய்தி வெளியாகியுள்ளது. ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) பிளாஸ்டிக் அல்லது பாலிமர் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் திட்டத்தில் ஒரு முக்கிய அடியை எடுத்து வைத்துள்ளது. இதற்காக, ஆர்பிஐ-யின் நோட்டு அச்சடிக்கும் பிரிவான பாரதிய ரிசர்வ் பேங்க் நோட் முத்ரன் பிரைவேட் லிமிடெட் (BRBNMPL), உலகளாவிய நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க: &lt;/strong&gt;ஸ்விக்கி, ஓலா ஊழியர்களுக்கும் இனி மாத பென்ஷன்! மத்திய அரசின் EPFO 3.0 அதிரடி திட்டம்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த நிறுவனங்கள், நவீன பாதுகாப்பு அம்சங்கள் ஏற்கனவே சேர்க்கப்பட்ட பாலிமர் தாள்களைத் தயாரிக்க வேண்டும். எதிர்காலத்தில், இந்தத் தாள்களைப் பயன்படுத்தி இந்திய ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படலாம். இந்தத் திட்டம் உண்மையானால், இந்தியா முதல் முறையாக காகித நோட்டுகளுக்குப் பதிலாக பிளாஸ்டிக் நோட்டுகளைப் பயன்படுத்தும்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;இதற்கு முன்னதாக, 2014-15 ஆம் ஆண்டிலேயே இந்தியாவின் 5 நகரங்களில் (கொச்சி, மைசூர், ஜெய்ப்பூர், சிம்லா மற்றும் புவனேஸ்வர்) 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகளைச் சோதனை முறையில் (Pilot Project) அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டிருந்தது. தற்போது அந்தத் திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவே இந்த உலகளாவிய டெண்டர் கோரப்பட்டுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க: &lt;/strong&gt;Free WiFi-ல் UPI, பேங்கிங் பயன்படுத்துபவரா நீங்கள்? உடனே உங்க அக்கவுண்ட்டை செக் பண்ணுங்க!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இருப்பினும், எந்த மதிப்புள்ள நோட்டுகள் பிளாஸ்டிக்கில் அச்சிடப்படும், எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்பதை ரிசர்வ் வங்கி இன்னும் தெளிவாகத் தெரிவிக்கவில்லை. இந்த டெண்டருக்கு ஆர்பிஐ கடுமையான தேசிய பாதுகாப்பு நிபந்தனைகளையும் விதித்துள்ளது. விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் இந்திய அரசிடமிருந்து பாதுகாப்பு அனுமதி பெற வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;மூன்றாம் நாடுகளுக்கு விற்க முடியாது&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்தியாவுக்காகத் தயாரிக்கப்படும் நோட்டுகளில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் சீனா அல்லது பாகிஸ்தானில் இருந்து வரவில்லை என்பதை அவர்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும், இந்தியாவுக்காகத் தயாரிக்கப்பட்ட இந்த சிறப்பு மூலப்பொருளை வேறு எந்த மூன்றாம் நாட்டுக்கும் விற்கக் கூடாது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;நீடித்த உழைப்பு:&lt;/strong&gt; காகித நோட்டுகளை விட பிளாஸ்டிக் (பாலிமர்) நோட்டுகள் 2 முதல் 3 மடங்கு அதிக காலம் கிழியாமல், பாழாகாமல் உழைக்கக்கூடியவை.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சுத்தம் மற்றும் சுகாதாரம்:&lt;/strong&gt; இந்த நோட்டுகளில் அழுக்கு, எண்ணெய் அல்லது தண்ணீர் ஒட்டாது. இதனால் கிருமிகள் பரவும் அபாயமும் குறையும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;கள்ளநோட்டுத் தடுப்பு:&lt;/strong&gt; பாலிமர் நோட்டுகளில் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களைச் சேர்க்க முடியும் என்பதால், கள்ளநோட்டுகளைத் தயாரிப்பது மிக மிகக் கடினம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;மறுசுழற்சி: &lt;/strong&gt;இந்த நோட்டுகள் சேதமடைந்த பிறகு, இவற்றை முழுமையாக மறுசுழற்சி செய்து வேறு பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேலும், ஒரு நாட்டின் மத்திய வங்கிக்கோ அல்லது நோட்டு அச்சடிக்கும் நிறுவனத்திற்கோ கடந்த மூன்று ஆண்டுகளாக பாலிமர் நோட்டுப் பொருட்களை வழங்கிய அனுபவம் உள்ள நிறுவனங்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். நாட்டின் மிக முக்கியமான நிதி நிலைமை சார்ந்த பிரச்சனை என்பதால் இந்த டெண்டரில் பாதுகாப்பிற்கு ஆர்பிஐ அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[business]]></category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/rbi-to-introduce-plastic-currency-notes-in-india-global-tenders-invited-for-polymer-sheets-6hei1o5"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Gold Investment: நகையா, பிஸ்கட்டா? எதுல முதலீடு செஞ்சா அதிக லாபம்? முழு விவரம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/gold-jewelry-vs-gold-biscuits-which-is-a-better-investment-option-znhioqr</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/gold-jewelry-vs-gold-biscuits-which-is-a-better-investment-option-znhioqr</guid>
            <pubDate>Sat, 18 Jul 2026 10:33:47 +0530</pubDate>
            <description><![CDATA[தங்கத்தில் முதலீடு செய்யும்போது நகைகள், பிஸ்கட்கள் என இரண்டு முக்கிய ஆப்ஷன்கள் உள்ளன. நகைகளில் செய்கூலி அதிகம். தங்க பிஸ்கட்கள் தூய்மையானதாக இருந்தாலும் அதை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இதில் எது சிறந்தது என்று பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kmf10dffkxqrd0ws0reze095,imgname-india-gold-price-today-24-march-2026-24k-22k-18k-delhi-mumbai-patna-update-4-1774325872111.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தங்கத்தில் முதலீடு செய்யும்போது நகைகள், பிஸ்கட்கள் என இரண்டு முக்கிய ஆப்ஷன்கள் உள்ளன. நகைகளில் செய்கூலி அதிகம். தங்க பிஸ்கட்கள் தூய்மையானதாக இருந்தாலும் அதை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இதில் எது சிறந்தது என்று பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முதல்முறையாக தங்கத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு எதில் தொடங்குவது என்ற குழப்பம் இருப்பது இயல்புதான். பொதுவாக, தங்க நகை அல்லது தங்க பிஸ்கட் (Gold Bar/Coin) என்ற இரண்டு வழிகளே அதிகம் தேர்வு செய்யப்படுகின்றன. அணிவதற்கும் பயன்படுத்துவதற்கும் தங்க நகை ஏற்றதாக இருந்தாலும், செய்கூலி மற்றும் சேதாரம் போன்ற கூடுதல் செலவுகள் இருக்கும். மறுபுறம், முதலீட்டு நோக்கத்திற்காக வாங்குபவர்களுக்கு தங்க பிஸ்கட் அல்லது தங்க நாணயம் சிறந்த தேர்வாக கருதப்படுகிறது. இவற்றில் செய்கூலி குறைவாக இருப்பதுடன், விற்பனை செய்யும்போதும் மதிப்பு எளிதாகக் கணக்கிடப்படுகிறது. எனவே, உங்கள் தேவையும் முதலீட்டு நோக்கமும் அடிப்படையாகக் கொண்டு சரியான தேர்வை மேற்கொள்வது நல்லது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தங்கத்தில் முதலீடு செய்வதற்கு முன், கவனிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்கள் உள்ளன. சரியான வகை தங்கத்தைத் தேர்வு செய்வது முதல், தூய்மை, விலை, வாங்கும் முறை மற்றும் எதிர்கால லாபம் வரை பல விஷயங்களை அறிந்திருப்பது அவசியம். இந்த தகவல்கள் தெரிந்திருந்தால், உங்கள் முதலீடு பாதுகாப்பாகவும் லாபகரமாகவும் அமையும். அந்த முக்கியமான தகவல்களைப் பற்றித்தான் இன்று விரிவாகப் பார்க்கப் போகிறோம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தங்க நகைகளில் முதலீடு செய்தால், அது வெறும் முதலீடாக மட்டுமல்லாமல், அன்றாட பயன்பாட்டிற்கும் உதவும். திருமணம், விழா மற்றும் பிற முக்கிய நிகழ்ச்சிகளில் அணிந்துகொள்ளலாம். மேலும், தலைமுறை தலைமுறையாகக் குடும்ப பாரம்பரிய சொத்தாகப் பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கு மதிப்புமிக்க பரிசாக வழங்கவும் முடியும். அதனால், தங்க நகைகள் உணர்வுப்பூர்வமான மதிப்பையும், பொருளாதார மதிப்பையும் ஒருசேர கொண்டுள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தங்க நகைகளை வாங்கும்போது, தங்கத்தின் விலையுடன் சேர்த்து செய்கூலி, சேதாரம் மற்றும் பிற கட்டணங்களையும் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், பின்னர் அந்த நகைகளை விற்கும்போது அல்லது மாற்றும்போது, இந்த செய்கூலித் தொகை பொதுவாக திரும்பக் கிடைக்காது. மேலும், பெரும்பாலான நகைகள் 22 காரட் தங்கத்தில் தயாரிக்கப்படுவதால், அவற்றில் 100% சுத்தத் தங்கம் இருப்பதில்லை. எனவே, முதலீட்டு நோக்கத்தில் தங்க நகைகளை வாங்கும் முன் இந்த அம்சங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தங்க பிஸ்கட் அல்லது தங்க நாணயங்களில் முதலீடு செய்தால், அதிக தூய்மை கொண்ட (பொதுவாக 24 காரட்) தங்கத்தைப் பெற முடியும். இதில் செய்கூலி மிகவும் குறைவாக இருக்கும் அல்லது சில இடங்களில் அதுவும் வசூலிக்கப்படாது. அதனால், முதலீட்டிற்காக தங்கம் வாங்க நினைப்பவர்களுக்கு இது செலவுக் குறைந்த மற்றும் பயனுள்ள தேர்வாக கருதப்படுகிறது. குறிப்பாக நீண்ட கால முதலீட்டு நோக்கத்தில் தங்க பிஸ்கட்கள் நல்ல மதிப்பு உயர்வை வழங்கும் ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தங்க பிஸ்கட்கள் முதலீட்டிற்கு ஏற்றதாக இருந்தாலும், அவற்றை தங்க நகைகளைப் போல அணிந்து பயன்படுத்த முடியாது. மேலும், அதிக மதிப்புள்ள சொத்தாக இருப்பதால், பாதுகாப்பாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். இதற்காக வங்கி லாக்கர் அல்லது பாதுகாப்பான சேமிப்பு வசதியைப் பயன்படுத்துவது நல்லது. வீட்டில் வைத்திருப்பவர்கள் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இல்லையெனில், திருட்டு உள்ளிட்ட அபாயங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், தங்க பிஸ்கட்களை பாதுகாப்பாக பராமரிப்பதில் எப்போதும் கவனம் செலுத்த வேண்டும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[business]]></category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/gold-jewelry-vs-gold-biscuits-which-is-a-better-investment-option-znhioqr"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Green Tea: எப்போ குடிக்கணும்? ராத்திரி குடிச்சா என்ன ஆகும் தெரியுமா?!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/webstories/life-style/when-is-the-best-time-to-drink-green-tea-for-maximum-benefits-87qvww0</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/webstories/life-style/when-is-the-best-time-to-drink-green-tea-for-maximum-benefits-87qvww0</guid>
            <pubDate>Sat, 18 Jul 2026 10:17:35 +0530</pubDate>
            <description><![CDATA[தினமும் ஒரு கப் கிரீன் டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். அதை எப்போது, எப்படி குடிக்க வேண்டும் என இங்கே பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxq6z14jj7fwr4jd948fk95r,imgname-fotojet---2026-07-17t102617.904-1784264230034.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தினமும் ஒரு கப் கிரீன் டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். அதை எப்போது, எப்படி குடிக்க வேண்டும் என இங்கே பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[life-style]]></category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/webstories/life-style/when-is-the-best-time-to-drink-green-tea-for-maximum-benefits-87qvww0"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Siragadikka Aasai : மனோஜின் பணத்தால் மீண்டும் ஆட்டம் போடும் விஜயா... ரோகிணிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/manoj-calls-rohini-for-divorce-papers-emotional-twist-ahead-in-siragadikka-aasai-serial-july-18-today-episode-nlagdch</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/manoj-calls-rohini-for-divorce-papers-emotional-twist-ahead-in-siragadikka-aasai-serial-july-18-today-episode-nlagdch</guid>
            <pubDate>Sat, 18 Jul 2026 09:57:02 +0530</pubDate>
            <description><![CDATA[Siragadikka Aasai Serial 18 July 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ், ரோகிணிக்கு போன் போட்டு டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்து போட வரச்சொல்லி இருக்கிறார்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxsm2z8jhh70c27xs7m2dyms,imgname-siragadikka-aasai---2026-07-18t085222.325-1784345099538.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial 18 July 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ், ரோகிணிக்கு போன் போட்டு டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்து போட வரச்சொல்லி இருக்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில் மனோஜ் பணத்தை முழுமையாக ஏற்பாடு செய்து வீட்டுக்கு கொண்டு வந்ததால், விஜயா மீண்டும் பழைய ஆணவத்துடன் நடக்க ஆரம்பிக்கிறார். முத்து மற்றும் மீனாவை குறைத்து பேசுவதோடு, மனோஜ்தான் எல்லாவற்றிலும் சிறந்தவன் என்ற விதத்தில் பெருமையாக பேசுகிறார். விஜயாவின் இந்த பேச்சால் மீனாவுக்கு கடும் கோபம் ஏற்படுகிறது. இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் வெடிக்கிறது. குடும்பத்தில் மீண்டும் பதற்றமான சூழல் உருவாக, அந்த சண்டையோடு அந்த காட்சி முடிவடைகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதற்குப் பிறகு விஜயா உடனடியாக மனோஜுக்கு போன் செய்து, ரோகிணியை தொடர்புகொண்டு &quot;நாளைக்கே வீட்டுக்கு வந்து பணத்தை வாங்கிக்கொண்டு விவாகரத்து ஆவணத்தில் கையெழுத்து போடச் சொல்லு&quot; என்று கட்டளையிடுகிறார். மனோஜும் ரோகிணியிடம் இருந்து விவாகரத்து பெற வேண்டும் என்று நினைத்தாலும், அவள் மீது இருக்கும் பாசம் இன்னும் குறையவில்லை. அதனால் மிகுந்த தயக்கத்துடன் ரோகிணிக்கு போன் செய்து விஷயத்தை தெரிவிக்கிறார். அந்த செய்தியை கேட்டதும் ரோகிணி முற்றிலும் அதிர்ச்சியடைந்து, வாழ்க்கையே முடிந்துவிட்டது போல மனம் உடைந்து கதறி அழுகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மறுபுறம், முத்துவும் மீனாவும் பேசிக்கொண்டிருக்கும்போது, &quot;மனோஜுக்கு இவ்வளவு பெரிய தொகை எப்படி கிடைத்தது? இதில் ஏதோ மர்மம் இருக்கிறது&quot; என்று முத்து தனது சந்தேகத்தை வெளிப்படுத்துகிறார். ஆனால் மீனா, &quot;எப்படியோ பணம் கிடைத்துவிட்டது... அதை விட்டுவிடுங்கள்&quot; என்று சமாதானப்படுத்த முயற்சிக்கிறார். இதற்கிடையில் விஜயா, பார்வதிக்கு போன் செய்து, &quot;நாளை காலை சரியாக 10 மணிக்கு வீட்டுக்கு வா... ஒரு முக்கியமான விஷயம் நடக்கப் போகிறது&quot; என்று அழைக்கிறார். காரணம் கேட்ட பார்வதியிடம், ரோகிணியிடம் பணத்தை கொடுத்து விவாகரத்து ஆவணத்தில் கையெழுத்து வாங்கும் நிகழ்வை பெருமையாக சொல்கிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆனால் பார்வதி அதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறார். &quot;இது கொண்டாட வேண்டிய விஷயம் இல்லை. அமைதியாக முடிக்க வேண்டிய ஒரு குடும்ப விஷயத்தை விழா மாதிரி நடத்த வேண்டாம்&quot; என்று விஜயாவை கண்டிக்கிறார். அதன்பிறகு விஜயா வக்கீலையும் தொடர்புகொண்டு, விவாகரத்து ஆவணங்களை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வருமாறு கூறுகிறார். ரோகிணி கையெழுத்திட தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கிறார். அதற்கு வக்கீலும் சம்மதம் தெரிவிக்கிறார். இதனால் செம சம்பவம் காத்திருக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இறுதியாக, மனோஜ் தனியாக அமர்ந்து ரோகிணியின் புகைப்படத்தை பார்த்துக்கொண்டே உணர்ச்சிவசப்படுகிறார். ரோகிணியை உண்மையிலேயே பிரிந்துவிடுவாரா? இல்லை கடைசி நேரத்தில் தனது முடிவை மாற்றுவாரா? முத்துவின் சந்தேகம் உண்மையாகுமா? மனோஜுக்கு இரண்டாவது திருமணம் நடந்த விஷயம் அனைவருக்கும் தெரியவருமா? இந்த கேள்விகளுக்கெல்லாம் அடுத்த வார எபிசோட்களில் பதில் கிடைக்க இருக்கிறது. ரசிகர்களிடையே இந்த திருப்பம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[television]]></category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/manoj-calls-rohini-for-divorce-papers-emotional-twist-ahead-in-siragadikka-aasai-serial-july-18-today-episode-nlagdch"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Tamil Nadu Weather: சென்னைக்கு மழை.. ஆனால் இந்த மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும்! முழு அப்டேட் இதோ]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/tamil-nadu-weather-today-rain-and-heat-forecast-5ria0d2</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/tamil-nadu-weather-today-rain-and-heat-forecast-5ria0d2</guid>
            <pubDate>Sat, 18 Jul 2026 09:52:17 +0530</pubDate>
            <description><![CDATA[Tamil Nadu Weather: தமிழகத்தில் ஜூலை 18 அன்று மழையும் வெயிலும் மாறி மாறி காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. இதன் முழுமையான விவரங்களை பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ka5vwa1rr9mev9s08kaxmpzr,imgname-tamil-news---2025-11-16t134608.246-1763281086519.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Tamil Nadu Weather: தமிழகத்தில் ஜூலை 18 அன்று மழையும் வெயிலும் மாறி மாறி காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. இதன் முழுமையான விவரங்களை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வானிலை ஆய்வு மையத்தின்படி, தென்மேற்கு வங்கக்கடல் முதல் வடக்கு லட்சத்தீவு பகுதி வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது வடக்கு தமிழ்நாடு, தெற்கு உள் கர்நாடகா மற்றும் வடக்கு கேரளா வழியாக செல்கிறது. இதுவே மாநிலத்தின் தற்போதைய வானிலைக்கு காரணம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜூலை 18 அன்று, மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழ்நாட்டில் மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் காற்று வீசி, இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலின் மற்ற பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. ஜூலை 19 முதல் 21 வரை இதேபோன்ற வானிலை தொடரும்.&lt;/p&gt;&lt;p&gt;சனிக்கிழமை ராசிபலன்: பணம், வேலை, குடும்பம்.. இன்று எப்படி இருக்கும்?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மாநிலத்தில் ஆங்காங்கே மழை பெய்தாலும், ஜூலை 18 முதல் 21 வரை வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது. உள் மாவட்டங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக பதிவாகும். கடலோர தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இயல்பான வெப்பநிலையே நீடிக்கும். சென்னையை பொறுத்தவரை, அதிகபட்ச வெப்பநிலை 37-38&deg;C ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29&deg;C ஆகவும் இருக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வானிலை ஆய்வு மையம் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜூலை 18 அன்று, வடக்கு தமிழ்நாடு கடற்கரை மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40-50 கி.மீ வேகத்திலும், சில சமயங்களில் 60 கி.மீ வேகத்திலும் பலத்த காற்று வீசும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜூலை 19, 20 தேதிகளில், தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 45-55 கி.மீ ஆகவும், சில சமயங்களில் 65 கி.மீ ஆகவும் அதிகரிக்கும். இதேபோல், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியிலும் ஜூலை 18 முதல் 21 வரை இதே நிலை நீடிக்கும். எனவே, மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;புதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 அறிமுகம்.. இந்த 2 அப்டேட்கள் ரைடிங்கை மாற்றும்&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[tamilnadu]]></category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/tamil-nadu-weather-today-rain-and-heat-forecast-5ria0d2"/>
        </item>
        <item>
            <title><![CDATA[புதன் - செவ்வாய் தசாங்க யோகம் 2026: இந்த 4 ராசிகளை இனி அசைக்க முடியாது! பதவி உயர்வு, பண மழை கன்பார்ம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/mercury-mars-conjunction-july-2026-4-zodiac-signs-to-get-huge-financial-benefits-yvr1qvt</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/mercury-mars-conjunction-july-2026-4-zodiac-signs-to-get-huge-financial-benefits-yvr1qvt</guid>
            <pubDate>Sat, 18 Jul 2026 09:50:45 +0530</pubDate>
            <description><![CDATA[Mercury Mars Conjunction 2026: ஜூலை 16 2026 புதன் செவ்வாய் சேர்க்கையால் உருவான தசாங்க யோகம் இந்த 4 ராசிகளுக்கு தொழில் வளர்ச்சி, பண வரவு மற்றும் அசாத்திய வெற்றியைத் தரப்போகிறது. இதில் உங்க ராசி இருக்கா? என செக் செய்து கொள்ளுங்கள்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxspt96pe6qw627a07jp04b3,imgname-mercury-mars-conjunction-2026-1784347960534.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Mercury Mars Conjunction 2026: ஜூலை 16 2026 புதன் செவ்வாய் சேர்க்கையால் உருவான தசாங்க யோகம் இந்த 4 ராசிகளுக்கு தொழில் வளர்ச்சி, பண வரவு மற்றும் அசாத்திய வெற்றியைத் தரப்போகிறது. இதில் உங்க ராசி இருக்கா? என செக் செய்து கொள்ளுங்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜோதிட சாஸ்திரத்தில் புதன் பகவான் அறிவுக்கூர்மை, சாதுரியமான பேச்சு, வணிகம் மற்றும் பகுப்பாய்வு திறன்களுக்கு காரகனாக விளங்குகிறார். மறுபுறம், செவ்வாய் கிரகம் வீரம், சுறுசுறுப்பு, ஆற்றல் மற்றும் மனவலிமையின் அதிபதியாகப் பார்க்கப்படுகிறார்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;இந்த இரு முக்கிய கிரகங்களும் கடந்த ஜூலை 16 அன்று இணைந்து 'தசாங்க யோகத்தை' உருவாக்கியுள்ளன. இந்த அபூர்வ கிரக சேர்க்கையானது புதிய சிந்தனைகள், படைப்பாற்றல் மற்றும் வாழ்வில் பல புதிய வாய்ப்புகளை அள்ளித்தரும் என்று ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;இப்போது புதன் பகவான் மிதுன ராசியில் வக்ர நிலையிலும், செவ்வாய் பகவான் ரிஷப ராசியிலும் சஞ்சரித்து வருகின்றனர். இந்த கிரக நிலைகளின் தாக்கம் சில ராசியினருக்கு தொழில் மேன்மை, வியாபாரத்தில் அதிரடி லாபம் மற்றும் கல்வியில் அசாத்தியமான வெற்றியைத் தேடித்தரப் போகிறது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்று கீழே பார்ப்போம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க: &lt;/strong&gt;Rahu Ketu Transit: ராகு-கேது பிடி விலகுகிறது! ஜூலை 19 முதல் 'இந்த' 3 ராசிகளுக்கு ஜாக்பாட்! கோடிகள் கொட்டப் போகுது!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரிஷப ராசியிலேயே செவ்வாய் சஞ்சரிப்பதால், இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை விண்ணைத் தொடும். துணிச்சலாகச் செயல்பட்டு முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். நீண்ட நாட்களாக உங்களை வாட்டி வதைத்த பண நெருக்கடிகள் இனி முடிவுக்கு வரும். இழுபறியாக இருந்த காரியங்கள் அனைத்தும் சுமுகமாக முடியும்.&lt;/p&gt;&lt;p&gt;செவ்வாயின் அருளால் வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள் மற்றும் புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்து காணப்படும். வரன் தேடிக் கொண்டிருப்பவர்களுக்குப் பொருத்தமான வாழ்க்கைத்துணை அமையும். கடின உழைப்பிற்கு ஏற்ற பலன்கள் தடையின்றி கிடைக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் தேர்வுகளில் சாதகமான முடிவுகள் வரும்.&lt;/p&gt;&lt;p&gt;இதையும் படிங்க: Astrology: நண்பேன்டா! நட்புக்காக உயிரையே கொடுக்கும் 4 ராசிக்காரர்கள்! உங்க நண்பர்கள் ராசி இருக்கானு பாருங்க!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிம்ம ராசியினருக்கு இந்த தசாங்க யோகம் பொற்காலமாக அமையப்போகிறது. குறிப்பாக, தொழிலதிபர்கள் மற்றும் வியாபாரிகளுக்குப் புதிய ஒப்பந்தங்கள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்தபடியே நல்ல நிறுவனங்களில் இருந்து புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும்.&lt;/p&gt;&lt;p&gt;குடும்பத்தில் இருந்து வந்த வாக்குவாதங்கள் நீங்கி, அமைதியும் ஒற்றுமையும் நிலவும். பொருளாதார ரீதியாக நல்ல ஸ்திரத்தன்மை உண்டாகும். கணவன்-மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். சரியான தகவல் தொடர்பு மூலம் கடந்த கால கசப்பான சம்பவங்களை மறந்து, தம்பதியினர் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மகர ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் எதிர்பாராத திருப்பங்களையும், அதிர்ஷ்டத்தையும் அள்ளித்தரப் போகிறது. நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். பொருளாதார ரீதியாகப் பெரிய முன்னேற்றம் காண்பீர்கள். புதிய வருமான வழிகள் மூலம் பணப்புழக்கம் அதிகரிக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;நீண்ட நாட்களாக முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் தற்போது உங்களுக்குச் சாதகமாக முடியும். சமூகத்தில் உங்களுக்கான அந்தஸ்தும், நற்பெயரும் உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் திறமையால் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். புதிய வண்டி, வாகனம் வாங்கும் கனவு நனவாகும்&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கும்ப ராசியினருக்கு இந்த யோகம் மிக பிரம்மாண்டமான நன்மைகளை வாரி வழங்கவுள்ளது. கூட்டு வியாபாரம் அல்லது சொந்த தொழில் செய்பவர்கள் லாபகரமான புதிய டீல்களை முடிப்பீர்கள். தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இது ஏற்ற காலம். பணியிடத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு அல்லது பெரிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும்.&lt;/p&gt;&lt;p&gt;எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு நீண்ட கால முதலீடுகளைச் செய்ய இது மிகச் சரியான தருணம்; இது பின்னாளில் பெரும் லாபத்தைத் தரும். குடும்பத்திலும், நண்பர்கள் வட்டாரத்திலும் சுமுகமான உறவு நீடிக்கும். மொத்தத்தில், நேர்மறை ஆற்றலும், அடுத்தடுத்த வெற்றிகளும் நிறைந்த காலகட்டமாக இது உங்களுக்கு அமையப்போகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[astrology]]></category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/mercury-mars-conjunction-july-2026-4-zodiac-signs-to-get-huge-financial-benefits-yvr1qvt"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Free WiFi-ல் UPI, பேங்கிங் பயன்படுத்துபவரா நீங்கள்? உடனே உங்க அக்கவுண்ட்டை செக் பண்ணுங்க!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/technology/why-you-should-never-use-upi-or-net-banking-on-free-wifi-vvzfb9w</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/technology/why-you-should-never-use-upi-or-net-banking-on-free-wifi-vvzfb9w</guid>
            <pubDate>Sat, 18 Jul 2026 09:11:55 +0530</pubDate>
            <description><![CDATA[Free WiFi Safety Tips: பொதுஇடங்களில் இலவச Wi-Fi பயன்படுத்தும்போது கவனமாக இல்லாவிட்டால் உங்கள் பேங்க் பேலன்ஸ் மொத்தமாக காலியாகி விடும். இலவச Wi-Fi பயன்படுத்தும்போது மனதில் வைக்க வேண்டிய 5 விதிகள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxsmmp0zeq3vmca2m6r4hg2g,imgname-free-wifi-safety-tips-1784345679902.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Free WiFi Safety Tips: பொதுஇடங்களில் இலவச Wi-Fi பயன்படுத்தும்போது கவனமாக இல்லாவிட்டால் உங்கள் பேங்க் பேலன்ஸ் மொத்தமாக காலியாகி விடும். இலவச Wi-Fi பயன்படுத்தும்போது மனதில் வைக்க வேண்டிய 5 விதிகள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&quot;Free WiFi Available&quot; என்ற போர்டைப் பார்த்ததும் உடனே போனில் நெட்டை ஆன் செய்துவிடுவீர்களா? மெட்ரோ, ரயில் நிலையம், கஃபே, மால் போன்ற இடங்களில் இலவச நெட் கிடைத்தால் யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால், இந்த &quot;இலவசம்&quot; என்ற வார்த்தைக்குப் பின்னால் மிகப்பெரிய ஆபத்து மறைந்துள்ளது. பொது இடங்களில் கிடைக்கும் Wi-Fi தான் ஹேக்கர்களின் புகலிடம் என சைபர் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சிறிய தவறு உங்க பேங்க் பேலன்ஸை காலி செய்து விடும்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;சும்மா YouTube, WhatsApp தானே பார்க்கிறோம், என்ன ஆகிவிடப் போகிறது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இலவச Wi-Fi நெட்வொர்க்கில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் ஹேக்கர்களால் கண்காணிக்க முடியும். ஒரு சிறிய தவறு செய்தால்கூட, உங்கள் UPI PIN, வங்கி பாஸ்வேர்டு, போனில் உள்ள புகைப்படங்கள் என அனைத்தும் அடுத்தவர் கைக்குச் சென்றுவிடும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க:&lt;/strong&gt; Ceiling Fan Tips: ஃபேன் காற்று கம்மியா இருக்கா? ஜெட் வேகத்தில் சுற்ற வைக்கும் 5 சிம்பிள் டிப்ஸ்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அப்படியென்றால், இலவச Wi-Fi-ஐ பயன்படுத்தவே கூடாதா? பயன்படுத்தலாம், ஆனால் இந்த 5 விதிகளை கண்டிப்பாக மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;முதல் விதி: &lt;/strong&gt;ஆன்லைன் பேங்கிங் மற்றும் UPI பரிவர்த்தனைகளை ஒருபோதும் செய்யாதீர்கள். இலவச Wi-Fi-ல் இருக்கும்போது PhonePe, GPay, வங்கி செயலிகள் அல்லது கார்டு விவரங்களைப் பயன்படுத்த வேண்டாம். ஹேக்கர்கள் &quot;Man in the Middle&quot; என்ற தாக்குதல் மூலம் உங்கள் அனைத்து தகவல்களையும் திருடிவிடுவார்கள். பணப் பரிவர்த்தனை செய்ய வேண்டியிருந்தால், உங்கள் மொபைல் டேட்டாவைப் பயன்படுத்துங்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இரண்டாவது விதி:&lt;/strong&gt; நெட்வொர்க்கின் பெயரை கவனமாகச் சரிபார்க்கவும். &quot;Station_Free_WiFi&quot; மற்றும் &quot;StationFreeWiFi1&quot; பார்ப்பதற்கு ஒன்று போலவே இருக்கும். ஹேக்கர்கள் உண்மையான நெட்வொர்க்கின் பெயரில் போலியான நெட்வொர்க்குகளை உருவாக்குவார்கள். தவறான நெட்வொர்க்கில் இணைந்தால், உங்கள் எல்லா டேட்டாவும் அவர்களுக்குச் சென்றுவிடும். எனவே, இணைக்கும் முன் அங்குள்ள ஊழியர்களிடம் சரியான பெயர் என்ன என்று கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க:&lt;/strong&gt; IRCTC New Beta Website: தட்கல் டிக்கெட் இனி மின்னல் வேகத்தில் புக் செய்யலாம்.. புது வெப்சைட் வந்தாச்சு!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;மூன்றாவது விதி:&lt;/strong&gt; Auto Connect மற்றும் File Sharing ஆப்ஷன்களை அணைத்து வைக்கவும். உங்கள் போன் செட்டிங்ஸில் &quot;Auto Join&quot; மற்றும் &quot;File Sharing&quot; ஆப்ஷன்களை ஆஃப் செய்துவிடுங்கள். இல்லையென்றால், உங்கள் போன் தானாகவே ஏதாவது ஒரு இலவச நெட்வொர்க்கில் இணைந்துவிடும். File Sharing ஆன் செய்யப்பட்டிருந்தால், உங்கள் போனில் உள்ள புகைப்படங்கள், ஆவணங்கள் போன்றவற்றை மற்றவர்கள் பார்க்க முடியும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;நான்காவது விதி:&lt;/strong&gt; VPN பயன்படுத்தவும். VPN என்பது உங்கள் நெட்வொர்க் டேட்டாவை ஒரு பாதுகாப்பான பெட்டிக்குள் பூட்டி வைப்பது போன்றது. இதனால் ஹேக்கர்களால் எதையும் தெரிந்துகொள்ள முடியாது. Play Store-ல் பல இலவச VPN செயலிகள் உள்ளன. இலவச Wi-Fi-ஐப் பயன்படுத்துவதற்கு முன், ஒரே கிளிக்கில் VPN-ஐ ஆன் செய்துகொள்ளுங்கள். இதுதான் மிக முக்கியமான பாதுகாப்பு.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஐந்தாவது விதி: &lt;/strong&gt;உங்கள் வேலை முடிந்ததும் Wi-Fi-ஐ மறந்துவிடுங்கள் (Forget). வேலை முடிந்தவுடன் போனில் Wi-Fi-ஐ ஆஃப் செய்துவிட்டு, செட்டிங்ஸ் சென்று அந்த நெட்வொர்க்கை &quot;Forget&quot; செய்துவிடுங்கள். இல்லையென்றால், அடுத்த முறை நீங்கள் அந்தப் பகுதிக்குச் செல்லும்போது உங்கள் போன் மீண்டும் அதே நெட்வொர்க்கில் தானாகவே இணைந்துவிடும்.&lt;/p&gt;&lt;p&gt;இலவச Wi-Fi தவறல்ல, ஆனால் நமது கவனக்குறைவுதான் தவறு. 2 நிமிட வசதிக்காக 2 லட்ச ரூபாயை இழக்க விரும்ப மாட்டீர்கள் அல்லவா? எனவே, அடுத்த முறை &quot;Free WiFi&quot; என்று பார்த்தால், இந்த 5 விஷயங்களையும் நினைவில் கொள்ளுங்கள். அதன் பிறகு நெட்டை ஆன் செய்யுங்கள்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[technology]]></category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/technology/why-you-should-never-use-upi-or-net-banking-on-free-wifi-vvzfb9w"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Aadi Month: ஆடி மாதத்தில் புதுமண தம்பதிகளை ஏன் பிரித்து வைக்கிறார்கள்? சுப நிகழ்ச்சிகள் ஏன் நடத்தப்படுவதில்லை தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/why-tamil-culture-restricts-auspicious-rituals-and-separates-couples-during-aadi-month-uqspgn3</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/why-tamil-culture-restricts-auspicious-rituals-and-separates-couples-during-aadi-month-uqspgn3</guid>
            <pubDate>Sat, 18 Jul 2026 09:06:56 +0530</pubDate>
            <description><![CDATA[Couples: ஆடி மாதம் அம்மன் வழிபாட்டிற்குரியது என்பதால், திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் தவிர்க்கப்படுகின்றன. புதுமணத் தம்பதியரை பிரித்து வைக்கும் வழக்கத்தின் பின்னணி குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kb2ae1hd84xcwqvbjfc4xt0c,imgname-couple-1764235871789.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Couples: ஆடி மாதம் அம்மன் வழிபாட்டிற்குரியது என்பதால், திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் தவிர்க்கப்படுகின்றன. புதுமணத் தம்பதியரை பிரித்து வைக்கும் வழக்கத்தின் பின்னணி குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆடி மாதம் தமிழ்நாட்டில் குறிப்பாக கிராமங்களில் இன்றைக்கும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்ல ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த நாளாகும். இம்மாதத்தில் ஆடி பிறப்பு, ஆடி வெள்ளி, ஆடி கிருத்திகை, ஆடிப்பூரம், ஆடிப்பெருக்கு என பல விசேஷங்கள் இந்த மாதத்தில் கொண்டாடப்படும். இம்மாதம் அம்மனுக்கு உரிய மாதம் என்பதால் அம்மனுக்கு கூழ் ஊற்றுவது, மஞ்சள் நீர் வைத்து வழிபாடு செய்யப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆனால் தனிப்பட்ட குடும்ப விசேஷங்கள் எதுவும் செய்யப்படுவதில்லை. அந்த வகையில், ஆடி மாதத்தில் திருமணங்கள், வீடு கிரஹபிரவேசம் போன்ற எந்த ஒரு சுப நிகழ்சிகளும் நடைபெறுவது இல்லை. அதுமட்டுமல்ல ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை பிரித்து வைக்க வேண்டும் என்பது தமிழகத்தில் வழக்கமாக உள்ளது. அதுவும் பெண் வீட்டார் சீர் செய்து தங்கள் வீட்டிற்கு பெண்ணை அழைத்துச் செல்வது வாடிக்கை. திருமணம் செய்து கொடுத்த பெண்ணை பிரித்து அழைத்து வருகிறார்கள் என்றார்கள் காரணம் இல்லாமல் இருக்குமா? அவை என்ன என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆடி மாதம் ஜூலை 17ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 17ம் தேதி முடியும். ஜூலை-ஆகஸ்ட் காலகட்டத்தில் ஒரு குழந்தை கருத்தரிக்கப்பட்டால், குழந்தை ஏப்ரல்-மே மாதத்தில் பிறக்கும். இது கோடைகாலம் மற்றும் வெப்பத்தின் காரணமாக குழந்தை பெற சிறந்த நேரம் அல்ல. இதனால் தான் ஆடி மாதத்தில் புதுமணத்தம்பதிகளை பிரித்து வைக்கின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Shani Vakra Peyarchi 2026: ஜூலை 27 முதல் சனியின் வக்ர கதி ஆரம்பம்! யாருக்கு பணமழை? ராஜயோகம் பெறப்போகும் அந்த 6 ராசிகள் யார் தெரியுமா?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆடி மாதத்தில் தான் விவசாயிகள் விதை விதைப்பதற்கான சிறந்த காலம் என்பதால் விவசாயிகள் விதைக்கத் தொடங்குவார்கள். மேலும் விவசாயம் செழித்து, வளம் பெருக வேண்டி ஆடி மாதத்தில் மக்கள் தங்கள் குலதெய்வ வழிபாட்டை மேற்க்கொள்வார்கள். ஆகையால் குலதெய்வ வழிபாடு தவிர்க்கக்கூடாது என்பதற்காக தான் ஆடி மாதத்தில் வேறு எந்த விசேஷங்களும் குறிப்பாக செய்வதில்லை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அது போல ஆடி மாதத்தில் தான் காற்று அதிகமாக வீசும். மேலும் இந்த மாதத்தில் திடீரென்று மழை பெய்யக் கூடும் என்பதால் புதுமனை புகு விழா, பூமி பூஜை செய்தல், நிலம் வாங்குதல் போன்ற சுப நிகழ்ச்சிகளையும் செய்வதில்லை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேலும் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். இதனால் இறை வழிபாடு செய்யும் போது கவனம் சிதறாமல் மற்றும் தடை படலாம் இருக்க தான் திருமணம், கிரஹபிரவேசம் உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்ச்சிகள் இம்மாதத்தில் நடத்தப்படுவதில்லை.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[astrology]]></category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/why-tamil-culture-restricts-auspicious-rituals-and-separates-couples-during-aadi-month-uqspgn3"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Money Plant Vastu: வீட்டில் மணி பிளான்ட் இருக்கா? இந்த 7 தப்பை மட்டும் செஞ்சிடாதீங்க!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/7-money-plant-vastu-mistakes-that-can-ruin-your-finances-zry8mdf</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/7-money-plant-vastu-mistakes-that-can-ruin-your-finances-zry8mdf</guid>
            <pubDate>Sat, 18 Jul 2026 09:06:34 +0530</pubDate>
            <description><![CDATA[வீட்டின் செழிப்புக்காக மணி பிளான்ட் வெச்சிருக்கீங்களா? அப்போ ஜாக்கிரதையா இருங்க! நீங்க தெரியாம செய்யுற 7 பெரிய தவறுகள் என்னென்ன, அதை எப்படி சரிபண்ணலாம்னு இங்க பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01ktnqm492xv764mvtagtdr96w,imgname-money-plant-secret-formula-for-fast-growth-2-1780993364257.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[வீட்டின் செழிப்புக்காக மணி பிளான்ட் வெச்சிருக்கீங்களா? அப்போ ஜாக்கிரதையா இருங்க! நீங்க தெரியாம செய்யுற 7 பெரிய தவறுகள் என்னென்ன, அதை எப்படி சரிபண்ணலாம்னு இங்க பார்க்கலாம்.&lt;img&gt;வீட்டின் அழகிற்கும், பண வரவிற்கும் மணி பிளான்ட் வைப்பது இப்போதைய டிரெண்ட். இது சுகத்தையும், செழிப்பையும் தரும்னு நாம நம்புறோம். ஆனால், வாஸ்து சாஸ்திரப்படி, மணி பிளான்ட்டை தப்பான திசையிலோ அல்லது தவறான முறையிலோ வைத்தால், பண லாபத்திற்குப் பதில் பெரிய நிதி நெருக்கடியை அது உருவாக்கலாம். நீங்க தெரியாம செய்யுற அந்த 7 தவறுகள் என்னென்னனு பார்க்கலாம் வாங்க.&lt;img&gt;மணி பிளான்ட்டை வடகிழக்கு (North-East) திசையில் வைப்பது மிகப்பெரிய வாஸ்து தோஷம். இது வீட்டின் முன்னேற்றத்தைத் தடுத்து, நிதி நெருக்கடிக்கு வழிவகுக்கும். தவறான இடத்தில் இருக்கும் இந்தச் செடி, குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே டென்ஷன் மற்றும் மனக்கசப்பை அதிகரிக்கும். இது வீட்டின் அமைதியைக் கெடுத்துவிடும்.&lt;img&gt;&lt;p&gt;வாஸ்து நம்பிக்கையின்படி, மணி பிளான்ட்டின் கொடிகள் ஒருபோதும் தரையில் படர விடக்கூடாது என்று கூறப்படுகிறது. தரையில் படரும் கொடிகள் வாழ்க்கையின் முன்னேற்றம் மற்றும் செல்வ வளர்ச்சி கீழ்நோக்கிச் செல்வதைக் குறிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே, செடியின் கொடிகள் எப்போதும் மேல்நோக்கி வளரும் வகையில் கயிறு, கம்பி அல்லது மாஸ் ஸ்டிக் போன்ற ஆதரவை வழங்குவது நல்லது. இதனால் செடி ஆரோக்கியமாக வளருவதுடன், வீட்டில் நேர்மறை ஆற்றல், செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டம் அதிகரிக்கும் என வாஸ்து நம்பிக்கைகள் கூறுகின்றன. இருப்பினும், இவை அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டவை அல்ல; வாஸ்து சார்ந்த பாரம்பரிய நம்பிக்கைகளாகவே கருதப்படுகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வாஸ்து நம்பிக்கையின்படி, மணி பிளான்ட்டின் இலைகள் மஞ்சளாக மாறினாலோ, காய்ந்தோ அல்லது வாடிய நிலையிலோ இருந்தால் அவற்றை உடனடியாக அகற்றுவது நல்லது. தூசி படிந்த அல்லது பராமரிக்கப்படாத செடிகள் வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. அதனால், செடியை எப்போதும் சுத்தமாகவும் பசுமையாகவும் பராமரிக்க வேண்டும். வாஸ்து நிபுணர்களின் கருத்துப்படி, வாடிய செடிகள் குடும்பத்தில் ஆரோக்கியம் மற்றும் மனநிலைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வாஸ்து நம்பிக்கையின்படி, வீட்டில் சில அடிப்படை விதிகளைப் பின்பற்றாமல் இருந்தால் குடும்ப உறுப்பினர்களிடையே நல்லிணக்கம் குறைந்து, தேவையற்ற கருத்து வேறுபாடுகள் மற்றும் சண்டைகள் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. வீட்டின் நேர்மறை ஆற்றல் ஓட்டம் பாதிக்கப்படுவதால் மனஅமைதி, நிம்மதி மற்றும் மகிழ்ச்சி குறையக்கூடும் என்ற நம்பிக்கையும் உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வாஸ்து நம்பிக்கையின்படி, மணி பிளான்ட்டை மற்றவர்களுக்கு பரிசாக வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அப்படிச் செய்தால், வீட்டின் செல்வ வளம், அதிர்ஷ்டம் மற்றும் மகாலட்சுமியின் அருள் மற்றவர்களிடம் சென்றுவிடும் என்ற பாரம்பரிய நம்பிக்கை உள்ளது. எனவே, மணி பிளான்ட்டை நீங்களே வாங்கி வீட்டில் வளர்ப்பது சிறந்ததாக வாஸ்து நிபுணர்கள் கருதுகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வாஸ்து நம்பிக்கையின்படி, மணி பிளான்ட்டுடன் மூங்கில் செடி (Lucky Bamboo) போன்ற செழிப்பைக் குறிக்கும் தாவரங்களை அருகில் வைத்தால் நல்ல அதிர்ஷ்டம், வளம் மற்றும் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில், கள்ளிச் செடி (Cactus) உள்ளிட்ட முள் கொண்ட தாவரங்களை மணி பிளான்ட் அருகே வைக்கக் கூடாது என்றும் வாஸ்து நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். இத்தகைய செடிகள் மணி பிளான்ட் தரும் நேர்மறை பலன்களைக் குறைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இருப்பினும், இவை வாஸ்து சார்ந்த பாரம்பரிய நம்பிக்கைகள் மட்டுமே; அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டவை அல்ல.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[life-style]]></category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/7-money-plant-vastu-mistakes-that-can-ruin-your-finances-zry8mdf"/>
        </item>
        <item>
            <title><![CDATA[EV Sales: அதிகம் பேர் வாங்குற ஸ்கூட்டர் இதுதான்.. ஜூன் மாதத்தில் இமாலய சாதனையை படைத்த மாடல் எது?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/auto/river-indie-records-best-ever-monthly-sales-in-june-2026-tusigql</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/auto/river-indie-records-best-ever-monthly-sales-in-june-2026-tusigql</guid>
            <pubDate>Sat, 18 Jul 2026 09:00:26 +0530</pubDate>
            <description><![CDATA[EV Sales: பெங்களூருவைச் சேர்ந்த மின்சார வாகன ஸ்டார்ட்அப் ரிவர் மொபிலிட்டியின் ரிவர் இண்டி எலக்ட்ரிக் ஸ்கூட்டர், ஜூன் 2026 மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக விற்பனையைப் பதிவு செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kczbd1k2v77vv3scy24nqgt1,imgname-tamil-news---2025-12-21t075131.358-1766283708002.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;EV Sales: பெங்களூருவைச் சேர்ந்த மின்சார வாகன ஸ்டார்ட்அப் ரிவர் மொபிலிட்டியின் ரிவர் இண்டி எலக்ட்ரிக் ஸ்கூட்டர், ஜூன் 2026 மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக விற்பனையைப் பதிவு செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பெங்களூருவைச் சேர்ந்த மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான ரிவர் மொபிலிட்டி, தனது ரிவர் இண்டி எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. 2026 ஜூன் மாதத்தில் மட்டும் 4,436 யூனிட்கள் விற்பனையாகி, இதுவரை இல்லாத உயர்ந்த மாதாந்திர விற்பனை சாதனையை நிறுவனம் பதிவு செய்துள்ளது. இதற்கு முன்பு, 2026 மார்ச் மாதத்தில் 4,273 யூனிட்கள் விற்பனையானதே அதிகபட்சமாக இருந்தது. ஜூன் மாதத்தின் இந்த விற்பனை, ரிவர் இண்டிக்கு சந்தையில் அதிகரித்து வரும் வரவேற்பை வெளிப்படுத்துகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;2026 ஆம் ஆண்டில் ரிவர் மொபிலிட்டியின் வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. 2025 முழுவதும் நிறுவனம் 17,020 ரிவர் இண்டி ஸ்கூட்டர்களை விற்பனை செய்த நிலையில், 2026 முதல் ஆறு மாதங்களிலேயே அதைவிட அதிகமான விற்பனையைப் பதிவு செய்தது. ஜனவரி முதல் மார்ச் வரை நடைபெற்ற முதல் காலாண்டில் 9,607 யூனிட்களும், ஏப்ரல் முதல் ஜூன் வரை நடைபெற்ற இரண்டாவது காலாண்டில் 11,776 யூனிட்களும் விற்பனையாகியுள்ளன. இதன்மூலம், 2026-ஆம் ஆண்டு முதல் அரையாண்டில் மட்டும் மொத்தம் 23,722 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;புதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 அறிமுகம்.. இந்த 2 அப்டேட்கள் ரைடிங்கை மாற்றும்&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அக்டோபர் 2023-ல் அறிமுகமான ரிவர் இண்டி, குறுகிய காலத்திலேயே வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஜூன் 2026 இறுதிக்குள் இந்த ஸ்கூட்டரின் மொத்த விற்பனை 43,805 யூனிட்களை எட்டியுள்ளது. நகர்ப்புறப் பயணங்களுக்கான நடைமுறை அம்சங்கள், அதிக ஸ்டோரேஜ் வசதி மற்றும் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற வடிவமைப்பு ஆகியவை இந்த மாதலின் வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரிவர் இண்டியின் பெங்களூரு எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.55 லட்சம் ஆகும். 43 லிட்டர் கொள்ளளவு கொண்ட அண்டர்-சீட் ஸ்டோரேஜ், விசாலமான இருக்கை, ஆப் மையமாகக் கொண்ட வடிவமைப்பு உள்ளிட்ட அம்சங்கள் இதன் முக்கிய சிறப்புகளாகும். இந்த விலை பிரிவில், டிவிஎஸ் ஐகியூப்,பஜாஜ் சேடக் ஏத்தர் ரிஸ்டா போன்ற மின்சார ஸ்கூட்டர்களுக்கு ரிவர் இண்டி நேரடி போட்டியாக உள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[auto]]></category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/auto/river-indie-records-best-ever-monthly-sales-in-june-2026-tusigql"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Kitchen Hacks: கீரையை எடை போட்டு விற்காமல் கட்டாக விற்பது ஏன்? இதன் பின்னணியில் உள்ள அறிவியல்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/why-your-greens-are-always-sold-in-bundles-not-by-weight-srlqpev</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/why-your-greens-are-always-sold-in-bundles-not-by-weight-srlqpev</guid>
            <pubDate>Sat, 18 Jul 2026 08:47:26 +0530</pubDate>
            <description><![CDATA[மார்க்கெட்டில் எல்லா காய்கறிகளையும் கிலோ கணக்கில் விற்கும்போது, கீரையை மட்டும் ஏன் கட்டாக விற்கிறார்கள்? இதற்கு வியாபார தந்திரம் மட்டுமல்ல, ஆச்சரியமான அறிவியல் மற்றும் நடைமுறை காரணங்களும் இருக்கின்றன.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxrg5rhe4fzwnn7jc16veyk7,imgname-thumbnail---2026-07-17t222653.062-1784307442222.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[மார்க்கெட்டில் எல்லா காய்கறிகளையும் கிலோ கணக்கில் விற்கும்போது, கீரையை மட்டும் ஏன் கட்டாக விற்கிறார்கள்? இதற்கு வியாபார தந்திரம் மட்டுமல்ல, ஆச்சரியமான அறிவியல் மற்றும் நடைமுறை காரணங்களும் இருக்கின்றன.&lt;img&gt;கீரைகள் சீக்கிரம் வாடிப்போகும் தன்மை கொண்டவை. அவற்றை உதிரியாக வைத்தால், காற்றில் ஈரப்பதம் போய்விடும். ஆனால், கட்டாக கட்டி வைக்கும்போது, உள்ளே இருக்கும் இலைகள் நீண்ட நேரம் ஈரப்பதத்தைத் தக்கவைத்துக்கொள்கின்றன. இதனால் கீரை ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.&lt;img&gt;பொதுவாக கீரைகளை வேருடன் பிடுங்கி எடுத்து வருவார்கள். வேருடன் சேர்த்து கட்டும்போது, வேரில் உள்ள ஈரப்பதம் இலைகளுக்குச் சென்று கொண்டே இருக்கும். இது கீரை நீண்ட நேரம் பச்சையாக இருக்க உதவுகிறது. இலைகளை மட்டும் தனியாகப் பறித்து விற்றால், சில மணி நேரங்களிலேயே கறுத்துவிடும்.&lt;img&gt;விவசாயிகள் வயலில் இருந்து சந்தைக்கோ அல்லது வியாபாரிகள் சந்தையிலிருந்து வீடுகளுக்கோ கீரைகளைக் கொண்டு செல்லும்போது, அவை நசுங்காமல் இருக்க இந்த கட்டுகள் உதவுகின்றன. உதிரியாக இருந்தால், மற்ற காய்கறிகளின் பாரத்தால் இலைகள் எளிதில் நசுங்கிவிடும். கட்டாக இருப்பதால், கீரைக்கு ஒரு பாதுகாப்பு கவசம் கிடைக்கிறது.&lt;img&gt;கீரையை கிலோ கணக்கில் எடை போடுவது வியாபாரிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் சற்று கடினமான வேலை. காரணம், நாம் கீரையை மிகக் குறைந்த அளவில்தான் வாங்குவோம் (உதாரணமாக, 5 அல்லது 10 ரூபாய்க்கு). இந்த மாதிரி நேரத்தில், ஒரு கட்டுக்கு இவ்வளவு விலை என்று நிர்ணயித்து விற்பது மிகவும் சுலபம்.&lt;img&gt;கீரையை உதிரியாக வைக்கும்போது, அதன் நறுமணமும் சத்துக்களும் காற்றில் சீக்கிரம் கலந்துவிடும். ஆனால், கட்டாக இருக்கும்போது, அதன் இயற்கையான நறுமணமும் சுவையும் அப்படியே பாதுகாக்கப்படும். எனவே, அடுத்த முறை மார்க்கெட்டில் கீரை வாங்கும்போது, இந்த காரணங்களை நினைவில் கொள்ளுங்கள்!]]></content:encoded>
            <category><![CDATA[life-style]]></category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/why-your-greens-are-always-sold-in-bundles-not-by-weight-srlqpev"/>
        </item>
        <item>
            <title><![CDATA[DC முதல் சிக்மா வரை... ஜனநாயகன் உடன் மோத பயந்து இத்தனை படங்கள் ஜகா வாங்கியதா? முழு லிஸ்ட் இதோ]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/dc-to-sigma-list-of-movies-avoid-clash-with-thalapathy-vijay-last-movie-jana-nayagan-oeozfag</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/dc-to-sigma-list-of-movies-avoid-clash-with-thalapathy-vijay-last-movie-jana-nayagan-oeozfag</guid>
            <pubDate>Sat, 18 Jul 2026 08:42:35 +0530</pubDate>
            <description><![CDATA[Movies Avoid Clash With Jana Nayagan : விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் ஜூலை 23ந் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளதால் அதன் உடன் மோத பயந்து ஏராளமான படங்கள் பின்வாங்கி உள்ளன.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxmvekac9rwgmc03d561r07g,imgname-fotojet--27--1784185048395.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Movies Avoid Clash With Jana Nayagan : விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் ஜூலை 23ந் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளதால் அதன் உடன் மோத பயந்து ஏராளமான படங்கள் பின்வாங்கி உள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடித்துள்ள 'DC' படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்தப் படம் ஜூலை 31-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு முதலமைச்சரும், நடிகருமான ஜோசப் விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' திரைப்படம் ஜூலை 23-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வந்துள்ளது. பாக்ஸ் ஆபிஸில் 'ஜன நாயகன்' படத்துடன் மோதுவதை தவிர்க்கவே 'DC' படக்குழு இந்த முடிவை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், லோகேஷ் கனகராஜ் மற்றும் வாமிகா கபி இடம்பெற்ற புதிய போஸ்டருடன் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அதில், &quot;'DC' படத்திற்கு 'A' சான்றிதழ். ஆகஸ்ட் 7 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது&quot; என்று குறிப்பிட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள 'DC' படத்தை அருண் மாதேஸ்வரன் எழுதி இயக்கியுள்ளார். இதில் லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி ஆகியோருடன் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விஜய்யின் 'ஜன நாயகன்' பட ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, தங்கள் படங்களின் வெளியீட்டு தேதியை மாற்றியமைத்த படங்களின் பட்டியலில் 'DC' படமும் இணைந்துள்ளது. முன்னதாக, 'The Dark Heaven' மற்றும் 'Immortal' ஆகிய தமிழ் படங்களின் தயாரிப்பாளர்களும் 'ஜன நாயகன்' படத்துடன் பாக்ஸ் ஆபிஸில் மோதுவதை தவிர்க்க, தங்கள் படங்களின் ரிலீஸ் தேதியை தள்ளிவைத்தனர். சூப்பர்நேச்சுரல் ஹாரர் த்ரில்லர் படமான 'Immortal' படத்தின் வெளியீட்டு தேதி செப்டம்பர் 4-க்கு மாற்றப்பட்டுள்ளது. முதலில் இந்தப் படம் ஜூலை 23-ம் தேதி வெளியாக இருந்தது.&lt;/p&gt;&lt;p&gt;இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் தனது X தளத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். மேலும், 'ஜன நாயகன்' படம் வெற்றி பெற தனது வாழ்த்துகளையும் தெரிவித்திருந்தார். இந்தப் படத்தை மாரியப்பன் சின்னா இயக்கியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் கயடு லோஹர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;'The Dark Heaven' படத்தைப் பொறுத்தவரை, அதன் தயாரிப்பாளர்கள் ஒரு பத்திரிகை அறிக்கை மூலம், விஜய்யின் &quot;கடைசி படத்திற்கு&quot; வழிவிடும் வகையில் தங்கள் படத்தின் ரிலீஸை தள்ளிவைப்பதாக அறிவித்தனர். இந்த அறிக்கையை அப்படத்தின் இயக்குநர் பாலாஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.&lt;/p&gt;&lt;p&gt;&quot;தளபதி விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' ஜூலை 23-ம் தேதி வெளியாவதை முன்னிட்டு, ஜூலை 17-ம் தேதி வெளியாகவிருந்த எங்கள் படமான 'The Dark Heaven' படத்தின் ரிலீஸை தள்ளிவைக்க எங்கள் குழு முடிவு செய்துள்ளது. புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும்,&quot; என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. &quot;உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களைப் போலவே, நாங்களும் தளபதியின் 'One Last Dance'-ஐ பெரிய திரையில் காண ஆவலுடன் காத்திருக்கிறோம். அதே நேரத்தில், இந்த சிறப்புமிக்க நிகழ்வை அனைத்து ரசிகர்களும் பொறுப்புடன் கொண்டாடி, அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்,&quot; என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பாலாஜி இயக்கிய 'The Dark Heaven' ஒரு தமிழ் க்ரைம் த்ரில்லர் படமாகும். இதில் சித்து சித் மற்றும் தர்ஷிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் முதலில் ஜூலை 17-ம் தேதி வெளியாக இருந்தது. அதேபோல் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் நடித்துள்ள சிக்மா திரைப்படத்தின் ரிலீஸும் தள்ளிப்போக வாய்ப்புள்ளது. சிக்மா திரைப்படம் ஜூலை 31ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் தான் ஜேசன் சஞ்சய் இயக்கிய முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[cinema]]></category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/dc-to-sigma-list-of-movies-avoid-clash-with-thalapathy-vijay-last-movie-jana-nayagan-oeozfag"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Sedan Cars: செடான் கார்களில் ஏன் 'ரியர் வைப்பர்' இல்லை? காசு மிச்சப்படுத்தவா? பின்னாடி சயின்ஸ் இருக்கு!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/auto/why-dont-sedan-cars-have-rear-wipers-the-real-science-behind-it-xkadlqu</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/auto/why-dont-sedan-cars-have-rear-wipers-the-real-science-behind-it-xkadlqu</guid>
            <pubDate>Sat, 18 Jul 2026 08:30:38 +0530</pubDate>
            <description><![CDATA[Sedan Cars: பெரும்பாலான செடான் கார்களில் பின்புற வைப்பர் இருப்பதில்லை. இது வெறும் செலவைக் குறைக்கும் உத்தி என பலர் நினைத்தாலும், இதன் பின்னணியில் ஏரோடைனமிக்ஸ் சார்ந்த முக்கிய அறிவியல் காரணம் உள்ளது. இது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxsj0zcbdzfr6cfj5pkgq61g,imgname-sedan-cars-1784342936971.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Sedan Cars: பெரும்பாலான செடான் கார்களில் பின்புற வைப்பர் இருப்பதில்லை. இது வெறும் செலவைக் குறைக்கும் உத்தி என பலர் நினைத்தாலும், இதன் பின்னணியில் ஏரோடைனமிக்ஸ் சார்ந்த முக்கிய அறிவியல் காரணம் உள்ளது. இது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நீங்கள் கார் ஓட்டும்போது அல்லது சாலையில் செல்லும்போது கவனித்திருக்கிறீர்களா? மாருதி ஸ்விஃப்ட், ஹூண்டாய் i20 போன்ற ஹேட்ச்பேக் கார்களிலும், எஸ்யூவி மாடல்களிலும் பின்புற கண்ணாடியை சுத்தம் செய்ய ஒரு வைப்பர் நிச்சயம் இருக்கும்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;ஆனால், ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா, ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் போன்ற பெரும்பாலான செடான் கார்களில் அந்த வசதி கொடுக்கப்படுவதில்லை. இது வெறும் செலவைக் குறைப்பதற்காக கார் நிறுவனங்கள் செய்யும் தந்திரம் என்று நம்மில் பலர் நினைக்கிறோம். ஆனால், உண்மை அது மட்டுமல்ல. இதன் பின்னணியில் ஒரு முக்கியமான அறிவியல் மற்றும் வடிவமைப்பு தர்க்கம் இருக்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க: &lt;/strong&gt;Bike Maintenance Tips: பைக் கழுவும்போது இந்த தவறு மட்டும் செய்யாதீங்க! ஆயுளைக் குறைக்கும் எச்சரிக்கை!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒரு காரின் வடிவமைப்பு அதன் செயல்திறனை மட்டுமல்ல, இது போன்ற சிறிய விஷயங்களையும் தீர்மானிக்கிறது. செடான் கார்களின் பின்பக்க கண்ணாடி, அதிக சரிவுடன் (steeply raked) வடிவமைக்கப்பட்டிருக்கும். இதனால், கார் வேகமாகச் செல்லும்போது, அதன் மேற்கூரை மீது பயணிக்கும் காற்று, எந்தத் தடையுமின்றி அப்படியே சரிவான பின்பக்க கண்ணாடி வழியாகப் பாய்ந்து கீழே சென்றுவிடும்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;இந்த தொடர்ச்சியான காற்றோட்டம், மழைத்துளிகள், தூசு மற்றும் அழுக்குகளை இயற்கையாகவே கண்ணாடியின் மீது தங்கவிடாமல் அடித்துச் சென்றுவிடுகிறது. இதனால், வாகனம் இயக்கத்தில் இருக்கும்போது பின்பக்கக் கண்ணாடி தானாகவே சுத்தமாக இருக்கும். ஆக, அதற்கென தனியாக ஒரு வைப்பரின் தேவை பெரும்பாலும் ஏற்படுவதில்லை.&lt;/p&gt;&lt;p&gt;இதையும் படிங்க: சென்னை டூ ஹைதராபாத் வெறும் 3 மணி நேரம் தான்! புல்லட் ரயில் குறித்து மாஸ் அப்டேட்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆனால், ஹேட்ச்பேக் மற்றும் எஸ்யூவி கார்களின் கதை வேறு. அவற்றின் பின்புறம் கிட்டத்தட்ட செங்குத்தாக (vertical) இருப்பதால், மேற்கூரையில் இருந்து வரும் காற்று திடீரெனத் துண்டிக்கப்படும். இது காருக்குப் பின்னால் ஒரு குறைந்த காற்றழுத்தப் பகுதியை (low-pressure zone) அல்லது வெற்றிடத்தை உருவாக்குகிறது. இந்த வெற்றிடம், சாலையில் உள்ள தண்ணீர், சேறு மற்றும் தூசிகளை சக்திவாய்ந்த முறையில் உறிஞ்சி, நேராகப் பின்பக்க கண்ணாடியில் தெறிக்கச் செய்கிறது. இதனால்தான், அந்த வகை கார்களுக்குப் பார்வை தெளிவாக இருக்க பின்புற வைப்பர் அத்தியாவசியமாகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அறிவியல் காரணம் பிரதானமாக இருந்தாலும், செலவு மற்றும் அழகியல் ஆகியவையும் முக்கிய காரணிகள்தான். ஒரு பின்புற வைப்பரை பொருத்துவதற்கு வைப்பர் பிளேடு, மோட்டார், அதற்கான வயரிங் மற்றும் வாஷர் சிஸ்டம் என பல பாகங்கள் தேவை. இவற்றைத் தவிர்ப்பதன் மூலம், கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஒரு காருக்கு கணிசமான உற்பத்திச் செலவு குறைகிறது.&lt;/p&gt;&lt;p&gt;மேலும், செடான் கார்கள் அவற்றின் நேர்த்தியான மற்றும் நீளமான பக்கவாட்டு தோற்றத்திற்காகவே விரும்பப்படுகின்றன. இந்த அழகியலான வடிவமைப்பில், ஒரு பின்புற வைப்பர் துருத்திக்கொண்டு நிற்பது அதன் தோற்றத்தைக் கெடுப்பதாக சில வடிவமைப்பாளர்கள் கருதுகின்றனர். ஆக, செடான் கார்களில் பின்புற வைப்பர் இல்லாதது ஒரு குறைபாடு அல்ல, அது ஒரு திட்டமிட்ட வடிவமைப்பு முடிவு என்பதே உண்மை.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[auto]]></category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/auto/why-dont-sedan-cars-have-rear-wipers-the-real-science-behind-it-xkadlqu"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Royal Enfield Classic 350: புதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 அறிமுகம்.. இந்த 2 அப்டேட்கள் ரைடிங்கை மாற்றும்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/auto/2026-royal-enfield-classic-350-launched-with-slip-assist-clutch-mlc8qbg</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/auto/2026-royal-enfield-classic-350-launched-with-slip-assist-clutch-mlc8qbg</guid>
            <pubDate>Sat, 18 Jul 2026 08:25:53 +0530</pubDate>
            <description><![CDATA[Royal Enfield Classic 350: ராயல் என்ஃபீல்டு தனது மிகவும் பிரபலமான கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளை 2026-ஆம் ஆண்டுக்கான புதிய அப்டேட்களுடன் அறிமுகப்படுத்தியுள்ளது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxqnwecqn0fn2xfq1sy36zvp,imgname-royal-enfield-classic-350-1784279873943.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Royal Enfield Classic 350: ராயல் என்ஃபீல்டு தனது மிகவும் பிரபலமான கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளை 2026-ஆம் ஆண்டுக்கான புதிய அப்டேட்களுடன் அறிமுகப்படுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;2026 ஆம் ஆண்டுக்கான ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளை நிறுவனம் புதிய வசதிகளுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. தோற்றம் மற்றும் இன்ஜின் அமைப்பில் பெரிய மாற்றங்கள் இல்லாமல் இருந்தாலும், அன்றாட பயன்பாடு மேலும் வசதியாக்கும் இரண்டு முக்கிய அப்டேட்கள் இந்த மாடலில் சேர்க்கப்பட்டுள்ளன.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;குறிப்பாக நகரப் போக்குவரத்தில் அதிகம் பயணம் செய்பவர்களையும், நீண்ட தூர ரைடர்களையும் கருத்தில் கொண்டு இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய அஸ்சிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் மற்றும் வேகமான யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட் ஆகியவை 2026 கிளாசிக் 350-ன் குறிப்பிடத்தக்க புதிய அம்சங்களாகும். எனினும், இந்த இரு வசதிகளும் தற்போது டூயல் சேனல் ஏபிஎஸ் கொண்ட வேரியண்ட்களில் மட்டுமே வழங்கப்படுகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;புதிய ஸ்லிப்பர் கிளட்ச் அமைப்பு ஓட்டுநரின் ரைடிங் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் உள்ளது. இந்த கிளட்ச் அமைப்பு இருப்பதால் கிளட்ச் லீவரை குறைந்த அழுத்தத்தில் இயக்க முடியும். இதனால் நகரங்களில் அடிக்கடி நிறுத்தி, மீண்டும் இயக்க வேண்டிய சூழல்களில் கைகளுக்கு ஏற்படும் சோர்வு குறைகிறது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;மேலும், அதிக நேரத்தில் திடீரென கியர்களை குறைக்கும் (Downshift) நேரங்களில் பின்சக்கரத்தில் ஏற்படும் திடீர் அதிர்வை கட்டுப்படுத்த உதவுகிறது. இதன் மூலம் வாகனத்தின் நிலைத்தன்மை மேம்பட்டது, ரைடருக்கு அதிக நம்பிக்கையுடன் வாகனத்தை இயக்கும் அனுபவம் கிடைக்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;32 கி.மீ மைலேஜ்... நச்சுனு 5 ஹைபிரிட் கார்களை அடுத்தடுத்து களத்தில் இறக்கும் மாருதி&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மற்றொரு முக்கிய அப்டேட், புதிய யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட் ஆகும். கிளாசிக் 350-ல் ஏற்கனவே யூஎஸ்பி சார்ஜிங் வசதி இருந்தாலும், அதற்கு பதிலாக வேகமாக சார்ஜ் செய்யும் டைப்-சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன், ஜிபிஎஸ் நேவிகேஷன் சாதனங்கள் அல்லது பிற மின்னணு கருவிகளை பயணத்தின் போது சார்ஜ் செய்யும் வசதி இதன் மூலம் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;குறிப்பாக நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ளும் ரைடர்களுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தற்போதைய மொபைல் சாதனங்களுடன் பொருந்தக்கூடிய டைப்-சி இணைப்பு வழங்கப்பட்டிருப்பது ஒரு கூடுதல் சிறப்பம்சமாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விலை விவரங்களைப் பொறுத்தவரை, ரெட்டிட்ச் ரெட் நிறத்தில் கிடைக்கும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வேரியண்ட் ரூ.1.87 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் புதிய ஸ்லிப்பர் கிளட்ச் மற்றும் யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட் இடம்பெறவில்லை. இந்த இரு வசதிகளும் டூயல் சேனல் ஏபிஎஸ் வேரியண்ட்களில் மட்டுமே கிடைக்கும்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;அவற்றின் ஆரம்ப விலை ரூ.1.95 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், எமெரால்ட் கிரீன் நிறத்தில் கிடைக்கும் டாப் வேரியண்டின் விலை ரூ.2.24 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). மேலும், ஹலகியோன் பிளாக் மற்றும் ஜோத்பூர் ப்ளூ ஆகிய நிற விருப்பங்கள் 2026 மாடல் வரிசையிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;2026 கிளாசிக் 350-ல் எந்த இயந்திர மாற்றமும் செய்யப்படவில்லை. முந்தைய மாடலில் இருந்த அதே 349cc ஜே-சீரிஸ் சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் தொடர்கிறது. இந்த இன்ஜின் 20.2 hp பவரையும், 27 Nm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. மேலும், டெலிஸ்கோபிக் முன் ஃபோர்க், ட்வின் ரியர் ஷாக் அப்சார்பர்கள், 19 அங்குல முன் சக்கரம் மற்றும் 18 அங்குல பின்சக்கரம் கொண்ட ஸ்போக் வீல் அமைப்பு உள்ளிட்ட மெக்கானிக்கல் அம்சங்களிலும் எந்த மாற்றமும் இல்லை.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;எனவே, 2026 அப்டேட் மூலம் கிளாசிக் 350-ன் பாரம்பரிய தோற்றம் மற்றும் சிறந்த செயல்திறன் அப்படியே தொடர்ந்தாலும், அன்றாட பயன்பாட்டை மேம்படுத்தும் புதிய வசதிகள் மட்டுமே இந்த மாடலின் முக்கிய சிறப்பாக அமைந்துள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[auto]]></category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/auto/2026-royal-enfield-classic-350-launched-with-slip-assist-clutch-mlc8qbg"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Variyan Yoga : வாரியன் யோகத்தால் கிடைக்கும் சனி பகவான் அருள்... இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காத்து வீசப்போகுது..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/variyan-yoga-effects-these-5-zodiac-signs-will-experience-good-fortune-43keire</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/variyan-yoga-effects-these-5-zodiac-signs-will-experience-good-fortune-43keire</guid>
