தமிழகத்தில் போராட்டம் வெடிக்கும்...!! பகிரங்கமாக எச்சரித்த வைகோ...!!
போராடும் மக்கள் மீது காவல்துறையை ஏவினால் தினமும் போராட்டம் நடக்கும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார் . சென்னையில் நடைபெற்ற மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார் .
போராடும் மக்கள் மீது காவல்துறையை ஏவினால் தினமும் போராட்டம் நடக்கும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார் . சென்னையில் நடைபெற்ற மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார் . இந்திய குடியுரிமை சட்டம் தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது . இந்தநிலையில் சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற போராட்டத்தில் திடீரென போராட்டக்காரர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது
.
அதில் காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர் , அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார் , இது தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது . இந்நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்றது . இதில் அக்கட்சியின் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி , மதிமுக பொதுச் செயலாளர் வைகோ , துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா , உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர் .
பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன . இதில் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சாதிமத வேறுபாடின்றி போராடிவரும் அனைத்து தரப்பு மக்கள் மீதும் தமிழக அரசு காவல் துறையை ஏவி தாக்குதல் நடத்தி வருகிறது . இது மிகுந்த கண்டனத்துக்குரியதாகும் ஜனநாயகத்தில் இத்தகைய பாசிசப் போக்கை அனுமதிக்க முடியாது . இதே நிலை தொடர்ந்தால் அமைதிப் பூங்காவாக திகழும் தமிழகம் நாள்தோறும் போராட்டக் களத்தை சந்திக்க வேண்டி இருக்கும் என வைகோ எச்சரித்ததுடன் , அக்கூட்டத்தில் முக்கிய தீர்மானமாகவும் இது நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .