Asianet News TamilAsianet News Tamil

தேர்தல் ரேஸில் முந்துகிறது திமுக...!! வேட்பாளர் தேர்வில் அதிரடி காட்டும் பிரஷாந்தி கிஷோர்...!!

கிரிமினல் ,  குற்ற வழக்குகள் உள்ளவர்களுக்கு தேர்தலில் வாய்ப்பு கொடுக்கக் கூடாது என  கிஷோர் கட்சியின் தலைமைக்கு அறிவுறுத்தியுள்ளார் . 
 

political advisers prasanth kishore noe start work for dmk and selection candidate for assembly election to dmk
Author
Chennai, First Published Feb 25, 2020, 1:45 PM IST

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்காக திமுகவில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தற்போதே தீவிரமடைய தொடங்கியுள்ளதாக  தகவல்கள் வெளியாகி உள்ளன .  இதற்கான பணியில் திமுகவின் தேர்தல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர் மற்றும் அவரது  குழுவினர்  தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன  .  சட்டசபை தேர்தலை சந்திப்பதற்காக பிரபல அரசியல் நிபுணரான பிரஷாந்த் கிஷோரின் ஆலோசனையைக் கேட்டு திமுக செயல்பட்டு வருகிறது.   தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன .  திமுக ஒரு அணியாகவும் அதிமுக மற்றொரு அணியாகவும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன . 

political advisers prasanth kishore noe start work for dmk and selection candidate for assembly election to dmk 

காங்கிரஸ் ,  விடுதலை சிறுத்தைகள் ,  மதிமுக ,  கம்யூனிஸ்ட்கள் ,  உள்ளிட்டவை திமுக  கூட்டணியில் இடம்பெற்றுள்ள கடந்த பாராளுமன்ற தேர்தலில் இந்த கூட்டணி அமோக வெற்றி பெற்றது .  சட்டமன்றத் தேர்தலிலும் இதே கூட்டணியுடன் தேர்தலை சந்திக்க திமுக ஆயத்தமாக வருகிறது.   சட்டமன்றத் தேர்தலை சந்திக்க பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் ஆலோசனைப்படி திமுக செயல்பட்டு வருகிறது .  தற்போது பிரசாந்த் கிஷோர் மற்றும் அவரது குழுவினர் பணியை தொடங்கியுள்ளனர்.  அதாவது எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் யார் யாரை களத்தில் இறக்குவது.?  என்ற வேட்பாளர் தெரிவில் இப்போது பிரசாந்த் கிஷோர் குழுவினர்  இறங்கியுள்ளதாக தெரிகிறது .  கிரிமினல் ,  குற்ற வழக்குகள் உள்ளவர்களுக்கு தேர்தலில் வாய்ப்பு கொடுக்கக் கூடாது என  கிஷோர் கட்சியின் தலைமைக்கு அறிவுறுத்தியுள்ளார் . 

political advisers prasanth kishore noe start work for dmk and selection candidate for assembly election to dmk

அதிக அளவில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் ,  கட்சியில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள மாவட்ட செயலாளர்களை தலைமை கழக  நிர்வாகிகளாக நியமித்து அவருடைய அனுபவத்தை தேர்தலில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் .  அதிமுகவின் உள்ளதுபோல 3 சட்டசபை தொகுதிக்கு ஒரு மாவட்ட  செயலாளரை நியமித்து கட்சியை வலுப்படுத்த வேண்டும் ,  உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை பிரசாந்த் கொடுத்துள்ளதாக தெரிகிறது .  அதுபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் செல்வாக்கு உள்ள குற்றப்பின்னணி இல்லாதவர்களை வேட்பாளராக களம் இறக்க  திமுக திட்டமிட்டுள்ளது .  இதற்காக திமுக முன்னணி நிர்வாகிகளின் கருத்துக்களையும் கட்சித் தலைமை கேட்டு வருகிறது .  அதே நேரத்தில் கூட்டணி கட்சியினருக்கும் பிரச்சினை இன்று தொகுதிகளை ஒதுக்கீடு செய்வது பற்றியும் திமுக பிரசாந்த் கிஷோரின் உதவியுடன் தீவிர ஆலோசனையில்  ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .
 

Follow Us:
Download App:
  • android
  • ios