            <pubDate>Sat, 18 Jul 2026 08:23:47 +0530</pubDate>
            <description><![CDATA[Saturn Blesses These 5 Zodiac Signs : வாரியன் யோகம், சில ராசிகளுக்குப் பயனளிக்கும். எந்தெந்த ராசிகளுக்கு சனி பகவானின் அருள் கிடைக்கும் என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxsj45p1kr6akstpcx4s7865,imgname-astrology--19--1784343041729.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Saturn Blesses These 5 Zodiac Signs : வாரியன் யோகம், சில ராசிகளுக்குப் பயனளிக்கும். எந்தெந்த ராசிகளுக்கு சனி பகவானின் அருள் கிடைக்கும் என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜூலை 18, சனிக்கிழமையான இன்று, வாரியன் யோகம் உள்ளிட்ட சில சுப யோகங்கள் உருவாகின்றன என்று ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. சனி பகவானுக்குரிய நாளாக இருப்பதால், சில ராசிக்காரர்களுக்கு தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கை மற்றும் உடல்நலம் போன்றவற்றில் சாதகமான மாற்றங்கள் ஏற்படலாம் என நம்பப்படுகிறது. ஜோதிட நம்பிக்கைகளின்படி, இந்த நாளில் சனி பகவானை வழிபட்டு எள் தீபம் ஏற்றுதல், காகங்களுக்கு உணவு அளித்தல், எள் தானம் செய்தல் போன்ற எளிய பரிகாரங்களைச் செய்தால் சனியின் அருள் மேலும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில், ஜூலை 18 அன்று அதிர்ஷ்டம் அதிகமாக அமையக்கூடிய ராசிகள் குறித்து பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பல நல்ல முன்னேற்றங்கள் காத்திருக்கின்றன. பணவரவு தொடர்பான மகிழ்ச்சியான தகவல் கிடைக்க வாய்ப்பு உள்ளது. குடும்ப உறவுகள் சுமுகமாக இருக்கும். உடல்நலம் சீராக இருப்பதால் உற்சாகமாக செயல்பட முடியும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். நண்பர்களின் ஆதரவால் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகளை எளிதாக முடிக்கலாம். புதிய வாகனம் அல்லது சொத்து வாங்க நினைப்பவர்களுக்கு ஏற்ற நாளாக அமையும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சாதகமான நாளாக அமையும். நீண்ட காலமாக முடியாமல் இருந்த வேலைகள் நிறைவேறும் வாய்ப்பு உள்ளது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பழைய நண்பர்களை சந்திக்கும் சந்தர்ப்பமும் கிடைக்கலாம். சனி பகவானின் அருளால் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. புதிய திட்டங்களை தொடங்குவதற்கு ஏற்ற நேரமாக இருக்கும். தொழில் காரணமாக பயணம் செய்யும் வாய்ப்பும் உருவாகலாம். வருமானத்தை உயர்த்தும் புதிய வாய்ப்புகள் கிடைக்கக்கூடும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் தரும் நாளாக இருக்கும். திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பழைய கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரலாம். நண்பர்களின் ஒத்துழைப்பால் முக்கிய வேலைகள் வெற்றிகரமாக நிறைவேறும். சொத்து தொடர்பான விஷயங்களில் நல்ல பலன் கிடைக்கலாம். தன்னம்பிக்கை அதிகரித்து, தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் உருவாகும். குடும்ப உறவுகளிலும் இனிமை நிலவும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் துணையாக இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் வேகமாக நிறைவேறலாம். குடும்பத்தினருடன் ஆன்மீகப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கலாம். பணியிடத்தில் சக ஊழியர்களின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும். இழந்த பணம் திரும்ப கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் அதிகரிக்கும். உடல்நலமும் சீராக இருக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மீன ராசிக்காரர்களுக்கு இன்று மிகவும் மங்களகரமான நாளாக அமையக்கூடும். தன்னம்பிக்கை அதிகரித்து, நீண்ட நாட்களாக கவலை அளித்த விஷயங்கள் சாதகமான முடிவை அடையலாம். பணவரவில் முன்னேற்றம் காணலாம். திருமண வாழ்க்கையில் இனிமை அதிகரிக்கும். புதிய நட்புகள் மற்றும் உறவுகள் உருவாகும் வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் அதிகரித்து, எதிர்காலத்திற்கு பயனுள்ள வாய்ப்புகள் கிடைக்கக்கூடும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[astrology]]></category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/variyan-yoga-effects-these-5-zodiac-signs-will-experience-good-fortune-43keire"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Moon Transit: சந்திரன் ராசி மாறுவதால் 3 ராசிகளுக்கு குட் நியூஸ்! இனி பென்ஸ் கார்ல  போகும் யோகம் காத்திருக்கு.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/horoscope-moon-transit-brings-good-fortune-to-3-zodiac-signs-mxar4sc</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/horoscope-moon-transit-brings-good-fortune-to-3-zodiac-signs-mxar4sc</guid>
            <pubDate>Sat, 18 Jul 2026 08:16:31 +0530</pubDate>
            <description><![CDATA[ஜூலை 18, சனிக்கிழமை அன்று, நான்கு சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகின்றன. அதே நாளில் சந்திரன் தனது ராசியை மாற்றுகிறார். இந்த யோகங்களும் கிரக மாற்றங்களும் அனைத்து ராசிகளையும் பாதிக்கும்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxqvpy0gr1p55nsgj8n3w9je,imgname-guru-ketu-viveka-yoga-october-effects-on-zodiac-signs-1784285984783.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஜூலை 18, சனிக்கிழமை அன்று, நான்கு சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகின்றன. அதே நாளில் சந்திரன் தனது ராசியை மாற்றுகிறார். இந்த யோகங்களும் கிரக மாற்றங்களும் அனைத்து ராசிகளையும் பாதிக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பணியிடத்தில் இன்று உங்களுக்கு அமோகமான நாள். உங்கள் கடின உழைப்பைக் கண்டு மேலதிகாரிகள் முழு ஆதரவை வழங்குவதோடு, உங்களைப் பாராட்டி ஊக்குவிப்பார்கள். இது உங்கள் உத்தியோக வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;இருப்பினும், பண விஷயத்தில் சற்று எச்சரிக்கை தேவை. தேவையற்ற, ஆடம்பரச் செலவுகள் உங்கள் மாதாந்திர பட்ஜெட்டைத் தலைகீழாக மாற்றக்கூடும். குறுக்கு வழியில் அல்லது தவறான வழிகளில் பணம் சம்பாதிக்கும் ஆசைகள் வரலாம், அதற்கு இடம் கொடுத்துவிடாதீர்கள்.&lt;/p&gt;&lt;p&gt;இன்றைய நாளில் உங்கள் வாழ்க்கைத் துணையின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அவர்களின் ஆலோசனைகள் உங்களுக்குப் பொருளாதார ரீதியாகப் பெரிய லாபத்தையும், சரியான வழிகாட்டுதலையும் தரும். சிக்கனமும், துணையின் ஆதரவும் இன்றைய நாளை சிறப்பாக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நீண்ட நாட்களாக நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த ஒரு நல்ல வாய்ப்பு இன்று உங்களைத் தேடி வரும். குறிப்பாக, வெளிநாட்டிலிருந்து புதிய வேலை வாய்ப்புகள் வருவதற்கான சாதகமான சூழல் கைகூடி வரும்.&lt;/p&gt;&lt;p&gt;எந்தவொரு முக்கிய முடிவையும் எடுக்கும்போது அவசரப்படாமலும், உணர்ச்சிவசப்படாமலும் நிதானமாகச் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உத்தியோகம் மற்றும் சமூகத்தில் உங்களை எதிர்க்க நினைத்தவர்கள் பின்வாங்குவார்கள்; எதிரிகள் மீது உங்கள் ஆதிக்கம் தொடர்ந்து நீடிக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;குடும்பத்தில் உள்ள குழந்தைகளின் செயல்பாடுகளைக் கூர்ந்து கவனித்து, அவர்களை நல்வழிப்படுத்துவது அவசியம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீண்ட நாள் உபாதைகள் நீங்கி, உடல்நிலை முன்பை விட வெகுவாக மேம்படும். ஒரு சிறப்பான நாளாக இது அமையும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பணிபுரியும் இடத்தில் இன்று உங்கள் திறமைகள் முழுமையாக வெளிப்படும். உங்கள் சுறுசுறுப்பான செயல்பாடுகளால் சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக உங்களை வாட்டி வதைத்த நிதிப் பிரச்சினைகள் மற்றும் பணத் தேவைகள் படிப்படியாகத் தீர நல்ல வாய்ப்புகள் அமையும்.&lt;/p&gt;&lt;p&gt;இன்று உங்களைத் தேடி உதவி என்று வருபவர்களுக்கு, உங்களால் இயன்ற உதவிகளைச் செய்து மகிழும் நல்வாய்ப்பு கிடைக்கும். ரியல் எஸ்டேட், வீடு அல்லது புதிய சொத்துகளில் முதலீடு செய்வதற்கான யோகம் அமையப் பெற்றுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருப்பதால், குறைந்த முயற்சியிலேயே நீங்கள் தொட்ட காரியங்கள் அனைத்தும் மிகச் சிறந்த மற்றும் சாதகமான பலன்களை உங்களுக்குத் தேடித் தரும். வெற்றிகரமான நாளாக அமைய வாழ்த்துகள்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அலுவலகத்தில் இன்று மற்றவர்களுடன் பேசும்போது, வார்த்தைகளை மிகவும் கவனமாகப் பயன்படுத்துவது நல்லது. தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பதன் மூலம் மேலதிகாரியுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதைத் தடுத்துக் கொள்ளலாம்.&lt;/p&gt;&lt;p&gt;இன்று உங்களுக்குக் கிடைக்கும் புதிய நபர்களின் சந்திப்பு மற்றும் நட்பு, எதிர்கால வளர்ச்சிக்கு நல்ல நன்மைகளையும் புதிய வாய்ப்புகளையும் பெற்றுத் தரும்.&lt;/p&gt;&lt;p&gt;வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் இன்று கிடைக்காததால், சற்று மன அழுத்தம் அல்லது சோர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், இது தற்காலிகமானதே; சூழ்நிலைகள் மிக விரைவில் உங்களுக்குச் சாதகமாக சீராகும் என்பதால் கவலைப்படத் தேவையில்லை. பொறுமையும் நிதானமும் இன்றைய நாளை நன்மையாக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்று அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசக்கூடும். பெரிய அளவில் கடின உழைப்பு இல்லாமலேயே, நீங்கள் நீண்ட நாட்களாக இழுபறியில் வைத்திருந்த பல முக்கிய வேலைகள் மிக எளிதாக முடிவடையும்.&lt;/p&gt;&lt;p&gt;உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் தேடி வரலாம் அல்லது பதவி உயர்வு, சம்பள உயர்வு பற்றிய மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். குடும்ப வாழ்க்கையைப் பொறுத்தவரை, உங்கள் அன்பான நடத்தையால் குடும்பத்தினர் அனைவரும் உங்கள் மீது மிகுந்த மகிழ்ச்சியும் திருப்தியும் அடைவார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;இதுமட்டுமின்றி, இன்று உங்கள் வாழ்க்கைத் துணையிடமிருந்து நீங்கள் சற்றும் எதிர்பாராத ஒரு அழகான சர்ப்ரைஸ் பரிசு அல்லது செய்தி கிடைக்க வாய்ப்புள்ளது. ஒட்டுமொத்தத்தில் இன்று உங்களுக்கு மகிழ்ச்சியும் அதிர்ஷ்டமும் நிறைந்த அற்புதமான நாளாக அமையும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்று நீங்கள் செய்யும் ஒரு சிறிய தவறு கூட பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால், ஒவ்வொரு செயலிலும் மிகவும் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் இருப்பது அவசியம். அவசரப்பட்டோ அல்லது கோபத்திலோ எந்தவொரு முக்கிய முடிவையும் எடுப்பதைத் தவிப்பதே நல்லது.&lt;/p&gt;&lt;p&gt;குடும்ப வாழ்க்கையில், உங்கள் வாழ்க்கைத் துணையின் கருத்துகளுக்கும் ஆலோசனைகளுக்கும் மதிப்பு கொடுங்கள்; அவர்களின் பேச்சைப் புறக்கணிப்பது உங்கள் உறவில் தேவையற்ற மனஸ்தாபங்களையும் விரிசல்களையும் உண்டாக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;இன்று நீங்கள் பயணம் செய்ய நேர்ந்தால், உங்கள் உடமைகள் மற்றும் ஆவணங்களை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளவும். சூழ்நிலைகள் சற்று சவாலாக இருந்தாலும், நீங்கள் அமைதியையும் பொறுமையையும் கடைப்பிடித்தால், இந்த நாள் இறுதியில் உங்களுக்கு சாதகமாகவே அமையும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்று உங்கள் குடும்பத்திலோ அல்லது உறவினர்கள் வட்டாரத்திலோ நடைபெறும் ஒரு சுப நிகழ்ச்சியில் மகிழ்ச்சியுடன் பங்கேற்கும் நல்வாய்ப்பு கிடைக்கும். இது உங்களுக்கு மனநிறைவைத் தரும்.&lt;/p&gt;&lt;p&gt;நிதி நிலைமையைப் பொறுத்தவரை அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் உள்ளது. நீண்ட நாட்களாக வராமல் இழுபறியில் இருந்த பழைய கடன்கள் அல்லது நிலுவைப் பணம் இன்று உங்கள் கைக்கு வந்து சேர வாய்ப்புள்ளது. காதல் உறவுகளில் பரஸ்பர புரிதல் அதிகரித்து, உங்கள் அன்பு மேலும் வலுப்பெறும்.&lt;/p&gt;&lt;p&gt;கல்வித்துறையில் இருக்கும் மாணவர்களுக்கும், வேலை தேடுபவர்களுக்கும் இன்று சிறப்பான நாள். கடின உழைப்பிற்குரிய பலன் கிடைக்கும்; போட்டித் தேர்வுகள் அல்லது நேர்காணல்களில் (Interviews) நீங்கள் எதிர்பார்த்த வெற்றியை எளிதாகக் கணிப்பீர்கள். ஒட்டுமொத்தத்தில் இன்று நன்மைகள் சூழும் இனிய நாளாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்று உத்தியோகம் மற்றும் தொழில் துறையில் நீங்கள் சிந்தித்துச் செய்த கடின உழைப்பை மற்றவர்கள் கவனித்துப் பாராட்டுவார்கள். இதனால் உங்கள் மீதான மதிப்பும் மரியாதையும் உயரும். புதிய முதலீடுகளை மேற்கொள்வது குறித்து திட்டமிடுவீர்கள்; ஆனால், அதில் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காமல், நிதானமாகச் செயல்படுவது நல்லது.&lt;/p&gt;&lt;p&gt;உங்களைத் தேடி வருபவர்களுக்கும், தேவைப்படுபவர்களுக்கும் உங்களால் இயன்ற உதவிகளைச் செய்வதன் மூலம் மனம் நிம்மதியும் பேரமைதியும் அடையும்.&lt;/p&gt;&lt;p&gt;குடும்பத் தேவைகளை உணர்ந்து, உங்கள் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த மற்றும் முடிக்கப்படாமல் அரைகுறையாக நின்ற பல முக்கிய வேலைகள் இன்று வெற்றிகரமாக முழுமையடையும். நிதானமும் உழைப்பும் நற்பலன் தரும் நாளிது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்று குடும்ப உறுப்பினர்களுடன் அமர்ந்து எதிர்காலம் சார்ந்த முக்கிய முடிவுகளைப் பற்றி சுமுகமாக விவாதிப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் இணைந்து மன அமைதி தரும் ஒரு ஆன்மீகப் பயணத்தைத் திட்டமிடுவீர்கள், இது தம்பதியருக்குள் நெருக்கத்தை அதிகரிக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவோ அல்லது பெரிய ஆர்டர்கள் கிடைக்கவோ அதிக வாய்ப்புள்ளது. குறிப்பாக, வெளிநாடு மற்றும் ஏற்றுமதி-இறக்குமதி தொடர்பான வேலைகளில் இருப்பவர்களுக்குச் சாதகமான பலன்களும் லாபமும் கிட்டும்.&lt;/p&gt;&lt;p&gt;இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு உங்கள் துறையில் அனுபவம் உள்ளவர்களின் ஆலோசனைகளைக் கேட்டுச் செயல்படுவது, உங்களை அடுத்த கட்ட வெற்றிக்குத் துல்லியமாக வழிநடத்தும். கூட்டு முயற்சியால் முன்னேற்றம் காணும் இனிய நாளிது!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்று உங்களைச் சுற்றி தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படலாம், எனவே எந்தவொரு சர்ச்சையிலும் சிக்குவதைத் தவிர்த்து அமைதி காப்பது நல்லது. வியாபாரத் துறையில் இருப்பவர்கள் பண விஷயத்திலோ அல்லது ஒப்பந்தங்களிலோ யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்; எச்சரிக்கை தேவை.&lt;/p&gt;&lt;p&gt;உங்கள் எதிர்காலத் திட்டங்களையோ அல்லது ரகசியங்களையோ இப்போது யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் ரகசியமாக வைப்பது உங்களுக்குப் பாதுகாப்பு தரும். வேலை செய்யும் இடத்தில் தேவையற்ற ஈகோக்களைக் தவிர்த்து, சக ஊழியர்களுடன் நல்லுறவைப் பேணி ஒத்துப் போவது காரிய வெற்றியைக் கொடுக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;நாளின் பிற்பகுதியில் உங்கள் குடும்பத்தினர் அல்லது உறவினர்களிடமிருந்து வரும் சில சுபமான மற்றும் நல்ல செய்திகள், உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உங்கள் மனநிலையை பெருமளவில் மேம்படுத்தும். எச்சரிக்கையும் பொறுமையும் வேண்டிய நாளிது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;புதிய தொழில்கள், வியாபாரங்கள் அல்லது கூட்டு முயற்சிகளைத் தொடங்குவதற்கு இன்று மிக அற்புதமான மற்றும் சாதகமான நாளாகும். நீண்ட நாட்களாகக் காதல் திருமணத்தைப் பற்றி வீட்டில் பேச நினைத்தவர்களுக்கு, இன்று குடும்பத்தினரிடமிருந்து சாதகமான சிக்னல்களும் பச்சைக்கொடியும் கிடைக்க வாய்ப்புள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவி, சூழல் மிகவும் இனிமையாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மனமகிழ்ச்சியோடு தரமான நேரத்தைச் செலவிடும் வாய்ப்பு கிட்டும்.&lt;/p&gt;&lt;p&gt;இதுமட்டுமின்றி, உங்கள் குழந்தைகளின் கல்வி அல்லது வேலைவாய்ப்பில் கிடைக்கும் சிறப்பான வெற்றி, உங்கள் குடும்பத்திற்குப் பெருமையையும் சமூகத்தில் நல்ல மதிப்பையும் தேடித் தரும். மகிழ்ச்சியும் முன்னேற்றமும் நிறைந்த சுப நாளிது!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்று குடும்பத்திலோ அல்லது பணிபுரியும் இடத்திலோ தேவைப்படும் மற்றும் உங்களிடம் கேட்கப்படும் இடங்களில் மட்டும் உங்கள் கருத்தைத் தெரிவிப்பது நல்லது. மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் அல்லது தேவையற்ற விவாதங்களில் அதிகம் தலையிடுவது உங்களுக்கு வீண் சிக்கல்களையும் மனவருத்தத்தையும் தேடித்தரலாம்.&lt;/p&gt;&lt;p&gt;ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீங்கள் நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்த நாள்பட்ட உடல்நலப் பிரச்சினைகளிலிருந்து படிப்படியாக விடுபட்டு, நல்ல தீர்வைக் காண்பீர்கள்.&lt;/p&gt;&lt;p&gt;குடும்பத்தில் சில சிறிய கருத்து வேறுபாடுகளும் வாக்குவாதங்களும் தோன்றக்கூடும்; எனினும், நீங்கள் கோபப்படாமல் உங்கள் விவேகத்தாலும் சாதுரியத்தாலும் பேசினால் நிலைமையை எளிதாகச் சரிசெய்துவிடலாம். வார்த்தைகளில் நிதானமும், செயல்களில் பொறுமையும் இன்றைய நாளை அமைதியாக்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[astrology]]></category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/horoscope-moon-transit-brings-good-fortune-to-3-zodiac-signs-mxar4sc"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Horoscope: புதன் புத்தியுடன் சேரும் சுக்கிர திசை.! யாருக்கெல்லாம் தங்க புதையல் கிடைக்க போகுது தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/horoscope-venus-dasha-meets-mercury-wisdom-who-is-set-to-discover-golden-fortune-1l1az4w</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/horoscope-venus-dasha-meets-mercury-wisdom-who-is-set-to-discover-golden-fortune-1l1az4w</guid>
            <pubDate>Sat, 18 Jul 2026 07:49:52 +0530</pubDate>
            <description><![CDATA[ஜோதிட சாஸ்திரப்படி, சுக்கிர திசையில் புதன் புத்தி வருவது ஒரு பொற்காலமாகும். நட்பு கிரகங்களான இவர்களின் சேர்க்கை 6 ஆகிய ராசிகளுக்கு 'தங்க புதையல்' போன்ற திடீர் அதிர்ஷ்டத்தையும், அளப்பரிய செல்வத்தையும் வாரி வழங்கும்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxsg3f8vsv6yd0xc0tceadvp,imgname-chatgpt-image-jul-18--2026--07-44-10-am--1--1784340921626.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஜோதிட சாஸ்திரப்படி, சுக்கிர திசையில் புதன் புத்தி வருவது ஒரு பொற்காலமாகும். நட்பு கிரகங்களான இவர்களின் சேர்க்கை 6 ஆகிய ராசிகளுக்கு 'தங்க புதையல்' போன்ற திடீர் அதிர்ஷ்டத்தையும், அளப்பரிய செல்வத்தையும் வாரி வழங்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜோதிட சாஸ்திரத்தில் நவக்கிரகங்களின் தசா புத்திகளுக்கு மிக முக்கிய இடமுண்டு. ஒருவருடைய வாழ்க்கையை தலைகீழாக மாற்றி, உச்சத்திற்குக் கொண்டு செல்லும் வல்லமை சில கிரக சேர்க்கைகளுக்கு உண்டு. அந்த வகையில், சொகுசு, ஆடம்பரம், வாகன யோகம், மற்றும் கலைகளுக்கு அதிபதியான சுக்கிரனின் தசையில், புத்தி கூர்மை, வியாபாரம், தனலாபம் மற்றும் சாதுரியத்திற்கு அதிபதியான புதனின் புத்தி இணையும் காலம் என்பது ஒரு பொற்காலமாகும்.&lt;/p&gt;&lt;p&gt;சுக்கிரனும் புதனும் ஜோதிட ரீதியாக 'நட்பு கிரகங்கள்' ஆவர். இந்த இரு சுப கிரகங்களும் இணையும் போது, அது ஒருவருக்கு 'தங்க புதையல்' போன்ற திடீர் அதிர்ஷ்டங்களையும், அளப்பரிய செல்வச் சேர்க்கையையும் வாரி வழங்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சுக்கிர தசை மொத்தம் 20 ஆண்டுகள் நடைபெறும். இதில் புதன் புத்தியானது சுமார் 2 ஆண்டுகள் 10 மாதங்கள் நீடிக்கும். சுக்கிரன் போக காரகன் (இன்பங்களை தருபவர்), புதன் தன காரகன் மற்றும் புத்தி காரகன்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;&quot;சுக்கிரனோடு புதனும் கூடி நற்களத்திர யோகம் தந்தால், அக்ரமமாய் தனமும் தேடி அதிர்ஷ்டங்கள் வந்து சேரும்.&quot;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஜாதகத்தில் சுக்கிரனும் புதனும் கேந்திர, திரிகோணங்களிலோ அல்லது 2, 11 ஆகிய லாப ஸ்தானங்களிலோ பலம்பெற்று அமர்ந்திருந்தால், இந்த காலகட்டத்தில் லட்சுமி கடாட்சம் முழுமையாகக் கிடைக்கும். ஆடி மாதம் தொடங்கியுள்ள நிலையில் இந்த அதிர்ஷ்டம் சில ராசிகளுக்கு கிடைக்க போகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரிஷபம் மற்றும் துலாம் ராசியினருக்கு இனி நல்ல பொறந்சாச்சு, கஷ்டமெல்லாம் தீர்ந்தாச்சு. உங்கள் ராசி நாதனான சுக்கிரனின் தசையில் புதன் புத்தி நடக்கும் போது, நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் எதிர்பாராத லாபம் கிடைக்கும். புதையல் போன்ற திடீர் பண வரவு, லாட்டரி, ஷேர் மார்க்கெட் அல்லது பிசினஸ் டீலிங் மூலம் பெரிய தொகை கைக்கு வரும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மிதுனம் மற்றும் கன்னி ராசியினருக்கு இனி தொட்டதெல்லாம் பொன்னாகும். சந்தோஷ வெற்றிகள் குவியும் காலமிது. புதனை அதிபதியாகக் கொண்ட உங்களுக்கு, நட்பு கிரகமான சுக்கிரனின் தசை நடப்பதே பெரும் பாக்கியம். இதில் புதன் புத்தி வரும்போது உங்கள் புத்தி கூர்மையால் பல கோடிகளை சம்பாதிப்பீர்கள். புதிய தொழில் முதலீடுகள் இரட்டிப்பு லாபத்தைத் தரும். கடன் தொல்லைகள் முற்றிலுமாக நீங்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மகரம் மற்றும் கும்பம் ராசியினர் சும்மா இருந்தால் கூட பணம் வந்துகிட்டே இருக்குமாம். இவர்கள் தொடங்கும் சின்ன காரியங்கள் கூட மிகப்பெரிய வெற்றியை கொடுக்குமாம். இவர்களுக்கு சிம்மாசனம் காத்திருக்கு என்கின்றனர் ஜோதிடர்கள். சனிக்கு சுக்கிரனும் புதனும் பரம நண்பர்கள். எனவே, இந்த ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் ஒரு 'ராஜயோக' காலமாகும். ரியல் எஸ்டேட், தங்கம் மற்றும் வைர வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கற்பனை செய்ய முடியாத அளவிற்கு லாபம் குவியும். புது வீடு, ஆடம்பர வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;திடீர் பணவரவு (Windfall Gain): &lt;/strong&gt;நீண்ட நாட்களாக வராமல் இருந்த கடன் தொகை, நீதிமன்ற வழக்குகளில் சாதகமான தீர்ப்பு மூலம் வரும் பணம் என எதிர்பாராத வழிகளில் தனலாபம் உண்டாகும்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;தொழில் வளர்ச்சி: &lt;/strong&gt;முடங்கிக் கிடந்த வியாபாரம் புத்துயிர் பெறும். புதிய கிளைகளைத் தொடங்குவீர்கள். வெளிநாட்டுத் தொடர்புகள் மூலம் லாபம் பெருகும்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;ஆபரணச் சேர்க்கை:&lt;/strong&gt; 'தங்க புதையல்' என்பது வெறும் குறியீடு மட்டுமல்ல; இந்த காலகட்டத்தில் நிஜமாகவே தங்கம், வெள்ளி மற்றும் வைர நகைகளை வாங்கும் யோகம் மிக அதிகமாக இருக்கும்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;கலைத்துறையில் உச்சம்:&lt;/strong&gt; சினிமா, இசை, ஊடகம், மற்றும் எழுத்துறையில் இருப்பவர்களுக்குப் புகழும், அதற்கேற்ற பெரும் பணமும் தேடி வரும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த தசா புத்தியின் நற்பலன்களை முழுமையாகப் பெற:&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி வழிபாடும், புதன்கிழமைகளில் மகாவிஷ்ணு வழிபாடும் செய்ய வேண்டும்.&lt;/li&gt; &lt;li&gt;துளசி செடிக்கு விளக்கேற்றி வழிபடுவது புதனின் பலத்தை அதிகரிக்கும்.&lt;/li&gt; &lt;li&gt;ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கு உதவுவது அல்லது பச்சை நிற ஆடைகளைத் தானம் செய்வது சிறந்தது.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;சுருக்கமாகக் கூறின், சுக்கிர திசையில் புதன் புத்தி என்பது வறுமையை விரட்டி, வாழ்வை வளமாக்கும் ஒரு அமுத கானமாகும். இந்த காலகட்டத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்பவர்கள், சமூகத்தில் பெரும் செல்வந்தர்களாக உருவெடுப்பார்கள் என்பதில் ஐயமில்லை!&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[astrology]]></category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/horoscope-venus-dasha-meets-mercury-wisdom-who-is-set-to-discover-golden-fortune-1l1az4w"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Shani Vakra Peyarchi 2026: ஜூலை 27 முதல் சனியின் வக்ர கதி ஆரம்பம்! யாருக்கு பணமழை? ராஜயோகம் பெறப்போகும் அந்த 6 ராசிகள் யார் தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/saturn-retrograde-2026-shani-vakra-peyarchi-from-july-27-to-bring-rajayoga-for-6-zodiac-signs-f65odbg</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/saturn-retrograde-2026-shani-vakra-peyarchi-from-july-27-to-bring-rajayoga-for-6-zodiac-signs-f65odbg</guid>
            <pubDate>Sat, 18 Jul 2026 07:42:33 +0530</pubDate>
            <description><![CDATA[Astrology: ஜூலை 27 முதல் டிசம்பர் 12 வரை தனது வக்ர இயக்கத்தைத் தொடங்குகிறார். ஜூலை 26 அன்று நிகழவிருக்கும் இந்த சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகாரர்களுக்கு எதிரொலித்தாலும், குறிப்பிட்ட 6 ராசிகளுக்கு மட்டும் ராஜயோக' காலமாக அமையப் போகிறது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kegxwreq449dqcdkgr01btcs,imgname-sani-vakra-peyarchi-2026-tamil-1767947264471.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Astrology: ஜூலை 27 முதல் டிசம்பர் 12 வரை தனது வக்ர இயக்கத்தைத் தொடங்குகிறார். ஜூலை 26 அன்று நிகழவிருக்கும் இந்த சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகாரர்களுக்கு எதிரொலித்தாலும், குறிப்பிட்ட 6 ராசிகளுக்கு மட்டும் ராஜயோக' காலமாக அமையப் போகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தற்போது மீன ராசியில் சஞ்சரித்து வரும் சனி பகவான் வரும் ஜூலை 27 முதல் டிசம்பர் 12 வரை தனது வக்ர இயக்கத்தைத் தொடங்குகிறார். ஜூலை 26 அன்று நிகழவிருக்கும் இந்த சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகாரர்களுக்கு எதிரொலித்தாலும், குறிப்பிட்ட 6 ராசிகளுக்கு மட்டும் ராஜயோக' காலமாக அமையப் போகிறது. சனி பகவானின் இந்த வக்ர கதியால் உடனடி சுப பலன்களையும், அள்ள அள்ளக் குறையாத நன்மைகளையும் பெறப்போகும் அந்த அதிர்ஷ்டசாலி ராசிகள் யார் யார் என்பதை இங்கே பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த சனி வக்ர பெயர்ச்சி அற்புதம் நிறைந்ததாக அமையப்போகிறது. நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த பதவி உயர்வு உங்களை தேடி வரும். தொழில் வாழ்க்கையில் அதிவேக முன்னேற்றத்துடன், எதிர்பாராத திடீர் பண வரவு உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். முடங்கிக் கிடந்த வணிகம் விறுவிறுப்படைந்து அசுர லாபத்தை தரும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மிதுன ராசியினருக்கு சனி வக்ர பெயர்ச்சியால் பல நாட்களாக இருந்த தடைகள் விலகி நன்மைகள் குவியும். நீண்ட நாள் உடல்நலப் பிரச்சினைகளிலிருந்து முழுமையான விடுதலை கிடைக்கும். கைக்கு வராமல் இழுத்தடித்த பழைய பாக்கிகள் அனைத்தும் உரிய நேரத்தில் வந்து சேரும். வருமானம் நாளுக்கு நாள் சீராக உயரும். பணியில் இருப்பவர்களுக்கும், வேலை தேடுபவர்களுக்கும் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு கிடைப்பதற்கான சூழல் உருவாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சனி வக்ர பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் மிக உன்னதமான செழிப்பையும், அளப்பரிய வெற்றியையும் அனுபவிக்கப் போகிறார்கள். அரசியல் செல்வாக்கு உயரும். அரசு துறையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் நிச்சயம் உண்டு. பிள்ளைகளால் பெருமை உண்டாகும். கௌரவமான குடும்பத்தில் இருந்து வரன் அமைந்து திருமண உறவு உறுதியாகும். உடல் ஆரோக்கியம் சீராகும். போட்டித் தேர்வுகள், நேர்காணல்களில் பெரும் வெற்றி கிடைக்கும். வெளிநாட்டிலிருந்து புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;துலாம் ராசியினருக்கு இந்த சனி பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை வாரி வழங்க போகிறது. சமுதாயத்தில் உங்களது மதிப்பும் அந்தஸ்தும் பல மடங்கு உயரும். தொழிலில் நீங்கள் செய்யும் புதிய மாற்றங்கள் பெரும் லாபத்தை ஈட்டித் தரும். பணப் பிரச்சனைகள், தனிப்பட்ட குழப்பங்கள் மற்றும் நீண்ட நாள் உடல்நலக் குறைபாடுகள் நீங்கி நிம்மதி பிறக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு மழலைச் செல்வம் கிட்டும்; பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சனி வக்ர பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்கள் தொட்ட காரியங்கள் அனைத்திலும் மிக எளிதாக வெற்றியை எட்டுவார்கள். குறைந்த முயற்சியிலேயே நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத பெரும் லாபத்தை ஈட்ட முடியும். புதிய மனிதர்களின் தொடர்புகளால் நன்மைகள் பெருகும். நீங்கள் நீண்ட நாட்களாக விரும்பிய இடமாற்றம் அல்லது புதிய வீட்டிற்கு குடிபெயரும் வாய்ப்பு தானாகவே அமையும். சனி பகவானின் அருளால் குழந்தை பாக்கியமும் உண்டாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மகர ராசியினருக்கு இந்த சனி வக்ர பெயர்ச்சியானது கற்பனைக்கு எட்டாத சுப பலன்களை அள்ளித் தரப்போகிறது. வேலை செய்யும் இடத்தில் உங்களது திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைத்து, உயர் பதவிகளை அடைவீர்கள். சம்பள உயர்வும், பதவி உயர்வும் தேடி வரும். கையில் பணப்புழக்கம் அதிகரித்து, எதிர்பாராத வழிகளில் பலத்த பண வரவு உண்டாகும். வேலையில்லாமல் தவித்தவர்களுக்கு அவர்கள் விரும்பிய முன்னணி நிறுவனங்களிலேயே வேலை கிடைக்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[astrology]]></category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/saturn-retrograde-2026-shani-vakra-peyarchi-from-july-27-to-bring-rajayoga-for-6-zodiac-signs-f65odbg"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஸ்விக்கி, ஓலா ஊழியர்களுக்கும் இனி மாத பென்ஷன்! மத்திய அரசின் EPFO 3.0 அதிரடி திட்டம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/epfo-three-point-zero-monthly-pension-scheme-for-swiggy-zomato-ola-and-uber-gig-workers-soon-v18nagg</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/epfo-three-point-zero-monthly-pension-scheme-for-swiggy-zomato-ola-and-uber-gig-workers-soon-v18nagg</guid>
            <pubDate>Sat, 18 Jul 2026 07:40:32 +0530</pubDate>
            <description><![CDATA[EPFO 3.0: ஸ்விக்கி, சோமாட்டோ, ஓலா ஊழியர்கள் மற்றும் கட்டடத் தொழிலாளர்களுக்கு மத்திய அரசின் EPFO 3.0 மூலம் புதிய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxsf7af86ngqex2zpe835r88,imgname-epfo-3.0-1784339999208.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;EPFO 3.0: ஸ்விக்கி, சோமாட்டோ, ஓலா ஊழியர்கள் மற்றும் கட்டடத் தொழிலாளர்களுக்கு மத்திய அரசின் EPFO 3.0 மூலம் புதிய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஸ்விக்கி, சோமேட்டோ போன்ற நிறுவனங்களின் டெலிவரி பார்ட்னர்கள், ஓலா, உபேர் ஓட்டுநர்கள் போன்ற கோடிக்கணக்கான கிக் தொழிலாளர்களுக்கும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு வடிவமைத்து வருகிறது. EPFO 3.0 சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, அதிக சம்பளம் வாங்கும் ஊழியர்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த பங்களிப்பு அடிப்படையிலான ஓய்வூதியத் திட்டம் உருவாக்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;தற்போது நடைமுறையில் உள்ள ஊழியர் ஓய்வூதியத் திட்டம் (EPS), மாதம் ரூ.15,000 வரை சம்பளம் பெறுபவர்களுக்கு மட்டுமே பொருந்தும். இதனால், நாட்டில் உள்ள சுமார் 41 கோடிக்கும் அதிகமான அமைப்புசாரா மற்றும் கிக் தொழிலாளர்கள் எந்தவிதமான ஓய்வூதியப் பாதுகாப்புமின்றி உள்ளனர். இந்தப் பெரிய இடைவெளியை நிரப்பும் நோக்கில், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வெற்றிகரமாகச் செயல்படும் மாடல்களை ஆய்வு செய்து இந்தத் திட்டம் இறுதி செய்யப்பட்டு வருகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க: &lt;/strong&gt;EPFO Update: ஜூலை 15 முதல் 10 பெரிய மாற்றங்கள்! வட்டி முதல் ஆட்டோ கிளைம் வரை! முழு விவரம்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த புதிய திட்டத்தின் கீழ், ஒரு ஊழியருக்கு 55 வயது ஆகும் வரை, அவரது கணக்கு ஒரு சாதாரண வருங்கால வைப்பு நிதி (PF) கணக்கு போலவே செயல்படும். செலுத்தப்படும் தொகை, பாதுகாப்பான அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்டு, ஆண்டுதோறும் வட்டி வரவு வைக்கப்படும். ஒருவர் 60 வயதை எட்டும்போது, அதுவரை சேர்ந்துள்ள மொத்தத் தொகை, 'இலக்கு ஓய்வூதியத் தொகை' (Target Retirement Sum - TRS) என்ற அடிப்படையில் ஓய்வூதியமாக மாற்றப்படும். சந்தையில் நிலவும் வட்டி விகிதங்கள் மற்றும் ஆனுட்டி விகிதங்களைக் கொண்டு இந்த ஓய்வூதியம் கணக்கிடப்படும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க:&lt;/strong&gt; Indian Railways: சென்னை டூ ஹைதராபாத் வெறும் 3 மணி நேரம் தான்! புல்லட் ரயில் குறித்து மாஸ் அப்டேட்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தற்போதுள்ள தேசிய ஓய்வூதியத் திட்டத்தை (NPS) போலல்லாமல், இந்த புதிய திட்டம் அதிக நெகிழ்வுத்தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஓய்வூதியம் பெறுவதற்கு இரண்டு முக்கிய வாய்ப்புகள் வழங்கப்படும். முதல் வாய்ப்பின்படி, உங்களின் அசல் தொகை அப்படியே பாதுகாப்பாக இருக்கும், அதிலிருந்து கிடைக்கும் வட்டியை மட்டும் நீங்கள் மாத ஓய்வூதியமாகப் பெறலாம்.&lt;/p&gt;&lt;p&gt;உதாரணமாக, உங்கள் கணக்கில் ரூ.1 கோடி இருந்தால், அதற்கு 8% வட்டி கிடைப்பதாகக் கொண்டால், ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வட்டியாகக் கிடைக்கும். இது மாதத்திற்கு சுமார் ரூ.66,000 ஓய்வூதியமாக உங்களுக்கு வழங்கப்படும். இரண்டாவது வாய்ப்பின்படி, தேவைப்பட்டால் அசலிலிருந்தும் ஒரு பகுதியை எடுத்துப் பயன்படுத்திக்கொள்ளலாம். இது ஆரம்ப ஆண்டுகளில் அதிக ஓய்வூதியம் தேவைப்படுபவர்களுக்குப் பேருதவியாக இருக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தத் திட்டத்தின் மூலம் ஸ்விக்கி, சோமேட்டோ, ஓலா, உபேர் போன்ற நிறுவனங்களில் பணிபுரியும் டெலிவரி பார்ட்னர்கள் மற்றும் ஓட்டுநர்கள் நேரடியாகப் பயனடைவார்கள். இந்த நிறுவனங்கள் தங்களது வருவாயில் இருந்து 1% முதல் 2% வரை ஊழியர்களின் ஓய்வூதியக் கணக்கிற்குப் பங்களிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதேபோல், நாடு முழுவதும் உள்ள 3.5 கோடிக்கும் அதிகமான கட்டடத் தொழிலாளர்களும் இதில் இணைக்கப்படுவார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;இதற்காக, மாநில நல வாரியங்களில் பயன்படுத்தப்படாமல் உள்ள ரூ.70,000 கோடி செஸ் நிதியைப் பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர, மாதம் ரூ.15,000-க்கு மேல் சம்பளம் வாங்குவதால் தற்போது EPS திட்டத்தில் சேர முடியாத ஊழியர்களும், இந்த புதிய திட்டத்தில் இணைந்து தங்களின் ஓய்வூதிய காலத்தில் சேமிப்பைத் தொடங்கலாம் என்பது இதன் சிறப்பம்சமாகும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[business]]></category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/epfo-three-point-zero-monthly-pension-scheme-for-swiggy-zomato-ola-and-uber-gig-workers-soon-v18nagg"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Zodiac signs: சனி கட்டத்திற்குள் புதன்.! சொத்துக்கள் குவியும் நேரம் வந்தாச்சு.! 4 ராசிகளுக்கு காட்டில் பணமழை.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/mercury-enters-saturn-orbit-4-zodiac-signs-will-rain-money-and-wealth-at58sml</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/mercury-enters-saturn-orbit-4-zodiac-signs-will-rain-money-and-wealth-at58sml</guid>
            <pubDate>Sat, 18 Jul 2026 07:19:49 +0530</pubDate>
            <description><![CDATA[நவகிரகங்களின் தளபதியான புதனும், கர்ம காரகனான சனியும் இணைவதால் ஒரு மகா தனயோகம் உருவாகிறது. இந்த கிரக சேர்க்கையால் 4 ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம், திடீர் சொத்து சேர்க்கை, மற்றும் தொழில் வளர்ச்சி போன்ற மகா பாக்கியங்கள் கிடைக்கப் போகிறது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxsdv9bxhp1katp8dp4c12mb,imgname-gemini-generated-image-dstkwxdstkwxdstk--1--1784338556284.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;நவகிரகங்களின் தளபதியான புதனும், கர்ம காரகனான சனியும் இணைவதால் ஒரு மகா தனயோகம் உருவாகிறது. இந்த கிரக சேர்க்கையால் 4 ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம், திடீர் சொத்து சேர்க்கை, மற்றும் தொழில் வளர்ச்சி போன்ற மகா பாக்கியங்கள் கிடைக்கப் போகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜோதிட உலகத்தில் கிரகங்களின் பெயர்ச்சியும், சேர்க்கையும் எப்போதும் ஒரு மனிதனின் வாழ்க்கையில் பெரும் திருப்பங்களை ஏற்படுத்தும் வல்லமை கொண்டவை. அந்த வகையில் நவகிரகங்களின் தளபதியான புதனும், கர்ம காரகனான சனியும் இணையும் போது அல்லது ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும் போது, அது வாழ்நாளில் மறக்க முடியாத மகா பாக்கியங்களை அள்ளித் தரும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;தற்போது சனி பகவானின் ஆதிக்கப் பகுதிக்குள் புதன் பகவான் பிரவேசிப்பது, பிரபஞ்சத்தில் ஒரு மகா தனயோகத்தை உருவாக்கப் போகிறது. ஜோதிட சாஸ்திரப்படி, சனியும் புதனும் நட்பு கிரகங்கள். எனவே, இந்த சேர்க்கை சில ராசிகளுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டத்தையும், திடீர் சொத்து சேர்க்கையையும் வாரி வழங்கக் காத்திருக்கிறது. குறிப்பாக, 4 ராசிகளுக்கு இந்த காலகட்டம் &quot;காட்டில் பணமழை&quot; பொழியும் நேரமாக அமையப் போகிறது.&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;அந்த அதிர்ஷ்டக்கார 4 ராசிகள் எவை? அவர்களின் வாழ்வில் என்னென்ன மாற்றங்கள் நிகழப் போகிறது என்பதை இந்த விரிவான ஜோதிட கட்டுரையில் காண்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தொட்டதெல்லாம் பொன்னாகும் நேரம் மேஷ ராசி நேயர்களுக்கு இந்த புதன்-சனி சேர்க்கையானது லாப ஸ்தானத்தில் அமையப் போவதால், பொருளாதார ரீதியாக நீங்கள் உச்சத்தைத் தொடப் போகிறீர்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பண வரவு: &lt;/strong&gt;நீண்ட நாட்களாக வராமல் இருந்த கடன்கள் வசூலாகும். பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் விலகி, உங்கள் கைக்கு சொத்துக்கள் வந்து சேரும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;தொழில்/வியாபார வளர்ச்சி:&lt;/strong&gt; புதிய முதலீடுகள் பெரும் லாபத்தைத் தரும். கூட்டு வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட இரட்டிப்பு மடங்கு லாபம் கிடைக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;அதிர்ஷ்டக் குறிப்பு: &lt;/strong&gt;புதன்கிழமைகளில் பெருமாள் வழிபாடு செய்வது உங்கள் தன வரவை மேலும் அதிகரிக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் மிதுன ராசியின் அதிபதியே புதன் பகவான் தான். தங்களுக்கு சாதகமான சனி கட்டத்திற்குள் புதன் நுழைவதால், மிதுன ராசிக்காரர்களுக்கு ராஜயோக காலம் ஆரம்பமாகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;சொத்து சேர்க்கை: &lt;/strong&gt;புதிய வீடு, மனை அல்லது வாகனம் வாங்குவதற்கான யோகம் கைகூடி வரும். ரியல் எஸ்டேட் மற்றும் பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு பிரம்மாண்ட லாபம் காத்திருக்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;உத்தியோகம்: &lt;/strong&gt;வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் நிச்சயம் உண்டு. வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும், அதன் மூலம் வருமானமும் பெருகும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;அதிர்ஷ்டக் குறிப்பு: &lt;/strong&gt;சனிக்கிழமைகளில் ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது யோகத்தை இரட்டிப்பாக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குபேர யோகம் தேடி வரும் புதனை ராசி நாதனாகக் கொண்ட கன்னி ராசியினருக்கு, இந்த கிரக நிலைகளின் மாற்றம் வாழ்க்கைத் தரத்தையே மாற்றியமைக்கப் போகிறது. கடன் தொல்லைகளில் இருந்து முழுமையான விடுதலை கிடைக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பணமழை:&lt;/strong&gt; எதிர்பாராத வழிகளில், அதாவது லாட்டரி, பரிசுப் போட்டிகள் அல்லது காப்பீட்டுத் தொகைகள் மூலம் திடீர் பண வரவு உண்டாகும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;வியாபார லாபம்: &lt;/strong&gt;புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இதுவே பொன்னான காலம். உங்கள் புத்திசாலித்தனத்தால் எதிரிகளையும் வென்று, தொழிலில் கொடிகட்டிப் பறப்பீர்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;அதிர்ஷ்டக் குறிப்பு:&lt;/strong&gt; தினமும் காலையில் &quot;ஓம் நமோ நாராயணாய&quot; என்ற மந்திரத்தை 108 முறை ஜெபிப்பது நற்பலன்களைத் தரும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ராஜவாழ்க்கை ஆரம்பம் சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட கும்ப ராசியினருக்கு, புதனின் இந்த சேர்க்கை அமோகமான பலன்களைத் தரப்போகிறது. இதுவரை நீங்கள் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் விடிவுகாலம் பிறந்துவிட்டது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;செல்வ வளம்: &lt;/strong&gt;சனியின் ஆதிக்கத்தில் புதன் அமர்வதால், உங்களின் பொருளாதார நிலை அசுர வேகத்தில் உயரும். தங்கம், வெள்ளி நகைகள் வாங்கும் யோகம் உண்டாகும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;குடும்ப மகிழ்ச்சி:&lt;/strong&gt; குடும்பத்தில் சுபகாரியங்கள் தடையின்றி நடக்கும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். சமூகத்தில் உங்களுக்கான அந்தஸ்தும், மதிப்பும் உயரும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;அதிர்ஷ்டக் குறிப்பு: &lt;/strong&gt;சனிக்கிழமைகளில் எள் தீபம் ஏற்றி சனீஸ்வர பகவானை வழிபடுவது தடைகளை நீக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கோச்சார ரீதியாக நிகழும் இந்த புதன்-சனி சேர்க்கையானது, மேலே குறிப்பிட்டுள்ள 4 ராசிகளுக்கும் வாழ்வில் ஒரு பொன்னான காலகட்டத்தை உருவாக்கிக் கொடுக்கப் போகிறது. எனினும், அவரவர் தனிப்பட்ட ஜாதகத்தில் உள்ள தசா புத்திக்கு ஏற்ப பலன்களின் வீரியம் மாறுபடலாம். நம்பிக்கையுடனும், கடின உழைப்புடனும் செயல்பட்டால், இந்த பிரபஞ்ச சக்திகள் உங்களுக்கு அள்ள அள்ளக் குறையாத செல்வத்தை அள்ளித் தரும் என்பது உறுதி!&lt;/p&gt;&lt;p&gt;Disclaimer (பொறுப்புத் துறப்பு): இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான ஜோதிட விதிகள் மற்றும் கோச்சார பலன்களின் அடிப்படையில் எழுதப்பட்டவை. துல்லியமான பலன்களுக்கு உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தை ஜோதிடரிடம் காண்பித்து ஆலோசனை பெறுவது நல்லது. இந்த 4 ராசிகளில் உங்களுடைய ராசியும் இருக்கிறதா? உங்கள் வாழ்வில் இந்த யோகத்தை வரவேற்க நீங்கள் தயாராகிவிட்டீர்களா?&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[astrology]]></category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/mercury-enters-saturn-orbit-4-zodiac-signs-will-rain-money-and-wealth-at58sml"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Saturday Don'ts: சனிக்கிழமையில் இந்த தவறுகளை செய்யாதீர்கள்.. சனி பகவானின் கோபம் வருமாம்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/saturday-donts-things-to-avoid-according-to-astrology-8tqg9zz</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/saturday-donts-things-to-avoid-according-to-astrology-8tqg9zz</guid>
            <pubDate>Sat, 18 Jul 2026 07:18:23 +0530</pubDate>
            <description><![CDATA[Saturday Don'ts: வேத ஜோதிட மற்றும் இந்து மத நம்பிக்கைகளின்படி, சனிக்கிழமை சனி பகவானுக்கு உகந்த நாளாகக் கருதப்படுகிறது. சில செயல்களை சனிக்கிழமையில் தவிர்க்க வேண்டும் என்ற பாரம்பரிய நம்பிக்கையும் பரவலாக உள்ளது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxse1qc0trkcvrvamw7736q1,imgname-astrology-1784338767231.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Saturday Don'ts: வேத ஜோதிட மற்றும் இந்து மத நம்பிக்கைகளின்படி, சனிக்கிழமை சனி பகவானுக்கு உகந்த நாளாகக் கருதப்படுகிறது. சில செயல்களை சனிக்கிழமையில் தவிர்க்க வேண்டும் என்ற பாரம்பரிய நம்பிக்கையும் பரவலாக உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வேத ஜோதிட மரபுகளின்படி, சனிக்கிழமை சனி பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் சில செயல்களைத் தவிர்ப்பது நல்லது என்றும், சில ஆன்மிக வழிபாடுகளை மேற்கொள்வது நன்மை தரும் என்றும் பலர் நம்புகின்றனர். இருப்பினும், இவை அனைத்தும் பாரம்பரிய மற்றும் மத நம்பிக்கைகளின் அடிப்படையில் கூறப்படுபவையே தவிர, அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மைகள் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரின் நம்பிக்கையும், குடும்ப மரபும் வேறுபடக்கூடும் என்பதால், இந்தக் கோணத்தில் அணுகுவது பொருத்தமானது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பாரம்பரிய ஜோதிடக் கருத்துகளின்படி, சனிக்கிழமையில் முடி, தாடி அல்லது நகம் வெட்டுவதை சிலர் தவிர்க்கின்றனர். இவ்வாறு செய்வதால் சனி பகவானின் அருள் குறையலாம் அல்லது சனி தோஷத்தின் தாக்கம் அதிகரிக்கலாம் என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது. மேலும், சனி பகவானுடன் தொடர்புடைய உலோகமாக இரும்பு கருதப்படுவதால், இந்த நாளில் இரும்பு அல்லது இரும்பு பொருட்களை வாங்காமல் இருப்பது சில குடும்பங்களில் உள்ளது. இது வீட்டில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் அல்லது தடைகள் ஏற்படாமல் இருக்க உதவும் எந்த பாரம்பரிய நம்பிக்கையும் காணப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;ராகுவின் தாக்கம் அதிகம்.. இந்த 6 ராசிக்காரர்கள் பண விஷயத்தில் கவனமாக இருக்கணும்&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சில ஜோதிட மரபுகளில், சனிக்கிழமை உப்பு வாங்குவதையும் தவிர்க்க வேண்டும். இந்த நாளில் உப்பு வாங்கினால் நிதி நெருக்கடி, செலவுகள் அதிகரித்தல் அல்லது கடன் சுமை போன்ற சிக்கல்கள் உருவாகலாம் என்ற நம்பிக்கை நிலவுகிறது. இருப்பினும், இதற்கு அறிவியல் ஆதாரம் எதுவும் இல்லை. மேலும், சனிக்கிழமை ஆன்மிக ஒழுக்கத்துக்கான நாளாகக் கருதப்படுவதால், பலர் அசைவ உணவு மற்றும் மதுபானங்களைத் தவிர்த்து விரதம் இருப்பதையோ அல்லது சைவ உணவை மட்டும் உட்கொள்வதையோ பின்பற்றுகின்றனர். இது உடல் மற்றும் மன அமைதியை வளர்க்கும் ஒரு ஆன்மிக நடைமுறையாகவும் கருதப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பயணங்கள் தொடர்பாகவும் சில பாரம்பரிய நம்பிக்கைகள் உள்ளன. குறிப்பாக சனிக்கிழமையில் கிழக்கு மற்றும் வடகிழக்கு (ஈசானியம்) திசைகளில் பயணம் செய்வதை சில ஜோதிடர்கள் தவிர்க்க அறிவுறுத்துகின்றனர். இருப்பினும், அவசர அல்லது அத்தியாவசிய பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்று எந்த அதிகாரப்பூர்வ விதிமுறை அல்லது கட்டாயமோ இல்லை. எனவே, இந்த நம்பிக்கைகளைப் பின்பற்றுவது முற்றிலும் தனிநபர் விருப்பம் மற்றும் குடும்ப மரபைப் பற்றியது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சனிக்கிழமையை ஆன்மிக ரீதியாக சிறப்பாகக் கழிக்க விரும்புபவர்கள், சனி பகவானை வழிபடுதல், எண்ணெய் தீபம் ஏற்றுதல், கருப்பு ஏள் அல்லது உளுந்தை தானமாக வழங்குதல், ஏழை எளியவர்களுக்கு உதவி செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடலாம் என்று வேத ஜோதிட நம்பிக்கைகள் கூறுகின்றன. மேலும், பொறுமை, அமைதி மற்றும் நல்ல சிந்தனையுடன் நாளைக் கழிப்பது சனி பகவானின் அருளைப் பெற உதவும் என்றும் பலர் நம்புகின்றனர். இவை அனைத்தும் ஆன்மிக மற்றும் பாரம்பரிய நம்பிக்கைகளின் அடிப்படையில் சொல்லப்படுபவையாகும்; அவற்றைப் பின்பற்றுவது ஒவ்வொருவரின் தனிப்பட்ட நம்பிக்கையைச் சார்ந்தது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[astrology]]></category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/saturday-donts-things-to-avoid-according-to-astrology-8tqg9zz"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Rahu Ketu Transit: ராகு-கேது பிடி விலகுகிறது! ஜூலை 19 முதல் 'இந்த' 3 ராசிகளுக்கு ஜாக்பாட்! கோடிகள் கொட்டப் போகுது!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/rahu-ketu-transit-july-19-2026-golden-time-begins-for-gemini-cancer-and-pisces-wealth-and-success-awaits-fta9c1o</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/rahu-ketu-transit-july-19-2026-golden-time-begins-for-gemini-cancer-and-pisces-wealth-and-success-awaits-fta9c1o</guid>
            <pubDate>Sat, 18 Jul 2026 06:42:12 +0530</pubDate>
            <description><![CDATA[Rahu Ketu Transit: ஜோதிட சாஸ்திரத்தின்படி ராகு-கேது பிடி விலகுவதால் ஜூலை 19 ஆம் தேதி முதல் 3 ராசிகளுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. பணமழை கொட்டப்போகுது. இவை என்னென்ன ராசிகள்? என்பது குறித்து பார்ப்போம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxsc3b9s57g3mkrmwab3p8gw,imgname-rahu-ketu-transit-1784336723257.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Rahu Ketu Transit: ஜோதிட சாஸ்திரத்தின்படி ராகு-கேது பிடி விலகுவதால் ஜூலை 19 ஆம் தேதி முதல் 3 ராசிகளுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. பணமழை கொட்டப்போகுது. இவை என்னென்ன ராசிகள்? என்பது குறித்து பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜோதிடக் கணக்கீட்டின்படி, ராகு-கேதுவுக்கு இடையில் முக்கிய கிரகங்கள் சிக்கியுள்ளதால், நல்ல பலன்கள் குறைந்துள்ளன. ஆனால், ஜூலை 19-ம் தேதி சந்திரன் ராசி மாறுவதால் இந்த அமைப்பு உடைகிறது. இதனால் கடகம், மிதுனம், மீனம் ராசியினருக்கு வெற்றி, மன அமைதி கிடைக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;ஜூலை மாதத்தின் கடைசி இரண்டு வாரங்களில் கிரகங்களின் நகர்வு மிக முக்கியமானதாக இருக்கும். ஜோதிடக் கணக்கீட்டின்படி, தற்போது சூரியன், செவ்வாய், புதன், சனி போன்ற முக்கிய கிரகங்கள் ராகு-கேது அச்சுக்குள் சிக்கியுள்ளன. இதனால், அந்த கிரகங்களின் நல்ல பலன்கள் குறைந்து காணப்படுகின்றன.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;ஜோதிடத்தில் 12 ராசிகள் உள்ளன. ராகுவும் கேதுவும் எப்போதுமே 180 டிகிரி கோணத்தில் நேர் எதிராக இருக்கும். ஜூலை 19 அன்று, சந்திரன் சிம்மத்திலிருந்து கன்னி ராசிக்கு பெயர்வதால், இந்த ராகு-கேதுவின் பிடி உடையும். இதனால் மூன்று ராசிக்காரர்களுக்கு நன்மை உண்டாகும். அந்த ராசிகள் எவை எனப் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க: &lt;/strong&gt;ஆடி மாதம் 'இந்த' 4 ராசிக்கும் அசுர வளர்ச்சிதான்! கோடீஸ்வர யோகம்! தொட்டதெல்லாம் துலங்கும்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கடக ராசிக்காரர்களுக்கு இதுவரை இருந்து வந்த மன உளைச்சல்களும், குழப்பங்களும் ஜூலை 19 முதல் முடிவுக்கு வரும். சந்திரன் ராசி மாறுவதால் உங்களின் மன அழுத்தம் குறைந்து, நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாக இருந்த பணப் பற்றாக்குறை நீங்கும். வர வேண்டிய பழைய பாக்கிகள் கைவந்து சேரும். சேமிப்பு உயரும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;தொழில் &amp;amp; வேலை: &lt;/strong&gt;முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் இனி வேகம் பிடிக்கும். அலுவலகத்தில் உங்களின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இது சாதகமான காலம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க: &lt;/strong&gt;Temple: கோவில் பாசிட்டிவ் எனர்ஜி அப்படியே வீட்டிற்கு வரணுமா? தரிசனத்திற்கு பின் 'இதை' பண்ணுங்க!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ராகு-கேதுவின் அச்சிலிருந்து கிரகங்கள் விடுபடுவதால், மிதுன ராசிக்கு அதிர்ஷ்டக் காற்று வீசத் தொடங்கும். இதுவரை குழப்பத்தில் இருந்த நீங்கள், இனி பணியிடத்திலும் குடும்பத்திலும் மிகச் சரியான முடிவுகளை தைரியமாக எடுப்பீர்கள்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் வருமானம் வரக்கூடும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். நீண்ட நாள் கனவு ஒன்று நனவாவதால் மன அமைதி கிடைக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மீன ராசிக்காரர்களுக்கு வேலைச் சுமையும், மனப் பதற்றமும் குறைந்து நிம்மதியான சூழல் உருவாகும். கடினமாகத் தோன்றிய பல வேலைகள் இனி மிக எளிதாக, சுமுகமாக முடிந்துவிடும். உங்களின் முயற்சிகளுக்கு விரைவான வெற்றி கிடைக்கும். மேல் அதிகாரிகளுடன் இருந்த அனாவசிய மோதல்கள், டென்ஷன்கள் குறையும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். எந்தவொரு காரியத்தையும் பதற்றமின்றி, நிதானமாகச் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்து லாபம் பெருகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இக்கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான ஜோதிடக் கணக்கீடுகள், நம்பிக்கைகள் மற்றும் இணையத்தில் கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் மட்டுமே எழுதப்பட்டவை ஆகும். இதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் எதுவும் இல்லை. தனிநபர்களின் துல்லியமான பலன்கள், அவர்களின் பிறப்பு ஜாதகம் மற்றும் தசா புத்திகளைப் பொறுத்து மாறுபடலாம்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;எனவே, இந்தத் தகவல்களை முழுமையான உண்மையாகக் கருதாமல், ஒரு பொதுவான வழிகாட்டியாக மட்டுமே எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஏதேனும் முக்கிய முடிவுகள் எடுக்கும் முன் தகுந்த ஜோதிட நிபுணரை அணுகுவது நல்லது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[astrology]]></category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/rahu-ketu-transit-july-19-2026-golden-time-begins-for-gemini-cancer-and-pisces-wealth-and-success-awaits-fta9c1o"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Today Horoscope: சனிக்கிழமை ராசிபலன்: பணம், வேலை, குடும்பம்.. இன்று எப்படி இருக்கும்?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/daily-horoscope-18-july-2026-zodiac-predictions-mg9ac5g</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/daily-horoscope-18-july-2026-zodiac-predictions-mg9ac5g</guid>
            <pubDate>Sat, 18 Jul 2026 06:39:34 +0530</pubDate>
            <description><![CDATA[Today Horoscope: 18 ஜூலை 2026, சனிக்கிழமை உங்கள் ராசிக்கு எப்படி அமையப் போகிறது? வேலை, தொழில், பணவரவு, குடும்பம், ஆரோக்கியம் மற்றும் உறவுகள் போன்ற விஷயங்களில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01krbjx7cn5ws0mecc8tj009j0,imgname-may-12-2026-indraya-rasi-palan-1778505391509.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Today Horoscope: 18 ஜூலை 2026, சனிக்கிழமை உங்கள் ராசிக்கு எப்படி அமையப் போகிறது? வேலை, தொழில், பணவரவு, குடும்பம், ஆரோக்கியம் மற்றும் உறவுகள் போன்ற விஷயங்களில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்றைய நாளில் எந்த ராசிக்காரர்களுக்கு புதிய வாய்ப்புகள் அமையும்? யார் செலவுகளில் கவனம் செலுத்த வேண்டும்? யாருக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்? மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்களைப் பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்று உற்சாகமாக இருப்பீர்கள். புதிய வேலைகளைத் தொடங்க நல்ல நாள். வேலையில் பொறுப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பண விஷயங்களில் கவனமாக முடிவெடுங்கள். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உடல் நலனில் கவனம் தேவை.&lt;/p&gt;&lt;p&gt;ராகுவின் தாக்கம் அதிகம்.. இந்த 6 ராசிக்காரர்கள் பண விஷயத்தில் கவனமாக இருக்கணும்&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்று உங்களுக்கு கலவையான பலன்களே கிடைக்கும். பணவரவு ஓரளவு சாதகமாக இருக்கும். கடந்த கால முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கலாம். வியாபாரிகளுக்குப் புதிய வாய்ப்புகள் வர வாய்ப்புள்ளது. குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உங்கள் தன்னம்பிக்கை இன்று அதிகரிக்கும். வேலையில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்க வாய்ப்புள்ளது. முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபார முடிவுகளை யோசித்து எடுக்க வேண்டும். மாணவர்களுக்குப் படிப்பில் கவனம் கூடும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குடும்பம் சம்பந்தமாக நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். நெருங்கியவர்களின் ஆதரவு கிடைக்கும். வேலையில் மாற்றங்கள் அல்லது புதிய பொறுப்புகள் வரலாம். பணப் பரிவர்த்தனைகளில் கவனம் தேவை. மன அமைதிக்கு தியானம் செய்வது நல்லது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வேலை, வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியத்தில் சிறிய பாதிப்புகள் ஏற்படலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்று திட்டமிட்டுச் செயல்பட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும். நிலுவையில் உள்ள பணிகள் முடிவடைய வாய்ப்புள்ளது. வேலையில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பீர்கள். வேலையில் புதிய வாய்ப்புகள் வரலாம். வியாபாரத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும் முன் நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது. வீண் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்று விடாமுயற்சியுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். முக்கியப் பணிகள் தாமதமாகலாம். பண விஷயங்களில் கவனம் தேவை. குடும்பத்தில் சிறிய கருத்து வேறுபாடுகள் வரலாம். உடல் நலனில் அக்கறை காட்டுவது நல்லது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தொலைதூரப் பயணங்கள் செல்ல நேரிடலாம். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வேலையில் உங்கள் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். நிதிநிலை சீராக இருக்கும். மாணவர்களுக்கு இது சாதகமான நேரம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கடினமாக உழைத்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். வேலையில் உயர் அதிகாரிகளிடம் இருந்து பாராட்டுப் பெற வாய்ப்புள்ளது. பண விஷயத்தில் திட்டமிடல் அவசியம். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொறுமையாக முடிவெடுப்பது நல்லது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்று உங்கள் படைப்பாற்றல் அதிகரிக்கும். புதிய விஷயங்களைத் தொடங்க இது நல்ல நேரம். வேலையில் புதிய வாய்ப்புகள் வரலாம். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். நிதிநிலை சாதாரணமாக இருக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மன அமைதி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆன்மிக விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். வேலையில் உங்கள் செயல்திறனுக்கு அங்கீகாரம் கிடைக்கலாம். நிதி முடிவுகளில் அவசரம் வேண்டாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[astrology]]></category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/daily-horoscope-18-july-2026-zodiac-predictions-mg9ac5g"/>
        </item>
        <item>
            <title><![CDATA[side dish recipes: சப்பாத்தி, பூரிக்கு ஏற்ற 5 சூப்பரான சைட் டிஷ் ரெசிபிகள்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/5-amazing-tasty-chapathi-poori-side-dish-recipes-tamil-bdlh3gw</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/5-amazing-tasty-chapathi-poori-side-dish-recipes-tamil-bdlh3gw</guid>
            <pubDate>Fri, 17 Jul 2026 20:36:29 +0530</pubDate>
