சீமான் ஒரு பாலியல் குற்றவாளி.. சட்டம் சரியா இருந்தா ஜெயில்ல தான் இருக்கனும்.. எம்.பி ஜோதிமணி விளாசல்..
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு பாலியல் குற்றவாளி என்றும் சட்டம் சரியா செயல்பட்டிருந்தால் இந்நேரம் அவர் சிறையில் தான் இருந்திருப்பார் என்றும் கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்து கடந்த புதன்கிழமை அன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மலரும் இந்த தீர்ப்பை வரவேற்று கருத்து தெரிவித்தனர். ஆனால் காங்கிரஸ், முன்னாள் பிரதமர் ராஜூவ் கொலை வழக்கில் குற்றவாளி பேரறிவாளன் விடுதலை செய்ததை கண்டித்து வாயில் வெள்ளை தூணி வைத்து அறப்போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் ராஜூவ் காந்தி நினைவு தினமான இன்று, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தனது தந்தை நினைவுக்கூர்ந்து ட்விட்டரில் பதிவு ஒன்றை போட்டிருந்தார். அதில் தனது தந்தை மிகவும் கனிவானவர் மற்றும் இரக்க குணம் உள்ளவர். எனக்கும் என் சகோதரிக்கும் அற்புதமான தந்தை என்றும் எங்களுக்கு மன்னிக்க கற்றுக்கொடுத்தவர் என்றும் பதிவிட்டுள்ளார்.
இதனிடையே இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ராகுல் காந்தி தனது தந்தையின் மரணத்திற்கு காரணமானவர்களை மன்னித்துவிட்டேன் என்று தெரிவித்தார். ஆனால் அவர் யார் எங்களை மன்னிக்க ? நாங்கள்தான் உங்களை மன்னித்தோம். ராஜீவ் காந்தி என்ன பெரிய தியாகியா ? ரூ.400 கோடி பீரங்கி ஊழல், ஒரு ராணுவத்தை அனுப்பி இனத்தையே அழித்தது என்று பல விஷயத்தை செய்துள்ளார்’ என்று கூறினார்.
சீமானின் கருத்திற்கு தற்போது காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி பதிலடி கொடுத்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,” சீமான் ஒரு பாலியல் குற்றவாளி.சட்டம் சரியாக செயல்பட்டிருக்குமானால் சீமான் இந்நேரம் இருந்திருக்க வேண்டிய இடம் சிறைச்சாலை. சீமானுக்கெல்லாம் இந்தியாவின் இளைய பிரதமர்,தொழில்நுட்ப இந்தியாவின் தந்தை, பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் நாயகன், தலைவர் ராஜீவ்காந்தியை விமர்சிக்கின்ற அருகதை கிடையாது” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க: ராஜீவ் காந்தி என்ன பெரிய தியாகியா ? நம் இனத்தை அழித்ததே அவர்தான்.! பொங்கி எழுந்த சீமான்