“இளம்பெண்ணுக்கு முத்தம் கொடுத்த அமைச்சர்...” செக்ஸ் புகாரால் அலறும் தலைமைச் செயலகம்!
ஒரு அமைச்சரின் அறைக்கு கோப்பு ஒன்றில் கையெழுத்து வாங்குவதற்காக சென்றபோது அவர் எனக்கு முத்தம் கொடுத்தார் என கணவரை இழந்த இளம் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளது தலைமை செயலகம் முழுவதும் அலண்டு கிடக்கிறது.
கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறியும் தங்கள் ஆட்சியில் தவறுகள் நடக்காது என்று வாக்குறுதி அளித்தும் கம்யூனிஸ்டு கட்சி ஆட்சியை பிடித்தது. ஆனால், கம்யூனிஸ்டு ஆட்சி அமைந்தபிறகு பினராயி விஜயன் மந்திரி சபையில் இடம்பெற்றுள்ள பல அமைச்சர்கள் சர்ச்சையில் சிக்கினார்கள். உறவினர்களுக்கு அரசு பணியில் சலுகை காட்டியது மற்றும் பெண்கள் செக்ஸ் குற்றச்சாட்டை அடுக்கியதால் தொடர் சர்ச்சைகள் உருவானது. இந்த பாலியல் புகாரால் சில அமைச்சர்கள் பதவி பறிபோனதும் குறுப்பிடத்தக்கது.
இந்நிலையில், தற்போது கேரள அமைச்சர் ஒருவர் மீது செக்ஸ் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டை கூறியுள்ளவர் கேரள அரசு தலைமை செயலகத்தில் வேலை செய்து வருகிறார். அவர், மந்திரியின் பெயரை குறிப்பிடாமல் மந்திரி தனது கையைப்பிடித்து இழுத்து முத்தமிட்டதாக ‘பேஸ்புக்’கில் பதிவிட்டுள்ளார்.
தனது ‘பேஸ்புக்’கில் அந்த பெண் கூறியுள்ளதாவது; நான் கணவரை இழந்த ஒரு இளம்பெண். எனக்கு 2 மகள்கள் உள்ளனர். நான் கேரள அரசு தலைமை செயலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தேன். அப்போது நான் ஒரு அமைச்சரின் அறைக்கு கோப்பு ஒன்றில் கையெழுத்து வாங்குவதற்காக சென்றேன். அப்போது அவர் எனது கையைப்பிடித்து இழுத்து உள்ளங்கையில் முத்தமிட்டார். இதை எதிர்பார்க்காத நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன். பிறகு அங்கிருந்து வேகமாக வெளியில் வந்துவிட்டேன். இதுபற்றி நான் யாரிடமும் கூறாததற்கு காரணம் நான் 2 மகள்களுக்கு தாய். மேலும் எனக்கு உதவுவதற்கு யாரும் முன்வர மாட்டார்கள். அமைச்சரை எதிர்க்கும் அளவுக்கு எனக்கு பலமும் கிடையாது என இவ்வாறு தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
புகாரில் கூறப்பட்ட மந்திரி யார்? என்பதை கண்டறிவதற்காக பேஸ்புக் முகவரி மூலம் அந்த பெண்ணை தொடர்பு கொண்டபோது அவர் தான் கூறிய குற்றச்சாட்டு உண்மைதான். ஆனால் மந்திரியின் பெயரை வெளியிட தனக்கு விருப்பமில்லை என தெரிவித்துவிட்டார். அமைச்சரின் மீதான இந்த செக்ஸ் குற்றச்சாட்டால் புகார் கேரளா அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.