            <description><![CDATA[தினமும் சப்பாத்தி, பூரிக்கு என்ன சைட் டிஷ் செய்வது என்ற கவலை இனி வேண்டாம்! சமையலறையில் உள்ள எளிய பொருட்களைக் கொண்டு, இதுவரை நீங்கள் சுவைத்திராத 5 புதிய ரகசிய ரெசிபிகள் மற்றும் சமையல் டிப்ஸ் இதோ. உங்கள் வழக்கமான சமையலை மாற்றி அசத்துங்கள்!]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxr79vdgctyr9qr9wgm2gkfq,imgname-chapathi-poori--1--1784298139056.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தினமும் சப்பாத்தி, பூரிக்கு என்ன சைட் டிஷ் செய்வது என்ற கவலை இனி வேண்டாம்! சமையலறையில் உள்ள எளிய பொருட்களைக் கொண்டு, இதுவரை நீங்கள் சுவைத்திராத 5 புதிய ரகசிய ரெசிபிகள் மற்றும் சமையல் டிப்ஸ் இதோ. உங்கள் வழக்கமான சமையலை மாற்றி அசத்துங்கள்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பன்னீர் மசாலா என்றாலே தக்காளி மற்றும் முந்திரி விழுது தான் நினைவுக்கு வரும். ஆனால், இந்த காஷ்மீரி முறையில் தக்காளிக்கு வேலையே இல்லை. தயிரின் புளிப்பும் நறுமணப் பொருட்களின் காரமும் இணையும் ஒரு உன்னத ரெசிபி இது.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;தேவையான பொருட்கள்: பன்னீர், கெட்டித் தயிர், சுக்குத் தூள் (சான்ட்), பெருஞ்சீரகப் பொடி, காஷ்மீரி மிளகாய்த்தூள், பிரியாணி இலை, லவங்கம், நெய்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;செய்முறை : பன்னீர் துண்டுகளை நெய்யில் லேசாக வதக்கி, வெதுவெதுப்பான உப்பு நீரில் போட்டு வைக்கவும் (இதனால் பன்னீர் பஞ்சு போல் மென்மையாகும்). மற்றொரு பாத்திரத்தில் நன்கு கடைந்த பிரஷ்ஷான கெட்டித் தயிருடன் சுக்குத் தூள், பெருஞ்சீரகப் பொடி மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து நைசாகக் கலக்கவும். கடாயில் நெய் சூடாக்கி, பிரியாணி இலை, லவங்கம் தாளித்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து தயிர் கலவையை ஊற்றி கைவிடாமல் கிளறவும். எண்ணெய் பிரிந்து வரும்போது பன்னீர் துண்டுகளைச் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும். டிப்ஸ்: இறக்குவதற்கு ஒரு நிமிடம் முன்பு, ஒரு சிட்டிகை கஸ்தூரி மேத்தியை உள்ளங்கைகளில் தேய்த்துத் தூவினால், ஹோட்டல் நறுமணத்தை மிஞ்சும் சுவை கிடைக்கும். இது சூடான, உப்பலான பூரிக்கு அட்டகாசமான ஜோடி.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வழக்கமான தால் மக்கானியில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் கீரையையும், நற்பதத்தையும் இணைத்து செய்யப்படும் ஒரு கிரீமியான சைட் டிஷ். கீரை சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு இது சிறந்த தேர்வு.&lt;/p&gt;&lt;p&gt;தேவையான பொருட்கள்: கருப்பு உளுந்து, ராஜ்மா, பொடியாக நறுக்கிய பாலக்கீரை, தக்காளி ப்யூரி, இஞ்சி-பூண்டு விழுது, வெண்ணெய், ஃப்ரெஷ் கிரீம்.&lt;/p&gt;&lt;p&gt;செய்முறை : இரவே ஊறவைத்த கருப்பு உளுந்து மற்றும் ராஜ்மாவை வேக வைக்கும் போதே, அதனுடன் பொடியாக நறுக்கிய பாலக்கீரையையும் சேர்த்து குக்கரில் நன்கு குழைய வேகவிட வேண்டும். ஒரு வாணலியில் தாராளமாக வெண்ணெய் சேர்த்து, இஞ்சி-பூண்டு விழுது, தக்காளி ப்யூரி மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். இதனுடன் வேகவைத்த பருப்பு-கீரை கலவையைச் சேர்த்து, மத்து கொண்டு லேசாகக் கடைந்து மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;டிப்ஸ்: இறக்கும் போது ஒரு ஸ்பூன் வெண்ணெய், சிறிது ஃப்ரெஷ் கிரீம் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். சுடச்சுட சப்பாத்தியுடன் இந்த மக்கானியைத் தொட்டுச் சாப்பிட்டால் அதன் சுவை சொர்க்கமாக இருக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பொதுவாக பூசணிக்காயை நாம் கூட்டு அல்லது சாம்பாரில் மட்டுமே பயன்படுத்துவோம். ஆனால், வட இந்திய திருமணங்களில் பூரிக்கு வழங்கப்படும் இந்த சப்ஜி, இனிப்பும் காரமும் கலந்த ஒரு அலாதியான சுவையைக் கொண்டது.&lt;/p&gt;&lt;p&gt;தேவையான பொருட்கள்: மஞ்சள் பூசணிக்காய் (தோலுடன்), கடுகு எண்ணெய், வெந்தயம், சீரகம், காய்ந்த மிளகாய், வெல்லம், அம்ச்சூர் பவுடர் (மாங்காய்த்தூள்), மஞ்சள் தூள்.&lt;/p&gt;&lt;p&gt;செய்முறை : இளசான மஞ்சள் பூசணிக்காயைத் தோலை நீக்காமல் சதுரங்களாக நறுக்கிக் கொள்ள வேண்டும் (தோல் தான் இந்த டிஷ்ஷிற்கு தனி சுவை தரும்). கடாயில் கடுகு எண்ணெயைப் புகை வரும் வரை சூடாக்கி, பின் சீரகம், வெந்தயம், காய்ந்த மிளகாய் தாளிக்க வேண்டும். நறுக்கிய பூசணிக்காய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி, மூடி போட்டு தண்ணீர் தெளித்து வேகவிட வேண்டும். காய் வெந்ததும், ஒரு ஸ்பூன் பொடித்த வெல்லம் மற்றும் அரை ஸ்பூன் அம்ச்சூர் பவுடர் சேர்த்து நன்றாக மசிக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;டிப்ஸ்: பூசணிக்காய் முற்றிலும் குழைந்து அல்வா போல ஆகிவிடக் கூடாது. துண்டுகள் தெரிய வேண்டும், அதே சமயம் மசாலாக்கள் உள்ளே இறங்கி சாஃப்டாக இருக்க வேண்டும். காரசாரமான பூரிக்கு இந்த இனிப்பு-புளிப்பு கிரேவி மிகச்சிறந்த காம்பினேஷன்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;காளான் மற்றும் பேபி கார்ன் கலவையில் மிளகின் காரசாரத்தோடு, நறநறப்பான சுவையுடன் தயாராகும் ஒரு உலர் வகை (Dry) சைட் டிஷ்.&lt;/p&gt;&lt;p&gt;தேவையான பொருட்கள்: பட்டன் காளான், பேபி கார்ன், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, இடிச்ச மிளகுத் தூள், சோம்பு, பூண்டு.&lt;/p&gt;&lt;p&gt;செய்முறை : பேபி கார்னை நீளவாக்கில் மெலிதாக நறுக்கி லேசாக வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, தட்டிய பூண்டு, கறிவேப்பிலை மற்றும் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் காளான் மற்றும் வெந்த பேபி கார்ன் சேர்க்கவும். தக்காளி சேர்க்கத் தேவையில்லை. காய்கறிகள் வதங்கி சுருங்கும் போது, காரத்திற்கு ஏற்ப இடிச்ச மிளகுத் தூள் மற்றும் சீரகத் தூள் மட்டுமே சேர்த்து பிரட்ட வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;டிப்ஸ்: இந்த வறுவலுக்குத் தண்ணீர் ஊற்றவே கூடாது. காளானில் இருந்து வெளிவரும் தண்ணீரே பேபி கார்ன் மற்றும் மசாலாவை ஒன்றிணைக்க போதுமானது. எண்ணெயில் நன்றாகச் சுருள வதக்கி இறக்கினால், மிருதுவான சப்பாத்திக்கு அருமையான மேட்ச்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மசாலாப் பொருட்களின் காரம் அதிகம் இல்லாமல், தேங்காய்ப் பாலின் இயற்கையான இனிப்பும், நறுமணமும் நிறைந்த ஒரு பாரம்பரிய கேரளா ஸ்டைல் குருமா.&lt;/p&gt;&lt;p&gt;தேவையான பொருட்கள்: கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், இஞ்சி, தேங்காயின் முதல் மற்றும் இரண்டாம் பால், தேங்காய் எண்ணெய், கறிவேப்பிலை.&lt;/p&gt;&lt;p&gt;செய்முறை: காய்கறிகளை நீளவாக்கில் நறுக்கி, இஞ்சி மற்றும் கீறிய பச்சை மிளகாயுடன் சேர்த்து தேங்காயின் இரண்டாம் பாலில் (மெலிதான பால்) வேகவைக்க வேண்டும். காய்கறிகள் வெந்ததும், அடுப்பை முற்றிலும் சிம்மில் வைத்துவிட்டு, கெட்டியான தேங்காயின் முதல் பாலை ஊற்றி ஒரு கொதி வந்ததும் உடனடியாக அடுப்பை அணைக்க வேண்டும் (அதிகம் கொதித்தால் தேங்காய்ப் பால் திரிந்துவிடும்).&lt;/p&gt;&lt;p&gt;டிப்ஸ்: அடுப்பை அணைத்த உடனேயே, ஒரு ஸ்பூன் பச்சையான சுத்தமான தேங்காய் எண்ணெய் மற்றும் ஒரு கொத்து பிரஷ்ஷான கறிவேப்பிலையைத் தூவி மூடி வைக்க வேண்டும். ஐந்து நிமிடங்கள் கழித்துத் திறந்தால் அதன் வாசனையே பசியைத் தூண்டும். சப்பாத்தி மற்றும் ஆப்பத்திற்கு இது ஒரு உலகத்தரம் வாய்ந்த சைட் டிஷ்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[life-style]]></category>
            <dc:creator>Priya Velan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/5-amazing-tasty-chapathi-poori-side-dish-recipes-tamil-bdlh3gw"/>
        </item>
        <item>
            <title><![CDATA[நெடுஞ்சாலை பணிகளை கொட்டும் மழையில் நனைந்தபடி அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடி ஆய்வு !]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/minister-aadhav-arjuna-reviews-highways-in-pouring-rain-videoshow-kdorg2u</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/minister-aadhav-arjuna-reviews-highways-in-pouring-rain-videoshow-kdorg2u</guid>
            <pubDate>Fri, 17 Jul 2026 20:11:36 +0530</pubDate>
            <description><![CDATA[]]></description>
            <media:content url="https://geo.dailymotion.com/player/x1tbu.html?video=null" medium="video" height="768" width="1024"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சென்னை அடுத்த காட்டுப்பள்ளி முதல் மகாபலிபுரம் பூஞ்சேரி வரையில் 2468 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 கட்டங்களாக சென்னை எல்லை சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக காட்டுப்பள்ளி முதல் பஞ்செட்டி வரையிலான 25 கி.மீ. தூரம் வரை நடைபெறும் பணிகளை நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு மேற்கொண்டார். ஆதவ் அர்ஜுனா ஆய்வு மேற்கொள்ளும் போது திடீரென மழை கொட்டியது. மேலும் மரக்கன்றுகளை நடும் போது மழை பெய்ததால், அவரது உதவியாளர்கள் குடை பிடித்தனர். அப்போது அதனை தள்ளி விட்டு மழையில் நனைந்தபடியே சென்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் உதவியாளரிடம இருந்து குடையை வாங்கி தனக்கு தானே குடையை பிடித்து கொண்டு சென்று ஆய்வு செய்தார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[tamilnadu]]></category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/minister-aadhav-arjuna-reviews-highways-in-pouring-rain-videoshow-kdorg2u"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஓராண்டுக்குள் சென்னை எல்லை சாலை பணிகள் நிறைவடையும் : அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடி அறிவிப்பு!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/chennai-peripheral-road-completion-set-for-one-year-videoshow-afcopsx</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/chennai-peripheral-road-completion-set-for-one-year-videoshow-afcopsx</guid>
            <pubDate>Fri, 17 Jul 2026 20:11:12 +0530</pubDate>
            <description><![CDATA[]]></description>
            <media:content url="https://geo.dailymotion.com/player/x1tbu.html?video=null" medium="video" height="768" width="1024"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சென்னை அடுத்த காட்டுப்பள்ளி முதல் மகாபலிபுரம் பூஞ்சேரி வரையில் சுமார் 133 கிமீ தூரம், 2468 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை எல்லை சாலை திட்டப் பணிகள் 5 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக காட்டுப்பள்ளி முதல் பஞ்செட்டி வரையிலான 25 கி.மீ. தூரம் வரை நடைபெறும் பணிகளை பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு மேற்கொண்டார். அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட போது மழை பெய்ய தொடங்கிய நிலையில், அதனை பொருட்படுத்தாமல் கொட்டும் மழையில் அவர் குடை கூட பிடிக்காமல் நனைந்தபடியே ஆய்வு மேற்கொண்டார். சாலை பணிகள் குறித்த வரைபடங்களுடன் அதிகாரிகள் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிற்கு விளக்கி எடுத்துரைத்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திருச்சியில் இருந்து 3 மணி நேரத்தில் செங்கல்பட்டு அடைந்தாலும், செங்கல்பட்டில் இருந்து பல்லாவரம் வந்து சேர மேலும் 4 மணி நேரம் எடுத்துக் கொள்வதாகவும், சென்னைக்குள் வர போக்குவரத்து அதிக அளவில் இருப்பதாகவும், கடந்த 30 - 40 ஆண்டுகளாக போக்குவரத்தை சீர் செய்ய முறையான திட்டங்கள் ஏற்படுத்தவில்லை என கூறினார். சென்னைக்கு உள்ளே வருவதற்கும், சென்னையில் இருந்து வெளியே செல்வதற்கும் தனியே திட்டம் வகுத்து வருவதாகவும், எண்ணூர் முதல் மகாபலிபுரம் வரையிலான சாலை பணிகள் 5 கட்டங்களாக நடைபெறுவதாகவும், பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனத்திற்கு பல்வேறு உதவிகள் தேவைப்படுவதால், ஆய்வு செய்து வருவதாகவும், அடுத்த ஓராண்டிற்குள் இந்த சாலை பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார். சென்னையில் உள்ள பெரும்பாலான சாலைகள் உலகத்தரத்தில் 6 வழி பாதைகளாக மாற்றப்பட்டு சென்னையில் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும் என்றார். ஒப்பந்ததாரர்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்வதற்காக களத்திற்கே வந்து ஆய்வு மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார். தமிழ்நாட்டில் உள்ள சேதமடைந்த சாலைகள் சீரமைப்பு, மணல் குவாரிகள் திறப்பு தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்து ஆதார் அர்ஜுனா புறப்பட்டு சென்றார். மேல்மட்டங்களில் இல்லை என்று சொல்வதை விட ஊழல் ஒழித்தாகிவிட்டது எனவும், கீழ் மட்டத்தில் விரைவில் அனைத்தும் சரி செய்யப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[tamilnadu]]></category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/chennai-peripheral-road-completion-set-for-one-year-videoshow-afcopsx"/>
        </item>
        <item>
            <title><![CDATA[லீக்கானதால் ஜனநாயகன் படத்தை பட்டி டிங்கரிங் பார்த்துள்ள படக்குழு... தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட் !]]></title>
            <link>https://tamil.asianetnews.com/cinema/jananayagan-overhauled-after-leak-producer-gives-update-videoshow-9udsupw</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/cinema/jananayagan-overhauled-after-leak-producer-gives-update-videoshow-9udsupw</guid>
            <pubDate>Fri, 17 Jul 2026 20:11:09 +0530</pubDate>
            <description><![CDATA[]]></description>
            <media:content url="https://geo.dailymotion.com/player/x1tbu.html?video=null" medium="video" height="768" width="1024"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Jana Nayagan Update : விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் வருகிற ஜூலை 23ந் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அப்படத்தை பற்றி முக்கிய அப்டேட் ஒன்றை தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[cinema]]></category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/cinema/jananayagan-overhauled-after-leak-producer-gives-update-videoshow-9udsupw"/>
        </item>
        <item>
            <title><![CDATA[rasam recipes: சட்டென தயார் செய்ய ஏற்ற 10 வகையான ரசம் ரெசிபிகள்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/instant-rasam-recipes-in-tamil-10-types-qqssxtg</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/instant-rasam-recipes-in-tamil-10-types-qqssxtg</guid>
            <pubDate>Fri, 17 Jul 2026 20:00:30 +0530</pubDate>
            <description><![CDATA[ஆரோக்கியம் தரும் உணவு, ஜீரணத்திற்கு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் உணவு என்றால் அனைவருக்கும் நினைவிற்கு வருவது ரசம் தான். மிளகு ரசம் மட்டுமின்றி, சலிப்பில்லாமல் சமைக்க புதுவித சுவையான ரசங்களை எளிதாக செய்ய சில அருமையான டிப்ஸ் இதோ!]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxr3h9yaf9rz49zkkdjb42j6,imgname-rasam-recipes--1--1784294189002.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஆரோக்கியம் தரும் உணவு, ஜீரணத்திற்கு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் உணவு என்றால் அனைவருக்கும் நினைவிற்கு வருவது ரசம் தான். மிளகு ரசம் மட்டுமின்றி, சலிப்பில்லாமல் சமைக்க புதுவித சுவையான ரசங்களை எளிதாக செய்ய சில அருமையான டிப்ஸ் இதோ!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வைட்டமின்-சி நிறைந்த பெரிய நெல்லிக்காயைக் கொண்டு செய்யப்படும் ஆரோக்கியமான ரசம்.நெல்லிக்காயின் விதைகளை நீக்கி, இஞ்சி மற்றும் பச்சை மிளகாயுடன் சேர்த்து அரைத்து வடிகட்ட வேண்டும். ரசத்தை அதிகம் கொதிக்க வைக்காமல், நுரை கூடி வரும்போது அடுப்பை அணைத்துவிட்டு நெல்லிக்காய் சாற்றைச் சேர்த்தால் அதன் சத்துக்கள் வீணாகாது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இனிப்பும், புளிப்பும், காரமும் கலந்த ஒரு அசத்தலான ராயல் சுவை கொண்ட ரசம். அன்னாசிப்பழத் துண்டுகளை மிக்ஸியில் அரைத்து வடிகட்டிய சாறுடன், சில துண்டுகளைப் பொடியாக நறுக்கியும் சேர்க்க வேண்டும். தாளிக்கும் போது நெய்யுடன் லவங்கம் மற்றும் பட்டை சேர்த்தால் பிரியாணி நறுமணத்துடன் ரசம் அட்டகாசமாக இருக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நெஞ்சு சளி மற்றும் இருமலை நொடியில் விரட்டும் ஒரு அற்புதமான மூலிகை ரசம். கற்பூரவல்லி இலைகளை வதக்கி மிளகு, சீரகம், பூண்டுடன் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். புளி சேர்க்காமல் எலுமிச்சை சாறு மட்டுமே இதில் பயன்படுத்த வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;காரமில்லாமல், தேங்காய்ப்பாலின் மென்மையான சுவையுடன் நாவில் கரையும் ரசம். தக்காளி, மிளகு, சீரகம் கொதித்த பிறகு, இறுதியாகத் தேங்காயின் கெட்டியான முதல் பாலை ஊற்றி, ஒரு கொதி வருவதற்குள் அணைக்க வேண்டும். காரத்திற்குப் பச்சை மிளகாய் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு ஏற்ற, கொழுப்பைக் கரைக்கும் பாரம்பரிய ரசம். வறுத்த கொள்ளுப் பருப்பை மிளகு, சீரகத்துடன் சேர்த்துப் பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். தக்காளி மற்றும் புளி நீரில் இந்த கொள்ளுப் பொடியைச் சேர்த்து கொதிக்கவிட்டுத் தாளித்தால் கமகமக்கும் கொள்ளு ரசம் தயார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குழந்தைகள் மிகவும் விரும்பிச் சாப்பிடும் ஒரு புதுமையான பழ ரசம். ஆப்பிளைத் தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி, புளி நீரில் தக்காளிக்கு மாற்றாகச் சேர்த்து வதக்க வேண்டும். ஆப்பிளின் இயற்கையான இனிப்பு, மிளகின் காரத்துடன் இணைந்து ஒரு புதிய சுவையைத் தரும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பித்தத்தை அகற்றி, உடலுக்குக் குளிர்ச்சி தரும் பாரம்பரியமிக்க ரசம். வேப்பம்பூவை நேரடியாக ரசத்தில் போடாமல், தனியாக நெய்யில் பொன்னிறமாக வறுத்து, ரசம் இறக்கிய பிறகு மேலே தூவ வேண்டும். இதனால் கசப்புத் தெரியாமல் நறுமணம் மட்டுமே தூக்கலாக இருக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தக்காளி, புளி என எதுவுமே தேவையில்லாமல் சட்டென 3 நிமிடங்களில் வைக்கும் இன்ஸ்டன்ட் ரசம். நசுக்கிய இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம் ஆகியவற்றைத் தண்ணீரில் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். அடுப்பை அணைத்த பிறகே எலுமிச்சை சாற்றைப் பிழிய வேண்டும்; கொதிக்கும் போது பிழிந்தால் ரசம் கசந்துவிடும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முடி வளர்ச்சிக்கும், செரிமானத்திற்கும் மிகவும் உகந்த இரும்புச்சத்து நிறைந்த ரசம். ஒரு கைப்பிடி நற்பதமான கறிவேப்பிலையை லேசாக வதக்கி, பூண்டு மற்றும் மிளகுடன் சேர்த்து அரைத்து ரசத்தில் கரைக்க வேண்டும். இதன் அடர்ந்த பச்சை நிறமும் வாசனையும் பசியைத் தூண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வயிற்று உப்புசம் மற்றும் அஜீரணக் கோளாறுகளை உடனடியாகச் சரிசெய்யும் மருத்துவக் குணம் கொண்ட ரசம்.ஓமத்தை வெறும் கடாயில் வறுத்து, சீரகம் மற்றும் காய்ந்த மிளகாயுடன் சேர்த்துப் பொடிக்க வேண்டும். இந்த ஓமப் பொடியை நெய் தாளிப்பில் சேர்த்து ரசத்தைக் கூட்டினால் நறுமணம் வீடு முழுவதும் வீசும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[life-style]]></category>
            <dc:creator>Priya Velan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/instant-rasam-recipes-in-tamil-10-types-qqssxtg"/>
        </item>
        <item>
            <title><![CDATA[god blessed zodiac signs: இறைவனின் அருளை அதிகமாக பெற்ற 6 ராசிக்காரர்கள்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/god-blessed-zodiac-signs-astrology-tamil-wzi1tnw</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/god-blessed-zodiac-signs-astrology-tamil-wzi1tnw</guid>
            <pubDate>Fri, 17 Jul 2026 19:15:52 +0530</pubDate>
            <description><![CDATA[கரடுமுரடான வாழ்க்கைப் பாதையில் பிரபஞ்ச வழிகாட்டுதல் பெற வேண்டுமா? உங்கள் ஜாதகத்தின் ஆன்மீக அதிர்வுகளைக் கண்டறிந்து, விதியிலிருந்து உங்களைக் காக்கும் பேராற்றலை முழுமையாகப் பயன்படுத்தும் எளிய வழிகளை உடனே தெரிந்து கொள்ளுங்கள்!]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxq7h558ryvpqg3bawzsc97f,imgname-lucky-zodiac-signs-17-july-2026-rashifal-dhan-labh-suuccess-career-horoscope-1784264823975.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கரடுமுரடான வாழ்க்கைப் பாதையில் பிரபஞ்ச வழிகாட்டுதல் பெற வேண்டுமா? உங்கள் ஜாதகத்தின் ஆன்மீக அதிர்வுகளைக் கண்டறிந்து, விதியிலிருந்து உங்களைக் காக்கும் பேராற்றலை முழுமையாகப் பயன்படுத்தும் எளிய வழிகளை உடனே தெரிந்து கொள்ளுங்கள்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிரகஸ்பதியான குரு பகவானை அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்கள், பிறப்பிலேயே ஆன்மீக நாட்டம் கொண்டவர்கள். எத்தகைய இக்கட்டான சூழ்நிலையிலும் இவர்களுக்கு ஒரு கண்ணுக்குத் தெரியாத உதவி கிடைத்துவிடும். ஒன்பதாம் வீடான பாக்கிய ஸ்தானத்துடன் தொடர்புடைய இந்த ராசி, தர்மத்தின் சின்னமாகும். வியாழக்கிழமைகளில் ஏழை எளியவர்களுக்குக் கொண்டைக்கடலை சுண்டல் அல்லது மஞ்சள் நிற உணவுகளைத் தானமாக வழங்குவது இவர்களின் ஆன்மீக ஆற்றலை மேலும் பெருக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;காலபுருஷ தத்துவத்தின் பன்னிரண்டாம் வீடான மோட்ச ஸ்தானத்தைக் குறிக்கும் மீனம், இறைவனின் எல்லையற்ற கருணையைப் பெற்றது. இவர்களின் உள்ளுணர்வு (Intuition) மிகவும் பலமாக இருக்கும். ஞானகாரகனான கேதுவின் மறைமுக ஆதிக்கமும், குருவின் வீடாகவும் அமைவதால் இவர்களுக்குத் தெய்வீகப் பாதுகாப்பு எப்போதும் உண்டு. தினமும் தியானம் செய்வதும், வீட்டில் விளக்கேற்றி &quot;ஓம் நமோ நாராயணாய&quot; மந்திரத்தை ஜெபிப்பதும் இவர்களின் மன அமைதியைப் பாதுகாக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மனோகாரகனான சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களுக்கு இறைவனின் தாய்மை கலந்த பேரருள் எப்போதும் உண்டு. இவர்களின் தூய்மையான அன்பும், இரக்க குணமுமே இவர்களுக்குப் பாதுகாப்பாக அமையும். சந்திரனின் ஆதிக்கத்தால் இவர்களின் பிரார்த்தனைகள் மிக எளிதாக இறைவனைச் சென்றடைகின்றன. பௌர்ணமி தோறும் அம்பிகை வழிபாடும், லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்வதும் இவர்களின் வாழ்வில் தடைகளைத் தகர்க்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிரபஞ்சத்தின் ஆத்மகாரகனான சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்கள், தார்மீக நெறி தவறாதவர்கள். இவர்களின் நேர்மையும் கம்பீரமும் இவர்களுக்கு இறைவனின் ஆசியை பெற்றுத் தருகிறது. சூரியனின் நேரடிப் பார்வை இவர்களுக்குத் தலைமைப் பண்பையும், ஆன்மீக பலத்தையும் தருகிறது. தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்து, ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் வாசிப்பது இவர்களின் தேஜஸையும் அதிர்ஷ்டத்தையும் அதிகரிக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நவக்கிரகங்களின் தளபதியான செவ்வாயின் ஆதிக்கம் பெற்ற மேஷ ராசிக்காரர்கள், நேர்மறையான ஆற்றல் நிறைந்தவர்கள். இவர்களின் தைரியமான முயற்சிகளுக்குப் பின்னால் எப்போதுமே இறைவனின் மறைமுகக் கரம் இருக்கும். காலபுருஷனின் முதல் ராசியான இது, படைப்பாற்றல் மற்றும் பிரபஞ்சத்தின் தொடக்கப் புள்ளியைக் குறிக்கிறது. செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை வழிபட்டு, செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்வது இவர்களின் தடைகளை நீக்கி வெற்றியைத் தரும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மறைபொருள் மற்றும் ஆன்மீக ரகசியங்களின் உச்சக்கட்ட எல்லையாகத் திகழும் விருச்சிக ராசிக்காரர்கள், தீவிரமான பக்திக்கு உகந்தவர்கள். இவர்களின் பிராத்தனைக்கு உடனடியாகப் பலன் கிடைக்கும். அட்டம ஸ்தானத்தின் ஆதிக்கமும், செவ்வாயின் வலிமையும் இவர்களைக் ஆன்மீகத்தின் ஆழத்திற்கு அழைத்துச் செல்லும். பிரதோஷ காலங்களில் சிவபெருமானுக்கு இளநீர் அபிஷேகம் செய்வதும், மகா மிருத்யுஞ்ஜய மந்திரம் ஜெபிப்பதும் இவர்களுக்குப் பெரும் பாதுகாப்பைத் தரும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[astrology]]></category>
            <dc:creator>Priya Velan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/god-blessed-zodiac-signs-astrology-tamil-wzi1tnw"/>
        </item>
        <item>
            <title><![CDATA[zodiac signs: Overthinking செய்து குழப்பத்திலேயே வாழும் 5 ராசிக்காரர்கள்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/overthinking-zodiac-signs-astrology-tamil-5czd2cb</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/overthinking-zodiac-signs-astrology-tamil-5czd2cb</guid>
            <pubDate>Fri, 17 Jul 2026 18:30:03 +0530</pubDate>
            <description><![CDATA[எண்ணங்களின் ஓட்டத்தை நிறுத்த முடியாமல் தவிக்கும் நபரா நீங்கள்? உங்கள் ஜாதகக் கட்டத்தில் உள்ள கிரகங்களின் தாக்கத்தால் ஏற்படும் அதீத சிந்தனைகளைக் கட்டுப்படுத்தி, மன அமைதி பெறுவதற்கான எளிய வழிமுறைகளை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxhnx9279zesmxx4xrdgg8jc,imgname-15-july-horoscope-2026-know-today-prediction-for-all-12-zodiac-sign-2026-1784078574663.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;எண்ணங்களின் ஓட்டத்தை நிறுத்த முடியாமல் தவிக்கும் நபரா நீங்கள்? உங்கள் ஜாதகக் கட்டத்தில் உள்ள கிரகங்களின் தாக்கத்தால் ஏற்படும் அதீத சிந்தனைகளைக் கட்டுப்படுத்தி, மன அமைதி பெறுவதற்கான எளிய வழிமுறைகளை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;புதனை அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்கள் இயற்கையிலேயே எல்லாவற்றிலும் கச்சிதத்தன்மையை (Perfection) எதிர்பார்ப்பவர்கள். ஒரு சிறிய தவறு நடந்தாலும், அது ஏன் நடந்தது என்று பல நாட்களாக ஆராய்ந்து கொண்டிருப்பார்கள். இவர்களின் ராசிநாதன் புதன் என்பதால், இவர்களின் மூளை எப்போதும் கணக்குகளைப் போட்டுக் கொண்டே இருக்கும்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;டிப்ஸ்: &quot;நடப்பவை அனைத்தும் நன்மைக்கே&quot; என்ற மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இரவு படுக்கைக்குச் செல்லும் முன் அன்றைய நிகழ்வுகளை ஒரு டைரியில் எழுதும் பழக்கம் மன பாரத்தைக் குறைக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மிதுன ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் இரண்டு விதமாகச் சிந்திக்கக் கூடியவர்கள். ஒரு முடிவை எடுப்பதற்கு முன், அதன் சாதக பாதகங்களை அளவுக்கு அதிகமாக யோசித்து, கடைசியில் எந்த முடிவும் எடுக்க முடியாமல் திணறுவார்கள். காற்று ராசியான மிதுனத்தில் எண்ணங்களின் ஓட்டம் காற்றின் வேகத்தில் இருக்கும்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;டிப்ஸ்: உங்கள் சிந்தனைகளுக்கு ஒரு காலக்கெடுவை (Time limit) நிர்ணயித்துக் கொள்ளுங்கள். தியானம் செய்வதும், மூச்சுப் பயிற்சி (Pranayama) மேற்கொள்வதும் இவர்களின் அதீத சிந்தனையைக் கட்டுப்படுத்தும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;யாராவது ஒரு வார்த்தை பேசினால், அதற்குப் பின்னால் என்ன உள்நோக்கம் இருக்கும் என்று தீவிரமாக யோசிப்பது விருச்சிக ராசிக்காரர்களின் இயல்பு. தேவையில்லாத சந்தேகங்களும், கற்பனைகளும் இவர்களை ஓவர்திங்கிங் செய்யத் தூண்டும். நீர் ராசியான விருச்சிகத்தின் ஆழமான உணர்ச்சிகளும், செவ்வாயின் ஆதிக்கமும் இவர்களை எப்போதும் விழிப்புடன் இருக்க வைக்கும்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;டிப்ஸ்: மற்றவர்களின் கருத்துக்களை அவர்களின் பார்வையில் மட்டுமே பார்க்கப் பழக வேண்டும். வாரத்திற்கு ஒருமுறை நீர்நிலைகளுக்கு அருகில் (குளம் அல்லது கடற்கரை) சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருப்பது இவர்களின் மனதை அமைதிப்படுத்தும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மீன ராசிக்காரர்கள் தங்களின் கற்பனைத் திறனால் ஒரு சிறிய பிரச்சினையைக் கூட உலகப் மகா யுத்தமாகத் தங்கள் மனதில் உருவகப்படுத்திக் கொள்வார்கள். எதிர்காலத்தைப் பற்றிய பயமும், கடந்த கால ஏமாற்றங்களும் இவர்களை அதிகம் யோசிக்க வைக்கும். குருவை அதிபதியாகக் கொண்ட மீன ராசி, எல்லையற்ற சிந்தனைத் திறனைக் குறிக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;டிப்ஸ்: கற்பனையான பயங்களில் இருந்து விடுபட்டு, நிகழ்காலத்தில் (Present moment) வாழப் பழக வேண்டும். இசை கேட்பதும், ஏதேனும் ஒரு கலை சார்ந்த பொழுதுபோக்கில் ஈடுபடுவதும் இவர்களின் சிந்தனையைத் திசைதிருப்பும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கடந்த காலத்தில் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் மற்றும் ஏமாற்றங்களை மீண்டும் மீண்டும் நினைத்து உருகிக் கொண்டிருப்பதே இவர்களின் ஓவர்திங்கிங்கிற்கு முக்கியக் காரணம். மற்றவர்கள் தங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற கவலை இவர்களுக்கு எப்போதும் உண்டு. மனோகாரகனான சந்திரன் இந்த ராசியின் அதிபதி என்பதால், சந்திரனின் வளர்பிறை தேய்பிறை மாற்றங்களைப் போல இவர்களின் மனநிலையும் மாறும்.&lt;/p&gt;&lt;p&gt;டிப்ஸ்: கடந்த கால நினைவுகளைத் தூக்கி எறிந்துவிட்டு, சுய முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும். பௌர்ணமி நாட்களில் நிலவொளியில் சிறிது நேரம் நடப்பது இவர்களின் மனக் குழப்பத்தைப் போக்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[astrology]]></category>
            <dc:creator>Priya Velan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/overthinking-zodiac-signs-astrology-tamil-5czd2cb"/>
        </item>
        <item>
            <title><![CDATA[கொள்ளைக் கட்டணம் வசூலித்தால் ஆம்னி பஸ்கள் பறிமுதல்! - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/omni-buses-face-seizure-for-overcharging-minister-warns-videoshow-f4fgci1</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/omni-buses-face-seizure-for-overcharging-minister-warns-videoshow-f4fgci1</guid>
            <pubDate>Fri, 17 Jul 2026 18:07:44 +0530</pubDate>
            <description><![CDATA[]]></description>
            <media:content url="https://geo.dailymotion.com/player/x1tbu.html?video=null" medium="video" height="768" width="1024"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கோயம்புத்தூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வருவாய்த்துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் பல்வேறு மக்கள் நலன் சார்ந்த மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து மிகக் கடுமையான மற்றும் அதிரடியான கருத்துக்களை முன்வைத்தார். கோவையில் கட்டப்பட்டு வரும் செம்மொழிப் பூங்கா திட்டத்தில் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் டெண்டர் குளறுபடிகள் குறித்துப் பேசிய அவர், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என எச்சரித்தார். மேலும், தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையைத் தடுத்து, கட்டணக் குறைப்பை முறைப்படுத்த அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும், விதிமீறலில் ஈடுபடும் ரெஸ்டோ-பார்களுக்கு எதிராக எவ்விதப் பாரபட்சமுமின்றி சட்ட நடவடிக்கை பாயும் என்றும் ஆவேசமாகப் பேசிய அதிரடிக் காட்சிகள்!&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[tamilnadu]]></category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/omni-buses-face-seizure-for-overcharging-minister-warns-videoshow-f4fgci1"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Lawyer vs Advocate: லாயர், அட்வகேட் ரெண்டும் ஒன்னு கிடையாது.! அட, இவ்வளவு வித்தியாசம் இருக்கா.? 99% பேருக்கு தெரியாத ரகசியம்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/interesting-facts-difference-between-lawyer-and-advocate-qualifications-rights-and-key-differences-explained-nzxrs8z</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/interesting-facts-difference-between-lawyer-and-advocate-qualifications-rights-and-key-differences-explained-nzxrs8z</guid>
            <pubDate>Fri, 17 Jul 2026 18:06:10 +0530</pubDate>
            <description><![CDATA[Difference Between Lawyer and Advocate: லாயர், அட்வகேட்... இந்த ரெண்டு வார்த்தையையும் நாம மாத்தி மாத்தி பயன்படுத்துவோம். ஆனா, ரெண்டு பேருக்கும் தகுதியிலயும் அதிகாரத்திலயும் நெறைய வித்தியாசம் இருக்கு. அது என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxr0p2metdtqncrpfg0dk49a,imgname-difference-between-lawyer-and-advocate-1784291199630.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Difference Between Lawyer and Advocate: லாயர், அட்வகேட்... இந்த ரெண்டு வார்த்தையையும் நாம மாத்தி மாத்தி பயன்படுத்துவோம். ஆனா, ரெண்டு பேருக்கும் தகுதியிலயும் அதிகாரத்திலயும் நெறைய வித்தியாசம் இருக்கு. அது என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சட்டப் படிப்பில் (LLB) பட்டம் பெற்ற யாரையும் 'லாயர்' என்று அழைக்கலாம். சட்டத் தொழிலுக்குத் தேவையான அடிப்படை கல்வியை இவர்கள் முடித்திருப்பார்கள். இந்தியாவில், LLB (பேச்சுலர் ஆஃப் லெஜிஸ்லேட்டிவ் லாஸ்) என்பது வழக்கறிஞர் ஆவதற்கான அடிப்படை பட்டம். ஆனால், இந்த பட்டத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஒருவர் நீதிமன்றத்தில் வாதாட முடியாது. அதற்கு பார் கவுன்சிலில் பதிவு செய்வது கட்டாயம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் - &amp;nbsp;&lt;/strong&gt;Interesting Facts: ஒயின் பாட்டில்கள் ஏன் 750 மிலி அளவிலும், அடர் பச்சை நிறத்திலும் இருக்கின்றன? பின்னால் உள்ள சுவாரஸ்ய காரணம்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்திய பார் கவுன்சில் அல்லது ஏதாவது ஒரு மாநில பார் கவுன்சிலில் பதிவு செய்த ஒரு லாயர்தான் 'அட்வகேட்'. இப்படி பதிவு செய்த பிறகுதான், ஒருவரால் இந்தியாவின் எந்த நீதிமன்றத்திலும் கட்சிக்காரர்களுக்காக வாதாட முடியும். 1961-ஆம் ஆண்டின் வழக்கறிஞர்கள் சட்டம் (Advocates Act, 1961) இதை முறைப்படுத்துகிறது. ஒரு லாயர் பார் கவுன்சிலில் பதிவு செய்த உடனேயே அட்வகேட் ஆகிவிடுகிறார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் - &amp;nbsp;&lt;/strong&gt;Interesting Facts: சோப்பு கலர் கலரா இருந்தாலும், நுரை மட்டும் ஏன் வெள்ளையா இருக்கு?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒரு லாயர் அட்வகேட்டாக மாற, முதலில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பில் (LLB) பட்டம் பெற வேண்டும். இது மூன்று அல்லது ஐந்து வருட படிப்பாக இருக்கும். பட்டம் பெற்ற பிறகு, அந்தந்த மாநில பார் கவுன்சிலில் பதிவு செய்ய வேண்டும். அகில இந்திய பார் தேர்வில் (AIBE) தேர்ச்சி பெற்றால் மட்டுமே, நீதிமன்றத்தில் வாதாட அனுமதி கிடைக்கும். இந்த முழு செயல்முறையையும் இந்திய பார் கவுன்சில் மேற்பார்வையிடுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் - &amp;nbsp;&lt;/strong&gt;Water Bottle: வாட்டர் பாட்டில் மூடி ஏன் வெவ்வேற கலர்ல இருக்குனு யோசிச்சிருக்கீங்களா? இதுக்கு பின்னாடி பெரிய சயின்ஸ் இருக்கு.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சட்டப் பட்டம் பெற்றவர் 'லாயர்'. இவர் சட்ட ஆலோசனைகள் வழங்கலாம், ஆனால் நீதிமன்றத்தில் வாதாட முடியாது. பார் கவுன்சிலில் பதிவு செய்த பிறகு, அவர் 'அட்வகேட்' ஆகிறார். இந்த பதிவுதான், நீதிமன்றத்தில் கட்சிக்காரர்களுக்காக வாதாடும் சட்டப்பூர்வ அதிகாரத்தை அவருக்கு வழங்குகிறது. 1961 வழக்கறிஞர்கள் சட்டத்தின்படி, பார் கவுன்சில் உறுப்பினர் ஆவது கட்டாயம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் -&amp;nbsp;&lt;/strong&gt; Pressure Cooker: அலுமினியம் குக்கர் vs ஸ்டீல் குக்கர்.! சமையலுக்கும், ஆரோக்கியத்திற்கும் எது பெஸ்ட்?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பொதுவா 'லாயர்', 'அட்வகேட்' என்ற வார்த்தைகளை ஒரே அர்த்தத்தில்தான் பலரும் பயன்படுத்துகிறார்கள். ஆனால், சட்டப்படி இரண்டுக்கும் தெளிவான வேறுபாடு உள்ளது. பார் கவுன்சிலில் பதிவு செய்து, நீதிமன்றத்தில் வாதாடும் தகுதி உள்ளவர் மட்டுமே 'அட்வகேட்'. சட்டப் பட்டம் மட்டும் பெற்றவர் 'லாயர்'. சட்ட உதவிக்கு சரியான நபரை அடையாளம் காண இந்த வேறுபாட்டைத் தெரிந்துகொள்வது அவசியம்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;Top Stories: அதிகம் படிக்கப்பட்டவை&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;ol&gt; &lt;li&gt;Astrology Tamil: சுக்கிர புத்தி ஆரம்பம்.! அடுத்த 6 மாதம் 5 ராசிகளுக்கு ராஜயோகம்.! இனி இவர்கள் தொட்டதெல்லாம் தங்கமாகும்.!&lt;/li&gt; &lt;li&gt;Vedic Astrology: இடம் மாறும் குரு பகவான்.! குரு பெயர்ச்சியால் கோடீஸ்வர யோகம் பெறும் 5 அதிர்ஷ்ட ராசிகள்.!&lt;/li&gt; &lt;li&gt;Mukesh Ambani House: அம்பானி வீட்ல வேலை வேணுமா? அரசு வேலையை விட கடினமாம்.! என்ன தகுதிகள் இருக்கணும்னு தெரிஞ்சிக்கோங்க.!&lt;/li&gt; &lt;li&gt;Numerology: இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ஒழுக்கமாகவும், சுய கட்டுப்பாடோட இருப்பாங்களாம்.! நீங்க பிறந்த தேதி இருக்கா?&lt;/li&gt; &lt;li&gt;Interesting Facts: உலகத்திலேயே ஒரு எறும்பு கூட இல்லாத இடம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க.!&lt;/li&gt;&lt;/ol&gt;]]></content:encoded>
            <category><![CDATA[life-style]]></category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/interesting-facts-difference-between-lawyer-and-advocate-qualifications-rights-and-key-differences-explained-nzxrs8z"/>
        </item>
        <item>
            <title><![CDATA[முகத்தின் அழகு பளிச்சிட பிளஷ் (Blush) பயன்படுத்தும் சரியான முறை: எளிய அழகு குறிப்புகள்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/health-beauty/how-to-apply-blush-perfectly-a-simple-guide-for-a-flawless-look-kbsmrhg</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/health-beauty/how-to-apply-blush-perfectly-a-simple-guide-for-a-flawless-look-kbsmrhg</guid>
            <pubDate>Fri, 17 Jul 2026 17:48:08 +0530</pubDate>
            <description><![CDATA[மேக்கப்பில் பிளஷ் (Blush) பயன்படுத்தும் விதம் உங்கள் முகத்திற்குத் தனிப்பொலிவையும் இளமையான தோற்றத்தையும் தரும். இயற்கையான அழகைப் பெற, சரியான பிளஷ் வகையைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவதற்கான எளிய மேக்கப் டிப்ஸ் மற்றும் வழிகாட்டி இதோ!]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxqzxwpqhj361kmtjhyxtdrs,imgname-apply-blush-perfectly--1--1784290407127.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;மேக்கப்பில் பிளஷ் (Blush) பயன்படுத்தும் விதம் உங்கள் முகத்திற்குத் தனிப்பொலிவையும் இளமையான தோற்றத்தையும் தரும். இயற்கையான அழகைப் பெற, சரியான பிளஷ் வகையைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவதற்கான எளிய மேக்கப் டிப்ஸ் மற்றும் வழிகாட்டி இதோ!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிளஷ் பயன்படுத்தும்போது அது சருமத்தோடு ஒட்டாமல் தனியாகத் தெரியக்கூடாது. அதற்கு, மேக்கப் போடுவதற்கு முன்பு முகத்தை நன்றாக மாய்ஸ்சுரைசர் (Moisturizer) கொண்டு ஈரப்பதமாக்க வேண்டும். பின்னர், லேசாக பிளஷ் தடவி, சருமத்தோடு நன்றாகக் கலக்குமாறு (Blend) செய்ய வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முகம் அழகாக செதுக்கியது போல் (Sculpted look) தோற்றமளிக்க வேண்டும் என்றால், பிளஷ்-ஐ கன்னங்களின் நடுப்பகுதியில் தடவக் கூடாது. மாறாக, கன்னங்களின் மேல் பகுதியின் ஓரங்களில் (Upper cheek ends) தடவி, அதை ஹைலைட்டருடன் சேர்த்து நன்றாக பிளெண்ட் செய்ய வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உங்கள் சருமத்தின் நிறத்திற்குப் பொருத்தமான பிளஷ் நிறத்தைத் தேர்ந்தெடுப்பது அவசியம்.&lt;/p&gt;&lt;p&gt;Cool Undertone (குளிர்ச்சியான சரும நிறம்): இளஞ்சிவப்பு (Pink), பெர்ரி அல்லது ரோஸ் நிறங்கள் நன்றாக இருக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;Warm Undertone (வெப்பமான சரும நிறம்): பீச் (Peach) மற்றும் கோரல் (Coral) நிறங்கள் பொருத்தமாக இருக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;Neutral Effect (இயல்பான நிறம்): டஸ்டி பிங்க் அல்லது இலவங்கப்பட்டை (Cinnamon) நிறங்களைத் தேர்ந்தெடுக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அழகு கலை நிபுணர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் மேக்கப் பிரஷ்களுக்குப் பதிலாக விரல் நுனிகளைப் பயன்படுத்துகிறார்கள். பிரஷ் அல்லது ஸ்பாஞ்ச் (Sponge) சில நேரங்களில் சருமத் துளைகளை அடைத்து முகப்பருக்களை ஏற்படுத்தலாம். எனவே, கன்னங்களில் சில துளிகள் பிளஷ் வைத்து, விரல் நுனிகளால் லேசாகத் தட்டி பிளெண்ட் செய்வது பாதுகாப்பானது மற்றும் இயற்கையானது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இயற்கையான ஒளிரும் முகப் பொலிவைப் பெற இந்த முறை உதவும். பவுண்டேஷன் (Foundation) போடுவதற்கு முன்பாகவே பிளஷ், கன்சீலர் மற்றும் ப்ரான்ஸர் ஆகியவற்றைத் முகத்தில் தடவிக்கொள்ள வேண்டும். அதன் பிறகு, அதன் மேல் லேசான பவுண்டேஷன் லேயரைப் பூசினால், மேக்கப் திட்டுத்திட்டாகத் தெரியாமல், சருமத்தின் உள்ளிருந்து ஒரு தனி வெளிச்சம் வருவது போல முகம் பிரகாசிக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்றைய இளைஞர்களிடம் இந்த ட்ரெண்ட் மிகவும் பிரபலம். செர்ரி நிற பிளஷ்-ஐ எடுத்து கன்னங்கள் மற்றும் மூக்கின் பாலப் பகுதி (Bridge of the nose) முழுவதும் லேசாகத் தடவி, மேல்நோக்கி பிளெண்ட் செய்ய வேண்டும். இறுதியாக ஹைலைட்டர் கொண்டு பினிஷிங் செய்தால், வெயிலில் மின்னுவது போன்ற ஒரு அழகான, இயற்கையான லுக் கிடைக்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[health-beauty]]></category>
            <dc:creator>Priya Velan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/health-beauty/how-to-apply-blush-perfectly-a-simple-guide-for-a-flawless-look-kbsmrhg"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Numerology: இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ஒழுக்கமாகவும், சுய கட்டுப்பாடோட இருப்பாங்களாம்.! நீங்க பிறந்த தேதி இருக்கா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/numerology-name-calculator-birth-dates-linked-to-discipline-and-self-control-according-to-astrology-tamil-ktgx2uy</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/numerology-name-calculator-birth-dates-linked-to-discipline-and-self-control-according-to-astrology-tamil-ktgx2uy</guid>
            <pubDate>Fri, 17 Jul 2026 17:35:42 +0530</pubDate>
            <description><![CDATA[Numerology Name Calculator: எண் கணிதத்தின்படி சில தேதிகளில் பிறந்தவர்கள் அதிக ஒழுக்கத்துடனும், சுய கட்டுப்பாடுகளுடனும் விளங்குவார்களாம். அந்த தேதிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxqz9drj9sfyd1hkp73dy676,imgname-numerology-name-calculator-birth-dates-linked-to-discipline-and-self-control-according-to-numerology-1784289736466.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Numerology Name Calculator: எண் கணிதத்தின்படி சில தேதிகளில் பிறந்தவர்கள் அதிக ஒழுக்கத்துடனும், சுய கட்டுப்பாடுகளுடனும் விளங்குவார்களாம். அந்த தேதிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எண் கணிதம் ஜோதிடத்தின் ஒரு அங்கமாகும். இது ஒருவரின் பிறந்த தேதியை வைத்தே அவர்களின் நிகழ்காலம், கடந்த காலம், எதிர்காலம், வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை கணித்துக் கூற முடியும். எண் கணிதத்தின் படி குறிப்பிட்ட சில தேதிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே அதிக ஒழுக்கம், கட்டுப்பாடு, பொறுப்புணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள் என நம்பப்படுகிறது. அந்த தேதிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் - &amp;nbsp;&lt;/strong&gt;Vedic Astrology: இடம் மாறும் குரு பகவான்.! குரு பெயர்ச்சியால் கோடீஸ்வர யோகம் பெறும் 5 அதிர்ஷ்ட ராசிகள்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த தேதிகளில் பிறந்தவர்கள் சூரிய பகவானின் ஆதிக்கம் பெற்றவர்கள். சூரியன் எப்படி தினமும் தவறாமல் உதிக்கிறதோ அதேபோல தங்கள் வாழ்க்கையில் ஒரு நேர நிர்வாகத்தையும், ஒழுக்கத்தையும் கடைபிடிப்பார்கள். ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் சரியான நேரத்திற்கு சென்று செல்ல வேண்டுமென நினைப்பார்கள். இவர்களிடம் தலைமைப் பண்பு அதிகமாக இருக்கும். தங்களை மட்டுமின்றி தங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கும் ஒழுக்கத்தை கற்றுத் தருவார்கள். பிறரையும் கட்டுப்பாடுடன் வைத்திருக்க விரும்புவார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் - &amp;nbsp;&lt;/strong&gt;Astrology Tamil: சுக்கிர புத்தி ஆரம்பம்.! அடுத்த 6 மாதம் 5 ராசிகளுக்கு ராஜயோகம்.! இனி இவர்கள் தொட்டதெல்லாம் தங்கமாகும்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எண் 4-ல் பிறந்தவர்கள் ராகுவின் ஆதிக்கம் கொண்டவர்கள். இருந்தாலும் இவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் ஒழுக்கமானவர்கள். கடினமாக உழைப்பார்கள் மற்றும் விதிகளை அச்சுபிசாமல் பின்பற்றுவார்கள். எதையும் ஒரு ஒழுங்கு முறையோடு செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். இவர்களது உடை, பேச்சு, செயல் அனைத்திலும் ஒருவித கட்டுப்பாடு இருக்கும். எவ்வளவு கோபம் வந்தாலும் கட்டுப்பாட்டை இழந்து எல்லை மீறி பேச மாட்டார்கள். தனிப்பட்ட வாழ்க்கையானாலும், பொது வாழ்க்கையானாலும் அதில் ஒழுக்கம் மிக முக்கியம் என்பதை அறிந்து செயல்படுவார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் -&amp;nbsp;&lt;/strong&gt; Chanakya Niti: கோடி ரூபாய் கொடுத்தாலும், இவர்களை மட்டும் திருமணம் செய்யாதீர்கள்.! சாணக்கியர் கூறும் அறிவுரை.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எண் கணிதத்தில் எண் 8 சனி பகவானின் ஆதிக்கதின் கீழ் வருகிறது. சனி பகவான் என்றாலே நீதி, ஒழுங்கு மற்றும் கடமைக்கு அதிபதியாவார். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் எதையும் திட்டமிட்டு செய்ய விரும்புவார்கள். விதிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்று விரும்புவார்கள். சோம்பேறித்தனம் இவர்களுக்கு பிடிக்காது. வாழ்க்கையில் எவ்வளவு பெரிய கஷ்டங்கள் வந்தாலும் தங்களின் சுய கட்டுப்பாட்டை இழக்காமல் நேர்மறையாக வாழ நினைப்பார்கள்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;முக்கிய குறிப்பு&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;ஜோதிடம் மற்றும் எண் கணிதம் பொதுவாக ஒருவருடைய குணங்களைக் கூறினாலும், ஒருவருடைய உண்மையான ஒழுக்கமும் கட்டுப்பாடும் அவர் வழங்கப்பட்ட விதம் சூழ்நிலை மற்றும் அவர்களது சுய முயற்சியை பொறுத்து அமைகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[astrology]]></category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/numerology-name-calculator-birth-dates-linked-to-discipline-and-self-control-according-to-astrology-tamil-ktgx2uy"/>
        </item>
        <item>
            <title><![CDATA[உரிமைகளைத் தட்டிப் பறிக்கப் பார்த்தால் சும்மா இருக்க மாட்டோம்!" - மதுரையில் சீறிய திருமாவளவன்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/thirumavalavan-in-madurai-a-fierce-warning-on-rights-videoshow-i1e5bbs</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/thirumavalavan-in-madurai-a-fierce-warning-on-rights-videoshow-i1e5bbs</guid>
            <pubDate>Fri, 17 Jul 2026 17:05:47 +0530</pubDate>
            <description><![CDATA[]]></description>
            <media:content url="https://geo.dailymotion.com/player/x1tbu.html?video=null" medium="video" height="768" width="1024"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;மதுரையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் தலித் அரசியலுக்கு எதிராக அரங்கேற்றப்படும் சதித் திட்டங்கள் குறித்து மிகக் கடுமையான கண்டனங்களை முன்வைத்தார். விசிக-வின் அரசியல் நகர்வுகளைக் கண்டு அஞ்சி, சாதிய மற்றும் மதவாத சக்திகள் திட்டமிட்டு அவதூறுகளைப் பரப்புவதாகக் குற்றம் சாட்டினார். மேலும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க விசிக எத்தகைய போராட்டக் களத்தையும் சந்திக்கத் தயார் என்று எச்சரிக்கும் தொனியில் அவர் பேசிய பரபரப்பான காட்சிகள்!&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[tamilnadu]]></category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/thirumavalavan-in-madurai-a-fierce-warning-on-rights-videoshow-i1e5bbs"/>
        </item>
        <item>
            <title><![CDATA[திமுக செய்த தவறை தவெக செய்யக் கூடாது! இல்லையெனில் போராட்டம்.! விஜய் அரசுக்கு அன்புமணி எச்சரிக்கை!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/anbumani-cautions-vijay-s-tvk-against-dmk-s-mistake-videoshow-m2nqsd6</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/anbumani-cautions-vijay-s-tvk-against-dmk-s-mistake-videoshow-m2nqsd6</guid>
            <pubDate>Fri, 17 Jul 2026 17:02:53 +0530</pubDate>
            <description><![CDATA[]]></description>
            <media:content url="https://geo.dailymotion.com/player/x1tbu.html?video=null" medium="video" height="768" width="1024"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Resto Bar: முந்தைய திமுக அரசு மக்களால் தூக்கி எறியப்பட்டதற்கு காரணமே மது உள்ளிட்ட போதைப் பொருள்கள் நடமாட்டத்தையும், அதனால் பெருகிய பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களையும் கட்டுப்படுத்தத் தவறியதுதான்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[tamilnadu]]></category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/anbumani-cautions-vijay-s-tvk-against-dmk-s-mistake-videoshow-m2nqsd6"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Poes Garden : 'அம்மா' வீட்டுக்கு வர்றாரா தளபதி? ஜெயலலிதா பங்களாவில் விஜய்... பரபரக்கும் சென்னை!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/vijay-at-poes-garden-a-calculated-political-move-videoshow-o7bkmbh</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/vijay-at-poes-garden-a-calculated-political-move-videoshow-o7bkmbh</guid>
            <pubDate>Fri, 17 Jul 2026 17:02:50 +0530</pubDate>
            <description><![CDATA[]]></description>
            <media:content url="https://geo.dailymotion.com/player/x1tbu.html?video=null" medium="video" height="768" width="1024"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;தமிழ்நாடு அரசியலில் 'போயஸ் கார்டன்' என்ற பெயருக்கு தனி மவுசு உண்டு. அது மறைந்த முன்னாள் முதல்வர், மக்களின் 'அம்மா' ஜெயலலிதா வாழ்ந்த அதிகார மையம். இப்போது அதே 'வேதா நிலையம்' பங்களாவை வாங்க முதல்வர் விஜய் திட்டமிடுகிறாரா? இந்த ஸ்டோரியைப் பாருங்க.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[tamilnadu]]></category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/vijay-at-poes-garden-a-calculated-political-move-videoshow-o7bkmbh"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ISRO Resignations: 100 விஞ்ஞானிகள் அடுத்தடுத்து ராஜினாமா.. இஸ்ரோவில் என்ன நடக்கிறது?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/india/over-100-scientists-leave-isro-what-it-means-ci0n8ek</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/india/over-100-scientists-leave-isro-what-it-means-ci0n8ek</guid>
            <pubDate>Fri, 17 Jul 2026 16:29:10 +0530</pubDate>
            <description><![CDATA[ISRO Resignations: இந்தியாவின் பெருமைக்குரிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ISRO (Indian Space Research Organisation)-வில் இருந்து கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான விஞ்ஞானிகள் ராஜினாமா செய்திருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxqkwa7gmcd9wsnngkk5w2z6,imgname-2-1784277772528.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ISRO Resignations: இந்தியாவின் பெருமைக்குரிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ISRO (Indian Space Research Organisation)-வில் இருந்து கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான விஞ்ஞானிகள் ராஜினாமா செய்திருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சமீப காலமாக, இஸ்ரோவில் இருந்து 100க்கும் மேற்பட்ட சீனியர் விஞ்ஞானிகளும் தொழில்நுட்ப வல்லுநர்களும் ராஜினாமா செய்துள்ளனர். சிலர் விருப்ப ஓய்வும் (VRS) பெற்றுச் செல்கின்றனர். குறிப்பாக, பெங்களூருவில் உள்ள யு.ஆர். ராவ் செயற்கைக்கோள் மையத்தில் இருந்து 80 பேரும், விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் இருந்து 20க்கும் மேற்பட்ட முக்கிய விஞ்ஞானிகளும் வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ககன்யான் போன்ற பெரிய திட்டங்களில் பணியாற்றுபவர்களும் விலகுவதால், இது நாடு தழுவிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவில் தனியார் விண்வெளித் துறை வேகமாக வளர்ந்து வருகிறது. தனியார் நிறுவனங்கள் வழங்கும் பெரும் சம்பளத்திற்கு ஆசைப்பட்டு பல விஞ்ஞானிகள் இஸ்ரோவை விட்டு வெளியேறுவதாகக் கூறப்படுகிறது. ராஜினாமா செய்தவர்களில் எல்விஎம்-3 திட்ட இயக்குநர், சந்திரயான்-3 சிமுலேஷன்ஸ் குழு மேலாளர் போன்ற பல சீனியர்களும் அடங்குவர். இப்படிப்பட்ட நிபுணர்கள் திடீரென நிறுவனத்தை விட்டு வெளியேறினால், ககன்யான் போன்ற முக்கிய திட்டங்களின் நிலை என்னவாகும் என்ற கவலை எழுந்துள்ளது. இந்த கவலையின் காரணமாகவே, அரசும் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மத்திய விண்வெளித் துறை, ஜூலை 14, 2026 அன்று ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்தது. அதன்படி, இஸ்ரோவின் உள்ளூர் மையங்களின் இயக்குநர்களுக்கு இருந்த ஒரு அதிகாரம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. அதாவது, இனி அந்த மையங்களில் உள்ள விஞ்ஞானிகள் ராஜினாமா செய்தால் அதை ஏற்கும் அதிகாரம் இயக்குநர்களுக்குக் கிடையாது. ககன்யான் போன்ற முக்கிய திட்டங்களில் பணிபுரியும் 'குரூப் ஏ' விஞ்ஞானிகள் ராஜினாமா செய்யவோ அல்லது விருப்ப ஓய்வு பெறவோ, இனி நேரடியாக மத்திய விண்வெளித் துறையிடமிருந்து அனுமதி பெற வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த ராஜினாமாக்கள் குறித்து இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் பேசுகையில், 'ஊழியர்கள் ஒரு நிறுவனத்தை விட்டு வெளியேறுவது எல்லா இடங்களிலும் நடப்பதுதான். இதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை' என்றார். நாட்டின் பாதுகாப்பு மற்றும் பெரிய விண்வெளிப் பயணங்களில் எந்த இடையூறும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதே தங்கள் இலக்கு என்று நாராயணன் கூறினார். ராஜினாமா செய்தவர்களின் பொறுப்புகளை உடனடியாக மற்றொருவருக்கு வழங்கி, திட்டங்களை வேகமாக முடிப்போம் என்றும் அவர் உறுதியளித்தார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[india]]></category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/india/over-100-scientists-leave-isro-what-it-means-ci0n8ek"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Kidney Health: சிறுநீரக ஆரோக்கியத்தை இயற்கையாக மேம்படுத்தும் உணவுகள்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/webstories/health/foods-that-naturally-protect-the-kidney-limxb8v</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/webstories/health/foods-that-naturally-protect-the-kidney-limxb8v</guid>
            <pubDate>Fri, 17 Jul 2026 16:11:58 +0530</pubDate>
            <description><![CDATA[நமது உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்று சிறுநீரகம். தவறான உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும். சிறுநீரகங்களைப் பாதுகாக்க உங்கள் டயட்டில் சேர்க்க வேண்டிய முக்கிய உணவுகளை பற்றி பார்ப்போம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kvfgsg0s9yyj3zaepcjapejr,imgname-fotojet---2026-06-19t141124.648-1781858615321.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;நமது உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்று சிறுநீரகம். தவறான உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும். சிறுநீரகங்களைப் பாதுகாக்க உங்கள் டயட்டில் சேர்க்க வேண்டிய முக்கிய உணவுகளை பற்றி பார்ப்போம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[health]]></category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/webstories/health/foods-that-naturally-protect-the-kidney-limxb8v"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Interesting Facts: உலகத்திலேயே ஒரு எறும்பு கூட இல்லாத இடம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/interesting-facts-the-only-place-in-the-world-with-no-ants-and-the-surprising-reason-behind-it-n79a6nd</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/interesting-facts-the-only-place-in-the-world-with-no-ants-and-the-surprising-reason-behind-it-n79a6nd</guid>
            <pubDate>Fri, 17 Jul 2026 15:37:49 +0530</pubDate>
            <description><![CDATA[The Only Continent Without Ants: நம்ம வீடு, தெரு, தோட்டம்னு எல்லா இடத்துலயும் எறும்பைப் பார்க்கிறோம். ஆனா, இந்த உலகத்துல ஒரு இடத்துல மட்டும் ஒரு எறும்புகூட கிடையாதாம். அது எந்த இடம், ஏன் அங்க எறும்புகள் இல்லைனு தெரிஞ்சுக்கலாம் வாங்க.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxqrq4prhj0esz8dax1h8xrh,imgname-interesting-facts-the-only-place-in-the-world-with-no-ants-1784282845910.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;The Only Continent Without Ants: நம்ம வீடு, தெரு, தோட்டம்னு எல்லா இடத்துலயும் எறும்பைப் பார்க்கிறோம். ஆனா, இந்த உலகத்துல ஒரு இடத்துல மட்டும் ஒரு எறும்புகூட கிடையாதாம். அது எந்த இடம், ஏன் அங்க எறும்புகள் இல்லைனு தெரிஞ்சுக்கலாம் வாங்க.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நம் வீடு, சமையலறை, தோட்டம் என அனைத்து பக்கத்திலும் எறும்புகளை பார்த்திருப்போம். ஆனால் உலகிலேயே ஒரு எறும்பு கூட இல்லாத இடம் பற்றி தெரியுமா? அது அண்டார்டிகா தான். அண்டார்டிகா, பனியால் மூடப்பட்ட ஒரு கண்டம். இது உலகின் ஐந்தாவது பெரிய கண்டம்னாலும், மற்ற கண்டங்களை விட இங்க சூழல் ரொம்பவே வித்தியாசமானது. வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கும் கீழே போவதால், எறும்புகள் போன்ற பூச்சிகள் உயிர் வாழ்வது ரொம்பவே கடினம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எறும்புகள் உயிர் வாழ ஒரு குறிப்பிட்ட சூழல் தேவை. அவை நிலத்துக்கு அடியில், பாறைகளுக்கு கீழ், மரப்பட்டைகளுக்குள்ள வாழும் உயிரனமாகும். ஆனால், அண்டார்டிகாவின் பனி, உறைந்த நிலம், கடுமையான காற்று காரணமாக எறும்புகளுக்குத் தேவையான சூழல் அண்டார்டிகாவில் இல்லை.&lt;/p&gt;&lt;img&gt;விஞ்ஞானிகள் என்ன சொல்றாங்கன்னா, எறும்புகள் உருவத்துல ரொம்ப சின்னதா இருக்கறதால, அதோட உடல்ல வெப்பத்தை தக்கவைக்க முடியாது. கடுமையான குளிரில் அவற்றின் இயக்கம் குறைஞ்சிடும். இதனால உணவு தேடவோ, கூடு கட்டவோ முடியாது. அதனாலதான் அண்டார்டிகா எறும்புகளுக்கு ஏற்ற இடமில்லை.&lt;img&gt;பூமியில் ஒவ்வொரு உயிரினமும் வாழ அதுக்குனு ஒரு தனிப்பட்ட சூழல் தேவை. ஒரு இடத்துல சுலபமா வாழுற ஒரு உயிரினம், இன்னொரு இடத்துல வாழ முடியாம போகலாம். காலநிலை, வெப்பநிலை, உணவு கிடைப்பது போன்ற விஷயங்கள் உயிரினங்களின் வாழ்க்கையை பாதிக்குது.&lt;img&gt;&lt;p&gt;எறும்புகள் பொதுவாகப் பூமிக்கு அடியில் கூடு கட்டும். ஆனால், அண்டார்டிகாவின் தரைப்பகுதி உறைந்து போவதால் (Frost heaving), எறும்புகளால் அங்கு இனப்பெருக்கம் செய்யவோ, நீண்ட காலம் உயிர்வாழவோ முடிவதில்லை.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[life-style]]></category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/interesting-facts-the-only-place-in-the-world-with-no-ants-and-the-surprising-reason-behind-it-n79a6nd"/>
        </item>
        <item>
            <title><![CDATA[The Odyssey Review : கிறிஸ்டோபர் நோலனின் ‘தி ஒடிஸி’ பிளாஸ்டா? வேஸ்டா? விமர்சனம் இதோ]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/review/christopher-nolan-the-odyssey-movie-review-a-mythological-masterpiece-flktb2p</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/review/christopher-nolan-the-odyssey-movie-review-a-mythological-masterpiece-flktb2p</guid>
            <pubDate>Fri, 17 Jul 2026 14:58:58 +0530</pubDate>
            <description><![CDATA[The Odyssey Movie Review : ஹாலிவுட்டின் ஜாம்பவன் இயக்குநர்களில் ஒருவரான கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் இன்று ரிலீஸ் ஆகி உள்ள தி ஒடிஸி திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kvd98dq0ajydakc6kjjjn45s,imgname-ct-54129-msg-1781783607008.jpeg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;The Odyssey Movie Review : ஹாலிவுட்டின் ஜாம்பவன் இயக்குநர்களில் ஒருவரான கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் இன்று ரிலீஸ் ஆகி உள்ள தி ஒடிஸி திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உலக சினிமா ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் திரைப்படங்களில் தற்போது முதலிடத்தில் இருப்பது கிறிஸ்டோபர் நோலனின் 'தி ஒடிஸி (The Odyssey)'. ஒவ்வொரு படத்திலும் புதிய தொழில்நுட்பத்தையும், பிரம்மாண்டமான காட்சிகளையும் அறிமுகப்படுத்தும் நோலன், இந்த முறை உலக சினிமாவில் புதிய வரலாறு படைக்க தயாராகியுள்ளார். இந்தப் படம் முழுவதும் IMAX ஃபிலிம் கேமராக்களில் படமாக்கப்பட்ட உலகின் முதல் முழுநீள திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இதுவரை எந்த திரைப்படமும் முழுமையாக இந்த தொழில்நுட்பத்தில் உருவாகாத நிலையில், 'தி ஒடிஸி' புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;இந்த திரைப்படம், கிரேக்கக் கவிஞர் ஹோமர் எழுதிய உலகப் புகழ்பெற்ற 'ஒடிஸி' காவியத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. நோலன் இயக்கும் 13-வது திரைப்படம் இதுவாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கதையின் நாயகன் ஒடிசியஸ், கிரேக்கத்தின் இத்தாகா என்ற தீவை ஆட்சி செய்யும் மன்னன். ட்ரோஜன் போரில் தனது புத்திசாலித்தனமான 'ட்ரோஜன் ஹார்ஸ்' தந்திரத்தின் மூலம் கிரேக்க படைக்கு வெற்றியைப் பெற்றுத் தருகிறார். ஆனால், போர் முடிந்த பிறகு தாயகத்திற்குத் திரும்பும் அவரது பயணம் எளிதாக அமையவில்லை. கடவுள்களின் கோபம், பயங்கரமான கடல் புயல்கள், மர்ம உயிரினங்கள் மற்றும் பல எதிர்பாராத ஆபத்துகள் ஒடிசியஸின் பயணத்தை சோதிக்கின்றன.&lt;/p&gt;&lt;p&gt;இதற்கிடையில், இத்தாகாவில் வேறு ஒரு பிரச்சினை உருவாகிறது. ஒடிசியஸின் மகன் டெலிமக்கஸ், தந்தை இன்னும் உயிருடன் இருப்பார் என்ற நம்பிக்கையில் அவரைத் தேடும் முயற்சியில் ஈடுபடுகிறார். அதே நேரத்தில், அரண்மனையை கைப்பற்ற நினைக்கும் பல பிரபுக்களும் இளவரசர்களும், ராணி பெனிலோப்பை மறுமணம் செய்ய வற்புறுத்தி, அரசாட்சியை கைப்பற்ற சதி செய்கின்றனர். இறுதியில் ஒடிசியஸ் தனது நாட்டிற்குத் திரும்புகிறாரா? தனது குடும்பத்தையும் ராஜியத்தையும் காப்பாற்றுகிறாரா? என்பதுதான் இந்த படத்தின் மீதிக்கதை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒடிஸியஸ் மன்னனாக மேட் டேமன் ஒரு மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஒரு கிரேக்க வீரனுக்கே உரிய கம்பீரம், விடாமுயற்சி என அனைத்தையும் தன் நடிப்பில் கொண்டு வந்துள்ளார். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை, அவரது கதாபாத்திரம் நம்மை கதைக்குள் கட்டிப்போடுகிறது. அவரது மனைவி பெனிலோப் ஆக ஆன் ஹாத்வே, பல ஆண்டுகள் கணவனுக்காகக் காத்திருக்கும் ஒரு ராணியின் வலியையும், மன உறுதியையும் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார். பெனிலோப்பின் காதலர்களில் ஒருவரான ஆண்டினோஸ் கதாபாத்திரத்தில் ராபர்ட் பேட்டின்சன் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகிறார். மேலும், லுபிடா நியாங்கோ, சார்லிஸ் தெரோன், ஜான் பெர்ன்தால், எலியட் பேஜ், சமந்தா மார்டன், ஜான் லெகுய்ஸாமோ, பில் இர்வின், பென்னி சஃப்டி ஆகியோரின் சிறப்பான துணை நடிப்பு படத்திற்கு மேலும் பலம் சேர்க்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ட்ரோஜன் போருக்குப் பிறகு, தன் சொந்த ஊரான இதாக்காவிற்குத் திரும்ப ஒடிஸியஸ் போராடுகிறார். வழியில், கடல் கடவுளான பொசைடனின் மகனான சைக்ளோப்ஸ் பாலிபீமஸை அவர் சந்திக்கிறார். இந்த சந்திப்பு, அவரது தைரியம், புத்திசாலித்தனம் மற்றும் மன உறுதியைச் சோதிக்கும் பல ஆபத்தான சாகசங்களுக்கு வழிவகுக்கிறது. புராண உயிரினங்கள், கடுமையான போர்கள், உணர்ச்சிகரமான சந்திப்புகள் என அனைத்தும் படத்தில் நிறைந்துள்ளன. பிரம்மாண்டமான ஆக்&zwnj;ஷன் காட்சிகளுக்கும், ஒடிஸியஸ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இடையேயான உணர்ச்சிப்பூர்வமான பிணைப்புக்கும் இடையே திரைக்கதை ஒரு சமநிலையை உருவாக்குகிறது. இதனால், இந்த பழங்கால காவியம் இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கும் எளிதில் புரிகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சினிமாவின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவராகக் கருதப்படும் கிறிஸ்டோபர் நோலன், அதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். அவரது இயக்கம், பிரமிக்க வைக்கும் விஷுவல்களையும், ஆழமான உணர்ச்சிகளையும் ஒன்றாக இணைக்கிறது. இதனால் 'தி ஒடிஸி' ஒரு வெறும் புராண ஆக்&zwnj;ஷன் படமாக மட்டும் இல்லாமல், ஒரு முழுமையான அனுபவமாக மாறுகிறது. படத்தின் அட்டகாசமான ஒளிப்பதிவும், IMAX தொழில்நுட்பமும் திரையரங்கில் மறக்க முடியாத அனுபவத்தைத் தருகின்றன. ஒவ்வொரு காட்சியும் பிரம்மாண்டமாகத் தெரிகிறது. அதே சமயம், உணர்வுப்பூர்வமான கதைசொல்லல் ரசிகர்களைப் பயணத்தின் இறுதிவரை கட்டிப்போடுகிறது. இது நோலனின் சிறந்த படமா இல்லையா என்பது விவாதத்திற்குரியது. ஆனால், இது நிச்சயமாக அவரது மிகவும் லட்சிய மற்றும் பார்வைக்கு பிரமிப்பூட்டும் படைப்புகளில் ஒன்றாக நிற்கிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[review]]></category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/review/christopher-nolan-the-odyssey-movie-review-a-mythological-masterpiece-flktb2p"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Bank Holidays: ஆகஸ்ட் மாதத்தில் இத்தனை நாட்களுக்கு பேங்க் லீவா.! விடுமுறை பட்டியல் இதோ!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/august-bank-holidays-2026-full-list-of-bank-closures-fdgxmrg</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/august-bank-holidays-2026-full-list-of-bank-closures-fdgxmrg</guid>
