நான் யார் தெரியுமா பொதுக்கூடத்தில் பொறிகிளப்பிய ராகுல்..!! சாவர்க்கரை அவமானம் செய்தார்...!!
உண்மையயை பேசியதற்காக மன்னிப்பு கேட்க சொல்கிறார்கள் . மன்னிப்பு கேட்க நான் ஒன்றும் சாவர்க்கர் அல்ல ராகுல்காந்தி என்று அவர் அதிரடியாக பேசியுள்ளார்.
உண்மையை பேசியதற்காக பாஜக என்னை மன்னிப்புக் கேட்கச் சொல்கிறது, மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் அல்லராகுல் காந்தி என அதிரடியாக பேசியுள்ளார் டெல்லியில் நடந்த காங்கிரஸ் கட்சியின் பொதுக் கூட்டத்தில் ராகுல்காந்தி இவ்வாறு பேசியுள்ளார் . டெல்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது . இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி , முன்னாள் தலைவர் ராகுல் காந்தி , முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் பொதுச்செயலாளர், பிரியங்கா காந்தி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
அதில் பேசிய ராகுல் காந்தி நான் ரேப் இன் இந்தியா என்று பேசியதற்கு என்னை மன்னிப்பு கேட்க சொல்கிறார்கள் என்றார் , மக்களின் உணர்களுக்கு மதிப்பளிக்காத மத்தியஅரசு மனம் போன போக்கில் மசோதாக்களை கொண்டு வந்து சட்டமாக நிறைவேற்றி வருகிறது . பாலியல் வன்கொடுமை குறித்த தன் விமர்சனத்திற்கு மன்னிப்பு கேட்கப்போவதில்லை , உண்மையயை பேசியதற்காக மன்னிப்பு கேட்க சொல்கிறார்கள் . மன்னிப்பு கேட்க நான் ஒன்றும் சாவர்க்கர் அல்ல ராகுல்காந்தி என்று அவர் அதிரடியாக பேசியுள்ளார்.
முன்னதாக பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம், கடந்த 6 மாதங்களில் இந்திய பொருளாதாரத்தை மத்திய அரசு சீரழித்து விட்டது என குற்றம்சாட்டினார் இதனை சரி செய்ய என்ன செய்வது என்று தெரியாமல் மத்திய அமைச்சர்கள் தவியாய் தவித்து வருகின்றனர் என அவர் குற்றம் சாட்டினார் . பாஜக எதேச்சதிகார மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது என்றும் ராகுலை குறி வைத்த அவர்கள் விமர்சிக்க தொடங்கியுள்ளனர் என்றும் அதில் பேசிய சோனியா காந்தி தெரிவித்தார்.