Asianet News TamilAsianet News Tamil

எச்.ராஜாவை மோசமான வார்த்தைகளால் திட்டிய பெண் வீடியோ! கேட்டுட்டு காதில் ரத்தம் வந்த நாங்க பொறுப்பு இல்ல!

ஆமை புகுந்த வீடும், அறநிலையத்துறை புகுந்த கோயிலும் உருப்படாது என்று பேசிய பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு 
எதிராக திருவாரூரில் கோயில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

 

ஆமை புகுந்த வீடும், அறநிலையத்துறை புகுந்த கோயிலும் உருப்படாது என்று பேசிய பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு 
எதிராக திருவாரூரில் கோயில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது, போலீசார் தடுத்து நிறுத்தியதால், ஆத்திரமுற்ற 
பாஜக ஹெச்.ராஜா, தன் நிலை தடுமாறி, என்ன பேசுகிறோம் என்று தெரியாமல், மயிறு... மட்டை என மோசமாக வாய்க்கு வந்ததை 
பேசி உளறிக் கொட்டிவிட்டார். ஆமை புகுந்த வீடும், அறநிலையத்துறை புகுந்த கோயிலும் உருப்படாது என்றும், கோயில் இருக்கு, 
இடிபாடா இருக்கும் என்றும் பேசியிருந்தார்.

அவரது பேச்சால், காவல் துறை அதிகாரிகள், நீதித்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். தமிழகத்தின் ஏராளமான இடங்களில் அவருக்கு 
எதிராக புகாரும் கொடுக்கப்பட்டது., சில புகார்களின் அடிப்படையில், ஹெச்.ரஜாவை பிடிக்க 2 தனிப்படை போலீசார் குழு 
அமைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில், ஒரு கூட்டத்தில் ஹெச்.ராஜா கலந்து கொண்டு 
பேசினார்.

இது தொடர்பாக நேற்று விசாரணைக்கு வந்த வழக்கில், ஹெச்.ராஜா, அக்டோபர் 3 ஆம் தேதி 4.30 மணிக்கு ஆஜராக வேண்டும் என்று 
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனை தொடர்ந்து இன்று அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன், ஹெச்.ராஜாவுக்கு 
சம்மன் ஒன்றை அனுப்பினார். நேற்றைய நீதிமன்ற உத்தரவை இன்றைய சம்மனில் விளக்கமாக கூறி நேரில் ஆஜராகுமாறு நோட்டீஸ் 
அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கோயில் ஊழியர்களை அவதூறாக பேசிய ஹெச்.ராஜாவை கண்டித்து திருவாரூரில், இந்து அறநிலையத்துறை உதவி 
ஆணையர் அலுவலகம் முன்பு, தியாகராஜ சாமி கோயில் பணியாளர்கள் மற்றும் உதவி ஆணையர் அலுவலகத்தின் ஊழியர்கள் 
ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஹெச்.ராஜாமீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர்.

தற்போது பெண் ஒருவர் எச்.ராஜாவை மிகவும் மோசமாக விமர்சித்து பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

Video Top Stories