            <pubDate>Fri, 17 Jul 2026 14:57:42 +0530</pubDate>
            <description><![CDATA[Bank Holidays: வங்கியில் முக்கிய வேலைகளைத் திட்டமிட்டு வைத்திருப்பவர்கள், ஆகஸ்ட் மாத வங்கி விடுமுறை பட்டியலை முன்கூட்டியே தெரிந்துகொள்வது அவசியம். ஆகஸ்ட் மாதத்தில் பல நாட்கள் வங்கிகள் செயல்படாது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxqm5abrtdtcmy6v12n73m7d,imgname-bank-holidays-1784278067571.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Bank Holidays: வங்கியில் முக்கிய வேலைகளைத் திட்டமிட்டு வைத்திருப்பவர்கள், ஆகஸ்ட் மாத வங்கி விடுமுறை பட்டியலை முன்கூட்டியே தெரிந்துகொள்வது அவசியம். ஆகஸ்ட் மாதத்தில் பல நாட்கள் வங்கிகள் செயல்படாது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆகஸ்ட் மாத வங்கிக் கிளைகளுக்குச் செல்ல திட்டமிடுபவர்கள், விடுமுறை நாட்களை முன்கூட்டியே தெரிந்துகொள்வது அவசியம். இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிடும் விடுமுறை அட்டவணையின்படி, வார இறுதி நாட்கள், தேசிய முக்கிய தினங்கள் மற்றும் சில மாநில பண்டிகைகள் காரணமாக ஆகஸ்டில் பல நாட்கள் வங்கிகள் செயல்படாது. குறிப்பாக பணம் எடுத்தல், காசோலை பரிவர்த்தனை, டிமாண்ட் டிராஃப்ட் (DD), KYC புதுப்பித்தல் போன்ற கிளை சேவைகளை பயன்படுத்த வேண்டியவர்கள், விடுமுறை அட்டவணையை கருத்தில் கொண்டு தங்களின் பணிகளை முன்கூட்டியே திட்டமிடுவது சிரமங்களை தவிர்க்க உதவும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நாடு முழுவதும் பொதுவாக விடுமுறை ஆகஸ்ட் 2 (ஞாயிற்றுக்கிழமை), ஆகஸ்ட் 8 (இரண்டாவது சனிக்கிழமை), ஆகஸ்ட் 9 (ஞாயிற்றுக்கிழமை), ஆகஸ்ட் 15 (சுதந்திர தினம்), ஆகஸ்ட் 16 (ஞாயிற்றுக்கிழமை), ஆகஸ்ட் 22 (நான்காவது சனிக்கிழமை), ஆகஸ்ட் 23 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் ஆகஸ்ட் 30 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் இடம்பெறும். இந்த நாட்களில் பெரும்பாலான வங்கிக் கிளைகள் மூடப்பட்டிருக்கும். எனவே, அவசர வங்கிப் பணிகள் இருந்தால் இந்த விடுமுறை நாட்களுக்கு முன்போ அல்லது அதற்குப் பிறகோ முடித்துக்கொள்வது சிறந்ததாக இருக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;இந்த தங்க பத்திரம் வாங்கியிருக்கீங்களா? ரூ.1 லட்சம் இன்று ரூ.4.18 லட்சம்.. ஆர்பிஐ அறிவிப்பு!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தேசிய அளவில் விடுமுறைகளைத் தவிர்த்து, மாநிலங்களுக்கு ஏற்ப கூடுதல் விடுமுறைகள் அறிவிக்கப்படலாம். ரக்ஷா பந்தன், ஓணம், ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி, கணேஷ் சதுர்த்தி உள்ளிட்ட மாநில பண்டிகைகளின் அடிப்படையில் சில மாநிலங்களில் வங்கிகள் கூடுதல் நாட்கள் மூடப்படலாம். எனவே, நீங்கள் வசிக்கும் மாநிலத்தில் எந்தெந்த தேதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது சம்பந்தப்பட்ட வங்கியின் விடுமுறை அல்லது RBI வெளியிடும் அதிகாரப்பூர்வ பட்டியலை சரிபார்ப்பது நல்லது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வங்கிக் கிளைகள் மூடப்பட்டிருந்தாலும், பெரும்பாலான டிஜிட்டல் வங்கி சேவைகள் வழக்கம்போல தொடர்ந்து செயல்படும். ஏடிஎம் மூலம் பணம் எடுத்தல், யுபிஐ பரிவர்த்தனைகள், இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்துதல் போன்ற சேவைகள் பொதுவாக கிடைக்கும். மேலும் IMPS சேவைகள் பெரும்பாலும் இயங்கும். இருப்பினும், NEFT உள்ளிட்ட சில பரிவர்த்தனைகள் குறிப்பிட்ட நேர விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படக்கூடும். எனவே, பெரிய தொகை பரிமாற்றங்கள் அல்லது நேரம் சார்ந்த பரிவர்த்தனைகளை முன்கூட்டியே மேற்கொள்வது பாதுகாப்பான தேர்வாக இருக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கிளையில் நேரில் சென்று செய்ய வேண்டிய பணிகள், உதாரணமாக காசோலை வைப்பு, டிமாண்ட் டிராஃப்ட் பெறுதல், KYC ஆவணங்களை புதுப்பித்தல், லாக்கர் சேவை அல்லது பிற வங்கி தொடர்பான சேவைகள் இருந்தால், விடுமுறை நாட்களைத் தவிர்த்து திட்டமிடுவது மிகவும் முக்கியம். குறிப்பாக தொடர்ச்சியான விடுமுறைகள் இருக்கும் வாரங்களில் வங்கிகளில் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், தேவையான பணிகளை முன்கூட்டியே முடித்துக்கொள்வது நேரத்தையும் சிரமத்தையும் மிச்சப்படுத்தும். மாநில வாரியான விடுமுறைகள் மாறுபடக்கூடும் என்பதால், வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் ரிசர்வ் வங்கி வெளியிடும் விடுமுறை அட்டவணையை சரிபார்ப்பது வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[business]]></category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/august-bank-holidays-2026-full-list-of-bank-closures-fdgxmrg"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Ceiling Fan Tips: ஃபேன் காற்று கம்மியா இருக்கா? ஜெட் வேகத்தில் சுற்ற வைக்கும் 5 சிம்பிள் டிப்ஸ்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/make-your-old-ceiling-fan-feel-new-with-these-5-easy-hacks-gozbom0</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/make-your-old-ceiling-fan-feel-new-with-these-5-easy-hacks-gozbom0</guid>
            <pubDate>Fri, 17 Jul 2026 14:48:34 +0530</pubDate>
            <description><![CDATA[Ceiling Fan Tips: உங்க வீட்டு சீலிங் ஃபேன் ரொம்ப மெதுவா சுத்துதா? காற்றே வரலையா? புது ஃபேன் வாங்க காசை செலவு பண்றதுக்கு முன்னாடி, இந்த 5 சிம்பிள் டிப்ஸை முயற்சி செஞ்சு பாருங்க. உங்க பழைய ஃபேனை புதுசு மாதிரி வேகமா சுத்த வைக்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxqmgsby1wfjcerz8jgx0m76,imgname-thumbnail---2026-07-17t142339.996-1784278443388.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Ceiling Fan Tips: உங்க வீட்டு சீலிங் ஃபேன் ரொம்ப மெதுவா சுத்துதா? காற்றே வரலையா? புது ஃபேன் வாங்க காசை செலவு பண்றதுக்கு முன்னாடி, இந்த 5 சிம்பிள் டிப்ஸை முயற்சி செஞ்சு பாருங்க. உங்க பழைய ஃபேனை புதுசு மாதிரி வேகமா சுத்த வைக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சீலிங் ஃபேன் வேகம் குறைந்தால் எரிச்சலாக இருக்கும். உடனே புது ஃபேன் வாங்க வேண்டும் என்று தோன்றும். ஆனால், சின்ன சின்ன காரணங்களால் கூட ஃபேன் வேகம் குறையலாம். கீழே உள்ள 5 சிம்பிள் டிப்ஸை ஃபாலோ செய்தால், உங்கள் பழைய ஃபேனே புதுசு மாதிரி வேகமாக காற்று கொடுக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஃபேன் வேகமாக சுழல்வதற்கு 'கெப்பாசிட்டர்' ஒரு முக்கிய காரணம். நாளடைவில் அது பழுதாகி விடும், அதனால் ஃபேன் சோர்வாக சுற்றுவது போலத் தோன்றும். உங்கள் ஃபேன் மெதுவாக சுற்றினால், முதலில் கெப்பாசிட்டரை சரிபார்க்கவும் அல்லது புதியதாக மாற்றவும். இது ஃபேன் வேகத்தை உடனடியாக அதிகரிக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;ஏர் கண்டிஷனர் போலவே சீலிங் ஃபேன்களுக்கும் சர்வீஸ் தேவை. மோட்டாரில் கிரீஸ் குறைந்தாலோ அல்லது வயரிங் தளர்வாக இருந்தாலோ, ஃபேன் சத்தம் போடும் அல்லது மெதுவாக சுற்றும். சரியான நேரத்தில் மோட்டாருக்கு ஆயிலிங் அல்லது கிரீஸிங் செய்தால், அது ஸ்மூத்தாக ஓடும்.&lt;img&gt;&lt;p&gt;ஃபேன் இறக்கைகளில் தூசி படிந்தால், அதன் எடை அதிகரித்து, காற்றை வீசும் திறன் குறையும். எனவே, வாரம் ஒருமுறை அல்லது பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை இறக்கைகளை ஈரமான துணியால் சுத்தம் செய்யுங்கள். இதனால், காற்றின் ஓட்டம் மேம்படும்.&lt;/p&gt;&lt;img&gt;மின்சார வோல்டேஜ் அடிக்கடி ஏறி இறங்கினால், மோட்டாரின் மீது அழுத்தம் ஏற்படும். இதனால் கூட ஃபேன் வேகம் குறையலாம். உங்கள் பகுதியில் வோல்டேஜ் பிரச்சனை இருந்தால், ஸ்டெபிலைசர் பயன்படுத்துவது அல்லது வயரிங்கை சரிபார்ப்பது நல்லது.&lt;img&gt;&lt;p&gt;ஃபேன் உடைய மூன்று இறக்கைகளும் ஒரே மட்டத்தில் இல்லையென்றால், காற்று சரியாக வராது. ஒரு இன்ச் டேப் எடுத்து, கூரையிலிருந்து மூன்று இறக்கைகளின் முனை வரை உள்ள தூரத்தை அளந்து பாருங்கள். இந்த தூரம் சமமாக இருக்க வேண்டும். இறக்கை வளைந்திருந்தால், அதை மெதுவாக நேராக்குங்கள். இந்த எளிய வழிகளைப் பின்பற்றி பணத்தை மிச்சப்படுத்துங்கள்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[life-style]]></category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/make-your-old-ceiling-fan-feel-new-with-these-5-easy-hacks-gozbom0"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Sakkarai Pongal Recipe: கோயில் ஸ்டைல் சர்க்கரைப் பொங்கல்.! அதே சுவையுடன் வீட்டிலேயே செய்வது எப்படி?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/sweet-pongal-recipe-how-to-make-temple-style-sakkarai-pongal-at-home-with-authentic-taste-and-aroma-96vl086</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/sweet-pongal-recipe-how-to-make-temple-style-sakkarai-pongal-at-home-with-authentic-taste-and-aroma-96vl086</guid>
            <pubDate>Fri, 17 Jul 2026 14:47:56 +0530</pubDate>
            <description><![CDATA[Sweet Pongal: கோயில்களில் பிரசாதமாக வழங்கப்படும் சர்க்கரைப் பொங்கலுக்கு என்றுமே ஒரு தனிச்சுவை உண்டு. அதே சுவையையும் மணத்தையும் நம் வீட்டிலேயே கொண்டு வருவது எப்படி என்பதற்கான எளிய செய்முறை விளக்கம் இங்கே.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxqnff7t5jpycrfmpyfa3bgf,imgname-sakkarai-pongal-recipe-1784279448826.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Sweet Pongal: கோயில்களில் பிரசாதமாக வழங்கப்படும் சர்க்கரைப் பொங்கலுக்கு என்றுமே ஒரு தனிச்சுவை உண்டு. அதே சுவையையும் மணத்தையும் நம் வீட்டிலேயே கொண்டு வருவது எப்படி என்பதற்கான எளிய செய்முறை விளக்கம் இங்கே.&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கோயில் பிரசாதம் என்றாலே அதற்கு ஒரு தனி மவுசுதான். அதிலும் குறிப்பாக, அங்கு கொடுக்கப்படும் சர்க்கரைப் பொங்கலின் சுவை, நாம் வீட்டில் செய்வதை விட முற்றிலும் வித்தியாசமாகவும் அலாதியாகவும் இருக்கும். அந்த அசல் கோயில் சுவையை நம் வீட்டிலேயே கொண்டு வருவது எப்படி என்று பார்ப்போம்.&lt;/p&gt;&lt;p&gt;Green Chutney: ஹோட்டல் ஸ்டைல் புதினா சட்னி வேணுமா? அரைக்கும் போது இந்த 2 சீக்ரெட் பொருளை மட்டும் சேருங்க.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒரு கப் பச்சரிசிக்கு, கால் கப் பாசிப்பருப்பு என்பது சரியான அளவு. இவற்றுடன் ஒன்றரை கப் பொடித்த வெல்லம், அரை கப் நெய், ஒரு கப் பால் மற்றும் நான்கு கப் தண்ணீர் தேவைப்படும். மேலும், வாசனைக்காக சிறிதளவு ஏலக்காய்த்தூள், ஒரு சிட்டிகை பச்சைக்கற்பூரம், மற்றும் நெய்யில் வறுக்க பத்து முந்திரி, பத்து உலர் திராட்சை ஆகியவற்றை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த அளவுகள் ஒரு சிறிய குடும்பத்திற்குப் போதுமானதாக இருக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;Mutton Curry: ஆட்டுக்கறியில் இந்த பாகங்களை சாப்பிடுறீங்களா? அப்போ உங்க ஹெல்த்துக்கு ஆபத்து!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முதலில் பாசிப்பருப்பை வெறும் வாணலியில் மணம் வரும் வரை லேசாக வறுத்துக்கொள்ள வேண்டும். பின்னர், வறுத்த பருப்புடன் கழுவிய பச்சரிசியைச் சேர்த்து, நான்கு கப் தண்ணீர் மற்றும் ஒரு கப் பால் ஊற்றி பிரஷர் குக்கரில் 4 முதல் 5 விசில் வரை நன்கு குழைய வேகவிடவும். பால் சேர்ப்பது பொங்கலுக்கு கூடுதல் சுவையையும் மென்மையையும் கொடுக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;Pressure Cooker: அலுமினியம் குக்கர் vs ஸ்டீல் குக்கர்.! சமையலுக்கும், ஆரோக்கியத்திற்கும் எது பெஸ்ட்?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குக்கரில் பிரஷர் அடங்கும் நேரத்தில், வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைய விடவும். வெல்லத்தில் தூசி, மண் இருக்க வாய்ப்புள்ளதால், கரைந்த பாகை வடிகட்டி எடுத்துக்கொள்வது மிக அவசியம். இப்போது, நன்கு வெந்து மசித்த பொங்கல் கலவையுடன் இந்த வெல்லப்பாகைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். வெல்லப்பாகு சேர்த்த பிறகு, அடுப்பை மிதமான தீயில் வைத்து 5 முதல் 7 நிமிடங்கள் வரை கிளறினால் பொங்கல் கெட்டியாகும்.&lt;/p&gt;&lt;p&gt;Home Cleaning: படுக்கை மெத்தையில் கெட்ட வாடையா? துவைக்காமலேயே துர்நாற்றத்தை நீக்க சூப்பர் டிப்ஸ்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த கட்டத்தில், ஏலக்காய்த்தூள் மற்றும் ஒரு சிட்டிகை பச்சைக்கற்பூரத்தைச் சேர்க்கவும்; இந்த பச்சைக்கற்பூரம்தான் கோயில் பொங்கலின் பிரத்யேக மணத்திற்கு முக்கிய காரணம் என்பதை நினைவில் வையுங்கள். இறுதியாக, மற்றொரு கடாயில் நெய்யை சூடாக்கி, முந்திரி மற்றும் உலர் திராட்சையை பொன்னிறமாக வறுத்து பொங்கலில் கொட்டி கிளறினால், சுவையான கோயில் சர்க்கரைப் பொங்கல் தயார்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;Top Stories: அதிகம் படிக்கப்பட்டவை&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;ol&gt; &lt;li&gt;Mukesh Ambani House: அம்பானி வீட்ல வேலை வேணுமா? அரசு வேலையை விட கடினமாம்.! என்ன தகுதிகள் இருக்கணும்னு தெரிஞ்சிக்கோங்க.!&lt;/li&gt; &lt;li&gt;Bathroom Cleaning: குழாயில் உப்புக்கறையா? இந்த குட்டி பந்து போதும்.! ஒரு நிமிடத்தில் பளபளன்னு ஆகிடும்.!&lt;/li&gt; &lt;li&gt;Astrology Tamil: சுக்கிர புத்தி ஆரம்பம்.! அடுத்த 6 மாதம் 5 ராசிகளுக்கு ராஜயோகம்.! இனி இவர்கள் தொட்டதெல்லாம் தங்கமாகும்.!&lt;/li&gt; &lt;li&gt;Vedic Astrology: இடம் மாறும் குரு பகவான்.! குரு பெயர்ச்சியால் கோடீஸ்வர யோகம் பெறும் 5 அதிர்ஷ்ட ராசிகள்.!&lt;/li&gt; &lt;li&gt;Chanakya Niti: கோடி ரூபாய் கொடுத்தாலும், இவர்களை மட்டும் திருமணம் செய்யாதீர்கள்.! சாணக்கியர் கூறும் அறிவுரை.!&lt;/li&gt;&lt;/ol&gt;]]></content:encoded>
            <category><![CDATA[life-style]]></category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/sweet-pongal-recipe-how-to-make-temple-style-sakkarai-pongal-at-home-with-authentic-taste-and-aroma-96vl086"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Guru-Ketu Viveka Yoga : வீட்டில் குவியப்போகும் தங்கம்! விவேக யோகத்தால் தெய்வம் உங்க கூட நிக்கும்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/guru-ketu-viveka-yoga-brings-gold-and-divine-blessings-5ggb6r1</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/guru-ketu-viveka-yoga-brings-gold-and-divine-blessings-5ggb6r1</guid>
            <pubDate>Fri, 17 Jul 2026 14:41:19 +0530</pubDate>
            <description><![CDATA[Guru-Ketu Viveka Yoga : குரு-கேது விவேக யோகம் அக்டோபர் இறுதியில் நிகழப்போகிறது. அறிவின் சிகரமான குரு பகவானும், நுண் அறிவின் ஊற்றுக்கண்ணான கேது பகவானும், சிம்ம ராசியில் இணையும்போது, ஒருவரது வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்கள் நிகழும்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxqmywhme49kdfkm1nkbs0nw,imgname-chatgpt-image-jul-17--2026--02-30-42-pm-1784278905396.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Guru-Ketu Viveka Yoga : குரு-கேது விவேக யோகம் அக்டோபர் இறுதியில் நிகழப்போகிறது. அறிவின் சிகரமான குரு பகவானும், நுண் அறிவின் ஊற்றுக்கண்ணான கேது பகவானும், சிம்ம ராசியில் இணையும்போது, ஒருவரது வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்கள் நிகழும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குரு மற்றும் கேதுவின் சேர்க்கை, ஒருவரைப் பிடித்துள்ள தடைகளை நீக்கி, சரியான பாதைக்கு அழைத்துச் செல்லும்.&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;தெய்வீக வழிகாட்டுதல்:&lt;/strong&gt; &quot;தெய்வம் உங்க கூட நிக்கும்&quot; என்று சொல்லப்படுவதன் காரணம், இந்த யோக காலத்தில் எடுக்கும் முடிவுகள் யாவும் ஒருவித தெய்வீகத் தூண்டுதலுடன் இருக்கும்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;பொருளாதார மேன்மை: &lt;/strong&gt;செல்வத்தைக் குறிக்கும் குருவும், திடீர் மாற்றத்தைத் தரும் கேதுவும் இணையும்போது, உங்கள் வீட்டில் பண வரவு மற்றும் பொன், பொருள் சேர்க்கை அதிகரிப்பது உறுதி.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;தவறுகளுக்கு விடை: &lt;/strong&gt;இதுவரை பணத்தை முதலீடு செய்து நஷ்டமடைந்தவர்கள், இந்த விவேக யோக காலத்தில் எடுக்கும் முடிவுகளால் அந்த நஷ்டத்தை ஈடு செய்து லாபத்தை ஈட்டுவார்கள்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;இந்த யோகம் வெறும் அதிர்ஷ்டம் மட்டுமல்ல; இது உங்கள் வாழ்க்கையில் இழந்த செல்வத்தை மீட்டுத் தரும், புதிய முதலீடுகளை அள்ளித் தரும் ஒரு அபூர்வ காலக்கட்டம். விவேக யோகத்தால் உங்களுக்குத் தேடி வரப்போகும் அந்தச் சிறப்பான பலன்களையும், அது எந்தெந்த ராசிகளுக்குக் கோடீஸ்வர யோகத்தை வழங்கப்போகிறது என்பதையும் விரிவாகக் காண்போம்.&lt;/p&gt;&lt;p&gt;Dream Astrology : உயிருடன் இருப்பவர்கள் இறப்பது போல் கனவா? அதன் அர்த்தம் என்ன தெரியுமா?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேஷ ராசியினருக்கு இது பொற்காலம். உங்கள் ராசிக்கு குரு-கேது சேர்க்கை தகுந்த ஆதாயங்களைத் தரப்போகிறது. இதுவரை நீங்கள் செய்த கடின உழைப்புக்குக் கைமேல் பலன் கிடைக்கும்.&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;சிறப்பு:&lt;/strong&gt; புதிய வீடு அல்லது சொத்து வாங்கும் முயற்சி வெற்றி பெறும். தங்கம் மற்றும் ஆபரணச் சேர்க்கை வீட்டில் அதிகரிக்கும். தொழிலில் இருந்த தடைகள் நீங்கி, லாபம் பல மடங்கு உயரும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;Astrology Secret : உங்க கையில இந்த 5 ரேகை இருக்கா? நீங்க கோடீஸ்வரர் ஆவதை எவராலும் தடுக்க முடியாது!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;துலாம் ராசியினருக்குப் பொருளாதாரத் தெளிவு பிறக்கும். குழப்பமான சூழலில் சரியான முதலீட்டு முடிவுகளை எடுப்பீர்கள். இது உங்களுக்குப் புதிய வருமான வழிகளைத் திறந்துவிடும்.&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;சிறப்பு: &lt;/strong&gt;உங்கள் குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும். தொழில் ரீதியாகக் கிடைத்த அரிய வாய்ப்புகள் உங்கள் வங்கி இருப்பு (Bank Balance) உயர்வதற்கு முக்கிய காரணமாக அமையும். உங்களின் விவேகமான செயல்பாடுகள் சமூகத்தில் பெரிய அந்தஸ்தைப் பெற்றுத் தரும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;Maha Dharma Yoga : இடம் மாறும் எமன்! கோடீஸ்வர யோகம் தேடி வரும் 3 ராசிகள்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தனுசு ராசியினருக்குப் பூர்வீகச் சொத்து மற்றும் எதிர்பாராத பண வரவு உண்டாகும். குரு பகவான் உங்கள் ராசிக்கு அதிபதி என்பதால், கேதுவின் சேர்க்கை உங்களை ஒரு 'விவேகி'யாக மாற்றும்.&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;சிறப்பு:&lt;/strong&gt; நீண்ட நாட்களாகக் கையில் சிக்காத பணம் தேடி வரும். ஆன்மீக மற்றும் தெய்வீக வழிபாடுகளில் ஆர்வம் கூடும். இதன் விளைவாக, மன அமைதியுடன் கூடிய மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியை நீங்கள் காண்பீர்கள். உங்கள் வீட்டில் செல்வம் பொங்கி வழியும் காலம் இது.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;Kadaga Sankranti : புதிய வீடு, சொத்து சேர்க்கை! 4 ராசிகளுக்கு அள்ள அள்ளக் குறையாத சொத்து யோகம்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த 'விவேக யோகத்தின்' பலனை முழுமையாகப் பெற, அக்டோபர் இறுதி முதல் வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து தட்சிணாமூர்த்தியை வழிபடவும். ஆதரவற்றோருக்கு உங்களால் இயன்ற உணவை அளிப்பது, கேதுவின் அருளைப் பெற்றுத் தந்து, உங்கள் வீட்டில் தங்கக் குவியலை அதிகரிக்கச் செய்யும்.&lt;/p&gt;&lt;p&gt;விதி மாறப்போகிறது! அக்டோபர் இறுதியில் மலரப்போகும் இந்த விவேக யோகத்தை உணர்ந்து செயல்படுங்கள். தெய்வம் உங்கள் பக்கம் இருக்கும்போது, தடைகள் யாவும் தகர்ந்து வெற்றி உங்கள் வாசலைத் தேடி வரும். தயாராக இருங்கள்!&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பொறுப்புத் துறப்பு : &lt;/strong&gt;ஜோதிடம் என்பது நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்தது. இது பொதுவான பலன்களே. தனிப்பட்ட ஜாதக அமைப்புகளைப் பொறுத்து முடிவுகள் மாறுபடலாம்.&lt;/p&gt;&lt;p&gt;Graha Yuddha : வேலை பறிபோகப்போகும் 3 ராசிகள்! கிரக யுத்தம் தரும் எச்சரிக்கை!&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[astrology]]></category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/guru-ketu-viveka-yoga-brings-gold-and-divine-blessings-5ggb6r1"/>
        </item>
        <item>
            <title><![CDATA[FIFA 2026 Prize Money: ஜெயிச்சா லைஃப் செட்டில்.. தோத்தாலும் 100 கோடி! மொத்த பரிசுத்தொகை எவ்வளவு?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/football-sports/fifa-world-cup-2026-prize-money-breakdown-for-all-48-teams-zuize6c</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/football-sports/fifa-world-cup-2026-prize-money-breakdown-for-all-48-teams-zuize6c</guid>
            <pubDate>Fri, 17 Jul 2026 14:33:27 +0530</pubDate>
            <description><![CDATA[FIFA 2026 Prize Money: FIFA உலகக் கோப்பை 2026 இறுதிப் போட்டிக்கு அர்ஜென்டினாவும் ஸ்பெயினும் ரெடி!. ஆனா, இந்தத் தொடரோட பரிசுத் தொகையைக் கேட்டா ஷாக் ஆகிடுவீங்க. குரூப் ஸ்டேஜ்ல தோத்து வெளியேறினாலே சுமார் ₹110 கோடி நிச்சயம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxmbjqhh304m822vqef3j7mg,imgname-fifa-world-cup-2026-semi-final-controversy-2-1784168406577.gif" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;FIFA 2026 Prize Money: FIFA உலகக் கோப்பை 2026 இறுதிப் போட்டிக்கு அர்ஜென்டினாவும் ஸ்பெயினும் ரெடி!. ஆனா, இந்தத் தொடரோட பரிசுத் தொகையைக் கேட்டா ஷாக் ஆகிடுவீங்க. குரூப் ஸ்டேஜ்ல தோத்து வெளியேறினாலே சுமார் ₹110 கோடி நிச்சயம்.&lt;/p&gt;&lt;img&gt;இந்த முறை FIFA மொத்தமாக 871 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ₹83,934 கோடியை பரிசுத் தொகையாக ஒதுக்கியுள்ளது. இது 2022 கத்தார் உலகக் கோப்பையின் மொத்த பட்ஜெட்டான 440 மில்லியன் டாலரை விட 65% அதிகம். இதில், 655 மில்லியன் டாலர் அணிகளின் செயல்பாட்டைப் பொறுத்து வழங்கப்படும். மீதமுள்ள நிதி, அணிகளின் தகுதி மற்றும் உலகக் கோப்பை தயாரிப்பு செலவுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.&lt;img&gt;இந்த உலகக் கோப்பையில் சாம்பியன் ஆகும் அணிக்கு, ஆட்டத்திறனுக்காக மட்டும் 50 மில்லியன் டாலர் (சுமார் ₹4,818 கோடி) கிடைக்கும். தகுதி மற்றும் இதர செலவுகளையும் சேர்த்தால், வின்னிங் டீம் பெறும் மொத்தத் தொகை 53.5 மில்லியன் டாலரை (சுமார் ₹5,155 கோடி) எட்டும். 2022-ல் வென்ற அர்ஜென்டினா 42 மில்லியன் டாலர்தான் பெற்றது. அதைவிட இது 8 மில்லியன் டாலர் அதிகம். ரன்னர்-அப் அணிக்கு 33 மில்லியன் டாலர் (சுமார் ₹3,180 கோடி) கிடைக்கும்.&lt;img&gt;இந்த முறை 48 அணிகள் பங்கேற்பதால், குரூப் ஸ்டேஜில் தோற்று வெளியேறும் அணிகளுக்கும் (33 முதல் 48வது இடம்) தலா 9 மில்லியன் டாலர் (சுமார் ₹86.7 கோடி) பெர்ஃபார்மன்ஸ் போனஸ் கிடைக்கும். இதனுடன், தகுதி பெற்ற ஒவ்வொரு அணிக்கும் FIFA ஏற்கனவே 2.5 மில்லியன் டாலர் (சுமார் ₹24 கோடி) வழங்கியுள்ளது. ஆக, ஒரு அணிக்கு குறைந்தபட்சம் 12.5 மில்லியன் டாலர் (சுமார் ₹120 கோடி) நிச்சயம்.&lt;img&gt;இந்த பரிசுத் தொகையை அந்தந்த நாடுகளின் அதிகாரப்பூர்வ கால்பந்து சங்கங்களுக்கு FIFA நேரடியாக வழங்கும். இந்த அதிகரித்த பரிசுத் தொகையால், சிறிய நாடுகளின் விளையாட்டு வாரியங்களுக்குக் கூட கோடிக்கணக்கில் வருமானம் கிடைக்கும். இது அந்த நாடுகளில் கால்பந்து உள்கட்டமைப்பை மேம்படுத்த உதவும் என FIFA கூறியுள்ளது.&lt;img&gt;&lt;p&gt;&lt;strong&gt;சாம்பியன்:&lt;/strong&gt; $50 மில்லியன் (மொத்தம் $52.5 மில்லியன் - சுமார் ₹505.9 கோடி).&lt;strong&gt; ரன்னர்-அப்&lt;/strong&gt;: $33 மில்லியன் (மொத்தம் $35.5 மில்லியன் - சுமார் ₹342.1 கோடி).&lt;strong&gt; 3வது இடம்:&lt;/strong&gt; $29 மில்லியன் (மொத்தம் $31.5 மில்லியன் - சுமார் ₹303.5 கோடி). &amp;nbsp;&lt;strong&gt;4வது இடம்: &lt;/strong&gt;$27 மில்லியன் (மொத்தம் $29.5 மில்லியன் - சுமார் ₹284.2 கோடி). &lt;strong&gt;காலிறுதி&lt;/strong&gt; (5-8 இடங்கள்): தலா $19 மில்லியன் (மொத்தம் $21.5 மில்லியன் - சுமார் ₹207.1 கோடி).&lt;strong&gt; ரவுண்ட் ஆஃப்&lt;/strong&gt; 16 (9-16 இடங்கள்): தலா $15 மில்லியன் (மொத்தம் $17.5 மில்லியன் - சுமார் ₹168.6 கோடி). &lt;strong&gt;ரவுண்ட் ஆஃப் 32&lt;/strong&gt; (17-32 இடங்கள்): தலா $11 மில்லியன் (மொத்தம் $13.5 மில்லியன்). குரூப் ஸ்டேஜ் (33-48 இடங்கள்): தலா $9 மில்லியன் (மொத்தம் $11.5 மில்லியன் - சுமார் ₹110.8 கோடி).&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[football-sports]]></category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/football-sports/fifa-world-cup-2026-prize-money-breakdown-for-all-48-teams-zuize6c"/>
        </item>
        <item>
            <title><![CDATA[லீக்கானதால் ஜனநாயகன் படத்தை பட்டி டிங்கரிங் பார்த்துள்ள படக்குழு... தயாரிப்பாளர் கொடுத்த அடிதூள் அப்டேட்..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/producer-venkat-narayana-says-vijay-final-film-jana-nayagan-movie-re-edited-with-new-scenes-vwgtyht</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/producer-venkat-narayana-says-vijay-final-film-jana-nayagan-movie-re-edited-with-new-scenes-vwgtyht</guid>
            <pubDate>Fri, 17 Jul 2026 14:27:41 +0530</pubDate>
            <description><![CDATA[Jana Nayagan Update : விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் வருகிற ஜூலை 23ந் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அப்படத்தை பற்றி முக்கிய அப்டேட் ஒன்றை தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா தெரிவித்துள்ளார்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01jaadc2k2wmjs1y2nph7s4nt4,imgname-thalapathy-69-film-vijay-charecter-hints-out.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Jana Nayagan Update : விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் வருகிற ஜூலை 23ந் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அப்படத்தை பற்றி முக்கிய அப்டேட் ஒன்றை தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக வலம் வந்தவர் தளபதி விஜய். இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் முன்னணி நடிகராக கோலோச்சி வந்த நிலையில், தற்போது அனைத்தையும் விட்டுவிட்டு அரசியலுக்குள் குதித்துவிட்டார். கடந்த 2024-ம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை தொடங்கிய அவர், கடந்த 2 ஆண்டுகளாக மேற்கொண்ட அரசியல் பணிகளின் பலனாக தற்போது சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் அமோக வெற்றி பெற்று, தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விஜய் கட்சி தொடங்கியபோதே, தன்னுடைய கடைசி படம் ஜனநாயகன் தான் என அறிவித்துவிட்டார். இதனால் அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பம் முதலே அதிகரிக்க தொடங்கியது. ஜனநாயகன் படத்தை எச்.வினோத் தான் இயக்கி இருக்கிறார். விஜய்க்கு ஒரு பக்கா ஃபேர்வெல் படமாக கொடுக்க வேண்டும் என்கிற முனைப்பில் பல்வேறு கமர்ஷியல் அம்சங்களுடன் ஜனநாயகன் திரைப்படத்தை செதுக்கி இருந்தார் வினோத். அப்படம் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான வேலைகளும் முழுவீச்சில் நடந்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆனால் கடைசி நேரத்தில் சென்சார் போர்டு முட்டுக்கட்டை போட்டதால், ஜனநாயகன் படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் பண்ண முடியாமல் போனது. இதையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, சட்ட போராட்டமும் நடத்தியது படக்குழு, ஆனால் எதுவும் கைகொடுக்காததால், வேறுவழியின்றி வழக்கை வாபஸ் வாங்கிவிட்டு, படத்தை மறுதணிக்கை செய்ய அனுப்பியது. அதற்குள் எலெக்&zwnj;ஷன் அறிவிக்கப்பட்டதால், ஜனநாயகன் படம் அப்படியே ரிலீஸ் செய்ய முடியாமல் முடங்கிப் போனது. தற்போது விஜய் முதலமைச்சர் ஆன பின்னர் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்றது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதனிடையே கடந்த வாரம் இந்த படத்துக்கு சென்சாரில் ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாக போஸ்டர் வெளியிட்ட படக்குழு, கடந்த சில தினங்களுக்கு முன்னர் இப்படத்தின் ரிலீஸ் தேதியையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி ஜூலை 23ந் தேதி ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளதால், விஜய் ரசிகர்கள் தற்போதே கொண்டாட்டத்துக்கு தயாராகிவிட்டனர். ஜனநாயகன் படம் ஏற்கனவே இணையத்தில் லீக் ஆனதால், அப்படத்திற்கு தியேட்டரில் வரவேற்பு இருக்குமா என்கிற கேள்வியும் எழுந்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆனால் அதற்கு பதிலளிக்கும் விதமாக ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளர் சூப்பர் தகவலை வெளியிட்டு உள்ளார். ஜனநாயகன் படத்தில் புதிய காட்சிகள் சேர்க்கப்பட்டு ரீ எடிட்டிங் செய்துள்ளதாக கூறிய அவர், இந்த வெர்ஷன், தியேட்டரில் படம் பார்க்கும் விஜய் ரசிகர்களுக்கு புது அனுபவத்தை கொடுக்கும் என கூறி இருக்கிறார். இதனால் அப்படத்தின் மீதான ஹைப் மேலும் அதிகரித்து உள்ளது. ஜனநாயகன் படத்தில் விஜய்யுடன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கெளதம் மேனன், மமிதா பைஜு, பூஜா ஹெக்டே என மிகப்பெரிய நட்சத்திர படையே நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[cinema]]></category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/producer-venkat-narayana-says-vijay-final-film-jana-nayagan-movie-re-edited-with-new-scenes-vwgtyht"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Headache Relief: கடுமையான தலைவலியை விரட்டும் 7 சூப்பர் பானங்கள்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/webstories/health-food/7-natural-drinks-for-severe-headache-relief-dc0qwpc</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/webstories/health-food/7-natural-drinks-for-severe-headache-relief-dc0qwpc</guid>
            <pubDate>Fri, 17 Jul 2026 14:22:49 +0530</pubDate>
            <description><![CDATA[Headache Relief: தூக்கமின்மை, அதிக வேலைப் பளு போன்ற காரணங்களால் சில நேரங்களில் நமக்குத் தாங்க முடியாத தலைவலி வரும். அந்த மாதிரி சமயங்களில் தலைவலியை போக்க உதவும் சில பானங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kwxegfrffsvypsyvgjws0npq,imgname-fotojet---2026-07-07t101646.494-1783399726863.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Headache Relief: தூக்கமின்மை, அதிக வேலைப் பளு போன்ற காரணங்களால் சில நேரங்களில் நமக்குத் தாங்க முடியாத தலைவலி வரும். அந்த மாதிரி சமயங்களில் தலைவலியை போக்க உதவும் சில பானங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[health-food]]></category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/webstories/health-food/7-natural-drinks-for-severe-headache-relief-dc0qwpc"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Tatkal Booking: தட்கல் டிக்கெட் புக் செய்வோருக்கு குட் நியூஸ்.. ஐஆர்சிடிசி அதிரடி]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/irctc-new-website-to-make-tatkal-booking-easier-pm2gnkg</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/irctc-new-website-to-make-tatkal-booking-easier-pm2gnkg</guid>
            <pubDate>Fri, 17 Jul 2026 14:16:57 +0530</pubDate>
            <description><![CDATA[Tatkal Booking: ரயில் டிக்கெட் முன்பதிவின் போது மெதுவாக லோடு ஆகும் பக்கங்கள், கேப்ச்சா சிக்கல்கள் மற்றும் தட்கல் நேரத்தில் ஏற்படும் அதிக நெரிசல் போன்ற பிரச்சினைகள் குறையும்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kffmvx3wsy1cyxmpe8ybbv1w,imgname-tatkal-ticket-1768977986684.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Tatkal Booking: ரயில் டிக்கெட் முன்பதிவின் போது மெதுவாக லோடு ஆகும் பக்கங்கள், கேப்ச்சா சிக்கல்கள் மற்றும் தட்கல் நேரத்தில் ஏற்படும் அதிக நெரிசல் போன்ற பிரச்சினைகள் குறையும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்திய ரயில்வே, ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் ஐஆர்சிடிசி இணையதளத்தை புதுப்பித்துள்ளது. புதிய தளம் வேகமாக இயங்குவதுடன், அதிக பயனர்களை ஒரே நேரத்தில் கையாளும் திறனும் பெறப்படுகிறது. குறிப்பாக தட்கல் டிக்கெட் முன்பதிவின் போது ஏற்படும் தொழில்நுட்ப சிக்கல்களைக் குறைப்பதே முக்கிய இலக்காகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;புதிய அமைப்பில், ஒரு நிமிடத்திற்கு 1.5 லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் திறன் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தட்கல் நேரங்களில் இணையதளத்தின் செயல்திறன் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;துணிகள் சுத்தமாக வரவில்லையா? வாஷிங் மெஷினில் இந்த ஒரு பகுதியை முதலில் பாருங்கள்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பிஎன்ஆர் நிலை, ரயில் நேரம் மற்றும் பிற தகவல்களை ஒரே நேரத்தில் பல லட்சம் பயனர்கள் பெறும் வகையில் புதிய அமைப்பு உள்ளது. இதனால் பண்டிகைக் காலங்களிலும் அதிக நெரிசலை எளிதாகக் கையாள முடியும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;புதிய இணையதளத்தில் பக்கங்கள் வேகமாக லோடு ஆகும். தேவையற்ற Pop-up-கள் குறைக்கப்பட்டு, மீண்டும் கேப்ச்சா உள்ளிட வேண்டிய அவசியமும் குறைக்கப்படும். இதனால் டிக்கெட் முன்பதிவு செய்யும் நேரம் குறையக்கூடும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பயணிகள் லோயர், மிடில், அப்பர், சைட் லோயர், சைட் அப்பர் போன்ற பெர்த் விருப்பங்கள், காலியிடம் இருந்தால், தேர்வு செய்யும் வசதி கிடைக்கும். மேலும், கட்டண காலெண்டர் மூலம் பல்வேறு தேதிகளுக்கான கட்டணங்களை ஒரே இடத்தில் ஒப்பிட்டு பார்க்க முடியும். பல மொழிகளில் சேவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், மாணவர்கள், நோயாளிகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கான சேவைகளும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;மாதம் ரூ.400 ரூபாய்க்கு வைஃபை, 1000+ டிவி சேனல்கள், ஓடிடி.. அசத்தும் ஜியோவின் புதிய ஹோம் பேக்&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[business]]></category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/irctc-new-website-to-make-tatkal-booking-easier-pm2gnkg"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Anbumani Ramadoss Warns Vijay Government: திமுக செய்த தவறை தவெக செய்யக் கூடாது! இல்லையெனில் போராட்டம்.! விஜய் அரசுக்கு அன்புமணி எச்சரிக்கை!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/resto-bar-issue-anbumani-ramadoss-warns-vijay-government-fwckbfk</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/resto-bar-issue-anbumani-ramadoss-warns-vijay-government-fwckbfk</guid>
            <pubDate>Fri, 17 Jul 2026 14:16:31 +0530</pubDate>
            <description><![CDATA[Resto Bar: முந்தைய திமுக அரசு மக்களால் தூக்கி எறியப்பட்டதற்கு காரணமே மது உள்ளிட்ட போதைப் பொருள்கள் நடமாட்டத்தையும், அதனால் பெருகிய பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களையும் கட்டுப்படுத்தத் தவறியதுதான்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k5vg2bxyx9w86yf8tf3she55,imgname-untitled-design-1758638190526.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Resto Bar: முந்தைய திமுக அரசு மக்களால் தூக்கி எறியப்பட்டதற்கு காரணமே மது உள்ளிட்ட போதைப் பொருள்கள் நடமாட்டத்தையும், அதனால் பெருகிய பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களையும் கட்டுப்படுத்தத் தவறியதுதான்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;டாஸ்மாக் கடைகளுடன் இயங்கி வரும் பார்களின் எண்ணிக்கையை குறைத்து கர்நாடகா, ஆந்திரா, கேரள உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் உள்ளதை போல் ரெஸ்டோ பார் அனுமதி வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அதிக வசதிகளுடன் ரெஸ்டொ பார்களை திறப்பது, வெளிமாநிலங்களில் இருந்து புதிய மது வகைகளை வாங்கி வினியோகம் செய்வது தமிழ்நாட்டில் மதுப்புழக்கத்தை அதிகரிக்கவே செய்யும் என்பதை தமிழக அரசு உணர வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதில், ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைமுறையில் இருப்பதைப் போன்று தமிழ்நாட்டிலும் உணவங்களுடன் குடிப்பகங்களும் இணைக்கப்பட்ட ரெஸ்டோ பார்களை அமைக்க உரிமம் வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாகவும், இது குறித்த அறிவிப்பு நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்படும் என்றும் ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. பெரும் கேட்டை விளைவிக்கும் திட்டம் குறித்த இந்த செய்திகள் உண்மையா? என்பதை அரசு விளக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ்நாட்டில் தற்போது 3 நிலைகளில் மது குடிப்பகங்கள் அனுமதிக்கப்படுகின்றன. அரசு மதுக்கடைகளுடன் இணைந்த குடிப்பகங்கள் HL 1 என்ற உரிமத்துடனும், மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரிலான குடிப்பகங்கள் HL2 என்ற உரிமத்துடனும், நட்சத்திர விடுதிகளில் உள்ள குடிப்பகங்கள் HL3 என்ற உரிமத்துடனும் இயங்கி வருகின்றன. இவை அனைத்திலும் கடுமையான விதிமீறல்களும், சட்டவிரோத மது விற்பனையும் நடைபெற்று வருவதால் அவற்றை மூட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியும், நலவாழ்வு ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் கூடுதலாக ரெஸ்டோ பார்களை அனுமதிக்கவும், அவற்றுக்காக HL3A என்ற உரிமத்தை வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதும் பிற்போக்குத்தனமான செயல்களாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரெஸ்டோ பார்களை திறப்பதற்காக அரசுத் தரப்பின் வாதங்களாக கூறப்படுபவை ஏற்றுக்கொள்ளவே முடியாதவை ஆகும். அரசு மதுக்கடைகளுடன் இணைந்த குடிப்பகங்கள் சுகாதாரமானவையாக இல்லை; மனமகிழ் மன்றங்களில் உறுப்பினர்களுக்கு மட்டும்தான் மது வழங்கப்பட வேண்டும் என்ற விதியை மீறி அனைவருக்கும் மது மற்றும் உணவு வகைகள் வழங்கப்படுவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது; இவற்றை ஒழுங்குபடுத்துவதற்காகத்தான் ரெஸ்டோ பார்கள் திறக்கப்படவுள்ளதாக அரசு அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த வாதங்கள் அபத்தமானவையாகும். மது மிகவும் கேடானது; மது சாத்தானுக்கு ஒப்பானது. அதன் வணிகம் தடை செய்யப்பட வேண்டுமே தவிர, அதை ஒழுங்குபடுத்தத் தேவையில்லை. அதையும் மீறி படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதுதான் அரசின் கொள்கை முடிவு என்றால் சட்டவிரோதமாக செயல்படும் குடிப்பகங்கள் எந்த வகையை சேர்ந்தவையாக இருந்தாலும் கருணை காட்டாமல் அவற்றை மூட ஆணையிடுவதுதான் சரியான, மக்கள் நலன் காக்கும் நடவடிக்கை ஆகும். அதற்கு மாறாக புதிய வகை குடிப்பகங்களை திறக்க முனைவது மோசமான முன்னுதாரணமாக அமைந்து விடும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த வரலாற்றுத் தவறை த.வெ.க அரசு செய்யக் கூடாது. அரசு மதுக்கடைகளுடன் கூடிய குடிப்பகங்கள், மனமகிழ்மன்ற குடிப்பகங்கள் ஆகியவற்றுக்கு எதிரான மனநிலை எப்போதும் மக்களிடம் உண்டு. அங்கு சென்று வந்தால், தங்களை சமூகத்தில் தவறாக நினைப்பார்கள் என்று அஞ்சுவார்கள். அந்த அச்சமே அவர்களை அவற்றின் பக்கம் செல்லாமல் தடுத்து விடும். ஆனால், ரெஸ்டோ பார்கள் உணவகங்களாகவும் கருதப்படும் என்பதால், அவற்றின் மீது அந்த தவறான முத்திரை இருக்காது. அதனால், மாணவர்கள், இளம்பெண்கள் போன்றவர்களும் ரெஸ்டோ பார்களுக்கு தயக்கமின்றி செல்லும் நிலை ஏற்பட்டு விடும். இது மிகவும் ஆபத்தானதும், சமூகக் கேடானதும் ஆகும். அதுமட்டுமின்றி, ரெஸ்டோ பார்களை திறப்பதற்காக கூறப்படும் காரணங்கள் என்னவாக இருந்தாலும், அதன் முதன்மை நோக்கம் அரசுக்கு கூடுதல் வருவாயை ஈட்டுவதுதான் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. வருவாய்க்காக மதுவணிகம் செய்வது மக்கள் நல அரசுக்கு அழகல்ல. கடந்த ஆட்சியில் மது வணிகத்தைப் பெருக்குவதற்காக வணிக வளாகங்களில் தானியங்கி மது வழங்கும் எந்திரங்களை அமைத்தல், 90 மி.லி காகிதக் குடுவையில் (டெட்ரா பேக்) மது வணிகம் செய்தல், விளையாட்டுப் போட்டிகள், மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள், திருமணம் போன்ற சமூக ஒன்று கூடல்கள் ஆகியவற்றில் மது வினியோகம் செய்தல் உள்ளிட்ட திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அவை அனைத்தையும் சட்டப் போராட்டம் நடத்தியும், அரசியல் அழுத்தங்களின் வாயிலாகவும் பாட்டாளி மக்கள் கட்சி முறியடித்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதன்பின் தங்களின் வருவாயைப் பெருக்கிக் கொள்ளும் வகையில் மனமகிழ் மன்றங்களுக்கு அனுமதி அளித்தது. கடந்த ஆட்சியில் மட்டும் 1200-க்கும் மேற்பட்ட மனமகிழ் மன்றங்கள் திறக்கப்பட்டன. ஆட்சியாளர்களின் நோக்கம் மதுவை ஒழிப்பதாகத் தான் இருக்க வேண்டும். மதுவிலக்குத் துறையில் செய்யப்படும் சீர்திருத்தங்களும் அவற்றை நோக்கியதாகவே இருக்க வேண்டும். மாறாக, அதிக வசதிகளுடன் ரெஸ்டொ பார்களை திறப்பது, வெளிமாநிலங்களில் இருந்து புதிய மது வகைகளை வாங்கி வினியோகம் செய்வது தமிழ்நாட்டில் மதுப்புழக்கத்தை அதிகரிக்கவே செய்யும் என்பதை தமிழக அரசு உணர வேண்டும். ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராசர், தென்னாட்டு ஜான்சி ராணி கடலூர் அஞ்சலையம்மாள் ஆகியோர் மதுவை கடுமையாக எதிர்த்தார்கள். தந்தை பெரியார் கள்ளுக்கடைகள் தேவையில்லை என்பதற்காக தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார். காமராசர் அவரது ஆட்சியில் மதுவிலக்கை தீவிரமாக கடைபிடித்தார். அவர்களின் வழியில் வந்ததாக பெருமிதப்பட்டுக் கொள்ளும் தவெக அரசு ரெஸ்டோ பார் எனும் புதிய வகை மதுக்குடிப்பங்களை அறிமுகம் செய்தால் அது அரசுக்கு தீராத அவப்பெயரை ஏற்படுத்தி விடும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரெஸ்டோ பார்கள் திறக்கப்பட்டு, அதன் காரணமாக மதுப்புழக்கம் அதிகரித்தால் சட்டம் ஒழுங்கு மிகவும் கடுமையாக பாதிக்கப்படும்; பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கும். முந்தைய திமுக அரசு மக்களால் தூக்கி எறியப்பட்டதற்கு காரணமே மது உள்ளிட்ட போதைப் பொருள்கள் நடமாட்டத்தையும், அதனால் பெருகிய பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களையும் கட்டுப்படுத்தத் தவறியதுதான். திமுக அரசு செய்த அதே தவறை த.வெ.க. அரசும் செய்யக் கூடாது. சமூகக் கேடுகளையும், புதிய குடிகாரர்களையும் உருவாக்கும் ரெஸ்டொ பார்களை அமைப்பதற்கு உரிமம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். இல்லாவிட்டால், மக்களுக்கு கேடான இந்தத் திட்டத்திற்கு எதிராக சட்ட மற்றும் அரசியல் போராட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சி முன்னெடுக்கும் என தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[tamilnadu]]></category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu/resto-bar-issue-anbumani-ramadoss-warns-vijay-government-fwckbfk"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஆடி மாதப் பிறப்பு : திருச்செந்தூர் முருகன் கோயிலில் அஸ்திர தேவர் தீர்த்தவாரி உற்சவம் விமரிசை!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/aadi-begins-asthra-devar-theerthavari-at-tiruchendur-videoshow-7gpx25z</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/aadi-begins-asthra-devar-theerthavari-at-tiruchendur-videoshow-7gpx25z</guid>
            <pubDate>Fri, 17 Jul 2026 14:00:54 +0530</pubDate>
            <description><![CDATA[]]></description>
            <media:content url="https://www.youtube.com/embed/s85XLsczkyw" medium="video" height="350" width="560"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஆடி மாதப் பிறப்பை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அஸ்திர தேவர் தீர்த்தவாரி உற்சவம் மிகச் சிறப்பாகவும் விமரிசையாகவும் நடைபெற்றது. இதையொட்டி அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் தீர்த்தவாரி வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்திப் பெருக்குடன் சுவாமி தரிசனம் செய்தனர். அதுகுறித்த சிறப்புக் காட்சிகள்!&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[tamilnadu]]></category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/aadi-begins-asthra-devar-theerthavari-at-tiruchendur-videoshow-7gpx25z"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Hair Care : 30 வயதிலேயே இளநரை வருகிறதா? வீட்டிலேயே இதற்கு தீர்வு இருக்கிறது!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/how-to-naturally-reverse-premature-grey-hair-at-home-0gtv3zz</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/how-to-naturally-reverse-premature-grey-hair-at-home-0gtv3zz</guid>
            <pubDate>Fri, 17 Jul 2026 13:46:09 +0530</pubDate>
            <description><![CDATA[Hair Care : உங்கள் முடி சீக்கிரம் நரைத்துவிட்டதா? ஹேர் டை வேலை செய்யவில்லையா? அப்படியென்றால் இந்த வீட்டு வைத்தியத்தைப் பயன்படுத்துங்கள். முடிக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத ஹேர் கேர் குறிப்புகள் இதோ!]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxqhpzwsf7ag6fm9e1zkgg4a,imgname-chatgpt-image-jul-17--2026--01-34-30-pm-1784275500953.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Hair Care : உங்கள் முடி சீக்கிரம் நரைத்துவிட்டதா? ஹேர் டை வேலை செய்யவில்லையா? அப்படியென்றால் இந்த வீட்டு வைத்தியத்தைப் பயன்படுத்துங்கள். முடிக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத ஹேர் கேர் குறிப்புகள் இதோ!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வயதாகும்போது முடி நரைப்பது என்பது முன்பு இயல்பான ஒன்றாக இருந்தது. ஆனால், இப்போது இளம் வயதிலேயே முடி நரைக்கத் தொடங்கியுள்ளது. மோசமான உணவுப் பழக்கம், மன அழுத்தம், தூக்கமின்மை மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு போன்றவற்றால் இளைஞர்களிடையே இந்தப் பிரச்சனை அதிகரித்து வருகிறது. இதற்காகப் பலர் ஹேர் டை (hair dye) பயன்படுத்துகின்றனர். ஆனால், ரசாயனம் கலந்த சாயங்களை அடிக்கடி பயன்படுத்துவதால், முடி வறண்டு, பலவீனமடைந்து, முடி கொட்டும் பிரச்சனை இன்னும் அதிகமாகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Dream Astrology : உயிருடன் இருப்பவர்கள் இறப்பது போல் கனவா? அதன் அர்த்தம் என்ன தெரியுமா?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முதலில் மாங்கொட்டையின் வெளிப்புற ஓட்டை நீக்கி, உள்ளே இருக்கும் பருப்பைச் சுத்தமாகக் கழுவி, வெயிலில் நன்றாகக் காய வைக்கவும். பிறகு, அதை நைசாகப் பொடி செய்து, காற்று புகாத டப்பாவில் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Astrology Secret : உங்க கையில இந்த 5 ரேகை இருக்கா? நீங்க கோடீஸ்வரர் ஆவதை எவராலும் தடுக்க முடியாது!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;1 ஸ்பூன் மாங்கொட்டைப் பொடி, 10-15 கிராம்பு, 1 டீஸ்பூன் தேயிலைத் தூள் (Tea powder), 2 ஸ்பூன் தயிர், தேவையான அளவு தண்ணீர். கிராம்பு மற்றும் தேயிலையைச் சிறிது வறுத்து பொடி செய்து கொள்ளவும். அதனுடன் மாங்கொட்டைப் பொடி மற்றும் தயிர் சேர்த்து கெட்டியான பேஸ்ட் போல தயாரித்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். பின்னர், இதைச் சில மணிநேரங்கள் அல்லது இரவு முழுவதும் அப்படியே மூடி வைக்கவும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Egg Storage : முட்டையை ஃபிரிட்ஜில் வைக்கிறீர்களா? இந்த தவறை இனியும் செய்யாதீர்கள்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மறுநாள் இந்த பேஸ்ட்டை முடியின் வேர்க்கால்கள் முதல் நுனி வரை சமமாகத் தடவுங்கள். சுமார் ஒரு மணி நேரம் அப்படியே விட்டுவிடுங்கள். அதன் பிறகு, மைல்டான (mild) ஷாம்பு பயன்படுத்தி முடியைக் கழுவுங்கள். தேவைப்பட்டால் கண்டிஷனர் பயன்படுத்தலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Mobile Phone : இரவு தூங்கும்போது செல்போனை தலையணைக்கு அருகில் வைக்கிறீர்களா?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த ஹேர் மாஸ்க்கை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தலாம். எந்தவொரு வீட்டு வைத்தியத்தையும் பயன்படுத்துவதற்கு முன்பு, பேட்ச் டெஸ்ட் (patch test) செய்வது முக்கியம். அரிப்பு, எரிச்சல் அல்லது ஒவ்வாமை (allergy) ஏற்பட்டால் உடனடியாகப் பயன்படுத்துவதை நிறுத்திவிடுங்கள். ஏற்கனவே உச்சந்தலையில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[life-style]]></category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/how-to-naturally-reverse-premature-grey-hair-at-home-0gtv3zz"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Home Cool: ஏசி தேவையில்லை! கோடை வெயிலில் வீட்டை ஜில்லென்று வைத்திருக்க 5 எளிய வழிகள்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/beat-the-heat-simple-diy-ways-to-keep-your-home-cool-without-ac-0ev2kfn</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/beat-the-heat-simple-diy-ways-to-keep-your-home-cool-without-ac-0ev2kfn</guid>
            <pubDate>Fri, 17 Jul 2026 13:42:37 +0530</pubDate>
            <description><![CDATA[கோடை வெயில் மற்றும் வெப்ப அலையிலிருந்து ஏசி இல்லாமலேயே உங்கள் வீட்டை இயற்கையாகக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் சில எளிய மற்றும் பயனுள்ள வீட்டு உபயோகக் குறிப்புகள் இதோ. மின் கட்டணத்தை மிச்சப்படுத்தி கோடையைச் சமாளியுங்கள்!]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxqhvygygq6tgapws2cs3p6c,imgname-air-conditioner--1--1784275663390.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கோடை வெயில் மற்றும் வெப்ப அலையிலிருந்து ஏசி இல்லாமலேயே உங்கள் வீட்டை இயற்கையாகக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் சில எளிய மற்றும் பயனுள்ள வீட்டு உபயோகக் குறிப்புகள் இதோ. மின் கட்டணத்தை மிச்சப்படுத்தி கோடையைச் சமாளியுங்கள்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பகலில் வீட்டின் வெப்பம் அதிகரிப்பதற்கு முக்கியக் காரணம் ஜன்னல்கள் வழியே உள்ளே நுழையும் நேரடி சூரிய ஒளிதான். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வீட்டின் ஜன்னல்களை மூடி, தடிமனான வெளிர் நிறத் திரைகளை (Light-colored Curtains) அல்லது மூங்கில் பாய்களைத் தொங்கவிடலாம். இது வீட்டிற்குள் வெப்பம் நுழைவதை 60% வரை தடுக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உங்களிடம் டேபிள் ஃபேன் (Table Fan) இருந்தால், அதன் முன்னால் ஒரு அகலமான பாத்திரத்தில் ஐஸ் கட்டிகளை (Ice cubes) போட்டு வைக்கலாம். அல்லது ஒரு மெல்லிய துணியை நனைத்து ஃபேனின் பின்புறமோ அல்லது ஜன்னலிலோ கட்டலாம். இதன் மூலம் ஃபேன் சுழலும் போது காற்று ஜில்லென்று மாறி வீடு முழுவதும் பரவும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பகலில் ஜன்னல்களை மூடி வைத்தாலும், மாலை நேரத்தில் சூரியன் மறைந்த பிறகு காம்பவுண்ட் மற்றும் ஜன்னல் கதவுகளைத் திறந்து வையுங்கள். வீட்டின் ஒரு பக்க ஜன்னல் வழியே குளிர்ந்த காற்று உள்ளே வந்து, மறுபக்கம் வழியே வெப்பக் காற்று வெளியேற இது உதவும். இரவு நேரத்தில் குளிர்ந்த காற்று வீடு முழுக்க நிரம்ப இதுவே சிறந்த வழி.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வீட்டிற்குள் கற்றாழை (Aloe Vera), பாம்புச் செடி (Snake Plant), மற்றும் மணி பிளான்ட் போன்ற செடிகளை வளர்க்கலாம். இவை காற்றில் உள்ள ஈரப்பதத்தை (Moisture) தக்கவைத்து, நச்சுக்களை நீக்குவதுடன் வீட்டின் வெப்பநிலையைக் குறைக்கப் பெரிதும் உதவுகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கோடையில் நைலான் அல்லது சாட்டின் போன்ற துணிகளைத் தவிர்த்துவிட்டு, படுக்கை விரிப்புகள் (Bed sheets) மற்றும் தலையணை உறைகளுக்கு 100% தூய பருத்திப் (Cotton) துணிகளைப் பயன்படுத்துங்கள். பருத்தி துணிகள் வெப்பத்தை உறிஞ்சாமல், காற்றோட்டத்தை அனுமதிப்பதால் படுக்கும் போது உடல் சூடாகாமல் இருக்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[life-style]]></category>
            <dc:creator>Priya Velan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/beat-the-heat-simple-diy-ways-to-keep-your-home-cool-without-ac-0ev2kfn"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Serial : சன் டிவி எடுத்த அதிரடி முடிவு... தொடங்கிய வேகத்தில் இழுத்து மூடப்படும் புத்தம் புது சீரியல்..!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/sun-tv-vinodhini-serial-to-end-soon-climax-shoot-photo-goes-viral-kgmifkf</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/sun-tv-vinodhini-serial-to-end-soon-climax-shoot-photo-goes-viral-kgmifkf</guid>
            <pubDate>Fri, 17 Jul 2026 13:21:39 +0530</pubDate>
            <description><![CDATA[Sun TV Serial End Soon : செல்லமே செல்லமே, ஆடுகளம் சீரியல்களை தொடர்ந்து சன் டிவி மற்றுமொரு புத்தம் புது சீரியலை முடிவுக்கு கொண்டு வர உள்ளது. அது எந்த சீரியல் என்பதை பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k76ddhzsmannz99r0327dhq8,imgname-new-project---2025-10-10t115050.927-1760078252025.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Sun TV Serial End Soon : செல்லமே செல்லமே, ஆடுகளம் சீரியல்களை தொடர்ந்து சன் டிவி மற்றுமொரு புத்தம் புது சீரியலை முடிவுக்கு கொண்டு வர உள்ளது. அது எந்த சீரியல் என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்காக தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் தொலைக்காட்சிகளில் முன்னணியில் இருப்பது சன் டிவி. தொடர்ந்து டிஆர்பி பட்டியலில் ஆதிக்கம் செலுத்தும் இந்த சேனலில் ஒளிபரப்பாகும் பல தொடர்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த வரிசையில் கடந்த ஆண்டு தொடங்கிய சீரியல் ஒன்றை தற்போது முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். அந்த சீரியலின் கிளைமாக்ஸ் காட்சியும் படமாக்கி முடிக்கப்பட்டுவிட்டதாம். அது எந்த சீரியல் என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குடும்ப உறவுகள், தாய்மையின் வலிமை மற்றும் வாழ்க்கைப் போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவான வினோதினி தொடர் தான் விரைவில் முடிவுக்கு வர உள்ளது. கடந்த 2025-ம் ஆண்டு மே மாத இறுதியில் தான் இந்த சீரியல் ஒளிபரப்பாக தொடங்கியது. திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல், குடும்ப ரசிகர்களிடையே தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தது. கணவனை இழந்த பிறகு இரண்டு குழந்தைகளை வளர்த்து வாழ்க்கையில் முன்னேற போராடும் ஒரு பெண்ணின் உணர்வுபூர்வமான பயணமே இந்த தொடரின் மையக் கதையாக அமைந்திருந்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குடும்ப உறவுகள், தியாகம் மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றை மையமாக வைத்து நகர்ந்த கதை பலரது கவனத்தையும் ஈர்த்தது. இந்த தொடரில் ஆர்த்திகா, அரவிந்த் ஆகாஷ், கிருஷ்ணா, ரியா மனோஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களின் நடிப்பும், குடும்ப பின்னணியில் அமைந்த திரைக்கதையும் தொடருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. ஒரு ஆண்டுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த 'வினோதினி', தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;கிளைமாக்ஸ் எப்போ?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;கிளைமாக்ஸ் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த தொடரின் இறுதி எபிசோடுகள் இன்னும் சில நாட்களில் ஒளிபரப்பாகும் என கூறப்படுகிறது. இருப்பினும், சீரியலின் நிறைவு குறித்து சேனல் தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. 'வினோதினி' சீரியலின் முடிவு எப்படி இருக்கும்? ரசிகர்கள் எதிர்பார்க்கும் விதத்தில் கிளைமாக்ஸ் அமையுமா? என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சன் டிவியில் அடுத்தடுத்து சீரியல்களுக்கு எண்டுகார்டு போடப்பட்டு வருகிறது. அண்மையில் மதிய நேர தொடரான ஆடுகளம் சீரியல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இதுதவிர மாலை நேரத்தில் ஒளிபரப்பாகி வந்த செல்லமே செல்லமே என்கிற தொடரும் கடந்த மாதம் முடிவுக்கு கொண்டுவந்தனர். அந்த சீரியலின் முடிவால், கயல் சீரியலை ஒரு மணிநேர ஸ்பெஷலாக மாற்றிவிட்டனர். விரைவில் இந்த சீரியல்களுக்கு பதிலாக புத்தம் புது தொடர்கள் களமிறங்க உள்ளது. அது என்னென்ன தொடர்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[television]]></category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/sun-tv-vinodhini-serial-to-end-soon-climax-shoot-photo-goes-viral-kgmifkf"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Dream Astrology : உயிருடன் இருப்பவர்கள் இறப்பது போல் கனவா? அதன் அர்த்தம் என்ன தெரியுமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/what-does-it-mean-to-dream-of-a-living-person-dying-q9kw4aq</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/what-does-it-mean-to-dream-of-a-living-person-dying-q9kw4aq</guid>
            <pubDate>Fri, 17 Jul 2026 13:21:28 +0530</pubDate>
            <description><![CDATA[Dream Astrology : தூக்கத்தில் நமக்கு பல கனவுகள் வந்து கொண்டே இருக்கின்றன. ஒரு சில நமக்கு மகிழ்ச்சியைத் தந்தால், வேறு சில பயமுறுத்துகின்றன. குறிப்பாக, இறப்பு தொடர்பான கனவுகள் அதிகமான பயத்தைத் தருகின்றன. அப்படியானால், அத்தகைய கனவுகளுக்கு என்ன அர்த்தம்?]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxqgfbyhdpm71b2kesnd4se4,imgname-chatgpt-image-jul-17--2026--01-05-08-pm-1784274202577.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Dream Astrology : தூக்கத்தில் நமக்கு பல கனவுகள் வந்து கொண்டே இருக்கின்றன. ஒரு சில நமக்கு மகிழ்ச்சியைத் தந்தால், வேறு சில பயமுறுத்துகின்றன. குறிப்பாக, இறப்பு தொடர்பான கனவுகள் அதிகமான பயத்தைத் தருகின்றன. அப்படியானால், அத்தகைய கனவுகளுக்கு என்ன அர்த்தம்?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கனவில் இறந்தவர்கள் வந்தாலோ, அல்லது நம் உறவினர்கள், குடும்ப உறுப்பினர்கள் இறப்பது போலக் கனவு வந்தாலோ மிகவும் பதற்றமாக இருக்கும். அந்தக் கனவுகளை நினைத்து மீண்டும் மீண்டும் பயப்படுவோம். ஆனால், உண்மையில் இதுபோன்ற கனவுகள் தீய அறிகுறிகளைக் காட்டுகின்றனவா? விரைவில் அசுபமான ஒன்று நடக்கப்போகிறது என்பதற்கான அறிகுறியா? சொப்பன சாஸ்திரம் என்ன சொல்கிறது? இந்தக் கனவுகளுக்குப் பின்னால் உள்ள அர்த்தம் என்ன என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.&lt;/p&gt;&lt;p&gt;Astrology Secret : உங்க கையில இந்த 5 ரேகை இருக்கா? நீங்க கோடீஸ்வரர் ஆவதை எவராலும் தடுக்க முடியாது!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;யாரோ இறந்த ஒருவரைப் பாடையின் மீது வைத்து எடுத்துச் செல்வது போல் உங்களுக்குக் கனவு வந்தால், விரைவில் உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் என்று அர்த்தம்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;கனவில் சடலம் தெரிந்தால்?&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;கனவில் யாரோ இறந்துவிட்டதாகவோ அல்லது சடலத்தை எடுத்துச் செல்வது போலவோ தெரிந்தால், உங்களுக்கு விரைவில் அதிர்ஷ்டம் தேடி வரும் என்று அர்த்தம். இதுபோன்ற கனவுகளைக் கண்டு பயப்படத் தேவையில்லை. விரைவில் நல்லவை நடக்கப்போகிறது என்பதற்கான அறிகுறி இது.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;இறந்தவருடன் பேசினால்?&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;உங்கள் குடும்பத்தில் யாராவது ஏற்கனவே இறந்திருந்தால்.. அந்த நபருடன் நீங்கள் பேசுவது போலக் கனவு வந்தால்.. விரைவில் உங்களுக்குப் பண வரவு ஏற்படும் என்று அர்த்தம்.&lt;/p&gt;&lt;p&gt;Maha Dharma Yoga : இடம் மாறும் எமன்! கோடீஸ்வர யோகம் தேடி வரும் 3 ராசிகள்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நிஜ வாழ்க்கையில் உயிருடன் இருக்கும் நபர், கனவில் இறந்துவிட்டதாகவோ அல்லது தற்கொலை செய்து கொண்டதாகவோ தெரிந்தால், அவர்களின் ஆயுள் கூடும் என்று அர்த்தம். அவர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;தண்ணீரில் மூழ்கிவிட்டதாகக் கனவு வந்தால்?&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;இதுபோன்ற கனவுகள் மிகவும் பயமுறுத்தும். ஆனால், தண்ணீரில் மூழ்கிவிட்டதாகக் கனவு வந்தால் அதிகம் பயப்படத் தேவையில்லை. விரைவில் உங்களுக்கு ஏதேனும் அவமானம் நடக்கப்போகிறது என்று அர்த்தம்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;கடவுள் கனவில் வந்தாலோ அல்லது பூஜை செய்வது போலத் தெரிந்தாலோ?&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;கனவில் உங்களுக்குக் கடவுள் தெரிந்தாலோ அல்லது நீங்கள் பூஜை செய்வது போலக் கனவு வந்தாலோ மிகவும் சுபமானது நடக்கும். விரைவில் நல்ல செய்தியைக் கேட்பீர்கள். அசைக்க முடியாத பக்தி மற்றும் நம்பிக்கையின் அடையாளம் இது.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;வெள்ளிப் பொருட்கள் கனவில் தெரிந்தால்?&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;உங்களுக்குக் கனவில் வெள்ளிப் பொருட்கள் எவை தெரிந்தாலும்.. சுபமானது நடக்கும் என்று அர்த்தம். விரைவில்.. நீங்கள் எதிர்பார்க்காத மகிழ்ச்சிகள் உங்கள் வாழ்க்கையில் நுழையப்போகின்றன என்பதை இந்தக் கனவு உணர்த்துகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[astrology]]></category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/what-does-it-mean-to-dream-of-a-living-person-dying-q9kw4aq"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Pournami Girivalam: ஆடி மாதம் பவுர்ணமி கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு.. தெற்கு ரயில்வே வெளியிட்ட குட்நியூஸ்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-thiruvannamalai/aadi-pournami-girivalam-southern-railway-announces-special-trains-6cewery</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-thiruvannamalai/aadi-pournami-girivalam-southern-railway-announces-special-trains-6cewery</guid>
            <pubDate>Fri, 17 Jul 2026 13:02:50 +0530</pubDate>
            <description><![CDATA[Southern Railway: திருவண்ணாமலையில் ஜூலை 29ம் தேதி நடைபெறவுள்ள ஆடி மாத பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j7sqv56yaymbrz9165e807fn,imgname-tiruvannamalai-girivalam-3.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Southern Railway: திருவண்ணாமலையில் ஜூலை 29ம் தேதி நடைபெறவுள்ள ஆடி மாத பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழகத்தில் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். இக்கோவில் நினைத்தாலே முக்தி தரக்கூடிய புண்ணிய தலமாகவும், பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும் விளங்குகிறது. இங்குள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் மாதந்தோறும் பல்வேறு மாவட்டம், மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து செல்வது வழக்கம். குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அதிகளவில் கிரிவலம் வருகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அந்த வகையில் ஆடி மாதத்துக்கான பவுர்ணமி கிரிவலம் வருகிற 29ம் தேதி புதன்கிழமை நடைபெறுகிறது. இந்நிலையில் பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதாவது 29-ம் தேதி விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து காலை 10.10 மணிக்கு புறப்படும் விழுப்புரம்-திருவண்ணாமலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் 11.45 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையத்தை சென்றடையும். அதேபோல் மறுமார்க்கத்தில் திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 12.40 மணிக்கு புறப்படும் திருவண்ணாமலை-விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு ரயில் மதியம் 2.15 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்தை வந்தடையும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த ரயில்கள் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[tamilnadu-thiruvannamalai]]></category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/tamilnadu-thiruvannamalai/aadi-pournami-girivalam-southern-railway-announces-special-trains-6cewery"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Mukesh Ambani House: அம்பானி வீட்ல வேலை வேணுமா? அரசு வேலையை விட கடினமாம்.! என்ன தகுதிகள் இருக்கணும்னு தெரிஞ்சிக்கோங்க.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/ambani-house-job-vacancy-eligibility-qualifications-selection-process-and-how-to-apply-for-jobs-at-ambanis-antilia-aghc5h8</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/ambani-house-job-vacancy-eligibility-qualifications-selection-process-and-how-to-apply-for-jobs-at-ambanis-antilia-aghc5h8</guid>
