Asianet News TamilAsianet News Tamil

பாஜகவை கிழி கிழின்னு கிழித்த சிவசேனா..!! அமித்ஷாவை காணவில்லை என சாம்னாவில் கட்டுரை..!!

ஆனாலும் சோனியா அமித்ஷாவை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார் .  டெல்லியில் இவ்வளவு பெரிய வன்முறை நடந்தும் இது குறித்து மத்திய அரசு வாய் திறக்கவில்லை .

sivasena criticized bjp and modi amih sha regarding Delhi riot  sama release artical against bjp
Author
Maharashtra, First Published Feb 29, 2020, 2:04 PM IST

டெல்லி வன்முறையின்போது அமித்ஷா காணாமல் போய்விட்டதாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான  சாம்னாவில் தலையங்கம் வெளியாகவுள்ளது . இதில் பாஜகவை சிவசேனா நேரடி விமர்சித்திருப்பது அரசியில் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் பாஜக மற்றும் சிவசேனாவிடையே பனிப்போர் இருந்து வருகிறது .  இந்நிலையில் டெல்லி வன்முறை சம்பவம் தொடர்பாக மத்திய  உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சிவசேனாவின் சாம்னா பத்திரிக்கை கடுமையாக விமர்சித்து கட்டுரை வெளியிட்டுள்ளது.   இந்த கட்டுரையில் விவரம் : -  

sivasena criticized bjp and modi amih sha regarding Delhi riot  sama release artical against bjp

டெல்லி சட்டசபை தேர்தல் நடந்தபோது மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பிரச்சாரத்திற்கு நீண்ட நேரம் ஒதுக்கினார் .  அப்போது வீடு வீடாகச் சென்று பாரதிய ஜனதா வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தார் .  ஆனால் டெல்லியில் நடந்த வன்முறையில் பல உயிர்கள் பறிபோனது பொதுச் சொத்துக்கள் சேதம் அடைந்தபோது,  தனியார் சொத்துக்கள் நாசப்படுத்தப் பட்டபோது அமித்ஷா எங்கே போனார்.  அமித்ஷாவை  டெல்லியில் காணமுடியவில்லை.

sivasena criticized bjp and modi amih sha regarding Delhi riot  sama release artical against bjp

இந்நிலையில் ,   காங்கிரஸ் கட்சியை வேறு எந்த  கட்சியோ மத்தியில் ஆட்சியில் இருந்து எதிர்க்கட்சியாக பாரதிய ஜனதா இருந்திருந்தால் ,  உள்துறை அமைச்சர் பதவி விலகுவது  குறித்து  பாரதிய ஜனதா தனது கோரிக்கையை அழுத்தமாக  கொடுப்பதற்காக  பெரிய அளவில் கண்டனப் பேரணி நடந்திருக்கும்.  ஆனால் இப்போது அப்படி எதுவும் நடக்கவில்லை. 

sivasena criticized bjp and modi amih sha regarding Delhi riot  sama release artical against bjp

ஏனெனில் பாஜக ஆட்சியில் இருக்கிறது ,  எதிர்க்கட்சிகள் பலவீனமாக இருக்கிறது .  ஆனாலும் சோனியா அமித்ஷாவை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார் .  டெல்லியில் இவ்வளவு பெரிய வன்முறை நடந்தும் இது குறித்து மத்திய அரசு வாய் திறக்கவில்லை . அகமதாபாத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிராம்பை  வரவேற்க அமைச்சா் அமித்ஷா சென்றிருந்த நேரத்தில்தான் டெல்லியில் உளவுத்துறை அதிகாரி வன்முறையில் படுகொலை செய்யப்பட்டார் .  வன்முறை நடந்து மூன்று நாட்கள் கழித்து மோடியும் அமித்ஷாவும் மக்கள் நல்லிணக்கம் காக்கவேண்டுமென வேண்டுகோள் விடுத்திருப்பது என்ன நியாயம் என்று  அந்தக் கட்டுரையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.  

 

Follow Us:
Download App:
  • android
  • ios