இந்தியன்2 படம் பட்டபிடிப்பில் நடந்த விபத்து.!! லைகா நிறுவனம் உட்பட 4பேர் மீது வழக்கு.!!
இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் உடைந்து விழுந்து சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர். இப்படத் தயாரிப்பு நிறுவனமான லைகா,கிரேன் ஆப்பரேட்டர்கள் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
T.Balamurukan
இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் உடைந்து விழுந்து சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர். இப்படத் தயாரிப்பு நிறுவனமான லைகா,கிரேன் ஆப்பரேட்டர்கள் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னையில், கடந்த சில நாட்களாக கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் நடந்து வந்தது. இந்த நிலையில் நேற்று அந்த படப்பிடிப்பு தளத்தில் பெரிய அளவிலான கிரேன் ஒன்றுஅறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும் 10 பேர் காயமடைந்து உள்ளதாகத் தகவல்.
"எத்தனையோ விபத்துக்களைச் சந்தித்து, கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்.எனது வலியை விட அவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன்.அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்" என்று கமல்ஹாசன் ட்விட்டர் பக்கத்தில் தனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ளார்