            <pubDate>Fri, 17 Jul 2026 12:49:23 +0530</pubDate>
            <description><![CDATA[Ambani House Job Vacancy: இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி வீட்டில் வேலைக்குச் சேர ஆசைப்பட்டால், என்ன தகுதிகள் இருக்க வேண்டும்? என்ன தகுதிகளைப் பார்த்து வேலைக்கு எடுக்கிறார்கள்? முழு விவரம் உள்ளே.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxqejrdrywkc5sn701z11476,imgname-ambani-house-job-vacancy-1784272216504.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Ambani House Job Vacancy: இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி வீட்டில் வேலைக்குச் சேர ஆசைப்பட்டால், என்ன தகுதிகள் இருக்க வேண்டும்? என்ன தகுதிகளைப் பார்த்து வேலைக்கு எடுக்கிறார்கள்? முழு விவரம் உள்ளே.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முகேஷ் அம்பானியின் 'ஆண்டிலியா' இல்லத்தில் வேலைக்குச் சேருவது என்பது ஒரு அரசு வேலைக்குத் தேர்வாவது போல மிகவும் கடினமான மற்றும் கடுமையான ஒரு செயல்முறையாகும். அங்கு வேலை செய்யும் பணியாளர்களுக்குத் தங்குமிடம், உணவு, மருத்துவக் காப்பீடு மற்றும் பல லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அம்பானி வீட்டில் வேலைக்குச் சேர என்ன தகுதிகள் வேண்டும்? எப்படி தேர்வு நடைபெறும் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் - &lt;/strong&gt;Bathroom Cleaning: குழாயில் உப்புக்கறையா? இந்த குட்டி பந்து போதும்.! ஒரு நிமிடத்தில் பளபளன்னு ஆகிடும்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பல்வேறு செய்தி நிறுவனங்களின் அறிக்கைகளின்படி, அம்பானி வீட்டில் ஒரு என்ட்ரி-லெவல் செஃப்புக்கு மாதம் சுமார் ரூ.1.5 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சம் வரை சம்பளம் கொடுக்கிறார்கள். சீனியர் அல்லது எக்ஸிகியூட்டிவ் செஃப் என்றால், மாதம் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சம் அல்லது அதற்கும் மேல் சம்பளம் கிடைக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;செஃப் ஆக என்ன தகுதிகள் வேண்டும்?&lt;/strong&gt; ஹோட்டல் மேனேஜ்மென்ட் அல்லது கல்னரி ஆர்ட்ஸில் டிகிரி/டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். ஏதாவது 5 ஸ்டார் ஹோட்டலில் வேலை பார்த்த அனுபவம் அவசியம். இந்திய மற்றும் சர்வதேச உணவுகள் செய்யத் தெரிந்திருக்க வேண்டும். சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு விதிகளைப் பற்றியும் அறிந்திருக்க வேண்டும். ரகசியங்களைக் காப்பவராக இருக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் - &lt;/strong&gt;Green Chutney: ஹோட்டல் ஸ்டைல் புதினா சட்னி வேணுமா? அரைக்கும் போது இந்த 2 சீக்ரெட் பொருளை மட்டும் சேருங்க.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அம்பானி வீட்டில் செஃப் வேலைக்கு, சமையல் தெரிந்தால் மட்டும் போதாது. இன்டர்வியூ மிகவும் கடினமாக இருக்கும். சுவையாக சமைப்பதோடு, உணவை அழகாக பரிமாறவும் தெரிந்திருக்க வேண்டும். எவ்வளவு பிரஷரிலும் வேலை செய்யும் திறன் இருக்கிறதா என்று சோதிப்பார்கள். உங்கள் நடத்தை, பின்னணி என அனைத்தையும் சரிபார்த்த பிறகே வேலை உறுதியாகும். முகேஷ் அம்பானிக்கு குஜராத்தி, தென்னிந்திய உணவுகள் போன்ற எளிய இந்திய உணவுகள்தான் பிடிக்குமாம். அதனால், தினமும் இதுபோன்ற உணவுகள்தான் செய்ய வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் - &lt;/strong&gt;Floor Cleaning: தரை பிசுபிசுன்னு இருக்கா? இந்த ஒரு பொருளை கலந்து துடைங்க, தரை கண்ணாடி போல ஜொலிக்கும்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சமையல்காரர், மேலாளர் அல்லது ஓட்டுநர் என எந்தப் பணியாக இருந்தாலும், அதற்கான முறையான கல்வி அல்லது சான்றிதழ் (உதாரணமாக, ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் பணிபுரிந்த அனுபவம் அல்லது கேட்டரிங் முடித்ததற்கான சான்றிதழ்) பெற்றிருக்க வேண்டும்.எந்தச் சூழ்நிலையிலும் பதற்றமடையாமல், ஒரே நேரத்தில் பல வேலைகளைத் துல்லியமாகச் செய்யும் திறன் இருக்க வேண்டும்.ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் சரளமாகப் பேசத் தெரிந்திருப்பது மிக முக்கியம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் - &lt;/strong&gt;Pressure Cooker: அலுமினியம் குக்கர் vs ஸ்டீல் குக்கர்.! சமையலுக்கும், ஆரோக்கியத்திற்கும் எது பெஸ்ட்?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குற்றப் பின்னணிகள் எதுவும் இருக்கக்கூடாது.விண்ணப்பதாரரின் குடும்பப் பின்னணி, முந்தைய வேலை விவரங்கள் மற்றும் அவர்களின் குணம் குறித்துப் போலீஸ் மூலம் மிகத் தீவிரமான பின்னணி சரிபார்ப்பு (Background Check) நடத்தப்படும். அம்பானி குடும்பத்தின் தனிப்பட்ட விஷயங்கள், பாதுகாப்பு மற்றும் அன்றாட நிகழ்வுகள் குறித்த ரகசியங்களை எக்காரணம் கொண்டும் வெளியே சொல்ல மாட்டேன் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் - &lt;/strong&gt;Actress Uma Shankari: 'சொக்கத் தங்கம்' பட நடிகையை ஞாபகம் இருக்கா? அவருக்கு என்ன ஆனது? மருத்துவமனையில் இருந்து வெளியான அதிர்ச்சி புகைப்படம்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அம்பானி குடும்பத்தினர் நேரடியாக ஆட்களை எடுப்பதில்லை. இதற்கென இருக்கும் முன்னணி மற்றும் நம்பகமான மனிதவள நிறுவனங்கள் மூலமாகவே தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஓட்டுநராக இருந்தால், எவ்வளவு கடினமான சூழ்நிலையிலும் காரைச் சரியாக ஓட்டுகிறாரா என்பதை அறியத் தனியாகத் தேர்வுகள் நடத்தப்படும். சமையல்காரர்களுக்கு அவர்களின் சமையல் திறமையைச் சோதிக்கப் பலகட்ட தேர்வுகள் இருக்கும். பணியாளர்கள் அனைவரும் முழுமையான மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். தொற்றுநோய்கள் ஏதேனும் இல்லாத, நல்ல உடற்தகுதி கொண்டவர்களே தேர்வு செய்யப்படுவர்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;Top Stories: அதிகம் படிக்கப்பட்டவை&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;ol&gt; &lt;li&gt;Bathroom Cleaning: பாத்ரூம் சுவர்களில் பூஞ்சை வளர்கிறதா? தடுப்பதற்கான 5 ட்ரிக்ஸ்.! இனி பாத்ரூம் டைல்ஸ் பளபளக்கும்.!&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;Vedic Astrology: இடம் மாறும் குரு பகவான்.! குரு பெயர்ச்சியால் கோடீஸ்வர யோகம் பெறும் 5 அதிர்ஷ்ட ராசிகள்.!&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;Astrology Tamil: சுக்கிர புத்தி ஆரம்பம்.! அடுத்த 6 மாதம் 5 ராசிகளுக்கு ராஜயோகம்.! இனி இவர்கள் தொட்டதெல்லாம் தங்கமாகும்.!&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;Chanakya Niti: கோடி ரூபாய் கொடுத்தாலும், இவர்களை மட்டும் திருமணம் செய்யாதீர்கள்.! சாணக்கியர் கூறும் அறிவுரை.!&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;Aadi Masam 2026: ஆடி வெள்ளி அம்மன் உங்க வீட்டுக்கு வரணுமா? இதை மட்டும் செய்யுங்கள்! தேச மங்கையர்கரசி சொன்ன ரகசியம்.!&lt;/li&gt;&lt;/ol&gt;]]></content:encoded>
            <category><![CDATA[life-style]]></category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/ambani-house-job-vacancy-eligibility-qualifications-selection-process-and-how-to-apply-for-jobs-at-ambanis-antilia-aghc5h8"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Astrology Secret : உங்க கையில இந்த 5 ரேகை இருக்கா? நீங்க கோடீஸ்வரர் ஆவதை எவராலும் தடுக்க முடியாது!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/do-you-have-these-5-palm-lines-of-wealth-bk3g70d</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/do-you-have-these-5-palm-lines-of-wealth-bk3g70d</guid>
            <pubDate>Fri, 17 Jul 2026 12:40:46 +0530</pubDate>
            <description><![CDATA[Astrology Secret : ஒருவரின் உள்ளங்கையில் உள்ள சில அரிதான மற்றும் மங்கலமான குறியீடுகள் அவர்கள் செல்வந்தராகும் வாய்ப்பைக் குறிக்கின்றன. அவை எவை என்பதைப் பார்ப்போம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxqe2wxrpe2e4215hxfpkvrr,imgname-chatgpt-image-jul-17--2026--12-26-36-pm-1784271696824.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Astrology Secret : ஒருவரின் உள்ளங்கையில் உள்ள சில அரிதான மற்றும் மங்கலமான குறியீடுகள் அவர்கள் செல்வந்தராகும் வாய்ப்பைக் குறிக்கின்றன. அவை எவை என்பதைப் பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உள்ளங்கையின் மணிக்கட்டுப் பகுதியிலிருந்து தொடங்கி, நடுவிரலை நோக்கி நேராகச் செல்லும் கோடுதான் 'விதி ரேகை' எனப்படும். இந்தக் கோடு எந்தவிதமான இடையூறுகளும் இல்லாமல், ஆழமாகவும் தெளிவாகவும் இருந்தால், அது ஒருவரது வாழ்நாள் முழுவதும் நிலையான பொருளாதார முன்னேற்றத்தைக் குறிக்கிறது. இவர்களுக்குத் தகுந்த நேரத்தில் சரியான வாய்ப்புகளும், பெரிய மனிதர்களின் ஆதரவும் தானாகவே தேடி வரும்.&lt;/p&gt;&lt;p&gt;Maha Dharma Yoga : இடம் மாறும் எமன்! கோடீஸ்வர யோகம் தேடி வரும் 3 ராசிகள்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மோதிர விரலுக்குக் கீழே உள்ள பகுதி 'சூரிய மேடு' எனப்படும். அங்கிருந்து கீழ்நோக்கிச் செல்லும் கோடு 'சூரிய ரேகை' ஆகும். இந்தக் கோடு தெளிவாக இருப்பவர்கள் சமுதாயத்தில் புகழையும், கௌரவத்தையும், பெரும் செல்வத்தையும் ஈட்டுவார்கள். குறிப்பாக, கலை, அரசியல், எழுத்து மற்றும் வணிகத் துறைகளில் உள்ளவர்களுக்கு இந்த ரேகை இருந்தால், அவர்கள் விரைவிலேயே கோடீஸ்வரர்களாக வாய்ப்புள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;Sukra Yogam : சொல்லி அடிக்கும் சுக்கிரன்! அடுத்த 6 மாதங்களில் கோடீஸ்வரர்கள் ஆகப்போகும் அந்த 5 ராசிகள்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உள்ளங்கையில் மீன் வடிவத்தில் ஒரு சின்னம் இருப்பது மிகவும் அபூர்வமானது மற்றும் மிகவும் அதிர்ஷ்டமானது. இது இருந்தால், அந்த நபர் ஆன்மீக ஆசீர்வாதங்களையும், பயணங்கள் மூலம் லாபத்தையும், எதிர்பாராத தன வரவையும் பெறுவார். இவர்களின் வெற்றிக்குக் கடின உழைப்புடன், இவர்களின் முற்பிறவி புண்ணியங்களும் துணை நிற்கும்.&lt;/p&gt;&lt;p&gt;Kadaga Sankranti : புதிய வீடு, சொத்து சேர்க்கை! 4 ராசிகளுக்கு அள்ள அள்ளக் குறையாத சொத்து யோகம்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குரு மேடு (ஆள்காட்டி விரலுக்குக் கீழே), சூரிய மேடு அல்லது புதன் மேடு (சுண்டு விரலுக்குக் கீழே) ஆகிய இடங்களில் முக்கோண வடிவிலான குறியீடுகள் இருப்பது சிறப்பு.&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;&lt;strong&gt;குரு மேட்டில் முக்கோணம்: &lt;/strong&gt;தலைமைப் பண்பு மற்றும் அபரிமிதமான அறிவைக் குறிக்கும்.&lt;/li&gt; &lt;li&gt;&lt;strong&gt;புதன் மேட்டில் முக்கோணம்: &lt;/strong&gt;இவர்களுக்குப் பிசினஸ் தந்திரம் மிக அதிகம் இருக்கும், அதன் மூலம் அவர்கள் கோடீஸ்வரர்களாகும் வாய்ப்பு அதிகம்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;Graha Yuddha : வேலை பறிபோகப்போகும் 3 ராசிகள்! கிரக யுத்தம் தரும் எச்சரிக்கை!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விதி ரேகையிலோ அல்லது சூரிய ரேகையிலோ 'திரிசூலம்' போன்ற அமைப்பு இருந்தால், அது ராஜயோகத்தைக் குறிக்கும். இது அந்த நபரை மிக உயர்ந்த அந்தஸ்திற்கும், அதிகாரத்திற்கும் கொண்டு செல்லும். இவர்கள் எதைத் தொட்டாலும் அதில் வெற்றி காண்பார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;பொறுப்பத் துறப்பு : ஜோதிடம் என்பது ஒரு வழிகாட்டி மட்டுமே. உங்கள் உள்ளங்கையில் இதுபோன்ற அடையாளங்கள் இல்லையென்றால் கவலைப்பட வேண்டாம். கடின உழைப்பும், சரியான திட்டமிடலும், விடாமுயற்சியும் ஒரு மனிதனை எந்தக் கோடும் இல்லாத உள்ளங்கையையும் கோடீஸ்வரனாக மாற்றும் ஆற்றல் கொண்டது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[astrology]]></category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/do-you-have-these-5-palm-lines-of-wealth-bk3g70d"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Astrology: நண்பேன்டா! நட்புக்காக உயிரையே கொடுக்கும் 4 ராசிக்காரர்கள்! உங்க நண்பர்கள் ராசி  இருக்கானு பாருங்க!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/natpe-thunai-4-zodiac-signs-who-will-do-anything-for-their-friends-c579a5q</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/natpe-thunai-4-zodiac-signs-who-will-do-anything-for-their-friends-c579a5q</guid>
            <pubDate>Fri, 17 Jul 2026 12:23:51 +0530</pubDate>
            <description><![CDATA[Astrology: நட்புனா என்னனு தெரியுமா? நண்பன்னா யாருனு தெரியுமா? என நண்பர்களுக்காக உயிரையே கொடுக்கும் 4 ராசிக்காரர்கள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம். உங்க நண்பர்களின் ராசி இருக்கா என்று பாருங்க.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxqd4crt5dpdg39zkg3vj4er,imgname-astrology-1784270697224.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Astrology: நட்புனா என்னனு தெரியுமா? நண்பன்னா யாருனு தெரியுமா? என நண்பர்களுக்காக உயிரையே கொடுக்கும் 4 ராசிக்காரர்கள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம். உங்க நண்பர்களின் ராசி இருக்கா என்று பாருங்க.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வாழ்க்கையில் பணம் இருந்தால் தான் சொந்த பந்தங்கள் கூட வரும். உடன்பிறப்புகளும் சில நேரங்களில் அப்படிதான். ஆனால் நமது வாழ்க்கையின் கடைசி வரை வருவது நண்பர்கள் தான். 'உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு&quot; என்ற வள்ளுவனின் வாக்குக்கு ஏற்ப, துன்பம் வரும்போது துடித்தெழுந்து உதவி செய்யும் நண்பர்கள் அமைவது ஒரு வரம். ஜோதிட சாஸ்திரத்தின்படி, குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் நட்புக்கு என்றுமே இலக்கணமாய் திகழ்வார்கள். தன் நண்பனுக்காக எதையும் செய்யத் துணியும் அந்த 4 ராசிக்காரர்கள் யார் யார் என்று இங்கு விரிவாகப் பார்ப்போம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க: &lt;/strong&gt;ஆடி மாதம் 'இந்த' 4 ராசிக்கும் அசுர வளர்ச்சிதான்! கோடீஸ்வர யோகம்! தொட்டதெல்லாம் துலங்கும்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நீர் ராசியான கடக ராசிக்காரர்களின் மனது மிகவும் மென்மையானது. இவர்களுக்கு நட்பு என்பது ஏனோ தானோ என்று பழகும் விஷயம் அல்ல; அது ஒரு ஆழமான உணர்வுப்பூர்வமான பந்தம். தன் நண்பர்களை நண்பர்களாகப் பார்க்காமல், தன் சொந்தக் குடும்ப உறுப்பினராகவே நினைப்பார்கள். உங்களுக்கு ஒரு கஷ்டம் என்றால், உங்களை விட அதிகமாக இவர்கள் கவலைப்படுவார்கள். &quot;எனக்கு யாரும் இல்லை&quot; என்று நீங்கள் நினைக்கும் தருணத்தில், உங்களை அரவணைத்துத் தேற்ற இவர்களால் மட்டுமே முடியும்.&lt;/p&gt;&lt;p&gt;இதையும் படிங்க: Temple: கோவில் பாசிட்டிவ் எனர்ஜி அப்படியே வீட்டிற்கு வரணுமா? தரிசனத்திற்கு பின் 'இதை' பண்ணுங்க!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விருச்சிக ராசிக்காரர்கள் அவ்வளவு எளிதில் யாரையும் நம்பிவிட மாட்டார்கள். ஆனால், ஒருவரைத் தன் உண்மையான நண்பன் என்று மனதார ஏற்றுக்கொண்டுவிட்டால், அவர்களுக்காக எதையும் செய்யத் துணிவார்கள். இவர்களின் டிக்&zwnj;ஷனரியிலேயே இல்லாத வார்த்தை 'துரோகம்'. நண்பனுக்கு ஒரு ஆபத்து என்றால், பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் களத்தில் இறங்குவார்கள். காலங்கள் மாறினாலும், இவர்களின் நட்பு மாறவே மாறாது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நெருப்பு ராசியான மேஷ ராசிக்காரர்கள் இயல்பாகவே அதிக கோபக்காரர்களாகத் தெரிந்தாலும், நட்பில் இவர்களைப் போல ஒரு நல்ல உள்ளத்தைக் காண்பது அரிது. தன் நண்பனை யாராவது தப்பாகப் பேசினால் இவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாது; உடனே சண்டைக்குப் போய்விடுவார்கள். ஆபத்து என்று நீங்கள் கூப்பிட்ட அடுத்த நொடி, எந்த வேலையாக இருந்தாலும் அதை அப்படியே போட்டுவிட்டு உங்களுக்கு முன்னால் வந்து நிற்பது இந்த மேஷ ராசிக்காரர்களாகத்தான் இருக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நில ராசியான ரிஷப ராசிக்காரர்கள் மிகவும் நம்பகமானவர்கள். கஷ்ட காலங்களில் நண்பனுக்குத் தோள் கொடுப்பதில் இவர்களை அடித்துக் கொள்ள முடியாது. பண உதவி முதல் மன ரீதியான ஆறுதல் வரை, எதையும் எதிர்பாராமல் செய்வார்கள். சூழ்நிலைகள் எப்படி மாறினாலும், இவர்களது நட்பு மட்டும் மாறாமல் உறுதியான பாறை போல நிலைத்து நிற்கும்.&lt;/p&gt;&lt;p&gt;ராசி பலன்கள் என்பது பொதுவானவை என்றாலும், மேலே குறிப்பிட்டுள்ள ராசிக்காரர்கள் உங்கள் வாழ்க்கையில் நண்பர்களாகக் கிடைத்தால், நீங்கள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள் தான்! உங்கள் வாழ்வில் இப்படிப்பட்ட நண்பர்கள் யாராவது இருக்கிறார்களா? உடனே இந்த செய்தியை அவர்களுக்குப் பகிர்ந்து, உங்கள் நன்றியைத் தெரிவியுங்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பொறுப்பு துறப்பு: &lt;/strong&gt;இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[astrology]]></category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/natpe-thunai-4-zodiac-signs-who-will-do-anything-for-their-friends-c579a5q"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Vijay: ஜெயலலிதா வீட்டில் குடியேறும் விஜய்.?! மீண்டும் பரபரப்பாகும் போயஸ்கார்டன்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/politics/thalapathy-vijay-eyes-jayalalithaas-poes-garden-residence-rumours-swirl-k32onqf</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/politics/thalapathy-vijay-eyes-jayalalithaas-poes-garden-residence-rumours-swirl-k32onqf</guid>
            <pubDate>Fri, 17 Jul 2026 12:16:09 +0530</pubDate>
            <description><![CDATA[தமிழ்நாடு அரசியலில் 'போயஸ் கார்டன்' என்ற பெயருக்கு தனி மவுசு உண்டு. அது மறைந்த முன்னாள் முதல்வர், மக்களின் 'அம்மா' ஜெயலலிதா வாழ்ந்த அதிகார மையம். இப்போது அதே 'வேதா நிலையம்' பங்களாவை வாங்க முதல்வர் விஜய் திட்டமிடுகிறாரா? இந்த ஸ்டோரியைப் பாருங்க.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxqc1htna6zb4rskxz4q5bpx,imgname-thalapathy-vijay-jayalalithaa-1784269555541.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[தமிழ்நாடு அரசியலில் 'போயஸ் கார்டன்' என்ற பெயருக்கு தனி மவுசு உண்டு. அது மறைந்த முன்னாள் முதல்வர், மக்களின் 'அம்மா' ஜெயலலிதா வாழ்ந்த அதிகார மையம். இப்போது அதே 'வேதா நிலையம்' பங்களாவை வாங்க முதல்வர் விஜய் திட்டமிடுகிறாரா? இந்த ஸ்டோரியைப் பாருங்க.&lt;img&gt;&lt;p&gt;தமிழ்நாடு என்றாலே சினிமாவும் அரசியலும் ஒண்ணுக்கொண்ணு பின்னிப் பிணைஞ்சது. இப்போ இந்த ரெண்டு களத்திலயும் 'தளபதி' விஜய் ஜோசப் தான் டாப். வெள்ளித்திரையில் மாஸ் காட்டிய விஜய், இப்போ முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து மாநிலத்தை வழிநடத்துறார். ஆனா, இப்போ ஹாட் டாபிக் அவரோட ஆட்சி இல்லை, அவர் வாங்கப்போறதா சொல்லப்படுற ஒரு 'மாஸ்' டீல் தான்! அதுவும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் பங்களாவை!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ்நாடு அரசியலில் 'போயஸ் கார்டன்' ஒரு சாதாரண இடமில்லை. அது மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த அதிகாரத்தின் அடையாளம். இப்போ, அந்த 'வேதா நிலையம்' பங்களாவை வாங்க முதல்வர் விஜய் திட்டமிடுவதாக ஒரு செய்தி பரவி வருகிறது. கோடிக்கணக்கான மக்களின் 'அம்மா' வாழ்ந்த வீட்டை, இப்போதைய 'தளபதி' வாங்க போவது உண்மையானால், அது கோலிவுட் முதல் டெல்லி வரை பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும்.&lt;/p&gt;&lt;img&gt;தற்போது விஜய், சென்னையின் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார். ஆனால், அங்கிருந்து தலைமைச் செயலகத்திற்கு தினமும் வர சுமார் 17 கிலோமீட்டர் பயணிக்க வேண்டும். முதல்வரின் கான்வாய் வரும்போது டிராஃபிக் ஜாம் ஏற்படுவது வழக்கம். இதனால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படக்கூடாது என்பதற்காக, நகரின் மையப்பகுதியான போயஸ் கார்டனுக்கு மாற விஜய் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த டீல் இன்னும் முடிவாகவில்லை, பேச்சுவார்த்தை அளவிலேயே இருப்பதாக சொல்லப்படுகிறது.&lt;img&gt;ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, இந்த பங்களாவின் வாரிசுரிமை குறித்து பெரிய சட்டப் போராட்டமே நடந்தது. தற்போது, இந்த வீட்டின் உரிமை ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபாவிடம் உள்ளது. தகவல்களின்படி, விஜய்யின் டீம் ஏற்கெனவே தீபாவுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க பங்களாவின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் 350 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த டீல் ஓகே ஆனால், விஜய் ரஜினிகாந்த் மற்றும் தனுஷுக்கு பக்கத்து வீட்டுக்காரர் ஆகிவிடுவார்.&lt;img&gt;ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, போயஸ் கார்டன் வெறும் வீடு மட்டுமல்ல, அது தமிழ்நாட்டின் அதிகார மையமாகவே இருந்தது. இப்போது விஜய் அங்கு சென்றால், மீண்டும் அந்த வீட்டுக்கு அரசியல் முக்கியத்துவம் வந்துவிடும். ஒருவேளை இந்த டீல் நடக்கவில்லை என்றால், விஜய் பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது சொந்த இடத்தில் வீடு கட்டலாம் அல்லது அரசு பங்களாவுக்கு மாறலாம் என்றும் கூறப்படுகிறது. இப்போதைக்கு எதுவும் உறுதியாகவில்லை.&lt;img&gt;மொத்தத்தில், தளபதி விஜய்யின் இந்த 'வீடு' பற்றிய செய்தி இப்போது தமிழ்நாட்டில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. 'அம்மா'வின் அரண்மனையில் தளபதியின் ராஜ வாழ்க்கை தொடங்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்!]]></content:encoded>
            <category><![CDATA[politics]]></category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/politics/thalapathy-vijay-eyes-jayalalithaas-poes-garden-residence-rumours-swirl-k32onqf"/>
        </item>
        <item>
            <title><![CDATA[OTT Special : கடைசி 20 நிமிஷம் உங்களை ஷாக் ஆக்கும்... த்ரிஷா நடிப்பில் இப்படி ஒரு கிரைம் த்ரில்லர் படமா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/trisha-edge-of-the-seat-crime-mystery-thriller-movie-you-should-not-miss-on-ott-the-road-0ywevzk</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/trisha-edge-of-the-seat-crime-mystery-thriller-movie-you-should-not-miss-on-ott-the-road-0ywevzk</guid>
            <pubDate>Fri, 17 Jul 2026 12:10:40 +0530</pubDate>
            <description><![CDATA[Must Watch Trisha Movie on OTT : தேசிய நெடுஞ்சாலையில் நடக்கும் தொடர் கொலைகளுக்கு பின்னால் இருக்கு மர்மங்களை தோலுரிக்கும் படத்தை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxqcpyvfcge93tmqbawdwzja,imgname-trisha--5--1784270257007.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Must Watch Trisha Movie on OTT : தேசிய நெடுஞ்சாலையில் நடக்கும் தொடர் கொலைகளுக்கு பின்னால் இருக்கு மர்மங்களை தோலுரிக்கும் படத்தை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களுக்கு சமீபகாலமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக, உண்மைக் குற்ற வழக்குகளை அடிப்படையாகக் கொண்ட கிரைம் த்ரில்லர்கள், திரையரங்குகளிலும் ஓடிடி தளங்களிலும் தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளன. அந்த வரிசையில் கவனம் பெற்ற படங்களில் ஒன்றைப் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம். அப்படத்தில் நாயகியாக திரிஷா நடித்திருக்கிறார். அது என்ன படம் என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அந்த படத்தின் பெயர் &lsquo;தி ரோட்&rsquo;. தமிழ்நாட்டில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்றதாகக் கூறப்படும் சில உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்த படம், தொடக்கம் முதல் இறுதி வரை பரபரப்பான சஸ்பென்ஸுடன் பயணிக்கிறது. கதைப்படி தேசிய நெடுஞ்சாலையில், ஒரே மாதிரியான மர்ம மரணங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. ஆரம்பத்தில் விபத்துகளாக தோன்றும் இந்த சம்பவங்களுக்குப் பின்னால் வேறு ஒரு கொடூரமான உண்மை இருப்பது பின்னர் தெரிய வருகிறது. இந்த மர்ம சம்பவங்களில் தனது குடும்பத்தினரையும் இழக்கும் நாயகி, உண்மையை கண்டுபிடிக்க தானே களத்தில் இறங்குகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விசாரணை முன்னேறும்போது, தனது குடும்பத்தின் மரணம் சாதாரண விபத்து அல்ல, திட்டமிட்டு நடத்தப்பட்ட சதியின் ஒரு பகுதி என்பதை அவர் அறிகிறார். அதன் பிறகு வெளிவரும் ஒவ்வொரு உண்மையும் கதையை மேலும் விறுவிறுப்பாக்குகிறது. இந்த தொடர் கொலைகளுக்கு காரணமானவர்கள் யார்? அவர்களின் நோக்கம் என்ன? நாயகி எப்படி அந்த மர்மத்தை உடைக்கிறார்? என்கிற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு விடை கொடுக்கும் படம் தான் தி ரோட். திரிஷா நடிப்பில் வெளிவந்த அண்டர்ரேட்டட் படங்களில் இதுவும் ஒன்றாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;'ரிவெஞ் இன் 462 கிலோமீட்டர்' என்ற டேக் லைனுடன் வெளியான 'தி ரோட்' படத்தை அருண் வசீகரன் இயக்கியுள்ளார். த்ரிஷா இந்த கதையின் பில்லர். முழு படத்தையும் தாங்கிச் செல்லும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் மலையாள நடிகர் ஷபீர், மியா ஜார்ஜ், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஷ்யாம் சி.எஸ். இசையமைத்துள்ள இந்த படத்தின் பின்னணி இசை, சஸ்பென்ஸ் காட்சிகளுக்கு கூடுதல் வலிமை சேர்க்கிறது. ஒளிப்பதிவும், திரைக்கதையின் வேகமும், கிரைம் த்ரில்லர் ரசிகர்களை கடைசி வரை இருக்கையில் கட்டிப்போடும் வகையில் அமைந்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தற்போது ஆஹா ஓடிடி தளத்தில் மட்டுமல்லாது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் இந்த படம் ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது. தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழியிலும் பார்க்கும் வசதி உள்ளது. சஸ்பென்ஸ், கிரைம், உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட த்ரில்லர் படங்களை விரும்புபவர்களுக்கு 'தி ரோட்' நிச்சயம் தவறவிடக் கூடாத திரைப்படமாக இருக்கும். இப்படம் தியேட்டரில் கடந்த 2023-ம் ஆண்டு ரிலீஸ் ஆனபோது பெரியளவில் கொண்டாடப்படாவிட்டாலும், ஓடிடியில் பார்க்க பக்காவான படமாக இருக்கிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[cinema]]></category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/trisha-edge-of-the-seat-crime-mystery-thriller-movie-you-should-not-miss-on-ott-the-road-0ywevzk"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Alcohol Sales: சூப்பர் மார்க்கெட்டில் பீர், ஒயின்! எந்த நாட்டில் தெரியுமா? ஆனால் ஒரு தப்பு செஞ்சா அவ்வளவு தான்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/alcohol-laws-in-usa-beer-and-wine-sales-inside-supermarkets-explained-ikcx53v</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/alcohol-laws-in-usa-beer-and-wine-sales-inside-supermarkets-explained-ikcx53v</guid>
            <pubDate>Fri, 17 Jul 2026 11:54:48 +0530</pubDate>
            <description><![CDATA[Alcohol Sales in Supermarkets: மது எளிதாகக் கிடைப்பதால் கண்ட கண்ட இடங்களில் குடிக்கலாம் என நினைக்கக் கூடாது. பல நகரங்களில் பூங்காக்கள், சாலைகள் போன்ற பொது இடங்களில் மது அருந்த தடை உள்ளது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxqbkv429e8c77bdp7thgdsf,imgname-alcohol-1784269106306.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Alcohol Sales in Supermarkets: மது எளிதாகக் கிடைப்பதால் கண்ட கண்ட இடங்களில் குடிக்கலாம் என நினைக்கக் கூடாது. பல நகரங்களில் பூங்காக்கள், சாலைகள் போன்ற பொது இடங்களில் மது அருந்த தடை உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவில் மது வாங்க தனி கடைக்குச் செல்ல வேண்டும். ஆனால், அமெரிக்காவின் பல மாகாணங்களில் சூப்பர் மார்க்கெட்டிலேயே மதுபானங்கள் விற்கப்படுகின்றன. காய்கறிகள், பழங்கள், பால் போன்றவற்றுடன் பீர், ஒயின் போன்றவையும் தனிப் பிரிவில் கிடைக்கும். இது ஒரு சாதாரண நுகர்வோர் பொருளாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த விதி எல்லா மாகாணங்களுக்கும் பொதுவானது அல்ல. சில இடங்களில் விஸ்கி போன்ற கடின மதுபானங்கள் உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே விற்கப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அமெரிக்காவின் பெரிய மளிகைக் கடைகளில் நூற்றுக்கணக்கான மதுபான பிராண்டுகள் அணிவகுத்து நிற்கும். உள்நாட்டு பிராண்டுகள் முதல் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒயின், பீர், விஸ்கி வரை அனைத்தும் கிடைக்கும். விலை, நாடு, ஆல்கஹால் அளவு போன்ற விவரங்களைப் பார்த்து வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்தமான பிராண்டை தேர்வு செய்யலாம். பண்டிகை நாட்களில் தள்ளுபடியில் கிடைக்கின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அமெரிக்காவில் மதுபானம் வாங்க குறைந்தபட்ச 21 வயதாகும். இது நாடு முழுவதும் உள்ள முக்கிய விதி. இளவயதினராகத் தெரிந்தால், விற்பனையாளர் கண்டிப்பாக அரசாங்க அடையாள அட்டையைக் (ID) கேட்பார். ஓட்டுநர் உரிமம் அல்லது பாஸ்போர்ட் காட்டிய பிறகே மதுபானம் விற்கப்படும். 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு விற்றால், கடை உரிமையாளர்களுக்குக் கடுமையான அபராதம் மற்றும் உரிமம் ரத்து போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மது எளிதாகக் கிடைப்பதால் கண்ட கண்ட இடங்களில் குடிக்கலாம் என நினைக்கக் கூடாது. பல நகரங்களில் பூங்காக்கள், சாலைகள் போன்ற பொது இடங்களில் மது அருந்த தடை உள்ளது. மீறினால் அபராதம் விதிக்கப்படும். குறிப்பாக, குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் அமெரிக்காவில் சட்டங்கள் மிகக் கடுமையானவை. ரத்தத்தில் ஆல்கஹால் அளவு (BAC) வரம்பைத் தாண்டினால், கடும் அபராதம், ஓட்டுநர் உரிமம் ரத்து, சிறைத் தண்டனை கூட கிடைக்கலாம். இதனால்தான் அங்கு 'Don't Drink and Drive' விழிப்புணர்வு அதிகம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அமெரிக்காவின் மதுபானக் கொள்கை 'வெளிப்படையாக, சட்டப்பூர்வமாக, பொறுப்புடன்' (Openly, Legally and Responsibly) என்ற அடிப்படையில் செயல்படுகிறது. மதுபானம் என்பது மறைத்து விற்கப்படும் பொருள் அல்ல, அது சட்டப்படி கட்டுப்படுத்தப்பட்ட ஒரு தயாரிப்பு. வாடிக்கையாளருக்கு சுதந்திரம் கொடுக்கும் அதே வேளையில், அந்த சுதந்திரத்தை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என சட்டங்கள் கூறுகின்றன. சில மாகாணங்களில் ஞாயிற்றுக்கிழமை விற்பனைக்குக் கட்டுப்பாடுகள் உண்டு. மொத்தத்தில், அமெரிக்காவில் மது வாங்குவது சுலபம், ஆனால் அதைப் பயன்படுத்துவதில் விதிகள் மிக கடுமையானதாக உள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[life-style]]></category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/alcohol-laws-in-usa-beer-and-wine-sales-inside-supermarkets-explained-ikcx53v"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Railway Concession: ரயில் டிக்கெட்டில் 40%–50% சலுகை.. மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கிடைக்குமா? முழு விவரம்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/will-indian-railways-restore-senior-citizen-fare-discount-mm72gc4</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/will-indian-railways-restore-senior-citizen-fare-discount-mm72gc4</guid>
            <pubDate>Fri, 17 Jul 2026 11:50:18 +0530</pubDate>
            <description><![CDATA[Senior Citizen Railway Concession: 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 50% மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 40% வரை மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் கட்டணச் சலுகை வழங்கப்பட்டது. ஆனால், 2020 மார்ச் மாதத்தில் இந்தச் சலுகை நிறுத்தப்பட்டது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01hhfgn0gafw77w7dmyneqf8r3,imgname-asianet-news---2023-12-12t224707.518.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Senior Citizen Railway Concession: 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 50% மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 40% வரை மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் கட்டணச் சலுகை வழங்கப்பட்டது. ஆனால், 2020 மார்ச் மாதத்தில் இந்தச் சலுகை நிறுத்தப்பட்டது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;2020 ஆம் ஆண்டு தொற்று பரவியபோது, ​​பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதி இந்திய ரயில்வே பல்வேறு பயணக் கட்டணச் சலுகைகளை தற்காலிகமாக நிறுத்தியது. அவற்றில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த கட்டணக் குறைப்பும் ஒன்று. தொற்று பரவல் உள்ளே வந்து, ரயில் சேவைகள் முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்பியிருந்தாலும், அந்தச் சலுகை இதுவரை மீண்டும் கட்டப்படவில்லை. இதனால், பல ஆண்டுகளாக இந்த வசதியை நம்பி பயணம் செய்து வந்த முதியவர்கள் மீண்டும் சலுகை வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த பரவலுக்கு முன்பு, குறிப்பிட்ட வயதுக்கு மேற்பட்ட பயணிகளுக்கு இந்திய ரயில்வே கட்டணத்தில் தள்ளுபடி வழங்கப்பட்டது. 58 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்களுக்கு 50 சதவீதமும், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண்களுக்கு 40 சதவீதமும் கட்டணச் சலுகை வழங்கப்பட்டது. இந்த சலுகை மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிக்கும் தகுதியான மூத்த குடிமக்களுக்கு கிடைத்தது. மருத்துவ சிகிச்சை, குடும்ப நிகழ்வுகள், மத யாத்திரை மற்றும் பிற அத்தியாவசிய தேவைகளுக்காக அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு இந்தத் திட்டம் பெரும் உதவியாக இருந்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தற்போதைய நிலையில், இந்திய ரயில்வே அனைவருக்கும் பொதுவாக மூத்த குடிமக்கள் கட்டணச் சலுகையை வழங்கவில்லை. அதற்கு பதிலாக, குறிப்பிட்ட மருத்துவ நிலை கொண்ட சில நோயாளிகள் மற்றும் விதிமுறைகளின் அடிப்படையில் தகுதி பெறும் சில பிரிவினருக்கு மட்டும் கட்டணச் சலுகைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், வயதைக் கொண்ட மூத்த குடிமக்கள் சலுகை இன்னும் மீண்டும் நடைமுறைக்கு வரவில்லை. இதன், மூத்த குடிமக்கள் தற்போது முழு பயணக் கட்டணத்தையே டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;இந்த தங்க பத்திரம் வாங்கியிருக்கீங்களா? ரூ.1 லட்சம் இன்று ரூ.4.18 லட்சம்.. ஆர்பிஐ அறிவிப்பு!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த விவகாரம் குறித்து அதிகாரிகள் கூறுவதன்படி, மூத்த குடிமக்களுக்கான கட்டணச் சலுகையை மீண்டும் அறிமுகப்படுத்துவது தொடர்பான இறுதி முடிவை ரயில்வே வாரியம் மட்டுமே எடுக்க முடியும். மண்டல ரயில்வே அலுவலகங்கள் அல்லது உள்ளூர் நிர்வாகங்கள் முறையில் இந்தச் சலுகையை மீண்டும் அமல்படுத்தப்பட்டது. எனவே, இந்த விவகாரத்தில் எந்த மாற்றமும் ஏற்பட வேண்டும், அது ரயில்வே வாரியத்தின் கொள்கை முடிவாகவே வர வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதற்கிடையில், மூத்த குடிமக்கள் நல அமைப்புகள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் இந்தச் சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். அவர்களின் கருத்துப்படி, இது வெறும் கட்டணத் தள்ளுபடி அல்ல, வயதானவர்களுக்கான சமூகப் பாதுகாப்பு மற்றும் நலத்திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். குறிப்பாக மருத்துவ சிகிச்சை, குடும்பத் தேவைகள் மற்றும் மத யாத்திரைகளுக்காக அடிக்கடி பயணம் செய்யும் முதியவர்களுக்கு இந்த வசதி மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இருப்பினும், இதுவரை இந்திய ரயில்வே அல்லது ஐஆர்சிடிசி தரப்பில் மூத்த குடிமக்கள் கட்டணச் சலுகையை மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே, தற்போதைய நிலவரப்படி அனைத்து மூத்த குடிமக்களும் வழக்கமான பயணக் கட்டணத்திலேயே டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்து வருகின்றனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[business]]></category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/will-indian-railways-restore-senior-citizen-fare-discount-mm72gc4"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Bathroom Cleaning: குழாயில் உப்புக்கறையா? இந்த குட்டி பந்து போதும்.! ஒரு நிமிடத்தில் பளபளன்னு ஆகிடும்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/bathroom-cleaning-simple-hack-to-remove-hard-water-stains-from-taps-using-aluminium-foil-67wfl59</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/bathroom-cleaning-simple-hack-to-remove-hard-water-stains-from-taps-using-aluminium-foil-67wfl59</guid>
            <pubDate>Fri, 17 Jul 2026 11:48:23 +0530</pubDate>
            <description><![CDATA[Simple Hack to Remove Hard Water Stains from Taps Using Aluminium Foil: சமையலறையிலும், குளியலறையிலும் உள்ள குழாய்களில் படியும் கடினமான உப்புக்கறைகளை, அலுமினியம் ஃபாயிலைக் கொண்டே எளிதாக நீக்க முடியும். அது பற்றி விரிவாகப் பார்ப்போம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxqb4zr9aj1frtbcse3wvkye,imgname-simple-hack-to-remove-hard-water-stains-from-taps-using-aluminium-foil-1784268619529.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Simple Hack to Remove Hard Water Stains from Taps Using Aluminium Foil: சமையலறையிலும், குளியலறையிலும் உள்ள குழாய்களில் படியும் கடினமான உப்புக்கறைகளை, அலுமினியம் ஃபாயிலைக் கொண்டே எளிதாக நீக்க முடியும். அது பற்றி விரிவாகப் பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பெரும்பாலான வீடுகளில் குழாய்கள், ஷவர் ஹெட்கள் போன்றவை சில மாதங்களிலேயே வெள்ளை நிறத்தில் உப்புக்கறை படிந்து, அதன் பளபளப்பை இழந்துவிடும். இதற்காக அதிக விலை கொண்ட ரசாயன கிளீனர்களை வாங்கிப் பயன்படுத்தினாலும், பலன் தற்காலிகமாகவே இருக்கும். ஆனால், நாம் சாதாரணமாகப் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் அலுமினியம் ஃபாயிலைக் கொண்டு இந்தப் பிரச்னைக்கு எளிதாகத் தீர்வு காண முடியும் என சுத்தப்படுத்தும் நிபுணர்கள் கூறுகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் - &lt;/strong&gt;Pressure Cooker: அலுமினியம் குக்கர் vs ஸ்டீல் குக்கர்.! சமையலுக்கும், ஆரோக்கியத்திற்கும் எது பெஸ்ட்?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கடின நீர் (Hard Water) பயன்பாட்டில் இருக்கும் பகுதிகளில் இந்த சிக்கல் அதிகம். கடின நீரில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற கனிமங்கள் அதிக அளவில் இருப்பதால், நீர் ஆவியான பிறகு இந்த கனிமங்கள் குழாய்களின் மீது வெண்படலமாகப் படிகின்றன. இதுவே நாளடைவில் தடிமனான, நீக்க முடியாத கறையாக மாறுகிறது. இங்கேதான் அலுமினியம் ஃபாயில் உதவுகிறது. ஃபாயிலை ஒரு பந்து போல சுருட்டும்போது, அது ஒரு மென்மையான ஸ்க்ரப்பராக செயல்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் - &lt;/strong&gt;Water Bottle: வாட்டர் பாட்டில் மூடி ஏன் வெவ்வேற கலர்ல இருக்குனு யோசிச்சிருக்கீங்களா?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஸ்டீல் ஸ்க்ரப்பர் போல உலோகத்தின் மேற்பரப்பில் கீறல்களை ஏற்படுத்தாமல், படிந்திருக்கும் கனிமப் படிவுகளை மட்டும் இது திறமையாக நீக்குகிறது. இந்தச் செயல்முறையை இன்னும் எளிதாக்க வெள்ளை வினிகரை (White Vinegar) பயன்படுத்தலாம். வினிகரில் உள்ள அசிட்டிக் அமிலம், சுண்ணாம்புப் படிவுகளைக் கரைக்கும் தன்மை கொண்டது. இதனால், ஃபாயிலுடன் வினிகரும் சேரும்போது, கறைகள் இன்னும் வேகமாக நீங்குகின்றன.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் -&lt;/strong&gt; Broom Stick: துடைப்பத்தை உப்பு தண்ணியில ஊறவெச்சு பாருங்க.! பழைய துடைப்பத்தை புதுசாக்க ஒரு சிம்பிள் ட்ரிக்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முதலில், பயன்படுத்திய அலுமினியம் ஃபாயிலின் ஒரு பகுதியை எடுத்து, அதை ஒரு சிறிய பந்தாகச் சுருட்டிக்கொள்ளுங்கள். பிறகு, அந்த ஃபாயில் பந்தை தண்ணீரில் நனைத்து, கறை படிந்த குழாயின் மீது வட்ட வடிவில் மெதுவாகத் தேய்க்க வேண்டும். சில நிமிடங்கள் தேய்த்தாலே, கறைகள் இளகி வருவதை நீங்கள் பார்க்கலாம். கறைகள் மிகவும் கடினமாக இருந்தால், ஃபாயிலை வெள்ளை வினிகரில் தோய்த்துப் பயன்படுத்தலாம். இன்னும் சிறந்த பலனுக்கு, கறை படிந்த இடத்தில் வினிகரை 10 நிமிடங்கள் தெளித்து ஊறவைத்து, அதன் பிறகு ஃபாயிலால் தேய்த்தால் நல்ல மாற்றம் தெரியும். சுத்தம் செய்த பிறகு, குழாயை தண்ணீரால் கழுவி, உலர்ந்த மைக்ரோஃபைபர் துணியால் துடைத்தால், புதியது போல பளபளக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் - &lt;/strong&gt;Floor Cleaning: தரை பிசுபிசுன்னு இருக்கா? இந்த ஒரு பொருளை கலந்து துடைங்க, தரை கண்ணாடி போல ஜொலிக்கும்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த முறை குரோம் மற்றும் ஸ்டையின்லெஸ் ஸ்டீல் போன்ற உலோகப் பரப்புகளுக்கு மிகவும் ஏற்றது. ஆனால், மேட் ஃபினிஷ் அல்லது பெயின்ட் கோட்டிங் செய்யப்பட்ட குழாய்களில் இதை முயற்சிக்கும் முன், கண்ணுக்குத் தெரியாத ஒரு சிறிய இடத்தில் சோதனை செய்வது அவசியம். இல்லையெனில், அது மேற்பரப்பை சேதப்படுத்த வாய்ப்புள்ளது. மேலும், சுத்தம் செய்யும்போது அதிக அழுத்தம் கொடுத்துத் தேய்ப்பதைத் தவிர்க்க வேண்டும். மென்மையாக தேய்த்தலே போதுமானது. இனி பயன்படுத்திய அலுமினியம் ஃபாயிலைப் பார்த்தால், குப்பைத்தொட்டி நினைவுக்கு வருமா அல்லது பளபளக்கும் குழாய்கள் நினைவுக்கு வருமா என்பது உங்கள் கையில்தான் இருக்கிறது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;Top Stories: அதிகம் படிக்கப்பட்டவை&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;ol&gt; &lt;li&gt;Bathroom Cleaning: பாத்ரூம் சுவர்களில் பூஞ்சை வளர்கிறதா? தடுப்பதற்கான 5 ட்ரிக்ஸ்.! இனி பாத்ரூம் டைல்ஸ் பளபளக்கும்.!&lt;/li&gt; &lt;li&gt;Vedic Astrology: இடம் மாறும் குரு பகவான்.! குரு பெயர்ச்சியால் கோடீஸ்வர யோகம் பெறும் 5 அதிர்ஷ்ட ராசிகள்.!&lt;/li&gt; &lt;li&gt;Astrology Tamil: சுக்கிர புத்தி ஆரம்பம்.! அடுத்த 6 மாதம் 5 ராசிகளுக்கு ராஜயோகம்.! இனி இவர்கள் தொட்டதெல்லாம் தங்கமாகும்.!&lt;/li&gt; &lt;li&gt;Chanakya Niti: கோடி ரூபாய் கொடுத்தாலும், இவர்களை மட்டும் திருமணம் செய்யாதீர்கள்.! சாணக்கியர் கூறும் அறிவுரை.!&lt;/li&gt; &lt;li&gt;Aadi Masam 2026: ஆடி வெள்ளி அம்மன் உங்க வீட்டுக்கு வரணுமா? இதை மட்டும் செய்யுங்கள்! தேச மங்கையர்கரசி சொன்ன ரகசியம்.!&lt;/li&gt;&lt;/ol&gt;]]></content:encoded>
            <category><![CDATA[life-style]]></category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/bathroom-cleaning-simple-hack-to-remove-hard-water-stains-from-taps-using-aluminium-foil-67wfl59"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Healthier Life: மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஓய்வு ஏன் அவசியம்?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/why-taking-a-break-is-the-ultimate-path-to-a-happier-healthier-life-2r10yon</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/why-taking-a-break-is-the-ultimate-path-to-a-happier-healthier-life-2r10yon</guid>
            <pubDate>Fri, 17 Jul 2026 11:46:29 +0530</pubDate>
            <description><![CDATA[இன்றைய அவசர உலகில் ஓயாமல் உழைப்பது உடலையும் மனதையும் பாதிக்கும். இடையில் எடுக்கும் ஓய்வு சோம்பேறித்தனமல்ல; அது மூளையை புத்துணர்ச்சியாக்கி, படைப்பாற்றலை வளர்த்து, வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும் சமநிலையோடும் வாழ உதவும் சிறந்த வழிமுறையாகும்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxqb6rmpa168xexsskces4tz,imgname-taking-a-break--1--1784268677782.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;இன்றைய அவசர உலகில் ஓயாமல் உழைப்பது உடலையும் மனதையும் பாதிக்கும். இடையில் எடுக்கும் ஓய்வு சோம்பேறித்தனமல்ல; அது மூளையை புத்துணர்ச்சியாக்கி, படைப்பாற்றலை வளர்த்து, வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும் சமநிலையோடும் வாழ உதவும் சிறந்த வழிமுறையாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்றைய காலகட்டத்தில் எப்போதும் 'பிஸியாக' இருப்பது ஒரு பெருமையாகக் கருதப்படுகிறது. இலக்குகளை அடைய ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் விதைக்கப்பட்டுள்ளது. இந்த அவசர கலாச்சாரம் நம்மை உழைக்கத் தூண்டினாலும், காலப்போக்கில் அது நம் உடல் மற்றும் மன நலனைப் பறித்து விடுகிறது. எப்போது பார்த்தாலும் வேலை, மொபைல் போன் நோட்டிபிகேஷன்கள், இமெயில்கள் என நம்மைச் சுற்றி எப்போதும் ஒரு பரபரப்பு சூழ்ந்திருக்கிறது. இதனால் நம்மை நாமே கவனித்துக் கொள்ளும் நேரம் குறைந்து போகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நின்று நிதானிக்காமல் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்கும்போது நாம் &quot;பேர்ன்அவுட்&quot; (Burnout) எனப்படும் கடுமையான மன மற்றும் உடல் சோர்வுக்கு ஆளாகிறோம். இரவு நேர இமெயில்கள், வார இறுதி நாட்களிலும் தொடரும் வேலைகள் போன்றவை நம்மை எப்போதும் பதற்றத்திலேயே வைத்திருக்கின்றன. இதன் விளைவாக, நாம் எளிதில் சோர்வடைகிறோம், நமது கவனம் சிதறுகிறது, மற்றும் ஒரு காலத்தில் நாம் ஆர்வமாகச் செய்த விஷயங்கள் கூட நமக்கு எரிச்சலையும் மன அழுத்தத்தையும் தரத் தொடங்குகின்றன. இடைவிடாமல் உழைப்பது நமது திறனை வளர்ப்பதில்லை, மாறாக தவறுகளையே அதிகமாக்குகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பலரும் ஓய்வு எடுப்பதை நேர விரயம் என்றோ அல்லது சோம்பேறித்தனம் என்றோ தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், வேலைக்கு நடுவே ஒரு சிறிய இடைவெளி எடுப்பது நமது மூளையை மீண்டும் 'ரீசார்ஜ்' செய்ய உதவுகிறது. வேலை செய்யும் இடத்தை விட்டு எழுந்து சிறிது தூரம் நடப்பது, உடலை ஸ்ட்ரெச் (Stretch) செய்வது அல்லது கண்களை மூடி சில நிமிடங்கள் அமைதியாக இருப்பது கூட நமது கவனத்தையும் மனநிலையையும் உடனடியாக மேம்படுத்தும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நமது மூளை எப்போதும் அழுத்தத்தில் இருக்கும்போது புதிய சிந்தனைகள் பிறப்பதில்லை. மாறாக, நாம் நிதானமாக இருக்கும்போதுதான் படைப்பாற்றல் (Creativity) அதிகரிக்கிறது. அதனால்தான் குளிக்கும் போதோ, மாலை நேரத்தில் சும்மா நடக்கும் போதோ அல்லது ஓய்வெடுக்கும் போதோ நமக்கு மிகச் சிறந்த ஐடியாக்கள் சட்டென்று தோன்றுகின்றன. நாம் ஓய்வெடுப்பதற்கு குற்ற உணர்ச்சி அடையத் தேவையில்லை. அது ஒவ்வொரு நாளும் நம் உடலுக்கும் மனதிற்கும் தேவையான ஒரு அடிப்படைத் தேவையாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வெற்றி என்பது எப்போதும் ஓடிக்கொண்டே இருப்பதில் இல்லை. சமநிலையான, ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதே உண்மையான வெற்றி. தங்களைப் பார்த்துக் கொள்ளும் நபர்கள் நீண்ட காலத்திற்குத் தங்கள் துறைகளில் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். எனவே, வேகமாக இயங்கும் இந்த உலகில், தேவைப்படும்போது சற்று 'பாஸ்' (Pause) செய்து ஓய்வெடுப்பது நம்மைப் பின்னுக்குத் தள்ளாது; மாறாக, நம்மை இன்னும் வலிமையோடு முன்னோக்கிச் செலுத்த உதவும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[life-style]]></category>
            <dc:creator>Priya Velan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/why-taking-a-break-is-the-ultimate-path-to-a-happier-healthier-life-2r10yon"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Egg Storage : முட்டையை ஃபிரிட்ஜில் வைக்கிறீர்களா? இந்த தவறை இனியும் செய்யாதீர்கள்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/are-you-storing-eggs-in-the-fridge-the-right-way-b54hvrv</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/are-you-storing-eggs-in-the-fridge-the-right-way-b54hvrv</guid>
            <pubDate>Fri, 17 Jul 2026 11:37:19 +0530</pubDate>
            <description><![CDATA[Egg Storage : முட்டையை ஃபிரிட்ஜில் வைப்பதா, வெளியில் வைப்பதா என்ற குழப்பம் பலருக்கும் உண்டு. ஆனால், அதை வைக்கும் இடமும், முறையும் மிக முக்கியம். சாதாரணமாக நாம் செய்யும் சில தவறுகள் முட்டையின் தரத்தை கெடுத்துவிடும்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxqaag8m3f1xzef2jb992cph,imgname-chatgpt-image-jul-17--2026--11-24-46-am-1784267751700.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Egg Storage : முட்டையை ஃபிரிட்ஜில் வைப்பதா, வெளியில் வைப்பதா என்ற குழப்பம் பலருக்கும் உண்டு. ஆனால், அதை வைக்கும் இடமும், முறையும் மிக முக்கியம். சாதாரணமாக நாம் செய்யும் சில தவறுகள் முட்டையின் தரத்தை கெடுத்துவிடும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;h2&gt;&lt;strong&gt;முட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது நல்லதா? உண்மை என்ன?&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;&quot;நம் வீடுகளில் முட்டையை ஃபிரிட்ஜில் வைப்பதா, வெளியில் வைப்பதா?&quot; இப்படி ஒரு கேள்வி பல இல்லத்தரசிகளின் மனதில் அடிக்கடி எழும். வெளிநாடுகளில் முட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது வழக்கம். ஆனால், இந்தியாவில் நாம் கடைகளில் வாங்கும் முட்டைகள் பொதுவாக குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருக்காது. திடீரென குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால், முட்டையின் ஓடு வழியே ஈரப்பதம் உள்ளே சென்று, உள்ளே இருக்கும் சத்துகளை பாதிக்கும் வாய்ப்பு உள்ளதாக சிலர் சொல்வார்கள். ஆனால், வெப்பமான நம் இந்தியச் சூழலில், முட்டையை வெளியில் வைப்பதை விட, ஃபிரிட்ஜில் வைத்துப் பாதுகாக்கவே பெரும்பாலான உணவு வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். முக்கியமாக, ஒரு வாரத்திற்கு மேல் முட்டையை வெளியே வைக்காமல் இருப்பது நல்லது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Cooker Biriyani : அரிசி ஒட்டாமல்-குழையாமல் குக்கரில் கச்சிதமாக மட்டன் பிரியாணி செய்வது எப்படி?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நம் வீடுகளில் ஃபிரிட்ஜ் வாங்கும்போதே, கதவு பகுதியில் முட்டை வைப்பதற்கான பிரத்யேக ட்ரே இருக்கும். ஆனால், பெரும்பாலானோர் செய்யும் பெரிய தவறு இதுதான். ஃபிரிட்ஜின் கதவுப் பகுதியை நாம் அடிக்கடி திறந்து மூடுவதால், அங்கு வெப்பநிலை சீராக இருக்காது. இந்த வெப்பநிலை மாற்றங்கள் முட்டையின் தரத்தை விரைவாகக் கெடுத்துவிடும். எனவே, முட்டைகளை ஃபிரிட்ஜின் உள்ளே, நடுப்பகுதியிலோ அல்லது கீழ்ப் பகுதியிலோ, மற்ற உணவுப் பொருட்களிலிருந்து சற்றுத் தள்ளி, அதன் அசல் அட்டைப்பெட்டியுடனே வைப்பதுதான் சிறந்தது. அட்டைப்பெட்டி முட்டையை உடைவதிலிருந்தும், மற்ற வாசனைகளை உறிஞ்சுவதிலிருந்தும் பாதுகாக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;LPG Cylinder : உங்க கேஸ் சிலிண்டர் 2 மாதம் வரணுமா? பலருக்கும் தெரியாத சூப்பர் டிப்ஸ் இதோ!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பொதுவாக, ஃபிரிட்ஜில் வைத்த முட்டைகளை 3 முதல் 5 வாரங்கள் வரை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். அதாவது, ஒரு மாதத்திற்கும் மேலாகவே! ஆனால், நாம் கடையில் முட்டை வாங்கும்போதே, சில முட்டைகளில் உற்பத்தி தேதி அல்லது காலாவதி தேதி அச்சிடப்பட்டிருக்கும். அந்த தேதிகளை சரிபார்ப்பது முக்கியம். உற்பத்தி செய்யப்பட்ட தேதியிலிருந்து குளிர்சாதனப் பெட்டியில் சரியாக வைக்கப்பட்டால், முட்டைகள் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். &quot;இந்த முட்டைகள் எப்போது வாங்கினோம்?&quot; என்று மறந்துவிடும் முன், புதிதாக வாங்கும் முட்டைகளை பழைய முட்டைகளுக்குப் பின்னால் வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது மிக நல்லது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Kitchen Hacks : லூசான மிக்ஸி ஜார் மூடியை வீட்டிலயே ஈசியா சரி பண்றது எப்படி?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&quot;இந்த முட்டை கெட்டுப்போய்விட்டதா?&quot; என்ற சந்தேகம் வந்தால், அதை உடைத்து வீணாக்கத் தேவையில்லை. ஒரு எளிய சோதனை மூலம் அதைக் கண்டறியலாம். ஒரு அகலமான பாத்திரத்தில் குளிர்ந்த நீரை நிரப்பி, முட்டையை மெதுவாக அதில் போடவும். முட்டை பாத்திரத்தின் அடியில் படுத்துக்கொண்டால், அது புத்தம் புதியது. முட்டை கீழ் நோக்கி நின்று, ஒரு முனை சற்று மேலெழும்பினால், அது சில வாரங்கள் பழமையானது, ஆனால் சாப்பிடலாம். முட்டை தண்ணீரின் மேல் மிதந்தால், அது கெட்டுப்போனது. அதைப் பயன்படுத்தவே கூடாது. மிதக்கும் முட்டையில் வாயு உருவாகி, உள்ளே கெட்டுப்போயிருக்கும் என்பதை இது காட்டுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க :&lt;/strong&gt;Vada Curry Recipe : ஹோட்டல் சுவையில் அட்டகாசமான வடகறி செய்வது எப்படி?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முட்டையை சேமிப்பதில் நாம் செய்யும் சில பொதுவான தவறுகள் அதன் தரத்தைப் பெரிதும் பாதிக்கும். முதலாவதாக, முட்டையை ஃபிரிட்ஜில் வைப்பதற்கு முன் கழுவுவது தவறு. முட்டையின் ஓட்டில் ஒரு பாதுகாப்பு அடுக்கு இருக்கும். கழுவினால் அந்த அடுக்கு நீங்கி, பாக்டீரியாக்கள் உள்ளே செல்ல வாய்ப்பு அதிகம். இரண்டாவதாக, அட்டைப்பெட்டியிலிருந்து எடுத்து வேறு பாத்திரத்தில் வைப்பதும் தவறு. முட்டையை அதன் அசல் அட்டைப்பெட்டியிலேயே வைப்பதால், அது பிற உணவுப் பொருட்களின் வாசனையை உறிஞ்சாது. மேலும், முட்டைகளை எப்போது வாங்கினோம் என்பதை அறிய புதிய முட்டைகளை பழைய முட்டைகளுக்குப் பின்னால் வைப்பது நல்லது. இந்த சிறிய மாற்றங்கள், உங்கள் முட்டைகளை நீண்ட நாட்கள் ஃப்ரெஷ்ஷாக வைத்திருக்க உதவும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[life-style]]></category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/are-you-storing-eggs-in-the-fridge-the-right-way-b54hvrv"/>
        </item>
        <item>
            <title><![CDATA[PM ஜன் தன் திட்டத்தில் ரூ.2 லட்சம் கிடைக்குமா? வைரல் மெசேஜின் உண்மை இதுதான்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/pm-jan-dhan-scheme-can-you-really-get-rs2-lakh-here-is-the-truth-behind-the-viral-message-mcu37kb</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/pm-jan-dhan-scheme-can-you-really-get-rs2-lakh-here-is-the-truth-behind-the-viral-message-mcu37kb</guid>
            <pubDate>Fri, 17 Jul 2026 11:04:59 +0530</pubDate>
            <description><![CDATA[PM ஜன் தன் திட்டத்தில் ரூ.2 லட்சம் நிதி உதவி கிடைப்பதாக செய்தியின் உண்மையை விளக்குகிறது இந்த கட்டுரை. உண்மையில் என்னதான் நடக்கிறது நாட்டுல யாருக்கு கிடைக்கும் நோட்டுகள், வாங்க தெரிஞ்சுக்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxq8yp84a300py0yaqcqp4pc,imgname-chatgpt-image-jul-17--2026--11-00-20-am--1--1784266316035.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;PM ஜன் தன் திட்டத்தில் ரூ.2 லட்சம் நிதி உதவி கிடைப்பதாக செய்தியின் உண்மையை விளக்குகிறது இந்த கட்டுரை. உண்மையில் என்னதான் நடக்கிறது நாட்டுல யாருக்கு கிடைக்கும் நோட்டுகள், வாங்க தெரிஞ்சுக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&quot;PM ஜன் தன் திட்டத்தில் ரூ.2 லட்சம் கிடைக்கும்&quot;, &quot;13 முதல் 65 வயதுடைய அனைவருக்கும் நிதி உதவி&quot; என்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இந்த தகவல் உண்மையா? உண்மையில் PMJDY திட்டத்தின் கீழ் என்னென்ன சலுகைகள் கிடைக்கின்றன? வைரலாகும் செய்தியின் உண்மையை தெரிந்துகொள்ளுங்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சமூக வலைதளங்களில், குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் டெலிகிராம் போன்ற தளங்களில் &quot;பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) 2026 திட்டத்தின் கீழ் 13 முதல் 65 வயதுடைய இந்தியர்களுக்கு ரூ.50,000 முதல் ரூ.2 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்படுகிறது&quot; என்ற தகவல் வேகமாக பரவி வருகிறது. இதைப் பார்த்த பலர் உடனடியாக விண்ணப்பிக்க முயற்சித்து வருகின்றனர். ஆனால், இந்த தகவல் உண்மையல்ல. PMJDY என்பது அனைவருக்கும் நேரடியாக பணம் வழங்கும் திட்டம் அல்ல.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;Pradhan Mantri Jan Dhan Yojana (PMJDY) திட்டம், வங்கிக் கணக்கு இல்லாத மக்களை வங்கி சேவைக்குள் கொண்டு வருவதற்காக 2014-ஆம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கும் வங்கிச் சேவைகள் எளிதாக கிடைக்க வேண்டும் என்பதே முக்கிய நோக்கமாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சமூக வலைதளங்களில் பரவும் தகவலின்படி,&lt;/p&gt;&lt;ol&gt; &lt;li&gt;13&ndash;25 வயதினருக்கு ரூ.50,000 முதல் ரூ.90,000&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;25&ndash;65 வயதினருக்கு ரூ.90,000 முதல் ரூ.2,00,000&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;p&gt;என்று பணம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;ஆனால், இந்த தகவலுக்கு எந்த அதிகாரப்பூர்வ ஆதாரமும் இல்லை. மத்திய அரசு இதுபோன்ற அறிவிப்பை வெளியிடவில்லை. எனவே, இது தவறான தகவலாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்குபவர்களுக்கு,&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;ஜீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்கு&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;ரூபே டெபிட் கார்டு&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;தகுதியுள்ளவர்களுக்கு விபத்து காப்பீட்டு பாதுகாப்பு&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் ஓவர்டிராஃப்ட் வசதி&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;அரசு மானியத் தொகைகளை நேரடியாக வங்கிக் கணக்கில் பெறும் வசதி&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;போன்ற பல நிதிச் சேவைகள் வழங்கப்படுகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பல போலி இணையதளங்கள், அரசு இணையதளம் போல தோற்றமளிக்கும் முகவரிகளை பயன்படுத்தி மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றன. அவற்றில்,&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;ஆதார் எண்&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;PAN விவரம்&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;வங்கி கணக்கு எண்&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;ATM தகவல்கள் OTP&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;போன்ற தகவல்களை கேட்கலாம். இந்த விவரங்களை பகிர்ந்தால் நிதி மோசடிக்கு ஆளாகும் அபாயம் உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;PM ஜன் தன் திட்டம் தொடர்பான தகவல்களை தெரிந்துகொள்ள,&lt;/p&gt;&lt;p&gt;PMJDY அதிகாரப்பூர்வ இணையதளம் அருகிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மூலமாக மட்டுமே தகவல்களை பெற வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சமூக வலைதளங்களில் வரும் ஒவ்வொரு தகவலையும் உடனே நம்ப வேண்டாம். குறிப்பாக &quot;இன்றே விண்ணப்பியுங்கள்&quot;, &quot;உடனே ரூ.2 லட்சம் கிடைக்கும்&quot;, &quot;இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்&quot; போன்ற செய்திகளை கவனமாக அணுக வேண்டும். தெரியாத இணையதளங்களில் தனிப்பட்ட விவரங்களை பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;PM ஜன் தன் திட்டத்தில் அனைவருக்கும் ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கப்படுகிறது என்ற தகவல் தவறானது. இந்த திட்டத்தின் நோக்கம் வங்கிச் சேவைகளை அனைவருக்கும் கொண்டு செல்வதே தவிர, நேரடியாக பணம் வழங்குவது அல்ல. எனவே, அதிகாரப்பூர்வ அரசு அறிவிப்புகளை மட்டுமே நம்புங்கள். சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை சரிபார்க்காமல் பகிர வேண்டாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[business]]></category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/pm-jan-dhan-scheme-can-you-really-get-rs2-lakh-here-is-the-truth-behind-the-viral-message-mcu37kb"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Geyser Maintenance Tips: பாத்ரூம் வாட்டர் ஹீட்டர் பயன்படுத்துறீங்களா? இந்த தப்ப மட்டும் செஞ்சிடாதீங்க! உயிருக்கே ஆபத்து ஆகலாம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/how-to-use-a-bathroom-geyser-safely-major-hidden-risks-explained-25nld0r</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/how-to-use-a-bathroom-geyser-safely-major-hidden-risks-explained-25nld0r</guid>
            <pubDate>Fri, 17 Jul 2026 11:04:22 +0530</pubDate>
            <description><![CDATA[Water Heater Maintenance Tips: குளிர்காலத்தில் வாட்டர் ஹீட்டர் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், குளிக்கும்போது ஸ்விட்சை ஆன் செய்வது போன்ற தவறுகளால் ஏற்படும் ஆபத்துகளை இந்த செய்தி விளக்குகிறது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01k8tjnyhsxm9yk15gnqvav2w4,imgname-geyser-water-heater-under-3000-3-1761828600376.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Water Heater Maintenance Tips: குளிர்காலத்தில் வாட்டர் ஹீட்டர் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், குளிக்கும்போது ஸ்விட்சை ஆன் செய்வது போன்ற தவறுகளால் ஏற்படும் ஆபத்துகளை இந்த செய்தி விளக்குகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தற்போதைய காலக்கட்டத்தில் கிராமம் முதல் நகரம் வரை பெரும்பாலானா வீடுகளில் வாட்டர் ஹீட்டர் (Geysers) பயன்படுத்தப்பட்டு வருகிறது. வாட்டர் ஹீட்டர் வந்த பிறகு குளிர்காலத்தில் வெந்நீரில் குளிப்பது எளிதாக மாறிவிட்டது என்றாலும், அதை நாம் பயன்படுத்தும் போது கவனமாக இல்லை என்றால் உயிருக்கே ஆபத்து ஏற்படும். எனவே, இந்த செய்தியில் பாத்ரூமில் இருக்கும் வாட்டர் ஹீட்டர் சரியாக பயன்படுத்துவது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பெரும்பாலானோர் செய்யும் மிகப்பெரிய தவறு என்னவென்றால் குளிக்கும்போது வாட்டர் ஹீட்டர் ஆன் செய்து குளிப்பது தான். இதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். தண்ணீர் சூடான பிறகு ஹீட்டரை ஆப் செய்து குளிப்பது தான் சரியான வழிமுறையாகும். மேலும் இப்படி செய்தால் மின்சாரத்தையும் மிச்சப்படுத்தலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நீங்கள் உங்களது குளியலறையில் வாட்டர் ஹீட்டர் வைக்கிறீர்கள் என்றால் அங்கு காற்றோட்டமாக இருப்பது ரொம்ப முக்கியம். ஏனெனில் சில சமயங்களில் வாட்டர் ஹீட்டரில் இருந்து வாயுகசிவு ஏற்படும். அப்படி ஏற்படும் போது குளியலறையில் காற்றோட்டம் இல்லை என்றால் உள்ளே குளிக்கும் போது மூச்சுத் திணறல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே குளியலறை ஜன்னலை எப்போதும் திறந்து வையுங்கள் அல்லது ஒரு எக்ஸாட் ஃபேனை பொருத்த வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சூடான நீரை விரைவில் பெற ஹீட்டர் வெப்பநிலையை அதிகமாக்குகிறார்கள். ஆனால் இப்படி செய்வது ரொம்பவே ஆபத்தானது. ஏனெனில் சில சமயங்களில் இதனால் வாட்டர் ஹீட்டர் வெடிக்கும் அபாயம் உள்ளது. எனவே வாட்டர் ஹீட்டரின் வெப்பநிலையை எப்போதுமே நடுநிலையில் வைப்பதே சிறந்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வாட்டர் ஹீட்டரில் தண்ணீர் கசிந்தாலோ அல்லது ஹீட்டரை ஆன் செய்யும்போது தீப்பொறி ஏற்பட்டாலும் உடனே அதை சரி செய்ய வேண்டும். அப்போது தான் ஆபத்துகள் ஏதேனும் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குளியலறையில் வாட்டர் ஹீட்டர் வைக்கப் போகிறீர்கள் என்றால் அதை எப்போதும் மேற்பரப்பில் பொருத்துங்கள். அப்போதுதான் குளிக்கும் போது வாட்டர் ஹீட்டர் மேல் தண்ணீர் படாது. ஒருவேளை தண்ணீர் வாட்டர் ஹீட்டர் மேற்பட்டால் அது விரைவில் சேதமடையும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[life-style]]></category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/how-to-use-a-bathroom-geyser-safely-major-hidden-risks-explained-25nld0r"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Mobile Phone : இரவு தூங்கும்போது செல்போனை தலையணைக்கு அருகில் வைக்கிறீர்களா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/technology/is-it-safe-to-keep-your-mobile-phone-near-your-pillow-while-sleeping-lkxzo2f</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/technology/is-it-safe-to-keep-your-mobile-phone-near-your-pillow-while-sleeping-lkxzo2f</guid>
