தேர்தல் என்றால் , கொலைகள் நடப்பது சகஜம்தான்...!! மூர்க்கத்தனம் காட்டிய ஜான்பாண்டியன்..!!
உள்ளாட்சித் தேர்தல் என்றால் கொலைகளும் சண்டைகளும் நடக்கத்தான் செய்யும் , இதெல்லாம் சகஜம் என்ற ரீதியில் அவர் பதில் அளித்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தல் என்றாலே கொலைகள் சகஜம்தான் என தமிழ்நாடு மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் சாதிக்கட்சி தலைவராக இருந்து வருகிறார் ஜான் பாண்டியன் . இவர் அரசியலில் இருந்து வந்தாலும் இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. சில நேரங்களில் சர்ச்சையான கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்துவது ஜான்பாண்டியனின் வழக்கமாக இருந்து வருகிறது . இந்நிலையில் சாத்தூர் அருகே ஊராட்சி தலைவர் பதவிக்கான போட்டி தொடர்பான பிரச்சினையில் நியாயம் கேட்க சென்ற வங்கி ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் . ஆனால் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஜான்பாண்டியன் இதெல்லாம் சகஜம்தான் என கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசி அவர் , ஏற்கனவே அதிமுகவின் கூட்டணியில் இருந்து வருகிறோம், அந்த வகையில் உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி இடங்கள் பங்கீடு தொடர்பாக அதிமுகவுடன் பேசி வருகிறோம் . குடியுரிமை சட்டத் திருத்தம் என்பது நமக்கான உரிமையை மீட்பதாகும், அதற்கு அதிமுக ஆதரவு அளித்து இருப்பது வரவேற்கத்தக்கது . பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்தால் திமுகவும் இச்சட்டத்தை ஆதரித்து இருப்பார்கள். இந்நேரத்தில் ஈழத்தமிழர்களைப் பற்றி பலர் பேசுகிறார்கள் . தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களால்.
தான் அங்கே ஈழத்தில் தமிழர்கள் அழிக்கப்பட்டார்கள் என்றார் . சாத்தூரில் ஊராட்சி தலைவர் பதவிக்கான போட்டி தொடர்பான பிரச்சனையில் நியாயம் கேட்க சென்ற வங்கி ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து ஜான்பாண்டியன் இடத்தில் கேட்டதற்கு , உள்ளாட்சித் தேர்தல் என்றால் கொலைகளும் சண்டைகளும் நடக்கத்தான் செய்யும் , இதெல்லாம் சகஜம் என்ற ரீதியில் அவர் பதில் அளித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், மாநில அரசும் காவல் துறையும்தான் பாதுகாப்பை பலப்படுத்தி சட்டம் ஒழுங்கை காக்க வேண்டும் என்றார் . உள்ளாட்சித் தேர்தல் என்றால் கொலைகள் சகஜம்தான் என ஜான்பாண்டியன் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .