பெட்ரோல் பங்க் திறந்திருக்கும் நேரம் குறைப்பு..!தமிழக அரசு உத்தரவு.. இறுகும் கெடுபிடிகள்..!!
கொரோனா எண்ணிக்கை தமிழகத்தில் 485ஐ தொட்டநிலையில் அரசு இதுபோன்ற நேரக்கட்டுபாடு உத்தரவுகள் நாளுக்கு நாள் கெடுபிடிகள் இறுகிக்கொண்டே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
T.Balamurukan
தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா தொற்று உள்ளவர்கள்,அறிகுறி உள்ளவர்கள் எண்ணிக்கை ஏறுமுகத்தில் ஏறிக்கொண்டே செல்கிறது அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலில் பெட்ரோல் இடம் பிடித்திருந்தது. அதற்கான நேரம் மதியம் 2.30 மணி வரை என நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில் தமிழக அரசு திடீரென மதியம் 1 மணி வரை மட்டுமே பெட்ரோல் நிலையங்கள் செயல்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக தமிழ்நாடு பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கத்தலைவர் முரளி இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
கொரோனா எண்ணிக்கை தமிழகத்தில் 485ஐ தொட்டநிலையில் அரசு இதுபோன்ற நேரக்கட்டுபாடு உத்தரவுகள் நாளுக்கு நாள் கெடுபிடிகள் இறுகிக்கொண்டே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.