            <pubDate>Fri, 17 Jul 2026 10:50:58 +0530</pubDate>
            <description><![CDATA[is it safe to keep your mobile phone near your pillow while sleeping : இரவு தூங்கும் போது பலரும் செல்போனை தங்கள் தலையணைக்கு அருகில் வைத்து உறங்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். இது சாதாரணமாக தோன்றலாம். ஆனால், இது பெரும் தீங்கை தருவிக்கக்கூடும்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxq84pvrqbjw9q5v8fx2sztt,imgname-gemini-generated-image-2pnvjb2pnvjb2pnv-1784265464696.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;is it safe to keep your mobile phone near your pillow while sleeping : இரவு தூங்கும் போது பலரும் செல்போனை தங்கள் தலையணைக்கு அருகில் வைத்து உறங்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். இது சாதாரணமாக தோன்றலாம். ஆனால், இது பெரும் தீங்கை தருவிக்கக்கூடும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உலக அளவில் பெரும்பாலான மக்கள், குறிப்பாக இளைஞர்கள், இரவில் தங்கள் செல்போனை தலையணைக்கு அடியிலோ அல்லது அருகிலோ வைத்துக்கொண்டு தூங்குவதை ஒரு சாதாராண வழக்கமாக கொண்டுள்ளனர். பல ஆய்வுகளின்படி, தோராயமாக 70% பெரியவர்கள் தங்கள் செல்போனை படுக்கைக்கு அருகிலேயே வைத்திருக்கிறார்கள். இது உடனடி வசதி, அலாரம், அல்லது எமர்ஜென்சிக்கான ஒரு முன் ஏற்பாடு என பல காரணங்களுக்காக செய்யப்படுகிறது. ஆனால், இந்த பழக்கம் எளிதானதாகத் தோன்றினாலும், நீண்டகால நோக்கில் நம் உடல் ஆரோக்கியத்திற்கு சில பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இந்த டிஜிட்டல் உலகில், இந்த பழக்கத்தின் உண்மையான விளைவுகளைப் பற்றி அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். இது நம் தூக்கத்தின் தரத்தை வெகுவாகக் குறைக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க :&lt;/strong&gt; Mobile Tower Radiation : உங்கள் வீட்டின் அருகில் செல்போன் டவர் இருந்தால் ஆபத்தா?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;செல்போன்களில் இருந்து வெளிப்படும் நீல ஒளி (Blue Light) மெலடோனின் உற்பத்தியைக் குறைத்து, உடலின் இயற்கையான தூக்க சுழற்சியைக் கடுமையாகப் பாதிக்கிறது. மெலடோனின் என்பது தூக்கத்தைத் தூண்டும் ஹார்மோன் ஆகும். இரவில் செல்போன் திரையைப் பார்ப்பது மூளையை விழித்திருக்கச் செய்து, ஆழ்ந்த உறக்கத்தைத் தடுக்கிறது. சராசரியாக, ஒரு நபர் இரவில் 8 மணி நேர உறக்கத்திற்குப் பதிலாக, செல்போன் பயன்பாட்டினால் ஒரு மணி நேர தூக்கத்தை இழக்க நேரிடும். தொடர்ந்து வரும் அறிவிப்புகள், மெசேஜ்கள் மற்றும் அழைப்புகள் தூக்கத்தைக் கலைத்து, தூக்கத்தின் தரத்தை மேலும் சிதைக்கின்றன. இது காலப்போக்கில் மன அழுத்தம், சோர்வு மற்றும் கவனக்குறைவு போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு போதுமான தூக்கம் அவசியம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;Satellite Phone : சிக்னல் கிடைக்கலேனாலும் இந்த போன்ல பேசலாம்! BSNL-ன் புதிய சேட்டிலைட் போன்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;செல்போன்கள் எலக்ட்ரோமேக்னடிக் கதிர்வீச்சை (EMF) வெளியிடுகின்றன, இது குறைந்த அளவில் இருந்தாலும், நீண்ட நேரம் நம் உடலுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும்போது கவலைகளை எழுப்புகிறது. உலக சுகாதார நிறுவனம் (WHO) இந்த கதிர்வீச்சை &quot;மனிதர்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய சாத்தியமுள்ள காரணி&quot; (possibly carcinogenic to humans) என வகைப்படுத்தியுள்ளது. இந்த கதிர்வீச்சு மூளை செல்கள் மற்றும் டி.என்.ஏ-வை பாதிக்கலாம் என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தலையணைக்கு அருகில் செல்போனை வைப்பதால், நீண்ட நேரம் இந்த கதிர்வீச்சு நம் உடலை நேரடியாகத் தாக்கக்கூடும். இது தலைவலி, சோர்வு மற்றும் தூக்கமின்மை போன்ற உடனடி பிரச்சனைகளையும், எதிர்காலத்தில் மிகவும் தீவிரமான உடல்நலக் கோளாறுகளையும் ஏற்படுத்தக்கூடும். நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க :&lt;/strong&gt; LPG : இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ உங்க ஹோஸ் பைப்பை உடனே மாத்திடுங்க!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆழ்ந்த மற்றும் ஆரோக்கியமான உறக்கத்தைப் பெற சில எளிய மாற்றங்களைச் செய்யலாம். செல்போனை உங்கள் படுக்கையறையிலிருந்து விலக்கி, வேறு அறையில் சார்ஜ் செய்யுங்கள். அதற்கு பதிலாக, வழக்கமான அலாரம் கடிகாரத்தைப் பயன்படுத்துங்கள். படுக்கைக்குச் செல்வதற்கு குறைந்தது 30 நிமிடங்களுக்கு முன்பே, அனைத்து எலக்ட்ரானிக் சாதனங்களிலிருந்தும் விலகி இருப்பது நல்லது. செல்போனை 'ஏரோப்ளேன் மோட்' அல்லது 'டூ நாட் டிஸ்டர்ப்' மோடில் வைத்து, குறுக்கீடுகளைத் தவிர்க்கலாம். தினமும் இந்த பழக்கத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம், உங்கள் மனமும் உடலும் ஓய்வெடுக்கத் தயாராகும். இது உங்கள் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தி, மறுநாள் காலை புத்துணர்ச்சியுடன் எழுவதற்கு உதவும். சிறுசிறு மாற்றங்கள் பெரிய அளவில் பலனளிக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க : &lt;/strong&gt;ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால் இன்று ரூ.87 லட்சம்! 3 ஆண்டுகளில் இப்படியும் லாபம் கிடைக்குமா?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;செல்போனை தூங்கும் போது அருகில் வைப்பது என்பது ஒரு வகை தொழில்நுட்ப அடிமைத்தனத்தின் அறிகுறியாகும். இதைத் தவிர்ப்பது உடல் நலத்திற்கு மட்டுமல்லாமல், மன நலத்திற்கும் நல்லது. செல்போனை ஒதுக்கி வைத்து தூங்குவதன் மூலம், நீங்கள் டிஜிட்டல் உலகத்திலிருந்து விலகி, உங்களுக்கான நேரத்தைப் பெறுகிறீர்கள். இது மன அழுத்தத்தைக் குறைத்து, சிந்தனைத் தெளிவை அதிகரிக்கும். மேலும், இது குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் நேரத்தைச் செலவிட அதிக வாய்ப்புகளை உருவாக்கி, சமூக உறவுகளை மேம்படுத்தும். ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு மணிநேரமாவது செல்போன் பயன்பாட்டைத் தவிர்ப்பது போன்ற டிஜிட்டல் டிடாக்ஸ் பழக்கத்தை வளர்த்துக்கொள்வது, புதிய மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு வழிவகுக்கும். இது நிச்சயம் உங்கள் வாழ்க்கையை மாற்றும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[technology]]></category>
            <dc:creator>Arun Mozhi Varman</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/technology/is-it-safe-to-keep-your-mobile-phone-near-your-pillow-while-sleeping-lkxzo2f"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Mahalakshmi Raja Yoga : மகாலட்சுமி ராஜயோகத்தால் குபேர அருள் பெறப்போகும் 4 ராசிகள்... உங்க ராசியும் இதில் இருக்கா?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/mahalakshmi-raja-yoga-2026-good-fortune-awaits-these-4-zodiac-signs-fbbo8oi</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/mahalakshmi-raja-yoga-2026-good-fortune-awaits-these-4-zodiac-signs-fbbo8oi</guid>
            <pubDate>Fri, 17 Jul 2026 10:45:15 +0530</pubDate>
            <description><![CDATA[Mahalakshmi Raja Yoga : சுப கிரகங்கள் செவ்வாயுடன் இணைவதால் மகாலட்சுமி யோகம் உருவாகும். இந்த ராஜ யோகம் சில ராசிகளுக்கு அளவற்ற நன்மைகளை வழங்கும். அது எந்தெந்த ராசிகள் என்பதை பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxq7nhczwjghbfx6ac3tmv8v,imgname-astrology--18--1784264967583.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Mahalakshmi Raja Yoga : சுப கிரகங்கள் செவ்வாயுடன் இணைவதால் மகாலட்சுமி யோகம் உருவாகும். இந்த ராஜ யோகம் சில ராசிகளுக்கு அளவற்ற நன்மைகளை வழங்கும். அது எந்தெந்த ராசிகள் என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வேத ஜோதிடத்தில் செவ்வாய் தைரியம், துணிச்சல், ஆற்றல் மற்றும் செயல்திறனை குறிக்கும் முக்கிய கிரகமாக கருதப்படுகிறது. தற்போது மிதுன ராசியில் பயணம் செய்து வரும் செவ்வாய், ஆகஸ்ட் 8-ம் தேதி அதிகாலை 3.48 மணிக்கு மிதுன ராசியில் சந்திரனுடன் இணைகிறது. இந்த அரிய கிரகச் சேர்க்கையால் 'மகாலட்சுமி ராஜயோகம்' உருவாகிறது. ஜோதிட நம்பிக்கைகளின்படி, இந்த யோகம் சுமார் இரண்டரை நாட்கள் தாக்கத்தை ஏற்படுத்தும். அனைத்து ராசியினருக்கும் இதன் பலன்கள் கிடைத்தாலும், குறிப்பாக நான்கு ராசிக்காரர்களுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் மற்றும் அதிர்ஷ்ட வாய்ப்புகள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகம் மிகுந்த சாதகமான காலத்தை உருவாக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு எதிர்பார்த்ததை விட அதிக பலன் கிடைக்கலாம். தொழில் மற்றும் வேலை தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். பதவி உயர்வு அல்லது புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும் சாத்தியம் உள்ளது. முன்னதாக செய்த முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரக்கூடும். பொருளாதார நிலை வலுப்பெறும். நிலுவையில் இருந்த பணம் கைக்கு வரும் வாய்ப்பும் உள்ளது. கடன்களை அடைக்கும் சூழ்நிலை உருவாகி, சேமிப்பு அதிகரிக்கக்கூடும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மகர ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பில் புதிய முன்னேற்றங்கள் உருவாகும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கலாம். தொழில் செய்பவர்கள் விரிவாக்கம் அல்லது லாப உயர்வை காணலாம். செல்வாக்கு மிக்க நபர்களின் ஆதரவு கிடைக்கும். பரம்பரை சொத்து தொடர்பான நல்ல தகவல்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தந்தையுடனான உறவு மேலும் வலுப்பெறலாம். திடீர் பணவரவுகள் கிடைக்கும் சாத்தியமும் காணப்படுகிறது. புதிய வேலைக்கு மாற நினைப்பவர்களுக்கு இது சாதகமான காலமாக இருக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் வருமான உயர்வை ஏற்படுத்தும். வெளிநாடு தொடர்பான முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் கிடைக்கலாம். வேலை செய்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு அதிகரிக்கும். வெளிநாட்டில் கல்வி அல்லது வேலை வாய்ப்புக்காக காத்திருப்பவர்களின் முயற்சிகள் வெற்றி பெறலாம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஆசைகள் நிறைவேற வாய்ப்பு உள்ளது. பல்வேறு வழிகளில் பணவரவு அதிகரித்து, சேமிப்பு திறனும் உயரும். குடும்ப வாழ்க்கையிலும் மகிழ்ச்சி நிலவும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கன்னி ராசிக்காரர்களுக்கு புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். மாணவர்களுக்கு வெளிநாட்டு கல்வி தொடர்பான நல்ல செய்திகள் கிடைக்கலாம். திட்டமிட்ட பணிகள் வெற்றிகரமாக நிறைவேறும். தொழிலதிபர்களுக்கு புதிய கூட்டாளிகள் மற்றும் வணிக விரிவாக்க வாய்ப்புகள் அமையும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடும் சூழல் உருவாகும். தன்னம்பிக்கை அதிகரித்து, பொருளாதார வளர்ச்சி வலுப்பெறும்&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[astrology]]></category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/mahalakshmi-raja-yoga-2026-good-fortune-awaits-these-4-zodiac-signs-fbbo8oi"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Income Tax: வருமானவரி தாக்கல்.! இப்படி செஞ்சா அதிக ரிட்டன்ஸ் கிடைக்கும்.! வரி பிடிப்பே இருக்காது.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/income-tax-file-your-itr-the-right-way-get-maximum-tax-refund-reduce-your-tax-burden-legally-r488ayr</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/income-tax-file-your-itr-the-right-way-get-maximum-tax-refund-reduce-your-tax-burden-legally-r488ayr</guid>
            <pubDate>Fri, 17 Jul 2026 10:35:16 +0530</pubDate>
            <description><![CDATA[வருமானவரி தாக்கல் செய்யும் போது சரியான வரி முறையைத் தேர்ந்தெடுத்து, 80C போன்ற அனைத்து கழிவுகளையும் பயன்படுத்தி வரியை எவ்வாறு சட்டப்படி சேமிப்பது என்பதை இந்த கட்டுரை விளக்குகிறது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxq7d8w10q63kdegggv2wbz8,imgname-chatgpt-image-jul-17--2026--10-29-57-am--1--1784264696704.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;வருமானவரி தாக்கல் செய்யும் போது சரியான வரி முறையைத் தேர்ந்தெடுத்து, 80C போன்ற அனைத்து கழிவுகளையும் பயன்படுத்தி வரியை எவ்வாறு சட்டப்படி சேமிப்பது என்பதை இந்த கட்டுரை விளக்குகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வருமானவரி தாக்கல் (Income Tax Return - ITR) செய்யும் காலம் வந்துவிட்டால், பெரும்பாலானோருக்கு ஒரு கேள்விதான் இருக்கும். &quot;எப்படி சட்டப்படி வரியை குறைக்கலாம்? அதிக ரிட்டர்ன்ஸ் பெற முடியுமா?&quot; என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும். உண்மையில், சரியான திட்டமிடலுடன் வருமானவரி தாக்கல் செய்தால் தேவையற்ற வரி செலுத்துவதைத் தவிர்க்கலாம். அதே நேரத்தில், அதிகமாக பிடிக்கப்பட்ட வரியையும் (TDS) ரிட்டர்ன்ஸாகப் பெறலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வரி தாக்கல் செய்யும் முன் முதலில் நீங்கள் எந்த வரி முறையை (New Tax Regime அல்லது Old Tax Regime) தேர்வு செய்வது உங்களுக்கு லாபம் என்பதை கணக்கிட வேண்டும். சம்பளம் மட்டுமே பெறுபவர்கள், அதிக முதலீடு அல்லது கழிவுகள் (Deductions) இல்லாதவர்கள் புதிய வரி முறையில் பயன் அடையலாம். ஆனால் PPF, ELSS, வாழ்க்கை காப்பீடு, வீட்டு கடன் போன்ற முதலீடுகள் அதிகமாக இருந்தால் பழைய வரி முறை சிறந்ததாக இருக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சம்பள வருமானம் மட்டுமல்லாமல் வங்கி வட்டி, Fixed Deposit வட்டி, வாடகை வருமானம், பங்குச் சந்தை லாபம், மியூச்சுவல் ஃபண்ட் லாபம் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் சரியாகக் குறிப்பிட வேண்டும். இதை மறைத்தால் பின்னர் வருமான வரித்துறையிடம் இருந்து நோட்டீஸ் வர வாய்ப்பு உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வரி தாக்கல் செய்வதற்கு முன் Form 26AS மற்றும் Annual Information Statement (AIS) ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். இதில் உங்கள் பெயரில் பிடிக்கப்பட்ட TDS, வங்கி வட்டி, முதலீட்டு விவரங்கள் உள்ளிட்ட தகவல்கள் இருக்கும். இவை ITR-ல் உள்ள தகவல்களுடன் பொருந்துகிறதா என்பதை உறுதி செய்வது மிகவும் முக்கியம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;ul&gt; &lt;li&gt;பழைய வரி முறையைத் தேர்வு செய்பவர்கள் வருமான வரிச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் கழிவுகளைப் பெறலாம்.&lt;/li&gt; &lt;li&gt;80C &ndash; PPF, ELSS, EPF, LIC உள்ளிட்ட முதலீடுகள்.&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;80D &ndash; மருத்துவ காப்பீட்டு பிரீமியம்.&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;80G &ndash; அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கிய நன்கொடை.&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;வீட்டுக் கடன் வட்டி உள்ளிட்ட தகுதியான சலுகைகளையும் மறக்காமல் பயன்படுத்த வேண்டும்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;img&gt;&lt;p&gt;பலருக்கு நிறுவனங்கள் அல்லது வங்கிகள் தேவைக்கு அதிகமாக TDS பிடித்திருக்கும். வருமானவரி தாக்கல் செய்யாமல் விட்டால் அந்த தொகையை திரும்பப் பெற முடியாது. சரியான தகவல்களுடன் ITR தாக்கல் செய்தால், உங்களுக்கு உரிய ரீஃபண்ட் நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ITR-1, ITR-2, ITR-3 போன்ற பல்வேறு படிவங்கள் உள்ளன. உங்கள் வருமானத்தின் தன்மைக்கு ஏற்ப சரியான படிவத்தை தேர்வு செய்வது அவசியம். தவறான படிவத்தில் தாக்கல் செய்தால் மீண்டும் திருத்தம் செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கடைசி நேரத்தில் வருமானவரி தாக்கல் செய்யும்போது இணையதள நெரிசல், ஆவணப் பிழைகள், OTP தாமதம் போன்ற சிக்கல்கள் ஏற்படலாம். எனவே முன்கூட்டியே தாக்கல் செய்தால் தவறுகளைத் திருத்தவும் போதுமான நேரம் கிடைக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;E-Verification செய்ய மறக்காதீர்கள்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;ITR தாக்கல் செய்த பிறகு E-Verification செய்வது கட்டாயம். இதை செய்யாமல் விட்டால் தாக்கல் செய்யப்பட்ட வருமானவரி கணக்கு செல்லுபடியாக கருதப்படாது. ஆதார் OTP, நெட் பேங்கிங் அல்லது வங்கி கணக்கு மூலம் இதை எளிதாக முடிக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வருமானவரி தாக்கல் என்பது வெறும் சட்டப்பூர்வ கடமை மட்டுமல்ல; சரியான திட்டமிடலின் மூலம் பணத்தை சேமிக்கவும் உதவும் ஒரு வாய்ப்பாகும். வருமான விவரங்களை முழுமையாக பதிவு செய்து, பொருத்தமான வரி முறையைத் தேர்வு செய்து, கிடைக்கும் அனைத்து சலுகைகளையும் பயன்படுத்தினால் தேவையற்ற வரி செலுத்துவதைத் தவிர்க்கலாம். அதே நேரத்தில், அதிகமாக பிடிக்கப்பட்ட TDS-ஐ ரிட்டர்ன்ஸாகப் பெற்று உங்கள் நிதி மேலாண்மையை மேலும் வலுப்படுத்தலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[business]]></category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/income-tax-file-your-itr-the-right-way-get-maximum-tax-refund-reduce-your-tax-burden-legally-r488ayr"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Indian Railways: சென்னை டூ ஹைதராபாத் வெறும் 3 மணி நேரம் தான்! புல்லட் ரயில் குறித்து மாஸ் அப்டேட்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/indian-railways-bullet-train-chennai-to-hyderabad-travel-time-just-3-hours-kvsegx2</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/indian-railways-bullet-train-chennai-to-hyderabad-travel-time-just-3-hours-kvsegx2</guid>
            <pubDate>Fri, 17 Jul 2026 10:21:22 +0530</pubDate>
            <description><![CDATA[Indian Railways: இந்தியாவின் புல்லட் ரயில் திட்டம் குறித்து மாஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. புல்லட் ரயில் மூலம் சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு வெறும் 3 மணி நேரத்தில் சென்று விட முடியும்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kvda9ty37y3t46m166ys8rk9,imgname-bullet-train-1781784701891.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Indian Railways: இந்தியாவின் புல்லட் ரயில் திட்டம் குறித்து மாஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. புல்லட் ரயில் மூலம் சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு வெறும் 3 மணி நேரத்தில் சென்று விட முடியும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவில் ரயில் போக்குவரத்து உயிர்நாடியாக உள்ளது. நமது நாட்டில் சாதாரண எக்ஸ்பிரஸ் ரயில்கள் முதல் வந்தே பாரத் வரையிலான அதிவேக சொகுசு ரயில்கள் வரை இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சீனா, ஜப்பானை போன்று இந்தியாவும் புல்லட் ரயில்களை இயக்க ரெடியாக உள்ளது. இந்தியாவின் முதல் புல்லட் ரயில் மும்பை, அகமதாபாத் இடையே இயக்கப்பட உள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க:&lt;/strong&gt; IRCTC New Beta Website: தட்கல் டிக்கெட் இனி மின்னல் வேகத்தில் புக் செய்யலாம்.. புது வெப்சைட் வந்தாச்சு!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தற்போது ரயிலில் 6 முதல் 7 மணி நேரமும், சாலை மார்க்கமாக 8 முதல் 9 மணி நேரமும் ஆகும் மும்பை - அகமதாபாத் பயணத்தை, வெறும் 2 மணி 7 நிமிடங்களில் முடிக்க முடியும் என்றால் எப்படி இருக்கும்? இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் இதை சாத்தியமாக்க உள்ளது. இத்திட்டத்தின் முழு வழித்தடமும் 2029-க்குள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;இது வெற்றிகரமாக அமையும்பட்சத்தில் சென்னை டூ பெங்களூரு, சென்னை டூ ஹைதராபாத் இடையேயும் புல்லட் ரயில் இயக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதுவும் எதிர்காலத்தில் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் சென்னையில் இருந்து 630 கிமீ தூரம் கொண்ட ஹைதராபத்துக்கு வெறும் 2.30 அல்லது 3 மணி நேரத்தில் சென்று விட முடியும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க: &lt;/strong&gt;Hydrogen Train: இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் வந்தாச்சு! எந்த ரூட்டில் இயக்கம்? என்னென்ன சிறப்பம்சம்?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியாவில் புல்லட் ரயில் செயல்பாட்டுக்கு வந்தால் ஜப்பான், சீனா, பிரான்ஸ் போன்ற அதிவேக ரயில் சேவை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் விரைவில் இணையும். இது நாட்டின் வர்த்தகம் மற்றும் சுற்றுலாத் துறைக்கு மிகப்பெரிய உந்துதலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;முழுத் திட்டமும் 2029-ல் நிறைவடையும் என்றாலும், அதன் முதல் பகுதி இன்னும் சில வருடங்களில் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. குஜராத் மாநிலத்தின் சூரத் மற்றும் பிலிமோரா இடையேயான 50 கி.மீ தூரத்திற்கான புல்லட் ரயில் பாதை 2027-ல் திறக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;10 நிமிடத்தில் 50 கிமீ போகலாம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;தற்போது இந்த 50 கி.மீ தூரத்தைக் கடக்க ரயிலில் சுமார் 45 நிமிடங்கள் முதல் ஒன்றரை மணி நேரம் வரை ஆகிறது. ஆனால், புல்லட் ரயில் சேவை தொடங்கப்பட்ட பிறகு, இந்த பயண நேரம் வெறும் 9 முதல் 10 நிமிடங்களாகக் குறையும் என்பதுதான் இதில் ஆச்சரியமான விஷயம். குஜராத் மாநில மக்கள்தான் இந்த அதிவேக பயணத்தை இந்தியாவில் முதன்முதலில் அனுபவிக்கப் போகிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த புல்லட் ரயில்கள் மணிக்கு 320 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு மற்றும் நேர மேலாண்மைக்குப் புகழ்பெற்ற ஜப்பானின் 'ஷிங்கன்சென்' தொழில்நுட்பம் இத்திட்டத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமை (JICA) இத்திட்டத்திற்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கி வருகிறது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;மொத்தம் 508 கி.மீ நீளமுள்ள இந்த வழித்தடத்தில், இந்திய ரயில்வே வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு பிரம்மாண்டம் நிகழவிருக்கிறது. மும்பை அருகே சுமார் 7 கி.மீ தூரத்திற்கு கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு, அதன் வழியாக புல்லட் ரயில் பயணிக்க உள்ளது. மேலும், நிலம் கையகப்படுத்தும் சிக்கல்களைத் தவிர்க்க, பாதையின் பெரும்பகுதி உயரமான தூண்கள் மீது அமைக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[business]]></category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/indian-railways-bullet-train-chennai-to-hyderabad-travel-time-just-3-hours-kvsegx2"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Siragadikka Aasai : மீனாவை அவமானப்படுத்திய விஜயா... அண்ணாமலை கொடுத்த தரமான பதிலடி]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-july-17-today-episode-vijaya-hurts-meena-annamalai-fires-back-a7eynd0</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-july-17-today-episode-vijaya-hurts-meena-annamalai-fires-back-a7eynd0</guid>
            <pubDate>Fri, 17 Jul 2026 09:53:09 +0530</pubDate>
            <description><![CDATA[Siragadikka Aasai Serial 17 July 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவை குழந்தை விஷயத்தில் அவமானப்படுத்துகிறார் விஜயா. இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்ப்போம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxq4wa8wdrpz4t4vfkqbnwny,imgname-siragadikka-aasai---2026-07-17t094907.471-1784262043932.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Siragadikka Aasai Serial 17 July 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவை குழந்தை விஷயத்தில் அவமானப்படுத்துகிறார் விஜயா. இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவுக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டு, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவரை பரிசோதித்த மருத்துவர் அவருக்கு குழந்தை பெற்றுக் கொள்வதில் சிரமம் இருப்பதாக சொல்லிவிடுகிறார். ஆஸ்பத்திரியில் இருந்து மீனா வீட்டுக்கு கிளம்பும் போது அந்த வழியாக சென்ற விஜயா, அவரை பார்த்துவிடுகிறார். பின்னர் அவர் சென்ற பின்னர் சீதாவிடம் சென்று மீனாவுக்கு என்ன ஆச்சு என விசாரிக்கிறார். அவரும் வயிற்று வலி என சொல்லி சமாளிக்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இன்றைய எபிசோடில் மீனாவையும் முத்துவையும் மருத்துவமனையில் பார்த்துவிட்டு வீட்டுக்கு வரும் விஜயா, பதற்றத்துடன் அனைவரிடமும் அதைப் பற்றி பேச ஆரம்பிக்கிறார். என்ன நடந்தது என்று அண்ணாமலை கவலையுடன் விசாரிக்க, &quot;குழந்தை பிறக்கும் மருத்துவமனையில்தான் மீனாவை பார்த்தேன்&quot; என்று விஜயா கூறுகிறார். அந்த நேரத்தில் வீட்டுக்கு வரும் முத்து, ஏதாவது சந்தேகம் இருந்தால் நேரடியாக எங்களிடமே கேட்க வேண்டியதுதானே என்று விஜயாவிடம் கேள்வி எழுப்புகிறார். ஆனால் விஜயாவின் மனதில் ஓடுவது வேறு.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மனோஜுக்கு முன்பாக மீனா குழந்தை பெற்றுவிடுவாளோ என்ற பொறாமை காரணமாக, மீனாவை காயப்படுத்தும் வகையில் தொடர்ந்து பேசுகிறார். ஏற்கனவே மருத்துவர்கள் கூறிய விஷயத்தால் மனவேதனையில் இருக்கும் மீனா, விஜயாவின் வார்த்தைகளை தாங்க முடியாமல் கண்கலங்குகிறார். இறுதியில் அழுதபடியே தனது அறைக்குள் சென்று விடுகிறார். இதனால் கோபமடைந்த அண்ணாமலை மற்றும் சுருதி, விஜயாவை கடுமையாக கண்டிக்கின்றனர். குடும்பத்தினரின் இந்த எதிர்ப்பால் விஜயாவும் அதிர்ச்சியடைகிறார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மறுபுறம், மனோஜ், ஜோதிடர் மற்றும் சந்தோஷ் ஆகியோர் கனகா வீட்டிற்கு செல்கிறார்கள். மனோஜை பார்த்ததும் கனகா மிகவும் உற்சாகமாக பேச ஆரம்பிக்கிறார். அதேசமயம், கனகாவின் தாய் ஜோதிடரிடம் ரூ.10 லட்சம் கொடுத்து, தனது மகளுக்கும் மாப்பிள்ளைக்கும் விரைவில் சாந்தி முகூர்த்த தேதி குறித்துத் தருமாறு கேட்கிறார். ஜோதிடரும் அமாவாசை நாளை சுப நாளாக கூறி தேதி குறிப்பிடுகிறார். இந்த முடிவு அடுத்தடுத்த எபிசோடுகளில் என்ன மாதிரியான திருப்பத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதற்கிடையில், மனோஜ் ரூ.5 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்து, பணத்தை தயார் செய்து விட்டதாக பெருமையாக பேசுகிறார். ஆனால் அந்த பணம் எங்கிருந்து வந்தது என்ற சந்தேகம் அனைவருக்கும் ஏற்படுகிறது. குறிப்பாக முத்து, இந்தப் பணம் கடனாக வாங்கப்பட்டதோ என்று சந்தேகப்படுகிறார். ஆனால் மனோஜ், &quot;இது என்னுடைய பிசினஸ் ஐடியாவில் வந்த பணம். நான் யாரிடமும் கடன் வாங்கவில்லை&quot; என்று கூறி சமாளிக்கிறார். ஆனால் மனோஜின் இந்த ரகசியம் வெளிச்சத்துக்கு வந்தால், விஜயாவின் நிலை என்ன ஆகும்? குடும்பத்தில் மீண்டும் என்ன பிரச்சினைகள் வெடிக்கப் போகின்றன? என்பதுதான் இனி வரும் எபிசோடுகளின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[television]]></category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/television/siragadikka-aasai-serial-july-17-today-episode-vijaya-hurts-meena-annamalai-fires-back-a7eynd0"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Haircare Tips: மழைக்கால ஈரப்பதத்தால் முடி கொட்டுதா? கூந்தலைப் பாதுகாக்க 5 எளிய டிப்ஸ்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/5-essential-haircare-tips-to-fight-monsoon-humidity-and-frizz-0lyzmgu</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/5-essential-haircare-tips-to-fight-monsoon-humidity-and-frizz-0lyzmgu</guid>
            <pubDate>Fri, 17 Jul 2026 09:25:25 +0530</pubDate>
            <description><![CDATA[மழைக்காலம் வந்தாலே காற்றில் ஈரப்பதம் (Humidity) அதிகரித்துவிடும். இதனால் தலைமுடி சீக்கிரமாகவே வறண்டு, சிக்கு விழுந்து, பொலிவிழந்து காணப்படும். இந்த பருவமழைக் காலத்தில் உங்கள் கூந்தலை அழகாகவும் ஆரோக்கியமாகவும் பராமரிக்க சில எளிய வழிகள்:]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxq32sv1s3twypjzabe1y3br,imgname-haircare--1--1784260159328.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;மழைக்காலம் வந்தாலே காற்றில் ஈரப்பதம் (Humidity) அதிகரித்துவிடும். இதனால் தலைமுடி சீக்கிரமாகவே வறண்டு, சிக்கு விழுந்து, பொலிவிழந்து காணப்படும். இந்த பருவமழைக் காலத்தில் உங்கள் கூந்தலை அழகாகவும் ஆரோக்கியமாகவும் பராமரிக்க சில எளிய வழிகள்:&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஈரப்பதம் காரணமாக உச்சந்தலையில் எண்ணெய் பசை அதிகமாகும். ஆனால், முடியின் நுனிகள் வறண்டு போகும். இதற்கு ரசாயனங்கள் குறைந்த 'சல்பேட் இல்லாத' மென்மையான ஷாம்பூவை பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இது கூந்தலின் இயற்கையான ஈரப்பதத்தை உறிஞ்சாமல், தேவையில்லாத எண்ணெய் மற்றும் அழுக்கை மட்டும் நீக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தலைமுடிக்கு கண்டிஷனர் போடுவது காற்றில் உள்ள ஈரப்பதத்தால் முடி சுருள்வதைத் (Frizz) தடுக்கும் ஒரு அரணாக செயல்படுகிறது. ஷாம்பு போட்ட பிறகு, முடியின் நடுப்பகுதியில் இருந்து நுனி வரை கண்டிஷனர் தடவி அலச வேண்டும். இது கூந்தலை மென்மையாக்கி, சிக்கு விழுவதைக் குறைக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தலைமுடி காற்றில் உள்ள ஈரப்பசையை உறிஞ்சி உப்பிக் கொள்ளாமல் இருக்க 'ஹேர் சீரம்' (Hair Serum) சிறந்த தீர்வு. குளித்து முடித்து தலைமுடி லேசான ஈரப்பதத்துடன் இருக்கும்போது அல்லது காய்ந்த பிறகு, சில துளிகள் சீரம் தடவினால் முடி பளபளப்பாக மாறும். இது முடியின் மேல் ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்குகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மழைக்காலத்தில் முடியை விரித்துப் போடுவதைத் தவிர்ப்பது நல்லது. லேசான பின்னல், கொண்டை அல்லது போனிடெயில் போன்ற ஹேர் ஸ்டைல்களை தேர்வு செய்யலாம். இதனால் கூந்தல் காற்றில் உள்ள ஈரப்பதத்தோடு நேரடியாகத் தொடர்பு கொள்வது குறைந்து, முடி உடைவது மற்றும் சிக்கு ஏற்படுவது தடுக்கப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஸ்ட்ரெய்ட்னர் (Straighteners), கர்லர் (Curling irons) அல்லது ப்ளோ டிரையர் போன்ற வெப்பமூட்டும் கருவிகளை இந்த காலத்தில் அதிகமாகப் பயன்படுத்த வேண்டாம். இது முடியை மேலும் பலவீனமாக்கிவிடும். இயற்கையான காற்றிலேயே முடியை உலர வைப்பது நல்லது. தவிர்க்க முடியாத பட்சத்தில், வெப்பத்தைக் குறைத்து 'ஹீட் ப்ரொடெக்டிவ்' ஸ்ப்ரே பயன்படுத்திவிட்டு உபயோகிக்கலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[life-style]]></category>
            <dc:creator>Priya Velan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/5-essential-haircare-tips-to-fight-monsoon-humidity-and-frizz-0lyzmgu"/>
        </item>
        <item>
            <title><![CDATA[அப்படியா! வேலை செய்வது போல் நடிக்கும் Gen Z ஊழியர்கள்?! அலுவலகங்களில் அதிகரிக்கும் புதிய டிரெண்ட்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/task-masking-why-gen-z-employees-are-pretending-to-work-the-viral-office-trend-explained-imimea4</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/task-masking-why-gen-z-employees-are-pretending-to-work-the-viral-office-trend-explained-imimea4</guid>
            <pubDate>Fri, 17 Jul 2026 09:15:43 +0530</pubDate>
            <description><![CDATA[Gen Z தலைமுறையினரிடையே பேசப்படும் "Task Masking" என்ற புதிய டிரெண்ட் நிறுவனங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது உண்மையில் என்ன? ஏன் இப்படிச் செய்கிறார்கள்? இதனால் நிறுவனங்களுக்கும் ஊழியர்களுக்கும் என்ன தாக்கம் ஏற்படுகிறது என்பதை விரிவாகப் பார்ப்போம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxq2r3zg9ja39v5dd8kr618n,imgname-chatgpt-image-jul-17--2026--08-43-30-am--1--1784259809264.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Gen Z தலைமுறையினரிடையே பேசப்படும் &quot;Task Masking&quot; என்ற புதிய டிரெண்ட் நிறுவனங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது உண்மையில் என்ன? ஏன் இப்படிச் செய்கிறார்கள்? இதனால் நிறுவனங்களுக்கும் ஊழியர்களுக்கும் என்ன தாக்கம் ஏற்படுகிறது என்பதை விரிவாகப் பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பணியிட கலாச்சாரம் வேகமாக மாறி வரும் இந்த காலத்தில், Gen Z (1997&ndash;2012 காலகட்டத்தில் பிறந்தவர்கள்) தலைமுறையினர் குறித்து புதிய விவாதம் ஒன்று சமூக வலைதளங்களிலும், நிறுவனங்களிலும் பரவி வருகிறது. &quot;வேலை செய்வது போல் நடிப்பது&quot; (Task Masking) என்ற புதிய பழக்கம் தற்போது பல நிறுவனங்களில் பேசுபொருளாகியுள்ளது. உண்மையில் அவர்கள் வேலை செய்யாமல் இருப்பதில்லை. ஆனால், வேலை செய்கிறார்கள் என்ற தோற்றத்தை உருவாக்கும் விதத்தில் சில செயல்களை மேற்கொள்வதே இந்த டிரெண்டின் மையக்கரு.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;Task Masking என்பது, ஒரு பணியாளர் உண்மையில் வேலையில் முழுமையாக ஈடுபடாமல் அல்லது உற்பத்தித்திறன் இல்லாமல் இருக்கும்போதும், வெளியில் பார்ப்பவர்களுக்குத் தான் மிகவும் பிஸியாக உழைத்துக் கொண்டிருப்பது போன்ற ஒரு போலித் தோற்றத்தை உருவாக்குவதாகும்.&lt;/p&gt;&lt;p&gt;தங்களைச் சோம்பேறி என்றோ அல்லது திறமையற்றவர் என்றோ மேலாளர்களோ, சக ஊழியர்களோ தவறாக மதிப்பிட்டுவிடக் கூடாது என்ற பயத்தினால் பலர் இந்த உத்தியைக் கையாளுகின்றனர். குறிப்பாக, Hybrid Work (கலப்பு வேலை முறை) மற்றும் நிறுவனங்கள் மீண்டும் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்கும் கலாச்சாரம் அதிகரித்த பிறகு இந்த நடத்தை பரவலாகக் கவனிக்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;சும்மா கணினித் திரையைப் பார்த்துக் கொண்டிருப்பது, தேவையில்லாமல் மின்னஞ்சல்களைத் தட்டச்சு செய்வது அல்லது எப்போதும் பிஸியாக இருப்பது போல் காட்டிக் கொள்வது இதன் அறிகுறிகளாகும். இது நிறுவனத்தின் உண்மையான வளர்ச்சிக்கும், தனிநபரின் மனநலனுக்கும் ஆரோக்கியமற்ற ஒன்றாகக் கருதப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;ul&gt; &lt;li&gt;சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் தகவல்களின்படி, சில Gen Z ஊழியர்கள் பயன்படுத்தும் வழிமுறைகள்.&lt;/li&gt; &lt;li&gt;Mouse-ஐ தொடர்ந்து நகர்த்திக்கொண்டே இருப்பது.&lt;/li&gt; &lt;li&gt;&amp;nbsp;Keyboard-ல் அடிக்கடி Typing செய்வது போல நடிப்பது.&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;அடிக்கடி Tab-களை மாற்றி மாற்றி திறப்பது.&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;Meeting-களில் மிகவும் கவனமாக குறிப்பெடுப்பது போல தோற்றம் காட்டுவது.&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;Excel அல்லது Coding Screen-ஐ திறந்து வைத்துக்கொண்டு வேறு வேலைகளைச் செய்வது.&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;Laptop-ஐ எப்போதும் திறந்தபடியே வைத்திருப்பது.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;இவை அனைத்தும் &quot;நான் மிகவும் பிஸியாக இருக்கிறேன்&quot; என்ற தோற்றத்தை ஏற்படுத்தும் உளவியல் செயல்பாடுகளாக பார்க்கப்படுகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்களின்படி, Software Finder நிறுவனம் நடத்திய ஆய்வில், சுமார் 80% Gen Z ஊழியர்கள் வாழ்க்கையில் ஒரு கட்டத்திலாவது Task Masking செய்ததாக தெரிவித்துள்ளனர் என்று கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அனைவரும் வேலை செய்யாமல் இருப்பதற்காக இதைச் செய்யவில்லை. சிலர் வேலை முடிந்த பிறகும் பிஸியாகத் தெரிய வேண்டும் என்ற அழுத்தம் காரணமாகவும், சிலர் மேலாளர்களின் கண்காணிப்பைத் தவிர்க்கவும் இப்படிச் செய்கிறார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பணியாளர்களின் கருத்துப்படி, இதற்கு பல காரணங்கள் உள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;1. எப்போதும் பிஸியாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;பல நிறுவனங்களில் வேலை முடிந்தாலும், &quot;பிஸியாக இருப்பது&quot; தான் திறமையின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;2. அலுவலக கண்காணிப்பு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;Employee Monitoring Software, Screen Tracking போன்ற தொழில்நுட்பங்கள் அதிகரித்துள்ளதால், பலர் தங்களை எப்போதும் Active-ஆக காட்ட முயல்கிறார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;3. வேலை முடிவை விட நேரம் முக்கியம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;சில நிறுவனங்களில், வேலை எவ்வளவு செய்தோம் என்பதைக் காட்டிலும், எவ்வளவு நேரம் Online-ல் இருந்தோம் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக ஊழியர்கள் கருதுகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;Task Masking அதிகரித்தால், உண்மையான Productivity குறைய வாய்ப்பு உள்ளது. மேலும், குழு ஒத்துழைப்பு பாதிக்கப்படும். உண்மையாக உழைக்கும் ஊழியர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகலாம். மேலாளர்களுக்கும் பணியாளர்களுக்கும் இடையிலான நம்பிக்கை குறையலாம். நிறுவனத்தின் செயல்திறனும் பாதிக்கப்படலாம். இதனால் பல நிறுவனங்கள் தற்போது &quot;Output-based Performance&quot; முறைக்கு மாறி வருகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த தலைமுறையைச் சேர்ந்த பலர், &quot;வேலை முடிவதே முக்கியம்; அலுவலகத்தில் எத்தனை மணி நேரம் அமர்ந்தோம் என்பது முக்கியமல்ல&quot; என்ற கருத்தை முன்வைக்கின்றனர். அவர்களுடைய பார்வையில், தேவையான பணிகளை நேரத்தில் முடித்துவிட்டால், மீதமுள்ள நேரத்தை வேறு பயனுள்ள செயல்களுக்கு பயன்படுத்துவதில் தவறு இல்லை என்கிறார்கள். இதனால், பழைய தலைமுறை மற்றும் புதிய தலைமுறைக்கு இடையே வேலை குறித்த அணுகுமுறையில் பெரிய வித்தியாசம் உருவாகியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மனிதவள (HR) நிபுணர்களின் கருத்துப்படி, Task Masking என்பது தனிநபரின் பிரச்சினை மட்டுமல்ல. அது நிறுவனத்தின் பணியிட கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கிறது. ஊழியர்கள் தங்களை நிரூபிக்க எப்போதும் பிஸியாக இருக்க வேண்டிய சூழல் உருவாகும்போது, இப்படிப்பட்ட பழக்கங்கள் அதிகரிக்கும். அதற்கு பதிலாக, பணியின் தரம், இலக்கு நிறைவு மற்றும் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடு செய்யும் நிறுவனங்களில் இந்த பிரச்சினை குறைவாக இருக்கும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;Task Masking என்பது வெறும் சமூக வலைதள டிரெண்ட் மட்டுமல்ல; இன்றைய பணியிட கலாச்சாரத்தில் உருவாகி வரும் புதிய மாற்றத்தின் அறிகுறியாகவும் பார்க்கப்படுகிறது. ஊழியர்கள் உண்மையில் உழைக்கிறார்களா அல்லது பிஸியாக இருப்பது போலத் தோற்றமளிக்கிறார்களா என்பதை கண்காணிப்பதை விட, அவர்கள் அளிக்கும் முடிவுகள் மற்றும் செயல்திறனுக்கே நிறுவனங்கள் முக்கியத்துவம் அளித்தால் மட்டுமே ஆரோக்கியமான பணிச்சூழலை உருவாக்க முடியும். Gen Z தலைமுறையின் புதிய அணுகுமுறையைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப பணியிட கொள்கைகளை மாற்றுவது நிறுவனங்களுக்கும், ஊழியர்களுக்கும் நீண்ட கால நன்மையை அளிக்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[business]]></category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/task-masking-why-gen-z-employees-are-pretending-to-work-the-viral-office-trend-explained-imimea4"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Weight Loss: உடல் எடையை குறைக்க உதவும் 7 குறைந்த கலோரி உணவுகள்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/webstories/life-style/7-low-calorie-foods-that-can-help-with-weight-loss-bvdss41</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/webstories/life-style/7-low-calorie-foods-that-can-help-with-weight-loss-bvdss41</guid>
            <pubDate>Fri, 17 Jul 2026 09:13:05 +0530</pubDate>
            <description><![CDATA[ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க நீங்க சாப்பிட வேண்டிய குறைந்த கலோரி உணவுகள் என்னென்னனு தெரிஞ்சுக்கலாம் வாங்க.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kfjx5rw0g16wrc0c3b7eszgn,imgname-2-1769087361920.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க நீங்க சாப்பிட வேண்டிய குறைந்த கலோரி உணவுகள் என்னென்னனு தெரிஞ்சுக்கலாம் வாங்க.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[life-style]]></category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/webstories/life-style/7-low-calorie-foods-that-can-help-with-weight-loss-bvdss41"/>
        </item>
        <item>
            <title><![CDATA[OTT : தமிழில் இப்படியொரு அடிபொலியான வெப் சீரிஸா? போலீஸ் vs சைக்கோ கில்லர்... ஒரு நிமிஷம் கூட போரடிக்காது!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/this-tamil-crime-thriller-iru-dhuruvam-web-series-on-ott-will-keep-you-hooked-till-the-end-2e8xph7</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/this-tamil-crime-thriller-iru-dhuruvam-web-series-on-ott-will-keep-you-hooked-till-the-end-2e8xph7</guid>
            <pubDate>Thu, 16 Jul 2026 11:51:13 +0530</pubDate>
            <description><![CDATA[Must Watch Tamil Web Series : தமிழில் ஏராளமான வெப் சீரிஸ் வெளிவந்த வண்ண உள்ளன. அதில் மிகவும் அண்டர்ரேட்டடு ஆன ஒரு வெப் சீரிஸ் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxms6f1vejhapzbz1xa8qk7r,imgname-iru-dhuruvam--2--1784182684731.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Must Watch Tamil Web Series : தமிழில் ஏராளமான வெப் சீரிஸ் வெளிவந்த வண்ண உள்ளன. அதில் மிகவும் அண்டர்ரேட்டடு ஆன ஒரு வெப் சீரிஸ் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;OTT தளங்களில் தினமும் புதிய படங்களும், வெப் சீரிஸ்களும் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. காதல், குடும்பம், ஆக்ஷன், காமெடி, ஹாரர் என பல வகை கதைகள் இருந்தாலும், சமீப காலமாக க்ரைம் த்ரில்லர் வெப் சீரிஸ்கள்தான் ரசிகர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்து வருகின்றன. காரணம், ஒவ்வொரு எபிசோடிலும் வரும் எதிர்பாராத திருப்பங்களும், கடைசி வரை சஸ்பென்ஸை தக்க வைத்திருக்கும் திரைக்கதையும்தான். அந்த வகையில், த்ரில்லர் ரசிகர்கள் தவறாமல் பார்க்க வேண்டிய ஒரு தமிழ் வெப் சீரிஸ் பற்றி தான் இங்கே பார்க்க உள்ளோம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Arulvaan Review : அடிபொலியாக இருந்ததா அருள்நிதியின் அருள்வான்? முழு விமர்சனம் இதோ&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அந்த வெப் சீரிஸ் பெயர் இரு துருவம். அதன் மையக் கதையாக இருப்பவர் போலீஸ் அதிகாரி விக்டர் செல்லதுரை. நேர்மையும் துணிச்சலும் கொண்ட அதிகாரியான அவரின் வாழ்க்கை, அவரது மனைவி திடீரென மாயமான பிறகு முற்றிலும் மாறிவிடுகிறது. அதே நேரத்தில் நகரின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக கொடூரமான கொலைகள் நடக்கத் தொடங்குகின்றன. ஒவ்வொரு கொலையையும் செய்த பிறகும், குற்றவாளி ஒரு மர்மமான துப்பை விட்டுச் செல்வதால், போலீசாருக்கு இது ஒரு சவாலாக மாறுகிறது. அனைத்து ஆதாரங்களும் ஒரே நபரை நோக்கிச் சுட்டிக்காட்ட, இது ஒரு சைக்கோ கொலையாளியின் வேலை என்ற முடிவுக்கு விசாரணை அதிகாரிகள் வருகிறார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Anbe Diana Review : அன்பே டயானா படம் ஒர்த்தா? ஒர்த் இல்லையா? முழு விமர்சனம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பு விக்டர் செல்லதுரைக்கு வழங்கப்படுகிறது. ஆனால், அவரின் ஒவ்வொரு நகர்வையும் முன்கூட்டியே கணிக்கும் அந்த மர்ம கொலையாளி, போலீசாரை தவறான பாதையில் இழுத்துச் செல்ல பல புத்திசாலித்தனமான திட்டங்களை தீட்டுகிறான். இதனால், விசாரணை மேலும் சிக்கலாக மாறுகிறது. உண்மையில் அந்த சைக்கோ கொலையாளி யார்? அவன் தொடர்ந்து கொலை செய்ய என்ன காரணம்? அவரது கடந்த காலத்தில் என்ன நடந்தது? காணாமல் போன விக்டரின் மனைவிக்கு என்ன ஆனது? இறுதியில் குற்றவாளியை போலீசார் எப்படி பிடிக்கிறார்கள்? என்ற கேள்விகளுக்கான பதில்கள்தான் இந்த தொடரின் விறுவிறுப்பான திரைக்கதையாக அமைந்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இயக்குநர் எம். குமரன் இயக்கியுள்ள இந்த வெப் சீரிஸை, அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் A Sign of Life Productions நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இதில் நந்தா துரைராஜ், பிரசன்னா, அப்துல், செபாஸ்டியன் ஆண்டனி, அபிராமி வெங்கடாச்சலம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மொத்தம் 9 எபிசோடுகள் கொண்ட இந்த வெப் சீரிஸ், தொடக்கம் முதல் முடிவு வரை எந்த இடத்திலும் சலிப்பு ஏற்படாமல், பரபரப்பான திரைக்கதையுடன் நகர்கிறது. க்ரைம் த்ரில்லர் கதைகளை விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த OTT தேர்வாக இருக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;'இரு துருவம்' வெப் சீரிஸ் தற்போது சோனி லிவ் OTT தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது. இந்த வெப் சீரிஸ் கடந்த 2019-ம் ஆண்டே ரிலீஸ் ஆகிவிட்டது. ஓடிடி தளங்கள் கொரோனா ஊரடங்கு சமயத்தில் தான் பேமஸ் ஆனதால், இந்த அற்புதமான தமிழ் திரில்லர் வெப் சீரிஸ் பெரியளவில் ரீச் ஆகவில்லை. இருப்பினும் அதனை தற்போது பார்க்கும் பலர் தமிழில் இப்படி ஒரு வெப் சீரிஸா என வியந்து பாராட்டி வருகின்றனர். இந்த வெப் சீரிஸின் இரண்டாம் பாகமும் ரிலீஸ் ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[cinema]]></category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/this-tamil-crime-thriller-iru-dhuruvam-web-series-on-ott-will-keep-you-hooked-till-the-end-2e8xph7"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Arulvaan Review : அடிபொலியாக இருந்ததா அருள்நிதியின் அருள்வான்? முழு விமர்சனம் இதோ]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/review/arulvaan-movie-review-a-powerful-social-drama-on-the-right-to-education-dwtlcht</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/review/arulvaan-movie-review-a-powerful-social-drama-on-the-right-to-education-dwtlcht</guid>
            <pubDate>Fri, 17 Jul 2026 09:08:02 +0530</pubDate>
            <description><![CDATA[Arulvaan Movie Review : கணேஷ் விநாயகம் இயக்கத்தில் அருள்நிதி, ரம்யா பாண்டியன், ஆரவ் ஆகியோர் நடிப்பில் ரிலீஸ் ஆகி உள்ள அருள்வான் திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxq28fcwksd17nc7gs2b05er,imgname-arulvaan--4--1784259296668.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Arulvaan Movie Review : கணேஷ் விநாயகம் இயக்கத்தில் அருள்நிதி, ரம்யா பாண்டியன், ஆரவ் ஆகியோர் நடிப்பில் ரிலீஸ் ஆகி உள்ள அருள்வான் திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கல்வி என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் சமமாக கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமை என்பதை வலியுறுத்தும் சமூகக் கருத்துடன் உருவாகியுள்ள திரைப்படம் தான் 'அருள்வான்'. பொழுதுபோக்கை மட்டுமே இலக்காகக் கொள்ளாமல், சமூகத்தில் இன்னும் நிலவி வரும் கல்வி சமத்துவமின்மையை உணர்வுபூர்வமாக திரையில் பதிவு செய்ய முயன்றிருக்கிறார் இயக்குநர் கணேஷ் விநாயகம். இப்படத்தில் அருள்நிதி, ஆரவ், ரம்யா பாண்டியன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. இதன் விமர்சனத்தை விரிவாக பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;OTT : தமிழில் இப்படியொரு அடிபொலியான வெப் சீரிஸா? போலீஸ் vs சைக்கோ கில்லர்... ஒரு நிமிஷம் கூட போரடிக்காது!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினச் சிறுமி கிருத்திகாவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. உயர்கல்வி கற்று சாதிக்க வேண்டும் என்ற உறுதியான கனவு அவளிடம் இருந்தாலும், பள்ளி, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் அந்தப் பயணம் பல சவால்களை எதிர்கொள்கிறது. அந்தக் குழந்தையின் போராட்டத்தையும், மலைவாழ் மக்களின் அன்றாட வாழ்க்கையையும் அறியும் மாவட்ட ஆட்சியர் முத்துவேல், அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்குகிறார். அந்த முயற்சி வெற்றியடைகிறதா? கிருத்திகாவின் கல்விக் கனவு நனவாகிறதா? என்பதே படத்தின் மீதிக்கதை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மாவட்ட ஆட்சியர் முத்துவேலாக நடித்துள்ள அருள்நிதி, மிகைப்படுத்தப்படாத நடிப்பின் மூலம் கதாபாத்திரத்திற்கு நம்பகத்தன்மையை வழங்கியுள்ளார். ஹீரோயிசத்தை விட கதையின் நோக்கத்தையே முன்னிலைப்படுத்தும் அவரது தேர்வு, படத்தின் மையக் கருத்தை மேலும் வலுப்படுத்துகிறது. அமைதியான நடிப்பும், அளவான உணர்ச்சி வெளிப்பாடும் அவரது கதாபாத்திரத்திற்கு சிறப்பை சேர்க்கின்றன. பழங்குடியின இளைஞராக நடித்துள்ள ஆரவ், தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருப்பது பல காட்சிகளில் வெளிப்படுகிறது. சில இடங்களில் இன்னும் இயல்பாக இருந்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்றினாலும், மொத்தத்தில் திருப்திகரமான நடிப்பை வழங்கியுள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரம்யா பாண்டியன் குறுகிய நேரமே திரையில் தோன்றினாலும் தனது பங்களிப்பை சிறப்பாக பதிவு செய்திருக்கிறார். அதேநேரம், சிறுமி கிருத்திகாவாக நடித்துள்ள குழந்தை நட்சத்திரமே படத்தை தன் தோளில் சுமர்ந்து செல்கிறார். கல்வி மீது கொண்ட ஆசை, குடும்பத்தை விட்டு பிரியும் வேதனை, எதிர்காலம் குறித்த அச்சம் என பல்வேறு உணர்வுகளை மிகவும் இயல்பாக வெளிப்படுத்தி மனதில் இடம்பிடிக்கிறார். காளி வெங்கட், ஜான் விஜய், விடிவி கணேஷ் உள்ளிட்ட துணை நடிகர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களை கதையின் ஓட்டத்திற்கு ஏற்றவாறு சிறப்பாக கையாள்ந்துள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒளிப்பதிவாளர் எம். சுகுமார், மலைப்பகுதியின் இயற்கை அழகையும், பழங்குடியின மக்களின் எளிமையான வாழ்க்கை முறையையும் அழகாக திரையில் பதிவு செய்திருக்கிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் அமைத்துள்ள இசை, குறிப்பாக பின்னணி இசை, பல உணர்ச்சி தருணங்களுக்கு கூடுதல் வலிமையை அளிக்கிறது. இயக்குநர் கணேஷ் விநாயகம், பழங்குடியின மக்களின் கல்வி, சாலை வசதி, அடிப்படை கட்டமைப்பு போன்ற நீண்டகால பிரச்சினைகளை சினிமா மொழியில் எளிமையாகவும் தாக்கமுள்ள வகையிலும் சொல்ல முயன்றிருக்கிறார்.&lt;/p&gt;&lt;p&gt;வணிக அம்சங்களை விட சமூக பிரச்சனைக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது படத்தின் தனித்துவமாக அமைகிறது. ஆக்&zwnj;ஷன், மாஸ் காட்சிகள், வணிக சினிமா அம்சங்களை எதிர்பார்ப்பவர்களுக்கு இது வேறுபட்ட அனுபவமாக இருக்கலாம். ஆனால், சமூக அக்கறையுடன் உருவாக்கப்பட்ட, மனதைத் தொடும், சிந்திக்க வைக்கும் திரைப்படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு 'அருள்வான்' நிச்சயம் ஏமாற்றமளிக்காது. மொத்தத்தில்: கல்வி சமத்துவத்தின் அவசியத்தை வலியுறுத்தும், உணர்வுகளும் சமூகப் பொறுப்பும் கலந்த தரமான படைப்பாக 'அருள்வான்' திகழ்கிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[review]]></category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/review/arulvaan-movie-review-a-powerful-social-drama-on-the-right-to-education-dwtlcht"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Tirupati Hundi Collection: ஒரே நாளில் ரூ.96.98 கோடி வசூல்! திருப்பதியில் புதிய வரலாற்றுச் சாதனை.. சலுகை விதிகளில் அதிரடி மாற்றம்?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/tirupati-temple-creates-history-hundi-collection-in-a-single-day-ttd-to-change-vip-rules-9zgatk3</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/tirupati-temple-creates-history-hundi-collection-in-a-single-day-ttd-to-change-vip-rules-9zgatk3</guid>
            <pubDate>Fri, 17 Jul 2026 08:45:00 +0530</pubDate>
            <description><![CDATA[TTD Privilege Policy Changes: உலகிலேயே மிகப்பணக்கார ஆன்மீகத் தலங்களில் ஒன்றான திருப்பதியில், சமீபகாலமாக நன்கொடையாளர்களின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இது குறித்த சுவாரசியமான புள்ளிவிவரங்கள் குறித்து பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxq0fa4x848swwwyg41whkjy,imgname-tirupati-1784257423517.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;TTD Privilege Policy Changes: உலகிலேயே மிகப்பணக்கார ஆன்மீகத் தலங்களில் ஒன்றான திருப்பதியில், சமீபகாலமாக நன்கொடையாளர்களின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இது குறித்த சுவாரசியமான புள்ளிவிவரங்கள் குறித்து பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உலகிலேயே மிகப்பணக்கார கோவில்களில் ஒன்று திருப்பதி ஏழுமலையான் கோவில். இக்கோவிலில் நாளுக்கு நாள் பக்தர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது மட்டுமல்லாமல் நன்கொடையாளர்களின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் மட்டும் ரூ.96.98 கோடி உண்டியல் காணிக்கையாக வசூலாகி புதிய வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், இரண்டு பக்தர்கள் தலா ரூ.1 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த இமாலய வசூலில் பெருநிறுவனங்களை விட நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பக்தர்களின் பங்களிப்பே மிக அதிகம் என்று கூறப்படுகிறது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி: 2,460 பேர் அதிகாரப்பூர்வ கவுன்ட்டர்கள் மூலமும், 2,354 பேர் ஆன்லைன் வாயிலாகவும், 106 பேர் நேரடியாகவும் (ஆஃப்லைன்) நிதியுதவி செய்துள்ளனர்.&lt;/p&gt;&lt;p&gt;புள்ளி விவரத்தின் படி பார்த்தால் 1,246 பக்தர்கள் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையிலும், 1,212 பக்தர்கள் ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலும் காணிக்கை செலுத்தியுள்ளனர். ஜூன் மாதத்தில் மட்டும் புதிதாக 1,97,888 பக்தர்கள் நன்கொடையாளர்களாகத் தங்களைப் பதிவு செய்துள்ளனர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;Tirumala Devotee Hair: திருப்பதி போனா ஏன் மொட்டை அடிக்கிறாங்க தெரியுமா? பக்தர்களின் முடியை வச்சு தேவஸ்தானம் என்ன செய்றாங்க தெரியுமா?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;திருப்பதி ஏழுமலையான் கோவிலின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ.3.38 லட்சம் கோடி ஆகும். இந்த சொத்து மதிப்பு உலகின் பல சிறிய நாடுகளின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) விட மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2025-26 நிதியாண்டில் மட்டும், கோவிலின் உண்டியல் காணிக்கை ரூ.1,738 கோடியைத் தாண்டியுள்ளது. அதாவது, ஒரு நாளுக்குச் சராசரியாக ரூ.4.75 கோடி வசூலாகியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;New Train: திருப்பதி, திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம்.. 3 புண்ணிய தலங்களை இணைக்கும் புதிய ரயில் வந்தாச்சு!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தற்போது திருப்பதி கோவிலில் பதிவு செய்யப்பட்ட மொத்த நன்கொடையாளர்களின் எண்ணிக்கை 1,97,888 ஆக உயர்ந்துள்ளது. இதில், ரூ.1 லட்சம் மற்றும் அதற்கு மேல் சுமார் 1.5 லட்சம் பக்தர்கள் நன்கொடை கொடுத்தவர்கள். அதேபோல் ரூ.10 லட்சம் மற்றும் அதற்கு மேல் கொடுத்தவர்கள் சுமார் 22,000 பக்தர்கள் நன்கொடை வழங்கியுள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;திருப்பதிக்கு வரும் நன்கொடையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் மிகத் தீவிரமாக அதிகரித்து வருவதால், அவர்களுக்கு வழங்கப்படும் சிறப்புத் தரிசனம் உள்ளிட்ட சலுகை விதிகளில் (Privilege Policy) சில மாற்றங்களைக் கொண்டு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) தெரிவித்துள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[astrology]]></category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/tirupati-temple-creates-history-hundi-collection-in-a-single-day-ttd-to-change-vip-rules-9zgatk3"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Rahu Transit: ராகுவின் தாக்கம் அதிகம்.. இந்த 6 ராசிக்காரர்கள் பண விஷயத்தில் கவனமாக இருக்கணும்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/rahu-transit-may-increase-expenses-for-these-6-zodiac-signs-2lb5s8k</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/rahu-transit-may-increase-expenses-for-these-6-zodiac-signs-2lb5s8k</guid>
            <pubDate>Fri, 17 Jul 2026 08:43:21 +0530</pubDate>
            <description><![CDATA[Rahu Transit: வேத ஜோதிட நம்பிக்கையின்படி, ராகு தற்போது கும்ப ராசியின் சதய நட்சத்திரத்தில் பயணிப்பதால், சில ராசிக்காரர்கள் நிதி மற்றும் செலவுகள் தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxq0cpd60gdae8j3r5jq7adh,imgname-rahu-transit--1784257337765.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Rahu Transit: வேத ஜோதிட நம்பிக்கையின்படி, ராகு தற்போது கும்ப ராசியின் சதய நட்சத்திரத்தில் பயணிப்பதால், சில ராசிக்காரர்கள் நிதி மற்றும் செலவுகள் தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வேத ஜோதிட நம்பிக்கைகளின்படி, ராகு கிரகத்தின் கோச்சாரம் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நிதி, வேலை மற்றும் தனிப்பட்ட முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று கருதப்படுகிறது. தற்போது கும்ப ராசியில் சதய (சதபிஷா) நட்சத்திரத்தில் ராகு பயணிப்பதால், சில ராசிக்காரர்கள் செலவுகள் தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜோதிடக் கணிப்புகளின்படி, பயணம் மற்றும் எதிர்பாராத தேவைகளால் செலவுகள் அதிகரிக்கலாம். பணம் கடன் கொடுப்பது அல்லது பெரிய நிதி முடிவுகளை எடுப்பது போன்ற விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது.&lt;/p&gt;&lt;p&gt;ஆடி 1ல் எந்த ராசிக்கு யோகம்? யார் கவனமாக இருக்க வேண்டும்? இன்றைய ராசி பலன் இதோ&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குடும்பம், உடல்நலம் அல்லது சொத்து செலவுகள் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. தேவையற்ற நிதி உறுதிமொழிகளைத் தவிர்ப்பது நல்லது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆடம்பரச் செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக ஜோதிடர்கள் குறிப்பிடுகின்றனர். பெரிய முதலீடுகள் அல்லது சொத்து தொடர்பான முடிவுகளில் நிதானமாக செயல்படுவது சிறந்தது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வீட்டு பராமரிப்பு, குடும்பத் தேவைகள் அல்லது பயணங்களால் கூடுதல் செலவுகள். செலவுகளை முன்கூட்டியே திட்டமிடுவது உதவியாக இருக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எதிர்பாராத குடும்பச் செலவுகள் மற்றும் நிலுவைப் பணம் தாமதமாகக் கிடைப்பது போன்ற சூழல்கள் உருவாகலாம் எனக் கூறப்படுகிறது. பணம் கடன் வாங்குவது அல்லது கொடுப்பது போன்ற விஷயங்களில் கவனம் தேவை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வருமானத்தை விட செலவுகள் அதிகரிக்கக்கூடும் என்ற பொதுவான ஜோதிடக் கணிப்பு உள்ளது. நீண்ட தூரப் பயணங்கள் அல்லது மருத்துவச் செலவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், நிதி திட்டமிடல் முக்கியம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சில ஜோதிடர்கள் ஸ்கந்த ஸ்தோத்திரம் பாராயணம் செய்வதை பாரம்பரிய பரிகாரமாக பரிந்துரைக்கின்றனர். இருப்பினும், இது ஒரு மத நம்பிக்கையாகும். நிதி சிக்கல்களை சமாளிக்க செலவுகளை திட்டமிடுதல், சேமிப்பு பழக்கம் மற்றும் பொறுப்பான நிதி மேலாண்மை ஆகியவை மிகவும் முக்கியமானவை.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[astrology]]></category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/rahu-transit-may-increase-expenses-for-these-6-zodiac-signs-2lb5s8k"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Astrology: ராகு பார்வையில் சுக்கிர திசை.! ஆடி மாதத்தில் அடிக்க போகும் அதிர்ஷ்ட காற்று.! 5 ராசிகளுக்கு நல்லகாலம் பொறக்குது.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/astrology-venus-under-rahu-influence-aadi-month-brings-a-wave-of-luck-5-zodiac-signs-set-for-a-prosperous-phase-dneiowv</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/astrology-venus-under-rahu-influence-aadi-month-brings-a-wave-of-luck-5-zodiac-signs-set-for-a-prosperous-phase-dneiowv</guid>
            <pubDate>Fri, 17 Jul 2026 08:05:14 +0530</pubDate>
