என்.பி.ஆர் குறித்து அச்சப்பட தேவையில்லை அமித்ஷா விளக்கம்.!!
மாநிலங்களவையில் காங்கிரஸ் மூத்த எம்பி கபில் சிபல் சிஏஏ, என்பிஆர் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா..,'மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, யாரையும் சந்தேகப்படும் நபர் என குறிப்பிடமாட்டோம். என்.பி.ஆர். குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை.
T.Balamurukan
பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி சிஏஏ, என்பிஆர் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விவாதத்தில் ஈடுபட்டனர். பாராளுமன்றமே பரபரப்பாக இயங்கியது.
குடியுரிமை திருத்த சட்டம்,மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக இந்தியாவின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் காங்கிரஸ் மூத்த எம்பி கபில் சிபல் சிஏஏ, என்பிஆர் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா..,'மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, யாரையும் சந்தேகப்படும் நபர் என குறிப்பிடமாட்டோம். என்.பி.ஆர். குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை. எந்த ஆவணமும் கேட்க மாட்டோம் - விருப்பம் இருந்தால் சில தகவல்களை தரலாம். சிஏஏ குறித்து சிறுபான்மை சகோதர, சகோதரிகள் மத்தியில் தவறான பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. என்பதை அவர்களிடம் நான் சொல்ல விரும்புகிறேன்,என்று பதிலளித்தார்.