            <description><![CDATA[இந்த ஆடி மாதத்தில் ராகுவின் பார்வையால் சுக்கிரன் வலுப்பெறுவதால், ஐந்து ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டமும், பண வரவும் கிடைக்க வாய்ப்புள்ளது. அவர்களுக்கு தொழில், நிதி மற்றும் குடும்ப வாழ்வில் பெரும் முன்னேற்றங்களைக் காணும் என ஜோதிடம் கூறுகிறது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxpyr0b8pc61y0mgqgphqx8d,imgname-chatgpt-image-jul-17--2026--07-41-08-am--1--1784255611238.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;இந்த ஆடி மாதத்தில் ராகுவின் பார்வையால் சுக்கிரன் வலுப்பெறுவதால், ஐந்து ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டமும், பண வரவும் கிடைக்க வாய்ப்புள்ளது. அவர்களுக்கு தொழில், நிதி மற்றும் குடும்ப வாழ்வில் பெரும் முன்னேற்றங்களைக் காணும் என ஜோதிடம் கூறுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆடி மாதம் ஆன்மிக ரீதியாக மட்டுமல்ல, ஜோதிட ரீதியிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தும் காலமாக கருதப்படுகிறது என்கின்றன ஜோதிட நூல்கள். இந்த ஆண்டின் ஆடி மாதத்தில் ராகுவின் பார்வையால் சுக்கிரனின் பலம் அதிகரிப்பதாக ஜோதிட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சுக்கிர பகவான் செல்வம், ஆடம்பரம், காதல், குடும்ப மகிழ்ச்சி மற்றும் வசதிகளின் காரகன் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமே. ராகுவின் தாக்கம் சில நேரங்களில் எதிர்பாராத புதிய நல்ல வாய்ப்புகளையும் திடீர் அதிர்ஷ்ட முன்னேற்றங்களையும் கொடுக்கக்கூடும். குறிப்பாக 5 ராசிக்காரர்களுக்கு இந்த காலம் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று ஜோதிர ரகசியங்களில் கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சுக்கிரன் நேரடி ஆதிபதியாக இருப்பதால் ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த ஆடி மாதம் மிகவும் சாதகமாகவும் அதிர்ஷ்டத்தை அள்ளி தரும் மாதமாகவும் இருக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த பணிகள் அனைத்தும் நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைத்து அதனால் லாபம் உயரலாம். எதிர்பாராத பணவரவு உங்களை மகிழ்ச்சியிலும் சந்தோஷத்திலும் ஆழ்த்தும் என ஜோதிட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து அமைதியும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் நிலவும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேற வாய்ப்பு உள்ளது என ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ராகுவின் ஆதரவால் மிதுன ராசிக்காரர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும் காலம் இது. வேலை மாற்றம் எதிர்பார்ப்பவர்களுக்கு கண்டிப்பாக நல்ல செய்தி கிடைக்கலாம். வணிகம் மற்றும் தொழிலில் லாபம் பலமடங்கு அதிகரிக்கும். சமூகத்திலும் உறவினர்கள் மத்தியிலும் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வெளிநாடு தொடர்பான முயற்சிகளில் சாதகமான &amp;nbsp;சந்தோஷமான முடிவுகள் கிடைக்கும். முதலீடு செய்வதற்கு முன் நிதானமாக முடிவு எடுத்தால் &amp;nbsp;எதிர்பார்த்ததை விட நல்ல பலன் கிடைக்கும் என ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிம்ம ராசிக்காரர்களுக்கு ஆடி மாதம் அதிர்ஷ்டம் நிறைந்த மாதமாக இருக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.நீண்ட நாட்களாக எதிர்பார்த்த &amp;nbsp;பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் திருமணம், வளைகாப்பு, மஞ்சள்நீராட்டு விழா போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறலாம். திருமண முயற்சிகள் வெற்றியடையும் என்பதால் முட்டு சிங்கிள்கள் இனி சந்தோஷத்தில் மிதப்பர். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இது நல்ல நேரமாகவும் சாதகமான காலமாகவும் அமையும். அமைதியும் ஆரோக்கியமும் மேம்படும் நேரம் என ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அள்ளிக்கொடுக்கும் சுக்கிரன் ஆட்சி செய்யும் துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த காலம் மிகுந்த நன்மைகளை தரும். நிதி நிலைமையும் பல மடங்கு வலுப்பெறும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த கடன் சுமைகள் காணாமல் போகும். கவலைகள் குறைந்து மனநிம்மதி கிடைக்கும்.காதலில் நெருக்கம் அதிகரிக்கும். தம்பதியர் இடையே நிலவி வந்த மனக்சப்புகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். கலை, ஊடகம், ஃபேஷன், அழகு துறைகளில் இருப்பவர்கள் புதிய உயரங்களை அடைய வாய்ப்புகள் உருவாகும். வாழ்வில் வெற்றிகான நண்பர்களின் ஆதரவும் அதிகரிக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மகர ராசிக்காரர்களுக்கு ராகுவின் பார்வை எதிர்பாராத வளர்ச்சியை ஏற்படுத்தும். வேலை மற்றும் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் அதிகரிப்பதுடன் சேமிப்பும் உயரும். குடும்பத்தில் இருந்த மனக்கசப்புகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் உருவாகும். பயணங்களால் லாபம் கிடைக்கலாம். புதிய சொத்து வாங்கும் யோகம் உருவாகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜோதிட பலன்கள் பொதுவான கிரக நிலைகளை அடிப்படையாகக் கொண்டவை. ஒவ்வொருவரின் தனிப்பட்ட ஜாதகம், தசா-புத்தி, கிரக அமைப்பு போன்றவற்றைப் பொறுத்து பலன்கள் மாறுபடலாம். எனவே இதை பொதுவான ஜோதிட வழிகாட்டுதலாக மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;ஆடி மாதத்தில் ராகுவின் பார்வையால் சுக்கிரன் வலுப்பெறும் இந்த காலம், ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம் மற்றும் மகரம் ஆகிய 5 ராசிகளுக்கு புதிய வாய்ப்புகள், பொருளாதார முன்னேற்றம், குடும்ப மகிழ்ச்சி மற்றும் தொழில் வளர்ச்சியை வழங்கும் காலமாக அமையக்கூடும். சரியான திட்டமிடலுடனும் முயற்சியுடனும் செயல்பட்டால் இந்த அதிர்ஷ்டக் காற்றை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[astrology]]></category>
            <dc:creator>Vedarethinam Ramalingam</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/astrology-venus-under-rahu-influence-aadi-month-brings-a-wave-of-luck-5-zodiac-signs-set-for-a-prosperous-phase-dneiowv"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Gold Bond: இந்த தங்க பத்திரம் வாங்கியிருக்கீங்களா? ரூ.1 லட்சம் இன்று ரூ.4.18 லட்சம்.. ஆர்பிஐ அறிவிப்பு!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/business/sovereign-gold-bond-2019-20-series-ii-redemption-details-40bt2px</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/business/sovereign-gold-bond-2019-20-series-ii-redemption-details-40bt2px</guid>
            <pubDate>Fri, 17 Jul 2026 07:55:32 +0530</pubDate>
            <description><![CDATA[Gold Bond: தங்க பத்திரம் (எஸ்ஜிபி) 2019-20 Series II-ல் முதலீடு செய்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூலை 16, 2026 முதல் இந்தத் தொடரில் முதலீடு செய்தவர்கள், ஆர்பிஐ விதிகளின்படி முன்கூட்டியே தங்களது முதலீட்டை மீட்டெடுக்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kcrnmqhygw4dfgv3b85kzqcd,imgname-sovereign-gold-bond-1766059564606.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Gold Bond: தங்க பத்திரம் (எஸ்ஜிபி) 2019-20 Series II-ல் முதலீடு செய்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூலை 16, 2026 முதல் இந்தத் தொடரில் முதலீடு செய்தவர்கள், ஆர்பிஐ விதிகளின்படி முன்கூட்டியே தங்களது முதலீட்டை மீட்டெடுக்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எஸ்ஜிபி ​​2019-20 தொடர் II ஜூலை 16, 2019 அன்று வெளியிடப்பட்டது. இந்தத் தொடரில் முதலீடு செய்தவர்கள், 5 ஆண்டுகள் நிறைவடைந்த, வட்டி வழங்கப்படும் தேதிகளில் முன்கூட்டியே முதலீட்டை மீட்டெடுக்கலாம். இந்த வசதி ஆர்பிஐ விதிகளின் கீழ் வழங்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;விலை எப்படி கணக்கிடப்படுகிறது?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி மீட்பு விலை 999, தூய்மை தங்கத்தின் முந்தைய மூன்று வேலை நாட்களின் சராசரி முடிவு விலையை நிர்ணயிக்கப்படுகிறது. இந்த விலையை India Bullion and Jewellers Association (IBJA) வெளியிடுகிறது. எனவே, இறுதியாக கிடைக்கும் தொகை அன்றைய தங்க விலையைப் பொறுத்து மாறுபடும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எஸ்ஜிபி-யில் முதலீடு செய்வதன் மூலம்:&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;தங்க விலை உயர்வின் பலன் கிடைக்கும்.&lt;/li&gt; &lt;li&gt;ஆண்டுக்கு 2.5% நிலையான வட்டி வழங்கப்படும்.&lt;/li&gt; &lt;li&gt;மெச்சூரிட்டி வரை வைத்திருந்தால், நடைமுறையில் உள்ள வரி விதிகளின்படி மூலதன ஆதார வரி (மூலதன ஆதாய வரி) விலக்கு கிடைக்கும்.&lt;/li&gt; &lt;li&gt;இதனால், நீண்டகால முதலீட்டாளர்களிடையே எஸ்ஜிபி ஒரு பிரபலமான முதலீட்டு கருவியாக உள்ளது.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;img&gt;&lt;ul&gt; &lt;li&gt;நிதி நிபுணர்களின் கருத்துப்படி, இந்த முடிவு உங்கள் தனிப்பட்ட நிதி தேவையைப் பற்றியது.&lt;/li&gt; &lt;li&gt;உடனடியாக பணம் தேவைப்பட்டால், முன்கூட்டியே மீட்டெடுப்பதை பரிசீலிக்கலாம்.&lt;/li&gt; &lt;li&gt;வரிச் சலுகை மற்றும் நீண்டகால முதலீட்டு பலன்களை முழுமையாகப் பெற வேண்டும், மெச்சூரிட்டி வரை வைத்திருக்கலாம்.&lt;/li&gt; &lt;li&gt;முடிவு எடுப்பதற்கு முன் தற்போதைய தங்க விலை, எதிர்கால சந்தை நிலவரம் மற்றும் உங்கள் நிதி இலக்குகளை மதிப்பீடு செய்வது நல்லது.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;செலவுகள் அதிகமா? மத்திய அரசின் இந்த 5 திட்டங்கள் உங்கள் குடும்பத்திற்கு உதவலாம்!&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[business]]></category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/business/sovereign-gold-bond-2019-20-series-ii-redemption-details-40bt2px"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Rohit Sharma Retirement: கம்பீர் சொன்ன 'அந்த' வார்த்தை! இங்கிலாந்து ஓடிஐ தொடருடன் ரோகித் சர்மா ஓய்வு?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/rohit-sharma-retirement-rumors-will-lords-odi-vs-england-be-the-hitmans-final-one-day-match-rermeh1</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/rohit-sharma-retirement-rumors-will-lords-odi-vs-england-be-the-hitmans-final-one-day-match-rermeh1</guid>
            <pubDate>Fri, 17 Jul 2026 07:53:45 +0530</pubDate>
            <description><![CDATA[Rohit Sharma Retirement: இந்திய அணியின் மூத்த வீரர் ரோகித் சர்மா இங்கிலாந்து ஓடிஐ தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கம்பீர் சொன்ன ஒரு விஷயத்தில் அவர் அதிருப்தி அடைந்ததாக தகவல்கல் கூறுகின்றன.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxp65ykn8qfwghsg8tbvxrvy,imgname-gettyimages-2241973937-1784229853813.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Rohit Sharma Retirement: இந்திய அணியின் மூத்த வீரர் ரோகித் சர்மா இங்கிலாந்து ஓடிஐ தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கம்பீர் சொன்ன ஒரு விஷயத்தில் அவர் அதிருப்தி அடைந்ததாக தகவல்கல் கூறுகின்றன.&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையிலான ஓடிஐ தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், நேற்று நடந்த 2வது போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா நிர்ணயித்த 234 ரன்கள் இலக்கை அந்த அணி 44 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. இந்திய அணியில் விராட் கோலி (65), ஷ்ரேயாஸ் ஐயர் (66) அரைசதம் அடித்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா 47 பந்துகளில் 26 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த நிலையில், லார்ட்ஸில் ஜூலை 19 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஓடிஐ போட்டியுடன் ஓடிஐ பார்மட்டிலும் ரோகித் சர்மா ஓய்வு பெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தேசிய ஊடக அறிக்கைகளின்படி, இந்திய அணியின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு பிசிசிஐ தேர்வுக்குழு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கு அணியை தயார்படுத்தும் நோக்கில், இங்கிலாந்து தொடருக்குப் பிறகு ரோகித் சர்மாவை ஒருநாள் அணிக்குத் தேர்வு செய்ய வேண்டாம் என அவர்கள் முடிவெடுத்துள்ளனர். இதுகுறித்து கடந்த வாரம் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் தேர்வாளர்கள் ரோகித்திடம் நீண்ட நேரம் பேசியுள்ளனர்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இளம் திறமைகளுக்கு வாய்ப்பு கொடுப்பதே தேர்வுக்குழுவின் இந்த முடிவுக்கு முக்கியக் காரணம். குறிப்பாக, யஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற அதிரடி இளம் வீரர்களுக்கு தொடக்க வீரராக நிரந்தர வாய்ப்பு அளித்து, அடுத்த உலகக் கோப்பைக்கு ஒரு வலுவான அணியை உருவாக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளில் தொடர விரும்பினாலும், இந்த முடிவு அவருக்குக் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரோகித் சர்மா 2024 டி20 உலகக் கோப்பையை வென்றதுடன் அந்த ஃபார்மட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பிறகு, 2025 மே மாதம் இன்ஸ்டாகிராம் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்து ஆச்சரியப்படுத்தினார். ஏற்கெனவே ஒருநாள் கேப்டன் பதவியை சுப்மன் கில்லிடம் அவர் ஒப்படைத்துவிட்டார். இப்போது, கடைசியாக இருந்த ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்தும் அவர் வெளியேறும் நேரம் வந்துவிட்டது.&lt;/p&gt;&lt;p&gt;இங்கிலாந்து தொடரில் ரோகித் சர்மாவின் பேட்டிங் ஃபார்மும் தேர்வாளர்களின் இந்த முடிவுக்கு வலு சேர்த்துள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் அவர் முறையே 11 மற்றும் 26 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார். களத்தில் பந்துகளை எதிர்கொள்ள அவர் திணறுவதும், வேகமாக ரன் குவிக்க முடியாததும், அவரது வயது மற்றும் வேகத்தை பாதித்துள்ளதா? என்ற விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;கடைசி போட்டிக்காக காத்திருக்கும் ரசிகர்கள்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;மொத்தத்தில், லார்ட்ஸில் நடக்கவிருக்கும் இந்தப் போட்டி, இந்திய கிரிக்கெட்டின் ஒரு அழகான சகாப்தத்தின் முடிவாக அமையலாம். கேப்டனாக இந்தியாவிற்குப் பெருமை சேர்த்த ரோகித், தனது பேட் மூலம் பிரியாவிடை தருவதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[sports-cricket]]></category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/rohit-sharma-retirement-rumors-will-lords-odi-vs-england-be-the-hitmans-final-one-day-match-rermeh1"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Tiruttani Aadi Krithigai 2026: திருத்தணி முருகன் கோயிலில் அன்னதானம் வழங்க போறீங்களா? அனுமதி பெறுவது எப்படி? பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/tiruttani-murugan-temple-aadi-krithigai-guidelines-on-how-to-apply-for-annadanam-permission-qmbz3uk</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/tiruttani-murugan-temple-aadi-krithigai-guidelines-on-how-to-apply-for-annadanam-permission-qmbz3uk</guid>
            <pubDate>Fri, 17 Jul 2026 07:48:38 +0530</pubDate>
            <description><![CDATA[Annadanam Permission: ஆடி மாதம் அம்மனுக்கு மட்டுமல்ல முருகருக்கு உகந்த மாதமாக பார்க்கப்படுகிறது. ஆடி மாதத்தில் கிருத்திகை, சஷ்டியும் மிகவும் பிரசித்தி பெற்றது. குறிப்பாக, ஆடிக்கிருத்திகை நாளில் முருகன் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01j3pssarzhwq8958mp9cr2mqq,imgname-whatsapp-image-2024-07-26-at-11.23.20-am.jpeg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Annadanam Permission: ஆடி மாதம் அம்மனுக்கு மட்டுமல்ல முருகருக்கு உகந்த மாதமாக பார்க்கப்படுகிறது. ஆடி மாதத்தில் கிருத்திகை, சஷ்டியும் மிகவும் பிரசித்தி பெற்றது. குறிப்பாக, ஆடிக்கிருத்திகை நாளில் முருகன் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆடி மாதம் முழுவதுமே அம்மன் வழிபாட்டிற்குரிய வழிபாட்டு மாதமாகக் கருதப்படுகிறது. இம்மாதத்தில் மாரியம்மன், காளியம்மன் மற்றும் துர்க்கை அம்மன் கோவில்களில் திருவிழாக்களும், சிறப்பு வழிபாடுகளும் விமரிசையாக நடைபெறும். அதுமட்டுமல்ல தமிழ் கடவுளான முருகருக்கு உகந்த மாதம். அதாவது கிருத்திகை, சஷ்டியும் மிகவும் பிரசித்தி பெற்றது. குறிப்பாக, ஆடிக்கிருத்திகை நாளில் முருகன் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் ஆடிக்கிருத்திகை முன்னிட்டு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதுதொடர்பாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆடிக்கிருத்திகை தெப்பத் திருவிழா ஆகஸ்ட் 04 முதல் 08ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இத்திருவிழாவில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆடிக்கிருத்திகை திருவிழாவில் அன்னதானம் வழங்க உத்தேசிக்கும் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் www.foscos.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அன்னதானம் வழங்க விரும்புவோர் ஜூலை 18 முதல் 28ம் தேதி வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை மேலே குறிப்பிட்ட இணையதளத்தில் சமர்பித்து அனுமதி பெறவேண்டும். மேலும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முகவரி தெரிவிக்கும் ஏதேனும் அங்கிகரிக்கப்பட்ட சான்றின் நகல் ஆகிய விவரங்களை அளிக்க வேண்டும். அன்னதானம் வழங்குவோர்கள் தங்களை சார்ந்த அன்னதானம் விநியோகிப்பவர்களின் விவரத்தினை ஆதார் அட்டை தகவலுடன் சமர்ப்பிக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;(தகவலுக்கு இணை ஆணையர் /செயல் அலுவலர், தலைமை அலுவலகம், அரக்கோணம் சாலை, திருத்தணி அவர்களை அணுகவும்) எக்காரணத்தை கொண்டும் ஜூலை 30 தேதிக்கு பின்னர் விண்ணப்பம் பெறப்பட மாட்டாது. அன்னதானம் வழங்குபவர்கள் மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட இடம், அனுமதி பெறப்பட்ட நாள் மற்றும் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும். அனுமதி பெறாமல் அன்னதானம் வழங்க கூடாது. பக்கதர்களுக்கு இடையூறு இல்லாமல் அன்னதானம் வழங்க வேண்டும். நோய்தொற்று உள்ளவர்களை அன்னதானம் சமைக்கவோ மற்றும் வழங்கவோ அனுமதிக்க கூடாது. உணவு பொருட்கள் கலப்படம் இல்லாமல் தரமானதாகவும், தூய்மையானதாகவும் மற்றும் பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தட்டுகளில் அன்னதானம் வழங்கக்கூடாது. பிளாஸ்டிக் டம்ளர்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யக்கூடாது. உணவு கழிவு பொருட்களை சேகரிப்பதற்கு ஏதுவாக குப்பைப்தொட்டிகளை வைத்து அதில் உணவு கழிவுகளை சேகரித்து, அன்னதானம் அளிப்பவர்களே சேகரித்த உணவு கழிவுகளை அவ்வப்போது அகற்றுவதுடன் அன்னதானம் வழங்கிய இடத்தையும் சுத்தம் செய்துவிட்டு செல்ல வேண்டும். அனுமதி பெறாமல் அன்னதானம் வழங்க இயலாது. மேலும் போதிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் அன்னதானம் வழங்குவது தொடர்பாக 9489279217, 9578726302 ஆகிய இந்த இரண்டு எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[astrology]]></category>
            <dc:creator>vinoth kumar</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/tiruttani-murugan-temple-aadi-krithigai-guidelines-on-how-to-apply-for-annadanam-permission-qmbz3uk"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Today Horoscope: ஆடி 1ல் எந்த ராசிக்கு யோகம்? யார் கவனமாக இருக்க வேண்டும்? இன்றைய ராசி பலன் இதோ]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/today-horoscope-july-17-2026-for-all-zodiac-signs-b47fyss</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/today-horoscope-july-17-2026-for-all-zodiac-signs-b47fyss</guid>
            <pubDate>Fri, 17 Jul 2026 07:11:21 +0530</pubDate>
            <description><![CDATA[Today Horoscope: 17.07.2026, வெள்ளிக்கிழமைக்கான இன்றைய ராசிபலனில், மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்குமான பொதுவான ஜோதிடக் கணிப்புகள் இடம்பெற்றுள்ளன. சில ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் நிதி தொடர்பான நல்ல முன்னேற்றங்கள் அமையலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kt90fd9myr4zgyj08ct3a79p,imgname-indraya-rasi-palan-tamil--3--1780566439220.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Today Horoscope: 17.07.2026, வெள்ளிக்கிழமைக்கான இன்றைய ராசிபலனில், மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்குமான பொதுவான ஜோதிடக் கணிப்புகள் இடம்பெற்றுள்ளன. சில ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் நிதி தொடர்பான நல்ல முன்னேற்றங்கள் அமையலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வேலைகளில் உங்களுக்குச் சாதகமான மாற்றங்கள் உண்டாகும். மேலதிகாரிகளிடம் இருந்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவீர்கள். பயணங்கள் லாபகரமாக அமையும். புதிய பணிகளைத் தொடங்குவீர்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உங்கள் நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும். மதிப்புமிக்க பொருட்களை வாங்கும் வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உடன் பிறந்தவர்களிடம் இருந்து எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். தொழில், வேலை, வியாபாரம் வழக்கம் போல் நடக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வேலை மற்றும் தொழிலில் பணிச்சுமை இருந்தாலும், சரியான நேரத்தில் முடிப்பீர்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் பேசும்போது அவசரம் வேண்டாம். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். குடும்பத்தினருடன் சேர்ந்து கோயில்களுக்குச் செல்வீர்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சமூகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். திடீர் பண வரவு உண்டாகும். நண்பர்களுடன் சேர்ந்து விருந்து, கேளிக்கைகளில் பங்கேற்பீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் फटाफट-ன்னு முடியும். தொழில், வியாபாரம் சாதகமாக இருக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். இது எதிர்காலத்தில் உங்கள் வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். முக்கியமான பணிகளில் வெற்றி பெறுவீர்கள். கோபத்தைக் கட்டுப்படுத்துவது உறவுகள் உடையாமல் தடுக்கும். சில விஷயங்களில் எச்சரிக்கை தேவை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வேலை, தொழிலில் பதவி உயர்வுக்கான அறிகுறிகள் தென்படுகின்றன. நிதிச் சிக்கல்கள் நீங்கும். வருமானம் சீராக இருக்கும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். ஆரோக்கியம் நன்றாக ஒத்துழைக்கும். வியாபாரம் வழக்கம் போல் நடக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நீங்கள் தொடங்கிய பணிகள் சற்று மெதுவாக நடக்கும். பொறுமையாக இருப்பது அவசியம். தேவையற்ற செலவுகளில் கவனம் தேவை. முக்கிய விஷயங்களில் குடும்பப் பெரியவர்களின் ஆலோசனையைப் பெறுவது நன்மை தரும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எடுத்த காரியங்களில் உங்கள் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். பழைய நண்பர்களை எதிர்பாராதவிதமாக சந்திப்பீர்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும். புதிய முதலீடுகள் செய்வதற்கு இது சாதகமான நாள். வேலை, தொழில் அனுகூலமாக இருக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சி, திடீர் லாபம் உண்டாகும். உறவினர்களிடமிருந்து ஒரு நல்ல செய்தியைக் கேட்பீர்கள். வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். தூரப் பயணங்கள் கைகூடும். வேலைகள் சாதகமாகவே இருக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தேவையற்ற வாக்குவாதங்கள், மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. வேலையிடத்தில் சக ஊழியர்களுடன் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் வர வாய்ப்புள்ளது. செலவுகளில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் சாதாரணமாகவே இருக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வீண் பயணங்கள் செய்ய நேரிடும். நீண்டகால கடன் சுமை அதிகரிக்கும். வீட்டிலும் வெளியிலும் எதிர்பாராத சிக்கல்கள் உண்டாகும். கோயில்களுக்குச் சென்று வருவீர்கள். தொழில், வியாபாரம் அவ்வளவாக சாதகமாக இருக்காது. குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பயணங்களின் போது புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களுடன் சேர்ந்து சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். திடீர் பண வரவுக்கு வாய்ப்புள்ளது. மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். தொழில், வியாபாரத்தில் சிறிய லாபம் இருக்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[astrology]]></category>
            <dc:creator>Raghupati R</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/today-horoscope-july-17-2026-for-all-zodiac-signs-b47fyss"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Pimples Remedy: ஒரே இரவில் பருக்கள் மாயமாகும்! ஒரு ரூபாய் செலவில்லாமல் எளிய வீட்டு வைத்தியம் இதோ!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/how-to-remove-pimples-overnight-using-neem-leaves-naturally-6xyo20f</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/how-to-remove-pimples-overnight-using-neem-leaves-naturally-6xyo20f</guid>
            <pubDate>Fri, 17 Jul 2026 07:05:52 +0530</pubDate>
            <description><![CDATA[Pimples Remedy: முகத்தில் வரும் பருக்களை ஒரே இரவில் விரட்ட, விலை உயர்ந்த கிரீம்களைத் தேடாதீர்கள். ஒரு பைசா செலவில்லாமல், நமது வீட்டு வேப்பிலையை வைத்தே பருக்களை எப்படி போக்குவது என விரிவாக பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01krahmf99mbrfy0jb02hvkvma,imgname-tamil-news--47--1778470501673.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Pimples Remedy: முகத்தில் வரும் பருக்களை ஒரே இரவில் விரட்ட, விலை உயர்ந்த கிரீம்களைத் தேடாதீர்கள். ஒரு பைசா செலவில்லாமல், நமது வீட்டு வேப்பிலையை வைத்தே பருக்களை எப்படி போக்குவது என விரிவாக பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;காலையில் ஒரு விழா, ஆனால் இரவில் முகத்தில் ஒரு பரு வந்தால் பதற்றம் ஆகிவிடும் அல்லவா? அதற்கு வேதிப்பொருள் (கெமிக்கல்) கிரீம்கள் எல்லாம் வேண்டாம். நமது வீட்டில் இருக்கிற வேப்பிலையே போதும். ஒரே இரவில் பருவைச் சரிசெய்துவிடலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இயற்கை தந்த அற்புதம் - வேம்பு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஆயுர்வேதம் முதல் நவீன தோல் மருத்துவர்கள் வரை, வேப்பிலையை ஒரு சிறந்த மருந்து என்று சொல்கிறார்கள். இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-ஃபங்கல் மற்றும் ஆன்டி-இன்ஃப்ளமேட்டரி குணங்கள் பருக்களுக்கு எதிராகச் செயல்படும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க:&lt;/strong&gt; பால்கனியில் வாஷிங் மெஷின் இருக்கா? தப்பான திசை பண நஷ்டத்தை தருமாம்.. இதை படிங்க!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சருமத் துளைகளில் பாக்டீரியாக்கள் சேர்வதால்தான் பருக்கள் வருகின்றன. வேப்பிலையில் உள்ள மருத்துவ குணங்கள் இந்த பாக்டீரியாக்களை வேரோடு அழித்துவிடும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;வீக்கம் மற்றும் சிவத்தல் குறையும்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;வேப்பிலையில் உள்ள ஆன்டி-இன்ஃப்ளமேட்டரி (Anti-inflammatory) பண்புகள், பருக்களால் ஏற்படும் வலி, வீக்கம் மற்றும் சிவந்த நிறத்தை உடனடியாகக் குறைக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;எண்ணெய்ப் பசையைக் கட்டுப்படுத்தும்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய்ப் பசையைக் கட்டுப்படுத்தி, புதிதாகப் பருக்கள் வராமலும் வேப்பிலை தடுக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க&lt;/strong&gt;: தினமும் தூக்கமில்லாம தவிக்கிறீங்களா? படுக்கையறையை இப்படி மாத்திப் பாருங்க!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒரே இரவில் நல்ல முடிவைப் பார்க்க, இந்த வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்:&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;புதிய வேப்பிலைகளைக் கழுவி, விழுது போல் அரைத்துச் சாறு எடுங்கள்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;இரவில் தூங்குவதற்கு முன்னால், முகத்தை நன்றாகக் கழுவித் துடைத்துக் கொள்ளுங்கள்.&lt;/p&gt;&lt;ul&gt; &lt;li&gt;ஒரு பஞ்சு முனைக் குச்சி (Cotton buds) வைத்து, பரு இருக்கிற இடத்தில் மட்டும் அந்தச் சாறை வையுங்கள்.&lt;/li&gt; &lt;li&gt;இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட்டு, காலையில் எழுந்ததும் தண்ணீரில் முகத்தைக் கழுவுங்கள். பருவின் வீக்கம் குறைந்து, அது காயத் தொடங்கியிருப்பதை நீங்களே காண்பீர்கள்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;img&gt;&lt;p&gt;வேப்பிலையுடன் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் அல்லது துளசி இலைகளைச் சேர்த்து அரைத்துப் பயன்படுத்துவது சருமத்திற்கு கூடுதல் பொலிவையும் ஆரோக்கியத்தையும் தரும். மஞ்சள் இயற்கையிலேயே சிறந்த கிருமிநாசினி என்பதால், அது பருக்கள் உருவாவதை ஆரம்ப நிலையிலேயே தடுக்கிறது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;மேலும், பருக்களால் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகளை மிக விரைவாக மறைக்க இது உதவுகிறது. பருக்கள் முழுமையாக மறைந்த பிறகும் அந்த இடத்தில் ஏற்படும் கருமை நிறத்தைக் குறைக்க, வேப்பிலைச் சாற்றுடன் சில துளிகள் தேன் கலந்து தேய்த்து வரலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படிங்க: &lt;/strong&gt;சோபாவை 10 நிமிடத்தில் புதுசு போல மாற்றலாம்! இதோ அந்த 'வைரல் பாத்திர மூடி' ரகசியம்!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதேபோல, பருக்கள் இருக்கும்போது அவற்றை நகங்களால் கிள்ளவோ அல்லது கைகளால் அழுத்தவோ கூடாது. அவ்வாறு செய்வதால் பாக்டீரியாக்கள் முகத்தின் மற்ற இடங்களுக்கும் பரவி, புதிய பருக்கள் தோன்றுவதற்கு வழிவகுக்கும். முகத்தை எப்போதும் சுத்தமான குளிர்ந்த நீரால் கழுவி வர வேண்டும்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;அத்துடன், தினமும் குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பது உடலின் நச்சுக்களை வெளியேற்றி, உள்ளிருந்தே சருமத்தை பொலிவாகவும் பருக்கள் இல்லாமலும் வைத்திருக்க உதவும். ஆரோக்கியமான உணவு முறையும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;அதிக எண்ணெய் மற்றும் காரமான உணவுகளைத் தவிர்த்து, பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. இது சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான செபம் (Sebum) எனப்படும் எண்ணெய்ப் பசையைக் கட்டுப்படுத்தி, முகப்பருக்கள் மீண்டும் வராமல் தடுக்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உங்களுடைய சருமம் மிகவும் உணர்திறன் (Sensitive Skin) வாய்ந்தது என்றால், முகத்தில் தடவுவதற்கு முன்னால் கையில் ஒவ்வாமைப் பரிசோதனை (Patch test) செய்து பாருங்கள். வேதிப் பொருட்களுக்கு ஆயிரக்கணக்கில் செலவு செய்வதற்குப் பதிலாக, இந்த இயற்கை வழியை ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[life-style]]></category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/how-to-remove-pimples-overnight-using-neem-leaves-naturally-6xyo20f"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஆடி மாதம் 'இந்த' 4 ராசிக்கும் அசுர வளர்ச்சிதான்! கோடீஸ்வர யோகம்! தொட்டதெல்லாம் துலங்கும்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/aadi-month-rasi-palan-2026-4-zodiac-signs-to-get-unexpected-wealth-and-luck-g556kr8</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/aadi-month-rasi-palan-2026-4-zodiac-signs-to-get-unexpected-wealth-and-luck-g556kr8</guid>
            <pubDate>Fri, 17 Jul 2026 06:31:27 +0530</pubDate>
            <description><![CDATA[Aadi Month Rasi Palan 2026: ஆடி மாதத்தில் 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை பொழிய போகிறது. தொட்டதெல்லாம் துலங்க போகிறது. அந்த 4 ராசிகள் என்னென்ன? என்று விரிவாக பார்ப்போம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxps4kzgv8mt6cgnzeyzm6n4,imgname-aadi-month-rasi-palan-202-1784249733104.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Aadi Month Rasi Palan 2026: ஆடி மாதத்தில் 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை பொழிய போகிறது. தொட்டதெல்லாம் துலங்க போகிறது. அந்த 4 ராசிகள் என்னென்ன? என்று விரிவாக பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ் மாதங்களில் ஆன்மீக ரீதியாகவும், வழிபாட்டு ரீதியாகவும் தனித்துவமான பெருமையைக் கொண்டது ஆடி மாதம். சூரிய பகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்குள் நுழையும் இந்த காலத்தை 'கடக மாதம்' என்றும் அழைப்பார்கள். அம்மன் வழிபாடு, குலதெய்வப் பிரார்த்தனை மற்றும் ஆடிப் பெருக்கு போன்ற நதி வழிபாடுகளுக்கு இந்த மாதம் மிகவும் உகந்தது.&lt;/p&gt;&lt;p&gt;​ஆன்மீகம் மட்டுமின்றி, ஜோதிட ரீதியாகவும் இந்த ஆடி மாதம் மிக முக்கியமான திருப்பங்களை ஏற்படுத்தப் போகிறது. ஏனெனில், இந்த மாதத்தில் புதன், சுக்கிரன், குரு மற்றும் சனி என முக்கிய கிரகங்களின் இடப்பெயர்வுகள் மற்றும் நிலை மாற்றங்கள் நிகழவுள்ளன. இந்த கிரக மாற்றங்கள் 12 ராசிகளிலுமே தாக்கத்தை ஏற்படுத்தினாலும், குறிப்பிட்ட 4 ராசிக்காரர்களுக்கு மட்டும் அசுர வளர்ச்சியையும், எதிர்பாராத யோகங்களையும் தரப்போகிறது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்று இங்கே பார்ப்போம்&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மேஷ ராசியினருக்கு இந்த ஆடி மாதம் எண்ணற்ற நன்மைகளை வாரி வழங்கப்போகிறது. சூரியன் மற்றும் குருவின் அருட்பார்வையால், உங்களின் நீண்ட நாள் ஆசைகள் மற்றும் கனவுகள் நனவாகும். தொட்டதெல்லாம் துலங்கும் அளவிற்கு அதிர்ஷ்டம் கூடிவரும்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;உத்தியோகத்தில் உங்களின் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். சாதகமான சூழல் நிலவும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி அமைதி நிலவும். வாழ்க்கைத்துணையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.&lt;/p&gt;&lt;p&gt;சகோதர வழியில் இருந்த சொத்து தகராறுகள் சுமுகமாக முடிவுக்கு வரும். புதிய வீடு, நிலம் வாங்கும் யோகம் கைகூடி வரும். ​வெளிநாட்டு யோகம்: வெளிநாட்டில் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த மாதம் நல்ல செய்தி தேடி வரும். உழைப்பிற்கேற்ற பலன் நிச்சயம் உண்டு.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;​சூரியன் உங்கள் ராசியிலேயே சஞ்சரிப்பதால், இந்த ஆடி மாதம் உங்களுக்கு ராஜயோக மாதமாக அமையப்போகிறது. சூரியனின் பலத்தால் உங்களின் பேச்சுத் திறமை அதிகரிக்கும். சமயோசிதமான பேச்சால் குடும்பத்திலும், பணிபுரியும் இடத்திலும் பலரது மனங்களை வெல்வீர்கள். பொருளாதார ரீதியாக பெரும் முன்னேற்றம் உண்டாகும்.&lt;/p&gt;&lt;p&gt;&amp;nbsp;பணவரவு அதிகரிப்பதுடன், லாபகரமான முதலீடுகளும் அமையும். வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வுகிடைக்க வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். இந்த மாதம் உடல்நலம் மிகச் சிறப்பாக இருக்கும். புத்துணர்ச்சியோடும், அசாத்திய ஆற்றலோடும் செயல்படுவீர்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கன்னி ராசியினருக்கு சூரியன் மற்றும் குருபகவானின் ஆசியால் இந்த மாதம் தடைகளைத் தகர்க்கும் மாதமாக இருக்கும். நீண்ட நாட்களாக உங்களை வாட்டி வதைத்த தொழில்முறை சிக்கல்கள் யாவும் முடிவுக்கு வரும்.&lt;/p&gt;&lt;p&gt;​பொருளாதாரம்: நிதி நிலைமை சீராகும். ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் இருந்து வருமானம் வரக்கூடும். வீண் செலவுகள் குறைந்து, சேமிப்பு உயரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு அவர்களின் தகுதிக்கு ஏற்ற நல்ல வேலை அமையும்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்குப் பொறுப்புகளும், பதவிகளும் உயரும்.​பொதுப்பலன்: ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், இந்த ஆடி மாதம் உங்கள் வாழ்வில் அதிர்ஷ்டத்தையும், வெற்றியையும் ஒருசேரக் கொண்டு சேர்க்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மீன ராசிக்காரர்களின் வாழ்வில் பல நேர்மறையான மாற்றங்களை இந்த ஆடி மாதம் கொண்டு வரப்போகிறது. பொருளாதார ரீதியாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நல்ல பலனைத் தரும். முந்தைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபமும், வருமானமும் வந்து சேரும். நிதிப் பற்றாக்குறை நீங்கும்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;தொழில் அல்லது வேலை நிமித்தமாக வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் தானாகத் தேடி வரும்.​குடும்பம்: குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு இருக்கும். &amp;nbsp;குடும்ப விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். த&zwnj;ம்பதியினருக்குள் இருந்த மனக்கசப்புகள் நீங்கி, அன்யோன்யம் அதிகரிக்கும். உங்களின் கடின உழைப்பை மேலதிகாரிகள் பாராட்டுவார்கள்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[astrology]]></category>
            <dc:creator>Rayar r</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/aadi-month-rasi-palan-2026-4-zodiac-signs-to-get-unexpected-wealth-and-luck-g556kr8"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Anbe Diana Review : அன்பே டயானா படம் ஒர்த்தா? ஒர்த் இல்லையா? முழு விமர்சனம்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/review/anbe-diana-movie-review-a-must-watch-family-entertainer-13feoi1</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/review/anbe-diana-movie-review-a-must-watch-family-entertainer-13feoi1</guid>
            <pubDate>Fri, 17 Jul 2026 00:42:24 +0530</pubDate>
            <description><![CDATA[Anbe Diana Movie Review : பாரி இளவழகன் இயக்கி ஹீரோவாக நடித்துள்ள படம் அன்பே டயானா. இப்படம் இன்று தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி உள்ளது. அதன் விமர்சனத்தை விரிவாக பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxn485ydrv2cm23s8192z6e7,imgname-anbe-diana--5--1784194275276.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Anbe Diana Movie Review : பாரி இளவழகன் இயக்கி ஹீரோவாக நடித்துள்ள படம் அன்பே டயானா. இப்படம் இன்று தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி உள்ளது. அதன் விமர்சனத்தை விரிவாக பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜமா திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் பாரி இளவழகன், இந்த முறை 'அன்பே டயானா' படத்தில் கதாநாயகனாகவும், இயக்குநராகவும் இரட்டை பொறுப்பை ஏற்றுள்ளார். காதல், குடும்ப உறவுகள், சமூகப் பார்வை ஆகியவற்றை நகைச்சுவையுடன் கலந்து சொல்லும் முயற்சியாக இந்த படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் நாயகியாக ரம்யா ரங்கநாதன் நடித்துள்ளார். இவர் இதற்கு முன்னர் தனுஷின் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் நடித்தவர் ஆவார். மேலும் பரிதாபங்கள் கோபியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;OTT : தமிழில் இப்படியொரு அடிபொலியான வெப் சீரிஸா? போலீஸ் vs சைக்கோ கில்லர்... ஒரு நிமிஷம் கூட போரடிக்காது!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கதை, சென்னை பெரம்பூரை பின்னணியாகக் கொண்டு நகர்கிறது. ரயில் பெட்டி தொழிற்சாலையில் பணிபுரியும் தந்தை மற்றும் குடும்பத்தை வழிநடத்தும் தாய் ஆகியோரின் மகனாக இருக்கும் கிருஷ்ணா, விளையாட்டு பயிற்சியாளராக பணியாற்றுகிறார். அந்த நேரத்தில் ஆங்கிலோ-இந்திய சமூகத்தைச் சேர்ந்த டயானாவை காதலிக்கிறார். இரு வெவ்வேறு கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையில் வளர்ந்த இவர்கள் காதலுக்கு, குடும்பமும் சமூகமும் பெரிய சவாலாக மாறுகின்றன. குறிப்பாக பாரம்பரிய நம்பிக்கைகளில் உறுதியாக இருக்கும் கிருஷ்ணாவின் தாய், இந்த உறவை ஏற்றுக்கொண்டாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கிருஷ்ணாவாக நடித்துள்ள பாரி இளவழகன், கதாபாத்திரத்திற்கு தேவையான இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். டயானாவாக வரும் ரம்யா ரங்கநாதன், ஆங்கிலோ-இந்திய பெண்ணின் பேச்சு, உடை, உடல்மொழி அனைத்திலும் தனித்துவத்தை வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார். படத்தின் மிகப்பெரிய பலமாக அமைவது சேத்தன் மற்றும் ரோஜா நடித்திருக்கும் கணவன்-மனைவி கதாபாத்திரங்கள். அமைதியான தந்தைக்கும், அதிரடியாக பேசும் தாய்க்கும் இடையிலான காட்சிகள் பல இடங்களில் சிரிப்பையும், சில இடங்களில் உணர்ச்சியையும் ஏற்படுத்துகின்றன. குறிப்பாக மகனுக்கு துணையாக நிற்கும் தந்தையின் பாத்திரம் மனதில் நிற்கிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நகைச்சுவை நடிகர் கோபிக்கும் கதையில் முக்கிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் அவரது வசனங்கள் சற்று நீளமாகத் தோன்றினாலும், காமெடி காட்சிகள் படத்திற்கு நல்ல பலமாக அமைந்துள்ளன. காதல் கதைக்குள் சமூகத்தில் இன்னும் நிலவி வரும் சாதி மனநிலையை இயக்குநர் மென்மையாக பதிவு செய்துள்ளார். பிரசங்கம் போல இல்லாமல், கதையின் ஓட்டத்திலேயே அந்த கருத்துகளை சொல்லியிருப்பது படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. ஒளிப்பதிவாளர் ஷெல்லி காலிஸ்ட், பெரம்பூரை இதுவரை திரையில் அதிகம் காணாத அழகான கோணத்தில் பதிவு செய்துள்ளார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நகரின் இயல்பான சூழலையும், அன்றாட வாழ்க்கையையும் காட்சிப்படுத்திய விதம் பாராட்டுக்குரியது. பரத் சங்கரின் பின்னணி இசையும், பாடல்களும் கதையின் உணர்வுகளுக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளன. படத்தின் இறுதி அரைமணி நேரம் முழுக்க நகைச்சுவை, எமோஷனல் மற்றும் குடும்ப பாசம் கலந்து ரசிகர்களை மகிழ்விக்கிறது. சிரிப்போடு ஒரு நல்ல கருத்தையும் சொல்லும் இந்த படம், குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய ஒரு ஃபீல் குட் திரைப்படமாக அமைந்துள்ளது. மொத்தத்தில், 'அன்பே டயானா' காதல், குடும்பம், நகைச்சுவை மற்றும் சமூகக் கருத்துகளை சமநிலையுடன் இணைத்து, மனநிறைவான தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸை நிச்சயம் தரும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[review]]></category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/review/anbe-diana-movie-review-a-must-watch-family-entertainer-13feoi1"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Maruti EV: டாடா நானோவுக்கே சவால் விடும் மாருதியின் குட்டி எலக்ட்ரிக் கார்! விலையும் ரொம்ப கம்மியாம்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/auto/maruti-suzuki-vision-e-sky-ev-tipped-to-rival-tata-tiago-ev-5e2b6e6</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/auto/maruti-suzuki-vision-e-sky-ev-tipped-to-rival-tata-tiago-ev-5e2b6e6</guid>
            <pubDate>Thu, 16 Jul 2026 22:48:09 +0530</pubDate>
            <description><![CDATA[மாருதி சுஸுகி நிறுவனம் 'விஷன் இ-ஸ்கை' என்ற புதிய, மலிவு விலை எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்த உள்ளது. டாடா டியாகோ EV-க்கு போட்டியாக வரும் இந்த கார், ஒருமுறை சார்ஜ் செய்தால் 270 கி.மீ. வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxnxfn3c2w1ffvkc9dnawr51,imgname-vision-e-sky-suzuki--2--1784220734572.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;மாருதி சுஸுகி நிறுவனம் 'விஷன் இ-ஸ்கை' என்ற புதிய, மலிவு விலை எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்த உள்ளது. டாடா டியாகோ EV-க்கு போட்டியாக வரும் இந்த கார், ஒருமுறை சார்ஜ் செய்தால் 270 கி.மீ. வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மாருதி சுசுகி நிறுவனம் தனது முதல் மின்சார காரான 'இ-விட்டாரா' என்ற நடுத்தர எஸ்யூவி-யை இந்திய வாகன சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் அதன் விற்பனை படிப்படியாக வேகம் பெற்று வருகிறது. இருப்பினும், இந்த எஸ்யூவி நடுத்தர வர்க்க நுகர்வோரின் பட்ஜெட்டுக்கு சற்று விலை உயர்ந்ததாக உள்ளது. இந்தக் காரணத்திற்காக, சுசுகி நிறுவனம் தற்போது சாமானிய மக்கள் வாங்கக்கூடிய விலையில், மிகவும் மலிவான ஒரு ஆரம்ப நிலை சிறிய மின்சார காரை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நாம் சுஸுகியின் வரவிருக்கும் புதிய சிறிய மின்சார காரான விஷன் இ-ஸ்கை பற்றிப் பேசுகிறோம். இந்தக் கார், தற்போது சந்தையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வரும் டாடா டியாகோ EV மற்றும் எம்ஜி காமட் EV ஆகியவற்றுடன் நேரடியாகப் போட்டியிடும். அளவைப் பொறுத்தவரை, இது டியாகோ EV-ஐ விடச் சிறியதாகவும், எம்ஜி காமட்டை விடப் பெரியதாகவும் இருக்கும். 2025 ஜப்பான் மொபிலிட்டி ஷோவில் இந்தக் காரின் கான்செப்ட் மாடலைக் காட்சிப்படுத்தியதன் மூலம் சுஸுகி ஏற்கனவே அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அளவு மற்றும் வடிவமைப்பைப் பொறுத்தவரை, இந்தக் கார் மிகவும் நடைமுறைக்கு ஏற்றதாகவும் நகர்ப்புற பயன்பாட்டிற்கு உகந்ததாகவும் இருக்கும். இந்தக் கார் 3395 மிமீ நீளமும், 1475 மிமீ அகலமும், 1625 மிமீ உயரமும் மட்டுமே கொண்டிருக்கும். அதாவது, தற்போது சந்தையில் உள்ள மாருதி சுசுகியின் சிறிய காரான 'எஸ்-பிரஸ்ஸோ'வை விட இந்தக் கார் அளவில் சிறியதாக இருக்கும். இது அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள சாலைகளில் எளிதாகச் செல்வதற்கும் நிறுத்துவதற்கும் மிகவும் உதவியாக இருக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த சிறிய மின்சாரக் கார், அளவில் சிறியதாக இருந்தாலும், அதன் மைலேஜில் எந்த சமரசமும் செய்யவில்லை. இந்த கார் ஒரே சார்ஜில் 270 கிலோமீட்டர் தூரம் வரை செல்லும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிறுவனம் ஆரம்பத்தில் இந்தக் காரை ஐரோப்பிய சந்தையில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது, அங்கு இது ஹோண்டா சூப்பர்-என் போன்ற கார்களுக்குக் கடுமையான போட்டியை அளிக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சுஸுகி நிறுவனம் உலகளாவிய சந்தையைக் கருத்தில் கொண்டு இந்தக் காரைத் தயாரித்து வருகிறது. தற்போதைய அறிக்கைகளின்படி, சுஸுகி நிறுவனம் இந்தக் காரை நடப்பு நிதியாண்டில் சர்வதேச சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தற்போது, ​​சுஸுகி இந்த காரை உலகளாவிய சந்தைக்காக வடிவமைத்து வருகிறது. இருப்பினும், இந்தியாவில் குறைந்த விலை மின்சார வாகனங்களுக்கான பெரும் தேவையைக் கருத்தில் கொண்டு, மாருதி சுஸுகி இந்த காரின் உள்ளூர்மயமாக்கப்பட்ட பதிப்பை இங்கு அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது. ஆனாலும், இதுகுறித்து மாருதி சுஸுகி தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. வாடிக்கையாளர்கள் இப்போதைக்கு பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[auto]]></category>
            <dc:creator>Asianetnews Tamil Stories</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/auto/maruti-suzuki-vision-e-sky-ev-tipped-to-rival-tata-tiago-ev-5e2b6e6"/>
        </item>
        <item>
            <title><![CDATA[EV Insurance: எலக்ட்ரிக் வண்டி தீப்பிடிச்சா இன்சூரன்ஸ் கிடைக்குமா? எப்போ Claim ரிஜெக்ட் ஆகும்?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/auto/electric-vehicle-insurance-guide-fire-accidents-and-claim-rejection-28wahnm</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/auto/electric-vehicle-insurance-guide-fire-accidents-and-claim-rejection-28wahnm</guid>
            <pubDate>Thu, 16 Jul 2026 22:38:48 +0530</pubDate>
            <description><![CDATA[சமீபத்தில் நொய்டாவில் ஒரு இ-பைக் தீப்பிடித்த சம்பவத்திற்குப் பிறகு, எலக்ட்ரிக் வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கவரேஜ், கிளைம் செயல்முறை மற்றும் கிளைம் நிராகரிக்கப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பெரிய விவாதம் தொடங்கியுள்ளது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxny8b5cxesdmcfb9zz8c03k,imgname-ev-insurance-1784221543596.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[சமீபத்தில் நொய்டாவில் ஒரு இ-பைக் தீப்பிடித்த சம்பவத்திற்குப் பிறகு, எலக்ட்ரிக் வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கவரேஜ், கிளைம் செயல்முறை மற்றும் கிளைம் நிராகரிக்கப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பெரிய விவாதம் தொடங்கியுள்ளது.&lt;img&gt;&lt;p&gt;நொய்டாவில் மின்சார பைக் தீப்பிடித்த சம்பவத்திற்குப் பிறகு, மின்சார வாகனங்களுக்கான காப்பீட்டு பாதுகாப்பு மற்றும் உரிமைகோரல் நடைமுறைகள் குறித்து கவலைகள் எழுந்துள்ளன. உரிமைகோரல்கள் நிராகரிக்கப்படுவதைத் தவிர்க்க பின்பற்றப்பட வேண்டிய விதிகள் குறித்தும் கவலைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. சமீபத்தில், நொய்டாவின் செக்டர் 66-ல் சார்ஜ் செய்யப்பட்டுக் கொண்டிருந்த மின்சார ஸ்கூட்டரின் பேட்டரி தீப்பிடித்ததால், நான்கு மாடிக் கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர் மற்றும் சுமார் 50 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.&lt;/p&gt;&lt;p&gt;இதன் விளைவாக, மின்சார வாகன உரிமையாளர்களிடையே காப்பீட்டுப் பாதுகாப்பு குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன. தங்களது மின்சார வாகனம் விபத்தில் சிக்கி, குறிப்பாகத் தீப்பிடித்தால், காப்பீட்டு நிறுவனங்கள் அந்த இழப்பை ஈடு செய்யுமா என்பது குறித்து சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சாதாரண வாகனங்களைப் போலவே, மின்சார வாகனங்களுக்கும் காப்பீட்டுத் திட்டங்கள் உள்ளன. மூன்றாம் தரப்புப் பொறுப்புக் காப்பீடு சட்டப்படி கட்டாயமாகும். விரிவான காப்பீட்டுத் திட்டங்கள், விபத்துகள், திருட்டு, தீ மற்றும் இயற்கை பேரழிவுகளால் ஏற்படும் சேதங்களை ஈடு செய்கின்றன. மேலும், இந்தத் திட்டங்கள் மோட்டார், கன்ட்ரோலர் மற்றும் கேபிள்கள் போன்ற மின்சார வாகனங்களுக்கென உள்ள பிரத்யேக பாகங்களுக்கும் பாதுகாப்பை வழங்குகின்றன.&lt;/p&gt;&lt;p&gt;இருப்பினும், வழக்கமான காப்பீட்டுத் திட்டங்கள் மின்சார வாகனங்களுக்கென ஏற்படும் கோளாறுகளை ஈடு செய்வதில்லை. இதில், நீர் உட்புகுதல், சார்ஜ் செய்யும் போது ஏற்படும் மின் அழுத்த ஏற்றங்கள் அல்லது மின்சுற்றுக் கோளாறுகள் ஆகியவற்றால் ஏற்படும் சேதங்கள் அடங்கும். இதற்காக, பல நிறுவனங்கள் 'பேட்டரி ப்ரொடெக்ட்' அல்லது 'ஈவி ஷீல்ட்' போன்ற கூடுதல் காப்பீடுகளை வழங்குகின்றன. இந்தக் கூடுதல் காப்பீடுகள், பேட்டரியைச் சரிசெய்வதற்கான அல்லது மாற்றுவதற்கான செலவை ஈடு செய்கின்றன; குறிப்பாக, நீர் உட்புகுதல், மின்சுற்றுக் கோளாறுகள் மற்றும் சார்ஜ் செய்யும் போது ஏற்படும் மின் அழுத்த ஏற்றங்கள் போன்ற உள் சிக்கல்களுக்கு எதிராக இவை உதவுகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மின்சார வாகனங்களுக்கான காப்பீட்டுக் கோரிக்கை செயல்முறை, வழக்கமான வாகனங்களைப் போன்றதே ஆகும். விபத்து நடந்த உடனேயே காப்பீட்டு நிறுவனத்திற்குத் தெரிவிக்க வேண்டும். சேத விவரங்களை இணையம் வழியாகவோ அல்லது மொபைல் செயலி மூலமாகவோ சமர்ப்பிக்கலாம், மேலும் சேதமடைந்த வாகனத்தின் புகைப்படங்களையும் பதிவேற்ற வேண்டும். அதன்பிறகு, காப்பீட்டு நிறுவனம் சேதமடைந்த பேட்டரியை ஆய்வு செய்து, தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு உங்களைக் கேட்கும். அங்கீகரிக்கப்பட்ட மின்சார வாகன சேவை மையங்களால் பழுதுபார்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பெரும்பாலான காப்பீட்டு நிறுவனங்கள் பணமில்லா தீர்வை வழங்குகின்றன, இதன் மூலம் பழுதுபார்ப்புச் செலவுகள் நேரடியாகப் பழுதுபார்க்கும் இடத்திற்கே செலுத்தப்படுகின்றன.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மின்சார வாகனக் காப்பீட்டுக் கோரிக்கைகள் பல காரணங்களுக்காக நிராகரிக்கப்படலாம். செல்லாத அல்லது தொலைந்துபோன ஓட்டுநர் உரிமம் ஒரு முக்கிய காரணமாகும். காப்பீட்டு நிறுவனத்திற்குத் தெரிவிப்பதில் ஏற்படும் தாமதங்கள், கோரிக்கை நிராகரிக்கப்படுவதற்கு வழிவகுக்கும்; சில பாலிசிகளின்படி 30 நாட்களுக்குள் (அல்லது 3 நாட்களுக்குள்) அறிவிக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;வாகனத்தில் அங்கீகரிக்கப்படாத மாற்றங்களைச் செய்வதும் காப்பீட்டுக் கோரிக்கை நிராகரிக்கப்படுவதற்கு வழிவகுக்கும். சரியான நேரத்தில் பிரீமியம் செலுத்தப்படாவிட்டால், பாலிசி காலாவதியாகிவிடும். இது காப்பீட்டுக் கோரிக்கை நிராகரிக்கப்படுவதற்கு வழிவகுக்கும். அங்கீகரிக்கப்பட்ட பராமரிப்பு அட்டவணையைப் பின்பற்றத் தவறினால், அது உத்தரவாதம் மற்றும் கூடுதல் காப்பீடு ஆகிய இரண்டையும் பாதிக்கக்கூடும். மின்சார வாகன பேட்டரிகள் மிகவும் விலை உயர்ந்தவை என்பதால், காப்பீட்டு அறிவிக்கப்பட்ட மதிப்பு (IDV) சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்வது முக்கியம். வாகனம் முழுமையாக சேதமடைந்தாலோ அல்லது திருடப்பட்டாலோ, குறைந்த IDV குறைவான இழப்பீட்டையே வழங்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[auto]]></category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/auto/electric-vehicle-insurance-guide-fire-accidents-and-claim-rejection-28wahnm"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Virat Kohli: ‘கிங்’ கோலி அதிரடி... குமார் சங்கக்காராவின் பல ஆண்டுச் சாதனைக்கு முற்றுப்புள்ளி!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/sports-cricket/virat-kohli-becomes-indias-highest-run-scorer-in-england-articleshow-ypembwb</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/sports-cricket/virat-kohli-becomes-indias-highest-run-scorer-in-england-articleshow-ypembwb</guid>
            <pubDate>Thu, 16 Jul 2026 22:28:23 +0530</pubDate>
            <description><![CDATA[இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடித்து, இங்கிலாந்து மண்ணில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxb8zphqmkg6ve1vz0keer0y,imgname-virat-kohli-rohit-sharma-1783863695927.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Virat Kohli: இந்தியா &ndash; இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மீண்டும் ஒரு மாபெரும் சாதனையை படைத்துள்ளார். இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்கக்காரா வைத்திருந்த உலக சாதனையை முறியடித்து, சர்வதேச கிரிக்கெட்டில் தனது பெயரை பொன்னெழுத்துகளில் பதித்துள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்த கோலி, எதிரணி அணிகளின் சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு முன்பு இந்த சாதனை குமார் சங்கக்காராவின் பெயரில் இருந்தது. தற்போது அந்த சாதனையை முறியடித்ததன் மூலம் கோலி மீண்டும் உலக கிரிக்கெட்டின் கவனத்தை ஈர்த்துள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;37 வயதிலும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராட் கோலி, தனது அனுபவத்தாலும், நிலைத்தன்மையாலும் இந்திய அணியின் முதுகெலும்பாக திகழ்கிறார். சமீபத்திய இங்கிலாந்து தொடரிலும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.&lt;/p&gt;&lt;p&gt;இதற்கு முன்பும் பல உலக சாதனைகளை கோலி முறியடித்துள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில், சர்வதேச கிரிக்கெட்டில் 28,000 ரன்களை மிக வேகமாக கடந்த வீரர் என்ற சாதனையைப் படைத்து, குமார் சங்கக்காராவை முந்தி சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். அந்த மைல்கல்லை எட்ட கோலி வெறும் 624 இன்னிங்ஸ்கள் மட்டுமே எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;&lt;p&gt;மேலும், இங்கிலாந்துக்கு எதிரான அதே போட்டியில் மற்றொரு சாதனையாக, முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸின் சாதனையையும் கோலி சமன் செய்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக அதிக ஒருநாள் சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் அவர் இணைந்துள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் பல சாதனைகளை நோக்கி விராட் கோலி தொடர்ந்து முன்னேறி வருகிறார். ஒவ்வொரு போட்டியிலும் புதிய வரலாறுகளை உருவாக்கி வரும் அவர், நவீன கிரிக்கெட்டின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக தனது இடத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[sports-cricket]]></category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/sports-cricket/virat-kohli-becomes-indias-highest-run-scorer-in-england-articleshow-ypembwb"/>
        </item>
        <item>
            <title><![CDATA[ஆடி மாதத்தின் முதல் நாள்... உங்கள் வீட்டில் செல்வமும் சந்தோஷமும் பெருக இந்த வழியை பின்பற்றுங்கள்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/spiritual/aadi-month-begins-what-should-you-do-today-to-attract-wealth-and-happiness-at-home-5sh7c7k</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/spiritual/aadi-month-begins-what-should-you-do-today-to-attract-wealth-and-happiness-at-home-5sh7c7k</guid>
            <pubDate>Thu, 16 Jul 2026 22:05:40 +0530</pubDate>
            <description><![CDATA[ஆடி மாதத்தின் முதல் நாளில் வீட்டில் எந்த வழிபாடுகளைச் செய்தால் செல்வமும் சந்தோஷமும் பெருகும் தெரியுமா? அம்மன் அருளைப் பெற பெரியவர்கள் தலைமுறைகளாகப் பின்பற்றி வரும் சில ஆன்மீக வழிமுறைகளையும், அவற்றின் முக்கியத்துவத்தையும் இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxnw69dthhyp5hcnyv5s9mr6,imgname-aadi-month-2026--6--1784219379128.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஆடி மாதத்தின் முதல் நாளில் வீட்டில் எந்த வழிபாடுகளைச் செய்தால் செல்வமும் சந்தோஷமும் பெருகும் தெரியுமா? அம்மன் அருளைப் பெற பெரியவர்கள் தலைமுறைகளாகப் பின்பற்றி வரும் சில ஆன்மீக வழிமுறைகளையும், அவற்றின் முக்கியத்துவத்தையும் இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ் மாதங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுவது ஆடி மாதம். சூரியன் கடக ராசிக்குள் நுழையும் நாளிலிருந்து ஆடி மாதம் தொடங்குகிறது. இந்த மாதம் அம்மன் வழிபாட்டிற்கும், ஆன்மீகச் செயல்களுக்கும் உகந்த காலமாக நம்பப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;குறிப்பாக, ஆடி மாதத்தின் முதல் நாளில் வீட்டில் சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால் செல்வ வளமும், குடும்ப மகிழ்ச்சியும் அதிகரிக்கும் என்று பலர் நம்புகின்றனர். அந்த வழிமுறைகள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;அதிகாலையில் வீட்டை சுத்தம் செய்யுங்கள்&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;ஆடி மாதத்தின் முதல் நாளில் அதிகாலையிலேயே எழுந்து வீட்டை முழுமையாக சுத்தம் செய்வது நல்ல சக்திகளை வரவேற்கும் என்று கூறப்படுகிறது. வீட்டின் வாசலில் தண்ணீர் தெளித்து, அழகான கோலம் போடுவது சிறப்பாக கருதப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;காலை மற்றும் மாலை நேரங்களில் வீட்டுப் பூஜை அறையில் நெய் அல்லது நல்லெண்ணெய் விளக்கேற்றி அம்மனை மனமார வேண்டிக் கொள்ளுங்கள். குறிப்பாக சிவப்பு அல்லது மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து வழிபடுவது நல்ல பலன்களைத் தரும் என்று நம்பப்படுகிறது.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;அரிசி மற்றும் மஞ்சள் வைத்து பூஜை செய்யுங்கள்&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;ஒரு சிறிய தட்டில் சிறிதளவு அரிசி, மஞ்சள், குங்குமம் மற்றும் பூக்களை வைத்து குடும்பத்தின் நலனுக்காக பிரார்த்தனை செய்யலாம். இது வீட்டில் செழிப்பையும், அமைதியையும் அதிகரிக்கும் என்ற ஐதீகம் உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆடி மாதத்தின் முதல் நாளில் வீட்டின் வாசலில் மாமர இலைத் தோரணம் கட்டுவது நல்ல அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் என்று பலர் நம்புகின்றனர். இது வீட்டிற்குள் நேர்மறை ஆற்றலைக் கொண்டு வரும் என்ற பாரம்பரிய நம்பிக்கையும் உள்ளது.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;அன்னதானம் செய்வது சிறப்பு&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;முடிந்தவரை ஏழை, எளிய மக்களுக்கு உணவு அல்லது தேவையான பொருட்களை வழங்குவது மிகவும் புண்ணியமான செயலாகக் கருதப்படுகிறது. பிறருக்கு உதவுவது குடும்பத்தில் மகிழ்ச்சியையும் மனநிம்மதியையும் அதிகரிக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆடி மாதத்தில் பெண்கள் அம்மன் கோயில்களுக்குச் சென்று விளக்கேற்றி வழிபடுவது வழக்கம். குடும்ப நலன், திருமண யோகம் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக பலர் விரதங்களையும் மேற்கொள்கின்றனர்.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;கவனிக்க வேண்டிய விஷயம்&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;இந்த வழக்கங்கள் அனைத்தும் பாரம்பரிய மற்றும் ஆன்மீக நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. ஒவ்வொரு குடும்பமும் தங்கள் மரபு மற்றும் நம்பிக்கைகளுக்கு ஏற்ப இவற்றைப் பின்பற்றுகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;ஆடி மாதத்தின் முதல் நாளில் நல்ல எண்ணங்களுடன் நாளைத் தொடங்கி, குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிட்டால், அந்த மாதம் முழுவதும் புத்துணர்ச்சியும் மனநிறைவும் கிடைக்கும் என்று பெரியவர்கள் கூறுகின்றனர்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[spiritual]]></category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/spiritual/aadi-month-begins-what-should-you-do-today-to-attract-wealth-and-happiness-at-home-5sh7c7k"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Salads: கோடைகால வெப்பத்தை தணிக்க 5 சுலபமான நீர்ச்சத்து சாலட் ரெசிபிக்கள்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/health-food/5-easy-water-rich-salads-for-summer-hydration-and-weight-loss-p6353ug</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/health-food/5-easy-water-rich-salads-for-summer-hydration-and-weight-loss-p6353ug</guid>
            <pubDate>Thu, 16 Jul 2026 22:00:58 +0530</pubDate>
            <description><![CDATA[கோடை காலத்தில் நம் உடலை குளிர்ச்சியாகவும், நீர்ச்சத்தோடும் (hydration) வைத்திருப்பது மிகவும் அவசியம். அதே சமயம், அதிக கலோரி இல்லாத, வயிற்றை நிரப்பக்கூடிய உணவுகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது. நீர்ச்சத்து அதிகம் நிறைந்த 5 ஆரோக்கியமான சாலட் ரெசிபிக்கள் இதோ]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxnsmzan7mhwgt740mc6cybv,imgname-salads--1--1784216714581.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;கோடை காலத்தில் நம் உடலை குளிர்ச்சியாகவும், நீர்ச்சத்தோடும் (hydration) வைத்திருப்பது மிகவும் அவசியம். அதே சமயம், அதிக கலோரி இல்லாத, வயிற்றை நிரப்பக்கூடிய உணவுகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது. நீர்ச்சத்து அதிகம் நிறைந்த 5 ஆரோக்கியமான சாலட் ரெசிபிக்கள் இதோ&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வெள்ளரிக்காயில் 90 சதவீதத்திற்கும் மேல் நீர்ச்சத்து நிறைந்துள்ளது. இது உடலின் வெப்பத்தை தணிப்பதில் முதலிடம் வகிக்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;செய்முறை: வெள்ளரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, அதனுடன் புதிய புதினா இலைகளைச் சேர்க்கவும். சிறிதளவு எலுமிச்சை சாறு, உப்பு மற்றும் மிளகுத்தூள் தூவி நன்கு கலக்கினால், மிகவும் சுவையான மற்றும் குளிர்ச்சியான சாலட் தயார்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கோடைகாலத்தின் ஸ்பெஷல் பழமான தர்பூசணி, உடலின் நீர் தேவையை பூர்த்தி செய்வதுடன், இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆவலையும் கட்டுப்படுத்துகிறது.&lt;/p&gt;&lt;p&gt;செய்முறை: தர்பூசணி துண்டுகளுடன் சிறிதளவு ஃபெட்டா சீஸ் (feta cheese) மற்றும் புதினா இலைகளைச் சேர்க்கவும். இனிப்பும் உப்பும் கலந்த இந்த வித்தியாசமான சுவை, நாவிற்கு நல்ல விருந்தாக அமையும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த மூன்று காய்கறிகளிலுமே நீர்ச்சத்து அதிகம் மற்றும் கலோரிகள் மிகக் குறைவு. இதில் உடலுக்குத் தேவையான வைட்டமின்களும், செரிமானத்திற்கு உதவும் நார்ச்சத்தும் (fibre) நிறைந்துள்ளன.&lt;/p&gt;&lt;p&gt;செய்முறை: லெட்டியூஸ் இலைகள், தக்காளி மற்றும் வண்ணமயமான குடைமிளகாய்களை நறுக்கி ஒன்றாக்கிக் கொள்ளவும். சிறிதளவு ஆலிவ் ஆயில் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்துப் பரிமாறலாம். இது பசியை நன்கு கட்டுப்படுத்தும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;முட்டக்கோஸில் நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் மிக அதிகம். கேரட் உடலுக்குத் தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளை வழங்குகிறது.&lt;/p&gt;&lt;p&gt;செய்முறை: பொடியாக நறுக்கிய முட்டக்கோஸ் மற்றும் துருவிய கேரட்டை ஒன்றாகக் கலக்கவும். இதனுடன் சுவைக்காகவும் ஆரோக்கியத்திற்காகவும் குறைந்த கொழுப்புள்ள தயிர் (yoghurt) சேர்த்து மிக்ஸ் செய்து சாப்பிடலாம். இது மொறுமொறுப்பான, வயிறு நிறையும் சிறந்த சாலட் ஆகும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஸ்ட்ராபெரி பழங்களில் நீர்ச்சத்து அதிகம். பசலைக்கீரை (spinach) உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.&lt;/p&gt;&lt;p&gt;செய்முறை: பசலைக்கீரை இலைகளுடன் நறுக்கிய ஸ்ட்ராபெரி துண்டுகளைச் சேர்க்கவும். கூடுதல் சுவைக்காகவும், நல்ல கொழுப்புக்காகவும் சில பாதாம் அல்லது பூசணி விதைகளை (seeds) மேலே தூவி சாப்பிடலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[health-food]]></category>
            <dc:creator>Priya Velan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/health-food/5-easy-water-rich-salads-for-summer-hydration-and-weight-loss-p6353ug"/>
        </item>
        <item>
            <title><![CDATA[tomato chutney: 5 வித்தியாசமான சுவைகளில் அசத்தலான தக்காளி சட்னி ரெசிபிகள்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/5-unique-tomato-chutney-variety-recipes-in-tamil-zydi02n</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/5-unique-tomato-chutney-variety-recipes-in-tamil-zydi02n</guid>
            <pubDate>Thu, 16 Jul 2026 21:15:04 +0530</pubDate>
            <description><![CDATA[ஒரே மாதிரி தக்காளி சட்னி செய்து அலுத்துவிட்டதா? உங்களுக்காக 5 அசத்தலான, வித்தியாசமான தக்காளி சட்னி ரெசிபிகள் இதோ! இப்படிச் சமைத்தால், தினமும் தக்காளி சட்னி வைத்தாலும் யாருக்கும் சலிப்பே தட்டாது; விரும்பி சாப்பிடுவார்கள்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxnp6yn8snxzfzeqtwhwgw4z,imgname-tomato-chutney--1--1784213109416.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;ஒரே மாதிரி தக்காளி சட்னி செய்து அலுத்துவிட்டதா? உங்களுக்காக 5 அசத்தலான, வித்தியாசமான தக்காளி சட்னி ரெசிபிகள் இதோ! இப்படிச் சமைத்தால், தினமும் தக்காளி சட்னி வைத்தாலும் யாருக்கும் சலிப்பே தட்டாது; விரும்பி சாப்பிடுவார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தினமும் இட்லி, தோசைக்கு என்ன சட்னி அரைப்பது என்ற கவலை இனி வேண்டாம். தக்காளி மட்டும் இருந்தால் போதும். இந்த ஒரு பொருளை மட்டும் வைத்து, தினமும் விதவிதமாக சட்னி செய்து அசத்தி விடலாம். தக்காளி சட்னி தான், ஆனால் வழக்கமான சுவையில் இல்லாமல் ஐந்தும் ஐந்து விதமான சுவைகளில் இருக்கும். இவற்றை செய்வதும் ஈஸி என்பதால் டிபன் செய்யும் வேலையும் சட்டென முடிந்து விடும். தக்காளி சட்னி பிடிக்காதவர்கள் கூட இனி, இன்னும் வேண்டும் என கேட்டு வாங்கி சாப்பிடும் அளவிற்கு, நாவில் எச்சில் ஊற வைக்கும் சுவையில் தக்காளி சட்னி செய்வதற்கு 5 வித்தியாசமான சட்னி ஐடியாக்கள் இதோ...&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வழக்கமான தக்காளியுடன் வறுத்த வெள்ளை எள் சேர்த்து அரைக்கப்படும் சட்னி இது. எள்ளில் உள்ள கால்சியம் சத்து உடலுக்கு நல்லது. தக்காளி, வெங்காயம், வரமிளகாயை வதக்கிவிட்டு, இறக்குவதற்கு முன் இரண்டு ஸ்பூன் வெள்ளை எள்ளை வறுத்து சேர்த்து அரைக்க வேண்டும். இந்த சட்னிக்கு நல்லெண்ணெய் தாளிப்பு கொடுக்கும் போது, எள்ளின் வாசனையும் தக்காளியின் புளிப்பும் இணைந்து அசாத்திய சுவையைத் தரும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கிராமத்து மணத்தில் கறுகிய வாசனையோடு (Smoky flavor) கூடிய ஒரு பிரத்யேக சட்னி. தக்காளியையும், தோலுரிக்காத பூண்டையும் நேரடியாக நெருப்பில் காட்டி சுட்டுக் கொள்ள வேண்டும். பின்னர் தோலை நீக்கிவிட்டு, மிக்ஸியில் அரைக்காமல் கைகளால் நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும். இதனுடன் பொடியாக நறுக்கிய பச்சை வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, கடுகு தாளித்து பரிமாறினால் இதன் சுவை அட்டகாசமாக இருக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஹோட்டல் ஸ்டைல் காரசாரமான சட்னிகளுக்கு மாற்றாக, சற்றே குளிர்ச்சியான மற்றும் நறுமணம் மிக்க சட்னி. தக்காளி மற்றும் புதினாவை வதக்கி அரைத்த பின்பு, இறுதியாக இரண்டு ஸ்பூன் கெட்டித் தயிர் சேர்த்து லேசாகக் கலக்க வேண்டும். காரத்தைக் குறைக்காமல், தயிரின் புளிப்புச் சுவையோடு புதினாவின் நறுமணமும் சேரும் போது இது பிரியாணி மற்றும் சப்பாத்திக்கு மிகச்சிறந்த காம்பினேஷனாக மாறும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஆந்திரா காரச் சட்னி பாணியில், காரமும் நட்ஸ் சுவையும் கலந்த ஒரு கலவை. தக்காளி வதக்கும் போது தாராளமாகப் பூண்டு மற்றும் காரசாரமான சிவப்பு மிளகாய் சேர்க்க வேண்டும். அரைக்கும் போது வறுத்த வேர்க்கடலையைச் சேர்த்து அரைக்க வேண்டும். வேர்க்கடலை சட்னிக்கு ஒரு கெட்டியான பதத்தைத் தருவதோடு, தக்காளியின் அதிகப்படியான புளிப்பைச் சமன் செய்து தனித்துவமான சுவையை வழங்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இனிப்பு, புளிப்பு, காரம் என மூன்று சுவைகளும் கலந்த ஒரு நாவூறும் சட்னி வகை. தக்காளியுடன் சில துண்டுகள் மாங்காய் மற்றும் சிறிதளவு வெல்லம் சேர்த்து வதக்கி அரைக்க வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் இந்த சட்னி, காரசாரமான மொறுமொறு தோசைக்கு ஒரு உலகத்தரம் வாய்ந்த காம்போவாக இருக்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[life-style]]></category>
            <dc:creator>Priya Velan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/5-unique-tomato-chutney-variety-recipes-in-tamil-zydi02n"/>
        </item>
        <item>
            <title><![CDATA[தமிழக மக்களே உஷார்! வெப்ப அலை எச்சரிக்கை! இன்று 19 மாவட்டங்களில் சுட்டெரிக்கப் போகும் வெயில்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/heatwave-warning-in-tamil-nadu-19-districts-on-alert-videoshow-frv7yig</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/heatwave-warning-in-tamil-nadu-19-districts-on-alert-videoshow-frv7yig</guid>
            <pubDate>Thu, 16 Jul 2026 21:04:57 +0530</pubDate>
            <description><![CDATA[]]></description>
            <media:content url="https://www.youtube.com/embed/klIyyWoFs2A" medium="video" height="350" width="560"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;TN Weather Update: தமிழகத்​தில் தினமும் பல்வேறு இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்து வருகிறது. இன்று வேலூர், மதுரை, சேலம், கள்ளக்குறிச்சி உள்​ளிட்ட 19 மாவட்​டங்​களில் வெப்ப அலை வீசும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[tamilnadu]]></category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/heatwave-warning-in-tamil-nadu-19-districts-on-alert-videoshow-frv7yig"/>
        </item>
        <item>
            <title><![CDATA[banana stem cutlet: மொறுமொறுப்பான வாழைத்தண்டு கட்லெட் செய்வது எப்படி?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/healthy-banana-stem-cutlet-recipe-in-tamil-r475nuy</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/healthy-banana-stem-cutlet-recipe-in-tamil-r475nuy</guid>
            <pubDate>Thu, 16 Jul 2026 20:30:51 +0530</pubDate>
            <description><![CDATA[பாரம்பரிய மற்றும் நீர்ச்சத்து நிறைந்த வாழைத்தண்டை இன்றைய தலைமுறையினர் உண்பது சவாலாக உள்ளது. எனவே, தீங்கு விளைவிக்கும் துரித உணவுகளுக்கு மாற்றாக, ஆரோக்கியமான சமையல் உத்தியில் மொறுமொறுப்பான, சுவையான வாழைத்தண்டு கட்லெட் சிறந்த தேர்வாக அமைகிறது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxnn60a6t3pem18zfsd875tk,imgname-cutlet--1--1784212029766.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;பாரம்பரிய மற்றும் நீர்ச்சத்து நிறைந்த வாழைத்தண்டை இன்றைய தலைமுறையினர் உண்பது சவாலாக உள்ளது. எனவே, தீங்கு விளைவிக்கும் துரித உணவுகளுக்கு மாற்றாக, ஆரோக்கியமான சமையல் உத்தியில் மொறுமொறுப்பான, சுவையான வாழைத்தண்டு கட்லெட் சிறந்த தேர்வாக அமைகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;உடல் நலத்திற்குப் பல்வேறு நன்மைகளை வாரி வழங்கும் வாழைத்தண்டை சமைப்பது என்றாலே பலருக்கும் சலிப்பு தட்டும். அப்படியே கஷ்டப்பட்டு சமைத்து வைத்தாலும், குழந்தைகள் அதை தொட்டு கூட பார்ப்பது கிடையாது. அதே வாழைத்தண்டை அவர்கள் வேண்டாம் என சொல்லாத படி, சூப்பரான ஸ்நாக்காக மாற்றி கொடுக்கலாம். வாழைத்தண்டை மாலை நேரத்தில் சுடச்சுட, மொறுமொறுப்பான கட்லெட்டாக மாற்றித் தந்தால் தட்டிலிருக்கும் அனைத்தும் நொடியில் காலியாகிவிடும். நார்ச்சத்து நிறைந்த வாழைத்தண்டை எண்ணெயில் பொரிக்காமல், அதே சமயம் சுவை குறையாமல் ஆரோக்கியமான முறையில் தயாரிப்பதற்கான புத்தம் புதிய செய்முறை இதோ!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வாழைத்தண்டின் நாரை முழுமையாக எடுப்பதற்குப் பதிலாக, அதனை மிக மெல்லியதாகத் துருவிக்கொள்ள வேண்டும். துருவிய வாழைத்தண்டை உப்பு கலந்த மோரில் 10 நிமிடங்கள் ஊறவைத்து பிழிந்து எடுக்கவும். இதனால் அதன் துவர்ப்புத் தன்மை நீங்கி, மென்மைத்தன்மை கூடும். வாழைத்தண்டின் நார் உடலுக்கு மிகவும் நல்லது என்பதால், மிகச்சிறிய துருவலாக மாற்றும் போது நாரை நீக்க வேண்டிய அவசியம் இல்லை. அது கட்லெட்டுக்கு நல்லதொரு பைண்டிங் அமைப்பையும் தரும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பொதுவாக கட்லெட் செய்ய உருளைக்கிழங்கு சேர்க்கப்படும். அதற்கு மாற்றாக, இதில் வேகவைத்த கொண்டைக்கடலை மாவு அல்லது தினை மாவைச் சேர்க்கலாம். பிழிந்து எடுத்த வாழைத்தண்டுடன், வறுத்த தினை மாவு மற்றும் வேகவைத்து மசித்த சோயா கிரானுயூல்ஸ் (Soy granules) சேர்க்கவும். இது கட்லெட்டின் புரதச்சத்தை (Protein) அதிகரிப்பதோடு, உருளைக்கிழங்கின் தேவையின்றி கலவை உதிராமல் கெட்டியாகப் பிடிக்க உதவும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;வழக்கமான கரம் மசாலாவுக்குப் பதிலாக, இதில் சேர்க்கப்படும் சில மசாலாக்கள் இதன் சுவையை ஹோட்டல் தரத்திற்கு உயர்த்தும். பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாயுடன், லேசாக வறுத்து இடித்த சோம்பு மற்றும் சீரகப் பொடியைச் சேர்க்கவும். இதில் சிறிதளவு எலுமிச்சைச் சாறு மற்றும் சாட் மசாலா சேர்க்கும் போது, வாழைத்தண்டின் சுவை முற்றிலும் மறைந்து வட இந்திய சாட் உணவுகளின் அலாதி சுவை கிடைக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கட்லெட் வெளியில் மொறுமொறுப்பாகவும், உள்ளே மிருதுவாகவும் இருக்க இந்த கோட்டிங் முறை உதவும். மைதா மாவிற்குப் பதிலாக சோள மாவை (Corn flour) தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். தயார் செய்த கட்லெட் கலவையை இதில் நனைத்து, பொடித்த ஓட்ஸ் மற்றும் முந்திரிப் பருப்புத் தூள் கலவையில் புரட்டி எடுக்கவும். முந்திரிப் பருப்பின் நொறுக்குத்தீனி வாசனை குழந்தைகள் விரும்பி உண்ணும் வகையில் கட்லெட்டை மாற்றும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதிகப்படியான எண்ணெயைத் தவிர்த்து உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் இறுதி வழிமுறை இது. கடாயில் எண்ணெயில் போட்டுப் பொரிக்காமல், தோசைக் கல்லில் சிறிதளவு நெய் அல்லது கடலை எண்ணெய் ஊற்றி, மிதமான தீயில் இருபுறமும் பொன்னிறமாக வேக வைத்து எடுக்க வேண்டும். மிதமான தீயில் வேக வைக்கும் போது ஓட்ஸ் கலவை நல்ல மொறுமொறுப்பைப் பெறுவதுடன், உட்புறம் உள்ள வாழைத்தண்டு ஆவியில் வெந்து மிக மென்மையாக மாறும். இதனைப் புதினா சட்னியுடன் பரிமாறலாம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[life-style]]></category>
            <dc:creator>Priya Velan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/healthy-banana-stem-cutlet-recipe-in-tamil-r475nuy"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Zodiac sign: சத்தமில்லாமல் சாதித்துக் காட்டுவதில் இந்த 5 ராசிக்காரர்கள் கில்லாடிகள்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/5-zodiac-signs-who-achieve-success-silently-in-tamil-wbyzyvb</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/5-zodiac-signs-who-achieve-success-silently-in-tamil-wbyzyvb</guid>
            <pubDate>Thu, 16 Jul 2026 19:44:00 +0530</pubDate>
            <description><![CDATA[மனிதர்களின் உழைப்பும் வெற்றிப்பாதையும் மாறுபடும். சிலர் விளம்பரப்படுத்தி உழைப்பார்கள், சிலரோ அமைதியாக நகர்ந்து பிரம்மாண்ட வெற்றியை மட்டுமே காட்டுவார்கள். அப்படி ஆரவாரம் இல்லாமல் தனித்துவமாக அசுர வளர்ச்சி அடையும் 5 ராசிகளைப் பற்றிப் பார்ப்போம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxj3gge29szew1bvmqabm8dz,imgname-the-month-of-ashada-will-be-extremely-favorable-for-these-4-zodiac-signs-1784092836290.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;மனிதர்களின் உழைப்பும் வெற்றிப்பாதையும் மாறுபடும். சிலர் விளம்பரப்படுத்தி உழைப்பார்கள், சிலரோ அமைதியாக நகர்ந்து பிரம்மாண்ட வெற்றியை மட்டுமே காட்டுவார்கள். அப்படி ஆரவாரம் இல்லாமல் தனித்துவமாக அசுர வளர்ச்சி அடையும் 5 ராசிகளைப் பற்றிப் பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&quot;ஆடிப் பாடி வேலை செஞ்சா அலுப்பிருக்காது&quot; என்பார்கள். ஆனால், சிலரோ எந்தவொரு ஆரவாரமும் இன்றி, தங்களின் உழைப்பை மட்டுமே முதலீடாகக் கொண்டு, இலக்குகளைச் சத்தமில்லாமல் அடைந்து காட்டுவார்கள். ஜோதிட சாஸ்திரத்தின்படி, கிரகங்களின் அமைப்பும் தனித்துவமான ராசிப் பண்புகளும் சிலரைத் தம்பட்டம் அடிக்காத சாதனையாளர்களாக மாற்றுகின்றன. தங்களின் திட்டங்களை வெளியில் சொல்லாமல், வெற்றிக் கனியைப் பறித்த பின்பு உலகிற்குத் தங்களைக் காட்டிக் கொள்ளும் அந்த 5 அதிர்ஷ்ட ராசிகள் யார் யார் என்பதை வாங்க பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சனி பகவானை அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்காரர்கள், விடாமுயற்சிக்குச் சான்றாகத் திகழ்வார்கள். தங்களின் எதிர்காலத் திட்டங்களையோ அல்லது தொழில் சார்ந்த ரகசியங்களையோ நெருங்கிய நண்பர்களிடம் கூடப் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். இவர்களின் மௌனம் பலவீனமல்ல, அது வெற்றிக்கான வியூகம். இவர்களது ராசியின் காலபுருஷ தத்துவப்படி 10-ஆம் இடம் (கர்ம ஸ்தானம்) வலுவாக இருப்பதால், விளம்பரத்தை விரும்பாமல் உழைப்பிலேயே குறியாக இருந்து நினைத்ததைச் சாதிப்பார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;செவ்வாயின் ஆதிக்கம் பெற்ற இந்த ராசிக்காரர்கள், இயல்பிலேயே ஆழ்ந்த சிந்தனையும் ரகசியத் தன்மையும் கொண்டவர்கள். தோல்விகள் வந்தாலும் சோர்வடையாமல், அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு தங்களை அடுத்த கட்டத்திற்குத் தயார்படுத்துவார்கள். தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை அருகில் இருப்பவர்களுக்கு கூடத் தெரியாமல் ரகசியமாக வைத்திருப்பதே இவர்களின் பலம். நீர் ராசியான விருச்சிகத்தின் ஆழம் அறிய முடியாதது போல, இவர்களின் அக உலகத் திட்டங்களை யாராலும் கணிக்க முடியாது. இறுதி நேரத்தில் மட்டுமே இவர்களின் வெற்றி வெளிச்சத்திற்கு வரும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;புதன் பகவானின் ஆதிக்கம் நிறைந்த கன்னி ராசிக்காரர்கள், அறிவுக் கூர்மையும் எல்லாவற்றையும் மிகத் துல்லியமாகச் செய்யும் ஆற்றலும் கொண்டவர்கள். பெரிய ஆரவாரம் இல்லாமல், சின்னச் சின்ன விஷயங்களையும் நுணுக்கமாகத் திட்டமிட்டுச் செயல்படுத்துவார்கள். மற்றவர்கள் இவர்களைச் சாதாரணமாக எடை போடும் போது, இவர்கள் தங்களின் திறமையால் சிகரத்தைத் தொட்டிருப்பார்கள். இவர்களது அபாரமான பகுப்பாய்வுத் திறன் (Analytical skill) எந்தவொரு சவாலையும் சத்தமில்லாமல் முறியடித்து, இவர்களை முதலிடத்தில் அமர வைக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்கள், நிலைத்தன்மைக்கும் அசைக்க முடியாத பொறுமைக்கும் பெயர் பெற்றவர்கள். எவ்வளவு பெரிய தடைகள் வந்தாலும், அமைதியாகத் தன் பாதையிலிருந்து விலகாமல் முன்னேறுவார்கள். ஆடம்பரப் பேச்சுகளைத் தவிர்த்து, செயலில் மட்டுமே தங்களின் முழு கவனத்தையும் செலுத்துவார்கள். பூமி தத்துவ ராசியான இவர்கள், வேரூன்றிய மரத்தைப் போல உறுதியானவர்கள். இவர்களின் கடின உழைப்பும் பொறுமையும் இறுதியில் இவர்களைப் பெரும் பொருளாதாரச் சாதனையாளர்களாக மாற்றும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்கள், மென்மையானவர்களாகத் தெரிந்தாலும், இலக்குகளை அடைவதில் அதீத பிடிவாதம் கொண்டவர்கள். தங்களின் பலவீனங்களை வெளியில் காட்டிக் கொள்ளாமல், தங்களுக்குள் இருக்கும் உள்ளுணர்வை (Intuition) நம்பிச் செயல்படுவார்கள். தங்களுக்குப் பிடித்தமான துறையில் யாருக்கும் தெரியாமல் அசுர வளர்ச்சி அடைவார்கள். இவர்களின் கற்பனைத் திறனும், மனோகாரகனான சந்திரனின் பலமும், மற்றவர்கள் சிந்திக்காத புதிய வழிகளில் இவர்களைச் சத்தமில்லாமல் சாதிக்க வைக்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[astrology]]></category>
            <dc:creator>Priya Velan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/5-zodiac-signs-who-achieve-success-silently-in-tamil-wbyzyvb"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Green Chutney: ஹோட்டல் ஸ்டைல் புதினா சட்னி வேணுமா? அரைக்கும் போது இந்த 2 சீக்ரெட் பொருளை மட்டும் சேருங்க.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/life-style/hotel-style-pudina-chutney-recipe-how-to-make-restaurant-style-green-chutney-for-idli-and-dosa-at-home-qpqxr0i</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/life-style/hotel-style-pudina-chutney-recipe-how-to-make-restaurant-style-green-chutney-for-idli-and-dosa-at-home-qpqxr0i</guid>
            <pubDate>Thu, 16 Jul 2026 19:26:02 +0530</pubDate>
            <description><![CDATA[Hotel Style Pudina Chutney: இட்லி, தோசை எதுவா இருந்தாலும், அதுக்கு புதினா சட்னி இருந்தா டேஸ்ட்டே தனிதான். ஆனா வீட்ல செய்யுற சட்னி, ஹோட்டல் டேஸ்ட்ல வராது. சில சிம்பிள் டிப்ஸ் ஃபாலோ பண்ணா, நீங்களும் வீட்லயே ரெஸ்டாரன்ட் ஸ்டைல் புதினா சட்னி செய்யலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxnkbqvzvxtr201ebeef0p39,imgname-hotel-style-pudina-chutney-in-tamil---3-1784210120575.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Hotel Style Pudina Chutney: இட்லி, தோசை எதுவா இருந்தாலும், அதுக்கு புதினா சட்னி இருந்தா டேஸ்ட்டே தனிதான். ஆனா வீட்ல செய்யுற சட்னி, ஹோட்டல் டேஸ்ட்ல வராது. சில சிம்பிள் டிப்ஸ் ஃபாலோ பண்ணா, நீங்களும் வீட்லயே ரெஸ்டாரன்ட் ஸ்டைல் புதினா சட்னி செய்யலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;ul&gt; &lt;li&gt;1 கப் ஃப்ரெஷ் கொத்தமல்லி,&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;1/2 கப் புதினா இலை,&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;2 பச்சை மிளகாய்,&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;4-5 பல் பூண்டு,&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;1 சின்ன துண்டு இஞ்சி,&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;1 ஸ்பூன் எலுமிச்சை சாறு,&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;1/2 டீஸ்பூன் வறுத்த சீரகம்,&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;தேவையான அளவு உப்பு,&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;2-3 ஐஸ் க்யூப்ஸ்,&amp;nbsp;&lt;/li&gt; &lt;li&gt;1-2 டேபிள்ஸ்பூன் தண்ணீர்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் -&lt;/strong&gt; &amp;nbsp;உங்க மட்டன் பஞ்சு போல வேகணுமா? சாஃப்ட் கறியை ஈஸியா கண்டுபிடிக்க சூப்பர் டிப்ஸ்.! வாங்கும் போதே இதை கவனிங்க.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சட்னிக்கு நீங்க பயன்படுத்துற கொத்தமல்லி, புதினா இலைகள் ஃப்ரெஷ்ஷா இருக்கணும். மஞ்சள் நிறத்துல வாடிப் போன இலைகளை பயன்படுத்தாதீங்க. அது சட்னியை கறுப்பாக்கிடும். இலைகளை நல்லா கழுவிட்டு, தண்ணியை வடிச்சிடுங்க.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் -&amp;nbsp;&lt;/strong&gt; Water Bottle: வாட்டர் பாட்டில் மூடி ஏன் வெவ்வேற கலர்ல இருக்குனு யோசிச்சிருக்கீங்களா? இதுக்கு பின்னாடி பெரிய சயின்ஸ் இருக்கு.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ரெஸ்டாரன்ட் ஸ்டைல் கிரீன் சட்னியோட பெரிய ரகசியமே ஐஸ் க்யூப்ஸ்தான். சட்னி அரைக்கும்போது, மிக்ஸியில் 2-3 ஐஸ் க்யூப்ஸை சேருங்க. இது மிக்ஸி சூடாகுறதைக் குறைச்சு, இலைகளோட இயற்கையான பச்சை நிறத்தை அப்படியே தக்க வைக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் -&lt;/strong&gt; &amp;nbsp;Pressure Cooker: அலுமினியம் குக்கர் vs ஸ்டீல் குக்கர்.! சமையலுக்கும், ஆரோக்கியத்திற்கும் எது பெஸ்ட்?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, வறுத்த சீரகம், உப்பு எல்லாத்தையும் மிக்ஸி ஜார்ல போடுங்க. இப்போ எலுமிச்சை சாறு, ஐஸ் க்யூப்ஸை சேருங்க. தேவைப்பட்டா கொஞ்சம் ஜில் தண்ணி சேர்த்து நல்லா நைசா அரைச்சுக்கோங்க. ஒரேடியா தண்ணி ஊத்தாம, கொஞ்சம் கொஞ்சமா சேருங்க.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் -&amp;nbsp;&lt;/strong&gt; Home Cleaning: படுக்கை மெத்தையில் கெட்ட வாடையா? துவைக்காமலேயே துர்நாற்றத்தை நீக்க சூப்பர் டிப்ஸ்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எலுமிச்சை சாறு சுவையை கூட்டுறது மட்டுமில்ல, சட்னியோட பச்சை நிறம் நீண்ட நேரம் மாறாம இருக்கவும் உதவுது. இது சட்னிக்கு ஒரு லைட்டான புளிப்புச் சுவையையும் கொடுக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் -&amp;nbsp;&lt;/strong&gt; Mutton: ஆட்டுக்கறிக்கு ஏன் 'மட்டன்'-னு பேரு? அப்ப வெள்ளாட்டுக்கறிக்கு என்ன பேரு?&lt;/p&gt;&lt;img&gt;சட்னி அரைக்கும்போது, எந்தக் காரணத்துக்காகவும் சுடுதண்ணீர் யூஸ் பண்ணாதீங்க. மிக்ஸியை ரொம்ப நேரம் தொடர்ந்து ஓட விடாதீங்க. அதிகமா தண்ணி சேர்க்கிறதையும் தவிர்த்திடுங்க.]]></content:encoded>
            <category><![CDATA[life-style]]></category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/life-style/hotel-style-pudina-chutney-recipe-how-to-make-restaurant-style-green-chutney-for-idli-and-dosa-at-home-qpqxr0i"/>
        </item>
        <item>
            <title><![CDATA[மிதுனம் – எழுதி வச்சிக்கோங்க! 100% சனியால் வாழ்க்கை மாறப்போகுது... அப்படி என்ன நடக்க போகிறது?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/gemini-horoscope-saturns-powerful-transit-could-change-your-life-completely-qwggsgm</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/gemini-horoscope-saturns-powerful-transit-could-change-your-life-completely-qwggsgm</guid>
            <pubDate>Thu, 16 Jul 2026 19:23:21 +0530</pubDate>
            <description><![CDATA[சனியின் சக்திவாய்ந்த தாக்கத்தால் மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படப் போகின்றன என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். உண்மையாகவே அதிர்ஷ்டம் காத்திருக்கிறதா? மிதுன ராசிக்காரர்கள் தவறாமல் தெரிந்துகொள்ள வேண்டிய பலன்கள் இதோ!]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxnjyc03s91d6c2vfyzcm4k9,imgname-saturn-effects-on-gemini-1784209682434.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;சனியின் சக்திவாய்ந்த தாக்கத்தால் மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படப் போகின்றன என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். உண்மையாகவே அதிர்ஷ்டம் காத்திருக்கிறதா? மிதுன ராசிக்காரர்கள் தவறாமல் தெரிந்துகொள்ள வேண்டிய பலன்கள் இதோ!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜோதிடத்தில் மெதுவாக நகரும் கிரகமாகக் கருதப்படும் சனி, ஒருவரின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய சக்தி கொண்டதாக நம்பப்படுகிறது. குறிப்பாக மிதுன ராசிக்காரர்களுக்கு, சனியின் தற்போதைய நகர்வு வாழ்க்கையின் பல துறைகளிலும் புதிய அனுபவங்களையும், எதிர்பாராத திருப்பங்களையும் கொண்டு வரும் என ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர்.&lt;/p&gt;&lt;p&gt;&ldquo;சனி வந்தால் சோதனைதான்&rdquo; என்று பலர் நினைத்தாலும், உண்மையில் சனி கற்றுத்தரும் பாடங்கள் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்பதே ஜோதிடத்தின் கருத்தாகும். மிதுன ராசிக்காரர்களுக்கு இனி என்னென்ன மாற்றங்கள் காத்திருக்கின்றன என்பதைப் பார்ப்போம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நீண்ட நாட்களாக பதவி உயர்வு, சம்பள உயர்வு அல்லது வேலை மாற்றத்திற்காக காத்திருந்த மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமான சூழல் உருவாகலாம். இதுவரை உழைத்த உழைப்புக்கான பலன் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கும், கூட்டுத் தொழிலில் இருப்பவர்களுக்கும் இந்த காலகட்டம் முக்கியமானதாக அமையும். அலுவலகத்தில் இருந்த போட்டிகள் குறைந்து, உங்கள் திறமை வெளிப்படும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;பண விஷயங்களில் இருந்து வந்த சிக்கல்கள் படிப்படியாக குறையலாம். எதிர்பாராத வருமானம், பழைய கடன்கள் வசூலாகுதல், சேமிப்புகள் அதிகரித்தல் போன்ற நல்ல பலன்கள் கிடைக்கக்கூடும்.&lt;/p&gt;&lt;p&gt;ஆனால், சனி பகவான் ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் விரும்புபவர் என்பதால், தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. முதலீடுகளை கவனமாக மேற்கொள்வது அவசியம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குடும்பத்தில் நீண்ட காலமாக இருந்த கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரலாம். கணவன்&ndash;மனைவி உறவு வலுப்பெறும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு அதிகரிப்பதால் மன நிம்மதி கிடைக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;வீடு, நிலம், வாகனம் வாங்க நினைப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறக்கூடும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;காதலில் இருந்த தடைகள் மெதுவாக விலகும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல வரன் அமைய வாய்ப்பு உள்ளது. திருமணமான தம்பதிகளிடையே புரிதல் அதிகரித்து, உறவு மேலும் வலுவடையும்.&lt;/p&gt;&lt;p&gt;எனினும், கோபம் மற்றும் அவசர முடிவுகளைத் தவிர்ப்பது முக்கியம். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை.&lt;/p&gt;&lt;h2&gt;&lt;strong&gt;உடல்நலத்தில் கவனம் அவசியம்!&lt;/strong&gt;&lt;/h2&gt;&lt;p&gt;சனியின் தாக்கத்தால் சிலருக்கு மன அழுத்தம், தூக்கமின்மை, சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். சீரான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி மற்றும் போதுமான ஓய்வு அவசியம்.&lt;/p&gt;&lt;p&gt;மருத்துவ பரிசோதனைகளை அலட்சியப்படுத்தாமல் இருப்பது நல்லது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சனி பகவான் உடனடியாக எதையும் கொடுப்பதில்லை. ஆனால், கடின உழைப்பு, பொறுமை மற்றும் நேர்மைக்கு ஏற்ற பலனை சரியான நேரத்தில் வழங்குவார் என்று ஜோதிடம் கூறுகிறது. மிதுன ராசிக்காரர்கள் இந்தக் காலத்தில் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் எதிர்கால வாழ்க்கையை மாற்றக்கூடியதாக இருக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;குறிப்பு: &lt;/strong&gt;ஜோதிட நம்பிக்கைகள் மற்றும் பலன்கள் தனிநபரின் ஜாதகம், கிரக நிலைகள் மற்றும் பிற காரணிகளைப் பொறுத்து மாறுபடலாம். இந்தத் தகவல்கள் பொதுவான ஜோதிடக் கணிப்புகளின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[astrology]]></category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/gemini-horoscope-saturns-powerful-transit-could-change-your-life-completely-qwggsgm"/>
        </item>
        <item>
            <title><![CDATA[zodiac signs: உதவி செய்தே பிரச்சனையில் சிக்கிக் கொள்ளும் 6 ராசிக்காரர்கள்]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/6-zodiac-signs-who-get-into-trouble-by-helping-others-in-tamil-n8eeqfu</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/6-zodiac-signs-who-get-into-trouble-by-helping-others-in-tamil-n8eeqfu</guid>
            <pubDate>Thu, 16 Jul 2026 19:06:53 +0530</pubDate>
            <description><![CDATA[மற்றவர்களுக்கு ஒரே ஒரு உதவியை செய்து விட்டு, தான் ஓராயிரம் சிக்கலில் சிக்கிக் கொள்ளும் அப்பாவியான ஆறு ராசிக்கார்கள் யார் தெரியுமா? இது போல் நீங்களும் பிரச்சனையில் சிக்கி இருந்தால் உங்கள் ராசியும் இதில் இருக்கா என பாருங்கள்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxj7yag6s4kvy7kzhyy5m44h,imgname-lucky-zodiac-signs-mars-saturn-yoga-to-bring-wealth-recognition-for-these-4-zodiac-signs-1784097483267.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;மற்றவர்களுக்கு ஒரே ஒரு உதவியை செய்து விட்டு, தான் ஓராயிரம் சிக்கலில் சிக்கிக் கொள்ளும் அப்பாவியான ஆறு ராசிக்கார்கள் யார் தெரியுமா? இது போல் நீங்களும் பிரச்சனையில் சிக்கி இருந்தால் உங்கள் ராசியும் இதில் இருக்கா என பாருங்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குரு பகவானின் ஆதிக்கம் பெற்ற மீன ராசிக்காரர்கள், தங்களின் சுய நலத்தை விடப் பிறரின் நலத்தையே அதிகம் சிந்திப்பார்கள். யாராவது அழுது கொண்டே உதவி கேட்டால், இவர்களால் மறுக்கவே முடியாது. தங்களின் தகுதிக்கு மீறி பண உதவி செய்தோ அல்லது ஜாமீன் கையெழுத்துப் போட்டோ பெரும் சட்டப் சிக்கல்களில் மாட்டிக் கொள்வார்கள். இவர்களின் நீர் தத்துவ குணம் யாரையும் சந்தேகிக்கக் கூடாது என்று நினைக்கும். பிறருக்கு உதவும் முன், அவர்களின் உண்மைத் தன்மையை ஒரு முறைக்கு இருமுறை ஆராய்வது இவர்களை ஆபத்துகளில் இருந்து காக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நெருப்பு தத்துவ ராசியான தனுசு ராசிக்காரர்கள், நேர்மைக்கும் எதையும் வெளிப்படையாகப் பேசுவதற்கும் பெயர் பெற்றவர்கள். &quot;நான் இருக்கிறேன், கவலைப்படாதீர்கள்&quot; என்று அவசரப்பட்டு வாக்குக் கொடுத்துவிட்டு, பின்னர் அந்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றத் துடிப்பார்கள். இதனால் மற்றவர்களின் தனிப்பட்ட குடும்பப் பிரச்சனைகளில் தலையிட்டு, இறுதியில் இவர்களே கெட்டப் பெயரைச் சம்பாதிப்பார்கள். குருவின் ஆதிக்கம் இவர்களைப் பெரிய மனிதராகக் காட்ட நினைக்கும். ஆனால், எல்லா இடங்களிலும் பஞ்சாயத்து செய்யப் போனால் சொந்த நிம்மதி கெடும் என்பதை இவர்கள் உணர வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சுக்கிரனின் ஆதிக்கம் கொண்ட துலாம் ராசிக்காரர்கள், எப்போதும் எல்லாரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். இரு தரப்பினருக்கு இடையே நடக்கும் சண்டையைத் தீர்த்து வைக்க, நடுநிலையாக நின்று சமாதானம் பேசப் போவார்கள். ஆனால், எதிர்பாராதவிதமாக சண்டை இவர்களின் பக்கம் திரும்பி, இவர்களையே குற்றவாளியாகச் சித்தரித்து விடுவார்கள். இவர்களின் காலபுருஷ தத்துவப்படி ஏழாம் இடம் வலுவாக இருப்பதால், மற்றவர்களின் கூட்டுப் பொறுப்புகளில் (Partnership) இணையும் போது அதிகக் கவனத்துடன் இருக்க வேண்டும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;செவ்வாய் பகவானை அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்கள், அதீத தைரியமும் வேகமும் கொண்டவர்கள். நியாயத்தின் பக்கம் நிற்கிறேன் என்ற எண்ணத்தில், நடுரோட்டில் நடக்கும் சண்டையாக இருந்தாலும் யோசிக்காமல் உள்ளே நுழைவார்கள். விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் உணர்ச்சிவசப்பட்டு உதவுவதால், தேவையற்ற பகைமையைத் தேடிக் கொள்வார்கள். செவ்வாயின் வேகத்தைக் குறைத்து, விவேகத்துடன் செயல்படப் பழக வேண்டும். அநீதியைக் கண்டு பொங்குவது நல்லது என்றாலும், சூழ்நிலை தனக்குச் சாதகமாக இருக்கிறதா என்று பார்ப்பது அவசியம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நவக்கிரகங்களின் தலைவனான சூரியனின் ஆதிக்கம் பெற்ற சிம்ம ராசிக்காரர்கள், தலைமைப் பண்பும் கம்பீரமும் உடையவர்கள். இவர்களிடம் வந்து ஒரு பவ்யமாக உதவி என்று கேட்டுவிட்டால், தங்களின் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காகத் தங்களால் இயலாத காரியத்தைக் கூடச் செய்து தருவதாக ஒப்புக் கொள்வார்கள். இதனால் இவர்களின் சொந்தப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும். இவர்களின் தாராள குணம் இவர்களுக்கே எமனாக மாறுவதுண்டு. முடியாத காரியங்களுக்கு &quot;முடியாது&quot; என்று முகத்திற்கு நேரே சொல்வதைக் கற்றுக் கொண்டால் நிம்மதி நிலைக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;புதன் பகவானை அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்கள், சிறந்த தகவல் தொடர்பாளர்களாகத் திகழ்வார்கள். நண்பர்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ வேலை வாங்கித் தருவதிலோ, அல்லது ஒரு காரியத்தை முடித்துக் கொடுப்பதிலோ தங்களின் செல்வாக்கைப் பயன்படுத்திப் பரிந்துரை (Recommendation) செய்வார்கள். ஆனால், அந்த நபர் செய்யும் தவறுகளுக்கு இவர்களே முழுப் பொறுப்பேற்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். புதனின் புத்திசாலித்தனம் இவர்களுக்கு இருந்தாலும், மற்றவர்களுக்காகப் பொறுப்பேற்கும் விஷயங்களில் இவர்களின் கணிப்பு சில நேரங்களில் தவறிவிடுவதால், தூரமாய் இருப்பதே நலம்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[astrology]]></category>
            <dc:creator>Priya Velan</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/6-zodiac-signs-who-get-into-trouble-by-helping-others-in-tamil-n8eeqfu"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Job Opportunities : வெளிநாடு போகப் போறீங்களா? கை நிறைய சம்பளம்.. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/high-paying-overseas-jobs-a-new-tn-govt-initiative-videoshow-h9bmfzb</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/high-paying-overseas-jobs-a-new-tn-govt-initiative-videoshow-h9bmfzb</guid>
            <pubDate>Thu, 16 Jul 2026 19:01:20 +0530</pubDate>
            <description><![CDATA[]]></description>
            <media:content url="https://www.youtube.com/embed/hw95pCf6T7o" medium="video" height="350" width="560"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Tamilnadu Government: தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (OMCL), வெளிநாட்டு வேலை, உயர்கல்வி மற்றும் குடியேற்றம் நாடுவோருக்காக கல்விச் சான்றிதழ்கள் மற்றும் தனிப்பட்ட ஆவணங்களுக்கு HRD Attestation மற்றும் Apostille சேவைகளை வழங்குகிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[tamilnadu]]></category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/high-paying-overseas-jobs-a-new-tn-govt-initiative-videoshow-h9bmfzb"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Meena Jayakumar : திமுக முக்கிய பெண் பிரமுகர் தவெகவில் இணைகிறார்? யார் இந்த மீனா ஜெயக்குமார்?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/dmk-leader-meena-jayakumar-to-join-tvk-who-is-she-videoshow-7a53x4s</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/dmk-leader-meena-jayakumar-to-join-tvk-who-is-she-videoshow-7a53x4s</guid>
            <pubDate>Thu, 16 Jul 2026 19:01:17 +0530</pubDate>
            <description><![CDATA[]]></description>
            <media:content url="https://www.youtube.com/embed/GwMOROqpyV0" medium="video" height="350" width="560"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Meena Jayakumar Vs Sengottaiyan: முன்னாள் திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் செயல்பட்டு வந்தார். தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அக்கட்சியில் விலகுவதாக அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[tamilnadu]]></category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/dmk-leader-meena-jayakumar-to-join-tvk-who-is-she-videoshow-7a53x4s"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Onion Price : விண்ணை தாண்டிய வெங்காய விலை?! ஒரே நாளில் உச்சம் தொட இதுதான் காரணம்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/business/onion-price-the-reason-for-the-sudden-surge-videoshow-dvyqh0g</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/business/onion-price-the-reason-for-the-sudden-surge-videoshow-dvyqh0g</guid>
            <pubDate>Thu, 16 Jul 2026 18:02:50 +0530</pubDate>
            <description><![CDATA[]]></description>
            <media:content url="https://geo.dailymotion.com/player/x1tbu.html?video=null" medium="video" height="768" width="1024"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;அன்றாட சமையலில் தவிர்க்க முடியாத வெங்காயத்தின் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. மகாராஷ்டிராவில் பெய்து வரும் கனமழையால் வரத்து குறைந்துள்ள நிலையில், அதன் தாக்கம் தமிழக சந்தைகளிலும் எதிரொலிக்கிறது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[business]]></category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/business/onion-price-the-reason-for-the-sudden-surge-videoshow-dvyqh0g"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Vedic Astrology: இடம் மாறும் குரு பகவான்.! குரு பெயர்ச்சியால் கோடீஸ்வர யோகம் பெறும் 5 அதிர்ஷ்ட ராசிகள்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/astrology-tamil-guru-peyarchi-2026-in-poosam-nakshatra-3rd-pada-these-5-zodiac-signs-may-receive-luck-wealth-and-success-inc18z1</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/astrology-tamil-guru-peyarchi-2026-in-poosam-nakshatra-3rd-pada-these-5-zodiac-signs-may-receive-luck-wealth-and-success-inc18z1</guid>
            <pubDate>Thu, 16 Jul 2026 18:01:05 +0530</pubDate>
            <description><![CDATA[Vedic Astrology: ஜூலை 19 ஆம் தேதி நவகிரகங்களில் சுபகிரகமாக விளங்கும் குரு பகவான், கடக ராசியில் உள்ள பூச நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்திற்குள் பிரவேசிக்கிறார். இதனால் அதிர்ஷ்டம் பெறும் 5 ராசிகள் பற்றி இங்கு விரிவாகப் பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01krx6frhq26qd5aaepab1h70n,imgname-guru-peyarchi-palangal--1--1779096347191.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Vedic Astrology: ஜூலை 19 ஆம் தேதி நவகிரகங்களில் சுபகிரகமாக விளங்கும் குரு பகவான், கடக ராசியில் உள்ள பூச நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்திற்குள் பிரவேசிக்கிறார். இதனால் அதிர்ஷ்டம் பெறும் 5 ராசிகள் பற்றி இங்கு விரிவாகப் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜோதிட சாஸ்திரப்படி, பூச நட்சத்திரம் என்பது சனியின் ஆதிக்கத்திற்கு உட்பட்டது என்றாலும், இது மிகவும் புனிதமான மற்றும் மங்களகரமான நட்சத்திரமாக கருதப்படுகிறது. மேலும், பூச நட்சத்திரத்தின் 3-ஆம் பாதம் என்பது துலாம் நவாம்சத்தில் (சுக்கிரனின் வீடு) வருகிறது. குருவின் அறிவு, சனியின் ஒழுக்கம் மற்றும் சுக்கிரனின் லௌகீக சுகங்கள் ஆகியவை இணைந்து இந்த காலகட்டத்தில் சில குறிப்பிட்ட ராசிகளுக்கு அபரிமிதமான நன்மைகளையும், அதிர்ஷ்டத்தையும் தரப்போகின்றன. இந்த குரு பெயர்ச்சியால் பெரும் பலன்களைப் பெறப்போகும் ராசிகள் மற்றும் பலன்கள் பற்றி இங்கு காணலாம்.&amp;nbsp;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் -&lt;/strong&gt; Astrology Tamil: சுக்கிர புத்தி ஆரம்பம்.! அடுத்த 6 மாதம் 5 ராசிகளுக்கு ராஜயோகம்.! இனி இவர்கள் தொட்டதெல்லாம் தங்கமாகும்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கடக ராசியில் தான் குரு பகவான் உச்சம் பெற்று விளங்குகிறார். தற்போது பூச நட்சத்திரத்தின் 3-ஆம் பாதத்திற்குள் அவர் நுழைவதால், உங்களுக்குள் இருந்த குழப்பங்கள் நீங்கி புதிய தெளிவு பிறக்கும். உங்கள் திறமைக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கும். புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி, ஒற்றுமை பலப்படும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் கைசேரும். சேமிப்பு உயரும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் - &amp;nbsp;&lt;/strong&gt;Astrology Tamil: இந்த 5 ராசியில் பிறந்தவர்களுக்கு எதிரிகள் அதிகம் இருப்பார்களாம்.! உங்க ராசி இருக்கா?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கன்னி ராசிக்கு குரு பகவான் லாப ஸ்தானத்தில் (11-ஆம் இடம்) சஞ்சரிக்கிறார். பூச நட்சத்திர சஞ்சாரம் உங்களுக்குப் பொருளாதார ரீதியாகப் பல வழிகளில் லாபத்தைத் தரும். கூட்டுத் தொழிலில் பெரும் லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகள் செய்ய இது சாதகமான காலம். உங்கள் சமூக வட்டம் விரிவடையும். முக்கியப் புள்ளிகளின் நட்பு மூலம் புதிய வாய்ப்புகள் கதவைத் தட்டும். கடன்கள் படிப்படியாக குறையும். எதிர்பார்த்ததை விட லாபம் இருமடங்காகும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் -&amp;nbsp;&lt;/strong&gt; Sani Peyarchi 2026: கொட்டி கொடுக்கப் போகும் சனி பகவான்.! 2026 இறுதி தொடங்கி, உச்சத்துக்கு செல்லப்போகும் 5 ராசிகள்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;விருச்சிக ராசிக்கு குரு பகவான் ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பது மிகச் சிறந்த பலன்களைத் தரும். பூச நட்சத்திர மாற்றம் உங்கள் அதிர்ஷ்டத்தை இரட்டிப்பாக்கும். ஆன்மீகப் பயணங்கள் மற்றும் வெளிநாட்டுப் பயணங்களுக்கான வாய்ப்புகள் கூடி வரும். தந்தையுடனான உறவு பலப்படும். பித்ருக்களின் ஆசீர்வாதம் முழுமையாகக் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். தடைபட்டுக் கொண்டிருந்த சுபகாரியங்கள் (திருமணம், வீடு கட்டுதல் போன்றவை) தடையின்றி நடக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் -&amp;nbsp;&lt;/strong&gt; Numerology: இந்த எண்களில் பிறந்தவர்களுக்கு தாமதமாகத் திருமணம் நடந்தாலும், கடவுள் போன்ற துணையைப் பெறுவார்களாம்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மகர ராசிக்கு குரு பகவான் ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். பூச நட்சத்திரத்தின் 3-ஆம் பாதம் சுக்கிரனின் நவாம்சத்திற்குள் வருவதால், உங்களுக்குத் தனிப்பட்ட வாழ்க்கையிலும் கூட்டுத் தொழிலிலும் சிறப்பான பலன்கள் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமைந்து திருமணம் கைகூடும். கணவன்-மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புதிய தொழில் கூட்டாளிகள் அமைவார்கள். அவர்களின் ஆலோசனைகள் உங்களுக்குப் பெரும் வெற்றியைத் தரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு முழுமையாகக் கிடைக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் -&amp;nbsp;&lt;/strong&gt; Aadi Month 2026: ஆடி மாதம் அம்மனை வீட்டுக்கு அழைப்பது எப்படி? தேச மங்கையர்கரசி கூறும் ரகசியம்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;மீன ராசிக்கு குரு பகவான் ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பது உங்களின் புண்ணியக் கணக்கை உயர்த்தும். &amp;nbsp;நீண்ட நாட்களாகக் குழந்தை பாக்கியத்திற்காகக் காத்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். குழந்தைகளின் கல்வி மற்றும் முன்னேற்றத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். கலைத்துறையில் இருப்பவர்களுக்குப் புதிய வாய்ப்புகளும் புகழும் கிடைக்கும். பங்குச்சந்தை மற்றும் நீண்ட கால முதலீடுகளில் நல்ல லாபம் காண முடியும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)&lt;/strong&gt;&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[astrology]]></category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/astrology-tamil-guru-peyarchi-2026-in-poosam-nakshatra-3rd-pada-these-5-zodiac-signs-may-receive-luck-wealth-and-success-inc18z1"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Chanakya Niti: கோடி ரூபாய் கொடுத்தாலும், இவர்களை மட்டும் திருமணம் செய்யாதீர்கள்.! சாணக்கியர் கூறும் அறிவுரை.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/spiritual/chanakya-niti-marriage-advice-qualities-to-avoid-when-choosing-a-life-partner-according-to-acharya-chanakya-b9kqpnk</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/spiritual/chanakya-niti-marriage-advice-qualities-to-avoid-when-choosing-a-life-partner-according-to-acharya-chanakya-b9kqpnk</guid>
            <pubDate>Thu, 16 Jul 2026 17:28:01 +0530</pubDate>
            <description><![CDATA[Chanakya Niti Marriage Advice: வாழ்க்கைத்துணைய தேர்ந்து எடுக்கும்போது ரொம்ப கவனமா இருக்கணும். சில குணங்கள் இருக்கிறவங்கள கல்யாணம் செஞ்சா வாழ்க்கை முழுக்க கஷ்டப்பட வேண்டியிருக்கும்னு சாணக்கிய நீதி சொல்லுது. அது என்னென்னனு பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxncd8d7yyc8c8et42j9w7gf,imgname-chanakya-niti-marriage-advice-1784202830247.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Chanakya Niti Marriage Advice: வாழ்க்கைத்துணைய தேர்ந்து எடுக்கும்போது ரொம்ப கவனமா இருக்கணும். சில குணங்கள் இருக்கிறவங்கள கல்யாணம் செஞ்சா வாழ்க்கை முழுக்க கஷ்டப்பட வேண்டியிருக்கும்னு சாணக்கிய நீதி சொல்லுது. அது என்னென்னனு பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;கல்யாணம்ங்கிறது ரெண்டு பேரை மட்டும் இல்ல, ரெண்டு குடும்பங்களையும் இணைக்கிற ஒரு அழகான பந்தம். அதனால, வாழ்க்கைத்துணைய தேர்ந்து எடுக்கும்போது அவசரப்பட்டு முடிவு எடுக்கக் கூடாதுன்னு ஆச்சார்ய சாணக்கியர் சொல்றாரு. வெளித்தோற்றம், பணத்தை விட நல்ல குணம் தான் வாழ்க்கைய சந்தோஷமா மாத்தும்னு அவர் விளக்குறாரு. சாணக்கியர் அறிவுரைப்படி, யாரையெல்லாம் கல்யாணம் செய்யவே கூடாதுன்னு இங்க பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் -&lt;/strong&gt; &amp;nbsp;Astrology Tamil: சுக்கிர புத்தி ஆரம்பம்.! அடுத்த 6 மாதம் 5 ராசிகளுக்கு ராஜயோகம்.! இனி இவர்கள் தொட்டதெல்லாம் தங்கமாகும்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;நல்ல குணம் இல்லாத ஒருத்தரோட திருமண வாழ்க்கை நிம்மதியா இருக்காது. பார்க்க அழகா இருந்தாலும், பேச்சில மரியாதை இல்லாம, மத்தவங்கள குறைச்சு பேசுறவங்களால குடும்பத்துல அமைதி இருக்காது. கணவன்-மனைவி உறவுங்கிறது பரஸ்பர மரியாதை, புரிதல்ல தான் இருக்கு. இதெல்லாம் இல்லைனா, சின்ன பிரச்னை கூட பெரிய சண்டைக்கு வழிவகுக்கும். அதனால, தோற்றத்தை பார்க்காம, அவங்க நடத்தைய பாருங்கன்னு சாணக்கியர் சொல்றாரு.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் -&lt;/strong&gt; &amp;nbsp;Astrology Tamil: இந்த 5 ராசியில் பிறந்தவர்களுக்கு எதிரிகள் அதிகம் இருப்பார்களாம்.! உங்க ராசி இருக்கா?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதிகமா கோபப்படுறவங்ககிட்டயும் கவனமா இருக்கணும்னு சாணக்கிய நீதி சொல்லுது. கோபம் வரும்போது யோசிக்காம பேசுறது, முடிவெடுக்குறது உறவுகள ரொம்ப பாதிக்கும். இந்த குணம் திருமண வாழ்க்கையில நம்பிக்கை, அன்பு, அமைதிய கெடுத்துடும். அதனால, பொறுமையும், சூழ்நிலைய புரிஞ்சிக்கிற மனசும் உள்ளவங்கள வாழ்க்கைத்துணையா தேர்ந்து எடுக்குறது நல்லதுன்னு சாணக்கியர் சொல்றாரு.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் -&lt;/strong&gt; &amp;nbsp;Sani Peyarchi 2026: கொட்டி கொடுக்கப் போகும் சனி பகவான்.! 2026 இறுதி தொடங்கி, உச்சத்துக்கு செல்லப்போகும் 5 ராசிகள்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;எந்த உறவும் நம்பிக்கை மேல தான் நிக்குது. ஒருத்தருக்கொருத்தர் மரியாதை கொடுக்காம, சொன்ன வார்த்தைய காப்பாத்தாம, ஏமாத்துற மாதிரி நடந்துக்கிட்டா உறவு பலவீனமாயிடும். அதனால, நேர்மையும், நம்பிக்கையான குணமும் உள்ள வாழ்க்கைத்துணைய தேர்ந்து எடுக்கணும்னு சாணக்கியர் சொல்லியிருக்காரு.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் -&amp;nbsp;&lt;/strong&gt; Aadi Month 2026: ஆடி மாதம் அம்மனை வீட்டுக்கு அழைப்பது எப்படி? தேச மங்கையர்கரசி கூறும் ரகசியம்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;குடும்ப வாழ்க்கை சந்தோஷமா இருக்கணும்னா நல்ல பழக்கவழக்கங்கள், பெரியவங்க மேல மரியாதை, பொறுப்பான நடத்தை அவசியம்னு சாணக்கியர் சொல்லியிருக்காரு. வெறும் பணத்தையோ, அழகையோ பார்த்து கல்யாணம் செய்றத விட, ஒருத்தரோட எண்ணம், குடும்பத்த பாத்துக்குற விதம், பொறுப்புகள ஏத்துக்குற குணத்த பார்த்து கல்யாணம் செய்றது நல்லதுன்னு சாணக்கியர் அறிவுரை சொல்றாரு.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் -&amp;nbsp;&lt;/strong&gt; Name Numerology: இந்த தேதிகள்ல பிறந்தவங்களுக்கு சின்ன வயசுலயே பெரிய நோய்கள் வர வாய்ப்பு அதிகமாம்.! நீங்க பிறந்த தேதி இருக்கா?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அதிகமான அகங்காரம், உறவுகள கெடுக்கிற ஒரு குணம்னு சாணக்கிய நீதி சொல்லுது. 'நான் சொல்றது தான் சரி'னு நினைக்கிறது, மத்தவங்க கருத்த மதிக்காம இருக்கிறது, விட்டுக்கொடுக்காம இருக்கிறது இதெல்லாம் திருமண வாழ்க்கையில சண்டைகள அதிகமாக்கும். ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் புரிஞ்சிக்கிட்டு, தேவைப்படும்போது விட்டுக்கொடுத்து போனா தான் குடும்ப வாழ்க்கை சுமூகமா போகும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[spiritual]]></category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/spiritual/chanakya-niti-marriage-advice-qualities-to-avoid-when-choosing-a-life-partner-according-to-acharya-chanakya-b9kqpnk"/>
        </item>
        <item>
            <title><![CDATA[விஜய்க்கு அரசியல் முதிர்ச்சி இல்லை! - டிவிகே-வை வெளுத்து வாங்கிய அமைச்சர் சிவசங்கர் அதிரடி பேட்டி!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/sivasankar-on-tvk-vijay-lacks-political-maturity-videoshow-g2gfgi0</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/sivasankar-on-tvk-vijay-lacks-political-maturity-videoshow-g2gfgi0</guid>
            <pubDate>Thu, 16 Jul 2026 17:03:14 +0530</pubDate>
            <description><![CDATA[]]></description>
            <media:content url="https://geo.dailymotion.com/player/x1tbu.html?video=null" medium="video" height="768" width="1024"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;பெரம்பலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் (திமுக), பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். தமிழக முதல்வர் மீதான தமிழக வெற்றிக் கழக (TVK) தலைவர் விஜய்யின் விமர்சனங்கள் மற்றும் அரசின் திட்டங்கள் மீதான புகார்களுக்குக் கடுமையான பதிலடி கொடுத்தார். மேலும், அதிமுக மற்றும் பாஜக-வின் அரசியல் குற்றச்சாட்டுகள், காவல் மரண விவகாரம் மற்றும் திமுக கூட்டணியில் உள்ள விசிக, இடதுசாரி கட்சிகளின் நிலைப்பாடு குறித்து எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை முறியடிக்கும் வகையில் அவர் ஆற்றிய காரசாரமான உரையின் தொகுப்பு.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[tamilnadu]]></category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/sivasankar-on-tvk-vijay-lacks-political-maturity-videoshow-g2gfgi0"/>
        </item>
        <item>
            <title><![CDATA[Actress Uma Shankari: 'சொக்கத் தங்கம்' பட நடிகையை ஞாபகம் இருக்கா? அவருக்கு என்ன ஆனது? மருத்துவமனையில் இருந்து வெளியான அதிர்ச்சி புகைப்படம்.!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/cinema/chokka-thangam-actress-uma-shankari-hospitalized-with-cancer-health-update-and-latest-details-0mcugs0</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/cinema/chokka-thangam-actress-uma-shankari-hospitalized-with-cancer-health-update-and-latest-details-0mcugs0</guid>
            <pubDate>Thu, 16 Jul 2026 16:49:01 +0530</pubDate>
            <description><![CDATA[Chokka Thangam Actress Uma Shankari: ‘சொக்கத்தங்கம்’ திரைப்படத்தில் நடித்த நடிகை மருத்துவமனையில் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxna3jfdtma5s6kc1cdngqtf,imgname-chokka-thangam-actress-uma-shankari--1--1784200415725.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;Chokka Thangam Actress Uma Shankari: &lsquo;சொக்கத்தங்கம்&rsquo; திரைப்படத்தில் நடித்த நடிகை மருத்துவமனையில் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தமிழ் சினிமாவில் சில நடிகைகள் குறைந்த படங்களே நடித்திருந்தாலும் மக்கள் மனங்களில் இடம் பிடித்து விடுவார்கள். அந்த வரிசையில் குறைந்த படங்களில் நடித்து அதிகம் கவனிக்கப்படாமல் போனவர்தான் நடிகை உமா சங்கரி. தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாக திகழ்ந்த சுமித்ராவின் மகளான இவர், 2000 ஆம் ஆண்டு சீமான் இயக்கிய &lsquo;வீரநடை&rsquo; படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் -&lt;/strong&gt; &amp;nbsp;S Janaki: ரெக்கார்டிங்கில் பாட முடியாமல் கதறி அழுத S ஜானகி.! ஜானகியை அழ வைத்த வரிகள்.! எந்த பாட்டு தெரியுமா?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;தொடர்ந்து கலகலப்பு, சொக்கத் தங்கம், விகடன், சூரியன், தென்றல், கோவை பிரதர்ஸ், அடைக்கலம், மணிகண்டா, ரசிகர் மன்றம், பாக்கியலட்சுமி போன்ற பல படங்களில் நடித்தார். இறுதியாக அவர் அஜித் நடித்த &lsquo;வலிமை&rsquo; படத்தில் சிறு வயது சுமித்ரா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் குறைந்த படங்களில் நடித்திருந்தாலும் &lsquo;சொக்கத்தங்கம்&rsquo; மற்றும் &lsquo;கோவை பிரதர்ஸ்' படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்ததுள்ள அவர் 2006 ஆம் ஆண்டு திருமணத்திற்குப் பின்னர் சினிமாவில் நடிப்பதை முற்றிலும் நிறுத்தினார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் -&amp;nbsp;&lt;/strong&gt; S Janaki Vs Savitri: சாவித்திரிக்காக பாடமாட்டேன் - S. ஜானகி எடுத்த சபதம்.! காரணம் என்ன தெரியுமா?&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இந்த நிலையில் அவர் எங்கு இருக்கிறார், என்ன செய்கிறார் என எதுவுமே தெரியாமல் இருந்து வந்தது. மேலும் சமூக வலைதளங்களிலும் பெரிய அளவில் அவர் ஆக்டிவாக இல்லாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். அதில் தான் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், புற்றுநோய்க்கான கீமோதெரபி மற்றும் இம்யூனோதெரபி சிகிச்சையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இதையும் படியுங்கள் - &amp;nbsp;&lt;/strong&gt;Actor Jai: இஸ்லாம் மதத்திற்கு மாறியது குறித்து உண்மைகளை உடைத்த நடிகர் ஜெய்.!&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அவர் வெளியிட்டுள்ள பதிவில், &ldquo;கீமோ மற்றும் இம்யூனோ சிகிச்சையின் இரண்டாம் சுற்றில் இருக்கிறேன். நான் ஒவ்வொரு நாளையும் அதன் போக்கிலேயே எதிர்கொண்டு வருகிறேன். கடினமான நாட்களை எப்படி சமாளிப்பது என்று கற்றுக் கொள்கிறேன். என்னை வலிமையாக உணரும் நாட்களை கொண்டாடுகிறேன். எனக்கு துணையாக இருக்கும் குடும்பத்தினருக்கு நன்றி. அன்பும், ஆதரவு தரும் ரசிகர்களுக்கும் நன்றி. நான் எனது பணிகளை தொடர்கிறேன். மேலும் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துகிறேன்&rdquo; என குறிப்பிட்டு இருக்கிறார்.&lt;/p&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;View this post on Instagram&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&lt;p&gt;A post shared by D R UmaShankari (@uma_shankarii_)&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;இதனைக் கண்ட அவரது ரசிகர்கள் பலரும் விரைவில் குணமாகி மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும், உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன், நீங்கள் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறீர்கள் என்று ஆறுதலான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். திரைத்துறையில் ஏற்கனவே நடிகை கௌதமி, மமதா மோகன்தாஸ், சோனாலி பிந்த்ரா, மனிஷா கொய்ராலா போன்றவர்கள் புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[cinema]]></category>
            <dc:creator>Ramprasath S</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/cinema/chokka-thangam-actress-uma-shankari-hospitalized-with-cancer-health-update-and-latest-details-0mcugs0"/>
        </item>
        <item>
            <title><![CDATA[அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவர்..! சிம்ம ராசிக்காரர்களின் தாராள மனசு பற்றி தெரியுமா..?]]></title>
            <link>https://tamil.asianetnews.com/gallery/astrology/no-one-can-match-them-this-zodiac-sign-is-the-most-generous-of-all-yhg3quh</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/gallery/astrology/no-one-can-match-them-this-zodiac-sign-is-the-most-generous-of-all-yhg3quh</guid>
            <pubDate>Thu, 16 Jul 2026 16:32:52 +0530</pubDate>
            <description><![CDATA[பணம், பொருள், அன்பு என தங்களிடம் இருப்பதை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பிறருக்கு அள்ளி கொடுக்கும் குணம் சிலருக்கு இயற்கையாகவே இருக்கும். ஜோதிட நம்பிக்கைகளின்படி, பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர்கள் சிம்ம ராசிக்காரர்கள் தான் என்று கூறப்படுகிறது.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kxn91a2fa4ve4dchatcdwvrm,imgname-leo-zodiac-sign-1784199293007.png" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;பணம், பொருள், அன்பு என தங்களிடம் இருப்பதை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பிறருக்கு அள்ளி கொடுக்கும் குணம் சிலருக்கு இயற்கையாகவே இருக்கும். ஜோதிட நம்பிக்கைகளின்படி, பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர்கள் சிம்ம ராசிக்காரர்கள் தான் என்று கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சூரியனை ஆட்சி கிரகமாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்கள், தலைமைப் பண்பு மற்றும் பெருந்தன்மைக்குப் பெயர் பெற்றவர்கள். மற்றவர்கள் தங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதில் அக்கறை கொண்டாலும், உதவி தேவைப்படும் நேரத்தில் அவர்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&ldquo;என்னிடம் இருக்கிறது என்றால், என்னைச் சுற்றியிருப்பவர்களுக்கும் இருக்க வேண்டும்&rdquo; என்ற எண்ணம் இவர்களிடம் அதிகமாக இருக்கும். நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர் என யாருக்காவது கஷ்டம் வந்தால், முதலில் உதவிக்கரம் நீட்டுவது பெரும்பாலும் சிம்ம ராசிக்காரர்களாகத்தான் இருக்கும்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;சிம்ம ராசிக்காரர்களின் தாராள குணம் பணத்துடன் மட்டும் முடிவதில்லை. அவர்கள் பிறருக்காக நேரத்தை ஒதுக்குவார்கள், ஊக்கம் கொடுப்பார்கள், மன உளைச்சலில் இருப்பவர்களுக்கு ஆறுதல் சொல்வார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;தங்களுக்கு பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வதும், அவர்களுக்கு விலை உயர்ந்த பரிசுகளை வாங்கிக் கொடுப்பதும் இவர்களின் இயல்பான குணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஒரு நண்பருக்கு அவசரமாக உதவி தேவைப்பட்டால், சிம்ம ராசிக்காரர்கள் தயங்காமல் முன்னே வருவார்கள். &ldquo;நான் இருக்கிறேன், கவலைப்படாதே&rdquo; என்று சொல்லும் மனப்பான்மை இவர்களிடம் இருக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;இதனால், பலரது நட்பு வட்டத்திலும் சிம்ம ராசிக்காரர்கள் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பார்கள். இவர்களை நம்பி பலர் தங்களின் பிரச்சினைகளைப் பகிர்ந்து கொள்வதும் வழக்கமாக உள்ளது.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;அளவுக்கு அதிகமான பெருந்தன்மை சில நேரங்களில் பிரச்சினைகளையும் உருவாக்கலாம். சிலர் இவர்களின் நல்ல மனதைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கலாம். இதனால், சிம்ம ராசிக்காரர்கள் பலமுறை ஏமாற்றங்களையும் சந்திக்க நேரிடும்.&lt;/p&gt;&lt;p&gt;அதேபோல், அவர்கள் செய்யும் உதவிக்கு அங்கீகாரம் மற்றும் மரியாதை கிடைக்க வேண்டும் என்று உள்ளுக்குள் எதிர்பார்ப்பார்கள். அது கிடைக்காதபோது மனவேதனை அடைவதும் உண்டு.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;&bull; பிறருக்கு உதவுவதில் எப்போதும் முன்னிலையில் இருப்பார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&bull; குடும்பத்தினர்மீது அதிக பாசம் கொண்டிருப்பார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&bull; நண்பர்களுக்காக எதையும் செய்யத் தயங்க மாட்டார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&bull; தலைமைப் பண்பும், தன்னம்பிக்கையும் அதிகமாக இருக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&bull; பிறர் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்து மகிழ்வார்கள்.&lt;/p&gt;&lt;img&gt;&lt;p&gt;ஜோதிட நம்பிக்கைகளின்படி, சிம்ம ராசிக்காரர்கள் &ldquo;கொடுக்கும் கரம்&rdquo; கொண்டவர்களாகக் கருதப்படுகிறார்கள். அவர்களின் பெருந்தன்மை மற்றும் தாராள மனப்பான்மையால் பலரது வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படுகின்றன என்றும் கூறப்படுகிறது.&lt;/p&gt;&lt;p&gt;ஆனால், ஒருவரின் குணாதிசயம் ராசியால் மட்டுமே நிர்ணயிக்கப்படாது. குடும்பச் சூழல், வாழ்க்கை அனுபவம் மற்றும் தனிப்பட்ட எண்ணங்களும் அதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;குறிப்பு: &lt;/strong&gt;மேற்கண்ட தகவல்கள் ஜோதிட நம்பிக்கைகளின் அடிப்படையில் வழங்கப்பட்டவை மட்டுமே; இவை அனைவருக்கும் ஒரே மாதிரியாக பொருந்த வேண்டிய அவசியமில்லை.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[astrology]]></category>
            <dc:creator>Asianetnews Tamil Stories</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/gallery/astrology/no-one-can-match-them-this-zodiac-sign-is-the-most-generous-of-all-yhg3quh"/>
        </item>
        <item>
            <title><![CDATA[LPG Cylinder : கேஸ் கனெக்‌ஷன் இல்லையா? இனி நிமிஷத்துல வீட்டுக்கு சிலிண்டர் வரும்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/tamilnadu/lpg-cylinder-delivery-in-minutes-no-connection-needed-videoshow-kd1e027</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/tamilnadu/lpg-cylinder-delivery-in-minutes-no-connection-needed-videoshow-kd1e027</guid>
            <pubDate>Thu, 16 Jul 2026 16:02:44 +0530</pubDate>
            <description><![CDATA[]]></description>
            <media:content url="https://geo.dailymotion.com/player/x1tbu.html?video=null" medium="video" height="768" width="1024"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;மளிகை, காய்கறி மாதிரி இனிமே எல்பிஜி சிலிண்டரையும் குயிக் காமர்ஸ் பிளாட்ஃபார்ம் மூலம் வாங்கலாம். இன்ஸ்டாமார்ட் மற்றும் ஹெச்பிசிஎல் நிறுவனங்கள் இணைந்து இந்த புதிய சேவையைத் தொடங்கியுள்ளன.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[tamilnadu]]></category>
            <dc:creator>Velmurugan s</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/tamilnadu/lpg-cylinder-delivery-in-minutes-no-connection-needed-videoshow-kd1e027"/>
        </item>
        <item>
            <title><![CDATA[பூ மாதிரி சாஃப்ட் இட்லி வேணுமா? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க போதும்!]]></title>
            <link>https://tamil.asianetnews.com/webstories/health-food/how-to-make-soft-and-fluffy-idli-at-home-6xtemmm</link>
            <guid isPermaLink="true">https://tamil.asianetnews.com/webstories/health-food/how-to-make-soft-and-fluffy-idli-at-home-6xtemmm</guid>
            <pubDate>Thu, 16 Jul 2026 15:57:02 +0530</pubDate>
            <description><![CDATA[வீட்டில் இட்லி சுடும்போது சிலருக்கு கல் மாதிரி ஆகிவிடும். பூ போல சாஃப்டான இட்லி சுடுவதற்கு சில எளிய குறிப்புகள் இங்கே உள்ளன. இனி உங்க வீட்டு இட்லியும் மல்லிகைப்பூ மாதிரி இருக்கும்.]]></description>
            <media:content url="https://static.asianetnews.com/images/w-1280,h-720,format-jpg,imgid-01kk9rjzj6wamp56zft4c688y3,imgname-iran-israel-war--35--1773075529286.jpg" type="image/jpeg" height="390" width="690"/>
            <content:encoded><![CDATA[&lt;p&gt;வீட்டில் இட்லி சுடும்போது சிலருக்கு கல் மாதிரி ஆகிவிடும். பூ போல சாஃப்டான இட்லி சுடுவதற்கு சில எளிய குறிப்புகள் இங்கே உள்ளன. இனி உங்க வீட்டு இட்லியும் மல்லிகைப்பூ மாதிரி இருக்கும்.&lt;/p&gt;]]></content:encoded>
            <category><![CDATA[health-food]]></category>
            <dc:creator>Ganesh A</dc:creator>
            <atom:link href="https://tamil.asianetnews.com/webstories/health-food/how-to-make-soft-and-fluffy-idli-at-home-6xtemmm"/>
        </item>
    </channel>
</rss>
